Payday loans Cialis online
payday loans Car insurance

Posts Tagged ‘ பாகிஸ்தான் ’

அரசியல், பயங்கரவாதம்

பாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்

பாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்

மெழுகுவர்த்தியை முத்தமிட்டுக் கொண்டு எப்படியாவது சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்று தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன் உரைத்துக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. காட்டுமிராண்டித்தனமாக, மூர்க்கத் தனமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கிக்கொண்டே இருப்பார்கள். அதற்கு பதிலடி கொடுக்காமல் சமாதானம், சமாதானம் என்று பிதற்றிக் கொண்டிருப்பது எந்தப் பயனையும் தரப்போவது இல்லை. [மேலும்..»]

அரசியல், சமூகம், பொது

கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

September 12, 2009
-
கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தினர் மதவெறி கோஷங்களை எழுப்ப தலைவரான ஹாஜி சொன்னார் - “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்” ... தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை, காட்மாண்டு முதல் ஜெட்டா வரை ஏன் எல்லா இடங்களிலும் கொத்துக் கொத்தாக இந்துக்கள் படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர்? இந்துக்கள் படும் காயங்கள் பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன. ஏன்? (மூலம்: தருண் விஜய், தமிழில்: ஜடாயு)... [மேலும்..»]

அரசியல், வரலாறு, வழிகாட்டிகள்

கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்

கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்

ஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத்தந்தவர் மகத்தான இந்த இஸ்லாமியர் .... [மேலும்..»]

ஆன்மிகம், பண்டிகைகள், வழிகாட்டிகள்

தலைவர்களைத் தேசத்திற்குத் தந்த குரு

தலைவர்களைத் தேசத்திற்குத் தந்த குரு

"... இந்த புத்தகம் முழுக்க முழுக்க நடைமுறை உபயோகத்திற்கானது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே இல்லை. நாம் மட்டும் புரிந்துகொண்டிருந்தால் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த படையெடுப்புகளோ, நமக்குள் நடக்கும் ஜாதிப் பிரச்சினைகளோ, பிரபுத்துவ கொடூரங்களோ, பிரம்மாண்டமான ஏழ்மையோ ஏற்பட்டிருக்காது. நாம் கீதைக்கு முக்கியத்துவமே தரவில்லை... " [மேலும்..»]

பயங்கரவாதம்

அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

January 7, 2009
-
அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

நாம் சோமநாதர் கோயிலை புனரமைத்தோம், தாஜ் ஹோட்டலையும் மறுபடியும் திறந்துவிட்டோம். ஒன்று ஆன்மீகத்தளம், மற்றொன்றோ நம் விருந்தோம்பலின் அழகிய சின்னம் – என்ற வித்தியாசங்கள் முக்கியமா என்ன? இரண்டு தாக்குதலுமே இந்தியாவின்மீது நடந்தவைதான். இவ்விரண்டிலும், நாம் (தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவதாகச் சொல்லப்படும்) ஃபீனிக்ஸ் பறவைபோல அழிவிலிருந்து மீண்டெழுந்தோம். மும்பையின் வீர முகமும், தாஜ் ஹோட்டலின் மறு-திறப்பும் நம் உறுதியைக் குறிக்கின்றன. நாம் இந்தப் போராட்டத்தை அதன் இயல்பான முடிவுவரை தொடர வேண்டும். [மேலும்..»]

சமூகம்

காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்

August 29, 2008
-
காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்

காஷ்மீருக்காகப் போராடி உயிர்நீத்த படைவீரனின் மனைவியையும், தாயையும் கேட்டுப்பாருங்கள் - அவர்கள் வெறும் ஊதியத்துக்காகத் தான் அந்தத் தியாகம் செய்தார்களா என்று. காஷ்மீரின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தும், பொட்டுவைத்துக் கொண்டதற்காகவும், “சிவ சிவ” என்று தங்கள் இறைவனின் பெயரைச் சொல்லி வழிபட்டதற்காகவுமே, முஸ்லிம் ஜிகாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட காஷ்மீரி இந்துக்களைக் கேட்டுப்பாருங்கள் - அவர்களைத் தாக்கி விரட்டியவர்களிடமே காஷ்மீரைக் கொடுத்துவிடலாமா என்று... ஜம்முவிலிருந்து இதனை எழுதுகிறேன். இங்கே மக்கள் இந்திய வழியில் தேசபக்தி என்றால் என்ன என்று காஷ்மீரின் முஸ்லிம்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலைகளும், தெருக்களுக்கும் வெறிச்சோடிக் கிடக்கின்றன, ஊரே அடங்கி... [மேலும்..»]