“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1

மூலம்: ரிச்சர்ட் ஷேனிக் (Richard Schoenig)
தமிழில்: ஆர்.கோபால்

மொழிபெயர்ப்பாளர் முன்னுரை:

இந்தக் கட்டுரை கிறிஸ்துவ மதத்தைப் பற்றியது. இது ஏன் இங்கே ‘தமிழ்ஹிந்து‘வில் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழலாம்.

adam-and-eveதமிழ்நாட்டில் பரவியுள்ள கிறிஸ்துவ இஸ்லாமியக் கலாசாரத்தின் விளைவாக பல இந்துக்களும் ஆதாம் ஏவாள் கொள்கையை நம்புபவர்களாக இருக்கிறார்கள். முதல் பாவம் என்பது கவிதைகளிலும் கதைகளிலும் சினிமாக்களிலும் பேசப்படுகிறது. முதல் மனிதர்களைக் குறிக்க ஆதாம் ஏவாள் என்ற பெயர்கள் பொதுவாகப் புழங்கும் பெயர்களாக ஆகிவிட்டன. “முதல் பாவம்” என்ற பெயரில் ஓர் ஆபாசத் திரைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. பரவலாகிவிட்ட இந்த யூதப் பழங்குடியினரின் புராணக் கதையை பெரும்பாலான நம் மக்கள் நம்பவில்லை என்றாலும், ஏதோ ஒரு ரீதியில் ஆதிமனிதனைக் குறிக்க இந்தச் சொற்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. இந்த முதல் பாவக் கொள்கை காரணமாகவே தெருமுனைகளிலும் தொலைக்காட்சி பெட்டிகளிலும் பல்வேறு கிறிஸ்துவப் பிரசாரகர்கள், “பாவிகளே!…” என்று நம்மைப் பார்த்துக் கத்துகிறார்கள். அவர்கள் உலகத்தில் உள்ள அனைவரையும்- ஒரு பாவமும் செய்யாத பச்சை குழந்தையிலிருந்து மகாத்மா காந்தி வரை எல்லோரையும்- பாவிகள் என்று ஏன் சொல்கிறார்கள் என்று நாம் அறிந்துகொள்வது தேவையான ஒன்று.

மற்றொன்று, பரவலாக இருக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமியத் தொலைக்காட்சிகளில் வெளிநாட்டினரும் நம்மக்களில் சிலரும் இந்த ஆதாம் ஏவாள் கதையை, தொடர்ந்து பிரசாரம் செய்துவருகின்றார்கள். இதனால், ஒரு சில இந்துப் பொதுமக்கள் ஆதம் ஏவாள் என்பவர்கள் இவர்கள் சொல்வது போல கடவுளால் 6000 வருடங்களுக்கு முன்னால் படைக்கப்பட்டவர்கள் என்று நம்புகிறார்கள். இது இந்து மதக் கொள்கை அல்ல. மாறாக, இந்து மதப் புத்தகங்களின்படி, இந்தப் பிரபஞ்சம், வயது கணக்கிட முடியாத அளவு புராதனமானது. ஒவ்வொரு யுகமும் பல லட்சம் வருடங்கள் கொண்டது. கிரித யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகியவை பருவகாலங்கள் போல சுழற்சியாக வருகின்றன. இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு சதுர்யுகமாகிறது. 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம் என்று சொல்லப்படுகிறது. (ஒரு கிரித யுகத்தின் அளவு 1728000 வருடங்கள்).

கார்ல் சாகன் (Dr. Carl Sagan, 1934-1996) என்ற புகழ்பெற்ற வானவியல் இயற்பியலாளர் தனது காஸ்மோஸ் (cosmos) என்ற புத்தகத்தில், கூறுகிறார்:

nataraja-in-chakra-form“The Hindu religion is the only one of the world’s great faiths dedicated to the idea that the Cosmos itself undergoes an immense, indeed an infinite, number of deaths and rebirths. It is the only religion in which the time scales correspond, to those of modern scientific cosmology. Its cycles run from our ordinary day and night to a day and night of Brahma, 8.64 billion years long. Longer than the age of the Earth or the Sun and about half the time since the Big Bang. And there are much longer time scales still.” Carl Sagan further says: “The most elegant and sublime of these is a representation of the creation of the universe at the beginning of each cosmic cycle, a motif known as the cosmic dance of Lord Shiva. The god, called in this manifestation Nataraja, the Dance King. In the upper right hand is a drum whose sound is the sound of creation. In the upper left hand is a tongue of flame, a reminder that the universe, now newly created, with billions of years from now will be utterly destroyed. These profound and lovely images are, I like to imagine, a kind of premonition of modern astronomical ideas.” Sagan continues, “A millennium before Europeans were wiling to divest themselves of the Biblical idea that the world was a few thousand years old, the Mayans were thinking of millions and the Hindus billions”
— (source: Cosmos – By Carl Sagan p. 213-214).

இந்தப் பிரபஞ்சமும் இது போன்ற எண்ணற்ற அனந்த அனந்தப் (infinite) பிரபஞ்சங்களும் பிரம்மத்தில் முகிழ்த்து மறைகின்றன என்று வேதங்கள் கூறுகின்றன. எல்லாக் காலங்களுக்கும் வெளிகளுக்கும் அப்பாலும் அதனுள் உறைந்தும் பிரம்மம் இருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. எண்ணற்ற பிரம்மாக்கள் எண்ணற்ற பிரபஞ்சங்களை உருவாக்கியவண்ணம் இருக்கிறார்கள். தங்கள் காலம் முடிந்ததும் அந்த பிரம்மாக்கள் மறைந்து புதிய பிரம்மாக்கள் பிறக்கிறார்கள் என்று இந்து மதம் உரைக்கிறது. பிரம்மத்துக்குள் ஒடுங்கியுள்ளது வெளிப்படுகிறது  என்று இந்து மதப் புத்தகங்கள் உரைக்கின்றன. ஆகவே ஆதாம் ஏவாள் என்ற சிறுபிள்ளைக்கதையை நாம் நம்புவது தவறு.

அறிவியற்பூர்வமாகவும் ஆதாம் ஏவாள் என்ற மனிதர்கள் இல்லை. தொடர்ந்து மாறிவரும் பரிணாமத்தில் இதுவரை குரங்கு, இதற்குப் பிள்ளை மனிதன் என்று சொல்வதும் தவறு. மேலும் பல்வேறு அறிவியல்களில் ஒன்றான பரிணாமவியலை கிறிஸ்துவமோ அல்லது இஸ்லாமோ ஒப்புக்கொள்வதும் இல்லை. ஆகவே பரிணாமவியலின்படி ஒருவரை மனிதன் என்று சொன்னாலும் அது ஆதாம் அல்லது ஏவாள் என்று கிறிஸ்துவமும் இஸ்லாமும் ஒப்புகொள்வதில்லை. ஏனெனில் பைபிள் சொல்லும் யாஹ்வே என்னும் தெய்வத்தால் களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டாலே ஆதாம். பரிணாமவியலின்படி தோன்றும் மனிதன் ஆதாம் அல்ல.

நமது இந்து மதப் புத்தகங்களுக்கும் அறிவியலுக்கும் புறம்பான, இப்படிப்பட்ட தவறான கருத்துகளை, ஊடகங்களின் இடைவிடாத பொய்ப் பிரசாரங்களின் காரணமாக இந்துக்களான நாம் உண்மையெனக் கருதிவிடக்கூடாது ஆகவே இந்தக் கட்டுரை, தொடர்ந்து ஒலித்துகொண்டு வரும் இப்படிப்பட்ட யூதப் பழங்குடி மக்களின் புராணக்கதைகளை வரலாறு என கருதிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்துக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகவும் மொழிபெயர்க்கப்பட்டதே அன்றி, கிறிஸ்துவ மதத்தின், அல்லது இஸ்லாமிய மதத்தின் கருத்துகளை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது அல்ல.)

1. முன்னுரை

கிறிஸ்துவ மதத்தில் [1] முதல் பாவம் என்ற கொள்கை (doctrine of original sin (DOS)) உள்ளது. இந்தக் கொள்கையை கிறிஸ்துவத்தின் அடிப்படைக் கொள்கையாக கிறிஸ்துவம் கருதுகிறது. இது “மெல்லவும் முடியாத, துப்பவும் முடியாத” கொள்கை. இந்தக் கொள்கையை வைத்துகொண்டும் கிறிஸ்துவத்தால் இருக்கமுடியாது. தூக்கி எறிந்துவிடவும் முடியாது. இக்கட்டுரையில், முதல் பாவம் நடந்திருக்கமுடியாதது; ஒழுக்க ரீதியில் தவறானது என்று காட்டியதோடு, கிறிஸ்துவத்தால் இதனை வைத்துகொள்ளவும்முடியாது என்று சுட்டிக்காட்டுகிறேன். ஆனால், அதே வேளையில், 2000 வருடங்களாக இதனை கிறிஸ்துவத்தோடு இறுக்கிப் பிணைத்துவிட்டபடியால், இதனைத் தூக்கி எறிவது கிறிஸ்துவ மதத்துக்கே ஆபத்தாகவும் ஆகும் என்றும் காட்டுகிறேன்.

2. முதல் பாவக் கொள்கை என்றால் என்ன?

1. மத்திய தரைக்கடல் (mediterranean sea) பகுதியில் வாழ்ந்துவந்த பழங்குடியினரான யூதர்கள், தங்கள் புராணக்கதைகளை, எல்லாப் பழங்குடியினர் போலவே எழுதிவைத்தனர். பூமி எப்படி உண்டாயிற்று, மனிதன் எப்படி உண்டானான் ஆகிய கதைகளை இவர்கள் மற்ற ஆப்பிரிக்க, அமெரிக்கப் பழங்குடியினர் போலவே கற்பனை செய்து எழுதினார்கள். பின்னர் இவர்களிலிருந்து கிளைத்த ஒரு கிளைமதம் கிறிஸ்துவம் என்ற பெயரில் மெல்ல மெல்ல பரவியது. ரோம அரசால் தத்தெடுத்துகொள்ளப்பட்ட பின்னர் அந்த சாம்ராஜ்யத்தின் வழித்தோன்றல்களாக உருவான ஐரோப்பிய நாடுகளாலும் உலகெங்கும் பரப்பப்பட்டு இந்தப் பழங்குடிப் புராணக்கதைகள் வரலாறு போலப் பிதற்றப்பட்டன. இந்த முதல் பாவம் என்ற கொள்கை இவர்களது ஜெனஸிஸ் எனப்படும் ஆதியாகமம் என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

adam_in_gardenயாஹ்வே என்ற தெய்வம் உலகத்தை உருவாக்கியதாம், பிறகு ஆரம்ப ஆண், பெண் ஜோடியை உருவாக்கியதாம். இந்த ஜோடியை தான் உருவாக்கிய ஒரு தோட்டத்தில் வைத்ததாம். அந்தத் தோட்டத்தில் பலவித விலங்குகளும், செடி கொடி தாவரங்களையும் உருவாக்கிவைத்திருந்ததாம். இந்தச் சமயத்தில் ஆதாமும் ஏவாளும் சாகாவரம் பெற்றவர்களாகவும், வலி, துயரம் ஆகியவை அண்டாதவர்களாகவும் இருந்தார்களாம். அந்தத் தோட்டத்தில் அவர்கள் சுற்றித்திரிய அனுமதித்திருந்தாலும், அறிவு மரத்தின் (Tree of the Knowledge of Good and Evil) கனியை மட்டும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி, அதனைச் சாப்பிட்டால் உடனே மரணமடைவார்கள் என்றும் எச்சரித்ததாம். பேசும் பாம்பு (இது லூசிபர் என்னும் சாத்தானாம்) இவர்களைத் தூண்டிவிட, இவர்கள் அந்த மரத்தின் கனியைச் சாப்பிட்டார்களாம். கிறிஸ்துவ மதத்தில் உள்ளவர்கள் இதனை மனிதனின் முதல் ஒழுக்கக்கேடு என்றும், முதல் பாவம் என்றும், இதனால், மனிதனின் வீழ்ச்சி உருவானது என்றும் கூறுவார்கள். யாஹ்வே (இதனைத்தான் கர்த்தர் என்று கிறிஸ்துவர்கள் தமிழில் கூறுவார்கள்.) இந்த ஜோடியை தனது தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி வலி, துயரம், கடின வாழ்க்கை, இறுதியில் சாவு என்று வாழும்படிக்கு தண்டித்ததாம். (தோட்டம் வானத்தில் இல்லை. பூமியில்தான் இருக்கிறது. அவர்கள் திரும்பவும் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காக தோட்ட வாசலில் தேவதைகள் காவல் வேறு இருக்கிறார்களாம்.)

god-creates-eve-from-adams-ribஅவர்களுடைய தண்டனையில், அவர்கள் பாவம் செய்ய இயற்கையிலேயே விருப்பமுள்ளவர்களாகவும், தங்களைத் தாங்களாகவே அந்தத் தண்டனையிலிருந்து மீட்டுகொள்ள முடியாதவர்களாவும் மனிதர்களை ஆக்கியதும் சேர்த்தியாம். கூடவே, அவர்களது தண்டனை அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது குழந்தைகளுக்கும் சந்ததிகளுக்கும் மேலேயேயும் இருக்குமாம்; கூடவே மிருகங்களுக்கும் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டதாம். (மிருகங்கள் செய்யாத தவறுக்கு மிருகங்களுக்கும் தண்டனை!)

உலகம் உருவானது எப்படி என்று யூதர்களது பழங்குடிக் கதை போன்றே ஒவ்வொரு பழங்குடிகளிலும் ஒரு கதை உண்டு. அவற்றை இந்தச் சுட்டியில் காணலாம் . அந்தப் பழங்குடிக் கதைகளைப் பிரசாரம் செய்ய, பெரிய கூட்டம் உங்களை தெருமுனைகளில் சந்தித்து பாவிகளே என்று கதறவில்லை என்பதால் அதனைப் பற்றிப் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளலாம்.

adam_and_eve_sinஇதற்கு மேல் உபரிச் செய்திகளாக இந்த கிறிஸ்துவ மதத்தின் அடிப்படைக் கருதுகோள்களை நினைவுப்படுத்திக்கொள்வது நல்லது. அதாவது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், யாஹ்வே தெய்வம் உலகத்தையும் வானத்தையும் படைத்து அதில் ஆண் பெண் இருவரையும் படைத்து அவர்கள் கீழ்ப்படியாததால், அவர்களின் சந்ததிகளுக்கும் மிருகங்களுக்கும் முதல் பாவத்தைக் கொடுத்தது. இந்த முதல் பாவம் எல்லோர் மேலும் இருக்கிறது. அந்த முதல் பாவத்தை போக்க யாஹ்வே தெய்வம் ஒரு வழியைச் சிந்தித்தது. அது தனக்குத் தானே ஒரு பலி கொடுத்துக்கொள்வதாக முடிவு செய்ததாம். யூதர்களின் பழைய ஏற்பாட்டில் யாஹ்வே தெய்வத்துக்கு, களங்கமில்லாத ஆடு பலி கொடுக்கப்பட்டால் சந்தோஷமாகி, பலி கொடுத்தவரின் பாவங்களை மன்னிக்கிறதாம். ஆகவே இப்போது களங்கமே இல்லாத ஒரு மனிதனை தனக்குப் பலிகொடுப்பதன் மூலம் யாஹ்வே சந்தோஷமடைந்து பொதுமக்களின் முதல் பாவத்தை மன்னிக்குமாம். ஆகவே இயேசு கிறிஸ்து என்ற தன் மகனைப் பிறக்கவைத்து, தவறே செய்யாத அவரைக் கொலைசெய்து, அதன் மூலம் சந்தோஷமடைந்து, பொதுமக்களின் பாவங்களை மன்னிக்கிறதாம். முன்பு பலி கொடுக்கப்பட்ட ஆட்டின் ரத்தத்தையும் சதையையும் யூதர்கள் புசிப்பார்கள். அதனால்தான் கிறிஸ்துவத்தில், பலி கொடுக்கப்பட்ட இயேசுவின் ரத்தத்தையும் சதையையும் சர்ச்சுகளில் புசிப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. அப்பாவியான இயேசு கொலை செய்யப்பட்டதால் எல்லோருடைய பாவங்களும் போய்விடாதாம். இயேசு கிறிஸ்து என்பவர் பாவங்களை மன்னிக்க யாஹ்வேயால் அனுப்பப்பட்டார் என்று நம்புபவர் மட்டுமே முதல் பாவத்திலிருந்து மீட்கப்படுவாராம். இதனால்தான் தெரு மூலைகளில் நின்று பாவிகளே என்று நம்மைப் பார்த்துக் கத்தி, இயேசுவை நாம் நம்பவேண்டும் என்று சொல்லுகிறார்கள். இயேசுவும் இந்த உலகத்தில் பிறந்தபோது மேரியிடமிருந்து அவருக்கு முதல் பாவம் ஒட்டியிருக்குமே என்ற கேள்விக்கு, மேரியின் வயிற்றில் இயேசு கருவாக வரும்போது முதல் பாவத்தின் தீட்டு தீண்டாவில்லை என்று எழுதிகொண்டார்கள். ஏன் தீண்டவில்லை என்பதற்கு காரணமெல்லாம் இல்லை. தீண்டவில்லை; அவ்வளவுதான். அதற்கு ஒரு பெயர் வைத்துகொண்டார்கள். அது முதல் பாவம் தீண்டாத கருவடைதல் என்ற பொருளில் immaculate conception of Mary.

3. இந்த முதல் பாவக் கொள்கையுடன் கிறிஸ்துவம் இருக்கமுடியாது

கிறிஸ்துவம் இந்த முதல் பாவக் கொள்கையுடன் இருக்கமுடியாது என்று காட்ட, இந்தப் பழங்குடிக் கதைக்கும் அறிவியலுக்கும் இடையே பெரிய முரண்பாடு இருக்கிறது என்று காட்டுகிறேன். கூடவே, இந்தப் பழங்குடி முதல் பாவக் கதையில் ஏராளமான ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பது மட்டுமல்ல; இதில் அறிதலின் பிரச்சினையும் (knowledge problem) இருக்கிறது என்று காட்டுகிறேன்.

3.1 பரிணாமவியல் அறிவியலும் யூதப் பழங்குடியினரின் ஆதியாகம உருவாக்கமும் ஏடன் தோட்டக் கதைகளும். [2]

முன்னரே சொன்னது போல, முதல் பாவக் கொள்கை, யூதப் பழங்குடியினரின் உலக உருவாக்கக் கதைகளின் பகுதி. உண்மையான உலக உருவாக்கம் யூதப் பழங்குடியினரது புராணக்கதைப்படி நடக்கவில்லை என்றால், முதல் பாவமும் இல்லை. அதனால்தான் பெரும்பாலான கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் யூதப் பழங்குடியினரின் ஆதியாகமக் கதைகளின்படிதான் உலகம் உருவானது என்று வலியுறுத்துகிறார்கள். இந்தக் கால கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, கடந்த 2000 வருடங்களாக எல்லா கிறிஸ்துவர்களும் யூதப் பழங்குடிப் புராணக்கதைகளின்படிதான் உலகம் படைக்கப்பட்டது என்று சொல்லிவந்திருக்கிறார்கள். அப்போஸ்தலர் பவுல், சர்ச் தந்தைகளில் ஒருவரான அகஸ்டின் ஆகியோர் உள்ளிட்ட கிறிஸ்துவத் தலைவர்கள், யூதப் பழங்குடியினரின் புராணக்கதைகளின்படிதான் உலகம் படைக்கப்பட்டது; அது வரலாற்று உண்மை என்றுதான் எழுதி வந்திருக்கிறார்கள். பார்ட் கிளிங் [3] சுட்டிக்காட்டுவது போல, யேசுவும் அதன் உண்மையை வலியுறுத்துகிறார்.

பைபிளில், வரலாற்றில் இருந்த ஒரு நபராகவே ஆதாம் சித்தரிக்கப்படுகிறார். இதனால்தான் பல்வேறு பைபிள் வம்சாவளிகள் ஆதாமின் வழியில் பிறந்ததாக எழுதப்படுகின்றன. ஆதியாகமம் 4-5 ஆதாமின் வழித்தோன்றல்களையும் அவர்களது வயதையும் வரிசைப்படுத்துகிறது. 1 Chronicles முதல் அத்தியாயம், ஆதாமின் வழித்தோன்றல்களை வரலாற்று நபர்களாகச் சித்தரிக்கிறது. லூக்காவில் இயேசுவும் ஆதாமின் வழித்தோன்றலாகத்தான் கருதப்படுகிறார்.

Jesus was about thirty years old when he began his work. He was the son (as was thought) of Joseph son of Heli, … son of Enos, son of Seth, son of Adam, son of God. (Luke 3:23-38)

23 இயேசு போதிக்கத் தொடங்கும்பொழுது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது. அவரை மக்கள் சூசையின் மகன் என்று கருதினர்.

24 சூசை ஏலியின் மகன்; ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்;

இப்படியே போய்…

37 மத்துசலா ஏனோக்கின் மகன்; ஏனோக்கு யாரேதின் மகன்; யாரேது மகலாலெயேலின் மகன்; மகலாலெயேல் காயினானின் மகன்;

38 காயினான் ஏனோசின் மகன்; ஏனோஸ் சேத்தின் மகன்; சேத் ஆதாமின் மகன்; ஆதாமோ கடவுளின் மகன்.

மாத்தியூவின் சுவிசேசத்தில் யேசுவே ஆதாமையும் ஏவாளையும் வரலாற்று நபர்களாகக் கருதிப் பேசுகிறார்.

He answered, ‘Have you not read that the one who made them at the beginning “made them male and female.”‘ (Matthew 19:4)[4]

அதற்கு அவர், “படைத்தவர் தொடக்கத்திலிருந்தே- ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்” என்றும், (Matthew 19:4) [4]

கிறிஸ்துவர்கள் இவ்வளவு உறுதியாக ஆதியாகமப் புராணக்கதைகள் நடந்ததாகவும் வரலாறு என்றும் உறுதியாகக் கூறினாலும், ஆதியாகமப் பழங்கதைகள் தற்போதைய அறிவியல் ஆய்வுகளுக்கும், பரிணாமவியல் போன்ற அறிவியல்களுக்கும் இன்னும் பல நிலவியல், வானியல், புவியியல், அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுக்கும் முரண்படுகின்றன. ஆதியாகமத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது போல உலகம் தோன்றியதற்கோ, அல்லது மனிதன் தோன்றியதற்கோ எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஒரு மரத்தின் கனியைச் சாப்பிட்டு எது சரி எது தவறு என்று தெரிந்துவிடும் என்பது போன்ற மரத்திற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. பாம்புகள் பேசும் என்பதற்கோ அல்லது மிருகங்களும், மனிதர்களும் சாவா வரம் பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதற்கோ எந்தவித ஆதாரங்களும் இல்லை. அவர்கள் வலி துக்கம் உணராமல் இருந்திருந்தார்கள், அல்லது இருந்திருப்பார்கள் என்பதற்கோ எந்தவித ஆதாரங்களும் இல்லை. இப்படிப்பட்ட ஆதியாகமக் கதைகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பது மட்டுமல்ல, இந்தக் கதைகள் பொய் என்பதற்கான ஏராளமான ஆதாரங்களையும் அறிவியல் குவித்து வைத்திருக்கிறது. ஆகவே ஆதியாகமம் என்று சொல்லக்கூடிய யூதப் பழங்குடியினரின் புராணக்கதைகள் வரலாற்றுரீதியில் பொய்யானவை. ஆகவே முதல் பாவம் என்பதும் பொய் என்பதே அறிவியலின் அதிகாரபூர்வமான நிலைப்பாடு. (இதனை இன்னும் விவரிக்கலாம். உதாரணமாக ஆதாமின் பின்னே வரும் வம்சாவளியையும் அதில் ஒவ்வொருவர் பிறப்பும் அவர்கள் வாழும் வயதும் கொடுக்கப்பட்டிருப்பதால், அவற்றை கணக்கிட்டு உலகம் 6000 வருடங்கள் பழையது என்று யூத அடிப்படைவாதிகளும் கிறிஸ்துவ அடிப்படைவாதிகளும் இன்னும் நம்புகிறார்கள். ஆனால் உலகம் பல பில்லியன் வருடங்கள் பழையது மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சம் நமது பூமியை விட இன்னும் பல கோடி வருடங்கள் பழையது. தற்போது பல அகழ்வாராய்வுகளில் 100000 வருடங்களுக்கு முந்தைய மனிதர்களது எலும்புகள் கிடைத்துள்ளன. டைனசோர்கள் இன்னும் பல லட்சம் வருடங்கள் பழையவை. அவற்றின் எலும்புகளும் கிடைத்துள்ளன. ஆகவே யூதப் பழங்குடியினரது புராணக்கதையில் வரும் ஆதியாகமத்தில் உள்ளது அறிவியற்பூர்வமாக பொய் என்று அறியலாம்.)

3.1.1 ஆதியாகமப் புராணக்கதைகளுக்கும் ஈடன் தோட்ட கதைகளுக்கும் உவமேயப் பொருள் கொடுத்தல்

சில முற்போக்கு வேடம் போடும் கிறிஸ்துவ வட்டங்களில் ஆதியாகமக் கதைகளை வேறுமாதிரி விளக்குகிறார்கள். அதன்படி, இந்தக் கதைகளை வரிக்கு வரி உண்மை என்று அப்படியே புரிந்துகொள்ளக்கூடாது; கருத்துகளை விளக்கும் புராணக்கதைகளாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற பார்வையை முன்னிருத்துகிறார்கள். “ஒரு விதமான” வகையில் இவை உண்மையானவை என்றும், ஆனால், அவற்றை வரலாற்று நிகழ்வுகளாகப் பார்க்கக்கூடாது என்பதும் இந்த நிலைப்பாடு. கருத்துகளைப் புரிந்துகொள்வதற்காக சொல்லப்படும் வகையில் “உண்மையானவை” (அதாவது கருத்துகள் சரி, ஆனால் நிகழ்வுகள் வெறும் கதை) என்றும், அதாவது யாஹ்வே தெய்வம் உலகத்தைப் படைத்தது; மனிதர்களையும் படைத்தது; மனிதர்கள் பெரும்பாலும் தங்களுக்குத் தெரிந்தே தவறான விஷயங்களை அவர்கள் செய்கிறார்கள்; பெரும்பாலும் இப்படிப்பட்ட தவறான செயல்களால் அவர்களும் அவர்களது சந்ததியினரும் பாதிக்கப்படுகிறார்கள்.. இது போலப் புரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள். ஏறத்தாழ, இந்தக் கருத்து விளக்கும் புராணக்கதைகளை சுவிசேஷத்தில் வரும் நீதிக்கதைகளைப் போலவும் ஏசாப்பின் நீதி கதைகளைப் போலவும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

adam_and_eve_banishedஇருந்தாலும், இப்படி ஆதியாகமக் கதைகளை அப்படியே வரலாற்று நிகழ்வாகப் பொருள் கொள்ளக்கூடாது என்று பின்வாங்குவதால், முதல் பாவம் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் விளைவு என்பது அடிபட்டுப் போகிறது. இப்படி இந்தப் புராணக்கதைகளுக்கு விளக்கம் கொடுத்தால், இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்துவ சர்ச் இந்த ஆதியாகமக் கதைகளை வரலாற்று நிகழ்வுகள் என்று சொல்லியதும் அப்படியே சொல்லவேண்டும் என்று கிறிஸ்துவர்களை வற்புறுத்தியதும் தவறு என்று ஆகிவிடும். அதுவும் நிரந்தர உண்மைகளை புனித ஆவியிடமிருந்து பெற்று கிறிஸ்துவ மக்களுக்கு இரண்டாயிரம் வருடங்களாகக் கொடுத்து வந்திருப்பதாகச் சொல்லும் சர்ச்சுக்கு இது தலைகுனிய வைக்கும் மாபெரும் தவறு.

இரண்டாவது, வானியல், புவியியல், பரிணாமவியல் அறிவியல் கண்டுபிடிப்புகளோடும் ஒத்துப்போவதற்காக உருவாக்கப்படும் இப்படிப்பட்ட புரிந்துகொள்ளவைக்க சொல்லப்பட்ட ஆதியாகமக் கதை என்ற நிலைப்பாடு மிகவும் அதிகமான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். முதல் பாவம் என்பது வரலாற்று உண்மை என்பதை, இல்லை என்று சொல்லியாக வேண்டும். புரிந்துகொள்ள சொல்லப்பட்ட புராணக்கதை என்று சொல்லிவிட்டால், முதல் பாவத்தில் வந்து முடியும் அந்தக் கதைகள் நடக்கவில்லை என்றும் சொல்லியாக வேண்டும். இது மாதிரி ஒப்புக்கொள்ளுவது, எந்த முதல் பாவத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தக் கதைகளை, புரிந்துகொள்ள சொல்லப்பட்ட கதைகள் என்று சொல்லிச் சமாளித்தார்களோ அந்த நோக்கத்துக்கே, முதல் பாவத்துக்கே ஆப்பாக முடியும்.

3.1.2 ஆதியாகமக் கதைகளையும், ஏடன் கதையையும் வரலாறும் கதையும் கலந்ததாகச் சொல்லும் வாத நிலைப்பாடு

இறுதியாக, கலப்பட நிலைப்பாடு என்று கூறப்படுவதைப் பார்ப்போம். அதாவது இது- ஆதியாகமக் கதைகளில் பாதி உண்மையான வரலாறு; மற்ற பாதி விளக்குவதற்காக சொல்லப்பட்ட கதை என்று சொல்கிறது. இதற்கான நல்ல உதாரணம் கத்தோலிக் ஆன்ஸர்ஸ் (Catholic Answers) என்ற அமைப்பு கூறுவது. இது ஆதியாகமக் கதைகளை, சரியாக எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை கீழ்வருமாறு விளக்குகிறது.

The story of the creation and fall of man is a true one, even if not written entirely according to modern literary techniques. The Catechism [of the Catholic Church] states, “The account of the fall in Genesis 3 uses figurative language, but affirms a primeval event, a deed that took place at the beginning of the history of man. Revelation gives us the certainty of faith that the whole of human history is marked by the original fault freely committed by our first parents” — (Catechism of the Catholic Church 390). [5]

“நவீன காலத்து வரலாறு எழுதும் முறைப்படி எழுதப்படவில்லை என்றாலும், உலகத்தை உருவாக்கிய கதையும், மனிதனின் வீழ்ச்சியும் உண்மையானவை. கத்தோலிக்க சர்ச்சின் உறுதியான நிலைப்பாடு (Catechism) கூறுவதாவது, “ஆதியாகமத்தின் மூன்றாவது அத்தியாயம், உவமை நடையில் மனிதனின் வீழ்ச்சியைச் சொல்கிறது. ஆனாலும் அது ஆதிகாலத்தில் நடந்த ஓர் உண்மையான நிகழ்ச்சியையே கூறுகிறது. மனித வரலாற்றின் ஆரம்பத்தில் நடந்த ஒரு நிகழ்வு அது. அது கத்தோலிக்க கிறிஸ்துவ மத நம்பிக்கை பற்றிய உறுதியைத் தருவதோடு, நமது முதல் பெற்றோர் சுதந்திரமாக செய்த முதல் தவறு நமது ஒட்டுமொத்த மனித வரலாற்றின் மீது இருப்பதைக் கூறுகிறது” — (Catechism of the Catholic Church 390). [5]

இந்தக் கலப்படமான விளக்கம் பிரயோசனமற்றது என்பது முதல்வரியிலேயே தெரிந்துவிடுகிறது. ஒரு பக்கத்தில், “ஆதிகாலத்தில் நடந்த உண்மை நிகழ்வு” என்று கூறி, அது வரலாறு என்று சொல்கிறது. மற்றொரு பக்கம், “உவமை மொழியில் எழுதப்பட்ட கதை” என்று சொல்லி ஒரு கருத்தை விளக்கச் சொன்ன கதையாக ஆக்குகிறது. உவமை என்றும் வரலாற்று உண்மை என்றும் ஒன்றுகொன்று முரண்பட்ட இரண்டு விளக்கங்களைக் கொடுப்பதன் மூலம் முதல் பாவத்தை உண்மை என்று சொல்ல வைக்க முயற்சி செய்வதாகவே இருக்கிறது. (இதனை இன்னும் விளக்கலாம். மனித வரலாற்றில் ஆதிகாலத்தில் நடந்த நிகழ்வு என்று வரலாறாகச் சொன்னால், அந்த ஆதிகால மனிதனை உருவாக்கியது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டிவரும். அதாவது மனிதன் பரிணாமம் அடைந்து உருவான ஒரு மிருகம் என்பது உண்மை என்றால், யாஹ்வே அவனை உருவாக்கவில்லை என்று ஆகும். யாஹ்வே உருவாக்கவில்லை என்றால் தோட்டமும் கனியும் லூசிபரும் இல்லை. யாஹ்வே உருவாக்கினார் என்றால் அது உண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சி. ஆகவே இரண்டையும் ஒரே விளக்கத்துக்குள் அடைக்கமுடியாது.)

ஆகவே, முதல் பாவம் என்பது இருக்கமுடியாது ஏனெனில் அது சொல்லப்பட்டிருக்கும் ஆதியாகமக் கதைகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் முடிவுக்கு வரவேண்டும்.

3.2 முதல் பாவக் கொள்கையின் ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள்

முதல் பாவத்தின் காரணமாக இந்த யாஹ்வே என்ற தெய்வம் மனிதர்களுக்குக் கொடுத்த தண்டனை தீவிரமான ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் கொண்டது. இந்தத் தண்டனை ஆதாம் ஏவாள் என்ற இருவருக்கும் அவர்களது சந்ததியினராக சொல்லப்படும் பல கோடிக்கணக்கான மனிதர்களுக்கும் ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி என்று சொல்லப்படும் அந்தக் காலத்தில் இருந்த விலங்குகளுக்கும் அவற்றின் சந்ததியினருக்கும் வலி, துயரம், பட்டினி, சாவு ஆகியவைகள் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்தத் தண்டனைகள் தார்மீக ரீதியில் கேள்விக்குரியவை.

ஆதாம் ஏவாள் ஆகியோரது செயல்பாடுகளை ஒழுக்கம் தவறிய செயல்பாடுகள் என்று கூறமுடியாது. ஏனெனில், ஆதாமும் ஏவாளும் அந்தக் கனியைச் சாப்பிடும் முன்னர் எது சரி எது தவறு என்ற அடிப்படை அறிவே இல்லாமல் இருந்திருக்கிறார்கள். (கனியை சாப்பிட்டதால்தானே அவர்களுக்கு எது சரி எது தவறு என்ற அறிவு வந்தது? அதற்கு முன்னால், யாஹ்வே தெய்வம் சொன்னதைக் கீழ்படிந்து நடக்கவேண்டும்; அதுதான் சரி என்ற அறிவு இல்லையே?)

இப்போதுதான் உருவான ஒரு குழந்தை மாதிரியான ஒரு ஜோடி, லூசிபர் என்ற சாத்தான் என்று சொல்லப்படக்கூடிய பேசும் பாம்புக்கு நிகராக இருக்கமுடியுமா? எந்தத் தண்டனையைக் கொடுப்பதாக இருந்தாலும், இந்த ஜோடியின் சூழ்நிலையையும் கணக்கிலெடுத்துகொள்ளவேண்டும். யூதப் பழங்குடியினரது புராணக்கதையின்படி, இந்தப் பேசும் பாம்பாக வந்த லூசிபர்தான் யாஹ்வே தெய்வத்தின் மிக சக்தி வாய்ந்த புத்திசாலியான உருவாக்கமாம். ஆதாம் ஏவாள் என்ற இந்தக் குழந்தை மாதிரியான ஜோடி, இப்படிப்பட்ட படு புத்திசாலியான, சக்திவாய்ந்த, லூசிபரின் தூண்டுதலினால்தான் குற்றமிழைத்தார்கள் என்பது இவர்களை விடுவிக்கப் போதுமான தடயம். குறைந்தது இவர்களுக்கு தண்டனை கொடுக்கும்போதாவது இந்த விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆதாம் ஏவாளின் இந்தச் சாதாரண “சொன்ன பேச்சு கேட்காததற்கு” கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் தண்டனை- வாழ்நாள் முழுவதும் வலி, துயரம், பட்டினி, சாவு ஆகியவை- குற்றத்தின் அளவை விட அதிகமான தண்டனை. இவர்கள் வணங்கிய, பாராட்டிய, அன்பு செலுத்திய யாஹ்வே தெய்வத்தைப் போல அவர்கள் இருக்க விருப்பப்பட்டதால்தான் ஆதாம் ஏவாள் அந்தக் கனியைச் சாப்பிட தூண்டப்பட்டார்கள். பெற்றோர் சொன்ன பேச்சைக் கேட்காமல், சச்சின் டெண்டுல்கர் மாதிரி ஆக, ஏராளமாக பூஸ்ட் சாப்பிட்ட குழந்தை போன்றதுதான். இதனை ஒழுக்கம் கெட்ட செயல் என்று சொல்லமுடியுமா? இருக்கலாம். அப்படியே இருந்தாலும் இது ரொம்ப சாதாரணமான சிறு தவறுதான். சச்சின் டெண்டுல்கரின் பிரபல பிம்பத்துக்கும், விளம்பரத்தின் சக்திக்கும் முன்னால், இது புரிந்துகொள்ளக்கூடியதுதான். நிச்சயமாக இது மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டிய செயல் அல்ல.

adam-and-eve-in-the-gardenஇதே போல, கனியைச் சாப்பிட்டது ஒழுக்கம் கெட்ட செயலா? இருக்கலாம். ஆனால், அப்படியே இருந்தாலும், யாஹ்வே தெய்வத்தின் மாபெரும் சக்திக்கு முன்னாலும் லூசிபரின் தூண்டுதலுக்கு முன்னாலும் மிகச்சிறிய ஆனால் புரிந்துகொள்ளக்கூடிய குற்றம். இது நிச்சயம் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டிய குற்றம் அல்ல. இறுதியிலும் அந்தக் கனியைச் சாப்பிட்டதால், யாரும் பாதிக்கப்படவில்லை. நிச்சயம் துயரமோ வலியோ அண்டமுடியாத யாஹ்வே தெய்வம் பாதிக்கப்படவில்லை. டெனிஸ் டிடெராட் (Denis Diderot) என்ற ஃப்ரெஞ்சுச் சிந்தனையாளர், 1762-இல், “தன் சொந்தக் குழந்தைகளை விட ஆப்பிள்கள் மீது மிகவும் அக்கறை கொண்ட அப்பா போன்றவர்தான் கிறிஸ்துவர்களின் தெய்வமான யாஹ்வே” என்று குறிப்பிட்டார். [6]

மனித இயற்கையைக் கொடுத்து, அவர்களுக்கு வலியும், துயரமும் சாவையும் கொடுத்து, ஒட்டுமொத்தமாக அவர்களது சந்ததிகளுக்கும் மிருகங்களுக்கும் அவர்கள் பொறுப்பேற்க முடியாத ஒரு செயலுக்காக இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்திருப்பதுதான் ஒழுக்கம் கெட்ட செயல்.

3.2.1 முதல் பாவக் கொள்கையில் தார்மீகப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை சமாளிக்க உருவாக்கிய இயற்கைக்கு முந்தைய கொடை (Preternatural Gift)

முதல் பாவக் கொள்கையில் ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதால், அவற்றைச் சமாளிக்க சில கிறிஸ்துவர்களால், “இயற்கைக்கு முந்தைய கொடை” என்ற கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, ஆதாமும் ஏவாளும் சாதாரண மனிதர்களைப் போல துயரமும் வலியும் சாவுடனும்தான் படைக்கப்பட்டார்கள். அதன் பின்னால், யாஹ்வே தெய்வம் அவர்களுக்கு சாகாவரத்தையும் வலியின்மையையும் யாஹ்வே தெய்வத்தின் முன்னால் இருக்கக்கூடிய வாய்ப்பையும் கொடைகளாக அளித்தது. அவர்கள் அந்த முதல் பாவத்தைச் செய்த பின்னால், கொடுத்த கொடைகளைத் திரும்பவும் எடுத்துகொண்டுவிட்டது. அதனால், அவர்கள் தங்களது பழைய மனிதத்தன்மைக்குத் திரும்பிவிட்டார்கள். இந்தச் சாதாரண மனிதத்தன்மையே அவர்களது சந்ததியினருக்கு வந்திருக்கிறது. இப்படி, கொடுத்த கொடையைத் திரும்ப எடுத்துக்கொள்வதில் எந்தவிதமான தார்மீகப் பிரச்சினையும் இல்லை. முதலில், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இந்தக் கொடைகளுக்கான தார்மீக உரிமை ஏதும் இல்லை. ஆகவே திரும்ப அவற்றை எடுத்துக்கொண்டதில் யாஹ்வே தெய்வம் எந்த ஒழுக்கக்கேட்டையும் செய்யவில்லை. அதுவும் அப்படி யாஹ்வே தெய்வம் சொன்னதைக் கேட்காமலிருந்த பின்னால், அதற்கான தார்மீக உரிமை நிச்சயம் கிடையாது. இரண்டாவது, ஆதாம்-ஏவாளின் சந்ததியினரிடமும் யாஹ்வே தெய்வம் எந்தவிதமான ஒழுக்கக்கேட்டையும் செய்யவில்லை ஏனெனில், அந்தச் சந்ததியினருக்கு சாகாவரம் போன்றவைகள் மீது எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை. கத்தோலிக்க என்சைக்ளோபீடியாவில் இந்த நிலைப்பாட்டை இப்படி எழுதுகிறார்கள்..

“கத்தோலிக்க மதக் கொள்கையின் படி மனிதன் தனது இயற்கையான எந்த ஒரு குணாம்சத்தையும் இழக்கவில்லை. ஆதாமின் பாவத்தால், யாஹ்வே தெய்வத்தின் கொடைகளைத்தான் இழந்தான். அவனது உணர்வுகள் மீதான முழுமையான கட்டுப்பாடு, சாவிலிருந்து தவிர்ப்பு, அருள், அடுத்த வாழ்வில் யாஹ்வேயின் தரிசனம் ஆகிய அந்தக் கொடைகள் மீது அவனுக்கு எந்த ஓர் உரிமையும் பாத்தியதையும் இல்லை. யாஹ்வே, இந்தக் கொடைகளை மனித இனத்துக்குப் பாத்தியதையாகச் செய்யவில்லை. குடும்பத் தலைவர் (ஆதாம்) எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்து அவர் அந்தக் கொடைகளைக் கொடுக்க விரும்பினார். ஒரு ஜமீந்தாரர் தனக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக நடந்துகொள்வார் என்பதை வைத்து அரசர் அவருக்கு பரம்பரை ஜமீன் தருகிறார். அந்த ஜமீந்தாரர் அரசருக்கு எதிராக போர்க்கொடி பிடித்தால், அந்தப் பட்டாவை அரசர் அந்த ஜமீந்தாரரிடமிருந்தும், அவரது சந்ததிகளிடமிருந்தும் நீக்குகிறார். ஆனால், அந்த அரசர் அந்த ஜமீந்தாரர் செய்த தவறுக்காக, அந்த ஜமீந்தாரரின் ஒவ்வொரு சந்ததிகளையும் பிறக்கும்போதே பிடித்து அவர்களது கை கால்களை வெட்டும்படி உத்தரவு தரமாட்டார். இந்த ஒப்பீடு லூசிபரின் கொள்கை. அதனை நாங்கள் ஒருபோதும் உபயோகப்படுத்தமாட்டோம். சர்ச்சின் கொள்கையின்படி, காட்டுமிராண்டித்தனமான மிகவும் கொடுமையான தண்டனையை குழந்தைகளுக்குக் கொடுத்தார் என்று சொல்வதில்லை. அந்த குழந்தைகள் முதல் பாவத்தையும், யாஹ்வே தெய்வத்தை உடனே கண்ணால் பார்க்கமுடியாததையும் கொண்டுதான் பிறக்கின்றன…” — [Denz., n. 1526 (1389)]. [7]

(தொடரும்….)

மேற்குறித்த தரவுகள்

[1] By “orthodox Christianity” I mean Christianity as practiced in Roman Catholicism, the Eastern Orthodox denomination, and most versions of mainline, Evangelical, Pentecostal, and fundamentalist Protestantism.

[2] This section has benefited from Bart Klink’s “The Untenability of Theistic Evolution,” The Secular Web (2009).

[3] See, for example, Davis A. Young’s “The Contemporary Relevance of Augustine’s View of Creation,” Perspectives on Science and Christian Faith, Vol. 40, No. 1, pp. 42-45 (March 1988).

There have been some heterodox interpretations of the Garden of Eden story, and of the sin of Adam, by some Christian groups (e.g., by the Mormons), and by figures such as Origen and Pelagius. Unsurprisingly, these have not been shared by “Saint” Origen or “Saint” Pelagius—for the victors write the history, even in the Church.

[4] Bart Klink, “The Untenability of Theistic Evolution,” The Secular Web (2009).

[5] “Adam, Eve, and Evolution” (with Imprimatur), Catholic Answers.

[6] John Gross, The Oxford Book of Aphorisms (New York, NY: Oxford University Press, 1987), p. 11.

[7] “Original Sin” in The Catholic Encyclopedia, ed. Stéphane Harent (New York, NY: Robert Appleton Company, 1911).

74 Replies to ““முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1”

  1. Pingback: Indli.com
  2. Waiting for more! Thanks for exposing Chritianity. I am not sure whether you have read about the Persian God Mithra ( 600BC, that is 600 years BEFORE Jesus Chritst ). He had a virgin birth, born on 25th December,performed miracles,died in cross , resurrected 3 days later. Sounds very much like J.Christ’s story? you bet. Lot of these Christianity’s beliefs are based on Mithra’s tales and they substituted Mithra with Christ.

  3. அடிப்படையிலேயே பல குளறுகளை கொண்ட ஒரு கதை பற்றி எந்த சந்தேகமும் கொள்ளாமல் அதைப் பின் பற்றுபவர்களைப் பற்றி ஆச்சரியப் பட வேண்டிஉள்ளது.

    1. உலகத்தைப் படைத்த தெய்வம் சாத்தானையும் படைத்ததா?

    ஆம் என்றால் எதற்காகப் படைத்தது? இல்லை என்றால் பின் அது எங்கிருந்து வந்தது? யாரால் படைக்கப் பட்டது?

    2 . உலகத்தைப் படைத்த தெய்வம்தான் சிறப்பானது என்றால், தெய்வத்தால் படைக்கப் பட்ட முதல் மனிதர்கள் ஏன், அதன் சொல்படி கேட்காமல் சாத்தானின் சொல்படி கேட்டு நடந்தார்கள்? அப்படி நடந்தால் அது யார் செய்த தவறு?

    3.தன்னால் படைக்கப் பட்டவர்கள் சாத்தானின் சொல்படிதான் கேட்பார்கள் என்பதை அறிய இயலாத ஒன்று, தெய்வம் என்ற தகுதிடையதா?

    அறிந்திருந்தால் பின் ஏன் சாத்தானை அங்கே உலவ விட்டது?

    4.நல்லது கெட்டதை அறிய உதவும் அறிவை ஏன் அது முதல் மனிதற்கு கொடுக்கவில்லை? முட்டாளைப் படைத்த அது வணங்குதற்கு உரியதா?

    இதிலுள்ள பல சந்தேகங்களுக்கு விடை இல்லை.
    இனி ஒருபடி மேலே போய், அடுத்த கட்டத்தைப் பார்த்தால் அது மஹா கேவலமாக உள்ளது.

    5.முதல் மனிதர்களான இருவர் மூலம் எப்படி ஒரு சந்ததி, நாட்டு மக்கள், உலக மக்கள் உருவானார்கள்?

    குழப்பங்களின் ஒட்டு மொத்தமான ஒரு கதையை நம்பி, கூச்சலிட்டுக் கொண்டு திரிவது மூடத்தனமில்லையா?? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்!

    சிலர் தான் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்.அறிவை மழுங்கடிக்க முயலும் கூட்டத்தை அடையாளம் கண்டு அவர்களை மீட்க முயற்சிப்போம்.

    அன்புடன்,
    ஆரோக்யசாமி

  4. கோபால் அய்யா
    நல்ல எழுத்து. ஆதியாகமத்தை நமது இந்து சமூகத்திலேயே புகழ்ந்தவர்களும் உண்டு. அமெரிக்காவில் புகழ் பெற்று விளங்கிய பரமஹம்ச யோகானந்தர் எழுதிய ‘ஒரு யோகியின் சுயசரிதை’ இதற்கு ஒரு அப்பட்டமான எடுத்துக் காட்டு.

    முன்னாளில் நானும் அப்புத்தகத்தை புகழ்ந்து இருக்கிறேன் என்றாலும், மீண்டும் அதைப் படிக்குங்கால், யோகானந்தரும், அவரது குருவான யுக்தீச்வர் கிரியும் நமது கொள்கைகளை கிறித்துவத்துக்கு துணை போகும் படியாக சமைத்துக் கூறுகின்றனர்.

    உதாரணத்திற்கு, யுக்தேஸ்வர் ஜோதிடத்தில் வல்லவர் என்றும், நம்முடைய புராணங்களில் கூறிய யுகக் கணக்கு தவறு என்றும் கூறி புதிதாக ஒரு பன்னிரெண்டாயிரம் வருடத்திய யுகக் கணக்கை காட்டுகிறார். அதன்படி 1700 ஆம் வருடமே கலியுகம் முடிந்து விட்டதாகவும், இப்போது சத்ய யுகம் நடப்பதாகவும் புனைகிறார்.

    யுக்தேஸ்வர் மேலும் ஒரு படி மேலே போய் ஆதியாகமம் ஒரு குறியீட்டுச் சின்னங்களின் தொகுப்பு என்று அளக்கிறார். (symbolic representation)

    கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்து யோசித்தால் , வெள்ளைக்காரன் வந்து நுழைந்த நாளில் நமக்கு கிருதயுகம் ஆரம்பித்ததாக அந்தப் புத்தகம் நமக்குக் கூறுகிறது. இது ஒரு சுத்தக் கிறித்தவ மூளைச் சலவை போலவே எனக்குத் தோன்றுகிறது. இந்தப் புத்தகத்திற்கு மேலை நாடுகளில் கிடைத்த வரவேற்பும் அதே போல சந்தேகத்திற்குரியதே. சென்ற நூற்றாண்டின் நூறு சிறந்த புத்தகங்களில் ஒன்று என்ற பட்டம் வேறு அதற்கு !

    இந்துவை தன் ஆணிவேரில் இருந்து அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே “ஒரு யோகியின் சுயசரிதை’. இதன் மூலம் இந்து மதமும் கிறித்தவமும் சமமே என்ற மாயைத்தோற்றம் இந்துக்களின் மனதில் பதிய வைக்க முயற்சி நடக்கிறது.

  5. //
    களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டாலே ஆதாம்

    //

    அதாம் மட்டும் தான – அறுப்பு நாட்டுக்காரன் மொத்தமும் தான்

    முதல் மனிதன் பிறப்பதற்கு முன்பே அபத்தம் தொடங்கிவிடும்

    கர்த்தர் முதலில் செடி கொடிகளை படைப்பார் – அதை காயவிட்டு மறு நாள் ஒளியை படிப்பார் – எப்படிங்காணும் photosynthesis நடந்தது என்றால் ஹிஹி ன்னு தான் முழிக்கணும்

    முதல் பாவத்தை பற்றி இன்னும் சற்று பார்த்தால் –

    கர்த்தர் எப்படி அவர் கொடுத்த கொடையை எடுத்துக் கொள்ளலாம் – நீ ஆப்பிள் சாப்பிட்டால் எடுத்துக் கொள்வேன் என்று சொல்லி விட்டு எடுக்கும் ஒரு basic etiquette கூட இல்லாமலா இருப்பது.

    சரி இயேசு பிறந்தாகிவிட்டது – அவரை நம்புவோருக்கு முதல் பாவம் போய் விட்டது – இப்படி முதல் பாவம் போன நமது லசாரஸ், சில்லிசாம், ஜோ, டிடஸ் இதாய்திகளுக்கு வலி இல்லவே இல்லையா – வலி இருந்தால் முதல் பாவம் போகவில்லை என்று தான் அர்த்தம் – வலி இல்லை என்றால் மரணமே இருந்திருக்க கூடாது – ஏசுவும் மரித்தே இருக்க கூடாது, நம்ம தினகரனும் இன்னு உசுரோட தான் இருந்திருக்கணும், அப்பப்பா இன்னும் எத்தன ஊழியம் செய்பவர்கள் உசுரோட திரிஞ்சுகிட்டு இருப்பாங்க

    ஆணையும் பெண்ணையும் மட்டுமே கர்த்தர் படைத்தால் – திருநங்கைகள் பிறப்பது எப்படி? இவர்கள் அதாம் ஏவாளின் சந்ததியாய் இருக்கவே முடியாதே?

    மிருகங்களுக்கும் பாவம் தொற்றிக் கொண்டதென்றால் – அவை பைபிள் படிக்காமல் என்னை சட்டியில் தானே வாட வேண்டி வரும் – என்ன ஒரு கல் நெஞ்சம் கொண்ட படைப்பு

    அடாமும் ஏவாளும் ஒரு சேர ஆப்பிள் தின்னார்களா – தின்னதால் பாவம் வந்ததா – ஆப்பிள் பறித்ததால் பாவம் வந்ததா

    ஒரு சேர தின்ன வில்லை என்றால் – யார் முதில் தின்றார் – அது தான் முதல் பாவம் – அடுத்தது இரண்டாவது பாவம்

    அதாம் தான் ஆப்பிள் தின்றார் – ஈவ் சாப்பிடதான் சொன்னார் என்றால் – ஈவிருக்கு எப்படி பாவம் வந்தது – அப்படி என்றால் இன்றைக்கு உள்ள எந்த பெண்ணுக்கும் முதல் பாவம் அண்டாதே – சாப்பிட சொன்னதால் பாவம் அண்டிற்று என்றால் பாவம் லூசிபர் பாம்பையே சேரும் – ஈவை அல்ல –

    இப்படி சொன்னது ஒரு பாவம் தின்றது ஒரு பாவம் என்றால் – இவற்றுள் எது முதல் பாவம் – சொன்னதா, தின்றதா – சொன்னதற்கு தண்டனையா, தின்னதர்க்கு தண்டனையா – இதில் எதை ஒத்துக் கொண்டாலும் இல்லை இரண்டையும் ஒத்துக் கொண்டாலும் – எக்க சக்க logic சிக்கல் வரும்

  6. //
    அது முதல் பாவம் தீண்டாத கருவடைதல் என்ற பொருளில் immaculate conception of Mary.
    //

    only a sinner needs punishment
    if a sinner needs to be redeemed, only a sinner needs to be given as a sacrifice
    then to redeem a whole lot of sinners, why was an immaculate soul given in sacrifice
    If someone is affected by H1N1, only he needs to be qurantined or sacrficed for the commuinty, will anyone sacriice a person in good health to save someone with H1N1 – beats logic
    If jesus after 4000 years of earth’s creation came to redeem people, what happened to those who were born inbetween earth’s creation an Jesus’s birth – What a non sense – even Jesus’s great grandfather could not be redeemed
    Was God cruel for all these 4000 years – why did he chage heart suddenly

  7. சாரங் அவர்களே,

    “ஆதி பாவம்” பிதற்றலில் உள்ள லாஜிக் சிக்கல்களை நன்றாகப் படம்பிடித்துள்ளீர்கள்.

    // மிருகங்களுக்கும் பாவம் தொற்றிக் கொண்டதென்றால் – அவை பைபிள் படிக்காமல் என்னை சட்டியில் தானே வாட வேண்டி வரும் – என்ன ஒரு கல் நெஞ்சம் கொண்ட படைப்பு //

    அதான் கிறித்தவத்தில் “மிருகங்களுக்கு ஆன்மாவே இல்லை” என்று மற்ற உயிரினங்களை அச்சித்தாக்கி விட்டிருக்கிறார்களே. இப்படிக் கூறுபவர்களுக்கு மற்ற உயிர்களிடம் எங்கிருந்து அன்பு ஏற்படும்?

    // Was God cruel for all these 4000 years – //

    இல்லை இல்லை, பழைய ஏற்பாட்டில் ஜெஹோவா ஒரு அன்புமிகுந்த தெய்வமாகத் தான் வருகிறார் — உதாரணமாக,

    (1) கர்த்தர் “தன்னுடைய குழந்தைகலாகிய” இசுறேளியர்களை பாரோ சிறை வைத்திருந்ததால் எகிப்தில் உள்ள அப்பாவி சிசுக்களை அழிக்கிறார்.

    (2) அமேலகைத்தில் உள்ள அப்பாவி சிசு, பெண், சிறுவர்-சிறுமியர், ஆடு, மாடு, கழுதை, புல், பூண்டு, ஆகியவற்றை எல்லாம் அழித்து ஒரு நாட்டையே தரைமட்டம் ஆக்குமாறு தன்னுடைய “குழந்தைகளாகிய” இசுறேளியர்களுக்கு ஆணை விடுக்கிறார்.

    (3) ஏவாள் (eve) செய்த குற்றத்திற்காகத் தாய்க்குலம் முழுவதையும் “பிள்ளை பெறும் பொழுது வலியால் தவிப்பாயாக” என்று சாபிக்கிறார்.

    இதை எல்லாம் செய்து காட்டுவதற்குக் கருணையே வடிவான தெய்வம் அன்றி வேறு யாரால் முடியும்?

  8. // If jesus after 4000 years of earth’s creation came to redeem people, what happened to those who were born inbetween earth’s creation an Jesus’s birth – What a non sense – even Jesus’s great grandfather could not be redeemed //

    சாரங் அவர்கள் கேட்கும் கேள்வியிலிருந்து கிறித்தவம் முதலிய ஆபிரகாமிய மதங்கள் மிகப்பெரிய மோசடி என்று இந்துக்கள் அனைவரும் தெரிந்துக் கொள்ளட்டும். எதை வேண்டுமானாலும் நம்புவது அவரவர்க்கு உள்ள மதச் சுதந்திரம்; ஆனால் இப்படிப் பட்ட மோசடியை முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல மறைத்துக் கொண்டு இந்நாட்டின் ஆழ்ந்த சனாதன தருமக் கொள்கைகளைச் சீர்குலைக்க வரும் விரோதிகள் தூற்றும்போது அதற்கு நாம் (அறிவுப்பூர்வமாக/விவாத/கட்டுரை/கண்டன ரூபமாக) தக்க பதிலடி கொடுக்கவேண்டும்.

  9. ஆதம் ஏவாள் கதை ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவதன் மூலம் பாவம் தொற்றிகொல்கிறது என்பது மிகவும் குறுகிய மனப்பான்மையுடனும் சிருபுல்லைதனமகவும் கூறப்படும் கதை ஆகும். இது போன்ற செயல்கள் ஒரு தெய்வத்தின் செயலாக இருக்க முடியாது. இதன் மூலம் கிருத்துவ வேதத்தின் ஆணிவேர் என்று கூறுவது அந்த மதத்தின் பொய்மையை வெளிச்சம் பூட்டு காட்டுகிறது.

  10. ஒரு கேள்வி.
    வரைந்து காட்டும் படங்களிலெல்லாம் ஆதாம் ஏவாள் அப்புறம் இந்த யாஹ்வே எல்லோரும் வெள்ளைக்காரர்களாக இருப்பது ஏன்? இதன் மூலம் வெள்ளைக்காரர்கள் மேலானவர்கள் கருப்பர்கள் கீழானவர்கள் என்று கிறிஸ்துவ மதம் பிரச்சாரம் செய்கிறதா? ஒரு கிறிஸ்துவர் என்னிடம் பேசும்போது ராமன் கிருஷ்ணன் எல்லோரும் கருப்பாக இருக்கிறார்கள் . இயேசு எவ்வளவு வெள்ளையாக இருக்கிறார் பாருங்கள் என்றார். நான் தலையில் அடித்துகொண்டேன். இத்தனைக்கும் அவரே கருப்பு! எப்போதுதான் நம் மக்களின் அடிமைப்புத்தி போகுமோ! நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்று எப்போது நினைப்பார்களோ தெரியவில்லை!

  11. By Rajkumar@
    https://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=31&topic=1882&Itemid=287

    இந்த முதல் பாவத்திற்குப் பின்னால் பூமி சபிக்கப்பட்டது ஏன்? பூமியும் அதிலுள்ள யாவையும் இன்று உள்ளது போல மனிதர்கள் ஆட்சிசெவதற்காகவே உண்டாக்கப்பட்டது,(ஆதி3:17.) ஆகவே சகலமும் சபிக்கப்பட்டது, இது எப்படி என்று உங்கள் பாணியிலேயே விளக்குகிறேன்.

    ஜாதகம் கணிப்பவர்களிடம் சென்று கால சர்பதோஷம் என்றால் என்ன? என்று கேட்டுப்பாருங்கள், இது எதனால் உண்டாகிறது? என்றும் கேட்டுப்பாருங்கள், மேலும் இது அந்தப்பரம்பரையில் எத்தனை தலைமுறைக்கு வரும் என்றும் கேட்டுப்பாருங்கள்…. அதை நான் இங்கு விளக்கப்போவதில்லை, ஆனால் ஒரு பாவம் மனிதனுடைய எத்தனை தலைமுறைகளை பாதிக்கும் என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த சாட்சி, அப்படிப்பட்ட கீழ்படியாமையின் பாவம் தான் ஆதாம் ஏவாளின் பாவங்கள் மேற்சொன்ன கால சர்ப தோஷத்தில் எப்படி தலைமுறை தலைமுறையாக பாதிப்பு இருக்குமோ அப்படித்தான் முதல் மனிதர்களின் பாவமும் இதை உங்களால் மறுக்க முடியுமா? இல்லை பொய் என்று சொல்லிவிட முடியுமா? முடிவை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

  12. அன்புள்ள சில்சாம்,
    சாபம் என்பது உண்டா, கால சர்ப தோஷம் என்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்.
    முதலாவது விஷயம், முதல் பாவம் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்ச்சி உண்மையா என்பதுதான் கேள்வி. நடக்காத ஒரு விஷயத்தை வைத்து பூச்சாண்டி காட்டும் மந்திரவாதி போலத்தான் இந்த முதல் பாவ கொள்கை என்பதுதான் கட்டுரையின் சாரம். கட்டுரையை கொஞ்சம் சரியாக வரி விடாமல் படித்துவிட்டு பிறகு பதில் எழுதவும்.

    இரண்டாவது, இந்த கட்டுரை கிறிஸ்துவர்களுக்கு அல்ல. இந்துக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

  13. சில்சாம்,
    பைபிளில் இருப்பதை இப்படி வரிக்கு வரி எழுத்துக்கு எழுத்து புள்ளிக்கு புள்ளி நம்புவதாக சொல்லிக்கொள்கிறீர்கள். ஆனால், விஷத்தை குடித்தாலும் ஒன்றும் செய்யாது என்றால் மட்டும் நம்ப மாட்டேன்னென்கிறீர்களே? :-)) இது நியாயமா?
    //விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு – 16 : 17-18)// வியாதியஸ்தர்கள் மீது கை வைத்து சொஸ்தமாவதாக பிலிம் காட்டி ஏமாற்று வேலை செய்து பிழைக்கிறீர்கள். ஆனால், அதே வரியில் சாவுக்கேதுவான விஷத்தை குடித்தால் ஒன்றும் செய்யாது என்பதை மட்டும் செய்ய மாட்டேன் என்கிறீர்களே? ”தேவனாகிய கர்த்தரை பரீட்சியா இருப்பாயாக. ” என்பதை வைத்து தப்பிக்க முயல்கிறீர்களே. அதே போல வியாதியஸ்தர்கள் மீது கை வைத்து சொஸ்தம் செய்ய முயற்சிப்பதும் இதே போல பரிட்சை செய்வது இல்லையா? அதை மட்டும் ஏன் செய்கிறீர்கள்? அது ஏமாற்றுவேலை தானே?. சொஸ்தம் ஆகிவிட்டது என்று பொய் சொல்லலாம். ஆனால், விஷம் குடித்து காட்டுவதில் அப்படி ஏமாற்றமுடியாது :-)) என்பதால் ஜகா வாங்குகிறீர்களா?
    //அப்படிப்பட்ட அருள்நாதருக்காக நான் விஷம் குடிக்கத் தயாராக இருக்கிறேன்; ஆனால் நான் விஷம் குடித்தால் மரித்துப்போவேன் என்பது நிச்சயம்; அதில் எந்த சந்தேகமும் இல்லை; ஏனெனில் இயேசு விஷம் குடிக்க‌ என்னை அழைக்கவில்லை; // என்று புளுகுகிறீர்களே? இயேசு விஷம் குடித்தால் ஒன்றும் செய்யாது என்று ஆணித்தரமாக சொல்லும்போது, விஷம் குடிக்க சொல்லவில்லை என்று இப்படி புளுகி த்ப்பிக்க முயல்வதில் உங்களுடைய விசுவாசமின்மைதானே தெரிகிறது? சாவுக்கேதுவான விஷத்தை குடித்தால் ஒன்றும் செய்யாது என்றுதானே சொல்லுகிறார்? அதில் தெரியாமல் குடித்துவிட்டால் ஒன்றும் செய்யாது என்று சொல்கிறாரா? அல்லது தெரிந்தே குடித்தால் நிச்சயம் செத்துபோவாய் என்று சொல்லுகிறாரா? அவர் சொல்லாததெல்லாம் அதில் இருப்பதாக நீங்களாக போட்டுக்கொண்டு தப்பிக்க முயல்கிறீர்களே? உங்களுக்கே நம்பிக்கையில்லாத ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் விற்று பிழைப்பு நடத்த முயலும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

  14. நாமெல்லாரும் மனிதர்கள் என்பதில் சந்தேகமில்லை தானே? அப்படியானால் நம்மூலம் பேசப்படும் காரிய‌ங்கள் மனித அறிவுக்கு உட்பட்டவை தானே? இந்நிலையில் ஒருவர் பேசும் விஷயத்தை இயற்கைக்கு மாறுபட்ட அதிசய செய்தியாக்கத் தேவையான இரகசிய செயல் எது?அந்த தரத்துக்கு இணையாக இந்த கட்டுரை இல்லை;

    ஆனாலும் இந்த கட்டுரையாசிரியர் இதனை எழுத எடுத்துக்கொண்ட காலத்தைப் போலவே இதற்குரிய பதிலை ஆயத்தம் செய்யவும் நேரம் தரப்படவும் அது இந்த கட்டுரையின் கருத்துக்கள் ஒரு “வெள்ளை” முட்டாளினிடமிருந்து பெறப்பட்டபோது கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைப் போல ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும்;அப்படியானால் நான் சவாலை ஏற்கிறேன்..!

  15. திரு தங்கமணி அவர்களே,

    திரு chillsam பொத்தாம்பொதுவாக சவாலை ஏற்கிறேன் என்று கூறியிருக்கிறார். கவனமாக சட்ட பூர்வமான எல்லா உறுதிப் (இறுதிப் !) பிரமாணங்களையும் தக்க சாட்சிகள் (குறைந்தது பத்துப் பேராவது) முன்னிலையில் எழுதி வாங்கிக் கொள்ளவும். தற்கொலைக்குத் தூண்டியதாக உங்கள் மீது வழக்கு வந்துவிடப் போகிறது ! மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு முன்னாள் வாங்கி வைப்பார்களே அதுபோல இதற்கும் செய்து கொள்ள வேண்டும்.

  16. Dear Chillsam,
    “Genesis theory” is one example for the fictions in Christianity. The missionaries and church never stop their imaginary tales and they are organised to do that only.
    If you want the Indian version of church lies, the standing example is the failed “Aryan Invasion theory”.
    With fairy tales, you can fool someone for sometime, but not all everytime. See the end result of the Church false theories. In Europe and UK, Christianity is fast approaching it’s end. The confession and testimony is given below :

    Father Piero Gheddo of the Pontifical Institute for Foreign Missions and founder of the missionary news agency AsiaNews, said that “The fact is that, as a people, we are becoming ever more pagan and the religious vacuum is inevitably filled by other proposals and religious forces,”.
    Jesus might be harmless gentleman, but the church and missionary are political, self aggrandizing agents and they don’t hesitate to fool the sheeps.

  17. “…….. but the church and missionary are political, self aggrandizing agents and they don’t hesitate to fool the sheeps.” – ராம்
    நன்றி ராம்ஜி!!!!!

    இதை ஒரு சாமானியன் படித்தால் கூட, தன் நிலைக்காக வெட்கி, “நானும் அந்த செம்மறியாட்டு மந்தையில் ஒருவன்தானே!! இத்தனை நாள் நான் மூளை மழுங்கி! எமாற்றுக்கூட்டத்தினால் வஞ்சிக்கப் பட்டு,என் தாய் நாட்டிலுள்ள மதத்தை மதியாமல், அற்ப சுகங்களுக்கு ஆசைப் பட்டு, பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து வெள்ளைத் தோலான் விற்றுவிட்டுப் போன ஒரு மதத்தை வாங்கியது மட்டுமல்லாமல்,பல ஏமாளி மக்களிடமும் அதை விக்க முயற்சி செய்தேனே,
    இதற்கு பிராய சித்தம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்” என்பான்.

    “…..அவரின் மீது நம்பிக்கை வைப்பதே ஞானத்தின் ஆரம்பம் ” என்ற ஆரம்பக் கல்வி படித்தவர்கள், அதே மூடத்தனத்தினால், வீண் விவாதங்களும், அடுத்தவர்களைக் குழப்பும் வெட்டிக் கதைகளையும் பேசியே மேலும், மேலும் பாவங்களைச் சேர்த்து, இறுதியல் எண்ணைச் சட்டியில் வறுபடுவதையே விரும்புவார்கள்.

    அமல்ராஜ்

  18. // இந்நிலையில் ஒருவர் பேசும் விஷயத்தை இயற்கைக்கு மாறுபட்ட அதிசய செய்தியாக்கத் தேவையான இரகசிய செயல் எது?அந்த தரத்துக்கு இணையாக இந்த கட்டுரை இல்லை//

    மேலேயுள்ள வாசகம் நிச்சயமாக கல்வெட்டிலே பொறிக்கப் பட்டு, அதற்கு இந்த வாசகத்தை சொன்னவரே காவலாக இருந்து, எதிர்கால சந்ததியர்காவது விளக்கம் சொல்லவேண்டும்.

    அதற்கு முன்னால், அவரே இதை ஐநூறு தடவை படித்துப் பார்த்து புரிந்து கொள்ள முயல வேண்டும்.

    தாங்கலப்பா சாமி!!!!!!!!!

  19. “வெள்ளை” முட்டாளினிடமிருந்து பெறப்பட்டபோது கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைப் போல ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும்”

    வாத்தியாரே, பல வருடம் முன்னால, பல வெள்ளை முட்டாள்கள் வந்து வித்துட்டுப் போனததான, இப்பயும் நீ பாலோவ் பண்ற.

    மாசான முத்து

  20. சில்லிசாம்,

    கால சர்ப்ப தோஷம் என்பது ஆப்பிள் சாப்பிட்டதால் வராது – அது சாபமும் அல்ல ஹிந்து மரபில் மறு பிறப்பை ஒத்துக் கொள்கிறோம் – அதனால் பாவ புண்யங்கள் தொடரலாம் என்பதை ஒத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை

    டபக்குன்னு ஒரு மூணு சுத்து சுத்தி – இதோ ஆவியே நீ இப்போது உண்டானை, இப்போது மைதனானாய் என்று instant காபி போல உருவாக்கப்படும் உயிர் தான் கிறிஸ்தவ உயிர் – அப்படி இருக்கையில் பாவம் எங்கேருந்து வரும் – கர்த்தர் செய்த பாவம் தான் முதல் பாவமாக இருக்க வேண்டும்

    அப்படி டபக்குன்னு உயிரை படிக்கிற கர்த்தர் ஏன் இயேசுவை late ஆ படைத்தார் ஒரு நாலாயிர வருஷம் சும்மா ஜாலிய இருந்தார் – திடீர்ன்னு ஞானம் வந்து இயேசுவை படைக்கிறார் – அப்புறம் முதல் பாவம் போயிரும் –

    இப்படி டபால்ன்னு உயிரை படைக்கிற கர்த்தர் ஏன் மங்கோலியா காரண படைக்கிறார் – அரபு நாட்டுக் காரண படைக்கிறார் – ஒரு புத்திஸ்ட படைக்கிறார், ஒரு பார்சியை படைக்கிறார் – எடுக்கு – இவங்களெல்லாம் சும்மா புடிச்சு ஞான ஸ்நானம் ஆகலன்னு காரணம் காட்டி என்ன சட்டில போடவா? இல்ல சாது செல்லப்பா வந்து அறுவடை பண்ணவா?

    இப்படி முதல் பாவத்திற்கு முன்னுக்கு பின் முரணாக எண்ணற்ற விஷயங்கள் உள்ளது – இந்த அபத்தம் உங்களுக்கு தேவை தானா

    உங்களை பற்றி தாழ்வாக நினைக்க சொல்லும் ஒரு மதம் என்ன மதம் – மனிதனின் மேம்பட்டிர்க்கே மதம் – மனிதனை சிந்திக்க வைப்பதே மதம் – இப்படி பாவிகளே என்று நிந்திக்க வைக்க அல்ல

    இதற்க்கு உங்களிடம் பதில் உண்டா?

    செடி கோடியை படைத்து ஒரு நாளைக்கப்பறம் light போட்டாரமே – அப்போ photosynthesis எப்படி நடந்திருக்கும்?

    //
    ஆனாலும் இந்த கட்டுரையாசிரியர் இதனை எழுத எடுத்துக்கொண்ட காலத்தைப் போலவே இதற்குரிய பதிலை ஆயத்தம் செய்யவும் நேரம் தரப்படவும்
    //

    இதெல்லாம் பல பல வருசங்களா கேட்கப்படும் கேள்வி தான் – இன்னும் உன்காளுங்களிடமிருந்து பதிலே வரல – புத்சால்லாம் யோசிச்சு ஏதும் நீங்க கண்டுபிடிக்க வேண்டாம் – பேசாம கொச்சினையே திருப்பி எழுதி வையுங்க grace மார்கானும் கிடைக்கும்

    //
    அப்படியானால் நம்மூலம் பேசப்படும் காரிய‌ங்கள் மனித அறிவுக்கு உட்பட்டவை தானே
    //
    இது விவிலியம் படிகாதவருக்கு மட்டமே பொருந்தும் – அதை படித்தவர்களின் அறிவு அப்பப்ப – எதற்கும் உட்பட்டதல்ல – சரி – நீங்கள் tom and jerry , animal kingdon, yesabs fables, mother goose rhymes, barney and children, thomas the tank engine bob the builder இதெல்லாம் பார்த்ததுண்டோ?

  21. //ஜாதகம் கணிப்பவர்களிடம் சென்று கால சர்பதோஷம் என்றால் என்ன? என்று கேட்டுப்பாருங்கள், இது எதனால் உண்டாகிறது? என்றும் கேட்டுப்பாருங்கள், மேலும் இது அந்தப்பரம்பரையில் எத்தனை தலைமுறைக்கு வரும் என்றும் கேட்டுப்பாருங்கள்…. அதை நான் இங்கு விளக்கப்போவதில்லை, ஆனால் ஒரு பாவம் மனிதனுடைய எத்தனை தலைமுறைகளை பாதிக்கும் என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த சாட்சி,//

    என் தந்தைக்கோ,தாத்தாவுக்கோ இல்லாத கால சர்ப்ப தோஷம் எனக்கு என் ஜாதகத்தில் உண்டு. என் தம்பிக்கோ,தங்கைக்கோ,அவ்வளவு ஏன் என் சித்தப்பா,பெரியப்பா பங்காளி குடும்பங்களில் யாருக்குமே இல்லை.
    என் குழந்தைக்கோ, என் சகோதரியின் குழந்தைகளுக்கோ கூட இல்லை. அப்படி பரம்பரையாக இருக்க வேண்டும் என்று விதியும் இல்லை. எந்த ஜோதிட நூலில் படித்தீர்கள்.நூல் ஆசிரியர் யார்? புலிப்பானியா? வராக மிஹிரரா? அல்லது அக்னி ஹோத்ரி ஐயங்கார் போல யாராவது டுபாகூர் ஜோசியரா? அல்லது யாரவது பைபிள் படித்த ஜோசியர் வேண்டுமானால் சொல்லி இருக்கலாம்.
    தயவு செய்து உங்களுக்கு சம்மந்தம் இல்லாத, தெரியாத ஜோசியத்தை இங்கே வம்புக்கு இழுக்காதீர்கள். ஏற்கனவே நிறைய பேர் ஜோசியத்தை கேவலப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
    ஜோசியம் எதிர் காலத்தை உணர்ந்து கொள்ள மட்டுமே. விதியை மற்ற முடியாது. செய்த தவறுக்கு தண்டனையை அவரவரே இப்பிரப்பிலோ, மறுபிறப்பிலோ அடைந்தே தீரவேண்டும். பரிகாரம் எல்லாம் மன வலிமையை கூட்டத்தானே தவீர ஒருவனுடைய விதியை மாற்றி அமைக்க அல்ல. அப்படி முடியும் என்று சொன்னால் அவரும் டுபாகூர் தான்.
    இறைவனின் சரணாகதி கூட நாம் நம் விதியை கடக்க உதவி மட்டுமே செய்யும். ஆனால் செய்த தவறுக்கு கர்மத்தை அடைந்தே தீர்க்க வேண்டும்.ஆண்டவனின் அருகாமை பிரச்னைகளை கடக்க உதவியாக இருக்கும் bypass எல்லாம் செய்யாது.இட்டர்க்கு இட்ட பலன் தான் இங்கே, தன வினை தன்னை சுட்டே தீரும். ; தன்னை வணங்கி சரணடைந்தவரை exemption கொடுத்து தப்ப வைக்கும் கடவுள் ஒருவர் இருந்தால் அவரும் கூட டுபாகூர் தான்.
    சரணடைந்தவ்ரை எஸ்கேப் ஆக விடுபவரே டுபாகூர் என்றால் வெறுமனே பொங்கல் வைப்பதாலும்,சுற்றி வருவதாலும். அபிசேகம் செய்வதாலும் விட்டால் அவர் மகா டுபாகூர்.
    சரணடைந்தவ்ரை இதற்க்கு மேல் தவறு செய்யாமல் நல்வழியில் நடக்க அருள் புரிந்தும், இதுவரை பெற்ற கர்மங்களை கடக்க துணை புரிவதும் மட்டுமே இறைவன்.
    இல்வாழ்வை துறந்த ஞானம் பெற்ற இறைவனை தரிசித்த பல பெரிய முனிவர்களும், யோகிகளுமே கர்ம வினை மீதமிருந்த காரணத்தால்
    அரச தண்டனை பெற்றும்,நோய்வாய் பட்டும் தான் கர்மத்தை கழித்திருக்கிறார்கள்.

  22. மேலும் கால சர்ப்ப தோஷம் முன்னோர்கள் செய்த பாவத்தால் அல்ல அவரவர் செய்த வினையால் மட்டுமே. பரம்பரை வியாதியல்ல.எத்தனையோ பேருக்கு கால சர்ப்ப தோஷம் உண்டு ஆனால் அவர் பரம்பரையில் எல்லோருக்கும் இருக்காது. அப்படி பரம்பரை தோஷம் என்றால் எல்லார் குடும்பத்திலும் பரம்பரையாக அது இருக்கவேண்டும்.ஏனென்றால் எதாவது ஒரு கால கட்டத்தில் எல்லா குடும்பத்திலும் யாரவது ஒருவருக்கு அந்த தோஷம் இருந்தே இருக்கும். அப்படி அது பரம்பரை தோஷமாக இருக்கும் பட்சத்தில் அதற்கு பின் பிறந்த எல்லா வாரிசுகளும் கால சர்ப்ப தொசத்துடன் தான் பிறக்க வேண்டும்.
    தவிரவும் அதை அனுபவிப்பதும் சரி,பரிகாரம் செய்து கொள்வதும் சரி அவரவர் தான் செய்ய வேண்டும். என் பொருட்டு என் கடவுளோ அல்லது என் மகனோ அல்லது என் தந்தையோ இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
    அப்படி கர்ம வினையை மற்றவர்க்கு மாற்றிவிடும் வழி முறை இருந்தால் பணக்காரர்கள் பணம் கொடுத்து பிறருக்கு மாற்றி விட மாட்டார்களா?

  23. தமிழ் ஹிந்து தளத்தின் தந்திரங்களும் சட்டவிரோத செயல்பாடுகளும்…
    https://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38261403

    முதல் பாவம் அல்லது ஆதி பாவம் கொள்கையைக் குறித்த போதனை
    https://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38261393

  24. மறுபிறப்பை மறுப்பவர்களுக்கு ஒரு கேள்வி.
    இயேசு கிறிஸ்து மீண்டும் வரபோவது மறுபிறப்பு தானே? அதனை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்.
    நீங்களே மறுபிறப்பு கொள்கையை வைத்துள்ளீர்கள்.
    உயிர்த்தெழுந்தது கூட ஒரு வகையில் மறுபிறப்பே.

    இயேசு மீது எந்த வெறுப்பும் இல்லை எங்களுக்கு, அவர் மீண்டும் பிறந்தால் அவரையும் சிலர் அவதராமாக ஏற்றுக்கொள்ள, குறைந்தபட்சம் ஒப்பு கொள்ளவாவது இந்துக்களே உள்ளார்கள்.

    ஆனால் ஏசுவையும், ஈஸ்வரனையும் வைத்து சண்டை போடுவது,தூற்றுவதை விட நீங்கள் உங்கள் வழியிலும்,நாங்கள் எங்கள் வழியிலும் நட்புடனே பயணித்து அவரவர் எல்லைக்குள், அவரவர்களுக்குரிய உரிமைகளோடும்,மற்றவர்களை மதித்தும் வாழ்ந்து இலக்கை அடைவதே, அடைய முயற்சிப்பதே சிறந்த மார்க்கமாக தெரிகிறது. இதனைத்தான் இந்துக்கள் இப்போதே செய்து கொண்டிருக்கின்றனர்.ஏன் நீங்களும் அப்படி செய்யகூடாது?
    அப்படி நீங்கள் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்னையே வந்திருக்காது.
    ஏன் இனிமேலாவது?

  25. Dear Chillsam,
    Leave up your struggle. The world is the court now and all the children abused by the organised church are the judges.

    Pope visits UK, admits failures in abuse scandal
    https://news.yahoo.com/s/ap/20100916/ap_on_re_eu/eu_pope_britain#mwpphu-container

    In this single article, the number of comments is exceeding 1100 within 24 hours of publishing this news. All these comments are not from biased people, but they were faithful from the whole of Europe, UK, Australia and US are charging the organised crimes. The RCC empire is damaged beyond repair.

  26. சில்சாம்,
    நீங்கள் உண்மையிலேயே விஷம் குடிக்க தயாரா? ஆச்சரியமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கிறீர்கள். பரவாயில்லை. நீங்கள் மட்டும்தானா? இயேசு கிறிஸ்துவை தீவிரமாக விசுவாசிக்கும் ராஜ்குமார், ஜோஸப் சினேகா எல்லோரும் பொதுவாக பலர் அறிய விஷம் குடித்து உங்களுக்கு இயேசு மீது உள்ள விசுவாசத்தை நிரூபிக்கப்போகிறீர்களா? வரவேற்கிறேன்.
    உண்மையிலேயே விஷம் குடித்து நீங்கள் ஒன்றும் ஆகாமல் பால் குடித்தாற்போல நின்றிருந்தால் எனக்கும் உங்களது கதைகள் மீது நம்பிக்கை வரும். எனக்கு நம்பிக்கை வருவது இரண்டாம் பட்சம். அது உங்களுக்கே உங்களது விசுவாசத்தின் மீது உள்ள நம்பிக்கையை உறுதி செய்யும்.
    சென்னையில் பகிரங்கமாக கூட்டம் போட்டு இதனை அறிவிப்பு செய்யுங்கள். வர ஆவலாக இருக்கிறேன். அதே போல மோகன் லாசரஸ், பால்தினகரன் மகன், மகள் எல்லோரையும் குடிக்க அன்புடன் அழையுங்கள். எங்கள் கையிலிருந்து கூட விஷத்தை வாங்கி குடிக்க வேண்டாம். கம்யூனிஸ்டுகள் உங்கள் நண்பர்கள்தானே? அவர்களின் கையிலிருந்து வாங்கி குடித்து காட்டுங்கள். அதற்கு முன்னால், நண்பர்கள் சொன்னது போல, “நான் செத்தால் நான் மட்டுமே பொறுப்பு” அல்லது ”நான் செத்தால் ஏசுதான் பொறுப்பு” என்பது போல ஒரு கடிதம் எழுதி போலீஸிடம் கொடுத்துவிடுங்கள்.

  27. ஒரு லாஜிக் புரியலை. ஆப்பிள் சாப்பிட்டது கீழ்படியாமை என்று உயிரினம் மொத்தத்தையும் சபித்து விட்ட கடவுள் பெரிய பெரிய குற்றங்களுக்கெல்லாம் பாவமன்னிப்பு கொடுக்கிறாரே. ஒருவேளை சின்ன தப்பு தான் செய்யக் கூடாதோ?

    யாராவது விளக்குங்கப்பா?

  28. என்னா சார் நம்ம ஊர் கதையில பழம் மேட்டர் போட்டுத் தாக்கினதைவிட இது பெரிய விஷயமா என்ன, டென்ஷன் ஆகாதீங்க‌..!

  29. Immaculate conception of Mary is not about birth of Jesus. Catholics say Mary herself was sinless when she was born. They claim God created her soul sinless but her body was born normally with father and mother coming together. But they say J.Christ was born to Mary but had no human father. The holy spirit entered through Mary and was the father. They say J.Christ was born mysteriously and not through the birth canal of Mary. They say Mary was a virgin perpetually. But contrary to all this is John 8-41 where the people clearly say J.Christ that he was born through fornication ( See Tamil bible for a better translation- says born to “vesi”!). Mary hid her pregnancy even from Joseph till she came back from her cousin Elizabeth’s house after staying there for months. Curiously, Elizabeth became pregnant when Mary was there!
    J.Christ obviously had a human father and mother. God does not impregnate a 13 year old girl who is betrothed to a man. Betrothal is like marriage in Jewish custom.
    Who was J.Christ’s father? Many earlier writers said it was a Roman soldier called Ben Tiberius Panthera. Interesting!

  30. very informative article, thank you. It could have been written in simpler Tamil, some sentences are difficult to understand.

    I really pity for you, chillsam. You are a classic example of somone trapped inside a tormenting cage and chained by silly ideas, but rejoices in it and exhorts others also to come and get chained! Sorry brother, your tricks will work no more. Come out and breath fresh air.. seriously, give it a try.

  31. விஷம் குடித்து, வித்தை காட்டும் நிகழ்ச்சியை,தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் வைத்து நடத்தினால், குமரி முதல் சென்னை வரையிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் காண வசதியாக இருக்கும். விரைவாக காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் நடத்தினால் படிக்கும் குழந்தைகளும் பார்த்து மகிழ வசதியாக இருக்கும். தேதியை உடனடியாக தெரியப் படுத்தினால், பஸ், ரயில் டிக்கெட் பதிவு செய்து வைக்க வசதியாக் இருக்கும்.

    வித்தை நடத்தாம, பின்வாங்கி ஏதாவது சால்ஜாப்பு சொல்ல நெனச்சா, மொத்த மக்களும் சேர்ந்து, பிராடுகளுக்கு டின் கட்டிடுவாங்க.

    ஆர்வமுடன்,
    அமல்ராஜ்

  32. வணக்கம்.

    கால சர்ப்ப தோஷம் விடாது போலிருக்கிறது, கால சர்ப்ப தோஷம் மட்டுமில்லாது எந்த தோஷமும் அவரவர் முற்பிறப்பு, இப்பிறப்பு என்று அவரவர் செய்த கர்மாவினால், அவரவர்க்கு ஏற்படும் விதியால் நிர்ணயிக்கப் படுவது. இது எல்லாம் காலம் செய்யும் ஆட்டோ ப்ரோக்ராம் என்று கூட சொல்லலாம். என் விதி எனக்கு மட்டுமே எல்லா மக்களுக்கும் அல்ல. என்தலை முறைக்கு இல்லை
    என் மறுபிறப்புக்கு மட்டுமே.

    ///என்னா சார் நம்ம ஊர் கதையில பழம் மேட்டர் போட்டுத் தாக்கினதைவிட இது பெரிய விஷயமா என்ன, டென்ஷன் ஆகாதீங்க‌..!/////

    எந்த பழம்?

  33. வணக்கம்,

    சகோதரர் சில்சாமின் விளக்கங்கள் படித்தேன் புதியதாய் என்ன இருக்கப் போகிறது? ஆனால் கிறிஸ்துவம் தனது தவறுகளை திருத்திக்கொள்வதாக எழதி இருந்தார், தவறுகள் உள்ளது என்று ஒப்புக் கொள்ளவும் ஒரு தைரியம் வேண்டும். அது அவரிடம் உள்ளது. நன்றி.

    பல ஆண்டுகளாக இந்துக்கள் தங்களை திருத்திக் கொள்ளாமல் இருப்பதாக வேறு வருத்தம் தெரிவித்து இருக்கிறார். நான் கேள்விப் பட்ட ஒரு விஷயம். உண்மை தனக்கு ஆதாரம் தேடுவதில்லை. ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இறுதி வரையிலும் இருக்கும். ஆனால் பொய் தன்னை நிரூபிக்க பல ஆதாரங்களை தேட வேண்டி உள்ளது. தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்.

  34. இந்து நண்பர்களே நீங்கள் விஷம் குடிக்க சொல்வது தவறு,அப்படி நாம் கேட்பதால் விஷம் குடித்து ஒருவர் இறந்தால் அவர் மரணம் புனித படுத்தப்படும். அதனை தியாகத்தின் உருவமே என்று சித்தரித்து மீண்டும் இந்த சம்பவத்தை கொண்டு மதமாற்றம் செய்ய உபயோகிக்க ஆரம்பிப்பார்கள். நாம் கேட்டு செய்தால் நம்மை கொடூரர்களாக காண்பித்து புதிய வழியில் மதமாற்றத்திற்கு இதனை பயன்படுத்துவார்கள்.நல்ல வியாபார யுக்தி தெரிந்தவர்கள். அவர்களுக்கு நபிக்கை இருக்கும் பட்சத்தில் அவர்களாகவே அதனை செய்யட்டும்.
    நமக்கும் எதற்கு நாம் கூறியதால் ஒருவர் உயிர்விடும் பாவம் வரவேண்டும். அது வாக்கால் நாம் செய்த பாவமகிவிடும்.

    அவர்களில் தாமாக யாரும் விஷம் குடித்து நிரூபிக்க வில்லை, அவர்களுக்கே அதில் நம்பிக்கை இல்லை,எனவே அந்த வரிகள் பொய் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. பின் எதற்கு நாம் அவர்களை மேலும் கேட்டுகொண்டே இருக்க வேண்டும்.

  35. எப்படியோ நீஙகள் மேலே எழுதிய அனைத்தும் படித்துவிட்டு நானும் கிறிஸ்தவனாக மாறிவிட்டேன். நல்ல தெளிவை உண்டாக்கிவட்டீர்கள் நன்றி.
    வசீகரன்

  36. // பல ஆண்டுகளாக இந்துக்கள் தங்களை திருத்திக் கொள்ளாமல் இருப்பதாக வேறு வருத்தம் தெரிவித்து இருக்கிறார். நான் கேள்விப் பட்ட ஒரு விஷயம். உண்மை தனக்கு ஆதாரம் தேடுவதில்லை. ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இறுதி வரையிலும் இருக்கும். ஆனால் பொய் தன்னை நிரூபிக்க பல ஆதாரங்களை தேட வேண்டி உள்ளது. தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும். //

    அற்புதமான கருத்து நண்பர் பாஸ் (எ) பாஸ்கர் அவர்களே..!
    ஆனால் பிரச்சினை ஆதாரம் தேடுவது பற்றியதல்ல;தன் ஆதாரங்களை நோக்கி முன்னேறுவதாகும்;

    எந்த ஒரு சமுதாயத்திலுமே தலைமுறைகள் மாறிவரும்போது மாற்றங்களும் இயல்பு;ஆனாலும் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் நின்று சுயபரிசோதனை செய்து நாம் எங்கிருந்து வந்தோம், எங்கு போகிறோம், ஏன் இங்கு இருக்கிறோம் என்று யோசிக்காத சமுதாயம்
    உயிர்மீட்சி அடைய முடியாது; இந்த அளவுகோலில் இந்து சமுதாயம் முழுவதும் வளைந்து நெளிந்து போயிருக்கிறது என்பதே உண்மை.

  37. அட போதும் விடுங்கப்பா இத படிக்கற கிறித்துவர் ரத்த கண்ணீர் வடிக்க போறாங்க ……. உண்மை எப்பவும் கசக்க தான செய்யும் ………

  38. //எந்த ஒரு சமுதாயத்திலுமே தலைமுறைகள் மாறிவரும்போது மாற்றங்களும் இயல்பு;ஆனாலும் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் நின்று சுயபரிசோதனை செய்து நாம் எங்கிருந்து வந்தோம், எங்கு போகிறோம், ஏன் இங்கு இருக்கிறோம் என்று யோசிக்காத சமுதாயம்//

    ஒரு கட்டத்தில் அல்ல ஆரம்பம் முதலே சுயபரிசோதனை செய்து நாம் எங்கிருந்து வந்தோம், எங்கு போகிறோம், ஏன் இங்கு இருக்கிறோம் என்று யோசிக்கும் சமுதாயத்திற்குதான் இந்து சமுதாயம் என்று பெயர் இட்டிருக்கிறார்கள்.

    //இந்து சமுதாயம் முழுவதும் வளைந்து நெளிந்து போயிருக்கிறது என்பதே உண்மை.//

    பிற மதத்தவர்களின் தாக்குதல்களை எதிர்க்காமல் வளைந்து கொடுத்து நெளிந்து போய் இருப்பது உண்மைதான்.மிக சரியாக கூறினீர்கள் நண்பரே. பிற மதத்தவருக்கு விலை போன சில போலி பகுத்தறிவாதிகளையும், போலி செகிலர்வாதிகளையும் தன்னகத்தே வைத்து கொண்டிருப்பதால் வளைந்து நெளிந்து போயிருக்கிறது.
    இந்து மதத்தில் களைய வேண்டிய சில சனியன்களை சகிப்பு தன்மை என்ற பெயரில் களையாமல் விட்டு வைத்ததால் வளைந்து நெளிந்து போயிருக்கிறது.

    //எந்த ஒரு சமுதாயத்திலுமே தலைமுறைகள் மாறிவரும்போது மாற்றங்களும் இயல்பு;//
    எத்தனை காலம் ஆனாலும் எத்தனை தலைமுறை மாறினாலும் பெற்றெடுத்தவள் தான் தாய் .கால மாற்றத்தால் ஆங்கிலம் பழகி மம்மி என்று அழைத்தாலும்,வேறு மொழி பயின்று வேறு பெயரிட்டு அழைத்தாலும் உணர்வும் உறவும் அம்மாதான்.
    எந்த வழி சென்றாலும், என்ன பெயரிட்டாலும் , எப்படி கடவுளை வணங்கினாலும் கடவுள் கடவுள் தான்.
    கடவுள் இல்லை என்பது வேண்டுமானால் ஒரு மாற்றாக தெரியும். இந்த கடவுள் இல்லை வேறு கடவுள் வேறு பெயர் என்று கூறும் பொது ஒன்றும் மாற்றமே இல்லை.

  39. நம் ஹிந்து சகோதரர்கள் கிறிஸ்தவர்களின் மற்றும் கிறிஸ்தவத்தின் அபத்தங்களை பற்றி எழ்துவதைப் படிக்கும் போது சிரிப்பு தாங்க முடியவில்லை
    இவ்வளவு கேலிக் கூத்தான ஒரு சரக்கை மதம் என்று இவ்வளவு காலம் ஏமாற்றினார்கள் என்றால் -அப்பா எவ்வளவு சாமர்த்தியம் வேண்டும்
    நேரம் வந்தாச்சு நல்ல நேரம் வந்தாச்சு.

  40. முடவர்கள் நடக்கிறார்கள்,ஊமைகள் பேசுகிறார்கள்,குருடர்கள் பார்க்கிறார்கள் என்று கூலிக்கு ஆட்களை வைத்து வித்தை காட்டும் ஒரு விஷயம் எப்படி மதமாகும்?
    மற்றவர்களுக்கு வியாதி என்றால் கிறிஸ்தவ ஜெபம் செய்து சொஸ்தம் ஆக்குவார்களாம். ஆனால் டி ஜி எஸ் தினகரன், தெரேசா இவர்களுக்கு சீக்கு வந்தால் ஐந்து நட்சதிர மருத்துவ மனை !பேஷ் பேஷ் !

  41. அன்புள்ள கிறிஸ்துவ சகோதரர் ஒருவர் இங்கே எழுதும் இந்து சகோதரர்களை சாத்தான்கள் என்று கிறிஸ்துவர்கள் தளத்தில் எழுதியிருக்கிறார். பாம்பு ரூபத்தில் சாத்தான் இப்போது வரவில்லையாம். இந்து சகோதரர்கள் ரூபத்தில் வந்திருக்கிறானாம்.

    அவர் ஏன் இந்துக்கள் தங்களுக்காக நடத்தும் தளத்திற்கு வந்து இப்படி படித்து கஷ்டப்பட்டு மற்ற மனிதர்களையும் திட்ட வேண்டும்?

    இந்த கட்டுரைகள் தமிழ் இந்துக்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காகவும், ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னால் பிரபஞ்சத்தை யாஹ்வே படைத்தது என்று நாம் நமக்கு சம்பந்தமில்லாத ஒரு பழங்குடியினர் கதையை உண்மை போலவோ வரலாறு போலவோ நம்பத்தேவையில்லை என்பதற்காகவுமே எழுதப்பட்டுள்ளது.

    அவரது நம்பிக்கையில் நாம் குறுக்கிடவில்லை. அவர் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது போல உலகம் தட்டையானது என்றோ, நரைத்த தலைமுடியும் நரைத்த தாடியும் வைத்த முதியவர் ஒருவர் கலர் கலராக டிரஸ் போட்டுக்கொண்டு வானத்தில் உட்கார்ந்துகொண்டு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மனிதனை களிமண்ணிலிருந்து உருவாக்கினான் என்றோ நம்பிகொள்ளட்டும். அவர் மத்திய தரைக்கடல் பக்கம் இருந்த ஒரு பெண்ணை கர்ப்பமாக்கி அந்த பெண்ணுக்கு தானே பிறந்து தன்னையே கொலை செய்து அதனால் தானே சந்தோஷமடைந்து பாவத்தை மன்னிக்கிறார் என்றும் நம்பிக்கொள்ளட்டும். ஆனால் அது ஒரு மடத்தனமான கொள்கை என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும். இது நாம் புரிந்துகொள்வதற்குத்தானே தவிர அவர்களை திருத்த அல்ல.

  42. வணக்கம் சகோதரர்களே,

    ///ஆனால் பிரச்சினை ஆதாரம் தேடுவது பற்றியதல்ல;தன் ஆதாரங்களை நோக்கி முன்னேறுவதாகும்;///
    எப்படி நீங்கள் தேடாமல் முன்னேற முடியும் கண்ணை மூடிக்கொண்டா? ( அறிவுக் )கண்ணை மூடிக்கொண்டுதான் நம்புகிறீர்கள், பிறகு என்ன அப்படியே டுபாக்கூர் ஆதாரங்களை சேர்த்துக் கொண்டும்தான் இருக்கிறீர்களே திருக்குறள் முதல் பல விஷயங்களையும். சத்தியத்திற்கு ஆதாரம் அவசியமில்ல என்கிறேன், ஆதாரமே இன்றி நிலைத்து நிற்பதுதான் அதன் தத்துவமே.

    ////எந்த ஒரு சமுதாயத்திலுமே தலைமுறைகள் மாறிவரும்போது மாற்றங்களும் இயல்பு;ஆனாலும் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் நின்று சுயபரிசோதனை செய்து நாம் எங்கிருந்து வந்தோம், எங்கு போகிறோம், ஏன் இங்கு இருக்கிறோம் என்று யோசிக்காத சமுதாயம்
    உயிர்மீட்சி அடைய முடியாது; இந்த அளவுகோலில் இந்து சமுதாயம் முழுவதும் வளைந்து நெளிந்து போயிருக்கிறது என்பதே உண்மை.////

    மாற்றங்கள் இயல்புதான் இல்லையென்று யார் சொன்னார்கள் அந்த மாற்றங்களையும் தனக்கு சாதகமாக மாற்றுவது உங்களின் இயல்பு.
    ஆனால் எந்த நிலையிலும் மனிதனின் தலை கழுத்துக்கு கீழே எடம் மாறி பிறப்பது இல்லை . அத்தகைய சரீரத்தை மையமாக கொண்டுதான் இறைநிலை கண்டு மானிடர்க்கு உணர்த்தியது சனாதன தர்மத்தின் முன்னோர்களின் முன்னோர்கள் கூட்டம். தன வாழ்வில் சுய பரிசோதனையின் மூலமாகத்தான் பலவிஷயங்களை கண்டு உலகிற்கு அற்பணித்தார்கள். வளைந்து நெளியாமல் ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருந்தால் திரும்ப ஆரம்ப நிலைக்குத்தான் வர முடியும் ஆண்டவனை அடைய முடியாது.

    சோதரர் பாபு

    /////ஒரு கட்டத்தில் அல்ல ஆரம்பம் முதலே (ஒவ்வொரு கட்டத்திலும்) சுயபரிசோதனை செய்து நாம் எங்கிருந்து வந்தோம், எங்கு போகிறோம், ஏன் இங்கு இருக்கிறோம் என்று யோசிக்கும் சமுதாயத்திற்குதான் இந்து சமுதாயம் என்று பெயர்இட்டிருக்கிறார்கள். ////

    ஒரு சின்ன மாற்றத்துடன் உங்கள் பின்னூட்டம் சரிதானே சகோதரா

  43. ஒரு வேண்டுகோள்!

    கட்டுரைக்கு கருத்தைத் தெரிவிக்கும்,ஒரு வாய்ப்பை மத வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கி,எதிரான கருத்துக்களையும் பிரசுரிக்கும் பெருந்தன்மை தமிழ்ஹிந்துக்கு உள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால், இந்து மதத்தைப் பற்றி தனது சொந்த வலை தளத்தில், தரம்கெட்ட முறையிலும்,நையாண்டி செய்தும் விமர்சனம் செயும் சில தரம் கெட்டவர்களின் கருத்தை இங்கே பிரசுரிப்பது அவசியமா? என்பதை பரிசீலனை செய்வது நலம்.

    காரணம் 1.

    உள்ளங்கை நெல்லிக் கனியாக தெளிவான ஆதாரங்களுடன் வரும் கட்டுரைகளைக் கூட, அதில் உள்ள உண்மையான விஷயங்கள் வெளிவருவதால் தங்கள் ஏமாற்றுப் பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்ற பரிதவிப்பிலும் எவ் வகையிலும் மதம் மாறியவர்கள் உண்மை உணர்ந்து மீண்டும் தாய் மதம் திரும்பி விடக் கூடாது என்பதில் ஒருவித் வெறியுடன் செயல்படுவது தெரிகிறது.

    காரணம் 2.

    கட்டுரைக்கு கருத்து எழுதுவதை விட்டு, கருத்து எழுதியவருக்கு மறுப்பு கருத்தை, எழுதும் வகையில், நமது இந்து வலைத் தள அன்பர்களின் ஒற்றுமையைக் குலைத்து, திசை திருப்பும் வகையில் திட்டமிடப் பட்டு செய்வது தெளிவாக தெரிகிறது.

    அன்புடன்,
    ஆரோக்யசாமி

  44. அறிவியல் தெரியாதவர் சாதான கர்த்தரா என்றே தெரியவில்லை

    God said let there be light and there was light – first day
    மூன்றாம் நாள் செடிகொடிகள் பூமியிலிருந்து எடுக்கப்படுகின்றன
    அப்புறம்

    இதற்க்கு அப்புறம் தான் கர்த்தர் எங்கயோ கேப்பு கீதேன்னு சூரியனையும் நிலவையும் படைக்கிறார் – அதெப்படி முதிலில் வெளிச்சமாம் அதற்கப்புறம் வெளிச்சம் கொடுக்கும் பொருள்களாம் – Cause Effect theory க்கு ஒரு causuality

    உருவைகியது எதுவும் அழியும் இது நாம் காணும் உண்மை – கர்த்தர் உருவாக்கிய உயிரும் அழியும் அப்புறம் எங்கப்பா நிரந்தர சொர்க்கம்

    கிறிஸ்தவத்தின் படி சூரியனும் வெளிச்சம் உருவாக்கும், சந்திரனும் உருவாக்கும் – உண்மையில் நிலா வெளிச்சம் சூரிய வெளிச்சமே

    முதல் மனிசனுக்கு தான் கர்த்தர் மூச்சு காத்து ஊதினார் – அப்புறம் வந்தவங்களுக்கு – நமக்கு தெரிந்து மேலே பிராண வாயு கிடையாது

    மனிதனுக்காகவே (சாப்பிட ஓட்டிப் போக) கர்த்தர் பிராணிகளை படைக்கிறார் – உண்மை என்னன்னா ஒரு சின்ன எலி கடிச்சு மனுஷன் செத்து போறான்

    வௌவால் பறவை இனம்

    பூமியை தூணினால் கர்த்தர் தாங்குகிறார் – அடேயப்பா
    பூமி ஸ்திரமாக அப்படியே இருக்கும் – நகராது
    சூரியன் பூமியை சுத்துகிறது

    ஆசா கடவுளின் துணையோடு பத்து லட்சம் எதியோப்பியர்களை கொன்றார்

    மனிதர்கள் இதயத்தின் மூலம் சிந்திக்கிறார்கள் – மண்ட சுத்துது

  45. கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய்,உண்மை அறிந்தும் மூடராய் கூட்டமாக வந்து ஓதிய சாத்தான்களின் சொல்லில் மூளை மழுங்கி……ச்சே …ச்சே… எவ்வளவு கீழ்த்தரமாக வெறிபிடித்து அலைந்த என்னை, இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்ட உண்மைகள் என் கண்ணை திறந்தது. கட்டுரை ஆசிரியர்கு நன்றி….நன்றி…நன்றி. என் போன்ற ஓராயிரம் மக்கள் இனிமேல் விடுதலை பெற்று மனிதராய் வாழ்வார்கள்.

    மார்கஸ்

  46. B.பாஸ்கர்
    19 September 2010 at 1:12 pm
    //சோதரர் பாபு

    /////ஒரு கட்டத்தில் அல்ல ஆரம்பம் முதலே (ஒவ்வொரு கட்டத்திலும்) சுயபரிசோதனை செய்து நாம் எங்கிருந்து வந்தோம், எங்கு போகிறோம், ஏன் இங்கு இருக்கிறோம் என்று யோசிக்கும் சமுதாயத்திற்குதான் இந்து சமுதாயம் என்று பெயர்இட்டிருக்கிறார்கள். ////

    ஒரு சின்ன மாற்றத்துடன் உங்கள் பின்னூட்டம் சரிதானே சகோதரா//

    மிகவும் சரி சகோதரரே,நன்றி நான் தவறவிட்டதை சரி செய்தமைக்கு.

  47. London witnessed one of the biggest protest over years against Pope’s handling of Sexual abuse by Roman Catholic priests. some 10,000 chanting demonstrators snaked though the streets of London to protest against his handling of the abuse crisis.while some protesters displayed their anger at the Pontiff’s apparent role in covering up the child abuse scandal within the church. They carried banners reading “Benedict’s homophobia costs lives” and “Protect the Children – Demote the Pope.”One man held a placard with a picture of the Pope above the heading: “Boss of world’s largest sex abuse gang.

    சில்லிசாம் போன்றவர்கள், மேலேயுள்ள 10,000 பேர் கிறிஸ்துவ கூட்டத்தினுள் மாட்டி இருந்தால், சில்லி ஜாம் ஆகி இருப்பார். அநீதி இழைக்கப் படும்போது அதை எதிர்த்து நிற்பதே உண்மையான மனித இயல்பு. இங்கிலாந்து கிறிஸ்துவர்கள் அதை செய்து வரலாற்றில் இடம் பிடித்து விட்டார்கள், இங்குள்ள சிலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மனம் திருந்தி மனிதராவார்கள் என நம்புவோம்.

    ஜெய் பாரதம்.

  48. ஆனால், எவ்வளவுதான் நாம் லாஜிக் பேசினாலும், வாழ்க்கையில் அடிபட்ட மனிதர்களை அவர்கள் எளிதாக குலைத்து விடுகிறார்கள்.. கவலையால் மனம் தளர்ந்த நிலையில் இருக்கும் மக்களை இந்த பாதிரிகள் சென்று, ” நீங்கள் பாவம் செய்ததால்தான் இவ்வளவு கஷ்டம்” என்று சொல்லும்போது யாராக இருந்தாலும் நம்பிவிடுவார்கள்..

    ரெண்டாவது, சாதாரண மதம் மாற்றப்பட்ட கிறித்துவ மக்கள் இவ்வளவு ஆழமாக சிந்திக்க மாட்டார்கள்.. நான் என்னுடைய சொந்தக்காரர் ஒருவரை கேள்வியால் மடக்கியபோது, அவர் அழுதே விட்டார்.. திடீரென்று, “ஏசு உன்னதமானவர், ஒப்பற்றவர், பரிசுத்தமானவர்” என்று இஸ்டீரியா வந்தது போல சொல்ல ஆரம்பித்துவிட்டார்..

    நான் சொன்னேன்.. யேசு உன்னதமானவர்.. ஆனால், அவர் எழுதியதாக சொல்லப்படும் பைபிள் பொய்யானது.. அவர் அதை எழுதவே இல்லை.. இந்த பாதிரிகளும், சர்ச்சுகளும் ஏசுவின் உண்மையான போதனைகளை அழித்துவிட்டு புதியதாக உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னேன்..

    ஏசுவை புகழ்ந்தவுடன் அவர் கொஞ்சம் சமாதனமானார்..

    பிரச்சினை ஏசுவிடம் இல்லை.. ஏச் கொடுத்ததாக சொல்லப்படும் பைபிளில் தான் எல்லா பிரச்சினையுமே உள்ளது..

  49. எனக்குத் தெரிந்த வங்கியில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ பெண்ணின் கதை கிறிஸ்தவ மதம் மாற்றிகள் செய்யும் அட்டூழியத்துக்கு ஒரு சான்று.
    அவர் ஒரு அறிவு மிகுந்த பெண்மணி. வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். நல்ல மன நிலையுடன் எல்லோரையும் போல் கல்யாணம் செய்து கொண்டு வாழலாம் என்று இருந்தார்.ஆனால் விதி ஒரு மிஷனரி உருவத்தில் விளையாடியது.அந்த மிஷனரி அப்போது ஓரளவு பிரபலமானவர் .
    எப்படியோ அவரது தொடர்பு கிடைத்தது.அவர் வங்கிக்கே வந்து போக ஆரம்பித்தார்.இல்லாததும் பொல்லாததும் சொல்லி ‘கயிறு’ சுற்றுவார்
    கூட வேலை செய்யும்ஹிந்துப் பெண்களிடமும் நான்தான் கிருஷ்ணா பரமாத்மா அது இது என்றெல்லாம் சொல்லி மூளை சலவை செய்வார்.அவர் திரு நெல்வெலியில் உள்ள கிறிஸ்தவ ‘ஆஸ்ரமத்துக்கு ‘ அவர்களை வரச் சொன்னார்.
    அந்தக் கிறிஸ்தவப் பெண்ணும் அங்கு போவதும் வருவதுமாக இருந்தார். மற்ற ஹிந்து பெண்களையும் அவர் தன்னுடன் வரச் சொல்லுவார்.இது தெரிந்து அந்தப் பெண்களின் குடும்பங்களில் குழப்பம், சச்சரவு. எப்படியோ அவர்கள் குடும்பம் கண்டிப்பாக இருந்ததினால் தப்பித்தனர்.
    அனால் அந்த கிறிஸ்தவப் பெண் மட்டும் கொஞ்சம்கொஞ்சமாக மூளை சலவை செய்யப்பட்டு வேலை,வாழ்க்கை இவற்றில் ஈடுபாடு குறைந்தது.மிஷனரி அவரை ‘நீ கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது . அப்படியே செய்து கொண்டாலும் அது நிலைக்காது என்றெல்லாம் சொல்லுவாராம். .அந்த ஹிந்துப் பெண்களிடமும் அவ்வாறே சொல்லுவாராம்.
    அந்தக் க்ரிச்தவப் பெண் பிறகு தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு அந்த கிறிஸ்தவ ‘ஆச்ரமதுக்கே’ போய் விட்டார். குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாயினர்.
    அங்குப் பல வருடங்கள் இருந்து அங்கு நடக்கும் கூத்தையும்,மதம் என்ற பெயரில் நடக்கும் பொய், பித்தலாட்டங்களையும் பார்த்து பார்த்து மனம் புழுங்கி பொய் கடைசியில் தாள முடியாமல் அதை விட்டு வந்து வாழ்கிறார்.
    ஆனால் அவர் வாழ்கை பறி பொய் விட்டது.
    இப்போது கிறிஸ்தவம் என்றாலே அவர் கடுப்பாகிறார்
    ஹிந்து சமயத்தை உயர்வாக பேசுகிறார்

  50. இது போல எனக்கும் ஒரு கிறிஸ்துவ நண்பரை தெரியும். பிறப்பால் கிறிஸ்துவர். தீவிரமான கிறிஸ்துவ பிரச்சாரகராகவும் கல்லூரியில் அறிமுகமானார். காலையில் எழுந்ததுமே யாரை பிடித்து இயேசுவை பற்றி சொல்லலாம் என்று அலைவார். என்னிடமும் பலமுறை இயேசுவை நான் மீட்பராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினார். நான் பதிலுக்கு அவரிடம் நீங்கள் முருகனை கடவுளாக ஏற்றுக்கொண்டால், நான் உங்கள் இயேசுவை ஏற்றுகொள்கிறேன் என்று சொன்னேன். அவர் திடுக்கிட்டார். என்ன இப்படி சொல்கிறீர்கள் என்றார்.
    ஆமாம். உங்களுக்கு இப்படி என்னிடம் வந்து சொல்ல உரிமை இருக்கிறது என்றால் நானும் உங்களிடம் இப்படி சொல்ல உரிமை உண்டுதானே என்று சொன்னேன்.
    பிறகு பைபிளில் இருக்கும் சில வாசகங்களை எடுத்து அவரிடம் காட்டினேன். இது ஏமாற்று வேலை என்று அவருக்கே புரியவைத்தேன். மாற்கில் இருக்கும் இயேசு யூதரல்லாதவர்களை நாய்கள் என்று திட்டுவதை எடுத்து காட்டினேன். அதன் பின்னே இருக்கும் உளவியலை எடுத்து சொன்னேன். தன்னை கும்பிடாதவனை காலில் கொண்டு வந்து கொல்லச்சொல்வதை எடுத்து காட்டினேன். அதனை வைத்துத்தான் யூதர்களை ஹிட்லர் கொன்றான் என்று எடுத்துக்காட்டினேன். இயேசு என்ற இந்த கற்பனை பாத்திரம் ஒரு பசுத்தோல் போத்திய பயஙக்ரவாதி என்று காட்டினேன். இதன் மூலமாகத்தான் அடிமைகளை அடக்கி ஒடுக்கினார்கள், அமெரிக்க பழங்குடியினரை கொன்றார்கள். ஆப்பிரிக்காவை அடிமையாக்கினார்கள் என்று காட்டினேன். இயேசுவின் சாந்தமான முகமூடி வேஷத்தின் பின்னால் ரத்த ஆறுதான் ஓட வைக்கப்பட்டது என்று காட்டினேன். முதலில் என்னை அடிக்கவே வந்துவிட்டார். ஆனால் பலமுறை என்னிடம் விவாதித்தார்.

    தற்போது இந்துவாக ஆகி, இந்து கோவில்களுக்கு செல்கிறார். தன் குழந்தைகளுக்கெல்லாம் செந்தமிழில் அழகாக குமரன், முருகன் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.

  51. அன்பு நண்பர்களே பாவம் என்பது ஆதியில் இருந்தே இருக்கிறது, அதன் பலனாக தான் ஜன்ம ஜென்மமாக தண்டனைகள் மற்றும் பிறவிகள் தொடர்கிறது என்ற கருத்தை இந்து சகோதரர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன். அதையே கர்மபலன் என்று அதை இந்து மதம் போதிக்கிறது

    ஆனால் தங்களால் கிறிஸ்த்தவ போதனைபடி ஆதாமில் இருந்து முதல் பாவம் வந்தது என்ற கொள்கை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    நல்லது!

    இப்பொழுது இரண்டையும் இணைத்து பார்த்தால் இதற்க்கான விளக்கம் எளிது!

    தங்களின் கருத்க்க்களில் எந்த தவறும் இல்லை. இந்து முறைப்படி ஒரே ஒரு பொய் சொன்னாலும் தண்டனை என்றொரு நிலையில் மனிதர்கள் வாழ்ந்து, கர்ம பாவத்தை பிறவி கணக்கில் சுமந்து இறைவன் எதிர்பார்க்கும் தகுதியை பெற்று “சுமார் நூற்றியைந்து படி நிலைகளை கடந்து பரிசுத்தம் அடைந்து வள்ளலாரின் கூற்றுபோல் அருட்பெரும் ஜோதியாம் மிகவும் பரிசுத்தம் உள்ள இறைவனோடு கலப்பது என்பது முடியாத காரணத்தால் கோடானு கோடிபேர் ஜன்ம பாவத்தில் பலயுகம் உழன்றுகொண்டு இருந்தனர்

    ஜன்ம ஜென்மமாக அனேக காலமாக தொடர்ந்து வந்து மனிதர்களை நாசமாக்கி வேதனைப்படுத்தும் அந்த பாவத்துக்கு ஒரு முடிவை கொண்டுவர தேவன் திட்டமிட்டார். (எதற்குமே ஒரு முடிவு உண்டு அல்லவா? நீங்கள் முடிவு தேவையில்லை என்று நினைக்கலாம் ஆனால் இறைவன் அவ்வாறு விரும்பவில்லை. தீயவன் வாழவும் நல்லவன் தாழவும், சிலர் சுக போகவாழ்க்கை வாழவும் சிலர் சோற்றுக்கு கூட வழியில்லாமல் சங்கடப்படுவதையும் பார்த்து இவைகள் அனைத்துக்கும் ஒரு முடிவை கொண்டுவர நினைத்தார்.

    தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்

    https://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=38327330

  52. நேசன்,

    இந்த கட்டுரையை கொஞ்சம் படியுங்களேன். அதன் பிறகு உங்களது விளக்கத்தை சொல்லலாம். கொஞ்சம் கூட கட்டுரையை முழுமையாக படிக்காமல் உளறினால் உங்களை பார்த்து “யார் பெத்த புள்ளையோ” என்றுதான் பரிதாபப்பட வேண்டும்.

    உங்களுக்கு இந்துக்களின் கர்ம பலன் என்ற கருத்து சுத்தமாக புரியவில்லை. அதனையும் ஆதி பாவம் என்று யூதர் பழங்குடியினர் உளறுவதையும் குழப்பி உங்களையும் குழப்பிக்கொண்டு .. ஏனுங்க. தமிழ் தெரியும்தானே? கொஞ்சம் படிச்சித்தான் பாருங்களேன். ஆறாயிரம் வருஷ்த்துக்கு முன்னால் யாஹ்வே இந்த உலகத்தை உருவாக்கியிருந்தால்தான் ஆதிபாவம். அது இல்லையென்றால் பைபிள் தப்பு. ஆதிபாவம் இல்லை. புரிகிறதா?

  53. நேசன்

    இவ்வளவு தான நீங்கள் புரிந்து கொண்டது – தவறு செய்வது தவறு என்றுதான் எந்த ஒரு நல்ல மதமும் சொல்லும் (இதற்க்கு விதி வ்ள்ளக்கும் உண்டு)

    நாம் கேட்பது – எவனோ ஒரு கிறுக்கன் செய்த தவறுக்கு நான் ஏன் பொறுப்பேற்க வேண்டும்

    சனாதன தர்மத்தில் வரும் கர்மா என்பதை முதல் பாவத்துடன் போட்டு குழப்பி கொள்கிறீர்கள் –

    கர்மா என்ன சொல்கிறது – எந்த ஒரு செயலுக்கும் பயன் உண்டு
    – சனாதனா தர்மம் ஆத்மா உண்டு அது அநாதி அதற்க்கு பிறப்பில்லை இறப்பில்லை என்று சொல்கியது – ஆத்மாவை இறைவன் ஸ்ரிஷ்டிக்க வில்லை என்று சொல்கிறது – ஆத்மா தனது நிலைக்கு அல்லது கர்மத்திற்கு ஏற்றார் போல உடலை பெற்று – அதன் மூலம் அந்த கர்மாவை கழிக்கிறது

    கிறிஸ்தவத்திலோ உயிர் இறைவனால் டபக்குன்னு படைக்க படுகிறது அதுவும் பாவியாகவே – என்ன கருமத்துக்கு ஒரு உயிரை பாவியாய் உருவாக்க வேண்டும் பின்னர் ஒருத்தரை நாலாயிரம் வருஷம் கழிச்சு அனுப்ப வேண்டும் – தான் உருவாக்கிவிட்டு ஏன் தானே என்னை சட்டியில் போட வேண்டும்
    இது அபத்தம் அல்லவா

    இந்த கருமத்தை ஏன் ஹிந்து தர்மத்தின் கர்மா என்பதோடு ஒப்பிடுகிறீர்கள்

    இதில் மறை முகமாக கிறிஸ்தவமே மேல் என்று வேற காட்ட முயற்சி

    இதில் வேறு தேவன் முடிவு கட்ட எண்ணினார் என்று சொல்கிறீர்கள் – அதாவு தானே அவர் செய்த ஒரு அபத்த காரியத்தை அவர் தானே முடிவு கட்ட எண்ணினார் (தானே பாவியாய் படைத்து தானே பாவி என்ற ஒன்றை நீக்கி ) என்ன இது சுத்த பேத்தலா இருக்கு – இதை எல்லாம் எப்படி அறிவுள்ளவர்கள் ஒத்துக் கொள்வார்கள்

    சரி உங்களுக்கு சிந்திக்க ஒரு கேள்வி

    உங்கள் தேவனை சிரமப்படுத்தாமல் கிறிஸ்தவர் அனைவரும் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் இருந்து விட்டால் இப்படி பாவமே நேராதே – ஒன்று செய்யுங்கள் கிறிஸ்தவர் அனைவரும் கல்யாணமே செய்யாதீர்கள் அப்புறம் என்ன நடக்கிறது என்று பாருங்கள் – ஒரு பாவி உருவாவதை தடுத்த புண்ணியம் உங்களை சேரும்

    எவனோ ஒரு மனிதன் செய்த பாவத்தினால் மற்ற மனிதர்கள் எல்லோரும் பாவிகலாகிரார்கள் – இதை உண்மை என்று வைத்துக் கொள்வோம்
    நீங்கள் சொல்வது போல் பார்த்தல் தாவுது இப்ராஹீம் செய்த அட்டுழியம் கூட மொத்த மனித ஜென்மத்தை பாதிக்கும் – அதாவது அவனது பாவம் அச்சு அசல் மொத்த பேரையும் வட்டும் – நீங்களும் நானும் அவன் செய்த மகா அட்டுழியத்திர்க்கு சமமான பாவத்தை பெறுகிறோம்
    இப்படிப்பட்ட ஒரு பாவத்திலிருந்து உங்கள் தேவன் எப்படி ஒருவனை வெறுமே ஏசுவே எல்லாம் என்று சொன்னவுடன் உங்களை விட்டுவிடுகிறார் என்னை விட மறுக்கிறார் – தவறு செய்ததோ தாவூத் இப்ராஹீம் – சரி நீங்கள் நானாகவும், நான் நீங்களாகவும் இருந்தால் அந்த நிலையை சற்று யோசித்து பாருங்கள் – உங்களுக்கு எதிராக ஒரு பெரிய அக்கிரமமாக அது தெரியும்

    இரக்கமுள்ள தேவன் ஏன் தன்னை ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டும் நல்லது செய்கிறார் – ஏன் கருணை உள்ள அவர் எல்லா நல்லவருக்கும் நல்லது செய்யலாமே – அதாவது ஒரு புத்த பிச்சு இருக்கிறார் அவர் எல்லோருக்கும் நல்லது செய்கிறார், உணவை தருகிறார் – இவருக்கு ஏன் கர்த்தர் நரகம் தருகிறார்

    கிறிஸ்தவத்தின் படி ஒரு உயிர் ஒரே ஒரு முறை மட்டும் புத்திச்டாக பிறந்து நல்லது செய்து நரகத்திற்கு போகிறது – அனால் தாவூத் இப்ராஹிமும், ஹிட்லரும் கிறிஸ்தவர்களாக மாறி பாவ மனிப்பு கேட்டால் சொர்கத்திற்கு போகிறார்கள்

    நல்லது செய்த உயிர் கடைசி வரை நரகத்தில் சாகிறது – இது என்ன வெக்கக் கேடு

    ஒண்ணுமே செய்யாத ஒரு பிஞ்சு குழந்தை நரகத்திற்கு செல்கிறது

    உங்களை வெறுமனே சமாதானம் செய்து கொள்ளாமல் – சற்று உண்மையாகவே சிந்தியுங்கள் – கிறிஸ்தவ அடையாளத்தை ஒரு நிமிடம் கழட்டி வைத்து விட்டு கடவுள் கொடுத்த அந்த அறிவை ஒரு முறை பயன் படுத்துங்கள்

  54. //கிறிஸ்தவர் அனைவரும் கல்யாணமே செய்யாதீர்கள் அப்புறம் என்ன நடக்கிறது என்று பாருங்கள் – ஒரு பாவி உருவாவதை தடுத்த புண்ணியம் உங்களை சேரும் //

    உண்மையில் இயேசு கிறிஸ்து அதனைத்தான் சொல்கிறார். ஆனால் ஒரு கிறிஸ்துவரும் பின்பற்றுவதில்லை.

    Matthew 19:12
    King James Bible
    For there are some eunuchs, which were so born from [their] mother’s womb: and there are some eunuchs, which were made eunuchs of men: and there be eunuchs, which have made themselves eunuchs for the kingdom of heaven’s sake. He that is able to receive [it], let him receive [it].
    ஆரம்பகால கிறிஸ்துவர்கள் தங்களை அலியாக ஆக்கிக்கொண்டனர். எசூபியஸ் என்பவர் தன்னைத்தானே அலியாக ஆக்கிகொண்டதை எழுதியிருக்கிறார். அப்படிப்பட்டவர்களே உண்மையான கிறிஸ்துவர்கள். இயேசுவின் சீடர்களில் ஒருவரும் திருமணம் செய்யவில்லை. அதனால்தான் கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் உண்மையான சீடர்கள் (பிஷப்புகள் சாமியார்கள்) திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று இருக்கிறது.

    உண்மையான கிறிஸ்துவர்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது.
    Revelation
    14:3 And they sung as it were a new song before the throne, and before the four beasts, and the elders: and no man could learn that song but the hundred and forty and four thousand, which were redeemed from the earth.
    14:4 These are they which were not defiled with women; for they are virgins. These are they which follow the Lamb whithersoever he goeth. These were redeemed from among men, being the firstfruits unto God and to the Lamb.

    பெண்வாடை இல்லாமல் இறந்த 144000 யூதர்கள் இயேசு கிறிஸ்து சென்ற இடமெல்லாம் பின்னால் சென்றார்களாம். இந்த கும்பல்தான் சொர்க்கத்துக்கு போவார்களாம். மற்றவர்களுக்கெல்லாம் இடம் கிடையாது.

    சில்லிசாம், ராஜ்குமார், சோசப்புசினேகா போன்றோருக்காக பரிதாபப்படுவதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்?

    ஏசு சொன்னதையும் புரிஞ்சிக்க மாட்டேன் என்கிறார்கள். நாம் சொல்வதையும் கேட்பதில்லை.

    கூலிக்கு மாரடிப்பது என்றால் அதுதான்.

  55. திரு தங்கமணி அவர்களே,

    ///இதன் மூலமாகத்தான் அடிமைகளை அடக்கி ஒடுக்கினார்கள், அமெரிக்க பழங்குடியினரை கொன்றார்கள். ஆப்பிரிக்காவை அடிமையாக்கினார்கள் என்று காட்டினேன். இயேசுவின் சாந்தமான முகமூடி வேஷத்தின் பின்னால் ரத்த ஆறுதான் ஓட வைக்கப்பட்டது என்று காட்டினேன். முதலில் என்னை அடிக்கவே வந்துவிட்டார். ஆனால் பலமுறை என்னிடம் விவாதித்தார்.

    தற்போது இந்துவாக ஆகி, இந்து கோவில்களுக்கு செல்கிறார். தன் குழந்தைகளுக்கெல்லாம் செந்தமிழில் அழகாக குமரன், முருகன் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.///

    உங்கள் செயலை மனதாரப் பாராட்டுகிறேன் .மிக்க நன்றி.

  56. ///உலகம் தட்டை. உருண்டை அல்ல.///

    இந்த இணைய உலகிலும், GOOGLE EARTH , NASA வின் இணையத்தளம் ,மற்றும் பூமியின் வடிவத்தைப் பார்த்து அறிந்து கொள்ள எத்தனையே வசதிகள் இருந்தும் இன்னும் பைபிளில் சொல்லப்பட்டது என்பதற்காக பூமி உருண்டை அல்ல,தட்டை வடிவமானது என்று நம்பும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

    அரிஸ்டாட்டில் பூமி உருண்டை என்று கூறியபோது அதை நம்பாத கிறிஸ்தவர்களில் பலர் உலகம் தட்டை என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.16 -ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அறிவியலில் முன்னேற்றம் ஏற்ப்பட கிருஸ்தவர்கள் சிறிது சிறிதாக பூமி உருண்டைவடிவமானது என்பதை நம்பத் தொடங்கினார்கள்.ஆனால் சிலர் எவ்வளவு அறிவியல் ஆதாரம் காட்டினாலும் , உலகம் தட்டையானது என்று பைபிள் கூறுவதே உண்மை என்று நம்பிக்கொண்டு வந்தார்கள்.அவர்கள் தான் இப்பொழுது ,அதுவும் இவ்வளவு அறிவுகளும் கொட்டிக் கிடக்கும் இணைய உலகிலேயே தங்களுக்கென்று இணைய தளம் ஒன்றை தொடக்கி, பூமி தட்டையானது என்று பைபிள் கூறியதை விட்டுவிடமுடியாமல் ,இணையத்திலும் தொடர்கிறார்கள்.அதன் பெயர் THE FLAT EARTH SOCIETY .

    சுட்டி:.https://theflatearthsociety.org/cms/

  57. //(இயேசுவோ தேவனோ ஒரு அந்நிய தேவன் என்று ஏன் எண்ணுகிறீர்கள் இந்து மத வேதமாகிய ரிக் / யஜூர் காட்டும் ஏக இறைவன்தான் கிறிஸ்த்தவம் காட்டும்இறைவனும் எனபது எனது கணிப்பு. இறைவன் ஒருவரே!)//

    திரு நேசன் உங்களுடைய நேச உள்ளம் புரிகிறது. இரண்டு மதங்களுக்கும் இடையேயான பிரச்னைகளை தீர்த்து இரு ப்ரிவிவும் ஒன்றாக எந்த பிரிவும் இன்றி ஒற்றுமையுடன் வழ வேண்டும் என்ற உங்கள் மனித நேயம் சிறந்ததாக படுகிறது.நீங்கள் நல்லவர்.

    அனால் உங்களின் கிறிஸ்து பக்தி காரணமாக ஆதி பாவத்தையும், கர்மாவையும் பொத்தூ குழப்பிக்கொள்கிறீர்கள். எப்பொழுது இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விட்டிர்களோ இனி உங்களுக்கு விரைவில் ஒரு தெளிவு கிடைக்கும்.

    மற்றபடி நடுநிலையாக வாழ நினைக்கும் மத நல்லிணக்க எண்ணம் உள்ள ஒரு மென்மையான கிறித்தவர் நீங்கள். உங்களுக்கு என் பாராட்டுகள்.

    //இயேசுவின் இரத்தத்தின் பலனால் நீங்கள் இதற்கும் முன் எந்த ஜன்மத்தில் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும் சலுகை முறையில் அவரை விசுவாசித்த மாத்திரத்தில் அத்தனையும் மன்னிக்கப்பட்டு நீங்கள் புது சிருஷ்டியாகிறீர்கள் அத்தோடு உங்களுக்கு நித்திய வாழ்வும் வாக்களிக்கப்படுகிறது //

    உங்களுக்கு (கிறித்தவர்களுக்கு) இதற்கு முன் ஜென்மங்களே இல்லை என்பது மறந்துவிட்டதா ? அல்லது எண்களின் இந்த கருத்தினை ஏற்று கொள்கிறீர்களா ?

    நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் நமக்குள்ளே மன வேறுபாடு வேண்டாம். அந்த பரம்பொருள் உங்களுக்கு கிரித்துவாகவும், எங்களுக்கு கிரிஷ்ணராகவும் அருள் புரியட்டும்.

  58. அன்புள்ள இந்து சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

    யூதர்களது பழங்குடி கதைகளில் வரும் அவர்களது தெய்வத்தின் பெயர் யாஹ்வே. இது கடவுள் என்ற் கூறக்கூடாது. கடவுளுக்கான குணாம்சங்கள் இல்லாத ஒன்றை கடவுள் என்று கூறுதல் தகாது.

    இந்த கட்டுரை முழுவதும் யாஹ்வே என்னும் தெய்வம் என்ற வார்த்தையை பிரயோகித்திருப்பதை கவனித்திருப்பீர்கள்.

    பைபிளில் வரும் யாஹ்வேயை கடவுள் என்று கூறவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

    அது நம் மக்களையே தவறான சிந்தனைக்கு இட்டுச் சென்றுவிடும். பைபிளில் வருவதை கடவுள் என்று நாமே கூறினால், அது கடவுளுக்கு நாம் செய்யும் அவதூறு. தயவு செய்து தவிருங்கள்.
    நன்றி

  59. உண்மை உண்மை உண்மை -ஹிந்துக்களாகிய நாம் எதையாவது அல்லது யாரையாவது உயர்வாகச் சொல்லிவிட்டால் உடனே கண்ணை மூடிக்கொண்டு அதை ,அவரை நம்புகிறோம்.
    உதாரணம்: [….],சமூக சேவை,கடவுள்

    [edited and published]

  60. இந்த கிறிஸ்தவர்களின் கோட்பாடு ஒரே குழப்பம்தான்.

    பிதாவாகிய கடவுளின் குமாரன்தான் இயேசு என்கின்றனர். ஆனால் பிதா தான் இயேசுவாக வந்தார் என்றும் சொல்கின்றனர். பிதாவும் கடவுள்தான், இயேசுவும் கடவுள்தான், பரிசுத்த ஆவியும் கடவுள்தான் என்றும் சொல்கின்றனர்.

    இப்படி 3 கடவுள்களை சொல்லிக்கிட்டு, இந்துக்களுக்கு நிறைய கடவுள்கள் இருப்பதை கேலி செய்கின்றனர்.

    கிறிஸ்தவங்களுக்கு 3 கடவுளா, ஒரே கடவுளா? இந்தக் கேள்விக்கு முதலாவது தெளிவா பதில் சொல்லுங்க.

    இயேசுதான் ஒரே கடவுள்-னு சொன்னீங்கனா, இன்னொரு கேள்வி.

    இயேசு மரித்து அடக்கம்பண்ணப்பட்டிருந்த 3 நாட்களில், கடவுள் இல்லாம இந்த உலகம் எப்படி இயங்கியது?

  61. இப்போதாவது நமது மக்கள் உண்மையை உணர்வார்கள் மொத்தத்தில் அற்புதம்,அற்புதம்,அற்புதம்.

  62. So Krishna dancing on snake with multiple heads, showing the entire universe in his mouth is true ? That is fiction too right ?

    Can you explain what is theory put forward by Hinduism for the origin of mankind ?

  63. Recently i saw a person Hindu To converted Christrian… he saying to me homosex is also not blunder mistake in this world but our kal vikara arathanai or hindu god prayer is the great blunder mistake of the world… what is this????? how can we respect yr religion… its very shame thing… how about yr teaching style?? is the good way… this one example but me having see my day to day life this type of example..

    Bible words are only creation of human not jesus saying words… no one destroy true at any
    case….

    sakthi ganesh

  64. dear all
    Just i want to say Christianity is not at all religion it is way of conquering the world by the idiots. pls you all understand service is the way to reach the god which is pylosapy in Santana dharma which was stolen by the idiot peoples(like Veda agamam etc).Ignore them and make our people more educate in Hinduism.Our own soul will do that also.

  65. //
    So Krishna dancing on snake with multiple heads, showing the entire universe in his mouth is true ? That is fiction too right ?

    Can you explain what is theory put forward by Hinduism for the origin of mankind ?
    .//

    Dear Mr Ganesh Ram

    before getting in to the details of this Krishna story – you better get to know the basis of Hinduism especially the philosophical factors of it.

    Bible is no Vedha – but it is being calle so and thus arises the question on the mistakes in it.

    If there is such a big snake and one has guts, one can dance on it – it is a possibility. These are stories of heroics which are part of puranas.

    however noone could have created plants on the first day and sun on the next day which is essential for photo sysnthesis
    it is impossible to create light before creating sun
    It is impossibe to logically explain first sin
    Moon cannot emit light on its own it only reflects Sun’s light
    It is a stupidity to say that Adam and Eve are the grand grand parents of all humanity
    Well these are the blunders you find when you go through Bible
    Bible puts earth at the centre of universe
    Bible thinks plants do not have life

    these things work on a different plane and vedas do not make any mistake in these aspects.
    Vedas rightly put sun at the centre. Vedas rightly say earth rotates sun. Vedas rightly give the speed of light
    Vedas rightly point out that plants have life.

    if you can please pick a few things from Vedas which are logical mistakes – we can talk about it.

  66. // Can you explain what is theory put forward by Hinduism for the origin of mankind ? //

    Why, how does that matter? Hinduism is about Atman realization, realizing the highest end. Finding out how human species originated is not the main concern, that is about bodily association.

    The Vedantic religion of Hinduism has crossed several philosophical barriers, by clear logical proofs given by the Acharyas of yore. The points raised by Yoga, Nyaya, Vaisheshika, Sankhya, and Purva Mimamsa religions, as well as by Buddhism, Jainism, Charvaka were all answered logically and crystal-clear.

    Christianity never had the courage to face any of its tests, if ever a question was raised, the response was like that of a malevolent bully from a small oasis in a Middle-Eastern desert.

    Vedic religion had far and wide reach all over the corners of India as is evident from both South Indian and North Indian ancient literature. It was a matter of harmony and assimilation, from time immemorial… there is historic, literary, and archaeological proofs for all these and every one of them count against the “Aryan Invasion” theory.

    Whereas the current popularity of Christianity (which is fast-declining in the Western world) is due to invasive slash-and-burn policy.

    When our Acharyas were concerned entirely with subtler sciences, St Augustine of Hippo, the father of modern Christianity, was busy trying to prove that unbaptized infants go to hell if they die.

    Is this not good enough to see the difference?

    The problem is not whether Christianity is logical and if it has a right to exist in India. The problem is that Hindus need to give a fitting slap and a good shove up the posterior to the evangelist who forces himself on him to say “Your Vedas and Puranas are the work of devil, your gods are amorous ghoulish creatures, idol worshippers end up in hell” etc. This article is one such slap. Isn’t that a rightful goal? Plus if you see the responses under this one and part-ii of the article, you will see how fruitful an effort this was.

  67. இது அண்மையில் நான் தமிழ் ஹிந்துவில் போட்ட பின்னூட்டமாகும்.காழ்ப்புணர்ச்சின் காரணமாக பைபிளுக்கு விரோதமாக எழுதி பதிக்கப்பட்ட இந்த‌ முதல் பாவம் கட்டுரைக்கு யாரும் இதுவரை தகுந்த பதிலைக் கொடுக்கவில்லை;என்னுடைய முயற்சிக்கும் பல்வேறு தடைகள் வந்துவிட்டது;விரைவில் அதனை செய்துமுடிப்பேன்.

    sakthi ganesh
    15 February 2011 at 6:01 pm

    // Recently i saw a person Hindu To converted Christrian… he saying to me homosex is also not blunder mistake in this world but our kal vikara arathanai or hindu god prayer is the great blunder mistake of the world… what is this????? how can we respect yr religion… its very shame thing… how about yr teaching style?? is the good way… this one example but me having see my day to day life this type of example..

    Bible words are only creation of human not jesus saying words… no one destroy true at any
    case….

    sakthi ganesh //

    திரு.சக்தி கணேஷ் அவர்களே, தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளமுடிகிறது;இந்தியா ஒரு கலாச்சார செழிப்புமிக்க நாடு என்பதில் எந்த ஐயமும் இல்லை;அண்மையில் மதம் மாறிய தங்கள் நண்பர் சொன்னது நிச்சயமாகவே கண்டிக்கத்தக்க கருத்துதான்;ஒருவேளை ஆர்வக்கோளாறு காரணமாக அவர் அவ்வாறு சொல்லியிருக்கலாம்;ஆனால் பைபிள் அவ்வாறு போதிப்பதாக தயவுசெய்து கருதவேண்டாம்;ஏனெனில் முதல் கொலையானாலும் சரி,முறைதவறிய பாலியல் உறவுகளானாலும் சரி அதனை பைபிள் கண்டிப்பதை நீங்கள் பைபிள் மூலமே அறியமுடியும்;பைபிள் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அதன் ஆதாரக் கருத்து மாறாததுடன் ஒன்றையொன்று விஞ்சியே நிற்கும்;பைபிள் பலரையும் கவராததற்குக் காரணமே அது யாருடனும் சமரசம் செய்துகொள்ளாததே;நுனிப்புல் மேய்ந்தவர்களெல்லாம் ஆதிவேதமான பைபிளைக் குறித்து விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்;ஒரு மனிதனால் படைக்கப்பட்டதை இன்னொரு மனிதன் ஒருபோதும் பல்லாயிரம் தலைமுறைகளைக் கடந்தும் ப்ரொமோட் செய்ய வாய்ப்பில்லை என்பதை உணருவீர்களா? முதன்முதலில் இறைவனாலேயே எழுதித்தரப்பட்ட இறைவேதம் பைபிள் மாத்திரமே;அது இறைவனால் எழுதித்தரப்பட்டது என்பதற்கான நிரூபணம் அதனைப் பெற்ற மனிதன் மூலம் பகிரங்கமாக வெளிப்பட்ட கடவுளுடைய அற்புதசெயல்களே;யோசிப்பீர்களா?

  68. hi am a new guy in this site my native arumanai kanyakumari dist
    In this area before 10years 95% of peoples are Hindhu peoples but now lot of guys are converted in to Christianity .I shocked lot of times because i studied in CSI institute od technology in that college hostal lot of hindu peoples are converting to Christianity .
    Example : 2008 year mechanical engg stud name vivekanandan hostal converting team was converted him and changed his name as vivek then he was promoted as a prayer cell head then he is try to convert other guys

    my question is
    1. What is the need of this conversion? religious is not a political party for one plate biriyani and one quoter to convert next party
    that guys want to populate his community that is the single aim….
    they are spreading like as a virus spreading medium poverty power peoples those who are not have money…those who are in sick condition like that
    In KK dist Christianity peopled think all guys are converted in secong generation only
    if analysing that guys grand pa name that is hindu name its true

    I dnt want to hurt any religious but think your self its not a rite country to convert \

    Because
    INDHU NADHI PAAYUM IDAM INDIA ENTUM ANGU VAAZHUM MAKKAL INDIARKAL ENTUM AZHAIKKAPATTANAR

    this word i studied in 4th std this country hindu peoples not allow to convert ………..

    It will clear soon

  69. சகோதர சகோதிரிகளுக்கு வணக்கம்,
    பாவம் என்பது சிந்தனை அளவில் இருப்பது, குற்றம் என்பது செயலாக மாறுவது, அதை சிந்தனையின் போதே கட்டுபடுத்தி விட்டால், பிரச்சனை இல்லை. உட்கர்ந்து கொண்டே ஓட முடியாது. இதை தான் எல்லா மதங்களும் சொல்லுகிறது. அமைதிதான் நுழை வாயில். இதை பல கதைகல் மூலம் சொல்லபடுகிறது. கிறிஸ்து, புத்தர், கிருஷ்ணர், நல்லவர் என்று சொல்லிவிடுவதால், நாம் வீண் விகாரத்தை வளர்க்குமே தவிர, வேற எதையும் தராது. நம்முடைய பயணம் எதை நோக்கியது என்பது பற்றிய புரிதல் வேண்டும்.

    ராஜகுரு

  70. Chillsam,
    Chill Sam..! There are countless proof in bloodshed, slavery, covetousness and all sorts of illogical things in the Bible. They require a separate book to be published.

    Do you know ‘The laws of the index?”
    Do you know that the Vatican wanted to ban Encyclopedia Britannica for its definition of Christianity?
    Do you know that in Europe and the US and many more countries counting, are quitting Christianity?

    As someone already suggested, for a moment, discard your missionary mask and that “you think you are a Christian” and think with logic? Do you believe in all the crap mentioned in The Bible?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *