வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்

tamilnadu_poor_govt_school”என்னா கண்ணு, என்னா ஆச்சு உனக்கு? பசிக்குதா?” வாடிய முகத்துடன் சோகமாகப் பள்ளியிலிருந்து வந்த தன் மகள் மகேஸ்வரியைப் பார்த்து கண்ணம்மா கேட்டாள். அந்தக் குடிசைப் பகுதிக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தான் மகேஸ்வரி 4-ஆம் வகுப்பு படிக்கிறாள்.

“அம்மா அம்மா.. இன்னிக்கு, ஸ்கூல்ல சில பிள்ளைங்கள மட்டும் பேர் சொல்லித் தனியாக் கூப்பிட்டாங்கம்மா. ரோஸ்மேரி, அப்துல்லா, ஸ்டீபன், அப்றம் சரவணன், சீனிவாசன்… ம்ம்ம்.. ஞாயித்துக் கிழமை காலைல கருப்பு புஸ்தகத்தை கையில் வெச்சுக்கிட்டு கூட்டத்தோட சர்ச் போவானுங்களே அந்தப் பசங்க.. அப்றம் அருள்ராஜ், ரஃபீக், ஸ்டெல்லா… ” என்று அடுக்கத் தொடங்கியது குழந்தை.

“சரி சொல்லு, எதுக்கு?” – இடைமறித்து கேள்விக் குறியுடன் தன் மகளின் முகத்தைப் பார்த்தாள் கண்ணம்மா.

”இவங்களை எல்லாம் தனியாக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.. கூட்டிட்டுப்போயி அவங்க கைல எல்லாம் ஆளுக்கு ஒரு கவர்ல நிறைய பணம் போட்டுக் குடுத்தாங்க. அப்பா அம்மா படிக்கவெக்க எவ்ளோ கஷ்டப்படறாங்க. கவனமா எடுத்துப்போய் வீட்ல குடுங்க”ன்னு சொன்னாங்க.

நம்மளையும் கூப்பிடுவாங்கன்னு நானு, செல்வி, அர்ஜுன், காமாட்சி, குமாரு எல்லாரும் காத்துக்கிட்டே இருந்தோம்.. ஆனா எங்களைக் கூப்பிடவே இல்லம்மா. ஏமாத்தமா இருந்திச்சு. “அதெல்லாம் யேசு சாமி கும்பிட்டாதான் தருவாங்க, என்ன தெர்தா” அப்டீன்னு ஸ்டீபனும், அருள்ராஜும் பழிப்பு காட்டிட்டுப் போறானுங்கம்மா.. நம்ப அவங்களை விட ரொம்ப ஏழைங்க தான? பின்ன ஏம்மா எனக்குப் பணம் தரல?”

அப்பாவியாக மகள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள் கண்ணம்மா. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதாவது கிறித்தவ நிறுவனம் பணம் வழங்குகிறதோ என்று நினைத்தாள். எதற்கும் பக்கத்து வீட்டு பானு அக்காவிடம் சாயங்காலம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

*************

இப்படிப் பட்ட சம்பவங்கள் தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. வெள்ளை உள்ளம் படைத்த சிறு குழந்தைகளின் உள்ளங்களிலும் சிறுபான்மைவாத அரசியலின் விஷம் தீண்டி அவநம்பிக்கைகளையும், பரஸ்பர சந்தேகங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

மிஸ்ரா கமிஷன், சச்சார் கமிட்டி என்று கமிஷன்களின் பரிந்துரைகளைக் காரணம் காட்டி “இந்தியாவின் வளங்கள் மீது முதல் உரிமை சிறுபான்மையினருக்குத் தான், குறிப்பாக முஸ்லீம்களுக்கு.. அதை மத்திய அரசு வலியுறுத்தும்; நடைமுறைப் படுத்த ஆவன செய்யும்” என்று மிகுந்த நடுநிலையோடும், மதச்சார்பற்ற தன்மையோடும் இரண்டு வருடம் முன்பு பிரதமர் மனமோகன சிங்கர் அறிவித்தது ஞாபகம் இருக்கலாம். அதைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு முதல் பொருளாதார ரீதியாக நலிவுற்ற சிறுபான்மையினருக்கு (சிறுபான்மையினருக்கு *மட்டும்*) தனிக் கவனிப்பு, சலுகைகள் உண்டு என்று காங்கிரஸ் அரசு பச்சைக் கொடி காட்டியது. மத்திய அரசு எள் என்று சொன்னவுடனேயே, மற்ற மாநில அரசுகள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, எண்ணையாக மாறி வழிந்தோட ஆரம்பித்து விட்டது சிறுபான்மை சேவக தி.மு.க. அரசு. அந்த விசேஷ சலுகைகளின் ஒரு பரிணாமம் தான் மேலே சொன்னது போன்ற சம்பவங்கள்.

வருடந்தோறும் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக சில சேவை அமைப்புகளுக்கு நன்கொடை தருவதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அத்தகைய ஒரு சேவை அமைப்பின் தொடர்பில் உள்ள கண்ணம்மா போன்ற ஏழைத் தாய்மார்கள் பலர் அரசே முன்னின்று நடத்தும் இந்த அப்பட்டமான பாரபட்ச நடவடிக்கை பற்றி அந்த அமைப்பிடம் முறையிட்டிருக்கிறார்கள். அதன் வாயிலாகவே தமிழக அரசின் இந்த அதிகாரபூர்வ அநீதி பற்றி நான் அறிய நேர்ந்தது.

எல்லா ’சமத்துவ, ஜனநாயக, செக்யுலர்’ கட்சிகளும் கைகட்டி, வாய்பொத்தி இந்த அநீதிக்கு ஒத்து ஊதுகின்றனர். தங்களுக்கு வாக்களித்த ஏழை இந்துக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்றனர். ஏழை மற்றும் நடுத்தட்டு இந்துக்களின் வயிற்றில் அடித்து, அவர்கள் கல்வியையும், வாழ்வுரிமையும் கீழே போட்டு மிதித்து நசுக்கும் இந்தத் திட்டத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி மட்டுமே குரல் எழுப்பியுள்ளது.

உதவித் தொகை சலுகைகள் பற்றிய விவரங்கள்:

tn_govt_education_assistance_to_minorities_table

இதில் கவனிக்க வேண்டிய  சில விஷயங்கள் –  இந்த உதவித் தொகை பெறுவதற்குத் தகுதியான “பொருளாதார ரீதியாக நலிவுற்ற” என்பதற்கான வரையறை வருட வருமானம் ஒரு லட்சத்திற்குக் குறைவாக  உள்ள குடும்பங்கள் என்று  கூறப் படுகிறது. மேலும், தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை விட இந்தத் தொகை அதிகமாக இருக்கிறதாம்.  அதோடு,  இடஒதுக்கீடால் பயன்பெறும் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போக மீதமுள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களும் அரசு உதவி பெறுவதற்கு  இந்தத் திட்டம் வழிசெய்து விட்டது.  ஆனால் அதே அளவில் “பொருளாதார ரீதியாக நலிவுற்ற” ஏழை இந்துக்கள் திட்டமிட்டு வஞ்சிக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஜூலை மாதம் முழுவதும் இந்தப் பிரசினையை வலியுறுத்தி தமிழகம் எங்கும் போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்து, போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.   பாஜகவின் கோரிக்கை  சிறுபான்மையினருக்கு உதவித் தொகை தரக்கூடாது  என்பது அல்ல;  இந்த உதவித் தொகை பாரபட்சமின்றி ஏழை இந்துக்கள் உட்பட அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது தான் – இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாணவர் சக்தி மூலம் திமுக ஆட்சியை அகற்றுவோம்: பாஜக

திங்கள்கிழமை, ஜூலை 12, 201

கோவை: எந்த மாணவர் சமுதாயத்தை வைத்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததோ, அதே மாணவர் சமுதாய சக்தியை வைத்து திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

pon_radhakrishnan_tn_bjpசிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது போல இந்துக்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரி கோவை கவுண்டம்பாளையத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ராதாகிருஷ்ணன் பேசுகையில் பின்வருமாறு கூறினார்:

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி [^] அரசு பொறுப்பேற்றதும், மீண்டும் ஆட்சியை பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதற்கு கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாயத்தினரும் ஒட்டுமொத்த ஓட்டு வங்கிகளாக உள்ளனர் என்று கண்டறியப்பட்டு, அந்த ஓட்டுகளை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என முடிவு செய்தனர்.

அதனால் சிறுபான்மையினரின் முன்னேற்றம் என்று 15 அம்ச திட்டத்தைக் கொண்டு வந்தனர். அதில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம். சிறுபான்மை என்பதன் கீழ் முஸ்லிம், கிறிஸ்துவ மக்களே மிகவும் பெரும்பான்மையாக உள்ளனர். அதனால் அவர்களுடைய ஒட்டுமொத்த ஓட்டுகளை பெறுவதற்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2007ம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.

நாடு முழுவதும் கடந்த 2008-09ம் கல்வியாண்டில் 5 லட்சத்து 12 ஆயிரத்து 657 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதுவே 2009-2010ம் கல்வியாண்டில் 17 லட்சத்து 29 ஆயிரத்து 76 பேருக்கு வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 364 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதன்மூலம் ஏற்கனவே திட்டமிட்ட இலக்கைவிட அதிகமாக உதவித்தொகை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் [^] 57,000 பேருக்கு உதவித்தொகை வழங்கத் திட்டமிட்டுவிட்டு, இறுதியில் 84,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படுவதில்லை.

திமுக, காங்கிரஸ் [^] கட்சிகள் ஓட்டு வாங்குவதற்காக சிறுபான்மை சமுதாயத்தினருக்கு சலுகைகளை வாரி வழங்குகின்றன. அதேசமயம் அக் கட்சிகள் இந்து சமுதாயத்தைப் புறக்கணிக்கின்றன.

… இந்து மாணவர் சமுதாயத்திற்கு செய்யப்படும் இதுபோன்ற துரோகத்தை பாஜக ஏற்றுக் கொள்ளாது. எந்த மாணவர் சமுதாயத்தை வைத்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததோ, அதே மாணவர் சமுதாய சக்தியை வைத்து திமுக ஆட்சியை அகற்றுவோம்.

நன்றி: தட்ஸ்தமிழ் செய்தி

“காமராஜர் ஆட்சிக் காலத்தில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சமமான கல்வி அளிக்கப்பட்டது. அவரது ஆட்சியின்போது 18 ஆயிரம் பள்ளிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டபோது, அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவசக் கல்வி வழங்குவதாக அறிவித்து, பள்ளிகள் மூடப்படுவதைத் தடுத்தார்.

மதமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மதமாற்றத்துக்கு சோனியா காந்தி துணைபோகிறார்; இதற்கு திமுக அரசும் உடந்தையாக இருக்கிறது. மதத்தின் பெயரால் வாக்குகளை அறுவடை செய்ய திமுக தயாராக இருக்கிறது.”

–  கோவையில் ஜூலை-18 கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்

மேலும் பல இடங்களிலும் பாஜகவினரின் போராட்டம் நடந்து வருகிறது.

ஜூலை 25ம் தேதி கன்னியாகுமரியில் ஒரு லட்சம் பேர் திரளும் மிகப் பெரிய போராட்டம்:

இப்போராட்டத்திற்கான தயாரிப்புகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.  ”இந்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க சமநீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. இப் போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்ளவேண்டும்” என்று  பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இது தொடர்பாக  குமரி மாவட்ட பா.ஜ.க வெளியிட்டுள்ள துண்டு பிரசுரம்:

bjp_hand_out

நான் முன்பு ஒரு சமயம் எழுதிய சிறுபான்மை, பெரும்பான்மை, மனப்பான்மை என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன் –

…. சிறுபான்மை என்ற சொல் இந்தியா முழுதும் மொத்தமாக மத அளவில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்களைக் குறிப்பதற்காகவே பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் மதம் தவிர, மற்ற பல வகையிலும், ஒவ்வொரு பிரதேசங்களிலும் சாதி மற்றும் வேறு பல காரணங்களால் சிறுபான்மையினராகி அதன் காரணமாகவே அல்லலுறும் எத்தனையோ சமூகக் குழுக்கள் பற்றி தேசிய அளவில் யாருக்கும் அக்கறை இல்லை.. பாரதம் போன்ற பல்வேறு வகைப்பட்ட சமூகச் சூழல்கள் வலைப் பின்னலாக நிலவும் நாட்டில், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பொதுப் படுத்துதலான குழு அடையாளங்கள் பெரும் குழப்பத்தையும், மயக்கத்தையும் தான் ஏற்படுத்துகின்றன …

The smallest minority on earth is the individual. Those who deny individual rights cannot claim to be defenders of minorities – Ayn Rand

“உலகில் எல்லாரையும் விட சிறுபான்மையானவன் தனிமனிதன் தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக் கொள்ள முடியாது” – அயன் ராண்ட்

இந்திய, தமிழக அரசியல் சூழலில் இந்த ஆதாரமான கருத்தை நாம் மீண்டும் மீண்டும்  உரத்துச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால், உண்மையில் பா.ஜ.க தமிழகத்தில் நடத்தும் போராட்டம் ஒரு குழுவின், மதத்தவர்களின் நலனுக்கான போராட்டம் அல்ல. அநீதி இழைக்கப் பட்டுள்ள ஒவ்வொரு தனி மனிதனின் கல்வி உரிமையையும் காக்க எழுந்துள்ள மக்கள் இயக்கம்.

இது சமநீதிக்காக எழும் ஜனநாயகரீதியான போர்க் குரல். சலுகைகளை வேண்டி நடத்தும் அரசியல் பேரமோ, அச்சுறுத்தலோ அல்ல.

இந்த உரிமைக் குரல் ஓங்கி ஒலித்திடுக. இந்தப் போராட்டம் வெல்க!

99 Replies to “வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்”

  1. Pingback: Indli.com
  2. சொந்த நாட்டிலே ஹிந்து குழந்தைகள்
    நொந்தழும் நாட்களும் வந்ததே
    இந்த வேதனை என்று மாறிடும் இழிசெயல்
    சிந்தை அரசியல்வாதிகள் வெந்திட
    வாஞ்சி வேங்கைகள் என்றெழும்?

  3. நேதாஜி வீரமும் பகத்சிங் தியாகமும்
    ஹிந்து உதிரத்தில் மறையுமோ
    அன்னியர் அசுர குலத்தினராண்டிட
    அன்னை பூமியில் தருமம் அழியுமோ

    பிஞ்சு குழந்தையும் ஹிந்து என்பதால்
    புறக்கணிக்கும் புல்லர்கள் அரசினை
    வளைகரங்களும் வாளேந்தி போரிடும்
    நிலை வரும் இது சத்தியம்

    இரவின் நீள்கரம் அதர்ம அரசெனும்
    அரவொத்த தீயவர் நாட்கள் போய்
    எழுந்திடும் ஒரு புதிய விடியலாய்
    காவிப்புரட்சியே தேச பூபாளமாய்

  4. மைனாரிடிகளின் ஒட்டுக்களை வாங்கி அரசாளத் துடிக்கும் போலி மதச் சார்பின்மை வாதிகளின் முகத்திரை இதன் மூலம் கிழிந்து விட்டது. மெஜாரிட்டி இந்து மக்களில் ஏழைகள் இல்லையா? இந்த பூமி அவர்களுடைய பூர்வீக சொத்து இல்லையா? இங்கு காட்டை அழித்து, மலைகளைத் தகர்த்து பூமியை உழுது, உணவளித்த பாரம்பரியம் இவர்களுடையது அல்லவா? இங்கு வந்து குடியேறிகள், மதமாற்றம் செய்த பின் மைனாரிட்டிகள் என்ற பெயரில் நம் உழைப்பில் கிடைத்த செல்வத்தை, இந்த அராஜக அரசியல் வாதிகள் தங்கள் இஷ்டத்துக்கு வாரி இறைப்பதை வாய் மூடி கைகட்டி இந்துக்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? இதற்கு ஒரு முடிவு வேண்டாமா? இதுதான் நம் மக்களுக்கு இறுதி வாய்ப்பு, இதைத் தவறவிட்டால் இந்த நாட்டில் இந்துக்கள் பிச்சைக்காரர்களாகத்தான் வாழ வேண்டி இருக்கும். சொரணை உள்ள இந்துக்கள் சிந்தித்து உடனடியாக இதற்கு முடிவு கட்ட பொங்கி எழ வேண்டும். செய்வார்களா? அல்லது பிரிட்டிஷ் ஆண்டால் என்ன இத்தாலி ஆண்டால் என்ன என்று வாயை மூடிக்கொண்டிருக்கப் போகிறார்களா? பார்ப்போம்.

  5. இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கக்கோரி தமிழக பா.ஜ. போராட்டம் நடத்துவது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், பா.ஜ. அரசாளும் மாநிலங்கள் ஹிந்து மாணவர்களுக்கு இதேபோல கல்வி உதவித்தொகை வழங்கி முன்னோடியாகவும் திகழ வேண்டும்.

    அதே போல, ஒவ்வொரு ஹிந்துவும் இந்தியாவிற்குள்ளும், வெளிநாடுகளிலும் க்ஷேத்திராடனம் செய்ய மானியம் வழங்க பா.ஜ. அரசாங்கங்கள் முன்வர வேண்டும். இது ஹஜ் யாத்திரைக்குத் தரப்படும் மானியத்தைவிடக் குறையாததாக இருக்க வேண்டும்.

    – பா. ரெங்கதுரை

  6. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். தமிழ் ஹிந்து வாசகர்கள் நாம் ஒன்று சேர்ந்து ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது எனக்கு. நம்மால் முடிந்த அளவு குழந்தைகளுக்கு படிப்புக்கென பண உதவி செய்யலாமா?

    இதன் மூலம் ஒரு விழிப்புணர்வு வருமா? மற்ற வாசகர்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள ஆசை.

  7. ஹிந்து தன்னுள் பிரிந்து கிடக்கும்போது இப்படியெல்லாம் நடக்கும்.. .திராவிடன், ஆரியன் என்ற பாகுபாடு என்று ஒழிகிற்தோ அன்றே இவை சரியாகி ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    அது வரை நாம் பார்ப்பான் அல்லாதவன் என்று அடித்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

    ஈஸ்வரா ! எங்கள் தமிழ் நாட்டை காப்பாற்று !

  8. சமீபத்தில் தமுமுக மாநாடு நடந்ததே?? பார்த்தீர்களா?? அவ்வளவு ஒழுங்கு முறை, பேசிய ஒவ்வொருவரும் குறிக்கோள் என்ன, எதற்காக போராடுகிறோம் என்று தெள்ளதெளிவாக உணர்ந்து பேசினார், வந்து இருந்தவர்களும் அப்படியே.
    நம் மக்கள் இது போல் உறுதியுடன் செயல்பட்டு ஒன்று கூடி போராடினால் கட்டாயம் நம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.. !!! இதை பற்றி நம் மக்கள் என் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி ஆகிய மூவருக்கும் தெளிவாக தகுந்த ஆதாரங்கள் மற்றும் குறிப்புகள் (ஸ்டாடிஸ்டிக்ஸ்,டேட்டா) உடன் கடிதம் மூலம் அனுப்பினால் என்ன. இத்தளம் அதற்கு உதவியாக குறிப்புகள் மற்றும் ஆதாரங்களுடன் வெளியிட்டால் உதவியாக இருக்கும் ….

  9. /////இதை பற்றி நம் மக்கள் ஏன் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி ஆகிய மூவருக்கும் தெளிவாக தகுந்த ஆதாரங்கள் மற்றும் குறிப்புகள் (ஸ்டாடிஸ்டிக்ஸ்,டேட்டா) உடன் கடிதம் மூலம் அனுப்பினால் என்ன. இத்தளம் அதற்கு உதவியாக குறிப்புகள் மற்றும் ஆதாரங்களுடன் வெளியிட்டால் உதவியாக இருக்கும் ….////

  10. பலே பலே
    ஒரு வழியாக பாரதீய ஜனதா துருப்புச் சீட்டை பிடித்து விட்டது
    இந்த அருவருப்பான, ஊழல் மலிந்த, குடும்ப,சிநேகித கழக ஆட்சிகளை ஒழித்து தமிழகத்தைப் பிடித்த நாற்பது வருட பீடையை ஒழிக்க வேண்டும்
    வாழ்த்துக்கள்

  11. why this information of table not at all published in any news paper.
    இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கக்கோரி தமிழக பா.ஜ. போராட்டம் நடத்துவது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், பா.ஜ. அரசாளும் மாநிலங்கள் ஹிந்து மாணவர்களுக்கு இதேபோல கல்வி உதவித்தொகை வழங்கி முன்னோடியாகவும் திகழ வேண்டும்.

    அதே போல, ஒவ்வொரு ஹிந்துவும் இந்தியாவிற்குள்ளும், வெளிநாடுகளிலும் க்ஷேத்திராடனம் செய்ய மானியம் வழங்க பா.ஜ. அரசாங்கங்கள் முன்வர வேண்டும்

    They can implement in Karnataka, Madhyapradesh, Gujarat, HP states first and insist on other states as well.

  12. This is stunningly bad news for us Hindus. Why should governments provide money to one religion versus another if it is “secular”? These Dravida Kazahaga Corrupt pigs have now started to bite the hands that feed them. Unless Tamils in TN start throwing out these corrupt politicians and their children, we will all be doomed. Fight now or die poor!

  13. பா ஜா கா இதை சட்ட ரீதியாகவும் அணுக கூடாது ?

    சட்ட ரீதியாக அணுகினால் வெற்றி கிடைக்காதா ?

    சட்டம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

  14. கோவையில் பா ஜ க நடத்திய ஆர்பாட்டம் மக்கள்(ஹிந்துக்கள் ) மனதில் ஒரு விழிப்புணர்வையும் அரசியல் கட்சிகள பார்க்கும் விததில் ஒரு மறுதலையும் நிச்சியம் ஏற்படுத்தி உள்ளது . அதற்காக உழைத்த அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் ,தொண்டர்களுக்கும் , மனமார்ந்த பாராட்டுகளை, வாழ்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்.

    பா ரெங்கதுரை அவர்களின் கருத்துடன் முழுவதும் ஒத்துபோகிறேன்

    ராஜேஷ் அவர்களே உங்கள் ஆதங்கம் புரிகிறது ,
    நாம் எவ்வளவு தான் உதவ முடியும் என்று நீங்கள் நினைகிறீர்கள் , மிக சொல்ல்பமகவே இருக்கும் பிரக்டிகல்டிப்பிகில்ல்டீஸ் நிறய இருக்கும் .
    உங்கள் கருத்தினை ,எண்ணங்களை மிகவும் போற்றுகிறேன்

    //தமிழ் ஹிந்து வாசகர்கள் நாம் ஒன்று சேர்ந்து ஒரு முயற்சி செய்து
    பார்க்கலாம் //
    முதலில் நமக்கு ஒரு அறிமுகம் தேவை அதற்கான முதல்கட்டமாக தமிழ் ஹிந்து வாசகர்கள் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்வோம் (தமிழ் ஹிந்துவின் ஒப்புதலோடு ) ஒத்த கருத்துகள் இருக்குமாயின் அனைவரும் தமிழ் ஹிந்து நிர்வாகத்திடம் விண்ணப்பம் வையுங்கள் .
    தமிழ் ஹிந்துவின் பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அறிமுக நிகழ்வாக அது அமையட்டும் .
    (நான் கடந்த இரண்டு மாதமாகத்தான் இவ்வலைதளத்தினை பாலோ செயிகிறேன் ,முன்பு தமிழ் ஹிந்து பதிவர் வாசகர் சந்திப்பு நடந்து உள்ளதா என்பதும் தெரியாது )

    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  15. பொருளாதார ரீதியில் பின் தங்கிய இந்துக்களை மத மாற்றம் செய்ய இந்த வழி தூண்டும் என்பது வருத்தத்துக் கூறிய செய்தி.

  16. பாஜகாவின் போஸ்டரில் எழுத்துக்கள் மட்டுமே இருக்கின்றன. எண்கள் இல்லை. எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது என்னும் தாக்கம் எங்களைக் காண்பித்தால் மட்டுமே எடுபடும். பாஜகாவின் முயற்சியை வாழ்த்துவதோடு, மக்களைச் சென்றடையும் விதம் இன்னும் நன்றாக எழுதவேண்டும். திருவாரூர் நரி போல் ஆர்பரிக்க வைக்கும் சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.

  17. முதல் தவறு காந்தி இஸ்லாமியர்கள் எட்டி உதைத்தும் அவர்களை கட்டிதழுவியது நம் நாட்டின் இறையாண்மைகே வேட்டு வைக்கும் முன்உதாரணம் ஆகும். இரண்டாவது தவறு காங்கிரஸ் மொழிவாரி மாநிலங்களை பிரித்ததாகும். மூன்றாவது தவறு காந்தி சுதந்திரத்திற்க்குபின் காங்கிரஸ்சை கலைக்கச்சொல்லியும் கேட்க்காமல் பிரிடிஷ்ஷாரின் பிரித்தாளும் கொள்கைளை உடும்பு பிடியாய் பிடித்துக்கொண்டு நேருவும் அவரது குடும்ப வாரிசுகளும் இன்றுவரை நாட்டை கூறுபோட்டுக்கொண்டிருக்கிறது. இப்பொழுது நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியைவிட மோசமான சர்வ அதிகார (சர்வாதிகார) ஆட்சி.
    சிறுபான்மையினர்கள் பெருன்பான்மையினரை அனுசரித்து சென்றால் பெரும்பான்மையினர் அவர்களை அரவணைத்து செல்லலாம். ஆனால் உண்மை நிலவரம் எப்படிஉள்ளது நாம் காந்தி சொன்ன எல்லாவற்றையும் மறந்துவிட்டு சிறுபான்மையினரை கட்டிதழுவி அவர்கள் கேட்காமலேயே பல சலுகைகளை அளித்து அரவணைக்கிறோம் ஆனால் அவர்கள் துளியும் அனுசரணையில்லாம் நாட்டை கூறுபோடும் எல்லாவிதமான செயல்களை தூண்டி அரசியல் நடத்தும் கட்சிகளை ஆதரிக்கிறார்கள்.
    சிறுபான்மையினர் என்றால் யார் ? இந்து மதத்தை சாராதோர் வெளிநாட்டிலிருந்து இங்குவந்து குடியிருப்பு உரிமை பெற்றவர்கள் மட்டும் தானா ? ஓட்டைகள் நிரம்பிய குழப்பமான சட்டம். மேலும் இங்கேயே பிறந்து வளர்ந்து சுயமாகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ பெரும்பான் மதத்ததிலிருந்து சிறுபான்மை மதத்திற்க்கு மாறியவர்களை எப்படி சிறுபான்மையினர் என்று ஏற்கலாம் ? மேலும் மதத்தை ஒருவன் மாற்றிக்கொள்ள உரிமை உண்டு என்றால் ஒருவனுக்கு தன் ஜாதியைமாற்றிக்கொள்ளும் உரிமை ஏன் இல்லை ? ஜாதி பிறப்பினால் ஏற்ப்பட்டது என்றால் மதமும்தான் பிறப்பினால் ஏற்ப்பட்டதாகும். எனவே மதம்மாறுவது நியாயம் என்றால் ஜாதிமாறுவம் நியாயம் ஆகும். ஒன்று மதமாற்றம் செல்லாது என சட்டம் கொண்டுவரவேண்டும் இல்லையேல் ஜாதிமாறுவது செல்லும் என்பதை ஏற்க்கவேண்டும். நாளைமுதல் என்னை தலித் என்று அரகாங்கம் ஏற்க்கவேண்டும் அவர்களுக்கு அளிக்கும் எல்லா சலுகைகளையும் எங்கள் வாரிசுகளுக்கும் அளிக்க வேண்டுகோள் வைக்கிறேன்

  18. கர்த்தராகிய தேவன் உண்மையானவர் என்று தெரிந்து கொள்கிற பிள்ளைகளுக்கு அவர் ஆதாயம் காணப்பண்ணுவார் என்று ஜீவனுள்ள வேதப்புஸ்தகத்திலே போட்டிருக்கிறபடிக்கு இந்தியாவிலே அரசாங்கம் பண்ணுகிறவர்களின் புத்தியை தேவன் ஏவியிருக்கிறார். செக்யூலரிசம் என்கிற பேரிலே துரைத்தனத்தார் ஆளுகிற பட்டணங்களிலே கர்த்தருக்கு எதிராகப் போகிறார்கள். ஆனால் ஸீயோனின் ஆண்டவர் சோனியாவை பழைய ஏற்பாட்டின் எஸ்தரை போல விக்கிரக ஆராதனை நிரம்பிய இந்த தேசத்துக்கு அனுப்பி இந்த தேசத்து ஜனங்களை கர்த்தரின் மார்க்கத்திலே திருப்ப விக்கிர ஆராதனைக்காரர்களிடமிருந்தே தசமபாகத்தை வசூலிக்க வைத்திருக்கிறார். சிருஷ்டி கர்த்தாவாகிய ஆண்டவரை வணங்காமல் அவரது பூமியை அனுபவித்துக்கொண்டு விக்கிரகங்களை தொழுபவர்களின் சொத்துக்களை நியாயவான்களாகிய கர்த்தரின் பிள்ளைகளான கிறிஸ்தவர்கள் எடுத்துக் கொள்ளலாமென்று விவிலிய சத்திய வாக்கிலே காட்டியிருக்கிற படியால் உண்மையான கிறிஸ்தவ விசுவாசியான சோனியா காந்தி அம்மையார் அவர்கள் இந்த கட்டளைப் போட்டிருப்பது மிகவும் சரியானதே. இதை எதிர்க்கும் விக்கிரக ஆராதனை காரர்களுக்கும் தமிழ்ஹிந்து என்கிற சைத்தானின் ஊழியக் காரர்களுக்கும் ஐயோ கேடு. இனியாவது மனம் திரும்புங்கள். இல்லையேல் ஆக்கினைக்கு ஆளாகி அக்கினி குழிக்குள்ளே போடப்படுவீர்கள்.

  19. Good point Vedamji…..

    கட்டுரை மிகவும் நன்றாக வந்திருக்கிறது.
    மக்கள் தெளிய வேண்டும்

  20. சிறுபான்மையினர் என்றால் யார் ? இந்து மதத்தை சாராதோர் வெளிநாட்டிலிருந்து இங்குவந்து குடியிருப்பு உரிமை பெற்றவர்கள் மட்டும் தானா ? ஓட்டைகள் நிரம்பிய குழப்பமான சட்டம். மேலும் இங்கேயே பிறந்து வளர்ந்து சுயமாகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ பெரும்பான் மதத்ததிலிருந்து சிறுபான்மை மதத்திற்க்கு மாறியவர்களை எப்படி சிறுபான்மையினர் என்று ஏற்கலாம் ? மேலும் மதத்தை ஒருவன் மாற்றிக்கொள்ள உரிமை உண்டு என்றால் ஒருவனுக்கு தன் ஜாதியைமாற்றிக்கொள்ளும் உரிமை ஏன் இல்லை ? ஜாதி பிறப்பினால் ஏற்ப்பட்டது என்றால் மதமும்தான் பிறப்பினால் ஏற்ப்பட்டதாகும். எனவே மதம்மாறுவது நியாயம் என்றால் ஜாதிமாறுவம் நியாயம் ஆகும். ஒன்று மதமாற்றம் செல்லாது என சட்டம் கொண்டுவரவேண்டும் இல்லையேல் ஜாதிமாறுவது செல்லும் என்பதை ஏற்க்கவேண்டும். நாளைமுதல் என்னை தலித் என்று அரகாங்கம் ஏற்க்கவேண்டும் அவர்களுக்கு அளிக்கும் எல்லா சலுகைகளையும் எங்கள் வாரிசுகளுக்கும் அளிக்க வேண்டுகோள் வைக்கிறேன்
    vedam gopal sir,
    excellent,great.
    namasivaya

  21. பிரதமரே பாராளுமன்றத்தில் நாட்டின் செல்வத்தின் மீது முதல் உரிமை மைனாரிட்டிகளுக்கு என்று அறிவிக்கிறார். கூட்டணிக் கட்சிகளும் சரி, எதிர்க்கட்சிகளில் ஒரு பிரிவினரும் சரி,மைனாரிட்டி வாக்கு வங்கியைக் கணக்குப் போட்டு இந்த அராஜக செயல்பாட்டுக்கு ஆதரவு தருகின்றனர். இந்த *வழிகாட்டுதலை* மையமாகக் கொண்டு பிறகு அரசின் எல்லா திட்டங்களூம் போடப் படுகின்றன்..

    சச்சார், மிஸ்ரா கமிட்டிகளின் முடிவுகள்/பரிந்துரைகள் பொய்யானவை, உள்நோக்கமுடையவை என்று வழக்குகள், வெகுஜன அபிப்பிராயங்கள் மூலம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும்போதே இது நிகழ்கிறது.. இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் போது சட்டரீதியாக இந்தப் பிரசினையில் என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்.

    அரசியல் ரீதியாகத் தான் இதனை உடைக்க வேண்டும். மக்கள் போராட்டம் வலிமையடைந்து ஆட்சி மாற்றம் வரவேண்டும், அது ஒன்று தான் தீர்வு.

    பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்த மைனாரிட்டி உதவித் தொகை திட்டத்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று தோன்றுகிறது.. விசாரிக்க வேண்டும்.

  22. Robert Manickam, your rant shows your low self esteem about yourself and your religion. You are suffering from what we doctors call Paranoia and delusions. I urge you to see a Psychiatrist asap. You need help

  23. #
    இராபர்ட் மாணிக்கம்
    22 July 2010 at 9:52 am

    கர்த்தராகிய தேவன் உண்மையானவர் என்று தெரிந்து கொள்கிற பிள்ளைகளுக்கு அவர் ஆதாயம் காணப்பண்ணுவார் என்று ஜீவனுள்ள வேதப்புஸ்தகத்திலே போட்டிருக்கிறபடிக்கு இந்தியாவிலே அரசாங்கம் பண்ணுகிறவர்களின் புத்தியை தேவன் ஏவியிருக்கிறார். செக்யூலரிசம் என்கிற பேரிலே துரைத்தனத்தார் ஆளுகிற பட்டணங்களிலே கர்த்தருக்கு எதிராகப் போகிறார்கள். ஆனால் ஸீயோனின் ஆண்டவர் சோனியாவை பழைய ஏற்பாட்டின் எஸ்தரை போல விக்கிரக ஆராதனை நிரம்பிய இந்த தேசத்துக்கு அனுப்பி இந்த தேசத்து ஜனங்களை கர்த்தரின் மார்க்கத்திலே திருப்ப விக்கிர ஆராதனைக்காரர்களிடமிருந்தே தசமபாகத்தை வசூலிக்க வைத்திருக்கிறார். சிருஷ்டி கர்த்தாவாகிய ஆண்டவரை வணங்காமல் அவரது பூமியை அனுபவித்துக்கொண்டு விக்கிரகங்களை தொழுபவர்களின் சொத்துக்களை நியாயவான்களாகிய கர்த்தரின் பிள்ளைகளான கிறிஸ்தவர்கள் எடுத்துக் கொள்ளலாமென்று விவிலிய சத்திய வாக்கிலே காட்டியிருக்கிற படியால் உண்மையான கிறிஸ்தவ விசுவாசியான சோனியா காந்தி அம்மையார் அவர்கள் இந்த கட்டளைப் போட்டிருப்பது மிகவும் சரியானதே. இதை எதிர்க்கும் விக்கிரக ஆராதனை காரர்களுக்கும் தமிழ்ஹிந்து என்கிற சைத்தானின் ஊழியக் காரர்களுக்கும் ஐயோ கேடு. இனியாவது மனம் திரும்புங்கள். இல்லையேல் ஆக்கினைக்கு ஆளாகி அக்கினி குழிக்குள்ளே போடப்படுவீர்கள்.
    extreme level impact of missio(fox)naries.Such this persons really need medical attention as doctor rama said.I pray to OUR GOD, this should not happen to all converted brothers.
    jai sriram

  24. //சிருஷ்டி கர்த்தாவாகிய ஆண்டவரை வணங்காமல் அவரது பூமியை அனுபவித்துக்கொண்டு விக்கிரகங்களை தொழுபவர்களின் சொத்துக்களை நியாயவான்களாகிய கர்த்தரின் பிள்ளைகளான கிறிஸ்தவர்கள் எடுத்துக் கொள்ளலாமென்று விவிலிய சத்திய வாக்கிலே காட்டியிருக்கிற படியால் உண்மையான கிறிஸ்தவ விசுவாசியான சோனியா காந்தி அம்மையார் அவர்கள் இந்த கட்டளைப் போட்டிருப்பது மிகவும் சரியானதே.
    //
    என்ன ஒரு குள்ளநரித்தனம் இந்த வேதத்தில், நீனைத்தாலே மனம் வெதும்புகிறது !! அடிமை படுத்துதல் இந்த வேதத்தின் (வேதமா ??) பண்பாகவே இருக்கிறது …
    நெயர்மையான முறையில் உழைத்து பெற்ற பூமியை, பல ஆயிரம் காலம் வாழ்து வந்த பூமியை …. இவர்களுக்கு அந்த பூமியை பிடுங்க உரிமை இருக்கிறதாம் !!!

    என்ன ஒரு வேதம் ??? இதுதான் சாத்தன் வேதமோ ???

  25. நன்றாக இருப்பவர்களை எப்படி கிறிஸ்தவம் மன நோயாளிகளாக ஆகுகிறது என்பதற்கு இந்த ‘கிறிஸ்தவர்களுள் மாணிக்கமே’ உதாரணம்.
    உயர்ந்த கோட்பாடுகள் அமைதியான மண்ணிலேயே உருவாகும்
    அதனால்தான் அவை பாரதத்தில் ஆயிரக்கணக்கான ரிஷிகள்,ஞானிகள்,யோகிகள்,சித்தர்கள்,முனி புங்கவர்கள் இவர்கள் மனமென்னும் வடிகட்டியில் வடித்து வடித்து தெள்ளிய அமுதங்களை எடுத்துக் கொடுத்த அக்ஷய பாத்திரமாக நமது நமது ஹிந்து சமயம் மனித இனத்துக்குக்கிடைத்தது.
    அதனால் தான் அவர்களால்
    ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘
    மற்றும்
    தத் த்வம் அசி- அது நீயாகவே இருக்கிறாய்
    அஹம் பிரம்மாஸ்மி- நானெ அந்த பிரம்மம்
    லோகாஸ் சம்ச்தாஸ் சுக்ஹினோ பவந்து – அகில உலகமும் நன்மை பெறுவதாக
    என்றெல்லாம் கூற முடிந்தது

    ஆனால் கிறிஸ்தவமும , இஸ்லாமும் பாலைவனத்தில் வாழ்க்கைப போராட்டத்துக்கு நடுவே, ரத்த ஆறுகளுக்கு நடுவே தோற்றிய கோட்பாடுகள்
    அதானால் தான் அவற்றால் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக கோடானு கோடி மக்கள் கொல்லப் பட்டனர்
    இவற்றிலிருந்து மனித இனம் வெளியே வரா விட்டால் இவர்கள் மனித இனம் மட்டும் அல்லாது உயிரினங்களைஎ அழித்து அவைகள் தோன்றிய பாலைவனம் போல் மொத்த பூமியையும் ஆக்கிகிவிடுவார்கள்

    இரா.ஸ்ரீதரன்
    i

  26. ராபர்ட்டு

    சொஸ்தமான உண்மையான தவான் ஏனுங்கோ ஆடை அராபியாவுளையும், பாகிச்டான்லையும் பண்ண முடியல – தாலிபான் காரனுங்கோ எத்தன கிறிஸ்துவன கொன்னு போடரானுங்கோ – உயிரோடு இருக்கும் உங்கள் தேவன் என்னங்காணும் பண்றார் – wtc கிறிஸ்துவ நாடான அமெரிக்காவுல தான இருக்கு – என்ன அச்சுங்கோ – எவ்வளவோ மோசமான நிலைமையில் ஆப்ரிகா நாட்டு மக்க இருக்காங்களே (சோறு இல்லாமே, எலும்பு தெரியுற மாதிரி ) அவங்கள பக்கம் உங்கள் தேவனுக்கு அன்பு பிறக்கலைய – இல்ல அந்த பக்கம் அவருக்கு கண் தெரியாதா – அவைகளும் கருப்பு போச்டகட்ட வச்சுகிட்டு தேவனே தேவன் என்று கூப்பிட்டு கொண்டு தான் இருக்காங்க – அவரு கையை இறக்கின மாதிரி தெரியளங்கோ?

    அது என்னங்காணும் இயேசு சில மாநிலமா பாத்து தான் இந்த உதவி தொகை தாராரமே. – மகாராஷ்ட்ராவில கொடுக்குறாங்களோ? காஷ்மீர்ல?
    – அது சரி அவரு ஏன் இஸ்லாமிச்டுக்களும் கொடுக்குறாரு – ஐயோ போங்க ஏமாந்துட்டாறு. சாத்தான் கெலிச்சுட்டாறு

    எது அவரது பூமிய – அப்போ அராபியால என்னங்கோ நடக்குது? அவர உசுரோடவே கழ்வேத்திடானுங்கோ அப்பவே காப்பாத்திக்க முடியாத ஒருத்தரா உங்கள காப்பாத்த போராறு – அப்புறம் நான் இஸ்ரெல்லு தான் rajaannu அவர் சொன்னாராமே – அப்புறம் சொர்கத்துக்கு தான் ராஜ ன்னு அவர் சொன்னாராமே – அப்போ அங்கேய பொண்ணுதான் கழுவுல எத்திட்டாங்கலாமே. இஸ்ரளின் ராஜாவுக்கு இந்தியால என்ன வேல – ஆக்கிரமிப்பு செஞ்ச குற்றத்துக்கு என்ன செய்யலாம் ?

  27. சைகோ ராபர்ட்,
    நீங்க மோடி மஸ்தான் வேலை கூட்டம்.அதற்க்கு தலைவியை கரெக்டா செலக்ட் பண்ணியிருக்கே ,
    இவனுகளுக்கு நல்ல புத்தியை, மன்னிக்கணும் முதலில் புத்தியை ,சிந்திக்கும் திறனை வழங்க நம் கடவுள்களை நாம் வேண்டுவோம்.
    ரொம்ப ஆடாதீங்க அடியோட அழிஞ்சு போயிருவீங்க

  28. நான் அமெரிக்கா வில் வாழும் தமிழன். உங்கள் பதில் களையும் Robert Manickam இன் மத வெறி பேச்சையும் படித்தேன். எட்டயப்பர் மாணிக்கம் அவர்கள் காவி உடை உடுத்தி, காவடி எடுத்து வாழ்ந்த தன் கூடப் பிறந்த தமிழ் மக்களையும் , தமிழ் கடவுளான முருகனயும் மறந்து, ஏதோ தானே தேடி, தன்னால் கண்டுப் பிடிக்கப்பட்ட ஒரு ரகசியத்தை போல் நம்மிடம் வெறித்தனமாகப் பேசுகிறார். அவர் தன் கிறிஸ்துவ மதத்தை தானே கண்டு பிடித்தது போல் எழுதுகிறார்.

    ஆனால் நான் இங்கு இருந்து பார்ப்பது என்னவென்றால் pentacoastal , evangelical சார்ந்த மத வெறி பிடித்த ஆசாமிகள் அவரை போன்ற முட்டாள்களை இங்கே கண்டு பிடிக்க முடியாமல், இந்தியா வரை வந்து அவரைக் கண்டு பிடித்திருக்கிரார்கள். இதுவே நான் தினமும் பார்க்கும் உண்மை.

    அவர் கிறிஸ்துவ மதத்தை தானாகப் படித்து தெரிந்து இருந்தால், தன்னால் முடியும் நல்ல காரியங்களை பண்ணி சுகமா இருந்து இருப்பார். ஆனால் யாரோ சொன்ன பொய்யை, மெய்யாய் நம்பி இதை திருப்பி திருப்பி ரெகார்டிங் மசின் போல சொல்லி, தன்னையே ஏமாற்றிக் கொள்ள இயல்கிறார்.

    அவர் சொல்வது உண்மை என்றால் இங்கே இருக்கும் தமிழகர்ளை ஏன் ஒருவர் கூட கன்வெர்ட் பண்ண முயல்வதில்லை? நான் இருபது ஆண்டுகளாய் இங்கு அமெரிக்காவில் இருக்கிறேன். ஏன் ஒரு கிறிஸ்துவர் கூட என்னை மதம் மாற்ற முயற்சிக்க வில்லை? இங்கே மட்டும் நான் வழி படும் இந்து மதம் இழிவாக இல்லையா? இங்கே இருக்கும் கோவில்களை அவரது கிறிஸ்துவர்கள் ஏன் இடிக்க முயற்சிப்பதில்லை?

    ஏனென்றால்? கிறிஸ்துவ மக்களில் பல ஜாதி இன வேறுபாடுகள் உண்டு. அவர்களில் உள்ள பெண்டசோச்டல் (pentacoastal), எவன்கேளிகால் (evangelical), காதொலிக் (catholic ) என்று பலப்பல பிரிவுகள், இவர்கள் மத வெறி பிடித்தவர்கள். அவர்களுடைய வெறி காரணமாக அவர்கள் மரபு இங்கே குறைந்து போயிற்று. வெறுப்பு என்றுமே சாந்தி அளிக்காது. அதை புரிந்து கொள்ளாத அவர்கள் உடனே எங்கே யாரைப் பிடிக்கலாம் என்று தேடி அலையும் போது, இந்தியாஉம் , சீனா உம் கிடைத்தது. உடனே எட்டையப்பன் போல பாதிரியார்கள் கிடைத்தார்கள். அவர்களை வைத்துகொண்டு Chillsamமை மசின் போல key கொடுத்து பேச வைக்கிறார்கள். அவராகப் பைபிள் ஐ படித்திருந்தால் இது போல பேச மாட்டார். யாரோ அவருக்குசொல்லி கொடுத்து அதையே திரும்ப ஒப்பிக்கிறார்.

    நாம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை இல்லையேல் அனைவர்க்கும் சாவு.

  29. எனக்கு என்னவோ இந்த ராபர்ட் மாணிக்கம் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு கிறித்துவர்களையும் சோனியாவையும் ஒருவர் கிண்டல் செய்கிறார் என்று தோன்றுகிறது.

  30. //‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘
    மற்றும் தத் த்வம் அசி- அது நீயாகவே இருக்கிறாய் அஹம் பிரம்மாஸ்மி- நானெ அந்த பிரம்மம்//
    தீமை சைத்தானாலே வந்தது நன்மையோ தேவனாகிய கர்த்தராலே வந்தது. இரண்டுமே நம்மாலே வராது. இதுதான் சத்தியமான பைபிள் சொல்வது. தீமையும் நன்மையும் நம்மாலே வந்தது என்று சொன்னால் கர்த்தாதி கர்த்தர் எதற்கு இருக்கிறார்? இதெல்லாம் பார்ப்பனிய பொய். தமிழர்களை அடிமையாக்க ஆரியர்கள் சொன்ன புரட்டு.
    இப்படிப்பட்ட தேவநிந்தனையான கருத்துக்களை சாத்தானின் தூண்டலால் பார்ப்பனர்கள் பரப்பி விட்டார்கள். யாதும் ஊர் என்பது உண்மைதான். பைபிளும் அதை சொல்கிறது. எல்லா ஊரும் தேவனின் ஊர். எல்லா ஊரும் தேவபிள்ளைகளான கிறிஸ்தவர்களுக்காக படைக்கப்பட்டதே. ஆனால் எல்லாரும் உறவினர் என்று சொல்லுவது தவரு. சத்தியமான வேத புத்தகத்திலே ஒரு நாட்டிலே விக்கிர ஆராதனை நடந்தால் அந்த நாட்டு ஜனங்களும் அந்த நாடும் சபிக்கப்பட்டவர்கள் என்றும் அதனை புனிதப்படுத்திய பிறகே உறவு கொள்ல வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது. (எஸ்ரா 9 10-12) அதே போல நீதிமான்களின் போதனையில் (20 48) அந்த இடத்திலே உள்ளவர்களை நீக்கிவிட்டு அந்த இடத்தை தேவனின் பிள்ளைகளுக்க்குள்ளாதக்க வேண்டும் என்று சொல்லிக்கண்டிருக்கிறது. எனவே தமிழ் தமிழ் என்று எல்லா தமிழ் பண்பாட்டையும் ஏற்காமல் ஜீவனுள்ள தேவனின் சத்திய புத்தகத்திலே இருக்கிரதை மட்டுஎமெ எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தேவபிள்ளைகள் விலிப்பாக இருக்காப்ர்கல்.திராவிடர்களின் சங்க காலமோ ஆரியர்களின் வேத காலமோ விக்கிரக ஆராதனை தீ வழிபாடு இயற்கை வழிபாடு இவையெல்லாம் செய்கிற மக்களால் முன்னேற முடியாது. ஆனால் உண்மையான தேவனை வணங்குகிற பிள்ளைகளுக்கோ கர்த்தர் செழிப்பை கொடுப்பார். அமெரிக்காவை பாருங்கள் ரெட் இண்டியன்ஸாலே ஒண்றும் முடியவில்லை. அங்கே கிறிஸ்தவ பாதிரியார்களையும் வெள்ளைக்காரர்களையும் கர்த்தர் அங்கே அனுப்பி நிலத்தை அவர்களிடமிருந்து பிடுங்கி கிறிஸ்துவின் பிள்ளைகளுக்கு கொடுத்தார். அமெரிக்கா இன்று தேவராச்சியமாக இருக்கிறது. இது ஆண்டவரே தேவனுடைய பிள்ளைகளுக்கு செய்திருக்கிற வாக்குத்தத்தம். எண்ணாகமத்திலே சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், “கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்பேதகிறது” யோசித்து பாருங்கள். கானான் தேசத்தை உருவாக்கியவர்கள் யார்? கானானியர். ஆனால் அதன் பெலனை அனுபவித்தவர்களோ தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள். எனவே விக்கிர ஆராதனை செய்கிற உங்கள் தேசத்தின் ராச்சியாதிபதிகள் எங்கள் பிள்ளைகளுக்கு தருகிறார்கள் என்றால் அது கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் வல்லமையே. இதை புரிந்து கொள்ளுங்கள்.

  31. இந்த போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் .ஹிந்துக்களே நமது உடனடி வேலை என்னவென்றால் நமது பகுதியில் வசிக்கும்,வேலைபார்க்கும் ஹிந்துக்களிடம் இருந்து வருடம் தோறும் ஒரு தொகையை (நூறு முதல் எந்த எண்ணிக்கையில் இருந்தாலும்) அன்பளிப்பாக வாங்கி ஒரு டிரஸ்ட் உருவாக்கவேண்டும்.அந்த டிரஸ்ட் மூலம் உயர் கல்வி கற்க விரும்பும் ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.அல்லது இந்த தொகை மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் (ஸ்போகேன் இங்கிலீஷ் ,தையல் ,பகவத் கீதை வகுப்புகள் ,சிறு தொழில் பயிற்சி ) போன்ற பயனுள்ள திட்டங்களை துவங்க வேண்டும்.நானும் என்னுடைய பகுதியில் துவங்கி இப்பொழுது நாற்பத்தி ஐந்தாயிரம் ருபாய் வருடத்திற்கு சேகரிக்கிறோம் .எங்களுடைய அமைப்பின் பெயர் வானமே எல்லை .இது சம்பந்தமாக ஏதாவது தகவல் தேவையென்றால் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் 9898745144 .

  32. இராபர்ட் மாணிக்கம்,
    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்.

    // சிருஷ்டி கர்த்தாவாகிய ஆண்டவரை வணங்காமல் அவரது பூமியை அனுபவித்துக்கொண்டு விக்கிரகங்களை தொழுபவர்களின் சொத்துக்களை நியாயவான்களாகிய கர்த்தரின் பிள்ளைகளான கிறிஸ்தவர்கள் எடுத்துக் கொள்ளலாமென்று விவிலிய சத்திய வாக்கிலே காட்டியிருக்கிற படியால் //

    இப்படி எங்கே பைபிளில் எழுதப்பட்டு இருக்கிறது? அதிகாரம், எண்ணுடன் கொடுத்தால் கர்த்தர் கிருபையும் பெலனுமுண்டு.

  33. நீங்கள் என்னை என்ன திட்டினாலும், இந்த விக்கிரக ஆராதனைக்கார தேசத்திலே கர்த்தரின் மீட்பை கொண்டு வர ராச்சியபாரம் தரித்த அன்னை சோனியா காந்தியும் கலைஞரும் எங்கள் ஆண்டவராகிய கர்த்தர் சொன்னதையே செய்கிறார்கள். இதை நான் யாரோ சொல்லிக் கொடுத்து சொல்லவில்லை. கர்த்தரே இதை சொல்கிறார். இந்து குழந்தைகள் ஏழைகளாக இருக்கலாம். கர்த்தரை விசுவசிக்கிற குழந்தைகளுக்கு ஏற்கனவே கர்த்தர் ரொம்ப கொடுத்திருக்கலாம். ஆனால் கர்த்தரை எல்லா உலகுக்கும் ராசாதிராசாவாக ஏற்றுக்கொள்ளாத பிள்ளைகள் ஏழைகளாக இருந்தாலும் அவர்களிடமிருந்து எடுத்து கர்த்தரை விசுவசிக்கிறவன் ஏற்கனவே கர்த்தர் தனவானாக்கியிருந்தாலும் கொடுக்க வேண்டுமென்று ஏசுவே சொல்லியிருக்கிறார். இதனை கர்த்தர் ஒரு ராசாவும் அவனை ஏற்காதவர்களுக்கும் ஏற்கிறவர்களுக்கும் செய்யும் உபகாரம் குறித்து லூக்கா எழுதிய பரிசுத்த நற்செய்தியிலே ஆண்டவர் ஏசு அழகான கதையாக சொல்லுகிறார் பாருங்கள்.

    அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள். அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.லூக்கா 19:25-26

    ஒருவன் ஏழையா பணக்காரனா நல்லவனா கெட்டவனா என்று கர்த்தர் பார்ப்பதில்லை. அவரிடம் விசுவாசம் வைத்திருக்கிறானா இல்லையா என்பதை மட்டுமே பார்ப்பார். இந்த ராச்சியாதிபதிகள் அதைத்தான் செய்கிறார்கள். கர்த்தரின் வார்த்தைகளை பின்பற்றுகிறார்கள். இதை ஏன் நீங்கள் தடுக்கிறீர்கள்? மனுசனான அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்திடம் விசுவாசம் வைக்காமல் கர்த்தராகிய ஏசுவின் வார்த்தைகளில் விசுவாசம் வைப்பது அன்னை சோனியா காந்தியின் மத நம்பிக்கை. கிறிஸ்தவர்களின் மதநம்பிக்கை அவர்களின் அடிப்படை உரிமை. இதை நீங்கள் எப்படி விமர்சிக்கலாம்? இன்னும் ஒரு விசயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் கர்த்தரும் நியாயாதிபதியுமாகிய ஏசு கிறிஸ்து உங்களிடமிருக்கிறதை பிடுங்கி விசுவாசிகளுக்கு கொடுப்பேன் என்று மட்டும் சொல்லவில்லை அதோடு

    “நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள்”லூக்கா 19:27

    இப்படி சொல்லுவதோடு எங்கள் ஆண்டவர் நிற்கவில்லை அதனை நடத்தியும் காட்டினார். கிராமத்தானின் கழுதைக் குட்டியை அவரது சீசர்கள் அதை வளர்த்தவனிடம் அனுமதி இல்லாமலே அவன் கொட்டடிக்குள் போய் இழுத்து வந்தார்கள். அவன் அதை கேட்ட போது “ஆண்டவர் கேட்கிறார்” என்பதையே உத்தரமாக சொன்னார்கள் என்று புனித வேதம் சொல்கிறது. எனவே ஏசுவின் வழியில் நாடு செல்வதை தடுக்காதீர்கள். உங்களால் தடுக்கவும் முடியாது. ஏனென்றால் நீங்களே தான் நவீன எஸ்தரான அன்னை சோனியா காந்தியை ஓட்டு போட்டு ராச்சியாதிபதி ஆக்கினீர்கள். ஏனென்றால் அப்படி செய்யும்படியாக உங்கள் மூளைகளை குழப்பி எங்கள் ஆண்டவர் உங்களை ஏவினார்.

  34. பிரத்யூஷ்

    உங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன். இதுவரை எனக்கு தெரிந்து மீட்டிங் எதுவும்
    நடந்ததில்லை. மீட்டிங்கை தமிழ் ஹிந்து ஏற்பட செய்ய நானும் வேண்டுகோள் வைக்கிறான். எதாவது ஒரு ஞாயிற்று கிழமை மாலை வைத்தால் வேலை செய்பவர்களும் கலந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    ஏற்பாடு செய்வீர்கள் என்று எதிபர்கிறேன்.

    சதீஷ் அவர்களே உங்கள் பணி மென் மேலும் வளர கடவுளை பிரத்தனை செய்கிறேன்

    ம. மணிவண்ணன்
    புதுவை

  35. புத்தி சலவைசெய்யப்பட்ட திரு. ராபர்ட் மாணிக்கம் அவர்களே இது என்ன ஒட்டாத பேர் அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் சம்பந்தம் ஏற்ப்படடால் பாயைபிராண்டி பேய்தனமான குணங்களே வெயிப்படும் என்பதற்க்கு நீங்கள் ஒரு சிறந்த முன்உதாரணம். நீங்கள் விவிலியத்தை முழுமையாக படிக்கவில்லை என்று நினைகிறேன். எண்ணற்ற காட்டுமிரான்டிதனமான செயல்களை பற்றிய விபரங்கள் நிறையவே விவிலியத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த விவிலயத்தில் சங்கீதம் என்ற ஒரு பாகம் இருக்கிறது. இனிமைக்கும் இதற்க்கும் துளியும் எந்த சம்பந்தமும்கிடையாது. யார் யாரை எப்பொமுது எப்படி எப்படி தாக்கி கொடுமைபடுத்தவேண்டும் என்பதை எடுத்துக்கூறும் மிருகத்தனமான செயல்களை விவரிப்பது. விருசேதனம் காய் அடித்தல் கொங்கை அறுத்தல் ஆண்குறியின் நுணிதசை வெட்டுதல் இன்னும் பல பலாந்து விஷயங்கள் உண்டு. பைபிள் வரலாற்றுபூர்வமாக உண்மையானது என்றால் இவை எல்லாம் சரித்திர வரலாற்று நம்மதகுந்த ஆவணங்கள். மறுப்பதற்க்கு ”புராண” கதைகள் அல்ல.

    மேலே சொன்னவற்றை விதிவிலக்கில்லாமல் ஏசு வரை எல்லா மேசய்யாக்களும் கடைபிடித்தார்கள். ஏசு கிருஸ்துவ மதத்தை நிறுவவில்லை. பால் என்பவரால் கிருஸ்துவம் திணிக்கப்பட்டது. இதுவும் மார்டின்லுதரால் பிளவு பட்டது. மார்டின் என்ன சொன்னார் ” Christ committed adultary first of all with a woman at the well, secondly with Mary Magdalene and thirdly with the woman taken in adultary (மேலும் கூறுகிறார் ) the saints must be good down sinners. The apostles themselves were sinners, yea, regular scoundrels…. I believe that the prophets also frequently sinned grieviously”
    தயவுசெய்து கர்தரை பற்றிய கதைவிடுதலை நிறுத்திக்கொள்ளுங்கள். கிருஸ்தும் பல வலைதளங்களில் நாற்றம் எடுத்துக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு பதில் சொல்லி எங்கள் பொன்னான நேரத்தை விணாக்காதீர்கள்
    என்னை பொருத்தவரையில் மதமாறுபவன் நாட்டை காட்டிக்கொடுப்பவன் தாயை கூட்டிக்கொடுப்பவன். ராபர்ட் ஐயா இந்த நாசகால கூட்டத்திலிருந்து மாணிக்கமாக தாய் மதம் திரும்புங்கள். அதற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் !!!

    (edited and published)

  36. ராபர்ட்டு

    அதெப்படி மொடல் வரிய சாத்தான் சொல்ல அப்புறம் இயேசு அடுத்த வரிய எடுத்து கொடுத்தாரா

    //
    தீமை சைத்தானாலே வந்தது நன்மையோ தேவனாகிய கர்த்தராலே வந்தது. இரண்டுமே நம்மாலே வராது. இதுதான் சத்தியமான பைபிள் சொல்வது. தீமையும் நன்மையும் நம்மாலே வந்தது என்று சொன்னால் கர்த்தாதி கர்த்தர் எதற்கு இருக்கிறார்? இதெல்லாம் பார்ப்பனிய பொய். தமிழர்களை அடிமையாக்க ஆரியர்கள் சொன்ன புரட்டு
    //

    சுத்த லூசுத்தனமா இல்லை – அப்போ இயேசு சாத்தானுக்கு பின் பாட்டு பாடறாரா – ஏனைய்யா ippadi bible சொன்ன “wine”எ குடிச்சிட்டு வண்டு உளறுகிறீர்

    /
    தீமை சைத்தானாலே வந்தது நன்மையோ தேவனாகிய கர்த்தராலே வந்தது.
    //

    அப்போ சைத்தான உங்க தேவன் ஏன் விட்டு வேச்ச்சுருகார் – அப்போ சைதானால உங்கள கட்டுப்படுத்த முடியும்ந சைத்தானும் இயேசுவை போலவே பவர் புல் ஆசாமி போலும் – ரெம்ப கேவலமா இருக்கே

    //
    அந்த இடத்திலே உள்ளவர்களை நீக்கிவிட்டு
    //
    காட்டுமிராண்டி தான் நீக்குவான் – ஒரு ஹிந்து அன்பை கட்டுவான் – இப்படி அடுத்தவன அடிச்சு வாழ சொன்ன கடவுளும் காட்டுமிராண்டியாக தான் இருக்கணும்

    //
    ஆனால் உண்மையான தேவனை வணங்குகிற பிள்ளைகளுக்கோ கர்த்தர் செழிப்பை கொடுப்பார். அமெரிக்காவை பாருங்கள் ரெட் இண்டியன்ஸாலே ஒண்றும் முடியவில்லை. அங்கே கிறிஸ்தவ பாதிரியார்களையும் வெள்ளைக்காரர்களையும் கர்த்தர் அங்கே அனுப்பி நிலத்தை அவர்களிடமிருந்து பிடுங்கி கிறிஸ்துவின் பிள்ளைகளுக்கு கொடுத்தார்
    //

    ஐயோ ஐயோ கிஷ்டவ தோன்றிய அரபு நாட்டை பாருங்கள் – ஹி ஹி – கிறிஸ்தவம் பரவி இருக்கும் ஆப்ரிக்காவை பாருங்கள் – ஐயோ ஐயோ

    அமெரிக்கா காரன் கொள்ளை அடிச்சு முன்னேறினான் – bay area பூர mexico நாட்டோடது – அப்படியே அமுக்கிட்டு சாப்பிடறான் – அது சரி இப்படிப்பட்ட காட்டு மிராண்டி தனத்ததானே விவிலியம் எனும் புனித நூலி சொல்லி இருக்கு – எங்களஊர்ல அடுத்தவன் அடிச்சு வாழரவண திருடன், மொள்ளமாரி என்றெல்லாம் சொல்லுவார்கள் – அவங்களுகேல்லாம் வழிகாட்டும் நூல் விவிலியம் என்று கேள்விப்பட ஆச்சர்யமா இருக்கு

    //
    எனவே விக்கிர ஆராதனை செய்கிற உங்கள் தேசத்தின் ராச்சியாதிபதிகள் எங்கள் பிள்ளைகளுக்கு தருகிறார்கள் என்றால் அது கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் வல்லமையே. இதை புரிந்து கொள்ளுங்கள்.
    //

    மேல் சொன்னபடி பார்த்தல் – அதை தான் கர்த்தர் செய்தார் என்றால் – அவர் உண்மையில் யார் என்று தெரிந்து விடுகிறது – உங்களுக்கு தேவனாக இருக்கும் கர்த்தர் இஸ்லாமிஸ்டுக்கு சாத்தான் ஆகிறறார் ஏன் என்றால் அவர்கள் பணத்தையும் அல்லவா கர்த்தர் பிடுங்கி கிறிஸ்தவனுக்கு கொடுக்கிறார்

    கிறிஸ்தவம் வளர்ந்த பெருவாரியான ஐரோப்பா நாடுகள் இன்று திவால். எசு என்ன் செய்யராரு தெரியலயெ – ஒஹொ இப்ப இந்டியாவுல டெந்டு அடிச்சிருக்காரா.

  37. @இராபர்ட் மாணிக்கம்
    //எனவே விக்கிர ஆராதனை செய்கிற உங்கள் தேசத்தின் ராச்சியாதிபதிகள் எங்கள் பிள்ளைகளுக்கு தருகிறார்கள் என்றால் அது கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் வல்லமையே. இதை புரிந்து கொள்ளுங்கள்.//

    அப்போ மேரி மாதா வழிபாடு செய்பவர்களுக்கு உதவித் தொகை கிடையாதா? அங்கே இன்னும் அபிஷேகம் மட்டும் தான் பண்ணலை. தீபம் ஏற்றுதல், தேர் இழுத்தல், கொடி ஏற்றம் என்று எல்லா இந்து சம்பிரதாயங்களும் இருக்கே.

  38. Robert,

    If Karunaanithi is doign what Jesus said then – its abslotely funny – let us take stock first

    1) Karunaanithi said those who praise the Lord are barbarians

    2) Karunaanithi was involved in heinous crimes

    3) Karunaanithi was responsible for mother St Sonia’s husband’s killing

    4) Karunaanithi is behind the mighty Telecom Scam, Sarkaaria Scam, Great Coovam scam
    – he is behind every possible scam

    //
    “நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள்”லூக்கா 19:27
    //

    One who says so is a Satan – how can he be GOD – you must you your brains if only Jesus has given you one

    If i interpret this lokkaa joke correctly – Karthar was no Raja (king) and he wanted to be one for some funny reasons (he got killed for that – thats a different story)

    He was originally not a King and wanted to be one – he never made it too – when he was not a king why do you he is the aborginal King – this statement clearly says that he wanted to do everything possible even crime, killing to become a King – so did hitler, napolean, Ceasar, Mussolini, Sadam – so they are also instances of Jesus

    excellant brother!!!

    //
    இப்படி சொல்லுவதோடு எங்கள் ஆண்டவர் நிற்கவில்லை அதனை நடத்தியும் காட்டினார். கிராமத்தானின் கழுதைக் குட்டியை அவரது சீசர்கள் அதை வளர்த்தவனிடம் அனுமதி இல்லாமலே அவன் கொட்டடிக்குள் போய் இழுத்து வந்தார்கள். அவன் அதை கேட்ட போது “ஆண்டவர் கேட்கிறார்” என்பதையே உத்தரமாக சொன்னார்கள் என்று புனித வேதம் சொல்கிறது. எனவே ஏசுவின் வழியில் நாடு செல்வதை தடுக்காதீர்கள். உங்களால் தடுக்கவும் முடியாது. ஏனென்றால் நீங்களே தான் நவீன எஸ்தரான அன்னை சோனியா காந்தியை ஓட்டு போட்டு ராச்சியாதிபதி ஆக்கினீர்கள். ஏனென்றால் அப்படி செய்யும்படியாக உங்கள் மூளைகளை குழப்பி எங்கள் ஆண்டவர் உங்களை ஏவினார்
    //

    yeah the world know – he kept saying all these nonsense and the jews decided to kill him and made it too – so ultimately Jehovah won, not Jesus, if i have to choose your approach and Mohhammad and his insane men killed a huge number of christians and declared Allah Won 🙂

    Why is your andavar involved in mind confusion tactics 🙂 sounds very funny – only hypnotists do that

    The great looters – Americans have realized that christianity will only let them down – they are becoming Hindus in bunches 🙂 what to do? the truth of Vedanta cannot be hidden – it will persist any eventuality- it will persist despite Sonia, Karunaanithi,Mohammed,Hitler, Gajini, Tuglak, Aurangazeeb and Robert Manicam too 🙂

    Brother your religion says Life is in blood – what a funny thing – grossly unscientific and uncreative
    Brother yuor religion says World is Flat 🙂 and kills people who say it is Round 🙂
    Brother your reliion said plants are lifeless 🙂

    Brother your religion has two gods Saathaan and Christ – both are equally powerful
    Brother your God is a Jelaous god as he says
    Brother Your god is a murderer as he himself says
    Brother your God is a looter as he himself says
    Brother you religion says world was created only 6000 years before 🙂 ha ha ha
    to sum it up – it says all kinds of cock and bull stories – those who read it can only say cock and bull stories like You

    If God creates you instantly (as bible says so) – why does he create Muslims in the first place – is it merely for you to loot them :-).

    If God creates you instantly why not create you rich and why does he want an Hindu Majority countr’s goverment pay alms to christian children

    Brother Brother – many christans are being murdered in Afgaistan – so what your God says (that i will protect you – i will be with thee) is all false – he is lying – beware – please please please try to use your brain, think, Arise, Awake – don’t drink too much Wine and blood it is not good for health – it makes Jack a dull boy – so stop injecting you with poision

    So Jesus also says a true child will drink poison and hold snakes for him – are you ready? can you send us a youtube link of you doing it – P.S if for any reason you can’t ask one of the other true child to do so

  39. //
    எனக்கு என்னவோ இந்த ராபர்ட் மாணிக்கம் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு கிறித்துவர்களையும் சோனியாவையும் ஒருவர் கிண்டல் செய்கிறார் என்று தோன்றுகிறது.
    //

    if so i thank that Gentleman – for he gave me an opportunity to laugh laugh and laugh

  40. இந்த வகை பிறழ் மனநிலைகளுக்கு நம் சமுதாயம் சரியான அணுகுமுறை கொடுப்பதில்லை. அவர்கள் மத்தியில் இது ஒரு சரியான வாதம் எனவும் நம்மவரோ இதனை ஏதோ உளறுகிறான் என்றும் கூறி விட்டு விடுகிறோம். உள்ளிருக்கும் வியாதியின் வெளிப்பாடு என்று தெரிந்தால் அந்த வியாதி அடுத்தவருக்கு தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்போம். ஆனால் இங்கோ வியாதி பரப்ப படுகிறது. அதன் தீவிரம் புரியாமல் நாம் இருக்கிறோம். நேற்று ஜெயா டிவியில் ஹரியுடன் நான் நிகழ்ச்சியில் பாடிய ஒரு பெண்ணிற்கு தொண்டையில் கோளாறு என்றவுடன் நடுவர் சரத் அது குணமாக எல்லாம் வல்ல கர்த்தரிடம் வேண்டி கொள்வதாக கூறினார். அந்த பெண் ஹிந்து, சரத்தும் ஹிந்து.
    எனக்கு அன்பே சிவம் படத்தில் ஏமாற்றுக்காரராக வரும் sanskrit பண்டிதரும் விபத்தில் தொண்டு செய்யும் nunnum ஞாபகத்துக்கு வந்தார்கள். இந்த வியாதி கொஞ்சம் முத்தி போய் விட்டது என்று நினைக்கிறேன். அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

  41. Ada loosu manickam come to bangalore shivaji nagar church.. hindukal pola kavi udai anivathum.. ooru fulla nadantu hindukal pola patha yathirai povathum.. thare ootam vidarathum…vitta pal abishekam santhana abishekam than illai.. idol worship illanu sollitu yenda jesus oda selaya vechurukeenka..silaya vechu yenda vendureenkha.. Nan anaithu mathathayum mathikaravan.. manikam ponra araka kunam padaithavarkalidam pesum pothu irukinra mathipum poi vidukinrathu.. yethachum correctaa point pidichu sonna avan unmiyana christian illainu kalati vittuduvanka.. Neenkhal unmiyana christianaka irunthal nan already pathivu seitha URL ulla unkhal theva thootharkal yeluthiya vasanathirku vilakam sollavum..

    Om nama shivaya
    Murali

  42. இந்த ராபர்ட் சொல்லுகிற சில மேற்கோள்களை பாருங்கள். ஏசு இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறாரா? நான் இத்தனை நாளும் பழைய ஏற்பாட்டில்தான் கொலைக்காரத்தனம் இருக்கிறது ஏசு ரொம்ப மென்மையானவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஏசு சொல்வதற்கும் “பழைய ஏற்பாட்டுக்கும்” ஒரு தொடர்ச்சி தெரிகிறது பார்த்தீர்களா? யுதர்களாவது ஏதோ ஒரு காலகட்டத்தில் நடந்த ஒரு விஷயமாக அதை பார்க்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்களோ கொலையையும் நாடு பிடிப்பதையும் செய்வது கிறிஸ்தவ மத நம்பிக்கையால்தான் என்பது தெளிவாகிறது. இந்துக்கள் கிறிஸ்தவ மனநிலையை உளவியலை புரிந்து கொள்ள வேண்டும்.

  43. Robert Manickam நான் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் பற்றோர்களை நாயே பேயே என்று திட்டுவது போல் இருக்கிறது, நீங்கள் எங்கள் தமிழகத்திலே பிறந்து எங்கள் மதத்தையே திட்டுவது. உங்கள் ஆணவம் முத்தி பொய் விட்டது. உங்களை போன்ற தாயை பழிக்கிற தேச துரோகியை நாங்கள் இனிமே விட்டு விட மாட்டோம். கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் போன்ற தேச துரோகியகளை நாங்கள் இனி மேல் உங்கள் சைத்தானை போல் நினைத்து துரத்தி அடிப்போம். உங்கள் ஆணவத்தில் இருந்து நாங்கள் இன்று மேலும் உர்ஜிதம் கொள்கிறோம்.

    (edited and published)

  44. ராபர்ட், உங்க மத பிரச்சாரத்த இங்கே செய்யாதீங்க. ரொம்ப எரிச்சலா இருக்கு. இரண்டாவது, நீங்க என்னா சொல்றிங்கன்னு சத்தியமா புரியல.

  45. சர்சில் பெரிய பெரிய அளவில் சிலுவை வைத்துள்ளார்கள் சிலுவையில் அரைந்த செத்த ஏசுவின் பிண உருவ சிலைகளை வைத்துள்ளார்கள் மாதா சிலைகளும் உண்டு இதை தவிற எண்ணற்ற ஏசு படங்கள் சர்சில் தொங்குகின்றன இவற்றிற்க்கு மெழுகுவத்தி ஏத்தி தூபம் காட்டுகீறீர்கள் அப்பம் நேவிதியம் செய்து பிராசாதம் கொடுக்கீறீர்கள் இதை தவிற மாதா சிலைகள் தெருக்கோடியில் எல்லாம் புதி புதிதாக முளைத்துக்கொண்டிருக்கிறது. இதைவிடகொடுமை வேளாங்கன்னி கோவிலில் மாரியம்மன் கோவிலில் இந்து சம்பிரதாயங்கள் கடைபிடிப்பதைபோல் வழிபாடு நடத்தி தேரில் சிலையை ஊர்வலம் விடுகீறீர்கள். எனவே உருவ வழிபாட்டை குறைகூற உங்களுக்கு அதிகாரம் கிடையாது.

  46. ராபர்ட் மாணிக்கம் என்று எழுதுவதை பார்த்து சிரிக்கிறோம். ஆனால்தமிழ்கத்தில் ஒரு சுவிசேச நற்செய்தி(தீயசெய்தி) கூட்டத்துக்கு போனால் இதை விட குரூரமாக பேசுவார்கள். அதையெல்லாம் கேட்டுவிட்டு இது சிரிப்புக்குரியதா அல்லது நம்மை நாமே நொந்துகொள்ளவேண்டுமா என்று சிந்தியுங்கள். செத்த பிணத்தை வணங்கிகொண்டே ஒவ்வொரு கிறிஸ்துவ கூட்டத்திலும் இதே பேசுகிறார்கள். கல்யாண திரு உருவங்களை வணங்கும் இந்து வழியை, விக்கிர ஆராதனை என்றும் சாத்தானை வழிபடுவது என்றும் அவதூறு பேசுகிறார்கள். இதனை யாரும் மத நல்லிணக்கத்துக்கு எதிரான பேச்சு என்று கண்டிப்பதில்லை. இதனால்தான் சமீபத்தில் மதம் மாறியவர்கள் எந்த குடும்ப சடங்கிலும் கலந்துகொள்ள மாட்டார்கள். கிறிஸ்துவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை உடைத்தால்தான் இது திருந்தும். அதனை செய்யவேண்டிய தமிழ் இந்து போன்ற தளங்களோ நாகரிகம் கருதி அவற்றை தவிர்க்கின்ற்ன. இது எதிர்ப்பார் இன்றி பொய்ப்பிரச்சாரம் பல மடங்கு தமிழ்நாட்டில் பரவ வழி வகை செய்கிறது.

  47. முஸ்லிம் யாராவது இங்கே வந்து இது முஸ்லீம்களுக்கு இந்துக்கள் தரவேண்டிய ஜிஸியா வரி என்றும் எழுதலாம். அதனைப் பார்த்தும் நாம் சிரிக்கலாம். ஆனால், ஹஜ் யாத்திரை, எக்ஸ்ட்ரா சலுகைகள், படிப்புக்கு செலவு என்று கோவில் உண்டியலில் இந்துக்கள் போடும் பணத்தை இப்படிஹஜ் யாத்திரைக்கும், முஸ்லீம்கள் படிப்புக்கும் மட்டுமே செலவு செய்வதும் நமது ஆட்சியாளர்கள் நமக்கு கொடுத்திருக்கும் பரிசு. இந்த ஆட்சியாளர்களை மாற்ற சக்தி உள்ள மக்களோ … காசு வாங்கிகொண்டு ஓட்டு போடுகிறார்கள். காசு கொடுத்து சன் டிவி விஜய் டிவி பார்க்கிறார்கள். எங்கே போய் முட்டிக்கொள்வது?

  48. காசி

    mr மாணிக்கம்,
    என்ன ஒரு குள்ள நரித்தனம். இயேசு தோன்றி 2000 வருடம் என்று சொல்கிறார்கள்

    ஆனால் 500 – 600 வருடம் முன்பு வரை கிறிஸ்தவம் இந்த அளவு யாருக்கும் தெரியாதே. அப்போ அவருக்கு சக்தி இல்லையா. ஏன்யா பைத்தியம் பிடிச்சு அலைறீங்க.

    பூமி தட்டைன்னு சொன்னீங்க. பூமிய சூர்யன் சுத்துதுன்னு சொன்னீங்க. எதுத்து கருத்து சொன்னா மரண தண்டனை. இதுதான் விவிலியத்தில் இருக்கு.

    சரி பலச விடுவோம், நாங்கல்லாம் விக்ரக ஆராதனை செய்பவர்கள் தான்.

    எங்களிடம் வியாபாரம் செய்யாமல் உங்களால் இருக்க முடியுமா?
    எங்களிடம் கல்வி கட்டணம் வாங்காமல் உங்களால் இருக்க முடியுமா?
    எங்கள் உதவி இல்லாமல் தனித்து உங்களால் இருக்க முடியுமா?

    மதம் என்பது தயிர் சாதத்துக்கு ஊறுகாய் மாதிரி இருக்கனும். அது ஒரு பகுதி. ஆனால் நீங்கள் ஊறுகாய்கு தயிர் சாதத்தை தொட்டுகறீங்க.

    மதம் மதம்நு அலையாதீங்கயா.

  49. //மாதா சிலைகள் தெருக்கோடியில் எல்லாம் புதி புதிதாக முளைத்துக்கொண்டிருக்கிறது. இதைவிடகொடுமை வேளாங்கன்னி கோவிலில் மாரியம்மன் கோவிலில் இந்து சம்பிரதாயங்கள் கடைபிடிப்பதைபோல் வழிபாடு நடத்தி தேரில் சிலையை ஊர்வலம் விடுகீறீர்கள். எனவே உருவ வழிபாட்டை குறைகூற உங்களுக்கு அதிகாரம் கிடையாது//

    அய்யா நீங்கள் புரியாமல் பேசுகிறீர். மேரி மாதாவை வணங்குவர்காள் கத்தோலிக்கர்கள். நாங்கள் அல்ல. ஆனால் ஒரு ecumenical கூட்டத்தில் ஒரு கத்தோலிக்க அருட்தந்தையிடம் இதைப்பத்தி கேட்டேன். அவர் சொன்னார்

    “பாருங்க இந்துக்கள் மாரியம்மன் பேச்சியம்மன் என்றெல்லாம் கல்லை பொம்பளை போல செய்து அதை சாமியாக கும்பிடுகிறார்கள். இவர்களை மாத்த என்ன செய்யவேண்டும். தேவனின் அன்னையான மாதாவை நாங்கள் முன்வைக்கிறோம். இந்துக்கள் இரண்டையும் ஒன்ணாக கும்பிடிவாங்க. ஆனா மாதா தெய்வம் கிடையாது. அவர் பெண். பெண் தெய்வமாக முடியாது. மாதா ஏசுகிட்ட உங்களுக்காக பரிந்துரைக்கும் தூதுவர்தான். இண்டூஸ் மாரியம்மனை மேரியையும் ஒண்ணா பாக்க ஆரம்பிச்சதுமே தன்னால மாரியம்மன் கடவுள் இல்லை அப்படீங்கிறதுக்கு அவுங்கள அறியாம வந்துருவாங்க. பிறகு வேளாங்க்கண்ணி மாதாவை கும்பிட ஆரம்பிச்சதும் மாதா வெறும் தூதர்தான் ஏசுதான் உண்மையான சாமின்னு அவுங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறது” சுலபம்ன்னாரு

    .. என்ன செய்றது மூடநம்பிக்கை உள்ள இந்துக்களை மனம் திருப்ப இதெல்லாம் நாங்க செய்ய வேண்டியிருக்குது. உங்களுக்கு சந்தேகம் இருந்தா மேரிக்கு சொல்ற பிரார்த்தனையை பாருங்க அது “அர்ச்சிஸ்ட மரியாயே சர்வேஸ்வரனுடைய மாதாவே…கர்த்தர் உம்முடனே….பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமேன்” அதாவது மாதாவுக்கு மதிப்பே அவர் ஏசுவுடைய மாதா என்பதால்தான். அவர் நமக்காக ஆண்டவனிடம் வேண்டும் படி ஆண்டவனுக்கு தாழ்ந்த நிலையில்தான் இருக்கிறார். ஆனால் நீங்கள் கும்பிடும் மாரியாத்தா முத்தாரம்மா எல்லாம் ஆண்டவனுக்கு இணையாக சொல்கிறீர்கள். பெண் எப்படி ஆண்டவன் ஆக முடியும்? எனவேதான் எங்கள் கிறிஸ்தவத்தின் மூவொருமை நிலையிலும் கூட பெண் கிடையாது: பிதா சுதன் பரிசுத்த ஆவி மட்டும்தான்.

  50. @இராபர்ட் மாணிக்கம்
    நான் இந்த பதிலை எதிர்பார்த்தேன். உங்கள் நோக்கம் மத மாற்றம் மட்டும் தான். அதுக்காக தேவைப்பட்டா காவடி கூட தூக்குவீங்கனு உங்க வாயாலேயே சொல்லி விட்டீங்க. ஒரு மதத்துக்கு என்று ஒரு கொள்கை இருந்தால் அதை ஏன் இன்னொரு மதத்துக்கு வேண்டி மாற்றிக் கொள்ள வேண்டும் ? அப்போ கொள்கை என்பதே மத மாற்றம் என்பது தான் என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்கள்.

    //மேரி மாதாவை வணங்குவர்காள் கத்தோலிக்கர்கள். நாங்கள் அல்ல//
    இந்த ஒப்புதல் பிரிவினை இருப்பதை ஒப்புக் கொள்ளும் ஒப்புதல். இந்தியாவுக்கு வெளியில் கத்தோலிக்க வழிபாடு இப்படி இல்லை. அங்கு வேறு மாதிரி. அங்கே இரு பிரிவுகளும் கடுமையாக மோதிக் கொள்கின்றன. இங்கே வந்து மத மாற்றத்துக்கு வேண்டி அடக்கி வாசிக்கின்றன. ஒரு கிறிஸ்தவன் பிற மத நண்பனோடு இங்கே சகஜமாக பழகுகிறான். ஆனால் க்ரிஸ்தவத்தின் பிற பிரிவுகளை மற்ற மதத்தவரை விட அதிகமாக வெறுக்கிறான். விமரிசிக்கிறான்.
    ஆனால் மத மாற்றம் செய்ய வேண்டும் எனும் போது கிறிஸ்தவத்தின் ஏதாவது ஒரு பிரிவுக்கு வந்தால் சரி என்று நினைக்கிறான்.

    இது என்ன கொள்கையோ ?

  51. This Robert Manickm is a nut,a dangerous nut though.He will rant like a parrot and he will not answer back to points raised about his cult Christianity and the immoral book called bible.Anyone with a pea brain like this Robert should know that as a phioshpy,christianity is a joke when compared to our great Vedas. It is like we are talking about Quantum physics in our religion and they are still trying to figure out answer to 1+1. Neverthless,beware of these nuts for they are fanatics.They would stoop to murder( as pointed out by the nut himself about red Indian massacare,Orissa murder of Swamiji in his asramam) if such acts will advance their causes.
    I do not see any point in wasting my precious time in replying to his lunatic rants.

  52. ராபர்ட்டு

    //
    “அர்ச்சிஸ்ட மரியாயே சர்வேஸ்வரனுடைய மாதாவே…கர்த்தர் உம்முடனே….பாவிகளாகிய எங்களுக்காக
    //
    சர்வேச்வரனுக்கு எப்படி மாதா இருக்க முடியும் – லூசு மாறி பேசவேண்டியது – இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மரியை வணங்குகிரார்கள் – மேரி கடவுளுக்கும் மனிதனுக்கும் ஒரு இடை தரகர் என்பது தான் கத்தோலிக்கர்களின் நம்பிக்கை – avargal ஏன் மேரி மாத சிலை வைத்து கும்பிடுகிறார்கள் – அங்கேலாம் ஹிந்துக்களை மாறா வேண்டிய அவசியம் இல்லையே – உங்களுக்கு வேண்டுமானால் நான் வெளி நாடுகளில் உள்ள ஏராளமான கத்தோலிக்க சர்சுகளில் இருந்து மேரியி சிலையை படம் பிடித்து face book ல share பண்றேன்.

    உருவமே வேண்டாதவருக்கு சிலுவை மட்டும் ஏனான் – அது மேல ஒரு பட்டு துணி வேற போட்டு வெச்சிருகீங்க

    உங்கள்ள சில பேரு சிலைய கும்பிடறாங்க – சில பேரு இல்ல – உங்களுக்குள்ள இருக்கிற அடி தடிய தீர்திக்கிட்டு இங்க வரலாம்

    கடவுl தன்னை போலவே மனிதனை படைத்தார் என்று ஒங்க ஏற்பாடு சொல்லுது – அப்புறம் கடவுளுக்கு உருவமே இல்லேன்றிங்க – நீங்களே உங்க எற்பாட்ட நம்பல்ல என்ன செய்ய

    இவரு எதோ கேட்டாராம் அப்புறம் ஒரு பாதர் சொன்னாராம் – இதிலிருந்தே தெரியலையா – வெறும் தண்ணிய போட்டு ஒளர பொய் பிரசாரம் பண்ற கேசுன்னு

    உங்களுக்காக இன்னும் சில புனித வரிகள் புதிய erpattilirunthu

    மக்கேவின் நெற்றியில் பொட்டு போல உள்ள சிoவப்பு நிறத்தை பார்த்து தேவன் அவளை விடாமல் கொள்ளுங்கள் என்றார்

    அது அவள் அடிபட்ட ரத்தம் என்று போவான் சொல்ல, எப்படியானாலும் அது சாத்தனின் வேலை அவளை முடிப்பதே தேவனாகிய நான் உனக்கிடும் கட்டளை – யோவான் 13.7.2.1

    கர்த்தராகிய நான் உங்களுக்காக அரேபியாவின் பூமிக்கு அடியில் தங்க சேமித்து வைத்துள்ளேன் அரபு மக்களை அடித்து அதை எடுத்து கொள்வது ஒரு தூயவனின் கடமை
    song 14.2.12.23

    முண்டாசு அணித்து மீசை இல்லாமல் தாடி வைத்தவன் எல்லாம் முட்டாள் அவனை ஏமாற்றி கொள்வதே நீ எனக்கு செய்யும் ஜபம்
    sonia 245.1.8.1

    நீ பத்து பிள்ளைகளுக்கு குறையாமல் பெற்றுகொள்வதன் மூலமே எனது நற்செதியை உலகில் பரப்ப முடியும்

    pranaab mukarjee 1018.00.11.000

    நீ இரவில் முழித்து மட்டுமே என்னை தொழ பகலில் மற்ற தொழுகயாலர்களை வெட்ட வேண்டும்

    George Bush 109.21.56

    பாக்கிய நாளைக்கு பார்க்கலாம்

    இதெல்லாம் எங்கேன்னு கேக்கறீங்களா இப்போதான் பைபிள்ளோட பதி மூணு லச்ச்சத்தி பதிமூனாயிரத்து பதிமூணாம் version print ஆயிட்டிருக்கு – free sample கெடச்சது

  53. ராபர்ட் மாணிக்கம் புகுந்து கலக்குகிறார்.

    அவருடைய மதவெறி முழுவதையும் கொட்டித் தீர்க்கிறார். இந்துக்கள் உருவ வழிபாடு செய்வதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்துக்கள் வணங்குகிற கடவுள்கள் பெரும்பாலானவை மக்களோடு வாழ்ந்து அவர்களுக்காக உழைத்தவர்கள. முருகன் , ஐயப்பன், இராமர், கிருஷ்ணர் …. எல்லோரும் மக்களுடன் வாழ்ந்தவர்கள் தான். அவர்களைக் கடவுள் அவதாரம் என்று மக்கள் நம்புகின்றனர்.

    இந்த ராபர்ட் மாணிக்கம் கூறும் கடவுளுக்கு என்ன சான்று இருக்கிறது? யாரோ ஒருவர் எழுதி வைத்ததைப் படித்து விட்டு இங்கே அமைதியான இந்திய சமுதாயத்தில் மோதலைத் தூண்டும் முரட்டு தனத்தை செய்கிறார்.

    அன்புக்குரிய நண்பர் இராபர்ட் மாணிக்கம், நீங்கள் உங்கள் ஜீவனுள்ள கடவுள் ச ர் வ வல்லமை உள்ளவர் என்றால் தொடரச்சியாக வானத்திலே ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக எல்லா நாட்களும் முழு நிலவாக பவுர்ணமியாக ஒளி விடச் செய்ய முடியுமா? அப்படி செய்தால் நான் நீங்கள் சொல்வதை உண்மை என்று ஒத்துக் கொள்வேன், மத விடயங்களில் உங்களைப் பின்பற்றுவேன்.

    அப்படி செய்ய முடியாத பட்சத்திலே நீங்கள் வெறுமனே காட்டுக் கத்து கத்தி, உங்கள் மத வெறியைக் கொட்டுவதால் பயன் இல்லை. நீங்கள் அமைத்த வெறியை தூண்டி விட்டாலும், நாங்கள் அஹிம்சை வழியிலே, அத்வேஷ்டா வழியிலேயே நிற்போம்.

    உருவ வழிபாட்டை மட்டும் மூடநம்பிக்கை என்று சொல்வது எப்படி சரியாகும். உருவமல்லாத கடவுளுக்கு மட்டும் நிரூபணம் இருக்கிறதா? இல்லையே!!!!!!

    அப்படி இருக்கும் போது உருவ வழி பாட்டை மட்டும் கட்டம் கட்டித் தாக்க வேண்டிய அவசியம் என்ன?

    கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் எல்லாம் வல்லவர் என்றால் , தனக்கு தேவைப் படும் போது , தனக்கு தேவைப் படும் வடிவத்தை அவர் எடுத்துக் கொள்ளும் வலிமை அவருக்கு இல்லையா? அதற்க்கு நம் அனுமதியை அவர் பெற வேண்டுமா?

    திரு. ராபர்ட் மாணிக்கம் உருவ வழிபாட்டை மட்டும் (தனியாக) மூடநம்பிக்கை என்று சொல்கிறார் என்றால்,

    1)முதலில் அவர் கடவுள் என்று ஒன்று இருப்பதை காட்ட வேண்டும்,

    2) பிறகு அவர் உருவம் இல்லாத நிலையில் மட்டுமே இருக்கிறார்
    என்பதையும் காட்ட வேண்டும்,

    3) பலருக்கும் உருவத்தை அளிக்கும் அவர் தனக்கு ஒரு உருவத்தை எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாத நிலையில் இருக்கிறார் என்பதையும் நிரூபிக்க வேண்டும். இத்தனையும் நிரூபித்து விட்டு திரு. ராபர்ட் மாணிக்கம் உருவ வழிப்பாட்டை மட்டும் முட்டாள் தனம் என்று சொன்னால் அதை நாம் ஒத்துக் கொள்ளலாம்.

    மேலும் உருவ வழிபாடு ஒருவனுக்கு ஒரு உருவத்திலே மனத்தைக் குவித்து, தன் புலன்களை அடக்கி, சிந்தனையை ஒரே இடத்திலே செலுத்தும் பயிற்ச்சிக்கு உதவக் கூடும் என்று கூறப் படுவதை நாம் மறுக்க இயலாது.

    மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் போதே இந்த அளவுக்கு தன்னுடைய மத வெறியைக் காட்டுகிறார்கள் என்றால், இன்னும் வருங்காலத்தில் மத வெறி கூடினால், இங்கேயும் சிலுவைப் போரை ஆரம்பித்து, இந்தியாவையும் பாலஸ்தீன் ஆக மாற்றினாலும் ஆச்சரியம் இல்ல.

  54. //ஆனா மாதா தெய்வம் கிடையாது. அவர் பெண். பெண் தெய்வமாக முடியாது. //

    ஏன்யா ராபர்ட்டு, மாதாவை கும்பிடறவன் ஏசுவை திட்டறான், ஏசுவக் கும்பிடறவன் மாதாவை திட்டறான். உங்க பொளப்பு நாறுது. மொதல்ல அதை சரி பண்ணுங்க.

    (edited and published)

  55. //இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மரியை வணங்குகிரார்கள்//
    ஒரு காலத்தில் இந்துக்களைப் போலவே உலகம் எல்லாம் பொம்பளை சாமியை கும்பிடுகிறவர்கள் இருந்தார்கள். அந்த பொம்பளை சாமிகளை நாங்கள் சாமி நிலையிலிருந்து கீழே இறக்கி மேரியாக மாற்றி கர்த்தருக்கு கீழானவர்களாக மாற்றினோம். இதே போல இந்து கோவிலெல்லாம் கிறிஸ்தவ சர்ச் ஆன பிறகு அங்கே உள்ள அம்மன் சாமியெல்லாம் நாங்க மேரி ஆக்கி விடுவோம். அதற்கு துணை செய்யத்தான் கர்த்தர் எங்களுக்கு அன்னை சோனியாவையும் டாக்டர் கலைஞரையும் அனுப்பியிருக்கிறார்.

  56. நீங்கள் உங்கள் ஜீவனுள்ள கடவுள் ச ர் வ வல்லமை உள்ளவர் என்றால் தொடரச்சியாக வானத்திலே ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக எல்லா நாட்களும் முழு நிலவாக பவுர்ணமியாக ஒளி விடச் செய்ய முடியுமா? அப்படி செய்தால் நான் நீங்கள் சொல்வதை உண்மை என்று ஒத்துக் கொள்வேன், மத விடயங்களில் உங்களைப் பின்பற்றுவேன்.

    ஆண்டவரை இப்படியெல்லாம் சோதிக்கக் கூடாது என்று ஜீவனுள்ள சத்திய புத்தகமான விவிலியத்திலே சொல்லியிருக்கிறது. பக்தர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வர அவர் ஒண்ணும் இந்து சாமி அல்ல. அவர் ஜீவனுள்ள தேவன். அவரை சோதிப்பவர்களை அவர் நரக தீக்குள்ளே போட்டு எரிப்பார். நீ என்ன தப்பு பண்ணினாலும் மன்னிப்பேன் ஆனால் என்னை சோதித்தால் மன்னிக்க மாட்டேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் அவர் ராசாதி ராசா. ஆனால் உங்க சாமியெல்லாம் அப்படி இல்லை. “என்னை எப்படி சோதித்தாலும் நான் உனக்கு வரம் தருவேன் ” என்று சொல்கின்றன. ஒரு ராசா அப்படி சொல்லுவாரா? மாட்டார். அவர் ஆணைதான் போடுவார். எனவேதான் சொல்கிறேன் ஏசுதான் ராசாதி ராசா. பிள்ளைகளை மரத்தில் அடித்து கொலை செய்த கம்போடியா நாட்டு கொலைக்கார கம்யூனிஸ்ட் கிறிஸ்தவனாக மனம் மாறியதும் அவனை காப்பாற்ற உலகநாடுகளே வருகின்றன. ஆமாம் எங்கள் கர்த்தர் அவரை தூஷனை செய்வதைத் தவிர மற்ற எல்லா தப்புகளையும் மன்னிப்பார் என்பதை நிரூபித்து காட்டுகிறார். ஹிட்லர் இந்துவாக மாறினால் அவன் இந்து ஆகிவிட்டான் அதனால் விட்டுவிடுங்கள் என்று காந்தி கேட்டிருப்பாரா? மாட்டார். ஏனென்றால் உங்க மதத்தில் நம்பிக்கையை விட நடத்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். ஆனால் எங்கள் மதத்தில் நடத்தையைவிட நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். கணக்கில்லாமல் கொலை செய்த கம்யூனிஸ்டையே அவன் கிறிஸ்தவனானதால் மன்னிக்கச் சொல்லி உலக கிறிஸ்தவர்கள் கேட்பதிலிருந்தே கிறிஸ்தவ்மே நல்ல மதம் என்று தெரியவில்லையா?

  57. கண்டிப்பாக இராபர்டு மாணிக்கம் உண்மையிலேயே சுவிசேஷ சூழ்ச்சியர்களையும் சோனியாவையும் கிண்டல் பண்ணத்தான் எழுதுகிறார் என்று தோன்றுகிறது —

    // நீ என்ன தப்பு பண்ணினாலும் மன்னிப்பேன் ஆனால் என்னை சோதித்தால் மன்னிக்க மாட்டேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் அவர் ராசாதி ராசா. //

    // எனவேதான் சொல்கிறேன் ஏசுதான் ராசாதி ராசா. பிள்ளைகளை மரத்தில் அடித்து கொலை செய்த கம்போடியா நாட்டு கொலைக்கார கம்யூனிஸ்ட் கிறிஸ்தவனாக மனம் மாறியதும் அவனை காப்பாற்ற உலகநாடுகளே வருகின்றன. ஆமாம் எங்கள் கர்த்தர் அவரை தூஷனை செய்வதைத் தவிர மற்ற எல்லா தப்புகளையும் மன்னிப்பார் என்பதை நிரூபித்து காட்டுகிறார். //

    // ஆனால் எங்கள் மதத்தில் நடத்தையைவிட நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். கணக்கில்லாமல் கொலை செய்த கம்யூனிஸ்டையே அவன் கிறிஸ்தவனானதால் மன்னிக்கச் சொல்லி உலக கிறிஸ்தவர்கள் கேட்பதிலிருந்தே கிறிஸ்தவ்மே நல்ல மதம் என்று தெரியவில்லையா? //

  58. // கண்டிப்பாக இராபர்டு மாணிக்கம் உண்மையிலேயே சுவிசேஷ சூழ்ச்சியர்களையும் சோனியாவையும் கிண்டல் பண்ணத்தான் எழுதுகிறார் என்று தோன்றுகிறது — //

    மன்னிக்கவும். சுவிசேஷக்காரர்களின் அறிவைச் சற்று குறைவாக எடை போட்டு விட்டேன் என்று நினைக்கிறேன். இப்பொழுது சொல்கிறேன்: நிஜமாகவே ராபர்ட் அவர்கள் சொல்வதைப் போல, ஒரு சுவிசேஷ அறிவாளிக்குத் தமது ஜீவனுள்ள கர்த்தர் மேலும், அந்த கர்த்தருடைய மாதா (ஆனால் கடவுள் அல்ல) மேலும், உன்னதமான ஏற்பாடுகளின் மேலும் நம்பிக்கை இருக்க வாய்ப்புண்டு.

  59. We have to really thank Roert Manickam – he is providing us a sample of what evangelical, fanatic christians talk in their inner circles. otherwise all of us get to see only the make believe ‘Loving’ face of christian groups. Thank you brother Robert.

    while it is good to counter this fanaticism with strong rebuttals, it is important to note one thing. what the article talks about is the denial of rights to poor Hindu children, the fundamental, democratic right which is trampled by the Indian state,and TN state govt in particular.. But Robert is successfully converting this into a *Theological* argument. He boasts that such ‘concessions’ are given to Christians because their religion is inherently superior and Hinduism is bad. What a nasty & stinking argument!

    He justifies a grave injustice and discrimination done to the Hindu poor based on Christian theology. But everyone of knows that christians (and Muslims) get such concessions is not thru any divine intervention. But bcaz They influence all the political powers showing the carrot of vote bank and thru murkier blackmails in line with dirty, third-rate, sectarian and evil political strategy. Our misfortune is that the selfish, “secular” parties in India crave for their votes.

    Robert, the christians are flourishing in India NOT because of the powers of Jesus or Jehova, but because of the above said reasons. Shame on you that you glorify this scum thru your stinking theology.

  60. அன்புக்குரிய நண்பர் இராபர்ட் மாணிக்கம்,

    சோதித்துப் பார்க்க கூடாதே என்று சொல்வது சோதனை செய்து நிரூபிக்க முடியாத இயலாமையை மறைக்கவே.

    உண்மை என்று இருந்தால் அமைதியாக நிரூபித்துக் காட்ட வேண்டும், நிரூபிக்க மடியாத நிலையில் இப்படி அடாவடிப் பேச்சு மூலம் மிரட்டுவது கற்கால போக்கே.

    அப்படி சோதித்துப் பார்க்க முடியாத ஒன்றின் அடிப்படையில், நீங்கள் மத வெறியை உங்கள் மனதிலே வளர்த்து சமூகத்தைக் கெடுப்பது தவறாகும்.

    ஒரு அறிவியல் கொள்கையை மக்களுடன் முன் வைப்பது என்றால் அதை எல்லோரையும் ஒத்துக் கொள்ள செய்ய எவ்வளவு கடினமாக இருக்கிறது, அதை செய்து காட்ட வேண்டும, . பலமுறை செய்து காட்ட வேண்டும் . யார் வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்!
    மின் காந்தப் புலத்தின் வூடாக மின் கடத்தி குறுக்கு வெட்டாக வூடுருவி சென்றால் அதில் மின்னோட்டம் உண்டாகிறது என்பதை நிரூபித்துக் காட்ட இயலும். எத்தனை முறை வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். அதை உலகம் ஏற்றுக் கொள்ள தயங்க வேண்டியதில்லை.

    ஆனால் உங்களிடம் எந்த நிரூபனமோ, ஆதாரமோ, சரி பார்ப்போ எதுவுமோ இல்லை. அதனால் தான் சோதனை செய்யக் கூடாது என்று பின் வாங்குகிறீர்கள். சோதனை செய்ய இயலாது. எங்களால் முடியாது , நாங்கள் புத்தகத்தில் எழுதி இருப்பதை அப்படியே ஒப்பிக்கிறோம், நீங்களும் அப்படியே செய்யுங்கள் என்று சொல்லுவது நேர்மையான பதிலாகும்.

    சரி நம்பிக்கை அடிப்படையிலே , நீங்கள் அமைதியாக கும்பிட்டு விட்டுப் போனால் யாரும் அதை குறை சொல்லவில்லை, நல்லிணக்க அடிப்படையிலே எல்லா மதத்தினருடனும் பிரார்த்தனையில் பங்கெடுக்கத் தயாராக இருப்பவன் உலகில் இந்துவே. ஆனால் நீங்கள் ஆதாரம் இல்லாத ஒன்றை அடாவடியாக எல்லோரிடமும் வெறியுடன் திணிக்க முயன்று பிற மதங்களை இகழ்ந்து சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கிறீர்கள்.

    இந்த மதவெறியின் காரணமாகவே மத்திய தரைக் கடல் பகுதியிலே தொடர்ச்சியாக புனிதப் போர்களை நடத்தி, இரண்டு உலகப் போர்களில் இறந்தவர்களை விட அதிகமான மக்களைக் கொன்று குவித்து விட்டார்கள். அதே மத வெறி அடாவடிக் கருத்துக்களை இங்கே கொண்டு வந்து கொட்டுகிறீர்கள்.

    மொத்த மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் போதே மத வெறி இந்த அளவுக்கு இருக்கிறது என்றால், இன்னும் மக்கள் தொகை அதிகமானால் இந்தியாவிலும் சிலுவைப் போர்களை கொண்டு வருவீர்களோ என்ற கவலையே உருவாகிறது. ஏனென்றால் உங்களிடம் மத சகிப்புத் தன்மை இல்லை.

    உங்களுடைய கற்பனைகளை உலகில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்கிற அடக்க முடியாத வெறியினால் மன்னிப்புக் கதைகளை போர்வையாகப் போர்த்திக் கொண்டு மத வெறியை அள்ளித் தெளிக்கிறீர்கள்.

    //பிள்ளைகளை மரத்தில் அடித்து கொலை செய்த கம்போடியா நாட்டு கொலைக்கார கம்யூனிஸ்ட் கிறிஸ்தவனாக மனம் மாறியதும் அவனை காப்பாற்ற உலகநாடுகளே வருகின்றன.

    கணக்கில்லாமல் கொலை செய்த கம்யூனிஸ்டையே அவன் கிறிஸ்தவனானதால் மன்னிக்கச் சொல்லி உலக கிறிஸ்தவர்கள் கேட்பதிலிருந்தே கிறிஸ்தவ்மே நல்ல மதம் என்று தெரியவில்லையா? //

    இதுதான் நீங்கள் இயேசு கிறிஸ்துவிடம் கற்றதா? தன்னைப் போல பிறனையும் நேசி என்றதற்கு , பிறன் யார் என்று கேட்டதற்கு, ஒரு யூதன் கொள்ளைக்காரனால் தாக்கப் பட்டுக் கிடந்த போது அவனை அவ்வழியாக வந்த யூதர்கள் காப்பாற்றாத போதும் ஒரு சமாரியன் காப்பற்றினான். அந்த சமாரியனுக்கு யூதன் யார் என்று கேட்டார். நம்முடைய மத, மொழி, இனத்தை சாராத ஒருவனுக்கும் (பிறன்) உதவி செய்ய வேண்டும் என்பதுதான் இயேசுவின் கொள்கை. நீங்கள் கொலைக்கார கம்யூனிஸ்ட் கிறிஸ்துவன் ஆக மாறியதால் அவனைக் காப்பற்றி விட்டார்கள் என்று பெருமை பேசுகிறீர்களே, அதாவது மதம் மாறியதால் காப்பற்றி மன்னித்தீர்கள், அதாவது கிறிஸ்தவனுக்கு கிறிஸ்தவன் உதவுவான், இது தான் இயேசு சொன்னதா?

    //கணக்கில்லாமல் கொலை செய்த கம்யூனிஸ்டையே அவன் கிறிஸ்தவனானதால் மன்னிக்கச் சொல்லி உலக கிறிஸ்தவர்கள் கேட்பதிலிருந்தே கிறிஸ்தவ்மே நல்ல மதம் என்று தெரியவில்லையா? //

    எந்தக் கொலையும் செய்யாத அப்பாவி ஜப்பானியர்கள் மீது அணு குண்டைப் போட்டு துடிக்க துடிக்க கொலை செய்ததில் இருந்தே உங்களின் மன்னிப்புக் கதைகளை புரிந்து கொள்ளலாமே.

    //ஏனென்றால் உங்க மதத்தில் நம்பிக்கையை விட நடத்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். ஆனால் எங்கள் மதத்தில் நடத்தையைவிட நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். //

    நீங்கள் முதலில் எந்த மதம் என்று தெரிவித்தால் நல்லது. ஏனெனில் உங்கள் எழுத்துக்கள் இயேசு கிறிஸ்துவின் கருத்தை ஒட்டி இருப்பதாக தெரியவில்லை.

    கொள்கை வழி நடப்பதே முக்கியம்., என்னைப் பார்த்து கர்த்தரே என்று அழைப்பது பலன் இல்லை என்று இயேசு கிறிஸ்து சொல்லவில்லையா?

    நான் பசியாக இருந்தேன் எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள் , தாகமாக இருந்தேன் குடிக்கக் கொடுத்தீர்கள் என்றார் . இது நடத்தையா, நம்பிக்கையா? உங்களின் பெயரால் அற்புதங்களை செய்தோமே, பிசாசுகளைத் துரத்திணோமே என்ற பொது, அப்பாலே போங்கள், உங்களை ஒரு போதும் கண்டதில்லை என்பேன் என்று சொல்லவில்லையே. அப்படி உங்களைப் பார்த்து அப்பாலே போ என்று இயேசு கிறிஸ்து சொல்லும் படிக்கு நீங்கள் மத வெறியை பரப்பி, சமூகத்தைக் கெடுக்கிறீர்கள்.

    தாய்மானவர், கணியன் பூங்குன்றனார், வியாசர், ஆங்கிரசர் , யாக்வல்ஞர், கிருஷ்ணர், ஆதி சங்கரர், அக்பர், சுவாமி விவேகானந்தர், காந்தி… உள்ளிட்ட எண்ணற்ற மத நல்லிணக்க அறிங்கர்கள் தோன்றி வளர்ந்த நாடு நம் நாடு. இந்தியாவே மத நல்லிணக்க நாடுதான். நாம் மற்றவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நீங்கள் மத வெறி விடத்தை உங்கள் மனதில் ஏற்றி எங்கள் மீது செலுத்துவது சரியல்ல.

    ஒரு சிலைக்கு சக்தி உண்டா என்றால், என் தலைவனின் சிலை கூடத்தான் கம்பீரமாக நிற்கிறது. அந்த சிலையை பார்த்து ஒரு தொண்டன் மன மகிழ்ச்சி அடைகிறான், அந்த சிலையை நோக்கி சல்யூட் அடிக்கிறான் என்றால் அந்த சிலை பதிலுக்கு அவனைப் பார்த்து சல்யூட் அடிக்காது. ஆனால் மக்கள் நன்மைக்கு அந்த தலைவன் உழைக்கிறான் என்ற நம்பிக்கையிலே ஒரு தொண்டன் சிலையை வணங்குகிறான். அதைப் போலத் தான் இந்து விக்கிரகத்தை வணக்குவதும். அதைப் பார்த்து சகிப்புத் தன்மை இல்லாமல் மத வெறியால துடிக்க வேண்டியதில்லை. இந்தியர்கள் எகிப்தில் இருந்து தப்பி வரவும் இல்லை. எந்தக் கட்டளையும் எங்களுக்கு இல்லை. நாங்கள் இஸ்ரேலியர்களை விக்கிரக ஆராதனை செய்ய சொல்லிக் கட்டாயப் படுத்தவும் இல்லை.

  61. //
    ஒரு காலத்தில் இந்துக்களைப் போலவே உலகம் எல்லாம் பொம்பளை சாமியை கும்பிடுகிறவர்கள் இருந்தார்கள். அந்த பொம்பளை சாமிகளை நாங்கள் சாமி நிலையிலிருந்து கீழே இறக்கி மேரியாக மாற்றி கர்த்தருக்கு கீழானவர்களாக மாற்றினோம்
    //

    அப்பாட – ஆக மொத்த விவிலியமும் ஏற்பாடு செய்யப்பட்டதுன்னு ஒத்துகினார்பா

    ஒரு பெண்ணை இறக்கி கீழ வெக்க ஏன்யா இவ்வொல பெரிய புஸ்தகத்த ரூம் போட்டு யோசிச்சு எழுதினீங்க

    இப்படியே முடிவு ஏற்படுமா – உங்கள் உளறல் உங்களையே காட்டி கொடுக்குது எப்படி இப்படி

    ராபர்ட் உளறுகிறார்
    //
    “அர்ச்சிஸ்ட மரியாயே சர்வேஸ்வரனுடைய மாதாவே…கர்த்தர் உம்முடனே….பாவிகளாகிய எங்களுக்காக
    //

    அப்போ சர்வேஸ்வரனுக்கு ஒரு மாதா இருக்கிறார் – அவர் சர்வேஸ்வரனை விட வயதிலாவது பெரிவராக இருக்க வேண்டும்

    நீங்கள் சொல்வதை பார்த்தல்
    – மரியாள் சர்வேச்வரனின் மாதாவே அல்ல, சும்மா நாங்க புருடா உட்டோம் அல்லது சர்வேஸ்வரனை விட பெரியவலான மாதாவை சர்வேஸ்வரனை விட சிரியவள் ஆக்கிநோம் இந்த இரண்டில் ஒன்றாகதான் இருக்க வேண்டும்

    நீங்கள் உலராது போலவே விவிலியம் பூர உளறல் இருக்குதுப்பா – முன்னுக்கு பின் முரனா எக்கச்சக்க மேட்டரு – wine சாப்டு எழுதினா இப்படித்தான்பா

    சரி உண்மையான ஜீவனே – புது விவில்ய copy வேணுமா – என்கிட்டே இருக்கு

    //
    நீ என்ன தப்பு பண்ணினாலும் மன்னிப்பேன் ஆனால் என்னை சோதித்தால் மன்னிக்க மாட்டேன்
    //

    சாத்தான் ஒண்டி தான் யேசுவ சோதிப்பார் – ஆனா சாத்தான கர்த்தரால ஒண்ணுமே பண்ண முடியாது ஏன்னா சாத்தானும் ஒரு உண்மையிலேயே ஜீவனுள்ள கடவுள் தான்

    (edited and published)

  62. இந்த ராபர்ட் ஐ தொடர்ந்து எழுத விடுங்கப்பா. ஒன்னு அவர் கிறிஸ்தவத்தை நக்கல் செய்கிறார். இல்லை என்றால் நல்லா நகைச்சுவையாக எழுதுகிறார். ரொம்ப சீரியஸ் விஷயங்கள் படிக்கும் போது இடை இடையே இந்த தமாஷ் நல்லா இருக்கு.

  63. I am 100% sure that sombody is hiding behind the name of “Robert Manikkam”. please forget him and write good comments and proposals to protect our hindupeoples and our religion.
    Love Logan

  64. //அதற்கு துணை செய்யத்தான் கர்த்தர் எங்களுக்கு அன்னை சோனியாவையும் டாக்டர் கலைஞரையும் அனுப்பியிருக்கிறார்// எங்கள் அலுவலகத்தில் கூட ஒரு மதமாற்று பேர்வழி இருக்கிறான். அவன் தான் சோனியாவுக்கே ஓட்டு போடுவேன் அல்லது சோனியாவுடன் யார் கூட்டனி உறவு வைத்துக்கொள்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டு என்கிறான். இந்துக்களை அழிக்க அரசியலைப் பயன் படுத்தும் இந்த கும்பலை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பி ஜெ பி யை முழுமனதாகா ஆதரியுங்கள். இந்துக்கள் தி மு க விற்கோ காங்கிரஸிர்கோ ஓட்டு போடாதீர்கள். எப்படி முஸ்லீம்கள் பி ஜெ பி க்கு ஓட்டு போடுவதில்லையோ அது போல இந்துக்கள் தி மு க விற்கு ஓட்டு போடாதீர்கள்.

  65. கர்தர் சோனியாவையும் கருனாநிதியையும் உருவ வழிபாடு செய்பவர்களை நல்பழிபடுத்தி கிருஸ்துவத்திற்க்கு திருப்புவது இல்லையேல் நசுக்குவது என்பதற்க்காக ஏவப்பட்டுள்ளார் என்று பெருமிதம் கொள்கீறீர்கள். அப்படியானால் இன்று இலங்கையில் நடந்துமுடிந்த இனபடுகொலைகளுக்கு இவர்கள்தான் காரணம் என்பதை மறுக்கமுடியுமா ?
    கொலையானவர்களில் பாதிக்குமேல் கிருஸ்துவர்கள் அவர்கள் எல்.டீ.டீ.இ யை சேர்ந்த பிராபகரன் முதல் பல தமிழுர்களும் சிங்களத்தவர்களும் கிருஸ்துவத்திற்க்கு மாறியவர்களே ஆவார்கள் (கர்தரின் கீழ் கொண்டுவரப்பட்டவர்கள்) மேலும் 30 வருடங்களாக இலங்கையை ஆண்டுவருவது கிருஸ்துவர்களான (கர்தரின் ஊழியராக மாற்றப்பட்ட) சிங்களத்தவர்களே. இதிலிருந்து தெரிவது என்ன ! கர்தரின் ஒரு படை கர்தரின் மற்றொறு படையை அழிக்க தயங்காது என்பது கண் எதிரே நீருபணமாகியுள்ளது. இறந்தவர்களில் ஒருவர்கூட ஒரிஜனல் கிருஸ்துவன் கிடையாது. இறந்தவர்கள் யாவரும் மதம்மாறி தமிழர்களும் உண்மை தமிழர்களும் ஆவார்கள்.
    இந்தவேலையை கிருஸ்துவம் கர்தரின் பேரால் 300 ஆண்டுகளாக உலகில் பல இடங்களில் பலகாலமாக செய்துகொண்டிருக்கிறது (போலிவியா, ஆண்டுராஸ், பனாமா, வெனிசுலா, எய்டி, இகுவேடார், மெக்ஸிகோ, அர்சன்டைனா, ராவான்டா, இஸ்ட், டைமோர், பிலிபைன்ஸ், கௌடமாலா, நாமிபியா, கோலம்பியா, இஐ சால்வேடார், பெரு, சவுத் ஆப்பிரிக்கா ,சாம்பியா, சிம்பாவே, போட்ஸ்வானா, புருன்டி ) இந்த நாடுகளில் எல்லாம் இன்று மக்கள் 50 முதல் 90 சதவிகிதம் வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உணவின்றி அல்லல்படுகிறார்கள்.
    இந்தநிலைமை இந்நியாவிற்க்கு ஏற்படவேண்டும் என்று துடியாய் துடிக்குகீறீர்கள். கிருஸ்துவம் ஒருமதம் அல்ல அது ஒரு இனவெறிகூட்டம் அதிலிருந்து மீண்டு தாய்மதம் திரும்ப மாணிக்கத்திற்க்கு வாழ்த்துக்கள்.

  66. Robert manickkam is a comedy piece.
    Haiyo, haiyo ennala srippu thaanga mudiyala.(vadivel style il padikkavum)

  67. நண்பர்களே please ignore robert manickam’s idiocy. Please focus on getting some stipends for Hindu poor children from the Govt through legal action. No secular govt can provide money to one religion’s kids vs. another. It must be illegal since it is then considered “favoritism” under the Indian constitution. This must be the basis of your arguments in Court.

    Also in America, we are fighting the root cause of roberrt manickam’s religion. His arrogance comes from the money coming from America. See for example the article below where we are fighting Christianity’s idiocy in America:
    https://invadingthesacred.com/content/view/59/52/

    Stay United and fight everything through legal means.

  68. இந்த இடுகை யின் நோக்கத்தை மற்ற விவாதங்கள் திசை திருப்பிவிடுமே
    என்றே நினைக்கிறேன்

    இது தொடர்பான ஆங்கில மொழி பெயர்ப்பினை பெற்றால் அதை எல்லா இந்திய
    நண்பர்களுக்கும் பகிரலாம்

    நன்றி

    சஹ்ரிதயன்

  69. Respected Mr.Jadayu

    A very important artilce. It gives a great awareness to all of us. Apart from joining the process of protest, we should also think how we can fight this collectively and indvidually.

    The point suggested by Mr.Satheesh is very good. It is a suggestion which can be defenitely explored and copied at different levels according to situation. They say charity begins at home. We can also help our nearest or distance family members who are in need. It is one way to prevent conversion for the sake of money or education.

    I have been reading Tamil Hindu for the past one or one and half a year. But everytime a very important article of such nature comes, some lunatic person posts some crazy comments and most of our energy is spent on replying to them.

    Feel there is no point in arguing with those people. If they had faith they would have never crossed over. I humbly feel we should put our energy and resources to more constructive ways on how to help and uplift our hindu society.

    Siva
    New Delhi

  70. aia manickam this is not the place to ppreach gospem u just live like Jesus .People shd see god in you .Unless u r perfect dont criticise others withour proper bible knowledge .Dont be sensitive emotional think twicw before speak.This is not the way to preach U read acts how they started preaching .We can control devil with the gift of holy spirit .He shd guide before speak

  71. mr edwin – why should yo control evil? is bible a book that talks about controlling evil? looks like?

    you are talking as though what mr Robert M wrote is perfectly write and only the place where he expressed is wrong 🙂

    the entire set of black books (with so many editions) cannot even come close to one statement (like Satyasya Satyam, vigyaanam aanandam brammaa…) which takes human being to higher consciousness level

    we consider eveil hunting as a subject matter of black magic and we do have a wealth of information on that too..

  72. Logan Subram-Norway
    Mr.Vedamgobal wrote that tamils killed by Sonya and Karunanidhi in srilanka are christians. That is not corect. Most or all of them killed by Sonya and karuna are hindus and Prabaharan is deep bliever in hinnduism. The rulers in srilanka are always sinhala budist from the inependence in 1948. I dont understand why you wrote like that. In my previous comment I asked every one to ignore satans like Robert Manikkam and to cmment in constractiv way to keep our hindu people and our religion all over the world.
    Sarvam Sivam
    Love Logan

  73. Logan Subram i- Norway
    இலங்கையை 30 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டுவருவது கிருஸ்துவர்களாக மாறிய சிங்களத்தவர்கள் ஆவார்கள். ( சாலமன் பண்டாரநாயகா சூலியஸ் ஜயவர்தனே சந்திரிகா குமாரதுங்கா சிரில் மகேந்திர ராஜபிராகாசே). ஆனால் இவர்கள் தாங்கள் கிருஸ்துவர்கள் என்று அடையாளம் காட்டி கொள்வதில்லை. எல்டிடியிலும் மற்ற தமிழ் பேராளிகளிலும் பலர் கிருஸ்துவர்களாக மாறியவர்கள். (லஷ்மன் கதிர்காராமன் டக்லஸ் தேவாநந்தம் பிராபகரன் மற்றும் பலர்).
    There is ample of evidence and support articles written including Singhalese writers that the problem in Sri Lanka is a church sponsored conspiracy attain success to a larger extent establishing puppet Government so far but now some hurdles due to interference of China

  74. //I have been reading Tamil Hindu for the past one or one and half a year. But everytime a very important article of such nature comes, some lunatic person posts some crazy comments and most of our energy is spent on replying to them.

    Feel there is no point in arguing with those people. If they had faith they would have never crossed over. I humbly feel we should put our energy and resources to more constructive ways on how to help and uplift our hindu society.

    Siva//

    well said

  75. இந்து மதத்தை தவிர மற்ற மதத்தை சார்ந்தவர்கள் தங்கள் பூர்விகம் என்ன என்பதை அறிந்து பேசுவது நல்லது.

  76. இராபர்ட் போன்ற உண்மை மறுப்பாளர்களுக்கு,

    நீங்களோ, உங்கள் தாய் தந்தையோ, தாத்தனோ, பாட்டனோ அல்லது பாட்டனுக்குப் பாட்டனோ கண்டிப்பாக இந்து மதத்திலிருந்து மதம் மாறிவந்தவராகத்தான் இருக்க வேண்டும்- நீங்கள் இந்தியர் என்பது உண்மையானால்.

    யோசித்துப் பார்த்தால் நீங்களோ, உங்கள் முன்னோர்களில் யாரோ ஒருவரோ யூதாசைப்போல ஒரு சில காசுகளுக்காகவோ, அற்ப வசதிகளுக்காகவோ அல்லது முட்டாள் தனமான நம்பிக்கையின் பேரிலோ நாட்டுப் பற்று, நம்பிக்கை, மானம் இவற்றில் எதோ ஒன்றை விற்று உங்களையே விலைப் பொருளாக்கி மதம் மாறி இருக்க வேண்டும். அதற்காக வெட்கப் படுங்கள், வேதனைப் படுங்கள், பிராய சித்தம் தேட முயலுங்கள். இக்கட்டுரையின் மூலம் ஒன்று பட்டிருக்கும் மக்களை பிரித்து உங்கள் மத விற்பனையை இனியும் தொடராதீர்கள்.இம்சையான உங்கள் கருத்தை இங்கே திணித்து இவ்வலைத் தளத்து அன்பர்களை திசை திருப்ப முயற்சிக்காதீர்கள்.

    தயாரில்லையா?????

    ஓகே! ஒரே ஒரு கேள்வி, உங்கள் விலை என்ன??? உங்களை நாங்கள் வாங்கிக்கொள்கிறோம்.

    அன்புடன்,
    ஆரோக்யசாமி

  77. we believe all the evil things happen cos of devil .That devil we shd control .I didn mean any individuaL here.Jesus never said to kill anybody .loot,or to take others property.When we read bible we should look for the common law .Then oly we can u .stand clearly if u take one portion we may confuse.FROM simple lie to murder will be tempted by devil and flesh oly.I meant to control th ese things first to sanctify our soul with the help of our almighty God.
    pls dont publish the statements which hurts each other religions .criticising r debating shd be in decent words

  78. STOP CONVERSION
    Survival of the fittest is the law which governs the animal nature prevalent in western culture.

    CONVERSION – IS PERVERSION
    CONVERSION – IS GROSS VIOLENCE
    CONVERSION – IS ERROSION OF CULTURE
    CONVERSION – IS AGGRESSION
    CONVERSION – IS INTRUSION IN ONES PRIVACY
    CONVERSION – IS DIVISION
    CONVERSION – IS INVASION
    CONVERSION – IS DESTRUCTION OF RELIGIOUS HARMONY
    CONVERSION – IS DOMINATION OF LAND AND PEOPLE
    CONVERSION – IS TERRORISM
    Conversion – the word itself announce that some thing is done in deliberation, force and influence to change the faith and it is unnatural. If an individual on his own learn, hear and attracted towards a particular religious faith then it is natural. The fact is 90% of the cases are unnatural and hence conversion to be banned with stringent laws. If anybody wants to change their faith in a natural manner the change to be done in presence of a judge and he has to disclose that he is not changing his faith due to any allurements and his birth certificate is immediately changed with court approval.

  79. Here is a story told by Swami Dyanananda

    “A Street rowdy is supposed to be a don of the area and he will be treated as Godfather. One such don went to well built house near his place and ordered the house owner to dispose the house in favour of him. The house owner replied that he is not ready to dispose. Again he ordered no you are disposing the house in favour of me and he fixes the rate also. The house owner replied first of all I am not ready to sell the house and there is no question of fixing the price. Again the don shouted that he knew the routes of his children going to school. With no immediate alternative he has accepted the Godfather’s demand

    Now, what about God, the Father? he is even worse. This is the aggressive religious tradition that says either you follow this person or you will be condemned eternally to hell. This is worse than the offer of a Mafia don. At least in the former case he can approach court on a later date. In case of later ? God, heaven, hells are all non verifiable belief. Conversion is purely for domination of land and people

    (edited and published)

  80. Another narration by Swami Dyananda

    Imagine now that I am in Rishikesh, Two people approach me and I welcome both of them. They are religious priest from different religion. They try to argue with me about something. I talk to them politely and friendly. Next, they pick up a quarrel with me and started beating me. They go on beating me black and blue. Then I saw a police man standing nearby. I implore him, please stop them. I am committed to non hurting and I do not want to fight with them back. You please do some thing.

    The police man says it is a matter between religious people . I am secular and not supposed to interfere. I appeal to him several times but he did not respond. Even though I am committed to Ahimsa still I have to protect myself. The best form of defense is offence. So I started to defend my self but the police man stops me and says you should not fight with them they are minorities. Hey, policeman, you are supposed to protect me. You are the Government. You are the State. You can not remain a silent spectator , but he does. This is pathetic situation that prevails in India.

  81. dear edwin

    i am only calling a spade a spade – i do not have to relent or be worried to call a spade a spade for i do not want to pratice hypocrisy

    i am surprised – how do you talk about souls when talking about Christianity?

    Does christianity accept souls? if so what is the status of the Soul? What are souls? How are they created? (if at all) and Why do they exist? where do they exist? what is the relationship between body and soul? are they different? what happens to soul after death? where was soul before birth? What is the nature of the soul? How does it look like?

    vedic system poses more questions, answers more questions and paves the way for realizing the soul and attaining the end objective… what you read – even if several 100 times in bible is about good conduct – which is a subject matter of dharma shaashraas in our system and there is nothing divine about dharma shaastraas – even the atheists in the (let me clarify Old india) were adherents of dharma shaastraas,

    so for Jesus’s sake don’t try to preach a Hindu the stories of Bible – we have a far better version in Hitopadesa tales and pancha tantra tales – the things that talk about God in Bible are straight lifts from pagan practices – please realize that, know your history

    btw, do not blame evil for the evil things you do – i wouldn’t – it is not hard to realize that what i reap is what i sow – i cause evil, i get that back – if you say evil or Satans is the cause of your evil, then it questions the authority of God itself or his partiality – i hope you will debate this with you first and get some answers

  82. it is true that the victims of the sinhala aggression and genocide were and are Hindus.
    But it is reported that Prabhakaran and his family were converted to christianity sometime back.
    It is said that from that time onwards the peceful protest of the tamils of Lanka became violent,
    The reason is said to be the instigation and the provision of money by the church
    The church is very clever and cunning and secretive. It works on both sides. simultaneously it pretends as if it is close to both sides and at the same time plotting to destroy both sides.
    That is why we have christian converts both amongst the sinhalese and the tamils

    This is absolutelty brilliant stategy
    because whoever is destroyed it is no loss to the church.
    Ultimately what matters is that a non-christian Nation is broken

  83. Jesus was against conversion.

    Jesus only wanted to modify the Jewish religion and to civilize the Jewish people.

    Jesus probably knew that the other people already had good religion and civilization.

    Mathews 10

    2. அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,

    3. பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,

    4. கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.

    5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,

    6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

    Mathews 15

    23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

    24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.

    For those who are converting the people, Jesus said the following:

    14. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.

    15. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள் அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

  84. Dear Robert manickam,

    Please go thro the below history and answer if you are an honest man.You can search in net confirm.
    MADHURANTHAKAM ERI KAATHA RAMAR KOIL

    About 150 years ago, during the regime of the East India Company, one Leonald Place happened to be Collector of Chingleput District. Since a very long time,
    Madurantakam had a big reservoir for preserving rainwater for agricultural purposes. But the bund used to be breached during the rains, thereby causing great loss and damage. Mr. Leonald Place took upon himself the task of preventing the breaches by constructing a waste weir and by strengthening the bund. In the year 1795, he completed the work at a cost of 8000 pagodas (a pagoda was about 312- rupees in value).
    Unfortunately, the rains that followed completely washed away theconstructions. Undaunted by this misfortune, Mr. Place reconstructed the whole more thoroughly at a cost of over 10,000 pagodas. But the subsequent rains washed off everything. During one of his visits to Madurantakam in 1798, in his usual morning walk, he happened to pass by Sri Rama’s temple on the banks of the reservoir. There he
    met a group of Brahmins going to the temple for worship.
    When he got into conversation with some of them, he learnt that they were very anxious to build a shrine for their Goddess but was handicapped for want of funds. Mr. Place jocularly taunted them by saying, “Why are you so keen on building a shrine for Devi, who does not care to do you a good turn for all your prayers by preventing the recurring breaches?” The Brahmins, whose pride was touched to the quick, replied that their Goddess was a great giver of boons if prayed to with faith and sincerity. “Well then”, said Mr. Place, “let me make that prayer to your Devi
    This year I am again constructing the weir and, should it withstand the rains, the next day shall Devi’s shrine rise”. The construction of the weir was finished at a cost of 10,000 pagodas, under the personal supervision of Mr. Place. The unusually heavy rains of the year soon filled the reservoir to the brim. The local subordinates sent word to the Collector with anxiety over possible breach of the bund. Mr. Place rushed to the place and camped at the P.W.D. bungalow.
    For two days, he could not stir out due to incessant rains. On the third night when the rains had somewhat abated, Mr. Place could not resist the temptation to visit the weir with his camp followers. Mr. Place was naturally expecting to see a sorrowful sight at the point of the weir. But lo! What a sight met his eyes! It was a heavenly sight, which would have made the great saints and sages of India envious of Mr. Place
    Lord Ramachandra and Lakshmana were giving darsan to Mr. Leonald Place! It is commonly said that Mr. Place could see Kodanda Rama, Lord Rama with his Bow pointing to the breach, which they had closed with their arrows. Mr. Place knelt down at the sight and began to pray.
    His attendants thought that their master had become sick all of a sudden and they rushed to his assistance. But Mr. Place shook them off crying, “What! Don’t you see? See those glorious figures with drawn arrows! How beautiful they are! They smile at us! Alas! They are gone now!”
    Mr. Place returned to the bungalow. Meanwhile news of his vision spread rapidly in the town and people gathered round the rest house. Mr. Place came out of his room and said: “The bund is not broken; nor will it ever be. I always believed that God is not the monopoly of the Christian Church. Today I am fully convinced. You may all go; tomorrow shall your Devi’s shrine rise.”
    True to his words, Mr. Place had Devi’s shrine built under his personal supervision. In memory of his services, the people of the town had the following inscription made, which can be seen even today, in Tamil and Telugu, “This act of charity goes to the credit of the Company Jagirdar Collector, Leonald Place.”

    Sri Rama Navami celebrations in the month of Panguni (March-April), lasting for 10 days, is the biggest festival in this temple. In the month of Ani (June-July) the Brahmotsavam of Karunakaramurthy is performed

  85. Dear Ram
    Bibleunmaigal blogspot .com is not opening;getting aborted evrytime.Why?

  86. I am not 100 % perfect in bible .In the beginning God made adam and gave that eternal soul from him only.When Jesus comes righteous souls will go to heaven.Bible gave history for our knowledge .We can get over all idea abt history .But its clearly given how to live fpr present and future .It is applicable even after 1000 yrs also.Bible never give the age of Earth and universe.Satan was not created by God .The ANGELS those who became proudy and try to go above became evils .Thereis lot of secrets abt creation of earth ,human being .Just reading genesis will not give ans .Also we cant explain all in net also .We cant ans for people dont who believe God .Converting to other religion is their own rights Se us ,uk People also converting to hinduism and islam.Jesus never ever said to convert by force r money But we shd preach abt him .Thanks brothers .Also i request u pls teach young generation to live holy life let us make corruption free India .

  87. Dear edwin

    //In the beginning God made adam and gave that eternal soul from him only//

    what do you mean by eternal soul – if the soul is eternal why did God create it – all know that only flesh/genes come from our ancestors where is the question of soul coming – is soul same as flesh?

    if god created soul – it cannot be eternal – for you can see for yourself anything that gets created also gets destroyed – You make a silver spoon – it gets destroyed one day

    Does not christianity say that the world was created only 6000 years ago ?

    you are saying bible talks about history? so creation/Genesis is history for you – is it not happening now? Will it not happen in the future?

    If Satan was not created by God, then who created? how did Satan come to exisit independent of God’s creation? If God is abovle all and created all, how come Satan alone stoodout – if he really stoodout he must be an out standing person and as powerful as God? How many Satans are there?

    What do you mean when Jesus comes righteous souls will go to Heaven? does it mean only when Jesus comes to earth next time the souls present in the earth that time will go to Heaven? if so why are you bothering about a future act in which you will not be a part?

    What do you mean by righteous soul? Is Soul body itself? how does it get a body? Is Mind the same as Soul? If soul is eternal what is righteousness about it? how does a soul get to become right or wrong? So according to you no muslim soul will go to heaven?

    If God created Adam, who created Prophet the Mohammed and why he created him and his followers as a Muslims?
    i thought God created Adam and eve toghether? may be i am wrong? if so which soul do we posses Adam’s or Eve’s? do souls have male/female differences?

    If proud people become Satans – then there must be horrendous amount of Satans in the world? is it so?

    //
    Thereis lot of secrets abt creation of earth
    //
    can you share one such secret? today bible itself is bein taught online – i do not think you will have a difficulty telling us.

    If earth is created by God, it will be destroyed also?

    What do you mean by people who do not believe in God and how did you determine that?

  88. Dear Edwin:

    You seem to be another recent convert to Christianity. That’s why you are blabbering about how bible tells you how to live.

    Have you bothered to read the Gita while you were a Hindu?

    The Gita is a fantastic book without any of the horrible stories found in Old and New Testaments. The Gita is a peaceful easy to read book that tells you how to live peacefully and get ahead in life.

    Don’t believe me? Read it. Then, come and tell me about what your friends and fathers are doing to this ancient culture and religions of ours (and yours).

    I have read your bible. I cannot understand 3 things and would appreciate a rational explanation from you:

    1. If God is shapeless, nameless and formless, how can you insist on calling that one God just by the name of Jesus and denying all others, the right to call him (or her) by the name of Shiva, or Vishnu or whatever. Answer me this: how can you “convert” someone to call that God by the name of Jesus only? Isn’t this mental domination? Why is the God’s name that important if he is nameless, shapeless and formless?

    2. Why are you living in fear of this God? How can you be scared into believing in this Satan and Hell and be scared into believing in this God? How can anyone be called a loving God when he uses scare tactics to believe in him (or her)?

    3. If this God created all the humans in his image, Why are non-believers hated? It is after all his children. Those children (non-believers) must be loved as much as the children who believe.

    Strangely enough, Gandhiji was assaulted by Christian missionaries all his life to convert and he refused because he said that Christianity’s beliefs don’t make sense. He found the Gita and Hinduism far superior to the bible. Here’s the link: read it and weep for what you have done to your own country and culture.

    Christianity and Conversion in India
    By M.K.Gandhi
    Gandhi

    https://india.indymedia.org/en/2003/02/3105.shtml

  89. //5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,

    6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
    //
    அப்ப கிறிஸ்டின் கும்பல் பண்றதெல்லாம் பிராடுத்தனமா? அடங்கொய்யால…

  90. Dear Edwin ,

    //In the beginning God made adam and gave that eternal soul from him only.//

    The hiring of Adam, eve (recruitment ) to do work in the of the garden/ farm is a common thing. And the firing of the workers on diciplinary grounds also a common thing only.

    Consider the following

    In the early time, The owner ( land LORD) of farms used to hire labours and ask them to stay and work in their farms.

    //15. தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
    And the LORD God took the man, and put him into the garden of Eden to dress it and to keep it.//

    If they pick any fruit and ate them, the owner (land LORD )of the farm might become angry and drive them away from the farm.

    //அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.
    So he drove out the man; and he placed at the east of the garden of Eden Cherubims, and a flaming sword which turned every way, to keep the way of the tree of life.//

    In earlier dyas The owner (land LORD) was coinsidered as good as GOD.

    On seeing this the Adam , eve incident somebody might have narrated the owner (land LORD) as the LORD “GOD”himself.

    I mean, I am not insisting that whatever , I pointed above is perfect, but there is a possibility , all possibilities that the Adam, eve incident was a farm house incident, which is magnified as ” god”story!

    We have to think of evolution also.

  91. மதிப்பிற்குரிய ஜடாயு, உங்கள் கருத்துக்கள் தற்போதைய அரசியல் தலைவர்களின் கீழ்த்தரமான சூழ்ச்சிகளை தோலுரித்துக்காட்டுகிறது. எனினும் 6 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் இருந்த பா. ஜ. க. விற்கு இதுபோன்ற சமுதாய அநீதிகளிலிருந்து ஹிந்துக்களை காப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும் வழி தெரியவில்லையா? அல்லது திறமை இல்லையா? கூட்டணியின் நிர்பந்தங்களை காரணமாக சொல்லி கடமையை நிறைவேற்ற தவறிய பா. ஜ. க. வை, மற்ற எந்த கட்சியுடனும் ஒப்பிட இயலாது. கமிஷன் (கொள்ளை) அடிப்பது, அதிகாரத்தை கைப்பற்ற மிகவும் கீழ்த்தரமான சமுதாயகேட்டை விளைவிக்கும் கொள்கைகளை அமுல்படுத்துவது இதுபோன்ற செயல்பாடுகளை கொண்டுள்ள மற்ற கட்சிகளுடன் போட்டி போடும் திறமையை வளர்த்துக்கொள்ளாத வரையில் புலம்பி பயனில்லை. அதர்ம வழியில் செயல்படும் ஆட்சியாளர்களுக்கு தர்ம வழியில் செயல்படும் பலவீனமான எதிரிகளால் எந்த பிரச்னையும் இருக்கப்போவதில்லை. தற்பொழுதெல்லாம் ஜனநாயகம் என்ற பெயரில் மக்களை கொள்ளையடிப்பது மிகவும் சுலபம்.

  92. Robert monicam is not an Indian, he is an christian terrorist he does not know only christian birth only two thousand years ago but whenever world formed that time Hinduism also formed. Christian religion have date of birth everybody know at the same date of death also have don’t forget it.

  93. இலங்கையில் மடிந்தவர்கள் மற்றும் அகதிகள் போல் இருப்பவர்கள் மிகப் பெரும்பான்மையாக ஹிந்துக்களே
    உண்மை என்னவென்றால் அற வழியில் சென்று கொண்டிருந்த போராட்டம் சர்ச் உள்ளே நுழைந்த பின் ஆயுதப் போராட்டமாக உரு எடுத்தது என்பது தான்
    .சர்ச்சின் செயல் திட்டம் எப்படி என்றால் கிறிஸ்தவம் அல்லாத நாடுகளில் முதலாவதாக இரு பிரிவு மக்களிடையே ‘சிண்டு’ முடிந்து விட்டு மோத விடுவது.
    இரண்டாவதாக கிறிஸ்தவத்துக்கு மக்களை மதம் மாற்றுவது.
    முதல் யுக்தியின் படி இரு பிரிவினர் மோதிக் கொண்டால் நாட்டில் குழப்பம் ஏற்படும்
    இவர்கள் அதை ஊதிப் பெரிதாக்குவார்கள்
    பணம், ஆயுதம் உதவி செய்வார்கள்.

    இடத்துக்கு ஏற்றால் போல் ஒரு பக்கமும் , இரண்டு பக்கமும் பேசுவார்கள்
    உதாரணம் சிறிலங்காவில் எல்டீடீஈ வலிவுடன் இருந்ததால் அவர்களுக்கும் சாதகமாக இருப்பது போலவும்,மறு பக்கம் ஆளும் சின்ஹலவர்களுக்கு சாதகமாக இருப்பது போலவும் நடித்தனர்
    இரண்டு பக்கத்திலும் மதம் மாற்றினர்
    நாட்டில் ரண களத்தை ஏற்படுத்தினர்

    மதம் மாற்றுதல் மூலமாக ஒரு கணிசமான மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றினால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் ஏற்படும்.அல்லது சர்ச் ஏற்படுத்தும்.அதானால் உள்நாட்டுப் போர், நாட்டுப் பிரிவினை ஏற்படுத்தும்.

    இந்தியாவில் ஹிந்துக்கள் ஏமாளிகளாகவும், ஒற்றுமை இல்லாமலும், தங்கள் சமயம் , கலாச்சாரம் மற்றும் நாட்டின் மீது பற்று இல்லாமல் இருப்பதும் ,மேலும் இங்குள்ள அரசியல்வாதிகள் பெட்டி வாங்கிக் கொண்டு நாட்டை காட்டி கொடுக்கத் தயாராக இருப்பதாலும் வெளிப்படையாகவே ஹிந்து சமயத்தை இழிவு படுத்துகின்றனர்

    ஆனால் ஆர்ர் எஸ் எஸ், பீ ஜெ பீ மற்றும் அவர்கள் சார்ந்த இயக்கங்களை நேரடியாக தாக்க முடியாததால் சோனியாவின் பின்னால் இருந்து கொண்டு அரசாங்கத்தின் அசுர பலத்தால் அவர்களை நசுக்க பகீரதப் பிரயத்னம் செய்து கொண்டிருக்கின்றனர்
    பாரதத்தை சர்ச்சின் கையில் ஒப்படைப்பதற்கு ஒரே தடையாக் இருப்பது இந்த இயக்கங்களே
    எனவேதான் இப்போது இவைகளின் மீது வரலாறு காணாத அளவில் தாக்குதல் நடக்கிறது

    அதையும் பிரித்தாளும் சூழ்ச்சியாகவே ரகசியமாக் எதோ சட்டத்துக்கு உட்பட்டு செய்வது போல் செய்கின்றனர்
    அதனால் தான் குஜராத்தில் சொக்ரபுதின் என்ற ஒரு முஸ்லிம் பயங்கரவாதியின் அழிப்பை மையமாக வைத்து செய்து கொண்டிருக்கின்றனர்

    என் மோடியின் மீது இவ்வளவு தாக்குதல் என்றால் அவர் ஹிந்துக்களை ஒன்றிணைத்து நம் நாட்டை மிகப் பெரும் சக்தியாக மாற்றும் வல்லமை படைத்தவர் என்பதால் தான்.

    அவர்களுக்கு மேலை நாடுகள் தவிர எந்த நாடும் வலிமையாக,வளமாக,அமைதியாக இருக்கக் கூடாது.

  94. முதல்ல தலைப்புக்கு வாங்கப்பா… இயேசுவா ? அல்லாவா? சிவனா ? அப்டிங்கற மேட்டர் கு போயிட்டீங்க? மக்களை பாருங்க… மதங்களை பாக்காதீங்க…. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சமமான கல்வி, அனைவரையும் சமமாக நடத்தும் கல்வி…. இதுதான் நமக்கு தேவை… சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்கள் அப்டிங்கறது குழந்தைகளுக்கு தெரியாது… தன்னோட படிக்கிறவர்களை அவர்கள் நண்பனாக மட்டுமே பார்பார்கள். இந்து முஸ்லிம் கிருஷ்துவன் அப்டின்னு பாக்றதில்ல… அப்டி பாக்க மறைமுகமாஹவோ நேரடியாகவோ அவங்களை பார்க்க தூண்டி விட்டாசினா…. இந்தியாவ எத்தன காந்தி எத்தன நேரு வந்தாலும் ..ஏன் ஆண்டவனே நேருல வந்தாலும் காப்பாத்த முடியாது…… எல்லாரும் எல்லாருக்காகவும் எல்லாத்தையும் வழங்கணும் … அந்த மனப்பான்மை வந்தாலே எதிர்காலம் சிறக்கும்…. சாமி பேர சொல்லி சண்டை போடுறத நிறுத்துங்க ….. வேற எதாச்சும் வழி இருந்தா முயற்சி செய்யுங்க…!!!

  95. கட்டுரையில் உள்ள அரசாங்கத்தின் அபிரகாமிய மத பரப்புதல் அவலத்தின் உண்மையை, ஜெருசலேத்திலிருந்து வராமல், பாரதத்திலேயே உயிர் வாழ்ந்து கொண்டு, பாரதத்தின் உயிரை உறிஞ்சிக்கொண்டிருக்கும், சிலரின் வெளிப்பாடுகளையும், நாகூசாமல், மனசாட்சியின்றி தமிழில் உள்ள தெய்வ வாக்கியங்களையே தங்களது போல் உபயோகப்படுத்தி, இன்னும் ஆயிரோப்பியரின் கூலிகளாகவே இருப்போம் என்று சபதம் செய்யும் விதத்தைப்பார்த்தால், ச்விச்ஸ் வங்கி,ஜேர்மன் வங்கி என்ற பெயர்களில், எல்லாவிதமான திருட்டுக்களையும் செய்துவிட்டு, பாரதத்திற்கு சேரவேண்டிய செல்வத்தில், திருட்டுத்தனமாகத் திளைத்துவிட்டு,தங்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும், தங்கள் அறிவியல் அறிவே காரணம் என்று பொய்பேசி ஏய்த்துப் பிழைக்கும் கேவலமான, மனித குலத்திற்கே அவமானச் சின்னங்கள்ளக நிற்கும், மேலை நாட்டுத் தெருப்போரிக்கித்தனத்தைப் பார்க்க நேரிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *