ஒரு தேசம், இரு உரைகள்

ந்திய தர்க்க சாஸ்திரத்தில் அருந்ததி நியாயம் என்று ஒரு கருதுகோள் உண்டு. அருந்ததி என்ற நட்சத்திரம் மிகச் சிறியது. வானவெளியில் அதைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதனால் அதற்கு அருகில் உள்ள பெரிய நட்சத்திரத்தைக் காட்டி, பிறகு படிப்படியாக சின்ன நட்சத்திரத்தை அடையாளம் சொல்வார்கள். பருண்மையிலிருந்து நுண்மைக்கு அறிவுபூர்வமாக இட்டுச் செல்லும் வழிமுறை.

வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்கள் பற்றிக் கூட நுண்ணுணர்வு கொண்டவர் தான் அவர். ஆனால் God of small things என்றே ஒரு ஆங்கில நாவல் எழுதி புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் சமீபத்தில் தில்லியில் ஆற்றிய உரையில் நியாயம் என்பது சிறிதும் இல்லை என்று இந்திய மக்களில் மிகப் பெரும்பான்மையினர் கருதுகிறார்கள்.

’காஷ்மீர் ஒரு போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை, அது தான் வரலாற்று உண்மை. பசியும் நிர்வாணமும் தாண்டவமாடும் இந்தியாவிலிருந்து (bhookhe nange hindustan) காஷ்மீரிகள் விடுதலை அடைய வேண்டும்.இந்தியாவின் அடக்குமுறைக்கான சாதனங்களாக தாங்கள் பயன்படுத்தப் படுவதை காஷ்மீரிகள் அனுமதிக்கக் கூடாது’.

arundhati_royதில்லியில் ஒரு பொது நிகழ்ச்சியில் காஷ்மீர் பிரிவினைவாதியும் தீவிரவாதியுமான சையத் அலி ஷா கீலானியுடன் ஒரே மேடையில் அமர்ந்து அவர் பேசிய மேற்கூறிய சொற்கள் அங்கு அமர்ந்திருந்த சட்டத்தை மதிக்கும் பல தரப்பட்ட இந்தியர்களையும், குறிப்பாக இஸ்லாமிய தீவிரவாதத்தால் காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாகி விட்ட காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரையும், கொதித்தெழ வைத்தன. அவர்கள் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்ப, காவலர்கள் உள்நுழைந்து அந்த தேசபக்தர்களை வெளியேற்ற, காவல்துறை பாதுகாப்புடன் அம்மணியின் பிரசாரம் இனிதே நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து, அவர்மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப் படலாம், அவர் கைது கூட செய்யப்படலாம் என்று செய்தி ஊடகங்கள் சொல்லத் தொடங்கின.

’ஸ்ரீநகரில் இருந்து இதை எழுதுகிறேன். சமீபத்தில் காஷ்மீர் பற்றி பொதுக்கூட்டங்களில் நான் சொன்ன கருத்துக்களுக்காக தேசவிரோகக் குற்றத்தின் கீழ் நான் கைது செய்யப் படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இங்குள்ள ஆயிரக்கணக்கானவர்கள் பல காலமாக சொல்வதைத் தான் நான் எதிரொலிக்கிறேன். எனது பேச்சை உன்னிப்பாகப் படிப்பவர்கள் அது நீதிக்கான அழைப்பு என்பதைப் புரிந்து கொள்வார்கள். உலகின் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்புகளில் ஒன்றின் கீழ் வாழ்ந்து வரும் காஷ்மீர் மக்களுக்காக நீதி கேட்கிறேன்.. தங்கள் மனத்திலிருப்பதைப் பேசும் எழுத்தாளர்களின் வாயை அடைக்கும் இந்த தேசத்திற்காக பரிதாபப் படுகிறேன். கார்ப்பரேட் ஊழல் பெருச்சாளிகளும், கொலைகாரர்களும் சுதந்திரமாகத் திரிய, நீதிக்காக பேசுபவர்களை ஜெயிலில் அடைக்கக் கோரும் இந்த தேசத்திற்காக பரிதாபப் படுகிறேன்’

என்று அடுத்த நாள் தனக்கே உரிய தார்மீக தளுக்கு மொழியில் அறிக்கை வெளியிட்டார் அருந்ததி ராய். எப்போது கைது வரும், எப்போது தியாகக் கிரீடத்தை சூடிக் கொள்ளலாம் என்று அவர் துடித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றியது.

மேலும், இந்த தேசத்தின் ஏழைகளிலும் ஏழைகளுக்காக (poorest of the poor) தான் குரல் கொடுப்பதாகவும் அவர் முரசறைகிறார். சக இந்தியர்கள் மீது தீராத வெறுப்பும் மதவெறியும் ததும்பி வழியும் முகங்களுடன் இந்தியக் காவல் படைகள் மீது கூலிவாங்கிக் கொண்டு கல்லெறியும் காஷ்மீரி லும்பன் கூட்டங்களை நாடு முழுவதும் தொலைக்காட்சியில் பார்க்கத் தான் செய்தது. நன்கு தின்று ஊட்டம் பெற்ற உடல்கள். நேர்த்தியான உடைகள். அகம்பாவமும் திமிரும் கலந்த பேச்சுகள். காலை எழுந்தவுடன் தெருவுக்கு வந்து நின்றுகொண்டு இந்தியா எங்களை நசுக்குகிறது என்று வெறிக்கூச்சல்கள். பல பத்தாண்டுகளாக காஷ்மீரிகளின் நம்பிக்கையைப் பெறவேண்டும் என்று இந்திய அரசு கோடிகோடியாகக் கொண்டு கொட்டும் பணத்தை (The Great Kashmiri Loot of India என்று ரிடீஃப் ராஜீவ் சீனிவாசன் ஒருமுறை எழுதியிருந்தார்) எந்த ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்த விடாமல் எப்போதும் இந்திய தேசிய எதிர்ப்பையும், வன்முறையையும் ஆறாமல் வைத்திருக்கும் பிரிவினைவாதிகள்.

இவர்களைப் பார்த்து நாம் ஏழைகளிலும் ஏழைகள் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டும் என்று அருந்ததி நினைக்கிறாரோ? மாறாக, இந்த நாட்டின் உண்மையான ஏழைகள் காஷ்மீரில் இல்லை. தோற்றத்திலேயே பரிதாபகரமாகக் காட்சியளிக்கும் வனவாசிகளும், வாழ்க்கையே ஒரு தினசரி போராட்டமாக உடலை உருக்கி உதிரத்தைச் சிந்தி வேலை செய்யும் உழைப்பாளிகளும் ஒரிஸ்ஸாவிலும், மத்தியப் பிரதேசத்திலும் ஜார்கண்டிலும், ஏன் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், பீகார் உள்ளிட்ட மற்ற எல்லா இந்திய மாநிலங்களிலும் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தங்கள் உழைப்பில் பசியாறி, கனவுகளைக் கண்ணில் தேக்கி தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் கோடிக் கணக்கான இந்திய கீழ் நடுத்தர வர்க்கத்து மாந்தர்கள் “ஏழைகள்” இல்லையா?

tamilnadu_poor_govt_school

அவர்கள் அடக்குமுறையின் கீழ் வாழ்வதாக நினைக்கவில்லை. பிரிவினை கோரவும் இல்லை. அவர்கள் விழைவது ஒன்றுபட்ட தேசிய வாழ்க்கையை, அது சாத்தியமாக்கும் அளப்பரிய வாய்ப்பு வசதிகளை, முன்னேற்றத்தை, வளர்ச்சியை. அவர்கள் வேண்டுவது உணவும், உடையும், கல்வியும், தொழில் வாய்ப்புகளும். சாதாரண பாமர மக்களின் இந்த சாதாரண பாமர முட்டாள்தனத்தை அருந்ததி ராய் போன்ற அறிவுஜீவி எழுத்தாளரால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? எனவே துப்பாக்கிகளும், துவேஷ பிரசாரங்களும், ரத்தக்களறிகளும் தான் அவர்களது மீட்புக்கு வழி என்று போதிக்கிறார். காஷ்மீர் பிரிவினைவாதத்தால் நாட்டின் வடக்கு மூலையில் மட்டும் தான் பிரசினை. மாவோயிச பயங்கரவாதம் தலையெடுத்தால் இந்தியா முழுவதுமே தீப்பற்றி எரியுமே. இதை விட இந்தியாவின் ஏழையிலும் ஏழைகளான மக்களுக்கு நல்லது என்ன இருக்க முடியும்?

அருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் (state), தேசத்தையும் (nation) வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும் என்ற கருத்து தான் உண்மையில் அவர் பிரசாரம் செய்வது. ’பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த மக்களை அவர்கள் விருப்பதிற்கு மாறாகப் பிடித்து அடைத்து வைத்திருக்கும் கூண்டு இந்தியா’ என்று இதற்கு முன்பு ஒருமுறை தன் உள்ளக் கருத்தை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

அரசு இயந்திரத்தின் திறமையின்மையையும், போலிஸ் அராஜகங்களையும், உள்ளூர் பிரசினைகளையும் குழைத்துக் கலக்கி, அதன்மீது தேசவிரோத பிரிவினை வாதத்தையும், இஸ்லாமிய மதவெறியையும், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தையும் அவியலாகக் கலந்து அப்பி ஒட்டுமொத்தமாக இந்தியா என்ற கருத்தையே தன் காழ்ப்புணர்ச்சிக்கு இலக்காக்கி துவேஷ பிரசாரம் செய்கிறார் அருந்ததி ராய். அவர் அடக்குமுறை என்று முத்திரை குத்தி வசைபாடுதை இந்த தேசத்தின் மண்மீது மட்டும் தான் நின்று கொண்டு அவர் செய்ய முடியும்.

இது கருத்துச் சுதந்திரத்தின் கட்டற்ற வெளிப்பாடு அல்ல, அதன் துஷ்பிரயோகம். இதற்குப் பெயர் நீதிக்கும் நல்வாழ்வுக்குமான குரல் அல்ல, கடைந்தெடுத்த அறிவுஜீவிக் கயமைத்தனம். அதனால் தான் அதே வார்ப்பில் உள்ள தேசவிரோதிகளும், அறிவுஜீவி கிரிமினல்களும் உடனடியாக இதற்கு ஒத்து ஊதுகிறார்கள்.

‘அருந்ததி ராய் சொல்வதைத் தான் நானும் நாற்பது வருஷமாக சொல்லி வருகிறேன். அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஆங்கிலத்தில் பேசும் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் என்பதால் அவர் சொல்வது இந்தியா மட்டுமல்ல உலக அளவில் கவனிக்கப் படுகிறது’ என்று புல்லரிக்கிறார் ஆந்திராவின் பிரபல நக்சலைட் பயங்கரவாதி வரவர ராவ். இந்திய வெறுப்பு பிரசாரத்தில் அருந்ததி ராயின் சக பயணி இவர். எம்.எஸ்.எஸ் பாண்டியன் என்ற தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக ”ஆய்வாளர்” சொல்கிறார் – “1962ல் அண்ணாதுரை தனிநாடு வேண்டும் என்றே முழங்கினார் – நேரடியான பிரிவினைக் கோரிக்கை அது.இப்போது அப்படியெல்லாம் பேசுவதே அபசாரம் (taboo) ஆகி விட்டது. காளைச்சாணம்! ஜனநாயகம் என்ற பெயரில் *இந்த விவாதம் கூட* செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது அக்கிரமம்” (இந்தியன் எக்ஸ்பிரஸ், 14 நவம்பர்,2010). இந்திய மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு மானியம் வழங்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் உட்கார்ந்து கொண்டு அவர் இதைப் பேசுகிறார்.

நல்லது. பாண்டியன் வீட்டில் தினந்தோறும் காலை எழுந்தவுடன் அவரும் அவர் மனைவியும் சேர்ந்து வாழலாமா வேண்டாமா என்ற விவாதம் ஒவ்வொரு நாளும் நடந்தால் தான் அது உண்மையான ஜனநாயக குடும்ப அமைப்பு என்று கருதுகிறார் போலத் தெரிகிறது. முதலில் அதை அவர் தன் வீட்டில் செயல்படுத்தத் தயாரா? வீட்டுக்கு ஒரு நீதி நாட்டுக்கு வேறோரு நீதியா?

அருந்ததி ராய்க்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புணர்வை நடுத்தர வர்க்க போலி பாவனை (middle class hypocricy) என்று வசைபாடுகிறார்கள் இந்த மேல்தட்டு, மேட்டிமைவாத அறிவுஜீவிகள்.

ஏனென்றால் நாட்டின் அமைதியிலும் நல்வாழ்விலும் அதிக அக்கறை கொண்டது இந்த நடுத்தர வர்க்கம் தான். இந்த மாபெரும் ஜன சமூகத்தில் வேதனைகளைச் சகித்துக் கொண்டு, அதே சமயம் தன் கனவுகளையும் உயிரோட்டத்துடன் வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு வர்க்கம் என்றால் அது தான். இந்த சமூகத்தின் சில்லறைத் தனமும் கையறு நிலையும் முட்டாள்தனங்களும் மட்டுமல்ல, இதன் நீதியுணர்வும் அறவுணர்வும் சாதனைகளுக்கும் உன்னதங்களுக்குமான பெருமையும் கூட பெருமளவில் நடுத்தரவர்க்கத்தைத் தான் சாரும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் அப்படித் தான்.

அருந்ததியின் உரையால் கடுப்படைந்திருந்த இந்திய உள்ளங்களில் பாரக் ஒபாமா இந்தியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை உடனடியாக ஒரு உவகையையும் ஒத்திசைவையும் உண்டாக்கியது ஆச்சரியமில்லை.

barack_obama2பொருளாதார, உலக அரசியல் ரீதியாக ஒபாமா விஜயத்தின் தாக்கம் என்ன, சாதக பாதங்கள் என்ன என்பது பற்றி நிறையவே பேசி விவாதிக்கப் பட்டு விட்டது. அதற்குள் போகவேண்டாம். தனது சர்வதேச அரசியல் நடவடிக்கைகளில், குறியீடுகளிலும் (symbolism), சமிக்ஞைகளிலும் (gestures) மிகவும் கவனம் செலுத்துபவர் ஒபாமா என்று கூறப்படுகிறது. எனவே இந்தியப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் சாராம்சம் என்ன என்று பார்க்கலாம். அந்த உரை ஒரு சம்பிரதாய நடைமுறையே என்றாலும் கூட வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதில் உள்ள நேர்த்தியும் பொருட்செறிவும் அதைத் தயாரித்தவரின் கைவண்ணமே என்றாலும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அரசின் முழு அங்கீகாரமும் அதன் மீது படிந்துள்ளது என்பதால் அது முக்கியமாகிறது.

”அறிவியலும், சிந்தனைத் திறனும் வளர்ந்த ஒரு பழம்பெரும் பண்பாடு. மானுட வளர்ச்சியின் மீதான அடிப்படை நம்பிக்கை. இந்த அசைக்க முடியாத அஸ்திவாரத்தின் மீது தான், சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடி உயர்ந்த அந்த நள்ளிரவு முதற்கொண்டு நீங்கள் தேசத்தைக் கட்டமைத்திருக்கிறீர்கள். இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக ஆகியிருக்கிறீர்கள்”.

இது வெறும் புகழுரை அல்ல. பெரும் வேறுபாடுகள் கொண்ட ஒரு தேசத்தின் ஜனாதிபதியாக ஒபாமா தன் மன ஆழத்திலிருந்தே இதைச் சொல்லியிருக்க வேண்டும் என்று எண்ண இடமிருக்கிறது.

மகாத்மா காந்தியைப் பலமுறை குறிப்பிட்டது அந்த உரை.

”காந்தி என்ற ஒருவர் தனது செய்தியை அமெரிக்காவுக்கும், உலகிற்கும் அளித்திருக்காவிட்டால், இன்று அமெரிக்க ஜனாதிபதியாக உங்கள் முன் நான் நின்றுகொண்டிருக்க முடியாது என்பதையும் நான் மனதில் கொள்கிறேன்”.

தனது சொந்த வாழ்க்கையை முன்வைத்து, உலகெங்கும் உள்ள அடக்கி ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்கான பேரொளியாக எப்படி “அடக்குமுறை தேசியமான” இந்தியா விளங்கி வருகிறது என்பதைச் சொல்ல ஒபாமா தவறவில்லை.

“இந்தியாவின் வலிமை, சொல்லப் போனால் இந்தியா என்ற கருத்தாக்கமே (the very idea of india) அனைத்து நிறங்களையும், சாதிகளையும், குழுக்களையும் அரவணைத்துக் கொள்வது தான் என்று நீங்கள் காட்டியிருக்கிறீர்கள். இந்த சபையே அந்தப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது. சமயங்களின் இந்தப் பன்முகத் தன்மையைத் தான் எனது சொந்த ஊரான சிகாகோவுக்கு நூறு வருடம் முன்பு வந்த புகழ்பெற்ற சுவாமி, விவேகானந்தர் என்ற அந்த சுவாமி சிலாகித்துப் பேசினார். புனிதமும் தூய்மையும் ஈகையும் உலகில் எந்த ஒரு திருச்சபையின் தனிச்சொத்தும் அல்ல; ஒவ்வொரு சமயமும் உயர்ந்த ஒழுக்கமும், பண்புகளும் கொண்ட ஆண்களையும் பெண்களையும் உருவாக்கியிருக்கிறது என்று அவர் சொன்னார்.”

இது தான் அமெரிக்காவின், உலகத்தின் பார்வையில் இந்திய தேசியத்தின் உண்மையான மதிப்பீடு.

”.. ஒன்றிணைந்த மானுடம் என்பதைக் கண்டறிந்த பிறகு, நாம் நேசிக்கும் லட்சியங்களை நிறைவேற்றுவது பற்றி நாம் யோசிக்கலாம். இந்தியர்களுக்கு நூற்றாண்டுகளாக வழிகாட்டி வரும் பஞ்சதந்திரம் என்ற கதைத் தொகுப்பில் ஒரு எளிய அறிவுரை உள்ளது. இந்தப் பேரவையின் நுழைவாயிலில் உள்ளே வருபவர்கள் ஒவ்வொருவரும் பார்க்கும் படி கல்வெட்டாக அதை வைத்திருக்கிறார்கள் – இது உன்னுடையது அது என்னுடையது என்பது சிறிய மனங்களின் கணக்கு. விசால இதயம் படைத்தவர்களுக்கு உலகமே அவர்களது குடும்பம்.”

நவீன ஆன்மிகவாதிகளின் பிரசங்கங்களில் நாம் அடிக்கடி கேட்கும் “வசுதைவ குடும்பகம்”- உலகமே ஒரு குடும்பம் என்ற மேற்கோளை அதன் சரியான இடம்பொருள் சுட்டி ஒபாமா குறிப்பிட்டார். இந்த மேற்கோள் பஞ்சதந்திரக் கதையில் ஒரு நரி சொல்லும் ராஜதந்திர உபதேசமாகத் தான் வருகிறது. ஆனால் உலக சகோதரத்துவத்துக்கான செய்தியும் உள்ளுறை பொருளாக இதில் உள்ளது. இந்தியாவுடனான அமெரிக்க நட்பு சீனாவையோ, பாகிஸ்தானையோ தனிமைப் படுத்தும் நோக்கில் இருக்காது, ஏனென்றால் அரசியலில் “உலகம் எல்லாம் ஒரே குடும்பம்” என்று குறிப்புணர்த்தக் கூட ஒபாமா எண்ணியிருக்கலாம். எதுவானாலும், பண்டைய இந்தியாவின் முதிர்ச்சியடைந்த அரசியல் ஞானத்தை அந்த இடத்தில் சரியாக மேற்கோள் காட்டியது பாராட்டத் தக்கது.

“நமது இணைந்த எதிர்காலத்திற்கான எனது நம்பிக்கை இந்தியாவின் புகழ்மிக்க கடந்தகாலத்தின் மீது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகை உருவாக்கி வரும் பண்பாட்டின் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பின் அடிப்படையிலானது. மனித உடலின் நுட்பங்களையும், நமது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் பற்றிய அறிவின் திறவுகோல் இந்தியர்களிடம் இருந்தது. நமது தகவல் யுகமே, ஏன் பூஜ்யம் என்ற எண் உட்பட, இந்தியக் கண்டுபிடிப்புகளின் மீது தான் வேர்விட்டு நின்று கொண்டிருக்கிறது என்று சொல்வது மிகையாகாது.”

timesless_indian_civilizationஇதையே நாம் சொன்னால் இந்துத்துவ புருடா என்று எள்ளி நகையாடுபவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.

ஒபாமாவின் உரை இந்தியாவை ஒரு அரசாட்சியாக மட்டுமல்ல, ஒரு தேசமாக, ஒரு வாழும் கலாசாரமாக, ஒரு பண்பாடாக (civilization) அணுகிப் பேசியது என்பதைக் கவனிக்க வேண்டும். மரங்களை வைத்து காட்டை எடைபோடுவது போல இந்திய அரசு அமைப்பின் ஊழல்களை மட்டும் வைத்து இந்தியா என்ற மகோன்னதத்தை அது மதிப்பிடவில்லை. நமது போலி மதச்சார்பின்மை அறிவுஜீவிகளுக்கு என்னென்ன கருத்தாக்கங்கள் கடும் மலச்சிக்கலை ஏற்படுத்துமேர் அவற்றை ஒவ்வொன்றாகப் போற்றிப் புகழ்ந்து ஒபாமா பேசியிருக்கிறார் என்று சொல்வது சரியாக இருக்கும்.

அருந்ததி ராயின் தேசவிரோத உரைக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி இணையத்தில் பெடிஷன்கள் மூலம் பிரசாரம் நடத்தப் பட்டது. அந்த நேரத்தின் உணர்ச்சி வசத்தில் அதில் நானும் உடனே கையெழுத்திட்டேன். ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கையில் அது தவறு என்று தோன்றுகிறது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்ட அரசின் நிலைப்பாடு, இப்போதைக்கு மிகச் சரியானது என்றே நினைக்கிறேன். கருத்து சுதந்திரத்தின் பதாகையைத் தூக்கிப் பிடித்ததற்காக ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கொடுங் கரங்களால் சிறைப்படுத்தப் பட்டவர் என்ற தியாகிப் பட்டம் பற்றியும், அவரது இலக்கியப் படைப்புகளை இப்போது யாருமே படிக்காத காரணத்தால் தவறவிட்ட சர்வதேச கவனத்தைத் திரும்பப் பெறுவதைப் பற்றியும் அருந்ததி ராய் கனவு கண்டிருக்கக் கூடும். அவரது அந்தக் கனவில் மண் விழுந்திருக்கிறது.

கருத்து சுதந்திரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் தீர்மானத்தில் (First amendment) வரையறுக்கப் பட்டுள்ளது. அதனை வடிவமைத்த சட்ட மேதை ஜேம்ஸ் மேடிஸன் அப்போது சொன்ன ஒரு கருத்து சிந்தனைக்குரியது – ’ஒரு சில நச்சுக் கிளைகளை வெட்டப் போய் நற்கனிகளை வழங்கும் மரத்தின் வீரியத்தை நாம் காயப் படுத்துவதைக் காட்டிலும், அவை கொஞ்சம் செழித்து வளர்வதை அப்படியே விட்டுவிடுவதே நல்லது’.

அருந்ததி நியாயத்தின் இன்னொரு பரிணாமம்?

**********

சுட்டிகள்: அருந்ததி ராய் உரை, ஒபாமா உரை

76 Replies to “ஒரு தேசம், இரு உரைகள்”

  1. Pingback: Indli.com
  2. // இது கருத்துச் சுதந்திரத்தின் கட்டற்ற வெளிப்பாடு அல்ல, அதன் துஷ்பிரயோகம். இதற்குப் பெயர் நீதிக்கும் நல்வாழ்வுக்குமான குரல் அல்ல, கடைந்தெடுத்த அறிவுஜீவிக் கயமைத்தனம். அதனால் தான் அதே வார்ப்பில் உள்ள தேசவிரோதிகளும், அறிவுஜீவி கிரிமினல்களும் உடனடியாக இதற்கு ஒத்து ஊதுகிறார்கள். //

    Emphatic & Very Well said.

    If you see, not all intellectuals are supporting Arundhati Roy. Ramachandra Guha had criticized her anti-India remarks recently. A big section of media is also against Ms Roy. If only the media takes the same kind of stand against all anti-India academics, it would be realy good!

  3. அருந்ததிராய் ஒரு அந்நிய கைக்கூலி … அவரை நம் மீடியாக்கள் கண்டுகொள்ளாமல் விட்டால் போதும் …

  4. திரு.ஜடாயு,
    கட்டுரையின் கடைசியில் அமேரிக்க அரசியல் சட்டத்தின் முதல்
    தீர்மானத்தைப்பற்றி எழுதியது அருமை.

    என்னை பொருத்தவரை, இந்த சட்டம் தற்பொழுதைய நிலையில்
    இந்தியாவிற்கு சரிவராது. அருந்ததி ராய்க்காக நான் கூற வில்லை.

    நம்பிக்கை சார்ந்த நம் கலாச்சாரம் இதற்கு முதல் தடங்கல். எந்த
    மதத்தைப்பற்றியும் இங்கு விமர்சிக்க முடியாது. அமேரிக்காவில் குரானை
    எரிப்பது உரிமை. அமேரிக்க அரசாலும் அதை தடுக்க முடியாது. வேண்டாம்
    என்று Requestதான் செய்ய முடியும். கிறிஸ்துவையும் மற்ற மதங்களையும்
    கெட்ட வார்த்தையில் கூட திட்டலாம். கிறிஸ்துவையும், கிருஷ்ணனையும்
    ஜட்டியில் வரைந்து கொள்ளலாம். Legalஆக கூறுவதென்றால்,
    “Death to Christians” என்பது அடிப்படை உரிமை.
    “Death to Bush” என்றால் அது குற்றம்.

    தற்பொழுதைய நிலையில் இந்தியாவால் இந்த நிலையை எட்ட முடியாது.
    பெரும்பாலானோர்க்கு சரியான தரத்தில் கல்வி, அதனால் ஏற்படும் சமூக
    முதிர்ச்சி, இவை ஏற்பட்ட பின் இந்த சட்டம் இங்கும் வரலாம்.
    அமேரிக்காவின் அந்த சட்டத்தை நம் குறிக்கோளாக வைத்து கொள்ள
    வேண்டும்.

    உதாரணமாக ஒரு எழுத்தாளர் அமேரிக்காவில் இப்படி பேசினால் அவரை
    ஒரு பயலும் மதிக்க மாட்டான். ஆனால் அப்படி பேச உரிமை உண்டு.

    அருந்ததிராய் பிரச்சினையை பொருத்தவரை நீங்கள் கூறியுள்ளது
    சரியே! அவரை தியாகியாக மாற்ற நம் அரசு ஒத்துழைக்க வில்லை.

    இது போன்ற விவகாரங்களில் “Case by Case” ஆக யோசித்து
    முடிவெடுப்பது சரியாக இருக்கும். Perfection கிடைக்காது. ஆனால்
    தற்போதைக்கு இதுதான் வழி.

    (அமேரிக்காவிலேயே இந்த சட்டம் பல சமயங்களில் துஷ்பிரயோகம்
    செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் இதுவரை அதற்கு உயிர் உள்ளது)

  5. அ . ராய் அம்மையாரே நாங்கள் புனிதமாகக் கருதும் நட்ச்சத்திரத்தின் பெயருடன் இப்படியெல்லாம் பேசாதம்மா.வேறு ஏதாவதொரு கழுதையின் பெயரை வைத்துக்கொண்டு பேசுமம்மா .

  6. ஜடாயு அவர்களே! நீங்கள் அமெரிக்க சட்டம், அமெரிக்க ஜனதிபதி அல்ல அல்ல அமெரிக்க அதிபர் ஆகியோரை மேற்கோள் காட்டி எழுதுகிறீர்கள். ஓபாமாவைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது தெய்வக் குற்றம் அல்ல அல்ல மார்க்சீயக் குற்றம். முற்போக்கு சிந்தனை என்பது அறவே உங்களுக்கு இல்லை என்பது எங்கலீயாவாதிகளின் ஏகோபித்த தீர்ப்பு. இனியும் நீங்கள் மார்க்சீய சிந்தனைகளை மறுப்பதும் இந்து மதத்தின் உயர்வுகளைப் போற்றுவதும் உங்கள் சமூகப் பொறுப்பைக் கேள்விக்குறிக்கு உள்ளாக்குவதோடு உங்களை பிற்போக்கு சிந்தனையுள்ள எழுத்தாளர் என்ற நிலைக்குத் தள்ளுகிறது.

    1962ல் சீனா இந்தியாவைத் தாக்கிய போது கொள்கை அடிப்படையில் சீனத்தை ஆதரித்தது கம்யூனிஸ்டுகளின் ஜனநாயக உரிமை. நேபாளத்துத் தீவிரவாதி புஷ்பகமல் தஹல்(எ)பிரச்சந்ந்தாவையும் அவனது கூட்டாளிகளையும் மார்க்சீய கம்யூனிஸ்டுகள் இந்தியாவில் அவ்வப்போது பதுக்கி வைத்துப் போராட்டத்துக்கு சகல வகைகளிலும் பெரிதும் உதவிய வரலாறு கம்யூனிஸ்டுகளின் கொள்கைப் பிடிப்பைப் பறைசாற்றும். இந்த உரிமை கம்யூனிச நாடுகளில் உண்டா என்று கேட்பது அறிவீனம். அப்படி உரிமைகளைக் கொடுத்து விட்டால மக்கள் கண்டபடி பேசி மார்க்சீயத்துக்கு எதிராக போய்விடுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மார்க்சீயமே நன்மை என்பதால் அதை எதிர்ப்பது குற்றம் என்பதைப் புரிந்துகொண்டு முற்போக்காகச் சிந்தியுங்கள்.

    அருந்ததி ராய்க்கு நட்சத்திரம் பார்ப்பது பூர்ஷ்வா மனப்பான்மை. இந்தியாவுக்கு எதிராக அவர் பேசுகிறார் என்றால் ஏன் பேசுகிறார் என்று பார்த்து அந்தக் காரணத்தைக் களையுங்கள். சோவியத் யூனியனே உடையவில்லையா? உலகம் என்ன அழிந்தா போய் விட்டது? பூர்ஷ்வாக்களின் பூட்ஸ் துடைக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகளின் கவலைகளுக்கு பதிலளிப்பது முற்போக்கில் முந்தி நிற்கும் எழுத்தாளர்களின் வேலையல்ல.

    மார்க்சீயம் மதங்களுக்கு எதிரானது, அதே சமயம் (அதாவது நேரம்)கிறிஸ்தவம் இசுலாம் போன்றவற்றை மக்கள் பின்பற்றுவது தனிமனித உரிமை. மதசார்பின்மை என்பது இந்து மதத்தைச் சாராது இருப்பதே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதற்கு மேலும் கேல்வி கேட்டால் நீங்கள் பிற்போக்கில் திளைத்த பூர்ஷ்வா என்று நாடு தூற்றும், வரலாறு சபிக்கும். வரலாற்றை ‘முறைப்படி’ எழுதுவோர் என்ற முறையில் இது மார்க்சீயவாதிகளின் அன்பு எச்சரிக்கை.

  7. Fantastic article !!

    The article clearly shows how an Indian will think when the pride of being Indian is hurt.

    It is unfortunate that even the great truths about our nation can only be said by some one from outside, and not by an Indian. Instead of Obama, if it is told by any Indian, then he would be branded as a hindutvavadi and suppressed. Thank god, it is said by Obama. 🙁

    If this is not cunning control of information by the protestant-marxists, what else is?

    Only a few great writers like Jatayu dares to tell the truth in a lucid manner. Kudos to him !!

  8. சிகப்பு சாயம் வெளுத்துபோய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இந்த சரக்கு உலகில் எங்கும் விலைபோகவில்லை என்பதுவே யதார்த உண்மை. 30 ஆண்டுகளுக்குமேல் ஆண்டுகொண்டு கல்கத்தாவில் கேவலம் இன்றும் கைரிக்க்ஷாகள் ஓடிக்கொண்டிருக்கிறது. சமுதாயசூழ்நிலையை மதநம்பிக்கை கெடுத்துவிடுகிறது என்பது சிகப்புசட்டையின் கொள்கை என்றால் எல்லா மதத்தையும் எதிர்கவேண்டும். இந்துமதத்தை மட்டும் எதிர்ப்பது பச்சை மடத்தனம்.

  9. பாலாஜி, அமெரிக்கர்கள் புனிதப் பசுவாக நினைக்கும் சில விஷயங்களைத் தொட்டால் அங்கும் தீவிர எதிர்வினை தான் – ஆனால் அரசு செய்யாது, ஊடகங்களும், வெகுஜன கலாசாரமுமே அந்த வேலையை செய்து விடும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அங்கு கருத்துச் சுதந்திரம் பெருமளவு மதிக்கப் படுகிறது என்று தான் சொல்லவேண்டும். ’இந்தியாவும் அந்த சட்டத்தை குறிக்கோளாக வைத்துக் கொள்ளவேண்டும்’ என்று நீங்கள் சொல்வதுடன் உடன்படுகிறேன்.

    // உதாரணமாக ஒரு எழுத்தாளர் அமேரிக்காவில் இப்படி பேசினால் அவரை
    ஒரு பயலும் மதிக்க மாட்டான். ஆனால் அப்படி பேச உரிமை உண்டு. //

    உண்மை. ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழ். இங்கு நன்கு மதிக்கப்படும் புள்ளிகள் அந்த ஒளிவட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு வேண்டுமென்றே இப்படிப் பேசுவார், அதைக் கண்டிக்க மாட்டார்கள், விஷக்கருத்து சமூகத்தில் பரவும். அது தான் வித்தியாசம்.

  10. ”காஷ்மீர், ஈழம், மாவோயிஸ்ட்டுகள்… என அனலடிக்கும் பிரச்னைகள் அனைத்திலும் நேர்மையின் பக்கம் நிற்கும் எழுத்துப் போராளி! ” – சமீபத்திய ஆனந்த விகடனில் அருந்ததி ராய் பற்றிய ஒரு பக்கக் கட்டுரையின் தலைப்பு! ஆனால் அதில் எங்கும் அவர் காஷ்மீர்/மாவோயிசம் பற்றி என்ன சொல்கிறார் என்ற தகவல் இல்லை.

    தேச விரோதக் கருத்துக்கு வெண்சாமரம் வீசி தனது வாசகர்களை ஏமாற்றும் விகடனைக் கண்டிக்க வேண்டும்.

  11. கட்டுரையில் குறிப்பிடப்படும் எம்.எஸ்.எஸ். பாண்டியன் என்பவர் பற்றிய ஒரு தகவல்.

    இவர் ஒரு தீவிர இவாஞ்சலிக்க கிறிஸ்தவர். சென்னையிலிருந்து செயல்படும் MIDS எனப்படும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் என்ற தேச விரோத இந்து விரோத ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியவர். பின்னர், மிஷனரிகளின் அழைப்பின் பேரில் சில ஆண்டுகள் அமெரிக்க கிறிஸ்தவப் பல்கலைக் கழகங்களில் பணியாற்றி இந்திய / இந்து வெறுப்புப் பிரசாரங்களை வழிநடத்தியவர்.

    இப்போது அமெரிக்கக் கிறிஸ்தவ நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் மூலம் அளிக்கும் நிதி உதவியுடன் இந்து மதத்துக்கும் இந்தியாவுக்கு எதிரான கருத்துப் போரில் ஈடுபட்டிருக்கிறார். இவரது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக உத்தியோகம் என்பது, அங்குள்ள இடதுசாரிகளை தீவிர கிறிஸ்தவத்தின் ஆதரவாளர்களாக வளைத்துப்போட அமெரிக்க கிறிஸ்தவர்களால் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பணி மட்டுமே.

    சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு இவருடைய மைத்துனர் ஆவார். இவருடைய மனைவி ஆனந்தி இன்னமும் சென்னை MIDS நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

  12. அருந்ததி ராய் போன்ற தேசவிரோத கருத்துக்களை பேசும் தேச விரோதிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.மேலும் கருத்து சுதந்திரம் என்பதற்கு அளவு கோல் நிர்ணயம் செய்ய வேண்டும். ஏன்னென்றால் யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் கேவலமாக பேசலாம் என்ற நிலை உள்ளது. இது போன்ற கருத்து சுதந்திரத்தால்தான் சில இந்து மத விரோதிகளும் சில இந்து மத துரோகிகளும் இந்து மதத்தை பத்தி மிகவும் கேவலமான வார்த்தைகளால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அசிங்கமாக விமர்சனம் செய்கின்றனர்.எனவே சமுக விரோதிகள் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கருத்து சுதந்திரத்துக்கு அளவுகோல் நிர்ணயிக்க வேண்டும்.

    (edited and published)

  13. Dear Jatayu,
    On behalf of millions of indians you have given a perfect answer through your article. Thank you for your sincearity.

    M.S.S. Pandian is a christian?. There are many christians hiding behind the Hindu name and speaking and doing all bad things. ( Near my town ( Paranghipettai in cuddalore district ) a teacher raped many girl children ( aged undr eight ) studying in his class but his name is an Hindu name. Immediately after getting this information my neibour a muslim blamed all hindus, indian culture and started preaching about importance of wearing burkha and all. Later we came to know the teacher is an christian but with a hindu name )

    Can anyone put a case in the court about this habit?. A christian should not use Hindu name..
    When they converted ( or ) christian by birth why they are keeping Hindu name?. They should use christian name only.

    In some cases they are keeping combination of hindu and christian name for example prabhu Alexander. They say prabhu in some places and Alexander in other places.

    Can Jatayu ( or ) Tamil hindu team can reveal the politics behind this Name issue.

    With Love and Regards,
    B. Murali Daran ( Jeddah , Saudi Arabia )

  14. அருந்ததி ராயும் அவரது கணவரும்
    மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினரின் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனராம்.

    https://www.dailypioneer.com/297320/Arundhati-Roy–Pradip-Krishen-grab-tribal-land-in-MP.html

    படிப்பது மூலதனம், அடிப்பது அடிமட்டத்தினர் வயிற்றில். வாழ்க இடதுசாரீயம்.

  15. அருமையான ஒப்பீட்டுக் கட்டுரை. ஜடாயுவுக்கு நன்றி. ‘அருந்ததி (அ)நியாயம்’ கட்டுரையில் தெளிவாகத் தெரிகிறது.

    எழுத்தாளர் ஜெயமோகன் ‘வார்த்தை’யில் எழுதிய ”எனது இந்தியா” கட்டுரை (https://www.jeyamohan.in/?p=685) அருந்ததி ராய்க்கு சரியான பதிலடியாக உள்ளது. நண்பர்கள் அதனையும் வாசிக்கலாம்.

    -சேக்கிழான்.

  16. அருந்ததி ராய் ஏழைகளுக்கான பிரதிநிதி என்று தன்னை காட்டிக்கொண்டாலும் காட்டுப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அவரது பங்களா அதை காட்டவில்லை https://www.dailypioneer.com/297320/Arundhati-Roy–Pradip-Krishen-grab-tribal-land-in-MP.html

  17. இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க சொல்வோர் மீது என்ன சட்டத்தைப் பாய்ச்சலாம்?

  18. // இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க சொல்வோர் மீது என்ன சட்டத்தைப் பாய்ச்சலாம்? //

    இந்த நாடு இந்து நாடு என்பது வரலாற்று, பண்பாட்டு, கலாசார ரீதியான சத்தியம். அது அரசியல் அறிவிப்பு அல்ல.

    சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – அதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா என்றார் பாரதி. சுவாமி விவேகானந்தரும், விவேகானந்தரும் எத்தனையோ முறை தங்கள் உரைகளில் Hindu Nation என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உங்கள் கணக்கில் அவர்கள் மீதெல்லாம் மரணத்திற்குப் பிறகு சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டுமோ?

    உளறுவதற்கும் ஒரு அளவு வேண்டும்.

  19. இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை இரு அரசு[State]என்று எங்குமே சொல்லவில்லையே

  20. இந்த நாடு இந்து நாடு என்பது வரலாற்று, பண்பாட்டு, கலாசார ரீதியான சத்தியம். அது அரசியல் அறிவிப்பு அல்ல.

    சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – அதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா என்றார் பாரதி. சுவாமி விவேகானந்தரும், விவேகானந்தரும் எத்தனையோ முறை தங்கள் உரைகளில் Hindu Nation என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உங்கள் கணக்கில் அவர்கள் மீதெல்லாம் மரணத்திற்குப் பிறகு சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டுமோ?
    \\

    அவர்கள் இருந்த போது Republic of India என்கிற இந்த நாடு இல்லை.பிடிரிட்டிசு சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக பிரிட்டிசு இந்தியா என்கிற ஒரு குடியிறுப்பு[காலணி] இருந்தது.பிரிட்டிசு இந்தியாவின் ஒரு பகுதியாக மியான்மர்,இலங்கை தீவின் தமிழர் பகுதி எல்லாம் கூட தான் இருந்தது

    Republic of India இன் சட்டதை எப்படி அது தோன்றும் முன்பு இருந்த ஒரு சாம்ராச்சியத்தின் சிறு பகுதி மிது செலுத்த முடியும்

    !!!!!!!!!!!!!!!!

    இன்று கோசாவில் எதாவது சட்டம் இயற்றினால் காலம் சென்ற யுகோசுலேசியாவில் யாரோ எந்த காலத்திலோ பேசியதற்கு தண்டனைத் தரமுடியுமா

  21. இலங்கைத் தீவை சிங்கள பௌத்த தேசம்[நாடு [country]வேறு தேசம் [nation]வேறு] அறிவித்தது போல இந்தியாவை இந்து தேசம் என்று அரசியல் சட்டத்தின் ஊடாக அறிவிக்க சொல்வார் மீது கட்டுரை ஆசிரியரின் நிலைப்பாடு என்ன என்று அடியேன் அறிய விரும்புகிறேன்

  22. //இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க சொல்வோர் மீது என்ன சட்டத்தைப் பாய்ச்சலாம்?//

    எந்தச் சட்டத்தைப் பாய்ச்சினாலும் மக்கள் மன்றத்தில் நிற்காது. இந்த மதசார்பற்ற வாதங்கள் B-Grade மேடைப்பேச்சு தவிர வேறெதற்கும் பயன் தந்ததாக வரலாறு இல்லை. இந்துவாக இருந்தால் என்ன வாழ வழி செய்கிறார்களா பார் என்பதே குஜராத் மக்கள் காட்டிய பாதை. பீகாரிகள் அதையே பின்பற்றுகிறார்கள். நிற்க.

    இன்னமும் அரபு நாடுகளில் ஹிந்துஸ்தானத்து முஸ்லிம்களை ஹிந்துக்கள் என்றே அழைக்கிறார்கள். ஹிந்துஸ்தானத்து மக்கள் ஹிந்துக்கள் என்பது உலக மரபு. பாரதத்தின் சநாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் மட்டுமே ஹிந்துக்கள் என்பது நடுவில் முளைத்த முட்டாள்தனம்.

    //இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை இரு அரசு[State]என்று எங்குமே சொல்லவில்லையே//
    ஒரு dejure அதிகார மையம் ஒரு defacto அதிகார மையம் என்று இரண்டு இருப்பது வாஸ்தவம் தான். அதற்காக இந்தியா இரு அரசு என்று அரசியல் சாசனத்தில் வேறு அறிவிக்கவேண்டுமா?

  23. //இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க சொல்வோர் மீது என்ன சட்டத்தைப் பாய்ச்சலாம்?//

    எந்தச் சட்டத்தைப் பாய்ச்சினாலும் மக்கள் மன்றத்தில் நிற்காது. இந்த மதசார்பற்ற வாதங்கள் B-Grade மேடைப்பேச்சு தவிர வேறெதற்கும் பயன் தந்ததாக வரலாறு இல்லை. இந்துவாக இருந்தால் என்ன வாழ வழி செய்கிறார்களா பார் என்பதே குஜராத் மக்கள் காட்டிய பாதை. பீகாரிகள் அதையே பின்பற்றுகிறார்கள். நிற்க.\\\

    இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை மதசார்பற்றது என்கிறதே.அதை ஏற்க மறுப்பது sedition[தேச துரோகம் அல்ல அரச துரோகம்] ஆகாதா.இதற்கு என்ன தண்டனை தரலாம்.

    ஒரு இந்து கட்சிக்கு வாக்களித்தால் மக்கள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க சொல்கிறார்கள் என்று ஆகுமா.அப்படி என்றால் தமிழ் நாட்டின் தி,மு,க `1960களில் வென்றதை வைத்து தமிழர்கள் மாநிலத்தன்னாட்சி கேட்டார்கள் என்று சொல்ல முடியுமா

  24. இன்னமும் அரபு நாடுகளில் ஹிந்துஸ்தானத்து முஸ்லிம்களை ஹிந்துக்கள் என்றே அழைக்கிறார்கள். ஹிந்துஸ்தானத்து மக்கள் ஹிந்துக்கள் என்பது உலக மரபு. பாரதத்தின் சநாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் மட்டுமே ஹிந்துக்கள் என்பது நடுவில் முளைத்த முட்டாள்தனம்.
    \\

    எனக்கு தெரிந்து இந்தியர்கள் என்று தான் வங்கதேசத்தவர்,இலங்கையர்,பாகிசுத்தானியரை எல்லாம் சில உலகநாடுகளில் அழைக்கிறார்கள்.அது பிரிட்டிசு இந்தியா என்கிற குடியிருப்பு அடையாளத்தின் நீட்சி.எப்படி ஆசியன் என்பது ஒரு நிலம் சார்ந்த அடையாளமோ அது போல. வேறு நாடுகளில் அவ்வாறு இந்திய துணைக்கண்டத்து மக்களையும் இந்திய குடியரசின் மக்களுக்கும் வேறுபாடு தெரியாமல் பேசுவதால் பாகிசுத்தானியருக்கும் வங்கதேசத்தவருக்கும் நேபாளிகளுக்கும் இந்திய குடியுரிமையை அளிக்க முடியுமா என்ன?

  25. இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை இரு அரசு[State]என்று எங்குமே சொல்லவில்லையே
    \\
    தட்டச்சு பிழை அது

    இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை ஒரு அரசு[State]என்று எங்குமே சொல்லவில்லையே என்று படிக்கவும்

  26. இந்தியா மதசார்ப்பற்றது என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது .அதை ஏற்க மறுத்தால் அது sedition[தேச இரண்டகம் அல்ல அரச இரண்டகம்] ஆகாதா?

    அப்புறம் அரச இரண்டகம் என்பது குடியுருப்பு[காலனி] ஆதிக்க காலத்து கோட்பாடு இல்லையா

  27. 1950ல் அரசியல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் மதசார்பற்ற நாடு என்கிற பிரகடனம் கிடையாது. அது இந்திராகாந்தி செய்த இடைச் செருகல். அந்த இடைச் செருகலை எடுத்துவிடச் சொல்வது குற்றமாகாது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சில் விவாதிக்கப்படத் தக்க விஷயம்.

    Sedition என்பது தேசத்தின் இறையாண்மைக்கு எதிராகவும், கலகம் விளைவிக்கும் வகையிலும், அமைதியான வாழ்வுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் பேசுவது எழுதுவது. LeT, SIMI, IM போன்ற அமைப்புகள் செய்வது sedition and consequent treason.

    அரசியல் சாசனத்தில் இடைச்செருகல்கள் தேவையா என்று கேட்பதும் அதை விலக்கிவிடச் சொல்வதும் sedition ஆகாது. That is an argument within the periphery of the constitutional setup. தேசத்தின் அரசியல் சாசனத்தைப் பற்றிய சட்டபூர்வமான விவாதம் செய்வதற்கும், தேசமே தேவையற்றது, இது தேசமே இல்லை என்று பேசுவதற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.

    The Constitution of India Part I, Article I states that “India, that is Bharat, shall be a Union of States”. அதாவது, அரசாங்கங்களின் கூட்டமைப்பு. கூட்டமைப்புக்கு எதிராகப் பேசினாலும் அதைச் சார்ந்த அரசாங்கங்களுக்கு எதிராகப் பேசியதாகத் தான் பொருள். சூசன்னா (எ) அருந்ததி ராய் அதைத் தான் செய்தார். தேசமே இல்லை என்பது அவரது வாதம். அது தான் sedition.

    சூசன்னா (எ) அருந்ததி ராய் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை இந்துக்கள் யார் மீதாவது சுமத்திவிட வேண்டும் என்கிற ‘Left over’ ஆர்வம் உங்களுக்கும் இருக்கிறது போலும்.

    //அவ்வாறு இந்திய துணைக்கண்டத்து மக்களையும் இந்திய குடியரசின் மக்களுக்கும் வேறுபாடு தெரியாமல் பேசுவதால் பாகிசுத்தானியருக்கும் வங்கதேசத்தவருக்கும் நேபாளிகளுக்கும் இந்திய குடியுரிமையை அளிக்க முடியுமா என்ன?//
    பக்கத்து நாட்டவர்க்கு குடியுரிமை தரமுடியாது. ஆனால் எல்லோரையும் இந்தியர்கள் என்பதால் குழப்பம் வருகிறது என்று இந்திய அடையளத்தை நீத்துவிட முடியுமா என்ன? அல்லது எந்த நாட்டையும் சாராத் துணைக்கண்டம் இது என்று தான் அறிவிக்க முடியுமா? இது என்றும் இந்தியத் துணைக்கண்டம் தானே?

    அது போலத்தான், பலதரப்பட்டோர் இருக்கிறார்கள் என்பதற்காக பாரம்பரியமான அடையாளத்தை அழிக்கக் கூடாது.

  28. இந்திய மத சார்பற்ற நாடு என்பதே இந்திரா வலிந்து கொணர்ந்த திருத்தம்.
    தமது அரசியல் நெருக்கடிகடியை நாட்டின் நெருக்கடியாக்கி மறுவாழ்வு தேட நினைத்த முயற்சியில் ஒரு அங்கம் இந்த secular கேலிக்கூத்து. தேவையானால் மீட்டும் மாற்றலாம். தேவை 2/3 பெரும்பான்மை. பார்க்க சுட்டி

    https://indiacode.nic.in/coiweb/amend/amend42.htm

  29. \\\\\\\\\வேறு நாடுகளில் அவ்வாறு இந்திய துணைக்கண்டத்து மக்களையும் இந்திய குடியரசின் மக்களுக்கும் வேறுபாடு தெரியாமல் பேசுவதால் பாகிசுத்தானியருக்கும் வங்கதேசத்தவருக்கும் நேபாளிகளுக்கும் இந்திய குடியுரிமையை அளிக்க முடியுமா என்ன?\\\\\\\\\\\\

    நடுவில் சுவர் போட்டு விட்டால் கயாமத் வரை தேசம் பிரிந்தே இருக்கும் என்று NATO & Allies ஜெர்மனி யை பிரித்தது சரித்ரம். அதே சுவர் பிளக்கப்பட்டு ஒன்றான ஐக்ய ஜெர்மனி திரும்ப வந்தது சரித்ரம்.

    அரேபியாவில், ஐரோப்பாவில் தேசம் தேசமாக ஊர் ஊராக தெருத் தெருவாக சித்ரவதை செய்யப்பட யஹூதிகள் மருவனமாகிய இஸ்ரேல் தேசத்தில் என்று உலகத்தில் மிகுந்த சுவையான த்ராக்ஷைகள் விளையுமோ அன்று உம் தேசம் மீட்கப் படும் என்று மொசெஸின் வசனத்தில் விச்வசித்து இஸ்ரேலை மிட்டது சரித்ரம்.

    அது போன்று பாகி ஸ்தானமும், பங்களாதேசமும் ஹிந்துஸ்தானத்துடன் இணையும். அன்று எம் சஹோதரர்களுக்கு குடியுரிமையும் கிடைக்கும்.

    குடியுரிமை இல்லாத பக்ஷத்திலும் ஹிந்துஸ்தானி நேபாளம் போவதும் நேபாளி ஹிந்துஸ்தானம் வருவதும் இங்கே சேவா வ்ருத்தியில் இருப்பதும் தங்களுக்கு தெரியாதா அன்பரே.

  30. அரேபியாவில், ஐரோப்பாவில் தேசம் தேசமாக ஊர் ஊராக தெருத் தெருவாக சித்ரவதை செய்யப்பட யஹூதிகள் மருவனமாகிய இஸ்ரேல் தேசத்தில் என்று உலகத்தில் மிகுந்த சுவையான த்ராக்ஷைகள் விளையுமோ அன்று உம் தேசம் மீட்கப் படும் என்று மொசெஸின் வசனத்தில் விச்வசித்து இஸ்ரேலை மிட்டது சரித்ரம்.
    \\

    நீங்கள் யூத மதத்தை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா

  31. அரேபியாவில், ஐரோப்பாவில் தேசம் தேசமாக ஊர் ஊராக தெருத் தெருவாக சித்ரவதை செய்யப்பட யஹூதிகள் மருவனமாகிய இஸ்ரேல் தேசத்தில் என்று உலகத்தில் மிகுந்த சுவையான த்ராக்ஷைகள் விளையுமோ அன்று உம் தேசம் மீட்கப் படும் என்று மொசெஸின் வசனத்தில் விச்வசித்து இஸ்ரேலை மிட்டது சரித்ரம்.

    அது போன்று பாகி ஸ்தானமும், பங்களாதேசமும் ஹிந்துஸ்தானத்துடன் இணையும். அன்று எம் சஹோதரர்களுக்கு குடியுரிமையும் கிடைக்கும்.

    குடியுரிமை இல்லாத பக்ஷத்திலும் ஹிந்துஸ்தானி நேபாளம் போவதும் நேபாளி ஹிந்துஸ்தானம் வருவதும் இங்கே சேவா வ்ருத்தியில் இருப்பதும் தங்களுக்கு தெரியாதா அன்பரே.
    \\

    ஆனால் 1931 வரை பிரிட்டிசு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த மியான்மர் ,இலங்கையின் தமிழர்பகுதிப் பற்றி எல்லாம் யாரும் எதுவும் பேசுவதில்லையே .ஒருவேலை அது எல்லாம் இசுலாமிய,கிறுத்துவ நாடாக இல்லாமல் பௌத்த இராணுவ அரச தீவிரவாத நாடாக இருப்பதாலா

  32. 1950ல் அரசியல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் மதசார்பற்ற நாடு என்கிற பிரகடனம் கிடையாது. அது இந்திராகாந்தி செய்த இடைச் செருகல். அந்த இடைச் செருகலை எடுத்துவிடச் சொல்வது குற்றமாகாது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சில் விவாதிக்கப்படத் தக்க விஷயம்.
    \\ஏன் 1950 இல் சட்டத்தில் இருந்த கருத்துகளைப்பற்றிக்கொண்டு மட்டுமே தொங்க வேண்டும்.அப்படிப்பார்த்தால் இந்திரா காந்தி என்கிற ஒரு காசுமீரி பண்டிதரின் காலத்தில் தான் இந்திய அரசியல் சட்டத்தில் ஆங்காங்கே இறையாண்மை,தேசிய ஒருமைப்பாடு என்கிற சொற்கள் எல்லாம் சேர்க்கப்பட்டன

    அப்புறம் இன்றைக்கே 500 வாங்கிக்கொண்டு மக்கள் வாக்களிக்கும் நிலை இருக்கும் போது ஆங்கிலேயர் வெளியேரும் முன் நடத்தப்பட்ட தேர்தலில் மக்கள் ,பிரதிநிதிகளை எந்த அழகில் தேர்ந்து எடுப்பர் என்பதும் தெரியவில்லை

  33. The Constitution of India Part I, Article I states that “India, that is Bharat, shall be a Union of States”. அதாவது, அரசாங்கங்களின் கூட்டமைப்பு. கூட்டமைப்புக்கு எதிராகப் பேசினாலும் அதைச் சார்ந்த அரசாங்கங்களுக்கு எதிராகப் பேசியதாகத் தான் பொருள். சூசன்னா (எ) அருந்ததி ராய் அதைத் தான் செய்தார். தேசமே இல்லை என்பது அவரது வாதம். அது தான் sedition.
    \\

    நீங்களே உங்கள் கருத்தில் முரண்படுகீறீர்.இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை ஒரு தேசம்[nation] என்று சொல்லவில்லையே.அரசுகளின் கூட்டமைப்பு[union of state]என்று தானே சொல்கிறது.

    அப்புறம் கட்டுரை ஆசிரியரே சொல்கிறார் அரசிடம்[state] சிக்கல் என்று .ஒரு அரசாங்கத்திடம்[government]இடம் சிக்கல் என்றால் அது ஆட்சி மாற்றத்தின் ஊடாக மாறலாம்.ஆனால் ஒரு அரசிடமே சிக்கல் என்றால் அது அவ்வளவு எளிதாக மாறிவிடுமா என்ன?

    உங்களுக்கு புரியும்படி சொன்னால்,பாகிசுத்தானில் இது வரை இல்லாத ஒரு புதுக்கட்சி ஆட்சிக்குவந்தால் அது மதசார்பற்ற நாடு ஆகிவிடுமா

    அப்புறம் 2/3 பங்கு பெரும்பான்மை இருந்தால் எந்த தீர்மானத்தையும் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றலமா.இந்துக்கள் என்று சொல்லப்படும் பல மததவர்களை ஒரே மததவர்களாக காட்டி 2/3 பெருமான்மயுடன் எதுவும் செய்துக்கொள்ளலாம்.ஆனால் இந்தியாவில் சிறுபான்மை தேசிய இனங்கள் தன்னாட்சி கேட்டால் கூட குற்றம்.இப்போது அசாமுக்கு தன்னாட்சி வேண்டும் என்றால் அவர்கள் இந்தியாவில் எல்லா இடங்களிலும் போட்டி இட்டு 2/3 பங்கு பெரும்பான்மைப் பெற்று ஆட்சி அமைத்து அசாமுக்கு அவர்களே தன்னாட்சி வழங்கிக்கொள்ள வேண்டும்.அப்படி தானே.

    கதை நன்றாக தான் இருக்கிறது

  34. நடுவில் சுவர் போட்டு விட்டால் கயாமத் வரை தேசம் பிரிந்தே இருக்கும் என்று NATO & Allies ஜெர்மனி யை பிரித்தது சரித்ரம். அதே சுவர் பிளக்கப்பட்டு ஒன்றான ஐக்ய ஜெர்மனி திரும்ப வந்தது சரித்ரம்
    \\

    யேர்மெனி ஒரு தேசம்.அங்கு ஒரு தேசம் ஒரு மக்கள் ஒரு மொழி ஆனால் ஒரு தேசம் 2 நாடாக பிரிந்துக்கிடந்தது

    ஆனால் இந்தியா என்கிற நாட்டினும் பல தேசங்கள் உள்ளன நாகாலாந்து மக்கள்,அசாமியர்,மராத்தியர்,தமிழர் என்று எல்லாம்

    இதில் தமிழர் இந்தியா ,இலங்கை என்று இரு வேறு அரசுகளின் கீழ் இருக்கிறார்கள், சீக்கியருக்கும் இது போல் தான் ,நாகாலாந்து மக்களுக்கும் இது போல் தான்.

    அப்புறம் பண்டைக்காலத்தில் இந்து மதங்கள் பரவிய இடம் எல்லாம் இந்தியா என்றால் இந்தோனேசியா,கம்போடியா,இலங்கை,மியான்மர்,பூட்டார்,நேபாளம்,மலேசியா,சிங்கப்பூர்,தாய்லாந்து மீது எல்லாம் படை எடுத்து இந்திய அரசு அதை தனக்கு கீழ் கொண்டுவந்துவிட வேண்டுமா

  35. 1950ல் அரசியல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் மதசார்பற்ற நாடு என்கிற பிரகடனம் கிடையாது. அது இந்திராகாந்தி செய்த இடைச் செருகல். அந்த இடைச் செருகலை எடுத்துவிடச் சொல்வது குற்றமாகாது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சில் விவாதிக்கப்படத் தக்க விஷயம்.

    Sedition என்பது தேசத்தின் இறையாண்மைக்கு எதிராகவும், கலகம் விளைவிக்கும் வகையிலும், அமைதியான வாழ்வுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் பேசுவது எழுதுவது. LeT, SIMI, IM போன்ற அமைப்புகள் செய்வது sedition and consequent treason.

    அரசியல் சாசனத்தில் இடைச்செருகல்கள் தேவையா என்று கேட்பதும் அதை விலக்கிவிடச் சொல்வதும் sedition ஆகாது. That is an argument within the periphery of the constitutional setup. தேசத்தின் அரசியல் சாசனத்தைப் பற்றிய சட்டபூர்வமான விவாதம் செய்வதற்கும், தேசமே தேவையற்றது, இது தேசமே இல்லை என்று பேசுவதற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.

    \\தேசம் வேறு அரசு வேறு என்ற கருத்து உடைய்வர்களாக இருக்கும் நீங்கள் ,ஒரு குறிப்பிட்ட மக்கள் இந்தியா என்கிற இந்த கூட்டமைப்பு அரசின் கீழ் வாழ பிடிக்கவில்லை என்று சொல்வது மட்டும் எப்படி தேச துரோகம் என்கிறீர்.அது கூட்டமைப்பிற்கு எதிரான துரோகம் என்று தானே அகீறது

    இங்கிலாந்தின் அரசியல் சட்டத்தை திருத்தி தானே பிரித்தானியாவால் கட்டமைக்கப்பட்ட குடியிருப்பான இந்தியாவிற்கு விடுதலை வழங்கப்பட்டது.அது போல தானே இந்தியாவின் அரசியல் சட்டத்தை திருத்தி காசுமீருக்கு விடுதலை தர வேண்டும் என்று அருந்தததி இராய் வாதிடலாம்

  36. // இங்கிலாந்தின் அரசியல் சட்டத்தை திருத்தி தானே பிரித்தானியாவால் கட்டமைக்கப்பட்ட குடியிருப்பான இந்தியாவிற்கு விடுதலை வழங்கப்பட்டது.அது போல தானே இந்தியாவின் அரசியல் சட்டத்தை திருத்தி காசுமீருக்கு விடுதலை தர வேண்டும் என்று அருந்தததி இராய் வாதிடலாம் //

    அருந்ததி ராய் என்ன வேண்டுமானாலும் வாதிடலாம்.. ஆனால், அது சரியா, தர்க்கபூர்வமானதா, இந்திய மக்கள் நலனுக்கு உகந்ததா என்பது தான் கேள்வி.

    பிரிட்டன் இந்தியாவை காலனியாதிக்கம் செய்து அடிமைப் படுத்தியிருந்தது, நீர் சொல்வது போல இந்தியா பிரிட்டனின் “குடியிருப்பு” அல்ல. ஆனால் காஷ்மீர் என்ற நிலப்பகுதியின் வரலாறும் பண்பாடும் இந்திய தேசியத்துடன் பின்னிப் பிணைந்தது. அது காலனியாதிக்கம் அல்ல. மகா அபத்தமான வாதம்.

    உங்கள் மறுமொழிகள் எல்லாவற்றிலும் இந்து வெறுப்பும், காலனியப் பார்வையும் தான் அடிநாதமாக உள்ளது.

  37. அருண் எண்ணிக்கை பலத்திலான அராஜகம் காஷ்மீரத்திலும் அரங்கேறுகிறது. அங்கிருந்து ஆரம்பிக்கிறீர்களா? அந்த அராஜகம் அரசியல் சாசனம் வரை நீண்டது. மேலும் இந்திய அரசியல் சாசனம் பெரிய விழுமியங்களை உள்ளடக்கியது என நான் கருதவில்லை.

    எண்ணிக்கை பலம் மொழி வழியும் நீள்கிறது. இதில் எல்லா இயக்கங்களும், குழுக்களும் இரட்டை நிலையையே காண்பிக்கின்றன. இதன் வெவ்வேறு பரிணாமங்களை பல வாதத்தினூடே காணலாம்.

    இதை மீறி சிந்திப்போர் உதிரிகளே.

  38. //இங்கிலாந்தின் அரசியல் சட்டத்தை திருத்தி தானே பிரித்தானியாவால் கட்டமைக்கப்பட்ட குடியிருப்பான இந்தியாவிற்கு விடுதலை வழங்கப்பட்டது.அது போல தானே இந்தியாவின் அரசியல் சட்டத்தை திருத்தி காசுமீருக்கு விடுதலை தர வேண்டும் என்று அருந்தததி இராய் வாதிடலாம்//

    பிரிட்டனுக்கு முழுதுமாய் எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. பல நீதிமன்றத் தீர்ப்புகள், அரசு ஒப்பந்தங்கள், பாராளுமன்ற மரபுகள், அரச பரம்பரை உரிமைகள் ஆகியன அடங்கிய தொகுப்புதான் பிரிட்டிஷ் அரசியலமைப்புச் சட்டம். இந்திய அரசியல் சாசனம் பிரிட்டானிய, அமெரிக்க, மற்றும் பல்வேறு அரசியல் சாசனங்களில் இருந்து ஆங்காங்கே சில கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டது எனும் போதும் பாரதீயப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது தான்.

    சட்டம் சம்பந்தப்பட்ட விஷய்ங்கள் மட்டுமல்ல, வரலாறாவது உங்களுக்குத் தெரிகிறதா என்றால் அதுவும் குறைகுடத்தின் கூத்தாட்டமாக இருக்கிறது. எது பற்றிப் பேசினாலும் விவரங்களை நன்கு தெரிந்து கொண்டு பேசுங்கள். என் பெயரை வேறு வைத்துக் கொண்டு………. இப்படி விவரங்கெட்டதனமாக உளறாதீர்கள்!!

  39. அருண் எண்ணிக்கை பலத்திலான அராஜகம் காஷ்மீரத்திலும் அரங்கேறுகிறது. அங்கிருந்து ஆரம்பிக்கிறீர்களா? அந்த அராஜகம் அரசியல் சாசனம் வரை நீண்டது. மேலும் இந்திய அரசியல் சாசனம் பெரிய விழுமியங்களை உள்ளடக்கியது என நான் கருதவில்லை.

    எண்ணிக்கை பலம் மொழி வழியும் நீள்கிறது. இதில் எல்லா இயக்கங்களும், குழுக்களும் இரட்டை நிலையையே காண்பிக்கின்றன. இதன் வெவ்வேறு பரிணாமங்களை பல வாதத்தினூடே காணலாம்.

    இதை மீறி சிந்திப்போர் உதிரிகளே.

    \\
    In US Senate,each state is given just 2 seats.The smallest state called Hawai has the same representation that the biggest state in the US has.But what is the power of the house of states in India?Do all states have equal representation?This unqual representation arises out of the fact that India doesn’t recognise a Tamil or Naga as a Tamil and Naga respectively.All are imposed with one single identity called Indian and when constituencies are formed,they are naturally formed based on the population of a region.So naturally Hindi speaking Up gets more representation in the parliament that TN.No need to speak about the representation available for the north east in the parliament.So in this system naturally the people from Hindi belt get an upper in all policy decisions.Why can’t each state be given equal representation in the parliament?The first step of Genocide of Eelam Tamils began with denial equal representation an muslims in the SL parliament by the majority Sinhalese.It will bepleasant to hear that all are Hindus,Indians.Lankan blah blah.But in Indian and SL kind of democracies where each ethnic group/state is not given equal representation is nothing but the tyranny of the majority on the minority

  40. ஆனால் காஷ்மீர் என்ற நிலப்பகுதியின் வரலாறும் பண்பாடும் இந்திய தேசியத்துடன் பின்னிப் பிணைந்தது. அது காலனியாதிக்கம் அல்ல. மகா அபத்தமான வாதம்.

    உங்கள் மறுமொழிகள் எல்லாவற்றிலும் இந்து வெறுப்பும், காலனியப் பார்வையும் தான் அடிநாதமாக உள்ளது.
    \\

    A friend told that sedition is a crime against the nation and not against the state.But at the first India is no where called a nation in our constitution.Moreover he told that any action or expression against the union is a thing against the states that form the union.By this statement that friend confirms on more thing too.

    That’s sovereignty of this union is th sum total of the sovereignty given to it by the 29 states.So why can’t the people of Kashmir reconsider about that when they have legal trump card called Instrument of Accession that promised autonomy to Kashmir and the final decision of the accession of Kashmir will be decided based the decision of the people of Kashmir

    I don’t think that Kashmir has the autonomy today that it had in 1950.I don’t think that the Indian state is no mood to conduct a referendum there nor the Pakistani state is ready to hand over Azad Kashmir to India so that the Indian state can’t give a lame excuse for not conducting a referendum

    It’s the people of kashmir who are suffering because of the polarised views of the Indian and Pakistani states

  41. / இங்கிலாந்தின் அரசியல் சட்டத்தை திருத்தி தானே பிரித்தானியாவால் கட்டமைக்கப்பட்ட குடியிருப்பான இந்தியாவிற்கு விடுதலை வழங்கப்பட்டது.அது போல தானே இந்தியாவின் அரசியல் சட்டத்தை திருத்தி காசுமீருக்கு விடுதலை தர வேண்டும் என்று அருந்தததி இராய் வாதிடலாம் //

    அருந்ததி ராய் என்ன வேண்டுமானாலும் வாதிடலாம்.. ஆனால், அது சரியா, தர்க்கபூர்வமானதா, இந்திய மக்கள் நலனுக்கு உகந்ததா என்பது தான் கேள்வி.
    \\

    While Independence act for independence of India the think that was taken in to consideration was the interests of Indians and not British

    So regarding Kashmir the interests of Kashmiris have to be taken

  42. //இங்கிலாந்தின் அரசியல் சட்டத்தை திருத்தி தானே பிரித்தானியாவால் கட்டமைக்கப்பட்ட குடியிருப்பான இந்தியாவிற்கு விடுதலை வழங்கப்பட்டது.அது போல தானே இந்தியாவின் அரசியல் சட்டத்தை திருத்தி காசுமீருக்கு விடுதலை தர வேண்டும் என்று அருந்தததி இராய் வாதிடலாம்- Sri Arun//

    This self- appointed cousel of Arundhati Rai should know that the UK does NOT have a single document that can be called constitution. Docements starting from age old magnacarta to the latest court judgements make directives to the state and the people. This enables excellent flexibility in governance, covering all aspects of running a people-friendly welfare government.
    -MALARMANNAN

  43. அதிகாரபூர்வமாக அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் இது ஹிந்துஸ்தானம்தான். இமயம் முதல் குமரி வரை காலங்காலமாக இங்கு வேரூன்றியிருப்பது ஹிந்து கலாசாரம்தான். காஷ்மீரம் என்ற பெயர்க் காரணமே கசியபரை முன்வைத்துத்தான். அது சைவ சித்தாந்தம் வரையறுக்கப்பட்ட பூமி. அதன் எதிரொலி ஹிந்துஸ்தானத்தின் தென்கோடியான தமிழகத்தில் கேட்டது. சமணமும் பவுத்தமும், ஏன், சீக்கியமும்கூட ஹிந்து கலாசாரத்தைப் பிரதிபலிப்பவையே. வெளியிலிருந்து வந்த முகமதியமும் கிறிஸ்தவமும் மட்டுமே இந்த பூமியுடன் ஒட்டாத கலாசாரத்தைக் கொண்டாடுபவை. சமய நம்பிக்கையின் அடிப்படையால் மட்டுமின்றி கலாசார அடிப்படையிலும் சிந்தனைப் போக்கிலும் ஒன்றான மக்கள் வாழும் நிலப்பரப்பான ஹிந்துஸ்தானத்தை ஒரே நாடு அல்ல என்பது அறியாமை.
    -மலர்மன்னன்

  44. The Constitution of India Part I, Article I states that “India, that is Bharat, shall be a Union of States”.
    இதன் பொருள் இந்தியா என்கிற பாரதம் பல மாநிலங்களின் ஐக்கியமாக, ஒன்றியமாகச் செயல்படுகிற அமைப்பாகும் என்பதே (கூட்டமைப்பு என்ற பதப்பிரயோகம் சரியல்ல. ஐக்கியமாகிவிட்ட் பிறகு அங்கு பிரிவுகளுக்கு இடமில்லை). . ஹிந்துஸ்தானம் என்கிற தேசம் நிர்வாக வசதிக்காகப் பல மாநிலங்களாப் பிரிக்ககப்பட்டு ஒருங்கிணைந்து இயங்கும் என்று இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா பல மாநிலங்களின் ஒன்றியமாக நிர்வகிக்கப்பட்டாலும் ஒரே தேசமாகத்தான் விளங்குகிறது. அமெரிக்காவுக்கே இப்படியொரு தேசிய அந்தஸ்து இருக்கையில் நமது ஹிந்துஸ்தானத்திற்கு ஒரே தேசியம் என்கிற அடையாளம் இல்லாமலா போய்விடும்? தங்கள் மீது கவனம் விழ வேண்டும் என்பதற்காகவே வக்கிரமாகவும் குதர்க்கமாகவும் பேசுகிற புத்திசாலிகள் உண்டு. இவர்கள் ஒருவகை மனநோயாளிகளே. இவர்களைப் பொருட்படுத்தாமல் புறக்கணிப்பதே அறிவுடைமை.
    -மலர்மன்னன்

  45. அதிகாரபூர்வமாக அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் இது ஹிந்துஸ்தானம்தான். இமயம் முதல் குமரி வரை காலங்காலமாக இங்கு வேரூன்றியிருப்பது ஹிந்து கலாசாரம்தான். காஷ்மீரம் என்ற பெயர்க் காரணமே கசியபரை முன்வைத்துத்தான். அது சைவ சித்தாந்தம் வரையறுக்கப்பட்ட பூமி. அதன் எதிரொலி ஹிந்துஸ்தானத்தின் தென்கோடியான தமிழகத்தில் கேட்டது. சமணமும் பவுத்தமும், ஏன், சீக்கியமும்கூட ஹிந்து கலாசாரத்தைப் பிரதிபலிப்பவையே. வெளியிலிருந்து வந்த முகமதியமும் கிறிஸ்தவமும் மட்டுமே இந்த பூமியுடன் ஒட்டாத கலாசாரத்தைக் கொண்டாடுபவை. சமய நம்பிக்கையின் அடிப்படையால் மட்டுமின்றி கலாசார அடிப்படையிலும் சிந்தனைப் போக்கிலும் ஒன்றான மக்கள் வாழும் நிலப்பரப்பான ஹிந்துஸ்தானத்தை ஒரே நாடு அல்ல என்பது அறியாமை.
    -மலர்மன்னன்
    \\
    You are claming the regions under the sovereignty of Indian state to have a UNIFORM CULTURE.Though I don’t think it’s the fact,may I know how on earth SL and Myanmar have different culture from India by your Hindutva point of view.How come Chinese who are buddhists ,have different culture,according to Hindutva people?
    Why Do Hindutva peopl who make a big fuss about Pakistan’s freedom ,never talk about the separation of Myanmar from BRITISH INDIAN[not republic of India] in 1931.Why no issue to Hindutvas about Tamil nation of Eelam Tamils that was a part of Madras Presidency in being a part of SL now.Is the issues with Pakistan and the cries about it’s independence just because it is a Islamic Republic.

  46. ஒரே தேசமாகத்தான் விளங்குகிறது. அமெரிக்காவுக்கே இப்படியொரு தேசிய அந்தஸ்து இருக்கையில் நமது ஹிந்துஸ்தானத்திற்கு ஒரே தேசியம் என்கிற அடையாளம் இல்லாமலா போய்விடும்?
    \\

    பல இறையாண்மை உள்ள அரசுகள் ஒன்று கூடி தங்களின் நலனுக்காக ஒரு தனட்சி அமைப்பை கொண்ட ஒன்றியத்தை உருவக்கிகொண்டனர் .அது தான் ஐக்கிய அமெரிக்க நாடுகள் .
    அங்கு எல்லா அரசுக்கும்[states]சரி நிகர் பிரதிடித்துவம் தான்.இது என் தரப்படுகிறது என்றால் பல வேறுப்பட்ட மக்கள் ஒன்று கூடி ஒரு ஒன்றிய அரசை உருவாக்குகிறார்கள் என்கிற அடிப்படையை அவர்கள் எட்ற்றுக்கொல்வதால் தான். ஆனால் இந்தியாவில் இலங்கியில் எல்லாம் அந்த தேசிய இன மக்களின் தனித்துவத்தை ஏற்று எல்லா ‘மாறுப்பட்ட ‘மக்களுக்கும் சரி நிகர் பிரதிநிதுதுவம தராவாமல் .எல்லோருக்கும் ஒரு ஒரு குடி உரிமை பெயரி கொடுத்து எல்லோரும் ஒரே மக்கள் என்று உலரும் பேத்தல் தான் இருக்கிறது.எல்லோரும் ஒரே மக்கள் என்று கேட்க நன்றா இருந்தாலும் இந்த மாதிரி சரி நிகர் பிரதிநிதுதுவம் இல்லாத அரசிகுறை கஊட்டாட்சி அரசு [india],otrai aatchi murai [sri lanka]வில் எல்லான் பெரும்பான்மை தேசியஅதின் ஆட்சி தான் நடக்கிறது

    அனமையிம் தேவநாகிரி எழுத்தை தாங்கி வந்த இந்திய உரூவாய் குறியீடு ஒரு குறிப்பிட்ட மொழி குடும்பத்தின் எழுத்வடிவதை மட்டும் தாங்கி நிற்கிறது

    Unitary states and Quasi federations in a land mass with multiple ethnic groups ,multiple linguistic groups multiple religious groups are nothing but the legitimating the tyranny of the majority on minority.

    Tamils have 40 parliament seats but one single Hindi State called UP alone has more seats thatn TN.There are 10 Hindi states in India.

    The fertility rate of an average Tamil woman [thanks to god damned family planning system that was implemented properly only in south] is 1.7 but in Bihar it is 3+.Already Hindis form 41% of the Indian population and Tails form 5.9%.So if this birht rate continues the ethnic minorities like Tamils,Telugus will become more and more minority and the Hindis will become more and more majority

    People in India get awarded for reproducing more and the ethnic groups that accept the indian state’s schemes are getting punished

  47. அருண்
    சட்டென்று தங்கள் வசதிகேற்றவாறு எங்கோ தாவிவிட்டீர்கள். அனாதைகளாய் அல்லலுறும் காஷ்மீர் இந்துக்களை (பண்டிட்) மீட்டும் குடியமர்த்த குரல் கொடுத்துவிட்டு மொழிக்குத் தாவுங்கள். இதையே நான் சுட்டியிருந்தேன். பெரும்பாலும் இரட்டை நிலை என்று. நீங்களும் அதே வகையா?

  48. பா. சிவசுப்பிரமணியன்

    பெருமதிப்பிற்குரிய மலர்மன்னன் அவர்களுக்கு

    தெளிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல உரித்தாகுக. கிறித்தவம் இந்த மண்ணின் குழந்தை அல்ல என்ற போதிலும் புனிதர் ஏசுபிரான் பல ஆண்டுகள் இந்தியாவில் இமயமலைச்சாரலில் கடுந்தவமியற்றி யோகசாதனைகள் புரிந்தவர் ஆவார். அவரது சித்திகள் இந்தியா என்று வெள்ளையர்களால் அழைக்கப்பட்ட பாரதத்திருநாட்டில் அவர் தங்கியிருந்தபோது பெறப்பட்டவையே ஆகும்.

    மேலும் பாரதக்கிரித்துவர்களில் பெரும்பாலோர் அன்னை மேரி சிலையும் குழந்தை இயேசு சிலையும் அல்லது பெரிய இயேசு சிலைகளை அவர்களது சர்ச்சுகளில் வைத்து வழிபாடுகள் செய்கின்றனர். மேலும் தேர்த்திருவிழா போன்ற இந்து வழிபாட்டுமுறைகளை காப்பியடித்தும், திருக்குறளும், திருவாசகமும், கிருத்துவ நூல்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து ஏமாளி தமிழனை மதம் மாற்ற எத்தனித்து வருகின்றனர். இந்தப்பாவிகளை இயேசு பிரானே கவனித்துக்கொள்வார். மேலும் ஏசுபிரானின் மலைப்பிரசங்கத்தைத்தவிர, பைபிள் என்று வேறு எதுவும் அவரால் அருளப்பட்டதல்ல. மலைப்பிரசங்கம் ஒன்று மட்டுமே தேவகுமாரன் ஏசுவால் அருளப்பட்டதாகும். எனவே இயேசு பிரான் இந்து முனிவர்களில் ஒருவரே ஆவார். மத மாற்றத்தில் ஈடுபடும் திருச்சபைகள் விரைவில் இதனை உணர்வார்கள்.

  49. புராணங்கள் வெறும் கட்டுக்கதைகள் அல்ல. அவை பல செய்திகளைச் சொல்பவை, ஏராளமான நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைத்திருப்பவை. மானிடவியல், புவியியல், வரலாறு ஆகிய துறைகள் சார்ந்த ஆய்வாளர்கள் இதனை நன்கு உணர்ந்து புராணங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டறிந்து வருகின்றனர். இமய மலைப் பகுதி நீருள் அமிழ்ந்திருந்த செய்தி நமது புராணங்களில் புதைந்துள்ளது. காசியபர் நீரை வற்றச் செய்து நிலப் பரப்பை மேலெழச் செய்த தகவல் காஷ்மீரம் தோன்றிய விவரத்தைத் தருகிறது. காஷ்மீரத்தில் உள்ள இடஙகளின் பெயர்கள் அனைத்துமே சமஸ்க்ருதம்தான். இன்று அவை உருமாறியுள்ளன. உதாரணமாக, பார மூலா என்பது வராக மூலம் என்பதன் திரிபேயன்றி வேறல்ல. வராக அவதாரம் நிகழ்ந்த புராணத் தகவல் இந்த இடத்தையே அதற்குரிய களமாகக் கொண்டிருக்க வேண்டும். நமது கலாசாரம், தத்துவம், தொன்மங்கள், இலக்கியங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள் ஆகியவைபற்றி எவ்வித அடிப்படை அறிவும் இல்லாதவர்கள் தங்கள் மனம்போனபடிப் பேசுவதும், அதை ஊடகங்களில் உள்ள கற்றுக்குட்டிகள் பிரபலப்படுத்துவ தும் நமது போதாத காலம். நேருவின் முதல் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இடம் பெற்ற்றவர் இரானியரும் பெர்ஷிய, அரபி மொழிகளை அறிந்த தீவிர முகமதிய மதப் பற்றாளருமான அபுல் கலாம் ஆஸாத். ஹிந்துஸ்தானத்தின் பாரம்பரிய கலாசாரம் பற்றி ஏதும் அறியாத அவர் நியமிக்கப்பட்டதால் சரியான-முறையான கல்வித் திட்டம் உருவாகாமல் போய்விட்டதன் விளைவே இது. அவருக்கு பதில் கே எம் முன்ஷி கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தால் கல்வியில் உருப்படியான மாற்றம் ஏற்பட்டிருக்கும். இன்று ஊடகங்களில் உள்ளவர்களுக்கு நமது கலாசாரம், வரலாறு, தொன்மங்கள், சமூகவியல், முதலானவற்றில் எவ்வித அடிப்படை அறிவும் கிடையாது. ஆகவே அருந்ததி ராய் போன்ற அரைக்குடங்கள் உளறுகையில் எதிர்க் கேள்வி கேட்க நமது ஊடகப் பிரதிநிதிகளுக்குத் தெரிவதில்லை.

  50. ஸ்ரீ அருண் என்னும் வாசகர் அடுக்கடுக்காகத் தெரிவித்துள்ள கருத்துகளை முன்வைத்து விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது.

    நான் ஹிந்துஸ்தானத்தின் எல்லாப் பகுதிகளிலும் வசித்திருக்கிறேன். இந்த தேசத்து மக்களின் கலாசாரம், மேலோட்டமாகப் பார்க்கையில் சிறிது வேறுபட்டிருப்பதுபோலத் தோற்றமளித்தாலும் அடி நாதமாக ஓடிக் கொண்டிருப்பது ஒரே கலசாரமே என்பது ஆழ்ந்து நோக்கினால் புலனாகும். இதனை நிறுவ ஏராளமான எடுத்துக் காட்டுகளுடன் தனிக் கட்டுரைதான் எழுத வேண்டியிருக்கும். (உடனே எழுது, எழுது என்று மின்னஞ்சலகள் வரத் தொடங்கிவிடக் கூடும்!)

    ந்மது நாடு ஒரே தேசியம் என்பதால்தான் மாநில அடிப்படையில் எல்லா மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்தில் பொதுவாக ஒரே எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கப்படாமல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் வரையறுக்கப்பட்டு அவற்றுக்கேற்ப இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நமது தேசம் யூனியன் தானேயன்றி யுனைட்டட் அல்ல. யுனைட்டட் என்றால்தான் கூட்டமைப்பு என்று பொருள்படும். தேவ நாகரி எழுத்துகளும் நம்முடையவைதாம். நமக்குச் சொந்தமானதை ஏன் வலிய விட்டுக் கொடுக்க வேண்டும்? மனம் விசாலமடைந்தால் நமக்குள் பேத உணர்வுகள் தோன்ற மாட்டா. ஹிந்துஸ்தானத்தில் தோன்றிய எழுத்துருக்கள், மொழிகள் யாவும் ஹிந்துஸ்தானத்தவ்ருக்குரியவையேயாகும். ஆகவே ரூ என்பது தேவநாகரி வடிவில் உள்ளதே என்று வருந்த வேண்டாம். அதை உருவாக்கியவர் ஒரு தமிழரே!

    ஹிந்துஸ்தானத்தை பாரத அன்னையாக உருவகிக்கும் சித்திரத்தைப் பார்த்தால் அன்னையின் முந்தானைச் சேலைத் தலைப்பே இன்றைய மியன்மாராகவும் இலங்கை எனப்படும் ஸ்ரீலங்கா அன்னையின் பாத பீடமாகவும் இருக்கக் காணலாம். யாழ் தமிழர் மட்டுமின்றி சிங்களவரும் கலாசார அடிப்படையில் ஹிந்து கலாசாரத்தைச் சேர்ந்தவர்களே. மியன்மார் மக்களும் அவ்வாறே. அவர்களின் மொழி எழுத்துருவைக் கவனித்தால் இது விளங்கும். சிங்கள மொழியில் சமஸ்க்ருதம் நிரம்பியுள்ளதைக் காணலாம். பர்மிய மொழியும் இவ்வாறே. தாய்லாந்து வரை இன்றளவும் ஹிந்து கலாசாரம்தான். சீனாவின் கலாசாரம் வேறுபடுவதால் அங்கு பவுத்தம் பரவிய போதிலும் கலாசார அடிப்படையில் மாற்றம் உள்ளது. ஒரு காலத்தில் இந்தோனேசியாவரை ஹிந்து கலாசாரம்தான் இருந்தது. ஆனால் இன்றுள்ள அரசியல் நிலையில் இறுதியாகப் பிரிக்கப்பட்ட பாகிஸ்தான், பங்களா தேஷ் ஆகியவற்றைத் திரும்ப இணைக்க முற்படுவதுதான் சாத்தியமாகும். ஸ்ரீ அருண் முன் முயற்சி எடுத்து விடுபட்ட பகுதிகளையும் ஹிந்துஸ்தானமாக அறிவிக்கக்கோரும் இயக்கம் தொடங்கினால் பாராட்டலாம்.

    அன்புள்ள ஸ்ரீ பா. சிவசுப்பிரமணியன்,
    நீங்கள் சொல்வது சரியே. கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தவர் ஸால் என்கிற ரோமானியர். அவரே பிறகு பால் ஆகிவிட்டார். ஆகவே ஏசுவுக்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏசுவின் பனிரண்டாவது முதல் முப்பது வயது வரையிலான காலம் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அவரது மலைப் பிரசங்கம் பல இடங்களில் நமது தத்துவங்களின் தாக்கத்துடன் காணப்படுவதும் உண்மையே.
    -மலர்மன்னன்

  51. ஸ்ரீ அருண் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. ஆனால் எல்லாம் தெரிந்தவர்போல எழுதுகிறார்.
    அமெரிக்கா என்பது முழு வட அமெரிக்காவும் அல்ல. மேலும் இன்றைய ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்பது மொத்தமும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும்போய் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பதுபோல ஆகிரமிப்பாளர்கள் உருவாக்கிக் கொண்ட பகுதிகள்தாம். அவற்றுக்கு இறையாண்மை என்கிற தனித் தகுதிகள் எல்லாம் இருந்தது கிடையாது. எல்லாமே பலவந்த அதிக்ரம ஆக்கிரமிப்புகள். இதில் ஏதோ தனித்தனி தேசியஙகள் இருந்ததுபோல் கற்பிதங்கள் செய்துகொள்ளத் தேவையில்லை!
    -மலர்மன்னன்

  52. //While Independence act for independence of India the think that was taken in to consideration was the interests of Indians and not British- Sri Arun//

    This is a wrong notion.
    After the second world war, Hinduustan became alaibility for Britain on several counts.
    1.) It could no longer depend on the defence force raised in Hindustan comprised by the citizens of Hindustan, as a result of the impact created by Subhash Chandra Bose.
    2. ) Huge expenditure on defence to face German intrusion.

    3.) Poverty looming large above the British people.

    4.) Severe unrest in Hindustan.

    Therefore, in her own interest, the Britain decided to give up her hold on Hindustan.
    -Malarmannan

  53. Mr. Arun! விடுதலை என்ற குரல் கேட்டதும் ஓங்குக! என்று கைதூக்குவது அறிவார்ந்த செயல் அல்ல. பிரச்சினையின் முழுமையைப் புரிந்து கொண்டு கருத்துத் தெரிவிப்பது நல்லது.

    Every argument you make smacks antiestablishmentarianism. Also, you hop topics without concluding the discussion on one, which shows that you just wish to make statements and boast of making them. Such chest thumping on making a lot of unrelated, facts-deprived statements would not help in taking the discussion forward.

    Seems you’ve read so far only materials from the left. Keeping left is shrewd only on the roads, not on debates/discussions.

  54. அருண் வாதத்திலுள்ள ஓட்டைகளை மலர்மன்னன், ராம்கி, அருண்பிரபு ஆகியோர் அருமையாக சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்..

    // Tamils have 40 parliament seats but one single Hindi State called UP alone has more seats thatn TN.There are 10 Hindi states in India. //

    ஏதோ ஒரு புள்ளிவிவரத்தை பின்னணி தெரியாமல் எடுத்துவிடுவது என்பது இது தான்.. அப்படியே, இந்திய மென்பொருள் கம்பெனிகளில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் யார், உயர்கல்விப் பல்க்லைக் கழங்களில் படிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அதில் தமிழர்களது எண்ணிக்கை அவர்களது மக்கள்தொகை விகிதத்தை விடவும் அதிகமாக இருக்கும்! அப்போது வாதத்தின் திசை எதிராகவும் ஆகும்!

    இந்திய தேசியம் அளவற்ற சமூக, பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதோடு சில சமரசப் புள்ளிகளையும் உள்ளடக்கியது. ஒரு குடும்பம் போல, ஒரு கிராமம் போல. ஒரு நிறுவனம் போல. இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா மட்டுமல்ல, உலகில் எல்லா ஜனநாயக, பன்முகத்தன்மை கொண்ட தேசியங்களுமே அப்படித் தான்.

    // People in India get awarded for reproducing more and the ethnic groups that accept the indian state’s schemes are getting punished //

    இதற்குத் தீர்வு தனிநாடு கேட்பதா? கொடுமை! Thats like throwing the baby with the bathwater.

    ஜன்நாயக அமைப்பில் இந்த பிரசினையை முன்வைத்து விவாதிப்பது தான் சரியான அணுகுமுறை. நமது அரசியல்சட்ட நிபுணர்கள் ஏற்கனவே இது பற்றி சிந்தித்து வருகிறார்கள். மக்கள்தொகை வளர்ச்சிப் படி தொகுதிகளை நீட்டிக்காமலும், மக்கள்தொகைக் குறைப்பை செயல்படுத்தும் மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையிலும், தொகுதிகளை normalize செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துக்களும் வரத் தொடங்கியுள்ளன..

    விவேகானந்தர், காந்தி, அம்பேத்கர், காமராஜர் போன்ற சீரிய தலைவர்களின் கருத்தாக்கங்களிலும், வழிகாட்டுதலிலும், கோடிக் கணக்கான இதயங்களின் ஒத்திசைவிலும், கரங்களின் உழைப்பிலும் உருவாகி வளர்ந்திருப்பது இந்திய தேசியம். வெற்று வாதங்களால் அதனைத் தூற்ற வேண்டாம்.

  55. \\\\\\\\\\\\\எண்ணிக்கை பலம் மொழி வழியும் நீள்கிறது. இதில் எல்லா இயக்கங்களும், குழுக்களும் இரட்டை நிலையையே காண்பிக்கின்றன. இதன் வெவ்வேறு பரிணாமங்களை பல வாதத்தினூடே காணலாம்.

    இதை மீறி சிந்திப்போர் உதிரிகளே.\\\\\\\\\\\\

    ராம்கி, I thought of not responding to this wrong logic. However, it goes

    I am currently residing in Kashmir. I am very much aware of the situation over there. first hand. many a times affected by situation over there. Two years back even our relatives visited kashmir. From Amarnaath land issue all hell broke loose.
    Jammu & Kashmir comprise of three regions viz., Jammu, Kashmir and Ladakh. Jammu & Ladakh region alone comprise of about 70% land mass and the Hindus and Budhists comprise of more than 50% of population. Apart from that the gujjars, bakrwals, pahadi and shia moslems are not at all for separation. It is only the minority sunni moslems ( about 15 to 20 per cent of population) who have been ruling kashmir ( thanks to delimitation tactics) since Independence are making a big hue and cry over issues of autonomy and separation. So as portrayed it is not sort of majority people of Kashmir torturing over the minority. Its otherwise. A miniscule population which has been thriving by media propaganda and the abhishaap of the nation, i.e congress is calling the shots and giving immense trouble to majority of people over there. The sort of atrocities perpetrated on kashmiri pandits can not be written. But Sardars are still residing in Baramulla in spite of the disturbances. No portrayals in the style of A.roy and her ilk.

    And does it not look ridiculous to compare this sort of a problem with that of majority language (again flawed and idiotic) vs. other languages. A complete society loosing its place of birth living in its own country like refugees is what is kashmir problem. It is horrbily absurd to say that majority language people indulged in this sort of atrocities on minority language people to altogether shunt them from any part of Hindustan. That sort of thing has happened only in Kashmir.

    Do not compare the kashmir atrocities and the politically ill motivated language disputes ( which shall be in whatever name of language takes place whereever in Hindustan need to be condemned by all right minded people and nationalist forces shall proactively themselves prevent such thamaashaas). No such foolish comparison. For you can not compare a chalk with cheese.

  56. Sri Krishnakumar:
    Kindly try to wrie an article in Tamil on these facts you have referred in this columns and send it to Dinamani stating you are residing in Kashmir. You can use a pseudonym if you do not wish to disclose your identity.
    -Malarmannan

  57. ஏதோ ஒரு புள்ளிவிவரத்தை பின்னணி தெரியாமல் எடுத்துவிடுவது என்பது இது தான்.. அப்படியே, இந்திய மென்பொருள் கம்பெனிகளில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் யார், உயர்கல்விப் பல்க்லைக் கழங்களில் படிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அதில் தமிழர்களது எண்ணிக்கை அவர்களது மக்கள்தொகை விகிதத்தை விடவும் அதிகமாக இருக்கும்! அப்போது வாதத்தின் திசை எதிராகவும் ஆகும்!

    இந்திய தேசியம் அளவற்ற சமூக, பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதோடு சில சமரசப் புள்ளிகளையும் உள்ளடக்கியது. ஒரு குடும்பம் போல, ஒரு கிராமம் போல. ஒரு நிறுவனம் போல. இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா மட்டுமல்ல, உலகில் எல்லா ஜனநாயக, பன்முகத்தன்மை கொண்ட தேசியங்களுமே அப்படித் தான்
    \

    Even for argument sake I have to accept that Tamils have an upper hand in India[yea may be as for as economics is concerned] then why should Hindi suffer a tyranny under Tamils!!!Why should Tamils steal the jobs of others!!??

  58. Seems you’ve read so far only materials from the left. Keeping left is shrewd only on the roads, not on debates/discussions.
    \\
    I am not a leftists but please don’t follow your right wing ideologies on road buddy

  59. Seems you’ve read so far only materials from the left. Keeping left is shrewd only on the roads, not on debates/discussions.
    \\
    I am not a leftists but please don’t follow your right wing ideologies on road buddy
    \\
    அமெரிக்கா என்பது முழு வட அமெரிக்காவும் அல்ல. மேலும் இன்றைய ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்பது மொத்தமும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும்போய் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பதுபோல ஆகிரமிப்பாளர்கள் உருவாக்கிக் கொண்ட பகுதிகள்தாம்.

    \\

    Human race evolved from Africa the same logic goes for a Indians.If North American settlements can be called as encroaching waste lands then the same was done by different african tribals on Indian subcontinent

  60. Anyway nice to have a debate of Republic of India’s counterparts of Sinhala Buddhist extremism often known as Sri Lanka nationalism

  61. This is a wrong notion.
    After the second world war, Hinduustan became alaibility for Britain on several counts.
    1.) It could no longer depend on the defence force raised in Hindustan comprised by the citizens of Hindustan, as a result of the impact created by Subhash Chandra Bose.
    2. ) Huge expenditure on defence to face German intrusion.

    3.) Poverty looming large above the British people.

    4.) Severe unrest in Hindustan.

    Therefore, in her own interest, the Britain decided to give up her hold on Hindustan.
    \\

    So you mean to say that BRITISHERS AWARDED Indians there freedom due to the change in GLOBAL ORDER and the protests of Indians was one more factors in India’s independance

  62. ஸ்ரீ அருண்
    \\
    When you write in English please use Mr and when in Tamil use திரு.When you write in sanskrit you can use ‘Shri’
    [I request you not to call me Sri Arun.I looks awkward]

  63. Every argument you make smacks antiestablishmentarianism
    \\
    நான் சிக்கல் வெறும் ஒரு அரசு[State] இடம் மட்டும் தான் இருக்கிறது என்று எப்போதோ சொல்லிவிட்டதாக நினைவு

  64. //
    Human race evolved from Africa the same logic goes for a Indians.If North American settlements can be called as encroaching waste lands then the same was done by different african tribals on Indian subcontinent
    //

    Yeah. Human race came from Africa… so what? As per what you say, India was uninhabited until African tribals came to the Indian subcontinent. That was not the case with North America.

    You seem to have a screwed-up utopian concept of dharma implanted in your brain. Please read some ancient Indian texts to compare our wisdom vis-a-vis the infantile opinions of the leftist/colonial commentators of today.

  65. திரு அருண் அவர்களே

    //அருண்
    25 November 2010 at 1:57 pm
    இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க சொல்வோர் மீது என்ன சட்டத்தைப் பாய்ச்சலாம்?///

    சவூதி அரேபியாவையும், மலேசியாவையும், இந்தோனேசியாவையும், பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும், இரானையும், iraakkaiyum இன்னபிற இஸ்லாமிய நாடுகளையும் இஸ்லாமிய நாடுகள் என்று aRiviththavarkaL மீது என்ன sataththaip பாய்ச்சினீர்களோ அதே சட்டத்தைப் பாய்ச்சலாம். அதுவும் பாரத தேசத்தை ஹிந்து நாடு என்று அறிவித்த பிறகு, அப்படி அறிவித்தவர்கள் மீது பாய்ச்சலாம் ….

    வாதிகனையும், அர்ஜென்டினாவையும், ஆர்மேனியாவையும், பொலீவியாவையும், டென்மார்க்கையும், இங்கிலாந்தையும், கிரீசையும், ரோமேனியாவையும், மால்டாவையும் இன்னபிற கிறித்துவ நாடுகளையும், கிறித்துவத்தை தத்தமது நாட்டின் அரச மதமாக (State religion ) என்று அறிவித்தவர்கள் மீது என்ன சட்டத்தைப் பாய்ச்சிநீர்களோ அதே சட்டத்தைப் பாய்ச்சலாம். அதுவும் பாரத தேசத்தை ஹிந்து நாடு என்று அறிவித்த பிறகு, அப்படி அறிவித்தவர்கள் மீது பாய்ச்சலாம் ….

    என்று இந்த உலகத்தில் எந்த நாடும் ஏதாவது ஒரு மதத்தையும் சாராமல், எந்த மதத்தையும் தனது தேசீய மதம் அல்லாதது அரச மதம் என்று அறிவிப்புச் cheyyaamal, எல்லா நாடுகளும் மதச் சார்பற்ற நாடுகளே என்ற nilai தோன்றுகிறதோ அன்றுதான் நீங்கள் கேட்டது போன்ற கேள்விகளை எவரும் கேட்கமுடியும். athillaamaal பாரதம் மட்டும் மதச்சாற்பர்ரதாகவே இருக்க வேண்டும் என்பது, அக்கிரமம், அநியாயம் sennaith தமிழில் சொன்னால் “போங்கு” இதைக் கண்டு பொங்கி எழவேண்டும்.

    உலகில் உள்ள எல்லா நாட்டையும் மதச் சார்பற்ற நாடுகளாக aRivikka முயற்சி எடுக்க வேண்டும் என்று நான் ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறேன். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று தெரிந்தும்கூட. இது குறித்த விரிவான கட்டுரை ஒன்றையும் விரைவில் எழுதுகிறேன்.

  66. திரு அருண்பிரபு அவர்களே

    ///அருண்பிரபு
    25 November 2010 at 5:41 pm
    The Constitution of India Part I, Article I states that “India, that is Bharat, shall be a Union of States”. அதாவது, அரசாங்கங்களின் கூட்டமைப்பு.

    இது தவறான புரிதல்.

    State என்னும் சொல் இடத்துக்குத் தக்க படிப் போருல்கொள்ளப் படவேண்டியது.

    Union of States என்னும்போது மாநிலங்களின் கூட்டமைப்பு என்று பொருள்படும்.

    DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY என்னும்போது “அரசு” என்று பொருள்படும்.

  67. Hello Shri Arun!

    //Even for argument sake I have to accept that Tamils have an upper hand in India[yea may be as for as economics is concerned] then why should Hindi suffer a tyranny under Tamils!!!Why should Tamils steal the jobs of others!!??//

    What is the point you’re trying to make here? India is one nation comprising of people of different language backgrounds. Indians, irrespective of language background, have the right to work anywhere in India. Stray skirmishes happen and those too are caused by incoherent minds posing as intellectuals (possibly like the one I’m replying to now). Those are taken care of by the Government of India as required.

    The issue you’re trying to frustrate this discussion to, Linguistic Nationalism, had backfired long back, with the people of India, especially Tamil Nadu where it was aggressively pursued a bunch of free-timers, by rejecting it totally. But still we have some astray minds blabbering about linguistic nationalism. Seems you’re bitten by the Dravidian political bug of hopping issues to keep talking irrespective of relevance. Wish you a speedy recovery!

    The issue we are discussing here is India as a nation and some separatist elements aided and abetted by Pakistan, causing disturbances to the tranquil life here. You’re neither discussing Indian nationalism nor deliberating the reasons on separatist demands. You just generalize issues and give assumptions which do not qualify to be a learned opinion in the first place, leave alone arguments. Assumption is the mother of all goof ups. If you’d like to discuss linguistic nationalism, this is not the right forum. Don’t attempt to shove in your incoherent arguments irrelevant to this discussion.

    As far as your suggestion on keeping right wing attitude, I’m right on my foot, right always, with no left overs!!!

  68. திரு அருண் அவர்களே

    அருண்
    25 November 2010 at 3:59 pm
    இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை இரு அரசு[State]என்று எங்குமே சொல்லவில்லையே
    \\
    தட்டச்சு பிழை அது

    இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை ஒரு அரசு[State]என்று எங்குமே சொல்லவில்லையே என்று படிக்கவும்

    இந்தியா அரசியல் அமைப்புச் சட்டப்படி இந்திய அரசு என்பது ஒரே அரசுதான். இந்தியா ஒரு மாநிலங்களின் கூட்டமைப்பு எனவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு அரசு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு என்பது ஒன்றுதான். அதுதான் தேசம் முழுமைக்கும் muLu அதிகாரம் கொண்டது.

    தங்களுக்கு சட்டம் குறித்த புரிதல் சரிவர இல்லை. தவறான புரிதலில், தவறான பாதைதான் தெரியும். அதனால்தான், இந்த தேசம் என்பது பல என்றும் கூறுகிறீர்கள்.

    இனம் என்பது வேறு. மதம் என்பது வேறு. சாதி என்பதும் வேறு. பாரதத்தில் உள்ள சிறுபான்மை இனம் என்று இஸ்லாத்தையும், கிறித்துவத்தையும் குறிப்படுவது தவறு. இவை மதங்கள். இனங்கள் அல்ல. இனம் என்பது என்ன enpathai nanku padiththup புரிந்துகொள்ளுங்கள். அரசியல்வாதிகள் மேடைகளில் தங்கள் வோட்டுக்காக மதங்களை எல்லாம் இனங்கள் என்றும், சாதிகளை எல்லாம் இனங்கள் என்றும் உளறுவதைக் கேட்டு முடிவுக்கு வராதீர்கள்.

    சில புத்திசாலி எழுத்தாளர்களும், அரசியல் கட்டுரைகளில் சாதிகளை எல்லாம் அந்த இனம், இந்த இனம் என்று எழுதுவதை வைத்து முடிவுக்கு வராதீர்கள்.

    தங்கள் கருத்துக்கள் முடிவுகள் ஆகியவை சரியான தகவல்கள், புரிதல்கள், ஆகியவற்றின் அடிப்படையில் அமையவேண்டும். The decision must be an informed decision. Such information must be based on correct and sound source and upon a proper understanding of the issues involved.

  69. Mr Arun

    ///Unitary states and Quasi federations in a land mass with multiple ethnic groups ,multiple linguistic groups multiple religious groups are nothing but the legitimating the tyranny of the majority on minority.

    Tamils have 40 parliament seats but one single Hindi State called UP alone has more seats thatn TN.There are 10 Hindi states in India.////

    One person one vote is Democracy. The number of Parliamentary seats was decided in 1952 based on the population Census of India. since then the same number of seats for the respective State is maintained.

    To seek parliamentary seats disproportionate to the population is AGAINST BASIC TENETS OF DEMOCRACY. Do you understand the import of this demand? Do you mean to say that the people of Utar Pradesh with a population of 20 Crores and the people of Lakshadweep with a population of 60,000 should be represented by equal number of Parliamentarians? Does this not look absurd to say the least? Will you make this demand if you were from Uttar Pradesh? Certainly not.

    Regional basis or liguistic basis cannot decide the representation. Population alone can decide. This is because, in democracy equality is ensured by giving each eligible person one vote and nothing more or nothing less.

    ///The fertility rate of an average Tamil woman [thanks to god damned family planning system that was implemented properly only in south] is 1.7 but in Bihar it is 3+.Already Hindis form 41% of the Indian population and Tails form 5.9%.So if this birht rate continues the ethnic minorities like Tamils,Telugus will become more and more minority and the Hindis will become more and more majority

    People in India get awarded for reproducing more and the ethnic groups that accept the indian state’s schemes are getting punished///

    The number of seats held by Tamilnadu remains the same even after sixty years. The population of Uttar Pradesh has grown at a rate more than Tamilnadu and there is no addition to Uttar Pradesh either. This shows that your understanding of this issue is wrong.

  70. Mr Arun

    ///While Independence act for independence of India the think that was taken in to consideration was the interests of Indians and not British

    So regarding Kashmir the interests of Kashmiris have to be taken///

    Please note that Kashmiris include the “Kashmiri Pandits” The Kashmiri Muslims have eliminated/ driven out the Kashmiri Pandits from Kashmir. What happened in Sri Lanka in the past few years have happened in a worse manner in Kashmir decades ago.

    The Population of Kashmiri Pandits which was 15% in 1941 has declined to 0.1% now.( This is from the Report of the National Human Rights Commission)

    What do you call this as? If this is not Genocide, what else is? If this is not ethnic cleansing, what else is?

    None of you have raised your voice against this genocide? May ask you why? (Like you asked ) Is it because they are Hindus? they are brahmins?

    Why has Arundati Roy not spoken about this? Aren’t the Kashmiri Pandits not humans? don’t they have right to live in their motherland? Where are your cries about Minority rights in Kashmir?

    Arundati Roy is an opportunist. She has never done anything productive in her life. She has not contributed to the Nation’s Gross Domestic Product in any manner, whatsoever. She tries to gather popularity by making such atrocious speeches and writing such seditious substance. She wont be able to take similar stands in any of the European/ Middle Eastern countries. India is the only Nation that follows the true principles of human rights. The ilk of Arundati Roy misuse and abuse the freedom of speech available in India.

  71. அரேபியாவில், ஐரோப்பாவில் தேசம் தேசமாக ஊர் ஊராக தெருத் தெருவாக சித்ரவதை செய்யப்பட யஹூதிகள் மருவனமாகிய இஸ்ரேல் தேசத்தில் என்று உலகத்தில் மிகுந்த சுவையான த்ராக்ஷைகள் விளையுமோ அன்று உம் தேசம் மீட்கப் படும் என்று மொசெஸின் வசனத்தில் விச்வசித்து இஸ்ரேலை மிட்டது சரித்ரம்.
    \\

    நீங்கள் யூத மதத்தை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா

    Arun, many have pointed out that instead of focussing on the topic, you go on building related and unrelated arguments. Thats a leftist diversionary tactic of circumvending real issue. And above is an example of yourself deviating even from supplementary topic you take on. This sort of endless diversion takes you like talk talk talk and reach nowhere.

    to your pointed question of whether people in pakistan and bangladesh could get citizenship rights in Hindustan, it has been deliberated as to why not? the nationalist forces who believe in Akhand Bharat always have hope that the current Baqi Sthan (Pakistan – Bangladesh) and Bangladesh would merge with India one day. So that you do not discard it impossibility, the case of Jermany divided and united and Israel restored to Jews was explained.

    Instead of pondering about your stand, you shot up another supplementary, do you accept “Judaism”. That smacks your understanding or otherwise of “Judaism” as well as “Hinduism”.

    Unlike what has been in the revelition of the ten commandments under deuteronomy,”you shall have no other gods before me”

    the Hindu concept is euologised as under

    “Aakashaath pathithanthoyam yatha gachathi saagaram
    sarvadeva namaskaraH keshavam prati gachchati”

    meaning like the waters (falling) from sky (in many streams) ultimately reach the ocean, thus to whomever god a person pays obeisances ultimately reach keshava.

    Unlike the revelition of an intolerant God who dooms every one who worship anybody else other than him to eternal hell, the God as visualised in Hinduism only considers the genuine worship of a person rather than to whom he worship.

    So, why alone Jews. Be it Jews, Christians or Moslems. Hindus believe that these people or any other religious group for that matter would never never go to anything called hell ( and forget concept of eternal hell) just because of the fact they follow some principles other than Hinduism. So to this extent, philosophy based and not revelition based Hinduism and its adherents Hindus recognise every other stream. But they equally are aware of the dangerous aginst the human race concepts of intolerant revelitions of jealous gods.

    So, recognition of “Judaism” – yes
    Acceptance or Adherence – a strong no

    The real issue of A.roy calling Hindustan names and shedding crocodile tears for kashmiris is just political stunt to make fame and money. The on and off skirmishes in the kashmir valley ( note only the valley) were restricted to few places like, Srinagar, baramullah and the apple belt of sopore and nearby sangrama. It is at the instigation of hostile forces from Baqi sthan (pakisthan) the algavvadhis in the valley disrupted life and it spread to places like Kupwara, Anantnag, ghurez , Bandipora and other places. in the melee that followed many people who defied the law and confronted the armed forces died. So also security forces.

    One of the oft forgotten face of the fall off are the people in Armed forces, para military forces and civilians belonging to other places working in the valley. Do you know, often for these people it is sort of one way traffic. The date of these people reaching the valley is always fixed by their respective employers. not the date of visiting back their family kith and kin. leaves are often sanctioned and unless and untile someone reach srinagar, there is no surety that one can avail the sanctioned leave. Do you know how many people were left behind in the valley not able to visit their kith and kin even on birth and death in their families.

    So all balberrings like sort of tamizh inam et al et al holds good for cofee shop tet-a-tet. step out of your home state; see our brethern from tamizh nadu, and other southern, western, northern and eastern states fighting for the national honour at every point of country.

    காலை எழுந்தவுடன் காபி
    பின்னர் கதைக்க வேண்டி ஒரு பேப்பர்
    ஆவி பறக்க பல இட்டலிகள்
    உடனே சுள்ளென சூடான சாம்பார்

    என்று வாழ்க்கை நடத்துபவரால் தான் ஹிந்துஸ்தானம் ஒரு நாடு அல்ல அங்கே ஒருவரோடு ஒருவர் இணைய முடியாத தனி இனங்கள் உள்ளன தனி மொழிகள் உள்ளன. ஒரு மொழி மற்றொரு மொழியை அமுக்கும் என்றெலாம் குமதியுடன் பேச முடியும்.

    தமிழன், மலையாளி, பங்காளி, பஞ்சாபி, காஷ்மீரி, டோக்ரி, ஹிமாசலி, ஹர்யான்வி, தேசியவாத ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று தோளோடு தோள் கொடுத்து எல்லையில் தேசத்திற்காக பாடு படுபவர்

    மிக பெருமையுடன்

    வங்காள மொழியும் சிங்கத் தமிழும் எங்களதேன்றிடுவோம்
    கன்னடம் தெலுங்கு கவின் மலையாளம் ஹிந்தியும் எங்களதே

    என்றே பாடுவோம்.

  72. தெருவெங்கும் இந்திய எதிர்ப்பு சுவரொட்டிகள்! இந்து வழிபாட்டிடங்கள் பாழடைந்து கிடக்கின்றன! 2000 வருடம் முன்பு மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் கூட இடிந்து கவனிப்பாரற்று! இருக்கும் ஒரு சில இந்து கோவில்கள் ராணுவ முகாமிற்குள், கடுமையான பாதுகாப்புடன்! யாரேனும் கோவில்களுக்கு செல்வதை கண்டால் தாக்கபடுவார்கள்! இந்து என்று தெரிந்தாலே மதகுருமார்கள் கண்ணில் பட்டுவிட்டால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. இவை எல்லாம் எதோ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நடப்பவை என்று என்ன வேண்டாம்.
    இந்திய தேசத்தில் காஷ்மீர் மற்றும் ஜம்முவின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலை. இந்திய அரசாங்கம் கோடிகளை வாரி தெளிக்கிறது காஷ்மீரிகளை தாஜா செய்து அமைதியாக வைக்க. தெருவுக்கு ஒரு பிரிவினைவாத இயக்கங்கள் செயல்படுகின்றன. இவர்களுக்கு உண்மையிலேயே பிரிவினை தேவைஇல்லை. இப்படி ஒரு அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கி என்றும் இந்திய அரசாங்கத்தை பயத்திலேயே வைத்து அதன் மூலம் வரும் கோடிகளை ருசிக்க. இப்படி அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்க பாகிஸ்தானும் பணத்தை வாரி தெளிக்கிறது. காஷ்மீரிகள் அனைவருமே செல்வந்தர்கள். தாரளமாக பணம் வருகின்றது. நாம் பார்க்கும் கூடாரங்களில் இருக்கும் மக்கள்,காஷ்மீரிகள் அல்ல. பீகாரிகள். கட்டிட பனி மற்றும் பல கூலி வேலைகளுக்கு காஷ்மீரில் இருப்பவர்கள்.
    இன்றையஜம்மு காஷ்மீர் தலைமுறை மிக மோசமான நிலை நோக்கி செல்கிறது. எந்த பணிக்கும் யாரும் போவதில்லை. ஏராளமான பணம் இரண்டு அரசாங்கங்கள் மூலம் வருகின்றது. பொது இடங்களை நீங்கள் பார்க்க வேண்டும். பணத்தை வாரி இறைத்து சாலைகள் முதல் எல்லா வசதிகளும் இந்திய அரசாங்கம் தருகின்றது. வாரம் மூன்றுமுறை தீடீர் என்று தெருவில் கல்வீச்சு நடைபெறும். காவலர்கள் இராணுவீரர்கள் தாக்கபடுவது வாடிக்கை. கடந்த மாதம் மட்டும் 500 ராணுவவீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த செய்திகள் வெளியே வராமல் ராணுவமே பார்த்து கொள்கிறது. இந்திய அரசாங்கத்தின் உத்தரவு அப்படி. ஏனென்றால் ஒரு சிறு செய்தி என்றால் கூட இந்தியா முழுவதும் மீடியாக்கள் பெரிது படுத்தி விடும். ராணுவம் இப்படி கல் எறிபவர்களுக்கு எதிராக ஒரு துரும்பை கூட வீச முடியாது. உலகநாடுகள் அனைவரும் பார்த்து கொண்டிருப்பதால், அப்பாவி இசுலாமிய குடிமகனை தாக்கிய இந்திய ராணுவம் என்று செய்தி வந்து, அது கலவரத்தில் முடியும். துப்பாக்கி ஏந்தி நிற்கும் ராணுவ வீரனின் முன் கல்லுடன் நின்று முறைத்து ராணுவ வீரரின் மண்டையை உடைத்து விட்டு தெனாவெட்டாக நடந்து செல்லும் பாத்து வயது சிறுவனுக்கு தெரியும் அந்த துப்பாக்கி தன்னை நோக்கி எக்காலத்திலும் திரும்பாது என்று!
    கடந்த வாரம் கடுமையான கல்வீச்சு போராட்டங்கள், எதற்கு என்று தெரியுமா? கோசார் நாத் என்ற குகை கோவில், வெகு சில இந்து வழிபாட்டு தளங்களில் ஒன்று. அதை மூடி விட வேண்டும் எந்த இந்துவும் அங்கு வணங்குவதை அனுமதிக்க முடியாது என்று ஹுரியத் அமைப்பு நடத்திய கல்வீச்சில் ராணுவ வீரர்களும், காவலர்களும் கடுமையாக காயமுற்றனர். சனாப் நதியில் நம்மூரை போலவே மண் அள்ளுகிறார்கள். அனைத்தும் காஷ்மீரிகளின் லாரிகள். பாதிக்கு மேல் அனுமதி இல்லாதவை. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. எடுத்தால், அது வேறு விதமான கலவரமாக மாறும்.
    காஷ்மீர் பொதுமக்கள் யாரும் இந்த கலவரங்களிலோ கல்வீச்சுகளிலோ ஈடுபடுவதில்லை. அவர்கள் வணிகர்கள், சுற்றுலா வருபவர்களை பார்த்து மிக சந்தோசம் அடைகிறார்கள். வருமானம் அதோடு ஒரு இயல்பு வாழ்க்கை நடைபெறுவதாக ஒரு மகிழ்ச்சி. ஆனால் பிரிவினைவாதிகளும் அரசிடம் இருந்து எந்த போராட்டங்களையும் தூண்டி விடாமல் இருக்க பணம் வாங்கும் சில செல்வந்தர்கள், பொறுக்கிகள் போன்றோரே காஷ்மீர் ஜம்முவின் சில பகுதிகளில் எப்போதும் பதற்றமாக வைத்திருக்க எண்ணுகிறார்கள். அதன் மூலம் இந்திய அரசிடம் இருந்து பெரும் பணமும், பாகிஸ்தானை மகிழ்ச்சி உற செய்து அதன் மூலமும் லாபம் பெறுகிறார்கள்.
    காஷ்மீர் பிரச்சினை பற்றி எந்த ஒரு நடுநிலை புத்தகங்களும் வெளிவந்ததில்லை. மகா புத்திசாலி என்று தன்னை எண்ணி கொள்ளும் அருந்ததிராய் எழுதிய ஆசாதி ஆசாதி என்ற புத்தகமே ஒரு மிக சிறந்த புத்தகமாக கருதபடுகிறது.
    நீங்கள் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆக வேண்டுமா? காஷ்மீர் பிரச்சினை குறித்து எழுத போகிறேன் என்று ஒரு அறிக்கை விட்டால் போதும், காஷ்மீர் பிரிவினைவாதிகள் உங்களை வரவேற்று அவர்கள் இடம் அழைத்து சென்று எல்லா வசதிகளுடன் தங்கவைத்து, அவர்களது சிந்தனைகள் அடங்கிய புத்தகங்களை படிக்க தந்து, அவர்களே சிலரை பேட்டி எடுக்க வைத்து அதை அப்படியே வெளியிடுமாக கேட்டுக்கொண்டு வழியனுப்பி வைப்பார்கள். ஜம்மு காஷ்மீரில் சுற்றி அலைந்து மக்களை பார்த்து பேசி, உண்மையான நிலை குறித்து கள ஆய்வு செய்து வரலாற்றை அறிந்து, காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை யோசித்து எழுதிய எழுத்தாளர்

  73. காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை யோசித்து எழுதிய எழுத்தாளர்கள் யாரும் இல்லை.
    அருந்ததி ராய் எல்லா மேலை நாடுகளாலும் கொண்டாட படுகிறார். காஷ்மீர் பிரிவினை வாதிகளின் பக்கமே நியாயம் உள்ளதாம். இந்தியா காஷ்மீர் பிரச்சினையில் தலையிட கூடாதாம். இவர் தெரு தெருவாக அலைந்து மக்களின் மன நிலை அறிந்தாரா? இப்படி இந்திய பிரிவினை குறித்து எழுத பேச அவருக்கு எத்துனை தையிரியம்? அமெரிக்காவிலோ ஐரோப்பிய தேசத்திலோ பிரிவினை குறித்து பேசி இருந்தால் உரு தெரியாமால் ஆக்கி இருப்பார்கள். ஆனால் பேச்சுரிமை இந்தியனுக்கு ஏராளம்.
    ஒவ்வொருவரும் சொல்வது காஷ்மீர் இசுலாமிய மக்களில் பலர் இந்தியாவுடன் இருக்க விரும்பவில்லை என்று. மொத்தத்தில் இந்திய அரசாங்கத்தை பயமுறுத்தி அது தரும் பணத்திற்காக பிரிவினைவாதம் என்ற ஆயுதத்தை பயன்படுத்துபவர்கள் மொத்தத்தில் ஒரு சதவிகிதம். பாகிஸ்தான் எல்லையில் உள்ள குரேஷி சமவெளி, மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்கள், மேலும் காஷ்மீர் கிராமங்கள் நகரங்கள் அனைத்திலும் இசுலாமியர்கள் பெரும்பான்மை. இங்கு மட்டுமே பிரிவினைவாதம் பேசபடுகிறது. அதிலும் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் இந்திய தேசத்துடன் இருக்கவே விரும்புகிறார்கள். சுன்னி பிரிவிலும் ஆதாயத்திற்காக பிரிவினைவாதம் பேசும் வெகு சிலரே உள்ளனர். இங்குதான் முழு அடைப்பு என்பதே பாசாங்கு. அவ்வபொழுது ஏதேனும் ஒரு காரணம் சொல்லி அடைப்பு என்று கூறி கல்வீச பொறுக்கிகளை தயாராக வைப்பார்கள். அனைத்து மீடியாக்களின் கவனம் வேணுமெனில் சாதாரண மக்களுக்கும் மதகுருமார்கள் மூலம் உத்தரவு சென்று விடும், கல்வீசும் கூடத்தின் பின் நின்றாக வேண்டும் என்று. மத ரீதியான உத்தரவு வரும் பொழுது அதை பெற முடியாதவர்களாக விருப்பம் இல்லா விட்டாலும் தெருவில் நின்றாக வேண்டிய கட்டாயம்.இதுவே காஷ்மீரின் நிலை.
    ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் இந்துக்கள் அதிகம். அங்கு பிரிவினைவாதம் பெசபடுவதில்லை. ஆனால் அங்கு பாகிஸ்தானின் ஊடுருவலும் அதை எதிர்ப்பதற்காக இந்திய ர்ரனுவம் எந்த நேரமும் ஊரடங்கு உத்தரவு செய்வதும்தான் பிரச்சினை. இப்பொழுது அனைவரும் ஒரு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருக்க விரும்புகிறார்களா பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா அல்லது தனி நாடாக விரும்புகிறார்களா என்று அறிய வேண்டும் என்கிறார்கள். பாகிஸ்தான் நடத்திய ஊடுருவல்கள் தாக்குதல்களால் காஷ்மீர் மக்கள் எந்த தேசத்துடன் இருந்தாலும் இந்த குண்டு சத்தம் இல்லாமல் இருந்தால் போதும் என்ற நிலையில் உள்ளார்கள். இப்பொழுது பாகிஸ்தானின் ஊடுருவல்களை தடுக்க சர்வதேச அளவில் நடவடிக்கை எடுப்பது சரியா, எங்களது ஒரு மாநிலத்தையே விட்டு விடுகிறோம், தயவு செய்து தாக்குதல் நடத்தாதீர்கள் என்று இந்திய தேசம் மண்டியிடுவது சரியா?
    இந்திய அரசு காஷ்மீர் பிரச்சனையை கௌரவப்பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருப்பதனால் இங்கு எந்த சிக்கலும் இல்லை என்று உலகுக்கு காட்ட விரும்புவதனால், எல்லையற்ற அளவு பணத்தை இங்கே கொட்டிக்கொண்டிருக்கிறது. இந்தப்பணம் நேரடியாக ராணுவத்திற்கும் பல்வேறு திட்டங்கள் வழியாக காஷ்மீர அரசுக்கும் வந்துகொண்டிருக்கிறது. ராணுவம் அதைக்கொண்டு பல்வேறு கட்டுமானத் திட்டங்களையும், பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் செய்துவருகிறது, அரசும் பல்வேறு திட்டப்பணிகளைச் செய்துவருகிறது.
    இப்பணிகள் மிகப்பெரும்பாலும் அனைத்துமே காஷ்மீர் பகுதிக்குத்தான் செய்யப்படுகின்றன. ஜம்மு, லடாக் பகுதிகள் ஒப்புநோக்க கைவிடப்பட்டிருக்கின்றன. காஷ்மீருக்கென வரும் பணம் அரசு குத்தகைதாரர்களுக்கும், அவர்களுடைய துணை குத்தகைதாரர்களுக்கும், அவர்களுடைய ஊழியர்களுக்கும் சென்றுகொண்டிருக்கிறது. இங்குள்ள பெரும் பணக்காரர்கள் ஏறத்தாழ அனைவருமே குத்தகைதாரர்கள்தாம். அவர்களால்தான் இங்குள்ள பொருளியலே இயங்கிக்கொண்டிருக்கிறது.
    குத்தகைதாரர்களுக்கு செல்லும் செல்வத்தில் நேர் பாதியாவது நேரடியாக தீவிரவாதிகளின் கைகளில் சென்று சேர்கிறது. அது அவர்களால் பங்கிட்டு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆகவே எந்த ஊழல் தரப்பு அரசிடம் இருக்கிறதோ, அதற்கு நேர் மறுபக்கமாகிய ஊழல் தரப்பு தீவிரவாதிகளிடம் இருக்கிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து எல்லைமீறாத ஒரு பதற்ற நிலையை உண்டாக்கி நீட்டிக்க விரும்புகிறார்கள்.
    காஷ்மீரைப்பொறுத்தவரை இஸ்லாமுக்குள் இருக்கக்கூடிய அடித்தள மக்கள் இன்னும் மத அதிகாரத்தின் பிடியில் தீவிரவாதத்தால் மிரட்டப்பட்டு மிக மோசமான வாழ்க்கை முறையில்தான் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
    பிரிவினைவாதிகள், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது ஆண்டுதோறும் தாக்குதல் நடத்துகிறார்கள். காவலர்களும் பயணிகளும் ஆண்டுதோறும் தாக்க படுகிறார்கள். எந்த பத்திரிக்கையிலும் இந்த செய்திகள் வந்தாலும், உடனே புத்திசாலிகளாக தன்னை நினைத்துகொள்ளும் எழுத்தாளர்கள், உலக நாடுகளே பாருங்கள் காஷ்மீர் மக்களுக்கு இந்துக்கள் அங்கு வருவது பிட

  74. எந்த பத்திரிக்கையிலும் இந்த செய்திகள் வந்தாலும், உடனே புத்திசாலிகளாக தன்னை நினைத்துகொள்ளும் எழுத்தாளர்கள், உலக நாடுகளே பாருங்கள் காஷ்மீர் மக்களுக்கு இந்துக்கள் அங்கு வருவது பிடிக்கவில்லை. எதற்காக பிறகு இந்த மாநில மக்களை கட்டாயபடுத்தி இந்தியாவுடன் இருக்கவைக்க வேண்டும். விட்டுவிடுங்கள் அவர்களை தனியாக நிம்மதியாக என்று எழுதுவார்கள்.
    இச்செய்திகள் எதுவும் வெளிவரக்கூடாது என்பது அரசின் தரப்பாக உள்ளது. இங்கு துணை ராணுவப்படை அலுவலகங்களுக்குச் சென்றபோது அனைத்து இடங்களிலும் அவர்களின் பணிகளில் முக்கியமானதாக நான்கை எழுதிவைத்திருந்ததைப் பார்த்தோம். ராணுவத்துக்கு உதவுவது, உள்நாட்டு அமைதியைப் பராமரிப்பது, தேர்தல்களை நடத்துவது, அமர்நாத் யாத்திரையை நடத்துவது.
    அமர்நாத் யாத்திரை கிட்டத்தட்ட ஒரு போர் ஒத்திகையைப்போல சுமார் ஒரு மாதகாலம் நிகழ்ந்து முடிகிறது. முடிந்ததும் ராணுவம் பெருமூச்சு விடுகிறது. ஆனால் கல்வீச்சில் எவரையும் கைது செய்ய முடிவதில்லை. எவரை கைது செய்தாலும் நிரபராதி கைது செய்யப்பட்டார் என்று சொல்லி அதை செய்தியாக தேசிய ஊடகங்கள் அனைத்திலும் பரவ விடுவார்கள் என்றும் அதற்காக அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்குவார்கள் என்றும் காவலர்கள் சொன்னார்கள். இஸ்லாமிய காவலர் ஒருவர் திரும்ப கல்வீசுவதைத்தவிர ராணுவத்தால் எதையுமே செய்யமுடியாது என்று சிரித்தபடி சொன்னார்.
    இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டு கோவில்கள் ஏராளமாக உள்ளன காஷ்மீரில். ஆனால் அது அத்தனையும் பாழடைந்து கிடக்கின்றன. அரசாங்கம் காஷ்மீரில் உள்ள ஒரு சதவிகித இந்து மக்களையும் எந்த கோவில்களுக்கும் செல்லவோ கோவில்களை பராமரிக்கவோ விரும்பவில்லை. அங்கு உள்ள பிரிவினைவாதிகள் கடுமையான தாக்குதல்களில் ஈடுபடுவார்கள்.
    ஆனால் காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மீது கடுமையான கோபம் உள்ளது. பிரிவினை வாதிகளை தாஜா பண்ணும் அளவு இறங்கி போய் இருக்கும் அரசு முன்பு காஷ்மீர் மக்களை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டதாக எண்ணுகிறார்கள். அரசு செய்ய வேண்டியது அரசு பணத்தில் செல்வந்தர்களாக இருக்கும் குத்தகைதாரர்களையும் அவர்கள் மூலம் பணம் பெரும் தீவிரவாத இடைதரகர்ளையும் களை எடுத்து மக்களிடம் ஒரு உண்மையான நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பிரிவினைவாத தலைவர்களும் மனம் மாற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இது எதையும் செய்ய பாகிஸ்தான் அனுமதிக்காது. காஷ்மீர் பிரச்சினை இருக்கும் வரையே பாகிஸ்தான் அரசியல் வாதிகளும் அரசியல் செய்ய முடியும்.
    இந்தியா இந்துக்களின் தேசம் அல்ல. ஆனால் அது இசுலாமியர்களின் தேசமும் அல்ல. ஒரு மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் இந்துக்களின் வழிபாட்டுதளங்கள் இருக்க கூடாது என்று கூறுவதும், தங்கள் மதம் மட்டுமே இருக்க வேண்டும் அங்கு என்று கூறுவதும் என்ன நியாயம்?
    வேறு தேசமாக இருந்தாலும் நம் ரத்தங்கள் பல்லாயிரம் இலங்கையில் இறந்தது தென்னிந்தியா தாண்டி வட இந்தியாவின் ஒரு சதவிகிதம் மக்களுக்கு கூட தெரியாது. ஆனால் ஒரு காஷ்மீர் பிரச்சினை பட்டி தொட்டி எங்கும் பேச படுகிறது. வேறு எந்த பிரச்சினையும் இந்தியாவில் இப்படி சில வினாடிகளில் நாடு எங்கும் பரவாது. ஆனால் ஒரு காஷ்மீரி தாக்கபட்டால் நாடெங்கும் பரவி விடும்.கல் வீச்சில் தினமும் இந்திய அரசும் ராணுவமும் காவல் துறையும் காயம் அடைவதை வெளியிடாமல் இருக்கவே மிகுந்த பணம் செலவு செய்கிறது. வெளி வந்தால் அதற்க்காகவே காத்திருக்கும் சில ஊடகங்கள் காஷ்மீரில் அமைதி இல்லை, பிரச்சினை என்று பெரிது படுத்தி விடும்.
    காஷ்மீரில் உள்ள சிறிய வட்டத்திலுள்ள தீவிரவாத அமைப்புகளுடைய பிரச்சாரம் மட்டும்,காஷ்மீரில் இருந்து கன்யாகுமரிவரை கோடிக்கணக்கான மக்களுக்கு எப்படி எடுத்துச்செல்லப்படுகிறது? யார் எடுத்துச்செல்கிறார்கள்? கண்டிப்பாக சுன்னி இஸ்லாம் மதப்பிரிவும், பிரச்சார அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் அதில் பெரும்பங்காற்றுகின்றன.
    ஆனால் அதற்குமேலாக தாங்கள் இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் இந்திய எதிர்ப்பு கூலி அறிவுஜீவிக்கும்பல் அந்தப்பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அப்பட்டமான் பொய்ப் பிரச்சாரம், பிழையான தகவல்கள், அவதூறுகள், திரிபுகள் வழியாக நம் சமகால வரலாறு நம் கண்ணெதிரே வேறாக காட்டப்படுகிறது.
    இந்திய அரசாங்கமும் ஒவ்வொரு இந்தியனும் செய்ய வேண்டியது ஒவ்வொரு காஷ்மீரிகளிடமும் நாம் அனைவரும் ஒன்று. உங்கள் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் நாங்கள் பொறுப்பு. காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதற்கு நீங்கள் பொறுப்பு என்ற மனம், உணர்வு அடிப்படையிலான ஒரு இணைப்பை உருவாக்குவதே. அந்த காஷ்மீர் மக்களை வைத்தே பிரிவினைவாதத்தை வேரறுத்து, பிரிவினைவாதிகள் மற்றும் கைகூலிகளை விரட்டி ஒன்றுபட்ட சமுதாயம் உருவாக்க வேண்டும். நடைபெறுமா? நடைபெற பாகிஸ்தான் அனுமதிக்குமா? காலம் பதில் கூறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *