தாய் மதம் திரும்பும் விழா – ஒரு நேரடி செய்தி

உலகளாவிய தமிழ் இந்துக்களுக்கும், தாய்மதம் திரும்பிக்கொண்டிருக்கும் நமது சகோதரர்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். தொடங்கும் செயல்களையெல்லாம் சித்தியாக்கும் விநாயகரின் அருளாசியுடன் குமரியில் தாய்மதம் திரும்பிய இந்து சனாதன தர்மத்தின் குழந்தைகள் பற்றி ஒரு செய்திக் குறிப்பை இதோ படைக்கிறோம்!

தருமம் மிகு தூத்துக்குடி செங்கோல் ஆதீன மகாசன்னிதான சுவாமிகள் மற்றும் இந்து மக்கள் கட்சி வீரத்திருமகன் அர்ஜுன் சம்பத் அவர்கள் மற்றும் குமரி மாவட்ட செந்தூரான் பேரவையும் இணைந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் 25 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 346 மக்கள் தாய்மதமாம் இந்து தருமத்தில் இணைந்த ‘தாய் மதம் திரும்பும் விழா‘ நாகர்கோவில் அருள் மிகு நாகராஜா திருக்கோவில் அருகில் உள்ள ‘அனந்த சமுத்திரம்’ திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமத்தை தொடர்ந்து தாய் மதம் திரும்புவோருக்கு சுத்தி செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்து சமுதாய தலைவரான உயர் திரு.பால சுப்பிரமணியன் அவர்கள் பேசும் போது ஒரிசாவில் மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட துறவி லக்ஷ்மனாந்த சரஸ்வதி மற்றும் விடுதலைப் போராட்ட வீர துறவியும் இந்து மகாசபை தலைவருமான சுவாமி சிரத்தானந்தர் ஆகியோர் தமது சேவைகளின் மூலம் திசை தவறி சென்ற மக்களை தாய் மதம் திருப்பி நன்னெறி படுத்திய காரணத்தால் படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார். இத்தகைய கொடுஞ்செயல்களையும் ஆபத்துக்களையும் சொந்த நாட்டிலேயே சந்தித்துதான் தம் தாய்மதத்துக்கு மக்கள் திரும்புகின்றனர். என்ற போதிலும் அனைத்து நதிகளும் பேராழியில் இணைவது போல அனைத்து தர்மங்களும் தொன்னெடு சமயமாம் தாய் தருமமாம் இந்து சனாதன தருமத்திலேயே சங்கமிக்கும் என்பதில் ஐயமில்லை என சொன்னார். இந்த நிருபர் இருக்கும் போதே ஒரு மாற்றுமத பெரியவர் அர்ஜுன் சம்பத் அய்யா அவர்களை சந்தித்து தமது ஊரில் தாய்மதம் திரும்ப மக்கள் தயாராக உள்ளதாகவும் தகுந்த ஏற்பாடுகள் செய்வதாகவும் அதைக் குறித்து உரையாடினார். அய்யா அர்ஜுன் சம்பத் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாய்மதம் திரும்ப மக்கள் எழுச்சியுடன் தயாராக உள்ளனர் என்றும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாய்மதம் திரும்புவது ஒரு தொடர் இயக்கமாக மாறி பெரும் இந்து எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் கூறினார். தினகரனிலும் தமிழ் முரசிலும் (நாகர்கோவில் பதிப்புகள்) தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சி குறித்து செய்திகள் வெளியாகியிருந்தன.

நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில படங்களையும், வீடியோக்களையும் இங்கு காணலாம்:

18 Replies to “தாய் மதம் திரும்பும் விழா – ஒரு நேரடி செய்தி”

  1. As Mahathma Gandhi wished.. let this poisonous act of conversion stopeed and all the coverted people come o sanadhana dharma again.

    Welcome to our brothers.

    Sreethar

  2. Thanks for Dinakaran newspaper for sending this news to public. Keep the good work. Best wishes to who worked and co-ordinated for this program.

  3. Excellent – Very happy and moved to see this news
    and photos.

    In this materialistic world very happy to see
    people like Sri Arjun Sampath Avargal.

    As Sri desamitran said, this will become 1000, 10,000 and one lakh soon –

    sanatana dharma always win -akila

  4. we
    have unbelieave work shri.arjun shampathji. hindu religion only save our nation. so he was working difficult situation for save nation. so we protect our arjun shampathji from terrorist people. so other religion not allowed to do. so national volunteer should protect and help to all ways to veera thirumagan.

  5. அடடா! மஞ்சல், குன்குமம், திருநீறு, எல்லாத்துக்கும் மேலே அந்தப் பெண்கலின் மங்கல முகங்களில் எத்தனை சந்தோசம்! அது ஏன் ‘அங்கே’ போனா மூஞ்சி பேயறஞ்சா மாரி ஆயிருமோ! இங்கே வந்தாத்தான் சந்தோசம். இந்தச் சந்தோசமும் மங்கலமும் இன்னும் கோடி கோடி பேருக்கு கெடக்கணும்.

  6. திரு. அர்ஜூன் சம்பத் இந்து தமிழர்களுக்கு ஆற்றிருக்கும் சேவை மிகப்புனிதமானது, பெரியது. அவருக்கு இந்த சமுதாயம் நன்றிக்கடன் படுகிறது. அதைவிட, வழிதவறிப்போன தமிழர்களை மீண்டும் தாய்வழிப்படுத்தி அவர்களுக்கும் ஒரு இனிய வாழ்க்கையைகொடுத்திருக்கிறார். மிகவும் இனிய செய்தியை வழங்கியதற்கு மிக்க நன்றி

    ஜயராமன்

  7. This is a good news. Like others who has commented, the following must be ensured:

    1. The safety of Mr. Arjun Sampath and those who involve in this task.

    2. Ensuring that this is not a “trick” created by any miscreants.

    3. More truth which validates the Sanathana Dharma in the field of Science and Education must be spread out.

  8. All Indians should appreciate the initiatives taken by Sri.Arjun Sambath and others for this patriotic act. The converted Christians and the Muslims are not only fighting with their Hindu compatriots, but they are cutting their own roots. When they come back to their original religion they will feel proud of their tradition and roots. Unfortuantely the converted Christians and Muslims are in a pathetic condition so that they cannot feel proud of any glory this country’s past.

  9. பாவத்தின் சம்பளம் மரணம் என்று தினமும் பயமுறுத்தப்பட்டு அல்லாவை தவிர வேறு எதையாவது அல்லது வடிவங்களையோ இறைவன் என்று ஏற்று வணங்கினால் புனிதபோர் என்ற போர்வையில்
    அழித்து விடும் சகிப்புத்தன்மையற்ற மதங்களிலிருந்து
    வந்தவர்களை இதுதான் உன் மதம் இந்துமதம்
    என்று உணரவைத்து இங்கிருந்து சென்றவர்களை
    இந்து மதம் இன்ப மதம் என்றும், பாவம் செய்தாலும்
    அதை விடுத்து இறைவனை வணங்கி அவன் அருள் பெற்று உய்யலாம் என்பதை எடுத்து கூறி அவர்களுக்கு
    உண்மை வழியை காட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி
    நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சி. அதை அவர்களின் முகமே பிரதிபலிக்கிறது என்பது உண்மை.

  10. யதேச்சையாக எனக்கு கிடைத்தது இந்த வெப். நல்ல முயற்சி. இந்து என்றாலே இளக்காரமாக பார்க்கக் கற்றுத் தந்தவர்கள் அரசியல்வாதிகள்ளே. தாய்மதம் திரும்பிய அனைவரும் இனிமேல்தான் உண்மையான மனிதர்களை தூய்மையான அன்பினை பெறப் போகிறார்கள். எல்லாம் வல்ல ஈஸ்வர கிருபையால் அனைத்தும் பெற வாழ்த்துகிறேன். இந்து என்று சொல்லடா உலகையே நிமிர்த்த (வாழ்விக்க) வாங்கடா. அர்ஜுன் சம்பத் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். இன்னும் பல கோடிப் பேர் தாய்மதம் திரும்ப உள்ளனர்.

  11. யதேச்சையாக எனக்கு கிடைத்தது இந்த வெப். நல்ல முயற்சி. இந்து என்றாலே இளக்காரமாக பார்க்கக் கற்றுத் தந்தவர்கள் அரசியல்வாதிகள்ளே. தாய்மதம் திரும்பிய அனைவரும் இனிமேல்தான் உண்மையான மனிதர்களை தூய்மையான அன்பினை பெறப் போகிறார்கள். எல்லாம் வல்ல ஈஸ்வர கிருபையால் அனைத்தும் பெற வாழ்த்துகிறேன். இந்து என்று சொல்லடா உலகையே நிமிர்த்த (வாழ்விக்க) வாங்கடா. அர்ஜுன் சம்பத் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். இன்னும் பல கோடிப் பேர் தாய்மதம் திரும்ப உள்ளனர்.
    THANKS MR.MAHESH

    OMPRAKASH
    (SINGAPORE)
    THIRUPPATHUR.
    SVGA DIST

  12. மங்கல முகங்களில் எத்தனை சந்தோசம்! அது ஏன் ‘அங்கே’ போனா மூஞ்சி பேயறஞ்சா மாரி ஆயிருமோ! இங்கே வந்தாத்தான் சந்தோசம். இந்தச் சந்தோசமும் மங்கலமும் இன்னும் கோடி கோடி பேருக்கு கெடக்கணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *