கம்பராமாயணம் – 66 : பகுதி 3

மத்தால் கடையப்படும் தயிர் போல, உடலுக்குள் வந்தும் வெளியே சென்றும் தத்தளிக்கிறது அவனது உயிர். அந்த உயிருடனே, ஐந்து புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து நிலையும், நின் பிரிவாலே தோன்றிய வேதனையும் எவ்வளவு? அதை அளவிட்டுச் சொல்ல முடியுமோ?…. இராவணனுடைய மூன்று கோடி ஆயுளையும், முயன்று பெற்றிருந்த பெரிய தவப் பயனையும், வரத்தையும், மற்றும் திசைகளையும், உலகங்கள் எவற்றையும் போரால் வென்ற தோள் ஆற்றலையும் உண்டு விட்டு, அவனுடைய மார்பில் நுழைந்து, உடல் எங்கும் சுழன்று ஓடி, உயிரைப் பருகிவிட்டு வெளியே சென்றது இராகவன் செலுத்திய புனிதம் நிறைந்த அம்பு…

View More கம்பராமாயணம் – 66 : பகுதி 3

கம்பராமாயணம் – 66 : பகுதி 2

இனிமேல் வேறு என்ன சொல்ல வேண்டும்? பிரமனை முதலாகக் கொண்டு உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எடுத்துக் காட்டப் பட்ட எல்லா உயிரினங்களும் (இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை) அருந்தி மகிழ்ந்தவை போலாயின…. எந்தக் குலத்தில் பிறந்தவராயினும், அவர்கள் எல்லோர்க்கும், மேன்மையும் கீழ்மையும் அவரவர் செய்யும் செயல்களாலேயே வரும். (வானர குலத்தில் பிறந்திருந்தாலும், உனது பெரும் அறிவால்) அதை நீ நன்கு உணர்ந்திருந்தும், பிறன் மனைவியின் கற்பு மாண்பினை அழித்தாய்” என்று உரைத்தான், மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்….

View More கம்பராமாயணம் – 66 : பகுதி 2

கம்பராமாயணம் – 66 : பகுதி 1

இந்த 66 பாடல்களின் தொகுப்பு, கதைப் போக்கின் தொடர்ச்சியையும், முக்கியமான கட்டங்களையும் பாடல்கள் தரும் உணர்வெழுச்சியையும் கருத்தில் கொண்டு, இராமகாதையின் அமுதச் சுவையை முதல்கட்டமாக அறிமுகப் படுத்தும் நோக்கில் செய்யப் பட்டுள்ளது… “சபையோர் யாவரும் கண் கொட்டுவதைக் கூட தவிர்த்து, இமைக்காதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்றனர். இராமன் தன் திருவடியால் அந்த வில்லின் முனையை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில் நாண் ஏற்றியதையும், அந்தச் செயல் நிகழ்ந்த வேகத்தால் அவர்களால் காண முடியவில்லை. மனத்தாலும் இன்னது தான் நிகழ்ந்தது என்று அவர்களால் அறிய முடியவில்லை…”

View More கம்பராமாயணம் – 66 : பகுதி 1

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20

அப்போது சீதை ஒரு தெய்வீக அன்னையாக வந்து ஆண், பெண், மற்றும் திருநங்கைகளைக் கூட எந்தவொரு வித்தியாசமும் பார்க்காது வாஞ்சையோடு கட்டி அணைத்து ஆரத் தழுவுவாள்… வேறு எதற்குமே இல்லாவிட்டாலும் நம்மை உலகுக்குக் கொண்டு வந்திருப்பதன் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமாவது நாம் பெற்றோர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். முன்பே இராமர் சொன்னது போல, அந்தக் கடனை நாம் என்றும் திருப்பிக் கொடுக்கவே முடியாது… அரக்கர்கள்தான் வெவ்வேறு உருவம் எடுத்து வருவதில் வல்லவர்கள் ஆயிற்றே, அதனால் தோட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் வானரமும் வேறு எந்த அரக்கனோ….

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20