Posts Tagged ‘ ராஜயோகம் ’

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம்

விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது... விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2

யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2

மந்திரங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதன் பயன் என்று ஒன்று உண்டு. நம்முடைய சூக்ஷ்ம உடலில் சில குறிப்பிட்ட அதிர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் மூலம் மந்திரங்கள் வேலை செய்கின்றன. ... தினமும் இரவு தூங்கப் போகும் முன், ஒரு அரை மணி நேரம், அன்றைய மனோ நிலைக்கு உகந்த ஆன்மிக நூல் ஒன்றை படிப்பது அல்லது சொற்பொழிவு பதிவைக் கேட்பது என்னும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்...

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1

யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1

மனதைத் தூய்மைப்படுத்தி, துக்கத்திலிருந்து விடுதலை அடைந்து, பேரின்பமான உங்கள் ஸ்வரூபத்தை நீங்கள் உணர விரும்பினால், யோகத்தை முழு மூச்சுடன் வாழ்க்கை முறையாக மாற்றுவது அவசியம். நீங்கள் கிறித்தவராகவோ, முஸ்லீமாகவோ இருந்தால், முதலில் அந்த மூட நம்பிக்கைகளில் இருந்து முழுவதும் விடுபட வேண்டும். வேண்டுமானால் பகுத்தறிவுவாதியாக இருந்து விஞ்ஞான ரீதியில் யோகத்தை அணுகலாம். ... தனி நபர்களை கடவுளாகப் பாவித்து சாமான்ய மனிதர்களால் இயற்றப்படும் சொற்றொடர்களை மந்திரங்கள் என்று கொள்வது சாத்திர ரீதியில் பார்க்கையில் தவறு.

மேலும் »

ஆன்மிகம், சமூகம், நிகழ்வுகள், பொது

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 1 (ராஜீவ் மல்ஹோத்ரா)

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 1 (ராஜீவ் மல்ஹோத்ரா)

இந்து அமைப்புகளின் பலவீனங்கள் என்னென்ன என்று எதிராளிகளுக்குத் தெரிய வரும்போது, இதே போன்ற விவகாரங்களை மற்ற இந்து அமைப்புகளும் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும். இதனை ஒரு முன்னறிவிப்பாகவே கூறுகிறேன்... ஒரு விஷயம் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் அது அறிவியலே அல்ல, ஏனென்றால் அறிவியல் அபோதபூர்வமானது, ஒழுக்கவிதிகள் சாராதது... சிவ சூத்திரங்களில் உள்ள 112 ஆன்மிக சாதனை முறைகளில், 6 முறைகள் ஆணும் (யோகி) பெண்ணும் (யோகினி) இணைந்து புரியும் யோகம் பற்றிக் கூறுகின்றன.

மேலும் »

அனுபவம், ஆன்மிகம்

மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை

மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை

அத்வைதத்தை அறிவியல் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம்.ஆனால் ஆஸ்த்மாவை அறிவியல் சரியாகவே கையாள்கிறது. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது... அர்ஜுனன் நம்மைப்போன்ற நிலையில் ஒரு கேள்வியை கேட்கிறான் - ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபடும் ஒருவன் நம்பிக்கை இருந்தும் நடுவில் வழி தவறினால் அதுகாறும் செய்தபயிற்சி வீண்தானா? என்று. இதற்கு பதில் அளிக்கும் பகவான் எவ்வளவு குறைந்திருந்தாலும் ஆன்மீகப்பயிற்சிகள் வீணாவதில்லை. தோல்வி அடையும் ஒருவன் அடுத்த பிறவியில் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய பயிற்சியை தொடருவான் என்று கூறுகிறார்.

மேலும் »

ஆன்மிகம், புத்தக விமர்சனம்

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)

உறவுமுறைகளின் கௌரவம் இப்படித்தான் பேணப்பட வேண்டும் என்பதில் நாம் மேலை நாடுகளைவிட கறாரான சமுதாயமே. என்றும் புராண உருவகங்களையும் நடைமுறை வாழ்க்கையையும் போட்டு ஒரு நாளும் யாரும் குழப்பிக் கொள்வதில்லை... ‘நம்மவர்’ - ‘மற்றவர்’ என்ற சமன்பாட்டின் தலையில் ஏற்றப்பட்டு ’நாம்’ அல்லாத ’மற்றவர்கள்’ சாத்தானைப்போலவே கருதப் பட வேண்டியவர்கள் என்ற மனப்போக்கு அடைந்த விபரீதம்.

மேலும் »