மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது

மூலம்: நவோமி ப்ரெட்டிமேன் (Naomi Prettyman)
தமிழில்: ஜடாயு

naomi_prettyman_ex_christian1நான் மிசௌரி மாநிலத்தின் கான்சாஸ் சிடி நகரில் (யு.எஸ்) வசீகரம் மிகுந்த எனது கிறிஸ்தவப் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டேன். கிறிஸ்தவ இல்லங்களில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் போன்றே ஐந்து வயதாகும்போது நானும் “ரட்சிக்கப்” பட்டேன். எனக்கும், என் கூடப் பிறந்த ஏழு சகோதர, சகோதரிகளுக்கும் எனது  அம்மாவே வீட்டுப் பள்ளிக் கூடத்தில் கல்வி கற்றுத் தந்தார். எனது நண்பர்களாக இருந்த எங்கள் சர்ச்சைச் சேர்ந்த எல்லாக் குழந்தைகளும் இதே வகையில் தான் வளர்க்கப் பட்டார்கள்.

நாங்கள் கான்சாஸ் நகரில் இருந்த எந்த உட்பிரிவையும் சாராத (non-denominational) கிறிஸ்தவ சர்ச்சுக்குச் சென்றோம். அங்கு அதிதீவிர கிறிஸ்தவத்தைக் கடைப் பிடித்தோம். மக்கள் ஆடுவதும், ஆவேசத்துடன் கூச்சலிடுவதும், வலிப்பு வந்தவர்கள் போன்று நடப்பதுமாக, பிரார்த்தனை நேரங்கள் பெரும்பாலும் வெறியாட்டங்களாகவே இருந்தன. “ஜீசஸ் கேம்ப்” என்ற ஆவணப் படம் எங்களுக்கு அளிக்கப் பட்ட அந்த போதனைகளை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகிறது. அப்போதே நாங்கள் “ஏசுவின் போர்வீரர்களாக” இருந்தோம். சர்ச் அதன் உறுப்பினர்களை மிஷன் குழுக்களாக பல இடங்களுக்கு அனுப்பியது, குறிப்பாக மெக்சிகோவுக்கு.

இதற்கெல்லாம் நான் உடன்பட்டேன். அந்தக் காலத்தில் எனது வாழ்க்கை லட்சியம் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது, கர்த்தருக்கு ஊழியம் செய்வது என்பதாக இருந்தது. ஒரு சராசரி பதின்மவயது ஜீசஸ் பைத்தியமாக (“Jesus Freak”) இருந்தேன்.

ஜீசஸ் கேம்ப் ஆவணப் படம் – முன்னோட்டம்

Jesus Camp is a 2006 documentary directed by Rachel Grady and Heidi Ewing about a pentecostal summer camp for children who spend their summers learning and practicing their “prophetic gifts” and being taught that they can “take back America for Christ.”

எனக்கு பதினான்கு வயது இருக்கும்போது, இந்தியாவில் புதுதில்லிக்கு மிஷன் குழுவாக செல்ல தகுந்த ஊழியர்களைத் தேடிக் கொண்டிருப்பதாக சர்ச்சில் அறிவித்தார்கள். நான் கண்டிப்பாகப் போயே ஆக வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எனது உயிர் நண்பனும் அந்த மிஷன் குழுவில் செல்வதாக இருந்தான். நான் அவனை விட்டுப் பிரிந்திருக்க விரும்பவில்லை. அந்தக் கோடை விடுமுறை முழுவதும் பலவிதமாக வேலை செய்து பணம் திரட்டினேன் – புல்வெளி சீர்செய்வது, புத்தகம் விற்பது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, நன்கொடை கேட்பது இப்படியெல்லாம்.

இப்படித் தான் பதினான்கே வயதான நான் இந்தியா போகும் விமானத்தில் ஏறி உட்கார்ந்தேன். எங்களது மிஷன் குழுத்தலைவர் பணி என்ன என்பதைத் தெளிவாகவே விளக்கியிருந்தார் – அந்தப் பகுதி முழுவதும் மக்களை வலைவீசித் தேட வேண்டும், ஜப வீடுகளை உருவாக்க வேண்டும் (”scout the land” and plant “house churches”). அங்கு நாங்கள் ஆச்சரியகரமான இந்தியக் குடிகளை சந்தித்தோம். அவர்களைப் போலவே உடையணிந்து கொண்டோம். அவர்களுடன் புது தில்லி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்தோம். பிரசினை என்னவென்றால், அவர்கள் அனைவரும் இந்துமதம் அல்லது புத்த மதத்தைக் கடைப் பிடிப்பவர்களாக இருந்தார்கள். அவர்களது “தீய, சாத்தானிய” வழிகள் அகன்று, ஏசு அவர்களது மண்ணிற்கு வந்து அவர்களுக்கு ஒளி காட்ட வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தித்தோம். நானும் பணியில் முழுமையாகவே ஈடுபட்டிருந்தேன். “தீய, சாத்தானிய” வழிபாட்டாளர்கள் மனம் திருந்த கூவிக் கூவிப் பிரார்த்தனை செய்தேன்.

hindu_religion_is_cultureநாங்கள் இந்தியாவில் இருந்தபோது தீபாவளி என்ற பண்டிகை வந்தது. அதைப் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெற எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த மக்கள் தங்களது மதம் மீது கொண்டிருந்த பெரும் நம்பிக்கையையும், சிரத்தையையும் நாங்கள் பார்த்தோம். அவர்கள் மதம் எப்படி அவர்களது கலாசாரத்தின் அழகிய அங்கமாக இருக்கிறது என்பதையும் உணர்ந்தோம்.

நான் யு.எஸ் திரும்பியதும், எனது 5 வயது தங்கை மிகவும் நோய்வாய்ப் பட்டாள். எங்கள் பெற்றோர்கள் ”கர்த்தரே பெரிய மருத்துவர்” என்ற நம்பிக்கை கொண்டிருந்ததனால் எனது தங்கை 2004ம் வருடம் ஜனவரி 9ம் நாள் இறந்து போனாள் (“Victory Halbert” என்று கூகிள் செய்தால் அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்). எங்கள் பெற்றோர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள். நானும், என் உடன்பிறந்தவர்களும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பப் பட்டோம். மூன்று வருடங்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் சீர்திருத்த இல்லங்களுக்கும் அலைக்கழிக்கப் பட்டு, கடைசியாக எங்கள் அப்பாவிடம் கொண்டு சேர்க்கப் பட்டோம். அப்போது விவாகரத்தாகியிருந்தது, அம்மா பிரிந்து சென்று விட்டிருந்தாள். அப்பா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டார். நிறையக் குடிக்க ஆரம்பித்தார். என் இஷ்டப் படி என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதித்தார்.

நான் ஒருவிதமாக வளர்க்கப் பட்ட வீட்டுச் சூழலிலிருந்து, மதச்சார்பற்ற சுதந்திர உலகத்துக்குள் தள்ளப் பட்டது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் அம்மாவிடம் வீட்டுப் பள்ளிக் கூடத்தில் பாடம். பிறகு, மிசௌரி மாநிலத்திலேயே மிகவும் மோசமான அரசுப் பள்ளிகள் இருக்கும் பகுதியில் அரசுப் பள்ளிக்குப் போகவேண்டி வற்புறுத்தப் பட்டேன்.

நான் அறியவந்த எல்லாவற்றுக்கும் எதிராக புரட்சி செய்தேன். அடிக்கடி பள்ளிக்குச் செல்வதை தவறவிட்டேன், அதனால் பள்ளியிலிருந்து நிற்கவேண்டியதாயிற்று. புதிய பெரிய கிளாஸ் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றினேன். கடைசியாக பதினேழு வயதில், பள்ளிப் பருவத்தில் சினேகமான தோழனுடன் சேர்ந்து வாழத் தொடங்கினேன். உடனேயே, நான் கர்ப்பமானேன். என்னை இழுத்துப் பிடித்து வைத்திருந்த எல்லாவற்றையும் உதறி, என் வாழ்க்கை இட்டுச் செல்லும் பாதையில் செல்லத் தொடங்கினேன். நானும் என் தோழனும் சேர்ந்து ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினோம். சேர்ந்து வாழ நிச்சயித்தோம். 2008ல் எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. இறுதியாக திருமணம் செய்து கொண்டோம். அப்போது வயது எனக்கு 19, அவனுக்கு 21. பிறகு புது வீடு கட்டிச் சென்றோம். நான் வீட்டிலிருந்தே குழந்தைகள் காப்பகம் நடத்தினேன். அவன் கல்லூரியில் படித்த பட்டதாரி என்பதால் நல்ல வேலை கிடைத்தது. நாங்கள் பொருளாதார ரீதியாக முற்றிலும் பாதுகாப்பு அடைந்து விட்டோம்.

என் கணவர் பாப்டிஸ்ட் (Baptist) சூழலில் வளர்ந்தவர். என்னைப் போலவே அவரும் தன்னை கிறிஸ்தவன் என்று பெருமையாக அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால் உண்மையில் நாங்கள் இருவருமே எங்கள் நம்பிக்கைகளுடன் போராடிக் கொண்டிருந்தோம். நாங்கள் இள வயதினர். கிறிஸ்தவ மதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாததால், அதைப் பற்றிப் பேசுவதை முற்றாகவே தவிர்த்தோம்.

எனது இந்திய மிஷன் பயணம் பற்றிய குற்ற உணர்வுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன். நான் உண்மையில் அங்கு போய் என்ன செய்தேன்? ”தேவனின் நற்செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்தேன்!” அந்த இந்தியர்கள் தங்கள் மதத்தின் மீது எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்தேன். அவர்களது கலாசாரத்திற்குள் எனது விசுவாச வெறியுடன் நான் அத்துமீறி நுழைந்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது. சொல்லப் போனால் அதன்மீது உண்மையில் எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை.

கிறிஸ்தவ மதத்தைப் பற்றிய ஏராளமான கேள்விகளை எனக்குள் எழுப்பிக் கொண்டேன். இதை அலங்கோலமாகாமல் எப்படி என் பாப்டிஸ்ட் கணவருடன் பேசப் போகிறேன் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். நல்லவேளை அவருக்கும் பைபிளைப் பற்றி கிறிஸ்தவத்தைப் பற்றி அதே போன்று கேள்விகள் இருந்தன என்று தெரியவந்தது. எனக்கு ஆசுவாசமாக இருந்தது. ஆனாலும், இதைப் பற்றி என்ன செய்வது என்று எங்கள் இருவருக்குமே தெரியவில்லை.

mclout_kansasஅது 2009ம் ஆண்டு கோடை காலம். என் அப்பா, தீவிரமாக கிறிஸ்தவத்தை உதறித் தள்ளி விட்டிருந்தார். மத மௌடிகம் பற்றி இடைவிடாத பேச்சுக்களிலும், சதிவலைகள் பற்றிய சலிக்காத உரையாடல்களிலும் ஊறி அதன் எல்லைக்கே சென்று விட்டிருந்தார். ”ஓய்வான உழைப்பாளர் தினம்” (Laid Back Labor Day) என்ற கொண்டாட்டத்திற்காக கான்சஸின் மெக்லவுத் (Mclouth) பிரதேசத்திற்கு கூட்டாகச் சேர்ந்து போக எங்களை அழைத்தார். நாங்கள் தயங்கினோம், ஏனென்றால் அந்த இடம் பாகன்கள் அதாவது இயற்கை வழிபாட்டாளர்கள் கூடும் மைதானம் (Pagan campground). கிறிஸ்தவர்களான எங்களுக்கு, பாகன்கள் சாத்தானிய வழிபாட்டாளர்கள், சூனியக் காரர்கள் என்று ஆதிமுதலே கற்றுக் கொடுக்கப் பட்டிருந்தது.

இருந்தாலும் அங்கு போனோம். அது எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இப்போது நாங்களே எங்களை ”பாகன்கள்” என்று அழைத்துக் கொள்கிறோம். எதையும் நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் மந்திர வித்தைகளையும், மறைஞானத்தையும் திறந்த மனதுடன் அணுகுகிறோம். இயற்கை மீது அன்பு கொண்டவர்களாக இருக்கிறோம்.

கர்த்தரால் நிராகரிக்கப் படுவது பற்றியும், நரகத்தில் உழல்வது பற்றியும் இப்போது எனக்குப் பயம் இல்லை. உலகத்தில் ஒருவர் சொல்வதும் முழு உண்மை இல்லை என்று இப்போது எனக்குப் புரிகிறது. அப்படி இருக்க ஒரே ஒரு மதம் மட்டும் எப்படி சரியானதாக இருக்க முடியும்? மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக. கடவுளை வேறு பெயரில் வழிபடுவதாலோ, ஏசு என்பவரை அவர்கள் இதயங்களில் ஏற்றுக் கொள்ளாததாலோ இந்தியர்கள் தீயவர்கள் அல்ல; சாத்தான்கள் அல்ல. இப்போது அதை நான் அறிவேன். நான் சுதந்திரமடைந்து விட்டேன்.

இந்த வாழ்க்கைக் கதையைச் சொன்னதன் நோக்கம் என்ன என்று என்னால் சரியாகக் கூற முடியவில்லை. இது ஒரு வாக்குமூலம் அல்ல. நான் யார், எப்படிப் பட்டவளாகியிருக்கிறேன் என்பதை உறுதியுடன் சொல்ல விரும்பினேன் என்றே நினைக்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை அறிவேன். முன்னாள் கிறிஸ்தவர்களாக எங்களது பழைய நினைவுகளை, எண்ணங்களை, புரிதலுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய கணவர் கிடைத்தார் என்பது என் அதிர்ஷ்டம். இந்த இடத்தில் “நீ நரகத்திற்குப் போவாய்” என்று சொல்லப் படாமல், என்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதிலும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் (மற்ற இடங்களில் அப்படி நிறையப் பேர் இன்னமும் சொல்லத் தான் செய்கிறார்கள். நான் தான் நம்புவதில்லை).

நான் நம்பிக்கைகளுக்காக அச்சுறுத்தப் படவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே தான் கீழ்ப்படிந்தேன் – அச்சம். கர்த்தரால் நிராகரிக்கப் பட்டு நரகத்தில் உழலாமல், சுவர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற அச்சத்தால், முற்றாக பைபிளில் கூறியபடி வாழ்க்கையை வாழ முயற்சி செய்தேன். எனக்கு பைபிளைப் பற்றிச் சொல்வதற்கு நிறையவே உள்ளது, ஆனால் இப்போது வேண்டாம்.

ex_christian_tshirtஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறேன் – இப்போதும் நான் அச்ச உணர்வுடன் போராட வேண்டியுள்ளது, கிறிஸ்தவத்தின் காரணமாக. சில சமயம் நினைக்கிறேன் – ஒருவேளை நான் எண்ணுவது தவறோ? உண்மையிலேயே நரகம் இருந்து, நான் அங்கு தான் போகப் போகிறேனோ? என்று. உடனே என்னை ஒரு உலுக்கு உலுக்கிக் கொள்கிறேன். தங்கள் பார்வையில் ”சரியான உலகத்தை” உருவாக்க கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்த சமாசாரம் தான் நரகம் என்று நினைவு படுத்திக் கொள்கிறேன்.

(இந்தக் கட்டுரை Exchristian.net என்ற இணையதளத்தில் வெளிவந்தது. இந்தக் கட்டுரை ஆசிரியர் போன்று கிறிஸ்தவ மதத்தால் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கடும் மன உளைச்சல்கள், குற்ற உணர்வுகளிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவக்கியவர்கள் மற்றும் அதில் முயல்பவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இணையதளம் அது).

114 Replies to “மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது”

  1. நான் நம்புவதையே பிறரும் நம்பவேண்டும் ஏற்க வேண்டும் எப்படியாவது அதை திணிக்கவும் வேண்டும் என்ற வெறி பிறந்தது மேற்கத்திய மதங்களில் மட்டுமே. இதனால் உலக சமாதான நிலை கெட்டு இன்றும் பல கேடுகள் உண்டாகின்றன.
    நடத்தை பண்பு இவர்களுக்கு முக்கியம் அல்ல. என்ன நம்பிக்கையென்பதே அவர்களுக்கு முக்கியம். அவர் போல் வழி படவேண்டும். அவர் வழிபடுவதையே வழி பட வேண்டும் என்று வெறி. இந்த வெறி நம் நாட்டுக்கும் வந்து பல நூற்றாண்டுகளாயின. ஆக மொத்தம் இவை இறை வழியே அல்ல. இவை நாட்டை பிடிக்கவும் நாட்டை அடிமையாக்கவும் சூறையாடவும் அக்கிரமம் செய்ய வந்த துர்மதங்களே. நல்ல கட்டுரை இந்த பித்தலாட்டங்களை காட்டுகிறது. நன்றி

  2. //
    மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக. கடவுளை வேறு பெயரில் வழிபடுவதாலோ, ஏசு என்பவரை அவர்கள் இதயங்களில் ஏற்றுக் கொள்ளாததாலோ இந்தியர்கள் தீயவர்கள் அல்ல; சாத்தான்கள் அல்ல. இப்போது அதை நான் அறிவேன். நான் சுதந்திரமடைந்து விட்டேன்
    //
    மிகவும் ரசித்தேன்.

    பொதுவாக கிறிஸ்தவர்களாக மாறிய இந்துக்கள், இந்து மதத்தின் மீது ஆழ்ந்த வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். வெறுப்பும் எள்ளலும் அதிகம். இந்து மதத்தை ஒரு வெறுப்பற்ற பார்வையில் இது போன்ற வெளி தேசத்து மனிதர்களாலேயே புரிந்து கொள்ள முடிகிறது – இந்தியாவிலேயே இருக்கிற கிறிஸ்தவர்களிடம் இதை காண முடியாது.

  3. Thanks Jatayu !
    Can you give the source link to the article ? I searched that site, but could not get this particular article.

  4. //உண்மையிலேயே நரகம் இருந்து, நான் அங்கு தான் போகப் போகிறேனோ? என்று. உடனே என்னை ஒரு உலுக்கு உலுக்கிக் கொள்கிறேன். தங்கள் பார்வையில் ”சரியான உலகத்தை” உருவாக்க கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்த சமாசாரம் தான் நரகம் என்று நினைவு படுத்திக் கொள்கிறேன்.//

  5. // Raja
    4 June 2010 at 9:01 am
    Thanks Jatayu !
    Can you give the source link to the article ? I searched that site, but could not get this particular article //

    ராஜா, கட்டுரையின் ஆரம்பத்தில் “மூலம்” என்பதில் க்ளிக் செய்தால் அந்த இணைப்பு கிடைக்கும்.

    https://exchristian.net/testimonies/2010/02/being-missionary-showed-me-light.html

  6. //இந்து மதத்தை ஒரு வெறுப்பற்ற பார்வையில் இது போன்ற வெளி தேசத்து மனிதர்களாலேயே புரிந்து கொள்ள முடிகிறது – இந்தியாவிலேயே இருக்கிற கிறிஸ்தவர்களிடம் இதை காண முடியாது.//

    இதற்கு நம்மிடமும் ஒரு சிலவற்றை புனரமைக்க வேண்டும். தர்ம பிரசாரம், ஆன்மீக கருத்து பரிமாற்ற விவாதங்கள், ஹிந்து மத நர்கோட்பாடுகள் பற்றிய மேடை பேச்சு என்பது மிக மிக அரிதாகி விட்டது இன்றைய சூழல் மற்றும் பணம் மட்டும் குறிக்கோள் என்று இருக்கும் வாழ்க்கையில். மேலும் அங்கே இங்கே என்று எப்பொழுதாவது ஒரு சில தர்ம பிரசாரகர்கள் இருந்தாலும் அவர்களை ஆதரிப்போர் மிக குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். இன்னொரு பக்கம் ராமாயணம்,பகவத் கீதை,ஸ்ரீமத் பாகவதம், ஹிந்து மத கலாசாரம்,பழக்க வழக்கங்கள் என்றால் எதோ புரட்டு வித்தை,புரளி கதை என்பது போல் the gr8 கழகங்களால் திரித்து கிராமம் கிராமமாக இதை பரப்புகின்றனர். இன்னொரு காரணம்.. நேற்று வரை நம் சமுதாயத்துடனும்,பெருமாள் கோவிலில் சனிகிழமை தவறாமல் வந்து 12 சுற்று, வெள்ளிகிழமை லக்ஷ்மி பூஜை என்று செய்து கொண்டு இருந்த நம் அண்டை வீட்டு தீவிர பக்தர்களான கோபாலனும், கந்தசாமியும் கோச்பேல் மிசினரியின் பேருதவியால் இன்று அதே பெருமாள் கோவில் முன் நின்று ஆண்டவரே!! அல்லே லூயா என்று பெரும் கூச்சலுடன் மைக் செட்டு கட்டி அழுது பக்கத்து வீட்டுக்காரனுடன் ஆக்ரோஷமாக (போப்புக்கு கூட இவ்வளவு கிறிஸ்துவ வெறி இருக்குமா என்று தெரியாது) இவர்களுக்கு ஏன்,எப்படி? இப்படி கண்மூடி தனமான வெறி ஊட்டபடுகிறது??…
    கம்பராமாயண நாடிய நாடகம்,சொற்பொழிவு, கிருஷ்ணா லீலா பொம்மலாட்டம் இதல்லாம் எங்க சார்?

  7. //பொதுவாக கிறிஸ்தவர்களாக மாறிய இந்துக்கள், இந்து மதத்தின் மீது ஆழ்ந்த வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். வெறுப்பும் எள்ளலும் அதிகம். இந்து மதத்தை ஒரு வெறுப்பற்ற பார்வையில் இது போன்ற வெளி தேசத்து மனிதர்களாலேயே புரிந்து கொள்ள முடிகிறது – இந்தியாவிலேயே இருக்கிற கிறிஸ்தவர்களிடம் இதை காண முடியாது.//

    GOOD, MR. MUTHU.

  8. அருமை! இந்த கட்டுரையை மதம் மாறுகிறோம் என்று துடிப்பவர்களிடம் படிக்கச் சொல்ல வேண்டும்! தன் கருத்தை மக்கள் மீது திணிப்பவர்கள் இங்கு உள்ள அரசியல் வாதிகளும் தானே! இங்கு இல்லாத ஒன்றைத் தேடி கண்டு பிடித்து விட்டதாக பெருமை பட்டுக் கொள்கிறார்கள்! ஆனால் உலகம் முழுதும் அன்பால் மட்டுமே கட்டுண்டு உள்ளது , என்பதை மறுக்கிறார்களே!

  9. வெறும் மேல் தட்டு மக்கள் அல்லது ஒரு சில நன்றாக படித்த மேதாவிகள் மட்டும் கூடி கொண்டு இசை கச்சேரி, உபன்யாசம், காலக்ஷேபம் என்று நாரத கான சபை,ரசிக ரஞ்சனா சபா, திருவல்லிக்கேணி கோவில், மீனாக்ஷி கோவில் நான்மாட வீதி இவற்றுக்குள் மட்டும் நடக்கும் கூட்டங்களும்,இசை மழையும் ஏன்? புளியனூர், தேனி,கம்பம், கீழகல்கண்டார் கோட்டை,நத்தம் போன்ற கீழ்தட்டு பாமரனுக்கும் புரியும் விதத்தில் ஜனரஞ்சகமான முறையில் சொல்லபடுவது இல்லை? ஏன் இங்கு தமிழ் மொழியில் ஒரு பாரதி பாட்டோ? ஆழ்வார் நாயன்மார்களின் பாசுர பாடல்கள் என்று இவைகளை பண்ணிசைத்து பாட முடியாதா?. அவ்வளவாக வசதியே இல்லாத நாட்களில் கூட நம் பெரியோர்கள் சிறிதளவேனும் ஹிந்து மத பிரசாரம் செய்து வந்தனரே ???

  10. A very good article by Mr. Jataayu. I appreciate him.

    HATS OFF TO NAOMI PRETTYMAN ! She keeps her conscious intact

    We can see that the westerners are broadminded people. We have to appreciate them. Hinduism has to reach them, we should not allpw pseudo godmans spoils the image of Hinduism in the west!

    இங்கே நவோமி ப்ரோட்டிமேனின் இதயத்தை தொட்டது அடிப்படை இந்துக்களே (அதாவது சடங்கு இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள்) இந்து மதத்தின் ஆணிவேர் இந்த அடிப்படை இந்துக்களே என்பதை அறியலாம்!

    அடிப்படை இதுத்துவமோ, ஆன்மீக இந்துதுவமோ அது ஆக இருந்தால் அதனால் அடுத்தவரின் மனம் நிலை உயரும். போலித் தனத்துக்கு சிம்பு வைத்துக் கட்டினால் தேறாது.

    ஆன்மீக இந்துத்வம் என்ற பெயரில் கோடிகளைக் குவிப்பர்களோடு ஒப்பு நோக்கினால் இந்த அடிப்படை இந்துக்களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்.

    மிக அருமையான் பதிவை தந்திருக்கிறார் திரு. ஜடாயு என்பதி மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

  11. A very good article by Mr. Jataayu. I appreciate him.

    HATS OFF TO NAOMI PRETTYMAN ! She keeps her conscious intact

    We can see that the westerners are broadminded people. We have to appreciate them. Hinduism has to reach them, we should not allpw pseudo godmans spoils the image of Hinduism in the west!

    இங்கே நவோமி ப்ரோட்டிமேனின் இதயத்தை தொட்டது அடிப்படை இந்துக்களே (அதாவது சடங்கு இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள்) இந்து மதத்தின் ஆணிவேர் இந்த அடிப்படை இந்துக்களே என்பதை அறியலாம்!

    அடிப்படை இதுத்துவமோ, ஆன்மீக இந்துதுவமோ அது ஆக genuine இருந்தால் அதனால் அடுத்தவரின் மனம் நிலை உயரும். போலித் தனத்துக்கு சிம்பு வைத்துக் கட்டினால் தேறாது.

    ஆன்மீக இந்துத்வம் என்ற பெயரில் கோடிகளைக் குவிப்பர்களோடு ஒப்பு நோக்கினால் இந்த அடிப்படை இந்துக்களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்.

    மிக அருமையான் பதிவை தந்திருக்கிறார் திரு. ஜடாயு என்பதி மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

  12. இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் பெற்றோர்கள்தான். தன்னுடைய குழ ந்தை நன்றாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்கிறார்களே தவிர மத சம்பந்தமான எந்த விஷயத்தையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. ஆங்கிலக் கல்வி வேறு நம் கலாச்சாரத்தை ஆட்டுவதாகத் தான் அமைகிறது. பெற்றோர்கள் தம் தவறை உணர்ந்து திருந்தி னால் தான் நிலைமை திருந்தும்.

  13. எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை தத்துவமே..!

    காந்திஜி சொன்னவாறு ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா கிறிஸ்தவ நாடாகியிருக்கும்; ஒவ்வொரு இந்துவும் ராமனைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா அமெரிக்கா போல மாறியிருக்கும்; ஒன்று மட்டும் நிச்சயம், இந்தியா என்ற நாட்டை உருவாக்கித் தந்த வெள்ளையனை நாம் மறக்கக்கூடாது..!

  14. // thiruchchikkaaran, on June 4, 2010 at 22:31 Said:

    I read one article about an American evangalist, who listened to the voice of her conscience.

    https://tamilhindu.com/2010/06/being-missionary-showed-me-light/

    எனது இந்திய மிஷன் பயணம் பற்றிய குற்ற உணர்வுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன். நான் உண்மையில் அங்கு போய் என்ன செய்தேன்? ”தேவனின் நற்செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்தேன்!” அந்த இந்தியர்கள் தங்கள் மதத்தின் மீது எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்தேன். அவர்களது கலாசாரத்திற்குள் எனது விசுவாச வெறியுடன் நான் அத்துமீறி நுழைந்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது. சொல்லப் போனால் அதன்மீது உண்மையில் எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை. //

    எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை தத்துவமே; காந்திஜி சொன்னவாறு ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா கிறிஸ்தவ நாடாகியிருக்கும்; ஒவ்வொரு இந்துவும் ராமனைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா அமெரிக்கா போல மாறியிருக்கும்; ஒன்று மட்டும் நிச்சயம், இந்தியா என்ற நாட்டை உருவாக்கித் தந்த வெள்ளையனை நாம் மறக்கக்கூடாது..!

    ஆனாலும் இரட்சிப்பின் அனுபவம் என்பது தனிப்பட்டதாகும்; அதனை மற்றொருவரால் புரிந்துக்கொள்ளவோ புரியவைக்கவோ இயலாது;

    மனிதனுடைய மனம் இயல்பாகவே மாற்றங்களையும் சுவாரசியங்களையும் நோக்கி ஈர்க்கப்படுகிறது;

    மேற்கத்திய கலாச்சார பழக்கவழக்கங்கள் கிழக்கத்தியரை ஈர்ப்பதும் கிழக்கத்திய கலாச்சாரத்தின் குறியீடுகளான பரதம்,சங்கீதம் போன்றவை மேற்கத்தியரை ஈர்ப்பதும் காலச் சக்கரத்தின் சுழற்சியின் மாயமாகும்;

    ஆனாலும் வரலாறு முழுவதுமே மேற்கத்தியவரே ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்திருக்கிறார்கள்;

    இங்கே ஆரியர் வந்து ஆதிக்கம் செலுத்தவில்லையா?பௌத்தத்துக்கு எதிராக ஆதிசங்கரர் முதலாக புனிதப் பயணம் மேற்கொள்ளவில்லையா?
    வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது என்ற கோஷம் எழும்பவில்லையா?

    “தமிழ் ஹிந்து” தளத்தின் கட்டுரையைப் போலவே ஓராயிரம் கட்டுரைகளை நாங்களும் இங்கே தயாரிக்கமுடியும்;இந்து மார்க்கத்தின் மோசடிகளால் துன்பப்பட்டவர்களின் படுபயங்கரமான கதைகளை நாங்களும் விவரிக்கமுடியும்;

    இங்கே நண்பர்கள் அசோக்,ஹார்ட்ரூத் போன்றவர்களை வரப்போறவனெல்லாம் தர்ம அடி கொடுப்பதுபோல சகட்டுமேனிக்கு தாக்கிவிட்டுப் போனாலும் சற்றும் விட்டுக்கொடுக்காமல் தங்கள் நம்பிக்கையை தெளிவாக முன்னெடுத்துவைத்து நம்முடைய தலைவர் திருச்சிக்காரன் சொல்வதுபோல எந்தவித வெறுப்புக்கருத்துக்களுக்கும் இடங்கொடுக்காமல் நாகரீகமாக நடந்துக்கொண்டதற்கு பாராட்டுகிறேன்;வாய்மைக்கு அலங்காரம் தேவையில்லை;

    இங்கே இடப்படும் பின்னூட்டங்களை பொறுமையாக ஆராய்ந்து பார்த்தால் இந்து மார்க்கத்தின்மீது மரியாதையும் தெளிவும் வரும்படியான எந்த கருத்தும் கட்டுரையும் இடம்பெறவில்லை;மாறாகப் புலம்பல்களே அதிகமாக இருக்கிறது;

    ஒரு அறையில் 90 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது இரண்டே இரண்டு பேர்மட்டும் வந்து என்ன சாதித்துவிடமுடியும்?

    இதுவே இந்துமார்க்கத்தின் மார்க்கத்தின் மாபெரும் பெலவீனமாகும்;
    ‘ஒன் சரக்கு ஒசத்தியாக இருந்தா தன்னால வியாபாரம் நடக்கும்’ என்று புத்திசாலி வியாபாரி சொல்லுகிறான்;

    அதற்கேற்ப அசோக் அவர்களும் ஹார்ட்ரூத் (hard truth) அவர்களும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்து ஒழுங்கானதொரு யுத்தத்தை செய்திருக்கின்றனர்;”இன்று போய் நாளை வா” என்ற ராமனின் பெருந்தன்மையின்படி விதிமுறைகளுக்கேற்ப யுத்தம் செய்தனர்; இதைப்படித்து என்னைப் போன்ற அநேகர் மெய்யான தேவனைக் குறித்து அறிந்துக்கொண்டோம்;

    ஆனால் மெத்தப்படித்த ஞானிபோல வேடமிடும் திருச்சிக்காரனோ சரியான பச்சோந்தித்தனமாகவே செயல்பட்டிருக்கிறார்;அவர் மீசை நனையாம கூழைக் (கும்பிடு போட்டு) குடிக்க கடுமையாக முயற்சிக்கிறார்;
    கடவுள் இல்லையென்றும் அது ஒரு கான்செப்ட் மட்டுமே என்றும் சொல்லிக்கொண்டே உபன்யாசமும் நடத்துவார்;அவர் இங்கே பரப்பியுள்ள வெறுப்புக்கருத்துக்களையும் பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்களையும் அவருடைய முரண்பாடான ஸ்டேட்மெண்ட்டுகளையும் நான் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்;அது ஒரு தனி கட்டுரையாக விரைவில் வெளியிடப்படும்;

    இங்கே தனபால் அவர்கள் மட்டுமே சற்று ஆரோக்கியமான விவாதத்தை நடத்தியிருக்கிறார்;அவரிடம் சில காரியங்களைச் சொன்னால் அதற்கு பரியாசம் செய்யாமலும் இழிவுபடுத்தாமலும் கருத்தை ஏற்காவிட்டாலும் நட்பைப் பேணும் நற்பண்பைக் காண்கிறேன்;(அதற்குக் காரணம் அவர் இந்துவாக இருப்பதல்ல,நல்ல மனிதராக இருப்பதுதான்..!)

    // நாங்கள் கூறிய “அனைத்து மதமும் கடவுளை அடையும் பாதைகளே”- ஒரே கடவுளையே பலர் பல பெயர்களில் அழைக்கின்றனர் என்பது போன்ற இந்து மதத்தில் சொல்லப்பட்ட சமரசக் கருத்தையே நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை…//

    நண்பர் ஹார்ட்ரூத் (hard truth) அவர்களிடம் முன்வைக்கப்படும் மேற்கண்ட கருத்தானது, இது இந்து மார்க்கத்தில் எங்கும் சொல்லப்படவில்லை, அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட வேதத்திலும் கட்டளையாகச் சொல்லப்படவில்லை;ஆனாலும் இதற்கென்றே சில ஸ்பெஷல் கோட்வேர்டுகள் உண்டு;அவையாவன:ஐதீகம், மரபு,தத்துவம், நம்பிக்கை..இப்ப்டியாக;

    பல தெய்வக் கோட்பாடு என்பது பலதாரத் திருமணம் போல ஒரு கலாச்சாரம் சம்பந்தமான விஷயம்;ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை நாடி செல்லும்போது மார்க்க அறிஞர்கள் சமூகத்தில் பிரிவினைகளும் மோதல்களும் ஏற்படாமல் தவிர்க்கும் ஆலோசனையாகவே இந்த கருத்தை மக்கள் மனதில் விதைத்தார்கள்;

    ஆனாலும் அது நடைமுறையில் இல்லை;ஆனாலும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் முண்டக்கன்னியையும் முண்டகப்பெருமாளையும் தூக்கிச் சுமக்கும் பல்லக்கு ஆரியனிடமிருந்தே தருவிக்கப்பட்டது;அதில் அவனையும் சேர்த்தே நாம் சுமக்கிறோம்;சாமிக்கு மட்டுமா ஊஞ்சலாட்டம்,சாமியாருக்கும் சேர்த்துதானே..?

    மனிதனை மனிதன் சுமக்கும் அடிமைத்தனத்தையும் வர்ணா(சிரமத்தை)யும் ஒழிக்கவே மாற்றுப்பாதைகள் தேடப்படுகிறது; அதில் சிறப்பானதாக பெரும்பான்மையோர் ஏற்றுக்கொண்டது கிறித்தவமாகும்;அது ஒன்றே அறிவுபூர்வமானது,உணர்வுபூர்வமானது;

    ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட கரடுமுரடான பாதை வழியே நாம் விரும்பும் இடத்துக்கு சென்றுவந்தோம்;இப்போதோ நல்லதொரு புதிய பாதை தோன்றியிருக்கிறது;அதன் வழியே விரைவாக சுகமாக பயணம் நிறைவேறுகிறது;அதனை ஏற்கமறுத்தால் விரைவில் பழைய பாதை முடக்கப்படும்;அப்போது வருத்தப்படவேண்டியிருக்கும்;

    // அப்படி இருக்கும் பொது இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவன்,அவராலே அல்லாமல் வேறு கடவுளைக் கும்பிடுபவன் இறைவனை அடைவதில்லை,எரிநரகத்திற்கு தான் செல்வான் என்பது போன்ற பைபிள் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்???. //

    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்மை இறைவனாக அல்ல, நண்பனாகவே வெளிப்படுத்துகிறார்;அவர் நரகத்தைக் காட்டி யாரையும் பயமுறுத்தவில்லை; நரகம் என்பது தீயசக்திகள் வதைக்கப்படும் இடமாகும்;அந்த தீயசக்திகள் நாம் கண்விழித்துக் கொள்ளாமலிருக்க நம்மை உலகப் பிரகாரமான காரியங்களிலேயே நம்மை மூழ்கடித்து இறை ஒளியை அடையவிடாமல் மயக்குகிறது;

    நரகம் என்பது இனி சம்பவிக்கப்போகிறவைகளின் குறியீடு மட்டுமே; உதாரணமாக நம்முடைய பக்திமார்க்கத்திலும்கூட தீயவைகளையும் ஆகாதவைகளையும் கொளுத்தும் வழக்கமிருக்கிறது;நான் சொல்றத கேட்காவிட்டால் அந்த போலீஸ் மாமாகிட்ட பிடிச்சி குடுத்துவேன் என்பது போலல்ல இந்த நியாயத்தீர்வை;நியாயத்தீர்வை என்பது அவரவர் தேரிந்தெடுப்பு சார்ந்தது;

    கடவுள் யாரையும் அழிப்பதற்காகப் படைக்கவில்லை என்பதே சத்தியமாகும்; ஆனாலும் ஒருவனைக் குற்றவாளியாக்கி (‘அப்சல்குரு’வைப் போன்ற ஒருவனை..!) தூக்கில் போடத்துடிக்கும் சமுதாயமா இறைவனின் நியாயத்தீர்வை தினத்தினைக் குறைகூறுகிறது..?

    எரிநரகத்துக்கு யார் செல்வான் என வேதம் கூறவில்லையா?
    இவரா பிடித்துத் தள்ளிவிடுவேன் என்கிறார்,இவனாக அல்லவா அதற்கு பங்காளியாகிறான்?

    // Murugan, on June 4, 2010 at 22:31 Said:

    இன்னா தனபால் சார்,அதான் அண்ணன் எழுதிகிறாரே,’ஹோலி இஸ்பிரிட்டு’ உள்ளார போனாத்தான் சரியாப் பிரியும்னு; அத்தொட்டு மொதல்ல பக்கத்துல எதுனா கடைக்கு போயி ‘ஹோலி இஸ்பிரிட்டு’ இருக்கானு பாருங்கோ;அத்தை வாங்கி உள்ள உடுங்க;அது உள்ளார போயி வொர்க் பண்ணாதான் ஒங்களுக்கு புரியும்னு சொல்லிகிறார், புர்யுதாணு பாருங்கோ.

    கிடைக்கலைனா அண்ணன் கிட்ட கேளுங்கோ, அண்ணான் உங்களுக்கு அனுப்புவாரு. ஏன்னா கண்டி எப்படியும் அண்ணனுக்குள்ள ஹோலி ஸ்பிரிட்டு வேலை செஞ்சு இருக்கும், இல்லாமலா எழுதுவாரு. தன்பால் சாருக்கு விருப்பம் இல்லைனா அவரை விட்டுடு, எனக்கு கொஞ்சம் அனுப்புப்பா. //

    பரியாசம் செய்வதன் மூலமும் வெறுப்புக்கருத்துக்களைப் பரப்பமுடியும் என்பதை இங்கே அறிகிறேன்;எனவே தான் இயேசுவானவர் கூறினார்,”பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.”(மத்தேயு.7:6)என்பதாக;மேலும் இயேசுவுக்கு எதிரான தூஷணம் மன்னிக்கப்படும்,பரிசுத்தாவியானவருக்கு எதிரான தூஷணம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை என்றும் கடுமையாக எச்சரிக்கிறார்;ஆனால் நாமோ இயேசுவானவரைப் போலவே விண்ணப்பிக்கிறோம்,”பிதாவே இவர்களுக்கு மன்னியும்,தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்”

    //santhosh, on June 4, 2010 at 22:31 Said:
    1) மறுபடியும் மறுபடியும் நச்சரித்தால் பிடுங்கல் தாங்காமல் ஒத்துக் கொள்ளலாம்.

    2) எரி நரகம் என்கிறதைக் காட்டி பயமுறுத்தினால் , கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவன் ஒத்து கொள்ளுவன்

    3) இதில் எதுவும் வொர்க் அவுட் ஆகாவிட்டால் கடைசியில் வைட்டமின் ப இருக்கவே இருக்கு. //

    “யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி.”(எரேமியா.11:13)

    இதுதான் இன்றைய உலகின் நிலை;ஆனாலும் குற்றங்கள் மட்டும் குறையவேயில்லை; அப்படியானால் தெய்வ பயம் யாருக்குமில்லை; மனதில் நிம்மதியில்லை;தொடர்ந்து எதிர்மறையான சம்பவங்களே நடக்கிறது;செலவில்லாமல் இறையருள் கிடைப்பதில்லை;

    எங்கு திரும்பினாலும் ஒரு கல்லை நட்டுவைத்துவிட்டு ஜனங்களை மிரட்டிக்கொண்டிருக்கும் திருடர்கள் யார்?ஏழை எளிய மக்களின் பக்தியையும் வாழ்வியல் அச்சங்களையும் காசாக்கி கசக்கிப் பிழியும் கொள்ளையர்கள் யார் என்பது தெரியாதோ?தோஷம் என மிரட்டுவதும் பரிகாரம் செய்தவுடன் தோஷம் விலகிவிட்டதாக வேஷமிடுவதும் பூஜாரிகளும் சந்நியாசிகளும் மந்திரவாதிகளும் குறிசொல்லிப்பிழைக்கும் முன்னாள் விபச்சாரிகளே..!

    ஒன் (கல்லு)சாமிய தரிசிக்க பணம் கேட்கிறாய்,சிருஷ்டிக் கர்த்தாவை தரிசிக்க பணம் கொடுக்கிறேன்,யாரையா மோசடி பேர்வழி..?

    திருப்பதிக்குச் செல்லும் சாலையோரங்களில் குழந்தையையும் குட்டியையும் வைத்துக்கொண்டும் குடும்பங்கள் தவிப்பது அந்த சாமிக்குத் தெரியாதா?ஒரு நாளாவது அந்த அசையாத‌- உயிரற்ற- அலங்கரிக்கப்பட்ட கல்லாக சமைந்துவிட்ட -பெரிய‌வன் அந்த ஏழை பக்தர்கள் கனவில் வந்து என்னைத் தேடி ஏன் இவ்வளவு தூரம் வந்தாய் நான் உனக்குள் தானே இருக்கிறேன் என்று சொன்னதுண்டாடா,அல்லது பணத்தினால் என்னை வாங்கமுடியாது என்று இலஞ்சப்பணத்தையும் ஏழைகளின் இரத்தக்கறை படிந்த வட்டிப்பணத்தையும் பெற மறுத்ததுண்டா?

    // தனபால், on June 4, 2010 at 22:31 Said:
    திரு சந்தோஷ் அவர்களே,இந்த எரி நரகம் என்றக் கருத்து மிகவும் கொடுமையானது.அந்த எரி நரகம் என்பது நிரந்தரமாக ,முடிவில்லாமல் எரிந்துகொண்டிருக்க வேண்டியது தான்.கிருஸ்தவ மதத்தின் எந்தக்கருத்தை ஏற்றுக்கொண்டாலும் இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள என் இரக்க மனம் இடம் கொடுக்கவில்லை. //

    தனபால் அவர்களே,உங்களது இந்த கருத்தைப் படித்தவுடனே எனக்கு பீஷ்மரின் (அம்புப் படுக்கை) இறுதிக்கட்டமே நினைவுக்கு வந்தது;மேலும் கர்ணனை (கண்ணனின் சூழ்ச்சி) நினைத்து சிறுவயதில் அழுதிருக்கிறேன்; இந்த இந்து மத கருத்துக்களை உங்கள் இரக்கமனம் எப்படி ஏற்றுக்கொண்டது? இவையெல்லாமே ‘பாதுகாப்புப் படைவீரர்கள் பலி’ என்றும் ‘தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்’ என்றும் குறிப்பிடுவதைப் போன்ற மனநிலை சம்பந்தமான பார்வையே;ஆனாலும் “அன்பு ஒருக்காலும் ஒழியாது”

    // thiruchchikkaaran, on June 4, 2010 at 22:31 Said:

    நிரந்தரமாக எந்த ஒரு உயிரும் எரி நரகத்திலே கஷ்டப்படாது;எல்லா உயிர்களும் விடுதலை அடையும்;ஒரு உயிர் நரகத்தில் இருந்தாலும், காணாமல் போன ஆட்டை தேடுவது போல தேடி விடுதலை கிடைக்கும் என்பதாகவே இயேசு கூறி உள்ளார். இது பற்றி தனிக் கட்டுரை வெளியிடப் படும். //

    திருச்சிக்காரன் சொல்வதெல்லாம் பொய்,பொய்யைத் தவிர வேறில்லை; ‘உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்’ ராஸா..!
    “தேவன்,தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு,அவரைத் தந்தருளி,இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”(யோவான்.3:16)
    ஒருவனும் கெட்டுப்போவது தேவசித்தமல்ல என்றே வேதம் கூறுகிறது;ஆனாலும் கிருபையின் காலத்துக்குப் பிறகு நரகத்துக்கு வந்தாவது உன்னை மீட்டுவிடுவேன் என்று இயேசு ஒருபோதும் சொல்லவில்லை;

    அரசாங்கம் சில காலத்துக்கு முன்பு “மழைநீர் சேகரிப்பு” திட்டத்தை அறிவித்து அதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவையும் நிர்ணயித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்தியது;அதனை நிறைவேற்றாதவர்க்கு தண்டனையாக வீட்டு மின்சாரம் உட்பட அனைத்து சேவைகளும் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது;அது ஒரு பெரும்புரளியாக அவர்கள் தோற்றுப்போகவே காரணமானது தனிக்கதை;

    அதுபோலவே இந்த உலகைப் படைத்த “யாவே” கடவுள் ஒரு நாளை நியமித்து அந்த நாளில் இந்த உலகை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார்;சிருஷ்டிகர் என்ற முறையில் அவருக்கு எல்லா உரிமையும் உண்டு;இதற்கான எச்சரிப்பின் அடையாளமாகவே எரிமலையும் பூகம்பமும் சுனாமியும் கட்டளையிடப்பட்டது;இவற்றை அவர் செய்யாவிட்டால் பின்னை யார் செய்தது?இது ஒரே நாளில் உலக முழுவதுக்கும் சம்பவிக்கும் போது நாங்கள் மத்திய ஆகாயத்தில் இருப்போம்;(என்ன சிரிப்பு வருகிறதா, அவரும் உன் பரிதாப நிலையினைக் கண்டு நகைக்கிறார்..!) இதெல்லாம் விஞ்ஞானமய்யா என ஆராய்ச்சி செய்துக்கொண்டிருப்போரும் சேர்ந்து உயிர்தப்ப ஓடுவர்;

    // athi karvitha, on June 4, 2010 at 22:31 Said:

    I have a nagging doubt since I visited this blog. When I pointed out USA, UK or other christian countries the bloggers say they are not christian countries. Could you please tell me which are Christian countries we can find in the atlaச்??? I thought Italy could be the one, but later I denied the answer ‘coz it has given birth to world’s notorious Mafia. The what else???Please, respond to this question.With love and peace, //

    கர்வம் பிடிச்ச டெட் (dead)கர்விதா, நான் டூட் (dude) என்பதால் நீ கவலைப்படவேண்டாம்;மானங்கெட்டுப் போய் ஆங்கிலேயன் காலை நக்கி அவன் மொழிய கத்துகிட்டு அவனுக்கு சொம்படிக்கப் போன உன்னை மாதிரி ஆளுங்கள விட சரியான கல்வியறிவு பெறமுடியாவிட்டாலும் சுயமுயற்சியினால் முன்னேறி என் மக்களுக்கே சேவை செய்யும் எண்ணற்ற தேச பக்தர்கள் இங்கே உண்டு;அவன் கலக்கிக் கொடுத்த பீரை குடிச்சிட்டு அவனுடைய நாத்தம் பிடிச்ச டையைக் கட்டிக்கிட்டு புனிதக் கலையான பரதத்தையும் சங்கீதத்தையும் வைத்து விபச்சாரம் பண்ணும் மேட்டுக்குடி பொறுக்கிகளைவிட நாங்கள் ஒன்றும் குறைந்துபோகவில்லை;

    கிறித்தவம் என்பது வாழ்க்கை முறையாகும்;அது எந்த ஒரு தேசத்துக்கும் சொந்தமானதும‌ல்ல;எந்த தேசத்தாலும் பரப்பப்படவுமில்லை; “உம்மைப் போல என்னை மாற்றும்” என நான் ஜெபிப்பேன்;இதுபோன்றதொரு ஜெபத்தை எந்த ஒரு இந்துவும் அனுமனையோ யானை முகத்தையுடையவனையோ நோக்கி செய்யமுடியாது;அப்படி நடந்துவிட்டால் காட்டிலாகா அதிகாரிகள் வந்து உங்கள் பெற்றோரை கைது செய்துவிடுவார்கள்;உங்க வீட்டுல ஆறு விரலுடன் ஒரு பெண பிறந்தால் ராசியானது என்பீர்கள்;ஆறு கையுடன் பிறந்தால்..?

    இறுதியாக மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்,வெறுப்புக்கருத்துக்களை பிரச்சாரம் செய்யாமல் நாகரீக சமுதாயத்துக்கு ஏற்ற வண்ணமாக பகுத்தறிவு மார்க்கமான இயேசுவின் வழி நடக்கவாருங்கள்;அப்போது தான் திருச்சிக்காரனின் ஆன்மா சாந்தியடையும்..!

  15. கிருஸ்துவர்களே, உங்களிடம் என்னுடைய பணிவான கேள்வி என்னவென்றால், ஏன் ஏமாற்றி மதம் மாற்றுகிறீர்கள்? பைபுளை ஏன் வேதம், தேவாரம் என்கிறீர்கள் ? இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு ஒன்னானம்பர் அயோக்யனை நல்லவன் என்று சொல்வதை போல உள்ளது. உங்களது மிக உயர்ந்த ‘பத்து கட்டளைகள்’ எங்களது அஷ்டாங்க யோகத்தின் முதல் இரண்டு நிலைகள். உங்களுக்கு ஹிந்து தர்மத்தை பற்றி பேசவே அருகதை இல்லை அனால் நீங்கள் எங்களை விமர்சிக்கிறீர்கள், ஏமாற்றி மதம் மாற்றுகிறீர்கள். இது எப்படி இருக்கிறது என்றால் சுத்தமான கங்கை நீரையும் காவேரி நீரை பருகுவனிடம், மூத்திரத்தை பிடித்து இது தான் மிக சுத்தமான நீர் என பருகவைப்பதர்க்கு ஈடாகும். ஆகவே மனந்திருந்துங்கள். மிக மகோன்னதமான ஹிந்து வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். எல்லாம் வல்ல சிவ பெருமான் நமாகு நல்லருள் புரிவான்.

  16. It is interesting to observe how a natural understanding of spirituality occurs even to those who work for the synthetic manufacturing of religions !!

  17. chilsam அவர்களே

    ///எனவே தான் இயேசுவானவர் கூறினார்,”பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.”(மத்தேயு.7:6)என்பதாக;மேலும் இயேசுவுக்கு எதிரான தூஷணம் மன்னிக்கப்படும்,பரிசுத்தாவியானவருக்கு எதிரான தூஷணம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை என்றும் கடுமையாக எச்சரிக்கிறார்;ஆனால் நாமோ இயேசுவானவரைப் போலவே விண்ணப்பிக்கிறோம்,”பிதாவே இவர்களுக்கு மன்னியும்,தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்”///

    ///ஆனாலும் “அன்பு ஒருக்காலும் ஒழியாது”///

    ///கர்வம் பிடிச்ச டெட் (dead)கர்விதா, நான் டூட் (dude) என்பதால் நீ கவலைப்படவேண்டாம்;மானங்கெட்டுப் போய் ஆங்கிலேயன் காலை நக்கி அவன் மொழிய கத்துகிட்டு அவனுக்கு சொம்படிக்கப் போன உன்னை மாதிரி ஆளுங்கள விட சரியான கல்வியறிவு பெறமுடியாவிட்டாலும் சுயமுயற்சியினால் முன்னேறி என் மக்களுக்கே சேவை செய்யும் எண்ணற்ற தேச பக்தர்கள் இங்கே உண்டு;அவன் கலக்கிக் கொடுத்த பீரை குடிச்சிட்டு அவனுடைய நாத்தம் பிடிச்ச டையைக் கட்டிக்கிட்டு புனிதக் கலையான பரதத்தையும் சங்கீதத்தையும் வைத்து விபச்சாரம் பண்ணும் மேட்டுக்குடி பொறுக்கிகளைவிட நாங்கள் ஒன்றும் குறைந்துபோகவில்லை;///

    ///வெறுப்புக்கருத்துக்களை பிரச்சாரம் செய்யாமல் நாகரீக சமுதாயத்துக்கு ஏற்ற வண்ணமாக பகுத்தறிவு மார்க்கமான இயேசுவின் வழி ///

    ஏசுவில் ஆரம்பித்து நேற்று கிறிஸ்தவரான நீங்கள் வரை பேசும் பேச்சுக்களில், எழுதும் எழுத்துக்களில் ……..

    எத்தனை “விருப்புக் கருத்து” வெளிப்படுகிறது !!!!
    எத்தனை “அன்பு” கொப்பளிக்கிறது!!!
    எத்தனை “நாகரீகம்” ஜொலிக்கிறது !!!
    எத்தனை “பகுத்தறிவு” மிளிர்கிறது !!!

    வேற்று மதத்தவரை நாய் என்றும் பன்றி என்றும் கூறிய ஒரே “கடவுள்” ஏசு என்பது எத்தனை பெருமைக்குறிய விஷயம் !!!!

  18. பரிசுத்த ஆவி போல ஒரு ஃப்ராடான கோட்பாட்டை எங்குமே பார்க்க முடியாது. பெந்தகோஸ்தே சபைகளில் ஒரு த்டவை பார்த்தால் போதும் இந்த பரிசுத்த ஆவி செய்கிற கெட்ட ஆவித்தனங்களை **** கூட செய்ய முடியாது. உண்மையில் இந்த டுபாக்கூர் பரிசுத்த ஆவி பெண் தெய்வ வழிபாட்டை அழிக்க கிறிஸ்தவ இறையியலின் வக்கிர வெறி உருவாக்கிய கீழ்த்தர அசிங்கம் மட்டுமே. இந்த லட்சணத்தில் குழந்தைகளை கொலை செய்யவும் பெண்கள் புருஷசம்போகத்தை அறிந்தார்களா என்று செக் பண்ணி அறியாதவர்களை எடுத்துக் கொண்டு புருஷ சம்போகம் அறிந்த பெண்களையும் ஆண்குழந்தைகள் முதல் வயோதிகர்களையும் கொலை செய்யவும் சொன்ன பொறுக்கி வெறியனான கிறிஸ்தவ கடவுளின் “பரிசுத்த” (த்த்த்தூ) ஆவியை தூஷணம் செய்யக் கூடாதாம் பாவமாம். அய்யா வேண்டுமென்றால் இந்த பரலோகத்துக்கு மரமண்டைக்கும் அவனுடைய ஏகபோக மகனுக்கும் அவனுடைய எல்லாவித ஆவிக்கும் நாங்கள் பாவமன்னிப்பு தருகிறோம். எங்கள் சுடலைமாட சுவாமி கோவில் பூசாரியின் காலடி மண்ணை தொழுது கண்டம் கண்டமாக அப்பாவி மக்களை கருவறுத்த கிறிஸ்தவம் என்கிற பாவம் தொலைய பாவமன்னிப்பு வாங்க சொல்லுங்கள்.

  19. //உம்மைப் போல என்னை மாற்றும்” என நான் ஜெபிப்பேன்//

    தண்ணியை தொட்டா சாராயமாறதுக்கும்…பெத்த தள்ளையை “போட்டி பொட்டச்சி”ன்னு திட்டிகிட்டு கண்ட பொம்பளையை வைச்சு (ஆமா வைச்சி.. நல்ல காலம் யூதாஸ் காலத்துல வீடியோ கேமிரா இல்லை) .வாசனை திரவியத்தால் காலை தேய்க்கிறதுக்கும் அப்புறம் ஆம்புளை சிஷ்யனை “beloved” அப்படீன்னு சொல்லி நெஞ்சில சாய்ச்சி கொஞ்சுறதுக்குமா…அடங்குகைய்யா….எல்லாவனும் ஏசு போல ஆனா எல்லாவனும் நித்தி போல ஆயிடுவாங்க என்ன ஒரே ஆறுதலான விசயம்னா சாருவுக்கு எக்கசக்க சாமியா கொட்டும் அதுனால ஐசிஐசிஐ பேங்க் அக்கவுண்டை ப்ளாக்ல போட்டு பாட்டுப்பாட வேண்டிய கஷ்டம் இருக்காது

  20. ஜடாயு அவர்களுக்கு நன்றி அருமையான கட்டுரை பதிவு அருமையான வீடியோ அராஜகத்தை கிருஸ்துவம் எவ்வாறு மழலை குழந்தைளுக்கு போதிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள். இப்படிபட்ட மணிதஇனத்தையே அழிக்கும் வெறுப்பு கருத்துக்களை தெடர்ந்து சர்சும் மதராஸாகளும் பரப்பிக்கொண்டிருக்கிறது. இவர்கள் எல்லாம் அமைதிமார்கம் என்று கூறிக்கொள்வதற்க்கு சற்றும் தகுதியற்றவர்கள்
    இன்று தமிழகத்தில் சட்டைகாரியின் கவுனுக்கு கீழ் வளர்ந்த ஒரு பெரும் அடிமை கூட்டம் வெறிபிடித்து அலைந்துகொண்டிருக்கிறது. கிருஸ்துவத்தால் இலங்கை தமிழ்இனம் கண்எதிரே அழிக்கப்பட்டதை பார்த்தும் தெளிவுஏற்படவில்லை. அப்படி ஒருநிலைக்கு தமிழகத்தை கொண்டுசெல்லும்வரையில் இவர்கள் ஒயமாட்டார்கள்.

  21. மதநல்லிணக்கணம் என்றால் என்ன ? ஒருவர் மதத்தை ஒருவர் குறை கூறாது பழித்து பேசாது அவர் அவர் வழியில் மணிதநேயத்துடன் அமைதியாக செல்லுவது ஆகும். அதைப்போல் ஒவ்வொரு மதத்தை சார்ந்தவர்களும் அவர்களது வழித்தோன்றல்கள் அவர்கள் மதத்தைபின்பற்றுவதையே இயற்கையாக விரும்புவார்கள். காரணம் அது ஒருபரம்பரையாக வந்த பண்பாடுகள் பழக்கவழக்கங்கள் பண்டிகைகொண்டாட்டங்கள் தெய்வ வழிபாட்டு வழிமுறைகள் என்று ஒருவழிவகைசெய்யப்பட்ட வாழ்கை முறையாகும்.
    எந்த ஒருமதமும் தங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள் என்றும் தஙகள் மதத்தைதான் எல்லோரும் பின்பற்றவேண்டும் என்றும் கட்டாயப்படுத்துவது அநாகரீகமான செயலாகும். பிரச்னையே எங்கள் மதத்திற்க்குத்தான் பலம் மதிப்பு அதிகம் என்று நிலைநிறுத்த கூவி கூவி காசுகொடுத்து ஆட்டுமந்தைபோல் கூட்டத்தைப்பெருக்குவது அப்பாவிமக்களை ஏமாற்றும் செயலே ஆகும். இப்படி ஒருஅரசியல் கட்சி கூட்டம் கூட்டுவது இயற்கை. ஆனால் எல்லாம்வல்ல கடவுளுக்கு இது தேவையா தேவை என்றால் அவர் சக்திவாய்ந்த கடவுளாக இருக்கமுடியுமா ? அவன் அவன் பாவத்தை அவன் அவன்தான் சுத்தகரிக்கவேண்டும் அடுத்தவன் பாவத்தை எப்பொழுதும் சுமப்பதற்க்கு ஒருகடவுள் உரிமையுடன் காத்துக்கொண்டிருந்தால் அது எல்லோரையும் எப்பொழுதுமே தொடர்ந்து பாவம் செய்ய தூண்டுவது என்பது உலகிலேயே பெரிய மகாபாவம் ஆகும்
    ஒருவன்தான் சார்ந்த மதத்திலிருந்து விலகி சொந்தவிருப்பத்துடன் மற்ற மதத்தின்மேல் பற்றுகொண்டு மதம்மாறினால் அதில் குறுக்கிட யாருக்கும் அதிகாரம்கிடையாது. ஆனால் அது சட்டத்தின் பார்வையில் நடைபெறவேண்டும். ஒருநீதிபதியின்முன் சத்தியபிரமாணமாக எடுக்கப்பட்டு பதிவு செய்யப்படவேண்டும். அவர் தன்வாக்குழூலத்தில் தான் எந்தஒரு வற்புறுதத்தினாலோ அல்லது பணம்பெற்றோ பொருள் உதவிசெய்வதாக ஆசைகாட்டியோ மதம் மாறவில்லை என்று உருதிசெய்யவேண்டும்.. அப்பொழுதே அவரது பிறப்புசான்றிதழையும் திருத்தம் செய்யவேண்டும்.
    எனக்குதெரிந்தவரையில் இப்படிவிரும்பி மதம்மாறியவர்கள் எண்ணிக்கை 5 சதவிகிதம்கூட இருக்க வாய்பில்லை. மேலும் பலர் சரியானகுடும்சூழல் இல்லாமையால் சமுகத்தில் ஒதுக்கப்பட்டு வெறுப்புற்று அரைமனதுடன் மதம்மாறியவர்கள். மற்றஎல்லோரும் பணத்தாசையால் நாட்டைகாட்டிக்கொடுக்க துணிந்த சுயநல கூட்டங்களே.
    சுதந்திரத்திற்முன் கத்திமுனையில் மதம்மாறியவர்களை நான்குறைகூறவில்லை. அவர்களது சந்ததிகள் இன்றும் நாட்டுபற்றுடன்தான் இருக்கிறார்கள். ஆனால் அதற்க்குபிறகு கிருஸ்துவம் நினைத்துக்கூட பார்கமுடியாத பல வழிமுறைகளைபின்பற்றி இன்றுவரை கீழ்தரமான மதமாற்றுசெயலில் ஈடுபட்டு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த ஈரமற்ற பாலைவனமதங்கள் இன்றுவரையில் உலகில் கொன்றுகுவித்த பிணக்குவியல் கணக்கிடமுடியாதது. உருதெரியாமல் அழித்த கலாசாரங்கள் கணக்கில் அடங்காதது. உலக சரித்திரங்களை தொடர்ந்து உருமாற்றம் செய்பவர்கள். இதுவே இன்று திருவள்ளுவரை ஆதிகிருஸ்துவர் என்றுதிரித்துகூறும் அளவிற்கு கொண்டுசென்றுள்ளது. இதையும் ஆமோதிக்கும் ஒரு மானம் கெட்ட பெரும் கூட்டம் இன்று தமிழ்நாட்டில் உள்ளது.. இவர்களது நம்பகதன்மை மிகபெரிய கேள்விகுறியேயாகும் ? மத மாற்றம் செய்ய எப்படி எப்படி எல்லாம் பொய்களையும் ஏமாற்றுவழிகளையும் பின்பற்றலாம் என்று புத்தம்போட்டு அதன்வழிநடப்பவர்கள். மகாத்மாகாந்தி்க்கே இவர்கள் நம்பிக்கை துரோகம் செய்தவர்கள். இவர்களிடம் மத நல்லிணக்கணம் பேசுவது வீணான முயற்சியே

  22. வாழ்க வளமுடன்
    அநேக கிருஸ்துவர்களிடம் இந்த மாதிரிதான் எண்ணம் உள்ளது நேற்று எனக்கு ஒரு கிறிஸ்துவ நண்பரிடம் இருந்து ஒரு பைபிள் கொடுத்தார்கள் நான் அதை வாங்கிகொண்டேன் ஆனால் இவர்கள் எப்பொழுதும் அவர் மாறினார் இவர் மாறினார் என்று கூறி கொள்கிறார்கள் ஆனால் இவர்கள் எப்பொழுதும் ஆட்கள் சேர்க்கும் கூடம் போல் தெரிகிறது நான் ஒரு இறை நம்பிக்கை உள்ளவன் வேதாத்திரி மகரிஷி அவர்களின் தவ பயிற்சி செய்து வருபவன் உங்கள் பதிவு ஒரு தமிழ் இந்துவின் குரலாக நான் பார்கிறேன்

    நன்றி
    வாழ்க வளமுடன்
    நடேசன் துபாய்

  23. வெகு நாட்களாக மௌனம் சாதித்து இப்பொழுது அந்த மௌனத்தை உடைக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று தோன்றுகிறது.

    வெறி பிடித்த பாலைவனத்து காட்டுமிராண்டியர் சனாதன தருமத்தின் கருத்துக்களை அரையும் குறையுமாகக் folklore ரீதியில் கேட்டுவிட்டு, அந்த அரைகுறை அறிவையும் தங்கள் இஷ்டம்போல திருத்திக் கூறி, அத்தொடும் நில்லாமல் இங்கும் அங்கும் ஆபாசமான எண்ணங்களை நுழைத்து கூறப்பட்ட காட்டுமிராண்டி கலாச்சாரத்தின் வெளிப்பாடே “பழைய ஏற்பாடு” என்னும் புத்தகம் [உதாரணம்: a. கடவுள் ஆதி தம்பதியினரை “மூடர்கலாகவே இருங்கள். ஞானத்தைத் தேடிச் சென்றால் கீழே தள்ளி விடுவேன்”; b. சகோதரர்கள் இருவர் (காய்ந் மற்றும் ஏபெல்) சமமாக தன்மீது அன்பு வைக்க, அவர்களிடம் பாரபட்சத்தைக் காண்பித்து அவர்களுக்குள் சண்டையை மூட்டியது; c. “உன்னுடைய பிள்ளையை பலியாக எனக்குக் கொடு”; d. “கானானிய தேசத்தில் உள்ள மக்களை அடியோடு கொன்று விடு. பெண், குழந்தை, சிசு, என்று வித்தியாசம் பார்க்காதே. ஒரு புழு பூச்சி புல் பூண்டு விடாமல் படுகொலை செய்து விடுங்கள்”]. இந்த காட்டுமிராண்டி வர்கத்தின் வெளிப்பாடு அவர்களுடைய புத்தகத்தோடு நில்லாமல், வரலாறு முழுவதும் ரத்தத்தால் இவர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். குரூசெடுகள், யூத இனத்தவர்கள் மீது அளவில்லாத காழ்ப்புணர்ச்சியும் அவர்களைப் புறக்கணித்தது, ஹிட்லருக்கு ஆதரவளித்தது, inquisition, அட்லாண்டிக் slave trade, ஆப்பிரிக்க-ஆஸ்திரேலிய-அமெரிக்க தேசங்களில் வாழ்ந்த பழன்குடியினரைப் பல வகையாக துன்புறுத்தி அவர்கள் சமுதாயத்தை சீர்குலைத்தது, முதலிய எண்ணிலடங்கா சில்மிஷங்களைச் செய்தவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? அந்த மதம் அவர்களை ஏன் திருத்துவதில் வெற்றி அடையவில்லை? நமது தேவர் ஏன் ஒரு அப்பாவியின் அப்பாவி மகனைப் பலியாகக் கேட்டார்? என் சிசு, பெண், வயதானவர் என்று கூடக் கருணை காட்டாமல் ஒரு வம்சத்தையும் ஒரு இனத்தையும் ஒரு நாட்டையுமே அழித்து தரைமட்டமாக்கச் சொன்னார்?- இத்தகைய சுய-ஆராய்ச்சியைச் (self-evaluation and reparation) செய்யாமல் “சூரியனைப் பார்த்து நாய் குலைப்பது” என்று சொல்வார்களே, அதைப்போல ஒரு கிறித்துவ நண்பர் சனாதன தருமத்தை எள்ளி நகைப்பதைப் பார்த்தால் என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை.

    சனாதன தருமம் தந்த ஆதரவையும், அரவணைப்பையும் இவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டுவிட்டு இரண்டு காலில் சொந்தமாக நிற்க வாய்ப்பு வந்ததும் அதை சீரழிக்க முயன்று வருகின்றனர். ஒரு கற்புக்கரசியின் கேட்டுப் போன பிள்ளை அவளை “நீ ஒரு விபச்சாரி” என்று வாய்க்கு வந்தபடி திட்டுவது போல உள்ளது இந்த ‘இந்தியக்’ கிருத்துவர் கூறுவது!

    இது ஒரு கண்டனக் கட்டுரையே. இதற்கு பதில் எழுதினால் நான் அதற்கு மீண்டும் பதிலை எழுதி இந்த அறிவிலிகளின் மதத்தைச் செர்ந்தவரோடு வாதம் புரிவேன் என்று எண்ண வேண்டாம்.

    //
    தனபால் அவர்களே,உங்களது இந்த கருத்தைப் படித்தவுடனே எனக்கு பீஷ்மரின் (அம்புப் படுக்கை) இறுதிக்கட்டமே நினைவுக்கு வந்தது;மேலும் கர்ணனை (கண்ணனின் சூழ்ச்சி) நினைத்து சிறுவயதில் அழுதிருக்கிறேன்;
    //

    ஆமாம், கானானிய குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், ஊனமுற்ற-நோயுற்ற-வயோதிகர்களுக்கும் கருணை காட்டாமல் அவர்களை தங்கள் காட்டுமிராண்டி skydaddy அழிக்கச் சொன்ன கதையைக் கேட்டு இவருக்குக் கண்ணீர் வரவில்லை போலும்!!

    பீஷ்மருக்கு என்ன குறைவு? அவர் பல அரிய பெரிய தர்மங்களை யுதிஷ்டிரனுக்கு விளக்கி, இறுதியில் நற்கதிக்குச் சென்றதாகவே மகாபாரதத்தில் உள்ளது.

    ஒரு கய வஞ்சக கொடுமைக்காரனை “என்ன ஆனாலும் இவனையே நண்பனாகக் கட்டிண்டு அழுவேன், என்ன அதர்மம் செய்தாலும் இவனுக்கே வக்காலத்து வாங்குவேன்” என்று மூடத்தனமாகவும் பிடிவாதமாகவும் ஒருவன் செயல்பட்டால் அவன் கதி என்ன ஆகவேண்டும், நியாயமாகப் பார்த்தால்? ஹிட்லர போடும் சோறை தின்று கொழுத்து, அவனுக்கு அடிபணிந்த வெட்கம்கெட்ட நாய்களுக்கு என்ன நியாயம் சொல்லுவீர்களோ, அந்த நியாயம் தான் கர்ணனுக்கும். இன்னும் சொல்லப்போனால், கண்ணன் கர்ணனிடமும், துர்யோதனநிடமும், ஏன், பஞ்ச-பாண்டவர்களிடமும் சற்று lenience காட்டியதாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.

    கண்ணனை ‘சூழ்ச்சிக்காரன்’ என்றெல்லாம் கூறும் இவர், பகவத் கீதையை ஒரு முறையும் படித்ததில்லை என்று தெரியவருகிறது. “சமோஹம் சர்வ-பூதேஷு”, “அத்வேஷ்டா சர்வ-பூதானாம்”, “நெறி தவறி விழுந்தாலும் ஒருவன் அதற்கு முன் செய்த நன்மைகள் பயனற்றுப் போய்விடாது” போன்ற கண்ணனின் கூற்றுக்களை இவர் படித்ததே இல்லை; இவர் மதத்திலும் இத்தகைய சத்-விஷயங்கள் அடியோடு இல்லை. ஒவ்வொரு ஆன்மாவின் தகுதிக்கேற்ப மெது-மெதுவே அந்த ஆன்மாவை personal tutor போல அவனுக்கு மருந்தும் (தண்டனை, நரகம் முதலியவற்றை சில காலம் அனுபவிக்கச் செய்து பாவ கர்மாக்களை குறைத்து வைத்தல்), மிட்டாயும் (புன்யங்களை அனுபவிக்கச் செய்தல்) கொடுத்து, இதெல்லாம் கழிந்து இறுதியில் தன் சங்கல்பத்தாலே, நிர்ஹெதுக கிருபையாலே, தனது அன்பு மாணவர்களாகிய ஒவ்வொரு ஜீவான்மாவையும், “எனக்கு சம்சாரத்தின் மீது இனி இஷ்டம் இல்லை. உன்னையே சரணடைகிறேன்” என்று கூற வைத்து, “இவன் என்னை வேண்டாம் என்று ஒதுக்கினாலும், நான் இவனை விடத் தயாராக இல்லை” என்று சங்கல்பித்து அவனுக்கு மோட்சத்தையே அளிக்கும் பரந்த மனப்பான்மை படைத்த கடவுளைக் கண்டு ‘சூழ்ச்சிக்காரன்’ என்று கூறுவது எத்தகைய அட்டூழியம்! ஆக்கிரமிப்புக்கும், அட்டூழியத்திற்குமே பேர் போன இவர்களுக்கு இதெல்லாம் புரியப் போவதும் இல்லை. கண்ணன் தான் இவரைக் காப்பாற்ற வேண்டும்.

    சாண்டில்ய ச்மிருதியில் ஒரு திருஷ்டாந்தம் உள்ளது. அது சொல்வதாவது, “நமது நூல்களைத் தவறாக அணுகுபவருக்கு தவறான அர்த்தன்களே கண்ணுக்குத் தெரியும்” என்று. “மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்” என்று சொல்வார்களே, அதைப்போலத்தான். இந்த chillsam-இன் மறுமொழியும் அந்தப் பாணியிலே தான் சேரும்.

    ஆன்மா என்ற ஒன்றை ஒத்துக் கொண்டால் “மறுபிறப்பு, கர்மா” முதலிய சித்தாந்த விஷயங்களை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும். மேலும் அந்த ஆன்மா அநாதி என்னும் உண்மையும் அதிலிருந்து விளங்கும். இவர்களது மூட மதம் இத்தகைய ஆழ்ந்த சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கவும் இல்லை. இதையெல்லாம் காணாமல் அம்மதத்தைச் சேர்ந்த ஒருவர், அயலாரைக் குறை கூறுவது வேடிக்கை. முதலில் ஒருவர் தத்தம் வீடுகளில் உள்ள மலத்தை நீக்க வேண்டும். அதை நீக்காமல், “பக்கத்து வீட்டுக் காரன் குப்பைத் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வருகிறது” என்று இவர் கூறுகிறார்.

    கட்டுரை வெளிவந்ததன் காரணம், ஹிந்துக்களையும், அவர்களது நம்பிக்கையையும் வேண்டுமென்றே இவர்கள் தவறாக விமர்சனம் செய்ததன் காரணமே. இது இல்லாவிடில் கிறித்தவர்களுடன் நட்பு கொண்டு அனைவரும் சேர்ந்து பொது நன்மைக்குப் பாடுபட சராசரி இந்து என்றுமே தயார் (இந்த விஷயத்தை exploit செய்ததால் தான் இவர்கள் தற்போது பேயாட்டம் ஆடுகின்றனர்). எத்தனை இந்து உபஞாசங்களில், இந்துக் கோயில்களில் கிறித்தவ மதத்தைப் பற்றிய ஆபாசமான விமர்சனங்கள் செய்யப்படுகின்றன? Pamphlet-கள் distribute செய்யப்படுகின்றன? இதை எல்லாம் சிந்தித்துப் பார்க்க இந்த chillsam-க்கு மனம் இடம் கொடுக்குமா?

  24. // இந்தியா என்ற நாட்டை உருவாக்கித் தந்த வெள்ளையனை நாம் மறக்கக்கூடாது..! //

    மேகச்தநீசும், பா-ஹியேனும், யுவாங்-சுவாங்கும், அல்-பிருனியும் மேலும் பல நூறு யவன-ரோம-சீன-அரபிய-பாரசீக வணிகர்களும் படையெடுக்க வந்த தளபதிகளும் நாட்டின் செழிப்பையும், கலாச்சாரத்தையும், மேன்மையையும் கண்டு பிரமித்ததும், அவர்களால் “indica” முதலிய வரலாற்று ஆவணங்களில் “உலகத்திலேயே அயல் நாடுகள் மீது படை எடுக்காத ஒரே சாத்வீக நாடு”, “Slavery இல்லாத ஒரே நாடு”, “ஞானிகள் வாழும் நாடு”, என்றெல்லாம் போற்றிக் கொண்டாடப்பட்டது “alice in wonderland” என்று இவர் சொல்வார் போலும்! இதுவும் பெற்ற தாயின் கற்பை கேள்வி கேட்கும் துஷ்ட மகன் பாணி தான்.

  25. கண்டனத்தின் தொடர்ச்சி…

    ‘பழைய ஏற்பாடு’ புத்தகத்தையும், ‘சூழ்ச்சிக்கார’ கண்ணனுடைய வாக்கையும் சற்று நேருக்கு நேர் வைத்துப் பார்த்தால் தெரியும் ‘பரிசுத்த ஆவியின்’ உண்மை நிலை:

    ‘கர்த்தருடைய’ செயல்:

    கையின் (Cain) தன்னுடைய நிலத்தில் விளைந்த பழங்களை ‘கர்த்தருக்குக்’ காணிக்கையாகக் கொண்டு வந்தார். ஏபெல் (Abel) தன்னுடைய ஆட்டுக்கூட்டத்தில் இருந்து முதல் கன்றுகளை காணிக்கையாகக் கொண்டு வந்தார். ‘கர்த்தருக்கு’ ஏபெல் மேலும், அவன் தந்த பலி ஆடுகள் மேலும் தான் ஆசை இருந்தது. (Genesis, 4-ஆம் அத்தியாயம்).

    கண்ணன் வாக்கு:

    “இல்லை, பூ, பழம், நீர் இதில் ஏதேனும் ஒன்றை ஒருவன் பக்தியுடன் எனக்கு சமர்ப்பித்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அருள் புரிவேன்”. (கீதை, 9.26)

  26. Mr .Chilsam ,

    சும்மா கலக்கிட்டிங்க! ஆனா,இதை எல்லாம் படிச்சா கூட நிறைய ஹிந்துவுக்கு சொரணை இல்லாமல் இருக்கிறது தான் ஹிந்து மதம் ஓவரா கத்து குடுத்திட்ட அஹிம்சையின் பலவீனம்.

    உங்களை மாதிரி கேப்(Cap) மாறிங்க நெறையபேர் இந்த ஹிந்து மதத்தையும்,ஹிந்துவையும் திட்னா தான் கொஞ்சம் பேருக்காவது உரைச்சி ஒரு பெண்ணுக்கு கல்யாணத்துக்கு முன்னால தகாத முறைல பொறந்து தன்னை கடவுளின் மகன் என்று பீதற்றி கொண்ட, விலைமாதுவின் சகவாசம் வெச்சுருந்த ஒருத்தனைப் பாராட்டுவதை எதிர்க்க வருவாங்க.உங்க சேவை தொடரட்டும்.

    [Edited and published]

  27. //
    எங்கு திரும்பினாலும் ஒரு கல்லை நட்டுவைத்துவிட்டு ஜனங்களை மிரட்டிக்கொண்டிருக்கும் திருடர்கள் யார்?
    //

    கிறித்தவ மினிஸ்டர்-களே. சிலுவை வடிவில் கல்லை நாடுகிறார்கள்.

    //
    ஏழை எளிய மக்களின் பக்தியையும் வாழ்வியல் அச்சங்களையும் காசாக்கி கசக்கிப் பிழியும் கொள்ளையர்கள் யார் என்பது தெரியாதோ?தோஷம் என மிரட்டுவதும் பரிகாரம் செய்தவுடன் தோஷம் விலகிவிட்டதாக வேஷமிடுவதும் பூஜாரிகளும் சந்நியாசிகளும் மந்திரவாதிகளும் குறிசொல்லிப்பிழைக்கும் முன்னாள் விபச்சாரிகளே..!
    //

    ‘Miracle காட்டுகிறேன் (ஹையா, மேஜிக்!), இதோ பாருங்கள்’, ‘உங்கள் வாழ்க்கை இனி சூப்பராக இருக்கும்’, ‘வாருங்கள், உங்களை குணப்படுத்துகிறேன்’ என்று மயக்கி பல பாலியல் குற்றங்களைப் புரியும் கபட வேடதாரி ‘ஹோலி ஸ்பிரிட்’-இன் pimps-ஐ இவர் கண்ணிருந்தும் காணாமல் இருப்பது போல நடிக்கிறார்.

    //
    ஒன் (கல்லு)சாமிய தரிசிக்க பணம் கேட்கிறாய்,சிருஷ்டிக் கர்த்தாவை தரிசிக்க பணம் கொடுக்கிறேன்,யாரையா மோசடி பேர்வழி..?
    //

    கோயில் வழிபாடு பற்றியும், விக்ரஹத்தின் மாஹாத்ம்யத்தைப் பற்றியும் சற்றும் கேள்விப்படாத ஆபிரகாமிய அறிவிலிகளின் தூஷணை இது. சரி, கல்லாகவே இருக்கட்டும். ஒரு மரக்கட்டையில் குருக்கவும் நெடுக்கவும் தொங்கும் பிணத்தை வணங்குவதை விட, கண் குளிரச் செய்யும் அலங்காரங்களுடன் கூடிய ஒரு கல் வடிவம் எவ்வளவோ பரவாயில்லை!

    ஏதோ ‘சிருஷ்டி’, ‘கர்த்தா’ போன்ற கான்செப்ட்-களை எல்லாம் ஆபிரகாமிய (காட்டுமிராண்டிக்) கலாச்சாரம் தான் கண்டுபிடித்ததாக எழுதுவது வேடிக்கை. ரிக் வேதத்தின் விஸ்வகர்மா சூக்தம் எல்லாம் உமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கண்டபடி எங்கள் புத்தகங்களிலிருந்து கான்டெக்ஸ்ட்-க்கு ஒட்டாத மேற்கோள்களை காட்டி எண்களை தீயவர்களாக சித்தரிக்கும் முயற்சியிலிருந்து சற்று விலகி நடுநிலை நின்று அந்நூல்களைப் படித்தால் அன்றோ உமக்கு இதெல்லாம் புலப்படும்!

    //
    திருப்பதிக்குச் செல்லும் சாலையோரங்களில் குழந்தையையும் குட்டியையும் வைத்துக்கொண்டும் குடும்பங்கள் தவிப்பது அந்த சாமிக்குத் தெரியாதா?ஒரு நாளாவது அந்த அசையாத‌- உயிரற்ற- அலங்கரிக்கப்பட்ட கல்லாக சமைந்துவிட்ட -பெரிய‌வன் அந்த ஏழை பக்தர்கள் கனவில் வந்து என்னைத் தேடி ஏன் இவ்வளவு தூரம் வந்தாய் நான் உனக்குள் தானே இருக்கிறேன் என்று சொன்னதுண்டாடா
    //

    கோயில் அபிகமனம், புனித யாத்திரை, பூஜை, முதலியவற்றின் மகிமை புரியாமல் எழுந்த உளறல் தான் இது. என் விரல்கள் தட்டி எழுதக் கூட கூசும்படியான குற்றங்களை சிறு பிள்ளைகளின் மேல் எப்படி செய்யலாம் என்று சதா திட்டம் போட்டுக் கொண்டு இருக்கும் hyena-க்களின் சஹாவாசமும் போதனையும் பெற்ற இவர்கள் இவ்விஷயங்களை ஒரு நாளும் உணரப்போவதில்லை.

    //
    அல்லது பணத்தினால் என்னை வாங்கமுடியாது என்று இலஞ்சப்பணத்தையும் ஏழைகளின் இரத்தக்கறை படிந்த வட்டிப்பணத்தையும் பெற மறுத்ததுண்டா?
    //

    முந்திய பத்தியில் கூறப்பட்ட மிநிச்டர்களையும், பாதிரியார்களையும் ‘இவர்கள் குற்றவாளிகள்’ என்று காட்டிக் கொடுத்து, அவர்களுடைய வழிபாட்டு சர்வீஸ்-களை உங்கள் கர்த்தர் என்றாவது மறுத்ததுண்டா? சரி, எது இல்லையோ இருக்கோ, குறைந்த பட்சம் உங்கள் ‘பரிசுத்த ஆவியினால்’ ஒரு நாளாவது இட்லியையாவது வேக வைக்க முடிந்ததா?

    //
    அதுபோலவே இந்த உலகைப் படைத்த “யாவே” கடவுள் ஒரு நாளை நியமித்து அந்த நாளில் இந்த உலகை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார்;
    //

    ‘அழிக்க’ என்று எழுத கை கூசி ‘மாற்றி அமைக்க’ என்று euphemistic-ஆக எழுதுகிறீர்கள் போல. ஏன் கை கூசுகிறது என்பது உங்களுக்கும், ஆண்டவனுக்கும் தான் தெரியும் (உங்களுடைய ‘கர்த்தருக்குத்’ தெரியாது).

    //
    சிருஷ்டிகர் என்ற முறையில் அவருக்கு எல்லா உரிமையும் உண்டு;இதற்கான எச்சரிப்பின் அடையாளமாகவே எரிமலையும் பூகம்பமும் சுனாமியும் கட்டளையிடப்பட்டது;இவற்றை அவர் செய்யாவிட்டால் பின்னை யார் செய்தது?
    //

    ஆஹா, அற்புதம்! என்ன பரிவு உங்கள் கர்த்தாவுக்கு! கோபம வந்து தன்னைத் தானே அடக்கிக் கொள்ள முடியாமல், அத்து மீறி பல natural calamities-ஐ செய்து அப்பாவி மக்களும், பிறந்த குழந்தையும், பிறவாத சிசுவும், துன்பப்பட வைப்பது உங்கள் ‘அன்புக் கர்த்தர்’ தானோ? இதற்கு என்ன சமாதானமோ? (இது உங்கள் ‘கர்த்தருக்குத்’ தான் தெரியும் என்று நினைக்கிறேன் – i concede this). அநாதி காலமாக வழங்கப்பட்டு வருகின்ற கர்மா, மறுபிறப்பு முதலிய சனாதன தருமக் கொள்கைகளை ஏற்க மனமில்லாமல், ‘ஒரே பிறப்பு தான் அனைவர்க்கும், இல்லாத ஆன்மாக்களை ஒருவன் படைத்தான், தன்னுடைய வானுலகத்தில் இருந்தே மனிதர்களை கீழே தள்ளினான்’ என்ற பொருந்தாத கொள்கையை எற்பதனால் பல விஷயங்களுக்கு உங்களால் என்றுமே சமாதானம் கூற முடியாமல், திக்கித் தவித்துத் திணறி சருக்கித் தடுக்கிக் கொண்டு இருப்பீர்கள் என்று தெரிகிறது.

    //
    இதெல்லாம் விஞ்ஞானமய்யா என ஆராய்ச்சி செய்துக்கொண்டிருப்போரும் சேர்ந்து உயிர்தப்ப ஓடுவர்;
    //

    விஞானம் என்றாலே ஓடி ஒளியும் பக்ஷத்தின் கடுப்பை நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் இதில். விஞானத்தை தைரியத்துடனும், நடுநிலையுடனும் நோக்கும் மனமில்லாமல், ‘fossil-களை நம்முடைய கர்த்தர் தான் வேண்டுமென்றே நம்முடைய நம்பிக்கையை சோதிப்பதற்காக வைத்துள்ளார்’ போன்ற பல அற்புத விளக்கங்களை இட்டுக்கட்டி அளிக்கும் பக்ஷம் அன்றோ உமது!

    //
    கர்வம் பிடிச்ச டெட் (dead)கர்விதா, நான் டூட் (dude) என்பதால் நீ கவலைப்படவேண்டாம்;மானங்கெட்டுப் போய் ஆங்கிலேயன் காலை நக்கி அவன் மொழிய கத்துகிட்டு அவனுக்கு சொம்படிக்கப் போன உன்னை மாதிரி ஆளுங்கள விட சரியான கல்வியறிவு பெறமுடியாவிட்டாலும் சுயமுயற்சியினால் முன்னேறி என் மக்களுக்கே சேவை செய்யும் எண்ணற்ற தேச பக்தர்கள் இங்கே உண்டு;அவன் கலக்கிக் கொடுத்த பீரை குடிச்சிட்டு அவனுடைய நாத்தம் பிடிச்ச டையைக் கட்டிக்கிட்டு புனிதக் கலையான பரதத்தையும் சங்கீதத்தையும் வைத்து விபச்சாரம் பண்ணும் மேட்டுக்குடி பொறுக்கிகளைவிட நாங்கள் ஒன்றும் குறைந்துபோகவில்லை;
    //

    மனதில் இருக்கும் காழ்ப்புணர்ச்சிச் சாக்கடையின் மடை உண்டைந்து விட்டது போலும், அந்தோ! damage control-ஆவது செய்யுங்கள்.

    //
    “உம்மைப் போல என்னை மாற்றும்” என நான் ஜெபிப்பேன்;இதுபோன்றதொரு ஜெபத்தை எந்த ஒரு இந்துவும் அனுமனையோ யானை முகத்தையுடையவனையோ நோக்கி செய்யமுடியாது;அப்படி நடந்துவிட்டால் காட்டிலாகா அதிகாரிகள் வந்து உங்கள் பெற்றோரை கைது செய்துவிடுவார்கள்;உங்க வீட்டுல ஆறு விரலுடன் ஒரு பெண பிறந்தால் ராசியானது என்பீர்கள்;ஆறு கையுடன் பிறந்தால்..?
    //

    இதை அறிவாளிகள் கண்டால் சிரிப்பார்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

  28. உலகத்திலேயே ஒருநாட்டின் செல்வம் மொத்தாமாக சுரண்டலுக்கு ஆளான நாடு இந்தியாதான். இந்த கொள்ளையை அடித்தது ஈஸ்ட்இந்தியா என்ற கிருஸ்துவ கம்பெனிதான். இங்குள்ள வளம்கொழுத்த கனிமங்களை மலிவு விலையில் இறக்குமதி செய்து சாற்றை உருஞ்சிக்கொண்டு சக்கையை அதிகவிலைக்கு விற்கும் நாடுகள் எல்லாம் கிருஸ்துவ நாடுகளே ஆகும். அவன் நமக்கு ஆங்கிலம் கற்றுதரவில்லை என்றால் அவனால் இங்கு 150 ஆண்டுகாலம் கோலோச்சி ஆட்சி நடத்தியிருக்க முடியாது. எனவே முளை சலவை செய்யப்பட்ட மதம் மாறிய கிருஸ்துவர்களே உங்கள் அடிமை புத்தியை அகற்றுங்கள். இந்த அடிமைதனத்திற்க்கு பேர்தான் ”பகுத்தறிவா” “செல்பு ரெஸ்பெக்ட் மூவ்மெண்டா” உருவ வழிபாடு தவறு என்று சொல்லிக்கொண்டே தெருகோடியில் எல்லாம் இப்பொழுது மாதா சிலை முளைத்துக்கொண்டிருக்கிறது.

  29. //Gantharvan
    கண்ணன் வாக்கு:

    “இல்லை, பூ, பழம், நீர் இதில் ஏதேனும் ஒன்றை ஒருவன் பக்தியுடன் எனக்கு சமர்ப்பித்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அருள் புரிவேன்”. (கீதை, 9.26)//

    இதை இங்கு படிக்கும் போது ஒரு சுவையான நிகழ்ச்சி பற்றி கேட்ட நினைவு. ஒரு முறை, நாகை சவுந்தரராஜ பெருமாள் வீதி உலா நடக்கும் பொழுது, அவரவர் வீடு வாயிலில், தேங்காய், பூ,பழம்,வெற்றிலை பாக்கு,கற்கண்டு என்று அவரவர் சக்திக்கு ஏற்ப காணிக்கையாய் (காளாஞ்சி எடுத்தல் என்று இதற்கு பெயர்) குடுத்து கொண்டுஇருக்க, ஒருவர் மட்டும் வெறுமனே கையை கூப்பிக்கொண்டு ஒன்றுமே கொடாமல் நிற்க!! பெருமாள் “ஏனப்பா!! அவரவர் பூ, பழம்,கற்கண்டு என்று கொடுத்து கொண்டு இருக்க நீ வெறுமனே நிற்பது என்? ஒரு இலை கூட சமர்பிக்க இயலவில்லையா?” என கேட்க. அதற்கு அந்த பக்தரோ “கண்ணா!! பரம்பொருளே!!, காருண்ய தயை கொண்டவனே!! இவையெல்லாம் கொடுபதற்கு இல்லை இப்பொழுது உன்னிடம் என் தூய்மையும் பக்தியும் நிறைந்த மனதை உன் திருவடி காணிக்கை ஆக்குகிறேன். ஏன் எனில் இவற்றை கிருஷ்ணாவதார காலத்தில் உன் பக்தர்களிடமும்,மெய் அடியார்களிடமும் நீ இழந்தாய்” என்று கூறினாராம். பெருமாளும் சிரித்துகொண்டே தன் இன்னருளை அந்த அடியவர்க்கு அருளினார். ஆக
    இலை, பூ, பழம், நீர் எதுவும் குடுக்க இயலையேனும் தன் தூய பக்தி நிறைந்த மனதை பகவானிடம் செலுத்தினாலே அவர் மகிழ்வார்.

    பொன்னால் விக்ரகம் செய்து இரத்தின மண்டபம் கட்டி, தூப,தீப,பொற்றாமரை பூ, முந்திரி,திராட்சை,வைர அலங்காரம், செய்த அரசனுக்கு முன்னர், மண்ணாலான சிறிய உருவமும், மண்ணால் செய்யப்பட்ட பூக்களையும், வெறும் மண்பாண்டத்தில் கொஞ்சம் தினைமாவும்,பழமும் படைத்த நம்பிகள் என்கிற குயவரின் பக்தியை தினமும் ஏற்று, கடைசியில் புஷ்பக விமானதில் சகல மரியாதைகளோடு மன்னனுக்கு முன்னராகவே வைகுண்ட பதவியை கொடுத்த அந்த மலையப்ப பெருமாளை !! ஏதோ spectrum ஊழல் செய்த ராசா போல் வர்ணிக்க எப்படி ஐயா chillsam உமக்கு மனது!!?? சோனியா,raul ,bianca போன்ற போபர்ஸ் முதலைகளின் பணமும், கடைகோடி வீட்டு தாமஸ் பணமும் எஸ்ரா சற்குணத்துக்கு difference செய்து கர்த்தரிடம் சமர்பிக்காமல் சோனியாவின் பணத்தை தூக்கி erivaaro? ?

  30. மேலை நாடுகளின் ராணுவம் நான்கு பிரிவுகளைக் கொண்டது ; அவையாவன- தரைப் படை,கப்பல் படை,விமானப் படை மற்றும் சர்ச் என்று ஜெ. சீ .குமரப்பா என்ற சரித்திர ஆசிரியர் கூறியுள்ளார் .
    ஏனென்றால் சர்ச் அதன் தொடக்க முதலே ஆன்மீகத்துக்குச் சிறிதும் சம்மந்தம் இல்லாத நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டு வந்துள்ளது
    மதத்தின் பெயரால் அது செய்த அக்கிரமங்களுக்கு அளவே இல்லை

    சிலுவைப் போர்கள் என்ற பெயரில் பெரும் அளவிலான மக்கள் கொல்லப் பட்டனர்.
    சர்ச்சின் பல முட்டாள்தனமான கொள்கைகளுக்கு எதிராக இருந்ததனால் கோபெர்நிகிஸ், கலிலியோ முதலிய பெரும் விஞ்ஞானிகள் கூட தங்கள் விஞ்ஞான கண்டு பிடிப்புகளை அவர்கள் காலத்தில் வெளியிட முடியவில்லை .
    ஐரோப்பாவில் சர்ச்சின் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக உண்மை பேசுபவர்கள் கொல்லப் பட்டனர். பல பெண்கள் சூனியக் காரிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப் பட்டனர்.
    பாவ மன்னிப்பு என்ற பெயரில் ஏழைகளின் பணம் சுரண்டப் பட்டது இதை எதிர்த்து மார்ட்டின் லூதர் ப்ராடஸ்டன்ட் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார் .அதுவே கிறித்தவத்தின் மற்றொரு கிளையாக மாறியது .

    தென் அமெரிக்காவில் மிக முன்னேறிய நிலையில் இருந்த மாயா, இன்கா நாகரிகங்களை மிக மூர்க்கமாக அழித்து அவர்களின் நூல்களையும் எரித்து அந்த நாகரிகங்களின் சுவடே தெரியாமல் செய்தது ஸ்பெயின் நாட்டிலிருந்து குடியேறிச் சென்ற கிறித்தவ மிஷனரிகள்.

    ஆப்பிரிக்கக் கண்டத்தில் நுழைந்த மிஷனரிகள் அங்கு மக்கள் காலம் காலமாக பின் பற்றி வந்த எளிய வழிபாடு முறையான ‘அனிமிசம்’ என்ற சமயத்தை முற்றிலுமாக அழித்தனர்.
    மேலும் அவர்கள் வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்,மற்றும் கனிம வளங்களைச் சூறையாடும் மேற்கத்திய பெரும் பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒத்து ஊதும் வேலை செய்தனர் .

    அதனால் தான் ஆப்பிரிக்காவில் ஒரு பழ மொழி உண்டு.
    ‘வெள்ளைக்காரன் இங்கு வந்த போது அவன் கையிலே பைபிளும் நம் கையில் நிலமும் இருந்தது ஆனால் இப்போது அவன் கையில் நிலமும் நம் கையில் பைபிளும் உள்ளது ‘

    மேலும் தென் அமெரிக்காவில் பல நாடுகளில் அரசுகளையே கூட கவிழச் செய்யும் அளவுக்கு சர்ச்சின் ஆதிக்கம் உள்ளது .
    மேலும் போதை மருந்து கடத்தும் கும்பல்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூட செய்திகள் வந்தன
    ஒரு நாட்டில் அமைதியையும் ஒற்றுமையையும் தந்திரமாகக் குலைத்து உள்நாட்டுக் கலகங்கள் விளைவிப்பது போன்றவைகளையும் அவர்கள் செய்வதாக குற்றச்சாட்டு உண்டு .
    எல் டி டி யை ஆதரிப்பது, மாவோயிஸ்டுகள் மற்றும் நாகா போராளிகளை ஆதரிப்பது இவை சில உதாரணங்கள்

    நம் நாட்டில் கோவாவில் போர்ச்சுகீசியர் ஆட்சியில் ‘இன்குவிசிஷன்’. என்று கூறப்படும் மிக அக்கிரமமான,அராஜகமான தாக்குதலில் ஏராளமான ஹிந்துக்கள் கொல்லப் பட்டனர்; அவர்களது ஆலயங்கள் இடிக்கப் பட்டன;அவர்கள் மீது பற்பல கொடுமைகள், அநியாய சட்டங்கள் ஏவப்பட்டன; அவர்களுக்கு மத உரிமைகள் மறுக்கப் பட்டன,ஏராளமான ஹிந்துக்கள் கிறித்தவத்துக்கு மற்றப் பட்டனர்

    புதுச்சேரியில் பிரெஞ்சு கிறித்தவ ஆட்சியில் ஹிந்துக்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்தன
    கவர்னர் டூப்ளேவின் துபாஷாக இருந்த ஆனந்த ரங்கம் பிள்ளை என்பவரது நாட்குறிப்பு, எவ்வாறு அங்கிருந்த வேதபுரீஸ்வரர் ஆலயம் கிறித்தவ வெறியர்களால் தரை மட்டமாகப் பட்டது என்பதை விளக்குகிறது.
    எனவே கிறித்தவம் என்பது ஒரு மிகப் பெரிய காலனி ஆதிக்க கட்டியன்காரனாக மாற்றப் பட்டுள்ளது .
    இதை ஒவ்வொரு ஹிந்துவும் புரிந்து கொள்ள வேண்டும்

    இரா.ஸ்ரீதரன்

  31. கந்தர்வன் அவர்கள் மேலும் பல எழுத வேண்டும். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. PP அவர்களும் சரியான கூற்றே!
    இயேசு என்பவன் பிறந்தது கடவுளால் 13 வயது பெண்ணை வேறொருவனை மணம் செய்ய முடிவு செய்தவளை வற்புறுத்தி கருவுருக்க செய்ததாகவும் பிறகு அந்த மனிதனை கொன்று இந்த உலகம் அதனால் மட்டும் உய்யும் என்று எவன் நம்புகிறானோ அவனே கிருத்துவன். இந்த இயேசுவின் உடல் மாமிசம் உண்ண வேண்டுமாம் அவன் ரத்தத்தை குடிக்க வேண்டுமாம்! இந்த அருவருப்பு அந்த பித்தல்லாட்ட மதம். இயேசு தன்னை கடவுள் என்றோ தான் கடவுளின் ஒரே மகன் என்றோ தன் தாய் கன்னி என்றோ ஒரு போதும் கூறிய‌தில்லை. ஆனால் தான் நல்லவனில்லை கடவுளே நல்லவன் என்கிறான்- மார்க்கு 10-18. இப்படி எல்லாம் கூறியது பிறகு வந்த பால் என்பவன் போன்றோர். மத்தேயு, மார்க்கு, யோவான் லூக்கு இவரெல்லாம் இயெசுவை சந்தித்ததேயில்லை! இவர்கள் யார் எந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பது யாருக்குமே தெரியாது. இவை பிறகு வந்த கட்டுக்கதைகள். இயேசு தன்னை தொடராவிடில் யார் எதிர்க்கிறார்களோ அவர்களை கொல்ல வேண்டும் என்றான் லூக்கா 19 -27, யோவான் 15 -6 ஆக்ட்ஸ் 3 -23. எதிர்ப்பவர்களை நரகத்தில் துன்புறுத்தி தீயில் வாட்டுவதாக கூறினான். பல சான்றுகள். உயிருள்ளபோதே அவர்களை கொல்ல வேண்டும் என்று கத்திகள் வாங்கி ( சட்டை விற்றாவது) காத்திருக்க வேண்டுமென்றான் லுக்கா 22- 38. இயேசு கூறிய அன்பு பாதை அவனை தொடர்பவர்களுக்கு மட்டுமே! எதிர்ப்பவர்களுக்கு கத்தியும் நெருப்பும் என்றே கூறினான். இதை கிருத்துவர் பல காலமாகவே மறைக்கிறார்கள்.
    இதனால்தான் கோவாவில் போப்பின் ஆணையால் பல பல இந்துக்கள் தீயில் இடப்பட்டு கொலைக்குள்ளானார்கள்

    சில் சாம் (Chillsam) போன்றோர் தில்லு முல்லு செய்ய முடியாது. உண்மை வெளி வரும். அவர் போன்றோர் மௌனமாக இருப்பதே நலம். கிருத்துவ மதம் துர்மதம் என்பதில் ஐயமில்லை. அவரே கூறுகிறார் ஆங்கிலேயன் நம் நாட்டை ஸ்தாபித்தானாம்!
    கிருத்துவ மதம் இந்த் நாட்டை அந்நியர்களுக்கு மீண்டும் ஒப்படைக்க நம்மை அடிமைகளாக்க வந்த துர்மதம்.
    இந்துக்கள் விழித்தெழ வேண்டும்!

  32. “இந்தியாவில் புதுதில்லிக்கு மிஷன் குழுவாக செல்ல தகுந்த ஊழியர்களைத் தேடிக் கொண்டிருப்பதாக சர்ச்சில் அறிவித்தார்கள்………..எங்களது மிஷன் குழுத்தலைவர் பணி என்ன என்பதைத் தெளிவாகவே விளக்கியிருந்தார் – அந்தப் பகுதி முழுவதும் மக்களை வலைவீசித் தேட வேண்டும், ஜப வீடுகளை உருவாக்க வேண்டும் (”scout the land” and plant “house churches”).”

    இந்த வரிகளைப் படிக்கும்போது இன்றும் இந்துக்கள் அந்நிய இஸ்லாமிய மற்றும் கிறித்தவ படைஎடுப்புக் காலங்களில் வாழ்ந்துகொண்டு வருவதாகவே இருக்கின்றது. நாய்கள் நுழையும் திறந்த வீடாகவே பாரதம் இன்றும் கேட்பாரற்றுக் கிடக்குமானால், ஜவஹர்லால் , காந்தி தலைமையில், சுதந்திரம் வாங்கினார இல்லை இத்தாலிக்காரிக்கு, விற்க திட்டம் தீட்டித் தந்தாரா? எங்கேயோ இருப்பவர்கள் , மத மாற்றம் செய்ய ராஜ மரியாதையோடு நுழைந்து பாரதத்தின் மக்களை மாற்ற முயல்பவர்களை சட்டங்கள் இடமளிக்கின்றன என்றால் , அச் சட்டங்களைத தூக்கி எறிய வேண்டாமா? இதற்க்கெல்லாம் துணைபோகும் இந்தியக் கயவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டாமா?

    “நாங்கள் இந்தியாவில் இருந்தபோது தீபாவளி என்ற பண்டிகை வந்தது. அதைப் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெற எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த மக்கள் தங்களது மதம் மீது கொண்டிருந்த பெரும் நம்பிக்கையையும், சிரத்தையையும் நாங்கள் பார்த்தோம். அவர்கள் மதம் எப்படி அவர்களது கலாசாரத்தின் அழகிய அங்கமாக இருக்கிறது என்பதையும் உணர்ந்தோம்”

    இப்போது புரிகின்றது, எதற்கு அயிரோப்பிய முறைப் பள்ளிகள், பிஞ்சுகளின் உள்ளத்தில் தீபாவளி ஒரு மாசு ஏற்படுத்தும் பண்டிகை என்ற மயக்கத்தை ஏற்படுத்தி, குழந்தைப் பருவத்திலேயே மதம் மாற்றத் துணியும் போக்கிரித் தனம் என்று.

    பாரதத்தில் எதிரிகள் உள்ளேயே உள்ளனர்.

    (edited and published)

  33. >நண்பர் ஹார்ட்ரூத் (hard truth) அவர்களிடம் முன்வைக்கப்படும் மேற்கண்ட கருத்தானது, இது இந்து மார்க்கத்தில் எங்கும் சொல்லப்படவில்லை, அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட வேதத்திலும் கட்டளையாகச் சொல்லப்படவில்லை;ஆனாலும் இதற்கென்றே சில ஸ்பெஷல் கோட்வேர்டுகள் உண்டு;அவையாவன:ஐதீகம், மரபு,தத்துவம், நம்பிக்கை.

    இன்னொரு விஷயம் மறந்து விட்டேன்

    நண்பர் Chilsam ஆணித்தரமாக பொய் கூறுகிறார் கிருத்துவருக்கே உரித்தான பாணி! புருஷ சூக்ததிலும் நாராயண சூக்ததிலும் (வேதம் நண்பருக்கு தெரியாததால் கூறுகிறேன்!! தெரிந்தவர் போல் அளக்கிறார்) அஜாயமானோ பஹுதா விஜாயதே‍ பிறப்பில்லாவன் பலவாக வெளிப்படுகிறான் என்றும் பிறகு ச பிரம்ம ச‌ ஷிவ‌ சஹரிஷ்சேந்திர சோக்ஷ‌ர பரம ஸ்வ‌ராட்

    அதாவது அவன் பிரம்மன் அவன் சிவன் அவன் ஹரி இந்திரன் அழியாதவன் எல்லாம் ஆளுபவன்

    என்றுள்ளது

    கீதையையும் பார்க்கவும்

    இப்போதாவது மன்னிப்பு கேட்க தயாரா? இல்லை இன்னும் வேண்டுமா?

    கிருத்துவத்தில் உள்ள துர் நாற்ற‌ம் வெளிப்படும்!

  34. When the lion of Vedanta roars, the foxes run to their holes என்றார் சுவாமி விவேகானந்தர்.

    chillsam என்ற கிறிஸ்தவ மதவெறியரின் துவேஷத்தில் ஊறிய அபத்தக் கருத்துகளுக்கு உறுதியாகவும், அறிவுபூர்வமாகவும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்து சிங்கங்கள்.

    நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

  35. // ஜடாயு (author)

    6 June 2010 at 12:03 pm

    When the lion of Vedanta roars, the foxes run to their holes என்றார் சுவாமி விவேகானந்தர்.

    chillsam என்ற கிறிஸ்தவ மதவெறியரின் துவேஷத்தில் ஊறிய அபத்தக் கருத்துகளுக்கு உறுதியாகவும், அறிவுபூர்வமாகவும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்து சிங்கங்கள்.

    நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி //

    அன்பு நண்பர்களே, நான் இங்கே எந்த மதப் பிரச்சாரமும் செய்து யாரையும் மதம் மாற்ற முயற்சி செய்யவில்லை;

    அப்படி செய்திருந்தால் இந்த தளத்தில் என்னுடைய நேரத்தை வீணாக்கவேண்டிய அவசியமில்லை;

    ஆனால் தாங்கள் எம்முடைய நம்பிக்கையினை அவதூறு செய்வதற்கு விளக்கமளிக்கவே முயற்சித்தே மீண்டும் மீண்டும் இங்கே நுழையவேண்டியதாக இருக்கிறது;

    ஆனால் “தமிழ்ஹிந்து” தன்னை விவேகானந்தரின் வழிவந்தோர் சொல்லிக்கொண்டு செய்துவரும் சூழ்ச்சிகள் சொல்லி மாளாது;

    அண்மையில் நான் கொடுத்த சரியான சவுக்கடிக்கு தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டனர்;

    நானோ நிர்வாகத்திலுள்ள ஒரு சிலராவது படிக்கட்டுமே என்ற நப்பாசையில்தான் இருந்தேன்;

    தற்போதோ எனது அடுத்தடுத்த பின்னூட்டங்களைத் தடுத்துவிட்டு தனக்குத் தானே தட்டிக்கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது..!

    https://tamilhindu.com/2010/06/being-missionary-showed-me-light/comment-page-2/#comment-14461

  36. இப்போது புருஷ சூக்தத்திலும் , நாராயநீயத்திலும் என்ன உள்ளது என்பதைப் பற்றி எதற்கு விவாதம்?
    இன்று ஹிந்துக்கள் என்ன அதையெல்லாம் அப்படியே பின்பற்றி நடக்கிறார்களா அல்லது அதுதான் உண்மை என்று பிடிவாதம் பிடிக்கிறார்களா?
    ஹிந்துக்களுக்கு என்று ஆயிரக்கணக்கான புனித நூல்கள், க்ரந்தங்கள் ,மகான்கள்,அவர்களது போதனைகள் ,பலப்பல வழிமுறைகள்,சம்பிரதாயங்கள் உள்ளன.
    கிறித்தவர்களைப் போல் ஒரு புத்தகம்,ஒரு கடவுள்,ஒரு தேவ தூதன் தான் என்ற நிலை இல்லை
    அதனால் இந்த விவாதங்களெல்லாம் வீண் .

    ஹிந்துக்களை குழப்பவும் ,அவர்களைத் தன சமயத்தின் மீது வெறுப்புக் கொள்ளவும் மிஷனரிகள் கடைப் பிடிக்கும் தந்திரம்
    அளவற்ற சமய, ஆன்மீக , மற்றும் கருத்துச் சுதந்திரம் கொண்டதே ஹிந்து சமயம்
    அங்கு எல்லாவித கோட்பாடுகளுக்கும் இடம் உண்டு
    தனி மனிதனின் மனமே அவை அலசப்படும் அம்பலம்
    அவனே நீதிபதி.
    ஆனால் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே .அவனே நித்ய சாட்சி என்பது எல்லா ஹிந்துக்களுக்கும் பொதுவாகும் .
    இரா.ஸ்ரீதரன்

  37. நண்பர் ஸ்ரீதரன் அவர்களுக்கு வேதத்தில் இப்படி இல்லை என்று சில் சாம் பொய் சொன்னார். நம் நூல்கள் பல உள்ளன. இது போலிகளுக்கு மிஷனரிகளுக்கு நன்றாகவே தெரியும். நாம் அவைகளை படிப்பதும் இல்லை. ஞானிகள் வாக்கையே பெரும்பாலும் நம்புகிறோம் என்றும் அவர்களுக்கு தெரியும். விடுதலை குடியரசு இதழ்கள் சாது செல்லப்பா ஏவீஎம் ராஜன் ஜாகிர் நாய‌க் ஹக் என்ற பல பித்தலாட்டக்காரகள் டீவீக்கள் நாளும் அந்த புராணத்தில் இப்படி அப்படி என்று பல பொய்கள். விடுதலையை பாருங்கள். எத்தனை வருடங்களாக. ஈவேரா சொன்ன பொயகள் எத்தனை. கருணாநிதி இராமனை குடிகாரன் என்று வால்மிகீயே கூறியதாக ஏன் கூறினார். பாமர மக்கள் நாம் மௌனமாகவே பல காலமாக இருந்தால் யாரை நம்புவர்? போலிகளையா நம்மையா? ஆண்டவ‌ன் காப்ப்பாற்றுவான் சரி. நம் கடமையை நாம் செய்யாவிடில் எப்படி? சாதாரண விஷயங்களுக்கெல்லாம் ஆண்டவைனையே நம்பி நம் செயலை கைவிடலாமா? உணவு தானே வாயில் வந்து விழுமா? நம் கடமையை மறந்தோம்
    பாமர‌ மக்கள் யாரும் கடல் போல் இருக்கும் நூல்களை படிப்பதில்லை. திரும்ப திரும்ப கொயப்பெல்ஸ் போல் பொய் கூறினால் அதைதான் நம்புவார்கள்
    கடல் போல் நூல்கள் இருப்பது நலம். ஆனால் அதனால்தான் யாரும் படிப்பதில்லை என்றும் உணர வேண்டும்! எதை போய் படிப்பது என்று விட்டு விடுவார்கள்
    சாதாரண கிருத்துவன் முசுலீம் இருப்பது சுண்டைக்காய் அள‌வு புத்தகத்தை படிக்கிறான். அளக்கிறான். அவனுக்கு அவன் புத்தகங்கள் தெரிந்த அளவு சாதாரண‌ இந்துக்களுக்கு கடுகளவும் தெரியாது. சாதாரண இந்துக்களுக்கு பகவத் கீதைக்கும் பாகவத்திற்கும் வித்தியாசம் தெரியாது. கீதையில் எத்தனை அத்தியாயம் என்று தெரியாது. உபநிடதம் என்றால் யார் ரஜினி நடித்த படமா என்பான்! இதை எல்லாம் தெரிந்தே போலிகள் மேற் கூறியவர்கள் அதில் இப்படி இதில் அப்படி அந்த புராணம் இப்படி என்று புருடா விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்

    அரசாங்கமும் நம்மை பாதுகாப்பதில்லை. பொய் கூறி மக்களை ஏமாற்றுபவர் மேல் விடுதலை செல்லப்பா போன்றோரை தண்டிப்பதுமில்லை. ஏன் நம்மையே அரசாங்கம் பழிக்கிறது!

    நம் நூல்களுக்கு நாம் விளக்கம் அளிக்காமல் பெரும் தவறு செய்திருக்கிறோம். இதை உடனே திருத்த வேண்டும்
    மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி. கெடுவார் கேடு செய்தால் எதிர்க்கவே வேண்டும்

  38. விவரம் தெரியாதவர்களோ அல்லது ஆங்கிலக் கல்வி படித்த பல ஹிந்துக்களோ தான் ‘ஆங்கிலேயன்தான் இந்தியா என்ற ஒரு தேசத்தை உரு வாக்கினான் என்பதை நம்புவார்கள். ஏனென்றால் அப்படித்தான் அவர்களுக்கு கற்பிக்கப் பட்டுள்ளது.

    ஆனால் அது மிகவும் திட்டமிட்டு செய்யப் பட்ட ஏமாற்று வேலையாகும்.
    எப்போது எழுதினதென்றே தெரியாத ஒரு ஸ்லோகம் இன்று வரை எல்லா ஹிந்து சடங்குகளிலும் முதன்மை வகிக்கிறது .
    அது எப்படி ஆரம்பிக்கிறது தெரியுமா?
    ‘ஜம்பு த்வீபே , பாரத வர்ஷே, பரதக் கண்டே ‘ அதாவது ஜம்பு தீபகற்பத்தில் உள்ள பாரதக் கண்டம்’ என்று ஆரம்பித்து அதில் வாழும் நான் இந்த சடங்கைச் செய்கிறேன் என்று சங்கல்பம் எடுத்துக் கொள்கிறோம் .

    மேலும் மற்றொரு ஸ்லோகம் ‘ ஆசேது ஹிமாசலம்’ என்று தெற்கில் ராமசேது விலிருந்து வடக்கே ஹிமாசலம் வரை என்று பாரத நாட்டின் எல்லைகளைச் சொல்கிறது .
    ஆகவே பாரதம் என்ற ஒரு மிகப் பெரும் நாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது என்றும் அது நமது முன்னோர்களின் பொது சொத்து என்பதும் தெளிவு.
    வெள்ளைகாரர்களோ ,அராபியர்களோ வேண்டுமானால் அதை இந்தியா என்று அழைத்திருக்கலாம் .

    அதனால் வெள்ளைக்காரன் அதை செய்தான் இதை செய்தான் என்று மாய் மாலம் செய்வது தேசத் துரோஹம் ஆகும்
    நம் நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரும் பஞ்சங்கள் ( பீகார் பஞ்சம், அஸ்ஸாம் பஞ்சம்) வெள்ளைகாரனின் ஆட்சியில் நடந்தன.
    உலகத்திலேயே செல்வச் செழிப்பு மிக்க நாடான ( பாஹியான் , ஹுவான்சுவாங், ,நிக்கோலோ கொன்டி, போன்ற வெளி நாட்டு யாத்ரிகர்கள் எழுதிய படியே) பாரதத்தை சுரண்டியும், அதன் சாதுவான மக்கள் மீது அராஜகம் நிகழ்த்தியும் அதன் முதுகெலும்பை முறித்தன முஸ்லிம் மற்றும் கிறித்தவ ( பிரிட்டிஷ்) ஆட்சிகள்.
    இன்று வரை அந்த அடியிலிருந்து மீள முடியாமல் நம் நாடு தவிக்கிறது

    இரா.ஸ்ரீதரன்

  39. // “உம்மைப் போல என்னை மாற்றும்” என நான் ஜெபிப்பேன்;இதுபோன்றதொரு ஜெபத்தை எந்த ஒரு இந்துவும் அனுமனையோ யானை முகத்தையுடையவனையோ நோக்கி செய்யமுடியாது;அப்படி நடந்துவிட்டால் காட்டிலாகா அதிகாரிகள் வந்து உங்கள் பெற்றோரை கைது செய்துவிடுவார்கள்;உங்க வீட்டுல ஆறு விரலுடன் ஒரு பெண பிறந்தால் ராசியானது என்பீர்கள்;ஆறு கையுடன் பிறந்தால்..? //

    chillsam,
    முதல்ல உங்களுக்கு உருவ வழிபாட்டோட அடிபடையே தெரியல . அதனால அத விமர்சனம் செய்ய வேண்டாம்.
    உங்கள் யஹ்வே ஆண்டவர் தான் மனித வடிவமுள்ளவர். அவர் சாயலில் தான் ஆடமை படைத்துள்ளார். அவர் ஏன் உருவ வழிபாட்டை எதிர்த்தார் ?? அவர் உருவத்தை ஏன் அவர் விசுவாசிகளுக்கு காட்ட வெட்கம் ? மோசேஸ் கூட அவர் முதுகை தான் பார்தாராமே ??


    33:10 And all the people saw the cloudy pillar stand at the tabernacle door: and all the people rose up and worshipped, every man in his tent door.
    33:11 And the LORD spake unto Moses face to face, as a man speaketh unto his friend. And he turned again into the camp: but his servant Joshua, the son of Nun, a young man, departed not out of the tabernacle. ”


    Exodus 33:20-23
    Thou canst not see my face: for there shall no man see me, and live. And the LORD said, Behold, there is a place by me, and thou shalt stand upon a rock: And it shall come to pass, while my glory passeth by, that I will put theein a clift of the rock, and will cover thee with my hand while I pass by: And I will take away mine hand, and thou shalt see my back parts: but my face shall not be seen. ”

    கடவுளோட முகத்துக்கும் முதுகுக்கும் என்ன பெரிய வித்தாயசம் ?? முதுக பாத்தா உயிரோட இருக்கலாமாம் , முகத்த பாத்தா இருக்க முடியாதா ?? இல்ல இருக்க விட மாட்டாரா ??

    33:11 க்கும் 33:20 க்கும் எவளோ முரண்பாடு. அதுக்குள்ளே என்ன ஆச்சு மூட் அவுட்டா ??
    இறுதி தீர்ப்புக்கு பிறகு நீங்களாவது அவர் முகத்தை பார்பீங்களா ?

    இப்படி எல்லாம் கதை எழுதி வச்சுக்கிட்டு , அந்த கடவுளுக்கு ஒரு மகன்னு ஒருத்தர வச்சு ஊற ஏமாத வேண்டாம். அட்லீஸ்ட் நீங்க ஏமாற வேண்டாம் .
    இந்த ஓல்ட் டேச்டமென்ட் கதைகல்லேலாம் சுமேரியா விலிருந்து திருடப்பட்டது .
    மேலை நாடுகள்ள, இந்த ஆபிரகாமிய மதங்கள் எல்லாம் ஓர் வேற்று க்ர்ஹ “reptilian aliens” தான் உருவாகினதகவும் , அவர்கள் நம்முடைய அச்சம், துயரம் எல்லாம் உண்டு பண்ணி , அவற்றையே உணவாக கொள்வார்கள் ன்னும் , அவர்களே நம்மை மறைமுகமாக ஆள்வதகவும் ( through divide and rule) ஒரு கான்ஸ்பிரசி தியரி இருக்கு.உங்க மக்கள் பண்ணறத பாத்தா அது எல்லாம் உண்மையோன்னு நினைக்கத்தான் தோணுது !!

  40. தொன்று தொட்டு வந்த பாரதப் பாரம்பரியத்தில் வழங்கப்பட்ட, மற்றும் பலப்பல நூல்களில் சொல்லப்பட்ட கருத்து பாரதம் என்பது ஐம்பத்தாறு ராஜ்யங்கள் கொண்டது என்பது ( அங்கம்,வங்கம்,கலிங்கம்,காந்தாரம் முதலியன)
    குருஷேத்ர யுத்தத்தில் பாரதத்தின் பல்வேறு அரசர்களும் இரண்டு பக்கத்திலும் சேர்ந்து பங்கெடுத்துக் கொண்டனர் என்று மகாபாரதத்தில் கூறப் பட்டுள்ளது.
    மேலும் எமது முன்னோர்கள் மிக உயர்ந்த சிந்தனைகளைப் பற்றி அகத்தாய்வு செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் ,ஐரோப்பியர்களின் முன்னோர்கள், காட்டு மிராண்டிகள் போல் திரிந்து கொண்டிருந்தனர் என்று மேலை நாட்டு அறிஞர்களே ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
    எனவே கோயபல்ஸ் தனமாக இத்தனை காலம் சொல்லிக் கொண்டிருந்த பொய்யான ‘பிரிடிஷார் தான் இந்தியாவை உருவாக்கினார்கள்’ என்று சொல்வதை இனிமேல் விட்டு விடுங்கள். இந்த நாட்டுக்கு உண்மையாக இருங்கள் .
    நீங்கள் என்னதான் கிறித்தவத்துக்கு மாறி,வெள்ளைக்காரன் போல் நடந்தாலும் அவன் உங்களை இரண்டாம்தரமான மக்களாகத் தான் கருதுவான் .
    பாரதத்தில் தான் எல்லோரும் மதிக்கப் படுவர்
    ஆனால் அதற்க்குக் காரணமான ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து கலாச்சாரத்தை இழிவு படுத்துவது,அதை அழிப்பது இவைகளை விட்டு விடுங்கள் .

    பாகிஸ்தானிலோ, சவுதிதியிலோ ,பங்களாதேஷிலோ ,மலேசியாவிலோ ஏன், சிறிலங்காவிலோ கூட உங்கள் பருப்பு வேகுமா?

    இரா.ஸ்ரீதரன்

  41. Koenraad Elst had tendered a very sound advice to us Hindus;
    “What Hindus who have been trapped in a sentimental glorification
    of Jesus and other prophets will have to learn, is that
    the essence of Hindu Dharma is not ‘tolerance’ or ‘equal respect
    for all religious’ but satya, truth. The problem with Christianity
    and Islam is superficially their intolerance and fanaticism. But
    this intolerance is a consequence of these religions’ untruthfulness.
    If your belief system is based on delusions, you have to
    pre-empt rational enquiry into it and shield it from contact with
    more sustainable thought systems. The fundamental problem
    with monotheistic religions is not that they are intolerant but that
    they are untrue (Asatya or Anrita).”

    RGk

  42. வணக்கம்
    //பொதுவாக கிறிஸ்தவர்களாக மாறிய இந்துக்கள், இந்து மதத்தின் மீது ஆழ்ந்த வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். வெறுப்பும் எள்ளலும் அதிகம். இந்து மதத்தை ஒரு வெறுப்பற்ற பார்வையில் இது போன்ற வெளி தேசத்து மனிதர்களாலேயே புரிந்து கொள்ள முடிகிறது – இந்தியாவிலேயே இருக்கிற கிறிஸ்தவர்களிடம் இதை காண முடியாது//
    நூற்றுக்கு நூறு உண்மை. கட்டுரையைப் பதிவு செய்த திரு ஜடாயுவுக்கும் இந்த வலைத் தள நிர்வாகத்தினருக்கும் எனது பாராட்டுக்கள்
    அன்புடன்
    நந்திதா

  43. நல்ல கட்டுரை. ஜடாயுவுக்கு நன்றி.

    இதை போன்ற கட்டுரைகள் தான் தேவை. “ஜட்காவா / ஹலாலா” போன்ற கட்டுரைகள் அல்ல.

  44. இந்த ப்ராடஸ்டன்ட் கிறிஸ்தவர்களை தவிர RC மற்றும் பெதேகோச்தே கிறிஸ்தவர்களை என்னால் கிறிஸ்தவர்களகேவே ஏற்றுகொள முடியாது .. ப்ராடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள் . ப்ராடஸ்டன்ட் கிறிஸ்தவ பெண்கள் நம் பெண்களை போல் குங்குமம் வைத்து கொள்வார்கள் .. இந்த பெதேகோச்தே கிறிஸ்தவர்கள் போடற ஆட்டம் தாங்க முடில ..

    //
    ‘ஒன் சரக்கு ஒசத்தியாக இருந்தா தன்னால வியாபாரம் நடக்கும்’ என்று புத்திசாலி வியாபாரி சொல்லுகிறான்;//
    Chillsam போன்ற ஆளுகளுக்கு கடவுள் ஒரு வியாபார சரக்குதான் .. அதான் பார்க்கிறோமே டெய்லி டிவி ல Tie கட்டிகிட்டு குவி குவி விற்கிறதை ..

    //கிறித்தவம் என்பது வாழ்க்கை முறையாகும்;அது எந்த ஒரு தேசத்துக்கும் சொந்தமானதும‌ல்ல;எந்த தேசத்தாலும் பரப்பப்படவுமில்லை; //

    அட அப்பா சாமீ கிறிஸ்தவம் வாழ்கை முறைன்னு நீ சொல்லித்தான் கேள்வி படறேன் .. ஒ அதான் கிறிஸ்தவத்தை பின்பற்றுகிற நாடுகளில் குடும்ப வாழ்கை சூப்பரா இருக்குள்ள …. யார் வேணுனாலும் யார் குடவேனாலும் போகலாம் … ஸ்கூல் படிக்கும்போதே கர்ப்பம் ..அட அட அட உன் கலாச்சார வாழ்கை முறை புல அரிக்க வைக்குது .

    [Edited and published]

  45. ‘உம்மைப்போல் என்னை மாற்றும் ‘ என்று வேண்டிக்கொண்டால் ,உங்களை எல்லாம் சிலுவையில் தானே அறைய வேண்டும்?
    ஏன் இந்த பிரார்த்தனைக்கு கர்த்தர் செவி சாய்க்கவில்லை?

    இரா.ஸ்ரீதரன்

  46. thooyavan
    6 June 2010 at 8:49 pm
    // சாதாரண கிருத்துவன் முசுலீம் இருப்பது சுண்டைக்காய் அள‌வு புத்தகத்தை படிக்கிறான். அளக்கிறான். அவனுக்கு அவன் புத்தகங்கள் தெரிந்த அளவு சாதாரண‌ இந்துக்களுக்கு கடுகளவும் தெரியாது. //

    எல்லாவற்றையும் போதிக்காவிட்டாலும் அன்றாட வழிபாடுகளில் நாம் பயன்படுத்தும் பூஜா பொருட்களின் அவசியத்தையும் அர்த்தத்தையுமாவது விளக்கலாமே..?

    அது அப்படித்தான்…அது ஐதீகம்…கேள்வி கேக்கப்படாது..சாமி குத்தமாயிரும்…என்றெல்லாம் தப்பிக்கக்கூடாது.

  47. //When the lion of Vedanta roars, the foxes run to their holes என்றார் சுவாமி விவேகானந்தர்.

    chillsam என்ற கிறிஸ்தவ மதவெறியரின் துவேஷத்தில் ஊறிய அபத்தக் கருத்துகளுக்கு உறுதியாகவும், அறிவுபூர்வமாகவும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்து சிங்கங்கள்.

    நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. //

    நல்லவர் ஜடாயு’வுக்கு மிக அழகாக கட்டுரை வரைகிறீர்கள்;
    ஆனால் என்னை உள்ளே நுழையவிடாமல் தடுத்துவிட்டு மாற்றுக் கருத்துக்களுக்கு ஜனநாயக முறையில் மதிப்பளிக்காமல் நான் ஓடிவிட்டதைப் போன்ற மாயையை தோற்றுவிக்கும் உங்களுக்கு மனசாட்சி கிடையாதா..?

    நான் கூட உங்கள் கருத்துக்களையும் இந்து மக்களின் எழுச்சியையும் பார்த்து ஒருவேளை அதுவே உண்மையான பாதையாக இருக்குமோ என அஞ்சியதுண்டு;ஆனால் நீங்களோ மிகத் தீர்க்கமாகவும் நிர்தாட்சண்யமாகவும் மெய்வழியை அவதூறு செய்வது மிகவும் வருந்தத்தக்கது.

  48. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:14-18)
    இப்போது சில்சாம் விஷம் குடித்து காட்டுவார்.. எல்லோரும் ஜோரா கைதட்டுங்க பாப்போம்..

  49. அன்புள்ள சில்லிசாம்

    உங்களின் மறுமொழியை ஆழ ஆராய்ந்து இடும் பதில் இது – தயவு செய்து tension ஆகாமல் படியுங்கள் – நான் எதோ பெரிய கருத்தெல்லாம் கூறவில்லை – சும்மா உங்களா மாதிரியே யோசிக்க முடியுமான்னு பார்த்தேன் அவ்வளோ தான்

    //
    மேற்கத்திய கலாச்சார பழக்கவழக்கங்கள் கிழக்கத்தியரை ஈர்ப்பதும் கிழக்கத்திய கலாச்சாரத்தின் குறியீடுகளான பரதம்,சங்கீதம் போன்றவை மேற்கத்தியரை ஈர்ப்பதும் காலச் சக்கரத்தின் சுழற்சியின் மாயமாகும்;
    //

    இந்த கால சக்கரம் என்ற மேட்டர் எல்லாம் ரட்சிப்பிர்க்கு உட்பட்டவர்க்கு கிடையாது – அது ஒரு ஹிந்து தத்துவம் – இதை நீங்கள் கையாண்டமையால் (அதாவது பன்றிகள் என்று உங்கள் தேவன் கருதும் ஒரு இனத்தின் கொள்கையை கையாண்டமையால்) உங்களின் தேவன் செம்ம கடுப்பாகி உள்ளார் – உடனே போய் எதாவது செய்யுங்கள் – ஒரு ரெண்டு அப்பாவிகளை பிடித்து தண்ணில முக்கி அப்பம் கொடுங்கள் உங்கள் தேவன் ஹையா ரெண்டு பேரு சிக்கிட்டான்யா என்று சந்தோசமாகி உங்களை மன்னிப்பார்

    //
    ஆனாலும் வரலாறு முழுவதுமே மேற்கத்தியவரே ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்திருக்கிறார்கள்;
    //

    கிரேக்க நாட்டில் மேர்கத்தியரான கிரேக்கரே ஆண்டனர் – ரோம புரியை மேர்கத்தியரான ரோம மன்னரே ஆண்டனர் – பாவம் இந்தியர்களை கஜினி வரும் முன்னர் வரை மேர்கத்தியரான இந்தியர்கள் ஆண்டனர்

    என்ன சொல்ல வருகிறீர்கள் சோழர் எல்லாம் மேற்கத்தியர் என்றா, சோழர்கள் ஆட்சி இந்தியாவை தாண்டி படர்ந்து இருந்தது என்று வரலார்த்ற்றில் தான் படித்ததாக நினைவு, விலங்கியலில் இல்லை – அது சரி இலங்கைக்கு இந்தியா மேற்கு நாடு தான் என்று சொல்கிறீர்களா.

    //
    ‘ஒன் சரக்கு ஒசத்தியாக இருந்தா தன்னால வியாபாரம் நடக்கும்’ என்று புத்திசாலி வியாபாரி சொல்லுகிறான்;
    //

    அப்போ டாஸ்மாக் ல கூட்டம் கூடறதுக்கு இது தான் காரணமா?

    நல்ல சரக்கு அதனால்தான் எல்லாரும் சின்னமலை AG சபைக்கு போறாங்களோ? அதென்ன sunday மட்டும் செம்ம கூட்டம்

    //
    நண்பர் ஹார்ட்ரூத் (hard truth) அவர்களிடம் முன்வைக்கப்படும் மேற்கண்ட கருத்தானது, இது இந்து மார்க்கத்தில் எங்கும் சொல்லப்படவில்லை, அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட வேதத்திலும் கட்டளையாகச் சொல்லப்படவில்லை;ஆனாலும் இதற்கென்றே சில ஸ்பெஷல் கோட்வேர்டுகள் உண்டு;அவையாவன:ஐதீகம், மரபு,தத்துவம், நம்பிக்கை..இப்ப்டியாக
    //

    இதென்ன சுத்த பைத்தியகார தனமா இருக்கு – வேதம் ஏற்பட்ட போது வேறு மதமே இல்லை – அப்புறம் எப்படி எல்லா மதமும் ஓகே அப்படின்னு வேதத்துல இருக்கும் – எங்களுக்கு பெந்தகொச்டே ஓகே என்று வேதம் சொல்லும் என்று எதிர்பார்கிறீர்களா

    எந்த வழியில் நீ ஆராதிதாலும் முடிவில் என்னையே வந்து அடைகிறாய் என்பது கீதையில் உள்ள கருத்து – இது பல உபநிஷட்களிலும் வரும் கருத்து – இதுவே வெறுப்பு இல்லாத எல்லா நல்லவற்றையும் அரவணைக்கும் கருத்து –

    வேதத்தில் மற்ற யாரையும் பண்ணி, நாய் என்றெல்லாம் சொல்ல வில்லை – அதனாலேயே ஹிந்துக்கள் வெறுப்பு இன்றி இருக்கின்றனர்

    //
    ஆனாலும் அது நடைமுறையில் இல்லை;ஆனாலும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் முண்டக்கன்னியையும் முண்டகப்பெருமாளையும் தூக்கிச் சுமக்கும் பல்லக்கு ஆரியனிடமிருந்தே தருவிக்கப்பட்டது;அதில் அவனையும் சேர்த்தே நாம் சுமக்கிறோம்;சாமிக்கு மட்டுமா ஊஞ்சலாட்டம்,சாமியாருக்கும் சேர்த்துதானே..?
    //
    இது இன்னொரு பைத்தியகார தனம் – வேதத்தில் எங்கும் உருவ வழிபாடே கிடையாது – ஆகம வழக்கில் தான் உருவ வழிபாடு வருகிறது – வேதம் ஆரியரிடம் இருந்து தான் வந்தது என்றால் அப்புறம் எப்படி இந்த பல்லக்கு தூக்கும் விஷயம் அவர்களிடம் இருந்து வரும் – எதோ மொட்ட மாடில ஒக்காந்து வெயில் தாங்காம வந்த கற்பனையா இருக்கு

    /

    கிறித்தவமாகும்;அது ஒன்றே அறிவுபூர்வமானது,உணர்வுபூர்வமானது;
    //

    ஹி ஹி – எது ரத்தில் தான் உயிர் இருக்கிறது என்று சொல்வதும், உலகம் தட்டை என்று சொல்வதும் அறிவு பூர்வமானதா
    – மற்றவனை நாய் பண்ணி என்று கடவுள் சொல்வது அறிவு பூர்வமானதா
    – சாத்தானை பார்த்து அஞ்சும் ஒரு மார்க்கம் அறிவு பூர்வமானத
    – இரு பெரும் கடவுள்கள் – கிறிஸ்து மற்றும் சாத்தான் என்று கொண்ட மூன்று edition கள் கொண்ட மதங்கள் (judaism, christinaism, islam) அறிவு பூர்வமானதா
    – உலகம் 6000 வருடம் முன் தான் தோன்றியது என்று பொய் சொல்லும் மதம் அறிவு பூர்வமானதா
    – உலகையே ஒரு மயான பூமியாகிய இந்த மூன்று மதங்கள் அறிவுபூர்வமானவையா
    – உயிரை கடவள் instant ஆகா படைத்தார் என்று சொல்லும் விஷயம் அறிவு பூர்வமானதா
    – அப்படி இன்ஸ்டண்டா அவர் மட்டுமே படைத்தார் என்றால் ஏன் அவர் ஹிந்துக்களையும், இஸ்லாமியரையும் படைக்கிறார் எல்லோரையும் ஒரு கிறிஸ்தவனாக படைத்து ரட்சிக்க வேண்டியது தானே
    – அப்படி படைக்கும் தேவன் ஏன் பாவிகளை படைக்கிறார் – புண்ணியவான்களை படைக்கப்டாதோ, அவ்வளோ என்ன மனிதர்கள் மீது அவருக்கு காண்டு, வெறும் பாவிகளாய் படைபதர்க்கு
    – சரி நாயையும் பாணியையும் அவர் படிப்பதில்லையோ? அப்படி படித்திருந்தால் திட்ட மாட்டாரே

    //
    இதுதான் இன்றைய உலகின் நிலை;ஆனாலும் குற்றங்கள் மட்டும் குறையவேயில்லை; அப்படியானால் தெய்வ பயம் யாருக்குமில்லை; மனதில் நிம்மதியில்லை;தொடர்ந்து எதிர்மறையான சம்பவங்களே நடக்கிறது;செலவில்லாமல் இறையருள் கிடைப்பதில்லை;
    //
    இந்த நிலை பெருவாரியாக காட்டுமிராண்டி மதங்கள் தோன்றிய, ஆளுமை செலுத்தும், மத்திய ஆசிய, இஸ்லாமிய நாடுகள், ஐரோப்பா, அமெரிக்க போன்ற இடங்களில் தான் அதிகம்

    //
    எங்கு திரும்பினாலும் ஒரு கல்லை நட்டுவைத்துவிட்டு ஜனங்களை மிரட்டிக்கொண்டிருக்கும் திருடர்கள் யார்?ஏழை எளிய மக்களின் பக்தியையும் வாழ்வியல் அச்சங்களையும் காசாக்கி கசக்கிப் பிழியும் கொள்ளையர்கள் யார் என்பது தெரியாதோ?தோஷம் என மிரட்டுவதும் பரிகாரம் செய்தவுடன் தோஷம் விலகிவிட்டதாக வேஷமிடுவதும் பூஜாரிகளும் சந்நியாசிகளும் மந்திரவாதிகளும் குறிசொல்லிப்பிழைக்கும் முன்னாள் விபச்சாரிகளே..!
    //

    சர்சுகள் அடிக்கும் கொள்ளை பற்றி யாருக்கு தெரியாதப்பா – மொத்த மடமே ஒரு கொள்ளை வியாபாரம் தான் – நீ பாவி என்று மிரட்டி அதற்க்கு பரிகாரமாக மண்டியிடு என பயமுறுத்தி, பணம் கறந்து நடத்தப்படும் ஒரு organized crime

    //
    திருப்பதிக்குச் செல்லும் சாலையோரங்களில் குழந்தையையும் குட்டியையும் வைத்துக்கொண்டும் குடும்பங்கள் தவிப்பது அந்த சாமிக்குத் தெரியாதா
    //

    அப்படி instanta அந்த குழந்தையை கிறிஸ்து பரிதவிக்க விட்டு படைத்து விட்டாரே – ஆப்ரிக்க கண்டம் முழுக்க ஒரு கிறிஸ்தவ பூமியாக தானே இருந்தது – அவர்களை ஏன் கர்த்தர் ரட்சிக்க வில்லை – ethiopia வில் நடக்கும் அவலங்கள் தான் என்ன – அதை பார்த்துகொண்டு ஸ்ருஷ்டி கர்த என்ன golf ஆடி கொண்டிருக்கிறாரா

    இன்று இந்தியாவில் சர்ச் பூர ஆப்ரிக்க பூமியையும் ஆசிய பூமியையும் கொள்ளையடித்த சூறையாடிய மிக மோசமான ரத்த கரை படிந்த காசை கொண்டு தான் நடத்த படுகின்றன – உண்மையான தேவன் இதை மறுத்தாரோ? போயும் போயும் Germany என்ற ஒரு நாட்டிலிருந்து funds வாங்குகிறீர்கள் – அது அனித்தும் யூதர்களை கொன்று குவித்த ஒரு கூட்டம் திரட்டிய பணம் – hitler தான் Gernmany யை ஒரு செழிப்பான நாடாக மாற்றினான். ஜப்பானில் குண்டு போட்டு பிணங்களாக சாய்த்த ஒரு நாட்டிலிருந்து வரும் பணத்தை வாங்கி அப்பம் தின்னு ஏப்பம் விடும் வெக்க கேடு வேறெங்கே

    //
    இறுதிக்கட்டமே நினைவுக்கு வந்தது;மேலும் கர்ணனை//

    அப்போ கர்ணன் துச்சாடணனை ஏவி திரௌபதி வஸ்திரத்தை அபகரிக்க சொன்னதை படித்து என்ன நினைத்தீர்கள்? நான் சொல்லட்டுமா? இந்த கருத்துதான் ஆபிராமிய மதத்தவரின் சொந்த கருத்து.

    கண்ணன் செய்து எப்பாடு பட்டும் தர்மத்தை காப்பதற்காக – அதற்க்கு அவன் தான் அவலபட்டான் – மற்றவரை ஏவி விட வில்லை

    //
    அரசாங்கம் சில காலத்துக்கு முன்பு “மழைநீர் சேகரிப்பு” திட்டத்தை அறிவித்து அதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவையும் நிர்ணயித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்தியது;அதனை நிறைவேற்றாதவர்க்கு தண்டனையாக வீட்டு மின்சாரம் உட்பட அனைத்து சேவைகளும் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது;அது ஒரு பெரும்புரளியாக அவர்கள் தோற்றுப்போகவே காரணமானது தனிக்கதை;
    //

    பைதியகாரதனமான ஒரு எண்ணம் –

    சரி ஒருவருக்கு எல்லா இணைப்பும் துண்டிக்கப்படுகிறது – அவர் சென்னையிலிருந்து, விருது நகருக்கு பொய் ஒரு புது வீடு கட்டுகிறார் – அங்கு மழை நீர் சேகரிக்க எல்லா ஏற்பாடும் செய்கிறார் – அவரை அரசாங்கம் மறுபடியும் தண்டிக்குமோ? – அய்யாமாரே இது தான் இந்து தர்மம் அதற்க்கு மாறாக அரசாங்கம் செய்யுமாயின் (மறுபடியும் துண்டிக்குமாயின்) அது ஒரு பைத்தியகார அரசாங்கமாகும்

    //
    ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட கரடுமுரடான பாதை வழியே நாம் விரும்பும் இடத்துக்கு சென்றுவந்தோம்;இப்போதோ நல்லதொரு புதிய பாதை தோன்றியிருக்கிறது;அதன் வழியே விரைவாக சுகமாக பயணம் நிறைவேறுகிறது;அதனை ஏற்கமறுத்தால் விரைவில் பழைய பாதை முடக்கப்படும்;அப்போது வருத்தப்படவேண்டியிருக்கும்;
    //

    என்ன சொல்ல வரீங்க – இது உண்மைன்ன வாங்க நாம ரெண்டு பெரும் ஒரு 100 lane super high fast rocket express way ஒன்று போடலாம் – அய்யா அப்போ கிறிஸ்தவம் காலியாகிடும்ல

    சார் மொட்ட மாடிலேருந்து கீழ இறங்குங்கள் – வெய்யில் காய்கிறது

    //
    கிறித்தவம் என்பது வாழ்க்கை முறையாகும்;அது எந்த ஒரு தேசத்துக்கும் சொந்தமானதும‌ல்ல;எந்த தேசத்தாலும் பரப்பப்படவுமில்லை; “
    //
    நான் யூதர்களை மட்டுமே மீட்க வந்ததாகவும், இஸ்ரவேல் நாடே சொந்த நாடு என்றும் bible என்ற நூலில் இல்லவே இல்லப்பா

    //
    கிறித்தவம் என்பது வாழ்க்கை முறையாகும்
    //
    எல்லோரையும் கொன்றுவிட்டால் நாம் மட்டுமே மின்குவோம் – அப்ப ஜாலிய இருக்கலாம் என்பது தான் கிறிஸ்தவம், இஸ்லாம் காட்டும் வாழ்கை முறை – இந்த வாழ்கை முறையில் வாழு மத்திய ஆசிய நாட்டவரையும், மேற்கத்திய நாட்டவரையும் இந்த கிறிஸ்தவம் படிக்கும் வாழ்கை முறை ஒரு ஒசத்தியான் முறை என்று தெரியவில்லையா

    //
    உம்மைப் போல என்னை மாற்றும்” என நான் ஜெபிப்பேன்;இதுபோன்றதொரு ஜெபத்தை எந்த ஒரு இந்துவும் அனுமனையோ யானை முகத்தையுடையவனையோ நோக்கி செய்யமுடியாது;அப்படி நடந்துவிட்டால் காட்டிலாகா அதிகாரிகள் வந்து உங்கள் பெற்றோரை கைது செய்துவிடுவார்கள்;உங்க வீட்டுல ஆறு விரலுடன் ஒரு பெண பிறந்தால் ராசியானது என்பீர்கள்;ஆறு கையுடன் பிறந்தால்..?
    //

    மற்றவனை பண்ணி, நாய் என்று திட்டிதர்க்கும், வெறுப்பு கருத்தையும், இன படுகொலைகளையும் அவிழ்த்து விட்டதற்குமாக உங்களை நல்ல போலீஸ் துரத்து பிடிக்கும் – இப்போ சிலவை கிடையாது, அதனால் தூக்கில் போடும்

    ஒரு குரங்கு கூட என்னை போலவும் கடவுள் இருக்கிறாரே என்று ஹனுமனை கும்பிட முடியும், யானை கூட விநாயகனை கும்பிட முடியும், அனால் மனிதனை திட்டுவதற்காக பன்னியையும், நாயையும் பயன் படுத்தும் ஒருவரை விலங்குகள் கூட சட்டை செய்யாது? அப்படி இருக்கையில் இங்கு ஏனோ என்னவோ நடக்குது

    //
    இறுதியாக மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்,வெறுப்புக்கருத்துக்களை பிரச்சாரம் செய்யாமல் நாகரீக சமுதாயத்துக்கு ஏற்ற வண்ணமாக பகுத்தறிவு மார்க்கமான இயேசுவின் வழி நடக்கவாருங்கள்;அப்போது தான் திருச்சிக்காரனின் ஆன்மா சாந்தியடையும்..!
    //

    ஒருவர் சொல்கிறார் – டேய் நீ பண்ணி, நீ நாய், டேய் அவனை போட்டு தாக்கு, கொன்று குவி நான் பாத்துக்கறேன் உனக்கு இரட்சிப்பு தருகிறேன்

    டேய் நீங்கள் எல்லாம் பாவிகள்

    அப்புறம் சொல்றார் – யாரும் யாரையும் வெறுக்கக் கூடாது

    இப்போதைக்கு இது போதும் வர்டா

  50. klu klan klux (kkl) என்று ஒரு இன வெறிக் கூட்டம் அமெரிக்காவில் 1900 முதல் 1960 வரை இருந்தது சுமர்ர் ஒரு ஐம்பதாயிரம் கருப்பு இன மக்களை கொன்ற ஒரு கூட்டம் இவர்கள். எல்லா வார்த்தைக்கு முன்னேய்ம் kl என்று சேர்த்து பெரும் வழக்கம் கொண்டவர்கள் – அவர்கள் தங்கள் கூட்டத்தை வெறியர்களாக மற்ற ஒரு புது புனித நூலையே உண்டு செய்தனர் – அதற்க்கு அவர்கள் இட்ட பெயர் kloran – பைபிளை விட குரானிலே தான் வெறுப்பு கருத்து அதிகம் மற்றும் குரான் edition of பைபிள் தான் தனது குறிக்கோளில் அடி வேகமாக வெற்றி பெற்றது என்பதால் இந்த பெயரை தேர்ந்தெடுத்தார்கள் –

    இதை நான் சொல்லலப்பா – படியுங்கள் – “Freakonomics” and Black Swan”

  51. // வேதத்தில் மற்ற யாரையும் பண்ணி, நாய் என்றெல்லாம் சொல்ல வில்லை – அதனாலேயே ஹிந்துக்கள் வெறுப்பு இன்றி இருக்கின்றனர் //

    ‘மனுஸ்மிருதி’ படித்ததில்லையா…கனவான்களே..?

  52. திரு ஜடாயு அவர்களுக்கு,

    சிறப்பான பதிவு பாராட்டுக்கள்.

    இங்கு கருத்துக்களை பதிவு செய்த அனைவருமே (ஒரு சிலரை thavira) ஒரு வித வேகத்தில் அல்லது mayakkathil தங்கள் கருத்தை பதிந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதை செய்து காட்டிய பெருமை, திரு Chill Sam என்ற கிருத்துவ (மத வெறி) அன்பரையே சேரும். இதுதான் கிருத்துவர்களின் பலமும் கூட எதிராளியை உணர்ச்சி வேகத்தில் தள்ளி அவர்கள் பேச வந்ததை மறக்கடிக்கும் அல்லது மழுங்கடிக்கும் உத்தி. இந்த திறமை பழம் கிருத்துவ நண்பர்களுக்குக் கிடையாது. uthaaranamaaga சுமார் 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் மதம் மாறிய மக்களுக்குத்தான் இந்த வெறி என்று சொல்லலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கல்லூரியில் படிக்கும் சமயம் கிருத்துவ நண்பர்கள் இருந்தார்கள். அவர்களிடம் இதனை வெறி இருந்து நான் பார்த்தது இல்லை. அதிலும் சில நண்பர்கள் நமது கோயில்களுக்கு வருவதும் நம்மை சர்ச் களுக்கு அழைத்து செல்வதும் மிக சாதாரண விஷயம். யாரும் யாருடனும் தம் மதம் சார்ந்த விசயங்களை உயர்வாக விவாதிக்காமல் அவரவர் வழி அவரவர்க்கு என்று படிப்பை தொடர்ந்து வந்தோம்.

    ஆனால் இன்று தினமும் சர்ச் செல்ல பழக்கப் படுத்தப்பட்டு விட்ட என் தோழி(இந்து பெண் – அவள் சர்ச் செல்ல காரணம் அவளது பெரியம்மா மதம் மாறி விட்டார் இவளையும் மாற்ற முயற்சி செய்கிறார்), நமது விபூதி பிரசாதம் கண்டு முகம் சுழிக்கிறாள். கோயில் லட்டுவை கண்டு விலகி ஓடுகிறாள். ithu yen enbathai Chill Sam போன்ற anbai ubadesikkum நண்பர்கள் than vilakka வேண்டும். இத்தனைக்கும் அவளது தாத்தா கோவை மருதமலை கோயில் அறங்காவலர்களில் ஒருவர். சர்ச் அவளது சாதாரண வாழ்க்கை முறையை மாற்றி விட்டது.

    மற்றுமோர் உதாரணம் என் பெரியப்பா மகன் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் மதம் மாறி இப்போது என் சொந்தங்களை மதம் மாற்ற முயற்சி செய்து வருகிறார். என்னால் முடிந்த வரை நான் அதை தடுக்க முயற்சி செய்கிறேன். ஆனால் நான் இருப்பது கோவை அவர்களோ நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில். ஒரு சிலரை அவர் மாற்றி விட்டதை அறிந்து என் மனம் பதைக்கிறது. இங்கு உதாரணம் காட்டுவோர் எல்லோரும் உபநிஷத், கீதை, என்று சொல்கிறார்கள். ஆனால் என்னை போன்ற அரசு பள்ளியில் பயின்று கலை கல்லூரியில் களைத்து vanthavargalukku ithu போன்ற uthaaranangal migavum anniyam. Eppadi என் sagaotharanidam poraadi என் சொந்தங்களை மதம் maatrum abaayathil இருந்து enbathum puriyavillai.

    Thiru Jadayu, Thiru Vedam Gopal, Thiru Saarang, Thiru Aravind Neelakandan மற்றும் Thiru Thiruchikkaaran pondror enakku ஒரு வழி sonnal uthaviyaaga irukkum.

    Thiru Chill Sam அவர்களுக்கு ஒரு Vaarthai. Ungal மதம் periyathu athuthaan siranthathu என்று sonnal yen Thiruvalluvarai என்ற indu gnaniyai thunaikku izhukkireergal? Jesus piranthu 2010 varudangal aagindrana. ஆனால் Thiruvalluvar pirantha varalaaru ungalukku theriyumaa? Thayavu செய்து ithu போன்ற karutthu vivaathangalil அதை thelivu padunthungal. Piragu theriyum yaar solvathu poi என்று.

  53. Chill Saam avargalukku oru marumozhi.

    //கடவுள் யாரையும் அழிப்பதற்காகப் படைக்கவில்லை என்பதே சத்தியமாகும்; ஆனாலும் ஒருவனைக் குற்றவாளியாக்கி (’அப்சல்குரு’வைப் போன்ற ஒருவனை..!) தூக்கில் போடத்துடிக்கும் சமுதாயமா இறைவனின் நியாயத்தீர்வை தினத்தினைக் குறைகூறுகிறது..?//

    அப்சல்குரு’வைப் போன்ற ஒருவனை தூக்கில் podaamal piragu ummaiya thookil poduvathu. Oru naatin paaraalumandrathai thakkiyavanai 9 perai kondravanai ungal matham nallavan endru solgiratha. Piragu yen America (Christian Government) sadaamai thookil pottathu? நியாயத்தீர்வை thinathil theerpu kidaikkum endru summa irukka veandiyathu thaane? Maelum Americavin Irattai gopurathai tharai mattamaakiya Obamavai yen valai veesi theda vendum? avargalukku ungal mathathin nal Theerppu thinathil nambikkai illaya?

    //அரசாங்கம் சில காலத்துக்கு முன்பு “மழைநீர் சேகரிப்பு” திட்டத்தை அறிவித்து அதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவையும் நிர்ணயித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்தியது;அதனை நிறைவேற்றாதவர்க்கு தண்டனையாக வீட்டு மின்சாரம் உட்பட அனைத்து சேவைகளும் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது;அது ஒரு பெரும்புரளியாக அவர்கள் தோற்றுப்போகவே காரணமானது தனிக்கதை//

    Manasai thottu sollungal Sendra arasu thotru poga mazhai neer segarippaa kaaranam? Chennai makkalai kettu paarungal mazhai neer segarippin avasiyatthai ungalukku thani vaguppe eduppaargal. Athanaalthan Chennaiyin anaithu thoguthiyum Aalum katchi vasamaanathu enbathai ninaivil kollungal.

    Ungalai pondra matham maariyor matham maatrra thadai sattathai kondu vanthatharkkaaga neengal alitha vaakke sendra arasu thotru poga oru perum kaaranam enbathai siru pillaiyum solli vidume?

    Maelum Arasu OOzhiyargalin ottu motha ethirppum (sendra arasu avaragalai vaelai sei allathu veetukku sel endru sonnathaal) sendra arasin tholvikkaana kaaranam.

    //அதுபோலவே இந்த உலகைப் படைத்த “யாவே” கடவுள் ஒரு நாளை நியமித்து அந்த நாளில் இந்த உலகை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார்;சிருஷ்டிகர் என்ற முறையில் அவருக்கு எல்லா உரிமையும் உண்டு;இதற்கான எச்சரிப்பின் அடையாளமாகவே எரிமலையும் பூகம்பமும் சுனாமியும் கட்டளையிடப்பட்டது;இவற்றை அவர் செய்யாவிட்டால் பின்னை யார் செய்தது?இது ஒரே நாளில் உலக முழுவதுக்கும் சம்பவிக்கும் போது நாங்கள் மத்திய ஆகாயத்தில் இருப்போம்;(என்ன சிரிப்பு வருகிறதா, அவரும் உன் பரிதாப நிலையினைக் கண்டு நகைக்கிறார்..!) இதெல்லாம் விஞ்ஞானமய்யா என ஆராய்ச்சி செய்துக்கொண்டிருப்போரும் சேர்ந்து உயிர்தப்ப ஓடுவர்//

    Appadiyaanal sunamiyin paathippu mattra ellaa paguthigalai vida yen velankanniyil miga athigamaaga vanthathu? athilum kurippaaga Christmas thinanthandru yen vanthathu? neengal yen appothu oadavillai? ungal mathiya aagaayam engu ponathu? ungal thevakumaaran athai vaadagaikku eduthu kondaara?

  54. Dear Chilsam,
    //மேற்கத்திய கலாச்சார பழக்கவழக்கங்கள் கிழக்கத்தியரை ஈர்ப்பதும் கிழக்கத்திய கலாச்சாரத்தின் குறியீடுகளான பரதம்,சங்கீதம் போன்றவை மேற்கத்தியரை ஈர்ப்பதும் காலச் சக்கரத்தின் சுழற்சியின் மாயமாகும்;

    ஆனாலும் வரலாறு முழுவதுமே மேற்கத்தியவரே ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்திருக்கிறார்கள்;//
    By Sword and Fraud- Now why don’t you use brain and come out?

    இங்கே ஆரியர் வந்து ஆதிக்கம் செலுத்தவில்லையா?பௌத்தத்துக்கு எதிராக ஆதிசங்கரர் முதலாக புனிதப் பயணம் மேற்கொள்ளவில்லையா?
    Why Spread this Fraud Lies in 21st Century? Don’t you have any new ones?

    “தமிழ் ஹிந்து” தளத்தின் கட்டுரையைப் போலவே ஓராயிரம் கட்டுரைகளை நாங்களும் இங்கே தயாரிக்கமுடியும்;இந்து மார்க்கத்தின் மோசடிகளால் துன்பப்பட்டவர்களின் படுபயங்கரமான கதைகளை நாங்களும் விவரிக்கமுடியும்.//
    Sir Not One 1000 but Crores and Crores trash is printed and pushed in to the innocent hands and we require answers like this. Why do you not come and answer in my threads?

    ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட கரடுமுரடான பாதை வழியே நாம் விரும்பும் இடத்துக்கு சென்றுவந்தோம்;இப்போதோ நல்லதொரு புதிய பாதை தோன்றியிருக்கிறது;அதன் வழியே விரைவாக சுகமாக பயணம் நிறைவேறுகிறது;அதனை ஏற்கமறுத்தால் விரைவில் பழைய பாதை முடக்கப்படும்;அப்போது வருத்தப்படவேண்டியிருக்கும்;
    The Existing path is known- Unknown is also known- Jesus ended up saying-“My God? why did you abandon me?”
    We are with God and not with abandones frauds.

  55. கிறித்தவர்கள் மத மாற்றம் செய்வதோடு அப்பாவி மக்களின் மனதில் ஹிந்து சமயம் மற்றும் ஹிந்து பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் விஷ விதைகளை விதைக்கின்றனர்.
    உதாரணமாக எனது நண்பர் வீட்டில் நடந்த நிகழ்ச்சி.
    ஒரு பண்டிகையின் போது, வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு அன்று செய்த தின் பண்டங்களைக் கொடுத்தனர் .
    ஆனால் அவள் அதை சாப்பிட மறுத்து விட்டாள்.

    எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் என் இப்படிச் செய்கிறாள் என்று காரணம் கேட்ட போது, அவள் சமீபத்தில் கிறித்தவத்துக்கு மாற்றப்பட்டதாகவும் அப்போது ‘ஹிந்துக் கடவுள்கள் சாத்தான்கள்,;எனவே அவைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் பேய் பிடிக்கும் ‘என்று ‘ சொன்னார்களாம் !

    கள்ளம் அறியாத மக்கள் மனதை கிறித்தவம் என்ற பெயரில் எப்படிக் கெடுக்கிறார்கள்?
    இது என்ன மதம்?இதையா கிறித்து போதித்தார்?

    இரா.ஸ்ரீதரன்

  56. https://jamakaran.com/tam/2010/april/alai.htm

    //
    “சமீபகாலமாக, கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்குச் செல்வதையும், வேதம் வாசிப்பதையும் அறவே தவிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். வெளிநாடுகளில் பல கிறிஸ்தவ தேவாலயங்கள் தியேட்டர்களாகவும், காப்பகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. தேவாலயங்களில் ஆராதனைக்கு வருபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களும் தங்கள் நாட்களை விரல்விட்டு எண்ணிக்கொண்டிருப்பவர்களாகவே இருப்பார்கள். குறிப்பாக இளைஞர்கள் தேவாலயங்கள் பக்கம் வருவதே இல்லை. இதற்கெல்லாம் காரணம், என்னவென்று நாங்கள் சிந்தித்துப் பார்த்தபோது, இன்றைய நவீன சமுதாயம் கல்வியும், அறிவும் நிரம்பிய சமுதாயமாக மாறிவருகிறது என்றும், இதன் அறிவும், புத்தியும் ஏற்கும் அளவில் நம்முடைய கிறிஸ்தவ மதத்தின் கொள்கைகள் இல்லை என்பதும் தெரியவந்தது. இன்றைய இளைஞர்கள் சிந்திக்கும் ஆற்றலை அபரிமிதமாகப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்தவத்தின்மேல் எழுப்பும் பல நியாயமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் நம்மிடம் பதிலில்லை. ஆகவே அவர்கள் கிறிஸ்தவத்தை நம்பவும், ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை. எனவேதான், நாங்கள் இன்றைய சமுதாயத்திற்கு ஏற்ற அளவில் கிறிஸ்தவ மார்க்கத்தைப் புதுப்பிக்க ஆரம்பித்தோம்.//
    //அப்படியென்னதான் புதுப்பித்திருக்கிறார்களாம்? கிழக்கு தேசங்களில் காணப்படும் மத நம்பிக்கைகளை வேதாகமத்தின் உபதேசங்களுடன் இணைத்து இதை ஒரு புதிய வடிவமாக கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் இந்துமதத் தத்துவங்கள் மற்றும் போதனைகள், பாகாய் மதத் தத்துவங்கள், அகங்காமதத் தத்துவங்கள் போன்ற எல்லாவற்றையும் கலந்து தாளித்துப்போட்டு அதை ஒரு கிறிஸ்தவத்தின் புதுப்பிக்கப்பட்ட வடிவம் என்று பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்//

  57. மத மாற்றத்தால் குடும்பங்கள் கூட சிதைக்கப் படுகின்றன.
    எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் தந்தை ஒரு இடத்திலும் , தாய் மற்றும் இரு மகன்கள் ஒரு இடத்திலும் வாழ்கின்றனர் ( மகன்களது படிப்பை முன்னிட்டு)

    தந்தை சினிமாத் துறையில் உள்ளார் . எப்படியோ கிறித்தவராக மாற்றப் பட்டார் .

    ஆனால் வேறு இடத்தில் இருந்த குடும்பம் மாறவில்லை. இதிலிருந்து போராட்டம் ஆரம்பித்தது .அவர் தன் குடும்பத்துக்கு பணம் அனுப்புவது குறைந்தது .அவர்களுக்கு இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டது .குடும்பத்தின் மீது அவருக்கு அக்கறை குறைந்தது .பொறியியல் படித்துக் கொண்டிருந்த மூத்த மகன் ,பள்ளியில் இருந்த இளையவன் இவர்கள் மன ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப் பட்டனர்.

    தாய் குடும்பத்தை நடத்த பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது .மூத்த மகன் நிலைமையை உணர்ந்து புத்திசாலித் தனமாகவும் பொறுப்பாகவும் நடந்து பொறியியல் படிப்பை முடித்து மெர்ச்சன்ட் நேவியில் ஒரு வேலையும் தேடிக்் கொண்டான். அவன் தனது தம்பியை இப்போது கல்லூரியில் சேர்த்திருக்கிறான். ஆனால் தந்தை எதையும் கண்டு கொள்ளவே இல்லை.
    அந்தக் குடும்பம் பட்ட இன்னல்கள் கிறித்தவ மத மாற்றத்தின் கொடூரங்களுக்கு ஒரு சான்று.

    இரா.ஸ்ரீதரன்

    இரா.ஸ்ரீதரன்

  58. // ‘மனுஸ்மிருதி’ படித்ததில்லையா…கனவான்களே..? //

    ஒரே ஒரு வித்தியாசம் – மனு ஸ்மிருதியில் உள்ள கட்டுப்பாடுகளை சொந்த வாழ்க்கையில் கடைபிடித்தனரே தவிர, அதை காரணமாக வைத்து எந்த இனத்தையும் அழித்ததில்லை. இதெல்லாம் அயல் நாட்டவர்களுடைய testimony. மனுச்மிருதியையோ வேறு வைதீக/ஆகம நூலையோ வைத்து யாரும் ‘குரூசெடுகலையோ’, ‘ஜிஹாதையோ’ பண்ணினதில்லை. ராமானுஜர், ஆதி சங்கரர் போன்ற பரம வைதீகர்களும் சமூக நன்மைக்குப் பாடுபட்டுள்ளனர் என்பது அவர்கள் எழுதி வைத்ததிலிருந்து விளங்கும்.

    கட்டுரையின் நோக்கம் சும்மா வம்புக்கு என்று கிறித்தவர்களைத் தாக்க அல்ல. அப்படி எழுத வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் பைபிளிலிருந்து பல மேற்கோள்களை கொடுத்திருப்பார் கட்டுரையாசிரியர். மதமாற்றம் என்ற பெயரில் ஹிந்துக்கள் மீது பொய்ப்பிரச்சாரம் பண்ணுவதையும் ஹிந்துக்கள் தெய்வமாகக் கருதுவோரை “சாத்தான்கள்” என்று pamphlet அடித்து அதையும் பொதுஜனங்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்வது போன்ற அட்டூழியத்தைக் கண்டிக்க தான் வருகிறோம். (வேண்டுமானால் இந்த வாதங்களை உங்கள் சார்ச்சுக்குல்லேயோ, உங்கள் தனிப்பட்ட fora-க்களிலோ வைத்து செய்திருந்தால் இப்படி ரியாக்ட் செய்திருக்க மாட்டோம்). அதைப் புரிந்துக் கொள்ளும்.

    “கர்த்தர் இதைத் தான் சொன்னார்” என்று நீங்கள் நம்புவதை, மற்ற பேருக்கு உபத்திரவம் இல்லாமல் செய்தால், அதை நாங்கள் ஒரு பொழுதும் எதிர்க்கவும் விமர்சிக்கவும் மாட்டோம். கண்ணனை அப்பட்டமாக “சூழ்ச்சிக்காரன்” என்றும், பெற்ற தாய் போன்ற நாட்டை, “வெள்ளைக்காரன் செய்து கொடுத்தது” என்றெல்லாம் பொய்ப்பிரச்சாரங்களை நீங்கள் எழுதியதனால் தான் பைபிளிலிருந்து மேற்கோள்களை உருவினோம். இல்லையென்றால் உங்கள் புத்தகங்களில் என்ன உள்ளது என்பது பற்றி எமக்கு ஒரு கவலையும் அக்கறையும் இல்லை. இதைப் புரிந்துக் கொண்டு இனியாகிலும் அயலாவர்களுடைய fora-க்களில் etiquette-ஓடு நடந்துக் கொள்ளவும்.

  59. “யாராவது மத சண்டையில் ஈடுபட விரும்பினால் அவனிடம் ‘ நீ கடவுளைக் கண்டிருக்கிறாயா? ஆன்மாவைக் கண்டிருக்கிறாயா?இல்லையென்றால் இறைவனின் திருநாமத்தைப் பிரச்சாரம் செய்ய உனக்கு என்ன உரிமை இருக்கிறது?இருட்டிற்குள் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் நீ என்னையும் அதற்குள் இழுத்துச் செல்ல விரும்புகிறாய்.குருடனைக் குருடன் வழிநடத்தி இருவரும் குழியில் விழ வேண்டுமா?’ என்று கேளுங்கள் “-(ஞானதீபம் 5 ,பக்.328 )
    ”உங்கள் சண்டைகளும் சச்சரவுகளும் வீண்.நீங்கள் பிரச்சாரம் செய்ய விழையும் கடவுளைக் நீங்கள் கண்டிருக்கிறீர்களா?காணவில்லை என்றால் உங்கள் பிரச்சாரம் வீண்.ஏனெனில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது.நீங்கள் அவரைப் பார்த்திருப்பீர்களானால் சண்டையிட மாட்டீர்கள்.”-(ஞானதீபம் 5 ,பக்.172)

  60. A story: – In all the churches we find one confession chamber. Those who commit mistakes or sins can pay a nominal fee to the church and ask the Father for confession standing inside the chamber. One notorious habitual thief every time comes to the church and asks the father for confession. One day the irritated Father told him this is his last confession and next time if you come your request will not be entertained and you will be handed over to the police. In reply the thief said to Father to allow him to commit one more mistake and promised him that he will stop the mistake once for all. He paid the extra amount for the last sin along with the current one. After getting confession for both the sin, he came out of the chamber and stabbed the Father taken all the valuables available in the church and ran away

  61. திரு சுரேஷ் அவர்களே

    //
    ஆனால் என்னை போன்ற அரசு பள்ளியில் பயின்று கலை கல்லூரியில் களைத்து vanthavargalukku ithu போன்ற uthaaranangal migavum anniyam. Eppadi என் sagaotharanidam poraadi என் சொந்தங்களை மதம் maatrum abaayathil இருந்து enbathum puriyavillai.
    //

    கீதையும், உபநிஷட்களும் கடினமானவை கிடையாது – எளிய முறையில் புரிந்து கொள்ள பல நல்ல தமிழ் உரைகள் உள்ளன

    நீங்கள் உங்களை தயார் படுத்திக்கொள்ள பல புத்தகங்களை படிக்கலாம் – கண்ணதாசனின் அர்த்தமுள்ள ஹிந்து மதம், விவேகானந்தரின் பல பல நூல்கள், சொற்பொழிவுகள் , தெய்வத்தின் குரல், Hinduism Rediscovered by Anbil Ramaswamy, சனாதன தர்மம் பற்றிய ஏதாவது ஒரு புத்தகம்
    இதில் ஒரு சிலவற்றை படித்து நீங்கள் தெளிவு அடைந்து, சிலவற்றை நடை முறை படுத்தினாலே உங்களுக்கு தெளிவும் அமைதியும் வந்துவிடும் … அதன் பிறகு உங்களின் உறவினர்களிடம் முறையாக எடுத்து சொல்ல உங்களால் எளிதாக முடியும்

    எல்லோரையும் பாவிகலாக்கி பயமுறுத்தி ஆள் சேர்ப்பது தான் அவர்களின் எண்ணம் – கழகத்தினர் காசு, அஞ்சு ரூவா பிரியாணி கொடுத்து ஆள் சேர்பதற்கும், இவர்களுக்கும் வித்யாசமே இல்லை! நிச்சயமாக இல்லை! சர்ச்க்கு போனா animation காட்டுவதோடு சரி – தேவனே உங்கள் கரங்களை கீழே இறக்குங்கள், எங்களை பிடித்துக்கொள்ளுங்கள், பாவிகளே கரங்களை உயர்த்துங்கள் தேவன் உங்களை பிடித்துகொல்வார் என்று ஒருவர் hypnotize செய்வார், பலர் hypnotize ஆகி ஒரு climax ஐ அடிவார – அப்புறம் கூட்டம் களையும் – sunday ஆனா சத்தம் போட்டதற்கு பிரியாணி கிடைக்கும்

    இயேசு ஏன் உண்மையான ஜீவனுள்ள தேவனாக இருக்க இயலாது என்று நீங்கள் சொல்ல எளிதில் இயலும்
    – தன்னையே காக்க இயலாத ஒருவரா உங்கள் உறவினரை காக்க போகிறார்
    – காட்டுமிராண்டி தனத்தை அவிழ்த்துவிட்டு பலரை கொன்ற ஒருவரா ஜீவனுள்ள தேவன்
    – பண்ணி, நாய் என்று சொல்பவர ஜீவனுள்ள தேவன்
    – சாத்தானை கண்டு அஞ்சும் ஒருவரா ஜீவனுள்ள தேவன்
    – எல்லோரையும் பாவிகளாகவே ஸ்ரிச்டித்த ஒருவரா ஜீவனுள்ள தேவன்
    – ஹிட்லரின் பணத்தில் கட்டிய சர்சுக்கு சென்று தொழ்டால் எப்படி அமைதி கிடைக்கும்
    – ஜப்பானை சர்வ நாசம் செய்தவன் பணத்தில் கட்டிய சர்ச்சுக்கு சென்று தொழுதால் எப்படி இன்பம் கிட்டும்
    – கிறிஸ்தவத்தை தழுவிய மேற்கத்தியர் ஏன் அமைதி இன்றி ஒரு விபச்சார மிருக வாழ்கை வாழ்கின்றனர்
    – உலகில் உள்ள மற்றும் இந்தியாவிற்கு வந்த அத்தனை புத்திசாலிகளும் ஏன் ஹிந்து மதமே உலக கஷ்டங்களை நீக்க கூடிய ஒரே மதம் என்று ஏன் சொல்ல வேண்டும்
    – நீ தவறு செய்தால் உன்னை நரகத்தில் தள்ளி விடுவேன் அப்புறம் கடைசி வரை அவ்வளவு தான் என்று சொல்லும் மதம் நல்ல மதமா
    அல்லது நீ தவறு செய்தாலும் இந்த பிறவியிலோ வரும் பிறவிகளிலோ நல்லது செய்தால் கடவுளை அடையலாம் என்று சொல்லும் ஹிந்து மதம் உயர்ந்ததா
    – எதுவும் படிக்க வேண்டாம், எதுவும் செய்ய வேண்டாம், ஒரு டம்பளர் தண்ணீர் எனக்கு ஆசையாக அளித்தால் போதும் நான் குளிர்ந்துவிடுவேன் எட்று கூறும் கண்ணன் மெய்யான கடவுளா? அல்லது நரகத்திலே அமிழ்க்கும் கோவக்கார கடவுள் மெய்யானவரா?
    – கல்லிலும் என்னை காணலாம் என்றும் சொல்லும் கடவுள் மெய்யானவரா? வேற எதாவது கும்பிட்டா உன்ன கல்லால அடிப்பேன் என்று சொல்லும் ஒருவர் மெய்யானவரா?
    – நீ ஒரு அற்ப பாவி என்று சொல்லும் மதம் சிறந்ததா? நீ உன்னை உணர்ந்தால் நீயே கடவுளின் நிலையை எட்டலாம் என்று சொல்லும் மதம் சிறந்ததா
    – எல்லா ஜீவன்களிடத்தும் கடவுளை காண சொல்லும் மதம் சிறந்ததா? அல்லது இஸ்ரேல் நாட்டு மக்களே வாழ வேண்டும் மற்றவர் எல்லாம் கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லும் மதம் சிறந்ததா?

    – வெறும் பஞ்ச தந்திர கதைகளை சேர்த்து கடவுளின் வாக்கு என்று சொல்லும் மதம் சிறந்ததா? மெய் ஞானத்தை, நிரந்தர மன அமைதியை, அன்பை, அடையும் வழிகளை சொல்லும் உபநிஷத் சிறந்ததா?

    எழுதிக்கொண்டே போகலாம்

  62. // இங்கு உதாரணம் காட்டுவோர் எல்லோரும் உபநிஷத், கீதை, என்று சொல்கிறார்கள். ஆனால் என்னை போன்ற அரசு பள்ளியில் பயின்று கலை கல்லூரியில் களைத்து vanthavargalukku ithu போன்ற uthaaranangal migavum anniyam. Eppadi என் sagaotharanidam poraadi என் சொந்தங்களை மதம் maatrum abaayathil இருந்து enbathum puriyavillai. //

    அன்புள்ள சுரேஷ்,

    பெரும்பாலான கேஸ்களில், மதமாற்றங்கள் நிகழ்வதற்குக் காரணம் சமூக, பொருளாதாரச் சூழல்கள், வழிகாட்டுதல் இன்மை அல்லது ஆதரவின்மை ஆகியவை தான். இந்து, கிறிஸ்தவ மதங்களின் உண்மைத் தன்மையை ஒப்பிட்டு சீர்தூக்கிப் பார்க்க்கும் நிலையில் எல்லாம் குறிப்பிட்ட தனிமனிதர்கள் / குடும்பங்கள் இருப்பதில்லை. அந்தத் தருணத்தில் கிடைக்கும் ஆதாயம் அல்லது அரவணைப்பு அவ்ர்களை மதமாற்றச் சேற்றில் அமிழ்த்தி விடுகிறது. அவர்களிடம் முதலில் இருந்தே இந்துமதப் பிடிப்பு இல்லாதிருந்தால், இது நிகழ்வது இன்னும் எளிதாகிறது..

    சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினால், இதைத் தடுக்கலாம்.

    தனிப்பட்ட அளவில் நமது நண்பரோ, உறவினரோ கிறிஸ்தவத்தின் தாக்கத்திற்கு ஆளாகியிருந்தால், அவருடன் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசி அவரது பிரசினை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயலவேண்டும். (எடுத்தவுடன் இந்துமத மேன்மையைப் பேச ஆரம்பிப்பது அவரை இன்னும் விலகவே செய்யும்) பெரும்பாலும் உளவியல் பிரசினை, ஆதரவுக்கான தேவை, வேறு சில அழுத்தங்கள் (நண்பர்கள் வட்டம், காதல்) இவற்றின் காரணமாகத் தான் அவர் கிறிஸ்தவச் சேற்றில் சிக்கியிருப்பார். அதனை அறிந்து கொண்டு பிரசினைக்குத் தீர்வுகள் அளித்தும், விளக்கிச் சொல்லியும் அவர்கள் மனதை மாற்றலாம். பிரசினைகளுக்காக இல்லாமல் ஆதாயத்துக்காக மதம் மாற எண்ணுபவர்களுக்கு அவர்கள் செய்வது பெரும் தவறு என்று சுட்டிக் காட்டி, வேறு எத்தனையோ வழிகள் உள்ளன என்பதை விளக்கி, உதவலாம். மனிதநேயத்தையும், சமரசத்தையும் வலியுறுத்திய காந்தியடிகள், பாரதியார் ஆகியவர்கள் மதமாற்றத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளார்கள் போன்ற விஷயங்களையும் எடுத்துச் சொல்லவேண்டும்.

    இவை நிறைய உழைப்பும், நேரமும் கோரும் விஷயங்கள். ஆனாலும் செய்தே ஆக வேண்டும்.

    ஒரு சமூகமாக இந்துக்கள் செய்யவேண்டியவை:

    1. எல்லா இந்துக் குடும்பங்களும் தங்கள் குழந்தைகளுக்கு இந்து மதம், கலாசாரம், நெறிகள் ஆகியவற்றுடன் பரிச்சயமளிக்க வேண்டும்.. இந்துமதம் என்றால் சடங்குகள், விழாக்கள், வழிபாடுகள், பஜனைகள், ஜோதிடம் இவ்வளவு தான் என்ற புரிதல் தான் சராசரி மக்களுக்கு உள்ளது. இவை நடைமுறை சமயத்தின் ஒரு முக்கியமான பகுதிகள், ஆனால் இந்தும்தம் இது மட்டும் அல்ல, அது நமது அடையாளம், நமது வாழ்க்கை முறை, நமது பண்பாடு, உலகத்திலேயே மேன்மையும், உன்னதமும் கொண்ட மதம் இந்து மதம், மனித சுதந்திரம், ஜனநாயகம், அறிவியல் பூர்வமான பார்வை இவைகளுக்கு முழுமையான இடம் தரும் மதம் இந்துமதம் மட்டுமே ஆகிய கருத்துக்களையும் கற்றுத் தர வேண்டும்.

    2. குடும்ப அமைப்பு உறுதியாக இருக்கும்போது இப்படியான மதமாற்றங்கள் நிகழ்வதைத் தடுக்கும். சொந்தபந்தங்கள் கூடி ஒற்றுமையுடன் வாழும்போது ஒருவர் வீட்டில் கஷ்டம் ஏற்பட்டால் உதவுவதற்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற நிலை இருந்தால், மதமாற்றிகள் அங்கு புகுந்து குழப்பம் விளைவிக்கும் வாய்ப்பு குறைவு.. அதனால் தான், பிரிட்டிஷ் காலம் முதல் கிறிஸ்தவ மிஷநரிகள் இந்துக் குடும்பங்களை சிதைக்கும் விதமாகவே பல கருத்தியல்களை பிரசாரம் செய்து வருகிறார்கள்.. இந்துக் குடும்ப அமைப்பில் சில குறைபாடுகள், ஆதிக்க மனோபாவங்கள் உண்டு தான், ஆனால் அடிப்படையில் அன்பும், அரவணைப்புமே அதன் லட்சியங்கள். நமது குடும்ப உறவுகளை வலுப்படுத்துவது, ஒருவருக்கொருவர் கஷ்டகாலங்களில் விட்டுக் கொடுக்காமல் உதவுவது மதமாற்றங்களுக்கு எதிரான பெரிய அரண்.

    3. நவீன வாழ்க்கையில் சமூக ரீதியான இத்தகைய அரவணைப்புக்கும் பெரும் தேவை உள்ளது, இந்துக் கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்கள், இந்து சமூகசேவை மையங்கள், இந்து கவுன்சலிங் செண்டர்கள் இவை எல்லா ஊர்களிலும் அதிகரிக்க வேண்டும்.. வசதியான நிலையில் இருக்கும் இந்துக்கள் இவற்றுக்கு ஆதரவும், உதவியும் அளிக்க வேண்டும்..

    துரதிர்ஷ்டவசமாக, கவுன்சலிங் செயல்பாடுகளை அமைப்புரீதியாக செய்ய இந்துக்கள் போதுமான அளவு அமைப்புகளை உருவாக்கவில்லை. பழங்காலத்தில் சாதி, சமூகம், மூத்தோர், சுற்றம் எல்லாம் இதைச் செய்துவந்தன.. நவீனமயமாக்கலின் வெள்ளத்தில் இவை போய்விட்டன. இதை இப்போதாவது உணர்ந்து கொண்டு இத்தகைய அமைப்புகளை நாம் அதிகமாக வளர்க்க வேண்டும்.

    4. ஊடகங்களீல் இந்துமதத்திற்கு எதிரான கடும் பிரசாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் நடக்கிறது.. இளைஞர்களிடம் ஊடகத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், அவர்கள் எளிதில் இதற்கு பலியாகிறார்கள். எனவே, இந்துமதத்தின் மீது அன்பு கொண்ட இயக்கங்கள், அமைப்புகள், தனிமனிதர்கள் தொடர்ந்து ஊடகச் செயல்பாடுகளை கவனித்து, எதிர்ப்பிரசாரங்களை மழுங்கவைக்க வேண்டும். இந்துத் தரப்பை எடுத்துச் சொல்லும் ஊடகங்களை உருவாக்கி, வளர்க்க வேண்டும்.

  63. // வெறும் பஞ்ச தந்திர கதைகளை சேர்த்து கடவுளின் வாக்கு என்று சொல்லும் மதம் சிறந்ததா? //

    பஞ்சதந்திரக் கதைகள் அற்புதமானவை. அபாரமான கற்பனையும், வாழ்க்கைக்கு உதவக் கூடிய நடைமுறை ஞானமும் அவற்றில் உண்டு.

    அவற்றை பைபிளுடன் ஒப்பிட்டு அவற்றின் மதிப்பை குறைக்காதீர்கள்.

  64. //
    பஞ்சதந்திரக் கதைகள் அற்புதமானவை. அபாரமான கற்பனையும், வாழ்க்கைக்கு உதவக் கூடிய நடைமுறை ஞானமும் அவற்றில் உண்டு.
    அவற்றை பைபிளுடன் ஒப்பிட்டு அவற்றின் மதிப்பை குறைக்காதீர்கள்
    //
    🙂 super

  65. மனுஸ்ம்ருதி பற்றி கிருத்துதாஸர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். மனு சொன்னது அவரது காலத்திய சமுதாய சட்டங்கள்; அதில் இந்த ஜாதியார்கள் மோட்சத்தை அடையமுடியாது என்றெல்லாம் சொல்லப்படவில்லை. மேலும் அந்த சமுதாய சட்டங்களை எட்டாவது மனுவாக அறியப்படுகின்ற டாக்டர் அம்பேத்கர் திருத்தி இன்றைக்கு ஏற்றவாறு எழுதிவிட்டார்; நாளை இதுவும் மாறும்-ஏற்கெனவே நிறைய திருத்தங்கள்.

    ஆனால், புறஜாதியார்கள் மோக்ஷத்திற்க்கு அருகதையில்லை என்று விவிலியம் சொல்கிறதாமே! 1,44,000 நபர்கள்தான் மோக்ஷத்தை அடைவார்கள் என்றும் சொல்கிறதாமே; இன்றைக்கு உலக ஜனத்தொகை சுமார் 600 கோடியில்லையோ! அப்படியானால் “விசுவாசி”களுக்கே அல்வாதானா?

    விவிலியம் மற்றும் திருச்சட்டங்களை ஆராய்ச்சி செய்பவர்கள் இதெல்லாம் கேட்கிறார்கள்; எனக்கொன்றும் தெரியாது; விவரமறிந்த விசுவாசிகள் பதில் சொல்வார்களா?

    -கண்ணன்.

  66. இதோ ஒரு கதை – ஒரு கிருஸ்துவ பாதரியார் சில சீனர்களுக்கு ஏசுவின் பெருமைகளை கூறி கிருஸ்துவே சிறந்த மார்கம் என்று எடுத்துக்கூறினார். தாம் கூறியதை அவர்கள் எவ்வளவு துரம் மனத்தில் பதித்துள்ளார்கள் என்பதை சோதிக்க ழூன்று சீனர்களை தேர்வு செய்து அவர்களிடம் சில கேள்விகளைக்கேட்டார் .
    பாதரி – சகோதரர்களே எத்தனை கடவுளர்கள் உள்ளனர் என்று வினவினார் ? முதல் சீனன் – ழூன்று என்றும், இரண்டாவது சீனன் – இரண்டு என்றும், ழூன்றாம் சீனன் – ஒருவரும் இல்லை என்றும் பதில் உரைத்தார்கள்.
    பாதரி – இவை சாத்தானிடத்திலிருந்து வரும் பதில் !
    சீனர்கள் – நீங்கள் போதித்தவாறே நாங்கள் பதில் உரைத்தோம்.
    பாதரி – துஷிப்பவர்கள்
    சீனர்ள் – நாங்கள் உங்கள் போதனையை அறிவு கூர்ந்து கேட்டோம், அதன் வெளிப்பாடே எங்கள் பதிலாக அமைந்தது.
    சற்று அமைதிக்குபின் பாதரி முதல் சீனனைப்பார்த்து நீ எவ்வாறு ழூன்று கடவுள் உள்ளனர் என்று முடிவு செய்தாய் ?
    முதல் சீனன் – பிதா கடவுள், மகன் கடவுள், புனிதபேய் கடவுள் என்றுதானே சொன்னீர்கள் எனவே ழூன்று கடவுள் என்று முடிவு செய்தேன்
    பாதரி – இது தவறு பாடத்தை நன்கு கவனிக்கவில்லை இந்த ழூன்றும் ஒரே கடவுள் என்றும் சொன்னேன் அல்லவா
    முதல் சீனன் – ஆமாம் சொன்னீர்கள் ஆனால் நீங்கள் உங்களை மறந்துவிட்டதாக எண்ணி முதல் கூறியதை உண்மை என தீர்மானித்தேன்
    பாதரி – இல்லை ழூன்று நபர்கள், அனைவரும் கடவுள் சக்தியிலும் கீர்தியிலும் சமமானவர்கள் என்பதோடு இவர்கள் ழூவரும் ஒருவரே என்பதை நீங்கள் நம்பவேண்டும்
    முதல் சீனன் – அது முடியாது ! சீனாவில் நாங்கள் முரண்பாடுகளை ஏற்பதில்லை நம்புவதும் இல்லை
    பாதரி – அது ஒரு மர்மம் அது உங்கள் அறிவுக்கு எட்டாது
    முதல் சீனன் – இதை கூறவா 1000 மைல் தொலைவிலிருந்து வந்தீர்கள்
    பாதரி – சீனாவில் ஒரு சோஸியன் சாத்தான் வேலை செய்கிறான் என்று கூறி, இரண்டாவது சீனனைப்பார்த்து நீ எவ்வாறு இரண்டு கடவுள் என்று கூறினாய் என வினவினார்
    இரண்டாவது சீனன் – சீனர்களாகிய நாங்கள் விஷயத்தை ஒன்றுபடுத்தி ஒப்பீடுசெய்து உண்மை அறியும் வழக்கம் உடையவர்கள். ழூன்றுபேர் இருந்ததாகவும் அதில் ஒருவர் வெகு நாட்களுக்குமுன் மேற்கத்திய தேசத்தில் இறந்ததாகவும் கூறினீர்கள். எனவே மிதமுள்ள கடவுள் இரண்டு என முடிவு செய்தேன்
    பாதரி – இருள்சூழ்ந்த இந்த ஜிவன்களிடம் விவாதம் செய்வது வீண் என்று சலித்தக்கொண்டு ழூன்றாவது சீனனை நோக்கி நீ எவ்வாறு ஒரு கடவுளும் இல்லை என்று கூறினாய் ?
    ழூன்றாவது சீனன் – நீங்கள்தான் ழூன்று கடவுள் என்றும் அவர் ழூவரும் ஒருவரே என்றும் அவர்தான் கிருஸ்து உண்மையான கடவுள் என்று கூறினீர்கள். அவரை அரேபியவளைகுடாபகுதியில் 1800 ஆண்டுகளுக்குமுன் மரத்தில் கட்டி கொன்றுவிட்டார்கள் என்றும் உரைத்தீர்கள். ஆனால் அவரும் இப்பொழுது இல்லை என்பதால் ஒருகடவுளும் இல்லை என்றேன்
    பாதரி – நான் பிறவாது இருப்பதேமேல் ஏன் என்றால் நீங்கள் உண்மையை நம்ப மறுக்கிறீர்கள் என்று சலித்துக்கொண்டார்
    முதல் சீனன் – எரிச்சலான மனநிலை உண்மையை வெளியே அனுப்பிவிடும். மணிதர்கள் சபிக்க தொடங்கும்போது கடவுளின் ஆவி அவர்களது இதயத்தைவிட்டு விலகிவிடும் என்று எங்கள் ”கன்ஃபியூஸியஸ்” கூறியுள்ளார்.
    இரண்டாவது சீனன் – இவ்வாறு முரண்பாடு கருத்துக்களை கூறும் உங்களைபோன்றோரை ஞானீகள் வரிசையிலும் முந்தையோர் மன்றத்திலும் அனுமதிக்கக்கூடாது என்று எங்கள் ”ஸின்சாங்” கூறியுள்ளார்
    ழூன்றாவது சீனன் – இந்த கடிந்துரைகள் நியானமானவை. சோற்றைவிட களி மேலானது என்று எங்கள் ”தெர்வாங்தீ” உரைத்துள்ளார். பொழுதுபோவதற்க்கு எங்களுக்கு பல விடுகதைகளை உரைத்தற்க்கு நன்றி. இவைகள் அத்தனையும் கட்டுகதைகள் என்பது நிஜமே என்றானாம்.
    கதை – ராஜாராம் மோகன் ராய்
    ஆதாரம் – திராவிட சான்றோர் பேரவை ”கர்த்தர் என்னும் கடவுள்”

  67. ‘chillsam’ போன்ற கிறித்தவர்கள், தங்களால் தமிழைக் கையாள முடியும் என்பதாலேயே தமிழ்நாடு கிறித்துவ நாடு என்று முடிவெடுத்தால், எவ்வளவு இந்தியர்கள், ஜெருசலேத்தையும் மற்ற கிறித்தவ நாடுகளையும் இந்துக்களின் நாடுகள் என்று நினைக்க முடியும்? உண்மையில் சொல்லப் போனால் ஜெருசலேமே கிறித்தவர்களது என்று இல்லாமல் கிறித்தவர்களின் தகப்பனாரின் வேலைக்கார மனைவியின் வாரிசுகளான இஸ்லாத்தினர் வுரிமை கோரிக் கொல்லுகையில், தமிழகம் கிறித்தவர்களின் நாடு போல் பேசுவது விந்தை, வினோதம், வம்பு, வரம்புக்கு மீறிய செயல்.

  68. அன்புக்குரிய சுரேஷ் அவர்களுக்கு,

    அக்கறையுடன் எழுதும் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை வாழ்த்துகிறேன்! உங்களைப் போன்றவர்களால் தான் இந்த உலகுக்கு நல்லது நடக்கிறது.

    நீங்கள் முதலில் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும், தைரியமாகவும் இருங்கள், ஏனெனில் நீங்கள் பின்பற்றும் இந்து மதம் மிகச் சிறந்த மதமாகும். இந்து மதத்தில் உள்ள எந்த ஒரு தெய்வமும் தன்னை வணங்காதவரை தண்டிப்பேன் என்று சொல்லவில்லை, பிறர் மீது வெறுப்பு பாராட்டவும் சொல்லவில்லை. இந்துவாக இருப்பதால் நீங்கள் உலக அமைதிக்கு, மானுட சமுதாயம் வாழ உதவி செய்கிறீர்கள். எனவே உங்களைக் குறித்து பெருமைப் படுங்கள்.

    அடுத்ததாக இந்து மதம் காக்கப் பட எல்லா இந்துக்களும் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டியது அவசியமாகும். நீங்கள் மிக எளிதாக ஆன்மீகத்தில் முன்னேற முடியும். நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவே. இந்துக்கள் தெய்வமாக வணங்குபவர்களில் உங்களது மனதுக்குப் பிடித்த ஒருவரை, தேர்ந்தெடுங்கள். முருகனோ, சிவனோ, விஷ்ணுவோ, ஐயப்பனோ, அங்காளம்மனோ, மாரிய்யம்மனோ, கிரிஷ்ணரோ, இராமரோ….. உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுங்கள். அவரின் படத்தை வாங்கி வீட்டில் ஒரு அறையில் வையுங்கள். அவரவர்களுக்கான பாடல் கேசட்டுகள் ,சிடிக்கள் கிடைக்கின்றன. நேரம் கிடைக்கும் போது எல்லாம் அந்தப் பாடல்களைக் கேளுங்கள். அதிலே உங்கள் மனம் இணைகிறதா?

    ”பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலும் போறும் , குமரா” அதில் உங்கள் மனம் லயிக்கிறதா? லயித்தால் உங்களுக்கு வெற்றி மிக அருகில் இருக்கிறது. இதற்குப் பிறகு வார விடுமுறை நாட்களில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அந்தப் பாடல்களை கேசட்டில் ஒளிக்கச் செய்து, பாடல்களைக் கேட்டுக் கொண்டே படத்தின் முன் உட்கார்ந்து விடுங்கள். உங்களுக்கு வசதியாக இருக்கும் வரை 5 நிமிடமோ, பத்து நிமிடமோ, 15 நிமிடமோ கண்ணை மூடி உட்கார்ந்து விடுங்கள்.

    ஒவ்வொரு நாளும் செய்ய முடியாவிட்டாலும் ஒவ்வொரு வாரமும் இப்படி மனக் குவிப்பு பயிற்ச்சியில் ஈடுபடுங்கள். ஆறு மாதங்கள் கழித்து உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்கள் மனதில் பொறுமையும் , அமைதியும், நட்பும் அதிகமாகி இருக்கிறதா? அப்படி அதிகமாகி இருந்தால் அதற்க்கு மேல் மற்றவரின் அறிவுரை உங்களுக்கு அதிகம் தேவை இல்லை.

    இதுதான் முக்கியம். ஆன்மீக முன்னேற்றமே உங்களுக்கு சக்தியை தரும். நீங்கள் தொடர்ச்சியாக மனக் குவிப்பு பயிற்ச்சியில் ஈடுபடுங்கள். இரண்டு வருடம் கழித்து நீங்கள் சொல்வீர்கள், நாங்கள் உங்கள் காலடியில் அமர்ந்து கேட்போம்.

    மற்றபடி நீங்கள் இந்து மதத்தின் கருத்துக்களைப் புரிந்து கொள்ள விரும்பினால் சுவாமி விவேகானந்தரின் நூல்கள், சித்தர் பாடல்கள், பகவத் கீதை இவை இவை எல்லாக் கடைகளிலும் கிடைக்கின்றன. இணையத்திலும் டவுன் லோடு செய்து கொள்ள முடியும். ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம், விவேக சூடாமணி ஆகியவை அருமையான நூல்கள். கத உபநிஷத், முண்டக உபநிஷத் ….. இவை எல்லாமே இணையத்திலே கிடைக்கின்றன. பட்டினத்தார் படம் சி. டி. யாக வந்து விட்டது என நினைக்கிறேன். அது ஒரு நல்ல ஆன்மீகப் படம் (film)!

    இப்படியாக உங்களுக்கு பட்டறிவும், படிப்பறிவும் கிடைத்து விடும். அதற்க்கு மேல் நீங்கள் நமது வாழ்க்கையைப் பற்றி சிறிது சிந்திக்க வேண்டும். நாம் வயதாகி இறக்கப் போகிறோம், நாம் சேர்க்கும் சொத்து ,பத்து, பேர், புகழ் இவை நம்மைக் காக்காது என்பதை நாம் உணர வேண்டும், அதை உணர்ந்தால்தான் , உங்களுக்கு வர இருக்கும் அபாயங்களை அறிந்தால்தான், அவற்றில் இருந்து மீள வேண்டும் என்கிற எண்ணம் வரும். எது நம்மைக் காக்காதோ அதை நம்பிப் பலன் இல்லை. பயம் என்பதும் கஷ்டம் என்பதும் நாம் வலிமை இல்லாமல் இருப்பதால்தான். ( உடல் வலிமை இல்லாதவன் தான் முரடனைப் பார்த்து பயப்படுவான். பத்துப் பேரை தூக்கி போடும் அளவுக்கு வலிமை உள்ளவன் அஞ்ச மாட்டான்- இதை உவமையாக மாத்திரமே சொல்கிறேன்). நம்முடைய மன வலிமை குறைந்து இருப்பதால் தான் நமக்கு கஷ்டமும், பயமும். நம் மன வலிமையை உயர்த்தி விட்டால் “நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்” என்னும் நிலையை அடைய முடியும். இப்படியாக நீங்கள் உங்கள் மன வலிமையை ஆன்மீகத்தின் மூலம் உயர்த்திக் கொண்டே வந்து, அதே நேரம் உங்களுடன் இருப்பவர்களுக்கும் அதை சொல்லிக் கொடுங்கள். உங்கள் வீட்டிலே , தெருவிலே, வூரிலே இருப்பவர்கள் அனைவரும் உங்களைக் கண்டு ஆன்மீக உணர்வு பெறுவார்கள். நாங்களும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்.

    உங்கள் ஆன்மீகம் எப்போது முழுமை அடையும் என்றால் எப்போது நீங்கள் உண்மையின் உச்சத்தை நேருக்கு நேராகக் காண்கிறீர்களோ, எப்போது உங்கள் உள்ளம் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் உங்களாகவே என்னும் அளவுக்கு எல்லோரின் மீதும் அன்பைப் பொழிகிறதோ , எப்போது எந்த ஒரு நிகழ்வும் உங்களுக்கு துன்பத்தை தருவதில்லையோ, எப்போது உங்களால் இந்த உலகில் யாருக்கும் துன்பம் இல்லையோ, எப்போது நீங்கள் முழு விடுதல் பெற்ற உணர்வை அடைந்து , உங்களின் எதிரகாலத்தை நீங்களே தீர்மானிக்கும் சுதந்திரம் உள்ளவர் ஆகி விட்டதாக உணர்கிறீர்களோ , அப்போது உங்களின் ஆன்மிகம் முழுமை அடையும்.

    நீங்கள் ஆன்மீக வலிமை உடையவராக இருங்கள், அதனால் இந்து மதம் காப்பற்றப் படும். வெறுமனே கிளிப் பிள்ளை போல நூல்களைப் படித்து விட்டு ஒப்பிப்பதால் பலன் இல்லை. ஆன்மீக வலிமை பெற்றால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும், நீங்கள் ஒரு விவேகானந்தராக, ஒரு ஆதி சங்கரராக, அப்பராக, தியாகராசராக உருவாவீர்கள். இந்து மதம் உங்களை நம்பி இருக்கிறது.

    ( நானும் ஒரு அரசுக் கல்லூரி மாணவன் தான், உங்களைப் போன்றவன் தான்)

    இதே விடயம் தொடர்பாக திரு. ஜடாயு அவர்களும், திரு. சாரங் அவர்களும் சிறப்பான கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக திரு. ஜடாயுவின் கருத்துக்கள் உடனடி பலன் தரக் கூடியவை, Need of the hour.

    அன்புடன்,

    திருச்சிக்காரன்

  69. அன்புள்ள சில்சாம்,

    உங்களது தெய்வம் சொன்ன வாக்கை நிரூபிக்க, எப்போது விஷம் குடிக்கப்போகிறீர்கள்?

    ஆவலுடன் காத்திருக்கிறோம்

  70. கிறித்தவம் ‘ பாவம் ,பாவம்’ என்று எப்போதும் எதிர்மறையாகவே பேசி மக்களை பயமுறுத்துகிறது.
    ஹிந்து சமயம் ‘புண்யம் செய்,புண்யம் செய்’ என்று போதித்து மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது .

    இரா.ஸ்ரீதரன்

  71. Agniveer has posted a new item, ‘Pamphlets on Christianity for circulation among youth’
    SAVE INDIA, SAVE HUMANITY, READ THIS IF YOU LOVE INDIA
    Jesus says in Bible: 12:53 The father shall be divided against the son, and the son against the father; the mother against the daughter, and the daughter against the mother; the mother in law against her daughter in law, and the daughter in law against her mother in law.

    DO YOU KNOW?

    1. Christians lie when they claim that Jesus stands for Peace and Love. Jesus, as per Bible, is symbol of hatred and violence.

    2. Christianity was spread throughout the world only through violence and fraud. Almost the entire Bible is full of violence and filth, and almost all the messiahs of Bible were murderers, rapists or criminals.

    3. Bible justifies even use of fraud to convert people into Christianity.

    4. Bible says that even a rapist, murderer and criminal can reach Heaven simply if he agrees to believe in Jesus Christ and Bible blindly.

    5. Bible promotes incest. It even justifies sex between father & daughters, father-in-law & daughter-in-law and between siblings. Lot, a messiah of Christians had children after having sex with his own daughters. Earlier, Lot had offered his enemies to rape his daughters to make peace with them!

    6. Bible is not clear on how Jesus was born from a virgin. In reality, Jesus was illegitimate son of Mary.

    7. Bible is the most superstitious and unscientific book of the world. Even the Quran stands nowhere close in terms of superstitions, brutality and mockery of science.

    8. ‘Songs of Solomon’ in Bible is the most vulgar literature of the world and has Solomon dreaming about sex with his sister.

    9. Many scientists were murdered and imprisoned in Europe because their discoveries exposed the fraud of Bible.

    10. Many Popes have been mass-murderers and rapists. Because Christianity claims that all sins will be forgiven by accepting Jesus as Lord, majority of Fathers get into illegitimate acts and have fathered many children from nuns and other women.

    11. The God of Bible is a lazy psychopath who needs security guards to protect him. He is jealous, thief and murders crores of people for whimsical reasons. He once ordered killing of those people who work on Sundays!

    12. There is no original Bible. What Christians claim as Bible are English translations of large number of Greek translations of several Hebrew translations of some unknown books which were supposed to be translations of original Bible. Various cults of Christianity have their own Bibles and fight against each other. Only common thing between them is that all of them are false and full of vulgarity and violence.

    13. Bible is intolerant of those who refuse to believe in stories of miracles. It justifies their killing. All who refuse to believe in Jesus are cursed to Hell forever!

    14. Bible believes in flat earth, witchcraft, human sacrifice, cannibalism and prostitution.

    15. Bible believes women to be born from rib of men. Hence women are not considered to have soul, are supposed to be perverted, considered inferior to men and supposed to only serve men. No book on earth is more derogatory to women except Bible.

    16. As per Bible, women are considered property of men and equated with ass or ox!

    17. If someone rapes a woman, as per Bible, one can simply pay a fine and take that woman as his property!

    18. Bible allows men to have sex-slaves and prostitutes. But a woman implicated in adultery should be immediately killed.

    19. If a husband doubts virginity of a woman, her father must bring proof of her virginity. Else, she shall be stoned to death. Thus, in many Christian societies, fathers used to put their hands in daughter’s private part before marriage to get proof of her virginity!

    20. Divorce is easy as per Bible. Husband must simply put a letter of divorce in hand of the wife and ask her to get out!

    21. Bible considers women to be inherently wicked and devil’s gateway!

    And most importantly, all Christian evangelists (those who try to convert people to Christianity) are anti-nationals. They only consider Vatican to be supreme authority. They want to make India a slave of West! Bible has NO CONCEPT of Patriotism. The only loyalty of Christianity is to Church and Pope. Bible orders death for those having any other loyalty.

    Please know that Bible is the most disgusting book of the world and completely against humanity. Many fraud agents may approach you in variety of ways to attract you to Christianity. Some of the tactics are: sweet talks, romance, flirting, miracle healing, discos, music shows, parties, free chance to mix with guys and gals and have fun, etc etc. They will present false translations of our Indian scriptures to create hatred against our own foundation.

    But remember, if you entertain them, you will be acting against humanity and country.

    So be a true patriot and true human. Reject the fraud of Christianity. Embrace the religion of humanity, equality, peace and brotherhood as detailed in our own Vedas.

    If you are a Christian, come back to your original roots by rejecting the fraud. If you are not, make sure you do not allow this fraud cult to succeed in its evil design. Promote this if you really love India!
    INDIA NEEDS YOU DESPERATELY! BE A FREEDOM FIGHTER!

    Every one should always be eager to accept the truth and reject the untruth
    Swami Dyananda

    SAVE INDIA, SAVE HUMANITY, BE A TRUTH SEEKER

    Day to day violence, terrorism, killing , religious conversion, predator attitude of some sects etc leads a wise man mind to think about dogmas of religious sects. Some starts saying that religion is other name of addiction, some starts raising doubts over the very existence of God watching such inhuman crimes. But is religion really a mindset or something else?

    The biggest crime is to accept dogmas as tenants of religion, to stop listening the voice of our own self and to start accepting religious beliefs blindly whether right or wrong.
    One of commonly heard slogans is” God is love”. Most of the time it’s propagated from those people whose firm belief is in Jesus Christ. The opposite of love is hate.
    Bible (Luke 14:26)- says If any man come to me, and hate not his father, and mother, and wife, and children, and brethren, and sisters, yea, and his own life also, he cannot be my disciple. Does it mean that a person can only become disciple of god if he starts hating his own family members? God of bible preach hate among family members .( Luke 12:53)-(They will be divided, father against son and son against father, mother against daughter and daughter against mother, mother-in-law against her daughter-in-law and daughter-in-law against mother-in-law. Atharv Veda 7/3/6 says conjugal love between husband and wife of family.

    How merciful is god of bible for babies of enemies? (Numbers 31:17) now therefore kill every boy, and kill every woman who has had sexual intercourse with a man. Similar instructions for killing babies are mentioned in Deut 2:34, Deut 28:53, 1 Sam 15:3, 2 kings 8:12, 2 kings 15:16, Isaiah 13:16, psalm 51:5, psalm 109:8-12, Isaiah 13:18, lam 2:20. Yajur Veda 26/18 says that all living beings are friends.

    Bearing of child is considered as punishment by god of bible and he discriminates between man and women. (Genesis 3:16)- To the woman he said-“I will greatly increase your labor pains; with pain you will give birth to children. You will want to control your husband, but he will dominate you. Atharv7:48:2 says scholarly, respectful, thoughtful, happy wife protects and enhances wealth and bring happiness in home. Atharv Veda 2/36/3 says may this bride become the queen of the house of her husband and enlighten all.

    God of bible is meat eater and is responsible for conflict of brother and finally Abel death. (Genesis 4:3)- At the designated time. Cain brought some of the fruit of the ground for an offering1to the Lord. 4:4 But Abel brought some of the firstborn of his flock – even the fattest of them. And the Lord was pleased with Abel and his offering, 4:5 but with Cain and his offering he was not pleased. So Cain became very angry, and his expression was downcast.4:8 Cain attacked his brother Abel and killed him. Yajur-veda 7/47-7/51 prohibits animal killing.

    God of bible is jealous of common language and happiness of people so he caused confusion of languages. (Genesis 11:6)And the Lord said, “If as one people all sharing a common language they have begun to do this, then nothing they plan to do will be beyond them.11:7 Come, let’s go down and confuse their language so they won’t be able to understand each other. Rig Veda 10:191:2 says assemble, speak together and let your minds be all of one accord.

    The bible promotes alcoholism and incest. Lot had sexual relations with his two daughters. (Genesis 19:32) Come, let’s make our father drunk with wine so we can have sexual relations with him and preserve our family line through our father.19:33 So that night they made their father drunk with wine, and the older daughter came and had sexual relations with her father. Rig Veda 8/2/12 and Rig Veda 8/21/14 condemns alcohol intake. Atharv Veda 11:5:1-10 stress on simple, celibant and disciplined life free from all illicit relations.

    God of bible advices killing of innocent animals for forgiving sins. (Levi 4:22) -Whenever a leader, by straying unintentionally, sins and violates one of the commandments of the Lord his God which must not be violated, and he pleads guilty, 4:23 or his sin that he committed is made known to him, he must bring a flawless male goat as his offering. There are many examples of offering goats, lambs, pigeons for forgiving sins. Can true god be so uncurl towards his own creation? Atharv Veda 7.5.5 prohibits animal sacrifice and believes in law of karma theory which is also testified by bible (Matthew 16:27) he will reward each person according to what he has done. This belief of forgiving of sins is just eyewash. English proverb as you so sow shall you reap is always applicable.

    The Christian Bible contains hundreds of thousands of things that are condemnable. We have only shown here a few absurdities; they will suffice to convince the wise of the untruth of it. Bible is the most vulgar book of world full of hatred. Truth adulterated with untruth can never remain pure and hence the works that contain it can never be acceptable.
    Come on friends, renounce this barbarous religion and embrace the Vedic faith – the religion of light, culture and righteousness. That alone will give you true happiness and save India. India needs you!
    For more enlightenment please visit http://www.agniveer.com or mail at agniveer@agniveer.com

  72. எனது பின்னூட்டத்தை மிகுந்த சகிப்புத்தன்மையுடன் வெளியிட்டதற்காக‌ “தமிழ்ஹிந்து”வின் நிர்வாகக் குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்;

    //நமது தேவர் ஏன் ஒரு அப்பாவியின் அப்பாவி மகனைப் பலியாகக் கேட்டார்? என் சிசு, பெண், வயதானவர் என்று கூடக் கருணை காட்டாமல் ஒரு வம்சத்தையும் ஒரு இனத்தையும் ஒரு நாட்டையுமே அழித்து தரைமட்டமாக்கச் சொன்னார்?- //

    பிள்ளைகளை பலிகொடுப்பதும் இன்னும் கர்ப்பிணி பெண்களை பலிகொடுப்பதும் இன்றைய நவீன யுகத்திலும் நம் நாட்டில் நடந்துக்கொண்டுதானிருக்கிறது;

    மிக அருகில் தமிழ்நாட்டில் கொல்லிமலையில் மந்திரவாதி கட்டளையிட்டான் என்பதற்காக தன் கர்ப்பிணி மனைவியை பலி கொடுத்தவனின் கதை எனக்குத் தெரியும்;

    அதுபோன்ற காட்டுமிராண்டிக் கலாச்சாரத்த்தில் வளர்ந்த ஆபிரகாமை சோதித்து நல்வழிப்படுத்த சர்வ வல்ல தேவன் சித்தங்கொண்டார்; ஆனாலும் அந்த பிள்ளை கொலைசெய்வதற்கு முன்னர் இறைவன் தடுத்துவிடுவதாக அந்த வரலாறு முடிகிறது;

    ஆனால் பாரதத்து கதைகளிலும் புராணங்களிலும் எண்ணற்ற கொலைகளை அவதாரங்களெடுத்து இறைவனே செய்கிறார்;முழு பூசணிக்காயை கைப்பிடிச் சோற்றில் மறைக்கப்பார்க்கிறீர்களே;

    இங்கே இறைவன் அவதாரமெடுத்து கொலைகளை செய்கிறார்;
    அங்கே அவதாரமெடுத்து வந்த இறைவன் கொலையானார்; மீண்டும் உயிர்த்தார்;அவர் சிந்திய இரத்தமே பாவ நிவர்த்தியானது என்பது உய(யி)ர் தத்துவம்;

    //சாண்டில்ய ச்மிருதியில் ஒரு திருஷ்டாந்தம் உள்ளது. அது சொல்வதாவது, “நமது நூல்களைத் தவறாக அணுகுபவருக்கு தவறான அர்த்தங்களே கண்ணுக்குத் தெரியும்” என்று. “மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்” என்று சொல்வார்களே, அதைப்போலத்தான்…//

    இந்த தத்துவம் பைபிளுக்குப் பொருந்தாதோ..?

    // எத்தனை இந்து உபன்யாசங்களில்,இந்துக் கோயில்களில் கிறித்தவ மதத்தைப் பற்றிய ஆபாசமான விமர்சனங்கள் செய்யப்படுகின்றன? //

    அய்யா நம்முடைய கோவில்களிலேயே கிரங்கடிக்குமளவுக்கு லீலைகளாகவும் திருவிளையாடல்களாகவும் உபன்யாசம் செய்து மக்களை மதிமயக்கி வைத்திருக்கிறோமே,அங்கு எதற்கு அபஸ்வரம் போல கிறித்தவத்தைப் பற்றிப் பேசவேண்டும்?

    கிறித்தவர்களை ஒடுக்க தனித்தன்மையுள்ள திட்டங்கள் போடப்பட்டு வேறுவழியில் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்;

    முதலாவது வாழ்வாதாரமான குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒடுக்குகிறோம்;கல்விச்சாலைகளிலும் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டிவிட்டு கிறித்தவ நிறுவனங்களை நலிவடையச் செய்கிறோம்;

    இன்னும் மருத்துவ உதவிக்காக வரும் ஏழைகளை அலைக்கழித்து விரட்டுகிறோம்;இப்படி அவர்கள் பேசிக்கொண்டே காலத்தைக் கழிக்க நாம் அமைதியாக செய்துமுடிக்க எத்தனையோ திட்டம் கைவசம் இருக்கிறது;அரசாங்கமும் அதிகாரிகளும் நம்ம ஆட்கள்தானே..!

    // இந்தியா என்ற நாட்டை உருவாக்கித் தந்த வெள்ளையனை நாம் மறக்கக்கூடாது..!//

    மேற்கண்ட கருத்து வஞ்சபுகழ்ச்சியாகச் சொல்லப்பட்டது;கட்டபொம்மன் பிறந்த அதே பூமியில்தானே எட்டப்பனும் வாழ்ந்தான்; மாவீரன் பிரபாகரன் வாழ்ந்த மண்ணிலேதான் துரோகியான கர்ணாவும் இருந்தான்;

    இந்திய சுதந்தரப் போராட்டம் வெல்லும் வரைக்கும் வெள்ளையனுக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தோர் ஆரியர்தானே..?

    வெள்ளையர் செய்த தீமையிலும் ஒரு நன்மை போல குட்டி குட்டி சாம்ராஜ்யங்களாக இருந்த இந்தியா ஒரு நாடாக கூட்டிச் சேர்க்கப்பட்டது என்கிறேன்;

    // காயீன் (Cain) தன்னுடைய நிலத்தில் விளைந்த பழங்களை ‘கர்த்தருக்குக்’ காணிக்கையாகக் கொண்டு வந்தார். ஆபேல் (Abel) தன்னுடைய ஆட்டுக்கூட்டத்தில் இருந்து முதல் கன்றுகளை காணிக்கையாகக் கொண்டு வந்தார். ‘கர்த்தருக்கு’ஆபேல் மேலும், அவன் தந்த பலி ஆடுகள் மேலும் தான் ஆசை இருந்தது. (Genesis, 4-ஆம் அத்தியாயம்). //

    வேதத்தைப் புரட்டவேண்டாம், நண்பரே; நான் மதிக்காத ஒன்று உங்களுக்குப் புனிதமாகத் தோன்றுவதைக் காட்டிலும் எனக்கு அதிக மேன்மையாக நான் போற்றுவதைக் குறித்து என்னைக் கேட்டால் நான் சொல்ல ஆயத்தமாக இருக்கிறேன்;

    நீங்கள் குறிப்பிட்டுள்ள வேதப்பகுதியில் பொருளைக் காட்டிலும் கொடுப்பவர் மனநிலையே சோதிக்கப்படுகிறது; இதற்கு இந்து வேதத்தின் சம்பவங்கள் சற்றும் சளைத்ததல்ல;நானும் திருவிளையாடல் படத்தினைப் பார்த்து ஏறக்குறைய மனப்பாடமே செய்து வைத்திருக்கிறேன், சரியா..?

    அதே தேவன் சில யுகங்கள் கழித்து சடங்கான காரியங்களை வெறுத்து உன்னுடைய பொருட்களல்ல,நீயே எனக்கு வேண்டும் என்று தம் அன்பையும் வெளிப்ப‌டுத்துகிறார்;(வாசிக்க:சங்கீதம்.50)

    // PP 5 June 2010 at 3:45 pm
    Mr.Chilsam,சும்மா கலக்கிட்டிங்க!ஆனா,இதை எல்லாம் படிச்சா கூட நிறைய ஹிந்துவுக்கு சொரணை இல்லாமல் இருக்கிறது தான் ஹிந்து மதம் ஓவரா கத்து குடுத்திட்ட அஹிம்சையின் பலவீனம். //

    நண்பர் பிப்ரப்பீப்பீ அவர்களே, வெயில் காலத்தில் சிரிப்பு மூட்டாதிருங்கள்; காந்திஜியைக் கொன்றது முதல் பாப்ரி மஸ்ஜிதை இடித்தது வரையிலான செயல்கள் அஹிம்சை செயல்களா? இதையா ‘இந்துத்வா’ என்கிறீர்கள்?

    //ஒரு பெண்ணுக்கு கல்யாணத்துக்கு முன்னால தகாத முறைல பொறந்து தன்னை கடவுளின் மகன் என்று பீதற்றி கொண்ட//

    நீங்கள் குறைசொல்வது கண்ணனையா,கர்ணனையா என்று எனக்கு விளங்கவில்லையே,சற்று கோபப்படாமல் விளக்குவீர்களா? சொம்புக்கும் கம்புக்கும் பொறந்தவன் இந்துபுராணங்களிலிருந்தால் மட்டும் கேள்விகேட்கமாட்டீர்களா?

    // உருவ வழிபாடு தவறு என்று சொல்லிக்கொண்டே தெருக் கோடியில் எல்லாம் இப்பொழுது மாதா சிலை முளைத்துக்கொண்டிருக்கிறது. //

    மாதா சிலை நிறுவுபவர்களை பக்தர்களைப் போலச் சற்று நெருங்கிச் சென்று கண்காணித்துப்பாருங்கள், அவர்கள் பிராமணீயத்தின் அடிமைத் தளையிலிருந்து ஆன்மீக விடுதலைப் பெற ஏங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள்;அவர்களுக்கும் பைபிளின் அடிப்படையிலான கிறித்தவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

    மேலும் இந்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுச் சொத்துக்களுடன் ஒப்பிடுகையில் இது இலட்சத்தில் ஒன்றுகூட தேறாது;

    இன்னும் திருச்சபையின் சொத்துக்களும் மோசடி பேர்வழிகளால்கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை;

    // ‘வெள்ளைக்காரன் இங்கு வந்த போது அவன் கையிலே பைபிளும் நம் கையில் நிலமும் இருந்தது ஆனால் இப்போது அவன் கையில் நிலமும் நம் கையில் பைபிளும் உள்ளது ‘ //

    நாமும் சொல்லலாம், ஆரியன் இங்கு வந்தபோது அவனிடம் மந்திரமும் தந்திரமும் நம்மிடம் சுதந்தரமான இயற்கை வழிபாடும் சமதர்ம சமுதாயக் கட்டமைப்பும் இருந்தது; தற்போதய நிலை உங்களுக்கே தெரியும்;

    தங்கள் கொள்கைகளை நிலைநாட்ட இந்த மண்ணில் ஆரியர் போட்ட வெறியாட்டம் வானத்தின் கீழே எந்த சமுதாயத்திலும் நடைபெற்றதில்லை; இன்றைக்கும் நம்மை ஆக்கிரமித்துள்ள விரியன்பாம்புகுட்டிகளே நம்முடைய மோதல்களுக்குக் காரணம்;

    ஒருபக்கம் நம்மை வெறியேற்றிக் கொண்டே அங்கே அமெரிக்க ஆதிக்க சக்திகளுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டது, உலகப் பொருளாதார தாராளமயமாக்கல் மாயை;

    இதற்கு முழுமுதல் காரணம் வாஜ்பாய் அரசாங்கமே, அதைத் தொடர்ந்து மன்மோகன்சிங் அரசாங்கம்… இதனால் ஒடுக்க‌ப்படும் மக்கள் செய்யும் புரட்சியே மாவோயிஸ்டுகள் வலுப்பெற காரணமானது; இங்கெல்லாம் கிறித்தவம் எந்தவகையிலும் பொறுப்பாகவில்லை;

    இங்கே பலர் சொல்வது போல கிறித்தவம் அதன் அடையாளங்களை இழந்து மெள்ள அழிந்துக்கொண்டிருக்கிறது;பிறகு எப்படி இந்தியாவில் பரவும்; வெளிநாட்டில் கிறித்தவம் அழிந்துப்போனால் இங்கே அதைப் பரப்பும் குழுக்களுக்கு உதவிகளும் நின்றுபோகுமே..?

    ஆம்,தற்போது எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் இங்கே கிறித்தவ மார்க்கம் சுயாதீனமாக இந்திய தேச சட்டங்களுக்குக் கீழ்பட்டு நிர்வகிக்கப்படுகிறது என்பதே உண்மை;

    தற்போதய கிறித்தவ சபைகள் மேற்கத்திய கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்தரமான இந்தியத் தன்மையுடன் செயல்படத் துவங்கியிருக்கிறது; மாற்றங்களை விரும்பும் புதிய தலைமுறைக்கு நம்பகமானதொரு மாற்றாக இன்றைய கிறித்தவம் விளங்குகிறது..!

    (edited and published)

  73. // நாமும் சொல்லலாம், ஆரியன் இங்கு வந்தபோது அவனிடம் மந்திரமும் தந்திரமும்… //

    ஆரிய படையெடுப்பு முழுக்க முழுக்க வெள்ளைக்காரர்கள் கிறித்தவத்தைப் பரப்புவதற்காக புனைந்த கட்டுக்கதை. இதை அவர்களே ஒத்துக் கொண்டுள்ளார்கள்.

    //…நம்மிடம் சுதந்தரமான இயற்கை வழிபாடும் சமதர்ம சமுதாயக் கட்டமைப்பும் இருந்தது; தற்போதய நிலை உங்களுக்கே தெரியும்; //

    எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஒரு ஆபிரகாமிய மதத்தவர் இதைக் கூறுகிறார் என்று தெரியவில்லை. மீண்டும் மீண்டும் இதைத் தான் கூற வேண்டும்: அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, கண்டங்களில் இருந்த இயற்கை வழிபாட்டு கலாச்சாரங்களை ‘ஆரியர்’ தான் அழித்தனரா? அனைவரும் யோசிக்கட்டும்.

    அது போகட்டும், ‘ஆரியர்கள்’ என்று இவர் கூறுபவர்கள் வருவதற்கு முன்பு “சமதர்ம சமுதாயக் கட்டமைப்பு” இருந்தது என்று ஒரு சான்று கூட இல்லாமல் உடான்ஸ் விடுகிறார் பாரும்.

    //ஆனால் பாரதத்து கதைகளிலும் புராணங்களிலும் எண்ணற்ற கொலைகளை அவதாரங்களெடுத்து இறைவனே செய்கிறார்;முழு பூசணிக்காயை கைப்பிடிச் சோற்றில் மறைக்கப்பார்க்கிறீர்களே;//

    மீண்டும் ஒரு ஆதாரமும், ஒரு ஆதாரப்பூர்வமான மேற்கோளும், எடுத்துக்காட்டும் காண்பிக்காமல், துஷ்பிரச்சார பாம்ப்லெட்-களைப் படித்து விட்டு அதை கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கிறார்!

    கனானிய தேசத்து அப்பாவிகளை ஏன் கொலை செய்து குவித்துத் தரைமட்டம் ஆக்கினார் என்று கேட்டதற்கு ஒரு விளக்கமும் காணோம்.

    //

    //சாண்டில்ய ச்மிருதியில் ஒரு திருஷ்டாந்தம் உள்ளது. அது சொல்வதாவது, “நமது நூல்களைத் தவறாக அணுகுபவருக்கு தவறான அர்த்தங்களே கண்ணுக்குத் தெரியும்” என்று. “மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்” என்று சொல்வார்களே, அதைப்போலத்தான்…//

    இந்த தத்துவம் பைபிளுக்குப் பொருந்தாதோ..?

    //

    என்றைக்கு நீங்கள் மனு ஸ்மிருதியையும், மகாபாரத்தத்தையும், கீதையையும், புராணங்களையும் துஷ்பிரச்சாரத்திற்கு out-of-context மேற்கோள் கட்டுவதை நிருத்துவீர்களோ அன்று முதல் தாராளமாகப் பொருந்தும். அது வரை நீங்கள் மேற்கோள் காட்டக் காட்ட எங்களாலும் உமது புத்தகங்களிலிருந்து காட்ட முடியும்.

    //
    வேதத்தைப் புரட்டவேண்டாம், நண்பரே; நான் மதிக்காத ஒன்று உங்களுக்குப் புனிதமாகத் தோன்றுவதைக் காட்டிலும் எனக்கு அதிக மேன்மையாக நான் போற்றுவதைக் குறித்து என்னைக் கேட்டால் நான் சொல்ல ஆயத்தமாக இருக்கிறேன்;

    நீங்கள் குறிப்பிட்டுள்ள வேதப்பகுதியில் பொருளைக் காட்டிலும் கொடுப்பவர் மனநிலையே சோதிக்கப்படுகிறது; இதற்கு இந்து வேதத்தின் சம்பவங்கள் சற்றும் சளைத்ததல்ல;நானும் திருவிளையாடல் படத்தினைப் பார்த்து ஏறக்குறைய மனப்பாடமே செய்து வைத்திருக்கிறேன், சரியா..?
    //

    அப்படியானால், மேற்சொன்னபடி நீங்களும் எங்கள் புத்தகத்தைப் புரட்டி “இந்துக் கடவுள்கள் சாத்தான்கள்” என்று பொதுவிடங்களில் அவதூறு செய்வதை நிறுத்துங்கள். கண்ணனைப் பற்றி அவதூறாகப் பெசிக்கொண்டிருப்பதையும் பேசியதையும் வாபஸ் வாங்குங்கள். தாராளமாக நீங்கள் உங்கள் கதைகளுக்கு எந்தவித சமாதானம் சொல்கிறீர்கள் என்பது உங்கள் இஷ்டம். அதையும் விட பன்மடங்கு convincing-ஆன, ஆழமான, ஆதாரப்பூர்வமான, மெய்யான, திருத்தாமல், மழுப்பாமல், விளக்கங்களை எங்கள் ரிஷிகளும் ஆச்சாரியார்களும் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொடுத்து வருகின்றனர். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் எங்கள் தெய்வத்தை கேலி செய்ததனால் தான் இந்த மாதிரியான கண்டனங்களை இட்டு வருகிறோம்.

    // அய்யா நம்முடைய கோவில்களிலேயே கிரங்கடிக்குமளவுக்கு லீலைகளாகவும் திருவிளையாடல்களாகவும் உபன்யாசம் செய்து மக்களை மதிமயக்கி வைத்திருக்கிறோமே,அங்கு எதற்கு அபஸ்வரம் போல கிறித்தவத்தைப் பற்றிப் பேசவேண்டும்? //

    மேற்கூறிய படி etiquette கடைபிடிக்காமல், மீண்டும் மீண்டும் இத்தகைய அவதூறான பொய்ப்பிரச்சாரங்களை செய்வதானால், கிறித்தவத்தைப் பற்றி எத்தனை எத்தனையோ உண்மையான அசிங்கங்களை அவலப்படுத்த முடியும்.

    //
    தங்கள் கொள்கைகளை நிலைநாட்ட இந்த மண்ணில் ஆரியர் போட்ட வெறியாட்டம் வானத்தின் கீழே எந்த சமுதாயத்திலும் நடைபெற்றதில்லை; இன்றைக்கும் நம்மை ஆக்கிரமித்துள்ள விரியன்பாம்புகுட்டிகளே நம்முடைய மோதல்களுக்குக் காரணம்;
    //

    இந்தியாவின் எந்த வேத-வேதாந்த-இதிஹாச-புராண-தருமசாச்திர நூலிலோ, எந்த ஒரு மொழியின் சரித்திர-இலக்கிய நூலிலோ, எந்த folklore கதைகளிலும் இல்லாத, வரலாற்றுச் சான்று ஒன்றுமே இல்லாத propaganda tool ஆகிய “ஆரிய படையெடுப்பு” என்பதை இங்கு பிரகடனப்படுத்தி அச்சுறுத்துவதும், தலைகுனிய வைக்க முயல்வதும், சிறுவர்கள் ரப்பர் தேளையும் பல்லியையும் காட்டி மிரட்டுவது போன்றதே.

    ஒரு இனத்தை குழந்தை-குட்டி, பெண்கள் என்று வித்தியாசம் பாராமல் அழித்ததுமல்லாமல், அதைப் பெருமையாகக் கூறிக்கொள்ளும் உங்கள் புத்தகத்தைப் பார்த்தன்றோ நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

    // ஆம்,தற்போது எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் இங்கே கிறித்தவ மார்க்கம் சுயாதீனமாக இந்திய தேச சட்டங்களுக்குக் கீழ்பட்டு நிர்வகிக்கப்படுகிறது என்பதே உண்மை; //

    மேற்கத்திய கலாச்சாரம் நாத்திகத்தை நோக்கிச் செல்வது ஒரு பக்கம் இருக்க, மில்லியன் பில்லியன் என்று காசில் மிதக்கும் அயோக்கிய minister-களுடைய செயல் தான் ஹிந்து மதத்தவர்களை ஏமாற்றி பொய்கூறி மதமாற்றம் செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர். மேலை நாடுகளில் இவர்களுக்கு ஒரு எதிர்காலமே இல்லை. அதனால் தான் இந்தியாவில் வந்து ஆன்மாக்களை அறுவடை செய்ய வருகிறார்கள். இதில் எந்த முரண்பாடும் இல்லை. சிருபில்லைகளுக்கும் இது விளங்கும்.

    //
    மாற்றங்களை விரும்பும் புதிய தலைமுறைக்கு நம்பகமானதொரு மாற்றாக இன்றைய கிறித்தவம் விளங்குகிறது..!
    //

    போலி பிரச்சாரத்தாலும் அட்டூழியத்தாலும் அவதூறுகள் மூலமாகவும் பரவி வரும் இந்த கீழ்த்தனமான புறமதத்தை, சட்ட ரீதியாகவும் சாத்விக வழிமுறைகள் மூலமாகவும், கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி மலியச் செய்தல் தான் மனித குலத்துக்கும் சனாதன தருமத்துக்கும் நல்லது.

  74. அன்புள்ள சில்லிசாம்

    நீங்கள் selective ஆகா பதில் தந்துள்ளீர்கள் – பரவில்லை – மீண்டும் உங்கள் பதிலை ஆழ படித்து இடும் மறு மொழி இது – tension வேண்டாம்

    //
    பிள்ளைகளை பலிகொடுப்பதும் இன்னும் கர்ப்பிணி பெண்களை பலிகொடுப்பதும் இன்றைய நவீன யுகத்திலும் நம் நாட்டில் நடந்துக்கொண்டுதானிருக்கிறது;
    //

    ஹி ஹி – அது மந்திரதிர்காக பெண்கள் செய்வது – இறைவன் கேட்டது இல்லை – உமது தேவன் கேட்டாரே அது தான் ஜீவன் உள்ள போக்கா
    பதிலுக்கு எதோ ஒரு பதில் சொல்லனும்னு ஒரு வேரில மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சோ போட்டு பார் இப்போ எல்லாம் சரியாகிடுச்சு என்ற இறுமாப்பு

    //
    ஆனால் பாரதத்து கதைகளிலும் புராணங்களிலும் எண்ணற்ற கொலைகளை அவதாரங்களெடுத்து இறைவனே செய்கிறார்;முழு பூசணிக்காயை கைப்பிடிச் சோற்றில் மறைக்கப்பார்க்கிறீர்களே;
    //

    அப்பாடி செம்ம பைத்தியகார தனம்
    உங்கள் தேவன் ஏன் என்ன்றார் மக்களை நரகத்தில் இட்டு கொள்கிறார் – ஏன் எல்லோருக்கும் மரணம் என்று ஒன்று வைக்கிறார்

    அப்சல் குரு, கசாப் போன்றவரை கொள்ள தான் இறைவன் கொன்றதாக புராணம் சொல்கிறது – அவர்களுக்கு என்ன விருந்து சோறு போடா வேண்டும் என்று சொல்கிறீர்களா
    இதுவும் வெறும் பதில் சொல்லவேண்டும் என்ற மட வெறியில் வந்த ஒரு அண்டப்புளுகே, திரிப்பே

    உமது தேவனோ இன படுகொலையை கட்டவிழ்கிறார் – புராணத்திலோ அப்சல் குரு போன்ற கொடியவரை கொன்று தர்மத்தை வாழ விடுகிறார்

    நீங்கள் சொல்வதை பார்த்தல் அப்சல் குரு கிறிஸ்தவனாக மாறினால் பாவ மன்னிப்பு கொடுத்து திரியவிட்டு இன்னும் ஒரு ஆயிரம் பெற கொள்ள சொல்லுவீங்க போல இருக்கு பலே பலே – என்ன காட்டுமிராண்டி தனம் இது

    //
    நீங்கள் குறிப்பிட்டுள்ள வேதப்பகுதியில் பொருளைக் காட்டிலும் கொடுப்பவர் மனநிலையே சோதிக்கப்படுகிறது; இதற்கு இந்து வேதத்தின் சம்பவங்கள் சற்றும் சளைத்ததல்ல;நானும் திருவிளையாடல் படத்தினைப் பார்த்து ஏறக்குறைய மனப்பாடமே செய்து வைத்திருக்கிறேன், சரியா..?
    //

    ஹைய் அப்படியா – என்ன ஒரு சப்பக்கட்டு

    நீங்கள் சொல்வது போல மனத்தையே பார்த்தல் எழுதும் பொது, இருவரும் ஆடுகளை கொண்டு வந்தனர் தேவன் என்று எழுதி இருக்கலாமே – இல்லை என்றால் cain ஆடு கொண்டுவந்தார்
    அபெல் பழம் கொண்டுவந்தார் தேவன் பழம் தின்னார் என்று சொல்லி இருக்கலாமே – ஹான் அப்படி எழுதினால் ஆடு அடித்து சாப்பிடுவதை ந்யாப்படுத்த முடியாது பாருங்கள்

    கிருஷ்ணர் என்ன சொல்கிறார், பூ, இல்லை, தண்ணீராவது என்றல்லவா சொல்கிறார் – இது அல்லவோ உண்மையான ஜீவனுள்ள வாக்கு

    //
    நண்பர் பிப்ரப்பீப்பீ அவர்களே, வெயில் காலத்தில் சிரிப்பு மூட்டாதிருங்கள்; காந்திஜியைக் கொன்றது முதல் பாப்ரி மஸ்ஜிதை இடித்தது வரையிலான செயல்கள் அஹிம்சை செயல்களா? இதையா ‘இந்துத்வா’ என்கிறீர்கள்?
    //

    அப்போ ஜப்பானில் குண்டு போட்டது நல்ல கிறிஸ்தவன் செய்யும் செயல் என்கிறீர்களா – மொட்ட மாடிலிருந்து இன்னும் இறங்கலையா – இன்னிக்கு தான் மழை பெய்யுதே?

    நாங்கள் என்ன ஹிந்துக்களில் கொலைகாரர்களே இல்லை என்றா சொல்கிறோம் – உலகிற்கே தெரியும் யார் அக்கிரம கார்கள் – யார் mass murder கட்டவிழ்த்து இனப்படுகொலை செய்தது என்று – உலகின் பெரும் கொலைகாரர்கள் பிணம் தின்பவர்கள் யூதர்களும், இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் தான் – இதற்க்கு தான் எவ்வளவு வரலாற்று சாட்ருகள் உள்ளன. இன்றளவும் அது நின்ற பாடு இல்லை

    ஆபிரிக்க கண்டமும், ஆப்கானிஸ்தானும், ஜெர்மனியும், ஜப்பானும், இராக்கும் இதற்க்கு சான்று

    //
    நீங்கள் குறைசொல்வது கண்ணனையா,கர்ணனையா என்று எனக்கு விளங்கவில்லையே,சற்று கோபப்படாமல் விளக்குவீர்களா? சொம்புக்கும் கம்புக்கும் பொறந்தவன் இந்துபுராணங்களிலிருந்தால் மட்டும் கேள்விகேட்கமாட்டீர்களா?
    //
    அவர் சொன்னது உமது தேவனை –
    சொம்புக்கு பிறப்பது தகாத முறை ஆகாதே? வம்புக்கு பிறந்தால் தான் தகாத முறை – கர்ணன் தகாத முறையில் ஏகாந்தத்தின் மூலம் பிறக்க வில்லை – கர்ணனை கடவுள் என்று யாரும் சொல்வதும் இல்லை – இதில் கண்ணனை இழுப்பது அப்பட்டமான காழ்புணர்ச்சி, மத வெறி அவ்வளவே

    //
    நாமும் சொல்லலாம், ஆரியன் இங்கு வந்தபோது அவனிடம் மந்திரமும் தந்திரமும் நம்மிடம் சுதந்தரமான இயற்கை வழிபாடும் சமதர்ம சமுதாயக் கட்டமைப்பும் இருந்தது; தற்போதய நிலை உங்களுக்கே தெரியும்;
    //

    அறிவில் சிறந்தவர் ஆரிய பொய்யை நம்ப மாட்டார்கள் – ஆரியன் இங்கு வரவில்லை – இங்கு கொள்ளை அடிக்க முதலில் வந்தது அலெக்சாண்டர் தான் அப்புறம் இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தான்

    //
    தங்கள் கொள்கைகளை நிலைநாட்ட இந்த மண்ணில் ஆரியர் போட்ட வெறியாட்டம் வானத்தின் கீழே எந்த சமுதாயத்திலும் நடைபெற்றதில்லை
    //
    இது வெறும் வெட்டி பேச்சு – பொய் – கிறிஸ்தவர்கள் கட்டவிழ்த்து விட்ட கடை – இதை முதலில் கிறிஸ்தவர்களே சொல்ல காரணம் என்ன? இங்கு இஸ்லாமியர் தான் முதலில் வந்து ஆக்கிரமிப்பு செய்தனர் – அவர்களோ, இங்கு வந்த அலேசேண்டரோ ஆரியன் அங்கிருந்து வந்தான் என்று ஏன் கூறவில்லை – இது முழுக்க முழுக்க கிறிஸ்தவ அயோக்கியர்கள் செய்த சூழ்ச்சி – அவர்களின் நித்திய வழக்கு – இந்த சூழ்ச்சிக்கும் பாவ மன்னிப்பு கேட்டிருப்பான்

    //
    மாதா சிலை நிறுவுபவர்களை பக்தர்களைப் போலச் சற்று நெருங்கிச் சென்று கண்காணித்துப்பாருங்கள், அவர்கள் பிராமணீயத்தின் அடிமைத் தளையிலிருந்து ஆன்மீக விடுதலைப் பெற ஏங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள்;அவர்களுக்கும் பைபிளின் அடிப்படையிலான கிறித்தவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;
    //
    எதோ வாய்க்கு வந்த பேச்சு – மாரியம்மன் கோயில்களை மாத கோவில்களாக தென்னகம் எங்கும் ஏன் மாற்றுகிறான் சூழ்சிக்கார கிறிஸ்தவன் – மாரியம்மன் கோவிலில் எங்கே பிராமணீயம் இருந்தது?
    வாய்க்கு வந்தபடி பேசாமல் மொட்ட மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து உங்களின் மேல் மாடியல் பயன் படுத்தவும் – எதோ பாதிரி கட்டவிழ்த்து விட்ட அல்லது உங்களின் வலைதளத்தில் வரும் பொய்யுரைகளை படித்து விட்டு இப்படி விஷம் காக்க என்ன காரணம்

    பைபளில் உள்ள அடிப்படை கிறிஸ்தவம் என்றால் என்ன ? வெறியாட்டம், சூழ்ச்சி, முல்லா கதைகள், நாய் பன்றி எவ்வளவே – அதற்க்கு மாத சிலை வைத்து கும்பிடுவது எவ்வளவோ மேல்

    virgin mary சிலையை கும்பிடலாம் (ஒரு குழந்தையான மேரி) – இது விந்தை இல்லை ஆனால் விநாயகரை கும்பிட கூடாதோ – என்ன கூத்து இது – சிலுவைக்கு பட்டு துணி போட்டு சிலை வைத்து கும்பிடலாம் அனுமனுக்கு சிலை கூடாதோ?

    //
    மேலும் இந்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுச் சொத்துக்களுடன் ஒப்பிடுகையில் இது இலட்சத்தில் ஒன்றுகூட தேறாது;
    //
    இது தான் காட்டு மிராண்டிகளின் நெஞ்சழுத்தம் – ஏன்யா என் வீட்டுல நான் என்ன வீனா கட்டுவேன் – அத்து மீறி ஆக்கிரமிப்பு செய்றவன் கேக்குற கேள்விய பாரு – என்ன ஒரு இறுமாப்பு – என்ன ஒரு பொய்மை – இது தான் அசல் நரித்தனம்
    ஹிந்துக்களின் நாட்டில் வந்து ஏன் ஹிந்து கோவில்கள் உள்ளன என்று கேட்பவரை என்ன சொல்வது?

    //
    இன்னும் திருச்சபையின் சொத்துக்களும் மோசடி பேர்வழிகளால்கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை;
    //
    தெருவுக்கு தெரு திருச்சபை அமைத்ததே கொள்ளை அடிக்க தானே

    //
    இங்கே பலர் சொல்வது போல கிறித்தவம் அதன் அடையாளங்களை இழந்து மெள்ள அழிந்துக்கொண்டிருக்கிறது;பிறகு எப்படி இந்தியாவில் பரவும்; வெளிநாட்டில் கிறித்தவம் அழிந்துப்போனால் இங்கே அதைப் பரப்பும் குழுக்களுக்கு உதவிகளும் நின்றுபோகுமே..?
    //

    அங்கு அழிந்து போவதால் கொள்ளை கூட்டம் வேறு இடம் தேறுகிறது – அமெரிக்காவில் கோல காரன் எமாதியது போதும்னு இந்தியாவுக்கு வரான் – தாவூத் இப்ராஹீம் துபைல கொள்ளை அடிக்க முடியலன்னா இந்தியா வருவான் (இங்க பணம் இருந்தா) – இதுகெல்லாம் பதில் சொல்லனுமா

    கொள்ளை காரனுக்கு கொள்ளை அடிப்பதை தவிர வேறு தெரியாது – கிறிஸ்தவ பரப்பாலனுக்கு அதை தவிர வேறு தெரியாது – அங்கு ஆள் இல்லை, இங்கு வந்து ஏமாத்தி, பொய் சொல்லி கடை விரிக்கிறான், அதற்க்கு சோனியாவின் துணை அற்புதமாக கிடைக்கிறது

    //
    ஆம்,தற்போது எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் இங்கே கிறித்தவ மார்க்கம் சுயாதீனமாக இந்திய தேச சட்டங்களுக்குக் கீழ்பட்டு நிர்வகிக்கப்படுகிறது என்பதே உண்மை;
    //

    இங்கேயே கொள்ளை அடிக்க அரம்பிச்ச்சு என்கிறீர்கள் – இங்கேயே கிடைக்கிறதென்றால் money transfer செய்து கஷ்டப்படுவானேன்

    ஆனால் இது உண்மை இல்லை நண்பரே – வெளி நாடு சூழ்சிப்பணம் (ஹிட்லரின் பர்ணம், பிணம் விற்ற பணம்) இப்பொழுதான் என்றும் இல்லாத அளவு இங்கு புரள்கிறது திருச்ச்சபையினுள் – இங்கேயே கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு சின்ன மலையில் அவ்வளவு பெரிய AG சபை கட்ட முடியுமா?

    //
    தற்போதய கிறித்தவ சபைகள் மேற்கத்திய கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்தரமான இந்தியத் தன்மையுடன் செயல்படத்
    துவங்கியிருக்கிறது;
    //

    அப்போ நிறைய விஷயத்தை ஒத்துகிடீங்க – நன்றி

    //
    மாற்றங்களை விரும்பும் புதிய தலைமுறைக்கு நம்பகமானதொரு மாற்றாக இன்றைய கிறித்தவம் விளங்குகிறது..!
    //

    புதிய தலைமுறைக்கு tasmac தான் பிடித்திருக்கிறது, ஆபாச படம் தான் பிடித்துரிக்கிறது என்ன செய்ய

    வர்டா

  75. சில்சாம்,

    அதெல்லாம் இருக்கட்டும்…ரங்கசாமி கேட்டதை நானும் கேட்கிறேன்…

    உங்களது தெய்வம் சொன்ன வாக்கை நிரூபிக்க, எப்போது விஷம் குடிக்கப்போகிறீர்கள்? உங்கள் தெய்வத்தை நீங்கள் “விசுவாசித்து” மக்களை குணப்படுத்தும்போது, அதே விசுவாசத்தால் விஷத்தை குடித்து காட்டுவதில் என்ன பயம்?

    ஆவலுடன் காத்திருக்கிறோம்

  76. Chelsam என்கிற மிஷ நரிக்கு: பரதக்கன்டம் என்று அழைக்கப்பட்ட பாரத தேசமான இக்கரைக்கு, என்றுமே அக்கரையான ஆபிரகாம் மதககண்டங்கள், பச்சையாக இருந்தது கிடையாது; பாரதத்தின் செல்வத்தை கொள்ளையடிக்க மற்றும் மதம் மாற்ற வந்த கும்பலே உங்களைச்சார்ந்த ஆபிரகாம் மதக் கும்பல்கள்; பாரதத்திற்கு வர வேண்டுமானால், பாரதத்தைப் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்; பாரத மதமான இந்து மதத்தின் கோட்பாடுகளை சிறிது தெரிந்து கொண்டு, அவற்றை தலை கீழாக மாற்றி, உங்கள் ஆபிரகாம் மதங்களைக் கொண்டு திணிக்க முற்பட்டீர்கள்; உங்களது முதல்வன் மூலம் வேலைக்காரிக்கு பிறந்த பிள்ளையின் வாரிசுகள் உங்களை ஜெருசலேத்தில் இருக்க விடாமல் அடித்து அனுப்பவே, பாரதம் நியாயமானவர்கள் இருப்பிடம் என்று தெரிந்து, மலபார் பகுதியில் முதலில் நுழைந்து, அங்கிருந்த மக்களிடையே கலகத்தை ஏற்படுத்தி, இப்போது நீங்கள் செய்வதற்கு முன்மாதிரியாக அடாவடி அடித்தீர்கள். இங்குள்ள ஒவ்வொரு கிரித்தவனும், கிரித்தவனாக இருக்க முடியாமல், நேராகவும் மறைமுகமாகவும், இந்துவாகவே வாழ வேண்டும் என்பது கிறித்தவர்களின் தலை எழுத்து. மேலும் வரும்!

    (Edited and published.)

  77. திரு ஜடாயு, சாரங் மற்றும் திருச்சிகாரன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது பின்னூட்டத்தை மதித்து அதற்கு உங்களின் தெளிவான விளக்கங்களை வழங்கியமைக்கு மிக்க நன்றி.

    எனது பொதுவான observation and suggestion .

    பெரும்பாலான அரசு அலுவகங்களில் கிறித்துவ மத மாற்றம் அல்லது அவர்களை வேலைக்கு அமைக்கும் போக்கு சமீப காலமாக நிலவி வருகிறது. மேலும் அத்தியாவசிய சேவைகளான பால், பேப்பர், மளிகை மற்றும் வீடு உபயோக பொருள்கள் போன்றவற்றில் கிருத்துவர்கள் தங்கள் பணத்தை வாரி இறைத்து தங்கள் வசமாக்கி வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் நாம் எதற்கும் அவர்களையே எதிர் நோக்க வேண்டிய சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதற்கு தீர்வாக, நமது இந்து அமைப்புகள் வெறுமனே திரைப்படங்களை எதிர்ப்பது, காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்ப்பது என்று இல்லாமல் நமது சமூக இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகளை சமாளிக்கும் வழிகளையும் இலவச IAS, IPS போன்ற தேர்வு மையங்களை நடத்தியும் இதனை எதிர் நோக்கலாம். மேலும் திரு வீரமணி (தி. க) போன்றோரே இது போன்ற இலவச IAS, IPS போன்ற தேர்வு மையங்களை நடத்தி வருகிறார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு அமைப்பு ரீதியான போட்டிகளை நடத்தி அவர்களுக்கு நமது இதிகாச இலக்கியங்களை, மர கன்றுகளை பரிசாக வழங்க வேண்டும். அதோடு நில்லாமல் அதன் புனிதத்தையும், அவசியத்தையும் அவர்களுக்கு விளக்க வேண்டும்.

    ஊருக்கு ஊர் மரம் நட்டு அதற்கு புராண இதிகாச கதா பாத்திரங்களின் பெயரை வைக்க வேண்டும். அந்த மரங்களை பராமரிக்கும் பணியையும் மாணவர்களிடமே விட்டு விட வேண்டும். இது சமூக பொறுப்புடன் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் ஆகும்.

    நீங்கள் இதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து சொல்லுங்கள். என்னால் முடிந்த பொருளாதார உதவியையும் செய்யத் தயாராக இருக்கிறேன். குறைந்த பட்சம் எனது உடல் உழைப்பை வழங்குவேன்.

    திரு Chill sam

    //ஆம்,தற்போது எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் இங்கே கிறித்தவ மார்க்கம் சுயாதீனமாக இந்திய தேச சட்டங்களுக்குக் கீழ்பட்டு நிர்வகிக்கப்படுகிறது என்பதே உண்மை;//

    உண்மை நண்பரே. உங்கள் பணம் எப்படி பங்கு சந்தையில் விளையாடுகிறது என்பதை நான் நன்கு அறிவேன். (நான் பங்கு சந்தை சம்பந்தமான நிறுவனத்தில் பணி புரிகிறேன்.) மேலும், உங்கள் பணம் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் எப்படி வட்டிக்கு விடப்படுகிறது என்பதையும் நான் நன்கு அறிவேன் (சுமார் 36% வட்டி). வேண்டிய அளவு அன்னிய நாட்டு பணம் வந்து சேர்ந்து விட்டது. இனி உங்களுக்கு அன்னிய நாட்டுப் பணம் தேவை இல்லை என்ற அளவுக்கு பங்கு சந்தையிலும் சுய உதவி குழுக்களிடமும் உங்கள் பணம் கொட்டிக் கிடைக்கிறது (இதனை என்னால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்).

    [Edited and published]

  78. அய்யா சில்சாம்
    இந்தியாவை ஏறத்தாழ 800 வருடங்களாக கொள்ளயடித்தது யாரு கோகினூர் வைரம் இப்போ எங்க இருக்கு எலிசபெத் ராணி வீட்டுல . கொள்ளையடிக்கப்பட்ட பொருள் என்று தெரிஞ்சும் அதை தலையில் வைத்து அழகு பார்ப்பது யார் ? கேட்டால் அது ராஜா பரம்பரை சொத்து என்று சொல்வீங்க ஜப்பானை அணுகுண்டு போட்டு ஒரே முறைதான் அழித்தான் அமெரிக்காக்காரன் ஆனால் இந்தியாவை மொத்தமா கொள்ளையடித்துவிட்டு போய் விட்டான் வெள்ளைக்காரன் .அப்பவும் அவங்க அதே கிறிஸ்துவ மதம் தான் . ஏன் அப்போது பைபிள் இல்லையா இல்ல மசினரீஸ் இல்லையா . எல்லாம் கூட்டு களவாணி பயலுவ . எல்லாம் சரி இப்போ மீனவர்கள் எல்லோரையும் மதம் மாத்தினது யார் [ பணத்தை காட்டி ] இதெலாம் செய்துவிட்டு நல்ல வேஷம் வேற போடுறீங்க நல்லவர்கள் மாதிரி . இருக்க இடம் கொடுத்தால் படுத்தே விட்டீர்கள் . திரைப்படங்களை கொண்டு வந்து இளைஞர்களை திசை திருப்பி விட்டீர்கள் . ஒரு விவேகானந்தர் போல் ஒருவர் எங்களுக்கு வழிகாட்டியாக வந்தால் போதும் . நீங்கள் உங்கள் நாட்டுக்கே ஓட்டம் பிடிக்க வேண்டியிருக்கும் . உங்கள் பரம்பரை முன்னோர்கள் அனைவரும் ஹிந்துக்களே , அவர்களும் மதம் மாற நிர்பந்திக்கபட்டவர்களே. அவர்கள் நிர்பந்திக்கப்பட்டது காலபோக்கில் மறைக்கபட்டிருக்கும் . இவ்வளவு ஏன் நான் படித்த கிறித்துவ பள்ளியில் கூட மதம் மாறினால் மேற்படிப்பு படிக்க உதவி செய்வதாக [?] ஆசை காட்டப்பட்டது .

    திரு ஜடாயு , திரு அரவிந்தன் நீலகண்டன் திருச்சிக்காரன் திருமதி தேவப்ரியா ஆகியோருக்கு நன்றி திருச்சிக்காரன் சார் நான் உங்கள் விசிறி

  79. நண்பர் சில்சாம் அவர்கள் கூறியது:
    >ஆனால் பாரதத்து கதைகளிலும் புராணங்களிலும் எண்ணற்ற கொலைகளை அவதாரங்களெடுத்து இறைவனே செய்கிறார்;முழு பூசணிக்காயை கைப்பிடிச் சோற்றில் மறைக்கப்பார்க்கிறீர்களே;

    இது முழுப்பொய். இதற்கு ஆதாரம் அணுவளவும் கிடையாது.

    மேலும் பைபிளை கொரானை வேதம் என்று கூறுவது பெரிய பித்தலாட்டம். இவை நம்பிக்கையையே ஒட்டிய மதங்கள்.வேதம் என்பது பெயருக்கு ஏற்ப அறிவை ஒட்டியது. இந்து வேதம் ஒன்றுதான் வேதம். வேறு அல்ல.
    பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்பதும் பித்தலாடமே. இறைவன் தன் கூற்றை மாற்றி மாறி அமைக்கவில்லை அப்படி மனதை மாற்றுபவன் இறைவனுமல்லன்.
    மேலும் இயேசு தன்னை இறைவன் என்றோ இறைவனுக்கு ஒரே புதல்வன் என்றோ ஒரு போதும் கூற‌வில்லை. இவை எல்லாம் பிறகு வந்தவர் கூறியது. கூறியவர் யாரும் இயேவை சந்தித்ததே கிடையாது! ஏன் இயேசு தான் நல்லவனே இல்லை என்கிறான்!
    இறைவன் 13 வயது மேரியை வற்புறுத்தி கருவுருக்க செய்வதில்லை. அதுவும் அவள் இன்னொருவனை மணக்க இருந்தவள். மணக்க ஒப்பந்தமும் செய்தவள். யூதர் மதத்தில் அப்படி ஒப்பந்தம் திருமணத்திற்கு சம்பந்தம். ஆணும் பெண்ணும் அப்படி ஒப்பந்தத்திற்கு பிறகு உடல் உறவு கூட கொள்ளலாம்! இப்படி இருக்க இறைவன் மேரியை வற்புறுத்தி ஜோசெபை கேட்காமலே கருவுரிக்க செய்தது தண்டனைக்குரி ய செயலாகும். அந்த ஆணும் பெண்ணும் யூதர்கள் சட்டப்படி மரண தண்டனைக்குள்ளாவார்கள். இதற்குதான் ஜோசெப் மேரியை முதலில் தள்ளி வைக்க முயன்ற பின் அவள் மரணம் நிச்சயம் என்று அறிந்து கனவில் கடவுள் வந்து கூறியதாக கூறினான். பிறகு ஜோசெப் பைபிளில் எங்குமே இல்லை! இயேசு தகாத முறையில் பிறந்ததாக ஊரே கூறுகிறது:

    யோவான் 8- 41:

    அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள்.

    யுதர்கள் மேரியை வேசியாக இருந்ததாக என்று கூறியது சரித்திரத்தில் உள்ளது

    இயேசு சிலுவையில் இறந்ததாக கூறுவது சரியல்ல. அவனை நண்பன் ஜோசெப் அரிமதேயா என்பவன் யூதர்களுக்கு தெரியாமல் மறைவாக எடுத்து சென்று மருந்துகள் போட்டு வைத்தான்! மயக்கதிலிருந்த இயேசு அங்கிருந்து ராணுவ வீரர்களுக்கு தெரியாமல் பயந்து ஓடியது பைபிளில் இருக்கிறது. தாகம் என்று குடித்ததும் பசி என்று உண்டதும் இருக்கிறது. இறந்து உயிர் பெற்றால் ஏன் தாகம், ஏன் பசி ஏன் ராணுவ வீரர்களுக்கு பயம்! இயேசு காஷ்மீரத்துக்கு ஒடி அங்கே இறந்து புதைக்க பட்டதென்று இன்றும் அங்கே சமாதி இருக்கிறது என்று பல காலமாகவே அஹமெதியா முசுலீம்கள் சான்றுடன் கூறுகிறார்கள். இயேசுவே தான் இறந்ததாகவும் உயிர் பெற்றுதாகவும் கூறவில்லை. மாறாக தான் ஆவி இல்லை என்கிறான். தன் கையிலுள்ள புண்ணை காட்டுகிறான்! ஆவிக்கு புண் ஏது?

    கிருத்துவத்தில் ஆண்டவனே இல்லை. எங்கும் இறைவன் தானே வந்து எதையும் கூறியதாக இல்லை. எல்லாம் மனிதர்கள் கூறியது. அதுவும் இயேசு கூறியதை விட பவுல் என்பவன் கூறியதே அதிகம். பவுல் கிருத்துவ பைபிளீல் பாதிக்கு மேல் எழுதினான். அவன்தான் இயேசு கடவுளின் ஒரே மகன் என்றும் அவன் இறந்து மீண்டும் உயிர் பெற்றதாகவும் அவன் சிலுவையில் சிந்திய ரத்ததினாலேயே பாவ மன்னிப்பு என்று மூட்டை விட்டான். இந்த கட்டுக்கதை நாடுகளை பிடித்து அடிமைகளாக்க வசதியாக இருந்தது. கஷ்டத்திலிருந்த கான்ஸ்டாண்டினோப்பில் முதன் முதலில் இந்த இயேசுவை நம்புவதாக கூறினான். அதனால் நாட்டை வசம் படுத்தினான். இல்லையேல் அவன் தலை கவிழ்ந்திருக்கும். கிருத்துவம் என்பது உண்மையில் மதம் இல்லை. அதில் உண்மை கடவுளும் இல்லை. நாடுகளை சூறையாடும் வழி அது அவ்வளவே!

    சில் சாமுக்கு இன்னமும் வேண்டுமா?

  80. இயேசுவின் பொன்மொழிகள் பல உள்ளன:
    லூக்கா 14:
    26. யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்

    பெற்றோரையே வெறுக்க வேண்டும் என்ற கண்றாவி மதம் இந்த நாட்டுக்குள் நுழைந்துள்ள‌து

    மார்க்கு 16

    17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

    18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்

    போப் கூட இதையேல்லாம் செய்ததில்லை செய்வதும் இல்லை!

  81. நண்பர்களே! இந்த சில்சம் போன்றவர்கட்கு பதில் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம். அனாவசியமாக இந்த விவாதங்களில் ஈடுபடுத்த வைத்து தங்களுடைய மதத்தைப் பற்றிய பிரச்சாரம் செய்வதற்கு இந்த தளத்தையும் ஹிந்து நண்பர்களையுமே உபயோகப்படுத்திக் கொள்வதுதான் அவர்கள் குறிக்கோள். இவர்களுக்குப் பதில் சொல்வதற்காகவேனும் பைபிளைப் படிக்கலாம் அல்லவா? அதுதான் அவர்கள் குறிக்கோள். இந்த தளத்தை நிர்வகிப்போர்களும் இதைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

  82. பாரதம் போன்ற நாடுகளில் சர்ச்சின் கொள்கை என்னவென்றால் அரசியலில் நாணயமும் நேர்மையும் இல்லாத எதற்கும் துணிந்த akkiஅராமக்காரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு பணம் கொடுத்து ஹிந்து மதத்தை இழிவு படுத்த தூண்டும்.
    இதனால் பெருவாரியான ஹிந்துக்களுக்கு அவர்களது சமயம் மற்றும் கலாச்சாரத்தின் மீது பற்று குறையும்
    அப்போது அவர்களை கிறித்தவத்துக்கு மாற்றலாம்
    மேலும் இந்த அரசியல்வாதிகளை வைத்து தங்களுக்கு சாதகமான சட்டங்கள்,ஆட்சி இவற்றை ஏற்படுத்தலாம்
    கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்படுத்தி நாட்டை உடைக்கலாம்

    இதுதான் அவர்களின் குறிக்கோள் .
    இதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்்டும்

  83. பகுத்தறிவு சுடர் சிலசம் அவர்களுக்கு !

    //பிப்ரப்பீப்பீ// எழுதி கொல்வது…

    இது ரொம்ப பிடிச்சிருக்கு.
    ஊத வேண்டிய நேரம் ஊதவே போகிறோம்….!!

    Direct action -ன்னுக்கு முதன்மையான காரணம் யாரு?அதனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஹிந்து அப்பாவி உயிர்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு.அன்று கற்பழிக்கப்பட்டு இறந்த ஹிந்து உயிர்களெல்லாம், மயிர்களா?

    நாங்கள் எங்கள் எட்டாவது மனுவாக மேதகு.டாக்டர் அம்பேத்கார் அவர்களை ஏற்பதற்கு சற்று முன்னர் எங்கள் அஹிம்சையிலும் மாற்றம் கொண்டு வந்து விட்டோம்.

    பாபர் மண்டபம்! கட்டியவன் என்ன அன்பை போதித்த அஹிம்சைவாதியா, அத்து மீறி வந்தேறிய பாரசிக,மங்கோலிய,துருக்கிய நாடோடி கலப்பினம் தானே அவன்! அவனும்,அவன் எழுப்பிய அவன் வெற்றி சின்னமும் அஹிம்சையின் அடையாளங்களா?

    இப்போது நாங்கள் எங்கள் எட்டாவது மனுவாக மேதகு. டாக்டர் அம்பேத்கார் அவர்களை ஏற்று சிறிது காலம் கழிந்த பின்னால் கொண்டு வந்த அஹிம்சையின் ஒரு படி முன்னேற்றம்.

    இனியும் நீங்கள் எதிர் பார்க்கலாம் சகோதரரே எங்கள் அஹிம்சையின் படிப்படியான முன்னேற்றத்தை மேலும்,மேலும்!! அதுவும் உங்கள் கைங்கர்யமான அடிமைகளை அதிக படுத்தும் திட்டமே முடிவு செய்ய உள்ளது.!

    அது சரி,பகுத்தறிவு பகலவன் சிலசம்!
    //உங்களை மாதிரி கேப்(Cap) மாறிங்க நெறையபேர் இந்த ஹிந்து மதத்தையும்,ஹிந்துவையும் திட்னா தான் கொஞ்சம் பேருக்காவது உரைச்சி ஒரு பெண்ணுக்கு கல்யாணத்துக்கு முன்னால தகாத முறைல பொறந்து தன்னை கடவுளின் மகன் என்று பீதற்றி கொண்ட, விலைமாதுவின் சகவாசம் வெச்சுருந்த ஒருத்தனைப் பாராட்டுவதை….//

    இதுக்கு என்ன உங்க எதிர் வினை,நண்பரே?? கர்ணன் பொறந்ததை சொல்ல போறிங்களா…..? சாரி nanba ! Karnanano,pancha pandavargalo எங்களுக்கு கடவுள் இல்லை!

    உங்கள் பகுத்தறிவை பயன்படுத்தி கைகுழந்தை இயேசுவை பேச வச்சு ஏதேனும் சொல்ல வைக்க போறிங்களா?

    அப்படி இல்லாமல்,விலை மாதுவுடன் சகோதர பந்தத்துடன் தான் இருந்தார் என்று ஏதேனும் வீடியோ ஆதாரம் இருக்கிறதா?

  84. The teaching of Bible for Mr Chillsam ( I know, some of you would like to call him Mr Sillysam but hey, let us forgive him, in our usual Hindu tradition, for he does not know what he is doing !!)
    This from King James Bible and nothing less:
    10 commandments for Mr Chillsam
    I Take heed to thyself, lest thou make a covenant with the inhabitants of the land whither thou goest, lest it be for a snare in the midst of thee: But ye shall destroy their altars, break their images, and cut down their groves:
    II For thou shalt worship no other god: for the LORD, whose name is Jealous, is a jealous God: Lest thou make a covenant with the inhabitants of the land, and they go a whoring after their gods, and do sacrifice unto their gods, and one call thee, and thou eat of his sacrifice; And thou take of their daughters unto thy sons, and their daughters go a whoring after their gods, and make thy sons go a whoring after their gods.
    III Thou shalt make thee no molten gods.
    IV The feast of unleavened bread shalt thou keep. Seven days thou shalt eat unleavened bread, as I commanded thee, in the time of the month Abib: for in the month Abib thou camest out from Egypt.
    V All that openeth the matrix is mine; and every firstling among thy cattle, whether ox or sheep, that is male. But the firstling of an ass thou shalt redeem with a lamb: and if thou redeem him not, then shalt thou break his neck. All the firstborn of thy sons thou shalt redeem. And none shall appear before me empty.
    VI Six days thou shalt work, but on the seventh day thou shalt rest: in earing time and in harvest thou shalt rest.
    VII And thou shalt observe the feast of weeks, of the firstfruits of wheat harvest, and the feast of ingathering at the year’s end. Thrice in the year shall all your menchildren appear before the LORD God, the God of Israel. For I will cast out the nations before thee, and enlarge thy borders: neither shall any man desire thy land, when thou shalt go up to appear before the LORD thy God thrice in the year.
    VIII Thou shalt not offer the blood of my sacrifice with leaven; neither shall the sacrifice of the feast of the passover be left unto the morning.
    IX The first of the firstfruits of thy land thou shalt bring unto the house of the LORD thy God.
    X Thou shalt not seethe a kid in his mother’s milk.

    And the LORD said unto Moses, Write thou these words: for after the tenor of these words I have made a covenant with thee and with Israel.

    Exodus 34:12-27, King James Bible
    Does this all sound too crazy to you? You bet it does. But Mr Chillsam who had been bribed, cajoled into this christian cult would not say so. Because, his brain has been washed, dry cleaned and ironed by the immoral christian mob.Who else will bring this discredited theory of Aryan inavsion other than a moron who is brain dead and refuses all evidences staring in his face? Please ignore his rantings about Aryan invasions of India because he is psychologically disturbed and suffers from ignorance and delusions.
    It is not too late Mr Chillsam. We Hindus, welcome you back into the religion of your forefathers, the only true religion,Sanatana Dharma, with open arms, provided you leave all your desert christian cult baggage behind. Reclaim your sanity.
    IT IS NOT TOO LATE.

  85. // இங்கே பலர் சொல்வது போல கிறித்தவம் அதன் அடையாளங்களை இழந்து மெள்ள அழிந்துக்கொண்டிருக்கிறது;பிறகு எப்படி இந்தியாவில் பரவும்; வெளிநாட்டில் கிறித்தவம் அழிந்துப்போனால் இங்கே அதைப் பரப்பும் குழுக்களுக்கு உதவிகளும் நின்றுபோகுமே..? //

    … சரக்க தயாரிச்ச எடதுலையே பிசினஸ் நல்லா போலையா !!! ஐயோ பாவமே !!

    [Edited and published]

  86. கிரி அவர்களே

    //
    அனாவசியமாக இந்த விவாதங்களில் ஈடுபடுத்த வைத்து தங்களுடைய மதத்தைப் பற்றிய பிரச்சாரம் செய்வதற்கு இந்த தளத்தையும் ஹிந்து நண்பர்களையுமே உபயோகப்படுத்திக் கொள்வதுதான் அவர்கள் குறிக்கோள்
    //

    எனக்கு தெரிந்து இது அல்ல அவரது குறிக்கோள் – அவருக்கு உண்மையிலேயே ஒரு பிரச்சனை இருக்கு

    கிறிஸ்தவத்திற்கு தெரியாமல் பங்கி ஜம்ப் அடித்துவிட்டு – இப்போது அது வெறும் டுபாகொர் என்று தெரிந்தும் மனம் ஒத்துக்கொள்ளவில்லை – எப்படியாது நம்பியே தீர வேடும் என்று நாட்டமை தீர்மானம் போல போட்டு போட்டு ஒரு வித மோனவியல் சார்ந்த சிக்கலுக்கு ஆளாகி உள்ளார் – அந்த அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்து எப்படியாகினும் நமது மனத்திற்கு சமாதானம் சொல்லிக்கொள்ள வேண்டும் என்று எண்ணி அதற்க்கு ஒரு உபாயமாக ஹிந்து மதத்தின் மீது வெறி தாக்குதல் நடத்துகிறார் – தன்னிடம் ஒன்றும் இல்லை என்ற போதிலும் அடுத்தவனை ஏலனம் செய்தால் எழும் ஆன்ம திருப்தியின் மூலம் மனத்தை கொஞ்ச நேரமேனம் நிம்மதி கொள்ள செய்யலாம் என்பது அவரது எண்ணம்

    கிறிஸ்தவத்தின் மேல் அவருக்கு எழுந்த மெய்யானதொரு அவ நம்பிக்கையை இன்னும் ஊர்கிஜபடுத்தி, ஆதாரங்கள் மூல நிரூபணம் காட்டுவதே நாம் அவருக்கு செய்யும் ஒரு சொஸ்தமான காரியமாகும் –
    அதன் பின் chilli sam sugar sam ஆகா மாறிவிடுவார்

  87. People have realized that if a species is vanished from this planet that would adversely affect other creatures. That’s conceived the idea of Diversity. Difference is inevitable and it prevails spontaneously in nature.

    Diversification is therefore acceptable, but not the dividend governance between the difference. This in turn shatter the nature. British invaded into the sub-continent (Bharatha Nation as known in scriptures) for trading, then to Evangelize, and later on to conquer. We now face the consequences of their venomous strategies, esp. dividend ruling between ethnic groups.

    However, we are not complaining about their religion but the hatred propaganda it carries out on laypeople in rural regions.

    The very first thing the locals need to do is to educate the people with Hinduism. And everyone should remember that Hinduism is a name given for the all-alike religious/ spiritual beliefs and doctrines practiced in India, by some Travelers. Because, these people were originated from Indus Valley which gave them a collective name Hindus.
    Hence, Hinduism has so many philosophies which sometimes seem to have drastic differences, though they do compromise with each other. For example, Saiva sect has two paths: devotion and wisdom (Sidhars way). This differs from Tantric methods of worshiping. Tribal worships are quiet a differnt from all the above. And Vaishnava branch is totally committed to devotion and krya. Likewise, there are ample amount of ways. THAT IS THE SPIRIT OF LONG SURVIVAL NATURE OF THIS RELIGION. No body knows which region they are attacking. It’s and old Ficus tree and immaturity cannot chop its hundreds or thousands of hanging roots.

    I will come soon, yes, with other treats 😉

    Cheers,

    AK 63

  88. //
    கிறிஸ்தவத்தின் மேல் அவருக்கு எழுந்த மெய்யானதொரு அவ நம்பிக்கையை இன்னும் ஊர்கிஜபடுத்தி, ஆதாரங்கள் மூல நிரூபணம் காட்டுவதே நாம் அவருக்கு செய்யும் ஒரு சொஸ்தமான காரியமாகும்
    //

    இதற்கென்று வரப்பிரசாதமாக பண்ணி வைத்துள்ளார்கள் இங்கே: https://www.skepticsannotatedbible.com/cruelty/long.html

    கண்ணனையும், விநாயகரையும், ஆஞ்சநேயரையும் கேலி செய்பவர்கள் இதை முதலில் படிக்க வேண்டும்.

  89. கீழே கொடுக்கப்பட்ட https://www.skepticsannotatedbible.com/cruelty/long.html என்னும் சுட்டியில் பல இடங்களில் யஹோவா என்னும் கிறித்தவ/யூத தேவன் மிருக பலியையும் ரத்தத்தையும் கேட்டு வாங்கி உகப்படைந்ததாகவே உள்ளது. இதிலிருந்து தெரிய வருவது: பழைய ஏற்பாட்டின் கடவுட்கொள்கை என்னவென்றால், ‘யஹோவா மிருக பலியால் தான் உகப்படைவார்’ என்பதே. ஆகையால், யஹோவா cain-ஐப் புறக்கணித்து abel-ஐ ஆதரித்தார் என்ற கதையின் நோக்கம் புரிகிறது. (cain காய்கறி-பழங்களை காணிக்கையாக கொண்டு வந்தார், abel ஆட்டுக் குட்டியை பலியிட்டு உகப்படைய வைத்தார் என்னும் கதை).

    chillsam சொல்வது போல, “கொண்டு வந்த பொருளைப் பாராமல் abel-உடைய மனநிளையால் உகப்படைந்தார்” என்று சப்பைக்கட்டுவது ஒரு கண்துடைப்பே என்பது இவர் நூலை வைத்தே நிரூபிக்கப்பட்டது. இவர் கூறும் விளக்கம் பைபிளில் எங்கும் இல்லை.

    எதிரி நட்டு வைத்த ஒன்றை சாதகமாக உபயோகப்படுத்துவது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று நினைக்கிறேன்.

  90. இது ஹிந்துக்களின் தேசம்
    இங்கு அவர்கள் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக உள்ளனர்
    அவர்கள் எதற்கு ஆக்ரமிக்க வேண்டும்?

    மிஷனரிகளே பிரிட்டிஷ் காலத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
    பழைய மிஷனரி கல்லூரிகள், சர்ச்கள் முதலியவற்றைப் பார்க்கும்போது இது விளங்கும்
    அவர்கள் மிகவும் திட்டம் போட்டு -முடிந்தவரை நாட்டின் நிலங்களை தங்கள் வசம் கொண்டுவர பல உத்திகளை செய்துள்ளனர்

    இப்போதும் கூட ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊர் போக ஒரு பேருந்தில் பயணம் செய்யும்போது இரு பக்கங்களிலும் நூறு அடிக்கு ஒரு கட்டிடம் இருக்கும்.
    அதன் மீது சிலுவை இருக்கும்
    ஆனால் பக்கத்தில் பல மைல்களில் ஒரு கொசு கூட இருக்காது
    அதுவும் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருக்கும்.
    ஆளே இல்லாத இடத்தில், அதுவும் ஒரு கிறித்தவன் கிட இல்லாத இடத்தில் எதற்கு இப்பவே சர்ச்?

    இரண்டு காரணங்கள் .ஒன்று இப்பொழுதே மிகக் குறைந்த விலையில் இடத்தைப் பிடித்தால் பின்னால் அது எப்படியும் விலை உயரும்
    சொத்துக்கு சொத்து, மதிப்புக்கு மதிப்பு.
    நாட்டின் நிலத்தை பிடித்ததாகவும் ஆயிற்று
    பிறகு அங்கு மக்கள் குடியேறும் பொது அந்த ‘ ஆபீசில் ‘ இருந்து கொண்டு மத மாற்றம் செய்யலாம்
    எவ்வளவு தந்திரம் !
    ஹிந்துக்கள் எவ்வளவு ஏமாளிகள்?

    இரா.ஸ்ரீதரன்

  91. மார்க்கு 16

    17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

    18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்


    ரொம்ப ரொம்ப சரி…

    இந்து நண்பர்கள் செய்யக்கூடியதெல்லாம் இதுதான்.

    எவர் கிறிஸ்துவ பிரச்சாரம் செய்தாலும், இதோ முடவர் நடக்கிறார்.. குணப்படுத்துகிறேன் என்று ஆரம்பித்தாலும், பகிரங்கமாக ஒரு பாட்டில் விஷத்தை எடுத்துக்கொண்டு போய் அந்த பிரச்சாரம் செய்பவரிடம் கொடுத்து, உங்கள் விசுவாசத்தை நீங்களே நிரூபியுங்கள். பிறகு பிரச்சாரம் செய்யலாம் என்று அவரிடம் கொடுத்துவிட வேண்டியதுதான்.

    அவர் குடிக்கிறாரா பார்ப்போம்.

    பிறகு அவர் ஏன் பிரச்சாரம் செய்ய வருகிறார்?

  92. ஆன்மிகம், அனுபவம், போன்ற வகையறைக்குள் வரும் கட்டுரைகளுக்கு மிகக்குறைந்த மறு மொழிகளே வருகின்றது, அதே நேரம் பிற மதங்கள் போன்ற கட்டுரைகளுக்கு அதிக அளவில் மறுமொழி கிடைகின்றது! இதிலிருந்து நமக்கு ஆன்மிக தேடல் மிகக்குறைவே என்பது தெளிவாகிறது! இந்து மதத்தின் மிக சிறந்த அம்சமே அதன் சகிப்பு தன்மையே, உலகத்தில் வேறந்த மதமும் இந்தளவுக்கு சகிப்பாக இருக்குமா என்று தெரியாது! இந்துக்களும் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் போல, மற்ற மதத்தினரை போட்டி போட்டு கொண்டு இழிவாக பேசினால் இந்துகளுக்கு பெருமை என்ன? இந்து மதத்திருக்கும் மற்ற ஆபிக்ரமிய மதங்களுக்கும் என்ன வித்தியாசம்? தன்னை உயர்வாகவும், மற்ற மதத்தினரை தாழ்வாக பேசுவதும் ஆபிரகாமிய மதத்தின் தாக்கம். ஆன்மிக தேடலை வளர்த்து கொள்ள வேண்டும், இதே போல் ஆன்மிக கட்டுரைகளுக்கும் அதிக பின்னூட்டம் கிடைக்க வேண்டும்!

  93. சகிப்பு தன்மை என்பது இந்து மதத்தின் அம்சம் மட்டுமல்ல, அதன் பெருமையும் கூட! மேலை நாட்டவர் நம்மை பார்த்து வியப்பது, வேற்றுமையிலும் ஒற்றுமை! கிருஸ்தவர்கள், இந்துக்களை இழிவாக பேசுகிறார்கள் என்றால், அது அவர்களது குணம்! பதிலுக்கு இந்துக்களும் அவ்வாறு பேசினால், இந்து மதத்தின் அடிப்படைக்கே ஆட்டம்!! இறந்த முற்பிதாக்களை, குல தெய்வாமாக மரியாதையை செலுத்தும், இறந்தவர்கள் சாமி ஆகிவிட்டார்கள் என்று சொல்லும் எந்த இந்துவும், யேசுவையோ, புத்தரையோ, முகமதையோ தவறாக பேச மாட்டார்! நமக்கு தேவை, விவேகானந்தர் போல மிகச்சிறந்த மிஷனரி! இது போல் விவாதித்து கொன்டிருந்தால் விவேகானந்தரை அடையாளம் காண்பது எப்படி? இயேசுவை பற்றி தவறாக பேசியிருந்தால், விவேகானந்தர் மேலை நாட்டில் வெற்றி அடைந்திருக்க முடியாது! மற்றவர்களை பற்றி தவறாக பேசி அவர்களது அன்பை பெற இயலாது! விவேகானந்த நீ மீண்டும் பிறந்தெழு!!

  94. சபாஷ் தோழர்களே எங்கே அந்த சில்ஷாம் பைபிளில் இருந்து என்ன படித்து கொண்டு வந்து சொல்லலாம் என்று போய் விட்டாரா. இந்தியாவை கொள்ளயடிதவர்களின் மதத்தை இவர்கள் கொண்டாடுகிறார்கள் . தேச துரோகிகள் . பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்று ஒரு பழமொழி உண்டு . அதுதான் இப்போது நடக்கிறது . இதுவும் உமயவனின் திருவிளையாடல் தான். அவனின்றி ஓரணுவும் அசையாது .

    (Edited and published.)

  95. >எவர் கிறிஸ்துவ பிரச்சாரம் செய்தாலும், இதோ முடவர் நடக்கிறார்.. குணப்படுத்துகிறேன் என்று ஆரம்பித்தாலும், பகிரங்கமாக ஒரு பாட்டில் விஷத்தை எடுத்துக்கொண்டு போய் அந்த பிரச்சாரம் செய்பவரிடம் கொடுத்து, உங்கள் விசுவாசத்தை நீங்களே நிரூபியுங்கள். பிறகு பிரச்சாரம் செய்யலாம் என்று அவரிடம் கொடுத்துவிட வேண்டியதுதான்.

    கேட்க வேண்டிய கேள்விதான். அதை விட கடவுள் மகன் இயேசு என்றால் இயேசுவேதானே ஏன் இப்படி கூறவில்லை. ஏன் பிறர் மட்டும் கூறுகிறார்கள்? குறிப்பாக பால்? கடவுள் 13 வயது பெண்ணை பய‌முறுத்தி கருவுருக்க செய்வாரா? ஏன் ஜோசெப் மேரியை விட்டு உறவை அறுக்க தயாராக‌ இருந்தான்? மேரி ஏன் கருவுருத்ததும் உடனே ஜோசெப்பிடம் சொல்லவேயில்லை? மாறாக ஏன் எலிசபெத் வீட்டில் போய் மூன்று மாதம் ம‌றைந்து இருந்தாள்? திரும்ப அங்கிருந்து வந்து வயிறு பெரிதாக தெரிந்தவுடன் ஜோசெப் கேட்க அப்போதுதானே கடவுள் கருவுருக்க செய்ததாக கூறினாள் ஏன் அவ்வள‌வு நாள் மறைத்தாள்? கடவுள் மகன் என்றால் தந்தை தெரியாத பிள்ளை என்றுதானே பொருள்?

  96. //எவர் கிறிஸ்துவ பிரச்சாரம் செய்தாலும், இதோ முடவர் நடக்கிறார்.. குணப்படுத்துகிறேன் என்று ஆரம்பித்தாலும், பகிரங்கமாக ஒரு பாட்டில் விஷத்தை எடுத்துக்கொண்டு போய் அந்த பிரச்சாரம் செய்பவரிடம் கொடுத்து, உங்கள் விசுவாசத்தை நீங்களே நிரூபியுங்கள். பிறகு பிரச்சாரம் செய்யலாம் என்று அவரிடம் கொடுத்துவிட வேண்டியதுதான். //

    ஒரு குறிப்பிட்ட வியாதிக்காக மருத்துவரிடம் செல்கிறோம்;அவர் அதற்கான ஒரு மருந்தினைக் கொடுக்கிறார்;முதலில் அவர் அந்த மருந்தை குடித்துக்காட்டிய பின்னரே பயன்படுத்துவேன் என்று அடம்பிடிக்கலாமா..?

    பாம்பு கடிக்கு வைத்தியம் செய்யவந்த வைத்தியரை பாம்பு கடித்தபிறகே அவரிடம் வைத்தியம் செய்துக் கொள்வேன் என்றால் அது சுத்த பைத்தியக்காரத்தனமல்லவா..?

  97. பல வருடங்களுக்கு முன் எனது அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்த்த ஒரு அதிகாரி நான் திருப்பதி செல்லப் போகிறேன் என்றதும்’ ‘எனக்கு லட்டு வாங்கி வர முடியுமா’ என்று கேட்டார் .அதற்கென்ன , வாங்கி வருகிறேன் என்று சொன்னேன். பிறகு திடீரென்று எதையோ நினைத்தவர் போல் என்னை அழைத்து ‘ லட்டுகள் எல்லாம் சாமிக்குப் படைக்கப் படுமா’ என்று கேட்டார். நான் ஆமாம், சாத்திரப்படி முதலில் தயாரிக்கும் கொஞ்சம் லட்டுகளை கடவுளுக்குப் படைப்பார்கள் என்றும் அதுவே எல்லா லட்டுகளும் படைக்கப் பட்டதாக ஐதீகம் என்றும் கூறினேன்.
    ‘கடவுளுக்குப் படைக்கப் படாத லட்டு கிடைக்குமா?’ என்று கேட்டார்.
    எனக்கு வந்த எரிச்சலில் ‘கிடைக்கும் ,லாலா கடையில்’ என்று சொன்னேன்!
    எப்படியெல்லாம் அவர்கள் மூளைச் சலவை செய்யப் படுகிறார்கள் !
    எவ்வளவு த்வேஷம்? ஆனால் நாம் கேட்டுக் கேட்டு கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டுகிறோம்!

    இரா.ஸ்ரீதரன்

  98. //ஒரு குறிப்பிட்ட வியாதிக்காக மருத்துவரிடம் செல்கிறோம்;அவர் அதற்கான ஒரு மருந்தினைக் கொடுக்கிறார்;முதலில் அவர் அந்த மருந்தை குடித்துக்காட்டிய பின்னரே பயன்படுத்துவேன் என்று அடம்பிடிக்கலாமா..?

    பாம்பு கடிக்கு வைத்தியம் செய்யவந்த வைத்தியரை பாம்பு கடித்தபிறகே அவரிடம் வைத்தியம் செய்துக் கொள்வேன் என்றால் அது சுத்த பைத்தியக்காரத்தனமல்லவா..?//

    Your analysis is itself wrong. The Medicines are tested clinically before it is being prescribed to common public, so let he Preacher does the Drinking poison for self and clinically prove bible is wrong or right.

  99. //இந்து மதத்தின் மிக சிறந்த அம்சமே அதன் சகிப்பு தன்மையே. – Amirtharaj//

    //சகிப்பு தன்மை என்பது இந்து மதத்தின் அம்சம் மட்டுமல்ல, அதன் பெருமையும் கூட! – Amirtharaj//

    சகித்துக்கொள்ளக் கூடாதனவற்றையும் சகித்துக்கொள்ள இயலாதனவற்றையும் சகித்துக்கொள்வதற்குப் பெயர் `சகிப்புத்தன்மை’ அன்று.

    அந்தத் `தன்மை’க்கு ஏமாளித்தனம், இளித்தவாய்த்தனம், கோழைத்தனம் என்று எத்தனையோ பொருத்தமான பெயர்கள் உண்டு; சொற்கள் போதவில்லையெனில்
    `மோழைத்தனம்’ என்று மேலும் ஒரு புதிய சொல்லை உருவாக்கிக்கொள்ளலாம்.

  100. ///இந்தியா என்ற நாட்டை உருவாக்கித் தந்த வெள்ளையனை நாம் மறக்கக்கூடாது..!/// – மேநாட்டு அடிவருடித் தனத்தை உயிர்மூச்சாகக் கொண்டவர்களில் கடைந்தெடுத்த கயவரின் எண்ணம் இது போன்றே இருக்கும்.

    கண்ணிருந்தும் குருடராய்! காதிருந்தும் செவிடராய்! இருப்பவர்களில் இது போன்றோரும் சிலர்.

    இவர்கள் தான் செய்வது இன்னதென்றறியாது செயதொளிந்தார்கள் – என்பது இவர் போன்றாருக்காகவே உண்டாக்கப் பட்ட வாசகம்.

    சுயஅறிவு மட்டுமன்றி, கேள்வியறிவும் அற்றவர்கள் உண்மைகளை ஒத்துக் கொள்வதில்லை.

    நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று அகந்தையுடன் கூறுபவர்களுக்கு உதாரணமாக இதுபோன்றோரைவிட சரியானவர் கிடைக்க மாட்டார்.

    கிணற்று தவளைக்கு சகலமும் கிணறுதான். கிணற்றுக்கு வெளியே நடக்கும் உண்மைகளை அது அறிய விரும்புவதுமில்லை.

    உள்ளுரில் (உள்நாட்டில்) விலைபோகாமல் வெளிநாடுகளில் கூவி, கூவி ………கூவி விற்கப் பட்ட மதம், இன்று எந்த நாட்டில் இருந்து வந்ததோ அங்கேயே சீந்துவார் இல்லை. இருப்பினும் இங்கே அதை இன்னும் விற்றுப் பிழைப்போர் சிலர் . அவர்கள் வயிற்றுப் பாட்டுக்கு வேறு என்ன செய்வார்கள்? அவர்கள் சுற்றிலும் நடக்கும் உண்மைகளை ஒப்ப மறுப்பவர்கள்.

    இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்தும் உலகத்துக்கே உடல் மற்றும் மனப் பிணி தீர்க்கும் யோகத்தையும் ஆசனத்தையும் கற்று தந்த இந்தப் பொன்னாட்டின் பண்பாட்டினையும், மகத்துவத்தையும் அறியாமல் கேவலம் …….வயிற்றுப் பிழைப்புக்காக பொய்யர்களின் வார்த்தைகளில் தன் அறிவை மளுக்கிக்கொண்டு, மதிகெட்டு அலைவோரால், இது போன்று ஆயிரம் நவோமி வந்து உண்மைகளை வெட்ட வெளிச்சமாக பச்சிளங் குழந்தைக்கு கூட புரியும் வண்ணம் எடுத்துரைத்தாலும் உண்மைகளை ஒப்ப மறுப்பார்.

    அன்புடன்
    ஆரோக்யசாமி

  101. தெரேசா நோய் வாய்ப்பட்டால் மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை செய்தனர்
    அதே போல் தினகரன் அபோல்லோ ஆஸ்பத்ரியில் சேர்க்கப் பட்டு இறந்தார்
    ஏன் ,அவர்களுக்கு ஜெபம் செய்து சரி செய்திருக்கலாமே?
    முடவன் நடக்கிறான்,குருடன் பார்க்கிறான் .
    பணம் கொடுத்து ஆட்களைப் பிடித்து டிராமா போடும் இந்த அசிங்கம் எதற்கோ?

    இரா.ஸ்ரீதரன்

  102. ஆம், நாம் மற்ற மதங்களை மட்டம் தட்ட வேண்டாம்

    அதே நேரத்தில் நமது தர்மம்,பண்பாடு,கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இவற்றின் மீது நடத்தப் படும் தாக்குதல்களை எதிர் கொண்டு தக்க மறு மொழி கொடுக்க கடமைப்பட்டுள்ளோம்
    இல்லை என்றால் இளைய தலைமுறையினர் அவர்களின் வாதம் உண்மை என்று நினைத்து நம் சமயத்தின் மீது பற்று இழந்து விடுவர்.
    பிறகு அவர்களை கிரித்துவதுக்கோ ,இஸ்லாமுக்கோ மதம் மாற்றுவது எளிது

    ஹிந்துக்கள் மிக அரிய,சுதந்திரம் மிக்க ஒரு வாழ்க்கை முறையின் சொந்தக்காரர்கள் .
    அது மிகவும் வண்ண மயமானது. வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் என்று சொல்வது.
    யாரையும் பாவி என்றோ இழிந்தவன் என்றோ கூறாதது .
    ‘அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது’ என்று கூறுவது
    தெய்வம் மனுஷ்ய ரூபேண – தெய்வம் மனித உருவில் உள்ளது என்று கூறுவது .
    கடவுளைக் கூட நண்பனாய் ,மந்திரியாய் , நல்லாசிரியனாக் காண்பது.
    எண்ணருங் கலைகளையும் , தத்துவங்களையும் தன்னுள்ளே அடக்கியது.
    மானவ சேவை மாதவ சேவை -மனிதனுக்குச் செய்யும் சேவையே மாதவனுக்குச் செய்யும் சேவை என்று சொல்வது
    ‘உயர்ந்த சிந்தனைகள் எல்லாத் திக்குகளிலிருந்தும் எம்மை வந்து அடையட்டும்’ என்று ரிக் வேதம் கூறுகிறது.
    ஏகம் சத் விப்ராஹ் பஹுத வதந்தி – உண்மை ஒன்றே மக்கள் அதனை வித விதமாக விவரிக்கின்றனர் என்று கூறுகின்றது .

    நமது தர்மம் ஒரு கடல்
    அது வற்றினால் உலகம் பாலைவனமாக மாறும்
    இரா.ஸ்ரீதரன்

  103. /// காந்திஜி சொன்னவாறு ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா கிறிஸ்தவ நாடாகியிருக்கும்/// – இதுபோன்று காந்திஜி கூறியதாக எந்தக் குறிப்பிலும் காணப் படவில்லை. கிறிஸ்துவத்தைப் பற்றி மகாத்மாவின் எண்ணமும், கருத்துக்களும் மிகத் தெளிவானவை. அதை உலகமே அறியும். ஆனால் உண்மைக்குப் புறம்பாக திரித்துக் கூறி இருப்பது, வஞ்சம் வைத்து, மோசடி எண்ணத்துடன் தேசப்பிதாவை இங்கே இழுத்திருப்பதாகவே படுகிறது.

    உண்மை மறுப்பாளர்களுக்கு அதுவே உயிர்மூச்சாகப் போதிக்கப்பட்டிருக்கலாம், இருப்பினும் இது அளவு மீறிய புளுகல்.

  104. PROSELYTIZING (CONVERSION) UNDER THE CLOAK OF HUMANITARIAN WORK IS UN-HEALTHY, TO SAY THE LEAST AND IF I HAD THE POWER AND COULD LEGISLATE, I SHOULD STOP ALL PROSELYTIZING. IT IS A DEADLIEST POISON THAT EVER SAPPED THE FOUNTAIN OF TRUTHS” – M.K.GANDHI
    மனிதநேயம் என்ற போர்வையில் மதமாமற்றத்தை ஊக்குவிப்பது ஆரோகியமான போக்கல்ல. எனக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால் இதை முதலில் தடைசெய்வேன். இம்மாதிரியான போக்கு உண்மை என்ற அஸ்திவாரத்தையே உலுக்கும் ஆலகால விஷம் போன்றது

    “FOR EVERY CONVERT THAT LOST HINDUISM, IT IS NOT JUST ONE LOST BUT ONE MORE ENEMY TO HINDUSIM – CONVERSION IS PERVERSION – SWAMIJI

    மதமாற்றம் என்பது ஒருவன் இந்துமதத்திலிருந்து குறைந்தான் என்பதைவிட நாம் இந்து மதத்திற்க்கு நாம் இந்து மதத்திற்க்கு ஒரு எதிரியை உருவாக்கியுள்ளோம் என்பதே உண்மையாகும். மதம் மாற்றுவது என்பது வக்கிரகம் பிடித்த வெறி புத்தியேயாகும்

  105. நண்பர் ஆரோக்கியா கூறுவது முற்றிலும் உண்மை. மேலை நாடுகளில் கிருத்துவம் மிகவும் நலிந்து அழியும் நிலையில் உள்ளது. இதற்குதான் அவர்கள் கிருத்துவத்திற்கு வேறு ஒரு நாட்டை தேடிகிறார்கள் என்பது உண்மை. யாரும் வராததால் பல பல சர்ச்சுகள் விற்க பட்டு பாலியல் குழந்தைகள் விவகாரத்தில் பரிகார பணம் கொடுக்க வழியில்லாமல் உள்ளனர். மக்களுக்கு கிருத்துவம் என்றால் சிரிக்கும் நிலையில் உள்ளது அங்கே. பல இடங்களில் இந்தியாவில் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த மதம் மாறி பாதிரிகளாக்கி வேலை வாய்ப்புக்காக மதம் மாறியவர்களை ஆசை காட்டி சர்ச்சில் பாதிரிகளாக இருக்கிறார்கள்
    இவர்கள் கூறும் பொய்கள் பல. காந்தி சொன்னார் நேரு சொன்னர் எழுதினார் என்று மேடையில் பொய். எவன் இது பொய்யா இல்லையா என்று புத்தகத்தை பார்க்க போகிறான் என்ற தைரியம்

    ஈவேராவும் வழி காட்டினார் இப்படி.அந்த நூலில் அப்படி இந்த புராணத்தில் இப்படி என்று தெரிந்த மாதிரியே படித்த மாதிரியே நாளும் பொய் சொன்னார். மக்கள் அவரை நம்பி விட்டார்கள் . அண்ணா கம்பனை பற்றியும் கருணாநிதி ராமனை பற்றியும் இதே போல் சொல்லாத பொய்கள் இல்லை

    நாம் இவர்களுக்கு உடனே பதில் அளித்து மறுப்பு உடனே தெரிவிக்க வேண்டும்
    பல காலமாகவே மௌனமாக இரும்தோம். அது பெரிய குற்றம்
    யார் என்ன சொன்னாலும் உடனே மறுப்பு பதில் அளிக்க வேண்டும்
    விடுதலை குடியரசு போன்ற பத்திரிகைகளை பார்க்கவும் எவ்வளவு பொய்கள். யார் மறுக்கிறார்கள்
    இதே போல் இப்போது மத மாற்று போலிகளும் இதே யுக்தியை கையாளுகிறார்கள்

    கிரித்துவ மத மாற்றாளர்கள் நாத்திகர் போல் வேடம் போட்டு ஈவெரா கூட்டத்தில் சேர்ந்து இந்துக்களை வெறுக்க பாடு படுகிறார்கள்
    முசுலீம்கள் வேதத்தை பற்றியும் பல நூல்களை பற்றியும் பொய்கள். நாயக் என்பவர் கூறும் பொய்களை பார்க்கவும்

  106. ஹா ஹா “யாவே” (yaweh ) நிலைமை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அவருக்கு ஏக பட்ட தூதர்கள். அனால் அந்த தூதர்களின் அடி வருடிகளுகுள் அவரால் ஒற்றுமை கொண்டு வர முடியவில்லை. யூதன், கிறிஸ்தவன், இஸ்லாத்தை சேர்ந்தவன் ஒரு நாள் ஆவது இந்த பூ உலகில் ஒன்றாக இருக்க வாழ்த்துக்கள். ஹா ஹா ஆமென்!!!

  107. அமெரிக்க இளம்பெண்ணுக்கு ஞானம் வந்து விட்டது, தப்பித்தார்.
    தமிழ் மண்ணில் இத்தனை நாள் வளர்ந்த பேரிளம்பெண் கிறிஸ்தவம் என்ற மானுட-விரோத கல்ட்க்கு மாறுகிறாராம்.

    கொடுமை!
    ———–
    கண்ணதாசன் மகள் விசாலி கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்

    https://thatstamil.oneindia.in/news/2010/07/11/poet-kannadasan-conversion-christianity.html

    மதுரை: மறைந்த கவியரசு கண்ணதாசனின் மகளான விசாலி கண்ணதாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்.

    கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி. தந்தை வழியில் கவிதை [^] எழுதுபவர், நல்ல பேச்சாளர். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு டிவியில் நிகழ்ச்சி ஒன்றையும் வழங்கினார்.

    இந்த நிலையில் விசாலி திடீரென கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். சென்னை [^] மயிலாப்பூரில் உள்ள குட் ஷெப்பர்டு ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒயின், அப்பம் பெற்று கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளாராம் விசாலி. மேலும், தனது பெயரையும் ஜெனீபர் என மாற்றிக் கொண்டுள்ளார்.

    அர்த்தமுள்ள இந்து மதம் [^] என்ற நூலை எழுதியவர் கண்ணதாசன். இந்த நிலையில் அவரது மகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  108. நான் அமெரிக்கா வில் வாழும் தமிழன். உங்கள் பதில் களையும் Chillsam இன் மத வெறி பேச்சையும் படித்தேன். நண்பர் chillsam அவர்கள் காவி உடை உடுத்தி, காவடி எடுத்து வாழ்ந்த தன் கூடப் பிறந்த தமிழ் மக்களையும் , தமிழ் கடவுளான முருகனயும் மறந்து, ஏதோ தானே தேடி, தன்னால் கண்டுப் பிடிக்கப்பட்ட ஒரு ரகசியத்தை போல் நம்மிடம் வெறித்தனமாகப் பேசுகிறார். அவர் தன் கிறிஸ்துவ மதத்தை தானே கண்டு பிடித்தது போல் எழுதுகிறார்.

    ஆனால் நான் இங்கு இருந்து பார்ப்பது என்னவென்றால் pentacoastal , evangelical சார்ந்த மத வெறி பிடித்த ஆசாமிகள் அவரை போன்ற முட்டாள்களை இங்கே கண்டு பிடிக்க முடியாமல், இந்தியா வரை வந்து அவரைக் கண்டு பிடித்திருக்கிரார்கள். இதுவே நான் தினமும் பார்க்கும் உண்மை.

    அவர் கிறிஸ்துவ மதத்தை தானாகப் படித்து தெரிந்து இருந்தால், தன்னால் முடியும் நல்ல காரியங்களை பண்ணி சுகமா இருந்து இருப்பார். ஆனால் யாரோ சொன்ன பொய்யை, மெய்யாய் நம்பி இதை திருப்பி திருப்பி ரெகார்டிங் மசின் போல சொல்லி, தன்னையே ஏமாற்றிக் கொள்ள இயல்கிறார்.

    அவர் சொல்வது உண்மை என்றால் இங்கே இருக்கும் தமிழகர்ளை ஏன் ஒருவர் கூட கன்வெர்ட் பண்ண முயல்வதில்லை? நான் இருபது ஆண்டுகளாய் இங்கு அமெரிக்காவில் இருக்கிறேன். ஏன் ஒரு கிறிஸ்துவர் கூட என்னை மதம் மாற்ற முயற்சிக்க வில்லை? இங்கே மட்டும் நான் வழி படும் இந்து மதம் இழிவாக இல்லையா? இங்கே இருக்கும் கோவில்களை அவரது கிறிஸ்துவர்கள் ஏன் இடிக்க முயற்சிப்பதில்லை?

    ஏனென்றால்? கிறிஸ்துவ மக்களில் பல ஜாதி இன வேறுபாடுகள் உண்டு. அவர்களில் உள்ள பெண்டசோச்டல் (pentacoastal), எவன்கேளிகால் (evangelical), காதொலிக் (catholic ) என்று பலப்பல பிரிவுகள், இவர்கள் மத வெறி பிடித்தவர்கள். அவர்களுடைய வெறி காரணமாக அவர்கள் மரபு இங்கே குறைந்து போயிற்று. வெறுப்பு என்றுமே சாந்தி அளிக்காது. அதை புரிந்து கொள்ளாத அவர்கள் உடனே எங்கே யாரைப் பிடிக்கலாம் என்று தேடி அலையும் போது, இந்தியாஉம் , சீனா உம் கிடைத்தது. உடனே எட்டையப்பன் போல பாதிரியார்கள் கிடைத்தார்கள். அவர்களை வைத்துகொண்டு Chillsamமை மசின் போல key கொடுத்து பேச வைக்கிறார்கள். அவராகப் பைபிள் ஐ படித்திருந்தால் இது போல பேச மாட்டார். யாரோ அவருக்குசொல்லி கொடுத்து அதையே திரும்ப ஒப்பிக்கிறார்.

    விசாலி பற்றி மன வருத்தப் படுகிறேன். ஆனால் அதை பற்றி இன்னொரு நாள் எழுதிகிறேன். நன்றி. வணக்கம்.

  109. விஷாலி கண்ணதாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியது ஒன்று பணத்திற்காக இருக்க வேண்டும் அல்லது ஏதோ மன வருத்தம் இருக்க வேண்டும்
    முதலில் சொன்னதாக இருந்தால் அது சர்ச் செய்யும் பாவங்களில் ஒன்று
    மன வருத்தத்தினால் என்றால் அவர் அவரது தந்தை எழுதிய நூல்களை படிக்கவே இல்லை என்று தெளிவாகிறது .ராமலிங்க வள்ளலின் திரு அருட்பா, அருந கிரினாதரின் கந்தர் அலங்காரம், சைவத் திருமுறை திருவாசகம் மற்றும் நூற்றுக் கணக்கான நெஞ்சை உருக்கும் ஹிந்து சமய நூல்கள் கொடுக்காத மன அமைிதியையா கிறிஸ்தவம் கொடுக்கும்?
    சுவாமி விவேகனந்தரின் சிங்க நாத உரைகளை படித்தால் மலையளவு துன்பமும் கடுகாகத் தோன்றாதா?
    கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்று இதைத்தான் கூறலாம்
    கங்கையில் குளித்துக் கொண்டிருப்பவர் என் கழிவுக் குட்டையில் விழ வேண்டும் ?
    இப்படி்த்தான் மலையாள பெண் எழுத்தாளர் கமலா தாஸ் திடீரென்று முஸ்லிமாக மாறினார்
    ஆனால் தனது கடைசிக் காலத்தில் ‘ நான் பெரிய தவறு செய்து விட்டேன்,இஸ்லாம் குரல்வளையை அழுத்தும் கோட்பாடு,அதில் பெண்களுக்கு உரிமை இல்லை’ என்றெல்லாம் புலம்பி இறந்து போனார்.
    சில சமயம் சிலர் யார் மேலேயோ இருக்கும் அல்லது சமுதாயத்தின் மேல் இருக்கும் அல்லது குடும்பத்தில் மனக் கசப்பு இதற்காகவும் ஏதோ மற்றவர்களை பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு மதம் மாறி தங்களையே தண்டித்துக் கொள்கின்றனர்.

    இரா.ஸ்ரீதரன்

  110. நான் அமெரிக்கா வில் வாழும் தமிழன். உங்கள் பதில் களையும் Robert Manickam இன் மத வெறி பேச்சையும் படித்தேன். எட்டயப்பர் மாணிக்கம் அவர்கள் காவி உடை உடுத்தி, காவடி எடுத்து வாழ்ந்த தன் கூடப் பிறந்த தமிழ் மக்களையும் , தமிழ் கடவுளான முருகனயும் மறந்து, ஏதோ தானே தேடி, தன்னால் கண்டுப் பிடிக்கப்பட்ட ஒரு ரகசியத்தை போல் நம்மிடம் வெறித்தனமாகப் பேசுகிறார். அவர் தன் கிறிஸ்துவ மதத்தை தானே கண்டு பிடித்தது போல் எழுதுகிறார்.

    ஆனால் நான் இங்கு இருந்து பார்ப்பது என்னவென்றால் pentacoastal , evangelical சார்ந்த மத வெறி பிடித்த ஆசாமிகள் அவரை போன்ற முட்டாள்களை இங்கே கண்டு பிடிக்க முடியாமல், இந்தியா வரை வந்து அவரைக் கண்டு பிடித்திருக்கிரார்கள். இதுவே நான் தினமும் பார்க்கும் உண்மை.

    அவர் கிறிஸ்துவ மதத்தை தானாகப் படித்து தெரிந்து இருந்தால், தன்னால் முடியும் நல்ல காரியங்களை பண்ணி சுகமா இருந்து இருப்பார். ஆனால் யாரோ சொன்ன பொய்யை, மெய்யாய் நம்பி இதை திருப்பி திருப்பி ரெகார்டிங் மசின் போல சொல்லி, தன்னையே ஏமாற்றிக் கொள்ள இயல்கிறார்.

    அவர் சொல்வது உண்மை என்றால் இங்கே இருக்கும் தமிழகர்ளை ஏன் ஒருவர் கூட கன்வெர்ட் பண்ண முயல்வதில்லை? நான் இருபது ஆண்டுகளாய் இங்கு அமெரிக்காவில் இருக்கிறேன். ஏன் ஒரு கிறிஸ்துவர் கூட என்னை மதம் மாற்ற முயற்சிக்க வில்லை? இங்கே மட்டும் நான் வழி படும் இந்து மதம் இழிவாக இல்லையா? இங்கே இருக்கும் கோவில்களை அவரது கிறிஸ்துவர்கள் ஏன் இடிக்க முயற்சிப்பதில்லை?

    ஏனென்றால்? கிறிஸ்துவ மக்களில் பல ஜாதி இன வேறுபாடுகள் உண்டு. அவர்களில் உள்ள பெண்டசோச்டல் (pentacoastal), எவன்கேளிகால் (evangelical), காதொலிக் (catholic ) என்று பலப்பல பிரிவுகள், இவர்கள் மத வெறி பிடித்தவர்கள். அவர்களுடைய வெறி காரணமாக அவர்கள் மரபு இங்கே குறைந்து போயிற்று. வெறுப்பு என்றுமே சாந்தி அளிக்காது. அதை புரிந்து கொள்ளாத அவர்கள் உடனே எங்கே யாரைப் பிடிக்கலாம் என்று தேடி அலையும் போது, இந்தியாஉம் , சீனா உம் கிடைத்தது. உடனே எட்டையப்பன் போல பாதிரியார்கள் கிடைத்தார்கள். அவர்களை வைத்துகொண்டு Chillsamமை மசின் போல key கொடுத்து பேச வைக்கிறார்கள். அவராகப் பைபிள் ஐ படித்திருந்தால் இது போல பேச மாட்டார். யாரோ அவருக்குசொல்லி கொடுத்து அதையே திரும்ப ஒப்பிக்கிறார்.

    நாம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை இல்லையேல் அனைவர்க்கும் சாவு.

  111. சீனாவில் இவர்கள் வால் ஆட்ட முடியாது
    ஓட்ட நறுக்கி விடுவார்கள்
    மேலும் அங்கே தேச பற்று உள்ள ஒரு ஆட்சி – சர்வாதிகார ஆட்சி – தவறோ சரியோ சீனர்களால் சீனர்களுக்காக நடத்தப் படுகிறது
    ஆனால் இங்கு ஹிந்து ச்மயத்தை வேரோடு அழிக்கும் ஒரு கும்பல் கிறிஸ்தவர்களுக்காக மற்றும் இஸ்லாமியர்களுக்க்காகவே அரசு நடப்பது போல் இருக்கிறது.

    சீக்கிரம் ஹிந்துக்கள் ஒன்று பட்டு இவர்களை ஒழிக்க வில்லை என்றால் உல் நாட்டுப் போர் வர வழைத்து நாட்டை துண்டாகி விடுவர்

  112. இது ஒரு ஆரோகியமான விவாதம் கிடையாது, இருந்தாலும் ஒரு பேச்சிற்கு இந்த மாதிரி நடந்துவிடும் என சொல்ல நினைக்கிறன்.

    உம்மைப் போல என்னை மாற்றும்” என நான் ஜெபிப்பேன்
    > பாத்து சார் , பிண கிடங்கிற்கு தூக்கி சென்று போய்டுவார்கள்.

  113. TO STOP THE CONVERSION,ALL HINDUS MUST LEARN AND READ BIBLE TO REALISE THAT IT IS TOTALLY INSTIGATING VIOLENCE,HATRED,DISHORMANY IN FAMILY AND ALSO CHRISTIANTIY IS TOTALLY A FABRICATED AND PLANTED RELIGION BY ST PAUL ON HEHALF OF EMPEROR CONSTAININE OF ROME TO CONTROL THE WORLD.

    LET US NOW TELL THE POSSIBLE HALF MINDED CONVERTS SHOULD THEY DECIDE TO CONVERT, THEY HAVE TO ENCOUNTER THE FOLLOWING DIFFICULTIES IN LIFE-
    1) EVERY SUNDAY, HE HAS TO GO FOR CHURCH WITH BLACK BOOK.
    2) HE WOULD BE THE ”SINNER’ ONCE HE GETS CONVERTED TO CHRISTIANITY
    3) HE HAS TO PAY 10% MONEY EVERY MONTH FROM HIS SALARY TO CHURCH WITH WHICH HE IS ATTACHED OTHERWISE HE HAS TO BRING EVERY MONTH TWO NEW COMERS FROM HINDUISM FOR CONVERSION ( A DIFFICULT JOB FOR HIM AS NOWADAYS HINDUS ARE KNOWLEDABLE ).
    4) HE HAS TO TAKE BATH EVERYDAY SINCE CHURCH GETS DEAD BODIES AS FUNERAL SERVICES ARE CONDUCTED IN CHURCH BEFORE CHRIST AND HENCE CHURCH IS THE TRANSIT PLACE BEFORE GOING TO CEMETRY.
    5) ALL CHRISTIANS HAVE TO SPEND BIG MONEY IN THE EVENT OF DEATH TO HIS FAMILY ( ONCE CONVERTED IN TO CHRISTIANITY ) SINCE THEY HAVE TO PAY FOR COFFIN, GRANIT TOMB, AND THE LAND FOR BURIAL WHICH ARE EXPENSIVE BY 20 TIMES THAN HINDUS CREAMATION. SO CHRISTIANITY IS AN EXPENSIVE CHIT COMPANY WHERE CONVERTS WILL GET DISAPPOINTMENT AFTER SOME TIME.
    6) CONVERTS MIND WILL BE BOGGED WITH BLOOD STRAIN AND CRUCIFICATION IMAGE OF DEAD GOD WHO COULD NOT SAVE HIMSELF. JESUS HISTORY BETWEEN HIS AGE OF 8 YEARS TO 28 YEARS IS NOT IN THE RECORD- WHERE HE WENT ,WHAT HE DID IN BETWEEN HIS AGE OF 8 YEARS TO 28 YEARS IS NOT IN HIS HISTORY.
    7) CONVERTS WILL LOST HIS CULTURE, HIS FAMILY TRADITION, PEACE IN MIND AND WILL GET ISOLATE FROM MAJORITY AND WILL BE LOOKED DOWN IN THE SOCIETY.

    FINALLY HINDUS SHOULD NEVER BELIEVE CHIRISTIANS WORDS – TO SAY SOMEFACT, MY CHRISTIAN FRIEND USED TO SAY” MANY ( HE WILL NAME THE COMMUNITY SAY NADARS OR BRAHMINS OR DEVARS LIKE THIS ) ARE GETTING CONVERTED VERY FAST”. THIS IS TOTALLY FALSE AND PLANTED THEORY TO FOOL AND CREAST A PHYSCO FEAR IN THE MIND OF HINDUS TO FALL WITH MAJORITY.

    THESE NEW CONVERTS ARE AGRESSIVE BECOUSE THEY LATER REALISE THAT THEY ARE TRAPPED , ISOLATED, CHEATED IN THE CONVERSION BUT TO AVOID EXPOSING THIS REAL FACT TO AVOID STIGMA IN THE SOCITY, THEY START CANVASSING WITH CLOSE RELATIVES AND FRIENDS TO BRING MORE PEOPLE FOR CONVERSION .THEY ARE TAUGHT TUTIONS IN THE CHURCH AS TO HOW CONVERT MORE PEOPLE. CHRISTIANITY IS THE CURSE TO THE SOCIETY AND ALL HINDUS MUST BE SOILDERS TO FIGHT AGAINST CONVERSION AND THAWART THE MISSONARIES CUNNING AND COVERT OPERATIONS..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *