அமெரிக்க தூதரக அதிகாரி தமிழர்களை ‘கருப்பு அழுக்கு’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்...பிரான்ஸிஸ் சேவியர் ’ஹிந்துக்கள் அவர்கள் வணங்கும் சிலைகளே போலவே கருப்பு’ என்கிறார். கூடவே இந்த இனமே மோசம், நாணயமானவர்கள் கிடையாது என்கிறார்... மேற்கத்திய இனவாத பித்தம் பெற்ற கள்ளப்பிள்ளைதான் திராவிட இனவாத போலி பகுத்தறிவு...
நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: "ராகசுதா ஹால்", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!

