நூல் அறிமுகம்: வரலாற்று ஆராய்ச்சி

ஆரியப்படையெடுப்பு என்பது பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும் ஒரு முக்கியமான அரசியல் கேள்வியாக ஆகியுள்ளது.harappa ஏனெனில் சில முக்கிய அரசியல் இயக்கங்கள் தமது கோட்பாட்டின் அடித்தளமாகவே இந்த ஆரிய இனவாதத்தை முன்வைக்கின்றன. மேற்கத்திய பெரும் அகாடமிக் நிறுவனங்களில் பல இந்த கோட்பாட்டை வாழவைப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இக்கோட்பாட்டின் முக்கிய மேற்கத்திய விமர்சகராக திகழ்பவர் டாக்டர்.எல்ஸ்ட். இவரது இந்நூல் குறித்து ஒரு அறிமுகமாக இக்கட்டுரையை தமிழ் ஹிந்து வெளியிடுகிறது.

பெல்ஜிய இந்தியவியலாளரான டாக்டர்.கொயன்ராட் எல்ஸ்ட் எழுதிய ‘ Asterisk in Bharopiyasthan’ எனும் நூல் 2007 இல் புது டெல்லியைச் சார்ந்த வாய்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டுக்கு ஆதரவாக வைக்கப்படும் ஆதாரங்களில் இருக்கும் ஓட்டைகள் மற்றும் இந்த கோட்பாடு குறித்து அண்மையில் அறிவுலகில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் ஆகியவற்றினை ஆழமாக ஆராய்ந்து அவர் பல ஊடகங்களிலும் ஆராய்ச்சி இதழ்களிலும் எழுதியுள்ள ஏழு கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல் ஆகும். சரஸ்வதி நதி ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாந்த் நதியே ஆகும் எனும் ராஜேஷ் கோச்சாரின் நூல், ஹரப்பாவாசிகளின் எழுத்துருக்கள் உண்மையில் எழுத்துருக்களே அல்ல அவை சித்திர வரைவுகள் மட்டுமே – அவர்கள் எழுத்தறிவற்றவர்கள் எனும் ஸ்டீவ் ஃபார்மரின் கோட்பாடு, வேத இலக்கியங்களிலிருந்து பெறப்படும் வானவியல் தரவுகள் ஆகிய பல விஷயங்களையும் அவை ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளையும் எல்ஸ்ட் இந்த நூலில் விவரித்துள்ளார்.

வேத இலக்கியங்களின் கால வரையறையில் தொடக்ககாலம் முதல் இருந்த பிரச்சனைகள் மேற்கத்திய இந்தியவியலாளர்களுக்கு இருந்த மனத்தடைகள் ஆகியவற்றை எல்ஸ்ட் பட்டியலிடுவது சுவாரசியமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக 1790 இல் ஸ்காட்டிஷ் கணிதவியலாளர் ஜான் ப்ளேஃபேர் ஹிந்து ஜோதிட கால அட்டவணைகளின் தொடக்க புள்ளி கிமு 4300 ஆக இருந்திருக்க வேண்டும் என கணித்தார். இந்த முடிவினை அந்த காலத்தினைச் சார்ந்த எந்த வானவியல் வல்லுனரோ அல்லது கணிதவியலாளரோ எதிர்க்கவில்லை என்ற போதிலும் வானவியல் அல்லது கணித பயிற்சியற்ற பிற அறிஞர்கள் இது இறை-நிந்தனை என எதிர்த்தனர். ஃபேர்பேளையை எதிர்த்தவர்களுள் முக்கியமானவர் ஜான் பெந்த்லே என்பவர். vedic_sky1825 இல் இவர் எழுதிய பதிலில் “ஹிந்து நூல்களின் பழமையை நிலைநிறுத்திட கருதும் ஃபேர்பேளியின் செயலானது அந்நூல்களில் காணப்படும் பொய்களையும் தவறுகளையும் ஏற்றுக்கொள்வதற்கு வழி கோலும். ஆனால் அவரது நோக்கம் அதைவிட மோசமானது நமது மதத்தில் உள்ள மோசேயின் வரலாற்று கற்பிதங்களை தவறெனக் காட்டி நம் மதத்தின் அடிப்படையையே இல்லாமல் ஆக்குவது ஆகும். ஏனெனில் நாம் ஃபேர்பேளே சொல்வது போல ஹிந்து நூல்களின் பழமையை ஏற்றுக்கொண்டால் பைபிளை வெறும் கதை என்றே கருதவேண்டியது ஆகும்.” இந்த அடிப்படையில் ஹிந்து நூல்களுக்கு ஒரு புதிய கால வரையறையை ஏற்படுத்த பெந்த்லே ஒரு முயற்சியை மேற்கொண்டார். அது மிகவும் நகைப்புக்கு இடமானது ஆயிற்று. இந்த காலக் கணக்கின்படி வராஹமிகிரர் (கிபி 510-587) மொகலாய மன்னர் அக்பரின் (1556-1605) சமகாலத்தவர் ஆவார். மேலும் இத்தகைய எதிர்ப்புக்ளில் இருக்கும் அபத்தத்தை ப்ளேஃபேர் சுட்டிக்காட்டி ஒரு கேள்வியை எழுப்பினார்:  ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்து அந்த காலத்தை விட மிக பழமையான காலகட்டத்தை வானியல் ரீதியாக கணக்கிடக்கூடிய அளவுக்கு வேதகாலத்தவர்களுக்கு கணிதமும் நவீன வானவியல் அறிவும் இருந்திருக்குமா? (பக். 181) ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அத்தகைய எதிர்ப்புகள் இந்த நூற்றாண்டின் மேற்கத்திய இந்தியவியலாளர்களின் மனப்போக்கில் ஏற்பட்டு விட்டதுதான் அதிசயமான விஷயமாகும்.  இருந்த போதிலும் ஹெர்மான் ஜெக்கோபி காலம் முதல் அண்மையில் நர்சிங் ஆச்சார் வரை வானவியல் அறிஞர்கள் மிகவும் கட்டுறுதியான தரவுகளை முன்வைப்பதை keஎல்ஸ்ட் சுட்டிக்காட்டி அதனை ஆரியப் படையெடுப்பு/புலப்பெயர்வு கோட்பாட்டாளர்களால் புறக்கணிக்கமட்டுமே முடிந்துள்ளதேயன்றி அதனை மறுதலிக்க முடியவில்லை என சொல்கிறார்.

இத்தகைய வானியல் தரவுகள் எல்லாம் வேதங்களை இயற்றியவர்களின் தொல்பழம் முன்னோர்களால் (இந்தியாவுக்கு வெளியே) காணப்பட்டு அவை வேதங்களை இயற்றியவர்களால் பாதுகாக்கப்பட்டு (இந்தியாவுக்குள்) மீள் பாடப்பட்டது எனும் ரொமிலா தாப்பர் போன்றவர்களின் வாதங்களை “ஏற்கமுடியாத அதீத வாதம்” என நிராகரிக்கும் எல்ஸ்ட் “எனில் வேதங்களை இயற்றியவர்கள் தங்களது சொந்த வானியல் தரவுகளை சில இடங்களில் மட்டும் பதிவு செய்து கொண்டு, சில இடங்களில் மட்டும் பழமையான தரவுகளை பதிவு செய்து கொண்டர்கள் என நம்பவேண்டுமா?” என வினவுகிறார் (பக்.194) மேலும் வடதுருவ நட்சத்திரன் அருகில் ஆல்பா டிராகோனிஸ் (யமா அல்லது தூபன்) எனும் விண்மீனின் இருக்கையை வேத இலக்கியம் பதிவு செய்கிறது ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டாளர்களால் வேதம் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் காலகட்டத்தில்  (கிமு 1200) அந்த விண்மீன் அந்த இடத்தில் (பூமியின் பம்பர சுழற்சியின் விளைவால்) இருக்கவே இல்லை. இந்த விண்மீன் குறிப்பிடப்படும் வேத இலக்கியம் வேதங்களில் மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும். இந்த மிகவும் பிற்பட்ட கால வேத இலக்கியத்துக்கு ஜெக்கோபி ஊகிக்கும் காலகட்டம் கிமு 2780 +/- 500 ஆண்டுகள் ஆகும். இத்தகைய தரவுகள் இன்னமும் மறுதலிக்கப்படவில்லை என்பதனை ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டினால் விளக்கமுடியாத தரவுகளாக எல்ஸ்ட் முன்வைக்கிறார்.

elst1Asterisk in Bharopiyasthan,

கொயன்ராட் எல்ஸ்ட்,

Voice of India, 2007

பக்கங்கள்: 207

விலை: ரூ 200

73 Replies to “நூல் அறிமுகம்: வரலாற்று ஆராய்ச்சி”

  1. இன்னொரு அறிவுப் பெட்டகத்தை திறந்து வைத்திருக்கிறார் அரவிந்தன்.நண்பர் அரவிந்தனுக்கு ஒரு வேண்டுகோள். இந்திய வரலாற்றியல்,தொன்மவியல் போன்ற துறைகளில் வெளிவரும் புத்தகங்களை அவர் தொடர்ந்து அறிமுகப்படுத்த வேண்டும். எழுதும்போது அது தொடர்பாக தமிழில் வெளிவந்திருக்கும் புத்தகங்களைப் பற்றியும் கட்டுரைகள் பற்றியும் எழுதலாம்.
    let us go on a voyage through the articles and books.
    அன்புடன்
    சுப்பு

  2. உலகின் பழைமையான நாகரீகத் தொட்டில்கள் நான்கு.

    அவை

    1) “சிந்து சமவெளி நாகரீகம்” எனப் பெயரிடப் பட்ட இந்திய நாகரீகம்.

    2) நைல் ஆற்று நாகரீகம்- எகிப்திய அராபியர் நாகரீகம்.

    3)சுமேரிய நாகரீகம்- அதாவது இன்றைய இராக்கிய அராபியர் நாகரீகம்.

    4) மஞ்சள் ஆற்று நாகரீகம் – சீனர்களினுடையது.

    இதில் நைல், சுமேரிய, மஞ்சள் ஆற்று நாகரீகம் இந்த மூன்றிலும் வாழ்ந்தவர்கள் அதே வூரிலே முளைத்து வளர்ந்தவர்களாம்.

    ஆனால் இந்த நாகரீகங்களில் எல்லாம் பழைமை வாய்ந்த பாரத நாகரீகத்தை வளர்த்தவர்கள் மட்டும், சுவிட்சர்லாந்தில்ரிந்து காலையிலே ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கிளம்பி ஆடுகளை சூ, சூ என்று ஓட்டிக் கொண்டே மாலையிலே கங்கை ஆற்றுக்கு வந்து சேர்ந்து விட்டனராம்.

    இதை உலகின் மிகச் சிறந்த வரலாற்று அறிங்கர் ட்ரிக்ஸ் கார்ளர் (Tirichs kaarlar) அவர்களுடனேயே நடந்து போய் பார்த்து பதிவு செய்து வைத்து இருக்கிறார்.

    இதை சேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்திலே மாணவர்களுக்கு விளக்கினார்.
    நேற்று கூட ஒரு சொற்பொழிவு நடத்தி உள்ளார்.

    ——–
    இதை ஒத்துக் கொள்ளுபவர்கள் பகுத்தறிவு வாதிகள்,
    மனித நேயமுள்ள முற்போக்கு சிந்தனையாளர் என்ற பட்டமும் அவர்களுக்கு வழங்கப்படும்.

    —————

    இது ஒரு கேனத்தனமான கருத்து என்று சொல்லுபவர்கள், பாசிச, இரத்த வெறி பிடித்த, இன வெறி பிடித்த, மத வெறி பிடித்த, மக்கள் விரோத, சமுக விரோத, பிற்போக்கு சக்திகள் என்கிற அடை மொழிக்கே உரியவர்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிற்போக்கு, பாசிச சக்திகளின் கொட்டத்தை அடக்குவோம் என்று சூளுரைக்கிறேன்!

  3. hmm….I remember reading Francois Gauiter’s comment that ‘The only race in the whole world, who do not take pride in thier past is, Indians’. How true? We Indians are brainswashed by the europeans to think that, whatever the white skin says is true and whatever we had all along is blind faith and myth. People like Romila Tapar are of this genre who always try to put India’s past in bad light and these pseudo seculars want to prove that anything in India is not as ancient as we think. This has led to the state where Indians started thinking that Ramayana and Mahabaratha are mere stories and not our histories.

    People with sense will realise that, our ancestors clearly demarcated History and other stories as ‘Ithihas’ (history – Ramayana and Mahabaratha are called Ithihas) and ‘Puranas’ (old ones – history blended with a bit of myth).How great they were?

    Was it Eienstein, who said ‘we owe a lot to Indians, who invented zero’ ? Even the western intellectuals appreciate India’s past, but not we Indians. What a shame? All the mathematical treaties and anstronomical facts have been recorded by our ancestors 1000’s of years before even the westerners started dressing.

    Thanks Mr.Aravind and Tamilhindu team, for bringing out such wonderful articles.

  4. வணக்கம்,

    ///மோசேயின் வரலாற்று கற்பிதங்களை தவறெனக் காட்டி நம் மதத்தின் அடிப்படையையே இல்லாமல் ஆக்குவது ஆகும். ஏனெனில் நாம் ஃபேர்பேளே சொல்வது போல ஹிந்து நூல்களின் பழமையை ஏற்றுக்கொண்டால் பைபிளை வெறும் கதை என்றே கருதவேண்டியது ஆகும்.”////

    அப்படியென்றால் அதற்காகத்தான் நமது வேதங்களை இயேசுவின் ஆதாரத்தளம் ஆக்கி நமது வேதங்களை தமதாக்கிக் கொள்ள அரும்பாடு படுகிறார்கள், ஆக இது இப்போது ஆரம்பித்த பிரச்சினை இல்லை.

    நன்றி நண்பர் ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் அவர்களே. கட்டுரை மிகவும் அருமை.

  5. // பிற்போக்கு, பாசிச சக்திகளின் கொட்டத்தை அடக்குவோம் என்று சூளுரைக்கிறேன்! //

    ஐயா, உங்கள் வீரம் புல்லரிக்கவைக்கிறது; சரி, இதனை எப்படி சாதிக்கப் போகிறீர்கள் என்று சொல்லவில்லையே..!

    ஆக்கிரமிப்பு கருத்துக்களை வெறுப்புடன் திணித்த ஐரோப்பியர்களைத் தடுமாறச் செய்யுமளவுக்கு இன்று நம்மிடமும் வசதிகள் இருக்கிறதே, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நம்மிடமிருக்கும் ஆதாரங்களையெல்லாம் அள்ளிவிடலாமே..?

    அதாவது இந்தியர்களில் ஆதி குடிமக்கள் யார்,அவர்களில் முதன்முதலாக நாகரீகம் அடைந்த குடியினர் யார் போன்ற தகவல்களை (ஆதாரத்துடன்…) இங்கே பதிவு செய்யலாமே..!

    உதாரணமாக யூதர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது வரலாற்றுக் குறிப்புகளில் கலாச்சாரத்தில் (இந்துக்கள் என்று யாராவது இருந்திருந்தால்…) அவர்களைப் பற்றி ஏதாவது இருந்திருக்க வேண்டும்; அதே போல யூதர்களைப் பற்றி இங்கே…

    இப்படி ஒவ்வொரு மக்கள் குழுவையும் அவர்கள் காலத்தினையும் இருக்கும் தகவல்களைக் கொண்டே ஆராய்ந்தால்..?

  6. Dear Shri Aravindan Nilakandan, Your review of the latest book by Koenraad Elst is excellent. Please note that he has written another book ‘Indigenous Indians – Agasthya to Ambedkar’ which has dealt with the Aryan Invasion theory and its baseless assumptions which are the very basis of the social problems in Tamilnadu and in many parts of our country. In that book he has also tried to exposed the nefarious designs of the Christian Missionaries in promoting the differences among the various constituents of our Hindu society for religious conversions and social unrest. Nowadays politicians like Karunanidhi, Thirumavalavan, Vaiko, Nedumaran and many dravidian party bigwigs and their followers have fallen a prey to the evil designs of anti-national Christian Missions.

  7. //ஆனால் இந்த நாகரீகங்களில் எல்லாம் பழைமை வாய்ந்த பாரத நாகரீகத்தை வளர்த்தவர்கள் மட்டும், சுவிட்சர்லாந்தில்ரிந்து காலையிலே ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கிளம்பி ஆடுகளை சூ, சூ என்று ஓட்டிக் கொண்டே மாலையிலே கங்கை ஆற்றுக்கு வந்து சேர்ந்து விட்டனராம்.//
    You won’t believe this. But one the comments on a news item in the expressindia.com says –
    //I am not a Hindu. I am a Mulniwasi a direct desendant of the Origial inhabitant of the land. Hindus/Aryans came from Eurasia! They are the original terrosist . SC/ST/OBC are NOT Hindus. These homless Aryans occupied our land and now we are low caste and slaves to them!//
    This is called ‘sickular’ brainwashing.

  8. சகோதரர் கிலாடியார் அவர்களே,

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

    //உதாரணமாக யூதர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது வரலாற்றுக் குறிப்புகளில் கலாச்சாரத்தில் (இந்துக்கள் என்று யாராவது இருந்திருந்தால்…) அவர்களைப் பற்றி ஏதாவது இருந்திருக்க வேண்டும்; //

    யூதர்கள் குறிப்பிலே இந்துக்களைப் (அதாவது இந்தியர்கள் )பற்றி ஏன் இல்லை என்று கேட்க வருகிறீர்களா?

    யூதர்கள் குறிப்பிலே மத்தியக் கிழக்கு ஆசியாவிலே வசித்தவர்களைப் பற்றி, யூதர்கள் யாருக்கு அடிமையாக இருந்தார்கள், எந்த இனத்தை எல்லாம் அழிக்க கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்தார் என்பதாக பல பதிவுகள் உள்ளன. அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் எழுதி வைத்தனர்.

    யூதர்கள் சீனரைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளனரா? அப்ப சீனர்களும் கிடையாதா?

    இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு ஐந்து நூற்றான்டுகள் முன்பே புத்தர் பிறந்து வாழ்ந்து தன கருத்துக்களைப் பரப்பி இருக்கிறார்.

    இயேசு கிறிஸ்துவுக்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறதோ இல்லையோ, புத்தருக்கு வரலாற்று ஆதாரங்கள் செம்மையாக உள்ளன. ஆனால் யூதரின் குறிப்பிலே புத்தரைப் பற்றிய பதிவுகள் இல்லை.

    எனவே,

    “புத்தர் என்று என்று யாராவது இருந்திருந்தால்……..

    (அவரைப் பற்றி யூதர்கள் குறிப்பில் இல்லை), என்ற உங்களின் நியாயப் படி , புத்தரை வரலாற்றின் குறிப்புகளில் இருந்து எடுக்க வேண்டும் என்று அதிரடி கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கப் போகிறீர்களா?

  9. //You won’t believe this. But one the comments on a news item in the expressindia.com says –
    //I am not a Hindu. I am a Mulniwasi a direct desendant of the Origial inhabitant of the land. Hindus/Aryans came from Eurasia! They are the original terrosist . SC/ST/OBC are NOT Hindus. These homless Aryans occupied our land and now we are low caste and slaves to them!//
    This is called ’sickular’ brainwashing.//

    Dear Armchaircritic, these people will never change even if Max Muller comes back to life and say that it was only a myth propagated by the British, and he just framed a story. So do not give much importance to them…

  10. நண்பரே தங்கள் புரட்சி திட்டத்தினைக் குறித்து கேட்டிருந்தேன்;
    ஆனால் அதனைக் கண்டு கொள்ளாமல்..?

    சரி,விஷயத்துக்கு வருகிறேன்;
    என்னிடம் தாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த ஆதாரமும் போதிய ஞானமும் இல்லாததால் தங்களிடம் விவரம் கேட்டேன்; நீங்களோ மிகவும் சாமர்த்தியமாக என்னையே கேள்வி கேட்கிறீர்கள்;
    யூதர் என்பது அதிகமாக விவாதிக்கப்பட்ட மக்கள் குழு (People Group) என்ற அளவிலேயே உதாரணத்துக்காகக் குறிப்பிட்டேன்; மற்றபடி நான் எதிர்பார்த்தது விவரங்களே; செவ்விந்தியரை (Red Indians in America) எடுத்துக் கொள்ளுவோம் அல்லது ஆஸ்திரேலிய பழங்குடிகளை எடுத்துக் கொள்ளுவோம்; அங்கே நடந்தது எதுவோ அதுவே இங்கேயும் நடந்திருக்க வேண்டும்; காரணம் இயல்பிலேயே மனிதன் தான் வாழுமிடத்திலிருந்து மற்ற பகுதிக்கு நகர்ந்து சென்று ஆக்கிரமிக்கிறவனாக இருக்கிறான்; இந்தியாவிலுள்ள ஆதிக்க வர்க்கத்தினர் மட்டும் நல்ல பிள்ளை போல “இந்த பூனையும் பால் குடிக்குமோ” என வேடிக்கை பார்த்தால்..?
    எனவே விஞ்ஞானமும் வரலாறும் அகழ்வாராய்ச்சிகளும் கேட்கும் விவரங்களை ஆதாரத்துடன் பதித்து விட்டால் ஒப்பிட்டுப் பார்த்து வரும் சந்ததியினர் தெளிவடைய‌ ஏதுவாக இருக்குமே;

    சரியான குறிப்புகள் ஆதாரத்துடன் இல்லாததால்தானே ஐரோப்பியன் மயக்கி ஏமாற்றுகிறான்..?

    armchaircritic :
    // You won’t believe this. But one the comments on a news item in the expressindia.com says –
    “I am not a Hindu. I am a Mulniwasi a direct desendant of the Origial inhabitant of the land. Hindus/Aryans came from Eurasia! They are the original terrosist . SC/ST/OBC are NOT Hindus. These homless Aryans occupied our land and now we are low caste and slaves to them!”
    This is called ’sickular’ brainwashing. //

    “ப்ரெய்ன்” மட்டுமல்ல, எது அழுக்காக இருந்தாலும் வாஷ் பண்ணுவதுதானே ஆரோக்கியமானது..?

  11. //பிற்போக்கு, பாசிச சக்திகளின் கொட்டத்தை அடக்குவோம் என்று சூளுரைக்கிறேன்!// TRICHYKARRAR good shot…………….

  12. Dear Mr. Sathish,

    //Was it Eienstein, who said ‘we owe a lot to Indians, who invented zero’ ? Even the western intellectuals appreciate India’s past, but not we Indians.//

    ————-
    Well, I dont know what is Mr. Einstiens exact observation’s in this regard,

    but let me quote from a very important Mathematician, Mr. Marquis de Laplace, a french , Whose Laplace Transformations are very useful in solving equations of higher order.
    ——————-
    “Its India that gave us the ingenious method of expressing all numbers by menas of ten
    symbols, each symbol receiving a value of position as well as an absolute value; a profound and importanat idea which appears so simple to us now that we ignore its true merit”

    Marquis de Laplace

    ———–
    The above was mentioned in the preface of the chapter 2, Number Systems in the book , “Digital Computer Fundementals” written by Thomas c. Bartee, Professor ,Harvard university.

    —–

    The crux of the matter is the number system, specifically Decimal number system

    As an example

    3582 , on seeing this number any one can easily tell that it is Three Thousands Five Hundreds Eighty two. Means they know that this number has 3 Thousands , 5 hundreds, 8 tens and 2 ones!

    Thousands Hundreds Tens Ones

    3 5 8 2

    Before we present this system to the world, they were using number systems like Roman number systems.

    We know how to write 8 in Roman number system.

    Its VIII.

    v + III

    One 5 and3 ones. We have to add the five with three ones – just to get a simple 8.

    —–

    Shall we try how to write the number Eighty Eight in Roman number system?

    LXXXVIII this is Eighty Eight in Roman nuber system.

    L + X + X + X + V + I + I + I

    To find the value of a number, one has to do addition sum seven times, Just to get the number 88!

    Now readers can try to write the number 3582 in roman system!

    —————-

    Moreover addition and substraction are Very convenient in Decimal number System.

    But we have to pull your hairs to do addition and substraction in Roman system.

    ————-

    இந்தியாவிலே பிறந்து வளர்ந்தும், இந்தியாவை சிறுமைப் படுத்தி இகழ்வதில் மகிழ்ச்சி அடையும் பாலூட்டிகளே (I mean mammal),

    உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு!

  13. Thiru Trichykaaran
    your choo-choo comment is very funny, keep it up!
    The Aryan Dravidian theory is interesting fiction really.But it has become a laughing stock now.
    Historians are really His-her -story-ans. They are now like mega serial script writers looking for some silly excuses to keep their sorry story going.
    Thank you Thiru Aravindan for Dr Elst’s article.We need more such articles.

  14. வணக்கம்,

    ///அதாவது இந்தியர்களில் ஆதி குடிமக்கள் யார்,அவர்களில் முதன்முதலாக நாகரீகம் அடைந்த குடியினர் யார் போன்ற தகவல்களை (ஆதாரத்துடன்…) இங்கே பதிவு செய்யலாமே..!

    உதாரணமாக யூதர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது வரலாற்றுக் குறிப்புகளில் கலாச்சாரத்தில் (இந்துக்கள் என்று யாராவது இருந்திருந்தால்…) அவர்களைப் பற்றி ஏதாவது இருந்திருக்க வேண்டும்; அதே போல யூதர்களைப் பற்றி இங்கே…//

    இங்கே நான் எழுதும் காரணத்தால் என்னை எல்லோருக்கும், குறிப்பாக, கிளாடிக்கு தெரியும். ஆனால் எனது நண்பர் கண்ணன் என்பவரைப் பற்றி கிலாடியின் குறிப்பில் இல்லை என்பதனால் கண்ணன் என்பவரே இல்லை என்பது போல் இருக்கிறது நண்பர் ஸ்ரீ கிலாடியின் வாதம்.

    சரிதான், இப்போதைய D.N.A. ஆய்வின்படி முதல் மனித அரங்கேற்றம் ஆப்பிரிக்காவில்தான் என்கிறது ஆராய்ச்சி, அப்படியானால் யூதர்களும் தன சொந்த நாடு என்று சொல்லிக்கொள்ளும் தேசத்தை சார்ந்தவர்கள் அல்லவே, இதற்க்கு என்ன செய்யலாம்.

  15. உண்மையிலேயே சகோதரர் கிலாடியாருக்கு நாம் அனைவரும் ஒரு வ‌கையிலே நன்றி தெரிவிக்க வேண்டும்.

    அவர் இந்த மேலை நாட்டு “ஆரியர் இடம் பெயர்தல்” கொள்கையாள‌ரின் மன நிலையை சரியாகப் படம் பிடித்துக் காட்டி விட்டார். அவர்களின் சீடர் அல்லவா?

    //யூதர் என்பது அதிகமாக விவாதிக்கப்பட்ட மக்கள் குழு (People Group) என்ற அளவிலேயே உதாரணத்துக்காகக் குறிப்பிட்டேன்; மற்றபடி நான் எதிர்பார்த்தது விவரங்களே; செவ்விந்தியரை (Red Indians in America) எடுத்துக் கொள்ளுவோம் அல்லது ஆஸ்திரேலிய பழங்குடிகளை எடுத்துக் கொள்ளுவோம்; அங்கே நடந்தது எதுவோ அதுவே இங்கேயும் நடந்திருக்க வேண்டும்; காரணம் இயல்பிலேயே மனிதன் தான் வாழுமிடத்திலிருந்து மற்ற பகுதிக்கு நகர்ந்து சென்று ஆக்கிரமிக்கிறவனாக இருக்கிறான்; இந்தியாவிலுள்ள ஆதிக்க வர்க்கத்தினர் மட்டும் நல்ல பிள்ளை போல “இந்த பூனையும் பால் குடிக்குமோ” என வேடிக்கை பார்த்தால்..?//

    மேலை நாட்டவர் எப்படி அமெரிக்காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் போய் அங்கே இருந்த பழங்ககுடி மக்களை எல்லாம் அழித்து விட்டோ, தள்ளி விட்டோ தாங்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்களோ, இந்தியாவில் இப்போது இருப்பவர்களும் அப்படித் தான் செய்து இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி விட்டார் கிலாடியார்.

    வேறு எந்த ஆதாரமும் தேவை இல்லை. எத்தனை பேர் நாடு பிடித்து, கொள்ளை அடைத்து, கொலை செய்து காலனியாக்கிக் கொண்டானோ அப்படித்தான்யா நீங்களும் செஞ்சீங்கனு தீர்ப்பு சொல்லி, வெத்திலை எச்சலையையும் துப்பி விட்டார் கிலாடியார்.

    அட, இந்த ஒலகத்திலே நல்லவனாவே எவனும் இருக்க மாட்டானையா?

    அவன் அவன் இருக்கற இடத்துல வாழ்ந்து, இருக்கறதைப் பகிர்ந்து வாழ்ந்து அடுததவனைக் கொள்ளையடிக்காமா, கொலை பண்ணாம, அடுத்தவன் இடத்தைப் பிடிக்காம இருக்கவே முடியாதா ஐயா?

    கிலாடியாரின் கருத்தோ, முடியவே முடியாது , எல்லாரும் கெட்டவன் தான். நம்ப முன்னோர்கள் எல்லோரும் கெட்டவனாதாண்டா இருந்திருப்பான் என்ற ரீதியிலே //காரணம் இயல்பிலேயே மனிதன் தான் வாழுமிடத்திலிருந்து மற்ற பகுதிக்கு நகர்ந்து சென்று ஆக்கிரமிக்கிறவனாக இருக்கிறான்;//என்று கூறுகிறார்.

    காந்தியைத் தந்த, விவேகானந்தரைத் தந்த, அரிச்சந்திரனைத் தந்த, புறாவுக்காக தன் வூனை அளித்த சிபிச் சோழனைத் தந்த, இந்த தியாக இனம்,

    அடியை வாங்கிக் கொண்டு அஹிம்சைப் புன்முறுவலைப் பரிசாகத் தந்த இந்த இந்திய இனம்,

    நாடு பிடிக்கும் கூட்டமாம், இனம் அழிக்கும் கூட்டமாம், இடம் பிடுங்கும் கூட்டமாம்.

    எலும்பு வ‌ளைய‌ உழைத்து, கால் வ‌யிருக் கஞ்சி குடித்தாலும், மான‌த்தோடும், நியாய‌த்தோடும் வாழ்ந்த‌ ந‌ம் முன்னொர்க‌ள் ஆதிக்க‌ ச‌க்தியாம், ஆக்கிர‌மிப்பு ச‌க்தியாம், இட‌ம் பிடிக்க‌ வ‌ந்தோமாம்!

    சகோதரர் கிலாடியாரே, தொடரட்டும் உங்கள் பணி, இகழுங்கள், காரி உமிழுங்கள், எங்கள் கன்னத்தில் அறியுங்கள், மறு கன்னத்தைக் காட்டுவதோடு நிற்க மாட்டோம், உங்களுக்கு இன்னும் நல்லதையே நினைப்போம்.

    யூதர்களின் கற்பனைக்கு மூளைச் சலவை செய்து கொண்டீர்கள். இந்தியா என்றால் இளப்பமாகத் தான் இருக்கும்!

    உங்களைக் கூறி குற்றமில்லை.

    க‌ட‌வுளின் பெய‌ராலேயே ந‌ச்சுக் க‌ருத்துக்க‌ளை உங்க‌ள் மூளையிலே வைத்துத் தைத்து விட்ட‌ர்க‌ள்

    //மோச‌சிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    “எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”

    யோசுவாவிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    யோசுவா, அதிகாரம் 6,

    2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்!

    21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

    24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//

    க‌ர்த்த‌ரின் “ஆசீர்வாத‌ம்” இன்னும் ப‌ல‌ உள்ளது.

    இஸ்ரேல்தான் தேர்ந்து எடுக்க‌ப் ப‌ட்ட‌ இன‌ம் ப‌ல‌ பிற‌ இன‌ங்க‌ளை முழுவ‌தியும் அழித்துப் போடு, இர‌க்க‌ம் காட்டாதே என்று கூறியிருப்ப‌து தெளிவாக‌ இருக்கிற‌து//

    க‌ட‌வுளின் பெய‌ராலேயே ந‌ச்சுக் க‌ருத்துக்க‌ளை உங்க‌ள் மூளையிலே வைத்துத் தைத்து விட்ட‌ர்க‌ள்

    விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?

    உங்களைக் கூறி குற்றமில்லை.

  16. யுவான் சுவாங் எனும் சீனப் பயணியைக் குறித்து பள்ளிப் பாடத்தில் படித்திருக்கிறேன்; அவர் பயணம் செய்த தேசங்களில் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களைக் குறித்து தனது பயணக் கட்டுரையில் எழுதி வைத்திருப்பார்; அதனைக் கொண்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சில விவரங்களை உறுதி செய்திருப்பார்கள்.

    இதேபோல இந்தியாவின் பூர்வ குடிகள் குறித்தும் அவர்களது பழக்கவழக்கங்கள் குறித்தும் உண்மையான‍ நம்பகமான குறிப்புகள் இருக்குமல்லவா,அவற்றை இங்கே பதிவு செய்தால் உபயோகமாக இருக்கும்; மற்றபடி வாதத்தை திசை திருப்புவது போல “அந்த மாமா என்னைக் கிள்ளிட்டாரு” என சிறு குழந்தையைப் போல எதையோ புலம்பிவிட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை;

    திருச்சிக் காரன்
    25 October 2009 at 1:00 am
    // எலும்பு வ‌ளைய‌ உழைத்து, கால் வ‌யிருக் கஞ்சி குடித்தாலும், மான‌த்தோடும், நியாய‌த்தோடும் வாழ்ந்த‌ ந‌ம் முன்னொர்க‌ள் ஆதிக்க‌ ச‌க்தியாம், ஆக்கிர‌மிப்பு ச‌க்தியாம், இட‌ம் பிடிக்க‌ வ‌ந்தோமாம் //

    ஆக்கிரமிப்பின் நிறங்களும் வகைகளும் உங்களுக்குத் தெரியுமா?

    “தாங்கள் மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற் போகுமட்டும் வீட்டோடே வீட்டைச் சேர்த்து வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ” (ஏசாயா.5:8)

    இதுவும் நீங்கள் அதிகமாக விரும்பி வாசிக்கும் யூதர்களின் வேதாகமத்தில்தான் எழுதப்பட்டுள்ளது; கிறிஸ்தவர்களை விடுங்கள்,அவர்கள் சிலுவையில் செத்துப்போன பிணத்தை வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொள்ளையடிக்கிறார்கள்;

    “இந்தியா” எனும் புண்ணிய பூமியில் இது ஒரு தேசமாக உருவாகும் முன்னரே நாம் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துக் கொண்டும் ஆக்கிரமித்துக் கொள்ளையடித்துக் கொண்டும் இருந்ததில்லையா?

    இன்றைக்கு மகாராஷ்டிராவில் நடப்பது என்ன, ‘மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே சொந்தம்’ என்று முழங்குபவர்கள் தேர்தல் முடிவின் போக்கையே நிர்ணயிக்கிறார்கள்;

    இங்கே நீங்கள் குறிப்பிட்டது போல ஏழை எளியோரின் கூலியையும் தாலியையும் கொள்ளையடித்து மாடிவீடு கட்டும் மார்வாடிகள் செய்வது ஆக்கிரமிப்பு இல்லையா?

    காந்தியைத் தந்த அதே குஜராத் எனும் புண்ணிய பூமியிலிருந்து வந்த இவர்கள் அத்துணை பேரும் புண்ணியவான்களா?

    காந்திஜியையும் விவேகானந்தரையும் புகழ்வது தவறல்ல,அவர்தம் கொள்கைகளை கொள்ளையடிக்கவும் வெள்ளையடிக்கவும் பயன்படுத்திவிட்டு அதனை செயலபடுத்தாமல் விட்டு விட்டால் என்ன பயன்?

    வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது என்ற கோஷம் வெளிப்பட யார் காரணம்?

    நான் இதுவரை இங்கே கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் ஏதுவும் செய்யவில்லை; நான் எந்த மதத்தையும் சார்ந்தவனுமல்ல; என்னுடைய நம்பிக்கைகளை முன்னரே சொல்லியிருக்கிறேன்; என்மீது எந்த முத்திரையும் யாரும் குத்த முடியாது;

    நடிகர் ரஜினிகாந்த் ஒரு முறை பரிதாபமாகச் சொன்னது போல (அவர் மராட்டியராம்,கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தவராம், தமிழ்நாட்டில் தான் அதிகம் சம்பாதித்தாராம்;அவர் மராட்டியரா?கன்னடரா? தமிழரா?) என்னை யாருமே ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது என் தவறல்ல; இதனால் நான் அடையாளமில்லாதவனுமல்ல, அடையமுடியாதவனுமல்ல;

    என்னைவிட நீங்கள்தான் அதிகம் பைபிளைப் பற்றிப் பேசுகிறீர்கள்; அதற்குக் காரணம் நீங்கள் அதனைக் கற்றுக் கொள்ளும் நோக்கத்துடனோ அல்லது அதைக் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கத்துடனோ வாசிக்காமல் பைபிள் ஒரு மதத்தின் புத்தகத்தைப் போலவும் அதிலுள்ள குறைகளை எடுத்துச் சொல்லி அதன் நம்பிக்கையாளர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்துடன் வாசிக்கிறீர்கள்; இப்படி கெட்ட எண்ணத்துடன் எந்த புத்தகத்தை வாசித்தாலும் அதனால் ஒரு பயனும் இராது; ஆனால் அது தனது தவறான பக்கத்தையே எடுத்துக் காட்டும்;

    உதாரணத்துக்கு “டெலிபோன் டைரக்டரி” யினை எடுத்துக் கொள்ளுவோம்;
    அது அத்தனைப் பெரியதாக கனமாக இருந்தாலும் ஒரு வருடத்துக்குமேல் அது பயன்படாது; அதில் தேடுகிறோம்; போதிய விவரம் கிடைக்கும் வரை தேடுகிறோம்; அதிலுள்ள விவரங்கள் மாற்றப்படமுடியாது; திருத்தப்படமுடியாது; யாரையும் குறைசொல்லவும் முடியாது; நியாயம் கேட்கவும் முடியாது; ஆனால் தேடும் முறையினை‍‍‍‍ -தன்மையினை ‍மாற்றலாம்; கிடைக்கும்வரை தேடலாம்; மீண்டும் வேறொரு சம‌யம் வேறொரு காரணத்துக்காகத் தேடவேண்டியும் வரலாம்; நாம் தேடிய விவரம் கிடைத்தாலும் கூட தொடர்பு கிடைக்காமலும் போகலாம்; அதற்கும் பல காரணங்களிருக்கலாம்; மேற்கண்ட அனைத்தும் “டெலிபோன் டைரக்டரி” யை பற்றியது மட்டுமே மற்றும் ஒரு புத்தக்த்தை எப்படி அணுகவேண்டும் என்ற தன்மையைக் குறித்த எனது தனிப்பட்ட கருத்தாகும்.

    B.பாஸ்கர்.
    24 October 2009 at 11:10 pm
    // இங்கே நான் எழுதும் காரணத்தால் என்னை எல்லோருக்கும், குறிப்பாக, கிளாடிக்கு தெரியும். ஆனால் எனது நண்பர் கண்ணன் என்பவரைப் பற்றி கிலாடியின் குறிப்பில் இல்லை என்பதனால் கண்ணன் என்பவரே இல்லை என்பது போல் இருக்கிறது நண்பர் ஸ்ரீ கிலாடியின் வாதம் //

    நண்பர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்; இதோ நீங்களும் நானும் தொடர்பு கொண்டிருப்பதால் கண்ணனைக் குறித்து உங்கள் மூலம் அறிந்துகொண்டேனே; அவரைக் குறித்து இன்னும் கொஞ்சம் சொன்னால் எனது நண்பர்களிடம் அவரைக் குறித்து சொல்லுவேன்; அப்படி சொல்லிக் கொள்ளும்படியான சாதனையாளராக இருந்தால் இன்னும் புகழ்ந்து சொல்லுவேன்;

    ஆனாலும் கூட நான் குறிப்பிட்டது தனிப்பட்ட நபர்களைக் குறித்து அல்ல; மக்கள் குழுக்களை(People Groups)க் குறித்தே; அதாவது தமிழர் என்பது மிகப் பெரிய குழுவானால் அவர்களில் சமுதாய ரீதியாக கலாச்சார ரீதியாக பல உட்பிரிவுகளிருக்கும்; அதிலும் குடும்ப சம்பந்தமான பிரிவுகளிருக்கும்;(ரெட்டியார்,செட்டியார்..இப்படி)

    இன்றைக்கு ஈராக் எனப்படுவது அக்கால பாபிலோன் நகரம்; அது ஒரு பெரிய சாம்ராஜ்ய‌மாக ஒரு காலத்தில் இருந்துள்ளது; அந்த சாம்ராஜ்யத்தின் கீழ் இந்தியாவும் இருந்துள்ளது; காலப்போக்கில் பெயர்கள் வழக்கொழிந்து போயிருக்கலாம்; மாறியிருக்கலாம்; கல்கத்தா கொல்கதா என்றும் பம்பாய் மும்பை என்றும் பெங்களூர் பெங்களூரு என்றும் மெட்ராஸ் சென்னை என்றும் மாற்றப்ப‌ட்டதைப் போல மக்கள் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருக்கலாம்; இன்றைக்கு அது மாறியிருக்கலாம் அல்லது மாற்றப்பட்டிருக்கலாம்; அந்த விவரத்தைக் கொண்டு உண்மையான வரலாற்றை ஆய்ந்தறிந்து பதிக்க வேண்டுமே தவிர வெறுமனே மறுத்துக் கொண்டிருந்தால் அதனால் யாருக்குப் பயன்?

    நண்பர் திருச்சிக்காரன் அவர்களே,
    புத்தரைக் குறித்து யூதர் அறிந்திருந்தாலும் அல்லது ஏதாவது எழுதியிருந்தாலும் அது அவர்கள் புத்தகத்தில் இல்லை; அதாவது நீங்கள் எதிர்பார்ப்பது போல பைபிளில் இல்லை; அதற்குக் காரணம்,”மல்கியா” எனும் புத்தகத்துடன் பழைய ஏற்பாடு முடிகிறது; அதுவரை மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட வேதமாகும்; அதன் பிறகு இயேசுகிறிஸ்துவின் காலம் வரை சுமார் 500 வருடம் யூதர்களின் “இருண்ட காலம்” என்று சொல்லப்படுகிறது; இந்த காலக் கட்டத்தில்தான் புத்தர் வாழ்ந்தார்; அவருடைய போதனைகள் மட்டுமல்ல, இன்னும் பல அறிஞர்களின் போதனைகளும் சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது; அதைக் குறித்த விமர்சனத்தை பெயர் குறிப்பிடாத பொதுவான அபிப்ராயமாக பவுல் எனும் கிறிஸ்தவத் தலைவர் அதிகம் எழுதியிருக்கிறார்; அதுவே புதிய ஏற்பாடு ஆயிற்று; ஆனாலும் இவை தொகுக்கப்படும் முன்னர் தனித்தனி புத்தகங்களாகவே இருந்துள்ளது;

    எனவே புத்தர் போன்ற ஞானிகளை யாராலும் மறுக்கமுடியாது; ஆனாலும் அவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று நீங்களும் நானும் ஒப்புக்கொண்டாலும் அவரது சீடர்கள் அதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்; அவர்கள் ஒப்புக்கொண்டதாக நீங்கள் நிரூபித்தால் நானும் ஒரு இந்து தான், அம்பேத்கரும் ஒரு இந்து தான் என்று நீங்கள் சொன்னது போலாகும்;

    ஒரு இந்தியன் இந்துவாக இருக்கலாம்;ஆனால் ஒரு இந்து இந்தியனாக மட்டுமே இருக்கமுடியாது; இதனை நீங்கள் எதிர்த்தால் எனது பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிவரலாம்;

  17. கருத்துக்கள் எழுதிய நண்பர்களுக்கு நன்றி. திரு சுப்பு அவர்கள் சொன்னபடி என்னால் முயன்ற அளவு நான் படித்த நூல்களை பகிர்ந்து கொள்கிறேன். திருச்சிக்காரன் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இந்திய பண்பாட்டின் தொன்மையும் நிலைத்த தன்மையும் முக்கியமானவை. அவற்றை நம் அகழ்வாராய்ச்சியாளர்களும் மரபணுவியலாளர்களும் நிரூபித்து வருகிறார்கள். ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டை ஏற்கனவே அண்ணல் அம்பேத்கரும் மகரிஷி ஸ்ரீ அரவிந்தரும் நிராகரித்துள்ளனர். Bharopiyasthan என்பது ஆரியர்களின் பூர்விக இடம் என்பதாக மொழியியலாளர்கள் தேடும் பகுதிக்கு வேடிக்கையாக எல்ஸ்ட் கொடுக்கும் பெயர். தொல்-இந்தோ-ஐரோப்பிய மொழி புழங்கும் இடமாம். Urheimat என்றும் சொல்லுவார்கள். இந்தோ ஐரோப்பிய என்பதைத்தான் பாரத+ஐரோப்பிய என்பதை பாரோப்பியஸ்தான் என வேடிக்கையாக சொல்லுகிறார் எல்ஸ்ட். 🙂

    கிலாடி, மானுடவியலில், தொல் வரலாற்றில், மானுட பரிணாமத்தில் எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமல் 18 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய இனவாத – விவிலிய அடிப்படைவாதி போல உளறுகிறீர்கள். கடுமையான வார்த்தைக்கு மன்னியுங்கள். நீங்கள் செய்வதை விளக்க மிக மென்மையான வார்த்தை நீங்கள் அறிவில்லாமல் உளறுகிறீர்கள் என்பதுதான். விவிலியம் என்பது வரலாற்று தரவுகள் கொண்ட ஐதீக நூல்தான். அதற்கு மேல் எதுவும் இல்லை. ஒரு திருக்குறளோ அல்லது சுபாஷிதமோ சொல்லும் மேலான மானுட அறங்களை விவிலியத்தில் நீங்கள் காணமுடியாது. உபநிடதங்களில் உள்ள உண்மைத்தேடலை நீங்கள் காணமுடியாது. மலைப்பிரசங்கத்தை விவிலிய சட்டகத்தில் பொருத்தும் போது “ஏக இறைவன் மீதான நம்பிக்கையே” அங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதிலுள்ள மானுட அறம் அல்ல. பாரத-ஹிந்து ஞான மரபில் அவ்வாறல்ல. இங்கு அறமும் உண்மைத்தேடலும் பண்பாட்டின் அடிப்படை. மற்றனைத்து பண்பாட்டு வெளிப்படுதலும் அந்த அடிப்படைகளுக்கு முன் வணங்கியாகவேண்டும். இறைநம்பிக்கை உட்பட. இந்த முதல் பாடத்தை பாரதப்பண்பாட்டை குறித்து உணராமல் நீங்கள் உளறுவது குறித்தும் உங்கள் கிறிஸ்தவ அறியாமை மற்றும் அகந்தை குறித்தும் ஹிந்துக்களாகிய நாங்கள் உங்களிடம் பரிதாபப்பட மட்டுமே முடியும். என்றாலும்…உங்கள் பித்தம் தெளிய மருந்தொன்றிருக்கிறது. முயலகன் மீதிருக்கும் திருவடிகள் உங்கள் ஆபிரகாமிய அறியாமையையும் அகற்றட்டும்.

  18. //திருச்சிக் காரன்
    25 October 2009 at 1:00 am//

    என்னடா ரொம்பநாளா ஆளக்கனமேன்னு பாத்தேன்.

    ////The crux of the matter is the number system, specifically Decimal number system
    As an example
    3582 , on seeing this number any one can easily tell that it is Three Thousands Five Hundreds Eighty two. Means they know that this number has 3 Thousands , 5 hundreds, 8 tens and 2 ones!
    Thousands Hundreds Tens Ones
    3 5 8 2
    Before we present this system to the world, they were using number systems like Roman number systems.
    We know how to write 8 in Roman number system.
    Its VIII.
    v + III
    One 5 and3 ones. We have to add the five with three ones – just to get a simple 8.

    —–

    Shall we try how to write the number Eighty Eight in Roman number system?

    LXXXVIII this is Eighty Eight in Roman nuber system.

    L + X + X + X + V + I + I + I

    To find the value of a number, one has to do addition sum seven times, Just to get the number 88!
    Now readers can try to write the number 3582 in roman system!//////////

    இப்படியெல்லாம் உங்களைத் தவிர டியூஷன் எடுக்கற மாதிரி சொல்லித்தர யார் இருக்காங்க? அடிக்கடி இங்க வாங்க சார்!

    அன்புடன்
    ராம்

  19. ///என்னைவிட நீங்கள்தான் அதிகம் பைபிளைப் பற்றிப் பேசுகிறீர்கள்; அதற்குக் காரணம் நீங்கள் அதனைக் கற்றுக் கொள்ளும் நோக்கத்துடனோ அல்லது அதைக் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கத்துடனோ வாசிக்காமல் பைபிள் ஒரு மதத்தின் புத்தகத்தைப் போலவும் அதிலுள்ள குறைகளை எடுத்துச் சொல்லி அதன் நம்பிக்கையாளர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்துடன் வாசிக்கிறீர்கள்; இப்படி கெட்ட எண்ணத்துடன் எந்த புத்தகத்தை வாசித்தாலும் அதனால் ஒரு பயனும் இராது; ஆனால் அது தனது தவறான பக்கத்தையே எடுத்துக் காட்டும்///
    gladdy சார்,
    நாங்களாவது. பைபிள் ளை கேட்ட எண்ணதுடனாவது வாசிக்க முடிகிறது.அனால் உங்களுக்கு எங்கள் மத புத்தகத்தை தொட முடியாத அளவுக்கு உங்களிடம் வெறுப்பும் அருவருப்பும் உள்ளது.

  20. யுவான் சிங் வந்தது ஹர்ஷர் காலத்தில்.
    ஹரஷருக்கு முன் குப்தர்கள்.
    குப்தருக்கு முன் மவுரியர்கள். மவுரியருக்கு முன் போரஸ் எனப்படும் புருசோத்தமன் அலேக்சாண்டாரால் தோற்கடிக்கப் பட்டார்.

    அலெக்சாண்டருக்கு முன் இந்தியாவுக்கு பேரும் புகழும் உள்ள வெளி நாட்டுப் பயணிகள் யாரும் வரவில்லை என்றால், அல்லது அவர்கள எழுதிய குறிப்பு கிடைக்கவில்லை என்றால், அதற்க்கு இந்தியர்கள் என்ன செய்ய முடியும்?

    நான் கேட்கிறேன், இந்தியர்கள் வெளிப் பிரதேசத்தில் இருந்து வந்தார் கள் என்பதற்கு என்ன ஆதாரம்.

    நான் திருச்சிராப் பள்ளியை சேர்ந்தவன். என் முன்னோர்கள் திருச்சியில் தான் பண்டு தொட்டு வாழ்ந்து வந்தார்கள்.

    இன்றைக்கு ஒரு ஐரோப்பியர் வந்து, நீ இலங்கையில் இருந்து வந்தவன் என்றால், அதற்கு என்ன ஆதாரம்?

    ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது நீங்கள் தான்.

    நான் கேட்கிறேன், இந்தியர்கள் வெளிப் பிரதேசத்தில் இருந்து வந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?

    சும்மா, நம் நாட்டின் பெருமையைக் கெடுக்க கதை விடுகிறீர்கள் என்று சொல்கிறேன்.

  21. //இந்தியா” எனும் புண்ணிய பூமியில் இது ஒரு தேசமாக உருவாகும் முன்னரே நாம் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துக் கொண்டும் ஆக்கிரமித்துக் கொள்ளையடித்துக் கொண்டும் இருந்ததில்லையா?//

    மன்னர்கள் தங்களுக்குள் சணடையிட்டுக் கொண்டார்களே தவிர மக்களை அழிக்கவில்லை.

    நாட்டைக் கைப்பற்றியதுண்டு. ஆனால் எந்த ஒரு இந்திய மன்னனாவது ஒரு நாட்டைக் கைப்பற்றிய பின் அங்கே இருந்த மக்களை கொன்று குவித்ததாக வரலாறு உண்டா?

    பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள் என்று வரலாறு உண்டா?

    போரிலே வீரர்கள் இறந்ததைக் கண்டே வருத்தப் பட்டு மனம் மாறினான் அசோகன்.

    இவ்வளவு சிறப்புடைய நாடு இந் நாடு. அவ்வளவு சிறப்பான சமூகம் நமது இந்திய சமூகம். ஆனால் அதை சீர் கெட்டதாக சித்தரித்துக் காட்டத் துடிக்கிறீர்கள்.

  22. அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன் (author) கட்டுரையாசிரியருக்கு,
    25 October 2009 at 12:13 pm

    // இங்கு அறமும் உண்மைத்தேடலும் பண்பாட்டின் அடிப்படை. //

    தேடுங்க,தேடுங்க,தேடிக்கிட்டே இருங்க..!

    “பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்;புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்” என்று நீதிமொழிகள்(14:6) கூறுகிறது.

    நான் எனது அறிவை பிரபலப்படுத்தும் எண்ணத்துடன் எதையுமே எழுதவில்லை; ஆனால் நிறைய தகவல்களை எதிர்பார்த்து பொதுவான ஐயங்களை மட்டுமே எழுப்பினேன்;அதுவும் யாரையும் புண்படுத்தாமல்..! இது இப்படித்தான் என நான் குறிப்பாக எதையுமே சொல்லாதபோது அவசரப்பட்டு நான் அறிவில் ஆதவன் என்றும் புத்தியில் ஆதவன் என்றும் மறைமுகமாக புகழுகிறீர்களே..!

  23. கிளாடி அவர்களே,

    ///பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்;புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்” என்று நீதிமொழிகள்(14:6) கூறுகிறது.///

    ஏசு கிறிஸ்து சொன்ன‌து எல்லாம் அவ‌ர‌து “விசுவாசிக‌ளுக்கு ம‌ட்டுமே” அவ‌ர‌து “ஆசீர்வாதம்”, அவ‌ர‌து “தியாக‌ம்”, அவ‌ர‌து “ம‌ர‌ண‌ம்” அனைத்துமே அவ‌ர‌து விசுவாசிக‌ளுக்கு ம‌ட்டுமே அல்லாது, உல‌கின் எல்லா உயிருக்கும் அல்ல‌. அத‌னால்தான் எம‌து முன்னோர்க‌ளுக்கும், ஏன் எங்க‌ளில் சில‌ருக்கும் தேடிய‌வுட‌னே கிடைக்கும் ஞான‌மும், இறையுண‌ர்வும், ஏசுவின் விசுவாசிக‌ளுக்கு வ‌ருவ‌தில்லை. அறிவும் லேசாய் வ‌ருவ‌தில்லை. மேலும் சொல்ல‌ப்போனால், எம‌து மூதாதைய‌ர்க‌ளான‌ ரிஷிக‌ளும், முனி சிரேஷ்ட‌ர்க‌ளும் த‌ங்க‌ளுக்குள்ளேயே தேடிக் க‌ண்ட‌ ஞான‌ம், இறைய‌றிவே ஆகும். இதைத்தான் ஆதி ச‌ங்க‌ர‌ரும், திருமூலரும், ர‌ம‌ண‌ ம‌ஹ‌ரிஷியும், இன்னும் எத்த‌னையோ ம‌ஹான்க‌ளும் ந‌ம‌து ம‌னித‌ ச‌முதாய‌த்துக்குப் பொதுவில் அதாவ‌து விசுவாசிக‌ளுக்கு ம‌ட்டும‌ல்லாம‌ல் எல்லோருக்கும் பொதுவில் சொன்னார்க‌ள்.

    உங்க‌ளுக்கு இது விள‌ங்காத‌த‌ன் கார‌ண‌ம் நீங்க‌ள் மேற்கோள் காட்டிய‌ ஏசுவின் வாக்கிலிருந்து நான் இப்போது புரிந்து கொண்டேன்.

    ///நான் எனது அறிவை பிரபலப்படுத்தும் எண்ணத்துடன் எதையுமே எழுதவில்லை; ஆனால் நிறைய தகவல்களை எதிர்பார்த்து பொதுவான ஐயங்களை மட்டுமே எழுப்பினேன்;அதுவும் யாரையும் புண்படுத்தாமல்..! இது இப்படித்தான் என நான் குறிப்பாக எதையுமே சொல்லாதபோது அவசரப்பட்டு நான் அறிவில் ஆதவன் என்றும் புத்தியில் ஆதவன் என்றும் மறைமுகமாக புகழுகிறீர்களே..!///

    ஏசுவின் சொல்ப‌டி, “ப‌ரியாச‌க்கார‌னாய் இராதீரும்”. உங்களை அறிவில்லாத‌வ‌ன் என்று எங்குமே, யாருமே குறிப்பிட்டுச் சொல்லாத‌ போது ஏன் உங்க‌ளுக்கு இப்ப‌டி ஓர் ஆசை? த‌ற்புக‌ழ்ச்சி எல்லாம்?

  24. //நான் இதுவரை இங்கே கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் ஏதுவும் செய்யவில்லை; நான் எந்த மதத்தையும் சார்ந்தவனுமல்ல; என்னுடைய நம்பிக்கைகளை முன்னரே சொல்லியிருக்கிறேன்; என்மீது எந்த முத்திரையும் யாரும் குத்த முடியாது;//

    இதைப் பற்றி நான் என்ன சொல்வது? நீங்கள் உங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நான் ஒன்றும் சொல்வதற்க்கில்லை!

    ஆனால் உங்களின் பதிவை நகல் எடுத்து மேற்க்கோள் காட்ட நான் கர்சரை உங்கள் பதிவின் மீது வைத்த போது, ” glady ” என்ற எழுத்துக்களின் மீது கர்சரை வைத்த போது, அது ஒரு புதிய வலைத் தளத்திற்கு என்னைக் கொண்டு சென்றது.

    ChristianBrahmin

    அங்கே கீழ்க் கண்டவாறு குறிப்பு இருந்தது.
    ——–
    ChristianBrahmin
    “I am a new Creation in Christ..!” “கிறிஸ்துவில் புது சிருஷ்டியாக..!”

    //About Me

    christianbrahmin
    நான் பிராமணக் குடும்பப் பின்னணியிலிருந்து கிறிஸ்தவ மார்க்கத்தின் வழிமுறைகளை ஏற்று சமூகப் பணியாற்றுகிறேன்; வாழ்க்கையில் மனச் சோர்வினால் துவண்டு போனவர்களுக்கு இறை ஒளியினை ஏற்றும் ஆலோசனைப் பணியாற்றுவதில் அதிக கவனம் செலுத்துகிறேன்//
    ——–

    “பிராமணக் குடும்பப் பின்னணியிலிருந்து” என்பது என்ன?

    அலுவலகத்தில் உங்களின் இருக்கைக்குப் பினனால் உள்ள இருக்கையில் அமர்ந்து பணி செய்பவர் பிராமண வகுப்பை சேர்ந்தவரா?

    அல்லது உங்களின் வீட்டின் பின்னால் உள்ள வீட்டில் குடி இருப்பவர் பிராமண வகுப்பை சேர்ந்தவரா, எப்படி நீங்கள் பிராமண குடும்பப் பின்னணி உள்ளவர் என்பது பற்றி எல்லாம் நீங்கள் மேலதிக விவரங்களை வாசகர்களுக்கு தருவதும் தராததும் உங்கள் விருப்பம்.

    நான் கருத்துக்கள் பற்றி விவாதிப்பவன்!

    ஆனால் “கிறிஸ்தவ மார்க்கத்தின் வழிமுறைகளை ஏற்று” என்று உங்கள் தளத்திலே நீங்களே உங்களை பற்றி விளக்கி விட்டு இங்கெ வந்து

    “நான் எந்த மதத்தையும் சார்ந்தவனுமல்ல; என்னுடைய நம்பிக்கைகளை முன்னரே சொல்லியிருக்கிறேன்; என்மீது எந்த முத்திரையும் யாரும் குத்த முடியாது”

    “கிறிஸ்தவ மார்க்கத்தின் வழிமுறைகளை ஏற்று” என்ற முத்திரையை இட்டுக் கொண்டது யார்? நீங்கள் தானே?

  25. //“இந்தியா” எனும் புண்ணிய பூமியில் இது ஒரு தேசமாக உருவாகும் முன்னரே //

    இன்றல்ல, நேற்றல்ல, அறுபது ஆண்டுகளுக்கு முன் அல்ல, பல்லாயிரம் வருடங்களாக இந்திய மக்கள் எல்லோரும் ஒன்றாகவே, இந்தியராகவே இருந்துள்ளனர்.

    குமரி முதல் இமயம் வரை உள்ள மக்களின் அடிப்படை எண்ணம், உணர்வு எப்பொழுதும் ஒன்றாகத் தான் இருந்தது.

    வெவ் வேறு கால கட்டங்களில் வாழ்ந்த சில இந்திய அரசியல் வாதிகாளை குறிப்பிட விரும்புகிறேன்.

    மனு சோழன்: தான் மகன் ஒரு கன்றை விபத்திலே கொன்றதற்க்காக, தன் மகனையே, தேரை யெற்றி மரணம் அடைய வைத்த- நீதி தவறாத மன்னன் – வேறு எங்காவது உண்டா?

    கரிகாலன்: மக்கள் வரிப் பணத்தை வைத்து , மாட மாளிகை , கூட கோபுரம் என்று தனக்கு வசதி செய்து கொள்ளும் மன்னர்களி ன் நடுவில், தன் கரூவூலப் பணத்தை எடுத்து காவிரியில் மக்கள் நன்மைக்கு ஆக ஆணை கட்டிய மாமன்னனின் கருணை- உலகில் பிற நாடுகளில் காண்பது அரிது!

    அசோகர்- மாவீரன் அலெக்சாண்டர் மறைவுக்குப் பின், இந்தியா உலக அரங்கில் ஒரு பெரிய வல்லரசாக உருவாக்கும் சூழல் இருந்தது. அதே நோக்குடன் தான் கலிங்கப் போரை நடத்தி வெற்றியும் கண்டான். வேறு யாராக இருந்தாலும், அந்தப் வெற்றியைத் தொடர்ந்து மேலும் பல படை எடுப்புகள் போர்கள் , என மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவுவதில் முனைப்பு காட்டி இருப்பான். ஆனால் அடுத்தவருக்கு துன்பம் தர விரும்பாத இந்தியனின் மன உணர்வு அவன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வெளியே வந்து , பிறகு நடந்ததும் ஒரு சரித்திரம் தான்!

    அக்பர்: தீவிரமான கட்டுப்பாடு உடைய ஒரு மதத்தைச் சேர்ந்தவர்! அவருடைய பாட்டனார் துருக்கிய நாட்டைச் சேர்ந்தவர், அப்படிப்பட்ட பாரம்பரியப் பின்னணி உடைய அக்பர், இந்திய மக்களின் சகிப்புத் தன்மை, அமைதி கருத்துக்களை தன் நல்ல உள்ளத்தில் பிரதி பலிக்கச் செய்து, இந்தியாவின் மிகச் சிறந்த அரசர்களில் ஒருவராக வரலாற்றில் இடம் பிடிக்கிறார்.

    இப்படியே இன்னும் பல இந்திய அரசர்களை குறிப்பிடலாம். நேரம் இல்லாததால் அவர்களை குறிப்பிட இயலாததற்கு, அவர்களிடம் மன்னி ப்பு கோருகிறேன்.

    இதோடு இன்னும் காந்தி, காமராசர், கக்கன்,ஜீவா… இப்படி பல சமீப கால தலைவர்களையும் சொல்ல முடியும்!

    இவர்கள் எல்லாம் இப்படி தன்னலம் இல்லா தியாகியாக வாழும்படிக்கான கருத்துக்கள், இந்தியாவில் உள்ள எல்லா மக்களின் மனக் கருத்துக்கள் தான்!

    அசோகர், அக்பர் எல்லோரின் கருத்தும் , எண்ணமும் 8000 வருடங்களாக தொடர்ந்து இந்திய சமுதாயத்தில் வாழ்ந்த எல்லா மக்களின் கருத்துக்கள் தான்.

    எனவே அரசர்கள் யார் ஆண்டாலும், ஆட்சி மாறினாலும், சோழர் ஆண்டாலும், மௌரீயர் ஆண்டாலும், முகலாயர் ஆண்டாலும் , ஆங்கிலேயர் ஆண்டாலும் குமரி முதல் இமயம் வரை உள்ள மக்களின் அடிப்படை எண்ணம், உணர்வு ஒன்றாகத் தான் இருந்தது.

    அந்த மக்களின் எண்ணம் தான் காந்தியை, அக்பரை, அசோகரை, கரிகாலனை உருவாக்கியது.

    கரிகாலன், அசோகர், அக்பர், காந்தி, விவேகானந்தர் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, பண்பாடு, குண நலன் இவைதான், அவர்களின் மனதில் தியாக எண்ணங்களை உருவாக்கியது.

    இந்த அப்பாவி மக்களின், நல்ல சனத்தின் நன்மைக்காகவே, அவர்கள் சுய நலத்தை விட்டு தியாக வாழ்க்கை மேற்கொண்டனர்.

    அப்படிப்பட்ட மக்கள் சன நாயக அடிப்படையில் ஒரு அமைப்பை உருவாக்கிய போது, அது இந்தியாவாகத் தானே உருவாகும்?

    எனவே வெறும் பொருளாதார, பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டும் இந்திய மக்கள் இணைந்து வாழ வில்லை. இது ஒரே எண்ணம், உணர்வு உடைய மக்களின் இணைப்பு என்றே நான் கருதுகிறேன்!

    இந்தியாவின் ஒற்றுமை, 115 கோடி இந்திய மக்களின் இதய இணைப்பால் உருவானது.

    சில ஐக்கியங்கள் ( Soviath Union போன்றவை)அரசியல் அதிகாரத்தால் உருவானவை. அதிகாரம் குறைந்த போது, அவை பிரிந்து விட்டன.

    ஆனால் இந்தியாவோ, ஒரே பூனை ஈன்ற வெவ்வேறு நிறமுள்ள பூனைக் குட்டிகளைப் போன்றவையாதலால்,

    உலகிலேயே வெவ் வேறு மொழி பேசும், ஒத்த சிந்தனையுள்ள மக்கள் ஒன்று பட்டு வாழும் அதிசயமாக உள்ளது.

    இந்தியாவை ஒற்றூமையாக வைத்து இருப்பது, இந்திய ஒற்றூமைக்கு பாதுகாவலன் ஆக இருப்பது அதன் 115 கோடி மக்கள்தான்!

    இன்றல்ல, நேற்றல்ல, அம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் அல்ல, பல்லாயிரம் வருடங்களாக இந்திய மக்கள் எல்லோரும் ஒன்றாகவே இந்தியராகவே இருந்துள்ளனர்.

    இவ்வளவு சிறப்புடைய நாடு இந் நாடு. அவ்வளவு சிறப்பான சமூகம் நமது இந்திய சமூகம். ஆனால் அதை சீர் கெட்டதாக சித்தரித்துக் காட்டத் துடிக்கிறீர்கள்.

  26. //இன்றைக்கு ஈராக் எனப்படுவது அக்கால பாபிலோன் நகரம்; அது ஒரு பெரிய சாம்ராஜ்ய‌மாக ஒரு காலத்தில் இருந்துள்ளது; அந்த சாம்ராஜ்யத்தின் கீழ் இந்தியாவும் இருந்துள்ளது;//

    எந்த ஆதாரமும் இல்லாத பச்சைப் பொய்யை வாய்க் கூசாமால் சொல்லுகிறார். மதக் காழ்ப்புணர்ச்சிக்கு எல்லையே இல்லையா?

  27. Back with a bang Glady..
    a) India was under Babylon.. Amazing History Knowledge
    b) Talking about yuan chwang.. ( This guy came to India during 6th Century Ad).. Buddha was born atleast 700 years before that.
    c)Even if glady care to read some of the articles of Arvindan and Jatayu, it has debicted how Vasudhava Sthanmbam was erected By Babylonian / Greek general around 260 BC.
    d) The greatest constraint Max Mueller and his cronies had was to put every thing they saw in India after 4000 BC.. We all know why ?
    e) What is the key Historical evidence of Aryan Invasion ? Glady can enlighten us. The cronies changed the Aryan Invasion to Aryan Migration theory.
    f) There are collective fables ( Not a Myth Glady) within red Indian People group about their eradication by Gods Messangers. There is no single collective fable about Aryan Invasion even in the remotest so called Dravidian Land.. Oh My god did I give out something, the new GU Popes and Caldwels under the auspices of Glady will create such fables and call then Fifth Veda.
    g) You have already given the evidence, when the messangers of God invaded a land they chronicled the people of that place. What we are saying, there is no Race called Aryans. It is in the minds of Maxmueller and his Cronies. Dont come back saying the term Aryan was used in Indian literature before Max Mueller. Do some research and you will identify the context of that word.
    h) The Chinese ( also made of many languages ) history can be got only from their Literature/ Epics etc. Greeks History can be got only from Greeks Literature/Epics etc.. Why then you are looking for Indian history outside India. Vedas depict Saraswati river, talk about a vast land ( because of our overdoing dharma we lost most of them — read Prithivarj history and the blunder he made in 1192), talk about many different kinds of people ( no race my friend) living under different kingdoms, beautifully picturising the astronomical evidences about the time ( if time permits and your religion permit read David Frawleys– here I could have suggested Indian authour because you will be pleased I am suggesting Frawley)..

    Regards
    S Baskar

  28. //ஆனாலும் கூட நான் குறிப்பிட்டது தனிப்பட்ட நபர்களைக் குறித்து அல்ல; மக்கள் குழுக்களை(People Groups)க் குறித்தே; அதாவது தமிழர் என்பது மிகப் பெரிய குழுவானால் அவர்களில் சமுதாய ரீதியாக கலாச்சார ரீதியாக பல உட்பிரிவுகளிருக்கும்; அதிலும் குடும்ப சம்பந்தமான பிரிவுகளிருக்கும்;(ரெட்டியார்,செட்டியார்..இப்படி) //

    ஆனால் பெரும்பாலாக எல்லோருக்கும் ஒரே வகையான கலாச்சாரம்தான். குழந்தை பிறந்தவுடன் தொட்டில் போடுவார்கள். பிறகு ஏதாவது ஒரு கோவிலிலே முடி இறக்குவார்கள். பிறகு ஒரு வருடம் ஆனவுடன் அதற்கு முதல் வருட ஆண்டு நிறைவும், காதணி அணிவித்தல்,பிறகு பள்ளிக்கு அனுப்புதல், வயதானவுடன் திருமணம் முடித்தல், பெரும்பாலான திருமணங்கள் சாகும் வரை கணவன், மனைவி பிரியாத குடும்ப வாழ்க்கை வாழ்தல் –

    இதுதான் ரெட்டியார், செட்டியார், முதலியார்….. , ஆகியோருக்கு மட்டும் அல்ல யாதவ், குர்மி, கவுடே ஆகிய இந்தியாவில் உள்ள எல்லா சாதியினருக்கும் கலாச்சாரம் ஒன்றுதான். சடங்கு முறைகள் சிறிது வேறுபடும்.

    இதில் முதலியார்கள் குடும்ப வாழ்க்கை, பிருகிபார்கள் டேட்டிங் வாழ்க்கை என்று இல்லை.

    பெரும்பான்மையான பெண்கள் – அவர்கள் எந்த பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும்- கண்ணகியைப் போல, சீதையைப் போலவே வாழ்பவர்கள்!

    எனவே இந்திய கலாச்சாரத்தின் அடிப்படை கண்ணகி, சீதை, நளாயினி, தமயந்தி… போன்ற எண்ணற்ற கற்புக் கரசிகள்தான். இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தியப் பெண்களின் வாழ்க்கைக்கான அடிப்படை தத்துவம் கண்ணகியும் , சீதையும் தான்.

    எனவே இங்கெ யாரும் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும், இந்தியாவில் விபாச்சாரக் கலாச்சாரத்தை வாழ்க்கை முறையாக்க முடியாது.

    இந்தியர்கள் பல பிரிவாக இருப்பராகள். ஆனாலும் அடிப்படை ஒன்றுதான். எப்போது சேர வேண்டுமோ அப்போது சேருவார்கள்.

    இந்தியாவிலேயே பிறந்தும், இந்தியாவை அறியாமல்,

    குளத்திலே தாமரைப் பூவுக்கு அருகில் வாழும் தவளை, தாமரைப் பூவின் சிறப்பை அறியாமல் வாழ்வது போல வாழக் கூடாது.

  29. //நடிகர் ரஜினிகாந்த் ஒரு முறை பரிதாபமாகச் சொன்னது போல (அவர் மராட்டியராம்,கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தவராம், தமிழ்நாட்டில் தான் அதிகம் சம்பாதித்தாராம்;அவர் மராட்டியரா?கன்னடரா? தமிழரா?) என்னை யாருமே ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது என் தவறல்ல; இதனால் நான் அடையாளமில்லாதவனுமல்ல, அடையமுடியாதவனுமல்ல;//

    ரஜினி காந்த், கமல ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா,மாதவன், சேரன், ஜெயம் ரவி,தனுஷ், பரத், சிம்பு, வடிவேலு, விவேக், கஞ்சா கருப்பு, சந்தானம், ….. ,

    நமீதா, சினேகா, திரிஷா, தமன்னா, அசீன் , நயன தாரா, மீரா ஜாஸ்மின், பாவனா, பத்ம பிரியா, கோபிகா, குஸ்பூ, சிம்ரன், ஜோதிகா……..

    இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்கள நலம் பல பெற்று வாழட்டும்.

    ஆனால் இந்தியாவின் அடிப்படை இவர்கள் அல்ல.

    காந்தி, கலாம் போன்றவர்கள் தான் இந்தியாவின் அடிப்படை. அவர்கள் கூறியுள்ளதைப் படியுங்கள். அப்போதுதான் இந்தியாவை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

    பொதுவாகவே ஒன்னு சொல்லுறேன், கேளுங்க. பணக்காரன் எங்க இருந்தாலும் அவன் பணத்தை பிடுங்க பலர் முயற்சி செய்வாங்க. அதுக்காக அவனை பலதும் சொல்லி மிரட்டுவாங்க. அதிலேரிந்து அவன் தப்பி தன்னையும், தன பணத்தையும் காப்பாத்திக்கனும்னா பலருக்கும், ஜால்ரா போட்டு, கூழைக் கும்பிடு போட்டு தான் ஆகணும்.

    எங் கையிலே பணம் இல்லை. நான் கலைங்கர் முதல் சோனியா வரைக்கும் காய்ச்சி எடுப்பேன். நானே நாளைக்கு நிறைய பணம் உள்ளவனா, எல்லோருக்கும் தெரியற அளவுக்கு பணம் உள்ளவனா ஆயிட்டா, அந்தப் பணத்தைக் காப்பத்த நாலு பேரு கிட்ட பல்லைக் காட்டித்தான் ஆகணும்.

    எனக்கு பல ஷாப்பிங் காம்பிலேக்ஸ் மும்பையிலே இருந்தா, அங்க இருக்கிற அரசியல் வாதி கிட்ட பல்லைக் காட்டி பணம் குடுக்கோணும், அவன் இன்னும் அதிகமா பணம் கேட்பான். கொடுக்கலைனா, டேய் நீ தமிழ் காரன்னு சொல்லி உன்னை கட்டம் கட்டுவேன் பான்,

    தெரு ரவுடி முதல் ஸ்டேட் ரவுடி வரை,

    போலீசு, அதிகாரி என்று எல்லோருக்கும் கப்பம் கட்டிதான் வாழா முடியும். பணம் அதிகமா கேக்குரானுகளேனு மனசு வருத்தப் படும் போது புலம்பல் வரத்தானே செய்யும்.

    கப்பம் கட்டினா, எட்டப்பன், சேதுபதி போல இருக்கலாம்.

    எதிர்த்துக் கேட்டா கட்ட பொம்மன் போல இறக்கலாம்.

    இதை எல்லாம் சரி செய்யத்தான் காந்தி, கலாம், பட்டினத்தார், அசோகர், ஆதி சங்கரர், விவேகானந்தர் , தியாகராசர், பாரதி, வ.வு.சி….. இவர்களைப் பத்தி எல்லாம் அடிக்கடி எழுதுனா,…. நம்பளை திட்டுராங்க.

    எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கு!

    ஆனா உங் கூட மாரடிக்கவே நேரம் சரியா இருக்கு!

  30. //என்னைவிட நீங்கள்தான் அதிகம் பைபிளைப் பற்றிப் பேசுகிறீர்கள்; அதற்குக் காரணம் நீங்கள் அதனைக் கற்றுக் கொள்ளும் நோக்கத்துடனோ அல்லது அதைக் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கத்துடனோ வாசிக்காமல் பைபிள் ஒரு மதத்தின் புத்தகத்தைப் போலவும் அதிலுள்ள குறைகளை எடுத்துச் சொல்லி அதன் நம்பிக்கையாளர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்துடன் வாசிக்கிறீர்கள்; இப்படி கெட்ட எண்ணத்துடன் எந்த புத்தகத்தை வாசித்தாலும் அதனால் ஒரு பயனும் இராது; ஆனால் அது தனது தவறான பக்கத்தையே எடுத்துக் காட்டும்; //

    //காரணம் நீங்கள் அதனைக் கற்றுக் கொள்ளும் நோக்கத்துடனோ அல்லது அதைக் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கத்துடனோ வாசிக்காமல் //

    நீங்கள் கூறுவது தவறு. நான் பைபிளைப் படித்தது நடு நிலையான கண்ணோட்டத்திலே தான். உலகிலேயே பிற மத நூல்களை நடு நிலையான கண்ணோட்டத்திலே படிப்பவர் யாராவது இருந்தால் அது இந்துதான் .

    //பைபிளை …..ஒரு மதத்தின் புத்தகத்தைப் போலவும்//

    பைபிள் ஒரு மதத்தின் புத்தகம் அல்ல என்றால், அது என்ன கெமிஸ்ட்ரி புத்தகமா?

    //அதிலுள்ள குறைகளை எடுத்துச் சொல்லி அதன் நம்பிக்கையாளர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்துடன் வாசிக்கிறீர்கள்;//

    உலகையே அழித்து சுடுகாடு ஆக்கக் கூடிய வெறுப்புக் கருத்துக்கள் ஒரு நூலில் இருந்தால், அதை எடுத்துக் காட்டி திருத்தாமல், உங்களைப் போல பிரச்சாரம் செய்யவா முடியும்?

    //அதிலுள்ள குறைகளை எடுத்துச் சொல்லி அதன் நம்பிக்கையாளர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்துடன் வாசிக்கிறீர்கள்;//

    பைபிளில் உள்ள வெறுப்புக் கருத்துக்களை, காட்டு மிராண்டிக் கருத்துக்களை,எடுத்துச் சொல்லி யூதர்களை திருத்தவே இயேசு கிறிஸ்து முயற்சி செய்தார்.

    பைபிள்;
    //உபாக‌ம‌ம்: அதிகார‌ம் 19, செய்யுள் 21

    உன் க‌ண் அவ‌னுக்கு இர‌ங்க‌ வேண்டாம். ஜீவ‌னுக்கு ஜீவ‌ன், க‌ண்ணுக்கு க‌ண், பல்லுக்குப் ப‌ல், கைக்கு கை, காலுக்கு கால் கொடுக்க‌ப் ப‌ட‌ வேண்டும். //

    இந்தக் காட்டு மிராண்டிக் கருத்து, மக்கள் மனதை நஞ்சாக ஆக்கி இருந்ததால் அதைப் போக்க இயேசு கிறிஸ்து செய்த திருத்தம் இதோ,

    மத்தேயூ: அதிகார‌ம் 5, செய்யுள் 38
    “க‌ண்ணுக்கு க‌ண், பல்லுக்குப் ப‌ல்” என்று உரைக்க‌ப் ப‌ட்ட‌தைக் கேல்விப்ப‌ட்டிருக்கிறீர்க‌ள். நான் உங்க‌ளுக்குச் சொல்லுகிரேன், தீமையோடு எதிர்த்து நிற்க்க‌ வேண்டாம், ஒருவ‌ன் உன்னை வ‌ல‌து க‌ன்ன‌த்தில் அறைந்தால், அவ‌னுக்கு ம‌று க‌ன்ன‌த்தையும் திருப்பிக் கொடு”

    இவ்வாறு வார்த்தைக்கு வார்த்தை பைபிளில் உள்ள நச்சுக் கருத்துக்களை எடுத்துக் காட்டி, இயேசு கிறிஸ்து பைபிளை திருத்தியுள்ளார். ப‌ல‌ முறை பைபிளை திருத்தியுள்ளார்!

    நான் இதைப் போல பல உண்மைகளைக் காட்ட முடியும்.

    இன்னும் சொல்லப் போனால் , இயேசு கிறிஸ்துவின் முக்கிய நோக்கமே , பைபிளினால் உருவான நச்சுக் கருத்துக்களில் இருந்த விசத்தை எடுப்பதுதான்.

    ஆனால் அதே நஞ்சை , இயேசு கிறிஸ்துவின் ஸ்டிக்கரை ஒட்டியே உலகம் முழுவதும் பலரின் எண்ணத்திலே புகுத்தி விட்டார்கள்.

    பைபிளில் உள்ள குறைகளை எடுத்துச் சொல்லி அதன் நம்பிக்கையாளர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்துடன் இயேசு கிறிஸ்து செயல் பட்டாரா?

    இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொண்டே நான் எழுதுகிறேன். இப்போது இயேசு கிறிஸ்து இருந்தால், நான் அவரது கருத்தை சரியாகப் புரிந்து கொண்டதற்காக என்னைப் பாராட்டுவார்.

    ஆனால் இயேசு கிறிஸ்து எந்த காட்டு மிராண்டிக் கருத்துக்கு எதிராகப் போராடி சிலுவையில் அறியப் பட்டதாகச் சொல்லப் படுகிறதோ, அதே காட்டு மிராண்டிக் கருத்தை நீங்கள் உலகில் எல்லோர் மனதிலும் பரப்பி அவர்களை கெடுக்கிறீர்கள்.

    நீங்கள் உங்களை அறியாமலேயே இயேசு கிறிஸ்துவின் பாதையில் செல்வதாக நினைத்துக் கொண்டு, முழு மூச்சாக சாத்தானின் பாதையிலே சென்று, சாத்தானுக்காக வேர்க்க விறு விறுக்க உழைக்கிறீர்கள்.

    மனம் திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது!

    .

  31. The following is a nice quote I read somewhere ‘You can’t use reason to talk someone out of a position they didn’t use reason to arrive at’
    Correct me if I am wrong but it is my feeling that the converted tend to have guilty conscience which makes them shout more for their new place while casting aspersions on their origin.
    There is a saying in English ‘cutting the nose to spite the face’ which comes to my mind whenever I see the ‘converted talk’.
    One more thing again about ‘nose’ – Remember the story of a person who lost his nose and tried to induce others in his village to cut theirs saying that their face will become beautiful as his without the nose!

  32. மொக்கை. பாரதியின் வழி வந்தவர்களா ‘கிறிஸ்தவ பிராமணர்கள்’? பாரதி எப்பொழுது மதம் மாறினார்? உங்கள் மறுமொழிகள் தமிழ் ஹிந்து தளத்தில் வெளியிடவில்லை என்பதே அப்பட்டமான பொய். இது உண்மையாக இருந்தால், இந்துக்களை தவிர யாருடைய மறுமொழியும் அங்கு இருக்காதே?? ஆனால் உங்கள் மறுமொழிகள் அங்கு இல்லை என்று சொல்லுங்கள்??

  33. கிலாடி அவர்களின் மறுமொழியை மதிக்காதீர்கள். எப்பொழுதும் பொய் பிரச்சாரம், பித்தலாட்டம் இவை மட்டுமே! அவரது தளத்தை வசித்து பாருங்கள்:-
    https://christianbrahmin.blogspot.com/2009/10/blog-post.html#comment-form ….

    i don’t know what is meant by christian brahmin??

    என்னொருவர் அசோக் குமார் கணேசன் அவர்கள்! இவர்களுடன் வாதிடிவது பொழுதை வீணடிப்பது! மேற்கண்ட மறுமொழியை அவர்கள் தளத்தில் நான் இட்டுள்ளேன்! இதை அவர்கள் பிரசுரிக்கிறார்களா என்று பார்ப்போம்.

  34. // “தமிழ்ஹிந்து” தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

    மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். //
    இது பின்னூட்டம் இடும் பகுதியில் காணப்ப‌டும் வாக்கியமாகும்;

    அரவிந்தன் நீலகண்டன் (author)
    25 October 2009 at 12:13 pm
    // கிலாடி, மானுடவியலில், தொல் வரலாற்றில், மானுட பரிணாமத்தில் எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமல் 18 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய இனவாத – விவிலிய அடிப்படைவாதி போல உளறுகிறீர்கள். கடுமையான வார்த்தைக்கு மன்னியுங்கள். நீங்கள் செய்வதை விளக்க மிக மென்மையான வார்த்தை நீங்கள் அறிவில்லாமல் உளறுகிறீர்கள் என்பதுதான். //

    இது இந்த கட்டுரையாளர் என்னைக் குறித்து செய்த விமர்சனமாகும்;

    ந.உமாசங்கர்
    26 October 2009 at 9:07 am
    // ஏசுவின் சொல்ப‌டி, “ப‌ரியாச‌க்கார‌னாய் இராதீரும்”. உங்களை அறிவில்லாத‌வ‌ன் என்று எங்குமே, யாருமே குறிப்பிட்டுச் சொல்லாத‌ போது ஏன் உங்க‌ளுக்கு இப்ப‌டி ஓர் ஆசை? த‌ற்புக‌ழ்ச்சி எல்லாம்? //

    இது நண்பர் உமாசங்கர் அவர்களின் ஆச்சரியமான மறுமொழியாகும்; கட்டுரையா-சிறியரின் அவசரத் தீர்ப்பினால் நான் தடுமாறி விலக எண்ணியும் சமாளித்துக் கொண்டு எழுந்து வருவதைக் கூட சிலருக்குப் பொறுக்கவில்லை போலும்;

    என்னைப் பரியாசம் செய்தவருக்கு பதிலாகச் சொன்னதற்கு வக்காலத்து வாங்கும் நண்பரைப் போன்ற சில நடுநிலையாளர்கள் எனது அத்தனை பதிவுகளையும் கவனித்தால் நான் எதையும் முடிவாகச் சொல்லாததும் விவரம் வேண்டியதும் தெரியவரும்; நான் வரலாற்று ஆதாரத்துடனோ விவாதிக்கவோ இங்கே வரவில்லை; ஆனால் சமூகப் பார்வையுடனே எனது கருத்துக்களைப் பதித்ததற்கு சிலருக்கு ஏன் இத்தனை கோபமோ?

    //என்னிடம் தாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த ஆதாரமும் போதிய ஞானமும் இல்லாததால் தங்களிடம் விவரம் கேட்டேன்; நீங்களோ மிகவும் சாமர்த்தியமாக என்னையே கேள்வி கேட்கிறீர்கள்;//

    இது இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டு இன்னும் இங்கே இருக்கும் எனது கருத்தாகும்.

    “யுவான் சுவாங்” போன்ற சிலரை உதாரணத்துக்குக் குறிப்பிட்டு இதேபோல -அதேபோல என்று தொடரும் ஐயங்களுக்கு (விவரமில்லாமல்..?) பதில் சொல்லாமல் என்னைக் குற்றப்படுத்துவதிலும் வீழ்த்துவதிலுமே குறியாக சிலர் இருந்தால் அது வாசகருக்கு தான் நஷ்டம்; எனக்கல்ல.

    வெளியிலிருந்து இந்திய வரலாற்றைத் தவறாக எழுதி ஏமாற்றிவிட்டனர் என்பது உங்கள் குற்றச்சாட்டானால் சரியான வரலாற்றை நாம் இங்கே பதிக்கலாமே என்பதே எனது இறுதியான வேண்டுகோள்..!

    // நாங்களாவது பைபிளை கெட்ட எண்ணத்துடனாவது வாசிக்க முடிகிறது; ஆனால் உங்களுக்கு எங்கள் மத புத்தகத்தை தொட முடியாத அளவுக்கு உங்களிடம் வெறுப்பும் அருவருப்பும் உள்ளது. //

    இது நண்பர் தனபால்;
    நண்பரே, நான் பள்ளிக்குச் செல்லவில்லை; ஆனால் எனக்கு அரிச்சுவடி சொல்லிக்கொடுத்து வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுத்த எனது தகப்பனார் படிக்கக் கொடுத்த வரலாற்றுப் புத்தகத்தில் இராமாயணமும் மகாபாரதமும் விசேஷ பாடமாகும்; அது இன்று வரை என்னை மிகவும் கவர்ந்த அருமையான கதைத் தொடராகும்; அதேபோல தொலைக்காட்சித் தொடரையும் அதற்கு உதவியாக “துக்ளக்” பத்திரிகையில் வெளியான வசனங்களும் (அக்காலத்தில் இந்தியில் மட்டுமே தொடர் ஒளிபரப்பானது) இன்னும் என் மனதிலும் அந்த வசனம் வெளியான “துக்ளக்” பத்திரிகையின் பகுதிகள் இன்னும் என்னிடமிருக்கிறது;

    ஆனால் அனுதினமும் பைபிளின் பிரதிகள் கோடிக்கணக்கான இந்தியர்களால் கிழிக்கப்படுகிறது அல்லது கொளுத்தப்படுகிறது; ஏன் தீபாவளியன்றுகூட‌ எத்தனையோ ஜெப ஆலயங்கள் கொளுத்தப்பட்டு விபத்து என பதிவு செய்யப்பட்டுள்ளது; உங்கள் மதப் புத்தகத்தினை பைபிளுடன் ஒப்புமை செய்து பார்க்கும் சுதந்தரத்தைக் கூட வழங்க‌ சிலருக்கு மனமில்லை; என்னைப் போன்ற “சத்தியந்தேடுவோர்” அனைத்து மார்க்க புத்தகத்தையுமே வேதமாகவே பாவிக்கிறோம்;

    //அலெக்சாண்டருக்கு முன் இந்தியாவுக்கு பேரும் புகழும் உள்ள வெளி நாட்டுப் பயணிகள் யாரும் வரவில்லை என்றால் அல்லது அவர்கள எழுதிய குறிப்பு கிடைக்கவில்லை என்றால் அதற்கு இந்தியர்கள் என்ன செய்ய முடியும்? நான் கேட்கிறேன், இந்தியர்கள் வெளிப் பிரதேசத்தில் இருந்து வந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் //

    நண்பர் திருச்சிக்காரன் தந்திரமானதொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்; இந்தியர்கள் வெளிப்பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் என்று எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை; வெளியிலிருந்து வருவோர் இந்தியர்களுமல்லர்; ஆனால் ஏற்கனவே இங்கிருந்த அப்பாவி குடிமக்களிடையே பிரிவினையினை விதைத்து அவர்களை ஆதிக்கம் செய்ய (…) செய்த பெருமை யாருக்குரியது? வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்பே இறுதியானது யாரும் இங்கே சொல்லவில்லை; நம் தரப்பு ஆதாரத்தினையே பதிவு செய்யவேண்டுகிறேன்; இந்தியா சுதந்தரம் பெற்றபோது இந்தியாவின் மக்கள்தொகை வெறும் 30 கோடியாக இருந்தது எனில் 2000 வருடமுன்பு..?

    // போரிலே வீரர்கள் இறந்ததைக் கண்டே வருத்தப்பட்டு மனம் மாறினான் அசோகன்.//

    அசோகர் இந்துவாக இருந்தவரைக்கும் போரிட்டார்; புத்தமதத்தைத் தழுவிய பிறகே உங்களால் புகழப்பட்டார்; அத்தனை சிறப்பான நாட்டின் இன்றைய நிலை என்ன..? “பழம்பெருமை பேசியிருத்தல் போதும்” என்றானே பாரதி.

    நண்பர் திருச்சிக்காரன் அவர்களே, நான் பிராமணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவன் என்ற எனது குறிப்பை ஏளனம் செய்யும் உங்கள் அறியாமைக்காக மனம் வருந்துகிறேன்; நான் கிறித்தவ மார்க்க நெறிகளை விரும்பி எனது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறேன்; உங்களைப் போல..!

    ஆனாலும் நான் எந்த சபைப் பிரிவையும் மதக் கொள்கைகளையும் பின்பற்றுபவனல்ல என்ற எனது கருத்து வெளிப்படையானது; இங்கே எந்த கிறித்தவரும் வந்து எதையும் எழுதியதாகத் தெரிய்வில்லை; ஆனாலும் நான் கிறித்தவ மதப் பிரச்சாரம் எதுவும் செய்யாமல் இயன்றம‌ட்டும் பொதுவான தளத்திலிருந்து எழுதவே முயற்சிக்கிறேன்;

    எனவே மீண்டும் கூறுகிறேன்; நான் மதப் பிரச்சாரம் செய்கிறதில்லை; “மதம்” எனும் வார்த்தையினையும் நான் வெறுக்கிறேன்; இந்து மதத்தைக் கூட இந்து மார்க்கம் என்றே குறிப்பிடுகிறேன்; ஆனால் உங்களில் சிலர் இதனை மதம் என்றே குறிப்பிடுகிறீர்கள்; மதம் என்ற வார்த்தையானது அகராதியின்படி அறிவைத் தடைசெய்கிறது; மார்க்கமோ தேடலை ஊக்குவிக்கிறது; எனவே “வழி” எனக் குறிப்புடன் வரும் வேத வார்த்தைகள் அதிகம்; தமிழ் பைபிளை மொழி பெயர்த்த “பிராமணர்கள்” மிக ஞானமாக இந்த வித்தியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர்;

    கடைசியாக திருச்சிக்காரனுக்கு,ஒரு தகவல்;
    இங்கே “மாத்தம்மா”க்களும் “சதீ”யும் “தேவதாசி”களும் கூட பிரபலம்; அதனைக் குறித்தும் கொஞ்சம் எழுதுங்கள்; கண்ணகி பிரபலமாகக் காரணம் யார்? மாதவி எனும் நடன மங்கைதானே..? என்னைப் போன்ற தவளைகள் இல்லாவிட்டால் உங்கள் “பொய்கை” பொய்யாகிப் போகும்; தவளை மட்டுமா காகம், நாய், பன்றி எல்லாமே ஒவ்வொரு “விசேஷ” அவதாரம் தானே..?

    நண்பர் பாஸ்கர் அவர்களுக்கு இது “தமிழ்ஹிந்து” தளம் என்பதனை நினைவூட்டுகிறேன்; பாழாய் போன ஆங்கிலத்தால் தானே தவறான கருத்துக்கள் இங்கே நுழைந்தது.?

    // b) Talking about yuan chwang.. ( This guy came to India during 6th Century Ad).. Buddha was born atleast 700 years before that.//

    “யுவான் சுவாங்”கையும் புத்தரையும் சம்பந்தப்படுத்தி நான் எதுவும் எழுதியதாக நினைவில்லை; இரண்டு பெயரையுமே தனித் த‌னியாக உதாரணத்துக்காக மட்டுமே குறிப்பிட்டேன்;

    C U bye..!

  35. //கடைசியாக திருச்சிக்காரனுக்கு,ஒரு தகவல்;
    இங்கே “மாத்தம்மா”க்களும் “சதீ”யும் “தேவதாசி”களும் கூட பிரபலம்; அதனைக் குறித்தும் கொஞ்சம் எழுதுங்கள்; கண்ணகி பிரபலமாகக் காரணம் யார்? மாதவி எனும் நடன மங்கைதானே..? //

    எத்தனை பெண்கள் கண்ணகியாக வாழ்கின்றனர்?
    எத்தனை பெண்கள் மாதவியாக வாழ்கின்றனர்?

    ஆயிரம் பெண்கள் கண்ணகியாக வாழ்ந்தால், ஒரிருவர் மாதவியாக வாழ்கின்றனர்.

    ஆனால் ஆயிரம் கண்ணகிகளை பார்க்காமல், ஓரிரு மாதவிகளைத் தேடிப் பிடித்து இதுதான் இந்தியக் கலாச்சாரம் என்று காட்டுவதுதான் காழ்ப்புணர்ச்சி!

  36. //நான் கிறித்தவ மார்க்க நெறிகளை விரும்பி எனது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறேன்; உங்களைப் போல..!//
    //உங்களைப் போல..!//

    “என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்று அறிவிப்பது காட்டு மிராண்டித் தனம், கடவுள் பல அவதாரங்களை எடுக்கும் வல்லமை உடையவர்” என்று நீங்கள் அறிவிக்கத் தயாரா?

    என்னைப் போல என்றால், நான் உலகின் எந்த மார்க்கத்தையும் வெறுக்காதவன். எல்லா மார்க்கங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்பவன்.

    எல்லா மார்க்கங்களிலும் உள்ள தியாக திருமூர்த்திகளை மதிக்கிறேன்.

    ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ள் முன்பே, த‌ன் பேரில் த‌வ‌றே இல்லாத‌ போதும், த‌ன் த‌மைய‌னிட‌ம் காலில் விழுந்து அர‌சை ஆளுங்க‌ள் என்று க‌த‌றினார் ப‌ர‌த‌ன். த‌ன்னை ம‌றுத்து தான் துன்ப‌ங்க‌ளை த‌ய‌ங்காம‌ல் ஏற்று, காடு சென்றார் இராம‌ர் . த‌ன் ம‌னைவியைத் த‌விர‌ வேறு எந்த‌ப் பெண்ணையும் ம‌ன‌தாலும் நினையாம‌ல் வாழ்ந்த‌வ‌ர் இராம‌ர்.

    தியாகம் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இராமர்! நல்ல கொள்கைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் தன்னை மறுத்து, பிறருக்காக தான் கஷ்டங்களை சுமந்து , தன் வாழ் நாள் முழுவதும் கடுமையான துன்பத்தை அனுபவித்தவர். சிவன் எல்லோரின் நன்மைக்காக விஷம் அருந்தியவர்.

    அவர்களை வணங்கத் தயாரா கிலாடியாரே , அப்போதுதான்
    //உங்களைப் போல..!// என்று எழுதும் நிலை உங்களுக்குப் பொருந்தும்.

    (Edited and published).

  37. // போரிலே வீரர்கள் இறந்ததைக் கண்டே வருத்தப்பட்டு மனம் மாறினான் அசோகன்.//

    அசோகர் இந்துவாக இருந்தவரைக்கும் போரிட்டார்; புத்தமதத்தைத் தழுவிய பிறகே உங்களால் புகழப்பட்டார்; //

    இதில் இந்து, முஸ்லீம், பவுத்தர் என்ற பிரச்சினை இல்லை. இந்தியக் கலாச்சாரத்தை ஒட்டி செயல் பட்டாரா என்பதுதான்.

    நான் அக்பரைக் கூட பாராட்டியிருக்கிரேனே படிக்கவில்லையா?

    அக்பர்: தீவிரமான கட்டுப்பாடு உடைய ஒரு மதத்தைச் சேர்ந்தவர்! அவருடைய பாட்டனார் துருக்கிய நாட்டைச் சேர்ந்தவர், அப்படிப்பட்ட பாரம்பரியப் பின்னணி உடைய அக்பர், இந்திய மக்களின் சகிப்புத் தன்மை, அமைதி கருத்துக்களை தன் நல்ல உள்ளத்தில் பிரதி பலிக்கச் செய்து, இந்தியாவின் மிகச் சிறந்த அரசர்களில் ஒருவராக வரலாற்றில் இடம் பிடிக்கிறார்.

    இதில் மதிப்பிற்குரிய கலாம் ஐயா கூட தியாக வாழ்க்கை வாழ்ந்தவர்தான். அவரயும் பாராட்டி இருக்கிறேனே. மிகச் சிறப்பாக இந்தியாவின் தியாகம் நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து செயல பட்ட மதிப்பிற்குரிய கலாம் ஐயா இசுலாமிய மதத்தை சேர்ந்தவர் தானே!

    மார்க்கக் காழ்ப்புணர்ச்சி உங்கள் கண்களை மறைக்கிறது. நான் சொல்ல வந்தது என்ன என்று சிந்திக்க கூட முடியாமல் செய்து விட்டது.

  38. //அத்தனை சிறப்பான நாட்டின் இன்றைய நிலை என்ன..? “பழம்பெருமை பேசியிருத்தல் போதும்” என்றானே பாரதி//.

    “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிப் பயனில்லை” என்றான் பாரதி, “திறமான புலமை எனில் வெளி நாட்டார் வணக்கஞ் செய்தல் வேண்டும்” என்றான்.

    //அத்தனை சிறப்பான நாட்டின் இன்றைய நிலை என்ன..? //

    நீங்க கேட்கு முன்னையே பதிலு குடுத்துட்டேன்.

    //திருச்சிக் கார‌ன்
    26 October 2009 at 2:55 pm

    தெரு ரவுடி முதல் ஸ்டேட் ரவுடி வரை,

    போலீசு, அதிகாரி என்று எல்லோருக்கும் கப்பம் கட்டிதான் வாழா முடியும். பணம் அதிகமா கேக்குரானுகளேனு மனசு வருத்தப் படும் போது புலம்பல் வரத்தானே செய்யும்.

    கப்பம் கட்டினா, எட்டப்பன், சேதுபதி போல இருக்கலாம்.

    எதிர்த்துக் கேட்டா கட்ட பொம்மன் போல இறக்கலாம்.

    இதை எல்லாம் சரி செய்யத்தான் காந்தி, கலாம், பட்டினத்தார், அசோகர், ஆதி சங்கரர், விவேகானந்தர் , தியாகராசர், பாரதி, வ.வு.சி….. இவர்களைப் பத்தி எல்லாம் அடிக்கடி எழுதுனா,…. நம்பளை திட்டுராங்க.

    எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கு!

    ஆனா உங் கூட மாரடிக்கவே நேரம் சரியா இருக்கு!//

  39. Dear Tiruchikkaran, Even during the Purana days there were traitors,social bigots and thugs like Kamsa, Sisubala and Ravana. We have never praised or followed their methodology, instead we condem their approach. //“இந்தியா” எனும் புண்ணிய பூமியில் இது ஒரு தேசமாக உருவாகும் முன்னரே நாம் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துக் கொண்டும் ஆக்கிரமித்துக் கொள்ளையடித்துக் கொண்டும் இருந்ததில்லையா?//. I do not agree with your opinion. For example : Even after the Islamic invasion for about seven centuries and the worst days of famine in 1769, after which the population of our country came down by one third, our country had not witnessed chaos and anarchy. According to the statistical data collected by the British regime and travel testimony by many foreigners (Thomas Manroe, Voltaire, Mecaulay, etc.), our society has excelled every other country or civilisation. Please read the book ‘ The beautiful tree’ by Dharampal. // இன்றைக்கு மகாராஷ்டிராவில் நடப்பது என்ன, ‘மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே சொந்தம்’ என்று முழங்குபவர்கள் தேர்தல் முடிவின் போக்கையே நிர்ணயிக்கிறார்கள்; // This is the result of the wrong policies followed by our leaders who have not designed a system to keep away anti-socials and anti-nationals from attaining political power. // இங்கே நீங்கள் குறிப்பிட்டது போல ஏழை எளியோரின் கூலியையும் தாலியையும் கொள்ளையடித்து மாடிவீடு கட்டும் மார்வாடிகள் செய்வது ஆக்கிரமிப்பு இல்லையா? //. Why are you singling out Marwadis? The truth of the day is: Every section of the society is trying to exploit the weakness of the other section and the worst affected people are the BPL (Below Poverty Line)

  40. நண்பர் கிளாடி அவர்கள் கட்டுரை ஆசிரியரின் “தாக்குதலைச்” சமாளிக்க விளையாட்டான போக்கில் அதனைச் சிரித்து மழுப்பும்போது நானும் ஒரு விளையாட்டான போக்கில்தான் அந்த மறுமொழியைச் செய்தேன். அவர் செய்தது போலவே, சொல் விளையாட்டில் “அறிவில்லாமல் உளறுகிறீர்கள்” என்பதற்கும் “அறிவில்லாத‌வன்” என்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் காட்ட முற்பட்டேன். “அறிவில்லாமல் உளறுகிறீர்கள்” என்பது தற்காலிகமான நிலை. “அறிவில்லாத‌வன்” என்பது நெடுங்கால அல்லது நிரந்தர நிலை. எனினும், அவரைத் தாக்கவோ அல்லது புண்படுத்தவோ எனது நோக்கம் இல்லை. இது போலவே கட்டுரை ஆசிரியரின் கருத்துக்கு நான் “வக்காலத்து” வாங்கித்தான் அவர் தனது கருத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற நிலையில் கட்டுரை ஆசிரியர் இல்லை என்பதே என் கருத்து.

    ஆனால், கிளாடி அவர்கள் கூறிய பின்கண்ட மறுமொழியைப்பாருங்கள்:
    ///// இங்கு அறமும் உண்மைத்தேடலும் பண்பாட்டின் அடிப்படை. //
    தேடுங்க,தேடுங்க,தேடிக்கிட்டே இருங்க..!
    “பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்;புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்” என்று நீதிமொழிகள்(14:6) கூறுகிறது.///

    பார‌த‌த்தில் தொன்றுதொட்டுப் ப‌ல்வேறு முனிவ‌ர்க‌ளும், ம‌ஹான்க‌ளும் ஆத்ம‌விசார‌ணை என்ற‌ ஒரு பொதுக்க‌ருத்தின் பாற்ப‌ட்டு, அவ‌ர‌வ‌ர் உள்ளுக்குள்ளேயே இறைவ‌னைத்தேடி சில‌ர் அவ்வாறு க‌ண்டும் ப‌ல‌ர் அவ்வாறு காணாவிடினும், அத் தேடுத‌லால், உய‌ரிய‌ நிலையை எய்தியும் இருக்கிறார்க‌ள். இத்த‌கு உய‌ரிய‌ கோட்பாட்டை கிளாடி அவ‌ர்க‌ள் வெறுமே ‘தேடுங்க‌ தேடுங்க‌ தேடிக்கிட்டே இருங்க’ என்று “FM Radio” போல‌ “ப‌ரியாச‌ம்” செய்வாரேயானால், என்னைப்போன்ற‌ சாதார‌ண‌ ம‌னித‌ன் என்ன‌ செய்வான்? தொட‌ர்ச்சியாக‌ அவ‌ர் “பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் க‌ண்டுபிடியான்;புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்” என்றும் எழுதுவாரேயானால் அது ந‌டுநிலையாள‌ரின் எழுத்தா? அவ்வாறு எழுதுவ‌து, எம‌து ம‌திப்பிற்குறிய‌ முனிவ‌ர்க‌ளும், ம‌ஹான்க‌ளும் எங்க‌ளுக்குக் கொடுத்த‌ அடிப்ப‌டை உப‌தேச‌த்தை எள்ளி ந‌கையாடுவ‌து இல்லையா? இத்த‌னை உய‌ரிய‌ த‌த்துவ‌த்தை, எல்லா உயிருக்குள்ளும் இறைத்த‌ன்மை உறைகிற‌து என்ற‌ உய‌ரிய‌ த‌த்துவ‌த்தை, அத‌னை எங்க‌ளுக்குப் போதித்த எங்க‌ள‌து ஆசாரிய‌ர்க‌ளை, ந‌ங்க‌ள் இறைவனுக்குச் ச‌ம‌மாக‌ வ‌ண‌ங்கும் எங்க‌ள‌து ஆசிரிய‌ர்க‌ளை எள்ளி ந‌கையாட‌லாமா?

  41. அன்பர் கிளாடி அவர்களின் கூற்று இதோ:
    ///இராமாயணமும் மகாபாரதமும் விசேஷ பாடமாகும்; அது இன்று வரை என்னை மிகவும் கவர்ந்த அருமையான கதைத் தொடராகும்; ///
    நான்கைந்து வரிகளுக்குப் பின்னர் அவரே எழுதுவது இதோ:
    /// என்னைப் போன்ற “சத்தியந்தேடுவோர்” அனைத்து மார்க்க புத்தகத்தையுமே வேதமாகவே பாவிக்கிறோம்;///

    எத்த‌னைக் க‌ப‌ட‌ம்? வேட‌ம்? இதை வெறுமே முர‌ண்பாடு என்று ஒதுக்க‌ முடியாது. இத்த‌கைய‌ க‌ப‌ட‌ம் தான் கிளாடி அவர்களுக்கு இங்கே பலரது தொடர் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறது. அதாவ‌து, கிளாடியின் நிலை இதோ:
    “நான் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன், ந‌டுநிலையாள‌ன், ச‌த்திய‌மான‌ தேடுத‌லுட‌ன் அலைகிற‌வ‌ன், எல்லா ச‌ம‌ய‌த்தையும், ம‌த‌த்தையும் ம‌தித்து ந‌ட‌ப்ப‌வ‌ன், ஆனால் என்னை அனாவ‌சிய‌மாக‌ எல்லாரும் இந்த‌த் த‌ள‌த்தில் தாக்குகிறார்க‌ள் ஆக‌வே நான் செயின்ட் ஃப்ரான்சிஸ் சேவிய‌ரைப்போல‌ “martyr” என்று க‌ருத‌ப்ப‌ட்டு, போப்பால் புனித‌ராக‌ அறிவிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ன். அதே ச‌ம‌ய‌த்தில், ச‌த்திய‌மான‌ ஆத்ம‌விசார‌ணையை ம‌த‌, மொழி, இன‌, சாதிப் பாகுபாடின்றி இந்த‌ உல‌குக்கு எடுத்துச்சொன்ன‌ ப‌க‌வ‌த்பாத‌ ஆதிச‌ங்க‌ர‌ர், திருமூல‌ர், ப‌க‌வான் ர‌ம‌ண‌ர் முத‌லிய‌ அனைத்து ஆசாரிய‌ர்க‌ளும் “ப‌ரியாசக்காரர்கள்” என்றே சொல்வேன். இதை யாரும் கேட்க‌க்கூடாது.”

  42. கிளாடியின் “blogspot” சொல்வது இதோ:
    //”நான் பிராமணக் குடும்பப் பின்னணியிலிருந்து கிறிஸ்தவ மார்க்கத்தின் வழிமுறைகளை ஏற்று சமூகப் பணியாற்றுகிறேன்; வாழ்க்கையில் மனச் சோர்வினால் துவண்டு போனவர்களுக்கு இறை ஒளியினை ஏற்றும் ஆலோசனைப் பணியாற்றுவதில் அதிக கவனம் செலுத்துகிறேன்.”//

    கிறித்துவ‌த்தில் இருக்கும் ப‌ல‌ சாதிக‌ளுட‌ன் இன்னும் ஒன்று உருவாகிற‌து. ஏற்க‌ன‌வே, ரோம‌ன் க‌த்தோலிக்க‌ர், ப்ரொடெஸ்ட‌ன்ட், பெந்த‌கோஸ்த், லுதெர‌ன், ஆர்க்க்காடு லுத்த‌ர‌ன், சிரிய‌ன் க‌த்தோலிக்க‌ர், “தாம‌ஸ்” கிறித்துவ‌ன், born again அதாவ‌து “மறுப‌டிப் பிற‌ந்த‌வன்”, வ‌ன்னிய‌க் கிறித்துவ‌ர், பிள்ளைக் கிறித்துவ‌ர், முத‌லியார்க் கிறித்துவ‌ர், ஆதி திராவிட‌க் கிறித்துவ‌ர், அதிலும் கூட‌, அருந்த‌திய‌க் கிறித்துவ‌ர், தேவேந்திர‌குல‌ வெள்ளாள‌க் கிறித்துவ‌ர், ரெட்டிக் கிறித்துவ‌ர், நாயுடுக் கிறித்துவ‌ர், க‌ம்ம நாயுடுக் கிறித்துவ‌ர்! அப்பட்டமான சாதிய வெறியையும், நிலைப்பாடுகளையும் முன்னெடுப்பதில் கிறிஸ்தவமே முன்னோடியாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

    ///நான் மதப் பிரச்சாரம் செய்கிறதில்லை; “மதம்” எனும் வார்த்தையினையும் நான் வெறுக்கிறேன்;///

    கிளாடியின் “blogspot” இல் உள்ள‌ மேற்கூறிய‌ ப‌த்தி சொல்வ‌து அவ‌ர் ஒரு “கிறித்துவ‌ப் போத‌க‌ர்” என்ப‌தே. மீண்டும் முர‌ண்பாடு. அல்ல‌து ப‌சுத்தோல் போர்த்திய‌ புலி. போத‌க‌ர்க‌ள் செய்வ‌து ச‌மூக‌ சேவை! ம‌த‌ம் மாற்றுவ‌து என்ப‌து இறை ஒளியை ஏற்றும் ஆலோச‌னைப்ப‌ணி!! இவ‌ர்க‌ள் மாற‌வே மாட்டார்க‌ள், பொய்யுரையிலிருந்து. அவ‌ர் வாக்கின் ப‌டியே அவர்கள் “மிக ஞானமாக இந்த வித்தியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர்”

    ///தவளை மட்டுமா காகம், நாய், பன்றி எல்லாமே ஒவ்வொரு “விசேஷ” அவதாரம் தானே..?///

    இப்ப‌டியெல்லாம் எழுதிவிட்டு,

    ///”நான் கிறித்தவ மதப் பிரச்சாரம் எதுவும் செய்யாமல் இயன்றம‌ட்டும் பொதுவான தளத்திலிருந்து எழுதவே முயற்சிக்கிறேன்”///

    என்றும்,

    /// “என்னைப் போன்ற “சத்தியந்தேடுவோர்” அனைத்து மார்க்க புத்தகத்தையுமே வேதமாகவே பாவிக்கிறோம்”///

    என்றும் எழுதுவாரேயானால், அவ‌ர‌து க‌ப‌ட‌த்தின் ஆழ‌ம் தெரிகிற‌தே !!!

  43. பிதாகொரஸ் பொ.ச.மு. 5ம் நூற்றாண்டில் இந்தியா வந்து பல வருடம் தங்கி கணிதமும் தத்துவமும் கற்றது வரலாற்று உண்மைகள்.

    இஸ்ரேலைப் பற்றி உண்மைகளைச் சொன்னால் ஏற்க ம்றுக்கும் க்ளாடிக்கு இந்த்டியப் பெருமைகள் ஏனோ கசக்கிறது.

  44. “நண்பர் பாஸ்கர் அவர்களுக்கு இது “தமிழ்ஹிந்து” தளம் என்பதனை நினைவூட்டுகிறேன்; பாழாய் போன ஆங்கிலத்தால் தானே தவறான கருத்துக்கள் இங்கே நுழைந்தது.?”

    // b) Talking about yuan chwang.. ( This guy came to India during 6th Century Ad).. Buddha was born atleast 700 years before that.//

    I am writing in english not because I do not know Tamil. I am comfortable in typing in english. TamilHindu is not a site just for Tamil Language it is for understanding ( It is difficult for Glady) Hinduism under the backdrop of Tamil. Anyhow in the future I will try typing in Tamil.

    I am not saying you have said anything about Yuan and Budhha.. All I meant was you are starting the History of India very Late under the footsteps of your forefathers ( maxmueller and his cronies).

    During Deepavali many churches were burnt( Hmm).. Guys do you really think we should allow this guy to write anything in this site. As I was telling in my earlier mail, they can get some ( Huge) funding from Joshua Project and can forward their Goebellistic Probaganda..

    Sure we can write about Sati and also
    a) Spanish Inquisition
    b) How Gods Messager Provided Typhoid Germs infested Balnkets to red Indians
    c) How Nigeria was swindled and massacred under tha name of God
    d) How North east of India turned into ..
    e) How Philipines was r..a..p..e..
    f) Why Protestant ?
    g) Comparison of Christ and Budhha by Betrand Russel

    Regards
    S baskar

  45. Varatharaajan
    //27 October 2009 at 6:02 am
    Dear Tiruchikkaran, Even during the Purana days there were traitors,social bigots and thugs like Kamsa, Sisubala and Ravana. We have never praised or followed their methodology, instead we condem their approach. //“இந்தியா” எனும் புண்ணிய பூமியில் இது ஒரு தேசமாக உருவாகும் முன்னரே நாம் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துக் கொண்டும் ஆக்கிரமித்துக் கொள்ளையடித்துக் கொண்டும் இருந்ததில்லையா?//

    திரு. வரதராஜன் அவர்களே, நீங்கள் சுட்டிக் காட்டிய கருத்துக்களை எழுதியவர் கிலாடியார். நான் அல்ல.

    உங்களைப் போலவே நானும் அந்தக் கருத்துக்களை மேற்க்கோள் காட்டி, கிலாடியார் இந்தியாராக இருந்து கொண்டே, இந்தியாவிற்கு எதிராக , இந்திய மக்களை சமூகத்தை கொச்சைப் படுத்திப் பேசுவதைக் விளக்கி,
    கிலாடியார் தன நெஞ்சறிந்து பொய் சொல்லக் கூடாது என்றே கூறி இருக்கிறேன்.

    நீங்கள் சரியாகப் படித்து விட்டு எழுதவும்.

  46. //எனவே மீண்டும் கூறுகிறேன்; நான் மதப் பிரச்சாரம் செய்கிறதில்லை//
    Does everything but saying point blank that it is better to move away from Hindu way as it also has skeletons in the cupboard, blind beliefs, etc.!
    //ஆனால் அனுதினமும் பைபிளின் பிரதிகள் கோடிக்கணக்கான இந்தியர்களால் கிழிக்கப்படுகிறது அல்லது கொளுத்தப்படுகிறது; ஏன் தீபாவளியன்றுகூட‌ எத்தனையோ ஜெப ஆலயங்கள் கொளுத்தப்பட்டு விபத்து என பதிவு செய்யப்பட்டுள்ளது//
    Can you please tell where these happened and if possible any media(not your media) link which recorded those happenings. Do you think our ‘sickular’ media would have left reporting these!!?
    //என்னைப் போன்ற தவளைகள் இல்லாவிட்டால் உங்கள் “பொய்கை” பொய்யாகிப் போகும்//
    Yes. Thank you. I take it that you mean but for you the greatness of hindu way of life wouldn’t have reached the outside world!

  47. //கிறித்துவ‌த்தில் இருக்கும் ப‌ல‌ சாதிக‌ளுட‌ன் இன்னும் ஒன்று உருவாகிற‌து.//
    Maybe a member of Sadhu Chellappa’s கிறுஸ்துவ பிராம்ம்ண சேவா சமிதி!!!

  48. அன்பு நண்பர் glady அவர்களே ,
    ////////இது நண்பர் தனபால்;
    நண்பரே, நான் பள்ளிக்குச் செல்லவில்லை; ஆனால் எனக்கு அரிச்சுவடி சொல்லிக்கொடுத்து வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுத்த எனது தகப்பனார் படிக்கக் கொடுத்த வரலாற்றுப் புத்தகத்தில் இராமாயணமும் மகாபாரதமும் விசேஷ பாடமாகும்; அது இன்று வரை என்னை மிகவும் கவர்ந்த அருமையான கதைத் தொடராகும்; /////
    திரு glady அவர்களே,
    நீங்கள் கிறிஸ்துவ பிராமணன் என்பதால்,அதாவது கொஞ்சம் கிறிஸ்துவம்,கொஞ்சம் இந்துத்துவம் கலந்தவர் என்பதால் உங்களால் இந்து மத நூல்களை படிக்க முடியும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் பைபிள் படி நடக்கும் ஒரு கிருஸ்துவர் மற்ற மத நூல்களை படிப்பாரா?பைபிள் இதை அனுமதிக்கிறதா?
    ////////////அனுதினமும் பைபிளின் பிரதிகள் கோடிக்கணக்கான இந்தியர்களால் கிழிக்கப்படுகிறது அல்லது கொளுத்தப்படுகிறது;/////
    திரு glady அவர்களே,
    ஒரு பைபிள் எரிக்கப்பட்டால் கூட,அது உலகம் முழுதும் மீடியாவில் ஒளிபரப்பப்பட்டுவிடுமே? பின் ஏன் நீங்கள் கூறிய செய்தி,அதுவும் கோடிக்கணக்கான!!!!!!!!!!!!!!! இந்தியர்களால் அனுதினமும்!!!!!!!! பைபிளின் பிரதிகள்!!!!! கிழிக்கப்பட்ட போதும், அல்லது கொளுத்தப்பட்ட போதும் ;எந்த டிவியிலும்,பத்திரிக்கையிலும் வரவில்லை???நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை என்று பைபிள் சாட்சியாகக் கூற முடியுமா?

    //////ஏன் தீபாவளியன்றுகூட‌ எத்தனையோ ஜெப ஆலயங்கள் கொளுத்தப்பட்டு விபத்து என பதிவு செய்யப்பட்டுள்ளது;/////

    எத்தனை ஜெப ஆலயங்கள் எங்கே கொளுத்தப்பட்டது என்று உங்களால் கூறமுடியுமா???

    ///உங்கள் மதப் புத்தகத்தினை பைபிளுடன் ஒப்புமை செய்து பார்க்கும் சுதந்தரத்தைக் கூட வழங்க‌ சிலருக்கு மனமில்லை///

    சும்மா உடான்ஸ் எல்லாம் விடாதீங்க சார்,இந்து மத புத்தகத்தினை பைபிள்- லுடன் ஒப்புமை செய்து பார்க்கும் சுதந்திரத்தை உங்களால் வழங்கமுடியுமா?

    /////////// என்னைப் போன்ற “சத்தியந்தேடுவோர்” அனைத்து மார்க்க புத்தகத்தையுமே வேதமாகவே பாவிக்கிறோம்.//////
    இது சினிமா வசனம் போல் உள்ளது.இதை பற்றி எனக்கு சொல்ல தெரியவில்லை.
    -தனபால்.

  49. /////ஆனால் அனுதினமும் பைபிளின் பிரதிகள் கோடிக்கணக்கான இந்தியர்களால் கிழிக்கப்படுகிறது அல்லது கொளுத்தப்படுகிறது; ஏன் தீபாவளியன்றுகூட‌ எத்தனையோ ஜெப ஆலயங்கள் கொளுத்தப்பட்டு விபத்து என பதிவு செய்யப்பட்டுள்ளது////

    கோடிக்க‌ண‌க்கான‌ என்றால் ஒரு ப‌த்து இருப‌து கோடி இருக்குமா? இத்த‌னை பேர் இந்தியாவில் கொளுத்தினால், எத்த‌னை புகை வ‌ரும். புகையில்லாம‌ல் நெருப்பா? மொட்டை மாடி மேலிருந்து பார்த்தால் ஒரே புகையாக‌த் தெரிய‌வேண்டுமே. அப்ப‌டி எதுவும் நாம் பார்ப்ப‌தில்லையே?

    “மிக ஞானமாக இந்த வித்தியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர்” என்ற‌ உய‌ரிய‌ த‌த்துவ‌த்தின்ப‌டி ……

    ஜெப‌ ஆல‌ய‌ம் என்ப‌த‌ற்கு “மதம் மாறி பாஸ்டர் என்ற தகுதியில் கிறிஸ்தவ மார்க்கத்தின் வழிமுறைகளை ஏற்று சமூகப் பணியாற்றும், மனச் சோர்வினால் துவண்டு போனவர்களுக்கு இறை ஒளியினை ஏற்றும் ஆலோசனைப் பணியாற்றும் சமுக சேவகர் புறம்போக்கு அல்லது சரியான உரிமையில்லாத நிலத்தில், தக்க அரசு அனுமதி இல்லாமல் வீடு கட்டி தனது குடும்பத்துடன் வசிக்கும் இடம்” என்ப‌தே பொருள்.

    தீபாவ‌ளி அன்று இப்ப‌டி எதுவும் கொளுத்த‌ப்ப‌ட்ட‌தாக‌வோ அல்ல‌து வெடி விப‌த்தில் சிக்கிய‌தாக‌வோ த‌க‌வ‌ல் இல்லை. ஆனால் திருவ‌ண்ணாம‌லையில் தி.மு.க‌.வைச் சேர்ந்த‌ முஸ்லிம் ஒருவ‌ர் வீட்டில் வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ப‌ட்டாசுக‌ள் வெடித்து 20க்கும் மேற்ப‌ட்டோர் ப‌லியான‌தாக‌ செய்தி வ‌ந்த‌து. ஆனால், ஒரே ஒரு முறைதான் வெடிச்ச‌த்த‌ம் கேட்ட‌து என்று அக்க‌ம் ப‌க்க‌ம் இருந்த‌ வீட்டார் சொன்ன‌து எதுவும் தொலைக்காட்சிச் செய்திகளிலோ, செய்தித்தாள்க‌ளிலோ வ‌ர‌வில்லை. இந்த‌ப் பார‌த‌த் திருநாட்டில் செய்தி வெளியிடும் வாய்ப்பு எல்லாம் க‌ம்யூனிச, மதசார்பில்லாத போர்வையிலுள்ள, போலிப் ப‌குத்த‌றிவு வாத‌ ச‌க்திக‌ளிட‌ம் ம‌ட்டுமே இருக்கிற‌து என்ப‌தே உண்மை. ஒரே ஒரு ஜெப‌வீட்டின் மொட்டை மாடியில் உள்ள‌ கீற்றுக்கொட்ட‌கை எரிந்தாலும் அத‌ற்கு த‌லைப்புச் செய்தித்துவ‌ம் த‌ராத‌ ஊட‌க‌ம் பார‌த‌த்தில் இல்லை.

  50. //இன்றைக்கு ஈராக் எனப்படுவது அக்கால பாபிலோன் நகரம்; அது ஒரு பெரிய சாம்ராஜ்ய‌மாக ஒரு காலத்தில் இருந்துள்ளது; அந்த சாம்ராஜ்யத்தின் கீழ் இந்தியாவும் இருந்துள்ளது;//
    Mr.glady…….wheat is this?
    i don’t accept it?

  51. உமா சங்கர் அருமையாக அப்பட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். ரூம் போட்டு யோசிபாரோ….

  52. அரவிந்தன் நீலகண்டன்:
    // ஹரப்பாவாசிகளின் எழுத்துருக்கள் உண்மையில் எழுத்துருக்களே அல்ல அவை சித்திர வரைவுகள் மட்டுமே – அவர்கள் எழுத்தறிவற்றவர்கள் எனும் ஸ்டீவ் ஃபார்மரின் கோட்பாடு… //

    இந்த கருத்துக்கு எதிரான மிக அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள் வேகமாக வந்துகொண்டிருக்கிறது;

    அந்த ஆராய்ச்சியாளர்களும் சாதாரணமாக இதுபோன்று இணையதளத்தில் வந்துபோகும் நாலாந்தர ஆராய்ச்சியாளர்களல்ல;அவர்கள் ஒரிஜனலான ஆராய்ச்சியாளர்கள்;

    தங்கள் முழு வாழ்நாளையும் தாங்கள் எடுத்துக்கொண்ட காரியத்தினை நேர்த்தியாக முடிப்பதில் மட்டுமே கவனம் கொண்டவர்கள்;

    எந்த மொழி,இன,மார்க்க நம்பிக்கைகளுக்கும் கட்டுப்படாமல் உண்மையினை அறியவேண்டும் என்ற உண்மையான அர்ப்பணமுள்ளவர்கள்;

    யாரையோ உயர்த்தியோ தாழ்த்தியோ லாபம் காண எண்ணாதவர்கள்; அதுபோன்ற தியாகிகள் நல்லவர்கள் இந்தியாவிலிருந்தே இதோ எழும்பிவிட்டார்கள்;

    இன்றைய THE HINDU நாளிதழில் தான் அந்த அதிசயத்தைக் கண்டேன்; அதன் விவரத்தினை இங்கே காணலாம்…

    https://www.hinduonnet.com/mag/2009/05/03/stories/2009050350010100.htm

    https://www.hindu.com/2009/11/15/stories/2009111556932200.htm

    https://www.harappa.com/har/har0.html

    சிந்துசமவெளி நாகரிகம் முழு வளர்ச்சியடைந்திருந்த நாகரிகம்; அதன் எழுத்துருக்கள் முழுமையான வழக்கொழிந்த மொழியினைச் சார்ந்தது;
    அதனை உச்சரித்துக் காட்டுவதற்கும் கூட மிச்சமோ எச்சமோ இல்லாமல் வேறொரு ஆக்கிரமிப்பாளரால் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்;

    அழித்தவர்கள் அவர்களுக்கு சம்பந்தமில்லாததும் தங்களுக்கு சம்பந்தமானதுமான அடையாளங்களை அங்கே திணித்து கலாச்சாரத் திருட்டை நிகழ்த்தியிருக்கிறார்கள்;

    அதுவும் இன்று வெட்டவெளிச்சமாகிவிட்டது;
    உதாரணமாக “கிருஷ்ண பரமாத்மா” ஒட்டிக்கொண்டு வரும் குதிரைவண்டியும் குதிரைகளும்..!

    அதற்கும் சிந்துசமவெளி நாகரிகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறது, நடுநிலையாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள்;

    நிகழ்ந்திருப்பது அப்பட்டமான இன ஒழிப்பு மற்றும் கலாச்சார ஆக்கிரமிப்பு; இதற்கு சமஸ்கிருத மொழியே ஆதாரமாக விளங்குகிறது; சமஸ்கிருத மொழி சம்பந்தமான எந்த ஆதாரமும் சிந்துசமவெளி நாகரிகத்தின் காலத்தில் இருந்ததில்லை; ஆனால் அது ஆரியர்களின் ஆதிவேதமான ரிக்வேதம் கொடுக்கப்பட்ட மொழியாகும்;

    எனவே தயவுசெய்து மேற்கண்ட நாளிதழின் குறிப்புகளை கவனித்து இனியாவது உண்மையினை உணர்ந்து பொய்மையினை விட்டுவர அன்புடன் அழைக்கிறேன்;

    (இன்னும் வரும்)

  53. அய்யா, ஹரப்பா எழுத்தை நாம் புரிந்து கொள்வது இருக்கட்டும் முதலில் கட்டுரையில் எழுதியிருப்பதை உருப்படியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். “தான் பயிலாத கவச தாரணம்” என்று சொல்வார்களே அதற்கான நல்ல எடுத்துக்காட்டு உங்கள் எழுத்துக்கள். முதலில் நீங்கள் கொடுத்திருக்கும் இணைய தளத்திலேயே என்ன சொல்லியிருக்கிறது என பாருங்கள்.

    There is no evidence for an Aryan invasion of the subcontinent, as some old archaeologists once thought. But large amounts of new research need to be done to better understand the complex interactions between the Indus Saraswati river basins and the neighboring areas.

    மேலும் ஹரப்பாவின் அருகில் நடந்த ஒரு மோதல் (அது நடந்திருந்தாலும் கூட – ஒரே பண்பாட்டைக் கொண்ட இரண்டு குழுக்களிடையே நடந்த மோதலாக இருந்திருக்கவே வாய்ப்பிருந்திருக்கிறது என்று சொல்வதையும் பாருங்கள்:

    .Many scholars have argued that the site of Harappa can possibly be associated with a reference in the Rg Veda (VI.27.4-8) to a place called Hariyupia (Majundar, Raychaudhuri, Datta, 1961; Wheeler 1968; Singh 1995). In this Vedic reference, there is a description of a battle between two forces, one led by Abhyavartin, son of Chayamana (Puru clan) and the other by Turuvasa (Turuvasa Clan); leader of the Vrichivat, seed of Varasika (Sen 1974; Majumdar, Raychaudhuri, Datta, 1961:25-26). The batttle was fought at Hariyupiyia, which appears to have been situated to the east of the Yabyabati River (possibly the Ravi). Half of the attacking force was scattered in the west, presumably on the other side of the river, while the other portion was defeated by Abhyavartin, aided by Indra (Singh 1995).

    இதில் கூறப்பட்டுள்ளதை அப்படியே நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால் வேதத்தில் சொல்லப்படும் இந்திர வழிபாட்டாளர்களே ஹரப்பாவில் வாழ்ந்தவர்கள். அவர்களே இந்திரனின் உதவியுடன் படையெடுத்து வந்த தங்கள் பண்பாட்டையே சார்ந்த மற்றொரு மக்கள் குழுவை வெற்றிக்கொள்கின்றனர். அய்யா நீங்கள் சொல்கிறீர்கள்:

    அதனை உச்சரித்துக் காட்டுவதற்கும் கூட மிச்சமோ எச்சமோ இல்லாமல் வேறொரு ஆக்கிரமிப்பாளரால் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்; அழித்தவர்கள் அவர்களுக்கு சம்பந்தமில்லாததும் தங்களுக்கு சம்பந்தமானதுமான அடையாளங்களை அங்கே திணித்து கலாச்சாரத் திருட்டை நிகழ்த்தியிருக்கிறார்கள்;

    ஆனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சி செய்த கென்னோயர் என்ன சொல்லுகிறார் பாருங்கள்:

    As the river dried up people migrated to the central Indus valley, the Ganga-Yamuna Valley or the fertile plains of Gujarat in western India. The Indus river itself began to change its course, resulting in destructive floods. Certain distinguishing hallmarks of the Indus civilization disappeared. Others, such as writing and weights, or aspects of Indus craft technology, art, agriculture and possibly social organization, continued among the Late and post-Harappan cultures. These cultural traditions eventually became incorporated in the new urban civilization that arose during the Early Historical period, around 600 B.C.

    பார்க்க: சிந்து சரஸ்வதி பண்பாட்டின் அழிவற்ற மாறுபட்ட பரிணாம வளர்ச்சி குறித்த கென்னோயர் கட்டுரைக்கு இங்கே சொடுக்கவும்ஆரியப்படையெடுப்பு தவறு : ஹரப்பாவின் அருகில் வேத இலக்கியம் சொல்லும் போரே நடைப் பெற்றிருக்க வேண்டும் எனும் ஊகத்துக்கு இங்கே சொடுக்கவும்

    அதாவது அங்கு படையெடுப்பு அல்லது அன்னிய ஆக்கிரமிப்பு நடக்கவில்லை என்பது மட்டுமல்ல நீங்கள் சொல்வதற்கு நேர் எதிராக சிந்து சரஸ்வதி பண்பாட்டின் கூறுகள் அப்பண்பாட்டின் தொடர் பரிணாமமாக பிற்காலத்தில் இந்தியாவிக் எழுந்த பண்பாடுகளில் நிலைபெற்று விளங்கியது என்கிறார். இதில் எங்கிருந்து வந்தது பண்பாட்டு திருட்டு அல்லது ஆக்கிரமிப்பாளரின் அழிப்பு? இனியாவது வெறுப்பில் உளறாமல் விஷயங்களை ஒழுங்காகப்படித்துவிட்டு பொருள் புரிந்து விவாதத்துக்கோ உரையாடலுக்கோ வாருங்கள். இல்லாவிட்டால் ஏற்படுவது தேவையற்ற காலவிரயம்தான்.

  54. என் தலைவரே அடிக்கடி சொல்லுவாரு. “ஹிந்து” வில் வந்தா வேதமா என்று. (“The Hindu”- daily news paper)

    ஆனால் இங்கே நம்முடைய அருமை சகோதரர் aryadasan
    கூறுவதினாலே நாம் மீண்டும் இந்தியாவின் சமுதாய வரலாற்று ஆராய்ச்சியை பகுததறிவு அடிப்படையிலே நடத்துவோம்.

    சகோதரர் aryadasan இப்போது இந்தியாவிலே வாழும் மக்கள் கூட்டம் இதன் பண்டைய மக்கள் கூட்டம் அல்ல என்று எப்படியாவது கற்ப்பித்து விட வேண்டும் என்று துடிக்கிறார்.

    நாம் அவருக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்க்கலாம்.

    நாம் அவ்வப் போது நம் ஆராய்ச்சியை அளிப்போம்.

  55. 1)
    இது என்னய்யா , எனக்கு ஒன்னும் வெளங்கலியே.

    இந்த சிந்து சமவெளி நாகரீகம் நகர நாகரீகம் என்றும் ,

    ஆரிய நாகரீகம் கிராமப் பகுதி நாகரீகம் என்றும் சொல்லுராங்க.

    சிந்து சமவெளிக் காரங்க வெறும் டவணுல இருந்தா அவங்க சாப்பிட கோதுமை, அரிசி வெள்ளாமை செஞ்சது யாருங்கோ.

    ஆரிய நாகரீகத்திலே அயோத்தி நகரம், இந்திரப் பிரஸ்தம், அஸ்தினாபுரம் ஆகிய நகரங்கள் எல்லாம் குறிக்கப் பட்டு இருக்கே.

    இந்த அயோத்தி, அஸ்தினாபுரம் பகுதியில இருந்த மக்கள் சிந்து சமவெளி மக்கள் எல்லாம் ஒரே மக்கள் மாறி இருக்கே!

    The ancient Indus systems of sewerage and drainage that were developed and used in cities throughout the Indus region were far more advanced than any found in contemporary urban sites in the Middle East and even more efficient than those in many areas of Pakistan and India today. The advanced architecture of the Harappans is shown by their impressive dockyards, granaries, warehouses, brick platforms and protective walls.

  56. ஆரியதாசன்….இன்னா பேருபா ஸார் இது, ஆ? ஒன்னோட பேர்லயே தெர்து ஸார் நீ திராவிட கூலின்னு, அ ஆங்.

    இன்னும் அண்ணாதொர, ஈவெரா காலத்லயே குந்திக்கினு கீறியே….எந்திர்ச்சு ஏறி வா நைனா. வர ஸொல்ல நறியா படிக்கனும் வாத்யாரே.

    அரவிந்தன் ஸொம்மா புட்டு புட்டு வச்சுக்கறாரு பாரு. இது வெவரமான சைட்டு நைனா…லெஃப்டுங்க, திராவிடனுங்க நட்தரானுங்க பாரு…அந்த மாறி டுபாங்குர் சைட்டு இல்ல. இன்னா தெர்ஞ்சுக்கினியா?

    ஒயுங்கா வந்து பேசு ஸார். எதுனாச்சும் புர்லன்னா நாயமா கேட்டு தெர்ஞ்சுக்க. ஸொல்லி தர இங்க நெறியா ஆளுங்க கீறாங்க. அத்த வுட்டு எதனாச்சும் பெனாத்திகிட்டு உன் டைமையும் வேஸ்ட் பண்ணிக்கினு எங்க அல்லார் டைமையும் வேஸ்ட் பண்ணிக்கினு பேஜார் பண்ணாத ஸார். ஆள வுடு.

    இன்னா, வர்டா

    மன்னாரு.

  57. ஆரியர்கள் ருஷியாவிலே இருந்து வந்தார்கள், மத்திய ஆசியாவிலே இருந்து வந்தார்கள், சுவிட்ச‌ர்லாந்திலே இருந்து வந்தார்கள் என்கிறார்களே,

    நல்லா கவனிங்க, அலெக்சாந்தரைப் போல, பாப‌ரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் ம‌ட்டும் வ‌ர‌வில்லை.

    முழு ச‌மூக‌மாக‌ குய‌வ‌ர்க‌ள், த‌ச்ச‌ர்க‌ள், நெச‌வாள‌ர்க‌ள், ச‌ல‌வைத் தொழிளாளிக‌ள், ம‌ருத்துவ‌ர்க‌ள், ச‌மைய‌ல் கார‌ர்க‌ள், பாட‌க‌ர்க‌ள், புல‌வ‌ர்கள், சேனாதிப‌திக‌ள், அமைச்ச‌ர்க‌ள் உள்ளிட்ட‌ மிக‌ப் பெரிய‌ ச‌மூக‌ம் இட‌ம் பெய‌ர்ந்து உள்ள‌து என்று கூற‌ப் ப‌டுகிர‌தே,

    அப்ப‌டியானால் அந்த‌ ச‌முதாய‌ம் உருவாக‌ ப‌ல‌ ஆயிர‌ம் ஆண்டுக‌ள் ஆகியிருக்குமே,

    அப்ப‌டி அவ‌ர்க‌ள் ச‌மூக‌மாக‌ உருவெடுத்த‌ நில‌ப் பிர‌தெச‌ம் எது?

    ருஷியாவா? ம‌த்திய‌ ஆசியாவா?

    ருஷியாவிலோ, ம‌த்திய‌ ஆசியாவிலோ ஆரிய‌ர்க‌ள் ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌ கால‌ம் வாழ்ந்து ஒரு ச‌மூக‌மாக‌ உருவான‌ வ‌ர‌லாறு, உல‌க‌ வ‌ர‌லாற்றின் ப‌க்க‌ங்களில் இல்லையே!

    நைல் ஆற்று நாகரீக‌ம், ம‌ஞ்ச‌ள் ஆற்று நாகரீக‌ம், இதை எல்லாம் விட‌ ப‌ழைமையான‌ நாகரீக‌ம் சிந்து ச‌ம‌வெளி நாகரீக‌ம் என்றால்,

    அவ‌ர்களை 5000 வ‌ருட‌ங்களுக்கு முன்பு விர‌ட்டி அடித்த‌தாக‌க் கூற‌ப் ப‌டும் ஆரிய‌ ச‌முதாய‌ம், கைப‌ர் போல‌ன் க‌ன‌வாய் வ‌ழியாக‌ வ‌ருமுன் சூட்சர்லாந்திலே இருந்தார்க‌ள் என்றால்,

    கைப‌ர் போல‌ன் க‌ன‌வாய் வ‌ழியே அந்த‌ ச‌முதாய‌ம் இந்தியாவுக்குள் நுழையும் வ‌ரையிலே, அந்த‌ ச‌மூக‌த்தின் சுவிட்ச‌ர்லாந்து வ‌ர‌லாறு அல்ல‌து ருஷியா வ‌ர‌லாறு அல்ல‌து மத்திய ஆசிய வ‌ர‌லாறு ( 5000 வ‌ருட‌ங்களுக்கு முந்தைய‌ வ‌ர‌லாறு), ஏன் ப‌திவு செய்ய‌ப் ப‌ட‌வில்லை?

    ஆரிய‌ர்க‌ள் சுவிட்ச‌ர்லாந்திலே அல்ல‌து ருஷியாவிலே அல்ல‌து ம‌த்திய‌ ஆசியாவிலே எப்ப‌டி வாழ்ந்தார்க‌ள், ஒரு ச‌மூக‌மாக‌ உருவானார்க‌ள் ‌ என்ப‌து ப‌ற்றி ஒரு வார்த்தை கூட‌ உல‌க‌ வ‌ர‌லாற்றின் ப‌க்க‌ங்களில் இல்லையே?

    நைல் ஆற்று நாகரீக‌ம், ம‌ஞ்ச‌ள் ஆற்று நாகரீக‌ம் போல,

    ‌ரைன் ந‌தி நாக‌ரீக‌ம் என்றோ, வோல்கா ந‌தி நாக‌ரீக‌ம் என்றோ ஒரு சிறு குறிப்பு கூட‌ இல்லையே?

    உல‌கின் மிக‌ப் ப‌ழைமையான‌ இல‌க்கிய‌ங்களில் ப‌ல‌வ‌ற்றை உள்ள‌டக்கிய‌ மொழி அவ‌ர்க‌ளின் மொழி – அந்த‌‍ இல‌க்கிய‌ங்க‌ளில் இந்தியாவைத் த‌விர‌ வேறு நாடுக‌ள் ப‌ற்றிய‌ குறிப்பு ஒன்று கூட‌ இல்லையே?

    ந‌ண்ப‌ர் ஆரியதாச‌ர் அவ‌ர்க‌ளே,

    இந்த‌ ஆரிய‌ர்க‌ள் இந்தியாவின் அச்சு அச‌லான‌, ஆதி குடிக‌ள்
    என்ப‌தை உறுதி செய்ய வேண்டிய‌ அளவுக்கு சாத்திய‌ங்க‌ள் உள்ள‌ன‌.

    (இன்னும் வரும்)

  58. பாவம் பா இந்த அறியதாசன்

    அவருக்கு யாரனும் ஹெல்ப் பண்ண முயற்சி பண்ணலாமே –

    ஆரியதாசன் உங்களுக்கென பெரியார் வழயில் சில பாயிண்ட்ஸ்

    1)
    நமது தமிழர்கள் மற்றும் திராவிடர்களை பார்த்திர்களானால் வீட்டிலேயே தான் சமைத்து உண்பார்கள் – ஹோட்டல் சென்று சாப்பிடும் பழக்கமெல்லாம் அவர்களுக்கேது மேலை. நாட்டவர் தான் இந்த ஹோட்டல் சென்று சாப்பிடும் கேடு கெட்ட காரியத்தை ஏற்படுத்தினார்கள்

    அந்த பழக்கமே இந்தியாவில் அவர்களின் படை எடுப்பின் பொது தொற்றிகொண்டது – அதன் வீச்சு இன்றும் உள்ளது – நீங்கள் பார்க்கலாமே ஹோட்டல் ஆரிய பவன், ஆரிய விலாஸ், ஆரியாஸ் – எங்கேயானும் ஹோட்டல் திராவிட பவன் உள்ளதா, திராவிட விலாஸ் தான் உள்ளத, அட திராவிட டீஸ்டால் கூட கிடையாது

    இதிலிருந்தே தெரியவில்லை ஆரியர்கள் படை எதுத்து நம் பாரம்பரியத்தை கொன்று விட்டார்கள்

    2)
    ஆதி திராவிடர் என்று ஜாதி உண்டு எங்கேயானும் ஆடி ஆரியர் என்ற ஜாதி உண்டா – ஜாதி என்பது இந்தியர்கள் ஊறி திளைக்கும் ஒரு விஷயம் – ஐரோப்பாவில் எங்காவது ஜாதி உண்டா – இருந்திருந்தால் ஆதி ஆரியர் என்ற ஒரு ஜாதி இருந்திருக்க வேண்டுமே – அப்படி இல்லையே – இதில் இருந்து என்ன தெரிகிறதென்றால் ஆரியர்கள் ஜாதி பேதமற்ற வெளி நாட்டில் இருந்து தான் வந்தார்கள் என்று

    3)
    ஆரியர்களிடம் உள்ள மொழி வெறி அவர்களது மொழியான ஆங்கிலத்தில் எப்படி வெளிபடுகிறது பாருங்கள்

    diction-“ary”, precaution-“ary” – ordin-“ary” இப்படி பல வார்த்தைகளை அடுக்கிகொண்டே போகலாம் – ஆரியர்கலாம் குள்ள நரிகள் தங்களின் மதத்தின் தாக்கம் மொழியிலும் இருக்க வேண்டும் என்று வேண்டுமென்றே சதி செய்து arya என்பதை சுருக்கி “ary” என்று பல ஆங்கில வார்த்தைகளில் சேர்த்துவிட்டார்கள்

    எங்கேயாவது dictiona-dravi, ordi-dravi என்று யாரவது சொல்லத்தான் முடியுமா — திராவிடனுக்கு மொழிபற்று உண்டே தவிர ஆரிய நரிகளை போல வெறி கிடையாது

    3)
    திராவிடர்களை மட்டம் தட்டவே – cula, ma, stic போண்டா இழிசொர்களுக்கு முன்னாள் dravidan என்பதை சுருக்கி “dra” என்ற வார்த்தையை சேர்த்து “dra”-cula, “dra”-ma, “dra”stic, என்று ஆக்கிவிட்டார்கள் அந்த ஆரியர்கள்

    இன்னிக்கு மூணு பாய்ண்ட்டு போதும் ஓகே வா

  59. aryadasan
    16 November 2009 at 7:53 am

    ////சிந்துசமவெளி நாகரிகம் முழு வளர்ச்சியடைந்திருந்த நாகரிகம்; அதன் எழுத்துருக்கள் முழுமையான வழக்கொழிந்த மொழியினைச் சார்ந்தது;
    அதனை உச்சரித்துக் காட்டுவதற்கும் கூட மிச்சமோ எச்சமோ இல்லாமல் வேறொரு ஆக்கிரமிப்பாளரால் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்;////ஓஹோ சமிஸ்கிரதத்தை இப்போது நீங்கள் கங்கனம்கட்டி அழிக்கப் பார்ப்பது போல் அப்போது நடந்திருக்கிறது என்கிறீர்களா?

    ///அதுவும் இன்று வெட்டவெளிச்சமாகிவிட்டது;
    உதாரணமாக “கிருஷ்ண பரமாத்மா” ஒட்டிக்கொண்டு வரும் குதிரைவண்டியும் குதிரைகளும்..!
    அதற்கும் சிந்துசமவெளி நாகரிகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறது, நடுநிலையாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள்;////

    ராமாயனம் நடந்ததாகச் சொல்லப்படுவது அயோத்தியில் , அதன் விஸ்தாரமான கதை இலங்கை வரை உள்ளது. ராமாயணம் நடந்த காலகட்டம் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கும் முன்னால் என்கிறார்கள். அப்போதே அஸ்வ மேத யாகம் என்ற குதிரையை அனுப்பும் யாகம் பற்றி குறிப்புகள் உள்ளன. நீங்கள் என்னடான்னா 5000 வருடங்களுக்கு முன்னாடி சிந்து சமவெளி நாகரீகத்தில் குதிரை இல்லாதது போல் சொல்கிறீர்களே!. சரியா செட்டாகலையே!

    ///நிகழ்ந்திருப்பது அப்பட்டமான இன ஒழிப்பு மற்றும் கலாச்சார ஆக்கிரமிப்பு///

    எப்படி இபோது பகுத்தறிவு நாத்திகம் என்று பேசிக்கொண்டு பார்பனர் ஒழிக இந்து மதம் ஒழிக என்றெல்லாம் பேசி இன அழிப்பு வேலையைச் செய்கிறார்களே அது போலவா!

    கிறிஸ்தவர்கள் காவியைக் கட்டிக்கொண்டு இந்து கலாச்சார ஆக்கிரமிப்பு செய்கிறார்களே அது போலவா! இதில் எதைக் கண்டிக்கவேண்டும் என்கிறீர்கள், எந்தப் பொய்யைவிட்டு வெளியே வர வேண்டும் என்கிறீர்கள். தெளிவே இல்லையே.

  60. https://en.wikipedia.org/wiki/History_of_the_horse_in_South_Asia

    Bronze Age
    Remains of horses have been found among other places in Mahagara near Allahabad (dated to c. 2265 BC to 1480 BC, described as Equus caballus Linn), Hallur in Karnataka (c.1500 – 1300 BC, described as Equus caballus), Mohenjo-Daro, Harappa (“small horse”), Lothal[6] (e.g., a terracotta figurine and a molar horse tooth, dated to 2200 BC), Kalibangan, and Kuntasi (dated to 2300 – 1900 BC). Horse remains from the Harappan site Surkotada (dated to c. 2400-1700 BC) have been identified by A.K. Sharma as being of the Equus caballus species. The horse specialist Sandor Bökönyi (1997) later confirmed these conclusions and stated that the excavated tooth specimens could “in all probability be considered remnants of true horses [i.e. Equus caballus Linn]”. Bökönyi stated that “The occurrence of true horse (Equus Caballus L.) was evidenced by the enamel pattern of the upper and lower cheek and teeth and by the size and form of incisors and phalanges (toe bones).” [7]. However, others like Meadow (1997) still disagree, because remains of the Equus caballus Linn horse are difficult to distinguish even by specialists from other horse species like Equus asinus (donkeys) or Equus hemionus (onagers) [8]. An alleged clay model of a horse has been found in Mohenjo-Daro and an alleged horse figurine in Periano Ghundai in the Indus Valley.[9]

    The Aryan Debate: Horse- Danino
    In 1974, archaeologists J. P. Joshi and A. K. Sharma found horse bones in Surkotada, a Harappan site in Gujarat. This was a sensational discovery: first, it was the bones of a horse and second, it was dated to the period 2265 B.C.E. to 1480 B.C.E, which corresponds to the Mature Harappan period[1].
    Finding horse remains, especially from India, are always controversial. For example, one of the earliest claims of horse is dated to 4500 B.C.E in the Aravalli range in Rajasthan – the same place from where the Harappans got their copper. This period is the same time when horse was first domesticated in the world. So there are questions: was the artifact obtained from a Bronze Age level even though the site was Neolithic? Was it really a horse — the Equus Caballus —rather than a donkey or onager.?
    Due to the large size of bones and teeth of an onager, it is hard to distinguish it from a horse. Also sometimes the reports that come with excavations have insufficient measurements, drawings, and photographs required for independent assessment[1]. Due to this the findings are always suspect; it is always concluded that the horse arrived quite late to India.
    Such questions arise because in the Indo-Aryan debate — if Vedic civilization pre-dated, co-existed or followed the Harappan civilization — a key factor is the horse. In this debate the main argument against Harappa being Indo-Aryan can be summarized as follows.
    According to the popular version of Indian pre-history, horse — an animal not native to India — was bought to India by the Indo-Aryans when they came in 1500 B.C.E. There is no evidence of horse in India before 1500 B.C.E.
    Among the numerous seals found in Harappa there is none which represent a horse, while other animals like the bull, buffalo, and goat are represented.
    In Rg Veda, the horse (asva) has cultural and religious significance. Since there is absence of horse in Harappa, it can only mean that the Vedic people arrived after the decline of the Harappan civilization.
    The find at Surkotada upset this narrative because it crossed a lakshman rekha into Mature Harappan and also violated the threshold for the Indo-Aryan arrival. Hence the findings themselves became suspect – at least till 1991.
    The eminent archaeozoologist, Sandor Bokonyi, was in Pune to attend a workshop on ‘Prehistoric contacts between South Asia and Africa’ at the Deccan College. Following the conference he spent some time in Delhi where the Excavation Branch of the ASI showed him the finds from Surkotada which consisted of six samples, mostly teeth. After examining the artifacts, he concluded that they were not of a half-ass, but a real domesticated horse[7].

    (Onager)
    In 1994, Richard Meadow and Ajita Patel examined the same remains in Purana Quila and came to a different conclusion. They thought the samples came from an onager and not the true horse. Meadow believes that horses could have come to the region, maybe by 2000 B.C.E since there is figurine evidence and painted shreds in Swat, but the find from Surkotada was not it. Richard Meadow raised his objections to Sandor Bokonyi during a conference in Konstanz, Germany, but Bokonyi was not convinced[5].
    To understand how controversial the issue of dating horse India is, we have to look at another story. In 1971, K. R Alur found horse bones from a Neolithic site in Hallur, Karnataka and they were dated between 1500 and 1300 B.C.E. Alur’s report sparked a controversy and he was asked to clarify his find since it went against the prevalent belief that Aryans introduced the horse around 1500 B.C.E. A re-excavation of Hallur was done and 21 years later Allur reported that he had indeed found the true horse and he could not deny or alter this scientific fact[1].
    Besides these, there have been other finds as well which includes horse teeth from Baluchistan dating to a pre-Harappan level, from Allahabad (2265 – 1480 B.C.E) [1], horse bones dated between 2450 and 2000 B.C.E in Chambal Valley[2], and an upper molar from Kalibangan[3]. Horse remains have been found in other locations — in Mohenjo-daro, Rupar, Inamgaon, and Kalibangan —- but they all are from a later period.
    Also, E.J.H Mackay in 1931 and R.E.M.Wheeler in 1968 found terracotta models of animals in Mohenjo-daro and one of them was the horse. From this Wheeler concluded that the horse was known from an earlier period in Baluchistan. Thus, from a complete absence of horse, we see little evidence of horse remains around the subcontinent, but not quite a lot. Maybe horse bones are lying undiscovered in various bags in Indian museums[1].
    If horse bones date to a period much earlier than the proposed Indo-Aryan arrival, who bought them? Did the Aryans come much before than expected — maybe before the decline of the Indus valley area? In fact one theory argues just that. According to this version, two Indo-Aryan groups — the Dasas and Panis — arrived around 2100 B.C.E from the steppes via Central Asia bringing horses with them. Fine. If the Indo-Aryans arrived earlier does this mean that the date of Rg Veda can be pushed to an earlier date than 1200 B.C.E? The theory says, the folks who came in 2100 B.C.E were not the composers of the Veda; they came in a second wave, a couple of centuries later[4][1].
    While such justifications fit in data with a pre-defined conclusion, there are few points that need to be addressed.
    Why are there so few horse remains and depictions of horse in India prior to 1500 B.C.E?
    If horses were not bought by the Indo-Aryans in the first wave of migration, then who did?
    The HARP has been excavating in Harappa for more than two decades; we have not heard of any breaking news from there. Hence we need to find out why there are such few remains of horses in India whereas we have found remains of cattle, goats, fish and sheep.
    Whenever we read such a list, we also need to pay attention to what is missing in this. Thus we find that there are few remains of elephants and camels, two animals which were present in Harappa. A possible explanation is that while sheep, goat and fish were eaten by Harappans, elephants, camels and horses were not and hence the remains are not found in the urban areas in large numbers[2]. Regarding the lack of depictions of horses in seals, we also find that the cow and camel too are not depicted, even though a large number of bones have been found[1].

    (Pasupati Seal)
    But if the Indo-Aryans bought the horses shouldn’t we see an explosion of horse remains and depiction of horse in art after 1500 B.C.E? In fact horse remains are rare even after 1500 B.C.E. Also, it is around the Mauryan period – around 350 B.C.E — that the depictions of horse and lion gains popularity[2]. Thus the time period 2000 – 1500 B.C.E was not significant regarding the arrival of horse in India. So much for that.
    Thus if horses did not arrive in a Big Bang moment, how did they end up in the subcontinent. To begin with, the horse, a rare animal, is not native to India: there are no wild horses in India; we only have the lambi race ka ghoda. Even as late as the 11th and 13th century CE, horses were imported: Marikkars controlled the horse tradewith Arabia and supplied them to Muslim rulers and Vijayanagara.
    The people of the subcontinent had trade relations with the external world much before 1500 B.C.E. Also the trade relations between various parts of India and the Near East, dating as far back as 4000 BCE with the find of cotton in Dhuwelia and carnelian bead in Mesopotamia in the third millennium BCE, showed that trade need not introduce a cultural change or introduce new people. Isn’t it possible that the horse too arrived just like that due to the trade relations with Central Asia? [1][2]
    Finally, consider this: is the horse required to identify a site as Indo-Aryan? The Bactria-Margiana Archaeological Complex is another Indo-Aryan site where the horse was depicted in grave goods was never found in large numbers in excavations. But this lack of horse bones did not prevent scholars from identifying it as an Indo-Aryan culture, so why not the Indus valley?[1].
    References & Notes
    ================
    Edwin Bryant, The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate (Oxford University Press, USA, 2004).
    Michel Danino, The Horse and the Aryan Debate, Journal of Indian History and Culture September 2006, no. 13: 33-59.
    B.B. Lal, The Truant Horse Clears the Hurdles,in The Aryan Debate edited by Thomas R. Trautmann (Oxford University Press, USA), 230-233
    Asko Parpola, The Horse and the Language of the Indus Civilization,in The Aryan Debate edited by Thomas R. Trautmann (Oxford University Press, USA), 234-236.
    Richard H. Meadow and Ajita Patel, “Comment on ‘Horse Remains from Surkotada’,” in The Aryan Debate edited by Thomas R. Trautmann (Oxford University Press, USA), 243-250.
    David Anthony, “The Domestication of the Horse in Asia,” in The Aryan Debate edited by Thomas R. Trautmann (Oxford University Press, USA), 251 -253.
    Sandor Bokonyi, Horse Remains from Surkotada, in The Aryan Debate edited by Thomas R. Trautmann (Oxford University Press, USA), 237 -242.

  61. திருச்சிக் கார‌ன்
    18 November 2009 at 3:09 pm

    Where is our Brother Aarya Daasan?
    Gone to Harappa?

    No, My dear brother…
    “ஆணவம் ஆராய்ச்சி செய்யாது;
    ஆராய்ச்சி செய்யும் மனம் ஆணவம் கொள்ளாது”

    நண்பர்களே, நான் மிகவும் நிதானமாகக் காரியங்களை ஆராய விரும்புகிறேன்; ஆத்திரம் அறிவை மறைக்கும், மறுக்கும் என்பதையறிந்து தஙகளது மேலான கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு உண்மையினை அறிய விழைகிறேன்;

    எனக்கு எந்த‌ அவசரமுமில்லை; நான் ஏற்கனவே முடிவு செய்து கொண்ட எதையும் மாற்றிக்கொள்ளவேண்டுமோ எனும் பதட்டமும் எனக்கில்லை; ஏனெனில் நான் இன்னும் எதையும் முடிவு செய்யவில்லை;

    யாருமே வரலாற்றில் பின்னோக்கிச் செல்லுதல் என்பது இயலாது; எனவே கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்தே உண்மையினை அறிய வேண்டும்; ஏற்கனவே அறியப்பட்டது இன்று மறுக்கப்படுமானால் இன்றைய உண்மையும் நாளை மறுக்கப்படலாம் என்பது அறிந்ததே;

    [ to be contd…]

    (Edited.)

  62. ச‌கோத‌ர‌ர் ஆரிய‌ தாச‌ன் அவ‌ர்க‌ளே,

    //“ஆணவம் ஆராய்ச்சி செய்யாது;
    ஆராய்ச்சி செய்யும் மனம் ஆணவம் கொள்ளாது”

    நண்பர்களே, நான் மிகவும் நிதானமாகக் காரியங்களை ஆராய விரும்புகிறேன்; ஆத்திரம் அறிவை மறைக்கும், மறுக்கும் என்பதையறிந்து தஙகளது மேலான கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு உண்மையினை அறிய விழைகிறேன்;

    எனக்கு எந்த‌ அவசரமுமில்லை; நான் ஏற்கனவே முடிவு செய்து கொண்ட எதையும் மாற்றிக்கொள்ளவேண்டுமோ எனும் பதட்டமும் எனக்கில்லை; ஏனெனில் நான் இன்னும் எதையும் முடிவு செய்யவில்லை;//

    இதைப் பாராட்டுகிரேன் ச‌கோத‌ர‌ர் ஆரிய‌ தாச‌ன் அவ‌ர்க‌ளே,
    இப்போது உங்க‌ள் சிந்த‌னையில் முதிர்ச்சி தெரிகிற‌து!

    //யாருமே வரலாற்றில் பின்னோக்கிச் செல்லுதல் என்பது இயலாது; எனவே கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்தே உண்மையினை அறிய வேண்டும்; ஏற்கனவே அறியப்பட்டது இன்று மறுக்கப்படுமானால் இன்றைய உண்மையும் நாளை மறுக்கப்படலாம் என்பது அறிந்ததே;//

    வ‌ர‌லாறு என்ப‌து அறிவிய‌ல் விதிக‌ளைப் போல நிரூபிக்க‌ப் ப‌ட‌ முடியாத‌து. அந்த‌ந்த‌ கால க‌ட்ட‌த்திலே எழுத‌ப் ப‌ட்ட‌ நூல்க‌ள் தான் முக்கிய‌ த‌க‌வ‌ல் சாத‌ன‌ம்,ம‌க்க‌ள் பேசி வ‌ருவ‌து, ம‌ற்றும் அக‌ழ்வாராய்ச்சியில் கிடைத்த‌ பொருள்க‌ளை வைத்து நாம் யூகிப்ப‌து‍ இப்ப‌டி தான் வ‌ர‌லாறு எழுத‌ப் ப‌டுகிர‌து.

    அசோக‌ ஸ்தூபியில் புலி யின் உருவ‌ம் இல்லை. அத‌னால் புலி இந்தியாவின் மிருக‌ம் இல்லை என‌ முடிவுக்கு வ‌ர‌ முடியுமா?

    நான் ஆண‌வ‌த்தோடு எழுத‌வில்லை. ந‌கைச் சுவையாக‌ எழுதி இருந்தேன்.

    நான் எழுதிய‌ முறை உங்க‌ளைப் புண் ப‌டுத்தி இருந்தால் வ‌ருத்த‌ம் தெரிவிக்கிறென்.

    ஆராய்ச்சிக‌ளை, மாற்றுக் க‌ருத்துக்க‌ளை புற‌க்க‌ணிக்க‌வில்லை. உண்மையை தேட‌வே விரும்புகிரேன். ச‌த்ய‌ம் ஏவ‌ ஜ‌ய‌தே!

  63. அன்பான நண்பர் திருச்சிக்காரன் அவர்களே, நமஸ்காரம்.

    // நான் ஆண‌வ‌த்தோடு எழுத‌வில்லை. ந‌கைச்சுவையாக‌ எழுதி இருந்தேன்; நான் எழுதிய‌ முறை உங்க‌ளைப் புண் ப‌டுத்தி இருந்தால் வ‌ருத்த‌ம் தெரிவிக்கிறேன். //

    “ஆணவம்” எனும் வார்த்தையை நான் உங்களுக்காகப் பயன்படுத்தவில்லை, நண்பரே; அதனை ஒரு தத்துவம் போல சொல்லவே முயற்சித்தேன்; இந்த கடினமான நாட்களில் நண்பர்களை சம்பாதிப்பது வெள்ளியை சம்பாதிப்பது போன்றதெனில் நல்ல நண்பர்களை சம்பாதிப்பது பொன்னைப் போன்றதாகும்; நீஙகள் “எங்கள் தங்கம்”

    சரி,எனது கருத்துக்கு வருகிறேன்;

    அரவிந்தன் நீலகண்டன் (author)
    //There is no evidence for an Aryan invasion of the subcontinent, as some old archaeologists once thought….//

    எனக்கு அருமையான நண்பர்களே எனது நண்பர் ஒருவருடன் விவாதித்த காரியங்களையே இங்கே பகிர்ந்து கொள்ளுகிறேன்; இது எனது இறுதியான கருத்து அல்ல; இங்கே யாராவது நியாயமான தங்கள் கருத்தினை ஆதாரத்துடன் சம்ர்ப்பித்தால் எனது கருத்தினை மாற்றிக் கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்;

    எப்படி வெளிநாட்டில் இதுபோன்ற ஆராய்ச்சிகளில் சரிசமமாக மதிக்கப்படும் இருவேறு கருத்துக்கள் உலவுகிறதோ அதுபோன்று இங்கும் இருக்குமல்லவா, அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு அல்லது அந்த பாதிப்பில்லாத சரியானதொரு உண்மையினைத் தேடுவோம்;

    தற்போது நம்மிடமிருக்கும் ஆதாரங்கள் கூட இல்லாத நிலையில் எப்படி அந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட கொள்கையினை நிறுவினார்களோ அதைவிட இப்போது நம்மிடம் அதிக ஆதாரங்களும் வசதிகளும் சிந்தனா சக்தியும் உண்டல்லவா? அதனைப் பயன்படுத்துவோம்;

    நாம் நமது முன்னோர்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்; எனவே தவறானதைப் பேசக்கூடாது என்பதுடன் சரியானதைப் பேசவும் வேண்டும்;
    “ஆரியர்கள் படையெடுப்பு” என்பது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருக்கும் தவறான கூற்றாக இருக்குமோ எண்ணவேண்டிய சூழ்நிலை ஏற்படக் காரணமே இந்த “ஆரியப் படையெடுப்பு”க் கொள்கையை நிறுவிய அதே மேநாட்டு அறிஞர்கள் தற்போது அதனை மறுத்து புதுப்புது கொள்கைகளை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள்;

    அவர்களுக்குத் தேவையெல்லாம் அறிவு ஜீவி எனும் பட்டமும் அவர்கள் பாக்கெட்டை நிரப்பும் அவர்கள் எழுதிய புத்தகங்களின் வியாபாரமே; அன்றைக்கும் இன்றைக்கும் நடப்பது இதுதானே? அன்றைக்கு நடந்தது ஐரோப்பிய இனவாத சூழ்ச்சி எனில் இன்றைக்கும் அது அதே போன்ற மேநாட்டு புத்தக வியாபாரிகளால் நடக்க வாய்ப்பில்லையா? எனவே ஏற்கனவே சொல்லப்பட்ட உண்மைகளையும் கவனத்தில் கொண்டே தற்போதய சூழ்நிலையினை அணுகவேண்டும்;

    உதாரணத்துக்கு நமது தேசத்திலிருந்தே புறப்பட்டு மேநாட்டு அறிஞர்களால் வியந்து பாராட்டப்பட்ட திரு.ஐராவதம் மகாதேவ ஐயர் அவர்களும் சேர்ந்து ஆரிய ஆக்கிரமிப்பை மறுக்கிறாரா, என்று பார்க்கவேண்டும்;

    அவர் வெளிப்படையாக ஆரியப் படையெடுப்பைக் குறித்து சொல்லாவிட்டாலும் சிந்துசமவெளி நாகரீகத்தின் எழுத்துக்களைப் பற்றிய வரலாற்றைத் தெளிவாக ஆராய்ந்து பதிவு செய்கிறார்;

    அவரது கூற்றுப்படி சிந்துசமவெளி நாகரீகம் முடியும் தருவாயில் தான் வேதகால நாகரீகம், அதாவது ஆரிய நாகரீகம் துவங்குகிறது; இதற்கு ஆதாரமாகச் சொல்லப்படுவது ஆரியர்களின் முதல் வேதமான “ரிக் வேதம்”
    “ஆரியர்” எனும் சொல்லாட்சியும் “ரிக்” வேதத்திலேயே வருகிறது;

    சிந்துசமவெளி நாகரீகத்தின் சம காலத்தவராக அருகருகே ஆரியர் வாழ்ந்திருந்தால் நிச்சயமாகவே சிந்துசமவெளி நாகரீகத்தாரின் பழக்கவழக்கங்கள் கலாச்சாரங்கள் ஆரியரிடம் கலந்திருக்கும்;

    அதாவது ஒரு கலாச்சாரத்தின் ஆதார அம்சமே மொழிதான்; சிறப்பான நகர அமைப்பில் வாழ்ந்த சிந்துசமவெளி குடிகள் தங்களுடன் வாழ்ந்த ஆரியரின் மொழியினைக் கற்றிருக்கக் கூடும் அதேபோல ஆரியரும் கற்றிருப்பார்கள்;
    ஆனால் சிந்துசமவெளி நாகரீகத்தின் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த‌ மண்ணில் சுட்ட எழுத்துக்களை ஆரியர்களுடன் ஒப்பிட்டு அறியமுடியவில்லை;
    காரணம் அவர்கள் அங்கே இல்லாததே; அந்த எழுத்துக்கள் வெறும் சித்திர வடிவம் என்ற கூற்று ஒரு புறமிருந்தாலும் அவை எழுத்துக்களே என்றும்
    திரு.ஐராவதம் மகாதேவ ஐயர் நிறுவுகிறார்; அவற்றைப் படித்துக் காட்ட ஒருவருமில்லை; ஆனாலும் அவை இன்றைய மொழியின் வரி அமைப்புகளுக்கே ஆதாரமாக விளங்குகிறது;

    உதாரணமாக சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்ட‌ ரிக் வேதம் கிபி 400ல் தான் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்; ஏனெனில் எழுத்துக்கள் உருவாக ஆதாரமாக இருந்த அசோகனின் “ப்ரம்மி” எழுத்துக்களே கிமு 400 வாக்கில் தான் உருவானது; அதிலிருந்து இந்தி மொழிக்கு ஆதாரமான தேவநாகரி எழுத்துக்கள் கிபி 400 உருவாக அதைக் கொண்டே சமஸ்கிருதத்தில் வழங்க்ப்பட்ட ரிக் வேதமானது புனையப்பட்டிருக்கவேண்டும்; இவையே திரு.ஐராவதம் மகாதேவ ஐயர் அவர்களின் வாதமாகும்; இதன்படி சிந்துசமவெளி நாகரீகம் அழியும் தருவாயில் துவங்கும் அதாவது நுழைந்த ஆரிய கலாச்சாம் தானே சிந்துசமவெளி நாகரீகத்தின் அழிவுக்கும் காரணமாக இருந்திருக்கவேண்டும்;
    மற்றபடி பத்தாயிரம் வருடம் என்ன ஒரு கோடி வருட முன்பதாக இராமயணமோ அல்லது எந்த ஆரிய வேதமும் எழுதப்பட்டதாக இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பிருந்து சொன்னாலும் அதையும் கூட அதில் வரும் சம்பவங்கள் மூலம் எளிதாக நிரூபிக்கலாமே; அப்படி ஏதாவது ஆதாரங்களைக் காண்பித்தால் அகில உலக அகழ்வாராய்ச்சி கழகத்தின் தலைவராக நியமிக்க நாமே சிபாரிசு செய்வோம்;

    என் வீட்டில் திருடு போய்விட்டது; அந்த நேரத்தில் எங்கிருந்தும் யாரும் வந்திருக்க முடியாத நிலையில் எனது நண்பன் ஒருவன் என் வீட்டிலிருந்தான்; நான் யாரை முதலில் சந்தேகப்படுவேன்?

    ஒன்று என் நண்பன் அந்த திருட்டை நிகழ்த்தியிருக்க வேண்டும் அல்லது அவன் அறிய யார் இதனைச் செய்தவன் என்பதை அவனே சொல்லவேண்டும்; அவன் சொல்லமாட்டான்; ஏனெனில் அந்த சம‌யத்தில் அவன் மட்டுமே அங்கே இருந்தான்; இதுவே சிந்துசமவெளி நாகரீகத்துக்கும் நிகழ்ந்திருக்க்வேண்டும்;

    (இன்னும் வரும்…)

    {Please Post this Important Reply…Thank You.}

  64. ச‌கொத‌ர‌ர் ஆரிய‌ தாச‌ன் அவ‌ர்களே, நீங்க‌ள் ச‌ம‌ஸ்கிருத‌ மொழி பெரும்பாலும் பேச்சு மொழியாக‌வே இருந்த‌தை வைத்து அந்த‌ ஒரு க‌ருத்தின் அடிப்ப‌டையிலே உங்க‌ள் பார்வையின் கோண‌த்தை முக்கிய‌மாக‌ வைத்து இருக்கிறீர்க‌ள். அதே நேர‌ம் ம‌ஹா பார‌த‌த்தை வியாச‌ர் கூற‌ வினாய‌க‌ர் என்பார் எழுதிய‌தாக‌ சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌து. ஓலை சுவ‌டிக‌ள் கரையான் போன்ற‌ பூச்சிக‌ளால் அழிவுறும் என‌க் க‌ருதி, ம‌ன‌திலே ம‌ன‌ன‌ம் செய்து காக்கும் முறையை கைக் கொண்டு எழுதும் முறையை நிறுத்தி இருக்க‌லாம் -‍இது ஒரு அனுமான‌ம் மாத்திர‌மே.

  65. ச‌கொத‌ர‌ர் ஆரிய‌ தாச‌ன் அவ‌ர்களே,

    ந‌ன்றி.

    1) நீங்க‌ள் ச‌ம‌ஸ்கிருத‌ மொழி பெரும்பாலும் பேச்சு மொழியாக‌வே இருந்த‌தை வைத்து அந்த‌ ஒரு க‌ருத்தின் அடிப்ப‌டையிலே உங்க‌ள் பார்வையின் கோண‌த்தை முக்கிய‌மாக‌ வைத்து இருக்கிறீர்க‌ள். அதே நேர‌ம் ம‌ஹா பார‌த‌த்தை வியாச‌ர் கூற‌ வினாய‌க‌ர் என்பார் எழுதிய‌தாக‌ சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌து. ஓலை சுவ‌டிக‌ள் கரையான் போன்ற‌ பூச்சிக‌ளால் அழிவுறும் என‌க் க‌ருதி, ம‌ன‌திலே ம‌ன‌ன‌ம் செய்து காக்கும் முறையை கைக் கொண்டு எழுதும் முறையை நிறுத்தி இருக்க‌லாம் – இது ஒரு அனுமான‌ம் மாத்திர‌மே.

    2)இந்த‌ ரிக் வேத‌ம் , இராமாயண‌ம் இவ‌ற்றுக்கான‌ கால‌ க‌ட்ட‌ங்க‌ளை எப்ப‌டி முடிவு செய்கிறார்க‌ள்? சும்மா குன்ஸா ஒரு கால‌த்தை சொல்கிறார்க‌ள் – அதாவ‌து ஜெர்மானிய‌ர்க‌ள் தான் ச‌ரியான‌
    ஆரிய‌ர் என்று உல‌க‌ம் ஒப்புக் கொள்ள‌ வேண்டிய‌ வ‌கையிலே , ஜெர்மானிய‌ரின் “ஆரிய‌ப்” பெருமைக்கு ஏற்றார் போல‌ இங்கே இந்திய‌ வ‌ர‌லாற்றின் காலை செதுக்குகிறார்க‌ளோ என‌ ஐய‌ம் உண்டாகிர‌து.
    ஏதாவ‌து ச‌ரியான‌ ஆதார‌ம் இருக்கிர‌தா என்று சொல்லுங்க‌ள், தெரிந்து கொள்கிரேன்.

    புத்த‌ரின் கால‌ம் என்ன‌? கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு. அவ‌ர் பிற‌க்கும் போது இந்தியாவிலே முழு அளவிலே, வேள்விக‌ள் ஆழ வேரூன்றி இருந்த‌ன‌ என்ப‌து ந‌ம‌க்கு தெரியும். அந்த‌ வேள்வீ முறையை எதிர்த்து செய‌ல் ப‌ட்ட‌து புத்த‌ரின், அவ‌ர‌து சீட‌ர்க‌ளின் முக்கிய‌ வேலையாக‌ இருந்திருக்கிறது. அந்த‌ அளவுக்கு வேள்விக‌ள் இந்திய‌ ச‌மூக‌த்தில் ஆழ வூன்றி இருந்த‌ன‌.

    அப்ப‌டியானால் அவைக‌ள் ச‌முதாய‌த்தில் வேர் பிடிக்க‌ எவ்வ‌ள‌வு கால‌ம் ஆகி இருக்கும். வெறும் ஆயிர‌ம், இர‌ண்டாயிர‌ம் வ‌ருட‌த்திலே இந்த‌ வேள்விக‌ள் வேர் பிடிக்க‌ இய‌லுமா? இந்திய ச‌மூக‌த்திலே வேள்விக‌ளின் தாக்க‌ம் இன்னும் உள்ள‌து.

    I found that the supporting theories for Aryan invasion are very week. At the same time, the Theory that the Aryans were the original habitants of India, has a strong and compelling Logic and evidences in proof of that. I will keep writing about them.

    My earlier projection //ஆரிய‌ர்க‌ள் சுவிட்ச‌ர்லாந்திலே அல்ல‌து ருஷியாவிலே அல்ல‌து ம‌த்திய‌ ஆசியாவிலே எப்ப‌டி வாழ்ந்தார்க‌ள், ஒரு ச‌மூக‌மாக‌ உருவானார்க‌ள் ‌ என்ப‌து ப‌ற்றி ஒரு வார்த்தை கூட‌ உல‌க‌ வ‌ர‌லாற்றின் ப‌க்க‌ங்களில் இல்லையே? // stands well !

    Even if The Aryans had not recorded the Diaspora (which is very strange), The world history could not left unnoticed the development of such a vIbrant soceity out side India, before the “invasion” period.

    There is not an iota of refrerence or findings about the development of Aryan Soceity outside India. Any Thing?

    I will post other angles in the next comments.

    Before I finsh,

    my brother Aryadasan, I request you to not use the word “நமஸ்காரம்” to me.

    If you can treat me as your brother or friend, I will be very happy!

    Thanks.

  66. ஆரியப்படையெடுப்பை எதிர்த்தவர்கள் முதலில் மேல்நாட்டவர்கள் அல்ல. இந்திய ஞானிகளான விவேகானந்தர், அரவிந்தர், அம்பேத்கர் ஆகியோர்தாம். இரண்டாவதாக ஆர்.பிஷ்ட், பி.பி/லால், அக்ரவால், எஸ்.ஆர்.ராவ் என பல இந்திய அகழ்வாராய்ச்சியாளர்களும் இக்கோட்பாட்டை எதிர்த்துள்ளனர். பொய்யென நிரூபித்துள்ளனர். எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞரைக் கூட சாதி பெயரால் பேசும் ஒரு இனவெறியாளனிடம் பேச எதுவுமில்லை.

  67. திரு. அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் அவ‌ர்க‌ளே,

    அவ‌ர் சாதிப் பெய‌ர் சேர்த்திருக்க‌ வேண்டாம்.

    ஆனால் அத‌ற்க்கு இவ்வ‌ள‌வு ஆவேச‌ம் தேவையா?

    க‌னி இருப்ப‌க் காய் கவர‌ வேண்டிய‌து அவ‌சிய‌மா?

    இப்ப‌டி கோப‌ப் ப‌ட்டால், நீங்க‌ள் எப்ப‌டி இந்துக்களை இணைக்க‌ப் போகிறீர்க‌ள்?

    எப்ப‌டி இந்தியாவை உருவாக்க‌ப் போகிறீர்க‌ள்?

    அவ‌ர் வேறு இன‌ம், நீங்க‌ள் வேறு இன‌மா?

    அவ‌ர், நான், நீங்க‌ள் எல்லோரும் ஒரே இன‌ம் தானே?

    அதுதானே உங்க‌ள் கட்டுறையின் க‌ருத்தும்?

    வில்லில் இருந்து விடுப‌ட்ட‌ அம்பையும், வாயில் இருந்து வ‌ந்த‌ சொல்லையும் திரும்ப‌ பெற‌ முடியுமா?

  68. திருச்சிக்காரரே, அவர் சாதிப்பெயரை சொன்னதால் எனக்கு கோபம் வரவில்லை. எந்த வித அடிப்படை அறிவும் இல்லாமல் உளறிக்கொண்டிருக்கிறார் அவர். இந்த லட்சணத்தில் ஒரு ஆராய்ச்சியாளரை சாதிப்பெயர் சொல்லி அழைக்கவேண்டிய அவசியமென்ன? இவர் ஏதோ ஆரியர்கள் வேறினம் தாங்கள் வேறினம் என நினைக்கும் இனவெறியாளர்கள். ஒருவன் இனவெறியாளனாக இருப்பதற்கு இனக்கோட்பாடு உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லையே அவன் தன்னுடைய மடத்தனத்தினாலோ அல்லது சிந்திக்கும் திறனில்லாமையாலோ அந்த கோட்பாடு உண்மையென பகுத்தறிவில்லாமல் ஈவெரா போல நம்பினால் போதுமே…

  69. நான் அதிக‌ம் சொல்ல‌ விரும்ப‌வில்லை திரு. அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் அவ‌ர்க‌ளே,

    ஆனால் எப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌ன‌ ம‌ய‌க்க‌த்தையும் நீக்கி அறிவை உண‌ர்த்த‌ தேவையான‌ உண்மைக‌ள் ந‌ம்மிட‌ம் உள்ள‌ன‌.

    அவ‌ர் சிந்திக்க‌ கூடிய‌வ‌ர் என‌ நினைக்கிறேன்.

    ஆதி ச‌ங்க‌ர‌ர் ப‌ல‌ பேருட‌ன் வாத‌ம் செய்து உண்மையை உண‌ர்த்தி இருக்கிறார். விவேகான‌ந்த‌ரா நாத்தீக‌ராக‌ இருந்த‌வ‌ர்.

  70. // ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞரைக் கூட சாதி பெயரால் பேசும் ஒரு இனவெறியாளனிடம் பேச எதுவுமில்லை. //

    நேசமிகு கட்டுரையாளருக்கு,
    வருத்தத்துடன் கூடிய வணக்கங்கள்; நான் இனவெறியாளன் கிடையாது;
    எனது ஆசிரியரின் நினைவாகவே நான் “ஆரியதாசன்” ஆனேன்;

    நான் கவனித்த வரலாற்று ஆசிரியரான திரு.ஐராவதம் மகாதேவன் ஐயர் அவர்கள் நம் நாட்டவர் என்றே அவர் பெயரைக் குறிப்பிட்டேனே தவிர அவருடைய இனத்தினை உள்நோக்கத்துடன் குறிப்பிடவில்லை;

    அவருடைய புத்தகத்தினை நீங்களும் வாசித்திருப்பீர்கள்; அதிலேயே அவருடைய பெயர் “திரு.ஐராவதம் மகாதேவன் ஐயர்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது; மேலும் அவருடைய இனம் உயர்வானது தானே, அவரைத் தாழ்த்தி எதுவும் கூறவில்லையே..!

    தவறு இருப்பின் உணர்த்தவும்,கடிந்துகொள்ளவேண்டாம்..!

    (இணையதளத் தொடர்பு இல்லாததால் உடனே பதிக்கமுடியாமைக்கு வருந்துகிறேன்; எனது இனிய நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றிகள்; இணைந்து தேடுவோம், முத்துக்கள் கிடைக்கலாம்..!)

  71. இன்றும் ஈரானியர்கள் தாங்கள் தான் ஆரியர்கள் என்றும், இந்தியர்கள் தங்களுடையதும் திராவிடர்களினதும் கலப்பினால் வந்தவர்கள் என்றும் வாதாடுகிறார்கள்.
    ஈரானிய சரித்திர ஆராய்ச்சியாளர்களையும், அவர்களின் சரித்திரத்தையும் பொய் என்று நிருபிக்கப் படவேண்டிய பொறுப்பு

    https://www.iranchamber.com/history/article…ple_origins.php

    ஈரான் என்று இன்று அழைக்கப்படும் Persia. PErsia என்ற சொல்லிற்கு Persian அல்லது Farsi மொழியில் Land of Aryans என்று அர்த்தம்.Hindi, Urudu, Farsi Persian போன்ற மொழிக்கிடையிலான ஒற்றுமைகள் தொடர்புகளை விவாதிக்க வேண்டிய தேவையிருக்காது என்று நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *