அடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை

“யார் பெரியவர்? நானா நீயா?” என்ற வாக்கு வாதம் ஒருமுறை ஆக்கும் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்குமே வந்ததாக ஸ்ரீ அருணாச்சல புராணம் கூறுகிறது. ஆருத்ரா தரிசனம் மற்றும் மஹா சிவராத்திரி நாட்களுக்கு இடையே நடந்த அந்த வாதமே அருணகிரி எனப்படும் திருவண்ணாமலை உருவானதற்குக் காரணமாக அப்புராணம் கூறுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்த அந்நிகழ்ச்சி, வேறு பல விஷயங்களையும் உணர்த்துவதாக நான் நினைக்கிறேன். அதை விளக்கும் ஒரு முயற்சியே இக்கட்டுரை. (ஸ்ரீமகாவிஷ்ணு முழுமுதல் பரம்பொருளின் வடிவமே என்பதில் நமக்கு எந்த பிணக்கும் இல்லை. இந்தப் புராணக் கதைக்காக, விஷ்ணு என்பது காக்கும் தொழில் கொண்ட கடவுளைக் குறிப்பதாக வைத்துக் கொள்வோம். புராணக் கதைகளின் மையமான நோக்கம் தத்துவங்களை விளக்குதல் தானே அன்றி, தெய்வ வடிவங்கள் பற்றிய பூசலை உண்டாக்குவதல்ல என்பதையும் மனதில் கொள்வோம்).

lingodbhavaபலருக்கும் அந்நிகழ்ச்சி தெரிந்திருக்கலாம். எனினும் அதை இங்கே சுருக்கமாகக் காணலாம். தான் ஆக்குவதனாலேதான் காப்பதற்கு உயிர்கள் இருப்பதால் ‘தானே பெரியவன்’ என்று பிரம்மாவும், தான் காப்பதினால்தானே எவரும் உயிரோடிருப்பதால் ‘தானே பெரியவன்’ என்று விஷ்ணுவும் வாதித்துக் கொண்டிருந்தனர். இந்த வாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அவர்களின் தொழிலை நம்பி இருந்த அனைவரும் பாதிக்கப்பட்டனர். வாதம் ஒரு முடிவுக்கும் வராது முற்றிக்கொண்டு இருந்ததால், முழு முதற் கடவுளாகிய பரமசிவன் அவர்கள் முன் ஆகாயத்திற்கும் பூமிக்கும் பரவியிருக்கும் ஒரு அக்னிப் பிழம்பாகத் தோன்றினார். அசரீரியாக ‘எவர் முதலாவதாக தனது அடியையோ முடியையோ காண்கிறாரோ, அவரே பெரியவர்’ என்று கூறுகிறார். அவர்களிருவரும் தங்கள் தங்கள் பெருமையிலேயே மூழ்கியிருந்ததால், தம் முன் வந்தவர் யார் என்று கூட அறிய இயலவில்லை. உடனே விஷ்ணு ஒரு வராஹ உருவம் எடுத்துக்கொண்டு பூமியைத் துளைத்துக்கொண்டு அடியைக் காணவும், பிரம்மன் ஓர் அன்ன வடிவம் எடுத்துக்கொண்டு மேலே பறந்து சென்று முடியைக் காணவும் சென்றனர்.

சிறிது காலம் சென்ற பின் அடியைக் காண இயலாத விஷ்ணு சற்று சோர்வடைந்ததும், அசரீரியாக வந்திருப்பவர் பெரியவர் என்பதை உணர்ந்தார். மேலே பறந்து சென்ற பிரம்மாவோ, மேலேயிருந்து விழுந்து கொண்டிருந்த தாழம்பூ ஒன்றைப் பார்த்து, ‘அங்கிருந்து நீ வருவதால், நான் முடியைப் பார்த்துவிட்டதாக சாட்சி சொல்ல வா’ என்று அழைத்துக் கொண்டு அவரிடம் சென்று அவ்வாறே கூறினார். உண்மை நிலையை உணர்ந்ததற்காக விஷ்ணுவை ‘எல்லா இடங்களிலும் விஷ்ணுவிற்குக் கோவில்கள் இருக்கும்’ என வந்தவர் வாழ்த்தினார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோவில்கள் எங்கும் இருக்காதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு ஆகாதென்றும் சாபமிட்டார்.

ஆருத்ரா தரிசனத்தன்று அந்த நீள் நெடுஞ்சுடர் தோன்றியது என்றும், அதன் தாபம் தாங்காது விஷ்ணு முதற்கொண்டு அனைத்து தேவர்களும் வேண்டிக்கொண்டதால் அதுவே மலை உருவாகத் திருவண்ணாமலை ஆனது என்றும் புராணம் கூறுகிறது. இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் தான், ஒவ்வொரு சிவன் கோவிலிலும், சிவனுக்குப் பின்புறம் பிரகாரத்தில் லிங்கோத்பவர் சிலை உள்ளது. அதற்கு மஹா சிவராத்திரி அன்று நள்ளிரவில் அபிஷேகம் நடக்கும்.

இவ்விரு கடவுளர்களும் தங்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்திருப்பார்கள் என்று நம்பக்கூடும். இதிலிருந்து நாமும் சில உண்மைகளை உணரக்கூடும். அதாவது, ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு என்பதை உணரவும், அதே போன்று மற்றவர் பொறுப்புகளை மதிக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம் பொறுப்புக்கு நமக்கு எவ்வளவு சுதந்திரம் உளளதோ, அதே போன்று மற்றவர் பொறுப்பையும் அதன் விளைவுகளையும் நாம் சார்ந்திருக்கிறோம். இதனை உணர்ந்தால் எந்தச் சமூகம் தான் வளர்ந்து முன்னேற முடியாது? இந்நிகழ்ச்சியை அலசினால் இது தவிர மேலும் பல உண்மைகளையும் உணரலாம்.

பிரம்மன் முடியைப் பார்க்க மேலும், விஷ்ணு அடியைப் பார்க்க கீழும் சென்றதற்குப் பதிலாக, பிரம்மன் கீழும் விஷ்ணு மேலும் சென்றிருக்க முடியுமோ? அப்படி கேள்வி கேட்கலாம் என்றாலும், அது இயற்கையானதாக இருக்கமுடியாது.  ஒன்றே பிரம்மம் என்ற நிலையை விட்டு பல கடவுளர்கள் என்னும்போது, மனிதர்களைப் போலவே கடவுளர்களுக்கும் ஒரு தனித் தன்மை உண்டு எனலாம். அதனாலாயே, விஷ்ணுவுக்குக் காக்கும் தன்மையும் பிரம்மனுக்கு ஆக்கும் தன்மையும்  உள்ளது.
காப்பதற்கு செல்வமும் ஒரு துணை அல்லவா? அதனால்தானோ செல்வத்தின் திருவுருவாம் லக்ஷ்மி விஷ்ணுவின் துணைவியாக உள்ளார்? அதே போன்று, ஆக்குதல், எண்ணங்களை தோற்றுவித்தல், கலைகளை வளர்த்தல் போன்ற எல்லா ஆக்கச் சக்திகளுக்கும் கடவுளான பிரம்மனின் துணையாக சரஸ்வதி உள்ளார். இப்படி அவர்களின் துணைவிகளையும் சேர்த்து நாம் நடந்ததைப் பார்க்கும்போது மேலும் பல தத்துவங்கள் புனலாகின்றன.

siva_as_guru_to_manikkavasagarகாத்தல் என்றாலே ஏதோ ஒரு விதத்தில் செல்வமும் அதனுடன் சம்பந்தப் படுகிறது. அந்தச் செல்வம் உலகு சம்பந்தப்பட்டதுதான். அது நிலம், மனை என்று தொடங்கி மற்ற வகையான செல்வங்களாகவும் தொடர்கிறது. அத்தகைய வசதிகள் சிறிதாவது இருந்தால்தான் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. அவைகள் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு, வடிவம் என்று கண்ணால் காணக்கூடியது போல் மற்ற புலன்களாலும் உணரக்கூடிய தன்மை உண்டு. அத்தகைய உலக சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி மற்றவர்களை விட தொழில் முனைவோருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அதை அவர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும்போது சமூகத்திற்கு நன்மையே செய்கின்றனர்; மனிதாபிமானமின்றி செயல் படுத்தும்போது தான் விளைவுகள் மோசமாகின்றன. செல்வம் தவிர உலகு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களும் காத்தல் அம்சத்தில் உள்ளதினாலோ என்னவோ, விஷ்ணுவிற்கு லக்ஷ்மி எனும் ஸ்ரீதேவியைத் தவிர பூதேவி எனும் துணைவியும் உண்டு. இப்படியாக பூமி, செல்வம் சம்பந்தம் விஷ்ணுவிற்கு இருக்கும் போது, அவர் பூமியைத் தவிர்த்து ஆகாயத்தில் பறந்து செல்வதையா எதிர்பார்க்கமுடியும்?

அதே போன்று ஆக்குதல் என்பது உலகு சம்பந்தப்பட்ட பிறப்பு, மற்றும் மனது சம்பந்தப்பட்ட எல்லாவிதமான எண்ணங்கள், திட்டங்கள் போன்ற புலன்களுக்குத்  தெரியாத நுண்ணியமானவைகளையும்  உற்பத்தி செய்யப்பட்டவைகள் எனக் குறிப்பதாகக் கொள்ளலாம். இவைகள் அனைத்துமே ஒருவர் தம் வாழ்க்கையில் கற்பதற்கு ஏதுவாக அமைந்து அவரை உயர்த்திச் செல்லும். அது தவிர அவைகள் அனைத்துமே உணர்வால் மட்டுமே அறிந்துகொள்ளப்படும் தன்மை வாய்ந்த நுண்ணிய திறன்கள் அல்லது பலன்கள் ஆனதால் உள்ளத்திலிருந்து அவைகள் வெளிப்படும்போதுதான் பேச்சாகவோ, செயலாகவோ மாறக   கூடும். அப்படி வரும்வரை அதற்கு ஒரு வடிவமோ, அளவோ இன்றி புகை மூட்டம் அல்லது மேகக் கூட்டம் போல் தளர்ந்து படர்ந்து இருக்கும். அதனாலேயே ஒரு செயல்வீரனோடு ஒப்பிடும் போது வெறும் எண்ணங்கள் மட்டுமே கொண்டவனை ஒரு பனிப் படலத்திலோ மேகக் கூட்டத்திலோ மிதப்பாதகச் சொல்கிறோம். “எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா?”  என்பதும் இதை உணர்த்துகிறது. இப்படியாக அறிவு சார்ந்த, கற்றல் சம்பந்தப்பட்ட திறன்களுக்கு அதிபதியான சரஸ்வதியின் துணையான பிரம்மா புகை மண்டலம் அல்லது மேகக் கூட்டம்  போல் மேலே போகாது கீழே போவார் என்பதை எப்படி எதிர்பார்க்கமுடியும்?  மேற்சொன்ன நிகழ்ச்சியில் அந்த இரு கடவுளர்களும் பின்னர் என்ன செய்தார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்றும், அதில் நமக்கு மேலும் என்ன படிப்பினைகள் இருக்கின்றன என்றும் இப்போது நாம் காணலாம்.

வராக வடிவில் கீழே சென்று கொண்டிருந்த விஷ்ணுவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாக அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. தன்னை விட ஒரு பெரிய சக்தி உள்ளது என்பதை அவர் உணர ஆரம்பித்தார். அதன் விளைவாக மேற்கொண்டு செல்லாமல் திரும்பிய அவர், தன்னை ஒரு சோதனைக்கு உள்ளாக்கிய அந்தச் சோதியினை உணர்ந்தார். ஒருவன் தனது வலிமையின் எல்லையை உணர்ந்ததும், அதற்கும் அப்பால் உள்ள சக்தியைத் தெரிந்து கொள்வது என்பது தானே முறையான வழி? ஒருவன் கை நிறைய சம்பாதித்து செல்வம் கொழித்து இருக்கையில், அவனுக்கு சொல்லொணாத் துயர் வந்தால் என்ன செய்வான்? “செல்வம் இல்லாதபோது, செல்வம் வேண்டினோம்; இதனால் பயனில்லை” என்று அனுபவப்பட்டு, அச்செல்வம் போனாலும் பரவாயில்லை என்று உணர்ந்து அதை இழக்கவும் தயாராக இருப்பான். அந்த நிலையில்தான் அவனுக்கு உலகின் நிலையாமை தெரிய வருகிறது. அவன் துறவுக்குத் தயார் ஆகிறான். இது போன்ற நிலையில்தான் விஷ்ணு இருந்தார்.

கிட்டத்தட்ட இதற்கு நேர் மாறான நிலையில் பிரம்மன் இருந்தார். கீழே விழுந்துகொண்டிருந்த தாழம்பூவைப் பார்த்த பிரம்மனுக்கோ அவரது புத்தி வேலை செய்ய ஆரம்பித்து, மேலிருந்து பூ வந்தால் அது மேலேயுள்ள முடியிலிருந்துதான் வருகிறது என்றும், அதனால் அப்பூவையே தான் முடியைப் பார்த்ததிற்கு சாட்சியாக வரச் சொல்லலாம் என்ற எண்ணமும் தோன்றி அப்படியே செய்கின்றார். இப்படிச் செய்தால் தான் வென்றுவிடுவோம் என்றும் அவருக்குத் தோன்றுகிறது. கலைகளுக்கும், ஞானத்திற்கும் அதிபதியான சரஸ்வதியின் பதிக்கு ஏன் இப்படித் தோன்றியது?.

அறிவு என்பது சரியான முறையில் சரியான மன நிலையில் வளரவில்லை என்றாலும், வெறும் உலக சம்பந்தப்பட்டதாக மட்டுமே  இருந்தாலும், அது இரு-முனைக் கத்தி போன்று ஒரு விரும்பத்தகாத ஆயுதமாக வளரக்கூடும். அப்போது புத்தியானது குறுக்குப் பாதையில் சென்று, அனைவருக்கும் உதவும் யுக்திகளுக்குப் பதிலாக தீய குயுக்திகளை வளர்க்கும். அது ஒருவனை தாழ் நிலைக்கும்  கொண்டுசெல்லும். அதிலிருந்து மீள்வது மிகக் கடினமானதாகிவிடும். உலக வாழ்க்கையிலிருந்தே தன் செயல்கள் மூலம் ஒருவனுக்கு அறிவு வளர்ந்தாலும், அது படிப் படியாக அவனை நல் வழிப்படுத்தி இறுதியில் அறிவுக்கும் ஆதாரமான தன்னை உணரச் செய்வதாக அமைய வேண்டும். அப்படியாகவில்லை என்றால் அது பாழ் அறிவே. அது பொல்லா விளைவுகளையே கொடுக்கும். அதனால் ஒருவன் அனாவசியமாக வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டோ, அனர்த்தங்களைக் கற்பித்துக்கொண்டோ, தவறான வழிகளில் மற்றவர்களை நடத்திக்கொண்டோ வாழ்நாளை வீணாக்குவான். அதுதான் பிரம்மன் விஷயத்திலும் நடந்ததோ?

வாழ்வு நன்கு அமைய ஒருவன் செயல்களில் ஈடுபட வேண்டும். முதலில் அது அடிப்படை தேவைகளுக்கும், பின்பு சில கூடுதல் தேவைகளுக்குமாகத் தொடரும். ஆரம்பத்தில் இருந்த ஆசை பின்பு பேராசையாக மாறினாலும், ஒருவனுக்கு தலையில் இடி போன்று ஒரு துயர நிகழ்ச்சி நேரும்போது இவ்வுலகின் உண்மையை அவன் உணரக்கூடும். ஓடி ஓடித் தேடிய செல்வத்தின் இயலாமையை உணர்வான். ஆனால், அப்படி செயல்களில் ஈடுபடும்போதே அவன் அப்பொருட்களின் நிலையாத் தன்மையையும் உணர்ந்து, செயலை ஒரு கர்ம யோக வழிப்படி செய்து பலன்களில் நாட்டம் கொள்ளாது இருந்திருந்தால் மன முதுர்ச்சியை அடைந்திருப்பான். இவ்வழியில் பலன் கிடைக்க காலதாமதம் ஆகலாம் என்றாலும், பலருக்கும் இது தான் எளிதான, சிறந்த வழி. அவ்வழி செல்லும் போது செயலில் நேர்மை, திறமை கூடுவது அன்றி மனதளவிலும், முடியவில்லை என்னும்போது அதை ஒத்துக்கொள்ளவும், சரண் அடையும் மனப் பக்குவமும் வளரக்கூடும். விஷ்ணு அதைத்தான் செய்தார்.

அறிந்தது அறியாதது இவைகளின் எல்லைகளை உணராத, பக்குவம் ramana maharishiஅடையாத அறிவு மிக மிக ஆபத்தானது. மனப் பக்குவத்துடனும் பொறுப்புடனும் வளரும் அறிவே நல்லறிவு. அதுவே ஒருவனை மேல் நோக்கி எழச் செய்யும்; உள் நோக்கி விழிக்கச் செய்யும்.  இதனையே “அறிவும் அறியாமையும் யார்க்கு என்று அம்முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு” என்பார் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி. பக்குவத்துடன் அறிவு வளரவில்லை என்றால் அந்த அறிவு, தன்னைத் தோண்டி ஞானம் பெற வழி வகுக்காது. பிரம்மனுக்கு நடந்தது போல் குறுக்கு வழியில் செலுத்தி மேலும் பல துன்பங்களைத்தான் கொடுக்கும். அறிவு சார்ந்த ஞான மார்க்கம் நேரான மார்க்கமாக இருந்தாலும், அது சரியான விளைவுகளைக் கொடுப்பதற்கு ஒருவன் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வழியில் தான் யார் என்ற அறிவு சார்ந்த கேள்விதான் கேட்கமுடியும். அதற்குண்டான  பதில் இயல்பாக உணர்வில் உதிக்கும் வரை பொறுமையும் முயற்சியும் வேண்டும். அப்போது ஞானிகள் கூற்றுப்படி பிரம்மன், விஷ்ணு என்ற இரு கடவுளரின் உண்மைத் தன்மையும் தெரிய வரும்.

“திருவண்ணாமலையே எல்லாம்” என்று அதனை அடைந்து, இக வாழ்வின் இறுதி வரை அங்கிருந்து எங்குமே செல்லாத பகவான் ரமணர், மற்றும் பல ஞானிகளின் கூற்றுப்படி ஞான மார்க்கமே கர்ம மார்கத்தை விட உன்னதமாகும்.  மற்ற யோக வழிகள் எல்லாவற்றையும் இவை இரண்டுக்கும் இடையே வரிசைப்படுத்தி விட்டு, அவை எல்லாமே கர்ம மார்கத்தின் வெவ்வேறு முறைகள்தான் என்றும்  ரமணர் “உபதேச உந்தியார்” நூலில் குறிப்பாகச் சொல்வார்.  அதனை இப்படியும் புரிந்து கொள்ளலாமோ? முதலில் நமக்கு உகந்த வழியை எடுத்துக் கொள்வது, அதிலே பழகப் பழக அதுவே நம்மை நுணுக்க முறைகளுக்குக் கொண்டு சென்று அதி உன்னத நிலையான “தன்னை”யும் உணர வைக்கும்.

அப்படியென்றால், பிரம்மா-விஷ்ணுவின் மோதலில் நமக்கு இன்னுமொரு பாடமும்  இருக்கிறதோ? ஸ்ரீதேவியும், பூதேவியும் கொண்ட விஷ்ணுவும் சரி, ஞானாம்பிகையான சரஸ்வதியைக் கொண்ட பிரம்மாவும் சரி, இருவருமே தம்தம் அகந்தையின் எழுச்சியினாலேயே வாதத்தைத் தொடங்கினர். விஷ்ணுவோ பாதியிலேயே தன் தவற்றை உணர்ந்து சரணடைகிறார். அதாவது, எப்படிப் பட்ட கரடு முரடான பாதையாக கர்மா வழி தோன்றினாலும், அது ஒருவன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாலும் அவன் உள்ளத்தைப் பண்படுத்தி உயர் நிலைக்குச் செல்லவைக்கும் ஆற்றல் உடையது என்பதை உணர வைக்கிறதோ? மிக நுண்ணியதான ஞானப் பாதை நேர் வழிதான் என்றாலும் அதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாது செய்யப்படும் பயிற்சியால் கர்வம் மிகுந்து தவறான வழிக்கும் கொண்டு செல்லக் கூடிய அபாயம் உள்ளது. அதைத்தான் – மனம்-புத்தி-அகங்காரம் அளவிலேயே “தான் யார்” என்று தன் உண்மை நிலையைத் தேடுபவருக்கும் நேரலாம் என்பதைத்தான் – பிரம்மாவின் வீழ்ச்சி குறிப்பாக உணர்த்துகிறதோ?

இப்படியாக, நமது புராண, இதிகாச நிகழ்ச்சிகளும் நமக்கு வழி வழியாக வந்திருக்கும் வேத-உபநிஷத உண்மைகளையும், முறைகளையும்  தான் உருவகங்களாக உபதேசிக்கின்றன. அவைகள் அனைத்திலும் உள்ளதை உள்ளவையாக உண்மை உணர்வுடன் தேடினால், நமக்குக் கிடைத்தற்கு அரிய பொக்கிஷங்கள் கிடைக்கும் என்பதே எனது தாழ்மையான அபிப்ராயம்.

99 Replies to “அடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை”

  1. நல்ல கட்டுரை! எளிமையான விதத்தில் புரிந்து கொள்ள உதவுகிறது!

  2. இக்கதை எந்த புராணத்தில் இருக்கிறது. ஹிந்து ஒற்றுமைக்குப்பதிலாக சைவ வைணவ மதத்தவர்களுக்கிடையே பகைமையை உருவாகுமே தவிர. ஹிந்து ஒற்றுமைக்கு உதவாது. வைணவர்களும் சைவர்களும் தங்கள் மத சிறப்புகளை எடுத்துரைக்கட்டும். இம்மாதிரி கதைகளைக் கூறி வைணவத்தையும், வைணவர்களையும் சிறுமைப்படுத்திட வேண்டாம் என்பது தாழ்மையான வேண்டுகோள்.

    வித்யா நிதி

  3. // இக்கதை எந்த புராணத்தில் இருக்கிறது. ஹிந்து ஒற்றுமைக்குப்பதிலாக சைவ வைணவ மதத்தவர்களுக்கிடையே பகைமையை உருவாகுமே தவிர. ஹிந்து ஒற்றுமைக்கு உதவாது. வைணவர்களும் சைவர்களும் தங்கள் மத சிறப்புகளை எடுத்துரைக்கட்டும். இம்மாதிரி கதைகளைக் கூறி வைணவத்தையும், வைணவர்களையும் சிறுமைப்படுத்திட வேண்டாம் என்பது தாழ்மையான வேண்டுகோள்.

    வித்யா நிதி //

    அன்புள்ள வித்யா நிதி,

    இந்தக் கதை லிங்க புராணம் உள்ளிட்ட பல சிவபுராணங்களில் வருகிறது. தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களிலும் மிகுதியும் பேசப் படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான புராதன சிவாலயஙக்ளிலும் லிங்கோத்ப மூர்த்தி வடிவில் சிற்பமாகவே இருக்கிறது. எனவே, “கூறாமல் இருப்பது” என்பது சாத்தியமே இல்லை. நம் சமய, புராண மரபின் ஒரு பகுதி இது.

    மேலோட்டமாக, literal ஆக இந்தக் கதையை அணுகி, இது வைணவர்களைச் சிறுமைப் படுத்துகிறது என்ற முடிவுக்கு எல்லாம் வந்து விடவேண்டாம். இத்தகைய கதைகள் வேறுபல புராணங்களிலும் தான் உள்ளன (உதாரணமாக, பஸ்மாசுரனுக்கு சிவன் வரமளிக்க, மோகினி வடிவில் விஷ்ணு வந்து அசுரனை மயக்குவது).

    இந்தப் புராணக் கதைகளை குறியீடுகளாகக் கண்டு, அவற்றின் படிமங்கள், தத்துவங்கள் ஆகியவற்றையும் மனதில் கொண்டே அவற்றை அணுக வேண்டும். அப்போது சமயப் பூசல் என்ற தளத்திற்கு அப்பால், அவற்றின் உள்ளுறை பொருளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அதைத் தான் இந்தக் கட்டுரையும் செய்ய முயன்றிருக்கிறது என்று நினைக்கிறேன். ரமண மஹரிஷியின் கருத்தையும் இறுதியில் கூறி முடித்திருப்பது சிறப்பு.

  4. திரு ராமன் அவர்களே

    உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

    மேலோட்டமாக பார்கிறோமோ ஆழமாக பார்கிறோமோ இது போன்ற கட்டுரைகள் மற்ற மதத்தினர் நம்மை எள்ளி நகையாடவே வைக்கும் – விஷ்ணுவும் பிரம்மாவும் அகந்தை உற்றனர் – இது தான் ஹிந்து கடவுள்களின் அழகு என்றல்லவா எண்ணுவார்கள்.

    விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் அகந்தை என்று சொல்ல நமக்கு எவ்வளவு அகந்தை இருக்க வேண்டும் 🙂

    அனைவரும் தங்கள் இழ்ட தேவதாவை அபிமாநிப்பது சகஜமே அனால் அதையே பிரகடனபடுத்த முயன்றால் தகுந்த மேற்கோள் காட்ட வேண்டும். நீங்கள் சொல்லும் கதை நம் முன்னோர்கலளால் கையாண்ட எந்த சத்வ புராணத்திலும் இல்லை – லிங்க புராணம் பதினெட்டு புராணத்தில் ஒன்று என்றாலும் அது ரஜசிக புராணமாக வேதா வியாசரால் சொல்லப் பட்டது. இதில் இருந்து அப்படியே மேற்கோள் காட்டி அப்படியே உண்மைகள் என்று சொல்வது தகுந்தது அல்ல

    மற்றொன்று
    //காத்தல் என்றாலே ஏதோ ஒரு விதத்தில் செல்வமும் அதனுடன் சம்பந்தப் படுகிறது. அந்தச் செல்வம் உலகு சம்பந்தப்பட்டதுதான். அது நிலம், மனை என்று தொடங்கி மற்ற வகையான செல்வங்களாகவும் தொடர்கிறது. அத்தகைய வசதிகள் சிறிதாவது இருந்தால்தான் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கிறது.
    //

    இப்படி முடிவு காட்டலாகாது – ஏன் வாழ்வதற்கு கல்வி அவசியம் இல்லையா – மிருகங்கள் கூடத்தான் வாழிகின்றன – அவைகளுக்கு எங்கே செல்வம்

    //
    செல்வம் தவிர உலகு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களும் காத்தல் அம்சத்தில் உள்ளதினாலோ என்னவோ, விஷ்ணுவிற்கு லக்ஷ்மி எனும் ஸ்ரீதேவியைத் தவிர பூதேவி எனும் துணைவியும் உண்டு. இப்படியாக பூமி, செல்வம் சம்பந்தம் விஷ்ணுவிற்கு இருக்கும் போது, அவர் பூமியைத் தவிர்த்து ஆகாயத்தில் பறந்து செல்வதையா எதிர்பார்க்கமுடியும்?
    //
    விஷ்ணுவிற்கு நீல என்று இன்னொரு இல்லாளும் உண்டு. அது போகட்டும் – விஷ்ணுவின் வாகனமோ கருடன் – கருடன் பறக்க தானே செய்கிறது

    நாம் இழ்டம்போல் முடிவு கட்டினால் எக்கு தப்பாகிவிடும்

    //
    பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு ஆகாதென்றும் சாபமிட்டார்.
    //

    ஆக இங்கே சிவன் தான் அந்த பரம் பொருள் என்று நீங்கள் முடிவு கட்டுகிறீர்கள் – அதில் தவறொன்றும் இல்லை – அனால் இதில் சில ஓட்டைகள் உண்டு,
    பரமாத்மா என்றுமே சர்வஞன் (பல உபநிஷத் வாக்கியங்கள் இதற்கு மேற்கோள்) – இப்படி இருக்க இன்னொரு புராணத்தின் படி சிவன் முருகனிடம் உபதேசம் பெறுகிறார் – அது எங்கனே பொருந்தும்

    நான் ஒன்றும் உங்களை இப்படி நினைக்காதிர்கள் – சிவனை போர்ரதீர்கள் என்று கூற வில்லை, நீங்கள் இந்த விழயத்தை பல பேர் படிக்க பிரகடன படுத்தும் பொது தகுந்த பிரமானதுடன் கையால வேண்டுகிறேன் அதுவே எழுத்துக்கு அழகு

    நீங்கள் சொல்ல வந்த கருத்திருக்கு சாதாரண கதைகளையே கையாண்டிருக்கலாம் – வீணாக ஏன் விஷ்ணுவையும், பிரம்மாவையும் இழுக்க வேண்டும்

    மேலும் சில தகவல்கள் – பிரம்மாவிற்கு கோவிலே இல்லை என்பது தவறு

    கேரளத்தில் பரசுராமர் கோவிலில் பிரம்மாவிற்கு சந்நிதி உண்டு.
    திருச்சி உத்தமர் கோவிலில் பிரம்மாவிற்கு சன்னதி உண்டு

    இன்னும் பல கோவில்கள் உள்ளன – ஏன் நீங்கள் கூட ஒரு கோவில் கட்டலாம் – அதை சிவனோ விஷ்ணுவோ தடுக்க மாட்டார்கள்

  5. Puranas are divided into 3 categories – sattvam (goodness), rajas (passion) and tamas (ignorance). It is only common sense that puranas which fall under the category of sattvam are the ultimate authority (which is why the author says in the beggining that there is no doubt about Mahavisnu’s supremacy) since anything said in the mode of ignorance will lead to darkness (like this story which is part of linga puranam – which is tamasic puranam). These stories mislead people from the real goal of life and that is why they are generally not quoted by the great scholars (let it be adi sankara, madhva or ramanuja) as authoritative.
    One thing to understand – the difference between sattva puranas and others is the approach to the message.
    In Vishnu Purana, Bhagavatha purana, etc which are sattva, they begin with a general question – who is the supreme? and the answer will be specific “it is Sriman Narayana and no one else”.
    In Rajasa and tamasa puranas, the question will be specific – what are the glories of linga? and the answer will be relating the glories of siva in his linga form.
    There are so many stories like this – some of them may exist in puranas, but majority of them were written/popularised by people who had a special agenda to reduce the supremacy of Sriman Narayana which is established clearly in Vedas/and all sastras.
    We should be careful to analyse, understand and identify what is true.

  6. இந்த அடிமுடி தேடிய கதை சைவர்களால் பரப்பப் பட்டு வருகிறது. இந்த கதை வேதத்திலோ, நாரத – யம – பராசர – யஞவல்க்ய – மனு ஆகிய எந்த ச்ம்ருதிகளிலோ இல்லை. சிவ பக்தனும் மகாகவியுமான காளிதாசன் போன்ற வடமொழி கவிஞர்களோ தமது படைப்புகளில் எடுத்து கூறியதில்லை. இராமாயண – மகாபாரத இதிகாசங்களிலும் இல்லை. எத்தனையோ உபநிஷத்துக்கள், வேத வாக்கியங்கள், இதிகாச – புராணங்களை ஆதாரமாக காட்டி, ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் முதலான ஆசாரியர்கள் படைத்த பிரம்ம சூத்திர – கீதா பாஷ்யங்களில் இந்த கதை குறிப்பிடப் படவில்லை. பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் இல்லை. இந்த கதை, நாயன்மார்கள் காலத்துக்கு சற்றுமுன் புனையப் பட்டுள்ளன. [நன்றி – புத்தூர் சுதர்சனர்]

    ஸ்ம்ருதிகளில், புராணங்களில் பல கருத்துக்களை இடைச்சொருகல் என்று தள்ளி விடுகிறோம். அதேபோல தள்ளவேண்டிய கதை இது. இதை பொருத்துவதற்காக வலிந்து படிமம், தத்துவம் என்றெல்லாம் படுத்துவது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும். தெளிவு பிறக்காது. இந்த காலத்தில் தெய்வபக்தியே குறைந்து விட்டது – இதில் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் நம்பிக்கையிலும் சந்தேகத்தை கிளறி குழப்புவது பாவ காரியம்.

  7. அன்புள்ள ஸ்ரீகாந்த்,

    கண்ணன் வெண்ணை திருடியது, குன்றைக் குடையாய்ப் பிடித்தது, உரலில் கட்டுண்டது, கோபியருடன் ராசலீலை புரிந்தது -இந்தக் கதைகளெல்லாம் எந்த வேதத்தில், எந்த ஸ்மிருதியில் இருக்கின்றன? காலத்தால் லிங்க புராணத்தை விட பிற்பட்டதாகக் கருதப் படும் பாகவத மகாபுராணத்தில் தான் இவை வருகின்றன.. ஆனால், ஆழ்வார்கள் இவற்றின் மூலம் எப்பேர்ப் பட்ட தெய்வீக அனுபவத்தை அடைந்திருக்கிறார்கள்! அவர்கள் அருளிச் செயல்களில் எத்தனை இடங்களில் இந்தக் கதைகளை உள்ளம் குளிர, நெஞ்சம் உருக அனுபவித்திருக்கிறார்கள்! இதையெல்லாம் இடைச் செருகல் என்று நாம் தள்ளிவிட முடியுமா?

    // ஸ்ம்ருதிகளில், புராணங்களில் பல கருத்துக்களை இடைச்சொருகல் என்று தள்ளி விடுகிறோம். அதேபோல தள்ளவேண்டிய கதை இது. இதை பொருத்துவதற்காக வலிந்து படிமம், தத்துவம் என்றெல்லாம் படுத்துவது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும்.//

    பொதுவாக வைஷ்ணவ புராணங்களில் நிகழ்வுகள் மானுடச் செயல் போன்று அமைந்த தெய்வ லீலைகள் என்று கருதப் படுகின்றன. அவதார தத்துவம் என்ற சரடில் அவை அழகுறக் கோர்க்கப் படுகின்றன. உணர்ச்சிமயமான வெளிமுக பக்திக்கு அவை பெரிதும் தூண்டுதல் அளிக்கின்றன.

    ஆனால் சைவ (மற்றும் சாக்த) புராணங்கள் அனைத்துமே குறியீட்டுத் தன்மை கொண்டவை. முப்புரம் எரித்தல், தட்ச யக்ஞத்தை அழித்தல், நஞ்சு உண்ணுதல், திருநடம் புரிதல், அடிமுடி தேடல் இவை அனைத்துமே தத்துவ நோக்கிலேயே சைவ சித்தாந்தத்தில் விளக்கப் படுகின்றன. திருமந்திரத்தில் ஒவ்வொரு புராணக் கதைகளின் பின் உள்ள ஆழ்ந்த தத்துத்திற்கும் ஒவ்வொரு அத்தியாயமே உள்ளது. உதாரணமாக, கீழ்க்கண்ட பாடலில் முப்புரம் எரித்த புராணத்தை அப்படியே நடந்ததாக நம்புபவன் மூடன் என்றே திருமூலர் கூறுகிறார் –

    அப்ப‌ணி செஞ்ச‌டை ஆதி புராத‌ன‌ன்
    முப்புர‌ம் செற்ற‌ன‌ன் என்ப‌ர்க‌ள் மூட‌ர்க‌ள்
    முப்புர‌மாவ‌து மும்ம‌ல‌ காரிய‌ம்
    அப்புர‌ம் எய்த‌மை ஆர‌றிவாரே….

    இந்த அடிமுடி தேடல் புராணத்தைக் கூறும் அத்தியாயத்திலேயே திருமூலர், பிரமனும், திருமாலும் பரம்பொருளின் வேறானவர்கள் அல்லர் என்றும் கூறூகிறார் –

    தானக் கமலத்திருந்த சதுர்முகன்
    தானக் கருங்கடல் ஊழித் தலைவனும்
    ஊனத்தினுள்ளே உயிர்போல் உணர்கின்ற
    தானப் பெரும்பொருள் தன்மையதாமே.

    எனவே இதைப் படிமமாகவும், தத்துவமாகவும் காண்பதாகச் சொல்வது ஏதோ “புதிய பார்வை” அல்ல, மரபிலேயே உள்ளது தான். எனவே “சைவர்களால் பரப்பப் பட்டு வரும் கதை” என்று ஒற்றைவரியில் நிராகரிப்பது சரியான அணுகுமுறை ஆகாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

    இங்கு சாரதி என்பவர் கூறீயிருக்கும் தாமஸ, ராஜஸ புராணம் என்கிற கருத்தும் சமயக் காழ்ப்பில் விளைந்ததே. சிவ வழிபாடு என்பதே தாமச குணம் என்ற கருத்தாக்கத்திற்கு இட்டுச் செல்லக் கூடியது அது.

    ஆனால் சைவசமயவாதிகளிலேயே இந்தப் புராணத்தை வைத்து கடவுளரில் யார் பெரியவர் என்று வெற்றுவாதம் புரியும் போக்கு இருக்கிறது. அது கண்டிக்கத் தக்கது.

    இது பற்றீ வேதாந்தியான சுவாமி சித்பவானந்தர் கூறுவதை அடுத்த மறுமொழியில் இடுகிறேன்.. புத்தகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்..

  8. சுவாமி சித்பவானந்தர் கூறுகிறார் –

    ”.. பரதத்துவம் ஒன்றை விளக்குவதற்கு அமைந்தது இக்கதை. அதாவது அலையாக வடிவெடுத்திருக்கிற நீர்ப்பகுதி கடல் முழுதையும் காணமாட்டாது. எல்லைக்கு உட்பட்ட பொருள் ஒன்று எல்லை கடந்ததை அளக்க மாட்டாது. கண்டம் அல்லது துண்டிக்கப் பட்ட வஸ்துவுக்கு அகண்ட வஸ்துவை அளக்க முடியாது. மும்மூர்த்திகள் தங்கள் கிருத்தியங்களுக்காக ஜீவபோதம் எடுத்துக் கொண்டவர்கள். அப்படி ஜீவபோதத்தில் இருப்பவர்கள் மும்மூர்த்திகளே ஆனாலும் அவர்கள் பரவஸ்துவை முழுதும் அறியவல்லார் அல்லர். இது தத்துவம்,

    அகண்டாகாரமாகிய சிவம், மூவர்க்கும் (பிரம்மா, விஷ்ணு, ருத்திரன்) முழுமுதலாயிருக்கிறான் என்றும், மூவரால் அறியப் படாதவன் என்றும் ஏழு தடவை திருவாசகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது, இக்கூற்று தத்துவத்துக்கு ஒத்தது.

    இனி, முக்கோணம் ஒன்றுக்கு மூன்று கோணங்களும் இன்றியமையாதவைகள். அங்ஙனம் இயற்கையின் நடைமுறை ஒவ்வொன்றிலும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களும் சேர்ந்தே அமைந்திருக்கின்றன. ஆதலால் மும்மூர்த்திகளும் சம அந்தஸ்துப் பெறுகின்றனர். அது இயற்கையின் நியதி. ஆனால் மாணிக்கவாசகர் அயனையும், அரியையும் செருக்குற்ற சிறு தெய்வங்களாகவும் திருவாசகத்தில் வகைப்படுத்துகிறார். கரிக்குருவிக்குக் கடவுள் கிருபை செய்தார்; அரக்கி மண்டோதரிக்கு அனுக்கிரகம் செய்தார். ஆனால் தற்பெருமை பூண்டிருந்த திருமாலும், படைப்புத் தெய்வமும் பரமனுடைய அருளுக்குப் பாத்திரமாகாது என்றென்றும் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்னும் கருத்தையும் திருவாசகத்தில் அவர் அடுத்தடுத்து சில இடங்களில் இயம்பியுள்ளார். தத்துவத்துக்கு ஒவ்வாத இக்கருத்து சமயப் பிணக்கை வளர்க்கும்; சான்றோர்க்கு இது ஏற்புடையதாகாது.”

    – திருவாசகம் (பக் 92-93), இராமகிருஷ்ண தபோவனம் வெளியீடு, திருப்பராய்த்துறை – திருச்சி மாவட்டம்.

  9. வாதம் என்று வந்துவிட்டாலே அதற்கு முடிவு கிடையாது. நமது அகங்காரம் உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் தடுத்துவிடும். தொடர்ந்து வீண் விதண்டாவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்காக எதை எதையோவெல்லாம் தேடிப்பிடித்து வாதத்திற்கு வலிமை சேர்ப்போம். இம்மாதிரி கட்டுரைகளால் என்ன பயன்? வைணவர் சைவராகிடமாடார். சைவரும் வைணவராகிடப் போவதில்லை. தமிழ் ஹிந்து என்பது ஒருதலைப் பட்சமானது என்று கருதி இந்த வலைப் பக்கம் வராமல் ஒதுங்கிப் போவதற்கு மட்டும்தான் உதவிடும். சைவமும் வைணவமும் ஹிந்து சனாதன தர்மத்தின் இரு கண்கள். சைவர்கள் நல்ல சைவர்களாக இருக்கட்டும். வைணவர்களும் தங்கள் சம்பிரதாயத்தை கடைபிடிக்கட்டும். இரு சமயங்களிலும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பொதுவான நல்ல விஷயங்களைச் சொல்வதற்கே நமது ஆயுள் போதாது. ஒரு சமயத்தை சிறுமைப்படுத்தி எழுதப்பட்டுள்ள கதைகளை சொல்லி வாதம் செய்வதால் ஹிந்து ஒற்றுமைக்கு உதவுமா? ஹிந்து ஒற்றுமை ஏற்படவேண்டும் என்று உண்மையிலேயே தாங்கள் கருதுவீர்களானால் எதிர் காலத்தில் இது போன்ற படைப்புகள் வெளியிடுவதை தவிர்க்கவும்.

    வித்யா நிதி

  10. பார்வ‌தி தேவியார் விஷ்ணுவின் ச‌கோத‌ரி என்றும், விஷ்ணுவான‌வ‌ர் பார்வ‌திக்கும் சிவ‌னுக்கும் திரும‌ண‌ம் செய்து வைத்த‌தாக‌வும் கேள்விப் ப‌டுகிறோம். அவ‌ர்க‌ள் சேர்ந்துதான் இருக்கிரார்க‌ள்.

    சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இருந்த பிணக்கு முதிர்ச்சி இல்லாத சிந்தனையால் உருவானதே, அது தேவை இல்லாதது என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்து, இப்போது சிவா விஷ்ணு கோவில், ரஜினி ராஜா கோவில் என ஒரே கோவிலாக உள்ள கோவில்களே இப்போது அதிகமாக உருவாக்கப் படுகின்றன.

    இந்து ம‌த‌த்திலே எண்ண‌ற்ற‌ பிரிவுக‌ள் உண்டு. அவைக‌ளின் த‌னித்துவ‌ம் அப்ப‌டியே இருக்க‌ட்டும். ஆனால் எல்லா இந்துக்க‌ளுக்கும் அடிப்ப‌டைக‌ள் ஒன்றுதான். ம‌ன‌ முதிர்ச்சியோடு சிந்திக்க‌ வேண்டும்.

  11. இந்து ம‌த‌ம் ப‌குத்த‌றிவு அடிப்ப‌டையிலான‌து. ப‌குத்த‌றிவும், ந‌ம்பிக்கையும் இந்து ம‌த‌த்திலே க‌ல‌ந்து உள்ள‌ன.

    ந‌ம்பிக்கையை வீட்டிலே பெற்றோர்க‌ள், தாத்தா, பாட்டி, உற‌வின‌ர், ச‌மூக‌ குரு ஆகியோர் சொல்லித் த‌ருகின்ற‌ன‌ர். அப்ப‌டி சொல்லித் த‌ரும்போது அதிலே ப‌ழைய‌ பஞ்சாங்க‌ வெறுப்புக் க‌ருத்துக்க‌ளும் க‌லந்து விடுகின்ற‌ன‌.

    ப‌குத்த‌றிவு அடிப்ப‌டையிலான‌ இந்து ம‌‌த‌த்தை நாம் உப‌ நிட‌த‌ங்க‌ள், கீதை ஆகிய‌வ‌ற்றை ப‌டிப்ப‌த‌ன் மூல‌மும் சுவாமி விவேகான‌ந்த‌ர், தியாக‌ராச‌ர், ஆதி ச‌ங்க‌ர‌ர்,புத்த‌ர், அப்ப‌ர்… இப்ப‌டி ப‌ல‌ர் மூல‌ம் அறிந்து கொள்ள‌ வேண்டிய‌ நிலையிலேயே இருக்கிரோம்.

    சிர‌ம‌ப் ப‌ட்டாலும் ப‌குத்த‌றிவு முறையை க‌ற்றுக் கொள்ளுங்க‌ள். சுவாமி விவேகான‌ந்த‌ர் போல‌ க‌ட‌வுள் இருக்கிறாரா என்று பார்க்க‌ முய‌லுங்க‌ள்.

    அப்ப‌டி பார்த்த‌ பின், க‌ட‌வுள் இருக்கிறாரா, உருவ‌ம் இருக்கிறதா, அவ‌ர் க‌றுப்பா‌, சிவப்பா, காளி யாக‌ இருக்கிறாரா, விஷ்ணுவாக‌ இருக்கிறாரா, சிவ‌னாக‌ இருக்கிறாரா, எல்லாமுமாக‌ இருக்கிறாரா, அடியா, முடியா என்ப‌து எல்லாம் அப்போது தெரியும்.

    உல‌கிலே யே ச‌கிப்புத் த‌ன்மை அதிக‌ம் உள்ள‌ ம‌த‌மாக‌ இந்து ம‌த‌ம் கருத‌ப் ப‌டுகிற‌து. ச‌கிப்புத் த‌ன்மை, எல்லா க‌ட‌வுள்க‌ளையும் வ‌ண‌ங்கும் த‌ன்மை, ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை ஏற்றுக் கொள்வ‌து இவை இந்து ம‌த‌த்தின் முக்கிய‌க் க‌ருத்துக்க‌ள்.

    சைவ‌ர்க‌ள் விஷ்ணுவை வ‌ணங்குவ‌து அவ‌ர்க‌ளின் பெருந்த‌ன்மையைக் காட்டும். வைண‌வர்க‌ள் சிவ‌னை வ‌ணங்குவ‌து அவ‌ர்க‌ளின் பெருந்த‌ன்மையைக் காட்டும். யாரையும் நான் க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை.

    இல்லை ஒரு க‌ட‌வுள் … சிவ‌னைத் த‌விர‌…..

    அல்ல‌து

    இல்லை ஒரு க‌ட‌வுள்… விஷ்ணுவைத் த‌விர‌ ….

    என்று யாராவ‌து சொன்னால்

    அது கிட்ட‌த் த‌ட்ட‌ இல்லை ஒரு க‌ட‌வுள் அல்லாவினைத் த‌விர‌ என்கிற‌ ரேஞ்சிலே கொண்டு போய் விடாதா என்று தாழ்மையுட‌ன் தெரிவிக்கிரேன்.

    எந்த‌ அளவுக்கு வெறுப்பில்லாம‌ல் – ‍ அத்வேஷ்டா – வாக‌ இருக்கிரானோ அந்த‌ அளவுக்கு அவ‌ன் சிற‌ந்த‌ இந்து.

    இராம‌ர் சிவ‌னை வ‌ணங்க‌வில்லையா?
    தியாக‌ராச‌ர் “மாற‌ வைரி ர‌ம‌ணீ ம‌ஞ்சுபாஷிணி” என்று பாடவில்லையா?

    ஆயிர‌ம் பிர‌ச்சினை இருக்கும் போது, கிட‌ப்ப‌து கிட‌க்க‌ட்டும், கிழ‌வியை தூக்கி ம‌னையில் வை, என்ப‌து போல‌ வெட்டி ச‌ண்டை தேவையா?

  12. நண்பர்களே, அடிமுடி தேடிய கதை இந்த ப்ரபஞ்சம் எல்லையற்றது என்பதை புரியவைக்க, ‘infinitive’ என்பதை எளிதாக மனதில் பதிய வைக்க சொன்ன கதை. அதை ஏன் இப்படி குழப்பிக்கொள்கிறீர்கள் என்று புரியவில்லை. இந்து மத கதைகளை அது சொல்லவரும் கருத்தை கொண்டு ஆராய்வதே நல்லது.

  13. Vidhya Nithi, I agree with you. Tamil Hindu should avoid similar articles in future. What we do not need at this time is division among ourselves..

  14. // Tamil Hindu should avoid similar articles in future. What we do not need at this time is division among ourselves.. //

    நண்பர்களே, இது ஒரு வித எஸ்கேபிஸ பார்வை என்பது என் தாழ்மையான எண்ணம்.

    எந்த இந்து சமயப் பிரிவையும் அவதூறு செய்தல் கூடாது, அது மிக முக்கியம்.
    ஆனால் இத்தகைய புராணக் கதைகள் எப்படி அணுகப்பட வேண்டும், அவற்றுக்குப் பின் உள்ள தத்துவ சிந்தனைகள் என்ன என்பதையெல்லாம் தமிழ்ஹிந்து போன்ற தளங்களில் எழுதாமல் வேறெங்கு எழுத முடியும்?

    இந்து விரோதிகள் இவற்றை தவறான நோக்கில் விமர்சித்து, இந்துமதத்துக்குள் சண்டைகள் உண்டு என்பார்கள். அதீத சைவ/வைணவப் பற்றாளர்கள் தங்கள் சமயப் பிரிவின் பார்வையையே மையமாகக் கொண்டு விமர்சிப்பார்கள். எனவே இந்து ஆன்மிகத்தில் முழு ஈடுபாடு கொண்டு நடுநிலைமையுடன் சிந்திக்கும் அறிஞர்களே இதைப் பற்றிய சரியான விளக்கங்களைக் கொடுக்க முடியும். அத்தகைய விளக்கங்கள் நமக்குக் கட்டாயம் தேவை. அவை யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதும் முக்கியம்.

    ஒரு உதாரணமாக சுவாமி சித்பவானந்தரின் கருத்தை இதற்கு முந்தையை மறுமொழிகளில் தந்திருக்கிறேன்.

    சாதியைப் பற்றிப் பேசுவது வேற்றுமைகளை வளர்க்கும் என்பதால் அதைப் பற்றி நாம் பேசாமல் இருந்து விடுகிறோமா? அதைப் பற்றிய ஒரு நடுநிலைமை கொண்ட இந்துப் பார்வையை உருவாக்கிக் கொண்டுவரவே முயல்கிறோம், இல்லையா?

  15. //இராம‌ர் சிவ‌னை வ‌ணங்க‌வில்லையா?

    யார் பெரியவர், ராமர் சிவனை ஏன் வணங்க கூடாது ? என்ன குடியா முழுகி போகிடும்? சிவனா விஷ்ணுவா இல்லை ஏசுவா என்ற எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இதை சொல்கிறேன்

    நாம் எப்பொழுதுமே தகுந்த முன்னோர்கலளால் எடுக்கப்பட்ட மேற்கோள்களை மட்டுமே எடுக்க வேண்டும்

    ராமர் சமுத்ரா அரசனிடம் சரணாகதி பண்ணுகிறார், சுக்ரிவனுக்கு பனி செய்கிறேன் என்கிறார் – இதெல்லாம் ராமாயணத்தில் உண்மையில் இடம் பெறுகின்றன

    இந்த லிங்க பிரதிச்டைக்கு ஆதாரம் கிடையாது – இது மூலமான வால்மீகி ராமாயனத்திலும் இல்லை, அதற்கு அடுத்து கூறப்படும் கம்ப ராமாயனத்திலும் இல்லை

    லிங்க பிரதிஷ்டை முதலில் கையாண்டவர் துளசி தாசரே – அவர் அத்வாததின் சிறப்பை சொல்வதற்காக இந்த கதையை அனுபவ பூர்வமாகவே சேர்த்திருக்க வேண்டும் . துளசி ராமாயணம் வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை எற்படுதியடாலேயே தொலைகாட்சியில் வரும் ராமாயணத்தில் இந்த லிங்க பிரதிஷ்டை இடம் பெறுகிறது.

    பரதனோ சிறை வாசம் முடிந்து ராமன் வர ஒரு நாள் தாமதமானாலும் உயிர் துறப்பேன் என்கிறான் – அப்படி இருக்க ராமர் குபேரனின் விமானத்திலே அவசரமாக அயோத்தி புரபடுகிறார் – இந்த சமயத்தில் அவருக்கு ராமசெஸ்வரத்தில் இறங்கி லிங்க பிரதிஷ்டை செய்ய ஏது நேரம்

    அதுவும் இல்லாமல் ராவண வாதம் முடிந்த பின் – வானவர், பிரம்ம, சிவன் எல்லோரும் காட்சி தந்து மலர் தூவுகிறார்கள் – ராமர் சிவனுக்கு அங்கேயே தனது வணக்கத்தை தெருவித்து இருக்கலாமே – காலம் தாழ்த்தி ஏன் அதை எங்கோ ராமேஸ்வரம் சென்று செய்ய வேண்டும் – சிவனே நேராக வந்த பின் லிங்க பிரதிஷ்டை செய்வானேன். அது போர்க்களம் சீத தேவியுடன் செய்யவேண்டும் என்பதாலே லிங்க பிரதிஷ்டை என்று நீங்கள் கூறலாம் – அது அப்படி கூற முடியாது – ஏன் என்றால் அன்னாருக்கு எல்லாமே ராமன் தான் – ராமனை தவிர மர்ரவர யாரையும் அவள் தலை வணங்காது – கற்புக்கு அரசியான அவள் அந்த சக்தியாலேயே ராவணனை பஸ்பம் செய்திருக்க முடியும் – ஆனால் அவள் தன்னை ராமன் அன்றி வேறு யாரு காப்பாற்ற கூடாது என்பதில் உறுதியாக இருந்தால், சத்த சர்வ காலமும் ராம ராம என்றே இருந்தாலே தவிர, விஷ்ணுவே, சக்தியே, சிவனே என்னை காப்பாற்றுங்கள் என்று அவள் ஒரு போதும் வேண்டியதில்லை

    இதை எழுதுவது முற்றிலும் உண்மை என்று கருதபடாத ஒரு மேற்கோளை நாம் தவிர்க்க வேண்டும் மற்றும் ஒரு விஷயத்தை நன்கு ஆராய்ந்து கற்ற பின்னரே மேற்கோள்களாக பயன் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே

  16. My humble opinion, without trying to offend anyone
    For Shaivites, it is all Shivamayam. For Vaishvanavites, it is all Vishnumayam.When one tries to potray Shiva as the supreme Brahman,as in this story, the Vaishnavites naturally will get upset and vice versa when Vishnu is shown as the Supreme Brahman.In Gita, Bhagavan Krishna in His Vishva Rupam, shows Shiva, Vishnu and Brahma all existing in HIM. Krishna,is an Avatar of Vishnu, hence this scenario will not please simple “hardcore ? ” shivite!! He will counter it with other stories to supprt Lord Shiva’s supremacy.
    Of course we all know that Shiva and Vishnu are all one and the same, but do we need this controversy now?

  17. Sorry for carrying on. With due respect,the caste and divisions in our religion is really another topic and cannot be compared to this Shiva/ Vishnu supremacy.
    I am sure both groups will totally be in agreement reg evils of this caste system and there is no place for any controversy here.Let us all talk and discuss about this caste stigma in Hinduisim more and more and hopefully such discussions will be fruitful for everyone..

  18. Its really painful and shameful to see the comments in this section.’harium sivanum onnu,ariyathavar vayil mannu’- I think people here are forgetting this. Instead of understanding the crux of the story, if we harp on such silly issues, then its no surprise, the vested interest are waiting to pounce on us. We hindus need no one from outside to destroy us, we ourselves are capable of doing this pretty soon. This is evident from the comments in this section.

    Let us unite as ‘Hindus’ and learn together, instead of fighting amoungst ourself.

  19. இந்த கட்டுரை நல்ல முறையிலயே எழுத பட்டிருந்தாலும், இதனால் ஏன் இவ்வளவு சர்ச்சை?? நீங்கள் முதலில் கட்டுரையை முழுவதுமாக படித்தீர்களா?? கட்டுரையின் தொடக்கத்திலயே, ஆசிரியர் பின்வருமாறு கூறியுள்ளரே:-

    //ஸ்ரீமகாவிஷ்ணு முழுமுதல் பரம்பொருளின் வடிவமே என்பதில் நமக்கு எந்த பிணக்கும் இல்லை. இந்தப் புராணக் கதைக்காக, விஷ்ணு என்பது காக்கும் தொழில் கொண்ட கடவுளைக் குறிப்பதாக வைத்துக் கொள்வோம். புராணக் கதைகளின் மையமான நோக்கம் தத்துவங்களை விளக்குதல் தானே அன்றி, தெய்வ வடிவங்கள் பற்றிய பூசலை உண்டாக்குவதல்ல என்பதையும் மனதில் கொள்வோம்.//
    (தொடக்கத்திலிருந்து ஆறாவது வரி பார்க்கவும்).

    இங்கு மறுமொழிகளை பிரசுரித்தவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்க நேற்று நான் இரண்டு மணிநேரம் செலவழித்து ஒரு பெரிய கட்டுரையை எழுதினேன். ஆனால் அதை சேமிப்பதர்க்குள் ஏன் துரதிர்ஷ்டம், வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. என் வாழ்நாளில் நான் எழுதிய முதல் கட்டுரை பலனில்லாமல் போனது! சரி, இப்பொழுது இன்னொரு கட்டுரையை என்னால் எழுத முடியவில்லை. அதனால், அதிலிருந்த முக்கியமான விஷயங்களை மட்டும் இங்கு மறுமொழியாக பிரசுரிக்கிறேன். பிரம்ம படைக்கிறார், விஷ்ணு காக்கிறார், சிவன் அழிக்கிறார். இதில் எந்த தொழிலும் மற்றொன்றிற்கு உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை! படைத்தல், காத்தல் இரண்டுமே ஒருசேர நடக்கும். ஆனால், இவை இரண்டும் சற்று நின்றால்தான் அழிவு (பிரளயம்) வரமுடியும். அதனால்தானோ என்னவோ, இங்கு சிவன் பிரம்மா, விஷ்ணு இருவரையும் சிவன் வென்றதாக காட்டப்பட்டுள்ளது. அதாவது, படைத்தல், காத்தல் இரண்டும் சற்றுநேரம் நின்றுபோக பிரளயம் வந்திருக்கவேண்டும். இதனால், பிரம்மாவும் விஷ்ணுவும் தாழ்ந்தவர்கள், சிவன் உயர்ந்தவர் என்று பொருள் கொள்ளக்கூடாது! அதேபோலத்தான், சிவன் சரபேஸ்வரராக நரசிம்மரை வென்றதாக சொல்லப்படும் கதையும். நரசிம்ம அவதாரம் நடந்தது கிருத யுகத்தின் முடிவில், எனவே அப்பொழுது ஒரு பிரளயம் வந்திருக்க வேண்டும். எனவே, இங்கு படைத்தல் நின்று அழித்தல் நடந்தது என்பதை குறிப்பதே, சரபேஸ்வரர் நரசிம்மரை சாந்தப்படுத்தியதாக சொல்லப்படும் வரலாறும். (இக்கதை வெறும் ‘தாமச’ புராணங்களில் மட்டுமில்லை, மாறாக அதர்வவேதத்தில் வரும் சரப உபநிஷத்திலும் உள்ளது). இதனால், சரபேஸ்வரர் நரசிம்மரை விட பெரியவர் என்று சொன்னால் அது மதியீனம். ஏனெனில், இன்று நரசிம்மருக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான ஆலயங்களை பார்க்கும்போது, சரபேஸ்வரருக்கு மூன்று ஆலயங்களே உள்ளன. அதனால், இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்றும் பொருளில்லை, இக்கதை நடக்கவே இல்லை என்றும் பொருளில்லை. நாம் புரிந்து கொண்டது தவறு என்பதே சரி!

    சரி, இதே போல ஸ்ரீமத் பாகவதத்தில் (8.12) விஷ்ணுவின் மோகினி உருவத்தைப்பார்த்து சிவன் மயங்கினார் என்றால், சிவன் புலனை அடக்காதவர், எனவே காமவயப்பட்டார் என்று பொருள் கொள்ளுதல் தவறானது! எல்லாம் ஒரு காரண காரியத்துடன் தான் நடக்கிறது. தேவயில்லாமலா விஷ்ணு மோகினி உருவெடுத்தார்? தேவயில்லாமலா, சிவன் அவருடன் சேர்ந்தார்? அப்படி ஆனால்தான் அவர்கள் மூலம் பிறக்கும் ஹரிஹரபுத்திரன் (ஐயப்பன்) மூலம் அரக்கியான மகிஷி சம்மாரம் செய்யப்பட முடியும். இக்கதை பாகவதத்தில் இல்லை, ஆனால் இது இந்து மரபு, நம்பிக்கை!

    பிருகு முனிவர் திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார்! அதனால், பிருகு விஷ்ணுவை விடப்பெரியவர் என்று சொன்னால் எப்படி? பிரிகுவிடம் விஷ்ணு, பிரம்மா, சிவன் மூவரும் சாபம் பெற்றுள்ளனர். காந்தாரி கிருஷ்ணனை சபித்தால், அதனால் காந்தாரி பரமாத்மாவை விட உயர்ந்தவளா? காரணமில்லாமல், பகவான் எதையும் செய்யமாட்டான்!

    சாரங் அவர்களே, இராமபிரான் சிவனை இராவனவதத்திர்க்குப்பிறகு லிங்க பிரதிஷ்டை செய்யவில்லை, இலங்கைக்கு செல்வதற்கு முன்னாலே செய்துவிட்டார். மேலும், துளசிதாசர் வேறோருவரில்லை. அவர் வால்மீகி முனிவரின் மறுபிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது.

    பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே பிரம்மம் தான். படைக்கும்போது அவன் பிரம்மா, காக்கும் போது விஷ்ணு, அழிக்கும் போது சிவன். எனவே புராணங்களையும், இதிகாசங்களையும் சரியாக புரிந்துகொள்ளுதல் அவசியம்.

    முடிவாக, சிருங்கேரி பீடத்தை 1892 முதல் 1954 வரை அலங்கரித்த ஸ்ரீ சந்திரசேகரேந்திரா பாரதி சுவாமிகள் கூறி சில வரிகளை இங்கு சொல்கிறேன்:- “உங்களால், இறைவனின் பாதத்தையே பார்க்க முடியவில்லை, அவன் முகம் எப்படியிருக்கிறது என்பதை எண்ணி ஏன் சண்டைபோடவேண்டும்? ஞானம் பெறுவோம், பக்தி செய்வோம், இறைவனிடம் செல்வோம், அவன் கையில் சங்கு, சக்கரம் கதை வைத்திருந்தால் அவனை விஷ்ணு என்று வணங்குவோம், இல்லை டமரு, திரிசூலம் வைத்து ஜடாமுடியுடன் இருந்தால் அவனை சிவனாகத் தொழுவோம்..”.

    I think this is what required today, unless Hindus give up their CASTEISM AND SECTARIANISM, the Vedic/Vedantic religion will struggle!

  20. Hinduism is an ocean of hidden insights . Unless we carefully relate the stories with the respective insight, we will only end up doing what anti- Hindus are doing.

    The basic insight is that the many gods of Hinduism are not competitors to one another, but are only doing a complementary role to make the Wholesome Brahman who also exists in them as adhyaatman. If a story is handed down to us by Puaranas or Ithihasas showing a kind of rivalry or a clash of Godhood, we have to realize that there lies a deeper insight which can not be deciphered by ordinary reckoning. This story presents itself as a candidate for such decipherment

    In the story discussed above, the search should have started with what Shivarathri stands for and what really happens at the point of Time and Space on Maha shivarathri day. The pramanas for any such search or decipherment are clearly delineated by all acharyas as the ‘Prasthana thrayam’ – the three gems called Brahma sutras, Upanishads and Bhagawad Gita. When researched in that way, we will find a fantastic insight of a cosmic scene behind this story which neither throws poor light on other Gods nor show it as a kind of Superiority of one deity. It just puts in perspective how the different gods have their portfolios at their disposal.

    I wish to write that insight in this dot com if the editors permit me.

  21. வால்மீகி இராமாய‌ண‌த்தில் இராம‌ர் சிவ‌னை வ‌ழிப‌ட்ட்து உண்டா இலையா என்ப‌தை வால்மீகி இராமாய‌ண‌த்தை முழுதும் க‌ற்ற‌ ந‌டு நிலையான‌ சான்றோர் சில‌ர் உறுதி செய்தாலே ஒப்ப‌ இய‌லும்.

    தொலைக் காட்சி இந்தியாவிற்க்கு வ‌ரும் முன் வெளியான‌ நூல்க‌ளிலேயே இராம‌ர் சீதை இருவ‌ரும் ம‌ண‌ல் வைத்து லிங்க‌ம் செய்து பூச‌னை செய்வ‌து வெளியாகி உள்ள‌து.

    நான் இராம‌ய‌ண‌ கால‌ க‌ட்ட‌த்திலே வாழ‌வில்லை. என‌வே இராம‌ர் சிவ‌னை பூச‌னை செய்தார் என்ப‌து உண்மையா என‌ அடித்து சொல்ல‌ என்னால் இய‌லாது. என்னவோ தான் இராம‌ருட‌ன் சேர்ந்து இல‌ங்கையில் அயோத்திக்கு வ‌ந்த‌து போல‌வும், ஒரு நிமிட‌ம் கூட‌ விடாம‌ல் கூட‌ ‌ இருந்து பார்த்த‌து போல‌வும், இராம‌ர் சிவ‌னை பூச‌னை செய்ய‌வில்லை என‌ சொல்வ‌து ச‌ரியா? சீதாம்மாவை இதில் இழுப்ப‌து தேவை இல்லாத‌து. தெய்வ‌ம் தொழாள் கொழுன‌ன் தொழுவாள் பெய்யென‌ப் பெய்யும் ம‌ழை என‌ப‌து வ‌ள்ளுவ‌ர் வாக்கு.

    சாதி வெறி, ம‌த‌ வெறியில் இருந்து ச‌மூக‌த்தைக் காப்ப‌து க‌டின‌மான‌ செய‌ல் தான். முள்ளிலே விழுந்த‌ சேலையை எடுப்ப‌து போன்ற‌து.

  22. இராமர் ந‌ல்ல‌வ‌ர், ம‌ற்றவ‌ர் ம‌கிழ்ச்சிக்காக‌ தான் துன்ப‌ம் அனுப‌வித்த‌வ‌ர், ம‌த‌வெறி இல்லாத‌வ‌ர், வெறுப்புக் க‌ருத்து இல்ல‌த‌வ‌ர், தியாகி – இதைக் காட்ட‌வே இராம‌ர் சிவ‌னை வ‌ண‌ங்கினார் என்று எழுதினோம்.

    ம‌னித‌ரிலும் இராம‌னுக்கு ச‌மான‌ம் இல்லை, இறைவ‌னிலும் இராம‌னுக்கு ச‌மான‌ம் இல்லை‍ என்றே புல‌வ‌ர்க‌ள் பாடி உள்ள‌ன‌ர்.

  23. ஹிந்து ஒற்றுமைக்காக துவங்கப்பட்ட இந்த தளத்தில் தற்போது சைவ, வைணவ மதத்தினரிடையே விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பதிலுக்கு விளக்கம் அந்த விளக்கத்திற்கு ஒரு விளக்கம் அதற்கு ஒரு மறு விளக்கம் என்று இக்கட்டுரையில் எழுதியுள்ள அடிமுடி தேடிய கதையாக முடிவில்லாமல் சென்று கொண்டுதான் இருக்கும். இம்மாதிரி கட்டுரைகளால் மேலும் மேலும் வீண் வெட்டி விவாதங்களும், இறுதியில் மனக்கசப்பு உருவாகி ஹிந்து சிந்தனையை பின்னுக்குத் தள்ளிவிட வாய்ப்பு இருக்கிறது.

    இன்றுகூட நமது நாட்டில் ஹிந்து என்கிற உணர்வை விட ஜாதி மற்றும் மத உணர்வு(சைவ , வைணவ ) அதிகம். ஹிந்து உணர்வைவிட இவைகள் அதிக சக்தி வாய்ந்தவை. எனவே அந்த விஷயத்தினை நாம் மிகுந்த கவனத்துடன்தான் அணுகிட வேண்டும். ஹிந்து என்பதை விட தாங்கள் கடைபிடிக்கின்ற மத சம்பிரதாயங்கள் முக்கியம் என்று மக்கள் கருதுவரே தவிர ஹிந்து உணர்வு என்பது அப்போது வராது. அவர்களது உணர்வு அல்லது நம்பிக்கை தாக்குதலுக்கு உள்ளாகும் போது அதற்காக வாதாடதான் தோன்றுமே தவிர நீங்கள் சொல்கின்ற ஹிந்து சிந்தனையுடன் ஒத்துப்போக இயலாது.

    எனவே ஹிந்து ஒற்றுமைப் பணியில் ஈடுபடுபவர்கள் சிலவற்றை பற்றி பேசிடவே கூடாது. கடும் பத்தியங்களைக் கடைபிடித்திட வேண்டும். உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளை சற்று தள்ளி வைத்து விட்டு வேலை செய்தால் தான் ஹிந்து ஒற்றுமை என்பது சாத்தியமாகும். அப்போது மட்டுமே நமது முயற்சிகளும் பலனளிக்கும்.

    வித்யா நிதி

    (edited and published)

  24. அனைவருக்கும்

    நான் யார் பெரியவர் என்ற விவாதத்திற்கே வரவில்லை அது வீணான ஒரு செயல் என்று நன்கு உபதேசம் பெற்றவன் – எனக்கு அன்னுடைய ஆச்சார்யர் சொன்ன உபதேசம் “Woship yours Respect others”

    நாம் நமது இஷ்டம் போல மேற்கோள்கள் காட்ட வேண்டாம் – நன்கு ஆராய்ந்த பின்னரே காட்ட வேண்டும் என்ற எனது தாழ்மையான கருத்தை தானே சொன்னேன்

    //வால்மீகி இராமாய‌ண‌த்தில் இராம‌ர் சிவ‌னை வ‌ழிப‌ட்ட்து உண்டா இலையா என்ப‌தை வால்மீகி இராமாய‌ண‌த்தை முழுதும் க‌ற்ற‌ ந‌டு நிலையான‌ சான்றோர் சில‌ர் உறுதி செய்தாலே ஒப்ப‌ இய‌லும்.
    //

    அப்போது நீங்கள் முழுவதுமாக கற்று நடுநிலையில் இருந்து தான் ராமர் சிவனை வழிபட்டார் என்று சொன்னீர்களா

    நான் ஒன்னும் சும்மா என் இழ்டம் போல சொல்லவில்லை – நீங்கள் சொல்வது போல் ராமாயணத்தில் மிக தேர்ச்சி பெற்றவரிடம் கேட்டுதான் சொல்கிறேன்

    //
    நான் இராம‌ய‌ண‌ கால‌ க‌ட்ட‌த்திலே வாழ‌வில்லை. என‌வே இராம‌ர் சிவ‌னை பூச‌னை செய்தார் என்ப‌து உண்மையா என‌ அடித்து சொல்ல‌ என்னால் இய‌லாது. என்னவோ தான் இராம‌ருட‌ன் சேர்ந்து இல‌ங்கையில் அயோத்திக்கு வ‌ந்த‌து போல‌வும், ஒரு நிமிட‌ம் கூட‌ விடாம‌ல் கூட‌ ‌ இருந்து பார்த்த‌து போல‌வும், இராம‌ர் சிவ‌னை பூச‌னை செய்ய‌வில்லை என‌ சொல்வ‌து ச‌ரியா?
    //

    நீங்கள் இங்ஙனம் சொல்வது விந்தையாக உள்ளது – அப்போ ராமாயணத்தில் நடந்ததை எல்லாம் நேரில் கண்டாலே ஒழிய நான் மட்டும் ஏதும் சொல்ல கூடாதா – ஆனால் நீங்கள் மட்டும் நேரில் கண்டது போல அவர் பூஜை செய்தார் என்று அருதியிடாமல் கூறலாம் 🙂

    அப்போ ராமர் இருந்தார் என்றே என்னால் மட்டும் கூற இயலாதோ? நான் ஒன்னும் கூட இருந்து பார்த்தது போல் எழுதவில்லை – வால்மீகி ராமாயணத்தில் உள்ளதை தான் எழுதினேன் – நான் நேரில் பார்த்த சாட்சி என்று எழுதவில்லை – வால்மீகியின் மனசாட்சி சொன்னதை தான் எழுதினேன் – கொஞ்சம் ராமாயண பக்கங்களை புரட்டி பாருங்கள் அப்புறம் என்னை சாடலாம் 🙂

    சீதா பிராட்டியை நான் ஒன்னும் வம்புக்கு இழுக்க வில்லை – பலர் லிங்க பிரதிஷ்டை நடந்ததாக கூறுவதற்கு இதை காரணமாக கூறி உள்ளனர் அதை மறுக்கவே அந்த கருத்து சொல்லப்பட்டது

    //
    இராமர் ந‌ல்ல‌வ‌ர், ம‌ற்றவ‌ர் ம‌கிழ்ச்சிக்காக‌ தான் துன்ப‌ம் அனுப‌வித்த‌வ‌ர், ம‌த‌வெறி இல்லாத‌வ‌ர், வெறுப்புக் க‌ருத்து இல்ல‌த‌வ‌ர், தியாகி – இதைக் காட்ட‌வே இராம‌ர் சிவ‌னை வ‌ண‌ங்கினார் என்று எழுதினோம்.
    //

    இதை காட்ட ஏன் இல்லாத ஒன்றை சொல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது கேள்வி. என்னுடைய பதிலிலேயே ராமர் சமுத்ரராஜனிடம் சரணடைந்தான் என்றும் தானே எழுதி இருந்தேன். – இது நடந்த விழயம் (அதாவது வால்மீகி ராமாயணத்தில் உள்ள விஷயம்) – இதை படிக்காமல் விட்டுவிட்டு நான் வெறுப்பு கருது சொல்வதுபோல் கூறுவது சரி இல்லையே?

    சமுத்ர ராஜனிடம் சரண் புக காரணம் இருக்கிறது அதனால் சரண் புகுந்தான். ஆனால் லிங்க பிரதிஷ்டைக்கு சரியான காரணம் இல்லை

    அப்படி இதை நீங்களே எழுதி இருந்தால் ராமன் ஏன் பிரம்மாவையும் சிவனையும் சேர்த்து வணங்கினான் என்று எழுதவில்லை – இது இன்னும் ராமனின் பெருமையை பறைசாற்றும் அல்லவே

    //சாரங் அவர்களே, இராமபிரான் சிவனை இராவனவதத்திர்க்குப்பிறகு லிங்க பிரதிஷ்டை செய்யவில்லை, இலங்கைக்கு செல்வதற்கு முன்னாலே செய்துவிட்டார். மேலும், துளசிதாசர் வேறோருவரில்லை. அவர் வால்மீகி முனிவரின் மறுபிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது.

    இல்லை – அவர் இலங்கை செல்லும் முன் சமுத்ரா ராஜனிடம் மட்டும் தான் சரணாகதி அடைந்தார்

    ராமர் சிவலிங்க பிரதிஷ்டை செய்ததாக சொல்வதற்கு பிணயபடும் இன்னொரு காரணம் அவர் பிராமணனாகிய ராவணனை கொன்றார் அதனால் அவருக்கு பிரம்மஹதி தோஷம் ஏற்பட்டது அதனால் அவர் சிவா லிங்க பிரதிஷ்டை செய்தார் என்று – இங்ஙனம் இருக்க ராவணனை கொல்வதற்கு முன்னமே அவருக்கு எவ்வாறு தோஷம் ஏற்படும்

    துளசிதாசர் வால்மீக்யின் மருபிரப்பகவே இருப்பினும் – ராமாயணத்தை பொருத்தமட்டில் வால்மீகி ராமாயணமே மூலம் அதில் சொன்னதே முடிவு அதில் மற்றம் இருக்க முடியாது

    சபரி தான் உண்ட பழத்தை ராமனுக்கு தந்ததாக உள்ளது துளசி ராமனத்தில் மட்டும் தான் – வால்மீகி ராமாயணத்தில் இல்லை

    ராவணன் சீதா பிராட்டியை தூக்கி சென்றான் என்று தான் வால்மீகி ராமாயணத்தில் பிரசித்தம் ஆனால் கம்பரோ கர்புஅடைய என் அன்னையை அவ்வாறு சித்தரித்தலாகத்து என்று ராவணன் சீத பிரட்டி இருந்த கூரையுடன் தூக்கி சென்றான் என்றே சொன்னார்

    இப்படி பல வித்யாசங்கள் உண்டு – எது எப்படி இருப்பினும் வால்மீகி ராமாயணமே மூலம்

    //
    பிருகு முனிவர் திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார்! அதனால், பிருகு விஷ்ணுவை விடப்பெரியவர் என்று சொன்னால் எப்படி? பிரிகுவிடம் விஷ்ணு, பிரம்மா, சிவன் மூவரும் சாபம் பெற்றுள்ளனர். காந்தாரி கிருஷ்ணனை சபித்தால், அதனால் காந்தாரி பரமாத்மாவை விட உயர்ந்தவளா? காரணமில்லாமல், பகவான் எதையும் செய்யமாட்டான்
    //

    இன்னும் எத்தனையோ உள்ளன – பகவானை இருந்த போதிலும் சாந்திபிணி மகாரிஷ்யிடம் பாடம் கற்றான் – அவருக்கு பணிவிடை செய்தான் – சுதாமாவை அண்ணா என்று அழைத்து சிரம பரிஹாரம் செய்தான் – அவர் உறங்கும் பொது கால் அமுக்கி விட்டான்

    அய்யா இதெற்கெல்லாம் சரியான மூலம் (பிரமாணம்) இருக்கிறது அதனால் இதை நம்பலாம் – ஆனால் லிங்கப்ரதிஷ்டைக்கு இல்லை – விஷயம் அவ்வளவே

    நீங்கலாக ஏன் நான் விஷ்ணு மட்டுமே உயர்ந்தவர் என்று என்னுவடாக கொள்ள வேண்டும் – நான் அப்படி எங்குமே கூற வில்லையே – மறுபடியும் எனது பதிலை படித்து பாருங்கள்

  25. //
    Its really painful and shameful to see the comments in this section.’harium sivanum onnu,ariyathavar vayil mannu’- I think people here are forgetting this. Instead of understanding the crux of the story, if we harp on such silly issues, then its no surprise, the vested interest are waiting to pounce on us
    //

    Dear satish – none here in their replies have claimed that only Siva is supreme or VIshnu is supreme. the discussion is over the purport of the story and authenticity of the references and the way it has been rendered

    //
    பிரம்மா-விஷ்ணுவின் மோதலில் நமக்கு இன்னுமொரு பாடமும் இருக்கிறதோ? ஸ்ரீதேவியும், பூதேவியும் கொண்ட விஷ்ணுவும் சரி, ஞானாம்பிகையான சரஸ்வதியைக் கொண்ட பிரம்மாவும் சரி, இருவருமே தம்தம் அகந்தையின் எழுச்சியினாலேயே வாதத்தைத் தொடங்கினர்.
    //
    read these lines – this is the inference of the author – i was only surprised why we are brining in Bramha and Vishnu to deliver the crux. All of us understand the crux. I am only writing to curb giving examples that can be misleading, Please read my first post on this subject

    //திரு ராமன் அவர்களே

    உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

    மேலோட்டமாக பார்கிறோமோ ஆழமாக பார்கிறோமோ இது போன்ற கட்டுரைகள் மற்ற மதத்தினர் நம்மை எள்ளி நகையாடவே வைக்கும் – விஷ்ணுவும் பிரம்மாவும் அகந்தை உற்றனர் – இது தான் ஹிந்து கடவுள்களின் அழகு என்றல்லவா எண்ணுவார்கள்
    //

    My only intent is – never ever show our devathaas – be it Indra, Rudra or Vishnu in poor light , for all of them verily being devathaas are more supreme than us

    When we put a disclaimer at the begninning of the article that the intent is not to create confusions – then why write the story in the first place – is it not known already that this story will create confusion? If so the disclaimer is of very little use.

  26. ஸ்ரிகாந்த் அவர்கள் கூறுவது:
    “இந்த கதை, நாயன்மார்கள் காலத்துக்கு சற்றுமுன் புனையப் பட்டுள்ளன. [நன்றி – புத்தூர் சுதர்சனர்
    ஸ்ம்ருதிகளில், புராணங்களில் பல கருத்துக்களை இடைச்சொருகல் என்று தள்ளி விடுகிறோம். அதேபோல தள்ளவேண்டிய கதை இது. ”

    இது தவறான தகவலாகும். த‌வ‌றான‌ அணுகுமுறையும் கூட‌.

    இன்றைய‌ த‌மிழ‌க‌ ஆட்சியாள‌ர்க‌ள் ஏழாம் நூற்றாண்டுக்குமுன்ன‌ர் த‌மிழ‌க‌த்தில் வினாய‌க‌ர் வ‌ழிபாடு இல்லை என்று கூறுவ‌தைப் போன்ற‌தே இதுவும்.

    இந்திய‌த்தொல்பொருள்துறையின் ஆராய்ச்சியாள‌ர்க‌ளால், 2200 ஆண்டுக‌ளுக்கு முந்தைய‌தாக‌க் க‌ருத‌ப்ப‌டும் குடிம‌ல்ல‌ம் சிவ‌லிங‌க‌க் கோவில் ப‌ர‌சுராமேஷ்வ‌ர் ஆல‌ய‌ம் என்று வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து. இந்தக் கோவிலில் பரசுராமர் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. என‌வே எல்லாவற்றையும் இடைச்செருக‌ல் என்று நாமே கூறிவிட‌முடியாது.

    கணாபத்யம், சைவ‌ம், சாக்த‌ம், வைண‌வ‌ம், கௌமார‌ம், சௌர‌ம் என்ற‌ ஆறு பிரிவின‌ரையும் உள்ளட‌க்கி ச‌னாத‌ன‌ த‌ர்ம‌த்தை ஸ்தாப‌க‌ம் செய்த‌ ஆதிச‌‌ங்க‌ரரின் குருவ‌ரிசையில் முழுமுத‌ல்குரு விஷ்ணுவே ஆவார்.

    புராணங்க‌ளில் உள்ள உட்க‌ருத்தை எடுத்துக்கொள்ள‌ வேண்டும் என்றுதான் க‌ட்டுரை ஆசிரிய‌ர் கூறுகிறார். அதைக் க‌வ‌னிக்காது பிரிவை ஏற்ப‌டுத்தும் பொருளில் ஏன் க‌வ‌ன‌ம் கொள்ள‌வேண்டும்?

    திருவ‌ண்ணாம‌லையின் த‌த்துவ‌ம் உய‌ரிய‌து. அக‌ந்தையை அழிக்க‌வேண்டும் என்ப‌தே அது. மும்மூர்த்திக‌ளில் இருவ‌ரான‌ விஷ்ணுவே ஆனாலும், பிர‌ம்ம‌னே ஆனாலும், அக‌ந்தை கூடாதென‌வே இந்நிக‌ழ்வு. அப்ப‌டியானால் த‌ன்னைப் பெரிய‌தாக‌ச் சிவ‌ன் ம‌ட்டும் காட்ட‌லாமா? அது அக‌ந்தை அல்ல‌வா என்ற‌ கேள்வி வ‌ரும‌ல்ல‌வா? அத‌னால்தான் வேறொரு புராண‌த்தால் சிவ‌பெருமான் த‌ன்னில் பாதியைச் சக்திக்குத் த‌ந்து, த‌ன்னைப் பாதியாக்கிக்கொள்கிறார்.

    (திருவண்ணாமலை தீபத்தின்போது, அர்த்தநாரிஸ்வரர் திருக்காட்சி தரும் வேளையில்தான் மலைதீபமும், மஹாதீபமும் எற்றப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். திருக்கார்த்திகைப் பெருவிழா நாயன்மார்களின் காலத்துக்கும் முற்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அருணாசலப் புராணத்தின் காலம் நாயன்மார்களின் காலத்துக்கும் மிகவும் முற்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.)

    அத்தோடு நில்லாது மாணிக்க‌வாச‌க‌ருக்கு அருவ‌மாய்த் தோன்றி, தாம் ஒன்றுமில்லானாக‌, சூன்ய‌னாக‌ நிற்கிறார். மூன்று, ஒன்றாகி, ஒன்றும், பாதியாகி, அந்த‌ப் பாதியும் சூன்ய‌மாகும் த‌த்துவ‌த்தின் மூல‌ம் அக‌ந்தையை இல்லாது ஆக்க‌ ந‌ம‌க்கு வ‌ழி சொல்கிறார்.

    அதும‌ட்டும‌ல்லாது, இறைத்த‌ன்மையை விஷ்ணு, பிர‌ம்மா, சிவ‌ன், பார்வ‌தி என்றெல்லாம் உருவ‌க‌ப் ப‌டுத்தாம‌ல், உருவில்லாம‌ல் காண‌வும் முடியும் என‌ மாணிக்க‌வாச‌க‌ருக்கு உணர்த்துகிறார. என‌வேதான், மாணிக்க‌வாச‌க‌ரும் தாம் க‌ட்டிய‌ திருப்பெருந்துறைக் கோவிலில், அருவ‌மாக‌வே இறைவ‌னை வ‌ழிப‌டுகிறார்.

    அத்வைத‌த்தின் அவ‌தார‌மாக‌வே திக‌ழ்ந்த ப‌க‌வான் ர‌மண‌ரும், எல்லா உயிரிலும் இறைவ‌னைக் க‌ண்டார். அக‌ந்தையை அழித்துக் க‌ந்தையை இடையில் த‌ரித்தே வாழ்ந்தார். திருட‌வந்த‌வ‌ர்க‌ளிட‌மும் அன்பு செய்தார். இன்றும் அவ‌ருக்கு ம‌ட்டும‌ன்றி, அவ‌ர‌து அன்னைக்கு ம‌ட்டும‌ன்றி, அவ‌ருட‌ன் இருந்த‌ மான், ப‌சு, நாய், காக்கை முத‌லான‌வ‌ற்றுக்கும் ச‌மாதி அமைத்து நித்ய‌ ஆராத‌னையும் செய்துவ‌ருவ‌தைக் க‌வ‌னிக்க‌வேண்டும். எல்லா உயிரிலும் இறைத்த‌ன்மையைக் காணும் இந்த‌க் கோட்பாட்டைக் க‌வ‌னித்தால், பிரிவினை க‌ண்ணில் ப‌டாது. இதைத்தான் க‌ட்டுரை ஆசிரிய‌ர் சொல்கிறார்.

    சுவாமி சித்பவான‌ந‌்த‌ரும், த‌ம்மிட‌ம் “இறைவ‌னை நீங்க‌ள் க‌ண்டிருக்கிறீர்க‌ளா?” என்று வின‌விய‌ நாத்திக‌ரிட‌ம், “இப்போது என்முன்னாலேயே இருக்கும் த‌ங்க‌ளிட‌மும் க‌ண்கிறேன்” என்று உரைத்து அக‌ந்தையை அழித்தால் அத்வைத‌ம் வெளிப்ப‌டும் என்று நிரூபித்தார்.

  27. //I wish to write that insight in this dot com if the editors permit me.//

    இன்னா வார்த்த ஸொல்லிக்கினீங்கம்மா? பேஜார் பண்டீங்களே…

    நீங்க எயுத ஸொல்ல ஆர்னாச்சும் வாணான்னுவாங்களா? ஸொம்மா ஸோக்கா எய்துங்க…..எய்திகினே இருங்க, அஆங்!

    வர்டா…

    மன்னாரு

  28. இதையும் படியுங்கள். இன்றைய காலகட்டத்தில் அத்வைதத்தின் குருவும், த்வைதத்தின் குருவும் சந்திப்பதையும், அஹங்காரத்தை அழிக்க வலியுறுத்துவதையும் கவனத்தில் கோள்ளவேண்டும்.

    https://mangalorean.com/news.php?newstype=broadcast&broadcastid=164191

  29. இங்கு அத்வைதிகளும், சைவர்களும், வைணவர்களும் அறிந்துகொண்டு உபயோகப்படவேண்டியது ஒன்று உள்ளது. “ஆதி சங்கரர் ஷண்மத ஸ்தாபனம் செய்தார்” என்ற கருத்து முற்றிலும் நவீனமானது, அது அவர் பண்ணிய பிரச்தான திரைய பாஷ்யங்களுக்கு விரோதமானது. “நாராயணனே, வாசுதேவனே, விஷ்ணுவே முழுமுதற் கடவுள். அவனே உலகைப் படைத்தும் காத்தும் அழித்தும் வருகிறான். பிரமனுக்குள்ளும் சிவனுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து படைத்தல் அழித்தலைச் செய்கிறான். பிரமன் முதல் புல் ஈறாக அனைவரும் மோக்ஷத்துக்காக காத்துக்கொண்டு கர்மாக்களின் பலன்களை அனுபவிக்கும் ஜீவாத்மாக்கள். வாசுதேவனாகிய நாராயணனோ சர்வேஸ்வரன்; அவனுக்கு கர்மத்தால் உண்டாகும் தோஷங்கள் கிடையா. மோக்ஷத்தைப் பெற விரும்பும் மனிதன் நிர்குண பிரம்ம உபாசனம் செய்யலாம்; அல்லது சகுண பிரம்மமான நாராயணனை உபாசிக்கலாம். மற்ற தெய்வங்கள் அளிக்கக்கூடிய பலன்கள் அழிவுள்ளவையே. விஷ்ணுவினுடைய பரமபதம் மட்டுமே அவன் கருணையாலே அடையப்படும் அழியாத மோக்ஷப்ராப்தி பூர்த்திபெறும் இடமாகும்.” – இக்கருத்து அவர் பண்ணிய பிரம்மசூத்ர, உபநிஷத், கீதா பாஷ்யங்களிளிருந்து விளங்கும். “பிரச்தான திரைய பாஷ்யங்கள்” என்று சொல்லப்படும் இந்நூல்களும், உபதேச சஹாச்ரி, விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம், ஆகிய நூல்கள் மட்டுமே அவர் இயற்றியவை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஏனென்றால் இந்நூல்களுக்குத் தான் பண்டைய அத்வைதிகள் (அதாவது 13-ஆம் நூற்றாண்டு வரையிலான அத்வைத ஆசார்யர்கள்) வார்த்திகைகளும், டீகைகளும் எழுதியுள்ளனர். அத்வைதக் கொள்கையைக் கண்டித்த தவித்த, விசிஷ்டாத்வைத ஆசாரியார்களாலும் இவை மேற்கோள் எடுக்கப்பட்டவை. மேலும் இந்நூல்களில் தான் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் காணப்படா. விசிஷ்டாத்வைத மதத்தைச் சேர்ந்த வேதாந்த தேசிகரோ, “தாத்பர்ய சந்த்ரிகையில்”, 18.66 கீதை சாரம ஸ்லோகத்தின் வ்யாக்யானத்தில், “சித்தாந்தத்தில் பல விஷயங்களைத் தவறாகக் கற்பித்த சங்கரர் முதலானோர் கூட நாராயணனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டவர், ‘வேறு தெய்வம் நமக்குச் சரணாகதி ஆகா’ என்று அவர் கூறிய சாரார்தம் அனைவராலும் ஆதரிக்கத்தக்கது” என்று எழுதியுள்ளார்! பிற்காலத்தில், அதாவது 14, 15 – ஆம் நூற்றாண்டுகளில் வந்த சாயணர், மாதவாசாரியார் (த்வைத மத மத்வாசாரியாருடன் குழப்பவேண்டாம். Spelling-இல் உள்ள வித்தியாசத்தை கவனிக்கவும்), சங்கரானந்தர், அப்பைய தீட்சிதர், ஆகியோர் ஆதி சங்கரருடைய நூல்களுக்கு முரணாகச் சைவ மதத்தையும் அத்வைதத்தையும் ஒன்று சேர்க்க ஆரம்பித்தனர். இவர்கள் காலத்தில் இருந்தவர்களும், இவர்களுக்கும் பின் வந்தவர்கலுமே அரசியல் நோக்கத்துடன் ஆதி சங்கரர் பெயரில் விஷ்ணுவை த்வேஷிக்கும் நூல்களான சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி போன்ற பல சைவ, சாக்த, துதிநூல்களை இயற்றி, நான்கு (அல்லது ஐந்து?) மடங்களை ஸ்தாபித்து, அவைகளில் சந்திரமௌளீஸ்வர, காமாட்சி, லலிதா சஹஸ்ரநாம பூஜையையே பிரதானமாகச் செய்து வந்தனர். “சூரியனாலும் ஒளிவிடமுடியா விஷ்ணுவின் பரம பதம்” என்று கீதாபாஷ்யத்தில் சங்கரர் சொன்னதற்கு முரணாக “சூரியனைப் பரதேய்வமாக வழிபடும் சௌர மதத்தையும் ஸ்தாபித்தார்” என்றும், “உருத்திரர்க்கு வரம் அளித்து முருகனாக உருவெடுத்தார் சனத்குமார ரிஷி” என்று சூத்ரபாஷ்யத்தில் சங்கரர் சொன்னதற்கு முரணாக “கௌமார மதம் ஸ்தாபித்தார்” என்றும் கூறி வந்தனர்.

    மேற்கூறியதற்குப் பல சான்றுகள் உள்ளன. அபிநிவேஷமில்லாமல், நடுநிலை காணத் தயாராக உள்ள சைவர்களும், அத்வைத ச்மார்தர்களும் இவ்விஷயங்களை ஸ்ரீ சுதர்ஷன ஐயங்கார் என்னும் பெருந்தகையாளர் இயற்றிய “சங்கரரும் வைணவமும்” என்னும் நூலில் காணலாம். இந்நூலை https://www.maransdog.org/2009_books/Bangalore_Vishnu/Sankararum_Vainavamum_Optimized.zip என்னும் சுட்டியிலிருந்து பதிவிறக்கம் செய்து இலவசமாகப் படித்துத் தெளிந்துக்கொள்ளலாம்.

    சைவர்களால் பண்ணப்பட்ட “அடி முடி தேடிய கதை”, “சிவன் சரபாமாக வந்து சிவன் நரசிம்மனை அழித்த கதை”, முதலானவை சங்க இலக்கியங்கள் எவற்றிலும் காணப்படா. மாறாக (யஜுர் வேதத்திலும் காணப்படும்) சிவன் திரிபுரம் எரித்த கதை முதலிய தொன்று தொட்டு வழங்கப்படும் கதைகளே காணப்படுகின்றன. கண்ணபிரான், இராமபிரான், வராக, நரசிம்ம, வாமன அவதாரங்கள், பலதேவர், முதலானோர் பற்றிய இராமாயண, மகாபாரதக் கதைகள் பல சங்க நூல்களிலும் உள்ளன. பரிபாடல் முதலிய நூல்களில் திருமாலே வேதத்தில் முழுமுதர்கடவுளாக ஒதப்படுபவனாகப் படிக்கப்படுகிறது. சிலப்பதிகாரம், பரிபாடல், பதிற்றுப்பத்து, முதலிய நூல்களிலோ ஸ்ரீரங்கம், திருப்பதி, திருமாலிருஞ்சோலை, திருவெஃகா (காஞ்சிபுரம்), திருவனந்தபுரம் ஆனந்தபத்மனாபச்வாமி ஆகிய கோயில்களில் விஷ்ணு (திருமால்) வழிபாடு அமோகமாக வழிபாட்டு வந்தமையைக் காணலாம். ஆக, “முல்லைநிலத் தெய்வம்” என்று தொல்காப்பியத்தில் படித்த போதிலும், முழுமுதற் கடவுளாகத் திருமாலையே ஐவகை நிலங்களில் வாழ் சங்க காலத் தமிழர்கள் வணங்கி வந்தனர் என்பது விளங்குகிறது. சங்க இலக்கியங்களில் திருமாலைத் தவிர எந்த ஒரு தெய்வமும் “அந்தணர் ஓதும் அருமறைப்போருளும் நீ” என்று பாடப்படவில்லை. எந்த அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத ஆசாரியார்களும் அடிமுடி தேடிய புராணக்கதைகளை ஆதரிக்கவில்லை. ஆதி சங்கரரும் புராணங்களில் பெரும்பாலும் விஷ்ணு புராணத்தை மட்டுமே மேற்கோள் காட்டுகின்றார்.

    இன்று “108 உபநிஷதுக்கள்” என்று வழங்கப்படும் நூல்களில் பலவற்றை 15-ஆம் நூற்றாண்டுக்கு முன்பான எந்த ஆசாரியாராலும் கையாளப்படவில்லை என்பதிலிருந்து இவ்வுபநிஷதுக்கள் நவீனக் கற்பனையே என்பது விளங்கும். உதாரணமாக, “108 Upanishads (https://www.celextel.org/108upanishads/)” என்று வழங்கப்பட்டு வரும் வரிசையில் உள்ள மைத்ராயணி உபநிஷத்தில், அப்பெயரைக் கொண்ட பழைய உபநிஷத்திளிருந்து வேதாந்த தேசிகரால் கையாளப்பட்ட பல வாக்கியங்கள் அப்பதிப்பில் காணப்படா. ஆனால் “ராமதீர்த்தர்” என்னும் பண்டைய அத்வைதி ஒருவரால் பாஷ்யமிடப்பட்ட நூலில் அவ்வாக்கியங்கள் உள்ளன. இவ்வுபநிஷத்தை “Edward B. Colwell” என்னும் ஆங்கிலேயர் சம்ஸ்க்ருத மூலத்துடனும், ராம தீர்த்தர் உரையுடனும், மூல ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மேற்கூறிய “புதிய பதிப்புகளில் காணப்படாத” வாக்கியங்களுள் பல மும்மூர்த்திகளுள் விஷ்ணுபரத்துவத்தை உணர்த்த வந்தன. இவ்விஷயங்களிளிருந்து தெளிய வேண்டிய உண்மை என்னவென்றால், எந்த ப்ராசீன ஆசாரியாராலும் கையாலப்படாத “சரபோபநிஷத்து” என்னும் நூல் உண்மையில் உபநிஷத்தே இல்லை; நவீனக்கற்பனை என்பதே. 108-இல் எந்தெந்த உபநிஷதுக்கள் உண்மையான உபநிஷத்துக்களே என்பதை நிர்ணயிக்கும் முறை – 13 ஆம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத ஆச்சாரியார்கள் எடுத்துள்ளவையே உபநிஷதுக்கள்.

    மேல் எழுதப்பட்டது எந்த ஒரு சைவ, அத்வைத ச்மார்த்தரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல. மாறாக, சைவ, வைணவ, ஸ்மார்த்த, பாகுபாடில்லாமல், ஹிந்துக்கள் அனைவரும் மேற்கூறிய விஷயங்களை அறியவேண்டியவர்களே. உண்மைகளை மறைப்பதனால் ஹிந்து சனாதன தர்மத்திற்கு ஒரு பயனும் இல்லை. மாறாக, உண்மைகள் அனைவற்றையும் அறிந்து, அவரவர் மனப்பக்குவத்தின் படி அவரவர் தொழ விழையும் தெய்வங்களைத் தொழுது, சைவ, வைணவ, சாக்த, அத்வைத, த்வைத மதங்களில் உள்ள கொள்கை வேறுபாடுகளை நன்கறிந்து, பொதுவான நல்ல தர்மசிந்தனமான விஷயங்களை அனைவரும் பகிர்ந்துக் கொள்வதே சனாதன தர்மத்துக்கு நன்மையைத் தரவல்லது. இதற்கு மாறாக அனைத்தையும் “ஹிந்துத்துவம்” என்று ஒரே குட்டையில் போட்டு கிளரிக்குழப்புவதால், பூசல்களும் சண்டைகளும் அதிகமாகி, எதிர்கால ஹிந்துத் தலைமுறையினர் நாத்திக வழியில் சென்று விடுவார்கள். கட்டுரையாசிரியருக்கு ஒரு வேண்டுகோள்: எதிர்காலத்தில் இம்மாதிரிக் கட்டுரைகளை எழுதும்போது, “இக்கதை முற்றிலும் சைவ அத்வைதிகலாலேயே ஆதரிக்கப்பட்டவை; மற்ற வைணவ ஹிந்துக்கள் இம்மாதிரிக் கதைகள் அவர் மதக்கொள்கைக்கு முற்றிலும் முரணானவை. இதை இங்கு வழங்குவதற்குக் காரணம், இதற்குப் பின்னுள்ள உட்கருத்து (moral of the story) அனைவர்க்கும் ஏற்கத்தக்கது என்பதற்காகவே” என்பது போன்ற disclaimers-ஐ எழுதினால் உசிதம்.

    References:

    (1) “ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம்” ஆசிரியர் ஸ்ரீ உ.வே. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் (அட்வகேட்) அவர்கள் இயற்றிய “சங்கரரும் வைணவமும்”, “விஷ்ணுசித்த விஜயம்”, “சங்ககாலத் தமிழர் சமையமே கம்பனின் சமையமும்” எனும் நூல்கள்.

    (2) Bhagavad Gita, with the commentary of Shankaracharya, A. Mahadeva Sastri: “https://www.archive.org/stream/bhagavadgitawith00maharich#page/n7/mode/2up” என்ற சுட்டியில் இதை இலவசமாகப் படிக்கலாம். முக்கியமாகக் கானவேண்டியவை: அவதரிகை அத்தியாயம் முழுவதும், மற்றும் ஆதி சங்கரர் பண்ணியுள்ள பின்வரும் ச்லோகங்களுக்கான உரை: அத்தியாயம் 13 ஸ்லோகம் 10, அத்தியாயம் 6 ஸ்லோகம் 47; 9.23, 9.24, 9.25; 8.16; 7.17-7.23; 18.56; 2.51; 11.43; 10.2, 10.8 (10.2-இல் சங்கரர் “தேவதைகள்- அதாவது பிரமன் முதலானோராலும் அறியப்படாதவன்” என்று எழுதியுள்ளார். இதை “Gita Supersite 2.0” என்னும் வலைதளத்தில் காணலாம். ஏனோ இது A. Mahadeva Sastri அவர்களின் புத்தகத்தில் விடப்பட்டுள்ளது).

    (3) மைத்ராயனீய உபநிஷத்து ராமதீர்த்தர் உரையுடன், E. Colwell மொழிபெயர்ப்புடன் – Bibliotheca Indica, Issue 951 – https://www.archive.org/stream/maitriormaitrya00cowegoog#page/n13/mode/1up . அத்தியாயம் 6-இல் உள்ள 38-ஆவது ஸ்லோக வாக்கியங்கள், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும், ராம தீர்த்தர் உரையையும் காண்க. நன்றி: “விஷ்ணுசித்த விஜயம்” (“சுதர்சனம்” கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் இயற்றியது).

    (4) பரிபாடல் – இதை https://tamilvu.org/library/libindex.htm எனும் சுட்டியில் உரையுடன் காணலாம். (Font Installation தேவை).

  30. ஒரு மேட்டர எய்துனு நம்ம மன்னாரு ஸொல்ல கண்டி, மாட்டேன்னு ஸொல்ல எவுனுக்காவுது தில்லு கீதா?
    ரைட் வாத்யாரே, நீ ஸொல்டேல்ல, பிச்சு உதறிடலாம்..
    இன்னா ஸொல்ரே..
    இதோ வந்துகீனே கீறேன்…

  31. Hinduism is ultimately a generic name given to a family of religious sects which interpret the Vedas in their own way, and each sect has their own Agamas and other books. Each way or path is unique, and there will always be scholarly debates among them.

    Hindus need to be united in their family- and societal- values (if they find a common ground there) and promote diversity. If any missionary/islamist campaign is aimed at maligning Hinduism, we should be able to come up with a common front to counter and demolish the same. UNITY IS THE KEY; FORCING UNIFORMITY ARTIFICIALLY IS NOT REALLY THE HINDU WAY.

    (Edited and published)

  32. கந்தர்வனின் கருத்துக்கள் அவதூறானவை. அவர் சுட்டும் ஸ்றி கிருஷ்ணசாமி அய்யங்காரிடமதான் ஆதிசங்கரர் அத்வைதத்திற்கும் ஷண்மத ஸ்தாபனத்துக்கும் சங்கர மடத்துக்கும் அத்தாட்சி வாங்கவேண்டும் எனறு எழுதுவது ஒற்றுமைக்கு ஊறுவிளைக்கும். இதுபோன்ற கருத்தைச் சொல்லும்போது இவர் எந்த diclaimer உம் செய்யாமல், கட்டுரை ஆசிரீயர் செய்யவேண்டியது பற்றி எழுதுவது முறையற்றது.

    இவர்பாணியில் எம்மாலும் மேற்கோள் காட்டி எழுதமுடியும். ஆனாலும் ஒற்றுமை கருதி வாளாவிருக்கிறோம்.

  33. பெரு ம‌க்க‌ளே,

    இராம‌ர் யுத்த‌ம் முடித்து விட்டு திரும்பி வ‌ரும் போது, இராமேஸ்வர‌த்தில் லிங்க‌ம் உருவாக்கி வ‌ழிப‌ட்ட‌தாக‌ ப‌ல‌ நூல‌க‌ளிலும் ப‌டித்த‌தை வைத்தே எழுதினேன்.சிறுவ‌னாக‌ இருக்கும் போது இராம‌ரும், சீதையும் ந‌டுவிலே சிவ‌ லிங்க‌த்தை வைத்து பூச‌னை செய்வ‌து போல‌ இருக்கும் கால‌ண்ட‌ர்க‌ளை பார்த்து இருக்கிறேன். அதை வைத்து தான் நான் குறிப்பிட்டேனேய‌ல்லாது, நான் பெரிய‌ ப‌ண்டித‌ன் போல‌ வால்மீகீ இராம‌ய‌ண‌த்தை முழுவ‌துமாக‌ ஆர‌ம்ப‌ம் முத‌ல் முடிவு வ‌ரை ஒரு வ‌ரி விடாம‌ல் ப‌டித்து முடித்து விட்ட‌து போல அடித்து சொல்ல‌ வில்லை.

    இராம‌ர், சிவ‌னை வ‌ண‌ங்கியும் இருக்க‌லாம். வ‌ண‌ங்காமலும் போயிருக்க‌க் கூடும். இந்த‌ விட‌ய‌த்தில் சார்பு இல்லாம‌ல் ந‌டு நிலையான‌ பண்டித‌ர்க‌ள் சொல்வ‌தையே ஒத்துக் கொள்ள‌ முடியும். இந்த‌ விட‌ய‌த்தை த‌மிழ் இந்து, சார்பு இல்லாத‌ வ‌ட‌மொழியில் முழுப் புல‌மை உடைய‌ ப‌ண்டித‌ர்க‌ளை -அவ‌ர்க‌ள் சைவ‌ சார்போ, வைண‌வ‌ சார்போ இல்லாதிருக்க‌ வேண்டும் – விசாரித்து விள‌க்க‌ம் அளிக்க‌ கோருகிறேன்.

    ஆனால் இந்த‌ விட‌ய‌த்தில்

    //யார் பெரியவர், ராமர் சிவனை ஏன் வணங்க கூடாது ? என்ன குடியா முழுகி போகிடும்? //

    என்ப‌து போன்ற‌ த‌டித்த‌ வார்த்தைக‌ள் ச‌ரியா?

    இராச்சிய‌த்தை விட்டு காட்டுக்குப் போக‌ சொன்ன‌ போது கூட‌ குடி முழுகி விட்ட‌தாக‌ இராம‌ர் நினைக்க‌வில்லை. அயோக்கிய‌னும், காமுக‌னுமான‌ இராவ‌ண‌ன் சீதாம்மாவை தூக்கி சென்ற‌ போது‍ (அது கிட்ட‌த் த‌ட்ட‌ குடி முழுகிய‌து போல‌தான்) கூட‌ ‍ குடி முழுகிய‌தாக ஓய்ந்து விட‌வில்லை இராம‌ர்.

    பின்னாளில் ஒரு குடிம‌க‌னின் சொல்லுக்காக‌ சீதையை காட்டுக்கு அனுப்பிய‌ போது கூட‌ குடி முழுகிய‌தாக எண்ண‌வில்லை இராம‌ர். அப்ப‌டிப் ப‌ட்டவ‌ர் சிவ‌னை வ‌ண‌ங்கி இருந்தால் அவ‌ருக்கு ஒன்றும் குடி முழுகி இருக்காது.

    எவ்வ‌ளவு க‌ஷ்ட‌ம் வ‌ந்த‌ நிலையிலும், குடியே முழுகிய‌து போன்ற‌ நிலையிலும், தாங்கொனாத் துய‌ர‌த்திலும், நிதான‌த்தையும், அமைதியையும், கை விடாம‌ல், ந‌ல்ல குண‌ங்க‌ளைக் கை விடாம‌ல் , ந‌ல்ல‌ குண‌ங்க‌ளில் உறுதியாக‌ நின்ற‌ க‌ட‌மை வீர‌ர் தான் இராம‌ர்.

    ந‌ல்லிண‌க்க‌த்தை உருவாக்கும் வ‌கையிலே நான் பெருமாளையும் (விஷ்ணு ), சிவ‌ பெருமானையும் வ‌ண‌ங்க‌ த‌யார். இருவ‌ருக்கும் த‌னித் த‌னியே அங்க‌ பிர‌த‌க்ஷ‌ன‌மும் செய்ய‌ நான் த‌யார்.

    ந‌ல்லிண‌க்க‌த்தைக் காட்ட‌வே இராம‌ர், சிவ‌ பெருமானை வ‌ண‌ங்கிய‌தாக‌க் குறிப்பிட்டோம்.

    இராம‌ருக்கு எப்பொதுமே குடி முழுக‌வில்லை.

    குடி முழுகிய‌து போல‌ வ‌ருத்த‌ம் வ‌ருவ‌து, சாதி ம‌த‌ உண‌ர்வை விட்டு வெளி வ‌ர‌ முடியாம‌ல் த‌விப்ப‌வ‌ர்க‌ளுக்குத்தான்.

  34. இதற்குமேல் இந்த விஷயத்தைப் பற்றி எதுவும் பேசவேண்டாம் என்று நினைக்கும்போது, வானத்திலிருந்து ஒரு கந்தர்வர் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் என் பெயரை குறிப்பிடவில்லை, ஆனால் மறைமுகமாக எனக்கு பதில் அளித்திருப்பதால், அவர் கேட்ட counter கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய கடமை எனக்கு உண்டு! இங்கு வைணவத்தைமட்டும் பெருமைபடுத்தும் விதத்தில் எழுதியிருப்பதால், நான் பிற சமயங்களை சற்று ஆதரித்து பேசவேண்டியுள்ளது. இதனால் “நான் வைணவத்தை வெறுக்கிறேன், விஷ்ணுவை துவேஷிக்கிறேன்” என்று எண்ணினால் அது என் தவறல்ல! விஷ்ணுவை எதிர்த்துவிட்டு நான் எங்கு செல்ல??

    முதலில் ஆதிசங்கரர் தான் ஷண்மதங்களை ‘ஸ்தாபித்தார்’ என்று உங்களுக்கு யார் சொன்னது? அப்படியென்றால் அவருக்குமுன் சிவன், விஷ்ணு, தேவி, விநாயகர், முருகன் மற்றும் சூரியனை எவரும் வணங்கவில்லையா? சங்கரர் தான் சௌரத்தை பரப்பினாரா? அப்படியென்றால் எப்படி அகத்தியமுனி இராமபிரானுக்கு “ஆதித்ய ரிதயம்” உபதேசித்தார்? இராமாயணம் சங்கரர் வாழ்ந்தபோதுதான் நடந்தது என்கிறீர்களா???

    //இங்கு அத்வைதிகளும், சைவர்களும், வைணவர்களும் அறிந்துகொண்டு உபயோகப்படவேண்டியது ஒன்று உள்ளது. “ஆதி சங்கரர் ஷண்மத ஸ்தாபனம் செய்தார்” என்ற கருத்து முற்றிலும் நவீனமானது, அது அவர் பண்ணிய பிரச்தான திரைய பாஷ்யங்களுக்கு விரோதமானது. “நாராயணனே, வாசுதேவனே, விஷ்ணுவே முழுமுதற் கடவுள். அவனே உலகைப் படைத்தும் காத்தும் அழித்தும் வருகிறான். பிரமனுக்குள்ளும் சிவனுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து படைத்தல் அழித்தலைச் செய்கிறான். பிரமன் முதல் புல் ஈறாக அனைவரும் மோக்ஷத்துக்காக காத்துக்கொண்டு கர்மாக்களின் பலன்களை அனுபவிக்கும் ஜீவாத்மாக்கள். வாசுதேவனாகிய நாராயணனோ சர்வேஸ்வரன்; அவனுக்கு கர்மத்தால் உண்டாகும் தோஷங்கள் கிடையா. மோக்ஷத்தைப் பெற விரும்பும் மனிதன் நிர்குண பிரம்ம உபாசனம் செய்யலாம்; அல்லது சகுண பிரம்மமான நாராயணனை உபாசிக்கலாம். மற்ற தெய்வங்கள் அளிக்கக்கூடிய பலன்கள் அழிவுள்ளவையே. விஷ்ணுவினுடைய பரமபதம் மட்டுமே அவன் கருணையாலே அடையப்படும் அழியாத மோக்ஷப்ராப்தி பூர்த்திபெறும் இடமாகும்.” – இக்கருத்து அவர் பண்ணிய பிரம்மசூத்ர, உபநிஷத், கீதா பாஷ்யங்களிளிருந்து விளங்கும். “பிரச்தான திரைய பாஷ்யங்கள்” என்று சொல்லப்படும் இந்நூல்களும், உபதேச சஹாச்ரி, விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம், ஆகிய நூல்கள் மட்டுமே அவர் இயற்றியவை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும்.//

    சங்கரர் தனது பகவத் கீதை பாஷ்யத்தில் “நாராயண பரோ அவ்யக்தாஹ்” என்கிறார். அதாவது, நாராயணனே எல்லாம், அவனே எல்லாவற்றையும் கடந்தவன் என்கிறார். உண்மைதான், நான் மறுக்கவில்லை!

    //ஏனென்றால் இந்நூல்களுக்குத் தான் பண்டைய அத்வைதிகள் (அதாவது 13-ஆம் நூற்றாண்டு வரையிலான அத்வைத ஆசார்யர்கள்) வார்த்திகைகளும், டீகைகளும் எழுதியுள்ளனர். அத்வைதக் கொள்கையைக் கண்டித்த தவித்த, விசிஷ்டாத்வைத ஆசாரியார்களாலும் இவை மேற்கோள் எடுக்கப்பட்டவை. மேலும் இந்நூல்களில் தான் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் காணப்படா. விசிஷ்டாத்வைத மதத்தைச் சேர்ந்த வேதாந்த தேசிகரோ, “தாத்பர்ய சந்த்ரிகையில்”, 18.66 கீதை சாரம ஸ்லோகத்தின் வ்யாக்யானத்தில், “சித்தாந்தத்தில் பல விஷயங்களைத் தவறாகக் கற்பித்த சங்கரர் முதலானோர் கூட நாராயணனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டவர், ‘வேறு தெய்வம் நமக்குச் சரணாகதி ஆகா’ என்று அவர் கூறிய சாரார்தம் அனைவராலும் ஆதரிக்கத்தக்கது” என்று எழுதியுள்ளார்! பிற்காலத்தில், அதாவது 14, 15 – ஆம் நூற்றாண்டுகளில் வந்த சாயணர், மாதவாசாரியார் (த்வைத மத மத்வாசாரியாருடன் குழப்பவேண்டாம். Spelling-இல் உள்ள வித்தியாசத்தை கவனிக்கவும்), சங்கரானந்தர், அப்பைய தீட்சிதர், ஆகியோர் ஆதி சங்கரருடைய நூல்களுக்கு முரணாகச் சைவ மதத்தையும் அத்வைதத்தையும் ஒன்று சேர்க்க ஆரம்பித்தனர்.//

    “பிரம்மாவும், விஷ்ணுவும் அகந்தையுடன் நடந்துகொண்டனர்” என்றுசொல்ல நமக்கென்ன அகந்தை இருக்கவேண்டும் என்று கேட்பவர்களுக்கு:- “சங்கரர் தவறாக கற்பித்துள்ளார் என்று சொல்ல நமக்கென்ன அகந்தை இருக்கவேண்டும்??”. இராமானுஜர் சொல்லட்டும், தேசிகர் சொல்லட்டும், மணவாள மாமுனிகள் சொல்லட்டும், மத்வர் சொல்லட்டும், நீங்கள் யார் சொல்வதற்கு? நீங்களும் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியிருக்கிறீர்களா??

    //இவர்கள் காலத்தில் இருந்தவர்களும், இவர்களுக்கும் பின் வந்தவர்கலுமே அரசியல் நோக்கத்துடன் ஆதி சங்கரர் பெயரில் விஷ்ணுவை த்வேஷிக்கும் நூல்களான சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி போன்ற பல சைவ, சாக்த, துதிநூல்களை இயற்றி, நான்கு (அல்லது ஐந்து?) மடங்களை ஸ்தாபித்து, அவைகளில் சந்திரமௌளீஸ்வர, காமாட்சி, லலிதா சஹஸ்ரநாம பூஜையையே பிரதானமாகச் செய்து வந்தனர். “சூரியனாலும் ஒளிவிடமுடியா விஷ்ணுவின் பரம பதம்” என்று கீதாபாஷ்யத்தில் சங்கரர் சொன்னதற்கு முரணாக “சூரியனைப் பரதேய்வமாக வழிபடும் சௌர மதத்தையும் ஸ்தாபித்தார்” என்றும், “உருத்திரர்க்கு வரம் அளித்து முருகனாக உருவெடுத்தார் சனத்குமார ரிஷி” என்று சூத்ரபாஷ்யத்தில் சங்கரர் சொன்னதற்கு முரணாக “கௌமார மதம் ஸ்தாபித்தார்” என்றும் கூறி வந்தனர்.//

    அரசியல் நோக்குடன் செயல்பட்டார்களா? அவர்களென்ன கருணாநிதியா, ஜெயலலிதாவா? நீங்கள் எழுதியுள்ளவை மிகவும் கண்டிக்கத்தகது காந்தர்வரே! சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரியில் என்ன விஷ்ணு துவேஷம் கண்டீர்? விஷ்ணு சஹாஸ்ரனாம் சிவனை துவேஷிக்கிறது என்பதுபோல உள்ளது உங்கள் வாதம்! சரி ஒரு முக்கியமான கேள்வி:- சங்கரர் சொன்னதற்கு முரணாக, அவரை பின்பற்றியவர்கள் ஏன் நடந்துகொள்ளவேண்டும்?? சங்கரர் வைணவத்தை மட்டுமே பரிந்துரைத்தார் என்றால், இவர்கள் ஏன் பிறதெய்வ வழிபாட்டை ஆதரிக்கவேண்டும்? நீங்கள் இராமனுஜரை பின்பற்றுபவர்தானே? உண்மையில் இராமானுஜர் பிறதெய்வ வழிபாட்டை ஆதரித்தார், அவருக்குப் பின் வந்தவர்கள் “அவர் பெயரைச் சொல்லி அதை வைணவமாக மாற்றிவிட்டனர்” என்று நான் சொல்கிறேன். உங்களால் மறுக்கமுடியுமா??

    //மேற்கூறியதற்குப் பல சான்றுகள் உள்ளன. அபிநிவேஷமில்லாமல், நடுநிலை காணத் தயாராக உள்ள சைவர்களும், அத்வைத ச்மார்தர்களும் இவ்விஷயங்களை ஸ்ரீ சுதர்ஷன ஐயங்கார் என்னும் பெருந்தகையாளர் இயற்றிய “சங்கரரும் வைணவமும்” என்னும் நூலில் காணலாம். இந்நூலை https://www.maransdog.org/2009_books/Bangalore_Vishnu/Sankararum_Vainavamum_Optimized.zip என்னும் சுட்டியிலிருந்து பதிவிறக்கம் செய்து இலவசமாகப் படித்துத் தெளிந்துக்கொள்ளலாம்.//

    நமக்கு உண்மை என்னவென்று தெரியாது. முகமதியர்கள் அயோத்தியில் இராமர் கோவில் இல்லை என்கிறார்கள், கிறித்தவர்கள் இந்து மதம் அவர்கள் ‘பொன்னான மதத்திலிருந்து’ தோன்றியது என்கிறார்கள். இன்றைய பௌத்தர்கள் சங்கரர், இராமானுஜர் முதலானோர் வாதிட்டு பவுத்தர்களையும் சமணர்களையும் வெல்லவில்லை, மாறாக அரசர்கள் துணையுடன் அவர்களை அடித்து துன்புறுத்தி கொன்றுவிட்டனர் என்கிறார்கள். நமது திருமலை உண்மையில் பவுத்த கோவில் என்கிறார்கள், இதையெல்லாம் நீங்கள் நம்பிவிடுவீர்களா??

    //சைவர்களால் பண்ணப்பட்ட “அடி முடி தேடிய கதை”, “சிவன் சரபாமாக வந்து சிவன் நரசிம்மனை அழித்த கதை”, முதலானவை சங்க இலக்கியங்கள் எவற்றிலும் காணப்படா.//

    ஆதிசங்கரர் புராண, இதிகாசங்களுள் நுழையவே இல்லை (பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம் தவிர!). அவர் கையாண்டது வேத உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள், கீதை மற்றும் ஸ்மிருதி தர்ம சாஸ்திரங்கள். அப்படியென்றால், அவருக்கு முன்பு புராணங்களே இல்லை என்பதுபோல உள்ளது உங்கள் வாதம்!

    //மாறாக (யஜுர் வேதத்திலும் காணப்படும்) சிவன் திரிபுரம் எரித்த கதை முதலிய தொன்று தொட்டு வழங்கப்படும் கதைகளே காணப்படுகின்றன. கண்ணபிரான், இராமபிரான், வராக, நரசிம்ம, வாமன அவதாரங்கள், பலதேவர், முதலானோர் பற்றிய இராமாயண, மகாபாரதக் கதைகள் பல சங்க நூல்களிலும் உள்ளன. பரிபாடல் முதலிய நூல்களில் திருமாலே வேதத்தில் முழுமுதர்கடவுளாக ஒதப்படுபவனாகப் படிக்கப்படுகிறது. சிலப்பதிகாரம், பரிபாடல், பதிற்றுப்பத்து, முதலிய நூல்களிலோ ஸ்ரீரங்கம், திருப்பதி, திருமாலிருஞ்சோலை, திருவெஃகா (காஞ்சிபுரம்), திருவனந்தபுரம் ஆனந்தபத்மனாபச்வாமி ஆகிய கோயில்களில் விஷ்ணு (திருமால்) வழிபாடு அமோகமாக வழிபாட்டு வந்தமையைக் காணலாம். ஆக, “முல்லைநிலத் தெய்வம்” என்று தொல்காப்பியத்தில் படித்த போதிலும், முழுமுதற் கடவுளாகத் திருமாலையே ஐவகை நிலங்களில் வாழ் சங்க காலத் தமிழர்கள் வணங்கி வந்தனர் என்பது விளங்குகிறது. சங்க இலக்கியங்களில் திருமாலைத் தவிர எந்த ஒரு தெய்வமும் “அந்தணர் ஓதும் அருமறைப்போருளும் நீ” என்று பாடப்படவில்லை. எந்த அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத ஆசாரியார்களும் அடிமுடி தேடிய புராணக்கதைகளை ஆதரிக்கவில்லை. ஆதி சங்கரரும் புராணங்களில் பெரும்பாலும் விஷ்ணு புராணத்தை மட்டுமே மேற்கோள் காட்டுகின்றார்.//

    எனக்கு சங்க இலக்கியங்களைப் பற்றி அவ்வளவாக தேரியாது. இருப்பினும், மூன்றாம் சங்கப் புலவரான நக்கீரர் இயற்றியதுதானே “திருமுருகாற்றுப்படை”? இல்லை, அதுவும் அவர் பெயர் சொல்லி வேறொருவர் இயற்றினார் என்பீர்களா??

    //இன்று “108 உபநிஷதுக்கள்” என்று வழங்கப்படும் நூல்களில் பலவற்றை 15-ஆம் நூற்றாண்டுக்கு முன்பான எந்த ஆசாரியாராலும் கையாளப்படவில்லை என்பதிலிருந்து இவ்வுபநிஷதுக்கள் நவீனக் கற்பனையே என்பது விளங்கும். உதாரணமாக, “108 Upanishads (https://www.celextel.org/108upanishads/)” என்று வழங்கப்பட்டு வரும் வரிசையில் உள்ள மைத்ராயணி உபநிஷத்தில், அப்பெயரைக் கொண்ட பழைய உபநிஷத்திளிருந்து வேதாந்த தேசிகரால் கையாளப்பட்ட பல வாக்கியங்கள் அப்பதிப்பில் காணப்படா. ஆனால் “ராமதீர்த்தர்” என்னும் பண்டைய அத்வைதி ஒருவரால் பாஷ்யமிடப்பட்ட நூலில் அவ்வாக்கியங்கள் உள்ளன. இவ்வுபநிஷத்தை “Edward B. Colwell” என்னும் ஆங்கிலேயர் சம்ஸ்க்ருத மூலத்துடனும், ராம தீர்த்தர் உரையுடனும், மூல ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மேற்கூறிய “புதிய பதிப்புகளில் காணப்படாத” வாக்கியங்களுள் பல மும்மூர்த்திகளுள் விஷ்ணுபரத்துவத்தை உணர்த்த வந்தன. இவ்விஷயங்களிளிருந்து தெளிய வேண்டிய உண்மை என்னவென்றால், எந்த ப்ராசீன ஆசாரியாராலும் கையாலப்படாத “சரபோபநிஷத்து” என்னும் நூல் உண்மையில் உபநிஷத்தே இல்லை; நவீனக்கற்பனை என்பதே. 108-இல் எந்தெந்த உபநிஷதுக்கள் உண்மையான உபநிஷத்துக்களே என்பதை நிர்ணயிக்கும் முறை – 13 ஆம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத ஆச்சாரியார்கள் எடுத்துள்ளவையே உபநிஷதுக்கள்.//

    உண்மையில் எத்தனை உபநிடதங்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? கூர்ம புராணம் (52.19-20) படி:- “வியாசர் வேதத்தை ரிக், யஜூர், சாம, அதர்வ என்று நான்காக பிரித்த பின்னர், அவரது சீடர்கள் அதை மேலும் 1,130 பிரிவுகளாக பிரித்தனர்! ரிக் வேதம் 21 பிரிவுகளாகவும், யஜூர் வேதம் 100 பிரிவுகளாகவும், சாம வேதம் 1000 பிரிவுகளாகவும், அதர்வ வேதம் 9 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டன! ஒவ்வொரு பிரிவும் சம்மிதை, பிராமணம், அரண்யகம், உபநிடதம் என்று நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது! ஆக 1,130 சம்மிதைகள், 1,130 பிராமணங்கள், 1,130 அரண்யகங்கள், 1,130 உபநிடதங்கள் இருக்கவேண்டும்”.
    ஆனால், இன்று நம்மிடம் வெறும் 11 சம்மிதைகள், 18 பிராமணங்கள், 7 அரண்யகங்கள் மற்றும் 220 உபநிடதங்கள் இருக்கவேண்டும்! (நன்றி:- http://www.gosai.com).

    இந்த 220 இல், பிரபலமானவை 108, அதிலும் ஆசாரியர்கள் பாஷியம் எழுதியவை பதினொன்றுதான்:- ஐதரேய, தைத்திரிய, கத, கேன, முண்டக, மண்டுக்ய, இசாவச்ய, ப்ரிகதாரன்யாக, பிரச்ன, சாந்தோக்ய மற்றும் ச்வேதாச்வதார ஆகும். சங்கரர் பாஷியம் எழுதவில்லை என்பதற்காக சரபோபநிஷதம் இப்பொழுது இல்லை என்று எப்படி சொல்லமுடியும்?? இராமகிருஷ்ண மடத்தின் சுவாமி தபஸ்யானந்தர் தனது ‘பாகவதத்தில்’ ஏன் இராமானுஜர் பாகவதத்திலிருந்து மேற்கோள் காட்டாமல், விஷ்ணு புராணத்திலிருந்து மட்டும் காட்டியுள்ளார் என்று ஆராய்ந்துள்ளார். விஷ்ணு புராணம் ஒரு சிறந்த புராணம் ஆனாலும், ஸ்ரீமத் பாகவதத்தை விட தாழ்ந்ததே ஆகும். அப்படியிருக்க, ஏன் இராமானுஜர் அதிலிருந்து மேற்கோள் கொடுக்கவில்லை?? அந்த சமயத்தில் பாகவதம் எழுதப்படவில்லை, வியாசர் தவத்தை சற்று நிறுத்தி, மத்வர், சைதன்யர் அவதரிப்பதர்க்குள் அதை எழுதிவிட்டாரா?? இராமானுஜர் மேற்கோள் காட்டவில்லை என்பதற்காக அந்த காலத்தில் ஸ்ரீமத் பாகவதம் இல்லை என்பதுபோல உள்ளது உங்கள் வாதம்! சங்கரர் பாஷியம் எழுதவில்லை என்பதற்காக அப்படி ஒரு உபநிடதமே இல்லை என்று சொன்னால் உங்களுடன் யார்தான் பேசமுடியும்?? 1,130/220/108 எத்தனை உபநிடதங்கள் இருக்கின்றனவோ, நான் குறிப்பிட்ட 11 தான் ‘மோட்சத்திற்கு’ முக்கியமானவை. சங்கரரின் குருவின் குரு கவுடாபாதர் “மண்டுக்ய உபநிஷத்” இற்கு மட்டும் ஒரு காரிகை எழுதியுள்ளார். அப்படியென்றால் சங்கரருக்குமுன் மற்ற எந்த உபநிடதமும் இல்லையா????? அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது:- முக்திகோபநிஷத்தில், மண்டுக்ய உபநிடதம் மட்டுமே மோட்சத்திற்கு போதும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, கவுடாபாதர் அதற்க்குமட்டும் காரிகை எழுதியுள்ளார். மற்ற ஆசாரியர்களும் அப்படியே, அவர் அவர்களுக்கு எதற்கு பாஷியம் எழுதவேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்க்கு மட்டுமே எழுதியுள்ளனர். அவர் எழுதவில்லை, எனவே அந்த சமயத்தில் அது இல்லை என்று சொன்னால், உங்களுடன் மனிதர்கள் வாதாடமுடியாது!!

    பஸ்மாசுரன் சிவனைக் கொள்ளவந்தான், அப்பொழுது விஷ்ணு மோகினியாக வந்து அவனை அழித்து சிவனைக் காப்பாற்றினார். எனவே விஷ்ணுதான் பெரியவர்!

    த்ரிபுராதி வாதத்திற்கு முன்பு, சிவன் விநாயகரை வழிபட்டார். எனவே வினாயகரே உயர்ந்தவர்!

    சிவன் முருகனிடம் பாடம் கேட்டார், எனவே முருகனே உயர்ந்தவர்!

    கிருஷ்ணன் அர்ஜுனனுக்காக தேரோட்டினார், எனவே அர்ஜுனனே உயர்ந்தவன்.

    பிருகு விஷ்ணுவை உதைத்தார், எனவே பிருகுவே உயர்ந்தவர்…

    இப்படியெல்லாம் உங்களுக்கு யார் கற்றுத்தந்தது?????

    “வைணவம் மட்டுமே உண்மையான வழி! விஷ்ணு மட்டுமே உண்மையானக் கடவுள்!! வேதங்களிலும் சங்க இலக்கியங்களிலும் விஷ்ணு மட்டுமே பாடப்படுகிறார். விஷ்ணுவைத் தவிர வேறு யாரையாவது வழிபட்டால் மோட்சம் கிட்டாது.”

    இவ்வாறு சிலவர் பேசியதால்தான், வைணவம் ஆரிய மதம், சைவம் திராவிட மதம்! சைவத்திற்கும் வேதங்களுக்கும் தொடர்பே இல்லை என்று திரித்துக் கூறுகிறார்கள். இன்னும் இந்த அவலம் தொடர வேண்டுமா, நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!

    இறுதியாக, மத்வாச்சாரியார் தனது “பாகவத தாத்பரிய நிர்ணயத்தில்” பின்வருமாறு கூறுகிறார்:-

    || ருத்ரஸ்ய யசசோ ரதாய ஸ்வயம் விஷ்ணுர் விஸ்வம் விபுஹ்
    ந சஞ்சாரே சமார்தோ பி வாயும் கோசே ப்ரஷந்தையே ||

    அதாவது, விஷ்ணு பரம்பொருளானதால் அவரால் ஆலகால விஷத்தை உண்டிருக்க முடியும், ஆனாலும் ருத்ரனுக்கு (சிவனுக்கு) பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக சிவனை பருகக்கூரினார்!

    அதேபோல, இந்த அடி முடி தேடிய கதையிலும், சிவாக்கு பெருமை வரட்டும் என்று ஏன் விஷ்ணு விட்டுக் கொடுத்திருக்கமுடியாது????

  35. இன்னொரு மிக்கியமான கேள்வி:- கந்தர்வர் சொன்னதுபோல ஆதிசங்கரர் வைணவத்தை மட்டுமே கற்பித்தார் என்றால், ஏன் இராமானுஜர், மத்வர் மற்றும் பிறர் வேறு சம்பிரதாயங்களைத் துவங்கினர்? அனைவரும் சங்கரையே பின்தொடர்ந்து சென்றிருக்கலாமே?? சங்கரர் விஷ்ணுவே பெரியவர் என்று சொன்னது உண்மைதான்.. நானும் அதைத்தான் நம்புகிறேன், ஆனால் ஒருபோதும் சங்கரர் “பிற தெய்வங்களை வழிபடவேண்டாம்” என்று கூறமாட்டார்!

    “சிவனே தந்தை, உமையே அன்னை, இவ்வுலகமே என் ஊர், சிவபக்தர்களே என் உறவினர்கள்!”.
    – சங்கரர் எழுதிய அன்னபூர்ணாஷ்டகம்…

  36. கந்தர்வன் அவர்களைப்பொருத்தமட்டில், அவருக்கு அவர் மேற்கோள் காட்டும் சுதர்சன அய்யங்கார் என்கிற கிருஷ்ணசாமி அய்யங்கார் எனப்பட்டவர், ஆதிசங்கர பகவத்பாதரைவிட, திருமூலரைவிட, நாயன்மார்களைவிட, மாதவாச்சாரியாரைவிட, சங்கரானந்தரைவிட, அப்பய்ய தீக்ஷிதரைவிட, பாரம்பரியமாக வந்த சங்கராச்சாரியார்களைவிட, அதிமேதாவி, முற்றும் கற்றுணர்ந்த மஹாஞானியோ?

    இதுவரை நாமெல்லாம் கேள்விப்படாத இந்தக் கிருஷ்ணசாமி அய்யங்காரின் புகழை இந்தக் க(ந்த)ர்வன் பாடக் காரணம், அவர் சொன்ன கருத்துக்கள் இவருக்குப் பிடித்திருக்கிறது என்பது மட்டுமே. அதில் உள்ள உண்மை/ பொய் பற்றிக் கவலையில்லை.

    வேதத்தில் சொல்லவில்லை, உபநிஷத்தில் சொல்லவில்லை என்றெல்லாம் சொல்பவர்கள், தங்களுக்குப்பிடித்த கருத்தானல் ஏற்றுக்கொள்வதும் பிடிக்காத கருத்தானால் அவற்றை இடைச்செருகல் என்பதும், வெற்று விதண்டாவாதமே அன்றி வேறில்லை. ரிக்வேத‌த்தின் மைய‌மாக ந‌ம‌ச்சிவாய‌ மந்திரம் உள்ளது என்ப‌து எவ‌ருக்கும் தெரியும், இதை எழுதிய‌ அந்த‌க் கிருஷ்ண‌சாமி அய்ய‌ங்காருக்கும் தெரிந்திருக்க‌ வேண்டும் அவ‌ர் வேத‌ம் ப‌டித்திருந்்தால்.

    அடிமுடி காணாத‌ வ‌ர‌லாறு திருமூல‌ரின் திரும‌ந்திர‌த்தில் இருக்கும்போது அதை ம‌றுதலிக்க‌ இவர் யார்? திருமூல‌ரைவிட‌ உய‌ர்ந்த‌ சித்த‌ரோ? இல்லை அருந்தவச்சீல‌ரோ? இல்லையே!

    வேத‌ங்க‌ளுக்குச் ச‌ம‌மான‌ முக்கிய‌த்துவ‌மும், தொன்மையும் கொண்ட‌ ஆக‌ம‌ங்க‌ளுள் முத‌லாவ‌தான‌ காமிக‌ ஆக‌ம‌த்தில் இந்த‌க் க‌ருத்து காண‌ப்ப‌டுகிற‌தே?

    மேலும் திருவண்ணாமலையில் இன்றைக்கும், காமிக‌ ஆக‌ம‌த்தின் நான்காவ‌து அர்ச்ச‌னாவிதிப்ப‌ட‌ல‌ச் ச‌ந்திரிகையில் உள்ள நான்காவ‌து ஆவ‌ர‌ண பூஜாவிதியில் க‌ண்ட‌ப‌டியே, அஷ்ட‌திக்குபால‌கர்க‌ளாக உள்ள கிழக்கே இந்திர‌ன், தென்கிழ‌க்கே அக்னி, தெற்கே எம‌ன், தென்மேற்கே நிருதி, மேற்கே வ‌ருண‌ன், வ‌ட‌மேற்கே வாயு, வ‌ட‌க்கே குபேர‌ன், வ‌ட‌கிழ‌க்கே ஈசான‌ன் என எண்திக்கிலும் அவ‌ர‌வ‌ர் வ‌ழிப‌ட்ட‌ ஒவ்வொரு சிவ‌லிங்க‌த்தை கிரிவ‌ல‌ப்பாதையான அண்ணாமலையார் கோவிலின் ஏழாவ‌து பிராகார‌த்தில் பிரதிஷ்டை செய்து, அத்துட‌ன் கீழே பூமியைக்குறிக்க‌ கிழ‌க்குக்கும் வ‌ட‌கிழ‌க்குக்கும் இடையே விஷ்ணு வ‌ழிபட்ட சிவ‌லிங்க‌‌ம் பிர‌திஷ்டை செய்ய‌ப்ப‌ட்ட‌ ஒரு பெரிய‌ கோவில் (அருண‌கிரிநாத‌ர் கோவில் என‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து), மேலே ஆஹாச‌த்தைக் குறிக்க‌ மேற்குக்கும், வ‌ட‌மேற்குக்கும் இடையே ப்ரம்ம‌ன் வ‌ழிப‌ட்ட‌ சிவ‌லிங்க‌ம் பிர‌திஷ்டை செய்ய‌ப்ப‌ட்ட‌ ஒரு பெரிய‌ கோவில் (ஆதி அண்ணாம‌லைக் கோவில் என‌வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து), அமைந்துள்ளன.

    சொல்லில் வடித்ததைச் “செருகல்” என்று விதண்டாவாதம் புரிவோரே,
    கல்லில் வடித்ததை எப்படி இல்லை என்பீர்?
    என்ப‌தாக‌வே அப்போதே க‌ல்லில் வ‌டித்த‌ன‌ர் என்றே தோன்றுகிற‌து.

    கணினி முன் அமர்ந்து இத்த‌னை எழுதும் க‌ந்த‌ர்வ‌ன், அடுத்த‌ பௌர்ண‌மிய‌ன்று திருவ‌ண்ணாம‌லை கோவில் முன் நின்று, கிரிவலத்தைப் பார்க்கட்டும். அப்போது அவருக்கு இதன் தத்துவம் புரியும்.
    கோடி‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் ஏற்றுக்கொண்ட‌ சமய, புராண மரபை வெறும் காழ்ப்புண‌ர்ச்சியால் ம‌றுக்க‌க்கூடாது. அது முறைய‌ல்ல‌.

    (Edited and published)

  37. திரு பாலாஜி/உமாசங்கர் அவர்களே,

    நான் இன்றைய அத்வைத மதங்களைப் பற்றி அவதூறாக எழுதியவற்றை முற்றிலும் பின்வாங்குகிறேன். அவை பலர் மனம் புண்படுமாறு அமைந்துள்ளமைக்கு வருந்துகிறேன். விருப்பமானால், இத்தலத்தை நடத்துபவர்கள் (moderators) அந்த சில வரிகளை மட்டுமோ, அல்லது அவர் மனத்திற்குச் சரியாகப் பட்டால் முழு பாதிப்பையோ நீக்கிவிடுமாறு வேண்டுகிறேன். இதற்காக மீண்டும் மீண்டும் மன்னிப்புகளை கேட்டுக்கொள்கிறேன். ஆனால், ஆதி சங்கரர் தெய்வக் கொள்கை அவர் பாஷ்யங்களில் தெளிவாக விளங்கியமையை நான் ஒரு போதும் பின்வாங்கவில்லை.

    உண்மைகளை வெளிப்படுத்தியது எந்த ஒரு தனி நபரின் மனதைப் புண்படுத்தும் நோக்கத்தோடு செய்தது அல்ல. மாறாக, அனைவரும் இச்சான்ருகளை நடுநிலையில் கண்டு, அவரவர் விருப்பப்படி முடிவுக்கு வரட்டும். சிவன், முருகன், துர்க்கை, சூரியன், முதலான தெய்வங்களின் வழிபாடுகள் வேதத்திலும், புராணங்களிலும், பல இடங்களில் ஓதப்படுகின்றன என்பதை மறுக்கவில்லை. “இவை தான் திராவிட தெய்வங்கள், இவை தான் ஆரிய தெய்வங்கள்” என்ற கருத்துக்கு யாம் என்றும் இடம் கொடுக்கவில்லை; கொடுத்ததும் இல்லை. மாறாக, “ஒரு தெய்வம் தான் பர தெய்வம், மற்றவர்கள் மனிதர்களை விடப் பெரியோராக இருந்தாலும், அவர்கள் எல்லாம் பர தெய்வத்துக்கு அடங்கியவையே, அப்பர தெய்வம் விஷ்ணுவே” என்று ரிக்வேதத்தின் “விஸ்வகர்மா சூக்தம்” முதலியவற்றிலும், சங்கர, ராமானுஜ, மத்வ பாஷ்யங்களில் பிரசித்தம் என்பதே எமது கொள்கை. அனைவரும் அறிந்து பயன்பெருவதர்காக அதற்கான சான்றுகளை இங்கு சுட்டினேன். காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் இக்கொள்கை மாறியிருக்கலாம். ஆனால் அனைவரும் உண்மைகளைத் தெரிந்து கொள்வதனால் ஒரு தீமையும் இல்லை. மனம் இருப்பவர்களுக்காவது இவை உபயோகப்படும். அப்படி உண்மையை மறைத்து எந்த ஒரு சித்தாந்தத்தையும் நாம் நிர்ணயிக்கத் தேவை இல்லை; சனாதன தருமம் அப்படி ஒரு தாழ்ந்த ரீதியைக் கையாளத் தேவையே இல்லை.

    இதற்காக தற்கால அத்வைதிகளையோ, வேறு எந்த மதத்தவரையோ இழித்துரைக்க இப்போது முன்வரவில்லை. இந்துக்கள் அனைவரும் அவரவர் கொள்கைகளை ஆதரித்து, பொதுவான நற்கருத்துக்களை நிலைநாட்டுவதே நன்மை. கொள்கைகளில் வேறுபாடுகள் உண்டு என்று காட்டவே இவற்றை எழுதினேன்.

    ராமானுஜரும், மாதவரும், சங்கரருடைய “நிர்குண பிரம்மாக் கொள்கை”, “இருநிலை உண்மைகள்” (two levels of truth – vyAvahArika, paramArthika) போன்ற கொள்கைகளையே நிராகரித்துள்ளனர். “நிர்குண பிரம்மம்”, “ஜீவன்முக்தி”, “சிகையையும், பூணூலையும் துறந்த சந்நியாசம்” ஆகியவை ராமானுஜர் கொள்கைகளுக்கு முரணானவை. இக்காரனங்களே புதிய மதம் தொற்றுவித்தமைக்கு. மாதவரும் த்வைத மதத்தைத் தோற்றுவித்தார். மேலும், த்வைத-அத்வைத, அத்வைத-விசிஷ்டாத்வைத வாதத்துடன், வியாசராயர் ஒரு சில இடங்களில் விசிஷ்டாத்வைதத்தையும் கண்டித்துள்ளார் என்று படித்திருக்கிறேன். ஆகையால், மூன்று மதங்களுக்கும் வித்தியாசம் தெய்வக் கொள்கையில் அல்ல; philosophy அடிப்படையில் மட்டும் தான். இதை வேதாந்த தேசிகர் தாத்பரிய சந்திரிகையிலும் சொல்லியுள்ளமைய கீழே காட்டினோம்.

    “ஆதி சங்கரர் யார்?” என்ற கேள்விக்கு, “பிரம்ம சூத்திர, உபநிஷத், கீதா, சஹஸ்ரநாம பாஷ்யங்களையும், உபதேஷ சாஹாச்ரி என்ற நூலையும் இயற்றியவர்” என்று கொள்வதே சரி என்று யாம் கண்டது. “மற்ற நூல்களை அவர் இயற்ரினாரா?” என்றால், “முன்கூறிய பாஷ்ய நூல்களின் கருத்துக்கு பெரும்பாலும் விரோதமான விஷயங்களை உள்ளவை என்றால், அவை ஆதி சங்கரரால் இயற்றப்பட்டவை அல்ல என்று கொள்வதே உசிதம்” என்று நடுநிலை கொள்வதே சரி. ஏன் இந்த பாஷ்ய நூல்களுக்கு மட்டுமே பிராதானம் என்று கேட்டால், இவை பிராசீனர்கள் பலரால் கையாலப்பட்டவை என்பதே காரணம்.

    சங்கரர் பண்ணிய கீதா பாஷ்யத்தின் 13.10, 6.47, 9.23-9.25, 7.17-7.21, 8.16, முதலிய அத்தியாய-சுலோக எண்களை நான் என் முதல் கட்டுரையில் காட்டினேன். இவற்றுள் சங்கரர் தெளிவாக “நாராயணனே பரம்பொருள், மற்ற தெய்வங்கள் அழியக்கூடிய பலன்களைத் தருபவர்களே. மோக்ஷ லோகம் விஷ்ணுவின் பரம பதம் மட்டும் தான்” என்று கூறுகிறார். இவற்றை நடுநிலை நின்று உண்மையை அறிந்துக்கொள்ளுங்கள். கீதா பாஷ்யம் “Gita Supersite 2.0” என்ற வலைதளத்தில் உள்ளது. இதை கூகிள் பண்ணி பாருங்கள். அங்கு, பாஷ்யத்தின் சமஸ்கிருத மொழியிலும், ஆங்கிலத்தில் ஒரு மொழிபெயர்ப்பும் உள்ளன. மேலும், சங்கர கீதாபாஷ்ய ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை இத்தளத்தில் புத்தக வடிவிலேயே படிக்கலாம்:

    https://www.archive.org/stream/maitriormaitrya00cowegoog#page/n13/mode/1up

    [மேலும், “Gita Supersite 2.0”-இல் (13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த?) ஆனந்தகிரி பண்ணிய டிகை ஒன்றும், மதுசூதன சரஸ்வதி என்னும் 16-வது நூற்றாண்டு அத்வைதியின் “கூடாரத்த தீபிகையிலும்”, “மறந்தும் புரன்தொழாமை” என்ற வைணவக் கொள்கையும் ஆதரிக்கப்பட்டுள்ளது (மேற்கூறிய சுலோக என்களிலேயே). இவ்விரு பாஷ்யங்களுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்றளவும் அத்தலத்தில் இல்லை; பாஷ்யத்தின் சமஸ்கிருத வாக்கியங்களே உள்ளன. முடிந்தவர் படித்துத் தெளியவும்.]

    சங்கரர் வேத, உபநிஷத, கீதை இவற்றை மட்டுமே பாஷ்யங்களில் கையாண்டுள்ளார் என்பது தவறு. பல இடங்களில் விஷ்ணு, மார்க்கண்டேய புராணங்களையும், கீதையில் அல்லாத பல மகாபாரதச் சுலோகத்தையும் காண முடியும். விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தின் ஒரு இடத்தில் மட்டும் பாகவத புராணத்தை மேற்கோள் காட்டியுள்ளார். விஷ்ணு புராணத்தில் சித்தாந்தத் தத்துவங்கள் பல விளக்கப்பட்டுள்ளன. பாகவத புராணமோ பக்தி மார்க்கத்தையே முக்கியமாக விளக்கவந்துள்ளது. இக்காரனத்தலேயே சங்கர, ராமானுஜர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யங்களில் கையாலாமைக்குக் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது (இது முற்றிலும் என் யூகமே, ஆராய்ச்சி பண்ணி வந்த முடிவு அன்று).

    நாராயண பட்டதிரி என்ற கேரளா அத்வைதி பண்ணிய நாராயநீயத்தின் 89, 90-ஆவது தசகங்களைப் படித்து பாருங்கள். அங்கு அவர் “சங்கரர் விஷ்ணுவை மட்டும் தான் பரதெய்வமாக வழிபட்டார்” என்று 90 தசகம், 5-வது சுலோகத்தில் தெளிவுற எழுதியுள்ளார். வலையில் “Complete Narayaneeyam” என்று கூகிள் பண்ணி முதன்முதலில் வரும் வலை தளத்திற்குச் சென்று இதை விரும்பியவர் தெரிந்துகொள்ளுங்கள்.

    எனினும், ராமானுஜர் காலத்திற்கு அண்மையில் (100 வருடங்களுக்குள்) வாழ்ந்த அத்வைதிகலான ஸ்ரீதரர், சித்சுகர் முதலானோரும், விஷிஷ்டாத்வைதியான வேதாந்த தேசிகரும், ஆக அத்வைத, தவித்த, விஷிஷ்டாத்வைத்த பாகுபாடில்லாமல் அனைவரும் ஆதரித்து வந்ததினால் “இப்புராணம் நவீனக் கற்பனை” என்று சொல்வது பொருந்தாது. “நவீனக் கற்பனையாக” இருந்தால் எப்படி மூன்று வேறு சம்பிரதாய ஆசிரியர்கள் அவற்றை வெகு விரைவில் ஏற்றுக்கொண்டனர்? மேலும், “ஆழ்வார் பாசுரங்களிலும், சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குறவையிலும் பாகவத புராணத்தில் உள்ள, மற்ற புராணங்களில் இல்லாத நிகழ்வுகள் காணப்படுகின்றன” என்று ஆராய்ச்சிக் கட்டுரைகளில் படித்துள்ளேன். இத்தகைய ஆதாரங்கள் (அதாவது அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத ப்ராசீனர்களாலும், சங்க இலக்கியங்களிலும் குறிப்புகள்) “அடி முடி தேடிய புராணத்திற்கு” கிடைக்காமையே அதன் பழமைக்கு எதிரான சான்றாகும்.

    பத்து உபநிஷதுக்களுக்கே சங்கரர் பாஷ்யமிட்டிருந்த போதிலும், அவை அல்லாத பல உபநிஷத் வாக்யங்களையும் பாஷ்யங்களில் எடுத்துள்ளார். அவற்றுள் சில மைத்ராயனீய, கௌஷிதகி பிராமணம், ஷ்வேதாஸ்வதாரம், மகா நாராயணம், நாராயணம், முத்கலம் முதலியவை. முக்திகொபநிஷத் என்பது எந்த ஒரு பிராசீன ஆசார்யாராலும் கையாளப்பட்டது அல்ல. நரசிம்மரை வெகுவாக தூஷித்து வைனவர்களைப் புண்படுத்தும் சரபோபநிஷத்து விலக்கத்தக்கதே.

    இத்துடன் இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்.

  38. ஸ்ரீ ஆதிசங்கரர் பகவத்பாதர் எழுதியவை மொத்தம் மூன்று வகைப்படும்:-

    1. பாஷிய கிரந்தங்கள் (பிரம்ம சூத்திர பாஷியம், பகவத் கீதை பாஷியம், உபநிஷத் பாஷியங்கள், ஆபஸ்தம்ப தர்ம சூத்திர பாஷியம், யோக சூத்திர பாஷியம் என மொத்தம் 23).

    2. பிராகறன மற்றும் உபதேச கிரந்தங்கள் (ஆத்மபோதம், தத்வபோதம், சங்கரச்மிருதி, மனிஷ பஞ்சகம், உபதேசசஹச்ரி, விவேகசூடாமணி என மொத்தம் 54).

    3. ஸ்தோத்ர மற்றும் ஸ்துதி கிரந்தங்கள் (சிவன், விஷ்ணு, தேவி, முருகன், விநாயகர் மற்றும் ஹனுமான் மீது இயற்றப்பட்ட ஸ்லோகங்கள் மொத்தம் 76).

    இவற்றுள் மேல்கூரப்பட்டுள்ள ஸ்தோத்ர மற்றும் ஸ்துதி கிரந்தங்களில் மட்டுமே, சங்கரர் புராண மற்றும் இதிகாசங்களிலிருந்து மேற்கோள் காட்டயுள்ளார்! மற்ற இருவித கிரந்தங்களிலும் தத்துவம் மட்டுமே. எனவே அவற்றிற்கு வேத உபநிடதங்கள், ஸ்மிருதிகள், தர்ம சாஸ்திரங்கள், தர்ம சூத்திரங்கள், பிரம்ம சூத்திரங்கள் ஆகியவையே போதுமானவை!

    மேலும், சங்கரரின் தத்துவமான அத்வைதத்தில் நிர்குண பிரம்மம் (அருவமானதால்), அது சிவன்/விஷ்ணு/தேவி என்று தனியாக நிலைநாட்டவேண்டிய அவசியமில்லை. இதனாலேதான் சங்கரர் வைணவத்தை “தனியாக” நிலைநாட்டாமல் பிற மார்கங்களுடன் சேர்த்து பஞ்சயதனம் (சிவன், விஷ்ணு, தேவி, விநாயகர் மற்றும் சூரியன்) அல்லது ஷன்மதம் (முருகனையும் சேர்த்து) ஸ்தாபித்தார்!

    ஆனால், இராமானுஜர், மத்வர், நிம்பார்கர் போன்ற பிற ஸ்ரீமதாசாரியர்கள் சகுன பிரம்மத்தை (உருவமுள்ள பிரம்மத்தை) பற்றி பேசியதால் அவர் எப்படி இருக்கிறார்? சிவனா, விஷ்ணுவா, தேவியா என்று நிரூபிக்கவேண்டியதாக இருந்தது.

    சங்கரர் புராணங்களிலிருந்து மேற்கோள் காட்டவில்லையேதவிர அவரது கிரந்தங்களே புரானங்களைப்போல உள்ளது. அதாவது எப்படி சைவ புராணங்களில் சிவன் பெரியவர், வைணவ புராணங்களில் விஷ்ணு பெரியவர், சாக்த புராணங்களில் தேவி பெரியவர் என்று சொல்லியுள்ளதோ, அதேபோல ஷன்மதங்களும் பயன்படுத்தும் விதத்தில் சங்கரர் ஸ்தோத்ர கிரந்தங்களை இயற்றயுள்ளார். பஜ கோவிந்தத்திலும் கோவிந்தாஷ்டகத்திலும் விஷ்ணு பெரியவர் என்று சொல்லுபவர், சிவமானசபூஜயிலும், சிவபஞ்சாக்ஷரத்திலும் சிவன் பெரியவர் என்று கூறுகிறார். சவுந்தர்யலஹரியிலோ ஒருபடி மேலாக சென்று “சக்தியுடன் சேர்ந்ததால் தான் சிவன் படைக்கிறான், அவள் இல்லையென்றால் அவனால் ஒரு துரும்பைக்கூட அசைக்கமுடியாது” என்று எல்லாம் சக்திமயம் என்று நிலைநாட்டுகிறார். பிரம்ம சூத்திர, கீதை மற்றும் உபநிஷத் பாஷியங்களில் “விஷ்ணு பெரியவர்” என்று கூறியுள்ளதால், பிற தெய்வங்களை போற்றும் ஸ்லோகங்கள் “சங்கரரால் இயற்றப்பட்டவை அல்ல, அவரது பெயரை வைத்து வேறொருவர் இயற்றயுள்ளார்” என்று சொல்வதுதான் இந்து ஒற்றுமையை சீர்குலைக்கும்!

    இந்துக்களை அழிக்க ‘ஈ.வே.இராமசாமி’ தேவையில்லை’, இந்த ‘கிருஷ்ணசாமி’ யே போதும்! ‘கலைஞர்’ தேவையில்லை, ‘கந்தர்வர்’ யே போதும்!!
    இதைத்தான் குமுதம் ஜோதிடம் ஆசிரியர் திரு.ஏ.எம்.இராஜகோபாலன் போன்றவர்கள் வலியுறுத்துகிறார்கள்….

    உண்மையில் இந்து ஒற்றுமை வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த ஸ்ரீ.கிரிஷ்ணஸ்வாமி அய்யங்கார் யார் என்பதை சற்று அலசி, அவருக்கு “இம்மாதிரி இந்துக்களை பிரிக்கும் ஆராய்ச்சிகள் இனி செய்யவேண்டாம்” என்று கேட்டுக்கொள்ளும்படி உங்களின் கால்களில் விழாதகுறையாக மன்றாடுகிறேன்.

    ஆராய்ச்சி செய்ய எத்தனையோ விஷயங்கள் உள்ளன:-
    -> வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் இருக்கும் அறிவியல் தொழில்நுட்பம் பற்றி ஆராயலாம்.
    -> இன்று வளர்ந்ததாக நாம் சொல்லும் ஐரோப்பியர்கள் குகைகளில் உடலை சாயம் பூசிக்கொண்டு கலாசாரம் இல்லாமல் வாழ்ந்தபோது, நம்நாட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற நவீன அறுவைசிகிச்சை, மருத்துவம் கற்பித்த ஆசாரியர்கள் சுஸ்ருதர் மற்றும் சாரகர் பற்றி ஆராயலாம்.
    ->பவுதயானர், ஆரியபட்டர், பாஸ்கராச்சரியார் செய்த வைதீக கணித முறையை ஆராயலாம்.
    ->இன்று பலரால் ‘கேலிக்கூத்து’ செய்யப்படும் ஜோதிடம் பற்றி ஆராய்ந்து ஜோதிடத்தை சீர்படுத்தி அதன்மீது படிந்திருக்கும் பழியை அகற்றலாம்.
    ->சாயணாசாரியர், வராஹமிஹிரர் போன்றவர்கள் செய்த சாதனைகளை ஆராயலாம்.
    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!

    இவ்வெல்லாவற்றையும் விடுத்து, “சங்கரர் ஷண்மதங்களை ஸ்தபித்தாரா? வைனவத்தைமட்டும் ஸ்தாபித்தாரா? என்பதுதான் இந்துக்களுக்கு இன்று மிகவும் அவசியமான பட்டிமன்றமா??

    ஒரு சிங்கம், மற்றும் நான்கு எருதுகளின் கதையை இங்கு நினைவு படுத்துகிறேன். நான்கு எருதுகளும் ஒன்றாக இருந்தவரையில் சிங்கத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவை பிரிந்தவுடன் சிங்கம் எளிதாக ஒவ்வொன்றையும் கொன்றுவிட்டது. நாம் பிரிந்துகொண்டே நமக்குள் போரிட்டுக்கொண்டே சென்றால், எருதுகளல்ல, பன்றிகளல்ல, எறும்புகளே நம்மை வீழ்த்திவிடும்!

    இனி இதுபோன்ற சண்டைகள் வேண்டாம் என்று பரப்ரம்மத்தை யாசிக்கும்,
    பாலாஜி!

  39. இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டு எல்லாரும் பேசுகிறீர்கள்.. ஹிந்து மதத்தில் ஆதார நூல்களான வேதங்கள், இதிகாசங்கள் உள்ளன..ஆனால் அதை தவிர இன்னொரு ஆதாரம் நம்முடைய முன்னோர்கள் ஒரு வழக்கத்தை கடை பற்றினார்களா என்பதும்… ஏன் தமிழகத்தில் எல்லாரும் கார்த்திகை தீபம் கொண்டாடுகிறோம்? சிவன் ஜோதியாக எழுந்தனன் என்று சைவர்களும், கோவில் பாஞ்சராத்ர தீபம் என்று வைணவர்களும் கொண்டாடுகிறோம்..ஏன்? அந்நாளை நம் தமிழ் முன்னோர்கள் தவறாமல் கொண்டாடி வந்தனர் என்பது ஒரு முக்கியமான காரணம் அல்லவா? எல்லா கோவில்களிலும் பங்குனி உத்திரம் அன்று பெருமானுக்கும் தாயாருக்கும், சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடக்கிறது.. இது ஏன்? என்னை பொறுத்த வரை, புராணங்களும் வேதங்களும், மக்களிடையே பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் நம்பிக்கைகளுக்கு ஒரு எழுத்து வடிவம் கொடுத்தவையே..

    ஆக இதில் யார் உயர்ந்த தெய்வம் என்று சண்டை போடுவதில் அர்த்தம் இல்லை… நம்புடைய தொன்மையான பண்பாட்டை பேணி காப்பது முக்கியம்…

    நான் ஒரு வைணவ குடும்பத்தில் பிறந்தவன்.. அனால் எங்கள் தாத்தா பாட்டி இருவரும் சைவ கோவில்களுக்கு செல்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர்..என் தாய் வழி பாட்டியோ தினமும் காலையில் “கற்பூர நாயகியே கனகவல்லி.. காளி மகமாயி கருமாரியம்மா!” என்று பாடாத நாளே இல்லை.. தை, ஆடி மாதங்களில் வெள்ளிகிழமையன்று அம்மன் கோவிலுக்கு சென்று புற்றுக்கு பால் தெளிக்கும் வழக்கம் உள்ளது.. வருடம் தவறாமல் முண்டகக்கண்ணி அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கம் உள்ளது.. இவை எல்லாவற்றிற்கும் நான் சாஸ்திர புராண ஆதாரங்களை பார்த்து கொண்டிருக்க முடியுமா? முக்கியமாக அன்னை, பிதா, முன்னோர் இவர்கள் விடாமல் செய்து வந்ததே ஒரு பிரமாணம் என்று தானே எடுத்து கொள்ள வேண்டும்…ஞானம் முக்கியம் தான் அனால் அது பக்தியாக கனியாமல் இருந்தால் அந்த ஞானத்திற்கு பலன் இல்லை.. ரொம்ப பிரமாணம் அது இது என்று பேசாமல், முன்னோர் செய்ததை, சொன்னதை பிரமாணம் என்று கொள்ளுதல் முக்கியம்…

  40. I agree with Shri Madhavan. I feel Tamil Hindu should be careful in future about publishing articles , such as this,that might offend certain sections of the Hindu community. Do we really need all these arguments? Can someone enlighten me as to the benifits served by this article and subsequent arguments? None, as far as I can see. I earnestly request all to use our energy against threats facing Hinduisim at present from the desert religions rather than wasting it arguing on irrelevant issues .I am from a Vashinavite family but our “Kula Deiyam” is Godess Durga.My ancestral Vaishnavite village’s in Palghat has Swamy Ayyapa as the deity in the main temple.I with my family visited all”Arupadai Veedus” a couple of years back and I carry Thiruchendur Lord Muruga’s picture in my wallet at all times. I am sure many of you have similar stories to tell . As Hindus, we see Brahman in everything and in every God we worship. Harium Harrananum ondre. Why create all these controversy?

  41. எஸ் கிருஷ்ணசாமி அய்யங்கார் யாரென்று தெரிந்து கொள்ளாமலே சிலர் அவரைப் பற்றிய கருத்துக் கூற ஆரம்பித்து விட்டனர். அம்மாமனிதர் 80 வயதினைக் கடந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் சம்ஸ்ருத்த நூல்களை தொகுத்து பதிப்பித்துள்ளார். தனது வாழ் நாளையே வைணவ சமயத்திற்காக என்கிற உறுதி எடுத்து வாழ்ந்து வருபவர். ஸ்ரீ சுதர்சனம் என்கிற வைணவ மாத இதழின் ஆசிரியர். இவரது தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இதழின் ஆசிரியராக கடந்த 50௦ வருடங்களுக்கும் மேலாக இருந்து சிறந்த தொண்டாற்றி வருபவர். இந்த இதழ் அவரது முன்னோர்கள் உருவாகிய அறக்கட்டளையிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. அதை பார்க்காதவர்கள் படிக்காதவர்கள் அவரைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். தமிழ் சம்ஸ்க்ருத, ஆங்கில மொழிகளில் மிகச் சிறந்த புலமை பெற்றவர். 60௦ வருடங்களுக்கு முன்பே எம்எ- பிஎல் படித்து விட்டு ஐஎஎஸ் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர். வைணவத்திற்காக தொண்டாற்றிட வேண்டும் என்பதற்காக மேலும் தேர்வு எழுதுவதை நிறுத்திவிட்டு தமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பணியினை தொடர்ந்து வருபவர்.தொழில் ரீதியில் பொருள் ஈட்டுவதை தவிர்த்துவிட்டு வைணவ சமய வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்பணித்துக் கொண்டவர். நமது வேத உபநிஷத நாலாயிரதிவ்யப் ப்ரபந்தம், சங்கத் தமிழ் இலக்கிய நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். வேத உபநிஷங்களில் உள்ள கருத்துக்களை மட்டும் உள்ளது உள்ளவாறே எடுத்துரைத்து வருபவர். அவருக்கு அறிவுரை வழங்கக்கூடிய அளவிற்கு இந்த வலைதளத்தில் எழுதுபவர்களுக்கு தகுதி இல்லை. நமக்கு தெரிந்துள்ளதை வைத்து நாம் வாதம் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்போம். அவர் போன்ற மகான்களை இந்த வீண் வம்பிற்கு இழுக்க வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள். அவரைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் முதலில் அவர் எழுதியுள்ள நூல்களையெல்லாம் ஒருமுறை படித்து விட்டு பின்பு எழுதட்டும்.

    வித்யா நிதி

    (edited and published).

  42. திரு கந்தர்வன் அவர்களே,

    தாங்கள் வருத்தம் தெரிவித்தமை ஓரளவு ஆறுதல் தந்தாலும், அதின் உடனேயே மீண்டும் அடிமுடி காணாத வரலாற்றைக் கொச்சைப் படுத்தி “பழைய குருடி கதவைத் திறடி” என்ற பாணியிலேயே எழுதியிருக்கிறீர்கள். நான் சுட்டிய திருமூலரின் பாடல்களுக்கும், தொன்மையான காமிக ஆகமத்துக்கும் விளக்கமாக, சம்பந்தமே இல்லாமல், பாகவதம், நாராயணீயம் என்றெல்லாம் பக்கத்தை நிரப்புகிறீர்கள்.

    அடிமுடி காணாத வரலாறு கோடிக் கணக்கானவர்கள் ஏற்றதை நான் சுட்டிய பின்னரும் அதை நீங்க‌ள் கொச்சைப் படுத்துவது முறையல்ல.

    நிர்குண‌ப் பிர‌ம்ம‌ம் என்ப‌தில் துஷ்ட‌ நிக்ர‌க‌மும், சிஷ்ட‌ப‌ரிபால‌ன‌மும் வ‌ருமா என்று ஆசாரியார்க‌ளிட‌ம் கேட்டுப் பாருங்க‌ள். இடைச் செருக‌ல் எது என்று புரியும்.

    அடுத்த‌முறை நான் அனுஷ்டான‌ம் செய்யும்போது “காயேன‌வாசா ம‌னஸேந்திரியைர்வா ………… நாராய‌ணேயாதி ச‌ம‌ர்ப்ப‌யாமி” சொல்லும் போது தாங்க‌ள் மென்மேலும் செய்யும் அவ‌தூறை நினைத்து அவ‌ரிட‌மே ச‌ம‌ர்ப்ப‌ண‌ம் செய்வ‌துதான் வ‌ழியாகும் என்றே தோன்றுகிற‌து.

  43. கிருஷ்ணசாமி அய்யங்கார் குறித்து திரு வித்யாநிதி அவர்கள் எழுதியது கண்டேன். அவரது அறிவுத் திறனும் தொண்டும் எவ்வளவு உயரிய‌தாக இருப்பினும், சிவபெருமானையும், அதி சங்கரரையும், சங்கர மடங்களையும், அப்பய்ய தீக்ஷிதரையும் அவர் இழித்துப் பேசுதல் முறையன்று. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

    கட்டுரை ஆசிரியர் தெரிவித்த கருத்துக்களைவிட சைவர்களின் மனத்தை நோகச் செய்யும் மோசமான கருத்துக்களைக் கந்தர்வன் கூற கிருஷ்ணசாமி அய்யங்காரை மேற்கோள் காட்டியிருக்கிறார் என்பதை திரு வித்யாநிதி கவனிக்க வேண்டும்.

    (edited and published)

  44. திருசிகார நண்பரே

    //இராம‌ர், சிவ‌னை வ‌ண‌ங்கியும் இருக்க‌லாம். வ‌ண‌ங்காமலும் போயிருக்க‌க் கூடும். இந்த‌ விட‌ய‌த்தில் சார்பு இல்லாம‌ல் ந‌டு நிலையான‌ பண்டித‌ர்க‌ள் சொல்வ‌தையே ஒத்துக் கொள்ள‌ முடியும். இந்த‌ விட‌ய‌த்தை த‌மிழ் இந்து, சார்பு இல்லாத‌ வ‌ட‌மொழியில் முழுப் புல‌மை உடைய‌ ப‌ண்டித‌ர்க‌ளை -அவ‌ர்க‌ள் சைவ‌ சார்போ, வைண‌வ‌ சார்போ இல்லாதிருக்க‌ வேண்டும் – விசாரித்து விள‌க்க‌ம் அளிக்க‌ கோருகிறேன்.
    ///

    நீங்கள் சொல்வதில் சில சிக்கல்கள் உள்ளன அதை பணிவுடன் எடுத்துரைக்கவே முயல்கிறேன்

    சைவரும் வைணவரும் அல்லாத… அப்படின்னா “max muller” போன்றவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்

    நீங்கள் சொல்வது எவ்வண்ணம் உள்ளது தெரியுமா –

    – ஹிந்து மதம் என்று ஒன்று உண்டு என்று ஒரு ஹிந்து அல்லாத நடு நிலாயாளர் கூறினால் தான் உண்மை என்றும்
    – கிருஷ்ணர், பகவான் என்று ஒரு ஹிந்து அல்லாத ஒருவர் கூறினால் தான் ஒப்புவேன் என்றும்
    – ஒரு கிறிஸ்துவன் நீங்கள் விவிலியத்தில் உள்ளாதாக சொன்ன “கிராகியர், கானானியர் …” போன்ற வாக்கியங்களை ஒரு நாடு நிலையான ஹிந்து அல்லாத, கிறிஸ்துவன் அல்லாத, முஸ்லிம் அல்லாத ஒருவர் கூறினால் தான் ஒப்புகொள்ள முடியும் என்பது போல இருக்கு

    வால்மீகி ராமாயணத்தை மூலமாக வைத்துதான் மற்ற ராமாயணங்கள் எழுதப்பட்டன என்பது உண்மை தானே – அப்போ கம்பர் நடு நிலையாளர் இல்லை என்று கொள்வதா – அவர் சைவரோ வைணவரோ தானே.. வியாசர் எழுதியது தான் மகாபாரதம் – அவரோ – “ந தெய்வம் கேசவாத் பரம்” என்று கூறியதனால் தான் ஒரு வைணவர் என்று காட்டிவிட்டார் – பீஷ்மர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை இயற்றியதன் மூலம் தான் ஒரு கிருஷ்ண பக்தர் என்று காட்டிவிட்டார் – இப்படி வைத்துகொண்டால் இவர்கள் எல்லாம் நடு நிலையாளர்கள் இல்லையா?

    அத்வைதம் தான் சரி என்று சங்கரரும் அத்வைதிகள் மட்டும் தானே சொல்ல முடியும் சொல்வார்கள், அதே போல விஷிஷ்டாத்த்வைதம் தான் சரி என்று விஷிஷ்டாட்விதிகளும் இராமநுஜரளும் தானே கூற இயலும் – இங்கே நடு நிலையாளன் என்ற பேச்சிற்கே இடம் இல்லை – ஏன் என்றால் ஒருவர் இரண்டையும் சரி என்று கூற இயலாது, அப்படி சொன்னால் சங்கரரும் ராமானுஜரும் சொன்னவைக்கே அபாவம் ஏற்படும், இரண்டில் ஒன்றே சரி என்றால் அவர் ஒன்னை சார்ந்தவர் ஆகிறார் – இரண்டுமே சரீல்லை என்றால் அவர் மூன்றாவது ஒன்னை சார்ந்தவர் ஆகிறார் (உதாரனதிருக்கு த்வைதம் )

    நான் என்ன நிலா இல்லை சூரியன் இல்லை என்றா சொன்னேன் – நீங்களே கூட வால்மீகி ராமாயணத்தை வாசிக்கலாம் (தமிழ் மொழிபெயர்ப்பு பல உள்ளன)

    வால்மீகி ராமாயணத்தில் உள்ள விஷயமாக இருந்தால் நான் அந்த ஸ்லோகத்தை மேற்கோள் காட்ட முடியும் – இல்லாத ஒன்றை எவ்வண்ணம் காட்ட முடியும் –
    சரி அதை விடுங்கள் கம்ப ராமாயணத்தை நீங்களே வாசிக்கலாமே

    இது இருக்கட்டும் – ஒருவர் நடு நிலையாளர் என்று எவ்வண்ணம் தீர்மானம் செய்வது – யார் தீர்மானம் செய்வது – ஒருவர் நடு நிலையாளர் அல்லர் என்று நீங்கள் பின்பு தீர்மநிக்கக்கூடுமாதளால் நீங்களே வசித்து முடிவு செய்வது தான் உத்தமம்

    //
    ஆனால் இந்த‌ விட‌ய‌த்தில்

    //யார் பெரியவர், ராமர் சிவனை ஏன் வணங்க கூடாது ? என்ன குடியா முழுகி போகிடும்? //

    என்ப‌து போன்ற‌ த‌டித்த‌ வார்த்தைக‌ள் ச‌ரியா?
    //

    இது எப்படி தடித்த வார்த்தை ஆகிவிடும் – நான் ஒன்னும் ராமர் குடியை பற்றி கூரவில்ல்யே – ராமர் சிவனை வணங்கியாதாக ஒப்புக்கொண்டால் நம் குடி முழுகுமா என்ற அர்த்தம் வரும்படியே எழுதினேன் – மற்ற விஷயங்களை விட்டு விட்டு இதை ஏன் சாடுகிரிர்கள் 🙂

    இதோ நீங்கள் சொன்னது
    //
    என்னவோ தான் இராம‌ருட‌ன் சேர்ந்து இல‌ங்கையில் அயோத்திக்கு வ‌ந்த‌து போல‌வும், ஒரு நிமிட‌ம் கூட‌ விடாம‌ல் கூட‌ ‌ இருந்து பார்த்த‌து போல‌வும், இராம‌ர் சிவ‌னை பூச‌னை செய்ய‌வில்லை என‌ சொல்வ‌து ச‌ரியா?
    //

    நாம் ஒரு விஷயத்தை பற்றி விவாதிக்கையில் ஒருமுகமாக என்னை பற்றி எழுதுவது அல்லவோ தடித்த வார்த்தை

    //
    ந‌ல்லிண‌க்க‌த்தைக் காட்ட‌வே இராம‌ர், சிவ‌ பெருமானை வ‌ண‌ங்கிய‌தாக‌க் குறிப்பிட்டோம்.
    //

    நல்லிணக்கம் ஏற்படும் என்பதற்காக இல்லாத ஒன்றை கூறித்தான் ஆகா வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பது மட்டுமே எனது தாழ்மையான கருத்து

    இதை போல் தான் கிறிஸ்தவர்களும் ஹிந்து கிருஷ்துவ நல்லிணக்கத்தை மேற்கொண்டு பகவிஷ்ய புராணத்தில் ஏசுவே பூஜிக்க படுகிறார் என்று கூறுகிறார்கள் என்று என்ன வேண்டி வருமே – ஒன்றை சாடும் நாம் மற்றொன்றை நல்லிணக்கம் என்கிறோமே!

    இல்லாத விஷயத்தை சொன்னால் உண்மை அற்று போய்விடும் பிறகு உண்மை எது நல்லிணக்கத்துக்காக அபிமானமாக சொன்னது எது என்று தெரியாமலே போய்விடும்

    நான் சாதி மத உணர்வோடு இதை எழுதவில்லை – எனது ஒரே வேண்டுகோள் இல்லாததை சொல்லாதிர்கள் என்பது மட்டுமே – இதற்க்கு வள்ளுவர் சொன்னதை மேற்கோள் காட்ட வேண்டாம் – ஏன் என்றால் இது போன்ற விஷயத்தில் எது நன்மை பயக்கும் என்றும் நம்மால் அறுதி இட்டு கூற இயலாது

  45. வலைதளத்தின் உரிமையாளர்களுக்கு (Site Moderators) ஒரு வேண்டுகோள். நான் எழுதிய பதிவுகளும், அதனால் உண்டான சர்ச்சையும் இங்கு ஏற்புடையதல்ல என்று நீங்கள் நினைத்தால், என் பதிவுகளை நீங்கள் முற்றிலும் நீக்குவதற்கு எமக்கு எந்த ஆட்சபனையும் இல்லை. என் பதிவுக்கு பதில் அளித்தவர்களுக்கும், உங்களுக்கும் இது ஒத்துப்போனால், அவர்கள் எமக்கு அளித்த மறுமொழிகளையும் தாராளமாக நீக்குங்கள்.

    நான் எழுதியவற்றுள் இன்றைய சங்கர மடங்களை இழுத்து வம்படித்ததற்கு முன்பே மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளேன். வேண்டுமானால் மறுபடியும் அவற்றைப் பின்வாங்குகிறேன் என்று சொல்ல எமக்கு எந்த ஒரு ஆட்சபனையும் இல்லை. என்னை “கர்வத்துக்கு இடம் கொடுக்கும் நீசன்” என்று என் குற்றங்களை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி (இதை நான் sarcastic-ஆகச் சொல்லவில்லை; sincere-ஆகத் தான் சொல்கிறேன்). நம் வேத வேதாந்த மரபைக் காக்கவேண்டி தியாகம் செய்த ஆச்சாரியார்கள் மத்தியில் நான் ஒன்றுமில்லாதவன் தான்.

    நான் எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் இதை எழுதத் தொடங்கவில்லை. மாறாக, எல்லா ஜீவாத்மாக்களையும் சஹோதரர்களாக பாவிக்கத்தான் நினைக்கிறேன்.

    “இந்துக்கள் அனைவரும் சமயரீதியாக uniform-ஆக ஒரே சித்தாந்தைத் தான் கடைபிடிப்பவர்கள்” என்று மயங்குவது சரி அன்று. அனைவர்க்கும் ஏற்றதான பொதுவான நற்கருத்துக்களையும், பொதுவான personal, social, and moral values-களையும் நன்கு பகிர்ந்துக் கொண்டு, சைவ, வைணவ, சாக்த, மதங்களில் “இவை இவை ஏற்புடையவை, இவை இவை ஏற்கத் தக்காதவை” என்ற வரம்பு வரையறைகளை நன்கு அறிந்து அவற்றை நடைமுறையில் மதிப்பதே நல்லது. Common Hindu Values என்பதற்கு இடமுண்டு. Common Hindu Theology என்பதற்கு ஒருநாளும் இடம் கொடுக்கக் கூடாது. நம் நாட்டு வரலாற்றைப் பற்றியும், கலாச்சாரத்தைப் பற்றியும் துஷ்பிரசாரங்கள் நடந்து வந்தால், அதை அனைவரும் இனைந்து, முக்கியமாக, சாத்துவீக முறையில் (அதாவது தனிப்பட்ட முறையில் ஒருவரையோ, ஒரு குழுவினரைப் பற்றியோ, அவதூறாகப் பேசாமல்) மேற்கோள்களைக் காட்டி ஜெயிப்போம். இதில் அனைத்து ஹிந்துக்களும் ஒற்றுமை காண்பதே.

    உண்மைகளை ஆராய்ச்சி ரீதியில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு, தக்க முறையில், ஆராய்ந்து தெளிந்து “எனக்கு இந்த சித்தாந்தம் தான் பிடித்திருக்கிறது” என்று அவரவர் முடிவு பண்ணினால் பண்ணிக்கொள்ளட்டும். வேண்டுமானால், அதை நிராகரிக்க முன்வருபவர்கள் மேற்கூறியபடி சாத்துவீக முறையைக் கையாண்டு அவர்களைத் convince பண்ணித் திருத்தலாம். நான் முன்பே கூறினேன் – ‘நடுநிலை ஆராய்ச்சி’ என்னும் limelight-க்குப் பயந்த மூடர்கள் சித்தாந்தம் அல்ல நம் வைதீக மதம்.

    “வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலியவை முற்றிலும் கற்பனைகளே” என்பது போன்ற துஷ்பிரச்சாரத்திற்கும், “அலர்மேல் மங்கை மணாளன் உறையும் திருப்பதி முதலில் பௌத்த மத பீடமாக இருந்தது; ராம சேது கற்பனையே”, என்பது போன்ற பொய்க் கூற்றுக்களுக்கும் எதிராக நடுநிலை ஆராய்ச்சி ரீதியில் பல சான்றுகள் உள்ளன. ஆகையால் ‘ஆராய்ச்சி’ என்ற உடனேயே நாம் புறமுதுகு இட்டு ஓட தேவை இல்லை. “ஆம், கலியின் நடனத்தால் எமது பிராசீன வைதிக சித்தாந்தம் பிரிந்து பல மதங்களாக இன்று உள்ளன. இதை சர்வேசுவரனுடைய கிருபையால் யாம் எமக்குள் சரி செய்துக் கொள்ளத் தயாராக உள்ளோம். சார்ச்சைகளைச் சாத்துவீக முறையில் நடத்தி சமாதானம் காண யாம் நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால், எமது பொதுவான கொள்கைகளான இறையுணர்வு, ஏழைகளுக்கு உதவுதல், கருணை காட்டுதல், நாட்டைக் காக்கப் பாடுபட்டு நற்பணிகளில் ஈடுபடுதல் போன்றவை தொன்று தொட்டு வந்துள்ளவையே. எல்லோரும் ஒரு தாய் மக்களே (சைவர்கள் ‘தாயுமானவர்’ என்று பரமசிவனைக் கூறுவதும், வைணவர்கள் “மாதா நாராயண:, பிதா நாராயண:” என்று ஓதுவதும் இங்கு நினைவுகொள்ளத் தக்கது). இவ்விஷயத்தில் நம் அனைவர்க்கும் பெருமையும் பற்றும் உண்டு” என்று கூறுவதனால் என்ன கேடு வந்துவிடும்?

    (edited and published)

  46. நண்பர் பாலாஜி அவர்களே
    //
    அதேபோல, இந்த அடி முடி தேடிய கதையிலும், சிவாக்கு பெருமை வரட்டும் என்று ஏன் விஷ்ணு விட்டுக் கொடுத்திருக்கமுடியாது????
    //

    தாரளமாக – ஆனால் கட்டுரை ஆசிரியர் எழுதியதை கொஞ்சம் பாருங்கள்
    //
    அப்படியென்றால், பிரம்மா-விஷ்ணுவின் மோதலில் நமக்கு இன்னுமொரு பாடமும் இருக்கிறதோ? ஸ்ரீதேவியும், பூதேவியும் கொண்ட விஷ்ணுவும் சரி, ஞானாம்பிகையான சரஸ்வதியைக் கொண்ட பிரம்மாவும் சரி, இருவருமே தம்தம் அகந்தையின் எழுச்சியினாலேயே வாதத்தைத் தொடங்கினர்.
    //

    இங்கு தேவை இல்லாமல் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் அகந்தை என்று ஏன் கூற வேண்டும் – இதுவே பிரச்சனையின் தொடக்கம் – அடி முடி தேடிய புராணத்தில் ஆழமான கருத்து இருக்கலாம் அதனாலே மற்ற ஒரு தேவதாவை நிந்திக்க வேண்டாமே – சற்று கவனித்து படியுங்கள் நான் பிரம்மாவையும் நிந்திக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன் விஷ்ணுவை மட்டும் அல்ல

    புராணம் எப்படியோ இருக்கட்டும் – நாம் ஏன் இப்படி ஒரு கருத்தை சொல்ல வேண்டும். நீங்கள் சொன்ன ஒரு கருத்தை பாப்போம்

    //
    இதில் எந்த தொழிலும் மற்றொன்றிற்கு உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை! படைத்தல், காத்தல் இரண்டுமே ஒருசேர நடக்கும். ஆனால், இவை இரண்டும் சற்று நின்றால்தான் அழிவு (பிரளயம்) வரமுடியும். அதனால்தானோ என்னவோ, இங்கு சிவன் பிரம்மா, விஷ்ணு இருவரையும் சிவன் வென்றதாக காட்டப்பட்டுள்ளது. அதாவது, படைத்தல், காத்தல் இரண்டும் சற்றுநேரம் நின்றுபோக பிரளயம் வந்திருக்கவேண்டும்

    அதேபோலத்தான், சிவன் சரபேஸ்வரராக நரசிம்மரை வென்றதாக சொல்லப்படும் கதையும். நரசிம்ம அவதாரம் நடந்தது கிருத யுகத்தின் முடிவில், எனவே அப்பொழுது ஒரு பிரளயம் வந்திருக்க வேண்டும்.
    //

    இது ஏன் தவறு (பிரளய, வந்ததென்ற காரணம்) என்று சாமான்ய தர்க்க வடிவாக பார்போம்

    – நரசிம்ம அவதாரம் முடிந்தவுடன் பிரளயம் ஏற்பட வில்லை – அப்படி யுக முடிவில் பிரளயம் ஏற்படும் என்றல் கலி யுகத்திற்கு முன் ஏன் பிரளயம் ஏற்பட வில்லை – பரிக்ஷித் ராஜா த்வாபர யுகத்திலும் கலி யுகத்திலும் நன்றாக வாழ்தானே.

    நரசிம்ம அவதார முடிவில் பிரளயம் ஏற்பட்டிருந்தால் – மகாபலி என்ற அரசன் ஏது அப்புறம் வாமன அவதாரம் தான் ஏது. மகாபலி பிரஹலாதனின் பெரனன்றோ, மேலும் பிரஹலாதன் நன்கு ஆட்சி புரிந்தான் என்று படிக்கிறோம் – பிரளயம் உண்டாகில் பிரஹலாதன் ஆட்சி புரிவது எங்கனே? மகாபலி தான் எவ்வாறு பிறப்பது

    நமக்கு தொன்றினவற்றை சொல்வதில் தவறேதும் இல்லை – என்னுடைய பணிவான வேண்டுகோள் அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும்.

  47. Hinduism has many sub sects, not just saivam and vainavam only.

    There are neutral vedic scholars , who does not take sides.

    I once again appeal tamilhindu to get this clarified – whether Rama worshipped siva is mentioned in Vaalmiki Raamayanam or not. I am ready to accept the Truth as it is.

    சிலரிடம் விசாரித்து விட்டு அவர்கள் கூறுவதைக் கேட்டு விட்டு இங்கே வந்து வால்மீகி ராமாயணத்தை அடி முதல் முடி வரை ஒரு வரியும் விடாமல் படித்து விட்டது போலவும், வால்மீகி இராமாயணத்துக்கு தான் தான் அத்தாரிட்டி போல தீர்ப்பு வழங்குவதை நாம் ஒப்ப இயலாது.

  48. திரு பாலாஜி அவர்களே

    //
    இன்னொரு மிக்கியமான கேள்வி:- கந்தர்வர் சொன்னதுபோல ஆதிசங்கரர் வைணவத்தை மட்டுமே கற்பித்தார் என்றால், ஏன் இராமானுஜர், மத்வர் மற்றும் பிறர் வேறு சம்பிரதாயங்களைத் துவங்கினர்
    //

    ராமானுஜரும் மாதவரும் சங்கரருடன் வேதாந்தத்தில் தான் வேறுபாடு கொண்டனர் – சித்தாந்தத்தில் இல்லை. அதனால் தான் வேறு சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. ஆதி சங்கரர் சிரமப்பட்டு புத்தத்தில் ஆழ்ந்து, கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்த வெகு ஜனங்களுக்கு கற்பித்து கற்பித்து வைணவம் இல்லை, அவர் இல்லை என்றால் இன்று நாம் ஹிந்துக்களாக இருந்திருக்க முடியாது
    அத்வைதம் மற்றும் கடவுள் இருக்கிறார் அவர் ஒர்வரே உண்மை, சூனியவாதம் பொய்யே ஏன் என்றால் இல்லை என்ற சொல்லவே ஒண்டு உண்மையாக வேண்டும் அந்த உண்மையே பகவான் என்பதுவே.
    ராமானுஜரின் தர்சனமும் வேதாந்தத்தை முன் நிறுத்தியே ஆனால் அவர் சித்தாந்தத்திலும் ஊறி இருந்தார் என்பது உண்மையே. ஞான மார்கத்திலே ஊறி இருந்த நம் மக்களில் பக்தி மார்க்கத்தை உண்டு பண்ணியதில் ராமனுஜருக்கும், மத்வருக்கும் பெரும் பங்குண்டு – இவ்விஷதினாலேயே இவர்கள் நாராயண ச்மரனத்தை பரப்பினார்களே ஒழியே சகுன பிரம்மம் என்று அவர்கள் வேதாந்தத்தில் கொண்டமையால் அல்ல

    புத்தர் கர்ம காந்ததிலேயே திளைத்து அன்பற்ற சமுதாயத்தை திருத்தும் பொருட்டு சூனிய வாதத்தை மேற்கொண்டார் (எல்லாம் பொய், அன்பொன்றே மெய்). சங்கரர் நம்பிக்கையற்று நர்கதியற்று போன சமூகத்தை அரும் பாடு பட்டு ஞான மார்கத்தை கொண்டே திருத்தினார், பின் வந்த ராமானுஜரும், மத்வரும் பக்தியின் மேம்பாட்டை நிலை நிறுத்தினார்கள் – ஒவ்வொருவரும் தத்தமது காலத்துக்கு ஏற்ற விஷயத்தையே போதித்தார்கள்

    சங்கரர் ஷன்மததை ஸ்தாபனம் செய்தார் என்றால் – ஏன் பிரம்மாவிற்கு ஒன்றை விட்டு விட்டார் – சூரியனுக்கு ஒன்று உண்டென்ற போது ஏன் சந்திரனுக்கு, வருணனுக்கு இல்லை, இவர்களின் அதிபதியான இந்திரனுக்கு ஏன் இல்லை, சிவா சக்தி, விநாயகர், குஹன் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒன்றிருக்க, விஷ்ணுவின் மார்பில் வாழும் லக்ஷ்மிக்கு ஏன் ஒன்று ஏற்பதுத வில்லை, கல்வியின் செல்வியான சரவதிக்கு ஏன் இல்லை? – வேதங்களை நன்கு அறிந்த சங்கரர் இந்திரனுக்கு ஒரு மதத்தை உண்டுபண்ணி இருக்க வேண்டும் அல்லவே

    ஷன்மதம் சங்கரரருக்கு முற்காலத்திலே இருந்திருக்க வேண்டும் – இதில் அவர் ஸ்தாபனம் செய்தார் என்று சொல்வதற்கு ஏதும் இருப்பதாக தெரியவிள்ளை

  49. இந்த கட்டுரை மற்றும் மறுமொழிகள் மூலம் நீங்கள் அனைவரும் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஒன்றைக் கற்றுக்கொண்டேன், நான் இந்த விஷயத்தில் தலையிட்டது தவறு என்று!

    அவர் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவரவர் பாணியிலேயே விடையளிக்க முயற்ச்சிக்கிறேன்:- முதலில் திரு.வித்யா நிதி.

    திரு.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் அவர்கள் தங்களது வாழ்நாளையே “வைஷ்ணவ சம்பிரதாயத்திற்காக” சமர்பித்திருக்கிறார் என்று நீங்கள் சொல்லும்போது எனக்கு சற்று வேதனையாகத் தான் இருக்கிறது. ஏனெனில், ஒற்றுமை ஒற்றுமை என்று பேசிவிட்டு உறுதிமொழியிலையே பிறிவினை உண்டாக்குவதா? அவர் எழுதிய ‘சங்கரரும் வைணவமும்’ என்ற நூலை படிக்க துவங்கினேன். முதல் ஏழு எட்டு வரிகளைப் படித்தவுடன் மூடிவைத்துவிட்டேன். ஏன்? அவ்வரிகளை கீழே எழுதியுள்ளேன். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்:-

    //வருடாவருடம் தீபாவளியின்போது வெளிவரும் தீபாவளி மலர்களில் வைஷ்ணவத்தைத் தாழ்த்தியும், வைஷ்ணவர்களின் மனத்தைப் புண்படுத்தியும் கட்டுரைகளை வெளியிடுவதே நம்நாட்டு சைவாத்வைதிகளால் நடத்தப்படும் பொதுஜனப் பத்திரிகைகளின் வழக்கமாகிவிட்டது//

    இதற்குமேல் படிக்க எனக்கு விருப்பமே இல்லை. இதற்குமேல் எதையும் சொல்லி உங்களுக்குப் புரியவைக்கவேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. முதல் நான்கு வரிகளிலேயே சைவர்கள் மீதும் அத்வைதிகள் மீதும் இவ்வளவு வெறுப்பை உமிழ்ந்தால் போகப்போக எப்படியிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். இது ஒரு தவறான கருத்து என்பதைமட்டும் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்லமுடியும். ஏனெனில் சற்று எண்ணிப் பாருங்கள், நாம் ஒன்னும் குலோத்துங்க சோழனின் காலத்திலில்லை, வைணவத்தை தாழ்த்தி, சைவத்தை தூக்கிப்பிடிக்க! http://www.indiadivine.org என்ற தளத்தில் இதேபோல வாக்குவாதங்கள் வரும். ஒருநாள் சங்கரரை சிலர் கால்பந்துபோல உதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.. அவர்களில் பெரும்பாலானவர் வைணவர்கள் என்பதையும் அறிந்தேன். ஏனெனில் அவர்கள் சங்கரரை மட்டம்தட்டி, இராமானுஜர், மத்வர், சைதன்யர் போன்றவர்களை போற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் போற்றத்தக்கவர்கல்தான், ஆனால் ஏன் சங்கரரை இப்படி தூற்றவேண்டும்? என்னால் முடிந்தவரை சங்கரருக்காக வாதாடினேன். சிலரது வாய்களை அடக்கினேன். அதில் கடைசியில் சாஜன் என்ற ஒருநபர் “சங்கரர் பவுத்தர்களை வாதத்தில் தோற்கடிக்கவில்லை, மாறாக அவர்களை உயிருடன் எரித்துவிட்டார்” என்று சுவாமி விவேகானந்தர் கூறியதாக எழுதியிருந்தார். அதை நான் நம்பவில்லை, “இதுவும் வைணவர் கிளப்பிய பொய்” என்று விட்டுவிட்டேன். சிறிது நாட்கள் கழித்து, அப்படி சொல்லப்பட்ட புத்தகத்தை எங்கெல்லாமோ தேடினேன்.. முடிவாக மைலாப்பூர் இராமகிருஷ்ண மடத்திற்கு சென்று சுவாமி முக்கியானந்தர் எழுதிய “ஸ்ரீ சங்கராச்சாரியார்: அவரது வாழ்கையும் தத்துவமும்” என்ற புத்தகத்தை வாங்கினேன். விலை ரூபாய் 50. அதன் முடிவில், appendix ஆக சுவாமி விவேகானந்தர் சங்கரரைப் பற்றி என்ன கூறினார் என்பது சொல்லப்பட்டிருந்தது சுமார் இரண்டு பக்கத்திற்கு. அதில் ஒருவரிகூட சங்கரைப் பற்றி தவறாக இல்லை! “சங்கரர் வேதங்களின் உச்சத்தைக் கண்டுவிட்டார்” என்று விவேகானந்தர் பாராட்டுமழை பொழிந்திருந்தார். அப்பொழுதுதான் அந்த சாஜன் என்ற நபர் எழுதியிருந்தது பொய் என்றும், அவர் வைணவராக இருக்கமுடியாது என்பதும் புலப்பட்டது. ஏனெனில், அந்த தளத்தில் சங்கரரை தூற்றிய வைணவர்கள் எல்லோரும் அத்வதத்தைத் தான் தூற்றினரே தவிர, எவரும் சங்கரரின் ஒழுக்கத்தைப் பற்றி எவரும் பேசவில்லை. அப்பொழுதுதான் அந்த சாஜன் என்ற நபர் வைணவர் அல்ல, ஒரு இந்து விரோதி (முஸ்லிம்/கிறித்தவர்/இடதுசாரி) ஆக இருக்கவேண்டும் என்று புரிந்தது. ஏனெனில், வைணவர்கள் சங்கரரின் தத்துவத்தை தூற்றினார்களே தவிர, அவருக்கு மரியாதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். சங்கரரை யுகவிரோதியாகப் பார்க்கும் இஸ்கான் அமைப்பினர்கூட அவ்வாறான வார்த்தைகளைக் கூரமாட்டார்களே! உடனே, அந்த தளத்தில் “நான் தவறாக எழுதிவிட்டேன், எல்லா வைணவர்களும் என்னை தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்” என்று எழுதி விடைபெற்றேன்.

    இதை ஏன் சொல்கிறேன் என்றால், இன்று இந்து விரோதிகள் பின்பற்றும் latest trend என்னவென்றால் சைவர்களிடம் தங்களை வைணவர்களாகக் கூறிக்கொண்டு சைவத்தைத் தாழ்தவேண்டியது; அதேபோல தங்களை சைவர்களாகக் கூறிக்கொண்டு வைணவத்தைத் தாழ்தவேண்டியது. முடிவில், சைவர்கள் வைணவர்களையும் வைணவர்கள் சைவர்களையும் பழித்து அங்கு ஒருபோரே நடக்கும். ஆங்கிலேயர்களின் DIVIDE AND RULE கொள்கையை நினைவில் கொள்க! ஆரியன், திராவிடன் என்று பிரித்தார்கள். பிறகு பவுத்தர்களையும் சமணர்களையும் இந்து மதத்திலிருந்து பிரித்தார்கள். இன்று முடிவாக அவர்கள் வழிவந்தவர்கள் நம்மிடையே அதையே டிரை பண்ணுகிறார்கள்.. இந்த ‘ஆரிய/திராவிட’ மாயையில் சிக்கிவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்…. இதைத்தான் கமலஹாசன் போன்ற வெக்கம்கேட்ட ************ உம் பயன்படுத்துகிறார்கள்.

    நீங்கள் திரு.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் வைஷ்ணவ சம்ப்ரதாயத்திர்க்காக போராடுகிறார் என்றீர்கள். யாருக்கு எதிராக? சைவர்கள், அத்வைதிகள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்? தசாவதாரம் என்ற மானங்கெட்ட திரைப்படம் மூலம் ஸ்ரீ வைஷ்ணவத்தையே கேவலபடுத்தியபோது, உங்கள் கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் எங்கே??????????????????????????????????????
    அப்பொழுது ஏதாவது கண்டனம் செய்தாரா? இப்பொழுதே நான் பேசிய வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்! கண்ணுக்குத் தெரியும் எதிருகளை விட்டுவிட்டு, இல்லாத எதிரிகளை பந்தாடுவதுதான் பெருமிதமா????

    அடுத்ததாக திரு.கந்தர்வன்:-

    நீங்கள் பெரும்பாலும் சங்கரரின் ஸ்தோத்திர கிரந்தங்கள் அவருடைய பாஷியங்களுடன் ஒத்துப் போகவில்லை, அதனால் அவற்றை சங்கரர் இயற்றவில்லை. அவர் பெயரைச் சொல்லி வேறு எவரோ இயற்றியுள்ளனர் என்கிறீர்கள். அப்படிப் பார்க்கப் போனால், இன்று இராமாயணத்தை வால்மீகிதான் இயற்றினாரா? எல்லா புராணங்களையும் மகாபாரதத்தையும் வியாசர்தான் இயற்றினாரா?? யோக சூத்திரங்களை பதஞ்சலிதான் இயற்றினாரா??? ஏன், பகவத் கீதை கிருஷ்ணர் தான் பேசினாரா???? அது மகாபாரதத்துடன் எழுதப்படவில்லை, மாறாக அது இடைச்சொருகல். இப்படியெல்லாம் நான் சொல்லவில்லை, இந்து விரோதிகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒரேகேள்வியைத்தான் கேட்பேன். கீதை கிருஷ்ணர் பேசவில்லை என்றால் அதைப்பேசிய ஞானி யார் என்றுக் காட்டுங்கள் என்று. ஒரு நூல் ஒருவரால் இயற்றப்பட்டது என்று காலம் காலமாக நம்பும்பொழுது, இல்லை அதை வேறொருவர் இயற்றினார் என்று சொன்னால் அது யார், எப்பொழுது என்ன காரணத்திற்க்காக இயற்றப்பட்டது என்று கேள்வி எழுப்புபவர்கள் நிரூபிக்கவேண்டும். அதில்லாமல், அது அவர் எழுதவில்லை என்று பாடிய பல்லவியையே பாடக் கூடாது! அதே கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்… அந்த ஸ்தோத்ர கிரந்தங்களை சங்கரர் இயற்றவில்லை என்றால், அதை யார் இயற்றினார், எப்பொழுது இயற்றினார் எதற்க்காக இயற்றினார் என்று நிர்ரோபிக்கவேண்டும்.. அதை நீங்களும் சொல்லவில்லை, நீங்கள் சொல்லும் திரு.கிருஷ்ணஸ்வாமி அய்யங்காரும் சொல்லவில்லை. எனவே அதை ஏற்கலாகாது!!!!

    திரு.சாரங் அவர்களுக்கு,
    நான் சொன்னது சரி என்று நான் சாதிக்கவில்லை. நான் எழுதியபோழுதே ‘இருக்கக்கூடும்’ என்றுதான் கூறினேன்.. அதுவெறும் சமாதானத்திர்க்காகதான்… தவறாக இருந்தால் மன்னிக்கவும்!

    எல்லா வைணவர்களுக்கும்:- நீங்கள் சிவனையோ முருகனையோ சூரியனையோ வணங்கவேண்டும் என்று எவரும் சொல்லவில்லை. மாறாக, நாங்கள் விஷ்ணுவைமட்டும் வணங்கவேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறோம்…..

    மறந்தும் புறம் தொழாதவனாக இருக்க நான் விரும்பவில்லை. தெரியாமல் எத்தனையோ தவறுகளை செய்கிறோம், இது தெரிந்து செய்யும் தவறாகவே இருக்கட்டும்…. தன்னை தூஷித்த கம்சனுக்குக் கூட மோட்சத்தை அளித்த எம்பெருமான், நான் முருகனையோ அய்யப்பனயோ வினங்கியதான் “மட்டும்” என்னை டிராட்டில் விட்டுவிடப் போவதில்லை! நீங்கள் சொல்வதைப் போல விஷ்ணுவை வணங்குபவர்கள் மட்டுமே மோட்சத்திற்கு போவார்களென்றால் இந்தப்பிறவியில் நீங்கள் செல்லுங்கள். எல்லா ஜீவன்களும் ஒரே சமயத்தில் ஸ்ரீ வைகுண்டத்தை அடையமுடியாது. நாங்கள் மீண்டும் பிறந்து, விஷ்ணுவிடம் exclusive devotion செய்து அடுத்தபிறவியில் வருகிறோம்…

    முடிவாக திரு.கந்தர்வன் சங்கரர் எழுதிய பாஷியங்களை சுட்டிக்காட்டினார். பிரம்ம சூத்திர பாஷியத்தில் சங்கரர் “ஒருவன் செய்யும் வாதத்தை இன்னொருவன் மறுப்பான், அவன் காட்டும் ஆதாரத்தை வேறொருவன் நிராகரிப்பான்.. நெருப்பு சூடு என்பதுபோன்ற வாதத்தை மட்டுமே ஒருவராலும் நிராகரிக்கமுடியாது” என்று சொன்னவர் பவுத்த சமண மதங்களை வீழ்த்தினார். அவரது தத்துவத்தை இராமானுஜர் வீழ்த்தினார். இவேல்லா தத்துவங்களையும் மத்வர் வீழ்த்தினார்… இன்று மத்வர்தான் எங்கள் ஆசாரியர், ஆனால் அவரது தத்துவத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லி பாலதேவ வித்தியபூஷனர் எழுதிய ‘கோவிந்தா பாஷியத்தை’ அனுசரித்த கௌடிய மார்கத்தை ஒருகாலத்தில் “இந்துமதம் என்றாலே மூடநம்பிக்கை” என்றெல்லாம் பேசிய ஐர்ப்பியர்கள், அமெரிக்கர்கள் இன்று பக்தியுடன் அனுசரிக்கிறார்கள்!
    சங்கரர் கூறிய அத்வைதம் பொய்யாகியிருக்கலாம், ஆனால் அவர் கூறிய பாஷிய வாக்கியங்கள் வேதவாக்கைப் பொய்யா வார்த்தைகள்!

    நான் சிவனும் அல்ல, வைணவனும் அல்ல, சாக்தனும் அல்ல, இந்துமதத்தின் diversity ஆல் பெருமைப்படும் வேதத்தை பின்பற்றும் ஒரு சனாதன தர்மி. அவ்வளவே! என் தந்தை தினமும் காலையிலும் மாலையிலும் எங்கள் வீட்டிர்க்கருகிலுள்ள பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் கோவிலுக்குச் சென்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வார். என் தாய் மத்வ சமயத்தில் பிறந்த ஒரு பழமைவாதி… என்னால் முடிந்த சீர்திருத்தத்தை வீட்டிலும் செய்கிறேன், வெளியிலும் செய்கிறேன்! சென்றமாதம் பரகால மடம் பிரம்மதந்திர சுவாமி சென்னை வந்தபொழுது சென்று லட்சுமி-அயக்ரீவ பெருமாளை தரிசித்தேன்…. முடிந்த அளவுக்கு கோவிலுக்குச் செல்கிறேன், எந்த கோவில் என்று தீர்மானிப்பதில்லை, மனதில் எந்த தெய்வம் தோன்றுகிறதோ, அந்த கோவிலுக்குச் செல்வேன்!

    இனியாவது இப்படி தேவையில்லாமல் சண்டைபோடாதீர்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன்…………..

  50. // நான் சிவனும் அல்ல, வைணவனும் அல்ல, சாக்தனும் அல்ல, இந்துமதத்தின் diversity ஆல் பெருமைப்படும் வேதத்தை பின்பற்றும் ஒரு சனாதன தர்மி. அவ்வளவே! //

    பாலாஜி, நன்று சொன்னீர்! ”ஒன்று சேர்ந்து செல்வோம், ஒன்று கூடிப் பேசுவோம், நம் மனங்கள் ஒன்றுபடுவதாக!” (சங்கச்சத்வம் சம் வதத்வம் சம்வோ மனாம்ஸி ஜானதாம்) என்னும் வேத மொழிக்கு இலக்கணமாக இருந்தது உங்கள் கூற்று.

    // இனியாவது இப்படி தேவையில்லாமல் சண்டைபோடாதீர்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன் //

    இப்படி ஒரு அருமையான மறுமொழியை அளித்து விட்டு விடைபெறுவதாகச் சொல்வது நியாயமா? சொல்லப் போனால், இந்த மறுமொழியையே விரித்து ஒரு கட்டுரையாகவே எழுதியிருக்கலாம். தமிழ்ஹிந்து தளத்தில் வெளியிட்டிருப்பார்கள்!

    நீங்கள் மேன்மேலும் எழுத வேண்டும்.

  51. திரு பாலாஜி அவர்களே,

    வாதத்தை வளர்க்க விருப்பமில்லை. நீங்கள் எனக்கு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள். அவற்றுக்கு மட்டும் சான்றுகள் அளித்து விடுகிறேன்.

    // வருடாவருடம் தீபாவளியின்போது வெளிவரும் தீபாவளி மலர்களில் வைஷ்ணவத்தைத் தாழ்த்தியும், வைஷ்ணவர்களின் மனத்தைப் புண்படுத்தியும் கட்டுரைகளை வெளியிடுவதே நம்நாட்டு சைவாத்வைதிகளால் நடத்தப்படும் பொதுஜனப் பத்திரிகைகளின் வழக்கமாகிவிட்டது//

    இதற்குமேல் படிக்க எனக்கு விருப்பமே இல்லை. இதற்குமேல் எதையும் சொல்லி உங்களுக்குப் புரியவைக்கவேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. முதல் நான்கு வரிகளிலேயே சைவர்கள் மீதும் அத்வைதிகள் மீதும் இவ்வளவு வெறுப்பை உமிழ்ந்தால் போகப்போக எப்படியிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். இது ஒரு தவறான கருத்து என்பதைமட்டும் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்லமுடியும். ஏனெனில் சற்று எண்ணிப் பாருங்கள், நாம் ஒன்னும் குலோத்துங்க சோழனின் காலத்திலில்லை, வைணவத்தை தாழ்த்தி, சைவத்தை தூக்கிப்பிடிக்க! //

    இவ்வாறு நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.

    (1) ஸ்ரீ உ. வே. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் எதிர்த்துள்ள ஆனந்த விகடன் கட்டுரையில் பின்வருமாறு வருகிறது. :

    “எனவே தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘வைஷ்ணவ’த்தை நிர்மாணிக்காமல், சமுதாய நல்வாழ்வையே அடித்தளத்தைக் கொண்டு (ஆதி சங்கரர்) நிர்மாணித்துள்ளார்கள். இதையே மெய்ப்பிப்பது போல் ஸ்ரீ ஆசார்யாளுக்குப் பிற்காலத்தில் தோன்றி வைஷ்ணவத்துக்குப் பெருமையளிக்கும் ஆண்டாள் பாசுரம் ஒன்று அமைந்துள்ளது. ‘குத்துவிளக்கெரிய… தத்துவம் அன்று தகவு – எம்பாவாய்’ (திருப்பாவை 19).”

    இவ்வரிகளைப் படிக்கும் பல்லாயிரக்கணக்கான பாமரர்கள் வைணவத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்? சாஸ்திரம் கற்காத, திருப்பாவை ஓதும் சாதாரண வைணவர் ஒருவருடைய மதக்கொள்கை என்னாகும்?

    (2) பிரபல அத்வைதி ஒருவர் சொன்னதை verbatim-ஆக மேற்கோள் இங்கு காட்டுகிறேன். இதை யார் சொன்னார் என்பதை விரும்புபவர் கூகிள் பண்ணி தெரிந்துக்கொள்ளட்டும்: “The Paramatman, the Brahman are the Supreme Godhead, is eternal. The cosmos, all sentient beings and insentient objects, emerge from him. The Paramatman did not create them himself : he did so through the agency of Brahma. Through Visnu he sustains them and through Rudra he destroys them. Later Brahma, Visnu, Rudra are themselves destroyed by him.” என்று எழுதியது எம்மாத்திரம்? இதுவும் வைணவத்துக்கு தீங்கு விளைவிப்பது தானே?

    (3) மேற்கூறியபடி பிரபல அத்வைதியர் “The practice of wearing ‘nAmam’ and in that, wearing with ‘pAdham’ and also with out it came in to vogue due to Vaishnava AchAryAs, who came later than Shankara is known from their guru parampara stories themselves, as retold by vaishnavAs. Later, when a separate religion and a sub sect were established based on Vishnu as the sole presiding deity, it became a necessity to give a new identity to the converts of this faith.” என்று கூறியிருப்பது சரியா? சொல்லுங்கள். இதை எந்த குருபரம்பரை நூலில் இருப்பதாக நான் படித்ததில்லை.

    இவ்வாறெல்லாம் பாமரர் பலர் படிக்கும் பத்திரிகைகளிலும், நூல்களிலும் இருப்பதைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

    (edited and published)

  52. திரு சாரங் அவர்களே,

    தாங்கள் கூறுவது:

    //சங்கரர் ஷன்மததை ஸ்தாபனம் செய்தார் என்றால் – ஏன் பிரம்மாவிற்கு ஒன்றை விட்டு விட்டார் – சூரியனுக்கு ஒன்று உண்டென்ற போது ஏன் சந்திரனுக்கு, வருணனுக்கு இல்லை, இவர்களின் அதிபதியான இந்திரனுக்கு ஏன் இல்லை, சிவா சக்தி, விநாயகர், குஹன் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒன்றிருக்க, விஷ்ணுவின் மார்பில் வாழும் லக்ஷ்மிக்கு ஏன் ஒன்று ஏற்பதுத வில்லை, கல்வியின் செல்வியான சரவதிக்கு ஏன் இல்லை? – வேதங்களை நன்கு அறிந்த சங்கரர் இந்திரனுக்கு ஒரு மதத்தை உண்டுபண்ணி இருக்க வேண்டும் அல்லவே //

    சங்கரர் ஷண்மதங்களை நிறுவினார் என்று யாரும் கூறவில்லை. ஸ்தாபகம் என்பது இந்த இடத்தில் நிலைநிருத்துதல் என்றே பொருள் கொள்ளவேண்டும். எனது மறுமொழியில்கூட நான் “கணாபத்யம், சைவ‌ம், சாக்த‌ம், வைண‌வ‌ம், கௌமார‌ம், சௌர‌ம் என்ற‌ ஆறு பிரிவின‌ரையும் உள்ளட‌க்கி ச‌னாத‌ன‌ த‌ர்ம‌த்தை ஸ்தாப‌க‌ம் செய்த‌ ஆதிச‌‌ங்க‌ரரின்” என்றே கூறினேன்.

    என‌வே அவ‌ர் ஏன் பிர‌ம்மாவுக்கு ஒன்று, ச‌ந்திர‌னுக்கு ஒன்று, வ‌ருண‌னுக்கு ஒன்று, இந்திர‌னுக்கு ஒன்று செய்ய‌வில்லை என்ற‌ கேள்விக்கே இட‌மில்லை. அதுபோக‌, சௌர‌ம் எனும் சூரிய‌ வ‌ழிபாடு அக்கால‌த்தில் இருந்து வ‌ந்திருக்கிற‌து. இத‌ற்கான‌ குறிப்புக‌ள் வேத‌ங்க‌ளில் உண்டு. ந‌ம‌து நித்ய‌ அனுஷ்டான‌க்க‌ளில் வ‌ரும் ச‌ந்தியாவ‌ந்த‌னத்தில் சூரிய வழிபாட்டின் ஒரு ப‌குதி உள்ள‌து. வேத‌ங்க‌ளிலில் இருந்து தொகுக்க‌ப்ப‌ட்ட‌தே சந்தி்யாவ‌ந்த‌ன‌ம் என்ப‌து எனது தாழ்மையான‌ க‌ருத்து. அதில் வ‌ரும் “அஸாவாதித்யோ பிர‌ம்ம பிர‌ம்மைவ‌ அஹ‌ம‌ஸ்மி” என்ற மந்திர‌த்தைக் க‌வ‌னிக்க‌வும். இதைச் சொல்லும்போது நாம் அந்த‌ சூரிய‌ ப‌க‌வான் ந‌ம‌க்குள் ப‌ர‌ம்பொருளாக‌ இருந்து ந‌ம்மை வ‌ழிந‌ட‌த்துகிறார் என்று தியானிக்க‌வேண்டும் என்று என‌து ஆசிரிய‌ர் ப‌ணித்திருக்கிறார். சூரிய‌னைப் ப‌ர‌ம்பொருளாக‌வே இங்கே க‌ருதுகிறோம் என்ப‌தைக் க‌வ‌னிக்க‌வும்,

    “ஆதித்யாதி ந‌வ‌க்கிர‌க‌ங்க‌ள்” என்று வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌தைக் க‌வ‌னியுங்க‌ள். ஆதித்யனை‌, முழுமுத‌லாக‌க் கொண்டு அதாவ‌து ஆத்த்யனில் இருந்து தோன்றிய‌ என்ற‌ பொருள் வ‌ருவ‌தைக் க‌வ‌னித்தால், விஞ்ஞான‌ ரீதியாக‌வும், வானிய‌ல் சாஸ்த்திர‌ ரீதியாக‌வும், சூரிய‌ன் பாற்ப‌ட்ட‌தே அனைத்து ந‌வ‌க்கிர‌க‌ங்க‌ளும் என்று ந‌ம‌து முன்னோர் க‌ருதின‌ர் என்ப‌து புல‌னாகும். நவ‌க்கிர‌க‌ங்க‌ளுக்கான‌ ச‌ன்னிதி என்ப‌து சௌர‌த்தின் பாற்ப‌ட்ட‌தே என்ப‌து தெளிவு.

  53. திரு பாலாஜி அவர்களுக்கு,

    த‌ங்க‌ளைப்போன்றே சில/ பல வ‌லைப் ப‌க்க‌ங்க‌ளில் வாதிட்டு என‌க்கும் வெறுப்பே வ‌ந்துவிட்ட‌து. ஆதிச‌ங்க‌ர‌ர்தான் மீண்டும் அவ‌த‌ரிக்க‌வேண்டும்.

    ப‌ல‌வித‌மான‌ பூஜைகளையும், வ‌ழிபாடுக‌ளையும் செய்துவ‌ந்த‌ ம‌க்க‌ளை ஒன்றுதிர‌ட்டி, எல்லா மூர்த்த‌ங்க‌ளையும் அவற்றின் வ‌ழிபாடுகளையும் உள்ளட‌க்கிய‌ இன்றைய‌ ச‌னாத‌ன‌ த‌ர்ம‌த்தை அவ‌ர் ஒருங்கிணைத்தும் கூட‌ அவ‌ர‌து தொண்டைக் கொச்சைப் ப‌டுத்தும் வித‌மாக‌ எழுதிவ‌ரும் திரு கிருஷ்ண‌சாமி அய்ய‌ங்கார‌து தொண்டு சீரிய‌து என்று எப்ப‌டி சொல்ல‌ முடியும்? எப்ப‌டி ஒப்புக்கொள்ள‌ முடியும்?

    திரு வித்யாநிதி அவ‌ர்க‌ளுக்கு, த‌ம‌து முதிய‌வ‌ய‌திலும் வைண‌வ‌த்துக்குச் சிற‌ந்த‌ தொண்டு செய்வ‌தாக‌ நீங்க‌ள் ப‌றைசாற்றும் பெரியவரிடம் பாலாஜி அவ‌ர்க‌ளைப்போல‌வே ப‌த‌ம் ப‌ணிந்து வைக்கும் வேண்டுகோளைச் சொல்லுங்க‌ள். அவ‌ர் இனியாவ‌து இதுபோல‌ சிவனையும், ஆதிச‌ங்க‌ர‌ரையும், அப்பைய‌ தீக்ஷத‌ரையும், நாய‌ன்மார்க‌ளையும் ம‌ட்ட‌ம் த‌ட்டி எழுத வேண்டாம் என்று.

    நாமெல்லாம் புனைப்பெயர் இல்லாமல் இங்கே எழுதினால் ஒருவேளை அடுத்தவர் மனம் நோகுமே அதனால் எதிரியைச் சம்பாதிப்போமே என்று மனதில் தோன்றி அதனால் கண்டபடி வாதம் செய்வது குறையும் என்று எனக்குப் படுகிறது.

    (edited and published)

  54. ஹரியும் சிவமும் ஒன்று.
    எல்லாம் ஒரே அருட்பெரும் ஜோதி.
    இதையே திருவருட்ப்ரகாச வள்ளலாரும் நம் அனைவருக்கும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

  55. திரு.ஜயாயுவிற்க்கும் திரு.உமாசங்கருருக்கும் எனது நன்றிகள்!

    திரு.கந்தர்வன் அவர்களுக்கு, நீங்கள் வாதத்தை வளர்க்க விரும்பவில்லை என்கிறீர்கள். நானும் அதையே எண்ணுகிறேன். நீங்கள் இந்த கடைசி மறுமொழியில் கூறியவற்றை நான் நம்புகிறேன். நீங்கள் “ஒரு அத்வைதி கூறினார், ஒரு அத்வைதி கூறினார்” என்று கூறுகிறீர்கள். எனது தாழ்மையான வேண்டுகோள்:- ஒரு அத்வைதி அப்படிக் கூறினார் என்பதற்காக எல்லா அத்வைதிகளும் வைணவவ-விரோதிகள் என்று பொருளா? காஞ்சிபுரத்தில் கோவிலென்றும் பாராமல் தெய்வத்தை வணங்க வரும் பெண்களுடன் தேவநாதன் என்ற அர்ச்சகர் தவறு செய்தார் என்பதற்காக, எல்லா அர்ச்சகர்களும் அப்படியா?? அதேபோல, யாரோ ஒரு அத்வைதி கூறினார் என்பதற்காக (அது எந்த சங்கராசாரியாரகவே இருந்தாலும்), எல்லா அத்வைதிகளும் அப்படியே என்ற முடிவிற்கு நீங்கள் எப்படி வரலாம்??
    ஒரிசாவில், கிறித்தவ மதமாற்ற பேய்களுடன் 45 வருடங்களுக்கு மேலாகப் போராடி தன் இன்னுயிரை அந்த ஜகந்நாதப் பெருமானுக்காகவே துறந்த மகாபெரியவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி ஒரு அத்வைதி என்று உங்களுக்குத் தெரியாதா? ஜகன்னாதர் கோவிலுக்குள் நுழையாத அப்பாவி காட்டுவாசி கும்பலுக்காகப் போராடி அவர்கள் வீட்டிற்க்குள் ஜகன்னாதரை எடுத்துச் சென்ற அவரும் ஒரு ஏகதண்டி தானே?? அதனால்தான் 85- வயதுப் பெரியவர் என்றும் பாராமல் நான்கு பயங்கரவாதிகள் சேர்ந்து நாயை சுடுவதுபோல அந்த மகாத்மாவை சுட்டுவிட்டனர்!

    “நாம சங்கீர்த்தனம் பண்ணுங்கப்பா, எளிதில் மோட்சத்திற்குப் போகலாம்” என்று சொன்ன ஸ்ரீ ஞானானந்த கிரி ஒரு அத்வைதிதான். ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியாராக திகழ்ந்தவர். அவரது சீடர்தான் சிறிது காலம் முன்பு ஜலசமாதியான தவத்திரு.ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள். பண்டரிபுரத்தைப்போலவே நமது தென்னான்கூரிலும் ஒரு அருமையான பாண்டுரங்கன் ஆலயத்தை அமைத்துள்ளார். வசித்துப் பாருங்கள்.

    அதனால், ஒரு அத்வைதி அப்படிச் சொன்னார் என்பதற்காக, ஒட்டுமொத்த அத்வைதிகளையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்….

  56. //whether Rama worshipped siva is mentioned in Vaalmiki Raamayanam or not. I am ready to accept the Truth as it is.//
    please read for yourself in https://www.valmikiramayan.net/. As far as I read there is no such thing. The Ayodhya going portion comes in Yudhdha kanda.

  57. திரு பாலாஜி அவர்களுக்கு,

    “எல்லா அத்வைதிகளும் வைணவ விரோதிகள்” என்று நாம் எப்பொழுதும் சொல்லவே இல்லை. உ. வே. கிருஷ்ணசுவாமி ஐயங்கார் அவர்கள் நீங்கள் கூறியதற்கு மாறாக, ஒரு பொழுதும் எல்லா சைவ, அத்வைதிகளையும் குற்றவாளிக் கூண்டில் தள்ளவில்லை. முன் பகுதியில் ஒரு சில வரிகள் அவ்வாறு நீங்கள் எண்ணுவதற்கு இடம் கொடுத்தாலும், அவர் அப்புத்தகத்தில் சங்கராச்சாரியாரை பரம பக்தராகவும் பாகவதராகவும் புகழ்ந்திருக்கிறார்; புத்தகத்தின் இறுதியில், “இவ்வாதத்தில் வெற்றி கண்டவன் நான் அல்ல; பரம்பொருளான நாராயனனுக்குமே, அவர்பால் சிறந்த பக்தி கொண்ட சங்கரருக்குமே இதில் வெற்றி.” என்று கூறியுள்ளார்; இவர் கட்டுரையைப் பாராட்டி சில அத்வைதிகளும் எழுதிய கடிதங்களை இப்புத்தகத்தின் இறுதியிலேயே பிரசுரித்துள்ளார் ; “திருவிசநல்லூர் ராமசுப்ப சாஸ்த்ரிகள்” என்பவர் 19-ஆம் நூற்றாண்டிலேயே சங்கர பாஷ்ய நூல்களைக் கொண்டும், “சங்கரர் விஷ்ணுவையே பரம்பொருள் என்று சொல்லியுள்ளார்; வைணவ பக்தி நெறியே அத்வைதத்துக்கு ஒத்தது” என்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த வைதிக ஸ்மார்த்தர் (இவர் ஒன்றும் மாக்ஸ் முல்லர் கட்சி அல்ல). இத் திருவிசை நல்லூர் சாச்திரிகளையும் புகழ்ந்து தான் எழுதியுள்ளார் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார். (ஆர்வமுள்ளவர்களுக்கு நான் கேள்விப்பட்ட சில விஷயங்கள்: திருவிசநல்லூர் சாஸ்திரிகள் புத்தகங்கள் ஒன்றுமே commercial-ஆகப பிரசுரிக்கப் படவில்லை. மாறாக, “கிருஷ்ண பிரேமி” சுவாமிகள் பரநூரில் ஒரு புத்தக சாலையிலும், சென்னை ஸ்ரீ ராமானுஜ மிஷன் டிரஸ்ட் புத்தகசாளையிலும், ராமசுப்ப சாஸ்திரிகளின் பௌத்திரர் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் அவர்களால் திருவிசநல்லூர் ஆக்ராஹாரத்திலும் ராமசுப்ப சாஸ்திரிகள் எழுதிய சுவடிகள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.)

    மேற்கூறிய விஷயங்களை “சங்கரரும் வைணவமும்” நூலை முழுவதும் படித்தால் நன்கு விளங்கும். ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் காட்டியுள்ள ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் நான் ஓராண்டு காலமாக ஆராய்ச்சி செய்து verify செய்துள்ளேன். ஆர்வம இருந்தால் சொல்லவும், அடுத்த பதிவில் எப்படி என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறுகிறேன்.

    நன்றி

    கந்தர்வன்

  58. திரு கந்தர்வன் அவர்களுக்கு

    தங்கள் மறுமொழியில் உள்ள “The Paramatman, the Brahman are the Supreme Godhead, is eternal. The cosmos, all sentient beings and insentient objects, emerge from him. The Paramatman did not create them himself : he did so through the agency of Brahma. Through Visnu he sustains them and through Rudra he destroys them. Later Brahma, Visnu, Rudra are themselves destroyed by him .,, பகுதியை பார்த்தேன். இவை https://www.kamakoti.org/hindudharma/part5/chap6.html என்ற நிரலில், காஞ்சிப் பரமாச்சாரியார் அவர்களுரையில் வருகின்றன. வெறுமனே ஒரு பகுதியை மட்டும் படித்துக் குறை கூறுதல் முறையன்று. மொத்த உரையையும் படித்தால், இதில் எக்குறையும் தெரியவில்லை. பரமாத்மன் என்று அவர் கூறுவதை நான் சிவன் என்று கொள்கிறேன், நீங்கள் நாராயணன் என்று கொள்ளுங்களேன். அவரே பெயரிடாமல் பரமாத்மன் எனும்போது நீங்கள் ஏன் அதைக் குற்றம் கூற வேண்டும். சரி, நீங்கள் இல்லை திரு கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களுக்கு அதைப் படித்ததில் அவருக்கு மாற்றுக் கருத்து உண்டென்றால் அவரே பரமாச்சாரியாரிடம் அதைச் சொல்லியிருக்கலாமே. வேதம் அறியாத‌வர்களிடம் விவாதிப்பதைவிட வேதம் அறிந்தவர்களிடம் விவாதிப்பதே நல்ல சரியான முடிவைத் தரும் அல்லவா? அதை விடுத்து, திருமூலர் முதல், நாயன்மார்கள் முதல், அப்பய்ய தீஷிதர் வழியாக எல்லா சங்கராசாரியார்களயும் அவர் சாடுவதும் அப்படிப் பட்ட அவரது சாடல் நூல்களை வேதத்தின் பாஷ்யங்களுக்கு இணயாக எப்படி மேற்கோள் காட்டலாம்?

    தங்களது இரண்டாவது மேற்கோளின் தமிழுரையைப் படியுங்கள். ஆங்கிலத்தில் அது மொழியாக்க‌ம் செய்யப்பட்டதில் சரியான அர்த்தத்தைத் தரவில்லை எனப்படுகிறது.

    நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். காமிக‌ ஆக‌ம‌த்திலும், திருமூல‌ரின் திரும‌ந்திர‌த்திலும் இக்க‌ருத்து காணப்ப‌டுகிற‌து. ஸ‌ம‌ஸ்கிருத‌ இல‌க்கிய‌த்திலோ, வேதத்திலோ இருப்ப‌தைத்தான் ஏற்பேன், ஆக‌ம‌த்திலோ த‌மிழில் இருப்ப‌தையோ ஏற்க‌ மாட்டேன் என்றால் அத் தகைய போக்கை அந்த‌ப் ப‌ர‌மேஸ்வ‌ர‌னுக்கே ச‌ம‌ர்ப்ப‌ண‌ம் செய்கிறேன்.

  59. I thank Mr. armchair critic for referring the vaalmiki Ramaayan. I gone throgh the same quickly, I can not find any mentioning of Rama worshipping Shiva. I will continue my throgh search, but with all probablities there may not be any mentioning of Rama worshipping shiva in Valmaiki Ramayan.

    Seems that that Rama worshipping Shiva could be written in Dulasidas Ramayan or elsewhere.

    In that way Mr. Sarangs writings shall be correct.

    But the way how the reaction was given was rude. Whenever reaction is strong for a simple matter, it gives us an impression that it could be biased one, which prompted me to ask for neutral verification.

    Still I would say that Rama was never a fanatic, it wont be a surprise if he as a man had worshipped Shiva .

  60. Dear armchaircritic

    //whether Rama worshipped siva is mentioned in Vaalmiki Raamayanam or not. I am ready to accept the Truth as it is.//
    please read for yourself in https://www.valmikiramayan.net/. As far as I read there is no such thing. The Ayodhya going portion comes in Yudhdha kanda.
    //

    thanks for pointing this out, however some may not accept this as an authority

    for the person who pointed this out is a habitual visitor of tamilhindu and he may be a hindu .
    for the website itself says that Ramayana was transformed in to a vaishnava text – how can we accept a vaishnava text to say the truth about Ramayana – will it not be partisan

    from the website – “The bulk, consisting of Books II–VI, represents Rama as an ideal hero. In Books I and VII, however Rama is made an avatara or incarnation of Vishnu, and the epic poem is transformed into a Vaishnava text.”

    Let us all pray to the almighty for some non hindu to first become an expert in sanskrit and then in Valmiki Raamaayana and also learn tamil and comment in this forum and after all this remain a non hindu also….

  61. நண்பர் திருச்சிகாரரே

    //
    சிலரிடம் விசாரித்து விட்டு அவர்கள் கூறுவதைக் கேட்டு விட்டு இங்கே வந்து வால்மீகி ராமாயணத்தை அடி முதல் முடி வரை ஒரு வரியும் விடாமல் படித்து விட்டது போலவும், வால்மீகி இராமாயணத்துக்கு தான் தான் அத்தாரிட்டி போல தீர்ப்பு வழங்குவதை நாம் ஒப்ப இயலாது.
    //

    அடியேன் எங்கு நான் ராமாயணத்தை முற்றும் படித்த ஒரு அதாரிட்டி என்று கூறினேன் என்று உங்களால் சொல்ல முடியுமா – ஒரு விஷயத்தை
    சொல்ல வந்த என்னை தனி பட்ட முறையில் சாடுவது தான் சரி என்று உங்களுக்கு தோன்றிக்கொண்டே இருக்குமாயின் நீங்கள் உங்கள் பணியினை தொடரலாம் 🙂

    ஒருவர் நடு நிலையாக எழுதுவாடாக இருந்தால் – இந்த கருத்தை என்னால் ஒப்புகொள்ள முடியவில்லை நான் நன்கு விசாரித்துவிட்டு எழுதுகிறேன் என்றதோடல்லவா நிறுத்தி விடுவார் 🙂

    என்னவோ ராமரோடோ கூடவே இருந்தது போல், என்னவோ அடி முதல் கடை வரை கண்ட அதாரிட்டி போல்… இதெல்லாம் தேவை இல்லையே 🙂

    நான் அதாரிட்டி ஆக வேண்டுமானால் இருக்கலாம் என் நெஞ்சே தோன்றினவர்றை நான் உண்மை போல கூறுவது இல்லை – மேலும் எனக்கு நிச்சயமாக தெரிந்த ஒன்றையே கூறினேன்

    நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நான் எழுதவில்லை – உண்மை எதுவோ அதை தெரிந்து கொண்ட பிறகே எழுதினேன் – இதற்காக வீணாக (சிலர் என்று கூறுவதன் மூலம்) எனது அசார்யர்களை வெய்ய வேண்டாம் – அவர்கள் யார் என்றே உங்களுக்கு தெரியாது 🙂

  62. //
    என‌வே அவ‌ர் ஏன் பிர‌ம்மாவுக்கு ஒன்று, ச‌ந்திர‌னுக்கு ஒன்று, வ‌ருண‌னுக்கு ஒன்று, இந்திர‌னுக்கு ஒன்று செய்ய‌வில்லை என்ற‌ கேள்விக்கே இட‌மில்லை.
    //

    இந்திரன் வழிபாடும் இந்தியாவில பிரசித்தமே – பிரம்மாவை நோக்கி பலரை தவம் இருந்ததும் உண்மையே – வேதாந்தியான ஆதி சங்கரர் நிலை நிறுத்தி இருந்தால் இவர்களையும் சேர்த்தே செய்திருக்க வேண்டும் – தனி லக்ஷ்மி வழிபாடென்பது இன்றும் பிரசித்தம், ஒரு சூக்தமே உள்ளது, அப்படி இருக்க ஏன் லக்ஷ்மி வழிபாடையும் சேர்த்து விசேஷமாக சப்த மதமாக நிலை நிருதிருக்கலாமே என்பது எனது ஐயம்?

    //
    அதில் வ‌ரும் “அஸாவாதித்யோ பிர‌ம்ம பிர‌ம்மைவ‌ அஹ‌ம‌ஸ்மி” என்ற மந்திர‌த்தைக் க‌வ‌னிக்க‌வும். இதைச் சொல்லும்போது நாம் அந்த‌ சூரிய‌ ப‌க‌வான் ந‌ம‌க்குள்
    //
    இது மட்டும் இன்றி காயத்ரி மந்த்ரதிலும்
    அது சூரிய வழிபாடு என்றாகிவிடாது – சூரியனை கண்ணுக்கு தெரியும் பரமாத்ம ஸ்வரூபமாக (பரமாத்மா வியாபித்துள்ள ஒன்றாக) கொண்டே இவைகள் செய்யபடுகின்றன என்பது எனக்கு கற்று கொடுத்தவர்கள் வாக்கு

    //
    ப‌ல‌வித‌மான‌ பூஜைகளையும், வ‌ழிபாடுக‌ளையும் செய்துவ‌ந்த‌ ம‌க்க‌ளை ஒன்றுதிர‌ட்டி, எல்லா மூர்த்த‌ங்க‌ளையும் அவற்றின் வ‌ழிபாடுகளையும் உள்ளட‌க்கிய‌ இன்றைய‌ ச‌னாத‌ன‌ த‌ர்ம‌த்தை அவ‌ர் ஒருங்கிணைத்தும் கூட‌ அவ‌ர‌து தொண்டைக் கொச்சைப் ப‌டுத்தும் வித‌மாக‌ எழுதிவ‌ரும் திரு கிருஷ்ண‌சாமி அய்ய‌ங்கார‌து தொண்டு சீரிய‌து என்று எப்ப‌டி சொல்ல‌ முடியும்? எப்ப‌டி ஒப்புக்கொள்ள‌ முடியும்?
    //
    நீங்களே ஆதி சங்கரரின் பெருமையை சற்று குறைத்து கூரினற்போல் எனக்கு உள்ளது – பல பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டிருந்தாள் தான் பரவா இல்லையே – நம் மக்கள் சொன்னிய வாதத்தின் பிடியில் சிக்கி இறை நம்பிக்கையே இழந்து இருந்தார்கள் – இந்த போக்கை தனி ஒரு ஆளாக மாற்றி நம்மையும் கரை சேர்த்த பெருமை ஆதி சங்கர பகவத் பாதாலையே சாரும் – அவருக்கு நாம் செய்யும் தொண்டு அவரது கிரந்தங்களை வாசிப்பதே

    மேலும் கிருஷ்ணஸ்வாமி அவர்கள் ஒன்றும் சங்கரரை வைத்ததாக எனக்கு தோன்றவில்லை – வேதாந்தத்தில் வேறு கருத்து கொள்வது தவறில்லை – அப்படி பார்த்தல் சங்கரரும் கூததான் “பேத அபேத” மதத்தை ஸ்தாபிதவரைய்ம் புத்தரையும் இன்னும் பல வேதாந்திகளையும் தள்ளி இருக்கிறார் (அவருடைய க்ரந்தங்கள் “polemic” வகையை சார்ந்தவை. இதற்காக சங்கரர் அவர்களை தூஷிததாக ஆகிவிடாது

    ராமானுஜரும், மத்வரும் அத்வைத மதத்தையும் சங்கரர் சொன்னதிலும் வேறுபாடு கொண்டு தல்லிருக்கின்றனர் இதற்காக அவர்கள் சங்கரரை தூஷனை செய்ததாக ஆகி விடாது

    அப்பைய தீட்சிதர் “நார்யணத் பரம், பிரம்ம தத்வம் நாராயண பரஹா, நாரயனோ பரம் ஜ்யோதி…” என்ற வேத வாக்கியத்திற்கு யாரும் ப்ராமனமே இலாத ஒரு அர்த்தத்தை கற்பித்தார் – அதாவது “நாராயண” என்பதை “நாராயந:” என்று திருத்து அது ருட்ரனையே குறிக்கும் சப்தம் என்றார் மேலும் நாரயநாத் என்று உள்ளபடியால் நாராயணனை காட்டிலும் பரம் உண்டு என்று அர்த்தம் செய்தார் – ஆனால் இதே பதம் வேறு விதமாக “நாரயனஹா பரம்” என்றும் வருகிறபடியால் இது தள்ளுபடி ஆகிறது – இது போன்று அப்பைய தீட்சிதர் செய்தவற்றை மட்டுமே கிருஷ்ணஸ்வாமி அவர்கள் தள்ளினார் – அப்பைய தீட்சிதரை அல்ல என்பது எனது கருத்து

    ஒரு பேச்சிற்காக நானும் நீங்கள் சொன்ன ஒரு கருத்தை தள்ளுகிறேன் – இதற்காக உங்களை நான் தள்ளியதாக ஆகாது – எனக்கு தெரிதவர்ரையே சொல்கிறேன் என்பது ஆகும் – உதாரணத்திற்கு

    //
    ரிக்வேத‌த்தின் மைய‌மாக ந‌ம‌ச்சிவாய‌ மந்திரம் உள்ளது என்ப‌து எவ‌ருக்கும் தெரியும், இதை எழுதிய‌ அந்த‌க் கிருஷ்ண‌சாமி அய்ய‌ங்காருக்கும் தெரிந்திருக்க‌ வேண்டும் அவ‌ர் வேத‌ம் ப‌டித்திருந்்தால்.
    //

    இதை நீங்கள் எப்படி உறுதி செய்கிறீர்கள் – இதற்க்கு பிராமாணம் யாவை – இதே ரிக் வேதத்தில்

    “தத் விஷ்ணோ பரமம் பதம், விஷ்நோர் யத் பரமம் பதம்” என்றும் நாரயநாத் பிரம்ம ஜாயதே, நாரயநாத் ருத்ர ஜாயதே என்றும் வருகிறது” –
    மேலும் புருஷ சூக்தமும் ரிக் வேதத்தில் தான்
    இதுவும் உண்மை நீங்கள் சொல்வதும் உண்மை என்றால் அபாவம் ஏற்படும் அதானால் ஒரு கருத்தை தல்ல வேண்டும்

    இதே போல் தான் க்ரிஷ்ணவாமி அவர்களும் விவாதம் செய்கிறார் அதற்காக அவர் தூஷனை செய்ததாக கொள்வது தேவை இல்லை என்றே நான் கொள்வேன்

    பண்டைய காலத்தில் உண்மையான வேதாந்திகள் யார் பெரியவர் என்ற வாட்தமே செய்யவில்லை – யார் பெரியவர் என்றால் – பிரம்மமே என்றே சொல்வார்கள்
    முதலில் ஈஸ்வரன் (சைதன்ய மாய தீதான்) பின் சூக்ஷ்ம ஆத்மா, பின் ஹிரன்யகர்பான், பின் விராட்
    அவர்கள் இத்துடன் நிறுத்திக்கொண்டு க்ஷேமமாக இருந்தார்கள்

    நீங்கள் பர பிரம்ம ஸ்வரூபமாய் யாரை கொண்டால் என்ன

    “அவர் அவர இறையவர் என அடி அடைவர்கள் அவர் அவர் இறையவர் குறைவிலர் இறையவர்” என்பது உண்மையே

    சிவனே அதற்வசிர உபநிஷட்டில் பிரம்மம் என்னுள்ளும் வ்யாபனம் அதாலால் என்னையே உபாசிக்கலாம் என்று தேவர்களுக்கு கூறுகிறாரே

    பாலாஜி அவர்கள் கூறுவதை போல
    நான் அய்யனார் கோவிலுக்கு போனேன் என்று பர பிரம்மம் கோவித்துக்கொண்டு மோக்ஷத்தை நிராகரிக்க போவதில்லை

  63. // Still I would say that Rama was never a fanatic, it wont be a surprise if he as a man had worshipped Shiva

    i did mention that and it is true that Rama surrendered to Samudrarajan himself – When he can say குஹா நின்னுடன் ஐவரானோம்” he steers clear every doubt about fanatism

    i wasn’t/wasn’t intending to be rude – i was only attempting to resort correctness and in the process wrote points in support of it thats all… l will see and learn to put things in perspective in an amicable manner

  64. திரு பாலாஜி அவர்களே
    //
    இதுவே எனது கருத்தும். என் இஷ்டதெய்வமும் பெருமாள்தான். ஆனால், அவனைத்தவிர வேறொருவரை வணங்கமாட்டேன் என்று சொல்ல என் நாவுகூட ஒருபோதும் எழுந்ததில்லை!
    //

    நீங்கள் சொல்வதும் தவறில்லை, மறந்தும் புறம் தொழேன் என்று சொல்வதும் தவறில்லை – இது மனோபாவம் அல்லது ஆத்மபாவதை பொறுத்தே – அது எப்படி என்று பாப்போம்

    ஒரு சாரர் சர்வம் பிரம்ம மயம் என்று எல்லாவற்றிலும் பிரம்மத்தை பார்கிறார்கள் – பிரம்மத்தின் இந்த குணத்தை இங்கு காண்கிறேன், அந்த குணத்தை அங்கு காண்கிறேன் என்பது போல

    ஒரு சாரார் சர்வம் பிரம்ம மயம் அந்த ஒரு பிரம்மத்த்யே நான் எங்கும் காண்கிறேன் என்கிறார்கள் – எல்லா குணத்தையும் கொண்ட ஒரு பிரம்மத்தை மட்டும் காண்கிறேன் எனவே மறந்தும் புறம் தொழேன் (அப்படி தொழா ஆரம்பித்தால் ஜெஹோவாஹ், அல்லா, ஜெசுஸ், குரு நானக், பாபர், ஏனைய தர்காவில் உள்ளவர்கள் என்று நீண்டு கொண்டே போய்விடும்) – இவர்கள் தங்களை நாயகி பாவமாக தரித்துகொல்வதால் இப்படி கொள்ளவேண்டி உள்ளது – சீத பிரட்டி எப்படி ராமனை தவிர மற்ற ஒன்றில்லை என்றாலோ, ஆண்டாள் எப்படி மன்னவர்க்கு நான் இல்லை என்றாலோ, இவர்களும் நான் என்ற இந்த ஆத்மா அந்த ஒரு பரமாத்மாவிர்க்கே என்று கொள்கிறார்கள்

    ராமானுஜர் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்

    ஒரு சமயம் அரங்கநாதன் புறப்பாடு ஜம்புகேஸ்வரர் கோவில் அருகே நடக்கையில் (அந்த காலத்தில் இந்த புறப்பாடு இருந்தது), பெரும் மழை பிடித்தது – ராமானுஜர் அரங்கனை ஜம்புகேஸ்வரர் கோவிலுள் எழ செய்ய சொல்லிவிட்டு தான் மழையில் நனைந்தவாறே வெளியில் இருந்தார் – ஒருவர் அவரைபார்த்து – என் சுவாமி உமது பெருமாளே உள்ளே போய்விட்டார் உமக்கென்ன என்று கேட்க, அதற்க்கு ராமானுஜர் அவன் ரங்கா ராஜன் – ராஜா எங்கே வேண்டும் என்றாலும் செல்லலாம் – நானோ ராணி, நான் போவது முறையாகாது என்றார்.

    கணவனே கண் கண்ட தெய்வம் என்று கொள்ளும் பெண்கள் ஏனைய புருஷர்களிடம்(ஆண்களிடம்) த்வேஷம் கொள்வதில்லையே அது போலவே இவர்களும் மற்ற தேவதாவிடம் த்வேஷம் கொள்வதில்லை – “Worship yours respect all” என்ற தாத்பர்யம் தான் இங்கு நிலவுகிறது

  65. Dear thiruchikaaran,

    i seek apology from you for writing these points

    //
    thanks for pointing this out, however some may not accept this as an authority

    for the person who pointed this out is a habitual visitor of tamilhindu and he may be a hindu .
    for the website itself says that Ramayana was transformed in to a vaishnava text – how can we accept a vaishnava text to say the truth about Ramayana – will it not be partisan
    //

  66. ஸ்ரீ உமாசங்கர் அவர்களுக்கு நமஸ்காரங்கள்.

    உங்கள் கருத்துக்களுக்கு என் மறுமொழிகள்:

    (1) “விஷ்ணு பரமாத்மாவால் அழிக்கப்படுவார்” என்று சொல்வது எந்த ஒரு வைஷ்ணவனையும் புண்படுத்தும். ஆதி சங்கரர் கீதா பாஷ்யத்தில் ‘சாச்வதன், அழிவில்லாதவன்’ என்று விஷ்ணுவைச் சொன்னதற்கு முரணாகும். காஞ்சி பெரியவர் சொன்ன ‘பரமாத்மா’ நாராயணன் என்று சொன்னால், “விஷ்ணு நாராயணனால் அழிக்கப்படுபவன்” என்ற அபார்த்தமும் பகவதபசாரமுமே மிஞ்சும். இதில் உங்களுக்கு ஐயம் இராது என்று நம்புகிறேன்.

    (2) இரண்டாவது மேற்கோள் ஆங்கிலத்தில் தான் என் கைக்கு எட்டியிருக்கிறது; தமிழ் மூலம் உங்களிடம் இருந்தால் அவ்வரிகளைத் தாங்கள் தமிழிலேயே சுட்டுங்கள்.

    (3) ஸ்ரீ கிருஷ்ணசுவாமி ஐயங்கார் காஞ்சி பெரியவர் மேற்கூறியபடி சொன்ன சில உபந்நியாசங்கள் தவறு என்று காமகோடி பீடத்திற்கு பல வேத வாக்கிய பிரமானங்களைக் காட்டிக் கடிதம் எழுதி, ஒரு clarification தருமாறு கோரினார். அதற்குத் தக்க மறுமொழி கிடைத்ததாகத் தெரியவில்லை. (Reference: “விஷ்ணுசித்த விஜயம்” நூலில் ‘சாத்விக விஜயம்’ என்னும் அத்தியாயம்; பக்கங்கள் ).

    (4) நீங்கள் எழுதியது: “ஸ‌ம‌ஸ்கிருத‌ இல‌க்கிய‌த்திலோ, வேதத்திலோ இருப்ப‌தைத்தான் ஏற்பேன், ஆக‌ம‌த்திலோ த‌மிழில் இருப்ப‌தையோ ஏற்க‌ மாட்டேன் என்றால் அத் தகைய போக்கை அந்த‌ப் ப‌ர‌மேஸ்வ‌ர‌னுக்கே ச‌ம‌ர்ப்ப‌ண‌ம் செய்கிறேன்.” என் பதில்: ” ‘வைதிகர்’ என்று கூருபவர்கலேல்லாம் வேதத்தைத் தான் முக்கியப் பிரமாணமாகக் கொள்ளவேண்டும். சம்ஸ்கிருத மொழியில் உள்ள புத்தகங்களெல்லாம் பிரமாணம் என்று சொல்லவில்லை; காம ஸூத்திரத்தையும், காளிதாசன் காவியங்களையும் எந்த ஒரு வைதிகரும் பிரமாணமாக எடுக்க மாட்டார். மாறாக, வேத விருத்தம் இல்லாமல் இருந்தால், போர்ச்சுகீசிய, அரபு, பாஷையானாலும் வேதாந்த, பகவத் விஷய நூல்கள் ஏற்கத் தக்கதே. வேதாந்திகள் ஆகமத்தைப் பிரதான பிரமாணமாக ஏற்கலாகாது. சித்தாந்தம் என்ன என்பதை தர்க்க ரீதியில் கண்டு தெளிவுருவதே நன்று.

    (edited and published)

  67. நண்பர் Sarang,

    //ராமர் சிவனை ஏன் வணங்க கூடாது ? என்ன குடியா முழுகி போகிடும்? //
    என்று இராமருக்கு அருகிலேயே தடித்த வார்த்தைகளைப் போடும் அளவுக்கு உங்களின் காழ்ப்புணர்ச்சி, பக்தியையும் தாண்டி சென்று விட்டது.

    அந்த நிலையிலே நான் என்ன புன்னாகவராளியா பாட முடியும்? இப்படி எழுதுபவரின் கண்களை காழ்ப்புணர்ச்சி மறைத்திருக்கக் கூடும் என எண்ணத் தோன்றலாம் அல்லவா? நமக்கு தனிப்பட்ட முறையிலே உங்கள் மீது எந்த பிணக்கும் இல்லை.

    ஆனால் சாதி உணர்வு, மத உணர்வு இந்த இரண்டாலும், இந்து மதமும், இந்தியாவும், இந்த உலகமும் பாதிப்படைந்து காட்டுமிராண்டிக் காலத்துக்கு திரும்பக் கூடாது என்பதே நமது அக்கறை. நாம் யாருடனும் வாக்குவாதம் செய்வது கருத்தின் அடிப்படையில் மட்டுமே. நான் அறிய விரும்பியது உண்மையை. உண்மை எதுவாக இருப்பினும் அதை ஒத்துக் கொண்டே வருகிறோம்.

    நம்முடைய ஆசாரியருக்கு மரியாதை வாங்கிக் கொடுப்பது நம்முடைய கையிலே தான் உள்ளது. கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்றார் வள்ளுவர். நாம் காயை பரிசளித்து விட்டு, கனியை எதிர்பார்க்க முடியுமா? நாம் நிதானமாகவும், இனிமையாகவும் எழுதினால், முரடன் கூட நம்மை திட்ட யோசிப்பான்.

  68. Saarang அவர்களுக்கு வணக்கங்கள். பிரமான சான்றுகளைக் காட்டியதற்கு நன்றி. உங்கள் கருத்துக்கு அனுகூலமான ஒரே ஒரு பிரமாணம் கூறுகிறேன்.

    (1) ராமானுஜர் “சிவன் பர தெய்வம் அல்ல; நாராயணன் பர தெய்வமே” என்று சொன்னதற்கு அவர் பண்ணின பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் நேரிடையாக உள்ளது:

    சுட்டி: https://www.sacred-texts.com/hin/sbe48/sbe48239.htm

    மத்வரும் அநேக வேத, புராண, இதிகாச பிரமாணங்களைக் கொண்டு “விஷ்ணுவே பரதெய்வம்” என்று அவருடைய சூத்திர பாஷ்யத்தில் முழங்குகிறார்.

    (2) புருஷ சூக்தம் பற்றிச் சொன்னீர். புருஷ சூக்தத்தை விவரிக்கும் ஸ்ருதி “முத்கலோபநிஷத்” (Mudgala Upanishad) ஆகும். இவ்வுபநிஷத்திளிருந்து இன்று கிடைத்துள்ள பாகங்கள் https://www.celextel.org/108upanishads என்ற சுட்டியில் ஆங்கில மொழியில் காணலாம். இதில் புருஷ சூக்தத்தின் புருஷன் யார் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இவ்வுபநிஷத்து genuine-ஆ? என்ற கேள்விக்கு “ஆதி சங்கரரின் பிருகதாரண்ணியாக பாஷ்யத்தில் முத்கலத்திலிருந்து ஒரே ஒரு வரியை எடுத்துள்ளார். அவ்வரி இன்றுள்ள உபநிஷத்திலும் உள்ளது. ஆகையால் இவ்வுபநிஷத் genuine அல்ல என்று ஐயமுருவதற்கு காரணம் இல்லை” என்று திண்ணமாக பதில் கூறமுடியும்.

    (Edited and published)

  69. இந்த கட்டுரையால், கந்தர்வன், பாலாஜி போன்ற இளைக்னர்களுக்கும் இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு உள்ளது என்பதும் அவர்களுக்குள் தொடர்பு உண்டாகியுள்ளது என்பதும் தெரிய வந்தது. Of course ஜெயஸ்ரீ அவர்களும் முத்துகுமாரசாமி அவர்களும் எழுதியுள்ள கட்டுரைகளும் additional bonus.

  70. நண்பர் திருச்சிகாரரே

    //
    //ராமர் சிவனை ஏன் வணங்க கூடாது ? என்ன குடியா முழுகி போகிடும்? //
    என்று இராமருக்கு அருகிலேயே தடித்த வார்த்தைகளைப் போடும் அளவுக்கு உங்களின் காழ்ப்புணர்ச்சி, பக்தியையும் தாண்டி சென்று விட்டது.
    //

    இது உங்களின் அபிப்ராயம் மட்டுமே -இப்படியெல்லாம் அர்த்தம் கொண்டால் அதற்க்கு அடியேன் பொறுப்பல்ல- இனிமேல் தவறு உண்டாகக்கூடும் என்று கொஞ்சம் கவனமாகவே எழுதுகிறேன்.

    நான் இந்த உலகத்தவர் கேட்கும் கேள்வியாக தான் குடி முழுகுமா என்று சொன்னேன்- உலக மக்கள் என்னென்னவோ கேட்கிறார்கள். வேதம் போற்றும் புருஷோத்தமனை ஒரு அழியும் ஜீவன் என்கிறார்கள் – அவனுக்கும் முடிவு கட்டுகிறார்கள் – அவனுக்கு அகந்தை என்கிறார்கள்- – ஒரு மந்திரி ராமன் என்று ஒருவன் இல்லவே இல்லை என்கிறார், நான் சொல்லவந்தது இந்த போக்கை பிரதிபலிப்பதே

    ஒரு உதாரணத்திற்கு

    ராமன் இல்லை என்று சொல்வாருக்கு – என்று ஆரம்பித்து எழுதினால் அதற்கு பின் வரும் வாக்கியங்களில் தான் முற்சொன்ன வாக்கியத்திற்கு மறுப்பு இருக்கும், பதில் இருக்கும் என்று கொள்ளவேண்டும் மாறாக “இல்லை” என்ற தடித்த வார்த்தை ராமனின் அருகில் வருவது தவறு என்று அறிவு மார்கமாக கூற இயலாது – பக்தி மார்கமாக கூறலாம் – நீங்கள் சொன்னதை நான் பக்தி மார்கமாக ஏற்றுக்கொண்டு இனி இதுபோல் தவறு வராமல் பார்த்துக்கொள்கிறேன்

    மேலும் ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்துகொண்டு முடிவு கட்டுவது சரியல்ல. மேலும் மற்றவர் பக்தியை நாம் சிறிதளவும் சிறுமை படுத்தகூடாது – பகவத் அபசாரத்தை விட பாகவத அபசாரம் கொடியது –
    இந்த கருத்தை பொதுவாக சொல்கிறேன்
    அடியேன் ஒரு பக்தன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை – என்னை மற்றவர் எவ்வலோவு திட்டினாலும் திட்டுபவர்க்கு நல்லதே நடக்கும் –

    //
    ஆனால் சாதி உணர்வு, மத உணர்வு இந்த இரண்டாலும், இந்து மதமும், இந்தியாவும், இந்த உலகமும் பாதிப்படைந்து காட்டுமிராண்டிக் காலத்துக்கு திரும்பக் கூடாது என்பதே நமது அக்கறை.
    //

    நல்லது – அதற்காக நான் சாதி அடிப்படையில் இதை எழுதினேன் என்று முடிவு கொள்ளாதீர்கள் – இந்த ஐயம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே பல விஷயங்களை சேர்த்துக்கொண்டு எழுதினேன் (ராமர் சமுத்ரராஜனிடம் சரண் அடைந்ததும், சுக்ரீவனை பணித்ததும் …) இதையும் நீங்கள் கவனத்தில் கொண்டிருந்தாள் எனது உண்மையான நோக்கம், தவறான பிரமாணத்தை காட்டவேண்டாம் என்பதை சுட்டிக்காட்டவே என்று புரிந்திருக்கும்.

    நானும் திருச்சிக்காரன் தான் 🙂
    – நாம் இந்த விடயத்தை இத்துடன் முடித்துகொள்வோம் 🙂

  71. நெடுந் தூரப் பயணத்தால், எனது கட்டுரைக்கு வந்த மறுமொழிகளை இந்நாள் வரை பார்க்க இயலாது போயிற்று. பலர் சரியாகக் குறிப்பிட்டுள்ளது போல “புராணக் கதையின் குறியீடுகளில்தான்” எனது கவனம் சென்றதே தவிர கதையிலோ, கதையின் மூலத்திலோ அல்லது கதா பாத்திரங்களிலோ அல்ல. அதே காரணங்களினால் தகுந்த முன்னோர்களால் கூறப்பட்டதும், ஒவ்வொரு சிவன் கோயிலிலும் உள்ள சிற்பத்தை அடிப்படையாகக் கொண்டும், மாத மற்றும் வருடாந்திர வழிபாட்டாலும் பிரபலமான முறைகளை மனதிலும் கொண்டே கட்டுரை எழுதப்பட்டது. மேலும் இது எனது பார்வையே. உங்கள் பார்வை வேறானால், வழி வழியாய் வந்திருக்கும் கதைகளைக் கொண்டு அவைகள் போதிக்கும் படிப்பினைகளைப் பற்றி எழுதுங்கள். நல்லது நடக்கட்டும். இக்கட்டுரையின் எதிரொலியாய் மறுமொழிகள் அளித்த பலர் மற்றும் தொடர் கட்டுரைகள் அளித்துள்ள பெரியவர் இருவரின் அனுபவமோ, பாண்டித்யமோ எனக்குக் கிடையாது என்பதும் உண்மையே.

    இந்தக் கட்டுரையின் உண்மை நிலையை உணர்ந்தோர்களுக்கு மிக்க நன்றி. ஆனால் இது போன்ற கட்டுரை கூடாது எனச் சொல்வோர் ஒன்று உணர வேண்டும். காலம் காலமாக வந்திருக்கும் வழிபாடுகளும், முறைகளும், கதைகளும் ஒருவன் தன்னை உயர்நிலைக்குக் கொண்டு செல்லவே தோன்றின. பிரபஞ்சம் ஆரம்பித்ததிலிருந்து அசல-சல சீவராசிகள் அனைத்தும் என்றும் முன்னேறவே முயற்சிக்கின்றன என்னும் உண்மையை அறிவோர், நான்-நீ என்பதில் தொடங்கி நாங்கள்-நீங்கள் என்று பகுத்து அறிதலில் காலத்தை விரயம் செய்ய மாட்டார்கள். இதில் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைப்பதும் நம்மைக் குறுக்கிக் கொள்வதே. நம்மில் பலரும் படித்தும், கேட்டும் அறிந்தவர்களே. வாழ்ந்து காட்டிய பெருமானான ரமணர் போன்றோர் கூற்றுக்களை நாம் மறுக்க இயலுமா? இக்கட்டுரையில் வந்த ஞான-கர்ம வழிப் பாதைகளின் விளக்கங்கள் அவர், மற்றும் அவர் போன்ற உணர்ந்தோர், சொன்னவைகள் தான். என்னைப் போல் படித்து அறிந்தோருக்கு மேலும் உதவலாம் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதுதான். எவரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல.

    இருவர், அவர் எவராயினும் , போட்டியிட்டால் அங்கு “தான்” என்னும் எண்ணம் ஓங்கியதால் அன்றோ? அங்கு எனது அகந்தை எங்கு வந்தது? அப்படியே எனது “அகந்தை” தான் என்றே ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம். அதைப் பற்றிச் சொல்வதாலும், விவரிப்பதாலும் தங்கள் அகந்தை அன்றோ வளர்கிறது? இது தேவையா? எனது அகந்தைக்கு உங்கள் அகந்தைதான் பதில் என்றால், ஆங்கிலத்தில் வரும் “eye for eye, blood for blood” என்ற வன்மம் அன்றோ வளர்கிறது. “இவர் அவராகார், அவர் இவராகார்” என்பதும் ‘நான்-நீ’ பேதத்தால் வரும் விளைவே. தான் யார் எனப் பார்க்கும்போது இவை எல்லாம் எங்கே போகின்றன என்று அப்போது பார்க்கலாம் என்றுதான் பெரியோர்கள் கூறுவர். புராணம் எங்கிருந்து வந்தது என்பது “நதி மூலம், ரிஷி மூலம்” பார்ப்பது போன்றதே. எது எங்கிருந்து வந்தாலும், எதற்காகச் சொல்லப்பட்டது என்பதையே கற்றோர் காண்பர். எத்தகையது என்பதும் நமது கண்ணோட்டத்தை ஏற்றிச் சொல்வதுதான்.

    தன்னின் உயர்நிலை என்றால் என்ன? அதற்கு முதலில் தான் தனதின் இயல் நிலையை உணர வேண்டும். அதை உணர்த்துவதுதான் நமது மதத்தின் நோக்கம். அதைக் காட்டவே எழுந்தது “ஜாக்ரத்- ஸ்வப்ன- சுஷுப்தி” நிலைகள் பற்றிய விளக்கங்கள். அதுவே “விழிப்பு- கனவு- ஆழ் உறக்க” நிலைகள். அதை உணர்ந்து கொள்ள, எவரும் வெளியே எதுவும் தேட வேண்டாம். நம்மில் உள்ள முத்து அது. நம்மை நாமே தோண்டி அறியும் அறிவு. “அறியும் தனை விட்டு அயலை அறிவது அறியாமை அன்றி அறிவோ?” என்பார் ரமணர். அது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டவே “காணும் தனை விட்டுக் கடவுளைக் காணல், காணும் மனோ மயமாம் காட்சி” என்பார். மேலெழுந்த வாக்கில் பார்த்தால் அது கடவுளை நிராகரிப்பது போன்று தோன்றலாம். அதன் உள்ளர்த்தம் காண்போர்க்குத்தான் அது நன்கு விளங்கும். நமது புராண, இதிகாசங்களில் கடவுளர்களும் பிரச்சினையைச் சந்திப்பது போல் வரும். அதனால் அவர்கள் நம் போல் சாதாரணமானவர்கள் என்றா கொள்வது? அப்படிப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு பொருள் புதைந்திருக்கும். அதைக் கூர்ந்து கவனித்தால் புரியும். அதையே இக்கட்டுரையின் துவக்கத்திலே “தெய்வீகத் தன்மை நிறைந்த நிகழ்ச்சி” என்று குறிப்படப் பட்டு, அதை என் பார்வையிலே அளித்துள்ளேன்.

    நம் நிலையை உணர யோக முறைகள் பல இருந்தும், நாம் முதன்மையாக “கர்ம- பக்தி- ஞான” முறைகளை அறிவோம்.
    “திடமிது பூசை செபம் தியானம்
    உடல் வாக்கு உளத் தொழில் உந்தீபற
    உயர்வாகும் ஒன்றிலொன்று உந்தீபற” என்பார் ரமணர்.
    அதற்காக ஒன்று உயர்த்தி, மற்றது தாழ்ந்தது என்று தள்ளுவது அல்ல. ஒவ்வொன்றும் அவரவர் துவக்க நிலைக்கு ஏற்ப உள்ளது என்று கொள்ள வேண்டும். இது பற்றி இன்னொரு கட்டுரையில் எழுதி உள்ளேன். வாய்ப்பு இருந்தால், அது உங்கள் கவனத்திற்கு வரும்.

    இந்தக் கட்டுரையில் முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டியது: “ஞான வழி உயர்வாகச் சொல்லப் பட்டிருந்தாலும் அதற்கு வேண்டிய மன நிலை இல்லையெனில், கர்ம வழி நின்று பூவுலக ஆசைகளில் உழன்றாலும் கடைத்தேற முடியும்; ஒன்று ஞானத்தைத் தேடு, இல்லையெனில் பூர்ண சரணாகதி செய்” என்பதே. அதை இக்கட்டுரை உணர்த்தவில்லை எனில், தவறு எனதே. பொறுத்து அருள வேண்டுகிறேன்.

    இந்த வாதங்களின் தொடர்பாகவோ, விளைவாகவோ இரண்டு குறிப்பிடத் தக்க நன்மைகள் இரு கட்டுரைகளாக வந்திருக்கின்றன. முனைவர் முத்துக்குமாரசுவாமி எழுதியுள்ள விளக்கக் கட்டுரையில் புராணக் கதையின் தோற்றத்தையும், சிவனின் மூவுருவங்களையும் அழகாக விளக்கியுள்ளார். ‘எல்லாம் தெய்வ வழிபாடே என்றும், எதுவும் சண்டையைத் தூண்டாது’ எனவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் கட்டுரையில் சிவராத்திரி பற்றித் தகவல்கள் பல தந்து, நடராசர் மற்றும் சுதர்சனம் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளார். அவர் எழுதியுள்ளதைப் படிக்கும்போது, அணு ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி Niels Bohr அணுவின் மாதிரியை உருவகப் படுத்த முடியாது குழம்பிய வேளையில், நம் கீழச் சீமையில் சர்வ சாதாரணமாக நம்மால் உணரப்படும் “தானும் தான் செய்யும் சோதனையின் ஒரு அங்கமே” என்பது ஞாபகம் வரவே, அவர் உடனே அணுவின் மாதிரியை அறிவித்து, பின் நோபல் பரிசு பெற்றதும் என் மனத்திரையில் ஓடியது. அவ்வளவு உள்ளர்த்தங்களைக் கொண்டது நம் முன்னோர்கள் கண்டது. மேலும், ஆசிரியர் ‘கடவுளர்கள் பலரும் தம் தம் செயல்களை ஆற்றுகின்றனர். எதற்கும் நேர்மையாகத் தேடினால் அதனதன் உண்மைகளும், உள்ளர்த்தங்களும் கிடைக்கும்’ என்றும் அழகுற எடுத்துரைத்துள்ளார். நான் முன்பே சொன்னபடி இவ்விருவரின் புலமையோ, அறிவோ எனக்குக் கிடையாது என்பதை உணர்கிறேன். அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி. அதே போன்று மறு மொழி அளித்த பலருக்கும் மிக்க நன்றி.

    – ராமன்

  72. அன்புள்ள கந்தர்வன் அவர்களுக்கு நமஸ்காரங்க‌ள்.

    இந்தக் கட்டுரையின் அடிப்படையான அடிமுடி தேடிய புராணத்தைப் புனையப்பட்டது என்றும் கட்டுக்கதை என்றும் நிலைநிறுத்தத் தாங்கள் திரு கிருஷ்ணசாமி அய்யங்காரின் வேத வியாக்கியானங்களையும், அவரது நூலையும் மேற்கோள் காட்டினீர்கள். இப்போது ” ‘வைதிகர்’ என்று கூறுபவர்கலேல்லாம் வேதத்தைத் தான் முக்கியப் பிரமாணமாகக் கொள்ளவேண்டும். சம்ஸ்கிருத மொழியில் உள்ள புத்தகங்களெல்லாம் பிரமாணம் என்று சொல்லவில்லை; காம ஸூத்திரத்தையும், காளிதாசன் காவியங்களையும் எந்த ஒரு வைதிகரும் பிரமாணமாக எடுக்க மாட்டார். மாறாக, வேத விருத்தம் இல்லாமல் இருந்தால், போர்ச்சுகீசிய, அரபு, பாஷையானாலும் வேதாந்த, பகவத் விஷய நூல்கள் ஏற்கத் தக்கதே. வேதாந்திகள் ஆகமத்தைப் பிரதான பிரமாணமாக ஏற்கலாகாது. சித்தாந்தம் என்ன என்பதை தர்க்க ரீதியில் கண்டு தெளிவுருவதே நன்று. ” என்று கூறூகிறீர்க‌ள். நான் எங்கே காம‌ சாச்திர‌த்தை மேற்கோள் காட்டினேன்? காமிக‌ ஆக‌ம‌ம் என்ப‌து காம‌ சாஸ்திர‌மா? இப்ப‌டிச்சொன்னால் அது அவதூறு இல்லையா? சிந்தித்துதான் எழுதினீர்க‌ளா?

    வேத‌ம் மாத்திர‌ம் அல்ல‌, ஆக‌மும் தொன்மையான‌தே. அதுவும் ப‌ர‌ம‌சிவ‌னின் நாக்கிலிருந்து வ‌ந்த‌துதான். எப்ப‌டியாவ‌து சிவ‌னையும் சிவ‌ப‌க்தியையும் கீழ்ப்ப‌டுத்த‌ நின‌ப்ப‌து த‌வ‌று. வேதங்க‌ள் அத்த‌னையும் முழுமையாக‌க் கிடைத்துவிட்ட‌தாக‌வோ, அத்த‌னை பாஷ்ய‌ங்க‌ளின் அல்ல‌து வாத்திகைக‌ளின் தொகுப்புக‌ளும் கிடைத்துவிட்ட‌தாக‌வோ கூற‌ முடியாது என்ப‌தை பாலாஜி அவ‌ர்க‌ள் அருமையாக‌ எடுத்துக்க‌ட்டிய‌ நிலையில், ம‌ற்ற‌ எந்த‌ அதார‌த்தையும் எடுத்துக்கொள்ள‌ மாட்டேன் என்ப‌து முறைய‌ல்ல‌.

    மேலும், இந்து ம‌த‌த்தை வேத‌ங்க‌ளுக்குள் ம‌ட்டுமே அட‌க்கி விட‌ முடியாது. நாய‌ன்மார்க‌ளின் கூற்றுக்க‌ளுக்கு எதிராக வேதத்தில் ஆதார‌ம் தேடுவதும்், அங்கே இல்லை ஆத‌லால், நாய‌ன்மார்க‌ள் புனை‌ந்த‌ க‌ட்டுக்கதை இது என்று கூறுவதும் அவ‌தூறு ஆகும். பாக‌வ‌த‌ அப‌சார‌ம் ப‌க‌வ‌த் அப‌சாரத்தை விடத்தவறானது் என்று சொல்ப‌வ‌ர்க‌ள், நாய‌ன்மார்க‌ள் புனை‌ந்த‌ க‌தை என்று சொன்னால் அது சிவ‌ன‌டியார்க‌ளை அப‌சார‌ம் செய்வ‌து என்ப‌தை சிந்திக்க‌ வேண்டும். ப‌ர‌மாச்சாரியாரை திரு கிருஷ்ண‌சாமி அய்ய‌ங்கார் எப்ப‌டி எப்போது அணுகினார் என்ப‌தெல்லாம் இந்த‌ அடிமுடி காணாத‌ வ‌ர‌லாற்றுக்கு ச‌ம்ப‌ந்த‌மில்லை. ஆனால், அத‌ற்காக‌ நாய‌ன்ம‌ர்க‌ளைக் க‌ட்டுக்க‌தை எழுதுப‌வ‌ர்க‌ள் என்று சொல்ல‌ யாருக்கும் அதிகார‌மில்லை.

    அடிமுடி காணாத‌ வ‌ர‌லாற்றுக்குச் சாட்சியாக‌ சாட்சாத் அந்த‌ப் ப‌ர‌மேஸ்வ‌ரனே அண்ணாம‌லையாக‌ வான‌ளாவ‌ நிற்கும்போது அத‌னைப் புனைய‌ப்ப‌ட்ட‌ க‌தை என்று கூறுவ‌து ஈ.வெ.ராம‌சாமி நாய‌க்க‌ரும் செய்யாத‌து என்ப‌தை உண‌ர‌வேண்டும்.

    ஹிந்து என்ப‌வ‌ன் வைதீக‌னாக‌த்தான் இருக்கவேண்டும் என்று ஆதிச‌ங்க‌ர‌ரோ, ம‌த்வாச்சாரியாரோ அல்ல‌து ராமாநுஜ‌ரோ கூறியிருக்கிறார்க‌ளா? சைவ‌த்தைக் க‌டைப்பிடிப்ப‌வ‌ரும், வைண‌வ‌த்தைக் க‌டைப்பிடிப்ப‌வ‌ரும், சாக்த‌த்தைக் க‌டைப்பிடிப்ப‌வ‌ரும் அனைவரும் இந்துதான். வேத‌வாக்கிய‌ப்பிர‌மாண‌ம் இருந்துதான் இவ‌ர்க‌ளெல்லாம் இந்து என்றா சொல்கிறோம்? வேத‌ப்பிர‌மாண‌ம் இல்லாததெல்லாம் பொய்யா? புனைவா?

    ராமாய‌ண‌ம், ம‌ஹாபார‌த‌ம், த‌சாவ‌தார‌ம், ஆண்டாள் அவ‌தார‌ம், துலுக்க‌நாச்சியார் பக்தி இவையெல்லாம் எந்த‌ அள‌வுக்கு உண்மையோ அந்த‌ அள‌வுக்கு அடி முடி காணாத‌ வ‌ர‌லாறும் உண்மை. இதை கோடிக்க‌ணக்கான‌ இந்துக்க‌ள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்க‌ள். அத்த‌னைச் சிவ‌ன‌டியார்க‌ளின் ம‌ன‌ம் நோக‌ எழுதிவிட்டு அனந்த‌கோடி ராம‌நாம‌ ஜெப‌ம் செய்தாலும் நிவ‌ர்த்தி உண்டா என்று ஆசாரியார்க‌ளிட‌ம் கேளுங்க‌ள்.

  73. திரு. உமாசங்கர் அவர்களுக்கு நமஸ்காரங்கள். நீங்கள் எனக்கு நமஸ்காரம் கூறுவது சரி அன்று என்று தோன்றுகிறது; வயதில் முதிர்ந்த உங்களுக்குத் தான் நான் அபிவாதனம் சொல்லி உங்களுக்கு நமஸ்கரிக்க வேண்டும், நீங்கள் தான் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடு இருந்தாலும், உங்களை அவமதிக்கிறேன் என்று ஒரு பொழுதும் நினைக்க வேண்டாம் என்று பணிவுடன் கோருகிறேன்.

    // நான் எங்கே காம‌ சாச்திர‌த்தை மேற்கோள் காட்டினேன்? காமிக‌ ஆக‌ம‌ம் என்ப‌து காம‌ சாஸ்திர‌மா? இப்ப‌டிச்சொன்னால் அது அவதூறு இல்லையா? சிந்தித்துதான் எழுதினீர்க‌ளா? //

    காம சாத்திரத்தை மேற்கோள் காட்டியதாக உங்களை எங்குமே நான் சொல்லவில்லை. மாறாக, நான் சமஸ்கிருத மொழியில் இருந்தால் தான் ஏற்பேன் என்று நீங்கள் கூறினீர்கள். அதற்குப் பதிலாக நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், “சம்ச்கிருதமாக இருந்தால் மட்டும் போதாது. வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களை அடியோற்றித் தான் இருக்க வேண்டும்” என்று எழுதினேன். அதற்கு ஒரு உதாரணமாக “காம சூத்திரம் சமஸ்கிருத மொழியில் இருந்தாலும், அதை நாம் ஏற்பதில்லை” என்றேன். இதற்கும், நீங்கள் சொன்ன காமிக்க சாச்திரத்திற்கும் எந்த விதமான தொடர்பையும் கூறவில்லை. குழப்பம் வராமல் இருப்பதற்காக, காம சூத்திரத்தை உதாரணமாக எடுக்காமல், சாருவாக-லோகாயதிக (atheist/materialist) புத்தங்களை உதாரணமாகக் கூறியிருந்தால் இக்குழப்பம் வந்திருக்காது. தெளிவாக எழுதாததால் மன்னிக்கவும்.

    // எப்ப‌டியாவ‌து சிவ‌னையும் சிவ‌ப‌க்தியையும் கீழ்ப்ப‌டுத்த‌ நின‌ப்ப‌து த‌வ‌று.//

    ‘சிவனைக் கீழ்ப்படுத்துவது’ என்பது என்றுமே என் நோக்கமல்ல. சிவனைப் பரம பாகவதராக பாவிக்கிறேன்; சிவனடியார்களும் மற்ற தெய்வங்களின் பக்தர்களும், ஏன், பௌத்த, சமண, கிறித்துவ, இசுலாமிய சமயமானாலும், நாத்திகரானாலும் அவர்களுள் நல்லோர் யாராக இருந்தாலும் ஏன் சகோதரர்களைப் போலவே அனைத்துக் கைகோர்த்துக் கொள்வேன். சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கலாம்; இருக்கத் தான் செய்யும்.

    // அத்த‌னை பாஷ்ய‌ங்க‌ளின் அல்ல‌து வாத்திகைக‌ளின் தொகுப்புக‌ளும் கிடைத்துவிட்ட‌தாக‌வோ கூற‌ முடியாது என்ப‌தை பாலாஜி அவ‌ர்க‌ள் அருமையாக‌ எடுத்துக்க‌ட்டிய‌ நிலையில் //

    வேத சாகைகள் பலவற்றை நாம் தொலைத்துத் திண்டாடுகிறோம் என்பதில் ஐயமில்லை. ஆனால், சங்கரர், ராமானுஜர், மத்வர், ஆகியோருடைய பிரச்தான திரைய பாஷ்யங்கள் முழுமையுமே நம்மிடம் இன்று உள்ளது. அதற்குப் பிராசீனமான பல அனுபாஷ்யங்கள் உள்ளன.

    // ஹிந்து என்ப‌வ‌ன் வைதீக‌னாக‌த்தான் இருக்கவேண்டும் என்று ஆதிச‌ங்க‌ர‌ரோ, ம‌த்வாச்சாரியாரோ அல்ல‌து ராமாநுஜ‌ரோ கூறியிருக்கிறார்க‌ளா? சைவ‌த்தைக் க‌டைப்பிடிப்ப‌வ‌ரும், வைண‌வ‌த்தைக் க‌டைப்பிடிப்ப‌வ‌ரும், சாக்த‌த்தைக் க‌டைப்பிடிப்ப‌வ‌ரும் அனைவரும் இந்துதான். வேத‌வாக்கிய‌ப்பிர‌மாண‌ம் இருந்துதான் இவ‌ர்க‌ளெல்லாம் இந்து என்றா சொல்கிறோம்? வேத‌ப்பிர‌மாண‌ம் இல்லாததெல்லாம் பொய்யா? புனைவா?//

    “இவர் இவர் தான் ஹிந்து” என்று சொல்ல எனக்கோ, ஏன், சங்கரருக்கோ ராமானுஜருக்கோ மத்வருக்கோ, உரிமை இல்லை. ஹிந்துமதம் என்பதற்கு, “சித்தாந்தங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், லௌகீக விஷயங்களில் ஒற்றுமையோடு இந்திய நாட்டை தொன்று தொட்டு பேணிப் பாதுகாத்து வரும் சமூஹம்” என்றே கூறுகிறேன். சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம், நையாயிகம், வைசேஷிகம், சாங்கியம், லோகாயதிகம், பௌத்தம், சமணம், என்று நம் நாட்டில் தொன்று தொட்டு வரும் பல சமயங்களில் ஒன்றைக் கடைபிடிக்கும் யாருக்கும் “ஹிந்து” என்று சொல்லிக்கொள்ள உரிமையுண்டு.

    இத்துடன் இந்த வாதத்தை முடித்துக் கொள்கிறேன். ஆக்கபூர்வமான, அனைத்து ஹிந்துக்களுக்கும் உகந்த ஒரு கட்டுரையை எழுத முற்படுகிறேன். அதற்கு அவகாசம் தேவை. மேலே கூரியவற்றிற்கு ஏதேனும் நீங்கள் அல்லது வேறு ஒருத்தர் சொல்ல முற்பட்டால், தாராளமாக எழுதுங்கள். அதைக் கண்டிப்பாகப் படிப்பேன், “இது உண்மை” என்று எனக்கு எட்டிய அறிவிற்கு தெரிந்தால் ஏற்றுக்கொள்வேன்.

    நன்றி,

    கந்தர்வன்

    (edited and published)

  74. அன்புள்ள கந்தர்வன் அவர்களுக்கு,

    நீங்க‌ள் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் என்னை அவ‌ம‌திப்ப‌தாக‌ நான் என்றும் க‌ருத‌வில்லை. நீங்க‌ள் த‌வ‌றான‌ அணுகுமுறையால் உங்க‌ள் நேர‌த்தை வீண‌டித்துக் கொண்டிருக்கிறீர்க‌ள். நீங்க‌ள் எழுதிய‌ ப‌ல‌ ம‌றுமொழிக‌ளில் முர‌ண்பாடுக‌ள் உள்ள‌ன‌ என்றாலும் அவ‌ற்றைஎல்லாம் பொதுவில் சொல்வ‌து ந‌ம‌து ம‌த‌த்துக்குப் ப‌ல‌வீன‌ம் என்றே பலவிஷயங்களில்ப‌திலுக்கு ப‌தில் சொல்ல‌வில்லை. சிவனை பரமேஸ்வரனாக ஆதிசங்கரர் சுட்டிய வேதப் பகுதிகளையெல்லாம் நான் மேற்கோள் காட்டவில்லை, ஏனெனில் நமது மதத்தை வேதங்களுக்குள் மட்டுமே அடக்க முடியாது. அடக்கவும் கூடாது.

    நடைமுறையில், வேதம் படிக்க அனைத்து சாதியினருக்கும் மகளிருக்கும் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், வேதப்பிரமாணம் இருந்தால்மட்டுமே வாதத்துக்கு ஏற்றுக்கொள்வேன் என்று கூறினால், பெரும்பாலான இந்துக்களின் நிலை என்ன என்று சிந்திக்காமல் எழுதுகிறீர்கள். இதை நான் பலமுறை மறைமுகமாகத் தமிழில் உள்ள ஆதாரங்களை ஏற்கத்தான் வேண்டும் என்று சொல்லியும் கூட பிடிவாதமாக வேதம்தான் பிரமாணம் என்கிறீர்கள். கோடிக்கணக்கான ஹிந்துக்கள் வேதம் படிக்காத நிலையில், படிக்க வாய்ப்பேஇல்லாத நிலையில் இவ்வாறு கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நீங்க‌ள் எத்த‌னை ஆண்டுக‌ள் எங்கே வேத‌ம் ப‌யின்றீர்க‌ள்? சரபௌபநிஷத்து இடைச்செருகல் என்று கூறும் அளவுக்குப் படித்திருக்கிறீர்களா? வேறொருவர் சொன்னதை எழுதினால் அது கேள்விப்பட்டது, ஆராய்ச்சியின் பாற்பட்டதல்ல என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? தருமியைப்போல் கவிதை எழுதுதல் இத்தகு விஷயத்தில் எத்தனைக் கேடு விளைக்கும் தெரியுமா?

    இருப்பினும்கூட‌, சிவ‌னை ந‌ங்க‌ள் ப‌ர‌ம்பொருளாக‌க் க‌ருதுகிறோம‌ என்ப‌தை ந‌ன்கு அறிந்தும் கூட‌, பாக‌வ‌த‌ன் என்று கிருஷ்ண‌சாமி அய்ய‌ங்காரின் நிலைக்குச் சிவனைத் த‌ள்ளும் போது அந்த‌ அவ‌தூற்றை எப்ப‌டிப் பொறுக்க‌ முடியும். அடிமுடி காணாத‌ வ‌ர‌லாற்றைக் குறித்து திருவ‌ண்ணாம‌லைத் திருக்கோவிலில் உங்க‌ளுக்கும் என‌க்கும் ஒரு வாத‌ம் ந‌ட‌ந்தால் உங்களால் இப்ப‌டிக்கூற‌ முடியுமா என்று சிந்தியுங்க‌ள். புனைப்பெய‌ரில் ஒளிந்துகொண்டு, முக‌ம் காட்டாம‌ல், சிவநிந்த‌னை செய்கிறீர்க‌ள். சொல்லுக்கும் செய‌லுக்கும் வேறுபாடு கூடாது. எழுத்தும் அப்ப‌டியே. தாங்க‌ள் எழுதுவ‌தெல்லாம், சில‌ வைஷ்ண‌வ‌ ஆசான்க‌ள் எழுதிய‌ உரைக‌ளின் அடிப்ப‌டையிலேயே அமைந்திருக்கின்ற‌ன‌. தா‌ங்க‌ள் அத்வைதி என்று சொல்லும்போது, இத்த‌னை தூர‌ம் வெறும் தீவிர வைஷ்ண‌வ‌க் கருத்துக்க‌ளையே எழுதினால் முர‌ண்பாடு தோன்றுகிறது. அத்வைதி விஷ்ணுவைக் கும்பிடுவான் ஆனால் ஒருபோதும் சிவ‌னை நிந்திக்க‌ மாட்டான். அப்ப‌ய்ய‌ தீக்ஷித‌‌ரையோ அல்ல‌து நாய‌ன்மார்க‌ளையோ ஒதுக்கித்த‌ள்ள‌ மாட்டான். என‌வே த‌ங்க‌ள் உண்மை முக‌ம் குறித்த‌ முரண்பாும் ஒளிர்கிற‌து.

    1982 திருக்கார்த்திகை தீபப்பெருவிழாவின்போது, கிறிஸ்துவ‌ப்போத‌க‌ர்க‌ள் இப்ப‌டித்தான் சிவநிந்்த‌னை அட‌ங்கிய‌ துண்டுப்பிர‌சுர‌ங்க‌ளை விநியோகித்துவ‌ந்த‌ன‌ர். அத‌ற்கு அவர்க‌ள் காட்டிய‌ ஆதார‌ங்க‌ள் எல்லாம் தாங்க‌ள் காட்டும் வைஷ்ண‌வ‌ சம்பிர‌தாய‌ங்க‌ள் “அளித்த‌” அல்ல‌து “அள்ளித் தெளித்த‌” ஆதார‌ங்க‌ளே. தின‌மும் ஒரு ப‌குதியில் இப்ப‌டி அவ‌ர்க‌ள் விநியோகிக்க‌, தொட‌ர்ந்து ஐந்து நாட்க‌ள் சொல்லியும் கேளாம‌ல் ஆறாம் நாள் விநியோகிக்கும்போது திருக்கோவிலின் கிழ‌க்குக்கும் வ‌ட‌கிழக்குக்கும் இடைப்ப‌ட்ட‌ தேர‌டி மூலையில் வைத்து சிவனடியார்கள் அவ‌ருக்குப் “பூஜை செய்து” காவல் நிலையத்தில் “பிரதிஷ்டை” செய்தனர். அத‌ற்குப் பிற‌கு இன்ற‌ள‌வும் இவ்வேலையை அந்தக் கிறிஸ்தவப் போதகர்கள்்செய்வ‌தில்லை.

    ///ஆக்கபூர்வமான, அனைத்து ஹிந்துக்களுக்கும் உகந்த ஒரு கட்டுரையை எழுத முற்படுகிறேன். அதற்கு அவகாசம் தேவை. ///

    தாராள‌மாக‌ச் செய்யுங்க‌ள். சிவ‌னையும் சிவ‌ ப‌க்தியையும் கீழ்மைப்ப‌டுத்தினால் அது “அனைத்து” ஹிந்துக்க‌ளுக்கும் ஏற்புடைய‌தாகாது என்பதை‌யும், வெறுமே வேத‌ம்தான் பிர‌மாணம் த‌மிழ் ப‌க்திநூல்க‌ள் ஏற்புடைய‌த‌ல்ல‌ என்ற‌ நிலையில் எழுதினாலும் அனைத்து ஹிந்துக்க‌ளுக்கும் அது ஏற்புடைய‌தாகாது, அப்ப‌ய்ய‌ தீக்ஷித‌ர் உள்ளிட்டோரின் சித்தாந்த‌க் க‌ருத்துக்க‌ள் த‌ள்ள‌த்த‌க்க‌ன‌ என்ற‌ முடிவுட‌ன் செய்தால் அது அத்த‌னை ஹிந்துக்க‌ளுக்கும் ஏற்புடைய‌தாகாது, என்பதை‌யும் கருத்தில் இருத்திச் செய்யுங்க‌ள்.

    எழுதும்முன்: காலிக்கோப்பை என்றொரு ஓஷோவின் உரையைப் படியுங்கள். நடுநிலையோடு எக்கருத்தையும் அணுக மிகவும் பயனுள்ளது.

    மனமார்ந்த ஆசிகள்.

    (edited and published)

  75. திரு கந்தர்வன் அவர்களே

    ஒரு எடுத்துக்காட்டாக இந்த நிரலியில் உள்ள ஹரதத்த சிவாச்சாரியாரின் சரிதத்தைப்படியுங்கள். அவர் எழுதிய ஸ்ருதி ஸுக்தி மாலை உள்ளிட்டவற்றுக்கும் இதே நிரலியில் தொடர்க் கணைகள் உள்ளன.

    இவை தங்கள் பார்வைக்கே. மேலும் மேலும் விவாதத்துக்காக அல்ல.

    https://www.shaivam.org/ad_haradattar.htm

  76. //
    இருப்பினும்கூட‌, சிவ‌னை ந‌ங்க‌ள் ப‌ர‌ம்பொருளாக‌க் க‌ருதுகிறோம‌ என்ப‌தை ந‌ன்கு அறிந்தும் கூட‌, பாக‌வ‌த‌ன் என்று கிருஷ்ண‌சாமி அய்ய‌ங்காரின் நிலைக்குச் சிவனைத் த‌ள்ளும் போது அந்த‌ அவ‌தூற்றை எப்ப‌டிப் பொறுக்க‌ முடியும்
    //

    உமாசங்கர் அவர்கள் எழுதியது – இங்கு உள்ள சிலரின் புரிதலின் படி சமயவாத கொள்கை ஆகிவிடுகிறதே.
    – ஆதலால் நாம் சமரசவாததை விட்டு புறம் ஏசாமை இல்லாத புறம் தோழமை என்பதும் ஒரு நல்ல கருத்தே என்பதை ஏற்பீர்கள் என்று நினைக்கிறன்

    சிவனை ஜீவன் என்று கூறியது அவதூறு என்கிறார் உமாசங்கர் அவர்கள் இந்த கட்டுரை ஆசிரியரும் இதற்கு நேர் மாறாக விஷ்ணுவை ஜீவன் என்கிறார் அவருக்கு அகந்தை என்கிறார் – இது வேத ப்ராமானதிர்க்கு மாறானது, வருத்தம் அளிக்கிறது என்று இதை சிலர் சுட்டிக்காடியதர்காகவே இவ்வளவு ஆரவாரம் சமயவாதி என்ற பட்டம்

    கட்டுரை ஆசிரயரேனும் நாம் அனைவரும் கடைசி பிரமாணமாக ஏற்கும் வேதத்திற்கு பிரதிகூலமாக எழுதினார் – அதற்காக அது வேண்டாத வேலை என்றல்லாம் நான் சொல்ல வில்லை – கட்டுரையில் உள்ள கருத்து பிராமனதுடன் ஒப்பவில்லை என்றே பதில் வாதங்கள் உண்டாகின

    ரிக் வேத சம்ஹிதை (உபநிஷத் அல்ல) வேத சம்ஹிதயிலேயே உள்ள மேற்கோள்கள்
    நாராயநாத் பிரம்ம ஜாயதே :நாராயநாத் ருத்ரோ ஜாயதே
    தத் விஷ்ணோ பரமம் பதம் விஷ்நோர்யத் பரமம் பதம்
    இந்த நாராயண் என்ற நாமம் ருட்ரனையே குறிக்கும் என்று சொல்ல முடியாதபடி “நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹே தன்னோ விஷ்ணுப் ப்ரசோதயாத்” என்று விஷ்ணு காயத்ரியும் நாராயண என்ற பதத்தில் உள்ள “ண” என்ற ரூடி பதம் தடுத்து விடுகிறது

    இப்படி இருக்கையில் கட்டுரை ஆசிரியர் எழுதியது வேதத்திற்கு பிரதிகூலமாக இருக்கிறதே என்று தான் கேள்விகள்?

    தனது சரியான கொள்கையில் ஸ்திரமாக இருந்தால் சமயவாதி என்று பட்டம் கட்டி விடுகிறோம் – இது அப்படியே காங்கிரஸ் கூறும் “non secular” வாதம் போல் உள்ளது அதாவது முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் உண்மையான மதத்தவர்கள் ஹிந்துக்கள் அப்படி இல்லை என்று கூறினால் மட்டுமே “secular”

    அப்படி என்றால்

    vyasar, parasarar, bheeshar (because he said eko vishnur mahat bhootam ), nayanmaargal, gopala krishna bharathi, azhwars, jeeyars, aadhinams, raamanujar and his disciples , madvar, chaitanyar, bhakta meera, annamayya, bhakta ramadoss, narsi metha (he only asked to recite the name of Rama in Vaishnava janatho) kabir – all will become “சமயவாதி”

    எல்லா சமயமும் OK என்ற புது சமயவாததை முன் வைக்காமல் இருக்கிற சமயங்களின் நல்லவற்றை கடை பிடிக்க முயல்வோம்

  77. நண்பர் சராங்,

    //எல்லா சமயமும் OK என்ற புது சமயவாததை முன் வைக்காமல் இருக்கிற சமயங்களின் நல்லவற்றை கடை பிடிக்க முயல்வோம்//

    எல்லா சமயமும் OK என்ற கருத்து – இது புதிய கருத்து அல்ல.பெரும்பான்மையான இந்துக்கள் பல்லாயிரம் வருடங்களாக பின்பற்றி வரும் கருத்துதான்,

    எல்லா, மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களையும் வரவேற்கும் ஒரே மதமாக் இந்து மதம் இருக்கிறது. பிற மதத்தினர் கடவுளாக வழிபடுபவர்களை, தானும் வழிபடக் கூடியவன் இந்து மட்டும் தான்.

    உலகில் உள்ள மதங்கள் எல்லாவற்றையும் தாய் உணர்ச்சியுடன் நோக்குவதே இந்து மதம். நான் இயேசு கிறிஸ்துவை வழி பட தயார், என்று பல முறை இதே தளத்திலே எழுதி இருக்கிறேன். அதை சிலர் எதிர்த்த போதிலும், சிலர் அதில் தவறு இல்லை என்றும் கூறி உள்ளனர்.

    கலந்து பழகுவது, பிற மத விழாக்களில் கலந்து கொள்வது, வெறுப்பிலாமல் (அத்வேஷ்டா) இருப்பது, இவை நாகரீகத்தின் அடிப்படை பண்புகள். பிற மதக் கடவுள்களை மரியாதை செய்வதும், நல்லிணக்க அடிப்படையில் வழி பாடு செய்வதும், நாகரீக சமுதாயம் அமைக்க உதவும், நான் முன்பு முரட்டு சிந்தனை கூடாது என்பதை விளக்கி எழுதிய பின்னூட்டத்தை இங்கே மீள் பதிவு செய்கிறோம்.

    //The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //

    இந்தக் கருத்து, மேலோட்டமாகப் பார்த்தால் இதில் என்ன தவறு என்பது போல தோன்றும். உண்மையில் இந்தக் கருத்தை உடைய பலரும் அமைதியான வாழ்க்கையை நடத்தக் கூடும். அவர்கள் வாழ்க்கை முழுவதும், அமைதியாகவே வாழ்ந்து முடிக்கக் கூடும்.

    அனால் இந்தக் கருத்தை அவர்கள் பிறருக்கு அறிமுகப் படுத்தி விட்டுப் போகிறார்கள்.

    நூறு வருடம் கழித்து இந்தக் கருத்தைப் படிக்கும் ஒருவர், அந்தக் கருத்தை ஆழமாக நம்பும் ஒருவர், பிற மதத்தவர் வணங்கும் தெய்வங்களை இகழ்சியிடன் நோக்க ஆரம்பிப்பார். அது வார்த்தையிலும் வெளி வரும். சகிப்புத் தன்மை இல்லாமல் போய் வெறுப்பு உணர்வு அதிகரிக்கும். அதனால் மோதல், சண்டைகள், இரத்த வெறி உருவாகும்.

    இப்போதே பல சுவிசெகர்கள் தங்களுடைய கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள்கள் எல்லாம் போய் என்பதை தங்கள் பிரச்சாரத்தின் முதல் பகுதியாக முக்கிய பகுதியாக வைக்கின்றனர்.

    //The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //

    இந்தக் கருத்து ஒரு உறங்கும் எரிமலை ( Dormant Volcano )போன்றது. எப்போது நெருப்புக் குழம்பை கக்கும் என்று சொல்ல முடியாது. இந்தக் கருத்து பாம்பின் முட்டையை போனறது. வெளியே பார்த்தால் உள்ளே இருக்கும் விஷம் தெரியாது.

    நான் இப்படி எழுதுவது சிலருக்கு மன வருத்தத்தை உண்டு பண்ணக் கூடும். ஆனால் மனிதத்தின் நலம் கருதி இந்த விளக்கத்தை அளிக்க வேண்டி உள்ளோம்.

    //The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //

    இந்தக் கருத்தை எந்த பிரிவினர் பின்பற்றினாலும் அது மனிதத்துக்கு கெடுதலே.

    மனிதத்தின் புனிதம் கருதி நான் பரம சிவன், உமை, விநாயகர், இராமர், seethai, இலக்குவன், அனுமன், குகன், ஜடாயு….. உள்ளிட்ட இந்துக்கள் கடவுளாக கருதுபவர்களையும், அவர்களோடு சேர்த்து கிறிஸ்தவர்கள் கடவுளாக கருதும் இயேசு கிறிஸ்து, மேரி மாதா அகியவரியும் மனப் பூர்வமாக மரியாதை செய்ய தயார். அதைப் போல இசுலாமியரோடு தொழவும் , நோன்பு இருக்கவும் தயார்.

    அதே நேரம் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் தர வேண்டும், இதைக் கூறுவது அடுத்தவரைப் புண்படுத்த அல்ல. உண்மையை அறியும் பாதையை அடைக்காதீர்கள் என்று சொல்ல.

    அப்படி என் கடவுள் மட்டும் தான் உண்மையான கடவுள் என்று அடாவடி செய்பவர்கள், முதலில் உங்கள் கடவுள் இருப்பதை நிரூபணம் செய்யுங்கள். நிரூபணம் இல்லை – வெறும் நம்பிக்கைதான்- என்றால்
    அமைதியாக வழிபட வேண்டும்.

  78. திருச்சிக் காரன் அவர்களே,

    //
    நான் இப்படி எழுதுவது சிலருக்கு மன வருத்தத்தை உண்டு பண்ணக் கூடும். ஆனால் மனிதத்தின் நலம் கருதி இந்த விளக்கத்தை அளிக்க வேண்டி உள்ளோம்.
    //

    அப்படியானால் என்னையும், சாரன்கையும் மாத்திரம் ஏன் “மற்றவர்கள் மனம் புண்படாமல் எழுதுங்கள்” என்று சொல்கிறார்களே?

    //
    மனிதத்தின் புனிதம் கருதி நான் பரம சிவன், உமை, விநாயகர், இராமர், seethai, இலக்குவன், அனுமன், குகன், ஜடாயு….. உள்ளிட்ட இந்துக்கள் கடவுளாக கருதுபவர்களையும், அவர்களோடு சேர்த்து கிறிஸ்தவர்கள் கடவுளாக கருதும் இயேசு கிறிஸ்து, மேரி மாதா அகியவரியும் மனப் பூர்வமாக மரியாதை செய்ய தயார். அதைப் போல இசுலாமியரோடு தொழவும் , நோன்பு இருக்கவும் தயார்.
    //

    தாராளமாகப் பண்ணலாம். என்ன செய்தாலும் “ஹிந்து” என்று தங்களைச் சொல்லிக் கொள்ளலாம். இதை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கோ, உங்கள் வீட்டின்மீது கல் எரிவதற்கோ, உங்கள் கோயில்களை உடைப்பதற்கோ நானோ, வேறு யாரோ முற்பட்டால் உங்களுக்கு மனப்பூர்வமாக support செய்யத் தயார். இக்கொள்கையையே தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்.

    //
    அதே நேரம் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் தர வேண்டும், இதைக் கூறுவது அடுத்தவரைப் புண்படுத்த அல்ல. உண்மையை அறியும் பாதையை அடைக்காதீர்கள் என்று சொல்ல.
    //

    தாராளமாகச் செய்யுங்கள், தடுக்கவில்லை. சிலர், “வேதத்தில் அணுகுண்டு செல்லப்பட்டுள்ளதா, பிளாஸ்டிக் சர்ஜரி சொல்லப்பட்டிருக்கிறதா, darwin theory சொல்லப்பட்டிருக்கிறதா, string theory, theory of relativity சொல்லப்பட்டிருக்கிறதா” என்றெல்லாமும் ஆராய்ச்சி செய்வதை நீங்கள் தடுக்காதது போல, “வேதத்தில் பரம்பொருள் யார்?” என்ற எங்கள் ஆராய்ச்சியையும் தடை செய்யாதீர்கள், சென்சொர் பண்ணாதீர்கள்.

    //
    அப்படி என் கடவுள் மட்டும் தான் உண்மையான கடவுள் என்று அடாவடி செய்பவர்கள், முதலில் உங்கள் கடவுள் இருப்பதை நிரூபணம் செய்யுங்கள்.
    //

    கடவுளை பிரத்தியட்சம், அனுமானம் (perception, inference) ஆகிய கருவிகளை மட்டும் வைத்துக் கொண்டு நிரூபணம் பண்ண முடியாது என்பதை வைதீகர்கள் அனைவரும் ஏற்பர். “கடவுளை நிரூபணம் பண்ண மூன்றாவதாக வேதம் தேவை, ஆகையால் இது எங்கள் நம்பிக்கையே” என்பதையும் ஆமோதிப்பர்.

    //
    நிரூபணம் இல்லை – வெறும் நம்பிக்கைதான்- என்றால்
    அமைதியாக வழிபட வேண்டும்.
    //

    அப்படி அமைதியாகத் தான் இந்துக்கள் எல்லாரும் வழிப்பட்டோம்; வழிபடுகின்றோம்; வழிபடுவோம். எந்நாளும் கத்தியைத்/துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு கிரித்தவர்கலையோ இசுலாமியர்கலையோ சண்டைக்கு இழுத்தது இல்லை.

    Arguments are just a bookshed battle. Not a bloodshed battle. Please understand that. We can argue about the nature of God in the vedas and still be very good friends with other religionists. You don’t have to worship with them to be friends.

    (edited and published)

  79. எனது கடைசி மறுமொழி.

    திரு.சாரங் அவர்களுக்கு,
    ஒரு சமயத்தைப் பற்றி விடாப்படியாகப் பேசினால் ‘சமயவாதி’ என்று யாரும் சொல்வதில்லை. நீங்களும்தான் வைணவத்தைப் பற்றிமட்டும் பேசுகிறீர்கள், உங்களை யாராவது சமயவாதி என்கிறார்களா? உமாசங்கர் அய்யாவும்தான் தொடக்கத்திலிருந்து சைவத்தைப் பற்றிமட்டும் பேசினார்.. அதனால் அவரை சமயவாதி என்று நாம் குறிப்பிடுவதில்லை! திரு.கந்தர்வன் ஸ்ரீ வைஷ்ணவத்தைப் பற்றியும், மற்ற வைணவ சம்பிரதாயங்களைப் பற்றிமட்டும் பேசியிருந்தால் யாரும் அவரை ‘சமயவாதி’ என்று அழைக்கமாட்டார்கள். ஆனால் “ஆதி சங்கரர் வைணவத்தைமட்டும்தான் கற்பித்தார், அவருக்குப் பின்வந்த சங்கராச்சாரியார்களும் அத்வைதிகளும்தான் அதை திரித்து ஷன்மதமாக ஆக்கிவிட்டனர்” என்று திரு.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் கூறியதாக திரு.கந்தர்வன் கூறியது கண்டிக்கத் தக்கதே! ஒரு உதாரணம் சொல்கிறேன்:- திரு.கந்தர்வன் அவர்களின் முதல் மறுமொழியிலிருந்து சில மேற்கோள்களைக் காட்டுகிறேன்:-

    //ஏனென்றால் இந்நூல்களுக்குத் தான் பண்டைய அத்வைதிகள் (அதாவது 13-ஆம் நூற்றாண்டு வரையிலான அத்வைத ஆசார்யர்கள்) வார்த்திகைகளும், டீகைகளும் எழுதியுள்ளனர். அத்வைதக் கொள்கையைக் கண்டித்த தவித்த, விசிஷ்டாத்வைத ஆசாரியார்களாலும் இவை மேற்கோள் எடுக்கப்பட்டவை. மேலும் இந்நூல்களில் தான் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் காணப்படா. பிற்காலத்தில், அதாவது 14, 15 – ஆம் நூற்றாண்டுகளில் வந்த சாயணர், மாதவாசாரியார் (த்வைத மத மத்வாசாரியாருடன் குழப்பவேண்டாம். Spelling-இல் உள்ள வித்தியாசத்தை கவனிக்கவும்), சங்கரானந்தர், அப்பைய தீட்சிதர், ஆகியோர் ஆதி சங்கரருடைய நூல்களுக்கு முரணாகச் சைவ மதத்தையும் அத்வைதத்தையும் ஒன்று சேர்க்க ஆரம்பித்தனர். இவர்கள் காலத்தில் இருந்தவர்களும், இவர்களுக்கும் பின் வந்தவர்கலுமே அரசியல் நோக்கத்துடன் ஆதி சங்கரர் பெயரில் விஷ்ணுவை த்வேஷிக்கும் நூல்களான சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி போன்ற பல சைவ, சாக்த, துதிநூல்களை இயற்றி, நான்கு (அல்லது ஐந்து?) மடங்களை ஸ்தாபித்து, அவைகளில் சந்திரமௌளீஸ்வர, காமாட்சி, லலிதா சஹஸ்ரநாம பூஜையையே பிரதானமாகச் செய்து வந்தனர். “சூரியனாலும் ஒளிவிடமுடியா விஷ்ணுவின் பரம பதம்” என்று கீதாபாஷ்யத்தில் சங்கரர் சொன்னதற்கு முரணாக “சூரியனைப் பரதேய்வமாக வழிபடும் சௌர மதத்தையும் ஸ்தாபித்தார்” என்றும், “உருத்திரர்க்கு வரம் அளித்து முருகனாக உருவெடுத்தார் சனத்குமார ரிஷி” என்று சூத்ரபாஷ்யத்தில் சங்கரர் சொன்னதற்கு முரணாக “கௌமார மதம் ஸ்தாபித்தார்” என்றும் கூறி வந்தனர்.//

    இதில் எவ்வளவு முரண்பாடு உள்ளது என்று சற்று கவனிக்கவும்.

    அதாவது, 13- ஆம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த அத்வைதிகளுக்கும் சங்கராசாரியர்களும் “சங்கரர் கூறியதுபோல வைணவத்தைமட்டும்”
    கற்பித்தனர், சங்கரருடன் முரண்பாடு இல்லை என்றும், அவர்களுக்குப்பின் வந்தவர்களான சங்கரானந்தர், அப்பையா தீட்சிதர் போன்றவர்கள் ‘அரசியல்’ நோக்குடன் சங்கரர் கூறியதையே மாற்றிவிட்டனர் என்று கூறுகிறார். அப்படியென்றால், 13- ஆம் நூற்றாண்டில் மாதவீய வித்யாரண்யர் எழுதிய ‘சங்கர திக்விஜயம்’ உம் முரண்பாடில்லாதது, ஏற்கத்தக்கதுதானே? இல்லை என்கிறாரே திரு.கந்தர்வன்! மேலும், அப்படி “விஷ்ணுமட்டும்தான் மேலான தெய்வம், அவனைமட்டும் வணங்கினால் போதும்” என்று சங்கரர் கூறியிருந்தால், ஏன் இராமானுஜர் “விஷ்ணுதான் பரதெய்வம்” என்று வாதாடவேண்டியிருந்தது? இராமானுஜரின் காலம் 1017-௧௧௩௭. அப்படியென்றால், எப்படி இராமானுஜர் அப்போதிருந்த அத்வைதிகளுடன் “விஷ்ணு சர்வோத்தமத்தை” பற்றி வாதிட்டார்?
    மத்வரின் காலம் 1238-1317. அப்படியிருக்கும்போது ஏன் அவர் “ஹரி சர்வோத்தம, வாயு ஜீவோத்தம” என்று நிலைநாட்டவேண்டும்? வேதாந்த தத்துவப்படி தான் எதிர்த்த சங்கரரே “விஷ்ணு மட்டும்தான் சர்வோத்தமன்” என்று கூறியிருந்தால், ஏன் மத்வர் “சங்கரரே சொல்லிவிட்டாரே, நாம் துவைதத்தை மட்டும் பரப்பினால் போதும், யார் பெரியவர் என்று சொல்லத் தேவையில்லை” என்று நினைக்காமல் ஏன் வைணவத்தை நிலைநாட்டினார்?? இதையே, மத்வ சித்தாந்தத்தில் தன்னிகரற்ற மகானாக உதித்த ஸ்ரீ வியாசராஜரும் தனது பிராமேய ஸ்லோகத்தில் மத்வ சம்பிரதாயத்தின் ஒன்பது தத்துவங்களைப் பற்றிக் கூறுகிறார்:-

    Sri manmadhvamate hariH parataraH satyaM jagat tattvatO
    BedO jIvagaNAH harEranucharAH nIchOcchaBAvaMgatAH |
    muktirnaijasuKAnuBUtiramalABaktiScha tatsAdhanaM
    hyAkSAditritayaM pramANamaKilAmnAyaikavEdyO hariH ||

    The nine tenets and their translation would be

    1. hariH parataraH : Hari, or Lord Vishnu is supreme
    2. satyaM jagat : The world is real
    3. tattvataH BedaH : The differences are real
    4. jIvagaNAH harEranucharAH : The various classes of souls are cohorts of Hari
    5. nIchOcchaBAvaMgatAH : They reach different states (lower or superior) ultimately
    6. muktirnaijasuKAnuBUtiH : Mukti is the experience of one’s own nature
    7. amalABaktiScha tatsAdhanaM : Mukti is achieved by pure devotion
    8. AkSAditritayaM pramANam : Observation and others are the sources of knowledge
    9. aKilAmnAyaikavEdyO hariH : It is Hari alone who is praised in the Vedas

    அதாவது, திரு.கந்தர்வன் கூறுவது எப்படியுள்ளதேன்றால் “மாதவீய வித்யாரண்யர், தத்தாத்ரேயரின் அவதாரம் என்று போற்றப்பட்ட நரசிம்ம பாரதி, காஞ்சி மகாபெரியவர், சுவாமி விவேகானந்தர் போன்றவர்களெல்லாம் ‘மடையர்கள்’, திரு.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் மட்டுமே முக்காலமும் உணர்ந்த ஞானி” என்பதுபோல உள்ளது.

    மேலும், அப்பையா தீட்சிதர் போன்ற மகான்கள் ‘அரசியல்’ நோக்குடன் நடந்துகொண்டனர் என்று சொல்வது மிக மிக அபத்தமானதாகும். இன்று மத்வ சம்பிரதாயத்தை ஆராய்ச்சி செய்த டாக்டர். பீ.என்.கே.ஷர்மா போன்ற ஆராய்ச்சியாளரான திரு.அம்மன் சத்தியநாதன் என்பவர் “ராகவேந்திர மகிமை”, “நவநிதி நல்கும் நவபிருந்தாவனம்” போன்ற பிரபலமான நூல்களை எழுதியுள்ளார். “விஜயீந்திர விஜயம்- முதல் பாகம்” என்ற நூலில், அப்பைய தீட்சிதரை அறிமுகப் படுத்தும்போது ‘ஸ்ரீமான் அப்பைய தீட்சிதர் என்ற மகாபண்டிதர்’ என்றுதான் அறிமுகம் செய்கிறார். திரு.கந்தர்வன் சொன்ன ‘வைணவ அத்வைதியான’ மதுசூதன சரஸ்வதியைக் கூட ‘ஸ்ரீ, ஸ்ரீமான்’ என்று மரியாதையாக குறிப்பிடவில்லை! திரு.அம்மன் சத்தியநாதன் அதே நூலில் “பக்திஎன்றால் எப்படியிருக்கவேண்டுமென்று மற்றவர்கள் உணரும்வண்ணம் நடந்து கொண்டார் அப்பைய தீட்சிதர்” என்கிறார். அதேபோல, அவர் எழுதிய ‘ராகவேந்திர மகிமை- முதல் பாகம்’ என்ற நூலில் “மதுரையை திருமலை நாயக்கர் என்ற மன்னன் ஆண்டுவந்தான். மகாபண்டிதரான அப்பைய தீட்சிதரை போலவே அவரது பேரனான நீலகண்ட தீட்சிதரும் சாஸ்திர ஞானத்தில் சிறந்து விளங்கினார். ராகவேந்திரர் மதுரை வந்தபொழுது அரச சபையில் நீலகண்ட தீட்சிதருடன் மீமாம்சை பற்றி வாதாடினார். இறுதியில் நீலகண்ட தீட்சிதர் ராகவேந்திரரின் ஞானத்தைக் கண்டு அதிசயித்தார். அவரது இலக்கியங்களை பார்க்கவேண்டுமென்று விரும்பினார்” என்றும் எழுதியுள்ளார்.

    மேலும், துவைத தளத்திலிருந்து ஒரு பகுதியை தருகிறேன்:-

    “Sri Appayya Dikshita was an extraordinary scholar with profound mastery over shruti and smruti. He had been profusely honored by the ruler of Tanjore and was considered an AsthAna pandit (Scholar of the king’s court). He was propagating the doctrine of Shaiva-advaita, which added the concept of Shiva sarvottamatva to advaita. Sri VijayIndra tIrtha invited him to the maTha and discussed several doctrinal issues. This was the beginning of a long and cordial interaction between Sri VijayIndra tIrtha and Sri Appayya Dikshita. Sri Appayya Dikshita tried his level best in hundreds of ways to put down dvaita and make Sri VijayIndra tIrtha accept defeat. But Sri VijayIndra tIrtha answered every one of his attacks with successful counter attacks and made Sri Appayya Dikshita accept defeat every single time. In spite of the lively discussions and debates, the atmosphere remained very cordial and scholarly in nature. One such incident is outlined below as an illustration.

    It is very well known and established that every word in every language connotes Sri Hari (called sarva-shabda vAchatva in shAstra). Appayya Dikshita tried to establish this with Shiva also, but Sri VijayIndra tIrtha proved that this was not possible, using the word ‘Narayana’ as an example. Inspired by this event, Sri VijayIndra tIrtha immediately composed a beautiful work called “NarayanashabdhArtha nirvachanam” outlining more than a hundred meaning for the word ‘Narayana’.

    Incidentally, Appayya Dikshita is the vile creature who cast a lot of aspersions on Acharya Madhva, accusing him of quoting imaginary or non-existent references. One shudders to think of the havoc that he would have caused if a great savant like VijayIndra tIrth had not been there to counter him and defeat him at every turn. ”

    https://www.gururaghavendra1.org/~srsmutt/param/vijayeendra.htm

    இதில் தத்துவரீதியாக அப்பையா தீட்சிதரை எதிர்த்தாலும், அவரை அவமதிக்கவில்லை என்பதை கவனிக்கவும்.

    மேலும், விக்கிபீடியா விலிருந்து சிலவற்றை தருகிறேன்:-

    “As an advaitin, Dikshitar saw no differences between the different manifestations of the Supreme Absolute. Partly because of Vaishnavite attacks on Shaivism during the previous century, one of his missions was a reconciliation of creeds, cults, and philosophy. He did not think that rival interpretations of the Vedas and Puranas were entirely in the wrong, asking: Who can prevent different interpretations when the Brahma Sutras themselves are capable of different meanings?

    He wrote the Chatur-mata-sara to illustrate the philosophical thoughts of the four prominent schools of interpretation of Brahma sutras. The Naya-manjari deals with advaita, the Naya-mani-mala with Srikanta mata, the Naya-mayukha-malika with Ramanuja’s philosophy, and the Naya-muktavali with Madhva’s philosophy. His remarkable catholicity of outlook, his thoroughness in writing, his impartiality, his unerring sense of values, and his concern for truth are all so evident in these writings that the Vaishnavas have adopted the Naya-Mayukha-Malika as their manual for study, and the Madhvas the Naya-Muktavali.”

    https://en.wikipedia.org/wiki/Appayya_Dikshitar

    அத்வைதத்துடன் சிவ தத்துவத்தை அப்பைய தீட்சிதர் சேர்க்கவில்லை. அவருக்கு முன்னாலேயே 1270- இல் ஸ்ரிகாந்தர் எழுதிய பிரம்ம சூத்திர பாஷியத்தில் ‘சைவ விசிஷ்டாத்வைதம்’ என்ற தத்துவத்தை நிலைநாட்டிவிட்டார்!

    எனவே, ஒரு சமயத்தைப் பற்றி மட்டும் பேசினால் ‘சமயவாதி’ என்று பொருளில்லை. ஆனால், திரு.கந்தர்வன் “சங்கரரும் வைனவர்தான்”, “இவர் வைணவர்”, “அவர் வைணவர்” என்று பிரிவினையை உண்டாக்குகிறார் என்று உங்களுக்குத் தெரியவில்லையா?

    //‘கம்பன் வைணவன்; சமரசவாதி அல்ல’ என்று பறைசாற்றுகிறார்கள் உ. வே. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் உள்ளிட்ட சிலர். அச்சுவடியை இங்கு பதிவிறக்கம் செய்யலாம் – https://www.tamilheritage.org/old/text/ebook/kamban.pdf//

    இது திரு.கந்தர்வன் “கம்பன் கண்ட சிவ-ராம தரிசனம்” என்னும் திரு.ஜடாயு எழுதிய கட்டுரைக்கு எழுதிய ஒரு மறுமொழி! சற்று சிந்தியுங்கள்:- கம்பர் வைணவராக இருந்தாலென்ன, சைவராக இருந்தாலென்ன? நமக்குத் தேவை அவர் எழுதிய அரும் பொக்கிஷம் மட்டுமே, அவரது சமயமில்லை!

    நாயன்மார்கள், ஆழ்வார்கள் இருதரப்பினருமே பக்தியினால்தான் பாடினார்கள்! நான்கு வர்ணத்தினரும் (தாழ்த்தப்பட்டவரும்) இரு தரப்பிலும் இருந்தனர். ஆனால் திரு.கந்தர்வன், திரு.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் சொல்வது எப்படியுள்ளதேன்றால்: ஆழ்வார்கள் வேதத்திற்கு உகந்தாற்போல் பாடினார்கள் எனவும், நாயன்மார்கள் வெறும் உணர்ச்சிபூர்வமானவர்கள் (sentimental idiots) என்பதுபோலவும் உள்ளது. இதுதான் நீங்கள் சொன்ன ‘இந்து ஒற்றுமையா’?

    அதனால்தான் நான் ஒரு கேள்வி கேட்டேன்:- சைவர்கள் “சிவன் விஷ்ணுவைவிட உயர்ந்தவர்” என்று சொல்வது ஸ்ரீ வைஷ்ணவத்தை புண்படுத்துகிறது என்று சொல்லும் திரு.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் போன்றவர்கள், தசாவதாரம் போன்ற மானங்கெட்ட திரைப்படம் மூலம் ஸ்ரீ வைஷ்ணவர்களை கேலிக் கூத்துக்கு உண்டாக்கின கமலகாசன் போன்ற வெக்கம் கேட்டவர்களை கண்டித்தாரா? இல்லை அவரும் பிறப்பால் ஸ்ரீ வைஷ்ணவந்தானே என்று விட்டுவிட்டாரா?? நான் சொல்வது உங்களுக்கு புண்படும்படியாக இருந்தால் என்னை மன்னிக்கவும். நான் ஸ்ரீ வைஷ்ணவன் அல்ல, ஆனால் தசாவதாரம் பார்த்தபொழுது என் ஆத்திரத்தை என்னால் கட்டுப் படுத்தமுடியவில்லை! இராமானுஜர் எப்படி சைவத்தை எதிர்த்தார் என்று காட்டிய ‘உலகநாயகன்’ ஏன் உறங்காவில்லிதாசன் என்ற தாழ்த்தப்பட்டவரை சீடனாக ஏற்றதைக் காட்டவில்லை? ஏன் இராமானுஜர் முதன்முறையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப்ரவேசம் செய்ததைக் காட்டவில்லை?? ‘திராவிட மாயை’ மக்களுக்கு நீங்கிவிடும் என்ற அச்சமா????

    சாரங் சார், இன்று இந்துமதம் நடந்த தவறுகளை சீர்திருத்திக் கொண்டு முன்னேற்றத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது! ‘ஸ்ரீ இராமானுஜர்’ என்று திரு.சுகி சுப்பரமணியம் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய திரு.சுகி சிவம் அவர்கள்:- “சைவரான என் தந்தை எப்படி இராமானுஜரைப் பற்றி புத்தகம் எழுதினர் என்று பலர் கேட்டார்கள். எல்லா தங்கமும் ஒன்றுதான், இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று கூறமுடியாது” என்று எழுதியுள்ளார். அதேபோல, ஸ்ரீ வைஷ்ணவராகப் பிறந்து திரு.இந்திரா சவுந்தரராஜன் சித்தர்களைப் பற்றியும் சைவ சித்தாந்தத்தைப் பற்றியும் எவ்வளவு ஆராய்ச்சி செய்துள்ளார்! தூர்தரிஷன் பொதிகை சேனலில் சனிக்கிழமைதோறும் ஒளிபரப்பாகும் ‘நாயன்மார்களை நாடுவோம்’ என்ற நிகழ்ச்சியில் பேசுகிறார். இவ்விருவரைப் போல நாம் ஏன் இருக்ககூடாது? இல்லை, ஆராய்ச்சிதான் செய்யவேண்டுமென்றால் அதற்க்கும் நல்ல தலைப்புகள் உள்ளன:-

    -> வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் இருக்கும் அறிவியல் தொழில்நுட்பம் பற்றி ஆராயலாம்.
    -> இன்று வளர்ந்ததாக நாம் சொல்லும் ஐரோப்பியர்கள் குகைகளில் உடலை சாயம் பூசிக்கொண்டு கலாசாரம் இல்லாமல் வாழ்ந்தபோது, நம்நாட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற நவீன அறுவைசிகிச்சை, மருத்துவம் கற்பித்த ஆசாரியர்கள் சுஸ்ருதர் மற்றும் சாரகர் பற்றி ஆராயலாம்.
    ->பவுதயானர், ஆரியபட்டர், பாஸ்கராச்சரியார் செய்த வைதீக கணித முறையை ஆராயலாம்.
    ->இன்று பலரால் ‘கேலிக்கூத்து’ செய்யப்படும் ஜோதிடம் பற்றி ஆராய்ந்து ஜோதிடத்தை சீர்படுத்தி அதன்மீது படிந்திருக்கும் பழியை அகற்றலாம்.
    ->சாயணாசாரியர், வராஹமிஹிரர் போன்றவர்கள் செய்த சாதனைகளை ஆராயலாம்.
    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!

    இவ்வெல்லாவற்றையும் விடுத்து, “யார் சைவர், யார் வைணவர்?” என்பதுதான் இந்துக்களுக்கு இன்று மிகவும் அவசியமான ஆராய்ச்சியா?? திரு.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் பெரிய பாகவதராக இருக்கலாம், திரு.வித்தியாநிதி சொன்னதுபோல அவர் நிறைய சாதனைகளை செய்திருக்கலாம்! IAS பதவியை நிராகரித்து, ஸ்ரீ வைஷ்ணவத்திர்க்கு தொண்டு செய்பவராக இருக்கலாம்… அந்த சேவைக்கு எனது கோடானுகோடி நமஸ்காரங்கள். ஆனால் இப்படி மற்ற சமயங்கள் மீது காழ்புணர்ச்சி வேண்டாமே!

    சற்று சிந்திப்பீர். நான் எழுதியவை உங்களை நிச்சயம் பாதித்திருக்கும், புண்படுத்தியிருக்கும். இதற்க்கு இப்பொழுதே, இங்கேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நான் பார்த்தவரை நீங்கள் சொன்னால் ஏற்கிறீர்கள், அதனால் தான் உங்களிடம் இவற்றைச் சொன்னேன்.. திரு.கந்தர்வனிடம் சொல்லி எந்த பயனும் இருக்கப்போவதில்லை. ஏனெனில், அவர் சொன்னதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்கிறார்!
    சற்று புரிந்துகொள்ளுங்கள்…

    விட்டுக் கொடுப்பது மனித இயல்பு மட்டுமில்லை, தெய்வங்களும் செய்துள்ளனர். மாகாபாரதத்தில் பதிமூன்றாம் பர்வமான அனுசான பர்வத்தில், கிருஷ்ணன் ‘சிவ சகஸ்ரநாமத்தை’ பாடுகிறான். சிவன் பத்ம புராணத்தில் ‘விஷ்ணு சகஸ்ரநாமத்தை’ பாடுகிறான். நம் ஆராதனைக்குரிய தெய்வங்களே போட்டி, பொறாமையில்லாமல் விட்டுக் கொடுத்துக் கொள்ளும்போழுது, அவர்கள் பெயர்களில் நாம் போட்டி போடுவது மகாபாதகம் இல்லையா?

    உமாசங்கர் அய்யா, நீங்கள் சொன்ன ஒன்றையும் நான் நிராகரிக்கிறேன். அதாவது, “நடைமுறையில், வேதம் படிக்க அனைத்து சாதியினருக்கும் மகளிருக்கும் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், வேதப்பிரமாணம் இருந்தால்மட்டுமே வாதத்துக்கு ஏற்றுக்கொள்வேன் என்று கூறினால், பெரும்பாலான இந்துக்களின் நிலை என்ன என்று சிந்திக்காமல் எழுதுகிறீர்கள்.” என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நான்காம் வர்ணத்தை சார்ந்தவர்களும், மகளிரும், அவர்னர்களும் வேதத்தை படித்ததாகவும், வாதத்தில் ஈடுபட்டதாகவும் பல தாழ்த்தப்பட்டவர்களும் அந்தன/முனிவராக உயர்ந்ததாகவும் வேதங்கள் மற்றும் புராண/இதிகாசங்களிலேயே குறிப்புகள் உள்ளன! உதாரணங்கள்:- விஸ்வாமித்திரர் (ஷத்திரியராகப் பிறந்து அந்த்னரானார்), வியாசர் (மீன்காரியின் மகன்- பிறகு வேதத்தை பிரித்த மகாபாரதத்தை இயற்றிய பெருமான்), மதங்கர் (பிறப்பால் அவர்ணர், பிறகு அந்தணர்), இன்னும் பல!

    பெண்கள் வேதம் கற்றனர் என்பதற்கு:-
    -> யஞவல்கிய முனிவர் தனது மனைவி மைத்தரேயியுடன் செய்த வாதம்.
    -> மண்டன மிஷ்ரரின் மனைவி உபய பாரதி ஆதி சங்கரருடன் செய்த வாதம்.

    அதேபோல, “வேதத்திற்குள் இந்து மதத்தை அடக்கிவிடமுடியாது” என்று சொல்வதும் ஏற்கத்தக்கவை அல்ல. எல்லாமே வேதத்திலிருந்துதான் வந்தது எனும்போது, எப்படி சிலவை வேதத்திற்கு வெளியிலிருந்து என்று நாம் சொல்லமுடியும்? வேதம் இல்லையென்றால், இந்து மதத்தில் என்ன இருக்கும்? ஐரோப்பியர்கள் தந்த கணக்குகளை இன்று நாய்கள் கவ்விக் கொண்டுவிட்டன.. வேதங்கள் அபரவுஷ்யமானைவைதான்!

    சைவம், வைணவம் இரண்டுமே வேத மதங்கள்தான்…

    நன்றி, மீண்டும் சந்திப்போம்,
    பாலாஜி!

  80. நண்பர் திருச்சிகாரரே

    நான் எழுதும் பொழுது ஒரு பிழையுடன் எழுதிவிட்டேன்

    //
    //எல்லா சமயமும் OK என்ற புது சமயவாததை முன் வைக்காமல் இருக்கிற சமயங்களின் நல்லவற்றை கடை பிடிக்க முயல்வோம்//

    எல்லா சமயமும் OK என்ற கருத்து – இது புதிய கருத்து அல்ல.பெரும்பான்மையான இந்துக்கள் பல்லாயிரம் வருடங்களாக பின்பற்றி வரும் கருத்துதான்,
    //

    இதை இப்பொழுது படித்து பாருங்கள்
    எல்லா சமயமும் கட்டாயம் OK வாக தான் இருக்க வேண்டும் வாக தான என்ற புது சமயவாததை முன் வைக்காமல் இருக்கிற சமயங்களின் நல்லவற்றை கடை பிடிக்க முயல்வோம்

    please read what i am trying to say with some diligence to understand what i am trying to mean – i say this not because you do not read but because i do not have the necessarry capacity to articulate powerfully what i want to say

    //The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //

    இது நான் எங்குமே கூறியது இல்லையே – நான் சொல்வது எல்லாம் “worship yours respect others” – ஏன் என்றால் இன்று புதிது புதிதாக “cult” உருவாகி கொண்டு இருக்கிறது எல்லாம் ஓகே என்ற route சரி என்றால் எல்லாவற்றிலும் புகுந்து எழ எனக்கு மற்றும் பல பேருக்கு திராணி இருக்காது

    all roads lead to paris – என்ற வாக்கியம் நமது மதத்திற்கு பொருந்தும் – ஒருவன் வைஷ்ணவனாகவோ சைவனாகவோ இருந்தால் மட்டுமே வீடு பேரு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை – ஏன் என்றல் கடவுளின் கிருபை நிர்ஹெதுகமானது (அவரது இஷ்டம்) என்ற நம்பிக்கைள் வளர்ந்தவன் நான் – அதாவது நான் இன்ன காரியங்களை செய்தேன் ஆதலால் பகவான் எனக்கு மோக்ஷம் தருவார் என்றில்லாமல் – மோக்ஷம் தரவதை அவர் ஒரு எதிர்பார்ப்பையும் இன்றி தருகிறார் என்பது இங்கு சித்தாந்தம்

    பத்ராசல ராமர் ஒரு முசல்மானுக்கு தான் ப்ரத்யக்ஷம் ஆனார், மதுராந்தகம் ஏறி காத்த ராமர் ஒரு கிறிஸ்தவனான ஆங்கிலேய கலக்டருக்கே ப்ரத்யக்ஷம் ஆனார் – பரம பக்தனான ஜடாயுவிற்கு கிடைத்த அதே பேரு ராவணனுக்கு, பூதனைக்கும் கிடைத்தது –

    ததி பாண்டன் என்ற குயவனுக்கு மட்டுமின்றி பானைக்கும் சேர்த்து மோக்ஷம் கொடுத்தவன் கிருஷ்ணன்

    இந்த நிர்ஹெதுக கிருபை என்ற சித்தாந்தம் ஒன்றும் என்னுடையதல்ல – பூருவாச்சர்யர்கள் இது போன்ற சம்பவத்தின் மூலமாகவும், வேத இதிஹாச, பாசுர பிரமானதுடனும் ஆராய்ந்து கூறியது

    இவ்வண்ணம் இருக்க – என் தெய்வம் தான் உண்மை மற்றதெல்லாம் பொய் என்ற கொள்கை அடிபட்டு போகிறது – ஹிந்துக்களில் எவருக்குமே இந்த கொள்கை கிடையாது – நான் சொல்வதெல்லாம் நான் எனது பூருவாச்சர்யர்கள் காட்டிய வழியில் செல்கிறேன் என்பது மட்டுமே.

    (edited and published)

  81. திரு பாலாஜி அவர்களே,

    சொன்னதைத் திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என்று நினைக்காதீர். சற்று பொறுமையுடன் நான் இப்பொழுது சொன்னது அனைத்தையும் படியுங்கள். உங்களுடைய கேள்விகளுக்கு நான் பொறுமையுடன் விடை கூறி, நான் சொல்ல வந்தவற்றைத் தக்க ஆதாரத்துடன் சொல்கிறேன்.

    முதலில், சங்கர மதங்களைப் பற்றி வம்பாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விட்டேன் முன்பே. தளத்தின் உரிமையாளர்களிடம் முன்பே இதைப் பற்றிக் கூறி, அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு, “வேண்டுமானால் அவ்வாக்கியங்களை delete செய்து விடுங்கள்” என்று கூறி உள்ளேன்.

    நீங்கள் சொல்லியுள்ளவைக்கு இனி பதில் கூறுகிறேன்.

    (1)
    //
    அப்படியென்றால், 13- ஆம் நூற்றாண்டில் மாதவீய வித்யாரண்யர் எழுதிய ‘சங்கர திக்விஜயம்’ உம் முரண்பாடில்லாதது, ஏற்கத்தக்கதுதானே?
    //

    மாதவிய சங்கரவிஜயம் 13-இல் அல்ல, அதற்கு அடுத்த நூற்றாண்டில் தான் எழுதப்பட்டது. சிருங்கேரி சாரதா பீடத்தவர்களும் மற்றைய அத்வைதிகளும் இதைக் கூறியுள்ளனர்.

    https://www.advaita-vedanta.org/avhp/sankara-vijayam.html :

    “The popularity of this work derives from the fame of its author, mAdhava, who is usually identified with vidyAraNya, the 14th century maThAdhipati at Sringeri”

    https://www.sringeri.net/jagadgurus/sri-vidyaranya/biography :

    “At Sringeri, Sri Vidyatirtha attained Mahasamadhi by entering into Lambika Yoga Samadhi and Sri Bharati Krishna Tirtha succeeded him as the 11th Jagadguru of the Sringeri Mutt and reigned from 1333 to 1380 A.D.”

    “At the junior pontiff’s request, Sri Vidyatirtha readily gave Madhava sanyasa diksha in 1331 A.D under the ascetic name of Sri Vidyaranya, in other words, verily a forest of knowledge. Sri Bharati Krishna Tirtha, though younger than Vidyaranya became his senior by virtue of his earlier ordainment into Sanyasa Ashrama and came to be known as the senior Sripada and Vidyaranya the junior.”

    https://en.wikipedia.org/wiki/Jagadguru_of_Sringeri_Sharada_Peetham#Guru_Parampara

    இங்கு வித்யாரண்யர் 1380-1386 வரை தான் (அதாவது 14-ஆம் நூற்றாண்டின் கடைசியில் தான்) பீடாதிபதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

    (2)

    //
    மேலும், அப்படி “விஷ்ணுமட்டும்தான் மேலான தெய்வம், அவனைமட்டும் வணங்கினால் போதும்” என்று சங்கரர் கூறியிருந்தால், ஏன் இராமானுஜர் “விஷ்ணுதான் பரதெய்வம்” என்று வாதாடவேண்டியிருந்தது? இராமானுஜரின் காலம் 1017-௧௧௩௭. அப்படியென்றால், எப்படி இராமானுஜர் அப்போதிருந்த அத்வைதிகளுடன் “விஷ்ணு சர்வோத்தமத்தை” பற்றி வாதிட்டார்?
    //

    ராமானுஜரின் வாதம் அத்வைதிகளின் “௧. உலகம் போய், ஜீவனும் பிரம்மமும் ஒன்று, ௨. வியாவஹாரிகம், பரமார்த்திகம் என்று இருவகை உண்மைகள் உண்டு. ௩. வியாவஹாரிக்க நிலையில் பிரம்மத்திற்கு குணங்கள் இருந்தாலும், பரமார்த்திக நிலையில் பிரம்மத்திற்கு குணம் இல்லை ௪. உயிருடன் இருக்கும்போதே ஜீவன்முக்தி உண்டு” என்பதற்கு எதிராகத் தான்.

    ராமானுஜரின் நூல்களிலோ, அல்லது விசிஷ்டாத்வைத குருபரம்பரை நூல்களிலோ, “அத்வைதிகளின் ஆறு தெய்வங்களை வணங்கும் சித்தாந்தத்தை எதிர்த்தார்” என்று இல்லை.

    இன்னும் சொல்லப்போனால், ராமானுஜருடைய சூத்திர பாஷ்யத்தில் “ஜீவன் இறுதியில் பிரம்மாவின் சத்திய லோகத்திற்கு மேலான ஒரு லோகத்திற்குச் செல்கிறான்” என்றே உள்ளது. ஆதி சங்கரரின் பாஷ்யத்திலோ, ராமானுஜர் சொன்னதைப் போலவே சங்கரர் கூறி, இன்னொன்றும் கூறுகிறார்: “அதாவது, விஷ்ணுவின் பரம பதத்திற்குச் செல்கிறான்” என்று.

    இன்னொன்றை முன்பே சுட்டியிருந்தேன். வேதாந்த தேசிகர் தாத்பரிய சந்திரிகையில் (18.66) கூறுகிறார்:

    “சித்தாந்தத்தில் பல விஷயங்களைத் தவறாகக் கற்பித்த சங்கரர் முதலானோர் கூட நாராயணனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டவர், ‘வேறு தெய்வம் நமக்குச் சரணாகதி ஆகா’ என்று அவர் கூறிய சாரார்தம் அனைவராலும் ஆதரிக்கத்தக்கது”

    என்று. இதன் சமஸ்கிருத மூலம் “Gita Supersite 2.0” என்று கூகிளில் தேடி, அப்பெயருடனேயே உள்ள வலைதளத்தில் காணலாம்.

    ‘அத்வைதம்’ என்பதற்கு அர்த்தம், பரமார்த்திகா நிலையில் ஜீவனும் பிரம்மமும் ஒன்று என்பதே. ஆதி சங்கரரின் பாஷ்யங்கள் படி வியாவஹாரிக்க நிலையில் (அதாவது உலகத்தை உண்மை என்று ஒத்துக்கொள்ளக்கூடிய நிலையில் – ஆங்கிலத்தில் சொல்லப் போனால் empirical நிலையில்) பிரம்மம் சகல வித கல்யாண குணங்களுடன் கூடிய விஷ்ணு அல்லது நாராயணனே. ஈரேழு உலகங்களையும், ஜீவர்கள் ஆகிய பிரம்மா, ருத்ரர், என்று பல தேவதைகளையும், மனிதர்களையும், விலங்குகளையும், ராட்சதர்களையும், அவனே நேரிடையாகவோ, அல்லது மற்ற தேவதைகளை அதிஷ்டித்தோ சிருஷ்டி பண்ணுகிறான் நாராயணன். இப்படி சங்கரர் கீதா பாஷ்யத்தின் அவதரிக்கையிலேயே சொல்கிறார்.

    //
    மத்வரின் காலம் 1238-1317. அப்படியிருக்கும்போது ஏன் அவர் “ஹரி சர்வோத்தம, வாயு ஜீவோத்தம” என்று நிலைநாட்டவேண்டும்? வேதாந்த தத்துவப்படி தான் எதிர்த்த சங்கரரே “விஷ்ணு மட்டும்தான் சர்வோத்தமன்” என்று கூறியிருந்தால், ஏன் மத்வர் “சங்கரரே சொல்லிவிட்டாரே, நாம் துவைதத்தை மட்டும் பரப்பினால் போதும், யார் பெரியவர் என்று சொல்லத் தேவையில்லை” என்று நினைக்காமல் ஏன் வைணவத்தை நிலைநாட்டினார்?
    //

    விஷ்ணு சர்வோத்துவத்துவத்தை மத்வர் சொன்னது “அத்வைதிகள் இதை ஒத்துக் கொள்ளாததால் எழுதுகிறோம்” என்று அவரே சொல்லவில்லை. கருநாடக மாநிலத்தில் அப்பொழுது சைவ மதம் பரவி வந்தமைக்காக அப்படிச் சொல்லியிருக்கலாம்.

    //
    அத்வைதத்துடன் சிவ தத்துவத்தை அப்பைய தீட்சிதர் சேர்க்கவில்லை. அவருக்கு முன்னாலேயே 1270- இல் ஸ்ரிகாந்தர் எழுதிய பிரம்ம சூத்திர பாஷியத்தில் ‘சைவ விசிஷ்டாத்வைதம்’ என்ற தத்துவத்தை நிலைநாட்டிவிட்டார்!
    //

    சைவ விசிஷ்டாத்வைதம் என்று தான் ஸ்ரீகண்ட பாஷ்யத்தில் உள்ளது. அதற்கும் அத்வைதத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஸ்ரீகண்டர் எந்த மடத்தின் அதிபதியாகவும், எந்த மடாசாரியாரின் ஆசாரியர்/சிஷ்யராகவும் இருந்ததாக யாருமே கூறவில்லை.

    நேற்று இன்னொன்றையும் சுட்டிக் காட்டினேன்:

    For further clarification, kindly read the commentary on Gita 7.17-7.23, Gita 9.23-9.26, Gita 13.10, Gita 11.43, 6.47, by Adi Sankaracharya. You can read the English translation of the commentary for free in this page:

    https://www.archive.org/stream/bhagavadgitawith00maharich#page/n7/mode/2up

    (edited and published)

  82. நண்பர் சாரங்கன்,

    // என் தெய்வம் மட்டுமே உண்மை, மற்றவை எல்லாம் பொய்// என்ற கருத்தாக்கம் எந்த அளவுக்கு அமைதியைக் கெடுத்து ஆபத்தை உருவாக்குகிறதோ, அதே போல

    //என் தெய்வம் தான் உயர்ந்த தெய்வம் மற்றவைகள் கொஞ்சம் குறைஞ்ச தெய்வம்// என்று நினைப்பதுவும் அபாயமான காட்டு மிராண்டித் தன்மை தான்.

    இதை கொஞ்சம் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

  83. திரு. கந்தர்வன் அவர்களே,

    //அப்படியானால் என்னையும், சாரன்கையும் மாத்திரம் ஏன் “மற்றவர்கள் மனம் புண்படாமல் எழுதுங்கள்” என்று சொல்கிறார்களே? //

    எங்களின் நோக்கமும், முயற்சியும் நல்லிணக்கம், அமைதி, சமரசம், சகஜமாக பழகுதல் ஆகியவையே. உங்களின் கருத்துக்கள் பிரிவினையை, பூசலை, உருவாக்கி விடக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

    ////மனிதத்தின் புனிதம் கருதி நான் பரம சிவன், உமை, விநாயகர், இராமர், seethai, இலக்குவன், அனுமன், குகன், ஜடாயு….. உள்ளிட்ட இந்துக்கள் கடவுளாக கருதுபவர்களையும், அவர்களோடு சேர்த்து கிறிஸ்தவர்கள் கடவுளாக கருதும் இயேசு கிறிஸ்து, மேரி மாதா அகியவரியும் மனப் பூர்வமாக மரியாதை செய்ய தயார். அதைப் போல இசுலாமியரோடு தொழவும் , நோன்பு இருக்கவும் தயார்.
    ////

    //தாராளமாகப் பண்ணலாம். என்ன செய்தாலும் “ஹிந்து” என்று தங்களைச் சொல்லிக் கொள்ளலாம். இதை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கோ, உங்கள் வீட்டின்மீது கல் எரிவதற்கோ, உங்கள் கோயில்களை உடைப்பதற்கோ நானோ, வேறு யாரோ முற்பட்டால் உங்களுக்கு மனப்பூர்வமாக support செய்யத் தயார். இக்கொள்கையையே தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்.//

    ஸ்வாமி, உலகிலே வெவேறு மார்க்கங்களுக்கிடையே சமரசத்தை உருவாக்கக் கூடிய கொள்கையும், முயற்சியும் உள்ள மார்க்கம் ஏதாவது இருந்தால் அது இந்து மதமே. எல்லா மார்க்கங்களைளும் உள்ள சிந்திக்கக் கூடியவரிடம் அன்புக் கருத்துக்களை, பகுத்தறிவுக் கருத்துக்களை பட்டை திட்ட வேண்டிய பணியை செய்யக் கூடியவன் இந்துவே. இராஜாஜி, காந்தி, பாரதியார், சுவாமி விவேகானந்தர் இவர்களும் பிறமதங்களில் உள்ள நல்ல கருத்துக்களைப் பாராட்டி, பிற மார்க்கத்தினர் புனிதராக கருதுபவரை பாராட்டி , மரியாதை செய்து உள்ளனர். அவர்களில் சிலரை அக்காலத்திலே கண்டித்து , இன்னும் சொல்லப் பணால, தண்டித்து (பிரஷ்டம் செய்து) வைத்தனர்.

    //கடவுளை பிரத்தியட்சம், அனுமானம் (perception, inference) ஆகிய கருவிகளை மட்டும் வைத்துக் கொண்டு நிரூபணம் பண்ண முடியாது என்பதை வைதீகர்கள் அனைவரும் ஏற்பர். “கடவுளை நிரூபணம் பண்ண மூன்றாவதாக வேதம் தேவை, ஆகையால் இது எங்கள் நம்பிக்கையே” என்பதையும் ஆமோதிப்பர்.//

    ஐயா, துருவன், பிரஹலாதன், மார்க்கண்டேயன் இவர்கள் எல்லாம் நேருக்கு நேர் கடவுளை பார்த்ததாக சொல்கிறார்களே? அது போல நீங்கள் பார்த்து விட்டுக் கூறினால், மற்றவர்களுக்கும் காட்ட முடியுமானால் அப்போது யாரும் மறுப்பு சொல்ல போவது இல்லை

    தெளிவான ஆதாரத்தைக் கொடுங்கள். முழு முதற்கடவுள் என்கிறீர்கள். நிரூபிக்கலாம் அல்லவா? நிரூபணம் தரும் அளவுக்கு அர்ப்பணிப்பு ஆராய்ச்சி செய்யலாம் அல்லவா எனவே அவசரப் பட்டு நம்பிக்கை அடிப்படையில் சாட்சி கொடுப்பதை விட அர்ப்பணிப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு சரியான உண்மையை நேருக்கு நேர் பார்த்து விட்டு, மற்றவர்களுக்கும் காட்டினால் அப்போது யாரும் மறுப்பு சொல்ல போவது இல்லை.

    ////அப்படி அமைதியாகத் தான் இந்துக்கள் எல்லாரும் வழிப்பட்டோம்; வழிபடுகின்றோம்; வழிபடுவோம். எந்நாளும் கத்தியைத்/துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு கிரித்தவர்கலையோ இசுலாமியர்கலையோ சண்டைக்கு இழுத்தது இல்லை.

    //கத்தியை தூக்கிக் கொண்டு பிற மத்தினரை நீங்கள் சண்டைக்கு இழுக்கவில்லை, கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு சொந்த மதத்தினரை சண்டைக்கு இழுக்கிறீர்கள்//

    Arguments are just a bookshed battle. Not a bloodshed battle. Please understand that. We can argue about the nature of God in the vedas and still be very good friends with other religionists. You don’t have to worship with them to be friends. ////

    உங்களை அப்படி பிறருடன் சேர்ந்து வழிபட வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை. ஏனெனில் கட்டாயப் படுத்துவது நாகரீகத்துக்க எதிரானது. இப்படி பேப்பரில் மட்டுமே எழுதுகிறோம், கையிலே கத்தியை துப்பாக்கியை எடுக்கவில்லை என்கிறீர்கள். பேப்பரில் எழுதி வைத்ததை, சொல்லி வைத்ததை சொல்லி சொல்லி வெறி ஏற்றி தான் உலகத்திலே இத்தனை சண்டையும், இரத்த ஆறும் உருவாகிறது.

    கையிலே ஆயுதம் ஏந்தாமல் முரட்டு சிந்தனைகளை எழுத்திலே பேச்சிலே மட்டுமே பரப்புபவர்கள், சாப்ட் ஜிஹாதிகள் என்று மட்டுமே சொல்லப் படுகின்றனர்.

    (edited and published)

  84. திரு பாலாஜி அவர்களுக்கு

    தங்களது நெடிய மறுமொழிக்கு நன்றி.

    த‌ங்க‌ள் நான் “ந‌டைமுறையில்” என்று கூறிய‌து த‌ற்போது ந‌ட‌ந்து வ‌ரும் முறைக‌ளின் அடிப்படையில் என்று கொள்ள‌வேண்டும். அக்கால‌த்தில்க‌ற்றுண‌ர்ந்த‌ ம‌க‌ளிரையும், வியாச‌ர் முத‌லிய‌ முனிசிரேஷ்ட‌ர்க‌ளையும் எடுத்துக்காட்டியுள்ளீர்க‌ள். நன்று. ஆனால், இன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் எத்த‌னைபேர் இந்த‌ நிலையை எய்தியிருக்கிறார்க‌ள்? அன்றைய‌ ம‌க்க‌ள்தொகையில் அவ்வாறு க‌ற்றோர் எத்த‌னை ச‌த‌வீத‌ம்? இன்று அது எத்த‌னை ச‌த‌வீத‌ம்?

    அவ்வ‌ள‌வு ஏன்? இங்கே (இத்தளத்தில்) வாதிடும் ந‌ம‌க்குள் எத்த‌னை பேருக்கு ச‌ம‌ஸ்கிருத‌ம் எழுத‌ப்ப‌டிக்க‌த்தெரியும்? எத்த‌னை பேர்க்கு அதை விவ‌ர‌மாகப் ப‌த‌ம் பிரித்துப் பொருள்க‌ண்டு உரை சொல்ல‌த்தெரியும்? எத்த‌னைபேர் வேத‌ங்க‌ளை முறைப்ப‌டிப் ப‌யின்ற‌வ‌ர்க‌ள்? இங்கே இருக்கும் சிறு எண்ணிக்கையிலான‌ ந‌ம்க்குள்ளேயே வேதக் கல்வி சமஸ்கிருத அறிவு ஆகியவற்றில் ச‌ம‌த்த‌ன்மையிலான‌ சூழ‌ல் இல்லை, அப்ப‌டியே இருந்தாலும், அது பெரும்பான்மையின‌ருக்கு இவ்விஷயத்திலே நேர‌டியான‌ முறையான‌ க‌ல்வி இல்லை என்ப‌தில் அனவரும் சமம் என்றுதான் இருக்கும். நம‌து வேத‌ம் குறித்த‌ விவாத‌ம் ‘குருட‌ர்கள் யானையை வர்ணிக்க‌ முற்ப‌ட்டதைப்போன்றதே’ என்பதைப் பெரும்பாலோர் ஏற்ப‌ர்.

    வெறுமே வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் வேதங்களாக ஏற்றிய‌வையெல்லாம் த‌க‌வல்க‌ளாக‌ ம‌ட்டுமே க‌ருத‌வேண்டும். அவையெல்லாம் வேதங்களின் ஆதார‌மாக‌க் க‌ருத‌க்கூடாது. இடைச்செருக‌லுக்கும், உருவ‌லுக்கும், பார‌ப‌ட்ச‌மான‌ உரைக‌ளுக்கும் வாய்ப்புக‌ள் அதிக‌ம் உள்ள‌ன‌. இவ‌ற்றாலெல்லாம், அவ்வாறு காட்ட‌ப் ப‌டும் மேற்கோள்க‌ள் த‌குதிக்குறைபாடுடைய‌ன‌வே.

    ஆக‌, வாதிடுபவர்க‌ளும் த‌குதிக்குறையுடையோர், வாதிட‌ எடுத்துக்காட்டும் ஆதார‌மும் த‌குதிக்குறையுடைத்து என்றால் அவ்வாறு வாதிடுத‌ல் முறையா? எனவேயும் வேத‌ப்பிரமாண‌‌ங்க‌ளை வைத்து இங்கே வாதிடுத‌ல் முறையான‌த‌ன்று என்று சொன்னேன்.

    காஞ்சி சங்க‌‌ர‌ம‌ட‌த்தில் ஒவ்வொருவார‌மும் வியாழ‌ன‌ன்று, குருவார‌ச‌த‌ஸ் என்று க‌ருத்துப் ப‌றிமாற‌ல் ந‌ட‌க்கிற‌து. வேத‌ம‌றிந்த‌, தேர்ந்த ப‌ண்டித‌ர்க‌ள் பலர் கூடி ச‌பையில் வேத‌, உப‌நிஷ‌த்துக‌ள், முத‌லிய‌ன‌ குறித்து விவாதிக்கிறார்க‌ள். அங்கே போய் இவை ப‌ற்றி விவாதித்தால் உண்மையான‌ விடை் கிடைக்குமே அல்லாது, என்போன்ற‌ ஆழ்ந்த‌க‌ன்ற‌ அறிவிலாரிட‌ம், வேத‌ப் பிர‌மாண‌ங்க‌ளைக்குறித்து மேற்கோள் காட்டிப் பேசுத‌ல் முறையாகாது.

    மீண்டும் சொல்கிறேன். வேதங்களுக்குள் நமது மதத்தை அடக்க முடியாது. அடக்கவும் கூடாது. கிறிஸ்த‌வ‌த்துக்கு பைபிள் ம‌ட்டுமே நூல். இஸ்லாமிய‌ருக்குக் குரான் ம‌ட்டுமே. ந‌ம‌க்கு அப்ப‌டியில்லை. வேத‌ம் ம‌ட்டும‌ல்ல‌, ஆக‌ம‌ங்க‌ளும் ம‌னித‌னால் செய்ய‌ப்ப‌ட்ட‌வை அல்ல‌. தாங்க‌ளே சுட்டிய‌ப‌டி, எல்லா வேத‌ங்க‌ளும் உபநிஷ‌த்துக்க‌ளும் முழுமையாக‌க் கிடைத்துவிட்ட‌தாக‌க் கூற‌முடியாது. ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளைப்போல‌ல்லாம‌ல், நம‌து ம‌த‌ம் ப‌ன்முகப் ப‌ட்ட‌து, மாறுப‌ட்ட‌ சித்தாந்த‌ங்க‌ளுக்கும்கூட‌ இன்முக‌ம் காட்டுவ‌து, ந‌ம‌து ம‌க்க‌ளும் பன்மொழியின‌ர் ஆவ‌ர். வெளிநோக்கிம‌ட்டும‌ல்ல‌, உள்நோக்கியும் இறைவ‌னைகாண‌ வ‌ழி கூறுவ‌து. என‌வேதான் இதை நாம் வேதம் உள்பட எதிலும் அட‌க்க‌ முடியாதென்கிறேன்.

    சந்தத்தின் வலிமையால் மட்டும் அல்லாது, இதனாலும்தான் வேத‌த்தை எழுதிப்ப‌டிப்ப‌தை விட, வாய்்வ‌ழியாய்ப்ப‌டிக்க‌ப் ப‌ணித்த‌னர, வேதத்தையே எழுத்தில் அடக்குவதைத் தவிர்த்தனர்் என்ப‌து எனக்குத் தோன்றும் தாழ்மையான‌ க‌ருத்து.

    (edited and published)

  85. திருச்சிக்காரன் அவர்களே,

    //
    இப்படி பேப்பரில் மட்டுமே எழுதுகிறோம், கையிலே கத்தியை துப்பாக்கியை எடுக்கவில்லை என்கிறீர்கள். பேப்பரில் எழுதி வைத்ததை, சொல்லி வைத்ததை சொல்லி சொல்லி வெறி ஏற்றி தான் உலகத்திலே இத்தனை சண்டையும், இரத்த ஆறும் உருவாகிறது.
    //

    வெறித்தனமாக நான் ஒன்றுமே எழுதவில்லையே! எங்கே வெறித்தனமாக எழுதினேன்? நீங்கள் சொன்ன வெறியும் கொலையும், வேற்று மதத்தவரைப் போல நானும் “கத்தியை எடுங்கள், காபிர்களை சுடுங்கள், யூ* மதத்தைச் சேர்ந்தவர்கள் பன்றிகளுக்கும் குரங்குகளுக்கும் சமம்” என்று எழுதியதைப் போன்று எழுதினால் தான் வரும். இப்படி நான் எதையுமே எழுதவில்லை; அப்படி எழுதுபவன் வைணவனும் இல்லை; எழுதினால் அவனை எந்த ஆலயத்தின் உள்ளும், உபன்யாசங்களுக்கும், பாகவத சப்தாகத்துக்கும், பஜனை கோஷ்டிக்குள்ளும் நுழைய விடமாட்டார்கள்.

    //
    ஐயா, துருவன், பிரஹலாதன், மார்க்கண்டேயன் இவர்கள் எல்லாம் நேருக்கு நேர் கடவுளை பார்த்ததாக சொல்கிறார்களே? அது போல நீங்கள் பார்த்து விட்டுக் கூறினால், மற்றவர்களுக்கும் காட்ட முடியுமானால் அப்போது யாரும் மறுப்பு சொல்ல போவது இல்லை

    தெளிவான ஆதாரத்தைக் கொடுங்கள். முழு முதற்கடவுள் என்கிறீர்கள். நிரூபிக்கலாம் அல்லவா? நிரூபணம் தரும் அளவுக்கு அர்ப்பணிப்பு ஆராய்ச்சி செய்யலாம் அல்லவா எனவே அவசரப் பட்டு நம்பிக்கை அடிப்படையில் சாட்சி கொடுப்பதை விட அர்ப்பணிப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு சரியான உண்மையை நேருக்கு நேர் பார்த்து விட்டு, மற்றவர்களுக்கும் காட்டினால் அப்போது யாரும் மறுப்பு சொல்ல போவது இல்லை.
    //

    நம் நாட்டுப் பெரியவர்கள் அனைவரும் பார்த்திருக்கிறார்கள். இதை ஒத்துக்கொல்லாதவர்க்கு நிரூபிக்க முடியாது; கோயிலில் காணப்படுவது இறைவனே; கல் இல்லை என்பதே எனது சித்தாந்தம். அவ்விரைவனும் அங்கு பிரத்யட்சமாக இருக்க அவனை “இவன் ஒரு கல் தான்” என்று கூறுகிறார்கள். மனப் பக்குவம் இல்லாதவர்க்கு என்ன சொன்னாலும் அது நிரூபணம் ஆகாது. பகவானும் அத்தகையவருடன் கண்முன் தோன்றி பேசுவதை செய்வதில்லை. “எல்லா ஆதாரங்களையும் பார்த்து விட்டு தான் நம்புவேன்” என்றால் நாட்கள் போய்க்கொண்டே இருக்கும்; ஜன்மாக்கள் வந்து போய்க்கொண்டே இருக்கும். இதுவே எனது சித்தாந்தம்.

    //
    கையிலே ஆயுதம் ஏந்தாமல் முரட்டு சிந்தனைகளை எழுத்திலே பேச்சிலே மட்டுமே பரப்புபவர்கள், சாப்ட் ஜிஹாதிகள் என்று மட்டுமே சொல்லப் படுகின்றனர்.
    //

    That is your opinion, your belief. Not empirical truth.

    (edited and published)

  86. நண்பரே

    //
    நண்பர் சாரங்கன்,

    // என் தெய்வம் மட்டுமே உண்மை, மற்றவை எல்லாம் பொய்// என்ற கருத்தாக்கம் எந்த அளவுக்கு அமைதியைக் கெடுத்து ஆபத்தை உருவாக்குகிறதோ, அதே போல

    //என் தெய்வம் தான் உயர்ந்த தெய்வம் மற்றவைகள் கொஞ்சம் குறைஞ்ச தெய்வம்// என்று நினைப்பதுவும் அபாயமான காட்டு மிராண்டித் தன்மை தான்.

    இதை கொஞ்சம் நீங்கள் சிந்திக்க வேண்டும்.
    //

    இதையும் நான் எங்குமே சொல்லவில்லை [சான்று இருந்தால் காட்டுங்கள்] –
    நான் சொன்ன எல்லாவற்றையும் தள்ளிவிட்டு எப்படியேனும் நீ ஒரு சமயவாதி என்று நிருபிக்கிறேன் பார் என்று நீங்கள் சங்கல்பம் செய்துள்ளது போல் இருக்கிறது 🙂 … அப்படிதான் உங்களின் விருப்பம் என்றால், நானாகவே நான் ஒரு சமயவாதி என்று சொல்லிகொண்டுவிடுகிறேன் – எனக்கு ஒரு குறையும் இதனால் நேரப்போவதில்லை 🙂

    ஆனால் வேத புருஷன் வாய் மூடி இருக்க வில்லை, அவன் ஒரு தீர்மானம் எடுத்து பர பிரம்ம ஸ்வரூபம் யார் என்று காட்டிவிடுகிறான் – அதை நீங்களே படித்து அல்லது ஒரு ஆச்சர்யனிடம் சென்று கற்று ஒரு முடிவுக்கு வரவும் – நானாக எதையும் சொல்ல விரும்பவில்லை

    நிற்க, உங்களின் இந்த விதமான எல்லாம் ஓகே வாக தான் இருக்கணும் என்ற சிந்தனை நடை முறைக்கு ஒவ்வாதது – இப்படி நீங்கள் கூரியவிட்டபடியால் நீங்கள் சொல்லும் அத்தனை இழி சொல்லும் நாயன்மார்கள், ஆழ்வார்கள், ராமானுஜர், மத்வர், சங்கரர், ஆதினங்கள், ஜீயர்கள், வியாசர்,பீஷ்மர் கோபால கிருஷ்ண பாரதி, த்யாகராஜர், அப்பையா தீட்சிதர் இவர்களையும் போய் சேரும் [நீங்கள் சொன்ன இழி சொற்களை எழுதக்கூட எனக்கு கஷ்டமாக உள்ளது] – நீங்கள் சற்றே கொஞ்சம் சிந்தியுங்கள்

    கொஞ்சம தர்க்க ரீதியில் சும்மா ஒரு பேச்சுக்கு ப்ரிஹுதாரன்யாக உபநிஷதை பாப்போம்

    gaargi asks Yagnavalkya – third adhyaayam, sixth brahmana

    G – O Master by what is this earth pervaded
    Y – By water o Gargi
    G – By what is this water pervaded
    Y – It is by Vayu O gargi
    G – By what is this Vayu pervaded
    Y – By ether O Gargi
    G – By what is this ether pervaded
    Y – By the gandarva loka O Gargi
    G -By what is this gandarva loka pervaded
    Y – By Sun o gargi
    G – By what is sun pervaded
    Y – By moon o Gargi [ not to be confused with the moon that roates the earth or other planets]
    G – by what is Moon pervaded
    .. this continues and goes till ishvaran [ishvara here means supreme bramhan]

    so many upanishad passages say – brahman is the controller of everything, he is superior to everything, the sun, stars and the moon shine because of him

    உங்களின் கருத்து படி பார்த்தல் வேதம், உபநிஷத், யஞ்யவல்கர் மற்றும் ஏனைய தபச்விகள் எல்லாருமே நீங்கள் சொல்லும் கூட்டத்தில் சேர வேண்டி வரும், ஏன் என்றால், இவர்கள் எல்லோருமே ஒன்றை விட ஒன்று பெரியது என்று கூறி விட்டார்கள், வருணனை விட வாயு பெரியவன், வாயுவை விட ஆகாசம் பெரியது, ஆகாசத்தை விட சூரியன் பெரியவன், சூரியனை விட தேவர்கள் பெரியவர்கள் தேவர்களை விட பரமாத்மா பெரியவன் 😉

    உங்களுக்கு இஷ்டமில்லாத உண்மைகளை எல்லாம் ஒரு கூட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  87. ந‌ண்ப‌ர் சார‌ங்,

    நான் எந்த‌ இழி சொல்லும் சொல்ல‌வில்லை. ம‌த‌ துவேஷ‌ப் பாதையிலே சென்றால் கெட்ட‌ பெய‌ர் வ‌ரும், ச‌மூக‌த்துக்கும் கெடுத‌ல் உண்டாகும் என்ப‌தையே சுட்டிக் காட்டினேன். என‌வே இழி சொல் வ‌ராம‌ல் காத்துக் கொள்ள‌வும், இன்னும் உல‌கம் போற்றும் வ‌ண்ண‌ம் பெய‌ர் எடுப்ப்துவும் உங்க‌ள் கையிலே , செய‌ல் பாட்டிலே தான் உள்ள‌து. மிக‌ப் பெரிய‌ லிஸ்டை கொடுத்து இருக்கிறீர்க‌ள், ந‌ல்லவ‌ர்க‌ளின் பெய‌ரை எல்லாம் போட்டு இருக்கிறீர்க‌ள்.

    இவ‌ர்க‌ளின் க‌ருத்து என்ன‌ என்ப‌தையும் பாருங்க‌ள். எந்த‌ ஒரு தெய்வ‌த்தையும் இக‌ழாம‌ல், எல்லா தெய்வ ங்க‌ளையும் போற்றி, அதே நேர‌ம் இராம‌ரிட‌ம் அதிக‌ அன்பு செலுத்துவ‌துதான் தியாக‌ராச‌ரின் கோட்பாடு. இராம‌ர் தான் தியாக‌ராச‌ருக்கு எல்லாம், இராம‌ர் நினைவு இல்லாவிட்டால் நீர் இல்லாத‌ மீனைப் போல‌ ஆகி விடுகிறார் தியாக ராச‌ர். ஆனால் வேறு எந்த‌ தெய்வ‌ங்க‌ளையும் நிந்திப்ப‌து இல்லை என்கிற‌ நிலைப் பாட்டை அவ‌ர் த‌ன்னுடைய‌ கீர்த்த‌னையிலேயே எழுதி இருக்கிறார். தியாக‌ராச‌ர் மாற‌ வைரீ ர‌ம‌ணீ, ஸ்ரீ க‌ண‌ப‌திம் … இப்ப‌டி ப‌ல‌ரையும் போற்றி பாடியுள்ளார். இராம‌ரைப் புரிந்து கொண்ட‌வ‌ர்க‌ள் எந்த‌ ஒரு தெய்வ‌த்தையும் இக‌ழ மாட்டார்க‌ள், யாரையும் (எந்த‌ தெய்வ‌த்தையும்) தேவை இல்லாம‌ல் ம‌ட்ட‌ம் த‌ட்டி பேச‌ மாட்டார்க‌ள், அது இராம‌ருக்கு பிடிக்காத‌ செய‌ல் என்று ஒரு ந‌ண்ப‌ர் கூறினார். தியாக‌ராச‌ர் ம‌த‌ துவேஷி என்றால் யாருமே ஒத்துக் கொள்ள‌ மாட்ட‌ர்க‌ள்.

    அதே போல‌ ஆதி ச‌ங்க‌ர‌ர் பாடாத‌ தெய்வ‌ங்க‌ள் இருக்கிறதா என்று சொல்லும் அள‌வுக்கு இந்துக்க்க‌ள் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழி ப‌டும் எல்லோரையும் பாடி உள்ளார்.

    இதில் பீஷ்ம‌ரை எல்லாம் இழுக்கிறீர்க‌ள், அரவானை பலியிட்ட‌து போல‌ ந‌ல்லிண‌க்க‌த்தை, அமைதியை ப‌லியிட்டு விட‌ வேண்டாம்.

    ஆச்சாரியாரிட‌ம் சென்று க‌ட்க‌ த‌யார். யாராவ‌து எனக்கு க‌ட‌வுளை காட்ட‌ முடியுமானால் அவ‌ரை வ‌ண‌ங்கி க‌ற்றுக் கொள்வேன் (இப்ப‌டிக் கேட்ட‌ ஒரு மிக‌ப் பெரிய‌ சிந்த‌னையாள‌ர் இந்து ம‌த‌த்திலே இருந்திருக்கிறார்)
    வெறும‌னே எழுதி இருப்ப‌தை ப‌டித்து அர்த்த‌ம் சொல்லுவ‌து என்றால், அதில் எங்க‌ளுக்கு பெரிய‌ உற்சாக‌ம் எதுவும் இல்லை.

    //உங்களுக்கு இஷ்டமில்லாத உண்மைகளை எல்லாம் ஒரு கூட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்//

    எதுவுமே நிரூபித்தால் தான் உண்மை, நிரூபிக்காத‌வ‌ரை அது யூக‌ம் அல்லது ந‌ம்பிக்கை மாத்திர‌மே!

  88. “எனது கடைசி மறுமொழி” என்று கூறிவிட்டு, மானங்கெட்டவன் மீண்டும் எழுதியுள்ளான் என்று நினைக்கவேண்டாம். மனம் கேட்கவில்லை, எனவே இது ஒன்றையும் எழுத நினைத்தேன்…

    தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவிற்கு,
    இரண்டு, மூன்று முறை சிந்தித்துதான் எழுதியுள்ளேன், ஏதாவது தவறாக இருந்தால்கூட, தயவுசெய்து edit செய்யாமால் என் மறுமொழியை முழுவதுமாக பிரசுரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..

    இந்த சைவ-வைணவ மோதலுக்கு என்னால் முடிந்த ஒரு முற்றுப்புள்ளியை வைக்கலாம் என்று எண்ணுகிறேன். இன்று இராமாயணமும், மகாபாரதமும் ‘வைணவ நூல்கள்’ என்கின்றனர். ஆனால் அவை நடந்த காலத்தில், அப்படி நினைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.. ஏனெனில், இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பல இடங்களில் சிவ பூஜையும், தேவி பூஜையும் கூறப்பட்டுள்ளது. விஷ்ணு சகஸ்ரநாமம் தோன்றும் அதே அனுசான பர்வத்தில், சிவ சகஸ்ரநாமமும் வருகிறது.

    மேலும், மாவீரன் அர்ஜுனன்தான் கண்ணப்ப நாயனாராகப் பிறந்தான் எனவும், 17- ஆம் நாள் யுத்த முடிவில், வள்ளல் கர்ணன் இறக்கக் கிடக்கையில், பகவான் அவனிடம் வந்து ஒரு நாடகத்தை நடுத்துகிறான்.. எல்லாம் முடிந்தவுடன், கர்ணனுக்கு நால்லாசி வழங்கிய கண்ணன்:- “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கையில், அதற்க்கு கர்ணன்:- “எல்லாவிதமான தான தர்மங்களையும் செய்துவிட்டேன், ஆனால் நான் அன்னதானம் மட்டும் செய்யவில்லை. காரணம் நான் தேரோட்டியின் மகன் என்பதால் என் வீட்டில் உண்ண ஒருவரும் வரவில்லை” என்று சொன்னவுடன் கண்ணன் “அடுத்த பிறவியில் சிறுத்தொண்டர் நாயனாராக அவதரிப்பாய்” என்று ஆசீர்வதித்தான்.

    இதற்க்கு சான்றுகள் உண்டா? பிரமாணம் உண்டா? என்று கேட்கலாம். என்னிடத்திலில்லை, ஆனால் சில counter கேள்விகளைக் கேட்கமுடியும்:-

    ஆதிசங்கரர் சிவபெருமானின் அவதாரம் என்பதற்கும், நரசிம்ம பாரதி தத்தாத்ரேயரின் அவதாரம் என்பதற்கும், காஞ்சி மகாபெரியவர் ஆதிசங்கரரின் மறு அவதாரம் என்பதற்கும்; இராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம் என்பதற்கும், மணவாள மாமுனிகள் இராமானுஜரின் மறு அவதாரம் என்பதற்கும், கூரத்தாழ்வார் விஷ்ணுவின் அவதாரம் என்பதற்கும்; மத்வர் வாயுதேவனின் அவதாரம் என்பதற்கும் (அதனால் அனுமான், பீமனின் மறுபிறப்பு) என்பதற்கும், ஸ்ரிபாதராஜர் துருவனின் அவதாரம் என்பதற்கும், புரந்தரதாசர் நாரதரின் அவதாரம் என்பதற்கும், ஜெயதீர்த்தார் அர்ஜுனனின் அவதாரம் என்பதற்கும், பிரகலாதர் தான் வியாசராஜராகவும் ராகவேந்திரராகவும் அவதரித்தார் என்பதற்கும்; நிம்பார்கர் சக்கரத்தாழ்வாரின் அவதாரம் என்பதற்கும், சுவாமிநாராயண் நர-நாராயனரின் அவதாரம் என்பதற்கும், துளசிதாசர் வால்மீகியின் அவதாரம் என்பதற்கும்
    நாம் என்ன பிராமானங்களையும், சான்றுகளையும் அளிக்கமுடியும்??

    ஒரு உதாரணத்திற்கு இதைப் பாப்போம்:- சைதன்ய மகாபிரபு கிருஷ்ணரின் அவதாரம் என்று கௌடிய-இஸ்கான் அமைப்பினர் நம்புகிறார்கள். “ஒரு ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் ஒப்பிடுவது மத்வரின் தத்துவத்திற்கு விரோதமானது” என்று மத்வரைப் பின்பற்றுபவர்கள் வாதாடுகிறார்கள். சைதன்யர் கிருஷ்ணர்தான் என்பதற்கு இஸ்கான் அமைப்பினர் சில ஆதாரங்களை காட்டுகிறார்கள்:-

    //itotham krta sannyaso’vatarisyami sa-guno nirvedo
    niskamo bhu-girvanas tira-atho’ lakanandayah kalau
    catuh-sahasrabdhopari panca-sahasrabhyantare
    gaura-varno dirghangah sarva-laksana-yukta isvara-
    prarthito nija-rasasvado bhakta-rupo misrakhyo
    vidita-yogah syam

    I will descend on the earth after the passage of four thousand years in the Kali-Age, and before the passsage of five thousand years. I will come on the earth on the bank of the Ganges,. I will be a tall and saintly brahmana devotee. I will have all the auspicious symptoms of an exalted person. I will exhibit renunciation. I will have all auspicious signs. I will be a devotee, practicing bhakti-yoga. I will taste the rasa of My own devotional service. (Atharva Veda)

    saptame gaura-varna-visnor ity aena sva-saktya
    caikyam etya pratar avatirya saha svaih sva-manum siksayati

    In the seventh manvantara, in the beginning of the Kali-Yuga, the Supreme Personality of Godhead will, accompanied by His own associates, descend in a golden form to the earth. He will teach the chanting of His own names. (Atharva-Veda Purusa-Bodhini-Upanisad 8)

    tathaham krta sannyaso bhu-girvano ‘vatarisye
    tire’lakanandayah punah punah isvara-prarthitah sa-
    parivaro niralambo nirdhuteh kali-kalmasa-kavalita-
    janavalambanaya

    I shall come to the earth, accompanied by My associates, in a place by the bank of the Ganges. I will advent to save the people who are afflicted and devoured by the sins of the age of Kali. I will manifest as an avadhuta Brahmana sannyasi. (Sama Veda)

    mahan prabhur vai purusah
    sattvasyaisa pravartakah
    su-nirmalam imam praptim
    isano jyotir avyayah

    The Supreme Personality of Godhead is Mahaprabhu, who disseminates transcendental enlightenment. Just to be in touch with Him is to be in contact with the indestructible Brahmajyoti. (Svetasvatara Upanisad 3.12)

    yada pasyah pasyate rukma-varnam
    kartaram isam purusam brahma-yonim

    One who sees that golden-colored Personality of Godhead, the Supreme Lord, the supreme actor, who is the source of the Supreme Brahman, is liberated. (Mundaka Upanisad 3.1.3)

    asan varnas trayo hyasya
    grhnato’nuygam tanuh
    suklo raktastatha pita
    idanim krsnatam gatah

    “This boy Krsna, has three other colors: white, red and yellow as He appears in different ages. Now, in this Dvapara-yuga, He has appeared in a transcendental blackish color.” (Srimad Bhagavatam 10.8.13)

    dhyeyam sada paribhava-ghnam abhista-doham
    tirthaspadam siva-virinci-nutam saranyam
    bhrtyarti-ham pranata-pala bhavabdhi-potam
    vande maha-purusa te caranaravindam

    We offer our respectful obeisances unto the lotus feet of Him, the Lord, upon whom one should always meditate. He destroys insults to His devotees. He removes the distresses of His devotees and satisfies their desires. He, the abode of all holy places and the shelter of all sages, is worshipable by Lord Siva and Lord Brahma. He is the boat of the demigods for crossing the ocean of birth and death. (Srimad Bhagavatam. 11.5.33)

    tyaktva sudustyaja-surepsita-rajya-laksmim
    dharmistha arya-vacasa yad agad aranyam
    maya-mrgam dayitayepsitam anvadhavad
    vande maha-purusa te caranaravindam

    “We offer our respectful obeisances unto the lotus feet of the Lord, upon whom one should always meditate. He left His householder life, leaving aside His eternal consort, whom even the denizens of heaven adore. He went into the forest to deliver the fallen souls, who are put into illusion by material energy.” (Srimad Bhagavatam. 11.5.34)

    krsna varnam tvisa krsnam
    sangopangastra parsadam
    yajnaih sankirtanam-prayair
    yajanti hi sumedhasah

    “In the age of Kali, Krsna appears in a golden form, chanting the two syllables krs-na. He descends along with His weapons, saktis, limbs, and eternal confidential associates. Those with intelligence worship Him with the sankirtana yajna. (1) (Srimad Bhagavatam 11.5.32)

    ittham nr-tiryag-rsi-deva-jhasavatarair
    lokan vibhavayasi hamsi jagat-pratipan
    dharmam maha-purusa pasi yuganuvrttam
    channah kalau yad abhavas tri-yugo ’tha sa tvam

    “My Lord, You kill all the enemies of the world in Your multifarious incarnations in the families of men, animals, demigods, rsis, aquatics and so on. Thus You illuminate the worlds with transcendental knowledge. In the Age of Kali, O Mahapurusa, You sometimes appear in a covered incarnation. Therefore You are known as Tri-yuga [one who appears in only three yugas].” (Srimad Bhagavatam. 7.9.38)

    aham eva dvija-srestha
    nityam pracchana-vigrahah
    bhagavad-bhakta-rupena
    lokan raksami sarvada

    “O best of the brahmanas, My disguised form is eternal. In this way, with My own form hidden from ordinary sight I take the form of a devotee and appear among the people in general in order to establish and protect religious principles.” (Adi Purana)

    aham eva kvacid brahman
    sannyasa asramam asritah
    hari bhaktim grahayami
    kalau papa-hatan naran

    ‘O Brahmana, I occasionally take the sannyasa asrama in an attempt to bring the fallen people of Kali Yuga to take up the path of bhakti or devotional service to Lord Krsna. (Upa-purana)

    kalina dahyamanam
    uddhararaya tanu-bhrtam
    janma prathama sandhyayam
    bhavisyati dvijalaye

    The Supreme Person will appear in the first part of the age of Kali. He will appear in the home of a brahmana to save the embodied conditioned souls burning in the troubles of Kali-Yuga. (Kurma-Purana)

    kalina dakyamananam
    paritranaya tanu-bhrtam
    janma prathama sandhyayam
    karisyami dvijatisu

    aham purno bhavisyami
    yuga-sandhyau visesatah
    mayapure navadvipe
    bhavisyami saci sutah

    kaleh prathama sandhyayam
    lakshmi- kanto bhavisyati
    daru-brahma-samipa-sthah
    sannyasi gaura-vigrahah

    In the first part of the age of Kali, I will come among the brahmanas to save the fallen souls, who are being burned by the troubles of the age of Kali.

    I will take birth as the son of Saci, in Navadvipa-Mayapura.. I will come in my complete spiritual form in the first part of Kali-Yuga.

    In the first part of Kali-Yuga, the Supreme Personality of Godhead will come in a gold-like form. First He will become the husband of Laksmi (Srimati Laksmi Devi, Lord Caitanya’s first wife). Then He will become a sannyasi, near Lord Jagannatha who will appear in a divine wooden form. (Garuda-Purana)

    satye daitya-kuladhi-nasa-samaye
    simhordhva-martyakrtis
    tretayam dasa-kandharam
    paribhavan rameti namakrtih
    gopalan paripalayan vraja-pure
    bharam haran dvapare
    gaurangah priya-kirtanah
    kali-yuge caitanya-nama prabhuh

    “The Supreme Personality of Godhead who in the Satya-yuga appeared as a half-man, half-lion to cure a terrible disease that had ravaged the daityas, and who in the Treta-yuga appeared as a person named Rama (Lord Ramacandra), a person who defeated the ten- headed Demon Ravana, and who in the Dvapara-yuga removed the earth’s burden, and protected the Gopa (cowherd men) people of Vraja-pura, will appear again in the Kali-yuga. His form will be golden, He will delight in chanting the Lord’s holy names, and His name will be Caitanya.” (Nrsimha Purana)

    yatrayogesvarah saksad
    yogi-cintyo janardanah
    caitanya vapur aste vai
    sandranandatmakah

    kaleh prathama-sandhyayam
    gaurangotham mahi-tale
    bhagirathi-tate ramye
    bhavisyami saci-sutah

    The Supreme Personality, Janardana, who is the object of the yogis’ meditation, who saves the devotees from various sufferings, and who is the master of all yogic practices, who is always full of divine transcendental ecstasy and bliss, will advent in His own divine form of Sri Caitanya.

    I shall appear on this earth in the first part of Kali-yuga in a beautiful place on the bank of the Bhagirathi. I shall have a golden form, and I shall take birth as the son of Saci. (Padma-Purana)

    aham eva kalau vipra
    nityam prachanna-vigrahah
    bhavavad-bhakta-rupena
    lokan raksami sarvada

    divija bhuvi jayadhvam
    jayadhvam bhakta rupinah
    kalau sankirtana rambhe
    bhavisyami saci-sutah

    aham eva dvija-srestho
    nityam pracchanna-vigrahah
    bhagavad-bhakta-rupena
    lokam raksami sarvada

    O Vipra, in the age of Kali, I will come disguised as a devotee and I will save all the worlds.

    O Divija (demigods), please come and advent as devotees on this earth in the age of Kali-yuga. I will incarnate as the son of Saci to inaugurate the congregational chanting of the name of Krsna.

    I shall advent in the form of a brahmana devotee and I shall hide my factual identity. I shall deliver all the worlds. (Narada Purana)

    kaleh prathama sandhyayam
    gaurangotham mahi-tale
    bhagirathi-tate bhumni
    bhavisyami saci-sutah

    I will reveal my eternal golden form in the first part of Kali-yuga. I will advent on the earth on the bank of the Bhagirathi. (Brahma-Purana)

    anandasru-kala-roma
    harsa-purnam tapo-dhana
    sarve mama eva draksyanti
    kalau sannyasa-rupinam

    O austere sage, you should know that in the age of Kali, everyone will see my transcendental form as a sannyasi. I will be exhibiting symptoms of ecstasy like shedding tears of bliss and hairs standing in ecstasy. (Bhavisya-Purana)

    prasantatma lamba-kanthas gaurangas ca suravrtah

    The Supreme Personality of Godhead will come in a golden form, full of peace, and a beautiful long neck. He will be surrounded by many saintly devotees. (Agni-Purana)

    mundo gaurah su-dirghangas
    tri-srotas-tira-sambhavah
    dayaluh kirtana-grahi
    bhavisyami kalau-yuge

    In the age of Kali, I shall advent where the three rivers meet. I shall have a shaven head. I shall have a golden complexion. I will be very kind and always chant the holy name of Krsna. (Matsya-Purana)

    golokam ca parityajya
    lokanam trana-karanat
    kalau gauranga-rupena
    lila-lavanya-vigrahah

    In the Kali-Yuga, I will leave Goloka and, to save the people of the world, I will become the handsome and playful Lord Gauranga. (Markandeya-Purana)

    aham eva dvija-srestho
    lila-pracurya-vigrahah
    bhagavad-bhakta-rupena
    lokan raksami sarvada

    I shall come as the best of the brahmanas. I will exhibit many pastimes in the form of a devotee. I shall deliver the people of the world. (Varaha-Purana)

    kali-ghora-tamas-channat
    sarvan acara varjitan
    sacigarbhe ca sambhuya
    tarayisyami narada

    O Narada Muni, I will take birth in the womb of Saci. I shall save the people, who will give up all proper good conduct, from the terrible darkness of the age of Kali-Yuga. (Vamana-Purana)

    paurnamasyam phalgunasya
    phalguni-rksa-yogatah
    bhavisye gaura-rupena
    saci-garbhe purandarat

    svarnadi-tiram asthaya
    navadvipe janasraye
    tatra dvija-kulam prapto
    bhavisyami janalaye

    bhakti-yoga-pradanaya
    lokasyanugrahaya ca
    sannyas-rupam asthaya
    krsna-caitanya-nama-dhrk

    tena lokasya nistaras
    tat kurudhvam mamajnaya
    dharitri bhavita cabhir
    mayaiva dvija-dehina

    I shall advent in the month of Phalguna, when the star Phalguni is conjoined with the full moon. I shall incarnate in a golden complexion in the womb of Saci and Purandara Misra.

    I will be born in the city of Navadvipa, on the Ganges’ shore, in a Brahmana’s family. I shall take the renounced order of life (sannyasa) and show kindness to the people in general and engage them in bhakti. I will be known as Sri Krsna Chaitanya.

    All of you should follow My order and deliver the people of the world. I shall appear as a Brahmana. I shall make this earth fearless. (Vayu-Purana)

    suddho gaurah-su-dirghango
    ganga-tira-samudbhavah
    dayaluh-kirtana-grahi
    bhavisyami kalau yuge

    In the age of Kali-yuga, I shall come in a place on the bank of the Ganges. I will be very pure, have a fair complexion, and be very tall and chant the holy names of Krsna. (Vayu-Purana)

    kalau sankirtanarambhe bhavisyami saci-sutah

    “In the Age of Kali when the sankirtana movement is inaugurated, I shall descend as the son of Sacidevi.” (Vayu Purana).

    suvarna-varno hemango
    varangas-candanangadi

    “He appears in a golden form, His limbs are the complexion of molten gold. His body is extremely beautiful and decorated with sandalwood pulp.” (Mahabharata, Visnu Sahasranama)

    sannyasa-krcchamah santo
    nistha santi-parayanah

    “He accepts sannyasa and shows equanimity. He is peaceful. His mind is always fixed and He performs chanting.” (Mahabharata, Visnu Sahasranama)

    svarnadi-tiram asritya
    navadvipe dvijalaye
    sampradatum bhakti-yogam
    lokasyanugrahaya ca

    sa eva bhagavan krmo
    radhika-prana-vallabhah
    srsty-adau sa jagannatho
    gaura asin mahesvari

    avatirno bhavisyami
    kalau-nija-ganaih saha
    saci-garbhe navadvipe
    svardhuni-parivarite

    aprakasyam idam guhyam
    na prakasyam bahir mukhe
    bhaktavataram bhaktakhyam
    bhaktam bhakti-pradam svayam

    man-maya-mohitah kecin
    na jnasyanto bahir-mokhah
    jnasyanti mad-bhakti-yuktah
    sadhavo-nyasinotmalah

    krmavatara-kale-yah
    striyo ye purusah priyah
    kalau te’vatarisyanti
    sridama-subaladayah

    catuh-sasti-mahantas te
    gopa dvadasa balakah
    caitanyera simhera…

    dharma-samsthapanarthay
    a viharisyami tair aham

    kale nastam bhakti-patham
    sthapayisyamy aham punah
    gacchantu bhuvi te putrah
    jayantam bhakta-rupinah
    dharma-samsthapanam kale
    kurvantu te mamajnaya

    krsnas caitanya-gaurango
    gauracandrah saci-sutah
    prabhur gauro gaura-harir
    namani-bhakti-dani me

    To show mercy to the people and give them devotional service, the Supreme Personality of Godhead will appear in a Brahmana’s home in Navadvipa by the Ganges’s shore. The Supreme Person, Sri Krsna Himself, who is the life of Srimati Radharani, and is the Lord of the universe in creation, rnaintenance, and annihilation, appears as Gaura, O Mahesvari.

    In Kali-yuga, I will descend to the earth with My associates. In Navadvipa, which is surrounded by the Ganges, I will take birth in Saci-devi ‘s womb.

    They who are bewildered by My illusory potency will not understand the great secret of the appearance in this world of Me in My personal form, in My form as the incarnation of devotion, in My form as the incarnation of a devotee, in My form bearing the name of a devotee, in My form as a devotee, and in My form as the giver of devotional service.

    This secret is not to be revealed to them. Only the saintly, pure, renounced devotees, diligently engaged in My devotional service, will be able to understand Me in these five forms.

    My dear male and female associates, headed by Sridama and Subala, who came to this world at the time of My advent as Lord Krsna, will come again during the Kali-yuga.

    The Gopas will become the sixty-four mahantas and the twelve gopalas. To establish the truth of religion, I will enjoy many pastimes with them.

    In this way I will again reveal the path of devotional service, which has been destroyed in the course of time. My sons should also descend to the earth, assume the forms of devotees, and, by My order, also work to re-establish the principles of true religion.

    At this time My names will be: Krsna Chaitanya, Gauranga, Gauracandra, Sacisuta, Mahaprabhu, Gaura and Gaurahari. Chanting these names will bring devotion to Me. (Ananta-Samhita)

    punya-ksetre navadvipe bhavisyami saci-sutah.

    “I shall appear in the holy land of Navadvipa as the son of Sacidevi.” (Krsna-yamala-Tantra)

    atha vaham dharadhame
    bhutva mad-bhakta-rupa-dhrk
    mayayam ca bhavisyami
    kalau sankirtanagame

    “Sometimes I personally appear on the surface of the world in the garb of a devotee. Specifically, I appear as the son of Saci in Kali-yuga to start the sankirtana movement.” (Brahma-yamala Tantra)//

    (நன்றி:- http://www.gosai.com).

    இதில் பெரும்பான்மையாக ‘நரசிம்ம புராணம்’ என்ற உபபுரானத்திலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர். அதேபோல நாயன்மார்களில் பலர் வேதகால மகரிஷிகளின் அவதாரங்கள் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. இதைப் பற்றி இதே தளத்தில் முனைவர்.கோ.ந.முத்துக்குமாரசுவாமி அய்யாவே எழுதியுள்ளார். அதிலிருந்து சில:-

    //“துறக்குமா சொலப்படாய் திருந்தடி மறக்குமாறிலாத என்னை மையல்செய்து மண்ணில் பிறக்குமாறு காட்டினாய்” எனத் திருஞானசம்பந்தர் தாம் மண்ணில் பிறப்பதற்கு முன்னிருந்த நிலையைப் பாடினார்.

    கயிலை மலையில் சிவனுக்கு அருகில் தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரை இறைவன், திருத்தொண்டின் சிறப்பினை உலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு மண்ணுலகில் பிறக்குமாறு செய்தான் என்னும் செய்தி திருநாவுக்கரசர் புராணம் முதற் செய்யுளில் தெரிகின்றது.

    மாதவம் செய்த தென் திசை வாழத் திருத்தொண்டத்தொகை தமிழ் மண்ணுக்குக் கிடைக்கும் பொருட்டுத் திருக்கயிலையில் அணுக்கத்தொண்டராக இருந்த ஆலாலசுந்தரர் மீது ஒரு பழியேற்றி இறைவன் நம்பியாரூரராகப் பிறக்குமாறு செய்தான்.

    திருஞான சம்பந்தரைப் போலவே, சிவலோகத்தில் சிவனடி மறவாப் பான்மையராகத் தன்னருகில் இருந்த ஒரு புண்ணிய ஆன்மாவை, திருவாசகத்தைப் பெற வேண்டி, மண்ணுலகத்தில் பிறக்குமார் இறைவன் செய்தான். மாணிக்கவாசகர் இச்செய்தியை,

    “நீக்கி முன்எனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
    …………………………………………………………………
    ஆக்கி ஆண்டு தன்னடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே” (அதிசயப்பத்து 8)

    எனக் கூறினார்.//

    https://tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/

    அதேபோல, சித்தர்கள் எனப்படுபவர்களும் ஒரு விதமான வைதீக மகரிஷிகளே! சித்தர்களில் முதல்வர் ‘ஜைமினிய பிராமனத்திலும்’, ‘கோபத பிராமனத்திலும்’ சப்தரிஷிகளுக்குள் ஒருவராகப் போற்றப்படும் அகத்திய முனிவரே. மேலும் யோக சூத்திரங்களை இயற்றிய பதஞ்சலி முனிவரும் சித்தர் பட்டியலில் உள்ளார். இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரும் சித்தர்கள் பட்டியலில் உள்ளார். இதைப் பற்றி திருமதி.ஜெயஸ்ரீ சாரநாதன் எழுதிய “Valmiki of the Ramayanam and Valmiki of Purananuru are one and the same” என்ற கட்டுரையைப் பரிந்துரைக்கிறேன்:-

    https://jayasreesaranathan.blogspot.com/2010/01/valmiki-of-ramayana-and-valmiki-of.html

    “அந்தனர்களாகப் பிறந்தவர்கள் மட்டுமே வைதீகர்கள்” என்ற தவறான ஒரு எண்ணமும் உள்ளது. “சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய எல்லா ஆசாரியர்களும் அந்தணர்கள் ஆனதால், அவர்கள் வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டு அவர்களது சமயங்களை நிலைநாட்டினர் என்றும், நாயன்மார்கள் அப்படியில்லை” என்றும் ஒரு திராவிட மாயை நிலவுகிறது. ஆனால் எப்படி ஆழ்வார்களில் நான்கு வர்ணத்தினரும், தாழ்த்தப்பட்டவர்களும், ஒரு பெண்ணும் இருந்தனரோ, அவ்வாறே நாயன்மார்களிலும் சாதி வித்தியாசம் இல்லாமல், அனைவரும் இருந்தனர். ‘நால்வர்’ என்றழைக்கப்படுபவர்களில், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் மாணிக்கவாசகர் மூவரும் அந்தணர்களே! தேவாரம், திருவாசகம் எல்லாவற்றையும் தொகுத்த நம்பியாண்டார் நம்பி சிவாசாரியார் வம்சத்தில் பிறந்து வேத-சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்றவர்தான்!

    மேலும், திருமந்திரத்தை அளித்த திருமூலர் நாயன்மார்கள் பட்டியலில் மட்டுமில்லாது, சித்தர்கள் பட்டியலிலும் இருக்கிறார்!

    சங்கரர் “விஷ்ணுதான் பெரியவர்” என்று கூறியது உண்மையானாலும், “சிவ சர்வோத்தமம்” வேதத்திற்குப் புறம்பானது என்று சொல்லமுடியாது.

    மண்டன மிஷ்ராருடன் வாதிட்டு “மிமாம்சம் தேவையில்லை, வேதாந்தம் தான் உயர்ந்தது” என்று சங்கரர் நிலைநாட்டினார். இதனால், மிமாம்சம் வேதத்திற்குப் புறம்பானது என்று சொல்லமுடியுமா?? அதேபோல, சங்கரர் சைவ ஆகமங்களை நிராகரித்தார் என்பதற்காக அவை அவைதீகமானது என்று சொல்லமுடியுமா??

    சைவர்கள் வைணவத்தைக் குறைத்துப் பேசுவதும், வைணவர்கள் சைவத்தைக் குறைத்துப் பேசுவதும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை நீடித்தது. ஆனால், இன்று இந்து விரோதிகள் சைவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு வைணவத்தையும், வைணவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு சைவத்தையும் சிறுமைப் படுத்தி இந்துக்களை பிரிக்க நினைக்கிறார்கள். வைணவத்தைப் பற்றி எவராவது சிறுமைப் படுத்தினால் அவர் சைவரல்ல, இந்து விரோதியே! அதேபோல, சைவத்தை யாராவது நிந்தித்தால் அவர் வைணவர் அல்ல, இந்து விரோதியே… “வைணவத்தை நிந்திப்பதே நம் நாட்டு சைவர்களுக்கு வழக்கமாகப் போய்விட்டது” என்று திரு.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் சொன்னதற்கும் “ஈ.வே.ரா வைணவர்” என்று மறைமலை அடிகள் சொன்னதற்கும் என்ன பெரிய வித்தியாசம்???
    இதோ, மறைமலை அடிகள் சொன்ன அதே வார்த்தைகளை கீழே தருகிறேன்:-

    “The leader of the Self-respect movement is a Vaishnavite; his brother too, we come to understand, is a Vaishnavite who has converted many gullible Saivites to Vaishnavism. Their accomplices too are Vaishnavites. Some of the Justice Party leaders too are Vaishnavites. Moreover, not only are they Vaishnavites, they are also Telugu-speakers.”

    https://en.wikipedia.org/wiki/Maraimalai_Adigal

    இதைப் படித்தபின் உங்களுக்குச் சிறிப்பு வரவில்லை என்றால் நான் பொறுப்பில்லை.

    எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் நான் எழுதிவிட்டேன். வாதத்தை வளர்க்க இவற்றை நான் எழுதவில்லை. மாறாக வாதத்தை சற்று நிறுத்தவே நான் எழுதினேன்….

    எல்லா இடத்திலும் சாஸ்திரங்களையும் பிரமாணங்களையும் படி நடக்கமுடியாது என்பதற்கு திரு.அரவிந்தன் நீலகண்டன் இதே தளத்தில் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சிலவற்றைத் தருகிறேன்:-

    //காஞ்சி காமகோடி பீடத்தின் 58-ஆவது ஆச்சாரியராகக் கருதப்படும் ஆத்மபோதர் அவரது வடநாட்டு யாத்திரையின் போது தனது சீடரான புருஷோத்தமன் என்பவருக்கு போதேந்திர சரஸ்வதி என துறவுத்திருநாமம் அளித்தார்; அவரை காஞ்சிபுரம் செல்லவும், போகும் வழியில் பூரி ஜெகந்நாத தலத்தில் லட்சுமி ஸ்ரீதரர் என்பவர் வசமிருக்கும் “பகவன் நாம கௌமுதி” என்ற நூலைப் பெற்று அதன் அடிப்படையில் இலட்சம் சுலோகங்களை இயற்றவும் உத்தரவிட்டார். அவ்விடத்தை போதேந்திரர் அடைந்த போது அப்பெரியவர் காலமாகிவிட்டதாக அவரது மகனான ஜகன்னாத பண்டிதரின் மூலம் அறிந்தார். அப்போது அங்கு ஓர் நிகழ்ச்சி நடந்தது.

    ஓர் தென்னிந்திய தம்பதிகள் அங்கு வந்திருந்தனர். இவர்கள் தீர்த்த யாத்திரை செல்லும் போது மனைவியை சில இஸ்லாமியர்கள் அபகரித்து சென்றுவிட்டனர். மனமுடைந்த கணவர் கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தார். சில மாதங்களுக்குப் பின்னர் தற்செயலாக ஒரு ஊரில் நதிப்புறத்துக்கு செல்லுகையில் அங்கு இஸ்லாமிய மாதர் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு இஸ்லாமியப் பெண் இவரிடம் ஓடோடி வந்துவிட்டார். அப்பெண்மணி அபகரிக்கப்பட்ட இவரது மனைவியே ஆவார். அவர் தற்போது இஸ்லாமியரின் மனைவியாக வாழ்வதாகவும் தம்மை மீண்டும் ஏற்றுக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பிக்க உதவுமாறும் அவர் தம் கணவனைக் கேட்டுக்கொள்ள, இருவருமாக இணைந்து ஜகன்னாத தலத்திற்கு வந்திருந்தனர்.

    மற்றொருவர் வீட்டில் அவருடைய மனைவியாகவே வாழ்ந்துவிட்ட இப்பெண்மணியை மீண்டும் மனைவியாக ஏற்க சாஸ்திரம் இடங்கொடுக்குமா என கேள்விகளுடன் இத்தம்பதிகள் மனம் வருந்தினர். இதனைக் கண்ட ஜகந்நாத பண்டிதர் தம்பதிகளுக்கு ஆறுதல் அளித்து இதற்கு பிராயசித்தமாக கோவில் புஷ்கரணியில் மூழ்கி ராமநாமத்தை உச்சரித்தாலே போதுமானது என்று கூறினார். அங்கு அப்போது வந்திருந்த போதேந்திர சரஸ்வதி இந்த பிராயசித்தத்துக்கு சாஸ்திர சம்மதம் உண்டா என வினவ பண்டிதர் தமது தந்தை எழுதிய “பகவன் நாம கௌமுதி” என்ற நூலைக் கொடுத்தார். அப்பெண்மணி அவ்வாறே புஷ்கரணியில் மூழ்கி ராமநாமத்தை சொல்லி கணவனுடன் இணைந்து தீர்த்த யாத்திரையை முடித்து தென்னகம் திரும்பினார். (இதில் உபரியாக, ஜகன்னாதர் அப்பெண்மணியிடம் மூன்று முறை ராமநாமத்தை சொல்லி நீரில் மூழ்கி எழச் சொன்னதாகவும் அதனைக் கேட்டுக்கொண்டிருந்த அவரது அன்னை “ஏன் இப்படி ராமன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாய்? மூன்று முறை எதற்கு? இராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே போதுமே!” எனக் கூறியதாகவும் சொல்லுவர். பின்னாளில் மகாத்மா காந்தியின் சிஷ்யரான வினோபா ராம நாமத்தால் விடுதலை பெற்றுவிட முடியாத அளவு கொடூரமான பாவத்தை மனிதன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பாராம்.)//

    https://tamilhindu.com/2009/11/hindu_authority/

    இதற்குப் பிறகும், “இங்கு சிவ நாமத்தைவிட ராமநாமமே பெரிதென சொல்லப்பட்டுள்ளது” என்று சொன்னால், I am very sorry, இனி நேரத்தை வீணடிக்க நான் பயித்தியக்காரன் இல்லை!

    சங்கரர் சிவனின் அவதாரம் என்று நம்பிக்கை உள்ளது. அது உண்மைதான் என்கிறார்கள் இஸ்கான் அமைப்பினர். பத்ம புராணத்தில் இதற்க்கு ஆதாரம் உள்ளது என்கிறார்கள்!
    https://www.gosai.com/krishna-talk/70-self-defeating-mayavada.html

    மத்வர் வாயுதேவனின் (அதாவது அனுமானின்) அவதாரம் என்றும் கூறுகிறார்கள். இதற்க்கு ஆதாரமாக மத்வரே ரிக் வேதத்தின் பலித்த சூக்த்தைத்தைக் காட்டி “தான் தான் முக்கிபிரானரின் அவதாரம்” என்றும் கூறியதாகச் சொல்கிறார்கள்.

    ஆனால், “11 ருத்திரர்களில் ஒருவரது மகன்தான் மனோஜவன் (அனுமான்)” என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. (துளசிதாசரும் இதைத்தான் கூறுகிறார்!)

    அப்படியென்றால் சிவன் நிலைநாட்டிய அத்வைதத்தை, சிவனே மற்றொரு அவதாரத்தில் வீழ்த்தினார் என்றா சொல்லமுடியும்?

    அப்படியென்றால் இதில் ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும்.. பத்ம புராணம் உண்மை என்றால், மத்வர் சொல்வது பொய் என்றாகிவிடும், மத்வர் சொன்னது உண்மை என்றால், பத்ம புராணம் பொய் என்றாகிவிடும்.

    இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில், ஒரு மகான் சொல்வதைத் தான் ஏற்கமுடியும். (எல்லா மகான்களும் ‘விஷ்ணுவே பெரியவர்’ என்று சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது). நாயன்மார்களும் மகான்கள்தான். இறந்துபோன அங்கப் பூம்பாவையை மீண்டும் உயிர்பிக்கச் செய்தார் ஞானசம்பந்தர் (இதுபோன்ற இன்னும் பல அதிசயிக்கத்தக்க நிகழ்வுகள் உள்ளன).

    எந்த தெய்வமும் மக்களைப் பிரித்துப் பார்பதில்லை. ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ச்தொத்திரத்திர்க்கும் மகாலட்சுமி செல்வத்தை அளித்தாள், வேதாந்த தேசிகர் பாடிய ஸ்ரீ ஸ்துதிக்கும் செல்வத்தை வாரியளித்தாள். “இவர் அத்வைதி, இவர் விசிஷ்டாத்வைதி” என்று பிரித்துப் பார்கவில்லை. அதேபோல, நாயன்மார்கள் சிவனையே துதித்தனர் என்று விஷ்ணு கோபப்படப்போவதில்லை, ஆழ்வார்கள் தன்னைப் பாடவில்லையென்று சிவன் சினம் கொள்ளப் போவதில்லை!

    நாயன்மார்களைத் தான் ‘நாயனார்’ என்று அழைக்கிறார்கள் என்கிறோம், ஆனால் மணவாள மாமுநிகளுக்கு அவரது பெற்றோர்கள் சூட்டிய பெயர் ‘அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்’.

    எதையும் நான் ஒதுக்கவில்லை. “தேவாரம், திருமுறை பாராயணத் திரட்டு” என்ற நூலிற்கு அருகில், பெரியாழ்வார் குழந்தை ஆண்டாளை கண்டெடுக்கும் வண்ணப் படத்தை வைத்துள்ளேன்….

    ஜீயர் ஸ்வாமிகள், சிருங்கேரி சங்கராச்சாரியார், தர்மபுர ஆதினம், உடுப்பி மடாதிபதி, வெளிநாட்டு இஸ்கான் சுவாமிஜி, எல்லோரையும் நான் மதிக்கிறேன். எல்லோர் காலில் விழவும் நான் தயார்!

    இதை இங்குமட்டும் பிரசுரித்தால் போதாது என்று வாதங்கள் நடக்கும் நான்கு கட்டுரைகளுக்கும் copy-paste செய்துள்ளேன். ஆசிரியர் குழு நான்கு இடங்களிலும் இம்மறுமொழியைப் பிரசுரிப்பார்கள் என்று நம்புகிறேன்…

    கிருஷ்ணன் மகாபாரதத்தில் அனுசான பர்வத்தில் “சிவ சகஸ்ரநாமத்தை” பாடுகிறான். பத்ம புராணத்தில் சிவன் “விஷ்ணு சகஸ்ரநாமத்தை” பாடுகிறான். சிவனுக்கு விஷ்ணுவை மிகவும் பிடிக்கும், விஷ்ணுவிற்கு சிவன் மீது கொள்ளைப் பிரியம். நாம் என்னவோ அவர்களை ‘விஜய்- அஜித்’ ஐப்போல பெட் கட்டி போட்டிபோடுகிறோம். இந்த வாதம் அவர்களுக்குப் பிடிக்குமா??

    மீண்டும் ஒரே ஒரு முறை சிருங்கேரி பீடத்தை 1892 முதல் 1954 வரை அலங்கரித்த ஸ்ரீ சந்திரசேகரேந்திரா பாரதி சுவாமிகள் கூறி சில வரிகளை இங்கு சொல்கிறேன்:- “உங்களால், இறைவனின் பாதத்தையே பார்க்க முடியவில்லை, அவன் முகம் எப்படியிருக்கிறது என்பதை எண்ணி ஏன் சண்டைபோடவேண்டும்? ஞானம் பெறுவோம், பக்தி செய்வோம், இறைவனிடம் செல்வோம், அவன் கையில் சங்கு, சக்கரம் கதை வைத்திருந்தால் அவனை விஷ்ணு என்று வணங்குவோம், இல்லை டமரு, திரிசூலம் வைத்து ஜடாமுடியுடன் இருந்தால் அவனை சிவனாகத் தொழுவோம்..”.

    இந்த சிறியவன் கூறியதை இவ்வளவு நேரம் பொறுமையுடன் படித்ததற்காக நன்றி!

  89. திரு உமாசங்கர் அவர்களே,

    //
    ஒரு எடுத்துக்காட்டாக இந்த நிரலியில் உள்ள ஹரதத்த சிவாச்சாரியாரின் சரிதத்தைப்படியுங்கள். அவர் எழுதிய ஸ்ருதி ஸுக்தி மாலை உள்ளிட்டவற்றுக்கும் இதே நிரலியில் தொடர்க் கணைகள் உள்ளன.

    https://www.shaivam.org/ad_haradattar.htm
    //

    காட்டியதற்கு நன்றி.

    //
    இவை தங்கள் பார்வைக்கே. மேலும் மேலும் விவாதத்துக்காக அல்ல.
    //

    ததாஸ்து.

    (edited and published)

  90. y u people are fighting among urselves.i m a saivite, so for me the supreme being is Siva.but i didnt say people who pray vishnu will go to hell or wil not attain moksha. in vishnu puranas,vishnu is the supreme soul so vishnu is praised.in saiva puranas, siva is the supreme soul,so he is praised.if people praying to siva will not attain moksha,what about the 63 nayanmars ??? in fact nayanmars are 63 compared with alwars,12..doest it means siva is greater than vishnu and they are both challenging themselves to get the most devotees ??? definitely no !!! siva and vishnu are one..if u r a vaishnavite,u have the rite to praise vishnu as the supreme being..so like that,saivites have the right to praise siva as the supreme being…so if u r a vaishnavite u can ignore this…but u dont have the right to say devotees of siva will not attain moksha,for if u do,vishu will not grant u moksha….

  91. மிக்கமழ்ச்சி,உங்களுடைய விளக்கம் இன்று உள்ள இளைஞர்களுக்கும் புரியும் விதத்தில் உள்ளது.நடுநிலையாளர்கள் நிச்சயம் ஏற்று கொள்வர்.கடவுள் எதற்கு நாம் சண்டை போட்டு கொள்ளவா.?அனைத்தும் மனிதனை பக்குவ படுத்ததான்.பக்குவ பட்ட உணவே உண்ண ஏற்றது.பக்குவப்பட்ட மனமே கடவுக்கு உகந்தது.

  92. Dear Hindu Brothers,
    I am not able to understand the real reason for all these arguments. I fully hate this sort of division among Hindus. By claiming the superiority what actually be the achievement of the Advocates of saivites and vaishnavites here? Are we not one and the same Hindus? For your own god’s sake leave this quarrel at this. Remember this is the quarrel which had snapped away our pride and prestige in the early centuries leading to our own enslavement to moghals and then to English for centuries. Have we not learned anything from the History?

    Mayilai Sugumar

  93. அடிமுடி தேடிய கதையை வைஷ்ணவர்கள் ஏற்க மறுப்பதை புரிந்துகொள்ளவேண்டும். பரத்துவ நிர்ணயம் என்பது வேதைதினை கொண்டு செய்யவேண்டியது கந்தர்வன் கூறியுள்ள புத்தூர் ஸ்வாமி யார் அவர் அவ்வளவு பெரியவரா என உமா சங்கர் கேட்டுள்ளார். யார் என அவரை பற்றி தெரியாமலே அவரை பெரியவரா என கேட்பது நகைப்புக்கு உரியது அவரை பற்றி அறிய புத்தூர் ஸ்வாமி https://aggraharam.blogspot.in/2013/01/blog-post_16.html ஸ்ரீ ராமன் லிங்க்பூஜை செய்தாரா என்பதற்க்கு நன்கு ஸ்ரீ ராமாயணத்தில் தேர்ச்சியுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிவு . ராமர் லிங்க பூஜை செய்தாரா?https://aggraharam.blogspot.in/2013/04/blog-post.html ஸ்ரீ நரசிம்ஹரை சரபம் அடக்கியதாக சைவ இலக்கியங்கள் கூறுவது உன்மயா என அறிய சரபரை அடக்கிய ஸ்ரீந்ருஸிம்ஹர் https://aggraharam.blogspot.in/2013/03/blog-post_21.html ஸ்ரீ ஜடாயு கண்ணன் லீலைகள் வேததில் இல்லையே என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் வேதகாலத்துக்கு பின்தானே. கட்டுரையை எழுதியவர் ஆரம்பிக்கும்போது ஸ்ரீ விஷ்ணு பரம்பொருள் இல்லை என ஏற்கிறாராம் பின் சிவன் பரம்பொருள் என்பாராம். இரண்டு பரம்பொருளை நமது வேதங்கள் கூறவில்லை. பரம்பொருளை அறிய வேத ஆராய்சி உதவுமே தவிர அடிமுடி தேடிய கதை உதவாது

  94. ஆர்யத்தமிழர் பரத்துவத்தினை வேதத்தினைக்கொண்டு நிர்ணயம் செய்து கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சைவர், வைணவர், சாக்தர், ஸ்மார்த்தர் அனைவரும் அப்படியேதான் நிர்ணயம் செய்துகொள்ளுகிறார்கள். தம் மூர்த்தியே பரமென்று சாற்றுகின்றனர். ஆனால் அவர்கள் பொருள்கொள்ளும் முறைகளில் பேதம் இருக்கிறது. வேதத்தினை மட்டுமே இவர்கள் பிரமாணமாக்கொள்வதில்லை. ஆகமங்களும் புராணங்களும் இந்த சமயங்களுக்குப்பிரமாணமாக அமைகின்றன. வேதங்களுக்கே தத்தம் ஆகம வழி ப்புராணங்களின்படி பொருள் கொள்கின்றனர். ஆகவே அனைவரும் ஏற்கத்தக்க பரத்துவம் ஒரே மூர்த்திக்கு கற்பிப்பது சாத்தியமே இல்லை. சைவராகிய யாம் சைவாச்சாரியார்கள் வழி செல்கிறோம். வைணவப்பாரம்பரியத்தினவர் உங்கள் வழி செல்லுங்கள். ஸ்மார்த்தர்களும் அப்படியே வழி நடக்கட்டும். சைவராகிய எம்மிடம் வந்து உங்கள் உபதேசம் செய்தல் வேண்டாம். ஸ்மார்த்தர்களும் ஹரியும் சிவனும் ஒன்று என்ற போதனையை எம்மிடம் செய்யாதீர்கள். ஹிந்து ஒற்றுமைக்கு எல்லா பாரம்பரியங்களும் செழித்தலே வழி. அதைவிட்டு எல்லோரையும் ஒரேவழிபாடு உள்ளவர்களாக்கும் முயற்சி செய்யாதீர்கள்.

  95. Kindly see the following Abstract given by Tamilhidu editors, which says it all:

    அறிந்தது அறியாதது இவைகளின் எல்லைகளை உணராத, பக்குவம் அடையாத அறிவு மிக மிக ஆபத்தானது. மனப் பக்குவத்துடனும் பொறுப்புடனும் வளரும் அறிவே நல்லறிவு. அதுவே ஒருவனை மேல் நோக்கி எழச் செய்யும்; உள் நோக்கி விழிக்கச் செய்யும்… மிக நுண்ணியதான ஞானப் பாதை நேர் வழிதான் என்றாலும் அதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாது செய்யப்படும் பயிற்சியால் கர்வம் மிகுந்து தவறான வழிக்கும் கொண்டு செல்லக் கூடிய அபாயம் உள்ளது. அதைத்தான் பிரம்மாவின் வீழ்ச்சி குறிப்பாக உணர்த்துகிறதோ?

  96. ஏனப்பா ராமன் அவர்கள் கூறும் கருத்துக்கு இவ்வளவு எதிர்ப்பு, சிவபெருமான், விஷ்ணு பகவான், பிரம்மதேவன், மற்றும் அனைத்து தேவர்களும் மனித பிறவி எடுத்துதான் இந்த அனைத்து சக்திகளையும் அடைத்தார்கள்,

    கடவுளாக இருந்தாலும் அகந்தை இருந்தால் அவர்களுடைய சக்தி வெளிப்படாது என்ற கருத்தைதான் கூற வருகிறார்.

    சிவன் வேறு சிவம் வேறு இந்த பிரபஞ்சத்தில் முதன் முதலாக சிவத்தை அடைந்ததால் அவருக்கு சிவன் என்ற பெயர் ஆகிற்று ( சிவன்,விஷ்ணு,பிரம்ம இம்மூண்றுமே ஒன்றுதான் அதுதான் சிவம் என்ற பிரபஞ்ச சக்தி).

    சிவபெருமான்:

    தவத்தின் மூலம் சிவம் என்ற அந்த பிரபஞ்ச சக்தியை பெற்றார்,

    மாகவிஷ்ணு: (அனைத்து அவதாரங்களிலும்) நமக்கு சான்றாக ராமருக்கு ராமேஸ்வரம், விஷ்ணுவுக்கு அவரின் அவதாரமாகிய வியாசகர், மகாவிஷ்ணு லிங்கபூஜையின் பொது விஷ்ணு பகவான் தன்னுடைய கண்களையே மலராக லிங்கத்திற்கு அர்ச்சனை செய்தார், அதன் பின்புதான் ஸ்ரீ சக்கரத்தை சிவத்திடம்(சிவபெருமானிடம் அல்ல) இருந்து பெற்றார்.

    மஹா விஷ்ணு சிவலிங்க பூஜை செய்து சிவம் என்ற அந்த பிரபஞ்ச சக்தியை பெற்றார்,

    பிரம்மதேவர்:

    அவரும் தவத்தின் வழியாகவே சிவம் என்ற அந்த பிரபஞ்ச சக்தியை பெற்றார்.

    ஆக இம்மூன்று பெறும் ஒன்றுதான்.

    இன்றும் நாம் தவத்தின் வழியை எடுத்தால் சிவபெருமானின் வழியாக சிவம் என்ற சக்தியை பெறலாம்.
    இன்றும் நாம் லிங்கபூஜை வழியை எடுத்தால் மகாவிஷ்ணு வழியாக சிவம் என்ற சக்தியை பெறலாம்.

  97. கூர்மத்தின் சிவ பெருமான் வதைத்து ஆமை ஓட்டை பிய்த்தார் மச்சத்தின் கண்ணை பறித்து மச்சத்தை வதைத்தார் வராக பல்லை உடைத்து வராகத்தை சிவன் வதைத்தார் நரசிம்மத்தை சரபேஸ்வரர் வடிவம் கொண்டு நரசிம்ம தலையை வெட்டி முதுகு தோலை உரித்து தன் மீது போர்த்தினார் வாமனன் முதுகு தண்டை பைரவன் பிடுங்கி எரிந்து தான் வைத்திருந்த தண்டை கொண்டு விமானத்தின் தலையில் அடித்தான் வாமனன் இறந்தான் தட்சனை அழிக்க சிவன் வீரபத்ரனை உண்டாக்கி அழிக்க அனுப்பி வைத்தார் அங்கு தட்சனை காக்க விஷ்ணுவும் பிரம்மனும் ரட்சனாக நின்றார் அங்கு இருந்த விஷ்னு பிரம்மன் தேவர்கள் சூரியன் சந்திரன் நவகிரகங்கள் அஷ்டதிக் பாலகர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் நவகிரகங்கள் எண் திசை காவலர்கள் பஞ்ச பூதங்கள் சந்திரன் அனைவரையும் சித்ர வதை செய்யப்பட்டு வீரபத்ரன் அனைவருடைய தலையை. கொய்தார் அங்கு காக்க வேண்டியவரும் இறந்தார் படைக்க வேண்டியவரும் இறந்தார் அதற்கு பிறகு தட்சனை அழித்தார் வீரபத்ரன்
    பைரவனால் பிரம்மாவின் ஒரு தலை அழிந்தது
    நாராயணன் மகன் காமதேவனை சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய நெருப்பால் சாம்பலானான் ஏன் கேக்கவில்லை நாராயணன் யுத்தம் செய்யவில்லை அது மட்டுமா கருடனுக்கு கார்கோடகனுக்கும் நடந்த யுத்ததில் கார்க்கோடகன் சிவனை வேண்டி கருடனும் விஷ்ணுவை வேண்ட சிவனும் விஷ்ணுவும் யுத்தம் புரிய சிவன் திரிசூலம் நாராயணன் நெஞ்சில் பதியவில்லையா அங்கு வெற்றி பெற்றது யார் நாராயணன் அடைந்த பலம் ஆத்மாவின் உறுதி ஆத்ம ஞானம் மாய சக்தி இது எதிலிருந்து நாராயணனுக்கு கிடைகிறது சுதர்சனம் சக்கரத்தால் சிவன் ஜலந்திரனை கொன்று அந்த ஜலந்திரனுள் கனன்று எரிந்த ருத்ர சக்தி அது சக்கரத்தினுள் செல்ல அந்த சக்கரத்தை விஷ்னுவிற்கு குடுத்தார் கையால் வாங்கியவுடன் அதனை தாங்காது அதிக எடையுடன் இருப்பதால் சிவன் அதை வாங்கி பல பின்னங்களாக பிரித்தார் 21 சக்கரங்களாக பிரித்தெடுத்தார் அதில் ஒன்றை சிவன் விஷ்ணுவிற்கு வழங்கினார் அதன் பெயர் சுதர்சனம் அம்பாளுக்கு ஒன்றை வழங்கினார் அதன் பெயர் பிராதகேது விநாயகரிடம் ஒரு சக்கரத்தை குடுத்தார் அதன் பெயர் வல்லபாராண்யம் சரி இதிகாசங்களில் வருவோம் இராமாயணம் வாலி வழிபட்ட லிங்கம் வாலீஸ்வரர் கோயில் உள்ளது இராமன் லிங்கத்தை வழிபட்ட தலம் இராமேஸ்வரம் உள்ள இராம நாதர் ஆலயம் ராவணன் வழிபட்ட ஆலயம் இலங்கையில் உள்ளது அபிமுகேஸ்வரர் மற்றும் ராவணஷ்வரர் நாராயணன் வழிபட்ட ஆலயம் உள்ளது பிரம்மன் வழிபட்ட ஆலயம் உள்ளது சூரியன் சந்திரன் நவகிரகங்கள் அஷ்டதிக் பாலகர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் நவகிரகங்கள் எண் திசை காவலர்கள் இந்திரன் எமன் சனி பஞ்ச பூதங்கள் அஷ்ட வசுக்கள் அனைவரும் வழிபட்ட ஆலயம் சிவனுக்கு உள்ளது அதுமட்டுமா அசுரர்களும் வழிபட்ட ஆலயம் சிவனுக்கு உள்ளது அரசர்கள் வழிபட்ட ஆலயம் ஏராளம் அதுமட்டுமா ஓறறிவு முதல் ஆறறிவு வரை சிவனை வழிபட்டு உள்ளது இராமாயணம் எழுதிய வால்மீகி வணங்கிய பிரதிஷ்டை செய்த லிங்கம் உள்ளது இந்த சென்னையில் திருவான்மியூர் பரசுராமர் சிவனுக்கும் அம்பாளுக்கு விநாயகருக்கும் முருகனுக்கும் பல கோவில்களை அமைத்து வழிபாடு நடத்தியுள்ளார் ஐயப்பன் கோவிலை அமைத்ததும் பரசு ராமரே அவர் வணங்கிய லிங்கம் பரசுராம லிங்கேஸ்வரர் அயனாவரத்தில் உள்ளது மகாபாராதத்துக்கு வருவோம் கிருஷ்ணன் சிவனை நோக்கி தவமிருந்து அழிவின் தன்மை கொண்ட மகன் வேண்டும் என சிவ பெருமானிடம் வேண்டினான் அதன் படியே சிவபெருமான் வரம் தந்தார் சூரியனிடம் இருந்து வாங்கிய சிந்தாமணி மாலையை ஒருவன் வரம் வாங்கி பெற்றதால் அம்மணியை கிருஷ்ணன் கேக்க இவன் பயந்து தம்பிக்கு அளித்து விட அந்த தம்பி காட்டுக்கு வேட்டையாட போக சிங்கம் அவனை கொல்ல ஜாம்பவான் எனும் கரடி அப்பக்கம் வந்து அவன் கழுத்தில் உள்ள மாலையை எடுத்து வீட்டுக்கு எடுத்து வர அங்கே அண்ணன் தம்பியை காணவில்லை அம்மாலைக்காக தன் தம்பியை கொன்றிருப்பான் கிருஷ்ணன் என முடிவு செய்து பலராமனிடம் முறையிட கிருஷ்ணன் நான் தமது தம்பியை கண்டுபிடித்து தருகிரேன் என்று உறுதி மொழி ஏற்று விநாயகரை வேண்டுகிறார் விநாயகரும் அவ்விடத்தை காட்ட ஜாம்பவானிடம் இருந்து அதனை சண்டை இட்டு அம்மணியை பெற்றார் பீஷ்மர் மூன்று பெண்களை கடத்தி சென்றான்‌அதில் அம்பாலியை விட்டு விட்டான் அவள் சென்று தன் காதலனிடம் நான் வந்து விட்டேன் என்று கூற உன்னை திருமணம் செய்ய முடியாத என்று கூற தன் வீட்டிலும் அவளை சேர்க்காமல் போக பீஷ்மரை பழிவாங்க முருக பெருமானிடம் இருந்து வரம் பெற தவம் இருந்தாள் முருக பெருமான் வந்து உமது இந்த ஜென்மத்தில் நினைத்தது நடக்காது மற்றொரு ஜென்மத்தில் நினைத்தது நடக்கும் என்றார் அர்ஜூனன் சுபத்ரா திருமணம் சோம நாதர் ஆலயத்தில் நடை பெற்றது கிருஷ்ணன் ருக்மினி கல்யாணம் முதன் முதலில் சந்தித்தது துர்க்கை அம்மன் கோயிலில் தான் இதிலிருந்து என்ன தெரிகிறது 17 யுகங்களிலும் சைவம் எனும் சிவம் சாக்தம் எனும் அம்பாள் கவுமாறம் எனும் முருகன் காணாதிபத்யம் எனும் விநாயகம் இந்த நான்கு சமயங்கள் மட்டுமே 17 யுகங்களிலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழிபாடு நடத்தியுள்ளார் கலியுகத்தில் மட்டும் சைவம் சாக்தம் கவுமாறம் காணாதிபத்யம் இந்த நான்கு சமயங்களோடு வைணவம் பெளத்தம் சமணம் கிறித்தவ இஸ்லாம் ஜைனம் போன்ற பல மதங்கள் உண்டாயின இதற்கு சாட்சி இதிகாசமான மகாபாரதம் ராமாயணம் இதிலிருந்து என்ன தெரிகிறது சிவபெருமான் மட்டுமே இறைவன் பரம்பொருள் பரபிரம்மம் அவனே பிரம்மனுக்கு படைப்பு தொழில் அழித்து விஷ்ணுவிற்கு காத்தல் தொழில் அளித்து பலாயிர லச்சம் கோடி ருத்ரர்களில் ஒருவரான பீம ருத்ரனுக்கு அழிக்கும் தொழிலை அளித்து மறைக்கும் தொழிலை மகேசனும் அருளும் தொழிலை சதாசிவனும் செய்கின்றனார் இவை அனைத்திற்கு மேல் சிவன் இந்த சிவன் சக்தி என்ன என்பதை சொல்கிறேன் பிரபஞ்சம் முழுவதும் மண் அந்த மண்ணின் எண்ணிக்கையில் பிரபஞ்சங்கள் அப்பிரபஞ்சம் முழுவதும் எரிமலை குழம்பில் நிரம்ப பெற்ற உடலை கொண்டவர் சிவபெருமான் அந்த எரிமலை குழம்பில் இருந்து நெருப்பு ஜீவாலை தோன்ற அந்த ஜீவாலையில் இருந்து பலாயிரம் லச்சம் கோடி கணக்கான தீப்பொறி தோன்ற ஆறு தீப்பொறிகளை ஆறு முகத்தின் மேல் உள்ள நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறி சரவண பொய்கையில் விழுந்து ஆறுமுகசாமி தோன்றினார் அகோர முகத்திலிருந்து நெற்றிக்கண் வழியே ஒற்றை தீப்பொறியில் உருவானவர் வீரபத்ரன் 17 யுகங்களிலும் சைவம் சாக்தம் கவுமாறம் காணாதிபத்யம் சிவன் சக்தி முருகன் விநாயகர் இந்த நான்கு தெய்வங்களை மட்டும் அரசர்கள் மனிதர்கள் கோயில் கட்டி வழிபாடு நடத்தியுள்ளார் அப்போது விஷ்ணுவிற்கு சமயம் இல்லை அவர் கடவுளாகவும் இல்லை கலியுகத்தில் மட்டுமே விஷ்ணுவிற்கு கோயில் உண்டானது அதுவும் 8 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு கிறித்தவம் இசுலாம் சமணம் பௌத்தம் ஜைனம் இவையும் மதங்களாக எழுந்தது பலாயிரம் கோடிக்கணக்கான வருடத்திற்கு முன் தமிழனே இப்பூமியை ஆண்டான்‌ தமிழன் வணங்கிய தெய்வம் சிவன் முருகன் விநாயகர் அம்பாள் இதனை நான் துவாபர யுகத்தில் வாழ்ந்த மகாபாரதம் எனும் இதிகாசம் நூல்களில் காண்பித்து விட்டேன் துரோணர் மரணமில்லா அஸ்வத்தாமன் சிவனிடம் பெற்றார் இதை விட சான்றுகள் என்ன வேண்டும் நிச்சயமாக சிவனே சக்தி வாய்ந்தவர் அவரே ஆதிமூலம் ஆதிபகவன் பரம்பொருள் பரபிரம்மம் ஓம் நமசிவாய ஓம் சரவணபவாய நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *