“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]

மூலம்: ரிச்சர்ட் ஷேனிக் (Richard Schoenig)
தமிழில்: ஆர்.கோபால்

“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1

(தொடர்ச்சி…)

3.2.1.1 இயற்கைக்கு முந்தைய கொடை சமாளிப்புக்கான பதில்கள்

(1) கத்தோலிக்க என்சைக்ளோபீடியாவுக்கு மாறாக, ஓர் அரசர் விசுவாசமில்லாத ஜமீந்தாரைத் தண்டிப்பது என்பது, யாஹ்வே தெய்வம் முதல் பாவத்துக்காக தண்டிப்பதற்குச் சரியான ஒப்பீடாகக் கருத முடியாது. இந்த உவமையில் இருக்கும் பிரச்சினைகள் கீழே:

ஒரு கொடையைக் கொடுத்துவிட்டு மீண்டும் எடுத்துகொள்வதன் மூலம் பெரிய தீங்கு விளையுமென்றால், அந்த கொடையை மீண்டும் எடுத்துகொள்வது ஒழுக்கக்கேடான விஷயம். உதாரணமாக நான் யாருக்காவது கிட்னி தானமாக கொடுத்துவிட்டு கிட்னியை பெற்றுக்கொண்டவர் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை என்பதற்காக கிட்னியை திருப்பிக்கொடு என்று கேட்பது ஒழுக்கக்கேடான விஷயம். பொருளாதார ரீதியில் வறிய நிலையில் இருக்கும் தாய்மார்களுக்கு செலவுக்குப் பணத்தை கொடுத்துவிட்டு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது அதற்கு பதிலாக ஃபார்முலா பால்தான் கொடுக்க வேண்டும் என்று கோருவது போன்றது. மீறி தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களிடமிருந்து கொடுத்த பணத்தைப் பிடுங்குவது என்பது ஒழுக்கக்கேடானது ஏனெனில் அது குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும்.

adam-eveமுதல் பாவத்துக்கான யாஹ்வே தெய்வத்தின் தண்டனை என்பது ஆதாம் ஏவாள், இன்னும் அவர்களது பல கோடிக்கணக்கான சந்ததியினர், இன்னும் மிருகங்களின் சந்ததியினர் ஆகியோருக்குக் கொடுத்திருந்த கொடைகளை நீக்குவதன் மூலம் உயிர், கை, கால், வாழ்க்கை அனைத்தையும் பாதிக்கும்படி செய்துவிட்டது. ஆகவே கொடுத்த கொடைகளை நீக்குவது தார்மீக நிலைப்படி தவறானது. அரசர் தனது பட்டாவை விலக்கிகொள்வது என்பது இப்படிப்பட்ட மாபெரும் அழிவையும் துயரத்தையும் ஜமீந்தாரரின் சந்ததிகளுக்கு கொடுக்கவில்லை. ஆகவே அரசர் தனது பட்டாவை விலக்கிக்கொள்வதை ஒழுக்கக்கேடு என்று சொல்லமுடியாது.

யாஹ்வே தெய்வம் தனது கொடைகளை விலக்கிக்கொண்டதன் மூலம் ஆதாம் ஏவாளுக்கு மிகப்பெரிய துன்பம் நேர்ந்தது என்பதையும், இவற்றோடு அரசர் தனது பட்டாவை விலக்கிக்கொண்டதை ஒப்பிடமுடியது என்பதையும் பார்த்தோம். எந்தக் குற்றத்துக்காக யாஹ்வே தெய்வம் தனது கொடைகளை நீக்கிக்கொண்டதோ அந்தக் குற்றம், ஓர் அரசர் பட்டாவை நீக்கிகொள்ளத் தூண்டிய குற்றத்தைவிட மிக மிகக் குறைவான குற்றம் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். ஓர் அரசர் ஓர் அமைப்புக்குள் வேலை செய்கிறார். அந்த அமைப்பில் ஒருவரை ஜமீந்தாராக ஆக்கி பிறகு அவர் விசுவாசமில்லாமல் போய்விட்டால், அந்த அரசருக்கும், அந்த அரசுக்கும் பெரும் கேடு விளையும். ஆனால், ஆதாம் ஏவாள் விஷயத்தில் அவர்களது விசுவாசமின்மை காரணமாக எந்த ஒரு பெரிய கேடும் நடந்துவிடப்போவதில்லை. அவர்கள் கனியை உண்டதால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.

(2) இயற்கைக்கு முந்தைய கொடை சமாளிப்பில், ஆதாம் ஏவாளைப் பொருத்தமட்டில் எது இயற்கைக்கு முந்தைய கொடை, எது இயற்கையான குணாம்சம் என்ற வித்தியாசம் சமாளிப்பாகத்தான் இருக்கிறது. ஏனெனில், இந்த வேறுபாடு ஆதியாகமக் கதைகளில் எங்கேயும் இல்லை. இதன் ஒரே வேலை, யாஹ்வே தெய்வம் முதல் பாவத்துக்குக் கொடுத்த தண்டனையைச் சமாளிப்பதுதான்.

jesus-baptism(3) யாஹ்வே தெய்வம் முழுமையான நல்லது பொருந்திய தெய்வம் என்ற கொள்கைக்கு இயற்கைக்கு முந்தைய கொடை சமாளிப்பு ஆப்படிக்கிறது. முன்னரே குறிப்பிட்டதுபோல, இந்தச் சமாளிப்பு ஆதாம் ஏவாளும் பாவம் செய்தபோது அவர்களது சந்ததியினர் ஆதாம் ஏவாளின் இயற்கை குணாம்சங்களை வழிவழியாகப் பெற்றார்கள். ஆனால், இயற்கைக்கு முந்தைய கொடைகளைப் பெறவில்லை. ஆனால், இந்தக் குணாம்சங்களால், மனிதர்கள் பிறக்கும்போதே யாஹ்வே தெய்வத்திற்குப் பிடிக்காதவர்களாகப் பிறக்கிறார்கள் என்று கிறிஸ்துவ மதம் கூறுகிறது. முதல் பாவத்தை ஞானஸ்நானம் செய்து போக்கிக்கொள்ளாமல் இறக்கிறவர்களுக்கு நடுநரகம் (perdition) காத்திருக்கிறது என்று அது கூறுகிறது. ஒரு குழந்தை உருவாகிறபோதே அதன் மனித இயற்கையால் (அவர்கள் என்ன நல்லது கெட்டது செய்தாலும்) யாஹ்வே தெய்வத்திற்குப் பிடிக்காததாக இருக்கிறது. விட்டேத்தியாக இந்த யாஹ்வே தெய்வம் இருந்தால்கூடப் பரவாயில்லை; ஆனால் அவர்களை விரோதியாகவே கருதும் ஒரு யாஹ்வே தெய்வத்தைத்தான் கிறிஸ்துவம் காட்டுகிறது. ஒன்றும் செய்யவில்லை என்றாலோ, அல்லது ஞானஸ்நானம் கொடுப்பதற்கு முன்னால் மரித்துவிட்டாலோ அவர்களுக்கு நடுநரகம்தான். சுயமாக யாஹ்வேயை மதிக்க சொந்தமாக முடிவெடுக்கும் முன்னாலேயே அவர்களுடன் வீம்புக்கு என்று சண்டைக்குப் போகும் ஒரு தெய்வமாகத்தான் கிறிஸ்துவ தெய்வத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இயற்கைக்கு முந்தைய கொடை என்ற இந்தக் கருத்துருவாக்கம், மிகவும் நல்ல, எல்லோரையும் அன்பு செலுத்தும் ஒரு தெய்வத்தைக் காட்டாமல் வீம்புச் சண்டை போடும் தெய்வத்தைத்தான் காட்டுகிறது.

தனியே இன்னொரு வார்த்தை- கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியாவின் இந்தக் கட்டுரையில் கடைசிவரி குறிப்பிடத்தகுந்தது.

“The doctrine of the Church supposes no sensible or afflictive punishment in the next world for children who die with nothing but original sin on their souls, but only the privation of the sight of God.”

“முதல் பாவத்தை மட்டுமே சுமந்து இறக்கும் குழந்தைகளுக்கு (அதாவது ஞானஸ்நானம் செய்யாமல் இறந்துவிடும் குழந்தைகளுக்கு) அறிவுக்குப் பொருந்தாத கொடூரமான தண்டனை வழங்கப்படாது; ஆனால், யாஹ்வே தெய்வத்தின் பார்வை மட்டும் விழாது என்பதே சர்ச்சின் கொள்கை.”

infant-baptismஞானஸ்நானம் செய்யாமல் இறந்துவிட்ட குழந்தைகளுக்கு என்ன விதி என்று கிறிஸ்துவ மதம் கூறுவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமே மிஞ்சுகிறது. யாஹ்வே தெய்வத்தின் கண்பார்வை விழுவதையே ரொம்பப் பெரிய விஷயமாக சொல்லிக்கொள்ளும் கிறிஸ்துவ மதத்தில் அது கிடைக்காது என்பதை அது ஏதோ பெரிய விஷயம் இல்லை என்பதுபோல சும்மா, “ஆனால்” (but only) போட்டுத் தாண்டிப்போய்விட்டார்கள். இரண்டாவது, ஞானஸ்நானம் செய்யப்படாமல் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்ட குழந்தைகளுக்கு இந்த மாபெரிய யாஹ்வே தெய்வத்தின் பார்வை கிட்டாது என்பது ஆதாம் ஏவாளின் சந்ததிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை மாதிரி அநீதியான தண்டனை இல்லையா? யாஹ்வே தெய்வத்தின் கண்பார்வையை அவ்வளவு பெரிய விஷயமாக வைத்துகொண்டு, இந்த ஞானஸ்நானம் செய்யாத குழந்தைகளுக்கு அது கிடையாது என்பதன்மூலம் இந்தக் குழந்தைகள் பொறுப்பேற்க முடியாத ஒரு விஷயத்துக்குப் பழிவாங்குகிறது கிறிஸ்துவக் கொள்கை. [8]

3.2.2 முதல் பாவக் கொள்கையில் ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைச் சமாளிக்க உதவும் “உருவாக்கியவர் உரிமை” நிலைப்பாடு

“உருவாக்கியர் உரிமை” (Creator Card) என்ற கொள்கையை முன்வைப்பவர்கள் யாஹ்வே தெய்வம் உலகத்தை உருவாக்கியது என்ற காரணத்தால், உயிர்களுக்கு எந்த இயற்கையைக் கொடுக்கவேண்டும், கொடுக்க வேண்டாம், கொடுத்த எந்த உரிமையை எடுத்துகொள்ளலாம் என்கிற முழு உரிமை உண்டு; அதே நேரத்தில் அதனால் அவரை எந்தவிதமான ஒழுக்க கேட்டுக்குள்ளும் அடைக்கமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

3.2.2.1 “உருவாக்குபவர் உரிமை” சமாளிப்புக்கு பதில்

உருவாக்குபவர் என்ற ஒரே காரணத்துக்காக, ஒருவர் தான் உருவாக்கும் உயிர்களுக்கு வலி, துயரம், சாவு ஆகியவற்றைக் கொடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. ஒழுக்கத்தின் உறைவிடமாக சொல்லிக்கொள்ளக் கூடிய யாஹ்வே இந்த ஒழுக்கரீதியில் தவறான தண்டனைகளைக் கொடுக்க என்ன நியாயம் இருக்கிறது? எந்த அளவுக்கு முதல் பாவத்தின் காரணமாக யாஹ்வே தெய்வம் செய்கிறதோ அதன்படியே இது ஒழுக்கக்கேடு.

3.3 முதல் பாவக் கொள்கையின் அறிதல் பிரச்சினை

யாஹ்வே அனைத்தும் அறிந்ததாக இருந்தால், ஆதாமும் ஏவாளும் பரிசோதனையில் தோற்றுப்போவார்கள் என்று அறிந்திருக்க வேண்டும். நல்ல, கருணை நிறைந்ததாகச் சொல்லப்படும் இந்தத் தெய்வம் ஏன் தண்டனையே விளையும்படியும் அந்த தண்டனையின்படி பல கோடி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வலி, துயரம், பட்டினி, சாவு என்று இந்த நாடகத்தை நடத்தவேண்டும், அதுவும் இதற்கு மாற்றாக பல நல்ல முடிவுகள் இருக்கும்போது?

யாஹ்வே தெய்வம் எல்லாம் அறிந்ததாக கற்பனை செய்யப்படுவதால், இதுவரை நடந்ததையும், இனி நடக்கப்போவதையும் அறிந்திருக்க வேண்டும். பல கிறிஸ்துவத் தத்துவவியலாளர்கள், [9] மனிதனுக்குக் கொடுத்த சுதந்திரத்தின் விளைவுகளையும் (counterfactuals of freedom) அறிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதாவது ஒரு மனிதனின் சுதந்திர எண்ணம் மூலம் எடுக்கும் செயல்களின் விளைவுகளையும், அந்தச் செயல்களை செய்யாமலிருப்பதன் விளைவுகளையும் யாஹ்வே தெய்வம் அறிந்திருக்க வேண்டும். ஒரு செயல் நடந்திருக்கக்கூடிய, நடக்காதிருக்கக்கூடிய எல்லா விளைவுகளையும் அறிந்திருக்கும் இது நடு அறிவு (middle knowledge) என்று அறியப்படுகிறது. அதாவது, ஆப்ரஹாம் லிங்கன் காலை உணவை ஆர்டர் செய்தால், என்ன ஆர்டர் செய்வார் என்பதையும் யாஹ்வே அறிந்திருக்கவேண்டும்.

creation-of-adam-and-eveமுதல் பாவக் கொள்கையைப் பொருத்தமட்டில், ஆதாமும் ஏவாளும் எப்படியும் தோற்றிருக்கக்கூடிய ஓர் உலகத்தை யாஹ்வே படைத்திருக்க வேண்டாம். பதிலாக, அவரது நடு அறிவைப் பயன்படுத்தி, ஆதாமும் ஏவாளும் பரிசோதனையில் வெற்றிபெற்றிருக்கக்கூடியதோர் உலகத்தைப் படைத்திருக்கலாம். அதன் மூலம் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அவர்தம் பல கோடி சந்ததியினருக்கும் பல கோடி மிருகங்களுக்கும் அத்தனை வலி, துயரம், சாவு அனைத்தையும் தவிர்த்திருக்கலாம். யாஹ்வேக்கு, ஆதாமும் ஏவாளும், எப்படிப்பட்ட உலகத்தைத் தோற்றுவித்தாலும், பரிசோதனையில் தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்திருக்கும் என்று ஒருவர் பதில் சொல்லலாம். அப்படியென்றால், அவர் வேறொரு ஆதாம் ஏவாளை- பரிசோதனையில் வெற்றிபெற்றிருக்கக்கூடிய ஆதாம் ஏவாளை- உருவாக்கியிருக்கவேண்டும். மற்றொருவர் எல்லா ஆதாம்-ஏவாள்களும் பரிசோதனையில் தோற்றிருப்பார்கள் என்று சொல்லலாம். அப்படியென்றால், மனிதர்களை உருவாக்கும் வடிவமைப்பிலேயே தவறு இருக்கிறது என்பதே பொருள். கருணையும் நன்மையுமே பொங்கித்ததும்பும் இந்த யாஹ்வே தெய்வம் ஒன்று பரிசோதனையை மாற்றியிருக்க வேண்டும் அல்லது மனிதர்களையே உருவாக்கியிருக்கக்கூடாது.

ஆகவே இப்படிப்பட்ட தவறான “முதல் பாவ”க் கொள்கையோடு கிறிஸ்துவ மதம் இருக்க முடியாது என்று முடிக்கிறேன்.

4. “முதல் பாவ”க் கொள்கை இல்லாமலும் இருக்கமுடியாது

jesus-dies-on-cross-proseதுரதிர்ஷ்டவசமாக, ஒரு சிலரது விருப்பத்துக்கு மாறாக, கிறிஸ்துவர்களால் முதல் பாவம் இல்லாமலும் இருக்கமுடியாது. கிறிஸ்துவக் கடையின் மாடியில் உட்கார்ந்திருக்கும் கிறுக்குப் பிடித்த கிழவியைத் துரத்த முடியாது. ஏனெனில் அவளின் பெயரில்தான் சொத்துப்பத்திரம் இருக்கிறது. உதாரணமாக, “முதல் பாவம்” இல்லாமல் கிறிஸ்துவத்தின் முதன்மைக் கோரிக்கைகள் பிரச்சினைக்குள்ளாகும். அதாவது எல்லா மக்களுமே பாவத்தில் இருக்கிறார்கள் என்ற கொள்கையும், எல்லா மக்களுமே குறைகள் மிகுந்த மனித இயற்கை காரணமாக மேலும் மேலும் பாவங்கள் செய்யவே முயல்வார்கள் என்ற கொள்கையும், அவர்களது குறைகள் மிகுந்த மனித இயற்கை காரணமாக அவர்களது குறைகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தானாகவே மீண்டெழச் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற கொள்கையும், இந்தப் பாவங்கள், அவர்களுக்குக் கடுமையான மறுமை தண்டனையைத் தரும் என்ற கொள்கையும் கிறிஸ்துவக் கடைக்கு மிக மிக முக்கியமானவை. இந்தக் கொள்கைகளின் காரணமாகவே இயேசு பிறப்பெடுத்தது, அடிவாங்கியது, செத்தது, மீண்டும் உயிர்த்தெழுந்தது எல்லாம்.

அப்போஸ்தலர் பவுல் ரோமன்ஸ் 5:18-19– இல் கூறுகிறார்..

Therefore, as by the offense [original sin] of one [Adam] judgment came upon all men to condemnation; even so by the righteousness of one the free gift came upon all men unto justification of life. For as by one man’s disobedience many were made sinners, so by the obedience of one shall many be made righteous.

18 ஆகவே ஒரே ஒருவனின் குற்றம் எல்லா மனிதர்க்கும் தண்டனைத் தீர்ப்பாய் முடிந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதர்க்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் மலர்ந்தது.

19 ஏனெனில், ஒரு மனிதனின் கீழ்ப்படியாமையால் அனைவரும் பாவிகளானது போல், ஒருவரின் கீழ்ப்படிதலால் அனைவரும் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

ஆகவே முதல் பாவத்தை நீக்கினால், இயேசுவின் அவதாரம், அவர் அடிவாங்கியது, அவரது தியாகம், அவரது மீண்டும் உயிர்தெழுப்புதல் ஆகியவை அனைத்தும் ஏன் தேவை என்று விளக்குவது மிகவும் கடினம். எல்லோர் மேலும் வியாபித்திருக்கும், பலவீனமடையச்செய்யும், தீர்க்கவே முடியாத பாவத்தில் உலக மக்கள் அனைவரும் இருப்பதாகச் சொல்வது முதல் பாவம் இல்லாமல் முடியாத விஷயம் என்பதைக் கீழே பார்ப்போம்.

4.1 உலக மக்கள் எல்லோரும் பாவிகள் அல்ல

முதல் பாவக் கொள்கை இல்லாமல் எல்லோரும் பாவிகள் என்று சொல்வது முடியாத காரியம். விவரம் அறிவதற்கு முன்னால் இறந்துவிடுபவர்கள் (தங்கள் காரியங்களுக்குப் பொறுப்பேற்கும் திறமும், அறிவும், முதிர்ச்சியும் அடையாத சிறுவ சிறுமிகள்) நிச்சயம் பாவிகள் அல்லர். எந்தக் காலத்திலும் தங்களது செயல்களுக்குப் பொறுப்பேற்க முடியாத நிலையிலுள்ள மூளைவளர்ச்சி குன்றியவர்களை முதல் பாவக் கொள்கை இல்லாமல் பாவிகள் என்றும் சொல்லமுடியாது. கரு உருவான சமயத்திலேயே அவர் முழு மனிதருக்கு ஒப்பானவர் என்ற கிறிஸ்துவப் பார்வையை எடுத்துகொண்டோமானால், தானாகவோ, செயற்கையாகவோ கலைந்துவிடும் கருக்கள் அனைத்தும், முதல் பாவக் கொள்கை இல்லையேல், பாவங்கள் செய்யாதவை. சமீபத்திய ஆய்வுகளில், கரு உருவாகி பின்னர் 31 சதவீத கருக்கள் மட்டுமே முழுக் குழந்தையாக வளர்ச்சியடைந்து பிறக்கின்றன என்று தெரியவந்துள்ளது. [10] மேலும், மேற்கண்ட லிஸ்டில் இல்லாமலேயே, பாவங்கள் செய்யாதவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்று அனுபவம் கூறுகிறது. துறவிகள், சாந்த சொரூபிகள், இன்னும் விபரம் அறியும் வயது வந்த பின்னர் பாவங்கள் செய்ய வாய்ப்பில்லாமலோ, வாய்ப்பிருந்தும் செய்யாமலோ, இறந்துவிட்டவர்கள் ஆகியோரைச் சொல்லலாம். மேலே சொல்லப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்தால், உலகத்து மக்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினரே பாவிகள் என்று கிறிஸ்துவர்களால் சொல்லவே முடியும்.

4.2 மனித இயற்கையின் பாவ நிலை அளவுக்கு மீறியது என்பதும், மனிதர்கள் தாங்களாக பாவ நிலையிலிருந்து மீளமுடியாது என்று கிறிஸ்துவர்கள் சொல்வதும் மிகைப்படுத்தல்

அளவுக்கு மீறிய, தாங்களாக மீட்டுக்கொள்ளமுடியாத நிரந்தரப் பாவநிலையில் உலகம் இருக்கிறது என்ற கிறிஸ்துவப் பிரசாரத்தை முதல் பாவக் கொள்கை இல்லாமல் உருவாக்குவது கடினமானது. பெரும்பாலான மக்களின் பாவ நிலை மிகவும் சாதாரணமானது என்று நம் அனுபவம் சொல்லுகிறது. அடால்ப் ஹிட்லர், ஜோஸப் ஸ்டாலின் போல்போட், ஜாக் தி ரிப்பர் போன்ற கொடூரர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலும், கெட்டவர்களைத் தடுப்பதற்காக எண்ணற்ற பலர் தங்களுடைய உடல், பொருள், உயிர், சொத்து ஆகியவற்றைத் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிவோம். அப்படித் தியாகம் செய்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்கள் மட்டுமே அல்ல என்பதையும் அறிவோம். உலகத்தில் உள்ள மற்றவர்களுடைய துன்பம், வலி, அகால மரணம் ஆகியவற்றைக் குறைக்க ஏராளமானவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதையும் அறிவோம். கிறிஸ்துவ மதம் சொல்வது போல உலகம் முழுமையாக பாவ நிலையில் இல்லை என்பதையும், ஓரளவுக்கு மணிக் கோடு (bell curve) மாதிரி ஒரு பக்கம் மிகவும் தீவிரமான கொடூரமான செயல்களைச் செய்பவர்கள் மிகக்குறைவாக இருக்கிறார்கள். ஆனால், நடுவில் மிகச்சிறிய ஒழுக்கக்கேடுகளைச் செய்தாலும் பெரும்பாலும் நேர்மையான ஒழுக்கம் உள்ளவர்களாக பெரும்பான்மையினர் வாழ்கிறார்கள்.

பெரும்பாலான மக்கள் செய்யும் சிறிய ஒழுக்கக்கேடுகள் குறைவானவை என்பது மட்டுமல்ல, (கிறிஸ்துவர்கள் சொல்வதற்கு மாறாக) தனிமனித ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் சக்தி பெரும்பாலான மக்களுக்கு எந்தவிதமான தெய்வீகத் துணையும் இல்லாமல் சாத்தியமானதாகவே இருக்கிறது. உதாரணமாக, ஸ்டீவன் மோஹ்ர் எழுதிய சமீபத்திய கட்டுரையில், பெரும்பாலான குடிநோய் கொண்டவர்கள் (alcoholics) தாங்களாகவே அந்தக் குடிப்பழக்கத்திலிருந்து மீள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களை ஒப்பிட்டு நோக்கும்போது, மத அடையாளம் ஒட்டிய அல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA) அமைப்பின் மூலம் குடிப்பழக்கத்தை விட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. [11]

மோஹ்ரின்படி, “1995-இல் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் குடிநோய் கொண்டவர்கள் தாங்களாகவே குடிப்பழக்கத்தை விட்டிருக்கிறார்கள் என்று அறிவித்தது. 1995 அக்டோபரில், ஹார்வர்ட் மெண்டல் ஹெல்த் கடிதத்தில், “சமீபத்திய ஆய்வின் மூலம் அறியப்பட்டது என்னவென்றால், 80 சதவீதக் குடிநோயாளர்கள் ஒருவருடத்துக்குள்ளாகவே தாங்களாகவே அந்த நோயிலிருந்து மீண்டுள்ளார்கள். இதில் ஒரு சிலர் நோய்க்கான மருத்துவ உதவியாலும் கைவிடப்பட்டவர்கள்,” என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். [12]

மேலும், கடவுள் இல்லை என்று சொல்லும் நாஸ்திகர்களும், கடவுளைப் பற்றி கவலை இல்லை என்று சொல்லும் அக்னோஸ்டிக்குகளும், ஒழுக்க ரீதியான தார்மீக வாழ்வு வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர். [13]

4.3 சூழ்நிலைகளை மாற்றுவதன் மூலம் பாவ நிலையின் அளவை மாற்றவோ குறைக்கவோ முடியும்

“முதல் பாவ”க் கொள்கை இல்லையேல், தெய்வீக உதவி இல்லாமலேயே சில மனிதர்கள் சில வேளைகளில் சமூகத்தைச் சீர்திருத்தி ஒழுக்க ரீதியில் சிறப்பானதாக ஆக்கினார்கள் என்பதை மறுக்கமுடியாது. வறுமை, அறியாமை, கல்வியின்மை, பஞ்சம், துரதிர்ஷ்டம், பாதுகாப்பின்மை, உடல் ரீதியான குறைபாடுகள், உள்ளக் குறைபாடுகள் ஆகிய சூழல்கள், குற்றங்களுக்குத் (பாவ காரியங்கள்) தூண்டுதலாக இருக்கின்றன என்பதை பெரும்பாலான சமூகவியலாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். [14] சமீப காலத்தில் மதச் சார்பற்ற நாடுகளான மேற்கத்திய நாடுகளும் இன்னும் பல மதச் சார்பற்ற நாடுகளும் கல்வி, சுகாதாரம், மருத்துவ உதவி, வேலைகள், பாதுகாப்பான வாழ்க்கை, முன்னேற சந்தர்ப்பங்கள் போன்றவற்றை அளித்து, எந்தவிதமான தெய்வீகப் பிரார்த்தனையின் உதவியும் இல்லாமலேயே குற்றங்களைக் குறைத்துள்ளன என்பதையும் அறிவோம். [15]

ஜான் 16:3-இல் யாஹ்வே மனிதர்களை மிகவும் நேசித்தது என்றும், அவர்களைப் பாவங்களிலிருந்து காப்பாற்ற விரும்பியது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தார்மீக ரீதியிலும் நடைமுறையிலும் யாஹ்வே செய்ததை விட சிறப்பான வழிகளில் அதே விஷயத்தைச் சாதித்திருக்கலாம். உதாரணமாக, ஓர் அப்பாவியை கொடூரமாகக் கொலை செய்வதை விட, இந்த யாஹ்வே, மக்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருக்கலாம். அதே போல, மக்கள் பாவம் செய்யத் தூண்டும் வறுமை, அறியாமை போன்ற சுற்றுச்சூழல் விஷயங்களை மாற்றி அவர்களைப் பாவம் குறைவாக செய்பவர்களாகவோ செய்யவே வாய்ப்பில்லாதவர்களாகவோ ஆக்கியிருக்கலாம். இந்த அணுகுமுறை, தனது சொந்த மகன் என்று சொல்லப்படுபவரை, கொடூரமாகக் கொலை செய்யாமலேயே, மனிதர்களின் சுதந்திர எண்ணத்தை எந்த விதத்திலும் பாதிக்காமலேயே, யாஹ்வே தனது மக்களுக்கு அன்பு செலுத்துபவராகவும் பாவங்களைக் குறைப்பவராகவும், பாவம் குறைந்தவர்களை ஊக்குவிப்பவர்களாகவும் ஆக்கியிருக்கும்.

இங்கே கிறிஸ்துவ மதம் “முதல் பாவ”க் கொள்கையைக் கைவிட்டுவிட்டு இருக்கவும் முடியாது என்று இங்கே முடிக்கிறேன். யாஹ்வே தெய்வம் மனிதர்கள், விலங்குகள் மீது சாபம் கொடுத்ததால்தான் அவர்கள் மீது முதல் பாவம் படிந்திருக்கிறதாம். அந்த முதல் பாவத்தைத் தீர்க்கத்தான், இயேசு என்ற தன் மகனை அனுப்பி அவரை அடி வாங்க வைத்து, அவரைச் சாவடித்து, அவரை மீண்டும் உயிர்த்தெழ வைத்தாராம். இப்படி கிறிஸ்துவ மதத்துக்கு முதல் பாவம் தேவைப்படுவதால், இந்தக் கொள்கை இல்லாமல் கிறிஸ்துவ மதமே பரிதாபமான நிலையைத்தான் அடையும்.

5. முடிவுரை

கிறிஸ்துவ மதத்துக்கு, தீவிரப் பிரச்சினை இருக்கிறது என்று இங்கே வாதிட்டுள்ளேன். “முதல் பாவ”க் கொள்கையை நம்பகத்தன்மையுடன் கிறிஸ்துவத்தால் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாது; அதனை விட்டுவிட்டு, கிறிஸ்துவத்தை நம்பகத்தன்மையுடன் பிரசாரம் செய்யவும் முடியாது.

மேற்குறித்த தரவுகள்

[8] This argument is developed in my “The Argument from Unfairness” in the International Journal for Philosophy of Religion Vol. 25, No. 2, pp. 115-128 (April 1999).

[9] William Lane Craig, Alvin Plantinga, Terrance Tiessen, and Thomas Flint are examples.

[10] Kathleen Stassen Berger, The Developing Person through Childhood and Adolescence (6th ed) (New York, NY: Macmillan, 2003), p. 94.

[11] Steven Mohr, “Exposing the Myth of Alcoholics Anonymous,” Free Inquiry April/May 2009, pp. 42-48.

[12] Ibid., p. 44.

[13] The Secular Web page “On Average, Are Atheists as Moral as Theists?” provides an excellent bibliography on atheism and morality.

[14] For example, see:

Adrian Raine, Patricia Brennan, Birgitte Mednick, and Sarnoff A. Mednick, “High Rates of Violence, Crime, Academic Problems, and Behavioral Problems in Males With Both Early Neuromotor Deficits and Unstable Family Environments,” Archives of General Psychiatry Vol. 53, No. 6, pp. 544-549 (1996). Bruce P. Kennedy, Ichiro Kawachi, Deborah Prothrow-Stith, Kimberly Lochner, and Vanita Gupta, “Social Capital, Income Inequality, and Firearm Violent Crime,” Social Science & Medicine, Vol. 47, Issue 1, pp. 7-17 (July 1, 1998). “Tackling the Underlying Causes of Crime: A Partnership Approach,” Submission to the (Irish) National Crime Council by the Combat Poverty Agency of Ireland (2002)

[15] Gregory S. Paul, “The Big Religion Questions Finally Solved,” Free Inquiry December 2008/January 2009, pp. 24-36. See especially Figs. 6, 7, and 8.

மொழிபெயர்ப்பாளர் பின்குறிப்பு

கிறிஸ்துவர்களோ முஸ்லீம்களோ ஆதாம் ஏவாளை பிரசாரம் செய்யும்போது இதற்கெல்லாம் என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்று நாகரிகத்தின் பொருட்டு நாம் கேட்பதில்லை. ஆனால் அவர்களோ தங்களது பிரசாரத்தை மறுத்து யாரும் பேசமுடியவில்லை என்பதே அவர்கள் கூறுவது உண்மை என்பதற்கு நிரூபணம் என்று எடுத்துகொள்கிறார்கள். ஆகையால், அவர்களைத் தேடிப்போய் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். ஆனால் யாராவது உங்களை பாவிகள் என்று அழைத்தாலோ, அல்லது உங்களிடம் வந்து ஆதாம் ஏவாள், முதல் பாவம் என்று யூதர்களின் புராணக்கதையை பேசினாலோ இந்தக் கட்டுரையை அச்சடித்து வைத்துகொண்டு,  அவர்களிடம் கொடுத்து, படிக்கச்சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.)

சுவாமி விவேகானந்தர் உரை (சுட்டி)

vivekananda-stamp‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!’ ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே! ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள்.

முற்றும்.

103 Replies to ““முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]”

  1. கிறித்துவ மதத்தின் வேர்கள் யூத மதத்தில் இருக்கின்றன. யூதர்களின் நூல்கள், கதைகள் போன்ற அனைத்தையும் கிறித்துவம் எடுத்துக்கொண்டது.(Old Testament). அப்படி இருக்கையில் ஏன் கிறித்துவத்துக்கும் யூதத்திற்கும் ஒத்துப் போவதில்லை?

  2. Pingback: Indli.com
  3. அருமையான கட்டுரை.
    இதனை யாராவது உடனடியாக மலையாளத்தில் மொழிபெயர்த்து கேரள கிறிஸ்துவர்களிடமும் முஸ்லீம்களிடமும் வினியோகிக்க வேண்டும்.

    நன்றி

  4. // துரதிர்ஷ்டவசமாக, ஒரு சிலரது விருப்பத்துக்கு மாறாக, கிறிஸ்துவர்களால் முதல் பாவம் இல்லாமலும் இருக்கமுடியாது. கிறிஸ்துவக் கடையின் மாடியில் உட்கார்ந்திருக்கும் கிறுக்குப் பிடித்த கிழவியைத் துரத்த முடியாது. ஏனெனில் அவளின் பெயரில்தான் சொத்துப்பத்திரம் இருக்கிறது. //

    Superb analogy. It clearly captures the absurdity in the “first sin” philosophy and shows how poorly fabricated the whole story is.

  5. This article was sent to me by a friend. I started reading this with a contempt at first and then realized that my belief was wrong.

    I am going to forward this to my friends. I want them to realize their mistakes as well.

    I have to say that “I was a christian”

    Thanks for the enlightenment.
    Ravikumar

  6. ஆர். கோபால்,

    தமிழ் இந்து தளத்தை தொடர்ந்து வாசித்து வந்தாலும் இப்போதுதான் பின்னூட்டம் எழுதுகிறேன்.

    ஒவ்வொரு கிறிஸ்துவரும் வளர்ந்தவுடனும் பள்ளிக்கு சென்றவுடனும் அவர் சந்திக்கும் முதல் பிரச்னை இதுவாகத்தான் இருக்கும். இந்துக்கள் இந்த பூமி பல யுகங்கள் பழையது என்று சொல்கிறதே, அறிவியலில் டைனசோர்கள் என்றெல்லாம் பல கோடி வருடங்களுக்கு முன்னால் நடமாடியது என்றெல்லாம் வருகிறதே, ஆனால் பைபிளில் இந்த உலகம் 6000 வருடங்களுக்கு முன்னால் கடவுள் உருவாக்கியது என்று சொல்கிறதே என்று குழம்புவார். ஆனால் பெரும்பாலான வளர்ந்த கிறிஸ்துவர்கள் ஒரு மாதிரி கம்பார்மெண்டலைஸ் பண்ணிவிடுவார்கள். சர்ச்சுக்கு போகும்போது ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னால் உலகத்தை கர்த்தர் படைத்தார் என்று படித்துவிட்டு மாலையில் கோடி வருடங்களுக்கு முன்னால் இந்த பூமியில் டைனசோர்கள் நடமாடின என்றும் முரண்பாடில்லாமல் படிப்பார்கள். இதனை விவாதிக்கும்போது சர்ச்சிலும், வீட்டிலும் இதனை ஒரு மாதிரி அமுக்கி விடுவார்கள். திரும்பத் திரும்ப யேசு, கர்த்தர், ஜெபம், யேசுவை விசுவாசிக்கிறேன் என்று கிளிப்பிள்ளை மாதிரி சொல்லி மூளைச்சலவை செய்து மற்றவற்றை அமுக்கி விடுவார்கள். ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னால் முதல் பாவம் நடக்கவில்லை என்றால் ஏசுவை கிறிஸ்துவர்கள் நம்புவது முட்டாள்தனம் என்று இப்படி நெத்தியிலடித்தாற்போல சொல்லவோ எழுதவோ தமிழ்நாட்டில் யாருமில்லை.

    இயேசு என்ற ஒருவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் இருந்தார் என்பதற்கு பைபிளை விட்டால் வேறு ஆதாரம் இல்லை. ஆனால், அவருக்கு முன்னால் இந்த உலகில் பிறந்த அலெக்ஸாந்தருக்கு வண்டி வண்டியாக ஆதாரங்கள் இருக்கின்றன. இயேசுவை பார்த்தே இராதவர்கள் அவரை தலை முடி நீளமாக தாடி மீசை இல்லாமல் படமாக வரைந்து வரலாற்று கதாபாத்திரமாக ஆக்கிவிட்டார்களே தவிர அவர் இருந்த ஒரு ஆதாரமும் இல்லை. அந்த காலத்தில் பலரும் இப்படித்தான் தலைமுடி நீளமாகவும், தாடி மீசை இல்லாமலும் இருந்தார்கள். இயேசு கிறிஸ்து என்பது மாற்கு எழுதிய நாவலில் வரும் ஹீரோ. அந்த ஹீரோவை சுற்றி கதை எழுதி அவரை வரலாற்று பாத்திரமாக ஆக்கிவிட்டார்கள் என்று இப்போது சொல்கிறார்கள்.

    நான் இந்த காரணங்களுக்காக கிறிஸ்துவ மதத்தை விடவில்லை. இனந்தெரியாமல் எனக்கு முருகன் மீது பக்தி வந்ததால் நான் முருகனை கும்பிடுகிறேன். நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தாலும், என் பெற்றோரும் சகோதரர்களும் தீவிர கிறிஸ்துவர்களாக இருந்தாலும் நான் சர்ச்சுக்கு போவதில்லை. அவை எனக்கு அந்நியமாகவும் எனது அடிமைத்தனத்தை பறைசாற்றுவது போலவும் உணர்வதால் நான் சர்ச்சுக்கு போவதில்லை. இந்த கட்டுரை என்னுடைய முடிவு சரியானதே என்று எனக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளது.

  7. All these Abrahamites take pride in calling themselves as people of book. உலகத்தில் எத்தனையோ கோடி ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றோக்கும் ஒரு திறமை உண்டு. அத்தனையும் ஒரு புத்தகத்தில் அடக்கிவிடமுடியுமா என்ன?இதைவிட ஒரு பிதற்றல் வேறு இருக்கமுடியாது.

    பரத்வாஜ முனிவர் பல பிறவிகள் எடுத்து வேதங்களை கற்றார். இன்னும் ஒரு முறை தவமிருந்த பொழுது இந்திரன் அவரிடம் இன்னொரு ஜன்மம் கொடுத்தல் என்ன செய்வீர் என்று கேட்டவுடன் அப்பொழுதும் வேதம்தான் கற்பேன் என்றார். அதற்க்கு இந்திரன் நீர் கற்றது கை மண் அளவே கல்லாதது மலை அளவு என்றார்.

    அதனால்தான் நமது தர்ம சாஸ்த்ரங்களில் பலவற்றை சொல்லி இறுதியில் இதில் சொல்லாதது ஏதாவது இருந்தால் அதை அந்த அந்த ஊர் பெருமக்களை கேற்று அறிந்து கொள்ளவும் என்றனர்

  8. ரவிக்குமார், ஸ்டீபன் ராஜ் – நீங்கள் மனோ தைரியத்துடன் செய்த சிந்தனைக்கும் அதை பின்பற்றி எடுத்த முடிவிற்கும் பாராட்டுக்கள்

    வாழ்க

  9. இனிமேல் எவனாச்சும் பாவிகளேன்னு நான் போகும்போது கூப்பிடட்டும், உடனே இந்தக் கட்டுரைக்கு பதில் சொல்லிவிட்டு பின்னர் சத்தம்போட்டு உங்கள் ஏசுவை அழையடா ”அடப்பாவி” என என்பேன். அருமையான கட்டுரை.

    வாழ்த்துக்கள்.

  10. அண்ணே, இந்த அறிவு வரவும் வெளிநாட்டுக்காரனைத் தானே நம்பியிருக்கிறீர்கள், இது நியாயமா? ஆனானப்பட்ட டார்வினே குரங்குபோல அந்தர் பல்டியடித்தான், இவன் எந்த மூலைக்கு? இவர்களுடைய தத்துவங்கள் கல்லறையில் தூங்குகிறது, இவர்களால் எதிர்க்கப்பட்ட இறைவனின் நற்செய்தியோ சிகரங்களின் கொடுமுடியில் ஜொலித்துக்கொண்டிருக்கிறது..!

  11. Mr Chilsam, please answer to the questions rather than shooting the messenger.
    No preaching please, answer the questions about the first sin. The author has proved the absurdity of your religion based on this silly first sin. If you take away the first sin, your religion will collapse.If you keep it, you/ your religion will be ridiculed and your God will be made to look like an ordinary mortal with anger and revenge being his predominant traits.Take the challenge and prove yourself and do not chicken out.. Do not change the topic and try to wriggle out of this dilema

  12. திரு chillsam அவர்களே

    ///இவர்களுடைய தத்துவங்கள் கல்லறையில் தூங்குகிறது, ////

    ஏசுவில் ஆரம்பித்து இப்போது வரை, கல்லறையிலிருந்து உங்களால் மீள முடியவில்லையே! எதற்கெடுத்தாலும் கல்லறையில் போட்டுப் புதைத்துவிடவேண்டுமா? கிறிஸ்தவத்துக்கு மற்ற மதத்தினரை மாற்றுவதன் பலன்
    அ. கிறிஸ்தவக் கல்லறைகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது.
    ஆ. மேலை நாடுகளின் ஆக்கிரமிப்புக்குப் பயன்படுகிறது. அவ்வளவுதான்.

    ///இவர்களால் எதிர்க்கப்பட்ட இறைவனின் நற்செய்தியோ சிகரங்களின் கொடுமுடியில் ஜொலித்துக்கொண்டிருக்கிறது..!///

    கொடுமுடி என்றொரு ஊர் இருக்கிறது. சிறந்த முருக பக்தையான கண்ணீர் குரல் என்றால் என்ன என்று உலகை அறியச்செய்த K.B. சுந்தராம்பாள் அவ்வூரினர்.

    அது என்ன சிகரங்களின் கொடுமுடி? கேள்விப்படாதது ? எல்லாம் அரசியல் மேடைகளில் பேசும் வெற்று வார்த்தை ஜாலமோ?

  13. சென்ற மறுமொழியில் ‘கணீர்க் குரல்’ என்பது தவறாக ‘கண்ணீர்க் குரல்’ என்று தட்டச்சாகிவிட்டது. மன்னிக்கவும்.

  14. Apart from the Original Sin, the other most fundamentally flawed premise of Christianity is Resurrection. Scientists are working overtime in Israel determined to find Jesus’ bones – they say when they find them, Resurrection will be proved wrong as well

  15. சில்லிசாம்

    இதற்கெல்லாம் ஒரு வெள்ளை காரனை நாங்கள் நம்ப வில்லை -நாங்க நிறையவே கேட்போம்

    this has been translated for poke at those arabian orgins who think western idea of philosophy is correct

    I am working on 100 questions just from genesis, once i finish compiling it i will share it with you – these will be pure logical questions – please try and answer them – you can use socretarian syllogism to answer as this too is from the west.

  16. சில்சாம்,

    ஒரே ஒரு கேள்வி: கருவாக இருக்கும்போதே இறக்கும் சிசுக்களின் கதி என்ன?

    (1) அவை “ஆதி பாவத்தால்” இறந்து போகும் பச்சைக் குழந்தைகளும், கருவறையிலேயே இறக்கும் சிசுக்களும் நரகத்திற்குப் போகின்றன என்று St. Augustine போன்ற உங்கள் ஆதிகாலத் தலைவர்கள் கூறுகின்றனரே? அவரை ஏற்கிரீர்களோ இல்லையோ, சிசுக்கள் நரகம் செல்வதை ஏற்றுக் கொண்டால் உங்கள் கர்த்தர் கருணையே இல்லாதவன் என்றாகிவிடுமே?

    (2) இறக்கும் சிசுக்கள் சுவர்க்கம் போகின்றன என்றால், சம்சாரத்தில் இருப்பவர்களுக்கு பெரும் அநியாயமாகிவிடுமே? ஏன் சிலரை மாத்திரம் ஈசியாக சொர்க்கம் அனுப்புகிறார்? உம் போன்றவர்க்கு அந்த ஈசியான வழியை ஏன் கொடுக்கவில்லை? கர்த்தர் பாரபட்சம் பார்ப்பாரோ? அது இருக்கட்டும், இறக்கும் சிசுக்கள் சொர்க்கம் தான் போகின்றன என்றால் நீங்கள் கருகலைப்பையும் சிசுவதையையும் ஏன் எதிர்க்கிறீர்கள்? அவர்களை சிசுவாக இருக்கும்போதே அழிந்து நிச்சயமாக சுவர்க்கம் போவதைத் தடுக்கிரீர்களே? என்ன கருணையின்மை உமக்கு?

  17. வணக்கம்

    சகோதரர்களே திரு சில்சாம் போன்ற பல சகோதரர்கள் தங்கள் தலையை தெரியாத்தனமாய் மாற்றோரை கழுவ விட்டு விட்டு போதாக் குறைக்கு மற்றவர் தலையை கழுவ முன் வந்துள்ளனர்.

    அவர்கள் தங்கள் நிலை புரியாதவர்கள், சர்ப்ப தோஷம் அது இது என புரியாமல் பேசி குழப்பி, குழம்பி, தவிப்பது வேதனைதான். ஆதாரம் தேட அவசியம் இன்றி உன்னித்துப் பார்த்தால் நமது வாழ்வே பிரபஞ்சத்தின், பரிணாமத்தின் ஆழ்ந்த ஆதாரம் என்பது புரியும். புரிய வைப்பதுதான் சனாதன தர்மம்.

    வானியலான ஜோசியத்தை புறக்கணித்து கிரகங்கள் நம்மை ஒருபோதும் ஆளாது என்று எக்களித்த வெள்ளைக்காரர்கள் திடீரென மறு ஒரு நாள் வானியல் மாற்றத்திற்கும் உலக உயிர்களுக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு என்கிறார்கள்.

    —இந்து வான சாஸ்திரம் எல்லாம் பொய் என்ற ஆபிரகமியக் கருத்து பொய்யானது.

    டார்வின் தத்துவத்தை உலகமே வெறுத்து பரிணாமத்தை ஒதுக்கிய உலகம் நீண்ட ஆராய்ச்சியின் பின்னர் ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று—தசாவதார உண்மை ஏற்புடையதாயிற்று.

    இது தினமலர்( 11-9-2010) கோவை: நாளிதழ் செய்தி:

    வானியல்..ஜோதிடம், ஆன்மிகம், போன்றவை இந்தியாவில் உள்ள கங்கைக் கரையில் இருந்துதான் நமக்கு வந்துள்ளன என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். 2500 ஆண்டுகளுக்கு முன் வடிவ கணிதம் (ஜியாமெட்ரி) கற்றுக்கொள்ள கிரேக்கத்தின் சமோஸ் தீவிலிருந்து கங்கை கரைக்கு சென்றார் பிதகொரேஸ். பிராமணர்களின் அறிவியலான புகழ் பெற்ற வடிவ கணிதம் ஐரோப்பாவில் அறிமுகம் ஆகாமல் இருந்து இருந்தால், சவாலான கங்கை கரை பயணத்தை பிதாகொரேஸ் மேற்கொண்டு இருக்க மாட்டார்.—-பிரான்கோயிஸ் எம். வால்ட்டர் (1694 -1774)
    உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர். தத்துவ அறிஞர்.

    கி க்கு முன்னமே அபாரமான ஞானம் பெற்றிருந்த தாய்த்திரு நாடு,நம் பாரத நாடு. ஞானத்தோடு அனைத்து வாழ்வியல் தத்துவங்களையும் வளர்த்தது சனாதன தர்மம். அது பக்தனையும் வழிநடத்தும். பராரியையும் வழிநடத்தும்.

    எங்கோ இருக்கும் தலைவனை ( கர்த்தரை) மட்டுமே நம்பும் வழியைவிட, தனக்குள் உள்ள இறைவனை அடையாளம் காட்டி தன்னையே நம்ப வைக்கும் சனாதன தர்மம்.

  18. Dear Chillsam,
    Leave up your struggle. The world is the court now and all the children abused by the organised church are the judges.

    Pope visits UK, admits failures in abuse scandal
    https://news.yahoo.com/s/ap/20100916/ap_on_re_eu/eu_pope_britain#mwpphu-container

    In this single article, the number of comments is exceeding 1100 within 24 hours of publishing this news. All these comments are not from biased people, but they were faithful from the whole of Europe, UK, Australia and US are charging the organised crimes. The RCC empire is damaged beyond repair.

  19. கந்தர்வன் 16 September 2010 at 12:10 pm

    // சில்சாம், ஒரே ஒரு கேள்வி: கருவாக இருக்கும்போதே இறக்கும் சிசுக்களின் கதி என்ன?

    (1) அவை “ஆதி பாவத்தால்” இறந்து போகும் பச்சைக் குழந்தைகளும், கருவறையிலேயே இறக்கும் சிசுக்களும் நரகத்திற்குப் போகின்றன என்று St. Augustine போன்ற உங்கள் ஆதிகாலத் தலைவர்கள் கூறுகின்றனரே? அவரை ஏற்கிரீர்களோ இல்லையோ, சிசுக்கள் நரகம் செல்வதை ஏற்றுக் கொண்டால் உங்கள் கர்த்தர் கருணையே இல்லாதவன் என்றாகிவிடுமே?

    (2) இறக்கும் சிசுக்கள் சுவர்க்கம் போகின்றன என்றால், சம்சாரத்தில் இருப்பவர்களுக்கு பெரும் அநியாயமாகிவிடுமே? ஏன் சிலரை மாத்திரம் ஈசியாக சொர்க்கம் அனுப்புகிறார்? உம் போன்றவர்க்கு அந்த ஈசியான வழியை ஏன் கொடுக்கவில்லை? கர்த்தர் பாரபட்சம் பார்ப்பாரோ? அது இருக்கட்டும், இறக்கும் சிசுக்கள் சொர்க்கம் தான் போகின்றன என்றால் நீங்கள் கருகலைப்பையும் சிசுவதையையும் ஏன் எதிர்க்கிறீர்கள்? அவர்களை சிசுவாக இருக்கும்போதே அழிந்து நிச்சயமாக சுவர்க்கம் போவதைத் தடுக்கிரீர்களே? என்ன கருணையின்மை உமக்கு? //

    அன்பு நண்பர் கவரும் கந்தர்வனுக்கு வாழ்த்துக்கள்;ஒரே ஒரு கேள்வி என்று இத்தனை கேள்வி கேட்டால் என்ன நியாயம்?
    இதில் எதற்கு என்று நான் பதில் சொல்வேன்?
    நான் என்ன முழு உலகக் கிறித்தவத்துக்கும் ஸ்போக்ஸ்மேன் என்று நினைத்தீர்களா? நானும் உங்களிலிருந்து வந்தவந்தான்! வேண்டுமானால் என்னுடைய இந்தியத் தன்மையையும் தமிழ் இரத்தத்தையும் சோதித்துப் பாருங்கள்;

    கிறித்துவின் நற்செய்தி என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்டது; ஆனால் கிறித்தவத்தின் மீது நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளெல்லாம் வெளிநாட்டு சட்டதிட்டங்கள் மற்றும் கலாச்சாரம் சம்பந்தப்பட்டதாகும்;

    நானோ கிறித்தவத்தின் எந்த பிரிவையும் சேராதவன்; உலகமுழுவதும் மரண தண்டனை நிறைவேற்ற ஒரே மாதிரியான நடைமுறை இருக்கிறதா என்ன? அதுபோலவே கருக்கலைப்போ சிசுவதையோ அந்தந்த வட்டாரத் தேவையைப் பொறுத்ததாகும்;

    நீங்கள் தான் இந்த உலகம் கடவுளுக்கு சொந்தமெனவும் அவரே நம்மைச் சுற்றி நடப்பவையாவற்றுக்கும் பொறுப்பாளி என்று நம்புகிறீர்கள்; என்னுடைய கருத்து வித்தியாசமானது;

    எந்தவொரு உயிரையும் துன்புறுத்துவது இறைவனுடைய நோக்கமல்ல; மாறாக இறைசக்தியின் எதிர்சக்தியான சாத்தானே உயிர்களைக் கவர்ந்து செல்கிறான்; இது அனைத்து மார்க்கங்களுக்கும் பொதுவான நம்பிக்கையாகும்;

    அப்படி இறையடி சேரும் உயிர்களை அது எத்தனை மாதக் குழந்தையோ அல்லது வயது முதிர்ந்த கிழவனோ இறைவன் தன்னிடமாக ஏற்றுக்கொள்கிறான்; உதாரணத்துக்கு இயேசுபெருமான் சிலுவை மரத்தில் உயிர்விடும் போது அவர் தனது ஆவியை இறைவனிடமே ஒப்புவித்தார்; இது ஒரு பார்வை;

    மற்றபடி இந்த ஜீவியத்தில் அன்றாடம் நாம் செய்யும் ஒவ்வொரு கர்மாவுக்கும் பலனை அடைந்தே தீரவேண்டும் என்பது ஏற்கனவே நமது மார்க்கத்தில் உள்ள நம்பிக்கை தானே;

    ஒரு இந்து நம்பிக்கையாளனாக உங்களைக் கேட்டால் கருவில் கலையும் சிசுவின் நிலையைக் குறித்து என்ன சொல்லுவீர்கள்?
    அந்த துன்பத்துக்கு யார் காரணம்?
    ஒரு பாவமுமறியாத அந்த இளம் தாய்க்கு நேர்ந்த துன்பத்துக்கும் ஏமாற்றத்துக்கும் யார் காரணம்?
    கிரகதோஷமா,
    சர்ப்ப தோஷமா,
    சாமி குத்தமா,
    முற்பிறவி சாபமா,
    செய்வினையா,
    செயப்பாட்டுவினையா,
    விதியா,
    மருத்துவ காரணமா,
    மாமியார் கொடுமையா,
    கள்ளக் காதல் சாபமா,
    தற்கொலை செய்துக்கொண்ட கன்னிப்பெண்ணின் சாபமா,
    குட்டிசாத்தானின் சித்துவேலையா,
    சூனியமா,
    மந்திரமா………..etc…….etc……..?
    இப்படி எனக்குத் தெரியாத தங்களுக்குத் தெரிந்த ஏதோ ஒரு காரணத்தையும் இதனால் துன்பமடைந்த உயிர்களுக்கு நல்ல தீர்வையும் நீங்களே சொல்லுங்களேன்..!

  20. Thanks for such articles. We must face facts. No need to hide and not talk of Christianity or Islam.
    We will freely discuss. Find truth.
    Yahveh forbade knowledge and demanded only obedience! We adore knowledge (veda means knowledge).
    Hope it is okay to eat banana at least!
    What contrast
    satyameva jayathe

  21. சில்ல்சாம்,

    நான் கேட்ட அனைத்துக் கேள்விகளும் முதலில் கேட்ட கேள்வியை மூலமாகக் கொண்டுள்ளது. கேட்ட கேள்விகளுக்கு நேராக பதில் உரைக்கவில்லை. பதில் உரைத்தால் நன்று.

    ஆகையால், மீண்டும் ஒரு முறை: இறந்து போகும் சிசுக்களுக்கு என்ன கதி? இக்கேள்விக்கு நீங்கள் “சொர்க்கம்” “நரகம்” ஆகிய இரண்டில் ஒன்றைத் தவிர வேறு எதையும் கூற இயலாது. (இயன்றால் கூறவும்.) இந்த இரண்டு பதில்களில் நீங்கள் என்ன கூறினாலும் அது உங்கள் கர்த்தருடைய பாரபட்சமின்மைக்கும் கருணைக்கும் உலை வைக்கும். இதுவே என்னுடைய சவால்.

    இக்கேள்விக்கு இந்து சிந்தனையின்படி என்ன பதில் என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். கூறுகிறேன். இந்து சிந்தனைப் படி, கர்மாவின் தொடர்ச்சி என்று விளக்கி விடலாம். அதாவது, சிசுவாக வந்த அந்த ஆத்மாவும், அதன் பெற்றோர்களும் செய்த (முன்பிரவியிலோ, அல்லது பெற்றோர்கள் விஷயத்தில் அதே பிறவியிலோ) பாப புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்கிறார்கள் என்ற விளக்கமே.

    (இதற்காக அந்த பெற்றோர்களுக்கோ குழந்தைகளுக்கோ உதவி புரியக் கூடாது என்று அர்த்தம் இல்லை. ஒருவர் துடிப்பதைப் பார்த்து அதற்கு நெஞ்சுருகி அனுதாபமும், அவர்களுடைய துயரை நீக்குவதும் நல்லோர்களின் லக்ஷணம் என்றே காலங்காலமாக இந்து சிந்தனையாளர்கள் சொல்லி வருவது. ஆகையால், இந்த கர்மா விஷயத்தை வைத்து நீங்கள் ஹிந்து நம்பிக்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தால் அது நேர்மையற்ற துஷ்ப்ரச்சாரம் ஆகும்).

  22. Mr Chilsam, you are evasive and not answering the questions posted here.You say you are a christian.We are questioning the basic tenets of Christianity,the FIRST SIN.You have to justify your stance on this first sin..No evasive answers.Or you can get out of this dilema by admitting to be a blind follower of Christianity.Also you need to accept that your brain had been washed and dried by this Christian missionary mob. We will understand and will resign to the fact that another, pardon my expression, fool had been duped.

  23. //
    எந்தவொரு உயிரையும் துன்புறுத்துவது இறைவனுடைய நோக்கமல்ல; மாறாக இறைசக்தியின் எதிர்சக்தியான சாத்தானே உயிர்களைக் கவர்ந்து செல்கிறான்; இது அனைத்து மார்க்கங்களுக்கும் பொதுவான நம்பிக்கையாகும்;
    //

    சில்சாம்,

    அப்படியானால், உங்களுடைய ஓரிறைக் கோட்பாடும் சர்வவள்ளமைபடைத்த இறைக்கொட்பாடும் அடிபட்டுப் போகிறது. இரண்டு ‘இறைவர்கள்’ என்று நீங்கள் ஒத்துக் கொண்டு ஆக வேண்டும். மேலும், “ஒரு இறைவர் (கர்த்தர்) நல்லது செய்யப் பார்க்கிறார், இன்னொரு இறைவர் (சாத்தான்) உயிர்களைத் துன்புறுத்தப் பார்க்கிறார். ஒரு இறைவர் (சாத்தான்) செய்வதை இன்னொரு இறைவரால் (கர்த்தர்) தடுக்க முடியாது. சில நேரங்களில் கர்த்தர் சாத்தானிடம் நிரந்தரமாகத் தோற்கிறார். ஏனென்றால், நரகத்தில் விழுந்த உயிர்களைக் கர்த்தருக்குக் காப்பாற்றும் சக்தி இல்லை. சக்தி இருந்தால் அனைவரிடத்திலும் கருணை கொண்ட இறைவர் அவர்களை மன்னிக்க மாட்டாரா?” என்று இரண்டு இறைவர்களை ஒப்புக் கொள்ள வேண்டி வரும்.

    (ஹிந்துக்களாகிய மற்றவர்களுக்கு ஒரு சுவாரசியமான விஷயம் — அந்த இரண்டு இறைவர்களில் யார் அயோக்கியர் யார் கருணை உள்ளவன் என்பதெல்லாம் வேறு விஷயம்… “ஒருவர் ஆப்பிள் தின்னத் தூண்டுபவர், இன்னொருவர் இனப் படுகொலை செய்யச் சொல்பவர்” என்று மாத்திரம் கூறிவிட்டு நிறுத்திக்கொள்கிறேன்.)

  24. சில்சாம்,

    // இப்படி எனக்குத் தெரியாத தங்களுக்குத் தெரிந்த ஏதோ ஒரு காரணத்தையும் இதனால் துன்பமடைந்த உயிர்களுக்கு நல்ல தீர்வையும் நீங்களே சொல்லுங்களேன்..! //

    சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம். இருப்பினும் எவராவது பயன்பெறுவார்கள் என்று கணித்துக் கூறுகிறேன்:

    எல்லா உயிர்களுக்கும் பிறப்பு இறப்பிலிருந்து மோக்ஷமாகிய திருவீட்டினை அடைய வழி உண்டு. எவரும் நிரந்தரமாக நரகத்திற்குச் செல்வதில்லை. பல பிறவி எடுத்து உயிர்கள் பல விதமாகத் துன்பப்படுவது அந்த ஆன்மா சேர்த்து வைத்துள்ள பாப கர்மத்தின் பலனாகும். மோக்ஷத்திற்கு ஏதுவாகிய ஆன்ம ஞானத்தை இறைவன் தன்னுடைய காரணமற்ற (நிர்ஹேதுக) கிருபையாலே தந்து பாப கர்மாக்களை அழிக்கிறான். அத்தகைய நிர்ஹெதுக கிருபைக்குப் paaththiramaavadhu eppadi enbadhellaam veru vishayam. adhu eppodhu nadakkum enbadhellaam avan kaiyil dhaan uLLadhu. eninum, அது நடக்கும் வரை சம்சாரத்தில் இருக்கும் நாம் கைங்கர்யமாக இறைப்பணியில் ஆழ்ந்து உலகத்து உயிர்கள் அனைத்தும் உய்வு பெற உழைக்க வேண்டும். அவ்வளவு தான்.

  25. @chill sam
    if u begin to write or analyse or comment on anything try to understand it completely or at the extent most possible. I read your articles/writings/scraps in your blog/board completely and with patience. It shows that how you are still scarce in knowledge about other religion. Why are you afraid of quoting your link to your writings @ your blog here even if your comments are not published here wantedly (as you said). You can believe/accept your christianic speeches/devotion/principles blindly or anything as you wish. But how can you write or post things that you are partial / not understood. If anyone asks evidence/proof for your blind/true principles or scrap or comments you suddenly post some wordings which are like Kamalhasan’s words without meaning to 1 % or less than that. “Kuruttu poonai vittathula paanja mathiri”. in many places in your blog/board many things are contradictory and truthless even to your own blog articles just before.
    For ex: you are asking to say “Kirusutva Dalit” like that in “Karuppu Dinam”. Then you are telling that I am not constrained to any caste and am only believing in Christ and his thoughts??? Like that i can find in many places your own statements are much contradict and shows your ignorance or half knowledge about other religions.

  26. திரு chillsam அவர்களே,

    ”“முதல் பாவ”க் கொள்கையை நம்பகத்தன்மையுடன் கிறிஸ்துவத்தால் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாது; அதனை விட்டுவிட்டு, கிறிஸ்துவத்தை நம்பகத்தன்மையுடன் பிரசாரம் செய்யவும் முடியாது.”””

    இந்தக் கட்டுரையில் கூறப்படும் இந்த முதல் பாவக் கொள்கை பற்றி என்ன விளக்கம் கூறுகிறீர்கள்.? உங்களிடமிருந்து விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.உங்கள் தளத்திலும் இக்கட்டுரையைப் பற்றி கூறியிருக்கிறீர்கள்.அதைப் படித்த போது இதற்க்கான தெளிவான விளக்கம் இல்லை..

  27. ss 17 September 2010 at 2:02 pm
    @chill sam
    // If anyone asks evidence/proof for your blind/true principles or scrap or comments you suddenly post some wordings which are like Kamalhasan’s words without meaning to 1 % or less than that. “Kuruttu poonai vittathula paanja mathiri”. in many places in your blog/board many things are contradictory and truthless even to your own blog articles just before.
    For ex: you are asking to say “Kirusutva Dalit” like that in “Karuppu Dinam”. Then you are telling that I am not constrained to any caste and am only believing in Christ and his thoughts??? Like that i can find in many places your own statements are much contradict and shows your ignorance or half knowledge about other religions.

    ஒரு வாசகர் என்ற முறையில் நண்பர் SS சொன்னவற்றை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளுகிறேன்; ஆனாலும் ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ளவேண்டும், நான் எதையும் புதிதாகச் செய்யவில்லை; நான் ஏதோ ஒரு ஆராய்ச்சியையோ புதினத்தையோ படைத்திருந்தால் அதிலிருந்து நீங்கள் விமர்சிக்கலாம்;ஆனால் நானோ குறுக்குக் கேள்விகளையும் குழுப்பும் கேள்விகளையும் திசைதிருப்பும் கேள்விகளையும் கேட்டு காலங்க‌ழித்துக் கொண்டிருக்கிறேன்;

    இந்து மார்க்கத்தையோ அல்லது எந்த ஒரு அந்நிய மார்க்கத்தையோ நான் எதற்கு ஆராயவேண்டும் அல்லது அறிந்துகொள்ளவேண்டும்? அங்கிருந்துதானே நான் இங்கு வந்தேன்;எனக்கு மற்ற மதங்களைப் பற்றிய அறிவிருந்திருந்தால் நான் இங்கே வந்திருக்கமாட்டேனே…?

  28. // (ஹிந்துக்களாகிய மற்றவர்களுக்கு ஒரு சுவாரசியமான விஷயம் — அந்த இரண்டு இறைவர்களில் யார் அயோக்கியர் யார் கருணை உள்ளவன் என்பதெல்லாம் வேறு விஷயம்… “ஒருவர் ஆப்பிள் தின்னத் தூண்டுபவர், இன்னொருவர் இனப் படுகொலை செய்யச் சொல்பவர்” என்று மாத்திரம் கூறிவிட்டு நிறுத்திக்கொள்கிறேன்.) //

    நண்பர் SS அவர்களே இது அடுத்த மதத்தைக் குறித்த முழுமையான் அறிவினாலும் புரிதலாலும் வந்த என்கிறீர்களா..?

  29. சில்லி சாம்

    எங்கே யோசிக்கத் தொடங்கினால் ஹிந்டுவாகிவிடோவோமோ என்ற கவலையை சற்றே புறம் வைத்து சிறிதேனும் சிந்தியும்

    //
    ஒரு இந்து நம்பிக்கையாளனாக உங்களைக் கேட்டால் கருவில் கலையும் சிசுவின் நிலையைக் குறித்து என்ன சொல்லுவீர்கள்?
    //

    ஹிந்துக்கள் மறுபிறப்பை ஒத்துக் கொள்வதாலும் – கர்மா என்ற ஒன்றை ஒத்துக் கொள்வதாலும் வீணாக பாவத்தின் மீது பழியை போடா மாட்டோம் – கருவிலே குழந்தை இயற்கையாக கலைந்தால் – பிரச்சனையை ஆராய்ந்து அடுத்த முறை சரி செய்வோம்
    – மேலும் தோஷம் என்பது தானாக வராது – முன் செய்த வினைபயனையே அந்த வினையின் கருத்தை ஒட்டி தோஷம் என்று அறியப்படுகிறது

    கர்மா என்பது தன தவறுக்கு தானே பொறுப்பேற்பது – அதாம் மீது பழியை போடும் escapism இல்லை – பாவ மன்னிப்பு கோரும் நோஞ்சான் தனமும் இல்லை

    கருவிலே இராக்கும் குழண்டியின் ஆன்மா மீண்டும் பிறக்கிறது – மேன்மெய் பெறுகிறது – விடுதலையை நோக்கி முன்னேறுகிறது – ஹிந்து தர்மத்தில் ஒரு எறும்பும் வாழ்வு சக்கரத்தின் எதோ ஒரு நிலையில் தான் இருக்கிறது – அதுவும் ஒரு நாள் விடுதலை பெரும் – அரபு நாட்டு மத கொள்கை படி – மற்றவை எல்லா மனிதன் கொடூரமாக கொள்வதற்கே, மனிதன் enjoy செய்வதற்கே என்றில்லாமல் – எவ்வுயிரையும் முக்தி பெற தகுதி கொடுக்கிறது ஹிந்து மதம்

    தோஷம் என்பது வேதத்தில் வைக்கப்படும் விஷயம் அல்ல – தோஷம் என்ற ஒன்று இல்லாவிடிலும் ஹிந்து தர்மம் இருக்கும் – முதல் பாவமோ கிறிஸ்தவம் எனும் ஒரு ஓட்டை வீட்டின் முக்கிய சுவர் – விவில்யத்தின் மையம் – ஆன்மீக வேட்டைக் காரனின் பீரங்கி குண்டு, லோக்கல் பிராடுகள் வசிதியாக வாழ ஏற்பட்ட ஒரு நோட்டடிக்கும் மிசின்

    முதல் பாவத்தை தள்ளி விட்டால் ஏசு ஒன்னுமிள்ளதவராகி விடுவார் – அதனால் தான் மொத்த க்ரிஷ்டவ கூட்டமே கிஞ்சித்தும் யோசனை என்ற ஒன்றையே செய்வதில்லை –

    முதல் பாவம் என்ற காட்டு மிராண்டி தனத்திலிருந்து வெளியே வாருங்கள் – எறும்பு ஊற கல்லும் தேயும் – அறிவுடன் யோசிக்க முயற்சி செய்யுங்கள் – வெற்றி நிச்சயம்

  30. சில்சாம்,

    ‘சுவாரசியமான விஷயம்’ என்று கிண்டலாகக் கூறியிருப்பதை நீங்கள் எடுத்து விமர்சிக்கிறீர்கள். நீங்கள் விநாயக சதுர்த்தி பற்றி உங்கள் blog-இல் கூறியதை இங்கே அம்பலப்படுத்தினால் உங்கள் கதி என்ன ஆகும்? இதோ நீங்கள் எழுதியது:

    // விநாயகர் என்றும் கணபதி என்றும் பக்தர்களால் அன்போடு புகழப்படும் முச்சந்தி தெய்வம் தனது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார்

    இதில் நிலைதடுமாறிய குட்டி யானை அதாவது விநாயகரை ஏற்றிவந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

    ஆனாலும் விநாயகர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்;விநாயருக்கு ஏற்கனவே பிராணன் இல்லாததால் பிராணவாயு செலுத்தி உயிர் பிழைக்கச் செய்த முயற்சிகளும் பலிக்கவில்லை;

    அவரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி பூஜை மரியாதை செய்து பிறகு ஊர்வலமாகக் கொண்டுச் சென்று கிரேன் மூலம் உடைத்து கடலில் தூக்கிப் போட்டு கொலை செய்வதே பக்தர்களின் வழக்கம்;ஆனால் இங்கே விநாயகர் சாலை விபத்தில் அகால மரணமடைந்தது பக்தர்கள் கண்களில் நீரை வரவழைத்தது; //

    ஏதோ நேர்மையானவர் போல நீங்கள் நடிப்பது வேடிக்கையாக உள்ளது. இந்து விரோதத்தில் ஊறிப் போயுள்ளவர் நீங்கள் என்று மேற்கண்டதிலிருந்து தெரிகிறது.

    எங்கே உங்களுடைய பழைய ஏற்பாட்டில் கர்த்தர் இனப்படுகொலை செய்யவில்லை, இசுறேளியர்களை இனப்படுகொலை செய்விக்கவில்லை என்று கூறுங்கள் பார்ப்போம்? இதோ… பழைய ஏற்பாடு என்ன கூறுகிறது பாருங்கள்…

    1 Samuel 15:2-3
    Thus saith the LORD of hosts … go and smite Amalek, and utterly destroy all that they have, and spare them not; but slay both man and woman, infant and suckling, ox and sheep, camel and ass.

    கேட்ட கேள்விக்கு பதிலைக் காணம். நீங்கள் எனக்குக் கேட்ட கேள்விக்கு நான் கூறிய சமாதானத்திற்கும் நீங்கள் ஒன்றும் கூறவில்லை. மீண்டும் தெளிவாக ஒரு முறை:

    இறந்து போகும் சிசுக்களுக்கு என்ன கதி?இக்கேள்விக்கு நீங்கள் “சொர்க்கம்” “நரகம்” ஆகிய இரண்டில் ஒன்றைத் தவிர வேறு எதையும் கூற இயலாது. (இயன்றால் கூறவும்.) இந்த இரண்டு பதில்களில் நீங்கள் என்ன கூறினாலும் அது உங்கள் கர்த்தருடைய பாரபட்சமின்மைக்கும் கருணைக்கும் உலை வைக்கிறதே? ஏன் இரண்டில் எந்த பதில் கூறினாலும் உங்கள் கர்த்தருடைய கருணைக்கும் பாரபட்சம் இன்மைக்கும் உலை வைக்கிறது என்று புரிகிறதா? இதற்கு உங்களால் சமாதானமே கூற இயல முடியுமா? இதுவே என்னுடைய சவால்.

  31. காலையில் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் படுக்கைக்குச் சென்றாலும், புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை. இப்போ, எனது கணினியில் மணி அதிகாலை 3.09. சுமார் நள்ளிரவு 12.00 மணியளவில் தமிழ்ஹிந்து தளத்தில் மேற்கண்ட தலைப்பிலான கட்டுரையைப் படித்து மன பாரத்தோடுதான் படுக்கச் சென்றேன். தூக்கம் வராம்ல் அந்தக் கட்டுரை என்னைக் குழப்பிக் கொண்டிருந்தது.

    குழப்பத்திற்கு மத்தியில் பிசாசானவனின் சூழ்ச்சியை நினைத்தும் வியந்து போனேன். விசுவாச வாழ்க்கையில் ஆழமாகக் காலூன்றி பதிந்து நடந்தோலும், எதார்த்தமாக அங்குச் சென்று படிக்கும் போது, நமக்கே கொஞ்சம் தலை சுற்றத்தான் செய்கிறது. இவர்களின் கட்டுரையைப் பற்றி கொஞ்சம் விமர்சனம் எழுத வேண்டும் என்று தேவன் நினைத்தாரோ தெரியவில்லை. அறையிலேயே உள்ள கணினியில் வந்து அமர்ந்து கொண்டேன். கட்டிலும் என்னைப் பரிதாபமாகப் பார்க்கிறது.

    [b]
    [color=#FF0000]குழந்தை உருவாகிறபோதே அதன் மனித இயற்கையால் (அவர்கள் என்ன நல்லது கெட்டது செய்தாலும்) யாஹ்வே தெய்வத்திற்குப் பிடிக்காததாக இருக்கிறது.[/color][/b]

    இது கிறிஸ்தவத்தைப் பற்றிய இந்துக்களின் பார்வையாக இருக்கிறது. அதாவது கருவில் சிதைந்து போகிற குழந்தை ஞானஸ்நானம் பெறாததினால், நரலோகத்திற்குப் போகுமா என்று கேட்கிறார்கள்.

    கிறிஸ்தவர்கள் இதுபோன்ற கேள்விகளைத் திடீரென்று இபோதான் சந்திக்கிறார்கள் என்று ஹிந்துக்கள் நினைக்கக் கூடாது. எனவே, இப்படிப் பட்ட கேள்விகளை அள்ளி எறிந்தால் அவர்களைத் தலைதெறிக்க ஓட வைக்கலாம் என்றும் இந்துக்கள் நம்பலாகாது.

    கிறிஸ்தவத் தத்துவப்படி கருவில் அழிகின்ற குழந்தை எந்தப் பாவமும் செய்யாமல் இருந்தும் அது நரகத்திற்குதான் செல்லும் என்று நீங்கள் கருதுகிறீர்கள். கிறிஸ்தவர்கள் உங்கள் கேள்விக்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் சொல்ல முடியாது என்றும் நினைக்கிறீர்கள். இந்துக்கள் பார்வையில் கிறிஸ்தவக் கோட்பாடு தவறானது என்பதை நிரூபிக்க சுவாமி விவேகானந்தர் உரையைச் சுட்டிக் காட்டுகிறீர்கள்.

    இங்கேதான் சாத்தானின் தந்திரம் நிறேவேறுகிறது. இந்தக் கட்டுரைக்குப் பின்னூட்டம் ஒரு இநது சகோதரர், யாராவது தன்னைப் பார்த்துப் பாவிகளே என்று கூப்பிட்டால், அவரை எப்படித் துறத்தியடிக்கத் தெரியும் என்றும் பதிலளித்திருக்கிறார்.

    ஐயா, நீங்கள் இந்தக் கட்டுரையை அச்சடித்துத் தாராளமாக, உங்களைப் பாவிகளே என்று கூப்பிடும் மஷனரிகளிடம் காட்டி பதில் கேட்கலாம். ஒரு வேளை அதைப் படித்து விட்டு அந்த மிஷனரி பதில் கூறாமல் போய்விடுவார். நீங்களும், உங்களுக்கு வெற்றி கிடைத்து விட்டதாக ஆர்ப்பரிப்பீர்கள். ஏன், எனக்கே கூட கருவில் மரிக்கும் சிசுவைக் கர்த்தர் நரகத்துக்கு அனுப்புவாரா, சொர்க்கத்திற்கு அனுப்புவாரா என்று தெரியாது.

    இங்கேதான் சாத்தானின் தந்திரம் பரிணாமம் அடைகிறது. பாம்பாக வந்த சாத்தான் கூட, ஏவாளிடம் முதல் சந்திப்பில் தேவனின் நிபந்தனையைப் பற்றி கேள்வியாகத்தான் கேட்டான். அந்த சாத்தான் அறிந்திருக்க மாட்டானா? இப்படியொரு நிபந்தனையைத் தேவன் வித்திருக்கிறார் என்று? நிச்சயமாகத் தெரிந்திருக்கும் என்றால், ஏன், ஏவாளிடம் வினா வடிவில் சம்பாஷனையைத் தொடங்க வேண்டும்? வினா வடிவில் கேட்டு, ஏவாளால் பதில் சொல்ல முடியாவில்லால், மனிதனின் தேவ கீழ்ப் படிதலைப் பாதியாவது பாழாக்கிப் போடலாம் என்ற நம்பிக்கை சாத்தானுக்கு இருந்திருக்க வேண்டும். சாத்தானின் நம்பிக்கையும் பலித்தது. பதில் சொல்வதில் தடுமாறிப் போன ஏவாளிடம், நீங்கள் சாவதில்லை. மாறாக தேவனைப் போல் ஞானம் பெறுவீர்கள் என்று வஞ்சகமாக ஆசை வார்த்தை காட்டி விட்டான். அந்த வஞ்சகத்தில் விழுந்த மனித குலம், தலைமுறை தலை முறையாய் பாவத்தில் விழுந்து வருகிறது.

    சாத்தானுக்குத் துணை போகிற இந்த இந்துத் தளம் மீண்டும் இதே காரியத்தில், திரும்பத் திரும்ப குழந்தை பருவத்திலும் கருவுற்ற பருவத்திலும் மரித்துப் போகிற சிசுகளின் நிலை என்ன என்று கேள்வி எழுப்புபிறது. இதைப் படித்தவுடன் எனக்குக் குழப்பம்தோன் ஏற்பட்டது. அதனால்தான் என்னவோ தெரியவில்லை, புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை.

    ஆர்.கோபால் என்பவர் கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைக்குத் தனபால், எஸ்எஸ், கந்தர்வன், ராமா, தூயவன், பாஸ்கர், சாராங், கோயமுத்துர் கவுண்டன், உமாசங்கர், ஜெயசங்கர், கோபால், ஸ்டீபன், போன்றோர் தாங்கள் தெளிவு பெற்று விட்டதாகப் பின்னூட்டம் எழுதியுள்ளனர்,

    உலகைக் காண்பதற்கு முன் உயிர் நீத்து விடுகிற குழந்தைகளின் நிலையைப் பற்றி கிறிஸ்தவர்களிடம் கேள்வி எழுப்பி, கிறிஸ்தவர்களும் ஒழுங்கா பதிலைத் தரமுடியாமல் நம்மை மடக்கப் பார்க்கிறார்கள். சிலிசாம் கூட கிறிஸ்தவர்கள் சார்பில் ஏதோ எழுதியிருக்கிறார்.

    சாத்தான் தந்திரமுள்ளவன் – இதனை நான் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    சாத்தான்தான் இவ்வுலகத்திற்குள் பாவத்தை இறக்குமதி செய்தது.

    அதே சாத்தான் மீண்டும் வந்திருக்கிறான். பாம்பின் வடிவமாக அல்ல, மேலே கூறப்பட்டுள்ள இந்து சகோதரர்கள் ரூபத்தில். அவர்கள் கேள்வி, பிறப்பதற்கு முன் அழிந்து போகின்ற சிசுக்களின் நிலை, கிறிஸ்தவர்களின் பார்வை என்ன? என்பதாகும். இது சாத்தானால் ஏவப்பட்ட கேள்வி. இந்தக் கேள்வியைக் கேட்டவர்களுக்கு,அவர்களின் பின்புலத்தில் சாத்தான் இருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் எல்லாம் ஒரு வேளை, தாங்கள் ஆச்சாரமான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும், தவறாமல் சாமிகுப்பிடுகிறவர்கள் என்றும், கௌரவமான குடும்பம் என்றும் இப்படி என்னென்னவோ சொல்வார்கள்.

    பிறந்த குழந்தை – பிறந்த குழந்தை – பிறந்த குழந்தை

    இதற்குக் கிறிஸ்தவர்கள் பதில் சொல்லமுடியவில்லை என்றால் ஆர்எஸ்எஸ் இந்துக்கள் இந்தக் கேள்வியை மூலாதாரமாக வைத்து மேலும் நமது மிஷனரி நடவடிக்கைகளைக் குறுக்கிறடுவார்கள்.

    ஆனால்,கட்டுரையாளருக்கும் பின்னூட்டம் எழுதியவருக்கும் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.

    உங்களிடத்தில எந்தப் பாவமும் இல்லையா? பிறக்காத குழந்தைகளைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். நீங்கள் இந்த உலகில் வாழ்ந்து உங்கள் மார்க்கப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் கேட்கிறேன். கடுகளவுகூட பாவம் இல்லையா,உங்கள் வாழ்க்கையில். பிறக்காத குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். நீங்கள் பிறந்து விட்டீர்கள். உங்களிடத்தில் எந்தவிதமான பாவமும் காணப்படவில்லையா? ஆம்/இல்லை என்று எதாவது ஒரு பதில் தாருங்கள். பிறந்த குழந்தையைப் பற்றிக் கேள்வி எழுப்ப சாத்தான் தூண்டி விட்டிருக்கிறான். அவனுடைய இலட்சியம், தேவன் இலவசமாகத் தந்த இரட்சிப்பை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான். இந்துமதம்தான் தமிழர்களின் தாய்மதம். அதனால், ஆபிராமிய கொள்கையை நாம் இங்கு இறக்குமதி செய்ய வேண்டாம் என்று அதே சாத்தான் உங்களை ஏவிவிடுவான்.

    உங்களிடம் எழுதிக் கொண்டிருக்கும் நான் ஒரு பாவி என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்த பாவம் ஆதாமின் கீழ்ப்படியாமையினால் வந்தது. ஆனாலும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் எங்களுக்கு இந்தப் பாவத்தில் இருந்து விடுதலையைத் தந்தது என்று விசுவாசிக்கிறோம். அதனால் எங்களுக்கு இரட்சிப்பு உண்டு.

    இதைப் படித்தவுடன், சாத்தான் தயாராக வைத்துள்ள அடுத்த கேள்வியை உங்கள் மூளைக்குத் திணித்து விடுவான்.

    இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம்தான் உங்களை நரக அக்கினியில் இருந்து உங்களைக் காக்கிறது என்றால், கிறிஸ்துவுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் கதி என்னவானாது? – இதுதானே சாத்தான் உங்களைக் கேட்கத் தூண்டுகிறது.?

    ஒரு வேளை கிறிஸ்தவர் தரப்பில் யாரும் பதில் தரமாட்டார்கள். நீங்களும், கிறிஸ்தவர்கள் பதில் சொல்லாமல் ஓடி ஒழிந்து விட்டார்கள் என்று எழுதி பெருமைப் பட்டுக் கொள்வீர்கள்.

    ஆனால், கிறிஸ்தவர்கள் விதைகளை நிலத்தில் தூவிக் கொண்டே போவார்கள். உங்கள் மனம் மாதிரி மணலும் முட்செடியும் நிறைந்த நிலத்தில் விழுகின்ற விதைகள் ஒரு வேளை முளைக்காமல் போகலாம். ஆனால், நிச்சயமாக செழிப்பான கருமண்ணிலும் கிறிஸ்துவின் இரட்சிப்பு விதை விழும். அந்த விதை நன்றாக நிலத்தைப் பற்றிக் கொண்டு ஓங்கி வளரும்.

    இப்போ மணி 4.00 ஆகிவிட்டது. ஏதோ சாத்தானை எதிர்த்து எழுதி விட்டேன் என்ற நம்பிக்கையில் மீண்டும் தூங்கச் செல்கிறேன். முடிந்தால் மற்ற பதிப்பில் சந்திப்போம்.

  32. ஜான்சன்,

    //கிறிஸ்தவத் தத்துவப்படி //

    அப்படின்னா – கிறிஸ்தவத்துக்கு தத்துவமும் உண்டோ – தத்துவம் பற்றி பேசிவிட்டு பதில் முழுக்க சாத்தான் பற்றிய பிதற்றல் – கிறிஸ்தவம் இயேசுவை விட சாத்தனுக்கு தான் அதிகம் கட்டுப்படுகிறது

    கேள்வி பிறந்த சிசுவை பற்றி மட்டுமல்ல – முதல் பாவம் என்பதே இருந்திருக்க முடியாது என்றே –

    நாங்கள் ஒன்னும் தெளிவு பெற்று விட்டதாக எழுதவில்லை – நாங்கள் எதோ கிறிஸ்தவம் உண்மி என்று இதுகாலும் நம்பி – இப்போ டபக்குன்னு மாரிட்டோமக்கும்

    உமது பதிலில் ஒரு வரியாவது அறிவுப் பூர்வமாக இருக்கா – சாத்தான் சாத்தான் என்று ஜபித்துல்லீர்கள் – அரபு நாட்டுகாரநேல்லாம் சாத்தானை தான் அதிகம் ஜபிக்கறான் – அதனால் தான் உலகம் பூர சாத்தான் மாதி அட்டுழியம் பண்றான் – இது தான் உங்கள் தேவனின் விருப்பம் போலும்

    //
    ஆனால்,கட்டுரையாளருக்கும் பின்னூட்டம் எழுதியவருக்கும் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.

    உங்களிடத்தில எந்தப் பாவமும் இல்லையா?
    //

    பாவம் இல்லை – நாங்கள் பாவிகள் இல்லை – நாங்கள் செய்த காரியங்கள் என்று நிறைய உண்டு அதற்க்கு (நாங்கள் செய்த காரியத்திற்கு மட்டும்) எங்களுக்கு பலன் கிடைக்கும் என்ற நினைவு உண்டு

    இப்படி வெட்டி பேச்சு பேசி உங்கள் சூழ்ச்சி சுவிசேஷத்தில் இறங்க வேண்டாம்

    //
    ஆனால், கிறிஸ்தவர்கள் விதைகளை நிலத்தில் தூவிக் கொண்டே போவார்கள். உங்கள் மனம் மாதிரி மணலும்
    //
    நீங்கள் தூவவது எல்லாம் விஷம் மேலை நாடுகளின் கிறிஸ்தவ விதை விழுந்த இடமெல்லாம் என்ன ஆகிவுள்ளது என்பது உள்ளங்கி நெல்லிக்கனி – வெறும் ஆபாசம், வெடிகுண்டு கலாசாரம், தேக முஹம, அடுத்தவனை ஏமாற்றி பிழைக்கும் பிழைப்பு, ஹிட்லர் போன்றோரின் தோற்றம், மன உளைச்சல், வாழ்கையில் என்ன செய்வதென்றே அறியாத ஒரு சீர்கேடு – இது தான் கிறிஸ்தவம் விடைத்த இடத்தில் முளைத்துள்ளது

    நீங்கள் சாத்தானை எதிர்த்து எழுதவில்லை – சாத்தான் உங்கள் உல் புகுந்து எழுதி இருக்கிறான் (மூணு மணி சாத்தான் உலவும் நேரம் தான்)

    நாங்கள் பதில் சொல்லாமல் போகலாம் அதனால் நாங்கள் தோற்றுவிட்டோம் என்று அர்த்தம் இல்லை என்று வரிக்கு வரி எழுதுகிறீர்கள் – இதை எல்லாம் நாங்கள் திராவிட கழக மேடையில் நிறைய கேட்டகி விட்டது – நாங்கள் இதே போல பேச்சை கொழிகளிடமிருந்தும், ஏமாற்று காரர்களிடமிருந்து, வெத்து டப்பைக்களிடமிருந்து நிறைய கேட்டாகி விட்டது

    கொஞ்சாமாவது அந்த சாத்தான் பயல தலயி வைத்து விட்டு சுயமாக சிந்தியுங்கள்

    உங்களுக்கு வேண்டுமென்றால் விவில்யத்தில் உள்ள அத்தனை பைத்திய கார தனங்களையும் தமிழில் மொழி பெயர்த்து ஒரு வெள்ளை அட்டை போட்டுத்தர தயார்

    தயவு செய்து சிந்தியுங்கள் – இப்படி நாடு ராத்திரியில் எழுந்து ezhudhuvathu உடம்பிற்கும், மனத்திற்கும் நல்லது alla

  33. ஜான்சன் அவர்கள் தமது மறுமொழியில் ஒரு பெரிய காமெடி ஷோ நடத்திக் காட்டியுள்ளார்.

    இங்கு நாம் மிஷனரிகளின் தந்திரத்திற்கு எதிராக நடத்தும் non-violent intellectual பிரச்சாரத்தையும் கேள்விகளையும் கண்டு கிறித்தவ இவர் மதிகலங்கி உள்ளார். இதோ-

    // ஏன், எனக்கே கூட கருவில் மரிக்கும் சிசுவைக் கர்த்தர் நரகத்துக்கு அனுப்புவாரா, சொர்க்கத்திற்கு அனுப்புவாரா என்று தெரியாது. //

    கருவில் மரிக்கும் சிசு மாத்திரம் அல்ல, பார்த்தாலே நம்மை மறக்கச் செய்யும் அழகும் மழலையும் உள்ள ஆறு மாதக் கைக்குழந்தை ஞானஸ்நாநம் இல்லாமல் மரித்தாலும் அக்குழந்தைக்கு என்ன கதி என்னும் கேள்விக்கு இவர்களுடைய அபத்தக் கடவுட்கொள்கை பதில் சொல்லத் திணறுகிறது. (ஆனால், இவர்களது மதத்தலைவரான St. Augustine of Hippo மிகத் தெளிவாக, “ஞானஸ்நாநம் செய்யாத குழந்தைகள் கண்டிப்பாக நரகத்திற்குத் தான் போகிறார்கள்” என்று கூறியுள்ளதை இவர்கள் இல்லை செய்துவிட முடியாது.)

    “ஒரு பாவமும் செய்யாத குழந்தை நரகத் தீயில் நிரந்தரமாக விழுவது என்பது சாத்தியமில்லை” என்பதைக் கூட மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ள இவருடைய கடவுட்கொள்கை தடையாக உள்ளது என்பதைப் புகைப்படம் எடுத்துக் காட்டிவிட்டார்.

    இப்படி மதிகலங்கியும், “கிறித்தவக் கடவுள் கோட்பாடு அபத்தமானது, இப்படி ஒரு கர்த்தர் இருப்பது சாத்தியமில்லை” என்று அறிவுப்பூர்வமாக ஒப்புக்கொள்ள இவருடைய மதாபிமானம் தடுக்கிறது. ஆகையால் intellectual-ஆக பதில் எழுதத் தெரியாமல், நம் அனைவரையும் பெயரால் குறிப்பிட்டு ( தனபால், எஸ்எஸ், கந்தர்வன், ராமா, தூயவன், பாஸ்கர், சாராங், கோயமுத்துர் கவுண்டன், உமாசங்கர், ஜெயசங்கர், கோபால், ஸ்டீபன்), நம்மை “சாத்தானால் ஏவப்படுபவர்” என்றும், “தமிழ்ஹிந்து தளம் சாத்தானால் நடத்தப்படுகிறது” என்றும் தூஷித்துள்ளார்.

    இந்துமத விரோதிகளான இவர்கள், தமிழ்ஹிந்துவில் வந்துள்ள இந்தக் கட்டுரைக்குப் பதில் அளிக்க முடியாமல் படுதோல்வியடைந்துள்ளனர் என்று தெரிகிறது.

  34. // இங்கேதான் சாத்தானின் தந்திரம் பரிணாமம் அடைகிறது.//

    //வினா வடிவில் கேட்டு, ஏவாளால் பதில் சொல்ல முடியாவில்லால், மனிதனின் தேவ கீழ்ப் படிதலைப் பாதியாவது பாழாக்கிப் போடலாம் என்ற நம்பிக்கை சாத்தானுக்கு இருந்திருக்க வேண்டும். சாத்தானின் நம்பிக்கையும் பலித்தது. //

    // பதில் சொல்வதில் தடுமாறிப் போன ஏவாளிடம், நீங்கள் சாவதில்லை. மாறாக தேவனைப் போல் ஞானம் பெறுவீர்கள் என்று வஞ்சகமாக ஆசை வார்த்தை காட்டி விட்டான். அந்த வஞ்சகத்தில் விழுந்த மனித குலம், தலைமுறை தலை முறையாய் பாவத்தில் விழுந்து வருகிறது. //

    அம்புலிமாமா கதையை வைத்து பூச்சாண்டி காட்டி இருநூறு கோடி மக்களுடைய சிந்தனைக்கு முற்றுபுள்ளி வைப்பது எப்படி? என்று ஆபிரகாமியர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

  35. வேடிக்கைக்காக, இன்னொரு சுவாரசியமான விஷயம்… ஜான்சன் அவர்களின் மறுமொழியில் பயன்படுத்தப்பட்ட சொற்களின் எண்ணிக்கை:

    கடவுள், இறைவன் – ௦
    இயேசு – 2
    தேவன் – 6
    சாத்தான், பிசாசு – 11

    சர்ப்பமாக வந்த சாத்தான் தான் இவர்களுக்கு முக்கியம். “சர்ப்ப தோஷம்” யாருக்கு உள்ளது என்று நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள். 🙂 🙂

    ஜான்சன், ஒரு சவால்… “சாத்தான், பிசாசு” என்ற சொற்களை உபயோகிக்காமல் நாம் கேட்ட கேள்விக்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா?

  36. முதல் பாவத்தை பற்றி குழப்பத்திற்கு முன் நாம் ஆதி மனித தோற்றம் பற்றியும் என்ன குழப்பியுள்ளார்கள் என்பதை அறியவேண்டும்

    ஆதி மனிதன் உற்பத்தி பற்றி விவிலியத்தின் ஆதியாகமம் இரண்டாம் அதிகாரம்
    ” 7 தேவனாகிய கர்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் மனுஷன் ஜீவாத்துமாவானான். இந்த ஆணே ஆதாம்.

    ” 21 அப்பொது தேவனாகிய கர்த்தா ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார் அவன் நித்திரையடைந்தான் அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தை சதையினால் அடைத்தார்

    “ 22 தேவனாகிய கர்த்தர் தான் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

    இப்படி உருவாக்கப்பட்ட முதல் பெண்தான் ஏவாள் ஆவாள். ஒரு மனிதனின் உடலில் தோன்றி ஒன்றிலிருந்து உருப்பெறும் ஒரு பெண் அந்த மனிதனின் மகள் என்பது சர்வ உலகமும் ஏற்க்கும் உண்மை. எங்கேயோ உதைக்கிறது

    இதை தவிற வேறுவிதமாக ஆதாம் ஏவாள் தோற்றத்தை ஆதியாகமம் 1:27 கூறுவது ” தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார் அவனை தேவசாயாலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். இப்படி தெளிவாக மானிட தோற்றம் பற்றிக்கூறிய விவிலியம் அடுத்த அதிகாரத்தில் இதற்க்கு மாறாக கூறியது ஏன் ? இந்த தோற்றமே கிருஸ்துவர்களால் ஏற்க்கப்பட்டு நடைமுறையில் இருந்துவருகிறது. காரணம் விவிலியம் பலவித (INCEST) இன்செஸ்ட் பற்றி பேசுவதே. மேலும் ஆதாமுக்கு லிலித் என்ற முதல் மனைவி உண்டு என்றும் அவள் ஏவாளால் அப்புறப்படுத்தப்பட்டாள் என்றும் யூதர்களின் தால்முட் (TALMUD) கூறுகிறது.

    விவிலியம் (INCEST)ஐ தூக்கிப்பிடித்து நிறுத்துகிறது. எகிப்து தேசத்தில் அடிமைகளாக்கப்பட்ட எபிரேயர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தவர் மோசஸ். இவர் ழூலமே இறைவன் தந்த 10 கட்டளைகள் வெளியாயின. யாத்திராகமம் 6 20 சான்றவது ”அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம் பண்ணினான். அவளுக்கு ஆரோன் மோசஸ் பிள்ளகளாக பிறந்தார்கள்.

    மேலும் (II) சாமுவேல் 13ஆம் அதிகாரத்தில் 1 முதல் 14 வரை எவ்வாறு அப்சலோம் என்பவன் தன் சொந்த தங்கையான தாமார் மேல் காதல் கொண்டு பலவந்தமாய் அவளோடு சயனித்து கற்பழித்தான் என்பதை விளக்குகிறது

    மேற்கண்ட விவிலிய பகுதியிலிருந்து கிருஸ்துவ மத முன்னோர்களிடையே நிலவிய ஒழுக்ககேட்டை அறியலாம்..

    அபிரகாம் என்பவரை யூதமத ஸ்தாபகராகக்கொள்வர். இயேசுநாதர் ஒரு யூதர் இந்த அபிரகாம் தன் சகோதரியை மணந்துகொண்டவர். ஆதியாகமம் 20:12 அவள் என் சகோதரி என்பது உண்மை ஆனால் அவள் என் தகப்பனுக்கு குமாரத்தி என் தாய்க்கு அல்ல எனக்கு மனைவியானாள்.

    (ஆதாரம் – கிருஸ்துவம் –உள்ளது உள்ளபடி – திராவிட சான்றோர் பேரவை)

    முடிந்தால் மேலும் படித்துவிட்டு தேவையான செய்தியை கூறலாம் ஆனால் தலை சுற்றுகிறது !!!! ஓ ஜிஸஸ்

  37. //
    விநாயகர் என்றும் கணபதி என்றும் பக்தர்களால் அன்போடு புகழப்படும் முச்சந்தி தெய்வம் தனது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார்
    //

    சில்லிசாம்

    இதே நிலை ஒரு மாதா சிலைக்கோ, சிகப்பு துனியால் அலங்காரம் செய்த சிலுவைக்கோ, போப் கையில் இருக்கும் கோடாளிக்கோ, போப்புக்கோ, அல்லது யாருக்கோ நேரலாம் என்பதை நினைவில் கொள்ளவும் – வெறுமே கொக்கரிக்க வேண்டாம் – உங்கள் உள்ளே இருக்கும் சாத்தானை முதலில் வெடி வைத்து கொல்லுங்கள் – கொஞ்சம் இப்படியே போனால் நீங்கள் கீ வீரமணி அவது நிச்சயம்.

    நொண்டி நடப்பான், கிறுக்கனுக்கு கிரேக்கில் வேலை கிடைக்கும், குருடன் பார்பான் என்று புருடா விடும் கூட்டம் உமதே என்பதை நினைவில் கொள்ளவும்

  38. Dear Sarang,
    பாவம் ஜான்சன்.அவரை விட்டு விடுங்கள்.அவர்களால் பகுத்தறிவோடு கூடிய ஒரு விவாதத்திற்கு வர முடியாது.ஏனெனில்,பைபிள் என்பது காலத்திற்கு ஏற்றவாறு புனையப்பட்டது என்று pala கட்டுரைகள் மேலை நாடுகளில் வந்துள்ளன.Arun ஷோரியின் “harvesting our souls”என்ற புத்தகத்தை படித்தால் போதும்;படித்தால் கிறிஸ்தவர்கள் வெட்கித் தலை குனிவார்கள்.இந்தியக் கிறிஸ்த்தவர்கள் யாரும் இதை அறிந்து கொள்ள சர்ச் அனுமதிக்காது.சாத்தான் என்று சொல்லி யே முடித்து விடுவார்கள்.
    வெளிநாடுகளில் இருந்து பணம் வரும் வரை இந்தியாவில் இந்த மதம் பிழைத்திருக்கும்.
    இப்போது ஐரோப்பாவில் அழிய ஆரம்பித்திருக்கிறது.

  39. .
    ஆதாமின் பாவம் காரணமாக மரணமாம்.
    பூமியில் மரணத்திற்கு காரணமான ஆதி பாவம் நீங்கியது என்றால் யாரும் மரணம் அடையக் கூடாது. தண்டனைக்கு உரிய அபராதம் கட்டிவிட்டால் விடுதலை தானே?

    கீழுள்ள வசனங்களில் இயேசு கதைப்படி வானத்திலிருந்து மன்னாவை பற்றி கூறி உள்ளது –

    யோவான் -அதிகாரம் 6

    31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘ அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ‘ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ‘ என்றனர்.32 இயேசு அவர்களிடம், ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ‘ என்றார்

    49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.51 ‘ விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

    மன்னாவை சாப்பிட்டவர்கள் மரணம் அடைந்தனர். ஆதாமின் பாவம் காரணமாக மரணமாம்.

    இயேசு தன்னை சாப்பிட்டவர்கள் மரணமடைவதில்லை என்கிறார். பாவம் இயேசுவின் சீடர்கள், ஏன் மதம் துவக்கி வைத்த பவுல் உட்பட யாரும் உயிரோடு இல்லை.

    இயேசு கதைப்படி உயிர்த்தெழுந்த பின்பு பற்றி கூறி உள்ளதாக
    யோவான் -அதிகாரம் 21
    .20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ‘ ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ‘ என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ‘ ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ‘ என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ‘ என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ‘ என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்

    இயேசுவின் சீடர் உயிரோடு இல்லை.

  40. திரு ஜோன்சன் ,

    //ஒரே ஒரு கேள்வி: கருவாக இருக்கும்போதே இறக்கும் சிசுக்களின் கதி என்ன?

    (1) அவை “ஆதி பாவத்தால்” இறந்து போகும் பச்சைக் குழந்தைகளும், கருவறையிலேயே இறக்கும் சிசுக்களும் நரகத்திற்குப் போகின்றன என்று St. Augustine போன்ற உங்கள் ஆதிகாலத் தலைவர்கள் கூறுகின்றனரே? அவரை ஏற்கிரீர்களோ இல்லையோ, சிசுக்கள் நரகம் செல்வதை ஏற்றுக் கொண்டால் உங்கள் கர்த்தர் கருணையே இல்லாதவன் என்றாகிவிடுமே?

    (2) இறக்கும் சிசுக்கள் சுவர்க்கம் போகின்றன என்றால், சம்சாரத்தில் இருப்பவர்களுக்கு பெரும் அநியாயமாகிவிடுமே? ஏன் சிலரை மாத்திரம் ஈசியாக சொர்க்கம் அனுப்புகிறார்? உம் போன்றவர்க்கு அந்த ஈசியான வழியை ஏன் கொடுக்கவில்லை? கர்த்தர் பாரபட்சம் பார்ப்பாரோ? அது இருக்கட்டும், இறக்கும் சிசுக்கள் சொர்க்கம் தான் போகின்றன என்றால் நீங்கள் கருகலைப்பையும் சிசுவதையையும் ஏன் எதிர்க்கிறீர்கள்? அவர்களை சிசுவாக இருக்கும்போதே அழிந்து நிச்சயமாக சுவர்க்கம் போவதைத் தடுக்கிரீர்களே? என்ன கருணையின்மை உமக்கு?//

    இந்த கேள்விக்கு பதிலே இல்லையே .(வசீகராவில் வடிவேலு விஜய்யிடம் தமிழே வரலேயே என்று கேட்பதுபோல் படிக்கவும்)

    //அதே சாத்தான் மீண்டும் வந்திருக்கிறான். பாம்பின் வடிவமாக அல்ல, மேலே கூறப்பட்டுள்ள இந்து சகோதரர்கள் ரூபத்தில்.//

    ஓகோ விவரமாக கேள்வி கேட்பவர்தான் சத்தனா ?

  41. வணக்கம் சகோதர்களே

    ///ஜான்சன், ஒரு சவால்… “சாத்தான், பிசாசு” என்ற சொற்களை உபயோகிக்காமல் நாம் கேட்ட கேள்விக்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா?///— இது சகோதரர் கந்தர்வனின் கேள்வி .

    நன்றாக கேட்டீர்கள் சகோதரா நம் சனாதன தர்மம் நம்மை இறைவனை பற்றியே சிந்தித்து அவனை அடையவே சொல்கிறது , நமக்கு சாத்தானை பற்றி நினைக்க கூட நேரம் இருப்பது இல்லை. ஏனெனில் சதா இறை நினைவே நம்மை உய்விக்கும் என்று சனாதன தர்மம் போதிக்கிறது. ஆனால் அவர்களோ இருட்டைக் கண்ட குழந்தை போல் சாத்தானைக் கண்டு பயந்தே கடவுளை பிடித்துக் கொண்டு கண்ணையும் மூடிக் கொண்டு உள்ளனர்.

    இன்னொன்று அரை வைத்தியன் கதை தெரியுமா? நோய்க்கு மருந்தறியாத மருத்துவன் நோயாளிக்கு மருந்து கொடுத்து விட்டு மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைத்தால் மருந்து வேலை செய்யாது என்பானாம். மருந்து ஒருவேள வேலை செய்தால் எல்லாம் என் அறிவுதான் என்று பீற்றிக்கொள்ளலாம், இல்லை என்றால் குரங்கை ஏன் நினைத்தாய் என்று தப்பித்துக் கொள்ளாலாம். அதுபோல்தான் இவர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும், புத்தி சாலித்தனமாக கேள்வி கேட்டாலோ இருக்கவே இருக்கிறான் சாத்தான் . அவன்தான் அவர்களை கேள்வி கேட்க வைத்துள்ளான் என்று சொல்லி விடுவார்கள். இதுவும் ஒரு வியாபார தந்திரம் அல்லவா?

  42. பைபிள் sellak காசு என்று தெரிந்துதான் அவர்கள் இப்போது இந்துக்களின் உபநிஷத் மற்றும் வேதங்களில் இருந்து பலவற்றை இந்திய பைபிள் என்று வெளியிட்டுள்ளார்கள்.
    பல அபத்தங்கள் பைபிளில் உள்ளன.சில பின்வருமாறு.
    1 .தகப்பனை கற்பழித்த புத்திரிகள்
    2 .அடங்காத காமவேசிகள்.
    3 .சகோதரியை கற்பழித்து ஒதுக்கியவன்.
    அதனால்தான் பெர்னார்ட் ஷா பைபிளை பெட்டியில் போட்டு பூட்டி வைக்கவேண்டும் என்றார்.

  43. கிருஸ்துவத்தின் சுய ரூபம்

    Massive Protest in London against “Boss of world’s largest sex abuse gang”
    19/09/2010 00:23:30 With Media Inputs

    LONDON: London witnessed one of the biggest protests over years against Pope’s handling of Sexual abuse by Roman Catholic priests. Some 10,000 chanting demonstrators snaked though the streets of London to protest against his handling of the abuse crisis and his views on homosexuals and the ordination of women.

    “An apology is what a schoolboy does when he kicks a football through a window. What we need is for the pope to release all the files on predator priests,” Sue Cox, a demonstrator who was abused as a child, said on television. Sue Cox was molested by a priest on the day before her Catholic confirmation at the age of 10 and, three years later, raped by the same cleric, told the marchers of her anger over the Pope’s visit. “The only thing I experienced from the Catholic church are pain, anger, disgust, lies and shame.”

    Protesters unfurled banners with statements including:” Pope’s opposition to condoms kills people”, “Keep the Pope out of women’s’ reproductive rights” and “F*CK the Pope … But wear a condom”. Others simply called the Pope a “bigot” or a “homophobe”, while others balloons made up of blown up condoms, while some protesters dis layed their anger at the Pontiff’s apparent role in covering up the child abuse scandal within the church. They carried banners reading “Benedict’s homophobia costs lives” and “Protect the Children – Demote the Pope.” One man held a placard with a picture of the Pope above the heading: “Boss of world’s largest sex abuse gang

  44. johnson

    “A fool’s voice is known by multitude of words.” – Ecclesiastes 5.3

    this is not a statement, but a prediction done keeping in you and those who fill the page with garbage in Mind

  45. யேசுவைவிட அதிகம் நேசிக்கும் சாத்தானின் நண்பர்களை எங்கே காணோம்? எனக்கென்னமோ அவர்களுக்கு அவர்களே சாத்தான் என்றுதான் தோன்றுகிறது. என்றைக்கு கிறிஸ்தவத்தை தலை முழுகிவிட்டு மீண்டும் தாய் மதம் திரும்புகிறார்களோ அன்றைக்கே அவர்களுக்கு விடிவு. இல்லையெனில் ஸ்டீபன் ராஜ் குடும்பத்து அங்கத்தினர்போல கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டு எனச் சொல்லிக்கொண்டிருக்கலாம். இல்லையெனில் இந்துமத வெறுப்பாளர் சில்சாம் போல சாலைவிபத்தில் நடந்ததை வைத்து இந்துமதத்தை கிண்டல் செய்து தனது இயலாமையை தீர்த்துக்கொள்ளலாம். தேவனே என்னை ஏன் கைவிட்டீர் என அலறியபோதே கிறிஸ்து யாரெனத் தெரிந்துவிட்டது

  46. ஜான்சன்

    இதற்கு பதில் சொல்லுங்கள்

    முதல் பாவம் அடம் செய்த தவறால் மானுடத்தையே பாவிகலாக்கியது – பேச்சுக்கு உண்மை என்று வைத்துக் கொள்ளுவோம்

    நீங்களே சொல்கிறீர்கள் – அதாம் முதல் பாவம் ஏற்படும் முன் வலி, இறப்பு ஏதுமின்றி இருந்தார் என்று

    முதல் பாவம் ஏற்பட்ட பிறகு வலி வந்தது, பசி வந்தது, மரணம் வந்தது

    – இத்தையும் பேச்சுக்கு உண்மை என்று வைத்துக் கொள்ளுவோம்

    அப்புறம் நீங்கள் சொல்கிறீர்கள் – இயேசுவின் அருளால், இயேசுவை ஏற்றுக் கொள்வதன் மூலாம் முதல் பாவம் ஒழிகிறது என்று
    – இத்தையும் பேச்சுக்கு உண்மை என்று வைத்துக் கொள்ளுவோம்

    இதிலிருந்து என்ன திண்ணம் – இயேசுவை ஏற்றுக் கொண்டவர் அனைவருக்கும் வலி இருக்காது, பசி இருக்காது, மரணம் இருக்காது

    அப்போ ஜான், மத்தேயு, போப்பாண்டவர் எல்லோரும் ஏன் மறித்தனர் – தினகரன் ஏன் சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி சென்றார் (வலி இருந்திருக்குமே) – உங்களுக்கு அடி பட்டால் வலிக்கலையா

    போப்பாண்டவருகே எதற்கு பிரத்யேக டாக்டர் இருக்கிறார்

    கிறிஸ்தவர்கள் ஏன் மரிக்கிறார்கள்

    பூகம்பம் வந்தால் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் போலவே கிறிஸ்தவர்களும் ஏன் அவதிப் படுகிர்ரார்கள், வழியால் துடிக்கிறார்கள், இறக்கிறார்கள்

    இந்த கேள்வியை சாத்தான் கேட்பதாக எண்ணாமல் – நீங்களே உங்களுக்கு கேட்டுப் பாருங்கள் – நீங்களே உங்களை சாத்தான் என்று கூறிக் கோலா முடியாது – அதனால் நீங்களே இந்த கேள்வியை கேட்டால் அது சாத்தான் கேட்ட கேள்வி ஆகாது – எப்படி பிரச்சனையை தீர்ந்தது பார்த்தீர்களா

  47. வணக்கம்.
    சாராங்கின் விளக்கத்திற்குப் பதில் எழுதி பதிப்பதற்குள் இங்கு பல கேள்விக் கணைகள் என்னைத் தாக்கி விட்டன. உண்மையிலேயே இப்போ எனக்குத் தலை சுற்றுகிறது. ஏன் தான் உங்கள் கோட்டைக்குள் பாய்ந்தேனோ என்றும் சிந்திக்கிறேன். எனவே, இப்போ, சாராங் உடைய உரைக்கு மட்டும் பதில் எழுதுகிறேன். அடுத்தப் பதிவுகளை வாசித்து, அவற்றைக் குறித்து தியானித்துப் பதில் எழுதுவதற்குள் மூட்டை கணக்கில் கேள்விக் கணைகள் தாக்கி விடுமோ என்றும் அச்சமாக இருக்கிறது. சரி, வந்தாகி விட்டது. எதிர்நோக்கி தானே ஆக வேண்டும். இப்போதைக்கு இந்தப் பதிலைத் தருகிறேன். மற்றவற்றைப் பிறகு பார்ப்போம்.

    இந்த சாராங்கின் எழுத்தில் பண்பும் வெளிப்படவில்லை, இலக்கணத் தூய்மையும் காணப்படவில்லை. இதுதான் இவர்கள் தங்கள் தாய்மதத்தைத் தற்காக்கும் அணுகுமுறை போலும். அது இருக்கட்டும். தமிழகத்திற்கு ஹிந்துதான் தாய்மதம் என்றால், தாய் மொழி என்ற அடிப்படையில், பெருமைப்படும் அளவில் தரமான தமிழில் எழுதுவார்கள் என்ற நம்பிக்கையும் போய்விட்டது. எழுத்துப் பிழையும், கொச்சைத் தனமும் கடல் தாண்டி வாழும் எனக்குக் குமட்டலைத் தான் ஏற்படுகிறது. சமயத்தையும் காக்கத் தெரியவில்லை. மொழியையும் காக்கத் தெரியவில்லை.

    கிறிஸ்தவம் இயேசுவை விட சாத்தனுக்கு தான் அதிகம் கட்டுப்படுகிறது.

    மன்னிக்கவும். கிறிஸ்தவர்கள் எப்போது இயேசுவுக்குக் கட்டுப்படுவதைத்தான் தங்கள் வாழ்க்கையின் சவாலாகக் கொள்வார்கள். அதே வேளையில் சாத்தானின் நயவஞ்ச வேலைகளைக் குறித்து மிகவும் கவனமாக இருப்பார்கள். தேவனுக்குக் கட்டுப்படுவதில் அலட்சியமாக இருந்து விட்டால், சாத்தனின் வலையில் விழுந்து பாவத்தைச் சம்பாதித்துக் கொள்வார்கள்.

    அதே நேரத்தில் உங்களைப் போன்று இயேசுவை விசுவாசிக்கத் தெரியாதவர்களுக்கு, சாத்தானின் நயவஞ்சக வாசல் எப்போதும் அடைபடாத திறந்த வெளிதான். இந்த அறியாமை உங்கள் எழுதில் பிரதிபலிக்கிறது. •பாவம் இல்லை• என்றும் •நாங்கள் பாவிகள் இல்லை• என்றும் எழுதி, அந்தப் பிசாசானவனின் ஐடியாவை இலவசமாகப் பெற்று விட்டீர்கள். நீங்கள் பாவத்தின் தன்மையும் அறிந்திருக்கவில்லை. அது எப்படி மனித உள்ளத்தில் கிரியை செய்கிறது என்பதையும் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.

    வெறும் ஆபாசம், வெடிகுண்டு கலாசாரம், தேக முஹம, அடுத்தவனை ஏமாற்றி பிழைக்கும் பிழைப்பு, ஹிட்லர் போன்றோரின் தோற்றம், மன உளைச்சல், வாழ்கையில் என்ன செய்வதென்றே அறியாத ஒரு சீர்கேடு

    இதுதான் நீங்கள் பாவத் தன்மையைப் பற்றி புரிந்து கொண்ட லட்சணம். மேல் நாடுகள் யாவும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டாலும் பாவத்தில் மூழ்கி தவிக்கின்றன என்று சொல்ல முற்பட்டு சிக்கிக் கொள்கிறீர்கள், சாராங். தாய் மதம் வாழும் தமிழகத்தில் ஆபாசம் வெளிப்படவில்லையாம். (அதுதான் தமிழ் சினிமா மேற்கத்திய கலாச்சாரத்தை மிஞ்சி விட்டதே. தாய் மதப் பற்றாளர்கள் இவற்றையெல்லாம் ரசிக்காமலேயா இந்த சினிமா இயக்குநர்கள் இவற்றிக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறார்கள்?)

    வெடி குண்டு கலாச்சாரம்? முதலில் அவர்களைச் குற்றஞ் சுமத்துவதற்கு முன் உங்கள் முதுகையே திரும்பிப் பாருங்கள், ஐயா. உங்கள் தாய்மதப் பற்றாளர்கள் வெடி குண்டி கலாச்சாரத்தைப் பின்பற்றவில்லையா? பாபூர் மசூதி சர்ச்சையில் நீங்கள் ஒருவரை ஒருவர் வெட்டி ரத்தம் சிந்திக் கொள்ளவில்லையா? இலங்கையில், தங்கள் தாய்நாட்டு விடுதலைக்காகப் போராடுகிறோம் என்று சொல்லி எத்தனை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்? அடுத்தவரைக் குற்றப்படுத்துவதற்கு முன் உங்களை முதலில் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து, மேல் நாட்டில் ஒரு வெடி குண்டு வெடித்தாலும், யாராவது கிறிஸ்துவின் நாமத்திற்காக அதைச் செய்ததாக கூறிக் கொள்கிறார்களா? – சொல்லுங்கள். எது எப்படி இருந்தாலும் எந்த விதமான வன்முறையையும் நான் நியாயப்படுத்த மாட்டேன். ஏனென்றால், கிறிஸ்தவ போதனை அப்படிப்பட்டதல்ல. அப்படியே ஒரு கிறிஸ்தவன் செய்து விட்டாலும் அந்தப் பாவத்திற்கு அவனே பொறுப்பாளி. தேச சட்டத்திற்கு மட்டும் அல்ல தேவனின் சட்டத்திற்கும் அவன் கட்டுப்பட்டவன்.

    தேக முஹம, – இது எனக்குப் புரியவில்லை. நீங்கள் பகல் நேரத்தில் தானே எழுதினீர்கள். தாய்மதப் பற்றாளர்கள் மது போதையில் எதையும் எழுதவில்லை என்று நம்புகிறேன். நான்தான் என்வோ, மனநோயாளி மாதிரி நள்ளிரவில் உறங்காமல் எதையோ கிறுக்கி விட்டேன் என்றால், உங்களுக்கு என்ன வந்தது? உங்கள் உடல்-மன நிலை எதுவும் பாதிக்கப்பட்டு விட்டதா என்று சோதித்துப பார்த்துக் கொள்ளுங்கள்.

    அடுத்தவனை ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பு – ஆஹா, தாய் மதப் பற்றாளர்கள் என்னவோ கன்னியமான பிழைப்பு நடத்துகிறார்களாம். அடுத்தவர்களைக் குறை சொல்ல வந்துவிட்டார்கள். உங்கள் சன் டீவி செய்திகளைப் பார்த்தாலே தெரிகிறதே, தாய்மதப் பற்றாளர்களின் கன்னியத்தின் இலட்சணம். மீண்டும் சொல்கிறேன், நீங்கள் சொல்வது போல் ஒரு கிறிஸ்தவன் அடுத்தவனை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தினால், அவன் தேசத்தின் சட்டத்திற்கு முன்பு மட்டும் அல்ல, தேவ ராஜ்யத்தின் சட்டத்திற்கும் அவன் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறான்.

    ஹிட்லர் போன்றோரின் தோற்றம் – அது உங்கள் அடுத்தக் குற்றச் சாட்டு, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஹிட்லரை கொடுங்கோல் ஆட்சி மன்னன் என்று குறிப்பிடுவார்கள். அப்படி எந்தக் கிறிஸ்தவன் இப்படிக் கொடுங்கோல் நடத்தி விட்டான் என்று நீங்கள்தான் விளக்க வேண்டும். அப்படியே மனிதனுக்கும் தேவனுக்கும் விரோதமாக யாராவது நடந்து விட்டால், அதற்கு அவனே பொறுப்பாளி.

    மன அழுத்தம், வாழ்க்கையில் என்ன செய்வதென்றே தெரியாத ஒரு சீர்கேடு – ஆமாம். கிறிஸ்துவைத் தங்கள் வாழ்வின் மையமாக வைக்காதவர்களுக்கு இது எல்லாம் ஏற்படும். தாய்மதப் பற்றாளர்கள் இதுபோன்ற பிரச்சனையில் இருந்து 100 விழுக்காடு விடுதலை பெற்றவர்கள் என்றால் சொல்லுங்கள். ஒரு வேளை ………………..

    நீங்கள் தூவுவதெல்லாம் விஷம்
    ஆமாம், அப்படிதான் இருக்கும் – கெட்டுப் போகிறவர்களுக்கு சிலுவையைக் குறித்த உபதேசம் பைத்தியமாய் இருக்கும் என்று பவுல் சொல்லியிருக்கிறார்.

    கேள்வி பிறந்த சிசுவை பற்றி மட்டுமல்ல – முதல் பாவம் என்பதே இருந்திருக்க முடியாது என்றே

    இங்கே தான் உங்களுக்குப் பாவத்தின் தன்மையைப் பற்றிய புரியாமை வெளிப்படுகிறது. தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போவதே பாவம். இந்தக் கீழ்படியாமையை மீறுதல் என்றும் அறியலாம். உங்களைப் போன்று உண்மையான தேவனை அறியாதர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு-ஏமாற்று………. இவற்றை மட்டும்தான் பாவம் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள். எனவே, தாங்கள் அறியாமலேயே படைப்பாளியாகிய தேவனுக்குப் பிரியமில்லாத பாவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இதற்கு ஆதாரமாக நீங்கள் பாவம் இல்லாத மனிதராக வேறு உங்களைக் காட்டிக் கொள்கிறீர்கள். உங்களுக்காக நான் பறிதாபப் படுகிறேன். இப்படிப் பட்டவர்களை இயேசு பொய்யன் என்று கூறியிருக்கிறார். மீண்டும் ஒரு முறை கேட்கிறேன். உண்மையிலேயே பிறந்தது முதல் இன்று வரை நீங்கள் எந்தவிதமான பாவத்திலும் ஈடுபடவில்லையா? இது ஒரு முக்கியமான கேள்வி. உங்களுடைய பதிலில் ஒரு வேளை உங்கள் ஆத்துமா இரட்சிக்கப்படும் சாத்தியம் இருக்கும். இந்த ஆத்துமா விவகாரம் எல்லாம் கிறிஸ்தவர்களின் பிதற்றல் என்று சொல்லி தப்பித்துக் கொண்டால் நான் விட்டு விடுகிறேன். ஏனென்றால் விதைகளைத் தூவுவதுதான் எங்கள் வேலை.

    பாவத்தின் தன்மையை உணர்ந்திருப்பதால் நான் சொல்கிறேன். நான் ஒரு பாவி. இதில் நான் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. தன் பாவத்தை மூடிமறைக்கிறவன் ஒருபோதும் வாழ்வடையமாட்டான் என்று வேதம் சொல்கிறது. நீங்கள்தான் உங்கள் தாய்மத வேதத்தை விட்டு மற்றவற்றை எட்டிப் பார்க்க மாட்டீர்களே. எனவே, இந்த எச்சரிக்கையைக் குறித்து நீங்கள் ஒன்றும் அஞ்ச மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.

    உமது பதிலில் ஒரு வரியாவது அறிவுப் பூர்வமாக இருக்கா – சாத்தான் சாத்தான் என்று ஜபித்துல்லீர்கள் – அரபு நாட்டுகாரநேல்லாம் சாத்தானை தான் அதிகம் ஜபிக்கறான் – அதனால் தான் உலகம் பூர சாத்தான் மாதி அட்டுழியம் பண்றான் – இது தான் உங்கள் தேவனின் விருப்பம் போலும்

    உங்களை என்னவென்று சொல்வது? மனித மூளை அவ்வளவு அபாரமானது என்று சொல்லவருகிறீர்களா? Logic-ஐப் பற்றி பேசி சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையைச் சிறுமைப் படுத்த நினைக்கிறீர்களே? டைடானிக் கப்பலை வடிவமைத்த இன்சினியர் சொன்னாராம், கடவுள் கூட இந்தக் கப்பலை மூழ்க்கடிக்க முடியாதாம். – எத்துணை ஆணவம் மனிதனுக்கு. தனது மாமிச மூளையின் வல்லமையை பெருமையடித்துக் கொண்ட மனிதன், தன் கப்பல் மூழ்கி விட்டது என்பதை அறிந்து இன்று எங்கே பொய் தன் தலையைப் புதைத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை. அதுபோல்தான் தாய்மதப் பற்றாளர்கள் தேவ வல்லமையைத் தங்கள் சிறுமதியின் இருட்டறையில் பூட்டிவிட்டு லாஜிக் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். கேளுங்கள்.
    சாத்தான், சாத்தான் என்று நாங்கள் ஜெபிக்கிறோமாம். ஐயா, உங்களுக்கு ஜெபம் என்றால் என்ன என்று தெரியுமா? அரபுக் காரர்களைப் பழி சொல்கிறீர்களே, முதலில் உங்கள் வார்த்தையில் கவனம் செலுத்துங்கள். அதே அரபுக் காரர்கள் இதைப் படித்துப் பார்த்து, உங்கள் தாய்மதப் பற்றாளர்களின் அட்டூழியங்களைப் பட்டியலிட்டுக் காட்டினால், அதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? இதில் வேறு இதுதான் எங்கள் தேவனின் விருப்பம் என்று கிண்டலடித்து உள்ளீர்கள்.

    உங்களுக்கு வேண்டுமென்றால் விவில்யத்தில் உள்ள அத்தனை பைத்திய கார தனங்களையும் தமிழில் மொழி பெயர்த்து ஒரு வெள்ளை அட்டை போட்டுத்தர தயார்

    ஆஹா, தாராளமா அந்த வேலையைச் செய்யுங்கள். சுறுசுறுப்பாக செய்யுங்கள். ஓய்வு உறக்கம் இல்லாமல் செய்யுங்கள். என்னமோ, உங்களுக்குப் பைத்தியமாகத் தோன்றும் காரியமெல்லாம் இன்னும் எங்கள் கண்களுக்குப் புலப்படாதது மாதிரி எழுதுகிறீர்கள். இந்த வேலையைத் தான் இஸ்லாமியர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். வேண்டுமென்றால், அவர்களோடு, ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கூட்டாக செய்யுங்கள். உங்கள் லாஜிக்கும் இஸ்லாமியர்களின் லாஜிக்கும் ஒன்றுதான். ஆனால், அந்த லாஜிக் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாய் இருக்கும் என்றுதான் பவுல் சொல்லிவிட்டாரே. உங்களுக்கு நாங்கள் பைத்தியக் காரத் தனமாக எழுதிக் கொண்டிருப்பது போல் தெரிந்தால், அதற்காக நாங்கள் கவலைப் படவும் மாட்டோம்.

    தயவு செய்து சிந்தியுங்கள் – இப்படி நாடு ராத்திரியில் எழுந்து ezhudhuvathu உடம்பிற்கும், மனத்திற்கும் நல்லது alla
    உங்கள் ஆலோசனைக்கு நன்றி. இங்கு உங்களுடைய நல்ல மனம் வெளிப்படுகிறது. இப்படியே எழுதினால் ஆரோக்கியமான விவாதம் நடக்கும் என்று நம்புகிறேன். ஆனால், இந்த அழிந்து போகிற உலகின் ஆதாயங்கள் எல்லாம் எனக்குக் குப்பையும் தூசியுமாய் இருக்கிறது.
    விடை பெறுகிறேன்.

  48. திரு ஜான்சன் அவர்களே,

    ///காலையில் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் படுக்கைக்குச் சென்றாலும், புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை. இப்போ, எனது கணினியில் மணி அதிகாலை 3.09. சுமார் நள்ளிரவு 12.00 மணியளவில் தமிழ்ஹிந்து தளத்தில் மேற்கண்ட தலைப்பிலான கட்டுரையைப் படித்து மன பாரத்தோடுதான் படுக்கச் சென்றேன். தூக்கம் வராம்ல் அந்தக் கட்டுரை என்னைக் குழப்பிக் கொண்டிருந்தது.

    உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது நண்பரே,உங்களுக்கு மன பாரம் ஏற்படுவதும்,அதனால் தூக்கம் வராமல் குழம்புவதும் எனக்கு வருத்தமாக உள்ளது.நானும் கிருஸ்த்தவ மதப் பிரச்சாரர்களால் இந்நிலைக்கு ஆளாகியிருக்கிறேன்.அப்பொழுது இந்துமதத்தைப் பற்றியும்,கிருஸ்தவ மதத்தைப் பற்றியும் எனக்கு அவ்வளவாகத் தெரியாது.ஆனால் இப்பொழுது எனக்கு இரண்டு மதத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்.என் இந்து மதத்தை மதத்தை விமர்சனம் செய்யும் தகுதி எந்த மதத்திற்கும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டேன்.

    நண்பர் திரு ஜான்சன் அவர்களே.உங்கள் மனம் வருத்தப் பட்டுக் குழம்பியதைப் போலத்தானே,எத்தனையோ மக்கள் உங்களால்( கிறிஸ்தவர்களால்) மனம் வருத்தப் பட்டுக் குழம்பியிருப்பார்கள்.நீங்களாவது ,நீங்களாகவே தமிழ் இந்து தளத்திற்கு வந்து ,படித்து மன பாரத்திற்கு உள்ளானீர்கள்.ஆனால் பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கே வந்து ஒலிபெருக்கியின் மூலம் கிருஸ்தவ பிரச்சாரர்கள் பிரச்சாரம் செய்து எங்களை மன வருத்தத்திற்கு ஆளாக்கினார்கள்,கிறிஸ்தவர்களால் அழிந்த நாகரீகங்கள்,கலாச்சாரங்கள்,கலைகள்,மொழிகள்,கடவுள்கள் எத்தனையோ எத்தனையோ …மாயா,இன்கா நாகரீகங்களின் பேர் சொல்லக் கூட இப்பொழுது யாரும் இல்லை.இத்தனைக்கும் இந்த மாயா நாகரீகத்தினர் கிருச்தவர்களைவிட அறிவாற்றல் மிக்கவர்களாகவும்,வான சாஸ்திரத்தில் மிகச் சிறந்த அறிவையும் பெற்றிருந்திருக்கிறார்கள்.ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு பழமொழி உண்டு .முதலில் எங்களிடம் நிலமும் கிருஸ்தவர்க்களிடம் பைபிளும் இருந்தன.ஆனால் இப்பொழுது எங்களிடம் பைபிளும் கிருஸ்தவர்க்களிடம் நிலமும் உள்ளன.எல்லாம் மதத்தைக் காட்டி கொள்ளை அடிக்கப்பட்டது.

    அடுத்தவரின் கடவுள், மதம்,கலாச்சாரம், போன்றவற்றை இகழ்ந்து, தூற்றி, அழிக்கும் செயலை ஆரம்பித்து வைத்தவர்கள் உலகில் முதன் முதலில் கிறிஸ்தவர்களே என்பதையும், கிறிஸ்தவர்களால் உங்களைப் போல் மனம் வருந்தியவர்கள் உலகில் எத்தனையோ கோடிப்பேர் இருக்கிறார்கள் என்பதையும், நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

    மற்றபடி நீங்கள் கூறும் சாத்தான் தூண்டுதலால் கேள்விகேட்கிறோம் என்று கூறுவதெல்லாம் நீங்கள் பைபிள் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கையாலே ஏற்படுகிறது.உங்கள் நம்பிக்கையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.எங்கள் மேல் திணிக்காதீர்கள்.அப்படி திணித்ததன் விளைவு தான் இப்படி பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.சாத்தான் பாவம் செய்தத் தூண்டுகிறது என்றால் அந்த சாத்தானை இறைவன் ஏன் படைத்தார்??? சாத்தானின் படைப்பு பற்றி பைபிளில் சொல்லப்படவில்லையே??? அப்படி என்றால் கர்த்தரைப் போலவே சாத்தானும் சக்தி படைத்தவரா.???இந்தக் கேள்விக்கும் சாத்தான் தான் காரணம் என்று கூறுவீர்கள்.எதற்கு வீண் வாதம்.நீங்களாவது உங்கள் மதம் உங்கள் கடவுள் போன்றவற்றை மற்றவர்கள் மீது. திணிக்க வேண்டாம்.

    கடைசியாக உங்களுக்கு கிருஸ்தவ மதத்தின் மீது தீவிர நம்பிக்கை இருப்பதாலும்,கிருஸ்தவ மதத்தைப் பற்றிய விமர்சனத்தை உங்களால் தாங்க முடியாததாலும் நீங்கள் இது போன்ற இந்து ,பகுத்தறிவு,கிருஸ்த்துவ மத விமர்சனங்கள் அடங்கியத் தளங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றுக் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் கடவுள்,மதம் மீது நம்பிக்கையோடு இருங்கள்.எங்கள்,கடவுள்,எங்கள் மதம் மீதான எங்கள் நம்பிக்கையைக் குலைக்காதீர்கள்.அதாவது மதம் மாற்றாதீர்கள்.நன்றி ஜான்சன்.

  49. ஜான்சன்,

    எந்த ஒரு நியாயமான கேள்விக்கும் தர்க்க ரீதியான பதில் கூறமுடியவில்லை என்றால், அந்த மதம்/இறையியல் அறிவாளிகளால் குப்பைத் தொட்டியில் புறக்கணிக்கத் தக்கது. நான் கேட்ட சிசுக்கள் பற்றிய கேள்வி நியாயமான ஒன்று. இக்கேள்விக்கு உங்களில் பல இறையியலாளர்கள் பதில் கூற முயன்று அம்முயற்சியில் தோல்வியடைந்து திகைத்துப் போயுள்ளனர்; அல்லது அபத்தமான, முன்னுக்குப் பின் முரணான விளக்கம் தந்துள்ளனர். இக்கேள்விக்கு “சொர்க்கம்” என்று கூறினாலும், “நரகம்” என்று கூறினாலும் இந்த சிக்கல் தான்.

    நீங்களோ, இதற்கு சமாதானம் கூறுவதிலிருந்து தப்பிக்கப் பல வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர். இப்பொழுது (சாரங் அவர்கள் விஷயத்தில்) வியக்தி தூஷணத்தில் இறங்கிவிட்டீர். இதிலிருந்து நீங்களும், உமது “ஆதி பாவக்” கொள்கையும், “இயேசு நம் பாவங்களுக்காக மரித்தார்” என்ற கொள்கையும் தோல்வியடைந்து விட்டது என்று தெளிவாகிறது. ஆகையால், உங்கள் மதம் கல்வியறிவில்லாத மக்களிடமும் முட்டால்களிடமும் தான் செல்லும். அறிவாளிகளிடம் செல்லாது.

  50. திரு ஜான்சன் அவர்களே,
    உங்க ஏசப்பா சாத்தான் கூட மல்லு கட்டிகொண்டே இருக்கிறார். இப்போ கூட இந்த தளத்திலே உங்கள் மூலமாக வாதாடி வருகிறார். நீங்களும், மற்ற எல்லா விசுவாசிகளும், சாத்தனை எதிர்த்து போராடியே உங்கள் காலம் கழிகிறது. இவ்வளவு பவர் உள்ள சாத்தனை நீங்கள் கும்பிடலாம். அவரு குடுக்கிற தலைவலியிலே உங்களுக்கும் தூக்கம் வரலே, உங்கள் யேசப்பாவும் ரொம்ப களைத்து இருப்பார். உங்களை எல்லாம் கண்டு கொள்ளவே அவருக்கு நேரம் கிடைக்காது. சாத்தான் உங்களோடையும், கடவுளோடையும் எப்போதும் சண்டை போட்டும் இன்னும் ஸ்ட்ராங்-ஆக உள்ளார். பேசாம அந்த சக்தி மிகுந்த சாத்தனை நீங்கள் வேண்ட ஆரம்பித்து விடுங்கள்.

  51. நான் தான் இயேசு! நான் தான் சாத்தான்! என்று எல்லா கிறிஸ்தவரும் என்னும் நாளே கிறிஸ்தவத்தின் விடிவு நாள்! அது வரை ஜான்சன் போல புத்தி பேதலித்து மனநோய்க்கு ஆளாகி தேவன்,இயேசு,சாத்தான், பிசாசு,நரகம்,சொர்க்கம் என்று உளற வேண்டியது தான்!

    அஹம் பிரம்மாஸ்மி!

    ஓம் தத் சத் !

  52. ஜான்சன் –

    சூப்பர் மா –

    நாம் உங்கள் சர்வ வல்லமை படைத்த யேசுவிடம் லாகிக் பேசவில்லை – உம்மிடம் தான்.

    ஒரு கேள்விக்கு கூடா பதில் தெரியலா – மறுபடியும் மறுபடியும் பக்கத்தை வார்த்தைகளால் ரொப்பி என்ன பயன்

    அண்ணே இந்தியாவில் சீர்கேடு உள்ளது – அது எபோது தொடங்கியது என்பது அனைவருக்கும் தெரியும் –

    முதலில் இஸ்லாமிஸ்டுகள் வந்த போது – அப்புறம் வெள்ளையன் வந்த போது

    சரி இன்னும் ஒரே ஒரு விஷயம் ஆராய்வோம்
    //இங்கே தான் உங்களுக்குப் பாவத்தின் தன்மையைப் பற்றிய புரியாமை வெளிப்படுகிறது. தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போவதே பாவம்.//

    இப்படி நீங்கள் பிதற்றி உள்ளீர்கள்

    நீங்கள் கொஞ்சம் யோசித்தால் தான் நான் சொல்ல வருவது புரியும் –

    முதலில் newton’s first law தெரிந்து இருக்க வேண்டும் – அது தெரியாவிடிலும் பரவா இல்லை – நாம் காணும், அறியும் விஷயத்தை சற்று கூர்மையாக கவினித்தால் கூட போதும் (இதை நாங்கள் ப்ரத்யக்ஷ பிரமாணம் – அதாவது புலன்களால் அறிந்து கொள்ளும் சான்று – evidence/proof) என்கிறோம்

    இந்த இரண்டின் படியும் – ஒருவன் ஒரு காரியம் செய்தால் மட்டுமே அந்த காரியத்திற்கு உண்டான பலன் கிடைக்கும் – ஒரு பந்தை தள்ளினால் அது உருளும் – தல்லா விட்டால் அது அப்படியே இருக்கும்
    (i can hear you saying No, the ball moves even if the wind blows 🙂 )

    அதே போல – ஒருவன் ஒரு தப்பு காரியம் செய்தால் தான் பாவம் வர வேண்டும்
    இல்லாதது எப்போதும் உண்மை இல்லை – இல்லதது இருக்கிறது என்று சொல்லவே முடியாது (உங்களுக்கு வேண்டுமானால் இதையும் நிரூபணம் செய்து காட்டுகிறேன் )

    இப்படி இருக்கையில் ஏசுவுக்கு அடிபணியாமை என்பது ஒரு செய்யாத காரியம் – அடிபணிந்தால் புண்ணியம் வரும் என்று வேண்டுமானால் நீங்கள் கூறிக் கொள்ளலாம் – ஆனால் அடி பணியாதால் பாவம் வரும் என்று சொல்வது இல்லாததை இறுகிறது என்று சொல்வதற்கு சமம் – பந்தை தல்லாமலேயே அது நகர்கிறது என்று சொல்வதற்கு சமம் intertia = motion என்று சொல்வதற்கு சமம் , earth தட்டையானது என்று சொல்வதற்கு சமம் – நிலவு தானே வெளிச்சம் தருகிறது என்பதற்கு சமம் (well all these are in Genesis)

    இல்லாததில் இருந்து இருப்பது உருவாகாது – அதன் போலே அடிபணியாமை என்ற ஒரு இல்லாமையிலிருந்து பாவம் என்ற இருக்கும் விஷயம் உருவாக வாய்ப்பே இல்லை

    நீங்கள் அறிவை பயன்படுத்துபவர் என்றால் இது உங்களுக்கு புரியும் -கர்த்தரே மண்ணிலிருந்துதான் மனிதனை படைக்கிறார் – இல்லாததில் இருந்து அல்ல (மண்ணிலிருந்து வரும் மனிதனுக்கு உடம்பில் 80 விழுக்காடு நீர் என்பது வேறு விஷயம்)

    ஜான்சன் – உங்களுக்கு ஜான் ஏரினால் முழம் சறுக்குகிறது – இப்போது சொன்னதற்கும் இது சாத்தான் வாக்கு என்று பிதற்றி பதில் எழுத வேண்டாம் – ஏற்கனவே பிதற்றியாகிவிட்டது

    நண்பரே ஜபம் த்யானம் இதை எல்லாம் பற்றி ஒரு ஹிந்துவிடம் உதார் விட வேண்டாம் – When the Arabs were in the trees – Indians had long lit the light of Vedantha.

    You have said islamists use logic – never say this, they will get angry

  53. Mr Sarang, Hats off for your brilliant reply. But we are all wasting our time here. This Johnson guy makes Mr Chilsam look brainy. He is too far gone. Any logical questions will be blamed on Satan. He had lost his sense of critical analysis.For him it is easy to be evasive and blame it on Satan. Otherwise, he knows that his beliefs and his cult religion of Christianity are all based on fables and fairy tales.Put it simply, he is AFRAID to use his brain.
    Iam not able to understand his bables and rantings.

  54. two rules to be followed in Christianity.
    rule no 1 Christianity is always right
    rule no 2 if wrong then follow rule no1

  55. //உங்கள் சன் டீவி செய்திகளைப் பார்த்தாலே தெரிகிறதே, தாய்மதப் பற்றாளர்களின் கன்னியத்தின் இலட்சணம்.//

    ஒரு சின்ன திருத்தம் அது எங்கள் சன் டிவி அல்ல ,எங்களுக்கு எதிரான உங்கள் சன் டிவி.

  56. ஆர். கோபாலுக்கு வெற்றிதான். கட்டுரையிலிருக்கும் ஒரு வரியைக் கூட தவறு என்று கிறிஸ்துவர்களால் சொல்லமுடியவில்லை. இப்படி எழுதும் இந்து சகோதரர்கள் சாத்தான் என்ருதிட்டி விட்டு போகிறார்களே தவிர, இந்த வரி சரியல்ல எனறு ஒன்றும் சொல்லமுடியவில்லை.

    ராபர்ட் ஷேனிக் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியராக இருக்கிறார். பெரும்பாலான அமெரிக்க அறிவாளிகள் கிறிஸ்துவம் ஒரு குப்பை என்று அறிந்து இந்துக்களாக ஆகிவருகிறார்கள்.

  57. UGLY FACE of Christianity

    The legacy of Western civilization to the world – Dark Ages, Crusades, The Inquisition, Witch Hunt, Slavery, Colonization of Africa, Asia, America and Australia, Imperialism, World Wars, Holocaust, Bombing of Nagasaki and Hiroshima, Conversion and destruction of Native cultures to Christianity, Drugs, School shootings in American schools, Gun violence, Racism, Clergy sex Abuse, Viagra spamming American Capitalism, quest for individualism, Iraq war …. ).

    Under each heading voluminous historic authenticated information are available to show the dirty face of Christianity

    What ever I said is truth nothing but truth only but you born sinners as per the teaching of Christ keep telling lies and fooling the ignorant.

    FIRST STOP CONVERSION (INVASION THROUGH CONVERSION).

  58. வணக்கம் சகோதரர்களே,

    சரங் அருமையான விவாதம், வாழ்த்துக்கள். ஆனாலும் நமது விவாதங்களெல்லாம் சிலரை மட்டுமே தெளியப் படுத்தும். சிலர் எல்லாம் சப்பாணி மாதிரிதான்,,, ”’சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசுகுடு””, ”’சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசுகுடு…..

    ////நீங்கள் தூவுவதெல்லாம் விஷம்
    ஆமாம், அப்படிதான் இருக்கும் – கெட்டுப் போகிறவர்களுக்கு சிலுவையைக் குறித்த உபதேசம் பைத்தியமாய் இருக்கும் என்று பவுல் சொல்லியிருக்கிறார்.////

    ஆஹா அன்பு சகோதரரே உங்களுக்கு என்று எந்த வார்தைகளுமில்லை, சிந்தனை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றுதானே? பவுல் சொன்னார் அவுல் சொன்னார் என்று மாற்றான் சிந்தனையில் உங்கள் வாழ்க்கையை நடத்துகிறீர்களே?

    அப்புறம் இலங்கை அயோத்தி என்று ஏதேதோ எழுதியிருந்தீர்கள்
    இரண்டு இடங்களிலும் நடப்பது என்னவென்று உலகமறியும், ஆக்கிரமித்து அழித்த ஒரு கோவிலை மீட்க ஒரு புறமும் ஆதிக்க வெறியால் அழிக்கப் படும் தமிழினம் காக்க ஒரு புறமுமாக நடந்தது என்னவென்று யாவரும் அறிவர்.

    ஆனால் இங்கே விவாதிக்கப் படுவது முதல் பாவம் பற்றி அதற்க்கு இன்னமும் சரியான பதில் தங்களிடம் & உங்களிடம் இதுவரை, இனிமேலும் இல்லை.

    இந்த உலகின் குப்பை தூசியிலும் சனாதன தர்மத்தின் ஏதாவது ஒரு தத்துவார்த்தம் இருக்கும். ஆனால் தங்களிடம் கர்த்தரும் சாத்தானும் பாவமும் மட்டுமே ஒலியாகவும், எதிரொலியாகவும் இருக்கிறது, உங்கள் இயேசுவின் முள் கிரீடங்கள் உங்கள் எல்லோருடைய தலையாலும் சுமக்கப் வைக்கப் படுகிறது. ஆனால் நீங்களோ அதை பாது காப்பு வளையமாக எண்ணி மகிழ்கிறீர்கள், ரொம்பவும் மகிழ்ச்சி சகோதரரே, ஆனால் நாங்கள் விரும்பாத, தேவை இல்லாத அந்த வளையத்தை எங்கள் தலைகளிலும் சுமத்தாதீர்கள். இதுவே இங்கு எல்லோரின் குரலும்.

    ஒருகன்னத்தில் அறைந்தால்….. வலிக்கும் ஆனால் அடிபட்டவனுக்கு. வலி அடிபட்டவனுக்கு, பாவம் ஆப்பிளை தின்னவனுக்கு. வேடிக்கை பார்த்த ஒருவன் அடிபட்ட வலிகொண்டு துடிக்கும் போது வேண்டுமானால் ஆப்பிள் பாவம் ஒருவேளை அடுத்து இருப்பவனை ( தடுக்காது இருந்தமைக்கான தண்டனை என்று வைத்துக் கொள்வோம்) வேண்டுமானால் சாரும். அந்த நிகழ்ச்சியை கண்டும் அருகிலும் இராத மற்றவரை எப்படி சாரும். மீண்டும் இலவசமாய் சாத்தானிடம் ஐடியா வாங்கியதை சொல்வீர்கள். கொஞ்சம் இயல்பான வாழ்க்கையை சற்றே நெருங்கி உற்றுப் பாருங்கள். ஒரு தத்துவம் நறுக்கென்று தெரியும் ” தீதும் நன்றும் பிறர் தர வாரா”

  59. Dear Chillsam,Johnson:
    You could not answer any of the questions raised earlier.Can you please answer the below?

    விஞ்ஞான அறிவிற்கு புறம்பான பைபிள் கூற்றுகள்.!!!

    கல்வி அறிவு பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகளை வெட்கி தலை குனிய செய்யும் புனித‌ பைபிளின் ஸ்லோக‌ங்களில் சில‌.

    பூமிக்கு அஸ்திவாரம்? பூமிக்கு தூண்கள் உண்டு? பூமியை அஸ்திவாரங்களின் மேல் கர்த்தர் அசையாமல் நிலை நிறுத்தி அமைத்திருக்கிறார். பூமி சுழலுவதில்லை.

    பைபிள். சங்கீதம் . 104 அதிகாரம் ஸ்லோக‌ம் 5
    BIBLE: PSALMS. CHAPTER 104.VERSE. 5
    ______________________________________

  60. ஆதாரம் சுட்டி https://www.tamil-bible.com/lookup.php?Book=I+Samuel&Chapter=2&Verse=7-8&Kjv=2
    ————————————-
    பூமிக்கு நான்கு மூலைகள்? உலகம் தட்டை. உருண்டை அல்ல. உலகத்திற்கு நான்கு திசைகளும் நான்கு மூலைகளும் உண்டு . கர்த்தரின் வார்த்தைகளை மட்டுமே அடங்கிய புனித பைபிள் கூறுகிறது

    புதிய ஏற்பாடு. NEW TESTAMENT.

    பைபிள்: வெளி 7 அதிகாரம் ஸ்லோக‌ம் 1.
    BIBLE: REVELATION. CHAPTER 7 VERSE 1.
    ________________________________________

    1. இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.

    1.And after these things I saw four angels standing on the four corners of the earth, holding the four winds of the earth, that the wind should not blow on the earth, nor on the sea, nor on any tree.

    ஆதாரம் சுட்டி https://www.tamil-bible.com/lookup.php?Book=Revelation&Chapter=7&Verse=1&Kjv=2
    ————————————-

    சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ ?

  61. also add to the kitty of christianity:

    annihilation of maya and inca civilisations in south America
    forcible conversion and killing of Hindus and demolition of temples in Gomantak ( Goa)
    aiding multinationals to exploit the resources of African and asian countries
    genocide of the red Indians in North america
    instigating civil war in countries like east Timor, Srilanka,Kenya,Uganda,Rrwanda, Sudan,Philippines.
    sex crimes of missionaries and bishops against children and nuns especially in Europe and America
    destroying the animist culture of the africans
    destroying the Hindu culture and family values by cunning propaganda so as to shake the foundations of the Hindu family to make it ripe for conversion.
    swindling money meant for the poor by pastors and evangelists.
    indulging in dirty politics by purchasing politicians in countries like india

  62. ஜான்சன் த்யானமேல்லாம் செய்து பதில் சொல்கிறேன் என்கிறார்

    அவருக்கு சிரமத்தை மிச்சப்படுத்தும் விதமாக நாமே நாம் சொன்னதுக்கு கிறிஸ்தவ அன்பர்கள் கூறக் கூடிய சமாதானம் சிலவற்றை கூறுவோம்

    newtons first law /இல்லாததில் இருந்து எப்படி இருப்பது உருவாகும் என்பதற்கு ஒரு உதாரணம்/ சமாதானம்

    ஜான்சன் கூறுகிறார்
    (ஜான்சன் இப்படி எல்லாம் சொல்லமாட்டார், சில்லிசாம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் – சரி போனால் போகிறது ஜான்சன் என்றே வைத்துக் கொள்ளலாம்)

    இது தவறு – ந்யுடன் சொல்வதை நம்பும் அன்பர்கள் கர்த்தர் சொல்வதை நம்ப மறுக்கின்றனர்
    [கரிப்பு நடுல நடுல சாத்தான், பிசாசு ன்னு போட்டுக்கணும்)

    நான் அனைவருக்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன் (ஜான்சன் சொல்வது)

    ஒரு பள்ளி கூட வாத்தியார் வீட்டுப் பாடம் செய்யாமல் வரும் மாணவனை பிரம்பால் அடித்து தண்டிக்கிறார் – வீட்டுப் பாடம் செய்யாமல் வரைவது தவறு (கிறிஸ்தவ மதப்படி பாவம்) தானே
    இங்கு வீட்டுப் பாடமோ செய்யாத ஒன்று – தண்டனையோ இருக்கும் ஒன்று – இங்கு இல்லத்தில் இருந்து இருந்தது வந்தது அல்லவா (- இப்போ என்ன செய்வீங்க இப்போ என்ன செய்வீங்க)

    வீட்டுப் பாடம் செய்யாத மாணவனை ஆசிரியர் எப்படி தண்டிக்கிராரோ அது போலவே கர்த்தர் தன்னை அடிபணியாத ஒரு மனிதனை தண்டிக்கிறார் – இதே பதில் தான் சிறு குழந்தைகளுக்கும் பொருந்தும் – எனவே கர்த்தர்
    செய்தது சரியே – கர்த்தர் ரொம்ப நல்லவர்

    இப்போது அறிவை பயன் படுத்தும் ஹிந்துக்களின் எதிர் கேள்வி

    ஐயோ ஐயோ – எந்த ஒரு விஷயத்தை செஞ்சாலும் ப்ளான் பண்ணி தான் செய்யணும் ப்ளான் பண்ணாட்டி இப்படிதான்

    முதலில் ஆசிரியர் தண்டனை கொடுத்தது தவறு (எந்த நாட்டு சட்டப் படியும்) – தவறை உதாரணமாக சொல்வது அபத்தம்

    இந்த பழக்கம் உண்மையில் அரபு நாட்டுகாரரின் பழக்கமே – அங்கிருந்து இது நமக்கு தொத்திக் கொண்டது

    நமது நாட்டில் வேதம் படிக்க ஒரு மாணவர் செல்கிறார் என்று வைத்து கொள்வோம்
    முதல் நாள் குரு கற்றுத் தருகிறார் – ஆக்னிமிலே புரோஹிதம் …. மாணவனிடம் இதை நினைவில் வை நாளை மேற்படி பார்க்கலாம் என்கிறார் (வீட்டுப் பாடம்)
    மறு நாள் மாணவன் மறந்து விடுகிறான் – உடனே ஆசிரியர் பிரம்பெடுக்க மாட்டார் – மறுபடியும் ஆக்னிமிலே புரோஹிதம் …. என்று ஆரம்பிப்பார்
    இது பல நாட்கள் தொடரலாம்

    எனக்கு எனது குரு செய்தது இதுவே, அவருக்கு அவரது குரு செய்தது இதுவே.

    ஆசிரியர் செய்தது ஏன் தவறு – எந்த ஒரு ஜீவனையும் துன்புருத்தாதே என்பது ஹிந்து தர்மம் சொல்கிறது . ஆக ஆசிரியர் அறியாமயினால் செய்கிறார்

    ஆசிரியர் என்ன செய்திருக்கலாம் – அப்பா நீ வீட்டுப் பாடம் செய்யாமல் வந்து விட்டாய் – உனக்கு நான் மேற்கொண்டு நடத்தும் பாடம் புறியாது அதனால் நீ இன்று வீட்டுப்பாடத்தை இரு முறை எழுதினால் உணக்கு புரியும் – அதை நீ இன்று மறக்காமல் செய்

    – ஆக ஆசிரியர் அடித்தார் என்றால் அவர் செய்தது தான் தவறு
    – வீட்டுப் பாடம் செய்யாத மானவனுக்கு நல்ல மதிப்பென் வராமல் போகலாம் அதற்காக –ve மதிப்பென் வராது – ஆக இங்கு இல்லததில் இருந்து இருப்பது வரவில்லை மாராக இருப்பது என்ற(அடியிலிருந்து ) மானவனுக்கு வலி என்ற இருப்பது உருவாகிறது
    ஜான்சன் சொல்லலாம் – மானவன் அதிக மதிப்பென் வாங்க வேண்டும் என்று தன்டனை தந்தது சரிதானே

    இல்லை – தன்டிக்ப்பட்ட மானவரெல்லாம் அதிக மதிப்பென் வாங்குவதில்லை என்பது நாம் காணும் உண்மை – மாராக பல மானவர்கல் இன்று வாதியார் அடித்தார் திட்டினார் என்பதர்க்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதுவே உண்மை

    ஆக கர்தர் இப்படி ஆசிரியர் போல தன்டனை தந்தால் அது அறியாமயினால் செய்த செயல் ஆகிவிடும்
    ஆக கர்தர் இப்படி செய்தால் அது தவராகிவிடும்
    ஆக வாதியார் மானவனுக்கு வலிக்குமே என்று தெரிந்தும், மானவனை வேரு விதமாக திருத்தலாம் என்று தெரிந்தும் அடிப்பது எப்படி தவரோ அது போல கர்தரும் இபபடி செய்தால் தவறாகிவிடும்

    ஜான்சன் இன்னொரு சமாதானம் சொல்ல முயலலால்ம்

    அலுவலகத்தில் ஒரு பனியாலர் இட்ட வேலையை செய்ய வில்லை அதற்காக அவரை மேலாலர் சராமாரியாக திட்டுகிறார் – பார் உன்னால் நமது நிறுவனத்திற்க்கு லட்ச ரூபாய் நட்டம் ….. (தனிக்கை செய்யப்பட்ட பகுதி)

    இங்கும் இல்லததில் (வேலை செய்யாமை) இருந்து இருப்பது (திட்டு) உருவாகிறதே. ஆனால் இங்கு முன் சொன்னது போல வேலை செய்யாத பனியாலருக்கு நட்டம் இல்லை மாராக நிறுவனத்திற்க்கே அதனால் மேலாலர் செய்தது தான் சரி – இந்த விஷயத்தை ம்ருதுவாக சொல்வதன் மூலம் பனியாலர் எந்த பயனும் அடையப்போவதில்லை.அதாலால் கர்தர் செய்தது சரிதான், கர்தர் நல்லவர் தான்

    நமது ஹிந்து நன்பர்கள் வைக்கும் எதிர் கேள்வி –

    ஒரு முரையாவது ஜான்சன் சிந்தித்து தான் பார்க்கட்டுமே – அறிவின் மேன்மை அவருக்கு புரிய வரலாம் – அவருக்கு அவர் சொன்ன சமாதான்த்தில் இருக்கும் அபத்தம் தெரிய்வில்லை என்றால் நாளை நாமே பதில் சொல்லலாம்

  63. ///உலகம் தட்டை. உருண்டை அல்ல.///

    இந்த இணைய உலகிலும், GOOGLE EARTH , NASA வின் இணையத்தளம் ,மற்றும் பூமியின் வடிவத்தைப் பார்த்து அறிந்து கொள்ள எத்தனையே வசதிகள் இருந்தும் இன்னும் பைபிளில் சொல்லப்பட்டது என்பதற்காக பூமி உருண்டை அல்ல,தட்டை வடிவமானது என்று நம்பும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

    அரிஸ்டாட்டில் பூமி உருண்டை என்று கூறியபோது அதை நம்பாத கிறிஸ்தவர்களில் பலர் உலகம் தட்டை என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.16 -ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அறிவியலில் முன்னேற்றம் ஏற்ப்பட கிருஸ்தவர்கள் சிறிது சிறிதாக பூமி உருண்டைவடிவமானது என்பதை நம்பத் தொடங்கினார்கள்.ஆனால் சிலர் எவ்வளவு அறிவியல் ஆதாரம் காட்டினாலும் , உலகம் தட்டையானது என்று பைபிள் கூறுவதே உண்மை என்று நம்பிக்கொண்டு வந்தார்கள்.அவர்கள் தான் இப்பொழுது ,அதுவும் இவ்வளவு அறிவுகளும் கொட்டிக் கிடக்கும் இணைய உலகிலேயே தங்களுக்கென்று இணைய தளம் ஒன்றை தொடக்கி, பூமி தட்டையானது என்று பைபிள் கூறியதை விட்டுவிடமுடியாமல் ,இணையத்திலும் தொடர்கிறார்கள்.அதன் பெயர் THE FLAT EARTH SOCIETY .

    சுட்டி:.https://theflatearthsociety.org/cms/

  64. விஷயம் ரொம்ப சிம்பிள். பைபிள் உலகம் தோன்றி ஆறாயிரம் வருடங்களாக ஆகிறது என்று சொல்கிறது. முதல் மனிதன் தோன்றியது ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னால் என்று சொல்கிறது.

    ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தைய மனிதர்களது எலும்பு ஒன்றே ஒன்று கிடைத்தாலும், பைபிள் பொய், முதல் பாவம் வெறும் கதை என்று நிரூபணம் ஆகிவிடும். அவர்களது ஒரே ஒரு கட்டிடத்தை காட்டினாலும் பைபிள் பொய்.

    சுமார் 500,000 ஐநூறாயிரம் வருடங்களுக்கு முந்தைய மனிதர்கள் கட்டிய வீடு
    https://news.bbc.co.uk/2/hi/science/nature/662794.stm

    பேரண்டத்தின் வயது 13 பில்லியன் வருடங்கள்.
    https://news.bbc.co.uk/2/hi/science/nature/1950403.stm

    யூதர்களின் பைபிள்படிதான் உல்கம் உருவாயிற்று என்று பள்ளிக்கூடங்களில் சொல்லித்தருவது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சட்டப்படி தவறு.

    மீறி சொல்லிகொடுத்த கிறிஸ்துவ வெறியர்களை அரசாங்கமும் நீதி மன்றங்களும் வேலை நீக்கம் செய்திருக்கின்றன.

    நாம் என்னடாவென்றால், சிறுபான்மை உரிமை என்று இந்த கூமுட்டைத்தனங்களை சகித்துகொண்டிருக்கிறோம்.

  65. //
    ஒரு பள்ளி கூட வாத்தியார் வீட்டுப் பாடம் செய்யாமல் வரும் மாணவனை பிரம்பால் அடித்து தண்டிக்கிறார் – வீட்டுப் பாடம் செய்யாமல் வரைவது தவறு (கிறிஸ்தவ மதப்படி பாவம்) தானே
    இங்கு வீட்டுப் பாடமோ செய்யாத ஒன்று – தண்டனையோ இருக்கும் ஒன்று – இங்கு இல்லத்தில் இருந்து இருந்தது வந்தது அல்லவா (- இப்போ என்ன செய்வீங்க இப்போ என்ன செய்வீங்க)
    //

    ஆனால், கிறித்தவர்கள் இந்த சமாதானம் கூட சொல்ல முடியாது. அவர்கள் கூறும் “அடிபணியாமை” பின்வரும் சம்பவத்துடன் ஒப்பாகும்: பள்ளிக்கூடம் என்றால் என்ன என்றே முன்பு தெரியாத மாணவன் ஒருவன் புதிதாகப் பள்ளிக் கூடத்தில் சேருகிறான். அவன் முதல் முதலில் வந்து உட்காரும் பாடத்தில், “சென்ற வாரம் நான் கொடுத்த வீட்டுப் பாடத்தைச் செய்யாமல் வந்திருக்கிறியே, இதோ அடி வாங்கு” என்று பிரம்பால் விளாசுகிறார்.

    இந்நிகழ்ச்சியைப் போல, பைபிள் என்றால் என்ன என்றே தெரியாமல்,
    ஆதி பாவம் முதலியவை பற்றித் தெரியாத ஒருவன், தன் வாழ்நாளில் யாருக்கும் தீங்கு இழைக்காமல் வாழ்கிறான்… ஒரு சமணரோ, புத்த பிக்ஷுவோ, சந்யாசியோ என்று வைத்துக் கொள்வோம். கிறித்தவர்கள் கூறுவது படி பார்த்தால் அவர் இறந்தவுடன் சொர்க்க வாசலுக்குப் போய் உள்ளே செல்ல அனுமதி கேட்கிறார். அதற்கு சொர்க்கத்தில் உள்ள துவார பாலகன், “நீ கர்த்தருக்கு அடிபணியவில்லை. ஆகையால் உன்னை நரகத்தில் எரியும் தீக்கு இரையாக்கப்போகிறேன்.” என்று பதிலளிக்கிறான்.

  66. ஒருவனின் வாழ்நாள் முழுவதும் முயன்றாலும் இயலாத வகையில், உலகத்துக்கே அனைத்தையும்,கற்றுத் தந்த இந்து மதம் பற்றி மேனாட்டரிஞ்சர்கள் கூறியவற்றிலிருந்து ஒரு சில விஷயங்கள்,

    The late scientist, Carl Sagan, in his book, Cosmos asserts that the Dance of Nataraja (Tandava).”The Hindu religion is the only one of the world’s great faiths dedicated to the idea that the Cosmos itself undergoes an immense, indeed an infinite, number of deaths and rebirths. It is the only religion in which the time scales correspond, to those of modern scientific cosmology.
    Professor Arthur Holmes (1895-1965) geologist, professor at the University of Durham. He writes regarding the age of the earth in his great book, The Age of Earth (1913) as follows:The ancient Hindus, whose astonishing concept of the Earth’s duration has been traced back to Manusmriti, a sacred book.”When the Hindu calculation of the present age of the arth and the expanding universe could make Professor Holmes so astonished, the precision with which the Hindu calculation regarding the age of the entire Universe was made would make any man spellbound.
    Louis Jacolliot (1837-1890), who worked in French India as a government official and was at one time President of the Court in Chandranagar, translated numerous Vedic hymns, the Manusmriti, and the Tamil work, Kural .”The Hindu revelation, which proclaims the slow and gradual formation of worlds, is of all revelations the only one whose ideas are in complete harmony with modern science. ”
    Jacolliot feels India has given to the West much more than she is credited with. when he says ” Besides the discoverers of geometry and algebra, the constructors of human speech, the parents of philosophy, the primal expounders of religion, the adepts in psychological and physical science, how even the greatest of our biological and theologians seem dwarfed! All Vedic ideas in process of readjustment to the theories of force correlation, natural selection, atomic polarity and evolution. And here, to mock our conceit, our apprehension, and our despair, we may read what Manu said, perhaps 10,000 years before the birth of Christ:

    Yaqubi, Shiite historian, wrote in the ninth century: “Hindu are more exact in astronomy and astrology than any other people.

    நம்ம நாட்டிலுள்ள, நம்ம மதத்தை பத்தி,ஒரு தூசி அளவுக்கு கூட தெரிஞ்சிக்க முயலாம, யாரோ கொண்டுவந்து குடுத்தத வச்சு, கூப்பாடு போட்டுக்கிட்டு திரியிறது எந்த வகயில் நியாயம்?

  67. After all the ‘Sex abuse Scandals’..It is now ..!
    21/09/2010 23:01:03

    Vatican bank investigated for money laundering

    In yet another scandal for the Catholic Church, Italian authorities are investigating the Vatican Bank on suspicion of money laundering:

    The Bank of Italy investigation was prompted by two wire transfers which the Vatican Bank asked Credito Artigiano to carry out, the Bank of Italy said.

    The Vatican Bank did not provide enough information about the transfers — one for 20 million euros (about $26 million), and one for 3 million euros (about $4 million) — to comply with the law, prompting the Bank of Italy to suspend them automatically, it said.

    The Vatican Bank is subject to particularly stringent anti-money laundering regulations because Italian law does not consider it to operate within the European Union.

    This is not the first time the bank, formally known as the Institute for Works of Religion, has been under suspicion. The bank has been accused in the past of laundering money for the Sicilian mafia and the Gambino crime family as well as helping Croatia’s pro-Nazi wartime government steal the assets of Holocaust victims.

    Read Full report at
    https://blog.foreignpolicy.com/posts/2010/09/21/vatican_bank_investigated_for_money_laundering

  68. தமிழ் இந்து மாதிரி ஆன்மீக தளத்துல, நாத்திகர் (Richard Schoening) எழுதிய கட்டுரைய எப்போ இருந்து வெளியிட ஆரம்பிச்சிங்க? அப்ப நீங்களும் நாத்தீகத்த சப்போர்ட் செய்றிங்களா? தன் மதம் மட்டும் தான் உண்மை மத்த மதமெல்லாம் அபத்தம் நினைக்கிறது, கிருஸ்தவ மதத்திற்கே உரிய குணம். அது உங்களுக்கு எப்படி வந்துச்சு? அப்ப நீங்களும் கிருஸ்தவங்க மாதிரி தானா?

  69. இந்து மதத்தின் அடிப்படை தத்துவத்தை நீங்க எல்லாம் தயவு செய்து புரிஞ்சுக்குங்க, இந்து மதத்த, நீங்க கிறிஸ்துவ மதம் மாதிரி ஒரு குறிபிட்ட கட்டத்துக்குள் அடைக்க முடியாது, எல்லா மதமும் அதற்குள் அடக்கம்! இந்து மதத்துல ஒருத்தன் மரத்த, கல்ல கூட கடவுளா கும்பிடலாம், ஏன், தன் அப்பாவ கூட கடவுள்ளா வெச்சு வணங்கலாம், அது தப்பு கிடையாது, நீங்க அவன கேலி கூட பண்ண முடியாது. நீங்க எழுதறத பாத்தா, நம்ம மதத்துனோட அடிப்படைய, நீங்க எந்தளவுக்கு புரிஞ்சு இருக்கீங்க அப்படின்னு, சந்தேகம் வருது. ஒரு சில comments எல்லாம் படிக்கும் போது, பெரியாரும், கிருஸ்தவ மிஷனரிகளும், மத்த மதத்த பற்றி கேவலம்மா பேசறது ஞாபகத்துக்கு வருது. எல்லாத்துக்கும் மேல, நம்ம இந்து தளத்துல, கிருஸ்தவ மதத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? மத்த மதத்தினுடைய கொள்கை, நமக்கெதுக்கு? எனக்கு இந்த கட்டுரையிலே ஒன்னுமே புரியல. ஏனா, எனக்கு ஆதாமு தெரியாது ஏவாளும் தெரியாது, கேள்வி பட்டுருக்கேன் அவ்வளவுதான்!

  70. அன்புள்ள விசு
    உங்களைப் போல ஏராளமான இந்துக்கள் “எம்மதமும் சம்மதம்” என்று மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் எனப்தற்காகத்தான் இந்த கட்டுரை. ஆதாம் ஏவாள் உங்களுக்கு தெரியவில்லை என்றால், இந்த கட்டுரை உங்களுக்கு தேவையில்லை. ஆனால் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் ஏன் இந்த கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை எழுதியிருக்கிறேன்.

    மற்றமதத்தின் கொள்கை நமக்கெதற்கு என்று எழுதியிருக்கிறீர்கள். அதுதான் இந்த கட்டுரையின் நோக்கமும். கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களின் கொள்கைதான் ஆதாம், ஏவாள், யாஹ்வே ஆகியவை எல்லாம். நமக்கு தேவையில்லை என்றுதான் இந்த கட்டுரையை விளக்கியிருக்கிறேன்.

    நன்றி

  71. // உங்களைப் போல ஏராளமான இந்துக்கள் “எம்மதமும் சம்மதம்” என்று மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் எனப்தற்காகத்தான் இந்த கட்டுரை. //

    ஆர். கோபால் அவர்கள் கூறுவதை ஆதரிக்கிறேன். கிறித்தவம் இஸ்லாம் கூறும் இறையியலும், மறுபிறவியின்மையும், வானவியலும், சிருஷ்டிக் கதையும் எந்த இந்துமதப் பிரிவையும் சேராது. “எம்மதமும் சம்மதம்” என்று அரசியல் ரீதியாகச் சில இந்துக்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் சகோதரர்களாகக் கருதும் கிறித்தவ இஸ்லாமிய மதங்களோ, எந்தத் தடையும் இல்லாமல் “எங்கள் மதம் தான் உண்மை” என்று பிரச்சாரமும் மதமாற்றமும் செய்து வருகிறார்கள். “எம்மதமும் சம்மதம்” என்று கூறுபவர்கள் இந்த பிரச்சாரத்துக்கும் மதமாற்றத்துக்கும் சுலபமாக இரையாவார்கள்.

  72. //Visu
    22 September 2010 at 9:54 pm

    தமிழ் இந்து மாதிரி ஆன்மீக தளத்துல, நாத்திகர் (Richard Schoening) எழுதிய கட்டுரைய எப்போ இருந்து வெளியிட ஆரம்பிச்சிங்க? அப்ப நீங்களும் நாத்தீகத்த சப்போர்ட் செய்றிங்களா? தன் மதம் மட்டும் தான் உண்மை மத்த மதமெல்லாம் அபத்தம் நினைக்கிறது, கிருஸ்தவ மதத்திற்கே உரிய குணம். அது உங்களுக்கு எப்படி வந்துச்சு? அப்ப நீங்களும் கிருஸ்தவங்க மாதிரி தானா?//

    //Visu
    22 September 2010 at 11:01 pm
    எனக்கு இந்த கட்டுரையிலே ஒன்னுமே புரியல. ஏனா, எனக்கு ஆதாமு தெரியாது ஏவாளும் தெரியாது, கேள்வி பட்டுருக்கேன் அவ்வளவுதான்!//
    நண்பரின் முதல் கருத்தும் இரண்டாவது கருத்தும் முரண்படுகிறதே, எங்கேயோ லாஜிக் உதைக்கிறதே.

  73. Hi Babu,
    Sorry, I did not read the ENTIRE article, so I don’t know what logic is missing! T
    Thanks,
    Visu

  74. எம்மதமும் சம்மதம் என்பதை ஹிந்துக்கள் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவுதான் இப்போது அவர்கள் அனுபவிக்கும் துன்பத்துக்குக் காரணம். இஸ்லாம் அல்லா ஒ்ருவரே கடவுள் என்கிறது, கிறிஸ்தவம் இயேசு ஒருவரே கடவுள் என்கிறது
    அதனால் தான் அவர்கள் மத மாற்றம் செய்கின்றனர். ஷரியா சட்டம் அமல் படுத்துகின்றனர்ஆனால் ஹிந்து சமயம் ‘உண்மை ஒன்றே அதை மக்கள் பலவாறாக விவரிக்கின்றனர்’ என்று கூறுகிறது
    ஆகவே எல்லா மதமும் ஒன்றே என்பது தவறு.
    எல்லாக் கடவுளரையும் நீ ஒப்புக் கொண்டால் உன் மதம் எனக்குச் சம்மதம். இல்லை என்றால் இல்லை என்று நாம் கூற வேண்டும்.

  75. விசு
    படிக்காமல் கருத்து சொல்வது தவறு. படியுங்கள்.
    நன்றி

  76. ஆர் கோபால் அவர்களுக்கும், ஷேனிக் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன்.

    யூதப் பழங்குடியினரது கதைகளை சிறுவயது முதலாக படித்த காரணத்தால் அதிலுள்ள ஆபாசங்களை கண்டு வெட்கி தலைகுனிந்திருக்கிறேன். பொதுவாக விமர்சனம் செய்யும்போது அவற்றை எளிதில் எடுத்து அதில் உள்ள ஆபாசங்களை பட்டியலிட்டாலே குமட்டிக்கொண்டு வரும். அதிலும் கர்த்தர் எத்தகைய ஆபாசங்களையும் குரூரங்களையும் இஸ்ரவேலர்களை செய்யத்தூண்டுகிறார் என்று படித்தாலே குலை நடுங்கும். அதனை பார்த்தால் கர்த்தர் ஒரு கடவுளா சாத்தானா என்ற சந்தேகமே வரும். கிறிஸ்துவர்களுக்கே வாந்தி வரக்கூடிய விஷயங்களை ஒரு மாதிரி புரியாதமாதிரி மொழிபெயர்த்து வைத்திருப்பதால் கிறிஸ்துவர்களுக்கே ஒன்றும் புரியாமல் கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால் இந்துக்கள் அவற்றை படித்துவிட்டார்கள் என்றால் கிறிஸ்துவர்கள் என்றாலே அசிங்கம் பிடித்தவர்கள் என்றுதான் நினைப்பார்கள்.

    பழைய ஏற்பாடு கதைகள் என்றால், அதுவெல்லாம் பழசு, இயேசு திருந்திட்டார், அதல்லாம் வேணாம்னு சொல்லிட்டார் என்பார்கள். பன்னிக்க்றி சாப்பிடலாம் என்று ஒரு இடத்திலும் ஏசு சொல்லவில்லை. பவுல்தான் சொல்லுகிறார். பன்னிக்கறியை தின்பார்கள். ஆனால் ஏசுவோ, பழைய ஏற்பாட்டு சட்டங்களை நான் மாற்றவரவில்லை, உறுதிபடுத்தத்தான் வந்தேன் என்று சொல்லுகிறார். பழைய ஏற்பாடு சட்டத்தின்படி யூதரல்லாதவர்கள் எல்லொரும் பன்றிகள், நாய்கள். அதனால், ஒரு கானானிய பெண்மணியை நாயே என்று திட்டுவார். அதெல்லாம் இருக்கிறது. அப்படியென்றால் தமிழர்களும் நாய்கள்தானே? தமிழர்களை நாய்கள் என்று சொல்லும் ஒருவரை கடவுள் என்று நினைத்து கும்பிடும் இவர்களை நினைத்து எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.

  77. மிகச்சரியாக சொன்னீர்கள் சூசைராஜ்

    யூதர்கள் மட்டும்தான் மனிதர்கள் மற்றவர்களெல்லாம் நாய்கள் பன்றிகள் என்று யூதர்கள் கருதியதை இயேசுவும் உறுதி செய்கிரார். அது பிரச்னையானது என்று லூக்காவிலிருந்து எடுத்துவிட்டார்கள். இருந்தும் தமிழ்நாட்டு கூமுட்டை கிறிஸ்துவர்கள் இவரை கடவுள் என்று கும்பிடுகிறார்கள்.

    கிறிஸ்துவர்கல் தங்களது லூசுத்தனத்தையும் அடிமைப்புத்தியையும் விட்டுவிட்டு மீண்டும் இந்துக்களாக ஆகவேண்டும்.

  78. // கூமுட்டை கிறிஸ்துவர்கள் இவரை கடவுள் என்று கும்பிடுகிறார்கள்.

    கிறிஸ்துவர்கல் தங்களது லூசுத்தனத்தையும் அடிமைப்புத்தியையும் விட்டுவிட்டு மீண்டும் இந்துக்களாக ஆகவேண்டும்.//

    அய்யய்யோ வேண்டாம் தங்கமணி சார், அவங்க அங்கேயே இருக்கட்டும், இங்க வந்தால் நம்ம பேரையும் கெடுத்து விடுவார்கள். நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டையும் விட்டு விட்டு அவர்களால் வாழ முடியாது. வெறி பிடித்து அலைய ஆரம்பித்து விடுவார்கள். நல்ல விஷயங்கள் எல்லாம் இனிமே அவங்களுக்கு ஒத்து வராது.

  79. @ babu,

    நீங்கள் சொன்னது:

    ///// அய்யய்யோ வேண்டாம் தங்கமணி சார், அவங்க அங்கேயே இருக்கட்டும், இங்க வந்தால் நம்ம பேரையும் கெடுத்து விடுவார்கள். நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டையும் விட்டு விட்டு அவர்களால் வாழ முடியாது. வெறி பிடித்து அலைய ஆரம்பித்து விடுவார்கள். நல்ல விஷயங்கள் எல்லாம் இனிமே அவங்களுக்கு ஒத்து வராது./////

    என் கருத்து:

    தங்களுக்குத் தரப்படும் போதனைகளைக் கேள்வி கேட்டு ஏற்கவோ மறுக்கவோ இந்துக்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அந்த சுதந்திரம் கிறுத்துவ, இசுலாமிய, கம்யூனிஸ குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு இல்லை.

    அதன் காரணமாகத்தான், அவர்களால் சுயமாகச் சிந்தித்துச் செயல்பட முடிவதில்லை. இது அவர்களது குறை இல்லை. அவர்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் இயங்கியலின் குணம் அது. இந்த வித்தியாசத்தைப் புரிதலின் உச்சத்தைத் தொட்டுள்ள இந்துக்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டாமா?

    தனது குழுவின் வக்கிரமான கட்டுப்பாட்டையும் மீறி நல்ல குணங்களைக் கொண்டுள்ள, திறந்த மனமுடைய கிறுத்துவர்களும், முஸ்லீம்களூம், கம்யூனிஸ்ட்டுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்துத்தன்மை கொண்டவர்களாக அவர்களை நாம் கருதலாமே.

    அதை விடுத்து, ஒருவர் ஒரு குழுவைச் சேர்ந்தவர் என்பதால் அவரைத் திருத்த முடியாது என்றோ, அவர் கெட்டவர் என்றோ, மனிதரே இல்லை என்றோ சொல்லுவது இந்து மரபில் இல்லை. ஆபிரகாமிய குணம் அது.

    அதனால்தான், இனவெறிகளும், மத வெறிகளும் ஆபிரகாமிய ஆதிக்கம் செலுத்துகிற, செலுத்திய இடங்களில் தென்படுகின்றன.

    இத்தகைய போக்கை இந்துக்களான நாம் வெறுத்து ஒதுக்க வேண்டாமா?

    ஒருவரை அவரது செயலை வைத்தே புரிந்துகொள்ள வேண்டும். நம்பிக்கையை வைத்தோ, பட்டங்களை வைத்தோ, அல்லது குழுவை வைத்தோ அல்ல.

    மக்காலே வழியில் கல்விகற்ற நமக்கு ஆபிரகாமியப் பார்வையில் அணுகுவது எளிதாக இருக்கும். ஆனால், நமது பார்வை, புரிதல், அறிதல், செயல் அனைத்திலும் இந்துத்துவம் இருந்தால்தான் நாம் இந்துக்கள். இல்லாவிட்டால் உள்ளீடற்றப் போர்வை மட்டுமே.

    ஒருவரை அவரது குழுவை வைத்து வெறுப்பது இந்துத்துவம் இல்லை நண்பரே. அது ஆபிரகாமியம்.

  80. @ visu

    நீங்கள் கேட்டது:

    /////…….தமிழ் இந்து மாதிரி ஆன்மீக தளத்துல, நாத்திகர் (Richard Schoening) எழுதிய கட்டுரைய எப்போ இருந்து வெளியிட ஆரம்பிச்சிங்க? அப்ப நீங்களும் நாத்தீகத்த சப்போர்ட் செய்றிங்களா? ……..////

    என் கருத்து:

    நீங்கள் தமிழ் இந்து தளத்தினரைத்தான் கேட்டிருக்கிறீர்கள். அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    என் புரிதலின்படி, நாத்திகம் என்பது இந்து மதங்களில் ஒன்று.

    அதிலும், ஏசு அல்லா போன்ற இல்லாத ஆண்டவர்களை மறுக்கும் நாத்திகரான Richard Schoeningகளை தமிழ் இந்து தளம் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பதையும் புரிந்துகொள்கிறேன். 😉 !!

  81. //களிமிகு கணபதி
    26 September 2010 at 3:39 pm
    என் கருத்து:

    தங்களுக்குத் தரப்படும் போதனைகளைக் கேள்வி கேட்டு ஏற்கவோ மறுக்கவோ இந்துக்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அந்த சுதந்திரம் கிறுத்துவ, இசுலாமிய, கம்யூனிஸ குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு இல்லை.

    அதன் காரணமாகத்தான், அவர்களால் சுயமாகச் சிந்தித்துச் செயல்பட முடிவதில்லை. இது அவர்களது குறை இல்லை. அவர்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் இயங்கியலின் குணம் அது. இந்த வித்தியாசத்தைப் புரிதலின் உச்சத்தைத் தொட்டுள்ள இந்துக்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டாமா?//

    சுதந்திரத்தின் கர்வத்தில் வந்த வார்த்தைகள் தான் இவை.கிட்டதட்ட அடுத்தவரிடம் இல்லாத ஒன்றை (சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரம்),குறையை சுட்டி காட்டியது தவறுதான். நான் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
    அனால் அவர்கள் நம்மை தேவை இல்லாமல் இழிவுபடுத்தி பேசுவதுடன் ஒப்பிட்டால் நான் கூறிய கருத்து ஒன்றுமில்லை என்றே படுகிறது. எப்படியோ அவர்களை பற்றிய விமர்சனங்கள் விட நம்முடைய செயல்பாடுகள தான் முக்கியம் என்பதால் நான் இனிமேல் இதுபோன்ற கருத்துகளை பதிவதை விடுகிறேன்.

    //ஒருவரை அவரது குழுவை வைத்து வெறுப்பது இந்துத்துவம் இல்லை நண்பரே. அது ஆபிரகாமியம்.//
    என்னை பற்றிய உங்கள் பார்வை தவறானது சார்.
    நான் எந்த வெறுப்பு எண்ணத்திலும் அப்படி கூறவில்லை, அவர்களில் சிலர் செய்யும் அட்டகாசங்களினால் சமீப நாட்களில் நான் அவர்களின் வலையில் படித்த வேதனையினால் வந்த கடுப்பின் நக்கலான வெளிப்பாடே தவிர, அவர்களினை வெறுக்கும் எண்ணம் உள்ளவன் நான் அல்ல. அவர்கள் அவர்களாக இருந்தாலும் நட்புடன் இருப்பதையே நான் விரும்புகிறேன். நாம் நம் எல்லைக்குள்ளும் அவர்கள் அவர்களுடைய எல்லைக்குள்ளும் அவரவர் உரிமைகளுடன் அடுத்தவரின் உணர்வுகளை மதித்து நட்புடனே வாழவேண்டும் என்பது தான் என் எண்ணம்,இக்கருத்தை நான் ஏற்கனவே இத்தளத்தில் பதித்திருக்கிறேன். இப்பவும் என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.
    நட்பு கரம் நீட்ட நம்மவர் பலர் இங்கேயே தாயராக இருந்தும் அவர்களின் ஏளன இலக்கர கேலி நக்கல் பேச்சுக்களுக்கு குறைவில்லாமல் நம்மை தாக்குவதிலேயே அவர்களின் மனம் மற்றும் செயல் தொடர்வதால் ஒரு சிறிய பதிலடி தானே ஒழிய, அவர்களை வெறுக்கும் எண்ணம் துளியும் இல்லை.
    எனக்கு பிற மத நண்பர்கள் நிறைய உண்டு, எப்படி வெறுப்பு எண்ணம் வரும்.
    அவர்கள் நமக்கெதிராக தவறு செய்யும் பொது கோபம் வருவதற்கு எல்லா உரிமையும் உள்ளவன்தான் நான்.

    பள்ளி நாட்களில் நான் இந்தியன், இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் என்று ஆரம்பிக்கும் உறுதிமொழியை நெஞ்சில் கை வைத்து தினமும் சொன்னது இன்னும் மறக்கவில்லை.

    நம்மை இந்த தாக்கு தாக்கும் பொது பதிலுக்கு சின்னதாக தாக்கிய ஒரு நக்கல் தாக்கு மட்டுமே.

  82. //பள்ளி நாட்களில் நான் இந்தியன், இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் என்று ஆரம்பிக்கும் உறுதிமொழியை நெஞ்சில் கை வைத்து தினமும் சொன்னது இன்னும் மறக்கவில்லை…நம்மை இந்த தாக்கு தாக்கும் பொது பதிலுக்கு சின்னதாக தாக்கிய ஒரு நக்கல் தாக்கு மட்டுமே.//

    இந்த கட்டுரையில் யார் யார் தாக்கினார்கள் நண்பரே… அதே உறுதிகொண்ட நெஞ்சில் கையை வைத்து யோசித்து சொல்லுங்களேன்…

    நான் ஆபிரகாமிய வர்க்கத்தான் என்பதில் பெருமை கொள்கிறேன்; அதுமட்டுமே இன்றைய உலகமுழுவதையும் வியாபித்துள்ள வர்க்கமாகும்; இஸ்ரவேலர், கிறித்தவர், இஸ்லாமியர் ஆகிய இம்மூன்று பிரதான மார்க்கங்களும் ஆபிரகாமின் வழிவந்தவையே;

    அரசியலில் வலதுசாரி இடதுசாரி என்று இருப்பதைப் போல மனுக்குலத்திலும் ஆபிரகாமியம் மற்றும் மற்றவர்கள் என்பது ஒருபோதும் தவிர்க்கமுடியாது; ஆனால் கொடுமை என்னவென்றால் பல்வேறு சடங்குகளைக் கொண்ட ஆபிரகாமிய வர்க்கத்தார் இந்துக்களை விமர்சிக்கின்றனர்; கல்லைச் சுற்றி வந்து வணங்கும் இஸ்லாமியர் (ஹஜ்) தாம் உருவமில்லாத இறைவனை வணங்குவதாகச் சொல்லிக்கொள்வதும் கிறித்தவர் மாதாவையும் தூதரையும் மரித்த புனிதர்களையும் வணங்கிக்கொண்டு கையில் அதனைக் கண்டிக்கும் பைபிளையும் வைத்திருப்பதும் மெய்யாகவே நகைப்புக்குரியது;

    இதில் யூதர் மாத்திரமே வித்தியாசப்பட்டு நிற்கின்றனர்; யூதருடைய சடங்குகளாக பைபிளில் சொல்லப்படுபவற்றையும் நம்மருகில் ஒரு இந்து செய்யும் சடங்குகளையும் உற்று நோக்கினால் பெரிய வித்தியாசம் ஒன்றுமிராது; எங்கே பிரிகிறோம் என்பதே புரியவில்லை..!

    ஆபிரகாமிய வழி வந்த நேரடி வாரிசுகளான யூதருடைய வாழ்க்கை முறையும் இந்துக்களின் வாழ்க்கை முறையும் ஏதாவது ஒருவகையில் ஒத்திருந்தாலும் இந்துக்களும் ஆபிரகாமிய வழிவந்தோர் என்ற அதிர்ச்சிகரமான உண்மையானது வெளிப்படும்;

    ஞானிகளுடைய இருதயம் உண்மையைத் தேடும்;
    அடையும் வரை உறங்காது.

  83. சில்சாம்,

    // இந்துக்களும் ஆபிரகாமிய வழிவந்தோர் என்ற அதிர்ச்சிகரமான உண்மையானது வெளிப்படும் //

    ஹை, இம்மாதிரியான மதமாற்ற முயற்சிகளை முன்பே கேட்டிருக்கேன். இதெல்லாம் சும்மா உடான்ஸ். “St. Thomas தான் இந்து மதத்தைத் தோற்றுவித்தார்.”, “வள்ளுவர் கிறித்தவர் தான்”. அப்புறம்? “மற்றீண்டு வாரா நெறி” என்று வள்ளுவர் கூறுகிறாரே. உங்கள் மதத்தில் “மறுபிறப்பு” என்பதெல்லாம் கிடையாது.

    சார், உங்கள் பிரச்சாரம் ஒன்றும் தெரியாத பேதைகளிடம் வேண்டுமானால் செல்லும். அறிவாளிகள் ஏற்க மாட்டார். கிறித்தவம் தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டு முன்பு தோன்றிய சங்க இலக்கியங்களைப் பார்த்தாலே தெரியும், அதில் இந்து மதத்தின் வேர் கெட்டியாக உள்ளது என்று தெரிய வரும்.

    //அதுமட்டுமே இன்றைய உலகமுழுவதையும் வியாபித்துள்ள வர்க்கமாகும்//

    இல்லவே இல்லை. கொசு வர்க்கமும் கரப்பான்பூச்சி வர்க்கமும் கூட தான் உலகம் முழுவதும் வியாபுத்துள்ளது.

  84. chillsam
    //27 September 2010 at 12:51 am

    //பள்ளி நாட்களில் நான் இந்தியன், இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் என்று ஆரம்பிக்கும் உறுதிமொழியை நெஞ்சில் கை வைத்து தினமும் சொன்னது இன்னும் மறக்கவில்லை…நம்மை இந்த தாக்கு தாக்கும் பொது பதிலுக்கு சின்னதாக தாக்கிய ஒரு நக்கல் தாக்கு மட்டுமே.//

    இந்த கட்டுரையில் யார் யார் தாக்கினார்கள் நண்பரே… அதே உறுதிகொண்ட நெஞ்சில் கையை வைத்து யோசித்து சொல்லுங்களேன்…///

    அன்பு சில்சம்

    நீங்கள் செய்யும் தாக்குதல்களை ஒப்பிட்டால் இது ஒரு மிக சிறிய பதிலடி தான். அதுவும் இதனை எதிர்த்தே பல இந்து நண்பர்கள் கருத்து கூறியுள்ளதை மறந்து விட்டு பேசாதீர்கள். எவ்வளவு அடித்தாலும் எதுவும் செய்யாமல் பொருத்து கொள்ள வேண்டும் என்பதல்ல நான் எடுத்த உறுதி மொழியும்.
    கருத்தை தெளிவாக விளங்கி கொள்ளுங்கள் சகோதரன் என்பதற்காக என்ன செய்தாலும் பொருத்து கொள்ள வேண்டும் என்பது அல்ல,எல்லை மீறி நம்மிடம் வம்பிழுத்து பொறுமை மீறும் போது எதிர்க்க வேண்டியது அவசியமாகிறது.

    பாரத போர் கூட பொறுமையின் எல்லை தாண்டிய பிறகு நடத்த பட்டது தான்.
    இன்றும் நீங்கள் சகோதரரே ஆனால் பங்காளி சண்டை வெகு இயல்பே.
    இந்த கட்டுரையின் முதல் பகுதியின் முதல் வரியை படிக்கவில்லையா? அது விளக்குகிறது இந்த கட்டுரை இங்கே பிரசுரிக்க பட்டதின் காரணத்தை இந்துக்கள் தெரிந்து கொள்ளமட்டுமே என்று, உங்களவர்களை மதம் மாற்ற அன்று என்று..கிழே பாருங்கள்.

    //இந்தக் கட்டுரை கிறிஸ்துவ மதத்தைப் பற்றியது. இது ஏன் இங்கே ‘தமிழ்ஹிந்து‘வில் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழலாம்.
    adam-and-eveதமிழ்நாட்டில் பரவியுள்ள கிறிஸ்துவ இஸ்லாமியக் கலாசாரத்தின் விளைவாக பல இந்துக்களும் ஆதாம் ஏவாள் கொள்கையை நம்புபவர்களாக இருக்கிறார்கள். //

    சகோதரரே உங்கள் கடவுளை வழிபாட்டை எந்த இந்துவும் தானாக விமர்சிக்க மாட்டன்.நீங்களே ஒத்துக்கொண்ட முரண் உங்களிடம் இருந்தும். எப்போதுமே உங்கள் ஆட்கள் மதம் மாற்றும் பொருத்து எங்களை இழித்து கூற ஆரம்பித்து அதற்கு கோபத்தில் உங்களிடம் உள்ள குறைகளை பதிலாக சுட்டி காட்டியிருப்பான்.

    //நான் ஆபிரகாமிய வர்க்கத்தான் என்பதில் பெருமை கொள்கிறேன்; அதுமட்டுமே இன்றைய உலகமுழுவதையும் வியாபித்துள்ள வர்க்கமாகும்; இஸ்ரவேலர், கிறித்தவர், இஸ்லாமியர் ஆகிய இம்மூன்று பிரதான மார்க்கங்களும் ஆபிரகாமின் வழிவந்தவையே;//

    இதிலே என்ன பெருமை உங்களுக்கு ? உலகில் உள்ள பெரும்பான்மை அடிமைகளில் ஒருவர் என்பதில் உங்களுக்கு பெருமையா? சகோதரரே நான் உங்களுக்காக வருந்துகிறேன்.
    விரைவில் உங்கள் அடிமை தளை உடைந்து நீங்கள் சுதந்திரமாக வாழ எம் (நம்) இறைவனை உமக்காக பிரார்த்திக்கிறேன்.

    இவை எவையும் நக்கல் அல்ல உண்மையில் ஒரு சகோதரனின் அடிமைத்தனத்தால் எனக்கு ஏற்ப்பட்ட மன வருத்தத்தால் வந்த உண்மையான வார்த்தைகள். நிச்சயம் நான் உங்களுக்காக பிரார்த்திப்பேன் நீங்கள் விரும்பாவிட்டாலும்.

  85. சகோதரர் என்று தான் சொன்னேன் இதற்கே இப்படி கேள்வி கேட்கிறீரே, அடித்தாலே மறு கன்னத்தை காட்ட வேண்டிய நீங்கள் ஏன் வழிய வந்து நீங்களாகவே அடிக்கிறீர்கள் எங்களை.
    அதனுடைய பதிலடிதான் நாங்கள் செய்யும் செயல்கள்.
    எங்காவது வீடு தேடி (அம்மா தாயே தர்மம் என்ற ரேஞ்சுக்கு) வந்து எங்கள் கடவுள் உத்தமர் உங்கள் இயேசு லூசு, கேனை, சாத்தன், என்று கூறி எங்களுடன் வந்து எங்கள் கூட்டத்தை நிரப்புங்கள் என்று அலைகிறோமா?
    மானம் கேட்டு வீடு வீடாக வந்து கட்சி கூடத்திற்கு ஆள் பிடிப்பது போல ஆள் சேர்க்கிறோமா?
    தெருவில் உள்ளவர்கள் அடித்து விரட்டிய பிறகும், அதற்கு சாதி சயத்தைபூசி பிரச்னை ஆக்கி குளிர் காயபார்க்கிரோமா?
    வெட்கமே இல்லாமல் ரோடு ரோடாக மைக் வைத்து கொண்டு ரோட்டில் போகும் அப்பாவிகளை எல்லாம் பார்த்து பாவிகளே என்கிறோமா?
    குழந்தை பிறக்கும் முன் இறந்து விட்டால் சொர்கமா? நரகமா? என்று கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல கூட தெரியாமல் ஏதேதோ சொல்லி உளறிக்கொண்டு மற்றவர்களுக்கு சொர்கத்துக்கு வழி காட்டுகிறோம் என்று பிதற்றுகிரோமா?

  86. //இதில் யூதர் மாத்திரமே வித்தியாசப்பட்டு நிற்கின்றனர்; யூதருடைய சடங்குகளாக பைபிளில் சொல்லப்படுபவற்றையும் நம்மருகில் ஒரு இந்து செய்யும் சடங்குகளையும் உற்று நோக்கினால் பெரிய வித்தியாசம் ஒன்றுமிராது; எங்கே பிரிகிறோம் என்பதே புரியவில்லை..!//

    ஆப்பிள் தமிழ் நாட்டில் எங்கே விளைகிறது? இந்தியாவிலேயே எத்தனை மாநிலங்களில் விளைகிறது? அது இந்தியாவுக்கு எப்போது வந்தது? 6000 ஆண்டுகள் முன்பு இந்த ஆப்பிள் இங்கே இருந்திருக்குமா? எவனோ ஒரு பாலஸ்திநியனோ,லெபனாநியோ, இஸ்ரலேனோ ஆப்பிள் தின்னது எப்டி
    அதற்கு முன்னரே தமிழ் சங்கம் வைத்து (முதல் தமிழ் சங்கம் ஆப்பிள் கதை எழுதுவதற்கு முன்னரே இருந்த ஒன்று ) தமிழ் வளர்த்த நமக்கு பாவம் கொடுக்கும்?

    இஸ்ரேல் பார்டர்ல வேணுமுன்ன அதிமனிதன் அப்ப தோன்றி இருக்கலாம். ஆனா அவன் நாகரீகம் வந்த அப்புறமா எழுதுன கதையை,அதற்கு முன்னே சங்க தமிழ் வளர்த்த முன் தோன்றிய மூத்த குடியிலே பிறந்த நாம் ஏற்றுக்கொண்டு அந்த கூட்டத்துக்கு அடிமையா ஆகி விட முடியுமா? அப்டி அடிமை ஆகிவிட்டு அந்த அடிமைத்தனத்திற்கு பெருமை படும் இடத்திலே தான் சகோதரரே பிரிந்து விட்டோம்.என்ன இருந்தாலும் நாம் முன் தோன்றிய மூத்த குடி ரத்தங்கள்.உணர்ந்து திருந்தி உடனே வாருங்கள், நாங்கள் காத்திருக்கிறோம்.

    ஆப்பிள் பற்றியே தெரியாதவனுக்கு ஆப்பிளால் எப்படி பாவம் வரும் . பல மலைவாழ் மக்கள் ஆப்பிள் பார்த்ததே இல்லை.
    நாங்கள் பவம் என்று ஒப்புக்கொண்ட செயல் எதையும் செய்ய மாட்டோம், நீங்கள் ஏன் ஆப்பிள் தின்னதை பாவமுன்னு சொல்லிபுட்டு தின்னுகிட்டு இருக்கிறீர்கள்?
    ஒ அப்ப டெய்லி ஆப்பிள் ஐ தின்னு கிட்டு மன்னிப்பு கேட்டு பழகி கொண்டால் ,உண்மையிலே பாவம் எதாவது செய்தாலும் அதே போல மன்னிப்பு கேட்டு மனச தேத்திக்கலாம் அப்டிங்கரத்துக்காக கண்டுபுடிச்ச பாவமா? சரி புடிச்சதுதான் புடிச்சீங்க நம்ம ஊர்ல கிடைக்கும் வாழை போன்ற எளிதாக கிடைக்கும் பழமா புடிக்க கூடாதா?

    // இந்துக்களும் ஆபிரகாமிய வழிவந்தோர் என்ற அதிர்ச்சிகரமான உண்மையானது வெளிப்படும் //

    இது தான் எனக்கு உங்ககிட்டே பிடிச்சது, நல்லா சிரிப்பு வரமாறியே பொய் சொல்லுவீங்க.
    நம்ம மன்னிக்கவும் எங்க வழி வந்தவங்க தான் ஆபிரகாமிய வழிவந்தோர் என்ற உண்மை உங்களுக்கு ஒரு நாள் தெரிந்து அன்று வருத்தப்படுவீர்கள்.
    எப்டியோ நாம ரெண்டு பேருமே ஒரு வழின்னு ஒத்துக்கிடீங்கள்ள அப்புறம் என்ன அங்க இருந்து கிட்டு , அங்கேதான் பல விஷயம் சொதப்பலா இருக்கே. வாங்க திரும்பி ,
    பிடிச்ச அடிமைத்தன பீடை உங்களை விட்டு போகட்டும்.

  87. வணக்கம்
    ///ஞானிகளுடைய இருதயம் உண்மையைத் தேடும்;
    அடையும் வரை உறங்காது.///

    இதயம் உறங்கி விட்டால் யாரும் இங்கே பதித்துக் கொண்டு இருக்க முடியாது.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி உலகத்துக்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த நமது பாரத் மக்களே ஆபிரகாமிய வழித்தோன்றல்கள் என்று கற்பனை செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது சகோதரா? இப்போது மாத்திரம் அன்றி எப்போதும் உமது இதயத்திற்கு உண்மைகள் தெரியப் போவது இல்லை.

    உண்மைகள் என்று எதை ஞானிகள் கண்டு கொண்டார்களோ அவர்கள் அத்தனை பெரும் இங்கேதான் அதை கண்டுகொண்டார்கள் அந்த உண்மையாவது உமக்கு தெரியமா?

    ஏசுவே இங்கேதான் வந்து ஆன்மிகப் பயிற்சி பெற்றார் அதாவது அவர் காணாமல் போன சிலநாட்களில், என்று புது சாயம் அவருக்கு பூசியிருக்கிரார்களே அது பொய் என்றாலும் இந்திய ஆன்மிகத்தின் மீது ஆபிரகாமியம் வைத்துள்ள நம்பிக்கைதான் காரணம். அப்போதுதான் அதன் மார்கட் வேல்யூ எகிறும் என்று சமீபமாக அவர்கள் கண்டு பிடித்து உள்ளார்கள். இது உண்மை.

    உலகம் பூராவும் வியாபித்து உள்ளார்கள், ஒருசில வியாபாரங்கள் திடீரென்று இப்படித்தான் பயங்கர சூடு பிடிக்கும்.

  88. //அதுமட்டுமே இன்றைய உலகமுழுவதையும் வியாபித்துள்ள வர்க்கமாகும்//
    இன்னும் முழுவதும் வியாபிக்க வில்லை அதை நோக்கி பயணம் செய்கிறீர்கள் ஓரளவு நெருங்கிவிட்டீர்கள்,கிட்டத்தட்ட ஹிட்லர் நிலைதான் இன்றைய உங்கள் பயணம், ஹிட்லரின் பயணம் பூர்த்தி அடைந்ததா? அவன் நிலை என்ன ? அதிகாரத்தால் உலகம் முழுதும் ஆள நினைக்கும் மனிதன் ஆனலும் குழு ஆனாலும் அதன் முடிவு ஹிட்லரை போல் தான் இருக்கும்.

  89. HINDUISM BELIEVE IN ”ATHMA (SOUL), KARMAS (GOOD OR BAD DEEDS), JANMA ( REBIRTH OR REINCORNATION) AND MOKSHA ( FINAL SALVATION WITH GODHOOD). SO WITH THIS CONCEPT, HINDUS CAN EXPLAIN TO THE REASONS FOR INEQUALITY, INEQUITY, VARIATION AND SOCIAL DISPARITIES IN OUR SOCIETY. BUT FOR CHRISTIANITY THEY DO NOT BELIEVE IN – KARMA AND JANMA ( REBIRTH). SO THEY POTRAY AN EVIL FORCE AS ”SATAN” TO CREAT THE ABOVE INEQUALITY AND VARIATION IN SOCIETY. WHO IS THIS SATAN ? IF YOU REFER XTINAITY BOOKS, THE SATAN WAS CALLED AS ” LUCIFIER” A MUSICIAN IN THE COURT OF FATHER GOD IN THE GARDEN OF EDEN WHO PERSUADED ADAM AND EVE TO TASTE THE FRUIT IN THE TREE WHICH WAS THE FIRST SIN COMMITTED BY THEM AGAINST GOD WISH WHO TOLD EVERYONE THAT NONE SHOULD PLUCK THE FRUIT FROM THE TREE. BUT LUCIFIER WHO WANTED TO TEST THE POWER OF GOD, MADE ADAM AND EVE TO TASTE THE FRUIT.
    NOW WHO IS THIS LUCIFIER ( SATAN), LUCIFIER IS CALLED AS MORNING STAR AND EVENING STAR -ONLY VENSUS APPEARS IN THE MORNING AND EVENING AS BRIGHT STAR. SO VENUS – SUKRACHARIAR, THE GURU OF ASURAS WHO GIVE ADVISES TO ASURAS TO WORK AGAINST THE GODHOOD. SO LUCIFIER WAS THROWN OUT OF HEAVEN BY GOD AND LUCIFIER FELL IN THE EARTH TO BECOME A ”SATAN ‘

    NOW IF YOU SEE BIBLE GENISIS, MANY VERSES CALL JESUS AS ” MORNING STAR” AND MANY VERSES OF LUKE CALLED JESUS AS ” EVENING STAR ” SO INVARIABLY JESUS IS NONE BUT LUCIFIER THE OTHER NAME OF SATAN. SO JESUS IS SAID TO BE THE SON OF GOD AND ALSO ACT AS ”SATAN ”

    CHRISTIANITY IS FULL OF FALSE AND CONTRADICTION IN ITS THEORY. PITY MANY WHO HAVE NOT READ THE BIBLE ARE BRAIN WASHED BY MISSIONARIES TO FOLLOW THIS SATAN RELIGION AND THUS THE FOLLOWERS BECOME AS ” SINNER”

  90. //////////அவர் வேறொரு ஆதாம் ஏவாளை- பரிசோதனையில் வெற்றிபெற்றிருக்கக்கூடிய ஆதாம் ஏவாளை- உருவாக்கியிருக்கவேண்டும். மற்றொருவர் எல்லா ஆதாம்-ஏவாள்களும் பரிசோதனையில் தோற்றிருப்பார்கள் என்று சொல்லலாம். அப்படியென்றால், மனிதர்களை உருவாக்கும் வடிவமைப்பிலேயே தவறு இருக்கிறது என்பதே பொருள்///////////

    எந்திரன் ரஜினிகாந்த் ரோபோ மனிதனை உருவாக்கி பின்னர் தன் சீனியர் பொறாமையால் பல துன்பங்கள் படுவாரே, அது போல கர்த்தருடைய சீனியர் (அதாங்க லுசிபார் பாம்பு) எதாவது செய்து ப்ரோக்ராமை மாற்றி வைத்திருக்குமோ என்னவோ.
    பாவம் கர்த்தர் சரியா தான் சொன்னதை செய்யும் படியான ப்ரோக்ராமை தான் கொடுத்திருப்பார் மனிதனுக்கு. அவரோட சீனியர் தான் ராங் கமண்ட்ஸ் கொடுத்து குழப்பி கேடுத்துடுசு, அப்புறம்தான் கர்த்தரும் ரஜினி போல தான் உருவாக்குன மனித பொம்மையை கொல்லாமல் ஒரு சாபத்தோட விட்டுபுட்டாறு,

    உண்மையிலேயே ரொம்ப இரக்கமுள்ள அன்புள்ள கடவுள் அதனால் தான் கொல்லாம சின்னதா ஒரு பாவமும் ஒரு சாபமும் ??????? கொடுத்து விட்டு விட்டார்.

  91. கிறிஸ்தவர்கள் யாரையோ கும்பிட்டும் அது என்னுடைய பிரச்சனை இல்லை. எனது அலுவலகத்தில் ஒருவர் வலுகட்டாயமாக(ஆபிரகாமியவாதி) உங்களுக்கு ஏன் பல கடவுள்கள் ( முப்பது முக்கோடி தேவர்களை எந்த ஆங்கில மடையனோ அத்துணை கடவுள்கள் என்று மொழி மற்றம் செய்துருப்பன் போல ) என்று அதையே கேட்டு சித்ரவதை. ஹிந்து மதத்தில் அறிவியல் பூர்வமாக எதுவும் இல்லையாம்.
    இந்த கொடுமைகளுக்கு ஒரு FAQ போன்று எதாவது வெளியிட முடியமா?

    எனக்கு தெரிந்த பதில்கள இதை தான் சொன்னேன் … எங்களிடம் பல தெய்வங்கள் உள்ளன அனால் இந்த காலத்திலாவது கிருஷ்ணா பக்தர்களும் , முருக பக்தர்களும் கொன்று குவிப்பது இல்லை…. அனால் ஒரே கடவுளை கும்பிடுவதாக சொல்லும் யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் அடித்து கொள்வது ஏன்? ஏன் உங்கள் கடவுள் மட்டும் ஓவரு இறை தூதரிடம் எதையோ ஒரு விடயத்தை பாதி பாதி சொல்லி அனுப்புகிறார்.

    கௌரவர்கள் நூறு பேரு எனபது அபத்தத்தின் உச்சசமாம்…. ஆனால் மேரி கன்னி எனபது சரியான ‘லாஜிக்’ ஆம் . அப்போது அவள் குழந்தை இயேசு அவளின் வாந்தியா ?

  92. //இந்த கொடுமைகளுக்கு ஒரு FAQ போன்று எதாவது வெளியிட முடியமா?//

    There are seven volumes of Deivathin Kural which is the collection of the upanyasams of Kanchi Mahaswamigal. It’s available in Tamil, English and various other languages. It is more than sufficient for most of us to understand the Hinduism’s values and practices. FAQs are too small to cover the entire gamut of our Sanatana Dharma.

  93. பாவத்தின் சம்பளம் மரணம். இது அவர்கள் தேவனின் வாக்கு. ஆனால் ஞான ஸ்நானம் வாங்கி,தினமும் சர்ச்சுக்கு போய் காணிக்கை கொடுத்து, பாதிரியிடம் பாவ மன்னிப்பு பெற்றுவரும் இவர்களில் ஒருவரேனும் மரணமில்லாமல் இருகின்றனரா? இவர்கள் கொள்கைப்படி மரணமடையும் ஒவ்வொரு கிறிஸ்துவனும் (கல்லறையில் புதைக்கப்பட்ட அனைவருமே) பாவிதானே? இவர்கள் சொல்கின்றனர் பாவிகளே மனம் திரும்புங்கள் என்று? இதுதான் சாத்தான் வேதம் ஓதுவதோ?
    அவர்களை பொருத்தமட்டில் அது உண்மையே. ஏனெனில் அவர்கள் ஆண்டவர் முன்னரே ஆதாம் ஏவாளிடம் “என் வார்த்தையை மீறாதே” என ஓதி இருப்பின் அவர்களும் பிழைத்து இருப்பரே. பாவம் அவர் என்ன செய்வார்? சாத்தான் ஓட்ட பந்தயத்தில் அவரை வென்று விட்டான் போலும்!
    முதலில் படைத்த மக்களை பாவத்தில் விழவைத்து பின் ஒரு மகனை படைத்து பலியிட்டு தன் இரத்த வெறியை தீர்த்து கொண்ட “கருணை” உள்ளவர் !? அல்லவா அவர்.அதனால் தான் அவரிடம் தினமும் “தயவாயிரும் சுவாமி,தயவாயிரும்” என மரண ஓலம் இடுகின்றனரோ?.
    ஆஹா என்னே “ஒப்பற்ற மலடி பெற்ற மகன் ஆகாய தாமரையை ஆமை ஒட்டு மயிர் கம்பளத்தில் எடுத்து வந்தானாம்” ஆகவே பாவிகளே இதனை நம்புங்கள். தேவனாலே இரட்சிக்க படுவீர்கள். அல்லேலுயா? அல்லேலுயா? அட கர்மமே இதும் ஒரு பிழைப்பா?
    ( பாவிகள் மட்டுமே நம்ப வேண்டிய மதமோ? அந்த மதம் நமக்கு தேவை இல்லை புண்ணியம் செய்த எல்லோரும் நம் சனாதன தர்மத்தில் இருங்கள்)

  94. படு வெண்டலையில் பலிகொண்டுழலும் பிதா,சிவபெருமானே உண்மையான இறைவன்..மலையென்று ஒன்று இருந்தால்,மடுவென்று ஒன்று இருக்கும்,அந்த மாமலையே சிவபெருமான்,மற்றவை பாழ் மடுவே…ஆதாம் ஏவாள் என்பது,முண்டக உபனிஷதிலுள்ள ஒரு கதையை திருடி,விவிலியத்தில் புகுத்தியது…இந்த உபனிஷதில்,இரண்டு பறவைகளில் ஒன்று பிப்பிலி பழத்தை சாப்பிட்டது….இந்த கதைக்கு பின்னால் ஒரு பெரிய தத்துவமே இருக்கிறது.ஆனால் விவிலியம் இதை திருடியதே தவிர,ஆதாம் ஏவால் கதைக்கு பின் ஒரு தத்துவமுமில்லை…கிருஸ்துவர்களுக்கு திருட மட்டுமே தெரியும்,தத்துவத்தை பற்றி தெரியாது.அடுத்து,நோவா(noah) என்பது பாகவத புராணத்திலிருந்து திருடியது….இந்த புராணத்தில்,வைவஸ்வத மனுவை ,விஷ்ணு ஒரு பிரளயம் வரப்போவதாக எச்சரித்து,ஒரு பெரிய படகை கட்டி அதில் ,பலரை காப்பாற்றி கொள் என்றார்….இன்னும் பல திருட்டுகளையும் கிருஸ்தவம் புரிந்திருக்கிறது…..

  95. செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் – திரு நள்ளாறு சனி பகவான்

    செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் – திரு நள்ளாறு சனி பகவான்

    இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி
    வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு…என்று
    பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
    சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின்
    குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
    ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க
    ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில்
    ஏற்படுவதில்லை.
    இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி
    சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.
    கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது
    இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.

    எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில்
    உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர் கோயிலுக்கு நேர்
    மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள்
    …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. …ஒவ்வொரு
    நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத
    கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2
    வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும்
    இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக
    இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள்
    இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது
    ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும்
    ஏற்படுவதில்லை.
    இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான்
    இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள்
    உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள்
    என்பது இதன் மூலம் புலனாகிறது.
    இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விலிருந்து பல முறை திருநள்ளாற்றிக்கு
    நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி
    உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக்
    கும்பிட்டு வழிபட்டனர்.
    இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள்
    திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே
    இருக்கின்றன. இதைப் பற்றிய தகவல்கள் ஜூனியர் விகடனில் 2005 -06 வாக்கில்
    , வெளிவந்தது.
    நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை..?


    Cheers,
    SAKTHI

  96. முதல் பாவமும் அதனைத்தொலைக்க இயேசுவே இயேசுமட்டுமே வழி என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை. முதல் பாவம் என்பது தர்க்க ரீதியுலும் அறவியல் அடிப்படையிலும் ரிச்சர்ட் ஷேனிக் (Richard Schoenig) அவர்களால் தகர்க்கப்பட்டிருக்கிறது. அவரது கட்டுரையை கோபால் அவர்கள் நன்கு மறுத்திருக்கிறார்.
    இது போன்று தொடர்ந்து அறிவார்ந்த கட்டுரைகளை படைத்து தமிழ் கூறும் நல்லுலகில் விதைக்கவெண்டும். கிறிஸ்தவ நண்பர்கள் எழுப்பிய வினாக்களுக்கு நல்ல விடயிருத்தவர்களும் பாராட்டுக்குரியவர்களே.
    சனாதன தர்மத்தில் நம்பிக்கையாளன் என்றமுறையில் விவிலியத்தை வாசித்ததில் ஷேநிக் கூறுவது உண்மையே.
    முதல் பாவம் என்ற நம்பிக்கை ஜெஹோவா என்ற யூதர்களின் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. தந்தை என்றாலும் ஜெஹோவா ஒரு சர்வாதிகாரி கொடுங்கோலனாக தான் எனும் அகந்தை நிறைந்தவனாக காட்டுகிறது பழைய ஏற்பாடு. ஆகவே மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவும் ஆண்டான் அடிமை என்பதாக அவர்கள் காண்கின்றார்கள். ஆனால் கூட ஒரு பழத்தினைக் கட்டளை மீறி உண்டது ஒரு பெரும் குற்றம் என்பதை ஏற்க இயலாதது. முதல் பாவம் கடவுளுக்கு கீழ் படியாமை என்பது அறிவார்ந்தவர்கள் ஏற்க இயலாது. சாதாரண பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தை தங்கள் செய்யக்கூடாது என்றதை செய்யும்ப்ஹோது அதனால் குழந்தைக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்று அஞ்சுவார்களே. தண்டனை கொடுத்தாலும் கடுமையிருப்பதில்லையே. இது அந்த ஜெய்ஹோவாவுக்கு தெரியவில்லையே. நம்மூர் கிறித்தவ நண்பர்களுக்கும் புரியவில்லையே. அந்தப்பாவம் இன்னும் மனிதசமுதாயத்தை தொடர்கிறது என்பதை ஏற்க்க இயலாது.
    முதல் பாவம் மட்டுமல்ல அதனை இயேசுவின் அவர் இறைமகன் என்பதால் அவரது இரத்தம் கழுவும், தீர்க்கும் என்பதும் நம்பமுடியாது. இயேசு மட்டுமல்ல எல்லா ஜீவர்களும் கடவுளுடைய அன்பான பிள்ளைகளே.
    சிவஸ்ரீ. விபூதிபூஷன்

  97. அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!’ ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே! ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள்.// விவேகானந்தரின் வீரம் மிகு வசனங்கள் …..எம் நெறியின் பெருமையை இன்றும் உலகறிய செய்கின்றது ……வாழ்க இந்து சமயம் …..வாழ்க சனாதன தர்மம்

  98. அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!’ ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே! ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள்.// விவேகானந்தரின் வீரம் மிகு வசனங்கள் …..எம் நெறியின் பெருமையை இன்றும் உலகறிய செய்கின்றது ……வாழ்க இந்து சமயம் …..வாழ்க சனாதன தர்மம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *