ஹலால் கறியா ஜட்கா கறியா?

ஹலால் கறியை தமிழ்நாட்டு மக்கள் வாங்குகிறார்கள். ஹலால் உடலுக்கு கெடுதி. ஜட்காவே உடலுக்கு நல்லது.

muniyandi-vilas-hotelஹலால் என்பது இஸ்லாமிய முறைப்படி வெட்டப்படும் ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றை குறிக்கிறது. ஜட்கா என்பது இந்து முறைப்படி வெட்டப்படும் ஆட்டுக்கறி கோழிக்கறி ஆகியவற்றை குறிக்கிறது.

ஆடுகளும் கோழிகளும் ஒரே வீச்சில் கழுத்து துண்டாக்கப்பட்டு கொல்லப்படுவதை ஜட்கா எனலாம். ஆனால், இஸ்லாமிய ஹலால் முறையில் ஆடுகளின் கழுத்து ஒரு கீறல் கீறப்பட்டு அதன் ரத்தம் வடிக்கப்படுகிறது. இந்த முறையில் ஆடு மெல்ல மெல்ல துடிதுடித்து சாகிறது.

வெகுகாலமாக இந்தியாவில் ஜட்கா முறையிலேயே ஆடுகள் கோழிகள் வெட்டபப்ட்டு வந்தன. முனியாண்டி விலாஸ் போன்ற இந்து மிலிட்டரி உணவு கடைகளில் ஜட்கா முறையில் வெட்டப்பட்ட கோழிகள், ஆடுகளே சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டன. தற்போது பல இந்துக்களும் இஸ்லாமியர்களது கசாப்புக் கடைகளில் ஹலால் முறையில் வெட்டப்படும் கறிகளை வாங்கி வருகிறார்கள்.

அது மட்டுமல்ல தற்போது மெக்டொனால்ட் போன்ற அசைவ உணவு கடைகளும் ஹலால் முறையில் வெட்டப்பட்ட மிருகங்களையே பரிமாறி வருகின்றன. இது இந்து முறைப்படி தவறானதாகும்.

2007இல் சீக்கிய அமைப்புகள் மெக்டொனால்ட் போன்ற கடைகளில் சீக்கியர்கள் உணவு வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியது. ஏனெனில் அந்த கடைகளில் ஹலால் முறையில் வெட்டப்பட்ட கறிகளையே வினியோகம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியது.

இந்த செய்தியை ஹிந்துஸ்தான் டைம்ஸ், Jalandhar, October 7, 2003 இதழில் Jhatka vs halal: Sikh body raises meaty issue  என்ற தலைப்பிட்ட பகுதியில் காணலாம்.

ஐரொப்பாவிலும் பல நாடுகளிலும் ஜட்கா என்றும் ஹலால் என்றும் பிரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்கப்படுகின்றன. அமெரிக்காவில் பல இந்துக்கள் ஜட்கா மாமிசத்தை வாங்குகிறார்கள்.

ஹலால் மூலம் கொல்லப்படும் மிருகங்கள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பது ஹலால் முறையில் வெட்டப்படும் மிருகத்தை பார்த்தாலே தெரியும். மன தைரியமுள்ளவர்கள் இங்கே வீடியோவை பார்க்கலாம்.

(இதே போல இஸ்லாமிய பயங்கரவாதிகள் மனிதர்களையும் கழுத்தை அறுத்து கொல்லுவதையும் அந்த மனிதர்கள் துடிக்க துடிக்க சாவதையும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளியிடும் வீடியோக்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்)

இந்தியாவின் பாரம்பரியத்தில் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று பொதுமக்கள் சொலவடையாக இருக்கிறது. ஆனால், எக்காரணத்தினாலும் ஒரு உயிரை துடிக்க துடிக்க கொல்வதும் அதன் கஷ்டத்தை அதிகரிப்பதும் தவறானது.

ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படும்போதும் அதிலிருந்து ரத்தம் வெளியேறும் போதும் அதன் உடலின் செல்களில் விஷங்கள் (toxins) உருவாக்கப் படுகின்றன. அது உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து ஓரளவு வெளியேறினாலும், பல விஷங்கள் அதன் கறிப்பகுதிகளில் தங்குகின்றன. இவை நியூரோ டாக்ஸின் எனப்படும் மூளையையும் நரம்பையும் பாதிக்கும் விஷங்கள்.

indian_butcherஇப்படிப்பட்ட பாதுகாப்பு செயல்பாடு பல மிருகங்களிடம் உள்ளது (Pharmacology of endogenous neurotoxins: a handbook By Andreas Moser).  பல மிருகங்கள் தங்களை எதிரி மிருகங்கள் கொன்றுவிடக்கூடாது என்பதற்காக காயம்பட்ட பகுதியில் விஷத்தை சுரக்கின்றன. இதற்கு மூல காரணமாக இருப்பது உடலில் தோன்றும் வலி. ஆகையால், ஐரோப்பாவில் ஒரு மிருகத்தை Stun செய்து அதாவது அதன் மூளையை செயல்படாமல் ஆக்கிய பின்னால் அந்த மிருகங்கள் கொல்லப்படுகின்றன. இந்த மிருகங்கள் வலி உணர்வதில்லை.  ஆனால், இவை ஹலால் உணவு அல்ல என்று முஸ்லீம்கள் உண்பதில்லை.

ஆனால், ஐரோப்பிய முறைப்படி Stun செய்யப்பட்ட மிருகங்களை கொன்று உண்பது ஜட்கா என்று கூறலாம்.

ஹலால் முறைப்படி வெட்டப்பட்ட மிருகத்தில் ரத்தம் இருப்பதில்லை. ரத்தம் வடிய விடப்பட்டு விடுகிறது. இந்த கறி சுவையற்றதாக ஆனாலும், மென்மையாக ஆகிவிடுவதால், இந்த கறியை பல இந்துக்கள் வாங்கி உண்கின்றனர். அதனால், அந்த துடிக்க துடிக்க கொல்லப்பட்ட மிருகத்தின் துயரத்துக்கு பொறுப்பாளியாகவும் ஆகி விடுகின்றனர்.

In 2003, an independent advisory group – the Farm Animal Welfare Council (FAWC) – concluded that the way halal and kosher meat is produced causes severe suffering to animals and should be banned immediately. FAWC argued that cattle required up to two minutes to bleed to death when such means are employed. The Chairperson of FAWC at the time, Judy MacArthur Clark, added, “this is a major incision into the animal and to say that it doesn’t suffer is quite ridiculous.”

இதே போல விலங்குகள் உரிமைகள் ஸ்தாபனம் போன்றவை மிருகங்களை கொல்வதற்கு பொதுவாக எதிர்ப்பு தெரிவித்தாலும், மிருகங்களை ஹலால் முறையில் கொல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

https://www.guardian.co.uk/uk/2003/may/15/religion.world

பல விலங்கு உரிமை அமைப்புகள் ஹலால் முறையின் கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹலால் முறையில் மிருகங்களை கொல்வதை தடை செய்யவேண்டும் என்று கூறி வருகின்றன. இந்தியாவில் இருக்கும் தற்போதைய நிலையில் ஹலால் முறையில் கொடூரமாக மிருகங்களை கொல்வதை தடை செய்ய முடியாது என்றாலும், இந்துக்கள் ஹலால் முறையில் வெட்டப்பட்ட மிருகங்களை வாங்காமல், அந்த பாவத்தில் பங்கு பெறாமல் இருப்பது சிறந்ததாகும். வட இந்தியாவின் பெரும்பாலான அசைவ உணவாளர்களான இந்துக்கள் இதைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்

109 Replies to “ஹலால் கறியா ஜட்கா கறியா?”

  1. திரு.ஆர்.கோபால் அவர்களே!

    நான் சைவ முறைப்படி உணவு எடுத்து கொள்வதால் “இந்த விஷயத்தில்”
    பாதி பாவம், முழு பாவம் என்பது எனக்கு இல்லை. (ஹையா!!!).

    (1)இஸ்லாமிய தீவிரவாதிகள் சிக்கும் அப்பாவிகளை வெட்டுவதை,
    விலங்கை வெட்டும் முறையுடன் ஒப்பிட்டது அருமை. இது சில விஷங்களை சொல்லாமல் சொல்லியது.

    (2)எங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் முக்காலே மூணு வீசம் கறிக்கடைகளை
    இஸ்லாமியர்கள்தான் பாகிஸ்தான் கொடியுடன் வைத்திருக்கிறார்கள்.
    கறி சாப்பிடும் பாவப்பட்ட இந்துக்களுக்கு வேறு வழி இருப்பதாக தெரிய
    வில்லை.

    (3)”ஐரோப்பாவில் ஒரு மிருகத்தை Stun செய்து அதாவது அதன் மூளையை செயல்படாமல் ஆக்கிய பின்னால் அந்த மிருகங்கள் கொல்லப்படுகின்றன” என்று கூறியுள்ளீர்கள்.
    இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. பிரிட்டனில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் KFC
    கடைகளில் ஹலால் கறி மட்டுமே சில மாதங்களுக்கு வழங்க போவதாக ஒரு செய்தியை படித்தேன்.
    மேலும் பன்றி கறியை இஸ்லாமியர்கள் வெறுப்பதால் அது மெனுவிலிருந்தே நீக்க பட்டிருக்கிறது.
    https://www.dailymail.co.uk/news/article-1260286/KFC-diner-told-bacon-burger–halal.html#ixzz0j84HxsA4

    (4)விலங்குகள் உரிமை ஸ்தாபனங்கள் எதிர்ப்பதை கூறியுள்ளீர்கள்.
    இவர்கள் ஆபத்தானவர்கள். இத்தோடு இவர்கள் நிற்க மாட்டார்கள்.
    வலியே இல்லாமல் கொல்லுவது பெரிய கடைகளுக்கு சாத்தியமாக
    இருக்கலாம். ஆனால் சிறிய் கிராமங்களில் ஜட்கா முறையின் படி கூட
    கொல்லக்கூடாது என்று ஆரம்பித்து விடுவார்கள்.

    (5)சாதாரணமாகவே அஹிம்ஸை கொஞ்சம் பைத்திய காரத்தனமான
    அளவில் இந்துக்களிடம் இருக்கிறது. ஹிம்ஸையினால்தான் அஹிம்ஸையை
    ஸ்தாபிக்க முடியும் என்பதை நாம் இன்று மறந்து விட்டிருக்கிறோம்.
    சுவாமி விவேகானந்தர் கூட இந்துக்களில் பெரும்பாலானோர் விலங்குகளை
    சாப்பிடாதனாலேயே 1000 வருடங்களாக இந்தியா அடிமை பட்டிருந்தது
    என்று கூறியுள்ளார். யாருக்கு விலங்கின் மாமிசம் வேண்டுமோ அவர்களால்
    வாங்க முடிவதில்லை. ஆனால் யாரெல்லாம் கடின வேலை செய்யாதவர்களோ அவர்கள்தான் கறியை தின்று பிற்காலத்தில் கஷ்ட
    படுகிறார்கள்.

  2. புனித பைபிளின் கூற்றின்படி ஆதியில் மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்கு சைவ உணவையே கட்டளையிட்டார்;
    அதாவது பயிரிட்டு சமைத்து உண்ணும் காலம் வரைக்கும்;

    ஆனால் அவன் இறைவனின் கட்டளையை மீறிய நாளின் தன் நிர்வாணத்தை உணர்ந்து மறைவிடம் நோக்கி ஓட இறைவன் அவன் வெட்கத்தை மூட மிருகத்தின் தோலினால் ஆடையை அமைத்துக் கொடுத்தார்;அதுதான் மனுக்குல வரலாற்றில் முதல் இரத்தம் சிந்துதலாக அமைந்திருக்கவேண்டும்;

    அவன் தன் பாவத்தின் நிமித்தம் மனவருத்தம் கொள்ளவேண்டி மிருகபலியை இறைவன் நியமித்தார்; அதுவே பிற்காலத்தில் மாமிசம் உண்பதாக மாறியது; அதையும் இரத்தத்துடன் புசிக்கக்கூடாது என்ற கட்டளை இறைவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டது;

    ஏனெனில் மாமிசத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்ற மாபெரும் மருத்துவ உண்மையை இறைவனே மனிதனுக்கு அன்றே சொல்லிக்கொடுத்தார்; இரத்தத்தின் அவசியம் முதன்முதலில் பைபிளில்தான் விளக்கப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உலகறிந்த உண்மையாகும்;

    அதன்படி பார்த்தால் “ஹலால்” எனப்படும் முறையினையே அரபியர்கள் யூதர்களிடமிருந்துதான் கற்றிருக்கவேண்டும்; ஏனெனில் யூதர்களுக்குத் தான் இறைவனால் எழுதப்பட்ட‌ வேதம் கொடுக்கப்பட்டது;

    இரத்தம் உடலிலிருந்து முழுவதும் வெளியேற வேண்டுமானால் “ஹலால்” முறையே சிறந்தது;

    மிருக வதையைக் குறித்து கரிசனை கொள்பவர் இறைச்சி புசிக்காதிருக்கலாம்..!

  3. ஆர். பாலாஜி,

    இது உண்மைதான். முஸ்லீம் கடையில் கறி மென்மையாக இருக்கிறது, ஹலால் உடலுக்கு நல்லது என்றெல்லாம் பொய் பேசி கெடுதியான குரூரமான ஹலாம் உணவே கிடைக்கும் படி விட்டுவிட்டோம்.

    எங்கெல்லாம் இந்துக்கள் கடை வைத்திருக்கிறார்களோ அந்த கறி கடைகளை ஆதரிக்க ஆரம்பிக்க வேண்டும்.

    ஹலால் உடலுக்கு கெடுதி. ஹலால் கறி சாப்பிடுவதால் மூளை பாதிக்கப்ப்டுகிறது என்ற உண்மையை நம் மக்களின் நலனுக்காக நம் மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டியது நம் கடமை.

    இந்த உண்மை பரவினால், முஸ்லீம் கடைகளே ஜட்கா இங்கே கிடைக்கும் என்று போர்டு வைப்பார்கள்.

    நன்றி

  4. நல்ல காமெடியான கட்டுரை. ஒரே வெட்டா வெட்டுங்க, துடிக்க துடிக்க வெட்டாதீங்க என்பதுதான் எத்தனை நல்ல செய்தி!

  5. ஹலால் முறைப்படி கொல்லுதல் கூட பெரிய விஷயமில்லை.
    ஆனால் அந்த ஹலால் செய்வதற்காக கறி கடைகள், ஹோட்டல்கள் வழங்கும் பணம் தான் குண்டு வைப்பதற்கும், தற்கொலைப்படைத் தாக்குதலுக்கும் செலவிடப்படுகிறது என்பது தான் வேதனையான விஷயம்.
    நாமே பணம் கொடுத்து நம்மேலேயே குண்டு போட்டுக்கொள்ளவேண்டுமா ?

  6. இந்துக்களை மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லுங்கள் பரவாயில்லை…. அதை விட்டுட்டு இஸ்லாமிய சட்டங்களையோ கொள்கைகளையோ மாற்ற நினைக்காதிர்கள்…

  7. சைவமே சிறந்தது சைவைதால் ஒரு பாதிப்பும் உடம்பிற்கு வருவதில்லை

  8. இந்த முக்கியமான விசயத்தைப் பற்றி தயக்கமோ கூச்சமோ இல்லாமல் கட்டுரை வெளியிட்ட தமிழ்ஹிந்து தளத்திற்குப் பாராட்டுக்கள். ஆர்.கோபால் அவர்களுக்கு நன்றி. இதன் மூலம் பலவிதமான இந்துக்களின் பலவிதமான பிரசினைகள் மீதும் நாம் அக்கறை கொள்ளவேண்டும் என்று உணர்த்தி உள்ளீர்கள்.

    எல்லாரும் சைவ உணவுக்கு மாறுவது என்பது நடைமுறையில் சாத்தியம் கிடையாது… , தீர்வும் கிடையாது.. இந்துக்களில் மெஜாரிடி மாமிச பட்சணிகள் என்கிறது ஞாபகம் இருக்கட்டும். (ஆயினும் விசேஷ நாட்களில் அசைவம் தவிர்ப்பது போன்ற கட்டுப் பாடுகள் கொண்டவர்கள்). நமது சத்திரிய வீரர்கர் ராமர், அர்ஜுனன், பீமன் எல்லாம் அசைவ உணவுப் பழக்கம் கொண்டிருந்தார்கள் என்று இதிகாசம் சொல்கிறது. ஆயுர்வேதத்தில் எநதெந்த மிருகங்களின் இறைச்சியை எப்படி உண்ண வேண்டும் என்பது பற்றி சொல்லும் மாமிச சாஸ்திரம் கூட இருக்கிறது. இந்துக்களின் இறைச்சி உணவு பழக்கங்கள் இதிலிருந்து வந்தவை தான்..

    ஹலால் இந்து மதத்தின் விதிகளுக்கு முற்றிலும் எதிரானது.. ஹலால் மாமிசத்தை உண்பது ஆரோக்கிய ரீதியாகவும், மத ரீதியாகவும் தவறு என்று இந்துக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.. இதை ஒரு இயக்கமாகவே நடத்த வேண்டும்.

    தமிழகத்தில் பொருளாதார ரீதியாக, இறைச்சி வியாபாரத்தை முஸ்லீம்கள் முழுக்க தங்கள் கையில் கொண்டுவரப் பார்க்கிறார்கள். ஏற்கனவே பல வியாபாரங்கள் இந்துக்கள் கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.. இதையும் இந்துக்கள் நழுவ விடக் கூடாது.. ஆந்திராவில் வெங்கடேஸ்வரா ஹாட்சரீஸ் போன்ற பெரிய அளவிலான கோழி இறைச்சி உற்பத்தி கம்பெஇனிகளை இந்துக்கள் தான் நடத்துகிறார்கள்..

    //
    Riyas
    30 March 2010 at 11:09 pm
    இந்துக்களை மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லுங்கள் பரவாயில்லை…. அதை விட்டுட்டு இஸ்லாமிய சட்டங்களையோ கொள்கைகளையோ மாற்ற நினைக்காதிர்கள்… //

    இதில் அப்படி எங்கே சொல்கிறார்கள்? ஹலால் மாமிசம் சாப்பிடாதீர்கள் என்று *இந்துக்களிடம்* தானே ஐயா அறிவுரை கூறுகிறார்கள் ?????

  9. இந்துக்கள் ஆகிய நீங்கள் தான் புலால் ( அசைவம் ) உண்ணக்கூடாது என்று சொல்லுகிறிர்கள். ஹலால், ஜட்கா என்ற கவலை உங்களுக்கு எதற்கு? ஹலால் தவறு என்றால் ஆய்வு மூலம் நிருபிக்கவும் . ஜட்கா சரி என்றாலும் ஆய்வு மூலம் நிருபிக்கவும்.

  10. Hello Mr.Kafirs,
    What you have written was bloody proof less and ridiculous. You don’t have any strong supportive document to proof that you are correct. Again don’t proove that you Kafir’s (HIndus) have no proof like praying sand and stones!!!
    The link you submit “https://www.guardian.co.uk/uk/2003/may/15/religion.world” is for inhumane topic…
    plz see the below rebut
    https://www.themodernreligion.com/misc/an/an_slaughter.htm
    I bet my head if you provide any witness that halal food is not edible..
    Plz don’t abuse internet by sending false alarm.. try to be a gentleman… If you dare plz publish this comment

  11. //nellaisiraj
    31 March 2010 at 10:23 am

    இந்துக்கள் ஆகிய நீங்கள் தான் புலால் ( அசைவம் ) உண்ணக்கூடாது என்று சொல்லுகிறிர்கள். ஹலால், ஜட்கா என்ற கவலை உங்களுக்கு எதற்கு? ஹலால் தவறு என்றால் ஆய்வு மூலம் நிருபிக்கவும் . ஜட்கா சரி என்றாலும் ஆய்வு மூலம் நிருபிக்கவும்.//
    நெல்லைசிராஜ் அவர்களே வெறும் மறுமொழிகளை மட்டும் படித்து விட்டு எழுத வேண்டாம். கட்டுரயையும் படிக்கவும். உங்களுடைய ஒவ்வொரு வாக்கியமும் தவறு என்று புரியும்.

  12. ஹரன் பிரசன்னா சொன்னது போல இது ஒரு காமெடியான கட்டுரை. தமிழ் ஹிந்து இந்த மாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தி, அதிலும் ஹிந்துக்கள் உயர்ந்தவர்கள் என்று நிரூபிப்பது வேதனைக்கு உரியது. கொல்லுவதே பாவம்..அதில் ஹிந்து முறையாம்..முஸ்லிம் முறையாம்..

  13. ஹரன் பிரசன்னா அவர்களே,

    உங்களின் நெருங்கிய நண்பர் ஒருவர் மரணமடைகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அதிக வலி உணராமல் தடக்கென்று மரணமடைகிறார், அல்லது உயிரோடு தோலை உரித்து துடிக்க துடிக்க கொல்லப்படுகிறார்.
    இதில் எதற்கு நீங்கள் மிக மனவருத்தமடைவீர்கள்?

  14. //இந்துக்கள் ஆகிய நீங்கள் தான் புலால் ( அசைவம் ) உண்ணக்கூடாது என்று சொல்லுகிறிர்கள். ஹலால், ஜட்கா என்ற கவலை உங்களுக்கு எதற்கு? ஹலால் தவறு என்றால் ஆய்வு மூலம் நிருபிக்கவும் . ஜட்கா சரி என்றாலும் ஆய்வு மூலம் நிருபிக்கவும்/

    திரு நெல்லை சிராஜ்,
    கசாப்புக் கடை வைத்திருக்கும் முகமதியர் ஹலால் நல்லது, ஹலால் கறி சாப்பிட்டால் நோய்கள் ஏற்படாது என்று கூறுகிறீர்களே, அதை ஆய்வு மூலம் நீங்கள் நிரூபிக்கலாமே? மேலும் கட்டுரையில் இதை நீங்கள் படித்தால் மாதிரி தெரியவில்லையே?
    //ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படும்போதும் அதிலிருந்து ரத்தம் வெளியேறும் போதும் அதன் உடலின் செல்களில் விஷங்கள் (toxins) உருவாக்கப் படுகின்றன. அது உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து ஓரளவு வெளியேறினாலும், பல விஷங்கள் அதன் கறிப்பகுதிகளில் தங்குகின்றன. இவை நியூரோ டாக்ஸின் எனப்படும் மூளையையும் நரம்பையும் பாதிக்கும் விஷங்கள்.

    இப்படிப்பட்ட பாதுகாப்பு செயல்பாடு பல மிருகங்களிடம் உள்ளது (Pharmacology of endogenous neurotoxins: a handbook By Andreas Moser). பல மிருகங்கள் தங்களை எதிரி மிருகங்கள் கொன்றுவிடக்கூடாது என்பதற்காக காயம்பட்ட பகுதியில் விஷத்தை சுரக்கின்றன.
    //

  15. இந்த கட்டுரை அசைவம் சாப்பிடும் இந்துக்களுக்கான கட்டுரை. தயவு செய்து இதனை சைவம் vs அசைவம் என்ற விவாதமாக ஆக்கிவிட வேண்டாம்.
    நன்றி

  16. Hello Mr.Singapore –
    This is a forum for Tamil Hindus and we do not want interference of others. There is another tamil website for the non-Kaffirs like you. All that is written in that website is absolutely ridiculouos and false. You beleive what you want to do and let us do what we have to.

  17. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கள் வரத்தேவையில்லை.
    மரக்கறி சாப்பிடுபவர்கள் இந்த விவாதத்தில் எல்லாம் தேவையில்லாமல் வந்து தலை காட்டவேண்டாம்.
    இது அவர்களுக்கான இடம் அல்ல. விவாதமும் புலால் உண்ணுதல் பாவமா, புலால் உண்ணாமை புன்னியமா என்பது பற்றியும் அல்ல.

    90 சதவிகித இந்துக்கள் உண்ணும் கறியை இப்படி இஸ்லாமிய முறைப்படி வெட்டி சாப்பிடுவது நல்லது என்பது எவ்வளவு பெரிய மூடத்தனம்.
    மேலும் ஹலால் சான்றிதழ் வழங்க இஸ்லாமியர் அலலாத ஹோட்டல்கள், கறிக்கடைகள் கூட மசூதி முல்லாவுக்குப் பணம் கொடுக்கிறார்கள். அப்பணம் எங்கெல்லாம் பாயக்கூடியது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

  18. armchaircritic
    31 March 2010 at 5:19 pm
    நெல்லைசிராஜ் அவர்களே வெறும் மறுமொழிகளை மட்டும் படித்து விட்டு எழுத வேண்டாம். கட்டுரயையும் படிக்கவும். உங்களுடைய ஒவ்வொரு வாக்கியமும் தவறு என்று புரியும்

    kargil jay
    31 March 2010 at 7:33 pm
    திரு நெல்லை சிராஜ்,
    கசாப்புக் கடை வைத்திருக்கும் முகமதியர் ஹலால் நல்லது, ஹலால் கறி சாப்பிட்டால் நோய்கள் ஏற்படாது என்று கூறுகிறீர்களே, அதை ஆய்வு மூலம் நீங்கள் நிரூபிக்கலாமே? மேலும் கட்டுரையில் இதை நீங்கள் படித்தால் மாதிரி தெரியவில்லையே?
    //ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படும்போதும் அதிலிருந்து ரத்தம் வெளியேறும் போதும் அதன் உடலின் செல்களில் விஷங்கள் (toxins) உருவாக்கப் படுகின்றன. அது உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து ஓரளவு வெளியேறினாலும், பல விஷங்கள் அதன் கறிப்பகுதிகளில் தங்குகின்றன. இவை நியூரோ டாக்ஸின் எனப்படும் மூளையையும் நரம்பையும் பாதிக்கும் விஷங்கள்.

    இப்படிப்பட்ட பாதுகாப்பு செயல்பாடு பல மிருகங்களிடம் உள்ளது (Pharmacology of endogenous neurotoxins: a handbook By Andreas Moser). பல மிருகங்கள் தங்களை எதிரி மிருகங்கள் கொன்றுவிடக்கூடாது என்பதற்காக காயம்பட்ட பகுதியில் விஷத்தை சுரக்கின்றன.
    //
    பிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது.இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வை நடத்தியவர்கள். பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.
    அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றேன்.
    1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.
    2)அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையை தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.
    3) உணர்வு திரும்பியதும். முழுவதுமாக குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.
    4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.
    5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் ஜட்கா முறைப்படி கொல்லப்பட்டன.
    6) பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் ஊ.ஊ.ஏ. மற்றும் ஊ.ஈ.ஏ. பதிவு செய்யப்பட்டன. அதாவது ஊ.ஊ.ஏ. மூளையின் நிலையையும், ஊ.ஈ.ஏ. இருதய நிலையையும் படம் பிடித்து காட்டின. இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.
    இஸ்லாம் கூறும் ஹலால் முறை :
    1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு ஊ.ஊ.ஏ.-ல் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போத அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.
    2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான இரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.
    3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் ஊ.ஊ.ஏ. பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலிக்கும் அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.
    4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் எடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக இரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதாரநிலையை அடைகிறது. வெளியேற்றப்பட்ட இரத்தத்தோடு கிருமிகளும் சேர்ந்து வெளியாகி விடுவதே இதற்கு காரணம்
    முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொள்ளும் ஜட்கா முறை :
    1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.
    2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது.
    3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான இரத்தம் தேங்கிவிடுகிறது. இரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொளளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.
    உடலில் தேங்கிய உறைந்து போன இரத்தத்தில் கிருமிகள் தங்கிவிடுவதால் சுகாதாரமற்றது என்பதற்குரிய காரணங்களாகும். மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையே நிரூப்பித்துள்ளது.

    சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடலை இறைவன் அமைத்திருப்பதும் சிந்திக்கத்தக்கது

  19. //இரும்படிக்கும் இடத்தில் ஈக்கள் வரத்தேவையில்லை.//
    இது இரும்படிக்கும் இடம் அல்ல. இரும், படிக்கும் இடம். அதனால் பதில் சொல்வதே முறையானது.

    இஸ்லாமிய மற்றும் சைவ பழக்கமுள்ள நண்பர்களுக்கு :

    ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை ஒவ்வொன்றுக்கும் உணர்ச்சி வித்தியாசம் மிக மிக அதிகம். ஒரு மீனுக்கு வலி உணர்ச்சி என்பது குறைவு, ஒரு தாவரத்துக்கு மிக மிகக் குறைவு. ஒரு பசுவுக்கு, நாய்க்கு அல்லது மானுக்கு வலி என்பது அதிகம், மனிதனுக்கு அதைவிட அதிகம்.

    ஒரு மனிதன் தன் உற்றோரை இழந்தால் படும் துன்பம் ஒரு மிருகம் தன் உற்றோரை இழந்தால் படும் துன்பத்தை விட மிக அதிகம். ஒரு கற்பழிப்பு அல்லது பலாத்காரம் என்பது எந்த வாயில்லா ஜீவனையும் விட மனித இனத்தை அதிகம் பாதிக்கிறது. அதேபோல் பசுவின் அன்பும் உணர்ச்சியும் வலியும் ஒரு மீனைவிட மிக அதிகம்.

    ஆகவே இதுதான் என் தாழ்மையான அபிப்ராயம்:
    சைவத்தை விட அசைவம் அதிக வலி ஏற்படுத்துகிறது. அசைவத்தில் ஹலால் முறை மேலும் அதிக வலி ஏற்படுத்துவதாகும். ஹலால் என்பது, ஒரு பிராணியை கழுத்தை வெட்டி பின் துடிப்பதை பார்ப்பது சாடிசமும் (sadism) கூட. ஒரு பிராணியை கழுத்தை வெட்டி பின் துடிப்பதை பார்ப்பது, மனிதனை மேலும் கொலை பாதகத்துக்கு அஞ்சாதவராக்கக் கூடும்.

  20. Dear Hindus,

    It is right to point that this is a discussion on which Halal or Jatka method of killing the animal is less harmful to human being. Sad to note that many muslim friends justify the halal method, if we compare bit by bit killing or at one cut?

    It is necessary to bring some truth on bacteria and virus infection in these two methods, that will speak.

    regards

    Murugan

  21. இந்த இணைப்பையும் சகோதரர்கள் படித்துக்கொள்ள வேண்டுகிறேன்.
    சீக்கியர்களுக்காக உலகெங்கும் ஜட்கா கறியே விற்கப்படுகிறது. சீக்கியர்களை பொறுத்த மட்டில் ஹலால் என்னும் குரூர கறி ஒதுக்க வேண்டியது.

    https://www.worldsikhnews.com/21%20January%202009/Goat%20Sacrifice%20at%20Hazur%20Sahib%20%20Myth%20&%20Truth.htm

  22. //nellaisiraj
    1 April 2010 at 6:47 pm //
    இந்த மறுமொழியில் கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் நெல்லைசிராஜ் அவர்களின் முந்தைய மறுமொழியில் கொடுக்கப்பட்ட linkல் உள்ளதுதான். ஒரே ஒரு வித்தியாசம் மூலத்தில் compare செய்யப்பட்டது இஸ்லாமிய ஹலால் முறையும் ஐரோப்பிய ‘stunning the animal before killing’ முறையும்தான். ஜட்கா முறை அந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப் படவில்லை!

  23. இந்துக்களின் வாளாக விளங்கிய சீக்கியர்கள் ஹலாலை வெறுத்து ஒதுக்கினார்கள். ஹலாலை வாங்குவது இஸ்லாமை நியாயப்படுத்துவதாக ஆகும், ஆள்கின்ற முகலாய அரசுக்கு ஆதரவளிப்பதாக ஆகும் என்று ஒதுக்கினார்கள்.
    சீக்கியர்கள் முஸ்லிம் ஹலால் கறியை குத்தா கறி என்றே அழைக்கிறார்கள். நாமும் அப்படியே அழைப்போம்.

    குத்தா கறியை சாப்பிடுவது பெரும் பாவங்களில் ஒன்று. துடிக்க துடிக்க செய்யப்பட்ட கொலையில் பங்கு பெறுவதாகும்.

    https://www.glamfaith.org/uk/faith-groups/7/dietary_laws/

    If a Sikh eats meat they must ensure that the meat is ‘jhatka’. Jhatka means that the animal has been killed quickly without suffering or religious ritual.

    இங்கே ரியாஸ் என்பவர் ஆராய்ச்சிகளை காட்டுகிறார். இது போலியான ஆராய்ச்சியாகும். ஹலால் சரி என்று காட்டுவதற்காக முஸ்லீமகளும் யூதர்களும் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை செய்து பரப்புகிறார்கள். இதெல்லாம் உள் நோக்கம் கொண்டவை. மூளைக்கு போகும் ரத்தக்குழாயை வெட்டினால் மூளைக்கு ரத்தம் போகாது என்றெல்லாம் பொய் பேசுகிறார்கள். அந்த ரத்தகுழாயைத்தான் வெட்டுகிறார்களா என்று என்ன ஆதாரம்? மெல்ல கழுத்தை வெட்டி துடிக்க துடிக்க சாவதைத்தான் நீங்கள் வீடியோக்களில் பார்க்கமுடியும்

    தடக்கென்று முழு கழுத்தையும் வெட்டினால் உடனே மூளை செயலிழக்கிறது என்று தெரிகிறது. விஷங்களை உற்பத்தி செய்ய மூளை கட்டளையிடமுடியாது என்று தெரிகிறது. ஆகவே, உடல் துடிக்க துடிக்க கொல்லப்படும் விலங்கில் உருவாகும் விஷத்தையும் சேர்த்து சாப்பிடாதீர்கள்.

    பல்லாயிரம் வருடங்களாக இந்துக்கள் ஜட்கா முறையிலேயே உண்டு வந்தார்கள். அதற்கு நிச்சயம் காரணங்கள் உண்டு. எது மனிதனுக்கு நல்லது, மனித உடலுக்கு நல்லது என்று இந்துக்கள் உருவாக்கிய பழக்கங்களை இன்று விட்டுக்கொடுத்துவிட்டு விஷத்தை உடலில் ஏற்றிகொள்ளாதீர்கள்.

  24. மிக நல்ல கட்டுரை.
    இதனை தயவு செய்து பிட் நோட்டீஸ் அடிப்பதற்கு தகுந்தற்போல பிடிஎஃப் கோப்பாக ஆக்கி டவுன் லோட் செய்ய கொடுத்தால் நன்றாக இருக்கும்.
    அப்படியே பிரிண்ட் செய்து ஊர்களில் வினியோகிக்க வசதியாக இருக்கும்.

    நன்றி

  25. nellai siraj ,
    You are contradicting with your own words :

    //1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.
    2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது.//

    உணர்வற்ற நிலைக்கு சென்றபின் எவ்வாறு வலியால் அவதியுற முடியும்? முரண்பாடில்லையா இது? சற்றே சிந்தித்து பாருங்களேன்.

    ஒரு பசு இரத்தம் வெளியேறும்போது துடிதுடிப்பதை ‘வலியெல்லாம் ஒண்ணும் இல்லை, இரத்தம் சீக்கரம் வெளியேற, கறி ருசியா இருக்கனும்னுதான் துடிக்குது’ என்று நீங்கள் சொல்வது சாடிசம் (sadistic pleasure) மட்டுமே.

  26. ஜட்கா பிரியன்
    30 March 2010 at 8:46 pm
    ஹலால் முறைப்படி கொல்லுதல் கூட பெரிய விஷயமில்லை.
    ஆனால் அந்த ஹலால் செய்வதற்காக கறி கடைகள், ஹோட்டல்கள் வழங்கும் பணம் தான் குண்டு வைப்பதற்கும், தற்கொலைப்படைத் தாக்குதலுக்கும் செலவிடப்படுகிறது என்பது தான் வேதனையான விஷயம்.
    நாமே பணம் கொடுத்து நம்மேலேயே குண்டு போட்டுக்கொள்ளவேண்டுமா ?

    ஜட்கா பிரியன்
    1 April 2010 at 3:50 pm
    இரும்படிக்கும் இடத்தில் ஈக்கள் வரத்தேவையில்லை.
    மரக்கறி சாப்பிடுபவர்கள் இந்த விவாதத்தில் எல்லாம் தேவையில்லாமல் வந்து தலை காட்டவேண்டாம்.
    இது அவர்களுக்கான இடம் அல்ல. விவாதமும் புலால் உண்ணுதல் பாவமா, புலால் உண்ணாமை புன்னியமா என்பது பற்றியும் அல்ல.
    90 சதவிகித இந்துக்கள் உண்ணும் கறியை இப்படி இஸ்லாமிய முறைப்படி வெட்டி சாப்பிடுவது நல்லது என்பது எவ்வளவு பெரிய மூடத்தனம்.
    மேலும் ஹலால் சான்றிதழ் வழங்க இஸ்லாமியர் அலலாத ஹோட்டல்கள், கறிக்கடைகள் கூட மசூதி முல்லாவுக்குப் பணம் கொடுக்கிறார்கள். அப்பணம் எங்கெல்லாம் பாயக்கூடியது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

    சகோதரர் ஜட்கா பிரியன் அவர்களே! தேவையில்லாமல் ஆதாரமில்லாத கற்பனை செய்திகளைக் கூறி அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்த வந்த சமுதாயத்தை அரசியல்வாதிகள் தங்களுடைய சுய நலனுக்காக மதவெறியை தூண்டி வன்முறைகளை ஏற்படுத்தி குளிர் காய்வதைப் போல் தாங்களும் நினைக்காதீர்! இந்திய சுதந்திரத்திற்கு பின் மலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் வரை அதிகமான குண்டு வெடிப்பு சம்பங்களை முன் நின்று நடத்தியது யார்? நீங்கள் விரும்பினால் அதனையும் ஆய்வு அறிக்கையாக வெளியீடத் தயார்!

  27. அட என்ன அறிவு உங்களுக்கு ஜடுக்கா ஹலால் விலக்கம் இதை சில்பேர் உன்மை என்று நம்பி அதற்க்கு விலக்கம்வேரு

    ஜடுக்கா என்றால் உதறல் (ஜடுக்கா வண்டி என்றால் குதிரை வண்டி அது குதித்து செல்வதால் அந்த பெயர் இது உருது மொழி)

    ஹலால் என்றால் அனுமதிக்க பட்டது, ஹராம் என்றால் அனுமதிக்காதது,

    பன்றி கறி ஹராம் முஸ்லீம் சாப்பிட கூடாது

    கோழி கறி ஹலால் சப்பிடலாம்.

    முஸ்லீம்கள் இங்கு எப்படி அறுக்கிறார்களோ அப்படிதான் உலகம் முழுவதும் அறுப்பார்கள்

    ஹிந்துக்களுக்கு அப்படி ஒரு விதிமுறை இருக்கா எங்கவூர் பக்கத்தில் கோழியை பூசாரி பல்லால் கடித்து கொள்லுவார் அந்தகோழியை சமைத்து சாப்பிடுவார்கள் பல்லால் கடித்தகோழி மூன்றாம் வகுப்பு படித்தவனுக்கு கூட தெறியும் அதில் விஷம் இருக்கும் என்று.
    இங்கு உல்லகோயிலில் வந்து சொல்லி பாருங்கள் உங்கள் கழுத்தை கடித்துவிடுவார் பூசாரி

  28. kargil jay

    ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை ஒவ்வொன்றுக்கும் உணர்ச்சி வித்தியாசம் மிக மிக அதிகம். ஒரு மீனுக்கு வலி உணர்ச்சி என்பது குறைவு, ஒரு தாவரத்துக்கு மிக மிகக் குறைவு. ஒரு பசுவுக்கு, நாய்க்கு அல்லது மானுக்கு வலி என்பது அதிகம், மனிதனுக்கு அதைவிட அதிகம்.

    சகோதரர் kargil jay
    ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை ஒவ்வொன்றுக்கும் உணர்ச்சி வித்தியாசம் மிக மிக அதிகம். என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள் உயிர்கள் என்று பார்த்தோம் என்றால் அனைத்துமே உயிர்கள் தான் இதில்; ஓரறிவு உயிர் ஆறறிவு உயிர் என்று பாகுபாடு காட்டுவது சரியில்லை

  29. kargil jay

    திரு நெல்லை சிராஜ்,
    கசாப்புக் கடை வைத்திருக்கும் முகமதியர் ஹலால் நல்லது, ஹலால் கறி சாப்பிட்டால் நோய்கள் ஏற்படாது என்று கூறுகிறீர்களே, அதை ஆய்வு மூலம் நீங்கள் நிரூபிக்கலாமே?

    சகோதரர் kargil jay
    இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்.
    அரபிமொழியில் “ஸக்காத்” என்றால் “தூய்மை” என்ற பொருள். மேற்படி சொல்லிலிருந்து “ஸக்கய்தும்” (தூய்மைப்படுத்துதல்) என்ற வினைச்சொல் பெறப்பட்டது. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுப்பதற்கு கீழக்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
    A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும். கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.
    B. “ஸபிஹா” என்றால் அரபிமொழியில் அறுத்தல் என்று பொருள்படும். மேற்படி இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
    C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும். இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம், அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடம் துண்டிக்கப்படுவதால் இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இதயம் திடீரென நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள்ள இரத்தம் இரத்த நாளங்களிலேயே தங்கிவிடக் கூடும்.
    D. இறைச்சியில் நோய்க்கிருமிகள் உருவாகக் காரணமாக அமைவது ஓட்டப்படாத இரத்தமே. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது, கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதற்கான சாத்தியக்கூறு பெருமளவு குறைக்கப்படுகிறது.
    E. கால்நடைகளின் கழுத்திலிருக்கும் இரத்ததக்குழாயும், சுவாசக்குழாயும் மிக வேகமாக அறுக்கப்படுவதால், இரத்தம் அனிச்சைச் செயலாக அப்பகுதிக்கு விரைவாக அனுப்பப்படுகிறது. இதனால் வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்புமண்டலம் இச்செயலுக்கான கட்டளைப் பொதியைச் சுமப்பதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை.
    F. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது, கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால், உடலில் உள்ள சதைப்பாகங்கள் இரத்த இழப்பால் சுருங்கி விரிவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் துள்ளுவதாகவும், துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதே தவிர வலியால் அல்ல.

  30. உயிர்களிடையே பாகுபாடு காட்டுவது சரியில்லை என்று திடீரென ஹிந்து சமயத் தத்துவ ஞானத்தில் நெல்லை சிராஜ் இறங்கியிருப்பது வியப் பூட்டுகிறது. எல்லா உயிர்களையும் ஒன்றுபோல் பாவிககவேண்டும் என்பது ஒரு பக்குவமடைந்த அனைத்துயிர் அபிமான மனப்பான்மை. அத்தகையோர் தாவர உணவைக் கூட வேறு வழியில்லலையே என்ற குறைந்த பட்ச ஹிம்சையுடன் உயிர் வாழ்தலைத் தொடர்பவர்கள். ஆனால் ஓரறிவு முதல் ஆறறிவு வரை உயிர்கள் இருப்பது அறிவியல் உண்மை. நான் படித்தவரை மூளை என்ற உறுப்பு இருப்பவையே இந்த ஓரறிவு-ஆறறிவு சட்டத்தினுள் வருபவை. ஒரு செல் உயிர்களும், தாவரங்களூம் இந்த அட்டவணையில் வருமா என்று தெரியாது. தாவரங்களுக்குத் தொடு உணர்வு மட்டுமே உண்டு. தொடு உனர்வு என்றால் உடலால் தொடுவது மட்டுமல்ல. ஒலியால், ஒளியால், காற்றால் தொட்டு உணர்வலைகளை எழுப்புவதும் தொடு உணர்வின் கீழ் வருவதே. மூளை என்கிற உறுப்பிற்கு நரம்புகள் மூலம் தெரிவிக்கப்படுவதே வலி என்பது. மூளை என்ற உறுப்பு இல்லாத தாவரங்கள் வலியை உணர்வது சாத்தியமில்லை. எனவேதான் வெட்டப்பட்ட மரம் கூட விட்டு வைத்தால் துளிர்க்கிறது. தாவர உணவு புலால் உணவைவிட பாதுகாப்பானது, குறைந்த அளவு பாதிப்பு அளிப்பது, அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடியது. உடல் வலிமைக்குப் புலால் உணவுதான் உதவும் என்ற கருத்தும் தவறே. உடல் வலிமைக்கு அவசியமான எல்லாச் சத்துக்களையும் தாவர உணவிலிருந்தே பெற முடியும். ஆனால் இங்கு விஷயம் புலால் உண்வு-தாவர உணவு இரண்டில் எது நல்லது என்பதல்ல. ஹலாலா ஜ்ட்காவா எது ந்ல்லது, மனிதாபிமானது என்பதே. என்னைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான். கொல்லப்படுவதற்கு முன்பே அந்த அப்பாவி உயிர்கள் பலவாறான உபாதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. குறைந்த பட்சம் இக்கொடுமையைத் தவிர்த்தாலாவது பரவாயில்லை. இஸ்லாம் ஹலால்தான் கொல்லபப்ட வேண்டிய முறை என்று கட்டளை பிறப்பித்துள்ளது. ஒரு உயிர் அது வலியை உனர்கிறதோ இல்லையோ, அதுவாகச் சொன்னால்தான் உண்டு, பரிசோத்னைகள் எல்லாம் 100க்கு 100 சரியாக இருப்பதில்லை. ஆனால் ஒரு உயிர் துடித்துத் துடித்து சாவதைப் பார்ர்த்துக்கொண்டிருக்கப் பழக்குவது ஈவிரமற்ற சுபாவத்ததையே வளர்க்கும். ஈவிரக்கமற்ற குரூர சுபாவத்தை மனிதரிடம் வளர்க்க வேண்டும் என்பதற் காகத்தான் ஹலால் பரிந்துரைக்கப்படுகிறது.

  31. //சகோதரர் kargil jay
    ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை ஒவ்வொன்றுக்கும் உணர்ச்சி வித்தியாசம் மிக மிக அதிகம். என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள் உயிர்கள் என்று பார்த்தோம் என்றால் அனைத்துமே உயிர்கள் தான் இதில்; ஓரறிவு உயிர் ஆறறிவு உயிர் என்று பாகுபாடு காட்டுவது சரியில்லை//

    திரு. சிராஜ்
    இவ்வளவு நேரம் நரம்பு மண்டலம், வலி உணர்வு, ஆராய்ச்சி என்று அறிவியல் பேசிவிட்டு தாவரத்தை வெட்டுவதும், மனிதனை வெட்டுவதும் ஒரே வலிதான் என்பது போல திடீரென ‘பாகுபாடு கட்டுவது சரியல்ல’ என்று அத்வைதத்துக்கு மாறுவது போன்ற முரண்பாடான பேச்சு, கால விரயம் இந்த தளத்தில் வேண்டாம்.

    எல்லாம் சமம் என்றால், பசு இறைச்சியுடன் பன்றி மற்றும் மனித இறைச்சியையும் சாப்பிடுங்கள். ஆனால் இந்த மாதிரி வீண் வாதமெல்லாம் இங்கே பேசாதீர்கள், எங்களை விட்டு விடுங்கள்.

  32. //C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும். இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம், அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடம் துண்டிக்கப்படுவதால் இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இதயம் திடீரென நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள்ள இரத்தம் இரத்த நாளங்களிலேயே தங்கிவிடக் கூடும்.//

    பொய் சொல்கிறீர்கள். தண்டுவடம் துண்டிக்கப் படாமல் இருப்பதால் கொடூரமான வலியில் மிருகங்கள் துடிக்கும்.

    //D. இறைச்சியில் நோய்க்கிருமிகள் உருவாகக் காரணமாக அமைவது ஓட்டப்படாத இரத்தமே. //

    scientifically wrong excuse for sadistic pleasure.

  33. இவ்வளவு நேரம் நரம்பு மண்டலம், வலி உணர்வு, ஆராய்ச்சி என்று அறிவியல் பேசிவிட்டு தாவரத்தை வெட்டுவதும், மனிதனை வெட்டுவதும் ஒரே வலிதான் என்பது போல திடீரென ‘பாகுபாடு கட்டுவது சரியல்ல’ என்று அத்வைதத்துக்கு மாறுவது போன்ற முரண்பாடான பேச்சு, கால விரயம் இந்த தளத்தில் வேண்டாம்.
    எல்லாம் சமம் என்றால், பசு இறைச்சியுடன் பன்றி மற்றும் மனித இறைச்சியையும் சாப்பிடுங்கள். ஆனால் இந்த மாதிரி வீண் வாதமெல்லாம் இங்கே பேசாதீர்கள், எங்களை விட்டு விடுங்கள்.

    பொய் சொல்கிறீர்கள். தண்டுவடம் துண்டிக்கப் படாமல் இருப்பதால் கொடூரமான வலியில் மிருகங்கள் துடிக்கும்.
    scientifically wrong excuse for sadistic pleasure.
    kargil jay
    ; கோபம் கொள்ளாதீர் உடலுக்கு கேடு, ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை என்று நான் தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறினேன்; அவ்வளவுதான். என்னை பொறுத்த வரை நீங்கள் உயிர் என்று இரக்கம் காட்டினால் அனத்து உயிர்களின் மீதும் இரக்கம் காடடுங்கள். பாகுபாடுகாட்டாதீர் உண்மையிலேயே உயிரினங்கள் மீது இரக்கம் காட்டினால் இனி ஆடு, மாடு, கோழிகளுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டாம் தங்களுடைய வீட்டில் தங்களுடைய படுக்கைகளில் அதுகளுக்கு இடம் ஒதுக்கி தங்களோடு சரி சமமாக பாவிக்க தயாரா? நான் சொல்லும் தகவல்கள் தவறு என்று கூறி வருகிறீர்கள் அப்படியென்றால் உண்மையை தாங்கள் நிருபிக்கவும

  34. இரா. சத்தியபாமா

    ஓரறிவு முதல் ஆறறிவு வரை உயிர்கள் இருப்பது அறிவியல் உண்மை. நான் படித்தவரை மூளை என்ற உறுப்பு இருப்பவையே இந்த ஓரறிவு-ஆறறிவு சட்டத்தினுள் வருபவை. ஒரு செல் உயிர்களும், தாவரங்களூம் இந்த அட்டவணையில் வருமா என்று தெரியாது. தாவரங்களுக்குத் தொடு உணர்வு மட்டுமே உண்டு. தொடு உனர்வு என்றால் உடலால் தொடுவது மட்டுமல்ல. ஒலியால், ஒளியால், காற்றால் தொட்டு உணர்வலைகளை எழுப்புவதும் தொடு உணர்வின் கீழ் வருவதே. மூளை என்கிற உறுப்பிற்கு நரம்புகள் மூலம் தெரிவிக்கப்படுவதே வலி என்பது. மூளை என்ற உறுப்பு இல்லாத தாவரங்கள் வலியை உணர்வது சாத்தியமில்லை
    1) தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு.

    பெரும்பான்மையான மதங்களைச் சார்ந்தவர்கள் அசைவ உணவு உண்ணாமல் இருப்பதற்கு காரணம் – அவர்களின் மதங்கள் உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்வது பாவம் என்ற கொள்கையை போதிப்பவைகளாக இருப்பதால்தான்.

    ஒரு உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியும் எனில் – மேற்படி கொள்கையை கடைபிடிக்கும் மனிதர்களில் முதலாவதாக இருப்பது நானாகத்தான் இருக்கும். முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

    ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் – தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம். எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

    2). தாவரங்களாலும் வலியை உணர முடியும்:

    தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது – உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட – குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும்.

    இன்றைய அறிவியல் – தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 hertz க்கு குறைவான சப்தத்தையும் 20000 hertz க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது.

    அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை – மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும்.

    பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் – மகிழ்ச்சி – வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.

    3). இரண்டு அல்லது மூன்று புலன்களை கொண்டு உயரி;வாழக்கூடியவைகளை கொல்வது என்பது குறைந்த பாவம் செய்வது ஆகாது.

    ஒருமுறை – ஒரு சைவ உணவு உட்கொள்பவர் – என்னோடு வாதிடும்போது சொன்னார் – மிருகங்கள் ஐந்தறிவு கொண்டவை. ஆனால் தாவரங்கள் – இரண்டு – அல்லது மூன்று புலன்களை கொண்டவைதான்.

    எனவே ஐந்தறிவுள்ள மிருகங்களை கொல்வதைவிட – இரண்டு அல்லது புலன்களை கொண்ட தாவரங்களை கொல்வது குறைந்த பாவம் இல்லையா என்று. ஒரு உதாரணத்திற்கு உங்களது சகோதரர் – பிறவியிலேயே செவிட்டு – ஊமையாக இருக்கிறார். அவரை மற்ற மனிதர்களோடு ஒப்பிடும்போது அவர் இரண்டு ஆற்றல்கள் – குறைவாக உள்ளவர்தான். வளர்ந்து ஆளான – உங்களது செவிட்டு ஊமை சகோதரரை – ஒருவர் கொலை செய்து விட்டார் – என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    உங்களது செவிட்டு ஊமை சகோதரர் இரண்டு ஆற்றல்கள் குறைவாக உள்ளவர் – ஆகவே கொலையாளிக்கு – குறைந்த தண்டனை தந்தால் போதும் என்று நீங்கள் நீதிபதியுடன் வாதாடுவீர்களா?. மாட்டீர்கள். மாறாக என்ன சொல்வீர்கள் – காது கேளாத – வாய் பேச முடியாத அப்பாவியை கொன்றவருக்கு நீதிமன்றம் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் வாதாடுவீர்கள்.

  35. திரு நெல்லை சிராஜு,
    //கோபம் கொள்ளாதீர் உடலுக்கு கேடு, ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை என்று நான் தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறினேன்; அவ்வளவுதான். என்னை பொறுத்த வரை நீங்கள் உயிர் என்று இரக்கம் காட்டினால் அனத்து உயிர்களின் மீதும் இரக்கம் காடடுங்கள். பாகுபாடுகாட்டாதீர் உண்மையிலேயே உயிரினங்கள் மீது இரக்கம் காட்டினால் இனி ஆடு, மாடு, கோழிகளுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டாம் தங்களுடைய வீட்டில் தங்களுடைய படுக்கைகளில் அதுகளுக்கு இடம் ஒதுக்கி தங்களோடு சரி சமமாக பாவிக்க தயாரா? நான் சொல்லும் தகவல்கள் தவறு என்று கூறி வருகிறீர்கள் அப்படியென்றால் உண்மையை தாங்கள் நிருபிக்கவும
    //
    ௧) நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறியதாக எழுதிஇருப்பது பொய்யானது. நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. பல முரண்பாடுகளை சுட்டியுள்ளேன். உங்களால் விளக்கம் சொல்ல முடியவில்லை.

    ௨) நான் ஒவ்வொரு உயிரினத்துக்கும் மாறுபடும் உடல், மன உணர்வுகளை விளக்கியது நான். உயிர்களை சமமாகப் பாவிக்கச் சொன்னது நீங்கள்தான் (உங்கள் பதிவைப் படியுங்கள்). அதனால் நீங்கள்தான் பன்றிகளை உங்கள் வீட்டில் வைத்து பூஜிக்க வேண்டும். அதை நான் சொன்னதாக நீங்கள் மாற்றி எழுதுவது இஸ்லாமிய அயோக்கியத்தனம்.

    ௩) உங்கள் கருத்து தவறு என்று உங்கள் வாதத்தில் உள்ள முரண்பாடு மூலம் நிரூபித்து விட்டேன். உங்கள் வாதத்தை நீங்கள் நிரூபிப்பதில் தோல்வி அடைந்தால் அதற்கு பொறுப்பு நான் அல்ல. அதனால் நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    முரண்பாடும், பொய்யும் மட்டுமின்றி ஒரே பதிவிலேயே தான் உளறியதை எதிர்க் கருத்து உள்ளவர் சொன்னதாக நேர்மாறாகச் சொல்லி அவருக்கே விளக்கம் கேட்டு எழுதும் இந்தப் பதிவை எவ்வாறு தமிழ் ஹிந்து வெளியிட்டது என்று தெரியவில்லை.

  36. //கோபம் கொள்ளாதீர் உடலுக்கு கேடு, ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை என்று நான் தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறினேன்; அவ்வளவுதான். என்னை பொறுத்த வரை நீங்கள் உயிர் என்று இரக்கம் காட்டினால் அனத்து உயிர்களின் மீதும் இரக்கம் காடடுங்கள். பாகுபாடுகாட்டாதீர் உண்மையிலேயே உயிரினங்கள் மீது இரக்கம் காட்டினால் இனி ஆடு, மாடு, கோழிகளுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டாம் தங்களுடைய வீட்டில் தங்களுடைய படுக்கைகளில் அதுகளுக்கு இடம் ஒதுக்கி தங்களோடு சரி சமமாக பாவிக்க தயாரா? நான் சொல்லும் தகவல்கள் தவறு என்று கூறி வருகிறீர்கள் அப்படியென்றால் உண்மையை தாங்கள் நிருபிக்கவும//

    நெல்லை சிராஜ்,
    நீங்கள் உளறுவது போல திருப்பி உளற நேரம் எடுக்காது. எழுதுவதற்கு முன்னால் உளறுகிறோமா என்று யோசித்துவிட்டு எழுத வேண்டும்.

    அப்படியானால், நீங்கள் எல்லா உயிர்களிடமும் ஒரே மாதிரி இரக்கம் காட்டமாட்டீர்களா?
    ஆடு மாடுகளை ஹலால் என்று கழுத்தை அறுப்பதுபோல உங்கள் சகோதர சகோதரிகளையும் கழுத்தை அறுப்பீர்களா?

    ஓ அதனால்தான் ஜிகாதி கும்பல் மனிதர்களின் கழுத்தை ஹலாலாக அறுக்கிறீர்களா?

    இப்படிப்பட்ட கசாப்பு கடைகளில் வாங்குவதை விட ஓரளவுக்கு மனிதாபிமான முறையில் கசாப்பு கடை வைத்திருக்கும் இந்துக்களிடம் வாங்குவதே மேல்.

  37. //அதை நான் சொன்னதாக நீங்கள் மாற்றி எழுதுவது இஸ்லாமிய அயோக்கியத்தனம். //
    Please don’t generalise.

  38. நண்பர் நெல்லை சிராஜ்

    //
    முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
    //

    உலகம் இஸ்லாத்திற்கு பிறகு தான் தோன்றியது என்ற என்னமா – அதென்ன பழைய மனிதனுக்கு அறிவு இல்லை என்ற பிடிவாதம் – வேதம் செடிகளுக்கும் வலி இருக்கிறது என்று சொல்கிறது, அது பயப்படும் என்றும் சொல்கிறது – வேள்விக்கு ஒரு கம்பு தேவை படுகிறது அதை எடுப்பதற்காக கோடாலியுடன் போகும் பொது மரம் பயப்ப்படுமாம் – அதை சமாதானப்படுத்தி, வேள்வியின் உலக பயனை சொல்லி ஒரு கொம்பு வெட்டி வருவதாக மந்திரம் உள்ளது

    தர்ப்பம் வெட்டுவதற்கு மந்திரம் – எக்க சக்க விதிமுறைகள் உள்ளன

    துளசி பறிக்கும் பொது கூட அதற்க்கு வலிக்காமல் எப்படி ஒவ்வொரு இலையாக பறிக்க வேண்டும், என்ன மந்திரம் சொல்ல வேண்டும், துளசி இலையை தருவதால் அது அடையப்போகும் பயன் என்ன என்றெல்லாம் சொல்லிக்கொண்டே தான் பறிக்க வேண்டும்

    வேத மதத்தினர் மிகுந்த அறிவுடன் தான் இருந்தனர் – கஜினி வரும் வரையில் எல்லாம் நன்றாக தான் இருந்தது

    அரபு நாட்டுக்காரன் யோசிக்கமால் அறிவில்லாமல் இருந்ததற்கு மொத்த மனித குலத்தையே சாடுவது அபத்தமாக இல்லையா

  39. /அதை நான் சொன்னதாக நீங்கள் மாற்றி எழுதுவது இஸ்லாமிய அயோக்கியத்தனம். //

    உங்கள் கருத்துகளுக்கு மட்டுமே முடிந்தால் பதிலளிக்கவும் தேவையில்லாமல் இஸ்லாமிய அயோக்கியத்தனம்.என்று கூறி யாருடைய மதங்களையும் இழிவு படுத்தவேண்டாம். கருத்துக்களில் நாகரிகத்தை கடைபிடிக்கவும்.

  40. சமீ ,
    நெல்லை சிராஜு அவர்கள் முதலில் ‘எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும்’ என்றார். அடுத்து எதோ அந்த வாசகத்தை நான் சொன்னது போல் ஜோடித்து, அப்படியே உல்டாவாக ‘எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் இனி ஆடு, மாடு, கோழிகளுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டாம் தங்களுடைய வீட்டில் தங்களுடைய படுக்கைகளில் அதுகளுக்கு இடம் ஒதுக்கி தங்களோடு சரி சமமாக பாவிக்க தயாரா?’ என்றார். இது மாதிரி மற்றவர்கள் பரிகசிக்கும் வகையில் அவர் முரண்பாடக பேசுவது அவர் எந்த மதத்துக்காகப் பேசுகிறாரோ அந்த மதத்துக்கே கெட்ட பெயர் விளைக்கும் என்று அவருக்கு அறிவுறுத்துங்கள். சுரா 6:152-153 படி பொய் சொல்லுதல் பெரும் பாவமாகும். ஆதலால் பொய் சொல்லும் அவரை கண்டியுங்கள்.

    எனக்கெல்லாம் பதில் சொல்லத்தெரியும். ‘முடிந்தால்’ எல்லாம் இங்கு வேண்டாம். நீங்கள் ‘முடிந்தால் பதிலளிக்க’ முகமதியரான நெல்லை சிராஜுக்கு அறிவுறுத்துங்கள்.

    ‘இஸ்லாமிய அயோக்கியத்தனம்’ என்று சொன்னதுக்கு காரணம், மாற்றிப் பேசும் முறையும், பொய் சொல்லுதலும் ( ராமர் கோவிலே அய்யோத்தியில் இல்லை எனபது போன்று), இஸ்லாத்தில் காபிர்களிடம் பொய் சொல்லுவது சரியே என அனுமத்திக்கப் பட்டிருப்பதும்தான். மேலும் திருக் குர் ஆன் , “உண்மை சொல்லி இலக்கை அடைய முடியாதபோது பொய் சொல்லியாவது அடையவேண்டும்” (அஹ்மத்இப்ன் நகிப் அல்மிஸ்ரி 1368 , நெடும்பயணத் துணை) என்று கூறுகிறது இல்லையா ?

  41. kargil jay
    2 April 2010 at 10:09 pm
    1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.
    2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது.//
    உணர்வற்ற நிலைக்கு சென்றபின் எவ்வாறு வலியால் அவதியுற முடியும்? முரண்பாடில்லையா இது? சற்றே சிந்தித்து பாருங்களேன்.
    ஒரு பசு இரத்தம் வெளியேறும்போது துடிதுடிப்பதை ‘வலியெல்லாம் ஒண்ணும் இல்லை, இரத்தம் சீக்கரம் வெளியேற, கறி ருசியா இருக்கனும்னுதான் துடிக்குது’ என்று நீங்கள் சொல்வது சாடிசம் (sadistic pleasure) மட்டுமே
    1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.
    2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது.

    மேற்கூறிய ஆய்வுகளில் முரண்பாடுகள் இல்லை நீங்கள் புரிந்து கொண்டதில் தான் முரணபாடுகள் உள்ளன. நான் கூறிய ஆய்வில் உள்ள வாசகம் (உணர்வற்ற நிலைக்குப் போகின்றன) அதாவது உணர்வற்ற நிலையை கொஞ்சம் கொஞசமாக அடைகின்றன என்று தான் அர்த்தம் இது பிரிகேஜி படிக்கும் சிறு குழந்தைக்கு கூட புரிந்துவிடும். ஆனால் நீங்கள் (உணர்வற்ற நிலைக்கு சென்றபின்) என்று தவறாக புரிந்து கொண்டுவிட்டதால் தங்களுக்கு முரண்பாடாக தெரிகிறது. அதாவது ஒருவன் சென்று கொண்டிருக்கிறான். என்பதற்கும், சென்றுவிட்டான் என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள். திரும்பவும் ஆய்வை ஒருமுறை வாசிக்கவும்.

    இஸ்லாம் கூறும் ஹலால் முறை :
    1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு ஊ.ஊ.ஏ.-ல் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போத அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.
    2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான இரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.
    3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் ஊ.ஊ.ஏ. பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலிக்கும் அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.
    4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் எடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக இரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதாரநிலையை அடைகிறது. வெளியேற்றப்பட்ட இரத்தத்தோடு கிருமிகளும் சேர்ந்து வெளியாகி விடுவதே இதற்கு காரணம்
    முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொள்ளும் ஜட்கா முறை :
    1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.
    2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது.
    3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான இரத்தம் தேங்கிவிடுகிறது. இரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொளளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.
    உடலில் தேங்கிய உறைந்து போன இரத்தத்தில் கிருமிகள் தங்கிவிடுவதால் சுகாதாரமற்றது என்பதற்குரிய காரணங்களாகும். மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையே நிரூப்பித்துள்ளது.

  42. kargil jay
    4 April 2010 at 12:24 am

    பொய் சொல்கிறீர்கள். தண்டுவடம் துண்டிக்கப் படாமல் இருப்பதால் கொடூரமான வலியில் மிருகங்கள் துடிக்கும்.
    நான் பொய் சொல்வதாக கூறுகிறீர்கள் அப்படியென்றால் உண்மை நிலையினை தாங்கள் கூறுங்கள்
    //D. இறைச்சியில் நோய்க்கிருமிகள் உருவாகக் காரணமாக அமைவது ஓட்டப்படாத இரத்தமே. //
    scientifically wrong excuse for sadistic pleasure.
    scientifically wrong என்றால் scientifically correct என்பதை நிரூபிக்கவும் அதைவிட்டு விட்டு கோபம் அடைந்து நாகரியமில்லாத வாசகம் அடங்கிய கருத்துக்களை கூறுவது சரியில்லை. எனக்கும் தெரியும். இருந்தாலும் கண்ணியத்தையே கடைபிடிக்க விரும்புகிறேன்.

  43. Sarang, Kargil jay, please keep writing, throughly enjoying your replies
    God bless
    Rama

  44. நெல்லை சிராஜ் அவர்களே

    இரண்டு விஷயம் சொல்கிறீர்கள்

    ஜீவ காருண்யம்
    அறிவியல்

    முதலில் ஜீவ காருண்யம் – கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறது –

    – இந்தியர்களின் மதத்தில் எல்லோரும் மாமிசம் உன்ன மாட்டார்கள் – யாருக்கு உடல் வலிமை தேவை என்று எண்ணுகிறார்களோ அவர்கள் மட்டுமே உண்பார்கள் [சீக்கியர்களில் கூட புலால் உண்ணாதவர்கள் உண்டு]

    – இவர்களும் கூட வருடத்தில் பாதி நாட்களுக்கு மேல் உன்ன மாட்டார்கள் (புரட்டாசி, மார்கழி, நல்ல நாட்கள், பண்டிகைகள் ) இப்படி பல நாட்கள் ஒன்னும் கிடையாது

    மேற்சொன்ன காரணத்தினால் நீங்கள் சொல்லும் காருண்ய வாதங்களை எல்லாம் முற்றிலுமாக தள்ள வேண்டி உள்ளது – ஒரு ஒப்பிடாக யோசித்துபாருங்கள் – சீனா காரன் கரப்பான் பூச்சியை அதற்க்கு வலிக்காமல் எப்படி கொள்ள வேண்டும் எப்படி சாப்பிட வேண்டும் என்று ஜீவ காருண்யத்தை பற்றி பேசினால் எப்படி இருக்கும்?

    அறிவியலுக்கு வருவோம்

    எதோ அறிவியல் பூர்வமா யோசிச்சு தான் ஹலால் முறையை எங்கள் (எங்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றிய) அறிவு ஜீவிகளான அரேபிய முன்னோர்கள் உண்டு பண்ணினார்கள் என்பதோ போன்று பேசப்படாது

    ஹலால் என்பது யூதர்களின் கோஷேர் முறையின் அச்சு அசல் அப்படியா ஈ அடிச்சான் காப்பி

    யூதர்கள் ரத்தம் குடிப்பதை அவர்களின் நூலான தோராஹ் தடுக்கிறது ஏன் தெரியுமா – தோராஹ் சொல்லும் காரணம் – ரத்தத்தில் தான் ஆன்மா இருக்கிறது என்று அதி அறிவியல் பூர்வமான ஒரு எண்ணத்தினால் [இதையும் சேர்த்துதான் இஸ்லாம் காப்பி அடித்தது என்பது வேறு விஷயம்]

    இதில் தான் எத்தனை அபத்தம் – ரத்தத்தில் ஆன்மா இருந்தால் அது வடியும் போதே காலி ஆகிவிடாதா, ஒருவனுக்கு அடி படுகிறது என்றால் அப்போ ஆன்மாவின் கதி? அது என்ன வெளியேறும் ரத்தத்தின் வழி escape ஆகிடுமா? ரத்தத்தை எடுத்து ப்ரிட்ஜுல வெச்சா சாவே இல்லாம இருக்குமா? அப்போ புதைகரதுக்கு முன்னாடி ரத்தத்தை புடிக்கிருவோமே? பங்களின்களோட எப்போதும் ஜாலியா இருக்கலாம்? சாவே கிடையாது?

    இந்த அறிவினால் தான் தாவரங்களுக்கு உயிர் இல்லை என்று முடிவு கட்டினார்களோ அரபு காரர்கள் – தாவரங்களுக்கு ஏது ரத்தம்? அப்படியானால் ரத்தம் இல்லாத தாவரமும் இல்லாத உயிர் இனங்களுக்கு உயிரே இல்லையா?

    இப்படி மூல (மூளை கேட்ட) காரணத்திலேயே அடி விழுகிறதே

    ஆதலால் அறிவியல் பூர்வமாகவும் உங்களின் வாதங்களை தள்ள வேண்டியதுதான்

    நீங்கள் காட்டும் ஆராச்சியை போல பல நடு நிலை ஆராய்ச்சியாளர்கள் ஹலால் மற்றும் கோஷேர் முறை கொடூரமானது என்று முடிவு சொல்கிறார்கள் – அதற்க்கு என்ன சொல்ல – நீங்கள் சொன்ன ஆராச்சியை செய்தவர் நடு நிலையாளர் அல்ல என்பது தெரிகிறது அதனால் அதை ஆதாரமாக காட்டிக் கொண்டு திரிவதி என்ன பயன் – மேலும் கட்டுரை ஆசிரியர் சொன்ன toxin விஷயங்களுக்கு உங்கள் பதில் வரவே இல்லையே – அதுவும் ஆராய்ச்சின் மூலம் நிர்ணயம் செய்தது தானே

    ஹலால் முறையில் எல்லா ரத்தமும் வெளியேற்ற படுகிறது என்பதும் தவறு – கொஞ்சம் ரத்தம் இருக்கத்தான் செய்கிறது – கோஷேர் முறையில் தான் அதிக அல்லது கிட்டத்தட்ட முழுவதுமாக ரத்தம் வெளியேற்ற படுகிறது – முடிவு பொதுவில் ஹலால் மாமிமசமும், ஹலால் அல்லாத மாமிசமும் ஒன்று போல் தான் உள்ளது என்கின்றனர் (சுவையில் வித்யாசம் உள்ளது என்று சொல்கிறார்கள்)

    மேற்சொன்ன காரணத்தினால் மாமிசத்தை பொறுத்த மட்டில் எல்லாமே ஒன்னு தான் என்பது தெளிவாகிறது – process மட்டுமே மாறுகிறது

    இப்படி அறிவியல் மற்றும் காருண்ய பூர்வமாக பேசும் நீங்கள் கோஷேர் மாமிசம் உண்பீர்களா – கிடையாது? ஏன்? அல்லா சொல்லிட்டாரே! என் பேரை எடுக்காமல் வெட்டினா உன்னோட கடைசி நாள் அன்னிக்கு பேசமாட்டேன் குத்துவேன்னுட்டு – இதை ஒத்துக்கிட்டு போன பிரச்சினையே இல்ல? இதோ பாருப்பா எங்க மதத்துல இந்த முறை தான் சொல்லிருக்கு, அத நான் நம்பறேன் – இதை விட்டுட்டு அறிவியல், உயிரியல் பற்றியெல்லாம் விஷயம் தெரியாமல் பேசினால் எக்கு தப்பாகிவிடும்

  45. kargil jay
    7 April 2010 at 12:04 am

    இஸ்லாமிய அயோக்கியத்தனம்’ என்று சொன்னதுக்கு காரணம், மாற்றிப் பேசும் முறையும், பொய் சொல்லுதலும் ( ராமர் கோவிலே அய்யோத்தியில் இல்லை எனபது போன்று), இஸ்லாத்தில் காபிர்களிடம் பொய் சொல்லுவது சரியே என அனுமத்திக்கப் பட்டிருப்பதும்தான். மேலும் திருக் குர் ஆன் , “உண்மை சொல்லி இலக்கை அடைய முடியாதபோது பொய் சொல்லியாவது அடையவேண்டும்” (அஹ்மத்இப்ன் நகிப் அல்மிஸ்ரி 1368 , நெடும்பயணத் துணை) என்று கூறுகிறது இல்லையா ?
    பதில் சொல்லத்தெரியும் என்றால் , பதிலளிங்கள் எதிர் கருத்துக்களுக்கு பதிலளிக்காமல் தேவையில்லாததை கூறி தாங்கள் குழம்பி கருத்துக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறீர். நான் முன்வைத்த கருத்துக்களுக்கு பதிலளிக்காமல் இஸ்லாமிய மார்க்கத்தை வம்புக்கு இழுக்கிறீர். உங்ளைப் போன்று அறிவில்லாமல் நான் உங்கள் மதத்தை வம்புக்கு இழுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் பிற மத தெய்வங்களை திட்டாதீர்கள் என கட்டளை பிறப்பிற்கிறது.
    இஸ்லாத்தில் காபிர்களிடம் பொய் சொல்லுவது சரியே என அனுமத்திக்கப் பட்டிருப்பதும்தான். மேலும் திருக் குர் ஆன் , “உண்மை சொல்லி இலக்கை அடைய முடியாதபோது பொய் சொல்லியாவது அடையவேண்டும்” (அஹ்மத்இப்ன் நகிப் அல்மிஸ்ரி 1368 , நெடும்பயணத் துணை) என்று கூறுகிறது இல்லையா ? என்று இஸ்லாம் சொல்லாத கருத்துக்களை இஸ்லாம் கூறியதாக பொய் சொல்லி வருகிறீர்கள். திருக்குர்ஆன் பொய் சொல்லியாவது இலக்கை அடைய வேண்டும் என்பதை மூலத்துடன் வெளிடவும்.

  46. ஏங்க சிராஜ்,
    என்னத்துக்கு ஒரு சில பாயிண்ட திருப்பி, திருப்பி வெட்டின கறியையே வெட்டறா மாதிரி பதிவு செய்யறீங்க? ஏதாவது வேண்டுதலா? இல்ல யாரவது உங்ககிட்ட 100 தரம் ஹலால் பத்தி எழுதினால் லாட்டரி அடிக்கும்னு ஏதாவது சொன்னாங்களா? வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு ஒரே போடா பேசுங்களேன். ஏன் கொஞ்சம் கொஞ்சமா அறுக்கறீங்க?

    என் அறிவு pre -KG அளவு கூட இல்லைன்னு சொல்லி இருக்கீங்க. அதற்கு ஆதரமா எனக்கு புரியலைன்னு சொல்லி இதை சுட்டி இருக்கீங்க :
    //
    1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் ***உடனே நிலை குலைந்து** போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

    மேற்கூறிய ஆய்வுகளில் முரண்பாடுகள் இல்லை நீங்கள் புரிந்து கொண்டதில் தான் முரணபாடுகள் உள்ளன. நான் கூறிய ஆய்வில் உள்ள வாசகம் (உணர்வற்ற நிலைக்குப் போகின்றன) அதாவது ***உணர்வற்ற நிலையை கொஞ்சம் கொஞசமாக*** அடைகின்றன //

    எப்படிங்க “உடனே நிலை குலைந்து” அப்படிங்கறதும் “உணர்வற்ற நிலையை கொஞ்சம் கொஞசமாக” அப்படீங்கறது ஒண்ணா ஆகும்? immediate அப்படிங்கறதும் gradual அப்படீங்கறதும் ஒண்ணா? ரெண்டும் synonym இல்லைங்க.. antonym. எதிர்ப்பதம். இதுக்கு மேல நீங்க எழுதினதெல்லாம் படிச்சா ” why blood ? same halal blood ” ஆகிடும். வலி உணர்வைப் பத்தி பேசினப்பவே தாறுமாறா பேசினீங்க.

    ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்கன்னு நினைக்கறேன். இதற்க்கு காரணம் ஹலால் மாமிசத்துல இருக்கற நரம்பு விஷமிங்களா இருக்கலாம். அதுக்காக நீங்க ஜட்கா கறியெல்லாம் சாப்பிடனும்னு நான் சொல்லலை. அது ஹாரம். ஒண்ணு பண்ணுங்க, நல்ல சைவ உணவா ஒரு மண்டலம் சாப்பிட்டு பாருங்க. தமிழ் ஹிண்டுல வர செய்தியெல்லாம் படிங்க. தெளிவாயிடுவீங்க.

  47. Sri. Siraj,
    This is what you wrote :
    //பதில் சொல்லத்தெரியும் என்றால் , பதிலளிங்கள் எதிர் கருத்துக்களுக்கு பதிலளிக்காமல் தேவையில்லாததை கூறி தாங்கள் குழம்பி கருத்துக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறீர்.//

    சரி எப்படி குழம்பாமல் பதில் சொல்ல வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள்.

    // நான் முன்வைத்த கருத்துக்களுக்கு பதிலளிக்காமல் இஸ்லாமிய மார்க்கத்தை வம்புக்கு இழுக்கிறீர்.//

    நீங்கள் என்ன கருத்தை முன்வைத்தீர்கள்? நான் ஸ்ரீ. சாரங் பதில் எழுதிவிட்டதால் நானும் அதையே எழுத வேண்டாம் என விட்டுவிட்டேன். நானும் வெட்டிய கறியையே வெட்டினால் வெட்டியா வெட்டுகிறேன் என்று வெட்டிப் பேசுவார்களே? சொன்னதையே திருப்பி திருப்பி எழுத உங்கள் அளவுக்கு எனக்கு அல்லா தைரியம் கொடுக்கவில்லை.

    நான் இஸ்லாமிய மார்க்கத்தை வம்புக்கு இழுக்கக் காரணம் ஹலால் பற்றியும் இன்ன பிறவற்றைப் பற்றியும் அதில் சொல்லப்பட்டு இருக்கும் பொய்கள்தான். அவங்கள பொய் சொல்றத நிறுத்த சொல்லுங்க.. நான் வம்புக்கு இழுக்கறத நிறுத்தறேன். அவங்கள ஜிகாத நிறுத்த சொல்லுங்க .. நான் நிறுத்தறேன்.

    //உங்ளைப் போன்று அறிவில்லாமல் நான் உங்கள் மதத்தை வம்புக்கு இழுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் பிற மத தெய்வங்களை திட்டாதீர்கள் என கட்டளை பிறப்பிற்கிறது//

    நாகரீகமா பேசணும்னு சொன்னீங்க. எப்படி? இதோ மேல பேசி இருக்கீங்களே இது மாதிரியா?. சரி பிற மதத்த திட்ட கூடாதுன்னு இஸ்லாமிய மார்க்கம் சொல்லுது.. அப்டின்னா கோவில எல்லாம் இடிக்கக் கூடாதுன்னு சொல்லவே இல்லையா? ஏன் இடிச்சாங்க?

    இதோ நீங்கள் கேட்ட ஆதாரம் : Al-Bukhari – 52-271; Qur’an 2:225 and 40:28

    Unlike most religions, within Islam, there are certain passages under which lying not simply tolerated, but actually encouraged. In the book “The Spirit of Islam,” by the Muslim scholar, AFIF A. TABBART states (page 247) “lying is more profitable and better for the general welfare, and for the settlement and conciliation among people, than telling the truth”.

    Muslim military dictators, Jihadi and their paid agents think that Islam would exempt them spiritual accountability if they lie as a foundation for a strategic Islamic maneuver. There are many incidences in the life of Mohammed where he often lied and instructed his followers to do the same. A good example is the assassination of Kaab Ibn Ashrf, a member of the Jewish tribe, Banu al-Nudair. Mohammed ordered his assassination by deception, lying and tricks. Mohammed also ordered the murder of Shaalan by deception and lying. Islamic history is replete with incidents of murder and assassination by deception

  48. ,கறி உணவுக்கு எப்படி விலங்கை வெட்டவேண்டும் என்பதைவிட கறி உண்பது எவ்வளவு தூரம் குறைத்துக்கொள்ளமுடியுமோ அவ்வளவுதூரம் ழூளை வளர்சிக்கு நல்லது. உலகில் கறி உணவுக்காக வளர்கப்படும் விலங்கு பண்ணைகள் வெளியிடும் கரியஅமிலவாயு (CO2 Emission ) 37% என்பது அதிர்சியாக உள்ளது. இதனால் உலகின் வெப்பம் அதிகமாகி பனிபாறைகள் உருகி கடல் நீர்மட்டத்தை உயர்தி கடல்ஓர தேசங்கள் நீரில் ழூழ்கும் அபாயத்தை ஏற்படுத்தும்

  49. Sri. Krishna
    Our hero’s are swami vivekananda who roared against crowd of americans in their own den, Subash Chandra bose who roared against worlds vast super power. I am just zero, may be a small echo from one of thousand sentences those hero’s spoke.

  50. I have to again point out that the comparison done in the research, nellaisiraj points out, is between halal and the european method of stunning the brain of the animal before killing it. Even after pointing out earlier nellaisiraj continues with his version that it is halal vs jatka! Either he did not understand the original comparison or as kargiljay points out, he is lying by repeating that the research is a comparison between halal and jatka!

  51. vedamgopal
    8 April 2010 at 6:40 am
    ,கறி உணவுக்கு எப்படி விலங்கை வெட்டவேண்டும் என்பதைவிட கறி உண்பது எவ்வளவு தூரம் குறைத்துக்கொள்ளமுடியுமோ அவ்வளவுதூரம் ழூளை வளர்சிக்கு நல்லது. உலகில் கறி உணவுக்காக வளர்கப்படும் விலங்கு பண்ணைகள் வெளியிடும் கரியஅமிலவாயு (CO2 Emission ) 37% என்பது அதிர்சியாக உள்ளது. இதனால் உலகின் வெப்பம் அதிகமாகி பனிபாறைகள் உருகி கடல் நீர்மட்டத்தை உயர்தி கடல்ஓர தேசங்கள் நீரில் ழூழ்கும் அபாயத்தை ஏற்படுத்தும்

    புவி வெப்பமடைதலை தடுக்கும் செம்மறி ஆடுகள்!
    புவி வெப்பமடைதலை தடுக்க உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் நடக்கும் ரகசிய யுத்தம் இது.

    பல்வேறு வழிகளில் புவி வெப்பமாவதை தடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. செம்மறி ஆடுகளின் ஏப்பம், புவி வெப்பமாவதை தடுப்பதாக தற்போது கண்டறியப்பட்டு உள்ளது.

    ஆஸ்திரேலியாவின் செம்மறி ஆடுகள் கூட்டுறவு ஆராய்ச்சி மைய ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது.

    பசுமை இல்லா வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்துவதில் சில விலங்கினங்கள் நமக்கு உதவுகின்றன.

    குறிப்பாக மீத்தேன் வாயுவை கட்டுப்படுத்துவதில் இவை பங்காற்றுகின்றன. மாடுகள் இந்தப் பணியில் உதவுவதாக ஏற்கனவே அறியப்பட்டு இருந்தது.

    தற்போது இந்தப் பட்டியலில் செம்மறி ஆடுகளும் சேர்ந்துள்ளன.
    செம்மறி ஆடுகளின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிரிகள், மீத்தேன் வாயுவை அதிகமாக குறைக்கின்றன. குறிப்பாக ஆடுகள் ஏப்பமிடும் சமயத்தில் அதிகப்படியான மீத்தேன் உள்ளிழுக்கப்படுகிறது.

    இதனால் குறிப்பிட்ட அளவில் காற்றில் மீத்தேன் அளவு உறிஞ்சப்படுவதால் புவி வெப்பமடைவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக ஆஸ்திரேலிய ஆய்வுக்குழு ஆடுகளில் பல்வேறு செயற்கை மாற்றங்களை ஏற்படுத்தி ஆய்வு செய்து வருகிறது. அங்குள்ள ஆடுமேய்க்கும் இடையர்களையும் ஊக்குவித்து வருகிறார்கள்.

    ஏனெனில் ஆடுகள் அதிகம் ஏப்பமிட்டால் நமக்கு ஏற்படும் ஆபத்து குறையுமே!

    இறைவன் திருமறையில்..
    கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம். அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்! அல்குர்ஆன் (23:21)

    இந்த ஆய்வு பற்றி BBC வெளியிட்ட செய்தி (ஆங்கிலம்)

    https://news.bbc.co.uk/2/hi/8385068.stm

  52. ஹலால் என்றால் ,உலகில் உள்ள அணைத்து மதத்திற்கும் தெரியும் ,,அதனால் இஸ்லாம் அல்லாத நாட்டிலும் ,அனுமதித்து ஏற்று கொண்டுயருகிரர்கள் ,,அது என்ன ஜட்கா,,,இந்த பெயர் முதலில் ஹிந்துக்களுக்கு தெர்யுமா ,,,

  53. kargil jay
    8 April 2010 at 4:03 am
    நாகரீகமா பேசணும்னு சொன்னீங்க. எப்படி? இதோ மேல பேசி இருக்கீங்களே இது மாதிரியா?. சரி பிற மதத்த திட்ட கூடாதுன்னு இஸ்லாமிய மார்க்கம் சொல்லுது.. அப்டின்னா கோவில எல்லாம் இடிக்கக் கூடாதுன்னு சொல்லவே இல்லையா? ஏன் இடிச்சாங்க?

    கோவில எல்லாம் இடிக்கக் கூடாதுன்னு சொல்லவே இல்லை, அப்படி இடிக்க சொல்லியிருந்த காட்டுங்க, எங்கே இடிச்சாங்க?

  54. ஸ்ரீ . சிராஜ் ,

    நீங்கள் சொன்ன அல்குர்ஆன் (23:21) வாசகத்தை நீங்கள் சொன்ன அந்த https://news.bbc.co.uk/2/hi/8385068.stm -ல் அறிவியல் அறிஞர்கள் தவறு என்று நிரூபித்து உள்ளார்கள். They did not prove as you claim, but disproved. அவர்கள் சொல்லியிருப்பது இதுதான் : “ஆஸ்திரேலியாவில், பெரும்பான்மை பசுமையில்லா வாயு வெளியேற்றத்தின் காரணம், கால்நடைகளின் ஏப்பத்தில் வரும் மீத்தேன் வாயுவே; இது புவியை வெப்பப் படுத்துவதால் அதைக் குறைக்க ஆராய்ச்சி நடக்கிறது “.

    அதற்கு நேரெதிராக நீங்கள் சொன்னது போல் //குறிப்பாக ஆடுகள் ஏப்பமிடும் சமயத்தில் அதிகப்படியான மீத்தேன் உள்ளிழுக்கப்படுகிறது// என்று எங்கும் குறிப்பிட படவில்லை. வெளியேற்றப் படுகிறது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

    armchaircritic / சமீ,
    இப்போது நான் அயோக்கியத்தனம் என்று சொன்னதற்கான காரணம் தெரிகிறதா?

  55. //
    ஹலால் என்றால் ,உலகில் உள்ள அணைத்து மதத்திற்கும் தெரியும் ,,அதனால் இஸ்லாம் அல்லாத நாட்டிலும் ,அனுமதித்து ஏற்று கொண்டுயருகிரர்கள் ,,அது என்ன ஜட்கா,,,இந்த பெயர் முதலில் ஹிந்துக்களுக்கு தெர்யுமா ,,,
    //

    பின் லேடன் என்றல் உலகம் பூர தெரியும் – அதாரு ஞாநேஸ்வரர் – அவரை பற்றி ஹிந்துக்களுக்கு தெரியுமா …

    அரபு காரன் என்றால் முட்டாள் என்று எல்லோருக்கு தெரியும் – அதாரு கணித மேதை ராமானுஜன் – இந்தியர் எல்லோருக்கும் அவரைபற்றி தெரியுமா …

  56. உணர்வுடையன்

    kargil jay
    9 April 2010 at 12:54 am
    ஸ்ரீ . சிராஜ் ,

    நீங்கள் சொன்ன அல்குர்ஆன் (23:21) வாசகத்தை நீங்கள் சொன்ன அந்த https://news.bbc.co.uk/2/hi/8385068.stm -ல் அறிவியல் அறிஞர்கள் தவறு என்று நிரூபித்து உள்ளார்கள். They did not prove as you claim, but disproved. அவர்கள் சொல்லியிருப்பது இதுதான் : “ஆஸ்திரேலியாவில், பெரும்பான்மை பசுமையில்லா வாயு வெளியேற்றத்தின் காரணம், கால்நடைகளின் ஏப்பத்தில் வரும் மீத்தேன் வாயுவே; இது புவியை வெப்பப் படுத்துவதால் அதைக் குறைக்க ஆராய்ச்சி நடக்கிறது “

    kargil jay நீங்க சொன்ன மாதிரி They did not prove as you claim, but disproved இல்லைய

    Australian aims to breed ‘green’ sheep that burp less

    Livestock account for a significant amount of Austalian emissions
    Australian scientists have said they are hoping to breed sheep that burp less as part of efforts to tackle climate change.
    The scientists have been trying to identify a genetic link that causes some sheep to belch less than others.
    Burping is a far greater cause of emissions in sheep than flatulence, they say.
    About 16% of Australia’s greenhouse emissions come from agriculture, says the department of climate change.
    Australia’s Sheep Cooperative Research Council says 66% of agricultural emissions are released as methane from the gut of livestock.
    “Ninety per cent of the methane that sheep and cattle and goats produce comes from the rumen, and that’s burped out,” John Goopy from the New South Wales Department of Industry and Investment told ABC.
    “Not much goes behind – that’s horses.”
    The scientists in New South Wales have been conducting experiments in specially designed pens where they measure how much gas sheep emit by burping.
    They have found, from tests on 200 sheep so far, that the more they eat, the more they belch.
    But even taking that into account, there appear to be “significant differences” between individual animals, Mr Goopy said.
    The scientists’ goal in the long term is to breed sheep that produce less methane, which produces many times more global warming than carbon dioxide.
    “We’re looking for natural variations so we’ll steer the population that way, ” said Roger Hegarty, from the Sheep Cooperative Research Council.

  57. //கோவில எல்லாம் இடிக்கக் கூடாதுன்னு சொல்லவே இல்லை, அப்படி இடிக்க சொல்லியிருந்த காட்டுங்க, எங்கே இடிச்சாங்க?//
    உங்க பாபர் மசூதியிலிருந்து தாஜ்மகல் வரைக்கும் background check பண்ணுங்க

  58. Nellaisiraj,Muslims did not detroy a lot of the Hindu temples in India.!!!!!!!!!!!!!!!!!
    You mean to say that these temples just fell away at mere sight of the barbaric, maruding Islamic invaders?
    Would you be in favour of this “non painful,humane,Halal killing” of MUSLIMs( only) criminals/ prisoners waiting on the death row?
    Your forefathers were all Hindus. Please abandon this barbaric arabian alien sect and return to the Hindu fold, where you rightfully belong.You are an Indian. Your culture and your past are all part and parcel of our Dharmic religion.Come back HOME!

  59. நெல்லை சிராஜ் – உங்களது சமீபத்திய மறுமொழிகள் மிக நீளமாக உள்ளன. அவற்றைப் பதிப்பிக்க இயலாது. சுருக்கமாக மறுமொழிகள் இட வேண்டுகிறோம்.

    அந்தக் கருத்துக்களை நீங்கள் வேறொரு இடத்தில் பதிந்து அதற்கான இணைப்பினை இங்கு குறிப்பிட்டால் பதிப்பிப்பது பற்றி பரிசீலிக்கப் படும்.

  60. armchaircritic
    9 April 2010 at 10:53 pm
    //கோவில எல்லாம் இடிக்கக் கூடாதுன்னு சொல்லவே இல்லை, அப்படி இடிக்க சொல்லியிருந்த காட்டுங்க, எங்கே இடிச்சாங்க?//
    உங்க பாபர் மசூதியிலிருந்து தாஜ்மகல் வரைக்கும் background check பண்ணுங்க

    Rama
    10 April 2010 at 9:24 am
    Nellaisiraj,Muslims did not detroy a lot of the Hindu temples in India.!!!!!!!!!!!!!!!!!
    You mean to say that these temples just fell away at mere sight of the barbaric, maruding Islamic invaders?
    Would you be in favour of this “non painful,humane,Halal killing” of MUSLIMs( only) criminals/ prisoners waiting on the death row?
    Your forefathers were all Hindus. Please abandon this barbaric arabian alien sect and return to the Hindu fold, where you rightfully belong.You are an Indian. Your culture and your past are all part and parcel of our Dharmic religion.Come back HOME!

    அயோத்தியில் ராமர் பிறந்தாரா?

    அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.

    இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.

    இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
    வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.https://www.tntj.net/?p=7656
    மேலும் உண்மை நிலையை முழுமையாக(தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவின் வேண்கோளுக்கு இணங்க லிங்கை கிளிக் செய்தால்)லாம்.

  61. நெல்லை சிராஜ்,

    அயோத்தி பிரசினை இந்திய தேசிய அளவில் தீவிரமாக பல ஆண்டுகள் விவாதிக்கப் பட்டிருக்கிறது. ஏராளமான ஆவணங்கள், பதிவுகள் உள்ளன.. இங்கே இருப்பவர்கள் எல்லாம் கேனையர்கள் அல்லது ஒண்ணாம் கிளாஸ் பசங்க என்ற ரீதியில் நீங்கள் எழுதிக் கொண்டு போகிறீர்கள்..

    அது உரிமைப் பிரசினையே தவிர ஒரு நம்பிக்கை உண்மையா இல்லையா என்பது பற்றீயதல்ல (நம்பிக்கை பற்றி எப்படி நீதிமன்றம், சட்டம் தீர்மானிக்க முடியும்??) பிரசினை அந்த இடத்தில் இருந்த புராதனமான புனித கோயில் பாபர் என்ற படையெடுப்பாளனால் அழிக்கப் பட்டதா என்பது தான்.. அங்கு இராமர் பிறந்தாரா என்பது அல்ல – ஆனால் இந்து விரோதிகளும், செக்யுலர் வாதிகளும் வேண்டுமென்றே இந்து நம்பிக்கைகளைக் கேலி செய்யவும், பிரசினையை திசைதிருப்பவும், இதே கேள்வியை வைத்து இந்துத் தரப்பினரை விளாசிக் கொண்டிருந்தனர். இந்துத் தரப்பின் சிலரும் இந்தக் கொக்கியில் மாட்டிக் கொண்டு விளக்கங்கள் அளித்துக் கொண்டிருந்தனர்.

    வி.ஹி.ப சார்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட ஆவணஙக்ள் முழுக்க முழுக்க அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று நிரூபணங்கள் சார்ந்தவை. புகழ்பெற்ற ஆய்வாளர் பி.பி லால் (அல்லது கே.எஸ். லால்??) அவர்களின் பல்லாண்டு கால அகழ்வாராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் அமைந்தவை. அருண் ஷோரி மற்றூம் சிலர் இணைந்து எழுதிய Ayodhya and After என்ற நூலில் இந்த அனைத்து ஆதாரங்களும் தரப்பட்டுள்ளன.

    கட்டுரைக்கு சம்பந்தமில்லாத இத்தகைய அபத்த கமெண்டுகளை மாடரேட்டர்கள் எப்படி பப்ளிஷ் செய்கிறார்கள்??

  62. நெல்லை சிராஜ் அவர்கள் கொடுத்துள்ள linkல் உள்ள வாதத்திற்கு எதிர் வாதம் உள்ளதா? யாராவது தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

  63. அயோத்தியில் பாபர் மண்டபம் ( மசூதி அல்ல; மசூதிக்குரிய விதிமுறைகள் அங்கு இருக்கவில்லை. உதாரணமாக நான்கு திசைகளிலும் பாங்கொலிப் பதற்கான அழைப்பு கோபுரங்கள், கைகால் கழுவுவதற்கான த்ண்ணீர்த் தொட்டி) இருந்த இடத்தின் பெய்ரே ஜன்மஸ்தான் என்பதுதான். இது காலங் காலமாக இருந்துவரும் பெயர். இப்போது திடீர் திடீர் என விருப்பம்போல் மாற்றம் செய்யப்பட்டு வைக்கப்படும் புதிய பெயர் போன்றது அல்ல. அயோத்தியில் ஜன்மஸ்தான் என்ற பெயர் ஒரு இடத்திற்கு இருக்குமானால் அது யாருடைய ஜன்மத்தைக் குறிப்பதாக இருக்கும் என்று விளக்கத் தேவையில்லை.,

  64. வீ.சக்திவெல் அவர்களெ,

    ///கட்டுரைக்கு சம்பந்தமில்லாத இத்தகைய அபத்த கமெண்டுகளை மாடரேட்டர்கள் எப்படி பப்ளிஷ் செய்கிறார்கள்??///

    சம்பந்தம் இருக்கிறது. தயை கூர்ந்து எனது அடுத்த மறுமொழியைப் பாருஙகள்.

  65. நெல்லை திரு சிராஜ் அவர்களுக்கு நன்றி.

    தாங்கள் சுட்டிய வலைப்பக்கத்தைப் பார்த்தேன். அபத்தக் களஞ்சியமாக இருக்கிறது. இப்படியும் சிந்திக்க முடியும் என்பதை என ்போன்றோருக்குத் தெரியப் படுத்தியமைக்கு நன்றி.
    அந்த‌க்க‌ட்டுரையிலிருந்து ஒரே ஒரு விஷ‌ய‌ம் குறித்து ம‌ட்டும் இங்கே எடுத்துக்கொள்கிறேன். ம‌ற்ற‌ அப‌த்த‌ங்க‌ள் குறித்து இஙகு விவாதிக்க‌ என‌க்கு நேர‌ம் இல்லை.

    ///ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.///

    இதை எழுதிய அதே கைதான் பின்வ‌ருவ‌தையும் அதே க‌ட்டுரையில் எழுதுகிற‌து.

    ///கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. ///

    ஒரு 800 வ‌ருஷ‌ கால‌ம் ம‌ட்டும் ம‌னித‌ர்க‌ள் அங்கு காணாம‌ல் போய்விட்டார்க‌ளா? அதிச‌ய‌மாக‌ இல்லை?

    ச‌ரி இத்தோடு நின்றாதா அப‌த்த‌ம்?

    ///ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.///

    ///இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

    200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.///

    ///இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.

    ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

    கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?///

    செப்புப்ப‌ட்ட‌ய‌த்தில் எழுதி பாப‌ர் எந்த‌க் கோவிலுக்கு மானிய‌ம் வ‌ழ‌ங்கினார்? ஹ‌னுமான்கிரி, ஜ‌ன்ம‌ஸ்தான் உள்ளிட்ட‌ ஐந்து கோவில்க‌ள். நான் சொல்ல‌வில்லை. https://www.tntj.net/?p=7656 சொல்கிற‌து.

    அதாவ‌து ஹ‌னுமான் வ‌ழிபாடு பாப‌ர் கால‌த்துக்கு முன்ன‌ரே இருந்த‌தை ஆதார‌த்தோடு சொல்கிற‌து. அப்ப‌டியானால், துள‌சிதாச‌ர் ராமாய‌ண‌த்துக்குப்பின்தான், 200 ஆண்டுக‌ளாக‌த்தான் ராம‌ர் வ‌ழிபாடு இருந்்த‌து என்று அதே க‌ட்டுரை எழுதினால் என்ன‌ அர்த்தம்? ஹிந்து ம‌த‌த்தை இழிவு ப‌டுத்த‌வேண்டும் என்ற‌ வெறி மேலிடும்போது என்ன‌ சொல்கிறோம் என்று கூட‌ப் பார்க்காம‌ல் ஒரேய‌டியாக‌ அவ‌தூறாக‌ எழுதுவ‌து, அதை அதே க‌ட்டுரையே ஆதார‌த்தோடு பொய் என்று நிரூபிக்கும் என்று கூட‌ப்புரியாம‌ல் எழுதுவ‌து.

    இதைப்போல‌ அந்த‌க் க‌ட்டுரையில் எத்த‌னையோ இருக்கின்ற‌ன‌. ச‌கோத‌ர‌ர் திரு சிராஜ் அவ‌ர்களெ, மான‌த்தைக் காப்பாற்றிக்கொள்ள அந்தத் தள உரிமையாள‌‌ர்க‌ளிட‌ம் சொல்லி அந்த‌க் க‌ட்டுரையை எடுத்துவிடுங்கள். அதுதான் அவ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌து. பொய்யை எழுதும்போது அதிக‌ம் யோசிக்க‌வேண்டும். உண்மையை எழுத‌ யோசிக்க‌வே வேண்டாம். என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள்.

    அன்ப‌ர் திரு ச‌க்திவேல் அவ்ர்களே,

    ஹ‌லால் செய்த‌ மாட்டுக்க‌றியையும், ஆட்டுக்க‌றியையும் சாப்பிடாதீர்க‌ள், மூளை ம‌ந்த‌மாகிப் போகும, மிருகத் தனமான வெறி மட்டும்தான் வரும்் என்று சொன்னால் கேட்க‌மாட்டேன் என்கிறார்களே!

    இதுதான் இந்தக் கட்டுரைக்கும் அந்தக் கட்டுரைக்கும் உள்ள ச‌ம்பந்த‌ம்!

  66. நெல்லை திரு சிராஜ் அவர்களே,

    ///பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,

    ”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

    இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?///

    பாப‌ர் பார‌சீக‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் என்ப‌தை நீங்க‌ள் சுட்டிய‌ க‌ட்டுரை ஆதார‌த்துட‌ன் ஒப்புக்கொள்கிற‌து. பாரதம் (இந்தியா) அவ‌ரைப்பொருத்த‌ ம‌ட்டும் அந்நிய‌ ம‌ண் அத‌னால்தான் த‌ன‌து ம‌க‌னுக்கு இப்ப‌டியொரு அறிவுரையை அவ‌ர் சொன்னார் என்ப‌தும் அக்கட்டுரை கூறுவது.

    உங்க‌ளை நாங்க‌ள் பாரதீயர் என்றுதான் க‌ருதுகிறோம். (இந்தியர் என்பது அந்நியர் வழங்கிய விதம். நமது அரசியல் அமைப்புச்சட்டமும் நமது தாய்த் திரு நாட்டை பாரதம் என்றே கூறுகிறது. ‘பாரதம் அதாவது இந்தியா’ என்றுதான் சொல்கிறது) 600 ஆண்டுக‌ளுக்கு முந்தைய அந்நிய‌ ஆட்சியாள‌ர் மேல் உங்க‌ளுக்கும் https://www.tntj.net/?p=7656 ம‌ற்ற‌பிற பாரதீய இஸ்லாமிய‌‌ ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கும் இருக்கும் ப‌ற்றும், பாச‌மும், அன்பும், ஆசையும், அரவணைப்பும், ஆத‌ங்க‌மும் பாபர் வாழ்ந்த அந்தக் காலம் முதல் இன்றுவரை பாரதத்தில் பெரும்பான்மையாக‌ இருக்கும் உங்க‌ள் பாரதீய‌ ஹிந்து ச‌கோத‌ரர்கள் மீது ஏன் வ‌ர‌வில்லை? ஏன் வ‌ர‌க்கூடாது? வரவேண்டுமா இல்லையா? வருவதுதானே நியாயம்? தர்மம்? தேசப் பற்று?

    அது சரி, பாபர் கட்டியதாக நீங்கள் நம்பும் மசூதி என்று நீங்கள் நம்பும் ஒரு கட்டடத்துக்கு இத்தனை ஆதங்கப்படும் பாரதீய (இந்திய) இஸ்லாமியர்கள், அவர் தனது மகனுக்குக் கொடுத்ததாக நீங்கள் நம்பும் ஓர் அறிவுரையைப் பின்பற்றுகிறீர்களா? அதாவது பசுவின் மாமிசத்தை உண்ணாமல் இருக்கிறீர்களா?

    டிசம்பர் 6ஆம் தேதியை ஹிந்து சகோதரர்கள் மீது வெறியை ஏற்படுத்தும் வண்ணம் ஒரு துக்க தினமாக அனுசரிக்கும் நீங்கள் வரும் 2010 டிசம்பர் 6 முதல் ஒவ்வொரு வருஷமும், பாபர் நினைவாக பசு மாமிசத்தை பாரதீய (இந்திய) இஸ்லாமியர்கள் உண்ணக்கூடாது (அது ஹலாலாக இருந்தாலும் கூட) என்று பிரசாரம் செய்து அதை கடைப்பிடிக்கவும் செய்யுங்களேன். அதுதான், பாரதீயர்களுக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும். உண்மையான மத நல்லிணக்கம் ஆகும். நீங்கள் சொல்லும் பாபரின் உயர்ந்த கொள்கைகளையும் மக்களிடம் வருடாவருடம் எடுத்துச் செல்லவும் ஏதுவாகும்.

  67. அரபு ஆதிக்கம்! அதற்கு மாரடிக்கும் அடிமைகள்.! அவர்களை வாழ்வாங்கு வாழ வைக்க அரசியல் பன்றிகள்.! இவைகளுக்கு மத்தியில் அப்பாவியாக ஹிந்து! .

  68. //அவர்களை வாழ்வாங்கு வாழ வைக்க அரசியல் பன்றிகள்.!//
    பன்றிகளை இழிவுபடுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  69. மன்னிக்கவும் armchaircritic அவர்களே !

    பன்றிகளை திரும்ப எடுத்து கொள்கிறேன்.
    வாதிகளையே போட்டுடுறேன்.
    தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி!!

  70. பாபரின் தளகர்த்தன் மீர் பாக்கி என்பவன்தான் தனது விசுவாசத்தைக் காட்டவும், ஹிந்துக்கள் மனதைப் புண்படுத்தவும் சிறிதும் சம்பந்தமின்றி அயோத்தியில் பாபர் பெயரால் மண்டபத்தைக் கட்டினான். பாபர் நினைவாக மண்டபம் கட்டுவதானால் தில்லியில் அல்லது போர் நிகழ்ந்த பானிபட்டில் அல்லவா எழுப்பியிருக்க வேண்டும்?

  71. புல் பூண்டு முளைத்து தொழுகையே நடைபெறாத பாழ்அடைந்த கட்டிடத்தை இடித்தது தவறுதான். ஆனால் அதற்க்காக ஒவ்வொருவருடமும் டிசம்பர் 6 ஆம் தேதி துக்கதினம் அனுசரிப்பது தேவைதானா ? இப்படிப்பட்ட பாழ்அடைந்த கட்டிடஇடிப்பிற்கு எதிர்பு துக்கதினம் என்றால் ஏன் இந்துக்களின் எழில் கொஞ்சம் கலைநயத்துடன் விளங்கிய எண்ணற்ற கோவில்களை இடித்து தள்ளியதற்க்கும் பல இடித்தஇடங்களில் மசூதி எழிப்பியதற்கும் எதிர்பு துக்கதினம் அனுகரிக்ககூடாது. அப்படி அனுசரிக்கவேண்டும் என்றால் வருடத்தின் 365 நாட்களையும் துக்கதினமாக அறிவிக்கவேண்டும். எனவே சிறந்த மத நல் இணக்கதிற்க்கு இந்த 6ஆம் தேதி துக்கதினம் அனுசரிப்பதை இஸ்லாமியர்கள் முதலில் கைவிடவேண்டும்

  72. அயோத்தி ஜன்மஸ்தானில் சம்பந்தப்பட்ட பழைய கட்டிடம் இடிக்கப்ப்ட்ட சமயத்தில் அங்கு குழந்தை ராமபிரானின் விக்ரகம் பிரதிஷ்டை செய்ய்ப்பட்டு தினசரி பூஜை வழிபாடு நடைபெற்று வந்தது. அக்கட்டிடம் ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது பல்லாண்டுகளாக இருந்து வந்த கோரிக்கை. அதற்கு முன்னோடியாக பிரதமர் ராஜீவ் காலத்தில் ராமபிரான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அறையின் பூட்டு திறந்துவிடப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே ஹிந்துக்கள் பொறுமை இழந்து தாமாகவே தங்கள் ராமபிரனை வழிபடும் இடம் பழைய கட்டிடத்தில் இருப்பதைவிடப் புதிய ஆலயத்தில் அமைய வேண்டும் என்பதற்காக அந்தப் பழைய கட்டிடத்தை இடித்து இடத்தை ச்மன் செய்தனர். இதில் தவறு ஏதும் இல்லை. எனவே திரு வேதம் கோபால் அவர்கள் அநத்ப் பாழடைந்த கட்டிடத்தை இடித்தது தவறுதான் என்று கருதத் தேவையில்லை.

  73. பாமியான் புத்தர் சிலைகள் கடல் மட்டத்திலிருந்து 8202 அடி உயரத்தில் இருந்த மலைகளில் காந்தாரக்கலை சார்ந்து செதுக்கி வடிக்கப்பட்ட புத்தர் சிலைகள். கி.மு ௫௫௦ க்கு முன் அமைக்கப்பட்டவை. இவை UNESCO என்றழைக்கப்படும் ஐ.நா. அமைப்பின் அதிகார பூர்வமான உலகத் தொன்மைச் சின்னங்கள். இவற்றின் மீது போர்க்காலத்தில் கூடக் குண்டு போடக்கூடாது என்பது ஐ.நா. வின் விதிகள்.

    தலிபான் இஸ்லாமியத தீவிரவாதிகள், மதவெறியர்கள் மார்ச் 2001 ல் இவற்றை டைனமைட் வைத்து, குண்டு போட்டுத் தகர்த்தனர்.

    https://tamilhindu.com/2010/03/should-hindus-eat-halal-or-jhatka-meat/#comments

    நெல்லை சிராஜ் போன்றோர், தவ்ஹித் முதலிய அமைப்புகள், பாரதீய இஸ்லாமியர்கள் இது பற்றி ஒவ்வொரு மார்ச் மாதமும் துக்க தினம் அனுசரிக்காத வரையில், அயோத்தி கட்டடத்தைப் பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது.

  74. // vedamgopal
    13 April 2010 at 10:51 am
    புல் பூண்டு முளைத்து தொழுகையே நடைபெறாத பாழ்அடைந்த கட்டிடத்தை இடித்தது தவறுதான். ஆனால் அதற்க்காக ஒவ்வொருவருடமும் டிசம்பர் 6 ஆம் தேதி துக்கதினம் அனுசரிப்பது தேவைதானா ? இப்படிப்பட்ட பாழ்அடைந்த கட்டிடஇடிப்பிற்கு எதிர்பு துக்கதினம் என்றால் ஏன் இந்துக்களின் எழில் கொஞ்சம் கலைநயத்துடன் விளங்கிய எண்ணற்ற கோவில்களை இடித்து தள்ளியதற்க்கும் பல இடித்தஇடங்களில் மசூதி எழிப்பியதற்கும் எதிர்பு துக்கதினம் அனுகரிக்ககூடாது. அப்படி அனுசரிக்கவேண்டும் என்றால் வருடத்தின் 365 நாட்களையும் துக்கதினமாக அறிவிக்கவேண்டும். எனவே சிறந்த மத நல் இணக்கதிற்க்கு இந்த 6ஆம் தேதி துக்கதினம் அனுசரிப்பதை இஸ்லாமியர்கள் முதலில் கைவிடவேண்டும் //

    தவறு என்று ஒத்து கொண்டதற்கு பரிகாரம் தேடுங்கள். கோவில்களை இடித்து முஸ்லிம்கள் மசூதி கட்டியதை நிருபித்தால் வருடத்தின் 365 நாட்களையும் உங்களுக்காக சட்டப்படி போராடி மசூதிகளை கோவில்களாக மாற்ற நாங்க தயார்…

    (edited and published)

  75. ஹிந்துக்களைஅவமனப்படுத்துவதற்காக பாபர் நினைவாக புனிதத் தலமான அயோத்தியில் கட்டப்பட்ட கட்டிடம்போல் ஆயிரம் பாழடைந்த முகமதிய கட்டிடங்கள் தில்லியிலும் உத்தரப் பிரதேசத்திலும் பராமரிக்க இயலாமல் சிறுகச் சிறுகத் தாமாகவே இடிந்து விழும் நிலையில் கிடக்கின்றன. அவற்றுள் பல தவறான செயல்களுக்கு உறைவிடமாகவும் இருந்து வருகின்றன.. தொல்பொருள் கட்டிடத் துறையால் சமாளிக்க முடியவில்லை என்பதோடு, வக்பு போர்டின் கீழ் வருவதாலும் ( சிறுபான்மை யினர் உரிமை!) அவை அப்படிக் கிடக்கின்றன. எனவே பாபர் கட்டிடம் இடிக்கப்பட்டது தொல்பொருள் இழப்பாகவோ வரலாற்று ஆதார அழிப்பாகவோ கருதப்படத் தேவையில்லை. மசூதி இடிப்பு, தொபொருள் அழிப்பு என்கிற பழிகள் யாவும் போலி மதச் சார்பின்மைக் கூட்டத்தால் முகமதியர் ஆத்ரவு வேண்டி செய்யப்படும் மாய்மாலங்கள் ஆகும். இதை நம்பி சில ஹிந்துக்களே ”பாபர் மசூதியை இடித்தது தவறுதான்” என்கின்றனர். இதில் மிகப் பெரிய வேடிக்கை, எல் கே அத்வானியேகூட அது இடிக்கப்பட்டது தமக்கு வருத்தம அளிப்பதாகக் கூறுவதுதான்! ஓர் அரசியல் கட்சி என்ற முறையில் முகமதியர் வாக்குகளும் தேவை என்பதால் இவ்வாறு அவர் கூறுகிறார் போலும். ஆனால் இருக்கிற ஹிந்து ஆதரவையும் இழக்கவே இது பயன்படும். பா ஜ க மீது ஹிந்துக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர் என்பதை அவர் இன்னமும்கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை.

  76. இரா. சத்தியபாமா
    13 April 2010 at 1:20 pm
    அயோத்தி ஜன்மஸ்தானில் சம்பந்தப்பட்ட பழைய கட்டிடம் இடிக்கப்ப்ட்ட சமயத்தில் அங்கு குழந்தை ராமபிரானின் விக்ரகம் பிரதிஷ்டை செய்ய்ப்பட்டு தினசரி பூஜை வழிபாடு நடைபெற்று வந்தது. அக்கட்டிடம் ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது பல்லாண்டுகளாக இருந்து வந்த கோரிக்கை. அதற்கு முன்னோடியாக பிரதமர் ராஜீவ் காலத்தில் ராமபிரான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அறையின் பூட்டு திறந்துவிடப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே ஹிந்துக்கள் பொறுமை இழந்து தாமாகவே தங்கள் ராமபிரனை வழிபடும் இடம் பழைய கட்டிடத்தில் இருப்பதைவிடப் புதிய ஆலயத்தில் அமைய வேண்டும் என்பதற்காக அந்தப் பழைய கட்டிடத்தை இடித்து இடத்தை ச்மன் செய்தனர். இதில் தவறு ஏதும் இல்லை. எனவே திரு வேதம் கோபால் அவர்கள் அநத்ப் பாழடைந்த கட்டிடத்தை இடித்தது தவறுதான் என்று கருதத் தேவையில்லை

    ஐயா! இரா. சத்தியபாமா,
    இன்றும் இந்தியாவில் பராமறிப்பில்லாமல் பாழடைந்த நிலையில் லட்சக் கணக்கில் இந்துக் கோயில்கள் காட்சியளிக்கின்றன. இடித்துவிலாமா?

  77. //இன்றும் இந்தியாவில் பராமறிப்பில்லாமல் பாழடைந்த நிலையில் லட்சக் கணக்கில் இந்துக் கோயில்கள் காட்சியளிக்கின்றன. இடித்துவிலாமா?//
    அந்தக் கோயில்கள் பிற மதத்தின் கோவில்களை இடித்துக் கட்டப்பட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளதா??!!

  78. கோவில் விவாதத்த்தை இன்னொரு கட்டுரையில் வைத்துக்கொள்ளலாம்.

    இன்று முக்கியமான பிரச்னை, ஹலால் கறி என்று விஷமுள்ள கறியை இந்துக்கள் சாப்பிடுவதை எப்படி தடுப்பது என்பதுதான்.

    சமீபத்தில் இந்தியாவில் பல இந்து குடும்பங்களில் கான்ஸர் அதிகரித்துள்ளது. இதற்கும் விஷமுள்ள ஹலால் கறியை சாப்பிடுவதற்கும் தொடர்பிருக்கலாம். இந்துக்களுக்கு பழக்கம் இல்லாத இப்படிப்பட்ட கறியை முன்பு பலர் வாரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தார்கள். தற்போது கையில் பணம் அதிகரித்திருப்பதால், வாரத்துக்கு பல முறை கறி சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், கான்ஸர் போன்றவை அதிகரித்துள்ளது என்று கருத இடம் இருக்கிறது. இந்த விஷ கறியை சாப்பிடுவதால், இந்துக்களிடம் கான்ஸர் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு குடல் புண் ஆகியவை அதிகரிக்கின்றன என்று கருதுகிறேன். இது பற்றிய ஆய்வை முஸ்லீம்களோ அல்லது வெளிநாட்டினரோ செய்யமாட்டார்கள். இந்துக்களே இது பற்றிய ஆய்வை நிகழ்த்த வேண்டும்.

  79. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்கும் செரிப்பு பாதை, குடல் புற்று நோய்களை ஆராய்ந்தால் இதற்கு விடை கிடைக்கிறது. இந்த கட்டுரைக்கு இந்த செய்திகள் இன்னும் வலு சேர்க்கின்றன.

    இந்தியாவில் 1999இல் செய்யப்பட்ட ஆய்வில் இந்தியாவில் மிக மிக குறைந்த அளவிலேயே வயிற்று கான்ஸர் இருப்பது தெரியவருகிறது. அதாவது 3.7 to 0.7/100,000 among men and 3 to 0.4/100,000 among women

    ஆனால், பாகிஸ்தானில் 15.04 per 100,000 in 2000-2004. அளவுக்கு கான்ஸர் இருக்கிறது. இது முக்கியமாக வடகிழக்கு மாநிலத்தில் மட்டுமே ஆய்வு செய்திருக்கிறார்கள்.

    உணவில் பிரச்னை என்பது தெளிவாக தெரிகிறது. 1999இல் இவ்வளவு அதிகமாக ஹலால் கறியை இந்தியாவில் சாப்பிட்டிருக்கமாட்டார்கள். ஆனால், பாகிஸ்தானிலோ எப்போதுமே ஹலால் கறி மட்டுமே கிடைக்கும். இதுவே அங்குள்ள அதிகப்படியான வயிற்று கேன்ஸருக்கு காரணமாக இருக்கும்.

    ஆனால், இப்போது (2010) இந்தியாவில் ஆராய்ச்சி செய்தால், வயிற்று கேன்ஸர் அதிகரித்திருக்கும். காரணம் ஹலால் விஷக்கறியை அதிகம் சாப்பிடுவதால், நிச்சயம் கேன்ஸர் அதிகரித்திருக்கும்.

    https://www.ncbi.nlm.nih.gov/pubmed/10407566

    Indian J Gastroenterol. 1999 Jul-Sep;18(3):118-21.

    Epidemiology of digestive tract cancers in India. V. Large and small bowel.
    Mohandas KM, Desai DC.

    Division of Digestive Diseases and Nutrition, Tata Memorial Hospital, Mumbai.

    Abstract
    The large bowel is a leading site for cancers in developed countries whereas small bowel cancers are rare worldwide. The incidence rates of both large and small bowel cancer are low in India, and rectal cancer is more common than colon cancer. The incidence rates of colon cancer in eight population registries vary from 3.7 to 0.7/100,000 among men and 3 to 0.4/100,000 among women. For rectal cancer the incidence rates range from 5.5 to 1.6/100,000 among men and 2.8 to 0/100,000 among women. One intriguing observation is the occurrence of rectal cancer in young Indians. Rural incidence rates for large bowel cancers in India are approximately half of urban rates. Based on data from eight registries, we estimate that, in the year 2001, the incidence of large bowel cancer in India will be 18,427 in men and 13,092 in women. Immigrant studies reveal an increase in incidence as compared to the rates in native counterparts. Reliable time trends for India are available only from the Bombay registry. Significant increase in the incidence of colon cancer has been reported for both men and women over two decades, but the rates of rectal cancer are steady. The low incidence of large bowel cancers in Indians can be attributed to high intake of starch and the presence of natural antioxidants such as curcumin in Indian cooking. The role of hereditary factors has been evaluated in a few studies. Some studies have reported the occurrence of both FAP and HNPCC in India. There are no Indian studies on large bowel cancer prevention. The prevalence of adenomas is rare in elderly Indians undergoing colonoscopy, even in those with large bowel cancers. Small bowel cancers are extremely rare in India and no analytical studies have been published. Hospital-based data suggest that lymphomas of small bowel are more common than carcinomas. In conclusion, the incidence of large and small bowel adenomas and cancers is low in Indians. Increase in the incidence of large bowel cancers in immigrants and urban Indians compared to rural populations supports a role for environmental risk factors including diet. High rates of rectal cancers in young Indians could suggest a different etiopathogenesis, which is neither inherited nor traditional diet-related.

    https://www.ncbi.nlm.nih.gov/pubmed/18290249

    J Chin Med Assoc. 2008 Feb;71(2):62-5.

    Cancer incidence in the districts of Dir (North West Frontier Province), Pakistan: a preliminary study.
    Zeb A, Rasool A, Nasreen S.

    Department of Biotechnology, University of Malakand, Chakdara, Pakistan. alamzeb01@yahoo.com

    Abstract
    BACKGROUND: Pakistan has a high incidence of cancer. The most severely affected province is the North West Frontier Province, which has districts of low socioeconomic status such as those in Dir. The purpose of this study was to analyze the cancer registry record of patients from the districts in Dir in order to obtain a net cancer incidence for use in proposing future health plans. METHODS: The medical records of 1,105 patients registered at the Institute of Radiotherapy and Nuclear Medicine in Peshawar were traced. Information regarding age, gender and affected sites were obtained. RESULTS: The incidence of cancer increased, with a mean incidence of 15.04 per 100,000 in 2000-2004. Of the 1,105 patients, 62% were male and 38% were female. The most affected female age groups were 41-50 and 51-60; while males in the age groups of 51-60 and 61-70 had the highest risk. The leading cancers were lymph/blood, and cancers of the digestive system, skin and breast. CONCLUSION: The increasing trend of cancer in Dir is alarming. Since this study was a preliminary investigation, it could provide a leading role in prevention, treatment and future planning regarding cancer in Pakistan.

    PMID: 18290249 [PubMed – indexed for MEDLINE]Free Article

  80. எமது கோயில் எதுவும் மக்காவிலோ மதீனாவிலோ பாழடைந்த நிலையில் இல்லை என்பதை உணர்வுடையன் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் சொந்த கலாசார உணர்வற்றவர் உணர வேண்டுகிறேன்.

  81. Sathiyabama, good response. God bless you. Do not expect any sensible answer from “Unnarvudian”.
    I really would love to see your article in Tamil hIndu.Hopefully very soon!

  82. திருமதி ரமா/ திரு ராமா அவர்களுக்கு மிக்க நன்றி (ஆங்கிலத்தில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டிருப்பதால் அதனை எவ்வாறு உச்சரிக்க வேண்டும், உங்களை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று தெரியவில்லை; மன்னிக்கவும்).

    ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துகளின் புனிதத் தலங்கள் தோறும் வேண்டு மென்றே மசூதிகளையும் தர்கா என்ற பெயரில் கல்லறைகளையும் கட்டிவைத்து ஹிந்துக்களின் மனதையும் சமய உணர்வையும் புண்படுத்து வதில் குரூர மகிழ்ச்சி காணும் பண்பாளர்கள்தான், முகமதியர்கள். இல்லாவிட்டால் நமது காசி ஷேத்திரத்தில் ஞானவாபி திருக்குளத்தினை ஒட்டி முன்பு இருந்த விஸ்வநாதர் ஆலயத்தினை இடித்துவிட்டு அதன் இடத்திலும் கண்ணபிரான் பிறந்த புண்ணியத் தலமான மதுராவில் அவன் அவதரித்த இடத்திலும் மசூதிகள் இருக்க வேண்டிய அவசியம் என்ன? இவ்விடங்கள் எந்த வகையில் முகமதியருக்கு முக்கியமானவை? இத்தலங்களை அவர்களும் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதுகிறார்களா? அதனால்தான் அங்கு நம் ஆலயப் பகுதியிலேயே மசூதிகளையும் கட்டிவைத்திருக்கிறார்களா? அவ்வளவு தூரம் போவானேன், காஞ்சியில் காமகோடி பீட மடத்திற்கு அருகிலேயே ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் யானை லாயமாக இருந்ததை மசூதியாக்கிவைத்திருக் கிறார்களே அதன் காரணம் என்ன?

    மறுமொழி எழுதுவது உண்மையில் உணர்வுடையான் போன்ற உணர்வற்றவர்களுக்கு அல்ல. நம்மிலேயே பலர் விழிப்புணர்வின்றி இவ்வாறான மனநிலையில் இருப்பதால் அவர்களுக்குப் பயன்படட்டுமே என்றுதான் எழுதுகிறேன். தமிழ் ஹிந்துவில் என் கட்டுரைகளை எதிர்பார்ப்பதாக எழுதி ஊக்குவித்துள்ளீர்கள். நன்றி. ஆனால் அந்த அளவுக்கு எனக்கு ஞானம் போதாது. அறிஞர் மலர்மன்னன அவர்களின் கட்டுரை களையும, மேடைப் பேச்சுகளையும் கேட்டு விழிப்புணர்வுபெற்று அவரை ஞானத் தந்தையாக ஏற்று, அவரை ”அப்பா” என்று உரிமையுடன் அழைக்கும் “மகன்” களும் “மகள்’களும் உலகம் முழுவதும் உள்ளனர். இவர்களில் நானும் ஒருத்தி என்பதே எனக்குள்ள தகுதி. மற்றபடி நமது சமயம் குறித்தோ நமது சமூகம் சார்ந்தோ விரிவான கட்டுரைகள் எழுதும் அளவிற்கு என்னிடம் சரக்கு இல்லை. அரவிந்தன் நீலகண்டன், அருணகிரி, ஜடாயு போன்றவர்களின் கட்டுரைகளும் எனது மறுமொழிகளுக்கு உரம் அளிப்பவை. இவர்கள் அனைவரும் முன்பே தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில்தான் எனது மறுமொழிகள் அமைகின்றன.

  83. சமீ என்பவர் கோயில்களை இடித்து மசூதிகள் கட்டப்பட்டதை நிரூபித்தால் வருடத்தில் 365 நாட்களும் ஹிந்துக்களுக்காகச் சட்டபடிப் போராடி அவற்றைக் கோயில்களாக மாற்ற நாங்கள் தயார் என்று இங்கு வாக்களிக்கிறார். எந்த அதிகாரத்தில் இவர் இவ்வாறு வாக்களிக்கிறார்? வெறும் வெற்று விவாத்த்திற்காகவா அல்லது முஸ்லிம்கள் சார்பில் இவ்வாறு வாகளிக்கும் தகுதி/உரிமை அவருக்கு உள்ளதா? தேசிய அளவில் அதிகாராம் உள்ள மவுல்வி சபையாவதுயாவ்து, முஸ்லிம்கள் சமூக/அரசியல் அமைப்பாவது இவ்வாறு வாக்களிக்க முன்வருமா? வராது. ஏனெனில் ஹிந்துக்களின் ஆயிரக காணக்கான கோயில்கள் இடிக்கப்ப்ட்டு அவற்றின் மீது மசூதிகள் கட்டப்பட்டமைக்குச் சான்றக ஏராளமான ஆவணங்கள் உள்ளன. சுல்தான்களின்/நவாபுகளின் அரசவைப் பதிவாளர்களே தமது அரசரின் பெருமையினையும் மதப் பற்றையும் உறுதி செய்ய கோயில்களை இடித்து மசூதிகள் கட்டிய சம்பவங்களைப் பதிவு செய்துள்ளனார். அனைத்து முஸ்லிம்கள் சார்பிலும் வாக்களிக்கும் அதிகாரம் உள்ள எவரேனும் சமியின் வாக்க்ளிப்பை உறுதி செய்ய முன் வந்தால் ஹிந்துக்களின் கோயில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்ட வரலாற்று உண்மையினை நிரூபிக்கத் தயார். எமது கணக்குப்படி பாரதம் முழுவதும் மூவாயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப் பட்டமைக்கு ஆதாரம் தர இயலும்.

  84. திரு ஆர்.கோபால் அவர்களே!
    என்னுடைய முதல் மறுமொழியில் ஹலால் கறி ஐரோப்பா முழுதும் சிறிது
    சிறிதாக KFC போன்ற ஹோட்டல்களில் வந்து கொண்டிருக்கின்றன
    என்று ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டியிருந்தேன்.

    அதன் தொடர்ச்சியாக இதில் ஒரு பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
    பிரிட்டனில் அந்த ஹோட்டலில் கொல்லப்படும் கோழிகள் போன்ற
    மிருகங்கள் குரானின் வசனத்தை கூறிக்கொண்டேதான் அறுக்கப்படுகின்றன
    என்று கூறினார்கள். இதை பிரிட்டனின் முஸ்லீம் சங்கம் மறுத்திருக்கிறது.

    ஒவ்வொரு விலங்கும் ஹலால் முறைப்படி அறுக்கும்போது தனித்தனியாக
    குரான் வசனம் படிக்கப்படாமல் ஒரு ஒலிபெருக்கியில் வசனம் பொதுவாக
    படிக்கப்படுகிறது. ஆகவே இந்த ஹோட்டலின் கறியை முஸ்லீம்கள்
    பகிஷ்கரிக்க வேண்டும் என்று கூறலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறது.

    ஹலால் கறியை எதிர்க்கும் வெள்ளை காரர்களும் இந்த ஹோட்டலை
    பகிஷ்கரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

    நாம் இதில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. முஸ்லீம்களுக்கு ஒரு
    சலுகையை கொடுத்தால் அவர்கள் அமைதி அடைவார்கள் என்பது ஒரு
    மாயைதான். மேலும் மேலும் அவர்கள் தங்களின் Agendaவிற்குதான்
    போராடுகிறார்கள்.
    https://www.foxnews.com/world/2010/04/12/uk-kfc-faces-boycott-threat-muslims-halal-trial/

  85. தஸ்லிமா நஸ்ஸ்ரீன் என்ற பங்களா தேஷ் எழுத்தாளர் தமது லஜ்ஜா என்ற நாவலில் பாபர் கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன்பே தமது நாட்டில் ஹிந்து கோயில்கள் பல முஸ்லிம்களால் இடிக்கப்பட்டுள்ள விவரத்திற்கு ஒரு பெரிய பட்டியலே கொடுத்துள்ளார். உண்மையில் பங்களா தேஷ் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள தேசமேயாகும். அதற்கென்று ஒரு தனி தேசியம் இல்லை. மேற்கு வங்கத்தில் பேசப்படும் வங்க மொழிதான் அங்கும் பேசவும் எழுதவும் படிக்கவும் படுகிறது. ஊர்ப் பெயர்கள் யாவும் ஹிந்து மூலத்திலிருந்து வநதவை. தேசிய கீதம் கூட தாகூர் பொதுவாக வங்கம் முழுமைக்குமாக எழுதிய “அமார் சோனார் பங்ளா” என்ற பாடல்தான். அதன் கலாசாரமும் ஹிந்து கலாசாரமேயாகும். எனினும் சுல்தான்கள் காலத்தில் நிகழ்ந்த வலுக்கட்டாய மத மாற்றத்தால் முஸ்லிம்கள் எண்ணிக்கை அங்கு அதிகமாகி ஹிந்துக்கள் சிறுபான்மை யினராகிவிட்ட காரணத்தால் அது தனி நாடாகி ஹிந்துக்களுக்கு எவ்விதப் பாதுகாப்போ உரிமையோ இல்லாத இடமாகிவிட்டது. ஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம்களின் எண்னிக்கை பெருகிவரும் வேகத்தைப் பார்த்தால் விரைவில் முழு ஹிந்துஸ்தானத்திற்கும் பங்களா தேஷின் கதிதான் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

  86. Sathiyabama I am still a” man”, thank you!!! Mr Malarmannan, the great soul, is doing such a wonderful job and I do my bit to help his cause.Please do not underestimate your indepth knowldge and your writing skills, which are very evident in your responses.As I wrote earlier, awaiting for your article in Tamil hindu soon.

  87. நன்றி ஆர். பாலாஜி

    குரான் வசனம் ஓதிய ஒரு கறியை நாம் சாப்பிடுவதே தவறு. அதனால்தான் அதனை குத்தா கறி என்று சீக்கியர்கள் சொல்கிறார்கள். அதனை சாப்பிடுவது பெரும் பாவங்களில் ஒன்றாக சீக்கிய குரு கோவிந்த சிங்கர் கூறியுள்ளார்.

    ஹலால் விஷக்கறியை இந்துக்கள் சாப்பிடுவதை எதிர்த்து ஒரு பொதுஜன இயக்கம் தொடங்கவேண்டிய தேவை உள்ளது.

    நன்றி

  88. திரு நெல்லை சிராஜ்,

    //இறைவன் திருமறையில்..
    கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம். அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்! அல்குர்ஆன் (23:21)//

    என்ன சொல்ல வரீங்க? ஆடு மற்றும் மாடுகளின் பால்-யை குடிகிறிர்கள், பின்னர் அதையே உண்ணுகிறிர்களே, பாவம் இல்லையா என்று உங்கள் இறைவன் கேட்கிறாரா என்ன?

    செம்மறி ஆடுகள் ஏப்பம் விட்டால் பூமி வெப்பம் ஆவது தவிர்க்க படுகிறது என்பது உண்மை ஆனால் பின் அவற்றை அதிகமாக கொல்வதை விட அதிகமாக வளர்ப்பது தானே முறை.!!!! .

  89. r.gopal.aya.ningkal.romaroma.nallavar.hindu.nanbarkalai.nallavarkalakave.vedunga.sir…….

  90. அட கனவான்களே … ஒரு கட்டுரையை எழுதும் பொது ஒன்றுக்கு பல தடவை யோசித்து எழுதுங்கள்… மதத்தின் மீது இருக்கும் பற்றின் காரணமாக பொய் பிரசாரம் செய்து தவறு செய்ய கூடாது…. மருத்துவ முறைகள் மூலம் ஆராய்ந்து மக்களுக்கு தெரிய படுத்தவும்…. பாவம் செய்யும்முன் இறைவனை நினைத்து அஞ்சிகொள்ளுங்கள்…..

  91. இந்த ஹலால் கறியை தின்னும் அப்பாவி தமிழர்கள் செய்யும் மேலும் ஒரு அப்பாவித்தனம் நெஞ்சை உலுக்குகிறது . தங்கள் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் முன்பெல்லாம் கோவிலுக்கு அழைத்துச்சென்று பூசாரி மூலம் வேப்பிலை அடிக்கச் செய்வார்கள் . வேப்பில்லை காற்று உடலுக்கு நல்லது என்பது அறிவியல் பூர்வமான உண்மை . ஆனால் யாரோ கிளப்பிவிட்ட பொய்யை நம்பி பலர் மசூதி வாசலில் நிற்கிறார்கள் . மசூதியில் ஓதுபவன் (பல் கூட துலக்குவானா என்பது கடவுளுக்கே வெளிச்சம்) தன நாத்தம் புடித்த வாயிலிருந்து குழந்தை முகத்தருகே ஊதுவான் . பேய்களே ஓடிவிடும் அந்த நாத்ததிற்க்கு முன் குழந்தைகள் கதி என்ன ? மக்களே சிந்தித்து செயல் படுங்கள் .

  92. ஒரு கட்டுரையை பிரசுரிக்கும் போது எதார்த்தநிலை, விஞ்ஞானம் குறிப்பிடுவது என்ன? என்பதை அறிந்த பின் பிரசுரித்தால் மிக்க நன்று. ஹலால் உணவு முறையின் உண்மை நிலை என்ன?

    ஒரு மிருகத்தை அறுக்கும் போது இரத்தம் வெளியேறுகிறது. இந்த எதார்த்தத்தை சராசரியாக நாம் சொல்லி விடலாம்.அது ஜட்கா முறை என்றாலும் சரியே, ஸபிஹா முறை என்றாலும் சரியே. அப்படி இரத்தம் வெளியேறும் போது அதன் உடலின் செல்களில் விஷங்கள் (toxins) உருவாக்கப் படுகின்றன. அதுவும், ஜட்கா முறை என்றாலும் சரியே, ஸபிஹா முறை என்றாலும் சரியே.

    கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படும். (உங்கள் ஆய்வு குறிப்பிடுவதும் அப்படியே) இப்படி செய்வதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை. இதனால்தான் இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடாமல் இருக்கின்றது.

    அதே நேரம் நீங்கள் குறிப்பிட்ட ஜட்கா முறையில் அறுக்கும் போது இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதில்லை. இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப் படாமல் விடும்போது இரத்தம் உடலில் விஷங்களுடன்(toxins) தங்கி விடுகிறது.(இந்த சராசரி Logic கூட புரியாமலா ஸபிஹா முறையை விட ஜட்கா முறை சரி என்று குறிப்பிடுகிறீர்கள் ??????) ஜட்கா முறையை விட இஸ்லாமிய முறையில் பிராணிகளை அறுக்கும் போதே உடலில் விஷம் தங்காது என்பது தெள்ளத் தெளிவு.

    உங்கள் கட்டுரையில் :-ஐரோப்பாவில் ஒரு மிருகத்தை Stun செய்து அதாவது அதன் மூளையை செயல்படாமல் ஆக்கிய பின்னால் அந்த மிருகங்கள் கொல்லப்படுகின்றன. இந்த மிருகங்கள் வலி உணர்வதில்லை. என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இங்கு நான் கேட்கும் கேள்வி என்னவென்றால், இப்படி stun செய்யாது சராசரி ஜட்கா முறையில் அறுக்கப்பட்டு சமைக்கப் பட்டு பரிமாறப்படும் முனியாண்டி விலாஸ் போன்ற இந்து மிலிட்டரி உணவு கடைகளின் நிலை என்ன????????? அவர்கள் stun முறையை விட வேறு ஏதாவது புது முறைகள் கையாள்கிறார்களா என்ன?????

    மேலும் உங்கள் கட்டுரையில் :- இஸ்லாமிய ஹலால் முறையில் ஆடுகளின் கழுத்து ஒரு கீறல் கீறப்பட்டு அதன் ரத்தம் வடிக்கப்படுகிறது. இந்த முறையில் ஆடு மெல்ல மெல்ல துடிதுடித்து சாகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.ஆனால் விஞ்ஞான ஆய்வின்படி,

    இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

    இஸ்லாமிய முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

    இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் – இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் – துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல. என்ற விஞ்ஞான உண்மை உங்களது ஒரு பக்க ஆய்வில் தெரியாமல் போய் விட்டது.

    இறுதியாக, எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (திருக்குறள் – 355)

    மேலதிக விளக்கங்களுக்கு
    https://drzakirnayek.blogspot.com/2007_10_01_archive.html

    https://www.youtube.com/watch?v=hHblgiBMcHo

  93. சபரி
    உயிர் மெல்ல மெல்ல போவதால் விஷம் நிறைய உருவாகிறது. அதனால், உடலெங்கும் விஷம் தங்குகிறது. ஓரளவு வெளியேறினாலும் சதைகளில் தங்குகிறது என்று கட்டுரை சொல்கிறது.

    ஜட்காவில் உடனடியாக உயிர் போவதால், விஷம் அதிகமாக உருவாக வாய்ப்பில்லை. ஆகவே ரத்தமும் சதையும் விஷம் இன்றி இருக்கின்றன.

    இஸ்லாமிய முறைப்படி அறுப்பதால், விஷம் அதிகமாக தங்குகிறது. அதனை உண்ணும் பாகிஸ்தானில் கான்சர் அதிகம். இந்தியாவில் மாமிசம் சாப்பிடுபவர்கள் மத்தியில் கான்சர் கம்மி.

    எல்லா ஆதாரங்களும் கட்டுரையிலேயே இருக்கிறது. படித்து பாருங்கள்.

  94. கட்டுரை ஆசிரியருக்கு,

    இப்போது பெரும்பாலான நகரங்களில் ஜட்கா கறி கிடைப்பதில்லை. எங்கும் ஹலால் மயம்.

    நம்புவீர்களா? கொல்கத்தா மாநகரில் ஒரே ஒரு ஜட்கா கறிக் கடைதான் இருக்கிறது.

    நாடு முழுவதும் ஜட்கா கறி விற்பவர்களை அடித்து விரட்டுகிறார்கள் அமைதி விரும்பும் இசுலாமியர்கள்.

    மட்டுமல்ல. பன்றிக் கறிக் கடைகளும் வைக்கவிடாமல் பிரச்சினைகள் எழுப்புகின்றனர்.

    அதாவது, இந்துக்களின் தொழில்களை அழித்து வருகின்றனர். ஆனால், கேட்க நாதியில்லை.

  95. கறியே சாப்பிடக்கொடாது என்ற தர்மம் உள்ளவனுக்கு குட்கா கறியாக இருந்தால் என்ன? அல்லது ஓட்கா கரியாக இருதால் என்ன?

  96. இஸ்லாத்தை உங்களால் முடிந்தவரை எதிர்த்து கொண்டே இருங்கள் அப்பொழுதுதான் இந்த முஸ்லிம்களுக்கு அறிவு வந்து மீண்டும் எழுச்சி பெற்று இந்த முழு உலகதையுமே வழிநடத்தி செல்வார்கள்……… இப்படி எந்த எதிர்புமே இல்லாதிருந்தால் இஸ்லாத்தில் என்ன இருக்கிறது என்பதை அவர்களே மறந்துவிடுவார்கள்… இது போன்ற உங்களது முட்டாள்தனமான பாசிச சிந்தனைகளை மக்களிடம் நீங்கள் பரப்பினால்தான் அவர்கள் இஸ்லாமை ஆராய்ந்து பதில் சொல்லி 54 முஸ்லிம் நாடுகளையும் ஒருங்கினைத்து இஸ்லாமிய பேரரசை கொண்டு வந்து 800௦௦ ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட சமுதாயம் மீண்டும் இந்தியாவையும் ஆள தொடங்கும்……..

  97. எனது ஹிந்து நண்பர்களுக்கு !
    இஸ்லாம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் உண்டான மதம் இல்லை. இந்த உலகத்தை அல்லா படைக்கிறான் , பிறகு அவர்களிளிளிருந்து சமுதாயத்தை உருவாக்குகிறான் , மக்களுக்கு அவனைப்பற்றி தெரிவிக்க அந்த மக்களிலில் இருந்தே ஒருவரை தனது தூதராக தேர்வு செய்கிறான் .இந்தியாவிற்கும் முன்னர் தூதர்கள் வந்திருக்கலாம் .. அனால் அது எத்தனை ஆயிரம் ஆண்டுகள்ளுக்கு முன்னர் என்பதை யாரும் அறியவில்லை . பிறகு அடுத்த தூதர் வந்த பிறகு முன்னர் உள்ள தூதர்களை நான் பின்பற்ற கூடாது அதாவது நமக்கு வந்த தூதரை பின்பற்ற வேண்டும் முன்னர் வந்த தூதரை நம்ப வேண்டும். இப்படி இருக்க உலகில் ஒரு முழுமை பெறாத கடவுள் கொள்கையை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள் உங்களை இந்த மாதிரியான வெப்சைட்கள் வழி கெடுகின்றன . உண்மையிலேயே குரானை ஒரு முறை முழுவதும் படித்து பாருங்கள் பைபிளையும் ஒரு முறை படுத்து பாருங்கள் உங்கள் வேதங்களையும் ( எனக்கு எது உங்கள் வேடம் என்று கண்டு பிடிக்க முடியவில்லை ) படித்து பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள் . உண்மையிலேயே அல்லா என்று ஒருவன் இருக்கிறான் நீங்கள் மரணம் அடைந்த பிறகு உங்களை எழுப்பி நீங்கள் செய்து கொண்டு இருந்தது பேசியது அனைத்தையும் அவன் விசாரிக்காமல் இருபான் என்று நீன்கள் எண்ணி விடாதீர்கள் ..

  98. @ S.Muhammad Ibrahim,

    ஆமாம் தலைவா எங்கள் வேதம் எது என்று எங்களக்கே தெரியாது,சாகிர் நாய்’கும்,அவரு சிஷ்ய புள்ளைங்களும் தான் வந்து எங்களக்கு சொல்லி தரனும்…
    பிரஸ்தரணயாத்ரம்…அவற்றில் அடங்கி உள்ளது பிரம்மசாச்திரம்,உபநிடதங்கள்,பகவத் கீதை..
    தங்களிடம் ஒரு கேள்வி…தாங்கள் ஒரு பொது அறிவு புத்தகத்தை வாசித்து விட்டு எனக்குதான் எல்லாம் தெரியும்,எனக்கு பிக் பங் தெரியும், Heisenberg theory தெரியும்…ங்கே ங்கே ங்கே..னு திரிவின்களா??இல்லாட்டி பல துறை சார் பல நூல்கள் கற்று அவற்றில் அறிவை பெறுவீர்களா?இந்து மதம் என்பது யாராலும் உருவாக்க பட்ட மதம் அன்று,சுயம்புவாக உருவாகிய மதமே…இந்து மதம் போல பிரபஞ்ச இயக்கத்தை நூல்களிலும்,வடிவங்களிலும் வெளிபடுத்திய மதம் ஏதும் உண்டெனில் கூறுங்கள்???? குர்-ஆண் கூறும் நல்ல பல விடயங்கள் கீழ் கண்ட ப்ளாக் இல் குவிக்கப்பட்டு கபிர்களால் அள்ளி எடுக்க பட்டு வருகிறது..!!௧
    https://pagadu.blogspot.com/2011/09/blog-post_16.html
    https://tamilan1001.blogspot.com/

    தூதர் ஏன் அரேபியால பிறக்கணும்?? செல்வ செழிப்புடன் வளர்ந்து பின் அத்தனையும் சொத்துக்களை கடவுளின் அனுமதியுடன்(!!!!) எதுக்கு கள்ள தனமா சொத்துக்களை அபகரிக்க போர் தொடுக்கணும்??எதுக்கு 6 வயது சிறுமி ஆயிஷாவை திருமணம் பண்ணி 10 வயதில கர்ப்பவதி ஆக்கணும்?? தூதர் இறந்த பின் அவரின் மனைவிகளை யாரும் பார்க்கவோ,திருமணமோ செய்ய கூடாதுன்னு இறைவன் ஏன் கூறினார் ????போரில் பிடிக்கப்பட்ட பெண்களை கற்பழிப்பு செய்த பின்னர் ஏன் அடிமை சந்தையில் விற்றார்???அதிக பட்சம் 4 மனைவிகளை வைத்து கொள்ளலாம் என்பது மும்மின்கலக்கு இறைவன் இட்ட கட்டளை,அனால் தூதர் மட்டும் ஏன் 10 மனைவிகள்(குர்-ஆண் படி!!!) வச்சு கிட்டாரு???

    பதில சொல்லுங்க …நான் இஸ்லாம உண்மையான மார்க்கம் என்பதை ஏற்று கொள்வது பற்றி யோசிக்கிறேன்

  99. @Bava,

    800 ஆண்டுகள் ஆண்டு, அவர்கள் செய்த கற்பழிப்பாலும், வன்முறையாலும் தான் நீங்கள் இன்று முஸ்லிமாக , யோசிக்கக்கூட தெரியாத நிலையில் உள்ளீர்கள்.

    @S.MUHAMED IBRAHIM,

    எதை முழுமை என்று சொல்கிறீர்கள். கொலை,கொள்ளை , கற்பழிப்பு இது எல்லாமும் இஸ்லாமில் இருப்பதையா? , எங்களுக்கு இது எல்லாம் தேவையில்லை. நீங்கள் குரானைப்படித்ததில்லை என்றூ நினைக்கிறேன்..

  100. அன்பு சகோ இப்ராஹீம்

    காபிரான என் கண்களை திறந்து உண்மையான மார்கத்தை கண்டறிய உதவிய நீங்கள் தான் சகோ எனது இறுதி தூதர். இறுதி தூதர் என்றால் சில கௌரவங்கள் இருக்க வேண்டுமே, என்ன செய்வது என்று வருந்த வேண்டாம், நீங்களும் முயற்சி செய்து நபி வழியில் நடக்கலாம். நீங்கள் நபி வழி நடந்து நாளை செய்ய கூடிய காரியங்களின் ஒரு சிறு பட்டியல் இது இங்கே இது அச்சு அசல் குரானிலிருந்து, ஹடீசுகளிளிருந்தும் எடுக்கப்பட்டவை.

    ஒரு இருபத்தி ரெண்டு மனைவிகளுள் ஒரு ஏழு வயது மனைவி, கொடூரமான எண்ணங்கள், மற்ற மத மனிதர்கள் மேல் கொலைவெறி, போரில் பிடிபட்ட பெண்களுள் மிக அழகிய ஒருவளை கப்சா செய்யும் முறை, சொந்த மருமகளை எசகு பிசகாக பார்தபைத்யால் கண்ணாலம் கட்டும் நடத்தை, . உலகம் தட்டை, சூரியன் பூமியை சுத்துன்னு சரடு விடும் வாய் ஜாலம், சூரியன் தினமும் அல்லாவுக்கு சுஜுது செய்ய போகுதுன்னு கப்சா விடும் திறமை, சைத்தான் காதில் உச்சா போய்ட்டான் என்று அலறவைக்கும் மிரட்டல்கள். போரில் வென்றவ்றுள் ஐந்தில் ஒரு பங்கை அலேக்காக அமுக்கும் ஐடியா, போரில் கணவனை கண் முன்னே கொடுராமாக கொன்று குவித்து விட்டு அந்த இரவே சபியாவை அள்ளிக்கொள்ளும் கொடூர மனம், கேட்டால் அது அல்ல நிச்சயித்த திருமணம் என்று சொல்லும் பித்தலாட்டம்.

    இதை எல்லாம் சரி என்று ஒப்புவிக்க ஒரு டம்மி பீஸ் கடவுள் அல்லா

    அட உங்க பேரு கூட முஹம்மத் தான். லாஹிலாஹா இல்லால்லா நீங்கள் தான் எனக்கினி ரசூல் புல்லா

    வாருங்கள் நாம் இருவரும் இஸ்லாம் எனும் மார்கத்தை வளர்ப்போம். இந்த காபிர்களின் முதுகெலும்பை உடைப்போம். இந்தியாவை சவுதி அராபியாவுடன் இணைப்போம்.

  101. அன்புள்ள சகோதரர் இப்ராகிம் அவர்களே
    நீங்கள் சொல்ல நினைப்பது சரியே! உலகத்தை அல்லா படைத்தார், நாங்கள் அவரை பிரம்மா என்று அழைக்கிறோம். அவருக்கு படைக்க மட்டுமே தெரியும். காக்கவோ அழிக்கவோ தெரியாது. பைபிளில் கூறியிருப்பது அந்த படைத்தல் கடவுளின் மகன் ஆவார். அதாவது கிருத்துவர்கள் இயேசு என்பர், நாங்களோ பிரம்மாவின் மகன் நாரதர் என்று அழைக்கிறோம். வேண்டுமானால் உங்கள் தூதுவரை எங்கள் எமன் என்று compare செய்து கொள்ளலாம். காரணம் உங்கள் செயல்பாடுகள் மரணம் சம்பந்தமாகவே இருப்பதால். இப்படி பல விதங்களில் comparative study செய்து கொள்ளலாம்.

  102. கடவுளின் சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு உண்டாகட்டும்….

    நண்பர்களுக்கு….ஒரு விசயத்தை சொல்லும்/பரப்பும் போதும்…கடவுளை அஞ்சிக்கொள்ளுங்கள்…..நீங்கள் சொல்லும் விசயத்தால் ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும் நீங்களே முழு பொறுப்பாளியாவீர்கள்…..

    Science of meat
    Kounteya Sinha, Amit Bhattacharya & Anuradha Varma, TNN Jan 29, 2012, 12.24PM IST
    Tags:
    United Kingdom|theory|Subtle|Meat

    (Science of meat (Corbis Images))
    Halal meat more tender, less cruel, say experts. Even as the UK Parliament refuses to serve halal meat at restaurants on its premises, fresh scientific opinion suggests halal is the better option. TOI investigates.

    For Mohammad Salim, owner of a tiny meat shop in the Gurdwara Road Market of New Delhi’s Kotla Mubarakpur area, business is just as it’s been for the last 15 years since he moved to the capital from Agra. There seem to be more takers for mutton that Sunday morning than for the fresh batch of Rohu that’s just arrived. The practising Muslim packs half kilo curry pieces of a leg of mutton in polythene. For this seller of halal meat, the recent debate over the UK parliament rejecting demands to serve halal meat in its restaurants, on grounds of cruelty, is pointless.

    “We read a kalma (Quranic verse) before the meat is cut. Lekin, marta toh murga hi hai (Finally, it’s the animal that pays the price). It’s just a question of using different methods of slaughter,” he shrugs.

    Early this month, British newspapers had reported that Muslim MPs and peers were told they wouldn’t be served meat slaughtered in line with Islamic tradition – slitting the animal’s throat without first stunning it – since it was offensive to their non-Muslim colleagues.

    Even as voices of dissent grow louder among furious UK parliamentarians, experts are speaking in favour of halal meat. According to fresh scientific opinion, halal – the method of slaughter that kills the animal with a deep cut across the neck – produces meat that’s more tender, stays fresh longer, and is less painful to the animal than say, the jhatka method that involves severing its head in one powerful blow.

    Dr V K Modi, head of department of meat technology at the Central Food Technology Research Institute in Mysore, says the halal method is effective in draining out most of the blood from a slaughtered animal, which is vital if its meat is to be soft. “In jhatka, chances of blood clotting are higher. This could spoil the meat if it’s kept uncooked for a few days. It could also make the meat tougher to chew.”

    Halal has been the traditional method of killing animals for meat. It’s only in the early 20th century that Sikhs of Punjab propagated jhatka as a ‘less painful way’ of killing the animal, although it would appear that the alternative way of slaughter was propagated more to differentiate it from the ‘Muslim way’ of killing the animal.

    Halal involves a swipe with a sharp blade across the animal’s neck, severing the windpipe, jugular vein and carotid artery. Contrary to popular belief, Dr Modi, who trains butchers in the art of slaughtering at the institute’s abattoir, says evidence suggests that animals slaughtered through jhatka suffer more trauma than those killed by halal. “The less an animal struggles, the better the meat. When animals face trauma, the glycogen content in their muscles is activated, leaving the meat tough. Stored glycogen is the agent that leads to rigor mortis (or, stiffening of muscles on death),” Dr Modi says.

    For the meat to be tender and juicy, the pH count in the animal should ideally be around 5.4 after slaughter. “Struggle leads to the utilisation of stored energy, making the pH count rise to as high as 7,” In halal the struggle is lesser by at least 20 per cent, claims a Delhibased nutrition expert.

    Dr Modi has support from Dr Karuna Chaturvedi, consultant nutritionist at Apollo Hospitals in New Delhi. “Halal is considered healthier because after slaughter, blood is drained from the animal’s arteries, ejecting most toxins because the heart continues to pump for a few seconds after slaughter. In jhatka, not all the blood is drained, leaving the meat tougher and drier.”

    Tracing the origin of jhatka, Jodh Singh, editor-in-chief of the Encyclopedia of Sikhism, says it was at the beginning of the last century that Sikh scholars compiled the faith’s Rehat Maryada, or code of conduct. “It clearly prohibits slaughtering animals through halal,” he notes. Chapter 13 of Section 6 of the Maryada mentions four taboos, including “eating the meat of an animal slaughtered the Muslim way”.

    Food is a vital marker of identity, believes Sikh scholar, chair and Crawford Family professor, department of religious studies at Colby College in Maine, Prof Nikky-Guninder Kaur Singh. “Halal is prohibited in Sikhism to avoid both, the pain caused to the animal and the ritualistic dimension practised by neighbouring ‘others’.

    Ironically, in most Indian abattoirs, animals are first stunned with 70 volts of electricity in the brain, leaving them unconscious. “The animal’s state of unconsciousness reduces its struggle,” says Dr Modi. However, Islamic scholar Maulana Wahiuddin Khan argues that the Islamic code of slaughter doesn’t approve of stunning. “According to Islam, the purpose of slaughtering is to release all blood from the animal’s body, leaving no room for growth of micro-organisms. When stunned, only a part of its blood is released.”

  103. kargil jay

    திரு நெல்லை சிராஜ்,
    கசாப்புக் கடை வைத்திருக்கும் முகமதியர் ஹலால் நல்லது, ஹலால் கறி சாப்பிட்டால் நோய்கள் ஏற்படாது என்று கூறுகிறீர்களே, அதை ஆய்வு மூலம் நீங்கள் நிரூபிக்கலாமே?

    சகோதரர் kargil jay

    Science of meat

    Dr V K Modi, head of department of meat technology at the Central Food Technology Research Institute in Mysore, says the halal method is effective in draining out most of the blood from a slaughtered animal, which is vital if its meat is to be soft. “In jhatka, chances of blood clotting are higher. This could spoil the meat if it’s kept uncooked for a few days. It could also make the meat tougher to chew.”

    Halal has been the traditional method of killing animals for meat. It’s only in the early 20th century that Sikhs of Punjab propagated jhatka as a ‘less painful way’ of killing the animal, although it would appear that the alternative way of slaughter was propagated more to differentiate it from the ‘Muslim way’ of killing the animal.

    Halal involves a swipe with a sharp blade across the animal’s neck, severing the windpipe, jugular vein and carotid artery. Contrary to popular belief, Dr Modi, who trains butchers in the art of slaughtering at the institute’s abattoir, says evidence suggests that animals slaughtered through jhatka suffer more trauma than those killed by halal. “The less an animal struggles, the better the meat. When animals face trauma, the glycogen content in their muscles is activated, leaving the meat tough. Stored glycogen is the agent that leads to rigor mortis (or, stiffening of muscles on death),” Dr Modi says.

    For the meat to be tender and juicy, the pH count in the animal should ideally be around 5.4 after slaughter. “Struggle leads to the utilisation of stored energy, making the pH count rise to as high as 7,” In halal the struggle is lesser by at least 20 per cent, claims a Delhibased nutrition expert.

    Dr Modi has support from Dr Karuna Chaturvedi, consultant nutritionist at Apollo Hospitals in New Delhi. “Halal is considered healthier because after slaughter, blood is drained from the animal’s arteries, ejecting most toxins because the heart continues to pump for a few seconds after slaughter. In jhatka, not all the blood is drained, leaving the meat tougher and drier.”

    Tracing the origin of jhatka, Jodh Singh, editor-in-chief of the Encyclopedia of Sikhism, says it was at the beginning of the last century that Sikh scholars compiled the faith’s Rehat Maryada, or code of conduct. “It clearly prohibits slaughtering animals through halal,” he notes. Chapter 13 of Section 6 of the Maryada mentions four taboos, including “eating the meat of an animal slaughtered the Muslim way”.

    Food is a vital marker of identity, believes Sikh scholar, chair and Crawford Family professor, department of religious studies at Colby College in Maine, Prof Nikky-Guninder Kaur Singh. “Halal is prohibited in Sikhism to avoid both, the pain caused to the animal and the ritualistic dimension practised by neighbouring ‘others’.

    Ironically, in most Indian abattoirs, animals are first stunned with 70 volts of electricity in the brain, leaving them unconscious. “The animal’s state of unconsciousness reduces its struggle,” says Dr Modi. However, Islamic scholar Maulana Wahiuddin Khan argues that the Islamic code of slaughter doesn’t approve of stunning. “According to Islam, the purpose of slaughtering is to release all blood from the animal’s body, leaving no room for growth of micro-organisms. When stunned, only a part of its blood is released.”

    Note: Both are non-muslims. (Dr Modi has support from Dr Karuna Chaturvedi,)

    Source:

    https://articles.timesofindia.indiatimes.com/2012-01-29/food-reviews/30675282_1_halal-meat-slaughter-animal

    https://timesofindia.indiatimes.com/life-style/food/food-reviews/Science-of-meat/articleshow/11672654.cms

  104. புலால் உண்பதே மிகவும் பாவகரமான ஒரு செயல் தான், கொள்வதில் உள்ள வேறுபாடுகளை பற்றி பேசுவது அர்த்தமற்றது. கடல் போன்று ஆழ்ந்து விரிந்து இருக்கும் இந்திய சமயங்களிலும் புலால் உண்ணுதல் போன்ற சில கீழான விஷயங்கள் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

  105. அட அட என்னமா புட்டு புட்டு வைக்கிறாங்க இஸ்லாமியர்கள்?? இந்த பேரண்டதையே காக்க வந்த மதம் என்று நினைத்து கொண்டார்களோ?? தான் துன்பப்பட்டாலும் மற்ற உயிர்கள் வதைப்படகூடது என்ற உயரிய கொள்கைகளை தனது ஜீவநாடியாக கொண்டிருக்கும் ஹிந்துத்வம் பற்றி ஏன் இத்தனை துவேஷம்?? உலகமெங்கும் இஸ்லாம் என்று கேட்டவுடனே அல்லது நினைத்ததுமே நினைவுக்கு வருவது தீவிர வாதமும், பின்லேடனும் தான்.. அப்படிப்பட்ட மகத்துவமான மதத்திலிருந்து கொண்டு அஹிம்சா முறையில் உயிர்கொலை பண்ணுவதாக எண்ணிக்கொண்டு இங்கே ஹலால் பற்றி வதம்(வாதம் ) செய்கிறார்களே கொடுமை டா சாமி 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *