Payday loans Cialis online
viagra Payday loans

Posts Tagged ‘ விவேகானந்தர் ’

வழிகாட்டிகள்

மகான்களின் வாழ்வில்-11: ஸ்ரீ சக்கரத்தம்மாள்

மகான்களின் வாழ்வில்-11: ஸ்ரீ சக்கரத்தம்மாள்

“சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர்," என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவரைப் பற்றி எழுதிச் சென்றுள்ளார்.... [மேலும்..»]

பொது, வழிகாட்டிகள்

இவரை மறக்கலாமா?

January 12, 2009
-
இவரை மறக்கலாமா?

ராக்ஃபெல்லர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இன்னும் பிரபலமடையவில்லை. ஆனால் செல்வாக்குள்ளவர், திண்ணமானவர், கையாளக் கடினமானவர், யாருடைய அறிவுரைகளையும் கேட்காதவர் என்றெல்லாம் பேர்வாங்கியிருந்தார்... [மேலும்..»]

வழிகாட்டிகள்

ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-2

ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-2

வேதங்களுக்கு கீதையை விட நல்ல பாஷ்யம் இதுவரையில் எழுதப் படவில்லல, இனிமேலும் எழுதமுடியாது. வேதங்களுக்கு மூலப் பொருளான அந்த பகவானே திருவுருவம் தாங்கி வந்து, அவைகளின் பொருளை விளக்கும்பொருட்டுக் கீதையை உபதேசம் செய்தருளினார். இந்த உபதேசத்தைத் தான் தற்கால இந்தியாவும், உலகமும் நாடி நிற்கின்றன.....விக்கிரக ஆராதனையை ஒழிப்பதற்காக நீங்கள் கத்திகளையும், பீரங்கிகளையும் கொண்டு, உலகம் முழுவதும் ரத்தப் பெருக்கெடுத்து ஓடும்படி செய்யலாம்; ஆனால் அவைகளின் அவசியம் இருக்கும் வரை அவை இருந்தே தீரும். அங்ஙனமே பலவிதமான வழிபாடுகளும், மத அனுஷ்டானங்களூம் இருக்கும். அவை ஏன் இருக்கவேண்டும் என்பதை கீதையிலிருந்து தெரிந்துகொள்ளுகிறோம். [மேலும்..»]

வழிகாட்டிகள்

ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1

ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1

அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்! ஸ்ரீகிருஷ்ணர் பற்றிய சுவாமி விவேகானந்தரின் அழகிய உரையை மகிழ்வுடன் அளிக்கிறோம். "அன்பு செய்வதற்காகவே அன்பு, பணியாற்றுவதற்காகவே பணி, சேவை செய்வதற்காகவே கடமை, என்ற கருத்து மனிதனுடைய மத வாழ்க்கையின் சரித்திரத்திலேயே ஓர் உன்னதமான இடத்தைக் குறிக்கின்றது. இது உலக சரித்திரத்தில் முதல் தடவையாக எல்லா அவதாரபுருஷர்களிலும் மேம்பட்டவரான ஸ்ரீகிருஷ்ணருடைய திருவாயிலிருந்து, இந்திய மண்ணிடையே பிறந்தது ... 'நீ வழிபடாவிடில், நீ நரகத்திற்கு போவாய் அல்லது வேறுவிதமாக கஷ்டப்படுவாய்' என்று தெய்வம் உரைப்பதாக நம்பி சிலர் பயத்தின் காரணமாகத் தெய்வ வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய தாழ்ந்த எண்ணங்கள் இருக்கும் வரையில் ஒருவன் கோபிகளுடைய... [மேலும்..»]

கவிதை

விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

August 14, 2008
-
விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

மீண்டும் எழுவாய் இது உறக்கம்தான் மரணமல்ல புது வாழ்வில் விழித்தெழும் துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன் கமலமலர் விழிகளின் சிறு அயரல் ஓ சத்தியமே! உன்னை வேண்டி நிற்கும் உலகம் உனக்கென்றும் அழிவில்லை [மேலும்..»]

வழிகாட்டிகள்

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 6

July 28, 2008
-
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 6

மாலையில் திரும்பி வரும்போது படகின் ஆட்டமோ, மதிய உணவின் வேலையோ தெரியவில்லை ஒரு பையனுக்கு வாந்தி எடுக்கத் தொடங்கியது. படகோட்டி கோபமடைந்தார். "வாந்தி எடுத்ததை நீங்கள்தான் சுத்தம் செய்யவேண்டும்" என்று வற்புறுத்தினார். "இல்லையென்றால் இரண்டு பங்கு கூலி கொடு" என்று மிரட்டினார்... [மேலும்..»]

வழிகாட்டிகள்

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 5

July 19, 2008
-
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 5

"இப்படியே வீடு வீடாக மரத்தில் தொங்கிக் கொண்டுதான் இருப்பாயா? இல்லை, படிக்கவும் செய்வாயா?". "ஐயா, நான் படிக்கவும் செய்வேன், விளையாடவும் விளையாடுவேன்" என்றான் நரேன். உடனே அவனைச் சோதித்தார் கிழவர். புவியியல், கணிதம் இவற்றில் கேள்வி கேட்டார். கவிதைகள் ஒப்பிக்கச் சொன்னார். இந்தக் கடினமான தேர்வில் சிறப்பாகத் தேறினான் நரேன். கிழவர் அவனை ஆசீர்வதித்து... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், பொது

இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்

இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்

இந்து என்ற பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள். [மேலும்..»]

வழிகாட்டிகள்

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 4

June 16, 2008
-
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 4

"இந்த மரத்தில் ஒரு பிரம்மராட்சசன் வசிக்கிறான். இரவு நேரத்தில் காலோடு தலை வெள்ளைவெளேரென்று உடையணிந்து வருவான். பார்க்கவே பயங்கரமாய் இருக்கும்" என்றார். பெரியவர். நரேந்திரனுக்கு இது புதுச் செய்தி. பிரம்ம ராட்சதன் இரவில் உலாவருவதைத் தவிர வேறென்ன செய்வான் என்று கேட்டான். [மேலும்..»]

வழிகாட்டிகள்

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3

June 7, 2008
-
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3

செயல்முறை தேசபக்தி என்பது வெறும் உணர்ச்சியோ, தாய்நாட்டின் மீது ஏற்படும் காதல் உணர்வோ அல்ல. மாறாக, சக தேசத்தவர்களுக்குச் சேவை செய்வதற்கான வெறி. நான் இந்தியா முழுதும் நடந்தே சுற்றியிருக்கிறேன். மக்களின் அறியாமை, துயரம், வறுமை இவற்றை என்னிரு கண்களால் பார்த்திருக்கிறேன். என் ஆன்மா பற்றி எரிகிறது. இந்தக் கொடிய நிலையை மாற்றும் பேராசை என்னை எரிக்கிறது. [மேலும்..»]