பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

தாழ்த்தப்பட்டவர்கள் – மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட காலத்தில் – ஊமைகளாக இருந்த அவர்களுக்கு பாடுபட்ட தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே.ராமசாமி நாயக்கர் இல்லையேல் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறி இருக்கமுடியாது. தாழ்த்தப்ட்டவர்களையும் ஈ.வே.ராமசாமி நாயக்கரையும் பிரித்துப்பேசமுடியாது என்றெல்லாம் பகுத்தறிவுவாதிகள் பிதற்றிக் கொண்டுவருகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பிரித்தே பார்த்திருக்கிறார். சாதி இந்துக்களைவிட தாழ்ந்தவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் வரமுடியாது, வரவும் கூடாது என்பதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்து.

காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?

”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)

தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

தாழ்த்தப்பட்டவர்களை சூத்திரர்களோடு சேர்த்ததை அனுமதிக்கக்கூடாது என்று ஆத்திரத்தோடு சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தானா தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது சாதி இந்துக்கள்தான். பிராமணர்கள் அல்ல என்று தாழ்த்தப்பட்டவர்களே சொல்லுகின்றனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரி பிராமணர்கள்தான் என்று அடையாளம் காட்டியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

ஏனென்றால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது தெரியக்கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் சாதி இந்துக்களுக்கு எதிராகக் கிளம்பிவிடக்கூடாது. அதனால்தான் பிராமணர்களை எதிரியாகக் காட்டினார்.

எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

s-v-rajaduraiபார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க விஷயத்தில் அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்றும் ஒரு மனத் தாங்கல் பெரியாரிடம் கடைசிவரை இருந்தது.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்து தந்ததில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு அக்கறையில்லை. மாறாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்ற கவலை மட்டும் இருந்தது இருக்கிறது என்ற சொன்னால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய எண்ணம் சாதி இந்துக்கள் நலனில் மட்டுமே குறியாய் இருந்திருக்கிறது என்று தலித் எழுத்தாளர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது! அது தப்பு! நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி! மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி! இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம்.
(விடுதலை 06-04-1959)

நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், தாழ்த்தப்பட்டவர்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு தெரியுமா?

‘தாழ்த்தப்பட்டவர்கள் – சாதி இந்துக்கள்’ என்று வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளமாட்டார். ‘சாதி இந்துக்கள் – பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வார். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தந்திரம்.

சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா? இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பாம் – இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

48வயது வரை ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர்தான் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

நாம் இப்படிச் சொன்னால் உடனே பகுத்தறிவுவாதிகள் 1924ல் நடந்த வைக்கம் போராட்டத்தைச் சொல்லுவார்கள்.

இந்த வைக்கம் போராட்டம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட முயற்சியால் – சுயமரியாதை இயக்கத்தால் நடத்தப்பட்டப் போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் நடத்த ஏற்பட்ட செலவும், ஈ.வே.ராமசாமி நாயக்கரோ அல்லது அவருடைய இயக்கமோ கொடுத்தது அல்ல. அப்போது அவருடைய இயக்கமே தோன்றவில்லை. அந்தப் போராட்டம் தேசிய காங்கிரஸ் சபை வழிகாட்டுதலினால் கேரள காங்கிரஸால் நடத்தப்பட்ட போராட்டம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஈ.வே.ராமசாமி நாயக்கரும் காங்கிரஸில் இருக்கும்போதுதான் காங்கிரஸ் சார்பாக அங்கு சென்று போராடினார். அதனால் வைக்கம்போராட்ட வெற்றிக்கு ஈ.வே.ராமசாமி நாயக்கரை மட்டும் உரித்தாக்குவது மிகையாகும்.

ஆனால் இங்கு ஒரு கேள்வி தாழ்த்தப்பட்டவர்களிடையே எழுகிறது. அதாவது வைக்கம் போராட்டம் போல் தமிழ் நாட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தலைமையேற்று ஏன் நடத்தவில்லை?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி நிறைய பேசினார். நிறைய எழுதினார். மாநாடுகளில் தீர்மானங்களை இயற்றினார். ஆனால் செயலில் காட்டவில்லையே ஏன்?

தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டங்கள் நடத்தத் தயார் என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்னென்ன போராட்டங்களை நடத்தினார்?

பட்டியலிடத் தயாரா?

keezhavenmaniமுதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை ஏற்பட்டபோது அதை எதிர்த்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சம்பவங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பங்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவார்களா பகுத்தறிவுவாதிகள்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களைக் கண்டித்து, எதிராக, எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் களஞ்சிய முன்னாள் பதிப்பாசிரியர் டாக்டர் சாமி. சண்முகம் கூறுகிறார்:-

தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்ட, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர். தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார். இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.

ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை. செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டுவரும் ஒரு சம்பிரதாயமாகும். மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார். 1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.

ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.

(நூல்:- தலித்துகள்)

டாக்டர் சாமி. சண்முகம் ஆர்.எஸ்.எஸ்.காரோ, இந்து முன்னணிகாரரோ, விசுவ ஹிந்து பரிஷத் காரரோ அல்ல. தன்னுடைய பல ஆண்டு கால அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். பலரின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் முடிவும் இதுதான்.

தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார் தெரியுமா?

வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் பெரியார் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு, ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத்தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார். அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலைமறையாகச் சொல்லிவிட்டார். இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின் ”உரிமை’‘ இதழின் ஜூலை 1949 பதிப்பில் பெரியாரின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஓதுக்கிவிட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.
(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்)

அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.

ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது. சென்னையில் சில அம்பேத்கர்வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின் ‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.

”ஓரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்”.

(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963)

இதிலிருந்து தெரிவதென்ன?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா! தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்.

அம்பேத்கரைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஒருவர் கேள்வி கேட்கிறார். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் அரசாங்கத்தை ஒழிக்கவேண்டுமென்று சொல்லுகிறீர்களே, இது அரசியல் பிரச்சனையாகாதா? அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சனையைத் தீர்க்கமுடியும்?

இதற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கர் பதில் சொல்கிறார்:

”நல்ல கேள்வி, அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே, அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும் உடனே அவனது நாணயம் ஒழுக்கம் கெட்டுப்போய்விடுகிறது! அவன் புரட்டு பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபா சாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி அப்படித்தான் ஆகிவிடுவோம். அது அப்படி ஆக்கிவிடும்.
(விடுதலை 16-02-1959)


dr-ambedkarஈ.வே.ராமசாமி நாயக்கரின் இந்த பதில் 1959-ம் ஆண்டு சொல்லப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் இறக்கும்வரை அதாவது 1956-ம் ஆண்டு அரசியலிலே எப்படியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய கொள்கைக்காக பதவியையே ராஜினாமா செய்தவர். இப்படிப்பட்ட அம்பேத்கரை – கடைசிவரை அரசியலியே ஒழுக்கமாக, நாணயமாக இருந்த அம்பேத்கரை – அரசியல் மாற்றிவிடும் என்ற அவர் இறந்தபிறகு சொல்வது அம்பேத்கரைக் கேவலப்படுத்துவதுதானே!

அம்பேத்கர்தான் ஒழுக்கமாக, நாணயமாக இருந்தாரே பின் ஏன் அம்பேத்கரை இழுக்க வேண்டும்? அம்பேத்கர் அப்படி மாறி இருந்தால் சொல்லலாம். அவர்தான் மாறவில்லையே! இவரைப் பொருத்தவரையில் மாறிவிடுவோம் என்று சொன்னது இவருக்கு மட்டும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் அம்பேத்கர் பெயரைச் சொல்லுகின்றார். காரணம் அம்பேத்கர் அரசியலில் நல்லவரல்ல என்பதை சொல்லுவதற்காகதான்.

அம்பேத்கரை அடக்கிவிட்டதா காங்கிரஸ்?

மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

……….தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு எனது அருமை நண்பரும் அறிஞருமான அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்ற மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர், நான் எதிர்பார்த்திருந்தேன், அவர் ஒத்துழைப்பை இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க, ஆனால் எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அந்த ஆரியத்தின் ஸ்தாபனமாகிய, இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூற வேண்டுமானால் இந்தியநாடு பிரிக்கப்படக்கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன்.
(குடியரசு 08-07-1947)

மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

…………டாக்டர் அம்பேத்கரை சுவாதீனம் செய்து கொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன் என்ற பிரிவு இருக்கக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதாடமல் செய்து விட்டார்கள்……. தனித் தொகுதியை ஓழிப்பதற்குக் கூட அவரால் தொல்லை நேராமல் பார்த்துக் கொண்டார்கள்.
(விடுதலை 10-07-1947)

இந்த விமர்சனத்தைக் கூர்ந்து படியுங்கள்.

அதாவது அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றதைத்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுகிறார்.

கோழைகளைத்தான் அடக்க முடியும். தைரியம் மிக்கவர்களை அடக்க முடியாது. கோழைகள்தான் அடங்கி போவார்கள். தைரியம் மிக்கவர்கள் அடங்கி போகமாட்டார்கள். இதுதான் நடைமுறை உண்மை, இது எல்லோருக்கும் தெரியும்.

காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அம்பேத்கர் கோழை என்பதால் காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றுதானே அர்த்தம்?

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுவது உண்மையிலேயே அம்பேத்கரை இழிவுபடுத்துவதாகும்.

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொள்ளக் காரணம் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகவே, அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தாலும்கூட தன்னுடைய கொள்கைகளை எப்போதுமே விட்டுக்கொடுத்ததில்லை.

இங்கே ஒன்றை நினைவுபடுத்துகிறோம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1920, 1921, 1922, 1923, 1924, 1925 – ஆகிய ஆண்டுகளில் வகுப்புரிமைத் தீர்மானங்கள் கொண்டுவந்தபோது காங்கிரஸ் அதை ஆதரிக்க மறுத்தது. 1925-ம் ஆண்டு இனி காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்று அதிலிருந்து வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது.

நான் கேட்கிறேன்.

  • 1920-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோது ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லையே? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1921-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1922-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1923-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1924-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?

இவர்கள் சொல்கிறபடி ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும்.

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் வகுப்புரிமைத் தீர்மானங்கள் தோல்வியடைந்த நிலையிலும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் ஈ.வே.ராமசாமி நாயக்கரை அடக்கிவிட்டது என்று சொல்லலாம் அல்லவா?

இவர்கள் அகராதிப்படி உண்மையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கரை காங்கிரஸ் அடக்கிவிட்டதுதான்.

மேலும் ஒரு சம்பவம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்– எந்த காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்றுசொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு– தங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டால், தான் காங்கிரசுக்கு ஆதரவு தருவதாகத் தூது அனுப்பினார். ஐந்து வருடங்களாக வகுப்புரிமைத் தீர்மானங்களையே ஏற்றுக்கொள்ளாத காங்கிரசுக்கு எதற்காகத் தூது அனுப்ப வேண்டும்? எதற்காக காங்கிரசுக்கு உறவு கொள்ள ஆசைப்பட வேண்டும்?

ஒருவேளை காங்கிரஸ் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் நல்லதுதானே – என்று பகுத்தறிவாளர் சொல்கிறார்கள்.

அம்பேத்கரும் காங்கிரஸில் மந்திரி சபையில் பங்குகொண்டு மக்களுக்கு நன்மை செய்யவே சேர்ந்தார். பதவிக்காக அல்ல.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் எந்த காங்கிரஸை ஓழிப்பதே என் வேலை என்று சொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு பிற்காலத்தில் ஆதரவு கொடுத்தார்.

எந்த காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்றுச் சொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு பிற்காலத்தில் ஆதரவு கொடுத்தது சரியென்று சொன்னால் அம்பேத்கரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரசுடன் உறவுகொண்டதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு ஒரு நியாயம், அம்பேத்கருக்கு ஒரு நியாயமா?

எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்ததும் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட மாகாணங்களையும் வலுப்படுத்தப்பட்ட மய்ய அரசாங்கத்தையும் கொண்ட ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தது.

பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்தது ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்ததாம்.

உண்மையிலேயே சந்தோஷம் அல்லவா அடைய வேண்டும்? எதற்காக மன வேதனை அடைய வேண்டும்? ஒருவேளை தாழ்த்தப்பட்டவர் வந்துவிட்டார் என்பதினாலா?

அம்பேத்கர் ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தது நியாயம் என்றால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் அதே ஏக திராவிடஸ்தானுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளித்தது நியாயம் ஆகும்.

இந்தியத் தூதர்கள் பதவியிலும் ஆதிதிராவிடர்களையே நியமிக்க வேண்டுமென்றும் தென்னிந்தியாவில் திராவிடஸ்தான் ஏற்படுவதானால் ஹரிஜனங்களுக்கு ஆதிதிராவிடஸ்தான் தனியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக விளங்கிய வி.ஐ. முனுசாமிப்பிள்ளை கூறினார்.

அதை விமர்சித்த ‘விடுதலை‘ தலையங்கம் சொன்னது என்ன தெரியுமா?

ஆதிதிராவிடஸ்தான் வேண்டும் என்று பிதற்றியிருக்கிறார்………… வெறும் பதவிகள் மட்டுமே ஒரு இனத்தையோ, சமுதாயத்தையோ உயர்த்திவிட முடியாது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்………………. எனவே பழங்குடி மக்கள் முழு உரிமையுடன் வாழ வேண்டுமானால் ஒரு சிலர் பெரிய பதவிகளைப் பெறுவதால் மட்டுமே முடியாது. திராவிடர்களுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும்.
(விடுதலை 10-07-1947)

ஏக இந்தியாவிற்குப் பதில் திராவிடஸ்தான் தீர்வு என்றால் சாதி இந்துக்களின் ஏக திராவிடஸ்தானுக்குப் பதில் ஆதிதிராவிடஸ்தான்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தீர்வாக இருக்க முடியும் அல்லவா? திராவிடஸ்தான் கேட்டால் அது கொள்கையாம்! ஆதிதிராவிடஸ்தான் கேட்டால் அது பிதற்றலாம்! இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை!

ஈ.வே.ராமசாமி நாயக்கர் மட்டும் அம்பேத்கரை கேவலப்படுத்தவில்லை.

மணியம்மையாரும் கூட கேவலப்படுத்தியிருக்கிறார்.

அய்யா வழியில் அம்பேத்கரா?

‘அய்யா வழியில் அம்பேத்கர்’ என்று தலைப்பிட்டு மணியம்மை எழுதுகிறார்:-

டாக்டர் அம்பேத்கர் வடநாட்டிலே பிறந்தவராக இருந்தும் தந்தை பெரியாரின் பெரும்பாலான கருத்துகளை ஏற்று, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகப் பாடுபட்டார். வட நாட்டிலே நமது பணியைச் செய்து தந்தை பெரியார் கருத்துக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் தந்தை பெரியார் அவரை அடையாளம் கண்டு அவரைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்… புத்தமதத்திற்கு சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டது.

(விடுதலை 06-01-1976)

மணியம்மையார் என்ன சொல்கிறார் தெரியுமா?

maniammaiyarஅம்பேத்கருக்கு என்று தனிப்பட்ட கருத்து இல்லை. ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய கருத்தைத்தான் எதிரொலித்தார் என்று மறைமுகமாக கூறுகிறார். அம்பேத்கருடைய அறிவும், ஆராய்ச்சித் திறனும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு இருந்ததா?

உலக அறிஞராக போற்றப்பட்ட அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்துக்களைத்தான் வடநாட்டிலே பரப்பினார் என்று கூறுவது இவருடைய அறிவின்மையையே காட்டுகிறது.

அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரா தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்?

இல்லவே இல்லை.

1927-ல் நடந்த மஹாட் போராட்டத்தின் போதே இந்தியா அம்பேத்கரைக் கண்டுகொண்டது. 1930-ல் முதல் வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் தலித்துக்களின் சார்பாகக் கலந்து கொண்டாரே, அப்போதே தமிழகம் அம்பேத்கரை நன்கு அறியும். 19-04-1931 ஆம் ஆண்டு பம்பாய் பரேல் பகுதியில் தலித் தலைவர்களின் கூட்டத்தை அம்பேத்கர் நடத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.சிவராஜ் அவர்கள்தான் தலைமை வகித்தார். அம்பேத்கர் பம்பாயில் கூட்டிய கூட்டத்திற்கு தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் தலைமை வகிக்கிறார் என்றால் அம்பேத்கர் தமிழகத்தை எவ்வளவு தெரிந்துவைத்திருப்பார் என்பதையும் அம்பேத்கருடைய கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து ஒருவர் போகிறார் என்றால் தமிழகம் அம்பேத்கரை எவ்வளவு தெரிந்துவைத்திருக்கும் என்பதையும் அறியலாம். என்.சிவராஜ் மட்டும் போகவில்லை, அவர்கூட இன்னும் பலரும் சென்றனர். இந்த விஷயமெல்லாம் மணியம்மைக்கு தெரியாததல்ல. இந்த விஷயத்தில்கூட ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குத்தான் பாராட்டு கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அடிப்படையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும் அம்பேத்கருக்கும் ஒரு வேறுபாடு இருந்தது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் அரசியல் போராட்டம் மூலம் விடுதலை பெற முடியாது என்றார். அம்பேத்கரோ அரசியல் போராட்டமே விடுதலை அளிக்கும் என்றார், அம்பேத்கர் சொன்ன அரசியலுக்குச் சென்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டம் நடத்துவதுதான் இன்று வெற்றி பெற்று இருக்கிறது என்பதை வரலாறு காட்டுகிறது.

இதுபோல பல விஷயங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும், அம்பேத்கருக்கும் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது.

ஒரே ஒரு உதாரணம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர், ‘ஆரியர்கள் வெளிநாட்டவர்’ என்றார். அம்பேத்கரோ, ‘ஆரியர்கள் இந்நாட்டவர்களே’ என்றார். இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் அம்பேத்கரை அறிமுகப்படுத்தினார் என்று சொல்வது சூரியனுக்கு வெளிச்சம் கொடுத்தது நாங்கள்தான் என்று கூறுவது போல் உள்ளது.

அடுத்து,

புத்தமதத்திற்குச் சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டதா?

அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிய ஆண்டு 14-10-1956.

அவர் இறந்தது 06-12-1956.

இடைப்பட்ட காலம் 53 நாட்கள் தான்.

இந்த 53 நாட்களிலா அம்பேத்கருடைய பெருமை குறைந்துபோய்விட்டது? இன்றும் உலகத்திலேயே அம்பேத்கருக்குதான் அதிக மன்றங்கள் இருக்கின்றன என்பதை இவர்கள் மறுக்கமுடியுமா? அம்பேத்கர் பெருமை எப்படிக் குறைந்து போய்விட்டது என்பதை இவர்களால் ஆதாரத்தோடு விளக்கமுடியுமா?

மணியம்மை இவ்வாறு சொல்லக் காரணம் என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் புத்த மதத்திலே மூட நம்பிக்கை இருக்கிறது. அதில் மாறமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிவிட்டாராம்.

அம்பேத்கர் தெரியாமல் புத்த மதத்திற்கு மாறிவிட்டார். அதனால் அவருடைய பெருமை குன்றிவிட்டது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் மாறவில்லை. அதனால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பெருமை குறையவில்லை என்று சொல்கிறார்.

இதில் கூட ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்ததுதான் சரி என்று சொல்லவருகிறார்கள். இவர்களுடைய ஈ.வே.ராமசாமி நாயக்கர் பக்தி அறிவின்மையால் ஏற்பட்டது என்பதை விளக்க இதைவிட ஆதாரம் வேறு வேண்டாம்.

இவர்களுடைய ஆதரவு, சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் என்பதைப் பார்த்தோம். அதுபோல அறிவுரை சொல்வதாக இருந்தாலும் கூட அது தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் சொல்வார்கள்.

வீரமணி கூறுகிறார்:-

தாழ்த்தப்பட்ட சமூகத் தோழர்களுக்கு –

அவர்கள் இன்று கூறியுள்ள இந்த நல்லெண்ணத்தை விரிவாக்க எனது அருமை தாழ்த்தப்பட்ட சமூதாய சகோதரத் தலைவர்கள் முயலவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
(விடுதலை 20-07-1997)

இந்த அறிவுரை சாதி இந்துக்களுக்கு இல்லை. மாறாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான். இது தான் இவர்களுடைய சாதிப்பற்று.

ஹோட்டல்களிலோ அல்லது கடைகளிலோ பிராமணாள் என்று இருந்தால் அதை அழிக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்களே திராவிடர் கழகம்- அதே திராவிடர் கழகம் நாயுடு, கவுண்டர், முதலியார் என்று தமது கடைகளுக்கும் ஹோட்டால்களுக்கும் பெயர் வைத்துள்ளார்களே அதை எதிர்த்து அதை அழிக்கவேண்டும் என்று இதுவரை ஏன் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை?

ஆதிதிராவிடன் – திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும். திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக்கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும்.
(குடியரசு: 08-07-1947)

திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்கார்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும் என்று சொன்னார்களே – அந்த ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை எதிர்த்து என்னென்னப் போராட்டங்களை ஈ.வே.ராமசாமி நாயக்கர் நடத்தினார்? 1947-க்குப் பிறகுதானே முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்?

1947லேயே ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை எதிர்த்து போராட்டங்களை நடத்தியிருந்தால் முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் தாழத்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டது நடந்திருக்குமா? ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை வழிக்குக் கொண்டு வர ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன செய்தார்? ஜாதி இந்துக்களின் ஒரு சாதிவெறிச் செயலையாவது வன்மையாகக் கண்டித்தாரா? இல்லை. இல்லவே இல்லை. ஆங்காங்கே தற்பெருமைக்காக செல்லமாய் சாதி இந்துக்களைக் கடிந்துள்ளார் என்பதே பொருத்தமாகும்.

ஈ.வே.ராவைப்பற்றி அம்பேத்கர்வாதிகள்:

இவர்களுடைய சாதி ஓழியவேண்டும் என்ற கொள்கை வெறும் கோஷம் மட்டுமே! இதை மனதில் வைத்துதான் அம்பேத்கர்வாதிகள் அன்றே சொல்லிவிட்டார்கள்.
அது என்ன தெரியுமா?

எல்லாத் துறைகளிலும் சாதி ஓழிய வேண்டும். ஒழித்துவிட்டேன், ஒழித்துவிடுவேன் என்று வாய்கிழியப் பேசிவந்த ஈ.வே.ரா… இதுவரை கூறிவந்தது ஏமாற்றுத்தனம், துரோகத்தனம், சமுதாய அரசியலில் வெறுக்கத்தக்க வேசித்தனம் என்றால் அதில் என்ன தவறு காணமுடியும்?

இன்றுவரை சாதியை ஒழித்து சமத்துவம் காணுவார் என்று ஏமாந்து ஈ.வே.ராவிற்கு கொடிதூக்கிகளாக, கூலிகளாக மாறி உழைத்த தாழ்த்தப்பட்டோர்கள் இப்போதாவது உணர்வார்களா? அல்லது சாதி இந்துக்களுக்காகப் போராடப் போகும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு துணை செய்யப்போகிறார்களா?
(அம்பேத்கர் மாத இதழ் -நவம்பர்-டிசம்பர்-1963)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றிய இந்தக் கடுமையான விமர்சனம் அம்பேத்கர்வாதிகளால் எழுப்பப்பட்டதாகும். ஆதலால் தாழ்த்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல என்பதை அறிந்து அதில் இருந்து வெளிவரவேண்டும்.

சில குறிப்புகள்:

தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர்

நம்மில் கீழ்த்தரமான மக்கள் (தலித்துகள்) நம்முடைய இழிநிலையினைப் பற்றியோ, அல்லது அவர்களது இழிநிலை பற்றியோ கவலை இல்லாமல் சோறு, சீலை, காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்களாக உள்ளனர்.
(பெரியார் யாருக்குப் பெரியார், புதியகோடங்கி; ஜூலை – 2004)

ராமசாமியின் குறி

ராமசாமியின் குறி என்னவெனில், இடைநிலை ஜாதிகளான சூத்திரர்களுக்கு மேலே பிராமணர் ஆளுமை இருக்கலாகாது. ஆனால் சூத்திரர்கள் உயர்த்திக்கொண்டிருப்பதை அடையாளம் காட்ட தமக்குக் கீழே (தாம் சதுர் வர்ணத்தில் இருந்ததைப் போல்) ஒரு பணிவிடைக் குடி இருக்க வேண்டும் என்பதே. இதற்காக இந்துயிஸத்தை விட்டுவிட்டு தாம் வெளியேறி விட்டால் இதைச் சாதிக்க முடியாது என்றெண்ணி ஹிந்துயிஸத்திற்கு உள்ளிருந்த படியே ஹிந்துயிஸத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, புரட்சியாளர் அம்பேத்கரை ஏமாற்றினார். அவரின் மக்களை ஏமாற்றினார். ஹிந்துயிஸத்திலேயே இருந்தால் அதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஜாதி அடையாளங்கள் மாறாத் தன்மை உடையனவாகவே இருக்கும். ஜாதி வேண்டாம் எனச் சொன்னால் ஈ.வே.ராமசாமிக்கும் இது பொருந்தும். ஜாதிய சமூகம் கழிவறைக்குச் சமம் எனக் கூறிவிட்டு கழிவறைக்குள் எப்படி இருந்தார் ஈ.வே.ரா? எண்ணிப்பாருங்கள்!
(புதிய கோடங்கி – அக்டோபர் – 2003)

ஆதித் திராவிடம் என்ற சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை

திராவிடம், திராவிடர் என்பவை சரித்திரச் சான்றுகளைக் கொண்ட சொற்கள். ஆதித் திராவிடம் என்று சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை.
(விடுதலை 10-07-1947)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி கோ.கேசவன்

சமீன்தார்களின் சாணிப்பால் கொடுத்தல், சவுக்கடி, அடித்தல் என்பனவற்றை கண்டுகொள்ளாமல் கனப் பொருத்தமற்ற முறையில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் செய்தார். பிராமண கபே எழுத்துகளை அழிப்பதில் இருந்த நியாயமான முனைப்பு தலித்துகளுக்கு பிராமணரல்லாதார்களால் ஏற்பட்ட கொடுமைகளான பொது இடப் பயன் மறுப்பு, தனிக்குவளை என்பனவற்றை எதிர்த்துப் பேசவோ போராடவோ இல்லை.

(கோ. கேசவன், தலித் அரசியல். நன்றி; புதிய கோடங்கி, ஜூலை – 2004.)


தி.க. தலித் இயக்கமா?

கேள்வி: கல்பாஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள தலித் என்சைக்ளோபீடியா எனும் ரூ.1000 விலை கொண்ட பதினொரு தொகுதிகள் பயனுள்ளவையாக இருக்கின்றனவா?

பதில்: இவ்வளவு செலவில் பதினொரு தொகுதியையும் பன்னாட்டு தலித் ஆய்வு மய்யம் வாங்கி வைத்திருந்ததைப் பார்த்தேன். தலித் இயக்கங்கள் பற்றிய ஒரு தொகுதியை மட்டும் படித்தேன். தமிழ்நாட்டில் உள்ள தலித் இயக்கம் பற்றி ஒரு சிறிய தகவல் கூட அதில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் இயக்கம் அதன் தலைவர் கி. வீரமணி பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. பிராமணரல்லாதார் இயக்கம் தலித் இயக்கமாகக் காட்டப்பட்டுள்ளது வேடிக்கைதான்.
(புதியகோடங்கி – அக்டோபர் 2003)

(தொடரும்…)

93 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?”

  1. Pingback: pligg.com
  2. //துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.//

    ம.வெங்கடேசன் இந்தப்புத்தகத்தை பொய் “மை” கொண்டே எழுதியுள்ளார் என்பதற்கு மேலே இவர் எழுதியுள்ள எழுத்தே சான்று.

    பெரியார் தான் உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே இதற்கு தெளிவான பதிலைச் சொல்லியுள்ளார். அதையெல்லாம் படிக்காமல் பூனை கண்னை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு போய் விட்டது என்று நினைக்குமாம். அது போல் வெங்கடேசனும் நினைத்துக் கொள்கிறார். அதை பார்ப்பனியமும் கோயபல்ஸ்பாணியில் பிரச்சாரம் செய்து பார்ப்பனியத்துக்கு வலுச் சேர்க்க நினைக்கிறது. உங்களின் அறியாமையை நினைத்து பரிதாபப் படுவதைத் தவர வேறு வழியில்லை.

    இது குறித்த பதிவை தமிழ் ஓவியா வலைப்பூவிலும் பதிவு செய்துள்ளேன். அதனுடைய சுட்டி

    https://thamizhoviya.blogspot.com/2008/04/blog-post_05.html

    கீற்று இணையதளத்திற்கும் அனுப்பி வைத்தேன். அவர்களும் அதைப் பதிவு செய்துள்ளார்கள். அதனுடைய சுட்டி

    https://www.keetru.com/rebel/periyar/96.php

  3. பெரியாரைப் பற்றி உண்மைக்கு மாறாக இழித்தும் பழித்தும் எழுதி பார்ப்பனர்களை மகிழ்வித்து வரும் வெங்கடேசன் நமது ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும். அப்போது தெரிந்து விடும் அவரின் உண்மை முகம்.

    நமது கேள்வி

    அருண்ஷோரி என்ற வடநாட்டுப் பார்ப்பன எழுத்தாளரால் எழுதப்பட்ட 665 பக்கங்கள் கொண்ட இந்தப் “worshipping false Gods – Ambedkar,and the Facts which have been Erased” புத்தகத்தில் அம்பேத்கரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி எழுதியுள்ளார். (மக்கள் பின்பற்ற தகுதி இல்லாதவர் அம்பேத்கர் என்றெல்லாம் கொச்சைப் படுத்தி எழுதியுள்ளார்)அதற்கு மறுப்பு தெரிவித்து இதுவரை ஏதாவது எழுதியுள்ளீர்களா?

    ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் செயல்பட்ட பெரியாரையும், அம்பேத்கரையும்(உண்மைக்கு மாறாக) விமர்சிப்பதில் காட்டும் அக்கரையை அந்நூலுக்கு மறுப்பு தெரிவிப்பதில் ஏன் காட்டவில்லை?

    விடை நமக்குத்தான் நன்கு தெரியுமே?

    ஆனாலும்

    இதற்கான வெங்கடேசன் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அருண்ஷோரியின் மேற்கண்ட நூல் வெளிவந்தவுடன் 30-7-2007 @ 5.8.2007 ஆகிய நாட்களில் அந்நூலை மறுத்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தி “அருண்ஷோரியின் அம்பேத்கர் பற்றிய நூலுக்கு மறுப்பு” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார் பெரியாரின் தொண்டர் கி.வீரமணி அவர்கள்.

    அம்பேத்கர் மேல் எங்களுக்கு அதாவது பெரியார் தொண்டர்களுக்கு உள்ள அக்கரை உங்களைப்போன்றவர்களை விட ஆயிரம் மடங்கு அக்கரை அதிகம் வெங்கடேசன்.

    பார்ப்பன வலையிலியிலிருந்து மீண்டு வாருங்கள் வெங்கடேசன்.எத்தனையோ தோழர்கள் அறியாமல் செய்து விட்டு மீண்டு வந்திருக்கிறார்கள். நீங்களும் வெட்கப்படாமல் மீண்டு வாருங்கள்.

    நன்றி.

  4. I WISH THOSE WHO THINK EVR WAS NOT ANTI DALIT READ THIS:

    In 1948, Dalit associations demanded apology from EVR for his COMPLAINT that the prices had gone up because Dalits have also started enjoying the comforts (Dalit women wearing blouse, Dalits eating rice instead of millets). There were also plans to conduct demonstrations against EVR for his anti-Dalit attitude (can anybody cite one popular leader having come up from DK? On the contrary, ANNA MADE IT A POINT TO BRING UP SATAYVANI MUTHU TO THE LIME LIGHT. AND WHEN DMK WAS FOUNDED, ILAM PARITI, A DALIT WAS MADE DISTRICT SECRETARY FOR MADRAS, THE STATE CAPITAL. LATER, HE WAS REMOVED BECUSE OF HIS ANTI PARTY ATTITUDE. HIS SON IS NOW A MINISTER IN KARUNANIDHI’S CABINET). Anbu Ponnoviyam has recorded EVR’S ANTI-DALIT ATTITUDE. Anbu Ponnoviyam was one of the Dalit intellectuals and if I my memory is not failing,he was an ardent suporter of Ayodhidaasar. Unfortunately, Anbu Ponnoviyam was not given due attention when he was alive. Again, if my memory is rifght, Anbu Ponnoviyam expired in 2004, before we could gather most of the details about Dalits treated bad by EVR and his DK.

    DK literature is cleverly edited and rewritten and we cannot take it authentic. Veeramani is now a businessman engaged in marketing education and the DK propaganda machinery is now his palything. So, many early editions of EVR’s speaches and writings and books about him are tampered with intentionally. It is DK that spreads falsehood since its inception.
    MALARMANNAN

  5. தமிழ் ஓவியா கொடுத்திருக்கும் சுட்டியில் துணி விலயேறக் காரணம் பற்றி ஒரு விளக்கமும் இல்லை.

    ஓகை நடராஜன்.

  6. த‌மிழ் ஓவியா அவ‌ர்க‌ளே,

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஆர‌ம்பித்த‌து முத‌ல் இன்று வ‌ரை ஒரு த‌லித் கூட‌ க‌ழ‌கத்தின் த‌லைவ‌ராக‌ வில்லையே?

    த‌லித் ஒருவ‌ரின் கையில் திராவிட‌ர் க‌ழ‌க‌த்தின் அனைத்து பொறூப்புக்க‌ளையும் ஒப்ப‌டைத்து விட்டு ஓய்வு எடுக்க‌ மான‌மிகு வீரமணியார் த‌யாரா?

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    ஒரு த‌லித் ஒருவ‌ரை , ஒரே ஒரு வ‌ருட‌மாவ‌து முத‌ல்வ‌ர் ப‌த‌வியில் அம‌ர‌ வைக்க‌ த‌மிழின‌த் த‌லைவ‌ன் த‌யாரா? செய்வாரா?

    த‌மிழ் ஓவியா அவ‌ர்க‌ளே, நீங்கள் இத‌ற்க்கு குர‌ல் கொடுக்க‌த் த‌யாரா?

  7. தமிழ் ஓவியா என்பவர் நன்றாக ப்ரெயின் வாஷ் செய்யப்பட்ட சிந்த்க்கத் தெரியாத போலி பகுத்தறிவு வாதி. அவருக்கு பார்பனர்களையும் இந்துக்களையும் அவமதிப்பதைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அந்தத் தொழிலை செய்துகொண்டிருக்கிறார். அவ்வளவு தான்

  8. Communal GO was insisted on NOT only to sideline Brahmins but also to reduce employment/educational opportunities of Dalits. I have been writing for several years and telling the BJP leaders that since caste based politics is ruling the roost, Brahmins and Dalits should join hands politically. Though many second rank leaders like Sri Naraendra Modi, Smt Uma Bharti, Sri Kalyan Singh, Sri Pramodh Mahajan (when he was alive), Sri Ila. Ganesan etc., appreciated my suggestion and said they would work for it, the decision making leadership at the top did not give due consideration to my suggestion. And uyltimastely, Mayavati was the beneficiary!
    I first met Sri Guruji Golwalkar in 1969 as a pressman at the Virat Hindu Sammelan in Udupi arranged by VHP and interviewed Guruji for more than four hours(I was NEVER in RSS and even now I do NOT belong to any Hindu organisation including RSS). I immediately became his ardent admirer and since then I was in his contact until he cast his physical body aside. Though I was an outsider, Guruji treated me as his own lith and kin, a rare phenomeon possible only with certain persons. Guruji made all heads of Mutts to declare that there was no place for untouchbility in the Hindu society and no Hindu scripture has sanction for untouchability. He made them to declare that Dalits are part and parcel of Hindu society. This was Guruji’s great achievement at that Virat Hindu Sammelan. He also saw that every sect of Hindu Mutt participated in that Sammelan and declare against untouchability and Dalits being marginalised in the society. My interview was given large space in Deccan Herald of the day and sincce I was associated with a German syndicated feature agency at that time, my interview with Sri Guruji reached many countries of Europe and given prominent position. Guruji complemented for this later. I sent Sri Guruji the clippings from German, English and French periodicals displaying his interview and Guruji was happy that he was able to clear the misunderstanding in the West about Hindu view on Dalits. I refer this mainly because Sri Guruji’s basic message in that interview was Dalits are part and parcel of Hindu society and discrimination in any form against them should stop.

    MALARMANNAN

  9. Agian, Dr Ambedkar had very cordial relationship with Sri Veer Sawarkar, The Hindu Maha Sabha leader and Hindutva ideologue and saw eye to eye with him in many issues. He has praised Veer Sarwarkar and it is a recorded document.
    MALARMANNAN

  10. சகோதரர் த‌மிழ் ஓவியா அவ‌ர்க‌ளே,

    கட்டுரை எதைப் பற்றியது?

    பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

    பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் மனப் பூர்வமான அக்கறை காட்டி இருந்தால், அவர்களின் பாசறையில் பயின்றவர்களுக்கு அந்த உணர்வு சிறிதாவது இருந்திருக்க வேண்டும் அல்லவா?

    நான் கேட்டது சரியான திசையில் தான். மிக முக்கியமான கேள்விதான்.

    திசை திருப்பும் வகையிலே என்ன கேட்டு விட்டோம்? கந்தசாமி திரைப்படம் பற்றி ஒன்றும் கேட்கவில்லையே?

    தங்களுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை என்றால் அதை நேரடியாக சொல்லி விட வேண்டியதுதானே?

    உங்களின் பார்வைக்கு அதே கேள்விகளை மீண்டும் முன் வைக்கிறோம் !

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஆர‌ம்பித்த‌து முத‌ல் இன்று வ‌ரை ஒரு த‌லித் கூட‌ க‌ழ‌கத்தின் த‌லைவ‌ராக‌ வில்லையே?

    த‌லித் ஒருவ‌ரின் கையில் திராவிட‌ர் க‌ழ‌க‌த்தின் அனைத்து பொறூப்புக்க‌ளையும் ஒப்ப‌டைத்து விட்டு ஓய்வு எடுக்க‌ மான‌மிகு வீரமணியார் த‌யாரா?

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    ஒரு த‌லித் ஒருவ‌ரை , ஒரே ஒரு வ‌ருட‌மாவ‌து முத‌ல்வ‌ர் ப‌த‌வியில் அம‌ர‌ வைக்க‌ த‌மிழின‌த் த‌லைவ‌ன் த‌யாரா? செய்வாரா?

    த‌மிழ் ஓவியா அவ‌ர்க‌ளே, நீங்கள் இத‌ற்க்கு குர‌ல் கொடுக்க‌த் த‌யாரா?

    இதைக் கேட்டால் என்ன தவறு? தெய்வக் குத்தமா? பகுத்தறிவுக் குத்தமா?

  11. திருச்சிகாரர் வாதத்தை திசை திருப்பவில்லை தமிழ் ஓவியா…வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆதரித்த பிராம்மணர்களின் எண்ணிக்கையை விட தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்ட திராவிட இயக்கத்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்பதுதான் வரலாற்று உண்மை. குறைவு மட்டுமல்ல கீழ்வெண்மணி சம்பவத்துக்கு ஈவெரா வெளியிட்ட மனிதத்தன்மையற்ற அறிக்கையானது மனநிலை பிறழ்ந்த திராவிடக்கும்பலின் தலித் விரோத மானுட விரோத இனவெறி கோட்பாடுகளுக்கு என்றென்றைக்கும் சான்றாக விளங்குகிறது. திராவிட கழகத்தின் அடுத்த தலைவராக ஒரு தலித்தை சரி வேண்டாம், தள்ளாத வயதில் ஈவெராவை திருமணம் செய்து கொள்ள வைக்கப்பட்ட அந்த இளம் பெண்ணை தலைவியாக்கியிருக்க வேண்டாமோ? ஈவெரா மனத்தளவில் வக்கிரமும் செயலளவில் ஆபாசமும் கொண்டவர். அன்றைக்கு புரையோடிப்போயிருந்த சமுதாய அவலங்களை தன் வெறுப்பியல் ஆபாசங்களுக்கு முற்போக்கு முலாம் போட மூலதனமாக்கிக்கொண்டார். அதற்காக அவரது முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. ஈவெரா ஒரு சமுதாய மனநிலை பிறழ்ச்சியின் அடையாளமாக பகுத்தாய்வு செய்யப்பட வேண்டியவர். அந்த பகுத்தாய்வை நாம் தொடக்கி வைப்போம்…ஈவெராவின் கடைசி சிலையும் அருங்காட்சியக பொருளாக மாறும் வரை

  12. த‌மிழ் ஓவியா அவ‌ர்க‌ளே,

    //ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் செயல்பட்ட பெரியாரையும், அம்பேத்கரையும்(உண்மைக்கு மாறாக)//

    அம்பேத்காரும் பெரியாரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களா?
    வெள்ளைக் காக்கா மல்லாக்கப் பறக்குதா?

    காமரசாரும் அரசியல் வாதிதான். மரியாதைக்குரிய மறைந்த தாமரைக் கனியாரும் அரசியல் வாதிதான்- அதற்காக காமரசாரும் தாமரைக் கனியாரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகக் கூற முடியுமா?

    அம்பேத்கர் என்றவுடன் முதலில் எனக்கு நினைவு வருவது என்னுடைய மாணவப் பருவம்தான்! சென்னை கன்னிமரா நூலகத்தில், சில நாட்கள், மாலை நேரம் படித்துக் கொண்டிருக்கும் போது, நூலகர் “நேரம் ஆகி விட்டது” என்று நினைவு படுத்துவார். ‘ஒரு நாளைக்காவது, அம்பத்கரைப் போல படித்தோம்’ என்று மன நிறைவுடன் செல்வேன்.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர் என்று நான் மனப் பூர்வமாகச் சொல்வேன்.

    அப்படிப்பட்ட ஒரு அறிங்கரை, பெரியாருடன் ஒப்பு வைக்க முடியுமா?

    அம்பேத்காரின் வாழ்க்கையின் லட்சியம், இந்தியாவில் உள்ள தலித் மக்களின் விடுதலை, முன்னேற்றம் அதோடு அவர் எல்லா இந்தியர்களையும் நேசித்தவர், இந்தியாவை நேசித்தவர்.

    பெரியாரின் முக்கிய குறிக்கோள் பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனருக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு தன்னை அரசியல், பொருளாதார, சமூக அரசியலில் உயர்த்திக் கொள்வது இவைதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

    பெரியாரிடம் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, புரிந்து கொள்ள வேண்டியது , திருத்திக் கொள்ள வேண்டியது உள்ளது என்றே நான் எழுதி வருகிறேன்.

    ஆனால் நீங்கள் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்காக முயற்சி செய்து
    வருகிறீர்கள்! ஆனால் இப்படி எல்லாம் எழுதினால் தான் கழக அரசியல் ஏணியில் மேலே செல்ல முடியும்! WE WISH YOU ALL THE BEST AND ALL SUCCESS!

  13. Hi

    There is no need to publish my thoughts.

    Let me confess that I am an aredent follower of hindutva. But I disagree with the tone of the series that you have been publishing on EVR.

    I agree that EVR was stupid, mis-informed and had very doubtful credentials. But unfortunately he has a large followership amongst Tamils – courtesy dravidian parties. Without even understanding what he stands for – he is revered as a visionary.

    To counter him or his ideals is NOT so important than attracting dravidian party members to the fold of hindutva. The best way would be to either ignore him completely or accept him as one of the many thousand hindu saints who had a different opinion. If you look at our guru parampara – Adi shankara or ramanuja or Madhva or even Ramalinga swamigal, Rajaram mohan roy, Arya Samajins and Ayyavazhi are extremely different people and would have been categorized as having completely radical thoughts during their time. I am sure Mimamsakas would have thought about Adishankara as an heretic and same case for others. Our guru parampara is so diverse that inclusion of an atheist would make no difference in the long run – say 20 years. This is bound to confuse the dravidian parties and its followers and naturally they will be assimilated with the main stream.

    Our current enemies are not the dravidian parties or athestic thoughts. The enemies are the militant other religion folks who are converting our innocent hindus. These dravidian parties and its members are somewhere in between and it is imperative to make them join our fight against our real enemies. There is a need for unity and strengthening our cause. Let us look at how protestants and catholics are united here in India – they guys fight tooth and nail in Europe.

    Whatever I suggested my sound to be wierd or out of mind. But imagine, it is not wierd as compared to inclusion of Buddha in the Dasavthar list.
    Hope you take this in the right spirit. Do revert back to me.

    regards
    Sankarasubramanian

  14. தமிழ் ஓவியா கூறியதில் தவறு யேதுமில்லை. பார்பனர்கள் பொதுவாக ஏமாற்று வேலைகளை செய்து வந்தார்கள். அதிலும் தலித்துகளை அடிமைபடுத்தி இழிவு படுத்தினார்கள் ஆனால் அதனை அழித்த மனஉறுதியுள்ள வீரர்தான் பெரியார் அவர்கள். இதனை பொது கண்னோட்டத்தில் பார்த்தால் தெரியும், மத கண்னோட்டத்தில் பார்த்தால் உங்களுக்க ஏற்பட்ட ஏமாற்றத்தால் வெறுப்புதான் தோன்றும் எனவே தயவு செய்து தியானம் செய்யுங்கள். கோபம் குறையும்.

  15. I was saying the same thing to Sri Rama Gopalan years ago what Sri Sanakra narayanan has said here. I was telling to simply ignore EVR. But having found that kind of approach is giving him clean chit as a reformer on par, I changed my view point.
    I find Sri Aravindan’s opinion valuable.
    MLARMANNAN

  16. அடங்கொய்யால, நானும் தமிழன்தான்… தமிழ்நாட்டுலதான் இருக்கேன்… ஆனா நீங்க பேசுறது ஒன்நேமி புரியலையே???

  17. தமிழ் ஓவியாவை எங்கே ஆளையே கானோம். பதில் சொல்லமுடியாத கேள்வி வந்தால் எஸ்கேப் ஆகிவிடுவார் எப்பொவுமே. அவரிடம் நான் பலமுறை கேள்வி கேட்டுவிட்டேன். ராமசாமி நாயக்கரின் உருக்கல்லை ஏன் மசூதியின் முன்னும் சர்ச்சுகள் முன்னும் வைக்கவில்லை என்று பலமுறை கேட்டாயிற்று. பதிலே இல்லை.

  18. Shankar wrote :

    // I am sure Mimamsakas would have thought about Adishankara as an heretic and same case for others. Our guru parampara is so diverse that inclusion of an atheist would make no difference in the long run – say 20 years. This is bound to confuse the dravidian parties and its followers and naturally they will be assimilated with the main stream. Our current enemies are not the dravidian parties or athestic thoughts. //

    Dear Shankar, the fact of the matter is that EVR is NOT one of those respectable atheists and rationalists who are fine flowers of human thought – like Kapila (founder of Sankhya philosophy) and the Hindu materialists like Kanada & Brihaspati, Ingersol or Niteze.

    The fact is that EVR was not even a thinker of any order, but an anti-Indian anti-Hindu hate-monger, racist, highly selfish and vengeful political backroom player.

    In TN, the Dravidian ideology and Periyar are the main weapon by which anti-Hindu forces attack Hindu Dharma. So, an expose of the man and the ideology is imperative.

    But Hindu acivists should not harbor any feeling of animosity or enmity with our misguided brethern who are still stuck in either Dravidian parties or Dravidian ideologies. Most of them follow Hinduisum in their family and also in public. Even those half-minded and confused lot are sure to return to their in-born Dharmik instincts in course of time.

    Pl also read his short article of Jeyamohan.

    அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை
    https://jeyamohan.in/?p=368

  19. தமிழ் ஓவியா இங்கே மட்டுமல்ல. அவர்களின் வலைப்பூவில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து கடவுள் ஒழிப்பு மட்டுமே. அதற்கும் வெறும் கூப்பாடு மட்டுமே போடுவார்கள். பகுத்தறிவு, கேள்வி கேட்க வேண்டும் என்று சொல்லும் இவர்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலே தருவதில்லை.

    எல்லோரும் நல்ல விளக்கங்களை ஆதாரத்தோடு கொடுக்க முனையும்போது ராம்கோபால் மட்டும் பொத்தாம் பொதுவாக மறுமொழி இடுகிறார். சப்பென்று இருக்கிறது. ஆதாரங்களை திரட்டினால் தேவலை.

    இந்நேரத்தில் திருச்சிக்காரன் அவர்களை பாராட்டி கொள்கிறேன். உயிரைக்கொடுத்து எல்லா மறுமொழிகளுக்கும் பதில் போடுகிறார். என்னுடைய கருத்து பெரும்பான்மை இடங்களில் அவருடன் ஒத்துப் போவதும் ஒரு காரணம்.

  20. தமிழ் ஓவியா இங்கே மட்டுமல்ல. அவர்களின் வலைப்பூவில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து கடவுள் ஒழிப்பு மட்டுமே. அதற்கும் வெறும் கூப்பாடு மட்டுமே போடுவார்கள். பகுத்தறிவு, கேள்வி கேட்க வேண்டும் என்று சொல்லும் இவர்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலே தருவதில்லை.

  21. எல்லோரும் நல்ல விளக்கங்களை ஆதாரத்தோடு கொடுக்க முனையும்போது ராம்கோபால் மட்டும் பொத்தாம் பொதுவாக மறுமொழி இடுகிறார். சப்பென்று இருக்கிறது. ஆதாரங்களை திரட்டினால் தேவலை.

    இந்நேரத்தில் திருச்சிக்காரன் அவர்களை பாராட்டி கொள்கிறேன். உயிரைக்கொடுத்து எல்லா மறுமொழிகளுக்கும் பதில் போடுகிறார். என்னுடைய கருத்து பெரும்பான்மை இடங்களில் அவருடன் ஒத்துப் போவதும் ஒரு காரணம்.

  22. கிரிஷ் அவ‌ர்க‌ளே , நீங்க‌ள் வாழ்க!

    //இந்நேரத்தில் திருச்சிக்காரன் அவர்களை பாராட்டி கொள்கிறேன். உயிரைக்கொடுத்து எல்லா மறுமொழிகளுக்கும் பதில் போடுகிறார்//

    ந‌ண்பா, ச‌கோத‌ரா ந‌ன்றி, ஏன்டா இந்த‌ த‌ள‌த்தில் நுழைந்தோம் என்று ஆகி விட்ட‌து. வ‌டிவேலு போல‌ எல்லொரும் “ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன்” என்று எல்லா ச‌ந்துக்கும் இழுத்து அடிக்கிறாங்க‌!

    க‌ம்பயூட்ட‌ர‌ உடைத்து விட்டு கிராம‌த்துக்கு போனால் தான் ஓய்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

    muzumuttaal@yahoo.co.in தான் என் மெயில் ஐ.டி.

    தேங்க்ஸ் த‌லைவா, நீ வாழ்க‌!

  23. //தமிழ் ஓவியாவை எங்கே ஆளையே கானோம். பதில் சொல்லமுடியாத கேள்வி வந்தால் எஸ்கேப் ஆகிவிடுவார் எப்பொவுமே. அவரிடம் நான் பலமுறை கேள்வி கேட்டுவிட்டேன். ராமசாமி நாயக்கரின் உருக்கல்லை ஏன் மசூதியின் முன்னும் சர்ச்சுகள் முன்னும் வைக்கவில்லை என்று பலமுறை கேட்டாயிற்று. பதிலே இல்லை.//

    ஆரோக்கியமான விவாதத்திற்குடபட்ட எல்லாக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பெரியார் தொண்டர்கள் அதற்கெல்லாம் சளைத்தவகள் அல்ல.

    திண்டுக்கல் சர்ச் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய பதிவை விரைவில் பதிவு செய்கிறேன்.

  24. //வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஆர‌ம்பித்த‌து முத‌ல் இன்று வ‌ரை ஒரு த‌லித் கூட‌ க‌ழ‌கத்தின் த‌லைவ‌ராக‌ வில்லையே?

    த‌லித் ஒருவ‌ரின் கையில் திராவிட‌ர் க‌ழ‌க‌த்தின் அனைத்து பொறூப்புக்க‌ளையும் ஒப்ப‌டைத்து விட்டு ஓய்வு எடுக்க‌ மான‌மிகு வீரமணியார் த‌யாரா?

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    ஒரு த‌லித் ஒருவ‌ரை , ஒரே ஒரு வ‌ருட‌மாவ‌து முத‌ல்வ‌ர் ப‌த‌வியில் அம‌ர‌ வைக்க‌ த‌மிழின‌த் த‌லைவ‌ன் த‌யாரா? செய்வாரா?

    த‌மிழ் ஓவியா அவ‌ர்க‌ளே, நீங்கள் இத‌ற்க்கு குர‌ல் கொடுக்க‌த் த‌யாரா?

    இதைக் கேட்டால் என்ன தவறு? தெய்வக் குத்தமா? பகுத்தறிவுக் குத்தமா?//

    தி.க.விற்கு தலைவர்களாக இருந்தவர்கள் பெரியார் ,மணியம்மையார், வீரமணி .

    இதில் பெரியார் மட்டுமே தத்துவத்தின் தலைவர்.

    மற்றவர்கள் பெரியாரின் கொள்கையை பரப்பும் தி.க.என்ற அமைப்பிற்கு தலைவர் பொறுப்பு வகிப்பவர்கள். இதில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். மற்ற கட்சிகளில் உள்ளது போல் தலித் பிரிவு என்பதெல்லாம் கிடையாது. இங்கு எல்லாரும் ஜாதியைத் துறந்து விட்டுத்தான் தி.க.வில் இணைகிறோம். அதன் பிறகும் தலித்-தலித் அல்லாதார் என்று தி.க. என்ற அமைப்பில் பேதம் பார்ப்பது கிடையாது.

    இன்னும் கேட்டால் தி.க.வில் பொறுப்பில் இருப்பவர்கள் என்ன ஜாதி என்று பார்க்கும் தன்மை அடியோடு இல்லை. மனிதர்களாக ஒன்றிணைந்திருக்கிறோம்.

    இயக்கத்திற்ககா, உழைக்கும் தோழர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு தேடி வந்து கொண்டிருக்கிறது. பொறுப்புக்காக இயக்கத்தில் யாரும் இல்லை என்பதில் நினைவில் கொள்ளுங்கள் திருச்சிக்காரர் மற்றும் அவரின் தோழர்களே

    ———–விவாதிப்போம்

  25. //தமிழ் ஓவியா என்பவர் நன்றாக ப்ரெயின் வாஷ் செய்யப்பட்ட சிந்த்க்கத் தெரியாத போலி பகுத்தறிவு வாதி. அவருக்கு பார்பனர்களையும் இந்துக்களையும் அவமதிப்பதைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அந்தத் தொழிலை செய்துகொண்டிருக்கிறார். அவ்வளவு தான்.//

    ராம் ஒன்றைத்தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
    பார்ப்பனர்களும் இந்து மதமும்தான் எங்களை சூத்திரன் என்று இழிவுபடுத்தி வருகிறது. இன்றுகூட கோயிலுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்படுவது இந்து மதத்தில்தான்.

    இந்து மதமும் பார்ப்பனர்களும் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. அதை விளக்கப் புகுந்தால் எழுதிக் கொண்டே இருக்கலாம் அந்த அள்வுக்கு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது இன்று வரை .

    எங்களை இழிவு படுத்தும் இந்து மதத்தையும் பார்ப்பனர்களையும் அம்பலப்படுத்துகிறோம். இல்லை என்று நீங்கள் விவாதியுங்கள். எது சரி என்பதை வாசகர்கள் முடிவுக்கு விட்டு விடுவோம்.
    நன்றி
    ————விவாதிப்போம்

  26. //இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர் என்று நான் மனப் பூர்வமாகச் சொல்வேன்.

    அப்படிப்பட்ட ஒரு அறிங்கரை, பெரியாருடன் ஒப்பு வைக்க முடியுமா?

    அம்பேத்காரின் வாழ்க்கையின் லட்சியம், இந்தியாவில் உள்ள தலித் மக்களின் விடுதலை, முன்னேற்றம் அதோடு அவர் எல்லா இந்தியர்களையும் நேசித்தவர், இந்தியாவை நேசித்தவர்.

    பெரியாரின் முக்கிய குறிக்கோள் பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனருக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு தன்னை அரசியல், பொருளாதார, சமூக அரசியலில் உயர்த்திக் கொள்வது இவைதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!//

    திருச்சிக்காரரே பெரியாரையும் அம்பேத்கரையும் பேதப்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை பார்ப்பனியம் தொடர்ந்து செய்து வந்து கொண்டேயிருக்கிறது. அதற்கெல்லாம் தக்க பதிலடியை தொடர்புடைய தலைவர்கள் உள்பட பலரும் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் தரும் தகவல்கள் உங்கள் பார்வைக்கு…

    பெரியார் அம்பேத்கர் : இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அமைச்சர் ஆ. இராசா பங்கேற்று ஆற்றிய உரையின் தொடர்ச்சி…

    அம்பேத்கர் – பெரியார் இந்த இரண்டு தலைவர்களும் தன்னைப் பற்றி பரிசோதனை செய்து கொண்டவர்கள். சுயவிளம்புகை செய்து கொண்டவர்கள்.
    குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், பெரியார் , “நான் யார்? ஈ.வே.இராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகத்திலே இருக்கிற பிற சமுதாயத்தைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்குகிற தொண்டினை மேற்போட்டுக்கொண்டிருக்கிறேன். இந்தத் தொண்டினைச் செய்வதற்கு எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் இதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் செய்து கொண்டிருக்கிறேன்’’

    – இது பெரியார் தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிற சுய பிரகடனம்.
    அதைப்போல் அம்பேத்கர் ஒரு இடத்தில் சொல்லுகிறார்:
    I am not a worshipper of idol – நான் சிலைகளை, கடவுளை வணங்குகிறவன் அல்ல. I believe destruction of idols- நான் கடவுளை சிலைகளை அழிப்பதை ஒரு தொழிலாக நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவன்.
    என்று சொல்லிவிட்டு மீண்டும் அவர் சொல்லுகின்றார்: I hate Gandhi and his philosophy of Hinduism நான் காந்தியையும் அவர் சார்ந்திருக்கிற இந்துயிசத்தையும் வெறுக்கிறேன், ஏனென்றால் காந்தியைப் பாராட்டுவது என்பது வேறு, தேசத்திற்கு நலன் செய்வது என்பது வேறு, வேறு வேறு மட்டுமல்ல சில நேரங்களில் இவை எதிரும் புதிருமாக இருக்கின்றன என்று அவர் சொல்கிறார். I love India அதனால்தான் சொல்லுகிறார்: Gandhi and loving this nation are two distinct and different things and sometimes afford equally opposite என்று குறிப்பிடுகிறார். ஆக இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் இரண்டு தலைவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

    பெரியார் – அம்பேத்கர்: இயங்கிய தளம் வேறு

    இன்னொன்று இன்றைக்குப் பெரியார் யார், அம்பேத்கர் யார் என்கின்ற சிந்தனையில் இந்த இரண்டு தளத்திலும் சில வேறுபாடுகளைக் கொண்டுவருகிறார்கள். பெரியாருக்குள்ளும் அம்பேத்கருக்குள்ளும் போகிற போது நாம் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் ஓர்மை உண்டு. இருவரும் ஒன்றாகச் சிந்தித்த இடங்கள் உண்டு. இரண்டு பேருக்கும் வேறுபாடுகளும் இருக்கிறது. நாம் மறுதலித்துவிட முடியாது.

    பெரியார் எந்தப் பற்றுக்கும் ஆட்படாதவர், எந்தப் பற்றுக்கும் ஆட்படாத தன்னை திராவிட சித்தாந்தம் என்ற சட்டகத்துக்குள் வைத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் அம்பேத்கருக்கு அந்தக் கட்டாயம் தேவைப்படவில்லை. இன்னும் நான் சொல்லவேண்டுமென்று சொன்னால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு தந்தைபெரியாருக்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்திருக்கிறது. ஆனால் இந்திதான் இந்த மண்ணிற்கு ஆட்சிமொழியாக, பொது மொழியாக இருக்க வேண்டுமென்று பதிவு செய்தவர் அம்பேத்கர். வேறுபாடுதான். புரிந்து கொள்ள வேண்டும்.

    I need a strong centre என்று சொன்னவர் அம்பேத்கர். மிக முக்கியமான இடத்திலிருக்கிற மய்ய அரசுக்கு அதிக அதிகாரங்கள் தேவை என்று சொன்னவர் அம்பேத்கர். ஆனால், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்று போராடிய இயக்கங்களுக்கு தந்தையாக இருந்தவர் தந்தை பெரியார். இவையெல்லாம் இருக்கின்ற வேறுபாடுகள். ஒரு காலகட்டத்தில் `தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கேட்டவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பிரிவினையை அம்பேத்கர் ஒரு நாளும் ஏற்றுக்கொண்டதில்லை. ஏனென்றால் அந்தத் தளத்தில் அவர் இயங்குகிற போது, தலித் விடுதலை என்று வருகிறபோது அல்லது மானிட விடுதலை என்று வருகிறபோது இந்த பூகோள அமைப்பு என்கின்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி, தான் எந்த இனம் என்கின்ற அடையாளத்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. திராவிட இன அடையாளத்தைக்கூட தந்தை பெரியார் ஒரு பெருமைமிக்க அடையாளமாகச் சொல்லிக்கொள்ளவில்லை.

    மேலும் தகவல்களை அறிந்து கொள்ள

    https://rajadmk.blogspot.com/ வலைப்பூவை படிக்கவும்,

    ——————விவாதிப்போம்.

  27. //தி.க.விற்கு தலைவர்களாக இருந்தவர்கள் பெரியார் ,மணியம்மையார், வீரமணி . இதில் பெரியார் மட்டுமே தத்துவத்தின் தலைவர். மற்றவர்கள் பெரியாரின் கொள்கையை பரப்பும் தி.க.என்ற அமைப்பிற்கு தலைவர் பொறுப்பு வகிப்பவர்கள். இதில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். மற்ற கட்சிகளில் உள்ளது போல் தலித் பிரிவு என்பதெல்லாம் கிடையாது. இங்கு எல்லாரும் ஜாதியைத் துறந்து விட்டுத்தான் தி.க.வில் இணைகிறோம். அதன் பிறகும் தலித்-தலித் அல்லாதார் என்று தி.க. என்ற அமைப்பில் பேதம் பார்ப்பது கிடையாது.//

    ஓ தத்துவம் சித்தாந்தம் எல்லாம் ஈவெரா…மற்றவர்கள் அதில் தலையிட மாட்டார்கள். அதாவது திராவிட கழகத்தின் தலை ஈவெரா வீரமணியும் மணியம்மையும் இன்னபிற உறுப்புகள். இந்த வர்ணாஸிரமத்தை ஏற்று திராவிடர் கழகத்துக்குள் வரும் போது பழைய சாதியை தலை முழுகிவிடவேண்டும். அடப்பாவிகளா ஏமாற்றுவித்தையிலேயே பெரிய ஏமாற்றுவித்தையாக அல்லவா இருக்கிறது இது….ஒருவன் திராவிடர் கழகத்துக்குள் வரும் போது அவன் தன் சாதியை அழித்துவிட்டால் அவனது வரலாற்றுக்கொடுமை போய்விடுமா? காலம் காலமாக நிலச்சுவாந்தார் குடும்பங்களிலிருந்து வந்த வீரமணிக்கும் வீரமணியின் பாட்டன் முப்பாட்டன் அப்பன் குடும்பங்களால் கூலியில்லா கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு கூலி கேட்டதற்கு கீழ் வெண்மணியில் கொளுத்தப்பட்ட தலித் குடும்பங்களிலிருந்து ஒருவன் திராவிட கழகத்துக்குள் வந்தால் அந்த திராவிட கழகத்தவருக்கும் வீரமணிக்கும் தலைமைக்கான போட்டியில் அல்லது தகுதிப்பார்ப்பதில் ஒரே அளவுகோலைத்தான் வைப்பீர்களா? அட இடஒதுக்கீடு எல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா? நான் நினைத்ததை விட கேவலமான கேலிக்கூத்தடிப்பு போல திராவிட கழக ஆபாசங்கள்…

  28. //இயக்கத்திற்ககா, உழைக்கும் தோழர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு தேடி வந்து கொண்டிருக்கிறது. பொறுப்புக்காக இயக்கத்தில் யாரும் இல்லை என்பதில் நினைவில் கொள்ளுங்கள் திருச்சிக்காரர் மற்றும் அவரின் தோழர்களே //

    இதெல்லாஞ் ச‌ரி!

    கொள்கை என்ப‌து என்ன?

    வ‌குப்பு வாரி பிர‌தி நிதித்துவ‌ம் என்ப‌து க‌ழ‌க‌த்தின் மிக‌ முக்கிய‌ கொள்கையா இல்லையா?

    அப்ப‌ கொள்கை எல்லாம் பிற‌ருக்கு அறிவுரை கூற‌ ம‌ட்டும் தானா?

    கொள்கையை நாமே பின்ப‌ற்ற வேண்டிய‌து அவ‌சிய‌ம் இல்லையா?

    60 வ‌ருட‌த்துக்கு மேலான‌ க‌ழ‌க‌ வ‌ர‌லாற்றில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அதை தாங்கிப் பிடிக்க‌வில்லையா?அவ‌ர்க‌ளுக்கு வ‌குப்பு வாரி பிர‌தி நிதித்துவ‌ம் த‌ர‌ப் ப‌ட்ட‌தா?

    தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை த‌ல‌மைப் பொறுப்புக்கு கொண்டு வ‌ர‌ நேர‌ம், கால‌ம், நாள், ந‌ட்ச்ச‌த்திர‌ம் பார்க்க‌ வேண்டுமா?

    தாழ்த்த‌ப் ப‌ட்ட‌வ‌ர் மீது காட்டும் க‌ரிச‌ன‌ம் வெட்ட‌ வெளிச்ச‌மாக‌த் தெரிகிர‌தே?

    //இங்கு எல்லாரும் ஜாதியைத் துறந்து விட்டுத்தான் தி.க.வில் இணைகிறோம். அதன் பிறகும் தலித்-தலித் அல்லாதார் என்று தி.க. என்ற அமைப்பில் பேதம் பார்ப்பது கிடையாது.

    இன்னும் கேட்டால் தி.க.வில் பொறுப்பில் இருப்பவர்கள் என்ன ஜாதி என்று பார்க்கும் தன்மை அடியோடு இல்லை. மனிதர்களாக ஒன்றிணைந்திருக்கிறோம்//

    //பொறுப்பில் இருப்ப‌வ‌ர‌க‌ளுக்கு ஜாதி பார்க்க‌க் கூடாது!//

    அப்ப‌டி போடு!

    //தலித்-தலித் அல்லாதார் என்று தி.க. என்ற அமைப்பில் பேதம் பார்ப்பது கிடையாது.

    மனிதர்களாக ஒன்றிணைந்திருக்கிறோம்!//

    “அப்ப‌ பார்ப்ப‌ன‌ர், பார்ப்ப‌ன‌ர‌ல்லாதார் பேத‌ம் ம‌ட்டும் பார்க்க‌ வேண்டுமா? பார்ப்பான் பேரை சொல்லி, பார்ப்பானைத் திட்டி,ச‌ம‌த்துவ‌ வேட‌மிட்டு க‌ண்ணுக் கெட்டிய‌ தூர‌ம் வ‌ரை வ‌ளைக்க‌ வேண்டிய‌து. க‌ல்லா நிர‌ம்பிய‌வுட‌ன், பொறுப்பில் இருப்ப‌வ‌ர‌க‌ளுக்கு ஜாதி பார்க்க‌க் கூடாது என்று த‌லித்க‌ளுக்கு ப‌ட்டை நாம‌ம் போட‌ப் ப‌டுவ‌தாக‌” ம‌க்க‌ள் பேசிக் கொள்கிறார்க‌ளே!

    நீங்க‌ள் குர‌ல் கொடுக்க‌க் கூடாதா?

  29. வணக்கம்,

    .//இதனை பொது கண்னோட்டத்தில் பார்த்தால் தெரியும், மத கண்னோட்டத்தில் பார்த்தால் உங்களுக்க ஏற்பட்ட ஏமாற்றத்தால் வெறுப்புதான் தோன்றும் எனவே தயவு செய்து தியானம் செய்யுங்கள். கோபம் குறையும்.//
    நண்பர் ஸ்ரீ ராம் கோபால் அவர்களே, இந்த விவாதத்தை யாரும் மதக்கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை, மனிதக்கன்னோட்டத்தில்தான் பார்க்கிறார்கள், நண்பர் ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டனின் கேள்விக்கு நியாயமான பதிலை யோசித்து பாருங்கள் புரியும்.
    தியானம் செய்ய சொல்லுகிறீர்கள் நன்றி அதைக்கூட மனிதர்களின் நலனில் அக்கறை கொண்ட சித்தர்கள் தான் சொல்லித்தந்தார்கள். அத்தனை பெரும் இந்துக்களே எந்த பகுத்தறிவு வாதியும் அல்ல.

    //தமிழ் ஓவியாவை எங்கே ஆளையே கானோம். பதில் சொல்லமுடியாத கேள்வி வந்தால் எஸ்கேப் ஆகிவிடுவார் எப்பொவுமே. அவரிடம் நான் பலமுறை கேள்வி கேட்டுவிட்டேன். ராமசாமி நாயக்கரின் உருக்கல்லை ஏன் மசூதியின் முன்னும் சர்ச்சுகள் முன்னும் வைக்கவில்லை என்று பலமுறை கேட்டாயிற்று. பதிலே இல்லை.//

    நண்பர் ஸ்ரீ ராம் அவர்களே பெரியார் திடலை கிறிஸ்துவர்களுக்கு வாடகைக்கு விட்டு துட்டு சம்பாரிக்கும் இவர்கள் ஏன் சர்ச்சுகளை பகைத்துக்கொள்ளபோகிறார்கள். சரி மசூதி முன்னால் சிலை வைக்கட்டும், அப்புறம் பாருங்களேன் இவர்களே இருக்க மாட்டர்கள்.

    //ராம் ஒன்றைத்தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
    பார்ப்பனர்களும் இந்து மதமும்தான் எங்களை சூத்திரன் என்று இழிவுபடுத்தி வருகிறது. இன்றுகூட கோயிலுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்படுவது இந்து மதத்தில்தான்.//

    கடவுளே இல்லை என்று சொல்லும் உங்களுக்கு கோவிலுக்குள் என்ன வேலை. அப்படி என்றால் கடவுளை நம்புகிறீர்கள், ஆனால் வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என்று நாத்திகம் பேசுகிறீர்களா, அல்லது பார்ப்பனீய எதிர்ப்புக்கு ஜாதி மறுப்பு முகமூடி போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் அப்படித்தானே.

    ஒருகட்டுரையில் படித்தேன் இந்துக்களின் கடவுள்களை நினைத்து பக்தர்கள் தீ மிதித்தால் நீங்களும் தீ மிதிப்பீர்களாமே, நடராஜர், அம்மன் ஆகியோர் கையில் அக்னி வைத்து உள்ளதை கண்டு பக்தர்களும் அவர்களை எண்ணி பக்தியோடு அக்நிசட்டி ஏந்தி வந்தால் நீங்களும் அக்க்நிசட்டி எடுப்பீர்களாமே, ரொம்ப துணிச்சலையா உங்களுக்கு,
    பாராட்டுக்கள், கிறிஸ்துவர்களின் தேவ குமாரன் கூட தனது தேவனின் மகிமையால் சிலுவையில் தொங்கினார் ஒருமுறையாவது உங்களில் யாராவது தொங்கி உள்ளீர்களா என்று தெரிவிக்கவும்.

  30. பெரியாரை எப்படியாவது அம்பேத்கார் ரேஞ்சுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், பெரியாருக்கும் அம்பேத்காருக்கும் இடையில் எப்படியாவது ஒரு உறவுப் பாலம் அமைத்து விட வேண்டும் என்றும் என்ன என்னவோ முயற்சி செய்து பார்க்கிறார்கள்.

    ஆனால் தமிழ் நாட்டிலே கூட, தலித்துகள் தங்களின் மனப் பூர்வமான தலைவரக ஏற்றுக் கொள்வது அம்பேத்காரை மட்டும்தான்.

    பெரியாரை அப்படி இப்படி உரசிக் கொள்வது எதற்கு என்றால், அரசாங்கத்திலே காரியங்களை செய்து கொள்ள வேண்டியுள்ளது. ஆட்சியிலே மாறி மாறி இருப்பது இரண்டு கழகங்களும் தான்.

    எனவே ஒரு கருப்பு துண்டையாவது போட்டுக் கொண்டு போனால், அதிகாரத்தின் கதவுகள் தங்களுக்காகத் திறக்காதா என்ற ஒரு ஆசையிலே தான், நப்பாசையிலே தான் கொஞ்சம் பெரியார், கொஞ்சம் அண்ணா என்று வைத்துக் கொள்கிறார்கள்.

    சில “அறிவு ஜீவிகள்” அப்படியே பெரியாரின் பின்னாலே போய் நாமளும் பெரிய புத்திசாலிகள் போலக் காட்டிக் கொள்ளலாம். அப்படியே கழகங்கள் மூலம் நாமும் கொஞ்சம் தேனை எடுக்கும் போது புறங்கையை நக்கலாம் என்று எல்லாம் கணக்குப் போட்டு, பெரியார் , பெரியார் என்று பெரியார் ஒரு உலகத்தின் மிகச் சிறந்த தத்துவ அறிங்கர்களில் ஒருவர் போல பில்டப் செய்து கொண்டு திரிகின்றனர்.

    நானும் பெரியாரிடம் சில விடயங்களைக் கற்றவன் தான். பெரியாரை இகழ வேண்டும் என்பது என்னுடைய நோக்கமோ, விருப்பமோ கிடையாது.

    ஆனால் பெரியாருக்கு எந்த இடம் , ஸ்தானம் கொடுக்கப் பட வேண்டுமோ அதை தாண்டி கொடுக்க முடியாது.

    1) அம்பேத்கர் ஆக்க பூர்வமான சிந்தனைகளை உடைய, ஆக்க பூர்வமான மனிதர்.
    பெரியார் வெறும் எதிர் மறைக் கருத்துகளை மட்டுமே சுமந்து இருந்தார்.

    2)அம்பேத்கர் தலித் மக்களின் விடுதலைக்கு போராடியவர்.
    பெரியார் பார்ப்பனர்களை எப்படியாவது கீழிறக்கி விட வேண்டும் என்ற குறிக்கோளையே பிரதானமாக வைத்து இருந்தார்.

    3)அம்பேத்கர் சிறந்த மாணவர், பேரறிங்கர், வெளிநாடுகளில் படித்தவர்.
    ஆனால் பெரியாருக்கு வசதி வாய்ப்பு இருந்தும் கல்வியில் ஈடுபாடு இல்லை.
    (இந்தக் கருத்தை எழுவது அம்பேத்கரின் சிறப்பை சுட்டிக் காட்ட, பெரியாரை குறை கூற அல்ல)

    4) இந்தியா என்னும் மாபெரும் தேசம் இன்றைக்கு உறுதியாக இருக்கிறது என்றால், அதற்க்கு முக்கியக் காரணிகளில் அம்பேத்கர் ஒருவர். அவர் நாடுகளை உருவாக்கும் சக்தி படைத்தவர்.
    ஆனால் பெரியார் “நானும் வ‌ருவேன், ஆட்ட‌த்தை க‌லைப்பேன்” என்ற‌ பாணியிலே இந்தியாவை உடைக்க‌ நினைத்து செய‌ல் ப‌ட்ட‌வ‌ர்.

    5) அம்பேத்க‌ர் காங்கிர‌சை எதிர்த்த‌வ‌ர். ஆனால் அத‌ற்க்காக‌ இந்தியாவையோ, இந்திய‌ ம‌க்க‌ளையோ விட்டுக் கொடுக்க‌வில்லை. பெரியாரும் காங்கிர‌சை எதிர்த்தார். ஆனால் த‌ன் சொந்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ எதிர்த்தார்.

    6)அம்பேத்க‌ர் ஆதிக்க‌ சாதி வெறியை எதிர்த்த‌வ‌ர். ஆனால் சாதி வெறிக்கு ஒட்டு மொத்த‌ கார‌ண‌மாக‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள் மேல் ப‌ழியை போட்டு ஒதுங்க‌வில்லை. தான் க‌ல்வியில் சிற‌‌ந்து விள‌ங்க‌ கார‌ண‌மான‌ பார்ப்ப‌ன‌ ஆசிரிய‌ரின் பெய‌ரையே, த‌ன் பெய‌ராக‌ வைத்துக் கொனண்டார், அந்த‌ ஆசிரிய‌ர் மேல் கொண்ட‌ அன்பினால்!
    பெரியாரோ ஆதிக்க‌ சாதி வெறியை பார்ப்ப‌ன‌ர்க‌ள வீழ்த்த‌ ஒரு க‌ருவியாக‌, ஆயுத‌மாக‌ உப‌யொகித்துக் கொண்டார்.

    இப்ப‌டியாக‌ இன்னும் ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை எழுத‌லாம்.

    பெரியாரின் பெய‌ரை வைத்து த‌ங‌க‌ளின் வாழ்க்கையை வ‌ளமாக்க நினைப்ப‌வ‌ர்க‌ள், பெரியாருக்கு இன்னும் இன்னும் அதிக‌ பில்ட‌ப் கொடுக்க‌ப் பார்ப்பார்க‌ள். ஆனால் பெரியாரே அவ‌ருடைய‌ பெய‌ரை வைத்து பிற‌ர் கூத்தாடி போல‌ வித்தை காட்டி பிழைப்ப‌தை விரும்ப‌ மாட்டார்.

    ஜ‌ன‌ங்க‌ விவ‌ரமாத்தான் இருக்காங்க‌!

    இப்ப‌வே எல்லா விவ‌ர‌மும் தெரிஞ்சுதான் இருக்காங்க‌. ஜால்ராவை தூக்கிட்டு இங்கெயும் அங்கெயும் அலைவ‌தை பார்த்துகிட்டு, சிரிச்சுகிட்டு தான் இருக்காங்க‌!

  31. //திண்டுக்கல் சர்ச் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய பதிவை விரைவில் பதிவு செய்கிறேன்.//

    ஓ வெச்சாச்சா! ஆனால் அது மட்டும் நீங்கள் பதிவு போட்டு சொன்னால் தான் தெரியும். அவளவு ரகசியமாவா வெச்சீங்க. அந்த அளவுக்கு எதிர்ப்பே தெருவிக்காமல் கிறிஸ்தவர்கள் சுரனை கெட்டுப்போய் இருந்தார்களா? அல்லது அவர்கள் எதிர்க்காத அளவிற்கு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெச்சீங்களா? அல்லது எதிர்க்க லாயக்கில்லாத அளவிற்கு வெளியே தெரியாத சர்ச்சா? ஏன் பெரியாரின் கல்லை வைக்க வேறு இடமே கிடைக்கலியா? சாந்தோம் சர்ச்சுல வெக்கலாமே…இல்ல வேளாங்கன்னி மாதா கோவில் முன்னாடி வெக்கலாமே! அது என்ன ஸ்பெஷலா திண்டுக்கல்..அங்கே தான் பேரம் படிஞ்சதோ!

  32. //எங்களை இழிவு படுத்தும் இந்து மதத்தையும் பார்ப்பனர்களையும் அம்பலப்படுத்துகிறோம். இல்லை என்று நீங்கள் விவாதியுங்கள். எது சரி என்பதை வாசகர்கள் முடிவுக்கு விட்டு விடுவோம்.
    நன்றி
    ————விவாதிப்போம்//

    சரி எப்ப தான் ஒரு முடிவுக்கு வருவீங்க

  33. எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது!

    ஒரு மனிதன் தெரு விளக்கின் அடியில் ஒரு பொருளை தேடிக் கொண்டு இருந்தானாம்!எதைத் தேடுகிறாய் என்று கேட்டால், என் மோதிரம் கீழே விழுந்து விட்டது, அதை தேடுகிறேன் என்றானாம்!

    எங்கே விழுந்தது என்றால், அந்த மர‌த்திற்கு அடியில் என்றானாம்!
    பின் ஏன் இங்கே தேடுகிறாய் என்றால், இங்கேதான் வெளிச்சம் இருக்கிறது என்றானாம்!

    அதைப் போல இருக்கிறது இந்த‌ “இந்து மதமும் பார்ப்பனர்களும் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல” கதை!

    ஏன் என்றால், இன்று தமிழ் நாட்டில் எளிதாக செய்யக் கூடிய செயல் என்ன என்றால் அது பார்ப்பானைத் திட்டுவதுதான்!

    பிராமணர்கள்தான் எப்ப‌டி சாதியை உருவாக்கியிருக்க‌ முடியும்?

    எண்ணிக்கையில் குறைந்த, உடல் வலிவு குறைந்த ஒரு பிரிவினர் தங்களைத் தாங்களே உயர்ந்த சாதி என்று அறிவித்துக் கொண்டால் மற்றவர் எப்படி ஒத்துக் கொண்டார்கள்?

    அதுவும் அரசர்கள் எல்லோரும் தமிழர்கள், படைத் தளபதிகள்,அமைச்சர்கள் , வியாபாரிகள், விவசாயப் பெருங்குடியினர் எல்லோரும் தமிழர்கள்.

    மிகப் பழமையான தமிழ் மொழி, மிக நீண்ட வரலாறு, ஆட்சி, வீரம், நிர்வாகம், பண்பாடு, சிறந்த அறிவு, நாகரீகம் உடைய தமிழ் சமுதாயத்தை, வெளியில் இருந்து வந்த பிரிவினர் “நாங்கள் உயர்ந்த சாதி” என்று எப்படி கூறியிருக்க முடியும்?

    அதைக் கேட்டுக் கொண்டூ அறிவும், வீரமும் உடைய தமிழ் சமுதாயம் சும்மா இருந்திருக்குமா?

    எனவே மற்ற பிரிவீனரைப் போல தமிழ் பிராமணர்களும் தமிழ் சமுதாயத்தின் பூர்வ கூடி மக்கள் ஆகத்தான் இருந்திருக்க முடியும்!

    பிராமணர்களுக்கு உயர் சாதி அந்தஸ்து கொடுத்தது மற்றவர்கள்தானே!

    த‌மிழ் ச‌முதாய‌த்திலே ஆன்மீக‌த்திலே அதிக‌ ஈடுபாடும் பொருளீட்டுவ‌தில் விருப்ப‌மில்லாத‌ சில‌ரை தேர்ந்து எடுத்து இறை வ‌ழிபாடு ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட காரிய‌ங்க‌ளுக்கு உப‌யொக‌ப் ப‌டுத்திக் கொண்டார்க‌ள்!

    குறைந்த‌ ஆசையுட‌ன் எளிமையாக‌ வாழ்ந்த‌வ‌னை, சாமி, சாமி என்று அழைத்து சோற்றுக்கு பிச்சை எடுக்க‌ வைத்து ஆப்படித்து விட்டார்க‌ள்!

    கண்ணகி அம்மாள் மதுரையை எரிக்க “தீ”க்கு ஆணையிடும் போது, “பார்ப்பனர், பெண்டிர், குழவிகள், முதியோர் பசு இவற்றை விட்டு விடும்” படி கூறியது ஏன்?

    இந்தியாவில் சாதி வரலாற்றை எடுத்துப் பார்த்தால், பல பரிணாமங்கள் கிடைக்கும்! வரூநாசிரம முறையால், அதிகம் பாதிப்புக்கு உள்ளானது யார் என்று பார்த்தால், கண்டிப்பாக தலித்கள் தான்! அதே வரூநாசிரம முறையால், அதிகம் பலன் அடைந்தது யார் என்று பார்த்தால், மேல் எழுந்தவாரியாகப் பார்த்தால் பார்ப்பான் என்று தோன்றும். நன்கு ஆராய்ந்தால் பார்ப்பனரை விட வைசியரும், சத்திரியர்களும் அதிக பயன் அடைந்துள்ளது புரியும்! ஏன் என்றால் விவசாயம், கூலி வேலை செய்ய எதிர்ப்பு காட்ட முடியாத வேலை ஆட்கள் வைஷ்யருக்கும், சத்திரியருக்கும் தேவைப் பட்டது! அதற்கு இந்த சாதி முறை அவர்களுக்கு உதவியாக இருந்தது!

    எல்லா சாதிக்காரரூக்கும் நில, புலம் இருக்கிறது அல்லது வருமானம் வரும் தொழில் இருக்கிறது!தொழில் செய்யும் வாய்ப்பு இருந்தது. பார்ப்பானை வூருக்கே எடுத்துக் காட்டாக வாழ வேண்டும், பண ஆசை இல்லாமல் வாழ வேண்டும் என்று கூறி தெருவிலே பிச்சை எடுக்க விட்டார்கள். வெறும் உயர் சாதி அந்தஸ்தை மட்டும் வைத்துக் கொண்டு, சோற்றுக்கும், துணீக்கும் பிட்சை எடுக்கும் இழிவான நிலைதான் பார்ப்பானுக்கு இருந்தது! ஆங்கிலேயன் காலத்தில் அரசாங்கத்தில் தபால், ரயில்வே என்று புதிய துறைகளில் வேலை வாய்ப்பு கிடைத்த போது, அதை உபயோகித்து கொண்டான்- சோற்றுக்கு, துணீக்கு வழி கிடைத்தது- இதில் என்ன தவறு?

    தமிழ் நாட்டில் எத்தனை சாதிகள்- செட்டியார் வகுப்பை எடுத்துக் கொண்டால், நாட்டுக் கோட்டைச் செட்டி, நகரத்துச் செட்டி, கோமுட்டி செட்டி… இப்படி எத்தனை பிரிவுகள்? ஆச்சாரி வகுப்பில் மர வேலை ஆச்சாரி, பொன் வேலை ஆச்சாரி என்று எத்தனை பிரிவுகள்?

    இதை எல்லாம் வேதத்தில் சொல்லி, பார்ப்பான் வந்து பிரித்து வைத்தானா? அவரவர் செய்யும் தொழில், வசிக்கும் இடம் இதற்கேற்ப்ப சாதிப் பிரிவினையை உருவாக்கி விட்டு, பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதை தான் இது காட்டுகிறது.

    இன்னும் சொல்லப் போனால், வர்ணாசிரம முறையால் பார்ப்பணர்கள் கஷ்டப் பட்டார்கள் என்பதே உண்மை! ப்ரோகிதம் செய்வதையும், பிட்சை எடுத்து வாழ்வதையும் தவிர வேறு வாழ்க்கை முறை பார்ப்பணர்களுக்கு மறுக்கப் பட்டது என்பதே உண்மை!

    ம‌ற்ற சாதியின‌ராவ‌து வ‌யிரு ப‌சித்தால் மூட்டை தூக்கிப் பிழைக்க‌லாம். ஆனால் அந்த‌க் கால‌த்தில் பார்ப்பானை வேறு வேலையும் செய்ய‌ விடாம‌ல், சோத்துக்கும் வ‌ழியில்லாம‌ல், குசேல‌னைப் போல‌ த‌வித்த‌ பார்ப்ப‌ன‌ர் எத்த‌னை பேர்? நினைத்தாலே ப‌த‌றும் ப‌ல‌ க‌ஷ்ட‌ங்க‌ள பல‌ர் அனுப‌விக்க‌ நேரில் க‌ண்டு இருக்கிறேன்!

    இவ‌ர்க‌ள் கண்க‌ளுக்குத் தெரிவ‌து எல்லாம் சில‌ கோடீசுவ‌ர‌ப் பார்ப்ப‌ன‌ர்க‌ள் தான். பில்லிய‌னில் புர‌ளுப‌வ‌ர்க‌ள் புழ‌ன்குவ‌து எல்லாம் கோடீசுவ‌ர‌ர் அளவீல் தானே?

    கோட்டையிலே கோலோச்சும் கோமான்க‌ளுக்கு இது புரியுமா?

    காழ்ப்புண‌ர்ச்சியோடு விச‌ம் க‌க்கும் கோம‌ள‌வ‌ல்லிக‌ளுக்கு இது தெரியுமா?

    எல்லோருக்கும் திறமை இருக்கிறது, சாதி வித்யாசம் தொழில் அடிப்படையில் உருவானது, அது மறைய வேண்டும், என்றுதான் விரும்புகிறோம்.

    ஆனால் இந்த‌ சாதி அமைப்பை அழியாம‌ல் காத்து, அதையே வாய்ப்பாக‌ வைத்து, ப‌ல‌ பில்லிய‌ன்க‌ளைக் குவிக்க‌வும், காக்க‌வும், அரசிய‌ல் செல்வாக்கை அதிக‌ரித்துக் கொள்ளவும் உப‌யோகிக்கிறார்க‌ள் சில‌ மான‌ மிகு த‌ளப‌திக‌ளும், சில‌ த‌மிழின‌த் த‌லைவ‌ர்க‌ளும்.

    சில‌ர் இந்த‌ த‌ளத்தில் வ‌ந்து அவ்வ‌ப் போது அவ‌ர்க‌ளுக்கு ப‌ல்ல‌க்குத் தூக்கி விட்டு செல்லுகிறார்க‌ள்.

    எப்படியோ வ‌ள‌ம் ப‌ல‌ பெற்று ந‌ல‌மாக‌ வாழ்ந்தால் ச‌ரி.

  34. //அம்பேத்க‌ர் ஆதிக்க‌ சாதி வெறியை எதிர்த்த‌வ‌ர். ஆனால் சாதி வெறிக்கு ஒட்டு மொத்த‌ கார‌ண‌மாக‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள் மேல் ப‌ழியை போட்டு ஒதுங்க‌வில்லை. தான் க‌ல்வியில் சிற‌‌ந்து விள‌ங்க‌ கார‌ண‌மான‌ பார்ப்ப‌ன‌ ஆசிரிய‌ரின் பெய‌ரையே, த‌ன் பெய‌ராக‌ வைத்துக் கொண்டார், அந்த‌ ஆசிரிய‌ர் மேல் கொண்ட‌ அன்பினால்!
    பெரியாரோ ஆதிக்க‌ சாதி வெறியை பார்ப்ப‌ன‌ர்க‌ள வீழ்த்த‌ ஒரு க‌ருவியாக‌, ஆயுத‌மாக‌ உப‌யொகித்துக் கொண்டார். //

    திருச்சிக்காரரே உங்களுக்கு பெரியாரையும் தெரியவில்லை. அம்பேத்கரையும் தெரியவில்லை. உங்களின் எழுத்தில் உள்ள அறியாமையை நினைத்து பரிதாபடத்தான் முடிகிறது. மேலும் இந்த விவாதத்தில் பங்கு பெற்றிருக்கும் நண்பர்கள் யாருக்கும் அவ்வளவு விசய ஞானம் இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது. ஆனால் நீங்கள் விவாதிக்கும் ஆரோக்கியமான முறை எனக்கு பிடித்திருக்கிறது.

    கீழ்கண்ட ஒரு செய்தியைத் தருகிறேன். அதைப் படிக்கும் போது நீங்கள் அம்பேத்கர் பற்றி எவ்வளவு அரைகுறையாக தெரிந்து வைத்துள்ளீர்கள் என்பது புலனாகும்.

    “அம்பேத்கர்- தனது பெயரை பார்ப்பன ஆசிரியரின் நினைவாக வைத்துக் கொண்டாரா? உண்மை என்ன?

    அம்பேத்கர் : பார்ப்பனப் பெயரா?

    அம்பேத்கர் என்பது ஒரு பார்ப்பனரின் பெயர். இவர், டாக்டர், அம்பேத்கரின் இளமைக்கால பள்ளி ஆசிரியராக இருந்தார். பீம்ராவ் ராம்ஜி என்ற இயற்பெயர் கொண்ட அம்பேத்கருடன் அன்புடன் நடந்துகொண்டு, அவர் தனது வாழ்வில் உயர்வடைய உதவினார்.எனவே, தனது பெயரை தன்னுடைய ஆசிரியரின் நினைவாக அம்பேத்கர் என வைத்துக்கொண்டார்.

    மேற்கண்ட ஓர் அப்பட்டமான வரலாற்றுத் திரிபு, பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பல அறிஞர் பெருமக்கள் கூட இத்திரிபுக்குப் பலியாகி உள்ளனர். ஆனால், உண்மை என்ன?

    இந்தக் கதையைப் பதிவு செய்துள்ளவர் யார் தெரியுமா? காந்தி ஓர் அகிம்சாவாதி, வீரசாவர்க்கர் என்ற நூல்களை எழுதிய தனஞ்செய்கீர் என்ற பார்ப்பனர்தான். இந்தப் பார்ப்பனர்தான் மூன்றாவதாக, அம்பேத்கரின் வாழ்வும் லட்சியமும் என்ற நூலை எழுதிப் பல லட்சங்களை சம்பாதித்தவர். இன்று, இந்தப் பொய் எல்லோராலும் ஆராயப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து நாம் முன்வைக்கும்சில கேள்விகள்: 1891ஆம் ஆண்டு பிறந்தவர் டாக்டர். அம்பேத்கர். அம்பேத்கர் என்ற பார்ப்பனர் ஒருவர் அப்போது வாழ்ந்திருந்தால், அவர் சந்ததியினர் இன்று என்னவானார்கள்? காந்தியின் சந்ததியினர், நேருவின் சந்ததியினர், ஏன் சங்கராச்சாரியின் சந்ததியினர்கூட இன்று அடையாளம் காட்டப்படும்போது, இவர்கள் குடும்பம் இன்று என்னவாயிற்று?

    ராமானுஜர்,சேஷாத்திரி என்பன பார்ப்பனப் பெயர்கள். இந்தப் பெயரில் பல காலகட்டங்களில் பல பார்ப்பனர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அம்பேத்கர் ஒரு பார்ப்பனப் பெயரென்றால், அந்தப் பெயருடைய பார்ப்பனர் வேறு எவரும் இதுவரை இல்லையே அது ஏன்? வரலாறு எந்தக் காலகட்டத்திலுமே இதுவரை அம்பேத்கர் என்ற பெயரை அதற்கு முன்பு பதிவு செய்யவில்லை.

    அம்பேத்கர் பல நூல்களை எழுதியுள்ளார். இந்த நூல்களில் தனக்கு உதவியதாகக் கூறப்படும் அந்தப் பார்ப்பனர் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால், அவர் பரோடா மன்னர், முன்ஷி, காமத், மாலவங்கர் போன்ற தமக்கு உதவிய உயர்ஜாதியினரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

    உண்மை இதுதான்

    அண்ணலின் பிறந்த ஊர் அம்பாவடே. அந்த ஊரின் பெயரை முன்னிலைப்படுத்தி அம்பாவடேகர் என்று தன் பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். பின்னர் இப்பெயர் மராட்டிய இலக்கணப்படி, அம்பேத்கர் எனப் பதிவு செய்யப்பட்டது. (இங்கு குறிஞ்சியார், செஞ்சியார், மதுராந்தகத்தார், ஆத்தூரார் போன்றவற்றுடன் இதை ஒப்பிட்டால், ஒரு தெளிவு கிடைக்கும்.)

    இதற்கு முழுக்காரணமானவர், அம்பேத்கரின் இளவயதில் அவரிடம் அன்பு காட்டிய ஆசிரியர் தாதா கேலுஸ்கர். இவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அம்பேத்கரின் தந்தை ராம்ஜிசக்பால் அவர்களின் இளமைக்கால நண்பர். இவர்தான் போதி மாதவ் என்ற புத்தரின் வரலாற்று நூலை அம்பேத்கருக்கு அளித்து, அவருக்கு இளவயதிலேயே பவுத்த சிந்தனை தோன்றக் காரணமாக இருந்தவர்.

    இதுதான் பீம்ராவ் ராம்ஜி – அம்பேத்கராக மாறிய வரலாறு. இதற்கான ஆதாரத்தை, அம்பேத்கர் லண்டனிலிருந்து தனது ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் காணலாம்.

    ———————- சோபகன் – நன்றி: “எழுச்சி தலித் முரசு” – மே 2000

    தமிழக மாணவர்கள் அம்பேத்கரை சந்தித்து எங்களுக்கு ஆலோசனை கூறுங்கள் என்று கேட்டபோது பெரியார் பெயரைச் சொல்லி அவரின் ஆலோசனைப் படி செயல்படுங்கள் என்று கூறியுள்ளார் அம்பேத்கர். இதற்கெல்லாம் ஆதாரம் வாழும் சான்றோர்கள் இன்னும் இருக்கிறார்கள் திருச்சிக்காராரே.

    “அம்பேத்கர் பேசுகிறார்” என்ற நூலைப்படியுங்கள். உங்களின் அய்யங்களுக்கும், அறியாமைகளுக்கும் விடை கிடைக்கும்…

    ————–“விவாதிப்போம்.

  35. திருச்சிக்காரரே – இன்னுமொரு சான்று இதோ:-படியுங்கள்!தெளியுங்கள்!!

    “18.9.1921 அன்று கும்பகோணம் வந்த காந்தியார் எழுதுகிறார் (நவஜீவன் இதழுக்காக).

    சென்னை மாநிலத்தில் கும்பகோணத்திலிருந்து நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்த நகரம் ஆலயங்களுக்காகப் பெயர் பெற்றது. இதில் படித்த திராவிடர்கள் பலர் குடியிருக்கிறார்கள். எனினும், ஒரு தோட்டியின் நிழல் தங்கள்மீது விழுந்தால்கூடத் தீட்டுப்பட்டுவிட்டதாக பிராமணர்கள் எண்ணுகிறார்கள். அவ்வாறு நிழல்பட விடும் தோட்டிக்கு நல்ல உதையும் விழலாம். உதை விழாவிட்டாலும் நிச்சயமாகத் திட்டு நிறையக் கிடைக்கும். சென்னை மாநிலத்தைப் போன்று தீண்டாமைக் கொடுமை கடுமையாக உள்ள இடம் வேறு எதுவுமே இல்லை. தீண்டாதவன் ஒருவன் பிராமணர்கள் குடியிருக்கும் தெருக்களின் வழியாக நடப்பது குறித்து எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. தீண்டாதார் வேண்டுமென்றே அறியாமையில் மூழ்கடித்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். ஒரு மிருகம் நோய்வாய்ப்பட்டால் அதைக் கவனிக்க ஆள் உண்டு; ஆனால், ஒரு தீண்டத்தகாதவனை ஆண்டவன்தான் காப்பற்றவேண்டும்.

    (தமிழ்நாட்டில் காந்தி, 338, 339).

    காந்தியாரே முகம் – அகம் கோணும்படி நடந்துகொண்ட ஊர். இந்த ஊர் நகராட்சியில்தான் அக்ரகாரத்துக்குக் கக்கூஸ் எடுக்க பஞ்சமர்கள் வரக்கூடாது; சூத்திரர்கள் வரவேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள் (1935) என்றால், கும்பகோணத்தின் கொழுப்பெடுத்த பிராமணர்களின் திமிரைப்பற்றி அலசத் தேவையில்லை.”

    (edited – Tamilhindu Editorial)

  36. அக்கா,

    நாங்கள் பள்ளியில் படித்ததைத் தான் எழுதினோம்.

    ஊருக்கெல்லாம் நாட்டுக்கெல்லாம் ஒரு வரலாறு இருந்தால், உங்களுக்கு மட்டும் தனியாக ஒரு வரலாறா?

    அடுத்து அவருக்கு அம்பேத்கர் என்று ஒரு ஆசிரியரே இல்லை என்றோ, அல்லது அந்த ஆசிரியர் தினம் தோறும் தலையில் குட்டி பிரம்பால் அடித்த காழ்ப்புணர்ச்சிக்காரர் என்றோ கூட கூறினாலும் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

    ஏனெனில் நாம் அம்பேத்கருடன் அவர் காலத்தில் இல்லை. ஆனால் அவருடன் படித்தவர்கள் எல்லாம் லணடன் நீதி மனறத்தில் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து கூறிய ஆதாரங்கள் உங்கள் கையில் இருக்கலாம்.

    பெரியாரை அம்பேத்கார் ரேஞ்சுக்கு உயர்த்த முயச்சி செய்து பார்த்தீர்கள். அது நடக்கவில்லை. இப்போது அம்பேத்கரை பெரியார் அளவுக்கு இறக்கப் பார்க்கிறீர்கள்.

    அடுத்தது என்ன ? அம்பேத்கர் கொலம்பியா பல்கலை கழகத்தில் படித்தது உண்மையா இல்லையா? பெரியார் கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் படித்ததற்கான ஆதாரத்தையும் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து மறைத்து விட்டனரா?

    பெரியாரின் முக்கியத்துவத்தை குறைப்பது என் நோக்கம் கிடையாது.
    நான் பெரியாருக்காக வாதாடி பல திட்டுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டவன்.

    ஆனால் பெரியாரின் குணாதிசயங்கள் நோக்கம், தகுதி, வழிமுறைகள் வேறு, அம்பேத்கரின் குணாதிசயங்கள் நோக்கம், தகுதி, வழிமுறைகள் வேறு, என்பதே என் கருத்து.

    நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். ஆனால்- மன்னிக்கவும்- பில்டப் செய்து எழுதாமல் நடுவு நிலைக் கண்ணோட்டத்தில் எழுதுங்கள். அப்போது உங்களின் கருத்துக்கள் வலிமை அடையும். நீங்களும் பெரிய சிந்தனையாளர் ஆவீர்கள்.

    ஆனால் இப்போது போலவே ஆஹா, ஓஹோ என்று எழுதினாலும் உங்களுக்கு கழக அரசியல் ஏணியில் முன்னேற்றம் கிடைக்கும். எனவே எப்படி இருந்தாலும் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம்தான். வாழ்த்துக்கள்!

  37. /////திண்டுக்கல் சர்ச் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய பதிவை விரைவில் பதிவு செய்கிறேன்.//

    ஓ வெச்சாச்சா! ஆனால் அது மட்டும் நீங்கள் பதிவு போட்டு சொன்னால் தான் தெரியும். அவளவு ரகசியமாவா வெச்சீங்க. அந்த அளவுக்கு எதிர்ப்பே தெருவிக்காமல் கிறிஸ்தவர்கள் சுரனை கெட்டுப்போய் இருந்தார்களா? அல்லது அவர்கள் எதிர்க்காத அளவிற்கு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெச்சீங்களா? அல்லது எதிர்க்க லாயக்கில்லாத அளவிற்கு வெளியே தெரியாத சர்ச்சா? ஏன் பெரியாரின் கல்லை வைக்க வேறு இடமே கிடைக்கலியா? சாந்தோம் சர்ச்சுல வெக்கலாமே…இல்ல வேளாங்கன்னி மாதா கோவில் முன்னாடி வெக்கலாமே! அது என்ன ஸ்பெஷலா திண்டுக்கல்..அங்கே தான் பேரம் படிஞ்சதோ!////

    தமிழ் ஓவியா இதற்கு பதில் சொல்லாமலே எஸ்கேப் ஆகிவிட்டாரே. என்னே வாதத்திறமை!!!

  38. 60 வ‌ருட‌த்துக்கு மேலான‌ க‌ழ‌க‌ வ‌ர‌லாற்றில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அதை தாங்கிப் பிடிக்க‌வில்லையா?அவ‌ர்க‌ளுக்கு வ‌குப்பு வாரி பிர‌தி நிதித்துவ‌ம் த‌ர‌ப் ப‌ட்ட‌தா?

    தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை த‌ல‌மைப் பொறுப்புக்கு கொண்டு வ‌ர‌ நேர‌ம், கால‌ம், நாள், ந‌ட்ச்ச‌த்திர‌ம் பார்க்க‌ வேண்டுமா?

    தாழ்த்த‌ப் ப‌ட்ட‌வ‌ர் மீது காட்டும் க‌ரிச‌ன‌ம் வெட்ட‌ வெளிச்ச‌மாக‌த் தெரிகிர‌தே?

    //இங்கு எல்லாரும் ஜாதியைத் துறந்து விட்டுத்தான் தி.க.வில் இணைகிறோம். அதன் பிறகும் தலித்-தலித் அல்லாதார் என்று தி.க. என்ற அமைப்பில் பேதம் பார்ப்பது கிடையாது.

    இன்னும் கேட்டால் தி.க.வில் பொறுப்பில் இருப்பவர்கள் என்ன ஜாதி என்று பார்க்கும் தன்மை அடியோடு இல்லை. மனிதர்களாக ஒன்றிணைந்திருக்கிறோம்//

    //பொறுப்பில் இருப்ப‌வ‌ர‌க‌ளுக்கு ஜாதி பார்க்க‌க் கூடாது!//

    அப்ப‌டி போடு!

    //தலித்-தலித் அல்லாதார் என்று தி.க. என்ற அமைப்பில் பேதம் பார்ப்பது கிடையாது.

    மனிதர்களாக ஒன்றிணைந்திருக்கிறோம்!//

    “அப்ப‌ பார்ப்ப‌ன‌ர், பார்ப்ப‌ன‌ர‌ல்லாதார் பேத‌ம் ம‌ட்டும் பார்க்க‌ வேண்டுமா? பார்ப்பான் பேரை சொல்லி, பார்ப்பானைத் திட்டி,ச‌ம‌த்துவ‌ வேட‌மிட்டு க‌ண்ணுக் கெட்டிய‌ தூர‌ம் வ‌ரை வ‌ளைக்க‌ வேண்டிய‌து. க‌ல்லா நிர‌ம்பிய‌வுட‌ன், பொறுப்பில் இருப்ப‌வ‌ர‌க‌ளுக்கு ஜாதி பார்க்க‌க் கூடாது என்று த‌லித்க‌ளுக்கு ப‌ட்டை நாம‌ம் போட‌ப் ப‌டுவ‌தாக‌” ம‌க்க‌ள் பேசிக் கொள்கிறார்க‌ளே!

    நீங்க‌ள் குர‌ல் கொடுக்க‌க் கூடாதா?

    We await clarfication from தமிழ் ஓவியா for this also.

  39. அக்கா,

    //இந்த ஊர் நகராட்சியில்தான் அக்ரகாரத்துக்குக் கக்கூஸ் எடுக்க பஞ்சமர்கள் வரக்கூடாது; சூத்திரர்கள் வரவேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள் (1935) என்றால், கும்பகோணத்தின் கொழுப்பெடுத்த பிராமணர்களின் திமிரைப்பற்றி அலசத் தேவையில்லை”//

    அது என்ன‌வோ புரிய‌வில்லை, உங்க‌ளுக்கு அதிகார‌த்திலிருந்த‌ குறைந்த‌ எண்ணிக்கையிலான பார்ப்ப‌ன‌ர்க‌ள் செய்த திமிர் த‌ன‌ம் ம‌ட்டும் க‌ண்ணுக்குத் தெரிகிற‌து.
    பெரும்பான்மையான‌ பார்ப்ப‌ன‌ர்க‌ளுக்கும் இத‌ற்க்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் கிடையாது, இவ‌ர்க‌ளை (அதிகார‌த்திலிருந்த‌ பார்ப்ப‌ன‌ர்க‌ளை) எதிர்க்கும் வ‌லுவும் பெரும்பான்மையான‌ பார்ப்ப‌ன‌ர்க‌ளுக்கு கிடையாது என்ப‌தாக‌ க‌ருத‌ எல்லா சாத்திய‌ங்க‌ளும் உள்ள‌ன‌.

    80 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ந‌ட‌ந்த‌ செய்திக‌ளை க‌ட் அன்ட் பேஸ்ட் செய்யும் உங்க‌ளுக்கு இன்று சுட‌ச் சுட‌ ந‌ட‌க்கும் செய்திக‌ள் தெரியாதா? அல்ல‌து காழ்ப்புண‌ர்ச்சி க‌ண்க‌ளை ம‌றைக்கிற‌தா?

    பிற‌ ம‌க்களின் செய‌ல்க‌ள் என்ன?

    பாப்பாப் ப‌ட்டி கீரிப்ப‌ட்டியிலே ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர்க‌ள் த‌லை உருட்ட‌ப் ப‌ட்ட்து உங்க‌ளுக்கு கொடுமையாக‌த் தெரியாதா?

    திண்ணிய‌த்திலே வாயிலே பீயைத் திணித்த‌து கொடுமை இல்லையா?

    ப‌ல‌ வீடூக‌ள் கொளுத்த‌ப் ப‌ட்டு, பெண்க‌ள் வன்புணர‌ப்ப‌ட்டு, வ‌ன்முறை வெறித் தாண்ட‌வ‌ங்க‌ள் ந‌டை பெறுவ‌து கொடுமை இல்லையா?

    எத்த‌னை பேர்க‌ள் க‌ட்டி வைக்க‌ப் ப‌ட்டு தோலை உறித்திருக்கிறார்க‌ள்?

    சென்னை ச‌ட்ட‌க் க‌ல்லூரியிலே 40 பேர் செர்ந்து ஒரு மாண‌வ‌னை அவ‌ன் கீழே விழுந்த‌ நிலையிலும்அவ‌னுக்கு உயிர் இருக்கிற‌தா என்று கூட‌த் தெரியாத‌ நிலையிலும் விடாம‌ல் வீர‌த் தாக்குத‌ல் ந‌டை பெற்றது கொடுமை இல்லையா?

    இந்த‌க் கொடுமை யை எல்லாம் பார்க்கும் போது, சில‌ பார்ப்பன‌ர் செய்த‌ திமிர் த‌ன‌ம் ஜுஜூபியாக‌த் தெரிய‌வில்லை?

    இந்திய ச‌முதாய‌த்தின் பிர‌ச்சினைக‌ளை எப்ப‌டித் தீர்ப்ப‌து என்று ந‌டு நிலையாக‌ ஆராயாம‌ல், சொந்த‌ விருப்பு வெறுப்பின் அடிப்ப‌டையில் பார்ப்ப‌ன‌ரை ம‌ட்டும் க‌ட்ட‌ம் க‌ட்டி, த‌ங்க‌ளை ச‌மூக‌ , அரசிய‌ல் ரீதியில் உய‌ர்த்திக் கொண்டு, பில்லிய‌ன் க‌ண‌க்கில் சொத்துக்க‌ளையும் சேர்த்துக் கொண்ட‌வ‌ர்க‌ள் காட்டிய‌ நீதியின் ந‌ற்ப‌ல‌ன்க‌ள் என்ன‌ தெரியுமா?

    தென்னிந்தியாவிலே இன்றைக்கு ம‌னித‌னின் வாயிலே பீ திணிப்ப‌து பெரியார் பிற‌ந்த‌ த‌மிழ் நாட்டில் ம‌ட்டும் தான்.

    இன்றைக்கு 40 மாண‌வர் சேர்ந்து ஒரு மாண‌வ‌னைக் கைமா செய்யும் செய‌ல் ந‌டை பெறும் இட‌ம் ப‌குத்த‌றிவு ப‌க‌ல‌வ‌ன் கொள்கை ப‌ர‌ப்பிய‌ த‌மிழ் நாட்டில் ம‌ட்டும் தான்!

    ப‌குத்த‌றிவு ப‌க‌ல‌வ‌ன் பெரியார், சாதியை ஒழிக்கிறோம் என்ற‌ பெய‌ரில் சாதிக் காழ்ப்புணர்ச்சியை, அப்ப‌ட்ட‌மான‌ சாதி வெறியைக் கொழுந்து விட்டு எரியும் ப‌டி வ‌ள‌ர்த்த‌துதான் இப்படிப் பாப்பாப் ப‌ட்டியிலும் , கீரிப் ப‌ட்டியிலும், ச‌ட்ட‌க் க‌ல்லூரியிலும், திண்ணிய‌த்திலும் வெடிக்கிற‌து.

    இத்த‌னை காட்டு மிராண்டி செய‌ல‌க‌ளும் ந‌ட‌க்கும் போது பார்ப்பான் த‌னியாக‌ ஒதுங்கி வாழ‌லாம் என்று நினைத்திருக்க‌லாம்.

    ஒரு ம‌னித‌னை பிற‌ ம‌னித‌ர் இழிவு செய்வ‌தும், வாயிலே பீ தினிப்ப‌தும், த‌லையை வெட்டி உருட்டுவ‌தும், வீடுக‌ளைக் கொளுத்துவ‌தும் செய்யும் ம‌னித‌ர்க‌ளிட‌ம் இருந்து ஒதுங்கி வாழ‌வே நான் விரும்புவேன்.

    பிறருக்கு தொல்லை தராத மனிதர்களுடன் சேர்ந்து வசிக்கவே நான் விரும்புவேன். அது அவ‌ர் எந்தப் பிரிவை சேர்ந்த‌வ‌ர் ஆக‌ இருந்தாலும் மகிழ்ச்சிதான். தீய ஒழுக்கத்தில் ஈடுபடுபவன் அவன் என் தம்பியானாலும் அவ‌னைத் திருத்த முடிந்த வரை முயற்சித்து, அப்படியும் அவன் திருந்தாவிட்டால் அவனை விட்டு ஒதுங்கியே வாழ வேண்டிய கட்டயத்திலேயே இருக்கிறேன்.

    எனவே எல்லோரும் சேர்ந்து வாழ‌ சிற‌ந்த‌ வ‌ழி, ம‌னித‌ன் ம‌ன‌தில் அன்பை வ‌ள‌ர்த்து, ஒவ்வொரு ம‌னித‌னையும் க‌ண்ணிய‌ம் மிக்க‌ க‌ன‌வான் ஆக்குவ‌துதான்.
    அப்போது தான் உண்மையான‌ நாக‌ரீக‌ ச‌முதாய‌ம் உருவாகும்.

    வாயில் பீ திணீப்பவரை வைத்து, த‌லையை வெட்டி ப‌ந்து போல‌ உருட்டுப‌வ‌ரை
    வைத்து ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் உருவாக்க‌ முடியாது.

    ஆனால் நீங்க‌ள்‍- மன்னிக்க‌வும்- சாதி வெறியை தூண்டி, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை வ‌ளர்த்து க‌ற்கால‌ நிலைக்கு கொண்டு செல்கிறீர்க‌ள்.

    அதுதான் இப்படிப் பாப்பாப் ப‌ட்டியிலும் , கீரிப் ப‌ட்டியிலும், ச‌ட்ட‌க் க‌ல்லூரியிலும்,திண்ணிய‌த்திலும் வெடிக்கிற‌து.

    தூங்குப‌வ‌ர எழுப்ப‌லாம். தூங்குவ‌து போல‌ ந‌டிப்ப‌வ‌ரை எழுப்ப‌ முடியுமா?

  40. //இந்தக் கதையைப் பதிவு செய்துள்ளவர் யார் தெரியுமா? காந்தி ஓர் அகிம்சாவாதி, வீரசாவர்க்கர் என்ற நூல்களை எழுதிய தனஞ்செய்கீர் என்ற பார்ப்பனர்தான்.//

    இதோ தெள்ளத்தெளிவாக மற்றொரு பொய். தனஞ்சய் கீர் பார்ப்பனரல்லர். அவரும் தலித்தான். (https://www.sepiamutiny.com/sepia/archives/003868.html) இது கூடத்தெரியாமல் பேசுவோரை என்ன செய்ய? கீழே உள்ளது பகுஜன் சமாஜ் கட்சியின் இணையதளத்திலிருந்து: “Of his brothers and sisters, only Ambedkar succeeded in passing his examinations and graduating to a bigger school. His native village name was “Ambavade” in Ratnagiri District so he changed his name from “Sakpal” to “Ambedkar” with the recommendation and faith of Mahadev Ambedkar, a Deshasta Brahmin teacher who believed in him.” இதுவும் பிராம்மண சூழ்ச்சியாகத்தான் இருக்கவேண்டும்.

  41. தமிழ் ஓவியா அவர்களை எங்கே காணோம்?

    தெளிவு பெற்று விட்டாரா?

  42. Thanks Aravindan Neelakantan. I was just trying to search on BSP website.. and you got it here.. Take it Mr.Tamil Oviya.. now what’s your answer for this? Well.. you may not really know about BSP. it’s a national Party.. (unlike DK) and they have Ambedkar as their mentor. Their leader Ms.Mayawati is the CM of Uttar Pradesh, a state in North India. (do you even know what India is??)

  43. தமிழ் ஓவியா போன்ற மூளை சலவை செய்யப்பட்டவர்களை யாராலும் திருத்த முடியாது. பிராமணர்கள்தான் ஜாதி முறையயை வளர்த்தார்கள் என்றால், அவர்கள் ஏன் பிராமணர்களுக்கு அவ்வளவு நிபந்தனைகள் விதித்தனர். பிச்சை எடுத்து உண்ண வேண்டும், தனக்கு என்று சொத்து சேர்க்க கூடாது, வேதம் கூறுவதும், கற்பிப்பது மட்டுமே தொழிலாக இருக்க வேண்டும்.

    பிராமணர்களுக்கு தண்டனை தரும் உரிமையும் இல்லை. பாரதத்தில் வரும் ஒரு வாசகம் “நன்கு கற்று அறிந்த பிராமண்னை விட சிறந்த அரசன் மேலானவன்”. பிராமணர்கள்தான் ஜாதியை உண்டாக்கினார்கள், பிராமணர்கள் மேலானவர்கள் என்று இந்து மதம் கூறுகின்றது என்பது, ஈ.வெ.ராவும் அம்பேத்கரும் ஒன்று என்பதை விட பெரிய பிதற்றல்

    ஆங்கிலேயன் வரும் வரை, புரோகிதம் செய்து அதில் வருவதை கொண்டு வாழ்ந்து வந்தனர், அன்று இருந்த அரசர்களுக் அவர்களுக்கு உதவி வந்தனர். ஆங்கிலேயன் வந்த பின் அவர்களுக்கு பிழைக்க வழி இன்றி கோட்டையில் கால் வைத்தனர், ஹோட்டல் வைத்தனர். இன்று பிராமண்த்துவம் ஏதுமின்றி அனைவரையும் போலத்தான் உள்ளனர்.

    அம்பேத்கர், ஜாதி முறையை ஒழிக்க போராடினார். ஈ.வெ.ரா, ஜாதி முறையயை வலுவாக்கினார். உயர்சாதியினர், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவை, பிராம்ணர்கள், பிராமணரல்லாத்வர், தாழ்த்தப்பட்டவர்கள் என்று பிரித்த புண்ணியம் அவருக்கே. அதோடு, ஒரு ஜாதியினர் மற்ற ஜாதியினர் மீது வன்முறை பிரோயகமும் செய்யலாம் என்றும் காட்டியது அவர்தான். பிராமண்ர்கள் மீது வன்முறையை தூண்டினார், அது தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் பாய்ந்தது.

    தமிழ் ஓவியா,பின் வரும் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்வாரா (முதலில் பதில் சொல்வார என்பது சந்தேகம், நேர்மை என்பது ஈ.வெ.ரா விற்கே கிடையாது, அவரின் தொண்டர்களிடம் ,,,,)

    1. பிராமண்ர்களின் பூணூலை அறுக்க புறப்பட்ட வீரப்படை ஏன் ஆசாரிகள், செட்டியார்களிடம் போக வில்லை

    2. சிலையை வணங்குவது முட்டாள்த்தனம் என்று பேசும் கூட்டம், ராமசாமியார்கு சிலை வைக்கும் முட்டாள்த்தனத்தை ஏன் செய்ய வேண்டும்

    3. விக்கிரகங்களுக்கு பாலபிஷேகம் செய்வது வீண் செலவு என்றால், ராமசாமியாரின் கல்லுக்கு மாலை அணிவிப்பது??

    4. ஸ்ரீரங்கத்தில் ஒரு கல்லை உடைத்தால், அதற்கு சம்பந்தமே இல்லாமல், சென்னை அயோந்தியா மண்டபத்தில் உள்ள அப்பாவிகளை உதைப்பது என்ன பகுத்தறிவு

    5. சிதம்பரத்தில் கோவிலில் நுழைந்து ரவுடித்தனம் செய்யும் கும்பலுக்கு, கண்டதேவி கோவிலில் சென்று போராட மனம் மறுப்பதேன்.

    6. கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களில் உள்ள மூடத்தனங்களை எதிர்த்து இது வரை ஒரு போராட்டமும் நடந்தமாதிரி தெரியவில்லையே?

    7. எக்மோரில் உள்ள பெரியார் திடலில், கிறிஸ்துவ ஜெபகூட்டங்களுக்கு மட்டும் அனுமதி தருவதேன், எப்படியாவது பணம் சம்பாதிக்கும் நோக்கமன்றி வேறென்ன

    8. கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்த போரடும் நீங்கள் ஏன் மசூதியில் அதை கடைபிடிக்க போராடவில்லை. அரபு மொழி தோன்றது இந்தியாவில் என்ற எண்ணமா?

    இதற்கு எல்லாம் பதில் தந்தால் நீங்கள் விவாதிக்க தகுதியானவர் என்று எண்ணலாம், இல்லாவிடில் விதண்டாவதம் புரியும் கும்பலை சேர்ந்த ஒரு பிறவி என்று உங்கள் உளறலை மறந்து உருப்படியான் வேலை பார்க்கலாம்

    எப்படியும் பதிலுக்கு கேள்வி கேட்பீர்கள், இதற்கு பதிலை கூறிவிட்டு பிறகு ஆரம்பியுங்கள் நேர்மையாக

  44. தமிழ் ஓவியா அவர்களுக்கு
    எனக்காக நீங்கள் ஒரு கேள்வியை வைத்துள்ளீர்கள். சரியான கேள்விதான்.
    அருண்சோரியின் புத்தகம் 1997ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது நான் பதினோறாம் வகுப்பு படித்து வந்தேன். (நான் பிறந்தது 1980) இந்த புத்தகம் அப்போது வெளிவந்ததே எனக்குத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல வெகுஜன மக்களுக்கும், சேரிவாழ் மக்களுக்கும் இன்றும் கூட இந்தப் புத்தகத்தைப் பற்றி தெரியாது. ஏனென்றால் அந்த புத்தகம் யாரிடமும் ஒரு சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தவில்லை.
    சரி தெரிந்தபின் எழுதியிருக்கலாமே என்று நீங்கள் கேட்பீர்கள்.
    எழுத நான் தயார்; யார் வெளியிடுவார்கள்?
    எழுதி சொந்தமாக வெளியிடும் அளவுக்கு(வீரமணி அளவுக்கு) நான் பணம் உள்ளவனும் அல்ல.

    அம்பேத்கரைப் பற்றி எழுதிவிட்டதால் அம்பேத்கர்வாதியாகவிட முடியாது.

    நீங்கள் விமர்சிக்கும் ஆர்எஸ்எஸ்கூட 24-10-1997 , தங்களுடைய அதிகாரப்பூர்வமான இதழான விஜயபாரதம் இதழில் ‘அருண்சோரியின் அம்பேத்கரும் தேசபக்தர்களின் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் ஐந்து பக்க கட்டுரையை எழுதி வெளியிட்டு அருண்சோரியின் பித்தலாட்டத்தை வெளியிட்டது.

    உங்கள் வாதப்படி அம்பேத்கரை புகழ்ந்து எழுதியதால் ஆர்எஸ்எஸ்கூட அம்பேத்கரிடம் ஆயிரம் மடங்கு அக்கறை உள்ளதாக நீங்கள் கருத வேண்டும்.

    எனக்கு ஒரு கேள்வி என்னவென்றால்
    நீங்கள் அந்த புத்தகத்துக்கு மறுப்புரை எழுதியிருக்கிறீர்களா? எழுதவில்லை என்றால் ஏன் எழுதவில்லை?

    மேலே உள்ள கட்டுரைக்கு பதிலே சொல்லவில்லையே , எப்பொழுது சொல்வீர்கள்?

    பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக போராடினார். தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல என்பதை என்னால் ஆதாரப்பூர்வமாக, உறுதியாகச் சொல்ல முடியும்.
    தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடினார் என்று உங்களால் ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியுமா?

    மாநாடுகளில் இப்படிப் பேசினார், குடியரசு, விடுதலையில் இப்படி எழுதினார் என்று வாய்ஜாலங்களை எல்லாம் சொல்லாதீர்கள். ஏனென்றால் இதை பார்த்து ஏமாற நான் ஒன்றும் கருப்புச்சட்டைக்காரன் அல்ல;
    இதுபோல் மாநாடுகளில்பேசியவர்கள், பத்திரிகைகளில் எழுதியவர்கள் நிறைய பேர் உண்டு.
    களத்திலே நின்று போராடினாரா? தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக என்ன போராட்டங்களை நடத்தினார்? எந்தெந்த உரிமைகளைப் பெற்றுத் தந்தார்?
    தமிழ் ஓவியாவின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

  45. ////திண்டுக்கல் சர்ச் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய பதிவை விரைவில் பதிவு செய்கிறேன்.//

    ஓ வெச்சாச்சா! ஆனால் அது மட்டும் நீங்கள் பதிவு போட்டு சொன்னால் தான் தெரியும். அவளவு ரகசியமாவா வெச்சீங்க. அந்த அளவுக்கு எதிர்ப்பே தெருவிக்காமல் கிறிஸ்தவர்கள் சுரனை கெட்டுப்போய் இருந்தார்களா? அல்லது அவர்கள் எதிர்க்காத அளவிற்கு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெச்சீங்களா? அல்லது எதிர்க்க லாயக்கில்லாத அளவிற்கு வெளியே தெரியாத சர்ச்சா? ஏன் பெரியாரின் கல்லை வைக்க வேறு இடமே கிடைக்கலியா? சாந்தோம் சர்ச்சுல வெக்கலாமே…இல்ல வேளாங்கன்னி மாதா கோவில் முன்னாடி வெக்கலாமே! அது என்ன ஸ்பெஷலா திண்டுக்கல்..அங்கே தான் பேரம் படிஞ்சதோ!////

    தமிழ் ஓவியா இதற்கு பதில் சொல்லாமலே எஸ்கேப் ஆகிவிட்டாரே. என்னே வாதத்திறமை!!!///////////

    காணாமல் போனவர் பற்றிய அறிவுப்பு!! அய்யோ தமிழ் ஓவியாவை ஞாயமான கேள்வி கேட்டவுடன் காணவில்லை…யாராவது கண்டுபிடுத்து இழுத்துவாருங்களேன். இங்கே பலபேர் பதிலுக்காக கத்துக் கொண்டு இருக்கிறார்களே….!!!!!!!

  46. வெங்கடேசன் சார்! எங்கே சார் அடுத்த பாகம். ஏதாவது வேறு வேலைப்பளு உங்களை அமுக்கி விட்டதா! எங்கள் குரலை உங்களைப் போன்ற ஒரு சிலர் தான் ஒலிக்கிறீர்கள். உதவியாக ஏதாவது செய்யவேண்டுமானால் சொல்லுங்கள். காசில்லை என்னிடம். உடல் உழைப்பைத் தருகிறேன். உங்களுக்காக.

    நன்றி

  47. வெங்கடேசன் மற்றும் நண்பர்களுக்கு நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு எனது வலைப்பூவான தமிழ் ஓவியாவில் (https://thamizhoviya.blogspot.com) பெரியார்-தலித் என்ற சுட்டியை சுட்டி விபரம் அறிந்து கொள்ளலாம். விரைவில் இது குறித்த பதிவு தமிழ் ஓவியா வலைப்பூவில் இடம் பெறும். ஆரோக்கியமான விவாதத்தை சந்திக்க எப்போதும் தயார் வெங்கடேசன்.
    நன்றி.

    ————-விவாதிப்போம்.

  48. . /பிராமண்ர்களின் பூணூலை அறுக்க புறப்பட்ட வீரப்படை ஏன் ஆசாரிகள், செட்டியார்களிடம் போக வில்லை//

    இது குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஓவியா வலைப்பூவில் உள்ள தேடு பொறியில் பூணூல் என்ற சொல்லைக் கொடுத்தால் அது தொடர்பான பதிவுகள் கிடைக்கும்.கட்டுரைகளைப் படித்து விளக்கம் பெறலாம்.இது போல் மற்ற கேள்விகளுக்கும் விளக்கம் கிடைக்கும். தேடிப் படிக்க வேண்டுகிறேன்..
    மிக்க நன்றி.
    ————–விவாதிப்போம்

  49. அக்கா, உங்கள் வலைப்பூவுக்கு வந்தால் வெளியே வரும் முன் மேலும் மேலும் பல முறை புதிது புதிதாக உங்கள் வலைப்பூக்கள் தோன்றி, பிரச்சினை ஆகி விட்டது. சில நொடிகளில், இருபது முப்பது என்று பெருகி விட்டது. கடைசியில் இன்டெர் நெட் கேபிளை பிடுங்கி எறிந்து அதை நிறுத்தினேன். வீட்டிலே எல்லோரும் என்னைத் திட்டினாங்க. உங்க இணையத்தை நல்லா செக் பண்ணுங்க. (கலைங்கர் பாணியில் மகிசாசுரனின் இரத்தத் துளி ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு மகிஷன் தோன்றியது போலாவா என்று புரட்சி வசனம் எழுதாதீர்கள். நாங்கள் பகுத்தறிவுக் காரர்கள்)

    இங்கே கேட்கப் படும் கேள்விகளுக்கு இங்கேயே பதில் அளிப்பதுதான் அறிவு நியாயம்.

  50. ////திண்டுக்கல் சர்ச் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய பதிவை விரைவில் பதிவு செய்கிறேன்.//

    ஓ வெச்சாச்சா! ஆனால் அது மட்டும் நீங்கள் பதிவு போட்டு சொன்னால் தான் தெரியும். அவளவு ரகசியமாவா வெச்சீங்க. அந்த அளவுக்கு எதிர்ப்பே தெருவிக்காமல் கிறிஸ்தவர்கள் சுரனை கெட்டுப்போய் இருந்தார்களா? அல்லது அவர்கள் எதிர்க்காத அளவிற்கு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெச்சீங்களா? அல்லது எதிர்க்க லாயக்கில்லாத அளவிற்கு வெளியே தெரியாத சர்ச்சா? ஏன் பெரியாரின் கல்லை வைக்க வேறு இடமே கிடைக்கலியா? சாந்தோம் சர்ச்சுல வெக்கலாமே…இல்ல வேளாங்கன்னி மாதா கோவில் முன்னாடி வெக்கலாமே! அது என்ன ஸ்பெஷலா திண்டுக்கல்..அங்கே தான் பேரம் படிஞ்சதோ!////

    தமிழ் ஓவியா இதற்கு பதில் சொல்லாமலே எஸ்கேப் ஆகிவிட்டாரே. என்னே வாதத்திறமை!!!/////////

    சார் பொறுமையே இல்லாமல் இந்தக் கேள்வியை தமிழ் ஓவியாவின் வலைப்பூவிலேயே போய் கேட்டேன் அதற்கு பதில் சொல்லவுமில்லை. அந்தக்கேள்வியை அவர் பிரசுரிக்கவும் இல்லை. என்ன சார் பகுத்தறிவு இது. ஒன்னுமே புரியலை சார்.

  51. பிற மதங்கள் எல்லாம் ஜெர்ரி, ஜாக், ஹென்றி எல்லோருக்கும் ஒரே அளவுள்ள சட்டையைக் கொடுத்து அணியக் கூறியது போல – எல்லோருக்கும் ஒரே வழி பாட்டு முறையை அளித்த போது,
    இந்து மதம் ஒவ்வொரு மனிதருக்கும் பொருந்தும் வகையில், தியானம், தவம், பக்தி, கர்ம பலத் தியாகம், கர்ம யோகம், ஹட யோகம், சேவை இப்படிப் பல வழிகளை பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பே அளித்து இருக்கிறது.

    வேத காலத்தில் பலர் சிவன் சாமியையும், ப்ரும்மா சாமியையும் நினைத்து தவம் செய்யவில்லையா?

    உருவம் இல்லாத நிலையை வழிபடுவது எப்போதும் இந்து மதத்தில் உள்ளது.
    ஆனால் அது தியானத்தில் சிறந்த பயிற்சி பெற்றவருக்கு பொருந்தும். நானும் உருவம் இல்லாத நிலையை தியானிக்க முயன்றவன் தான்.

    வூருக்கு வெளியே காட்டுப் பகுதியில் சென்று தியானத்தில் ஈடு பட்டு இருக்கிறேன். ஆனால் உருவம் இல்லாத நிலையை தியானம் செய்யும் போது அதிக நேரம் தியானம் செய்ய என்னால் முடியவில்லை. 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் செய்திருக்கிறேன்.

    அதே நேரம் உருவம் எடுத்த நிலையில் உள்ள கடவுளின் நிலையில் மனம் சிதறாமல் ஒரு மணி நேரம் கூட தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபட முடிகிறது.

    “இவர் சொன்னார், அவர் சொன்னார்” என்று யாரோ கூறியதைக் கேட்டு, இங்கெ வந்து மற்றவரைக் கட்டாயப் படுத்தவில்லை நான். எனக்கு பொருத்தமான வழி பாட்டை நான் தேர்வு செய்து செயல் படுத்துகிறேன்.

  52. //இங்கே கேட்கப் படும் கேள்விகளுக்கு இங்கேயே பதில் அளிப்பதுதான் அறிவு நியாயம்//

    நான் கூட அதையே தான் சொல்ல நினைத்தேன். இங்கே கேள்வி கேட்டால் அங்கே சொல்கிறேன் வா என்றால் என்ன அர்த்தம் என்று…பரவாயில்லை நீங்களே அதை வெளிப்படுத்தி விட்டீர்கள்.

    நன்றி

  53. தமிழோவியா, கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை என்றால் முடியவில்லை என்று நேர்மையாக கூறி விலகுங்கள். இதில் தேடிப்பார், இதில் தேடிப்பார் என்று தப்பிப்பது அல்ல விவாதம். உங்கள் சைட்டில் நீங்களே தேடி பதிப்பிக்கலாமே. உங்கள் கேள்விகளுக்கும் நாங்களும் வேதத்தில் தேடிப்பார், உபநிஷத்தில் தேடிப்பார் என கூறிச் செல்ல முடியும். ஆனாலும், உங்களைப்போன்ற போலிப் பகுத்தறிவு புலிகளின் தலையில் ஏறும்படி இங்கு பலர் கூறும் நேர்மையை கற்றுக் கொள்ளுங்கள். (உங்கள் ப்ளாகிற்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமானால் வேறு உபாயங்களை கையாளுங்கள்). விவாதம் நடப்பது இங்கே, இங்கு பதில் சொல்ல முடியாமல் பயந்தோடும் நீங்கள் உண்மையில் ராமசாமியாரின் தொண்டர்தான். அவரின் புத்தி எப்படி இல்லாமல் போகும்.

  54. ஆள், ஆளாக்கு கலாய்க்குறீங்க!

    முதலில் சட்டியில் இருப்பதே அப்பட்டமான சாதி வெறியும், மத துவேஷமும் தான். அதை பகுத்தறிவு என்ற பெயரிலே போனி செய்து வந்துள்ளனர். எனவே உண்மையான பகுத்தறிவு இல்லாத நிலையில் என்ன செய்ய
    முடியும்?

    1920, 1930 ஆகிய கால கட்டங்களில் நடந்த “கொடுமைகளை” எழுதி ஒப்பேத்தப் பார்த்தால், இப்போ உள்ள நிலைமையை எழுதுறீங்க.

    ஏதோ தலையை ஆட்டி, ஒத்துக் கொள்ளுவீங்க என்ற நினைப்பிலே எழுத வந்தால், எல்லோரும் பல விவரமான கேள்விகளைக் கேக்குறீங்க.

    எனவே யாரவது சிந்திக்க விரும்பாதவர் கிடைத்தால் வெறுப்புக் கருத்துக்களை அள்ளி வீசி மூளை சலவை செய்ய வசதியாக இருக்கும்.

    கழகப் பணிகளைக் கவனித்தால், நாளை முன்னேறும் வாய்ப்பு உள்ளது!

  55. //இங்கே கேள்வி கேட்டால் அங்கே சொல்கிறேன் வா என்றால் என்ன அர்த்தம் //

    இங்கு விளக்கம் கொடுத்தால், உங்கள் கேள்விக்கு மறுமொழி அளித்தால் அதை பதிவு செய்யாமல் இருட்டடிப்புச் செய்து விடுகிறார்கள். நான் பல முறை மறுமொழி அளித்தும் அதை பதிவு செய்ய வில்லை. அப்படியிருக்கிறது உங்கள் நேர்மை. வேறு என்ன செய்வது எனது தமிழ் ஓவியா வலைப்பூ வில் தான் தேடிப் படிக்கச் சொல்ல முடியும்.

    அறிவு நாணயம் ஏதாவது ஒரு சிறு துளி அளவாவது இருந்தால் இந்த விளக்கத்தை இருட்டடிப்புச் செய்யாமல் பதிவிட வேண்டுகிறேன்.

  56. வணக்கம்,
    //

    தமிழ் ஓவியா அவர்களை எங்கே காணோம்?

    தெளிவு பெற்று விட்டாரா?//

    என்ன நண்பர் திருசிக்காரரே நீங்க காமிடி கீமிடி பண்ணலையே?

  57. வணக்கம்

    //அறிவு நாணயம் ஏதாவது ஒரு சிறு துளி அளவாவது இருந்தால் இந்த விளக்கத்தை இருட்டடிப்புச் செய்யாமல் பதிவிட வேண்டுகிறேன். //

    (பகுத்து) அறிவை நாணயமாக்கும் (துட்டு நைனா துட்டு) விஷயம் தெரியாது என்பதால் நாணயம்மான அறிவு உள்ள பதிவுகளை மட்டுமே இங்கு பதிக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

  58. Tamil Hindu, please publish tamil ovia’s comment as it is. I assure it will be nice all time comedy. Lets enjoy his “Pathaals”

  59. கேள்விகளை கேட்டால் பலர் சொந்த கருத்து ேசாக கருத்துகளை கூறுகின்றர்களே தவிர. ஆதாரத்துடன் எவரும் கூறியதே கிடையாது. இவர்கள் அனைவரும் போலியாக வாக்குவாதம் செய்பவர்கள். யூகமாக கூறும் இவர்களின் பதில் காமெடியாகவே இருக்கிறது. இவர்கள் சரியான சிரிப்பு பதிப்பாளர்கள்…

  60. கேட்கப் படும் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதில்கள் அளிக்கப் பட்டு வருகின்றன. வாக்கியத்துக்கு வாக்கியம் விளக்கம் அளிக்கிறோம்.

    ஆனால் நாம் கூறுவதில் உண்மை இருப்பது புரிந்தும்- அது எல்லோருக்கும் புரிகிற வகையிலும் இருப்பதால் – சிலருக்கு தான் செய்ய வந்த செயல் நடை பெறவில்லையே என்று எரிச்சல் வருகிறது.

    “எல்லோரும் தன் வழியை மட்டுமே பின்பற்றியாக வேண்டும்” என்று கட்டளையிடுவது, வற்புறுத்துவது கற்கால முறையாகும் என்பதை நாகரீக உலகில் வாழ்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    கடவுள் பற்றி யார் வேண்டுமானாலும் ஆராயலாம். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கேள்வி கேட்கலாம். கடவுள் என்று யாராவது இருந்தால் அவர் யாருக்கும் தனிப் பட்ட சொத்து அல்ல!

    கடவுள் இல்லை என்று கூறும் உரிமை இந்தியாவில் எப்போதும் இருக்கும்.

    நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். கடவுளை வழிபடுவதும் வழிபடாததும் என் விருப்பம்.

    முடிந்தால் உங்கள் கடவுளிடம் சொல்லி என்னைத் தண்டிக்கச் சொல்லுங்கள்.

  61. தமிழ் ஓவியா அவர்களே, இங்கெ இந்து மதத்தை விமரிசிக்கும் பலரின் பின்னூட்டங்கள் வெளியிடப் படுகின்றன. உங்களின் கருத்துக்குப் பலர் பதில் குடுத்தே வருகின்றனர். நீங்கள் இப்படிக் கூறுவது நழுவலாகவே கருதப் படக் கூடும்.

  62. பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டாரா? இது குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தரும் தகவல் இதோ:-

    பெரியார் தலித்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரியா? – அ.மார்க்ஸ்

    பெரியார் இறந்து கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் அவர் மீதான தாக்குதல்களும் அவதூறுகளும் தொடர்கின்றன. கன்னடர், தமிழ்த் தேசத்துரோகி, மார்வார்களிடமிருந்து காசு வாங்கியவர் என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் பெரியாரை அவதூறு செய்த பெங்களுர் குணா இன்று முகவரி இன்றி முடங்கிக் கிடக்கிறார். இப்போது புதுச்சேரி ரவிக்குமார் முஸ்லிம்களுக்கும் தலித்களுக்கும் எதிராகப் பெரியாரை நிறுத்துகிறார்.

    இதற்கு ஆதாரமாக அவர் முன் வைப்பது ஆனைமுத்து அவர்கள் தொகுத்தள்ள பெரியார் சிந்தனைகளிலிருந்து இரு கட்டுரைகள்: ‘சதியை முறியடிப்போம்’ (பக்கம்- 1950-1953)’மைனாரிட்டி சமுதாயம்’ (பக்கம்- 46-48) – என்பன அவ்விரு கட்டுரைகள்.இப்படியான அவதூறு பேசுவோர் வழக்கமாகச் செய்யும் இரண்டு தந்திரங்கள் இங்கும் செயல்படுகின்றன.

    1- முழுக்கட்டுரையில் இருந்து தனக்கு வேண்டிய வரிகளை மட்டும் பீறாய்ந்து போடுவது.
    2- எந்தச் சூழலில் இப்படி பேச நேர்ந்தது என்கிற பின்னணியை முற்றாக மறைப்பது.

    சுமார் 50-ஆண்டு காலம் தமிழக அரசியலில் ஒரு மாபெரும் சக்தியாக ஓய்வின்றி இயங்கியவர் பெரியார். தேர்வு செய்யப்பட்ட அவர் பேச்சுக்களே இரண்டாயிரம் பக்கத்துக்கு மேல் வருகின்றன. ஒரு நீண்ட காலகட்டத்தில் பல்வேறு அரசியல் சூழல்களில் செயல்பட்ட ஒருவரின் ஒரு குறிப்பிட்ட கால உரையை மட்டும் வைத்து அவரை மதிப்பிட இயலாது. மேற்சொன்ன இரு கட்டுரைகளும் 1962-63 என்கின்ற ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அவதூறு பேசுகிறவர்கள் எந்தக் கூற்றை மேற்கோள் காட்டுகின்றனர்? திராவிட சமுதாய எதிரிகள் எனப் பார்ப்பனரோடு தாழ்த்தப்பட்டவர்கள்- முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள் ஆகியோரையும் பெரியார் சுட்டிக்காட்டுகிறார். அப்புறம் மைனாரிட்டிகளின் ஆதிக்கம் ஒரு நாட்டுக்கு நல்லதல்ல என்றும் அவர்களுக்கு சலுகைகள் அளிப்பது நாட்டுக்குக் கேடு என்றும் அவர் சொல்லுகிறார்.

    பெரியார் இப்படிச் சொல்லியுள்ளது உண்மைதான். எந்தச் சூழலில் இப்படிச் சொன்னார் என்பதைக் காணும் முன் தலித்கள் மற்றும் சிறுபான்மையோர் குறித்து அவர் என்னவெல்லாம் சொல்லியுள்ளார்- செய்துள்ளார் என சிந்திப்பது அவசியம்.

    தீண்டாமை ஒழிப்பு- தாழ்த்தப்பட்டோர் விடுதலை என்பன தொடர்ந்து அவர் கரிசனமாக இருந்தது. முதல் சுயமரியாதை மாநாட்டில் (1929) போடப்பட்ட தீர்மானங்கள் சில:

    சாலைகள்-குளங்கள்- கோயில்கள் முதலான பொது இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சம உரிமை அளிக்க வேண்டும்.அதற்கான சட்டங்கள் இயற்ற வேண்டும்.

    யாரும் தம் பெயருடன் சாதியை இணைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்குச் சட்டம் வேணடும்.

    தலித்குழந்தைகளுக்கு இலவசகல்வி- உணவு- உடை- புத்தகங்கள்- வழங்க வேண்டும்.

    புறம்போக்கு நிலங்களைத் தலித் மக்களுக்குப் பிரித்தளிக்க வேண்டும்.

    காலியாகும் அரசுப் பணியிடங்களை தலித்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்

    வெறும் தீர்மானங்களோடு நில்லாமல் தீண்டாமைக்கெதிரான போராட்டங்களைத் தமிழகத்திலும் புதுவையிலும் முன்னெடுத்து சிறை செல்லவும் பெரியாரும் அவரது தொண்டர்களும் தயங்கவில்லை. தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் மாநாடுகள் நடத்தி தலித் பிரச்சினைகளை நோக்கி மக்களின் கவனத்தை ஈர்க்கவும் பெரியார் தயங்கவில்லை.

    பறையருக்கு மேலாக இருந்தால் போதும் என நினைக்காதீர்கள். தீண்டாமையைக் கைவிடாமல் உங்கள் ஜாதி இழிவு ஒழியும் என்று நினைக்காதீர்கள் எனப் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பார்த்து கடிந்து கொண்டார். உயர்சாதி எனச் சொல்லிக் கொண்டு எவன் குறுக்கே வந்தாலும் பாம்பை அடிப்பது போல அடியுங்கள் என தாழ்த்தப்பட்டவர்களை ஊக்குவித்தார்.

    வாழ்வின் இறுதியாக அவர் நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டிலும் கூட(1973) அரசியல் சட்டத்தில் வெறுமனே தீண்டாமையை ஒழித்தால் போதாது. சாதியையே ஒழிக்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றினார்.

    தொடாந்து தலித் அரசியலுக்கும் ஆதரவாகவே நின்றார். அம்பேத்கர் முன் வைத்த தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதிக் கோரிக்கையை ராஜா போன்ற தலித் தலைவர்களே
    கைவிட்ட போதும் பெரியார் தொடர்ந்து ஆதரித்து வந்தார். அம்பேத்கருக்கு எதிராக ஜெகஜீவன்ராமைக் காங்கிரஸ் முன் நிறுத்தியபோது அதை எதிர்த்தார்.

    பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார். முஸ்லிம்கள் திராவிடர் கழகத்தில் சேர வேண்டும் என ஜின்னா சொல்லும் அளவிற்கு பெரியார், முஸ்லிம்களின்
    அரசியலுக்குத் துணை நின்றார். சூத்திரர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இழிவு நீங்க ஒரே மருந்து தான் உண்டு. அதுதான் இஸ்லாம் என்றார்.

    எர்ணாகுளத்தில் மாநாடு ஒன்று நடத்திப் பலரை முஸ்லிமாக மாற்றினார். முஸ்லிம்கள் அன்னியர் அல்லர் திராவிடர் என்றார். இந்த நாட்டை இந்துஸ்தான் ஆக்குவதைவிட திராவிட நாட்டுக் கொள்கையை உடைய பாகிஸ்தான் என ஆக்க வேண்டும் என்ற அளவிற்குப் பேசினார்.

    தலித் முஸ்லிம் ஆதரவை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த போதும் அதற்காக அவர் உரிமைக் கோரியதில்லை. என் மக்கள் விடுதலைக்காக நான் செய்வது உங்களுக்கும் நன்மையைப் பயக்கிறது அவ்வளவு தான் என்றார். இவ்வளவும் சொன்ன அவர் 1962-63 கால கட்டத்தில் மைனாரிட்டிகளையும் தாழ்த்தப்பட்டோரையும் எதிரிகள் எனச் சொன்னதின் பின்னணி என்ன?

    சென்ற நூற்றாண்டு தொடக்கம் முதல் ரெட்டமலை சீனிவாசன்- சிவராஜ் முதலிய தலைவர்கள் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றில் இருந்து செயல்பட்டனர்.
    பார்ப்பன எதிர்ப்பு அரசியலுக்கு ஆதரவாக தலித் மக்கள் இருந்தனர். 1940-களின் இறுதியில் தி.மு.க. பிரிந்தது. இளம்பரிதி- சக்திதாசன் முதலானோர் தி.மு.க.வில் இருந்து செயல்பட்டனர். சிவராஜ் போன்றவர்கள் குடிஅரசு கட்சியில் இணைந்தனர். பின்னர் அவர் அக்கட்சியின் அகில இந்தியத் தலைவரானார்.

    பிரிவினைக்குப் பிந்திய இந்தியாவில் முஸ்லிம்கள் தமது தேசபக்தியை நிறுவும் நோக்கில்
    அகில இந்திய ஒற்றுமை பற்றி அதிகம் பேசினார்.பார்ப்பன எதிர்ப்பு அரசியலில் சற்றே பின் வாங்கினர். முஸ்லிம் லீக் கட்சி என்பது முஸ்லிம் வணிக நலனை முதன்மைப்படுத்தியதாக அமைந்தது. அம்பேத்கரே கூட இந்திய தேசிய ஒற்றுமையை வலியுறுத்திப் பேசத்தொடங்கியது பெரியாருக்கு வருத்தத்தை அளித்தது.

    பார்ப்பனர் நலன்களை முன்னிறுத்தி 1950-களின் இறுதியில் சுதந்திராக் கட்சியைத் தொடங்கிய ராஜாஜி கடுமையாகக் காங்கிரஸை எதிர்த்தார். தமிழ்நாட்டில் பார்ப்பனரே இடம் பெறாத ஒரு அமைச்சரவையைத் தொடக்கத்தில் அமைத்த காமராசரை கடுமையாகத் தாக்கினார். தி.மு.க. வையும் பின்னர் முஸ்லிம் லீக்கையும் கூடத் தன்னுடன் அணி சேர்த்தார்.

    பேராசிரியர் ரத்தினசாமி பிள்ளை- டாக்டர்.மத்தியாஸ் போன்ற கிறிஸ்துவ மைனாரிட்டிகளும் சுதந்திராவில் இணைந்தனர். நான் இராமன், இவர்கள் எனது குரங்குப் படைகள் எனப் பெருமையோடு மேடையில் கூறினார் இராஜாஜி. தி.மு.க. வின் வழியாகத் தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவும் இந்தக் கூட்டணிக்கு அமைந்தது. சிவராஜ் போன்றவர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலும் தி.மு.க. விற்கு ஆதரவாகவே முடிந்தது.

    இராஜாஜி தலைமையிலான இக்கூட்டை பெரியார் கவலையோடு நோக்கினார். அவர் கவலை உண்மையானது. 1962-தேர்தலில் தி.மு.க. 50- இடங்களைப் பிடித்தது. தமிழக வரலாற்றை மாற்றி அமைத்த திருச்செங்கோடு பாராளுமன்ற மற்றும் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் (1963) தி.மு.க. வென்றது.

    வெற்றிவிழாக் கூட்டங்களில் இராஜாஜிக்கும் காயிதேமில்லத் இஸ்மாயில் அவர்களுக்கும் அண்ணா நன்றி சொன்னார். இந்த சூழலில் தான் தாழ்த்தப்பட்டோரும் மைனாரிட்டியினரும் பார்ப்பனருக்கு ஆதரவாக உள்ளனரே எனப் புலம்பினார் பெரியார்.

    1967-தேர்தலில் மாநிலக் கட்சிகள் மேலுக்கு வந்ததை நாம் வரவேற்ற போதிலும் பின்னாளில் இத்தகையக் கட்சிகளே மாநிலங்களில் பா.ஜ.க. காலூன்றுவதற்குக் காரணமாயின என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

    தாங்களும் மைனாரிட்டிகள்தான், எங்களுக்கும் சலுகைகள் வேண்டும் எனப் பார்ப்பனர்களும் உரிமை கோரிய நிலையில் தான் பெரியார் மைனாரிட்டி ஆதிக்கத்தை எதிர்த்துப் பேச நேர்ந்தது. பெரியாரின் முழுக் கட்டுரையையும் வாசித்தால் இது விளங்கும்.

    1962-63 காலகட்டத்தில் பெரியார் இப்படிப் பேசிய போதும் அடுத்த பத்தாண்டுகளில் தனது இறுதி மூச்சுவரை இத்தகைய நிலையை அவர் தொடர்ந்ததில்லை என்பது சிந்திக்கத்தக்கது. தலித்கள் மற்றும் மைனாரிட்டிகளுக்கு ஆதரவாகவே அவரது செயல்பாடுகள் அமைந்தன.

    1925-க்கு முன் காங்கிரசில் இருந்தார், 1954- 1967- காலகட்டத்தில் காங்கிரசை ஆதரித்தார் என்பதற்காகப் பெரியாரைக் காங்கிரஸ்காரர் என்று சொல்லுவது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் 1962-63 காலகட்டத்தில் அவர் பேசிய பேச்சை வைத்து அவரை தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக நிறுத்துவது. இந்துத்துவ அரசியலுக்கு துணைபோகவே இது உதவும்.

    (நன்றி: கருப்புப்பிரதிகள்)

    வாசகர்கள் ஊன்றிப்படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.
    நன்றி

    —————-விவாதிப்போம்

  63. பெரியார் பற்றி ஆதவன்தீட்சண்யா அவர்கள் தரும் தகவல்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். படியுங்கள்! உண்மையை உணருங்கள்!!

    ஒடுக்குகிறவர்களிடம் தாக்குதல் நடத்திய பெரியார்

    நீங்கள் தொடர்ந்து பெரியாரை முன்னிறுத்தி எழுதுகிறீர்கள். சாதி ஒழிப்பில் அவரின் பங்களிப்பு மிக முக்கியம் என்பது தான் காரணமா அல்லது அவர் கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கியமான ஆளுமை என்று நீங்கள் கருதுகிறீர்களா?

    இடஒதுக்கீடு, நாத்திகம் போன்றவற்றுக்காக பெரியாரைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள், அவரை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். பெரியார் கடவுளை மறுத்ததால் மட்டும் தான் ஆதிக்க சாதிக்காரர்கள் அவரை விமர்சிக்கிறார்களா என்றால் இல்லை. அவர்களிலும் கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ‘இந்திய சமூகம் சமத்துவமின்மையின் மீது கட்டப்பட்டிருக்கிறது’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். அதே அலைவரிசையில் தான் பெரியாரும் செயல்பட்டார். அதுதான் ஆதிக்க சாதியினரின் விமர்சனத்திற்குக் காரணம்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள், இயக்கங்கள் எல்லாமே ஒடுக்கப்பட்டவர்களிடம் மட்டும்தான் பேசின. ஆனால் ஒடுக்குகிறவர்களிடமே தாக்குதல் நடத்தியவர் பெரியார் ஒருவர்தான். கஷ்டப்படுபவனை பார்த்து நீ கஷ்டப்படுகிறாய் என்பதும், அதை அவன் ஏற்றுக்கொள்வதும் மிக இயல்பானது. ஆனால் ஒடுக்குகிறவனைப் பார்த்து, ‘நீ அவனை ஒடுக்குகிறாய்’ என்று சொல்லும் தைரியம் பெரியாருக்கு மட்டும்தான் இருந்தது.ஒடுக்குமுறைகளின் அடிப்படைகளைக் கண்டறிந்து அதை நீக்குவது தான் மார்க்சிய தத்துவம். இந்தியாவில் ஒடுக்குமுறையின் அடிப்படையாக சாதியம் இருக்கிறது. அந்த அடிப்படைகளின் மீது கைவைக்கிற நிகழ்வாக பெரியாரின் பேச்சும் செயல்பாடும் இருந்தது. சாதி ஒழிப்பு என்பதிலும், வருணாசிரம எதிர்ப்பு என்பதிலும் பெரியார் அம்பேத்கரோடு ஒன்றுபட்டார். இந்த விஷயங்கள் தான் அவர்களுக்குள் தொடர்பு ஏற்படக் காரணமாக இருந்தது.பெரியாரை ஆதரிப்பதற்கும், அவரை முன்னோடியாக நிறுத்துவதற்கும் பல்வேறு காரணங்களை சொல்லலாம். அதில் சிலவற்றையாவது வாசிப்பின் வழியாகத் தெரிந்து கொண்டதால் அவரை முழுவதுமாக ஆதரித்துப் பேசுகிறேன். அதனால் அவரை நான் என் முன்னோடியாகவும் கருதுகிறேன். பெரியார் மீது சில இடங்களில் இடதுசாரிகளுக்கு விமர்சனம் உண்டு. அதற்காக அவர்கள் பெரியாரை எந்த இடத்திலும் நிராகரிக்கவேயில்லை.வகுப்புவாதப் பிரச்சனைகள் தலைதூக்கும்போது நாம் போராட்டங்களை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கட்டம் வரைக்கும் பெரியார் நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியைத்தான் நாம் மேற்கொண்டாக வேண்டும். கேரளாவில் நாராயணகுருவை உள்வாங்கிக் கொண்டு இடதுசாரிகள் செயல்படுவதுபோல் தமிழ்நாட்டிலும் பெரியாரை உள்வாங்கிக் கொண்டு செயல்படலாம்.

    பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றும், பெரியார் ஒரு பிள்ளையார் சிலையை உடைக்கப்போய் தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் வந்துவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்களே, உண்மையா?

    பிள்ளையார் சிலையை பெரியார் உடைத்ததை அந்தக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, சிலையை பெரியார் உடைத்ததற்கான சமூகக் காரணத்தைத்தான் விளக்கவேண்டுமே தவிர பெரியாரை அல்ல. மூடநம்பிக்கை கரைபுரண்டோடி, மொத்த சமூகத்தையும் அடித்துப் புரட்டுகிறபோது, அதைத் தடுத்த நிறுத்த, கைக்கு கிடைத்ததையெல்லாம் பயன்படுத்துகிற பதற்றம் பெரியாருக்கிருந்தது.மக்களிடம் மூடநம்பிக்கை எந்த மட்டத்தில் இருக்கிறதோ அந்த மட்டத்தில் போய் பெரியார் அதை மறுத்துக் காட்டினார். ‘கடவுளுக்கு எல்லாவற்றையும் காப்பாற்றும் சக்தி இருக்கிறதென்றால், நான் கடவுளை உடைக்கிறேன், முடிந்தால் அவர் அவரையாவது காப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று சொல்லும் விதமாகத் தான் பிள்ளையார் சிலையை உடைத்தார். ‘என்னை கடவுள் படைத்தார், அவர் தான் என் தலையெழுத்தை எழுதி என்னைக் காப்பாற்றுகிறார்’ என்ற மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்காகத் தான் அவர் அதைச் செய்தார்.எந்த ஒரு தத்துவமும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் கடவுள் என்கிற தத்துவம் மட்டும் மக்களை பயமுறுத்தி மூடனாக மாற்றுகிறது. எனவே அதிலிருந்து மக்களை மீட்பதற்கு தன்னாலான வழிகளை அவர் செய்தார். அதை வறட்டு நாத்திகவாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. தெருவுக்குத்தெரு பிள்ளையார் வைத்தவர்கள் யார்? ஏற்கனவே பிள்ளையாரை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள்தானே? பெரியார் செயல்பாட்டில் கடுப்பாகிப் போய் எந்த நாத்திகனும் ஆத்திகனாகிவிடவில்லையே? பெரியாரே சொல்வதுபோல், வேறெவரும் இந்தக் காரியங்களை செய்வதற்கு முன்வராததால்தானே அவர் செய்ய வேண்டியதாயிருந்தது?பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றே வைத்துக்கொள்வோம். அதை நிராகரித்துவிட்டு விஞ்ஞானப்பூர்வமான நாத்திகத்தை மக்களிடம் பரப்புவதை யார் தடுத்தார்கள்? ஒவ்வொரு அரசாங்க அலுவலகமும் இந்துமதத்தினருக்கு மட்டுமேயானது மாதிரி பூசை, புனஸ்காரங்கள் அங்கே நடக்கிறது. இந்துக்கடவுள்களின் விக்கிரகங்களும் சிலைகளும் இல்லாத அலுவலகமே கிடையாது. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நடக்கிறது. அங்கிருக்கிற தொழிற்சங்கங்கள் உணர்வுமட்டம் தாழ்ந்துபோய் இதிலெல்லாம் பங்கெடுப்பதாய் மாறிவரும் கொடுமை நடக்கிறது. மத உணர்வுகள் பாதிக்கப்படும்னு சொல்லி எந்த இடத்திலும் நாம் நாத்திகம் பேசுவதில்லை, பகுத்தறிவு பற்றியும் பேசுவதில்லை, விஞ்ஞானக் கண்ணோட்டத்தை வலியுறுத்துவதில்லை. இப்போது யோசித்துப் பாருங்கள், பெரியார் செய்தளவுக்கு நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று

    ————-கீற்று இணையதளத்தில் திரு.ஆதவன்தீட்சண்யா அளித்த நேர்காணலின் ஒரு பகுதி.

    நன்றி…………….விவாதிப்போம்

  64. சகோதரர் மதிமாறன் அவருடைய தளத்திலே பெரியார் தாழ்த்தப் பட்ட இன மக்களுக்காகா பாடுபட்டதை விவரித்துக் கட்டுரை எழுதியுள்ளார்.அது அனேகமாக மதிப்புக்குரிய ம. வெங்கடேசன் ஐயா அவர்கள் இங்கே எழுதியதற்கு பதிலாகத்தான் கருதலாம்.

    அதில் நாம் அளித்த பின்னூட்டத்தை இங்கெ அதே பொருள் பற்றி விவாதிப்பதால் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

    ” நான் பெரியாரிடமிருந்து பல விசயங்களைக் கற்றவன் என்ற வகையிலே , அவருக்கு ஒரு soft corner வைத்திருக்கிறேன்.

    அதே நேரம் பெரியாரை விமர்சிக்கக் கூடாது என்பது இல்லை. பகுத்தறிவு என்பதே விமரிசனமும் உள்ளதுதான். அது ஆசிரியராக இருந்தாலும் சரி.

    //நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் மதிமாறனின் கவிதையிலேயே பதில் உள்ளது. பனை ஏறும் தொழிலாளி, பிணம் எரித்துக் கொண்டிருப்பவர் இவர்களெல்லாம் யார்?//

    //“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”

    பனை ஏறும்

    தந்தை தொழிலில்

    இருந்து தப்பித்து

    தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்//

    //அப்பன் இன்னும்

    பிணம் எரித்துக் கொண்டிருக்க

    இங்கே டெலிபோன் டிபார்மென்டில்

    சுபமங்களாவை விரித்தபடி

    சுஜாதா

    சுந்தர ராமசாமிக்கு

    இணையாக

    இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்

    அவருடைய மகன்//

    ஆந்திராவிலே , கர்நாடகாவிலே , மத்தியப் பிரதேசத்திலே பிணம் எரித்தவர் மகன் அதிகாரி ஆகவில்லையா?

    அவையெல்லாமும் பெரியாரினால் தானா?

    அங்கே பெரியார் இல்லையே?

    இந்திய நாட்டிலே நசுக்கப்பட்ட ஒதுக்கப் பட்ட மக்கள் முன்னேற திட்டங்கள் தீட்டப் பட்டு , இந்தியா முழுவதிலும் படிப் படியாக செயல் திட்டங்கள் அமுல் செய்யப் பட்டன.

    இந்த திட்டங்களை அப்படியே பெரியார் பேருக்கு பட்டா போட்டு, அதை தங்களின் பெயருக்கு பட்டாவாக மாற்றி “நமக்கு நாமே கோடீஸ்வரன்” திட்டமாக்கி விட்டார்கள்.

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஆர‌ம்பித்த‌து முத‌ல் இன்று வ‌ரை ஒரு த‌லித் கூட‌ க‌ழ‌கத்தின் த‌லைவ‌ராக‌வில்லையே?

    பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை தன்னுடைய வகுப்பு வாரி பிரதிநித்துவக் கொள்கையின் படி, தலித் இனத்தை சேர்ந்த ஒருவரைடம் சில வருடங்களாவது, சில மாதங்களாவது, சில வாரங்களாவது, ஒரு நாளாவது ஒப்படைத்தாரா?

    அப்படி ஒப்படைத்திருந்தால் அதை முன் உதாரணமாக்கி முதல்வர் பொறுப்புக்கும் தலித் இனத்தை சேர்ந்த ஒருவரை சில காலமாவது அமர்த்த வேண்டிய தார்மீக பொறுப்பு, அவர் வழி வந்த திராவிட தலைவர்களுக்கும் இருக்கும் அல்லவா?

    பார்ப்பனர்கள் 10 விழுக்காடு உள்ள உத்தர பிரதேசத்திலே, அவர்களின் ஆதரவோடே தலித் இனத்தை சேர்ந்தவர் முதல்வர் ஆகி விட்டார்!

    கேராளாவைச் சேர்ந்த தாழ்த்தப் பட்ட பிரிவை சேர்ந்தவர் நாட்டின் தலைமை நீதிபதி ஆகி விட்டார்.

    பகுத்தறிவுப் பகலவன் சுடர் விட்டு பிரகாசித்த தமிழ் நாட்டிலே நிலைமை என்ன?

    தலித் இன மக்களுக்கு , தலித் மக்களின் நன்மைக்காக நேர்மையாக , சுயநலமின்றி பாடுபடும் தலித் தலைமை தமிழ் நாட்டில் உள்ளதா?

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    ஒரு த‌லித் ஒருவ‌ரை, ஒரே ஒரு வ‌ருட‌மாவ‌து முத‌ல்வ‌ர் ப‌த‌வியில் அம‌ர‌ வைக்க‌ த‌மிழின‌த் த‌லைவ‌ர் த‌யாரா? செய்வாரா?

    இதைக் கேட்டால் என்ன தவறு? தெய்வக் குத்தமா? பகுத்தறிவுக் குத்தமா?

    அப்ப‌ கொள்கை எல்லாம் பிற‌ருக்கு அறிவுரை கூற‌ ம‌ட்டும் தானா?

    கொள்கையை நாமே பின்ப‌ற்ற வேண்டிய‌து அவ‌சிய‌ம் இல்லையா?

    60 வ‌ருட‌த்துக்கு மேலான‌ க‌ழ‌க‌ வ‌ர‌லாற்றில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அதை தாங்கிப் பிடிக்க‌வில்லையா?அவ‌ர்க‌ளுக்கு வ‌குப்பு வாரி பிர‌தி நிதித்துவ‌ம் த‌ர‌ப் ப‌ட்ட‌தா?

    தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை த‌ல‌மைப் பொறுப்புக்கு கொண்டு வ‌ர‌ நேர‌ம், கால‌ம், நாள், ந‌ட்ச்ச‌த்திர‌ம் பார்க்க‌ வேண்டுமா?

    த‌லித் ஒருவ‌ரின் கையில் திராவிட‌ர் க‌ழ‌க‌த்தின் அனைத்து பொறூப்புக்க‌ளையும் ஒப்ப‌டைத்து விட்டு ஓய்வு எடுக்க‌ மான‌மிகு வீரமணியார் த‌யாரா?

    பார்ப்பன எதிர்ப்பு அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்து, அந்த பார்ப்பன எதிர்ப்பு தேரின் அழுத்தத்திலே , அறிந்தோ அறியாமலோ தலித் இனத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் முன்னுக்கு வர முடியாமல் அமுக்கப் பட்டு விட்டனர் என்கிற உண்மையை நீங்கள்
    புரிந்து கொள்ளாமல், ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் சிந்த்தித்தால் உங்களுக்கப் புரியும்.

    பந்தி பரிமாறுபவன் ஒருவன், பாயசம் சாப்பிடுபவன் ஒருவன் என்ற நிலைதானே?

    “இந்திய விடுதலை என்பது தலித்துகளுக்கு எஜமான மாற்றமேயன்றி வேறென்ன” என்று அம்பேத்கர் கூறியதாகப் படித்திருக்கிறோம்.

    “என்னைத் தொடாதே , என்னைத் தொட்டால் தீட்டு” என்ற அநியாயமான இழிவை செய்த பார்ப்பனர்களின் கையிலே இருந்து அதிகாரத்தை மாற்றித்,

    தலையை வெட்டித் தெருவில் உருட்டும் கொடுமையை, வாயிலே பீ திணிக்கும் கொடுமையை செய்பவர்களின் கையிலே அதிகாரம் மாறும் நிலைமையைக் கொண்டு வந்துதானே பகுத்தறிவுப் பகலவனால் உண்டான விளைவு?

    இன்றைக்கு தமிழ் நாட்டிலே நசுக்கப் பட்ட மக்களில் சிந்திக்கக் கூடியவர்கள் செய்யக் கூடியது என்ன? பிலாகுகளை (blogs) அமைப்பது, பத்திரிக்கைகளை உருவாக்குவது, அதிலே எழுதுவது, தன்னுடைய சிந்தனைக்கு அங்கீகாரம் கிடத்ததாகத் திருப்தி அடைவது- இதுதானே? கோட்டையிலே கோலோச்ச முடியுமா/ கோட்டையின் அதிகாரக் கதவுகளின் அருகேயாவது செல்ல முடியுமா?

    சாதிகளுக்கு இடையில் பிரிவினையை உருவாக்கி குளிர் காய்வது எனக்கு ஒருக்காலும் ஒப்பில்லை. ஆனால் உண்மைகளை பல கோணத்தில் இருந்தும் எடுத்து வைக்கிறோம். உண்மையை யாராலும் மறைக்க முடியாது.

    என் வழி இணைப்பதுதான் பிரிப்பது இல்லை என்று தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

    நசுக்கப் பட்ட, பிற்படுத்தப் பட்ட, முற்படுத்தப் பட்ட என்ற எல்லா பிரிவு மக்களும், ஒன்றாக , கனவானாக, நாகரிக மனிதராக, அன்பின் அடிப்படையில் நல்லெண்ணத்தில், எல்லாப் “பட்ட”ங்களும் நீங்கி ஒரே பொதுப் பிரிவில் இணைய வேண்டும் என்பதுதான் என் கருத்து. (இதை சொல்வதினால் இட ஒதுக்கீடு நீக்கப் பட வேண்டும் என்ற கருத்துக்காக அல்ல. இட ஒதுக்கீடு தேவைப் படும் வரைக்கும், அவசியம் உள்ள வரைக்கும், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அமுல் படுத்தப் படலாம்.
    நான் பொதுவாக இணைவது என்பது மன இணைப்பை, சமூக இணைப்பைக் கூறினேன்.)

    எனவே சாதிகளுக்கு இடையில் பிரிவினையை உருவாக்கி குளிர் காய்வது எனக்கு ஒருக்காலும் ஒப்பில்லை. ஆனால் உண்மைகளை பல கோணத்தில் இருந்தும் எடுத்து வைக்கிறோம். உண்மையை யாராலும் மறைக்க முடியாது.

  65. நம்முடைய கருத்துக்கு சகோதரர் கலை என்பவரின் பதில் கருத்தும், அதற்கு நம்முடைய பதிலும்

    கலை:

    ////ஆந்திராவிலே , கர்நாடகாவிலே , மத்தியப் பிரதேசத்திலே பிணம் எரித்தவர் மகன் அதிகாரி ஆகவில்லையா?

    அவையெல்லாமும் பெரியாரினால் தானா?

    அங்கே பெரியார் இல்லையே?////

    திருச்சிக்காரன் என்கிற பெயரில் எழுதுகிற இன்னொரு திருச்சி, அதற்கான விதையை நட்டேதே தமிழ்நாடுதான். அம்பேத்கரும்-பெரியாரும் இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் யாரும் நல்ல நிலைக்கு வந்துவிட முடியாது.

    நீங்கள், பார்ப்பான் புத்தியில் இருக்கிற இந்து வெறிகொண்ட சூத்திரன்போல் தெரிகிறது. தலித் மக்கள் மீது வெறுப்பு,பெரியார் இயக்கதின் மீது வெறுப்பு இவை இரண்டும் கலந்து நன்றாக தந்திரமாக எழுதுகிறீர்கள்.

    நம்முடைய பதில்:
    சகோதரர் கலை அவர்களே,

    கீழே கொடுக்கப் பட்டுள்ளதைப் படியுங்கள்.

    //1882 – Hunter Commission appointed. Mahatma Jyotirao PhuleMahatma Jyotirao Phule
    Jotiba Govindrao Phule , also known as Mahatma Jotiba Phule was an activist, thinker, social reformer and revolutionary from Maharashtra in the nineteenth century….
    made a demand of free and compulsory education for all along with proportionate reservation/representation in government jobs.

    1891-The demand for reservation of government jobs was made as early as 1891 with an agitation in the princely State of Travancore against the recruitment of non-natives into public service overlooking qualified native people.

    1901-Reservations were introduced in Maharashtra in the Princely State of Kolhapur by Shahu MaharajShahu Maharaj
    Shahu IV was the first Maharaja of the Indian princely state of Kolhapur between 1884 and 1922….

    . Reservations in the princely states of Baroda and Mysore were already in force.

    1908-Reservations were introduced in favour of a number of castes and communities that had little share in the administration by the British.

    1909- Provisions were made in the Government of India Act

    1909Government of India Act 1909

    Indian Councils Act of 1909, commonly known as the Morley-Minto Reforms, began when John Morley, the Liberal Secretary of State for India, and the Conservative Governor-General of India, Gilbert Elliot-Murray-Kynynmound, 4th Earl of Minto, believed that cracking down on terrorism in Bengal was necessary but not sufficient for restoring…

    1919- Montagu-Chelmsford ReformsMontagu-Chelmsford Reforms
    The Montagu-Chelmsford Reforms were reforms introduced by the Ayush Kumar to introduce self-governing institutions gradually to India. The reforms take their name from Edwin Samuel Montagu, the Secretary of State for India during the latter parts of World War I and Frederic John Napier Thesiger, 3rd Baron Chelmsford, Viceroy of India between…
    introduced.

    1919 – Provisions were made in the Government of India Act

    1919Government of India Act 1919
    The Government of India Act 1919 was an Act of Parliament of the Parliament of the United Kingdom. It was passed to expand participation of the natives in the government of British Indian Empire….

    1921-Madras PresidencyMadras Presidency
    Madras Presidency , also known as Madras Province and known officially as Presidency of Fort St. George, was a province of British India….
    introduces Communal G O in which reservation of 44 per cent for non-Brahmins, 16 per cent for Brahmins, 16 per cent for Muslims, 16 per cent for Anglo-Indians/ Christians and eight per cent for Scheduled Castes.

    1935-Indian national congressIndian National Congress
    Indian National Congress-I is a major political party in India. Founded in 1885 by Dadabhai Naoroji, Dinshaw Edulji Wacha, Womesh Chandra Bonerjee, Surendranath Banerjee, Monomohun Ghose, Allan Octavian Hume, and William Wedderburn, the Indian National Congress became the leader of the Indian Independence Movement, with over 15 million memb…
    passes resolution called Poona PactPoona Pact
    The Poona Pact refers to an agreement between the lower caste Untouchables of India led by B. R. Ambedkar and the upper caste Hindus of India that took place on 24 September 1932 at Yerawada Jail in Pune , India….
    to allocate separate electoral constituencies for depressed classes.

    1935 – Provisions in Government of India Act 1935Government of India Act 1935
    The Government of India Act 1935 was passes during the Interwar period and was the last pre-independence constitution of British Raj. The significant aspects of the act were:…
    .
    1942-B.R.Ambedkar established the All India Depressed Classes federation to support the advancement of the scheduled castes. He also demanded reservations for the Scheduled castes in government services and education.
    1946- 1946 Cabinet Mission to India1946 Cabinet Mission to India
    The United Kingdom Cabinet Mission of 1946 to India aimed to discuss and finalize plans for the transfer of power from the British Raj to Indian leadership, providing India with independence under Dominion status in the Commonwealth of Nations….
    proposes proportionate representation with several other recommendations.
    1947-India obtained Independence. Dr. Ambedkar was appointed chairman of the drafting committee for Indian Constitution. The Indian constitution prohibits discrimination on the grounds only of religionReligion
    A religion is an organized approach to human spirituality which usually encompasses a set of myth, symbols, beliefs and practices, often with a supernatural or transcendence quality, that give meaning to the practitioner’s experiences of life through reference to a higher power or truth….
    , race, casteCaste
    Castes are hereditary systems of wikt:occupation, endogamy, culture, social class, and political power, the assignment of individuals to places in the social hierarchy is determined by social group and culture….
    , sexSex
    In biology, sex is a process of combining and mixing genetics traits, often resulting in the specialization of organisms into male and female types ….
    and place of birth . While providing equality of opportunityEqual opportunity
    Equal opportunity is a term which has differing definitions and there is no consensus as to the precise meaning. Some use it as a descriptive term for an approach intended to provide a certain social environment in which people are not excluded from the activities of society, such as education, employment, or health care, on the basis of immu…
    for all citizens, the constitution contains special clauses “for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes”. Separate constituencies allocated to Scheduled Castes and TribesScheduled Castes and Tribes
    Scheduled Castes and Scheduled Tribes are Indian population groupings that are explicitly recognized by the Constitution of India, previously called the “depressed classes” by the British India, and otherwise known as untouchable ….
    to ensure their political representationRepresentation (politics)
    In politics, representation describes how political power is alienated from most of the members of a group and vested, for a certain time period, in the hands of a small subset of the members….
    for 10 years.(These were subsequently extended for every 10 years through constitutional amendmentConstitutional amendment
    An amendment is a change to the Constitution of a nation or a state. In jurisdictions with “rigid” or “entrenched” constitutions, amendments require a special procedure different from that used for enacting ordinary laws….
    s).
    1947-1950- Debates of the Constituent Assembly.//

    எனவே தான் மீண்டும் கேட்கிறோம், தெளிவாகக் கேட்கிறோம்,

    //ஆந்திராவிலே , கர்நாடகாவிலே , மத்தியப் பிரதேசத்திலே பிணம் எரித்தவர் மகன் அதிகாரி ஆகவில்லையா?

    அவையெல்லாமும் பெரியாரினால் தானா?

    அங்கே பெரியார் இல்லையே?//

    என்கிற உண்மையை எடுத்து வைக்கிறோம்.

    //அதற்கான விதையை நட்டேதே தமிழ்நாடுதான்//- இதைக் கேட்டால் எல்லோரும் புன்முறுவல் கொள்வார்கள்.

    நானும் பெரியாரிடம் சில விடயங்களைக் கற்றவன் தான். பெரியாரை இகழ வேண்டும் என்பது என்னுடைய நோக்கமோ, விருப்பமோ கிடையாது.

    ஆனால் உண்மை என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.

    அம்பேத்கார் ஆக்க பூர்வமானவர். பெரியார் எதிர்மறை சிந்தனைகளை உடையவர்.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர் என்று நான் மனப் பூர்வமாகச் சொல்வேன்.

    அப்படிப்பட்ட ஒரு அறிங்கரை, பெரியாருடன் ஒப்பு வைக்க முடியுமா?

    அம்பேத்காரின் வாழ்க்கையின் லட்சியம், இந்தியாவில் உள்ள தலித் மக்களின் விடுதலை, முன்னேற்றம் அதோடு அவர் எல்லா இந்தியர்களையும் நேசித்தவர், இந்தியாவை நேசித்தவர்.

    பெரியாரின் முக்கிய குறிக்கோள் பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனருக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு தன்னை அரசியல், பொருளாதார, சமூக அரசியலில் உயர்த்திக் கொள்வது இவைதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

    பெரியாரிடம் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, புரிந்து கொள்ள வேண்டியது , திருத்திக் கொள்ள வேண்டியது உள்ளது என்றே நான் எழுதி வருகிறேன்.

    ஆனால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க
    1) அம்பேத்கர் ஆக்க பூர்வமான சிந்தனைகளை உடைய, ஆக்க பூர்வமான மனிதர்.
    பெரியார் வெறும் எதிர் மறைக் கருத்துகளை மட்டுமே சுமந்து இருந்தார்.

    2)அம்பேத்கர் தலித் மக்களின் விடுதலைக்கு போராடியவர்.
    பெரியார் பார்ப்பனர்களை எப்படியாவது கீழிறக்கி விட வேண்டும் என்ற குறிக்கோளையே பிரதானமாக வைத்து இருந்தார்.

    3)அம்பேத்கர் சிறந்த மாணவர், பேரறிங்கர், வெளிநாடுகளில் படித்தவர்.
    ஆனால் பெரியாருக்கு வசதி வாய்ப்பு இருந்தும் கல்வியில் ஈடுபாடு இல்லை.
    (இந்தக் கருத்தை எழுவது அம்பேத்கரின் சிறப்பை சுட்டிக் காட்ட, பெரியாரை குறை கூற அல்ல)

    4) இந்தியா என்னும் மாபெரும் தேசம் இன்றைக்கு உறுதியாக இருக்கிறது என்றால், அதற்க்கு முக்கியக் காரணிகளில் அம்பேத்கர் ஒருவர். அவர் நாடுகளை உருவாக்கும் சக்தி படைத்தவர்.
    ஆனால் பெரியார் “நானும் வ‌ருவேன், ஆட்ட‌த்தை க‌லைப்பேன்” என்ற‌ பாணியிலே இந்தியாவை உடைக்க‌ நினைத்து செய‌ல் ப‌ட்ட‌வ‌ர்.

    5) அம்பேத்க‌ர் காங்கிர‌சை எதிர்த்த‌வ‌ர். ஆனால் அத‌ற்க்காக‌ இந்தியாவையோ, இந்திய‌ ம‌க்க‌ளையோ விட்டுக் கொடுக்க‌வில்லை. பெரியாரும் காங்கிர‌சை எதிர்த்தார். ஆனால் த‌ன் சொந்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ எதிர்த்தார்.

    அம்பேத்கர் முக்கியமாக தாழ்த்தப் பட்ட மக்களின் விடுதலை, முன்னேற்றத்திறக்காகவும் , ஒட்டு மொத்த இந்திய மக்களின் நன்மைக்காகவும் பாடுபட்வர்.

    பெரியார் பார்ப்பானர்களை எப்படி கீழிறக்குவது, தனிமைப் படுத்துவது எப்படி, தன்னுடைய கட்சியை தன கட்டுப்பட்டே எப்படி வைத்துக் கொள்வது, தன்னுடைய சொத்துக்களை எப்படி அதிகமாக்குவது என்ற சிந்தனைக்கே அதிக இடம் கொடுத்தவர், தலித்கள் முன்னேற்றம் பற்றிய வகையில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவு.

    பெரியாரை எப்படியாவது அம்பேத்கார் ரேஞ்சுக்கு கொண்டு வர வேண்டும் என்று, என்ன என்னவோ முயற்சி செய்து பார்க்கிறார்கள்!

    ஆனால் அம்பேத்கரோடு பெரியாரை ஒப்பிடுவே முடியாது. அம்பேத்கரின் வழிகளும், நோக்கமும் சிறந்தவை.

  66. தலித் விடுதலை முன்னோடி – பெரியார்

    இதுதான் யானை என்று உருவகப்படுத்திக் கொண்ட விழி இழந்த அய்வர் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது.பகுத்தறிவு ஒளி மூலம் நமது விழிகளைத் திறந்த சமுதாய மருத்துவராம் தந்தைபெரியாரைப் பற்றி அந்த விழி இழந்தோர் உருவகப்படுத்தியதை விடவும் அதிகமான அளவில் பொய்யும், புனைவுமாக பல உருவகங்களை உலவவிட்டுள்ளனர் பார்ப்பனர்களும் ,பார்ப்பன அடிவருடிகளும்.

    எடுத்துக்காட்டாக பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் பிள்ளையாரை வணங்கினார், வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தார்,பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடவில்லை,அவர்களை இழிவாகப் பேசினார் என்பது போன்ற பல அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றார்கள். இந்த அவதூறுகள் பெரியார் உயிரோடு இருந்த போதிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இந்த அவதூறுகளுக்கெல்லாம் பெரியாராலும், பெரியார் தொண்டர்களாலும் மற்றும் நேர்மையான வரலாற்று ஆய்வாளர்களாலும் தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்பட்டே வந்துள்ளது.

    இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே அவதூறுகளை இப்போதும் சொல்லிவருகிறார்கள். அந்த வகையில் https://tamilhindu.com தளத்தில் பெரியாரின் மறுபக்கம் என்ற பெயரில் ஏற்கனவே புத்தகமாக வந்ததை பதிவு செய்து வருகின்றனர். அந்த தளத்தில் வரும் செய்திகளையொட்டி நாம் மறுமொழி அளித்தால் பதிவு செய்யப்படுவதில்லை. அதோடு நாம் பதில் அளிக்கவில்லை. நழுவி விடுகிறோம் என்ற மாய்மாலப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கெல்லாம் நாம் ஏற்கனவே நாம் https://thamizhoviya.blogspot.com “தமிழ் ஓவியா” வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    பணிப்பளு மற்றும் குடும்பச் சுமை காரணமாக உடனுக்குடன் பதில் அளிக்க கால தாமதமாகிறது. அதோடு ஏற்கனவே இது குறித்து பதில் அளித்து விரிவான நூல்கள் வந்து விட்ட நிலையில் திரும்பத் திரும்ப எழுத வேண்டுமா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
    அந்த வகையில் 2004 அம் ஆண்டு “உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள்,எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக நான் எழுதிய கட்டுரையை இங்கு தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறேன்.
    சமூகப் பொறுப்பில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று கூறியதோடு இந்த கட்டுரையை தட்டச்சு செய்து கொடுத்த எனது இனிய தோழர் “ஆதிஆனந்த்அப்பா” அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி
    ****************************************************************************
    தலித் விடுதலை முன்னோடி – பெரியார்

    “உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள், பெரியாரின் கருத்தை திரித்தும், அவதூறு பரப்பியும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இதில் பல கேள்விகளை, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார். இதற்கெல்லாம் பெரியார் தொண்டர்களால் ஏற்கனவே தெளிவாக பதில் கூறப்பட்டுள்ளது.. அவைகளையெல்லாம் படித்திருந்தால் இது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்டிருக்கமாட்டடார். இவரின் கட்டுரையை வரிக்கு வரி நம்மால் ஆதாரங்களுடன் மறுக்க முடியும். இருப்பினும் அவசியம் கருதி ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

    “பெரியார் பார்ப்பனர்களை மட்டுமே ஒழிக்கப் பாடுபட்டார், பார்ப்பனீயத்தை அல்ல, தலித்துகள் இதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் பார்ப்பனியத்தை ஒழிக்க பாடுபட்டிருந்தால் இன்று தமிழ்நாட்டில் இந்துத்துவம் இப்படி செழிந்து வளர்ந்திருக்குமா? என்கிறார் டாக்டர் வேலு அண்ணாமலை.

    பெரியாரின் கருத்துக்கள் “பெரியாரியம்”, அம்பேத்கரின் கருத்துக்கள் “அம்பேத்கரியம்” மார்க்சின் கருத்துக்கள் “மார்க்சியம்” என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆதேபோல் பார்ப்பனர்களின் கருத்தியல்கள் “பார்ப்பனியம்” என்று அழைக்கப்படுகிறது. ‘பார்ப்பனர் எதிர்ப்பு என்பேத ‘பார்ப்பனிய எதிர்ப்பு‘த்தான். இதை பின்வரும் பெரியாரின் மேற்கோள் தெளிவுபடுத்துகிறது.

    ——————————தொடரும்

    திருச்சிக்காரரே இந்தத் தொடரில் தங்களின் வினாவிற்கு விடைகிடைக்கும்.அம்பேத்கரையும், பெரியாரையும் மோதவிடலாம் என்ற உங்களின் சூழ்ச்சி எடுபடாது.

    —————-“விவாதிப்போம் ………

    (Comment edited & published)

  67. அக்கா,

    நான் பெரியாரையும் அம்பேத்கரையும் மோத விட வரவில்லை. பெரியார் வேறு, அம்பேத்கர் வேறு என்பதையே காட்டியுள்ளேன். பெரியாரின் கருத்துக்களை நான் முற்றாக எதிர்க்கவில்லை.

    சாதிக் காழ்ப்பு உணர்ச்சியை மூலதனமாக வைத்து செயல படுபவர்களுக்குத் தான் இது மோதலாகத் தெரியும்.

    பெரியாரிடம் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, புரிந்து கொள்ள வேண்டியது, திருத்திக் கொள்ள வேண்டியது உள்ளது என்றும் எழுதியிருக்கிறோமே!

    “நம் முன் வைக்கப் பட்ட ஒவ்வொரு வாக்கியமும் , வார்த்தையும் கேள்விக்கு உள்ளாக்கப் படும், உண்மையின் சோதனைக் களத்தில் பரிசோதிக்கப் பட வேண்டும்” என்பதே பகுத்தறிவு. கடவுளேயானாலும் அவர் கூறியதை மறுக்கவும், எதிர்க்கவும் அவரை விமரிசிக்கவும் உரிமை உள்ளது.

    ஆனால் நீங்களோ “பெரியார் சொன்னது அத்தனையும் வேதம். பெரியாரை விமர்சித்து எழுதினால் தேவ தூசனம் செய்தது போன்றது” என்ற ரேஞ்சுக்கே போய் விட்டீர்கள் போல உள்ளதே.

    பெரியாரை இப்படி விமரினங்களுக்கு அப்பாற்ப்பட்ட ஸ்தானத்தில் வைத்தே ஆக வேண்டும் என்று கூறும் அளவுக்கு உணர்ச்சி வசப் பட்ட நிலையிலே இருக்கிறீர்கள்.

    தொலைக் காட்சியிலே ஒளி பரப்பப் படும் ஒரு படத்தைப் பார்க்கும் ஒரு சிறுவனோ, சிறுமியோ கூட “இது என்னாயா படம், ஒரே போரா இருக்கே , எவன் எடுத்தான் இந்தப் படத்தை” என்று விமரிசிக்கும் உரிமை உள்ளவர்கள்.

    பெரியார் எல்லாவற்றையும் விமரிசனம் செய்துள்ளார். எதையும் விட்டு வைக்கவில்லை. நாமும் எதையும் விமரிசிக்கலாம்- பெரியாரையும் விமரிசிக்கலாம்.

    உண்மைகளை உலகுக்கு உணர்த்தலாம்.

    நீங்கள் அஞ்சாமல் உண்மைகளை எதிர் கொள்ளத் தயாராகுங்கள்.

    அக்கா,

    இதே தமிழ் ஹிந்து இதழிலே நான் பெரியாரைப் பாராட்டி பல முறை எழுதியுள்ளேன். பெரியாரின் மறுபக்கம் – பாகம் 11 ஐ நோக்குங்கள்.

    // பெரியார் எழுதியதைப் படியுங்கள் ” உபாத்தியார் பள்ளியிலே கிரகணம் எப்படி நடை பெறுகிறது, சூரியனும் சந்திரனும் பூமியும் நேர் கோட்டிலே வரும் போது சந்திரன், சூரியனை மறைப்பதால் சூரியனின் ஒளி நமக்குத் தெரியாமல் மறைக்கப் படுவதால், சூரியன் இருண்டது போல காட்சி ஏற்படுவது, சூரிய கிரகணம்! என்று தெளிவாக விளக்கி விட்டு, வீட்டிற்கு போய், ராகு என்னும் பாம்பு சூரியனை விழுங்குவதால் கிரகணம் உருவானதாக கற்பிதம் செய்து சடங்கு செய்து தலை முழுகுகிறார்கள்.”

    இதில் என்ன தவறு?

    நான் பெரியாரின் கொள்கைகளைப் பரப்பியதாக கூறி வைத்து இது வரை ஒரு பைசா கூட சம்பாதிக்கதவன் என்ற வகையிலே பெரியார் எண்ணப் பார்த்து இவன் இப்படி அப்பாவியாக இருக்கிறானே என்று நினைப்பாரா அல்லது என்னைப பாராட்டுவாரா என்பது பெரியாருக்கே வெளிச்சம்.

  68. //பெரியார் எல்லாவற்றையும் விமரிசனம் செய்துள்ளார். எதையும் விட்டு வைக்கவில்லை. நாமும் எதையும் விமரிசிக்கலாம்- பெரியாரையும் விமரிசிக்கலாம்.//

    யாரும் யாரையும் விமர்சிக்கலாம். ஆனால் அந்த விமர்சனம் உண்மைத்தன்மையுடன் சான்றுகளுடன் கூடியதாக இருக்கவேண்டும்.

  69. When the sun is hidden under the shadow of the moon, its rays do NOT fall on the earth. But scientists advise NOT to see the sun with naked eyes duiring eclpise. Why? Should NOT it be more safe to see the sun wihtout the impact of its rays on the earth? The reason is though the sun is hidden under the shadow of the moon, the harmful rays escape and hit the earth causing harm if seen with naked eyes. Our forefathers might have gussed the abnormal condition of the sun or moon during eclipse and advised to take precautionary measures by taking bath after its impact is over; they also advised against taking food during the period of eclipse as a precaution. Our forefathers could study the course of the sun, moon, and the earth and predict the forthcoming eclipse. If their knowledge were so advanced, would their related advice be so foolish? Certain advices have to go like sugar coated pills if at all they are to be practised. This could be one such advice.
    MALARMANNAN

  70. தமிழ் ஓவியா,

    உண்மைத்தன்மையை பற்றி பெரியாரும், நீங்களும் பேசுவதா? நகைச்சுவையாக பேசுகிறீர்கள்.

    பெரியாரின் வாயில் உண்மை வந்ததே இல்லை.வீரமணி வாயில் உண்மை வந்ததே இல்லை.

    அவரது பொய்கள் நமக்கு பிரயோசனமாக இருக்கின்றன என்பதால் பொய்கள் உண்மைகளாகி விடாது.

    தலித்துகள் ரவிக்கை போட்டதால்தான் துணிவிலை ஏறிவிட்டது எனறு பேசிவிட்டு, நான் சொன்னதை திரித்து சொல்லிவிட்டார்கள் என்று பொய் பேசியது பெரியார்

    போகும் இடங்களிலெல்லாம், பார்ப்பனன் சூத்திரன் என்ற இரண்டே பாகுபாடுதான் இருக்கிறது என்று பொய் பேசியது பெரியார்.

    சூத்திரன் என்றால் பார்ப்பனனின் வைப்பாட்டி மகன் என்று அர்த்தம் என்று பொய் பேசியது பெரியார்.

    பார்ப்ப‌ன‌ன் த‌மிழ‌ன் இல்லை என்று பொய் பேசிய‌து பெரியார்.

    அவ‌ர‌து குறிக்கோள் பார்ப்ப‌ன‌னை திட்டுவ‌துதானே ஒழிய‌, தீண்டாமை, பெண் விடுத‌லை என்ற‌ எந்த‌ வித‌ நோக்க‌மும் இல்லை.

    தீண்டாமை பெண்ண‌டிமை ஆகிய‌வை அனைத்தும் இஸ்லாமிய‌ ஆட்சி இந்தியாவுக்கு கொடுத்த‌வை என்ப‌தைக் கூட‌ அவ‌ர் புரிந்துகொள்ளாத‌ வ‌டிக‌ட்டிய‌ முட்டாள், வ‌ர‌லாறு தெரியாத‌ பாம‌ரன் அவ‌ர்.

  71. There are umpteen examples to cite EVR was NOT only anti-Brahmin BUT also anti-Dalits. He promoted Communal GO at the cost of Dalits and Brahmins. And all those instances have been quoted already. Refusing to see those facts only reveals blind faith in EVR. Since EVR wanted only idiots for his followers, it seems his followers like to fulfill EVR’s desire.
    Initially, EVR had very many intelligent colleagues with himn like P Jeevanandam, S. Ramanathan, KAP Visvanatham, Anna etc. All of them possessed thinking fauculty of their own. And therefore they could not pull on with EVR for long. All of them left one by one. Only those who satisfied the criterion to be EVR’s followers could continue to be with him. I hope you know what the criterion is to be a follower of EVR.

    MALARMANNAN

  72. வெளிப்படையாக நாணயமாக நேர்மையாக யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் செயல்பட்டவர் பெரியார் என்பதை அன்பரசன்கள் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ?

    (Comment edited & published)

  73. Thamil ovia, where are the answers for my Questions. I cant find any answers on you big big paragraphs. Is it possible to give simple answer for my questinos. If you are not able to answer to my questins, it shows that whatever you said, EVR said all are just lies. Thas all, the respect which will be given to a lier should be given to EVR and you

  74. //திருச்சிக்காரரே இந்தத் தொடரில் தங்களின் வினாவிற்கு விடைகிடைக்கும்.அம்பேத்கரையும், பெரியாரையும் மோதவிடலாம் என்ற உங்களின் சூழ்ச்சி எடுபடாது//

    தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

    //திருச்சிக்காரரே இந்தத் தொடரில் தங்களின் வினாவிற்கு விடைகிடைக்கும்//

    அக்கா கூறுவதை வைத்து நான் என்னவோ பெரியார் விருது ஒரு தாழ்த்தப் பட்டவருக்கு வழங்கப் படுமோ என்று ஆவலுடன் காத்திருந்தேன்.

    விடுவாரா, பார்ப்பன சூழ்ச்சிகளை முறியடித்து பெரியார் விருதும் எங்கள் மானமிகு தளபதியார் வீரமணியார் அவர்களுக்குத்தான்.

  75. அக்கா,

    //பெரியார் எல்லாவற்றையும் விமரிசனம் செய்துள்ளார். எதையும் விட்டு வைக்கவில்லை. நாமும் எதையும் விமரிசிக்கலாம்- பெரியாரையும் விமரிசிக்கலாம்.//

    யாரும் யாரையும் விமர்சிக்கலாம். ஆனால் அந்த விமர்சனம் உண்மைத்தன்மையுடன் சான்றுகளுடன் கூடியதாக இருக்கவேண்டும்.

    பெரியார் தாழ்த்தப் பட்டவருக்காக எப்படி எல்லாம் பாடு பட்டார், தாழ்த்தப் பட்ட மக்களுக்கு என்ன நன்மை வாங்கித் தந்தார் என்ற ஆதாரங்களை எல்லாம் தர வேண்டியது – அப்படி ஏதாவது செய்து இருந்தால் ஆதாரங்களை எல்லாம் தர வேண்டியது நீங்கள் தான்.

    இந்திய நாட்டிலே நசுக்கப்பட்ட ஒதுக்கப் பட்ட மக்கள் முன்னேற திட்டங்கள் தீட்டப் பட்டு , இந்தியா முழுவதிலும் படிப் படியாக செயல் திட்டங்கள் அமுல் செய்யப் பட்டன.

    இந்த திட்டங்களை அப்படியே பெரியார் பேருக்கு பட்டா போட்டு, அதை தங்களின் பெயருக்கு பட்டாவாக மாற்றி “நமக்கு நாமே கோடீஸ்வரன்” திட்டமாக்கி விட்டார்கள்.

    //1882 – Hunter Commission appointed. Mahatma Jyotirao PhuleMahatma Jyotirao Phule
    Jotiba Govindrao Phule , also known as Mahatma Jotiba Phule was an activist, thinker, social reformer and revolutionary from Maharashtra in the nineteenth century….
    made a demand of free and compulsory education for all along with proportionate reservation/representation in government jobs.

    1891-The demand for reservation of government jobs was made as early as 1891 with an agitation in the princely State of Travancore against the recruitment of non-natives into public service overlooking qualified native people.

    1901-Reservations were introduced in Maharashtra in the Princely State of Kolhapur by Shahu MaharajShahu Maharaj
    Shahu IV was the first Maharaja of the Indian princely state of Kolhapur between 1884 and 1922….

    . Reservations in the princely states of Baroda and Mysore were already in force.

    1908-Reservations were introduced in favour of a number of castes and communities that had little share in the administration by the British.

    1909- Provisions were made in the Government of India Act

    1909Government of India Act 1909

    Indian Councils Act of 1909, commonly known as the Morley-Minto Reforms, began when John Morley, the Liberal Secretary of State for India, and the Conservative Governor-General of India, Gilbert Elliot-Murray-Kynynmound, 4th Earl of Minto, believed that cracking down on terrorism in Bengal was necessary but not sufficient for restoring…

    1919- Montagu-Chelmsford ReformsMontagu-Chelmsford Reforms
    The Montagu-Chelmsford Reforms were reforms introduced by the Ayush Kumar to introduce self-governing institutions gradually to India. The reforms take their name from Edwin Samuel Montagu, the Secretary of State for India during the latter parts of World War I and Frederic John Napier Thesiger, 3rd Baron Chelmsford, Viceroy of India between…
    introduced.

    1919 – Provisions were made in the Government of India Act

    1919Government of India Act 1919
    The Government of India Act 1919 was an Act of Parliament of the Parliament of the United Kingdom. It was passed to expand participation of the natives in the government of British Indian Empire….

    1921-Madras PresidencyMadras Presidency
    Madras Presidency , also known as Madras Province and known officially as Presidency of Fort St. George, was a province of British India….
    introduces Communal G O in which reservation of 44 per cent for non-Brahmins, 16 per cent for Brahmins, 16 per cent for Muslims, 16 per cent for Anglo-Indians/ Christians and eight per cent for Scheduled Castes.

    1935-Indian national congressIndian National Congress
    Indian National Congress-I is a major political party in India. Founded in 1885 by Dadabhai Naoroji, Dinshaw Edulji Wacha, Womesh Chandra Bonerjee, Surendranath Banerjee, Monomohun Ghose, Allan Octavian Hume, and William Wedderburn, the Indian National Congress became the leader of the Indian Independence Movement, with over 15 million memb…
    passes resolution called Poona PactPoona Pact
    The Poona Pact refers to an agreement between the lower caste Untouchables of India led by B. R. Ambedkar and the upper caste Hindus of India that took place on 24 September 1932 at Yerawada Jail in Pune , India….
    to allocate separate electoral constituencies for depressed classes.

    1935 – Provisions in Government of India Act 1935Government of India Act 1935
    The Government of India Act 1935 was passes during the Interwar period and was the last pre-independence constitution of British Raj. The significant aspects of the act were:…
    .
    1942-B.R.Ambedkar established the All India Depressed Classes federation to support the advancement of the scheduled castes. He also demanded reservations for the Scheduled castes in government services and education.
    1946- 1946 Cabinet Mission to India1946 Cabinet Mission to India
    The United Kingdom Cabinet Mission of 1946 to India aimed to discuss and finalize plans for the transfer of power from the British Raj to Indian leadership, providing India with independence under Dominion status in the Commonwealth of Nations….
    proposes proportionate representation with several other recommendations.
    1947-India obtained Independence. Dr. Ambedkar was appointed chairman of the drafting committee for Indian Constitution. The Indian constitution prohibits discrimination on the grounds only of religionReligion
    A religion is an organized approach to human spirituality which usually encompasses a set of myth, symbols, beliefs and practices, often with a supernatural or transcendence quality, that give meaning to the practitioner’s experiences of life through reference to a higher power or truth….
    , race, casteCaste
    Castes are hereditary systems of wikt:occupation, endogamy, culture, social class, and political power, the assignment of individuals to places in the social hierarchy is determined by social group and culture….
    , sexSex
    In biology, sex is a process of combining and mixing genetics traits, often resulting in the specialization of organisms into male and female types ….
    and place of birth . While providing equality of opportunityEqual opportunity
    Equal opportunity is a term which has differing definitions and there is no consensus as to the precise meaning. Some use it as a descriptive term for an approach intended to provide a certain social environment in which people are not excluded from the activities of society, such as education, employment, or health care, on the basis of immu…
    for all citizens, the constitution contains special clauses “for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes”. Separate constituencies allocated to Scheduled Castes and TribesScheduled Castes and Tribes
    Scheduled Castes and Scheduled Tribes are Indian population groupings that are explicitly recognized by the Constitution of India, previously called the “depressed classes” by the British India, and otherwise known as untouchable ….
    to ensure their political representationRepresentation (politics)
    In politics, representation describes how political power is alienated from most of the members of a group and vested, for a certain time period, in the hands of a small subset of the members….
    for 10 years.(These were subsequently extended for every 10 years through constitutional amendmentConstitutional amendment
    An amendment is a change to the Constitution of a nation or a state. In jurisdictions with “rigid” or “entrenched” constitutions, amendments require a special procedure different from that used for enacting ordinary laws….
    s).
    1947-1950- Debates of the Constituent Assembly.//

    பெரியார் பார்ப்பானர்களை எப்படி கீழிறக்குவது, தனிமைப் படுத்துவது எப்படி, தன்னுடைய கட்சியை தன கட்டுப்பட்டில் எப்படி வைத்துக் கொள்வது, தன்னுடைய சொத்துக்களை எப்படி அதிகமாக்குவது என்ற சிந்தனைக்கே அதிக இடம் கொடுத்தவர், தலித்கள் முன்னேற்றம் பற்றிய வகையில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை என்றுதானே சொல்கிறோம்.

    அப்படி செய்து இருந்தால் ஆதாரங்களை அணி வகுக்க்க வைக்க வேண்டியது நீங்கள் தானே அக்கா!

  76. //இந்திய நாட்டிலே நசுக்கப்பட்ட ஒதுக்கப் பட்ட மக்கள் முன்னேற திட்டங்கள் தீட்டப் பட்டு , இந்தியா முழுவதிலும் படிப் படியாக செயல் திட்டங்கள் அமுல் செய்யப் பட்டன.//

    இந்த திட்டங்கள் தீட்டப்பட பெரியார் குரல்கொடுத்தது,போராடியது பற்றி அறிய எமது வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    (பின்னூட்டம் தணிக்கை செய்யப்பட்டது.)

  77. தமிழாக வரலாற்றை நாம் படித்திருக்கிறோமே,

    பெரியாரின் எழுத்தையும் , பேச்சையும் படித்திருக்கிறோமே,

    நமக்குத் தெரிந்த வரையில் இந்து மத எதிர்ப்பு, பார்ர்ப்ப்னர் எதிர்ப்பு , காங்கிரெஸ் எதிர்ப்பு, இப்படி எதிர்ப்பு கருத்துக்களைத்தானே படித்திருக்கிறோம். தாழ்த்தப் பட்டவர் முன்னேற்றம் பற்றி எந்த ஒரு திட்டத்தையும் பெரியார் வகுத்ததாகவோ, சிந்திதித்தாகவோ கூட தெரியவில்லையே , இங்கே அக்கா மட்டும் எப்படி தனியாகக் கண்டு பிடித்தார் என்று ஆச்சரியப் பட்டு, அவர் குறிப்பிட்டுள்ள சுட்டிகளுக்குள் போனால் – ஒரு விஷயமுமில்லை.

    வழக்கம் போல அறிவு நாணய ஏமாற்று வேலைதான்.

  78. தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்பமுடியாது திருச்சிக்காரரே.

  79. அக்கா,

    தூங்குபவர்கள் போல் நடிப்பவர் யார்?

    தாழ்த்தப் பட்டவரின் முன்னேற்றத்திற்காக பெரியார் எதுவும் செய்யவில்லை என்பதை தெளிவாக எடுத்து வைக்கிறோம். வரலாற்றிலே அதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை.

    நீங்கள் எதை எதையோ எழுதுகிறீர்களே தவிர, தாழ்த்தப் பட்டவர் முன்னேற்றத்திற்காக பெரியார் செய்தது என்ன என்பதை பற்றி விவரங்கள் எதையும் தரவில்லை.

    எனினும் உங்களின் இந்த பெரியார் பாதுகாப்புக்கு சேவையை நீங்கள் உங்கள் தலைமைக்கு தெரியப் படுத்தி,

    இவ்வளவு சமாளித்துப் பார்க்கிறேன் என்று எல்லாம் விளக்கி,

    நீங்கள் கழக ஏணியிலே முன்னேற வாய்ப்பு உள்ளது என்பதை, என் மனப் பூர்வமான வாழ்த்துகளாக உங்களுக்கு தெரிவிக்கிறேன்!

  80. தலித் விடுதலை முன்னோடி – பெரியார் – 2

    https//thamizhoviya.blogspot.com

    இதில் இன்னொரு உண்மையும் பொதிந்து கிடக்கிறது.

    ———————————-தொடரும்

    (Edited.)

  81. தமிழ் ஓவியா அவர்களே,

    //ஆரோக்கியமான விவாதத்திற்குடபட்ட எல்லாக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பெரியார் தொண்டர்கள் அதற்கெல்லாம் சளைத்தவகள் அல்ல.//

    ——————————————–

    அப்படியானால், இராவணனின் குதிரை விண்ணில் பறக்கும் என்று இராமாயணம் கூறும் போது பரிகசிக்கும் நீங்கள், எள்ளினகயாடும் நீங்கள், ‘நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு’ வின் குதிரை மட்டும் எப்படி பறந்து சொர்கத்தை அடைத்தது ஏன் உங்கள் தலைவரோ நீங்களோ கேட்கவில்லை?
    வேத கால மகரிஷிகள் தீயின் மேல் நடந்தார்கள் என்று சொல்லும்போது சிரிக்கும் நீங்கள், இயேசு கிறிஸ்து நீரின் மேல் நடந்தார் என்று சொல்லும் போது, ஏன் மௌனம் சாதிக்கேறீர்கள்?

    கேட்டா அவன் அடிப்பான் இல்லே? கேள்வி கேட்கும் நாவு வெட்டப்பட்டிருக்கும் இல்லே?
    ஆனா இந்த பொட்டை தனத்திற்கு பேரு மட்டும் பகுத்தறிவு.
    என்ன ஒரு லாஜிக்?

  82. //Of his brothers and sisters, only Ambedkar succeeded in passing his examinations and graduating to a bigger school. His native village name was “Ambavade” in Ratnagiri District so he changed his name from “Sakpal” to “Ambedkar” with the recommendation and faith of Mahadev Ambedkar, a Deshasta Brahmin teacher who believed in him.//
    —————————————————–
    https://bspindia.org/bhimrao-ambedkar.php
    —————————————————-
    Do u say that this also a wrong info……
    Tamil ovia and others please find here the refernce proof of the good man who inspired ambedkar.(A Brahmin)
    You all all such blind-folded or *** anything such that all you can’t accept about hindus,indain culture or hindu’s part and parcel Brahmins.( I am not a brahmin )

    Still to come…..

  83. திருச்சிகாரன் யார் என்று புரிந்துவிட்டது. .
    பெரியார் வகுப்பவாவாத பிரதிநிதித்துவம் கேட்டார் அதனார் திராவிடர் கழகத்தில் தலித் ஒருவih தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை கேட்கிறார் இப்படியெல்லாம் கேட்பதினால் தலிமக்களிடமிருந்து பெரியார் மீதும் அதன் இயக்கத்தின் மீதும் அவதூரை ஏற்படுத்து வேண்டுமென்பததான் நோக்கம் காரணம் அவர்கள்தான் காதி ஒழியவேண்டும் இந்து மதம் ஒழியவேண்டுமென்ற பேசுகிறார்களே அதனை தடுக்கவேண்டும் நோக்கம்.

    சரி செய்திக்கு வருவோம் பெரியார் வலியுருத்தியது அரசு பணிகளில் கல்வியில் இந்த இடஒதுக்கீடு கேட்டார் அதை இயக்கத்தில் கேட்டால் இதெல்லாம் அறிவுப்பூhவமானதா? சாதி இல்லை சாதி ஒழிக்கப்படவேண்டும் என்ற சொல்லும் இயக்கத்தில் சாதி பார்க்கவேண்டும் எனள்று சொன்னால் எப்படி சரி இப்படி எடுத்துக் கொள்வோம் தலித் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதாக வைத்துக்கொள்கொம் அப்படியாராவது தலித் மக்களை புறக்கணிக்கிறார்கள் என்று போராடினார்களா? அந்த இயக்கத்தில் யார்க்க என்ன பொறுப்ப கொடுக்க வேண்டுமென்று செயற்கழு முடிவசெய்யும் நீங்கள் யார்பக்கம் நிற்கிறீர்கள் தலித் மக்களை கோயிலுக்குள் உள்ளே விட அனுமதிக்க மறுக்கிறான் இதனால் இதை கண்டித்து உற்றளால் போரடமுடியுமா?

    அம்பேத்கரை பற்றி இவ்வளவு பொறுப்பாக கருத்து எழுதவதாக சொல்கிறாரே அம்பேத்கர் பிரமனர் பெயர் என்று வக்காலத்து வாங்கியவர் தமிழ் ஓவியா சான்றுடன் அம்பேத்கள் எழுதிய கடிததின் தகவலை சொன்னவடன் ஒன்று ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது இல்லை பிரமனர் பெயரைத்தான் அம்பேத்கர் வைத்துக்கொண்டார் என்று அவர் ஆதாரத்தை காட்டவேண்டும் அதைவிடுத்து நான் படித்த வரலாறு இதுதான் மழுப்புவதன் நோக்கம்

    வெங்கடேசன் தலித் மக்களிடம் இருந்த பெரியாரை மீட்பதற்க்கு படாதபாடுபடுகிறார் உங்களின் உள்நோக்கம் எடுபடாது அம்பேத்கரை விமர்சித்து இழிவாக எழுதிய பார்பனர் அருண்சோரியை ஏன் மறுப்பு வெளியிடவில்லை என்று கேட்டால் நான் அப்போது 11ம் வகுப்ப படித்துக்கொண்டிருந்தேன் என்று சொல்கிறார் அது மக்களிடம் பெரிய அளவில் சொல்லவில்லை என்று சொன்னால் உங்கள் கணக்கு எவ்வளவு மக்களுக்கு போய்சேர்ந்திருக்கவேண்டும் இதெல்லாம மழுப்புகிற வேலை இப்பொது அருண்சோரியை கண்டித்து எழுதி இந்த தளத்திலே வெளிடவேண்டியதானே அதற்க்க உங்களுக்க தைரியம் இருக்கிறதா?

    சரி அதை விடுங்க பாடபுத்தகத்தில் அம்பேத்கரை பற்றி காhட்டூன் போட்டிருநதார்களே அதை கண்டித்தாரா?

    அம்பேத்கரை பற்றி பெரியார் அவதூறாக பேசினார் பேசினார் என்று செய்தி வெளியிடுகிறீர்களே அம்பேத்கரை உங்களுக்கு அக்கறை இருக்குமானால் அம்பேத்கர் சொன்ன இதை
    ‘ நான் இந்துவான பிறந்தது பிறந்தது என்குற்றமில்லை நான் சாகுமபோது இந்துவாகசாகமாட்டேன் “‘ உங்களால் பதிவுசெய்யமுடியமா? ‘

  84. தமிழ் ஓவியா,

    // பெரியாரின் தொண்டர் கி.வீரமணி அவர்கள். //

    அப்படியா!!! சரி அப்படியே இருக்கட்டும், இதை நீங்கள் எங்களிடம் சொன்னது போல் ‘வினவு’ குழுவிடம் சொல்லி ‘வண்டை வண்டையாக’ வாங்கி கட்டி கொண்டது போதாதா ??

    இத்தனைக்கும் வினவு ‘பெரியாரை போற்றும் குழு’

    இன்னும் எத்தனை காலம் தான் ‘நீங்கள் பகுத்தறிவாதிகள்’ என்று எங்களை ஏமாற்ற போகிறீர்கள்

  85. தமிழ் ஓவியா,

    // ////திண்டுக்கல் சர்ச் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய பதிவை விரைவில் பதிவு செய்கிறேன்.//

    ஆமாம் அந்த சிலையின் கீழே ‘இயேசுவை’ பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்கிற ‘வசனத்தையும்’ சேர்த்து விடுங்கள்

    இல்லையெனில் ‘உங்கள் பெரியாரின்’ பகுத்தறிவு மற்றும் ‘கடவுள் நம்பிக்கைக்கு’ எதிராக அமைந்து விடும்

  86. பெரியார் என்கிற ஒரு காம வெறி பிடித்த ஜந்துவால் நாசமானது தமிழ் மண் சார்ந்த கலாச்சாரம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *