மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்

ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களில் ‘கிழவன் சேதுபதி’ சிறப்பானவன். அவன் வரலாற்றை திரு மீ.மனோகரன் எழுதியிருக்கிறார். அதில் பிரிட்டோ பாதிரியார் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. தென் மாவட்டங்களில் மதமாற்றம் எப்படி நடந்தது என்பதற்கு இந்த வரலாறு ஒரு எடுத்துக்காட்டு. இனி பிரிட்டோ பாதிரியார் பற்றி படியுங்கள்.

பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு பிரிவினர். இவர்கள் மறவர் நாட்டின் அதிபதியாக பலகாலம் விளங்கி வந்தவர்கள். வீரத்துக்கும், விவேகத்துக்கும், பக்திக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி அற்புதமானது.

2252_bhaskara_sethupatiஇத்தகைய பாரம்பரியமிக்க சேதுபதிகளில் பலரும் புகழ்வாய்ந்தவர்கள். கிழவன் சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி இப்படிப் பலர். இவர்களில் பாஸ்கர சேதுபதி சுமார் நூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர். சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவில் சிகாகோவில் நடந்த சர்வ மத மாநாட்டுக்கு அனுப்பி வைத்தவர். அவர் 1897ல் தாய்நாடு திரும்பிய போது இலங்கை வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து காலடி வைத்த போது, சுவாமிஜியின் காலடி பாரத புண்ணிய பூமியில் படுவதற்கு முன் தன் தலைமீது காலடி வைக்க வேண்டுமென்று கேட்டுப் பெற்றவர். பற்பல தானதர்மங்களைச் செய்தவர். அந்தக் காலத்திலேயே சென்னை கிருத்துவக் கல்லூரியில் எஃப்.ஏ. எனப்படும் இண்டெர்மீடியட் பாஸ் செய்தவர். ஆங்கிலம், தமிழ் இவற்றில் பாண்டித்தியம் வாய்ந்தவர். கலை இலக்கியங்களைப் போற்றியவர். இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களெல்லாம் வாழ்ந்த குலம் ‘சேதுபதிகள்’ குலம்.

ஆயினும் இவர்களது வரலாற்றை ஆய்ந்து பார்க்க விரும்பினால், நம்மவர்கள் எவரும் எழுதிவைக்காத நிலையில் போர்த்துகீசிய பாதிரிமார்களும், கிறிஸ்தவ மதப் பிரச்சாகர்களும் எழுதிவைத்தவைகளைத்தான் நம் வரலாற்றாசிரியர்கள் எழுதி வருகிறார்கள். இப்படி ஒருதலைப் பட்சமான செய்திகளை பாதிரிமார்களின் குறிப்புகளிலிருந்தும், ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கெசட்டுகளிலிருந்தும் எடுத்தாளும் நம்மவர்கள் இதிலுள்ள உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு மாறாக, அவர்களது செயல்களைப் போற்றியும், இங்கிருந்த இந்து மன்னர்களின் செய்கைகளைக் குறை கூறியும் எழுதி வைத்திருப்பது தலைக்குனிவை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்டதொரு வரலாற்று செய்தி இராமநாதபுரத்தை நெடுங்காலம் ஆண்ட கிழவன் சேதுபதி காலத்தில் நடந்திருப்பதாக நமக்குத் தெரிகிறது.

பிரிட்டோ எனும் போர்த்துகீசிய பாதிரியாருக்கு மனிதாபிமானத்தோடு கிழவன் சேதுபதி ஒரு வழிபாட்டுத் தலத்தைக் கட்டிக்கொண்டு தன் மத வழிபாட்டை நடத்த அனுமதி கொடுத்தான். அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த பிரிட்டோ பாதிரியார் மறவர்களை மதமாற்றம் செய்யத் தலைப்பட்டார். அவர் எல்லை மீறி அரண்மனையிலேயே கைவைத்ததும், அதனால் கிழவன் சேதுபதியின் மருமகளும், தம்பியும் கூட பாதிக்கப் பட்டதும், மன்னன் விழித்துக் கொண்டான். தன் தம்பியிடம்  ”ஏன் இப்படிச் செய்தாய்? நமது இந்து தர்மத்தில் இல்லாத எதை அந்த கிருத்துவ மதத்தில் கண்டுவிட்டாய்? அந்த பாதிரியார் உன்னை என்ன சொல்லி மதமாற்றம் செய்தார்? மன்னர் குடும்பத்து நீயே மதம் மாறினால், அது இந்த ராஜ்யத்துக்கே ஆபத்து அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர் அது என் இஷ்டம் என்றார். சரி, இனி இவனிடம் பேசிப் பயனில்லை என்று அந்த ஜான் பிரிட்டோ பாதிரியாரை வரவழைத்து அவர் மீது விசாரணை நடத்தப் பட்டது.  பாதிரியார் தண்டிக்கப்பட்டார்.

john_de_brito_stampஇதனை அன்னிய அடிவருடிகள், வெளிநாட்டு சரித்திர ஆசிரியர்கள் கூறும் ஒருதலைப் பட்சமான செய்திகளைக் கொண்டு, அந்த பாதிரியாரை வானளாவப் புகழ்ந்து அவரது மரணத்தைப் போற்றியும், கிழவன் சேதுபதியின் முடிவைக் கண்டித்தும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சமீபத்தில் “இன்று” என்ற தலைப்பில் செய்திக்கு முன் ஒளிபரப்பும் வரலாற்றுச் செய்தியொன்றில் ஒரு தொலைக்காட்சி ஊடகம், இந்த பிரிட்டோ பாதிரியார் செய்தது பெரும் தியாகம் என்றெல்லாம் வர்ணித்தார்கள். இப்போதும் கூட இந்த மதமாற்ற நாடகங்களைப் புரிந்து கொள்ளாத நம் மக்களைப் பற்றி நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.

ஆனால், நடந்த வரலாறு என்ன?

நாம் பார்க்கப் போகும் இந்தப் பாதிரியாரின் முழுப்பெயர் ஜான் டி பிரிட்டோ என்பதாகும். இவர் காலம் 1647 முதல் 1693 வரை. இவர் போர்த்துகல் நாட்டில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார். பிரேசில் நாட்டில் இவரது தந்தை கவர்னராக இருந்தாராம். வசதியான செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த இந்த பிரிட்டோ, கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் இந்தியா செல்லத் துடித்தார். அதன் காரணமாக இவர் மதபோதகராவதற்காக 1662இல் அதற்கான பள்ளியில் சேர்ந்து படித்தார். ஐரோப்பா தவிர்த்த ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களிலுள்ள நாடுகளில் மதப் பிரச்சாரம், மதமாற்றம் இவைகளைச் செய்வதிலுள்ள ஆபத்துக்களை உணர்ந்தே இவர் இந்தியா வந்தார். குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் மறவர் சமூக மக்களைக் குறிவைத்து இவர் மதமாற்றம் செய்ய விழைந்தார்.

தனது 26ஆவது வயதில் 1674இல் இவர் இந்தியா வந்தார். அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் நிலைமைகளை நன்கு ஆராய்ந்து பார்த்துத் தனது மதமாற்றப் பணிக்குத் தென்னிந்தியாவில் மறவர் பூமியே சிறந்தது என்ற எண்ணத்தில் இவர் 1686இல் மதுரை வந்து சேர்ந்தார். அங்கிருந்து பனங்குடி எனும் ஊருக்கு அருகிலுள்ள வெள்ளைக்குளம் எனுமிடத்தில்  தனது மதமாற்ற முகாமைத் தொடங்கினார். தாங்கள் பரம்பரை பரம்பரையாக போற்றிப் பாதுகாத்துவந்த சமய நெறிகளில் அலுத்துப் போயோ என்னவோ அந்தப் பாதிரியார் இங்கு குடியேறிய சில நாட்களுக்குள்ளாக, சில பிராமணர்கள் உட்பட இவரது வாசாலப் பேச்சினாலும், புதிய வழிபாட்டு முறைகளைக் கண்டு மோகித்தும், மதம் மாறினார்கள். இது அந்தப் பாதிரியாருக்கு உற்சாகத்தை ஊட்டியிருக்க வேண்டும். பரவாயில்லையே முதல் வியாபாரமே கண்டு முதல் அதிகம் பார்த்து விட்டோமே, இனி மேலும் அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்றால் மக்கள் மந்தை மந்தையாக மதம் மாறுவார்கள் போலிருக்கிறதே என்று இவர் வியந்து போனார்.

நம் மக்களுக்கு அந்தக் காலத்தில் வெள்ளைத் தோலையும், அவர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழையும் கண்டதும் ஒருவித மோகம் ஏற்பட்டு விடுகிறது. இன்றுகூட அயல்நாட்டிலிருந்து வரும் வெள்ளைக்கார சுற்றுலாப் பயணிகளின் பின்னால், நமது குழந்தைகள் காணாததைக் கண்டது போல ஓடுவதைப் பார்க்கிறோமல்லவா? அந்த தாழ்வு மனப்பான்மைதான் நம் அப்பாவி மக்களை அவர்கள் பின் ஓடவைத்தது.

sethupathi_kings_palaceபிரிட்டோ பாதிரியாரின் புதிய சீடர்கள் அவருக்கு அருளானந்தர் என்று பெயர் சூட்டி பெருமைப் படுத்தினர். இவர் இந்தப் பகுதியில் குடியேறிய ஒரு சில நாட்களிலேயே இவருக்கு நிறையபேர் மதமாற்றத்திற்கு இணங்கி விட்டனர். அந்த நிலையில் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் செல்லும் நோக்கில் இவர் சிவகங்கை வழியாக பாகனேரிக்கு நான்கு மைல் தூரத்தில் உள்ள மேலமங்கலம் எனும் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த இராமநாதபுரம் கிழவன் சேதுபதியின் முதலமைச்சராக இருந்த குமார பிள்ளை இந்தப் பாதிரியார் தங்கள் மக்களை மதமாற்றம் செய்யும் செய்தியறிந்து மறவர் படையைக் கொண்டு பிரிட்டோ பாதிரியாரைக் கைது செய்தார். அந்த மறவர் படையினர் இந்தப் பாதிரியாரையும் அவருடன் வந்தவர்களையும் காளையார்கோயிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் பத்து நாட்கள் காளையார் கோயில் சிறையில் இருந்த பிறகு இவர்கள் அனைவரும் பாகனேரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது கிழவன் சேதுபதியிடமிருந்து, கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பாதிரியாரையும் அவரோடு இருப்பவர்களையும் இராமநாதபுரத்துக்குக் கொண்டு வரும்படி கட்டளை வந்தது.

அங்கு மன்னனின் அரசவையில் பிரிட்டோ பாதிரியார் விசாரிக்கப்பட்டார்.  அந்த விசாரணையின் போது, இந்த நாட்டில் இந்துக்கள் பல கடவுளர்களை வணங்குவதாகவும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் காட்டுமிராண்டித்தனமாக இருப்பதாகவும், கல்லையும், மண்ணையும், மரத்தையும் வணங்கும் இவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவதுதான் தனது மதத்தின் நோக்கமென்றும், அந்தப் புனிதமான பணியைத்தான் தான் செய்து வருவதாகவும் பிரிட்டோ வாதாடினார். அப்படி என்னதான் உங்கள் மதம் போதிக்கிறது என்று மன்னர் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினார். உடனே அவையிலிருந்த பெரியோர்கள், இந்த பாதிரி நம் மன்னனின் மனதைக் கூட கலைத்து விடுவார் என்று அஞ்சினர்.

எனினும் மன்னனின் கட்டளைக்கிணங்க பாதிரியார் அரண்மனைக்குச் சென்று அங்கு அரசனுக்குச் சரிசமமான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு தனது மதத்தின் அருமை பெருமைகளை வர்ணிக்கத் தொடங்கி விட்டார். அவர் சொல்லச் சொல்ல அரசனுக்கு கோபம் கூடியது. ஆனால் தான் குடிப்பழக்கத்துக்கு ஆளானவன், மேலும் பலதாரங்களை மணந்து கொண்டிருப்பவன் என்பதால் ஒருவகைக் குற்ற உணர்வுக்கு ஆட்பட்டு  நேரடியாக பாதிரியாரை எதிர்த்து அவன் வாதம் செய்யவில்லை. எனவே சமாளித்துக் கொண்டு அரசன் சொன்னான் “பாதிரியாரே! நீங்கள் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மதத்தைப் பின்பற்றுவதையோ, உங்கள் கடவுளை வணங்குவதையோ நான் தடுக்கவில்லை. ஆனால், எங்களுடைய கலாசாரம், நாகரிகம், பண்பாடு இவைகளுக்கு மாறான எதையும் நீங்கள் உபதேசிக்க நான் அனுமதிக்க முடியாது. மீறி நடந்தால் உங்கள் உயிருக்கு நான் ஜவாப்தாரியல்ல” என்று எச்சரித்து பாதிரியைப் போக விடுத்தான்.

அதன் பிறகு அரசனைச் சந்திக்க பிரிட்டோ பாதிரியார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. சிலகாலம் தென் தமிழ்நாட்டில் தன் மதமாற்ற வேலைகளை நிறைவுற செய்து முடித்த பின் 1687இல் அவர் போர்சுகல் திரும்பினார். இந்தியாவில் வெற்றிகரமாக மதமாற்றங்களைச் செய்துவிட்டு நாடு திரும்பும் பாதிரியாரை அந்நாட்டு மதவாதிகள் உற்சாகமாக வரவேற்றார்கள். போர்ச்சுகலில் சில காலம் இருந்த பிறகு அவருக்கு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்துத் தன் வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்று விரும்பினார். தனது நண்பரான டிகோஸ்டா எனும் பாதிரியாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனக்கு லிஸ்பனில் (போர்த்துகல் தலைநகர்) உள்ள அரண்மனையை விட தென் தமிழ்நாட்டு மறவர் மண்ணே மிகவும் பிடித்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார். அதன்படி அவர் மீண்டும் இந்தியாவை அடைந்து கோவாவில் தரையிறங்கினார். அங்கிருந்து பாண்டிய நாட்டு மண்ணுக்கு வந்து தனது பணியைத் தொடங்கினார்.

தாதியாத் தேவன் என்றொரு பாளையக்காரன். இவன் கிழவன் சேதுபதிக்கும் உறவினன்கூட. அவனுக்கு இந்த பாதிரியார் பால் அன்பு ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏதோவொரு வினோதமான வியாதி அவனைப் பீடித்தது. பல மருத்துவர்கள் மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. அப்போது செய்தியறிந்து அருளானந்த அடிகளான பாதிரியார் பிரிட்டோ தாதியாத் தேவனைப் பார்க்க வந்தார். அவர் வந்த வேளை அந்த பாளையக்காரனின் வியாதி தீர்ந்து குணமடைந்தான். அவன் பாதிரியாரை மிகவும் மதித்து அவர் ஆலோசனைப்படி ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டு மதமாற்றம் பெற்றான்.

அவன் மதம் மாறியதில் ஓர் சிக்கல் ஏற்பட்டது. அவனுக்கு ஐந்து மனைவியர். அவன் சார்ந்த புதிய மதக் கோட்பாடுகளின்படி அவனுடைய முதல் மனைவி மட்டும்தான் மனைவியாக இருக்க முடியும். மற்ற நால்வரும் அவனுக்குச் சகோதரிகளாகி விடுகின்றனர். இந்த செய்தி அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. முதல் மனைவி நீங்கலாக மற்றவர்கள் என்ன கெஞ்சியும் அவன் அவர்களை மனைவியராக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான் பாதிரியாரின் அறிவுரைப்படி. அவர்கள் நால்வரும் கூடிப்பேசி, நால்வரில் இளையவளான காதலி நாச்சியார் என்பவளை அழைத்து, அவளுக்குப் பெரியப்பன் உறவான கிழவன் சேதுபதியிடம் சென்று முறையிடும்படி கேட்டுக் கொண்டனர்.

அதன்படி காதலி நாச்சியார் சென்று கிழவனிடம் முறையிட்டாள். அவனும் யோசித்தான். தன் உறவினனான தாதியாத் தேவன் மதம் மாறிவிட்டான். தன் தம்பி மகள் கணவன் உறவை இழந்து அழுகிறாள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் இந்த பாதிரியார் மறவர் இனமக்கள் அனைவரையும் மதம் மாற்றிவிடுவார் என்று நினைத்தார். இந்த தாதியாத் தேவன் முன்னர் கிழவன் சேதுபதியோடு அரியணைக்குப் போட்டியிட்டவன். கிழவனுக்குப் பிறகு அரசனாக ஆகக்கூட வாய்ப்புகள் இருந்தன. மற்றவர்களை மதம் மாற்றியதைப் போல சகட்டு மேனிக்கு இந்த மறவர் பூமிக்கு உரிமையுள்ள ஒருவனையுமல்லவா இந்த பாதிரியார் மதம் மாற்றிவிட்டார் என்ற கோபம், வருத்தம். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையுமா? சேதுபதியால் கோபத்தை அடக்கமுடியவில்லை.

john_de_brito_christian_pictureஅரச குடும்பத்தில் ஒருவன் மதம் மாறினால் மக்களும் அல்லவா மதம் மாறிவிடுவார்கள்!  அப்படி மக்கள் மதம் மாறத் துணிந்தால் இந்த தாதியாத் தேவனைத் தனக்கெதிராக ஆட்சியைப் பறிக்க போர்த்துகீசியர் தூண்டக் கூடுமல்லவா என்றெல்லாம் யோசித்தான் கிழவன் சேதுபதி. இது வெறும் மதமாற்றம் மட்டுமல்ல; போர்த்துகீசிய ஆதிக்கத்தை கடற்கரையையும் தாண்டி உள்நாட்டில் ஏற்படுத்தும் நோக்கமும் இதில் இருக்கிறது என்று சிந்தித்தார் அவர். இது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இது ஏதோ கற்பனையான பயம் என்று எண்ணுவதற்கில்லை. வரலாற்று அடிப்படையில் அவ்வாறு சேதுபதி பயந்ததற்குக் காரணங்கள் இருந்தன. 1532 – 1582 காலகட்டத்திலேயே கத்தோலிக்க மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட மீனவர்களுடன் தூத்துக்குடியில் வாழ்ந்தவர்களும் போர்த்துகீசிய குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். இதனை ஒரு கிறிஸ்தவ பாதிரியாரே எழுதியிருக்கிறார். ஆம்! பிஷப் கால்டுவெல் கூறும் செய்தி இது.

ஐரோப்பாவிலிருந்து நாடுபிடிக்கவும், கீழை நாடுகளில் மக்களை மதமாற்றம் செய்வதற்காகவும் பல நாட்டினர் இங்கு வந்தனர். அவர்களில் டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர் என பலரும் அடங்குவர். என்றாலும் இங்கு எவரும் மதமாற்றம் செய்வதை கிழவன் அனுமதிக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார்  அந்த சிறைவாசத்திலேயே இறந்து போனார். பண்பிலும், அரசாட்சியிலும் சிறந்து விளங்கிய கிழவன் சேதுபதி மற்ற வகைகளில், கடற்கரையில் முத்து எடுப்பது முதல், வியாபாரம் வரை அந்நியர்களை அனுமதித்தாலும் இதுபோன்ற மதமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

இது குறித்து பல்வேறுபட்ட சர்ச்சைகள்  உள்ளன.  ஆனால் சில வரலாற்று உண்மைகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. பாதிரியார்கள் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தனர் என்பது அவர்கள் மீது கிழவன் சேதுபதி காழ்ப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்பதைக்காட்டுகிறது.   பாதிரியார்கள் முக்கியமான பிரபல புள்ளிகளை மதமாற்றம் செய்வதில் குறியாக இருந்தார்கள்; தாங்கள் செய்யும் ”தியாகங்களை” எல்லாம் கூறி மக்களின் அனுதாபத்தைப் பெற்று மதமாற்றம் செய்தார்கள் என்பதும் தெளிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்து மதத்தின் அழிவில்தான் கிறிஸ்தவம் வளரமுடியும் என்று அவர்கள் கருதினார்கள் என்பதும் ஐயமின்றி விளங்குகிறது.

“Most of the Historians who have written on this account have mostly dependant on Jesuit records and so their picture is necessarily pro-christian. The historian’s task is to find out the truth. Britto’s death issue was carefully propagated in such a way so as to create public sympathy in India and Europe”.

– History of Tamilnadu from Viswanatha Nayakar to M.G.Ramachandran: ஆர்.எட்வின் ராஜன் & டி.ஞானசேகர் (பக்கம் 63, 64)

பாதிரியாரின்பால் இரக்கம் உண்டாகும்படி பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது  மிகவும் திட்டமிட்டு நடத்தப் பட்ட செயல்பாடு என்று இவர்கள் சொல்வதிலிருந்து உண்மை நிலவரத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. செயல்பாடுகள் தான் மாறவில்லை!

48 Replies to “மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்”

  1. ///நம் மக்களுக்கு அந்தக் காலத்தில் வெள்ளைத் தோலையும், அவர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழையும் கண்டதும் ஒருவித மோகம் ஏற்பட்டு விடுகிறது. இன்றுகூட அயல்நாட்டிலிருந்து வரும் வெள்ளைக்கார சுற்றுலாப் பயணிகளின் பின்னால், நமது குழந்தைகள் காணாததைக் கண்டது போல ஓடுவதைப் பார்க்கிறோமல்லவா? அந்த தாழ்வு மனப்பான்மைதான் நம் அப்பாவி மக்களை அவர்கள் பின் ஓடவைத்தது.////

    ////நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. செயல்பாடுகள் தான் மாறவில்லை!////

    சத்தியமான வார்த்தைகள். வெண் தோலினர் எதோ ஒரு பக்கம் புகழ்வதுபோல எழுதிவிட்டு அதிலேயே வஞ்சத்தை உள்வைத்து அவதூறாக எழுதினால் புரியாத நிலையில்தான் இன்னமும் இருக்கிறோம்.

  2. உண்மையை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றி

  3. கிழவன் சேதுபதி போன்ற மன்னர்கள் பெரிதும் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
    இந்த மன்னனைப் போல் சேர நாட்டில் சமோரின் இருந்திருந்தால் இன்று கேரளாவில் இவ்வளவு ஹிந்துக்கள் கிறித்தவர்களாக மாறியிருக்க மாட்டார்கள்.
    அவ்வளவு காலத்துக்கு முன்னமேயே அந்நிய கோட்பாடுகளால் நம் சமுதாயத்துக்கு கேடு ஏற்படும் என்று துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தது அவனின் அறிவுக் கூர்மையை விளக்குகிறது
    இவர்களைப் போன்ற நமது ஆங்கிலம் படிக்காத முன்னோர்களுக்கு இருந்த அறிவில், மற்றும் சூட்சும புத்தியில் நூற்றில் ஒரு பங்கு இன்று உள்ள படித்த ஹிந்துக்களுக்கு இருந்தால் நாடும் ஹிந்து தர்மமும் இவ்வாறு இழிந்த நிலையை அடைந்திருக்காது.

    இரா.ஸ்ரீதரன்

  4. இது போன்ற உண்மையான செய்திகள் வெளியிடப்படுவதால், தவறான பிரச்சாரங்கள் கண்டறியப்படுவதுடன் சேதுபதி போன்றோர் மீது ஏற்பட்டுள்ள கொலையாளி என்ற பட்டமும் நீக்கப்படும். இது போன்ற செய்தியினை வெளியிட்டதற்கு நன்றி.

  5. வாழ்க சேதுபதி!!! நாமும் நம்மை உணர்ந்து நாட்டுக்காகவும் நம் மக்களுக்காகவும் வாழ்வோம்.

  6. உண்மை! அருமை! நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. செயல்பாடுகள் தான் மாறவில்லை! என்ன செய்ய! நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு, இனியாவது ஒன்று படுவோம்! விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்! வெற்றி பெறுவோம்!

  7. வெள்ளையர்களும் ,வெள்ளை ஆங்கியயும் ஆணிபவர்களின் கருப்பு மனதை காட்டும் ஒரு நேர்மையான பதிவு .
    இன்றும் இது தொடர்கிறது என்பது வேதனையான நிதர்சனம்.
    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  8. இந்துவாக வாழ்வது மட்டும் பெருமை அல்ல ஹிந்து அல்லாதவர்களுக்கும் நமது மதத்தின் அருமை பெருமைகளையும் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்க்கு முதலில் நம் மதத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளவேண்டும் . ராமாயணம் மகாபாரதம் தேவாரம் திருவாசகம் போன்றவற்றை நன்கு உணர்ந்து பயில வேண்டும். நம்மவர்கள் கண்டுபிடித்த ஞானம் விஞ்ஞானம் போன்றவை இப்போதைய விஞ்ஞானத்தை விடவும் மிகவும் முன்னேறி இருந்ததை தகுந்த ஆதாரத்துடன் எடுத்துக்கூறவேண்டும்.எல்ல மதத்துக்கும் ஊற்றுக்கண் நமது ஹிந்து மதமே என்பதை எடுத்து கூறவேண்டும்.

  9. இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க செய்தினை தந்தமைக்கு நன்றி. இது போன்ற தகவல்களை தருமாறு கேட்டுகொள்கிறோம்.

  10. அன்பர் க.பூலாம்பட்டி ஈஸ்வரன் அவர்களுக்கு, நீங்கள் கூறியபடி, முதலில் நம் குழந்தைகளுக்கு இந்து கலாச்சாரம், பண்பாடு, நமது பண்டிகைகளின் சிறப்பு, பொதுவான நமது திருவிழாக்கள், சடங்குகள் இவற்றின் முக்கியத்துவத்தையும் அவைகளின் சிறப்புகளையும் சொல்லித் தரவேண்டும். ஆங்கில மோகத்தில் இரண்டு வயது ஆனவுடனே அதை ஆங்கில ரைம்ஸ் பாடச்சொல்லி கேட்டு மகிழ்வதற்கு பதில், நம் பாட்டி ஒவ்வையார் எழுதியுள்ள ஆத்திசூடி, நல்வழி
    போன்ற பாடல்களை சொல்லித்தர வேண்டும். நம் ஹிந்து தர்மம் ஒரு மதமல்ல, அது ஒரு வாழ்க்கை நெறி. ஒழுக்கம், பண்பு, ஈகை, அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை இவைகளைத்தான் நம் தர்மம் போதிக்கிறது. இவை அனைத்தும் பெரியவர்கள் எப்படித் தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. நான் ஒரு பாரதியன், எனக்கென்று ஒரு தர்மம் இருக்கிறது. பசிபிக் சமுத்திரம் போல் நம் பண்பாடு ஆழமானது. வீணாக கணுக்கால் வரை ஓடும் கழிவுநீர் ஓடையில் கால் வைக்க வேண்டுமா? சிந்திக்க வேண்டும்.

  11. oru kaalathil nam sanathana dharmathai serntha makkal migavum santhamaaga,sanmaarga nerimuraigalai tham tham makkal,manaivi,utraar uravinarin kuzhainthaigalukku kooda bothiththu vazhi nadathi chenranar. aanal indru irukkum samuthaaya soozhnilaiyil erpatirukkum maatram…
    thalaivirikolamaagave alaiyavendum,pottu sinnathaagavo,allathu veikkave vendamalo, araikurai aadaiyudan ulaa varave indraya pendir virumbuginranar. melnaatu mogathin thaakam mattum alla, ithan velipaadu christuvathin oru vetri. aangal mattum salaithavargalaa??? thangal samuthaayathirku uriya samaya vazhipaatu kuriyai netri matraia idangalil aninthu kondu varum oru hindu maanavanaio,saga thozhilaliyaio kindal seithu avargal manathai punpaduthi konjam konjamaaga maatra vaippathu pira matha manithargal mattum alla, nam hindu samuthaya makkalum idhil adakkam. modernisation leads to westernisation then it leads to christianization. nam kuzhainthaigalukku nam samooga,samuthaaya nalla pazhakka vazhakkangalai bothiththu nal vazhipaduthuthal enbathu thanthai,thaai iruvarukkum undenbathuvum athai vida kudumbathil ulla moothor ivargalai vida miga mukkiyamaaga petra thaai. ivargale than kudumba makkalai hindu samuthaaya nanneri,kadavul vazhipaattu murai,namathu arumayaana kalaachaaram agiyavatrai katru thandhu valarkka vendum

  12. ivai engu kalaikkapadum enil nam makkal padikkum paada pusthakathil. ivatril irukkum perumpaalaanavai saakadai arasiyal kalanthathuvum, hindu samuthaaya veruppu karuthukkalume. en oru madarasaavukkum,christuva kalvi nilayathukkum kidaikira thannnatchi andhasthu, avargalukkena thani pada thittam amaiththu kollum vasathi en innum sariaaga amaiyavillai? historyium, thamizh paadamum,English language um thavaraana nokkathodum thavaraana pada thittathodum thaan payitruvikka padugirathu. melum namm kovilgalum,aalayam saarntha madangal,gurukulangal,aasramangal,aalayathinudiaya mandapangal, nilam,thottam aagiyavai sariyaana muraiyil aavana padutha pada vendum. HR&CE boardil irukkum thagavalgal entha alavukku unmaiyaanavai matrum azhikkapadaamalum,maatrapadaamalum irukkinrana??? nam makkalukku ena thaniyaaga oru thalamai peedam amaiapetru thaniyaaga anaithu aalaya kanakku vazhakkugal,soththu vivarangal sariyaana muraiyil, nalla vazhakuraingar,kanakkar agiyavargalai kondu thanikkai seiapattu pariseelikka pada vendum. illaiyenil koodiya viraivil pala graama kovilgal,kovil kulangal sutri ulla makkal ellame matham maatrigalaal azhikkapattum,kavarappattum poga neridum. anru oru kizhavan sethupathi,kattabomman,aalinaadan,paraanthaka chozhan,seran aagior veeramaaga irunthu nam hindu mathathai kaaakavum,paravavum thunaiaaga irunthanar. inru aatchiyil iruppur migavum ethirmariaye intha vishayaththil.

  13. ///en oru madarasaavukkum,christuva kalvi nilayathukkum kidaikira thannnatchi andhasthu, avargalukkena thani pada thittam amaiththu kollum vasathi en innum sariaaga amaiyavillai?///

    en innum nam hindu samutaaya kalvi koodangalukku amiaya vilai???

  14. 18, 19 நூற்றாண்டுகளில் இராமநாத்புரம் சேதுபதிகளும், தெற்கத்திய மறவர்களும் கிறித்துவம் தென்னாட்டில் பரவாமல் தடுக்கச் செய்த தியாககங்கள் பல. அவை மறக்கப்பட்டு வருகின்றன. திரு வெ. கோபாலன் போல அறிந்த அன்பர்கள் தமிழ்ஹிந்துவில் அவற்றைப் பதிவு செய்ய்து வைக்க வேண்டுகின்றேன்.

  15. ஒரு புறம் நமது சமயத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
    மற்றொறு புறம் சமுதாய உணர்வு கொள்ள வேண்டும்
    இன்றைய தினம் ஹிந்துக்களிடம் பக்தி உணர்வுக்குக் குறைவில்லை
    கோயில்களிலும், ஆன்மீகச் சொற்பொழிவுகளிலும்,பஜனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது

    ஆனால் ஹிந்துக்களுக்கு என்று ஒரு பாதிப்பு வந்தால் மிகப் பெரும்பாலானவர்கள் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்
    உதாரணமாக கருணாநிதி ராமரை இழிவு படுத்திப் பேசியபோது, அல்லது ராமர் பாலம் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் அரசு கோர்ட்டில் கூறிய போதும் , ஹிந்துக்களிலே பெரும் பணக்காரர்கள்,அறிவு ஜீவிகள்,சூப்பர் ஸ்டார்கள் மற்றும் பல துறைகளில் உள்ள பெரியவர்கள் ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை .
    அவர்களில் பலர் தங்கள் பக்தியை வெளிப்படையாகவே காட்டிக் கொள்பவர்கள்
    ஆனால் என் இப்படி நடந்து கொள்கிறார்கள்?
    அவர்களில் பலர் மெத்தப் படித்தவர்கள்.விஷயம் தெரிந்தவர்கள்

    ஆனால் இன்று போல் காண்வென்டிலும், கல்லூரியிலும் படிக்காத அவர்களின் முன்னோர்கள் இம்மாதிரி இருந்திருப்பார்களா ,இருந்தார்களா என்று அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
    சத்ரபதி சிவாஜியும், ராணா பிரதாப்பும்,வீர பாண்டிய கட்டபொம்மனும்,கிட்டூர் ராணி சந்நம்மாவும், தாத்யா தொபேயும் ,ஆங்கிலப் படிப்பு படிக்கவில்லை.ஆனால் நம் நாட்டின் மீதும் சமயத்தின் மீதும் உயிரையே வைத்திருந்தனர். அப்படி இருந்ததால் தான் இன்று இவர்கள் சுதந்திரமாக வாழ முடிகிறது
    அதை மறக்கலாமா ?
    ஒரு வார்த்தை – ஐயா நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் .எங்கள் நம்பிக்கையை, நாங்கள் வணங்கும் தெய்வத்தை கேவலப் படுத்தாதீர்கள் என்று சொல்ல இவர்களால் முடியாதா?
    அப்படிச் சொல்லியிருந்தால் அவ்வாறு சொல்பவர் மறுபடி அம்மாதிரி பேச யோசிக்க மாட்டாரா?
    மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு இருப்பார்களா?
    ஆகவே இன்று வேண்டுவது வெறும் வறட்டு வேதாந்த அறிவு மட்டும் அல்ல .

    கோயில்களைச் சுற்றி கொண்டிருப்பது மட்டும் அல்ல ,பெரும் தத்துவ அறிவு மட்டும் அல்ல
    இவையும் வேண்டும் .ஆனால் …….
    ஹிந்துக்கள் சமயத்தை தாய்நாட்டுடன் தொடர்பு படுத்திப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும் .

    நாடு இல்லையேல் கோயில் இல்லை,பஜனை இல்லை,காலட்சேபம் இல்லை,ஏன் நமது சமய நூல்களே இல்லை,கலைகள் இல்லை, என்று புரிந்து கொள்ள வேண்டும்.

    இரா.ஸ்ரீதரன்

  16. இந்த ராம்நாடு மண்ணிலே பிறந்ததற்க்கு மிகவும் பெருமைபடுகிறேன்.எங்கள் ஊரில் எல்லாரும் “ராம்நாடு ” என்று சொல்லும் போது துலுக்கர்கள் மட்டும் “ராம் நாட்” என்பார்கள்.

  17. அருமையான ஆய்வு. சேதுபதியைக் கொலைகாரனாக வர்ணிக்கும்
    போலி ‘செகுலர்’ வாதிகளுக்கு நல்ல அறிவுறுத்தல். தொடரட்டும் உங்கள்
    ஆய்வு

  18. //இதனை அன்னிய அடிவருடிகள், வெளிநாட்டு சரித்திர ஆசிரியர்கள் கூறும் ஒருதலைப் பட்சமான செய்திகளைக் கொண்டு, அந்த பாதிரியாரை வானளாவப் புகழ்ந்து அவரது மரணத்தைப் போற்றியும், கிழவன் சேதுபதியின் முடிவைக் கண்டித்தும் எழுதி வைத்திருக்கிறார்கள்.//

    முற்றிலும் உண்மை… இது போல் நம் மண்ணின் மைந்தர்களின் தியாகங்கள் திரித்து எழுதப்பட்டன.

    என் பள்ளி நாட்களில் எந்த வகுப்பாசிரியர் (ஒரு பாதிரியார்) வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு திருடன் என்றும்… அவர் அரசர் அல்ல எனவும் ஒரு பாதிரியாரின் குறிப்பில் இருந்ததாக சொல்லுவார்….
    உண்மையை வெளி கொணர்ந்தமைக்கு நன்றி.

  19. I would also like to know more about Sethupathy history.
    Any one can here knows any good books for reading about Ramanathapuram or Sethupathy?
    Tamil or english no problem…..
    Any one can suggest?
    appreciate it.
    Thank you.

  20. //என் பள்ளி நாட்களில் எந்த வகுப்பாசிரியர் (ஒரு பாதிரியார்) வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு திருடன் என்றும்… அவர் அரசர் அல்ல எனவும் ஒரு பாதிரியாரின் குறிப்பில் இருந்ததாக சொல்லுவார்//

    விடுதலைக்காக போராடிய சுதேசிய மன்னர்களான வீர பாண்டிய கட்டபொம்மனையும் பூலித்தேவனையும் அவ்வாறு இழிவாக பேசித்திரிந்த மதமாற்றி கால்டுவெல் என்கிற எஸ்டேட் பிஸினஸ்காரன். மதமாற்றம் அவனது சைட் பிஸினஸ். எல்லீஸ் என்கிற அறிஞர் எழுதியதிலிருந்து திருடி எழுதப்பட்டதுதான் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம். எல்லீஸ் இரு அந்தணர்களுடன் இனைந்தே இந்த ஒப்பிலக்கண ஒற்றுமையை கண்டுபிடித்தார். அதை அவர் நேர்மையாக குறிப்பிடவும் செய்தார். ஆனால் கால்டுவெல்லுக்கோ மூளை முழுவதும் நிரம்பி வழிந்தது இந்து சமுதாயத்தின் மீதான துவேசமே என்பதால் அவன் அதை குறிப்பிடக் கூடிய அடிப்படை நேர்மை கூட இல்லாதவனாக இருந்தான்.

  21. திரு கிருஷ்ணா அவர்களுக்கு, “கிழவன் சேதுபதி” பற்றி சிவகங்கை அகரம்
    பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள நூலை எழுதி இருப்பவர் திரு மீ.மனோகரன். இவர் எழுதியுள்ள இந்த நூல் தவிர தமிழறிஞர் ரா.ராகவ ஐயங்கார் எழுதியுள்ள “சேது நாடும் தமிழும்” பி.முத்துத்தேவர் எழுதிய “மூவேந்தர் குலத்தேவமார் சமூக வரலாறு”, ராமநாதபுரம் கெஜட்டியர் ஆகியவை செதுபதிகளைப் பற்றிய அறிந்து கொள்ள உதவும். முதல் நூல் சிவகங்கை அகரம் பதிப்பகத்தில் கேட்டுப் பெறலாம். மற்றவை இப்போது கிடைக்கிறதா தெரியவில்லை. கிழவன் சேதுபதியின் இயற்பெயர் ரகுநாதத் தேவர் II

  22. HERE MISTAKE IS PERSONS LIKE KING SETHUPATHI .
    once they realised that this persons are doing conversion,then they should killed this type of persons immediately without inquiry. If all our kings did so,now we will not suffer with the rotten smell.However we should thanks to our elders whoever fought against this
    Miss(infect)ionaries

  23. //அரச குடும்பத்தில் ஒருவன் மதம் மாறினால் மக்களும் அல்லவா மதம் மாறிவிடுவார்கள்!//

    உண்மை. இது தானே நம் ‘காங்கிரஸ் பேரியக்கத்தில் நடந்து கொண்டிருக்கிறது! Biyanka என்ற பிரியங்கா காந்தி, Raul என்ற ராகுல் காந்தி.

  24. இந்த கட்டுரையைப் படித்தபின் பிரிட்டோ பாதிரியாரி்ன் செயல் பிரமிக்க வைக்கிறது!

  25. பாதிரியார்கள் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தனர் என்பது அவர்கள் மீது கிழவன் சேதுபதி காழ்ப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்பதைக்காட்டுகிறது.////

    இதான் நம் பண்பாடு.

    இந்து மதத்தின் அழிவில்தான் கிறிஸ்தவம் வளரமுடியும் என்று அவர்கள் கருதினார்கள் என்பதும் ஐயமின்றி விளங்குகிறது

    இதான் அவர்கள் பண்பாடு.

  26. Muthu thevar book is available in e book form. Muthu thevar is the author of muvendar kula thevar samuga varalaru. He lived in KARUMATHUR VILLAGE, usilampatti taluk. Madurai district. He studied sslc in board high school usilampatti.Then he continued his study at YMCA, Chennai for physical training in 1928. He worked as physical director for 12 years in rajapalayam sevuga pandiyar high school. He also served under the varies district collectors in Tamil nadu as rural recreation officer. He also got sannad from the British Government for recruiting for serving as recruiting officer to the Indian army during Second World War. After the independence he under gone a co operative training and was appointed as senior inspector of co operative societies in the government of Tamil nadu. He retired from service in 1968.
    During his service period he traveled all over Tamil nadu. He had more affection to the people of thevar community that is kallar, maravar, agamudiyar communities and Piramalai kallars, because he thought these communities were won rullers of Tamil nadu.
    muvender kula thevar samuga varalaru by muthuthevar book is online in tamil heritage.com
    https://www.tamilheritage.org.in/thfebook/THFmuvendhar.pdf
    Muthu thevar e book is available in scribd.com
    https://www.scribd.com/muthu-theaver-Compatibility-Mode/d/48632707
    kindly forward the free e book information to our thevar community relatives
    by N. chidambaranathan grand son of P.Muthu thevar (1912-1993)
    9884882867
    email: virumandi1234in@gmail.com & nathan1234in@yahoo.co.in

  27. சேதுபதி வீரன் என்றால் பாதிரியார் மாவீரன் .

  28. ஒரு நாட்டை ஆள்கின்ற அரசன் ஒரு குடிமகனுக்கோ அல்லது தன்னுடைய எதிரிக்கோ தண்டனை வழங்கினால் அதுவும் தன்னுடைய நாட்டிலே குற்றமற்ற தெய்வ உணர்வுகளையும் புனிதமான கலாச்சாரத்தையும் அழிக்க ஒருவன் வந்தால் அவனைக் கொலவது தர்மமேயாகும். அரசர்கள் நாட்டையும் makkalaiyum
    kaakka vendiya pruppu udayavargal. adhuve avargalin kadamaiyum thozhilum aagum. mannar sethupatthi avargal seithirukkum indhacheyal thannudaiya தாய்க்கும் தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் செய்துள்ள மிக மிக உயர்ந்த நற்செயல். ஹிந்து தர்மத்தில் இல்லாத தத்துவங்கள் நீதிகள் ஏதும் எந்த அந்நிய மதத்திலும் நிச்சயமாக இல்லை. ஹிந்து மதம் என்பது அஹிம்ஸா தர்மம், மனசாட்சியை வலியுறுத்தும் உயர்ந்த தர்மம். தெய்வத்தை பிரபஞ்சத்திலும் தனக்குள்ளும் காண முடியும் என்னும் உயர்ந்த அப்பழுக்கற்ற உண்மையை காட்டுகிற கோட்பாடு. இதை அறிந்துகொள்ள ‘மனிதராயிருக்கும்’ எல்லோராலும முடியும். நமக்கு அந்நிய மண்ணிலிருந்து வந்த கொல்யளிகளின் உபதேசம் சற்றும் அவசியமில்லை. நம்முடைய தேசமும் இங்கே தோன்றிய பெரியவர்களும் தெய்வத்தை நேரிலே கண்டவர்கள். ராமனும் கிருஷ்ணனும் புத்தனும் மகாவீரனும் தோன்றிய நம் நாட்டுக்கு அந்நிய மதங்கள் தேவையில்லை.முகலாயர்களும் கிறித்தவர்களும், இந்த மண்ணை காமுகனை போலே சூறை ஆடினார்கள். மதவெறி கொண்டு ஈவிரக்கமின்றி மனிதனையும் மாட்டையும் இன்ன பிற உயிர்களையும் கொலை செய்யும் கருணையற்ற கலாச்சாரங்கள் நமக்கு எந்த வகையிலும் சமமானதும் இல்லை, தெய்வத்தை உணர்த்தும் வழிகளும் இல்லை. முடிவில் அன்னைதமிழும் பாரதநாடும் என்றும் வெல்லும். உலகம் முழுவதும் ஒரே மதத்தின் வசமாகாது. வந்தாலும் அது அழிவின் ஆரம்பமே ஆகும் ஏதும் நிரந்தரமில்லை என்பது நம் முன்னோர்கள் உணர்ந்து சொன்ன உண்மை. எனவே நமக்கு எதிலும் வியப்புமில்லை. அறியாமை இல்லை கர்வம் இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படலை முழுமையாக படித்தால் இது புரியும். காலத்திற்கொவ்வாத அந்நிய மதங்கள் எந்த மாறுதலையும் வரவேர்காதவை. ஆனால் நமது மதம் நன்மை தரும் அறிவை உயர்த்தும் மாறுதல்களை ஏற்றுகொள்ளும் பக்குவம் உடையது. எல்லாவற்றிலும் இறைவனை காண்பது. உணர்வது, உய்வது. மனித குலத்துக்கு வாய்த்த நல்வழி நமது தர்மம்.!

  29. ஹிந்து மதத்திலே ஜாதிகள் இருப்பதை குறை கூறும் மற்றவர்கள் தங்கள் மதத்தை எண்ணிப்பார்க்கவேண்டும். அங்கேயும் பற்பல பேதங்கள் த்வேஷங்கள் உள்ளுக்குளே நீருபூத்த நெருப்பாய் இருக்கின்றன. ஒரு அரபி முஸ்லிம் ஒரு இந்திய முஸ்லிமை உண்மையில் மதிப்பானா? சரிசமமாக நடத்துவானா? ஒரு ஐரோப்பிய கிருத்தவன் தன்னுடைய மகளை ஒரு கருப்பு கிறிஸ்தவனுக்கு கொடுப்பானா? அதிலும் ஷியா, சுன்னி அஹ்மதியா, (கல்வி அறிவற்ற) ஒருவரால் மனதில் தோன்றியபடி உபதேசித்த சற்றும் கால மாறுதல்களை ஏற்றுகொள்ளாத மதம். கருணை என்பதே இல்லாத மதம். கிறிஸ்தவர்களோ கதோலிக் ப்ரோடேச்டன்ட் செவன்த் டே எனவும் தவிர கருப்பு நிறத்தவன் என்றால் தாழ்ந்தவன் என்றும் இழிவாக நடத்துகிறார்கள் மதத்தின் பெயரால் மண் வெறி கொண்டு மற்ற மனிதர்களை வேட்டையாடும் இந்த இரண்டு அந்நிய மதங்களுமே பாரத நாட்டை சூறை யாடியாவை. நமது ஹிந்து மக்களை கோடிக்கணக்கிலே கொன்றும், அடிமைப்படுத்தியும் கொடுமைபடுத்தியும் பாவக்கறை படிந்த கொலை க்கத்திகள். அவைகளுக்கு ஒரு புனிதத்தன்மையும் இல்லை.

  30. இன்னும் ஒன்றை முக்கியமாக சொல்ல வேண்டும். அதுதான் பெண்களுக்கு நாம் காட்டும் மரியாதை. பெண்களை தெய்வமாக, தாயாக, சகோதரிகளாக மகளாக,கருணையின் பிறப்பிடமாக வணங்குகிறவர்கள் நாம் மட்டுமே. மற்றவர்கள் அவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அவர்களுடைய மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.

  31. //இன்னும் ஒன்றை முக்கியமாக சொல்ல வேண்டும். அதுதான் பெண்களுக்கு நாம் காட்டும் மரியாதை. பெண்களை தெய்வமாக, தாயாக, சகோதரிகளாக மகளாக,கருணையின் பிறப்பிடமாக வணங்குகிறவர்கள் நாம் மட்டுமே. மற்றவர்கள் அவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அவர்களுடைய மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.//

    தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யா; திருச்சியைச் சேர்ந்த ஜெயா; வேதாரண்யம் வட்டம், வண்டல் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா; பழனி அருகிலுள்ள க.கலையமுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா; தஞ்சை மாவட்டம் வடசேரியைச் சேர்ந்த சதுரா; இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 17 வயதான திருச்செல்வி; திண்டுக்கல் அருகேயுள்ள புள்ளக்காடுபட்டியைச் சேர்ந்த சங்கீதா; மானாமதுரை வட்டம் கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவக்குமார்; தண்டாரம்பட்டு வட்டம், ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான துரை; ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான இளங்கோ; கோவை மாவட்டத்திலுள்ள சோமனூரைச் சேர்ந்த அருந்ததியினரான சிற்றரசு; திருவாரூக்கு அருகேயுள்ள அரிதுவார்மங்கலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவாஜி இவர்கள் அனைவரும் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காகக் கொல்லப்பட்டவர்கள். கடந்த நான்காண்டுகளில் நடந்து பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ள கௌரவக் கொலைகளின் எண்ணிக்கையே இத்தனை இருக்கிறது என்றால், அம்பலத்துக்கு வராமலும், போலீசாரால் அமுக்கப்பட்டும் மறைக்கப்பட்ட கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை எத்துனை இருக்கக்கூடும்?

  32. நானும் ஒரு இந்துதான். ஆனால் நியாயத்தை பார்க்கவேண்டும்.

    ராமானுஜர் வைத்திருந்த திருவரங்கனின் சிலையைப் பார்த்து முகாலய இளவரசி அரங்கன் மீது காதல் கொண்டார். அவருக்கு இன்றும் துலுக்க நாச்சியார் என்ற பெயரில் ஒரு சந்நிதானம் திருவரங்கத்தில் உண்டு. இதுவும் வரலாறுதான்.

    திருஞானசம்பந்தர் எவராலும் தீர்க்க முடியாமல் இருந்த மதுரை மன்னரின் வயிற்று வலியை திருநீறு கொடுத்து தீர்த்தார். அதனால் சமண மத மோகத்தில் இருந்த மன்னர் சைவ மதத்திற்கு வந்தார். இதுவும் வரலாறுதான்.

    ஒரு கிருஸ்துவ பாதிரி இந்து மன்னரின் நோயை தீர்த்து கிருஸ்துவ மதத்தை பரப்பக் கூடாதா?

    இந்து மதம் சில நூற்றாண்டுகள் முன்பு வரை காட்டுமிராண்டித்தனமாகதான் இருந்தது. கணவன் இறந்தப் பின் பெண்ணை தீயில் தள்ளுவது, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது எல்லாம் ஆங்கிலேயர்கள் வந்தப் பிறகுதான் நம் இந்து மதத்திலிருந்து ஒழிந்தது.

  33. நியாயத்தை மட்டுமே பார்த்த பொற்கை பாண்டியரும் மனுநீதிச் சோழரும் வாழ்ந்த புண்ணிய பூமி நம் அன்னை தமிழ்நாடு. அவர்கள் வழியில் வாழ்வதே தமிழரின் பண்பாடு.

  34. ஜனாப் சுவனப்ரியன்! ஜாதிக்குவெளியே திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறீர்கள். ஆனால் ஒரே மார்கம் மட்டுமே உலகில் இருக்கவேண்டும் என்பதற்காக ஏக இறைவனின் திருப்பெயரால் குண்டுகள் வெடிக்கப்பட்டு உலகெங்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கிறதே அதை நீவிர் மறந்தது ஏனோ?.
    ஜாதிக்குள் திருமணம் என்பது பழங்குடிகளிடையே தொன்றுதொட்டு இருக்கிற அகமணம் அது வர்ணாஸ்ரம முறையால் வந்ததது என்பது கதை. ஒரே பகுதியில் வாழுகிற இருவேறு பழங்குடிகளிடையே க்கூட திருமணம் நிகழவில்லை. வர்ணாஸ்ரம முறையில் அனுலோமா என்கிற கலப்பு மணம் காணப்படுகிறது.
    இஸ்லாத்தில் ஜாதியில்லை என்று சொல்லப்படுகிறது ஆனால் இந்தியாவில் முஸ்லீம்களுக்கிடையே சாதி உள்ளது என்று அன்சாரி என்ற முஸ்லீம் எழுத்தாளர் கூறுகிறாரே, உயர் சாதி முஸ்லீம்கள் தாழ்ந்த சாதி முஸ்லீம் களிடம் பெண் எடுக்கமாட்டார்களாமே.
    இந்துக்களிடையே சாதியின் பெயரால் அநியாயங்கள் நிகழ்கின்றன ஆனால் அவற்றை ஆண்டவனின் பெயரால் நியாயப்படுத்தப்படுவதில்லை. ஆண்டவனுக்காக அவை நிகழ்த்தப்படுவதில்லை.

  35. பொற்கைப்பாண்டியனும் மனு நீதிச்சோழனும் வாழ்ந்த் புண்ய நாட்டின் புதல்வர் மதுசூதனரே. நீங்கள் சொல்வது போல் மதமாற்றம் செய்தால் அன்னை பூமியாகவோ அல்லது புண்ணிய பூமியாகவோ தமிழ் நாடு இருக்காது. அன்றி பொற்கைப் பாண்டியனும் மனுனீதிச் சோழனும் பெயரை சொல்ல மதுசூதனரும் இருக்கமாட்டார். ஆகவே மதமாற்றம் வேண்டாம் என்கிறோம். தமிழ், சமயம் பண்பாடு எல்லாம் காணமல் போய்விடும் ஐயா இன்றைக்கு உள்ள அறிவியலின் கலைச்சொற்களையெல்லாம் கொடுத்த கிரேக்கம் இலத்தீன் ஆகிய மொழி பேசிய மக்களின் சமயமெங்கே, பண்பாடு எங்கே. அவை எப்படி அழிந்து போயின் என்பதை அறியுங்கள். ஜொராஸ்ட்ரிய ஸ்மயமெங்கே பாரசீகப்பண்பாடு என்கே உணருங்கள். உலகைவென்ற அலெக்சாண்டரின் மதமெங்கே அவனது பண்பாடு எங்கே. அவன் பெயரை உச்சரிக்க மதுசூதனரைப்போல யாரும் இல்லை அதற்கு காரணம் உங்களுடைய ஆதரவு பெற்ற மிசநரிகளே.
    ஸ்ரீ ராமனுஜர் வைத்திருந்த இஸ்லாமிய இளவரசியை யாரும் வைணவராக்கவில்லை. ஸ்ரீ துலுக்க நாச்சியாருக்கு செய்யப்படும் மரியாதை அவரது பக்திக்காக. கூன்பாண்டியன் சைவனாக இருந்தவன் சமணனான போது அவனை மீட்க அவனது மனைவியின் அழைப்பில் ஸ்ரீ சம்பந்தர் சுவாமிகள் மதுரை சென்றர். கூன்பாண்டியனே கேட்டுக்கொண்டபடியால் அவனது நோயை நீக்கினார் சுவாமிகள். நோயை நீக்க மிசனரிகள் பெரும்பாலும் மருந்தைப்பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை.
    ஆங்கிலேயர்கள் வந்ததால் ஹிந்து சமயத்தில் மூடப்பழக்கங்கள் ஒழிந்தன என்கிறீர்கள். அந்த ஆங்கிலேயர்கள் தான் அடிமை வியாபாரம் செய்தார்கள் என்பதை அறிவீர்களா. தாங்கள் உயர்ந்தவர்கள் மற்ற இனத்தினர் தாழ்ந்தவர்கள் என்ற கொள்கையை சமீப காலம் வரை தென் ஆப்ரிக்காவில் ஆண்டனர் என்பதையும் அறியுங்கள். கொலம்பஸ், வாஸ்கோட காமா ப்போன்ற வெள்ளை க்கடல் கொள்ளையர்கள் அவர்களை அன்போடு வரவேற்று உபசரித்த அமெரிக்க இந்திய மக்களுக்கு செய்த கொடுமைகள் அறியுங்கள். செவ்விந்தியர்களின் மாயன் பண்பாட்டுக்கு நேர்ந்த கதி நமக்கும் நிகழாமல் இருக்கவே, சமயத்தில் உள்ள சுதந்திரம் பாதுக்காக்கப்படவே மதமாற்றத்தினை எதிர்கிறோம்.
    சிவஸ்ரீ.

  36. நானும் ஹிந்துதான் என்று சொல்லிக் கொண்டு ஒரு ஹிந்துப் பெயரையும் வைத்துக்கொண்டு தாம் சார்ந்துள்ள மதத்தவரின் செயல்பாடுகளை நியாயப்படுத்திக்கொண்டு திரியும் கும்பல் அதிகரித்து வருகிறது. இனம் கண்டு அறிய வேண்டும். இந்த மண்ணுக்கு அந்நியமான எந்தச் சமயத்தினரும் தமது எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடம் அளிக்கலாகாது. அவரவர் சமய நடைமுறைப்படி வழிபாடு செய்ய அளிக்கப் பட்டிருக்கும் உரிமையை மதமாற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் துஷ்பிரயோகத்தை அனுமதிக்கலாகாது. அந்நிய சமயத்தினர் எண்ணிக்கை அதிகரித்தால் ஒரு புராதான கலாசார, தத்துவார்த்தச் சிறப்பை இழக்க நேரிடும். தென் கிழக்கு ஆசிய நாடுகள் இதற்கு எடுத்துக்காட்டாகக் கண்ணெதிரே இருபப்தோடு, நம் நாட்டிலேயேகூட ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்துவிட்ட இடங்களில் நமது புராதன கலாசாரம் மறைந்துவிட்டதைக் காணலாம்.
    -மலர்மன்னன்

  37. உங்கள் கருத்துக்கு நன்றி. ஒரு சிறிய விளக்கம்.

    நான் 100% சதவித நிறைகுடம் அன்று. குறைகுடமே.

    பொற்கைப்பாண்டியனும் மனு நீதிச்சோழனும் வாழ்ந்த புண்ணிய நாட்டின் புதல்வர் என்று எம்மை நீர் அழைத்தமைக்கு யாம் பெருமைபடுகிறோம். காரணம் அவர்கள் வாழ்ந்து காண்பித்த மார்க்கத்தையே முயற்சிக்கிறோம்.
    உம்மைப் போன்றோர் அத்திருப்பெயர்களை கூறுவதர்காவது ஒரு வாய்ப்புகிட்டியதற்கு அகமகிழ்கிறோம்.

    கிறிஸ்துவ மதமென்பது இந்து மதத்தின் ஒரு பகுதிதான். (ஏசுநாதரின் முத்திரைகளை காண்பவர்க்கு இவ்வுண்மைப் புரியும்). வைணவவும் சைவவுமே இணைந்துவிட்டப் பிறகு கிறிஸ்துவ மதம் இணைந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

    இஸ்லாமியத்திற்கும் இந்து மதத்திற்கும் உருவ வழிபாடு, ஒரு கடவுள் கொள்கைதான் வேறுபாடு. அவர்கள் தங்கள் மதக்கோட்பாட்டை சற்றும் சமரசம் செய்யாமல் மூர்க்கமாக கடைப்பிடிப்பவர்கள். இந்துக்கள் அப்படி அல்ல. நீங்கள் கூறியிருக்கும் மதமாற்றம் இங்குதான் தொடங்குகிறது.

    ஒரே பரம்பொருள் மட்டுமே உள்ளார். இது தெரிந்த விஷயம்தான். யாரை வணங்கினாலும் அது பரம்பொருளுக்கே போகும். இதுவும் தெரிந்த விஷயம்தான். தெரிந்துகொண்டே இதை ஏற்கமறுப்பவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

    நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு மதம் என்னும் நிலையில் இருந்து (இந்துவோ, கிறிஸ்துவமோ, இஸ்லாமியமோ, சமணமோ) அடியேன் வெளியேவந்துவிட்டேன். அந்த நிலையிலே
    தொடரவேண்டும் என்பது உங்களைப் போன்றோரது விருப்பமென்றால், அதனை தாராளாமாக செய்யுங்கள்.

    ஆணுமல்லன் பெண்ணுமல்லன் அலியுமல்லன்…(நம்மைப் போன்றோருக்கு திருவாய்மொழியில் ஆழ்வார் அன்றே விளக்கிவிட்டார்).

  38. எம்மால் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களால் எவரது மனமேனும் புண்பட்டிருந்தால் எம்மை மன்னிக்க வேண்டும்.

  39. //அம்பலமாகியுள்ள கௌரவக் கொலைகளின் எண்ணிக்கையே இத்தனை இருக்கிறது என்றால், அம்பலத்துக்கு வராமலும், போலீசாரால் அமுக்கப்பட்டும் மறைக்கப்பட்ட கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை எத்துனை இருக்கக்கூடும்?//

    தன் முதுகிலுள்ள அழுக்கைப் பார்க்க முடியாதவன் மற்றவனைப் பார்த்துச் சிரித்தானாம் என்பது போன்றது தான் கெளரவக் கொலைகளைப்பற்றி முஸ்லீம்கள் விமர்சனம் செய்வதும். பெண்விடுதலையைப் பற்றியோ அல்லது பெண்ணுரிமையைப் பற்றிப் பேச, முக்காடு மட்டும் போட்டுக்கொண்டிருந்த தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்களுக்கு, அரபுக்களின் கறுப்பு புர்க்காவையும் அணியும் வழக்கத்தை நடைமுறைப்படுத்தும் தமிழ்நாட்டு வஹாபிஸ்டுக்களுக்கு அருகதையுண்டா என்பதை திரு.சுவனப்பிரியன் தெளிவுபடுத்துவார் என நம்புவோம்.

    சகோதரர் சுவனப்பிரியனுக்கு கெளரவக் கொலைகள் அல்லது Honour Killings என்றால் என்னவென்று தெரியாமல் குழம்பி விட்டார் போல் தெரிகிறது. நீங்கள் குறிப்பிடும் கொலைகள் எல்லாம் சாதிவேறுபாட்டால் நடந்தவை. இப்படியான சாதிவெறியில் நடைபெறும் கொலைகள் இந்துக்களிடம் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களின் மத்தியிலும், வட இந்திய முஸ்லீம்களின் வெவ்வேறு சாதிப்பிரிவினர் மத்தியிலும் நடப்பவை தாம். ஆனால் இவற்றைக் கெளரவக் கொலைகள் என்று யாரும் குறிப்பிடுவதில்லை, இவை சாதிக்கொலைகள். ஆனால் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், சவூதி அரேபியா போன்ற பெண்ணுரிமையற்ற இஸ்லாமிய நாடுகளில் தமது குடும்பத்தினர் குறிப்பாக ஆண்சகோதரர் அல்லது தந்தையினால், வேறு மதத்தினரை அல்லது வேறு இனத்தினரை அல்ல‌து குடும்ப‌த்திலுள்ள‌ ஆண்க‌ளால் அங்கீக‌ரிக்க‌ப்ப‌டாத‌ அல்ல‌து த‌ம்மை விட‌க் குடும்ப‌ அந்த‌ஸ்தில் குறைந்த‌ ஒருவ‌ரை ம‌ண‌க்க‌ விரும்பும் அல்லது காதலிக்கும் முஸ்லீம் பெண்கள் கொலை செய்யப்படுவதைக் குறிப்பிடுவது தான் கெளரவக் கொலை என்பது. ஆனால் நீங்கள் அந்தப் பதத்தை தவறாக சாதிக்கொலைகளைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறீர்கள் போல் தெரிகிறது. முஸ்லீம் பெண்க‌ளுட‌ன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் ம‌ட்டுமல்ல‌ உலகெங்கிலுமே இந்துப் பெண்க‌ளுக்குக் கூடிய‌ உரிமைக‌ள் உண்டென்ப‌தை யாராலும் ம‌றுக்க‌ முடியாது.

    “An honor killing, or honour killing is the homicide of a member of a family or social group by other members, due to the belief of the perpetrators that the victim has brought dishonor upon the family or community. Honor killings are directed mostly against women and girls and are MOST PREVALENT in Middle Eastern and South Asian ISLAMIC CULTURES.”

  40. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, நான் தினமும் பார்க்கிற இணையங்களுள் ஒன்றாக தமிழ்ஹிந்து உள்ள போதிலும்கூட, நான் இந்தக் கட்டுரையை வாசிக்காமை ஒருஅதிசயமே ஆகும்.

    சர்ச்சைக்குரியதாக, ஏற்கலாமோ ,இல்லையோ தான்நம்புகிற கருத்தை கட்டுரையாசிரியர் முன் வைத்திருப்பது வரவேற்பதற்குரியது. அதுநிற்க,
    இந்த சேதுபதிகள் தொடர்பான வரலாற்றை அறிய நானும் மிகவும் ஆவலாயுள்ளேன்.அதற்கான காரணம் வேறு..

    நமது இலங்கையின் வடபகுதியில் பொ.பி 09 ஆம் நூற்றாண்டு தொடக்கம் பொ.பி 17 ஆம்நூற்றாண்டு வரை ஒரு தமிழரசு நிலவியிருக்கிறது. யாழ்ப்பாணத்தரசு என்று அழைக்கப்பட்ட இவ்வரசு யாழ்ப்பாணத்து நல்லூரைத்தலைநகராக கொண்ட தமிழ்ஹிந்து அரசாகும்.

    சிவபெருமானின் வாகனமான ரிஷபத்தை தமது முத்திரையாகவும், கொடியாகவும் கொண்ட இவ்வரசர்களை ஆரியச்சக்கரவர்த்திகள் என்ற பட்டப்பெயரால் அழைப்பர்.. சிலஇடங்களில் சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சங்கம் நிறுவி தமிழ் வளர்த்ததுடன், பல சைவாலயங்களையும் ஸ்தாபித்தும் திருப்பணி செய்தும் சைவம் வளர்த்திருக்கிறார்கள்.

    அது மட்டுமன்றி தமிழ்நாட்டின் இராமேஸ்வரம், திருமறைக்காடு(வேதாரண்யம்) போன்ற ஸ்தலங்களிலும் இவர்கள் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இதற்கான கல்வெட்டுக்களைஇன்றும் இத்தலங்களில் காணலாம்..

    இந்த அரசர்கள் சேதுபதிகளின் வம்சத்துடன் நெருக்கமான தொடர்பையும்-உறவையும் பேணியிருக்கிறார்கள் என்பது மிகத்தெளிவு..

    ஆக,இவர்களும் சேதுபதிகளின் வம்சத்தில் பிறந்தவர்கள் தானோ, என்பது ஆய்விற்குரியதாகிறது.

    பர்வதவர்த்தனி உடனாய ஸ்ரீராமநாதக்கடவுளை தங்களின் ஆத்மநாயகராக கொண்டிருந்த இவர்கள் எதனை எழுதும் போதும் பிள்ளையார்சுழி போடுவதுபோல, சேது என்ற மங்கலவாசகத்தை முன்னிறுத்தி எழுதுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    இந்த அரசர்களில் பரராஜசேகரன், செகராஜசேகரன், சங்கிலியன், கனகசூரியன் போன்றவர்கள் பிரபலமானவர்கள்.

    இந்த மரபின் கடைசி மன்னன் சங்கிலியன்.. அவன் பரராஜசேகரனின் புதல்வன். இவன் காலத்தில் போர்த்துக்கேயர் மதமாற்றத்தை முன்னிறுத்தி நாட்டுக்குள் நுழைந்தார்கள். கிழவன்சேதுபதி போல இந்த சங்கிலியனும் தன் ஆட்சிக்கு உட்பட்ட மன்னாரில் மக்களை கூண்டோடு மதமாற்றம் செய்தமைக்காக செபஸ்தியார் என்கிற கத்தோலிக்க பாதிரியாரை(புனிதரை) சிரசேதம் செய்தான்..

    இதனால் மிகவும் கோபமடைந்தவர்களாகவும், படைபலம்மிக்கவர்களாகவும் ,முதலிலேயே தென்னிலங்கையை கைப்பற்றி ஆட்சி செய்து வந்தவர்களும் ஆன போர்த்துக்கேயர் இவன் மீது திடீரென ஒரு விஜயதசமியன்று போராடத்துணிந்தனர்..

    அந்தப்போரிலும் சங்கிலியனே வெற்றி பெற்றான். அதன் பிறகு, இவர்கள் சூழ்ச்சியோடு காக்கைவன்னியன் என்ற உள்நாட்டுக்காரனை துணைக்கழைத்துக் கொண்டு சென்றுகளவாக சங்கிலியனைச் சிறைப்பிடித்துக் கொன்றார்கள்.. அதன்பிறகு, போர்த்துக்கேயர் செய்தவை தனிச்சரித்திரம்..

    இந்த அரசர்கள் தொடர்பிலும், வரலாறு பெரியளவில் பரவலாகவில்லை..

    எனவே,இவர்களின் காலத்தைச் சித்தரிக்கும் வகையில் கதைவடிவில் சொன்னால் பலரின் கருத்தைக் கவரும் என்ற நோக்கில் நான் “அபிராமியின்காதலன்” என்ற குறுநாவலை எழுதியுள்ளேன்.. அது பதிப்பிக்கப்பட்டு வருகிறது.. விரைவில் வெளியாகவுள்ளது.

    இவ்வரசர்களுக்கும் சேதுபதிகளுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் செகராசசேகரசிங்கையாரியன் என்ற இக்காலவரசர் காலநூலான செகராசசேகரமாலையில் உள்ள சில செய்யுள்கள் இங்கே தருகின்றேன்..

    இராமன்

    எழில்வாய்ந்த மணிமௌலித் துளவணிந்தமாதசரதன் தன்சேயெனவந்தெய்தி
    தொழில்வாய்ந்த இளவலொடுசென்று முனிவோனின் அருள்சுரந்துகாத்து
    பொழில்வாய்ந்த மிதிலைநகர் வில்லிறுத்துத் திருவைமணம் புரிந்துவெண்சங்கு
    குழிவாய்ந்த மணிகொழிக்கும் தன்னகர்வந்து அன்னை தருமுரையைவேண்டி

    இராவணன் வதம்

    மின்னுடனே நெடிய கானகம் புகுந்து விராதனை மாயமாரீசன்
    தன்னை வாலியை ஏழ்மராமரங்களை வெஞ்சாயகமொன்றினால்தடிந்து
    மன்னு நீர்வேலையடைத்தடலிலங்கை வளநகர் புகுந்தெழிற்கும்ப
    கன்னனை அரக்கர்கோவினைச்செயித்துக் கமலநாயகியைச் சிறை கடிந்து

    இராமேஸ்வரம்

    கருங்கடற் சேனை வெள்ளமுந்தானுங் கந்தமால் வரைப்புறத்தணுக
    இருங்கதத்தரக்கன் சாயைவிட்டகன்றஇயல்பினைத் திருவுளத்தெண்ணி
    அருங்கலைப் பொதியமாமுனிக்குரைப்ப அவனுமத்தலத்தினது இயல்பை
    பெருங்கதைப்படுத்த அதிசயதித்து அந்தப்பெருங்கதை ஆதரம்பிணிப்ப

    பாசுபத சைவர்கள்

    அந்தமாதலத்தில் அரன்தனைத்தாபித்தருச்சனை புரிந்து தன்னாமஞ்
    சிந்தையாலருளி அப்பதி தனக்குத் திருபெயரென்னதேயாக்கி
    நந்தலில் பஞ்சக்கிராமவேதியராய் நான்மறைப் பொருளுளம்பிரியாப்
    பைந்தொடைப் பாசுபதர்களை ஐந்நூற்றுப்பன்னிருவரை வரவழைத்து

    ஆரியச்சக்கரவர்த்திகள்

    பூசனைசெய்மின்நீரெனக் கருணைபுரிந்தவர் தங்களில் இருவர்
    காசினிதாங்கும்படி வரங்கொடுத்துக் கமழ்செழுந்துளப மாலிகையும்
    மாசறுசுருதி ஆரியவேந்தென்று அணிமணிப்பட்டமுங் கொடுத்துத்
    தேசுறுகுடையும் மொற்றையும் வெற்றிதிகழ்விடைத்துவசமும் நல்க

    நீண்ட ஆட்சி

    அன்றுமுதற் சதுரயுகநாலாறிற் புவிபுரந்த அரசர்தம்மில்
    வென்றிதிகழ் மீனவன்முன் செப்பேடங்கத்தழைக்கும் வேதவேந்துஞ்
    சென்றுகருநாடகரை அந்தரவல்லியிற் பொருது செயித்தவேந்துங்
    கன்றிவரு மதவேனங்கரந்துணித்துப் போசலனைக் கடிந்தவேந்தும்

    செகராசசேகரன் பெருமை

    ஐந்தருவுநவநிதியும் குலமணியும் பொன்முகிலும்மாவும் ஒன்றாய்
    வந்தனைய கொடைக்குரிசில் வரியளிகளிசை குலவுவனசத்தாமன்
    சந்ததமுந்தருமநெறி கோடாததவப்பெருமான் தழைத்த கீர்த்திக்
    கந்தமலையாரியர் கோன் செகராசசேகரமன் கங்கைநாடன்

    ஆய்வாளர்கள் இவற்றை தங்கள் கவனத்தில் கொள்ளும் வண்ணம் பணிவன்புடன் வேண்டுகின்றேன்..

    தி.மயூரகிரிசர்மா
    நீர்வேலி

  41. மதங்களுக்கு வெளியே வந்த மதுசூதனர் மதமாற்றப்பாதிரிகளை நியாயப்படுத்துவது ஏன்?
    “கிறிஸ்துவ மதமென்பது இந்து மதத்தின் ஒரு பகுதிதான். (ஏசுநாதரின் முத்திரைகளை காண்பவர்க்கு இவ்வுண்மைப் புரியும்). வைணவவும் சைவவுமே இணைந்துவிட்டப் பிறகு கிறிஸ்துவ மதம் இணைந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை”.
    மதுசூதனரே ஒரு பகுதியாக இருப்பது ஏன் பிறகு இணையவேண்டிய அவசியம். கிறித்தவம் ஹிந்து மதத்தின் பகுதி என்று எந்த பாதிரியார் உங்களுக்கு போதித்தது. இயேசுவின் எந்த முத்திரை ஹிந்து மதத்தின் முத்திரையை நினைவுபடுத்துகிறது.
    நன்றாக குழம்பியிருக்கிறீர்கள் அல்லது குழப்பபட்டிருக்கிறீர்கள். ஒரு தேவகுமாரனை அவரது எதிரிகள் கொலை செய்ததனால் சிந்திய இரத்தம் அவரை விசுவாசிக்கிற அனைத்து விசுவாசிகளின் பாவத்தை நீக்கி சொர்கவாழ்வை நித்திய வாழ்வை அளிக்கும் என்கிறார்களே கிறிஸ்தவர்கள். இது எப்படி ஹிந்துமதமாகும்.
    சிவஸ்ரீ.

  42. intha kalathil varalaru therintha vayothibargal kuraivu …..
    emathu varalattrai ariya avaludan irukkum ilainjargalukku intha valaithalam perum palanai tharukindrathu …

  43. ராமநாதபுரம் மன்னர் சேதுபதி வெளிநாட்டு மனிதர்களை வெறுக்கவில்லை…
    மத மாற்றத்தைத்தான் வெறுத்திருக்கிறார்…இதை அன்றே செய்த
    சேதுபதிக்கு…வீர வணக்கம்…
    ஆனால்..இன்றும்..நமது மக்கள் சலுகைகளுக்கும் ..காசுக்கும்…
    ஆசைப்பட்டு மதம் மாறி வருவதை பார்த்தால்..மனம்
    உண்மையிலேயே..வேதனைப்படுகிறது..
    நமது..மக்கள் ..அடுத்தவருக்கு.அடிமை ஆகிவிடக்கூடாது
    என்பதே…எனது..ஆசை.. நன்றி..

    என்றும் மக்கள் பணியில்..
    பருத்தியூர்..சரவணன்..

    பருத்தியூர்..சரவணன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *