‘நிஜம்’ – சன் டிவியின் உண்மையான முகம்

காசி மஹாத்மியம்

வடக்கே இமயம், தெற்கே ராமேஸ்வரம், கிழக்கே புரி, மேற்கே துவாரகை என்று நம் பாரத தேசமே ஒரு புண்ணிய பூமியாக இருக்கிறது. இந்தப் புண்ணிய பூமியின் நடுவே இருக்கிறது புண்ணிய நதியாம் கங்கை பிரவாஹமாக ஒட்டிக்கொண்டிருக்கும் காசி மாநகரம்.

“ஸாதாரணமாக எந்த க்ஷேத்ரத்தின் ஸ்தல புராணத்தைப் பார்த்தாலும் ‘இது காசிக்குச் சமமானது; அல்லது காசியை விட உசந்தது’ என்றே இருக்கும். இப்படி ஒரு க்ஷேத்ரத்தை மற்ற எந்த க்ஷேத்ரத்தோடும் ‘கம்பேர்’ பண்ணாமல் காசியோடேயே எல்லா க்ஷேத்ரங்களையும் ஒப்பிட்டிருப்பதாலேயே காசி தான் க்ஷேத்ர ராஜா என்று தெரிகிறது. இப்படியே மற்ற புண்ய தீர்த்தங்களைப் பற்றிய புராணங்களிலும் அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு உசத்தி சொல்லாமால், அந்தந்த நதியைப் பற்றி ‘இது கங்கா துல்யமானது’ அல்லது ‘கங்கையை விட விசேஷமானது’ என்று தான் சொல்லியிருக்கும். இதனாலேயே கங்கை தான் தீர்த்தங்களில் தலைசிறந்தது என்று ‘ப்ரூவ்’ ஆகிறது”. (காஞ்சி மஹாஸ்வாமிகள்- தெய்வத்தின் குரல் – ஏழாம் பகுதி – பக்கம் 832)

வடமாநிலங்களில் உள்ளவர்கள் தென் பகுதிகளுக்கும், தென்மாநிலங்களில் உள்ளவர்கள் வடப் பகுதிகளுக்கும் க்ஷேத்ராடனம் போவது நம் தேசத்தில் தொன்று தொட்டு வரும் ஆன்மீகக் மரபு. இந்த கலாசாரமே பல மொழிகள் பேசும், பல பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கும் நம் தேச மக்களின் ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாக விளங்குகிறது. உதாரணமாக ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்த (கடல்)மண்ணை எடுத்துச் சென்று பிரயாகையில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கரைத்து, பின்னர் அங்கிருந்து கங்கை நீரை எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, காசி ராமேஸ்வரம் ஆகிய இரண்டு தலங்களிலும் பித்ருக்களுக்கு சிராத்தம், தர்ப்பணம் ஆகியவை செய்து முடித்த பின்னரே காசி-ராமேஸ்வர க்ஷேத்ராடனம் பூர்த்தியடைகிறது. இவ்வாறு ஆன்மீகத்திலும் கலாசாரத்திலும் பின்னிப்பிணைந்து மக்களை ஒற்றுமையாக வைத்திருப்பதே இந்து மதம் என்கிற சனாதன தர்மம்.

kumaraguruparaபாவலரும் நாவலரும் பண் மலரக் கண்மலரும்
காவலரும் ஏடவிழ்க்கும் காசியே – தீ வளரும்
கஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம்
அஞ்சக் கரத்தான் அகம்

– குமரகுருபரர் (காசிக் கலம்பகம்)

முதல் இரண்டு அடிகளில், ஏடவிழ்க்கும் (இதழ் விரிக்கும்) அலர்களையும் (பூக்களையும்),  தங்கள் ஏடவிழ்க்கும் (சுவடிகளைத் திறக்கும்) நாவலர்களையும் குறிக்குமாறு  இரு பொருள்பட அமைந்த அழகிய பாடல் இது.  தென் தமிழ் நாட்டில் பிறந்த குமரகுருபரர் காசி சென்று சைவ மடம் அமைத்தார்.

காசித் தலத்தின் பெருமைகளைக் கூறும் காசிக் கலம்பகம் என்ற அழகிய நூலையும் எழுதினார்.

காசி க்ஷேத்திரத்தின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். காசி நகரத்தின் வடக்கு திசையிலிருந்து வரும் “வருணா” நதியும், தெற்கு திசையிலிருந்து வரும் “அசி” நதியும் கங்கை நதியில் கலக்கின்றதால் “வாரணாசி” என்றும் அழைக்கபடுகிறது. பகவான் மஹாதேவர் தன்னுடைய திரிசூலத்தின் மேல் கால்களை வைத்து நின்று இந்தக் காசி நகரத்தைப் படைத்தார் என்று நம்பப் படுகிறது. ஆகையால் எந்த ஜந்துவும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம்.

மேலும் பகவான் ஆதி சங்கரர் தன் அத்வைத ஸ்தாபனத்தை இங்கிருந்தே ஆரம்பிக்கிறார் என்று சொல்லலாம்.   அன்றைய சமூக அடுக்கில் தாழ்ந்திருந்த சண்டாளனிலும்  பிரம்மத்தைக் காண வேண்டும் என்ற நடைமுறை அத்வைதம் சங்கரரின் மெய்யுணர்வில் உருவானது இந்தத் தலத்தில் தான்!   அந்த உபதேசத்தைத் தனக்கு நல்கிய சண்டாளனையே குருவாகப் போற்றி அவர் “மனிஷா பஞ்சகம்” என்ற துதியை அருளியதும் காசியில் தான்!

பார்க்க: மனிஷா பஞ்சகத்தின் தமிழ் வடிவம் :  சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது

ஆன்மீகத்தின் மூலமாகவும், கலாசாரத்தின் மூலமாகவும் நம் தேசத்தின் ஒருமைப்பாடு காக்கப் படுவதற்கு காசி-காஞ்சி நகரங்களின் தொடர்பும், கங்கை-காவிரி நதிகளின் தொடர்பும் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன.

“காசிக்கும் காஞ்சிக்கும் நடுவே ஆயிரம் மைலுக்கு மேல் இருக்கிறது. காசியில் அன்னபூரணி விசேஷம். காஞ்சீபுரத்திலும் ஜகன்மாதா 32 தர்மங்களைப் பண்ணும் போது அன்னதானம் பண்ணியிருக்கிறாள். காமாக்‌ஷி ஆலயத்தில் கர்ப்ப கிருஹத்தின் நுழைவாசலுக்கு நேரே அன்னபூர்ணேச்வரிக்கு ஸந்நிதி இருக்கிறது. அதன் விமானத்தில் தக்ஷிண தேசத்தில் வேறே எங்கேயும் இல்லாத விதத்தில் ஆறு சிகரங்கள் இருக்கின்றன. ஏன் இப்படி இருக்கிறது என்பதற்குப் பதில் காசியில் கிடைக்கிறது! காசியில் அன்னபூரணி விமானத்தில் இதே மாதிரி ஆறு சிகரங்கள் இருக்கின்றன. அதன் அச்சாகத்தான் இங்கே ஆயிரம் மைல் தாண்டிக் காஞ்சியிலும் இப்படி இருக்கிறது! சின்ன விஷயங்களில் கூட இவ்விதம் தேசத்தின் வெவ்வேறு கோடிகளில் உள்ள ஸ்தலங்களில் ஒற்றுமையிருப்பதால் க்ஷேத்ர ஐதிஹ்யங்களை லேசாகத் தள்ளி விடுவதற்கில்லை என்று தெரிகிறதல்லவா?” – (காஞ்சி மஹாஸ்வாமிகள்- தெய்வத்தின் குரல் – இரண்டாம் பகுதி – பக்கம் 745-746)

காசியின் பெருமைகள்

மேற்கண்ட பழம்பெருமை வாய்ந்த புராண மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் மட்டுமல்லாமல், மேலும் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமைகளும் இடங்களும் காசி நகரத்திற்கு உண்டு. காசி விஸ்வநாதர் கோவில், கால பைரவர் கோவில், அன்னபூர்ணேஸ்வரி கோவில், விசாலாக்‌ஷி கோவில், துர்கை கோவில், சங்கட் மோட்சன் ஹனுமான் கோவில், துளசிமனாஸ் மந்திர், பாரத மாதா கோவில், கிரி ஸ்வாமி பாஸ்கரானந்த் சமாதி, என்று பல ஆலயங்கள் உள்ளன. மேலும் புண்ணிய நதியாம் கங்கையும் அதன் கரையில் உள்ள ஹரிசந்திர கட்டம், சிந்தா கட்டம், தசாஸ்வமேத கட்டம், மணிகர்ணிகா கட்டம், பஞ்சகங்கா கட்டம், ஆகிய கட்டங்களும், கங்கை நதியைப் பூஜை செய்து வழிபடும் அற்புதமான ‘ஆரத்தி’ வழிபாடும் மிக முக்கியமானவை.

திருத்தசாங்கம் என்று ஒரு சிற்றிலக்கிய பிரபந்த வகை உண்டு..   ஒரு தலத்தின் இறைவனை (அல்லது ஒரு நாட்டின் மன்னனை/அரசியை)  முன்வைத்து அவனது நாமம், நாடு, நகர், கொடி, மலை, ஆறு என்று பத்து அம்சங்களைச் சிறப்பித்து வெண்பாக்களாகப் பாடும் பாடல் வகை.   இந்தப் பாடல் வகையில் பாரதமாதாவை முன்வைத்து  மகாகவி பாரதி  “பாரத தேவியின் திருத்தசாங்கம்”  என்று  பாடியிருக்கிறார்.  அதில், பாரத தேவியின் நகராகவும், ஆறாகவும் எவற்றைக் கூறுகிறார் தெரியுமா?

இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? – சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.

வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! – நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.

மேலும், காசி மன்னரின் அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனாரஸ் பல்கலையில் உள்ள கோவில், சாரநாத் நகரம், சாரநாத் புத்தர் கோவில், தாமெக் ஸ்தூபி, அருங்காட்சியகம், இலங்கை ஆளுனர் ஜப்பானிய முறைப்படி கட்டிய முல்காஞ் குடி விஹார், அதனருகில் அசோகச் சக்ரவர்த்தி புத்த கயாவிலிருந்து அனுப்பிய போதி மரம், 23-வது தீர்த்தங்கரரான பர்ஸ்வனாத் பிறந்த இடத்தில் உள்ள ஜெயின் கோவில், சீனர் கோவில் மற்றும் சாரநாத் மஹாதேவர் கோவில் ஆகியவையும் இருக்கின்றன.

தமிழ் இந்துக்களின் அறியாமை

ganga_aarti_at_varanasi_ghatsநம் தமிழ் இந்துக்களைப் பொறுத்தவரை பெரும்பான்மையானவர்கள் “காசி யாத்திரை” என்று கேள்விப் பட்டிருப்பார்களேயன்றி, காசி நகரத்தின் மஹாத்மியத்தைப்பற்றிப் பலர் அறிந்திலர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சொல்லப்போனால் சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே, நாத்திகம் தலைதூக்க ஆரம்பித்ததிலிருந்து, திராவிட இனவெறியாளர்கள் தங்கள் விஷப் பிரசாரத்தினால் தமிழ் இந்துக்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தின் எல்லை தாண்டினால் தமிழனுக்கு மதிப்பில்லாமல் செய்துவிட்டார்கள். ஆரிய-திராவிட கட்டுக்கதை, ஸம்ஸ்க்ருத விரோதம், இந்தி எதிர்ப்பு, வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுடனும் சண்டை சச்சரவுகள் என்று தமிழர்களை குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்களாக, கிணற்றுத் தவளைகளாக வைத்திருக்கின்றார்கள்.இதன் பயன் பெரும்பான்மையான தமிழ் இந்துக்கள் இந்து மதத்தின் பாரம்பரியமும், கலாசாரமும், மகத்துவமும், விசேஷங்களும் தெரியாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இம்மாதிரியன சூழலில் அனைத்து அமைப்புகளுக்கும் தமிழ் மக்களை நல்ல வழியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி நடத்திச் செல்லும் பொறுப்பு இருக்கின்றது. ஊடகங்களுக்கும் அப்பொறுப்பு உண்டு. தேசப்பற்றும், சமூகப் பொறுப்புணர்ச்சியும் உள்ள ஊடகங்களாக இருந்தால் அவ்வாறு தான் செய்யும். ஆனால் தமிழகத்து ஊடகங்களில் பெரும்பான்மையானவை நாத்திக, இடது சாரி சிந்தனைகள் உடையவையாக இருக்கின்ற காரணத்தால், இந்து கலாசாரத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றன. ஊடகங்களின் அத்தகைய செயல்பாட்டிற்கு உதாரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் சொந்தங்களினால் (மாறன் குடும்பத்தினர்) நடத்தப்படும் “சன் டிவி” நிறுவனத்தைச் சொல்லலாம்.

சன் டிவி முன் நிறுத்திய காசி

“சன் நியூஸ்” தொலைக்காட்சியில் “நிஜம்” என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும்பான்மையாக இந்து ஆன்மீக, கலாசார, பழக்கவழக்கங்களை கேவலமாகச் சித்தரித்து, பார்வையாளர்கள் மனதில் இந்து மதத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்தி, இந்து மதத்தின் உன்னதமான கலாசாரத்தை அவர்கள் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது சன் டிவி. கிராமங்களிலும், வனவாசிகளிடத்திலும் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கைகளை தூற்றி, எள்ளிநகையாடி, மூடநம்பிக்கைகள் என்று ஏளனம் செய்து, இந்து மதம் அறிவியல் கோட்பாடுகளுக்கு சற்றும் ஒத்துவராத மதம் என்று பார்வையாளர்கள் மனதில் குழப்பங்கள் விளைவித்து வருகின்றது இந்நிறுவனம்.

இதன் தொடர்ச்சியாகவே சென்ற மாதம் தொடர்ந்து நான்கு பகுதிகளாக காசி நகரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பியது சன் டிவி. “நிஜம் – காசி நகரத்தின் உண்மையான முகம்” என்று சன் நியூஸ் சானலில் அந்நிகழ்ச்சியை முன்நிறுத்தியது. அதே நிகழ்ச்சியை தற்போது சன் டிவியிலும் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது. ஒரு மாதத்திற்குள்ளாக அந்நிகழ்ச்சியை இரண்டாவது முறையாக ஒளிபரப்பு செய்வதிலிருந்தே சன் நிறுவனத்தின் தீய நோக்கம் தெளிவாகிறது. சென்னையிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்கு ஒரு படக்குழுவினரை அனுப்பிய சன் டிவி, அங்கே படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வந்து தமிழர்களுக்குப் பின்வருமாறு அவதூறு செய்து காசிநகரத்தைக் காட்டியது.

  • நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முதியவர்கள் மரணத்தை எதிர்நோக்கியே காசி வருகிறார்கள். மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவர்களுக்காகவே இங்கு பல மடங்கள் இருக்கின்றன.
  • கங்கை நதிக்கரையில் பிணங்களை எரிக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன. பிணங்கள் கங்கை நதியிலும் மிதக்கவிடப்படுகின்றன. 24 மணி நேரமும் கங்கைக் கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. மேலும் காசி நகரத்தில் எந்த திசையில் திரும்பினாலும் சிதைகள் தான் எரிந்து கொண்டிருக்கின்றன.
  • கங்கைக் கரை முழுவதும் ‘அகோரிகள்’ எனப்படும் பிணம் தின்னும் சாமியார்கள் வாழ்கிறார்கள். அவர்கள் 24 மணி நேரமும் கஞ்ஜா, அபின் முதலிய போதை பொருட்களை உட்கொண்டு போதையிலேயே இருக்கின்றார்கள். நடு இரவில் உடலெங்கும் திருநீறு பூசி, எரியும் சிதையிலிருந்து மாமிசம் எடுத்துச் சாப்பிடுகிறார்கள்.
  • காசி நகரத்து இளைஞர்களும், வெளியூர்களிலிருந்து வரும் இளைஞர்களும் காசியில் சுலபமாகக் கிடைக்கும் போதைப் பொருட்களை வாங்கி போதைக்கு அடிமையாகிறார்கள்.
  • புனித நதி என்று சொல்லப்படும் கங்கை அசுத்தம் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த அசுத்த நதியில் குளித்தால் பாவம் தீர்ந்து மோட்சம் கிட்டும் என்றும், இங்கு வந்து திவசம் செய்வதால் முன்னோர்களின் ஆன்மா சந்தியடைந்து அவர்களின் சாபம் தீரும் என்றும் நம்பி ஏராளமான இந்துக்கள் காசி நகரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சன் டிவி காட்டாமல் மறைத்த விஷயங்கள்

கங்கைக் கரையில் கட்டங்கள் பல இருப்பதை நாம் மேலே பார்த்தோம். அவற்றில் ஹரிச்சந்திர கட்டம் என்பது உண்மையிலேயே பிணங்கள் எரிக்கப்படும் இடம் தான். இங்கு தான் ஹரிச்சந்திரன் சுடுகாட்டின் காவலனாக இருக்கும் போது அவன் மனைவி சந்திரமதி இறந்து போன அவர்களின் மகனுக்கு ஈமக் கிரியைகள் செய்ய வருகிறாள். எனவே தான் அந்த இடத்திற்கு ஹரிச்சந்திர கட்டம் என்று பெயர் வந்தது. இந்து மத சாஸ்த்திரப்படியே இறந்தவர்களின் உடலை எரித்த பின்னர் அவர்களின் அஸ்தியை கடலிலோ, நதியிலோ கரைப்பது வழக்கம். மேலும் கங்கை பாவங்களைப் போக்கும் புண்ணிய நதி என்ற நம்பிக்கை இருப்பதால் அங்கு வந்து பிணங்களை எரித்து அஸ்தியைக் கரைப்பதென்பது சாதாரணமான விஷயம். இதை ஏதோ ஒரு கேவலமான விஷயம் போல சித்தரித்தது சன் டிவி. கங்கைக்கரையில் நடத்தப்படும் புண்ணியம் மிகுந்த பித்ரு காரியங்களையோ, யாத்ரீகர்கள் கங்கா மாதாவிற்குச் செய்யும் பூஜைகளையோ, தினமும் அந்தி சாயும் நேரத்தில் அற்புதமாக நடக்கும் ஆரத்தி வழிபாட்டையோ சன் டிவி காட்டவில்லை.

அதற்கு நேர்மாறாக நடு இரவில் அகோரிகள் அலைந்து திரிந்து போதை வஸ்துக்களை உட்கொள்வதைக் காட்டினர். அகோரிகள் என்பவர்கள் ஒரு காலத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. காபாலிகர்கள் என்பவர்களைப் பற்றியும் நாம் படித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை. தலை முடி வளர்த்துக்கொண்டு, உடலெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, சதா சர்வ காலமும் போதை ஏற்றிக் கொண்டு இருக்கும் “நாகா” சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களும் பிரயாகை என்று சொல்லப்படும் அலகாபாத்தில் தான், அதுவும் கும்ப மேளா சமயத்தில் தான் இருப்பார்கள். பிறகு தங்கள் இடங்களுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் அவர்கள் சன் டிவி காட்டியதைப் போல் உடையணிந்தவர்கள் அல்ல. நிர்வாணச் சாமியார்கள். மேலும் அவர்கள் பிணம் தின்பவர்கள் அல்ல. சன் டிவியிலும் ஒரே ஒருவரைத் தான் பிணம் தின்பதைப்போல் காட்டினார்கள். ஆனால் அவர் சாமியாரைப் போலல்லாமல் மொட்டைத் தலையராக இருந்தார். நெற்றியிலோ உடலிலோ திருநீறும் பூசியிருக்கவில்லை. மேலும் அவர் எரியும் சிதையருகே உட்கார்ந்து கொண்டு ஏதோ மாமிசம் ஒன்றை (ஆடோ, கோழியோ, ஏதோ ஒன்று) தின்பது போல் காட்டினார்களே ஒழிய, சிதையிலிருந்து அவர் நர மாமிசத்தை எடுத்து சாப்பிடுவதாகக் காட்டவில்லை.

காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பக்கம் தப்பித் தவறி கூட படப்பிடிப்புக் குழு செல்லவில்லை. கங்கையில் நடக்கும் பூஜை வழிபாடுகளைக் காண்பிக்கவில்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காட்டவில்லை. காசி நகரம் எவ்வளவு சிறந்த கல்விச்சாலையாக இருந்திருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. பாரத தேசத்தின் ஆன்மீகம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை சிறக்க காசியை ஆண்ட மன்னர்கள் எவ்வளவு சேவைகள் செய்துள்ளார்கள் என்பதைச் சொல்லவில்லை. அங்கு உள்ள விஸாலாட்சி கோவில் நம் தமிழகத்தைச் சேர்ந்த நகரத்தார்களால் அருமையாக நிர்வாகம் செய்யப் படுகின்ற நல்ல விஷயத்தைப் பற்றிச் சொல்லவில்லை சன் டிவி.

முகலாயர்கள் எவ்வாறு காசி நகரத்தை அழித்தார்கள் என்றும், காசி விஸ்வநாதர் ஆலயம் போன்ற ஏராளமான ஆலயங்களை அவர்கள் எவ்வாறு அழித்தார்கள் என்பதைச் சொல்லவில்லை. இன்றும் விஸ்வநாதர் ஆலயத்தின் நந்தி மசூதியைப் பார்த்தவண்ணம் நின்றிருப்பதே முகலாயர்கள் ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கி அவ்விடத்தில் மசூதியைக் கட்டியுள்ளார்கள் என்பதற்குச் சரியான சாட்சி என்பதைச் சொல்லவில்லை.

காலம் சென்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் இஸ்லாமியராக இருந்தாலும் கங்கை நதியையும், விஸ்வநாதர் ஆலயத்தையும் எவ்வாறு போற்றினார் என்கிற மத நல்லிணக்கத்துக்கு உதாரணமான உண்மையைச் சொல்லவில்லை. அம்மத நல்லிணக்கத்தை உடைகும் விதமாக, சங்கடங்களைத் தீர்த்து மோட்சம் அளிக்கும் சங்கட் மோட்சன் ஹனுமான் கோவிலிலும், காசி ரெயில் நிலையத்திலும் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எவ்வாறு குண்டு வைத்துத் தாக்கினர் என்று காட்டவில்லை.

தங்களுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத கங்கைக் கரையில் கிளை அலுவலகம் அமைத்து “மிஷநரீஸ் ஆஃப் சாரிடி” அங்கு வாழும் ஓடக்காரர்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றுவதைப் பற்றி விளக்கவில்லை. இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி பெரிதும் இன்றியமையாதது. எனவே அவ்வாறு ஓடக்காரர்களை மதம் மாற்றுவதன் மூலம் இந்துக்களின் முக்கியமான ஆன்மீக கலாசார நிகழ்வுகளை அடியோடு அழிக்க நினைக்கிறார்கள் கிறுத்துவ மிஷநரிகள் என்கிற உண்மையை சன் டிவி சொல்லவில்லை.

கங்கை நதியின் அசுத்தத்திற்கு ஏதோ இந்துக்கள் தான் காரனம் என்பது போன்று சித்தரிக்கிறது சன் டிவி. அங்கு உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட அரசாங்கம் செய்து தரவில்லை என்பதைச் சொல்லவில்லை. கங்கைக் கரையை ஒட்டியுள்ள பனாரஸ் பட்டுத் துணிகள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் சாயக்கழிவுகளை கங்கை நதியில் கலக்கவிடுவதைக் காட்டவில்லை. கரையில் உள்ள விடுதிகளிலிருந்து கழிவுகளும் நதியில் கலப்பதைக் காட்டவில்லை. கங்கையைச் சுத்தம் செய்வதற்காக அரசு செலவிடும் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் அரசியல் வாதிகளின் வங்கிகளை நிறப்புவதைப் பற்றிச் சொல்லவில்லை.

சாரநாத் சென்று அங்கே தழைத்தோங்கிய புத்த மதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அங்கேயுள்ள சைவ, பௌத்த, ஜைன ஆலயங்களைக் காட்டவில்லை. புத்த கயாவிலிருக்கும் அதே போதி மரம் அங்கும் இருப்பதைக் காட்டவில்லை. சீனக் கோவில்களைக் காண்பிக்கவில்லை.

சன் டிவியின் ரகசிய குறிக்கோள்

வெறும் பிணங்கள் எரிவதையும், பிச்சைக்காரர்களைச் சாமியார்களாகவும், அந்திம காலத்தில் நிம்மதியாக இறைசேவை செய்பவர்களை மரணத்தைத் தேடி வந்தவர்களாகவும், சித்தரித்து இந்து மதத்தைக் கேவலப் படுத்துவதற்காகவே சன் டிவி ஒரு குழுவை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்கு அனுப்பியுள்ளது. புண்ணிய ஸ்தலமான காசியையும், புண்ணிய நதியான கங்கையையும், சிறுமைப் படுத்தி, அவற்றைப் பார்வையாளர்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன், மீண்டும் மீண்டும் பிணங்களையும், போதை ஏற்றும் பிச்சைக்காரர்களையுமே காட்டி, அது தான் உண்மையான காசியின் நிஜ முகம் என்று மக்களை ஏமாற்ற முயன்றுள்ளது சன் டிவி நிறுவனம். அயோக்கியத்தனமான அம்முயற்சியில் ஹிந்துக்களின் ஆன்மீக, கலாசார உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது இந்த அழுக்கு நிறுவனம். இது மிகக்கடுமையாகக் கண்டிக்கப் படவேண்டிய ஒரு விஷயம்.

சன் டிவியிடம் சில கேள்விகள்

* இந்து மத பழக்கவழக்கங்களை அவமதிப்பு செய்து அவற்றைப் பற்றி அவதூறாக சித்தரித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதைப் போல் மற்ற மதங்களில் நடக்கும் அசிங்கங்களையும், அராஜகங்களையும் ஏன் நிஜம் நிகழ்ச்சியில் காண்பிப்பதில்லை?

* காசி நகரத்தின் மறு பக்கம் என்று காண்பிப்பதைப்போல், நாகூரின் மறுபக்கம் என்றோ வேளாங்கன்னியின் நிஜ முகம் என்றோ காண்பிக்கத் தைரியம் இருக்கிறதா?

* ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்குச் சென்று படம்பிடித்த மாதிரி, இதோ சில நூறு மைல்களே தள்ளியுள்ள கேரளத்திற்குச் சென்று அங்கு உள்ள சர்ச்சுகளில் பாதிரிமார்கள் நடத்தும் லீலாவினோதங்களைப் பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த தைரியம் இருக்கிறதா?

* ஒரு கன்னியா ஸ்த்ரீயே எழுதியுள்ள “ஆமென்” என்ற புத்தகத்தில் உள்ள உண்மையான நிகழ்வுகளைப் படம் பிடித்து ஒளிபரப்பலாமே? கத்தோலிக்க சர்ச்சின் நிஜ முகம் அல்லது கத்தோலிக்க மதகுருமார்களின் மறு பக்கம் என்று காண்பிக்கலாமே?

* அதே கேரளம் தான் இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்து வருகிறது. அதைப் பற்றி ஒரு ‘நிஜம்’ நிகழ்ச்சி காட்டலாமே? மதரசாக்களில் என்ன நடக்கிறது என்று படம் பிடிக்கத் தைரியம் இருக்கிறதா?

* அம்மாநிலத்தில் நடக்கும் ‘லவ் ஜிகாத்’ பற்றிப் பல வாரங்கள் தொடர்ந்து நிகழ்ச்சி செய்யலாமே? அதற்குத் தைரியம் இருக்கிறதா?

* ஏன் கேரளத்திற்குச் செல்ல வேண்டும்? சென்னையிலேயே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஏராளமான கிறுத்துவ அனாதைக் குழந்தை விடுதிகளிலும், பெண்கள் காப்பகத்திலும் நடக்கும் பாலியல் வன்முறைகளைக் காண்பிக்கும் தைரியம் இருக்கிறதா? அங்கு நடக்கும் ஊழல்களையும், அங்கு வந்து தங்கும் வெளிநாட்டினர் அந்த அனாதைப் பெண்களையும் குழந்தைகளையும் எவ்வாறு சித்திரவதை செய்கின்றனர் என்று காட்டலாமே?

* யோபு சரவணன் போன்ற, அப்பாவி மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய, பாதிரிகளைப் பற்றி ஒரு நிஜம் நிகழ்ச்சி செய்யலாமே?

* காசியின் மறுபக்கத்தைப் போல் மதுரையின் மறுபக்கத்தைக் காட்டத் தைரியம் இருக்கிறதா? மதுரையில் நடக்கும் அரசியல் அராஜகங்களைக் காட்ட வேண்டியது தானே? தங்களின் நிறுவன அலுவலகத்தையே கொளுத்தி மூன்று அப்பாவிகளைக் கொன்றார்களே! பேருக்கு சி.பி.ஐ. விசாரணை என்று சொல்லி ஒரே மாதத்திற்குள் ஜாமினில் வெளிவந்து, இப்போது அனைவரும் விடுதலையாகி சுதந்திரமாக வெளியில் உலவுகிறார்களே! இவர்கள் அந்த மூன்று அப்பாவிகளை ஏன் கொன்றார்கள்? யார் சொல்லிக் கொன்றார்கள்? சாட்சிகள் ஏன் மனம் மாறினார்கள்? அவர்கள் மிரட்டப் பட்டார்களா? இதையெல்லாம் ‘மதுரையின் நிஜ முகம்’ என்று காண்பிக்க வேண்டியது தானே? தாக்கப் பட்டது சன் டிவி அலுவலகம் தானே? இறந்து போனவர்கள் சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த தினகரன் அலுவலகத்தில் வேலைப் பார்த்தவர்கள் தானே? கொலைகாரர்கள் விடுதலையானவுடன் உயர் நீதி மன்றத்தில் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இதையெல்லாம் பற்றி நிஜம் நிகழ்ச்சி நடத்துவது தானே?

கண்டிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும்

விஜய் டிவியில் ’நீயா நானா’ நிகழ்ச்சியிலும், ‘நடந்தது என்ன’ நிகழ்ச்சியிலும் எவ்வாறு ஹிந்துக்களைப் புண்படுத்துகிறார்களோ, அதே போல் தான் சன் டிவி மற்றும் ஏனைய சானல்களிலும் செய்கிறார்கள். விஜய் டிவிக்கு எதிராக வலுவான கண்டனம் பதிவு செய்யப் பட்டது.  அதே போல் சன் டிவிக்கு எதிராகவும்  கண்டனம் பதிவு செய்யப் பட வேண்டும். நிஜம் போன்ற நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். அந்நிகழ்ச்சிகளை விளம்பரம் மூலம் ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.  இத்தகைய எச்சரிக்கைகள் பயனளிக்காவிட்டால்  அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை/சேவைகளை முற்றிலும் புறக்கணிப்போம் என்ற நிலைப்பாடு  எடுக்க வேண்டும்.

நம் கண்டனத்தையும் எதிர்ப்பையும் மடல்கள் மூலமும் தொலை பேசி மூலமும் தெரிவிக்க வேண்டும்.

சன் டிவியின் முகவரியும், தொலைபேசி எண்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Sun Network Corporate Office
4, Norton Road,
Mandaveli, Chennai-28
Tamil Nadu, India.
Phone No: 044-24648181
Fax: 044-24648282 Fax us at: 91-44-24648250

email: queries@sunnetwork.in, queries@sunnetwork.in

மேலும் “கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் ரூல்ஸ், 1994” – இன் படி கொடுக்கப்பட்டுள்ள “நிகழ்ச்சி மற்றும் விளம்பர விதி-6” – இன் கீழ் சொல்லப்பட்டுள்ள நெறிகளை மீறுவதாக இந்த நிகழ்ச்சி இருப்பதால், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு நாம் புகார் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரிகள்:

mib.inb@sb.nic.in , psmib.inb@sb.nic.in , msib.inb@sb.nic.in , psmsib.inb@sb.nic.in

மேலும் அமைச்சகத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே.

ஹிந்துக்களைப் புண்படுத்துவதையே தலையாய கடமையாகச் செய்துகொண்டிருக்கும் ஊடகங்களை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். சகித்துக் கொண்டு அமைதி காப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. நாளைய தலைமுறை நமது கலாசாரத்தையே இழந்து அந்நிய கலாசாரத்தில் உழன்று அழிந்து போவதைத் தடுக்கவேண்டும் என்றால் இன்றைய தலைமுறை விழித்து எழவேண்டும்!

77 Replies to “‘நிஜம்’ – சன் டிவியின் உண்மையான முகம்”

  1. Very good article. Every Tamil Hindu person should come with sharp words against Sun TV and Vijay TV for such programmes.

  2. ஐயா!… நான் இறப்பாலும், வளர்ப்பாலும் ஹிந்துவாக இருக்கிறேன். இருப்பினும் உங்களுடைய இந்த ’என் குறையை சொல்லக்கூடாது’ என்ற மனப்பான்மையை வெறுக்கிறேன். ஹிந்துவாக இருப்பது முக்கியமல்ல… முதலில் நல்ல மனிதராக இருக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

    [edited and published]

  3. /////இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி பெரிதும் இன்றியமையாதது. எனவே அவ்வாறு ஓடக்காரர்களை மதம் மாற்றுவதன் மூலம் இந்துக்களின் முக்கியமான ஆன்மீக கலாசார நிகழ்வுகளை அடியோடு அழிக்க நினைக்கிறார்கள் கிறுத்துவ மிஷநரிகள் என்கிற உண்மையை சன் டிவி சொல்லவில்லை//////

    மேலே குறிப்பிடப்பட்டிருப்பது யாருக்கும் தெரிந்திருக்க முடியாத மிக பயங்கரமான உண்மை. இந்துக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

    திருவான்மயூரில் நடைபெற்று வரும் இந்து சமய கண்காட்சியில் இதை ப்ரிண்ட் செய்து விநியோகித்தால் ஒரு பலன் கிடைக்கும்.

    என்னால் முடிந்தது 28 பேருக்கு இது வரை இந்த தகவலை அளித்திருக்கிறேன். இந்துக்களின் எழுச்சி அழுத்தமாகவும் வேகமாகவும் இருக்க வேண்டிய அவசியத்தை இந்த கட்டுரை வலியுறுத்துகிறது.

  4. Thank you for the wake up call contained in the above article. I too felt strongly about
    this mudslinging exercise of the Sun TV. As usual, the mainstream media never even bother to point out this act of hurting the sentiments of the vast majority of Hindus. I will shortly
    send my complaint to the Minister of I&B as suggested by you. But I doubt very much if any
    corrective action would be taken.

  5. My humble request to all visitors to this website is please encourage Jaya TV. It is the only tv channel that does not hurt sentiments and feelings of any religion. Vijay and Kalaignar TV are pro christian and it is onlyJaya tv that gives carnatic music kutcheris and magazhi season’s best viewed and rated concerts. So, please encourage the channel to do more service.

  6. திருச்சிற்றம்பலம்

    இன்ன்னிகழ்சி பற்றிய விளம்பரமே என் மனதைப் புண்படுத்திவிட்டது. இவ்வாறு வெளிப்படியாகவே நிகழ்ச்சியி பெயரை வைத்து விளம்பரம் செய்து நிகைசியை ஒளிபரப்பும் வகையில் இத்தகைய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடம் கொடுத்துக்கொண்டு மக்கள் இருக்கும் வரை இவர்களைத் தடுக்க எவரும் இல்லை.

    நான் என் கண்டனத்தை அத்தொலைக்காட்சி நிறுவத்திற்கும், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கும் என் கண்டனத்தைத் தெரிவித்துவிட்டேன்.
    நீங்கள்?

    திருச்சிற்றம்பலம்.

  7. என்ன தான் எதிர்ப்புகள் வந்தாலும், மட்டமாக விமர்சித்தாலும், யாரும் உயர்த்தி பிடிக்காமல் இருந்தாலும்….இந்து மதத்தின் பெருமை வளர்ந்து கொண்டே தான் செல்கிறது, கொஞ்சம் கூட குறைந்ததை போல தெரியவில்லை.

    யாரும் வளர்க்காமலே தானாகவே உயரும் மதம் இந்து மதம் தான்.

    சன் டிவி போன்றவர்கள் தலைகீழாக நின்றாலும் இதன் பெருமையை எக்காலத்திலும் குலைக்க முடியாது.

    நீங்கள் அவர்களிடம் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இருக்காது.

    நான் இந்து வெறியன் இல்லை என்றாலும் அவசியமில்லாமல் இவ்வாறு தூற்றும் போது கோவம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

  8. இது சன் டிவி மட்டும் அல்லாமல் வேறு பலரும் சம்பந்த பட்டுள்ள சதி சில நாட்களுக்கு முன்பு காசியின் உண்மை முகம் என்று ஒரு மின்னஞ்சல் பரப்பப்பட்டு வந்தது அதிலும் காசியில் எரியும் பிணங்களின் படத்தை போடு காசியை பற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக முயன்றனர்

  9. மனம் கொதித்துப் போக வைத்த நிகழ்ச்சி. நாங்களும் காசிக்குச் சென்று பத்துநாட்கள் தங்கி இருந்திருக்கிறோம். வழிகாட்டி யாருமில்லாமல் தனியாகவே பல இடங்களுக்குச் சுற்றி அலைந்து பார்த்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சி திட்டமிட்டு எடுக்கப் பட்ட ஒன்று என்பதையும் அறிய முடிகிறது. . ஆனாலும் எங்கள் உறவினரே இதை நம்பிக்கொண்டு என்னிடம் வந்து இதைப் பற்றி விசாரித்ததில் இருந்து இதன் தாக்கம் மிகவும் மோசமாக மக்களிடம் சென்றிருக்கிறது என்பதும் புரிய வருகிறது. என்னைப் பொறுத்த வரையிலும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்க்காமலே தவிர்த்துவிடுவேன். ஆனால் இவற்றைப் பார்த்தால் தான் உண்மை தெரியும் எனச் சிலர் நம்புகிறார்களே???? அதை நினைத்தால் வருத்தமாய் இருக்கிறது. தனியார் தொலைக்காட்சிகள் வந்ததுக்கு அப்புறமாவே நம்முடைய கலாசாரம், பண்பாடு, சகிப்புத் தன்மை, நன்னடத்தை அனைத்திலும் மாற்றங்கள், மாற்றங்கள், மாற்றங்கள். அந்த ஆண்டவன் தான் காப்பாற்றணும்:(((((((((((

  10. இருபது வருடங்களாக கிறிஸ்தவராக இருந்து தாய் மதம் திரும்பிய ஒரு இளைஞரின் பெருமூச்சும் சுதந்திர காற்றும் இந்த வீடியோவில் காணலாம்.

    https://www.youtube.com/watch?v=dkvdtzk1pbo

    அன்புடன்.
    ராம்

  11. இந்தியாவை வெளியுலகத்தார் பாமரதேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக்கருவிகள் பல. முதலாவது, கிறிஸ்துவப் பாதிரி. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிக ள், தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படிட் தாழ்ந்து போய் மகட்தான அநாகரிக நிலையில் இருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மடத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்டைச் செய்வதாகச் சொல்லுகிறகள்.
    இந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்த்ரிகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷர்களை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறர்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலெ இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை. Barathiyar, கட்டுரை- மதிப்பு

    Now Dravidian Politicians and their TV does the same.

    There are more than 3000 branches in Christianity and growing every day.

  12. Actually I have an Idea and would like to propose this to the TamilHindu editors.. To make Hindus vigilant and aware of whats happening around them, is it possible that you do like a exhibition something like what Mr Francois Gautier does. It is called Fact-India. We can set up this kind of exhibitions in temples. So that anyone who comes to temple, have the chance to spot and read articles like this and know what is happening around them. Can you get any support from Hindu Organisation from Tamil Nadu for funding? Or you need Donations? I find Mr Francois Gautier Fact-India a very effective way to let hindus know whats happening. Its not necessary that this exhibitions must have alot of drawings like those on Mr Francois Gautier. We can’t just keep talking and discussing on the internet. WE HAVE TO DO SOMETHING.Just think about it the temple is the only place where alot of people come including ladies and uncles…. So this kind of exhibitions will definitely catches their attention and they will read it…… Come on guys, we have to do the something…..
    Does anyone have any other suggestions? You can check these site of Mr Francois Gautier here……
    https://www.fact-india.com/

  13. நாம் மறுமொழிகளாக மட்டும் நம் கண்டனத்தையும் எதிர்ப்பையும் கட்டினால் போதாது.. இதற்கும் அப்பாற்பட்ட ஊடகங்கள் வழியாகவும் நாம் நம் கண்டனத்தையும் இத்தகைய நிறுவனங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்..

    இக்கட்டுரையைப் பார்த்தவர்கள் மட்டும் அல்லாமல் மற்றவர்களும் தங்கள் கண்டனத்தை இத்தகைய நிறுவனங்களுக்கு எதிராகத் தெரிவிக்க ஒரு ஊடகம் மற்றும் வாய்ப்பு வேண்டும்..

    திருச்சிற்றம்பலம்.

  14. I WELCOME THIS ARTICLE AS REAL HINDU,WHATEVER YOU HAVE GIVEN IS CENT PERCENT CORRECT,THE SUN TV AND VIJAY TV SHOULD CHANGE THEIR STYLE OF PROGRAMS.THESE TV’S JUST THEY HURT THE FEELINGS OF HINDU’S ONLY.SINCE THE HINDU CULTURE ONLY HAVE THE FREEDOM TO TELL ANYTHING,IF WE LOOK INTO REST OF THE RELIGION THEY VERY NARROW AND NEVER ALLOWS THIS TYPE OF COMMENTS.THESE TV’S THEY WORK FOR THE POLITICAN’S INDIRECTLY LIKE DMK.THESE TV’S DON’T HAVE THE GUTS TO COMMENT ANY CHISTIAN OR MUSLIM RELIGIONS.YESTERDAY IN A MEETING THE KARNATAKA CHIEF MINISTER HAS GIVEN ONE MESSAGE THAT” ALL OF THE HINDU RELIGION SHOULD COME UNDER ONE ROOF WHICH WILL UNIT THIS NATION AS ONE .” WE HAVE TO FORM ONE ORGANISATION LIKE THIS TO SECURE OUR RELIGION AND NATION AS SOON AS POSSIBLE.I HATE SUN TV AND VIJAY TV.WE HAVE TO DO SOMETHING VERY URGENT TO CREATE SOME AWARENESS IN THE PUBLIC,AS MR.KRESHNA SAID WE HAVE TO WORK URGENTLY TO EXPLAIN THE PEOPLE WHAT IS GOING AROUND US?. JAI HIND………………….

  15. `முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

    முன் ஏரின் கோணல் வழிக்கு ஓர் எடுத்துக்காட்டு:

    `தொடர்ந்து பரப்பப்படும் பச்சைப்பொய்…!’

    https://nanavuhal.wordpress.com/

  16. //ஆரிய-திராவிட கட்டுக்கதை, ஸம்ஸ்க்ருத விரோதம், இந்தி எதிர்ப்பு, வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுடனும் சண்டை சச்சரவுகள் என்று தமிழர்களை குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்களாக, கிணற்றுத் தவளைகளாக வைத்திருக்கின்றார்கள்.இதன் பயன் பெரும்பான்மையான தமிழ் இந்துக்கள் இந்து மதத்தின் பாரம்பரியமும், கலாசாரமும், மகத்துவமும், விசேஷங்களும் தெரியாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்//

    அருமையான நிதர்சனமான தமிழ் ஹிந்துக்களின் உண்மை நிலையை எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி

    மேலும் இது போன்ற ஊடகங்களின் தவறான வழிகாட்டுதல்களை கூடுதல் மக்கள் அறியும்படி செய்ய வேண்டும். அதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும்.

  17. ம‌ற்றுமொரு கவ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்,

    விஜய் டிவி மேலெ குறிப்பிட்ட‌ நிக‌ழ்ச்சியில்,
    ந‌ட‌ந்தது என்ன‌ என்று சொல்லி விட்டு, ஒரு யோகா ப‌யிற்சியில் இருப்ப‌வ‌ரை
    பேட்டி எடுத்து அவ‌ர‌து ந‌ம்பிக்கையை கேலி செய்வ‌து போல் கேள்விக‌ள்
    கேட்க‌ப்ப‌டுகிற‌து. மேலும் எல்லா விள‌ம்ப‌ர‌மும் ந‌ட‌ந்தது என்ன‌ (குற்ற‌மும் அத‌ன் பின்ன‌னியும்)
    என்றே சொல்கிற‌து, பெரும்பாலான‌வை ந‌ம்பிக்கையை குறி வைத்தெ செய்ய‌ப்ப‌டுகிற‌து.

    ஒவ்வொரு வ‌ரின் ந‌ம்பிக்கையை குற்ற‌ம் என்று சொல்ல‌ இவ‌ர்க‌ள் யார்?

    எல்லாரும் விழிப்பாக‌ செய‌ல்ப‌ட‌ வேண்டிய‌ நேர‌ம் இது.

    ந‌ன்றி,

    ச‌ஹ்ரித‌ய‌ன்

  18. We cannot keep any exibition in temples because they are with Government.

    Secondly we should oppose the Tamil Magazines also.

    1. Kumudam:

    It has 3 publications. Kumudam Bhakthii and Jyodidam will glorify Hinduism and Kumudam Reporter will degrade Hinduism

    2. Vigadan: same – Sakthi Vigadan for Hinduism and Junior Vigadan for Hindu hate.

    Shameless groups. They take pride in their heritage.

    We should also condemn this publication prostitution.

    regards

  19. திரு கிருஷ்ணன் அவர்கள் கூறியது மிகவும் சரி. அணைத்து கோவில்களிலும் நுழைவாயில் அருகில் இதை போன்று ஒரு ஏற்பாடு செய்ய பட வேண்டும். இதனை யார் செய்வது? இது மிகவம் அவசரம் மற்றும் அவசியம். இந்துக்கள் நாம் யாரிடமும் வம்புக்கு செல்ல வேண்டாம். ஆனால் ஏமாறாமல் இருக்க வேண்டும்.
    ராம்நாத்

  20. Very good article.
    It is really the pot calling the kettle black!! When the channel bosses are in government, directly or indirectly, and they have not been able to clean up the Couum, Buckingham Canal or many water bodies make the cremation grounds all over the city and state clean and pleasant places, they are talking about the known most ancient in civilization, Kasi that has washed many a sin of such people. As long as there is positive journalism, it is welcome. When it become slandering then it is deplorable.

    The Hindus have been taking the heap of slander about their lives, religion and beliefs lying low for many years now. It is indeed shameful that the majority population with an ancient and cultured past are being gradually marginalised in this country. It is indeed commendable that you have publicised this matter.

    Padmini Natarajan

  21. இந்த கட்டுரையை படிக்கும் போது ஏற்கனவே சன் டிவி ஒளிபரப்பிய நிஜம் நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. மேல்மலையனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயிலை படம் பிடித்துக்காட்டி ஆண்டு தோறும் மாசி மாத திருவிழாவின் போது இடுகாட்டில் இறந்தவர்களின் சாம்பல் திருநீறாக தரப்படுகிறது என்று சொன்னதோடு நிற்காமல், கிண்டலாக மற்றும் ஏளனமாக “ஒவ்வொரு திருவிழாவுக்கு முன்பாக யாரவது ஒருவர் சாகடிக்கப் படுகிறார் என்றும், மேல்மலையனூர் மட்டுமல்ல திருவண்ணாமலை மாவட்டமே காத்திருக்கிறது இறந்தவர்களின் திருநீற்றைப் பூசிக்கொள்ள” என்று ஒளிபரப்பினார்கள்.

    இதுபோல் இந்துக்களின் புனிதத்தலமான காசியைக் கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. அர்த்தமுள்ள இந்துமதத்தினை படைத்திட்ட கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்த மண்ணில் இது போன்ற வூடகங்கள் அவதூறான செய்திகளை ஒளிபரப்புவது வெட்கப்படவேண்டிய நேரம். இந்த வூடகங்கள்
    முஸ்லிம், சீக்கிய, கிருஸ்துவ மத தலங்களை பற்றி வர்ணித்தார்களேயானால் பின் விளைவுகள் என்ன என்பதை புரிந்து கொள்வார்கள்.

    இக்பாலுடன் இனியபயணமாய்
    காசிக்கு…
    கிருஸ்துமஸ் விடுமுறையில்!

    என்று மத நல்லிணக்கத்திற்காக ஒரு ஹைக்கூ கவிதையை எழுதிய எனது பேனா முனைகள் தங்கள் கட்டுரையை படித்தபோது மனம் பதரிப்போனது.

    இந்து தர்மம் பன்னெடுங்காலமாக வேரூன்றியது. மனிதத்தின் வாழ்வியல் கோட்பாடுகளில் எழுதப்பட்ட ஆன்மீகப் பாடல்கள், இதிகாசங்கள், புராணங்கள்
    இன்றும் அர்த்தமுள்ளவையாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
    சக்தி வாய்ந்த வூடகங்கள் அதுவும் சன் தொலைகாட்சி போன்ற வூடகங்கள் இனிமேலும் இந்துக்களின் மனம் புண்படும்படியாக நிகழ்சிகளை ஒளிபரப்பாதீர்கள். இதிகாசம், புராணங்கள் மனிதவள மேம்பாடுகள் அடங்கிய, சரித்திர சான்றுகள் அடங்கிய, என்றும் வாழக்கூடிய புத்தகங்கள் என்று சொல்வதைவிட அவை பொக்கிஷங்கள் என்றே கூறலாம்.

    புதிய தலைமுறைகள் இன்றைய அவசர, இயந்திர உலகில் தங்கள் மதத்தின் புனிதத்தையும், வரலாற்றையும் அறிந்துகொல்லாத நிலையில் இருக்கும் போது, இம்மாதிரி தவறான கருத்துக்களை அவர்கள் மனதில் விதைக்காது, நல்வழியில் நல்ல எண்ணங்களோடு வாழ வழிநடத்துங்கள்
    என்று சன் தொலைக்காட்சியினரை கேட்டுகொள்கிறேன்.

    அன்புடன்,
    கா.ந.கல்யாணசுந்தரம்.

  22. இந்தக் கட்டுரையின் ஆசிரியர் தமிழ்செல்வன். ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பதிப்பிக்கையில் ”தமிழ்இந்து.காம் நிர்வாகம் & ஆசிரியர் குழு” என்று வந்து விட்டது.

    இப்போது தவறு சரிசெய்யப் பட்டுவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம்.

  23. Sir,
    This article is very good. i Welcome such kind of articles to enlighten the HINDUS.
    The Sun network is not telecasting the HINDU SANKARA Channel which is also
    a free channel. This channel is a devotional one. We made a several requests
    to the Sun network. But it all gone to the deaf ear of the network.
    We must condem such attitude. One of the readers view is very correct.
    They wont dare to telecast other religion’s nature. We hindu must unite!

  24. A timely mail to one and all making awareness about the atrocity committed to Hindus and Hindu Religion. Hope WE ALL HINDUS STAND WITH UNITY AND INTEGRITY TO FIGHT AGAINST THEM AND GET JUSTICE TO OUR SANADHANA DHARMA.

  25. Can you please make an English translation and circulate it as the readership will dramatically increase. Many Hindus will not be able to read this article in Tamizh. The protests can then be sent to Sun TV all through the year and force them to rethink their stand.

    In all probability the material is sourced from Christian supported media like NDTV, CNN etc. I doubt whether they sent their camerapersons. I do not view the program as a narrow propaganda against only the Tamilians. It is aimed against the entire Hindu community.

    Prof N Natarajan

  26. It is really a very good article & info. every Hindu should know and object such media telecasts. I too strongly object Suntv & vijai tv for telecasting such programmes & record my objection. sivakumaran

  27. என்னுடைய கட்டுரையில் ஸ்ரீ குமரகுருபரர் ஸ்வாமிகளின் காசிக்கலம்பகப் பாடலையும், மஹாகவி பாரதியாரின் பாரததேவியின் திருத்தசாங்கம் பாடலையும் சேர்த்து, மனிஷா பஞ்சகத்தின் தமிழ் வடிவையும் இணைத்து பெருமை சேர்த்த தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள், பாராட்டுகள்.

    மேலும் இந்தக் கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மறுமொழி தந்துள்ள, தரப்போகின்ற, அனைவருக்கும் நன்றி. இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பதிவு இரண்டு பகுதியாக விஜய்வாணி ( http://www.vijayvaani.com ) தளத்தில் உள்ளது. அவற்றிற்கான இணைப்பைக் கீழே கொடுத்துள்ளேன்.

    https://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1003

    ‘NIJAM’ (TRUTH): The true face of SUN TV-I

    https://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1004

    ‘NIJAM’ (TRUTH) – The true face of SUN TV-II

    Thamizhchelvan

    அனைவரும் தங்கள் எதிர்ப்பை சன் டிவி நிறுவனத்திற்குத் தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    நன்றி, அன்புடன்

    தமிழ்செல்வன்.

  28. ஊடகங்களின் இந்த வெட்கங்கெட்டத்தனம் பலருக்குப் புதியதாய் இருக்கலாம். 1998ம் ஆண்டு பொதுததேர்தலின் போது பத்திரிக்கை நிருபரான நண்பருடன் ஜனதாகட்சித் தலைவர் திரு சுப்ரமண்யம் ஸ்வாமியின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு சென்றிருந்தேன். மிகவும் சுவராஸ்யமான சந்திப்பு. மிகத் திறமையான “பொருளாதார மேதையும்(! ?) தற்போதைய” தெலுங்கான புகழ்” உள்துறையமைச்சருமான ப. சிதம்பரம அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட அதைப்பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்டார். திரு ஸ்வாமி அவர்கள் அவருக்கே உரித்தான பாணியில் பதிலளித்தார். அன்று மாலை வெளிவந்த ஒரு மாலைப்பத்திரிக்கையில் “சிதம்பரம் ஒரு முட்டாள்” சுப்ரமண்யம் ஸ்வாமி காட்டமானத் தாக்கு” என்று செய்தி வெளியிட்டது. இரண்டொரு நாட்கள் கழித்து அந்தப் பத்திரிக்கையின் நிருபர் திரு ஸ்வாமியின் கூட்டத்துக்கு வந்தார். ஸ்வாமியும் அந்த நிருபரை அழைத்து செய்தி வெளியிட்டவிதம் குறித்து அதிருப்தி தெரிவித்தார். பரபரப்புக்காக அவ்வாறு வெளியிட்டதாக நிருபர் தெரிவித்தார். அடிப்படைப் பண்புகள் இல்லாமல் மனம் போனப் போக்கில் செய்தி வெளியிடுவது சரியல்ல என்று திரு ஸ்வாமி சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு கூட்டத்தைத் தொடர்ந்தார். இந்தப் பத்து வருடங்களில் பல “முன்னேற்றங்கள்” ஊடகத்துறையில் வந்துவிட்டன. ஒழுக்கக் கேடுகளையும் கலாச்சார சீரழிவுகளையும் “நவ நாகரிகம்” எனக்காட்டி காசு பொறுக்கும் கும்பல்கள் “மீடியா மாபியா “கள் தான் நமது கலாச்சாரக் காவலர்கள். என்ன செய்வது? காலம் கலி காலம் .

  29. Kasi was sought to be belittled by film industry!!
    “They come with foreign money to make a film which shows India in poor light because that is what sells in the west.”
    But they sell it even India. Shame on us.
    ———————————————————————-
    The day before filming was due to begin, the crew was informed that there were a few complications with gaining location permits. The following day we were greeted with the news that 2,000 protesters had stormed the ghats, destroying the main film set, burning and throwing it into the holy river. Protesters burnt effigies of Deepa Mehta, and threats to her life began. There were three main political/religious parties leading the angry mob: the BJP( Bharatiya Janata Party), the VHU (Vishwa Hindu Parishad), both well established groups within the state of Uttar Pradesh; and the KSRSS (Kashi Sanskrit Raksha Sangharsh Samiti), a party formed overnight from the RSS (Raksha Sangharsh Samiti) specifically targeting Deepa Mehta. The KSRSS claimed their role was as the guardians of the culture of Varanasi and came forward with threats of violence against her. The head of the RSS approaching press with statements to support this:

    “Breaking up the sets was far too mild an act, the people involved with the film should have been beaten black and blue. They come with foreign money to make a film which shows India in poor light because that is what sells in the west. The west refuses to acknowledge our achievements in any sphere, but is only interested in our snake charmers and child brides. And people like Deepa Mehta pander to them.” (The Week magazine, India, Feb 13th, 2000
    https://www.brightlightsfilm.com/28/water.html

  30. Hi All,
    We all feel shame but SUN TV will feel Good bcos their main aim is to make the youngsters NOT TO BELEIVE IN GOD who go to temple regularly & worship God. It’s also their parties aim but their own family ladies will go to these temples & pray GOD for the welfare of their family persons & OWN WEALTH. They make people முட்டாள்.
    Please all HINDUS bcom ONE & UNITE overselves to make those people முட்டாள்.

  31. ம்ம்ம் எவனோ எந்த நாட்டிலோ சிலரை கூட்டி தீவிரவாதம் செய்தான் என்பதற்காக இந்தியாவில் உள்ள மதரசாக்களை ஒட்டுமொத்த,தீவிரவாத பயிற்சி கூடம் போல குற்றம் சாட்டும் போது,50% மேனும் உண்மை இருக்குமென்றே தோன்றுகிறது…

    இந்திய மதரசாக்களில் என்ன வன்முறை பயிற்சி நடக்கிறது என தாங்கள் சொல்லலாமே?அவர்கள்தான் பீதியில் இருக்கிறார்கள் என்கிறீர்கள்.சரி.உங்களுக்கென்ன.ஒருவேலை,மதரசாக்களை நாங்கள் நம்பியிருந்தால் அதில் எங்களுக்கு தெளிவு பிறக்குமே.

    நன்றி

    அன்புடன்
    ரஜின்

    (Comment edited & published)

  32. No Religion can boast about themselves or criticise other Religions or beliefs in any form in any place or media in Singapore. They are maintaining and violations are strictly monitored and action is taken. Why not India follow this? AT the same time, legal experts may examine if any action like PIL can be initiated against SUN TV for such or similar broadcasts hurting the feelings of Hindus and any good Samaritan can file the PIL. Let it be a parallel legal initiative along with the suggested protets and objections to the concerned media. V.Ramaswamy

  33. Excellent article by Shri. Tamizhselvan. The efforts by the electronic media to defame and de-Hinduise the common man should be dealt with stern resistance by each and every Hindu. Great work really.

  34. //திரு கிருஷ்ணன் அவர்கள் கூறியது மிகவும் சரி. அணைத்து கோவில்களிலும் நுழைவாயில் அருகில் இதை போன்று ஒரு ஏற்பாடு செய்ய பட வேண்டும். இதனை யார் செய்வது?//

    I second this.

  35. சன் டிவி நிறுவனத்துக்கும், தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கும் கண்டனங்களை அனுப்பியுள்ளேன்.

  36. As Mr Ramaswamy suggests, we must change our law akin to that in Singapore. But will our legislators listen?

    Next election, we must formulate this manifesto and declare that this group will vote only for the party which includes our wish list in their manifesto. Every True Hindu will subscribe to this group.

    Gurunathan RS

  37. kaasiyil naam kulikka chellum mudhal mukya kattangal palavatril neradiyaaga saakadai thaneer dam reservoiril irunthu kottum thaneer pol forceaga vanthu kalakkum. ithai yaavarume kan koodaga paarkalam. anaal kaasiyil agorigal ennum saamiyaargal irukkirargala ena teria villai. en enil kasiai inch by inch sutri paarta anubavam undu. kaasiyai asuththam sooznthu irunthaalum punitha thanmai maraathu. aanaal innum athirchiyootum sila vishayangal, canadavil irunthum, australia vil irunthum vantha oru araichi kuzhu kaasiyil odum gangai nathiyil irukkum nallathaie erpaduthum oru sila neer vaazh janthukkalin vaazhvu perum alavil paadhikapaduvathaium, kadal vaazh kodoora janthukkal sila gangai ponra nathigalil vaazha pazhagi kondu, nalla nathi vaazh janthukkalai azhithu thunpuruthu kinranavaam. ithanaal koodiya viraivil gangai nathiyin pala maruthuva gunangal matrum manithanukku erpadum nalla udal nilai maatrangalin thanmai aagiyavai perum alavil paadhikkapada koodiya aabathukkal ullana enru koori chendru irukkinranar. THE HINDU, GUJRATHI TIMES ponra naaledugal intha seithiyai veli itullana.

  38. matrapadi ganja,pinamthinnum koramum irupathaaga teriavillai. rishikeshathil gangaiyil kulikkumpothu soap or detergent ethuvume ubayogam seiya mudiathu. kadum thadai. meerinaal soap potti,powder dappa ponravatrai parimuthal seivaargal. 50-100 rs fine kattamal vanga mudiathu marupadium. kaasiyil kulikkavendum,pitru karyam seiya odathil eri maru karai senraal oralavukku nalla neeril kulikkalam. arasangathaiyo,athigaarigalaiyo angu kelvi ketka mudiyaathu. (inga mattum keka mudiuma enna ??? ).

    ayya rajin avargale…. hubli-dharwad karnatakavil ulla twin cities. angu cricket groundukku arugil irukkum madarasavukku thangal oru muraiyenum visit seiyavum. nan angu arugil ulla companyil 2 varudam velai paarthu ullen. angu madarasaaavil solli tharappadum mudhal paadam paakistaniar,afghanisthaniar namathu ratha sondhangal enbathu thaan. nuzhaivu vaiyil arugil kannadam,urdu irandilum ezhuthappatulla vasagangal “Kafir gal islathukku mara veiungal, illai enil avargal irukka vendam, ithu allavin aanai,nabigalin sattam ithu” …. enna sir nyayam ithu??
    “madarasaiye mugamatheeya” – thamizhagathin mayyamaam sirappalli maangaril iyangum aaramba pallikku thangalai per anbudan varaverkirom.

  39. ஹிந்து மதம் என்பது அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒரு இயக்கம். சன் T.V. போன்ற பிழைப்பு நடத்துபவர்கள், இது போன்ற தவறான யுக்திகளையும், தவறான செய்திகளையும் பரப்புவது ஒன்றும் புதிது அல்ல. எனவே இது பற்றி வீண் கலக்கம் அடைய தேவையில்லை.போற்றுவார் potralum,தூற்றுவார் துற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.

  40. நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னுடைய கண்டனங்களை தெரிவித்துவிட்டேன்.வரவேற்பில் இருப்பவர்களிடம் தெரிவிப்பது வீண் அதனால் நான் நிஜம் தொடர்பான அதிகாரியிடம் தான் பேசுவேன் என கூறி என்னுடைய கண்டனங்களை தெரிவித்தேன்.மினஞ்சல் அனுப்பியும் விட்டேன் அனால் தொலைபேசியில் தொடர்புகொண்டு கண்டனங்களை தெரிவிப்பது தான் சிறந்தது.

  41. indhu matham,inthu kovilgal enrellam nam vidiya vidiya pesinaalum, kandana kuralgal ezhuppinaalum sentru adiaium kaathugal vegu sila mattume. nam aalaya thooimai patri en evarume sinthipathu illai?? kovilgalin suttham matrum sugathaarathirku ISO certification kudukkum alavukku sentru vitathu inraia christuvavaatha congress-dmk kootani. hindukkalin kovil enna private limited company ya, illai share market il vilaiadum pangu ulla company vagaigalaa?. kovilgalukkuleie tharaa tharam, vetrumai paarkum izhivaana asingamana seiyalai namakkule teriaamaleiye valarthu vittu kondirukkirathu HR&CE board um. naam en aalaiya thooimai, aalaiathai chutriyulla sthala vruksham ponravatrai maranthom? kavithai ezhutalam, kandana e-mail anuppalam aanaal naam nammai patrium sirithalavenum edai pottu paarka vendum. seekiargal thangal amirthasaras kovilai suththam sugaatharam aagiyavatril sokka thangamaagave paarthu kolginranar. Aanal naam???. aiyo kovilil ore puravin kazhivu,durnaatram,kuppai enru sollikondu thaandi chelgirom. en thairiamaaga athai Devasthana office irko,HR&CE boardukko complaint seivathu illai?. mariyamman kovil thangam,madurai azhagar kovilukku virkapadugirathu? nanraaga gavanikkavum virka padugirathu.inthukkalin kaanikaaiyai etuthu,inthu kovilgalukkuleie vyaaparam? Tiruvallikeni kovil pushkaraniai chutri antha antha nakshatiram,raasikku uriya marangal,marakkanrugal nadapattu ullana. aanal pala paarampariamaana kovilgalil sthala vruksham enru peiyarukku iruntha ore marathaium vetti saithu ullanar. aio bavaniyilum,thaamiraparanilum kazhivu neer kalakkirathu, nellaiappar kovilai sutri ulla neer nilaigal asuthamaaga ullana! en nammil yaarum athai suttha paduthavo, devasthana board nirvaagathai kelvi ketkavo munaivathu illai?

  42. thirumalai theivam angu tharappadum arumaiaana prasaadathirku ISO certification enna, GI Geographical Identification enru attagaasamaaga nadanthu kondirukkirathu? nam kadavulukkum,kadavul prasaathathirkum,ISO,GI kkum enna sambantham. enna ithiluma Globalisation? veli naatavar potta pichai echil soraaga irunthaalum indhiyargalukku amirtham ena ninaika thoondum seialgal allava ivai. aalaya thooimai azhagar sevai, kovilai thooimaiyaaga veithirippom — pazhamaiana kalvettugalai maraithu oil paint adithu ezhuthinaal mattum pothuma? maha sivaraathri anrum,vaikunta ekadasi anrum kovilukkul paduthukonde nadu nisiyil yarukkum teriathu enru kovil mathil suvar arugil iyarkai upathai seivathu eppadi nyayam? evvalavo grama,perunagara kovil kulangal inru mary land real estate,anugraha apartments enru maari vittana. Iskcon kovil, thirupathi kovil ponra aalayangalin thooimai,nerthi en nammal seiia iyalaatha? thirupathi kovil sutramaippu thiruchiyil ulla uttamar kovil ponra amaiputhan. aainum suttham,sugathaaram en nammaal pena mudiavillai? intha azhagil tirupathi kovil,tirupathi district thamizhagathudan inaikapada vendum. en tirupathi iayum kudumba sotthaaga pangu poda venduma? thamizh hindu.com kovililum,kovil nagarangalilum sutru pura soozhal thoimai matrum mempaadu patri oru katturai veli idalame???

  43. nam makkal,nam kovil, nam iraiyvan enru koorumpozhuthu, nam aalaaya thooimai naam seithaal kuraivoma? en nam ilaingargalo, palli siruvargalo kooda ithai samooga nala thittamaaga seialame? kovilul ninru pan parag podupavargalaium, echil thuppubavargalaium,siruneer kazhipavargalaium thatti ketka mudiatha? itharku exnora,HR&CE board notice,thaniyaaga peon watchman poda venduma?

  44. கோவில்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று : அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
    நவம்பர் 12,2009,00:00 IST
    https://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14932
    பழநி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல, இரண்டாவது “ரோப் கார்’ (மோனோ கேபிள் ஜிப் பேக் முறை) அமைக்கப்பட உள்ளது. சோளிங்கரில் புதிதாக “ரோப் கார்’அமைக்கப்படும். இதற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் டெண்டர் விடப்படும். இவ்வாறு டெண்டர் பணம் எங்கே போகும்? இங்கு ஏன் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகல் மறந்து விட்டது?
    ஆதிதிராவிடர்கள் பகுதியில் உள்ள 1,000 கோவில் திருப்பணிக்காக, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் ஆதிதிராவிடர் கோவில்களுக்கு திருப்பணி செய்ய நிதி தரப்பட்டுள்ளது, என்றார். அறநிலையத்துறை கமிஷனர் சம்பத், கலெக்டர் மகேசன்காசிராஜன், ராஜசேகரன் எஸ்.பி., உடனிருந்தனர். இதுவும் ஒதுக்கீடா அல்லது அரசியல் ரீதியில் ஜாதி உணர்வுகளை காப்பாற்றிவைக்கும் சூழ்ச்சியா?
    “வெளியாட்களை நியமித்தல்” (Outsourcing) என்ற ரீதியில், இவர்களே புதிய கம்பெனிகளைத் தோற்றுவித்து அல்லது உள்ல கம்பெனிகளையே காசு கொடுத்து வாங்கிவிட்டு, அதன் மூலம் தமது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ள ஆரம்பிப்பார்கள். செக்யூரிடி கம்பெனிகள் பாதுகாப்பு அளிக்குமாம். பிறகு, யாராக இருக்கும் இந்த செக்யூரிடி கம்பெனிகள்? யார் அதில் பயிற்ச்சி கொண்டு, கோவில்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வருவர்? அதில் இந்துக்கள் அல்லாதவர்கள் கூட வரலாமே? ஏன் இத்தகைய வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தவுடனே “ஜிஹாதி தீவிரவாதிகள்” இன்று முதலே “இந்துக்கள்” போர்வையில் பயிற்ச்சி பெற்று கழகங்களின் கம்பெனிகள் மூலம் கோவில்களுக்குள் நுழைந்து விடுவார்களே?

  45. ரஜின் பாய் சொல்லிக்கினாரு:

    //இந்திய மதரசாக்களில் என்ன வன்முறை பயிற்சி நடக்கிறது என தாங்கள் சொல்லலாமே?//

    வன்மொற மட்டுமா கீது? பலான மேட்டரு கூட நடக்குது நைனா, அஆங்!

    Madrassa teacher held for sodomising, killing child

    30/12/2009 12:09:26 IANS

    Lucknow: A teacher was Monday arrested for killing a 12-year-old student after sodomising him at a madrassa (seminary) in Uttar Pradesh, police said.
    Maulavi Shahzad, 25, who sodomised and strangled the student at the Abrar Uloom Madrassa in Uttar Pradesh’s Muzaffarnagar district, some 350 km from Lucknow, was arrested from Bunta village.

    “Shahzad has admitted to committing the crime. He told us that he throttled the boy Sunday and later dumped his body in the fields of Bunta village,” police Inspector Yogesh Chaudhary told reporters in Muzaffarnagar.

    Police have also initiated an enquiry to ascertain whether other teachers or employees of the seminary were involved in the incident.

    “We have learnt that the teacher was sodomising the 12-year-old for the last few days and had threatened him of dire consequences if he told anyone about it,” said Chaudhary.

    https://news.in.msn.com/crimefile/article.aspx?cp-documentid=3486387&page=0

    இன்னா…வர்டா..

    மன்னாரு.

  46. சன் நெட்வொர்க்கில் சங்கரா சேனல் இருட்டடிப்பு செய்கிறார்கள் என்று ஒரு அன்பர் குறிப்பிட்டிருந்தார் இணையம் மூலம் சங்கரா சேனல் காண https://srisankaratv.net/

  47. நான் ஒரு inthu
    என்றுசொல்லிக்கொள்ல
    மிகவும்
    பெருமைபடுகிறேன்
    ஏன்
    எனில்.நமது
    மதத்தினஆணிவேர் புவியின்ஆழம்வரைநிலைபெற்றுள்ளதுஎனவே,மனிதனின்
    அறியாமையே
    மதமாற்றத்துக்குகாரணம்.

  48. அந்த மிஷனரிகளைவிட இந்த ‘விஷ நரி’களின் ஈனச்செயல் கண்டனத்திற்கு உரியது.

  49. காசி கோவிலை கட்டிக் கொடுத்ததே முகலாய மன்னர் ’அவுரங்சீப்’ தான்
    தமிழ்நாட்டை சேர்ந்த குமரகுருபர் கேட்டுக் கொண்டதின் பேரில் அவுரங்சீப் காசி
    கோவிலை கட்டிக் கொடுத்தார்
    என்பது வரலாறு. ஆனால் இன்று அவுரங்க
    சீப் மீதும் தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.
    “இந்துகளின் புனிதங்களை காப்பாற்ற முஸ்லிம்கள் தியாகம் செய்ய வேண்டும்”
    என்ற கல்வேட்டும் அவுரங்கசீப்பால் காசியில் கோவிலில்
    வைக்கப்பட்டது தான்.
     இதற்கெல்லாம் காரணம் ஆங்கிலேயரின்
    பிரித்தாலும் சுழ்சியே. ஒற்றுமையாக இருந்தால் அவன் நம்மை அடிமைப்படுத்த முடியாது
    என்பதால் அவதூறு பிரச்சாரம் செய்து இந்துகளையும், முஸ்லிம்களை பிரித்து ஆட்சி
    செய்தான். அதன் விளைவே இன்று நாம் இவ்வாறு உள்ளோம்.

     
    மதரஸாக்கள்
    மதரஸாக்கள் என்பது வேதத்தை கற்றுக்
    கொடுக்கும்(ARABIC SCHOOL) இடமே. அங்கே சாதாரண
    உடற்பயிற்சி கூட சொல்லி தருவதில்லை. மீடியாக்கள் இதனை தவறாக பிரச்சாரம் செய்கின்றன.

    சுதந்திர போரட்டத்தில் காலத்தில்
    ஆங்கில கல்வியை கற்க கூடாது என்று தடை விதித்த
    வர்கள் இந்த மதரஸாக்களின் ஆசிரியர்களே.

    JAWAHARLAL NEHRU:
    சுதந்திர போரட்ட காலத்தில் மதரஸா
    ஆலிம்கள் (ஆசிரியர்களின்) ஆயிரக்கணக்கானோர் சுதந்திர போரட்டத்தில் ஈடுபட்டதற்காக
    பிரிட்டிஷாரல் தூக்கிலப்பட்டார்கள்.

     

  50. மதம் என்பதே ஓர் மயக்க நிலை. இதில்,பெரிதும் சரியானதும் உன் மதமா இல்லை என் மதமா என்ற வாக்குவாதங்கள் உயிர்களுக்கும் அவை நிரம்பிய இந்த சூழலுக்கும் அவை எதிர் நோக்கி காத்திருக்கும் எதிர் கால அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கும் எந்த வகையிலும் பயனளிக்காது. உலகில் உள்ள அத்தனை மதங்களும் கேவலங்களும் ஏமாற்றுத்தனங்களும் போலிகளும் நிரம்பியவையே. மதங்களை விட்டு வெளியே வந்து மனிதத்திற்குள் வலம் வரத் துவங்குங்கள் இது எனது தாழ்மையான கருத்து

  51. இஸ்லாம் இனிய மார்க்கம்என்று
    சொல்லிக்கொண்டே
    கொலைசெய்திடும்
    கொடுமைக்கு
    விடிவுஎன்ன
    ருத்ரனே
    கண் திறவாய்……………

  52. பணம்,பதவிதிமிர்
    கொண்ட
    இவர்கள் செய்யும் தவறுகள் எண்ணப்படுகின்றன. சிசுபாலனுக்கு
    கண்ணன்கொடுத்த
    நேரம்முடியும்
    சுதர்சனச்சக்கரம்
    பறக்கும்
    காத்திருப்போம்.

  53. சன் டிவி இல்லை பாதர் மதர் மாமா டிவி வந்தாலும் நம் ஹிந்து மதத்தை ஒழிகவோ மறைக்கவோ முடியாது ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை, அடியும் முடியும் இல்ல தா மதம் நம் மதம் மட்டும் தான் யாரும் தோற்று வைக்காத மதம் ஹிந்து மதம் பன்னி கத்துகிறது என்று நாமும் கத்த முடிஊமா, இவர்களை அடக்க ஒருவர் வருவர் கண்டிப்பாக கவலை வேன்ன்டம்

  54. Sun TV showed the miracle of a cobra climbing onto the sacred shivalinga at the Thepperumanallur temple with Bilva leaf in it’s mouth
    The channel wanted to attract the viewers and increase it’s ratings and the advertisement income.

    At the same time it wanted to be loyal to it’s Christian and islamic financiers
    So at the end of the programme some persons ( one a Muslim with beard and lungi and another a DK follower with black shirt) were shown as saying that the whole thing was a trick to attract people to the temple and earn money.

    This despite the photographer who pictured the whole thing saying that whatever was in the picture actually happened.

    The channel cleverly casts aspersions on the genuiness of the photographs
    But at the same time the channel wants the people to believe the dirty tapes it telecast on swami Nityananda!
    The only solution is for the Hindus to totally boycott the channel.
    R.Sridharan

  55. Some time back a christian pastor in Salem ( I think his name is jayaraj) was in the news for forcing young boys to have homosexual relations with foreign donors who visited his ‘Ashram’.
    Also everyone knows the sister abhaya case in kerala
    recently a 100 crore housing scandal was enacted by a christian ‘father’ cheating thousands of poor people
    Why not sun tv telecast stories on these incidents?
    The owners of the channel may not be afraid of christians( But surely these ‘dravidians’ are terrified of Muslims)
    So the only conclusion is that they are getting funds from the church

    Sridharan

  56. The DMK has been talking of cleaning the Cooum river since it first came to power in 1967.
    But in the last 40 years nothing has been done.
    they even talked of starting boat service in the cooum!
    But what has happened is that the cooum has become a bigger gutter during their rule
    What business they have to talk about Mother Ganga?
    These shameless people fell at the feet of Bhagwan Satya Sai Baba to help in the clean cooum project !
    But other than begging Baba to ‘create’ one more ring for Maran they have not achieved anything!
    R.Sridharan

  57. we feel the same from sun networks programes. And please note the nijam directer named a.r.salim ,and one of the writter name is ajmalkhan something supported by any islamicterrorisumgroup .somany pe4ople doubt in this matter.

  58. It is the ultimate joke
    So far the evangelists and Missionaries were using the word ‘Veda’ to describe their teaching.
    Now one Muslim gentleman has said that the Madrasas teach’ Vedam’!

    Where is the place for the word ‘Veda’ In Islam and christianity?
    Now they may say Masjids are Temples where allah is worshipped
    This is the problem when a dogma which originated in a different land is spread in an entirely different land.
    If it is Hindu Dharma there is no need for such tactics since Hindus do not crave to convert others
    But for the other religions since they want to convert and dominate they have to use the local idiom.
    R.Sridharan

  59. ஆன்மீக வியாபாரங்கள் பெருகி, மஞ்சள் பத்த்ரிகைகள், ஊடகங்கள் போன்ற சன் டிவிக்களின் அசிங்க வியாபாரம் படுத்துவிடுமோ என்று பயந்து, இவர்கள் ஆன்மிகததுள் அசிங்கத்தையும், அசிங்கதுள் ஆன்மிகத்தையும் படம் மற்றும் பட்டியலிட நினைக்கிறார்கள்; பணம் பண்ணுகிறார்கள்; ஆனால் சமுதாயம் நல்ல மனிதர்களைப் பெறவில்லை என்பதை, ஊரே திரண்டு பார்க்கும் சன் டிவி கும்பலில் இருநது தெரிகிறது; இம்மாதிரியான மாக்களுக்கு எதற்கு ஆன்மிகம்?

  60. அவுரங்கசீப்பு காசியில் கோயில் கட்டிக் கொடுத்தாராம் .
    ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தர்மமும் அமைதியும் காத்து வாழ்ந்து வந்த ஹிந்து சமுதாயத்தை சின்னா பின்னமாக ஆக்கிய ஒரு வெறிக் கும்பலின் நாயகன் இவன்.ஆயிரக்கணக்கான கோயில்களை இடித்தும், பெண்களை மான பங்கப் படுத்தியும் ஆண்களை கட்டாய மத மாற்றம் செய்தும்
    கொள்ளை அடித்தும் அடாது செய்த ஒரு கூட்டத்தில் ஒருவன் .
    காசி விஸ்வநாதர் கோவிலை இடித்து ஹிந்துக்களை இழிவு படுத்தும் விதமாக அதன் ஒரு பாதியில் மசூதி கட்டிய அயோக்கியன் அவன்
    அவன் யார் ஹிதுக்களது தேசத்தில் அவர்களுக்கே நிலம் கொடுப்பது

    ரா.ஸ்ரீதரன்

  61. சன் டிவி இதைப்போல் செய்வதற்கு மற்றொரு காரணம் அந்த கும்பல் செய்யும் அக்கிரமங்களையும் ஊழல்களையும் மறைக்கத்தான்
    Headlinestoday டீவீயில் Radia -spectrum செய்தியைத் திரும்பத் திரும்பக் காண்பித்துக் கொண்டிருந்த போது திடீரென்று நித்யானந்தா பற்றி ஏதோ அபத்தமாக ‘நித்யானந்தாவைப் பிடிக்க தமிழக போலீஸ் பெங்களுரு விரைந்தனர் ‘என்றெல்லாம் சன் டிவி உளறிக் கொண்டிருந்தது
    அரதப் பழசான செய்தி திடீரென்று !
    அதாவது அவர்கள் பரபரப்பு செய்தியைக் காண்பித்து மக்களை திசை திருப்பும் குள்ள நரி வேலை செய்கிறார்கள் .
    அதற்கும் ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்பது போல் நித்யானந்தா ! .
    இந்த கும்பல் அக்கிரமத்தை ஒரு கலையாகக் கற்றவர்கள்
    எதற்கும் துணிந்தவர்கள்

    இரா.ஸ்ரீதரன்

  62. ஆசிரியர் அவர்களுக்கு, இந்த நிஜம் நிகழ்ச்சி தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை! சமீபத்தில், ருத்ராட்சத்தைப் பற்றியும், சாளக்கிராமத்தைப் பற்றியும் இழிவான ஒரு தொகுப்பைப் பார்த்துக் கொதித்துப் போனேன்.. இவர்கள் செய்வது பொறுத்துக் கொள்ளும்படி இல்லையே! நிற்க, நீங்கள் இந்த கட்டுரையை எழுதிய பொழுதே, நீங்கள் குருப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் Mailer Demon என்று வந்து, அந்த முகவரிகள் சரியானவை அல்ல என்று எனக்கு தகவல் வந்தது. இன்று ஒரு புதிய மின்னஞ்சல் அனுப்பினேன்.. அதே தகவல்தான் வந்தது. வேறு ஏதாவது மின்னஞ்சல் முகவரி இருந்தால் தரவும்..

    நன்றி,
    பாலாஜி.

  63. அகோரிகள் இல்லை அகோரிகள் இல்லை என்பது என் தீர்வான பதில்

  64. அன்பார்ந்த தமிழ் ஹிந்து ஆசிரிய குழுமத்திற்கு,ஹிந்து மத மக்களுக்கு எவ்வாறு புரிய வைப்பது.எவ்வாறு வ்ழிப்புனர்வை உண்டாக்குவது நீங்கள்தான் முன் நின்று செய்ய வேண்ண்டும்.கீ.வீரமணி மற்றும் மு.கருணாநிதி மற்றும் சில அரசியல்வாதிகள் கருப்பு ஓநாய்களின் பிள்ளைகள்.இவர்கள் அனைவரும் ஓட்டுவங்கிகளை கணக்கில் கொண்டே இது போன்ற ஈனத்தனமான பிரசாரங்களை செய்கிறார்கள்.இவர்களுக்கு ஹிந்து மதத்தில் மட்டும்தான் மூட நம்பிக்கைகள் இருக்கிறது என்று பிரச்சரரம் செய்வது ஏன்.முஸ்லிம் மற்றும் கிருத்துவ மதத்தில் மூட நம்பிக்கை இல்லையா? ஏன் பிரச்சரரம் செய்யவில்லை.

  65. ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். எல்லா மதங்களையும் மனிதர்கள் தான் பின்பற்றுகிறார்கள்! அதில் நல்லவர்களும், கெட்டவர்களும் உள்ளார்கள். கெட்டவர்களின் செயல் கண்டிக்கத்தக்கதே! இதில் மனிதர்களின் நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு மட்டும் மற்ற மதங்களின் மாண்பை குறைத்துவிடாதிர்கள்! வரலாறில் என்ன நடந்தது என்பது தெளிவான உண்மை இல்லாமல் அதை ஆதாரமாக கொண்டு மற்ற மதங்களை இழி செய்யகூடாது. நம் மதங்களின் பெருமையான விசயங்களை பகிர்ந்துகொள்ளுங்கள், அந்த மதத்தை யாரேனும் அவதூறு செய்தால் ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவியுங்கள்!

  66. நான் தற்போது தான் படித்தேன் சான் டி‌வி இவ்வளவு கேவலமாக இருக்குமா என்று அறிந்தேன் . சன் டி‌வி பார்த்து 4 வருடங்கள் ஆகின்றன மிக்க நன்றி

  67. First we have to convert hindus back to hinduism from that ‘Asuran’ karunanidhi’s religion called d.m.k & his hindu destruction programme called secularism.

  68. சன் டிவி இந்து மதத்தை இழிவு செய்து விட்டது என்று ஒரு இணையத்தில் கட்டுரை எழுதி என்னை போன்று ஒரு 50 பேர் கண்டனம் தெரிவித்தல் போதுமா? இந்த இணையத்தை ஒரு 1000 பேர் பார்ப்பார்களா? ஆனால் அந்த சன் டிவி நிகழ்ச்சியினை எத்தனை கோடி பேர் பார்த்திருப்பார்கள். கோடி எங்கே? 1000 எங்கே? எத்தனை இந்துவீடுகளில் கம்ப்யூட்டர இருக்கிறது? அப்படி இருந்தாலும் எத்தனை கம்ப்யூட்டர் களுக்கு இன்டர்நெட் இணைப்பு இருக்கும்? அப்படி இருந்தாலும் தமிழ் இந்து இணையத்தை எத்தனைபேர் பார்ப்பார்கள்? அப்படி பார்த்தாலும் எத்தனை பேர் மறுமொழி எழுதுவார்கள் என்று நீங்கள் பார்கிறீர்கள்? தமிழ் இந்து இணையத்தை பற்றி நாம் நம் நண்பர்களுக்கு கூறி அதை பார்கசொல்லவேண்டும் மறுமொழி எழுதசொள்ளவேண்டும். ஆகவே மறுமொழி எழுதுவோர் circle அதிகர்க்கவேண்டும்.
    முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும். அதுபோல ஒரு டிவி செய்த அவதூறை இன்னொரு டிவி மூலம் செய்தால் மட்டுமே அதனை சரிபண்ணமுடிய்ம். அப்படி ஒரு துணிவான டிவி இந்துக்களிடம் உள்ளதா? கூறுங்கள் பார்க்கலாம். இருக்கும் சில டிவி களில் வெறும் பஜனை பாடல்கள் பாடிகொண்டிருக்கின்றனர். கோவிலில் செய்ய வேண்டியதை டிவி களில் செய்தால் எப்படி? இந்து மதத்துக்கு எதிரான பொய் பிரசாரங்களை முறியடிக்க என்ன நடவடிக்கை வேண்டுமோ அதை செய்யாமல் உறங்கிகொண்டிருக்கிரார்கள்.. ஒவ்வொரு இந்துவும் அவனது வீட்டில் எப்போதும் 100 post card வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். இந்து மதத்திற்கு எதிரான கருத்து வெளிப்படும்போது கண்டன கடிதம் எழுதவேண்டும். E mail மூலம் கண்டனம் தெரிவிக்கவேண்டும். போன் செய்து கண்டனம் தெரிவ்க்கவேண்டும். முக்கிய இடங்களில் கண்டன ஆர்பாட்டம் நடத்தவேண்டும். செல் போன் வைத்திருப்பவர்கள் கண்டன மெசேஜ் அனுபவேண்டும். அப்போதுதான் நம் எதிராளிகள் “அட இந்துகளுக்கு கூட கோபம் வருகிறதே! நாம் இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்று நினைகவைக்கமுடிய்ம். இந்துக்கள் செய்வார்களா?

    A .VISWANATHAN

  69. இந்துக்கள் ஒன்றுபடுவது எப்போது?

    இந்துக்களை திட்டினாலும், கிண்டல் கேலி செய்தாலும் அது நம்மை இல்லை என்று கண்டும் காணாமலும் போய்கொண்டே இருக்கிறான். எதிர்க்க யாருக்கும் துணிவில்லை. அப்படி துணிந்து எதிர்க்க எவனாவது வந்தாலும் அவனுக்கு support செய்ய எந்த இந்துவும் வராததால் துணிந்து வந்தவனும் பணிந்து போய் நமக்கு என்னடா வந்தது என்று அடங்கிவிடுகிறான். அவர்களை ஒன்றுபடாமல் தடுத்து நிறுத்துவது எது? 1. சாதி என்ற சனியன். 2. இந்துக்களிடை ஒரு பொது மொழி இன்மை.
    கவுண்டனுக்கும் தலித்துக்கும் ஆகாது. அடுத்து தேவர்களுக்கும் தலித்துக்கும் ஆகாது. தமிழ் நாட்டில் மேற் சொன்ன 3 ஜாதிகாரர்களுமேதான் ஜாதி கலவரங்களுக்கு முக்கிய காரணம். ஏன் என்றால் அவரவர் தத்தம் கட்சிகளை வளர்க்க கலவரங்களை தூண்டிவிட்டு அதிலே குளிர் காய்வதுதான்..
    ஆகவே ஜாதிகள் ஒழிந்தால்மட்டுமே இந்து மதம் உருப்படும். ஜாதியினை ஒழிப்பது எப்படி?

    இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் (jains ) புத்தமதத்தினர், சீக்கியர்கள் ஆகியோருக்கு 25% ம் மீதமுள்ள 75% னை இந்துகளில் கலப்பு திருமணம் செய்துகொள்வோருக்குமட்டும் என்று வேலையில் இட ஒதுக்கீடு செய்யவேண்டும். அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை துணிந்து செய்யவேண்டும். எல்லா கட்சியினர்க்கும் ஜாதியினை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறபோது அதை ஒழிக்க சட்டம் கொண்டுவந்தால் எந்த கட்சியாவது எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்ன?கலப்பு திருமணம் செய்துகொண்டு வேலை பெற்று divorce செய்தால் அரசு அந்த வேலையை பரித்துகொள்வதோடு divorce க்கு காரணமானவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கவேண்டும்.அவர்களிருவருக்கும் குழந்தை பிறந்தால் அவன் எந்த ஜாதி?
    கலப்பு திருமணம் செய்துகொண்டதுமே அந்த கணவன் மனைவி இருவருக்கும்
    அரசாங்கம் “சமத்துவ ஜாதி” என்ற community certificate னை கொடுக்கவேண்டும்.
    அன்று முதல் அவர்கள் சமத்துவ ஜாதியினர் ஆவார்கள். அவர்களுக்கு பிறக்கும் ஆகவே,குழந்தையும் சமத்துவ ஜாதியினை சேர்ந்ததாகும். இப்படியாக சமத்துவ ஜாதி பெருகி இப்போதுள்ள ஜாதிகள் அனைத்தும் ஒரு காலத்தில் அருகி ஒழிந்து போய் தொலையும். அப்போது ஒரே ஜாதி ஒரே நீதி. என்றாகும். இதை யார் செய்வது? ஜாதியினை தன கட்சி வளர்வதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொண்டிருக்கும் திராவிட கட்சிகளோ காங்கிரஸ் கட்சியோ நிச்சயம் செய்ய முன் வராது. பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் கோவில் கட்டுவதை ஒரு ஓரம் போட்டுவிட்டு இதை முதலில் செய்து ஜாதியினை ஒழிக்க அணைத்து முயற்சிகளயும் எடுக்கவேண்டும்.

    தமிழ்நாட்டிலுள்ள ஒரு இந்து ஒரிசா விலுள்ள ஒரு இந்துவுடன் உறவாட முடியாது. குறுக்கே நிற்பது மொழி. உருது மூலம் அணைத்து முஸ்லிம்களும் உறவாடுகின்றனர். அதுபோல sanskrit மூலம் அல்லது Hindi மூலம் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் மீண்டும் மொழி போர் வரும். ஆகவே இந்துகள் அனைவரும் ஒரு பொது மொழியாக ஆங்கில மொழியினை இணைப்புமொழியாக வைத்துக்கொள்ளவேண்டும். இது கொஞ்சம் கடினமாக தோன்றும். ஆனால் இதை தவிர்த்து வேறு வழி இல்லை. ஆங்கிலம் படிப்பதால் நாம் அவனுக்கு அடிமை ஆகிவிட மாட்டோம். ஒரு பொது மொழியால் இந்துக்கள் ஒன்றுபட இதுவே நல்ல வழி. தாய் மொழி அவரவர் மொழியாக இருக்கட்டும். ஆங்கிலம் இந்துகளுக்கு பொதுமொழியாக இருக்கவேண்டும். வேறு எந்த மொழி என்றாலும் பிரச்சனைதான்.
    இந்த 2 பிரச்சனைகளும் தீர்கபட்டால் இந்து ஒற்றுமை ஏற்படும். அப்போது எந்த பயலும் டிவியிலும் பதிர்கையிலும் கொழுப்பேறி எழுதமாட்டன். பேச மாட்டான். ஆகவே இந்துக்களாகிய நாம் ஒன்றுபடுவோம் ஜாதியால் வரும் பிரச்சனைகளை வென்று விடுவோம். வாருங்கள் இந்துக்களே! ஒன்று சேருங்கள் இந்துக்களே! Unity is the strength என்பதை உணருங்கள் இந்து சகோதரர்களே! இந்த இக்கட்டான நேரத்திலும் நிலைமையினை உணராமல் கவலை இன்றி தூங்கிகொண்டிருப்பது நியாயமில்லை இந்து சகோதரா. சுணங்காதே! சுணங்கினால் நீ வணங்கும் தெய்வங்களை சூறையாட 2 மதவெறியர்கள் தயாராக காத்து கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து உடனே செயல்புரி.

    A Viswanathan

  70. The Media in India always propose anti Hindu Sentiments , there is no excuse with Sun TV which is the Party where Atheism is the way of life, hence the TV show does not mean any thing to us, we are fully agreeing with the sentiments of Hindu and its rituals

  71. குறும் படத்தலோ , திரைபடத்தலோ , விளம்பாரத்தலோ ,சில நிகழ்ச்சியாலோ நம் மதத்தை அழிக்க முடியாது…”ஒற்றுமையாய் குரல் கொடுப்போம் நாம் இந்தியன் என்று”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *