இந்து மதம் – கேள்வி பதில்: 1

இந்த பிரிவில் இந்து மதம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை தொகுக்கவிருக்கிறோம். பதில் சொல்ல விரும்பும் நாங்களே சிறுவர்கள் எனும்போது இப்பதில்களில் தவறிருக்கலாம் அல்லது சரியான பதிலை நீங்கள் சொல்ல விரும்பலாம். அப்படியிருப்பின் எங்களுக்கு உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.

ஹரி ஓம்!

—–

01. பகவத் கீதையின் காலம் எது? மகாபாரதத்தின் காலம் எது? பகவத்கீதை மகாபாரதத்தில் ஒரு இடைச்செருகலாகச் சேர்க்கபப்ட்டது என்கிற பேச்சு நிலவுகிறதே உண்மைதானா? இதற்குச் சாத்தியம் உள்ளதா? மகாபாரதம் கி.பியில் தான் உருவாக்கப்பட்டது என்று சிலர் சொல்கிறார்களே, உண்மையா?

பதில் : பகவத் கீதையின் காலம் குறித்து பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. மகாபாரதத்தில் விவரிக்கப்படும் தொடர்ச்சியான நிகழ்வுகள், தத்துவங்களுடன் கீதையும் வருகிறது. இடைச்செருகல் என்றால் தனித்துத் தெரியும். எனவே அது இடைச்செருகல் இல்லை.

கி.பிக்கு எல்லாவற்றையும் தள்ள முற்படுவது, Creationism கொள்கையின் ஒரு பகுதி. இவர்களது நம்பிக்கையின்படி கடவுள் தூங்கி, விழித்து உலகை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தான் படைத்தார். படைத்துவிட்டு பின்பு மீண்டும் ஓய்வெடுத்தார் என்பது. இவர்கள் உலக வரலாற்றை இந்த பைபிள் கதையுடன் தொடர்புபடுத்தி, அதிலிருந்து உலகத்தின் எல்லா நிகழ்வுகளையும் தீர்மானிக்க முற்படுகின்றனர். இதன் நீட்சியே இந்த கி.பி கட்டுக்கதைகள்.

“காலனிய இந்தியவியலாளர்கள் இந்து வேதங்களை புராணங்களை கால மதிப்பீடு
செய்யும் போது அவர்களது கலாச்சாரத்தில் நிலவி வந்த படைப்புவாதம்
(Creationism) என்கிற (இது இன்று அறிவியலால் பொய் என நிரூபிக்கப்பட்டு
விட்டது) கோட்பாட்டின் படி உலக வரலாற்றை எடை போட்டார்கள். வில்லியம்
ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வேதங்கள் நோவாவின் பிரளயத்துக்கு
பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டுமென கருதினார்கள். எனவே கிமு 1200 இல்
வேதங்கள் எழுதப்பட்டதாக கருதினார்கள். இதன் கணக்கில் இதிகாசங்களின்
காலமும் பின்னால் தள்ளப்பட்டது. எனவே நாம் இவற்றை ஏற்க முடியாது.
வானவியல் தரவுகளின் அடிப்படையில் நர்ஹரியாச்சார் எனும் மெம்பிஸ்
பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் கிமு 3000 இல் நிகழ்ந்த நிகழ்வுகளின்
அடிப்படையில் மகாபாரதம் எழுந்திருக்கலாம் என்கிறார். ஆனால் மகாபாரதம்
எழுதப்பட்ட காலகட்டம் மகாபாரத நிகழ்வுக்கு சில தலைமுறைகளுக்கு பிறகாக
இருக்கலாம் என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். ” [அரவிந்தன் நீலகண்டன்]

கி.முவிலான கிருஷ்ண வழிபாடு பற்றிய சான்றுகள் உலகின் பல பாகங்களின் கிடைக்கின்றன. இன்றைய ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலைகள், அர்மீனியாவில் இன்னமும் இருக்கும் பண்டைய இந்துக்கோவிலின் மீதமுள்ள பாகங்கள், இந்த தொன்மைக்கு சான்றாக நிற்கின்றன.

“கிருஷ்ணர் – அவர் ஒரு ஞானி என்பது உபநிடதக்காலத்திலேயே நிறுவப்பட்டுவிட்ட ஒன்று . (பௌத்தத்துக்கு முந்தையது என நிரூபிக்கப் பட்ட சாந்தோக்ய உபநிடதத்திலேயே
கிருஷ்ணன் என்கிற ஞானி பேசப்படுகிறார்.கிருஷ்ண வழிபாடு குறித்து கிமுவிலான கிரேக்க சான்றுகளே உண்டு: “This Garuda-column of Vasudeva (Visnu), the god of gods, was erected here
by Heliodorus, a worshipper of Visnu, the son of Dion, and an inhabitant of Taxila, who came as Greek ambassador from the Great King Antialkidas to King Kasiputra Bhagabhadra” விஷ்ணுவுக்காக ஒரு கிரேக்க தூதன் உருவாக்கிய கருட ஸ்தம்பத்திலிருந்துள்ள வரிகள் காலம் கிமு 113.” [அரவிந்தன் நீலகண்டன்]

02. ஸ்ருதி என்றால் என்ன? ஸ்மிருதி என்றால் என்ன? இதன் பிரிவுகள் என்ன?

பதில் : ஸ்ருதி – நிலையானது. ஸ்மிருதி – காலத்துக்கேற்ப மாறுவது. ஸ்ருதி – அடிப்படை ஆன்மீக தத்துவங்களையும், ஸ்மிருதி – அந்த தத்துவங்களையொட்டி காலத்துக்கேற்ப ஏற்படுத்தப்படும் விதிகளையும் விளக்குகிறது. இன்று இந்தக்காலத்துக்கான ஸ்மிருதி என்று எதுவும் இல்லை. ஸ்ருதியாக வேதங்கள், உபநிஷத்துகள் இருக்கின்றன.

03. கிருஷ்ண துவைபாயண வியாசன் என்பவர் யார்?

பதில் :
“கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி என்ற முறையில் அது வியாசன் என்ற கிருஷ்ணன் துவைபாயனனால் இயற்றப்பட்டது என்று கொள்ளுவது அறிவுலக வழக்கம். கிருஷ்ண துவைபாயனன் மகாபாரதத்திலேயே ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறார். அவர் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் பிதாமகன். கிருஷ்ணனுக்கு மிகவும் வயதில் மூத்தவர். அவர் பாரதபோர் முடிந்த பிறகு மகாபாரதத்தை எழுதினார் என்பது ஒரு காவிய உருவகம். ஆனால் மகாபாரதம் அதன்பிறகும் பல தலைமுறைக்காலம் நீண்டு ஜனமேஜயன் காலகட்டம் வரை வருகிறது. அப்படியானால் கிருஷ்ண துவைபாயன வியாசன் எத்தனைகாலம் வாழ்ந்தார் – நம் புராணமரபின்படி அவர் மரணமற்றவர் சிரஞ்சீவி. அதை அப்படியே ஏற்பது ஒரு வழி. தர்க்கபூர்வமாக பார்த்தால் வேறுசில ஊகங்களுக்கு வரமுடியும்.” [ஜெயமோகன்]

04. பதஞ்சலி யோகத்திற்கும் இந்து மதத்திற்கும் ஆன்மிகத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்கிறார்களே. பதஞ்சலி யோகம் என்பதுதான் என்ன? உண்மையில் அதற்கும் இந்து மதத்திற்கும் தொடர்பில்லையா?

பதில் : இந்து மதத்தின் சுதந்திரத்தை புரிந்து கொள்ளாதவர்களின் கூற்று இது. பதஞ்சலி யோகம், இந்து மதம் அளிக்கும் ஆன்மீக சுதந்திரத்தின் விளைவாக உள்ளாழ்ந்து ஆன்மீக வழிமுறைகளை, பயிற்சிகளை கண்டு அதை தொடந்து வாழையடிவாழையாக மேம்படுத்திய ஒரு பாரம்பரியத்தின் உன்னத வெளிப்பாடு. பதஞ்சலியின் யோகமுறைகள், தந்திர சாஸ்திரம், அந்த யோக முறைகளின் அடிப்படையில் எழுந்த ஆலய வழிபாடு என்று ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட முறைகள் இந்து மதத்தின் பல்வேறு அங்கங்களாக இருக்கின்றன.

இவற்றிலிருந்து யோகத்தை மட்டும் பிரித்தெடுத்து அதற்கு தனியே வர்ணம் பூசி, அதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்க முற்படுவது அப்பட்டமான அபகரிப்பு. நமது மஞ்சளை, மூலிகைகளை, பல தலைமுறைகளாக பயிற்சி செய்து கண்டுபிடித்த வைத்திய முறைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அபகரித்து, மார்கடிங் செய்து லாபம் ஈட்டி அந்த பொருளாதார வலுவால் பூர்வகுடிகளை அழிப்பதுபோல, சில அந்நிய மதங்கள் உலகெங்கும் பூர்வகுடி மதங்களின் கடவுள்களை, வழிபாட்டு முறைகளை அபகரித்து அந்த அபகரித்த ஆன்மீக முறைகளை தமதாக்கி அவற்றின் மூலமே பூர்வகுடி வழிபாட்டு முறைகளையும் கலாச்சாரங்களையும் அழிக்கின்றன. இந்த அபகரிப்பு முறையின் ஒரு பகுதியே இந்து மதத்திலிருந்து யோகத்தை பிரிக்க முயலும் முயற்சிகள்.

05. திருவள்ளுவர் ஏன் சமணராக இருக்கமுடியாது?

பதில் : இது குறித்து திரு.ஜடாயு, விரிவான பதிலை*நீதி, தர்மம், திருவள்ளுவர்,
சமணம்
* என்ற பதிவில் எழுதியுள்ளார். அதில், இது குறித்து ஜாவா குமார் எழுதி பிரசுரமாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஆதாரபூர்வமான கட்டுரையும் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

06. ஹிந்துத்துவம் என்பது என்ன?

பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.

07. ஹிந்து மதம் எப்போது தோன்றியது?

பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.

08. கடவுள் மேல் பற்றில்லாதவன் ஹிந்துவாக இருக்கமுடியாதா?

பதில் : இருக்கலாம். இந்து மதம் தரும் எல்லையில்லா சுதந்திரத்திற்கு இன்னுமொரு அடையாளம் இது. மற்ற மதங்களில் கடவுள் மற்றும் கடவுளின் தூதராக, மகனாக தங்களை சொல்லி மதத்தை உருவாக்கியவர்களை நம்பாதவர்கள், பற்றாதவர்கள் அந்த மதத்திலிருந்து உடனடியாக வெளியேறிவிடுகிறார்கள். ஆனால், இந்து மதத்தில் அப்படி எந்த தடையும் இல்லை. இயல்பாக இருக்கும் எவரும் இந்துவே.

09. ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.

10. சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?

பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.

11. பாரதி ஒரு இந்துத்துவ தீவிரவாதி என்று ஆகப்பெரிய எழுத்தாளர் ஒருவர் கூற, இன்னொரு எழுத்தாளர் ஆதரிக்கவும் செய்கிறாரே? பாரதி உண்மையில் ஒரு தீவிரவாதியா?

பதில் : இந்துத்துவம் பற்றி மேலே கொடுத்துள்ள விளக்கத்தை படித்தால் இந்த கேள்வியே எழாது. பாரதி தீவிரமானவர். பாரதி உறுதியாக தம்மை இந்துவாக அடையாளம் காட்டிக்கொண்டவர். தொடர்ந்து வரும் யோகிகளின் பரம்பரையில் வந்தவராக தம்மையும் அடையாளப்படுத்திக் கொண்டவர். இந்து சமூகத்தை சீர்படுத்த, மேம்படுத்த இடையறாது சிந்தித்து உழைத்தவர்.

12. இந்து மதத்தில் இருக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும் இடைச்செருகல்கள் என்கிறார்களே? (உ.ம்: திருக்குறள், கீதை, யோகம்) இதை ஒரு வளர்ந்து விட்ட எழுத்தாளர் திருவள்ளுவர் எழுதும்போது அருகிலிருந்து பார்த்தது போலவும், பெரிதும் மதிக்கப்படும் ஆழ்வார் ஒருவரைப் பைத்தியம் என்றும் எழுத,இன்னொரு எழுத்தாளர் ‘ஒரு எழுத்தாளருக்கு எதை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்ல உரிமை இருக்கிறது’ என்றும் கூறுகிறார்களே? அப்படி அவர் எழுதுவதைப் படித்து உள்ளம் கொதித்துக் குமுறும் அன்பர்களின் கூக்குரல்,எழுத்தாளரின் புனைவை விட சகிக்க முடியாத ஒன்று என்றும் எழுத்தாள அன்பர்கள் மனம் நொந்து கொள்கிறார்களே?

பதில் : மேலே பதஞ்சலியோகம் பற்றிய கேள்விக்கான பதிலை பாருங்கள். அதிலேயே இதற்கான பதிலும் இருக்கின்றது.

13. கிருஷ்ணர் ஒரு யாதவ குல அரசன் என்றும், அதை வெளி உலகிற்குத் தெரியாமல் சிதைத்துப் பிற்காலத்தில் மகாபாரதம் என்ற ஒன்றை எழுதி அதில் அவரைக் கடவுளாக்கி விட்டார்களாமே?

பதில் : யாதவ குல அரசன் என்றுதானே மகாபாரதம் தெரிவிக்கிறது?

இது குறித்த கீழ்க்காணும் கட்டுரைகள் பல விஷயங்களை தெளிவுபடுத்தும்:

ஜடாயு – கிருஷ்ணர் கடவுளா, அரசரா?: விகடனில் ஹாய் மதன்
பாமரத்தனம்

அரவிந்தன் நீலகண்டன் – கண்ணன் எனும் தமிழர் கடவுளும் ஆனந்தவிகடனும்

14. புராணங்கள் உண்மையா பொய்யா?

பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.

15. சுவர்க்கம், நரகம் என்பது என்ன?

பதில் : நமது நல்லது கெட்டதற்கு தகுந்தாற்போல், நமது மனம் அனுபவிக்கும் உணர்வுகளே சுவர்க்கம், நரகமாக குறிப்பிடப்படுகின்றன. சஞ்சலப்பட்ட மனம் கனவு நிலையில் துக்கமான விஷயங்களை கண்டு விசனப்படுவது போல, நமது மனோநிலைக்கு தகுந்தவாறு நமது கர்மபலன்களை மனம் நுகர்ந்து மகிழவோ, வருந்தவோ செய்கிறது. இதுவே சுவர்க்கம், நரகம்.

ஆபிரகாமியத்துவத்தின் இந்த சுவர்க்கம் நரகம் திரிந்துபோய், அடியார்களை மிரட்டி தம்மிடமே வைத்துக்கொள்ளவும், எதிராளிகளை மிரட்டி தம் பக்கம் சேர்க்கவும் ஒரு மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்து மதத்தில் அப்படி கிடையாது. நல்லது செய்தால், மகிழ்சியை அனுபவிப்போம். கெட்டது செய்தால் துக்கத்தை அனுபவிப்போம். இதில் ஜாதி – மத பாகுபாடெல்லாம் கிடையாது.

மேலும் இந்து மதத்தில் நிரந்தர சொர்க்கம், நிரந்தர நரகம் கிடையாது. அந்த நிலைகள் Transit Lounges போன்றவையே. நிரந்தரமாக நல்லவர்களும் இல்லை, நிரந்தரமாக கெட்டவர்களும் இல்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு தீயமனிதன் திருந்தலாம் என்பதே இந்துமதம் சொல்வது.

எனவே, சொர்க்கம் அல்லது நரகத்தை நமது கர்மபலன்களுக்கேற்றவாறு நாம் அனுபவித்துவிட்டு மீண்டும் பூமியில் பிறப்போம். பூமி-சொர்க்கம் – நரகம் எல்லாவற்றிலுமிருந்து விடுபடுவதே முக்தி. இதுவே இலக்காக பெரும்பாலான இந்துத்துவ ஆசான்களால் சொல்லப்படுகிறது.

16. புண்ணியம் – பாவம் என்பது என்ன?

பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.

மகாபாரதம் கூறுகிறது –

श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।
परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥

ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் |

ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் ||

“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”

17. தர்மம் என்பது எது?

பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.

18. ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?

பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.

19. நான் ஒரு முஸ்லீம்/கிறிஸ்தவன். என்னால் ஹிந்து மதத்துக்கு மாற முடியுமா?

பதில் : ஓ தாராளமாக. அப்படி மாறிய பல லட்சக்கணக்கானோர் இருக்கின்றனரே. சாகர்களிலிருந்து, ஹூனர்களிலிருந்து ,யவனர்களிலிருந்து, இன்று மதம் மாறும் இஸ்கான்(ISKCON) வெள்ளைக்காரர்கள் வரை எத்தனையோ கோடி நபர்கள் சரித்திரமெங்கும் இந்துக்களாக மாறி இருக்கின்றனர்.

20. சோதிடம் உண்மையா?

பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.

21. “சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?

பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.

22. தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?

பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?

23. ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?

பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.

24. ஜாதிகளைப் பற்றி வரலாறு உண்டா? உண்மையில் ஜாதிகள் எப்படி தோன்றின?

பதில் : இந்து மதத்தின் சகிப்புத்தன்மையின் அடையாளமே ஜாதிகள். பல குழுக்கள் தத்தமது கலாச்சாரங்களை பின்பற்ற முனைகிறபோது இந்து மதம் அந்தக்கலாச்சாரங்களை அழிக்க முயல்வதில்லை. அதனாலேயே ஜாதிகள் எழுந்தன. இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்பது தேவைதானா என்பது நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

25. வர்ணாஸ்ரம தர்மம் என்பது என்ன?

பதில் : வர்ணம் வேறு, ஆசிரமம் வேறு. ஒருவரின் இயல்பு – தேர்வு – விருப்பத்திற்கேற்றவாறு செயல்புரிவது வர்ணம், ஆசிரமம்.

வேதகால சமூகத்தில் இந்த வித்தியாசங்கள் எல்லாம் வெறும் வித்தியாசமான பாதைகளாகவே இருந்தன. உயர்வு தாழ்வு இல்லை. ஒரே குடும்பத்திலிருந்து தமது விருப்பத்திற்கேற்றவாறு பல வர்ணங்களை சார்ந்திருந்தார்கள். ஆன்மீக நாட்டமுடையவன் அந்தணன் ஆனான் என்பதை வேதகாலத்திற்குப் பிறகும் காண்கிறோம். இன்றும் பழைய இந்துமதத்தைப் பின்பற்றும் பாலித்தீவு ஹிந்துக்களிடையே இப்படிப்பட்ட முறையே காணப்படுகிறது. அங்கே வர்ணங்கள் நான்கும் இருந்தாலும், உயர்வு தாழ்வு இல்லை, மணவுறவுக்கு இந்த வர்ணங்கள் தடையாயில்லை.

அதே போல,வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆசிரமங்களை அன்று மனிதர் ஏற்றனர். படிக்கிற காலத்தில் மாணவனாகவும், மணம் புரிந்து பொருளீட்டிய காலத்தில் இல்லறமென்னும் ஆசிரமத்திலும், அதற்குப் பிறகு வனப்பிரஸ்தம் என்ற நாடோடி-சிந்தனையாளன் நிலையிலும், கடைசியாக அனைத்தின் மீதும் உள்ள பற்றைத் துறந்து, துறவறம் மேற்கொள்வன் அதற்குரிய ஆசிரமமான சந்நியாச ஆசிரமத்தை சார்ந்தவனாக காணப்படுகிறான்.

ஆனால், தோற்றங்கள் எப்படி இருந்தாலும் ஜாதிகளைப் போலவே இவையும்(வர்ணம்+ஆசிரமம்) இன்றைய காலகட்டத்தில் தேவையா என்பது நம்மையே நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.

25. ஏழைகள் பசியில் வாட, ஹிந்துக்கள் கோவிலில் மட்டும் நகையாகவும், பணமாகவும் குவிக்கலாமா? கோவில்களுக்கு ஏன் காணிக்கை செலுத்த வேண்டும்? அதனால் பயன் என்ன? அதற்கு பதிலாக கோவில் பணத்தை எல்லாம் எடுத்து ஏழைகளுக்கு உதவினால் என்ன?

பதில் : கோவில்களுக்கு கொடுப்பதைவிட ஏழைகளுக்கு கொடுப்பது சாலச்சிறந்தது. ஆனால், எவருக்குமே கொடுக்காமல் இருப்பதைவிட கோவில்களுக்கு கொடுப்பது மேல். குறைந்த பட்சம், ஒரு சக்தி மேலே இருக்கிறது என்பதையாவது இந்த சுயநலமிகள் ஏற்கின்றனர் இல்லையா.

67 Replies to “இந்து மதம் – கேள்வி பதில்: 1”

  1. எழில் என்பவரின் பதிவில் இதில் சில பதில்கள் இருக்கிறதே? பார்த்தீர்களா?

    https://ezhila.blogspot.com

  2. Dear Sir,
    Please accept my sincere thanks for your valuable service.Which would be helpful for our Tamilians to live moral values which was lived by our ancestors. I wish to give suggested answer for question No.5 (Why do not Thiruvalluvar be a Jain?)

    Answer: I belielve Thiruvalluvar written Thirukkural in the Jain way of life. If Thiruvalluvar considered to be a Jain, There is no contradiction of core Hindu Value if Thiruvalluvar considered to be Jain.

    More commonolities among Hindus and Jains are:
    1. Both believe karma
    2. Both believe God is within us (Advaitha sidhantha)
    3. Both learn and pray Nature
    4. Both believe Yoga and penance

    Prior to analyse, First understand Who is Jain? Particularly (Tamil as mothertongue) about Tamil Jains whom still living in Tamil nadu. Most of the people do not know. Still Temples and Puja are conducted in Tamil Jain temples in TN. Understand from them or their books. Do not simply follow the things written in History.

    Please refer following websites for my belief:

    1. https://www.jainworld.com/JWTamil/jainworld/sripalbooks/(Refer articles: indhavithan yaar? and Thiruvalluvar vazhthum adhibagavan). Note: Jeevabandhu Sripal is the reason for TN government made bill to prevent killing of animals at temple. But withdrawn by present DMK government.

    2. https://www.geocities.com/tamiljain/ (Refer: Tamil essays written by various people)

    3. There is a English book comparing Lord Rishaba (First Jain Thirthankara and Lord Shiva) written by Shri.A.Chakkravarthi Nainar.IES. But I could not recall the book name.

    4. Thirukkaral -Notes preface written by Lat Tamil writer Sujatha.It is generally available from all shops.

    5. Samanamum Thamizhum by Mylapore (Mylai).Sreeni Venkatasami

    6. Thiru.Vi.Ka ‘s books,

  3. வாழ்த்துக்கள்! அப்படியே பதிலும் சொன்னா நிறைய பேருக்கு உதவியா இருக்கும்

  4. அட்டகாசமான கேள்விகள். அருமையான பதில்கள்.

    “இயல்பாக இருப்பவரே ஹிந்து” எனும் விளக்கம் புதுமையாக உள்ளது. மிகச் சரியான விளக்கம் இதுதான் என்று தோன்றுகிறது.

  5. Dear Sir,

    Some meat eating people claim that Plants also have “Unarvu” therefore they also feel pain when they are eaten. Also we eat bacteria in our foods, so we are killing micro organisms. Can you please explain these to me.

    Uthaya.

  6. அன்புள்ள வர்த்தமானன், திருவள்ளுவரை சமணர் என்றாலும் அவரது மைய இந்து மதிப்பீடுகள் மாறப்போவதில்லை என தாங்கள் கூறியுள்ளது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத்தக்கதே. சமணமும் பௌத்தமும் வேத மறுப்பு இருப்பினும் இந்து சமுதாயத்தின் அங்கங்களே என அண்ணல் அம்பேத்கர் கூறியதும் இங்கு நோக்கத்தக்கது. திருவள்ளுவர் கூறுகிற பல கருத்துகளில் வைதீக ஏற்பு உள்ளது என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்கத்திய இந்தியவியலாளர்கள் திருவள்ளுவரின் ஒழுக்க சிந்தனை இந்து-வேத மரபுக்கு புறம்பானது என்றும் எனவே அவர் சமணர் என்றும் செய்த ‘ஆராய்ச்சி’கள் பிரச்சாரங்களின் விளைவாக திருவள்ளுவர் சமணர் என்றும் வைதீக மரபுக்கு எதிரானவர் என்றும் கூறப்படுகிறது. அத்தகைய பிரச்சார ஆராய்ச்சிக்கும் நம்மவர்களும் கூட (எடுத்துக்காட்டு திருவிக) பலியாகியுள்ளனர். எனவேதான் சமணம் வேத நெறிக்கு எதிரானது என இந்த பார்வை சொல்லி ஒரு பிரிவினை ஏற்படுத்துவதாலேயே அத்தகையதோர் சமணராக திருவள்ளுவர் இல்லை அவர் வேதங்களை மதித்தவர் வேதமரபினை தம் இலக்கியத்தில் வெளிப்படுத்தியுள்ளார் என காட்ட வேண்டியுள்ளது. வேதமரபே ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி எனும் போது இளங்கோ அடிகள் ‘நாராயணனை பாடாத நாவென்ன நாவே’ எனும் வரிகளை எழுதும் போது திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் வேத நம்பிக்கையாளர், சமணர் என்பவை இன்றைய சான்றிதழ் பிரிவுகளாகவா இருந்திருக்கும்? பல இந்து மன்னர்களுக்கு ஜைன ராணிகளும் இருந்திருக்கிறார்கள். எல்லோரா குடைவரை கோவில் சைவ மன்னனால் கட்டப்பட்டு அங்கே ஜைன தீர்த்தங்கரர்களை சேர்த்திருக்கிறான். மோதல்களும் இருந்திருக்கலாம். அதனையும் மீறி ஆன்மிக கருத்திணைவு வேத-சமண தர்மங்களுக்கு அமைந்திருக்கின்றன. 1526 இல் பாபர் படையெடுத்த காலம் வரை ராஜபுத்திர வம்சங்கள் மகாவீரர் சிலைகளை வணங்கி வந்துள்ளன. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டே மேலே உள்ள பதில் கூறப்பட்டுள்ளதே தவிர ஒன்றை உயர்த்தி மற்றொன்றை தாழ்த்தும் எண்ணமோ திருவள்ளுவரை எமக்கு மட்டுமே என சொந்தம் கொண்டாடுதலோ இந்த தளத்துக்கு இல்லை.

  7. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

  8. >>>10. சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?
    பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.<<<

    `நமது வழிபாட்டு முறையின் பிரிக்க இயலாத அங்கம்’ என நம் அருள்நூல்கள் சொல்கின்றனவா?

    `சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
    சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்’ (6.98.5)

    `செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
    பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ’ (5.100.2)

    எனத் திருநாவுக்கரசர் பெருமானார் அருளிச்செய்கிறார்.

    மக்கள் செய்வன எல்லாம் சமயக் கொள்கைகள் ஆகா.

  9. திருத்தம்:

    `நமது வழிபாட்டு முறையின் பிரிக்க இயலாத அங்கம் சிறுதெய்வ வழிபாடு’ என நம் அருள்நூல்கள் சொல்கின்றனவா?

  10. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

  11. உஙகளது பதில்கள் மிகவும் அற்புதமாக உள்ளன.

    நன்றிகள், உங்களது அற்புதமான சேவை தொடர வாழ்த்துக்கள்.

  12. ஹிந்து மதம் ஆதியும் அந்தமும் இல்லாதது.இதை யாராலும் அழிக்கமுடியாது. இதை அறியாத சிலர் மதம் மாற்றும் வேலயில் ஈடுபடுகின்றனர். பதவி ஆசை பிடித்த சில அரசியல்வாதிகளும் வோட்டுகளுக்காக இதற்கு துணை போகிறார்கள் என்பதுதான் வருத்தம் கொள்ள வைக்கிறது.தான் பிறந்த மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறுவதும் தன் தாயை காசுக்காக விற்பதும் ஒன்றுதான் என்பது எனது கருத்து.இதற்கு உஙகளது கருத்து என்ன?

  13. lot of hindus converted to muslims and christians in india. how can we prevent this converting? anyone who can interest in this topic contact via my email. i can’t tollerate this forcible convertion.india is a hidus country. even though i’m a srilankan i am unable to tollarate this. specially zakir naik engaging this work. any young man should awake and arise against this.I’m expecting replies soon.

  14. அன்பு நண்பர் அவர்களே,

    எனக்கு ஒரு சந்தேகம்,

    பகவத் கீதையில்,

    அவன் மகாத்மா கானுதற்க்கரியவன். என்று குறிப்பிடபட்டுள்ளதே. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

  15. அன்பு நண்பர் Siddiq அவர்களே,

    “அவன் மகாத்மா கானுதற்க்கரியவன்!”

    கானுதற்க்கரியவன்- rare to see!

    We have 600 crore people (approximately)now in the world!Did any one see the God really?

    Closing the eyes and assuming that God is with us is different – seeing the God actually is different- Right?

    In the world history,only very few people claimed that they have seen or realised or listen to the God. People like Abrahaam, Moses, David, Jesus, Mohammed (PBUH), Arjunan, Adi Shankara, Ramakrishna, Veivekaananthaa… and quiet a few others only claimed to have seen or realised the God.

    All other people ,more than 5000 crores of people (approximately) born so far could not able to see or realise God in any form- Right ?

    could not able to see or realise God in any form- rare to see- கானுதற்க்கரியவன்!- Sarithaane?

    What is your doubt in this?

  16. // கீதையில்,

    அவன் மகாத்மா கானுதற்க்கரியவன். என்று குறிப்பிடபட்டுள்ளதே. இதை பற்றி உங்கள் கருத்து என்ன? //

    அன்புள்ள சாதிக், முதலில் கீதையில் ஒரு சுலோகத்தில் இருந்து கால்பங்கு மேற்கோளை உருவி அதை வைத்து கேள்வி கேட்பது என்பதே சரியானதல்ல. கீதை ஒரு முழுமையான தத்துவ விவாதம், ஞான நூல், யோக சாஸ்திரம், உபநிஷதம். உதிரிப் பொன்மொழித் தொகுப்பு அல்ல – அதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    திருச்சி சார், நீங்களும் அதற்கு ஏதோ உங்கள் போக்கில் பதில் சொல்கிறீர்கள்.

    இந்த வாசகம் “வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:” என்ற சுலோகத்தின் பகுதி.

    ”உயிர்கள் அனைத்தும் வாசுதேவனே என்ற உணர்வுடன் ஒழுகும் மகாத்மா காணுதற்கரியவன்” என்பது பொருள். இது இறைவனைக் குறிக்கவில்லை, மனிதனைக் குறிக்கிறது. உண்மை பக்தனின் இலக்கணங்களைக் குறிப்பிடும் பகுதியில் வருகிறது ! ”எங்கெங்கே நோக்கிடினும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் அங்கங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே” என்ற தாயுமானவர் பாடலின் ஆதி நாதம் இந்த கீதை மொழி.

    மற்றபடி, நம் அருளாளர்கள் அனைவரும் இறைவனைக் கண்டதாகவே சொல்லியிருக்கின்றார்கள்..

    அர்ஜுனன் கீதோபதேசத்தின்போது விசுவரூப தரிசனம் கண்டான்.
    ”கண்ணால் யானும் கண்டேன் காண்க” என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.
    ”அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்கிறார் ஆழ்வார்.

    சித்திக், உங்களுடையது “சந்தேகம்” தானா என்று எனக்குச் சந்தேகம் வருகிறது. அது குழப்பும் நோக்கத்துடன் எடுத்துவிடப் பட்ட சரடு, சரிதானே? :))

  17. Jattayji,

    Your clarifications are correct. Its a clear and precise clarification.

    In a hurry, I did not refer the original text!

    I appreciate your Brilliance.

    I will be careful in the future!

  18. Siddiq merely voimits what is preached in mosques. They have this misconception that everything in Hinduism is similar to Islam and these have been corrupted by humans whereas in Islam they are kept in pristine form. This bullshit theory has been propagated by mohammed and is repeated by such fools who neither has real interest in reading the Hindu scriptures in toto nor has the patience to understand what the Hindu Saints say in repect of these.

    Learned hindu scholars like Jataayu should write and counter the likes of Dr.Zakir Naik (another islamic joker). Counter their propaganda and publish a series in this site, do it in english as it will then reach a wider audience.

    (Comment edited and published – Tamihindu Editorial Team.)

  19. If you analyse Tirukkural, you will hear the voice of Manu and his Smruti.
    Hence, Considering Tiruvalluvar a Jain may NOT be correct.

    For some other’s question on the contention that vegetarian food:
    Living beings with brains will only experience pain through loose nerves spread all over the body and when any part odf the body is subjected to pain, the loose nerves send the mesage of pain to the brain. Anyone put under anesthesia does not experience pain at the time of causing pain because nerves become sesneles during the effect of anasthesia. Since plants do not possess brains and loose nerves, they do not feel any pain. They, however, have a certain kind of the feel of being. All these facts are results of scientific experiments.

    There is no such thing as non-violence. It is a myth. Only minimum violence is possible. The whole cycle of life thrives on violence only, though at various degrees. This is the reason that all manifestations of Godliness according to Hindu ethos appear with weapons.

    MALARMANNAN

  20. If we go deep into the practice of demigod worship, you will know they were all once lived in flesh and blood and died either for a cause or innocently. That is why it was NOT encouraged NOTE: NOT condemned). Our Vanavasis worship their forefathers, treating them as Gods. However, whether vanavasis OR worshippers of demigods are none other than Hindus, their worship is not a taboo.
    MALARMANNAN

  21. God only created heaven and earth and all things in the world but your hindu religion why people making so many idol gods, by their own choice and design. God is creater but in your religion you people making God.if you want to konw only god read bible and obey to God.

  22. In fact, Abrahamic religions give shape and figure of the Big Brother sitting on judgement ( And the followers of Abrahamic religions blame Hindus as worshiping God in different figures!). When God is the creator, God can also take the favourite figure/shape to please the person who visualises God according to his/her choice and temperament ardently. That is why a Hindu has the liberty to visualise God in his/her own way, according to personal preference.

    SRI J R KUMAR, DO YOU THINK GOD CANNOT TAKE ANY SHAPE OR FIGURE? IS GOD SO INCAPABLE? IS HE JUST AN OLD HAG SITTING SOMEWHERE WATCHING YOU SECRETLY? IF YOU THINK SO, THEN YOU ARE ONLY DENIGRATING ALL POWERFUL, OMNIPOTENT, OMNIPRESENT GOD! A HINDU IS AWARE GOD CAN BE VISUALISED IN ANY FORM ACCORDING TO ONE’S LIKING AND GOD CAN BE REALISED IN THAT VISUALISED FORM BECAUSE GOD CAN TAKE ANY SHAPE OR FIGURE! HE IS NOT INCAPABLE AS AN ABRAHAMIC THINKS!
    for a Hindu, God is not some where far away. God is in you, in the other and also in the middle that is in between, which you think vaccum. For a Hindu, God is NOT jealous. God will NOT punish if you do NOT worship. Because you worship for your sake; NOT for the sake of God. A Hindu knows God will not be offended if visualised in any form. Because a Hindu knows God the Master Creator can take any shape, any figure, any time and treat all animate and inanimate creations of His/Her are same, as for God. God can come as a baby, as companian, as mother, as fahter, as friend, as guide, as a plant, as an animal depending on the preference made by the person who sought Him/Her. Bible, both old and new are lyrical, poetic, interesting to read. Some lines are very powerful. Solomon’s verses are beautiful. But SORRY, divinity, spriritual in depth is missing. The New Testament has some good portions such as Sermon on The Mount. But the Christian theology is elementary; has no provision for deep philosophical exercise. It is limited to Dos and Don’ts. And its concept that all are born sinners is self defeating. There is no scope for spiritual advancement in it. That is why it has lost its command over modern societies of North Amricas and Europe. And for survival, Christianity is targeting developing countries. Persons like Sri J R Kumar should update their general knowledge, use the brains GOD has given him very kindly. Talking like withered grannies even today will NOT convince probing minds of the modern age.

    MALARMANNAN

  23. Could you kindly explain as to when& where the word/name HINDU appeared first in which scripture. Whether it really means a cult/religion or a name of a religion/cult. Why is so called?

  24. இந்துக்கள் பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

  25. //Could you kindly explain as to when & where the word/name HINDU appeared first in which scripture. Whether it really means a cult/religion or a name of a religion/cult. Why is so called? – S. Ramalingam//

    I would like to suggest Sri Ramalingam to read the book ‘Hindutva,’
    authored by Sri V D Sawarkar, published by Hindi Sahitya Sadan, 2 B. D. Chambers, # 10/54 Desh Bandhu Gupta Road, Karolbagh, New Delhi 110 005.
    Price Rs. 40/- + for handling and shipping Rs.20/- (for domestic service). He can get all his doubts about the name Hindu cleared from this 141-page book.

    Is it not wise to acquire knowledge from some authoritative scholars than collecting information from different people on these columns? In his book, the learned Sri Savarkarji gives reference from various sources for the term Hindu. He also puts forth a new theory that Hindu could be the original name of the land and its people, their culture and traditon; it got changed to Sindhu later. He substantiates also to this theory.
    MALARMANNAN

  26. Respected Malarmannanji,

    The online book Hindutva by Savarkarji answers many questions.

    But, Sri. Ramalingamji’s question is about the book that first mentioned the word “Hindu”, which is not answered by Savarkarji’s book.

  27. Dear Sri Kalimigu Ganapathi,
    In his book Hindutva, Sri Sawarkarji has stated that the term Hindu is mentioned in Bhavishya Puranam. Kindly check the last line of his quote that reads Hapta Hindu from Bhavishya Puranam.
    Affly.,
    Malarmannan

  28. Respected Malarmannan ji,

    Thanks for notifying it.

    Savarkar ji’s Hindutva books is available online at: https://www.hindusarise.com

    When I searched, I did find that Savarkar ji informs that Bhavishya puran mentioning the origins of the word Hindu.

    But, in the same book, Savarkar ji seems to be vary of quoting it. He does not rule out the possibility of inaccuracies in Bhavishya puran, and by doing so, makes us be ready to change our understanding with later reliable updates.

    In that book Saavarkar ji says:

    The verses from Bhavishyapuran quoted above seem to be quite trustworthy so far as their general purport is concerned: Firstly because they record a general tradition that, unlike dates or individual successions, can easily be remembered longer. Secondly, independently of that, the general trend of our history as shown points to some such state of affairs. Thirdly, it is not necessary here for our arguments to be very precise either about the date of this Decree or even the king by whom it was issued.

    How careful researcher he is. Later researchers prove his suspicions true. There is this site that confirms that though the purana is certainly bona fide as far as the recognition of it as one of the important puranas, the content and accuracies of the purana is highly unreliable due to evangelical interference. Shlokas in the purana inform that there was a person called….WHAT?… Jesus !!

    JESUS !! Jesus?

    We know that Jesus is a historical lie equal only to the existence of Satan.

    The author clearly disprove the authenticity of Bhavishya puran at the site: https://www.gosai.com/krishna-talk/58-jesus-in-the-vedas.html

    Interestingly, some web sources, including Wikipedia, say that it is Raja Ram Mohan Roy who first introduced the term:

    https://www.freeindia.org/biographies/greatpersonalities/roy/index.htm

    https://en.wikipedia.org/wiki/Ram_Mohan_Roy

    Sadly, these sources do not mention in which book Raja Rammohan Roy ji first refers it, or from where he has taken this word and why.

    As most of the reference material in Savarkarji’s book are corrupted by evangelical forces, I assume that we have to tread the book carefully, and take only the material directly relevant to the purpose of his book; as he wants us to do.

  29. Thiru Malarmannan avargale,
    Thank you for having clarified me with great interest
    I will,surely, be contacting you after going through the book mentiond by you. All along I have been under the impression created by the famous historians that the word Hindu is derived from Sindu. Then why the Hindu scholars are keeping quiet and also accepting whatever the historians propagate through their research books referred by Universities all over India.

  30. Dear Sri Ramalingam,
    In Samascrutam, the word Sindhu means waterbody only. That is why it is mentioned Sapta Sindhu that is Seven Waterbodies, NOT just Sindhu the proper noun of one river. In spoken languages, pronunciation of S changes to H in course of time and that Sindhu has become Hindu. And Sapta turns Hapta. This happens in foreign languages such as Persian and Latin/Greek also. This is the reason the assumption that the word Hindu has derived from Sindhu is not disputed. However, the word Sindhu is NOT given by others but belongs to our own language that is Samascrutam and if it has changed into Hindu in our own spoken languages, there need not be any issues over it. There is no dispute that Hindu faith and culture is assimilation of variuos faiths and cultures born on our soil that is Hindustan.

    MALARMANNAN

  31. I am very happy, Sri Kalimigu Ganapathi, to note your precaution. YES, you are right but in case of Hindu, there is no need of any alien interest to insert it. All our scriptures and epics are very old and subjected to many interpolations, cahnges etc. In the circumstances, I think we need NOT waste our time in wondering as to whether the word Hindu was given by others to us or where was it first mentioned in our scriptures. I have tried to convince Sri Ramalingam also in this regard in my subsequent reply. You may read that also and I hope you will agree with me. Afterall, what is in a name? A Rose is a Rose is a Rsoe! Hindu is a univerasally understood name and we need NOT make it an issue!

    MALARMANNAN

  32. I read Sri Sawarakrji’s Hindutva many years ago. Likewise, I studied our scriptures long long ago! Also, I am a layman with very limited intellct to discuss on such intricate topics. I just share what I have understood and I do NOT claim that I am right. I am also very flexible to change my views if convinced. Personally speaking, my priorities, as most of you know, is to work for the interests of Hindu society. Aware of my limitations, I keep of from intellectual excercises. Honest!
    MALARMANNAN

  33. Malarmannan ji,

    We are grand children sitting by you with gaped mouth listening to your beautiful experiences and knowledge. Your response here also teach us to remain open like you.

    My response is due to a burst of interest in knowing the origin of the word, which as you have correctly said is a curiosity satisfying than cruelty sabotaging, which is the need of the hour.

    And you inspire us in that very important work.

    Bless us to have your vigor and maintain our rational mind.

  34. Thank you, Sri Kalimigu Ganapathi, for the kind words. Of all our puranams, Bhavishya had to undergo severe onslaught by alien rogues, with the tacit coopeartion from local learned (!)rogues, since it deals with the future course and gives ample scope to insert/interpolate according to one’s interest. However, Bhavishya Puranam cannot be totally rejected as a cooked one. It is very easy to identify, as to which one could be interpolation from the style and usage of words. All you need is patience and experience in ancient system of presentation. It is the job of linguists with very good indepth study of Samascrutam.

    My elder sister (Smt Vijaya Sankaranarayanan wtih Sri Aurobindo Ashram background) is a scholar in Samascrutam, who has translated Rig Veda into English and many other scriptures such as Sri Vidya. She studied Samascrutasm from Sri Kapali Satriji. And she says the word Hindu has the origin from our own soil only. I can trouble her to find the source if you are very particular about this!

    MALARMANNAN

    MALARMANNAN

  35. Respected Malarmannanji,

    Your “elder” sister. Now, I am getting jealous of your family.

    Please do not trouble the elderly lady for my sake. But, in course of any future interaction, if the answer is received, please let the tamil hindu readers know.

    Very kind of you.

  36. வணக்கம்,

    மிகவும் பயனுள்ள பதிவு இட்டுள்ளனர் ஆசிரியர் குழுவினர்.

    ஒரு சிறு சந்தேகம் எனது மனதில்.

    இன்று பெரும்பாலும் மக்கள் நினைப்பது என்னெவெனில், எந்த கடவுளை கும்பிட்டாலும் அந்த பக்தனின் தேவைகளை அது சாத்தியமல்ல எனினும் அதை கடவுள் நிறைவேற்றித் தர வேண்டும் என்பது போலவும், இல்லையெனில் அப்புறம் எதுக்கு சாமி, என்பதாகவும் இருக்கிறது என்பது நான் பலரின் நடவடிக்கைகளில் கண்ட உண்மை. ஆனால் நாம், ” நீ இதை நிறைவேற்றினால் நான் உனக்கு அதைசெய்வேன்” என்பது போல் கடவுளிடம் வேண்டுவது அவரிடம் வியாபாரம் பேசுவது போலான செயல்.

    இதை சிலரிடம் கூறினால் அதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். நாம் கடவுளை தினமும் வழிபாடு செய்வது என்பது வேண்டுதல் என்ற போர்வையில் வியாபாரம் பேச அல்ல இப்பிறப்பின் கர்மாக்களை களைந்து இறைவனின் திருவடிகளில் முக்தி பெற நாம் அவரை நெருங்கும் முன்னேற்றப் பாதை என்பது எனது கருத்து.

    நமது முன்னோர்கள் தமது சுய காரணங்களுக்காக இறைவனிடம் வேண்டியுள்ளனரா? ஒருவகையில் இந்த பழக்கம் அந்நியரின் வருகைக்குப் பின் வந்தது என்பது எனது சந்தேகம். இது பற்றி ஆசிரியர் குழுவின் கருத்து என்ன என்பதை அறிய ஆவல்.

    இன்னொன்று எனக்கு மனவருத்தம் தரும் விஷயம் என்னவெனில் இன்றும் நாம் வழியில் எதாகிலும் கோவில்களை காணும் பொழுது அங்கே வணங்கிவிட்டு செல்லுவது வழக்கம், ஆனால் பலர் அப்படி வணங்குதலுக்கு பதில் நெஞ்சையும் நெற்றியையும் ஒரு கையால் தொட்டு இச் என்று பெரிதாக சத்தம் வரும் வகையில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு செல்கிறார்கள், இது நமது மரபு அல்ல, எனவே ஆலயங்களில் வணங்கும் முறைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

  37. வணக்கம்,
    மன்னிக்கவும், ஒரு சிறு பிழை
    இங்கே முருகன் படத்திற்கு அருகே புதியது பகுதியில் சூர சம்ஹார ”’வாழ்த்துக்கள் ”’ என்பதற்கு பதில் ”வாத்துக்கள்” என பதிவாகியுள்ளது. திருத்திக் கொள்ளவும். நன்றி.

  38. அதுவும் சரிதான்,வாத்துக்கள் எப்படி சூரசம்ஹாரம் செய்யும்..?

  39. //ஹிந்து மதம் ஆதியும் அந்தமும் இல்லாதது.இதை யாராலும் அழிக்கமுடியாது. இதை அறியாத சிலர் மதம் மாற்றும் வேலயில் ஈடுபடுகின்றனர். பதவி ஆசை பிடித்த சில அரசியல்வாதிகளும் வோட்டுகளுக்காக இதற்கு துணை போகிறார்கள் என்பதுதான் வருத்தம் கொள்ள வைக்கிறது.தான் பிறந்த மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறுவதும் தன் தாயை காசுக்காக விற்பதும் ஒன்றுதான் என்பது எனது கருத்து.இதற்கு உஙகளது கருத்து என்ன?//
    friend KAVINATH good comment………..

  40. ஹிந்து மஹா சமுத்திரத்தில் மற்ற அனைத்து (மத) ஆறுகளும் கலக்கத் தான் போகின்றன

  41. இந்த வெப்சைட் -ல் கேள்வி கேட்பது எப்படி வழி சொல்லுங்கள் .

  42. // இந்த வெப்சைட் -ல் கேள்வி கேட்பது எப்படி வழி சொல்லுங்கள் //

    ”தொடர்பு கொள்ள” என்ற பகுதியில் குறிப்பிட்டுள்ள படி tamizh.hindu @ gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யலாம்.

  43. 09. ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

    ஹிந்து கொள்கையில் கடவுள் ஒருவரே. பழங்காலத்து கோவில்களின் வாயிலில் துவார பாலகர் இருக்கும். ஒன்று ஒரு விரலை சுட்டி காடும். இது சொல்வது கடவுள் ஒருவரே. இன்னொரு பாலகர் கையை விரித்து காட்டும். இது சொல்வது ஒன்றை தவிர வேறு எதுவும் இல்லை. கடவுள் ஒருவரே. அவன் பல வேலைகளை செய்யும்போது பல விதங்களில் காணப்டுகிறான். படைத்தல் பிரம்மா, காத்தல் விஷ்ணு, அழித்தல் சிவன். ஆக இறைவன் ஒருவனே. இறைவனே பிரம்மா, இறைவனே விஷ்ணு, இறைவனே சிவன். இதை தான்

    கிருஷ்ணன் பகவத் கீதையில் சொல்கிறான். நாம் நமக்கு பிடித்தாற்போல இறைவனை பல்வேறு உருவங்களில் வழிபடுகிறோம். நாம் பல்வேறு உருவங்களில் வழிபடுவதினால் மட்டுமே இறைவன் பலர் என்று சொல்ல முடியாது. இறைவன் ஒருவனே. இதை தான் வேதம் சொல்கிறது “ஏகம் பர பிரம்மம்”.

    மேலும் அறிய படிக்க வேண்டிய புத்தகம்

    சமய களஞ்கியம் – கஞ்சி பெரியவர் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்)

    வாரியார் வாக்கு – வாரியார்

  44. மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது? _ Great Line

  45. சிறு தெய்வ வழிபாடு பற்றிய அதிக விளக்கம் தேவை. காவல் தெய்வம் எனக்கருதும் முனியாண்டி,முனிஸ்வரர் போன்றோர் தெய்வமா? அவர்கள் பூமியில் பிறந்து இறந்தவர்கள் ஆயிற்றே, அப்படி இருக்க எப்படி தெய்வம் எனக் கருதுவது? ஆதி பரம்பொருள் பிறப்பு மற்றும் இறப்புக்கு அப்பார்ட்பட்டது ஆயிற்றே.
    -நரேந்திரன், மலேசியா

  46. தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?

    பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?
    ஆனால், இறைவன் நம்மை எப்பொழுதும் வற்புறுத்தியது இல்லை, நமது சமயம் அன்பு சமயம், அன்பே சிவம், அறிவார்ந்த சமயம், செய்யும்முன் ஏன் செய்கிறோம் என்று தெரிந்து செய்ய வேண்டும். நாவடக்கை உணர்த்தவே அலகு குத்தப்படுகிறது. ஆனால் இன்றோ ஆணவத்தை காட்டவே ஒருனை விட இன்னொருவன் பெரிதாக அலகு குத்துகிறான். மற்றபடி தெய்வத்தை நினைத்தப்படி பால்குடமோ அபிஷேக பொருட்களையோ சுமந்து செல்வது தவறில்லை. உடலை வருதிக்கொள்ளலாம் ஆனால், இறைவன் கொடுத்த இந்த உடலை ஊசிகளால் துளைக்கவோ காயப்படுத்தவோ நமக்கு உரிமை இல்லை. செய்யும் வேண்டுதல்களை அளவோடு, அடக்கத்தோடு, அமைதியோடு, பக்தியுடன், செய்யாமல் காட்டுமிராண்டிப்போல கத்திக்கொண்டு ஏன் செய்ய வீண்டும்? இது நம் மதத்தை நாமே இழிவு படுத்தல் ஆகும். மற்ற மதத்தினர் இதற்கு விளக்கம் கேட்டால் நமக்கு சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.வேண்டுதல் என்று சொல்லி தட்டிக்கலிக்கக்கூடாது ஏனெனில், ஒவ்வொரு காரியத்திற்கும் நமது சமையத்தில் காரணம் உள்ளது. சுயமாகவே ஒரு வேண்டுதலை நினைத்து செய்தல் கூடாது. இறைவனை அடைய ஒரே வழி பக்தி மட்டுமே…… அன்பான வழியில் அதை காட்டுங்கள். வேண்டுதல் செய்யும்போது மற்றவர் நம்மை பார்க்கும்போது பக்தி வர வேண்டுமே தவிர பயம் வரக்கூடாது.
    -நரேந்திரன், மலேசியா

  47. உருவ வழிபாடு என்பது ஏதோ ஹிந்து மதத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பது போன்ற ஒரு மாயையை மற்றவர்கள் ஏற்படுத்தி உள்ளனர்
    ஏன் ,சிலுவையும் ,மெக்காவில் உள்ள ,முஸ்லிம்கள் வணங்கும் சுவரும் உருவம் இல்லையா ?
    அப்போது ஏசுவின், மேரியின் படங்கள் எதற்கு ?

    அப்படியே இருந்தாலும் உருவ வழிபாடு தவறு என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது?
    நமது ஹிந்து மதத்தில் உருவ வழிபாடுதான் வேண்டும் என்று சொல்லப்படவில்லை
    அதனால்தான் ‘ஏகம் சத் ,விப்ரஹா பஹுத பஹுதா வதந்தி ‘-அதாவது ‘உண்மை ஒன்றுதான் அதை மக்கள் பலவிதமாக வெளிப்படுத்துகின்றனர்’ . இதைவிட ஒரு சிறந்த விளக்கம் கூற முடியுமா?
    இராமலிங்க வள்ளலார் போன்றவர்கள் அருவ வழிபாட்டையும் நமக்குக் கட்டிச் சென்றுள்ளனர்
    இதுதான் ஹிந்து மதத்தில் உள்ள மிகச் சிறந்த தனி மனித சுதந்திரம்
    இது எப்படி ஒரு குறையாகும் ?

    சுவாமி விவேகனந்தர் ராஜபுதனத்தில் உள்ள கேத்ரி என்ற சமஸ்தானத்துக்குச் சென்றார்
    அப்போது அந்த சமஸ்தானத்து ராஜாவுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்
    பேச்சுக்கு இடையே உருவ வழிபாடு பற்றி பேச்சு வந்தது .
    ராஜா உருவ வழிபாடு தவறானது என்றார்
    உடனே விவேகானந்தர் ராஜாவை அவரது தந்தையாரின் ஓவியம் ஒன்றை எடுத்து வரச் சொன்னார்
    அவரும் அவ்வாறே எடுத்து வரச் செய்தார்
    பிறகு விவேகானந்தர் அவரை அதன் மீது எச்சில் உமிழச் சொன்னார்
    ராஜா அதிர்ந்து விட்டார் .’ஐயோ இது என் தகப்பனார் உருவம் அல்லவா ? அதன் மீது எச்சில் உமிழ்வது எப்படித் தகும்’ என்று கேட்டார்

    விவேகானந்தர் ‘ஆம் ,அது போலதான் ,இது வெறும் ஓவியம் என்றாலும் நீங்கள் அதில் உங்கள் தந்தையைப் பார்க்கின்றீர்கள். அது போலத்தான் ஹிந்துக்கள் உருவங்களில் கடவுளைப் பார்க்கின்றனர் ‘ என்றார்
    ராஜாவும் அது சரியே என்று ஒப்புக் கொண்டார்

    இரா.ஸ்ரீதரன்

  48. உலகத்தில் எத்தனை மதங்கள் இருந்தாலும் இந்து மதத்தின் கீதைகு ஈடு இல்லை .இன்று புதுமைகளை முற்காலத்தில் ராமாயணம், பகவத்கீதை, மகாபாரதம் ,திருக்குறள்,போன்ற சிறந்த புராணங்கள் முலம் மக்களுக்கு கூறியது இந்து மதம்

  49. மிக அருமையான விளக்கங்கள். பாராட்டுக்கள் என்ற சொல்லிவிட நன்றி என்ற சொல்லுடன் என் எண்ணத்தினைக் கூறத்தொடங்குவது பொருத்தமானதாகும்.

    1.கேள்வி ௦07 லிருந்து தொடங்கி இந்து என்பவன் யார் என்பதை விளக்கியிருக்கும் விதமும் உள்ளடக்கமும் அருமை.

    2. கேள்வி 02 இல் ஸ்ருதிக்கும் ஸ்மிருதிக்கும் கொடுத்திருக்கும் விளக்கங்களில் நான் கொஞ்சம் தலையிட விரும்புகிறேன்.
    என் கருத்துப்படி சுருதி என்றால் கேட்டுத்தெரிந்து வந்தவை. ஸ்ம்ருதி என்றால் மனதில் நின்று தெரிந்து வந்தவை. எழுத்து இல்லாத காலத்தில் ‘படித்து’ தெரிந்து வந்தவை இருந்திருக்க முடியாது. இல்லையென்றால் பாடம் என்ற தொகுதியோடு இன்னொரு பகுதி வந்திருக்கலாம். அப்படி வருவதென்றாலும் அது வேத காலத்தில் ஏற்ப்பட்டிருக்க முடியாது. இன்று கூட ஒரு பேரறிஞர் சொன்னதை மற்றவர் சொல்லக்கேட்டு புகழ்ந்து வழிபட்டால் கூட இன்னொருவர் சொன்னதாகக் கூறுகிறோம். நிறைய இடங்களில் ஜான்சன் சொன்னதை அண்ணா சொன்னதாகக் கூறுகிறோம். ஜான்சனே சொன்னாரா என்பது இன்னொரு பக்கம். ஸ்ருதிகளில் கூட இந்த ஆபத்துக்கள் ஏற்பட்டிருக்கலாம். வேண்டுமென்றே என்று இல்லாவிட்டால்கூட தற்செயலாக முழு நம்பிக்கையுடன் கூட ஏற்பட்டிருக்கலாம். பைபிளில்கூட சரை அப்ரம் என்ற தம்பதியினர் பின் பகுதிகளில் சாரா ஆபிரகாம் என்று திருத்தி அமைத்து அதற்குக் காரணமும் எழுதப்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளும் இங்குள்ள ஸ்ருதிகளுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
    ஸ்ம்ருதிகள் பார்த்தவைகளை நினைவில் நிறுத்தி சொல்லப்பட்டு பிற்காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். இந்தக் காரணத்தால் இவைகளின் வலு அதிகம் என்றே நினைக்கின்றேன். இவை என் எண்ணங்கள். துளியும் ஆராய்ச்சி வயப்பட்டதல்ல.
    கேள்வி 03 இல் வேத வியசரைப்பற்றிக் கூறியிருப்பது மிகவும் அருமை. இதிகாசம் என்பது சமகாலத்தில் வாழ்ந்தவர் எழுதுவது என்று எங்கோ படித்திருக்கிறேன். ஒரே பத்திரிகையில் எத்தனை ஆசிரியர்கள் மாறினாலும் எடிட்டர் எழுதுவதுதான் எடிட்டோரியல் என்பதுபோல் சம காலத்தில் எழுதியவர்கள் எல்லாருமே வியசர்களாக இருந்திருக்கலாம். வள்ளுவரைப்பற்றியும் அவ்வயாரைப்பற்றியும் இத்தகைய விவாதங்கள் நடந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மகாபாரதத்தில் கூட எங்காவது வியாசரால் தோற்றுவிக்கப்பட்ட ஒருவர் என்று எவரையேனும் குறிப்பிட்டிருந்தால் அது கற்பனை பாத்திரம் என்று கொள்ள வேண்டுமேயன்றி வியாசர் தம் மந்திர சக்திகளால் தோற்றுவித்தார் என்று கொள்ளுதல் பொருந்தாது.
    இந்த அல்லது இத்தகைய அவைகளுக்கு நான் முற்றிலும் புதியவன். இதன் காரணமாகவும் உளறல்கள் இருப்பின் பொருத்தருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
    வி எஸ்

  50. You have taken a bold step to answer questions regarding hindu religion. My congrats. to you. Regarding hindu Gods in my opinion there is a misconception. Hindu faith acknowledged only god. All others are all deities who appeared as an avatar for a specific purpose. We have new avatars in Satya Sai Baba, Mata Amrithananda Mayi, and many more. In Tamil Nad, they had constructed temples even for their favorite film stars.
    The Upanishads contain discussion between a guru and a shishya about the ultimate truth, truth about God. This ultimate truth is what is known as God. Isavasya Upanishad explains God as “Isa vasyam idam sarvam…” God is what we see all around us, the whole universe. It includes the entire solar system, sky, stars etc. He resides in the smallest of the small and the largest of the large. In Kathopanishad, the young boy Nachikethas went in search of truth to the god of death, Yama. Similarly, rishis like Yagnavalkya explained to their disciples the basics about the ultimate truth. In Brihatharanyaka Upanishad his theories are explained. Hindu God does not have a form, it is just a concept. God resides in every human being in their mind. “Aham Brahmasmi” (I am Bhahmam) Guru explained to his disciples who evinced interest and doubts about the ultimate truth “Ta twam Asi” (It is you). In Sabarimalai there is a huge neon sign board “Ta twam asi”. It is just to remind the devotee who comes after 41 days of very serious penance, to the hill, climbing the most arduous passage full of thorns and stones that the god he has come in search of is nowhere but within him. The very concept of Ayyappa is based on this philosophy that every devotee will become ayyappa during the days of penance.
    There cannot be a better method of worshiping God than help a fellow being. To feed a hungry stomach is the best form of worship. To lead a life without hurting a fellow being is the most righteous life. Thirumoolar in Thirumandiram has mentioned about the truth. Of course Thirukkural gives the definition of dharmam in Arathu pal.
    This is what I feel about God.

  51. ஆராய்ச்சியாளர்கள், வியாசர் எழுதிய பாரதவும் பாகவதவும் மற்று நூல்களும் பிற்காலத்தில் இதற்க்கு விளக்கவுரை கூறினவர்கள் அவர்களுடைய் இஷடத்திற்கு தகுந்த மாதிரி மாற்றிவிட்டார்கள் என்று கூறுகின்றார்கள். ஆதி சங்கரர் எழுதிய பல கிருதிகளும் அவருடைய பெயரை சொல்லி வேறே யாரோ எழுதியது என்றும் சொல்லப்படுகின்றது. சங்கராச்சார்யா பரம்பரையில் யார் எழுதியாலும் அந்த கிருதிக்கு சங்கராச்சர்யருடைய பெயர் தானே வைக்கமுடியும். இந்த விஷயத்தில் கேரளாவில் பல அபிப்ராயங்களும் உள்ளன. அதில் எது சரி எது தப்பு என்று சொல்ல முடியாது.

  52. திருவள்ளுவர் ஹிந்து என்பதற்கு திருக்குறளில் பல ஆதாரங்கள் உள்ளது. இன்னும் அவர் கிருத்துவனு சொன்னாலும் சொல்லுவாங்க போலருக்கு . நீதி என்ன்பது சாமனர்களுக்கு மட்டுமே உரியதா என்ன ஒவ்வொரு மனிதனுக்கும் மதத்திற்கும் உரியது .

  53. உண்மை வந்தது பொய்கள் அழிந்தது, பொய்கள் அழிந்தே தீரும்………………………………

    ஹிந்து நண்பர்களே………………………………

    அன்பான ஒரு கேள்வி????????????

    ஹிந்து மதத்தில் பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வாறு தன் உடம்பை மறைக்க வேண்டும்? பெண்கள் தன் அழகை கனவனை தவிர்ந்த ஏனைய ஆண்களுக்கு காட்டலாமா? இது போன்ற கேள்விக்கு பதில்கள் ஹிந்து மத நூள்களில் காணப்படுகிறதா? இருந்தால் கட்டாயம் இலக்கங்களை குறித்து காட்டவும்.

  54. //…ஹிந்து மதத்தில் பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வாறு தன் உடம்பை மறைக்க வேண்டும்? பெண்கள் தன் அழகை கனவனை தவிர்ந்த ஏனைய ஆண்களுக்கு காட்டலாமா? இது போன்ற கேள்விக்கு பதில்கள் ஹிந்து மத நூள்களில் காணப்படுகிறதா? இருந்தால் கட்டாயம் இலக்கங்களை குறித்து காட்டவும்…//

    Rifa,

    தங்களை எப்படி சமூகத்தில் நடத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவு இந்துப் பெண்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. இயல்பான சிறப்பே இயல்பாகி விடுகிறது. பூவை ரசிப்பதற்கும், புன்னகையை விகசிப்பதற்கும் புத்தகங்கள் தேவையில்லை. அவர்கள் பர்தா அணிந்த டேப் ரெக்கார்டுகள் இல்லை. ரெக்கார்டுகளை உருவாக்கும் மின்சார சக்திகள்.

  55. சிறு தெய்வ வழிபாட்டை ஹிந்து மதம் ஏற்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு ஆம் என்று பதில் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு சில நண்பர்கள் சில வினாக்களையும் எழுப்பியிருக்கிறார்கள்.
    அவை இங்கே
    -நரேந்திரன், மலேசியா
    “சிறு தெய்வ வழிபாடு பற்றிய அதிக விளக்கம் தேவை. காவல் தெய்வம் எனக்கருதும் முனியாண்டி, முனிஸ்வரர் போன்றோர் தெய்வமா? அவர்கள் பூமியில் பிறந்து இறந்தவர்கள் ஆயிற்றே, அப்படி இருக்க எப்படி தெய்வம் எனக் கருதுவது? ஆதி பரம்பொருள் பிறப்பு மற்றும் இறப்புக்கு அப்பார்ட்பட்டது ஆயிற்றே”.
    அ. நம்பி
    மக்கள் செய்வன எல்லாம் சமயக் கொள்கைகள் ஆகா.
    சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
    சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்’ (6.98.5)
    நமது வழிபாட்டு முறையின் பிரிக்க இயலாத அங்கம் சிறுதெய்வ வழிபாடு’ என நம் அருள்நூல்கள் சொல்கின்றனவா?

    ஓரு சமூகபொருளியல் ஆராய்ச்சியாளனாக கடந்த இருபது ஆண்டுகளாக சமயம், சாதி மற்றும் பழங்குடிகளை உற்று நோக்கி வந்துள்ளேன்.சமய நூல்கள் மட்டுமன்றி நாட்டார் வழக்குகள் பற்றி அறிந்துணர முயன்று கொண்டுள்ளேன். சிறுதெய்வங்கள் பற்றி எனது புரிதல்கள்.
    சிறு தெய்வங்கள் பெரும்பாலும் கிராம தேவதைகள். அவை குலதெய்வமாகவும் வழிபடப்படுகினறன. தமிழ் மக்களின் முன்னோர்கள், வீரர்கள், கற்புடைப்பெண்கள் வழிபாடான நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சி என இவ்வழிபாட்டைக்கூறலாம். இவ்வழிபாட்டை செய்வதன் அடிப்படையான நோக்கங்களாவன. ஒன்று முன்னோர்களுக்கு நன்றி செலுத்துதல். இரண்டு அவர்களிடமிருந்து காவலைப் பாதுகாப்பை வேண்டுதல். எனவே சிறுதெய்வங்கள் பரம்பொருள் அல்ல என்பது தெளிவாகிறது. அவர்களை வழிபடுதல் முக்திக்கு அன்று இகவாழ்வுக்கு என்பதே நம்பிக்கை. சிறுதெய்வ வழிப்பாட்டால் கிராமத்தவர்களிடையே, ஒரு குலத்தாரிடையே, ஒரே தெய்வத்தை வழிபடுவோரிடையே ஒற்றுமை பெருகுவது கண்கூடு.
    சிறுதெய்வங்களை வழிபாடு செய்யவேண்டாம் என்று திருவருட்பிரகாச வள்ளலார், பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னை, ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் கூறியுள்ளனர். ஆனால் இந்த்ப்பிரிவினில் அப்பரடிகளைச் சேர்க்கவேண்டியதில்லை. ஏன் எனில் அவர் சிறுதெய்வ வழிபாட்டை கண்டிக்கவில்லை. சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம் என்ற அவரே யாதொரு தெய்வம் கண்டீர் ஆங்கே மாதொரு பாகனார் வருவார் என்றும் பாடியுள்ளார்.

    சமயம் என்பது நூல்களில் காணப்படுவது(IDEAL) மட்டுமன்று முக்கியமாக அது மக்களால் வாழ்ப்படுவது(REAL) என்பதே உண்மை. இரண்டுக்கும் இடைவெளியிருக்கும். அதுதவிர்க்க இயலாத்து.
    ஆக ஹிந்துமதம் என்பது மக்கள் வாழ்கின்ற மதம் கண்னை மூடிக்கொண்டு ஒரு புத்தகத்தை நம்புவதல்ல என்பதை நாம் இங்கே உணரவேண்டும்.
    நடைமுறையில் ஹிந்து மத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கும் கிராமதெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. குலதெய்வ வழிபாடு செய்தபின்னரே மற்ற வழிபாடுகள் செய்யப்படவேண்டும் என்பதே மக்களின் நம்பிக்கை. சைவசமயத்தில் நம்பிக்கை கொண்ட அடியேனும் குலதெய்வ வழிபாடு இயற்றுகிறேன். கிராம தேவதைகளுக்கு வழிபாடு ஆற்றுகிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
    நம் பாரத நாட்டில் சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களாவது காலம் காலமாக நடந்து வருகிறது. சமூக மானுடவியலாளர் மாக்கிம் மாரியட் இதை மேல்னிலையாக்கம் என்று கூறுவார். கீழ்னிலையாக்கம் என்பதும் உண்டு. அதாவது பெருந்தெய்வமானது சிறுதெய்வமாக மாறுவது. நம்முடைய மாரியம்மன் போன்ற தாய்தெய்வங்கள் மேல் நிலையாக்கத்திற்கு உதாரணம். தர்மஸாஸ்தா வான ஐயப்பன் கூட ஒருகாலத்தில் சிறுதெய்வமே. இது சமுகப்பொருளாதர வளர்ச்சியினாலும் சமுக பண்பாட்டு ஊடாடுதல்க்ளாலும் நடைபெறுகிறது. மேல்னிலையாக்கத்தால் சிறுதெய்வம் உயர்வு பெறுகிறது அன்றி கிறித்தவ மதமாற்றத்தால் நிகழ்வது போல் அழிவதில்லை என்பதே உண்மை.

  56. 1) What is the book for hindu religion.
    2) caste and religion are same or different. why i ask you this, when i follow an other religion the government change my caste also. why this partiality.

  57. நான் ஒரு இந்து கூட்டு குடும்பத்தின் கடைசி வாரிசு… என் அம்மா இறந்து 4 மாதங்கள் ஆகிறது இந்த நிலையில் என் சூழ்நிலை காரணமாக தனி வீடு பார்க்க வேண்டி உள்ளது … ஆனால் பெரியவர்கள் அம்மா இறந்து ஒரு வருடம் கழித்து தான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்கிறார்கள் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது விவரம் தெரிந்தவர்கள் தயவு செய்து எனக்கு ஆலோசனை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்… நன்றி…

  58. ஒரே ஊரில் உங்களுக்கு தொழில் அல்லது வேலை வாய்ப்பு இருந்தால் , வீடு மாற்ற வேண்டிய தேவை அனேகமாக இருக்காது. ஆனால், தொழில் அல்லது வேலை வாய்ப்பு நிமித்தமாக, வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் நிர்ப்பந்தம் உள்ளவர்களுக்கு , வீடு மாற்றுவதற்கு எவ்வித தடையும் இல்லை. தர்ம சாஸ்திரம் நமக்கு நல்ல வழி காட்டுவதற்கு தான் ஏற்பட்டது. நமக்கு தடைகளை உருவாக்குவதற்கு அல்ல.

    ” என் சூழ்நிலை காரணமாக தனி வீடு பார்க்க வேண்டி உள்ளது …”- என்று தெரிவித்து உள்ளீர்கள். இறந்த உங்கள் மூதாதையரை மனதில் நினைத்து, ஐந்து நிமிடம் வணங்கிவிட்டு, உங்கள் குலதெய்வம் என்னவோ, அதனையும் மனதில் நினைத்து வணங்கிவிட்டு, உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் உங்களின் சூழ்நிலையை விளக்கி சொல்லி, அதன்பிறகு புதிய இடத்துக்கு செல்லுங்கள். உங்களுக்கு எந்த தொல்லையும் வராது. வீணாக பயம், வீண்கவலை வேண்டாம்.

  59. சாதி வேறுபாடுகள் ஏன் இந்து மதத்தில் இருந்தன? இருக்கின்றன? அம்பேத்கார் போன்றவர்கள் இதைக் கூறி இந்து மதத்தை வெறுக்கின்றனரே? அனைவரையும் சமமாகப் பாவிக்கச் சொல்லும் இந்து மதம் ஏன் சதுர்வர்ண முறையை தோற்றுவிக்க வேண்டும்?

  60. “எம்மதமும் சம்மதம்., எம்மதமும் என்மதம்”
    ஜெய் விக்ணேஷ்…
    மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை முட்டாள்களாக்கும் செயலிலுருந்து அவர்களை விடுவித்து நல்வழிப்படுத்த ஒரு சிறு முயற்சி…
    கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்.
    குறிப்பாக மதத்தலைவர்களிடமிருந்தும்… மதகுருமார்களிடமிருந்தும் பதில்கள் வரவேற்கப்படுகின்றன…
    தெரி[ளி]ந்தவர்கள் பதில் கூறலாம்…
    தெரி[ளி]யாதவர்களுக்கு தெளி[ரி]வுபடுத்தப்படும்…

    ஓம்கார்…
    நல்லதே நடக்கட்டும்…
    ஆனந்தமாய் இரு…

    1] மதம் என்றால் என்ன?
    அவை எத்தனை?
    அவை யாவை?
    அதன் பொருள் என்ன?

    2] ஆன்மீகம் என்றால் என்ன?

    3] தியானம் என்றால் என்ன?
    அதற்கு விளக்கம் தேவை…!

    4) தேவன்
    ஆண்டவன்
    இறைவன்
    கடவுள்
    நாசி
    இவை யாவை? விளக்கவும்

  61. இந்துமதம் மாறுவது எப்படி?
    அதன் வழிமுறைகள்?
    எங்கு செல்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *