தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…

குரங்கு ஒன்று குட்டியுடன் தண்ணீர்த் தொட்டிக்குள் சிக்கிக் கொண்டது. தண்ணீர் மட்டம் உயர உயர, குரங்கும் தனது குட்டியை மேலே மேலே தூக்கியது. தண்ணீர் மட்டம் கழுத்தை நெருங்கியபோது கூட, குட்டியை சிரமப்பட்டு தலைக்கு மேல் தூக்கிவைத்துக் காப்பாற்ற முயன்றது குரங்கு. ஆனால் பாசம் நெடுநேரம் நீடிக்கவில்லை. தண்ணீர் மட்டம் நாசியைத் தொட்டவுடன் குரங்கு என்ன செய்தது தெரியுமா? சட்டென்று தனது குட்டியை தொட்டிக்குள் போட்டு அதன் மீது ஏறி நின்றுகொண்டது. இப்போது தண்ணீர் மட்டம் பழையபடி அதன் கழுத்துக்குக் கீழ் சென்றுவிட்டது. உயிராசை பாசத்தை வென்றுவிட்டது. எனினும் தண்ணீர் மட்டம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தக் குரங்கு தப்புமா? கீழே தண்ணீர் குடித்து குரங்குக் குட்டி உப்புகிறது…

-பின் நவீனத்துவ பஞ்சதந்திரக் கதை ஒன்றிலிருந்து.

தினமணி கார்ட்டூன்கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால் குழப்பமாகத் தோன்றக்கூடும். ‘சிக்கன் 65’ என்று சொல்வது போல, அது என்ன சனிக்கிழமை 63? செவ்வாய்கிழமை 63? இரண்டிற்கும் என்ன தொடர்பு? இரண்டிடையே என்ன வேறுபாடு? ஒரே எண் தான் 63. ஆனால், மூன்று நாட்களில் அந்த எண் படுத்திய பாடு இருக்கிறதே, அதை நமது பகுத்தறிவுப் பகலவன், முத்தமிழ்க் காவலர், செம்மொழி வேந்தர், டாக்டர் கலைஞர் தம் வாழ்நாளிலேயே மறக்க முடியாது.
இதனைப் புரிந்துகொள்ள சற்றே பூர்வ கதைக்கு செல்ல வேண்டும். அதாவது திமுக – காங்கிரஸ் கூட்டணி கதைக்கு நாம் சென்றாக வேண்டும்.

வரும் தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணியில் இடம் பெற காங்கிரஸ் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 63; திமுக தருவதாகக் கூறியது 60. இரண்டுக்கும் வித்யாசம் வெறும் மூன்று. ஆனால், கூட்டணியை முறிக்கவே திட்டமிட்டு மூன்று தொகுதிகளை காங்கிரஸ் தூதர் குலாம் நபி ஆசாத் கூடுதலாக கேட்பதாகவும், அதை ஏற்க முடியாது எனவும், கடந்த மார்ச் 5 (சனிக்கிழமை) அறிவித்தார், இளைஞன் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின் வசனகர்த்தா ஆகிய கலைஞர். ‘காங்கிரஸ் தற்போது செய்துள்ள இக்கட்டு போல தனது அரசியல் வாழ்வில் எப்போதும் யாரும் செய்ததில்லை’ என்று உருகிய தலைவர், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியிலுள்ள திமுக அமைச்சர்கள் ஆறு பேரும் பதவி விலகுவார்கள் என்றும் அறிவித்தார்.

ஏழு ஆண்டுகளாக கூடிக் குலாவிய தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெறும் மூன்று எண்களில் பிட்டுக் கொண்டுவிட்டதாக தானைத் தலைவர் கருணாநிதி அறிவித்ததை நம்ப முடியாமல், அதிர்ச்சியுடன் முகம் கருக்க வேடிக்கை பார்த்தார்கள் கழக உடன்பிறப்புகள். காங்கிரஸ் வேண்டுமென்றே இழுத்தடிப்பது கூட்டணியை முறிக்கத் தான் என்பது பகுத்தறிவாளருக்கு பட்டென்று புரிந்துபோக, கூட்டணி சட்டென்று முறியும் சூழலுக்கு ஆளானது.

பா.ம.க. எதிர்பார்த்ததற்கு மேலாகவே, 31 தொகுதிகளை தாரைவார்த்த தி.மு.க. தலைவர், காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த கூடுதலான 3 இடங்களை ஒதுக்குவது சிரமமா என்ன? தவிர, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் காங்கிரசுக்கும் பல்லாயிரம் கோடி சம்பாதித்துக் கொடுத்ததோடு, சிறைக்கு சென்று தியாகிப் பட்டம் சுமக்கும் ஆ.ராசாவின் அற்புத சேவையை இவ்வளவு சீக்கிரம் சோனியா மறப்பார் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை.

தலைவர் ஏதோ கோபத்தில் மத்திய அரசிலிருந்து விலகுவதாக அறிவித்தாலும் மௌனசாமி பிரதமராவது கொஞ்சம் தாஜா செய்வார் என்று எதிர்பார்த்தால், இப்படி ‘காங்கிரஸ் புத்தி’யைக் காட்டிவிட்டார்களே என்று உள்ளுக்குள் பொருமாத உடன்பிறப்பு தமிழகத்தில் இல்லை. அவர்களது கோபம் இரட்டைக் குழல் துப்பாக்கியின் இன்னொரு குழலான வீரமணி மீது தான். அவர் தான் வெண்ணெய் திரண்டுவரும்போது பானையை உடைத்தவர் என்பது கழகத் தொண்டர்களின் கருத்து.

இந்த வீரமணி, நேரம் காலம் தெரியாமல் ‘சுயமரியாதை’யை நினைவுபடுத்த, ஏற்கனவே முறுக்கிக்கொண்டு திரிந்த காங்கிரஸ் மீது தலைவருக்கு கோபம் வர, வீரமணியின் சேட்டைகளை மற்றொரு மணியான ‘தினமணி’ கிழிகிழியென்று (கார்டூனில் தான்) கிழிக்க, ஒரு நல்ல முகூர்த்தத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணிக்கு பாடை தயாரானது.

இருப்பினும் பதவியிலிருந்து விலக விரும்பாத திமுக அமைச்சர்களின் அபிலாஷைகளை 3 நாட்களுக்கு தலைநகரம் கண்டது. தயாநிதி மாறனும் அழகிரியும் (சும்மா வேடிக்கை பார்த்தாலும் அவரும் கூட இருந்தார் அல்லவா?) கடைசிகட்ட முயற்சிகளை மேற்கொண்டு பதவி விலகலை ஒத்திப் போட்டனர். ஆயினும் தலைநகரில் திமுகவை சீந்துவாரில்லை. போதாக்குறைக்கு, ‘திமுக வெளியேறினாலும் மத்திய அரசு கவிழ விட மாட்டோம்’ என்று அறிவித்து, நேரம் காலம் தெரியாமல் கடுப்பு ஏற்றினார் முலாயம்.

கடைசியில் திமுக தனது வீறாப்பைக் கைவிட்டு, சமயோசித சிகாமணியான பிரணாப் முகர்ஜியிடம் தஞ்சம் அடைந்தது. நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் தனது துறை அமைச்சர் என்ற ரீதியில் பிரணாபிடம் பேசி, சமரசத் திட்டங்களை முன்வைத்தார். ‘திமுக தலைவர் ஏதோ கோபத்தில் அவசரப்பட்டு அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்; நீங்கள் நினைத்தால் கூட்டணியைத் தொடரலாம்’ என்று கெஞ்சும் நிலைக்கு திமுக ஆளானது.

அவரும் கடைசியில் மனமிளகினார். பிறகு அகமது படேல், சோனியா, ஆசாத் ஆகியோருடன் ஞாயிறு, திங்கள், செவ்வாய் – 3 நாட்களும் தொடர்ந்து இழுபறி பேச்சு நடந்தது. ஆரம்பத்தில் மிகவும் கறாராக இருந்த சோனியா, சிதம்பரம் உள்ளிட்ட திமுக அபிமானிகளின் வேண்டுகோளை ஏற்று கீழ்இறங்கியதாகத் தகவல். இறுதியில் இரு தரப்பிற்கும் ஒத்த உடன்பாடு எட்டப்பட்டது. அதாவது காங்கிரஸ் 63 தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்தார் ஆசாத். அருகில் நின்று மண்டை ஆட்டினார்கள் அழகிரியும் தயாநிதியும். தமிழகத்தில் இருந்தபடி, கூட்டணி திருப்திகரமாக அமைந்துவிட்டதாக அறிவித்தார் மு.க.

அதுசரி, சனிக்கிழமை காங்கிரஸ் கேட்ட அதே 63 தொகுதிகளைத் தானே செவ்வாய்கிழமை திமுக ஒப்புக்கொண்டது? இதை சனிக்கிழமையே அறிவித்திருந்தால் நாகரிகமாக இருந்திருக்குமே? பேரம் பேசும் ஆற்றலை இழந்து தில்லியில் காங்கிரஸ் காரர்களின் வீடுகளுக்கு காவடி தூக்கி அலைய வேண்டிய நிலைமை வந்திருக்காதே? மூன்று நாளில் 63 என்ற எண்ணின் மதிப்பு மாறிவிட்டதா? என்ற கேள்விகள் உங்களுக்கு இப்போது எழக்கூடும். அதைத்தானே கட்டுரையின் தலைப்பு இங்கு சுட்டிக் காட்டுகிறது?

***

முரண்டு பிடித்த மூழ்கும் கப்பல்கள்:

திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணிக்குள் நடத்திய கூத்துக்களின் பின்னணியில் வேறு பல அம்சங்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முதலாவதாக, மத்திய அரசுக்கு திமுகவால் ஏற்பட்ட சங்கடங்கள் அவர்களை நிலைகுலையச் செய்தன. மத்திய உளவுத் துறை சேகரித்துக் கொடுத்த தகவல்கள், தமிழகத்தில் நிலவும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தின. இதுவும் காங்கிரசின் தீர்க்கமான முடிவுக்கு காரணமானது. காங்கிரசைப் பொருத்தவரை திமுக ஒரு மூழ்கும் கப்பல். இந்தக் கப்பல் இதுவரை சம்பாதித்துக் கொடுத்த பலகோடிகள் பாதுகாப்பாக இருப்பதால், இனிமேல் ஓட்டைக் கப்பலைக் ‘கை’விடலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இது காங்கிரஸ் தரப்பு நிலவரம்.

அதேபோல, இலங்கைத் தமிழரைக் கொன்று குவித்த ராஜபக்ஷே குறித்த பிரசாரம் தமிழகத்தில் எடுபடலாம்; இலங்கைத் தமிழரை காக்க மறந்த மன்மோகனை எதிர்த்து தேர்தல் முழக்கம் செய்யப்படலாம். ஏற்கனவே இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு தமிழகத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் எந்த வலுவும் இல்லாத காங்கிரசை மூழ்கும் கப்பலாக தி.மு.க.வும் கருதியது. மத்தியிலும் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் தானே மன்மோகன் சிங் அரசு? இது திமுக தரப்பு நிலவரம்.

ஆக, இரண்டு மூழ்கும் கப்பல்களும் ஒன்றையொன்று மோதிக்கொண்டு மூன்று நாட்கள் போக்குக் காட்டின. இருப்பினும், இரு கட்சிகளுக்குமே வேறு வழியில்லை. ஜெயலலிதா ஆதரவு பெறுவதைவிட தனியாகவே தேர்தலைச் சந்திக்கலாம் என்று ஒரே குரலில் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் கூறியதைக் கேட்ட கட்சித் தலைமை அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மத்திய அரசிலிருந்து விலகுவது இப்போதைக்கு உடனடி பாதிப்பு ஏற்படுத்தாவிட்டாலும், தேர்தலில் திமுக தோற்றால் சாவுமணியாகி விடும் என்பதை வாரிசுகள் உணர்ந்ததால் மறுபரிசீலனை சாத்தியமானது.

இரு கட்சிகளுமே ஊழல் கூட்டாளிகளாக இருந்தபோதும், தங்களைக் காத்துக்கொள்ள ஒருவரை ஒருவர் தியாகம் செய்யத் தலைப்பட்டு நின்றதும், இந்தக் குத்துவெட்டில் அம்பலமானது. என்ன கூட்டணி அமைத்தாலும், அடுத்த ஜூன் மாதம் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு உவப்பாக இருக்காது என்ற உண்மையை அவர்களிடம் யாராவது சொன்னால் நல்லது.

அலைக்கற்றை ஊழல் விவகாரம் வெடித்தபோது அதை மறைக்க அனைத்து தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டவர்கள் மன்மோகன் சிங்கும் கருணாநிதியும். இருவரும் ஒத்த சிந்தனையுடன் இயங்கியது கண்டு கண்வைக்காதவர்கள் இந்திய அரசியலில் கிடையாது. ஆ.ராசா தவறே செய்யவில்லை என்று சத்தியமே செய்தார் காங்கிரஸ் வக்கீல் கபில் சிபல். தி.மு.க.வை விட ஒருபடி மேலாகவே ராசாவைக் காக்க முயன்றவர் சோனியா அம்மையார் தான். கொடுத்துச் சிவந்த கரங்களை வெடுக்கென்று வெட்ட முடியுமா?

dinamanicartoon280211இந்த ஊழலால் காங்கிரஸ் மானம் கப்பலேறியபோதும், மத்திய அரசு நிதானம் காத்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கால், மத்திய அரசு தடுமாறியது. நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அரசு, இறுதியில் மத்தியப் புலனாய்வுத் துறையை நீதிமன்றத்தின் ஆளுகைக்கு ஒப்புக் கொடுத்தது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அலைக்கற்றை ஊழல் விவகாரம் மத்தியப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்படுகிறது. அதன் விளைவாகவே ராசாவும் அவரது கூட்டாளிகளும் திகார் சிறைக்குள் செல்ல வேண்டியதாயிற்று.

புலனாய்வுத் துறை அரசு கட்டுப்பாடின்றி இயங்கத் துவங்கியபோதே கருணாநிதிக்கு வேர்க்கத் துவங்கிவிட்டது. கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ‘பொதுசேவை’யில் வாழ்வை அர்ப்பணித்த முதல்வருக்கு, அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகவே தெரிந்தது. எனினும் ராசா போட்ட உப்பிற்கு சிறிதேனும் நன்றி பாராட்டுவார்கள் என்ற அவரது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. ராசாவின் வாக்குமூலங்கள் கசியாதபோது நிம்மதி அடைந்த கலாகார் (இப்படித்தான் ஹிந்தி பத்திரிகையாளர்கள் கலைஞரை அழைக்கிறார்களாம்!), கூட்டணிதர்மம் காத்தார்.

ஆயினும், ராசாவின் ஊழல் கூட்டாளி பல்வாவிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாறிய பலநூறு கோடி விவகாரம் கசிந்தவுடன் கலங்கினார் கலாகார். இதை அப்படியே மூடி மறைக்க துடித்த தி.மு.க.வின் கோரிக்கையை பிரதமர் கண்டுகொள்ளவே இல்லை. புலனாய்வுத் துறை உச்ச நீதிமன்றக் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், தன்னால் ஏது செய்ய இயலாது என்றும் கைவிரித்தார், மௌனசாமி. அப்போது தான் கூட்டணியில் முதல் கீறல் விழுந்தது என்பதை பகுத்தறிவு இல்லாதவர்களும் உணர்வார்கள்.

கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்தியப் புலனாய்வுத் துறை நடத்திய சோதனையை அடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களும் ஆதாரங்களும் கூட்டணியில் அதிர்வை ஏற்படுத்தின. ‘சினியுக்’ என்ற நிறுவனம் ரூ. 214 கோடி கொடுத்ததற்கான ஆதாரம் வெளியானவுடன், காங்கிரஸ் மீது தி.மு.க. நம்பிக்கை இழக்கத் துவங்கியது. இது, கூட்டணியில் விழுந்த கீறல் விரிசலான இடம்.

அடுத்து, விசாரணை வளையத்திற்குள் முதல்வரின் அன்பு மகள் கனிமொழியும் மனைவி தயாளுவும், துணைவி ராசாத்தியும் வரக்கூடும் என்ற தகவல்கள் வந்தவுடன் தி.மு.க. தலைவர் நொந்தே போனார். தி.மு.க.வின் தூதர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்ந்து ‘கூட்டணி பேச்சு’ நடத்தினார்கள்; எப்படியாவது விசாரணையின் திசையை மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.கனிமொழி உள்ளிட்ட கழக குடும்ப உறுப்பினர்களிடம் செய்யப்படும் விசாரணை என்பது தி.மு.க.வின் சுயமரியாதைக்கு விடுக்கப்படும் சவால் என்பது, ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் விலாவாரியாக விளக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் நிலைமை தி.மு.க.வை விட மோசமாக இருந்தது.

இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிக மோசமான, ஊழல்மயமான, கீழ்த்தரமான அரசு என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்ட மன்மோகன் அரசுக்கு, இனிமேலும் தி.மு.க.வைக் காப்பது முடியாத காரியம் என்பது புரிந்துபோனது. ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கிலாவது காங்கிரஸ் வெல்ல வேண்டுமானால், ‘ஊழலை சகிக்க முடியாது’ என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காங்கிரஸ் புரிய வைத்தாக வேண்டும் என்று காங்கிரஸ் மதியூகிகளும் சொல்லியிருந்தார்கள். அதாவது, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி மாநிலங்களில் வெல்ல தமிழகத்தில் சாகசம் செய்தாக வேண்டும் என்று புரிந்து கொண்டது காங்கிரஸ்.

இந்தக் கருத்திற்கு சுதி சேர்த்தார், முன்னொரு காலத்தில் கருணாநிதியால் முதுகில் குத்தப்பட்ட ஈ.வி.கே.சம்பத் என்ற திராவிட இயக்கத் தலைவரின் மகனும் தற்போதைய காங்கிரஸ் முன்னணித் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். கூட்டணியில் காங்கிரசுக்கு அதிக இடம்; ஆட்சியில் பங்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கழகம் செய்த இளங்கோவனை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஒதுக்கிய காங்கிரஸ், அவரது வியூகத்தையே கூட்டணியை முறிக்கப் பயன்படுத்தியது. கலைஞர் நெளிந்தார்; பிறகு தெளிந்தார்.

முதலில் காங்கிரஸ் ஐவர் குழு தி.மு.க.வுடன் பேச்சு நடத்தியபோது, கூட்டணியில் காங்கிரசுக்கு 90 இடங்கள் ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பிறகு தேர்தலுக்குப் பிந்தைய அரசு கூட்டணி அரசாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இளங்கோவன், குழுவில் இல்லாமலே, குழுவின் கோரிக்கையைத் தீர்மானிப்பவரானார். கூட்டணிக்குள் விரிசல் பெரிதானது.

மேலிடத் தூதராக வந்த குலாம் நபி ஆசாத்தும் இதே கோரிக்கையை முன்வைக்க, தி.மு.க.வுக்கு பாதை நழுவுவது புலப்பட்டது. சாத்தியமற்ற நிபந்தனைகள் வாயிலாக கூட்டணியிலிருந்து கழன்றுகொள்ள காங்கிரஸ் முயற்சிப்பதாக தி.மு.க. உணர்ந்தது. கடைசிவரை பேச்சுவார்த்தை இழுபட்டு, காங்கிரசுக்கு 60 இடங்கள் என்று முடிவானது. ஆனால், இதனை 63 ஆக வேண்டுமென்றே உயர்த்திவிட்டது காங்கிரஸ் என்பது கருணாநிதியின் குற்றச்சாட்டு. இந்த மூன்று இடங்களுக்காக கூட்டணியை முறிக்கும் அளவுக்கு பகுத்தறிவு இல்லாதவர் அல்ல தலைவர் என்பது உடன்பிறப்புகளுக்குத் தெரிந்திருந்தாலும், முகம் கருக்க, தொண்டை நரம்புகள் புடைக்க காங்கிரஸ் எதிர்ப்பு கோஷம் முதல்முதலாக (மார்ச் 5 ) அறிவாலயத்தில் எழுந்தது.

கழக உயர்நிலை செயல்திட்டக் குழு முடிவெடுத்தபடி, வேண்டாவெறுப்பாக மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய தில்லி சென்றனர், புன்னகை முகமும் புண்பட்ட உள்ளமுமாக தி.மு.க. அமைச்சர்கள் ஆறு பேரும் (மார்ச் 6). கடைசிவரை ஏதாவது சமரசத்தை எதிர்பார்த்தபோதும், தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஏமாற்றம் அளித்தது. திடீரென்று பிரணாப் ஆபத்துதவியாக கருணாநிதியுடன் பேச, சுயமரியாதையை ஒத்திவைத்து, மீண்டும் பேச்சு நடத்த (மார்ச் 7 இரவு) திமுக தயாரானது. இம்முறை, பேசும் பொறுப்பு தயாநிதிக்கு கிடைத்துவிட்டது. அவரது ஏற்பாட்டில், பதவி விலகல் மேலும் ஒரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எனினும் காங்கிரஸ் தலைவி சோனியா உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்துகொள்வார் என்பதை திமுக அமைச்சர்கள் எதிர்பார்க்கவில்லை. ”பதவி விலகுவதாக மிரட்டி காரியம் சாதிக்க முடியாது. கூட்டணி தர்மத்தை தனது மிரட்டலால் பாழ்படுத்திவிட்டது திமுக” என்று காங்கிரஸ் கூறும் என்று அவர்கள் கனவிலும் கருதவில்லை. அகமது படேல், பிரணாப் முகர்ஜி போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் மட்டுமே தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய திமுக அமைச்சர்களால், எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவிக்கும் முன் என்னிடம் ஏன் ஆலோசிக்கவில்லை? என்ற சோனியா அம்மையாரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திமுக அமைச்சர்கள் நெளிந்ததாகவும் தகவல்.

திமுக்- காங்கிரஸ் கூட்டணி முறியுமானால், இருவருக்குமே ஆட்சி கவிழும் ஆபத்து இல்லை. மத்தியில் 18 எம்.பி.க்களின் ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டாலும் அதிகாரத் தரகர்களான முலாயம் போன்றவர்கள் மன்மோகன் அரசைக் காத்துவிடுவார்கள்; இருக்கவே இருக்கிறது ‘மதச்சார்பின்மை’ தாரக மந்திரம். தமிழகத்தில் 34 காங்கிரஸ் எம்எல்ஏக்ளின் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் பாமக ஆதரவுடன் தேர்தல் மாதங்களைக் கடந்துவிட முடியும் என்பது கருணாநிதியின் திட்டம். இந்த கணக்கு இரு தரப்பிற்கும் தெரியும். அதேபோல, கூட்டணி முறிந்தால் இரு தரப்பிலும் சேதாரம் இருக்கும் என்பதும் நிதர்சனம். பிறகு ஏன் இரு தரப்பிலும் காலைவாரும் கைங்கரியம் நடந்தது?

தினமணி கார்டூன்

முதலாவதாக, வெறும் மூன்று தொகுதிகளுக்காக நடந்த குத்துவெட்டு அல்ல இது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கழகக் குடும்பம் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதே முக்கிய கோரிக்கையாக இருந்தது என்று தகவல்கள் கசிந்தன. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் ராசாவை பலிகடா ஆக்கி இதுவரை தப்பிவந்த திமுக.வையே பலிகடா ஆக்கத் தயாராகி விட்டது காங்கிரஸ் என்பதும் புலப்பட்டது. கூட்டணியை முறிக்க இதைக் காரணமாகக் கட்ட முடியாதே? எனவே தான் மூன்று என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் கிடைத்தது.

பிறகு ஏன் மீண்டும் சமரசத்திற்கு திமுக முயன்றது? இதற்கு காரணம் அழகிரி, தயாநிதி, கனிமொழி ஆகியோரே என்பது தலைநகரச் செய்தியாளர்கள் நமுட்டுச் சிரிப்புடன் கூறும் தகவல்கள். திமுக அமைச்சர்கள் எவீருக்கும் பதவி விலக விருப்பமில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை முடுக்கிவிடப்படும் நிலையில் மத்திய அரசிலிருந்து விலகுவது புத்திசாலித்தனமல்ல என்று அழகிரி எடுத்துரைத்து சுயமரியாதைச் சுடர் கருணாநிதியிடம் விளக்கிய பிறகு, நிலவரம் பிடிபட்டது. போதாக்குறைக்கு ‘அண்ணன் எப்பச் சாவான்? திண்ணை எப்போ காலியாகும்?’ என்று காத்திருக்கும் அதிமுக தலைவி ஜெயலலிதாவும் புதுடில்லி நோக்கி பார்வையைத் திருப்பியது திமுகவுக்கு உதறலை ஏற்படுத்தியது; கலவரம் ஏற்பட்டது. கடைசியில், தனது பிடிவாதத்தைக் கைவிட்டு ஆசாத் கேட்ட அதே எண்ணிக்கையிலான தொகுதிகளைத் தாரை வார்த்தார் (மார்ச் 8) கலைஞர்.

இதற்காக பாமகவும் முஸ்லிம்லீகும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தலா ஒன்றை தியாகம் செய்தனவாம். என்ன பெருந்தன்மை! திமுகவும் பெருந்தன்மையாக ஒரு தொகுதியை தியாகம் செய்து காங்கிரஸ் கட்சியின் கெளரவம் காத்தது! ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். கீழே விழுந்து பலத்த அடிபட்ட பின்னரும், வெறும் சிராய்ப்பு தான் என்று மழுப்பும் திமுகவைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
2006 சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் 34 தொகுதிகளில் வென்றது. இப்போது காங்கிரஸ் கரம் ஓங்கியதால் 15 தொகுதிகளை கூடுதலாகப் பெற்றுவிட்டது. இதனால், சென்ற முறை 132 தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவின் (வென்றது 99) எண்ணிக்கை இம்முறை 121 ஆகக் குறைந்துவிட்டது. இக்கூட்டணியில் பாமக (30), விடுதலை சிறுத்தைகள் (10), கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (7), இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (2), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1) ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

எதிரணியில் ஆரம்பத்தில் இருந்த சுறுசுறுப்பு இடைக்காலத்தில் ‘காங்கிரஸ்’ காரணமாக மங்கிவிட்டது. அதிமுக அணியிலும் தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டுவிட்டால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துவிடும். இரு அணிகளாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தமிழக பாரதிய ஜனதா 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதற்கான வேட்பாளர் தேர்வும் தொடங்கிவிட்டது. பாஜக போட்டியிடுவதால் குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. பாஜக தீவிரமாக முயன்றால் 5 தொகுதிகளில் வெல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

44 Replies to “தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…”

  1. Pingback: Indli.com
  2. அட்டகாசமான, உண்மையை உள்ளது உள்ளபடி கூறும் கட்டுரை. எல்லாருமே திருடங்கதான் என்ற பாடல் காதில் ஒலிக்கிறது. தமிழக மக்களுக்கு கொஞ்சமாகவேனும் சூடு, சொரனை இருந்தால் இதுவரை அவர்களைச் சுரண்டியவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். மாற்றுச் சக்தியான கறைகள் இல்லாத கைகள் கொண்ட பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து தங்களது தவற்றுக்கு பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும்.

    கிட்டத்தட்ட நாட்டையே விற்றுவிட்டனர் பாவிகள்.. தேசத்துரோகிகளான இவர்களைத்தான் நாம் பிரதம மந்திரி, முதல் மந்திரி என்று கூறிக்கொண்டிருக்கிறோம்

  3. தேர்தலைத் தனியாக தைரியமாக எதிர்நோக்கும் பாரதீய ஜனதா கட்சிக்குக் குறைந்தது பத்து இடங்களாவது கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். இப்போதைய அரசியல் சூழ்நிலை மனதை வேதனைப் படுத்துகிறது. எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கும் மக்கள் ஓரளவுக்கானும் சிந்தித்துத் தங்கள் வாக்குகளை அளிக்கவேண்டும். இறைவன் தான் இந்த நாட்டைக் காக்கவேண்டும்! 🙁

  4. // தேர்தலைத் தனியாக தைரியமாக எதிர்நோக்கும் பாரதீய ஜனதா கட்சிக்குக் குறைந்தது பத்து இடங்களாவது கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். //

    வேறு வழியில்லை. அதற்க்கு பெயர் தைரியம் ?
    இருந்தாலும் நானும் பிரார்த்திக்கிறேன் 🙂

  5. Agree with Geetha Sambasivam…..

    Its pretty strange why Hindus are hesitating to vote for a pro Hindu party like BJP…
    Friends if you live in tamil nadu, please encourage your hindu friends and relatives to vote for BJP.

    Jai Sri Ram!!!

  6. @ ராஜா,

    முதலில் புறகணிக்க படுவோம்
    பிறகு எதிர்க்க படுவோம்
    அதன் பிறகு கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வோம்.

    கண்டிப்பாக தமிழக பிஜேபியை நான் பாராட்டுகிறேன். 234 தொகுதிகளில் நிற்பதற்கு எத்தனை பிரச்சனைகள் உள்ளது தெரியுமா உங்களுக்கு? தைரியம் இல்லாமல் இருந்தால் 100 இடங்களில் தான் போட்டி இட்டு இருப்பார்கள்.

    பொன் ராதா கிருஷ்ணன் மற்றும் லட்ச கணக்கான பிஜேபி தொடர்கள் உழைப்பு, சான்றோர்கள் ஆசியும் வீண் போகாது.

    ஆட்சியில் இல்லாவிட்டால் காணமல் போவதற்கு இது ஒன்றும் காங்கிரஸ் / திராவிட கட்சிகள் கிடையாது.

  7. சேக்கிழான்

    நல்ல அலசல். சில உடைபட்ட சங்கிலித் தொடர்கள் உள்ளனவோ என்று தெரிகிறது. வீரமணி நீங்கள் சொல்லுவது போல தன்னிச்சையாக அறிக்கை விடவில்லை. கலாகார் சொல்லியே செய்திருக்கிறார். எப்பொழுதெல்லாம் தன்னால் தன் பெயரில் அறிக்கை விட முடியாதோ அல்லது அறிக்கை விடப் பயமோ அப்பொழுதெல்லாம் தன் பினாமிகளான வீரமணி, தோரகா துரைமுருகன் ஆகியோரிடம் சொல்லி அறிக்கை விடச் சொல்வார். எனக்கு என்னமோ இவர்கள் போட்டது அனைத்துமே சோனியா சொல்லிப் போட்ட நாடகமாகவே தெரிகிறது. அப்படி இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் ஆபத்தின் விளிம்பு வரை எட்டிப் பார்க்கும் துணிவு கருணாநிதி அண்டு கொள்ளைக் குடும்பக் கும்பலுக்குக் கிடையாது. மேலும் ஸ்பெக்ட்ரம் கொள்ளையில் கூட்டுக் களவாணிகள் அவ்வளவு சீக்கிரம் ஒருவரை ஒருவர் விலகிச் சென்று விட மாட்டார்கள். அப்படி ஒரு வேளை இது சோனியாவின் ஸ்க்ரிப்டாக இல்லாத பட்சத்தில் கூடுமான வரை விசாரணைகளை தடுக்கப் பார்ப்போம் பழம் விழுந்தால் லாபம் விழாவிட்டால் கடைசி நேரத்தில் கேட்ட சீட்டுக்களைக் கொடுத்துத் தோப்புக் கரணம் போட்டுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு அதன் படியே நடந்திருக்கலாம். இது சோனியாவும் கருணாநிதியும் தனிப்பட்ட முறையில் பேசி வைத்துப் போட்ட நாடகாமவே தெரிகிறது.

    இதற்கிடையில் இந்தப் பேரத்தின் உடனடி பலனாக பிராணப் முகர்ஜி என்னும் திருடன் தனக்குக் கீழேயுள்ள என்ஃபோர்ஸ்மெண்ட் டைரக்ட்டரேட் அதிகாரிகளுக்கு ஸ்பெக்ட்ரம் விஷயமாக தீவீரமாக விசாரணை நடத்த வேண்டாம் என்று போட்டிருக்கும் உத்தரவை டெஹல்க்கா வெளியிட்டுள்ளது. இதில் யாரும் யோக்யர்கள் கிடையாது. சோனியா கடுர்மையாகத் திட்டினார் மன்மோகனும் பிராணுப்பும்தான் கருணாநிதிக்கு சாதகமாகப் பேசிக் கூட்டணியை தக்க வைத்தனர் என்ற செய்தி திட்டமிட்டு மீடீயாக்களுக்குக் கசிய வைக்கப் பட்டன. இது ஏதோ சோனியா பெரிய தியாகத் திருவுருவம் போன்ற பிம்பத்தை ஏற்படுத்த திட்டமிட்ட மீடீயா பிரச்சாரம். அப்படி ஒரு இமேஜை உருவாக்கினால் சோனியாவுக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் சம்பந்தமேயில்லை என்று அனைவரும் நம்பி விடுவார்கள் என்று திட்டமிடுகிறார்கள். அதன் காரணமாகவே கருணாநிதியிடம் சொல்லி இந்த டிராமாவை சோனியா போட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

    பத்திரிகைச் செய்திகளில் வந்தது அனைத்துமே பிரச்சாரத்திற்காகப் பரப்பபட்ட கட்டுக்கதைகளே. கொள்ளைக் கூட்டாளிகள் கருணாநிதியும் சோனியாவும் சொல்லி வைத்து போட்ட நாடகம் மட்டுமே இது. இப்படிப் போட்டால் கூடுதல் போனசாக ஜெயலலிதாவின் கூட்டணியில் சலசலப்பு வந்து பிரிந்து விடுவார்கள் என்றும் கணக்குப் போட்டுத் திட்டமிட்டு இந்த டிராமாவைப் போட்டிருக்கிறார்கள்.

    விஸ்வாமித்ரா

  8. ///பாஜக போட்டியிடுவதால் குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. பாஜக தீவிரமாக முயன்றால் 5 தொகுதிகளில் வெல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.///

    திருநாவுக்கரசரும் போய்விட்ட நிலையில் பா.ஜ.க.வின் வாய்ப்பு இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் இருக்காதேன்பதே எனது கணிப்பு. முப்பது தொகுதிகளில் மாற்றம் நிகழ்த்தும் வாய்ப்பிருந்திருந்தால் ஏதாவது ஒரு கூட்டணி சிறிதேனும் பா.ஜ.க வைச் சீந்தியிருக்கும். இல்லையே.

    பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குக் காரணம் பா.ஜ.கவின் தலைமையே. வாய்ப்புகள் வரும்போது அவற்றை முறையாகப் பயன்படுத்துவதில்லை. சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட பொது அத்வானி, வெங்கடராமன் உள்ளிட்டோர் தில்லியில் உண்ணாவிரதம் இருந்து என்ன பயன்? பா.ஜ.கவுக்கும் இல்லை குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கும் இல்லை. மதுரை மீனாக்ஷி கோவில் முன்னால் இருந்திருந்தால் பா.ஜ.கவை தமிழக மக்கள் நிச்சயம் ஒரு பெரிய இயக்கமாக நினைத்திருப்பார்கள். அந்த நேரத்தில் ஜெயலலிதாவை நேரடியாகச் சந்திக்கத் துணிவில்லாத நிலையில் பா.ஜ.கவின் தேசியத்தலைவர்கள் இருந்தார்கள் என்பதே உண்மை. உண்மை கசக்கும். ஆனால் இது போன்ற நிலையால்தான் பா.ஜ.க. தம்லகத்தில் இன்னும் வளரவேயில்லை.

    இப்போது கூட பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் தனி ஆவர்த்தனமாக சிறுபான்மையினருக்கு மட்டுமான கல்வி உதவித்தொகை குறித்துப் போராடுகிறார். அத்வானி உள்ளிட்ட முன்னநித்தளைவர்கள் இது குறித்த போராட்டத்தில் மதுரையில் ஆர்பாட்டம் மறியல் உள்ளிட்டவை நடத்தினால் தான் இந்தப் பிரசினை மக்களைச் சென்றடையும். அவார்கள் செய்ய மாட்டார்கள். நாமும் பிரார்த்தித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். செயல் பாடுபவனுக்கு மட்டுமே இறைவன் உதவுவார். சோம்பேறிக்கு அல்ல.

  9. I do not think that the BJP will win even a single assy seat in the forthcoming TN polls.

    It is perceived by the people in general as a north indian party.

  10. பிஜேபி ஆதரவாளர்களுக்கு எப்போது பார்த்தாலும் திட்டி கொண்டு இருப்பதே வேலை.

    குமரன் அவர்களே,

    தங்களால் முடிந்தால் 100 ஓட்டு பிஜேபி க்கு கிடைக்க உதவுங்கள். அதே சமயத்தில் தங்களுடைய கருத்துக்களை முற்றிலுமாக நிராகரிப்பதற்கு இல்லை. என்ன செய்வது… சில புல்லுருவி பிஜேபி முட்டாள்களால் நாம் இந்த அளவுக்கு கஷ்ட படவேண்டி இருக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள திருநாவுக்கரசர் ஒரு டம்மி பீசு. இவர் என்னத்தே கிளிச்சிடாறு பிஜேபில இருக்குபோது. இவரால கட்சிக்கு பைசா பிரயோஜனம் இல்ல. தேவையிலாம இந்த ஆளுக்கு minister போஸ்ட் கொடுத்து பிஜேபி தப்பு செஞ்சிட்டாங்க…

    எப்படி இருந்தாலும் நாம் கண்டிப்பாக குறைத்து 3 சீட்கள் மற்றும் ஒட்டு மொத்தமாக தமிழக தேர்தலில் 5 சதவிகித வாக்கும் கண்டிப்பாக பெறுவோம்.

  11. வேறு வழியில்லை. அதற்க்கு பெயர் தைரியம் ?//

    நிச்சயமா தைரியம் தான். இலவசங்களை அள்ளி வீசும் ஆளும் கட்சிக்குக் கூடக் கூட்டணி தேவைப்படுகிறது. அப்படி இருக்கையில் தனியாக நிற்பது என்பதற்கு மனோவலிமை தேவை. அது நிச்சயமாய் பிஜேபி தொண்டர்களிடம் எதிர்பார்க்கலாம். தமிழ்நாட்டில் வளரவில்லை என்பது உண்மையே. என்றாலும் பெருவாரியான மக்கள் தமிழ்நாட்டில் சானல்களின் மயக்கத்திலே ஆழ்ந்திருப்பதால் பிஜேபி பற்றிய சரியான கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. அதனால் கட்சிக்கு வளர்ச்சியில் தாமதம். என்றாலும் மக்களுக்குப்புரியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

  12. An excellent detailed running-commentary-like account of the known drama that was enacted with the same old type of dialogues, etc. by the renowned Tamil Cinema Vasana Kartha. Unfortunately the drama this time did not click well much to his disappointment as the other Party faced the unfriendly DMK with equal or more vulnerability. Anyway, as there was no other go, knowing their weakening status, the DMK had to bow down. All these incidents should be an eye opener to the Tamil Nadu Voters and they will be wise and will have a better friendly governance if all educated Voters instead of confining themselves indoors on Election Day go fot voting and vote efficiently and effectively to throw all corrupt and public un-friendly cheaters out of power and give an opportunity to a new Party known for their true interests in public welfare.

  13. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், காங்கிரஸ் கூட்டணி ஆதரவு இயந்திரமோ என்ற சந்தேகமுள்ளது. இந்த இயந்திரத் தில்லுமுல்லு தான் காங்கிரச்சையும் திமுகவையும் இணைக்கும் மந்திரமாக இருக்கும் என என் நண்பர்கள் கூறுவது எனக்கும் சரியெனப் படுகிறது.
    பாஜக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதிக கவனம் கொடுத்து (பணம் கொடுத்தல்ல) வேலை செய்தால் நிச்சயம் இம்முறை சட்டசபைக்குள் நுழையலாம். உதாரணமாக கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தி வேலை செய்தால், கட்டாயம் பலனுண்டு. கோவை, மதுரை, திருநெல்வேலி, சென்னை மாவட்ட தொகுதிகளில் அதிக வாக்குகள் பெறலாம்.

  14. இந்திய வாக்காளர் பேரவை என்ற அமைப்பு கோயம்புத்தூரிலிருந்து கடந்த சில தேர்தல்களில் வாக்காலப்பெருமக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. 2001 மற்றும் 2006 ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் , இந்த அமைப்பு நடத்தி முடித்து வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் , உண்மையான தேர்தல் முடிவுகளுடன் 95 சதவீதத்திற்கும் மேல் துல்லியமாக இருந்தன. 2001 தேர்தலில் ஜெயலலிதா அணி 190 க்கு மேலான இடங்களைப்பெறும் என்று இந்த அமைப்பு துல்லியமாக கணித்தது. 2006 சட்டசபை தேர்தலிலும் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்பதை துல்லியமாக கணித்தது.

    இந்த அமைப்பு சுமார் 60000 வாக்காளர்களுக்கும் மேல் தொடர்பு கொண்டு, சுமார் 25 கேள்விகளை கேட்டு , அவற்றுக்கு பதில் வாங்கி, அவற்றை தொகுத்து , வாக்காளர் விருப்பத்தை ஆராய்கிறது.இவர்கள் மக்கள் தொகையில் படித்தவர், படிக்காதவர், ஆண்,பெண் , ஏழை, பணக்காரர், பல்வேறு தொழில்புரிவோர், பல்வேறு மதம், ஜாதி ஆகியவற்றை சேர்ந்தவர்களிடம் அவர்களின் சதவீத அடிப்படையில் பங்கு பெறச்செய்து கருத்து கேட்கிறது. எனவே, இதன் கணிப்புப் தவறாது.

    இந்தமுறை, இன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை தமிழ் இதழில்( 17.3.2011 தேதியிட்டது) இந்த அமைப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி சுமார் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கணிப்பின் சில முக்கிய விவரங்கள் வருமாறு:-

    திமுக ஆட்சி நல்ல ஆட்சி என்று ஐந்து சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். தொண்ணூற்று ஐந்து சதவீதம் பேர்கள் இது நல்ல அரசு அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

    ஒரே குடும்பத்தின் ஆட்சியை விரும்பவில்லை என்று தொண்ணூறு சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

    கிலோ ஒரு ரூபாய் அரிசி , அரிசியை கடத்தி விற்கும் கடத்தல் வியாபாரிகளுக்கு அதிக பயனுள்ளதாக 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

    திமுக ஆட்சியே மீண்டும் வரவேண்டுமா என்ற கேள்விக்கு 98 சதவீதம் பேர்கள் இல்லை என்று கூறி உள்ளனர்.

    மொத்தமுள்ள 25 கேள்விகளில் 23 கேள்விகளுக்கு 93 .4 சதவீத மக்கள் திமுகவின் மாநில அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

    திமுக ஆட்சி கூடாது என்று சொல்லுபவர்கள் ஒரே அணியில் திரள வேண்டும் என்று நூறு சதவீதம்பேர்கள் தெரிவித்துள்ளனர்.

    விலைவாசி உயர்வு, ஆ ராசா முறைகேடு, கலைஞர் குடும்பத்தினரின் அதிகார ஆதிக்கம் ஆகியவை மூன்றுமே பொதுமக்களிடம் மிக கடுமையான வெறுப்பை ஏற்படுத்தி உள்ளன.

    எனவே இந்தமுறை எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் , வாக்கு வித்தியாசத்தில் வேண்டுமானால் சிறிது மாறுதல் ஏற்படுத்தலாமே தவிர, அண்ணாதிமுக கூட்டணியின் வெற்றியை மாற்ற முடியாது.

    இதில் அனைவரும் மகிழ வேண்டிய ஒரே ஒரு விவரம் என்னவெனில், தமிழக சோனியா காங்கிரசு இந்தமுறை மறைந்து போகும். எல்லோரும் முன்கூட்டியே அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளலாம்.

  15. அன்புள்ள விஸ்வாமித்திராவுக்கு

    உங்கள் ஹேஷ்யம் சரியே. இதில் பல தொடர்பறுந்த கண்ணிகள் உள்ளன. அவற்றை அறிந்தவர்கள் கருணாநிதியும் சோனியாவும் மட்டுமாகத் தான் இருக்க முடியும். ஆயினும், இந்த நாடகத்தை இயக்கி நடத்தியவர் என்று தனிப்பட்ட யாரையும் சுட்டிக்காட்ட முடியாது என்றே கருதுகிறேன்.

    முதலாவதாக, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் லாபம் அடைந்தவர்கள் பட்டியலில் ஆ.ராசா முதல் பிரணாப் முகர்ஜி, சரத் பவார், சிதம்பரம் வரை பலருக்கு பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. கருணாநிதிக்கும் இதில் பெரும் பங்குண்டு. எனவே தான் ஆரம்பத்தில் ராசாவைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன. சோனியாவின் பொம்மையான பிரதமர் மன்மோகனும் பல பொய்களைக் கூற அதுவே காரணம்.

    ஆனால், ராசாவே பினாமி பெயரில் தனி லெட்டர்பேட் நிறுவனத்தைத் துவங்கி, தனக்கே அலைக்கற்றைகளை ஒதுக்கிக் கொண்டதையும் அவற்றை முட்டாள்தனமாக சில நாட்களில் விற்று பல்லாயிரம் கோடி சம்பாதித்ததையும் அவர்களாலும் நம்ப முடியவில்லை. ராசாவின் அவசரமே அவரையும் அவரது ஆதரவாளர்களையும் இக்கட்டில் மாட்டிவிட்டது. ராசாவுக்கு கருணாநிதி போலவோ, சோனியா போலவோ அமர்த்தலாக ஊழல் புரியத் தெரியவில்லை என்பது தான் உண்மை.

    ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளிப்பட, ராசாவின் பினாமி நிறுவனத்தின் அலைக்கற்றைகள் பல மடங்கு விலையில் விற்கப்பட்டதே காரணம் எனில் மிகையில்லை. எனினும் கனிமொழியின் ‘ராசா ஆதரவால்’ திமுக தலைவர் அமைதி காத்தார். அப்படி அமைதி காக்க வேண்டிய கட்டாயம் சோனியாவுக்கு இருக்கவில்லை. போதாக்குறைக்கு உச்ச நீதிமன்றமும் தோண்டித் துருவ ஆரம்பித்தவுடன், காங்கிரசுக்கு ராசாவை கைகழுவுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஆயினும் அவருக்கு இன்னும் கொடிய சிறை அனுபவங்கள் வாய்க்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.

    எனினும், சோனியா கைவிட்டதை கலாகாரால் ஏற்க முடியவில்லை. சென்ற முறை தில்லியில் தனக்கு காங்கிரஸ் தரப்பில் வரவேற்பு கிடைக்காத போதே கருணாநிதிக்கு விஷயம் புரிந்துவிட்டது. எனவே அவர்தான் இந்த குத்துவெட்டு நாடகத்தைத் துவக்கிவைத்தார். அதற்கு வீரமணியை அவர் பயன்படுத்திக் கொண்டார். (காண்க: தினமணி கார்டூன்). ஆனால், பதவி விலக விரும்பாத வாரிசுகள் நாடகத்தின் அடுத்த பகுதியை தில்லியில் அரங்கேற்றினார்கள். இறுதியில் அந்த நாடகத்தை சோனியா முடித்துவைத்தார். அதற்கு முன் சோனியா திமுக.வினரைக் கடிந்துகொண்டது உண்மை என்பது, எனது தில்லி பத்திரிகையாளர் நண்பர் மூலம் அறிந்த தகவலே.

    இப்போதைக்கு தயாளு, கனிமொழியிடம் விசாரணை துவங்கி இருக்கிறது. எனினும் கடும் நடவடிக்கை மத்திய அரசால் எடுக்கப்பட வாய்ப்பு குறைவு. அதற்கான ‘புரிந்துணர்வு ஒப்பந்தமும்’ தில்லி நாடகத்தின் முடிவில் ஏற்கப்பட்டிருக்கலாம். இதில் வடஇந்திய மீடியாவைப் பொறுத்தவரை, திமுகவை பலிகடா ஆக்கி காங்கிரஸ் இமேஜைத் தூக்கி நிறுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன. அது புதிதல்ல. இந்த நாடகத்தில் மீடியா முக்கிய இடம் வகித்ததும் மறுக்க முடியாத உண்மையே.

    பல கோடி ‘சம்பாதித்துக் கொடுத்தும்’ காங்கிரஸ் சுயபுத்தியைக் காட்டிவிட்டதே என்ற ஆதங்கத்தை கலைஞரிடம் காண முடிந்தது. தவிர தொகுதி விஷயத்தில் பிளாக்மெயில் செய்யப்படுவதாக அவர் உணர்ந்தார். (காண்க: மதியின் கார்ட்டூன்). சில வேலைகளில் கார்ட்டூன்கள் உண்மையை பட்டவர்த்தனமாக சொல்லிவிடுவதுண்டு. எனவே தான் அவரும் திட்டமிட்டு பாமக, கொமுக கட்சிகளுடன் கூட்டணி கண்டார். தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி உறுதியான பிறகே அவர் அறிக்கை வெளியிட்டார் என்பதையும் கவனியுங்கள். திமுக நடத்தியது ஓரங்க நாடகமானால், இவ்வாறு காத்திருக்கத் தேவையில்லை.

    கருணாநிதி கூட்டணியை வெட்டவே விரும்பியிருக்கக் கூடும். பிற்பாடு நடக்கவுள்ள சட்ட நடவடிக்கைகள் மீது அரசியல் சதி பழி போட அவருக்கு அது உதவியாக இருந்திருக்கும். ஆனால், திமுகவின் வாரிசுகளுக்கு போராட்ட குணமில்லை. அது அவர்களது நாடகத்தில் வெளிப்பட்டது. இவ்விஷயத்தில் திமுக தலைவர் திட்டமிட்டு நகர்த்திய அரசியல் ‘மூவ்’ நாடகமாக மாறியதற்கு அழகிரி, தயாநிதி, கனிமொழி ஆகியோரே காரணம்.

    மேற்கு வங்கத்தில் தீதியிடம் சிக்கிக்கொண்டு திணறும் காங்கிரசுக்கு தமிழகத்திலும் கைவிடப்படுவது ஆபத்து என்பதால் சிதம்பரம், பிரணாப் உள்ளிட்ட பெரிய மண்டைகள் ஆலோசித்து சோனியாவை சாந்தப்படுத்தினர் என்பதும் தகவல். இந்த விஷயத்தில் காங்கிரஸ் எந்த இழப்பும் அடையவில்லை. நாடகத்தில் முழு நிர்வாணியாக்கப்பட்டது திமுக மட்டுமே.

    -சேக்கிழான்

  16. அன்புள்ள பாஜக நண்பர்களுக்கு

    இந்த தேர்தல் அலசல் வரிசையில் விரைவில் பாஜக நிலை குறித்து தனிக் கட்டுரை வரவுள்ளது. அப்போது, பாஜக வின் பலம்-பலவீனம் குறித்து கண்டிப்பாக ஆராயப்படும். இப்போதுள்ள நிலையில் பாஜக.வை மிகவும் மட்டமாக எடைபோடத் தேவையில்லை என்பதே என் கருத்து.

    இந்தத் தேர்தலின் அடிநாதம் ஊழல் கூட்டாளிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற மைய நோக்கில் திரும்பினால், பாஜக வாக்காளர்களும் கூட தங்கள் வாக்குகளை பாஜக தவிர்த்து மாற்றுக் கட்சிகளுக்கு அளிக்கக் கூடும். ஆனால், அதற்கான முயற்சியில் இதுவரை அதிமுக தலைவி இறங்கி இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதும் கூட ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு மனநிலை இருப்பது புலப்படுகிறது. ஆகவே ஊழலை ஒழிக்க விரும்புவோர் பாஜகவை மாற்று சக்தியாக முன்நிறுத்த வேண்டும்.

    பொன்.ராதாகிருஷ்ணன் எடுத்துள்ள நிலைப்பாடு இப்போதைக்கு கேலிக்குரியதாகத் தோன்றலாம். 30 தொகுதிகளில் பாஜக வாக்குகள் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் இருப்பவர்கள் பொறுத்திருந்து தான் ஆக வேண்டும். ஏனெனில் தேர்தல் அரசியலில் ஒரு வாக்கு குறைந்து தோற்றாலும் தோல்வியே. அப்படிப்பட்ட நிலையை பாஜக ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    தவிர குமரி மாவட்டம் இம்முறை பலத்த அதிர்ச்சி முடிவுகளை பாஜக தவிர்த்த கட்சிகளுக்கு அளிக்கும் என்பது எனது அனுமானம். பத்மநாபபுரத்தில் வேலாயுதன் ஜெயித்தபோது, யாரும் நம்பியிருக்கவில்லை. இம்முறை பொன்.ராதாகிருஷ்ணன் சாதித்துக் காட்டுவார் என்று நம்புகிறேன். அதுவரை நாமும் நம்மால் இயன்ற அளவில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டின் தேவையை பிரசாரம் செய்ய வேண்டியது தான்.

    -சேக்கிழான்.

  17. இந்திய வாக்காளர் பேரவை என்ற அமைப்பு கோயம்புத்தூரிலிருந்து கடந்த சில தேர்தல்களில் வாக்காலப்பெருமக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. 2001 மற்றும் 2006 ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் , இந்த அமைப்பு நடத்தி முடித்து வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் , உண்மையான தேர்தல் முடிவுகளுடன் 95 சதவீதத்திற்கும் மேல் துல்லியமாக இருந்தன. 2001 தேர்தலில் ஜெயலலிதா அணி 190 க்கு மேலான இடங்களைப்பெறும் என்று இந்த அமைப்பு துல்லியமாக கணித்தது. 2006 சட்டசபை தேர்தலிலும் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்பதை துல்லியமாக கணித்தது.

    இந்த அமைப்பு சுமார் 60000 வாக்காளர்களுக்கும் மேல் தொடர்பு கொண்டு, சுமார் 25 கேள்விகளை கேட்டு , அவற்றுக்கு பதில் வாங்கி, அவற்றை தொகுத்து , வாக்காளர் விருப்பத்தை ஆராய்கிறது.இவர்கள் மக்கள் தொகையில் படித்தவர், படிக்காதவர், ஆண்,பெண் , ஏழை, பணக்காரர், பல்வேறு தொழில்புரிவோர், பல்வேறு மதம், ஜாதி ஆகியவற்றை சேர்ந்தவர்களிடம் அவர்களின் சதவீத அடிப்படையில் பங்கு பெறச்செய்து கருத்து கேட்கிறது. எனவே, இதன் கணிப்புப் தவறாது.

    இந்தமுறை, இன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை தமிழ் இதழில்( 17.3.2011 தேதியிட்டது) இந்த அமைப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி சுமார் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கணிப்பின் சில முக்கிய விவரங்கள் வருமாறு:-

    திமுக ஆட்சி நல்ல ஆட்சி என்று ஐந்து சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். தொண்ணூற்று ஐந்து சதவீதம் பேர்கள் இது நல்ல அரசு அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

    ஒரே குடும்பத்தின் ஆட்சியை விரும்பவில்லை என்று தொண்ணூறு சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

    கிலோ ஒரு ரூபாய் அரிசி , அரிசியை கடத்தி விற்கும் கடத்தல் வியாபாரிகளுக்கு அதிக பயனுள்ளதாக 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

    திமுக ஆட்சியே மீண்டும் வரவேண்டுமா என்ற கேள்விக்கு 98 சதவீதம் பேர்கள் இல்லை என்று கூறி உள்ளனர்.

    மொத்தமுள்ள 25 கேள்விகளில் 23 கேள்விகளுக்கு 93 .4 சதவீத மக்கள் திமுகவின் மாநில அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

    திமுக ஆட்சி கூடாது என்று சொல்லுபவர்கள் ஒரே அணியில் திரள வேண்டும் என்று நூறு சதவீதம்பேர்கள் தெரிவித்துள்ளனர்.

    விலைவாசி உயர்வு, ஆ ராசா முறைகேடு, கலைஞர் குடும்பத்தினரின் அதிகார ஆதிக்கம் ஆகியவை மூன்றுமே பொதுமக்களிடம் மிக கடுமையான வெறுப்பை ஏற்படுத்தி உள்ளன.

    எனவே இந்தமுறை எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் , வாக்கு வித்தியாசத்தில் வேண்டுமானால் சிறிது மாறுதல் ஏற்படுத்தலாமே தவிர, அண்ணாதிமுக கூட்டணியின் வெற்றியை மாற்ற முடியாது.

    இதில் அனைவரும் மகிழ வேண்டிய ஒரே ஒரு விவரம் என்னவெனில், தமிழக சோனியா காங்கிரசு இந்தமுறை மறைந்து போகும். எல்லோரும் முன்கூட்டியே அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளலாம்.

    பிரதாப்

  18. Tamil Nadu people always a supporter of secularism so, from this point of view BJP will not win even a single in TN assembly poll…

    JAI HIND

  19. Tamilan,

    Do you know the definition of secular? Don’t make some rubbish statement. we are not here for political gain.

  20. [asthikasamaj] MU KA’s latest attempt to win Brahmin Votes (எனக்கு வந்த மெயில்)

    சங்கரரராமன் கொலை வழக்கில் சிக்கியுள்ள ஜெயேந்திரரைக் காப்பாற்ற கருணாநிதி முயற்சி எடுத்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தலைமைச் செயலக வட்டாரங்கள் இது குறித்து தெரிவிக்கையில், நேற்று, இந்த வழக்கின் முன்னாள் புலனாய்வு அதிகாரி சக்தி வேல் என்பவரை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து, உள்துறைச் செயலாளர் ஞானதேசிகன், பொதுத்துறை செயலாளர் கருத்தைய்யா பாண்டியன், சட்டத்துறை செயலாளர் தீனதயாளன் மற்றும் தலைமைச் செயலாளர் மாலதி ஆகியோர், மூன்று மணி நேரத்துக்கும் மேலாக, ஜெயேந்திரர் வழக்கில் உள்ள பலவீனங்கள் என்ன, தீர்ப்பு எப்போது வரும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி விட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை தேர்தலுக்கு முன் வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளனர். ஜெயேந்திரர் கைது செய்யப் பட்டதால், பிராமணர்கள் ஜெயலலிதா மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும், ஜெயேந்திரர் தேர்தலுக்கு முன் விடுதலை செய்யப் பட்டால் பிராமணர்கள் வாக்குகள் அத்தனையும், தனக்கு விழும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
    அதிகாரிகளைச் சந்தித்த பிறகு, இறுதியாக சக்திவேல், கருணாநிதியை அவரது அறையில் சந்தித்த போது, அந்த அதிகாரிகள் சொன்னதை நிறைவேற்றுமாறு, சக்திவேலிடம் தெரிவிக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, புதுவை முதல்வர் வைத்தியலிங்கத்திடமும், கருணாநிதி தொலைபேசியில் பேசி, வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 13க்குள் வருவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  21. Mr.shree,

    The view that religious considerations should be excluded from government and education – This is the meaning of secularism and my statement. India has a secular image in abroad but that image is vanishing now because of some organisations like bjp… etc. Tamil Nadu have that image still now, we don’t allow it to vanish!!! If you want to support some community you can rise your voice for TAMIL PEOPLES in srilanka… The amount involved in the Karnataka (BJP government) mining lease scam was higher than the 2G spectrum issue. This is a statement from The former Prime Minister and Janata Dal (Secular) president, H.D. Deve Gowda, on Saturday (12-03-2011). Single state scam (mining lease scam) is higher than National scam (2G spectrum) This is the example of bjp government. Dr Manmohan Singh universally praised as India’s best prime minister since Nehru – This is the statement from Forbes magazine recently so, India drives in a right way guided by right government (Center)…

    வாழ்க சமய சார்பின்மை…

  22. திருவாளர் தமிழன் அவர்களே,
    செக்குலரிசம் என்று கூறிக் கொண்டு ஹிந்துக்கள் அல்லாத மாணவர்களுக்கு நிதி உதவி – மதசார்பின்மை என்று கூறிக் கொண்டு கொடிகளில் புரளும் சர்ச் அமைப்புகளுக்கு மேலும் அரசு சார்ந்த உதவி அளிப்பது…

    உங்களது இந்த நிலைப்பாடு இன்னும் 30 ஆண்டுகள் கழித்து இருக்குமா?!

  23. தமிழன்,
    என்ன பிதற்றுகிறீர்கள்? உங்களுக்கு குஜராத் இந்தியாவில் முன் மாநிலமாக இருப்பது தெரியுமா? அங்கு பிஜேபி அரசு நடப்பது உங்களுக்கு தெரியாதா?

    காங்கிரஸின் கொள்ளை சாதனையும் திமுகா ஆதிமுக அந்த மற்றும் முகாவின் கொள்ளை உச்சங்களும் உலகே அறியும்.

    நீங்கள் என்னவோ 2G கொள்ளையை சாதரணமாக கூற முற்படுகிறீர்கள்
    திமுக வரும் தேர்தலில் நாக்க முக்கா தான்

  24. பிரதாப்

    அன்புள்ள தமிழியன் அவர்களே ,

    கர்நாடகத்தில் உள்ள சுரங்க குத்தகை ஊழல் என்பது எவ்வளவு என்றாலும் , அந்த தொகை வெளிநாடுகளுக்கு செல்லவில்லை. மேலும் பாகிஸ்தானோ, சீனாவோ அந்த ஊழலில் சம்பந்தப்படவில்லை.

    ஆனால் 2ஜி யில் சம்பந்தப்பட்ட பணம் வெளிநாடுகளுக்கு போய்த்தலைமறைவாகி விட்டது. மேலும் ஸ்வான் நிறுவனம் விற்ற உரிமைகளை வாங்கியவர்கள் பம்பாயில் ( மும்பை) வெடிவைத்து பல நூறு இந்திய உயிர்களை குடித்த தாவூது இப்ராஹீம் மற்றும் இந்தியாவின் கடுமையான எதிரியும், மனித இனத்தின் ஜனநாயகம், சமத்துவம் , சுதந்திரம் என்ற கொள்கைகளுக்கு குழி பறிக்க முயலும் சீனக்கம்யூனிஸ்ட் பதர்களுக்கும் கை மாறியுள்ளது. எனவே 2ஜி ஊழல் தேசப்பாதுகாப்புக்கே ஆபத்தான சக்திகளுக்கு உதவியுள்ளது என்று தெளிவாக தெரிகிறது.எனவே 2ஜி உடன் கர்நாடக ஊழலை ஒப்பிட்ட தமிழியனின் நாட்டுப்பற்று மீது எல்லோருக்கும் சந்தேகம் வந்தால் வியப்பு ஒன்றும் இல்லை.

  25. A VERY CLASSIC ARTICLE.CONGRATS MR.SEKHIZHAN.
    THE MEANING OF,”KALAAKAR” IS ” KILLADY ” (SAID WITH A SARCASM.)

    AM MENTIONING THIS FOR TAMIL FRIENDS WHO ARE NOT FAMILIAR WITH HINDI

  26. Tamilan, Thanks a lot for your reply. Is your concept of secularisum appliacable in hindu miniority states like Kashmir, kerala, mizoran, nagaland, manipur, skkim, south tamilnadu…

    I appreciate if you answer for my below mails.. I am ready to quit if you answer for my below questions…

    50. All Hindu-majority regions are peaceful. But all Hindu-minority regions have become problematic – like J&K, North Eastern parts, etc. Can you explain why?

    49. Riots take place mostly after the Friday prayers. Is it not because of the fiery sermons of the Imams?

    48. Are you aware that India is the only country which openly invites infiltrators from Bangladesh. Bihar, UP and West Bengal Govts. provide them with immediate ration cards and make them voters.

    47. Why Christian Missionaries do not go to Muslim-dominated areas and start their social service there? Is it because they will not get sufficient return to their ‘investment’?

    46. Why Hindu dominated Bharat is secular for ages and Muslim dominated countries are only Islamic with no powers to minorities?

    45. How come a Muslim family peacefully lives in a predominantly Hindu locality, whereas a Hindu family is not able to do so in a Muslim locality?

    44. Do you agree with the thesis of Communists that India is a State of different nations, like the former USSR, (and not a Nation of different states) and therefore is bound to break up?

    43. Do you believe that Communists love our country, when they refuse to admit that China was the aggressor in 1962?

    42. UN Charter says that minority means less than 10% of the population. How can Muslims, who are nearly 14% in India be called a minority?

    41. Don’t you think that ‘Secular Muslim’ is a misnomer? A person can either be Secular or a Muslim, and not both? A Muslim (who believes in the only God, Allah) cannot be secular

    (believing in many Gods).

    40. Ishwar Allah tere naam – Can you show me one Muslim who has agreed to this?

    39. Don’t you believe that Islam and Christianity are political
    ideologies, out to grab nations. They – through their Mullahs and
    Fathers – achieve what Army, Navy and Air Force cannot, by converting
    locals and destroying their culture.

    38. Do you trust that Islam and Christianity believe in Sarva Dharma Samabhav? If yes, why do they believe in conversion.

    37. When Quran does not believe in negotiation (it believes only in defeating Kafirs in a war), do you think that the Ayodhya problem will be solved by negotiation?

    36. A former President, two former PMs, Sadhus and Sants have demonstrated against the arrest of Kanchi Shankaracharya, but the media says there is absolutely no protest. Do you think violence is the only yardstick to measure people’s agony?

    35. How do you explain the Muslim psyche : Enjoying the freedom in a democratic country like India, USA, UK, France, etc. and still trying to make it an Islamic nation, where they lose all freedom.

    34. If Islam is a religion of peace, why Quran-reading and Gunwielding is taught in tandem?

    33. If the communal riots is due to RSS, VHP, Bajrang Dal, etc. why there are riots in Bangladesh, Pakistan, Saudi Arabia, Iraq, Turkey, Afghanistan, Indonesia, Chechhnya, China, Russia, UK, France, Spain, Cyprus, etc. – where there is no RSS/VHP.

    32. When Deepavali & Janmashtami are celebrated at White House,
    House of Commons, Australian Parliament, etc. why are they not
    celebrated in Indian parliament? Are we more secular than USA, UK &
    Australia?

    31. Do you think that India will remain secular and democratic if Muslims become majority?

    30. If music, singing and dancing are un-Islamic (because Islam is a
    serious religion), why no Fatwa is issued against the many Khans in the
    cinefield. What will they give up – Islam or Acting?

    29. If painting is un-Islamic, why there is no Fatwa issued against MF
    Hussain? If he still persists with painting, is he not doing an
    un-Islamic act?

    28. J&K with about 1 crore population has been provided with aid worth Rs.24,000 crores, i.e. Rs.24,000/- per head, whereas in other states the per head aid is less than 5% of this amount. Is this not a reward for anti-nationalism?

    27. IMTD act in Assam gives legal rights to Bangladeshi Muslims to
    settle and become Indian citizen, whereas Indians cannot settle in
    Jammu & Kashmir. Why this double standard?

    28. J&K with about 1 crore population has been provided with aid
    worth Rs.24,000 crores, i.e. Rs.24,000/- per head, whereas in other
    states the per head aid is less than 5% of this amount. Is this not a
    reward for anti-nationalism?

    26. Arabic language is promoted in India at Govt. expenses. but not Sanskrit? Is Arabic more national than Sanskrit?

    25. In Kerala, MLAs, MPs & Ministers take oath in the name of Allah
    and Infant Jesus, which is against the Constitution. Can a Hindu take
    oath in the name of Ram or Krishna?

    24. In 2003-2004 – A Muslim President, a Hindu Prime Minister and a Christian Defence Minister, running the affairs of the country, with a unity of purpose. Can this happen any where
    except in a Hindu Nation – Bharat?

    23. When Haj pilgrims are given subsidy, why Hindu pilgrims to Amarnath, Sabarimalai & Kailash Mansarover are taxed?

    22. Dr. Praveenbhai Thogadiya has been arrested many times on flimsy grounds. Has the Shahi Imam of Jama Masjid, Delhi, Ahmed Bukhari been arrested for claiming to be an ISI agent and advocating partition of Bharat?

    21. Abdul Rehman Antuley was made a trustee of the famous Siddhi Vinayak Temple in Prabhadevi, Mumbai. Can a Hindu – say Mulayam or Laloo – ever become a trustee of a Masjid or Madrassa?

    20. Why post-Godhra is blown out of proportion, when no-one talks of the ethnic cleansing of 4 lakh Hindus from Kashmir?

    19. In contrast, in India, Muslim population has gone up from 10.4% in 1951 to about 14% today; whereas Hindu population has come down from 87.2% in 1951 to 81.5% in 2001. Does any politician have the guts to ask Muslims to go for family planning?

    18. In 1947, when India was partitioned, the Hindu population in
    Pakistan was about 24%. Today it is not even 1%. In 1947, the Hindu
    population in East Pakistan (now Bangladesh) was 30%. Today it is about
    7%. What happened to the missing Hindus? Do Hindus have human rights?

    17. Do you consider that – Sanskrit is communal and Urdu is secular, Mandir is communal and Masjid is secular, Sadhu is communal and Imam is secular, BJP is communal and Muslim
    League is secular, Dr. Praveen Thogadiya is anti-national and Bhukari is national, Vande Matharam is communal and Allah- O-Akbar is secular, Shriman is communal and Mian is secular, Hinduism is communal and Islam is secular, Hindutva is communal and Jihadism is secular, and at last, Bharat is communal and Italy is secular?

    16. When Christian and Muslim schools can teach Bible and Quran, why Hindus cannot teach Gita or Ramayan?

    15. Do you admit that Hindus do have problems that need to be recognized. Or do you think that those who call themselves Hindus are themselves the problem?

    14. If Muslims & Christians are minorities in Maharashtra, UP, Bihar, etc., are Hindus not minorities in J&K, Mizoram, Nagaland, Arunachal Pradesh, Meghalaya, etc?. Why are Hindus denied minority rights in these States?

    13. Why Gandhiji objected to the decision of the cabinet and insisted that Somnath Temple should be reconstructed out of public funds, not government funds, when in January 1948 he
    pressurised Nehru and Patel to carry on renovation of the mosques of Delhi at government expenses?

    12. Why Gandhiji supported Khilafat movement (nothing to do with our freedom movement) and what in turn he got?

    11. In what way, J&K is different from Maharashtra, Tamil Nadu or Uttar Pradesh, to have Article 370?

    10. When uniform is made compulsory for school children, why there is no Uniform Civil Code for citizens?

    9. Why temple funds are spent for the welfare of Muslims and Christians, when they are free to spend their money in any way they like?

    8. When Hindus gave to Muslims 30% of Bharat for a song, why should Hindus now beg for their sacred places at Ayodhya, Mathura and Kashi?

    7. Today Hindus are 82%. If Hindus are intolerant, how come Masjids and Madrassas are thriving? How come Muslims are offering Namaz on the road? How come Muslims are proclaiming 5 times a day on loudspeakers that there is no God except Allah?

    6. Hindu-majority Maharashtra, Bihar, Kerala, Pondicherry, etc. have in the past elected Muslims as CMs; Can you ever imagine a Hindu becoming the CM of Muslim-majority J&K or Christian dominated Nagaland/Mizoram?

    5. Show one Mullah or Maulvi who has declared a ‘fatwa’ against terrorists.

    4. Show one country where the 82% majority craves for the indulgence of the 18% minority.

    3. Show one Muslim country which has a Non-Muslim as its President or Prime Minister.

    2. Show one Muslim country where Hindus are extended the special rights that Muslims are accorded in India?

    1. There are nearly 57 Muslim countries. Show one Muslim country which provides Haj subsidy.

    \\ வாழ்க சமய சார்பின்மை…\\ you deserve to be in muslims dominated kashmir / christion dominated north east states….

  27. Shree,
    Your post should be made a separate article and should be publicized very well.

  28. Mr Shree and friends

    First of all plz understand that i am not supporting any community other than TAMILS… Constitution of India declares that India is a secular state but it is not followed practically this is the reason of my anger… Your commands are in favor of hinduism and criticize congress, i want to ask you that we all know congress is the reason for death of lakhs of tamil peoples in srilanka than why you bjp mens are not rising voice against congress… As a congress man i am doing this…

    We all know that Gujarat is developing as a modal state but it follows china’s way its not good for india… Tamil Nadu’s development is not like that it developes in right way… One state development is calculated in terms of health (prescribed by UNO) TN is no-1, Chennai is a number one medical hub in south asia… We can’t expect this from gujarat… This is achieved by congress coalition government…

  29. Shree,

    A lot of good questions – however many aren’ that sound…

    //Arabic language is promoted in India at Govt. expenses. but not Sanskrit? Is Arabic more national than Sanskrit?
    //
    Indian govt does not promote Arabic – it promotes Urudhu – Urudhu has a DD channel – according to the norms a language gets a DD channel if 2% of our population speak that language – So why does Sanskrit not have one?

    You can help – please learn

    Washington celebrates Diwali because they are also in the same game as our govt – minority appeasement

    Several of your questions about J&K are not backed by sound knowledge of the actual problem – the problem isn’t so simple

  30. @Tamilian

    you have not answered any of the question ,
    Secularism is for state not for citizen , if you will not vote for a party that will favor Hindus , no one can stop muslims appeasement , christian missionary conversions , and problems for India will increase only, soon they will get reservations also , Any Hindu is tolerant for others , it is only because we are Hindu majority that you can keep singing secularism here , Secularism is just a outer cover , the essence is Hinduism , but the Congress traitors their deep rooted education system is telling you from beginning that Gandhi is father of nation and Congress has made the nation ,

    Congress is just a party of traitors , character less people , who can cheat their own religion and people to gain vote , Congress is the Big monster, anybody knows about Mr. N.D. tiwari ? google him , to know about character of this old Congress Man and governor , Congress is full of such ,

    It is also Evident that You are only supporting “Tamil ” so dividing Hindus on the basis of region has been tactics of Congress and other “Secular” party for long time ,

  31. New Unit scale conversion introduced in India :-

    100 crore = 1 Yeddi
    100 Yeddi = 1 Reddi
    100 Reddi = 1 Radia
    100 Radia = 1 Kalmandi
    100 Kalmandi = 1 Pawar
    100 Pawar = 1 Raja
    100 Raja = 1 Sonia

  32. Tamilian, come out of your well. It is ok, it is safe out here. Please have a look around. People in this website are being Indian first before being Tamilian, Keralite or Bengali. I cannot blame you.You are the result of brain washing done by the Dravidian parties. Think NATIONAL for a change. We do not need enemies to divide us and our country as long we have people like you.
    I feel sympathy for Tamils in Sri Lanka and no doubt India should do something about it. But rantings against BJP do not help. Have you ever raised your voice about the Kashmiri Hindus who have become refuges in their own country? Don’t you think you duty ls to fellow citizens of India is first and foremost rather than worrying MORE about Tamils in Sri Lanka or Malaysia? Where is your loyalty?
    You also need some basic understanding of maths and economics and your head examined by a Psychiatrist, if you think that land scams in Karnataka is bigger than 2G scam. Also, being a congresswallah, ask yourself this question. Who is behind your beloved party’s head,the the Italian boss Sonia Maino Gandhi? She is not educated enough and she hasn’t got the brain to pull off a scheme like 2 G. The Vatican? Mafia?
    Also what qualifications this Italian Madam has to lead your party/nation, other than being a widow of ex PM?
    By the way you have not answered Shree’s questions. I dare you answer each one of them, point by point.

  33. பிரதாப்

    பெருமதிப்பிற்குரிய SHREE ,

    உங்களுடைய ஐம்பது கேள்விகளுக்கும் எந்த அரசியல்வாதிகளாலும் பதில் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் அனைவருமே இந்த உண்மைகளை நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆனால் சாதிகளுக்கிடையே பிரிவினை, விரோதம், மற்றும் வெறுப்பு இவற்றை வளர்த்து , அதில் தங்கள் வோட்டு வங்கிகளை வளர்த்து வரும் இவர்களிடம் நீங்கள் நியாயத்தை எதிர்பார்க்கலாமா?

    இந்துக்களிடம் மதத்தலைவர்களாக இருப்பவர்கள் கலப்பு திருமணங்கள் எல்லா ஜாதிகளிடையேயும் நிறைய எண்ணிக்கையில் நடந்து இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்பட்டால் , எல்லா அரசியல் வாதிகளும் நம் காலில் வந்து விழுவார்கள்.

    பிறமதங்களுக்கு சென்ற நண்பர்களும் அடுத்த வாய்ப்பிலேயே இங்கு வந்துவிடுவார்கள்.

  34. Tamilian
    In India secularism means exclude Hindu, Hinduism & appease the minorities to grab power and not to bother about national integrity or security. See how shamelessly the grand old congress party leaders are hiding under the […] Vatican planted Italian Mafia [….] Sonia Maino. This great self respected tamilan Mu.Ka only interested in his family welfare and do not want to loose his alliance at any point of time. First time during Lankan war he was coolly witnessing the Tamil genocide. Second time in spectrum issue both congress and DMK looted the money but only Raja was arrested and now in Jail. The congress supported medias openly projecting as if it is only the loot of DMK and putting all blames till date. Still this self respect man wanted to continue the alliance with congress and loot more public wealth & cheating the Tamilians by throwing dog biscuit (freebees)

  35. @Tamilian

    \\Constitution of India declares that India is a secular state but it is not followed practically this is the reason of my anger… \\

    you misunderstood the indian constitution. Kashmir is not a secular state. Please read the article 370 for more information. Few years before, BJP tabled the amendment change for including the word “secualr” in the constituion of kashmir. Both congress and communist voted together against BJP amendment. why the secular congress voted against secular amendment?

    oops.. instead of answering for my questions, you are just changing the topic. If BJP is communal then congress is also communal. I would suggested you to quit congress if you really want to be a secular. Compare to congress, BJP is secuar.

    \\Your commands are in favor of hinduism and criticize congress,\\

    As i mentioned, we are not here for political gain. we are ready to supprt congress if they work without considering the vote bank politics. I appriciate if you answer for any of my quesitons.

    \\ i want to ask you that we all know congress is the reason for death of lakhs of tamil peoples in srilanka than why you bjp mens are not rising voice against congress… As a congress man i am doing this\\

    you must know the reason of this srilanka issue.

    I always wonder why Srilanka is not merged with India during 1940… Andaman & Nicobar island is nearly more than… 1000Km away from India. But, Srilanka is just few Km away from Rameswaram. After all, the genital and cultural wise, we both are same.

    Ship transportation plays a major role in the world economy. Indian Ocean plays a major role.

    https://www.sangam.org/2007/10/International.php?uid=2566

    A looter christians always had an eye on Indian Ocean. Western people always look for long term goal. The western (American so called Buddhist Henry Steel Olcott) some how penetrated into the Buddhism and reformed it during 19th century… for separating the srilanka from the core concept of mother land. Problem started during 1950’s. I request you to read the list of srilanka presidents and buddisum reformation… to know their relation with christianity …

    https://en.wikipedia.org/wiki/Buddhism_in_Sri_Lanka#Christian_missionaries_and_colonialismhttps://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1582
    https://en.wikipedia.org/wiki/List_of_Presidents_of_Sri_Lanka

    BJP protested in parliment for srilankan tamil people.

    https://www.thaindian.com/newsportal/india-news/bjp-asks-govt-to-ensure-early-rehabilitation-of-tamils-in-sri-lanka_100274881.html

    https://www.hindu.com/2009/04/27/stories/2009042760001100.htm

    https://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=389&page=34

    Seav bharathi (sangh parviar family) runs n number of rehabliantion camps in north srilanka.

    Show me a single rehabillation camp run by congress and any dravidian group.

    As you know, all indian medias are controlled by congress, communist, christions and muslims groups.. To know more on this, please read the below link.

    https://realfacts-indianmedia.blogspot.com/

    you can check the authentication of this information in wikipedia. They will never publish the pro-BJP news.

    \\We all know that Gujarat is developing as a modal state but it follows china’s way its not good for india… \\

    Just dont make some rubbish statement. Dont’ speak like third grade politician. Do you have any idea about china’s / communist priniciple? Is there any logic in your statement. Please compare china and gujrat business strategy. I am ready to quit BJP if you show any similarity..

    \\Tamil Nadu’s development is not like that it developes in right way… One state development is calculated in terms of health (prescribed by UNO) TN is no-1, Chennai is a number one medical hub in south asia… We can’t expect this from gujarat\\

    Do you want to compare TN and gujarat?

    \\This is achieved by congress coalition government…\\

    I couldn’t stop laughing after reading your comment. you are speaking as if DMK and congress ruled tamilnadu for the past 25 years.

    விலங்குகளையே தெய்வமாக வணங்குபவர்கள் நாங்கள். ஒரு அல்லாவையோ ஒரு யேசுவையோ ஏற்றுகொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. பல ஆயிரம் புத்தகங்களை புனித நுலாக கொண்டவர்கள் நாங்கள். ஒரு பைபிள் அல்லது குரானை ஏற்றுகொள்வதில் எந்த தயக்கமும் இல்லை.

    வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைப்பதை போல, , கிறித்துவ மத மாற்றம் மற்றும் இஸ்லாம் ஜிகாதி என்ற பெயரில் இந்த நாட்டை மற்றும் ஒரு முறை அடிமை படுத்த ஒரு காலும் அனுமதிக்க மாட்டோம்.

  36. I got confused after reading your statement.

    \\ Indian govt does not promote Arabic – it promotes Urudhu – Urudhu has a DD channel – according to the norms a language gets a DD channel if 2% of our population speak that language – So why does Sanskrit not have one? \\

    Then why hell government allots the funds for Arabic university? Is there any non-Muslims / secular country in the world… promoting the Arabic universities?

    https://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=13353&SKIN=B
    I am not good in language. I hope someone will answer for your question briefly. You get more information if you Google…

    Sanskrit is ancient classical Indian language. We have 100’s of Sanskrit institutions in India. Sanskrit is used in all the Hindu temples. You must improve your knowledge on Indian languages. Instead of promoting ancient Indian language, why government is very much interested to promote the invaders language? Show me a single non Muslim country in the world… which promotes the Urdu language

    \\Washington celebrates Diwali because they are also in the same game as our govt – minority appeasement\\

    Haaa Haaa…. Are you clear on your statement? How the diwali celebration becomes minority appeasement?
    Can you show me a single example… where USA / any government allots… fund / reservation / constitutional changes to the people in the name of minority religious?

    \\Several of your questions about J&K are not backed by sound knowledge of the actual problem – the problem isn’t so simple\\

    Don’t give some vague statement. Do you know the actual problem of J&K? If so, please help us to understand the actual problem of Kashmir. Kashmir problem is nothing but a problem of jihadi muslism. I have one more question. Why there is no issue in Pakistan / china occupied Kashmir. Do you have any answer for this?

  37. Shree

    about J&K issue – it is not just a Jihadhi problem – you may get some answers from TH Q&A article if it comes out.

    Diwali celebration, declaring Mexican, spanish et al as official languages and having sign boards etc are for sure minority appeasment – even if it is Washington – a vote is a vote – they do this for nothing othern than votes. So why is Banglaore govt going soft on tamizhians now – there is a sizeable tamizh poluation who have Vote – In munnar election capmpains are done in tamizh 🙂 for what purpose?

    minority appeasement will be there everywhere (forget Arab countries – they are not governments at all). India is in a different league thats all

    // according to the norms a language gets a DD channel if 2% of our population speak that language – So why does Sanskrit not have one?

    You can help – please learn
    //

    Will you ?

    WRITE is 5 words, TALK is 4 words – DO is just two words – very simple.

    Though i appreciate your anguish towards the state of affiars – ARE you READY to DO?

  38. பிரதாப்

    2ஜி யில் சம்பந்தப்பட்ட ராஜாவின் வலதுகை போன்றவரான சாதிக் பாட்சா இறந்துள்ளார். அது இயற்கை மரணமல்ல என்பது தெளிவு. தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேக மேகம் இன்னும் பல நாட்களுக்கு சூழ்ந்திருக்கும்.

    தேர்தலுக்கு இன்னும் இருபத்தேழு நாட்களே இருக்கும்போது இப்படி நடந்திருப்பது பகுத்தறிவு திமுகவுக்கு நல்ல சகுனம் இல்லை.

    ஆரம்பத்தில் போர்க்களத்தில் தோல்வி அடைந்து இறந்த இராவணனையும், அவனுடைய தம்பி கும்பகர்ணனையும் போல ஒற்றுமையாக இருங்கள் என்று தன் பிள்ளைகளிடம் கூறியதே நல்ல சகுனம் அல்ல.

    பின்னர் கலைஞர் மகள் கனிமொழியிடம் சி பி ஐ விசாரணை செய்துகொண்டிருந்த போது, அதே தினத்தில் ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் வந்து ஏகப்பட்ட உயிர் சேதம் ஏற்பட்டது. இதுவும் நல்ல சகுனம் அல்ல.

    இதுவரை நடந்த தேர்தல்களில் திமுக வாங்கிய ஒட்டு சதவீதம் இன்றைய தினமலர் தமிழ் நாளிதழில் சப்ளிமெண்டில் வெளியாகி உள்ளது. காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து திமுக போட்டியிட்ட 1980 தேர்தலில் தான் திமுக சரிபாதி தொகுதிகளை இந்திரா கம்பெனிக்கு வழங்கி , மிக குறைவாக 21.92 சதவீத ஒட்டு பெற்றுள்ளது ( எம் ஜி ஆர் இருந்தபோது ).

    இந்தமுறை சோனியா கம்பெனியை சுமக்காமல் தனித்து போட்டி இட்டிருந்தால் திமுக இவ்வளவு ஊழல் புகார்களுக்கிடையிலும் ஒரு ஐம்பது முதல் எழுபது சீட்டுக்கள் வரை நிச்சயம் பெற்றுவிடும். ஏனெனில் திமுகவுக்கு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் பதினைந்து முதல் முப்பத்தைந்து சதவீதம் வாக்கு வங்கி உண்டு.இந்தவாக்கு வங்கி சில மாவட்டங்களில் சிறிது வித்தியாசப்படும்.

    உதாரணமாக குமரி, நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் பா ஜ க வுக்கு சிறிது செல்வாக்கு உண்டு. அந்த ஊர்களில் பிற கட்சிகளின் ஒட்டு சதவீதம் சிறிது குறையும். இதேபோல கம்யூனிஸ்ட்களுக்கு செல்வாக்கு சிறிது உள்ள நாகை, திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளிலும் பிற கட்சிகளின் வாக்கு வங்கி சிறிது குறையும். எனவே இன்றைய குழப்பமான சூழலில் திமுக தனித்திருந்தால் , டாக்டர், மற்றும் சிறுத்தை ஆகியோருடன் கௌரவமாகவாவது தோற்கலாம். எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தாவது கிடைக்கும். இப்போது சோனியாவின் கம்பெனியுடன் மூழ்க போவதை நினைத்து , தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பிறகு வருத்தப்படப்போகிறார்.

  39. ஊழலுக்கு எதிரான அத்துணை பெரும் தயவு செய்து எந்த திராவிட கட்சிகளுக்கும் வாக்களிக்காதீர்கள். தமிழ் நாட்டில் இதுவரை ஆட்சிக்கு வராத, நேர்மை ஒன்றையே முதலீடாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற பா.ஜ.க.வுக்கு வாக்களித்து உங்கள் தேச பக்தியை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  40. கருணாநிதிக்குப் போட்டியாக ஜெயலலிதா முஸ்லீம்களுக்கு அதிக அளவில் இட ஒதுக்கீடு செய்வதாக வாக்களித்துள்ளார்.

    இவர்கள் இருவருமே ஹிந்து விரோதிகளே
    இவர்கள் ஆட்சி இன்னும் சிறிது காலம் தொடர்ந்தால் தமிழ் நாடு முழுதுமே நாகாலாந்து போலவோ காஷ்மீர் போலவோ மாறி விடும்
    ஹிந்துக்களின் எதிர்கால சந்ததிகள் இதுவரை இங்கு அமைதியாக வாழ்ந்தது போல் வாழ முடியாது
    எனவே ஹிந்துக்கள் இனியும் ஏமாறாமல் பா ஜ காவுக்கே வாக்களிக்க வேண்டும்.

    இரா .ஸ்ரீதரன்

  41. என்னுடைய 11 .3 .2001 தேதிய கடிதம் ( இதே தலைப்பின் கீழ்) தயவு செய்து பார்க்கவும்.

    “PIRADHAAP
    11 March 2011 at 10:23 pm

    இந்திய வாக்காளர் பேரவை என்ற அமைப்பு கோயம்புத்தூரிலிருந்து கடந்த சில தேர்தல்களில் வாக்காலப்பெருமக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. 2001 மற்றும் 2006 ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் , இந்த அமைப்பு நடத்தி முடித்து வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் , உண்மையான தேர்தல் முடிவுகளுடன் 95 சதவீதத்திற்கும் மேல் துல்லியமாக இருந்தன. 2001 தேர்தலில் ஜெயலலிதா அணி 190 க்கு மேலான இடங்களைப்பெறும் என்று இந்த அமைப்பு துல்லியமாக கணித்தது. 2006 சட்டசபை தேர்தலிலும் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்பதை துல்லியமாக கணித்தது.

    இந்த அமைப்பு சுமார் 60000 வாக்காளர்களுக்கும் மேல் தொடர்பு கொண்டு, சுமார் 25 கேள்விகளை கேட்டு , அவற்றுக்கு பதில் வாங்கி, அவற்றை தொகுத்து , வாக்காளர் விருப்பத்தை ஆராய்கிறது.இவர்கள் மக்கள் தொகையில் படித்தவர், படிக்காதவர், ஆண்,பெண் , ஏழை, பணக்காரர், பல்வேறு தொழில்புரிவோர், பல்வேறு மதம், ஜாதி ஆகியவற்றை சேர்ந்தவர்களிடம் அவர்களின் சதவீத அடிப்படையில் பங்கு பெறச்செய்து கருத்து கேட்கிறது. எனவே, இதன் கணிப்பு தவறாது.

    இந்தமுறை, இன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை தமிழ் இதழில்( 17.3.2011 தேதியிட்டது) இந்த அமைப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி சுமார் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”

    மேலே தெரிவிக்கப்பட்ட கோவையை சேர்ந்த தமிழ்நாடு வாக்காளர் பேரவை என்ற அமைப்பின் கருத்துக்கணிப்பு இந்த தேர்தலிலும் மிக துல்லியமாக சரியாக வந்துள்ளது.

    இதில் என்ன முக்கியம் என்றால் , தேர்தலுக்கு ஆறு வாரம் முன்பே கணிப்பு நடத்தி மிக சரியாக விடை அளித்துள்ளனர். ஆனால் வேறு பல பத்திரிக்கைகளும், தொலை காட்சிகளும் எடுத்த , தேர்தலுக்கு முந்திய கருத்து கணிப்பும், தேர்தல் நடந்து முடிந்தபின் எடுத்த எக்சிட் போல் முடிவுகளும் தேர்தல் முடிவை சரியாக சொல்ல முடியவில்லை.

    கோவை தமிழ் நாடு வாக்காளர்பேரவை அமைப்பின் பணியை அனைவரும் மனமார பாராட்டுவோம்.

  42. // தேர்தலைத் தனியாக தைரியமாக எதிர்நோக்கும் பாரதீய ஜனதா கட்சிக்குக் குறைந்தது பத்து இடங்களாவது கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். //

    வேறு வழியில்லை. அதற்க்கு பெயர் தைரியம் ?
    இருந்தாலும் நானும் பிரார்த்திக்கிறேன் 🙂

    மற்ற மதங்களின் வழிபாடு தளம் அவர்களது மதத்தின் மீது பற்று ஏற்படும்படி பிரசாரம் செய்வதோடு நம் பாரத தோன்றல் ஆனா ஹிந்து மதத்தை பற்றி இழிவாக பேசி எக்காலம் இடுகிறது ,ஓட்டு இடுவது கூட ஒன்றாக பேசி முடிவெடுத்து வாக்குயிடுகிரார்கள் ,அதனால் அவர்கள் சிறுபான்மையர் என்ற போர்வையில் இருந்தாலும் அரசின் அனைத்து சலுகையை நேராகவும் மறைவாகவும் அதிகமாக பெறுகிறார்கள் ,அரசியல்வாதிகளும் இதன் kaaranamaagavay அவர்களுக்கு சொம்பு தூக்கி வாதாடுகிறார்கள் . ஆனால் ஹிந்துக்கள் ஆனா நாமோ வெளிப்படையாக நான் ஹிந்து என்று சொல்ல ( தம்மை மதவாதி என்று கருதுவார்களோ ) கூட தயங்குகிறோம். ஆலயங்கள் verum வேண்டுதல் தளங்களாக மட்டுமே வுள்ளது அங்கு நமது தர்மம் குறித்து வுபன்யாசம் m கூட கிடையாது appadiya வுபன்யாசம் வைத்தாலும் கேட்பார் இல்லை ,இதெர்கிடையே நாம் எங்காவது ஆலையத்தில் ஒற்றுமையாக அமர்ந்து இது போன்ற விச்யனகள் பற்றி பெசிகொண்டால் மற்ற பெரியவர்கள் அங்கீகரிப்பது இல்லை அகற்றவே முயல்கிறார்கள் காரணம் அவர்கள் கருப்பு சிவப்பு துண்டுக்கு ஆபத்து வருமோ என்று எண்ணுகிறார்களோ தெரிய வில்லை , இது மாறவேண்டும் சிறுபான்மையர் சொளிகொல்வேர் செல்வதில் நமை விட பெரியவேர்களாக இருந்த போதும் அரசு ஆலய அற நிலத்துறை நம்மக்கள் இட்ட வுண்டியல் பணத்தை அவர்களுக்கு தானம் செய்கிறது ஆனால் நம் வீட்டு ஏழை குழந்தைகள் வறுமையில் வாடுகிறார்கள் இந்த அநிதி மாற மாற்றம் வேண்டும் நமக்காக சிந்திபவற்கும்,செய்பவருக்கு வாக்கு இடவேண்டியது நமது கடமை ஆகும் வாழ்க நம் ஹிந்து தர்மம் ,வளர்க நம் ஒற்றுமை ஹரி ஓம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *