பொதுவாகவே ஊழலையும், நேர்மையின்மையையும், சுயநலத்தையும், சுரண்டலையும் அடித்தட்டு மக்களில் ஆரம்பித்து நாட்டு அதிபர் வரை அன்றாட நிகழ்வாக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம். ஒருவன் செய்யும் குற்றத்தை இன்னொருவன் தட்டிக் கேட்கத் தகுதி இல்லாத அளவு, ஒட்டு மொத்த சமுதாயமும் நேர்மையற்றதாக மாறிக்கொண்டு இருக்கிறது.