புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை

ஸ்ரீ களிமிகு கணபதி தமிழ் ஹிந்துவில் எழுதிய ‘இஸ்லாமியருக்கு: ஹிந்து மதத்தை எப்படிப் புரிந்து கொள்வதுஎன்ற கட்டுரையைப் படிக்குமாறும் கருத்துத் தெரிவிக்குமாறும் நேற்றுவரை ஐந்து மின்னஞ்சல்கள் வந்தனஇருந்தும் தேவையில்லை என்றே முடிவு செய்திருந்தேன். இன்று, மேலும் ஒரு மின்னஞ்சல் உன்னிடமிருந்து தெளிவு பெறவேண்டும் எனபதற்காகத்தான் கேட்கிறோம். ஆகவே பிகு செய்து கொள்ளாமல் எழுது என்று கட்டளையிடுகிறது (சம்பந்தப்பட்டவர்கள் அனுமதித்தால் அவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக உள்ளேன்).

என்னிடமிருந்து தெளிவு பெற முடியும் என்கிற நம்பிக்கை சிலருக்கு இருப்பதால் சரி என்று படித்துப் பார்த்து, எழுதவும் துணிந்தேன்.

முதலில் இப்படியொரு கட்டுரையை எழுதியதற்காக ஸ்ரீ களிமிகு கணபதியும் பிரசுரம் செய்தமைக்காக தமிழ்ஹிந்துவும் வெட்கப்பட வேண்டியிருக்கும்.

சில அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

hindu-symbol-aum

சமயம் என்பது ஆன்மிகம் சார்ந்தது. சமூகம் என்பது வாழ்வியல் சார்ந்தது. இரண்டுமே மக்களுக்கு அவசியமானவையாக இருப்பதால் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளன. சமயம் என்பதில் ஆன்மிகம் தவிர ஏதும் இல்லை. சமூகத்தில் முக்கியமாக ஆன்மிகத் தூண்டுதலுக்காகவும் அடுத்தபடியாக ஒற்றுமை உணர்வை நிலைபெறச் செய்யவும் தனி அடையாளத்திற்காகவும் வழிபாடு, திருவிழா, வழிபாட்டுத் தலம் சடங்குகள் ஆசாரங்கள் என்பவை சமயத்தின் பெயரால் கடைப்பிடிக்கப் பட்டாலும், கலாசாரம், பொருளியல், சமூக நடைமுறை, அதிகாரம், கட்டமைப்பு போன்றவையே சமூகம் சார்ந்த முன்னுரிமைகளாக உள்ளன. சமயமும் சமூகமும் பின்னிப் பிணைந்து கிடப்பதால்தான் இரண்டையும் ஒன்றாகக் காணும் மயக்கம் ஏற்படுகிறது. காலப் போக்கில் சமுகப் பழக்க வழக்கங்களில், முக்கியமாக மேலாதிக்க விழைவின் காரணமாக வலியுறுத்தப்படும் ஏற்பாடுகளும் எளிதில் அங்கீகாரம் கிட்ட வேண்டும் என்பதற்காக சமயத்தின் பெயரால் கட்டாயப் படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்து, அதன் விளைவாகச் சமயம் அந்தப் பழியைச் சுமக்க நேரிடுகிறது (இதுபற்றி நான் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்).

shivamuruga1சமயம் சமூகத்திற்குச் சில வழிகாட்டுதல்களைச் செய்தாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஆன்மிகம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இல்லை. ஆன்மிகத் தேடலுக்கு ஆன்மா குடிபுகவும் பரிணாமப் படிக்கட்டுகளில் மேலே ஏறிச் செல்லவும் சரீரம் தேவையாயிருக்கிறது. சரீரத்திற்கு சமுகத் தொடர்பும் பொருளியல் தேவைகளும் அவசியப்படுகின்றன. அவ்வளவில் சரீரம் சம்பந்தப்பட்ட சமூக ஏற்பாட்டில் சமயம் சில வழிகாட்டுதல்களைக் கட்டளைகளாக அல்லாமல் கோட்பாடுகளாக அறிவுறுத்துகின்றது. உதாரணமாக குணத்தின் காரணமாகவும் மன நாட்டங்களுக்கு ஏற்பவும் அமையும் வர்ணப் பிரிவுகள். இந்த வர்ணப் பிரிவுகள் சுட்டிக் காட்டப்படுகின்றனவேயன்றி அவற்றுள் இன்னது உயர்ந்தது, இன்னது தாழ்ந்தது என பேதம் கற்பிப்பதில்லை. ஆனால் சமூகம் தன் வசதிக்கு ஏற்ப இந்த வர்ணப் பிரிவுகளை வளைத்துச் சில தரப்புகளுக்குச் சாதகமாகவும் சில தரப்புகளுக்கு பாதகமாகவும் நடைமுறைப் படுத்திக்கொண்டது. விளைவு, சமூகம் செய்த பிழைக்குச் சமயம் பழி சுமக்க வேண்டியதாயிற்று. உதாரணத்திற்கு இது ஒன்றைச் சொன்னேன். சொல்வதற்கு இன்னும் நிறையவே உள்ளன. ஆனால் தேவையில்லை. பேசுவதற்கு வேறு முக்கியமான விஷயங்கள் உள்ளன.

சரி, ஆன்மிகம் சார்ந்த சமயமும் பொருளியல் சார்ந்த சமூகமும் அடிப்படையில் வெவ்வேறானவையானாலும் இரண்டுமே மனிதக் கூட்டத்திற்கு அவசியமாக இருப்பதோடு இணைந்தும் இருக்க வேண்டியுள்ளது. சரீரமும் ஆன்மாவும் இணைந்து இருக்க வேண்டியிருப்பது போலத்தான்! ஆனால் சமயம் ஆன்மாவைப் போலவே பூடகமாக இருப்பதால் சமூகத்தின் தாக்கம் அதன்மீது எளிதாகச் செல்லுபடியாகிவிடுகிறது. ஒரு சமூகத்தை முன்வைத்தே அதன் சமயத்தைக் காண்பதான நடைமுறை வந்துவிட்டிருக்கிறது. சமூகம் இவ்வாறாக முதல் மரியாதை பெறக் காரணம், சமூகம் தோன்றிய பின்னரே சமயம் தோன்றியது. இன்னும் சொல்லப் போனால் சமூகத்திலிருந்துதான் சமயம் தோன்றி, தகப்பன் சாமியாகிவிட்டது. தந்தைக்கு உபதேசம் செய்த தனயன் புராணம் இதைத்தான் சொல்கிறது. மனித மனதின் உள்ளுணர்வே இதற்கு, சமயம் தோன்றுவதற்கு, காரணம். தேடலில் உள்ள ஆர்வம், அதில் உள்ள சுகம். அதுவே சமயமாகப் பரிணமித்தது.

இதுவரை நாம் பார்த்த சமயம் என்ற கருதுகோளுக்குப் பொருந்தி வருவது ஹிந்துஸ்தானத்தில் தோன்றிய ஸனாதனதர்மம் என்று சொல்லக் கூடிய ஹிந்து சமயமும் (ஸனாதன தர்மம் என்பதேகூட அடையாளம் காட்டுவதற்காக, அவசியம் கருதிப் பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயர்தான். தர்மம் மட்டுமே உண்டு, சமணம் தோன்றியதன் விளைவாகத்தான் ஸனாதனபுராதன என்பது சேர்க்கப்பட்டது. சரித்திரப் புத்தகத்தில் சமணத்தைத் தோற்றுவித்தவர் வர்த்தமான மஹாவீரர் என்று எழுதப் பட்டிருந்தாலும், பரீட்சையில் அவ்வாறு விடை எழுதினால்தான் மதிப்பெண் கிடைக்கும் என்றாலும் சமணம் மஹாவீரருக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. சங்கரர் மடங்களை ஸ்தாபித்தார் என்று எழுதினால்தான் மதிப்பெண் கிடைக்கும் எனப்துபோல!). சமணம், பெளத்தம் ஆகியவையுமே.

religion-cartoon-salesman1ஆபிரகாமிய மதங்கள், மதம் என்கிற அடையாளத்தைப் பெற்று விட்ட போதிலும், மதம் அல்லது சமயம் என்பதற்கு உரிய லட்சணங்களைப் பெற்றவை அல்ல. ஆன்மிகத்தின் சுவடுகளை யூத சமயத்திலாவது காணமுடியும். ஏனெனில் அது தொல் நம்பிக்கை சார்ந்தது. உலகில் உள்ள எல்லா தொல் நம்பிக்கைகளிலும் ஆன்மிகத்தின் சுவடுகளைக் காணலாம். இவற்றைப் பாகனியம் என்ற இழிவான பெயரில் குறிப்பிட நான் விரும்பவில்லை. மெளட்டீகமான கிறிஸ்தவம் ஒரு தொற்று நோய் போலப் பல்வேறு சமுதாயங்கள் மீதும் தாக்குதல் நடத்தியபோது அங்கு நிலவிய நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளுக்கு அவ்வாறான இழி பெயரைச் சூட்டியது. பாகன் என்பதற்கும் காஃபிர் என்பதற்கும் பொருள் ஒன்றுதான்.

கிறிஸ்தவம், முகமதியம் இரண்டுமே மேலாதிக்க நோக்கத்துடன், தலைகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்டவை. அவற்றில் ஆன்மிகம் பெயரளவிற்குக் கூட இல்லை. ஆண்டவன், பரம பிதா என்றெல்லாம் பேசப்படுவதாலயே அவற்றில் ஆன்மிகம் இருப்பதுபோல் ஒரு மயக்கம் ஏற்படலாம். ஆனால் ஆன்மிகம் என்பது மனித மனதின் தேடல் ஆகும். கிறிஸ்தவத்திலும் முகமதியத்திலும் தேடலுக்கு இடமில்லை. எல்லாம் தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுகளே ஆகும்.

கிறிஸ்தவம் என்பது ரோமானியப் பேரரசின் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்கிற மேலாதிக்கச் செயல் திட்டமேயன்றி வேறல்ல. அதன் ஸ்தாபகரான ரோமானிய ஸால் என்கிற பால் ஆன்மிகவாதியும் அல்ல.

முகமதியத்தை ஸ்தாபித்த முகமதுவை எடுத்துக்கொண்டால் அவருக்கும் ஆன்மிகத்துக்கும் ஒருசிறிதும் தொடர்பு இல்லை.

இறைவனின் தூதன் என்று தன்னை அழைத்துக் கொண்டு இறைவன் பெயரால் கட்டளை பிறப்பித்தல் ஆன்மிகம் அல்ல.

நாட்ஸியம், மார்க்சியம் போல் முகமதியம் ஒரு மேலாதிக்கப் பேராசை கொண்ட எதேச்சாதிகார அரசியல் கோட்பாடே ஆகும்.

குரானை முழுவதும் படித்தால் அதில் ஆன்மிகத்துக்கு எள்ளளவும் இடம் இல்லாதது மட்டுமின்றி, மாற்று நம்பிக்கைகளை ஈவிரக்கமின்றி நசுக்கிச் சாகடிக்குமாறு உத்தரவுகளும் கடவுளின் பெயரால் இடப்பட்டிருப்பது விளங்கும். அதேபோல் கிறிஸ்தவத்தின் ஆணி வேரான புதிய ஏற்பாட்டில் சுவிசேஷங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளைப் படித்தால் அதில் ஆன்மிகத்துக்கு இடமில்லை என்பதும் அதுவும் கட்டளைகளின் தொகுப்புதான் என்பதும் muslimcartoon1002தெளிவாகும். சுவிசேஷங்களில் ஆன்மிகத் தேடலுக்கு இடமில்லை என்றாலும் ஏசு சொன்னதாகக் கூறப்படும் வாசகங்களில் ஆன்மிக நாட்டத்தின் தெறிப்புகளைக் காண முடியும். காரணம் அவர் யூத தொல் சமுதாயத்தில் தோன்றி அதன் நம்பிக்கை பாதிப்பில் இருந்தவர் (ஏசு என்று ஒருவர் இருந்தாரா என்கிற சர்ச்சை ஒரு தனி சமாசாரம். இப்போது இங்கு அது தேவையில்லை).

முற்றிலும் ஆன்மிகம் சார்ந்த ஹிந்து சமயத்தைப் புரிய வைக்கிறேன் பேர்வழி என்று எவராவது நல்லெண்ணத்துடன் புறப்பட்டாலும், ஆன்மிகம் என்றாலே ஆண்டவன் என்பதாக ஒரு பெரியண்ணனின் கட்டளைகள்தான் என்கிற புரிதலுடன் காலங் காலமாக இருந்து வருவோருக்குப் புரிய வைக்க முடியாது.

அவர்களுடனான இணக்கத்திற்காக பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழங்குவதும் கேலிக் கூத்தாக முடியும்.

ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்?

பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான். குரானில் அல்லா அப்படிக் கூறுவதாகச் சொல்ல முடியுமா?

என்மீது நம்பிக்கையில்லாதோரிடம் இந்த வாசகங்களைக் கூற வேண்டாம் என்றும் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்கிறான்.

krishna-arjuna

அல்லாவோ குரானை அனைவர் மீதும் வலுக் கட்டாயமாகத் திணிக்கச் சொல்கிறார்! அல்லா என்கிற கருதுகோளே ஹிந்து சமய இறைக் கோபாட்டிற்குப் புறம்பானதாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதில் பொருள் ஏதும் இருக்க முடியுமா?

inquistion_islam_christian_jihad_abrahamicஆர். எஸ். எஸ். பேரியக்கம் பேரழிவு, விபத்து, இடர்பாடு போன்ற தருணங்களில் மத வேறுபாடு பாராமல் மனிதாபிமான அடிப்படையில் அனைவருக்கும் தொண்டாற்றுகிறது. அதற்காக சமயக்கோட்பாட்டில் சமரசம் எதுவும் அது செய்துகொண்டு விடவில்லை! குஜராத்தில் மோதி அரசு முகமதியரும் சமூகத்தில் ஓர் அங்கம் என்பதால் அவர்களுக்கும் உரியதைச் செய்கிறது. முகமதிய மதத்தை அல்ல, முகமதிய சமூகத்தையே அது கருத்தில் கொள்கிறது. அதே போல் ஆர். எஸ். எஸ். இயக்கமும் முகமதியரை மத அடிப்படையில் பாராமல் சமூக நோக்கிலேயே அணுகுகிறது.

ஆனால் ஸ்ரீ களிமிகு கணபதியின் கட்டுரையோ, முகமதியருக்கு ஹிந்து மதத்தைப் புரிய வைப்பதாகப் புறப்பட்டு, இரு வேறு கோட்பாடுகளையும் ஒன்றிணைக்க முற்பட்டு அல்லாஹோ அக்பர் என முழங்குவதில் முற்றுப் பெறுகிறது. இதில் வேடிக்கை, அல்லாஹோ அக்பர் என்ற முடிந்த முடிபான பிரகடனத்தை முகமதியத்தை மகிழ்விப்பதற்காகச் சொல்லிவிட்டு அனைவருக்கும் பொதுவான ஸத்யமேவ ஜயதேயை அதனுடன் இணைக்கிறது. அல்லாஹோ அக்பர் என்கிற ஸத்யம் ஜயிக்கட்டும் என்று பொருள்படக் கூடிய விதமாக!

எனக்கும் பல முகமதிய நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் சமய அடிப்படையில் எவ்வித சமரசமும் செய்துகொண்டதில்லை.

ஹிந்து சமயக் கோட்பாடுகளை அவர்களுக்குப் புரிய வைத்து, மனத்தளவில் ஹிந்துக்களாக வாழ வைத்திருக்கிறேன். சிலர் துணிந்து தாய்மதம் திரும்பவும் உதவியிருக்கிறேன். மனதளவில் ஹிந்துக்களாக வாழும் என் முகமதிய நண்பர்களின் பெயர்களைக் கேட்டால் திகைப்படைவீர்கள். ஆனால் நான் அவர்களின் பெயர்களை வெளியிட்டால் அவர்களுடைய ஜமாத்துகளில் பல சங்கடங்களை அவர்கள் அனுபவிக்க நேரிடும்.

jamathமுகமதிய சமுதாயங்களில் ஜமாத் என்ற பெயரில் ஒரு போட்டி அரசாங்கமே கண்டுகொள்ளப்படாமல் கோலோச்சி வருகிறது என்பதைக் காதுள்ளவர்கள் கேட்கக் கடவீர்கள். முகமதியரிடையே ஏதும் சச்சரவு என்றால் உங்க ஜமாத்துலயே பேசி முடிச்சுக்குங்க என்று காவல் துறையே சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. மனதளவில் ஹிந்துக்களாக வாழும் எனது முகமதிய நண்பர்கள் என்னிடம் தெரிவிக்கும் செய்திகள் வேதனை தருபவை.

தமிழ்நாட்டில் ஒரு அரபு சமுதாயத்தை உருவாக்குவதில் வஹாபிகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்பது இதில் முக்கியமான செய்தி.

நமது மண்ணுக்குப் பொருந்தாத அரபு சம்பிரதாயங்கள் எங்கள் சமுதாயத்தில் திணிக்கப்படுகின்றன. எதிர்த்து நிற்க இயலவில்லை என்கிறார்கள். எங்களுக்கென்று உள்ள சுயம் வேகமாக அழிந்து வருகிறது என்று வருந்துகிறார்கள்.

வேதங்களையும் உபநிடதங்களையும் திரு மந்திரத்தையும் படித்துவிட்டு என்னிடம் விளக்கம் கேட்கும் முகமதிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எவரும் குரான் வாசகங்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பேசவில்லை. உருவ வழிபாடு தவிர்க்க இயலாதது என்று சொல்லும் அளவிற்குச் சிலர் உள்ளனர். முகமதுவுக்கு உருவம் சமைப்பது சில நூற்றாண்டுகள் முன்புவரை இருந்ததை ஒப்புக்கொள்வது மட்டுமின்றி அதில் தவறு இல்லை என்று சூசகமாக எழுதும் அளவிற்குத் துணிவு பெற்றுள்ளனர். இத்தகையோரை நாம் அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டுமேயன்றி அல்லா கீதையில் சொன்ன மாதிரி என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கலாகாது.

மத நல்லிணக்கம் என்பது ஹிந்து சமயத்தில் உள்ள ஷண் மதப் பிரிவுகளை முன்னிட்டுச் சொல்லப்பட்டதேயாகும். நமது மண்ணுக்கும் பாரம்பரியமான மனோபாவத்திற்கும் பொருந்தாத அயல் பிரதேசங்களிலிருந்து மதத்தின் பெயராலும் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டும் வந்த மேலாதிக்கப் பேராசையும் அடிமைப் படுத்தும் நோக்கமும் உள்ள புறக்கோட்பாடுகளையல்ல.thai_maatham1

ஹிந்து மதத்தை நம் நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் புரிய வைப்பது அல்ல, அவர்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். அவர்கள் வழியிலேயே புரிய வைப்பதாக நினைத்துக்கொண்டு அசடு வழியக் கூடாது. முதல் படியாக அவர்கள் கிறிஸ்தவர்களாகவோ முகமதியராகவோ இருப்பதால் அடி பணிய வேண்டியிருக்கிற கட்டாயத்தை சமூக நோக்கில் விவரித்துப் பின்னர் நமது சமூகசமய மேன்மைகளை உணர்த்த வேண்டும்.

இதனை எனது வழிமுறையாகக் கொண்டிருப்பதால்தான் எனக்கு திராவிட இயக்கம், கிறிஸ்தவ, முகமதிய வட்டாரங்கள் ஆகியவற்றில் இனிக்கும் நஞ்சு என்பதாக ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள்.

243 Replies to “புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை”

  1. //பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான்.//

    கீதை 18.63…

    ஆகா! ஆகா!! ஆகா!!! அய்யா, இதுவல்லவா கட்டுரை. அசத்தீடீங்க போங்க.. இந்த தளத்தில் இதுவரை வந்த கட்டுரைகளில் மிக முக்கியமான ஒன்றாகும்..

    மலர்மன்னன் உண்மையில் மலர்மன்னன் தான்! தொடரட்டும் உங்கள் பணி..

    ஹர ஹர மகாதேவா!
    ஜெய் ஸ்ரீ ராம்!!
    வந்தே மாதரம்!!!

  2. ///பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான்.//// இந்து தர்மத்தின் அடித்தளமே இது தான்.

    தர்மங்கள் கதைகள் மூலமாகவும், தத்துவங்கள் மூலமாகவும், நடை முறை வாழ்க்கை நெறி முறைகள் மூலமாகவும் தொடர்ந்து மக்கள் மனதில் ஆழப்பதிய வைக்கப்படுகிறது. அவற்றை தொடர்ந்து அனுசரித்து வந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாம், மற்றவர்களும் மகிழலாம். அந்த தர்மங்களை அனுசரிக்காமல் இருந்தால் அதனால் நாமும் கஷ்டப்பட்டு நம்மால் பிறரும் துன்புறும் நிலை உருவாகும். நன்மை வேண்டுமா? தீமை வேண்டுமா? தர்மங்களை அனுசரித்து வாழ வேண்டுமா? துன்பங்களில் உழன்று வாழ வேண்டுமா? எது நம் பாதை என்பதை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்! அத்தகைய சுதந்திரத்தை நமக்குக் கொடுத்திருப்பது தான் இந்து தர்மம்.

    அதற்காக இந்து தர்மம் எப்படியும் இரு என்று விட்டு விடாது. நன்மை தீமைகளின் சங்கிலித் தொடரான விளைவுகளையும் அவ்வப்பொழுது உணர்த்திக்கொண்டே இருக்கும். சிலர் இளம்பருவத்திலேயே புரிந்து கொள்வார்கள். சிலர் காலம் கடந்து உணர்ந்து கொள்வார்கள். ஆனால் இந்து தர்மம் என்றும் தத்துவார்த்தமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டே வந்திருக்கிறது. இதை உணர்ந்து தான் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கும் வாருங்கள் புரியவைக்கிறேன் என்று ஒரு நாளில் சொல்லிப் புரியவைத்து விட முடியாது. அதுவும் கட்டளைக்கு மட்டுமே கீழ்படியக் கற்றுக்கொண்ட இஸ்லாமியர்களுக்கோ, பிரெயின் வாஷ் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கோ சாத்தியமே இல்லை.

    முதலில் நம்மவர்களுக்கு நம் பாரம்பரியப் பெருமையையும் கலாச்சாரரீதியான சமூகத்தின் சங்கிலிப்பிணைப்பையும் அது அறுபட்டால் உண்டாகும் சீர்கேட்டையும் விளக்க வேண்டும். தத்துவார்த்தமாக இந்து தர்மத்தை நம்மவர்கள் உணரச் செய்ய வேண்டும். இந்துக்களிடையேயே இப்படி முடியாதபட்சத்தில் மற்றவர்களுக்கு புரியவைக்கிறேன் என்று புறப்படுவது நகைப்புக்குரியது. மலர்மன்னன் ஐயா, சூழலை அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள். நன்றி!

  3. (edited and published)

    //சமயமும் சமூகமும் பின்னிப் பிணைந்து கிடப்பதால்தான் இரண்டையும் ஒன்றாகக் காணும் மயக்கம் ஏற்படுகிறது. காலப் போக்கில் சமுகப் பழக்க வழக்கங்களில், முக்கியமாக மேலாதிக்க விழைவின் காரணமாக வலியுறுத்தப்படும் ஏற்பாடுகளும் எளிதில் அங்கீகாரம் கிட்ட வேண்டும் என்பதற்காக சமயத்தின் பெயரால் கட்டாயப் படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்து, அதன் விளைவாகச் சமயம் அந்தப் பழியைச் சுமக்க நேரிடுகிறது //
    இந்த விஷயம், மாற்று சமயத்தவருடன் நான் விவாதிக்க வசதியாய் இருக்கும். குறிப்பெடுத்து கொள்கிறேன்.

    //இதில் வேடிக்கை, அல்லாஹோ அக்பர் என்ற முடிந்த முடிபான பிரகடனத்தை முகமதியத்தை மகிழ்விப்பதற்காகச் சொல்லிவிட்டு அனைவருக்கும் பொதுவான ஸத்யமேவ ஜயதேயை அதனுடன் இணைக்கிறது. அல்லாஹோ அக்பர் என்கிற ஸத்யம் ஜயிக்கட்டும் என்று பொருள்படக் கூடிய விதமாக!//
    இப்போதுதான், அதை கவனித்தேன்.

    //நமது மண்ணுக்குப் பொருந்தாத அரபு சம்பிரதாயங்கள் எங்கள் சமுதாயத்தில் திணிக்கப்படுகின்றன. எதிர்த்து நிற்க இயலவில்லை என்கிறார்கள். எங்களுக்கென்று உள்ள சுயம் வேகமாக அழிந்து வருகிறது என்று வருந்துகிறார்கள்.//
    எனக்கு தெரிந்த சில முசுலிம் நண்பர்களும், அவ்வாறு கூறியுள்ளனர். ஒரு நண்பர், பல சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்வது என்று புரியாமல் குழம்பியுள்ளாராம். அவர் இயல்பாக செய்யும் பல செயல்கள் இஸ்லாத்துக்கு விரோதமாக இருக்கிறது என்று பயந்து பயந்து வாழ்கிறார்.

    மற்றபடி, அருமையான கட்டுரை, முக்கியமாக, திருச்சிக்காரன் போன்ற (போலி) மதநல்லினக்கவாதிகள், படிக்கவேண்டிய ஒன்று. அவர்கள்தான், ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்று, தானும் குழம்பி, மற்றவரையும் குழப்பி, புதிதாக ஒரு இந்துத்துவம் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

  4. முஸ்லீம்களுக்குப் புரியவைக்க கட்டுரை எழுதுகிறார்களாம். ஆனால் முஸ்லீம்கள் பார்வையில் இந்துக்களின் நிலை என்ன என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளாதவரை இந்த சுட்டியில் உள்ளது போலத்தான் நடக்கும். அதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    https://www.hindujagruti.org/news/12393.html

    regards
    ram

  5. சுவாமி, இந்த கட்டுரையினால் , உங்களுக்கு எனது என் சிரம் தாழ்ந்த, சாஷ்டாஙக நமஸ்காரம்.. வேறு எதுவும் சொல்லுவதற்கு இல்லை.

  6. அற்புதமான கட்டுரை 🙂

    எரியறத புடுங்கினா புகையிறது தானா அடங்கும் என்று ஒரு பழமொழி உண்டு.

    எல்லாவற்றிகும் ஆதாரமாக இருக்கும் ரியால்களுக்கும், டாலர்களுக்கும் முடிவு கட்டினாலே போதும். பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.

    எப்பொழுது நாம் அடுத்த நாட்டில் குழப்பத்தை விழைவிக்கக் கூடிய அளவுக்கு அமெரிக்கா சைனா போல் நமது அரசியல் சாதுர்யத்தை உயர்த்தி கொள்கிறோமோ அப்பொழுது தான் நாம் மற்ற நாட்டின் தாக்குதலில் இருந்து தப்பிக்க இயலும். இது கேட்க தவறாக இருக்கும். ஆனால் இது தான் நிதர்சனம்.

    எங்கள் தெருவில் ஒரு காலத்தில் முக்காடு போட்ட முஸ்லீம் பெண்களையும் அரேபியர்களை போன்ற தாடி வைத்த ஆண்களையும் பார்பதே அரிது. ஆனால் தற்போது நிலைமை தழை கீழ்.

    இந்தியாவில் உள்ள முகமதியர்கள் இந்தோனேஷ்ய முஸ்லீகளிடன் எப்படி மண்ணின் பண்பாட்டை மதிப்பது என்பதை கற்று கொள்ள வேண்டும்.

    இவர்களை சொல்லி தப்பில்லை. எரியிர நெருப்பில் எண்ணையை ஊற்றுவதை போல இவர்கள் தவறே செய்யாவிட்டாலும், வெள்ளைகாரனின் பினாமி கட்சியான காங்கிரஸ் கட்சி இவர்களை கெடுத்து நாசம் செய்கிறது.

    எதற்கு எடுத்தாலும் சாதி வெங்காயம் என்று பேசி, கருத்தை திசை மாற்றுவது இன்னோறு விசயம். நல்ல வேலை ஆன்மிகத்திற்கும் சமயத்திற்கும் தெளிவான் விளக்கம் தந்து இந்த விவாதத்திற்கு முற்று புள்ளி வைத்த மலர்மன்னன் அவர்களுக்கு நன்றி.

    (edited and published)

  7. ஐயா மலர்மன்னன் அவர்களே,

    இந்த அற்புதமான கட்டுரைக்காக மீண்டும், மீண்டும் உங்களை வணங்குகிறோம்.

    இந்துவுக்கு எல்லைகள் கிடையாது. புதிய தோற்றங்களும், புதிய வடிவங்களும், வந்துகொண்டே இருக்கும்.

    எதனையும் இந்து திணிக்க மாட்டான். நல்லதை சொல்வான், நல்லதை செய்வான். நாம்தான் எது நல்லது என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தமிழ் இந்துவில் பல அற்புதமான தொடர்கள் வந்துள்ளன எனினும், இந்த கட்டுரையே மனதில் மிக ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலை உடன் தருகிறது.

    நன்றிகள் பலப்பல.

  8. பாரதத்தில் பிறந்த அனைவரும் அடிப்படையில் இந்து தர்மத்தை சார்ந்தவர்களே. பிற மதங்களின் பண பலமும், ஆளுமையும் நம் மண்ணின் மைந்தர்களின் அறிவை தடம் புரட்டி விடுவதால் அவர்கள் இந்து தர்மத்தை புரிந்து கொள்ளாமல் விலகி நிற்கிறார்கள். இந்து தர்மத்தின் உயர்ந்த தத்துவ ரீதியான கோட்பாடுகளை அவர்களுக்கு புரிய வைத்து தாய் மதம் திரும்ப செய்து அவர்களுக்கே பெருமை செய்வது நம் நோக்கமாக இருக்க வேண்டும்.
    ஸ்ரீ களிமிகு கணபதி தமிழ் ஹிந்துவில் எழுதிய ‘இஸ்லாமியருக்கு: ஹிந்து மதத்தை எப்படிப் புரிந்து கொள்வது’ என்ற கட்டுரையை மலர்மன்னன் விமர்சனம் செய்தது தவறு. ஏனெனில் அதை தொடர்ந்த மலர்மன்னனின் கட்டுரைக்கு அதுவே உந்துகோல்.

  9. // தேவையில்லை என்றே முடிவு செய்திருந்தேன். இன்று, மேலும் ஒரு மின்னஞ்சல் உன்னிடமிருந்து தெளிவு பெறவேண்டும் எனபதற்காகத்தான் கேட்கிறோம். ஆகவே பிகு செய்து கொள்ளாமல் எழுது என்று கட்டளையிடுகிறது (சம்பந்தப்பட்டவர்கள் அனுமதித்தால் அவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக உள்ளேன்).

    என்னிடமிருந்து தெளிவு பெற முடியும் என்கிற நம்பிக்கை சிலருக்கு இருப்பதால் சரி என்று படித்துப் பார்த்து, எழுதவும் துணிந்தேன். //

    அடிக்கடி நீங்க வந்து ஏதாவது கருத்து சொல்வதை படித்துக் கொண்டு தான இருக்கோம்?

    ஏதோ இமயமலையில் மோனத்தில் இருக்கிற வாயே திறக்காத முனிவர், சீடர்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருவாய் மலர்ந்தருளியது .மாதிரி ஒரு சீன் உருவாக்குகிறீர்களே.. உங்களுக்கே இது ஓவரா தெரியல? எதற்கு இந்த அனாவசிய பில்டப் எல்லாம்?

    போலித் தனமாகவும், சவடாலுக்கு எழுதியது போலும் இருக்கிறது.

    இதற்கு களிமிகு கணபதி எழுதியதே நேரடியாகவும், வெளிப்படையாகவும் இருந்தது.

    (edited and published).

  10. /////// ஹிந்து மதத்தை நம் நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் புரிய வைப்பது அல்ல, அவர்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். அவர்கள் வழியிலேயே புரிய வைப்பதாக நினைத்துக்கொண்டு அசடு வழியக் கூடாது. ////////

    நல்ல பதிவு. தர்மம் அழிவில்லாதது. நிச்சயம் தாய் மதத்தை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  11. அற்புதமான கட்டுரை…
    உங்கள் பணி தொடரட்டும்…

  12. The mail by Mr. Ram should be read by all of us. But, what can we do on this? It’s really horrible when I think about the consequences of that rule.

  13. //…ஸ்ரீ களிமிகு கணபதி தமிழ் ஹிந்துவில் எழுதிய ‘இஸ்லாமியருக்கு: ஹிந்து மதத்தை எப்படிப் புரிந்து கொள்வது’ என்ற கட்டுரையை மலர்மன்னன் விமர்சனம் செய்தது தவறு. ..//

    மன்னிக்கவும் சுதீந்திரர். நான் மாறுபடுகிறேன்.

    இந்து மதத்திற்கு மற்றவர்களால் இப்போதைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஒரே சுதந்திரம் விமர்சனம் செய்வதுதான். அதுவும் இணைய தளங்களில் மட்டும்தான் இது இருக்கிறது.

    எனவே, எந்த விமர்சனமும் தவறானதாகாது. விமர்சனம் செய்யாமல் இருப்பது வேண்டுமானாலும் தவறாக இருக்கலாம்.

    ஆபிரகாமியத் தீவிரவாதத்தினால் பாதிக்கப்படுபவர்களின் உணர்வுகளை மலர்மன்னன் பிரதிபலிக்கிறார். அவற்றை, அதே சூழலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான் புரிந்துகொள்கிறேன். ஏற்றுக்கொள்ளவில்லை.

    அவரது உணர்வுகளை இஸ்லாமியர்களும், கிறுத்துவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

    அதற்கு அறிவுப் பரிமாற்றம் மிகச் சிறந்த வழி என்பது என் நம்பிக்கை. மலர்மன்னன் மாறுபட்டு என் நம்பிக்கையை விமர்சிக்கிறார்.

    விமர்சனங்கள் மூலம்தான் அறிவுப் பரிமாற்றம் நடக்கும் எனின், மதிப்பிற்குரிய மலர்மன்னன் அவர்களின் விமர்சனத்திலும் நான் கற்றுக்கொள்ள விஷயங்கள் இருக்கக் கூடும்.

    உதாரணமாக, வரலாற்று அறிவு என்பது வரலாற்றுப் புரிதல், வரலாற்று இயங்கியல் என்பவற்றில் இருந்து வேறுபட்டது என்ற எண்ணம் மீண்டும் உறுதியானது.

    அறிவுப் பரிமாற்றம் என்பது ஒற்றைப்பாதை அல்ல. இஸ்லாமியர்களுக்கு இந்து மதம் பற்றிப் பேசும்போது, இந்துக்களுக்கும் இந்து வழிமுறைகளைச் சொல்ல வேண்டிய நிலை இப்போது இருக்கிறது.

    ஆபிரகாமிய ஆக்கிரமிப்புக் குணத்தை மற்றொரு ஆக்கிரமிப்புக் குணத்தால் சரி செய்துவிட முடியும் எனும் புதிய தவறான வழிகாட்டல்களில் இருந்து இந்துக்கள் விடுபட வேண்டும். அத்துடன், இஸ்லாமும் கிறுத்துவமும் கத்தியால் மட்டும் பரவவில்லை. நம்முடைய தவறான புரிதல்களால், செயல்களாலும்தான் நடந்தது என்பதறிந்து, ஹிந்துக்களும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

    ஆபிரகாமிய, முக்கியமாக ஐரோப்பிய, வழிமுறைகளைக் கைவிட வேண்டும். வேதாந்தம் உள்ளிட்ட இந்திய ஞான மரபுகளுக்குச் சிந்தனைகளையும் செயல்களையும் திருப்ப வேண்டும்.

    @ Bala.

    தமிழ் இணைய உலகில் இந்துத்துவத்திற்காக முதன் முதலில் தைரியமாகக் குரல் கொடுக்க ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர் மதிப்பிற்குரிய மலர்மன்னன் அவர்கள். அவரால் இதுவரை அறியப்படாத பல தகவல்களை நாம் அறிகிறோம். கள நிலவரங்கள் அறிந்தவர். முதுமையோ, உடல்நிலையோ அவரது செயல் வேகத்தைக் குறைக்கவில்லை. அவரைப் போன்றவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.

    அவர் சொல்வதைப் பற்றி விமர்சனங்கள் செய்யுங்கள். மாறுபடுங்கள். ஆனால், தயை செய்து நோக்கம் கற்பிக்காதீர்கள்.

    களிமிகு கணபதி வெட்கப்படவேண்டும் என்று அவர் சொல்லலாம். அசடு வழிய வேண்டாம் என்றும் அவர் சொல்லலாம். இந்து மதம் பற்றியோ, சமுதாயத்திற்கும்-ஆன்மீகத்திற்கும் இருக்கும் நடைமுறை வித்தியாசங்கள் பற்றியோ உனக்கு ஒன்றும் தெரியவில்லை என்றும் அவர் சொல்லலாம்.
    ஆனால், இதற்காக அவரையும் பதிலுக்கு தாக்க நான் விரும்பவில்லை. ஏனெனில், இத்தகைய ஒரு பரிமாற்றத்தால் உருப்படியான எதுவும் எழாது.

    உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. இருந்தாலும், தனிமனிதத் தாக்குதல் வேண்டாமே.

    .

  14. சரிங்க. ஆனா ஏன் இந்து என்று எழுதும் போது “ஹிந்து” என்று எழுதரீங்க? “இந்து” என்று எழுதினால் என்ன?

  15. மலர் மன்னன் ஐயா அவர்களுக்கு
    என் மனமார்ந்த நன்றிகள்.உலகிலேயே மிக தொன்மையானதும், தோன்றிய காலம் கணிக்க முடியாத அளவு மிக நீண்ட ஆன்மீக பாரம்பரியமும் உடையவர்கள் நாம். நமது பெருமையை நாம் ஏன் இவர்களிடம் நிரூபிக்க வேண்டும்? அப்படியாவது எதையும் திறந்த மனத்தோடு அணுகும் பார்வையை, அதற்கான சுதந்திரத்தை ஆபிரஹாமிய மதங்கள் வழங்குகின்றனவா? தன்னுடைய கடவுளை ஏற்காதவன் நரகத்துக்கு போவான் என்கிறது கிறிஸ்தவம். இவர்களாவது பரவாயில்லை,அல்லாவை தவிர வேறு தெய்வத்தை வணங்குபவனை காபிர் என்றும், உருவ வழிபாடு செய்பவனை கொன்றொழிக்க வேண்டும் என்றும் கட்டளை இடுகிறது இஸ்லாம். ஆன்மீகத் தேடலுக்கோ, கேள்வி கேட்பதற்கோ வழியில்லாமல், இட்ட கட்டளையை அப்படியே ஏற்று நடப்பவர்களிடம் நமது மதத்தைப் பற்றி என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது?
    கணவனால் கைவிடப்பட்ட, வயதான , குழந்தைகள் இல்லாத ,ஆதரவற்ற ஒரு ஏழை பெண்மணிக்கு ஜீவனாம்சம் வழங்குமாறு இரக்கத்தோடு நீதிமன்றம் உத்தரவிட்டால் ,அதை எதிர்த்து மதத்தின் பெயரால் கலவரம் செய்தவர்களிடம் போய் நம் மதத்தை பற்றி விளக்குவது வீண் வேலை…

  16. சீனு அவர்களே ……..
    இப்படியே வடையை தின்பதை விட்டு விட்டு துளையை எண்ணிக்கொண்டிருங்கள்…உங்கள் மகனோ அல்லது பேரனோ தாமசாகவோ, முஹம்மதாகவோ மாற்றப்பட்டு விடுவார்கள்…அப்போதும் நீங்கள் இப்படியே ” செம் மொழி ”ஆராய்ச்சி செய்து கொண்டிருங்கள்…..

  17. ஐயா , ஹைந்தவகேரளம் தளத்தில் இந்த வாசகம் தலைப்பில் ஓடிக்கொண்டு இருக்கும் .. “I am trying to convert Hindus back to Hindu religion and that will stop Hindus getting converted to other religions.” — Swami Chinmayananda

    முதலில் ஹிந்துகளை ஒன்று படுத்த வேண்டும்.
    இரண்டாவது மதம் என்ற பெயரில் இருக்கின்ற பாலைவன ஆதிக்க அரசியல் கட்சிகளில் உள்ள உறுப்பினர்களை ஹிந்து மதத்துக்கு மாற்றவேண்டும். இதை செய்யாதவரை நாம் இங்கு அமைதியாக வாழமுடியாது.

  18. சீனு

    //
    சரிங்க. ஆனா ஏன் இந்து என்று எழுதும் போது “ஹிந்து” என்று எழுதரீங்க? “இந்து” என்று எழுதினால் என்ன?
    .//

    ஏன் என்றால் அது ஹிந்து தான் – ஹிந்துஸ்தானம் என்பதில் ஹி என்பது ஹிமாலயத்தையும் இந்து என்பது இந்து மகா பெருங்கடலையும் குறிக்கும்
    அதாவது அகண்ட பாரதம் என்பது ஹிமாலயம் முதல் இந்து மகா பெருங்கடல் வரை உள்ள பூமி என்பதை குறிக்கிறது
    இந்து என்று மட்டும் எழுதினால் அது வேறு இந்து மகா பெருங்கடலை மட்டு குறிப்பதாக ஆகிவிடும்

    சரி உங்கள் பெயரை திரு (வாழ் மார்பன் ?) என்று மாத்தி வைத்துக் கொண்டு திருவா திருவா என்று எழுதக் கூடாது?

  19. //
    ஏன் என்றால் அது ஹிந்து தான் – ஹிந்துஸ்தானம் என்பதில் ஹி என்பது ஹிமாலயத்தையும் இந்து என்பது இந்து மகா பெருங்கடலையும் குறிக்கும்
    அதாவது அகண்ட பாரதம் என்பது ஹிமாலயம் முதல் இந்து மகா பெருங்கடல் வரை உள்ள பூமி என்பதை குறிக்கிறது
    இந்து என்று மட்டும் எழுதினால்
    //

    ஹிமாலயம் முதல் இந்து மகா சமுத்திரம் உள்ள ஸ்தானமே ஹிந்துஸ்தானம் என்று பெயர் பெற்றது.

    ஹிந்துஸ்தானம் என்பது ஏதோ பாரசிகன் நமக்கு கொடுத்த பெயர் என்று கூட டப்பா அடிக்கபெருகிறது – மலர்மன்னன் அய்யா சொல்வதை போல அப்படி எழுதினால் தான் பரிட்சையில் மார்க் கிடைக்கும்

  20. 1.பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான். குரானில் அல்லா அப்படிக் கூறுவதாகச் சொல்ல முடியுமா?

    1 .1 குரானை முழுவதும் படித்தால் அதில் ஆன்மிகத்துக்கு எள்ளளவும் இடம் இல்லாதது மட்டுமின்றி, மாற்று நம்பிக்கைகளை ஈவிரக்கமின்றி நசுக்கிச் சாகடிக்குமாறு உத்தரவுகளும் கடவுளின் பெயரால் இடப்பட்டிருப்பது விளங்கும்.

    மிக அருமையான வரிகள், கட்டுரை ஆசிரியரின் ஆழமான குரான் அறிவை காட்டும் வரிகள்

    2 .ஆபிரகாமிய மதங்கள், மதம் என்கிற அடையாளத்தைப் பெற்று விட்ட போதிலும், மதம் அல்லது சமயம் என்பதற்கு உரிய லட்சணங்களைப் பெற்றவை அல்ல.

    இஸ்லாத்தை மார்க்கமை, மதமாக மாற்றிய விதத்தில் ஆசிரியரின் படைப்பாற்றல் விளங்ககுகிறது.

    3முகமதியத்தை ஸ்தாபித்த முகமதுவை எடுத்துக்கொண்டால் அவருக்கும் ஆன்மிகத்துக்கும் ஒருசிறிதும் தொடர்பு இல்லை

    முகமதுவை எதையும் ஸ்தாபிக்கவில்லை.இஸ்லாத்தை நிறைவு செய்தார் என்று சொல்லி கொண்டு திரியும் இஸ்லாமியர்களுக்கு சரியான சாட்டை அடி

    4 .ஆர். எஸ். எஸ். பேரியக்கம் பேரழிவு, விபத்து, இடர்பாடு போன்ற தருணங்களில் மத வேறுபாடு பாராமல் மனிதாபிமான அடிப்படையில் அனைவருக்கும் தொண்டாற்றுகிறது.

    கட்டுரை ஆசிரியரின் ரிசி மூலம் காட்டும் வரிகள்

    5 .மனதளவில் ஹிந்துக்களாக வாழும் என் முகமதிய நண்பர்களின் பெயர்களைக் கேட்டால் திகைப்படைவீர்கள்

    மனதளவில் ஹிந்துக்களாக வாழுபவர்கள் ஹிந்துக்கலே, அவர்களை முகமதியர் என்று சொல்லும் ஆசிரியரின் சாமர்த்தியம் பாரட்ட தக்கது

    அல்லாஹு அக்பர் ( இறைவன் மிக பெரியவன் )

  21. “I am trying to convert Hindus back to Hindu religion”

    இக்கட்டுரை எழுத உந்துதலாக இருந்த “இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?” என்ற கட்டுரையின் பதிலில் நான் சொன்ன மாதிரி,
    “முதலில் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் இந்துக்கள் தாம். இந்துக்கள் முதலில் தன் தர்மம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டாலே போதும். அடுத்தவர்களை மதம் மாற்ற வேண்டிய அவசியம் கூட தேவைப்படாது. ”

    “இந்த மதம் என்பது கடைத்தெரு பிள்ளையாருக்கு போகிறபோக்கில் ஒரு சல்யூட் அடித்துவிட்டு போகிறதோ அல்லது ஆரத்தி எடுப்பதோ அல்ல, அதையும் கடந்த தேடல்களில் நம்மை அழைத்துச்சென்று நம்மை நாம் உணர வைக்கிறது. நம் அறிவியல் இன்னும் காணாத சூட்சுமங்களை அது விவரிக்கிறது” என்பதை பாமர மக்களும் உணரும் படி செய்ய வேண்டும்.

    இங்கே நான் எழுதிய “இனி என்ன – இந்து மதம்” என்ற கட்டுரையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  22. மலர் மன்னன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள். மிக அழகாகவும், தெளிவாகவும் அற்புதமாக எழுதியுள்ளீர்கள். ஹிந்துக்கள் யார் எந்தக் கடவுளைக் கும்பிட்டால் என்ன? எல்லோரும் ஒரே கடவுளைத்தானே கும்பிடுகிறோம் என்று பிற மதத்தினரை மதம் மாற்ற முயற்சிப்பதில்லை. எந்த மகான்களும் தங்களிடம் வந்த வேற்றுமதத்தினரை ஹிந்து மதத்திற்கு வந்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டதில்லை. இதனால் தான் தாய் மதம் திரும்ப நினைப்பவர்களும் அதற்கான முயற்சி செய்யாமல் இரு்க்கிறார்கள். விஸ்வ ஹிந்து பரிஷத்தும், இந்து மக்கள் கட்சியும் தான் மதம் மாறியவர்களை தாய் மதம் திரும்ப செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எல்லா ஹிந்து அமைப்புக்களும் இப்படி ஒரு முயற்சியில் இறங்கினால் நல்லது.

    அதே போல் சில ஜோதிடர்கள் தங்களிடம் வருகின்ற கிறிஸ்தவர்களிடம் சம்பந்தமே இல்லாமல் மாதா கோவிலுக்கு சென்று (இந்து கோவிலுக்கு வரமாட்டார்களாம்) இத்தனை மெழுகுவத்தி இத்தனை வாரங்கள் ஏற்றி வழிபடுங்கள் என்று தவறான பரிகாரங்களைக் கூறுகிறார்கள். அவர்களுடைய ஜாதகப்படி இந்து மதத்தில் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதைச் செய்யச் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் வழியில் செய்யச் சொல்கிறார்கள்.

    அரேபியனுக்கும், அமரிக்கனுக்கும் ஏஜெண்டாக செயல்படும் இவர்கள் மதத்தில் ஆன்மீகம் இல்லை என்பதை உணர வைக்க வேண்டும்.
    தொடரட்டும் உங்கள் பணி.

  23. கிறிஸ்தவம், முகமதியம் இரண்டுமே மேலாதிக்க நோக்கத்துடன், தலைகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்டவை. அவற்றில் ஆன்மிகம் பெயரளவிற்குக் கூட இல்லை. ஆண்டவன், பரம பிதா என்றெல்லாம் பேசப்படுவதாலயே அவற்றில் ஆன்மிகம் இருப்பதுபோல் ஒரு மயக்கம் ஏற்படலாம். ஆனால் ஆன்மிகம் என்பது மனித மனதின் தேடல் ஆகும். கிறிஸ்தவத்திலும் முகமதியத்திலும் தேடலுக்கு இடமில்லை. எல்லாம் தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுகளே ஆகும்.

    “The two religions were founded with the objective of dominating the people. Domination over people and property is their only aim. There is nothing which can be called ‘spiritual’ in these religions. Still, they may be misunderstood to be spiritual as they use certain terms as God, Father etc. Spirituality is a search of man for the Unknown. For such a search, there is no place or hope in these two religions. They only show the concluded and frozen paths to their folowers which the followers ought to accept without question.”

    This is the English translation of Malarmannan’s para quoted above. The whole essay would have been more intelligble to me if it had been written in English.

    The Search for the Unknown – the so-called spiritual search. Malarmannan takes pride in the fact that his religion is primarily suitable to such a search; and helps people towards that.

    My question to him is plain and direct: Why should we do or need that search at all ? Although such a search is a thirst in Man, as found from earliest history onwards, yet the fact remains that there are and were only a few among humans who concentrate their minds on it. The whole society look upon such a few humans with astonishment; and treat them far and above themselves in stature and capacity, calling them saints, gurus, sages and what not.

    For the majority of the masses, such a search is neither necessary nor possible. I, for one, dont do that search. But I go to those who have done that, and left records of that. I wonder at them. But I dont aspire to be like them; because it is not possible for me. So, people like me, are content to lead our lives in quite ordinary way, and we need the God with certainties; and everything should have already been tailor made for us. In the words of Malarmannan, we want தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுkaL.

    Christianity and Islam, by having and projecting before their followers the தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுkal do serve a purpose namely, let people carry on their daily lives and be happy; and their spirital needs, as and when they need them, may be alrady made for them. Come, partake and go.

    Thus, these two religions distinguishe the vast majority of the peole as ordinary from a few among them as extraordinary who can go beyond the தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுகளே. That is why, we come across exceptional humans among their followers who became saints. I dont think any one will mock at the way many the catholic saints lived. For e.g St Dominic and St Francis of Assisi. In Islam, too, we have sufi saints, the iranian Jalaludin Rumi

    It may be true to say that only Hindu religion helps us to be deeply spiriutual is true, but it is not wholly true to assert like that. Other religions also help us to be deeply spiritual. Perhaps, there are elements in the Hindu religion which help goad or encourage us in spiritual search, which one may not find in other religions. In the same vein, it can also be argued that there are elements in the Hindu religion which are best discarded; and which are not found in other religions. Equally, there are some elements in those religions which are not found, nor even thought of, in the Hindu religion.

    Religion, whichever causes we may ascribe to its origins, is yet rooted in the soil, and gets coloured with it. Its basic ethos come from the soil. If the soil is red, the product will be reddish, if not completely, at least partly. If the soil is brown, ditto.

    The soil from which Islam and Christianity came out is dinstinctly different from that Hindu religion came out. Naturally, they will fundamentally differ. If certain people in one soil feel that they are better be with the product from another soil, let them have it. If they feel the product of their soil is ok, they will have it. Just us we find a foreign product better and preferable to our own, for various reaasons. Why should foreigness be an anthema ? or our aversion ? In ancient times, we lived in a place immobile and though beyond our terriotry, the world was a dark continet. Hence, we developed the mindset of praising all that is ours. Given a chance of choices, we will definitely pick and choose. Now, we have the choices, now we know we are not alone, now we know there may be some one better than us, while we remain better than millions, now we know there are no inferior or superior cultures, there are only different cultures. Thus, our perception has been widened.

    However, I do agree that the freedome to people to pick up a choice should be absolute. They can be guided to arrive at the choice best suitable to them. At the same time, they should not be persuaded, or brainwashed to believe certain choice alone is okey for them. Subject to that condition of free will, any religion can be chosen for a person and he should be fully allowed to exercise his choice.

    Much is made about the obscruntist views of Islam. I wd like to remind that the Koran has also this sura: ‘Your religion is yours; mine is mine’, meaning let us live together while following different faiths.

  24. I have a quite a no of differences with Malamannan’s points of which tomorrow.

  25. திரு மலர் மன்னன்!

    //பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான். குரானில் அல்லா அப்படிக் கூறுவதாகச் சொல்ல முடியுமா?//

    ‘மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்’ என்று முஹம்மதே! கூறுவீராக.
    குர்ஆன்: 10:108

    நீங்கள் மேலே சுட்டும் பகவத் கீதையின் வசனமும் நான் சுட்டியிருக்கும் குர்ஆனின் வசனமும் ஒரே கருத்தைத்தானே சொல்கிறது!

    //ஹிந்து மதத்தை நம் நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் புரிய வைப்பது அல்ல, அவர்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். அவர்கள் வழியிலேயே புரிய வைப்பதாக நினைத்துக்கொண்டு அசடு வழியக் கூடாது.//

    ‘நோய் முதல் நாடி’ என்று வள்ளுவர் கூறுவதற்கேற்ப எனது முன்னோர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று முதலில் சிந்தித்து அதை களைய பாடுபட வேண்டும். தீண்டாமை, சாதி வேற்றுமை, மூடப் பழக்க வழக்கங்கள் என்று சனாதன தர்மம் சொல்லாத பல வழக்கங்களை இந்து மதம் அனுமதித்து நடைமுறைபடுத்தியதால்தான் பல தலைமுறைகளுக்கு முன்னால் இந்துவாக இருந்த என் முன்னோர் இஸ்லாத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானர். எனவே ரியாலுக்கோ, டாலருக்கோ கத்திக்கோ மயங்கி வேறு மதத்துக்கு சென்று விட்டனர் என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

    //ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்?//

    ‘அல்லாஹ் அக்பர்’ என்பது ‘இறைவன் பெரியவன்’ அதாவது ஏக இறைவன். இஸ்லாத்தின் மூல மந்திரமான ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்பதற்கு ‘இறைவன் ஒருவனைக் தவிர வேறு இறைவன் இல்லை’ என்ற பொருள் வரும்.

    இதையேதான் நமது முன்னோர்களும் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கின்றனர். இங்கு இரண்டு மதத்தின் கொள்கைகளும் ஒத்துப் போகிறதா இல்லையா?

    ஏக இறைவனை பறை சாற்றக் கூடிய பல வசனங்களை ருக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்களிலிருந்தே பல ஆதாரங்களை என்னால் தர முடியும்.

    //அல்லாவோ குரானை அனைவர் மீதும் வலுக் கட்டாயமாகத் திணிக்கச் சொல்கிறார்! அல்லா என்கிற கருதுகோளே ஹிந்து சமய இறைக் கோபாட்டிற்குப் புறம்பானதாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதில் பொருள் ஏதும் இருக்க முடியுமா?//

    ‘முஹம்மதே!உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?’
    -குர்ஆன் 10:99

    சிலரிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு முகமது நபி வற்புறுத்துவதை இறைவன் இந்த வசனத்தில் கண்டிக்கிறான். எனவே மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதில் மற்றவர்களை நிர்பந்திக்கக் கூடாது என்பதை இந்த வசனத்தின் மூலம் அறிகிறோம்.

    திரு களிமிகு கணபதி!

    //இஸ்லாமும் கிறுத்துவமும் கத்தியால் மட்டும் பரவவில்லை. நம்முடைய தவறான புரிதல்களால், செயல்களாலும்தான் நடந்தது என்பதறிந்து, ஹிந்துக்களும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.//

    இன்று பெரும்பான்மை மக்களால் தவறாக புரிய வைக்கப்பட்ட ஒரு நிகழ்வை அதன் உண்மையை சிறப்பாக எடுத்து வைத்துள்ளீர்கள். முகலாயர்கள் காலத்தில் கத்திக்கு பயந்து நாங்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் இன்றைய காலத்தில் நாங்கள் இந்து மதத்துக்கு திரும்பியிருக்க வேண்டுமே! இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பான்மை மதமான இந்துவில் ஐக்கியமாவதுதானே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக அமையும். ஆனால் எவருமே ஏன் தாய் மதம் திரும்புவதில்லை? காரணம் இந்து மதத்தில் உள்ள குறைபாடுகள். அதனை நிவர்த்தி செய்யாத வரை மத மாற்றம் ஒரு தொடர்கதையாகவே இருக்குமல்லவா!

  26. சுவனப்பிரியன்,
    அப்போ, இந்தியாவில தீண்டாமை போன்றவை அகற்றப்பட்டால், மீண்டும் இந்துவாகி விடுவீர்களா?

    சாரங்,
    //ஹிமாலயம் முதல் இந்து மகா சமுத்திரம் உள்ள ஸ்தானமே ஹிந்துஸ்தானம் என்று பெயர் பெற்றது.//
    ஹிந்துஸ்தானத்திற்கு இப்படி ஒரு விளக்கத்தை இப்போதான் பார்கிறேன். ஆனாலும் நான் சீனுவின் கட்சிதான், பல இடங்களில் மலர்மன்னன் ஐயா, திரு என்று சொல்லும் இடங்களில் வேண்டுமென்றே ஸ்ரீ என்று எழுதுகிறாரோ என்று எனக்கும் தோன்றும்.

    சரவணா குமார்,
    //சீனு அவர்களே ……..
    உங்கள் மகனோ அல்லது பேரனோ தாமசாகவோ, முஹம்மதாகவோ மாற்றப்பட்டு விடுவார்கள்…அப்போதும் நீங்கள் இப்படியே ” செம் மொழி ”ஆராய்ச்சி செய்து கொண்டிருங்கள்…..//
    இப்படியே போய்கொண்டிருந்தால், உங்கள் மகனோ, உங்கள் பேரனோ, உங்களை போல தமிழில் எழுதத்தெரியாமல் நண்பர் க்ருஷ்ணகுமார் போலவோ, ஆங்கிலத்திலோ தான் எழுதுவார்.

  27. சுவனப்ரியன்,

    நீங்கள் இவ்வாறு ஓர் இரு வாசனைகளை படித்து விட்டு ரெண்டும் ஒன்னும் ரெண்டும் ஒண்ணுன்னு சொல்லி பிரயோஜனம் இல்லை

    //நோய் முதல் நாடி’ என்று வள்ளுவர் கூறுவதற்கேற்ப எனது முன்னோர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று முதலில் சிந்தித்து அதை களைய பாடுபட வேண்டும்
    //

    சொல்லட்டுமா – கஜினி இத்யாதிகள்,, முஹலாயர்கள் வந்து கத்தி முனையிலும் பெண்களை கற்பழித்தும் இஸ்லாமியர்களாக மாற்றினார்கள். இதற்கு இந்திய வரலாற்றில் (நமது பாட புத்தகத்தில் இல்லை) பல பல சான்றுகள் உள்ளன.

    இஸ்லாமியர்கள் வருவர்ஹர்க்கு முன்னரே சாதி விஷயங்கள் ஹிந்து மதத்திலிருந்து கலேடுக்கப் பட்டன – பக்தி மார்க்கம் இதை செவ்வனே செய்து கொண்டிருந்த காலத்தில் தான் இஸ்லாமிஸ்டுகள் இங்கே வந்தனர்.

    எந்த ஒரு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளனும் பிரசாரம் செய்து ஹிந்து மதத்தில் ஜாடி உள்ளது அதனால் இஸ்லாமுக்கு மாறுங்கள் என்று சொல்லி கொண்டிருக்க வில்லை. சொல்லப் போனால் இந்தியர்கள் இஸ்லாத்தை வெகுவாக வெறுத்தனர் (சான்றுகள் தரவா). காட்டுமிராண்டி கஜினி மற்றும் முகல்களை யாரேனும் விரும்புவார்களா. – அவர்களாக இஸ்லாத்தை விரும்பி ஏற்பதேல்லாம் கற்பனைக்கும் எட்டாத ஒன்று.

    ஒன்று புரிந்துகொள்ளுங்கள் – இந்திய சாதியத்தில்/வர்ண முறையில் – உயர் ஜாதி என்று கூறப்படும் பிராமணர்கள் பிச்சை எடுத்துதான் உண்டு வந்தனர். அவரகளுக்கு என்று ரெண்டு வேட்டி தான். எதோ சொகுசாக இருந்தாக நினைக்க வேண்டாம். காலையில் நாலு மணிக்கு எழுந்து அடுத்தடுத்து அனுஷ்டானங்கள் என்று இருக்கும். சுகத்திற்கு இடமே இல்லாமல் இருந்தது.

    அப்போது கீழ் ஜாதி என்று சொல்லப்பட்ட வண்ணான் கூட நாள் காசு பார்த்து நினைத்ததை வாங்கிகொண்டு இருக்கக் கூடிய நிலை.

    ஏழைகளுக்கு உதவுவது, எலோருக்கும் வேலை என்பது போன்றதை கவினிக்க அரசர்கள் இருந்தனர். கீழ் ஜாதி ஆனாலும் கௌரவமாகவே பிழைப்பிற்கு கஷ்டம் இன்றியே வாழ்ந்தனர். இதை தவிர்த்து கோவில் மாறும் மடங்கள் , சத்திரங்கள், தங்க இடம் தந்து சோறும் போட்டன.

    இப்படி இருந்த ஒரு நிலை மாறத் தொடங்கியது இஸ்லாமிச்ட்டும், ஆங்கிலேயனும் வந்த பிறகு தான் – அவர்கள் இந்த கட்டுமானத்தையே தகர்த்து விட்டனர். அரசனே ஆண்டி ஆன பின்பு, கோவில்கள் சூறையாடப்பட்ட பின்பு இந்த காரியங்களை யார் செய்வார்.

    ஆங்கிலேயன் வந்த பின்னரே படித்தால் தான் சோறு என்ற நிலை ஏற்பட்டது – இதனாலேயே படிக்காத ஜாடி என்று இருந்தவர்கள் பெரும் அல்லலுக்கு தள்ளப்பட்டனர். இதை புரிந்து கொள்ளுங்கள். இந்தியாவை அதன் போக்கில் விட்டிருந்தால் இன்று நன்றாகவே இருந்திருக்கும்.

  28. திரு மலர் மன்னன்!

    //எனக்கும் பல முகமதிய நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் சமய அடிப்படையில் எவ்வித சமரசமும் செய்துகொண்டதில்லை.//

    இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. நான் படிக்கும் காலத்தில் இருந்து இந்து கிறித்தவ நண்பர்களிடத்தில் இன்று வரை நட்போடு பழகியே வருகிறேன். மதமோ மார்க்கமோ எங்களின் நட்புக்கு என்றுமே தடையாக இருந்ததில்லை. மத விவகாரங்களில் சமரசமும் செய்து கொள்வதில்லை.

    //தமிழ்நாட்டில் ஒரு அரபு சமுதாயத்தை உருவாக்குவதில் வஹாபிகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்பது இதில் முக்கியமான செய்தி.//

    அரபு சமுதாயத்துக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. இஸ்லாம் வருவதற்கு முன்பு சவுதியில் பிறந்த பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தார்கள். விபசாரம் கொடி கட்டிப் பறந்தது. மது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. முகமது நபியின் குடும்பத்தினரே வட்டி தொழிலில் சிறந்து விளங்கி வந்தனர். மனிதர்களை அடிமைகளாக நடத்தும் கொடுமையும் அரங்கேறி வந்தது.

    இஸ்லாம் அந்த மக்களின் வாழ்வில் நுழைந்தவுடன் அனைத்து கொடூரமான பழக்கங்களும் சில ஆண்டுகளிலேயே களையப்பட்டது. இங்கு தமிழகத்தில் கூட இஸ்லாமியரிடத்திலும் வரதட்சணை கொடுமை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட தலைவிரித்தாடியது. தௌஹீது(உங்கள் பார்வையில் வஹாபி) கொள்கைகள் சில ஆண்டுகளாக சிறந்த முறையில் பிரசாரம் செய்ததன் விளைவாக இன்று வரதட்சணை வாங்குவது அவமானம் என்று இளைஞர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். சில இடங்களில் முன்பு தவறாக வாங்கிய வரதட்சணையை பெண்ணின் தந்தையிடம் திருப்பி கொடுத்த நிகழ்ச்சிகளும் நடந்துள்ளது. எனது நண்பன் அவனது தாயார் வரதட்சணை வாங்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டதனால் கடந்த மூன்று வருடமாக திருமணமே செய்து கொள்ளாமல் பெற்றோருடன் போராடிக் கொண்டிருக்கிறான். இன்னும் சில ஆண்டுகளில் அரபு நாடுகளைப் போல் பெண்ணுக்கு மஹர் கொடுத்து திருமணம் முடிக்கும் நிகழ்வுகள் தமிழகத்திலும் அரங்கேறும்.

    அதே போல் தர்ஹா வணக்கம். இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. ‘தரை மட்டத்துக்கு மேலே கட்டப்பட்ட எந்த சமாதியையும் இடித்து சமப்படுத்தி விடவும்’ என்பது முகமது நபியின் போதனை. முகமது நபிக்கும் மண்ணால் ஆன சமாதியே இன்று வரை உள்ளது. காரணம் முகமது நபியையும் ஏசுவைப் போல் கடவுளாக்கி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையே! ஆனால் தமிழகத்தில் எங்களின் மூதாதையர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டு இருந்ததால் அந்த பழக்கத்தின் வாயிலாக இறந்தவர்களுக்கு சமாதி கட்டும் பழக்கத்தை இஸ்லாத்திலும் கொண்டு வந்து விட்டனர். இதன் தவறை விளக்கி சொல்லியவுடன் எங்கள் ஊருக்கு அருகில் இருந்த தர்ஹா இடிக்கப்பட்டு அது லைப்ரரியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வன்முறையில் இல்லாமல் பிரசாரத்தின் மூலமாக சாத்தியப்பட்டது. நாகூர் தர்ஹாவையும் மக்களின் மனமாற்றத்தோடு இடித்து விட்டு அங்கு ஒரு கல்விச் சாலையை நிறுவ பலர் முயற்ச்சித்து வருகின்றனர். தர்ஹா போன்ற மூடப் பழக்கங்களை களைய பலரும் முயற்ச்சித்து வருகின்றனர்.

    எந்த நாட்டிலிருந்து கொள்கைகளை கடன் வாங்கினாலும் அது மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

    //முகமதியரிடையே ஏதும் சச்சரவு என்றால் உங்க ஜமாத்துலயே பேசி முடிச்சுக்குங்க என்று காவல் துறையே சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.//

    சிவில் பிரச்னைகளை சின்ன சின்ன சண்டைகளையும் ஜமாத்துகளுக்குள்ளேயே பேசி முடித்துக் கொள்வது காவல் துறையின் சிரமத்தையும் குறைக்கிறது தானே! இதனால் கோர்ட் கேஸ் என்று அலைந்து நேரமும் பணமும் விரயமாவதும் தடுக்கப்படுகிறதே!

    இதே நிலைமை பல ஹிந்து கிராமங்களில் இன்றும் நடைமுறைப்படுத்தப் பட்டே வருகிறது.

    சோழன்!

    //எல்லாவற்றிகும் ஆதாரமாக இருக்கும் ரியால்களுக்கும், டாலர்களுக்கும் முடிவு கட்டினாலே போதும். பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.//
    முதலில் மண்ணின் மைந்தனான தாழ்த்தப்பட்டவனுக்கு உரிய பங்களிப்பை அளித்து விட்டு அதன் பிறகு டாலரையும் ரியாலையும் தடுக்க முயற்ச்சிப்போம் சோழன். நானும் உதவிக்கு வருகிறேன்.
    //எங்கள் தெருவில் ஒரு காலத்தில் முக்காடு போட்ட முஸ்லீம் பெண்களையும் அரேபியர்களை போன்ற தாடி வைத்த ஆண்களையும் பார்பதே அரிது. ஆனால் தற்போது நிலைமை தழை கீழ்.//

    தாடி வைப்பதும் முக்காடு போட்டுக் கொள்வதும் அவரவரின் தனிப்பட்ட விருப்பமல்லவா! ஒரு பெண்ணுக்கு புர்கா போட்டு செல்வது தனக்கு பாதுகாப்பு என்று நினைத்தால் அதை யார்தான் தடுக்க முடியும். அதே போல் பெண்ணுக்கு தாடி வளர்வதில்லை. தாடி ஆண்மைக்கே உரிய அடையாளம். சம்பந்தப்பட்டவர் தனக்கு தாடி இருப்பது அழகு என்று தோன்றினால் வைத்துக் கொள்ளட்டுமே! உங்களை தாடி வைக்க சொல்லி வற்புறுத்தினால்தான் அதில் குறை காண முடியும். தினமும் ஷேவ் செய்வதால் கண்ணின் பார்வை நரம்புகள் பாதிப்படைவதாகவும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.

  29. /…ஆனால் எவருமே ஏன் தாய் மதம் திரும்புவதில்லை? காரணம் இந்து மதத்தில் உள்ள குறைபாடுகள். அதனை நிவர்த்தி செய்யாத வரை மத மாற்றம் ஒரு தொடர்கதையாகவே இருக்குமல்லவா!..//

    குறைபாடுகள் இல்லாத மதங்களே இல்லை சுவனப்பிரியன் ஜி.

    ஒரு மதம் தன் குறைபாடுகளைத் தீர்த்து வளரவேண்டும். பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

  30. [10:3]
    நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் – பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
    [10:4]
    நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது – நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீ;ண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.

    [10:7]
    நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ –
    [10:8]
    அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.

    [10:18]
    தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும்.

    [10:106]
    உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடவீர்.

  31. [10:7]
    நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ –
    [10:8]
    அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.

  32. உலக அளவில் இஸ்லாம் மீதும் முகமதியர் மீதும் மெல்ல ஓர் கோபமும் வெறுப்பும் கவிந்து வருவதை இங்கே பலர் அவதானித்து வரக்கூடும். மேற்குலகின் குணமும் புத்தியும் எவ்வாறு வேலை செய்யும் என்பது இங்கு வெகு சிலருக்கு மட்டுமே தெரிகிறது. பொருளாதார மந்த நிலை, இஸ்லாம் எனும் முழு மூடத்தனம், அதன் சகோதர ஆபிரகாமிய மதங்கள் இவையெல்லாவற்றையும் கலக்கிய cocktail எவ்வாறு இருக்கும்? இவ்வேதிவினையின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

    களிமிகு கணபதி, அல்லாஹு அக்பர் என்று கல்லால் அடித்துக் கொல்லும் போதும், காபிர்களைக் கொல்லும் போதும் கத்துகின்றனர். இதன் பின்னால் உள்ள உளவியலைப் பற்றி யோசியுங்கள். பிறகு அதை எங்கு உபயோகிப்பது என்று பார்க்கலாம்.

    என் முடிபு, இஸ்லாம்மும் அதன் சகோதர மதங்களும் உடனடியாகவும் முழுமையாகவும் தடை செய்யப்பட வேண்டும். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அறிவு வேலை செய்ய ஆரம்பித்து விஷம் இறங்க ஒன்றிரண்டு தலைமுறைகள் கூட ஆகலாம். இது மென்மையான வழி. இயற்கையின் தேர்வு வேறு விதமாயிருக்கும்.

  33. “கிறிஸ்தவம், முகமதியம் இரண்டுமே மேலாதிக்க நோக்கத்துடன், தலைகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்டவை. அவற்றில் ஆன்மிகம் பெயரளவிற்குக் கூட இல்லை. ஆண்டவன், பரம பிதா என்றெல்லாம் பேசப்படுவதாலயே அவற்றில் ஆன்மிகம் இருப்பதுபோல் ஒரு மயக்கம் ஏற்படலாம். ஆனால் ஆன்மிகம் என்பது மனித மனதின் தேடல் ஆகும். கிறிஸ்தவத்திலும் முகமதியத்திலும் தேடலுக்கு இடமில்லை. எல்லாம் தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுகளே ஆகும்.”-

    திரு அமலன் அவர்களின் மேற்சொன்ன கருத்து மிக சரியானது. ஆனால், கிறித்தவம், முகம்மதியம் ஆகியவற்றைமட்டும் சொல்லாமல் , வேறு எந்த மதமாயினும், ( இந்து மதத்தில் உள்ள சில தீவிர வைஷ்ணவ அல்லது சைவ பிரிவுகள் உட்பட), தங்கள் கடவுளின் பெயர், மற்றும் தங்கள் கடவுளின் வழிபாட்டு முறைகள் மட்டுமே சரி என்றும், மற்றவை தவறு என்றும், கடவுளுக்கு எல்லைகள் வகுக்கும் யாராயினும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆவார்கள்.

    எந்த துறையிலும் , இத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டால், அதன் பிறகு வாழ்க்கை அர்த்தம் அற்றதாக மாறிவிடும்.

    ரேடியோ மட்டுமே போதும் , அதற்கு அப்பால் ஒன்றும் இல்லை என்று , மனித இனம் எல்லை வகுத்து இருந்தால், தொலைகாட்சி பெட்டி, செல் போன் , இன்டர்நெட் ஆகியவை வந்திருக்க முடியாது.

    எனவே, இது மட்டும்தான், இதற்கு அப்பால் ஒன்றும் இல்லை என்று சொல்கிற எந்தமதமாயினும், அவர்களது அறியாமையைத்தான் காட்டுகிறார்கள்.

  34. ////அதே போல் சில ஜோதிடர்கள் தங்களிடம் வருகின்ற கிறிஸ்தவர்களிடம் சம்பந்தமே இல்லாமல் மாதா கோவிலுக்கு சென்று (இந்து கோவிலுக்கு வரமாட்டார்களாம்) இத்தனை மெழுகுவத்தி இத்தனை வாரங்கள் ஏற்றி வழிபடுங்கள் என்று தவறான பரிகாரங்களைக் கூறுகிறார்கள்///// ஐயோ உண்மை உண்மை. இதற்குப் பின்னாடி ஏதேனும் லாபி நடக்கிறதா என்றும் தெரியவில்லை. நேற்று தான் என் நண்பர் ஒருவர் என்னை அழைத்து பொன்னேரி அருகில் ஒரு தர்கா இருக்கிறது. அங்கே வியாழக்கிழமை சென்று வழிபட்டு வரச்சொல்லி ஜோசியர் கூறியிருக்கிறார். நல்ல வைபிரேஷன் அங்கே இருக்கிறதாம். நீங்களும் வருகிறீர்களா என்றார்! நான் சோம்பல் காரணமாக வரவில்லை என்றேன். பிறகு தனியாகவே சென்றுவிட்டு வந்த அவர் ஒருவித ஏமாற்றத்துடன், அந்த தர்காவில் ஏதோ வழக்கு நடப்பதால் இழுத்து மூடியிருக்கிறார்கள். அதனால் ஜோசியரிடம் கேட்டேன், அவர் அன்னாசாலை தர்காவிற்குச் சென்று தொழுதுவாரச்சொன்னார். அடுத்த வாரம் போகலாமென்று இருக்கிறேன் என்றார். அந்த கூமுட்டையிடம் ஏன் சார் அவர் முஸ்லீம் சமாதியையே கும்பிட சொல்றார் இந்து கோவில்ல்லலாம் வைபிரேஷனே இல்லையா என்ன? என்றேன் சந்தேகத்துடன். ஜோசியர் கூறினார் அதனால் செய்கிறேன் என்றார் அந்த மனிதர். இப்போது இங்கே குறிப்பிடப்படும் மெழுகுவர்த்தி விஷயத்தையும் பார்த்தால் இதில் ஏதோ லாபி இருப்பது போலவும், ஜோசியக்காரர்களிடம் பணம் கொடுத்து இப்படிச் சொல்லச் சொல்லி வைத்திருப்பார்கள் என்றும் தோன்றுகிறது. பணத்திற்காக விடித்த ..யைக்கூட தின்னத்தான் ஆட்கள் இருக்கிறார்களே. செய்யமாட்டார்களா என்ன? இந்துக்களே சுற்றத்தை நன்றாக கவனித்து வாருங்கள். ஜாக்கிரதை.

  35. //////என் நண்பர் ஒருவர் என்னை அழைத்து பொன்னேரி அருகில் ஒரு தர்கா இருக்கிறது. அங்கே வியாழக்கிழமை சென்று வழிபட்டு வரச்சொல்லி ஜோசியர் கூறியிருக்கிறார். நல்ல வைபிரேஷன் அங்கே இருக்கிறதாம். நீங்களும் வருகிறீர்களா என்றார்! நான் சோம்பல் காரணமாக வரவில்லை என்றேன். பிறகு தனியாகவே சென்றுவிட்டு வந்த அவர் ஒருவித ஏமாற்றத்துடன், அந்த தர்காவில் ஏதோ வழக்கு நடப்பதால் இழுத்து மூடியிருக்கிறார்கள். அதனால் ஜோசியரிடம் கேட்டேன், அவர் அன்னாசாலை தர்காவிற்குச் சென்று தொழுதுவாரச்சொன்னார். அடுத்த வாரம் போகலாமென்று இருக்கிறேன் என்றார். அந்த கூமுட்டையிடம் ஏன் சார் அவர் முஸ்லீம் சமாதியையே கும்பிட சொல்றார் இந்து கோவில்ல்லலாம் வைபிரேஷனே இல்லையா என்ன? என்றேன் சந்தேகத்துடன். ஜோசியர் கூறினார் அதனால் செய்கிறேன் என்றார் அந்த மனிதர். இப்போது இங்கே குறிப்பிடப்படும் மெழுகுவர்த்தி விஷயத்தையும் பார்த்தால் இதில் ஏதோ லாபி இருப்பது போலவும், ஜோசியக்காரர்களிடம் பணம் கொடுத்து இப்படிச் சொல்லச் சொல்லி வைத்திருப்பார்கள் என்றும் தோன்றுகிறது. பணத்திற்காக விடித்த ..யைக்கூட தின்னத்தான் ஆட்கள் இருக்கிறார்களே. செய்யமாட்டார்களா என்ன? இந்துக்களே சுற்றத்தை நன்றாக கவனித்து வாருங்கள். ஜாக்கிரதை.
    //////////////////// இத்தனையும் நான் கூறியது ஒரு இந்து ஜோசியர் இந்துவிடம் முஸ்லீம் தர்க்கவை கும்பிடச்சொல்லி இருக்கிறார். அதை கொஞ்சம் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

  36. @ சுவனப்பிரியன், அப்துல் ரஹீம்

    உங்கள் இருவரின் கருத்துப்படி (குரானின் படி)
    ” நீங்கள் குரானை ஏற்று கொண்டால் சுவர்க்கம்(72 கன்னிகள்) ஏற்று கொள்ளாவிட்டால் நரகம் (கொத்தி நீரில் எரிக்கப்பட்டுவீர்கள்). ஆனால் ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்.”

    இவ்வாறு கூறப்படுவது புலனாகிறது, இதை ஆசை காட்டியும் முக்கியமாக பயமுறுத்தியும் குரானை திணிப்பது என்றல்லவா கூற வேண்டும். இதை தானே மலர்மன்னன் குறிப்பிட்டுள்ளார்.

  37. //இன்னும் சில ஆண்டுகளில் அரபு நாடுகளைப் போல் பெண்ணுக்கு மஹர் கொடுத்து திருமணம் முடிக்கும் நிகழ்வுகள் தமிழகத்திலும் அரங்கேறும்//.

    நீங்கள் மஹர் குடுத்தாலும் குடுக்காவிட்டாலும் மனைவியை மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முறை உள்ளதே. பணம் மட்டும் தான் வாழ்க்கையா, இத்தனை நாள் வாழ்ந்த கணவன் குழந்தை குட்டிகளை விட்டு தெருவில் இறங்கு என்றால் நியாயமா பாஸ்?

    ஒரு இஸ்லாமியர் தன் மனைவியைப் பார்த்து மூன்று முறை தலாக் சொல்லி விடுகிறார் என்றால், அந்தப் பெண்

    1)தன் பிள்ளை குட்டிகளை விட்டு விட்டு வீட்டை விட்டு தெருவிலே நடக்க வேண்டும்.

    2) ஒருதலைப் பட்சமாக தரப்பட்ட விவாகரத்தை எதிர்த்து எந்தக் கோர்ட்டிலும் முறையீடு செய்ய வழி இல்லை!

    3) அந்தப் பெண் ஜீவனாம்சம் கோர சட்டத்தில் வழி இல்லை! (ஆனால் நீங்கள் சொல்லும் மஹர் இருந்தால் அதை வைத்துக் கொள்ளலாம்.)

    4) தான் பெற்ற பிள்ளை தன்னுடன் இருக்க வேண்டும் என்று கோர அவளுக்கு உரிமை இல்லை. தான் பெற்ற பிள்ளைக்கு தாய்ப் பால் வூட்டக் கூட அவளுக்கு உரிமை இல்லை.அந்தக் முன்னாள் கணவன் அனுமதித்தால் தான் பாலூட்ட முடியும், பாலூட்ட அந்த முன்னால தாய்க்கு காசு தர சொல்லும் அளவுக்கு கருணை இருக்கிறது.

    65.6:உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.

    கணவனுக்கு அந்த மனைவியை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றால் வேறு பெண்ணை பாலூட்ட வைத்துக் கொள்ளலாம்.

    5)ஆனால் அந்தப் பெண் மூன்று மாதம் காத்திருந்து தான் கர்ப்பவதி இல்லை என்று நிரூபணம் ஆனால் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம்.

    6)அவரும் எப்போது வேண்டுமானாலும் தலாக் கொடுக்கலாம்.

    again

    1)தன் பிள்ளை குட்டிகளை விட்டு விட்டு வீட்டை விட்டு தெருவிலே நடக்க வேண்டும்.
    ……..

    இப்படி பெண்களை கார், ஸ்கூட்டர் போல வேண்டும் என்னும் போது உபயோகித்து வேண்டாத போது ஸ்கிராப் செய்யும் முறை மனிதாபிமானம் இல்லாத முறையாக உள்ளதே.

    மேலும் ஒருவனிடம் தலாக் பெறுதல், இன்னொருவனை திருமணம் செய்தல், அவனும் தலாக் கொடுத்தல் என ஒரு பெண் பல முறை கை மாறுவது இது தமிழ்க் கலாச்சாரத்துக்கு எப்படி ஒத்து வரும்?

    இது கண்ணகி வாழ்ந்த தமிழ் பண்பாட்டுக்கு சரிப் பட்டு வராதே. மேலும் இது மனிதாபிமானம் இல்லாமல் பெண்களை ஒரு கமாடிட்டி போல கருதும் படியாக உள்ளதே. இது அக்காலத்தில் அரேபிய பண்பாட்டுக்கு ஏற்ப உருவானது. இப்போதும் அதை என் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

    இந்தியப் பண்பாட்டை உணர்ந்த நீங்கள் ஏன் அரேபியர்களிடம் சொல்லி, கட்டிய மனைவியோடு கடைசி வரை வாழ்வதுதான் மனித தன்மை என்பதை புரிய வைத்து இந்த வசனங்களி மாற்றக் கூடாதா?

  38. //உதாரணமாக குணத்தின் காரணமாகவும் மன நாட்டங்களுக்கு ஏற்பவும் அமையும் வர்ணப் பிரிவுகள். இந்த வர்ணப் பிரிவுகள் சுட்டிக் காட்டப்படுகின்றனவேயன்றி அவற்றுள் இன்னது உயர்ந்தது, இன்னது தாழ்ந்தது என பேதம் கற்பிப்பதில்லை. ஆனால் சமூகம் தன் வசதிக்கு ஏற்ப இந்த வர்ணப் பிரிவுகளை வளைத்துச் சில தரப்புகளுக்குச் சாதகமாகவும் சில தரப்புகளுக்கு பாதகமாகவும் நடைமுறைப் படுத்திக்கொண்டது. விளைவு, சமூகம் செய்த பிழைக்குச் சமயம் பழி சுமக்க வேண்டியதாயிற்று. //

    மிஸ்டர் மலர் மன்னன்

    குணத்தின் காரணமாகவும் மன நாட்டங்களுக்கு ஏற்பவும் அமையும் வருணப்பிரிவுகள் என்று இந்துமதம் தனிநபரைக் குறிப்பிட்டுச் சொல்கிறதா? அல்ல ஒரு கூட்டத்தையா ? தனிநபர் என்றால், அவரிடம் குணங்கள் இருக்கும். ஒரே ஒரு குணம் மட்டுமா இருக்கும் ? ஒரே ஒரு குணம் என்று குறிப்பிட்டால், அது அவரிடம் இருக்கும் குணங்களுள் அதிக தாக்கத்தைத் தரக்கூடிய ஒரு குணத்தைக்குறிக்கிறது. மற்றபடி குணங்கள் ஒன்றுக்கொன்று ஊடுருவி அவரின் வாழ்க்கையை இழுத்துச் செல்லும். எனவேதான் கல்லுக்குள்ளும் ஈரமுண்டு என்று சொன்னார்கள். இஃது இந்துமதத்தில் மட்டும் சொல்லப்படவில்லை. ஐரோப்பாவிலும் சொல்லப்பட்டது. அவர்கள் ஹீமர்ஸ் என்பார்கள். நான்கு வகை ஹுமர்ஸ்களால் மனிதர்கள் உருவாக்கபப்டுகிறார்கள்.ஒவ்வொருவரிடம் ஒன்று டாமினேட்டாக இருக்கும்.

    போகட்டும். இப்போது இப்படிப்பட்ட கொள்கை மனிதர்களால் வேறுவிதமாகவும் புரிந்து பேணப்படும் அல்லது பாதகமாகவும் நடைமுறைப் படுத்திக்கொள்ளப்படும் என்று இக்கொள்கையைப்படைத்த இந்து மத பிதாமகர்களுக்கு ஏன் முன்பேயே தெரியவில்லை ? அவர்கள்தான் தீர்க்கதரிசிகளாயிற்றே !

    ‘சிலதரப்புக்கள் பாதமாக நடைமுறைப்படுத்திக்கொண்டது என்றால், அதற்கும் சாதகாம வந்தது இக்கொள்கை என்றுதான் பொருள். “சமூகம் செய்த பிழை” என்பதற்கு முன் நான் அச்சமூகத்தைப் பிழை செய்யத் தூண்டினோம் நம்மை அறியாமலே என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

    வீட்டைத் திறந்து போட்டு இரவு தூங்கி விட்டு மறுநாள் கொள்ளை போய்விட்டது என்றழுதால், ஆரைத் திட்ட வேண்டும் ? வீட்டைத் திறந்து போட்டுத் தூங்கியவனையா? அல்லது திறந்த‌ வீடு தனக்குச்சாதகாம இருக்கிறதே ! என்றுழைந்து இலகுவாகப் பொருட்களை தூக்கிச் சென்றவனையா ?

    வருணக்கொள்கை திறந்து போட்ட வீடு. அக்கொள்கையை இந்து மதம் செய்திருக்க வேண்டியதில்லை முதன்முதலாக‌

    அக்கொள்கை சொல்லப்படாமலும் மனிதர்கள் தத்தம் குணவியல்புகளுக்கேற்பவே வாழ்வார்கள். இதையே சொல்லிக் கெடுப்பானேன்? அல்லது இதற்கு ஏன் தெய்வமுலாம் பூசவேண்டும் கீதையில் கண்ணன் சொன்னதாகச்சொல்லி ?

  39. //முகலாயர்கள் காலத்தில் கத்திக்கு பயந்து நாங்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் இன்றைய காலத்தில் நாங்கள் இந்து மதத்துக்கு திரும்பியிருக்க வேண்டுமே!//

    கத்திக்கு பயந்தது எல்லாம் ஒரு தலைமுறைக்கு தான் நினைவு இருக்கும். அடுத்த தலைமுறையில் உள்ளவர்களுக்கு அந்த பயமுறுத்தல் தெரிய வாய்ப்பில்லை. இரண்டு மூன்று தலை முறைக்கு பிறகு அவர்களும் “இறைவனால் அருளப்பட்ட உண்மை மார்க்கத்திடம்” இணையற்ற பற்று கொண்ட மத உணர்வு உள்ளவர்களாகி விடுவார்கள். மேலும் மார்க்கத்தை விட்டுப் போனால் எரி நரகம் போன்ற பயமுறுத்தல்கள் உள்ளது.

    இப்போது நான் இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்திருந்தால் நான் உங்களை போல் பேசியிருப்பேன். நீங்கள் இந்து பெற்றோருக்கு பிறந்திருந்தால் நம்ப மலர்மன்னன் ஐயாவைப் போல பேசி இருப்பீர்கள். தன்னுடைய மதம் மட்டுமே உண்மை என்று நினைப்பது – அது எந்த வித ஆதாரமும் இல்லாதது. எந்த மதக் கோட்பாட்டுக்காவது சரி பார்த்துக் கொள்ளும் ஆதாரம் இருக்கா பாஸ்?.

    எந்த மத புத்தகத்திலயாவது பென்சிலின் போன்ற உயிர் கக்கும் மருந்து பற்றி ஏதாவது இருக்கா?( பிடரிகளை வெட்டுங்க, விரலை வெட்டுங்க… இதெல்லாம் தான் இருக்கு)! அம்மை நோய்க்கு தடுப்பூசி , ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி இதெல்லாம் மனிதன்தான் கண்டு பிடிச்சான்.

    கடவுளின் பெயரால் கட்டளைகளைப் போட்டு மனிதர்களை வெறுப்பது பெரும் பூசலில் கொண்டு போய் விடும்.

    கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும், யூதரும் போட்ட புனிதப் போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு உலகப் போர்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இப்ப அந்தப் போரின் நினைவாக புதிய போரை நார்வேயில் பிறேவிக் துவக்கி இருக்கிறான்.

    இந்தியர்கள் நாம அமைதியா இருக்கறதுக் குமற்றவருக்கு கத்துக் கொடுக்கணும். உங்க மார்க்கத்தில அஞ்சு வேலை தொழுகிற ஆன்மீகம் இருக்கு, அதை பாராட்டுறேன் அதை வச்சுகங்க, பிற மதங்களை, உருவ வழிபாட்டை வெறுக்க வேண்டியதில்லை பாஸ்.

    நான் ராமதானில் காலை நான்கு மணி முதல் மாலை ஆறு மணி வரை நோன்பு இருந்து உங்களுடன் சேர்ந்து தொழுகை நடத்த தயார்.நீங்க கோவிலுக்கு வந்து பாருங்க- கும்பிட வேண்டாம்- சுற்றிப் பார்த்தல் போதும். மக்கள் எப்படி பக்தியோட கும்பிடராங்கனு பாருங்க. எல்லா மதத்திலும் உண்மையான ஆன்மீகம் இருப்பதை தெரிஞ்சுக்குவீங்க.

    உங்களை சுத்தி இருக்கிறவங்க எல்லாம் உங்க பாசையில சொன்னால் காபிர் தான். ஆனா காலயில இருந்து மாலை வரைக்கும் இடுப்பொடிய வேலை செய்யறான். இரவு குடும்பம் குட்டியோட கஞ்சி குடிக்கிறான்.

    இந்தியனைப் போல அமைதியானவனை பார்க்க முடியுமா? இன்னிக்கி இல்ல, நேத்திக்கு இல்ல, எட்டாயிரம் வருட சமூகம் அண்ணே!
    இந்தக் கலாச்சாரத்தை அவனுக்கு எந்த மதம் கத்துக் குடுத்தது!

    மத்த நாட்டுல பாருங்கக், ஒரே அடி புடி, வெடி தகராறு!

    தான் கட்டின பொண்டாட்டியை சாகுற வரைக்கும் கைவிடாம பாத்துகிறான் இந்தியன், இந்தக் கலாச்சாரத்தை அவனுக்கு எந்த மதம் கத்துக் குடுத்தது.

    பொண்டாட்டி மேல கோவம் வந்து அவளை பொறந்த வீட்டுக்கு அனுப்புறான். கோவிலுக்குப் போனா அங்க சாமியே பொண்டாட்டியோட நிக்குது. உன் பொண்டாட்டி எங்கடான்னு கேக்குற மாறி இருக்கும். போயி பொண்டாட்டிய கூட்டிகினு வருவான். அந்தக் கலாச்சாரத்தினால தான் இந்தியாவில இருக்குற முஸ்லீமும் அதே போல நடந்துக்கறான். முழுசா அரேபிய கலாச்சாரத்தைக் கொண்டு வந்தா பல கை மாறுவதுதான் நடக்கும்.

  40. திரு. சிங்கமுத்து அவர்களே…….
    //….இப்படியே போய்கொண்டிருந்தால், உங்கள் மகனோ, உங்கள் பேரனோ, உங்களை போல தமிழில் எழுதத்தெரியாமல் நண்பர் க்ருஷ்ணகுமார் போலவோ, ஆங்கிலத்திலோ தான் எழுதுவார்.//
    நான் சொல்ல வந்த விஷயத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.சமஸ்கிருதம் என்பது நமக்கு சம்பந்தமில்லாத மொழியில்லை.அது ஏதோ பிராமணர்களுக்கு மட்டுமான சொத்தும் கிடையாது.தமிழகத்தில் துவேஷப் பிரச்சாரம் மூலமாகவே ஆட்சியைப் பிடித்தது மட்டுமில்லாமல் இன்றுவரை அதன் மூலமாகவே வயிறு வளர்த்து வரும் திராவிட குப்பைகளின் முன்னோர்களான தனித்தமிழ் இயக்கத்தினர் விதைத்த விஷம் அது.
    நீங்கள் ”ஹிந்து” என்று சொல்லிக்கொள்வதற்கோ, “இந்து” என்று சொல்லிக்கொள்வதற்கோ முதலில் நீங்கள் பிறந்த மதம் தழைத்திருக்க வேண்டும்.ஹிந்து மதம் எதிர் நோக்கும் அபாயங்களை பற்றிய விவாதத்தில் மொழி பற்றிய மோதல் ஏன் என்றுதான் நான் கேட்டேன்.நாம் சொந்தத்தில் சண்டை போடும் நேரம் அல்ல இது .பிருத்திவி ராஜனுக்கும் , ஜெயசந்திரனுக்கும் இடையிலான மோதலால் தான் கோரி முஹம்மது உள்ளே நுழைய முடிந்தது.சரித்திரத்தில் இருந்து பாடம் கற்றுகொள்வது என்பது நம்முடைய விருப்பம்.
    சமஸ்கிருதம் நம்முடைய பொக்கிஷம். அதை வைத்துக்கொள்வதும் வெறுத்து ஒதுக்குவதும் உங்கள் விருப்பம். அதனால் அந்த மொழிக்கு ஒரு குறைவும் இல்லை.உடனே திராவிட இயக்கத்தினர் பாணியில் எனக்கு ” அவாள்” என்று பூணூல் சுற்றிவிட வேண்டாம். நான் பிராமணன் அல்ல.
    எந்த மொழி மீதும் எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது.தமிழோ ,ஆங்கிலமோ கற்றுக்கொண்டால் தமிழ் அழிந்துவிடும் என்று எண்ணும் அளவுக்கு எனக்கு தமிழ் மீது அவநம்பிக்கையில்லை.ஆகவே, என் மகனோ ,பேரனோ தமிழில் எழுததேரியாமல் பொய் விடுவார்களோ என்ற பயமும் எனக்கில்லை.
    ஆனால் அவர்கள் ஹிந்துவாக இருக்கவேண்டும்..ஏனெனில் நம் மதம் தற்போது பல முனை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது…….

  41. /////ஒரு பெண்ணுக்கு புர்கா போட்டு செல்வது தனக்கு பாதுகாப்பு என்று நினைத்தால் அதை யார்தான் தடுக்க முடியும்/////// அவர்களாக நினைத்தால் பரவாயில்லை. அவர்களை அப்படி நினைக்கத் தூண்டி அல்லது பயமுறுத்தி போடச்சொல்வது தானே நடக்கிறது. புர்க்கா போடாத பெண்களெல்லாம் பாதுகாப்பாக இல்லையா என்ன?

  42. திருச்சிக்காரன்!

    //மேலும் ஒருவனிடம் தலாக் பெறுதல், இன்னொருவனை திருமணம் செய்தல், அவனும் தலாக் கொடுத்தல் என ஒரு பெண் பல முறை கை மாறுவது இது தமிழ்க் கலாச்சாரத்துக்கு எப்படி ஒத்து வரும்?//

    இஸ்லாம் திருமணத்தை ஒரு ஒப்பந்தம் என்கிறது. கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றால் சந்தோஷமாக பிரிந்து விடுவதுதானே முறை. ‘கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன்’ என்று வாழ்நாள் முழுக்க பிரியமில்லா விட்டாலும் சேர்ந்தே வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த வகை நியாயம். விவாகரத்து கடுமையாக்கப்படுவதால்தான் ‘மனைவியை கொன்ற கணவன்’ ‘கணவனை கொன்ற மனைவி’ என்று செய்தித்தாள்களில் பரவலாக படிக்கிறோம்.

    //இது கண்ணகி வாழ்ந்த தமிழ் பண்பாட்டுக்கு சரிப் பட்டு வராதே. மேலும் இது மனிதாபிமானம் இல்லாமல் பெண்களை ஒரு கமாடிட்டி போல கருதும் படியாக உள்ளதே. இது அக்காலத்தில் அரேபிய பண்பாட்டுக்கு ஏற்ப உருவானது. இப்போதும் அதை என் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.//

    கண்ணகி வாழ்ந்த தமிழ்நாட்டில்தான் சின்ன வீடுகளும் அதிகமாக உள்ளது. நமது முன்னால் முதலமைச்சருக்கு மூன்று மனைவிகள். ஒன்று மட்டுமே சட்டப்படியான மனைவி. மற்ற மனைவிகள் எல்லாம் இந்திய சட்டப்படி சின்ன வீடுகளே! கருணாநிதியின் பூர்வீக சொத்தில் கனிமொழி தனக்கும் பங்கு உண்டு என்று வழக்காட முடியாது. அதே போல் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறவும் இந்திய சட்டப்படி தவறே! மனிதர்கள் உருவாக்கிய சட்டத்தில் இத்தனை குளறுபடிகள்.

    மேலும் நீங்கள் தமிழகத்தை மத ரீதியாக கணக்கெடுத்து விவாகரத்து எந்த மதத்தில் அதிகமாக நடக்கிறது என்று கணக்கெடுத்து பாருங்கள். சதவீதத்தில் இஸ்லாமியரின் எண்ணிக்கை முதலில் வராது. மேலும் இறைவன் அனுமதித்த தலாக்கை அவ்வளவு சுலமாக சட்டம் தெரிந்த எவரும் பயன்படுத்த மாட்டார்.

    ‘கணவன் மனைவிக்கிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இறைவன் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான்.’
    -குர்ஆன் 4:35

    இந்த வசனம் இருவருக்கும் சமரசத்தை ஏற்படுத்த முதலில் முயற்ச்சிக்க வேண்டும். முடியாத பட்சத்தில்தான் தலாக்கை உபயோகப்படுத்த வேண்டும் என்கிறது. அதுவும் தொடர்ந்து மூன்று முறை தொடர்ந்து சொல்லக் கூடாது. ஒவ்வொரு தலாக்குக்கும் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளி உள்ளது. இரண்டு தலாக் சொல்லியவுடன் இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் அவர்கள் கணவன் மனைவியாகவே தொடரலாம். மூன்றாவது தலாக் சொன்னவுடன்தான் நிரந்தரமாக பிரிகிறார்கள்.

    //இந்தியப் பண்பாட்டை உணர்ந்த நீங்கள் ஏன் அரேபியர்களிடம் சொல்லி, கட்டிய மனைவியோடு கடைசி வரை வாழ்வதுதான் மனித தன்மை என்பதை புரிய வைத்து இந்த வசனங்களி மாற்றக் கூடாதா?//

    குர்ஆனின் வசனங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது அல்ல. உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவன் அருளிய வசனம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. இறைவனின் வசனம் எக்காலத்துக்கும் எந்த நாட்டினருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். இந்த வசனங்களை தவறாக புரிந்து கொண்டவர்களை வேண்டுமானால் உபதேசம் செய்து திருத்தலாம். குர்ஆனை திருத்த ஆரம்பித்தால் மனிதனாகிய நாம் இறைவனுக்கு அறிவுரை சொல்வது போல் ஆகி விடும்.

    //கடவுளின் பெயரால் கட்டளைகளைப் போட்டு மனிதர்களை வெறுப்பது பெரும் பூசலில் கொண்டு போய் விடும்.
    கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும், யூதரும் போட்ட புனிதப் போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு உலகப் போர்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இப்ப அந்தப் போரின் நினைவாக புதிய போரை நார்வேயில் பிறேவிக் துவக்கி இருக்கிறான்.//

    பிரவிக் தான் வன்முறையை கையில் எடுத்ததற்கு வழிகாட்டிகளே நமது இந்திய நாட்டின் இந்துத்வவாதிகளே என்று கொடுத்துள்ள பேட்டியை ஹிந்து நாளிதழில் படித்துப் பாருங்கள்.

    இஸ்லாம் மாற்று மதத்தவரோடு எவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கு ஒரு ஹதீதை எடுத்து தருகிறேன்.

    3038. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள், முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், ‘நீங்கள் இலேசானதையே மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்: வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபட்டு) பிணங்காதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள்.
    Volume :3 Book :56

    3162. ஜுவைரிய்யா இப்னு குதாமா அத் தமீமீ(ரஹ்) அறிவித்தார்.
    (ஒருமுறை) நாங்கள், ‘எங்களுக்கு அறிவுரை கூறுங்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!” என்று உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அப்போது உமர்(ரலி), ‘இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல்லாதவர்களைக் காக்கும் அல்லாஹ்வின் பொறுப்பை நிறைவேற்றும்படி உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அது உங்கள் நபியின் பொறுப்பும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
    Volume :3 Book :58

  43. //அது ஏதோ பிராமணர்களுக்கு மட்டுமான சொத்தும் கிடையாது.தமிழகத்தில் துவேஷப் பிரச்சாரம் மூலமாகவே ஆட்சியைப் பிடித்தது மட்டுமில்லாமல் இன்றுவரை அதன் மூலமாகவே வயிறு வளர்த்து வரும் திராவிட குப்பைகளின் முன்னோர்களான தனித்தமிழ் இயக்கத்தினர் விதைத்த விஷம் அது//

    saravana kumar!

    சமசுகிருதம் எப்படிப்பட்ட மொழி, ஆருக்குச் சொந்தம் என்பதெல்லாம் தியரி. நடைமுறையில் அஃது ஒரு குறிப்பிட்ட ஜாதியினரால் மட்டுமே கற்றுப்பேணப்படுகிறது என்பது உண்மை. அவர்கள்கூட இன்று அம்மொழியை கசடறக்கற்கவில்லை. மேலும் கற்பவ்ர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தோ போய், அம்மொழியைத் தெரிந்தோர் சிலரே என்ற நிலைக்கு வந்தாயிற்று. Dravidian leaders are not responsible for the disinterest for the language among those i cited.

    தனித்தமிழ் இயக்கம் திராவிட இயக்கத்தில் இருந்தோரைவிட இல்லாதோர் பலரால் வளர்க்கப்பட்டு ஆனால் பின்னர் தோல்வியடைந்து விட்டது. எ.கா. மறைமலை. இவர் ஆத்திகர். சிவ நெறியாளர். துறவறம் மேற்கொண்டவர். இவருக்கும் திராவிட இயக்கத்திற்கும் என்ன தொடர்பு? ஒன்றுமேயில்லை. ஆனால் “தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை” எனப் போற்றுமளவுக்கு தனித்தமிழை ஆதரித்தார்.

    வடமொழியா, தென்மொழியா என்பது இக்காலத்தில் தோன்றிய பிரச்சினையே கிடையாது. அஃது ஆதிகாலமுதல் இருந்துகொண்டே வந்தது.

    “ஆழ்வார்கள் பாசுரங்கள் தமிழில் எனவே அவைகளுக்குத் தெய்வத்தன்மை கிடையாது” எனச் சொல்லித் தடுக்க, “இல்லை! அது திராவிட வேதமாகும்; நாலாயிரத்திவ்ய பிரபந்தம் கண்டிப்பாக வைணவக்கோயில் பூஜைகளில் ஓதப்படவேண்டும்” என்று சொல்லி அதை நடாத்திக்காட்டியவர் இராமானுஜர். அவரயொட்டி பின்வந்த ஆச்சாரியர்களும் கடைபிடிக்க இன்றும் நடைமுறையில் இருக்கிறது அக்கட்டாயம். வடமொழி வேதமும் தென் மொழி திராவிட வேதமும் (நாலாயிரம்) ஓதப்பட்டுத்தான் தமிழ்நாட்டு வைணவக்கோயில்களில் பூசனை நடைபெறுகிறது. தமிழ் வைணவத்தைப் பொறுத்தவரை தேவ பாசை.

    Dravidian leaders have nothing to do with what I have written above.

  44. முதலில் புர்கா(பர்தா) என்பது ஏன்/ எப்படி வந்தது என்பதே புரியாமல் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அரேபியா போன்ற பாலைவனத்தில் மணல் புயல் அடிப்பதால் ஒட்டகத்தில் போகும் ஆண்களும் பெண்களும் முழுமையாக பெரிய அங்கியால் மூடிக்கொண்டு சென்றார்கள். இப்போதும் கூட வளைகுடா நாடுகளின் தலைவர்கள்/அமீர்கள் வரும்போது நீண்ட அங்கியால் மூடிக்கொண்டு வருவதைக் காணலாம். அது அந்த பகுதியில்/நாட்டில் வசதியானது! இப்போதுகூட அங்கெல்லாம் இருசக்கர வாகன‌ங்கள் பெருமளவில் இல்லை என்பதும் கார்கள் ம‌ட்டுமே இருக்கின்றன என்பதையும் சேர்த்து பார்த்தால் இது புரியும். இயற்பியல் படித்தவர்களுக்கு தெரியும், கருப்பு நிறமானது (black body) எல்லா அலைநீளமுள்ள கதிர்களையும் கவரும் என்பதும் அதனால் உடலில் அதிக வெப்பம் தாக்கும் என்பதும். இங்கே அண்ணா சாலையில் மண்டை பிளக்கும் வெயிலில் கருப்பு நிறத்தில் ஆடை போட்டு நடந்தால் உடம்பு எரியும்!

  45. @suvanappiriyan

    //ஒரு பெண்ணுக்கு புர்கா போட்டு செல்வது தனக்கு பாதுகாப்பு என்று நினைத்தால் அதை யார்தான் தடுக்க முடியும்//

    [Edited and published]

    பர்தா

    இஸ்லாம் பெண்களுக்கு கட்டாயப்படுத்தும் கடமைகளில் பர்தாவும் ஒன்றாகும். ஒரு முஸ்லிம் பெண் அந்நிய ஆண்களுக்கு முன்வர அவசியப்படும் போது அவள் தன்னை மார்க்க ஷரீஅத்படி முறையாக மூடிமறைத்து வருவது அவசியமாகும். மார்க்க ஒழுக்கத்துக்கு கட்டுப்பட்டு அவள் தன்னை மூடிமறைத்துக்கொள்ள பயன் படும் சாதனமே பர்தா ஆகும். பர்தா ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாகவும். அந்நிய ஆண்களின் தீயப்பார்வை தம்மீது விலாமல் பாதுகாத்துக்கொள்ள பர்தா ஒரு பெண்ணுக்கு மிக மிக அவசியமாகிறது.

    பர்தா’ அணியாதவர்களுக்கு கிடைக்கும் தண்டனை
    ஸைய்யதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: “ஒரு நாள் நானும், பாத்திமாவும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வீட்டுக்குப் போனோம். அந்த நேரம் அன்னவர்கள் அழுதுக்கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த பாத்திமா நாயகி (ரலியல்லாஹு அன்ஹா) கண் கலங்கி, கலக்கமடைந்து “அருமை தந்தையே! தாங்கள் அழு காரணம் என்ன?” எனக்கேட்டார்கள். அப்போது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்,: “அருமை மகளே! நான் மிஹ்ராஜ் சென்று இருந்த இரவில் நரகத்தில் சில பெண்களை கண்டேன். அவர்கள் வேதனைப்படுவதற்கு காரணங்களை தெரிந்துக்கொண்டேன் அதை நினைத்தே அழுகிறேன்.” என்று கூறினார்கள். அதற்கு பாத்திமா நாயகி (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் “அருமைத்தந்தையே! அந்தப்பெண்கள் எந்த காரணத்துக்காக, எப்படி வேதனை செய்யப்படுகிறார்கள்? எனக்கேட்க, அதற்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், “ஒருப்பேன் அவளுடைய முடியால் தொங்கிக்கொண்டிருந்தால் அவளுடைய மூளை பயங்கரமாக கொதித்துக்கொண்டிருந்தது. காரணம் அந்தப்பெண் தன்னுடைய முடியை அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து மறைத்துக்கொள்ளாதவள். இன்னொரு பெண்ணின் உடல் நெருப்பிலான கத்தரிக்கோலால் வேட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் அவள் தன்னுடைய உடலையும், அலங்காரத்தையும் அந்நிய ஆண்களுக்கு காட்டிக்கொண்டிருந்தவள் என்று கூறப்பட்டது.

  46. இப்போது தெரிகிறது, ஜோ ஏன் ஸ்ரீவைணவம் என்பதற்கு சிரிவைணவம் என்று எழுதுகிறார் என்று.sri என்று டைப் செய்தல் ஸ்ரீ என்றுதான் வரும் ஆன்னால் சிரி என்று டைப் செய்ய siri என்று டைப் செய்ய வேண்டும்.
    பின்ன ஏன் ராமானுசர் என்று இல்லாமல் ராமானுஜர் என்று எழுதி உள்ளார் என்று தெரியவில்லை,அப்புறம் தன்னை சோ அமலன் என்றல்லவா குறிப்பிடவேண்டும்,திராவிட வேதம் என்று ஏன் எழுதுகிறார்?
    இடையிடையே இங்கிலீஷ் பீட்டர் வேற,

  47. \\\\\\\\முதலில் இப்படியொரு கட்டுரையை எழுதியதற்காக ஸ்ரீ களிமிகு கணபதியும் பிரசுரம் செய்தமைக்காக தமிழ்ஹிந்துவும் வெட்கப்பட வேண்டியிருக்கும்.\\\\\\

    ஸ்ரீ மலர்மன்னன் மஹாசய், க்ஷமிக்கவும். தங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன். அகண்ட பாரதம் என்பதில் எந்தளவுக்கு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதோ அந்தளவு வழிதவறி ஆப்ரஹாமிய மதங்களில் உள்ள நமது சஹோதரர்களை முழுதாக மீட்டெடுக்க முடியும் என்பதில் தங்கள் நம்பிக்கையை விட எனது நம்பிக்கை குறைவானதென்பதால் இவ்வேறுபாடு இருக்கலாம். கார்ய நிமித்தமாக ப்ரயாணத்தில் இருந்தபடியால் ஒரு வாரம் பின் ஸ்ரீ களிமிகு கணபதி அவர்களின் வ்யாசம் முழுதும் வாசித்தேன். ஸனாதன, பௌத்த, ஜைன, சீக்கிய மற்றும் வேதாந்த தர்சனங்கள் உள்ளடக்கிய தத்வ பூர்வமான ஹிந்து மதத்தை வெறும் கட்டளைகள் (நிரந்தரமான) உள்ளடக்கிய ஆப்ரஹாமிய மதங்கள் புரிந்து கொள்ளும் விதம் சரியல்ல என்பதை தெளிவு படுத்த விழைந்த அவரது ப்ரயத்னம் ச்லாகிக்கத்தகுந்தது.

    த்வைதம் – ஆப்ரஹாமிய மதங்கள் மற்றும் வ்யாசத்தை முடித்த பாங்கு இவற்றில் எனக்கு கருத்து வேறுபாடென்றாலும் பல கருத்துக்கள் தங்களுக்கும் ஒப்புதலாகவே இருக்கும் என்பதென் அனுமானம்.

    குறிப்பாக

    \\\\\\அதாவது, ஓர் ஆபிரகாமிய நம்பிக்கையாளரை அவரது தளத்துக்குள் இருந்து உரையாடி, சனாதன தர்மம் குறித்த புரிதல்களை ஏற்படுத்திவிட முடியாது. முற்றிலும் வேறுபட்ட வேறு ஒரு தளமான, சனாதன தர்மத்துக்குள் ஆபிரகாமிய நம்பிக்கையாளரை அழைத்துச் சென்றுதான் புரிதலை ஏற்படுத்த முடியும்.\\\\\\\\

    ஆப்ரஹாமிய மதங்களிலிருந்து தாங்கள் இவ்வாறே நமது வழிதவறிய சஹோதரர்களை அழைத்து வந்திருக்க முடியும் என எண்ணுகிறேன்.

    ஸ்ரீ கணபதி அவர்களின் கீழ்க்கண்ட வாசகங்களிலும் தங்களுக்கு அபிப்ராய பேதமிருக்க முடியாதென்பதும் என் அனுமானம்.

    \\\\\\\\இப்போதைய நடைமுறை உறவாடல்களில், ஒரு விஷயம் எல்லாவற்றையும் விட முக்கியமாக நம்மைப் பாதிக்கிறது. தன் மதம் சரி என்று நிறுவ வேண்டும் எனும் அதீதமான ஆசையில் மற்ற மத நூல்களில் இல்லாதவற்றை இருப்பதாகச் சொல்லி ஆதரவு தேடும் போக்குத்தான் அது.\\\\\\\\பெரும்பாலும் அவர்கள் எடுத்துக் காட்டும் வரிகள் ரிக் வேதத்தில் இருப்பவை அல்ல. அவர்கள் வாசித்த புத்தகமே அந்த வரிகளை முதலில் உருவாக்கி இருக்கக் கூடும். அவர்கள் வாசித்த அந்த வரிகளின் கீழுள்ள “ருக் வேதம் (8:1:1) (10)” என்பது “ருக்கு பஷீரின் வேதம் (8:1:1) (10)” என்பதன் சுருக்கமாகவும் இருக்கலாம்.\\\\\\\\\\\\\

    \\\\\\\\\குர்ஆனின் வசனங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது அல்ல. உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவன் அருளிய வசனம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.\\\\\\\

    அன்ய மதத்து மறைநூலகள் மனிதர்களால் எழுதப்பட்டது என்று நீங்கள் நினைத்தால் தவறே.

    \\\\\\\\\இஸ்லாம் அந்த மக்களின் வாழ்வில் நுழைந்தவுடன் அனைத்து கொடூரமான பழக்கங்களும் சில ஆண்டுகளிலேயே களையப்பட்டது. \\\\\\\\

    ஜெனாப் சுவனப்ரியன், காந்தாரம், சிந்த், பஞ்சாப் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இன்று இருக்கும் baqi sthan மற்றும் ஆஃப்கனிஸ்தான் பகுதிகளில் இஸ்லாம் நுழைந்ததாலேயே அங்குள்ள மக்கள் கடும் கொடுமையாளர்களானார்கள். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு பயங்கரவாதத்தின் வேரும் இந்த பகுதியையே தங்கள் புகலிடமாக கொண்டுள்ளது. இதற்குக் காரணம் அறவே சஹிப்பின்மையற்ற வஹாபி இஸ்லாம்.

    தர்க்காக்களுடன் சம்பந்தமுள்ளவர்கள் ஸூஃபிகள். ஸூஃபிகள் மற்ற சமயங்களுடன் விரோதம் பாராட்டாதவர் என்ற கருத்தில் எனக்கு ஒப்பில்லை. ஆனால் வஹாபி இஸ்லாத்திற்கு மாறுபட்டு இருந்தனர் என்றளவில் உண்மையுள்ளது.

    அவர்கள் ஹிந்து நம்பிக்கைகளுக்கு அணுக்கமாக இருக்கிறார்கள் என்ற புரிதலே அவர்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் ஒழிக்க விழையும் வஹாபி இஸ்லாம்.

    கீழே உபநிஷத வாக்யமும் பதவுரையும்

    தஸ்மாத்வா ஏதஸ்மாத் ஆத்மன ஆகாச ஸம்பூத:

    ஆகாசாத் வாயு:
    வாயோ ரக்னி:
    அக்னேராப:
    அத்ப்ய: ப்ருதிவீ
    ப்ருதிவ்யா ஓஷதய:
    ஓஷதீப்யோன்னம்
    அன்னாத் புருஷ:

    அந்த ப்ரம்மத்திலிருந்து ஆகாயமும் அதனின்று வாயுவும் அதனின்று அனலும் அதனின்று புனலும் அதனின்று பூமியும் அதனின்று தாவரங்களும் அதனின்று அன்னமும் அதனின்று மனிதனும் உண்டாயினர்.

    காலஞ்சென்ற உஸ்தாத் நுஸ்ரத் ஃப்தே அலிகான் அவர்கள் பாடும் ப்ரசித்தமான பந்திஷ் (பாடல்)

    yeh zamin jab na thi
    yeh jahan jab na tha
    chand suraj na the
    Asmaan jab na thaa

    Sare haq bhi kisi par Aayaa jab na thaa

    thab na tha kuch yahan

    thaa magar thu hi thu Allah hoo

    Aank ki Roshni
    dil ki Awaaz thu

    thaa bhi thu hai bi thu hoga bhi thu hi thu Allah hoo

    அப்போது இந்த நிலமில்லை. உலகில்லை. சந்த்ரஸூர்யர்களில்லை. ஆகாயமுமில்லை. இவற்றின் மீது உரிமைகொண்டாடுபவரெவரும் வருவாரில்லை.

    அப்போது ஏதுமில்லை என்றபோது ஆனால் இருந்ததென்னவோ நீ – நீயே அல்லாஹ்

    கண்ணின் ஒளி மற்றும் ஹ்ருதயத்தின் ஓசை நீ.

    நீ இருந்தாய், இருக்கிறாய், இருக்கப்போவதும் நீ – நீ மட்டுமே.

    ஸ்ரீ களிமிகு கணபதி, கீழே சொன்ன வாக்யத்திற்கு மேலிருக்கும் பந்திஷ் வேறுபட்டால் அது ஹிந்துக்கருத்துக்களுடன் அணுக்கமானால் (முழுமையாக என்றில்லாவிடினும்) வஹாபிகள் பதட்டப்படுவது வெள்ளிடைமலையே

    \\\\\\\\\\\\ஆனால், அது “ஒருவன்” அல்ல. “ஒருமை”. அதாவது, One அல்ல; Oneness.

    மேலும், இந்து மதப் புரிதலின்படி ஊழிக் காலத்துக்கு (இறுதி நாளுக்குப்) பின்னர் எஞ்சி இருப்பது இறை மட்டுமே. அந்த இறைக்குள் படைப்பும் உயிரினங்களும் ஒடுங்கிவிடுகின்றன.\\\\\\\\

    \\\\\\\\\ஆனால், ஆபிரகாமிய மதங்களின் புரிதல் முற்றிலும் வேறுபட்டது. ஊழிக்குப் பின்னரும், படைப்புகள் படைத்தவனிடம் இருந்து வேறுபட்டே இருக்கின்றன.\\\\\\\\

    ஹிந்துக்களை இஸ்லாமியர் புரிந்து கொள்வது பின்னாலிருக்கட்டும்.

    “ஸுர்மா லகானா ஸுன்னத் கா ரஸூல்” என நம்புவோர் ஷியா, ஸூஃபி மற்றும் அஹமதியா போன்ற மற்றைய இஸ்லாமியரை புரிந்து கொண்டாலே உலகத்தில் ரத்தக்களரிகள் மிகவும் குறையும்.

  48. திரு. சுவனப்பிரியன் அவர்களே

    என்னுடைய தெருவில், பகுதியில் இதுவரை ஒரு விவாகரத்து கூட ஆகவில்லை.

    கோர்ட்டில் வந்த வழக்குகளின் அடிப்படையில் பார்க்க சொல்கிறீர்களா? இஸ்லாமிய முறையில் விவாகரத்து செய்ய கோர்ட்டு தேவை இல்லையே. மூன்று முறை தலாக் சொன்னால் போதுமே. ஜமாஅத் வரைக்கும் கூட போக வேண்டியதில்லை. மூன்று முறை தலாக் சொன்னால் அந்தப் பெண் கிளம்ப வேண்டியதுதான்.

    மேலும் இந்திய நாட்டில் இஸ்லாமியர் தலாக் செய்வது அரேபிய நாடு அளவில் இல்லை. காரணம் பெரும்பாலான இந்திய சமுதாயம் அதை ஆதரிப்பதில்லை. நான் என்னுடைய இஸ்லாமிய நண்பர் ஒருவரை கேட்டேன், நீங்கள் இன்னும் அதிக வசதி வாய்ப்பு வந்தால் இன்னொரு திருமணம் செய்து கொள்வீர்களா என்றேன். அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். ஆமாம் என்றார். நான் ஒன்றும் பேசவில்லை. சில நிமிடம் கழித்து அவர் என்னிடம் “ஆர் யு அப்செ”ட் என்றார். “எஸ்” என்றேன். நான் இன்னொரு திருமணம் செய்து கொள்வதாக் சொன்னால் என்னுடைய தாயும் சகோதரியும் கூட அதர்ச்சி அடைய மாட்டார்கள் என்றார்.

    நான் உங்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால், இந்த தலாக் விடயத்தை சுட்டிக் காட்டுவது இஸ்லாத்தை மட்டம் தட்ட , குறை கூற அல்ல.

    இது அரேபிய மக்களுக்காக உருவாக்கப் பட்டது.என்னுடைய நண்பர் ஒருவர் துபாயில் பணி புரிகிறார். அவர் ஒரு முறை என்னிடம் சொன்னார். அங்கே ஆக்சிடன்ட் நடந்தால் போலீஸ் வந்து செக் செய்த பிறகுதான் வண்டியை எடுக்க வேண்டுமாம். மூன்று கார்கள் இடித்துக் கொண்டான். அவர்கள் காரை நிறுத்தி இறங்கி பேசிக் கொண்டு இருந்தனராம். அதில் இருவர் அரேபிகள். போலீஸ் வர தாமதமானதால், அவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். வயதான அரபி, இளைங்கராக இருந்த அரபியிடம் உங்கள் அப்பா யார் , பேர் என்ன என்று கேட்டாராம். இளைங்கர் பதில் சொல்லிக் கொண்டே போக கடைசியில் அந்த இளைங்கனின் தந்தைதான் அவராம். பல வருடங்கள் பார்க்கவும் இல்லை, தொடர்பும் இல்லை.

    மோசஸ் யூதர்களுக்காக உருவாக்கிய சட்ட திட்டத்திலும் சரி, முகமது (ஸல்) அரேபியர்களுக்காக உருவாக்கிய சட்டத்திலும் சரி, இந்த தள்ளுதல் சீட்டு அல்லது தலாக் உள்ளது. ஏனெனில் மக்களை இணைத்து பெரிய சமூகங்களை உருவாக்கும் போது அந்த மக்களின் சில அடிப்படை குணாதிசயங்களை ஒட்டியே சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன. அதை புரிந்து கொண்டே மோசஸ் , முகமது (ஸல்) ஆகியோர் சட்டங்களி உருவாக்கினர். இடையில் வந்த இயேசு கிறிஸ்து தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்கக் கூடாதே என்றார். இப்படி யூதருக்கு பிடிக்காத பல விடயங்களை அவர் சொன்னதால் அவர்கள் இயேசுவை புறக்கணித்து விட்டனர். இயேசுவும் தூதர் என்றுதானே நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்ப அவர் சொன்னது கடவுள் சொன்னது ஆகாதா?

    ஆனால் இது எல்லாம் மனிதராக உருவாக்கிக் கொள்ளுவதுதான்.இயேசு கிறிஸ்து “உங்களின் மனதின் கடினத்திநிமித்தமே மோசஸ் தள்ளுதல் சீட்டு தரச் சொன்னார்” என்றார். கடவுள் ஒன்னும் சொல்லவில்லை, உங்களோட மல்லுக் கட்ட முடியாமல் மோசஸ் தள்ளுதல் சீட்டு கொடுத்துக்கோ என்று சொல்லி விட்டார் என்று இயேசு உண்மையை வெளிப்படையாக சொல்லி விட்டார்.

    கணவனுக்காக உடல் பொருள் ஆவி உட்பட அனைத்தயும் தருகிறாள் மனைவி. அவளை ஒருதலைப் பட்சமாக தள்ளி விடும் படிக்கு வைப்பது சரியா? இஸ்லாமிய சகோதரிகளுக்குத் தான் பிரச்சினை, அவரகள் கணவனை எப்படி அன்பு செய்கிறார்கள், அவர்களுக்கு தரும் கைம்மாறு இதுதானா?
    .
    (to be continued)

  49. திரு.அமலன் அவர்களே….

    பிற மொழிக்கலப்பே இல்லாமல் ஒரு மொழி பேச்சு வழக்கில் நீடித்து இருப்பது சாத்தியமே இல்லை….தமிழில் தற்போது வெகுஜன பேச்சு வழக்கில் உள்ள சம்ஸ்கிருத, அராபிய,தெலுங்கு,பாரசீக.,போர்த்துகீசிய , மற்றும் இதர மொழி வார்த்தைகளின் பட்டியலை நான் தரட்டுமா? அந்த வார்த்தைகளை அப்படியே தமிழ்ப்படுத்தி உபயோகித்தால் எத்தனை பேருக்கு புரியும்?

    // வடமொழியா, தென்மொழியா என்பது இக்காலத்தில் தோன்றிய பிரச்சினையே கிடையாது. அஃது ஆதிகாலமுதல் இருந்துகொண்டே வந்தது.//
    இதை நான் மறுக்கவில்லை. ஆனால் மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தை திராவிட இயக்கங்கள் ஹிந்து மத எதிர்ப்பு பிரச்சாரத்திற்கே உபயோகப்படுத்திக்கொண்டன. அதன் நீட்சி தான் கருணாநிதி தமிழ்புத்தாண்டை தை முதல் தேதிக்கு மாற்றியது.

    பக்தி இலக்கியங்களால் தான் தமிழ் வளர்ந்தது என்ற என்னுடைய கருத்தை , இதே தளத்தில் கம்பன் பாடிய குரல் என்ற கட்டுரைக்கான பின்னூட்டத்தில் பதிவு செய்துள்ளேன்.

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மிக பெரும்பான்மையாக உள்ள தமிழ்ச்சமூகத்தில் , இன்று நாத்திகர்களும் ஹிந்து மத விரோதிகளும் தலைவர்களாக வலம் வருவதன் காரணம் என்ன ? நம்மிடையே உள்ள இது போன்ற சிறு பூசல்களை இவர்கள் பெரிதாக்கி தம்மை வளப்படுத்திக் கொள்கிறார்கள் …..அந்நிய மதங்கள் நம் மீது தொடுக்கும் தாக்குதல் பற்றிய விவாதத்தில் ,நமக்குள்ளேயே ஏன் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதே ஏன் கேள்வி………

  50. // அன்ய மதத்து மறைநூலகள் மனிதர்களால் எழுதப்பட்டது என்று நீங்கள் நினைத்தால் தவறே. //

    அவற்றை எழுதியவர்கள் மிருகங்கள் – மனிதர்கள் அல்ல. With due apologies to animals.

  51. //இப்போது தெரிகிறது, ஜோ ஏன் ஸ்ரீவைணவம் என்பதற்கு சிரிவைணவம் என்று எழுதுகிறார் என்று.sri என்று டைப் செய்தல் ஸ்ரீ என்றுதான் வரும் ஆன்னால் சிரி என்று டைப் செய்ய siri என்று டைப் செய்ய வேண்டும்.
    பின்ன ஏன் ராமானுசர் என்று இல்லாமல் ராமானுஜர் என்று எழுதி உள்ளார் என்று தெரியவில்லை,அப்புறம் தன்னை சோ அமலன் என்றல்லவா குறிப்பிடவேண்டும்,திராவிட வேதம் என்று ஏன் எழுதுகிறார்?
    இடையிடையே இங்கிலீஷ் பீட்டர் வேற,//

    திராவிட்!

    எனக்கு சிரி டைப் வரல. எப்படி என்று சொன்னால் செய்வேன்.

    நான் நிறைய தளங்களில் ஆழ்வார்கள் பாசுரங்கள்; அவர்களின் உன்னதம், இராமனுஜரின் தொண்டு, ஆச்சாரியர்களின் வாழ்க்கை பற்றியெல்லாம் எழுதி வருகிறேன். சில பொதுவிடங்களிலும் பேசிவருகிறேன். சிலரை திருமலைக்கு யாத்திரை போக வைத்திருக்கிறேன். நானும் சின்னாட்களுக்குமுன் சென்றவந்தான். அதன் பிரதிபலிப்புதான் நான் திருமலையில் புத்தம்புது சாலைகள் போடப்பட்டிருக்கின்றன என்று சொன்னது. திருச்சானூருக்கும் போய் வந்தேன்.

    சிலருக்கு என்னைப்பிடிப்பதில்லை. என் கருத்துக்கள் கசக்கும். அதனால் என்னைத்தாக்குவதற்குப் பதிலாக இராமனுஜரையும் ஆழ்வார்களையும் தாக்குவார்கள். இதில் என்ன கொடுமை என்றால் இவர்களுள் பலர் இந்துமதக்காவலர்கள் எனத் தங்களை நினைத்துக்கொண்டு எழுதுவார்கள்.

    நம்மாழ்வாரின் புகழ் மிகப்பெரியது. ‘பாடப்பாட வாய் மணக்கும்’ என்று கண்ணதாசன் எழுதியது திருவாய்மொழிக்குத்தான் சாலப்பொருந்தும். அது (திருவாய்மொழி) நான்மறையின் தொகுப்பு என்று தமிழ் வைணவர்கள் கருதி போற்றி ஓதுகிறார்கள். தென்கலையாரோ, வடமொழி வேததத்தைப்படிக்காவிட்டாலும், இத்திராவிட வேதம் படித்தாலே போதும்.

    ஆனால் உங்கள் நிலை கத்துக்குட்டித்தனம் கூட. என்னைத்தாக்க ‘திராவிட வேதம்’ என்ற சொல்லையே நக்கலடிக்கிறீர்கள். என்ன செய்ய? கிணத்துத்தவளைகளிடம் மாட்டிக்கொண்டேன். A little knowledge is a dangerous thing!

    Please know about Shrivaishanvam and read Azwaars before writing in Hindu.com.

  52. //ற மொழிக்கலப்பே இல்லாமல் ஒரு மொழி பேச்சு வழக்கில் நீடித்து இருப்பது சாத்தியமே இல்லை….தமிழில் தற்போது வெகுஜன பேச்சு வழக்கில் உள்ள சம்ஸ்கிருத, அராபிய,தெலுங்கு,பாரசீக.,போர்த்துகீசிய , மற்றும் இதர மொழி வார்த்தைகளின் பட்டியலை நான் தரட்டுமா? அந்த வார்த்தைகளை அப்படியே தமிழ்ப்படுத்தி உபயோகித்தால் எத்தனை பேருக்கு புரியும்?

    Mr Saravana Kumar

    ஆனால் தனித்தமிழ் இயக்கம் தொடங்கியோர் அப்படி நம்பினார்கள். மறைமலை தன் எழுத்தில் அப்படி எழுதிக் காட்டினார். தேவநாயப்பாவனாரும் அப்படியே.

    சாத்தியமா இல்லையா என்பது என் வாதமன்று. சாத்தியம் என்று நம்பிய ஒரு இயக்கம் இருந்தது என்றுதான் சொன்னேன்.

    உங்கள் விவரத்துக்கு:

    ஆழ்வார்கள் தமிழில் எழுதினார்கள். அவர்கள் வைதீக மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள். அஃதாவது, வேதங்களை. ஆனால், அவர்கள் தம் எழுத்தில் வடமொழிச் சொற்களைத் தமிழ்படுத்திதான் எழுதினார்கள். இத்தனைக்கும் அவர்களில் சிலர் (பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகரர், முதலாழ்வார்கள்) வடமொழியில் கரை கண்டவர்கள். பெரியாழ்வாரும் குலசேகரரும் படைத்த வடமொழி நூல்கள் உள்ளன. அவர்கள் எல்லாரும் திருமாலை வடமொழிப் பெயர்களால் அழைக்கும்போது அவற்றைத் தமிழ்ப்படுத்திதான் எழுதினார்கள். எ.கா. பற்மநாபன், சிரிதரன், விட்டுச்சித்தன் (பெரியாழ்வாரின் பெயர்)

    தனித்தமிழ் தோற்கக் காரணம் ஆங்கிலத் தாக்கமும் பிறமொழி பேசுவோர் தமிழகத்து மக்களிடையே கலந்தனாலுமே.

    // வடமொழியா, தென்மொழியா என்பது இக்காலத்தில் தோன்றிய பிரச்சினையே கிடையாது. அஃது ஆதிகாலமுதல் இருந்துகொண்டே வந்தது.//
    இதை நான் மறுக்கவில்லை. ஆனால் மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தை திராவிட இயக்கங்கள் ஹிந்து மத எதிர்ப்பு பிரச்சாரத்திற்கே உபயோகப்படுத்திக்கொண்டன. அதன் நீட்சி தான் கருணாநிதி தமிழ்புத்தாண்டை தை முதல் தேதிக்கு மாற்றியது.”

    Mr Saravana Kumar

    இருக்கலாம்.

    //பக்தி இலக்கியங்களால் தான் தமிழ் வளர்ந்தது என்ற என்னுடைய கருத்தை, இதே தளத்தில் கம்பன் பாடிய குரல் என்ற கட்டுரைக்கான பின்னூட்டத்தில் பதிவு செய்துள்ளேன்.//

    Mr Saravana Kumar,

    அப்படி சொல்ல உங்களுக்கு தமிழ் மொழியின் தோற்றம், தொன்மை, வளர்ச்சி பற்றி ஒரு மொழியறிஞனைப்போல நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். நானறிந்த வரை, சமய இலக்கியங்களால் தமிழ் வளர்ச்சியடைந்த காலம் இடைக்காலமே. சங்க காலமல்ல. அப்போது சமய இலக்கியங்கள் இருந்தாலும் (நக்கீரரின் படைப்புக்கள்) அவற்றைவிட சமயமில்லா செகுலர் இலக்கியபடைப்புகளே பெருகி தமிழை வளம்பெறச்செய்தன.

    சமய இலக்கியங்கள் இடைக்காலத்தில் பெருவாரியாக வந்து தாக்கம் செய்யத் தொடங்க செகுலர் இலக்கியங்கள் இருட்டடிப்புக்கு ஆளாயின. அல்லது பரவலாக படிக்கப்படவில்லை. நிலைக்கவுமில்லை. ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலம் CE 7லிருந்து 10 வரையே. அதன் பின்னர் சித்தர்களும் முருகபக்தர்கள் (அருணகிரிநாதர்) பெருமாள் பகதர்களும் (வில்லிபுத்தூரார்) வந்தார்கள். இச்சமய இயக்கங்கள் தமிழுக்குத் தாமறியாமலே (அதாவது அவற்றின் நோக்கம் மொழி அன்று) தொண்டு செய்தாலும் செக்குலர் இலக்கியத்தை மங்க வைத்துவிட்டது.. தமிழ் வளர்ச்சி ஒருதலையாக ஒரே பாதையில் நீட்டப்பட்டது.

    If u examine the matter from the stand point of a language and literature enthusiast, u would agree that the Religious literature did spoil the growth of Tamil in the sense that they took the growth in one direction only. Literature does not mean merely beautiful language to read; but also substance to savour and enjoy.l The substance Azwaars and Nayanmaars gave was uniform, i.e. only about God. The substance that the creative writers give variegated. Literature needs variety.

    Tamil people gave more importance to relgious literature as they were overawed by the saints and sages who wrote in it; and almost associated good writing only with the relgious singers like Azhwaars and Nayanmaars and others like Arunagiryaar. As a result, other men of letters (the creatifve writers) were not encouraged to write or lacked enthusiasm. This created a lop sided development of Tamil.

    When the grip of Religious literature gradually loosened, Tamil looked up again to develop in other ways also.

    தமிழ் இந்து என்ற முறையில் நீங்கள் இதைப்படித்தால் ஏற்க மாட்டீர்கள்.

    //கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மிக பெரும்பான்மையாக உள்ள தமிழ்ச்சமூகத்தில் , இன்று நாத்திகர்களும் ஹிந்து மத விரோதிகளும் தலைவர்களாக வலம் வருவதன் காரணம் என்ன ? நம்மிடையே உள்ள இது போன்ற சிறு பூசல்களை இவர்கள் பெரிதாக்கி தம்மை வளப்படுத்திக் கொள்கிறார்கள் …..அந்நிய மதங்கள் நம் மீது தொடுக்கும் தாக்குதல் பற்றிய விவாதத்தில் ,நமக்குள்ளேயே ஏன் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதே ஏன் கேள்வி………//

    சரவண குமார்…

    நாம்..நாம் என்று எழுதி என்னையும் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இங்கே நான் ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற முறையில்தான் எழுதுகிறேன். இந்து, கிருத்துவன், இசுலாமியன் என்ற பட்டங்களை நான் பொதுவிடங்களில் அணிவதில்லை. பேசுவதுமில்லை. Whether I am a Hindu or a Christian is known only to me. I dont want u to know that.

    ஒன்றை மட்டும் சொல்லலாம். நாத்திகம் என்றுமே தேவை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் இருப்பார்கள். எதிர்கட்சியில்லாமல் ஆட்சியில்லை. இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பானிலாலும் கெடும்.

    ஆயினும் நாத்திகர்கள் ஒரு மதம் குறிவைத்துத் தாக்காமல் சகட்டுமேனிக்கு எல்லா மதங்களையும் தாக்கவேண்டும் என்பது என் கருத்து.

  53. நான் இந்தக் கட்டுரையின் சிறப்பம்சமாக எதைக் கருதுகிறேன் என்றால் “திரும்ப வைத்தல்” என்கிறதைத் தான். எண்ணற்ற இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்தவர்களாகவும் முஸ்லிம்களாகவும் மாற்றப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் தங்களுடைய தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்ப வைப்பதே இந்துக்கள் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் வலிமை மிக்க இந்து நாடு உருவாக முடியும். இக்கருத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்திருக்கிறது தங்களுடைய கட்டுரை.

    வாழ்த்துக்கள்.

  54. இங்கே நாம் ஆய்வது பொது விவாகரத்து பற்றி அல்ல, கணவன் மனைவியை தன்னிச்சையாக வெளியே தள்ளும் தலாக் விவாகரத்து பற்றியது.

    “விவாகரத்து வேண்டாம், நான் என் குடும்பத்தோடு சேர்ந்து வாழ விரும்புகிறேன்” என்று மனைவி சொல்லிக் கொள்ள அனுமதி இல்லை,

    மனைவியின் தரப்பு நியாயத்தை வைக்க இடமில்லை ,

    எந்த ஒரு ஆட்சேபனையையும் மனைவி சொல்ல முடியாது,

    வயதான மாட்டை வீட்டை விட்டு விரட்டி விடுவது போல அவ்வளவு எளிதாக மனைவி வீட்டை விட்டு, குழந்தைகளை விட்டு வெளியே அனுப்பப் படுகிறாள். எதிர்த்துப் பேச முடியாது, அழுவதானால் கூட வெளியே வந்து ரோட்டில் தான் அழ வேண்டும்.

    //இஸ்லாம் திருமணத்தை ஒரு ஒப்பந்தம் என்கிறது//

    ஒப்பந்தம்!

    கணவனுக்கு படுக்கையில் சுகம் அளிப்பது, வீட்டு வேலைகளை செய்வது, பிள்ளை பெற்றுக் கொடுப்பது….உனது ஒப்பந்தம், காண்டிராக்ட் முடிந்தது , கேன்சல் என்றால் அவள் வேறு இடத்தில் காண்டிராக்ட் கிடைகிறதா என்று பார்க்க வேண்டும். இதை இந்திய பெண்கள் ஒத்துக் கொள்ளுவார்களா? அதனால் தான் இது இந்திய கலாச்சாரத்துக்கு ஒத்து வராது என்கிறோம்.

    இந்தியாவில் திருமணம் என்பது அன்பினால் இரு மனங்கள் இணைக்கப் படுவது ஆகும்.

    வீடு கட்டும் போது, வேலைகளை செய்து முடிக்க அட்வான்சாக பணம் கொடுத்து பிளம்பிங் , ஒயரிங் இதற்கென தனி காண்டிராக்டர்களை ஒப்பந்தம் செய்து, வேலை முடிந்தவுடன் செட்டில் செய்து அனுப்புவது போன்ற முறை அல்ல இந்திய குடும்ப வாழ்க்கை.

    இந்தியாவில் பல இஸ்லாமிய சகோதரர்கள் இந்த விடயத்தில் தங்களை அறியாமலே இந்திய கலாச்சாரத்துக்கு மனதில் இடம் கொடுப்பதால் தான், மனைவியை அன்பு செய்து தலாக் தராமல் வாழ்கின்றனர்.

    //கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றால் சந்தோஷமாக பிரிந்து விடுவதுதானே முறை.//

    ஆனால் தலாக் முறையில் கணவனின் சந்தோசம் மட்டும் தான்பார்க்கப் படுகிறது. மனைவியின் மனநிலை யை பற்றிக் கவலையில்லை. மனைவி பிரிய மனமில்லை , பெற்ற பிள்ளையுடன் வாழ விருப்பப் படுகிறாள், கணவனுடன் வாழ விருப்பப் படுகிறாள் என்றால் கூட அவள் சொல்லுவதை தலாக் ஆதரவாளர் யாரும் கேட்பதில்லை

    //‘கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன்’ என்று வாழ்நாள் முழுக்க பிரியமில்லா விட்டாலும் சேர்ந்தே வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த வகை நியாயம்//

    இந்தியாவில் கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்வது அன்பினால் பிணைக்கப் பட்டு, கட்டாயத்தின் அடிப்படையில் அல்ல. சேர்ந்து வாழ இருவருக்கும் விருப்பம் இல்லை என்றால், கோர்ட் அவர்களுக்கு விவாகரத்து தர மறுப்பதில்லை. ஒருவர் மட்டும் விவாகரத்து கோருகிறார் என்றால், மற்றவரின் விருப்பம் என்ன, அவருக்கு என்ன பாதிப்பு என்பதை எல்லாம் நீதி மன்றம் விசாரிக்கிறது. குழந்தைகள் யாருடன் இருக்க வேண்டும் என்பதை எது நீதி என்று பார்த்து நீதி மன்றம் முடிவு செய்யும். நிலைமை எப்படி இருந்தாலும் குழந்தைகள் அப்பாவோடு தான் இருக்க வேண்டும் என்று பெண்ணுக்கு அநியாயம் செய்வதில்லை

    // விவாகரத்து கடுமையாக்கப்படுவதால்தான் ‘மனைவியை கொன்ற கணவன்’ ‘கணவனை கொன்ற மனைவி’ என்று செய்தித்தாள்களில் பரவலாக படிக்கிறோம்.//

    120 கோடி பேர் உள்ள இந்தியாவில் எத்தனை கணவன் மனைவியை கொல்லுகிறான், எத்தனை மனைவி கணவனை கொல்லுகிறாள்?

    உங்களுக்கு எத்தனை இந்து நண்பர்கள் இருக்கிறார்கள், உங்கள் வூரில் எத்தனை இந்துக்கள் இருக்கிறார்கள், அவர்களில் இதுவரை எத்தனை இந்துக்கள் மனைவியால் கொல்லப் பட்டு இறந்திருக்கிறார்கள்? சொல்லுங்கள்!

    எதோ ஒரு சம்பவம் எப்போதே எங்கேயோ நடப்பதை வைத்து இதுதான் வாழ்க்கை முறை என்பது போலக் கருத இயலுமா?

  55. திரு. சுவனப்பிரியன் அவர்களே,

    //அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய//

    இவ்வளவு கருணையும் அன்பும் உடைய ஒருவர் பெற்ற பிள்ளை தாயிடம் பால் குடிக்க அனுமதிக்கும் அளவு கூட கருணை இல்லாதவராக இருப்பாரா,

    65.6: Lodge them [in a section] of where you dwell out of your means and do not harm them in order to oppress them. And if they should be pregnant, then spend on them until they give birth.

    And if they breastfeed for you, then give them their payment and confer among yourselves in the acceptable way;

    but if you are in discord, then there may breastfeed for the father another woman.

    கடவுளின் அன்பு அவ்வளவுதானா? இது கடவுள் அருளிய வாசகமாக இருக்க வாய்ப்பே இல்லை என பலர் கருதுகின்றனர்.

    . அரேபிய சமூகம் ஆணாதிக்க சமுதாயமாக இருந்திருக்கிறது.
    போர் என்பது அக்காலத்தில் இஸ்லாமியரின் முக்கிய செயலாக இருந்திக்கிறது. போர் புரிந்தது ஆண்களே. பெண்கள் வீட்டுவேலை மற்றும் குடும்ப வாழ்க்கை இவற்றை கவனிக்க மட்டுமே.

    எனவே ஆண்களுக்கு எவ்வளவு அட்வான்டேஜ் கொடுக்க முடியுமோ அத்தனையும் கொடுத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது, அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ஒருவர் இப்படி “அருளி” இருக்க முடியுமா?

    ஒரு தாய் தான் பெற்ற பிள்ளைக்கு பாலூட்ட கூடாதா? பிள்ளை பெற்று குடுத்து விட்டு தலாக் வாங்கிக் கொண்டு போக வேண்டுமா?

  56. ஜோ,
    நான் உங்களை தாக்க வில்லை உங்களின் முரண்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறேன். சும்மா ஏதேதோ உளறாதீர்கள்.நான் கத்துக்குட்டியாக இருந்தால் உங்களுக்கு பதில் கொடுக்க கூடாதா? தமிழ் எழுத்து நடையில் பிற சொற்கள் வருவது பற்றியே இங்கு விவாதம் நான் இதனை இந்து மதத்துடன் ச்மபந்தபடுத்தி எதாவது கூறி இருக்கிறேனா? திராவிட வேதம் என்ற வார்த்தை தமிழ் அல்ல எல்லா சொற்களும் தமிழில் எழுத நினைப்பவர் இவ்வார்த்தையை பயன்படுத்துவது முரண் என்பதே நான் குறிப்பிட்டது. எந்த ஆழ்வாரையும் குறைத்து கூற நான் விரும்பவில்லை,ஏன் அவர்களை பற்றி நான் பேசவே இல்லை. நீங்கள் ஏன் இப்படி தேவை இன்றி எழுதுகிறிர்களோ தெரியவில்லை.
    நான் (இந்த கத்துக்குட்டி) உங்களிடம் (மெத்தபடித்த மேதாவியிடம் )சொல்ல வருவது எல்லாம் தமிழ் என்று வற்புறுத்தினால் உங்கள் பெயரில் இருந்து மாற்றம் தேவை என்பதே, இடை இடையே ஆங்கிலம் தேவையான இடத்தில் வடமொழி என்று நீங்கள் எழுதிக்கொண்டு ஹிந்து ஏன் இந்துவாக இல்லை என்பதற்கு ஒருவரிட்ட மறுமொழிக்கு வரிந்து கட்டி வடமொழி கொண்டு விளக்குவதே முரண் என தெரிவிக்கத்தான்.
    நான் விளக்கியது எல்லாமே வார்த்தை மொழி சம்பந்த பட்டதே
    ஆழ்வார்களை போல் நீங்களும் எழுத வேண்டியதுதானே? நீங்கள் இப்படி எழுதினாலும் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இந்து என்றுதான் எழுத வேண்டும் ஹிந்து என்று எழுத கூடாது என்ற விசயத்திற்கு தாங்கள் ஜால்ரா போடா கூடாது. ஒன்று இப்படி இருங்கள் அல்லது அப்படி இருங்கள்.
    மொழியை பற்றி மட்டும் கூறும் போது சமயத்தையும் பற்றி பேச்சு இழுக்கும் நீங்கள் என்னை கிணற்று தவளை என்பது நகைப்பாக உள்ளது.

    ஸ்ரீ வைஷ்ணவத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, அப்படி தெரிந்து கொண்டால் தான் இங்கு வந்து எழுத முடியும் என்றால் அதனை தமிழ் ஹிந்து அறிவிக்கட்டும்.

    sri டைப் செய்து என்ட்டர் செய்தால் ஸ்ரீ siri டைப் செய்து என்ட்டர் செய்தால் சிரி
    (இப்போது கூட டைப் என்ட்டர் போன்ற வார்த்தைகள் தவிர்க்க முடியவில்லை)

  57. “கடவுள் ஒருவரே. அக்கடவுளைத்தவிர வேறெவரையும் தொழமாட்டோம்.” என்ற மோனோதீயிசமே இசுலாத்தின் அடிப்படை.

    ஒருவர் இதை விரும்பினால் இசுலாத்தை ஏற்றுக் கொள்ளலாம். அப்படி ஏற்றுக்கொண்ட பிறமதத்தினரே இசுலாமியாரானார்கள். இந்தோனிசியாவிலும் மலேசியா போன்ற பலநாடுகளில் எவரும் கட்டாயத்தின்பேரில் இசுலாமியராகவில்லை.

    இந்தியர்களை தாய் மதம் திரும்புங்கள் என்று எப்படி அழைக்க முடியும்? உங்கள் மதத்தில் ஒரே கடவுள் என்றா இருக்கிறது ?

    ஒன்று சொல்வீர்கள்: ‘பலபல கடவுளர்கள் ஒரு கடவுளின் அவதாரங்களே. எக்கடவுளை வணங்கினாலும் அந்த ஒரே ஒரு கடவுளை வணங்குவதாகும்’ என்பீர்கள்!

    “அந்த பலகடவுளர்கள் பேச்சே வேணாம். ஒரே ஒரு கடவுள் என்று சொன்னால் போதும்” என்பார்கள்.

    “அப்படியா? இதோ நீங்கள் கேட்ட ஒரே கடவுள்” என காட்டினாலும், அக்கடவுளை இசுலாத்தில் இருந்து தொழுதாலென்ன? பிற மதததில் இருந்து தொழுதாலென்ன ?

    இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். மதம் என்பது கடவுள் ஆர்? என்பதோடு நின்று விடுவதில்லை. அவரை எப்படித் தொழவேண்டும்? அவரின் அருளுக்குப் பாத்தியப்பட எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழவேண்டும்? என்றெல்லாம் சொல்லும்போது அவைகள் வேறுபடுகின்றன.

    இத்தகைய வேறுபாடுகளையும் கவனித்து, அவற்றில் இசுலாத்தின் மறைத்தூதர் காட்டிய வழிகளே எமக்கு உகந்தவை என்று சொல்லும்போது ‘தாய்மதத்துக்குத் திரும்புங்கள்’ என்று கேட்பதில் என்ன பொருள் இருக்க முடியும் ?

    மேலும், இருமதங்களும் ஒரே கருத்தை பல வழிகளில் சொல்கின்றன என்னும்போது, இங்கிருந்தாலென்ன? அங்கிருந்தாலென்ன?

  58. இஸ்லாத்தில் உள்ள புனித வசனங்கள் – குரானை முழுவதுமாக படித்தால் தான் அங்குள்ள அட்டுழியங்கள் தெரியவரும்

    நாமாளுகளுக்கு மதரசாவில் எதோ ஒன்றிரண்டு நல்ல வாக்கியங்களை கேட்டு விட்டு (கவனிக்க குரானில் 5% நல்ல விஷயங்கள் நிச்சமாக உண்டு) இஸ்லாம் தான் உலகின் ஒளி விளக்கு என்கிறார்கள்.

    2:223 Your women are a tilth for you (to cultivate) so go to your tilth as ye will, and send (good deeds) before you for your souls, and fear Allah, and know that ye will (one day) meet Him. Give glad tidings to believers, (O Muhammad).

    2:226 Those who forswear their wives must wait four months; then, if they change their mind, lo! Allah is Forgiving, Merciful.

    2:234 Such of you as die and leave behind them wives, they (the wives) shall wait, keeping themselves apart, four months and ten days. And when they reach the term (prescribed for them) then there is no sin for you in aught that they may do with themselves in decency. Allah is informed of what ye do.

    இது விவிலயத்தில் வரும் கதை – சாகுலையும் கிடியானையும் அல்லா போட்டு குழப்பி கொள்கிறார்

    2:249 And when Saul set out with the army, he said: Lo! Allah will try you by (the ordeal of) a river. Whosoever therefore drinketh thereof he is not of me, and whosoever tasteth it not he is of me, save him who taketh (thereof) in the hollow of his hand. But they drank thereof, all save a few of them. And after he had crossed (the river), he and those who believed with him, they said: We have no power this day against Goliath and his hosts. But those who knew that they would meet Allah exclaimed: How many a little company hath overcome a mighty host by Allah’s leave! Allah is with the steadfast.

    அல்லா எப்படி பேச்ச மாத்தி பெசாறார் பாருங்க – சுவன ப்ரியனுக்கு – எதோ ஒரு இஸ்லாம் வசனத்தை உருவி பாருங்க இந்த தான் ஹிந்து தர்மமும் சொல்லுதுன்னு சொல்வது தவறு என்பது அல்லா முழுசா என்ன சொல்ல வரார் என்று பார்த்தா புரியும்

    மொதல்ல எல்லா மதமும் சம்மதம்
    2:256 There is no compulsion in religion. The right direction is henceforth distinct from error. And he who rejecteth false deities and believeth in Allah hath grasped a firm handhold which will never break. Allah is Hearer, Knower.

    உடனே சுதாரித்து கொண்டு காபிர்களை காப்பி ஆத்துகிறார்

    2:257 Allah is the Protecting Guardian of those who believe. He bringeth them out of darkness into light. As for those who disbelieve, their patrons are false deities. They bring them out of light into darkness. Such are rightful owners of the Fire. They will abide therein.

    அல்லா தான் சூரியனை கிழக்கே உதிக்க செய்கிறாராம் –

    அப்போ உலகம் தட்டை, சூரியன் பூமியை சுட்டுடுகிறது என்பதேல்லாம் உண்மை என்றாகிறது

    //
    2:258 Bethink thee of him who had an argument with Abraham about his Lord, because Allah had given him the kingdom; how, when Abraham said: My Lord is He Who giveth life and causeth death, he answered: I give life and cause death. Abraham said: Lo! Allah causeth the sun to rise in the East, so do thou cause it to come up from the West. Thus was the disbeliever abashed. And Allah guideth not wrongdoing folk.
    //

    இப்படியாப்பட்ட வசனங்களை கொண்ட ஒரு புஸ்தகத்தை ஒரு ஏக இறைவன் எழுதினார் என்று எப்படி நம்புகிறீர்கள். இடை ஏக இறைவன் எழுதி இருந்தார் நான் இறை வழி பாட்டையே நிறுத்தி விடுவேன் – ஏன் என்றால் இது அத்தனையும் பேத்தல்.

    முழுக்க முழுக்க பழய ஏற்பட்டு கதைகளை காப்பி அடிச்சு இன்னும் கொஞ்சம் வெறித் தனத்தை தூண்டி விட்டு ஒரு மனிதால் எழுதப்பட்ட ஒரு புஸ்தகத்தை வைத்து கொண்டு ஏன் இப்படி அங்கலைகிரீர்கள்.

    அப்படியே முஹம்மத் வந்தவுடன் சவுதி புண்ணிய பூமி ஆயிட்டடாம். இன்னிக்கு போய் பாருங்க அங்க நடக்கற அட்டுழியத்த. இன்னிக்கும் சவுதி குவைத்தில் அடிமை தனம் இருக்கிறதா. பெண்களை அல்பமாக பார்க்கும் பழக்கம் இன்னைக்கும் இருக்கிறது. காம வெறி எக்கச்சக்கமாக இருக்கிறது (எல்லா சேக்கும் weekend பகரின் ஏன் போறாங்க) .

    இஸ்லாம் நன்மையை விட உலகிற்கு பெருத்த தீமையே செய்திருக்கிறது அதுவும் வெகு குறுகிய காலத்தில்

    இன்றைக்கு outlook கில் வந்த கட்டுரை (இஸ்லாமியர்களின் கனவு என்ன என்பதை தெளிவாக காட்டுகிறது)

    https://www.outlookindia.com/article.aspx?277847

  59. Saarang says: ஒன்று புரிந்துகொள்ளுங்கள் – இந்திய சாதியத்தில்/வர்ண முறையில் – உயர் ஜாதி என்று கூறப்படும் பிராமணர்கள் பிச்சை எடுத்துதான் உண்டு வந்தனர். அவரகளுக்கு என்று ரெண்டு வேட்டி தான். எதோ சொகுசாக இருந்தாக நினைக்க வேண்டாம். காலையில் நாலு மணிக்கு எழுந்து அடுத்தடுத்து அனுஷ்டானங்கள் என்று இருக்கும். சுகத்திற்கு இடமே இல்லாமல் இருந்தது. அப்போது கீழ் ஜாதி என்று சொல்லப்பட்ட வண்ணான் கூட நாள் காசு பார்த்து நினைத்ததை வாங்கிகொண்டு இருக்கக் கூடிய நிலை.

    ஏழைகளுக்கு உதவுவது, எலோருக்கும் வேலை என்பது போன்றதை கவினிக்க அரசர்கள் இருந்தனர். கீழ் ஜாதி ஆனாலும் கௌரவமாகவே பிழைப்பிற்கு கஷ்டம் இன்றியே வாழ்ந்தனர். இதை தவிர்த்து கோவில் மாறும் மடங்கள் , சத்திரங்கள், தங்க இடம் தந்து சோறும் போட்டன”

    சார‌ங்!

    இது ஒரு க‌வ‌ன‌த்திற்குரிய‌ பேச்சு. இதை கொஞ்ச‌ம் விள‌க்க‌வேண்டும்.

    வ‌ருண‌ம் ம‌க்க‌ளை நால்வ‌கையாக‌ப் பிரிக்கிற‌து. அதில் ஒருசாராருக்கு ம‌ட்டும் சார‌ங் முத‌ல்ப‌த்தியில் சொல்ல‌ப்ப‌ட்ட‌வை கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. அது ஏன்? என்ற‌ கேள்வி எழகிற‌து. அத‌ற்கு ம‌ல‌ர்ம‌ன்ன‌னின் ப‌தில்: ம‌க்க‌ளில் வ‌ருண‌ங்க‌ள் அவ‌ர‌வ‌ர் குண‌த்தின் பேரால் கொடுக்க‌ப்ப‌டுகிற‌து.

    என் கேள்வி: த‌னிம‌னித‌னுக்கா? கூட்ட‌த்துக்கா ? ஒரு கூட்ட‌முழுவ‌துமே இறையுண‌ர்வு கொண்டோர் என்ப‌து த‌காத‌ பேச்சாகும். இய‌ற்கைக்கும் ஒவ்வாத‌து. ஒரு கூட்ட‌த்துக்குள்ளெயே நால்வ‌கை குண‌க்கூறுக‌ள் இருக்கும்போது, அவ‌ர்க‌ளையெல்லாரையும் ஒரே க‌ட்டாக‌க்க‌ட்டி இவ‌ர்க‌ள் பிராம‌ண‌ர்க‌ள் என்று வ‌ருண‌ம் கொடுக்கும்போது இம்ம‌த‌ம் இய‌ற்கைக்கு மாறாக‌ பிழை செய்கிற‌து.

    பிராம‌ண‌ன் எளிய‌ வாழ்க்கை வாழ‌வேண்டும். அவன் ‘பிச்சை’ எடுத்து உண்ண‌வேண்டும். அவ‌ன் இறை நினைப்பில் நின்று பிற‌ரை இறைனோக்க‌ வைக்க‌வேண்டும் என்றெல்லாம் சொல்லும் போது, அஃது ஒரு கூட்ட‌த்துக்கு இட்ட‌ க‌ட்ட‌ளைக‌ளா? இல்லை த‌னிந‌ப‌ருக்கா ?

    தனிநபருக்கே என்றால், உணமையில் என்ன நடந்தது? “பிராமணர்கள் தாங்கள்” என்று ஒரு கூட்டம் தங்களை உருவகப்படுத்திக்கொண்டு, அப்பிராமணத்துவத்தை வைத்தே வாழ்க்கையை அமைத்துக்கொண்டது.

    இருவேட்டிகள், பிச்சை என்று சொன்னாலும், அக்கூட்டத்திலுள்ளோர் இதைச்செய்யவில்லை. ஞானிகளும், துறவிகளும் மட்டுமே இந்த பிச்சை, இருவேட்டிகள் என்று வாழ்ந்தார்கள். அவர்களுள் பலர் “பிராமணர்கள்” எனவழைத்துக்கொண்டோர்களிடமிருந்து வரவில்லை. பஞ்சமர்கள் எனவழைக்கப்பட்டோரிலிருந்தும் இந்த இரு வேட்டிகள், பிச்சை வாழ்க்கையை மேற்கொண்டோர்கள் உண்டு என்று இம்மத வரலாறு காண்பிக்கிறது. ஆயினும் பஞ்சமர்கள் ‘பிராம‌ண‌’ நிலையை அடைய‌ முடியாது. ‘காம‌தேனுவானாலும் ப‌சுத்த‌ன்மை போகாது’ என்ப‌து வ‌டக‌லையாரின் கொள்கை.

    பின்னர் இக்கூட்டம் என்ன செய்தது? பிராமணன் என்பவனுக்கு இட்ட கட்டளைகளை அவன் மேற்கொண்டு வாழ்ந்து பொதுவாழ்க்கையில் எல்லாருக்கும் இறையுணர்வையும் நிலையையும் காட்ட, அவனுக்கு பிறர் பல உதவிகளை (உதவிகள் எனக்கருதாது, தெய்வத்திற்குச்செய்யும் சமமாக) செய்ய வேண்டும் என சமூக நிலை உருவாக்கப்பட்டது. பிராமணனுக்குப் போடுவது பிச்சையல்ல. அதன் பெயர் வேறு. அப்பிராமணனை எப்படி நடாத்தவேண்டும். அவர்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அரசர்களுக்கும் உணர்த்தப்பட்டது. ‘அந்தணர் என்பர் அறவோர்’ எனவும் அவர்களுக்கு உதவுதல் அறவோர்க்கு உதவுதலாகுமெனவும், இறையைப்பழித்தாலும் பிராமணரைப்பழித்தலாகாதெனவும், பிராமணனின் சாபத்துக்கு ஆளாகக்கூடாதெனவும், கடவுளுக்கு நிகராக வைத்துப் பிராமணன் பேணப்பட்டான்.

    போகட்டும். இத்தகைய பிராமணத்துவத்தை ஏன் மக்களுள் ஒரு கூட்டம் தங்களுக்கென்றே வைக்கப்பட்டதாகுமெனவும், அதற்கான சடங்குமுறைகளைக்கடைபிடித்தல் போன்றவற்றைச் செய்தும் வாழ்ந்தது? ஏன், என்பதை விட செய்தார்கள் என்பதே இங்கு வாதத்துக்குப் பொருந்தும்.

    இவர்கள் இப்படி வாழ, அதுவே சமூகத்தில் பிறமக்களிடம் “இவர்கள் மட்டும் ஆர்? இவர்களுக்கு மட்டும் ஏன் தனி மரியாதை ? அல்லது இவர்களுக்கு மட்டுமே ஏன் இப்படி தனிப்பட்ட மத வாழ்க்கை?” என்ற கேள்விகளை எழுப்பியது. இவர்கள் வாழ்க்கையை ஒரு சிறப்பான வாழ்க்கை அல்லது இம்மதம் இவர்களையே முதலில் வைத்துப்போற்றுகிறது என்று கருதியோர் இம்மதத்தையே வெறுத்தார்கள்.

    சிங்கமுத்து சொல்வது போல வெறும் தீண்டாமையால் வெளியே போனவர்கள் தலித்துகள் மட்டுமே. இடைனிலை சாதியினர் பெருமளவில் கிருத்துவத்துக்கும் இசுலாத்துக்கும் போனது பிராமணர்கள் என்போருக்கு மதத்தில் கிடைத்த சலுகைகளும் முதல் மரியாதையுமே. திருனெல்வேலி பிள்ளைகள் கிருத்துவத்துக்கு நிறைய மாறினார்கள். இரட்சண்ய யாத்ரீகம் எழுதிய கிருட்டிணப்பிள்ளை ஒரு எ.கா. மறைமலை இந்துவாக இருந்து மடிந்தாலும், தன் வாணாள் முழுவதும் இப்பிராமணர்களைப் பற்றி விமர்சனம் செய்தார்.

    இன்றும் இக்கூட்டம் தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக்கொண்டு ஒரு தனிமனிதனுக்கு ஆக்கப்பட்ட பிராமணத்துவம் விமர்சிக்கப்படும்போது தம்ஜாதியாரே விமர்சிக்கபடுவதாக ஆத்திரமடைகிறதே? இவர்கள் ஜாதி விமர்சிக்கப்படும்போது, அது இந்து மதம் விமர்சிக்கப்படுவதாகவும், பிராமணத்துவேசம் பண்ணப்படுவதாகவும்தானே எழுதியும் சொல்லியும் வருகிறார்கள். இதன் விளவு என்ன? “இவர்கள்தான் இந்து மதம். இந்துமதம்தான் இவர்கள்” என்றல்லவா இவர்கள் விளங்க வைக்கிறார்கள்?

    மற்றவர்களைத் தாய்மதம் திரும்புங்கள் என்று சொல்லுமுன், இம்மதத்தில் இவர்களால் அரங்கேறும் ஆதிக்கமுறைகளும் ஏமாற்றும் ஒழிய வேண்டும்.

    வெறும் தீண்டாமை மட்டுமல்ல சிங்க முத்து!

    Sarang, Not economics but religious concepts decide who is high in your religion. A poor brahmin is superior to a rich dalit, in religion. In society, it may be different.

  60. “இடையிடையே இங்கிலீஷ் பீட்டர் வேற,”

    அப்படின்னா ? U mean I am writing broken or butler English ?
    .

  61. திரு ஜோ,
    இல்லை, இல்லை இடையிடையே ஆங்கிலத்தில் எழுதுவதை குறிப்பிட்டேனே ஒழிய உங்களின் ஆங்கிலத்தை குறை சொல்ல வில்லை.அது எனக்கு தேவையும் இல்லை.(நான் பிராக்டிக்கலாக வழக்கு தமிழில் எழுதவே முயற்சிக்கிறேன், அதில் வடமொழி, ஆங்கிலம் இன்னும் என்ன முடியுமோ அத்தனையும் இருக்கும் ஏனென்றால் நான் இவற்றை குறையாக பார்ப்பதில்லை) அது பிற மொழி கலப்புக்கு எதிரான ஒரு பின்னுட்டத்திலும் நீங்கள் உபயோகித்ததால் குறிப்பிட்டேனே ஒழிய நீங்கள் பிற கட்டுரைகளுக்கு கூட ஆங்கில பின்னுட்டம் இட்டுள்ளீர்கள் நான் ஏதாவது கூறினேனா?
    இப்படித்தான் கருத்துகள் அனர்த்தமாகிவிடுகின்றன. ஐய்யா சாமி தனி நபர் தாக்குதலில் எனக்கு இஷ்ட்டம் இல்லை.

  62. அற்புதமான கட்டுரை…
    உங்கள் பணி தொடரட்டும்.
    Karunaga

  63. திரு கிருஷ்ணகுமார்!

    //அன்ய மதத்து மறைநூலகள் மனிதர்களால் எழுதப்பட்டது என்று நீங்கள் நினைத்தால் தவறே//

    நான் அவ்வாறு சொல்லவில்லை. உலகில் புழக்கத்தில் இருக்கும் அனைத்து வேதங்களுமே இறைவனால் அருளப்பட்டவையே! ஆனால் காலப் போக்கில் விளக்கம் கொடுக்கிறேன் என்ற பெயரில் மனிதர்களின் கருத்துகளும் வேதத்தோடு கலந்து விட்டது. ஏக இறைவனைப் பற்றிய வசனங்களும், பல தெய்வ வழிபாடுகளும் ஒரே வேதத்தில் புகுந்தது இந்த முறையில்தான். கிறித்தவத்திலும் ஏக இறைவனை விடுத்து பவுல் அடிகள் புகுத்திய முக்கடவுள் கொள்கை நிலை பெற்றதும் இந்த முறையில்தான். குர்ஆனைப் போன்று மற்ற வேதங்களும் பாதுகாக்கப்பட்டிருந்தால் உலகில் உள்ள அனைத்து வேதங்களின் மூலமும் ஒன்றாகவே இருக்கும்.

    //உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு பயங்கரவாதத்தின் வேரும் இந்த பகுதியையே தங்கள் புகலிடமாக கொண்டுள்ளது. இதற்குக் காரணம் அறவே சஹிப்பின்மையற்ற வஹாபி இஸ்லாம்.//
    வஹாபி இஸ்லாத்தை முறையாக பின் பற்றறும் சவுதி அரேபியாவில் எந்த வன்முறையை கண்டிருக்கிறீர்கள். இந்து சகோதரர்கள் பலர் 20 வருடம் 30 வருடமாக தங்கள் குடும்பத்தோடு பிள்ளை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்களே!

    முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாலிபான்களை அகற்றி அங்கு ஒரு பொம்மை அரசை நிறுவி இன்று குழப்பம் செய்து கொண்டிருப்பது மேற்குலக நாடுகளே! மண்ணின் மைந்தர்களை அவர்கள் போக்கில் ஆட்சி செய்ய விட்டிருந்தால் இவ்வளவு பிரச்னை வர வாய்ப்பே இல்லை. அதே போல் இந்தியாவுக்கு பிரச்னை கொடுக்க பாகிஸ்தானை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது அமெரிக்கா! பாகிஸ்தானின் ஆட்சியாளர்களும் அமெரிக்காவுக்கு அடி பணிந்தவர்களாக இருப்பதுதான் பிரச்னையே. ஒரு வழியாக நமது ஆட்சியாளர்களையும் தலை ஆட்டும் பொம்மையாகவே மாற்றி விட்டது அமெரிக்காவின் நயவஞ்சக அரசியல்

    //அவர்கள் ஹிந்து நம்பிக்கைகளுக்கு அணுக்கமாக இருக்கிறார்கள் என்ற புரிதலே அவர்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் ஒழிக்க விழையும் வஹாபி இஸ்லாம்.//
    ஒரு உள்ளத்தில் இரண்டு கொள்கைகள் இருக்க முடியாது. தர்ஹாவையும் வணங்கிக் கொண்டு பள்ளிக்கு செல்வதையும் குர்ஆன் தடுக்கிறது. வணக்கத்தில் குளறுபடிகள் இருக்கக் கூடாது. அதே சமயம் வேறு நம்பிக்கை உடையவர்களை எதிரிகளாக பார்க்காமல் சகோதரர்களாக பார்க்க வேண்டும். இஸ்லாமும் அதைத்தான் போதிக்கிறது. இஸ்லாத்தை தவறாக விளங்கியவர்களை தெரிந்தவர்கள்தான் விளக்கி சொல்ல வேண்டும். தற்போது தமிழகத்தில் கடந்த இருபது வருடமாக வஹாபியிசம் பரவலாக்கப்பட்டதனால் மத சண்டைகள் குறைந்திருக்கிறது. மூடப்பழக்கங்கள் களையப்பட்டிருக்கிறது. படித்து பட்டம் பெற வேண்டும் என்ற ஆர்வம் இன்று முஸ்லிம்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இவை எல்லாம் வர வேற்கப்பட வேண்டியவைகளே!

    //“ஸுர்மா லகானா ஸுன்னத் கா ரஸூல்” என நம்புவோர் ஷியா, ஸூஃபி மற்றும் அஹமதியா போன்ற மற்றைய இஸ்லாமியரை புரிந்து கொண்டாலே உலகத்தில் ரத்தக்களரிகள் மிகவும் குறையும்.//
    குர்ஆனையும் முகமது நபியின் போதனைகளையும் தவறாக விளங்கியதால் உண்டான சிறு சிறு குழுக்களே நீங்கள் மேலே சுட்டிக் காட்டியது. குர்ஆனை வியங்கிய பல குழுக்கள் தங்கள் தவறை உணர்ந்து இஸ்லாத்தில் ஙே;காங்கு ஐக்கியமாகிக் கொணடுதான் இருக்கிறார்கள். வன்முறை என்பது எல்லா மதத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இஸ்லாம் மட்டும் ஊடகத்துறையால் மிகைப்படுத்தப் படுகிறது. வன்முறை அற்ற சமூகம் உருவாக நாம் அனைவரும் சேர்ந்து போராடுவோம்.

  64. Dravid has written “..திராவிட வேதம் என்ற வார்த்தை தமிழ் அல்ல எல்லா சொற்களும் தமிழில் எழுத நினைப்பவர் இவ்வார்த்தையை பயன்படுத்துவது முரண் என்பதே நான் குறிப்பிட்டது…
    நான் (இந்த கத்துக்குட்டி) உங்களிடம் (மெத்தபடித்த மேதாவியிடம் )சொல்ல வருவது எல்லாம் தமிழ் என்று வற்புறுத்தினால் உங்கள் பெயரில் இருந்து மாற்றம் தேவை என்பதே, இடை இடையே ஆங்கிலம் தேவையான இடத்தில் வடமொழி என்று நீங்கள் எழுதிக்கொண்டு ஹிந்து ஏன் இந்துவாக இல்லை என்பதற்கு ஒருவரிட்ட மறுமொழிக்கு வரிந்து கட்டி வடமொழி கொண்டு விளக்குவதே முரண் என தெரிவிக்கத்தான்.”

    Mr Dravid

    முதலில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் மொழி பற்றி எழுதியவை பிறரால் என்ன செய்யப்பட்டன; கருதப்பட்டன தமிழ் மொழி வரலாற்றில் என்பதே. வடமொழியா சமசுகிருதமா என்ற கேள்வி ஆதிகாலத்து கேள்வி என்று சொன்ன நான், பின்னர் அப்பிரச்சனையில் திராவிடக்கட்சிகள் குளிர்காய்ந்தன என்பதையும் மறுக்கவில்லை.

    ‘திராவிட வேதம்’ என்ற சொற்றொடருக்குச் சொந்தக்காரர் இராமனுஜரே. அவர் அதைச் சொல்லக்காரணம் வருமாறு:

    ஆழ்வார்கள் திருமாலைப்பாடினார்கள். பின்னர் ‘திருநாடு அலங்கரித்தார்கள்’ (passed away) அதன் பின்னர் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின் கிட்டத்தட்ட 11ம் நூற்றாண்டில் வீரநாராயணபுரம் (காட்டுமன்னார் கோயில்) என்றவூரில் அவதரித்த‌ நாதமுனிகள் என்ற ஆச்சாரியரால் அப்பாடல்கள் தொகுக்கப்பட்டன. அவர் திருமகன் மற்றும் அவரின் சீடர்கள் (உய்யக்கொண்டார்; திருக்குருகை காவலப்பன்) வழியாக அத்தொகுப்பு தலைமுறைதலைமுறையாகக் கொண்டு செல்லப்பட்டது.

    ஆனால், அவை வெறும் திருமால் வணக்கப்பாடல்கள் மட்டுமே என்று அன்று கருதப்பட்டன. “தமிழில் பாடிய காரணத்தால் அவற்றுக்கு தெய்வத்தன்மை கிடையாது; மேலும், ஆழ்வார்களில் பலர் பிராமணர்கள் கிடையாது; எனவே, இவர்கள் பாடல்களுக்குத் தெய்வத்தன்மை கொடுத்து நாம் பாடவேண்டுமா?” என்று கேட்கப்பட்டு, அப்பாடல்கள் கிடப்பில் போடப்பட்டன. “வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு, எங்கள் வாழ்வாம்” என்று நம்மாழ்வாரின் சீடர் மதுரகவி ஆழ்வார் எழுதியதையும் மறுத்து விட்டார்கள். குருகூர் என்பது நம்மாழ்வார் ஊர்.(Nanmaaran is the name given to Nammaazhwaar by his parents. Maran is clannish name)

    அப்படியே இருந்திருந்தால் இன்று என்னவாகி இருக்கும்? கருனானிதி ‘தொல்காப்பியப் பூங்கா’ என்று எழுதியது போல, ‘நன்மாறன் நல்கிய நல் முத்துக்கள்’ என்று கருணானிதி விளக்கவுரை எழுத தமிழறிஞர்கள் நன்மாறன் நல்கிய தமிழைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் அப்படி அவை இலக்கியமாகவில்லை. மாறாக, இராமானுஜர், இப்பாடல்களைப் பரிகாசம் பண்ணியோரை எதிர்த்தார். தன்னுடைய புரட்சிகரமான ஆளுமையால் அனைவரையும் இப்பாடல்கள் தெய்வத்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல; இவை கண்டிப்பாக திருமால் வணக்கத்தில் (பூசனையில்) பாடப்பட (ஓதப்பட) வேண்டும். ஒவ்வொரு வைணவனும் இப்பாக்களை பாராயணம் செய்ய வேண்டும் என்று சொன்னார். அவரைப் பின்பற்றியோர் ஏற்றுக்கொண்டார்கள். அவரிடம், ‘அப்படியானால் எங்கள் வடமொழி வேதம் என்னாவது?’ என்று வடகலையார் கேட்டதற்கு, இரண்டையும் ஓதலாம் என்றார். இதன் விளைவாக, இன்று, கோயில் பூசனையில் நாலாயிரமும் வடமொழி வேதமும் ஓதப்படுகின்றன. இராமானுஜர் கட்டளைப்படி அவரின் சீடர்கள் நாலாயிரத்துக்குப் படி (விளக்கங்கள்) வரைந்தார்கள். திருவாய்மொழி நான்குவேதங்களின் சாரமாகும். இதைப்படித்தாலே போதும் என்றார்கள் தென்கலையார்.

    திராவிட வேதம் என்ற சொல் தமிழுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையாகவும், இம்மொழிக்கு வடமொழிக்கு ஈடான தெய்வத்தன்மையுடையது என்றும் சிரிவைணவம் காட்டிற்று என்று விளக்கவே நான் எழுதினேன்.

    மேலே எழுதியவை என் சொந்த கருத்துக்கள் அல்ல. இவையெல்லாம் தமிழக சமய வரலாறு. இங்கு நான் செய்தவை கட் அன்ட் பேஸ்டு மட்டுமே.

    இன்னொருவருக்குப் போட்ட மறுமொழியை நீங்கள் அவுட் ஆப் கான்டெக்ஸ்டில் பார்க்கிறீர்கள். இடையிடையே ஆங்கிலம் எனக்குத் தவிர்க்கமுடியாது. படிப்பவர்கள் ஆங்கில அறிவுடையவர்கள். வெளிநாடுகளிலிருந்தெல்லாம் படிக்கிறார்கள்.

    “ஸ்ரீ வைஷ்ணவத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, அப்படி தெரிந்து கொண்டால் தான் இங்கு வந்து எழுத முடியும் என்றால் அதனை தமிழ் ஹிந்து அறிவிக்கட்டும்.”

    Mr Dravid

    அறிந்து கொண்டு எழுதும்போது, த‌வ‌றுக‌ள் போடா வ‌ண்ண‌ம் எழுத‌லாம். அத‌ற்காக‌த்தான் அப்ப‌டிச் சொன்னேன். என‌க்குத் தேவார‌மும் திருவாச‌க‌மும் தெரியாது. என‌வே அவைப‌ற்றி ஆராவ‌து பேசும்போது நான் குறுக்கிடுவ‌து கிடையாது.

    திராவிடைப் போன்றோர் இப்ப‌டி பாராமுக‌மாக‌ இருப்ப‌த‌ற்கு இந்த இணைய‌த‌ள‌மும் ஒரு காரணம். ஆழ்வார்களைப்பற்றி அடிக்கடி எழுதுவது இல்லை. அப்படியே எழுதினாலும் அதை வைணவ அறிஞர்கள் எழுதுவதில்லை. இத்தளம் சிரிவைணவர்களைவிட பொது இந்துக்களால் படிக்கப்படுகிறது. அவர்களில் பலருக்கு இவரைப்போல ஆழ்வார்களிடம் பரிச்சயம் இல்லை. ஆழ்வார்களைத்தெரிவதும் சிரிவைணவத்தைத் தெரிவதும் ஒன்றே. ஆக, ஆழ்வார்களைப்பற்றித் தெரிந்து கொள்ள சிரிவைணவர்கள் பலரும் நடாத்தும் இணைய தளங்களுக்குப் போக வேண்டியதிருக்கிறது. ஆங்கு இவர்கள் போக மாட்டார்கள். ஆங்கு படிப்பவர்கள் சிரிவைணவர்கள் மட்டுமே.

    எனவே இத்தளம் ஆழ்வார்களைப்பற்றி நிறைய எழுதினால், இவரைப்போன்றோர் விரும்பியும் விரும்பாலும் தன்னாலேயே ஞானம் பெறுவர் ஆழ்வார்களைப்பற்றி.

    You may get an essay from Na Subbu Reddiyaar and release it here. He is a siva neriyaalaar but still, is a formidable scholar in Azhwaars paasurams. Similarly, many scholars live among us. You may not ask them to write because many are octogenarians; and I think, NS a nonagenearian. But it is possible for you to cull out from their published works suitable essays – suitable in the sense keeping persons like Dravidian in mind and release them here.

    As someone has written here, before you teach Christians and Muslims about your religion, it is imperative and urgent to teach your own brethren.

  65. ஜோ அமலன்

    நீங்கள் மதம் இறைவனை எப்படி தோழா வேண்டும் என்பதை வரையறுக்கிறது அதனாலேயே வேறுபடுகிறது என்கிறீர்கள்.

    இரண்டு மதத்திலும் ஏக இறைவன் தானே அதனால் எங்கிருந்தால் என்ன என்கிறீர்கள். ஸ்ரீ வைஷ்ணவமும் பேசுகிறீர்கள்

    இரண்டும் ஒன்றா – இஸ்லாத்தில் conciousness சிற்கு இடம் உண்டா. வெறும் கும்பிடு போடுவது ஆன்மீகம் இல்லையே – ஆன்மிகம் என்பது conciousness சார்ந்தது. கும்பிடு போடுபவன் கும்பிடு போட்டுக் கொண்டே இரு என்று இஸ்லாம் கூறுகிறது. அதாவது வாழ் நாள் பூராவும் அவன் அட்ட அடிமை. அடிமை பாவம் என்பது வேறு அட்ட அடிமையாய் இறைவனுக்கு ஒவ்வொரு நிமிசமும் பயந்து சாவது வேறு. இஸ்லாத்தின் மூலம் ஒருவனுக்கு எஞ்சுவது பயமே – அவக முகத்த பார்த்தாலே அது தெரியும்.

    – பயம் நீங்கிய வாழ்வு எங்களது பாரத சகோதர்களுக்கு கிடைக்க வேண்டாமா அதனால் தான் மாறுங்கள் என்கிறோம்

    ஹிந்து எவனாவது கடவுளுக்கு அஞ்சி வாழறான. சாமிய வாடா போடான்னு நண்பன் மாதிரி இல்ல கருதறான். பெரியாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு எதற்கு பாடினார். அப்படிப்பட்ட பாவத்தை இஸ்லாத்தில் பார்க்க முடியுமா. – இது எங்களது பாரத சகோதர்களுக்கு கிடைக்க வேண்டாமா அதனால் தான் மாறுங்கள் என்கிறோம்

    இஸ்லாம் ஒவ் ஓவருவனையும் அச்சு அசல் ஒரே மாதிரி அடிமையாக வார்க்க பார்க்கிறது. ஹிந்து மத்தில் ஒவ் ஒவ்ருவனையும் அவனது போக்கில் வார்க்கிறது. ஒருவர் பிரம்ம ஞானி, ஒருவர் சித்தர், ஒருவர் பக்தர், ஒருவர் முக்தர், ஒருவர் ஜிஞாசர், ஒருவர் கர்ம யோகி, ஒருத்தர் சாமான்யர், என்று ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் தன்னை வெளிப்படுத்தி கொள்ள உதவுகிறது. அஞ்சு வேல தொழுவாட்டி அல்லா தொழுவத்துல கட்டி வெச்சு அடிப்பார். இங்கே நாம் என்ன சொல்கிறோம் – உனக்கு ஞானம் வந்து விட்டதா கர்மத்தை எல்லாம் விடலாம் என்கிறோம்.
    – இது எங்களது பாரத சகோதர்களுக்கு கிடைக்க வேண்டாமா அதனால் தான் மாறுங்கள் என்கிறோம்

    இஸ்லாமிச்டுகளால் ஜகன் மித்யாவை அறியவே முடியாது. இறைவனை அறிந்து கொள்ள வாய்ப்பே இருக்காது. அவரு ஒரு பெரிய ஜமீந்தார் என்றளவில் மட்டுமே வாழ் நாள் பூராவும் எண்ணம் இருக்கும். அவ்வளவு தான இறைவன் என்ற கோட்பாடு. கடவுள் என்பதன் அர்த்தம் தான் என்ன. அதை எப்படி விளங்கிக் கொள்வது. கடவுளை எல்லோரிடமும் எப்படி காண்பது. மனதை, புலன்களை எப்படி நிக்ரஹனம் செய்வது, எப்படி இடை விடாது ஆன்ம இன்பத்தில் திளைப்பது, இதெல்லாம் ஒரு இஸ்லாமிஸ்டுக்கு கிடைகாமலேஎய் போகிறதே – இது எங்களது பாரத சகோதர்களுக்கு கிடைக்க வேண்டாமா அதனால் தான் மாறுங்கள் என்கிறோம்

    இன்னொன்று உபநிஷத் கூறும் வாக்கை சொல்கிறேன் –

    அதர மாத அமாதா …. வேதா அவேதா , தேவ அதேவா
    (பிரம்ம ஜீவா ஐக்கியத்தில் அம்மா அம்மா இல்லை, வேதங்கள் வேதங்கள் இல்லை, கடவுள் கடவுள் இல்லை) – எந்த ஒரு இஸ்லாமிச்டாவது இப்படி துணிச்சலாக சொல்ல முடியுமா. அல்லா எரிச்சுருவாறு

    சங்கரர் வேடங்களினால் கடவுளை காட்ட முடியாது அதை உணர்ந்தே அறிய முடியும் அவ்வளவில் வேடங்களினால் பிரயோஜனம் இல்லை என்று சொல்கிறார். இதை போல குராநிஆல் பிரயோஜனம் இல்லை (இது என்னமோ உண்மை தான்) என்று எந்த இஸ்லாமிச்டாவது சொல்வானா.

    நாங்கள் மதம் திரும்புங்கள் என்று சொல்வது பாரத தேசத்தை சார்ந்தவர்களை தான். பாரதம் என்றாலே ஞானத்தால் இன்புருபுவர்களால் கொண்ட பூமி என்று அர்த்தம். இஸ்லாத்தின் மூலம் அஞானமே எஞ்சும் அதனாலேயே திரும்புங்கள் என்கிறோம்.

  66. ////முதலில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் மொழி பற்றி எழுதியவை பிறரால் என்ன செய்யப்பட்டன; கருதப்பட்டன தமிழ் மொழி வரலாற்றில் என்பதே. வடமொழியா சமசுகிருதமா என்ற கேள்வி ஆதிகாலத்து கேள்வி என்று சொன்ன நான், பின்னர் அப்பிரச்சனையில் திராவிடக்கட்சிகள் குளிர்காய்ந்தன என்பதையும் மறுக்கவில்லை.

    ‘திராவிட வேதம்’ என்ற சொற்றொடருக்குச் சொந்தக்காரர் இராமனுஜரே. அவர் அதைச் சொல்லக்காரணம் வருமாறு……………/////
    ஸ்ஸ் அப்பாடி அப்ப நீங்க உங்க சொந்த கருத்துகளை இங்கு சொல்லவில்லை அப்படித்தானே? மறுபடியும் எங்க முதலில் இருந்து ஆரம்பிக்கிறீங்க திராவிட கட்சிகளை நான் எங்கு குறிப்பிட்டேன் நீங்கள் ஏனுங்கோ வழிய சேர்த்து கொள்கிறீர்கள். /////Dravid has written “..திராவிட வேதம் என்ற வார்த்தை தமிழ் அல்ல எல்லா சொற்களும் தமிழில் எழுத நினைப்பவர் இவ்வார்த்தையை பயன்படுத்துவது முரண் என்பதே நான் குறிப்பிட்டது…/// இதானுங்கோ நான் சொன்னது. நீங்களாகவே நிறைய இல்லாத அர்த்தம் பண்ணிக்கொண்டே எழுத்கிரீர்கள்

    //////இன்னொருவருக்குப் போட்ட மறுமொழியை நீங்கள் அவுட் ஆப் கான்டெக்ஸ்டில் பார்க்கிறீர்கள். இடையிடையே ஆங்கிலம் எனக்குத் தவிர்க்கமுடியாது. படிப்பவர்கள் ஆங்கில அறிவுடையவர்கள். வெளிநாடுகளிலிருந்தெல்லாம் படிக்கிறார்கள்.

    “ஸ்ரீ வைஷ்ணவத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, அப்படி தெரிந்து கொண்டால் தான் இங்கு வந்து எழுத முடியும் என்றால் அதனை தமிழ் ஹிந்து அறிவிக்கட்டும்.”

    Mr Dravid

    அறிந்து கொண்டு எழுதும்போது, த‌வ‌றுக‌ள் போடா வ‌ண்ண‌ம் எழுத‌லாம். அத‌ற்காக‌த்தான் அப்ப‌டிச் சொன்னேன். என‌க்குத் தேவார‌மும் திருவாச‌க‌மும் தெரியாது. என‌வே அவைப‌ற்றி ஆராவ‌து பேசும்போது நான் குறுக்கிடுவ‌து கிடையாது////
    பாருங்க மறுபடியும் அவுட் ஆப காண்டக்ஸ்ட்.நான் எங்காவது ஸ்ரீ வைஷ்ணவ, விவாதத்தில் பங்கேடுத்தேனா?அவற்றை பற்றி விவாதிக்க தான் அந்த பிரபந்த அறிவு தேவை. நான் வெறும் வார்த்தை பிரயோகத்தை விளக்குகிறேன் அவ்வளவே, நியாயமாக இந்த விளக்கத்தில் தவறு இருப்பின் சுட்டி காட்டுவதை விட்டு விட்டு அவுட் ஆப் கான்டெக்ஸ்ட் அர்த்தம் பண்ணுவது நீங்கள் தான். நீங்கள் ஆழ்வார் பற்றியோ ஸ்ரீவைஷ்ணவம் பற்றியோ விவாதித்து இருந்தால் நானும் வேடிக்கை பார்த்திருப்பேன் அல்லது எனக்கெழும் சந்தேகங்களை கேட்டிருந்திருப்பேன்.

    ///இத்தளம் ஆழ்வார்களைப்பற்றி நிறைய எழுதினால், இவரைப்போன்றோர் விரும்பியும் விரும்பாலும் தன்னாலேயே ஞானம் பெறுவர் ஆழ்வார்களைப்பற்றி/////
    வரவேற்கிறேன்

    ////திராவிட வேதம் என்ற சொல் தமிழுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையாகவும், இம்மொழிக்கு வடமொழிக்கு ஈடான தெய்வத்தன்மையுடையது என்றும் சிரிவைணவம் காட்டிற்று என்று விளக்கவே நான் எழுதினேன்/////
    வட மொழிக்கு ஈடான தெய்வத்தன்மையை யாரும் தமிழுக்கு கொடுக்க தேவையில்லை, தமிழுக்கு அதற்குண்டான தெய்வத்தன்மை எப்போதும் உண்டு,மேலும் ஸ்ரீவைஷ்ணவம் வடமொழியை உபயோகித்தால் தமிழ் அழிந்து விடும் என்று கூற வில்லை. வடமொழி வார்த்தையை (ஹிந்து போன்ற) அவர்கள் எதிர்க்கவில்லை,எனவே அவர்கள் திராவிட வேதம் என கூறலாம். நீங்கள் சொற்பிரயோகத்தில் வடமொழியை எதிர்ப்பவர் நீங்கள் அதனை குறிப்பிட்டதுதான் முரண் என்று கூறினேன்,ஸ்ரிவைனவத்தையும் அவர்கள் திராவிட வேதம் என்று கூறுவது பற்றியும் நான் ஒன்றும் கூறவில்லை.
    /////ஆக, ஆழ்வார்களைப்பற்றித் தெரிந்து கொள்ள சிரிவைணவர்கள் பலரும் நடாத்தும் இணைய தளங்களுக்குப் போக வேண்டியதிருக்கிறது. ஆங்கு இவர்கள் போக மாட்டார்கள். ஆங்கு படிப்பவர்கள் சிரிவைணவர்கள் மட்டுமே////
    லிங்க் ஐ கொடுத்திருக்கலாமே
    //////You may not ask them to write because many are octogenarians; and I think, NS a nonagenearian. But it is possible for you to cull out from their published works suitable essays – suitable in the sense keeping persons like Dravidian in mind and release them here /////
    எனக்கு புரியல

  67. நானும் நீங்களும் விளக்கி ஒருவருக்கொருவர் கொண்டிருப்பததைவிட இக்கட்டுரைக்கான பின்னுட்டங்களுக்கு வழி விடலாம் என நினைக்கிறேன்

  68. ஏக இறைவனோ, எழுபத்தெட்டு இறைவனோ, முக்கடவுளோ … எந்த இறைவனையும் யாரும் இதுவரை பார்க்கவில்லை.

    அப்படியானால் அவரவர நம்புவதை அமைதியாக வணங்கி விட்டு போனால், ஒரு பிரச்சினையும் இல்லை.

    நான் சொல்லுற முறையில் தான் இறைவன் இருக்கிறார், இப்படிதான் தொழுவனும், இப்படி தான் வாழனும், மற்ற முறையில் வாழ்பவன் நிராகரிப்பவன், அவன் மேல் தாக்குதல் நடத்து, அவனை அடிபணியவை… இதெல்லாம் கற்கால பழக்கங்கள்.

    எந்த ஒரு வேதத்திலாவது நோய் தீர்க்கும் மருந்து ஒன்றாவது சொல்லப் பட்டு இருக்கிறதா? உயிர் காக்கும் மருந்துகள் இன்சுலின், டயாலிசிஸ் சிகிச்சை முறை… இவை எதையாவது எந்த வேத புத்தகத்திலாவது சொல்லி இருக்கா? ஒன்னும் இல்லை! சும்மா, குயவன் பொம்மை செய்யறதை பார்த்து விட்டு இப்படி தான் கடவுள் மனுசனை செஞ்சு காற்றை மூக்குல வூதினார்னு நினைச்சிகிட்டாங்க.

    எந்தக் கடவுளையோ கும்பிடுங்க, உங்களை யார் என்ன சொன்னா?

    வேற ஒரு தெய்வத்தை இன்னொருத்தன் வணங்குவதைப் பார்த்தா மனசுக்குள்ள குமுறுது, பொகையிது. தான் நம்பறதை உலகில எல்லோரும் நம்ப வைக்கணும்கிற ஆவசம் உள்ளுக்குள்ள, அதுக்காக அடுத்தவன் எவ்வளவு கஷ்டப் பட்டாலும் செத்தாலு கவலை இல்லை

    வன்முறையில் அப்பாவி மக்களைக் கொல்லப் படுவதற்கு காரணமான கோட்பாடுகளுக்கு வக்காலத்து வாங்கி ஒண்ணுமே இல்லைங்க… ரொம்ப நல்லதுங்க….அவ்வவளவும் அமைதிங்க …. என அணுகுண்டை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.

    நாங்கக் வன்முறையை ஆதரிக்கலை கண்டிக்கிறோம் என்பார்கள். ஆனால் அவர்கள் போற்றிப் பாராட்டும் கோட்பாடு வன்முறையை தூண்டுது என்பதை மறைப்பார்கள். வன்முறைக் கோட்பாட்டை மட்டும் சொல்லித் தராம விட்டுருப்பா என்றால் கூட கேட்க மாட்டார்கள்!

  69. I came across the following article in the DK website “The modern rationalist”.

    I am surprised bcos DK guys usually have a dig only at hinduism (there is a reference here too in a couple of places).

    “The ability to listen to a story,” said the renowned Telugu litterateure Rachakonda
    Vishwanatha Shastri, “is as important as the genius for writing one.” Similarly, if writing a book is one dimension of the effort, publishing is another. These days, it often takes courage to publish a controversial book. In the wake of the persecution of Salman Rushdie and the Bangladeshi writer Taslima Nasreen, many publishers have become reluctant to bring out controversial books.

    They are particularly wary of publishing anything that is critical of Muslims, Prophet Muhammad, the Koran or Islamic laws. In the circumstances, the courage shown by Prometheus Books of U.S.A. in bringing out Ibn Warraq’s Why I am Not a Muslim is praiseworthy.

    The author who calls himself Ibn Warraq (not his real name) was born into a Muslim family, but became a severe critic of Islam. There are many works critical of Islam written by non-Muslims. These are routinely ignored by most Muslims.

    But when such a book – as the one under review – authored by one of their own faith appears, the reaction is swift and inhuman, and may even mean death for the author.

    The late Ayotollah Khomeini, the ‘spiritual leader’ of Islam issued a fatwa of death sentence against Salman Rushdie, the author of The Satanic Verses. After the publication of his book Lajja (‘Shame’) Taslima Nasreen of Bangladesh was forced to leave the country and live in exile in Sweden. These are only two of the best known cases of authors persecuted in the name of Islam. And yet, all these countries are signatories to the Declaration of Human Rights!

    The book under review, Ibn Warraq’s Why I am Not a Muslim is a work of great depth, based on intensive study and analysis of a large number of scholarly works on Islam. After this research (and his own experience), the author has declared himself unable to continue as a Muslim. His willingness to share his findings and views on this highly combustible topic bears testimony to his extraordinary courage.

    Sources: facts and fiction

    When Bertrand Russell published his Why I am Not a Christian, it was wholeheartedly welcomed by adherents of other faiths. Ibn Warraq makes the insightful observation that if Allah were to be substituted for Jesus in Russell’s work, it would still be substantially on the mark.

    The same in fact may apply to all religions. Ramendra, Rationalist from Bihar has written a book called Why I am Not a Hindu which may be said to be in the same vein as the books of Russell and Ibn Warraq.

    In his book of 17 chapters, Ibn Warraq has examined every aspect of Islam – both its doctrine and its application. The book opens with the Rushdie affair. The details are well known: in February 1989, Ayatollah Khomeini of Iran issued a fatwa (religious decree) of death sentence against Salman Rushdie for his Satanic Verses.

    As Ibn Warraq notes, almost as reprehensible was the conduct of some Western liberals some of whom even justified Khomeini’s fatwa; no less a person than the French author Michel Foucault welcomed it. One can only speculate as to the causes: greed for favours, or fear perhaps.

    At a doctrinal level Christianity is as dogmatic as Islam. But as Ibn Warraq has noted, to some extent at least, Christians have begun to take notice of academic progress and the results of modern science and research, something which Muslims have yet to do.

    He has also observed that the Koran does not tolerate any academic examination of its claims. (Progress among ‘Christians’ is due to the rise of secular-humanism in the West, and not due to any inherent tolerance of dissent or the growth of scientific spirit within Christianity.)

    The second chapter discusses at length the origins of Islam and also the influence of Christian and Jewish source books from which the Koran has heavily borrowed. The author points out that though supposedly opposed to idolatry, Muslims have installed a Black Stone at Kaaba, their holiest shrine and worship it. (Astrophysicist Carl Sagan and others have identified it as a meteorite. Before Islam, Kaaba seems to have been known to the Hindus of India as a place of pilgrimage.)

    According to Ibn Warraq, the choice of the spot of Kaaba was in all probability due to its proximity to the well of Zam Zam – a precious water source on the caravan route that passed through Mecca on its way to Yemen and Syria.

    The third chapter examines the problems associated with the sources of Islam. It shows that many of the traditional beliefs about the Koran have little or no historical basis.

    The fourth chapter takes a critical look at the message and teachings of Muhammad. The author highlights the fact that many who have criticized the Prophet were not necessarily non-believers, but sincere scholars who nonetheless stated simply as facts many things that the orthodox may find unpalatable. During the first period in Mecca, Muhammad appears to have been religiously motivated, sincerely seeking truth. His attitude seems to have undergone a sea change in subsequent years as he gained in power and influence.

    The fifth chapter presents a critical overview of the Koran. For Muslims, the Koran is holy, wholly God-given, and of which every word is true to the letter. The author demonstrates that this has no basis in reality. On the other hand, the Koran is full of inconsistencies, with many contradictions, later textual additions, and variant readings. All this is supported with the help of profuse examples.

    What is particularly telling is the author’s observation that all Islamic countries are signatories to the Declaration of Human Rights, while their sacred book – the Koran – is filled with teachings that grossly violate human rights. In addition, like the Bible, the Koran too rejects the Theory of Evolution and other findings of science.

    Islam and the state

    The author next brings out the uncompromisingly totalitarian nature of the ‘religion’ of Islam; democracy and Islam are fundamentally incompatible. It is full of “do” and “don’t” injunctions which it uses to regulate the whole of human life from birth to death. It is not just democracy which Islam is opposed to, Islam has no place for secularism. It does not separate religion from polity.

    The Islamic law or Sharia rests on four pillars: the Koran, the Sunna (sayings and traditions of the Prophet), the ljma or the consensus of orthodox scholars, and the Qiyas or reasoning through analogy. But according to the author, the Koran was written down over a period from the 7th to the 9th century AD, appropriating large portions from apocryphal Christian, Zoroastrian and Samaritan traditions.

    It is filled with countless irrationalities, grammatical errors and self-contradictions – hardly living up to the claim of the infallible word of God. There are occasional homilies about the need for generosity and kindness towards parents and so forth, but these are greatly outnumbered by its voluminous negative outpourings – of extreme intolerance towards pagans and other nonbelievers, calls to violence and slaughter, gender inequality and other similarly inhuman teachings.

    The Prophet of Islam expresses his disgust at human reasoning -the enemy of blind faith.

    Orthodox Muslim scholars stoutly deny the existence of a priestly order in Islam, but the reality is different. In the name of ulema its priesthood has held on to a monopoly over the interpretation of Islam and has for centuries been a barrier to progress. It is these mullahs who have turned back every attempt at progress, from the spread of rational thinking to the growth of science.

    The author is uncompromising in his indictment of Sharia; it was drawn up over a thousand years ago and can hardly be used as a panacea for every human situation today. Such obstinacy, he argues, can only retard moral and every other kind of progress.

    Human Rights

    Muslim countries have signed the Declaration of Human Rights of 1948 while at the same time professing unwavering loyalty to Islam. They also continue to be members of the United Nations. But Islam violates human rights at every step. Men and women are treated as unequal in Islam, and the testimony of a woman in a court of law is worth only half of that of a man.

    To begin with, the Declaration of Human Rights does not countenance gender inequality. But Islam restricts the freedom of women in almost every respect; the insistence on the veil (purdah) is only one example of it. For another, Muslim women cannot marry non-Muslims.

    The Declaration of Human Rights is also against religious discrimination, but non-Muslims living in Muslim countries have almost no rights – sometimes not even the right to life. Persons belonging to other faiths are forbidden from offering their prayers, building temples and churches, or reciting their sacred texts. Slavery is legal (according to the Koran), and men are allowed to cohabit with any number of concubines.

    Torture and degrading punishment are also against human rights, but they are commonplace in Islamic societies. Such savage punishments as public flogging, scores and even hundreds of lashes (in public) for women, amputation of limbs, and stoning to death are freely prescribed.

    Human rights imply universal equality as a fundamental principle, but Islamic countries flagrantly violate this principle. For instance, conversion to Islam is permitted and even encouraged, but apostasy – or leaving Islam – is forbidden under pain of death. Islam does not recognize freedom of conscience; in fact, it sees it as a great evil.

    The author has provided pages upon pages of testimony showing that human rights have no place in Islam. According to him secularist reform is unavoidable if Muslims are to keep pace with the rest of the world. This means religion and polity must be separated. (But if this happens Islam will collapse. Islam without the power to control and regulate the people is inconceivable.)

    Women in Islam

    The author devotes a whole chapter to the attitude of Islam towards woman. Islam like Christianity believes that the creation of man came before that of woman. (They both borrowed the idea from Judaism.) It gives precedence to man, and as the author shows with numerous examples, Islam has been savage in its treatment of women. Here are a few examples.

    A woman during the menstrual period is not permitted to touch the Koran. She is not allowed to go anywhere near the Kaaba. She can neither pray nor fast. In all this, regarding woman as inferior to man is both axiomatic and mandatory (Koran 2.282).

    Even in matters of division of property, the daughter is entitled to only half of what a son is assigned. Pursuit of vengeance is also sanctioned in the Koran (Koran 2.178). Muslim jurists have declared that man possesses greater wisdom than woman. The author discusses the dominance of man in sexual mores and also how Muslim women themselves treat other women.

    Regarding women as slaves, keeping them strictly confined to the home and treating them as inferiors are best exemplified in the practice of wearing the veil (purdah) by women. It is mandatory, women have no choice in the matter.

    In some countries Muslim women have discarded the veil, but both Islam and the clergy look down upon such a practice. Also, whenever the clergy manage to gain control of the state – as in Iran – they invariably reverse the trend by re-imposing the veil. The author provides many such instances.

    The author has also dealt with the poetic tradition in Islam, and the role of women and wine found therein. Here also there are inconsistencies. In one place Prophet Muhammad refers to wine as of divine origin (Koran 16.69), while he prohibits it elsewhere (5.92). (The Prophet was himself said to enjoy a drink of wine once in a while as do many of his followers, especially in the West.)

    All religions impose certain restrictions in matters of food and drink. Hinduism and Christianity are no exceptions. Islam regards pigs as unclean and has banned pork in any form (again borrowing from Judaism). But Muslims in China consume pork while calling it mutton. Even in the staunchly Islamic Morocco, pork is eaten widely if clandestinely.

    Personality of the Prophet

    Ibn Warraq devotes a full chapter to the personality of Prophet Muhammad, including positive traits in his character which made him stand out in history. During the Mecca period, his conduct appears to have been marked by sincerity and even nobility. But his personality and attitudes seem to have undergone a radical change during the Medina period. He began to see himself as the infallible Messenger of God and intercessory. (In other words, he became a megalomaniac.)

    Muslims hold that there is no salvation for non-Muslims – that is, for those who do not believe that Allah is the Only God and Muhammad is His (Last) Prophet. They also believe it is the sacred duty of Muslims to spread this message to the whole of humanity (by the sword if necessary). The author has convincingly argued that there can be no greater hallucination. Bertrand Russell bears testimony to the untenability of such a stand.

    The author has also shown that the growth of fresh ideas and intellectual freedom have suffered grievously because of Prophet Muhammad’s declaration that the Koran is divine in origin, the sole repository of ultimate truth to the exclusion of everything else. (His followers have ensured that this claim is not questioned by anyone concerned about one’s life.)

    Summary and warning
    Why I am Not A Muslim is not a book of fantasy – or of veiled attack – like Salman Rushdie’s Satanic Verses. It is a deeply felt intellectual tour de force by a great Muslim scholar whose heart bleeds for the fate of his fellow Muslims, and whose thirst for knowledge has led him on a path of incomparable research and study.

    Because of the well-known (and widely feared) Muslim proclivity to violence the book had to be brought out by an American humanist publisher rather than any of the major publishing houses.

    It is doubtful that there exists another work on the subject as scholarly, as detailed or as comprehensive, not to say as courageous.

    Looking at the scene in India, the writings of Hamid Dalwai and A.B. Shah have set many people thinking about the nature of Islam. If Ibn Warraq’s book were to be made widely available in India, and Arab world, it may serve to open the eyes of the people further.

    After placing before us the Koran in its true colours, the author has highlighted the danger of continuing the practice of dinning into the impressionable minds of innocent Muslim children the contents of the 6000 odd Suras making up the Koran, forcing them to commit them to memory to the exclusion of everything else.

    Footnotes:
    1 This review appeared in the Telugu monthly, MISIMI (edited by Alapati Ravindranath) of April, 1997. The monthly is published from Hyderabad in Andhra Pradesh. It has been translated into English by S. R. Ramaswamy.

    2 Here the reviewer appears to be guilty of the common error committed by most intellectuals of equating the scripture of dogmatic creeds like Christianity and Islam with the more flexible Hindu tradition. Unlike the Koran for instance which is a book of authority, Hindu works offer only guidance. They are open also to challenge and reform.

    3 Leftist intellectuals in India were not so brazen as Foucault; they only sat in petrified silence.
    4 The highest goal of Islam is the installation of a world empire or Caliphate – a theocratic empire ruled according to the rules of Islam. It sees any attempt to separate religion from the state as a great evil.

    5 This was before the revelation prohibiting wine was sent by Allah.
    Prometheus Books, USA published this book.

  70. ஜோ அமலன்

    பிராமணன் என்பது ஒருவனை குறிக்கிறதா ஒரு சமூகத்தை குறிக்கிறதா என்று கேட்டுள்ளீர்கள்.

    ஞானிகள் என்றால் ஒரு சமூகத்தை குறிக்கிறதா ஒருவரை குறிக்கிறதா?

    பிரம்மத்தை அறிந்தா எல்லோருமே பிராணர்கள் தான் என்பதுவே நிதர்சனம். அதனால் தான் நம்மாழ்வாருக்கும் பூணூல் மாட்டி உள்ளார்கள். பூ நூல் என்பது பிரம்மத்தின் கிட்டே அழைத்து செல்ல வித்யாரம்பத்தின் முன் நடத்த படும் ஒரு நிகழ்வு. உப நயனம் – கிட்டே அழைத்து செல்வது என்பதே. உங்களுக்கு சத்யா காமனின் கதை தெரிந்தே இருக்கும் அவரது குரு அவன் சத்யம் பெசியடர்காகவே அவனை பிராமணன் என்று அழைத்தார்.

    இது நாளடைவில் இறுகி ஜாதியானது உண்மை தான். இது எந்த மதத்தில் தான் இல்லை. எல்லா மதத்திலும் வைதீக பணியில் இருப்பவர்களுக்கு தான் பணம் உள்ளவரை வட மதிப்பு அதிகம். ஏன் போப்பாண்டவரை கொண்டாடுகிறார்கள்.

    இஸ்லாமிஸ்டுகள் ஏன் முல்லாக்களுக்கு சலாம் வைக்கிறார்கள். முல்லாக்கள் தானே பரம சக்தி உடையவர்கள். இன்றைக்கு டியோபந்தியில் நாம் என்ன பார்க்கிறோம்

    பிராமண வர்ணம் என்பது அக்குணம் ஒரு தனி மனிதனையே குறிக்கிறது. ஜாதி பிராமணர்கள் வெறும் சாதிக்காரர்களே, அவர்கள் எந்நாளும் பிராமணர்கள் அல்ல.

    அக்காலத்தில் பிராமணன் என்பதற்காக தனி சலுகைகள் இல்லை. எப்படி doctor படிப்பு படிச்சவர் தன வைத்தியம் பாக்க முடியுமோ. வேதம் படித்தவர் தான் வேத்தியாக முடியும். எல்லோருக்கும் doctor சீட்டு எப்படி தருவதில்லையோ எல்லோருக்கும் வேத்தி செட்டு தருவதில்லை அவ்வளவே. முன்னாளில் எல்லோருக்கும் ஞானம் தந்து விட வில்லை. உமக்கு நன்றாகவே தெரியும் ஓரான் வழி ஆசார்யர்கள் கடுமையாக சோதித்துவிட்டு தான் ஞானம் தந்தார்கள். ஆனாளப்பட்ட ராமானுஜரே 18 வாட்டி to and fro srirangam to thirukostiyur நடந்து பின்பு ஒரு மாசம் கொலை பட்டினி இருந்து தான் கற்றுக்கொண்டார்.

    அன்றைய நிலை அப்படி, வேதத்திர்க்கு அப்படி ஒரு மரியாதை இருந்தது. இன்றைய நிலை வேறு. இன்றைக்கு எல்லோருக்குமே வேடம் சொல்லித் தண்டாக வேண்டும். வேத்தி என்று சொல்லிக்கொள்ள ஆட்களே இல்லை.

    நான் எனது முந்தைய மறு மொழியில் சொல்ல வந்தது என்ன வென்றால், முற்காலத்தில் எல்லோருமே வேடம் படித்தே ஆகா வேண்டும் எங்களுக்கு இழிவு செய்யப்பட்டுள்ளது என்று புலம்பிக் கொண்டு திரியவில்லை., ஏன் என்றால் அண்டைக்கு அப்படிப்பட்ட நிலை இல்லை. எல்லோருக்குமே பிழைக்க நிம்மதியாக வாழ வழி இருந்தது.

    இந்த பிரிவினை பாங்கு பெரிதானது ஆங்கிலேயரின் வருவுக்கு பின்னரே முக்கியமாக மெக்காலே பாடத்திட்டத்தின் வருகைக்கு பின்னரே.

    18th நூற்றாண்டில் இந்தியாவின் GDP 24% of the worlds GDP. இப்படி இருந்த நிலையில் சோத்துக்கு யாரவது அலைந்திருப்பார்களா. அட வேதம் படித்தால் தான் என்ன இல்லாங்காட்டி தான் என்ன. ஒவ்வொரோருக்கும் அவர்கள் செய்யும் வேலையே பொறுத்து status இருந்தது. இன்றைக்கும் உலகெங்கிலும் அது தானே நிலை. இந்த ஏற்றத் தாழ்வு என்பது உலகில் அழியவே வாய்ப்பில்லை – ஏதாவது ஒரு வகையில் இருந்தே தீரும். இவ்வளவு இருந்தும் உயர் ஜாதி இந்தியர்கள் கீழ் ஜாதி என்று சொல்லப்படுவோரை அடிமைகளாக நடத்தவில்லை. ஆனால் அராபியாவிலும் ஐரோப்பாவிலும் லட்ச லட்சமானவர்கள் ஏன் அடிமைகளாக இருந்தனர் இன்றும் அராபியாவில் உள்ளனர். அது ஏன். எந்த மூஞ்சிய வெச்சுகிட்டு ஜாதியை குறை சொல்கிறார்கள் இந்த இஸ்லாமிஸ்டுகள். இன்றைக்கும் குவைத்திலும் சவுதியிலும் வெளி நாட்டிலிருந்து அடிமைகளை (domestic help) இருக்கமதி செய்து வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களின் அல்லல் கதைகளை தான் படிக்க முடிகிறதே. துபாயில் வேலை சீயம் தமிழர்களின் நிலை என்ன. சேக்கு நம்மவனை நாயைவிட கீழாக தானே பார்கிறான்.

    சென்னையில் இன்று சீனா காரகர்களும், நாகாலாந்து கார்களும் தான் அத்தனை அடிமட்ட வேலைகளையும் செய்து வருகின்றனர். அவர்களை பொது மக்கள் யாராவது அடிமை போல நடுத்துகின்றனரா?

    //
    இன்றும் இக்கூட்டம் தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக்கொண்டு ஒரு தனிமனிதனுக்கு ஆக்கப்பட்ட பிராமணத்துவம் விமர்சிக்கப்படும்போது தம்ஜாதியாரே விமர்சிக்கபடுவதாக ஆத்திரமடைகிறதே? இவர்கள் ஜாதி விமர்சிக்கப்படும்போது, அது இந்து மதம் விமர்சிக்கப்படுவதாகவும், பிராமணத்துவேசம் பண்ணப்படுவதாகவும்தானே எழுதியும் சொல்லியும் வருகிறார்கள். இதன் விளவு என்ன? “இவர்கள்தான் இந்து மதம். இந்துமதம்தான் இவர்கள்” என்றல்லவா இவர்கள் விளங்க வைக்கிறார்கள்?
    //

    வெறும் பிராமண ஜாதியை விமர்சித்தால் பரவா இல்லை – அதை வைத்துக் கொண்டு ப்ராம்நீயமும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. ஹிந்து மதத்தில் உள்ள எந்த ஜாதியை இழித்தாலும் அது ஹிந்து மதத்திற்கு தான் கேடு. இன்றைய நிலையில் பிராமணர்களை மட்டுமே ஒரு கூட்டம் இழிகிறது அதனாலேயே உங்களுக்கு இப்படி தோன்றுகிறது.

  71. //வன்முறை என்பது எல்லா மதத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது//

    //வன்முறை அற்ற சமூகம் உருவாக நாம் அனைவரும் சேர்ந்து போராடுவோம்.//

    வன்முறை அற்ற சமூகத்தை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?

    வன்முறை என்பது எல்லா மதத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்று சொல்கிறீர்கள். அந்த மதங்களை பின்பற்றவும் செய்கிறீர்கள். அப்புறம் எப்படி வன்முறை இல்லாத சமுதாயம் உருவாகும்?

    அப்ப எந்த மதமுமே வேண்டாம், மதம் இல்லாம இருக்கலாமா?

    “மதங்கள்ல வன்முறை இருக்குயா போறுமா… நீ அங்கேயும் இங்கேயும் கோட் பண்ணி எழுத வேண்டியதில்லை…. நானே சொல்லுறேன் போ” என்ற ரீதியில் தெளிவாக சொல்லி விட்டார்கள்.

    அப்புறம் எதுக்கு சும்மா ஒப்புக்கு “வன்முறை இல்லாத சமுதாயம் அமைக்கப் பாடுபடுவோம்” என்று அரசியல்வாதி போல மேடைப் பேச்சு?

    வன்முறை இருக்கிறது என்று தெரிகிறது, அப்படியும் அதை ஒதுக்க விரும்பவில்லை, நாளைக்கு நம் பிள்ளைகளும் இந்த உலகில் தான் வாழ்ந்தாக வேண்டும். அவர்களும் இந்த வன்முறை உள்ள மதங்களினால் உண்டாகும் கடும் துயரங்களை பெற வேண்டுமா…. பெறட்டும், மத பற்று, மத வெறிதான் முக்கியம் என்ற ரீதியில் மத உணர்வு மனிதனை ஆட்டுவிக்கிறது!

    சரி மதங்களை விட வேண்டாம், அவற்றில் இருக்கும் வன்முறைக் கோட்பாடுகளை மட்டுமாவது விட்டு விடலாம் அல்லவா! என்றால் அதெல்லாம் முடியாது போ, வன்முறை இருக்கும் என்பார்கள்!

    மனிதனுக்கு கை கால் சிதையும் அளவுக்கு வன்முறை தொடர்ந்து நடந்தாலும் , கை கால் இல்லாம இருந்துக்கோ (வன்முறைக் கோட்பாடுகளைஒரு எழுத்தைக்) கூட மாற்ற முடியாது என்று சொன்னாலும் சொல்வார்கள். முடவர்கள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் எனலாம்.

    கீழே விழுந்த கை காலை பொறுக்கிக்
    கொண்டு, ஆஸ்பத்திரிக்கு ரத்தம் சொட்ட சொட்ட ஓடுபவனுக்கு தான் ரணத்தின் வலி தெர்யும். ஆஸ்பத்திரியில் மாண்புமிகு வந்து தடவிக் குடுக்கும் போது வலி நிற்குமா? இரண்டு லட்சம் கொடுத்தால் குண்டி கழுவ கை மறுபடியும் முளைக்குமா?

    மனசாட்சி, மனிதத் தனம் இவற்றை மனதில் வைத்து சிந்தியுங்கள்.

  72. ஜோ அமலன்

    பிராமணன் என்பது ஒருவனை குறிக்கிறதா ஒரு சமூகத்தை குறிக்கிறதா என்று கேட்டுள்ளீர்கள்.

    ஞானிகள் என்றால் ஒரு சமூகத்தை குறிக்கிறதா ஒருவரை குறிக்கிறதா?

    பிரம்மத்தை அறிந்த எல்லோருமே பிராணர்கள் தான் என்பதுவே நிதர்சனம். அதனால் தான் நம்மாழ்வாருக்கும் பூ நூல் மாட்டி உள்ளார்கள். பூ நூல் என்பது பிரம்மத்தின் கிட்டே அழைத்து செல்ல வித்யாரம்பத்தின் முன் நடத்த படும் ஒரு நிகழ்வு. உப நயனம் – கிட்டே அழைத்து செல்வது என்பதே. உங்களுக்கு சத்யகாமனின் கதை தெரிந்தே இருக்கும் அவரது குரு அவன் சத்யம் பேசியதற்காகவே அவனை பிராமணன் என்று அழைத்தார்.

    இது நாளடைவில் இறுகி ஜாதியானது உண்மை தான். இது எந்த மதத்தில் தான் இல்லை. எல்லா மதத்திலும் வைதீக பணியில் இருப்பவர்களுக்கு தான் பணம் உள்ளவரை விட மதிப்பு அதிகம். ஏன் போப்பாண்டவரை கொண்டாடுகிறார்கள்.

    இஸ்லாமிஸ்டுகள் ஏன் முல்லாக்களுக்கு சலாம் வைக்கிறார்கள். முல்லாக்கள் தானே பரம சக்தி உடையவர்கள். இன்றைக்கு டியோபந்தியில் நாம் என்ன பார்க்கிறோம் ?

    பிராமண வர்ணம் என்பது அக்குணம் கொண்ட ஒரு தனி மனிதனையே குறிக்கிறது. ஜாதி பிராமணர்கள் வெறும் சாதிக்காரர்களே, அவர்கள் எந்நாளும் பிராமணர்கள் அல்ல.

    அக்காலத்தில் பிராமணன் என்பதற்காக தனி சலுகைகள் இல்லை. எப்படி doctor படிப்பு படிச்சவர் தன வைத்தியம் பாக்க முடியுமோ. வேதம் படித்தவர் தான் வேத்தியாக முடியும். எல்லோருக்கும் doctor சீட்டு எப்படி தருவதில்லையோ எல்லோருக்கும் வேத்தி சீட்டு தருவதில்லை அவ்வளவே. முன்னாளில் எல்லோருக்கும் ஞானம் தந்து விட வில்லை. உமக்கு நன்றாகவே தெரியும் ஓரான் வழி ஆசார்யர்கள் கடுமையாக சோதித்துவிட்டு தான் ஞானம் தந்தார்கள். ஆனாளப்பட்ட ராமானுஜரே 18 வாட்டி to and fro srirangam to thirukostiyur நடந்து பின்பு ஒரு மாசம் கொலை பட்டினி இருந்து தான் கற்றுக்கொண்டார்.

    அன்றைய நிலை அப்படி, வேதத்திர்க்கு அப்படி ஒரு மரியாதை இருந்தது. இன்றைய நிலை வேறு. இன்றைக்கு எல்லோருக்குமே வேதம் சொல்லித் தந்தாக வேண்டும். வேத்தி என்று சொல்லிக்கொள்ள ஆட்களே இல்லை.

    நான் எனது முந்தைய மறு மொழியில் சொல்ல வந்தது என்னவென்றால், முற்காலத்தில் எல்லோருமே வேதம் படித்தே ஆகா வேண்டும் எங்களுக்கு இழிவு செய்யப்பட்டுள்ளது என்று புலம்பிக் கொண்டு திரியவில்லை., ஏன் என்றால் அன்றைக்கு அப்படிப்பட்ட நிலை இல்லை. எல்லோருக்குமே பிழைக்க நிம்மதியாக வாழ வழி இருந்தது.

    இந்த பிரிவினை பாங்கு பெரிதானது ஆங்கிலேயரின் வருகைக்கு பின்னரே முக்கியமாக மெக்காலே பாடத்திட்டத்தின் வருகைக்கு பின்னரே.

    18th நூற்றாண்டில் இந்தியாவின் GDP 24% of the worlds GDP. இப்படி இருந்த நிலையில் சோத்துக்கு யாரவது அலைந்திருப்பார்களா. அட வேதம் படித்தால் தான் என்ன இல்லாங்காட்டி தான் என்ன. ஒவ்வொரோருக்கும் அவர்கள் செய்யும் வேலையே பொறுத்து status இருந்தது. இன்றைக்கும் உலகெங்கிலும் அது தானே நிலை. இந்த ஏற்றத் தாழ்வு என்பது உலகில் அழியவே வாய்ப்பில்லை – ஏதாவது ஒரு வகையில் இருந்தே தீரும். இவ்வளவு இருந்தும் உயர் ஜாதி இந்தியர்கள் கீழ் ஜாதி என்று சொல்லப்படுவோரை அடிமைகளாக நடத்தவில்லை. ஆனால் அராபியாவிலும் ஐரோப்பாவிலும் லட்ச லட்சமானவர்கள் ஏன் அடிமைகளாக இருந்தனர் இன்றும் அராபியாவில் உள்ளனர். அது ஏன்?. எந்த மூஞ்சிய வெச்சுகிட்டு ஜாதியை குறை சொல்கிறார்கள் இந்த இஸ்லாமிஸ்டுகள். இன்றைக்கும் குவைத்திலும் சவுதியிலும் வெளி நாட்டிலிருந்து அடிமைகளை (domestic help) இருக்கமதி செய்து கடுமையாக வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களின் அல்லல் கதைகளை தான் படிக்க முடிகிறதே. துபாயில் வேலை சீயம் தமிழர்களின் நிலை என்ன. சேக்கு நம்மவனை நாயைவிட கீழாக தானே பார்கிறான்.

    சென்னையில் இன்று சீனா காரகர்களும், நாகாலாந்து கார்களும் தான் அத்தனை அடிமட்ட வேலைகளையும் செய்து வருகின்றனர். அவர்களை பொது மக்கள் யாராவது அடிமை போல நடுத்துகின்றனரா?

    //
    இன்றும் இக்கூட்டம் தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக்கொண்டு ஒரு தனிமனிதனுக்கு ஆக்கப்பட்ட பிராமணத்துவம் விமர்சிக்கப்படும்போது தம்ஜாதியாரே விமர்சிக்கபடுவதாக ஆத்திரமடைகிறதே? இவர்கள் ஜாதி விமர்சிக்கப்படும்போது, அது இந்து மதம் விமர்சிக்கப்படுவதாகவும், பிராமணத்துவேசம் பண்ணப்படுவதாகவும்தானே எழுதியும் சொல்லியும் வருகிறார்கள். இதன் விளவு என்ன? “இவர்கள்தான் இந்து மதம். இந்துமதம்தான் இவர்கள்” என்றல்லவா இவர்கள் விளங்க வைக்கிறார்கள்?
    //

    வெறும் பிராமண ஜாதியை விமர்சித்தால் பரவா இல்லை – அதை வைத்துக் கொண்டு ப்ராம்நீயமும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. ஹிந்து மதத்தில் உள்ள எந்த ஜாதியை இழித்தாலும் அது ஹிந்து மதத்திற்கு தான் கேடு. இன்றைய நிலையில் பிராமணர்களை மட்டுமே ஒரு கூட்டம் இழிகிறது அதனாலேயே உங்களுக்கு இப்படி தோன்றுகிறது.

  73. திரு.ஜோ.அமலன் அவர்களே….

    // தனித்தமிழ் தோற்கக் காரணம் ஆங்கிலத் தாக்கமும் பிறமொழி பேசுவோர் தமிழகத்து மக்களிடையே கலந்தனாலுமே. //

    என்ன சார் செய்யலாம் ? பிற மொழி பேசுவோர் ஒருவர் கூட இல்லாத தமிழகம் என்று இருந்தது என்று கூற முடியுமா? இல்லை பிற மொழி பேசுவோர் அனைவரையும் தமிழகத்தை விட்டு விரட்டி விடுவோமா ?

    //அப்படி சொல்ல உங்களுக்கு தமிழ் மொழியின் தோற்றம், தொன்மை, வளர்ச்சி பற்றி ஒரு மொழியறிஞனைப்போல நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் //

    நான் மொழி அறிஞன் அல்ல. இது தமிழ் மொழியின் தொன்மை பற்றிய விவாதமும் அல்ல. அது சங்க காலமோ, இடைக்காலமோ,தமிழ் மொழி வளர்ச்சியில் பக்தி இலக்கியங்களின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.

    // சமய இலக்கியங்கள் இடைக்காலத்தில் பெருவாரியாக வந்து தாக்கம் செய்யத் தொடங்க செகுலர் இலக்கியங்கள் இருட்டடிப்புக்கு ஆளாயின. அல்லது பரவலாக படிக்கப்படவில்லை. நிலைக்கவுமில்லை //

    உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி. நான் முதன் முதலில் சொல்ல வந்த விஷயத்தின் அடி நாதமும் இதுதான்..ஒரு தனி மனிதனின் அன்றாட வாழ்வுக்கு தேவைப்படாத எந்த விஷயமும் நிலைக்காது…..மன்னர்களின் வள்ளல்தன்மை பற்றிய புகழ் மாலைகளும்,தலைவன் – தலைவி இடையேயான ஊடல்களும், போர் வெற்றி பற்றிய பிரலாபங்களும் தான் இலக்கியமா? இதுதான் மக்களுக்கு தேவையான விஷயங்கள் என்ற சான்றிதழை யார் அளிப்பது ?

    // செகுலர் இலக்கியம் //…….இதுபோன்ற வார்த்தைகளை எங்கே சார் பிடிக்கிறீர்கள் ? ஒட்டு பொறுக்கிகளின் வாய் ஜால வார்த்தைகளை பழந்தமிழர் மீது ஏன் பூசுகிறீர்கள் ?

    // நாம்..நாம் என்று எழுதி என்னையும் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இங்கே நான் ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற முறையில்தான் எழுதுகிறேன். //

    உங்களை யாரும் வருந்தி அழைக்கவில்லை. அமலன் வந்துதான் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற நிலையில் ” என்னுடைய ” ஹிந்து மதம் இல்லை….

    வந்தால் உங்களோடு….. வராவிட்டால் நாங்களாக…….தடுத்தால் உங்களையும் மீறி,,,,,,,,,

  74. . /////இடையிடையே ஆங்கிலம் எனக்குத் தவிர்க்கமுடியாது. படிப்பவர்கள் ஆங்கில அறிவுடையவர்கள். வெளிநாடுகளிலிருந்தெல்லாம் படிக்கிறார்கள்//////.

    ஜோ, இத்தளம் ஆங்கில அறிவிலாத என்னைபோன்ற பாமரர்களுக்கும் உள்ள தளம்.தமிழ் அறிவு உள்ளவர்தான் நிச்சயம் இத்தளத்தின் வாசகர்கள்.கட்டுரைகள் எல்லாம் தமிழில் தான் வெளிவருகின்றன. இதன் பெயரே தமிழ் ஹிந்து (tamilhindu ). இதில் ஆங்கிலத்தில் எழுவது உங்கள் உரிமை அதை நான் கேட்கவில்லை,தமிழ் ஹிந்துவில் ஹிந்து என்று எழுத கூடாது என்று வாதிடுவதை தான் நான் ஏன் என்று கேட்கிறேன்.
    எப்படி இடையிடையே ஆங்கிலம் உங்களுக்கு தவிர்க்க முடியாதோ அதே போல் சிலருக்கு ஹிந்து போன்ற வடமொழி வார்த்தைகள் தவிர்க்கமுடியாது, அவர்களின் உரிமையில் நீங்கள் தலையிடுவது நாகரிகம் அல்ல.

  75. திரு. சுவனப்பிரியன் அவர்களே…..

    //முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாலிபான்களை அகற்றி அங்கு ஒரு பொம்மை அரசை நிறுவி இன்று குழப்பம் செய்து கொண்டிருப்பது மேற்குலக நாடுகளே! மண்ணின் மைந்தர்களை அவர்கள் போக்கில் ஆட்சி செய்ய விட்டிருந்தால் இவ்வளவு பிரச்னை வர வாய்ப்பே இல்லை.//

    என்ன சார் புதுக்கதை விடுகிறீர்கள்…..தாலிபான்கள் முறையாக தேர்ந்தேடுக்கப்பட்டார்களா ? அங்கே எப்போது தேர்தல் நடந்தது ?முதலில் அந்த காட்டுமிராண்டிகளுக்கு தேர்தல் என்றால் என்னவென்றாவது தெரியுமா ?அப்படியானால் நஜிபுல்லாவை நடுவீதியில் தூக்கிலிட்டு கொன்றது யார் ? இவ்வளவு சமீப கால சம்பவத்தையே இப்படி திரித்தால் எப்படி ?

    தாலிபான்களின் ஆட்சிதான் வஹாபிய இஸ்லாமியர்களின் கனவு ஆட்சி என்றால், இனி நீங்கள் இஸ்லாம் பற்றி விரல்நோக எழுத வேண்டாம்… எங்களுக்கு தெளிவாக புரிகிறது……..

  76. திருச்சிக்காரன்!
    //ஆனால் தலாக் முறையில் கணவனின் சந்தோசம் மட்டும் தான்பார்க்கப் படுகிறது. மனைவியின் மனநிலை யை பற்றிக் கவலையில்லை. மனைவி பிரிய மனமில்லை , பெற்ற பிள்ளையுடன் வாழ விருப்பப் படுகிறாள், கணவனுடன் வாழ விருப்பப் படுகிறாள் என்றால் கூட அவள் சொல்லுவதை தலாக் ஆதரவாளர் யாரும் கேட்பதில்லை //

    தவறான புரிதல். இஸ்லாத்தில் குல என்ற ஒரு வழிமுறை இருப்பது தெரியுமா? ஆண்களுக்கு எப்படி தலாக்கோ அதுபோல் பெண்ணுக்கு கணவனைப் பிடிக்க வில்லை என்றால் விலகி விடும் முறைக்கு குலா என்று பெயர். இதை ஒரு சம்பவத்தின் மூலம் தெரிந்து கொள்வோம்.

    ஒரு முறை ஒரு பெண் முகமது நபியிடம் வந்து ‘இறைவனின் தூதரே! எனது கணவனோடு வாழ எனக்கு பிரியமில்லை. எங்களை பிரித்து விடுங்கள்’ என்று கூறுகிறார். அதற்கு முகமது நபி ‘உன் கணவன் சிறந்த ஆண்மகனாயிற்றே! இருவரும் பிரியாமல் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறேன்’ என்கிறார். உடன் அந்த பெண் ‘உங்களின் இந்த கருத்து இறைவன் புறத்திலிருந்தா அல்லது உங்களது சொந்த கருத்தா’ என்று கேட்கிறார். அதற்கு முகமது நபி ‘இது என்னுடைய சொந்த கருத்தே’ என்கிறார். அதற்கு அந்த பெண் ‘அப்படியானால் நான் சேர்ந்து வாழ விரும்பவில்லை. எங்களை பிரித்து விடுங்கள்’ என்கிறார். அந்த பெண்ணின் விருப்பத்தின்படி அந்த நிமிடமே திருமணத்தை ரத்து செய்கிறார் முகமது நபி. இந்த சம்பவம் புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீது கிரந்தங்களில் பதியப்பட்ட ஆதாரபூர்வமான ஹதீஸ்.

    ஒரு ஆட்சித் தலைவரிடம் ஒரு பெண் இந்த அளவு சுதந்திரமாக பேசும் சூழல்தான் அன்று இருந்தது. இஸ்லாமிய நடைமுறையும் அதுதான்.

    //இதை இந்திய பெண்கள் ஒத்துக் கொள்ளுவார்களா? அதனால் தான் இது இந்திய கலாச்சாரத்துக்கு ஒத்து வராது என்கிறோம்.//

    தலாக்கை விடுங்கள் பலதார மணத்தையே இந்திய மக்கள் அங்கீகரித்திருக்கிறாரகள். வள்ளி தெய்வானை, பாமா ருக்மணி, தசரத மஹாராஜாவுக்கு 60000 மனைவிகள் என்று நம் சமூகம் பல கலாசாரங்களையும் உள் வாங்கியே இருக்கிறது. மு.க.ஸ்டாலினும், கனிமொழியும் எந்த சச்சரவும் இல்லாமல் அன்புடனேயே பழகி வருகின்றனர்.

    25 கோடி இந்திய முஸ்லிம்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாமிய பெண்களிடத்தில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் இதுவரை வந்ததில்லை.

    எனது கிராமத்தில் கிட்டத்தட்ட 2500 முஸ்லிம் குடும்பங்கள் உண்டு. எனக்கு தெரிந்து ஒரே ஒரு தலாக்தான் நடந்துள்ளது. அதுவும் சம்பந்தப்பட்ட அந்த பெண் வேறொருவனிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டது நிரூபிக்கப்பட்டதால்தான். எனவே நீங்கள் சொல்வது போல் தலாக் பல குடும்பங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறவில்லை. இந்துக்களை விட குடும்ப கட்டுக்கோப்பை பேணுவதில் அதிக அக்கறையுடனேயே முஸ்விம்கள் செயல்படுகிறார்கள்.

    திரு ஜோ அமலன்!

    //இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். மதம் என்பது கடவுள் ஆர்? என்பதோடு நின்று விடுவதில்லை. அவரை எப்படித் தொழவேண்டும்? அவரின் அருளுக்குப் பாத்தியப்பட எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழவேண்டும்? என்றெல்லாம் சொல்லும்போது அவைகள் வேறுபடுகின்றன.
    இத்தகைய வேறுபாடுகளையும் கவனித்து, அவற்றில் இசுலாத்தின் மறைத்தூதர் காட்டிய வழிகளே எமக்கு உகந்தவை என்று சொல்லும்போது ‘தாய்மதத்துக்குத் திரும்புங்கள்’ என்று கேட்பதில் என்ன பொருள் இருக்க முடியும் ?//

    உங்கள் கருத்தோடு முற்றிலும் ஒத்துப் போகிறேன்.

  77. Very good comments Mr. Jo Amalan (for the sake of either commenting or to preach your dogmas into the readers mind). Your comments show you have read a lot of history, rewritten, falsely written and mis written by missionary fed westerners and their western thinking psuedo geniuses.

    But never mind, next time you finish reading a histroy book, close it and think about the possibliities on the view of practicality. Compare it scientifically, see on what grounds the writer must have written them. You will start attaining wisdom not just knowledge (I assume knowledge is contextual and wisdom is universal). You will understand that there is no book written by an author called GOD. It is you who have to search and understand what is it is whether life or sprituality.

    Sprituality doesn’t lead you to an individual person called God. Since he doesn’t actually exisist. The phenomenon called GOD according to Hinduism is not a person but the personification of certain processes in the universe or rather the planet that we dwell in. It is niether father nor mother nor brother nor sister. It is everything.

    He does not live in a everlasting, luxurious planet called HEAVEN to give you life points (such as in a video game) so that you can enter his planet and live an eternal life just having sex with some 72 virgins (imagine for a population of 100 million moslems he has to create 72 x 100 million virgins, thats filthy crowd man! ! !).

    Heaven or Hell it is right here, we make it or for your information, we (Indians) earlier had heaven here (India) before the moslems and the xtians came, now you have made it hell.

    To understand what I am trying to explain here, you should apply that ‘practical thinking using sceintific ways’ approach.

    Try that and good luck

  78. ஸ்ரீ அமலன், நான் எழுதும் மொழிநடை ஸம்ஸ்க்ருதம் கலந்த மொழிநடையே. சற்று ஹிந்துஸ்தானி பாஷை கலந்தது கூட. ஆங்க்ல பாஷை கலந்து எழுதுவது எனக்கு ஒப்பிலாத விஷயம். வள்ளல் அருணகிரி அருளிய திருப்புகழ் எனது மனதுக்குகந்தது. ஸ்ரீ வைஷ்ணவத்திலும் எனக்கு மிக ஈடுபாடு உண்டு. திருநாடேகிய ஸ்ரீ உ.வே. லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்ய ஸ்வாமியிடம் காலக்ஷேபம் கேட்டிருக்கிறேன். நீங்கள் தீந்தமிழே எழுதுங்கள் எனக்கு உவக்காத ஆங்க்ல பாஷையே எழுதுங்கள். சிரிவைஷ்ணவம் என்பது எனக்கு ஒப்பில்லைதான். நீங்கள் ஜோவாக இருந்தாலென்ன பெர்னாண்டோவாக இருந்தாலென்ன. ஆழ்வார் ஆசார்யாதிகளின் அருளிச்செயல்கள் பற்றி் உணர்வுபூர்வமாக நீங்களெழுதுவது மனதுக்கு உகப்பளிக்கிறது. குலசேகரமன்னன் சொன்ன “ப்ருத்யஸ்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய” என நான் ப்ரார்த்திக்க வேண்டுமென நினைவுக்கு வருகிறது. வளர்க நும் பணி. வர்த்ததாம். அபிவர்த்ததாம்.

  79. //
    எந்த ஒரு வேதத்திலாவது நோய் தீர்க்கும் மருந்து ஒன்றாவது சொல்லப் பட்டு இருக்கிறதா? உயிர் காக்கும் மருந்துகள் இன்சுலின், டயாலிசிஸ் சிகிச்சை முறை… இவை எதையாவது எந்த வேத புத்தகத்திலாவது சொல்லி இருக்கா?
    //

    அதர்வண வேதத்தில் இருக்கு நண்பரே – இதுக்காக அப்படியே டயாலிசிஸ் தான் இருக்கிறதா என்றெல்லாம் கேட்கக் கூடாது.

    அதர்வண வேதத்தில் ஏக்க சக்க மருத்துவம் சம்பந்தப்பட்ட முறைகள் உள்ளன. அப்புறம் தனியா ஆயுர் வேதம் என்று கூட இருக்கு போல இருக்கே

  80. /////தலாக்கை விடுங்கள் பலதார மணத்தையே இந்திய மக்கள் அங்கீகரித்திருக்கிறாரகள். வள்ளி தெய்வானை, பாமா ருக்மணி, தசரத மஹாராஜாவுக்கு 60000 மனைவிகள் என்று நம் சமூகம் பல கலாசாரங்களையும் உள் வாங்கியே இருக்கிறது. மு.க.ஸ்டாலினும், கனிமொழியும் எந்த சச்சரவும் இல்லாமல் அன்புடனேயே பழகி வருகின்றனர்./////
    எத்தனை இந்துக்கள் இருதாரமும் பலதாரமும் இன்று செய்து கொண்டுள்ளனர்? வள்ளி தெயவானைக்கோ,பாமா ருக்மநிக்கோ தலாக் சொன்னதாக இல்லையே? முக ஸ்டாலினும், கனிமொழியும் அவர்களின் தந்தை கலைஞ்சரும் இந்து மதத்துக்கு எதிரான நாத்திக கொள்கை உடையவர்கள்.

    ////25 கோடி இந்திய முஸ்லிம்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாமிய பெண்களிடத்தில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் இதுவரை வந்ததில்லை/////.
    கட்டாயமும் பயமும் வந்த பின் எப்படி எதிர்ப்பார்கள்?

    ////எனது கிராமத்தில் கிட்டத்தட்ட 2500 முஸ்லிம் குடும்பங்கள் உண்டு. எனக்கு தெரிந்து ஒரே ஒரு தலாக்தான் நடந்துள்ளது. அதுவும் சம்பந்தப்பட்ட அந்த பெண் வேறொருவனிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டது நிரூபிக்கப்பட்டதால்தான். எனவே நீங்கள் சொல்வது போல் தலாக் பல குடும்பங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறவில்லை. இந்துக்களை விட குடும்ப கட்டுக்கோப்பை பேணுவதில் அதிக அக்கறையுடனேயே முஸ்விம்கள் செயல்படுகிறார்கள்///
    அதிராம்பட்டினம் என்ற ஊருக்கு சென்று பாருங்கள் நீங்கள் சொன்ன தலாக்கும் பெண்கள் கொடுக்கும் தலாக்கும் மிக சாதாரணம்.உடனே அடுத்த திருமணமும் நடக்கும்.

  81. //
    25 கோடி இந்திய முஸ்லிம்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாமிய பெண்களிடத்தில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் இதுவரை வந்ததில்லை.

    //

    வந்தா உசுரு இருக்காதில்ல ? நான் ரெக்கார்ட் பண்ணி எடுத்து வரவாயா? பாவம் யா அவங்க இப்படி எல்லாம் உதார் விடாதீங்க

    சந்தடி சாக்ல 25 கோடின்னு பில்டப்பு வேறு. தாலிபானை எல்லாம் அரசு என்று சொல்லும் நீங்கள் எப்படி மூளை மழுங்கி இருக்க வேண்டும். அதான் TV ல காட்ராங்கலேயா – இப்பதான்யா ஒரு 25 பாகிஸ்தான் காரங்களா வரிசையா நிக்க வெச்சு ஹிட் அடிச்சு கொசுவ கொல்ற மாதிரி கொன்னாங்க. புத்தர் சிலையே எல்லாம் பாம் வெச்சு வெடிச்சாங்கலேயா. அதுல ஒருத்தன் மூஞ்சியாவது பாக்க சகிக்குதாயா எப்படியா அவிங்கள அரசுன்னு சொல்றீங்க

  82. robert spencer wrote a book on the truth about mohammad. In the cover page the author has given praise for the book

    the praise have come ofcourse from muslim site revivingislam.com
    here it goes..

    “May Allah rip out his spine from his back and split his brains in two and then put them both back and then do it over and over again”

    🙂

    ரெம்ப அன்பானவங்கப்பா – பிச்ல்லாஹ் ஹி ரஹமானுர் ரஹீம்

  83. Very good comments Mr. Jo Amalan (for the sake of either commenting or to preach your dogmas into the readers mind). Your comments show you have read a lot of history, rewritten, falsely written and mis written by missionary fed westerners and their western thinking psuedo geniuses. //

    சடக்கென்று குதித்து முடிவுகட்டிவிட்டீர்கள். நான் வரலாற்று மாணவன்று. படித்ததது ஓரிரண்டே. ரொம்ப பெரியவனாக என்னை கற்பனையாக ஆக்காதீர்கள் சுவாமி.

    போகட்டும். Dogmas என்று எழுதியிருக்கிறீர்களே சுவாமி. அவை யாவை ? புரியவில்லையே. கொஞ்சம் சொல்லுங்கள்.

    //Sprituality doesn’t lead you to an individual person called God. Since he doesn’t actually exisist. The phenomenon called GOD according to Hinduism is not a person but the personification of certain processes in the universe or rather the planet that we dwell in. It is niether father nor mother nor brother nor sister. It is everything.

    He does not live in a everlasting, luxurious planet called HEAVEN to give you life points (such as in a video game) so that you can enter his planet and live an eternal life just having sex with some 72 virgins (imagine for a population of 100 million moslems he has to create 72 x 100 million virgins, thats filthy crowd man! ! !).

    Heaven or Hell it is right here, we make it or for your information, we (Indians) earlier had heaven here (India) before the moslems and the xtians came, now you have made it hell.

    To understand what I am trying to explain here, you should apply that ‘practical thinking using sceintific ways’ approach.

    Try that and good luck //

    ட்ரை பண்ணினேன். எனக்குத் தெரிந்தது என்னவென்றால் இந்து மதம் எதையும் சொல்லட்டும். கிருத்துவம் எதையும் சொல்லட்டும். இசுலாம் எதையும் சொல்லட்டும். ஏன் ஒருவர் தாம் சொல்வதே உண்மை. அதைத்த்தவற வேறுண்மையில்லை என்று சொல்லவேண்டும்? அப்படியே வைத்துக்கொண்டாலும் அதை அவரவர் கடைபிடித்துக்கொண்டால் கேடொன்றுமில்லை. அவரவர் அவரவர் தெய்வத்தை அவரவர் முறையில் வணங்கினால் என்ன கேடு? மாறாக, நன்மையே அவரவர் தெய்வம் அவரவருக்குத் தரும் என்று நான் சொல்லவில்லை. நம்மாழ்வார் சொல்கிறார்:

    திருவாய்மொழியில் முதற்பத்தில் ஐந்தாம் பாசுரம்:

    “அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
    அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
    அவரவர் இறையவ்ர் குறைவு இலர்; இறையவர்
    அவரவர் விதிவழி அடைய நின்றனரே”

    நினைவில் கொள்க. அவரவர் இறையவர் குறைவு இலர் என்கிறார் நம்மாழ்வார்.

    மேலும், அவரவர் தெய்வத்தை அவரவர் விதிவழி – அஃதாவது அவர்கள் மதத்தின் படி உள்ள வழிபாட்டுக்கொள்கையின் படி, வணங்கினால், அவர்கள் தெய்வம் அவர்களுக்கு நன்மையே செய்யும் என்கிறார்.

    இப்படிச் சொன்ன நம்மாழ்வார் தொடர்ந்து ஆயிரம் பாசுரங்களில் திருவாய்மொழியில் திருமாலே தெய்வம் என தலைக்கட்டுகிறார். இத்தெய்வத்தை வணங்காமல் பரதேவதைகளி நாடி ஓடுகிறார்களே என்பதை சொல்லும் போது எப்படிச்சொல்கிறார்: சொன்னால் விரோதமிது ஆயினும் சொல்வின் கேண்மினோ என்கிறார்.

    என்ன தெரிகிறது நமக்கு இங்கே ? கிட்டத்தட்ட மலர்மன்னன் கட்டுரையில் அடிக்கருத்தே; அஃதாவது மற்றவர்கள் அவர்கள் மதவழிப்படி இருக்க நாம் ஏன் அவர்கள் மதத்தையும் நம்மதத்தையும் இணைக்க வேண்டும்?

    இதில் நான் சேர்ப்பது என்னவென்றால், என் கடவுள் எனக்கு; அவர்கள் கடவுள் அவர்களுக்கு. அவர்களை நம்மோடு சேர்க்கவேண்டா; நமதை அவர்களோடு சேர்க்க வேண்டா. ஏனெனில் என் தெய்வம் எனக்கு உண்மை; அவர்களது அவர்களுக்கு உண்மை. எனவே. Not as Unity in Unformity. But as Unity in Diversity.

    இஙகே மத நல்லிணக்கம் வேறு பொருளாக அனுசரிக்கப்படுகிறது. அஃதாவது மதங்கள் கலவாமல். ஒன்றையொன்று தானே பெரியவன் என்று போட்டிபோடாமல். பார்க்கும்போது, “பார் பார் இங்கே உள்ளது அங்கே ! சொல்லப்படடிருக்கிறது; அங்கெ உள்ளது இங்கே !! “என்று கவனப்பிரியனின் தண்டோரா, களி கணபதியின் தண்டோராவுக்கு என் கருத்தில் இடமில்லை. My brand is of good neighbourhood, no mixing of people or theologies. Good fences make good neighbours.

    செந்தில் உங்கள் மதத்தின் தியாலஜியை விளக்கி விட்டீர்கள்; . அதுவே உயர்ந்தது என்றும் அல்லது உண்மையென்றும் நினைத்து நுங்கள் மதத்தைக் கடைபிடியுங்கள். ; அஃதோடு நின்று விடுங்கள் அதற்குமேல் போகாதீர்கள். போனால் அதன் பெயர் மதம்பிடித்த மதம். Religious bigotry.

    While u accuse muslims of such bigotry, u urself stand accused of the same bigotry, don’t u?

  84. இதன் பெயரே தமிழ் ஹிந்து (tamilhindu ).

    Dravid

    தமிழ் இந்து எனற பதத்தை ஒரு இனக்குறியீடாகத்தான் பயன்படுத்துகிறார்கள் இவர்கள் என நினைக்கிறேன். தமிழறியா தலைமுறைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.பல நாடுகளில்.

    போகட்டும்!. தமிழில் எழுதுவதே சிறப்பு. எனவேதான் செந்தில் குமார் என்ற இந்து மத அறிஞருக்கு தமிழில் பதில் போடப்பட்டிருக்கிறது.

    நான் ஆங்கிலத்தில் எழுதப்போக அவர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதி என்னை ஆங்கிலத்தையே வெறுக்கும்படி செய்துவிடுவாரோ என்ற பயமும் கூட.

    எனினும், தமிழ் வாழ்க at least in this .com

  85. திருச்சிக்காரன்!

    //வன்முறை என்பது எல்லா மதத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்று சொல்கிறீர்கள். அந்த மதங்களை பின்பற்றவும் செய்கிறீர்கள். அப்புறம் எப்படி வன்முறை இல்லாத சமுதாயம் உருவாகும்?
    அப்ப எந்த மதமுமே வேண்டாம், மதம் இல்லாம இருக்கலாமா? //

    நான் சொல்ல வந்ததை நிங்கள் தவறாக விளங்கிக் கொண்டீர்கள். உலகில் உள்ள அனைத்து மதங்களுமே நல்ல விஷயங்களைத்தான் போதிக்கிறது. பிரச்னையே மதத்தையோ மார்க்கத்தையோ சரியாக விளங்கிக் கொள்ளாத அரைகுறைகளால்தான். குர்ஆனில் சில வசனங்கள் வன்முறையை தூண்டுவதுபோல் இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது யாருக்கு சொல்லப்பட்டது: எந்த நேரத்தில் சொல்லப்பட்டது: என்பதை விளங்கினால் பிரச்னை வரவே வாய்ப்பில்லை. அந்த விளக்கத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கிச் சொல்வதுதான் நம்முன் உள்ள மிகப் பெரிய வேலை. இந்து இஸ்லாமிய கிறித்தவ தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் வேதங்களின் உண்மைகளை அவர்கள் விளங்கும்படி போதனை செய்தாலே 90 சதவீத தீவிரவாதத்தை ஒழித்து விடலாம். அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.

    சரவணகுமார்!

    //தாலிபான்களின் ஆட்சிதான் வஹாபிய இஸ்லாமியர்களின் கனவு ஆட்சி என்றால், இனி நீங்கள் இஸ்லாம் பற்றி விரல்நோக எழுத வேண்டாம்… எங்களுக்கு தெளிவாக புரிகிறது…….//

    தாலிபான்களின் ஆட்சியை இஸ்லாமிய ஆட்சி என்று நான் எங்குமே சொல்லவில்லை. நான் சொன்னது சவுதி அரேபியாவின் ஆட்சியைத்தான். தாலிபான்கள் இஸ்லாத்தை தவறாக விளங்கியிருக்கிறார்கள். ஒரு சமயத்தில் சவுதி அரேபியா தாலிபான்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ‘இஸ்லாமிய ஆட்சி எப்படி அமைய வேண்டும்’ என்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அமெரிக்கா தேவையில்லாமல் தாலிபான்களின் ஆட்சியை அகற்றி பொம்மை அரசை அங்கு நிறுவியது. ரஷ்யாவாலேயே தாக்குபிடிக்க முடியாமல்தான் படைகளை வாபஸ் வாங்கிக் கொண்டு சென்றனர். இத்தனை காலம் அமெரிக்கா தங்கியிருந்து ஏதும் சாதிக்க முடிந்ததா? சொந்த நாட்டு மக்களை இன்று கடனாளியாக்கியதுதான் மிச்சம். எந்த முடிவும் எட்டப்படாமல் அடுத்த வருடம் படைகளை வாபஸ் வாங்கப் போகிறார்களாம். தாலிபான்களுக்கு உரிய பங்களிப்பை அளித்து சுமூகமாக பேசி தீர்த்திருந்தால் இத்தனை உயிர்கள் பலியாக வேண்டிய அவசியம் இல்லையல்லவா?

  86. //ஆண்களுக்கு எப்படி தலாக்கோ அதுபோல் பெண்ணுக்கு கணவனைப் பிடிக்க வில்லை என்றால் விலகி விடும் முறைக்கு குலா என்று பெயர்./// பெயர் இருக்கிறது. ஆனால் பெண்கள் அதைச் செய்யவதற்கு அனுமதி இருக்கிறதா. மூஞ்சியில் ஆசிட் வீசி விடுவீர்களே!

  87. //ஆனால் காலப் போக்கில் விளக்கம் கொடுக்கிறேன் என்ற பெயரில் மனிதர்களின் கருத்துகளும் வேதத்தோடு கலந்து விட்டது. ஏக இறைவனைப் பற்றிய வசனங்களும், பல தெய்வ வழிபாடுகளும் ஒரே வேதத்தில் புகுந்தது இந்த முறையில்தான்.//

    அட தூ… வேதத்தில் உள்ளவற்றைப் புரிந்துக்கொள்ள அறிவில்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டியது தானே. ‘பல தெய்வக் கொள்கைகள் பின்னாளில் சேர்க்கப்பட்டுவிட்டது’ என்று இப்படி எல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் பகல் கனவு வேறயா உங்களுக்கு? இண்டர்நெட்டில் ஜாகிர் நாயக் என்ற ஜிஹாதி வெறியன் உளறியதை எல்லாம் இங்கு வந்து கொட்ட அவசியம் என்ன?

    “இந்த்ரம் மித்ரம் வருணமக்நிமாஹுரதோ திவ்யஃ ஸ ஸுபர்ணோ கருத்மாந்| ஏகம் ஸத்விப்ரா பஹுதா வதந்த்யக்நிம் யமம் மாதரிஶ்வாநமாஹுஃ”

    “They call Agni as Indra, Mitra, and Varuna; they also say that He is the divine Garutman of beautiful wings. The sages speak of Him, who is one, in many ways; they call Him Agni, Yama, mAtarishvan.”

    (Atharva Veda, 9.10.28)

    என்று கூறும் அதே வேதம் தான் பல தெய்வங்களைச் சொல்லுகிறது. இவ்விரு வாக்கியங்களையும் ஒன்றுக்கொன்று முரண்படாமல் விளக்கம் கூற முடியும். இதற்கு விளக்கம் வேறு வேதப்பகுதியில் இருக்கிறது. “ஸ ஆத்மா, அங்கானி அந்ய தேவதாஃ” – தைத்திரீய உபநிஷத். இதற்கு அர்த்தம் என்ன என்று நீங்கள் முயற்சி செய்து தேடித் தெரிந்து கொள்ளுங்கள். இது தெரியாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு வேதப்பகுதியை உண்மை என்றும் இன்னொரு வேதப்பகுதியை இடைச்செருகல் என்றும் தள்ளுவது அறிவின்மை.

    வேத சாகைகள் என்பன காலங்காலமாக பாரத தேசமெங்கும் உள்ள அந்தண சமூகத்தினால் அத்யயனம் செய்யப்பட்டு வருபவை. இடைச்செருகல் என்று ஒன்று இருந்தால் அது ஒரு குறிப்பிட்ட குழுவினருக்குள்ளே தான் காணப்படும். அப்படி ஒன்றும் இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    // வஹாபி இஸ்லாத்தை முறையாக பின் பற்றறும் சவுதி அரேபியாவில் எந்த வன்முறையை கண்டிருக்கிறீர்கள். இந்து சகோதரர்கள் பலர் 20 வருடம் 30 வருடமாக தங்கள் குடும்பத்தோடு பிள்ளை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்களே! //

    ஆமாம், பெண்கள் கார் ஓட்ட முடியாது – வெளியில் போகும்பொழுது வலுக்கட்டாயமாக முக்காடு போட்டுக்கொண்டு தான் போக வேண்டும் இல்லை என்றால் சவுக்கடி, ஆலயங்களை நிர்மாணிக்கக் கூடாது. பஜனை, சத்சங்கம், சீதா கல்யாணம், பிரசாத விநியோகம் நடத்தினால் போலீஸ் வந்து பிடிக்கும். வீட்டில் வழிபடுவதற்காக சுவாமி படங்களையும் மூர்த்திகளையும் கொண்டு வந்தால் சுங்கவரிக்காரர்கள் (customs) ஏர்போர்ட்-லையே அதைப் பிடுங்கிக்கொண்டு உடைத்தெறிவார்கள். இப்படி ஒரு சமூகத்தில் இருப்பவர்கள் எந்தக் குறையுமின்றி சந்தோஷமாக தான் வாழ்ந்து வருகிறார்கள்!

    //அதே சமயம் வேறு நம்பிக்கை உடையவர்களை எதிரிகளாக பார்க்காமல் சகோதரர்களாக பார்க்க வேண்டும். இஸ்லாமும் அதைத்தான் போதிக்கிறது.//

    ஆமாம், வேறு நம்பிக்கை உடையவர்களை – அவர்கள் வலுக்கட்டாயத்திற்கு அடிபணிந்து அநியாயமாக ஜிஸ்யா வரி கட்டினால் மாத்திரம் – எதிரிகளாகப் பார்க்காமல் சகோதரர்களாகப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் தளையறுக்க வேண்டியது தான். என்ன அமைதியான மார்க்கம்!!!

  88. சுவனப்பிரியன்,

    //25 கோடி இந்திய முஸ்லிம்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாமிய பெண்களிடத்தில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் இதுவரை வந்ததில்லை. //

    எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அவர்கள் இருக்கிறார்களா.

    ஒரு இந்துப் பெண் எதிர்ப்பு குரல் குடுத்தால் அவருக்கு ஆதரவு தெரிவிக்க இந்து ஆண்கள் முன்வருவார்கள்.

    ஆனால் இஸ்லாமியப் பெண்கள் தலாக் கொடுக்கப் பட்டால் ஒரு இஸ்லாமிய ஆண் கூட எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் . அந்தப் பெண்ணின் சகோதரர்கள் கூட வருத்தத்தை மனதில் நிறுத்தி விடுகின்றனர்.

    எதிர்ப்பு தெரிவிக்க நினைக்கும் பெண்ணின் நிலை என்னவென்றால், அவள் பிறந்து வளர்ந்து இன்று வரை வாழ்ந்து வரும் சமூகத்தின் முழு வெறுப்பைப் பெற்று முற்றாகப் புறக்கணிக்கப் படுவாள்.

    அதனால் ஹமாரா நசீப் ஐஸா ஹை (எங்க தலை விதி அவ்வளவுதான்) என்று விட்டு விடுகின்றனர். மேலும் சட்டமும் அவளுக்கு எந்த உதவியும் அளிக்காது.

    //ஆனால் தலாக் முறையில் கணவனின் சந்தோசம் மட்டும் தான்பார்க்கப் படுகிறது. மனைவியின் மனநிலை யை பற்றிக் கவலையில்லை. மனைவி பிரிய மனமில்லை , பெற்ற பிள்ளையுடன் வாழ விருப்பப் படுகிறாள், கணவனுடன் வாழ விருப்பப் படுகிறாள் என்றால் கூட அவள் சொல்லுவதை தலாக் ஆதரவாளர் யாரும் கேட்பதில்லை //

    //தவறான புரிதல். இஸ்லாத்தில் குல என்ற ஒரு வழிமுறை இருப்பது தெரியுமா?//

    நீங்கள் குறிப்பிடும் “குல” என்பது “தலாக்”கில் இருந்து மனைவிக்கு பாதுகாப்பு தருகிறதா?

    ஒரு கணவன் தன மனைவியை விவாகரத்து செய்ய விரும்புகிறான், (ஆனால் அந்த மனைவி கணவனுடன் , குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்புகிறாள் என்றால்) ஒரு இந்துவோ, கிறிஸ்தவரோ மனைவியின் சம்மதம் இல்லாமல் ஒரு தலைப் பட்சமாக விவாகரத்து செய்ய முடியாது.

    ஆனால் இஸ்லாமியராக இருந்தால் மனைவி கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினாலும், தலாக் வேண்டாம் என்று மனைவி சொல்ல முடியாது.

    நீங்கள் சொல்லும் “குல்” கணவனால் துரத்தப்படுவதில் இருந்து (“தலாக்”கில் இருந்து ) மனைவிக்கு எந்தப் பாதுகாப்பையும் தருவதில்லை.

    இப்போது ஒரு இந்துவின் குடும்பத்துப் பெண்கள் திருமணம் செய்து கொடுக்கப் பட்டால், அவர்களை அவ்வளவு எளிதில் யாரும் விவாக ரத்து செய் முடியாது. ஆனால் அதே இந்து இஸ்லாத்தை தழுவி அவர் குடும்பத்தினர் அனைவரும் முஸ்லீம்கள் ஆனால், அவர் வீட்டுப் பெண்கள் திருமணம் செய்து கொடுக்கப் பட்டால், நாளைக்கு அவர்கள் மிக எளிதாக விவாகரத்து செய்யப் பட்டு அவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப் படலாம், தாய் வீட்டுக்கு வந்து அழுது புலம்புவதை தவிர அந்தப் பெண்கள் வேறெதுவும் செய்ய இயலாது என்பதுதானே உண்மை!

  89. //நான் சொல்ல வந்ததை நிங்கள் தவறாக விளங்கிக் கொண்டீர்கள். உலகில் உள்ள அனைத்து மதங்களுமே நல்ல விஷயங்களைத்தான் போதிக்கிறது. பிரச்னையே மதத்தையோ மார்க்கத்தையோ சரியாக விளங்கிக் கொள்ளாத அரைகுறைகளால்தான். குர்ஆனில் சில வசனங்கள் வன்முறையை தூண்டுவதுபோல் இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது யாருக்கு சொல்லப்பட்டது: எந்த நேரத்தில் சொல்லப்பட்டது: என்பதை விளங்கினால் பிரச்னை வரவே வாய்ப்பில்லை. அந்த விளக்கத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கிச் சொல்வதுதான் நம்முன் உள்ள மிகப் பெரிய வேலை.//

    அப்படியானால் நீங்கள், “குர்ஆனில் எழுதப் பட்ட சில வசனங்கள் (வன்முறையை தூண்டுவதுபோல் இருப்பதான் வசனங்கள்) அக்காலத்தில் அக்கால மக்களுக்கு எழுதப் பட்டவை, இன்றைய சூழ்நிலையில் நம் பிற மதங்களை வெறுக்க வேண்டியதில்லை” என்ற வகையில் சக இஸ்லாமியருக்கு அறிவுரை சொல்லி வருகிறீர்களா?

    ‘பிற மதங்களை வெறுப்புணர்வோடு நோக்குவதுதான் வன்முறைகளுக்கு அடிப்படை வித்தே. சே, இவங்க சிலைகளை போய் வழிபடுராங்க பாரு என்று வெறுப்புடன் நோக்குவது, வாய்ப்பு கிடைக்கும் போது அந்த சிலைகளை, அந்த சிலைகள் இருக்கும் வழிபாட்டுத் தளங்களை உடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்குகிறது. அவன் கடவுள் என்று நம்புவதை அவன் கும்பிட்டுப் போறான்யா என்ற புரிதல் இருந்தால் இருந்தால் வெறுப்பும் வராது, வன்முறையும் வராது.
    இஸ்லாமியர்கள் உருவம் இல்லாத நிலையில் கடவுள் இருப்பதாக கருதுவதையோ, வழிபடுவதையோ யாரும் ஆட்சேபிக்கவில்லை. . அதே போல நாமும் உருவ வழிபாட்டை வெறுக்கவோ, இகழவோ தேவையில்லை ” என்ற வகையில் சக இஸ்லாமியருக்கு அறிவுரை சொல்லி வருகிறீர்களா?

    அப்படிப் பட்ட வகையில் எந்தப் பின்னூட்டத்தையாவது நீங்கள் பதிவு செய்து இருக்கிறீர்களா?

    அப்படிப் பட்ட வகையில் எந்தக் கட்டுரையாவது உங்கள் தளத்தில் நீங்கள் பதிவு செய்து இருக்கிறீர்களா?
    .

    . .

  90. கந்தர்வன்,

    ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேதங்கள் படைக்கப்பட்டன. பின்னர் உபனிஷத்துக்கள். ஆர், எங்கே, எப்போது இவை செய்தார் என்று அறுதியிட்டுச்ச் சொல்ல முடியாது. இவை எழுத்து வடிவமாக இறுதிப்படுத்தப்படவில்லை. அனைத்தும் வாய் வழியாக காலங்காலமாக எடுத்துச்செல்லப்பட்டவையே.

    அப்படி எடுத்துச்சொல்லும்போது, அதன் முதல் வடிவம் கண்டிப்பாகத் திரியும். பலர் வாயிலாக எடுத்துச் செல்வதால் இடைச்செருகள் இல்லாமல் இருக்கா. இது வெகு இலகுவாகp புரியும் ஒன்று.

    எப்படி இடைச்செருகலே இல்லை என்று சொல்கிறீர்கள் என்பது எனக்கு ரொம்ப வியப்பு ? எப்படி ?

  91. //ஸ்ரீ அமலன், நான் எழுதும் மொழிநடை ஸம்ஸ்க்ருதம் கலந்த மொழிநடையே. சற்று ஹிந்துஸ்தானி பாஷை கலந்தது கூட. ஆங்க்ல பாஷை கலந்து எழுதுவது எனக்கு ஒப்பிலாத விஷயம். வள்ளல் அருணகிரி அருளிய திருப்புகழ் எனது மனதுக்குகந்தது. ஸ்ரீ வைஷ்ணவத்திலும் எனக்கு மிக ஈடுபாடு உண்டு. திருநாடேகிய ஸ்ரீ உ.வே. லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்ய ஸ்வாமியிடம் காலக்ஷேபம் கேட்டிருக்கிறேன். நீங்கள் தீந்தமிழே எழுதுங்கள் எனக்கு உவக்காத ஆங்க்ல பாஷையே எழுதுங்கள். சிரிவைஷ்ணவம் என்பது எனக்கு ஒப்பில்லைதான். நீங்கள் ஜோவாக இருந்தாலென்ன பெர்னாண்டோவாக இருந்தாலென்ன. ஆழ்வார் ஆசார்யாதிகளின் அருளிச்செயல்கள் பற்றி் உணர்வுபூர்வமாக நீங்களெழுதுவது மனதுக்கு உகப்பளிக்கிறது. குலசேகரமன்னன் சொன்ன “ப்ருத்யஸ்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய” என நான் ப்ரார்த்திக்க வேண்டுமென நினைவுக்கு வருகிறது. வளர்க நும் பணி. வர்த்ததாம். அபிவர்த்ததாம்.//

    இது மணிப்பிரவாளம்.

    ஆங்கிலத்தை எதிர்த்து ஒருவர் சண்டைப்போட்டுக் கொண்டிருக்க இந்த மணிப்பிரவாளம் தேவையா ? ஏற்கனவே இந்து.காமில் ஜடாயு வைணவ ஆச்சாரியர்கள் மணிப்பிரவாளத்தில் எழுதி இந்து மதத்தைப் பண்டிதர் மதமாக்கினர் என்று கம்ப்ளெயிண்டு பண்ணியிருக்கிறார். ஆங்கே அவருக்கு நான் எழுதிய பின்னூட்டத்தைப் பார்க்கவும்

    எப்படி ஆங்கிலம் இங்கே தடை செய்யப்பட வேண்டுமோ, அப்படி மணிப்பிரவாளமும் தடை செய்யப்படவேண்டும்.

    நிர்வாகிகள் கவனிப்பார்களா ?

  92. From

    Jo.Amalan Rayen Fernando
    (Ph.D student in Srivaishnavism in Madras University)

    To

    Messrs Tamilhindu.com

    Subject: Use of English and Manipravaalam by commenters in this forum – need to stop – request regarding.

    Respected Sirs,

    Of late, it is seen that a group of commenters in your forum increasingly use the language of colonialists English and also, the language of Jains who used Manipravalam for propogating their religion in Tamil land when they colonised Tamil land in early CEs upto 10, which was later imitated by the Vaishnava Acharyaas.

    As the majority of the readers of your forum are ignorant of the two colonial lanuguages, on their behalf I would request you to kindly intervene and ban all comments in these two languages. The mischief makers may be strictly told to write only in Tamil or quit.

    Thanking you in anticipation

    Yours sincerely
    JARF

  93. தமிழ் நாட்டில் இருக்கும் இந்துக்களில் பெரும்பாலானோருக்கு கிரந்தம் தெரியாது.

    இங்கே திரு. கிருஷ்ணகுமார் எழுதும் கட்டுரைகளையும், பின்னூட்டங்களையும் என்னால் எளிதாக
    படிக்க முடியவில்லை. எனவே நான் அவரது கட்டுரைகளைப் படிப்பது இல்லை. ஒருவேளை அவருக்கு இப்படி தான் எழுத வரும், அதுதான் அவருக்கு பழக்கம் என்றால் அவர் மேல் தவறில்லை, யாரவது ஒருவரிடம் கொடுத்து தமிழில் மொழி பெயர்த்து கட்டுரையாகப் போட்டால் அவர் கருத்துக்கள் எல்லோரையும் சென்றடையும். .

    இன்றிய சூழ் நிலையில் தமிழ் நாட்டில் இந்து மதத்தை
    இந்துக்களே வெறுக்கும் படி செய்ய எளிய வழி தமிழ் மொழியில் கிரந்தமோ (சமஸ்கிரதமோ) கலந்து எழுதுவது.

    தமிழ் மொழியின் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் தமிழ் மொழியின் எழுத்துக்களை தெளிவாக சொல்லி இருக்கிறார். கீதை, உபநிடதங்கள் ஆகியவற்றை கோட் செய்து எழுதும் போது சமஸ்கிரத எழுத்துக்களை உபயோகிப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    இந்து மதத்தின் வளர்ச்சி, வலிமை முக்கியமா அல்லது கிரந்த, சமஸ்கிரத எழுத்துக்களை கலந்து எழுதி இந்து மதம் செல்வாக்கு குறைந்தாலும் பரவாயில்லை என்கிற நிலைப்பாடு முக்கியமா என்பதை எண்ணிப் பார்க்கலாம்.

    தமிழ் ஹிந்து என்பது சரியல்ல , தமிழ் இந்து என்பதே சரியானது. தமிழில் ஹ இல்லை, அகத்தியரின் சீடன் தொல்காப்பியன் வகுத்த இலக்கண நூலில் அது இல்லை. சமஸ்கிரதம் படிப்பதையோ, ஹிந்தி படிப்பதையோ நாம் வெறுக்கவில்லை. ஆனால் தமிழில் வேற்று மொழி சொல் கலப்பு அவசியம் இல்லாததது.

    சொல்லுவதை சொல்லி விட்டோம், வூதுகிற சங்கை வூதி விட்டோம். தமிழ் நாட்டில் தமிழ் மொழிதான் எங்கும் இருக்கும். தமிழ் நாட்டில் மட்டும் அல்ல, ஈழம், மலேசிய, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழ் மொழி செல்வாக்கு படைத்தது.

    இந்து மதத்தின் வலிமையை எல்லாம் அழித்து, அதை பலவீனமாக்கணும் என்று சிலர் தெரிஞ்சோ தெரியாமலோ கச்சை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் போல இருக்கிறது.

  94. ஜோ அமலன்,

    உங்களுக்கு வேத அத்யயனம் பற்றித் தெரியவில்லை என்று தெரிகிறது. மாக்ஸ் முல்லர் கூட இதைப் பற்றிப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்:

    //
    Here then we are not dealing with theories, but with facts, which anybody may verify. The whole of the Rig-Veda, and a great deal more, still exists at the present moment in the oral tradition of a number of scholars who, if they liked, could write down every letter, and every accent, exactly as we find them in our old MSS (manuscripts). Of course, this learning by heart is carried on under a strict discipline; it is, in fact, considered as a sacred duty. A native friend of mine, himself a very distinguished Vedic scholar, tells me that a boy, who is to be brought up as a student of the Rig-Veda, has to spend about eight years in the house of his teacher. He has to learn ten books: first, the hymns of the Rig-Veda; then a prose treatise on sacrifices, called the Brâhmana; then the so-called Forest-book or Âranyaka; then the rules on domestic ceremonies; and lastly, six treatises on pronunciation, grammar, etymology, metre, astronomy, and ceremonial.

    These ten books, it has been calculated, contain nearly 30,000 lines, each line reckoned as thirty-two syllables.

    A pupil studies every day during the eight years of his theological apprenticeship, except on the holidays, which are called “non-reading days.” There being 360 days in a lunar year, the eight years would give him 2880 days. Deduct from this 384 holidays, and you get 2496 working days during the eight years. If you divide the number of lines, 30,000, by the number of working days, you get about twelve lines to be learned each day, though much time is taken up, in addition, for practising and rehearsing what has been learned before.

    But now let us look back. About a thousand years ago a Chinese of the name of I-tsing, a Buddhist, went to India to learn Sanskrit, in order to be able to translate some of the sacred books of his own religion, which were originally written in Sanskrit, into Chinese. He left China in 671, arrived at Tâmralipti in India in 673, and went to the great College and Monastery of Nâlanda, where he studied Sanskrit. He returned to China in 695, and died in 703.

    In one of his works which we still possess in Chinese, he gives an account of what he saw in India, not only among his own co-religionists, the Buddhists, but likewise among the Brâhmans

    And then turning to the heretics, or what we should call the orthodox Brahmans, he says: “…They revere their Scriptures, the four Vedas, containing about 100,000 verses…. The Vedas are handed down from mouth to mouth, not written on paper. There are in every generation some intelligent Brâhmans who can recite those 100,000 verses…. I myself saw such men.”

    Here then we have an eye-witness who, in the seventh century after Christ, visited India, learned Sanskrit, and spent about twenty years in different monasteries—a man who had no theories of his own about oral tradition, but who, on the contrary, as coming from China, was quite familiar with the idea of a written, nay, of a printed literature: and yet what does he say? “The Vedas are not written on paper, but handed down from mouth to mouth.”
    //

  95. //அப்படி எடுத்துச்சொல்லும்போது, அதன் முதல் வடிவம் கண்டிப்பாகத் திரியும். பலர் வாயிலாக எடுத்துச் செல்வதால் இடைச்செருகள் இல்லாமல் இருக்கா. //

    இடைச் சொருகல் இருந்துதான் தீர வேண்டும் என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.

    புரியாமல் ஒப்பித்தால் இடைச் சொருகல் வரலாம்.

    புரிந்து படித்தால், மிகவும் சிரத்தையுடன் கற்று, பயிற்றுவித்தால் எப்படி இடைச் சொருகல் வரும்

    இந்து மதத்தின் உபநிடதங்கள் போன்ற ஸ்ருதிகள் உண்மையை அடிப்படையாகக் கொண்டவை.

    “சத்யமேவ ஜெயதே” ( உண்மையே வெல்லும்) என்று முண்டக உபநிடதத்தில் சொல்லி இருக்கிறார்கள். உண்மையை சிலகாலம் மட்டுமே மறைக்க முடியும்.

    இந்த வாசகத்தில் கருத்தை மாற்றி இடைச் சொருகல் செய்வது எளிதல்ல, எழுத்துக்களை மாற்றுவதும் எளிதல்ல.

    அதைப் போல

    அசத்தோமா சத்கமய ( let me go From illusion/ false to truth)
    தமஸோமா ஜ்யோதிர்கமய ( let me go From darkness to light)
    மிருத்யோர் மா அமிர்தங்கமய ( let me go From mortal state to immortal)

    இதிலே இடைச் சொருகல் கொண்டுவருவது என்றால் எப்படிக் கொண்டுவர முடியும் ?

    இந்த மூன்றுமே மிக உயரிய கருத்துக்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இதிலே இடைச் சொருகல் கொண்டு வர முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் இதிலே இடைச் சொருகல் கொண்டு வந்தால் வெளிப்படையாக தெரியும்.

    மேலும் இந்து தன்னுடைய மத நூல்களை மதிக்கக் காரணம் அவை உண்மையை சொல்வதனால், நல்ல விடயங்களை சொல்வதனால், வெறுப்புக் கருத்துக்கள் இல்லாமல் கருணைக் கருத்துக்கள் இருப்பதனால் தான். அவை ஆதியில் இருந்து அப்படியே எழுத்துக்கு எழுத்து மாறாமல் வந்திருக்கிறது என்பது முக்கிய காரணம் அல்ல.

    ஆதியில் இருந்து மாறாமல் இடைச் சொருகல் இல்லாமல் அப்படியே வர வாய்ப்பு

    நான் சரியா படிக்காம தப்பா ஒப்பிச்சு டீச்சரிடம் அடி வாங்கினால், எல்லோரும் அதே போல ஒப்பிக்கும் போது விட்டுடுவான், மறந்துடுவான், வேற எதையாவது சொல்லி சமாளிப்பான் என்று எல்லோரையும் தீர்ப்பு சொல்ல முடியாது. பள்ளியில் படிக்கும் போது படித்த சில தியரங்களை இப்போது கேட்டாலும் வார்த்தைக்கு வார்த்தை எழுத்துக்குக் எழுத்து மாறாமல் சொல்ல முடியும்.

  96. //ஆதியில் இருந்து மாறாமல் இடைச் சொருகல் இல்லாமல் அப்படியே வர வாய்ப்பு இருக்கிறது.

    நான் சரியா படிக்காம தப்பா ஒப்பிச்சு டீச்சரிடம் அடி வாங்கினால், எல்லோரும் அதே போல ஒப்பிக்கும் போது விட்டுடுவான், மறந்துடுவான், வேற எதையாவது சொல்லி சமாளிப்பான் என்று எல்லோரையும் தீர்ப்பு சொல்ல முடியாது. பள்ளியில் படிக்கும் போது படித்த சில தியரங்களை இப்போது கேட்டாலும் வார்த்தைக்கு வார்த்தை எழுத்துக்குக் எழுத்து மாறாமல் சொல்ல முடியும்.//

  97. ஜோ அமலன்

    இடை சொருகல் பற்றி பேசுகிறீர்கள். இதற்க்கு முன் மற்றவர்களை விஷயம் தெரிந்து பேசுங்கள் என்று வேறு சொன்னீர்கள்.

    இன்டர்நெட்தில் data அனுப்புகிறோம் பல data க்கள் சேர்ந்து தான் பயணிக்கின்றன ஆனால் அது எந்த இலக்கை எப்படி அடைய வேண்டும் என்பதற்கு protocol உள்ளது. அதன் பிரகாரம் எந்த ஒரு data வும் மாறுபாடின்றி இலக்கை அடைகிறது. இதை போல ஒரு வழக்கு வேத பாட முறையில் உள்ளது. பல வகையான பாட முறைகள் உள்ளது. கன பாடம் படித்துவிட்டால் ஒரு வார்த்தை கூட தவறாது. ஒரு வார்த்தை மாறினால் கூட சந்தஸ் மாறிவிடும். சந்தஸ் மாறமால் வேறு வார்த்தை சேர்த்தால் கூட நிருக்தம், மிமாம்சம் உள்ளது. இதை எல்லாவற்றையும் மீறி cryptographic வழிகள் அனைத்தையும் பயன் படுத்தியே வேத மந்திரங்கள் அனைத்தும் செய்யப் பட்டுள்ளன. வேதத்தில் ஒரு வார்த்தை கூட மாறமால் தான் இன்று வரை உள்ளது.

    வேத மந்திரங்கள் என்பன சும்மா எதோ குருட்டாம் போக்குல எழுதி வைத்தவை அல்ல.

    ராமாயணம் மகாபாரதம், பாஷ்யங்கள் இவைகளில் இடை சொருகல்கள் வர வாய்ப்பு உள்ளது அனால் வேத மந்திரங்களை மாற்ற வாய்ப்பே இல்லை.

    தெரிந்து கொண்டு நீட்டி முழக்குங்கள்

    //
    ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேதங்கள் படைக்கப்பட்டன. பின்னர் உபனிஷத்துக்கள். ஆர், எங்கே, எப்போது இவை செய்தார் என்று அறுதியிட்டுச்ச் சொல்ல முடியாது. இவை எழுத்து வடிவமாக இறுதிப்படுத்தப்படவில்லை. அனைத்தும் வாய் வழியாக காலங்காலமாக எடுத்துச்செல்லப்பட்டவையே.

    அப்படி எடுத்துச்சொல்லும்போது, அதன் முதல் வடிவம் கண்டிப்பாகத் திரியும். பலர் வாயிலாக எடுத்துச் செல்வதால் இடைச்செருகள் இல்லாமல் இருக்கா. இது வெகு இலகுவாகp புரியும் ஒன்று.

    எப்படி இடைச்செருகலே இல்லை என்று சொல்கிறீர்கள் என்பது எனக்கு ரொம்ப வியப்பு ? எப்படி ?
    .//

  98. சாரங்,
    //
    எந்த ஒரு வேதத்திலாவது நோய் தீர்க்கும் மருந்து ஒன்றாவது சொல்லப் பட்டு இருக்கிறதா? உயிர் காக்கும் மருந்துகள் இன்சுலின், டயாலிசிஸ் சிகிச்சை முறை… இவை எதையாவது எந்த வேத புத்தகத்திலாவது சொல்லி இருக்கா?
    //

    அதர்வண வேதத்தில் இருக்கு நண்பரே – இதுக்காக அப்படியே டயாலிசிஸ் தான் இருக்கிறதா என்றெல்லாம் கேட்கக் கூடாது. //

    சாரங்,

    இப்படி ஒரு மாதிரியாகி எழுதி இருக்கு ஆனா இல்லை என ஒப்பேத்துகிரீர்கள்.

    சிறுநீரகம் பழுதாகி இரத்தத்தில் இருந்து சிறுநீர் பிரியாத நோய்க்கு சிகிச்சை முறை அதர்வண வேதத்தில் இருக்கிறதா இல்லையா? தெளிவாக சொல்லுங்கள்! இருக்கிறது என்றால் அப்படி என்ன இருக்கிறது?

    மனிதன் உபயோகப் படுத்தும் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று இவற்றை விட இன்னும் சிறந்த சிகிச்சை கூட இருக்கலாம். தெய்வீக புத்தகங்கள் ஆயிற்றே. இருக்கிறது என்றால் அப்படி என்ன இருக்கிறது?

    //அதர்வண வேதத்தில் ஏக்க சக்க மருத்துவம் சம்பந்தப்பட்ட முறைகள் உள்ளன. //

    “ஏக்க சக்க மருத்துவம்” – என்றால் என்ன? அதை வைத்து எத்தனை பேருக்கு சிகிச்சை கொடுத்து, உயிர் போகும் நிலையில் இருப்பவரைக் காப்பாற்றி பூரண குணம் அடைய வைத்திருக்கிறீர்கள்?

    //அப்புறம் தனியா ஆயுர் வேதம் என்று கூட இருக்கு போல இருக்கே//

    ஆயுர் வேதம் மனிதன் படிப் படியாக உருவாக்கியதா?
    அல்லது இறைவன் “அருளி” யதா?

    இதில் உங்களுக்கே தீர்மானம் இல்லை போல தோன்றுகிறது (இருக்கு போல இருக்கே)

    சும்மா அப்படி இருக்கும் போல் இருக்கே என்றெல்லாம் எழுதாமல் தெளிவாக எழுதுவதுதான் சரி.

    Till then, My previous mentioning

    //
    எந்த ஒரு வேதத்திலாவது நோய் தீர்க்கும் மருந்து ஒன்றாவது சொல்லப் பட்டு இருக்கிறதா? உயிர் காக்கும் மருந்துகள் இன்சுலின், டயாலிசிஸ் சிகிச்சை முறை… இவை எதையாவது எந்த வேத புத்தகத்திலாவது சொல்லி இருக்கா?//

    stays without challenge!

    //

  99. ஜோ அமலன்,

    தாங்கள் விவாதத்தை திசை திருப்பிகிறீர்கள். அனைத்து பாரத மொழிகளும் போற்றுதளுக்கு உரியவையே. இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. பிற நாட்டு மொழிகளை பற்றி ஹிந்துக்கள் யாரும் கவலை படவில்லை.

    ஒரு பழ மொழி உண்டு. ஈயை பேனாக்கி, பேனை பெருச்சாளி ஆக்குவார்கள் என்பது தான். மொழி என்பது பண்பாட்டின் ஒரு அடையாலம். அதுவே அவனது இனமாக மாறிவிடாது.

    கிறித்துவ மிஷினரிகள் தான் உலகம் முழுவதும் மொழியை இனமாக மாற்றி பல்வேறு கலவரத்தை உருவாக்கியுள்ளனர். இதற்கு ஒரு சிறந்த உதாரணம், இலங்கை.

    கிறித்துவ மிஷினரி அடிவருடி காங்கிரஸ் கட்சி கோவாவில் கட்டாய ஆங்கில கல்வியை அறிமுகப்படுத்தியதோடு மட்டும் அல்லாமல், தாய் மொழி கல்வி கற்பிக்கும் கல்வி நிலையங்களுக்கு மானியத்தையும் ரத்து செய்து உள்ளது.

    மானியம் என்ன சோனியாவின் அப்பன்கள் வீட்டு சொத்தா தர மறுப்பதற்கு? கயவர்கள்.

    https://www.hindujagruti.org/news/12353.html

    இது ஒன்றே போதும் கிறித்துவ மிசினரிகளின் குள்ளத் தனமும் அவர்களின் ஆங்கில அடிமைதனமும். இவர்களின் தமிழ் ஆதரவு எல்லா சும்மா? முகமுடி கொள்ளையர்களை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மொழி ரீதியான நமக்குள் நடந்த பழைய சண்டைகளை விடுத்து,
    வலிமையான பாரதத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். இல்லாவிட்டால், நம்மை எல்லாம் கிறித்துவ மிஷினரிகள் வெளிநாட்டுகாரர்களுக்கு விற்று விடுவார்கள் ஜாக்கிரதை…

  100. //..இது மணிப்பிரவாளம்…//

    மணிப்பிரவாளம் என்பது ஸம்ஸ்க்ருதம் மட்டும் கலந்த தமிழ் நடையல்ல. ஸம்ஸ்க்ருதத்தோடு மற்ற தென்னக மொழிகளில் உள்ள பொருள்செறிவும், சுவையும் நிறைந்த வார்த்தைகளையும் கலந்து பேசுவதுதான் மணிப்பிரவாளம் என்று எண்ணுகிறேன்.

    எனவே இதை மணிப்பிரவாளம் என அடையாளப்படுத்துவது சரியா என்பது தெரியவில்லை.

    .

  101. அமலன் அல்ல வேறு யாராயினும் , ஆங்கிலத்தில் எழுதப்படும் கடிதங்களை முற்றிலும் தடை செய்தல் நல்லது . தமிழ் இந்து என்று சொல்வதற்கு பதில் ஆங்கில இந்து என்று பெயர் வைத்துவிடலாம் போல இருக்கிறது.

    மணிப்பிரவாளத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்த யோக்கிய சிகாமணி அமலன் ஆங்கிலத்தில் கடிதம் எழுதியிருப்பது ஒரு கேலி கூத்து. என்ன கேவலம்?

  102. //ஸ்ரீ அமலன், நான் எழுதும் மொழிநடை ஸம்ஸ்க்ருதம் கலந்த மொழிநடையே. சற்று ஹிந்துஸ்தானி பாஷை கலந்தது கூட. ஆங்க்ல பாஷை கலந்து எழுதுவது எனக்கு ஒப்பிலாத விஷயம்.//

    //இங்கே திரு. கிருஷ்ணகுமார் எழுதும் கட்டுரைகளையும், பின்னூட்டங்களையும் என்னால் எளிதாக படிக்க முடியவில்லை. எனவே நான் அவரது கட்டுரைகளைப் படிப்பது இல்லை.//

    தமிழ் பெரிதா? சமஸ்கிரதம் பெரிதா? என்ற கேள்வி பலகாலமாக பலராலும் எழுப்பப்ட்டு வருகிறது. முஸ்லிம்களில் கூட சிலர் அரபியை தேவ பாசை என்று தவறாக விளங்கியிருக்கிறார்கள். மொழி வெறி கூடாது என்கிறது இஸ்லாம்.

    ‘ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு தூதர் உள்ளார். அவர்களின் தூதர் வந்ததும் அவர்களிடையே நீதியாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.’
    -குர்ஆன் 10:47

    ‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்’
    -குர்ஆன் 14:4

    மேலே கூறப்பட்ட இரண்டு வசனங்களை வைத்து உலக மூல மொழிகள் அனைத்துக்கும் இறைத்தூதரகளும் வேதங்களும் அனுப்பப் பட்டதாக குர்ஆன் கூறுகிறது. அரபுகளுக்கு மத்தியில் முகமது நபி பிறந்ததால் குர்ஆன் அரபியில் அனுப்பப்பட்டது. அவரே தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறங்கியிருக்கும். எனவே இஸ்லாமிய பார்வையில் தேவ பாசை என்று தனியாக எதுவும் இல்லை. உலகில் உள்ள அனைத்து மொழிகளுமே மனிதர்களுக்கு இறைவன் அருளியதே!

    திருவள்ளுவர் கூட நம் மொழிக்கு அனுப்பப்பட்ட தூதராக இருக்கலாம். ஆனால் அவருடைய வரலாறு சரியாக தெரியாததால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.

    ‘அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் தம் இறைவனால் ஆப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகோபு, மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோசேவுக்கும் ஏசுவுக்கும் அருளப்பட்டதையும் ஏனைய தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நமபினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்’ என்று கூறுங்கள்.
    -குர்ஆன் 2:136

    இந்த வசனத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து இறைத் தூதர்களையும் சமமாக பாவிக்க வேண்டும். ஒருவரை உயர்த்தி மற்றவரை தாழ்த்தக் கூடாது என்ற போதனையும் இந்த வசனத்திலிருந்து கிடைக்கிறது.

  103. திருச்சிக்காரன்!

    //Till then, My previous mentioning
    //
    எந்த ஒரு வேதத்திலாவது நோய் தீர்க்கும் மருந்து ஒன்றாவது சொல்லப் பட்டு இருக்கிறதா? உயிர் காக்கும் மருந்துகள் இன்சுலின், டயாலிசிஸ் சிகிச்சை முறை… இவை எதையாவது எந்த வேத புத்தகத்திலாவது சொல்லி இருக்கா?//
    stays without challenge!//

    ‘தேனீக்களின் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது.’
    -குர்ஆன் 16:69

    ஆயுர் வேத மருந்துகளிலிருந்து யுனானி மருத்துவம் வரை அனைவரும் மருந்தை கொடுத்து விட்டு தேனை குழைத்து சாப்பிடுங்கள் என்று மறக்காமல் சொல்வதைப் பார்த்திருப்பீர்கள். வைத்தியர் கொடுக்கும் மருந்தில் நோய் குணமாகிறதோ இல்லையோ தேனின் உதவியால் நோயாளி குணமாகி விடுவார்.

    காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதைதான். 🙂

  104. தமிழ் மொழி இந்து மதம் வளர மிக உதவி செய்துள்ளது.

    தமிழ் இந்து, தமிழ் நாட்டில் உள்ள 7 கோடி இந்துக்களையும் சென்றடைய வேண்டும் என்றால் அது தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.

    வலிமையான பாரதம் என்பது இதயபூர்வமாக அமையும்.
    அதிலே பாரதத்தில் எல்லா மக்களும் தங்களின் மொழி, கலாச்சாரம், மதம், இனம், செம்மையும் சிறப்பும் அடையப் பெறுவதாக, தாங்கள் மொழி கலாச்சார சுதந்திரம் பெற்றுள்ளதாக அவர்கள் கருத வேண்டும்.

    உலகிலேயே 18 மொழிகள் பேசும், வெவ்வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மனப்பூர்வமாக இணைந்து வாழும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. இதியாவின் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப் படும் மதமானது, வெறுப்புணர்ச்சியை போதிக்காத ஒன்றாக, உள்ளது. இதிலே ஒரு சிறந்த மொழியில் கலப்படம் செய்து வலிமை வாய்ந்த பாரதத்தை உருவாக்க இயலாது.

  105. “ஸ்ரீ வைஷ்ணவமும் பேசுகிறீர்கள் ”

    சாரங்!

    நான் ஒரு மாணவன் மட்டுமே. மதங்களைப்பற்றி – அஃது எந்த மதமாயினும் – நான் எழுதுவது கற்றது மட்டுமே. கல்வி முற்றுப் பெறவில்லை. இத்தளம் ஸ்ரீ வைஷ்ணவத்தை இருட்டடிப்புச் செய்கிறது. மார்கழியில மட்டுமே ஆண்டாளைப்பற்றி எவரோ எழுதுவார்கள். அவர்கள் கூட ஸ்ரீ வைஷ்ணவத்துக்காரர்களாக இருக்கமாட்டார்கள். இப்போது ஆடிப்பூரம். ஆனால் இந்து.காமுக்கு ஆடிக்கிருத்திகை மட்டுமே. அலகு குத்தி முருகருக்குக் காவடி தூக்குவோர் படங்களே போடப்பட்டிருக்கிறது.

    நீங்கள் எழுதிய மற்றவை பற்றி!

    மதமாற்றம் மிசுனோரிகள் செய்கிறார்கள் என்பதே ஒரு பெரிய குற்றச்சாட்டாக இத்தளத்தில் எழுதிவருகிறார்கள். நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள்? ‘உங்கள் மதத்தை விட்டு எங்கள் மதத்துக்கு திரும்புங்கள். இங்கே “ஆன்மீக இன்பம்” நிறைய கிடைக்கிறது என்று இந்திய அல்லது தமிழ் இசுலாமியரை அழைக்கிறீர்கள். ‘ஆன்மீக இன்பம்’ என்பது உங்கள் சொல்.

    போகட்டும். உங்கள் அடிப்படை கருத்தைப் பாருங்கள். இசுலாம் இறைவனே பெரியவன்; எல்லாமறிந்தவன். அவனிடம் சரணாகதி அடையுங்கள் என்கிறது. அல்லது, நீங்கள் எழுதியது போல “இறைவனுக்கு அடிமையாகுங்கள்.”

    கிட்டத்தட்ட இதுவே ஆழ்வார்களாலும் பேசப்படுகிறது. The core philosophy of Azhwaaars is surrender to God. Saranaakathi. No conditions apply,. U can surrender.

    “தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஓழுக
    பண்டே பரமன் பணித்த பணி”

    என்கிறார் நம்மாழ்வார். இதே போல நிறைய நம்மாழ்வாரும், மற்ற ஆழ்வார்களும் எழுதியிருக்கிறார்கள். குலசேகரர் “படியாகக் கிடந்து பவளவாய்க் காண்பேனே” “பேயே ஆனேன்” என்றெல்லாம் சொல்கிறார். திருமழிசை ஆழ்வார், தன்னை நாய் என்கிறார். இப்படியாக அவர்கள் இறைவன் முன் அடங்கி அடிமையாக வேண்டும் என்கிறார்கள்.. இதற்கெல்லாம் வேறு பொருள் இருக்குமானால் சொல்லுங்கள்! தெரிந்து கொள்கிறேன்.

    இங்கு ஒன்றும் சொல்லியாக வேண்டும். இந்து மதத்தில் வேதங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் பொருளை அவரவருக்குப்புரிந்த மாதிரி சொல்லியிருக்கிறார்கள். எ.கா. இராமானுஜர், சங்கரர், மத்துவர் போன்று. இராமானுஜருக்கும் சங்கரருக்கும் அடைப்படைக்கருத்து வேறுபாடு இருக்கிறது. மாயாவாதம் என்றே சங்கரரின் கொள்கை இங்கு அழைக்கப்படுகிறது. ஆடிக்கிருத்திகையில் அலகு குத்தி குருதி வழிய பக்தி செய்வது போன்று இங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. தமிழகத்தில் எந்தவொரு திருமால் கோயிலிலும் இவ்வழக்கம் கிடையாது. ஒருவேளை, பிற தமிழர்களால் திருமால் வணங்கப்படும்போது இப்படி தொல் தமிழக நாட்டார் கொடும்வழக்கங்கள் இருக்கலாம். அது வேறு.

    அதே சமயத்தில், பொதுப்பார்வையாக இந்து மதத்தைப் பார்க்கும்போது, எவ்வழி உகந்ததோ அவ்வழியை ஏற்க இம்மதம் அனுமதிக்கிறது. இல்லையா ? அதன்படி ஒருவன் அலகு குத்தி குருதி வழிய, ‘வேல்..வேல்’ என்று சொல்லி நேர்த்திக்கடன் செய்கிறான் இம்மதத்தில். இன்னொரு சாராரோ, அதெல்லாம் நமக்கு இருக்கக்கூடாது.“ஆட்டைஅடித்துத் தா. உன் மகனைக் கொன்று சமைத்துத் தா” என்று நம் சாமி (திருமால்) கேட்காது என்று சொல்கிறார்கள். ஆச்சாரியர்கள்..

    இப்பிரிவுகளில் நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் இந்து மதம் என்பது ஒரு பிரிவை மட்டுமே குறிக்கும். கொடும் வழக்கங்களை ஏற்கா மற்றும் இறைவனுக்கு அடிமை செய்வோம் என்பதுவும் ஒரு இந்து மதப்பிரிவே.

    இறைவனுக்கு நானும் என் குடும்பத்தாரும் அடிமைகள் என்றும், அல்லது இறைவன் தண்டிப்பான் என பயந்து வாழ்வோம் என்று சொல்வதுவும் இந்து மதமே. அப்படி பயந்து வாழும் இந்துக்கள் ஏராளம். ஆக, இந்து மதம் எல்லாவகையிலும் இருக்கிறது.

    இருக்கட்டும். இசுலாத்தைப்பற்றி எனக்கு தெரியாது. ஒரு சில அடைப்படைக் கருத்துக்கள் மட்டுமே தெரியும். அஃதில் ஒன்றுதான் மோனோதீயிசம் – ஒரே கடவுட்கொள்கை. But that is the bedrock on which Islam is built. மற்றபடி நீங்கள் சொல்லும் ‘இறைவனுக்குப்பயப்படுதல்’ என்ற கேள்வி ஞானமும் எனக்குண்டு.

    இசுலாம் மட்டுமல்ல. கிருத்துவமும் ‘இறைவனுக்குப்பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்’ என்று தன் விவிலியத்தையே தொடங்குகிறது. “Fear of God is beginning of wisdom”.

    அவர்களிடம் கேட்டால், இதுவே எங்களுக்கு ஆன்மிக வலியையும் நிறைவையும் தருகிறது. இந்துக்களின் வழிபாட்டை ஏற்றுக் கொண்டால் எங்களுக்கு ஆன்மிக நிறைவு ஏற்படாது என்று சொல்லும்போதும், அல்லது இசுலாமியர்கள் ‘இறைவனே பெரியவன். எல்லாப் புகழும் அவனுக்கே அவனிடம் சரணடைன்து வாழ்வதே எம் வாழ்க்கையின் குறிக்கோளாகும் ‘Islam means surrender. என்று சொல்லி இதுவே எமக்கு உகதந்து என்றால் அதையேன் தடுப்பானேன்?

    எம்மதமே ‘ஆன்மிக இன்பம்’ தரும். ஓகே. ஆனால் அவர்கள் மதங்கள் தரா என்பது உங்கள் பார்வை மட்டுமே. அவர்கள் பார்வை அன்று.

  106. உலக மூல மொழிகள் அனைத்துக்கும் இறைத்தூதரகளும் வேதங்களும் அனுப்பப் பட்டதாக குர்ஆன் கூறுகிறது. அரபுகளுக்கு மத்தியில் முகமது நபி பிறந்ததால் குர்ஆன் அரபியில் அனுப்பப்பட்டது. அவரே தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறங்கியிருக்கும். எனவே இஸ்லாமிய பார்வையில் தேவ பாசை என்று தனியாக எதுவும் இல்லை. உலகில் உள்ள அனைத்து மொழிகளுமே மனிதர்களுக்கு இறைவன் அருளியதே!

    Well said!

  107. அன்புக்குரிய சுவனப்பிரியன்,

    //‘ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு தூதர் உள்ளார். அவர்களின் தூதர் வந்ததும் அவர்களிடையே நீதியாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.’
    -குர்ஆன் 10:47

    ‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்’
    -குர்ஆன் 14:4//

    முகமது (ஸல்) அவர்கள் நிறுவிய இஸ்லாம் மார்க்கமானது அரேபியர்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அமைக்கப் பட்டது என்பதையே நாமும் சொல்லி வருகிறோம்.

    அந்தப் பகுதியில் தண்ணீர் கிடைப்பது அரிது, விவசாயம் மிக குறைவு, அங்கே பாறைகள் , உலோகங்கள் கிடைப்பது அரிது. எனவே மக்கள் கரடு முரடான பழக்கங்களைக் கொண்டு இருந்தனர்.

    அவர்களை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர், ஒற்றுமையுடன் வாழச் செய்ய ஒரே மார்க்கம், ஒரே வழிபாடு, கடுமையான தண்டனைகள், வேறு முறையில் கடவுளை வழிபட அனுமதி இல்லை, மீறினால் தனியாக மத வரி கட்ட வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகளை வைத்து அங்கே இஸ்லாம் மார்க்கத்தை உருவாக்கினார்.

    அவருக்கு முன்பு அதே பகுதியில் மோசஸ் ஆனவர் உருவாக்கிய யூத மதமானது இதே போன்ற கடுமையான சட்டங்களையும், பிற மத மறுப்புக் கருத்துக்களையும் உள்ளடகியதொடு, மேலதிகமாக யூதர்களின் நிலம் பிடுங்க வசதியாக இனப் படுகொலைகளை அங்கீகரிக்கும் வண்ணம் இருந்தது தானே!

    இந்தக் கடுமையான சட்டங்களும், சமரச மறுப்புக் கருத்துக்களும் இந்தியாவுக்கு அவசியமில்லை என்பது சரிதானே.

    தமிழர்களுக்கு சித்தர்கள், ஆழ்வார்கள் , நாயன்மார்கள், உள்ளிட்ட பலர் வழங்கிய மிக சிறப்பான இந்து மார்க்கம் உள்ளது. நிச்சயாக வள்ளுவரும் இந்து மார்க்கத்துக்கு சிறந்த கருத்துக்களை அளித்து வழங்கியவரே. பிற மதங்கள், இனங்கள், மொழிகள் மீது எந்தவொரு வெறுப்புக் கருத்தையும் தமிழ் இலக்கியங்களில் காண இயலாது.

    விளக்கம் அளிக்கும் வகையில் எடுத்துக் கொடுத்தற்கு நன்றி சகோதரர்!

    இந்து மதம் எந்த மொழியையும் நம்பி இருக்கவில்லை. இன்றைக்கு சமஸ்கிரதத்தை இந்தியாவில் எந்த பகுதியிலும் பேச்சு மொழியாக உபயோகிக்கவில்லை. ஆனாலும் இந்து மதம் செழிப்பாக உள்ளது, இந்துக்கள் தங்கள் மதத்தை நன்கு பின்பற்றி வருகின்றனர்.

    அதே நேரம் சமஸ்கிரத மொழியை யாரும் வெறுக்கவில்லை. சமஸ்கிரத மொழியில் இருக்கும் ஸ்மிருதிகள் இந்து மதத்தின் மிக முக்கிய உண்மைகளை சொல்கின்றன என்பதை இந்துக்கள் அறிந்தே உள்ளனர். உணவுக்கு உப்பு தேவைதான். ஆனால் உப்பே உணவாகி விடாது. சாம்பார், அவியல், பொரியலுக்கு தான் கொஞ்சம் உப்பு போடுகின்றனர். சாதத்தில் யாரும் உப்பு போடுவதில்லை. இதைப் புரியாத சிலர் உப்பை அள்ளிக் கொட்டி சமைக்கின்றனர்.

    நல்லா சொன்னீங்க சகோதரர்.

  108. மணிப்பிரவாளத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்த யோக்கிய சிகாமணி அமலன் ஆங்கிலத்தில் கடிதம் எழுதியிருப்பது ஒரு கேலி கூத்து. என்ன கேவலம்?

    Kadhirvan

    பயங்கரமாகவும் சீரியஸாகவும் இருக்கும் ஹேம்லட் நாடகத்தில் இடையில் கல்லறைக்காட்சியில் நகைச்சுவைதரும் வசனங்களைப் வெட்டியான்கள் இருவர் பேசுவதாக செகப்பிரியர் வைப்பார். நாடகத்தில் வரும் கொலக்காட்சி, பேய்வரும் காட்சிகளைக் கண்டு ஒரேயடியாக நாம் விரக்தியும் வேதனையும் அடைந்துவிடக்கூடாதென்பது அவரெண்ணம்.

    அதே போல நகைச்சுவை எங்கும் ஆங்காங்கே இருக்கவேண்டும். நகைச்சுவையாக எழுதப்பட்டதே என் ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட வேண்டுகோள். In whichever blog or forum I am writing, I will insert humor here and there, w/o diverting the core of the issue. Comic interlude is compulsory.

    எந்த மதமும் மனிதன் சிரிக்கக்கூடாதென்று சொல்லவில்லை.

    எனவே சிரிப்போம்.

  109. மணிப்பிரவாளம் என்பது ஸம்ஸ்க்ருதம் மட்டும் கலந்த தமிழ் நடையல்ல. ஸம்ஸ்க்ருதத்தோடு மற்ற தென்னக மொழிகளில் உள்ள பொருள்செறிவும், சுவையும் நிறைந்த வார்த்தைகளையும் கலந்து பேசுவதுதான் மணிப்பிரவாளம் என்று எண்ணுகிறேன்.

    எனவே இதை மணிப்பிரவாளம் என அடையாளப்படுத்துவது சரியா என்பது தெரியவில்லை.

    Dear Kalimigu Ganapathi

    ஆனாலும். ஜடாயு சொன்னதுதான் சரியாகத் தெரிகிறது. மணிப்பிரவாளத்தினால் பெரிய தவறொறுமில்லை. ஆனால், அதைப் படித்துத் தெரிய பண்டிதர்களுக்கே பெரும்பாடு. பாமர மக்களைப்போய் எப்படிச்சேரும் என்பது அவர் வாதம்.

    ஆச்சாரியர்கள் எழுதியவை மணிப்பிரவாளத்தில். நான் முன்பே சொன்னது போல இப்படி தமிழைக் கலந்து எழுதி ஒருவித மயக்கத்தைத் அதாவது அதுவே இறைச்செய்திகளை அல்லது இறைபற்றிய கருத்துக்களைச் சொல்ல தகுதிவாய்ந்தது என்ற மதிமயக்கத்தைச் செய்த சமணர்களை தமிழ்மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவர்கள் மதத்தைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். அப்படியே அவர்கள் மதம் தழைத்தது. பின்னரே அவர்கள் சங்கத்தமிழில் எழுதினார்கள். நீதிநால்கள் படைத்தார்கள்.

    இதைப்பார்த்த வைணவ உரைகாரர்கள் (ஆச்சாரியர்கள்) அம்மணிப்பிரவாளத்தையே தேர்ந்தெடுத்து ‘படிகள்” (வியாக்யானங்கள்) ஆழ்வார் பாசுரங்களுக்கு வரைந்தார்கள். ஒருவேளை அவர்கள் நினத்தது இவ்வியாக்யானங்கள் பண்டிதர்கள் படித்து பாமரர்களுக்குப் பழுகு தமிழில் விளக்கவேண்டுமென நினைத்திருக்கலாம்.

    மணிப்பிரவாளம் படிக்கச்சுவையாக இருக்கும்.

  110. //ஆயுர் வேத மருந்துகளிலிருந்து யுனானி மருத்துவம் வரை அனைவரும் மருந்தை கொடுத்து விட்டு தேனை குழைத்து சாப்பிடுங்கள் என்று மறக்காமல் சொல்வதைப் பார்த்திருப்பீர்கள். வைத்தியர் கொடுக்கும் மருந்தில் நோய் குணமாகிறதோ இல்லையோ தேனின் உதவியால் நோயாளி குணமாகி விடுவார்.

    காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதைதான். //

    மொத்தத்தில் எந்த மத வேதத்திலும் மனிதனின் உயிர் காக்கும் மருந்துகளோ, சிகிச்சை முறையோ இல்லை என்பதை எல்லோரும் அறிந்துள்ளனர். இதை எல்லாம் ஆராய்ந்து உருவாக்கியது மனிதனே.

    அவரவர் மத நூல்களில் உள்ள வெறுப்புணர்ச்சியை தூண்டும் கருத்துக்களை விட்டு விட்டால் அந்த வகையிலாவது மனிதருக்கு நல்லது செய்தவர்களாவீர்கள்.

  111. இடைச் சொருகல் இருந்துதான் தீர வேண்டும் என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.

    புரியாமல் ஒப்பித்தால் இடைச் சொருகல் வரலாம்.

    Dear Thiruchikkaaran

    நான் சொன்னது இயற்கை நியதி.

    அதன்படி, வாய் வழியாகச் செல்லும் சொற்கள் – ஒரு நாளல்ல. ஒராண்டல்ல – ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக – மேலும் சொல்லிச்சென்றவர்களெல்லாம் பண்டிதர்களல்ல, எவராகவேனும் இருக்கலாம் – இறுதியில் பல அல்லது சில கறைகள் அல்லது கலவைகளோடு சேர்ந்துதான் இருக்கும். மான்சரோவரில் கிடக்கும் கங்கை நீரும் பாட்னாவில் கிடக்கும் கங்கை நீரும் ஒன்றாக இருக்குமா ?

    வைணவ பரிபாசையைக் கிண்டலடிப்போர் ஒரு கதை சொல்வதுண்டு. ‘மொட்டைத்தாத்தன் குட்டையில் விழுந்தான்’ என்பது கதையின் தலைப்பு. அக்கதையை எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். வைணவ பரிபாசை என்ற தலைப்பின் கீழ் பார்க்கவும்.

    எடுத்துச்சென்ற‌வ‌ர்க‌ளில் பாம‌ர‌ரும் ப‌ண்டித‌ர்க‌ளும் உண்டு. எடுத்துச்சென்ற‌ கால‌ம் நெடுங்கால‌ம். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது இடைச்செருக‌ல‌கள் நேர்ந்த‌ன‌ என்ப‌தை விட‌ இய‌ற்கை நிய‌தின் ப‌டி நேராம‌ல் இருந்திருக்காது என்று சொல்வ‌தே ச‌ரி.

  112. திருச்சிக்காரன் அவர்களே

    சதுர் வேதங்கள் கூட இறைவன் அருளியது என்று நீங்கள் ஏன் நனைக்கிறீர்கள் -அதுவும் படிப்படியாக ரிஷிகளின் தவ வலிமையால் உருவாகியதே.

    diabetes ஆயுர்வேதத்தில் இதற்கு பெயர் prameha. அதர்வ வேதத்தில் நீரிழைவு நோய்க் சிறு நீராக நோய்களுக்கெல்லாம் மெய்யாலுமே வலுவான சிகிச்சை முறைகள் உள்ளன – அணுகவும் கோட்டக்கல் ஆயுர்வேத சாலா.

    அதர்வண வேதத்தில் வரும் நோய் தீர்க்கும் மருந்துகளை வைத்துக்கொண்டு தான் பலரை உயிர் இழப்பில் இருந்து காப்பாற்றி உள்ளார்கள். தயவு செய்து என்னை எல்லாத்தையும் இங்கே அடுக்க சொல்லாதீர்கள். நீங்களே நிச்சயமாக google செய்தாலே தெரிந்து கொள்ளலாம்.

    கருட புராணத்தில் கூட சிறுநீரக பிரச்சனைகள் பல விவாதிக்கப் படுகின்றன. மருத்துவ முறைகளும் தரப்பட்டுள்ளன.

  113. Sarang

    It was via oral tradition that ancient hindu scriptures like Vedas were carried forward from generation to generation for millennia. It is said Vyasa or whoever wrote, did not write any new Vedas but only ‘fixed’ the Vedas already came to him via oral tradition in writing. No body knows who really authored these scriptures and when. After such fixing only, Vedas became written documents and carried forward as such; and oral tradition stopped.

    As long as the Oral tradition continued, we can’t say that eveyone who carried forward it, did so with meticulous care and attention to each and every word in it.

    It is a fair guess to conclude that there must have been scope for interpolations and emendations etc. in the final version.

    When Hindu religion boasts that it is liberal, it should not dogmatically sit upon verbal inerrancy of the Vedas, just like Christians and Muslims siting upon the verbal inerraancy of their respective Holy Books. Muslims wont allow any one to say, or accept anyone saying that their Holy Koran was altered. (I have, however, read some of them saying there were insertions in it by Kalifas). To say so is blashmemy for them.

    Dont make Vedas ‘immutable, inerrant and unchangable’. Vedas say beautiful things; but there is no case that everything was original and pristine.

  114. திரு சாரங் கூறிய கருத்தை மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறார்கள் அக்னி வீர் தளத்தில்.

    Swara Protection of Vedas
    They laid down rules to make sure that not even a syllable was changed in chanting, not even a svara was altered. In this way they ensured that the full benefits were derived from intoning the mantras. They fixed the time taken to enunciate each syllable of a word and called this unit of time or time interval “matra”.
    How we must regulate our breathing to produce the desired vibration in a particular part of our body so that the sound of the syllable enunciated is produced in its pure form: this science is explained in the Vedanga called Shiksha.
    If you see a Vedic mantra in the Samhita, you would find certain marks after syllables. For example see the following image:
    [im] https://agniveer.com/wp-content/uploads/2010/10/rigveda2.gif [/im]

    These marks called Swara Chinha depict the method of pronunciation. These markers ensure that not even a single syllable can be altered from any Vedic mantra.
    In traditional gurukuls, pupils memorize the locations of these Swaras through specific hand or head movements. Thus you would see them moving their hands or head while reciting the Vedic mantras. And if a slightest error in Swara is found in recitation, they would easily pin-point it.
    Further, different gurukuls specialize in studying different Patha methods (explained after this section) would still have the same Swara system in place, thereby easily tracking accuracy of each Vedic mantra to last syllable.

  115. Paatha Protection of Vedas
    A remarkable method was devised to make sure that words and syllables are not altered. According to this the words of a mantra are strung together in different patterns like “vakya”, “pada”, “karma”, “jata”, “mala”, “sikha”, “rekha”, “dhvaja”, “danda”, “ratha”, “ghana”. These represent different permutations of reciting words of a Vedic Mantra.
    We call some Vedic scholars “ghanapathins”, don’t we? It means they have learnt the chanting of the scripture up to the advanced stage called “ghana”. “Pathin” means one who has learnt the “patha”. When we listen to ghanapathins chant the ghana, we notice that they intone a few words of a mantra in different ways, back and forth.
    It is most delightful to the ear, like nectar poured into it. The sonority natural to Vedic chanting is enhanced in ghana. Similarly, in the other methods of chanting like karma, jata, sikha, mala, and so on the intonation is nothing less than stately, indeed divine.
    The chief purpose of such methods, as already mentioned, is to ensure that not even a syllable of a mantra is altered to the slightest extent. The words are braided together, so to speak, and recited back and forth.
    In “vakyapatha” and “samhitapatha” the mantras are chanted in the original (natural) order, with no special pattern adopted. In the vakyapatha some words of the mantras are joined together in what is called “sandhi”. There is sandhi in Tamil also; but in English the words are not joined together. You have many examples of sandhi in the Tevaram, Tiruvachakam, Tirukkural, Divyaprabandham and other Tamil works. Because of the sandhi the individual words are less recognisable in Sanskrit than even in Tamil.
    In padapatha each word in a mantra is clearly separated from the next. It comes next to samhitapatha and after it is kramapatha. In this the first word of a mantra is joined to the second, the second to the third, the third to the fourth, and so on, until we come to the final word.
    In old inscriptions in the South we find the names of some important people of the place concerned mentioned with the appellation “kramavittan” added to the names. “Kramavittan” is the Tamil form of “kramavid” in the same way as “Vedavittan” is of “Vedavid”. We learn from the inscriptions that such Vedic scholars were to be met throughout South India in past.
    (Note that South India has a great contribution in preserving the Vedic traditions during a critical long era of history when North India was occupied in struggling for survival from brutal attacks of barbaric invaders and their progenies from West Asia. We find the tradition of Vedic gurukuls uninterrupted even till today.)
    In jata patha, the first word of the mantra is chanted with the second, then the order is reversed-the second is chanted with the first. Then, again, the first word is chanted with the second, then the second with the third, and so on. In this way the entire mantra is chanted, going back and forth.
    In shikhapatha the pattern consists of three words of a mantra, instead of the two of jata.
    Ghanapatha is more difficult than these. There are four types in this method. Here also the words of a mantra are chanted back and forth and there is a system of permutation and combination in the chanting. To explain all of it would be like conducting a class of arithmetic.
    We take all kinds of precautions in the laboratory, don’t we, to protect a life-saving drug? The sound of the Vedas guards the world against all ills. Our forefathers devised these methods of chanting to protect the sound of our scripture against change and distortion.
    Samhitapatha and padapatha are called “prakrtipatha” (natural way of chanting) since the words are recited only once and in their natural order. The other methods belong to the “vikrtipatha” (artificial way of chanting) category. (In krama, though the words do not go in the strict natural order of one-two-three, there is no reversal of the words-the first after the second, the second after the third, and so on. So we cannot describe it fully as vikrtipatha). Leaving out krama, there are eight vikrti patterns and they are recounted in verse to be easily remembered.
    Jata mala sikha rekha dhvaja dando ratho ghanah
    Ityastau-vikrtayah proktah kramapurva maharsibhih
    All these different methods of chanting are meant to ensure the tonal and verbal purity of the Vedas for all time. In pada the words in their natural order, in krama two words together, in jata the words going back and forth. The words tally in all these methods of chanting and there is the assurance that the original form will not be altered.
    The benefits to be derived from the different ways of chanting are given in this verse.
    Samhitapathamatrena yatphalam procyate budhaih
    Padu tu dvigunam vidyat krame tu ca caturgunam
    Varnakrame satagunam jatayantu sahasrakam
    Considering that our ancestors took so much care to make sure that the sound of the Vedas did not undergo the slightest change, it is futile for modern researchers to try to establish the date of our scriptures by finding out how the sounds of its words have changed.
    What more, today different schools of Vedas exist in south who memorize vedas in different means, as explained above. And if you compare the mantras memorized by different schools, you will find variation of not a single syllable. Remember we are talking lacs of syllables!! And still no variations. Thats why even Max Muller, a bitter critic of Vedic philosophy, could also not help but state that such a foolproof method of preservation is among the greatest wonders and miracles of the world!

  116. An example of Ghana Patha
    (Reference Source: https://www.krishnamurthys.com/profvk/index.html )
    This example gives a faint glimpse of how the vedas in spite of its massive content, (Rg veda and Yajur veda have 153,826 words and 109,287 words respectively) have been preserved from generation to generation though it was all done only by oral transmission.
    We give below a sentence from the Yajur veda, obviously without the svaras, in its original samhita pATha form, also its pada text and then the order of the words in the ghana recital. A pundit who has learnt the Ghana recital of one complete veda (he takes thirteen years of whole time work to reach that stage) is called a ghana-pAThi.
    First we give the rule for the ghana mechanics of recitation:
    If the original order of words in a sentence is:
    1/2/3/4/5
    The ghana recital goes as follows:
    12/21/123/321/123/
    23/32/234/432/234/
    34/43/345/543/345/
    45/54/45/
    5 iti 5.
    Example:
    samhita sentence:
    eshAm purushANAm-eshAm paSUnAM mA bher-mA ro-mo eshAM kincanAmamat //
    Meaning:
    Oh God! Do not frighten these our men and animals, may none of these perish or lack health.
    pada text:
    eshAM/purushANAM/eshAM/paSUnAM/mA/bheH/mA/arah/mo-iti-mo/eshAM/
    kim/chana/Amamat/Amamad-ity-Amamat/
    Note: The ninth break here and the last break are the results of a technicality which you may ignore, unless you want to specialise in this art.
    Now for the ghana recital(without the svaras; with the svaras it would be a delight to hear). The recital is a non-stop recital, except for a half-pause at the place shown by / . There is no break anywhere else. The hyphens shown are for requirements of those who can decipher the grammar ; they will not be reflected in the recital.
    eshAM-purushANAM-purushANAm-eshAm-eshAM purushANAm-eshAm-eshAm
    purushANAm-eshAm-eshAm purushANAm-eshAM /
    purushANAm-eshAm-eshAM purushANAM purushANAm-eshAM paSUnAM
    paSunAm-eshAm purushANAm purushANAm-eshAM paSUnAM /
    eshAM paSUnAM paSUnAm-eshAm-eshAM paSUnAm-mA mA paSUnAm-eshAm-eshAM paSUnAm-mA /
    paSUnAm-mA mA paSUnAM paSUnAm-mA bher-bher-mA paSUnAM paSUnAm-mA bheH /
    mA bher-bher-mAmA bher-mAmA bher-mAmA bher-mA /
    bher-mAmA bher-bher-mAro aro mA bher-bhermA araH /
    mA ro aro mAmA ro momo aro mA mA ro mo /
    aro mo mo aro aro mo eshAm-eshAm mo aro aro mo eshAM /
    mo eshAm-eshAm mo mo eshAm kim kim-eshAm-mo mo eshAm kim / mo iti mo/
    eshAm kimkim-eshAmeshAM kim-cana cana kim-esham-eshaM kim-cana /
    kim cana cana kim kim canAmamad-Amamat cana kim kim canAmamat /
    canAmamad-Amamac-cana canAmamat /
    Amamad-ityAmamat /
    The significant point to note here is that in Sanskrit the order of words does not matter.
    If you do it with an English sentence like:
    Rama vanquished Ravana
    It will go like this:
    Rama vanquished vanquished Rama Rama vanquished Ravana ‘Ravana vanquished Rama’ Rama vanquished Ravana … and so on.
    You can see the absurdity now. In Sanskrit this absurdity would not arise. So a ghana recitation is supposed to be equivalent to a recitation of the veda 13 times and to that extent is multifold fruitful! The 13 is because except for two beginning and two ending words in a sentence the others are repeated 13 times. (You can check it with the word paSUnAM above).

  117. //எனக்கு தெரிந்து ஒரே ஒரு தலாக்தான் நடந்துள்ளது. அதுவும் சம்பந்தப்பட்ட அந்த பெண் வேறொருவனிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டது நிரூபிக்கப்பட்டதால்தான். //

    அந்த வேறொருவனும் படுக்கையை பகிர்ந்து கொண்ட குற்றத்தை செய்தவன் தானே.

    அந்த வேறொருவரின் மனைவிக்கு அவனை தலாக் செய்யும் உரிமை வழங்கப் பட்டு இருக்கிறதா?

    அந்த வேறொருவன் தலாக் வாங்கிக் கொண்டு
    தன சொத்து, குடும்பம், குழந்தைகளை விட்டு செல்ல வேண்டும் என்ற முறை இருக்கவேண்டும் அல்லவா?

    இருக்கிறதா?

  118. @suvanappiriyan ,

    //‘தேனீக்களின் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது.’
    -குர்ஆன் 16:69//

    தேனின் மருத்துவ குணங்கள் பற்றி அல்லாவுக்கு தெரியும் முன்பே மனிதர்களுக்கு தெரியும்..

    Ebers Papyrus – எகிப்த்தின் பழைய மருத்துவனூல் 1500BC – அல்லா இதைத்தான் காப்பி அடித்து தான் தான் அதை கண்டுபிடித்த மாதிரி கூறியுள்ளார்….. அதை வேற நீங்கள் பெருமையாக இங்கே கூறுகிறீர்கள்.

  119. //தேனீக்களின் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது.’//

    இதுதான் கடவுள் தந்த சிகிச்சை முறையா? தேனைக் குடித்தால் எல்லா நோயும் குணமாகி விடுமா?

    குறிப்பிட்ட அளவு தேனைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சொல்லலாம். இது எல்லோருக்கும் தெரிந்ததே. இதில் புதிதாக ஒன்றும் இல்லை.

    நான் கேட்டது என்னவென்றால் மனிதனின் உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும் நோய்களில் இருந்து அவனைக் காக்கும் மருந்துகள், இன்சுலின், பென்சிலின் போன்றவையோ, அம்மை நோய்க்கு தடுப்பூசி, ரேபிஸ் நோய்க்கு மருந்து, சிகிச்சைக்கு உதவும் MRI scan, CT scan போன்றவற்றைப் பற்றி….அல்லது இவை அளவுக்கு நோய்க்கு நிவாரணம் தரும் மருந்துகளோ, சிகிச்சை முறையோ எந்த மத நூலிலாவது சொல்லியிருக்கிறதா?

    பழங்களை சாப்பிடுங்கள், அவை உடலுக்கு நல்லது, கீரைகளை , பச்சைக் காய்கறிகளை சாப்பிடுங்கள் என்று நான் எழுதி வைக்கிறேன், அதுவும் கடவுள் சொன்னது என்று சொல்லி, பாத்தியா , நோய் குணமாக வழி சொல்லியாச்சு கடவுள் அனைத்தும் அறிந்தவர், அளவற்ற…. என எல்லா பில்ட் அப்பையும் போட்டுக் கொள்வது முடியுமா?

  120. திரு. ஜோ. அமலன் அவர்கள் பின்வருமாறு கருத்து சொல்லி உள்ளார்:

    // Jo.Amalan
    31 July 2011 at 8:29 am

    இத்தளம் ஸ்ரீ வைஷ்ணவத்தை இருட்டடிப்புச் செய்கிறது. மார்கழியில மட்டுமே ஆண்டாளைப்பற்றி எவரோ எழுதுவார்கள். அவர்கள் கூட ஸ்ரீ வைஷ்ணவத்துக்காரர்களாக இருக்கமாட்டார்கள். இப்போது ஆடிப்பூரம். ஆனால் இந்து.காமுக்கு ஆடிக்கிருத்திகை மட்டுமே. அலகு குத்தி முருகருக்குக் காவடி தூக்குவோர் படங்களே போடப்பட்டிருக்கிறது. //

    ஆசிரியர் குழுமத்தின் பதில்:

    இந்த தளத்தில் கந்தர்வன், ஜடாயு, ஜெயஸ்ரீ சாரநாதன், ஹரி கிருஷ்ணன், எஸ். ஜெயலஷ்மி .. உள்ளிட்ட பற்பல எழுத்தாளர்கள் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம், விஷ்ணு பக்தி, ஸ்ரீரங்கம் போன்ற திருத்தலங்கள், ஆழ்வார்கள், கம்பராமாயணம் போன்ற பல விஷயங்கள் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளதை தமிழ்ஹிந்து தளத்தின் வாசகர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். எமது முகப்புப் படங்களும் இது போன்று இந்துப் பண்பாட்டின் பல கூறுகளையும் வானவில் போன்று சித்தரிப்பதாக இருக்கும்.

    எனவே ஜோ.அமலன் கூறுவது தவறான கருத்து என்பதைச் சுட்டுகிறோம். அவர் அறியாமல் அத்தகைய விமர்சனத்தை முன்வைத்திருந்தாலும்கூட, நம் தளத்தில் நடைபெறும் ஆக்க பூர்வமான விவாதங்களுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

    இருப்பினும், ஆபாசமற்ற வாசகர் மறுவினைகள் யாரிடம் இருந்து வந்தாலும் அதை வெளியிட வேண்டும் எனும் இந்துத்துவ திறந்த மனநிலையின்படி அவரது கருத்தையும் அனுமதிக்கிறோம்.

    வைணவம், சைவம் மட்டுமல்ல, சார்வாகம் உள்ளிட்ட இந்து தர்மத்தின் அனைத்துக் கூறுகளையும் அறிவுப் பரிமாற்றம் செய்யவே தமிழ் இந்து தளம் இயங்குகிறது. தரமான கட்டுரைகள் வருமானால், ஆசிரியர் குழு பதிப்பிக்கும்.

    கிறுத்துவரான ஜோ. அமலன் வைணவத்தின் மீது காட்டும் ஆர்வம் மானுட தர்மத்தின் நன்மைக்காகவும், உண்மையினை வெளிப்படுத்தவும் செயல்படும் என நம்புகிறோம். நம்பிக்கை மிக மென்மையான உணர்வு. நன்றிகள்.

  121. ஜோ அமலன்

    நீங்கள் அரை குடம் என்பது எழுதுவதிலிருந்தே தெரிகிறது

    //
    ட்டத்தட்ட இதுவே ஆழ்வார்களாலும் பேசப்படுகிறது. The core philosophy of Azhwaaars is surrender to God. Saranaakathi. No conditions apply,. U can surrender.

    “தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஓழுக
    பண்டே பரமன் பணித்த பணி”

    //

    ஆழ்வார் அடிமை பாவத்துடன் சொல்வது வேறு. கடவுளே நீ எனக்கு அடிமை நான் சொல்றதை கேக்காட்டி சுட்ட்ருவேன்னு சொல்றது வேறு

    அடிமை பாவம் வேறு என்று எனது முந்தைய மறுமொழிலேயே சொல்லி இருந்தேனே? பாக்கலையா

    நான் என்னால் ஆவது ஒன்றுமில்லை நீயே கதி என்று சொல்வதற்கும். அல்லா அற்பர்களே என்னை உட்டா உன்னை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்னு மிரட்டரத்துக்கும் வித்யாசம் இல்லையா. பாசுரங்களில் எங்கனாச்சும் பெருமாள் மிரட்றாரா?

    என்னதுதுக்கு Vaisnavism PHD எல்லாம் படிக்கிறீங்க – ஒரு சாதாரண விஷயத்தை வித்யாசப்படுத்தி பார்க்க தெரியல. நீங்கள் ஸ்ரீ வைஷ்ணவத்தை என்னவெல்லாம் செய்ய போகிறீர்களோ பெருமாளே எசய்யா

    நான் இஸ்லாமிஸ்டுகளை, கிறிஸ்தவர்களை எல்லாம் மதம் மாற சொல்லவில்லை – அது அவர்கள் இஷ்டம். எங்களை இம்சை பண்ணாதீர்கள். எங்களை அல்ப விஷயத்திற்கு மாற்றாதீர்கள் என்பதுவே எனது கருத்து.

    நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் – ஆன்மிகம் என்று வந்தால் இந்திய மதங்கள் (சனாதனம், புத்தம், …) தான் அதற்க்கு வழி. கண்மூடித்தனமான இறை கோட்பாடுகள் தான் அரபு நாடுகளிலிருந்து தோன்றின – அவைகள் நன்மைகளை விட தீமைகளையே அள்ளி தெளித்திருக்கின்றன

  122. //அதர்வண வேதத்தில் வரும் நோய் தீர்க்கும் மருந்துகளை வைத்துக்கொண்டு தான் பலரை உயிர் இழப்பில் இருந்து காப்பாற்றி உள்ளார்கள். தயவு செய்து என்னை எல்லாத்தையும் இங்கே அடுக்க சொல்லாதீர்கள். நீங்களே நிச்சயமாக google செய்தாலே தெரிந்து கொள்ளலாம்.

    கருட புராணத்தில் கூட சிறுநீரக பிரச்சனைகள் பல விவாதிக்கப் படுகின்றன. மருத்துவ முறைகளும் தரப்பட்டுள்ளன//

    ஏதோ ஒரு சிகிச்சை முறையாவது எழுதி, இது இவ்வாறு குணமாக உதவுகிறது என்று எழுதினால் தான் சரியாக இருக்கும். குணம் அடைவதற்கான வழியை சொல்வதாக அது இருக்க வேண்டும்.

    சும்மா இருக்கு இருக்கு என்று சொல்லி பயன் இல்லை. எல்லாவற்றையும் அடுக்க வேண்டாம், ஒன்று இரண்டையாவது உதாரணமாக காட்டலாம் – இருந்தால் !

  123. ஜோ அமலன் சொன்னதற்கெல்லாம் ஆசிரியர் குழிவினர் மறுமொழி போடுதுவது சரியா, தேவையா? மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது

    அவர் தான் அரை குறையாக படித்துவிட்டு ஏதேதோ எழுதுகிறார்

    எனக்கென்னவோ இங்கு எப்படியாவது ஒரு கலகம் மூட்டிவிட வேண்டும் என்று தீர்மானத்துடனே அவர் செயல்படுகிறார் என்று தோன்றுகிறது

  124. //எடுத்துச்சென்ற‌வ‌ர்க‌ளில் பாம‌ர‌ரும் ப‌ண்டித‌ர்க‌ளும் உண்டு. எடுத்துச்சென்ற‌ கால‌ம் நெடுங்கால‌ம். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது இடைச்செருக‌ல‌கள் நேர்ந்த‌ன‌ என்ப‌தை விட‌ இய‌ற்கை நிய‌தின் ப‌டி நேராம‌ல் இருந்திருக்காது என்று சொல்வ‌தே ச‌ரி.//

    நியூட்டன்ஸ் லா, வெப்பவியல் விதிகள் இவை எல்லாம் எந்த காலத்திலும் ஒரு போதும், ஒரு எழுத்து கூட மாறாது.

    அவற்றை எழுதி வைத்தால் தான் மாறாமல் நிற்கும் என்றில்லை.

    நான் படிக்கு போது, இந்த விதிகளை , மற்றும் பல பார்முலாக்களை எல்லாம் டேப் ரிகார்டரில் நானே ஒரு முறை பதிவு செய்து வைத் விடுவேன். பிறகு டேப் ரிகார்டரை மீண்டும் பலமுறை இயங்க விட்டு அந்த விதிகளை, பார்முலாக்களை மனப் பாடம் செய்து கொள்வேன். அவற்றை ஒரு நாளும் நான் தவறாக சொல்லியதே கிடையாது. இப்போது கூட அதே வேகத்தில் அப்படியே சொல் முடியும்.

    நம்பிக்கை வேண்டும், முயற்சி வேண்டும்.

    அதே நேரம் என்னால் ஹை ஜம்ப் அதிக உயரம் தாண்ட முடியாது. என் நண்பன் ஒரே ஒரு முறைதான் முயலுவான், ஆசிரியர் மூணு அட்டம்ப்ட் பண்ணலாம்பா, என்பார் அவசியம் இல்லை சார் என்பான். மாநிலஅளவிலே நடை பெற்ற போட்டியில் ஒரே முறை தாவி தங்கம் வங்கி வந்தான்.

    நம்மால் முடியவில்லை என்றால் மற்றவரும் அப்படி என நினைப்பது சரி அல்ல.

  125. ஜோ அமலன்

    //
    It is a fair guess to conclude that there must have been scope for interpolations and emendations etc. in the final version.

    When Hindu religion boasts that it is liberal, it should not dogmatically sit upon verbal inerrancy of the Vedas,
    //
    உங்கள் பேத்தலை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள். வேடங்களில் மன்ற பாகத்திற்கு தான் இப்படியான ஒரு நாங்கள் உண்டு. (மந்திரம் பிசகினால் பலன் கிடையாது. பலன் கிடைக்குமா இல்லையா என்று உங்களுக்கு நிருபணம் செய்யும் அவசியம் எனக்கு கிடையாது. )
    இதனாலேயே இவ்வளவு சிரமப்பட்டு உக்திகளை கையாண்டுள்ளார்கள்.

    oral tradition மாறும் அமாம் அது முட்டாள்கள் செய்தால். பரதர்கள் முட்டாள்கள் அல்ல. மாறமால் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள். மேலே தமிசன் சான்றுகளை அடுக்கி உள்ளார். உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீர் படிக்கும் கல்வி நிலையத்தில் இருக்கும் MA Venkata Krishnanai கேட்க வேண்டியது தானே. அவர் விளக்கம் தர தகுதியானவரே. அதை விட்டு விட்டு ஏன் இப்படி சகட்டு மேனிக்கு உளறருகிரீர். முடியும், அதற்கான வழி முறைகள் உண்டு என்று சொல்கிறேன் இல்லை என்கிறீர்கள். பாசுரங்களும் oral tradition தான். சந்தை முறை தான் அங்கும் உள்ளது. நீங்கள் வேண்டுமென்றால் சந்தை முறையில் பாசுரங்களை படித்து விட்டு ஒரு சிறு ஆராய்ச்சி செய்து பாருங்கள் – மாருகிராத இல்லையா என்று .மாறாது ஸ்வாமின் . மாறாமல் கொண்டு வர முடியும். அதையே இந்தியர்கள் செய்தார்கள்

    நீங்கள் வேண்டுமென்றால் இந்திய முழுவதும் சுற்றுப் பயணம் செல்லுங்கள். பீகாரில் உள்ள ஒரு குக்க்ராமத்தில் (கிருஷ்த்வர்கள் மதம் மாற்றி இருக்காவிட்டால்) கூட வேடம் தமிழ் நாட்டு கிராமத்தில் எப்படி இருக்குமோ அப்படியே தான் . இஷ்டத்துக்கு மாற்றம் இருந்திருந்தால் எல்லா இடத்திலும் மாறி மாறியே இருக்கும்.

    உங்களது (அல்லது மிசநரிகளின்) தலையில் உதித்த எண்ணங்கள் உண்மையாக இருக்க வேண்டுமா என்ன?

  126. Jo Amalan

    //Dont make Vedas ‘immutable, inerrant and unchangable’. Vedas say beautiful things; but there is no case that everything was original and pristine.
    //

    mantra portions of veda are immutable inerrant and unchangeable – vedas are original and pristine. there are loads and loads of proof for that. and they will remain so.

    where hinduism offers variability is in its interpretation – we do not have mullas or popes who supress the interpretations. We have scores of bashyams, vaartikas, tikas and sutras.

    prabandams do not change – it need not and should not, however padigal can change that is why you have 6000, 9000,12000,24000 and idu padigal. Got it?

  127. ஆசிரியர் குழுவுக்கு முதலில் நன்றி. பதிலுருத்தமைக்காக.

    ஹிந்து.காமில் எழுதும் நபர்களில் ஸ்ரீவைணவர்கள் இருந்தால் அஃது எழுத்திலுள்ள பக்தியில் தெரியவரும். அப்படி ஆராவது எழுதி நான் படித்திருந்திருக்க மாட்டேன் என்பது ஒருவேளை சரி.

    திருவரங்கத்தைப்பற்றி ஜடாயு எழுதியிருந்தார். எப்படி ? ஒரு டூரிஸ்டு எழுதுவதைப்போல. இவருக்கு ஏதோ திருவரங்கம் புதியது போன்றும். முதன்முதலாக தான் போய்வந்து பிறருக்குச் சொல்வது போலவும் தோரணை. வெள்ளைக்காரன் தோரணை.

    இப்படிப்பட்ட கட்டுரைகள் கல்கி தீபாவளி மலரில்தான் வரும். வரலாம் இங்கேயும். ஆனால் அவை ஒரு வைணவத்தனம் நிறைந்த கட்டுரைகள் என்று சொல்ல முடியாது. மேலும், அவர் வைணவ ஆச்சாரியர்களின் மணிப்பிரவாளத்தை விமர்சனம் பண்ணியிருந்தார். என் பின்னூட்டத்தில் நான் கண்டித்திருந்தேன். போய்ப் பார்த்துக் கொள்ளலாம். ஒரு இலக்கியவாதியின் கூட்டத்துக்குப் போயிருந்தாராம், அவர் சொன்னாராம். இலக்கியவாதிகளுக்கும் பக்திதர வேண்டிய இணையதளத்துக்கும் தூரம்.

    ஜெயஷிரி சாரநாதனும் எழுதியிருந்தார் ஆண்டாளைப்பற்றி. ஆங்கு என் பின்னூட்டமிருக்கிறது. ஆசிரியர் குழு போய்த் தேடிப்படித்து அஃது எந்தப்பிளவைக் குறிவைத்து எழுதப்பட்டது என்று சொல்லட்டும்.

    இப்படி நான் பிரிக்கும் சூழ்ச்சியென்பது பொதுவாக மதசாரா இணைதளங்களிலும் என்னிடம் சொல்லப்பட்டது. எனவே இஃதொன்றும் வியப்பல்ல.

    இந்த தலைப்பு அப்படிப்பட்டது. எனவே இப்படி போனது. இஃதல்லாமல், பிற தலைப்புக்களிலும் என் கருத்துக்களை போடமுடியும். போட்டிருக்கிறேன். ஆங்கே நீங்கள் மிசுநரி பிரிக்கிறான் என்று சொல்ல முடியாது.

    என் கருத்துக்கள் கசக்கும். எ.கா. பிறமதங்களில ஆன்மிகவாதிகள் இருக்கமுடியாது என்று மலர்மன்னனின் கருத்து மறுக்கப்படவேண்டியதென்பது என்று நான் சொன்னால்.

    ஹிந்து.காமின் பல கருத்துகள் பிடிக்கும். குறிப்பாக ஜாதிகள் பற்றி. அந்தணர்களைப்பற்றி எடுத்த முடிவுகள். அம்பேதக்ரைப்பற்றிய பார்வை போன்று. அதனாலேயே நான் இத்தளத்தை ஆதரிக்கிறேன். அது மட்டுமல்ல. இத்தளத்தைப்பற்றி பலவிடங்களில் பாசிட்டிவ் ஆக சொல்லியிருக்கிறேன்.

    பலர் இத்தளத்துக்கு பக்கம் நெருங்குவதில்லை. இஃது இந்துத்துவத்தைப் பறைசாற்றுவதலால். நான் நெருங்குகிறேன். ஏனெனில், குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் நன்றென்பதால்.

    படித்தவரை ஸ்ரீ வைணவத்தைப்பற்றி யான் எதுவும் இத்தளத்தில் எழுதியோரிடமிருந்து கற்றுக் கொள்ளவில்லை. மாறாக வெறுப்புத்தான் வந்தது. இவர்கள் எல்லாரும் ஏதோ கல்கி தீபாவளி மலரில் எழுதுவதை இங்கு போட்டிருக்கிறார்கள். They look at Vaishnava saints from the perspective of a foreinger. We can’t blame them. They are capable of only such perspective. Because they were not brought up as Vaishnavas or became such like Sudaraali Joseph and his wife Fatima Josheph (both are Professors of Tamil as well). Naturally they don’t have such inborn affinity with that sect. All that they have is the same which any other Hindu who worships any Hindu god has. Not Maha Vishu exclusively. The writings on Perumaal, Achaaryas and Azhwaars will become distinct from others if they were written by such people who were born or became Srivaishnavas. In them we see and partake coruscating Vaishnav Bakthi and great erudition which can be passed on to readers only through such bakthi. Bhakti should be shared. Writings can do that. They are some Sivaneriyaalars also who are capable of doing that e.g. Naa.Subbu Reddiyaar as already pointed out. Common folk will be benefited. வைணவ அறிஞர்களின் கட்டுரைகளை எதிர்னோக்குகிறேன். வரவேயில்லை. ஆனால் சைவத்தைப்பற்றி பல சிறப்பான கட்டுரைகள் ஆழமான சிந்தனைகளுடன் வருகின்றன. ஏன்? ஆடிப்புரமும் ஆடிக்கிருத்திகையும் போய்க்கொண்டிருக்கிறது. ஆண்டாளைப் பற்றிய கட்டுரை வரவைல்லை ? மாஸடு ஹெட்டில் (Masthead) ஆண்டாளின் படமில்லை ? போட்டுவிட்டால் மிசுனோரி எப்படி பிளவுபடுத்துவான்? அவனுக்கு ஏன் நாம் இடம் கொடுக்கவேண்டும் ?

    போகட்டும். மிசுநரிகள் சூதான செயல் இப்படித் திறமையாகப் பிரிப்பதென்றால் என் எழுத்துக்களைத் தடை செய்யலாமே?

  128. ஜோ அமலன்

    நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்

    //
    சமசுகிருதம் எப்படிப்பட்ட மொழி, ஆருக்குச் சொந்தம் என்பதெல்லாம் தியரி. நடைமுறையில் அஃது ஒரு குறிப்பிட்ட ஜாதியினரால் மட்டுமே கற்றுப்பேணப்படுகிறது என்பது உண்மை. அவர்கள்கூட இன்று அம்மொழியை கசடறக்கற்கவில்லை. மேலும் கற்பவ்ர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தோ போய், அம்மொழியைத் தெரிந்தோர் சிலரே என்ற நிலைக்கு வந்தாயிற்று. Dravidian leaders are not responsible for the disinterest for the language among those i cited.
    //

    என்று

    அச்சோ பாவம். இன்று தமிழகத்தில் மட்டும் சமஸ்க்ரிதத்தில் சரளமாக பேச தெரிந்தவர்கள் இரண்டு லட்சத்திற்கும் மேல். இதில் பிராமணர்கள் ஒரு லட்சம் கூட கிடையாது. இந்திய பூராவும் சரளமாக தினசரி பேசுபவர்களின் எண்ணிக்கை அறுபது லட்சத்திற்கும் மேல். சமஸ்க்ரிதம் சரளமாக பேசத்தெரியாமல் ஆனால் சமஸ்க்ரிதம் நன்றாக தெரிந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகம்.

    முன் காலத்தில் கூட எல்லா மொழிகளும் இருந்தன. பல மொழிக்காரர்கள் தங்களிடேயே பேச மட்டுமே சமஸ்க்ரிதத்தை உபயோகம் செய்தார்கள். அதை ஹிந்தியும் ஆங்கிலமும் ஒரு இரநூறு வருடங்களாக அபகரித்து கொண்டுள்ளன.

    சமஸ்க்ரிதம் முன் காலத்தில் (ஒரு 500 years ago) வ்யவஹார பாஷ்யாக இருந்தது என்பதர்ற்கு சான்றுகள் போட்டு கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு புஸ்தகம் எழுதி உள்ளார் – விலை இருவதே ரூபாய்.

    நாம் கூப மண்டூகமாக இருந்தால் என்ன செய்வது?

  129. தமிழன்

    சூப்பர்

    //
    @suvanappiriyan ,

    //‘தேனீக்களின் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது.’
    -குர்ஆன் 16:69//

    தேனின் மருத்துவ குணங்கள் பற்றி அல்லாவுக்கு தெரியும் முன்பே மனிதர்களுக்கு தெரியும்..

    Ebers Papyrus – எகிப்த்தின் பழைய மருத்துவனூல் 1500BC – அல்லா இதைத்தான் காப்பி அடித்து தான் தான் அதை கண்டுபிடித்த மாதிரி கூறியுள்ளார்….. அதை வேற நீங்கள் பெருமையாக இங்கே கூறுகிறீர்கள்
    //

  130. தமிழ் இந்து, தமிழ் நாட்டில் உள்ள 7 கோடி இந்துக்களையும் சென்றடைய வேண்டும் என்றால் அது தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. ”

    Thiruchikkaaran

    ஆழ்வார்கள் தமிழைத்தேர்ந்தெடுத்து பாசுரங்களைப்பாடிய காரணமே இந்து மதம் பண்டிதர்களுக்கும் மேட்டுக்குடியினத்தவருக்குமே சென்றடையாமல். அனைத்து மக்களும் திருமால் பக்தியில் திளைக்கவேண்டுமென்பதற்காக. ‘ஊனகரேயாயினும் தொழுமின்’ என்று தொணரடிப்பொடியாழ்வார் உரக்கச் சொன்னதும் அதற்காகவே.

    இராமனுஜர் கோட்டைமீதேறி திருமந்திரத்தின் இரகசியார்த்தங்களை ஊரறியச்சொன்னதும் அப்படியே. அவர்களுக்குப்பின் வந்த ஆச்சாரியர்களும் அப்படியே.

    தமிழை அன்றிலிருந்து இன்று வரை வைணவம் போற்றி தமிழ்ப்பாசுரங்கள் திருமால் முன் பாராயணம் பண்ணப்பட்டு கிட்டத்தட்ட ஆயிரத்து ஐனூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.

    அனைவருக்கும் திருமால் என்பதே கொள்கை. அது வெறும்பேச்சில் இல்லாமல் செயலிலும் காட்டப்பட்டது. எனவேதான் திருமலைக்கு சோனியாவும் செல்லலாம். அப்துல்கலாமும் செல்லலாம்.

  131. Dear Sarang you may refer to your this mge Sarang
    29 July 2011 at 5:45 pm

    I agree.

  132. jo amalan

    //
    ஆச்சாரியர்கள் எழுதியவை மணிப்பிரவாளத்தில். நான் முன்பே சொன்னது போல இப்படி தமிழைக் கலந்து எழுதி ஒருவித மயக்கத்தைத் அதாவது அதுவே இறைச்செய்திகளை அல்லது இறைபற்றிய கருத்துக்களைச் சொல்ல தகுதிவாய்ந்தது என்ற மதிமயக்கத்தைச் செய்த சமணர்களை தமிழ்மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவர்கள் மதத்தைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். அப்படியே அவர்கள் மதம் தழைத்தது. பின்னரே அவர்கள் சங்கத்தமிழில் எழுதினார்கள். நீதிநால்கள் படைத்தார்கள்.

    இதைப்பார்த்த வைணவ உரைகாரர்கள் (ஆச்சாரியர்கள்) அம்மணிப்பிரவாளத்தையே தேர்ந்தெடுத்து ‘படிகள்” (வியாக்யானங்கள்) ஆழ்வார் பாசுரங்களுக்கு வரைந்தார்கள். ஒருவேளை அவர்கள் நினத்தது இவ்வியாக்யானங்கள் பண்டிதர்கள் படித்து பாமரர்களுக்குப் பழுகு தமிழில் விளக்கவேண்டுமென நினைத்திருக்கலாம்.

    //

    இப்படி எல்லாம் கேணயர்கள் அப்புறம் மிசனரிகள் தான் செய்வார்கள். சமணத்திலும் சரி, ஸ்ரீ வைஷ்ணவத்திலும் சரி விஷயம் உண்டு. மயக்க ஏற்படுத்த அவர்களுக்கு avasaiyam இருக்கவில்லை.

    பண்டிதர்களின் சமஸ்க்ரிதத்தை எளிமை படுத்தவே தமிழ் கலந்து எழுதினார்கள் அதை தமிழ் பேசும் மக்களுக்கும் எடுத்து சென்றார்கள். முன் காலத்தில் (இஸ்லாமிஸ்டுகள், மிசனரிகள் வரும் முன் ) வெகு ஜனங்களும் புத்திசாலிகளாகவே இருந்தனர், மணிப்ரவாளம் படிக்கும் திறன் படைத்திருந்தனர்.

  133. //////தமிழ் பெரிதா? சமஸ்கிரதம் பெரிதா? என்ற கேள்வி பலகாலமாக பலராலும் எழுப்பப்ட்டு வருகிறது. முஸ்லிம்களில் கூட சிலர் அரபியை தேவ பாசை என்று தவறாக விளங்கியிருக்கிறார்கள். மொழி வெறி கூடாது என்கிறது இஸ்லாம்.//////
    மொழி வெறி கூடாது என்கிறதே இஸ்லாம்,, அப்புறம் என்ன பள்ளியில் பாங்கு சொல்வதும் நமாஸ் படிப்பதும் தமிழில் செய்ய ஆரம்பிக்கவேண்டியதுதானே? முடியுமா? யோசித்ததாவது உண்டா?
    பல சிவன் கோயிலில் தேவாரம் முற்றோதுதல் உண்டு, வைணவ ஆலயங்களில் தமிழ்வேத பாராயணம் உண்டு. ஒரு சிவன் தமிழ் திருமுறைகளை மட்டுமே ஓதியும் வைணவன் பிரபந்தங்களை மட்டும் ஒதியுமே பக்தி செய்ய முடியும். இஸ்லாத்தில் ஒரு பிர்விலாவது இது சாத்தியமா?

    ////‘ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு தூதர் உள்ளார். அவர்களின் தூதர் வந்ததும் அவர்களிடையே நீதியாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.’
    -குர்ஆன் 10:47 ////
    நல்ல கருத்தே இதனை பின்பற்றுவீர்களா?

    ‘////எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்’
    -குர்ஆன் 14:4 /////

    எந்த அளவு இக்கருத்தை நடைமுறையில் ஏற்கிறீர்கள் ? ஏற்றால் பிற மதங்கள் மீது ஏன் வன்முறை ஆதரவு இருக்கிறது இஸ்லாத்தில்.

    ////மேலே கூறப்பட்ட இரண்டு வசனங்களை வைத்து உலக மூல மொழிகள் அனைத்துக்கும் இறைத்தூதரகளும் வேதங்களும் அனுப்பப் பட்டதாக குர்ஆன் கூறுகிறது. அரபுகளுக்கு மத்தியில் முகமது நபி பிறந்ததால் குர்ஆன் அரபியில் அனுப்பப்பட்டது. அவரே தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறங்கியிருக்கும். எனவே இஸ்லாமிய பார்வையில் தேவ பாசை என்று தனியாக எதுவும் இல்லை. உலகில் உள்ள அனைத்து மொழிகளுமே மனிதர்களுக்கு இறைவன் அருளியதே!////
    இது ஒரு பள்ளியிலாவது தமிழில் அல்லது அரபி அல்லாத மொழியில் தொழுகை நடக்கும் போது சொல்லவேண்டும் நண்பரே.

    ‘////அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் தம் இறைவனால் ஆப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகோபு, மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோசேவுக்கும் ஏசுவுக்கும் அருளப்பட்டதையும் ஏனைய தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நமபினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்’ என்று கூறுங்கள்.
    -குர்ஆன் 2:136
    இந்த வசனத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து இறைத் தூதர்களையும் சமமாக பாவிக்க வேண்டும். ஒருவரை உயர்த்தி மற்றவரை தாழ்த்தக் கூடாது என்ற போதனையும் இந்த வசனத்திலிருந்து கிடைக்கிறது./////
    கருத்து என்னவோ நல்லாத்தான் இருக்கு ஆனால்
    நண்பரே நடைமுறையில் எந்த இஸ்லாமியரும் செயல்படுத்தாத கருத்துக்கள்

  134. திரு கோமதி செட்டி!

    நீங்கள் கொடுத்த லிங்கைப் படித்தேன். அவர்கள் வைத்த கோரிக்கைகள் வெறும் மத சம்பந்தமாக மட்டுமில்லை. எ.கா. சட்டசபையில் மராத்தியில்தான் உரையாடவேண்டும். இங்கொன்று கவனிக்கவேண்டும்: ஏன் மராத்தி. கோவா மக்களின் தாய்மொழி கொங்கனியே. மராத்தியன்று. மராத்திதான் என்றால் மக்களிடையே பிரிவினை கோரிக்க வரும். ஏற்கனவே மராத்தியா கன்னடமா என்று பெல்காம் எறிந்து கொண்டிருக்கிறது பன்னெடுங்காலமாக.

    முதலில் மிசுனோரிகளுக்கும் ஆங்கில வழி தொடக்கப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்படும் நிதி உதவிக்கும் இன்று என்ன தொடர்பென்று தெரியவில்லை. ஆங்கு பிஜேபி ஆட்சியா அன்று காங்கிரசா ?

    இந்த விசயம் அஃதாவது: “பிராந்திய மொழிகளை மட்டும்தான் அரசு வளர்க்கவேண்டும். ஆங்கில வழிக்கல்வியை ஊக்குவிக்கக்கூடாது” என்பது இங்கு பேசப்படும் விசயத்தை மிகவும் திருப்பும். என்னைச்சொல்லிவிட்டு நீங்களே செய்யலாமா ?

    ஒன்று மட்டும் சொல்லி நிறுத்தலாம்: இந்த விசயம் கோவாவைப் பொறுத்தது மட்டுமல்ல. இந்தியா முழுமைக்கும் வரும். எல்லா மானிலங்களில் இப்படி அரசு ஆங்கில வழிக் கல்விக்கு நிதி உதவி செய்யவில்லை என்றாலும், பெற்றொர் – ஏழைப்பெற்றோர்கள் கூட – ஆங்கிலவழிக் கல்வியில்தான் தம்பிள்ளைகளை – அது கட்டணப்படிப்பாக இருந்தாலும் – சேர்க்க விழைகிறார்கள். இது கண்கூடு.

    இதற்கெல்லாம் மிசுனோரிகள் காரணமென்பதை விட, நம்மை ஆண்ட ஆங்கில அரசும், தற்போது நடக்கும் உலகமயமாக்கலும், வெளிநாடுகளுக்குச்சென்று பிழைக்கவேண்டிய நிலையும் கரணிகளாகும்.

    It is not practical wisdom to deny English education today. True the colonialists and missonaries were responsible for the English education everywhere in our country. Macaulay opened wrote in his Minute which introduced English medium instruction that he wanted slaving clerks with English knowledge to serve the British Empire in India.

    But such history is long past. English is no longer considered unwanted or a colonial legacy that should be discarded. To get on in life, English is inevitable today.

  135. ஜோ அமலன்!

    //எடுத்துச்சென்ற‌வ‌ர்க‌ளில் பாம‌ர‌ரும் ப‌ண்டித‌ர்க‌ளும் உண்டு. எடுத்துச்சென்ற‌ கால‌ம் நெடுங்கால‌ம். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது இடைச்செருக‌ல‌கள் நேர்ந்த‌ன‌ என்ப‌தை விட‌ இய‌ற்கை நிய‌தின் ப‌டி நேராம‌ல் இருந்திருக்காது என்று சொல்வ‌தே ச‌ரி.//

    இந்து மதத்தினை தீவிரமாக பின்பற்றுபவர்கள் என்றேனும் ஏன் பிரம்மாவைக் கும்பிடுவது இல்லை. பிற்காலத்தில் பிரம்மா என்பவருக்கு சரஸ்வதி என்ற மனைவியை வைத்து நான்கு முகங்களைக் கொடுத்து ஒரு மனிதனாக மாற்றப்பட்டு பின்னர். சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களை இணைத்து மூன்றோடு ஒன்றாக்கப் பட்டு இன்று பிரம்மம் என்றாலோ பிரம்மன் என்றாலோ என்னவென்று தெரியாத அளவுக்கு தரம் இறங்கிப் போய்விட்டது.
    இந்து வேதங்களை அருளியது யார்? என்ற தெளிவான விபரம் நமக்கு கிடைக்கவில்லை. பல ரிஷிகள் எழுதிய பாடல்களின் தொகுப்பாகவே வேதங்கள் அறியப்படுகிறது. அதிலும் வெறும் வாய்மொழியாகவே பல நூற்றாண்டுகள் கடந்து வந்திருக்கிறது. ஒரே வேதத்தில் ஓரிறைக் கோட்பாடும் பல தெய்வ வணக்கமும் எவ்வாறு வர முடியும். இங்கு ஏதோ ஒரு கொள்கை இடைச் செருகலாக இருக்க வாய்ப்புண்டு. கூகுளில் தேடியதில் கிடைத்த சில தகவல்களை பகிர்கிறேன். வேதத்தை நன்கு படித்தவர்கள் மேலதிக விளக்கம் தரவும்.

    பல தெய்வ வணக்கத்துக்கு சில ஆதாரங்கள்:

    பகவத் கீதையில், உலக நடப்புகள் அனைத்திற்கும் காரணமானவராகக் கிருஷ்ணர் காட்டப்படுகிறார். உபநிடதங்கள் ‘பிரம்மம்’ என ஒரு முழுமையை (absolute) ஏற்படுத்திக் காட்ட முயன்றன. ஏறத்தாழ அந்நிலைக்குக் கிருஷ்ணன் கீதையில் கொண்டுவரப்படுகின்றார். ‘ஆக்குபவன் நானே, ஆக்கப்படுபவன் நானே, கொல்பவன் நானே, கொல்லப்படுபவனும் நானே’ என்பது போன்றதோர் ‘ஒருமை வாதம்’ (ஏகம்) அங்கு நிலைநிறுத்தப்படுகிறது. இந்துக் கடவுள் தத்துவம் அனேகத்திலிருந்து ஏகத்தை நோக்கி நகர்கிறது.
    இது எவ்வளவு செயற்கையானது என்பதை, மகாபாரதம் படித்தவர்கள் அறிவார்கள். பாரதம் நெடுக இடம் பெற்றுள்ள கண்ணன் பாத்திரத்திற்கும், பகவத் கீதை காட்டும் கண்ணன் பாத்திரத்திற்கும் தொடர்பே இல்லை.மகாபாரதக் கண்ணன், ஒரு சாதாரணப் பாத்திரம். அக்காப்பியத்தில் இடம்பெறும் சிசுபாலன் போன்ற சிறு பாத்திரங்கள் கூடக் கண்ணனைக் கேலி பேசுவதை நாம் பார்க்க முடியும்.

    இருக்குவேதம் குறிப்பிடும் தெய்வங்களுக்குட் தலை சிறந்த தெய்வமெனக் கருதப்படுபவன் ‘வருணன்’. பாடல்கள் இவனை மிக உயரிய நிலையில் வைத்துச் சித்திரிக்கின்றன. வருணனை மட்டும் தனியே போற்றும் பாடல்கள் பன்னிரண்டே. இத்தெய்வத்தின் கை, முகம், கண்கள் முதலிய உடலுறுப்புக்கள் கூறப்பட்டுள்ளன. இதைவிட நடத்தல், பவனி வருதல், இருத்தல். உண்ணுதல் முதலிய செயல்களை வருணன் செய்வதாக இப்பாடல்களிலிருந்து அறிகிறோம். இவ் வருணன் சூரியனைத் தன் இரு கண்களில் ஒன்றாகக் கொண்டு விளங்குகின்றான். இக்கண்ணாலேயே வருணன் உலக நடவடிக்கைகளை ஒன்றும் விடாது கவனிக்கின்றான். இவன் வேள்விகளில் தருப்பையின் மீது அமருபவன். பளபளக்கும் பொன்னாடை அணிந்து தன் மாளிகையில் அமர்ந்து மக்கள் செய்யுங் காரியங்களைக் காண்கிறான்.
    ‘பூஷன’ என்னுந் தெய்வத்தைப் பற்றி எட்டுச் சூக்தங்கள் இருக்கின்றன. இவை இவனைக் கைகால்கள் முதலிய உறுப்புக்களை உடையவனாக வர்ணிக்கின்றது.

    இந்தியாவில் இன்று வழங்கி வரும் தெய்வங்களுள் இருபெரும் கடவுளர் தலைசிறந்து விளங்குவர். இவ்விருவருள் ‘விஷ்ணு’ ஒருவன். இருக்கு வேதத்தில் இவன் மிகச் சிறு தெய்வமாகவே காணப்படுகிறான். ஐந்தாறு சூக்தங்களில் மட்டுமே இவன் போற்றப்படுகிறான்.

    இருக்குவேதத்தில் இருபதுக்கு அதிகமான பாடல்களில் ‘உஷை’ போற்றி வழுத்தப்படுகின்றான். இப்பாடல்கள் இத்தெய்வத்திற்கு உருவங் கொடுக்கின்றன. இவளே இருக்கு வேதத்தில் கூறப்படும் தனிப்பெரும் பெண் தெய்வம். இவன் கிழக்கே தோற்றுவள். ஒளியே இவள் அணிந்து விளங்கும் ஆடை. அழகிய ஆடை அணிந்து விளங்கும் உஷை ஆடல் அழகியாகப் போற்றப்படுகின்றாள். இவள் இருளை அகற்றுகின்றாள். இவள் களைவது இருளின் கரிய உடையை என்று கவி வர்ணிக்கின்றார். பருவங்கடந்து பன்னெடுங்காலம் வாழ்ந்து முதிர்ந்த பிராயம் எய்திக் காட்சியளிக்கும் இவள் எப்பொழுதும் இளமை சிறிதும் குன்றாது இளம் பிராயத்தினளாகத் தெரிவது கவியைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றது

    இருக்குவேதம் எடுத்துக் கூறும் சிறு தெய்வங்களுள் பர்ஜனியனும் ஒருவன். இவனைப் பற்றி மூன்று பாடல்கள் வருகின்றன. இவன் மழைத் தெய்வம்.

    பிருதுவி என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். பிருதுவியை ஒரு தெய்வமாக இருக்குவேதம் எடுத்துக் கூறுகின்றது.

    ஏக தெய்வ வணக்கத்துக்கு சில ஆதாரங்கள்:
    பகவத் கீதை
    அவன் மகாத்மா,கானுதர்கரியன் (7:19)
    சென்று விட்டனவும்,நிகழ்வனவும்,இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன்,ஆனால் என்னை எவனும் அறியான். (7:26)

    அவன் ஆதிதேவன்,பிரவாதவன் (10:12)

    4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
    ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்
    அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.
    ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி
    அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.
    “ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி” அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் – யஜூர் வேதம் பக்கம் 377)
    அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
    (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
    “அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே” இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
    (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

    ரிக் வேதம் (8:1:1)
    ”மா சிதான்யதியா ஷன்ஸதா” அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
    (ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

    * ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்.
    ( ரிக் வேதம் 1:164:46)

    ரிக் வேதம் குறிப்பிடும் இறைவனின் திருப்பெயர்களில் மிக அழகிய திருப்பெயர் ‘பிரம்மா’ என்பதாகும்.’படைப்பாளன்’ என்பது இதன் பொருள்.இதனை அரபியில் மொழி பெய‌ர்ப்போமேயானால் ‘கலிக்’ என்றாகும்.ஏக இறைவனை ‘கலிக்’ என்றோ ‘படைப்பாளன்’ என்றோ ‘பிரம்மா’ என்றோ அழைப்பதில் முஸ்லிம்களுக்கு எந்த மாற்றுக் க‌ருத்தில்லை……..ஆனால் ‘ பிரம்மாவிற்கு நான்கு தலை உண்டு’ என்று கூறுவதையே மறுக்கின்றனர்……..ரிக் வேதம் கூறும் மற்றொரு அழகிய திருநாமம் ‘விஷ்ணு’.இதன் பொருள் ‘பரிபாலிப்பவன்’.இதை அரபியில் மொழிப்பெயர்த்தால் ‘ரப்’ என்றாகிறது……..இறைவனை ‘ரப்’ என்றோ,’பரிபாலிப்பவன்’ என்றோ,’விஷ்ணு’ என்றோ கூறுவதில் முஸ்லிம்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.ஆனால்,’விஷ்ணுவுக்கு நான்கு கைகள் உண்டு.கைகளில் சக்கரமும் சங்குமாக பாம்பில் பள்ளி கொண்டிருப்பவர் ஆவார்’ என்பதையே மறுக்கின்றனர்……..

  136. “இன்று தமிழகத்தில் மட்டும் சமஸ்க்ரிதத்தில் சரளமாக பேச தெரிந்தவர்கள் இரண்டு லட்சத்திற்கும் மேல்”

    சாரங்கின் இச்செய்தி மிகப்பெரிய விசயம்.
    முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன்.

  137. // அனைவருக்கும் திருமால் என்பதே கொள்கை. அது வெறும்பேச்சில் இல்லாமல் செயலிலும் காட்டப்பட்டது. எனவேதான் திருமலைக்கு சோனியாவும் செல்லலாம். அப்துல்கலாமும் செல்லலாம். //

    திருமலை மட்டுமல்ல.. பண்டரிபுரத்திலும், காசி விசுவநாதர் ஆலயத்திலும், சோமநாதபுரத்திலும், துவாரகையிலும், ஸ்ரீசைலத்திலும், காளி கட்டத்திலும் எல்லா இடத்திலும் அப்படித் தான்… வட பாரதத்தின் கோயில்களில் இறைவனுக்கு அருகே சென்று பக்தர்களே பூஜை செய்யலாம், அந்த அளவுக்கு சமத்துவம் உள்ளது.. அங்கெல்லாம் தமிழ் அர்ச்சனையா நடக்கிறது? சம்ஸ்கிருத, வேத மந்திரங்கள் தானே சொல்லி பூஜை செய்கிறார்கள்?

    ஸ்ரீ ராமானுஜர் என்ற மிகப் பெரும் மகான் தமிழகத்தில் செய்தார், அவரைப் பற்றீ ஏதோ நீங்கள் கொஞ்சம் படித்திருக்கிறீர்கள், சந்தோஷம். அதை வைத்துக் கொண்டு ஓவராக எல்லாம் அறிந்தவன் போல் பேசுவதை நிறுத்துங்கள். அதே போன்று பாரத தேசம் முழுதும் அது போன்று பல மகான்கள் பல இடங்களில் சமய சீர்திருத்தம் செய்திருக்கிறார்கள். அதையும் உண்மையான இந்துக்களாகிய நாங்கள் அறிந்திருக்கிறோம்.

    இந்த ஜோ அமலனின் கருத்துக்களைப் பார்த்தால், அரை குடம் கூட அல்ல, கால் குடத்திற்கும் கம்மி என்று தெரிகிறது. இந்து மதத்தின் விஸ்வரூபம், விசாலம் இந்த ஆள் அறியவரவில்லை. ஒரு இந்துவாக, இந்துப் பண்பாட்டின் உள் வாழ்ந்து அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று இவருக்கு அனுபவம் இல்லை. இவர்.. தான் ஏதோ பெரிய வைணவ அபிமானி போல பாவனை செய்து கொண்டு குழப்படியாக ஏதோ எழுதுகிறார். உண்மையான வைஷ்ணவ நெறியாளர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.

  138. மீண்டும் ஜோ.அமலன் கூறுவது தவறான கருத்து என்பதைச் சுட்டுகிறோம். சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்து அவர் அறியாமல் அத்தகைய விமர்சனத்தை முன்வைத்திருந்தாலும்கூட, நம் தளத்தில் நடைபெறும் ஆக்க பூர்வமான விவாதங்களுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

    இருப்பினும், ஆபாசமற்ற வாசகர் மறுவினைகள் யாரிடம் இருந்து வந்தாலும், அதை வெளியிட வேண்டும் எனும் இந்துத்துவ திறந்த மனநிலையின்படி அவரது கருத்தையும் அனுமதிக்கிறோம்.

    வைணவம், சைவம் மட்டுமல்ல, சார்வாகம் உள்ளிட்ட இந்து தர்மத்தின் அனைத்துக் கூறுகளையும் அறிவுப் பரிமாற்றம் செய்யவே தமிழ் இந்து தளம் இயங்குகிறது. தரமான படைப்புகள் வருமானால், ஆசிரியர் குழு பதிப்பிக்கும்.

    கிறுத்துவரான ஜோ. அமலன் இந்து தர்மத்தின் மீது காட்டும் ஆர்வம் மானுடத்தின் நன்மைக்காகவும், உண்மையினை வெளிப்படுத்தவும் செயல்படும் என நம்புகிறோம். நம்பிக்கை மிக மென்மையான உணர்வு. நன்றிகள்.

  139. தமிழ் நாட்டில் ஒருவர் இன்னொருவருடன் பேசும் போது சமஸ்கிரதத்தில் பேசிக் கொள்ளும் நிகழ்வை நான் இதுவரை பார்த்தது இல்லை.

    என்னுடைய உறவுகாரங்க வீட்டிலேயே சில மாணவர்கள் பள்ளியில் சமஸ்கிரதம் எடுத்து படிக்கிறார்கள். “ஈசியா மார்க் வாங்கலாம் அங்கிள் அதுக்குத் தான்” என்கிறார்கள்.

    சமஸ்கிரதம் படிக்கும் இரண்டு மாணவர்கள் சேர்ந்தால் கூட தமிழில் தான் பேசிக் கொள்கிறர்கள். “அந்தப் படம் மரண மொக்கை” என நிகழ்கால தமிழில் பேசிக் கொள்கிறார்கள்.

    அப்படியே இரண்டு லட்சம் பேர் இருந்தாலும் தமிழ் இந்து இரண்டு லட்சம் பேருக்காக நடத்தப் படுகிறதா? 7 கோடி மக்களுக்காக நடத்தப் படுகிறதா?

  140. கிறுத்துவரான ஜோ. அமலன் ….//

    இங்குதான் ஆசிரியர் குழு தவறு செய்கிறது,

    சுடராளி ஜோசப் தெரியுமா உங்களுக்கு ?

    ஜோசப் என்றால் அவர் கிருத்துவரா ? அவருக்கு சுடராளி என்ற பட்டத்தை வழங்கியவர் ஆரென்று தெரியுமா உங்களுக்கு ? அவரின் ஆழ்வார் பாசுரப்பேருரைகளை எங்காவது கேட்டிருக்கிறீர்களா ?

    நான் ஆர் ? எம்மதத்தைச் சேர்ந்தவன் ? என் தெய்வமெது ? என்றெல்லாம் நீங்கள் எப்படி கற்பனை பண்ணலாம் ?

    ஆசிரியர் குழவே. பேரை வைத்து எந்த முடிவும் கட்டும் பழக்கத்தை இன்றோடு நீங்கள் விட்டுவிடுவது நலம்.

    உங்கள் தவறைச்சரி செய்ய ஒரு வழி:

    திரு ஜோசப் எங்கேயாவது சென்னையில் ஆழ்வார் உரை நிகழ்த்துவார். ஆங்கு சென்று அதைப்படியெடுத்து கட்டுரையாக ஈண்டு உமது வாசகர்களுக்காக வெளியிடுங்கள். அவர் கிருத்துவ தேவாலயங்களிலோ, அல்லது பொது மேடைகளிலோ உரையாற்றுவதில்லை. இந்து மடங்களிலும் கோயில்களிலும்தான் உரையாற்றுவார். காஞ்சிமடக்கோயில்களிலிலும் (இந்தியா முழுவதும் உள்ளன) உண்டு. அம்மடத்திலேயே கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.

  141. இத்துடன் கோவிந்தா சொல்லி முடித்துவிடுகிறேன்.

  142. சுவனப் பிரியன்,

    உங்களின் சகிப்புத் தன்மை இன்மை மிகத் தெளிவாக விளங்குகிறது.

    //இந்து மதத்தினை தீவிரமாக பின்பற்றுபவர்கள் என்றேனும் ஏன் பிரம்மாவைக் கும்பிடுவது இல்லை. பிற்காலத்தில் பிரம்மா என்பவருக்கு சரஸ்வதி என்ற மனைவியை வைத்து நான்கு முகங்களைக் கொடுத்து ஒரு மனிதனாக மாற்றப்பட்டு பின்னர். சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களை இணைத்து மூன்றோடு ஒன்றாக்கப் பட்டு இன்று பிரம்மம் என்றாலோ பிரம்மன் என்றாலோ என்னவென்று தெரியாத அளவுக்கு தரம் இறங்கிப் போய்விட்டது.//

    இந்துக்கள் யாரைக் கும்பிட்டால் உங்களுக்கு என்ன?

    கருமாரி அம்மனையோ , முருகனையோ, பாலாஜியை யோ தொழுபவன் எனக்கு கஷ்டம் வரக் கூடாது, குடும்பம் நல்ல இருக்கணும் என்று அமைதியாகத் தொழுகிறான்.

    அவன் தொழும் போதும், தொழுது விட்டு வரும் போதும் அவன் மனதில் அமைதியே இருக்கிறது. நான் கும்பிடற கடவுள் மட்டுமே உண்மை, மத்த கடவுள்கள் ஜீவனில்லாத பொய்த் தேவர்கள் என்பது போன்ற நினைவுகள் அவன் மனதில் இல்லை. அதனால் இன்னொரு மதத்தினர் கும்பிடுவதைப் பார்க்கும் போது அவனுக்கு ஆவேசம் பொங்குவதில்லை. இப்படி அமைதியான வழிபாட்டை செய்பவன் மனதில் மத வெறி கோட்பாட்டை திணிப்பது எளிது அல்ல.

    பிரம்மம், ஏகம் எனபது எல்லாம் இந்துக்களுக்கு தெரிந்ததுதான். இந்த உலகில் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொண்ட ஒரே ஒருவராக தானே கடவுள் என்றும் , தானே மனிதனாக அவதாரம் எடுத்து வந்தார் என்றும் சொல்லிய ஒரே ஒருவராக கிருஷ்ணர் இருக்கிறார்.

    அதற்க்கு முன்பே “அஹம் பிரமாஸ்மி”, நான் பிரம்மமாக இருக்கிறேன் என்று மனிதன் தானே கடவுளின் தன்மையிலே இருப்பதாகவும், அதை அறியாமல் இருப்பதாகவும் சொல்கின்றன.

    அதையே கிருஷ்ணன் எல்லா உயிர்களின் ஆன்மாகவும் நானே இருக்கிறேன் என்கிறான். எனவே ஏகம் என்பது புது தத்துவம் அல்ல. தான் அவ்வப் பொது பல அவதாரங்கள் எடுப்பதாகவும் கிருஷ்ணன் சொல்கிறான். அவ்வாறக இராமர், முருகன்… இப்படி பலரையும் வணங்கவும் இந்து மத்தில் தடை இல்லை.

    பல உருவங்களில் தெய்வத்தை வழிபாடு செய்யக் கூடாது என்று எந்த வேதாமாவது சொல்லி இருக்கிறதா? காட்ட முடியுமா?

    தன் மார்க்கக் கருத்தை மட்டுமே உலகில் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும் என்று துடிக்க கூடாது . சகிப்புத் தன்மையுடன் வாழ வேண்டும்!

  143. தமிழன்!
    //தேனின் மருத்துவ குணங்கள் பற்றி அல்லாவுக்கு தெரியும் முன்பே மனிதர்களுக்கு தெரியும்..
    Ebers Papyrus – எகிப்த்தின் பழைய மருத்துவனூல் 1500BC – அல்லா இதைத்தான் காப்பி அடித்து தான் தான் அதை கண்டுபிடித்த மாதிரி கூறியுள்ளார்….. அதை வேற நீங்கள் பெருமையாக இங்கே கூறுகிறீர்கள்.//

    ‘இது முந்தைய வேதங்களிலும் ஆப்ரஹாம், மோசேயுடைய வேதங்களிலும் உள்ளது.’
    -குர்ஆன் 87:18,19

    எகிப்தியர்களுக்கு இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்தான் மோசே! இவரது காலம் கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன்பு என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றது.

    எனவே குர்ஆனின் செய்திகள் புதியதன்று. மனித குலம் தோன்றியதிலிருந்து இறைவன் புறத்திலிருந்து வழி வழியாக வந்த செய்திகளே வேதங்கள்.

    திராவிடன்!
    //அப்புறம் என்ன பள்ளியில் பாங்கு சொல்வதும் நமாஸ் படிப்பதும் தமிழில் செய்ய ஆரம்பிக்கவேண்டியதுதானே? முடியுமா? யோசித்ததாவது உண்டா?//

    ஜனகனமன என்ற தேசிய கீதத்தை வங்காள மொழியில் இருந்தாலும் நாட்டுப் பற்றை தெரிவிப்பதற்காக நாம் மரியாதை செலுத்துகிறோம். அது போலவே உலக ஒற்றுமைக்காக பாங்கும், தொழுகையும் அரபியில் நடத்தப்படுகிறது. நீங்கள் அமெரிக்கா சென்றாலும் ஆப்ரிக்கா சென்றாலும் ஒரே பாங்குதான்: ஒரே தொழுகை முறைதான். கூட்டுத் தொழுகை முடிந்தவுடன் பிரார்த்தனை என்ற ஒரு சடங்கு உள்ளது. அது அவரவர் தாய் மொழியில்தான் கேட்கப்டுகிறது. ஒவ்வவொரு தொழுகைக்கு பின்னும் நான் என் தாய் மொழியான தமிழில்தான் பிரார்த்தனை புரிகிறேன்.

    எப்போது ஆட்சேபணை வர வேண்டும்? அரபி மட்டுமே தேவ பாஷை. அரபி படிக்க யாரும் விரும்பினாலும் அவரது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று குர்ஆனில் எங்காவது சொல்லப்பட்டால் உங்களோடு சேர்ந்து நானும் ஆட்சேபிக்கிறேன்.

    //இது ஒரு பள்ளியிலாவது தமிழில் அல்லது அரபி அல்லாத மொழியில் தொழுகை நடக்கும் போது சொல்லவேண்டும் நண்பரே.//

    அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு தொழுகையில் பல முறை இந்த வசனங்கள் ஓதப்படுகிறது. தமிழில் விளக்கமும் கொடுக்கப்படுகிறது.

    //கருத்து என்னவோ நல்லாத்தான் இருக்கு ஆனால்
    நண்பரே நடைமுறையில் எந்த இஸ்லாமியரும் செயல்படுத்தாத கருத்துக்கள்//

    இதற்கு காரணம் குர்ஆனை மொழி பெயர்க்காமலேயே அரபியில் பொருள் புரியாமல் மந்திரம் போல் ஓதி வந்ததுதான். இஸ்லாம் தமிழகத்துக்கு வந்து ஆயிரம் வருடம் ஆனாலும் குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது 100 வருடங்களுக்கு முன்பு தான். தற்போதுதான் தமிழ் மொழி பெயர்ப்பை படிக்கும் ஆர்வம் இஸ்லாமிய இளைஞர்களிடத்தில் வந்துள்ளது. நீங்கள் விரும்பும் மாற்றம் இனிமேல் அவசியம் ஏற்படும்.

  144. Suvanappriyan,

    //இறைவனை ‘ரப்’ என்றோ,’பரிபாலிப்பவன்’ என்றோ,’விஷ்ணு’ என்றோ கூறுவதில் முஸ்லிம்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.ஆனால்,’விஷ்ணுவுக்கு நான்கு கைகள் உண்டு.கைகளில் சக்கரமும் சங்குமாக பாம்பில் பள்ளி கொண்டிருப்பவர் ஆவார்’ என்பதையே மறுக்கின்றனர்……..//

    இஸ்லாமியர்கள் மெக்கா இருக்கும் திசையை நோக்கி தொழுகின்றனர், இதை உலகில் யாரவாது மறுக்கிறார்களா? கடவுள் அந்த திசையில் மட்டும்தான், அந்த இடத்தில் மட்டும் தான் இருக்கிறாரா என்று கேட்கிறார்களா? நீங்கள் எப்படிக் கும்பிட்டாலும் பிறர் அதை வெறுக்கவோ, மறுக்கவோ இல்லை.

    பிற மதத்தினர் “கடவுளக்கு நான்கு கைகள் உண்டு,கைகளில் சக்கரமும் சங்குமாக பாம்பில் பள்ளி கொண்டிருப்பவர் ஆவார்’ என்று கருதினால் உங்களுக்கு என்ன பிரச்சினை?

    எதற்கு அதை மறுக்க வேண்டும் ? அவர்கள் கும்பிட்டு போகிறார்கள் என்று சகஜமாக அமைதியாக இருக்க வேண்டியதுதானே!

  145. ஜோ அமலன் சைவ வைணவத் தகராறு இங்கே வரவேண்டும் என்ற நோக்கோடு இந்தத் தளத்தில் எழுதுகிறார்.

    மேலும் அவர் வேறெரு கட்டுரையில் ஜெயமோகன் தனது தளத்தில் பத்மநாபன் என்றுதான் எழுதுகிறார் “ஸ்ரீ” போடவில்லை என்று ஜெயமோகன்க்கு எதிராக இங்குள்ள வைஷ்ணவர்கள் அவரது தளத்தில் போய் எழுதவேண்டும் என்ற நோக்கில் எழுதினார்.

    ஆனால் இங்கே இந்தக் கட்டுரையில் எழுதும்போது மட்டும் தனக்கு “ஸ்ரீ” போடத் தெரியாது என்கிறார்.

    கிறிஸ்தவ மிஷ”நரி”களிடம் நல்ல பயிற்சி எடுத்திருக்கிறார் போலும். தனிமனிதத் தாக்குதல் எனக்கும் ஹிந்து மதத்திற்கும் உடன்பாடல்ல என்பதால் அமைதி காத்தேன். ஆனால் அவர் தனது விஷமத்தில் எல்லை மீறிப் போவதால் அடையாளம் காட்டவேண்டியதாகிறது.

  146. ஜோ அமலன்,

    வெகு நாட்களாக நீங்கள் எப்படிப்பட்டவர் என்ன கூற வருகிறீர்கள் என்று நான் இணைய தளத்தில் பார்த்து வருகிறேன்.

    “வேதங்களில் இடைச்செருகல் – ஆங்காங்கே அவரவர் வசதிக்கேற்ப சேர்த்துக்கொண்டு விட்டனர்”, “மணிப்ரவாளத்தை மக்களை மயக்குவதற்காக வைணவ ஆச்சாரியார்கள் உபயோகித்தார்கள்”, “தொண்டரடிப்பொடி ஆழ்வார் இஸ்லாமிய ஜிகாதிகளைப் போல”, “வைனவர்களைப் பொறுத்தவரை சிவபெருமான் ஒரு false God” என்றெல்லாம் எழுதிவிட்டு, வைணவத்திற்கு நீங்கள் தொண்டு செய்வது போன்ற ஒரு மயக்கத்தை இங்கு ஏற்படுத்த வேண்டாம். வேதத்திலேயே இடைச்செருகல் உள்ளது என்று கூறும் எவனுக்கும் மற்றவர்கள் வைணவத்தைப் பற்றி எழுதுவதில் குறை சொல்ல அருகதை இல்லை.

    நான்கு வேதங்கள் தான் வைணவத்திற்கு அடிப்படை – ஸ்ரீவைஷ்ணவத்தை வேதத்திலிருந்தும் வடமொழியிலிருந்தும் நீங்கள் வேருடன் பிடுங்கி எடுத்துக் காட்ட முயற்சி செய்வது வீண்.

    சரணாகதி என்றால் என்ன, அதன் ஆறு அங்கங்கள் என்ன இதெல்லாம் தெரியாமல் வைணவத்தை இஸ்லாத்துடன் சம்பந்தப்படுத்துவது வேறு!

    ஜோ அமலன் இணையத்தில் கூறியுள்ள பொன்மொழிகள் இங்கே:

    ——————————–

    “திருமாலே ஒரே பரம்பொருள் என்றால், மற்ற தெய்வங்கள் பொய் என்றுதான் பொருள். அத்தெய்வங்களைச்சாத்தான்கள் என்று ஓப்பனாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.”

    ——————————–

    “கிடைக்கட்டும். நாம் அதைப்பற்றியா பேசுகிறோம். நீங்கள் எவ்வளவுதான் நல்லவராயிருப்பினும், திருமாலைத் தொழாமல் பர தெய்வங்களை (சிவனும் அடக்கம்) தொழுதால், you are out, according to Azvaars and also, today Srivaishnavas.”

    ——————————–

    “What is your answer to my point that Thondarippodiyaazvaar wanted to cut off the heads of Buddhists, Jains, and Atheists?

    Ditto with Muslims who want to behead kafirs.

    You want the paasuram from Thirumaalai.”

    ——————————–

    “Similarly, if azvaars declare that only Thiurmal is the God, it means all other Gods and goddesses are false.

    Exactly like fanatical muslims and chritian evangelists declare.”

    ——————————–

    “In other words, monotheism, with slight difference. The Thirumall is to be worshippied along with his Consort Sri as she will help you take your representations to Him.

    Otherwise, this monotheism is akin to Islam.”

    ———————————

    “வேள்விக்குடி, முக்கூர் நரசிம்மாச்சாரியார் – இவர்கள் சிரி வைணவர்களே. ஆயினும், ஆச்சாரியர்கள் இல்லை.

    ஜீயர்களே ஆச்சாரியர்கள்.”

    ———————————

    chillsam சொல்கிறார்:

    செப்டம்பர் 6, 2010 at 10:07 மு.பகல்

    Jo Amalan Rayen Fernando
    அவர்கள் மிக நேர்த்தியாக எழுதி வருகிறார்கள்; உங்கள் வைணவ ஞானத்தினை சாதாரண பின்னூட்டத்தில் நிறுவிட இயலாது;

    தாங்கள் விரும்பினால் எமது தளத்தில் இந்த காரியங்களைத் தொடராக எழுத அன்புடன் அழைக்கிறேன்;
    https://chillsam.activeboard.com/

    மேலும் தங்களது தொடர்பு மின்னஞ்சல் முகவரியையும் அளிக்க வேண்டுகிறேன்;
    https://www.chillsam@yahoo.co.in
    https://chillsam.wordpress.com/

    சர்வவல்ல ஏகக்கடவுளான சிருஷ்டி கர்த்தாவும் பரம்பொருளும் ப்ரஜாபதியுமான சர்வேஸ்வரன் தாமே உமக்கு நீடித்த ஆயுளையும் நிறைந்த ஞானத்தையும் தந்தருள்வாராக‌.

  147. @சுவனப்பிரியன்
    ////மகாபாரதக் கண்ணன் ஒரு சாதாரண பாத்திரம். சிசுபாலன் கூட கிண்டல் செய்கிறான். //
    சிசுபாலனை அவன் தாய்க்காக நூறு முறை மன்னித்து பின் வதம் செய்து விஸ்வரூபம் எடுக்கிறான் கண்ணன்.
    கண்ணன் மகாபாரத்தில் கீதை உரைக்கும் வரை தன்னை முழுவதும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
    இடைசெருகல்கள் என்று எதையாவது யாராவது சொன்னதை எடுத்துக் கொண்டு வந்து அது தான் மொத்தமும் என்று சொல்ல முயலுமுன் புரிந்து கொள்ளவும். இங்கே இறைவன் என்பவன் சங்கு சக்கிரம் , ஜடாமுடி என்ற உருவகங்களைப் புரிந்து கொள்ள உங்களது மனதில் இருக்கும் தளைகள் தாண்டி வர வேண்டும்.
    கடவுள் கடவுளின் படைப்புகள் என்பது குறித்த உங்களது புத்தக அறிவின் புரிதல்களை வைத்துக் கொண்டு இதை புரிந்து கொள்ள முடியாது.

  148. \\இந்த விசயம் அஃதாவது: “பிராந்திய மொழிகளை மட்டும்தான் அரசு வளர்க்கவேண்டும். ஆங்கில வழிக்கல்வியை ஊக்குவிக்கக்கூடாது” என்பது இங்கு பேசப்படும் விசயத்தை மிகவும் திருப்பும். என்னைச்சொல்லிவிட்டு நீங்களே செய்யலாமா ?\\

    இங்கு பிரச்சனை அது அல்ல. பிரச்சனை வலுக்கட்டாயமாக பிராந்திய மொழி பாடத்திட்டத்தை முழுமையாக மாற்றியதோடு மட்டும் அல்லாமல், அவர்களுக்கு கொடுக்கக் கூடிய மானியத்தையும் நிறுத்தியதே ஆகும்.

    மொழிக்கும் அறிவுக்கும் சம்மந்தம் இல்லை என்பது எனது கருத்து

  149. ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்’
    -ரிக்வேதம 1:164:46

    ஓம் அப்பா போற்றி* ஓம் அரனே போற்றி
    * ஓம் அமுதே போற்றி* ஓம் அழகே போற்றி
    * ஓம் அத்தா போற்றி* ஓம் அற்புத போற்றி
    * ஓம் அறிவா போற்றி* ஓம் அம்பலா போற்றி
    * ஓம் அரியோன் போற்றி * ஓம் அருந்த வா போற்றி
    * ஓம் அணுவே போற்றி * ஓம் அண்டா போற்றி
    * ஓம் ஆதியே போற்றி * ஓம் ஆரங்கா போற்றி
    * ஓம் ஆரமுதே போற்றி* ஓம் ஆரணா போற்றி
    * ஓம் ஆண்டவா போற்றி* ஓம் ஆலவாமா போற்றி
    * ஓம் ஆரூரா போற்றி * ஓம் இறைவா போற்றி
    * ஓம் இடபா போற்றி * ஓம் இன்பா போற்றி
    * ஓம் ஈசா போற்றி * ஓம் உடையாய் போற்றி
    * ஓம் உணர்வே போற்றி* ஓம் உயிரே போற்றி
    * ஓம் ஊ ழியே போற்றி* ஓம் எண்ணே போற்றி
    * ஓம் எழுத்தே போற்றி* ஓம் என்ருணா போற்றி
    * ஓம் எழிலா போற்றி* ஓம் எளியே போற்றி
    * ஓம் ஏகா போற்றி* ஓம் ஏழிசையே போற்றி
    * ஓம் ஏநூர்ந்தா போற்றி* ஓம் ஐயா போற்றி
    * ஓம் ஒருவா போற்றி* ஓம் ஒப்பிலா போற்றி
    * ஓம் ஒளியே போற்றி* ஓம் ஓங்காரா போற்றி
    * ஓம் கடம்பா போற்றி* ஓம் கதிரே போற்றி
    * ஓம் கதியே போற்றி* ஓம் கனியே போற்றி
    * ஓம் கலையே போற்றி* ஓம் காருண்யா போற்றி
    * ஓம் குறியே போற்றி* ஓம் குருவே போற்றி
    * ஓம் குணமே போற்றி* ஓம் கூ த்தா போற்றி
    * ஓம் சடையா போற்றி* ஓம் சங்கரா போற்றி
    * ஓம் சதுரா போற்றி* ஓம் சதாசிவா போற்றி
    * ஓம் சிவமே போற்றி* ஓம் சிறமே போற்றி
    * ஓம் சித்தா போற்றி* ஓம் சீரா போற்றி
    * ஓம் சுடரே போற்றி* ஓம் சுந்தரா போற்றி
    * ஓம் செல்வா போற்றி* ஓம் செங்கணா போற்றி
    * ஓம் செம்பொனா போற்றி* ஓம் சொல்லே போற்றி
    * ஓம் ஞாயிரே போற்றி * ஓம் ஞானமே போற்றி
    * ஓம் தமிழே போற்றி * ஓம் அரசே போற்றி
    * ஓம் தத்துவா போற்றி* ஓம் தலைவா போற்றி
    * ஓம் தந்தையே போற்றி* ஓம் தாயே போற்றி
    * ஓம் தாண்டவா போற்றி* ஓம் திங்களே போற்றி
    * ஓம் திசையே போற்றி* ஓம் திரிசூலா போற்றி
    * ஓம் துணையே போற்றி* ஓம் தெளிவே போற்றி
    * ஓம் தேவதேவே போற்றி* ஓம் தோழா போற்றி
    * ஓம் நமச்சிவாயா போற்றி* ஓம் நண்பா போற்றி
    * ஓம் நஞ்சுண்டா போற்றி* ஓம் நான்மறையா போற்றி
    * ஓம் நிறைவே போற்றி* ஓம் நினைவே போற்றி
    * ஓம் நீலகண்டா போற்றி* ஓம் நெறியே போற்றி
    * ஓம் பண்ணே போற்றி* ஓம் பித்தா போற்றி
    * ஓம் புராணா போற்றி* ஓம் பெரியோய் போற்றி
    * ஓம் பொருளே போற்றி* ஓம் பொங்கரவா போற்றி
    * ஓம் மணியே போற்றி* ஓம் மதிசூடியே போற்றி
    * ஓம் மருந்தே போற்றி* ஓம் மலையே போற்றி
    * ஓம் மஞ்சா போற்றி* ஓம் மணாளா போற்றி
    * ஓம் மெய்யே போற்றி* ஓம் முகிலே போற்றி
    * ஓம் முத்தா போற்றி* ஓம் முதல்வா போற்றி
    * ஓம் வாழ்வே போற்றி* ஓம் வைப்பே போற்றி

    ‘இறைவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்.’
    -குர்ஆன் 7:180

    ‘அல்லாஹ் என்று அழையுங்கள். ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.’ என்று முஹம்மதே! கூறுவீராக!’
    -குர்ஆன் 17:110
    குர்ஆனில் கூறப்படும் இறைவனின் மற்ற தன்மைகள், பெயர்கள்:

    ரப்-அதிபதி, அவ்வல்-முதலானவன், ஆகிர்-முடிவானவன், பாரீ-உருவாக்குபவன், பாத்தின்-அந்தரங்கமானவன், பதீவு-முன்மாதிரியின்றி படைத்தவன், பர்ரு-நல்லது செய்பவன், பஷீர்-பார்ப்பவன், தவ்வாப்-ம்னிப்பை ஏற்பவன், ஜாமிஉ-திரட்டுபவன், ஜப்பார்-அடக்கி ஆள்பவன், ஹஸீப்-கணக்கெடுப்பவன், ஹஃபீன்-காப்பவன், ஹக்-மெய்யானவன், ஹக்கீம்-ஞானமிக்கவன், ஹலீம்-சகிப்பவன், ஹமீத்-புகழுக்குரியவன், ஹய்யு-உயிரள்ளவன், ஹாலிக்-படைத்தவன், ஹபீர்-நன்கறிந்தவன், ரவூஃப்-இரக்கமுடையவன், ரஹ்மான்-அருளாளன், ரஹீம்-நிகரற்ற அன்புடையோன், ராஸிக், ரஸ்ஸாக்-உணவளிப்பவன், ரகீப்-கண்காணிப்பவன், ஸலாம்-நிம்மதி அளிப்பவன், ஸமீஉ-செவியுறுபவன், ஷக்கூர்-நன்றியை ஏற்பவன், ஷஹீத்-நேரடியாகக் கண்காணிப்பவன், ஸமத்-தேவையற்றவன், ளாஹிர்-வெளிப்படையானவன், அஸீஸ்-மிகைத்தவன், அளீம்-மகத்தானவன், அஃபுவ்வு-பெருந்தன்மையுடன் மன்னிப்பவன், அல்லாமுல் குயுப்-மறைவானவற்றை அறிபவன், அலிய்யு-உயர்ந்தவன், அலீம்-அறிந்தவன், கஃபூர்-மிகவும் மன்னிப்பவன், கனிய்யு-தேவையற்றவன், ஃபத்தாஹ்-தீர்ப்பளிப்பவன், குத்தூஸ்-தூயவன், காதிர்-ஆற்றலுடையவன், கரீப்-அருகில் உள்ளவன், ஹாகிம்-தீர்ப்பு வழங்குபவன், கவிய்யு-வலிமையானவன், கய்யூம்-நிலையானவன், கபீர்-பெரியவன், அக்ரம்-பெரும் வள்ளல், லத்தீஃப்-நுட்பமானவன், முஃமின்-அபயமளிப்பவன், முதஆலி-உயர்ந்தவன், முதகப்பிர்-பெருமைக்கு சொந்தக்காரன், மதீன்-உறுதியானவன், முஜிப்-ஏற்பவன், பதிலளிப்பவன், மஜீத்-மகத்தானவன், முஹ்யீ-உயிர் கொடுப்பவன், முஸவ்விர்-வடிவமைப்பவன், முக்ததிர்-ஆற்றலுடையவன், முகீத்-ஆற்றலுடையவன், மாலிகுல் முல்க்-ஆட்சிக்கு உரிமையாளன், மாலிகு யவ்மித்தீன்-நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி, முபீன்-தெளிவுபடுத்துபவன், முஹீத்-முழுமையாக அறிபவன், மலிக்-அரசன், துன்திகாம்-பழிதீர்ப்பவன், முன்தகீம்-பழி தீர்ப்பவன், முஹைமின் கண்காணிப்பவன், மவ்லா-எஜமான், நூர்-ஒளி, ஹாதி-வழிகாட்டுபவன், வாஹித்-ஏகன், வாரிஸ்-உரிமையாளன், வாஸிவு-தாராளமானவன், வதூத்-அன்புடையவன், வக்கீல்-பொறுப்பாளன், வலீ-பொறுப்பாளன், நஸீர்-உதபுபவன், வஹ்ஹாப்-வள்ளல்

  150. சுவனப்ரியன்,

    நான் முன்பே சொன்னேன் வேதம் குர்ஆன் அல்ல அதை உங்களால் நிச்சயமாக சரளமாக விளங்கிக்கொள்ள முடியாது

    //
    இந்து மதத்தினை தீவிரமாக பின்பற்றுபவர்கள் என்றேனும் ஏன் பிரம்மாவைக் கும்பிடுவது இல்லை
    //
    ஜாலியாக சொன்னால் அது எங்கள் இஷ்டம். உங்களுக்கு ஏன் கஷ்டம்.
    உங்கள் தகவலுக்கு பிரம்மாவிற்கு பல கோவில்கள் உள்ளன. பிரம்மாவை மனிதர்கள் வணங்காமல் இல்லை. எல்லா யாகங்களிலும் அவரை ஆவாஹனம் செய்யாமல் யாகம் தொடங்கப்படுவதில்லை. ப்ராம்மவிற்கு அதிகம் கோவில்கள் இல்லை அவ்வளவே.
    அது சரி அக்னி வாயு கூடத்தான் ஹிந்து தர்மத்தில் தேவதாக்கள் அனால் அவர்களுக்கும் கோவில்கள் இல்லையே. அவர்களை மக்கள் ஏன் கும்பிடுவதில்லை? இப்படி ஏன் உங்களுக்கு தோனவில்லை. யாகம் நடக்கும் பொது இவர்களுக்கு சிறப்பான வழிபாடுகள் உள்ளன. உதாரணமாக ப்ரஜபதையே ஸ்வாஹா ப்ரஜபதையே இதம் ந மம. அக்னேயே ஸ்வாஹா அக்னேயே இதம் ந மம.

    பிரம்மாவிற்கு ஏன் அதிக கோவில்கள் இல்லை என்பதற்கான காரணங்களை ஜெயஸ்ரீ சாரநாதன் என்பவர் இந்த தலித்திலேயே எழுடயுள்ளார் அதை படிங்கள். அதை இங்கேயே சொல்ல முடியாது ஏன் என்றால் ஒரு முழு கட்டுரையை படித்தால் மட்டுமே அது புரியும். சரியா

    //பிருதுவி என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். பிருதுவியை ஒரு தெய்வமாக இருக்குவேதம் எடுத்துக் கூறுகின்றது.
    //

    ஹைய் ஹைய் – பிருதுவி என்பது ஒரு பரப்ரம்மத்தின் ஒரு நிலை – இதை கீதை விளக்குகிறதே. ரிக் வேதமும் விளக்குகிறது.

    சரி பிரிதிவி கடவுள் என்றும் சொல்லுவோமே அதில் என்ன உங்கள்ளு பிரச்சனையை. எங்கள் கிருஷ்ணன் ஒரு ஏழு பெட்டு மேல தூங்கறவர் இல்லை – எல்லாவிடத்திலும் இருப்பார். ப்ருடுவியிலும் இருக்கிறார். ப்ரிதுவியும் கடவுளே. மண்ணை தெய்வமாக கருதும் மனிதனே உயர்கிரார்ன். இறைவனை மண்ணில் கானத்தெரியாதவன் எங்கு காணப் போகிறான்.

    பிரம்மன் பிரம்ம என்று ஏன் சகட்டு மேனிக்கு உளறுகிறீர்கள் – பிரம்மம் என்பது வேறு சப்தம் பிரம்ம என்பது வேறு சப்தம் (சமஸ்க்ரிதத்தில்) . உங்களுக்கு தெரிவில்லை என்றால் உளறக்கூடாது. நாராயநாத் பிரம்ம ஜாயதே (நாராயணனிடமிருந்து பிரம்மா வந்தார் ) என்று வேதத்தில் தெளிவாகவே உள்ளது.

    //
    பகவத் கீதையில், உலக நடப்புகள் அனைத்திற்கும் காரணமானவராகக் கிருஷ்ணர் காட்டப்படுகிறார். உபநிடதங்கள் ‘பிரம்மம்’ என ஒரு முழுமையை (absolute) ஏற்படுத்திக் காட்ட முயன்றன. ஏறத்தாழ அந்நிலைக்குக் கிருஷ்ணன் கீதையில் கொண்டுவரப்படுகின்றார். ‘ஆக்குபவன் நானே, ஆக்கப்படுபவன் நானே, கொல்பவன் நானே, கொல்லப்படுபவனும் நானே’ என்பது போன்றதோர் ‘ஒருமை வாதம்’ (ஏகம்) அங்கு நிலைநிறுத்தப்படுகிறது. இந்துக் கடவுள் தத்துவம் அனேகத்திலிருந்து ஏகத்தை நோக்கி நகர்கிறது.
    //

    ஏன் சார் இப்படி உளறுகிறீர்கள். இந்து மதம் நகர்வது ஏகத்திளிருந்து அனேகத்திர்க்கு உல்டா இல்லை . தலைகீழாகவே எல்லாத்தையும் படித்து பழக்கம் உங்களுக்கு.

    ரிக் வேத ஷாந்தி மந்த்ரம் – நமோ பிரம்மனே (பிரம்மா (தமிழில் பிரமன்) இல்லை , பிரம்ம சப்தத்தின் நாலாவது வேற்றுமை உறுபு)

    நமஸ்தே வாயு. த்வம் ஏவ ப்ரத்யக்ஷம் ப்ராமாசி (வாயுவே நீதான் நாங்கள் அறியக்கூடிய (தொடு உணர்ச்சியால்) பரமாத்மாவாக இருக்கிறாய்)

    வேதத்தில் ஏக இறைவன் மற்றும் பல தெய்வங்கள் சேர்ந்தே வருவதர்க்கு இதுவே பல சான்றுகலில் ஒன்று. இதற்கு மனிப்ரவாலத்தில் சமானாதிகாரணம் செய்வது என்று பெயர். தமிழில் சொன்னால் ஒரே வேற்றுமயில் படிப்பது.

    நன்பரே இது புனித நூல்கள் மாதிரி இல்லை எப்படி ககூஸ் போக வேண்டும் என்பது போல இருக்காது. இல்லாட்டி சும்மா மேம்போக்கா எல்லாரும் ந்ல்லா இருஙப்பா என்றேல்லாம் இருக்கது. படித்து விளஙிக்கொள்வது கஷ்டம் தான்

    //
    ஒரே வேதத்தில் ஓரிறைக் கோட்பாடும் பல தெய்வ வணக்கமும் எவ்வாறு வர முடியும். இங்கு ஏதோ ஒரு கொள்கை இடைச் செருகலாக இருக்க வாய்ப்புண்டு. கூகுளில் தேடியதில் கிடைத்த சில தகவல்களை பகிர்கிறேன். வேதத்தை நன்கு படித்தவர்கள் மேலதிக விளக்கம் தரவும்.
    //

    ஏன் இப்படி பேசுகிகிறீர்கள். நண்பரே இது குர் ஆன் அல்ல. எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக குத்து வெட்டு கொலை செய் என்று சொல்ல.

    மொத்தம் மூன்று நிலை உள்ளது walking, dreaming , deep sleep என்று

    இஸ்லாத்தில் நீங்கள் காண்பது வெறும் walking state மட்டுமே. அதனால் தான் நீங்கள் இறைவன் வேறு, நான் வேறு மரம் வேறு, செடி வேறு என்கிறீர்கள்.

    ஹிந்துத்வத்தில் இந்த மூன்று நிலைகளுமே ஆராயப்படுகின்றன. மேலே சொன்னபடி walking ஸ்டேட்டில் பார்த்தல் வாயு வேறு தான் ஆனால் ஆழ் நிலையில் (deep sleep) எல்லாம் ஒன்றே. நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொது உங்களுக்கு எதுவுமே தெரியாது – அங்கு அல்லாவும் இல்லை, மரமும் இல்லை, நானும் இல்லை. நீங்கள் மட்டுமே. (இது சடக்கென்று உங்களுக்கு புரியாது, கொஞ்சம் சிந்தியுங்கள்).

    கனவு நிலையை சற்று விளக்க வேண்டும் என்றால் ஒரு உதாரணம் தருகிறேன். நீங்கள் விழித்துக் கொண்டு இருக்கும் பொழுது உங்கள் அம்மாவை சூரிய ஒளியில் பார்கிறீர்கள். கனவில் கூட உங்கள் அம்மாவை பார்கிறீர்கள். கனவில் ஒழி எங்கிருந்து வருகிறது ? கனவில் சூரியன் உண்டா? மின்சார விளக்கு உண்டா ? அது ஆன்மாவின் ஒளியால் (ஆன்மா ஒளி மயமானது) சாத்திய படுகிறது என்று சொல்கிறது ஹுது மதம்.

    // ரிக் வேதம் குறிப்பிடும் இறைவனின் திருப்பெயர்களில் மிக அழகிய திருப்பெயர் ‘பிரம்மா’ என்பதாகும்.’படைப்பாளன்’ என்பது இதன் பொருள்.//

    சுவனப்ப்ரியன் மன்னிக்கவும் சமஸ்க்ரிதம் தெரியாமல் வேத அர்தம் நிச்சயமாக கொட்க்க இயலாது. ப்ரம்மா என்பது அகாராந்த புல்லிங்க ஷப்தம் (ஆவில் முடியும் ஆன் பால்) ப்ரம்மம் என்பது மகாராந்த நபும்சகலிங்க ஷப்தம் (மாவில் முடியும் அஃறினை (neuter gender) – ஆமாம் எங்களுக்கு ப்ரம்மம் that தான் he she இல்லை ). இந்த இரண்டயும் வேறு வேறாக தான் ரிக் வேதம் சொல்கிறது.

    ப்ரம்மம் என்பதற்ககு படைப்பாளி என்று பெயர் இல்லை. வளர்வது என்று பொருள்

    ப்ரம்மா என்பதற்ககு படைப்பாளி என்று பெயர் இல்லை. ப்ரம்மம் ஆ அதாவது ப்ரம்மதிலிருந்து வந்தவர் படைக்கப்ட்டவர் என்று பெயர். நீங்கள் வழக்கம் போல உல்டா செய்து சொல்லிருகீங்க.

    நண்பரே ஹிந்து மதம் சொல்வது உத்தமமான ஏக இறைவன் கொள்கை – இங்கே அவர் ஒருவரே இருக்கிறார். மற்றவை எல்லாம் அசத்யம். இது ரிக் வேத புருஷ சூக்தத்தில் மிக அழகாக வர்ணிக்கப்படுகிறது

    இத்தோட இன்னைக்கு முடிச்சுக்கிறேன். நாளைக்கு பாப்போம்

  151. இது இப்போது காட்டா குஸ்தி போல ஆகி விட்டது. எந்த பின்னோட்டம் அதற்க்கு பதில் எங்கே என்று தெரியவில்லை. ஒரு அடாவடியான கோட்பாட்டை சொல்லி விட்டு, அது பற்றி விளக்கம் கேட்டால் கண்டு கொள்ளாமல், அந்தர் பல்டி அடித்து வேறு ஒரு விவாதத்தை துவக்குகின்றனர்.

    ஒரு பின்னூட்டத்துக்கு தரும் பதில் பின்னோட்டம் அதற்க்கு கீழே வரும்படியாக, இருந்தால் தொடர்ச்சியாக கருத்துப் பரிமாற்றம் நடத்த வசதியாக இருக்கும்.

    ஜோ அமலன் ஒரு புறம் விவாதத்தை ஒரு வழியில் கொண்டு சென்று விட்டார்.

    சுவனப்பிரியன் பிற மதங்களின் மீதான் சகிப்புத் தன்மை இன்மையை வெளிப் படுத்தி, ஒரு கடவுள்தான், அவரால வடிவம் எல்லாம் எடுக்க முடியாது … அதை எல்லோரும் ஒத்துக்கங்க, என்ற ரீதியில் தொடர்ந்து பின்னி எடுக்கிறார்.

    எந்த பின்னோட்டம் அதற்க்கு பதில் எங்கே என்று தெரியவில்லை. வேர்ட் பிரஸ் தளங்களில் பின்னோட்டம், பதில் பின்னூட்டம்… இவை தொடர்ச்சியாக வரும் வகையில் உள்ளதே. தமிழ் இந்துவிலும் அது போல செய்ய இயலாதா?

  152. திருச்சிகாரரே

    நிச்சயமாக தருகிறேன் – கொஞ்சம் அவகாசம் வேண்டும் இப்பொழுது தான் வீடு மாறியதால் புத்தகத்தை தேடி எடுத்து படித்து எழுதுகிறேன்

  153. சுவனப்ரியன்

    //
    ‘இறைவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்.’
    -குர்ஆன் 7:180
    //

    குரான் zend avesta மற்றும் பழய ஏற்பாட்டிலிருந்து அட்ட காபி அடிக்கப்பட்டது. zend avesta என்பது பார்சிகளின் மதம். அதில் ஹிந்து மத தழுவல்கள் உள்ளன – இப்படி ஓர் இரு விஷயங்கள் குரானில் இருப்பது வியப்பல்ல அது விதி விளக்கு – நான் தான் சொன்னேனே குர்ஆனில் 5% நல்ல விஷயங்கள் உள்ளன என்று.

    நீங்கள் zend avesta நிச்சயமாக படியுங்கள்

    நீங்கள் சொல்லும் வசனங்கள் எல்லாம் அரபு நாட்டுக்காரன் குரங்காக இருக்கும் போதே எம் முன்னோர்கள் ரிஷிகள் கவிதையாகவே எழுதி விட்டனர். நீங்கள் பேசுவது ஒரு 1200 வருடங்கள் முன்னாடி. நாங்கள் பேசுவது ஒரு 140000 வருடங்கள் முன்னாடி.

  154. ஜோ அமலன்

    இங்கு வைணவம் பற்றி பிரசூரம் ஆவதில்லை என்கிறீர்கள். அது தமிழ் ஹிந்துவின் தவறா வைணவர்களின் தவறா?

    வைணவர்கள் பல web site வைத்துக் கொண்டு அவர்களுக்குள்ளேயே எழுதிக்கொண்டு ரெம்ப பிஸியாக உள்ளார்கள்

    முனைவர் மற்றும் ஷர்மா அவர்கள் தொடர்ந்து எழுதி வருவாதால் சைவம் பற்றி இங்கே அதிகம் படிக்க முடிகிறது. வைணவர்கள் எழுதினால் பிரசூரிக்க மாட்டேன் என்று ஆசிரியர் குழுவினர் சொன்னர்கள. இல்லை ப்ரசூரிகாமல் தான் விட்டார்களா.

    வைணவத்தில் PHD படிக்கிறீர்கள் வைணவர்களை பற்றி உங்களுக்கு தான் தெரியாதா. அவர்கள் பொதுவாக வெளி web site களில் எழுதுவதில்லை.

    இதை நீரே கூட ஒரு முறை மறு மொழியில் சொல்லி உள்ளீர். பிறகும் இப்படி குற்றம் சாற்றினால் பிரிக்கப்பார்கிறார் என்று தானே சொல்ல வேண்டும். முதலில் நீர் ஒரு முடிவுக்கு வாரும் ஸ்வாமின்.

  155. திருச்சிக்காரன்!

    //பிற மதத்தினர் “கடவுளக்கு நான்கு கைகள் உண்டு,கைகளில் சக்கரமும் சங்குமாக பாம்பில் பள்ளி கொண்டிருப்பவர் ஆவார்’ என்று கருதினால் உங்களுக்கு என்ன பிரச்சினை?
    எதற்கு அதை மறுக்க வேண்டும் ? அவர்கள் கும்பிட்டு போகிறார்கள் என்று சகஜமாக அமைதியாக இருக்க வேண்டியதுதானே!//

    மலர் மன்னனின் இந்த பதிவின் நோக்கம் என்ன? இந்து மதத்தின் தொன்மை புரியாமல் இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் இந்தியாவில் இந்து மதத்திலிருந்து வெளியேறி விட்டனர். எனவே அவர்களுக்கு இந்து மதத்தின் உண்மையை விளக்கி திரும்பவும் எங்களை இந்துக்களாக மாற்ற வேண்டும் என்பதே திரு மலர் மன்னனின் பதிவின் சாரம். நல்ல முயற்சிதான்.

    அதே சமயம் நான் திரும்பவும் இந்து மதத்துக்குள் நுழைய வேண்டுமானால் அதன் கடவுள் தன்மை: வேதத்தின் உண்மை: வழிபாட்டின் தெளிவு போன்றவற்றில் இஸ்லாத்தைப் போன்ற தெளிவோ அல்லது இஸ்லாத்தை விட சிறந்த ஒரு தெளிவை இந்து மதம் வழங்கினால்தான் என்னால் பழைய மதத்தில் நுழைய முடியும். எனவே அந்த மதத்தில் எனக்குத் தெரியும் முரண்பாடுகளை பட்டியலிட்டால்தான் ஒரு தெளிவு எனக்குள் பிறக்கும். எனவேதான் இந்து மக்களின் வழிபாட்டு முறையைப் பற்றிய எனது கேள்வியை வைக்கிறேன்.

    //இஸ்லாமியர்கள் மெக்கா இருக்கும் திசையை நோக்கி தொழுகின்றனர், இதை உலகில் யாரவாது மறுக்கிறார்களா? கடவுள் அந்த திசையில் மட்டும்தான், அந்த இடத்தில் மட்டும் தான் இருக்கிறாரா என்று கேட்கிறார்களா? நீங்கள் எப்படிக் கும்பிட்டாலும் பிறர் அதை வெறுக்கவோ, மறுக்கவோ இல்லை.//

    //2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).

    இதற்கு இறைவனே குர்ஆனில் அழகாக பதிலளிக்கிறான். கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ முகத்தை திருப்பி தொழுவதால் எந்த புண்ணியமும் இல்லை. புண்ணியம் என்பது சொந்தங்களை நேசிப்பது: ஏழைகளுக்கு உதவுவது: வழிப்போக்கர்கள், யாசிப்பவர்கள் போன்ற தேவையுடையவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தர்மங்களை செய்தல்: தூதர்களை நம்புதல்: வானவர்களை நம்புதல்: மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்றவைகளே புண்ணியம் என்கிறான் இறைவன். ஒருவன் மேற்கு நோக்கி ஐந்து வேளை விடாது தொழுது வந்து மேலே கூறிய எந்த நல்ல அமல்களையும் செய்யவில்லை என்றால் அவன் தொழுது ஒரு புண்ணியமும் இல்லை என்கிறான் இறைவன். அதாவது மனிதனுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் வணக்கமாகும் என்கிறான் இறைவன்.

  156. அன்புள்ள சுவனப்பிரியன்,

    விஷ்ணுவுக்கு நான்கு கைகள் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்கிறீர்கள். இந்துக்களின் கடவுள் கொள்கையில் , கடவுளுக்கு தோற்ற எல்லைகள், கால எல்லைகள் என்று எந்த எல்லைகளும் கிடையாது. விஷ்ணுவுக்கு நான்கு கைகள் மட்டுமே என்று சொன்னால் தான் தவறு. தூணிலும் துரும்பிலும் இருப்பவர், தச அவதாரம் மட்டுமல்ல, வேண்டும்போது, வேண்டிய உருவிலும், உருவில்லாமலும் காட்சி தரக்கூடியவர்.

    சகஸ்ர நாமங்கள் என்றால் ஆயிரம் பெயர்கள் மாத்திரமே என்று எல்லைகள் இல்லை. எண்ணமுடியாத, அளவற்ற பெயர்களில்,ஒரு ஆயிரம் மட்டுமே சொல்ல நமக்கு நேரம் , வசதி உள்ளது.

    இறைவனே எங்கும் உள்ளான்; எப்போதும் உள்ளான்; எல்லா வடிவங்களும், எல்லா உயிர்களும், எல்லா உயிரற்ற அகிறிணையும் அவனே ஆகும். இறைவனுக்கு ஆண் பெண் என்று பிரிவினை இல்லை. ஆணும் அவனே, பெண்ணும் அவனே. பெயர்கள் நம் வசதிக்காக, அதாவது சில புரிதல்களை சுலபப்படுத்துவதற்காக.

    வேட்டி அணிந்த ஒருவரை பார்த்தவுடன் , இவருக்கு வேட்டியை தவிர வேறு உடை இல்லை போலிருக்கிறது என்று எண்ணக்கூடாது. வேட்டி அணியும் அவரே , அலுவலகத்திற்கு போகும்போது , பான்ட் அணிந்து செல்கிறார். அவரே வீட்டுவேலைகள் முடிந்து இரவு உறங்க போகும் போது, மெல்லிய இரவு உடை அணிகிறார். மனிதர்களாகிய நாம் இவ்வளவு வகைகள் பெறும்போது , எங்கும் நிறைந்தான், எல்லாம் அறிந்தோன்,யாதும் வல்லோன், அளவுகளுக்குள்ளும், பெயர்களுக்குள்ளும் சிறைப்படுத்த முடியாத விஷயம் என்பதை உணர வேண்டுகிறேன்.

  157. //
    மலர் மன்னனின் இந்த பதிவின் நோக்கம் என்ன? இந்து மதத்தின் தொன்மை புரியாமல் இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் இந்தியாவில் இந்து மதத்திலிருந்து வெளியேறி விட்டனர். எனவே அவர்களுக்கு இந்து மதத்தின் உண்மையை விளக்கி திரும்பவும் எங்களை இந்துக்களாக மாற்ற வேண்டும் என்பதே திரு மலர் மன்னனின் பதிவின் சாரம். நல்ல முயற்சிதான்.

    அதே சமயம் நான் திரும்பவும் இந்து மதத்துக்குள் நுழைய வேண்டுமானால் அதன் கடவுள் தன்மை: வேதத்தின் உண்மை: வழிபாட்டின் தெளிவு போன்றவற்றில் இஸ்லாத்தைப் போன்ற தெளிவோ அல்லது இஸ்லாத்தை விட சிறந்த ஒரு தெளிவை இந்து மதம் வழங்கினால்தான் என்னால் பழைய மதத்தில் நுழைய முடியும். எனவே அந்த மதத்தில் எனக்குத் தெரியும் முரண்பாடுகளை பட்டியலிட்டால்தான் ஒரு தெளிவு எனக்குள் பிறக்கும். எனவேதான் இந்து மக்களின் வழிபாட்டு முறையைப் பற்றிய எனது கேள்வியை வைக்கிறேன். //

    முதலில் கடவுளின் பண்புகளாக இரண்டு மதங்களும் சொல்லுவது என்ன என்று பாருங்கள்.

    இஸ்லாத்தின் படி கடவுள் தன்னைத் தொழுபவரை ஒத்துக் கொள்கிறார், தன்னைத் தொழாதவரை (நிராகரிப்பாளர்) நரகத்தில் தள்ளுகிறார். மேலும் நம்பிக்கியாளரை நிராகரிப்போர் மீது தாக்குதல் நடத்துமாறும், சொல்கிறார்.

    குர் ஆன் 8.55

    நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் – அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

    குர் ஆன் 8.12

    (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.

    9.5 (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

    இந்து மத புத்தகம் எதிலாவது, நிராகரிப்போரை, பிற மதத்தவரை, இனத்தவரை… வெட்ட சொல்லி யோ , துன்பப் படுத்தச் சொல்லியோ, தன்னுடைய மார்க்கத்துக்கு வரும்படிக் கட்டாயப் படுத்த சொல்லியோ … ஒரு இடத்திலாவது இருக்கிறதா? இந்துக கடவுள் தன்னைக் கும்பிடாதவரை, நிராகரிப்போரை வெறுக்கவில்லை.

    எனவே கடவுளின் தன்மை, குணாதிசயமாக இரண்டு மார்க்கங்களும் சொல்லுவது என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் ஒன்றாக இருக்கிறாரா, ஒன்றாக இருந்து கொண்டே பல வடிவங்களில் காட்சி தருகிறாரா என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

    அவர் அன்புள்ளவரா , இல்லை தன்னைக் கும்பிடாதவரை துன்புறுத்தத் துடிப்பவரா என்பதை முதலில் எண்ணிப் பாருங்கள்.

  158. சுவனத்துக்கு போக வேண்டும் என்றால் பிற மதத்தவரோடு போர் புரிய சொல்லி தூண்டும் வாசகங்கள

    9.19(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் – அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.

    9.20. எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.

    9.21அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.

    9:22 அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அவர்களுக்கு) மகத்தான (நற்) கூலி உண்டு!

    9.73 நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் போர் செய்வீராக; மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக; (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே – தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.

  159. போருக்குப் போகாமல் இருந்தவன் இஸ்லாமியனாக முடியாது போருக்குப் போகத் தயங்கியவனை சேர்த்துக் கொள்ளாதே, அவன் காபிராகவே சாகட்டும் என்பதை விளக்கி அல்லா அருளிய வாசகங்கள் இவை.

    9.83 (நபியே!) உம்மை அல்லாஹ் அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்பி வருமாறு செய்து (உம் வெற்றியையும், பொருட்களையும் பார்த்துவிட்டு மறு யுத்தத்திற்குப்) புறப்பட்டு வர உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் “நீங்கள் ஒருக்காலும் என்னுடன் புறப்படாதீர்கள்; இன்னும் என்னுடன் சேர்ந்து எந்த விரோதியுடனும் நீங்கள் போர் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் முதன் முறையில் (போருக்குப் புறப்படாமல் தன் வீடுகளில்) உட்கார்ந்திருப்பதைத் தான் பொருத்த மெனக்கொண்டீர்கள் – எனவே (இப்பொழுதும் தம் இல்லங்களில்) தங்கியவர்களுடனேயே இருந்து விடுங்கள்” என்று கூறுவீராக!.

    9.84அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்

    9.85இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.

  160. சுவனப்ரியன்

    //
    இஸ்லாத்தைப் போன்ற தெளிவோ அல்லது இஸ்லாத்தை விட சிறந்த ஒரு தெளிவை இந்து மதம் வழங்கினால்தான் என்னால் பழைய மதத்தில் நுழைய முடியும். எனவே அந்த மதத்தில் எனக்குத் தெரியும்
    //

    உங்களுக்கே சிரிப்பு வரலையா இப்படி எழுத. அய்யா 1 + 1 = 2 என்பதில் தெளிவு எளிதில் ஏற்படும். இப்படிப்பட்ட நிலைகளும் ஹிந்து மதத்தில் உள்ளது.

    regression,AHP,dynamic programming dea analysis, கால்குலஸ் போன்றவைகள் எளிதில் விளங்கிக்கொள்ள கஷ்டம் தான் அதனால் 1 + 1 = 2 என்பதை வைத்துக் கொண்டு பால் கணக்கு மட்டும் தான் போட முடியும்

    பால் கணக்குடன் நிறுத்திக் கொள்வதும். தொடர்ந்து படிப்பதும் உங்களது இஷ்டம். இஸ்லாமியர்கள் ஹிந்துவாக இருப்பது எளிது ஏன் என்றால். இஸ்லாத்தில் ஒரு வித பக்தி மார்கம் உண்டு. இதை அப்படியே தொடர்ந்து கடவுலுக்கு பயப்படாமால் கடவுலிடம் தூய பக்தி செய்தால் போதும். மதம் எல்லாம் மார தேவையே இல்லை. காபிர் தாஸரின் கதயை படியுங்கள். பக்தி என்பதற்கு தமிழ் பதம் மதின்நலம் – எது மதிக்கு நல்லதோ அதுவே பக்தி ஆகிறது. மதியை உபயோகம் செய்து பக்தி ப்ராவகமெடுத்தாலே போதுமானது.

  161. ஐயா பெரியவங்களே,
    என்ன என்னமோ எழுதறீங்க. ?
    உள்ள சேதிய விட்டுடறீங்க. ? !
    ஏன் ?
    முக்கியமான ஒரு விஷயத்தின் மூலதாரமணா ஒரு பகுதியை நாசுக்காகத் தொட்டு கோடி காண்பித்திருக்கிறார் பெரியவர் மலர்மன்னன்.
    நமஸ்கரிக்க வேண்டிய நல்ல காரியம் இது.
    இதுநாள் வரை, இத்தனை தெளிவாக நம் சமூகத்தின் ஆணி வேறான நமது சமுதாயக் கலவையை இப்படி எவரும் தொகுத்துக் கோர்த்து ஆக்கபூர்வமான அலசலுக்கு உதவியாக வெளியிட்டதில்லை.
    உண்மையா இல்லையா ?
    ஏன் படிக்கிற மகானுபாவர்கள் மனசாட்சியோடு பதில் எழுதுவதில்லை ?
    தும்பை விட்டு ஏன் எல்லோரும் வாலைப் பிடிக்கிறீர்கள். ?
    இந்த கட்டுரையின் அடி நாதமான சங்கதிகளின் சமாச்சரங்களை குறித்த மேலதிகத் தகவல்கள் இருக்கிறதே ?
    அதைப் பத்தி பேசுவோமே ?
    அக்கப்போர்களை ஏன் ஆசிரியர் குழு இப்படி அம்பலத்திலே ஏற்றுகிறீர்கள் ?
    பலமான திறமை மிக்க பலர் இங்கே இதைப் படித்தாலும், இந்த மறு மொழி கூட்டத்திலே, நாமும் ஏன் என்று சொல்ல வந்ததை + சொல்ல வேண்டியதை சொல்லாமல் ஒதுங்கி விடுவார்களே ?
    சம்பந்தா சம்பந்தம் இல்லா மறு மொழிகள் எதற்கு ?
    மறு மொழிகளே இல்லாது போனால்தான் என்ன ?
    கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று போனால் போகட்டுமே.
    தங்கமாகத் தங்குவது மட்டுமே தங்கம்.
    இல்லையா ?
    நல்லதை மட்டுமே சாரமாக வெளியிட்டால் என்ன ?
    ஏன் இத்தனை திசை திருப்பும் மறு மொழிகள் ?
    சத்தியம் சொல்லும் தமிழ் ஹிந்துவுக்கு, இந்த தகர டப்பாக்கள் தேவையா ?
    தயவு செய்து யோசிக்கவும் ?
    நான் யோசித்தேன்.
    நன்றி.
    வணங்கி மகிழ்கிறேன்.
    மஹா சக்தி துணை இருப்பாள்.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன் வெங்கடராமன்.

  162. //
    இதற்கு இறைவனே குர்ஆனில் அழகாக பதிலளிக்கிறான். கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ முகத்தை திருப்பி தொழுவதால் எந்த புண்ணியமும் இல்லை. புண்ணியம் என்பது சொந்தங்களை நேசிப்பது: ஏழைகளுக்கு உதவுவது: வழிப்போக்கர்கள், யாசிப்பவர்கள் போன்ற தேவையுடையவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தர்மங்களை செய்தல்: தூதர்களை நம்புதல்: வானவர்களை நம்புதல்: மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்றவைகளே புண்ணியம் என்கிறான் இறைவன். ஒருவன் மேற்கு நோக்கி ஐந்து வேளை விடாது தொழுது வந்து மேலே கூறிய எந்த நல்ல அமல்களையும் செய்யவில்லை என்றால் அவன் தொழுது ஒரு புண்ணியமும் இல்லை என்கிறான் இறைவன். அதாவது மனிதனுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் வணக்கமாகும் என்கிறான் இறைவன்.

    //

    இதே வசனம் புதிய ஏற்பாட்டிலும் இருக்கிறது 🙂

    Konica Minolta, HP, Kodak, Cannon, Xerox Corporation – they have something in common. they sell copier machines.

  163. I THINK EITHER THE AUTHOR OR TAMIL HINDU HAS TO CLARIFY THE FOLLOWING NOW.

    //
    மலர் மன்னனின் இந்த பதிவின் நோக்கம் என்ன? இந்து மதத்தின் தொன்மை புரியாமல் இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் இந்தியாவில் இந்து மதத்திலிருந்து வெளியேறி விட்டனர். எனவே அவர்களுக்கு இந்து மதத்தின் உண்மையை விளக்கி திரும்பவும் எங்களை இந்துக்களாக மாற்ற வேண்டும் என்பதே திரு மலர் மன்னனின் பதிவின் சாரம். நல்ல முயற்சிதான்.

    அதே சமயம் நான் திரும்பவும் இந்து மதத்துக்குள் நுழைய வேண்டுமானால் அதன் கடவுள் தன்மை: வேதத்தின் உண்மை: வழிபாட்டின் தெளிவு போன்றவற்றில் இஸ்லாத்தைப் போன்ற தெளிவோ அல்லது இஸ்லாத்தை விட சிறந்த ஒரு தெளிவை இந்து மதம் வழங்கினால்தான் என்னால் பழைய மதத்தில் நுழைய முடியும். எனவே அந்த மதத்தில் எனக்குத் தெரியும் முரண்பாடுகளை பட்டியலிட்டால்தான் ஒரு தெளிவு எனக்குள் பிறக்கும். எனவேதான் இந்து மக்களின் வழிபாட்டு முறையைப் பற்றிய எனது கேள்வியை வைக்கிறேன். //

    அதாவது இந்து மதங்கள் குறிப்பிடும் பிரம்மம் என்பது உருவமற்ற ஒன்று. அதனால் இந்து மதமும் உருவமற்ற கடவுள் நிலையை குறிப்பிடுகிறது (தைத்திரியோ உபநிசத்தில் விஸ்வரூபத்தை வணக்குகிறேன் என்று உள்ளது. ரூப வடிவில் கடவுளை வணக்க கூடாது என்று எந்த உபநிடதமும் தடை விதிக்கவில்லை- இதை எல்லாம் கவனிக்க வேண்டியதில்லை) .

    எனவே இந்து மத்தில் இது வரை மக்கள் வணங்கும் சிலைகளை விட்டுவிட்டு பிரம்மம் என்கிற உருவமற்ற நிலையை மட்டும் வணங்க வேண்டும், அப்போது பலரும் இந்து மதத்திற்கு வருவார். அதாவது இந்து மதத்தை மாற்றுங்கள், அப்புறம் வர முடியுமா என்று பார்க்கிறோம் என்பத்தான் இதன் பொருள். அதனால் தான் கடவுள் நாலு கையேடு பாம்பில் தூங்குபவராக இருப்பதை மறுக்கிறோம் என்று முன்பே எழுதி இருக்கிறார்.

    இதற்க்கு பதிலை திரு. மலர் மன்னன் தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்தான் திரும்ப வைத்தாலே வேலை என்கிறார். அப்படி திரும்ப வைக்க – இந்து மதம் அதன் சுய வடிவிற்கு – அதாவது இஸ்லாத்துக்கு திரும்ப வேண்டும் என்கிறார்கள்!

    மலர் மன்னன் திரும்பி வர சொன்னதால் தான் நாங்க “உண்மை”களை தெளிவாக சொல்லுறோம், இல்லை என்றால் இந்துக்கள் வணங்கும் எந்த ஒரு தெய்வத்தையும் நாங்க எதுக்கு குறை சொல்ல போறோம், நாங்க எவ்வளவு டீசன்ட் பார்ட்டி, என்ற வகையில் சொல்கிறார்கள்.

    WE CANT BALME THEM AS WHY YOU INTERFERE IN OTHERS RELIGIOUS PRACTICES, BECAUSE THEY SAY, YOU CALLED ME, I ASK FOR CLARIFICATION!

    I THINK EITHER THE AUTHOR OR TAMIL HINDU HAS TO CLARIFY THEIR STAND NOW.

  164. //இதற்கு இறைவனே குர்ஆனில் அழகாக பதிலளிக்கிறான். கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ முகத்தை திருப்பி தொழுவதால் எந்த புண்ணியமும் இல்லை.//

    அப்படியானால் எதற்க்காக மெக்கா இருக்கும் திசையை மட்டும் நோக்கி எல்லா முஸ்லீம்களும் தொழ வேண்டும்.?

    நீங்கள் என்றாவது மெக்கா இருக்கும் திசைக்கு பின்புறத்தைக் காட்டிக் கொண்டு தொழுகை செய்து இருக்கிறீர்களா?

  165. திரு களிமிகுகணபதி அவர்கள் ஹிந்து மதத்தினை மற்றைய மதத்தினருக்கு புரிய வைக்க வேண்டும் என்கிறார். ஐயா மலர்மன்னன் தாய்மதம் திரும்ப வைக்க வேண்டும் என்கிறார். இரண்டுகட்டுரைகளும் தத்தம் நேக்கில் சிறந்தன. ஹிந்து சமயத்தினை உலகோர் அனைவருக்கும் திறந்து வைக்கவேண்டும் என்பததே அடியேனின் எண்ணம்.
    ஹிந்து சமயத்தினை வெளியார் யாரும் சார்ந்திட சடங்குகள் வழிமுறைகள் இருக்கவில்லை. எனவே ஆரிய ஸ்மாஜத்தின் நிறுவனர் ஸ்ரீ தயானந்த சரசுவதி ஸ்வாமிகள் சுத்தி சடங்கினை தோற்றுவித்து சுத்தி இயக்கத்தினை நடத்தினார். இது இன்றும் தாய்மதம் திரும்ப விரும்புவோருக்கு செய்விக்கப்படுகிறது. உலகெங்கும் ஸ்ரீ கிருஷ்ணபக்தி இயக்கம்(ஹரே கிருஷ்ணா) அனைவரையும் வைதீக வைணவர்களாக்கி வருகிறது. பல அயல் நாட்டவரை பிராமணர்களாக்கிய சிறப்பும் இந்த உலகளவிய இயக்கத்திற்கு உண்டு.
    இன்றைக்கு இது அனைத்து ஹிந்து சமய அமைப்புகளாலும் பின் பற்றற்குரியது.
    ஆனால் ஜோ அமலன் போன்ற கிறித்தவர்கள் மட்டுமல்ல போலிமதச்சார்பின்மைவாதிகள் கூட இதனை எதிர்க்கிறார்கள்(மதமாற்றத்தை ஆதரிக்கும் அவர்தம் போலித்தன்மைக்கு இதுவே சான்று). ஹிந்துமதத்தினை காக்க வேண்டும் எனீல் அதன் கருத்துக்களை, பக்தி, யோக, வழிமுறைகளை அனைவருக்கும் அளிக்கவேண்டும். விரும்பி வருகின்றவர்களை இனம் மொழி, நாடு பேதமின்றி ஹிந்துக்களாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  166. திருச்சிகாரரே

    சூப்பர்

    //
    எனவே கடவுளின் தன்மை, குணாதிசயமாக இரண்டு மார்க்கங்களும் சொல்லுவது என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் ஒன்றாக இருக்கிறாரா, ஒன்றாக இருந்து கொண்டே பல வடிவங்களில் காட்சி தருகிறாரா என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

    அவர் அன்புள்ளவரா , இல்லை தன்னைக் கும்பிடாதவரை துன்புறுத்தத் துடிப்பவரா என்பதை முதலில் எண்ணிப் பாருங்கள்.
    //

  167. /// “இன்று தமிழகத்தில் மட்டும் சமஸ்க்ரிதத்தில் சரளமாக பேச தெரிந்தவர்கள் இரண்டு லட்சத்திற்கும் மேல்”

    சாரங்கின் இச்செய்தி மிகப்பெரிய விசயம்.
    முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன்.///

    நீங்கள் நிஜமாகவே PhD படிக்கிரீர்களா? அல்லது வேறு இனையதளங்ளுக்கு சென்று அதில் உள்ள கறுத்துக்களை Copy அடித்து இங்கு Paste செயிகிறீர்களா?

    தாங்கள் இது போன்ற தகவல் ஏதும் தெரிந்துகொள்வது இல்லை போலும், காரணம் இது மிகவும் பழைய செய்தி. சிரு படிப்பு படித்த எனக்கு கூட தெரிந்த விஷயம்…..? ? ? ! ! ! !

    வளரனும் தம்பி வளரனும்
    .

  168. இந்த சுவன்ன பிரியன் என்பவர் “ஜாகிர் நாயக்” என்ற இஸ்லாமிய வெறியன் – ஒசாமா ஆதரவாளன் – தொலைக்காட்சியிலும் இணையத்திலும் பரப்பும் கபடப் பொய்களை நம்பிக்கொண்டு இங்கு வந்து கிளிப்பிள்ளை மாதிரி கூறுகிறார்.

  169. \\\\\\\எனவே இதை மணிப்பிரவாளம் என அடையாளப்படுத்துவது சரியா என்பது தெரியவில்லை.\\\\\\\

    ஸ்ரீ களிமிகு கணபதி, ஸ்ரீ அமலனுக்கு அளித்த உத்தரத்திலும் தமிழுடன் ஸம்ஸ்க்ருதம் கலந்த மொழிநடை என்றே குறிப்பிட்டிருந்தேன்.

    விதிவிலக்கில்லாது இங்கே பலரது வ்யாசங்களையும் உத்தரங்களையும் வாசித்து நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம் தவிர்க்க இயலாத மொழிகலப்பு. விகிதாசாரத்தில் வித்யாசங்களிருக்கலாம்.

    மணிப்ரவாளத்திற்கெதிரான (ஸம்ஸ்க்ருதம் கலந்த தமிழ் என்றே கொள்கிறேன்) குரல் கொடுக்குங்கால் அதில் உள்ள ஞாயம் சீர்தூக்கிப்பார்க்கப்படும். ஸ்ரீ தாயுமானவர் என்ற அன்பர் மிகத்தெளிவுடன் தமிழுடன் ஆங்க்லம், ஸம்ஸ்க்ருதம், ஹிந்தி, பாரசீகம் போன்ற எந்த மொழியும் கலத்தல் தவறே என்று அழகாக குறிப்பிட்டிருந்தார். அந்த நிலைப்பாட்டுடன் ஒத்ததான தூய தமிழ் மொழிநடைக்குத் தலை வணங்குகிறேன்.

    ஆனால் ஆங்க்ல ஷேம்பெய்னை தமிழ்ப்பொன்னிப் புனலுடன் கலக்கி எழுதும் மொழிநடையை

    இது தமிழ் தான் என்று உறுதிப்பாட்டுடன் இருந்து

    பின்னிட்டும்

    ஸம்ஸ்க்ருத கங்கையின் சில உத்தரணித் துளிகள் தமிழ்ப் பொன்னிப் புனலுடன் கலந்து எழுதப்படும்

    மொழிநடைக்கு எதிராக வெகுண்டெழுவதென்பது

    அவ்வாறான மனப்போக்கின் ஒவ்வா இரட்டை நிலையையே நிதர்சனமாக காண்பிக்கிறது.

    \\\“வேள்விக்குடி, முக்கூர் நரசிம்மாச்சாரியார் – இவர்கள் சிரி வைணவர்களே. ஆயினும், ஆச்சாரியர்கள் இல்லை. ஜீயர்களே ஆச்சாரியர்கள்.\\\\சர்வவல்ல ஏகக்கடவுளான சிருஷ்டி கர்த்தாவும் பரம்பொருளும் ப்ரஜாபதியுமான சர்வேஸ்வரன் தாமே உமக்கு நீடித்த ஆயுளையும் நிறைந்த ஞானத்தையும் தந்தருள்வாராக‌.\\\\\\

    ஸ்ரீ கந்தர்வன், coup detat??????

    ஸ்ரீ அமலன் அவர்களுடைய சில்சாமுடனான சம்பாஷணம் திடுக்கிடவே வைக்கிறது.

    பின்னும் பரம்பொருளைப் பற்றியதான நேரான கருத்துப் பரிவர்த்தனங்கள் யார் வாயிலிருந்தாயினும் மனதுக்கு நிறைவையே தருகிறது. மனதை இறைவன் பால் திருப்பும் எந்த ஒரு வாசகமும் வணக்கத்திற்குறியதே.

    மேலும், ஸ்ரீமத் பாகவதத்திலும்

    avismritih krishna-padâravindayoh

    kshinoty abhadrâni ca s’am tanoti

    sattvasya s’uddhim paramâtma-bhaktim

    jn’ânam ca vijn’âna-virâga-yuktam (ஸ்ரீமத் பாகவதம் 12-12-55)

    கண்ணனின் திருவடித்தாமரைகள் பற்றிய நினைவானது எல்லா அசுபங்களையும் அழிக்க வல்லது மற்றும் மிகுந்த நலனளிக்கவல்லது. அத்தூய நினைவு ஹ்ருதயத்தை தூயதாக்கி வைராக்யத்தையும் ஞானத்தையும் அளித்து பரம்பொருளிடத்து பக்தியையும் அளிக்க வல்லது
    .
    என்று சொல்லப்ப்ட்டுள்ளது.

    முக்கூர் ஸ்வாமியிடம் கேட்ட வைஷ்ணவ லக்ஷணம் “கொக்கைப் போலிருப்பான், கோழியைப்போலிருப்பான், உப்பைப்போலிருப்பான், உம்மைப்போலிருப்பான்” ஞாபகம் வருகிறது. இந்த வைஷ்ணவ லக்ஷணமாக இருக்கட்டும் சமதமாதி ஷட்குணசம்பத் என அறியப்படும் ஆறு நற்குணங்களாகட்டும் இந்த ஆதர்ச நிலையை அடைந்தவர் மிக சொல்பமே. மற்றெல்லோரும் அதை அடையும் பாதையில் வழிப்போக்கர்களே.

    ஜெனாப் சுவனப்ரியன், தமிழ்ஹிந்து தளத்தில் நிதானம் தவறாது கருத்துப்பரிவர்த்தனம் செய்யும் தங்களுக்கு எங்களது இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

    உலகோர் இஸ்லாமியரிடம் காணும் பெரும் குறை, அந்த மதத்தவரால் அப்பாவி மக்களுக்கெதிராக நிகழ்த்தப்பெறும் குண்டு வெடிப்பு இத்யாதி பயங்கரவாத சம்பவங்கள். வன்முறையற்ற உலகம் உண்டாக இறைவனிடம் இறைஞ்சுங்கள்.

    \\\\\//அவர்கள் ஹிந்து நம்பிக்கைகளுக்கு அணுக்கமாக இருக்கிறார்கள் என்ற புரிதலே அவர்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் ஒழிக்க விழையும் வஹாபி இஸ்லாம்.//
    ஒரு உள்ளத்தில் இரண்டு கொள்கைகள் இருக்க முடியாது. தர்ஹாவையும் வணங்கிக் கொண்டு பள்ளிக்கு செல்வதையும் குர்ஆன் தடுக்கிறது. வணக்கத்தில் குளறுபடிகள் இருக்கக் கூடாது. அதே சமயம் வேறு நம்பிக்கை உடையவர்களை எதிரிகளாக பார்க்காமல் சகோதரர்களாக பார்க்க வேண்டும்.\\\\\\\\\

    ஜெனாப் இரு தினங்களாக ஹிமாசல ப்ரதேசம் சென்றிருந்தேன். அங்கே பேசப்படும் மொழி டோக்ரி / பஹாடி. இம்மொழிகள் பஞ்சாபி மொழிக்கு மிக அணுக்கமானவை. பின்னும் அந்த மாகாணத்து ஆட்சிமொழி ஹிந்தி. நான் சொல்ல வரும் விஷயம் ஹிந்துஸ்தானத்தின் பன்முகம். இது இந்த தேசத்திற்கும் ஹிந்து மதத்திற்கும் உரித்தான மிக உயர்வான விஷயங்கள்.

    ஆப்ரஹாமிய மதங்கள் புரிய மறுக்கும் மிக முக்ய விஷயம் பன்முகம். “அனல் ஹக்” என்று முழங்கிய ஹுஸைன் மன்ஸூர் அல் ஹலாஜ் மற்றும் மற்றைய மதக்கருத்துகளுக்கு அணுக்கமான கருத்துகள் பகிர்ந்த ஸூஃபிகள் போன்றோர் குரான்-ஏ-ஷெரிஃபை கசடறக் கற்றதற்கு பின்னும் அவ்வாறு சொல்லியுள்ளனர் என்பதை மறவாதீர்.

    \\\\ஒரு உள்ளத்தில் இரண்டு கொள்கைகள் இருக்க முடியாது\\\\\

    ஆனால் ஒரு மதத்தில் பற்பல கொள்கைகள் இருக்கும் என்பதே ஷியா, அஹமதியா போன்ற உட்பிரிவுகளும் (தங்களது வஹாபி பிரிவன்றி) க்றைஸ்தவத்தின் கத்தோலிக்க, புரோட்டாஸ்டண்ட், ஸால்வேஷன் ஆர்மி, ஜெஹோவாஸ் விட்னஸ் இத்யாதி மற்றும் யஹூதிகளின் Orthodox, liberal, cabalist இத்யாதி உட்பிரிவுகள் காண்பிப்பது இயற்கையான பன்முகத்தை செயற்கையான ஒரு கொள்கை அசைக்க இயலாது என்பதையே. ஒரு ஷியா முஸல்மான் உங்களது கொள்கை நிலைப்பாடுகளை தவறானவை என்று கூறலாமே.

    ஒரு கொள்கையின் கீழ் உலகை கொணர வேண்டும் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

    சரி இஸ்லாத்தில் சங்கீதம் பாவமாக ஏன் கருதப்படுகிறது என்று சொல்லுங்கள். தாலிபான்கள் ஆட்சியில் ஆஃப்கனிஸ்தானில் சங்கீதம் முற்றுமாக அழித்தொழிக்க முனையப்பட்டது.

  170. திரு கந்தர்வன்!

    //இந்த சுவன்ன பிரியன் என்பவர் “ஜாகிர் நாயக்” என்ற இஸ்லாமிய வெறியன் – ஒசாமா ஆதரவாளன் – தொலைக்காட்சியிலும் இணையத்திலும் பரப்பும் கபடப் பொய்களை நம்பிக்கொண்டு இங்கு வந்து கிளிப்பிள்ளை மாதிரி கூறுகிறார்.//

    நான் சொல்வது அனைத்தும் இந்து மத வேதங்களின் வசன எண்களோடு! ஒரே வேதத்தில் ஏக தெய்வ கொள்கையும் பல தெய்வ கொள்கையும் எவ்வாறு வந்தது என்ற என் கேள்விக்கு உருப்படியான ஒரு பதிலையும் சாரங்கினாலோ அல்லது திருச்சிக்காரனாலோ சொல்ல முடியவில்லை. ருக் வேதத்தில் வரும் பல தெய்வ கோட்பாடு உண்மை என்றால் யஜீர் வேதத்தில் வரக் கூடிய ஏக தெய்வ கொள்கை தவறென்றாகும்.

    நான் இறைவனின் பண்புகளாக இஸ்லாத்திலிருந்தும் இந்து மதத்திலிருந்தும் ஆதாரங்களை தந்திருக்கிறேன். ஏக இறைவனின் மற்ற பண்புகளையே இறைவனாக்கி விட்டனர் பின்னால் வந்தவர்கள். பிறகு அதற்கு தங்கள் கற்பனைக்கு தகுந்தவாறு நாலு கை, அதிலும் அரிவாள் என்று சகட்டு மேனிக்கு தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டனர்.

    நான் கேட்கிறேன்! பரம்மா, விஸ்ணு, முருகன் போன்ற தெய்வங்களுக்கு இப்படிப்பட்ட உருவத்தில்தான் இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. ஏதாவது ஒரு வேத புத்தகத்தில் பிரம்மனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதா? எல்லாமே கற்பனைதானே! மனிதர்கள் தங்கள் வசதிக்காக உண்டாக்கிக் கொண்டதுதானே!

    Thiru Krishnakumar!

    //ஆனால் ஒரு மதத்தில் பற்பல கொள்கைகள் இருக்கும் என்பதே ஷியா, அஹமதியா போன்ற உட்பிரிவுகளும் (தங்களது வஹாபி பிரிவன்றி) க்றைஸ்தவத்தின் கத்தோலிக்க, புரோட்டாஸ்டண்ட், ஸால்வேஷன் ஆர்மி, ஜெஹோவாஸ் விட்னஸ் இத்யாதி மற்றும் யஹூதிகளின் Orthodox, liberal, cabalist இத்யாதி உட்பிரிவுகள் காண்பிப்பது இயற்கையான பன்முகத்தை செயற்கையான ஒரு கொள்கை அசைக்க இயலாது என்பதையே. ஒரு ஷியா முஸல்மான் உங்களது கொள்கை நிலைப்பாடுகளை தவறானவை என்று //

    இஸ்லாத்தில் குறைவாக சில பிரிவுகள் இருந்தாலும் அனைவருக்கும் இறைவன் ஒருவன்தான்! அனைவருக்கும் தூதர் ஒருவர்தான். முக்கிய சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றுதான். முகமது நபிக்கு பிறகு ஆட்சிக்கு யார் வருவது என்ற குளறுபடியில் உருவானதே சியாக்கள். குர்ஆனை தெளிவோடு அவர்களும் அணுகினார்கள் என்றால் ஒரு குடையின் கீழ் வர வாய்ப்புண்டு. அதற்கான முயற்சிகளை பலரும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மற்றபடி நீங்கள் சொல்லும் தீவிரவாதத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. தவறான வழியில் சென்றவர்களை பிரச்சாரத்தின் மூலம்தான் நேர்வழிக்கு கொண்டு வர வேண்டும். இந்து மதத்திலும் கிறித்தவத்திலும் கூட தீவிரவாதம் இருக்கிறது. ஆனால் அதனை அந்த மதங்கள் தடுக்கின்றன

    திருச்சிக்காரன்!

    //போருக்குப் போகாமல் இருந்தவன் இஸ்லாமியனாக முடியாது போருக்குப் போகத் தயங்கியவனை சேர்த்துக் கொள்ளாதே, அவன் காபிராகவே சாகட்டும் என்பதை விளக்கி அல்லா அருளிய வாசகங்கள் இவை//

    இதற்கு முன்பே விளக்கம் கொடுத்தாகி விட்டது. முகமது நபியையும் சொற்பமான முஸ்லிம்களையும் கொல்ல மக்காவிலிருந்து படை திரட்டிக் கொண்டு வந்தவர்களுக்கு எதிராக சொல்லப்பட்ட வசனம் இது. அதற்கு முந்தய வசனங்களை படித்தால் உண்மை விளங்கும்.

    நான் சிறுவனாக இருக்கும் போது எனது தாயார் எங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் மிகப் பெரிய காளி சிலையை கையில் கத்தியுடன் நாக்கை வெளியில் தொங்க விட்டிருக்கும் சிலையை காட்டி என்னை சாப்பிடுவதற்கும் பள்ளிக் கூடம் செல்வதற்கும் பயமுறுத்துவார். அவ்வளவு கோரமாக இருக்கும் அந்த சிலைகள். சுடலை மாடன் சாமி, காளி என்று கிராமங்களில் இருக்கும் நாட்டு தெய்வங்கள் அனைத்தும் கோரமாகவே உள்ளன. இறைவன் தண்டிக்கக் கூடியவன் என்பதை மக்களுக்கு விளக்கவே அந்த சிலைகள். ராமன் சூர்ப்ப நகையின் மூக்கை வெட்டியது, வாலியை மறைந்திருந்து கொன்றது, பாஞ்சாலியின் கதை, பாரதப்போர், கர்ணனை வஞ்சகமாக கொன்றது என்று இந்து மதத்திலும் கொலைகளும் வஞ்சகமும் நீக்கமற நிறைந்திருக்கிறது. எனவெ இந்து மதம் சாந்த சொரூபமான மதம், இஸ்லாத்தில் மடடுமே போர்க்களக் காட்சிகள் உள்ளது என்று மறைக்க வேண்டாம்.

    அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்…

  171. //ஒரு கொள்கையின் கீழ் உலகை கொணர வேண்டும் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம்.//
    அதனால்தான் அந்த கொள்கையின் கீழ் வராதவரை அழிக்கின்றனர்.

    //சத்தியம் சொல்லும் தமிழ் ஹிந்துவுக்கு, இந்த தகர டப்பாக்கள் தேவையா?//
    Srinivasan.V,
    உங்க டப்பாவில் இருந்து வரும் சத்தம் நன்றாக இல்லையே.

    //சுவனப்பிரியன் பிற மதங்களின் மீதான் சகிப்புத் தன்மை இன்மையை வெளிப் படுத்தி, ஒரு கடவுள்தான், அவரால வடிவம் எல்லாம் எடுக்க முடியாது … அதை எல்லோரும் ஒத்துக்கங்க, என்ற ரீதியில் தொடர்ந்து பின்னி எடுக்கிறார். //
    திருச்சிக்காரன்,
    சுவனப்பிரியன் கடவுளால் உருவம் எடுக்கமுடியாது என்று சொல்லவில்லை. கடவுளுக்கு உருவம் இல்லை என்றே சொல்கிறார். எதிரியாக இருந்தாலும் நியாயமா பேசணும் சார். மேலும், எனக்கு தெரிந்தவரை, திரு.சுவனப்பிரியன், தனிமனித தாக்குதலில் ஈடுபடாமல் (தாக்கப்பட்டாலும்), நல்லபடியே பேசுகிறார். விஷயம் தெரிந்தவர்கள், கொஞ்சம் அன்பாக சொன்னால் புரிந்து கொள்வார். புரிந்து கொண்டால்…….

    //நான் முன்பே சொன்னேன் வேதம் குர்ஆன் அல்ல அதை உங்களால் நிச்சயமாக சரளமாக விளங்கிக்கொள்ள முடியாது //
    சாரங்,
    இந்த மாதிரி பேசிப்பேசிதான், வேதத்தை சிலர் மாத்திரம் படிக்கலாம்ன்னு, மத்தவனுக்கெல்லாம் அதை புரிஞ்சுக்கற அறிவில்லைன்னு ஒதுக்கி இருந்தாங்க. இப்போதான் நிலைமை சீராகிக்கொண்டு வருது, மீண்டும் பழைய குருடி கதவை திறடி ன்னு போனா, புரியாத வேதத்தை ஏன்டா படிக்கணும், புரியற பைபிள் மற்றும் குரானை படிங்கடான்னு பலர் போய்டுவாங்க நண்பா.

    மேலும்,
    மிசிநரிகள் மதமாற்றுகிரார்கள் என்று நாமும் போய் அதை செய்ய வேண்டுமா? வீட்டு சாப்பாடு பிடிக்காம வெளிய போய் சாப்பிடறவன் சாப்பிடட்டும், ரெண்டுநாள் வயத்தால போனா தானா வீட்டுல சாப்பிடுவான்.

  172. திரு மலர் மன்னன் இஸ்லாமியர்களை இந்துக்களாக மாற்ற வேண்டும் என்கிறார். இதே போன்று நண்பர் எழில் முன்பு கேட்டபோது அவருக்கு கொடுத்த பதில் பதிவை இங்கு பதித்து என்னளவில் இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

    https://suvanappiriyan.blogspot.com/2007/02/blog-post.html

  173. @சுவனப்பிரியன்
    மகாபாரதத்தில் இருந்து நீங்க சொல்லும் உதாரணங்கள் அரைகுறையாக இருக்கிறது.
    அதில் முன்வைக்கைப்படுவது தீவிரவாதமோ வஞ்சமோ இல்லை. அதில் வரும் சம்பவங்கள் குறித்த விவாதங்கள், நியாய அநியாயங்கள் அதன் பலன்கள் எல்லாமே அதிலேயே சம்பவங்களாக வந்து விடும். மகாபாரதமோ ராமாயணமோ நடந்ததா இல்லையா கற்பனையா என்பதைத் தாண்டி சம்பவங்களின் தொடர்ச்சியும் அதன் பலாபலன்கள் இவை குறித்த விவரங்களைப் புரிந்து கொண்டு நாம் நம் வாழ்க்கைக்கு முன் உதாரணங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமே அன்றி அவை விதிமுறைகள் அல்ல. கட்டளைகளும் அல்ல.
    அதே போல் தான் வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இந்து மத சம்பந்தமான எந்த ஒரு புராணமாக இருந்தாலும் அது விதி முறைகள் அல்ல. மனிதனின் வாழ்கை குறித்த புரிதல்களை அவன் அந்தந்த காலத்தில் விவரிக்கிறான். அதில் நியாய அநியாங்களை வெளிப்படையாகச் சொல்கிறான். இதெல்லாம் முன் உதாரணங்களாகக் கொண்டு உன் புத்தி கொண்டு தேடிக் கண்டதை என்பது தான் அடிப்படை.

    ஒரு மனிதனின் வாழ்க்கைக்கான நெறிமுறைகளை ஒரு புத்தகம் கொடுக்க முடியாது என்னும் போது மண்ணில் வசிக்கும் விவவிதமான மனிதர்கள் அனைவருக்கும் ஒரு புத்தகம் வழிகாட்டியாக இருந்து விட முடியுமா?
    மனிதனின் அடிப்படையிலேயே அவன் சுதந்திர விரும்பி. அது இயற்கை. அவனை ஒரு புத்தகத்தைக் கொடுத்து இது படி வாழ் என்று சொல்லிவிடுவது சாத்தியமில்லை.

    எனது புரிதலில் இருந்து,
    https://www.virutcham.com/2011/08/இருத்தலும்-இல்லாமையும்

  174. // ஹிந்து சமயத்தினை வெளியார் யாரும் சார்ந்திட சடங்குகள் வழிமுறைகள் இருக்கவில்லை. எனவே ஆரிய ஸ்மாஜத்தின் நிறுவனர் ஸ்ரீ தயானந்த சரசுவதி ஸ்வாமிகள் சுத்தி சடங்கினை தோற்றுவித்து சுத்தி இயக்கத்தினை நடத்தினார். //

    சிவஸ்ரீ விபூதிபூஷண் அவர்களுக்கு, நவீன காலங்களில் இத்தகைய சடங்கை தயானந்தர் மீள் உருவாக்கினார்,. ஆனால் கி.பி 10ம் நூற்றாண்டிலேயே தேவலர் என்ற இந்து மகான் இதற்கான சாஸ்திர சம்மதத்தை அளித்து, வழிமுறைகளையும் உருவாக்கி விட்டார். தேவல ஸ்மிருதி என்ற அவரது நூலில் இது பற்றிய விவரங்கள் உள்ளன. தயானந்தர் தமது நூலில் தேவலர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    அதற்கும் முன்பு குஷாணர்கள், ஹூணர்கள், டார்டார்கள், சகர்கள் போன்ற அன்னிய இனங்களை ஹிந்து சமூகத்திற்கு உள் கொண்டு வருவதற்காக வ்ரத்யஸ்தோமம் என்ற வைதீக சடங்கு உருவாக்கப் பட்டது. கிபி. 1 அல்லது 2ம் நூற்றாண்டுகளில் இச்சடங்கு உருவாகியிருக்கலாம்.

    மறுமொழிகளின் ஆரம்பத்தில் சுவனப் பிரியன், “இந்து மதம் அவ்வளவு நல்லதாக இருந்தால் ஏன் இஸ்லாமுக்கு மாறியவர்கள் திரும்பி வராமல் இருக்கிறார்கள்?” என்று கேட்டிருக்கிறார். அது வரலாற்று அறியாமையில் விளைந்த கேள்வி.

    இந்தியாவின் ஆயிரம் ஆண்டு கால இஸ்லாமிய ஆட்சியில் பற்பல சமயங்களில் வாள்முனையிலும், கட்டாயத்திலும் மதம் மாறிய இந்துக்கள் தாய்மதம் திரும்பிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். இஸ்லாமிய ஆதிக்கம் கொஞ்சம் தளர்வுறும் நேரங்களில் எல்லாம் ஒட்டுமொத்த கிராமங்களே தாய்மதம் திரும்பியுள்ளன. இதற்கு இஸ்லாமிய வரலாற்று நூல்களிலேயே ஆதாரங்கள் உள்ளன. இதன் கடைசி அலையாக, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, முஸ்லிமாக இருந்த லட்சக்கணக்கானோர் ஆரிய சமாஜன் மூலம் தாய்மதம் திரும்பியுள்ளனர். இது குறித்து தனியாக, விரிவாகவே எழுத வேண்டும்.

    மேலும் அறிய, இரண்டு புத்தகங்களை சிபாரிசு செய்கிறேன் ..

    1. Legacy of Muslim Rule in India : K.S Lal, Aditya Prakashan, Delhi – https://www.flipkart.com/author/ks-lal

    2. . Islamic Jihad – A Legacy of Forced Conversion‚ Imperialism‚ and Slavery : M A Khan, iUniverse, Inc. New York Bloomington – https://www.iuniverse.com

  175. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே உங்களுக்கு முதலில் சில கேள்விகள்
    கடவுளுக்கு உருவம் இல்லை என்றால் அவனை(அவரை என்பது கூட இஸ்லாமியருக்கு உடன் பாடு அல்ல) ஏன் ஆண் என்று கூறுகிறீர்கள்.
    கடவுள் உருவமற்றவர் என்பது தவரென்றால் சொர்கத்தின் ஏழாவது வாயிலில் அமர்ந்திருந்த அவரை முகமது நபிகள் சந்தித்தது எப்படி.
    உங்கள் வேதம் ஏற்கும் தோரா(தவ்ராத்) அதாவது பழைய ஏற்பாடு கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்தான் என்கிறதே அது எப்படி.

    ஹிந்து சமயத்திலும் தெய்வங்கள் தேவர்கள் அவதாரங்கள் போர் செய்தன. ஆனால் மதத்தினை பரப்புவதற்காக அன்று. மக்களுக்கு கொடுமைகளை செய்தவர்களை ஒறுக்கவே. அன்னைக் காளி பயங்கர வடிவம் கொண்டாளும் அவள் ஆனந்த ரூபிணியே.

    பல தெய்வ வணக்கம் ஏன்? ஹிந்துக்களைப் பொறுத்தவரை இறை ஒன்றே ஆனால் பெயர் பல. அது போல் வழிபடு முறைகள் பல. இது பன்னெடுங்காலம் இங்கே உள்ளது இந்த நாட்டில். இஸ்லாம் போல ஹிந்துக்களின் மதம் ஆகாது ஏன் எனில் இது பாலைவனம் அன்று. பலபபல பயிர்களூம் செழிக்கும்.

  176. அன்பு ஜடாயு அவர்களே
    தங்கள் மறுமொழிக்கு நன்றி. பொதுவாக சில சமூக வரலாற்று அறிஞர்கள் அப்ப்படி ஹிந்துக்களானவர்கள் ஒரு மானிடக்குழுவினர்(கம்யூனிட்டி அல்லது குரூப்) தனிமனிதர்கள் அல்ல என்று கருதுகிறார்கள். ஆனால் தேவலர் என்ற மகானின் உதாரணம் மூலம் நல்ல விளக்கம் அளித்திருக்கிறீர்கள்.

  177. சுவனப்ரியன்

    //
    நான் சொல்வது அனைத்தும் இந்து மத வேதங்களின் வசன எண்களோடு! ஒரே வேதத்தில் ஏக தெய்வ கொள்கையும் பல தெய்வ கொள்கையும் எவ்வாறு வந்தது என்ற என் கேள்விக்கு உருப்படியான ஒரு பதிலையும் சாரங்கினாலோ அல்லது திருச்சிக்காரனாலோ சொல்ல முடியவில்லை. ருக் வேதத்தில் வரும் பல தெய்வ கோட்பாடு உண்மை என்றால் யஜீர் வேதத்தில் வரக் கூடிய ஏக தெய்வ கொள்கை தவறென்றாகும்.
    //

    உங்களுக்கு புரிந்தால் தான் உருப்படியான பதிலா. நான் தான் சொன்னேனே ரிக் வேதத்திலேயே ஒரு மற்றும் பல தெய்வ வழிபாடு ஒரே இடத்தில் சேர்ந்து வருகிறதென்று. அது வழிபாடு இல்லை இரண்டும் ஒன்றே என்று வருகிறது . வாயுவை (பிராணனை) tvam eva pratyaksham braammaasi. நீ தான் காணக் கூடிய பிரம்மம் என்கிறது ரிக் வேதம். அப்புறம் எதற்கு நீட்டி முழக்கிக் கொண்டு எதோ யசுர் வேதத்தில் தான் ஒரு கடவுள் கொள்கை என்பது போல சொல்கிறீர்.

    ரிக் யசுர் சாம என்பது மூன்று தனி தனி வேதங்கள் அல்ல. ஒன்றே தான் அதை மூன்று பாகங்களாக செய்தது மகாபாரதம் எழுதிய வேத வியாசர்., ஒரே வேதங்களில் வரும் மந்திர பாகம் ரிக் எனவும், பிராமண பாகம் யஜுஸ் எனவும், கான பாகம் சாமம் எனவும் வழங்கப்பட்டன. இந்த மூன்று பாகங்களையும் அறிந்தவர் த்ரயி வேதி எனப்படுகிறார். மகாபாரத காலத்தில் தான் மூன்று பாகங்களும் மூன்று வேதங்களாக தொகுக்கப்பட்டன. அனால் அதற்க்கு ஒரு இரண்டாயிரம் டு மூவாயிரம் ஆண்டுகள் முன் நிகழ்ந்த ராமாயணத்திலும் இந்த வேதத்தின் மூன்று பாகங்கள் வரும்.

    நண்பரே அரபு நாட்டு மன நிலையில் இருக்கும் உங்களுக்கு இது புரிந்து கொள்வது கடினமே. இதை சொன்னால் சிங்க முத்து கோவப்படுகிறார்.

    நீங்களாகவே ஏதோ கற்பனை செய்து கொள்வீர்கள். முட்டாள்கள் tv இல் பேசுவதையும். உருது பத்திரிக்கையில் எழுதுவதையும் வாந்தி எடுப்பீர்கள்.

    உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் உங்களுக்கு சிறிதளவாது இந்திய வரலாறு தெரிந்து இருக்க வேண்டும் இல்லையேல் படித்து தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும். புரிந்து கொள்ளும் மனப்பான்மயாவது உள்ளது என்பதை வெளிக்காட்டுகிரீர்களா.

    உஷஸ் பற்றி எழுதுகிறீர்கள்., உஷஸ் என்பது விடைர்காலையை ஒரு ரிஷி பெண் தெய்வமாக வருணிக்கிறார் – அவ்வளவே. இதை பல திவா வழிபாடு என்றால் என்ன அர்த்தம்.

    ரிக் வேத புருஷ சூக்தத்தில் இந்த பல தெய்வங்கள் என்பது ஒரு பரமாத்மாவின் வடிவங்கள் தான் என்பது மிக துல்லியமாக கவித்துவத்துடன் விளக்கபடுகிறது. சஹஸ்ர சீர்சா புருஷஹ – ஆயிரம் ஆயிரம் தலைகளாக விளங்கும் ஒரு புருஷனே என்று தான் புருஷ சூக்தம் ஆரம்பமாகிறது. ஆயிரம் ஆயிரம் தளிகள் என்றால் பல உருவங்களாக விளங்கும் ஏக புருஷனே என்று அர்த்தம்.

    சரி உங்களுக்காக ஒரு இறைவனே எல்லாம் என்று சொல்லும் ரிக் வேத மந்த்ரம். இது முதல் அத்யாயத்திலேயே வருகிறது.

    Indram Mitram varunamagnimaahuratho divyah sa suparno garuthmaan|
    Yekham sadvipra bahudha vadantyagnim yamam maatarishwanamaahuh||
    Rigveda 1.64.46

    சத்யத்தில் இறைவன் ஒருவனே. ஞானிகள் அவரை பல பெயர் கொண்டு அழைக்கின்றனர். இறைவனே உலகின் ஆதார ஆன்மா. அவர்கள் ஒரே இறைவனை இந்திரன் என்றும், மித்திரன் என்றும் வருணன் என்றும் அழைக்கிறார்கள். …..

    இப்படி பல மந்திரங்கள் உள்ளன. எல்லாம் இடை சொருகல் என்று உலரக் கூடாது. வேத மந்திர, பிராமன, சாமான் பகுதிகளில் இடை சொருகல்கள் இருக்கவே வாய்ப்பில்லை என்பதை முன்பே வில்லை யாகி விட்டது. இதை நாங்கள் மட்டும் கூறவில்லை. சில கிறிஸ்தவ வெறியர்களான மேற்கிந்திய ஆராய்ச்சியாளர்களே ஒத்துக் கொண்டு விட்டனர். உதாரணத்திற்கு frits stall (discovering the vedas ) என்ற புத்தகத்தை எழுதிய ஆராச்சியாளர். அப்புறம் இருக்கவே இருக்கார் max muller.
    (உங்களுக்காக ஒரு சுவாரஸ்யமான செய்தி. முதல் முதலில் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது ரிக் வேதத்தின் முதல் மந்திரம் தான். எடிசன் அவர்கள் max muller ஐ அவரது குரலை முதலில் பதிவு செய்யும் படி விண்ணப்பித்த பொழுது., ஆயிரக் கணக்கானவர் முன்னிலையில் max muller ஆக்னி மிலே எனத் தொடங்கும் மந்திரத்தை தான் பத்தி செய்தார்.)

    மற்றபடி வேதத்தில் இப்படி இரண்டும் சேர்ந்து வருவது போல தோற்றமளிப்பது காரணம் எல்லாவற்றையும் ஒரு கடவுளாக பார்க்கிறது – உங்களை, என்னை, கல்லை மண்ணை, மரத்தை, செடியை, அக்னியை, நீரை, ஆகாசத்தை, இந்திரனை, சந்திரனை எல்லாவற்றையும்.

    அரபு மதங்களிலோ இறைவன் வேறு மற்றவை எல்லாம் வேறு வேறு. முஹம்மத் வேறு, மோசேஸ் வேறு அல்லா வேறு, முல்லாக்கள் வேறு வேறு. இப்படி பல பல வற்றை வைத்துக் கொண்டு எந்த மூஜியில் ஏக இறைவன் என்கிறீர்கள். அப்போ இறைவனை தவிர வரவும் இருக்கின்றன என்று சொல்கிறீர்களா. இது எப்படி ஏக இறைவன் கொள்கையாகும். இது ஒரு இறைவன் பல பாவப்பட்ட ஜனங்கள் கொள்கையாகும்.

    ஹிந்து மதஹ்தில் இறைவன் ஒருவரே உண்மை. இறைவன் ஒருவரே வேறு யாரையும் நாங்கள் ஒத்துக் கொள்வதில்லை. நீங்களோ இறைவனை ஒத்துக் கொள்கிறீர்கள், மோசேசை ஒத்துக் கொள்கிறீர்கள், முஹம்மதை ஒத்து கொள்கிறீர்கள், முல்லாக்களை ஒத்துகொள்கிறீர்கள் – எப்படி சார் ஓர் இறைவன்.

    உங்களது கொள்கையில் எவ்வளவு லாஜிக் சிக்கல்கள் இருக்கு என்று தெரியுமா உங்களுக்கு. அதற்க்குள் எல்லாம் என்னை போக வைக்காதீர்கள்

    நீங்கள் பால் கணக்கு தான் போடுகிறீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும் அதனால் தான் உங்கள் போக்கிலேயயே குரான் பற்றி கேள்விகள் கேட்டேன்.

    லாஜிக் சம்பந்தமான கேள்விகள் கேட்டால் உங்களுக்கு அல்லவை கும்பிடுவதா வேண்டாமா என்ற சந்தேகங்கள் நிச்சயம் எழும். நீங்கள் இழ்டப்பட்டால் கேட்கிறேன் – மூன்றே கேள்விகள் தான். அதை சுத்தி வளைத்து கீழே கேட்கிறென். இதில் நாங்கள் கேட்க நினைக்கும் கேள்வி உங்களுக்கு நிச்சயமாக புரியாது. புரிந்தால் சொல்லுங்கள். அப்புரம் இன்னொறு விஷ்யம் மேம்போக்காக பதில் சொல்லாதீர்க்ள். ஏதோ குரான் வசனத்தை அல்லித் தெளிக்காதீர்கள்

    சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் – நீங்கள் அல்லா தான் ஏக இறைவன் என்கிறீர்கள். அப்போ நீங்கள் யார். நான் யார். நீங்கள் அல்லா இல்லை என்றால் அல்லாவால் உங்களை கட்டுப்படுத்த முடியாது.

    வேணும்னா அல்லாவை ஏதானும் சொல்ல சொல்லுங்க நான் கேக்காம இருக்கிறேன் – அப்புறம் என்னாத்துக்கு ஏக இறைவன். என்னை கூட கட்டுப்படுத்த முடியாம,? .

    திருச்சிகாரர் குரானில் உள்ள காட்டு மிராண்டி வசனங்களைஅடுக்கி உள்ளார் அதற்க்கு நீங்கள் இன்னும் விளக்கம் தந்த பாடில்லை – ஹிந்துவத்தில் இறைவன் ஒன்றா பலவா என்று பேசுவது பிறகிருக்கட்டும்

    //
    நான் சிறுவனாக இருக்கும் போது எனது தாயார் எங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் மிகப் பெரிய காளி சிலையை கையில் கத்தியுடன் நாக்கை வெளியில் தொங்க விட்டிருக்கும் சிலையை காட்டி என்னை சாப்பிடுவதற்கும் பள்ளிக் கூடம் செல்வதற்கும் பயமுறுத்துவார். அவ்வளவு கோரமாக இருக்கும் அந்த சிலைகள். சுடலை மாடன் சாமி, காளி என்று கிராமங்களில் இருக்கும் நாட்டு தெய்வங்கள் அனைத்தும் கோரமாகவே உள்ளன. இறைவன் தண்டிக்கக் கூடியவன் என்பதை மக்களுக்கு விளக்கவே அந்த சிலைகள். ராமன் சூர்ப்ப நகையின் மூக்கை வெட்டியது, வாலியை மறைந்திருந்து கொன்றது, பாஞ்சாலியின் கதை, பாரதப்போர், கர்ணனை வஞ்சகமாக கொன்றது என்று இந்து மதத்திலும் கொலைகளும் வஞ்சகமும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
    //

    இப்படி அல்பமான விளக்கம் தர உங்களால் எப்படி முடிகிறது. இரண்டு ஊர் காரர்களுக்கு சன்டை என்றால் அதை ஏன் புனித புத்தகத்தில் எழுதி வைத்துள்ளீர்கள். அதுவும் பக்கத்து ஊர் காரண் உங்களை கொல்ல வந்தால் திருப்பி அடியுங்கள் என்றா இருக்கிரது. முஸ்லிம் அல்லாத எல்லா மக்களையும் வெட்டு குத்து, இல்லாட்டி டப்பு கர என்றல்லவாஇருக்கிறது . மஹாபாரத்தில் ஹிந்து இல்லாத எல்லாரையும் வெட்டுன்னா இருக்கு – அது வெரும் அன்னன் தம்பி சண்டை. அவர்கள் ஒப்புக் கொண்டு தான் போருக்கு போகிரார்கள். ஊர் ஊரா போய் மக்களை பயமுருத்தல மதம் மார சொல்லல, வரி போடல, கற்பழிக்கல – இதை எல்லாம் நபிகலின் சீடர்கலே செய்தார்கள் -அல்லா செய்ய சொன்னார் என்று நபிகள் சரடு விட்டதால் செய்தார்கள்.

    குரானில் ஒரு எழுபது விழுக்காடு இந்த சண்டயை பற்றி தானே இருக்கிரது. அதை எல்லாம் எடுத்து விட்டு குரான் வாசிக்க வேண்டியது தானே. இதை எடுத்து விட்டால் குரான் ஒரு pocket size book ஆகிடும். மதரஸாக்கல் நடத்த முடியாது. உலகமே இஸ்லாமியர்களை கொல்ல வருவதாக பில்ட் அப் கொடுக்க முடியாது.

    வேதங்கள் தான் ஹிந்துக்களின் ஒளி. அதில் சண்டை இல்லை. உடனே கீதயை காட்டாதீர்கள். அதில் வறுவது தர்ம-அதர்ம விஷ்யம். க்ருஷ்ணர் யாரயும் கற்பழிக்க சொல்ல வில்லை . போர வரவனை எல்லாம் கொல்ல சொல்லவில்லை. எல்லா அமைதி முயற்சியும் தோல்வி அடைந்த பின்ன்ர் தான் போறுக்கு செல்கிறார்கள். அதில் அர்ஜுனன் மட்டும் எல்லோறயும் விட்டு விட்டு ஒட பார்கிரான் – அவனது கடமயை என்ன என்பதை சொல்கிறார். India – China war ல. ஒரு major general பயந்து ஒடுவது தர்மம் ஆகாது. இது தான் க்ருஷ்ணர் சொல்வது. எல்லோரும் சண்டை போடனும் அப்படின்னு க்ருஷ்ண்ர் சொல்லலியே – வேதாந்தி இல்லாதவன கொல்லுன்னு க்ருஷ்ணர் சொல்லலியே. கௌரவர்கலிடம் ச்ண்டை போடுன்னு தான் சொன்னாரே தவிர நாடு நாடா போ எல்லாரயும் கற்பழி,மக்களை எல்லாம் கொல்லு,வெட்டு எல்லரயும் வேதான்தியா மாத்தர வரைக்கும் விடாதே என்ற் சொல்லவில்லயே

    கீதாவயும் குரானயும் compare செய்வத்ற்கே வெட்கப்பட வேண்டும் –இதை எல்லாம் சில முல்லாக்கல் சொல்கிரார்கள். இஸ்லாம் டீவீ யில் சொல்கிறார்கள் அதை அப்படியே இங்கே சொல்கிறீர்களே. உங்களது மூலயை பயன் படுத்த மாட்டீர்களா. முல்லா சொல்ரது சரியா என்ற் கீதயை ஒரு வாட்டி படித்து விட்டு முடிவு செய்வோமே என்று உங்களுக்கு தோனாதா. சரி விடுஙள், ஹிந்து அல்லாத புத்திசாலி நல்ல அறிஞ்ர்கள் பகவத் கீதா பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கூகுல் செய்து பாருங்கள்

    என்னைக்கோ நடந்த போறு அதை இபோபொதும் ஏன் மதரசாவில் மக் அப் செய்கிறீர்கள். பக்கத்து ஊர் காரண் தான் அடித்தான் இதை வைத்துக் கொண்டு அப்புறம் ஏன் இரான், ஆப்கான், பாரடம்,மலெசியா, ஆப்ரிகா என்ற் எல்லா இடத்துக்கும் போய் சகட்டு மேனிக்க்கு பொது மக்களை கொண்று பென்களை கற்பழித்து புனித இஸ்லாத்தை புகுத்தினிற்கள்.இவை இரு நாட்ட்குக்குள் நடந்த போர் அல்ல. வேறும் அரசாங்கங்களின் மோதல்கள் அல்ல. பொது மக்களை கொண்று குவித்த கோரப் போர். இஸ்லாம் சென்றவிடமெல்லாம் ரெத்தக் காடு தான்

  178. திரு சிங்க முத்து!

    //கடவுளுக்கு உருவம் இல்லை என்றே சொல்கிறார்.//

    கடவுளுக்கு உருவம் இல்லை என்று நான் சொல்லவில்லை. அதை கற்பனை செய்யும் அளவக்கு அறிவு நமக்கு கொடுக்கப்பட வில்லை என்றே கூறுகிறேன்.

    //சாரங்,
    இந்த மாதிரி பேசிப்பேசிதான், வேதத்தை சிலர் மாத்திரம் படிக்கலாம்ன்னு, மத்தவனுக்கெல்லாம் அதை புரிஞ்சுக்கற அறிவில்லைன்னு ஒதுக்கி இருந்தாங்க. இப்போதான் நிலைமை சீராகிக்கொண்டு வருது, மீண்டும் பழைய குருடி கதவை திறடி ன்னு போனா, புரியாத வேதத்தை ஏன்டா படிக்கணும், புரியற பைபிள் மற்றும் குரானை படிங்கடான்னு பலர் போய்டுவாங்க நண்பா.//

    ஒன்று சொன்னாலும் அந்த ஒன்றை நன்றே சொன்னீர்கள். முதலில் குர்ஆனைப்போல் தமிழில் அனைத்து வேதங்களையும் மொழி பெயர்த்து அனைத்து இந்து மக்களுக்கும் சலுகை விலையில் அளித்தாலே பல மாற்றங்கள் வரும்.

    முதலில் மனுவின் சட்டங்களை தூரமாக்க முயற்சி எடுத்தால் இந்து மதத்தில் மத மாற்றங்கள் நடப்பது ஓரளவு மட்டுப்படுத்தப்படும்.

    சில வேலை காரணமாக ஐந்து நாட்களுக்கு இணைய பக்கம் வர இயலாது. வேலை முடிந்து பதிவுகளை பார்வையிடுகிறேன்.

    அனைத்து பின்னூட்டங்களையும் எடிட் செய்யாது வெளியிட்ட நிர்வாகிகளுக்கு முதற்கன் நன்றி!

  179. திரு மலர்மன்னன் ஐய்யா ஒரு முதிர்ந்த ஹிந்து தலைவராக இந்த கட்டுரையில் நமக்கு தெளிவு படுத்தியுள்ளார் நன்றி
    குமரன்

  180. திரு சுவன்னப்பிரியன்,

    ஏற்கனவே “ஒரு பரப்பிரம்மம், பல தேவதைகள்” கொள்கைக்கு விளக்கம் கூறிவிட்டதாயிற்று. அதைப் பார்க்காமல் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லுவதால் என்ன பயன்?

    “கந்தர்வன்
    30 July 2011 at 8:00 am ”

    இந்த மறுமொழியில் பதில் இருக்கிறது.

    // நான் கேட்கிறேன்! பரம்மா, விஸ்ணு, முருகன் போன்ற தெய்வங்களுக்கு இப்படிப்பட்ட உருவத்தில்தான் இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. ஏதாவது ஒரு வேத புத்தகத்தில் பிரம்மனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதா? எல்லாமே கற்பனைதானே! மனிதர்கள் தங்கள் வசதிக்காக உண்டாக்கிக் கொண்டதுதானே! //

    பல வேத சாகைகள் நமக்கு இன்று கிடைக்காமல் போய்விட்டன என்பது நிச்சயம். ஆனால் விஷ்ணுவின் ரூபத்தை வேதமே சொல்கிறது என்று சங்கத் தமிழர்கள் கூறுகின்றனர்:

    கள்ளணி பசுந்துளவினவை கருங்குன் றனையவை
    ஒள்ளொளியவை ஒருகுழையவை
    புள்ளணி பொலங்கொடியவை
    வள்ளணி வளைநாஞ்சிலவை
    சலம்புரி தண்டேந்தினவை
    வலம்புரி வயநேமியவை
    வரிசிலை வயவம்பினவை
    புகரிணர்சூழ் வட்டத்தவை புகர்வாளவை
    எனவாங்கு
    நலம்புரீஇ அஞ்சீர் நாம வாய்மொழி
    இதுவென உரைத்தனெம் உள்ளமர்ந் திசைத்திறை
    இருங்குன்றத் தடியுறை இயைகெனப்
    பெரும்பெயர் இருவரைப் பரவுதும் தொழுதே.

    — பரிபாடல், 15

    மேற்கண்ட வரிகளின் பொருள்:
    திருமாலே! நீ துளவமாலையினையுடையை; நீல மலைபோன்றனை; ஒளிமிகவுடையை; ஒற்றைக்குழையினையுடையை! கருடக்கொடியை உடையை; கலப்பையை உடையை; சங்கு முதலிய ஐந்து திருப்படைக்கலனை யுடையை; இவ்வாறு வேதம் அவன்
    பெருமை கூறுதலானே
    யாமும் யாமறியளவையின் கூறித் திருமாலையும் பலதேவனையும் தொழுது அத் திருமாலிருஞ்சோலை மலையின் அடியிலுறைந்து வாழும் பேறு எமக்கு அருள்க! என வேண்டுவேமாக.

    உடனே சங்கத் தமிழ்ப் புலவர்கள் உடான்ஸ் விடுகிறார்கள் என்று எழுதாதீர்கள்.

    விஷ்ணுவின் பத்மநாப ரூபம் வேதத்தில் விஸ்வகர்மா சூக்தத்தில் குறிப்பாக உள்ளது. “பிறப்பற்ற பரம்பொருளின் நாபியிலே ஒன்று உண்டானது. அதில் பிரபஞ்சம் முழுவதும் அடங்கப்பெர்று நிலைபெற்றது” என்று ரிக் வேதம் விஸ்வகர்மா சூக்தத்தில் உள்ளது.

    விஷ்ணு அவதாரங்கள் பல வேதத்தில் உள்ளது. வாமன-திரிவிக்கிரம அவதாரம், வராக அவதாரம், மத்ஸ்ய அவதாரம், நரசிம்ம அவதாரம், கிருஷ்ண அவதாரம் எல்லாம் வருகிறது.

    இதெல்லாம் விஷ்ணுவுக்கு ரூபத்தைச் சொல்லாமல் எதைச் சொல்லுகிறதாம்?

  181. சிங்கமுத்து,

    நான் சுவனப்பிரியனிடம் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் சொல்வார். நீங்கள் தயவு செய்து சிண்டு முடிய வேண்டாம். சுவனப்பிரியன் எனக்கு நண்பர்தான். நாம் அவரும் பல தளங்களில் கருத்துப் பரிமாற்றம் செய்து இருக்கிறோம். எனக்கு யாருமே எதிரி அல்ல. அடிப்படையில் எல்லோரும் நல்லவரே, அவர்களின் அறியாமையால் அவர்கள் செயல்படும் விதம் மாறி உள்ளது என்பதே எமது கருத்து.

    இந்த உலகில் உள்ள எல்லோருக்கும் முழு பாதுகாப்பு , சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப் படவேண்டுன், அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப் பட வேண்டும் என்பதே நமது கருத்து.

    நீங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்வதானால் கருத்து அடிப்படையில் பேசுங்கள். பாலிடிக்ஸ் செய்ய வேண்டாம்.

    ஏற்கெனவே வேறொரு கட்டுரையில் என்னிடம் செத்துப் போய் பாரு கடவுள் தெரிவார் என்றீர்கள். செத்தால் கடவுள் காட்சி தருவாரா என்றால், செத்துப் போய் பாரு என்றீர்கள். இத்தனைக்கும் அந்தக் கட்டுரையில் நான் அதற்க்கு முன் உங்களிடம் கருத்து பரிமாற்றம் செய்யக் கூட இல்லை. இவ்வாறு எனக்கு எதிராக தனி மனித தாக்குதல் நடத்துவது சரி அல்ல.

    இதற்கு முன்பு இன்னொருவரும் இப்படி எனக்கெதிராக தொடர்ந்து தனி மனித தாக்குதல் நடத்தி வந்தார். நான் இந்து மதத்தை விட்டு போவதே நல்லது என்று அவர் சொன்ன கருத்தை தமிழ் இந்து தளம் தயங்காமல்
    பிரசுரித்தது.

    கருத்துப் பரிமாற்றம் செய்யவே நேரம் இல்லாத போது, இவ்வாறான தனி மனித தாக்குதலுக்கு பதில் அளிப்பது இயலாத காரியம்.

    எனவே நான் விலகுகிறேன்.

    சுவனப்பிரியன்,

    நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான எனது பதில் உங்களுக்கு கிடைக்கும்.

    இத்தனை காலம் என்னுடைய பின்னூட்டங்களை வெளியிட்ட தமிழ் இந்து தளத்திற்கு நன்றி.

    நன்றி.

  182. [47:4] If you encounter those who disbelieve, you may strike the necks. If you take them as captives you may set them free or ransom them, until the war ends. Had GOD willed, He could have granted you victory, without war. But He thus tests you by one another. As for those who get killed in the cause of GOD, He will never put their sacrifice to waste
    கழுத்தில் வெட்டி கொல்லுங்கள் நம்பாதவர்களை
    https://www.quran-islam.org/
    [9:23] O you who believe, do not ally yourselves even with your parents and your siblings, if they prefer disbelieving over believing. Those among you who ally themselves with them are transgressing.
    நம்பாதவர்கள் பெற்றோர் சகொதரராயினும் இனங்காதீர்கள்
    [9:28] O you who believe, the idol worshipers are polluted; they shall not be permitted to approach the Sacred Masjid after this year. If you fear loss of income, GOD will shower you with His provisions, in accordance with His will. GOD is Omniscient, Most Wise.
    உருவ வழிபாட்டாளன் தீண்ட தகாதவன்
    [9:29] You shall fight back against those who do not believe in GOD, nor in the Last Day, nor do they prohibit what GOD and His messenger have prohibited, nor do they abide by the religion of truth – among those who received the scripture – until they pay the due tax, willingly or unwillingly.
    [9:30] The Jews said, “Ezra is the son of GOD,” while the Christians said, “Jesus is the son of GOD!” These are blasphemies uttered by their mouths. They thus match the blasphemies of those who have disbelieved in the past. GOD condemns them. They have surely deviated.
    ஜிசிய வரி வாங்கலையோ ஜிசியா வரி, மேலும் ezra மற்றும் jesus கடவுளின் தூதர் என்பது கடவுள் நிந்தனை
    https://www.quran-islam.org/
    47:3] This is because those who disbelieve are following falsehood, while those who believe are following the truth from their Lord. GOD thus cites for the people their examples.
    [47:4] If you encounter (in war) those who disbelieve, you may strike the necks. If you take them as captives you may set them free or ransom them, until the war ends. Had GOD willed, He could have granted you victory, without war. But He thus tests you by one another. As for those who get killed in the cause of GOD, He will never put their sacrifice to waste.
    [4:24] Also prohibited are the women who are already married, unless they flee their disbelieving husbands who are at war with you.
    [4:34] The men are made responsible for the women, and GOD has endowed them with certain qualities, and made them the bread earners. The righteous women will cheerfully accept this arrangement, since it is GOD’s commandment, and honor their husbands during their absence. If you experience rebellion from the women, you shall first talk to them, then (you may use negative incentives like) deserting them in bed, then you may (as a last alternative) beat them. If they obey you, you are not permitted to transgress against them. GOD is Most High, Supreme.
    அடிங்கப்பா பொம்பளைங்கள
    [2:226] Those who intend to divorce their wives shall wait four months (cooling off); if they change their minds and reconcile, then GOD is Forgiver, Merciful.
    [2:227] If they go through with the divorce, then GOD is Hearer, Knower.
    [2:228] The divorced women shall wait three menstruations (before marrying another man). It is not lawful for them to conceal what GOD creates in their wombs, if they believe in GOD and the Last Day. (In case of pregnancy,) the husband’s wishes shall supersede the wife’s wishes, if he wants to remarry her. The women have rights, as well as obligations, equitably. Thus, the man’s wishes prevail (in case of pregnancy). GOD is Almighty, Most Wise
    தலாக்கு இப்படி இருக்கோணும், நாட்டமையோட தீர்ப்பாக்கும்.
    [22:8] Among the people there is the one who argues about GOD without knowledge, and without guidance, and without an enlightening scripture.
    [22:9] Arrogantly he strives to divert the people from the path of GOD. He thus incurs humiliation in this life, and we commit him on the Day of Resurrection to the agony of burning.
    சுட்டு பொசுக்கிடுவேன் என்னை நம்பாங்காட்டி

    [66:10] GOD cites as examples of those who disbelieved the wife of Noah and the wife of Lot. They were married to two of our righteous servants, but they betrayed them and, consequently, they could not help them at all against GOD. The two of them were told, “Enter the Hell-fire with those who deserved it.”
    [22:19] Here are two parties feuding with regard to their Lord. As for those who disbelieve, they will have clothes of fire tailored for them. Hellish liquid will be poured on top of their heads.
    [22:20] It will cause their insides to melt, as well as their skins.
    [22:21] They will be confined in iron pots.
    [22:22] Whenever they try to exit such misery, they will be forced back in: “Taste the agony of burning.”
    நம்பாதவர்க்கு நரகம் இப்படித்தான் இருக்கும்.இது எப்புடி இருக்கு? இது எல்லாமே மேலே குறிப்பிட்டுள்ள ஒரு இஸ்லாமிய தளத்தில் தானுங்கோ எடுத்தேன்.
    இவை எல்லாம் அல்லாவை பணியாதர்காகவே நபிகள் மூலம் அனுப்பப்பட்ட தண்டனைகள்.மற்றும் இஸ்லாமின் பெண்களின் உரிமைகள்.
    இங்கு கொலை செய்ய சொல்லபட்டிருப்பதெல்லாம் அல்லாவை ஏற்காததற்கு மட்டுமே. ராமன் அல்ல சூர்ப்பனகை முக்கை வெட்டியது, லட்சுமணன்.அதுவும் அவள் ராமனிடம் பொருந்தா காமம் (பெருந்திணை, கைக்கிளை) கொண்டு அவனை அதற்கு கட்டயபடுத்தியதுதான்,மறைந்து இருந்து கொன்றது மிருகத்தை மனிதனை அல்ல, மனிதனை கொல்லத்தான் போர் தர்மம், மிருகத்திற்கு (வானரனுக்கு) அல்ல.பாரத போர் பங்காளி சண்டை, நீங்கள் குரான் வரிகளை இங்கு இணை வைப்பதை யாரவது உங்கள் ஆட்கள் பார்த்தால் உங்களுக்கு தடை விதிக்க போகிறார்கள்.கவனம்

    உங்களுக்கு ரமலான் நல்வாழ்த்துக்கள்.

  183. சுவனப்ரியன்

    வேதம் குரான் இல்லை, பஞ்ச தந்தர கதை இல்லை. முல்லா கதை இல்லை – படம் பார்த்து புரிந்து கொள்வதற்கு. வேதங்களின் மொழி பெயர்ப்பு பல பல மொழிகளில் உள்ளன. பகவத் கீதையை ஒரு 800 ஆண்டுகள் முன்னரே தமிழ் படுத்தியாகிவிட்டது (விளக்க உரை இல்லை, தமிழில் வென்பாவாகவே வடிக்கப்பட்டுவிட்டது).

    வேதத்தின் பொருளை அப்படியே அழகான தமிழில் பரிபாடல்களும், திவ்ய பிரபந்தங்களும் கூறுகின்றன. திவ்ய பிரபண்டத்திர்க்கு திராவிட வேதம் என்று தான் பெயர். வைணவத்தில் பிராமணர்களை விட அப்ராமனர்களே அதிகம். அவர்கள் அனைவரும் பிரபந்தம் அறிவர். இதை எல்லாம் நம் முன்னோர் அன்றே செவ்வனே செய்து விட்டனர்.

    பல பல காலமாகவே வேதங்கள் பிராமணர் அல்லாதவருக்கும் சொல்லிதரப்படுகின்றது. நான் வேதாந்தம் படிக்கும் இடத்திலேயே பிராமணர் அல்லாதவரும் படிக்கின்றனர்.

    தீகா காரன் சொல்வதை முழசா நம்பி இப்படி பேசுவதால் பயன் இல்லை. கொஞ்சமேனும் யோசியுங்கள்.

    சிங்கமுத்து சொல்வதெல்லாம் உங்களுக்கு law point – அதுல பழ மொழி வேற.

    சிங்க முத்து – யாராவது பிராமணர் அல்லாதவர்கள் வேதம் படிக்க ஆசை பட்டு தடை செய்யப்படுகிறதா இப்போது.

    முன்காலத்தில் என்று சொன்னால் – நான் பல பல சான்றுகளை அடுக்குவேன். தெரிந்து கொண்டு பேசுங்கள். திருச்சிகாரர் சொல்வது போல இடை சொருகல்கள் வேண்டாம். உங்களுக்க் தான் சறுக்கல்கள் மிஞ்சும்.

  184. திருச்சிக்காரன்,
    ஆத்தோட கோவிச்சுட்டு கால் கழுவாம போனானாம் ஒருத்தன். அப்படி இருக்கு நீங்க போறது.
    மலர்மன்னன் மாதிரி பெரியவர்கள் தங்கள் அனுபவத்தை கொண்டு கட்டுரை போடுகிறார்கள்.
    சாரங் போன்றவர்கள் மாற்றுமத நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார்கள்.
    ஜோ மற்றும் சுவனப்பிரியன் போன்றோர் நல்லமுறையில் விவாதம் செய்கிறார்கள். நமது பல கொள்கைகளை புரிந்தும் கொள்கிறார்கள் (ஒரே நாளில் அவர்கள் இந்துக்கள் ஆகவும் முடியாது, புரிதலுக்கு கொஞ்சம் காலம் பிடிக்கலாம்). இந்த மாதிரி வெண்ணை திரண்டு வர வேளையில் தாழியை உடைப்பதை போல், குதர்க்கமாக, அடுத்தவரை வெறுப்பேற்றும் தொனியில் பேசினால் என்னதான் செய்ய முடியும்.

  185. இங்கு பிரச்சனை அது அல்ல. பிரச்சனை வலுக்கட்டாயமாக பிராந்திய மொழி பாடத்திட்டத்தை முழுமையாக மாற்றியதோடு மட்டும் அல்லாமல், அவர்களுக்கு கொடுக்கக் கூடிய மானியத்தையும் நிறுத்தியதே ஆகும்.

    Gomathi Chetti.

    Marathi s not the mother tongue of Goans as i said already. Their mother tongue is Konkani. Prominent Goans include the Mangeshkar sisters, the Cartoonist Mario Miranda, the Journalists Frank Moraes and his son, Dom Moraes. The film Bobby s based on Goan culture. The last song is a Goan dance of fisher-folk rendered in Hindi flamboyantly.

    Goan culture s a hybrid of Indian and Portuguese culture. They r proud of it. There s no objection to such Portuguese hybrid from them. Had they been, they wd have been insistent to change it when they got liberation in 1962. Just as Puducherry people. They don’t want to join TN although their mother tongue and culture is Tamil and Tamilian. They want to b part of French colonial legacy only and consider it a pride of possession. Not only Christians among them, but all of them want that. Hence in order to preserve it they remain as UT. They were given the choice of either joining TN or becoming a State themselves. The Pudhucherrians rejected both.

    Konkani s, however, the sister language of Marati – having same root. The issue s here: y the govt s not supporting Konkani. It should.
    But supporting the regional lang shd not preclude lending support to English.
    Remember, most of the Goans like to go out of state for earning and also abroad Eng s mandatory for that. Eng proficiency s the passport to job. Countries like UK and Australia, have prescribed mandatory TOEFEL test for migration.

    My qn to u: y s the govt supporting the mother tongue of Maharashtrians ?

    Do u know in Punjab, the govt s not only actively supporting financially and in other ways, but recently advanced the year of student to learn English from 5th to 3rd class.

    The attempt of the people in ur link s retrograde. Goan masses wont approve.

  186. இந்து மதத்தின் தொன்மை பற்றிச்சொல்லி கட்டுரையாளர் பெருமைப்பட்டுக்கொள்கிறார். இவரைப்போல எல்லாரும். தமிழில் தொன்மைபற்றித் தமிழர்கள் பெருமைபட்டுக்கொள்கிறார்கள்.

    இவ்வாறாக, தொன்மையிலிருந்து ஒரு கிரடிட் எடுக்கப்பட்டுக் காட்டப்படுகிறது.

    ஒரு மொழி தொன்மையானது என்றே சொல்லிக்கொண்டு மட்டுமிருந்தால் அம்மொழியைப் பிறமொழிகள் மிஞ்சு விடும் இலக்கியத்தில் மட்டுமல்ல மற்றபல விடயங்களிலும். இதைப் பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பழங்கதைப் பேசிப்பலனில்லை. எட்டுத்திக்கும் சென்றிடுவீர். பிற நாட்டு இலக்கியங்களைத்தமிழருக்குச் சொல்லுங்கள் தமிழில் என்றெல்லாம் பாரதியார் எழுதியிருக்கிறார். இன்றையத் தமிழ்ப்பற்றாளர்கள் இம்மொழியை இற்றைநாளுக்குரியதாக எப்படி மாற்றுவது என்று கலந்து பேசி வருகிறார்கள்.

    மதமும் அப்படித்தான் இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். வெறும் தொன்மை மட்டுமே கிரடிட்டா ?

    இன்னொரு மதமிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை எழுதினோர் பராமரிப்போர் இற்றை நாளுக்கு அல்லது மனிதருக்கேற்றவண்ணம் மாற்றிக்கொண்டே வரும்போது மக்களின் பேராதரவுடன் அது வலம் வரும்.

    எனவே இந்து மதம் தொன்மையானது. எனவே சிறப்பானது என்று கருத்து மட்டுமே முன்வைக்கப்பட்டால், அது வெறும் தற்பெருமை.

  187. The commenter with the name senthil kumar writes:
    நீங்கள் நிஜமாகவே PhD படிக்கிரீர்களா? அல்லது வேறு இனையதளங்ளுக்கு சென்று அதில் உள்ள கறுத்துக்களை Copy அடித்து இங்கு Paste செயிகிறீர்களா?

    தாங்கள் இது போன்ற தகவல் ஏதும் தெரிந்துகொள்வது இல்லை போலும், காரணம் இது மிகவும் பழைய செய்தி. சிரு படிப்பு படித்த எனக்கு கூட தெரிந்த விஷயம்…..? ? ? ! ! ! !

    வளரனும் தம்பி வளரனும்//

    The letter in English asking the admn to ban all Sanskirtic and English comments was in jest. And, anything therein describing the writer of the letter shd also b taken in jest. But no one here cd take it that way. Some time from now, I will post something describing me as the President of US or a President of some orgn which u dont know. U will believe all.
    இப்போது தலையான கருத்துக்கு வருவோம். இரு இலட்சம் பேர் தமிழகத்தில் வடமொழி தெரிந்திருக்கிறார்கள் என்று மட்டும் எழுதவில்லை. அவர்கள் சரளமாக அம்மொழியில் பேசுபவர்கள் என்றும் சொல்கிறார். இப்படி இரு இலட்சம் பேர் இருந்தால், அத் வெளியில் தெரியாமல் இராது. மேலும், அம்மொழி நாளுக்குநாள் பரவுமேயொழிய குடத்திலிட்ட விளக்காக மட்டுமிராது. தமிழையும் மிஞ்சிவிடும் இன்னும் சில்லாண்டுகளில்.

    அப்படி இருந்திருந்தால், எழுதியவர் சொல்லி நமக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை. எவராவது தமிழர்களுள் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் தெரியுமென்று சொன்னால் எப்படியிருக்கும் ? எங்களுக்குத் தெரியாதா ? என்றுதான் சொல்வோம்.

    இப்படி புள்ளிவிவரங்கள் கொடுத்து எழுதுவோர் எங்கிருந்து பெற்றார்கள் என்று மூலத்தையும் போட்டுவிட்டால், வியப்போ, விதண்டாவாதமோ எழுவே எழா!

    I presume he takes all those priests (vaathiyaars) who recite slokas in religious ceremonies like marriage etc. None of them speaks Sanskrit either among themselves or at their homes. They have memorized all slokas from childhood onwards and acquired the expertise to recite them with effortless ease; but they do only as a professional requirement. Just as Cine actors, esp. actresses, know more than one south Indian lang for their survival: if Kollywood rejects, they can go to Mollywood; if Mollywood rejects, they will go to Tellywood and so on.

    The students studying in Vedapadasalas r negligible in number. As I said already, even among Tamil brahmins, the number s going down rapidly. The lang s associated with religion and as such, it s non-utilitarian. Further, the Hindu religion s so flexible that she does not insist on knowledge of anything, let alone Sanskrit, to be a good Hindu.

    So, he has to show the proof to his statement that 2 laksh people in TN speak Sanskrit fluently.

    It is over-enthusiam on his part.

  188. சிங்கமுத்து,

    சுவனப்பிரியன் , ஜோ அமலன் போன்றவர்களே என்னை ஒன்றும் சொல்லாத நிலையில், என்னை விட பலரும் கடுமை காட்டிய நிலையில், என்னை மட்டும் குறி வைத்து என் மீதான தனி மனித தாக்குதலை நீங்கள் தொடர்ந்து நடத்துவதை

    இதை மீண்டும் குறிப்பிட்டு சொல்லுகிறேன்,என்னை விட பலரும் கடுமை காட்டிய என்னை மட்டும் குறி வைத்து என் மீதான தனி மனித தாக்குதலை நீங்கள் தொடர்ந்து நடத்துவதை படிக்கும் அனைவரும் புரிந்து கொள்ள இயலும்.

    முன்பும், இப்போதும் எனக்கெதிராக திட்டமிட்டு நடத்தப் படும் தனி மனித தாக்குதல்களை மகிழ்ச்சியுடன் வெளியிடும் தமிழ் இந்து இதழுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிங்கமுத்து, நீங்கள் என்னை இகழ்ந்து கணடித்து ஆயிரம் பின்னூட்டங்களை போட்டுக் கொள்ளலாம். தமிழ் இந்து இதழும் அதை மகிழ்ச்சியாக வெளியிடலாம். ஆனால் அதை நான் அனேகமாக படிக்க மாட்டேன் என எண்ணுகிறேன் , மற்றவர்கள் வேண்டுமானால் படித்துக் கொள்ளலாம்.

    ஒரு இந்துவை தமிழ் ஹிந்து தளத்திலிருந்து விரட்டும் படிக்கான தனி மனித தாக்குதல்களை மட்டுறுத்தாமல் வெளியிட்ட நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.

    எப்போதைக்குமாக விலகுகிறேன்!

  189. The commenter with the name Bala writes:

    திருமலை மட்டுமல்ல.. பண்டரிபுரத்திலும், காசி விசுவநாதர் ஆலயத்திலும், சோமநாதபுரத்திலும், துவாரகையிலும், ஸ்ரீசைலத்திலும், காளி கட்டத்திலும் எல்லா இடத்திலும் அப்படித் தான்… வட பாரதத்தின் கோயில்களில் இறைவனுக்கு அருகே சென்று பக்தர்களே பூஜை செய்யலாம், அந்த அளவுக்கு சமத்துவம் உள்ளது.. அங்கெல்லாம் தமிழ் அர்ச்சனையா நடக்கிறது? சம்ஸ்கிருத, வேத மந்திரங்கள் தானே சொல்லி பூஜை செய்கிறார்கள்?

    ஸ்ரீ ராமானுஜர் என்ற மிகப் பெரும் மகான் தமிழகத்தில் செய்தார், அவரைப் பற்றீ ஏதோ நீங்கள் கொஞ்சம் படித்திருக்கிறீர்கள், சந்தோஷம். அதை வைத்துக் கொண்டு ஓவராக எல்லாம் அறிந்தவன் போல் பேசுவதை நிறுத்துங்கள். அதே போன்று பாரத தேசம் முழுதும் அது போன்று பல மகான்கள் பல இடங்களில் சமய சீர்திருத்தம் செய்திருக்கிறார்கள். அதையும் உண்மையான இந்துக்களாகிய நாங்கள் அறிந்திருக்கிறோம்.

    இந்த ஜோ அமலனின் கருத்துக்களைப் பார்த்தால், அரை குடம் கூட அல்ல, கால் குடத்திற்கும் கம்மி என்று தெரிகிறது. இந்து மதத்தின் விஸ்வரூபம், விசாலம் இந்த ஆள் அறியவரவில்லை. ஒரு இந்துவாக, இந்துப் பண்பாட்டின் உள் வாழ்ந்து அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று இவருக்கு அனுபவம் இல்லை. இவர்.. தான் ஏதோ பெரிய வைணவ அபிமானி போல பாவனை செய்து கொண்டு குழப்படியாக ஏதோ எழுதுகிறார். உண்மையான வைஷ்ணவ நெறியாளர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.//

    My dissent:

    இந்த “நாங்கள், நீங்கள், அவர்கள்” என்பது இந்து மதத்தில் அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே இங்கு ஒருவருக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அப்படி எவர் சொன்னாலும் அவர் போய் வாழவேண்டிய இடம் ஆப்கானிஸ்தான் தாலிபான்களோடே.

    எப்படி உண்மையான இந்துவாக பாலா ஆகிறார் என்பது வியப்பே. அவர் நினைப்பது என்னவென்றால். இந்து என்பது ஒரு ஆமினிபஸ் மதம். இதுவே இத்தள நிர்வாகிகளின் நினைப்பும் கூட‌.

    ஆனால், இஃது ஒருவகையான சிந்தனை மட்டுமே. ஒரு கருத்தில் மட்டுமே. One part of the whole story.

    இந்து மதம் வித விதமான வகைகளுக்கு வழிசெய்கிறது. எவருக்கு எஃது வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டு வாழலாம். அப்படி வாழ்பவரும் இந்து என்பதை மறுத்தால் மறுப்பவன் இந்துவல்ல. அவன் ஒரு தாலிபான்

    உணமை இந்து என்பவன் இந்துமதத்தில் இருக்கும் பேதங்களை அனுமதித்து அவர்களுக்குத் தொல்லைதராதவன் மட்டுமே. எல்லா விதங்களும் சேர்ந்ததுதான் இந்து மதமென்றும் சொல்லலாம். At the same time, “இல்லை இல்லை…அந்த விதங்களில் ஒன்றை மட்டுமே நான் ஏற்றுக்கொள்வேன்; அதுவே என் மதம்” என்றும் சொல்லலாம்.

    எடுத்துக்காட்டாக: தயானந்த சரசுவதி விக்ரக வழிபாட்டை ஏற்கவில்லை. அவர் வேதங்களின் வழி வேள்விகளையே ஏற்றுக்கொண்டார். At the same time, அவ்வேதங்களை ஏற்காத இந்துமத விதமும் உண்டு.

    அலகு குத்திக்கொண்டு முருகனுக்குக் காவடி எடுப்போருக்கு இங்கு பந்தாவாக எழுதப்படும் வடமொழியோ அதன் சுலோகங்களோ, இம்மதத்தின் தொன்மையாக செய்யப்படும் சடங்குகளோ, அவற்றின் பொருட்களோ தெரியா. இருப்பினும் அவர்கள் இந்துக்கள். அவ‌ர்க‌ள் உங்க‌ளிட‌ன் வ‌ர‌மாட்டார்க‌ள். ஏனெனில் அவ‌ர்க‌ளில் ப‌ல‌கோயில்க‌ள் பூஜாரிக‌ள் அவ‌ர்க‌ளே. ஆங்கு த‌மிழே கோலோச்சும்.

    என‌வே, உண்மை இந்து என்று த‌னக்குத்தானே மாலை போட்டுக்கொள்ளும் பாலா, please know this.
    “எப்ப‌டியும் வாழ‌லாம். ஒழுக்க‌மாக‌. இந்துக் க‌ட‌வுளர்க‌ளையோ, அவ‌ர்க‌ளுள் ஒருவ‌ரையோ வ‌ண‌ங்க‌லாம். எப்ப‌டியும் வ‌ழ‌ங்க‌லாம். கோயிலிலோ, அல்ல‌து வீட்டிலிலோ. எப்பாசையிலும் வ‌ண‌ங்க‌லாம். அதே வேளையிலும் அப்ப‌டிச்செய்ப‌வ‌ர் தாம் செய்வ‌தே ச‌ரியென‌வும் சொல்லிக்கொள்ள‌லாம்.

    கிருத்துவ‌ரோ, இசுலாமிய‌ரோ அப்ப‌டித்தான் சொல்கிறார்க‌ள். ஆனால் ஒரே ஒரு வேறுபாடு. தாம் வ‌ண‌ங்கும் க‌ட‌வுளே ப‌ரத்துவ‌ம். ம‌ற்ற‌ தெய்வங்க‌ளைத் தொழோம் என்று சொல்வ‌தோடு நிற்க‌ வேண்டும். மாறாக, பிறர் வணங்கும் தெய்வங்களைப்போலி என்று பகடி பண்ணக்கூடாது. நம்மாழ்வார் ‘அவரவர்’ பாசுரத்தில் சொல்கிறாரல்லவா ? “உங்கள் இறைவனை நான் குறை சொல்லவில்லை. ஆனால் எனக்கு ஒரே கடவுள் திருமாலே” என திருவாய்மொழியே பேசிவிட்டாரல்லவா ? அவரிடம் போய், ‘நாந்தான் உண்மை இந்து! நீரல்ல” என்று சொல்ல பாலாவுக்கு முடியுமா ?

    மேற்ச்சொன்ன இருமதத்தாரும் தங்கள்தங்கள் கடவுள் உண்மையென்பதோடு நில்லாமல் பிறதெய்வங்களப்போலி என்று பகடி ப‌ண்ணுவதால் விமர்சனத்துக்குள்ளாகிறார்கள்.

    இந்து மதத்தில், தன் கடவுள் இதுவே எனச் சொல்லி பிறர் இறைவழிபாட்டு நம்பிக்கைகளில் தலையிடாமல் வாழ முடியும். அவ‌னிட‌ம் போய் ‘நானே உண்மை இந்து !நீர் போலி ” என்றால் ஊரார் கைகொட்டிச்சிரிப்பார்கள்.

    வைணவப்பாசுரங்கள் திருமழியிசையாழ்வாரின் திருச்சந்த விருத்தத்திலிருந்து போட்டால் பாலா வாயடைத்துப்போவார். திருமாலின் பரத்துவத்தைத் தனக்கே உரித்தான முரட்டுத்தனத்தில் (aggressively) நிலை நாட்டுகிறார் ஆழ்வார். இவர் இப்படிச்சொன்னதாலேயே இவருக்கு சிரிவைணவர்கள் இட்ட இன்னொரு திருநாமம் ‘உரையில் அடங்காதவர்’ என்பது. (a sword that cant be kept in its sheath meaning it s in active use)

    பெரியாழ்வாரோ, அய்யோ..குழந்தைகளுக்கு பெருமாளின் திருநாமங்களைச்சூட்டு மகிழாமல் பிற தேவதைகளிள் பெயர்களச்ச்சூட்டி மாய்கிறார்களே’ எனப்பெற்றொர்களைக்கடிந்து பத்துப்பாசுரங்களில் சொல்லி விசன்ப்படுகிறார். இப்படி அனைத்து ஆழ்வார்களிடமிருந்து எடுத்துக்காட்டலாம். ஆழ்வார்களைப்பொறுத்த மட்டில் ஒரே கடவுள் திருமாலே. அக்கடவுளே தொழப்படவேண்டும். அக்கடவுளாகவோ, அக்கடவுளின் அவதாரங்களாகவோ.

  190. இதே பெரியாழ்வார்தான் திருமாலில் ப்ரத்துவத்தை பாண்டியன் வல்லபதேவன் அரசவையில் பிற சமயத்தோடு நடத்தப்பட்ட வாதத்தில் நிலை நாட்டி பொற்கிழி பெற்றார். இதற்காக அவரை ஆனையில் மேலேற்றி ஊர்வலம் வரச்செய்து போற்றினான் பாண்டியன். இதன்பின்னெரே அரசவைக்கு அருகிலிருந்து கூடலழகர் பெருமாள் கோயில் கூடலழகருக்கும் மதுரவல்லித்தாயாருக்கும் முன்பு ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லார்ந்த திண்டோள் மணிவண்ணா நீ வாழ்க” என்று பாடினார்.

    No aazhwaar accepted any other God. Why not call them fake Hindus ?

  191. எனது அடையாளத்தைத் தேடி தனிநபர் தாக்குதலில் இறங்காதீர்கள். என் கருத்துக்கள் தாக்கப்பட்டால் அது போதும். எந்த‌ தளத்திலும் எனது அடையாளத்தை நான் காட்டுவது கிடையாது. நான் ஏற்கனவே சொல்லி விட்டேன்: நான் இந்து என்றோ, இசுலாமியன் என்றோ கிருத்துவன் என்றோ எழுதவில்லை. கற்றதும் பெற்றதும் மட்டுமே என்னால் இங்கு பதிவுக்குப் பதில் தரும்வண்ணம் எடுத்தியம்பப்படுகிறது (rehashing that which I hav learnt or read). எனவே நான் உண்மை இந்துவா, போலி இந்துவா, கிருத்துவனா இசுலாமியனா என்ற பேச்சுக்கே இடமில்லை.

  192. \\\\\\\\\\தமிழ் பெரிதா? சமஸ்கிரதம் பெரிதா? என்ற கேள்வி பலகாலமாக பலராலும் எழுப்பப்ட்டு வருகிறது. முஸ்லிம்களில் கூட சிலர் அரபியை தேவ பாசை என்று தவறாக விளங்கியிருக்கிறார்கள். மொழி வெறி கூடாது என்கிறது இஸ்லாம்.\\\\\\\

    பரவாயில்லையே. ஆனால் உலகமுழுதும் அரபியில் மட்டுமேயன்றோ குரான்-ஏ-ஷெரீஃப் ஓதப்படுகிறது.

    \\\\\\\\சிங்க முத்து – யாராவது பிராமணர் அல்லாதவர்கள் வேதம் படிக்க ஆசை பட்டு தடை செய்யப்படுகிறதா இப்போது.\\\\\\\

    அன்பர் ஸ்ரீ சிங்கமுத்து, ஒரு சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்த ஸ்ரீ ராம்க்ருஷண் யாதவ் என்ற ஸ்வாமி ராம்தேவ் மற்றும் அவரது குரு ஸ்ரீ ப்ரத்யும்னர் போன்றோர் சிறந்த வேத விற்பன்னர்கள். இவர்கள் ப்ராம்மணர்கள் அல்லர். வேதம் கற்க வேண்டும் என்ற மனமிருந்தால் மார்க்கமுண்டு. உத்தர பாரதத்தில் இதுபோல் ஆயிரக்கணக்கானோர் உண்டு.

    \\\\\\ஒரு இந்துவை தமிழ் ஹிந்து தளத்திலிருந்து விரட்டும் படிக்கான தனி மனித தாக்குதல்களை மட்டுறுத்தாமல் வெளியிட்ட நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.எப்போதைக்குமாக விலகுகிறேன்!\\\\\\

    எப்பொழுதும் உத்ஸாஹம் குறையாது உத்தரமளிக்கும் ஸ்ரீ திருச்சிக்காரர் இப்படி பதிலிறுப்பது அழகன்று. தங்கள் கருத்துப்பரிவர்த்தனங்களை தொடருங்கள்.

  193. //சிங்க முத்து – யாராவது பிராமணர் அல்லாதவர்கள் வேதம் படிக்க ஆசை பட்டு தடை செய்யப்படுகிறதா இப்போது. //
    சாரங் மற்றும் கிருஷ்ணகுமார்,
    என் மனைவி பிராமண சமூக பெண். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதால், நான் சந்தித்த அவலங்கள் பல. அதில் ஒன்று தான், என் வேதம் பயிலும் முயற்சியும். கன்னியாகுமரியை சேர்ந்த ஒரு பிரபல வேத ஆசிரியர் (பெயர் வேண்டாம்), என் ஜாதகத்தை எல்லாம் கொண்டுவர சொல்லி, மணிக்கணக்காக என்னை காக்கவைத்து, “அனைவராலும் வேதம் பயில முடியாதப்பா” என்று கூறி ஒரு காபி கொடுத்து அனுப்பிவிட்டார்.
    யாரோ ஒரு சிலர் பிராமணராக இல்லாவிட்டாலும் வேதம் பயிலும் வாய்ப்பு பெற்று இருக்கலாம். ஆனால், அது எல்லோர்க்கும் கிடைக்கவில்லை. இப்போதும் நான் இணையதளம் மூலம் சிலவற்றை கட்டுகொள்ள முயல்கிறேன். உங்களை போன்றவர்கள் கூறும் சில வார்த்தைகளை கிரகிக்க பார்கிறேன், ஆனால் குருமுகமாக கற்பர்தர்க்கு அது இணையாகாது.

    திருச்சிக்காரன்,
    உமக்கு எதிராக யாரும் திட்டம் எல்லாம் போடவில்லை. நீராக வெளியேறுவதானால் அது உமது விருப்பம், அநியாயமாக தளத்தை குறை சொல்ல தேவையில்லை. சில இடங்களில் நீர் இடறல் உண்டாகியது போல் இருந்தமையாலேயே, உம்மை கண்டிக்க நேர்ந்தது.

  194. //…கன்னியாகுமரியை சேர்ந்த ஒரு பிரபல வேத ஆசிரியர் (பெயர் வேண்டாம்), என் ஜாதகத்தை எல்லாம் கொண்டுவர சொல்லி, மணிக்கணக்காக என்னை காக்கவைத்து, “அனைவராலும் வேதம் பயில முடியாதப்பா” என்று கூறி ஒரு காபி கொடுத்து அனுப்பிவிட்டார்….//

    புரியவில்லை. எதற்காக ஜாதகம் வாங்கிப் பார்க்க வேண்டும். ஜாதகம் பார்த்துத்தான் அவர் மற்றவர்களுக்கு வேதம் கற்றுத் தருகிறாரா?

    அபத்தமாக இருக்கிறது.

    சிங்கமுத்து, ஆனைக்கட்டியில் உள்ள ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதியின் ஆஸ்ரமத்தில் ஜாதி மத வேறுபாடின்றி வேதம் சொல்லித் தருகிறார்கள். தேனி ஓம்காரனந்த ஸ்வாமியின் ஆஸ்ரமத்திலும். அவரது சீடரான ஸ்வாமி ப்ரஹ்மயோகானந்தரின் ஆஸ்ரமத்திலும் அப்படியே.

    ஆரிய சமாஜங்களிலும் சொல்லித் தருகிறார்கள்.

    வேறு எங்கெல்லாம் இந்த வாய்ப்பு இருக்கிறது என்பதை இதுகுறித்துத் தகவல்கள் அறிந்த வாசகர்கள் இங்கே சொல்லலாமே.

    .

  195. சிங்கமுத்து

    உங்களது ஊர் என்ன – சென்னையாக இருந்தால் உங்களை வேத கிளாசில் சேர்த்து விடுவது என் பொறுப்பு.

    srsarangan@gmail.com இ-மெயில் அனுப்பவும்.

  196. அன்பர் ஸ்ரீ சிங்கமுத்து, தங்களது உத்தரத்தில் தங்களது தாபமறிந்து மனக்லேசமுற்றேன். பின்னும் மிக உயர்ந்த கருத்தையும் தங்கள் உத்தரம் தாங்கியுள்ளது.

    “ஆனால் குருமுகமாக கற்பர்தர்க்கு அது இணையாகாது”

    “குரோர் அனுக்ரஹேணைவ புமான் பூர்ண: ப்ரசாந்தயே” – குருவருளாலேயே மனிதன் முழுமையடைய முடியும் என்பது இறைவனாகிய கண்ணனே சாந்தீபனியிடமிருந்து கல்வி கற்று நமக்கு அறிவுறுத்தும் விஷயம்.

    நான் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாகிறது. உத்தர பாரதத்தில் தங்களுக்குதவும் சான்றோர்களை சொல்ல முடியும். ஆயினும் தமிழகத்தைப் பொருத்தவரை தளத்தில் உள்ள ஏனைய கற்றறிந்த சான்றோர்களே தங்களுக்கு வழி சொல்ல இயலும்.

    தாங்கள் வேண்டுவது அறிதற்கரிய பொருள். அதையும் முறைப்படி அறிய விழைகிறீர்கள். ப்ரதேசாந்தரத்தில் இருக்கும் நான், “வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே” என எனது வள்ளல் அருணகிரிப்பெருமான் உகந்தேத்தும் சிவகுருநாதனை மனதாற இறைஞ்சவே இயலும்.

    “யாம் நினைத்ததுமளிக்கும் மனத்தையுமுருக்கும்” மால் மருகன் தங்கள் வேண்டுதலைப் பூர்த்தி செய்யவேணும்.

    பின்னும் எமது உத்தரம் தங்களுக்கு க்லேசமளித்துள்ளதென்றால் எமது க்ஷமா யாசனம்.

  197. jo amalan

    இந்த ஆழ்வார் பாசுரங்களை மற்றும் திருமறைகளை – பலவாறாக இத்தளத்தில் முன்னதாகவே விவாத்திதாகி விட்டது.

    ரெம்ப புலம்ப வேண்டாம். நீங்கள் வித்யாசமாக எழுதுபவர் என்று நினைத்தக் கொண்டால் அது அப்படியே தொடரட்டும். உங்களுக்கு இன்றைக்கு இருப்பது ஆர்வக்கோளாறு. அது தீரும் வரை இப்படி தான் எழுதிக் கொண்டிருபீர்.

    ஆழ்வார்களுக்கு மற்றவர் எல்லாம் அபர தேவதைகள் தான் – ஆமாம். அனால் அவர்கள் மற்ற தேவதைகளை இல்லை என்று சொல்லி விடவில்லை. யாரையும் போய் தலை அறுக்கவில்லை மதம் மாறச்சொல்லி. அவர்கள் வழி வந்தவர் எவரும் அப்படி செய்யவில்லை.

    இதே போல் தான் நாயன்மார்களும்.

    ஆறும் ஆழ்வார்கலையோ நாயன்மார்கலையோ fake hindus என்று சொன்னதில்லை. ஏன் பக்கா சைவர் ஒருவர் வைணவரை பார்த்து நீர் fake hindu என்று சொன்னதில்லை சொல்லப் போவதும் இல்லை. இதே கடை தான் வைனவருக்கும்.

    சிலரைத்தான் நாங்கள் fake என்கிறோம் – இதை விளங்கிக் கொள்ள மாட்டேன் என்கிறீர்களே.

    திருமழிசை ஆழ்வார் முரடர் என்கிறீர் – நன்றி. அவர் செய்ய நினைத்ததெல்லாம் பரத்வ நிர்ணயம் அவ்வளவே. அவர் சைவராக இருந்து வைணவராக மாறியவர். யாரையும் முரட்டு தனமாக தாக்கியதாக வரலாறு பூகோளம் எல்லாம் இருக்கா – jest intended 🙂

    அவர் சிவா பெருமானை வருணிக்கும் பொழுது – தாது உலவும் கொன்றை மாலை துன்னும் செஞ்சடை உடையோன் என்று தான் வருணிக்கிறார் – யாரையும் எந்த கடவுளையும் முரட்டு தனமாக தரம் தாழ்த்தி பேசவில்லை.

    நெஞ்சே மொய்பூ மழிசை பரண் அடியே வாழ்த்து

  198. அன்பு நெஞ்சங்களாகிய களிமிகு கணபதி, சாரங், கிருஷ்ணகுமார் அவர்களே,
    உங்கள் அன்பு என்னை நெகிழவைக்கிறது. இதுவரை யார் மீதோ இருந்த கோபம் அகன்றது. நான் தற்போது பணி நிமித்தமாக அமெரிக்க மேரிலன்ட் பகுதியில் உள்ளேன். இப்போது இந்த அந்நிய தேசத்தில் என் பிள்ளைகளுக்கு இங்கே கீதை மற்றும் உபநிஷத்துக்கள் சிறிய அளவில் கற்கும் வாய்ப்புள்ளது, என்னை சேர்க்க மறுக்கிறார்கள் (சாதி காரணமல்ல, வயதே காரணம், நான் குழந்தை அல்லவே). வாய்ப்பு அமையும் போது உங்கள் உதவிகளை ஏற்றுகொள்கிறேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. நம் தளத்திற்கும் நன்றி. திரு.சாரங்கன், தங்களை நான் மின் அஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.
    நன்றி,
    சிங்கமுத்து மற்றும் அருணா சிங்கமுத்து

  199. ‘/////ஆழ்வார்களைப்பொறுத்த மட்டில் ஒரே கடவுள் திருமாலே. அக்கடவுளே தொழப்படவேண்டும். அக்கடவுளாகவோ, அக்கடவுளின் அவதாரங்களாகவோ.////
    //////No aazhwaar accepted any other God. Why not call them fake Hindus ?/////
    அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி உரைநூல்மறை உறையும் கோயில் – வரைநீர்
    கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
    உருவம் எரிகார் மேனி ஒன்று’ (5)

    விளக்கம்
    பெயர்-பரமசிவன், நாராயணன்
    வாகனம் – எருது, கருடன்
    பெருமை சொல்லும் நூல்கள் – ஆகமம், வேதம்
    இருக்கும் இடம் – (கைலாய) மலை, (பாற்) கடல்
    தொழில் – அழித்தல், காத்தல்
    ஆயுதம் – வேல், சக்கரம்
    உருவம் – நெருப்பின் சிவப்பு, மேகத்தின் கருப்பு
    உடல் – ஒன்றே!
    முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் சைவ வைணவப் பிணக்குகள் பண்டிதர்களிடம் அதிகமாக இருந்தன. இரண்டு தெய்வங்களும் ஒன்றே என்று கூறும் முதல் குரல் பொய்கை யாருடையது. இந்தக் கருத்தை பொய்கையார் பலவிடங்களில் வலியுறுத்துகிறார்.

    ‘பொன் திகழும் மேனிப் புரிசடையும் புண்ணியனும்
    நின்றுலகம் தாய நெடுமாலும் – என்றும்
    இருவர் அங்கத்தான் திரிவரேனும் ஒருவன்
    ஒருவரங்கத்து என்றும் உளன்’ (98)

    பொன்போன்ற மேனியும் பின்னிவிட்ட சடையும் கொண்ட சிவபெருமானும், நின்று கொண்டே உலகை அளந்த நெடிய திருமாலும், இரண்டு உடல்களில் திரிவார்கள் என்றாலும் ஒருவரில் ஒருவர் என்றும் உளர்.

    பரமசிவன் மட்டும் அல்ல பிரமனும் இலக்குமியும் கூடச் சேர்கிறார்கள்.
    ‘கைய வலம்புரியும் நேமியும் கார்வண்ணத்து
    ஐய மலர்மகன் நின் ஆகத்தாள் – செய்ய
    மறையான் நின்னுந்தியான் மாமதிள் மூன்றெய்த
    இறையான் நின்னாகத் திறை’ (28)
    கையில் சங்கு சக்கரம் மேகவர்ணம் கொண்ட உன் பக்கத்தில் இலக்குமி இருக்கிறாள். உன் உந்திக்கமலத்தில் பிரமன் இருக்கிறான். முப்புரமெரித்த சிவபெருமானும் உன் உடலின் ஒரு பாகம்தான்.

    ஒரு ஆழ்வார் பொய்கையார் இருக்கிறாரே.

  200. திருமங்கை ஆழ்வார் ஐயோ இவர் கூட நலந்தரும் சொல் நாராயணா எனும் நாமம் என்கிறார். மூவருள் முதல்வன் அவன் என்று கூட சொல்கிறார். எங்கும் பிற கடவுள்களை எதிர்க்க வில்லை.
    மும்மூர்த்திகளின் மொத்த உருவாகத்தான் இப்பாடலில் பெருமாளை காண்கிறார்

    பாருருவில் நீர் எரி கால் விசும்பும் ஆகி
    பலவேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
    ஏருருவில் மூவருமே யென்னநின்ற
    இமையவர்தம் திருவுருவேறெண்ணும்போது
    ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
    ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற
    மூவுருவும் கண்டபோது ஒன்றாம்சோதி
    மூகிலுருவம் எம்மடிகள் உருவம்தானே

    நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்றும் பலவேறு சமயங்களுமாய் பரந்து விரிந்தவனை ஒருமைப்படுத்தி, பிரமன், விஷ்ணு, சிவன் மூவரையும் ஓர் உருவம் என்று இமையவர்கள் எண்ணும்போது ஓர் உருவம் பொன்நிறம், ஒன்று சிவந்த நெருப்புருவம், ஒன்று கடல் உருவம். இந்த மூன்று உருவங்களும் கண்டபோது ஒருமைப்படுத்திய ஒரு சோதி போன்றவன் மேகக் கருமை படைத்த எங்கள் நாராயணனின் உருவம், என்று விஸ்தாரமான அழகான பாசுரத்தால் விளக்குகிறார்.
    இது திரு சுஜாதாவின் விளக்கம்
    நம்மாழ்வார்கூட பிற கடவுளரை எதிர்க்கவில்லை அவர்களை படைத்தவனும் பெருமாள்தான் என்கிறார். அவர்களில் எல்லாம் விரவி இருப்பதும் அப்பெருமாள்தான் என்றும் கூட கூறுகிறார்
    யாவகை உலகமும் யாவரும் இல்லா
    மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும் பொருட்
    கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதான்
    ஆகித் தெய்வநான்முகக் கொழுமுளை
    ஈன்று முக்கண் ஈசனோடு தேவுபல
    நுதலி மூவுலகம் விளைத்த உந்தி
    மாயக் கடவுள் மாமுதல் அடியே
    எந்த வகை உலகமும் உயிரினமும் இல்லாத அந்தப் பெரிய பாழ்க் காலத்தில் பொருள்களுக்கெல்லாம் வித்தாய் ஒரே ஒரு `தானா’ய் பிரமனையும் ஈசனையும் தேவர்களையும் கொண்டு வந்து மூன்று லோகங்களையும் உண்டாக்கின திருமாலின் முதல் அடி.

    இதிலே எங்கு பிற தெய்வ வெறுப்பு எதிர்ப்பு உள்ளது எல்லாவற்றுள்ளும் நீக்கமற நிறைந்துள்ளவன் எம்பெருமான் என்றே கூறுகிறார்.
    நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்_
    தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா
    யாவகை உலகமும் யாவரும் அகப்பட
    நிலம், நீர், தீ, கடல், சுடர் இரு விசும்பும்
    மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
    ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும்
    அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த
    எம்பெருமானே அல்லாது
    ஒருமா தெய்வம் உடையமோ யாமே?
    சிவனும், பிரம்மாவும், இந்திரன் முதலான தேவர்களும் எல்லா உலகங்களும், நிலம், நீர், நெருப்பு, காற்று, சூரிய சந்திரர்கள்; நட்சத்திரங்கள் அனைத்திலும் விட்டு வைக்காமல் (புறப்பாடின்றி) விதிவிலக்கின்றி மறைந்து விரவியிருந்து (கரந்து) ஆலிலைமேல் தூங்கும் எம்பெருமானையல்லாது வேறு தெய்வம் எங்களுக்கு உண்டோ!
    சிவனிலும் பிரம்மாவிலும் மறைந்திருக்கும் பரம்பொருளை ஆழ்வார் விஷ்ணுவை காண்கிறார்.
    எந்த ஆழ்வாரும் பிற தெய்வங்களை நிந்திக்க வில்லை. நித்திப்பது வேறு வணங்காதிருப்பது வேறு.எப்படியாவது ஆழ்வார்களை ஆப்ரகாமியர்கல் ஆக காட்ட முயல வேண்டாம். ஆழ்வார்கள் பிற தெய்வங்களை திட்டினாலும் பிற வழிபாட்டரை திட்டினாலும் (அப்படி ஏதேனும் பாடல் இருந்து நீங்கள் குறிப்பிட்டாலும்) இது அவர்களுக்கு உரிய உரிமை. (சம்மந்தி சண்டை போல) என்று கொள்ள தயார்.
    எங்களுக்கு ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஒன்றே.பிரிக்க முயல வேண்டாம். அது தோல்வியிலேயே முடியும். நான் சைவனோ வைணவனோ அல்ல. நாட்டார் தெய்வ வழிபாடு கொண்ட குடும்பத்தில் பிறந்த சைவைணவக்தன்———-திராவிடன்..

  201. அன்புள்ள திராவிடன்,

    இவ்வளவு நல்ல கருத்தை அழகாக சொன்ன பொய்கை ஆழ்வாரை , சில தீவிரங்கள் ஒன்று சேர்ந்து , ஆழ்வார் பட்டியலில் இருந்து , நீக்கவேண்டும் என்று சொல்லாமல் இருக்க , நாரணன் அருள் புரியட்டும்.

    அன்புள்ள திருச்சிக்காரரே,

    தங்கள் கடிதங்களையும், கருத்துக்களையும் படித்து மிகவும் மகிழ்ந்தோம். விலகாமல் தொடர்ந்து பங்கு பெறுதலே எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும். ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்கவேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் , இந்துக்களுக்கு கிடையாது.

    நமக்கு ஏற்றதை நாமே உருவாக்கும் சுதந்திரம் இந்துக்களுக்கு உண்டு. நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்போம். நாமும் புதிய கருத்துக்களை உருவாக்குவோம். நமக்கு சரியாக வராது என்று படுகிற கருத்தை யார் சொன்னாலும், ஒதுக்குவோம். ஆனால், தங்கள் கோபத்தை மறுபரிசீலனை செய்து, கோபத்தை விளக்கி, மீண்டும் தொடர்ந்து பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.

  202. //“வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே” //

    ஸ்ரீ க்ருஷ்ணகுமார் சுவாமிகள் காட்டியுள்ள தொடர் “வேண்டியபோ தடியர் வேண்டிய போகமது வேண்டவெ றாதுதவு பெருமாளே” என இருக்குமோ என எனக்கொரு ஐயம். (சம்சயம்?)

  203. Sarang writes and my replies follow.

    உங்களுக்கு இன்றைக்கு இருப்பது ஆர்வக்கோளாறு. அது தீரும் வரை இப்படி தான் எழுதிக் கொண்டிருபீர்.//

    என் பதில்:

    இருபதாண்டுகளாக இந்த கோளாறு இருக்கிறது. எப்போது போகுமென்று தெரியாது.

    //ஆழ்வார்களுக்கு மற்றவர் எல்லாம் அபர தேவதைகள் தான் – ஆமாம். அனால் அவர்கள் மற்ற தேவதைகளை இல்லை என்று சொல்லி விடவில்லை. யாரையும் போய் தலை அறுக்கவில்லை மதம் மாறச்சொல்லி. அவர்கள் வழி வந்தவர் எவரும் அப்படி செய்யவில்லை.//

    என் பதில்:

    தவறு. ஒரு ஆழ்வார் அப்படியும் எழுதியிருக்கிறார். “தலையை அறுங்கள்”

    நான் ஆழ்வார்களைப்பற்றி எழுதும் போது ஓரிருவர் அதைச்சுட்டிக்காட்டுவதுண்டு. என்னால் என்ன பதில் போடுவதென்று தெரியவில்லை.

    ஒவ்வொரு ஆழ்வாரும் ஒரு பெர்சனாலிட்டி டைப். அதற்கேற்றபடியே அவர்கள் பாசுரம் அமைந்தன:

    தொண்டரடிப்பொடியாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் கொஞ்சம் அக்ரசிவ் (இதை தமிழில் முரடு என்று மொழி பெயர்த்தேன். வேறு பெயர் நீங்கள் கொடுக்கலாம். “தலையை அறுக்கவேண்டும்” என்று எழுதியவர் தொண்டரடிப்பொடியாழ்வாரே.

    ‘உரையில் அடங்காதவர்’ என திருமழிசையாழ்வாருக்குத் திருநாமம் கொடுத்தவர்கள் வைணவ ஆச்சாரியர்களே.

    பெரியாழ்வார் – தாயுள்ளம் நிறைந்த மென்மையானவர்.

    ஆண்டாள் – பெண்ணுள்ளம்

    மதுரகவியாழ்வார் – குருபக்தி நிறைந்த மாணவ உள்ளம்.

    முதலாழ்வார்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் அக்ரசிவ் இல்லை. அவர்கள் பாசுரங்கள் டெக்னிக்கலாக இருக்கும். (படித்தால்தால் புரியும். விளக்கமுடியாது)

    குலசேகர ஆழ்வார் – எளிதில் உணர்ச்சியடைபவர். ஆனால் அக்ரசிவ் அல்ல. உணர்ச்சிபிரவாகத்தில் என்ன செய்கிறோம் என்று தெரிய அவருக்கு நேரமாகும். அவர் வாழ்க்கைசரிதத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

    நம்மாழ்வார் – மென்மையிலும் மென்மை. ஒரு கடுஞ‌சொல்கூட கிடையாது. தன‌க்கு ம‌ன‌வேத‌னை த‌ரும் ம‌னித‌ர்க‌ளின் செய‌லைக்கூட‌ ‘சொன்னால் விரோத‌மிது. ஆயினும் சொல்வ‌ன் கேண்மினோ’என்றுதான் தொட‌ங்கி சொல்வார். அப்ப‌டித் தொட‌ங்கி சொல்லும் ப‌த்துப்பாசுர‌ங்க‌ளில் அவ‌ர் பிறதெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கி வீணாகிப்போகிறாரார்களே என‌ ம‌ன‌வேத‌னை அடைகிறார்.

    திருமங்கையாழ்வார் – குலசேகரரைப்போல. இருப்பினும் அவரின் “ஜாதிப்புத்தி” போகவில்லை. அப்புத்தியே அவருக்குச் சிறப்பாகும். அதனாலேயே அவர் ஆழ்வாரானார். அவர் சரிதத்தைப் படிக்காமல் புரியாது. Dont quarrel with me. Read his life story.

    //ஆறும் ஆழ்வார்கலையோ நாயன்மார்கலையோ fake hindus என்று சொன்னதில்லை. ஏன் பக்கா சைவர் ஒருவர் வைணவரை பார்த்து நீர் fake hindu என்று சொன்னதில்லை சொல்லப் போவதும் இல்லை. இதே கடை தான் வைனவருக்கும்.

    சிலரைத்தான் நாங்கள் fake என்கிறோம் – இதை விளங்கிக் கொள்ள மாட்டேன் என்கிறீர்களே.//

    நான் எழுதியது இன்னொருவருக்கு.

    இங்கு எழுதுபவர்களின் கருத்துக்களைத்தான் படிக்கவேண்டுமெனத் திரும்பத்திரும்ப சொல்கிறேன். ஆனால் தனிநபர் விமர்சனத்தில் இறங்குகிறார் அவர். என்னை சுடராளி ஜோசப்புடன் ஒப்பிட்டு.

    நீங்களும் புரிந்து கொள்ள மறுத்துப் பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்றுதான்

    உங்கள் ‘சிலரை மட்டும் நாங்கள் ஃபேக் என்கிறோம்’ என்று சொல்லும்போது

    உங்கள் கருத்து தவறு. எவரையும் ஃபேக எனச்சொல்ல எவருக்கும் உரிமை இந்து மதம் தரவில்லை. பிற மதங்களில் ஃபாட்வா போடுவார்கள். அவர்களுக்கு ஒரு ஏகதலைவன் இருப்பான். அவர்கள் ஒருவனை அவர்கள் மதத்திலிருந்து தள்ளி வைக்கலாம். அவன் தலையை வெட்டிக்கொண்டுவந்தால் கோடி பரிசு எனலாம் (சால்மன் ருஸ்டி கேஸ்),

    இந்து மதத்தில் என்றுமே ஒரே தலைவர் கிடையாது. மடங்களுக்கு மட்டுமே அப்படி ஒரே தலைவர். அவர் அம்மடத்திலிருந்து ஆரையும் வெளியேற்றலாம். மற்றபடி இந்து மதம் எவரையும் தலைவராக அங்கீகரிக்கவில்லை.

    நீங்களே ‘நாங்கள் சொல்கிறோம்’ என்று தனக்குத்தானே தலைவர் பட்டம் கொடுத்துக்கொண்டு சிரிப்புக்குள்ளாகிறீர்களே ? நீங்கள் ஆர் மற்றவரை ஃபேக் என்று சொல்ல?

    உங்களுக்குத் தெரிந்த வரை உங்கள் இந்து மதத்தை பி பற்றுங்கள். பிறருக்கும் சொல்லுங்கள். ஏற்றுக்கொள்வது ஏற்காததும் கேட்பவர் பொறுப்பு.

    மற்றவருக்குத் தெரிந்த மாதிரி அவர்கள் இந்து மதத்தைப்பின் பற்றற்றும்.

    உங்களை நான் புரிந்து கொள்ளவில்லையே என அங்கலாய்க்கும் உங்களுக்கு நான் சொலவது என அங்கலாய்ப்பும் அதே. ஏன் என்னைப்புரிய நீங்க முயலவில்லை ?

    //திருமழிசை ஆழ்வார் முரடர் என்கிறீர் – நன்றி. அவர் செய்ய நினைத்ததெல்லாம் பரத்வ நிர்ணயம் அவ்வளவே. அவர் சைவராக இருந்து வைணவராக மாறியவர். யாரையும் முரட்டு தனமாக தாக்கியதாக வரலாறு பூகோளம் எல்லாம் இருக்கா – jest intended //

    அவர் சிவா பெருமானை வருணிக்கும் பொழுது – தாது உலவும் கொன்றை மாலை துன்னும் செஞ்சடை உடையோன் என்று தான் வருணிக்கிறார் – யாரையும் எந்த கடவுளையும் முரட்டு தனமாக தரம் தாழ்த்தி பேசவில்லை.

    நெஞ்சே மொய்பூ மழிசை பரண் அடியே வாழ்த்து//

    My response:

    முரடர் என்பது அக்ரசிவ் என்பதன் தமிழாக்கமே ஒழிய முரடன் என்னும் பொதுவான தமிழ்சொல்லன்று. வேறுஒரு தமிற்சொல்லிருக்குமேயானால் நன்று.

    அவர் முதலில் நாத்திகர்; பின்னர் சமணர்; பின்னர் பவுத்தர்; பின்னரே சைவர். சைவராக இருக்கும்போது சிவபெருமான் அவரின் சிவபக்தியின் உக்கிரத்துக்காக ‘பக்தி சாரர்’ என்ற பட்டமும் பெற்றதாக வரலாறு. பின்னர் பேயாழ்வாரால் தத்தெடுக்கப்பட்டு (இருவருக்கும் வயது வித்தியாசம் அப்படி) வைணவரானார். எங்கிருந்தாலும் அவர் பெர்சனாலிட்டி டைப்புக்குத் தக்கவே அவர் பக்தி அமைந்தது. அவரை தீவிர வைணவர் என்பார்கள். அவர் சைவத்திலுருக்கும் போது அவர் சித்தர் எனவும் அவர்தான் சிவவாக்கியர் எனவும் பேசப்படுகிறது. சிவவாக்கியரின் பாடல்களைப்படித்தால் நீங்கள் எழுதியதை மாற்றிக்கொள்வீர்கள். முதலில் படிக்கவும்.

    திருமழிசையாழ்வாரின் பாசுரங்களையும் வாழ்க்கை சரிதத்தை நான் இங்கே எழுதினால் உங்களுக்கு நான் ஏன் அப்படி அவரை விவரிக்கிறேன் எனவும் புரியும்.

    Obviously, Sarang appears to have not gone through Naalaayiram.

  204. திராவிடன் சொல்வது கரெக்ட்.

    பொய்கையாழ்வார் அப்படி ஒரு பாசுரம் போட்டிருக்கிறார்.

    எங்கெல்லாம் நான் எழுதியது போல ‘ஆழ்வார்கள் திருமாலை, அல்லது திருமகளோடு இணைந்த திருமாலை (திருவாழ் மார்பன்)த் தவிர பிறதெய்வங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று எழுதப்படுகிறதோ, அங்கெல்லாம் பொய்கையாழ்வாரின் இப்பாசுரம் சுட்டிக்காட்டப்படும். சோ கூட இதைக்காட்டியிருக்கிறார்.

    இப்பாசுரம் நாலாயிரத்தில் இருக்கிறது. எல்லாருக்குமே தெரியும். இரகசியமில்லை.

    ஆயினும், இப்பாசுரத்திற்கு மற்றோர் எடுத்துக்கொள்ளும் பொருளை சிரிவைணவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் தங்களாச்சாரியர்கள் சொல்வதையே ஏற்றுக்கொள்கிறார்கள். அதன்படி, இப்பாசுரமும் திருமாலே முழுமுதற்தெய்வம் எனச்சொல்கிறது.

    அப்படி ஏற்றுக்கொள்ளாமல், மற்றோர் எழுதியபடி ஏற்றுக்கொண்டால், சிரிவைணவத்தின் கதை முடிந்தது.

    When Hindu religion allows differences and gives freedom to their followers to interpret the religion and Vedas as they like, and follow their own path, y to say that their interpretation is unacceptable ? Y not they be Shrivaishanvaas accepting only Thirumaal or Thirumagalkeelmaarban ?

    R u not violating the very concept of liberalism in ur religion ?

  205. ஐயன்மீர், கற்றறிந்த சான்றோர் தங்கள் கூற்றெப்படி சம்சயத்திற்குள்ளாகவியலும்?

    சிறியேனுக்கு ஞாபகம் வந்த திருவடிகள் “கோங்க முகையு மெலிய” எனத்துவங்கி
    “வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டுமளவிலுதவும் பெருமாளே” என ஸமாப்தமுறும் கழுகுமலைத்திருப்புகழ்.

    தேவரீர் செப்பியது, “கோங்கிள நீரிளக” எனத்துவங்கி “வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்டவெறாதுதவு பெருமாளே” என ஸமாப்தமுறும் திருவேங்கடமலைத் திருப்புகழ்.

    இரண்டுமே எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் உகந்தேத்தும் அடியார்க்கு நல்ல பெருமாளின் அஸீமக்ருபை பற்றிய திருவடிகள். திருவேங்கடத் திருப்புகழில் வேண்டப்பெறுவது போகம். கழுகுமலைத் திருப்புகழில் வேண்டப்பெறுவது அறிதற்கரிய வஸ்து. அனபர் சிங்கமுத்துவிற்கு வாஞ்சிதமான வஸ்துவும் அறிதற்கரியது. இது சிறியேனின் சிறுமதிக்குப் புரிந்தபடி.

    மற்றபடி சிறியேன் உத்தரமெழுதுங்கால் அகஸ்மாத்தாகத் தான் அந்த திருவடிகள் நினைவுக்கு வந்தன. சிவகுருநாதனின் சித்தம். மேலும் இந்த வ்யாஜத்தில் தேவரீர் வாயிலாக “அகலகில்லேன் என அலர்மேல்மங்கையுறைமார்பனின்” ஸ்மரணம் ப்ராப்தமானதற்கு தங்கள் திருவடியில் என் ப்ரணாமங்கள்.

  206. புரிய வைப்பதல்ல, திரும்ப வைத்தலே ந்மது வேலை என்ற கட்டுரைக்கான மறுமொழிகள் முடிவில்லாது வளர்ந்து கொண்டே போகின்றன. வாசகர்கள் கட்டுரையின் மையக் கருத்தைவிட்டு எங்கெங்கோ போவதால்தான் இப்படியாகிறது. வேண்டுமென்றே திசை திருப்பும் நோக்கம் முகமதிய-கிறிஸ்தவ மறுமொழியாளர் களுக்கு இருக்கலாம் என்கிற ஐயப்பாடும் எனக்கு உள்ளது. ஏனெனில் தாய் மதம் திரும்புதல் எனும் நமது செயல் திட்டம் கிறிஸ்தவ, முகமதிய வட்டாரங்களுக்கு வயிற்றைக் கலக்கும் சங்கதியாக இருந்து வருகிறது.

    ஹிந்து சமயக் கோட்பாடுகளை எவ்வளவுதான் விளக்கினாலும் கிறிஸ்தவ-முகமதிய கோட்பாடுகளிலேயே ஊறிப் போயிருப்பவர் களுக்குப் புரிய வைக்க இயலாது. அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் எதுவாயினும், அவர்களின் கண்ணோடத்தில் தான் அவற்றைப் புரிந்துகொள்ள அவர்களால் முடியும். எனவே இது வீண்முயற்சி, அதற்கு பதிலாக சமூகப் பிரச்சினைகளின் அடிப்படையில் அவர்களை அணுகி அவர்கள் ஏதோ ஒரு தலைமுறையில் ஹிந்துக்களாக இருந்தவர்கள்தாம் என்பதை மனதில் பதிய வைத்துத் தாய் மதம் திரும்பச்செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை அக்கட்டுரை வலியுறுத்துகிறது. ஹிந்து சமூக நடைமுறைகளில் விரும்பத் தகாத அம்சங்கள் இருப்பின் அவற்றைக் களைவதற்கும், எதிர்த்துப் போராடுவதற்கும் வாய்ப்பு இருப்பதுபோல் கிறிஸ்தவ, முகமதிய சமூகங்களில் இல்லையெனவும் எடுத்துக் கூறித் தாய் மதம் திரும்பச் செய்யலாம் என்பதற்கான குறிப்பும் கட்டுரையில் உள்ளது.

    மேலும், ஒரு சுமுகமான நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக எல்லா சமயக் கோட்பாடுகளும் அடிப்படையில் ஒன்றானவையே என்பதுபோல் ஒரு சமரசச் சூழலை மேற்கொள்ளலாகாது எனவும் கட்டுரை சொல்கிறது.

    இந்த மையக் கருத்து மறுமொழிகளில் சரிவர விவாதிக்கப் படவில்லை

    என்னுடன் கருத்தொற்றுமையுள்ளவர்கள் கட்டுரையைப் பாராட்டியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
    ஸ்ரீ களிமிகு கணபதியை வெட்கப் பட வேண்டும், அசடு வழியக் கூடாது என்றெல்லாம் ஒரு தகப்பனுக்குரிய உரிமையுடன் எழுத .
    எனக்கு அனுமதியுண்டு என்றே இன்னமும் நம்புகிறேன். என்னு டைய சஹிருதயர்களில் களிமிகு கணபதி முக்கியமானவர்.

    “குறைபாடுகள் இல்லாத மதங்களே இல்லை சுவனப்பிரியன் ஜி. ஒரு மதம் தன் குறைபாடுகளைத் தீர்த்து வளரவேண்டும். பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்” என்று களிமிகு கணபதி இங்கு ஒரு மறுமொழியில் குறிப்பிடுகிறார். சமயத்தையும் சமூகத்தையும் ஒன்றாகக் காணும் மயக்கத்தால்தான் இப்படி எழுதத் தோன்றுகிறது. ஹிந்து சம்யத்தை ஆபிரகாமிய மதங்களுடன் இண்சை வைத்துச் சிந்திப்பதால் வரும் குழப்பம் இது. இதைத்தான் நான் எனது கட்டுரையில் களிமிகு கணபதிக்கு உணர்த்தியிருக்கிறேன்.
    ஸ்ரீ பாலா, உங்களுக்கு நான் மிகவும் எரிச்சலூட்டியுள்ள மைக்காக தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன். நான் எங்குசென்றாலும் இந்த அதிகப் பிரசங்கி ஏன் இங்கே சம்மனில்லாமல் ஆஜராகிறான் என்று பேச்சு வருகிறது. மலர் மன்னன் என்ன திண்ணைக்கு நாட்டாமையா என்று திண்ணை டாட்.காம் தளத்தில் ஒருவர் கட்டுரை எழுதுமளவிற்கு அங்கு நிலைமை உருவாகிவிட்டது. ஒரு முறை காலச்சுவடு கூட்டத்திலும்கூட உங்களுக்குப் பிடிக்கா விட்டால் எழுந்து போய்விடுங்கள், கேள்வி எல்லாம் கேட்காதீர்கள் என்று மேடையில் பேசிக் கொண்டிருந்தவர் சொன்னார். எனவேதான் நண்பர்கள் கேட்டுக் கொள்வதற்கு இணங்க எழுதுவதாகவும், கூட்ட அமைப்பாளர்கள் வருந்தி அழைத்தமைக்கு ஏற்பக் கலந்துகொளவதாகவும் முன்னதாகவே குறிப்பிட வேண்டியுள்ளது. இவர் எங்கே போனாலும் களேபரமாகிவிடுகிறது என்றும் சிலர் சொன்னார்கள். எனவேதான் நானாக வரவில்லை, நானாக எழுத முன்வரவில்லை என்றெல்லாம் முன்னதாக உறுதி கூற வேண்டியுள்ளது. மற்றபடி பில்டப் எல்லாம் எனக்கு எதற்கு? நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதியும் தெருவில் இறங்கி வேலை செய்தும் வருகிறேன். மெல்ல மெல்ல எல்லாவற்றையும் நிறுத்தி ஒடுங்கவும் முனைந்து வருகிறேன்.
    இதற்கு மேல் பில்டப் செய்து என்ன சாதிககப்போகிறேன்?

    ஸ்ரீ பாலா, நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது. தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என்னால் ஏதும் தீங்கு விளைந்துள்ளதா என்பதை தயவு செய்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டுகிறேன். ஏனெனில்,
    “உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. இருந்தாலும், தனிமனிதத் தாக்குதல் வேண்டாமே” என்று களிமிகு கணபதி இங்கு உங்களுக்கு எழுதியுள்ளார். இது பலருக்கும் சந்தேகம் ஏற்படுதுகிறது. ஆகவே என் விஷயமாக உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
    ஸ்ரீ சுவனப் பிரியனுக்கு நான் எதுவும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. நான் குரான், ஹதீஸ் எல்லவற்றையும் முழுமையாகப் படித்தவன் என்பதை மட்டும் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எதையும் தவறாகவே புரிந்துகொண்டு பதில் எழுதும் அவரிடம் பேசுவதற்கு ஏதுமில்லை. அவருடைய சில விளக்கங்கள் மிகவும் பாமரத்தனமாக உள்ளன. இறைவனை ஆயிரம் நாமங்களால் அழைப்பதுபோல் நாங்களும் அழைப்பதால் இரண்டும் ஒன்றுதான் என்கிறார். கீதை வாசகங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளாமல், அதன் தொனி அடையாளம் தெரியாமல் குரானும் அதைத்தான் சொல்கிறது என்கிறது என்கிறார்.
    முகமதியம் வாளால் மட்டும் பரவவில்லை என்று களிமிகு கணபதி சொல்லப் போய் அதையே பிடித்துக்கொண்டு தொங்குகிறார். ஹிந்து சமூக ஏற்பாடுகளின் முறைகேடு களாலும் சிலர் முகமதியராக மாறியிருக்கலாம். ஆனால் ஹிந்துவாக இருந்தால் எதிர்த்துப் போராட வாய்ப்பு உண்டு. சட்டத்தையும் துணைக்கு வருமாறு வற்புறுத்த முடியும். முகமதிய சமுதாயத்தில் லப்பைகளுக்கு உள்ள மரியாதை என்னவென்று எனக்குத் தெரியும்.
    முதல் முதலில் பேச்சு வரும் குழந்தை வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும். பேசிக் கொண்டே எனபதைவிட உளறிக் கொண்டே என்பதுதான் சரியாக இருக்கும். ஸ்ரீ ஜோ அமலன் எழுதுவதையெல்லாம் பார்த்தால் எனக்கு அதுதான் நினைவுக்கு வருகிறது. எல்லாம் ஸ்ரீ பாலா சொல்கிற மதிரி கால் குடம் கூட அல்ல, அரைக்கால் குடமாக உள்ளது. இத்ற்கே இவ்வளவு சத்தமா?
    துவைதம், அத்வைதம் ஆகியவற்றில் இவருக்குள்ள அறியாமையே இவரது மறுமொழிகளில் வெளிப்படுகிற்து. இவர் வைணவம் பற்றி ஆய்ந்து என்னவெல்லாம் உளறி, பட்டம் வாங்கப் போகிறாரோ!
    வைணவம் பற்றியோ, ஆழ்வார்கள் மனப் போக்கு பற்றியோ ஏதும் அறியாதவராக இருக்கிறார். இவர் ஏதோ சில திருவாய் மொழிகளை உதிர்க்கிறார் என்பதற்காக ஸ்ரீ க்ருஷ்ணகுமார் போன்றவர்கள் அகமகிழ்ந்து போய் விடலாகாது. இது ஒரு சாமர்த்தியமான ஊடுருவல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
    வர்ணாசிரம தர்மம் குறித்து நான் ஏற்கனவே விரிவான முறையில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஸ்ரீ அமலன் அவற்றைத் தேடிப் படித்துக்கொள்ள வேண்டியதுதான். திண்ணையில் கிடைக்கலாம். தமிழ் ஹிந்துவிலும் காணப்படலாம். நிச்சயமாகக் கூறவியலாது.
    ஒரு சமூகம் என்பது எவ்வாறு உருவாகிறது? ஒத்த மனப் போக்குள்ளவர்கள் தாமாக ஒருவரையொருவர் இனங் கண்டு ஒன்று திரண்டு சமூகத்தின் பல பிரிவுகளாக அமைகின்றனர். வருணமும் இவ்வாறே தனி மனிதப் பண்பாகத்தோன்றி, அவ்வாறான தனி மனிதர்கள் ஒரு தொகுப்பாகச் சேர்க்கப் பட்டு சமூகத்தின் அங்கங்களாக அமைகின்றனர். ஹிந்து சமூகத்தில் உள்ள இன்றைய சாதி அமைப்பை வர்ணாசிரமத்துடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. இதுவே அமலனுக்கு நான் சொல்லக் கூடியது.
    ஸ்ரீ சிங்கமுத்து, திரு என்பது மிகவும் அழகான சொல். ஆனால் ஸ்ரீ ஒரு ஒற்றை எழுத்து மந்திரம். அனைவரும் படிக்கும்போது மனதிற்குள்ளாகவே அதைப் படித்து அதன் பயனைப் பெற வேண்டும் என்பதற்காகவே அதனைப் பயன்படுதி வருகிறேன். வெறும் சம்பிரதாயமாக அல்ல.
    -மலர்மன்னன்

  207. அனைவருக்கும் வணக்கம் …………..

    மிக சிறந்த கட்டுரை அதன் பின்னணியில் மிக சிறந்த விவாதங்கள் நடைபெறகிறது. இப்போது என்ன விஷயத்திற்கு வருகிறேன். இன்று மாலை என் கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் ஒன்று வந்தது அனுப்பியவர் என்னுடைய நீண்ட நாள் இஸ்லாமிய நண்பர். அந்த குறுஞ்செய்தி ஆங்கிலத்தில் வந்ததால் அதை அப்படியே இங்கு ஆங்கிலத்திலேயே தருகிறேன்…

    “Sunita Williams ( First Indian woman who went on moon) accepted “ISLAM” Masha Allah, because when they were on the moon, they saw towards EARTH, the entire EARTH looked dark, but 2 places on the EARTH looked like SPARKS (Roshni). They were shocked to see that and saw them with the help of telescope and came to know that those two places were ” MECCA ” and “MADINA”(saudi arabia) and at the moon all the frequencies failed but i still could hear the sound of ADHAAN SUBHANALLAH. Masha Allah. Then they decided that after reaching to earth they’ll accept “ISLAM”. plz forward this to all muslim and non muslim friends.

    கூகிள் தளத்திலும் இது பற்றி பெரிய அளவில் விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. கவனிக்கவும்

    நண்பர் திரு.சிங்கமுத்து………….

    “என் மனைவி பிராமண சமூக பெண். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதால், நான் சந்தித்த அவலங்கள் பல. அதில் ஒன்று தான், என் வேதம் பயிலும் முயற்சியும். கன்னியாகுமரியை சேர்ந்த ஒரு பிரபல வேத ஆசிரியர் (பெயர் வேண்டாம்), என் ஜாதகத்தை எல்லாம் கொண்டுவர சொல்லி, மணிக்கணக்காக என்னை காக்கவைத்து, “அனைவராலும் வேதம் பயில முடியாதப்பா” என்று கூறி ஒரு காபி கொடுத்து அனுப்பிவிட்டார்.
    யாரோ ஒரு சிலர் பிராமணராக இல்லாவிட்டாலும் வேதம் பயிலும் வாய்ப்பு பெற்று இருக்கலாம். ஆனால், அது எல்லோர்க்கும் கிடைக்கவில்லை. இப்போதும் நான் இணையதளம் மூலம் சிலவற்றை கட்டுகொள்ள முயல்கிறேன். உங்களை போன்றவர்கள் கூறும் சில வார்த்தைகளை கிரகிக்க பார்கிறேன், ஆனால் குருமுகமாக கற்பர்தர்க்கு அது இணையாகாது.”

    நண்பரே …வேதத்தை நீங்கள் ஏன் கற்று கொள்ள விரும்பினீர்கள் என்று எனக்கு தெரியாது.. அது என்ன காரணமாக இருந்தாலும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். வேதம் மிக சிறந்த அறிவு பொக்கிஷம் தான். ஆனால் அதை குருமுகமாக போய் கற்று கொண்டால் தான் புண்ணியம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை. அல்லது சமஸ்க்ருத மொழியின் உச்சரிப்பின் படி உரக்க ஒலிப்பதால் தான் வேதத்தின் உண்மையை தெரிந்து கொள்ளமுடியும் என்பதெல்லாம் இல்லை. வேதத்தின் தத்துவார்த்தத்தை புரிந்து கொள்ள விரும்பினால். இப்போது வேதத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுகிறார்கள் அதை வாங்கி வேதங்கள் சொல்ல வரும் செய்தி என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். பகவத் கீதையோ, வேதமோ, அல்லது எந்த வடமொழி இலக்கியமோ அந்த மொழியின் மூலம் படித்தால் தான் உண்மை பயனை அடையமுடியும் என்பதோ மெய் ஞானத்தை தொட முடியும் என்பதோ இல்லை. அந்த அந்த இலக்கியத்தின் மொழியில் தான் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது மிக சிறு பிள்ளை தனமான வாதம். நமக்கு தேவை மொழி அல்ல. உட்பொருள் மட்டுமே.

    ஒன்றை மட்டும் சொல்லி கொண்டு முடிக்கிறேன்….என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சமஸ்க்ரிதம் கற்று கொண்டு இருந்தார் அவரிடம் எதற்காக சமஸ்க்ரிதம் படிக்க ஆசை வந்தது என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்ன காரணம் 2011 ஆம் ஆண்டின் மிக பெரிய காமெடி. அவர் சொன்னது சமஸ்ரிதம் படித்தால் நல்லொழுக்கம் பர ஞானமும் ஏற்பட வழி வகுக்கும் என்று கூறினார். ஒரு மொழியை படித்தால் நல்லொழுக்கமும் ஞானமும் வருமா என்று கேட்டேன். அப்படி ஆனால் சமஸ்க்ரிதம் பழுதற கற்றவர்கள் எல்லாம் யோகியவான்கள் தானா அல்லது ஞானம் அடைந்தவர்களா என்று கேட்டேன். அதற்க்கு என் நண்பர் இப்போது என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள் என்று எரிச்சலோடு என்னை கேட்டார். அதற்கு நான், “ஏதோ பல மொழி கற்ற வித்தகன் ஆகவேண்டும் என்று நினைத்தால் வடமொழியை கற்று கொள்ளுங்கள் அல்லது சமுதாயம் உங்களை பார்த்து யெப்பா…. இவருக்கு சமஸ்க்ரிதம் தெரியுமா மந்திரம் எல்லாம் சூப்பரா பொலந்து கட்டுவாரு என்று நாலு பேரு உங்களை மெச்ச வேண்டும் என்று ஆசை இருந்தால் கற்று கொள்ளுங்கள். பெரும்பாலும் சமஸ்க்ரிதம் கற்று கொள்ள்பவர்களுக்கு இந்த இரண்டாவதாக சொன்ன ஆசை அதாவது தற்பெருமை நிச்சயம் பலருக்கும் இருக்கும். அதை நான் நேரில் பார்த்து இருக்கிறேன். பிறகு அவரிடம் , “இல்லை ஒழுக்கத்தில் உயர்ந்து நிற்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் தாய் மொழி தெலுங்கு போதும் என்று சொன்னேன். உடனே அவர் அதற்க்கு “இல்லை சமஸ்கிருதம் ஒரு தேவபாஷை அதனால் ……………. என்று இழுத்தார். எனக்கு பயம் வந்து விட்டது ஆள விடுடா சாமி என்று ஓடி வந்து விட்டேன். ஆகவே நண்பர் சிங்கமுத்து ஏதோ நான் அறிவுரை சொல்வதாகவோ வேதங்களை மட்டும் தட்டுவதாகவோ நினைத்து கொள்ளவேண்டாம்.அதற்கான அருகதை எனக்கு இல்லை ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன். வேண்டுமானால் உங்கள் ஆத்ம திருப்திக்காக குருமுகமாக படித்து கொள்ளலாம். தப்பு இல்லை .ஆனால் அனுகுலம் ஒன்றும் இருக்காது. நன்றி.

  208. //…ஸ்ரீ பாலா, நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது. தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என்னால் ஏதும் தீங்கு விளைந்துள்ளதா என்பதை தயவு செய்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டுகிறேன். ஏனெனில்,
    “உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. இருந்தாலும், தனிமனிதத் தாக்குதல் வேண்டாமே” என்று களிமிகு கணபதி இங்கு உங்களுக்கு எழுதியுள்ளார். இது பலருக்கும் சந்தேகம் ஏற்படுதுகிறது. ஆகவே என் விஷயமாக உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்..//

    உங்களது கட்டுரையைப் படிக்கும்போது அவருக்கு எழுந்த சுகானுபவத்தையே நான் இங்கு அவரது “உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம்” என்று குறிப்பிட்டேன்.

    கட்டுரையைப் படிப்பவர் கட்டுரை குறித்துக் கருத்துச் சொல்லலாமே யன்றி, கட்டுரையாளரை ஏளனமாகப் பேசுவது எனக்கு ஏற்புடையதல்ல.

    அவருக்கும் உங்களுக்கும் இடையில் வேறு ஏதேனும் கசப்பான அனுபவங்கள் உண்டா இல்லையா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    .

  209. ஜோ அமலன்

    //
    நீங்களே ‘நாங்கள் சொல்கிறோம்’ என்று தனக்குத்தானே தலைவர் பட்டம் கொடுத்துக்கொண்டு சிரிப்புக்குள்ளாகிறீர்களே ? நீங்கள் ஆர் மற்றவரை ஃபேக் என்று சொல்ல?
    //

    ஸ்வாமின் இது உம்மை தான் என்று புரியவில்லையா – கொஞ்சம் decentaa இருக்கட்டுமே என்று அப்படி எழுதி வைத்தேன். உங்களை fake என்று சொல்ல PHD பட்டம் தேவை இல்லை – உமது எழுத்துக்களே போதுமானது. நீங்கள் இட்ட ஒவ்வொரு மறு மொழியிலும் உள்ள முரண்பாடுகளையும், உங்களது உள் நோக்கம் என்ன என்பதையும் இங்கு எழுதினால் ரெம்ப அசிங்காமா இருக்கும் 🙂

    ஒரு சாம்பிளுக்கு மேலே படிக்கவும்

    //
    Obviously, Sarang appears to have not gone through Naalaayiram.
    //

    🙂 நன்று

    தலை அறுப்புண்டும் சாகேன் சத்தியம் காண்மின் அய்யா என்று முதலில் தொண்டரடி பொடியாழ்வார் சொல்கிறார் – இங்கு தலை என்பதற்கு என்ன அர்த்தம் ? என் தலையை வெட்டினால் சாக மாட்டேன் என்றா சொல்கிறார் – அப்படி நீங்கள் நினைத்தால் 🙂 சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

    அடுத்த பாசுரத்தில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் என்கிறார்

    இவ்விரண்டண்டிடத்திலும் தலை என்பதற்கு தல மண்டை என்பதுவா அர்த்தம் ? தலை அறுப்பேன் என்றால் தலையை அறுப்பேன் என்றா அர்த்தம் – என்ன ஒய் நீர் ? தலை அறுப்பது என்றால் தலை எடுக்காமல் செய்வது என்று அர்த்தம்.

    இந்த ஒரு அல்ப மட்டேற நீங்கள் எவ்வளவு ப்ளாக்கில் எழுதுகிறீர்கள் 🙂 விளங்கியே கொள்ளாமல் எழுதும் நீர் fake இல்லையா

    ஜோ அமலன் அச்சச்சோ அமலன் – எதற்கு உங்களுக்கு இந்த வெட்டிச் சவடால். பாசுரம் படித்தால் மட்டும் போறாது. கண்ணன் பிறந்த அதே ரோகிணியில் பிறந்து திருமங்கையார் பிறந்த அதே கார்த்திகையில் அவதரித்த நம்பிள்ளயிடம் பாடம் கற்ற தொண்டரடிபோடியாழ்வாரின் பக்கத்து ஊர் காராரான பெரிய வாச்சான் பிள்ளை என்ற ஆசாரியரின் அமுதினும் இனிதான திருமாலை வ்யாக்யானத்தையும் படியுங்கள்

    திருமங்கையாழ்வாருக்கு ஜாதி புத்தி என்றெல்லாம் அடுக்குகிரீர். இருக்கட்டும்.

    agressive என்றால் தமிழில் முரடா 🙂 உங்களது பாஷ்யம் நன்றாகவே இருக்கிறது.

    //
    திருமழிசையாழ்வாரின் பாசுரங்களையும் வாழ்க்கை சரிதத்தை நான் இங்கே எழுதினால் உங்களுக்கு நான் ஏன் அப்படி அவரை விவரிக்கிறேன் எனவும் புரியும்.
    //

    ஹி ஹி நன்றி

    தீவிரமான பக்தி உடையவர் தீவிரவாதி ஆக மாட்டார். புரியுதா

    இவர் சொன்னதற்காக நாகப் பாயை சுருட்டிக் கொண்டு ஓடி வந்தான் காமரு பூங்கச்சி மணிவண்ணன் – இவரா முரடு. பகவானுக்கே சொன்னம் வண்ண செய்த பெருமாள் என்று பெயர் மாறிப் போச்சு.

    ஸ்வாமின் கும்பகோணத்தில் ஆழ்வார் ஆர் ஆண்டான் ஆர் – திருமழிசை பிரான் – ஆரவமுதாழ்வார். இப்படி பரிவர்த்தனம் ஆகிவிட்ட முரடு

    மேம்போக்காக பீர்பால் கதை படிக்கிற மாதிரி இவர்களது சரிதங்களை படிக்க வேண்டாமே? இதற்குதான் பிரபன்னாம்ருதம் போன்ற அற்புதமான புத்தகங்கள் உள்ளன. இவை எல்லாவற்றிர்க்கும் அழகான விளக்கங்கள் தருகின்றன. இதை படித்தால் நமக்கு குதர்க்க புத்தி வராது.

    தலை அறுப்பேன் என்பதை நீங்கள் விளங்கிகொண்டதிலிருந்தே உமது லட்சணம் நன்றாக தெறிகிறது

  210. //“Sunita Williams ( First Indian woman who went on moon) accepted “ISLAM” Masha Allah, because when they were on the moon, they saw towards EARTH, the entire EARTH looked dark, but 2 places on the EARTH looked like SPARKS (Roshni). They were shocked to see that and saw them with the help of telescope and came to know that those two places were ” MECCA ” and “MADINA”(saudi arabia) and at the moon all the frequencies failed but i still could hear the sound of ADHAAN SUBHANALLAH. Masha Allah. Then they decided that after reaching to earth they’ll accept “ISLAM”. plz forward this to all muslim and non muslim friends.//

    This is false because sunitha did not go to moon……

  211. To say that Sunita Williams converted to Islam, is as mythical and hoax as the good number of instances of falsehood contained in Koran, as exposed by Sri Sarang hereinabove.

    It is a pity that Islam and Christianity have to survive by spreading canards!

    Please visit the following link:

    https://www.wikiislam.net/wiki/Sunita_Williams_Conversion_to_Islam

    Evidence of Hoax

    Williams went to the International Space Station, not to the moon. The last moon landing (Apollo 17) was on December 7, 1972,[5] and Eugene Cernan is, to date, the last person to have walked on the Moon.[6]

    She is also not the “first Indian woman who went on a space journey”. The Indian-American astronaut, Kalpana Chawla, was the first woman of Indian ethnicity to fly in space.[7]

    The claims state that they decided, upon returning to earth, they would accept Islam. However, when setting off toward the International Space Station, Williams had taken with her a copy of the Bhagavad Gita and a small statue of Lord Ganesha,[8] and following her return to earth on June 22, 2007, she showed no signs of having converted to Islam. In fact, she claimed Lord Ganesha, not Allah, was looking after her.
    Having created a new record of stay in space by a woman, Indian-American astronaut Sunita Williams now has set her eyes on the Red Planet.

    Williams, who returned to earth on June 22 after spending 195 days at the International Space Station, said she would love to fly to Mars, if not the moon.
    . . .
    She also thanked people across India, particularly from her native state of Gujarat, who prayed for her safe return to earth.

    Williams fondly recalled taking a copy of Bhagvad Gita and an idol of Lord Ganesha along with her to the space station and took tense moments in her stride. “I knew Ganesha was looking after me,” she said.
    She said she will be visiting Hyderabad in September for the International Astronautical Congress after which she will visit her relatives in Gujarat and Delhi.[9]

    More than three months later in an October 2007 interview with India Today, nothing had changed.
    Up in space, the Gita and Ganesha were what kept me grounded. They put life in perspective,” says Sunita Williams in her India Today interview. In a country that believes that beauty trophies are a genetic right, they are calling her the true Miss Universe.
    . . .

    Williams took with her into space a statue of Lord Ganesha and a copy of the Bhagavad Gita for company. She had never read the Gita with any depth before her space journey though her father had narrated to her the epics–the Ramayan and the Mahabharat–when she was young. She says: “This may sound a bit corny, but it sort of grounds you. In a little spacecraft zipping around the earth, you are doing a lot of things, sometimes it feels like work…maybe you are taking for granted where you are, what you are doing…things like Ganesha, the Gita bring you back home. It is nice to read about Arjuna’s trials and tribulations and it puts your life in perspective.”
    . . .
    At 42, Williams is still raring to go back into space apart from sharing her experiences with those planning to go up. She says: “If I have the opportunity, I would like to go to the moon.[10]

    After looking at the facts, we can rightly conclude that their is no evidence whatsoever to back up the claim that Sunita Williams, or any of the other unspecified individuals, ever witnessed a miracle in space/on the moon, nor did they ever agree to convert to Islam upon their return to earth.

  212. ஜோ அமலன்,

    =========
    //ஆழ்வார்களுக்கு மற்றவர் எல்லாம் அபர தேவதைகள் தான் – ஆமாம். அனால் அவர்கள் மற்ற தேவதைகளை இல்லை என்று சொல்லி விடவில்லை. யாரையும் போய் தலை அறுக்கவில்லை மதம் மாறச்சொல்லி. அவர்கள் வழி வந்தவர் எவரும் அப்படி செய்யவில்லை.//

    என் பதில்:

    தவறு. ஒரு ஆழ்வார் அப்படியும் எழுதியிருக்கிறார். “தலையை அறுங்கள்”
    ========

    ஆழ்வார்களைப் பற்றி ரிசர்ச் செய்கிறேன் என்று நூலகத்தில் கண்டவர்கள் கண்டபடி எழுதியதை எல்லாம் கருத்தில் கொண்டால் இப்படித் தான்.

    சாரங் என்ன கேட்டார்? “யாரையும் போய் தலை அறுக்கவில்லை” என்று தான் கூறினார். அதற்கு நீங்கள் பாசுரத்தை எடுத்துக் காட்டுகிறீர்கள். அந்த பாசுரத்தைக் காரணங்காட்டி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவராவது நிஜ வாழ்க்கையில் வன்முறையில் இறங்கியதுண்டா?

    ஏன் இப்படி — கேட்ட கேள்விக்குக் குதர்க்கமாக பதிலுரைக்கிரீர்?

    சாரங் அவர்கள் சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் M A Venkatakrishnan Swamy அவர்களிடம் கேட்டுத் தெளியுமாறு கூறினார். அதற்கும் பதிலைக் காணம். இந்த அழகில் பாகவதொத்தமர் டி ஏ ஜோசப் செய்வதைத் தான் நீங்கள் செய்வது போன்ற ஒரு சால்ஜாப்பு வேற.

    உங்கள் பெயரை மாத்திரம் வைத்து எதையும் நாங்கள் முடிவு செய்யவில்லை. நீங்கள் எழுதும் தொனியிலிருந்து தான். நீங்கள் “ஸ்ரீ உ.வே. வரதாச்சாரி ஐயங்கார்” என்ற பெயரில் முன்பு எழுதியது போல எழுதியிருந்தாலும் இதே பதில் தான் கிடைக்கும்.

    (Jo Amalan Rayen Fernando என்ற முழுப்பெயரை மற்ற தளங்களில் இட்டு இங்கு இடாததற்கும் காரணம் இருக்குமோ?)

    இதிலிருந்து தெரிகிறது நீர் ஒரு fake மற்றும் அரைகுறை.

    // ஒவ்வொரு ஆழ்வாரும் ஒரு பெர்சனாலிட்டி டைப். அதற்கேற்றபடியே அவர்கள் பாசுரம் அமைந்தன: //

    விட்டால் பிரபந்தங்களை வைத்து freudian psychoanalysis கூட செய்து விடுவீர்கள் போல இருக்கிறது… ஆழ்வார்கள் பெர்சனாலிட்டி டைப்பாம். இப்படிக் கூறுபவர்கள் “பத்மநாபனுக்கு ஸ்ரீ போடவில்லையே” என்று முதலைக் கண்ணீர் வேறு.

    உங்கள் நோக்கம் புரிந்துவிட்டது. 🙂

  213. ///நீங்கள் “ஸ்ரீ உ.வே. வரதாச்சாரி ஐயங்கார்” என்ற பெயரில் முன்பு எழுதியது போல எழுதியிருந்தாலும் இதே பதில் தான் கிடைக்கும்//////
    தாத்தாச்சாரி தெரியும், அவரின் பித்தலாட்டங்களுக்கு திரு ஜோசெப் அவர்கள் அணையட்டும் இந்த அக்னி என்று பதில் கட்டுரை எழுதியுள்ளார். இவர் வரதாச்சாரி என்று எழுதினாரா?

  214. திரு விருட்சம் மற்று திரு அஞ்சன் குமார்……

    தன் மதத்தை பிரபலம் ஆக்க வேண்டும் என்பதற்காக சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாமியராக மாறி விட்டார் என்னும் தவறான பிரச்சாரத்தில் ஈடு பட்டு வரும் இஸ்லாமியர்களுக்கு நீங்கள் கொடுத்த பதில் சட்டை அடியாக இருக்கும் என நம்புகிறேன். மிக்க நன்றி.

  215. ///நீங்கள் “ஸ்ரீ உ.வே. வரதாச்சாரி ஐயங்கார்” என்ற பெயரில் முன்பு எழுதியது போல எழுதியிருந்தாலும் இதே பதில் தான் கிடைக்கும்//////

    ஒரு பேச்சுக்கு சொன்னேன். அப்படிப் பெயர் வைத்துக்கொண்டு நிஜமாகவே ஒருவர் இருக்கிறார் என்று சொல்லவில்லை.

  216. இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் பல நூற்றாண்டுகளாக இதுபோன்ற பித்தலாட்ட திருப்பணிகளில் ஈடு பட்டுவருவது எல்லோரும் அறிந்ததே.

    இஸ்லாமியர்களில் சிலருக்கும், கிறித்தவர்களில் சிலருக்கும், இதுபோன்ற விஷயங்கள் பிடிக்காவிட்டாலும், தவறு செய்பவர்களை கண்டிக்கும் வலு இல்லாத ஜடங்களாக உள்ளனர்.

    இந்த மத மாற்ற கும்பல் முழு நரகத்திற்கு தான் செல்லும். இன்னும் சில ஆண்டுகளில் இயற்கை விபரீதங்களினால் , இவர்களின் கடவுளே இவர்களுக்கு நல்ல பாடம் கற்று கொடுப்பார்.

  217. ////திருமழிசை ஆழ்வார் முரடர் என்கிறீர் – நன்றி. அவர் செய்ய நினைத்ததெல்லாம் பரத்வ நிர்ணயம் அவ்வளவே. அவர் சைவராக இருந்து வைணவராக மாறியவர். யாரையும் முரட்டு தனமாக தாக்கியதாக வரலாறு பூகோளம் எல்லாம் இருக்கா – jest intended //
    முரடர் என்பது அக்ரசிவ் என்பதன் தமிழாக்கமே ஒழிய முரடன் என்னும் பொதுவான தமிழ்சொல்லன்று. வேறுஒரு தமிற்சொல்லிருக்குமேயானால் நன்று.

    அவர் முதலில் நாத்திகர்; பின்னர் சமணர்; பின்னர் பவுத்தர்; பின்னரே சைவர். சைவராக இருக்கும்போது சிவபெருமான் அவரின் சிவபக்தியின் உக்கிரத்துக்காக ‘பக்தி சாரர்’ என்ற பட்டமும் பெற்றதாக வரலாறு. பின்னர் பேயாழ்வாரால் தத்தெடுக்கப்பட்டு (இருவருக்கும் வயது வித்தியாசம் அப்படி) வைணவரானார். எங்கிருந்தாலும் அவர் பெர்சனாலிட்டி டைப்புக்குத் தக்கவே அவர் பக்தி அமைந்தது. அவரை தீவிர வைணவர் என்பார்கள். அவர் சைவத்திலுருக்கும் போது அவர் சித்தர் எனவும் அவர்தான் சிவவாக்கியர் எனவும் பேசப்படுகிறது. சிவவாக்கியரின் பாடல்களைப்படித்தால் நீங்கள் எழுதியதை மாற்றிக்கொள்வீர்கள். முதலில் படிக்கவும். //////////

    சிவவாக்கியர் பாடல்களில் அவர் சைவம்,வைணவம் எதையும் அவர் வெறுக்கவில்லை இருவரையும் பாடுகிறார் இருவரையும் இணைத்து பாடிய பாடல் வேண்டுமா?
    தங்கம்ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
    செங்கண் மாலும் ஈசனும் சிறந்திருந்தது எம்முளே
    விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
    எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே ——–22

    சிவனை தனியாய் பாடிய பாடல் பல உண்டு, அதில் இது ஒன்று

    நாலுவேதம் ஓதுவீர் ஞானபாத அறிகிலீர்
    பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
    ஆலம்உண்ட கண்டனர் அகத்துள்ளே இருக்கவே
    காலன்என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே ————16

    நாராயணரை மட்டும் பாடிய பாடல் பல, அதில் ஒன்று

    அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
    சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
    சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
    எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே —————–11

    இப்போது எந்த கருத்தை யார் மாற்றிக்கொள்ள வேண்டும்.?சிவவாக்கியம் 550 பாடலிலும் எங்கும் சிவனை எதிர்த்தோ விஷ்ணுவை எதிர்த்தோ பாடல் இல்லை.

  218. சிவவாக்கியம் 56 பாடல் இருவரும் ஒன்றே என்று கூறி பிரித்து பேசி மகிழ்ந்தால் வாய் புழுத்து மாய்வர் என்கிறார்

    தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்அவன்
    எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
    பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
    வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே ——56

  219. @thayumanavan1985 ,
    நண்பரே, இந்த துலுக்கர்களுக்கு இதே வேலை , முதலில் நீல் ஆம்ஸ்ராங் முஸ்லிமாக மாறிவிட்டதாக புரளியை கிளப்பினார்கள். இன்றும் நிறைய முட்டாள் முஸ்லிம்கள் அதை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
    உஜிலா தேவி வலை தளத்தில் படித்த முஸ்லிம் போட்ட பின்னூட்டம் இது..

    //Abdul Rahman – Dubai
    நிலாவில் முதலில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கிலிருந்து நம்ம ஊர் ஏ.ஆர். ரஹ்மான் வரை பட்டியலிட்டால் பக்கம் பக்கமாக போய்க் கொண்டே இருக்கும். இவர்களையெல்லாம் யார் கட்டாயப்படுத்தி வைத்திருக்கிறார்கள்? //

    அவர்கள் மாதிரியான ஆட்டு மந்தையை பார்ர்க்கவே முடியாது.
    ஆடு கூட சில சமயம் யோசிக்கும்.

  220. இந்து மதம் வந்து சேர்ந்திருக்கும் நயன்தாராவிற்கு நல்வரவு சொல்லவில்லையே தமிழ் ஹிந்து. இதே நயன் இஸ்லாமில் சேர்ந்திருந்தால் இந்நேரம் முஸ்லிம் சகோதரர்கள் இலவசமாக ஊருக்கு ஊர் பிரியாணி வழங்கி கொண்டாடியிருப்பார்கள்.

  221. //Rasigan
    8 August 2011 at 9:29 pm
    இந்து மதம் வந்து சேர்ந்திருக்கும் நயன்தாராவிற்கு நல்வரவு சொல்லவில்லையே தமிழ் ஹிந்து. //

    Rombaaa Mukkiyam 😉

  222. \\\\\\\\\\//“வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே” //

    ஸ்ரீ க்ருஷ்ணகுமார் சுவாமிகள் காட்டியுள்ள தொடர் “வேண்டியபோ தடியர் வேண்டிய போகமது வேண்டவெ றாதுதவு பெருமாளே” என இருக்குமோ என எனக்கொரு ஐயம். (சம்சயம்?)\\\\\\\\\\\

    ஐயன்மீர், தேவரீர் சொல்ல வந்த விஷயத்தை சிவகுருநாதன் தெளிவுபடுத்தினான் என்பதே சொல்லத்தகும். யத்ருச்சையாகவே ஆயினும்

    கலகலெனச்சில கலைகள் பிதற்றுவ
    தொழிவ துனைச்சிறி துரையாதே

    என்ற திருப்புகழோதுங்கால்

    அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
    அவைதரு வித்தருள் பெருமாளே

    என ஓதிய போது உறைத்தது. மோக்ஷ ஹேதுவாக வேதாத்யயனம் ப்ராப்தமாகவேண்டும் என நானிறைஞ்ச ஸகல போகங்களும் ப்ராப்தமாக வேண்டும் என தேவரீர் இறைஞ்ச இரண்டும் சேர்ந்து பூரணமாக தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பலபுருஷார்த்தங்களும் அடியார்க்கு சித்திக்க வேணும் என நீலக்கலாப மயிலேறும் புங்கவன் தலையில் குட்டியது போலிருந்தது. ஓதி நாட்களாயினும் சிறுமதி சிறுமதி தானே எனப்புரிந்தது நன்றே.

    திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவப்
    பொருவடிவேலும் கடம்பும் தடம்புயமாறிரண்டும்
    மருவடிவான வதனங்களாறும் மலர்க்கண்களும்
    குருவடிவாய் வந்தெனுள்ளம் குளிரக் குதிகொண்டவே

    வேலும் மயிலும் சேவலும் துணை.

  223. This refers to Malarmannan’s reply.

    My response:

    //முதல் முதலில் பேச்சு வரும் குழந்தை வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும். பேசிக் கொண்டே எனபதைவிட உளறிக் கொண்டே என்பதுதான் சரியாக இருக்கும். ஸ்ரீ ஜோ அமலன் எழுதுவதையெல்லாம் பார்த்தால் எனக்கு அதுதான் நினைவுக்கு வருகிறது. எல்லாம் ஸ்ரீ பாலா சொல்கிற மதிரி கால் குடம் கூட அல்ல, அரைக்கால் குடமாக உள்ளது. இத்ற்கே இவ்வளவு சத்தமா?
    //

    வாழ்க்கையில் ஆருமே எல்லாம் தெரிந்தவர்களல்ல. சிலருக்கு அதிகம் தெரிந்திருக்கலாம். அவ்வளவே. நிறை குடமென்று எதுவும் கிடையாது. அரை, கால், அரைக்கால் என்று இருக்கலாம். தனக்கே எல்லாம் தெரியும்! தன் சொற்களே இறுதி!! என்று நினைப்பவர் அரையுமில்லை, காலுமில்லை, அரைக்காலுமில்லை. அவர் ஒரு பாசிஸ்ட்.

    //துவைதம், அத்வைதம் ஆகியவற்றில் இவருக்குள்ள அறியாமையே இவரது மறுமொழிகளில் வெளிப்படுகிற்து. இவர் வைணவம் பற்றி ஆய்ந்து என்னவெல்லாம் உளறி, பட்டம் வாங்கப் போகிறாரோ!//

    நம்பி விட்டீர்களா அப்படி ?

    ஆழ்வார்களைப்படிக்க எந்த முன் தகுதியும் தேவையில்லை என்று மட்டும் சொல்லி விடுகிறேன். அதுவே அவர்களின் சிறப்பு. இதைப்படிக்க இன்ன தகுதி வேண்டுமென்பது மதமல்ல. பாசிசம்.

    துவைதம், அதைவதம் வேதாந்தம் என்றெல்லாம் அலகு குத்திக்காவடி தூக்குவோருக்கும் இம்மாதம் ஆடிக்கூழ் அம்மனுக்கு ஊற்றி வணங்குவோருக்கும் தெரியுமா ? தெரியாது. இவர்களைத்தான் என்மனக்கண்ணின் வைத்து நாம் எப்போதுமெழுதுவேன். ஆழ்வார்கள் இவர்களைத்தான் வைத்தார்கள் என்பது என்கணிப்பு. இல்லாவிட்டால் பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் புரியா விடயங்களை புரியாவண்ணம் எழுதியிருப்பார்களே? அப்படித்தான் எழுதினார்கள் என்றல்லவா இங்கு சொற்போர் நடைபெறுகிறது. எளிமைக்கும் எலீட்டிசத்திற்கும். ஆழ்வார்கள் எலீட்டிசத்தை ஆதரித்தார்களாம் ? இல்லை எளிமையென்றால் எனக்கு ஆழ்வார்களைப்பற்றித் தெரியவில்லையாம்.

    மக்களுக்குத்தான் மதம். மக்களை மறந்து பண்டிதர்களை மட்டும் வைத்து மதம் இருக்கமுடியாது. உங்கள் பாண்டியத்ய‌ம் இந்து மதத்தை வளர்க்கும் என கனவு காணவேண்டாம். அதற்கென்று மேட்டுக்குடி இருக்கிறது. அவர்களுக்கு பொழுது போகும்.

    //வைணவம் பற்றியோ, ஆழ்வார்கள் மனப் போக்கு பற்றியோ ஏதும் அறியாதவராக இருக்கிறார். இது ஒரு சாமர்த்தியமான ஊடுருவல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.//

    பின் ஏன் இங்கு வெளியிடுகிறார்கள் ? காரணம் ?

    அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் இல்லையா? ஏன் இப்படி பயப்படுகிறீர்கள் மற்றவன் வேறுவிதமாக எழுதும்போது?

    மேலேயுள்ள பதிலையும் படிக்கவும்.

    “ஊடுருவுகிறார்கள்’ என்ற பேச்சின் அடிப்படை என்னவென்றால் இந்து மதம் என்பது ஒரு சிலக்கூட்டத்திற்கு மட்டுமே இருக்கவேண்டும்; அதை எப்படி எல்லாருக்கும் எளிதாகச் சொல்லி எல்லாரையும் சேர்த்துவிடுவது என்ற நினைப்பே. உங்கள் ஐடியாலஜி, தியாலாஜி பாமரத் தமிழர்களுக்குத் தேவையா? என்ற கேள்வியை ஹானஸ்டாகக் கேட்டுக்கொள்ளுங்கள். எலீட்டிசம் என்பது இந்து மதத்தில் இருக்கிறது எப்போதும். அது போகும்போது கிருத்துவ இசுலாம் மதங்கள் இந்திய மண்ணிலிருந்து தானாகவே காணாமல போகும்.

  224. //வர்ணாசிரம தர்மம் குறித்து நான் ஏற்கனவே விரிவான முறையில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஸ்ரீ அமலன் அவற்றைத் தேடிப் படித்துக்கொள்ள வேண்டியதுதான். திண்ணையில் கிடைக்கலாம். தமிழ் ஹிந்துவிலும் காணப்படலாம். நிச்சயமாகக் கூறவியலாது. ஒரு சமூகம் என்பது எவ்வாறு உருவாகிறது? ஒத்த மனப் போக்குள்ளவர்கள் தாமாக ஒருவரையொருவர் இனங் கண்டு ஒன்று திரண்டு சமூகத்தின் பல பிரிவுகளாக அமைகின்றனர். வருணமும் இவ்வாறே தனி மனிதப் பண்பாகத்தோன்றி, அவ்வாறான தனி மனிதர்கள் ஒரு தொகுப்பாகச் சேர்க்கப் பட்டு சமூகத்தின் அங்கங்களாக அமைகின்றனர். ஹிந்து சமூகத்தில் உள்ள இன்றைய சாதி அமைப்பை வர்ணாசிரமத்துடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. இதுவே அமலனுக்கு நான் சொல்லக் கூடிய//

    திரு மலர் மன்னன்!

    இதை இந்து மதமட்டுமல்ல. உலக மனோதத்துவமும் (psychology) இதைக் காட்டியிருக்கிறது. சமூகவியல், ஆந்த்ரோபாலஜி Sociology and anthropology முதலியவையும் காட்டியிருக்கிகின்றன.. இந்து மதம் முதன் முதலில் சொன்னதாக மட்டும்தான் எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு தனிமனிதனுக்கு ஒவ்வொரு தனிப்பட்ட குணயமப்பு உண்டு. அக்குணமைப்பை ஒத்தவர்கள் ஒன்று கூடி வாழுகிறார்கள். Is it a new discovery ? Or surprising discovery ? Be that as it may, இஃது என்ன மறுக்கப்படவேண்டிய விடயமா ? நான் மறுத்தேனா ?

    நான் சொலவது – திண்ணையிலும் உங்கள் கட்டுரைக்கு மறுபதில் எழுதினேன் போடவில்லை –

    ஒரு தனிமனிதன் என்பவன் ஆர் ?அவன் தனியாகத்தான் பிறந்தானா ? அவனுக்கு உடன்பிறந்தோர் கிடையாவா ? அவர்கள் அனைவருக்கும் ஒரே குணயமப்பு என்று உங்களால் சொல்ல முடியுமா ? ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள்தானே இராவணனும் வீபிசனனும் ? ஒரே குருதியில் பிறந்தோரிடையிலே இவ்வளவு வேறுபாடுகள் இருப்பின், பலர் கூடிய சமூகத்தில் எத்தனை எததனை வேறுபாடுகள் இருக்கும் ?

    அன்று ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தன் குணத்தைப்போன்ற மற்றொருவர் அல்லது மற்றவர்களுடன் சேர்ந்தானா ? அப்படியே சேர்ந்தாலும் அவன் தன்குணமொக்கா உடன்பிறந்தோனை விட்டு விலகத்தானே செய்ய வேண்டும் விபீசனன் செய்தத்து போல?
    ஒரு கூட்டமாக ஒன்று சேர்ந்தார்கள் என்று சுலபமாகச் சொல்லிவிட்டீர்களே ?

    அப்படியே அவர்கள் சேர்ந்து ஒரு ஜாதியான பின், அவர்கள் எல்லாருக்கும் எப்போது ஒரு குணயமைப்பா இருந்தது? இருக்கும்? ஜீன்ஸ் மூட்டேசனே கிடையாதா ? குருதி கலப்பே நடக்கவில்லையா ? ஆயிரமாயிரமாண்டுகளா ஒருவன் குணயமைப்பு நூற்கல்விக்கும் இன்னொருவன் குணயமைப்பு உடலுழைப்புக்கும் பொருத்தமானது என்று சொல்லமுடியுமா ?

    வருணாசிரதர்மக்கொள்கை, குணயமைப்பை அடைப்படையாக வைத்ததே என்று சொல்லும்போது நான் மேலே காட்டிய குழப்பங்கள் மிகும். எனவே இக்கொள்கை பிழையானது. தர்க்க ரீதியாகவும் வாழ்க்கை உண்மை ரீதியாகவும், விஞ்ஞான வழியாகவும்.

    அப்படியே சரியென்றாலும், இது நடந்தது எப்போது ? ஆதிகாலத்தில், பின்னர் இடைக்காலத்தில் ஜாதிகளாக ஆகி ஒரு குறிப்பிட்ட கூட்டத்தைத் தீண்டத்தகாதவர்கள் எனச்சொல்லி நடாத்த ஏதுவாகியதா இல்லையா ?

    இப்படிப்பட்ட வருணாசிரம் அன்று ஓரளவுக்குச் சரியென்றாலும் – ஏனென்றால் அன்று மக்கள் கிராமங்களில் குறைவான எண்ணிக்கையில் வாழ்ந்தார்கள் – இன்று தேவையா ? இன்றும் மலர் மன்னன் எல்லவிடங்களிலும் வருணாசிரமத்திற்கு குடைபிடிப்பதேன்?இக்கொள்கையால் இந்துமதத்திற்குத் தீமையா நன்மையா இப்போது? சொல்லட்டுமே மலர்மன்னன் ?

    இன்றும் ஒரு தலித்து என் ஜாதியைக் காட்டி வேதம் படிக்க நீ முடியாது என்று தடுக்கிறார்கள் என்றெழுகிறாரே ? அவருக்குப் பதில் போடுகிறார்கள். “ஆங்கோர் மலையிலே ஒரு சாமியார் கற்றுக்கொடுக்கிறார்.” “இங்கோர் மலையிலே இன்னொருவர்.” “சென்னையிலே ஓரிடத்தில்” என்று டெபின்ஸாக மட்டுமெதானே சொல்லமுடிகிறது? அது ஒரு பிரச்சின்யாக எப்படி வந்தது? முதலில் ? எப்படி வேதங்கள் ஒரு ஜாதியாருக்கு மட்டும் போய்ச்சேர்ந்தது முதலில் ? ஆர் காரணம் ?

    இன்றும் மடங்கள் நடாத்தும் வேதபாடசாலைகளில் பிராமணர் என்போரைத்தவிர மற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாதே ? இன்றும் அவர்களுக்கு மட்டும்தானே உண்ண உணவு, உடுக்கவுடை என்று வழங்கப்படுகிறதே ? இன்றும் தமிழர்களில் ஒரு கூட்டம் தங்களை பிராமணர்கள் என்றழைத்துக்கொள்கிறதே? இதற்கெல்லாம் வருணக்கொள்கை அவர்கள் நம்பி வாழ்வதானால்தானே ? ஏன் அப்படி நம்புகிறார்கள். மலர்மன்னன் போன்றவர்கள் அக்கொள்கையைத் தூக்கிப்பிடித்து வருவதால்.

    இதனால் என்ன விளைவு மதத்திற்கு ? மற்றவர்கள் விலகிக்கொள்கிறார்கள்.

    உள்ளேயேயிருந்து குழிதோண்டி தம்மதத்தைப் புதைத்துவிட்டு கிருத்தவனும் இசுலாமியனும் மதமாற்றுகிறான் என்றால் எவன் நம்புவான் ?

    ஊடுருவுகிறானாம். ஜாக்கிரதையாக இருக்கணுமாம். என்ன நாட்டாண்மையிது !

  225. ஜோ அமலன்

    //
    பின் ஏன் இங்கு வெளியிடுகிறார்கள் ? காரணம் ?

    //

    என்ன செய்வது தமிழ் ஹிந்து editor கள் ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உளறல், அலறல் என்றெல்லாம் பார்ப்பதில்லை. இதை வைத்துக் கொண்டே நீங்கள் எழுதுவதெல்லா சரி என்று முடிவு கட்டியாகிவைட்டதா – சபாஷ் அமலன் ஜி சபாஷ்

    எல்லோருக்கும் வேதம் கற்றுக் கொடுக்கும் இடங்கள். இங்கொன்று அங்கொன்று என்று இல்லை. எல்லா ஊரிலும் இருக்கிறார்கள். எனக்கு எனது வீட்டருகில் இருக்கும் சிலரை தானே தெரியும். வேத பாட சாலைகள் என்ன register செய்து web site வைத்து நடத்தப்படும் விஷயமா – கூகிள் செய்த கண்டு பிடிக்க – வாய் வழி தான். எவ்வளவோ இடங்களில் வேடம் எல்லோருக்கும் சொல்லித் தரப்படுகிறது. உடனே கும்பகோண பாட சாலையில் எல்லோரையும் செர்பீர்களா என்று கேட்பது முட்டாள் தனம். சேர்ப்பதும் சேர்க்காததும் அவர்கள் இஷ்டம். அவர்கள் ஒன்றும் முழு வேதத்தின் மொத்த குத்தகைக்காரர்கள் அல்ல. வேடம் எல்லோருக்கும் சொல்லித் தரப்படும் இடங்கள் உள்ளன.

    சரி கிறிஸ்துவத்தில் philosophy என்றெல்லாம் கூட ஒன்று இருக்கு அது எல்லா இடத்திலும் கற்று தரப்படுகிறதா – எல்லோருக்கும் கற்றுத் தரப் படுகிறதா ? பதில் இல்லை தான்.

    ஹிந்துத்வம் செழிக்க வேதம் தேவை இல்லை – அதை படித்தால் தான் ஹிந்து என்று எங்காவது சொல்கிறார்களா. அப்புறம் ஏன் இதை வைத்துகே கொண்டு ஒரு சமூக பிரச்சனையை உருவாக்குகிறீர்கள். இதை ஊத்தி ஊத்தி பெரிதாக்கியதே மிச நரிகள் தான். அதற்க்கு முன் ஆயூ என்னால் வேடம் படிக்க முடிய வில்லையே என்று கலங்கியதாக யாராவது உண்டா. வேடம் சொல்லும் கருத்தை சொல்ல தான் ஒவ்வொரு மொழியிலும் விஷயங்கள் உள்ளனவே – பிரபந்தங்கள், பரிபாடல்கள் எல்லாம் என்னத்தை சொல்கின்றனவாம்.

    வேதத்தை விடுவோம் – பகவத் கீதைக்கு வருவோம். யாருக்கெல்லாம் பகவத் கீதை தெரியும் என்றாவது உமக்கு தெரியுமா.

    இந்தியாவில் இருந்த ஒரு கட்டமைப்பை ஒடுக்கி அழித்து விட்டு இன்று சும்மா புலம்புவது போல் நடித்தால் என்ன செய்வது. இதை பற்றி மறுமொழி பதில் முன்பே கொடுத்தாகிவிட்டது.

    ஹிந்டுத்தவ்த்தை சாமானியர்கள் சரியாகவே புரிந்து வைத்துள்ளார்கள். இடையில் பூந்து கழகம் செய்யும் மிசநரிகளின் தொல்லைதான் தாங்கவில்லை. கூழ் ஊத்துபவர்கள் கூழ் ஊத்துகிரார்கள், அழகு குத்துபவர்கள் அலகு குத்துகிறார்கள், ஏகாதேசி விரதம் இருப்பவர்க்க விரதம் இருக்கிறார்கள், பிரபந்தம் படிப்பவர்கள் பிரபந்தம் படிக்கிறார்கள் வேதம் படிப்பவர்கள் வேதம் படிக்கிறார்கள். இது ஒவ்வொன்றின் பின்னும் ஹிந்துமதத்தின் உயரிய வேதாந்த கருத்துக்கள் பின்னப்பட்டுள்ளன. ஒரே சமயத்தில் பழனிக்கு இந்த எல்லா கூட்டத்திலிருந்தும் மக்கள் வருகிறார்கள்.

    கருப்பு புத்தகம் ஒன்றே எங்களுது விடி மோட்சம் அல்ல. சர்ச்சுக்கு போய் அலற வேண்டியது போன்ற அவசியம் எங்களுக்கு அல்ல, அடுத்தவனை ஏமாற்றி மதம் மாற்றி புண்ணியம் சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

    எதற்கு சும்மா draama போடுகிறீர்.

    நான் முன்பே சொன்னது போல – மிச நரிகள் சும்மா இருந்தாலே போதும் நாங்களே பாத்துப்போம். எந்த மிசனரி வந்து ராமானுஜருக்கு சொன்னான் – அவர் எல்லாவற்றையும் ஆசை உடயோருக்கேல்லாம் திறந்து விட்டார்.

  226. Jo Amalan

    //துவைதம், அதைவதம் வேதாந்தம் என்றெல்லாம் அலகு குத்திக்காவடி தூக்குவோருக்கும் இம்மாதம் ஆடிக்கூழ் அம்மனுக்கு ஊற்றி வணங்குவோருக்கும் தெரியுமா ? தெரியாது. ///

    ///மக்களுக்குத்தான் மதம். மக்களை மறந்து பண்டிதர்களை மட்டும் வைத்து மதம் இருக்கமுடியாது.///

    இந்தக் கருத்துக்கள் சரியானவையே. ஹிந்துமதம், சமஸ்கிருதம், வேதம், வேதாந்தம், திருமுறைகள், பிரபந்தம் என அனைத்தையும் உள்ளடக்கியது. அவை அனைத்தையும் கடந்ததும் ஆகும்.

  227. அன்புள்ள அமலன்,

    தங்கள் கடிதத்தில் நான்கு வேதங்களை மட்டுமே குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள். வேதங்கள் உண்மையில் நான்கு அல்ல. அவற்றின் பெயர்கள் ஒரு அடையாளத்துக்கே. நால்வேதம் என்பது இப்போது இருப்பது. எப்போதும் இருந்தது அல்ல. இதற்கு முன்னர் ஏராளமான வேதங்கள் இருந்தன. அவற்றில் காலப்போக்கில் எஞ்சி இருப்பது , இவை நாலு மட்டுமே. இந்த நாலு வேதத்திலும் , பல கிளைகள் ( சாகைகள்) உள்ளன.

    மேலும் வேதங்களுக்கு எல்லைகள் கிடையாது. எதிர்காலத்திலும் , நம் பூவுலகில், அதிலும் பாரத தேசத்தில் ஏராளமான ரிஷிகள் தோன்றுவர். இன்னும் எண்ணிக்கையில் அடங்காத வேதங்களும் உருவாகும். நாங்கள் சுய சிந்தனை உடையவர்கள். ஒரே புத்தகத்தை மட்டுமே வேதம் என்று சொல்லி , அதை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு தொங்குபவர்கள் அல்ல. வீணாக பார்ப்பனர்கள் வேதங்களை திருடிவிட்டனர் என்பதுபோல கூறியுள்ளீர்கள். ஆனால், வேதம் என்பது திருட முடியாதது. இப்போது உள்ள , எங்களது வேத புத்தகங்கள் அனைத்தும் காணாமல் போனாலும், இப்போது உள்ள வேதம் அறிந்த மனிதர்கள் அனைவரும் காலமானபின்னரும், இளைய தலைமுறையில் வேதம் கற்றவர் இல்லாமல் போனாலும், இறை அருளால் புதிய வேதங்கள் எங்களுக்கு கடவுள் கொடுப்பார்.

    அதே போல, எங்களுக்கு முதல் இறைதூதர் என்று எவனும் கிடையாது. கடைசி இறை தூதர் என்றும் எவனும் கிடையாது. முதலும் , இறுதியும் அற்ற மரபு எங்கள் மரபு. வைணவம், அல்லது சைவம் என்ற இரண்டு குறுகிய பிரிவுகளை மட்டும் வைத்து , இந்துமதத்தை எடை போட முயற்சிக்காதீர்கள். வைணவமும், சைவமும் தோன்றுவதற்கு முன்னரே இருந்த மதம் அனாதியான இந்து மதம். ஆதி சங்கராச்சாரியார் உருவாக்கிய மதம் இந்து மதம் என்று என் நண்பர்களில் சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆதி சங்கரர் இந்துமதத்தின் பல்வேறுபிரிவுகளை தொகுத்து ஒரு அமைப்பிற்கான வடிவம் கொடுத்தவர், அவ்வளவுதான்.

    அமலன்,

    உங்களுக்கு, ஒரு கேள்வி ? வீணாக பார்ப்பனர்கள் வேதத்தை மூடிமறைத்துவிட்டனர் என்று சொல்கிறீர்களே, அது உண்மையானால், பார்ப்பனர்கள் தினசரி சொல்லும் ரிக் வேத மந்திரமான காயத்திரிக்கு , முனிவரே ( ரிஷி) விஸ்வாமித்திரர் தான் என்பதும் தாங்கள் அறிந்திருக்க கூடும். விஸ்வாமித்திரர் ஒரு ஷத்திரிய மன்னர் அன்றோ? உண்மை என்னவெனில், பார்ப்பனர்களுக்கே, வேதம் தந்தது விஸ்வாமித்திரர் மற்றும் பல ஷத்திரிய ஞானிகள். வேதங்களை முழுவதும் படியுங்கள். அப்போது தான் உண்மை தெரியும்.

    வரலாற்றில், சனகனும், விச்வாமித்ரனும் தான் மிகச்சிறந்த முனிவர்களாக போற்றப்படுகின்றனர். பிராமண முனிவர்கள் மிக குறைவு. வசிஷ்டரை போல ஓரிருவரே. எனவே, இது போன்ற , பொருந்தாத குற்றச்சாட்டுக்களை கூறாதீர்கள்.

    வைணவத்திலும், சைவத்திலும், அவற்றை பின் பற்றுவோரிடம் சில குறுகிய எல்லைகள் இருக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில், சில அரை வேக்காடுகளின் விளக்க உரைகளை படித்து, இந்த குறைபாடுகள் ஏற்பட்டன . விரைவில் இவை மாறும்.

    இந்துமதம் என்பது, பெயர், கோட்பாடு ,உருவம், உருவமின்மை ( அருவம்) என்று எவ்வித எல்லைகளும் அற்றது. அறியாமையின் உச்சக்கட்டத்தில் இருக்கும் சில நண்பர்கள் , மீண்டும் மீண்டும் சில குறுகிய எல்லைகளை , தடைகளை உருவாக்க , விடாமுயற்சி செய்கின்றனர். அந்த தீய முயற்சிகளை கடவுளே துடைத்து எறிவார். இந்துமதம் என்பது ஒரு வரையறை செய்ய முடியாத கடலை விட பெரிய சமாசாரம்.

  228. As Shri Malarmannan ji rightly pointed out, the responses by many of the readers to the article are way out of the mark. A lot of readers are getting distracted from the main topic ( Bringing Christians and Muslims back into the Hindu fold) thanks to DELIBERATE ramblings by Jo Amalan and Co.
    My 2 cents worth: I have seen similar internet trolls like Jo Amalan parading in other Hindu sites, successfully hijacking the discussion and deviating readers from the topic of discussion. They are not there to win you over with intellectual debate. No logical intelligent response will win them over. They will change the topic frequently, will not answer to questions posed and are there for nuisance value only. It is a waste of time in answering these cretins. Ignore them, I say.

  229. ஆசிரியருக்கும் மற்றவர்களுக்கும்,

    பிற மதத்தை சேர்ந்தவர்களை இயற்க்கை மதமான இந்து மதத்துக்கு திரும்பச் செய்வது என்பதை விட முக்கியம் இந்துக்கள் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பது.
    பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான குடும்ப, கோவில், திருவிழாக்கள், பிற சுற்றுலாத் தலங்களான, ஆறுகள், அருவிகள் இங்கெல்லாம் மக்கள் பெருமளவு சுற்று சூழல் பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள். அருவிகளில் ஷாம்பூ சோப்பு கவர்கள் நிரம்பி மண்ணையும் இடத்தையும் பாழ்படுத்துகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
    மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம். இயற்கையை அழித்து மதத்தை காக்க முடியாது. மனிதனே உயிர்களே அழிந்த பின் மதம் கடவுள் எல்லாம் என்ன அர்த்தம் கொள்ள முடியும்?

    மக்களிடம் இந்த சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை எல்லா வகையிலும் இந்து அமைப்புகளும் தன்னார்வ தொண்டர்களும் செய்ய வேண்டும். வாழ்வு முறை மாற்றங்கள் முதலில் முக்கியம். நாம் முதலில் இயற்க்கை வாழ்வு முறைக்கு திரும்புவோம்.

    திரு ராமா அவர்கள் இங்கே கூறியபடி திசை திருப்பும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லி நாம் நம் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்கலாம். இந்த கும்பலில் நல்ல கருத்துக்கள் எவை என்பதே தெரிவதில்லை.

  230. அன்புள்ள ஸ்ரீ விருட்சம்,

    சுற்றுச் சூழல் பாதுக்காப்பு இன்று உலகளாவிய பிரச்சினை. கன ரகத் தொழிலகளின் வளர்ச்சியாலும் ஆயுத சோதனைகளாலும் மட்டுமின்றி வீட்டுக்கு வீடு ஏர் கண்டிஷன் கருவியைப் பயன்படுத்துவதும், அளவுக்கு மீறிய பெட்ரோல் வாகனங்கள் பயன்பாடும் இவ்வாறாகப் பல்வேறு முனைகளிலும் சுற்றுச் சூழலுக்குப் பெருங்கேடு விளைந்துகொண்டுதானிருக்கிறது. இங்கே நம் நாட்டில் எழுபது-எண்பது ஆண்டுகளுக்கு முன் வரை எவ்வித இயக்கமோ, பிரசாரமோ அவசியப்படாமல் இயல்பாகவே சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பதில் இயற்கை அறிவுடன் நமது முந்தைய தலைமுறையினர் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள்.

    நீர்நிலைகளைத் தூய்மை கெடாமல் பாதுக்காக்க வேண்டும் அவற்றுக்கு அருகில் அசுத்தம் செய்யலாகாது, அனாவசியமாக மரங்களை வெட்டக் கூடாது, இலை தழைகளைப் பறிப்பது கூடத் தேவையின்றி செய்யலாகாது, பூவைக் கொய்வதைக் கூட நோகாமல் கொய்ய வேண்டும் என இவ்வாறான வாழ்க்கை நடைமுறைகளையெல்லாம் நம் முன்னோர் எவ்விதக் கடுமையான சட்டங்களின் அச்சுறுத்தலும் இன்றியே மிகவும் இயல்பாகக் கடைப்பிடித்து வந்தனர். எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. பூர்விக கிராமத்தில் எங்கள் பாட்டி உணவு உண்பதற்காகக் கொல்லையில் வாழை இலையைப் பறிக்க நேர்ந்தால் முதலில் வாழை மரத்திடம் மன்னிப்புக் கேட்பார். எனக்கு வேறு வழியில்ல அதனால்தான் உன்னைத் துன்புறுத்த வேண்டியுள்ளது என்பார். பிறகு மிகவும் மென்மையாக கூடியவரை நோகாமல் இலையை அறுப்பார். பெரும்பாலும் தானாகக் காய்ந்த ச்ருகிலேயே உண்பார். இவ்வளவுக்கும் பெரும் செல்வச் சீமாட்டி!
    சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக நமது சாஸ்திரஙகளிலேயே பல அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இளம் பருவத்திலேயே அவற்றை எடுத்துக் கூறப் பல பெற்றோர் தவறிவிட்டனர். கல்வியின் நோக்கம் மாறிவிட்டது. ஒழுக்கத்தைக் கற்பிக்க இன்று வகுப்புகள் இல்லை. வேற்று மத கலாசாரங்களின் தாக்கம் அதிகமானதால் பல நல்ல பழக்க வழக்கங்களை இழந்துவிட்டோம். நீங்கள் சொலவது முற்றிலும் சரியே என்றாலும் இம்மாதிரியான பணிகளைப் பங்கு போட்டுக்கொண்டுதான் செய்ய வேண்டும். ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதற்காக இன்னொரு காரியத்தை நிறுத்தி வைக்க முடியாது. இன்று மத மாற்றம் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. முகமதியமும் இதில் மிகுந்த தீவிரம் காட்டி வருவதோடு மதத்தின் பெயராலேயே நாச வேலைகளிலும் இறங்குகிறது. நம் நாட்டு முகமதிய சமுதாயத்திலிருந்தே பயங்கர வாதச் செயல்களுக்கு ஆட்கள் எடுக்கப்பட்டு வருகிறார்கள். ஹிந்துக்களின் எண்ணிக்கை மள மள வெனக் குறைந்து வருகிறது. வெகு விரைவில் ஹிந்துக் குடும்பங்களில் அண்ணன் தம்பி, அக்கா தங்கை, மாமன், அத்தை, பெரியப்பா சிற்றப்பா என்று உறவாடுவதற்கே வழியில்லாமல் போகப் போகிறது. அதனால்தான் மத மாற்றத்தைத் தடுத்தல், தாய் மதம் திரும்பச் செய்தல் ஆகிய பணிகளை இயன்றவாறெல்லாம் அவசியம் அனைவரும் செய்து வர வேண்டும். சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்புப் பிரசாரத்துக்கு இன்று வலுவான அமைப்புகள் உள்ளன. அவற்றுக்கு நிதி ஆதாரங்களும் உள்ளன. அரசாங்கங்களும் பெயரளவிலாவது தலை வணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆனால் மத மாற்ற முயற்சிகளைத் தடுத்தல், தாய் மதம் திரும்பச் செய்தல் முதலான பணிகளுக்கு அத்தகைய விழிப்புணர்வோ பிரசார பலமோ தொண்டர்கள் துணையோ பிற அத்தியாவசிய வசதிகளோ இல்லை. இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கிறபோது இன்றைய நிலையில் நமது கவனம் தாய் மதம் திரும்பச் செய்தல், மத மாற்றம் தடுத்தல் ஆகிய பணிகளில் செல்ல வேண்டியது அவசியமாகிறது.

    ஹிந்துஸ்தானம் வலிமையான ஹிந்துஸ்தானமாகவும் வளமான ஹிந்துஸ்தானமாகவும், தூய்மையான ஹிந்துஸ்தானமாகவும் உயர்ந்து, ஹிந்துக்களின் மக்கள் தொகை மட்டும் சிறுபான்மை யாகச் சிறுத்துப் போயிருந்தால் பரவாயில்லையா?

    முயலும் ஆமையும் கதையை நினைவூட்டுகிறேன்.
    -மலர்மன்னன்

  231. திரு மலர்மன்னன் அவர்களுக்கு,
    மதம் மாறியவர்கள் அல்லது மாறுபவர்கள் முக்கியமான காரணங்களாக முன் வைப்பது தீண்டாமை. அதற்கும் பல கடவுள் வழிபாட்டுக்கும், பின்பற்றும் சம்பிரதாயங்களுக்கும் நேரடி தொடர்பை கண்டெத்தி விட முடிகிறது. மத மாற்றிகள் குறிவைப்பது ஜாதியின் கீழ் அடுக்குகளில் இருக்கும் ஏழைகளை. கிறிஸ்தவம் ஏழைகளை அடுத்து நோயாளிகள், குற்றவாளிகள் மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டத்தில் சிக்கிக் கொள்பவர்களை. இதற்கு ஆரிய, திராவிட பிரிவினையை தூண்டி, பல கடவுள் வழிபாட்டுத் தன்மையை கொச்சைபடுத்தி , கல்வி, வாழ்க்கைக்கு வழி என்று முன்நேற்றுப் பாதையில் சிறு நம்பிக்கையை ஊட்டி விடும் போது மத மாற்றம் சுலபமாகி விடுகிறது. இதற்கு வெளிநாட்டில் இருந்து திட்டம் போட்டு பணம் அனுப்பப்படுகிறது.

    அக்கம் பக்கம் மக்களைப் பார்க்கும் போது இவர்கள் மதம் மாறியதாலேயே இன்று இந்த வளமான நிலையில் இருக்கிறார்கள் என்றே கருத இடமுண்டு. அவர்களிடம் தாய் மதம் குறித்த எந்த நல்ல எண்ணமும் இருக்க வாய்பிருக்குமா என்பது சந்தேகமே. நல்ல நிலையில் இருக்கும் ஒருவர் மத மாற்றம் பற்றி யோசிக்கவே மாட்டார். மேலும் நேற்று வரை இந்துவாக இருந்த ஒருவர் மதம் மாறுவதை காண நேரும் போது தம் மதம் குறித்த பெருமை தான் வரும்.

    ஆனால் இதை எல்லாம் தாண்டி நீங்கள் ஒருவரை தாய் மதம் திரும்ப வைக்க முடியும் முடிந்திருக்கிறது என்று சொல்ல்வது ஆச்சர்யம் அளிக்கிறது. மதத்தின் பெருமையை புரிந்து மதத்தை ஏற்றுக் கொள்ள வெளிநாட்டில் இருந்து பலரும் வரலாம். ஆனால் நம் மக்களின் கடவுள் தேவை என்பது பெரும்பாலும் சுயநலம் நிறைந்ததாக அதாவது ஓரளவேனும் வசதியான, மரியாதையான வாழ்க்கை என்று இருக்கும் போது மதம் மாற்றங்களும் அதன் அடிப்படையிலேயே தானே நிகழ முடியும். அப்படி ஒரு வளமான வாழ்வுக்கான நம்பிக்கையை உங்களால் முன் வைக்க முடிந்திருக்கிறதா?
    உங்கள் அனுபவங்களை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

  232. Dear swarna priayn,

    I understand you are belongs to wahabhi sect of Isalm. You all people blaming Hindus for caste indiffernce. Then, why ask seperate reservation for Dailt Muslims. If reservation means , there is some difference there.

    Just check psumanda muslim website.There , all accept caste difference is in Islam.

    Next, you are not answering one question raised by one member. Islam why forcley converted people and Arab slavery. why single non-Arab muslim became chief Haji of main Mecca or Madina Majad there.

    Please also gothro main.faithfreedom.org. very informative website about facts about Islam.

  233. also main.faithfreedom.org

    Here, irrefutable arguements given against Islam. If you progagate this link , this is very useful to non-muslims.

  234. Dear virucham,
    If Islam and christanity here only money in their hand. After petro dollar and weapon dollar gone. Their position become weak.

    Now hindus graudually getting money. In another five years, Hindus will become stronger in financial side. Then see what happen

  235. மலர்மன்னன் அய்யா அவர்களுக்கு (நீங்கள் வயதானவர் என்று நினைக்கிறேன்.. )

    நல்ல கட்டுரை.. ஆனால், நான் இதே தமிழ் இந்துவில் பல இடத்தில் கேட்கும் கேள்வியை இங்கு கேட்கிறேன்..

    இந்து மதம் என்று நீங்களும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.. அது எப்படி மதம் ஆனது? ஆதி சங்கரர் வகுத்த சன்மதங்களும் மதம் என்று வரையறைக்குள் வருகிறது.. இந்து மதம் என்ற ஒன்று அவ்வாற் வராத பொழுது, அதையே நாம் ஏன் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்..

    இந்து என்பது மதம் என்று எப்படி நாம் சொல்ல முடியும்?

  236. தங்கள் கட்டுரை நன்றாக இருக்கிறது. ஆனால் நான் இன்னும் திருவாளர் களிமிகு கணபதி எழுதியுள்ள மூலக் கட்டுரையைப் படிக்கவில்லை.

    உங்கள் கட்டுரையில் ‘சமயம்’ மற்றும் ‘சமூகம்’ என்று இரண்டினைப் பற்றியும் விவரித்தும், இன்னும் சில அன்பர்கள் ஹிந்து சமயத்திலிருந்து மத மாற்றம் நிகழ, ‘சமூக ஏற்றத்தாழ்வுகளே காரணம்’ என்றே கருத்துப் பதிகிறார்கள்.

    இவர்களுக்கு எப்படி நல்லதைப் புரிய வைப்பதென்று விளக்கி, ஒரு விரிவான கட்டுரையல்ல; பல கட்டுரைகள், மறுமொழிகள் வெளியாகியுள்ளன. ஆனால், கண்களை மூடிக்கொண்டு ‘இருட்டு…இருட்டு…’ என்று ஓலமிடுகிறார்கள். இவர்களை என்ன சொல்லிப் புரிய வைப்பது?

  237. அன்புள்ள அனைவருக்கும்

    வணக்கம் . இந்த வலை தளத்தில் இதுவே என் முதல் கடிதம். உங்கள் அனைவரின் கேள்வி பதில்களும் கண்டேன்!!..மன்னிக்கவும் மனம் மிக வருந்துகிறது.

    நாம் மத, மொழி, இன, இன்னபிற பிரிவினைகள் நீக்கி இந்த தேசத்தின் புதல்வர்களாக விளங்க வேண்டியது நம் அனைவரின் முழு முதற் கடமை. அதைவிடுத்து வின் மதமா என் மதமா எது உயர்த்தி? எது தாழ்த்தி? ஏன் தாழ்த்தி? என்பன போன்ற விவாதங்களால் நாம் சாதிக்கபோவது என்ன?

    தேச பக்தியையும் தெய்வ நம்பிக்கையும் பிணைக்காதீர்கள். தீர்வே கிடைக்காது. மதம் வேறு தேசம் வேறு. மதம் தனிமனித விஷயம்

    தேசமே பிரதானம். தேசம் அனைவருக்கும் பொது. தேச நலனில், பாதுகாப்பில் தான் நம் தனிமனித வாழ்வும் சுதந்திரமும், மற்றெல்லாம் அடங்கி இருக்கிறது ..

    உங்கள் அனைவருக்கும் தெய்வ நம்பிக்கை இருக்கிறது என்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது!!.. நன்றிகள் பல. நமக்கிடையே வேற்றுமைகள் பல இருந்தாலும் தெய்வ நம்பிக்கையே இல்லாதவர்கள் தான் அவரவர் மத அழிவுக்கு மிக முக்கிய காரணம்.

    இந்த பரந்த பாரத தேசத்தில் பிறந்து வாழும் எம்மததினராயினும் அவர்கள் இந்தியர்களாகவே / இந்தியர்களாக மட்டுமே இருக்கமுடியும்/ இருக்க வேண்டும். தேச பக்தி என்பது நம் அனைவருக்கும் பொதுவானதாக மட்டுமே இருக்க முடியும்.

    நம் தேசத்தை குறைத்து மதிப்பிடும் யாரையுமே இந்த தேசத்தின் துரோகியாகவே கருத வேண்டும். இதில் மத சமய உணர்வகளுக்கு இடமே இல்லை.

    இந்த தேசத்தின் பெரும்பான்மையான இந்துக்களில் எந்தனை பேர் தேச பக்தி உள்ளவர்கள்? மாற்று மதத்தினர் எதனை பேர் தேச பக்தி இல்லாது உள்ளனர்?

    இந்துக்களாகிய நாம் பிற நாட்டவரை அவரவ்ர நாட்டவராகவே மதம் கடந்து பார்க்கிறோம். ஆனால். ஒரு குறிப்பிட மதத்தவரை மட்டும் மாற்று கண்ணோட்டத்திலேயே காண்கிறோம் !!..

    முதலில் நமது நாட்டில் வாழும் பிற மத மக்களை இந்தியர் என்ற உணர்வோடு பார்க்கவேண்டும் நாம் இந்தியர் என்ற உணர்வை அனைவருக்கும் ஊட்ட வேண்டும். அப்போது தான் அந்நிய சக்திகள் மதங்களின் போர்வையில் உள்ளே நுழையாது!!..அனால் நாம் நேர் மாறாக பேசுவதாலும், எழுதுவதாலும் தான் திசை மாறுதல் நடக்கிறது..

    எம்மததினராயினும் அவரவர் மதம் சொல்லும் கடவுளை கண்டவர் யாருமில்லை. அனால் எல்லா மதங்களும் கடவுள் ஒருவரே என்பதில் உறுதியாக இருகின்றனர் என்னும் போது வேறுபாடுகளுக்கு இடமே இல்லையே !!..ஒருவனேயான தேவனை யார் எப்பெயரிட்டு அழைத்தால் தான் என்ன?

    சாதாரண நமக்கே பல பெயர்கள் இருக்கும் போது இறைவனுக்கு பல பெயர்கள் இருக்ககூடாதா?

    ஒரு ஊருக்கே பல வழிகள் இருக்கும் போது இறைவனை அடையும் வழிகள் பல இருக்க கூடாதா? அவரவர் வசதிக்கும் வைப்புக்கும் ஏற்ற வழியை பயன்படுத்தலாம்..

    பிரச்னை இங்கே வேறு ..இறைவன் பெயரால் பல விவகாரங்கள் உருவெடுப்பதால் தான் பலவும் நடக்கின்றன..

    அவரவர் மூலம் தேடி போவதிலோ மதம் சார்ந்த நம்பிக்கைகளை பின்பற்றுவதோ தவறே இல்லை. எல்லா நிலைகளிலும் நோக்கம் இறைவனை நோக்கியதாக இருக்க வேண்டும். ஆனால் எல்லா மதங்களிலும் போலிகள் நீக்கமற நிறைந்து கிடக்கிறார்கள். இந்து மதத்தில் பணம், புகழை சாத்வீக வேஷங்களின் மூலம் எளிதில் சம்பாதித்து விடுகிறார்கள்.
    சில மதங்களில் தீவிரவாத சிந்தனைகள், செயல்கள் மூலம் அதையே அடைய முயற்சிகிறார்கள்!!!..

    என்ன செய்ய!! திரைப்படத்திலே அடிதடிகாரன் தான் ஆராதிக்கப்படுகிறான்.. உண்மை புரியாமல் குறுகிய காலத்தில் எதையோ சாதிக்க நினைப்பதாக எண்ணி தவறு செய்ய துடிக்கிறார்கள்!!.

    இந்துக்களாகிய நாம் இந்துக்களாக நடப்போம்.
    – மத சின்னங்களை கட்டாயம் அணிவோம்
    – நம் பாரம்பரிய உடைகளை முடிந்தவரை அணிவோம்.
    – லுங்கி அணிவதை முற்றிலும் தவிர்ப்போம்
    – திருவிழாக்களில் திரைப்பட பாடல்களை ஒளிபரப்புவதை நிறுத்துவோம்.
    – ஒருவரை ஒருவர் காணும் போது இரு கை கூப்பி வணக்கம் சொல்லுவோம்
    – கட்டாயம் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கோயிலுக்கு செல்லுவோம்
    – கோயிலில் கட்டாயம் கைபேசி பேசுவதை தவிர்ப்போம். சைலென்ட் மோடில் வைப்போம்.
    – அவரவர் சமய, குல தெய்வங்களின் ஸ்தோத்திரங்களை மனப்பாடம் செய்து உரக்க பாடுவோம்.
    – திருமண மேடைகளில் காலனி அணிந்து செல்வதை தவிர்ப்போம்.
    – எங்கும் வரிசைகளில் நின்று முறையாக செல்வோம்
    – முதியோருக்கு உரிய மரியாதையை அளிப்போம்
    – பெண்களிடத்தில் கண்ணியத்தோடு பழகுவோம்
    – கோவில் சுவர்களில் கிறுக்காது இருப்போம்.
    -கோயில் உள்ளே அசுத்தம் செய்யது இருப்போம்

    இது போல நாம் நடந்து கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன!!அதை விடுத்தது நம் வீட்டு வாசலில் ஆயிரம் குப்பைகளை கொட்டி வைத்து கொண்டு அடுத்தவன் வீட்டு கூரையில் உள்ள தூசுகளை பற்றி அரற்றி கொண்டு இருக்கவும் வேண்டாம் அவனை பற்றி ஏதேதோ சொல்லி நாமே அவனை எதிரியின் பால் போக வைக்கவும் வேண்டாம்..

    அரவணைப்போம். ஆதரவளிப்போம். ஒன்று படுவோம், வெல்வோம்..

    நண்பர்களே, பலபல கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள பல பல கோவில்கள் பராமரிக்க ஆளின்றி பாழடைந்து கிடக்கின்றன. அவை அனைத்தும் நம் சொத்து. நம் முன்னோர் பலபல தலைமுறைகள் வாழ் நமக்காக ஏற்படுத்தி விட்டு சென்றவை. அவற்றை முறையாக பாதுகாப்போம் , பராமரிப்போம்.

    மாற்று மதத்தினர் ஒற்றுமையாக (சரியான பாதையோ தவறோ) இருப்பது கண்டு, ஒன்று படுவது கண்டு நாம் கூக்குரல் இடுவது ஏன்?..அதை ஒடுக்க நினைப்பது ஏன்?

    பீர்பால் கதையில் சொன்னது போல ஒரு கோட்டை அழிக்காமல் சிறியது ஆக்க வேண்டுமானால் பெரிய கோட்டை வரைந்து விட வேண்டும். ஆம் நண்பர்கள்ளே இந்துக்களாகிய நாம் ஒன்றுபடுவதும் ஒரு குரலாய் ஒலிப்பதுமே சரியான தீர்வாக இருக்க முடியும்.. நம்மால் முடியும். சின்ன சின்ன வேற்றுமை மறப்போம் ஒன்று படுவோம் வெற்றி காண்போம்..

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *