கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!

மெரிக்கத் தூதரக அதிகாரி தமிழர்களை, ‘கருப்பு அழுக்கு’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

Regret’ என்கிறார்கள். கவனியுங்கள் ‘apologize’ – மன்னிப்பு கிடையாது; வருத்தம்தான். “நான் சொன்னது என்னவோ உண்மைதான், ஆனா அது உங்க மனசை புண்படுத்தியிருந்தா வருத்தம். போதுமா? பொத்திகிட்டு போங்கடா கருப்பன்களா!” இதைத் தான் நாசூக்காக சொல்லியிருக்கிறார்.

fairness_cream_adபொதுவாகவே மேற்கத்திய மனநிலையில் கருப்பு என்றால் மோசம் என்கிற ஒரு எண்ணம். அதை இந்தியர்கள் மனதிலும் விதைத்துவிட்டார்கள். சும்மாவா? முன்னூறு ஆண்டுகளாக அதைச் செய்திருக்கிறார்கள். நாமும் அதை ஏற்றுக் கொண்டு விட்டோம். சிவப்பு வெண்மைக்கு ஆசைப்படுகிறோம். அதற்காக க்ரீம் வாங்கிப் பூசி இயற்கையாக இருக்கிற மெலானினைக் குறைத்துக் கொள்கிறோம். மணமகள் தேவையில் ‘fair girl’ தேவை என்கிறோம்.

வெள்ளைக்காரன் என்றாலே ஒரு உயர்ந்த பார்வை. ஈவெராவே சொல்லியிருக்கிறார், “வெள்ளைக்காரன் சண்டை போட்டால் எத்தனை நாசூக்கா ‘இடியட்’னு திட்றான், நம்ம பொண்டுங்க சண்டை போட்டா கேட்க சகிக்கலை” . பொங்கி வழியும் பகுத்தறிவு… நாற்றமடிக்கும் மூளைச்சுரப்பு என்றும் சொல்லலாம். வெள்ளைக்காரன் திட்டினால் கூட அதில் நாகரிகம் காணும் பகுத்தறிவு… ஈவெரா இப்போது இருந்திருந்தால் அந்த ”அமெரிக்கத் தூதரக அதிகாரி சரியாத்தானே சொல்லியிருக்காங்க, இதில வருத்தப்பட என்ன இருக்கு வெங்காயம்!” என்று சொல்லியிருப்பார்.

அமெரிக்கத் தூதரக அதிகாரி பேசியது வெறுமனே தெரியாமல் பேசிவிட்ட விஷயமல்ல. அமெரிக்கக் கருப்பின மக்களுக்கு இது தெரியும். அடிமை வியாபாரத்தையும் அடிமைத்தனத்தையும் நியாயப்படுத்திய மத போதகர்களுக்கு இது தெரியும். கருப்பின மக்கள் தங்களைத் தாங்களே ஆளத் தெரியாதவர்கள். அது நோவா கொடுத்த சாபம். எனவே வெள்ளைக்காரர்கள்தான் அவர்களைப் பண்படுத்த வேண்டும். அதற்கு வெள்ளைக்காரர்களின் பண்ணைகளில் அடிமை வேலை செய்ய வேண்டும். மெதுவாக மெதுவாக அவர்கள் பண்பட்டுவிடுவார்கள்…அப்புறம் பார்க்கலாம். அப்படி இல்லாமல் நீங்கள் கருப்பர்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டால் என்ன ஆகும்? பார்த்தீர்களா என்ன அழுக்கு என்ன கருப்பு… ’வெள்ளைக்காரன் ஆண்டா இப்படி எல்லாம் இருக்குமாடா? கண்டவனுக்கும் அதிகாரத்தை கொடுத்து நாட்டையே சீரழிச்சுட்டான்’ என்கிற பேச்சும் இந்த இனவாதத்தின் இன்னொரு வெளிப்பாடுதான்.

இதற்கும் நம் திராவிடப் பகுத்தறிவுக்கும் ஒரு தொடர்பு உண்டு. கருணாநிதிக்கும் இதர இந்து விரோத அறிவுசீவிகளுக்கும் ஒரு வியாதி உண்டு; அவ்வப்போது பாரசீக அகராதி ஒன்றை மேற்கோள் காட்டி ஹிந்து என்றால் திருடன் என்று பொருள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த அகராதியில் ஹிந்து என்றால் திருடன் என்று மட்டும் இல்லை கூடவே ‘கருப்பன்’,  ’அடிமை’ என்றும் இருக்கிறது. “கருப்பாக இருப்பவன் அடிமையாக இருக்கவே லாயக்கு, இல்லாவிட்டால் திருடனாக இருப்பான்” என்கிற இனவாதக் கோட்பாடு, சமத்துவத்தை வளர்த்ததாக சொல்லும் இஸ்லாமிய சமுதாயத்தில் மத்திய காலத்தில் எப்படி இருந்திருக்கிறது! இதை வைத்து ஹிந்துக்களை இழிவுபடுத்தும் அகராதிக் கும்பல்களின் மனநிலைக்கும், மேலே சொன்ன அமெரிக்கத் தூதரக அதிகாரியின் மனநிலைக்கும் அப்படி ஒன்றும் வேறுபாடு இல்லை.

இஸ்லாமிலும் சரி, கிறிஸ்தவத்திலும் சரி, கருப்பர்கள் கீழாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். பாங்கு அழைக்க வேண்டுமானால் கருப்பினத்தார் பயன்பட்டிருக்கலாம்; ஆனால் கலீபா ஆக கருப்பினத்தாரால் முடியாது.  இந்தியக் கருப்பர்கள் இமாமாக இருக்கக் கூடாது என்றுதான் மொகலாய மன்னர், ஜும்மா மசூதிக்கு புகாரிலிருந்து இமாமை அழைத்து வந்தார். இன்றைக்கும் அந்த வெள்ளையினக் குடும்பத்தின் ஆண் வாரிசுச் சொத்தாகத்தான் ஜும்மா மசூதி இமாம் பொறுப்பு இருந்து வருகிறது.

’புனித’ சவேரியார் என அழைக்கப்படுகிற பிரான்ஸிஸ் சேவியர்ஹிந்துக்கள், அவர்கள் வணங்கும் சிலைகளைப் போலவே கருப்பு’ என்கிறார். கூடவே இந்த இனமே மோசம், நாணயமானவர்கள் கிடையாது என்கிறார். அந்தப் பாரம்பரியம் திராவிடக் கும்பல்கள் வரை நீள்கிறது. எனவே கருணாநிதி அகராதியை மேற்கோள் காட்டுவதும், அமெரிக்க அதிகாரி நம்மை ‘கருப்பு அழுக்கு’ என்பதும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். கூடவே ‘சூத்திரன் கருப்பு, பாப்பான் வெளுப்பு’ என்று சொல்லும் மெக்காலேயின் வளர்ப்புப் புத்திரர்களையும் இதே வக்கிர மனநிலையுடன் இணைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

****

“அவர் பெருமூச்சுடன் படிகளை இறங்கி மீண்டும் முற்றத்துக்குவந்தார். அரசமரம் இலைகளைச் சிலுசிலுத்தபடி நின்றது. அதை ஏறிட்டுப்பார்த்தார்…

… நான் சற்று ஆற்றாமையுடன் கார்க் கதவைப் பற்றியபடி, ” எங்கள் கடவுளைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்? ” என்று கேட்டேன்.

” இதுதான் கடவுள். மனிதர்களின் கடவுள். ” என்றார் அவர். முகத்தை கைகளால் மீண்டும் மீண்டும் தேய்த்தார். டிரைவர் வந்து ஏறிக் கொண்டார். அவர் கையசைக்க, கார் கிளம்பியது. ” என்ன ஒரு நிறம்! எத்தனை கருமை!” வண்டி சற்று நகர்ந்தது .

அவர் எட்டிப்பார்த்து ”என்னை உண்மையிலேயே உனக்குத் தெரியாதா? ”என்றார்…

ஜெயமோகன் சிறுகதை “திருமுகப்பில்”

srirangam-moolavar_

ஆனால், இந்து சமயத்தில் அப்படி இல்லை. இங்கே கடவுளே கருப்புதான். எல்லா நிறங்களிலும் இறைசக்தியையும் அருளையும் காண்பவர்கள் நாம். பொன்னார் மேனியன் சிவன், கண்டம் கரியவன். கண்ணனும் ராமனும் கருப்பு. பச்சைமா மலை போல் மேனியான் அரங்கன்.

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே!

என்றார் இளங்கோ அடிகள்.

தேவியும் ’சியாமா’ தான்- பச்சை கலந்து ஜொலிக்கும் கருப்பு! எல்லா நிறங்களிலும் பிரகாசிப்பவள் தேவியே (ஸர்வ வர்ணோப சோபிதா) என்கிறது ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம். wasp_kulavi_cartoon

எனவேதான் 1920-களிலே உலகமே இனவாதப் பெருமைகள் பேசிக்கொண்டிருந்த போது, உலகின் வட துருவம் முதல் தென் துருவம் வரை மானுட இனம் ஒரே இரத்தம் என வீர சாவர்க்கரால் பேச முடிந்தது. ஆனால் இன்று சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில் கூட பழைய இனவாதக் கோட்பாடுகள் மீண்டும் சொல்லப்படுவதை நாம் பார்க்கிறோம்.

அமெரிக்கத் தூதரக அதிகாரியின் பேச்சில் வெளிப்பட்டது அப்பட்டமான மேற்கத்திய இனவாதப் பித்தம். இந்த இனவாத பித்தம் பெற்ற கள்ளப்பிள்ளைதான் திராவிட இனவாதப் போலிப் பகுத்தறிவு. இந்தப் பித்தங்கள் தெளிய மருந்தொன்றிருக்குது –

அதுதான் ‘இந்துத்துவம்’.

[குளவிக் கொட்டுகள் தொடரும்…]

102 Replies to “கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!”

  1. அட்டஹாசமாய் எழுதிக் கொட்டியிருக்கிறது குளவி!

    “ பொத்திகிட்டு போங்கடா கருப்பன்களா! ” இந்த நெத்தியடி சொற்கள் கட்டுரை ஆரம்பத்திலேயே வந்து கட்டுரையே களை கட்டிவிடுகிறது. அருமை!

    இன்னொரு விஷயம். பெரியாரின் உடல்நிறம் கருப்பு இல்லை.

  2. தமிழுக்கு இரட்டைக்கிளவி போல்
    தமிழ் ஹிந்துவுக்கு அழகு சேர்க்கும் குளவி வாழ்க..

    அமெரிக்கர்களுக்கு குளவி பிடிக்காது. 🙂 அமெரிக்காவில் குளவிகளைக் கொல்லும் ஸ்ப்ரே எல்லா கடைகளிலும் கிடைக்கும்.. அவர்களுக்கு அவர்களைத்தவிர எல்லாரும், எல்லாமும் அழிக்கப் படவேண்டியவையே. அமெரிக்கக் கறுப்பர்களுக்கும் அவர்களில் பெருமையும், பிறவற்றில் வெறுப்பும் உண்டு.

    செய்த தவறுக்கு மன்னிப்பு இல்லாவிட்டாலும் வருத்தமாவது தெரிவிக்க தோன்றுகிறதே.. அதுவும் நம் அரசியல்வாதிகளுக்கு இல்லை.

  3. /// இந்த இனவாத பித்தம் பெற்ற கள்ளப்பிள்ளைதான் திராவிட இனவாதப் போலிப் பகுத்தறிவு. இந்தப் பித்தங்கள் தெளிய மருந்தொன்றிருக்குது –

    அதுதான் ‘இந்துத்துவம்’.
    //////

    fantastic finishing.

  4. குளவி நீவிர் பல்லாண்டு வாழ்க. உமது பணி தொடர சேவற்கொடியோன் அருளை பிரார்த்திக்கிறேன்.

    திராவிட அழுக்கு இயக்கங்களின் முகமூடியை கிழித்தது அருமையிலும் அருமை.

  5. குளவியின் கொடுக்கு வாழ்க…….

    //ஆனால், இந்து சமயத்தில் அப்படி இல்லை. இங்கே கடவுளே கருப்புதான். எல்லா நிறங்களிலும் இறைசக்தியையும் அருளையும் காண்பவர்கள் நாம். வாழ்க…….//

    அருமையான வார்த்தைகள்…….இந்தியனின் நிறம் கருப்பு…..அசாதாரணமான வெளுப்பு என்பது நோயின் அறிகுறி……..நம்முடைய இயல்புக்கு மாறான நிறத்தை விரும்பினால் அது நிச்சயம் தாழ்வு மனப்பான்மை தான்…….

  6. ஒரு சின்ன அதிகாரி அவர். அவர் சொன்ன சொற்களை வைத்து ஒரு கட்டுரை வரைய முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சேவியர், ஆப்பிரிக்கா, இந்துமதம், சாவர்க்கர் என்று அசோசியன் ஆஃப் தாட்ஸ். பலே குளவி ! பாராட்டுக்கள் !! நல்ல திறமை.

    அவர் ரிக்ரட் பண்ணிவிட்டார். அபாலஜி பண்ணியிருக்கவேண்டும். சரிதான். அவர் ரிக்ரட் பண்ணியது அவராகச் செய்தது. அபாலஜிதான் சரியென்று அவர் உணர்ந்தால் அதையும் செய்துவிடுவார் என நினைக்கிறேன். தான் செய்தது சரியென்பவன் ரிக்ரட் கூட பண்ணமாட்டான். இல்லையா குளவி ?

    வெள்ளைக்காரன் கற்றுக்கொடுத்தான் நிறபேதத்தை. சரி. எப்போது, 60 ஆண்டுகளுக்கு முன். அவன் போய் விட்டான். இன்று சிவத்த பெண்தான் வேண்டும் கலியாணம் பண்ண ! ஏனாம். வெள்ளைக்காரன் சொல்லிக்கொடுத்தானாம் !!

    அவன் போன பின் இன்று எந்த தலைமுறைக்குத் திருமணம் ? மூன்றாம் அல்லது நான்காம் தலைமுறைக்கு ? இவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தது ஆரப்பா ? வெள்ளைக்காரனா ?

    அவன் போனபின் சட்டங்களையும் சாலைப்பெயர்களையு ஊர்களின் பெயர்களையும் மாற்றத் தெரிந்த உங்களுக்கு ஏன் உங்கள் பிள்ளைகளுக்கு, பெருமாளும் கறுப்பு, பெருமாட்டியும் கறுப்பு, கறுப்புத்தான் அழகு’ என்று சொல்லிக்கொடுக்க்த் தெரியவில்லை ? காரணம், நீங்கள் விரும்பவில்லை. உங்கள் பையன் சிவத்தபெண்ணைத்தான் கட்டவேண்டும். பெண்ணுக்கு மாப்பிள்ளை சிவப்பாக இல்லாவிட்டாலும் அட்டகரியாக இருக்கக்கூடாது என்கிறீர்கள்

    திரைப்படங்களில் கறுப்பான பெண்ணென்றால் நகைச்சுவைக்குத்தான் பயன்படுத்துவார்கள். கதாநாயகி கறுப்பாக இருக்கமாட்டார். கதாநாயகன் இப்போதுதான் கறுப்பாகவும் வருகிறார்கள். முன்பல்ல. இந்தி சீரியல்களில் பெண் கறுப்பாக இருந்தால் வாழ்க்கை எவ்வளவு துயரமாகிறது என்றெல்லாம் சீரியல்கள் காட்டப்படுகின்றன. இஃதையெல்லாம் வெள்ளைக்காரன் சொல்லித்தந்தானா குளவி?

    உங்கள் எண்ணத்தைச் சாக்கடை என்று சொல்ல திராணி இல்லை. அதற்கு ஒரு கவசம் வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட வெள்ளைக்காரன் வசதியாக மாட்டினான். இல்லையா ?

    இதே போல குளவிக்கு ஒரு உந்து தேவை தொடர்பில்லா விசயத்த்தை தொடர்புபடுத்திக் காட்ட.

    அவலை நினைத்து உரலையிடித்த கதை.

  7. நிற பேதத்தை உண்டு ப்ண்னியவன் நில நூற்றாண்டுகளுக்கு முன்பு நுழைந்த கால்டுவெல் என்கிற மத மாற்றி.
    மலர்மன்னன்

  8. கட்டுரை மொத்தமும் ‘நாம்’ ‘நம்’ , ‘இந்தியா இந்தியர்கள்’ என்று பன்மையாக நம்மை சுட்டும் போது பின்னூட்டத்தில் இங்கே ஒரு பெரியவர் வந்து ‘உங்கள்’ ‘உங்களுக்கு’ என்று ஒதுகிறாரே
    . அப்போ இவர் யாராம்?

  9. அன்பு சகோதரர்
    ஆலமென்
    நீங்கள் சொல்வது சரியே

    இப்போது வெள்ளையன் நேரடியாக சொல்ல முடியாமல் விளம்பரம் மூலம்
    சொல்கிறான் .எல்லா வெளிநாட்டு பொருட்களின் விளம்பரமும் இந்த வெள்ளை
    இன வாதத்தை முன் வைத்தே இருக்கின்றது .
    திருமணம் ,சீரியல் ,சினிமா எல்லாம் இதன் வெளிப்பாடே

    ஆனால் இது போன்ற பித்துக்கு குழவி யின் கடி வைத்தியம் தான் சரிவரும்
    .

  10. தமிழனின் நிறம் கருப்பு என்றால் தமிழச்சியின் நிறம் ? –
    https://www.virutcham.com/2010/02/தமிழனின்-நிறம்-கருப்பு-எ/

    Nursery rhymes சொல்லித் தரும் நிறப்பாகுபாடு – https://www.virutcham.com/2011/05/nursery-rhymes-சொல்லி-தரும்-நிறப்பாகு/

  11. அமலன்,

    தங்களின் இந்த பின்னூட்டம் மூலம் நீங்கள் எப்படிப்பட்ட சிந்தனையாளார் என்பதை இதன் மூலம் தெளிவாக புரிந்து கொண்டேன். உண்மையில் உங்களை இது போன்று எழுத வைத்த வெள்ளைக்காரன் புத்தசாலி. அது சரி இதற்கு தானே கோடிக் கண்க்கில் செலவு செய்கிறார்கள். இது கூட நடக்கவிட்டால் எப்படி?

  12. அவ்வப்போது பாரசீக அகராதி ஒன்றை மேற்கோள் காட்டி ஹிந்து என்றால் திருடன் என்று பொருள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த அகராதியில் ஹிந்து என்றால் திருடன் என்று மட்டும் இல்லை கூடவே ‘கருப்பன்’, ’அடிமை’ என்றும் இருக்கிறது. “கருப்பாக இருப்பவன் அடிமையாக இருக்கவே லாயக்கு, இல்லாவிட்டால் திருடனாக இருப்பான்” என்கிற இனவாதக் கோட்பாடு,

    ayya enakku ஒரு சிறிய சந்தேகம் என்ன வென்றால் இதுவோ தூதரக அதிகரி சொன்ன கருத்து . இதற்கும் பாரசீகத்திர்க்கும் என்ன சம்பந்தம் உள்ளது . இஸ்லாம் ஆண்ட ஆரம்ப காலத்தில் மக்காவில் பாங்கு சொன்னதே ஒரு ஆப்ரிக்க நீக்ரோ கருப்பு இனத்தை சேர்ந்த பிலால் (ரலி) அவர்கள்தான். அவ்வாறு இருக்கும் போது ஏன் இஸ்லாத்தில் இல்லாததை சொல்கிறீர். தயவு செய்து தெரிந்து கொண்டு எழுதவூம்.

  13. ஜோ அமலன்,

    இன்று சுதந்திரநாள். ஆனால் வெள்ளைக்கரன் இந்தை நாட்டை விட்டு முழுதுமாகப் போய்விடவில்லை. உங்களைப் போன்றோரை அவனுக்கு வக்காலத்து வாங்க இங்கு வைத்துவிட்டுதான் போயிருக்கிறான். சரி என்று உணர்ந்ததால் அந்தப் பெண்மணி வருத்தம் தெரிவித்தாராம். இது உங்கள் காலை ஒருவர் மிதித்துவிட்டு சாரி சொல்வதுபோல இல்லை? இது தெரியாமல் காலை மிதித்துவிடுவது போன்றதொன்று இல்லை. அமெரிக்க அடிமனதின் ஆழத்தில் உறைந்து உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் எண்ணம். அப்படி இல்லை என்றால் அந்த வார்த்தை ஒருவர் வாயிலிருந்து இயல்பாக வருமா? என்னவொரு வெள்ளைக்கார திமிர்? அதற்கும் உங்களைப் போன்றோரிடமிருந்து ஒரு நற்சான்றிதழ்!

    இக்கட்டுரையில் மாற்றோர் கருப்புக்கு கொடுக்கும் இழிவையும் இந்துமதம் கருப்புக்குக் கொடுக்கும் உயர்வையும் பிட்டு பிட்டு வைக்கிறார் குளவியார். சின்னக் குழந்தைக்குக் கூட புரியும் வகையில்தானே கட்டுரை இருக்கிறது? சேவியர் ’ஹிந்துக்கள், அவர்கள் வணங்கும் சிலைகளைப் போலவே கருப்பு என்று சொன்னதால் இக்கட்டுரை சொற்களுக்கு வேறு பொருள் வந்துவிடுமா? இந்த நாட்டுக்கே நாவலந்தீவு என்றுதான் பெயர். கருப்பே அழகு என்று பழமொழியே இங்கு இருக்கிறது.

    கருப்புப் பெண்கள் அழகில்லை என்று சொல்லும் மூடர்களை கணக்கில் எடுத்துக்கொண்டு வெள்ளைகாரர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் இந்து மதத்தின் கருதுகோள்களுக்கு கண்ணையும் கருத்தையும் மூடிக் கொள்வீரா? ஆதி சங்கரர் அம்பிகையின் மீது சௌந்தர்ய லகரியே பாடியிருக்கிறார். நீங்கள் சொல்வதைப் போல் கருப்பான பெண்களுக்கு பிரச்சனையால் இங்கு நிறவெறியா தலைவிரித்து ஆடுகிறது? நிறவெறியின் மொத்த சொந்தக்காரர்களின் சார்பில் பேச வந்திருக்கும் உங்களுக்கு கிருஷ்ணா ஜமுனா என்றெல்லாம் கருமையே நதிகளின் பெயராக வைத்திருக்கும் பாரதப்ண்பாட்டின் பெருமை எங்கே புரியப் போகிறது?

  14. முதலில் மலர்மன்னனுக்கு

    தாடிக்காரன் கால்டுவெல் போய் கிட்டத்தட்ட் 100 ஆண்டுகளாகி விட்டன. அவனுக்குப்பின் அவன் எந்த சந்ததியையும் விட்டுச்செல்லவில்லை. அவனின் வாரிசுகளெல்லாம் அவன்னாட்டிலும், அமெரிக்காவிலும். கோரே அமெரிக்க முன்னாள் உதவி ஜனாதிபதி அவன் வாரிசுகளில் ஒருவன். தாடிக்காரன் குடும்பம் அவன் செத்தவுடன் இங்கிலாந்து போய்க் குடியேறிவிட்டது. அவனின் பிள்ளையும் பேரப்பிள்ளையும் ஆக்ஸ்போர்டு பலகலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர்களாகி ஓய்வு பெற்றனர். குடும்பத்தாடிக்காரனின் நூற்கள் பாமரர்கள் படிக்கும்படி கடைகளில் விற்கா. நூலகங்களில் கேட்டுவாங்கித்தான் படிக்கலாம். சி.எஸ்.ஐ நாடார்களத்தவிர அவனின் செல்வாக்கு வேறெங்கும் கிடையாது. ஆக், தாடிக்காரனும் நாம் இப்போது எப்படி வாழ்கிறோம் எனப்தற்கும் தொடர்பில்லை.

    மேட்ரிமோனியலில் சிவப்பான பெண் வேண்டும் என்று கேட்பதற்கும் தாடிக்காரனுக்கும் என்ன தொடர்பு? தமிழ்நாட்டுப்பட்டிக்காட்டான் அவன் பெண்டாட்டிக்கு குங்குமப்பூ வாங்கிகொடுக்கிறான். குழந்தை சிவப்பாகப் பிறக்குமென்று. எவன் சொல்லிக்கொடுத்தான் கறுப்பு அழுக்கென்று ? தாடிக்காரனா ?

    வெள்ளைக்காரன் சொன்னான். எனவே என் பையனுக்குச்சிவத்த பெண் பார்க்கிறேன் என்றால் உங்களுக்கு சுயறிவே இல்லையா ? வெள்ளைக்காரனும் நீக்ரோவும் சென்னையில் ஒரு பொதுவிடத்தில் உதவி கேட்கிறானென்றால், நம்மாள் வெள்ளைக்காரனுக்குத்தான் உதவுவான் என்பது நீக்ரோ மாணவர்களிடன் கேட்டால் தெரியும். நீக்ரோ மாணவர்களிடம் ஏன் போக வேண்டும் ? வடகிழக்கு மாணவிகள் டெல்லியில் கற்பழிக்கப்படுகிறார்கள். அம்மாணவர்கள் டெல்லி பலகலைக்கழகத்தில் ரேசிசத்துக்கு ஆளாகிறோம் என்று முதல்வரிடம் மனுக்கொடுத்திருக்கிறார்கள். பார்லிமெண்டிலும் பேசப்பட்டது. தமிழர்கள் டெல்லியில் காலா மதராசி என்று இழிவாக அழைக்கப்படுகிறார்கள். பீகாரிகள் அடித்து விரட்டப்படுகிறார்கள்.

    இதையெல்லாம் உங்களுக்கு வெள்ளைக்காரன் சொல்லிக்கொடுத்தானா ? நிறபேதமட்டுமல்ல.இனபேதமும் பண்ணுகிறார்கள் இந்தியாவில்.

    உங்கள் வாழ்க்கை மாரல்களைக் கூட ஏன் வெள்ளைக்காரன் பண்ணவேண்டுமென்றுதான் கேட்கிறேன்.

    “அவன் சொன்னான்; நாங்கள் செய்கிறோம்” என்பது அப்பாவித்தனம் மலர்மன்னன்.

  15. //கட்டுரை மொத்தமும் ‘நாம்’ ‘நம்’ , ‘இந்தியா இந்தியர்கள்’ என்று பன்மையாக நம்மை சுட்டும் போது பின்னூட்டத்தில் இங்கே ஒரு பெரியவர் வந்து ‘உங்கள்’ ‘உங்களுக்கு’ என்று ஒதுகிறாரே
    . அப்போ இவர் யாராம்//

    விருட்சம் !

    அஃது என்னுடைய ஸ்டெயில். ஆங்கிலத்தில் நெகட்டிவ் கேபபிளிட்டி என்பார்கள். அதன்படி ஒருவாதம் புரியும் களத்தில் உள்ள அனைவரிடமிருந்து பிரிந்து ஒரு அன்னியப்பார்வையுடன் பேசும்போது பல கசப்பான கருத்துக்களை முன் வைக்கலாம். மாறாக, உங்களுடன் சேர்ந்து கொண்டால், அதைச்செய்ய முடியாது.

    இந்தியாவைப்பற்றி விமர்சனம் பண்ணும்போது என்னை இந்தியனாக உணர்வதில்லை. தமிழரைப்பற்றி விமர்சனம் ண்ணும்போது என்ன தமிழனாக உணர்வதில்லை. இப்படியே சொல்லிக்கொள்ளலாம். அப்ஜக்டிவிடி என்றும் சொல்லலாம்.

    Intellectuals ought to be objective like Judges. Justice should not only be delivered but also SEEM to be delivered. Similarly, intellectualS should convince that they are brutally honest. No doubt they will be attacked by the lobbyists. In such brutal honesty, we are able to see and accept our lacune. Only then, we well be able to take remedial steps to plug them. The basic point here is my argument that Kulavi is dishonestly arguing – that is to say – he attributes the negative traits in our social life to English men who have long left the soil. Unless and until u acknowledge that you are corrupt, u will never care to reform yourself.

    கற்றவருக்கு அழகு கருத்தை மட்டும் பார்ப்பது.. என் ஜாதகத்தைத் தேடும்போது மலர்மன்னன் போன்றவர்கள் செய்யும் பிழையைத்தான் செய்ய நேரிடும். அஃதாவது இவர் ஒருவரே இந்து. மற்றவனெல்லாம் கிருத்துவ சுவிசேசி, இந்து.காமில் ஊடுருவி இவரை மதமாற்றம் செய்யப்போகிறார்களாம். ‘ஜாக்கிதை..ஜாக்கிர்தை என்று எச்சரிக்கை பண்ணுகிறார்.. When u r rooted strongly, no one can uproot u, Sir. Very simple!

  16. ஓகை நடராஜன்

    பத்திக்குப் பத்தி பதில் என்னால் எழுதமுடியும். தற்போது, உங்கள் முதற்பத்தி மட்டுமே எடுத்துக்கொள்கிறேன்.

    //உங்களைப் போன்றோரை அவனுக்கு வக்காலத்து வாங்க இங்கு வைத்துவிட்டுதான் போயிருக்கிறான். சரி என்று உணர்ந்ததால் அந்தப் பெண்மணி வருத்தம் தெரிவித்தாராம். இது உங்கள் காலை ஒருவர் மிதித்துவிட்டு சாரி சொல்வதுபோல இல்லை? இது தெரியாமல் காலை மிதித்துவிடுவது போன்றதொன்று இல்லை. அமெரிக்க அடிமனதின் ஆழத்தில் உறைந்து உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் எண்ணம். அப்படி இல்லை என்றால் அந்த வார்த்தை ஒருவர் வாயிலிருந்து இயல்பாக வருமா? என்னவொரு வெள்ளைக்கார திமிர்? அதற்கும் உங்களைப் போன்றோரிடமிருந்து ஒரு நற்சான்றிதழ்! //

    சொன்னபெண் ஒரு அமெரிக்கர். அவர்கள் நாட்டில் பிறநாட்டினரைப்பற்றி என்ன எண்ணம் ஏற்படவேண்டும் என்பது அவர்கள் கலாச்சாரத்தின் மூலம் போதிக்கப்படுகிறது. அக்கலாச்சாரம் பிறரைக் கீழாகப்பார்த்தாலும், மேலாகப்பார்த்தாலும், அதைக்குற்றம் சொல்ல நாம் ஆர்? இங்கு வந்து சொன்னார்; எனவே குற்றம் ஆகிறது. அவர் நாட்டிலேயே, தமிழர்கள் அழுக்கு, கறுப்பு என்றால் அஃது உங்களுக்கு எப்படித் தெரியும்? இல்லை. தெரிந்தாலும் என்ன செய்ய முடியும்?

    உ.ம் உங்களைப்ப்ற்றி ஒருவன் தப்பான அபிப்பிராயம் வைத்திருக்கிறான். அவன் அவர்கள் உறவினரோடு நண்பர்களிடமோ மட்டும் சொல்கிறான். உங்களிடம் நேரில் வந்து சொல்லவில்லை. நேரில் வந்து சொன்னால்தான் தவறு.

    இவ்வாறு, எவரும் , என்னாட்டவரும் பிறரைப்பற்றி, பிறவினத்தவரைப்பற்றி எந்த அபிப்ராயமும் வைத்துக்கொள்ளலாம். அமெரிக்கர்கள் தாமே உயர்ந்தவர்கள் மற்றவர்களைக்காட்டிலும் என்று நினைப்புடன் வாழ்ந்தால் ஒன்றும் செய்ய முடியாது. அது பிறரோடு உறவாடும்போது தெரிந்தால் மட்டுமே பிரச்சினை. இங்கு அப்படி இந்தப்பெண் மாட்டிக்கொண்டாள். அவன் நினைக்கக்கூடாதென்று நாம் சொல்லக்கூடாது. அவள் சொல்லக்கூடாதென்பதே நான் சொல்\லவேண்டியது.

  17. தமிழர்களாகிய நீங்கள் யோக்கியமா ? இந்திக்காரன் என்றுதானே ஏளனமாக விளிக்கிறீர்? மலையாளத்தான் என்றுதானே ஏளனமாக விளிக்கிறீர் ? மலையாள செக்ஸ் சினிமா பார்த்துவிட்டு மலையாளப்பெண்கள் என்றால் சுலபம் என ஏளனமாகத்தானே பேசுகிறீர்? உமது சினிமாவில் எவ்வள்வு இனக்கிண்டல்? ஜாதிகிண்டல் ? கைதட்டி நகைச்சுவை என்று ஓகோவெனச்சிரிக்கிறீர்களா இல்லையா ?

    மணிப்பூர் பெண்ணைக் கற்பழித்தவர்கள் நாங்கள் அவர்கள் பார்வார்டு என்று நினைத்தோம் என்று போலிசிடம் சொன்னார்கள். அஃதாவது இந்திப்பெண்கள் யோக்கியம். இவர்கள் ஈசி.

    இப்படி எங்கேயும் காணலாம்.

  18. //பாங்கு அழைக்க வேண்டுமானால் கருப்பினத்தார் பயன்பட்டிருக்கலாம்; ஆனால் கலீபா ஆக கருப்பினத்தாரால் முடியாது. இந்தியக் கருப்பர்கள் இமாமாக இருக்கக் கூடாது என்றுதான் மொகலாய மன்னர், ஜும்மா மசூதிக்கு புகாரிலிருந்து இமாமை அழைத்து வந்தார். இன்றைக்கும் அந்த வெள்ளையினக் குடும்பத்தின் ஆண் வாரிசுச் சொத்தாகத்தான் ஜும்மா மசூதி இமாம் பொறுப்பு இருந்து வருகிறது.//

    ஹி ஹீ…ஹி…உங்கள் கற்பனை குதிரையின் வேகம் நான் எதிர்பார்த்த அளவில் இல்லையே…!!!!

    ஜும்மா மசூதி என்ன முஸ்லிம்களின் புனித தளமா???அது பத்தோடு பதினொன்னு அவ்வளவே…என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கூரை வேய்ந்த பள்ளிக்கும் அதற்கும் என்னிடத்தில் வேற்பாடு இல்லை…

    இது தவிர மொகலாயன்,தெருவுல போரவன்,பொருக்கி திங்கிரவன் செய்ரதெல்லாம் இஸ்லாம்ன்னு சொல்லிக்கிட்டான்னா அவனுக்கு முஸ்லிம்கள் காட்டுவது பிஞ்ச செருப்பை மட்டும்தான்…மொகலாயன் என்ன ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதியா??எவனும் கிடையாது..நபி (ஸல்)அவர்களைத்தவிர..

    இமாம் ஆவதற்கு இஸ்லாம் கூறும் எளிமையான தகுதி என்ன தெரியுமா?உங்களில் அதிகம் குர்ஆனை ஓதியவர் இமாமாக இருக்கட்டும்… அவ்ளோதான்…

    உலகம் முழுமையிலும் இருக்கும் இந்த இனப்பாகுபாட்டிற்கு இஸ்லாம் அன்றே தெளிவாக தன்னிலை விளக்கத்தை தலையில் ஆணிஅடித்தாற்போல் சொல்லி விட்டதே!..அது உங்கள் பார்வைக்கும் இதோ….

    எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

    தலைமைக்குக் கீழ்ப்படிவீர்! ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

    இந்த இரண்டே நபிமொழிகள் போதும் நீங்கள் சொல்லிய அரபுக்கள் உசத்தி, கருப்பினர் அதிகாரமையத்தில் வகிக்க முடியாது,போன்ற இத்யாதிகளுக்கு பதிலாக….
    அரபு இல்லை எந்தப் பருப்பும் இஸ்லாத்தில் உசத்தி இல்லை…தாழ்வும் இல்லை…

    அன்புடன்
    ரஜின்

  19. பிறநாட்டுக்கு வந்து அவர்கள் கடவுளர்கள் எப்படித் தோன்ற வேண்டுமென்று சொல்ல்க்கூடாது. சேவியர் சொன்னாரா என்று எனக்குத்தெரியாது. ஆனால் குளவி சொல்கிறார் அவர் சொன்னாரென்று. கத்தோலிக்கர்கள் எங்கு போகிறார்களோ ஆங்குள்ள மக்களின் ஆசாபாசக்ன்களுக்குட்பட்டே மதத்தைப்பரப்ப வேண்டும் என்பது அவர்கள் கொள்கையாக இருக்கும்போது சேவியர் எப்படி அதை மீறியிருப்பார் என்பது வியப்பே.

    இன்று பொங்கல் கொண்டாடலாம். பூ வைக்கலாம். பொட்டு இட்டுக்கொள்ளலாம். வேட்டி சட்டைதான். காவியுடையும் உடுத்தி சர்ச்சில் தியானம் பண்ணலாம். முளைப்பாறி வில்லுப்பாட்டு என்று எல்லாமே உண்டு.

    கேரளத்தில் ஜ்யார்ஜுக்கு மீசை உண்டு. அவர் ஒரு மலையாளியைப்போல் இருப்பார். நாளை மேரி, ஜீசஸ், ஜோசப் என்று எல்லாருமே கறுப்பாகத்த்தோன்றுவார்கள். அப்போது என்ன செய்வார் குளவி ? அவர்கள் அவ்வளவு பாஸ்ட்.

    அது கிடக்க. இப்போது இம்மதங்கள் ஏன் இவ்வாறு செய்கின்றன ?
    எந்தவொரு மதமும் தான் தோன்றிய இடத்திலிருந்து முளைக்கும்போது அவ்விடத்தின் நிறம், சாயல், குணங்களை எடுக்கும். அல்லது போற்றும். ஒரு மதம் பின்லாந்தில் பிறக்கிறது என்று வைத்தால், அங்குள்ள மக்கள் ஒருவர் நீங்கலாக‌ எப்போதும் வெள்ளைவெளேர் என்றுதான் இருப்பார்கள். எனவே அம்மதம் அன்னிறத்தைப்போற்றும். கறுப்பு இகழப்படும். மேலும் நரகத்தில் கறுப்பானவர்கள்தான் இருப்பார்கள் என்றெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லித்தரும்.

    மாற்றிப்போட்டுப்பாருங்கள். ஆங்கு எல்லாரும் எப்போதும் கறுப்பே. கறுப்பாகவே பிறக்கிறார்கள். அம்மதம் கறுப்பைப்போற்றும். வெள்ளைத்தன்மையை அழுக்கு, அசிங்கம், பேய் வெள்ளையாகத்தான் இருக்கும் என்றெல்லாம் சொல்லும். வடமானிலங்களில் வாழ்ந்து பாருங்கள். கறுப்பு எவ்வளவு நீசத்தனமாக பார்க்கப்படுகிறது என்று தெரியும். வங்காளத்தில் அம்மன் வங்காளப்பெண்ணைப் போனறு நீள்கண்களையுடையவராகத்தான் இருப்பார். நேப்பாளத்தில் சிவபெருமான் சீனாக்காரனைப்போல ஒட்டிய கண்களோடுதான் இருப்பார். தாய்லாந்திலும் இந்தோனிசியாவிலும் இராமாயண நாடகத்தில் இராமர்-சீதை மற்றும் அவர்களின் பரிவாரங்கள், இராவணன், அவனின் தமையர்கள், மனைவி – என்று எல்லாருமே அங்குள்ள மக்களைப்போலத்தான் இருப்பார்கள்.

    எனவே மக்கள் நிறம், அவர்கள் பொதுவான உடலமைப்பு, அவர்கள் வாழ்க்கைப் பழக்கவழக்கங்கள் (இங்கே அம்மனுக்குத் தேங்காய் பழம், பம்பாயில் மகாலட்சுமிக்கு மிட்டாய்ப்பெட்டி, அதேபோல காசி விசுவநாதருக்கும் மிட்டாய்பெட்டி) இவற்றைப் பொறுத்தே அமைவன.. அமையவேண்டும். இல்லாவிட்டால், அம்மதத்தில் மக்கள் ஒட்டுணர முடியாது

    இந்து மதம் கறுப்பைப்போற்றினால், அஃது அப்படிப்பட்ட கட்டாயத்தில் இருக்கிறது. ஆம். கட்டாயங்கள் மதங்களையும் கட்டிப்போடும். These are all natural parameters that bind any religion and if a religion moves away from these parameters, it will become unpopular with the people and disappear.

    .

  20. Let us ignore the ramblings and ravings by our Asthana stooge of the WHITE people, the one and the only Mr Joe Amalan. Like I said earlier, these Marxist/white man’s boot licking, internet trolls are of nuisance value only. What this American lady said is racial. No arguments about it. Regret is not synonymous with being sorry.
    But ( there is always a but,) we also need to address the REAL ISSUES here. Why was the train this lady was traveling delayed by 48 hours? How come we haven’t got train carriages that are clean and dirt free? Why are the toilet facilities in Indian trains so ” crappy” literally? I dread traveling in Indian trains precisely for the atrocious toilet conditions. I feel more energy could be spend on these relevant matters than worrying about remarks made by an ignorant racist imbecile.
    Let us also not forget our obsession about fair skin. The stigma of being black lingers on 60 years after independence and we will be fools to deny it. We still have a long way to go to get rid of of our prejudices and inferiority complexes. Oh. Why do ordinary people crowd around white tourists and treat them like Royals? I cringe when I see this.

  21. ஆயிரம் தமிழன் பேசுவான். ஆனா ஜெயலலிதா நாளைக்கு டெல்லி போயிருக்கும் போது ‘சப்பாத்தியே சாப்பிட்டு நாக்கு செத்து போயி உணர்ச்சியே இல்லாத வடநாட்டான் மாதிரி ஆயிட்டேன்’ அப்படீன்னு சொன்னா…

    யார் சொன்னாங்க அப்படீங்கிறது முக்கியம். பொதுவான prejudices சமூகக்குழுக்களிடையே சகஜம். ஆனால் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதுதான் மரியாதையும் அதிகாரமும் உடையவர்கள் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்படும் போதுதான் பிரச்சனை ஆகிறது. இந்த வேறுபாட்டை அறியாதவர் அல்ல அந்த ஜோ. ஆனால் ஏனோ அந்த அமெரிக்க தூதரக அதிகாரியை காப்பாறற வேண்டிய உளவியல் சிக்கல் அவருக்கு இருக்கிறது போலும்

  22. கால்டுவெல்லும் அவனது நேரடி சந்ததியும் இல்லாவிட்டால் என்ன, அவன் விட்டுச் சென்ற வைப்பாட்டி மக்கள் தலைமுறை தொடர்கிறதே! ஹிந்து சமுதாயத்தை ஆரியம்- திராவிடம் என இரு இனங்களாய்ப் பிரித்து அதற்கு இலக்கணமும் செய்து அவன் செலுத்திய விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றுகிற கூட்டம் இன்னமும் நீடித்துக்கொண்டுதானே இருக்கீறது! வெள்ளக்காரன் போய் அறுபது ஆண்டுகள் ஆனதாய் வெட்டிப் பேச்சு பேசியதால் கால்டுவெல்லை நினைவூட்டினேன். வெள்ளைக்காரனின் ஐந்தாம் படையாக இருந்த மிஷனரிக் கூட்டம் இன்னும் இடத்தைக் காலி செய்யவில்லையே! ஹிந்துஸ்தானத்தில் அரசுக்கு அடுத்தபடியாக நிலம் வைத்திருப்பது இந்த மிஷ்னரிக் கூட்டம்தான். வெள்ளைக்காரன் போவதற்குமுன் நிலங்களைத் தமக்கு உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தி உத்தரவாதம் பெற்றவைதானே அவை! அந்த நன்றிக் கடனை இன்னும் செலுத்திகொண்டுதானே உள்ளன!

    இங்கே கிறிஸ்தவ மதமாற்றிகள் கருப்புத் துரைகளாய் இந்த வெயில் தேசத்திலும் கோட்டும் சூட்டும் மாட்டிக்கொண்டுதானே பிரசாரம் செய்கின்றன! அப்படியாவது தனது சருமத்தின் கருப்பை ஈடுகட்டிக்கொள்ள மாட்டோமா என்கிற தாழ்வு மனப்பான்மைதானே அது!
    மண்மகள் தேவையில் சிவ்ப்புப் பெண் கேடப்தும் படிக்காத பெண்தேவை, படித்த பெண் தேவை என்றெல்லாம் நிபந்தனை விதிப்பதும் தனி நபர்களின் விருப்பம், அதற்கெல்லாம் பதில் அனுப்புவதும் தனி நபர் விவகாரம். அதற்கும் இங்கு பேசப்படும் விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்?

    வேலை வெட்டி எதுவும் இல்லாவிட்டால் இங்கு வந்து உட்கார்ந்துகொண்டு உளற ஆரம்பிக்கலாம், இது ஹிந்துஸ்த்தான்ம் போலவே திறந்த வீடு, இங்கே எது வேண்டுமானாலும் நுழையலாம், கேட்பார் இல்லை என்கிற தைரியமா?
    -மலர்மன்னன்

  23. “Intellectuals ought to be objective like Judges. Justice should not only be delivered but also SEEM to be delivered. Similarly, intellectualS should convince that they are brutally honest. No doubt they will be attacked by the lobbyists. In such brutal honesty, we are able to see and accept our lacune. Only then, we well be able to take remedial steps to plug them. ”
    @Joe Amalan, it looks like a cut and paste job here!! No original thoughts!!!!

  24. ஓகை நடராஜனின் மூன்றாவது பத்தி. கறுப்பான பெண்கள் அழகா இல்லையா ? என்பது பற்றி.

    முதலில் இது மதத்தொடர்புள்ளதுதானா ?

    இந்திய விமானப் பணிப்பெண்களில் – குறிப்பாக தனியார் விமானங்களில் – கறுப்பான பெண்களே கிடையாது. கறுப்பான பெண்களை அவர்கள் வேலைக்கமர்த்துவதில்லை. ஆனால் அமெரிக்க விமானங்களில் உண்டு.

    “எங்களுக்கு வியாபாரம் ஆகவேண்டும். எனவே பயணிகளில் ஒட்டுமொத்தம் விருப்பத்தை நாங்கள் பார்த்தாக வேண்டும்” என்கிறார்கள்.

    கறுப்புதான் அழகு என்று சினிமாப்பாட்டு பாடலாம். புராணக்கதைகளில் வரலாம். ஆனால் நடைமுறையென்ன ? எந்த 5 நட்சத்திர ஓட்டலிலாவது கறுப்பான பெண்ணுக்கு வேலை கிடைக்குமா ? எடுக்கமாட்டார்கள் என்று அவர்கள் அப்ளை பண்ணுவதே கிடையாது.

    டிவி விளம்பரங்களில் வரும் மாடல்கள் ஆர் ? பஞ்சாபிப்பெண்கள். மற்றவர்கள் என்றால் மேட்டுக்குடிப்பெண்கள். அவர்கள் கலராக இருப்பார்கள். தலித்துப்பெண்கள் என்றுமே அழகு கிடையாது அவர்கள் கன்னங்கரேளென‌ இருப்பதால். எனவேதான், நல்ல வேலை கிடைத்தால், பார்ப்பன பெண்களைக் கட்ட கீழ்ச்சாதிக்காரப்பையன்கள் அலைகிறார்கள். மத்தவனுந்தான். அதே வேளையில் பார்ப்பனபையன்மாரோ அல்லது வேறுமேல்சாதிப்பையன்மாரோ தலித்துப்பெண்களை ஏற்க வருவானா ? கிடையவே கிடையாது.

    ஒரு பெண்பதிவாளர் எழுதியிருக்கிறார்: ‘எங்கள் ஐ.டி கம்பெனியில் பையன்களோடு பேசும்போது, அவர்கள் மலையாளப்பெண்களைப்பற்றிப் பேசுவார்கள், “கட்டினால் அவர்களைத்தான் கட்ட வேண்டும்” என்பார்கள். நான், மலையாளத்தில் தலித்துப்பெண்களும் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்துத்தானே? என்றேன். உடனே அவர்கள் சொன்னார்கள்: “அய்யயோ வேண்டாம் அப்பா கொன்னு போடுவார். மலையாளப்பெண் என்று நான் சொல்வது நயந்தாரா, ஜாஸ்மின், அமலா பால் இப்படி!”

    பையன்மார்கள் எண்ணம் சமூகத்தின் பரவலான எண்ணத்தைப் பிரதிபலிக்கின்றது. கலர் வேண்டும். நான் கூறிய எடுத்துக்காட்டுக்களில் நம் மனப்பாங்குக்கும் மதத்திற்கும் தொடர்பில்லை. வெள்ளைக்காரன் வந்து நம்மைக் கட்டாயப்படுத்தவில்லை. “இல்லை இல்லை அவன் நமது மனத்தை அப்படி மாற்றிவைத்துவிட்டுப்போய் விட்டான்” என்பது சுத்த கப்சா.

    ஓகை நடராஜன், இந்து மதம் ஆயிரம் பேசும். நம்மாழ்வார் “கருமாணிக்கமே” என்று பாடுவார். அதைப் பாடிக்கொண்டிருப்பவன் தன் பையனுக்கு கறுத்த பெண் என்றால் வேண்டாமென்றுதான் சொல்வான். அவன் சரியென்றாலும் அவன் பெண்டாட்டி விட மாட்டாள் “ஏன் என் பையனுக்கு என்ன குறைச்சல் ?’ என்று சண்டைக்கு வருவாள்.

    பலபல விடயங்களில் மதம் தன் சக்தியை இழந்து அப்பாவியாக ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கத்தான் வேண்டும்.

  25. 1 கால்டுவெல்லும் அவனது நேரடி சந்ததியும் இல்லாவிட்டால் என்ன, அவன் விட்டுச் சென்ற வைப்பாட்டி மக்கள் தலைமுறை தொடர்கிறதே! ஹிந்து சமுதாயத்தை ஆரியம்- திராவிடம் என இரு இனங்களாய்ப் பிரித்து அதற்கு இலக்கணமும் செய்து அவன் செலுத்திய விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றுகிற கூட்டம் இன்னமும் நீடித்துக்கொண்டுதானே இருக்கீறது! வெள்ளக்காரன் போய் அறுபது ஆண்டுகள் ஆனதாய் வெட்டிப் பேச்சு பேசியதால் கால்டுவெல்லை நினைவூட்டினேன். வெள்ளைக்காரனின் ஐந்தாம் படையாக இருந்த மிஷனரிக் கூட்டம் இன்னும் இடத்தைக் காலி செய்யவில்லையே! ஹிந்துஸ்தானத்தில் அரசுக்கு அடுத்தபடியாக நிலம் வைத்திருப்பது இந்த மிஷ்னரிக் கூட்டம்தான். வெள்ளைக்காரன் போவதற்குமுன் நிலங்களைத் தமக்கு உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தி உத்தரவாதம் பெற்றவைதானே அவை! அந்த நன்றிக் கடனை இன்னும் செலுத்திகொண்டுதானே உள்ளன!

    2 இங்கே கிறிஸ்தவ மதமாற்றிகள் கருப்புத் துரைகளாய் இந்த வெயில் தேசத்திலும் கோட்டும் சூட்டும் மாட்டிக்கொண்டுதானே பிரசாரம் செய்கின்றன! அப்படியாவது தனது சருமத்தின் கருப்பை ஈடுகட்டிக்கொள்ள மாட்டோமா என்கிற தாழ்வு மனப்பான்மைதானே அது!

    3 மண்மகள் தேவையில் சிவப்புப் பெண் கேடப்தும் படிக்காத பெண்தேவை, படித்த பெண் தேவை என்றெல்லாம் நிபந்தனை விதிப்பதும் தனி நபர்களின் விருப்பம், அதற்கெல்லாம் பதில் அனுப்புவதும் தனி நபர் விவகாரம். அதற்கும் இங்கு பேசப்படும் விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்?

    4 வேலை வெட்டி எதுவும் இல்லாவிட்டால் இங்கு வந்து உட்கார்ந்துகொண்டு உளற ஆரம்பிக்கலாம், இது ஹிந்துஸ்த்தான்ம் போலவே திறந்த வீடு, இங்கே எது வேண்டுமானாலும் நுழையலாம், கேட்பார் இல்லை என்கிற தைரியமா?
    -மலர்மன்னன்
    //.

    கேளுங்கள். இவர்கள் உங்களை கண்டிப்பாக பிரசுரிப்பார்கள். படிப்பவர்கள் படிக்கட்டும். அனுபவஸ்தர் என்று உங்கள் சொற்களுக்குத் தனிமதிப்புண்டு.

    I hav given para numbers to Malarmannan’s mge to facilitate referencing.

    3 வதில் நீங்கள் எழுதியதைப்பாருங்கள். அதைத்தான் நான் வழிமொழிந்து கொண்டிருக்கிறேன். வெள்ளைக்காரந்தான் நிறபேதத்தை கற்றுக்கொடுத்தான் என்றதை நான் தவறென்றவுடன், அதெல்லாம் தனிநபர் விருப்பம் என்று விட்டீர்கள் அல்லவா?

    ஒரு சிலர் என்றால் பரவாயில்லை மலர்மன்னன் தனிநபர் விருப்பம் என்ற போர்வையில் கீழ் தள்ளி விடலாம். ஒட்டுமொத்த சமூகமே கறுப்பை அசிங்கமென்கிறதே ? ஓரு தமிழ்த்திரைப்படத்தில் இரு கறுப்பான பெண்களைக்காட்டி நகைச்சுவை செய்ய, ஒட்டுமொத்த தமிழ்மக்களே சிரித்தார்களே ? இஃதெல்லாம் தனிநபர் விருப்பமா ? தலித்துபெண்களில் ஒரு பெண்ணையாவது இச்சமூகம் விமானப் பணிப்பெண்ணாக ஏற்றுக்கொண்டதா ?

    4- கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ளமுடியாதவர்களுக்கு அவை உளறல்தான். இதில் வியப்பொன்றுமில்லை.

    2. இன்றைய மதமாற்றிகள் என்று நீங்கள் நினைவில் வைத்துக்க்கொண்டிருப்பது – பெர்க்மான்ஸ், சாம் செல்லத்துரை, தினகரனும் பால் தினகரன், மற்றும் ஏராளமான புராட்டஸ்டெண்டு, பெந்தோகோஸ்தோக்களே. இல்லையா ? கத்தோலிக்கர்கள் இல்லை. ஏனென்றால் உங்களுக்கு கத்தொலிக்கர்களைப்பற்றி நேரடி அனுபவம் கண்டிப்பாக இல்லை. அவர்களை கோட்டும் சூட்டும் என்றெல்லாம் கதைக்கமுடியாது. அவர்கள் மக்களைப்போலவே இருப்பார்கள் நடந்து கொள்வார்கள் காவி உடையும் வெறுங்காலேடும் ஆசிரம வாழ்க்கையும். புனேக்குப் பக்கத்தில், தமிழகத்தில் உண்டு.
    இவர்களையும் பார்த்துச் சொல்லுங்கள். இவர்கள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று? இவர்கள் சருமம் என்ன நிறம் மலர்மன்னன்?

    1. கால்டுவெல். அவனுக்குப்பின் அவன் நேரடி சந்ததி இல்லையென்று ஒப்புக்கொண்டுவிட்டீர்கள். பின்னர் அவன் வைப்பாட்டிப்பிள்ளைகள் என்றால் ? அவன் விட்டுச்சென்ற வைப்பாட்டிப்பிள்ளைகளென்றால் ? அது சிஎஸை [edited] குறிக்கும். இவர்களைத்தானே சொல்கிறீர்கள் ? இல்லையென்றால் ஆரவர்கள்?

    இன்று தமிழகத்தில் மிசுனோரிகள் என்றால், அது இந்திய வம்சாவளியினரே. பெர்க்மான்ஸ், தினகரன், சாம் செல்லத்துரை இவர்கள் வெள்ளைக்காரர்களல்ல. இவர்கள் தமிழர்கள். இவர்கள் இடத்தைக்காலி செய்வது எப்படி என்று நீங்கள் ஒரு நல்ல வழியைச் சொல்லுங்கள்.

    ஒன்று. இவர்கள் இந்துக்களாக வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை விட்டு வெளியேற வேண்டும். நாங்கள் தமிழர்கள் என்பார்கள். என்ன பதில்?

    [Edited and published.]

  26. கருப்பு நிறத்தை தீய நிறமாக, துக்கத்தின் நிறமாக, கீழ்மையான குணங்களின் நிறமாக மாற்றியது கிறுத்துவமே. அதை உலகெங்கும் பரப்பியது யூரோப்பிய காலனியம். எனவே, யூரோப்பியக் காலனியம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் கருப்பு மோசமான நிறமாகக் கருதப்படுகிறது.

    .

  27. //Let us ignore the ramblings and ravings by our Asthana stooge of the WHITE people, the one and the only Mr Joe Amalan…//

    Mr Rama !

    In ur last para U r indeed endorsing what I hav been calling attention to, namely religion has nothing to do with such prejudices and predilections. Why do ordinary people have such prejudices is a qn that goes directly into society w/o touching religion. U may examine it and come up with your findings and solutions – all of us can b benefited.

    //What this American lady said is racial. No arguments about it. //

    There is an argument about it. Not on whether it is racial or not, but on how, in the first place, it has crept into her mind.

    Taking ur last para, u say all of us r like that ladies. We can’t extirpate the racist feelings in us. Ok to say it s moral depravity; it s unethical; and it s antisocial. But still we have it. Why?
    Imagine for a moment: She may regret it; and she may even be transferred from India. But she will have that feeling about Tamilians and skin color for ever. Can us stop it? A honest and direct qn to u. Can u stop it? All racist remarks r deeply felt and come from heart of hearts.

    My reply is: CANT. We cant tell people of a country; or our own country, how they shd structure their morals which include the discrimination of people based on color etc. It s impossible to stop them. Religion s ineffective to change people’s such morals. It s my point. When I explain the point, u r taking it as an endorsement of her racist remark. Read between the lines Sir.

  28. //வேலை வெட்டி எதுவும் இல்லாவிட்டால் இங்கு வந்து உட்கார்ந்துகொண்டு//

    ஜோ அமலன் என்று ஒருவன் இங்கே ஊடுருவி இந்துக்களையும் இந்துமதத்தையும் விமர்சித்துக்கொண்டும் வெள்ளைக்காரனுக்கு வால்பிடித்துக்கொண்டும் இருக்கிறான். அவனின் மூக்கையறுத்து அவன் பித்தலாட்டங்களை வெளிக்காட்டுவதை விட திரு மலர் மன்னன் போன்றவர்களுக்கு வேறென்ன முக்கியமான வேலை ??

  29. //அரபு இல்லை எந்தப் பருப்பும் இஸ்லாத்தில் உசத்தி இல்லை…தாழ்வும் இல்லை…-ரஜின்//
    அப்படியா சங்கதி? சவூதியில் போய் அப்படிச் சொன்னால மிச்சம் இருப்பதையும் அறுத்து அனுப்பிவிடுவான், ஜாக்கிரதை!
    ஹஜ்ஜுக்கு ஆசை ஆசையாய்ப் போய் வந்தவர்கள் வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு மூடி மறைக்கும் மானக்கேடுகள் தெரியாதா?
    அவ்வளவெல்லாம் ஏன், இங்கே லப்பைகள் சமாசாரம் என்ன?
    இங்கேயே வஹாபிஸம் வேருன்றுவதைக் கண்டு வெதும்புகிறவனுக்கு ஜமாத் தருவது என்ன? சரி சம உரிமைதானா?
    அடிமைகள் மீது ஒரு எஜமானனுக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன என்று அல்லாவிடமிருந்து நேரடியாக முகமதுவுக்குத் தெரிவிக்கப் பட்டுள்ளவற்றையும் கொஞ்சம் சொல்லலாமே! அடிமை முறையை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்திருப்பவர்கள்தானே அல்லாவும் அவரது இறுதி தூதுவரும்!
    -மலர்மன்னன்

  30. //
    இந்த வேறுபாட்டை அறியாதவர் அல்ல அந்த ஜோ. ஆனால் ஏனோ அந்த அமெரிக்க தூதரக அதிகாரியை காப்பாறற வேண்டிய உளவியல் சிக்கல் அவருக்கு இருக்கிறது போலும்
    .//

    ஜோ சத்தியமாக அறியாதவர் தான். இவரை இவ்வளவு புத்திசாலின்னு எப்படி எடை போட்டீங்க.

    ஒரு வரி தமிழில் இருக்கிறது – அதை பற்றி ஆயிரம் அறிவு கேட்ட கேள்விகள் தொடுக்கும் திறமை உள்ளவர்களா அறிவாளிகள். மணீஸ் திவாரிக்கும் திக் விஜய் சிங்குக்கும் இவருக்கும் என்ன வித்யாசம்

  31. ரெஜின்

    //
    எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

    //

    கேக்க எல்லாம் நல்லா தான் இருக்கு – அரபு நாட்டுக்காரன் கேவலம் அரபு நாட்டுக்காரன் இந்தியர்களை (இஸ்லாமியர்கள் உட்பட ) பத்தி என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சு கிட்டு பேசுங்க.

    எல்லாம் ஒன்னு அப்படின்னு ஒரு வசனம் எழுதிட்ட அது தீர்க்க தரிசனமாயிடுமா. இதை நான் கூட தான் சொல்லுவேன். உடனே உங்கள் அல்லாவின் கடைசி தூதனாக என்னை ஏற்றுக் கொள்வீர்களா.

    எல்லாம் ஒன்னு – ஆமாம் எல்லாருமே சுன்னி முஸ்லிமா இருக்கும் வரைக்கும் தான். இவர்களுக்குள் பாகு பாடு வேண்டாம் என்பதே உஅமது கொள்கை. உங்களால மட்டும் தான் சக முஸ்லிம் பிரிவுகளை பாம் வைத்து கொள்ள முடியும். உடனே இது யாரோ ஒருவர் செய்தது என்காதீர்கள். இன்று வரை இது நின்ற பாடில்லை என்பதிலிருந்தே இதை தடுக்கு உள்ளிருந்து ஒரு போராட்டமும் வர வில்லை என்பது தெரிகிறது.

    எல்லாம் ஒன்னு தான் – இப்படி ஸல் ஒரு வசனம் எழுதி வைத்தார் என்றால் அதற்க்கு ஒரு காரணம் இல்லாமலா இருக்கும். என்ன எல்லாரும் ஒண்ணுனு சொன்னா தான் எல்லா பிள்ளைகளையும் கட்டலாம். எல்லா நாட்டையும் அட்டுழியம் பண்ணி பிடிச்ச அப்புறம் முசில்மா மாத்தி நம்ம நிம்மதியா ஆளலாம்.

    இந்த வசனத்தை கொஞ்சமா மாத்தி பாப்போமா

    எந்த ஒர் இஸ்லாமியருக்கும் ஒர் இஸ்லாமியர் அல்லாதவரை விடவோ, எந்த ஒர் இஸ்லாமியர் அல்லாதவருக்கும் ஒர் இஸ்லாமியரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு மனிதருக்கு வேறு ஒரு மானிடரை விடவோ, எந்த ஒரு மனிதருக்கும் ஒரு உயிரை (பிராணி, செடி, மரம் …. ) விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறை அன்பு மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக கடவுளிடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அன்பு உள்ளவர்தான்.

    இதை நீங்கள் ஒத்துக் கொண்டாலே லோகம் க்ஷேமமா இருக்கும்.

  32. பெரியண்ணன் ஜோ அவர்களே. இந்தக் கட்டுரையும் அதன் பின்னூட்டங்களும் ஒரு சுய விமர்சனமே. தமிழர்கள் தமிழர்களுக்கு நிறம் பற்றிய தாழ்வுணர்வு
    தேவை இல்லை என்ற அக்கறையுடனும் பொறுப்புடனும் எழுதப்படுவது அதற்கு சில உதாரணங்களைச் சொல்லி நூற்றாண்டுக்கு முன் திணிக்கப்பட்ட எண்ணங்களை இன்னும் சுமந்து நடக்க வேண்டாம் என்று விழிப்புணர்வு ஊட்ட எழுதபடுபவை. பெரும்பாலான கட்டுரைகள் இங்கே அப்படித் தான் எழுதப்படுகின்றன என்று வாசிக்கும் எங்களுக்கு புரியும். அல்லாமல்
    மாடி மேல் நின்று பெரியண்ணன் நீங்கள் கீழ் நோக்கி சொல்லும் குற்றச்சாட்டுகள் அல்ல அவை.

    எங்களுக்கு பெரியண்ணன் உபதேசங்களை விட சக விமர்சனங்களே நன்மை தரக் கூடியது. மலர்மன்னன் போன்றவர்கள் அதைச் செய்வதையே நாங்கள் விரும்புகிறோம்.

  33. பெரியண்ணன் அவர்களுக்கு மீண்டும்,

    எனது பதிலுக்கு பதில் இங்கே எழுதப்படும் கட்டுரைகளை விட பெரிய கட்டுரையாக பின்னூட்டம் இட்டு உபதேசிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு அது தமிழா ஆங்கிலமா தங்க்லீஷா என்றெல்லாம் ஆராய்ந்து புரிந்து கொண்டு பின் என்ன சொல்ல முயற்சி செய்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள ரொம்பக் கஷ்டம். என் மொழி அறிவு ரொம்பக் குறைவு. மன்னிக்கவும்.

  34. திருவாளர் ஜோ அமலனுக்கு குளவி எழுதிக் கொள்வது.

    வணக்கம்.

    //பிறநாட்டுக்கு வந்து அவர்கள் கடவுளர்கள் எப்படித் தோன்ற வேண்டுமென்று சொல்ல்க்கூடாது. சேவியர் சொன்னாரா என்று எனக்குத்தெரியாது. ஆனால் குளவி சொல்கிறார் அவர் சொன்னாரென்று. கத்தோலிக்கர்கள் எங்கு போகிறார்களோ ஆங்குள்ள மக்களின் ஆசாபாசக்ன்களுக்குட்பட்டே மதத்தைப்பரப்ப வேண்டும் என்பது அவர்கள் கொள்கையாக இருக்கும்போது சேவியர் எப்படி அதை மீறியிருப்பார் என்பது வியப்பே.//

    ஆனால் இங்குள்ள இந்துக்களிடம் அவர் வந்து விவாதிக்கிறார். ஹிந்துக்கள் கடவுளின் நிறம் என்ன கறுப்பா வெளுப்பா என்று கேட்கிறார்களாம். இதை அவர் தம ‘சகோதரர்களுக்கு’ எழுதுகிறார். அப்போது அவர் சொல்கிறார்: “For as there is so great a variety of color among men and the Indians being black themselves, consider their own colour the best, they believe that their gods are black. On this account the great majority of their idols are as black as black can be and moreover are generally so rubbed over with oil as to smell detestably and seem to be as dity as they are ugly and horrible to look at. ” இங்கு ஜோ அமலன் சவேரியின் நிற வெறுப்புக்கான அடுத்த கத்தோலிக்க் ஜல்லியை தொடங்குவதற்கு முன்னால் ஒன்றை கவனிக்க வேண்டும். சவேரி இதை எழுதும் இடம் கொங்கணத்திலிருந்து. அங்குள்ள மக்கள் தங்களை கறுப்பு என்றோ தங்கள் தெய்வங்களை கறுப்பு என்றோ கருதியிருக்க வாய்ப்பில்லை. இது சவேரியின் சுய பிரதாபம் மட்டுமே. இதில் வெளிப்படுவது சவேரியின் நிற வெறுப்பு.

    நிற அடிப்படையிலான வெறுப்பு இந்தியாவுக்கு ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியான விசயம். எப்படி ஆங்கில மீடிய மோகம் இருக்கிறதோ எப்படி fair and lovely மோகம் இருக்கிறதோ எப்படி ஜோ அமலன் போன்றவர்களுக்கு போப்பாண்டை மீது அடிமை விசுவாசம் இருக்கிறதோ அதேபோல இன்னும் பரவலாக வெள்ளைத் தோல் மோகம் இருக்கிறது. இனி ஜோ அமலன் பெரிதாக கதைவிடும் கத்தோலிக்க ஆசிரம கதைகளுக்கு வருகிறேன்.

    ஆமாம் திருச்சியில் ஆசிரமம் என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள் சாந்தி வனம். அதன் முக்கியமான தலைவர்களில் ஒருவர் பிடி க்ரிப்த்ஸ். இவர் இந்தியர்கள் இயல்பாகவே நேர்மையற்றவர்கள் என கருதியவர். அப்படியா என்று ஜோ அமலன் என்னிடம் ஆதாரம் கேட்பார் என விரும்புகிறேன். கேட்க வேண்டும்.

    எப்படி பெப்ஸியும் கோக்கும் இங்குள்ள ஒரு பானத்தை ஒழிக்க முடியவில்லை என்றால் அதே பானத்தை போல வேசம் போடுவார்களோ அதே போலத்தான் இதுவும்: theological counterparts of Indianized Coke advts. ஒரு இடத்திலுள்ள கிராம குல தேவதைகள் வழிபாட்டை ஆராய்ந்து ‘ரூம் போட்டு யோசித்து’ அதே போல கிறிஸ்தவத்தை நுழைக்கப் பார்ப்பது. அண்ணன் ஜோ அமலன் இப்போது வைணவத்துக்கு செய்து அதன் மூலம் வைணவத்தை ஹிந்து மரபிலிருந்து எப்படியெல்லாம் தனிமைப்படுத்தலாம் என்று பார்க்கிறாரே (அதே நேரத்தில் ஏதோ ஆழ்வார்கள் பாடல்களில் தோய்ந்தது போல சிவாஜி கணேசனை மிஞ்சும் நடிப்பும் அதில் சேர்த்தி) அதைப் போலத்தான்! இது வளமையான மிசிநரி தந்திரம் தான். ரொம்ப பார்த்திருக்கோம் ஜோ அமலன். நீங்க ஒண்ணும் அதில் ஸ்பெஷல் அல்ல. வாங்க குந்துஙக. பேசுவோம்.

  35. நான் தாய் மதம் திரும்பச் செய்த கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்கள்தாம்! கிறிஸ்தவர்களில் என்னுடன் தொடர்பில் உள்ளவர்களுள் பெரும்பாலானோர் கத்தோலிக்கரே.

    நேரத்தை உண்டு பண்ணிக்கொண்டுதான் இங்கு வருகிறேன். அந்த அளவுக்கு வேலைகள் உள்ளன. எஞ்சியுள்ள நாள்கள் குறைவாக இருப்பதால் அவசர அவசரமாக வேறு வேலை செய்ய வேண்டியுள்ளது! இருந்தும் ஏன் வருகிறேன் என்பதைச் சொன்னால் ஸ்ரீ பாலாவுக்குப் கோபம் வரும்!
    -மலர்மன்னன்

  36. //சவூதியில் போய் அப்படிச் சொன்னால//

    சவுதில போய் சொல்ரதில்ல..செய்ரோம்…அங்க இருக்கிர அரபிக்கும் நான் தொழுகை வைக்கமுடியும்,…அவன் தலை என் காலில் படுமாறு அவன் என் பின்னால் நின்று தொழத்தான் செய்கிறான்…இதை சொல்லனுமாம்…

    உங்களூக்குத்தான் சொன்னால்கூட காதில் ஈயத்தை காச்சி ஊத்துவான்..வாயில் மலத்தை தினிப்பான்..

    ஹ்ம்ம்….
    //இது தவிர மொகலாயன்,தெருவுல போரவன்,பொருக்கி திங்கிரவன் செய்ரதெல்லாம் இஸ்லாம்ன்னு சொல்லிக்கிட்டான்னா அவனுக்கு முஸ்லிம்கள் காட்டுவது //

    இஸ்லாம் சொன்னதை நான் சொல்றேன்…எவனோ எங்கொ செய்வது இஸ்லாம்ன்னு நீங்க சொல்ரீங்க…

    எது பொருத்தமானதுன்னு பாக்குரவங்களுக்கு தெரியும்…

    வண்டி இப்டித்தான் ஓட்டனும்ன்னு தெளிவா சொன்னதுகப்பரம்,ஒருத்தன் தப்பா வண்டி ஓட்டுனா,அது யார் தப்புன்னு விளங்கிக்கொள்ளும் தன்மை இருந்தால் சரி…அது இல்லாதவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை…

    சவுதில செய்ரதெல்லாம் இஸ்லாமா??? உங்களது ஞானம் பிரம்பிக்க வைக்கிறது…

    சும்மா எதையாவது சொல்லக்கூடாது..

    நானும்தா சொல்லலாம்…கும்பமேலாவுக்கு போனவுக சொல்ரத கேளுங்கன்னு…

    எதையாவது சொல்லாதீர் மலர்மன்னன்..உங்கள இங்க சிலபேர் ரொம்ப பெருஷா நெனச்சுட்டு இருக்காக…கெடுத்துக்கிறாதீர்,,

  37. \\\\\அரபு இல்லை எந்தப் பருப்பும் இஸ்லாத்தில் உசத்தி இல்லை…தாழ்வும் இல்லை…-ரஜின்\\\\\\\\

    ஜெனாப் ரஜின் கீழ்க்கண்ட சுட்டியை அவசியம் வாசிக்க வேண்டும். ஒட்டகமேறி அரேபியாவெல்லாம் போக வேண்டா.

    https://en.wikipedia.org/wiki/Caste_system_among_South_Asian_Muslims

    ஹிந்துஸ்தானத்திலும் பிளவுபடுத்தப்பட்டு தின்ன உப்புக்கு த்ரோஹம் செய்த நமக்ஹராமி baqi sthan லும் இஸ்லாத்தில் unchi zat aur nichi zat எப்படி கொடி கட்டி பறக்கிறது என பார்க்கலாம்

  38. //அப்படியா சங்கதி? சவூதியில் போய் அப்படிச் சொன்னால மிச்சம் இருப்பதையும் அறுத்து அனுப்பிவிடுவான், ஜாக்கிரதை!
    ஹஜ்ஜுக்கு ஆசை ஆசையாய்ப் போய் வந்தவர்கள் வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு மூடி மறைக்கும் மானக்கேடுகள் தெரியாதா?
    அவ்வளவெல்லாம் ஏன், இங்கே லப்பைகள் சமாசாரம் என்ன?//

    மலர்மன்னன்,

    பண்பாகப் பேசுவதை உங்களைப் போன்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. பண்புடைய கருத்துக்கள் இந்தத் தளத்தில் கிடைக்காது. எனவே, இப்படி ஆபாசமாக நீங்க எழுதுவதும், உங்க தளத்துல அதை வெளியிடுவதும் அதிர்ச்சி தரவில்லை.

    ஹஜ் யாத்திரை போகிற தமிழக இஸ்லாமியர்கள் அப்படி என்ன கேவலத்தை அனுபவித்து விட்டார்கள்? கோயிலுக்குள்ள வராதேடா, தீட்டுப் பட்டிரும் அபிஷ்டு என யாராவது மாமாக்கள் சொல்லி விட்டார்களா?

    தேவையில்லாமல் லப்பைகள் பிரச்சினை என்றெல்லாம் வேறு கதையளக்கிறீர்கள்.

    உங்களுக்கு சவால் விடுகிறேன். உண்மையான தகவல்கள் இருந்தால் இங்கே வெளியே சொல்லுங்கள். அசிங்கமாகப் பேசாதீர்கள்.

    “முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுடைய செயல்களை உங்களுக்கு அவன் சீராக்கி வைத்து, உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்” [அல்-அஹ்ஸாப்: 70, 71].

  39. //பெரும்பாலான கட்டுரைகள் இங்கே அப்படித் தான் எழுதப்படுகின்றன என்று வாசிக்கும் எங்களுக்கு புரியும். அல்லாமல்//

    விருட்சம் !

    இங்கு போடப்படும் கட்டுரைகள் உங்களைப்போல ஒரு சிலருக்கல்ல. பலமதத்தினரும் படிப்பதற்காகவே. இல்லையென்றால், இங்கு இசுலாமியர்களும் கிருத்துவர்களும் தடைசெய்யப்பட்டிருப்பார்கள். நமக்குள்ளே பழங்கதைகள் பேசிப்பயனில்லை என்று உங்கள் தமிழ்நாட்டுக்குப் புலவர் ஒருவர் எழுதிவைத்து விட்டுப்போயிருக்கிறார் இல்லையா ?

    இங்கு பின்னூட்டமிடுபவர்கள் பலர் விருட்சம் போல அப்படித்தான் நினைக்கின்றனர். சிலர் கேட்கின்றார்கள்: ஏன் அன்னியரை இங்கு எழுதவிடுகிறிர்கள் என்று. அப்படியானால் உங்களுக்குள்ளே உங்கள் மதம அடங்கி எலீட்டிசத்திற்கு வழிவகுக்கும். ஆபாசமாகயில்லாமல் கருத்துப் பரிமாற்றம் பண்ணலாம் என்று பதிவைத் திறக்குமுன்னரே போட்டுவிட்டார்கள் பின்னே என்ன பிரச்சினை விருட்சம்?

    என்னுடைய ஒரே கொள்கை இந்து மதத்தில் எலீட்டிசத்தைத் தாக்குவது.

  40. //எனது பதிலுக்கு பதில்//

    virutcham

    we don’t do one on one or one to one talk. If i put up a rejoinder to u, it means i put up for all. This is a general policy in forum discussions. Anyone can respond.

    If u dont like, dont read. Let others may read.

  41. எங்களுக்கு பெரியண்ணன் உபதேசங்களை விட சக விமர்சனங்களே நன்மை தரக் கூடியது. மலர்மன்னன் போன்றவர்கள் அதைச் செய்வதையே நாங்கள் விரும்புகிறோம்.//

    விருட்சம்!

    இந்த ” நாங்கள் ” என்பதுதான் என் டார்கெட் ஆப் அட்டாக். இந்துமதம் அப்படி எவரையும் நினைக்க வைக்கக்கூடாது. அது செய்யவில்லை என்று உறுதியாக நான் நம்புகிறோம். ‘நாங்கள்’ ‘அவர்கள்’ என்பது கோடிக்கணக்கான இந்துக்களை அன்னியர்கள் ஆக்கி விடும். நான் குற்றம் சொல்லும் எலீட்டிசமே அதுதான்.

    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்கு ஒரு லட்சம் மக்கள் திரளுகிறார்கள். திருச்செந்தூர் விசாகத்திற்கு ஒரு லட்சம் மக்கள் வருகிறார்கள் கால்நடையாக காவடிகள் தூக்கிக்கொண்டு. குலசேகரப்பட்டினம் தசராக் காலத்தில் ஒரு 100 கிராமங்கள் மகிழ்கின்றன.

    இந்த மக்கள் ஆர் ? இவர்களுக்கான இந்து மதம் எது ? இவர்களுக்காகத்தான் நான் இந்து எலீட்ட்களுடன் மல்லுக்கட்டுகிறேன். இந்த மக்களைப்பற்றித் தெரியுமா மலர்மன்னனுக்கு? அவர் இவர்களைப்பற்றிப் பேசுவாரா ? ஆனால், துவைதம், அத்வைதம் சைவச்சித்தாந்தம் பற்றிப்பேசுவார். கேளுங்கள். அவர் உங்களை மகிழ்விப்பார். நான் பண்ண மாட்டேன். He is also writing essays here. U can enjoy reading his essays. He will explain Varnashradharma which will delight u. Enjoy yourself.

  42. //இந்த மக்களைப்பற்றித் தெரியுமா மலர்மன்னனுக்கு? //
    என் வாழ்க்கையின் பெரும்பகுதி கழிந்ததே அந்த மக்களுடனும் அந்த மக்களுக்காகவும்தான் என்பது தெரியுமா இந்த ஊடுருவிக்கு? வனவாசி கல்யாணில் சம்பந்தப்பட்டும் தனியாகவும் கிறிஸ்தவரின் மத மாற்ற முயற்சிகளை முறியடித்தவன் நான்!
    பிஹார், மத்தியப் பிரதேசம், தமிழ் நாட்டில் சில மாவட்டங்கள் எனத் தொடர்ந்தது எனது கடந்த காலப் பணி.

    விசுவ ஹிந்து பரிஷத்தில் ஞானவேல முருகனுடன் நான் சென்று வந்ததெல்லாம் அந்த மக்களின் வாழ்விடங்களுக்குத்தான்! அங்கெல்லாம் அவர்களின் வழிபாடுகளில் பங்கேற்றவன் நான். எமது நாட்டார் சிறு தெய்வங்களை யெல்லாம் பேய் பிசாசு சாத்தான் என்று வர்ணித்த கிறிஸ்தவ மத மாற்றிகளை ஓட ஒடவிரட்டியவன் நான்!
    -மலர்மன்னன்

  43. @Joe Amalan
    Friendly advise;
    I am sorry to say this.Your English and grammar are atrocious. On top of this, claiming authorship for a ” Cut and paste job” and not admitting to this fact. Many of us here including myself are not able to comprehend your writings. What exactly is your point?
    Please write in Tamil and in simple terms so that we all can understand your views. Otherwise , it will be all ramblings and rantings from yet another internet troll called Joe Amalan.

  44. //இந்த ” நாங்கள் ” என்பதுதான் என் டார்கெட் ஆப் அட்டாக். இந்துமதம் அப்படி எவரையும் நினைக்க வைக்கக்கூடாது. அது செய்யவில்லை என்று உறுதியாக நான் நம்புகிறோம். ‘நாங்கள்’ ‘அவர்கள்’ என்பது கோடிக்கணக்கான இந்துக்களை அன்னியர்கள் ஆக்கி விடும். நான் குற்றம் சொல்லும் எலீட்டிசமே அதுதான்.இந்த மக்கள் ஆர் ? இவர்களுக்கான இந்து மதம் எது ? இவர்களுக்காகத்தான் நான் இந்து எலீட்ட்களுடன் மல்லுக்கட்டுகிறேன்//
    இந்த முதலை வடிக்கிற கண்ணீரை கவனித்தீர்களா? இதுகளுடைய செயல் திட்டமே இதுதான். இப்படி நீலிக் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இதுகள் ஹிந்து சமுதாயத்திற்குள் நுழைந்து மத மாற்ற வேலையைத் தொடங்குகின்றன. நமது மண்ணில் காலடி எடுத்து வைத்த ஃப்ரான்சிஸ் சேவியர் என்கிற ரோமன் கத்தோலிக்கன் தொடங்கி வைத்த முதல் வேலை, ஜாதியின் பெயரால் ஹிந்துக்களைப் பிரித்து துவேஷத்தைத் தூண்டி, ஹிந்துக்களில் ஒரு பகுதியினரை மதம் மாற்றுகிற தந்திரம்தான்! இந்த முதலை சொல்கிற ஹிந்து எலிட்களிடம்தான் சேவியர் முதலில் மோதினான்.
    சேவியர் பற்றி விரைவில் ஒரு தனிக் கட்டுரை எழுதியாக வேண்டும்!
    ஹிந்துக்களை மதம் மாற்ற சேவியரின் அடாவடிகளை இன்று கையாள முடியாது என்பதால் ஹிந்துக்களின் ஒரு பிரிவினருக்காக முதலைக் கண்ணீர் வடித்து, ஹிந்து சமயத்தின் மீது ஏதோ மிகவும் அக்கரை இருப்பதுபோல் நடித்து, ஹிந்துக்களில் ஒரு பிரிவினருக்காக வாதாடுவது போல் வேடம் தரித்து, இறுதியில் இப்படிப் பாரபட்சம் உள்ள ஹிந்து சமயம் எதற்கு, பேசாமல் வந்துவிடுங்கள் நமது சமரசம் உலாவும் சொர்க்கபுரிக்கு என்று பொய் சொல்லிக் கூட்டிக்கொண்டு போகும் திட்டம் இது! இதனால்தான் இந்த விஷக் கிருமிகளை உள்ளே விடக் கூடாது என்று நான் சொலவது!
    //இயேசுவின் அருளால் நான் அவரின் தந்தையை , ஆதிதேவனை , மூல கடவுளை ,போற்றும் ஆழ்வார்களின் பாசுரங்களை படித்து புண்ணியம் பெற போகிறேன். இந்த வாய்ப்பை அளித்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள்!
    -டேவிட் நவீந்திரன்//
    இதன் சாயம் எப்படி வெளுத்துவிட்டது கவனித்தீர்களா? எப்படித் தொடங்கி எப்படி முடித்தது பாருங்கள்! இது நம் திவ்யப் பிரபந்தங்கள் பேசுவதெல்லாம் ஏசுகுமாரன் சிலுவையில் தொங்கவிட்டபோது அவனைக் கைவிட்ட பரம் பிதாவைத்தான் என்று சொல்ல ஆரம்பிக்கும்!
    -மலர்மன்னன்

  45. //எமது நாட்டார் சிறு தெய்வங்களை யெல்லாம் பேய் பிசாசு சாத்தான் என்று வர்ணித்த கிறிஸ்தவ மத மாற்றிகளை ஓட ஒடவிரட்டியவன் நான்!
    -மலர்மன்னன்//

    இங்கு நான் ஓர் அடையாளத்துக்காக மட்டுமே சிறு தெய்வங்கள் எனக் குறிப்பிட்டுள்ளேன். உண்மையில் நாட்டார் தெய்வங்கள் பிராமணர் பல்ரிம் குல தெய்வங்களாக இருப்பதை ஆதாரங்களுடன் பட்டியலிட என்னால் இயலும். எமது சமயத்தில் சிறியது பெரியது என பேதங்கள் எல்லாம் கிடையாது. அவரவர் நிலையில் இத்தெய்வங்கள் பெரியவையே.
    சம்மனசு போன்ற கூலிக்காரகள் எல்லாம்நம்மிடம் இல்லை.
    -மலர்மன்னன்

  46. //சவூதியில் போய் அப்படிச் சொன்னால//

    சவுதில போய் சொல்ரதில்ல..செய்ரோம்…அங்க இருக்கிர அரபிக்கும் நான் தொழுகை வைக்கமுடியும்,…அவன் தலை என் காலில் படுமாறு அவன் என் பின்னால் நின்று தொழத்தான் செய்கிறான்…இதை சொல்லனுமாம்…

    உங்களூக்குத்தான் சொன்னால்கூட காதில் ஈயத்தை காச்சி ஊத்துவான்.. வாயில் மலத்தை தினிப்பான்..

    ஹ்ம்ம்….
    //இது தவிர மொகலாயன்,தெருவுல போரவன்,பொருக்கி திங்கிரவன் செய்ரதெல்லாம் இஸ்லாம்ன்னு சொல்லிக்கிட்டான்னா அவனுக்கு முஸ்லிம்கள் காட்டுவது //என்னன்னு முன்னமே சொல்லிட்டேன்..

    இஸ்லாம் சொன்னதை நான் சொல்றேன்…எவனோ எங்கொ செய்வது இஸ்லாம்ன்னு நீங்க சொல்ரீங்க…

    எது பொருத்தமானதுன்னு பாக்குரவங்களுக்கு தெரியும்…

    வண்டி இப்டித்தான் ஓட்டனும்ன்னு தெளிவா சொன்னதுகப்பரம்,ஒருத்தன் தப்பா வண்டி ஓட்டுனா,அது யார் தப்புன்னு விளங்கிக்கொள்ளும் தன்மை இருந்தால் சரி…அது இல்லாதவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை…

    சவுதில செய்ரதெல்லாம் இஸ்லாமா??? உங்களது ஞானம் பிரம்பிக்க வைக்கிறது…

    சும்மா எதையாவது சொல்லக்கூடாது..

    நானும்தா சொல்லலாம்…கும்பமேலாவுக்கு ஆசை ஆசையா போன எங்க ஊர் பொம்பளைக சொல்ரத கேளுங்கன்னு…

    எதையாவது சொல்லாதீர் மலர்மன்னன்..உங்கள இங்க சிலபேர் ரொம்ப பெருசா நெனச்சுட்டு இருக்காக…கெடுத்துக்கிறாதீர்,,
    இஸ்லாத்தை குறித்து கேவலமாக விமர்சிக்க ஆர்வம் இருக்கிற அளவுக்கு,அதன் நியாயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லைங்களே…

    என்ன இருந்தாலும்,உங்க அளவுக்கு தரம்தாழ்ந்து பேசதெரியல…
    —————————————————————————————————————————–
    சகோ பாசித்..
    விடுங்க…மலர்மன்னனுக்கு பொறுக்கல…அவர் அவ்ளோதான்..சட்டியில் உள்ளது அகப்பையில்…

    //பண்பாகப் பேசுவதை உங்களைப் போன்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. பண்புடைய கருத்துக்கள் இந்தத் தளத்தில் கிடைக்காது. எனவே, இப்படி ஆபாசமாக நீங்க எழுதுவதும், உங்க தளத்துல அதை வெளியிடுவதும் அதிர்ச்சி தரவில்லை./// – சரியா சொன்னீங்க,,,
    —————————————————————————————————————————-
    @ க்ருஷ்ணகுமார்
    இஸ்லாம் என்ன சொல்லுதுன்னு ஆணித்தரமா சொல்லிட்டேன்..அதுவல்லாது …எவன் என்ன சொன்னாலும் அவனுக்கு பதில்
    //இது தவிர மொகலாயன்,தெருவுல போரவன்,பொருக்கி திங்கிரவன் செய்ரதெல்லாம் இஸ்லாம்ன்னு சொல்லிக்கிட்டான்னா அவனுக்கு முஸ்லிம்கள் காட்டுவது //என்னன்னு முன்னமே சொல்லிட்டேன்..

    அப்புறம் வந்து அந்த சுட்டி,இந்த சுட்டி எதுக்கு…???

    எவனோ எழுதுற சுட்டிதான் உங்களுக்கு இஸ்லாமா??

    இஸ்லாமிய வேதத்துல,இவன் தலைல வயித்துல கால்ல பொறந்தான்,இவன் தாழ்ந்த சாதி.இவன தீண்டாதன்னு சொல்லிருதா சொல்லுங்க,…அத விட்டுட்டு…

    ஜல்லி விக்கிற விலைல…இப்டி வீணாக்காதீங்க..

  47. பெரியண்ணன் அவர்களே, நான் உங்களை அன்னியர் என்றோ ஏன் இங்கே வந்து படிக்கிறீர்கள், எழுதுகிறீர்கள் என்றோ சொல்லவில்லையே. உங்கள் ஒவ்வொரு வரியிலும் அன்னியதன்மையை நீங்கள் வெளியிடுவது போதாதென்று அந்நியன் என்று நீங்களே சொல்லிக் கொள்ளும் போது தான் அன்னியப்படுகிறீர்கள்.

    பாவிகளே என்று முச்சந்தியில் நின்று பாவிகளை விளித்து புண்ணியப் பாதைக்கு இட்டு செல்லும் மீட்பர்களை நாங்கள் தேடிக் கொண்டு இருக்கவில்லை. எதிரில் தானே வந்தாலும் தாண்டிப் போக விரும்புகிறோம்.

    ஏற்கனவே சொன்னது போல் சுய விமர்சனங்கள் மூலம் விழிப்புணர்வு பெரும் முயற்சி. அவ்வளவே. இந்த உபயோகமில்லாத பின்னூட்ட விவாதங்களில் பலரின் நேரம் விரயமாவதை சில நாட்களாக காண நேர்வதால் தாண்டிக் சென்று கொண்டிருந்தாலும் நிற்க நேரிட்டது. இனி தாண்டி செல்லவே விரும்புகிறேன்.

    புரியும் மொழியில் முதலில் எழுத முயற்சி செய்யவும். பின் உபதேசங்கள் செய்யலாம்.

  48. //Jo.Amalan
    16 August 2011 at 10:04 pm
    Kulavi, i shall reply to u later.

    //

    please do not. We are very afraid Amalan. உங்க பேருக்கு முன்னாடி ஜோ போட்டாலும் போட்டீங்க படிச்சா உடனே தூக்கம் வருது. ஆபீஸ்ல வேலை இருக்கப்பா

  49. // ஊடுருவிக்கு//

    Mr மலர்மன்னன்!

    “ஊடுருவி” என்று சொல்வதன் காரணம்? விளக்குங்கள். பிழையாகச் சொன்னால் மன்னிப்புக்கேட்க வேண்டும். .

    காரணங்கள் இவைகளாக மட்டும் இருந்தால் ஊடுருவி என்பது சரியாகும்.

    1. ஜோ அமலன் என்பவன் உண்மையிலேயே கிருத்துவன்.
    2. அப்படி கிருத்துவன் என்றால் அவன் இங்குள்ளவர்களைக் கிருத்துவத்துக்கு மாற்ற எண்ணம் கொண்டு எழுதுவதற்காக இங்கு வந்திருக்கிறான்.
    3 தமிழ்.இந்து.காம் மலர்மன்னனால் நடாத்தப்படுகிறது.

    மலர்மன்னனுக்கு என் கேள்விகள்.

    ஜோ அமலன் கிருத்துவனா இந்துவா ? கிருத்துவன் என்றாலே ஊடுருவி. கிருத்துவன் என்று எப்படி கண்டார்?

    கிருத்துவனேயென்று கண்டுபிடித்தார் என்று வைத்துக்கொள்வோம். கிருத்துவர்கள் இங்கு தடை செய்யப்பட்டிருக்கிறார்களா ? அப்படித் தடைசெய்யப்பட்ட இடத்தில் எழுதும்போது மட்டுமே ஊடுருவி என்ற சொல் சரியாகும். ஊடுருவி means one who has entered here w/o permission.

    Mr மலர்மன்னன் ! பெரிய அனுபவஸ்தர் என்று எல்லாருக்கும் தெரியும். வயதும் அதிகம். ஒருதடவை, சன் டிவி செய்தியில் ஒரு சிலனிமிடம் மலர்மன்னன் சொன்னதைக் காட்டினார். அந்த கான்டெக்ஸ் எனக்கு நினைவில்லை. ஆனால் அது பலவருடங்களுக்கு முன்னால். ஒரு வயதான ஆள் – 60க்கு மேலிருக்கும்- திரையில் தோன்ற ‘மலர்மன்னன்’ என்று போட்டிருந்தார்கள். அப்போதுதான் எனக்கும் தெரியும். I guess it was about some religious matter.

    அது சரி திரு மலர்மன்னன்!

    மலர்மன்னன் என்ற பெயர் இந்துவா ? நான் ஏன் உங்களைக் கிருத்துவர் என்று கற்பனை பண்ணி ‘ஊடுருவி’ என்று சொல்லக்கூடாது ? This name is found among Christians also. Mostly among Tamil atheists. The son of the poet Bharthi dasan has this name; but it is his original name as his father was an atheist. Taking ur name, I can easily say: U r an atheist and therefore, ஊடுருவி. U r a Christian and therefore: ஊடுருவி; U r a muslim and therefore ஊடுருவி. U r a sinhala against Hindus and therefore ஊடுருவி. Can I this all just taking ur name ? Dont defend that malarmannan refers to a hindu god. So also, I can defend my nick: Amalan aathippraan. Not only that, Nammaazhvaar uses Amalan at many places.

    ஜோ என்றால் ஜோசப்பா ? அமலன் என்றால் யேசுவா ? என்ன மலர்மன்னன் இது குழந்தைத்தனமான் கற்பனை ? Just a nick. U r getting fooled over this nick name. To have nicknames in internet forums is for security. I may like to conceal my identity for my own reasons. Does this .com put a condition that all of us shd divulge their real identities ? NO.

    ஒன்று மட்டும் சொல்கிறேன். தான் மட்டுமே இந்து. தனக்குத் தெரிந்தவிதமே இந்து மதம் என்ற நினைப்பை இன்றோடு விட்டுவிடுங்கள். கற்பனை விளையாட்டை விட்டு விடுங்கள். ஏன் கள்ளழகர் விழாவையும் ஒரு லட்சம் மக்களையும் குறிப்பிட்டேன் ? ஏனென்றால், உங்களுக்குத்தெரிந்த பண்டித இந்து மதம் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களை வைத்தே இந்து மதம் வாழும். வாழ்கிறது. வாழட்டும்.

    அம்மக்களை அடித்தளமாக வைத்து ஒரு சில கட்டுரைகள் வரைந்து வருகிறேன். அவை இந்த தளத்தில் வெளியாகும். ஏனென்றால், தமிழ்.இந்து.காம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அக்கட்டுரைகளை வெளியிடாமல் இருக்கவே முடியாது. விரைவில் எதிர்பாருங்கள்.

    Jo Amalan

    (Only after seeing my school records, u shd fix me whether I am a Hindu, or a Christian or a Muslim. If not, keep shut ur mouth please)

  50. //பெரியண்ணன் அவர்களே, நான் உங்களை அன்னியர் என்றோ ஏன் இங்கே வந்து படிக்கிறீர்கள், எழுதுகிறீர்கள் என்றோ சொல்லவில்லையே. உங்கள் ஒவ்வொரு வரியிலும் அன்னியதன்மையை நீங்கள் வெளியிடுவது போதாதென்று அந்நியன் என்று நீங்களே சொல்லிக் கொள்ளும் போது தான் அன்னியப்படுகிறீர்கள்.//

    —அஃது உங்க‌ள் பார்வை. அத‌ற்கு நானென்ன‌ செய்ய‌ முடியும் ? என் பெய‌ர் பெரிய‌ண்ண‌ன் இல்லை.

    //பாவிகளே என்று முச்சந்தியில் நின்று பாவிகளை விளித்து புண்ணியப் பாதைக்கு இட்டு செல்லும் மீட்பர்களை நாங்கள் தேடிக் கொண்டு இருக்கவில்லை. எதிரில் தானே வந்தாலும் தாண்டிப் போக விரும்புகிறோம்.//

    —அப்ப‌டிப்ப‌ட்ட‌ சுவிசேச‌ பிர‌ச‌ங்கிக‌ள் இங்கு இருக்கின்றார்க‌ளா ? அப்ப‌டி எவ‌ரேனும் இருன்தால் தாண்டிப்போங்க‌ள். எனினும் அப்ப‌டித்தாண்டிப்போத‌ல் கோழைத்த‌ன‌ம். அவ‌ர்க‌ளுக்குப்ப‌திலுக்குப்ப‌தில் சொல்வ‌தே வீர‌ம்.

    //ஏற்கனவே சொன்னது போல் சுய விமர்சனங்கள் மூலம் விழிப்புணர்வு பெரும் முயற்சி. அவ்வளவே. இந்த உபயோகமில்லாத பின்னூட்ட விவாதங்களில் பலரின் நேரம் விரயமாவதை சில நாட்களாக காண நேர்வதால் தாண்டிக் சென்று கொண்டிருந்தாலும் நிற்க நேரிட்டது. இனி தாண்டி செல்லவே விரும்புகிறேன்.//

    —வேண்டா பின்னூட்ட‌ங்க‌ளைப்ப‌டித்து ஏன் உங்க‌ள் நேர‌த்தை வீணாக்கு ம‌ன‌வுழைச்ச‌ல‌டைய‌வேண்டும்?

    //புரியும் மொழியில் முதலில் எழுத முயற்சி செய்யவும். பின் உபதேசங்கள் செய்யலாம்
    //

    —உங்களுக்குப்புரியும் மொழி எனக்குத் தெரியவில்லை. எனக்கு எது வருதோ அப்படித்தானே எழுத முடியும்?

  51. நாலு பேர் இங்க உக்காந்துகிட்டு நாங்கதான் இந்துக்கள் என்றால் என்னய்யா அர்த்தம் ?

  52. //அட்டஹாசமாய் எழுதிக் கொட்டியிருக்கிறது குளவி!

    “ பொத்திகிட்டு போங்கடா கருப்பன்களா! ” இந்த நெத்தியடி சொற்கள் கட்டுரை ஆரம்பத்திலேயே வந்து கட்டுரையே களை கட்டிவிடுகிறது. அருமை
    //

    ஓகை நடராஜன்!

    பொத்துக்கிட்டு போங்கடா என்பது ஆபாசமான சொல்லாடல். நெற்றியடிச்சொற்கள் கிடையாது. இப்படி ஒரு கட்டுரை தொடங்கினால், படிப்பவர்கள் அப்போதே விலகிவிடுவார்கள்.

    பின்னூட்டங்களில் உணர்ச்சிகரமாக ஆபாசச்சொற்கள் இடம்பெரும். இங்கே மலர் மன்னன் அள்ளி வீசுகிறார்.

    ஆனால், கட்டுரையாளர்கள் நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டும் சொற்களில் மட்டும். கருத்துக்கள் எப்படியும் இருக்கலாம்.

  53. @Joe Amalan
    Friendly advise;
    I am sorry to say this.Your English and grammar are atrocious. Amalan.

    Rama Sir

    I don’t know that much English Sir. I am very sorry Sir. Let the admn ban English writing here Sir. You may move them to take that step Sir. My flow is to oscillate between two languages wherever I write Sir. Tamil I like; Malayalam I like better; but English I like the best Sir.

    Sir, in school I was caned for putting the letter ‘s’ as u have done here Sir. “Advise”.

    In India, we are taught only British English, Sir. In American English, both noun and verb have the same spelling ‘Advise’ Sir. In British English, advise is verb; and advice is noun, Sir.
    I am very sorry for being impetuous Sir. It is not my intention ever to hurt you Sir. Pardon Sir.

    (The above has been written to add some homorous touches to the acrimonious argumentations here. )

  54. ரஜீன், ஓகோ, ஆக நீங்கள் சொல்வதுதான் இஸ்லாமா? ஆக ஆளாளுக்கு ஒரு இஸ்லாமை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது! ஷியா, ஸுன்னி, அஹமதியா, போரா, இன்னும் பலப்பல வெட்டுக் குத்து உள் விவகாரங்கள் போதாதென்று ஆளாளுக்கு வேறு ஒரு இஸ்லாம் வைத்துகொள்ள ஆரம்பித்திருக்கிறீர்களா?

    அடிமை வியாபாரத்தை நியாயப்படுத்துகிற ஆண்டவனையும் அவருடைய ஏக தூதரையும் வைத்துக்கொண்டிருக்கிற உங்களுக்குப் பிற சமய, சமூகங்களை விமர்சிக்க அருகதை இருக்கிறதா என்ன?
    என்னைப் பற்றி எவரும் ரொமப் பெரிதாக எண்ண வேண்டும் என்கிற எதிர்பார்ப்பெல்லாம் எனக்குக் கிடையாது! ஆகவே என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டா!
    -மலர்மன்னன்

  55. //உங்களுக்கு சவால் விடுகிறேன். உண்மையான தகவல்கள் இருந்தால் இங்கே வெளியே சொல்லுங்கள். அசிங்கமாகப் பேசாதீர்கள். -.K. L. M. பாசித் அலி //
    தகவல்களைச் சொன்னால் முதலில் அந்தப் பாவப்பட்டவர்கள் மீதல்லவா பாய்வீர்கள்! சர்வ வல்லமை படைத்த உங்கள் ஜமாத்துகள் அவர்களைச் சும்மாவிடுமா என்ன?
    -மலர்மன்னன்

  56. திரு ஜோ.அமலன் அவர்களே,

    ///உ.ம் உங்களைப்ப்ற்றி ஒருவன் தப்பான அபிப்பிராயம் வைத்திருக்கிறான். அவன் அவர்கள் உறவினரோடு நண்பர்களிடமோ மட்டும் சொல்கிறான். உங்களிடம் நேரில் வந்து சொல்லவில்லை. நேரில் வந்து சொன்னால்தான் தவறு.///

    நீங்கள் கூறுவது போல் அமெரிக்க துணை தூதரக அதிகாரியான அந்தப் பெண் அமெரிக்காவில் அவருடைய உறவினரிடமோ, நண்பரிடமோ மட்டும் சொல்லியிருந்தால் இந்த கட்டுரையே வந்திருக்காது. ஆனால் நடந்தது என்ன வென்றால்
    இங்கே எங்கள் இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் வந்து, சென்னைக்கு அருகில் உள்ள காட்டான்குளத்தில் உள்ள SRM பல்கலைக் கழகத்தில், நடந்த விழாவில் எங்கள் தமிழர்களிடமே நேரில் வந்து சொன்னது.

    கட்டுரையின் முதல் வரியில் உள்ள சுட்டியை சொடுக்கிப் படியுங்கள் அல்லது இந்த சுட்டியைப் படியுங்கள்

    https://www.dailythanthi.com/article.asp?NewsID=667558&disdate=8/17/௨௦௧௧

    ///உங்களிடம் நேரில் வந்து சொல்லவில்லை. நேரில் வந்து சொன்னால்தான் தவறு.///

    அவர் எங்களிடம் நேரில் வந்து தான் சொல்லியிருக்கிறார் இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்.????

  57. பாசித்-ரஜீன்,
    எதையும் துண்டித்து எறிவது ஷரியா சட்ட சம்பிரதாயம். அதைச் சொன்னால் உங்களுக்கே பண்பாடற்ற சொல்லாகத் தெரிந்தால் நான் என்ன செய்யட்டும்? உங்கள் மனதிலும் கண்களிலும் ஆபாசம் இருந்தால் எதுவும் ஆபாசமாகத்தான் தெரியும்.

    சவூதியில் ஏதேனும் ஒரு தொழுகையில் ஒரு அரபிக்கு முன் வரிசையில் ஒரு வேற்று நாட்டான் இருப்பதுபோல் உங்களிடம் புகைப் படம் ஏதும் இருந்தால் அனுப்புங்களேன். நீங்கள் சவூதி போயிருக்கிறீர்களா? இங்குள்ள சுதந்திரக் காற்றை அங்கு சுவாசித்ததுண்டா? நெஞ்சில் கை வைத்துச் சொல்ல வேண்டும். சும்மா வாதத்துக்காகப் பேசக் கூடாது. குரான் படிதான் நீங்கள் வாழ்கிறீர்கள் என்றால் முதலில் எங்களுக்கு ஷரியா முழுமையாக வேண்டும். முக்கியமாக சிவில் மட்டும் போதாது, கிரிமினல் சம்பந்தமாகவும் ஷரியா விதிகளின்படியே எங்களை தண்டிக்க வேண்டும் என்று இயக்கம் தொடங்குங்கள் பார்க்கலாம். இங்கே யாராவது இஸ்லாம் தொடர்பாக ஏதும் சொன்னால் உடனே எவனோ சொன்னால் அதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடுமா என்று ஒரிஜினல் இஸ்லாம்படியே நடப்பது போல் பேசுகிறீர்களே அதுதான் கேட்கிறேன்.
    -மலர்மன்னன்

  58. ஜோ அமலன் என்கிற புனைப் பெயரில் ஒளிந்திருக்கும் பயங்கொள்ளிக்கு,

    எனக்கு எவ்வளவோ அச்சுறுத்தல்கள் இருந்தும் அன்றும் இன்றும் என்றும் நான் மலர்மன்னன்தான். நான் வெளியிடும் கருத்துகளும் எனது செயல்பாடுகளும் நான் யார் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்தும். அதன் காரணமாகவே வேற்று மத வெறியர்கள் என் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தியதும் உண்டு. உம்மைப்போல் ஒளிந்துகொண்டு வம்புபேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நேரமும் இல்லை. நீர் வெளியிடும் கருத்துகளும், வெளியிடும் முறையும் உம்மை ஒரு ஊடுருவி என்பதை நிரூபணம் செய்கின்றன. ஒன்று நீர் ஊடுருவியாக இருக்க வேண்டும். இல்லயேல் துரோகியாக இருக்க வேண்டும். இரண்டில் எது உமக்குச் சரிப்படும் எனப்தைத் தெரிவிக்கவும். உமது எழுத்தை வைத்தே உம்மை ஊடுருவி என்கிறேன். அதை மறுக்கிறீர் என்றால் துரோகியாகத்தான் இருந்தாக வேண்டும். ஊடுருவியா துரோகியா? எது செளகரியம்? கொஞ்சம் கெளரவமாக இருக்கட்டுமே என்றுதான் ஊடுருவி என்கிறேன்.
    ஹிந்து சமூகத்தில் எப்படி மகா வீரர்களுக்கும் மகா தியாகிகளுக்கும் மகா ஞானிகளுக்கும் பஞ்சமில்லையோ அப்படியே மகா துரோகிகளுக்கும் பஞ்சமில்லை என்பது தெரிந்த விஷ்யம்தானே. நீர் அந்தப் பட்டியலில் இருந்தால் எனக்கு அதில் ஆட்சேபமில்லை.

    தமிழ் ஹிந்து தளத்தின் பெருந்தன்மையை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம். பகைவனுக்கும் அருளல் ஹிந்துக்களுக்கே உரித்தான இயல்பு. இதைத்தான் வேற்று சமய மத மாற்றிகள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. போதும் இந்தப் பெருந்தன்மையால் வரும் இழப்பு என்று கூறிவருவதுதான் என்னிடம் உள்ள குறை.
    (பரதிதாசன் மகன் பெயர் மன்னர் மன்னன். அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு சவடால் பேசும் பேர்வழி நீர் எனபதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு!)
    -மலர்மன்னன்

  59. //தகவல்களைச் சொன்னால் முதலில் அந்தப் பாவப்பட்டவர்கள் மீதல்லவா பாய்வீர்கள்! சர்வ வல்லமை படைத்த உங்கள் ஜமாத்துகள் அவர்களைச் சும்மாவிடுமா என்ன?//

    மலர்மன்ன்ன்,

    உங்களைப் பற்றி நீங்கள் தரும் தகவல்களே உண்மை இல்லை என்று கேள்வி. இதில், அடுத்தவர் பற்றி நீங்கள் சொல்லுவது மட்டும் உண்மையாக இருக்கப் போகிறதா என்ன ?

    ஜமாத்துக்கள் நீதியையும், ஒழுக்கத்தையும் மக்களுக்கு எடுத்துச் சொல்பவை. உங்களைப் போலப் பொய்யர்களின் கூட்டம் இல்லை. நீங்கள் சொல்லுவதில் உண்மை இருந்தால் இன்னேரம் வெளியே நடந்த விஷயங்களைச் சொல்லி இருப்பீர்கள். ஆனால், ஜமாத்துக்களின்மேல் பழியைப் போட்டுத் தப்பிக்கிறீர்கள். இது ஏமாற்றுபவர்களின் நடத்தை இப்படித்தான் இருக்கும்.

    “மேலும் இவர்களுக்கு முன்னிருந்த ஏனைய சமூகத்தவர்களும் இவ்வாறே பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை. ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூறட்டும்) (திருக்குர்ஆன் 34 : 45)”

    சவால் வீட்டால் வாலைக் குளைத்துக் கொண்டு ஓடும் கூட்டத்தின் முதல்தர பிரதிநிதி நீங்கதான். இந்தத் தமிழ் இந்து தளம் வெறும் தமிழ் தஜ்ஜால்களின் தளம்.

    .
    .

  60. பாசித்-ர்ஜீன்,
    சவூதியில் இஸ்லாம் முறையாக அனுசரிக்கப்படவில்லை என்கிறீர்களா? இதை பகிரங்கமாகக் கூட்டம் போட்டு அறிவித்து தீர்மானம் போட்டு சவூதி தூத்ரகம் அனுப்புங்களேன்!
    இங்கே வந்து வீரம் பேசுவதில் என்ன இருக்கிறது?

    மக்காவும் மதீனாவும் உள்ள, ஹஜ்ஜுக்கு ஏற்பாடு செய்யும் அதிகாரம் உள்ள சவூதியில் அனுசரிக்கபப்டுவது என்ன என்று கொஞ்சம் விளக்குவதோடு இஸ்லாமை முறையாக அனுசரிக்காத சவூதிக்கு மக்கா மதீனாவை பராமரிக்கவும் ஹஜ்ஜுக்கு ஏற்பாடு செய்யவும் உரிமை இல்லை என்றும் பகிரங்கமாக அறிவியுங்களேன்!
    -மலர்மன்னன்

  61. K L M பாசி(ஸ்)த் அலி என்னும் கயவன் மதிப்பிற்குரிய ஒரு பெரியவரைப் பார்த்து அவரைப் ‘பொய்யர்’ எழுதுவதை எல்லாம் இங்கு பதிக்க வேண்டாம் என்று ஆசிரியர் குழுவிடம் கேட்டுக் கொள்கிறேன்.

  62. \\\\\\\\இஸ்லாம் என்ன சொல்லுதுன்னு ஆணித்தரமா சொல்லிட்டேன்..அதுவல்லாது …எவன் என்ன சொன்னாலும் அவனுக்கு பதில்
    //இது தவிர மொகலாயன்,தெருவுல போரவன்,பொருக்கி திங்கிரவன் செய்ரதெல்லாம் இஸ்லாம்ன்னு சொல்லிக்கிட்டான்னா அவனுக்கு முஸ்லிம்கள் காட்டுவது //என்னன்னு முன்னமே சொல்லிட்டேன்..\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

    ஜெனாப் பாசித் எழுதியது, “பண்பாகப் பேசுவதை உங்களைப் போன்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது”. அவர் இந்தப் பொன்னான வாசகங்களை தவறுதலாக மலர்மன்னன் என்று எழுதிவிட்டார் போலும்.

    லக்னவி tehzeeb என்று வாய்க்கு வாய் சொல்லும் என் முஸல்மாணிய நண்பர்களிடம் இருந்து அவன், இவன் எவன், பொருக்கி இத்யாதியெல்லாம் லக்னவி tehzeeb ல் உண்டோ என கேட்டு தெரிந்து கொள்கிறேன். ஒருவேளை இவையெல்லாம் tehzeeb-e-melvisharam போலும். வாஹ்! என்ன பண்பு அருவியாய் பொழிகிறது.

    \\\\\\\\\\எல்லாம் ஒன்னு – ஆமாம் எல்லாருமே சுன்னி முஸ்லிமா இருக்கும் வரைக்கும் தான். \\\\\\\\\

    ஸ்ரீ சாரங்கன், ஒரு சின்ன திருத்தம். எல்லாருமே சுன்னி முஸ்லிமா இருந்தாலும் சண்டை சச்சரவுக்கு முற்றுப்புள்ளி என்றெல்லாம் நினைப்பது கூட கானல்நீரே. அதற்குள்ளும் குத்துப்பழி கொலைப்பழி அடிதடி ரணகளம் எல்லாம் உண்டு. உத்தர பாரதத்தில் சுன்னி முஸல்மான்கள் நேர் செங்குத்தாக பரேல்வி, தேவ்பந்தி என இரு பிரிவாக பிரிந்துள்ளனர். உலகில் உள்ள முஸல்மான் அல்லாதவர்களை முஸல்மான்கள் தீர்த்துக்கட்டுவதெல்லாம் அடுத்த பக்ஷம். ஷியா, அஹமதியா முஸல்மான்களை சுன்னி முஸல்மான்கள் தீர்த்துக்கட்டுவது கூட அடுத்த பக்ஷம்.பரேல்வி தேவ்பந்தி சுன்னி முஸல்மான்களிடையே உள்ள கொலைப்பழி குத்துப்பழி ஜகப்ரஸித்தம்.

    \\\\\\\\\\ஜமாத்துக்கள் நீதியையும், ஒழுக்கத்தையும் மக்களுக்கு எடுத்துச் சொல்பவை.\\\\\\\\\

    அப்படியா? அதில் ஜமாத் அஹ்ல்-ஏ-சுன்னத் உண்டா இல்லையா? அஹ்மத் ராஜா கான் பரேல்வி இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பின் ஏன் ஷியா, வஹாபி, அஹ்மதியா முஸல்மான்களுக்கு எதிராக ஃபாத்வா கொடுக்க வேண்டும்..

    கராச்சி, ஃபைஸலாபாத், தேரா இஸ்மாயில் கான் போன்ற ஹிந்துஸ்தானத்திலிருந்து பிளக்கப்பட்ட baqi sthan நரகங்களில் ஸிபாஹி-ஏ-ஸாஹபா பரேல்வி மஸ்ஜித்களில் ஏன் குண்டு வீச வேண்டும். ஏன் சஹோதர முஸல்மான்களை தீர்த்துக்கட்ட வேண்டும். மேல் அதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டி.

    https://en.wikipedia.org/wiki/Barelvi

    பரேல்வி முஸல்மான்கள் வந்தவர்க்ளோ போனவர்களோ இல்லை. நீங்கள் படிக்கும் அதே குரான்-ஏ-ஷெரீஃப் படிப்பவர்கள்.

    முஸல்மான்கள் முதலில் சஹோதர முஸல்மான்களிடம் கொலைப்பழியில்லாமல் நடந்து கொண்டாலே உலகில் ரணகளரி குறையும். ரப்பிடம் முதலில் இதற்கு து ஆ வாங்குங்கள்.

  63. K. L. M. பாசித் அலி,

    தயவு செய்து தமிழில் ஒழுங்காக எழுதுங்கள். உங்கள் பரம்பரையில் யாரோ ஒருவர் மதம் மாறியதன் விளைவு நீங்கள் இப்படி சொந்த இனத்திற்கே இப்படி துரோகம் செய்வராக மாறி உள்ளீர்கள். உண்மையில் ஆப்ரகாமிய மதத்தினர் புத்திசாலிகள் தான். எவ்வளவு அழகாக ஹிந்துக்களை மதம் மாற்றி அவர்களை மோத விடுகின்றனர்.

    ஒசாமா பின்லேடனுக்கு மசூதியிலேயே இரங்கல் தெரிவித்த கூட்டம் தானே? உங்களை எல்லாம் மதித்து சுதந்திரத்திற்கு முன்பே மதம் மாறிய மக்களை பாக்கிஸ்தானுக்கோ அல்லது பாக்கிஸ்தானில் இருக்கும் ஹிந்துக்களை எப்படி முஸ்லீமகள் நடத்தினார்களோ அப்படி நடத்தி இருந்தால் இது போன்று நீங்கள் எங்கள் மண்ணில் இருந்து கொண்டு எங்களையே இப்படி திட்டுவீர்களா?

    எல்லாம் எங்கள் நேரம். உங்களை சொல்லி தப்பில்லை. உங்கள் மூதாதையருக்கு துரோகம் செய்து உங்கள் பரம்பரையில் மதம் மாறினானே அவனை சொல்ல வேண்டும்.

    அரேபிய கூட்டத்திற்கு துணை போகாமல் உங்கள் பாட்டன் முப்பாட்டனால் தோற்றுவிக்கப்பட்ட பாரத தர்மத்திற்கு மாறுங்கள். இல்லாவிட்டால் நஷ்டம் உங்களுக்கே அன்றி, அரேபியாவிற்கு அல்ல.

    https://tamilhindu.com/2011/07/vampires-that-drained-sudan-3/

    இந்த கட்டுரையில் கருப்பு இன மதம் மாறிய பழங்குடியினர் எவ்வாறு அரேபிய முஸ்லீமகளால் அழிக்கப்பட்டனர் என்பது தெளிவாக உள்ளது.

    பாக்கிஸ்தானில் நடப்பது என்ன என்பது எங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். உங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம் அளிக்கிறது.

    ஒவ்வொடு முஸ்லீம் வளை தளத்திலும் அரேபிய செய்திகள், வளைகுடா செய்திகள் என்று ஒரு பகுதியை கொடுக்கும் பொழுதே நீங்கள் சொந்த மண்ணை விட்டு திட்டமிட்டு அரேபிய பாலைவன மண்ணுக்கு விலைக்கு விற்க்கப்படுகிறீர்கள் என்பதை உணரவில்லையா?

  64. எந்த நோக்கத்துக்காகப் புனைப் பெயர் வைத்துக்கொள்ளப்படுகிறது என்பது முக்கியம். ஓர் எழுத்தாளர் தமக்கென ஒரு புனைப் பெயரைத் தேர்வு செய்து கதை கட்டுரைகள் எழுதுவது வேறு. அது அவரது விருப்பம். ஆனால்—

    மொட்டைக் கடிதம் போடுகிறவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளமல்
    உண்மை விளம்பி என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொள்வது கோழைத்தனம். இதை எவரும் புனைப் பெயர் என கெளரவிப்பதில்லை. அதேபோல்
    ஒரு கருத்துப் பரிமாற்றம் நடக்கும் தளத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வம்பு பேசுவதற்கென்றே ஒரு நபர் ஒரு போலிப்பெயரை வைத்துக் கொண்டால் அது உள் நோக்கம் உள்ள ஒரு முறைகேடான செயலாகவே இருக்கும். பிறரை வேண்டுமென்றே திசை திருப்ப மேற்கொள்ளும் போக்கிரித்தனம்தான் அது. தான் யார் என்று அறிமுகம் செய்துகொள்ளத் துணிவற்ற பயந்தாங்கொள்ளித்தனமாகவும் அது கருதப்படும்.
    தன் பெயரை வெளியிடும் துணிவற்ற அனாமதேயங்கள் வெளியிடும் கருத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது. மொட்டைக் கடிதாசுகளுக்குக் கொடுக்கிற மரியாதையைத்தான் இதற்கும் கொடுக்க முடியும்.
    -மலர்மன்னன்

  65. .K. L. M. பாசித் அலி

    //
    ஜமாத்துக்கள் நீதியையும், ஒழுக்கத்தையும் மக்களுக்கு எடுத்துச் சொல்பவை
    //

    இது உண்மை தான் அனால் இவையும் கூட

    பில் கிளிண்டன் ஒரு ஏக பத்தினி விரதர்

    கபில் சிபலுக்கு பொய் சொல்லவே தெரியாது

    நரசிம்ம ராவ் மற்றும் மன் மோகன் சிங்க் இவர்களை விட அதிகம் பேசுபவர்கள் உலகில் இல்லை.

    தந்தை பெரியார் ஒரு ராம பக்தர் புத்திசாலியும் கூட

    நொட்டாங்கையர்கள் தான் உலகில் குழப்பே இல்லாமல் (மற்றவரையும் குழப்பாமல்) பேசத் தெரிந்தவர்கள் – gans என்பவர் எழுதுவதை படித்தாலே புரியும்

    ஜோ அமலன் புத்திசாலி

    அரபு நாட்டுக்காரன் தான் உலகிலேயே அறிவாற்றல் படைத்தவன்

    உலகிலேயே புத்திசாலி திக் விஜய் சிங் அப்புறம் பாகிஸ்தான் காரர்கள்

    கீழ்பாக் மெண்டல் ஹாஸ்பிடலில் காட்ராக்ட் ஆபரேசன் தான் செய்யபடுகிறது

    திருநெல்வேலி தென்னாப்ரிக்காவில் உள்ளது

    அமெரிக்கா காயல் பட்டினத்தில் உள்ளது

    ஒபாமா கீழக்கரையில் பிறந்தவர்

    குரான் தான் உலகின் ஒளி விளக்க – அதை விட அமைதியை படிக்கும் ஒரு புத்தகம் உலகில் இல்லை

    வடிமேல் அழகர் ஈஞ்சம்பாக்கம் பட்டாபிராம அய்யங்கார் ஐந்து வேலையும் தொழும் வஹாபி முஸ்லிம்

    கருணாதிதி ஊழலுக்கு எதிரான நெருப்பு

    கருணாதி ஒரு சமஸ்க்ரித்த பண்டிதர் – சென்னை சம்ச்க்ரித்த கல்லூரியின் ஸ்தாபகர்

    உலகிலேயே சோமாலியா தான் மிகவும் வளமையான நாடு – அங்கு பசி பட்டினியே இல்லை

    சரக்கடித்தால் ஸ்டெடியா நடக்கலாம்

    2012 ல் உலகம் அழிந்துவிடும்

    அப்போது இஸ்லாம்யியார்களை மட்டும் அல்லா காப்பாத்துவார்

    உலகிலேயே சாது மனிதர் என்றால் அது ஒசாமா தான் அப்புறம் ஸல் அவர்கள்.

    அமேரிக்கா யார் மீதும் இது வரைக்கும் ஆக்கிரமிப்பு செய்ததில்லை

    ஹிந்து மதம் தான் உயந்த மதம் என்று புனித குர்ஆனில் 324 தடவை சொல்லப் பட்டுள்ளது

    பைபிள் இது வரை ஒரு முறையே எழுதப்பட்டு மாற்றமே இல்லாமல் இன்று வரை உள்ளது

    குர்ஆனில் logical ஓட்டைகள் இல்லவே இல்லை – அது நபியின் உள்ளார்கள் இல்லை அல்லாவின் பொன் வாக்குகளே

    உலகம் தட்டை என்று குரான் சொல்லவே இல்லை

    ராகுல் காந்தி நெஞ்சுரம் கொண்ட ஆம்பளை

    கமல ஹாசனை விட பெண் ஆசை இல்லாதவனை பார்க்கவே முடியாது

    பாபா தான் ரஜினியின் மிக சிறந்த படம்.

    அப்பாஸ் தான் தமிழில் சிறந்த நடிகர்

    S க்கு முன்னாடி வரும் வீ தான் உலகிலேயே புத்திசாலி மனிதர்

    இஸ்லாம் ஒரு அன்பு மார்க்கம்

  66. ” ‘Regret’ என்கிறார்கள். கவனியுங்கள் ‘apologize’ – மன்னிப்பு கிடையாது; வருத்தம்தான். “நான் சொன்னது என்னவோ உண்மைதான், ஆனா அது உங்க மனசை புண்படுத்தியிருந்தா வருத்தம். போதுமா? பொத்திகிட்டு போங்கடா கருப்பன்களா!” இதைத் தான் நாசூக்காக சொல்லியிருக்கிறார்.”

    ஜோ அமலன்,

    மேற்கொண்ட வரிகளில் என்னால் எந்த ஆபாசத்தையும் பார்க்க முடியவில்லை. குளவி இக்கட்டுரைக்கு கையாண்டிருக்கும் மொழிநடைக்கு அவை சரியாகவே இருக்கின்றன. அந்த அமெரிக்க அரசு பிரதிநிதி சொன்னது உங்களுக்கு பெரிதாக படாதபோது இது பெரிதாகப் படுவது வியப்பில்லை. நீங்கள் சமனாகத்தான் இருக்கிறீர்கள்.

    இங்குள்ள ஆண்கள் சிவப்புப் பெண்களையே வேண்டுவதாலும் விமானப் பணிப்பெண் போன்ற வேலைகளுக்கு கருப்புப் பெண்கள் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை என்பதாலும் இதுபோன்ற இன்னபிற கருப்புவெறுப்பினாலும் அந்த அமெரிக்க அரசு பிரதிநிதி இங்கு எங்கள் நாட்டுக்கு வந்து எங்களை கருப்பென்றும் அழுக்கென்றும் இழித்துப் பேசியது உங்களுக்கு சமாதானமாகப் போய்விட்டது. ஆனால் எனக்கு அப்படி இல்லையே! குளவிக்கும் அப்படி இல்லை போலிருக்கிறது. இங்குள்ளவர்கள் இதையெல்லாம் மாற்றிக் கொள்ளாதவரையில் எல்லா நாட்டு அரச பிரதிநிகளுக்கும் இவ்வாறு பேசுவதற்கு நீங்கள் உரிமம் கொடுத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. இவ்வாறு உரிமம் கொடுப்பதற்கு உங்களுக்கு உரிமத்தை இங்குள்ள சிவப்பு விரும்பிகளிடமிருந்து எடுத்துக் கொண்டீர்கள் போலிருக்கிறது .

    ஜோ அமலன் அறைகூவல் விடுகிறார்.”எல்லா நாட்டு அரச பிரநிதிகளும் இங்கு வாருங்கள்! இங்குள்ளவர்கள் சிவப்பு நிறத்துக்கு சில முன்னுரிமைகள் கொடுக்கிறார்கள், ஆகவே வாருங்கள்! வந்து ஆசை தீர வசை பாடுங்கள். இதை உங்கள் நாட்டிலேயே சொல்லிக் கொண்டிந்தால் இங்குள்ளவர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அமலனுக்கு என்ன பலன்? ஆகவே வாருங்கள், வசைமழை பொழியுங்கள்! கருப்புக்கு என்றில்லை, இங்கு எல்லா குறைகளும் இருக்கின்றன! எல்லாவற்றையும் வசை பாடுங்கள்!”

  67. ஜோ அமலன் என்கிற புனைப் பெயரில் ஒளிந்திருக்கும் பயங்கொள்ளிக்க …எனக்கு எவ்வளவோ அச்சுறுத்தல்கள் இருந்தும் அன்றும் இன்றும் என்றும் நான் மலர்மன்னன்தான். நான் வெளியிடும் கருத்துகளும் எனது செயல்பாடுகளும் நான் யார் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்தும். அதன் காரணமாகவே வேற்று மத வெறியர்கள் என் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தியதும் உண்டு. உம்மைப்போல் ஒளிந்துகொண்டு வம்புபேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நேரமும் இல்லை. //

    திரு மலர்மன்னன் !

    நான் ஏற்கனவே ஒன்று சொல்லிவிட்டேன். அதை நீங்கள் சரியாகப் படிக்கவில்லை போலும். இணையதளங்கள் பலருக்கு ஒரு பொழுதுபோக்கு, இன்னும் சிலருக்கு ஒரு பயனி. அஃதாவது அறிவுத்தேடல். அவர்களோ இவர்களோ இணயதளங்களில் தங்கள்தங்கள் உணமையடையாளத்தைக் காட்டவேண்டும் என்று எவருமே நிர்ப்பந்திக்கவில்லை. குறிப்பாக பெண்கள் என்றால் கண்டிப்பாகக் கூடாது.

    அது கிடக்க. ஓரிரு இணைய விவாதமேடைகள் தவிர வேறெந்த மேடைகளும் விவாதத்தில் கலந்து கொள்வோரின் உண்மை வடிவைச் சொல்ல நிர்பந்திக்கா. அப்படி நிர்ப்பந்தித்தால் பிர்ச்சினையேயில்லை உங்களைப்போன்றோருக்கு. என்னைபோன்றோர்கள் எழுத மாட்டார்கள் :-))).

    மதம், ஜாதி, அரசியல் போன்ற உணர்ச்சிகரமான விவாதக்கருத்து மேடைகளில விவாதம் செய்வோர் அனைவரும் துறவிகள் அல்ல. அவர்களுக்கு முழுனேர வேலை இருக்கும். அவையே அவர்கள் வாழ்க்கை. புருசன், பிள்ளைகள் என்றிருக்கும். எனவே அவர்கள் தங்களைக்காட்டிக் கொள்வதில்லை. அது சரியாகும். இன்னும் சிலர் அஃதாவது உங்களைப்போல – தங்கள் கருத்துக்களைப் பறைசாற்ற வாணாளையே அர்ப்பணிக்கிறார்கள். நீங்கள் உங்களை ஆரெனக்காட்டிக் கொள்ளலாம். உங்கள் மீது வன்முறைத்தாக்குதல் நடந்தால் உங்களைச்சார்ந்த மற்றவர்களுக்கு “எனக்குப்பிறகு என்னாவாகுமோ?” என்ற கவலை உங்களுக்கு இல்லை. எங்களுக்கு இருக்கிறது சார். இதற்காக எங்களைப் பயந்தாங்கொள்ளிகள் என்று இழிப்பது எப்படியென்றால், தன்னைப் போலவே எல்லாரும் இருக்கவேண்டும் என்று அடம்பிடிப்பது போல. எல்லாரும் துறவிகள் ஆக முடியுமா ?

    //நீர் வெளியிடும் கருத்துகளும், வெளியிடும் முறையும் உம்மை ஒரு ஊடுருவி என்பதை நிரூபணம் செய்கின்றன. ஒன்று நீர் ஊடுருவியாக இருக்க வேண்டும். இல்லயேல் துரோகியாக இருக்க வேண்டும். இரண்டில் எது உமக்குச் சரிப்படும் எனப்தைத் தெரிவிக்கவும். உமது எழுத்தை வைத்தே உம்மை ஊடுருவி என்கிறேன். அதை மறுக்கிறீர் என்றால் துரோகியாகத்தான் இருந்தாக வேண்டும். ஊடுருவியா துரோகியா? எது செளகரியம்? கொஞ்சம் கெளரவமாக இருக்கட்டுமே என்றுதான் ஊடுருவி என்கிறேன். ஹிந்து சமூகத்தில் எப்படி மகா வீரர்களுக்கும் மகா தியாகிகளுக்கும் மகா ஞானிகளுக்கும் பஞ்சமில்லையோ அப்படியே மகா துரோகிகளுக்கும் பஞ்சமில்லை என்பது தெரிந்த விஷ்யம்தானே. நீர் அந்தப் பட்டியலில் இருந்தால் எனக்கு அதில் ஆட்சேபமில்லை.//

    முதலில் ஊடுருவி என்றீர்கள் ! நான் புனைப்பெயரை வைத்து ஒருவரின் மதத்தைக் கண்டுபிடிக்கும் தவறான போக்கைச்சுட்டிக்காட்டியவுடன், துரோகி என்கிறீர்கள். மேலே சொன்ன எதிர்க்கருத்தே ஈண்டும் பொருந்தும். உங்களுக்குப்பிடிக்காக் கருத்துகள் கொள்வோரெல்லாம் துரோகிகள். அப்படித்தான் உங்களுக்குத் தெரிகிறது இல்லையா?. இஃது உங்களில் அறியாமையைத்தான் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. மலர்மன்னன் – நம் கருத்திடம் மாறுபட்டோர் துரோகிகள் இல்லை.

    //தமிழ் ஹிந்து தளத்தின் பெருந்தன்மையை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம். பகைவனுக்கும் அருளல் ஹிந்துக்களுக்கே உரித்தான இயல்பு. இதைத்தான் வேற்று சமய மத மாற்றிகள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. போதும் இந்தப் பெருந்தன்மையால் வரும் இழப்பு என்று கூறிவருவதுதான் என்னிடம் உள்ள குறை.
    (பரதிதாசன் மகன் பெயர் மன்னர் மன்னன். அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு சவடால் பேசும் பேர்வழி நீர் எனபதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு!)//

    துஷ்பிரயோகமா அல்ல நல்லெண்ணப்பிரயோகமா என்பதும் உங்கள் பார்வை மட்டுமே. உங்களுக்குப் பிடிக்கா கருத்துகளாயிருப்பின் அவை இங்கு போடப்பட்டால் அஃது இத்தளத்தை துஷ்பிரயோகப்படுத்துவதாகும். Your subjective opinion. உங்களுக்குப்பிடிக்கா கருத்துக்கள் பெரும் ஆன்மீகவாதிகளும் ஆச்சாரியர்களும் சொல்கிறார்கள்; சொல்லியிருந்திருக்கிறார்கள். ஒரே விடயத்தை பல ஆன்மீகவாதிகள் பலவழிகளில் எதிர்னோக்கியிருக்கிறார்கள் என்பது இந்து மத வரலாறு. ஒரேவிடயத்தை ஒரேவிதமாக அணுகவேண்டும் இல்லையென்றால் துரோகிகள் என்பதுவே உங்கள் கட்சி. இது கிட்டத்தட்ட நீங்கள் எந்த மதத்தைத்தாக்கி இப்போது இங்கே எழுதிக்கொண்டிருக்கிறீகளோ அதையே எனக்கு நினைவுபடுத்துகிறது. You have extreme views and there are millions of Hindus who are moderate in their views. You cant accuse all of them for being that. They don’t insist that you shd have moderate views like them. If they do, they can’t be moderates, can they ?

    If u insist that every Hindu should hold extreme views as you and if they don’t, they are traitors, it is – should I say that? – akin to the very religion you are attacking here: Islam. There, there is no avenue, no way, and no room whatsoever for taking a different view. Either you are a 100% Muslim or you are not a Muslim.

    “Either u r with us, or u r against us” – u r saying that here to me. If this is your way, then Islam is the right place for you. You can practise your brand of religion there happily unquestioned. In Hindu religion, u ought to accommodate different views. Indeed, u must respect such views, if not accept them. There is no place at all for extremists in Hindu religion.

    Extremists are extremists anywhere: all that they desperately seek is just a trivial straw to hold on, to hammer out, and to attack upon.

    A good fight – who cares for which cause ? A fight is a fight. Enjoy yourself: no matter you call yourself a Hindu, or a Muslim or a Christian!

  68. Mr Malarmannan

    துரோகி என்பதிலிருந்து இறங்கி வந்துள்ளீர்கள். குட் சேஞ்ஜ். U seem to have introspected your intemperate views.

    உள் நோக்கம், வம்பு பேசுவது என்பதெல்லாம் சப்ஜக்டிவ் ஒபினியன்.

    மரியாதையெல்லாம் வேண்டியதில்லை எனக்கு. மரியாதையை வைத்து நான் என்ன செய்ய ?

  69. //நீங்கள் கூறுவது போல் அமெரிக்க துணை தூதரக அதிகாரியான அந்தப் பெண் அமெரிக்காவில் அவருடைய உறவினரிடமோ, நண்பரிடமோ மட்டும் சொல்லியிருந்தால் இந்த கட்டுரையே வந்திருக்காது. ஆனால் நடந்தது என்ன வென்றால் இங்கே எங்கள் இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் வந்து, சென்னைக்கு அருகில் உள்ள காட்டான்குளத்தில் உள்ள SRM பல்கலைக் கழகத்தில், நடந்த விழாவில் எங்கள் தமிழர்களிடமே நேரில் வந்து சொன்னது.

    ///உங்களிடம் நேரில் வந்து சொல்லவில்லை. நேரில் வந்து சொன்னால்தான் தவறு.///

    அவர் எங்களிடம் நேரில் வந்து தான் சொல்லியிருக்கிறார் இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்.????//

    Mr Danapal

    If she had said it to the audience of Tamilans, it is wrong only in the sense that she chose an inappropriate stage to air her prejudice. Not at all strange if she holds such views to herself.

    But the qn is: Was it intentional ? If intentional, it Is a gratuitous insult or racist remark. All such racist remarks are objectionable and reprehensible – no doubt about it.

    But racism per se is common and natural in all countries, esp. in a multiculturalist society. All of us hold racist views. Myself have many, many as my education was defective.

    I hav given many instances already to show where we hold such racism or discriminating attitudes towards fellow humans.

    Some can’t stand Muslims; some Muslims can’t stand Hindus; some can’t stand Christians; some can’t stand Dalits; some can’t stand Brahmins; – here have given only religious and casteist discrimination or prejudices. There are many kinds in open society.

    Prejudices are cultural hangups. Can be gradually erased but for that, education and good upbringing are necessary. If a society fails on that score, it will produce extremists and racists.

    It is surprising that an educated American woman, that too, sent abroad to be a messenger for her country, harbours such prejudices against the very people among whom she has come to live; and she has the naivete to air such prejudices from a public platform.

    It is an unfortunate occurrence. But this essay writer Kulavi exploiting such an occurrence to take us on a gullible tour of religion and religious politics – is too much to bear, isn’t ?. Hav already pointed out that.

  70. I wrote: “There is no place at all for extremists in Hindu religion. ”

    Rama Sir may kindly note that the above is not my original statement. I shoud give credit to its creator. He is none other than the incumbent president of RSS. He made the statement which was published in all newspaper – I think, a year ago. Perhpas he is just saying the open policy of the religion practised from time immemorial.

  71. //ஆனால் இங்குள்ள இந்துக்களிடம் அவர் வந்து விவாதிக்கிறார். ஹிந்துக்கள் கடவுளின் நிறம் என்ன கறுப்பா வெளுப்பா என்று கேட்கிறார்களாம். இதை அவர் தம ‘சகோதரர்களுக்கு’ எழுதுகிறார். அப்போது அவர் சொல்கிறார்: “For as there is so great a variety of color among men and the Indians being black themselves, consider their own colour the best, they believe that their gods are black. On this account the great majority of their idols are as black as black can be and moreover are generally so rubbed over with oil as to smell detestably and seem to be as dity as they are ugly and horrible to look at. ” இங்கு ஜோ அமலன் சவேரியின் நிற வெறுப்புக்கான அடுத்த கத்தோலிக்க் ஜல்லியை தொடங்குவதற்கு முன்னால் ஒன்றை கவனிக்க வேண்டும். சவேரி இதை எழுதும் இடம் கொங்கணத்திலிருந்து. அங்குள்ள மக்கள் தங்களை கறுப்பு என்றோ தங்கள் தெய்வங்களை கறுப்பு என்றோ கருதியிருக்க வாய்ப்பில்லை. இது சவேரியின் சுய பிரதாபம் மட்டுமே. இதில் வெளிப்படுவது சவேரியின் நிற வெறுப்பு.

    //

    Source please. The quotation has not correctly come out. I will go to the source to read it there.

    எங்கிருந்து எடுத்தீர்கள் எனபதைசொன்னால் அங்கேயே போய்ப் படித்துக்கொண்டு தெரிகிறேன். ஏனென்றால், சேவியர் சொன்னதாக நீங்கள் எழுதியிருப்பது தெளிவாக இல்லை.

    இரண்டாவது, இதை ஆருக்கு எழுதினார் என்பதும் தெரியப்பட வேண்டும்.

  72. //ஜோ அமலன் போன்றவர்களுக்கு போப்பாண்டை மீது அடிமை விசுவாசம் இருக்கிறதோ அதேபோல இன்னும் பரவலாக வெள்ளைத் தோல் மோகம் இருக்கிறது//

    Mr Kulavi

    நண்பரே, சொற்களை அளந்துதான் விடவேண்டும். நீங்கள் மட்டும்தான் இந்து என்ற பந்தா வேண்டாம். கொல், அடி, குத்து என்றால்தான் இந்துவா ? கிருத்துவனைக்கொல், முசுலிமைக்கொல் என்று நான் எழுதவேண்டும். இல்லையென்றால் நான் அவர்களின் கைக்கூலி.

    இப்படிக்கொள்கையை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இருக்கவேண்டிய மதம் இதுவல்ல. ‘அன்பிலன்றி ஆழியானைக் காண வல்லார் ஆரோ?’ என்பதுவே கொள்கை.

    அன்பே சிவம்.

    உரையாடும்போது கண்ணியமானச்சொற்களைத்தான் விட வேண்டும்.

    இந்து என்ற பேரையே நாசப்படுத்தவா இங்கு எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் ?

    (edited and published)

  73. நிற அடிப்படையிலான வெறுப்பு இந்தியாவுக்கு ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியான விசயம். எப்படி ஆங்கில மீடிய மோகம் இருக்கிறதோ எப்படி fair and lovely மோகம் இருக்கிறதோ எப்படி //

    குளவி!

    இந்த விசயத்தில் நீங்களும் நானும் மாறு படுகிறோம். உடனே என்னைத்துரோகி என்று ரீல் விட்டுவிடாதீர்கள்.

    நிற அடைப்படியிலான விருப்பு, வெறுப்புகள், ஆங்கில மொழி மோகம், இன்னபிற – தொடக்கத்தில் ஆங்கில காலனியாக இருந்தபோது முளைவிட்டிருக்கலாம். ஆனால் இன்றல்ல. இந்தியா நினைத்திருந்தால் ஆங்கிலத்தை முழுவதுமாக 1945லேயே விரட்டியிருக்கலாம். ஆனால் முடியவில்லை. காரணம், இந்தியர்கள் ஒரே ஒரு பாசையை மட்டும் பேசவில்லை ஜப்பான், சீனா, ரஷ்யா போன்று. இந்திமொழி பலமானிலங்களில் பேசப்பட்டாலும், தென்மானிலங்களுக்கு அஃதொரு அன்னிய பாசையே. எனவே ஆங்கிலம் ஒரு தேவையாகி விட்டது. மேலும், வியாபார நோக்கில் ஆங்கிலமே செல்லுபடியாகிறது.

    இதற்கெல்லாம் வெள்ளைக்காரன் காரணமன்று.

    முகப்பூச்சூ, தன்னை அலங்கரித்தல், வெள்ளை நிறம் போற்றுதல், கறுப்பு நிறம் இகழ்வு -இவையெல்லாம் எப்போதும் இருக்கும். எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது. நிற அடிப்படை ரேசிசம் என்றுமே இருக்கும். சட்டம்போட்டு அடக்கி வைக்கமட்டுமே முடியும்.

    உங்களுக்கு ஒரு மன ஆறுதலுக்காக இப்படி முடிச்சுப்போட்டுப் பேசிக்கொள்ளுங்கள். பரவாயில்லை.

    ஆனால், உலகத்தில் காண்பது மட்டுமே உண்மை. கற்பனை உண்மையாகாது.

  74. ஜோ.அமலன் அவர்களே….

    // ஜோ அமலன் கிருத்துவனா இந்துவா ? கிருத்துவன் என்றாலே ஊடுருவி. கிருத்துவன் என்று எப்படி கண்டார்? //

    ப்ரீயா விடுங்க……..ஏதோ பெரியவர்…பாவம்….தெரியாம சொல்லிட்டார்…..

    ” ஜோ.அமலன் ரேயன் பெர்னாண்டோ ” – எத்தனை அழகான ஹிந்துப் பெயர்? இதப்போய் கிரித்தவபெயர்னு எப்படி சொல்லலாம் ?

  75. Joe Amalan, Tamil Hindu saved you from sleepless nights. My previous comments were not published.
    Question to Th: Why does TH give breathing space to anti Hindu internet trolls like JA? It seems he is achieving his objective of hijacking the whole discussion.

  76. /” ஜோ.அமலன் ரேயன் பெர்னாண்டோ ” – எத்தனை அழகான ஹிந்துப் பெயர்? இதப்போய் கிரித்தவபெயர்னு எப்படி சொல்லலாம் ?
    .//

    சாரு ஹாசன், சந்திர ஹாசன், கமல் ஹாசன் எவ்வளவு அழகான இந்துப்பெயர்கள் !

  77. ப‌ய‌ங்க‌ர‌ க‌ற்ப‌னை ம‌ல‌ர்ம‌ன்ன‌னுக்கு. என்னை நேரிலேயே பார்க்க‌வில்லை. ஆனால் க‌ற்ப‌னை. அடிம‌னத்தில் மிசுனோரி என்று ப‌ய‌ம். இல்லையா ? இத்த‌ள‌ நிர்வாகிக‌ளிட‌ன் சொல்லி என்னை வெளியில் அனுப்ப‌ச்சொல்லிவிடுங்க‌ள். அவ‌ர்க‌ள் ப‌ண்ண‌ட்டும்.

    I still stand by my conclusion. The elitism in the religion should go. People like Malarmannan is useless to bring the religion to common Tamil masses. He may claim to have converted a few catholics but it is only he who s saying that. I have not read anything abt it.

    According to my observations, the elitism has not gone completely. I am glad that this .com is doing its best by releasing many essays which will send elitism out, and also having taken a firm stand against castes and other kinds of discrimination among the Hindus. I am glad that it is strong in making it known that it wont project any group in the religion as holier than others. Perfect equality will broadbase it. Inclusive religion is all v need. Of course, this .com s releasing other kinds of essays on other topics, with which I am not enamoured. I am primarily attracted by their bold stand in such matters which are dear to my heart.

    We ought to attack anyone -howsoever high he may be – either here or outside – who tries to bring back inequality through elitism.

    //இதனால்தான் இந்த விஷக் கிருமிகளை உள்ளே விடக் கூடாது என்று நான் சொலவது!
    //

    This s what I want. Insist that I shd be ousted from here. Let the admn shut me out. That will, alas, endorse my statement that it s people like u whom Hindu religion wants. Not ppl like me. It s not I but u who divide it. U will b exposed by the very .com in which u r writing.

    நான் தென்மாவட்ட மக்களிடம் சொன்னால், அவர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

    “அவர்களிடம் ஏன் போய் வாதாடுகிறீர்கள் ? அவர்கள் நம்மை என்றுமே பக்கத்தில் விடமாட்டார்கள். அவர்கள் ஹை… நாம லோ… என்பது அவர்களின் குருதியில் ஊறிய ஈனப்புத்தி. அவ‌ர்க‌ள் மாற‌வே மாட்டார்க‌ள். அன்பில‌ன்றி ஆழியானைக்காண முடியுமா? என்று சொல்லி விட்டார‌ல்ல‌வா? அதைப்ப‌டித்துத் திருப்திய‌டைவோம்” என்பார்க‌ள்.

    தமிழ்.ஹிந்து. காம் என்பது 7 கோடித் தமிழரையும் குறிக்க வேண்டும். அது மலர்மன்னனுக்கு வேண்டியவர்களை மட்டும் குறிக்கக்கூடாது.

    A dalit , “நான் போனேன், விட்டார்கள், படித்தேன், வந்தேன்” என்று அலாக்காகச் என்று சொல்லமுடியுமோ, அன்றுதான் தமிழ். ஹிந்து 7 கோடித் தமிழர்களையும் குறித்ததாகப் பொருள். கோடிக்கணக்கான தமிழர்களுக்கு மதம் இன்னும் எட்டாக்கனி.

    இங்குதான் என்னால் எல்லாமே எழுதப்படுகிறது. இதுபோல் வேறெங்கெல்லாம் இந்து எலீட்டுக்கள் கூடி பிரிவினையை மனதில் வைத்துக்கொண்டு, அதைச்சுட்டிக்காட்டுபவனை வைத்தே அதை மறைக்கப்பார்க்கும் தந்திரம் பண்ணப்படுகிறதோ, அங்கெல்லாம் இப்படி எழுதியிருக்கிறேன். Will write. No stopping however Malarmannan tries.

    ATTACK !

  78. ////Jo.Amalan
    18 August 2011 at 11:34 am
    நிற அடிப்படையிலான வெறுப்பு இந்தியாவுக்கு ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியான விசயம். எப்படி ஆங்கில மீடிய மோகம் இருக்கிறதோ எப்படி fair and lovely மோகம் இருக்கிறதோ எப்படி //
    குளவி!
    இந்த விசயத்தில் நீங்களும் நானும் மாறு படுகிறோம். உடனே என்னைத்துரோகி என்று ரீல் விட்டுவிடாதீர்கள்./////
    ஐயா சாமி குளவி மட்டும் அல்ல இங்கு இந்த கட்டுரை விசயத்திலே இந்த கட்டுரை மட்டும் அல்ல இங்கு வெளியிடப்படும் ஒவ்வோர் கட்டுரையிலும் நீங்கள் மட்டும் இங்குள்ள மற்ற எல்லா வாசகர்களின் கருத்துடனும் வேறுபடுகிறீர்கள்.ஒன்று மற்ற எல்லோரும் தவறானவர்கள் அல்லது நீங்கள் தவறானவர். அது எப்படி சார் எல்லாருமே உங்கள் கருத்தை எதிர்க்கின்றனர் இங்கு எல்லோருமே தவறான கருத்துடையவர்களா?
    அப்புறம் என்ன நீங்கள் புதிதாக ஒரு இந்துமதத்தை கண்டு பிடித்துள்ளதாக கூறி கொண்டிருக்கிறீர்கள் யாருக்கும் இந்துத்துவம் தெரியவில்லை போல இருக்கிறதே உங்கள் கருத்துகளை பார்க்கும்போது. நீங்கள் கண்ட இந்துமதம் எப்படி இருக்க வேண்டும் என்றாவது சொல்லி விடுங்களேன்,இங்கு யாருக்கும் தெரியவில்லை தெரிந்து கொள்வோம்.
    ///ஒரு சின்ன அதிகாரி அவர். அவர் சொன்ன சொற்களை வைத்து ஒரு கட்டுரை வரைய முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சேவியர், ஆப்பிரிக்கா, இந்துமதம், சாவர்க்கர் என்று அசோசியன் ஆஃப் தாட்ஸ். பலே குளவி ! பாராட்டுக்கள் !! நல்ல திறமை./////
    ஒரு கட்டுரையை விட பலமடங்கு மறுமொழி இட்டுக்கொண்டே இருக்க முடியமா? வெள்ளை மோகத்தை பற்றிய கட்டுரையை கொண்டு இந்துக்கள் எப்படி பேச வேண்டும் வரை அறிவுரை கருத்துகளை எழுதி கொண்டு இருக்கிறீர்களே அசொசியசன் ஆப் தாட்ஸ் பலே

  79. சரவணக்குமார் ! என் பிள்ளைகள் பெரிய்வர்களாகி செட்டில் ஆனதும் நான் என் உண்மைப்பெயரை வெளியிடுகிறேன். அப்போது வாருங்கள். நம்ம ரெண்டுபேரும் திருப்பதி யாத்திரை செல்லலாம்.

  80. //ஒரு கருத்துப் பரிமாற்றம் நடக்கும் தளத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் //

    Mr மலர் மன்னன்

    தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தேவையில்லையென்று நன்றாக விளக்கியிருக்கிறேன். மீண்டும் படிக்கவும். சரவணக்குமாருக்குச் சொல்லிய பதிலே உங்களுக்கும். என் பிள்ளைகள் பெரியவர்களாகி என்னைச்சாரா நிலையடைந்ததும் உங்களைக்கூப்பிட்டு என்னை வெளிப்படுத்திக்கொண்டு கருத்துப்பரிமாற்றம் பண்ணுகிறேன். அதற்குள் நீங்கள் 100 ஐத் தாண்டிவிடுவீர்கள். :- (

    கருத்துக்கள் எப்போதுமே தான் என்ற தன்மையை வைத்து எழுதப்படுவதில்லை. தனியாக விலகி நின்றும் எழுதலாம். அதைத்தான் நான் செய்கிறேன் என்று விருச்சத்திடம் விளக்கிவிட்டேன். மீண்டும் படியுங்கள்.

    அப்படி விலகி நின்று எழுதும்போது மட்டுமே கருத்து பரிமாற்றம் உண்மையில் நிகழ முடியும். உணர்ச்சிவேகத்தில் ஆபாச சொற்களைத் திட்டி எதிர்க்கருத்துடையோரை ஓண்டிக்கு ஒண்டி வாரியா? என்று கேட்பது கருத்து பரிமாற்றமல்ல.

  81. ஐயா சாரங் அவர்களே, .K. L. M. பாசித் அலி

    //
    ஜமாத்துக்கள் நீதியையும், ஒழுக்கத்தையும் மக்களுக்கு எடுத்துச் சொல்பவை
    //

    இது உண்மை தான் அனால் இவையும் கூட….

    இதை படித்த பிறகு, வயிறு வலிக்க சிரித்தேன். தமிழ் ஹிந்து தளம் என் சிந்தனைக்கு தீனி தந்தது ! இன்று சிரிக்கவும் வைத்தது ! இங்கு எழுதப்படும் கட்டுரைகளை விட, மறுமொழிகள்தான் அட்டகாசமாக உள்ளது!

    இனி , மலேசியாவில் உள்ள என் அனைத்து ஹிந்து நண்பர்களுக்கும் இந்த தளத்தை அறிமுக படுத்த போகிறேன்.

  82. //இங்கு இந்த கட்டுரை விசயத்திலே இந்த கட்டுரை மட்டும் அல்ல இங்கு வெளியிடப்படும் ஒவ்வோர் கட்டுரையிலும் நீங்கள் மட்டும் இங்குள்ள மற்ற எல்லா வாசகர்களின் கருத்துடனும் வேறுபடுகிறீர்கள்.ஒன்று மற்ற எல்லோரும் தவறானவர்கள் அல்லது நீங்கள் தவறானவர். அது எப்படி சார் எல்லாருமே உங்கள் கருத்தை எதிர்க்கின்றனர் இங்கு எல்லோருமே தவறான கருத்துடையவர்களா?அப்புறம் என்ன நீங்கள் புதிதாக ஒரு இந்துமதத்தை கண்டு பிடித்துள்ளதாக கூறி கொண்டிருக்கிறீர்கள் யாருக்கும் இந்துத்துவம் தெரியவில்லை போல இருக்கிறதே உங்கள் கருத்துகளை பார்க்கும்போது. நீங்கள் கண்ட இந்துமதம் எப்படி இருக்க வேண்டும் என்றாவது சொல்லி விடுங்களேன்,இங்கு யாருக்கும் தெரியவில்லை தெரிந்து கொள்வோம்//

    நூற்றுக்கணக்கில் இங்கு போடப்பட்ட கட்டுரைகள் இருக்கும். அவைகளில் நான் போட்ட போடும் பின்னூட்டங்கள் வெகு சிலவற்றில் மட்டுமே கின்றன. தற்போது கூட கிட்டத்தட்ட பத்துகட்டுரைகளுக்குமேல் முகப்பில் காட்டப்படுகிறது. ஆங்கு எதிலும் நான் எழுதுவதில்லை. மேலும், நான் ஏற்கனவே சொல்லியது போல இந்த .காமின் பல அணுகுமறைகள் எனக்குப்பிடிக்காது. எனக்குப்பிடிக்கா விசயங்களில் நான் தலையிடுவது இல்லை. நான் இத்தளத்தில் நிரந்தர வாசகன் இல்லை.

    சமீபத்தில் வெங்கடேசன் கட்டுரையில் மட்டுமே எழதியுள்ளேன். காரணம் அவரின் பறையர் பிக்சேசன் தவறு. பறையரை மட்டுமே அவருக்குத் தெரிகிறது. தென்மானிலங்களில் பள்ளர்களே அதிகம். சக்திவாய்ந்தவர்கள். தேவர்களை எதிர்த்துப்போராடுபவர்கள். அனைவரும் கிருத்துவர்கள். அவர்களைப்பற்றித் தெரியாமல் அனைத்துப்பிரச்சினைகளையும் பறையரை மையமாக வைத்து எழுதினால் எப்படி ? இதைச் சுட்டிக்காட்டவே ஆங்கு எழுதினேன். மற்றபடி நான் எங்கும் எழுதவில்லை.

    ஒன்றும் மட்டும் திராவிட் புரிந்து கொளல் நலம். இங்கு போடப்படும் கட்டரைகளைப் படிப்பவர்கள் ஆமோதிப்பவர்களாக மட்டுமே இருந்தால், அல்லது அதன் மீது கருத்து விவாதம் நடைபெறவில்லையென்றால், அது வெற்றிடத்தில் ஒரு பைத்தியக்காரன் பேசுவதைப்போலத்தான் எழுதியவரே உணர்வார். கட்டுரையாளர்கள் ஆர்வத்தை இழப்பார்கள். In whatever I read, only that which is preposterous, strikes me. I will read some more essays here today and react.

    புதிதாக இந்து மதம் என்று ஒன்றில்லை. எல்லாமே பழையதுதான். இந்து மதம் எப்படியிருக்க வேண்டும் என்பது மேலே மலர் மன்னனுக்கு எழுதிய பதிலில் இருந்து தெரியலாம். பிறர் தெரிவதைவிட உங்களைப் போன்றோர் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். You are the movers and shakers of the religion and its future is in your hands. Resort to proper means to bring it to the masses. Speak to them in the language they understand and in the way they can relate to. Improper means, improper medium and improper way have alienated them.

  83. ஜோ.அமலன்……..

    ஆரோக்கியமான வாதம் என்பது வேறு….உள்நோக்கத்துடன் செய்யப்படும் அவதூறு என்பது வேறு……kans போன்றவர்கள் பச்சையாக சொல்லும் விஷயத்தை நீங்கள் சற்று நாசூக்காக சொல்கிறீர்கள்…அவ்வளவுதான்…என்ன இருந்தாலும் மிஷ நரி பயிற்சி இல்லையா ?

    // We ought to attack anyone -howsoever high he may be – either here or outside – who tries to bring back inequality through elitism. //

    உங்கள் பரந்த நோக்கம் புல்லரிக்க வைக்கிறது…….ஐயா மலர்மன்னன் போன்றவர்களிடமிருந்து எங்கள் மதத்தை காப்பதற்காகவே உழைக்கும் உங்களை போன்றவர்களை நாங்கள் எளிதாக புரிந்து கொள்வோம்………

    // நான் தென்மாவட்ட மக்களிடம் சொன்னால், அவர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா? //

    ஐயா தென் மாவட்ட மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியே….அப்போ தென் மாவட்டத்துல இருக்கறவங்க எல்லாம் ஹிந்துக்கள் இல்லையா ? ஹிந்துக்களின் பெரும்பாலான புண்ணிய தளங்கள் இருப்பது தென் மாவட்டங்களில் தான் என்பது தெரியுமா?

    ஹிந்து மதத்தை போல் காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ளும், சகல விஷயங்களையும் விவாதிக்க, தனக்கு பிடிக்கவில்லையென்றால் மறுக்கவும் சுதந்திரம் தரும் மதம் உலகில் எதுவும் கிடையாது….இது மதம் கூட கிடையாது…..தர்மம்….வாழும் வழிமுறை…..

    உங்கள் உளறல்களை அனுமதிப்பதோ,மறுப்பதோ ஆசிரியர் குழுவின் உரிமை….. எத்தனை வேஷம் போட்டாலும் சரி….உங்கள் உள்நோக்கம் என்ன என்பது மலர்மன்னன் ஐயா போன்றவர்களுக்கு தெளிவாக தெரிவதால்தான் , விவாதம் என்ற பெயரில் உள்ளே நுழையும் உங்களை போன்றவர்களை தோலுரிக்கிரார்கள்…..ஹிந்து மதம் என்பது மிக உன்னதமானது…..அதை அணுகுவோர் எப்படிப்பட்டவர் என்பது முக்கியம்…
    நீங்கள் அடிக்கடி வம்பிழுக்கும் வைணவத்தில் இருந்து இதோ…..பாவை மொழி…..
    ” வானிடை வாழும் அவ் வானவர்க்கு
    மறையவர் வகுத்த வேள்விஅவி
    கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
    காப்பதும் மோப்பதும் செய்வதொப்ப…..”

    [ மிஷ ] நரியின் நோக்கம் தெரிந்துவிட்டதே,,…என்ன செய்ய……

    திரு. மலர்மன்னன் போன்ற அனுபவஸ்தர்களுக்கு உங்களை போன்றவர்களை எளிதாக அடையாளம் காண முடிகிறது…….அவர் மேல் பாய்ந்து பலனில்லை……

    எங்கள் கொங்கு வட்டார வழக்கில்

  84. யப்பா ஜோ

    //
    still stand by my conclusion. The elitism in the religion should go. People like Malarmannan is useless to bring the religion to common Tamil மச்செஸ்
    //

    இதை செய்ய ஜோ அமலன் மட்டுமே தகுதி உள்ளவர். சாமி மேடைய கட்டுங்க உன்ன விரதம் ஆரம்பிங்க நாங்க வந்து ஜாயின் பண்ணிக்கிறோம்.

    ஜோ அமலன் ஒரு மறு மொழியில் எதார்த்தம் பற்றி பேசினார் – அவருக்கு தெரியாதாக்கும் elitism இல்லாத இடமே இல்லை. அவைகள் மாட்டுக்கு அவர்கள் பேசுவதை பேசிக் கொண்டே இருப்பார்கள், மற்றவர்கள் அவர்களின் வேலையே செய்து கொண்டே இருப்பார்கள். எங்காவது CSI யும் பெந்தகோச்டேயும் சேர்ந்து செயல் படுமா.

    மற்றவர்களை elitist என்று சொல்லிக் கொள்கிறார் – அப்புறம் ஜோ அமலன் யார். தமிழ் ஹிந்துவில் அலகு குத்தும் banner போட்டால் TH ஆழ்வார்களை கண்டுகொள்வதேயில்லை என்று காட்டு கத்து கத்துகிறார். அலகு குத்திகொல்வது தான் elitist டோ.

    ஏன் இப்படி நரி வேஷம் போடறீங்க ஜோ . நீங்கள் அச்சச்சோ தான். மிசநரிகளுக்கு இருக்கும் அத்தனை குள்ள நரி குணமும் உங்களுள் இருக்கு.

    எதோ elitism இருக்கு என்பது போல ஒரு மாயையை கிளப்பி உட வேண்டியது. பேத்து பெத்துன்னு பேத்தி எழுத வேண்டியது.

    சாமி நீங்கள் களப்பணி செய்ய வேண்டுமென்றால் இத்தாலிக்கு போங்கள் – அங்க போய் elitis த்தை ஒழியுங்கள்.

  85. //வானிடை வாழும் அவ் வானவர்க்கு
    மறையவர் வகுத்த வேள்விஅவி
    கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
    காப்பதும் மோப்பதும் செய்வதொப்ப…..” //

    பொழிப்புரை சொல்க. புரியவில்லை.

  86. ////Speak to them in the language they understand and in the way they can relate to. Improper means, improper medium and improper way have alienated them////
    நீங்கள் முதலில் செய்யவும்

  87. //தமிழ் ஹிந்துவில் அலகு குத்தும் banner போட்டால் TH ஆழ்வார்களை கண்டுகொள்வதேயில்லை என்று காட்டு கத்து கத்துகிறார். அலகு குத்திகொல்வது தான் elitist டோ.//

    யப்பா சாரங் !

    தமிழ் இந்து .காம் எலீட் என்று சொல்லவில்லை. எலீட்டிசம் இங்கு பின்னூட்டம்போடும் பலரிடமும் வெளியேயும் இருக்கிறது என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

    ஆழ்வார்களைப்பற்றி சொன்னதற்கு .காம் பதில் அப்போதே போட்டுவிட்டது. ஆண்டாள் படமும் போட்டாயிற்று. பின்னர் சாரங் ஏன் தமிழிந்து.காமைப்பற்றிப்பேசுகிறார் ? நான் சொல்லும் கருத்து வேறா யப்பா ?

    Any talk abt Tamilhindu.com s irrelevant now. Stick to the point under discussion.

  88. ஜோ அமலன், விவாதம் செய்வது வேறு எப்போதும் எதிர்த்து கொண்டிருப்பதே வேறு
    ஒட்டுமொத்த இந்த தள வாசகர்களை விட நீங்கள் மட்டும் odd person.
    நீங்கள் மட்டும் நல்லவர் மற்ற எல்லோரும் கெட்டவர் இதில் எது சரி அதனை நேரடியாக தங்கள் கருத்தை கூறவும் பக்கம் பக்கமாக ஏதேதோ சொல்லி குழப்ப வேண்டாம்.

  89. TH, Just to shut this Troll, please kindly publish my previous comments. Insulting great souls like Shri Malarmannan ji is the last straw.

  90. //Mr Kulavi

    நண்பரே, சொற்களை அளந்துதான் விடவேண்டும். நீங்கள் மட்டும்தான் இந்து என்ற பந்தா வேண்டாம். கொல், அடி, குத்து என்றால்தான் இந்துவா ? கிருத்துவனைக்கொல், முசுலிமைக்கொல் என்று நான் எழுதவேண்டும். இல்லையென்றால் நான் அவர்களின் கைக்கூலி.//

    அப்படி எங்காவது குளவி எழுதியுள்ளாரா? ஆம் என்றால் குளவியும் அதை வெளியிட்ட தமிழ்ஹிந்து தளமும் மன்னிப்பு கேட்கவேண்டும். குளவி என்கிற பெயரில் எழுதும் நபரை தடை செய்ய வேண்டும். இல்லை என்றால் நான் இனி இந்த தளத்தை புறக்கணிப்பு செய்வேன்.

    அப்படி குளவி எழுதவில்லை என்றால் நிபந்தனையற்ற மன்னிப்பு ஜோ அமலன் கேட்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தவரை கொல்லத் தூண்டுகிறார்கள் இல்லாவிட்டால் கைக்கூலி என்று சொல்கிறார்கள் என்பது சாதாரணமான குற்றச்சாட்டு அல்ல. தமிழ்ஹிந்து தளம் அப்படிப்பட்ட தூண்டுதலை செய்கிறது என்பதும் சாதாரணமான குற்றச்சாட்டு அல்ல. எனவே தமிழ்ஹிந்து.காம் இதனை சீரியஸாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டுகிறேன்.

  91. When upper cast white skinned Tamil speaking people ridicule Tamils about their colour and when north Indians pass racist comments against Tamils regarding their colour, why do you find fault only with an American?!

  92. //இது வளமையான மிசிநரி தந்திரம் தான். ரொம்ப பார்த்திருக்கோம் ஜோ அமலன். நீங்க ஒண்ணும் அதில் ஸ்பெஷல் அல்ல. வாங்க குந்துஙக. பேசுவோம்.//

    குளவி எழுதியது.

    மிசுநரி, ஊருருவி, என்பது எழுதுவது மலர்மன்னன் பாணி. அஃதொரு தந்திரம். அதையே குளவி எழுதியிருக்கிறார். இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இவர்களுக்கெதிரான கருத்துக்கள் சொல்வோரெல்லாமே கிருததுவக் கைக்கூலிகள் இங்கு ஊடுரிவி இவர்களை மதம்மாற்றம் செய்ய வந்திருக்கிறார்கள். அவ்வளவு வீக்கா இவர்கள் மதப்பற்று ? Shame shame.

    ஆளந்தூர் மன்னன். !

    மிசுநரி என்பது பொய். அந்தப் பொய்யை எழுதிய குளவியை மன்னிப்புக்கேட்கச்சொல்லுங்கள் பார்ப்போம். Each one of u who have called me thus, shd offer unconditional apology to me.

    கருத்தை கருத்தை வைத்தே எதிர்னோக்கவேண்டும். தனிநபர் விமர்சனம் அக்கருத்தை எதிர்னோக்கப் பயப்படுகிறீர்கள் என்றே காட்டும்.

  93. // பொழிப்புரை சொல்க. புரியவில்லை.//

    அர்த்தம் புரியாதது போல் நடிக்கும் அமலனுக்கு…..

    சுலபமாக புரியும் வண்ணம் [ மற்ற நண்பர்களுக்கு ] எங்கள் கொங்கு வட்டார பழமொழி ஒன்றை கொடுத்திருந்தேன்.அது எடிட் செய்யப்பட்டு விட்டது.

    மேற்படி பாடல் ஆண்டாள் கண்ணனை நோக்கி பாடுவது….. ஒரு உன்னதமான விஷயத்தை அதன் அருமை புரியாதவர் முன் வைப்பதில் பலனில்லை என்பதே நான் சொல்ல வந்த விஷயமாகும்…..

    வானிடை வாழும் அவ்வானவர்க்கு [ தேவலோகத்தில் உள்ள தெய்வங்களுக்கு ] – மறையவர் வகுத்த வேள்வியவி [ யாகத்தின் அவிர்பாகத்தை ] – கானிடை திரிவதோர் நரி புகுந்து [ காட்டில் வாழும் நரி யாகசாலையில் நுழைந்து ] காப்பதும் மோப்பதும் செய்வதொப்ப [ முகர்ந்து பார்ப்பது போல் ]……..

    எங்கள் மதத்தின் அருமை புரியாமல் அதனை இழிவு செய்யும் நோக்கில் உள்ளே நுழைந்து குழப்பம் விளைவிக்கும் உங்களை அந்த நரியோடு ஒப்பிட்டிருந்தேன்….. போதுமா ? இல்லை இன்னும் படம் வரைந்து பாகங்களை குறிக்க வேண்டுமா?…….

    இதோ அந்த முழுப்பாடல்……

    .//வானிடை வாழும் அவ் வானவர்க்கு
    மறையவர் வகுத்த வேள்விஅவி
    கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
    காப்பதும் மோப்பதும் செய்வதொப்ப –
    ஊனிடை ஆழி வெண் சங்குதமர்க்கு
    உன்னித்தெழுந்த என் தடமுலைகள்
    மானிடர்க்கென்று பேச்சுப்படில்
    வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே…

    கண்ணனுக்கு மட்டுமே உரிமையான தன்னை ,வேறு மனிதர்களுக்கு திருமணம் செய்வதாக பேச்சு எழுந்தால் வாழ மாட்டேன்…என்று கண்ணனிடம் இறைஞ்சும் பாடல்……

  94. ஜோ அமலன்

    //
    தமிழ் இந்து .காம் எலீட் என்று சொல்லவில்லை. எலீட்டிசம் இங்கு பின்னூட்டம்போடும் பலரிடமும் வெளியேயும் இருக்கிறது என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

    ஆழ்வார்களைப்பற்றி சொன்னதற்கு .காம் பதில் அப்போதே போட்டுவிட்டது. ஆண்டாள் படமும் போட்டாயிற்று. பின்னர் சாரங் ஏன் தமிழிந்து.காமைப்பற்றிப்பேசுகிறார் ? நான் சொல்லும் கருத்து வேறா யப்பா ?

    Any talk abt Tamilhindu.com s irrelevant now. Stick to the point under discussion.
    .//

    ஸ்வாமின் நீங்கள் எப்படி எல்லாம் கோர்வையாக உலரக் கூடியவர் என்று எப்படிங்காணும் சுட்டிக் காட்டுவது. நீர் elitist elitist என்று இங்கு கத்துகிறீர் – அனால் வேறெங்கோ அழகு குட்டரதேல்லாம் போடறாங்கன்னு புலம்பல்.

    நீர் சொன்னதுக்காக TH ஆண்டாள் படம் போட்டாங்களாக்கும் – அச்சோ உங்களைக் கண்டா அவங்களுக்கு பயமாக்கும் – எப்பா எப்பா ஏன் பா இந்த ஸெல்ப் டப்பா . பேசாம உங்க பெற பயங்கரவாதி ஜோ அமலன் என்று வைத்துகே கொள்ளலாம்.

    ஆடி மாசம் வந்தது அலகு குத்தல் திருவாடி பூரம் வந்தது ஆண்டாள் படம். போட்டார்கள். சிவ ராத்ரி வந்தா சிவ பெருமான் படம்

    ஸ்வாமின் நான் TH ஐ பற்றி பேசவில்லை உம்மை பத்திதான். ஐ பற்றி பேசவேண்டுமென்றால் அவர்களுக்கு தனியாக மெயில் அனுப்புவேன் சரியா.

    பாட்டில் மேல இருக்குமே அதுவாய் இரும்.

  95. தமிழ்ஹிந்து தளத்தில் எழுதும் படைப்பாளிகளின் உணர்வுகளுக்கு எமது தளம் மதிப்பளிக்கிறது. தங்களது பல பணிகளுக்கிடையிலும் இலாப நோக்கற்ற இந்தத் தளத்திற்குப் பங்களிக்கும் எழுத்தாளர்களை தனிப்பட்ட முறையில் மறுமொழிகளில் அவதூறு செய்வதையும் வசை பாடுவதையும் தமிழ்ஹிந்து கண்டிக்கிறது.

    தமிழ்ஹிந்துவின் மறுமொழிப் பெட்டி பல சமயங்களில் ஒரு சுதந்திரமான விவாதக் களமாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. ஆனால் விவாதங்கள் இயல்பாகவும், அறிவார்ந்த நோக்கிலும் செல்லாவிடில் அதில் பொருளில்லை.

    எமது தளத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு. ஆலந்தூர் மள்ளன் அவர்கள் எழுப்பியுள்ள கோரிக்கையையும் இதன் அடிப்படையிலேயே நோக்குகின்றோம்.

    மறுமொழிகள் விவாதத்திற்கான பொருளைப் பற்றிப் பேசவேண்டுமே அல்லாது, மீண்டும் மீண்டும் இந்தத் தளத்தையும், இதன் நோக்கங்களையும், இத்தளத்தின் மரியாதைக்குரிய எழுத்தாளர்களையும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு செய்யும் வகையில் இருந்தால், அத்தகைய கருத்துக்கள் பதிப்பிக்கப் பட மாட்டாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவற்றால் ஆவதொன்றுமில்லை.

    தளம் தொடர்பான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் கூற விரும்புவோர் நேரடியாக ஆசிரியர் குழுவை மின் அஞ்சலிலேயே தொடர்பு கொண்டு அவற்றைத் தெரிவிக்கலாம்.

  96. //ஒரு அன்னியப்பார்வையுடன் பேசும்போது பல கசப்பான கருத்துக்களை முன் வைக்கலாம். //
    இதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி ஜோ அமலன்..

    நான் ஏற்கனவே என் கருத்தைப் பதிவு செய்துவிட்டேன். ஜோ அமலன் மீன் கிடைக்காவிடினும் பரவாயில்லை குட்டை குழம்பினால் போதும் என்ற கொள்கையோடு கருத்துப் பேசுபவர். அவருக்கு பதிலளிப்பது நேரவிரயம். பிள்ளைகள் செட்டிலானதும் வருவாராமே அப்போது பேசலாம். இப்போ போயி பிள்ளைகளைப் படிக்கவையும் ஜோ அமலன். அது முக்கியமான கடமை.

  97. நான் இரண்டு மனதாக இருந்தேன் .. என்னடா நம்மவர்கள் ஒருவரை குறிவைத்து இந்த மாதிரி பேசுகிறார்களே என்று. ஒரு வேளை அவர்கள் கூறுவது தவறாக இருந்தால் . அந்த மற்றவரின் மனது கஷ்டப்படுமே என்று நினைத்தேன்… ஆனால் கீழே உள்ள பின்னூட்டத்தை பார்த்தபின் .. நம்மவர்கள் சொல்வது சரிதான்………(இது அந்த மற்றவர் இட்ட பின்னூட்டம் ..வேறு ஒரு தளத்தில்.)

    //See, different religions have different theological concepts on God, Heaven, life on earth etc.

    Let them have their own because the thoughts originated from the experiences of the founder, and, in the case of Christianity, from the early followers.

    As a yogi who is concerned with the goodness of one and all, isn’t it your noble task to explore that which is common to all religions in order to build bridges between them, rather than scouting for that which divides them in order to break the bridges ?

    Further, choosing a religion is a freedom of conscience. Despite the conversion efforts in a religion, there are many, many people who choose that religion on their own exploration.

    Choosing a religion to follow is not merely based on consideration of which theology the religion offers, but on how one’s life will undergo a change for better if one chooses that religion and whether that is the kind of life one wants.

    A religion is not a thing apart from one’s life. It is a one’s life itself.

    If one feels one is a sinner and needs to be forgiven, and in Christianity gives the assurance of forgiveness, why not one goes to that, instead of to a religion which insists that his sin wont be forgiven and he ought to undergo punishment for that ?

    Science says, every action has its own reaction. No one can escape it. The same theory is adopted by your religion to tell people it is inevitable that they will have to face the results of their action.

    Yet, if a person wants the intervention of kind God to interrupt the effect of the his past actions and nullify it, why not he go to that God ?

    Religion is a man’s choice. Not your choice please.//

    கிறிஸ்துவ சமயத்தாருக்கு மட்டும் உலகில் உள்ள பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கடவுள் கொடுத்திருப்பது போல பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.”

    Already some one has clarified it. Let me add a few words.

    No pastor will do that. If he does, he violates the basic tenets of his religion.

    No pastor has been invested with powers to forgive your sins. He can only listen to your grievances which include confessions of your past sins; and assure you that if he prays to Jesus, he will be forgiven by Jesus. It is not as you said: I, the pastor, forgive you. However, the pastor can say: I forgive in the name of Jesus. Which in fact means, it is Jesus who forgives, not the pastor.

    The pastor is interceding on behalf of the sinner, and assures the sinner that he will pray for him also. In the church masses, the pastor may take up the case of sinner, and ask the congregation to pray and seek the forgiveness of his sins and thus, group prayer performed on his behalf.

    Everything is noble here. It is small mindedness to cavil at this act of praying for a sinner.

    Not far away, in your own religion, such a thing exists also. Group prayer. Praying for the unfortunate who weeps for the past act seeking forgivenss.

    Srivaishnavites pray to MahaLakshmi to intercede with Mahavishnu to get favor for the sethanars.

    Mahalakshmi has no independent powers to give the favour. She acts only as a mediatrix. The powers are with Mahavishnu.

    You can refer to the theology of that religion, either yourself, or by seeking the help of a learned scholar; and there are many you may know.

    To condemn a man who is already crying in agony saying he has to suffer, and he wont be forgiven at all, is, I feel, cruel. Let us sympathize with such people. Lets say everything is not lost and there is still hope; and there is life ahead which can be lived differently for better.

    Hindu religion does offer that hope, I am sure.

    I am afraid you are not able to search for that in your religion.

  98. UNGAL CINEMA VILA ENNA VALUTHADA V… MAKALLA???
    KRUPPU HEROVUKUM SIVAPPU PEN VENUM . ” SIVAJI” PADATHIL VANTHA KAATCHIKKU(PPAPPAYA PENKALUKKU KARUPPU KANDECTOR SILAYAIPPUKUM, —ENTHA NAKARIKAMUM, PENVIDUTHALAYUM, “PAHUTHARIVU” PULLURUVIKALUM ETHIRPU KATATHATHU??????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *