Posted in அரசியல் on 12 May 2009
Stats: பார்வை: 538 and 10 Comments
தமிழர்கள் தமது தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆம், மே 13ம் தேதி நமது எதிர்காலத்தை நிச்சயிக்கும் நாள். நல்லவர்கள் கூடவே திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றப் பின்னணியில் உள்ளவர்களும் வந்து ஓட்டுக் கேட்கும் பொழுது யாருக்கு ஆதரவளிப்பது என்று வாக்களர் குழம்பிப் போவது இயற்கைதான். நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குழப்பமில்லாமல் சிந்திக்க உதவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்…
Posted in நிகழ்வுகள் on 5 February 2009
Stats: பார்வை: 509 and No Comments
சென்னையில் GFCH என்கிற தன்னார்வ அமைப்பு, பிப்ரவரி 6,7,8 ஆகிய நாட்களில், 40 இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் கலந்து கொள்ளும் ஒரு சம்மேளனம் மற்றும் கண்காட்சியை நடத்துகிறது. மாதா அம்ருதானந்தமயி மடம், வாழும் கலை அமைப்பு, ஈஷா அறக்கட்டளை, விவேகானந்த கேந்திரம், சேவா பாரதி, வனவாசிகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதில் பங்கு கொள்கின்றன. அழைப்பிதழ் மற்றும் விவரங்கள் உள்ளே காணலாம்.
Posted in வழிகாட்டிகள் on 30 January 2009
Stats: பார்வை: 714 and 5 Comments
மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார் சுவாமிகள். பலருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது. சாவு வீட்டில் இருந்து, அதுவும் குளிக்காமல் தீட்டுடன் திருமண வீட்டிற்குள் நுழைந்து விட்டாரே என சிலர் கோபமுற்றனர். சிலர் திட்டினர். மகான் அதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை…
Posted in ராமாயணம் on 16 January 2009
Stats: பார்வை: 1,057 and 8 Comments
மலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் “இஸ்லாமுக்கு எதிரானவை” என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன…
Posted in சமூகம், நேர்காணல் on 21 December 2008
Stats: பார்வை: 966 and 14 Comments
அருட்திரு காளிதாஸ் சுவாமிகள் அகில இந்திய தலித் இந்து மக்கள் ஆன்மிக சங்கத்தின் தலைவர். அவர் கூறுகிறார்: “…தலித்துகளுக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை இந்த நாட்டுக்குக் கொண்டு வருகின்றனர்… இதனால் தலித் மக்களுக்கு சக இந்துக்கள் தங்களைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பது போன்ற எண்ணத்தைத் தோன்ற வைக்கிறது.”…
Posted in இலக்கியம் on 2 October 2008
Stats: பார்வை: 429 and No Comments
காந்திமதியம்மன் பிள்ளைத்தமிழ்
நெல்லை நகரில் கோவில் கொண்டிருக்கும் காந்திமதி அம்மையின் பேரில் அழகிய சொக்கநாதர் என்பவர் “காந்திமதி அம்மன் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் பாடப் பெற்றது.
காப்புப் பருவம், கலைமகள் துதி
அதிகாலையில் எழுந்து நதியில் நீராடி கோவிலுக்குச் சென்று கதவைத் திறந்து பூஜைக்குச் செல்லும் அர்ச்சகர்களைப் பார்க்கிறோம்.சூரியனை இப்படிப் பட்ட ஒரு அர்ச்சகராகப் பார்க்கிறார் புலவர். சூரியன் தினமும் கடலில் மூழ்கி ஒவ்வொரு நாளும் தனது ஆயிரம் பொற்கரங்களால்
[கிரணங்களால்] வெள்ளிக்கோவிலின் கதவைத் திறக்கிறானாம்.
அது என்ன வெள்ளிக் கோவில்? [...]
Posted in ஆன்மீகம் on 3 September 2008
Stats: பார்வை: 395 and No Comments
வயிருபெ ருத்தவ லம்புரி நாயகன்
வேண்டுவ ரந்தருவான்
கயிறுபி டித்தக ரங்களி னாற்பகை
கடிந்துவி ரட்டிடுவான்.
ஆரணப் போருளனுக் கன்புடன் மோதகம்
ஆக்கிப் படைப்பவர்க்குப்
பூரண வாழ்வினைப் பூமியில் தந்திடும்
பூரண னவனாவான்.
Posted in சமூகம், புதிய இந்து on 3 September 2008
Stats: பார்வை: 882 and 17 Comments
தருமம் மிகு தூத்துக்குடி செங்கோல் ஆதீன மகாசன்னிதான சுவாமிகள் மற்றும் இந்து மக்கள் கட்சி வீரத்திருமகன் அர்ஜுன் சம்பத் அவர்கள் மற்றும் குமரி மாவட்ட செந்தூரான் பேரவையும் இணைந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் 25 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 346 மக்கள் தாய்மதமாம் இந்து தருமத்தில் இணைந்த ‘தாய் மதம் திரும்பும் விழா‘ நாகர்கோவில் அருள் மிகு நாகராஜா திருக்கோவில் அருகில் உள்ள ‘அனந்த சமுத்திரம்’ திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
Posted in சமூகம், புதிய இந்து on 28 August 2008
Stats: பார்வை: 296 and 2 Comments
தாய்நாடு காக்க, தாய்மொழி காக்க, தீண்டாமையை ஒழிக்க, சாதி ஏற்றத் தாழ்வுகளை நீக்க, இந்து ஒற்றுமை காத்திட தமிழன்பர்கள் பலர் தாய்மதமாம் இந்து மதம் திரும்பும் திருவிழா வரும் ஞாயிறன்று (31-08-2008) நாகர்கோயிலில் நிகழவிருக்கிறது. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
Posted in சமூகம், நிகழ்வுகள், வரலாறு on 27 August 2008
Stats: பார்வை: 724 and 11 Comments
“அமர்நாத் கோயில் நில விவகாரம்” என்பது ஏதோ அயோத்யா பிரச்சனை போல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்காக இரு வேறு குழுவினர் சண்டை போட்டுக் கொள்வது போல ஒரு மேலோட்டமான உருவம் நிலவுகிறது. இது வெறும் அமர்நாத் நிலம் பற்றிய பிரச்சனை தானா ? ஒரு நூறு ஏக்கர் நிலத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? முதலில் இந்த அமர்நாத் பிரச்சனை எப்படி ஆரம்பித்தது ? அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும், பத்திரிகைகளும், காஷ்மீரிகள் என்று சொல்லை காஷ்மீரில் வாழ்கின்ற முஸ்லீம்களை மட்டுமே குறிக்கும்படி பயன்படுத்துகிறார்கள். உண்மையில் காஷ்மீரிகள் யார்? பண்டிட்கள் என்பவர்கள் யார்? இன்னும் பல கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை விடையாக அமைகிறது.
Posted in ஆன்மீகம், வைணவம் on 27 August 2008
Stats: பார்வை: 837 and 3 Comments
வையாளி: இது ஸ்ரீரங்கத்தில் திருவரங்கனின் கோவிலில் மட்டுமே காணக்கிடைக்கும்
ஒரு வைபவம். ஆன்ம அனுபவம். நம்பெருமாளின் ராப்பத்து திருவிழாவின் 8-ம் நாள்
இந்த இன்ப அனுபவம் கிட்டும். இறை நம்பிக்கை உள்ளவர் இல்லாதவர் என்ற பாகுபாடு இன்றி, உணர்வுள்ள அனைவர் உள்ளங்களிலும் உயரனுபவம் ஏற்படுத்தும் உன்னத நிகழ்வு இது. பக்தரோடு, பத்தரும் பரவசமடையும் தருணம் இது.
எதனால் இந்த பரவசம் ஏற்படுகிறது? ஒத்திசையும் சக்திகள் ஒருங்கே வெளிப்படுவதால்
இந்த பரவச அனுபவம் நிகழ்கிறது. இங்கே வேகமும், வலிமையும், விவேகமும், நளினமும் ஒன்றாய் கலந்து வெளிப்படுகிறது. கடவுளின் காந்தி காந்தமாய் தீண்டுகையில் உடம்பு அதிருகிறது. மனது பரவசம் பரவசம் என்கிறது.
Posted in இந்து மத விளக்கங்கள், விவேகானந்தர் on 8 July 2008
Stats: பார்வை: 826 and 2 Comments
இந்து என்ற பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.
Posted in வழிகாட்டிகள் on 22 June 2008
Stats: பார்வை: 915 and 2 Comments
‘கடவுளின் குழந்தை’ எனப் போற்றப்பட்டவர் யோகி ராம்சுரத்குமார். வடநாட்டில் பிறந்திருந்தாலும் திருவண்ணாமலையையே இறுதிவரை தனது வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்தவர். ஒருவரைப் பார்த்ததுமே அவர் எப்படிப்பட்டவர், அவரது ஆன்மா எத்தகைய தன்மை உடையது, அவரது அருள் நோக்கம் எவ்வாறு உள்ளது என எல்லாவற்றையுமே யாருமே கூறாமல் உணரும் திறன் பெற்ற மகா யோகி. பலரது கர்மவினைகளைத் தாம் ஏற்று அவர்களது ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவியவர்.
ஒரு முறை தெ.பொ.மீ. என அன்பர்களால் அழைக்கப்படும் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் [...]
Posted in சமூகம் on 20 June 2008
Stats: பார்வை: 750 and 3 Comments
தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் ஆகியோரிடம் ஹிந்து மதத்தின் பெருமையை எடுத்துச் செல்லும்விதமாக பல்வேறு முயற்சிகளை திருப்பதி தேவஸ்தானம் எடுத்து வருகிறது.
கோயில் அர்ச்சகர் பயிற்சிகளில் தலித்துகள், பழங்குடிகள் ஆகியோரைச் சேர்த்துக் கொள்வது, அவர்கள் குடியிருக்கும் இடங்களுக்கே வெங்கடாசலபதி விக்ரகத்தைக் கொண்டு சென்று பிரார்த்தனை செய்வது போன்று திட்டங்களை தேவஸ்தானம் செயல்படுத்தி வருவதாக தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி தெரிவித்தார்.
சங்கராச்சாரியர், ராமானுஜர், அன்னமாச்சாரியர் ஆகியோர் காலத்தில் ஹிந்து மதப் பண்பாடு அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தற்போது ஹிந்து [...]
Posted in ஆன்மீகம், வழிகாட்டிகள் on 18 June 2008
Stats: பார்வை: 1,071 and No Comments
ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார்…
Posted in சமூகசேவை on 12 June 2008
Stats: பார்வை: 3,658 and 32 Comments
மாற்றுமத சகோதரர் ஒருவர் என்னிடம் ‘எங்கள் மதத்தில் பாருங்கள் எவ்வளவோ தொண்டு அமைப்புகள் உள்ளன. நாங்கள் மருத்துவம் கல்வி ஆகிய தொண்டுகளை ஏழைகளுக்காக செய்கிறோம். ஆனால் இந்து மதத்தில் அத்தகைய செயல்பாட்டை காணமுடியவில்லையே. இதற்கு காரணம் இந்து மதம் கர்மம் கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டிருப்பதுதான்’ என சொல்லுகிறார். அவர் சொல்வது சரியாகத்தானே இருக்கிறது. இந்துக்களின் தொண்டு நிறுவனங்கள் கூட மாற்றுமத அமைப்புகளின் தாக்கத்தால் ஏற்பட்டவைதானே? நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
~ சொர்ணப்பன், மேட்டுப்பாளையம்
இந்தக் கேள்விக்கு இந்து தர்மம் சார்ந்த [...]
Posted in கவிதை on 6 June 2008
Stats: பார்வை: 380 and No Comments
கும்மியடி பெண்ணே கும்மியடி - கையில்
கோலவளை கொஞ்சக் கும்மியடி
நம்மவர் ஒற்றுமை ஓங்கிடவும் - தமிழ்
நாடு செழிக்கவும் கும்மியடி.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்