Posts Tagged ‘ பசுமை ’

அறிவிப்புகள்

பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு

பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு

விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள “பசுமை விவசாய தொழில்நுட்பங்கள்” என்ற இந்த நூல் நம் பாரம்பரிய அறிவைச் சார்ந்த பசுமைத் தொழில்நுட்பங்களை அழகிய வண்ண புகைப்படங்களுடன் அளிக்கிறது. மண்புழு உரம், மண்புழு உர நீர், உயிர் நீர், கம்போஸ்ட் டீ, பஞ்சகவ்யம், மீன் அமினோ, அஸோலா ஆகிய தொழில்நுட்பங்களை செய்முறை விளக்கங்களுடன் தருகிறது. விவசாயிகளுக்கும், பசுமை வேளாண்மை மாணவர்களுக்கும், சூழலியல் ஆர்வலர்களுக்கும், இன்றியமையாத தொடக்க நிலை கையேடு. நூலாக்கியவர்கள்: டாக்டர் கமலாசனன் பிள்ளை, அரவிந்தன் நீலகண்டன், ராஜமணி, பிரேம்லதா பாண்டியன் ஆகியோர். மேலும் விவரங்களுக்கு பதிப்பாளரை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். விவேகானந்த கேந்திரம் – இயற்களை வள அபிவிருத்தித்...

மேலும் »

அனுபவம், இலக்கியம், கவிதை

ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

August 31, 2010
-
ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

இந்த இரண்டரை நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதையின் பல வீச்சுக்களையும், பரிமாணங்களையும் வண்ணத் தீற்றல்களாக அனுபவிக்க முடிந்தது... விவாதம் சூடாகி, உரத்த குரல்கள், கூச்சல்கள் ஒருசில சமயங்கள் எழுந்த போதும்... சில இலக்கிய விவாதங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதுவும் ஒரு நல்ல திகில் அனுபவமாகவே இருந்தது... இந்தக் கருத்துக்களை ஏற்கனவே பலமுறை ஜெ.மோவே எழுதியுள்ளார் என்றாலும், இத்தகைய தொகுப்பு நோக்கில் நேரடியாக, வாய்மொழியாக அதனை விளக்கியது சிறப்பாக இருந்தது...

மேலும் »

அரசியல், சமூகம்

ஒரு நதியின் நசிவு

ஒரு நதியின் நசிவு

மூன்று பெரும் அழிவுகள் இந்த ஆற்றின் வனப்பை, ஜீவனை இன்று அழித்து வருகின்றன. அவை அரசியல்வாதிகளின் பேராசையினால் விளைந்த மணல் கொள்ளையும் அரசாங்கத்தினரின் அலட்சியத்தினால் உருவான சீமக் கருவேல மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்பாடில்லாமல் ஆற்றினுள் விடப்படும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவு மற்றும் ப்ளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளும் ஆகும்.... வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக...

மேலும் »

கவிதை, வேதம்

பூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு

April 28, 2010
-
பூமி சூக்தம் –  பூமிக்கு வேதத்தின் பாட்டு

பூமி, உன்னிடமிருந்து எதைத் தோண்டினாலும் அது விரைவில் வளரட்டும். உனது இதயத்தையும், மர்மஸ்தானங்களையும் நாங்கள் சேதப் படுத்தாதிருப்போமாக... ஆழ்ந்த கவித்துவமும், ஆன்மிகமும் ததும்பும் மொழியில், இன்றைக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், புவிநேசர்களும் கூறும் சூழலியல் கருத்தாக்கங்களுடன் இயைவதாக வேத ரிஷிகளின் இந்தக் கவிதை விளங்குகிறது என்றே சொல்லலாம்.

மேலும் »

சமூகம், பொருளாதாரம்

திருவள்ளுவர் கண்டுபிடித்த துப்பாக்கி!

திருவள்ளுவர் கண்டுபிடித்த துப்பாக்கி!

பிட்ஸாவும் பர்கரும் உண்டு மேற்கத்தியமாகி நம் உயிர் வாழ்தலின் அடிப்படையான பண்பாட்டு மரத்தையே வெட்டி வீழ்த்தி நம்மை நாமே "நீருக்கான உலகப் போரில்" அழிக்கும் மேற்கத்திய நாகரிக தலைமுறையாக நாம் முழுமையாக மாறுவதற்கு முன்னால் "உணவாகும் நீரை" கட்டிக்காத்த பண்பாட்டின் சுவடுகளையும் சிறிது பின்நோக்ககிப் பார்ப்பது நல்லது... நம் பண்பாட்டின் ஆகப்பழமையான பொறியியல் கலையின்-அறிவியலின் அடிப்படை அமைப்புகளில் ஒன்றாக குளங்கள் மற்றும் ஏரிகளின் வடிவமைப்பையே குறிப்பிடலாம்.

மேலும் »