ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல்லது ஆரியமாக இருக்கும். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பொருள் மாறிப் போன வார்த்தைகள் எவை என்று பார்த்தால் அவை திராவிட இனமாக இருக்கும், அல்லது ஆரிய இனமாக இருக்கும்.

ஆரியம் என்றால் என்ன? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன? இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? என்பதை அறியும் முயற்சியே இந்தக் கட்டுரை.

முதலில் ஆரியம்.

நம்முடைய வரலாற்றில் தொன்மையானதாகக் கருதப்படும் வேதங்களில் ஆரியம் இருக்கிறதா? ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள், ஆரிய இனத்தவருக்கும் மற்றொரு இனத்தவருக்கும் இடையே நடந்தவை என்ற கருத்து திராவிட இயக்கத்தவரால் தொடர்ந்து சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து.

ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் இரண்டு இனங்களுக்கு இடையே நடந்த போர்களல்ல. அவை அந்த சமூகத்திற்கு உள்ளேயே நடந்த மோதல்கள். ஆரியர், அஸுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாக பிரிந்திருந்தது. இதில் இனப்பிரிவே இல்லை. இது தொடர்பாக பி.ஆர். அம்பேத்கர் கூறியதை இங்கே குறிப்பிட வேண்டும்: “ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை!!“.

ஆரியர்கள் சிவப்பு நிறத்தவர்கள் என்றும் திராவிடர்கள் கருப்பு நிறத்தவர்கள் என்றும் ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது. இதுவும் தவறு.

வேத காலத்து முனிவர்களில் சிலர் கருப்பு நிறமுடையவர்களாக இருந்திருக்கிறர்கள். கண்வ மகரிஷி கருப்பு நிறம் உடையவர் என்ற வருணனை ரிக் வேதத்தில் (10:31:11) இருக்கிறது. இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த ராமனும் , யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனும் கருப்பு. பாஞ்சாலியின் இயற்பெயரான ‘கிருஷ்ணா’ என்பதும் கருப்பு நிறத்தைக் குறிக்கிறது.

வேதங்களில் ’திராவிட’ என்ற சொல் இல்லை!!

தமிழ் நூல்களில் குறுந்தொகையில் (7:3:5) மேள ஓசைக்கு ஏற்றபடி கயிற்றின் மேல் ஆடுபவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “…ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகைவெண் நெற்றொலிக்கும்” என்கிறது குறுந்தொகை..

திருநாவுக்கரசர் தேவராத்தில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு), இறைவன் வடமொழியும் தென்மொழித் தோத்திரங்களும் ஆகிய இசையாகத் திகழ்பவர்; சாத்விக குணத்தோடு சிவசிந்தனையோடு இருக்கும் ஞானிகளுடைய சொல்லாக விளங்குபவர் என்று எழுதப்பட்டுள்ளது. “ஆரியம் தமிழோடிசையானவன் கூரிய குணத்தார் குறிநின்றவன்” என்பது திருநாவுக்கரசர் பாடல் (176)

மாணிக்கவாசகர்,(கி.பி. எட்டாம் நூற்றாண்டு) ‘ஆசாரியன்’ என்ற பொருள்பட சிவ புராணத்தில் “பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே” (64) என்று பாடுகிறார். பிறகு, கம்பராமாயணம் (கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு) யுத்த காண்டத்தில்,


இற்றைநாள்வரை முதலியான் முன்செய்தன
குற்றமு முளவெனிற் பொறுத்தி கொற்றவ;
அற்றதான் முகத்தினில் விழித்தல் ஆரிய!
பெற்றனன் விடையெனப் பெயர்ந்து போயினான்.

– (கம்ப ராமாயணம் யுத்த காண்டம், கும்பகர்ணன் வதைப் படலம்)

என்று வருகிறது. இந்த இடத்தில், உரையாசிரியர்கள் “ஆரிய” என்பதைத் “தலைவன்” என்று எழுதுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து, மணவாள மாமுனிகள் (கி.பி. 1370 — 1443) “வாய்த்ததிரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி செய்கலையை ஆர்த்தபுகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல்நடுவே சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து” (உபதேச ரத்ன மாலை) என்று எழுதுகிறார்.

வேதாந்த தேசிகர்(கி.பி. 1269—1370), “காண்பனவு முரைப்பனவு மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய தாதற் பாண்பெருமாளருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுகின்றோம் வேண்பெரிய விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்த ஆரியன் என்றியம்ப நின்றோம் நாம் பெரியோமல்லோம் நாம் நன்றுந்தீதும் நமக்குரைப்பாள ரென்று நாடுவோமே” (அம்ருதாஸ்வாதி – 37) என்கிறார். இங்கே “ஆரியன்” என்பதை “சிறப்புடையவன்” என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் சிறப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்ட ஆரியம் , ஒரு பாதிரியாரால் பாதை மாற்றப்பட்டது! திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (கி.பி. 1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரியார், இதை இன அடையாளமாக மாற்றினார்.

கால்டுவெல் வழி வந்த சி. என். அண்ணதுரை, ’ஆரிய மாயை ‘(1943) என்ற புத்தகத்தில், “நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணீயமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைச் சரித்திரம் படிப்போர் அனைவரும் நன்கு அறிவர்” (ப..26) என்று எழுதினார்.

பூகோளப் படத்தைப் பார்த்தாலே மத்தியப் பிரதேசத்தின் தெற்குப் பகுதி, குஜராத்தின் தெற்குப் பகுதி, மகாராஷ்ட்ரம் ஆகியவை நர்மதையின் தெற்கே உள்ளன என்று தெரிந்து விடும். சத்திரபதி சிவாஜியும் நரேந்திர மோடியும் திராவிடர்களா என்பதை அண்ணாவின் தம்பிகள்தாம் விளக்க வேண்டும்.

அடுத்தது திராவிடம்.

“திராவிடம்” என்ற பொருளில் ’த்ரமிடம்’ என்ற சொல் பாகவதத்தில் (8-5-49) வருகிறது. தமிழைக் குறிக்க ஸம்ஸ்கிருதத்தில் “த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘ தாமரி ’ என்று எழுதினார். ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ’தமிரிசி’ என்று எழுதினார். இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்த அரேபியர்கள், முதலில் மலபார் கடற்கரையில் இறங்கினார்கள். அவர்கள் அந்த இடத்தையும், தமிழகத்தையும் ’மலபார்’ என்றே அழைத்தார்கள். எனவே, தமிழ் திராவிடமாக ஒலிக்க வாய்ப்புகள் இருந்தன.

சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை.. பழைய ஐம்பத்தாறு தேசப் பட்டியலில் திராவிட தேசமும் உள்ளது. இந்தத் திராவிட தேசம் கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலும், சோழ தேசத்திற்கு வடக்கிலும் , கர்நாடக தேச எல்லை வரையிலும் பரவி இருந்தது. இதற்கும் பகுத்தறிவாளர்கள் கேட்ட திராவிட நாட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

வேதாந்த தேசிகர் ‘ த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறார். தாயுமானவர், ( பதினெட்டாம் நூற்றாண்டு) “….வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” (சித்தர் கணம் 10) என்று எழுதுகிறார். வேதாந்த தேசிகரும், தாயுமானவரும் ‘திராவிடம்’ என்ற சொல்லை, ‘தமிழ்’ என்பதாகப் பயன்படுத்துகிறார்கள்.

ராபர்ட் கால்டுவெல்

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் , தென்னிந்திய மொழிகளை, ‘ திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர் (கி.பி. 1777 – 1789) செய்த மொழி ஆராய்ச்சியின் விளைவு இது. இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப் பட்டது.

“தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்று தொடங்கி, சுய மரியாதை இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவு பட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல் தான். இந்த இயக்கங்களின் அடிப்படை, கால்டுவெல்லின் கற்பனையில் உருவான “திராவிட இனம்” என் கருத்தாக்கம்தான்.

கால்டுவெல் செய்த மோசடி பற்றி ஈழத்து அறிஞர் ஒருவர் கூறுவதைப் பார்க்கலாம் :

A matter of convenience became a factor of mischief; the application of the name ‘dravida’ which is peculiar to the Tamils to allied people in inferior grades of culture. The responsibility is Bishop Caldwell’s . The wrong done to those, to whom alone the dravidian language belongs, is aggregated by employing a philological convention as an ethnological distinction. The Caldwell terminology is unscientific and unsatisfactory

P.viii.. Psamls of a Saiva Saint / T Isacc Thambiah/ London. Luzee & Co./1925.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரசர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகளாக அழைத்துக் கொண்டனர் என்றும் இவர் கூறுகிறார். ஆங்கிலேயர்களின் அதிகார நோக்கங்களும், சுரண்டல் திட்டங்களும் கிறித்துவப் பாதிரிமார்களின் மதமாற்ற வேட்கையும் துவக்கி வைத்ததுதான் திராவிட இனவாதம் . ஈ.வெ.ராமசாமியின் அடாவடி அரசியல் இதை பெருமளவில் வளர்த்து விட்டது. இனவாதம் இயக்கமானது.

ஒரு கட்டத்தில் மலிவான அரசியல் வாதங்களோடு வலுவான தொழில் நுட்பமும் சேர்ந்து கொண்டது. திரைப்படப். பாட்டுப் புத்தகங்களும், இசைத்தட்டுகளும் கிராமங்கள் தோறும் ஊடுருவிய நிலையில், கலை வாழும் தென்னாடும், திராவிடப் பொன்னாடும் பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்தன. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இனவாதம் இங்கே இனிமேல் எடுபடாது. தொல்லியல் துறை ஆய்வுகளின் அடிப்படையில், ஆரிய திராவிட மோதல் பற்றிய வரலாறு இப்போது வலுவிழந்து விட்டது. இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காக இன வாதம் தொடர்ந்து போதிக்கப் படுகிறது.

நிறைவாக, இலக்கியமல்லாத ஒரு சான்றையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் நீதிபதி க்யான் சுதா மிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் “திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடர்கள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும். – ஜனவரி 5, 2011.

மேலும் அறிய:

  1. புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள், பி. வி. ஜகதீச ஐயர், 1918, சந்தியா பதிப்பகம், 2009.
  2. மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு, கே வி. ராமகிருஷ்ண ராவ், திராவிடச் சான்றோர் பேரவை, 2009.

168 Replies to “ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்”

  1. By mentioning the supreme court judgement, what is your exact point? Do you want to tell that only dravidians are outsiders and ariyans are true citizens?

    It’s really a shame to read this web site. This web site always biased towards brahmins. Whenever possible this web site criticizes Tamil and Tamilians. By living here and having Tamilians as your viewers don’t you feel shame to have this type of mentality?

  2. https://www.kamakoti.org/tamil/KURAL4.htm
    இவ்வலை தளத்தை படிக்கவும்.
    காஞ்சி பெரியவரை விட இங்கே பெரிய ஞானிகள் யாரும் சமீபத்தில் இருந்ததில்லை என்றே சொல்லலாம்.

  3. //காஞ்சி பெரியவரை விட இங்கே பெரிய ஞானிகள் யாரும் சமீபத்தில் இருந்ததில்லை என்றே சொல்லலாம்.//

    Kanchi Mahapperiyava is a great source of oral traditions and knowledge that are shared through person to person. His speeches are a good source to prove that Indic pundits opposed the industrialization of British, and to know the arguments that are given against it. He is a great proponent of Indian tradition that supported village centric economy and ecology focused lifestyle.

    The only other person who vigorously talked for the same Indian economic ethos and Hindu ethos at the time is Mahatma Gandhi ji. Nobody else. These two were the last voices of Indic social system.

    And, Sridhar ji !

    You must have known all the jnAnis of India since and after Maha Periyava. And, you yourself must be a great jnani.

    Otherwise, it would not be possible to make judgement on all the jnaanis of India after weighing them based on spiritual wisdom. And, spiritual wisdom is the only scale that can meter this matter.

    We are really blessed to have you among us.

    .

  4. இப்படியெல்லாம் சிறப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்ட ஆரியம் , ஒரு பாதிரியாரால் பாதை மாற்றப்பட்டது! திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (கி.பி. 1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரியார், இதை இன அடையாளமாக மாற்றினார்.//

    எங்கே அப்படி எழுதியிருக்கிறார் என்பதை அவர் நூலிலிருந்து மேற்கோள்கள் காட்டவும்.

  5. சமீபத்தில் ஹிந்து ஆண்மிக கண்காட்சியில் “ஆரியமாவது திராவிடமாவது“ என்ற புத்தகம் வாங்கினேன். இது நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை எழுதியது. இந்த நூலின் பழைய பிரிதியை கொடுத்து உதவியது திரு.சுப்பு மற்றும் பழங்காசு சீனிவாசன் என்று முன்னுரையில் கூறியுள்ளார்கள். இது விஜயபாரதம் வெளியீடு. விலை ரூபாய் 20 தான். இதை தமிழ் ஹிந்து வாசகர்கள் எல்லோரும் நிச்சயம் படிக்கவேண்டும். நான் ஒரு 10 பிரதிகளாவது வாங்கி இலவசமாக சிலருக்கு கொடுக்க எண்ணியுள்ளேன்.
    இந்த புத்தகத்தில் நான் மிகவும் ரசித்த சில வரிகள் – தமிழ் அரசு என்ற தலைபில் –
    மூவேந்தர் பெரும் புகழ் நாம் பேசுகிறோம். ஆனால் அவர்கள் அருங்குணத்தில் கூசுகிறோம் அவர்கள் வீரத்தை வாழ்த்துகிறோம் ஆனால் அதன் சுகத்தைத் தாழ்த்துகின்றோம். அவர்கள் விட்டுவைத்த சரித்திரத்தில் களிக்கின்றோம் ஆனால் அவர்கள் கட்டிவைத்த கோயில்களைப் பழிக்கின்றோம். அவர்கள் போர் திறத்தைச் சொல்லி நித்தம் கதைக்கின்றோம் ஆனால் அவர்கள் சேர்த்துவைத்த நல்லறிவைச் சிதைக்கின்றோம். அவர்கள் மாட்சிமிக்க அரசியலில் மலைக்கின்றோம் ஆனால் அவர்கள் ஆட்சிகண்ட அமைதிககை் குலைக்கின்றோம். அவர்கள் செய்யாதது இல்லை என்று மகிழ்கின்றோம் ஆனால் அவர்கள் செய்துவைத்த இலக்கியத்தை இகழ்கின்றோம். அவர்கள் நீதி நெறிமுறைகளை வந்தித்தோம் ஆனால் அவர்கள் ஆதரித்த புலவர்களை நிந்தித்தோம். மாண்டுபோன அம்மண்ணர்களுக்காக கண்ணீர் விடுகிறோம் ஆனால் மாளாதிருக்கும் அவர்கள் அறப்பயிர்களுக்கு வெந்நீர் விடுகிறோம். அவர்களது புற சின்னங்களாகிய வில் மீன் புலிக்கொடிகளை ஏற்றுகின்றோம் ஆனால் அவர்கள் அற சின்னங்களான அன்பு தெய்வம் அறங்களை தூற்றுகின்றோம். களை எடுக்க எண்ணி முளைஎடுக்க முனைந்து விட்டோம். சீர்திருத்தம் பேசி வேர் பறித்தல் செய்கிறோம். சமாதானம் காட்டி சண்டைகளை மூட்டகின்றோம். அன்பென்று பேணி வம்புகளை வளர்க்கின்றோம். அறமென்று நினைத்து மறங்களிலே மனம் செலுத்துகிறோம்.
    தமிழ் பண்பு என்ற தலைப்பில் – தமிழ் பண்பு இறைவன் உண்மையை மறுக்காது தெய்வ நிந்தனை பொறுக்காது பெரியோரை பிழை சொல்லாது முன்னோர்களை மூடர்களாக்காது பழைமையைப் பழிக்காது நிகழ்கால அவசரத்தால் நிதானம் தவறிவிடாது எதிர்கால ஆசைகளுக்காக எதையும் செய்துவிடாது. இந்த தமிழ் பண்பினால் நாம் என்ன பலன் கண்டோம் என்று வெகு எளிதாக் கேட்டுவிடலாம். அதற்கு இந்தப் பண்பில்லாத ஏனைய நாடுகள் அடைந்துவிட்ட நலன்களைச் சற்றாகிலும் எண்ணிப்பார்த்தால் தக்க பதில் கிடைக்கும்.

  6. நம் நாடு இலக்கியங்களில் எந்த ஆதாரமும் இல்லாத வெளி நாட்டிலிருந்து மதம் மற்றம் மட்டுமே குறிக்கோளாக இங்கு வந்து கிறிஸ்தவ பாதிரியார்களால் பரப்பப் பட்ட விஷங்களை உண்மை என்று சாதிக்கும் நம் நட்டு மக்களை உணர வைப்பது அவசியம். தங்கள் முயற்சி தொடர வேண்டும்

  7. சவ்ரவ்,

    வெள்ளையாக இருப்பதால் மத்திய ஆசியாவில் இருந்து வந்தார்கள் என்று நீங்கள் சொல்லலாம். கருப்பாக இருக்கிறார்கள் ஆப்பிரிவாவில் இருந்து வந்த வந்தேறிகள் தான் திராவிடர்கள் என்று சொல்ல கூடாதா 🙂

    என்னை பொறுத்தவரை இரண்டுமே பொய்… ஒருமுறை எழுதியதற்கே இவ்வளவு கோபமா 🙂

  8. ஹிந்துக்களின் பெரும்பான்மையைப் பற்றி நீட்டி முழக்கும் சுப்பு தமிழர்களில் பெரும்பான்மையானோர் ஹிந்து மத நம்பிக்கைகளில் இருந்து விலகி இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறாரா?

  9. ‘ஆரியர் படையெடுப்பு’ எனும் செய்தியே பொய் என்பதற்கு நூல்கள் வெளியாகி இருக்கின்றன. பிராமண எதிர்ப்பு இயக்கம் தொடங்கிய காலத்தில் இந்த ஆரிய திராவிட பிளவு வாதம் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்பட்டது. அதன் மூலமாக பயன் அடைந்தவர்கள் இது ஒரு நல்ல ஆயுதம் என்பதால் அதனைத் தீட்டி, நெய் தடவி எப்போதும் தயாராக வைத்திருக்கிறார்கள். எப்போதெல்லாம் அவர்களது செல்வாக்குக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் இந்த ஆயுதம் வெளியே எடுக்கப்படும். அதற்கு இப்போதும்கூட ஓரளவுக்கு பலன் இருக்கிறது. எடுத்துக்காட்டாக கடந்த சட்டசபை தேர்தலில் கருணாநிதி சொன்னது தனது கட்சியின் தோல்விக்குச் சில பிராமணர்கள் காரணம் என்று. இதில் பொதிந்து கிடக்கும் உண்மையை நேர்மை சிந்தனை உள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த அறுபது ஆண்டுகளாக நாக்கு தழும்பேற பேசியும் எழுதியும் வந்த பின், பிராமணர்கள் இவரை எப்படி ஆதரிப்பார்கள்?

  10. \\\\\\ Whenever possible this web site criticizes Tamil and Tamilians.\\\\\\

    நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. இந்த விஷயத்தை ஆங்கிலத்தில் கூச்ச நாச்சம் ஏதுமின்றி எழுதும் உங்களுக்கு தமிழ் பற்றி பேச நாவெழுந்தது தான் வியப்பு.

    \\\This web site always biased towards brahmins\\\

    நல்ல கற்பனை

  11. //திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடர்கள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும்.//

    Then where did sanskrit speaking people came from ??? Are u going to sanskrit evolved in present day INDIA ???

    Out of these two who came first ???

  12. so u r saying TAMIL speaking people came from outside and people who spoke sanskrit and the religion which has its base texts in sanskrit evolved here ???

  13. \\ஹிந்து மத நம்பிக்கைகளில் இருந்து விலகி இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறாரா?\\

    பூனை கண்ணை மூடிவிட்டால் உலகமே இருண்டு விட்டது என்று நினைக்குமாம் என்று ஒரு பழமொழி உண்டு. அது சரி உங்களுக்கு அரேபிய பழமொழிகள் தானே தெரியும்…

    பிரதோஷ நாட்கள் மற்றும் ஆடி மாதங்களில் சற்று கோயில்கள் பக்கம் சென்று பாருங்கள். பிறகு தெரியும் இங்கு யார் விலகி இருக்கிறார்கள். யார் சேர்ந்து இருக்கிறார்கள் என்று?

    அடுத்து உங்களை போல் மாஸ் காட்டி ஆள் சேர்க்கும் ரௌடி கூட்டம் அல்ல.. சனாதன ஹிந்து மதம். இது பக்தியை போதிக்கிறது. அரசியலை அல்ல…

    ஆனால் ஆப்ரகாமிய மதமோ… அரசியலை தானே போதிக்கிறது…

  14. Dear Jenil,

    This concepted coined not by this Author rather by your beloved chirstian missionaries. In order to justisfy their invansion, all people now here Tamil Nadu originally came from out side.

    why Tamilian not being hindus. Tamilans are backbone of Hindu religion. Christianity and Islam is only foreign religions. Mind it. Sanskrit is common language including Tamil Nadu even upto 18th centuary CE. Mind it.

  15. Answer to you is.. both exist here.. classic example Ravana created Shiva Thandava in Sanskrit..

  16. `திராவிடர்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தார்கள்` என்ற கருத்தை உச்ச நீதி மன்றம் கூறியது. சுப்பு அதை நம்முடைய பார்வைக்கு வைத்திருக்கிறார். இதற்க்காக தைய தக்கா என்று குதிப்பவர்களுக்கு ஒரு தகவல். இதே கருத்தை ஒருவர் 1856 இல் எழுதியிருக்கிறார். அந்த பாதிரியாரின் பெயர் ராபர்ட் கால்டுவெல்.இப்ப என்னா செய்வீங்க?

  17. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த ஆரியன் இறுதியாக தமிழனின் தலையிலேயே கைவைக்க்றான்.தமிழன் வெளியே இருந்து வந்தான் என்றால் அவன் கொடுக்கும் தட்சிணையை பிராமணன் ஏன் வாங்குகிறான்?

  18. ////“திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடர்கள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும்.////

    அய்யா தயவு செய்து தமிழ் ஹிந்து என்பதை மாற்றி வெறும் ஹிந்து என்று வைக்கவும். தமிழ்தான் இந்த உலகின் முதல் மொழி. அதிலிருந்து பக்குவமாக சமைக்கப்பட்டது தான் சங்கதம் (சமஸ்கிருதம்) பார்ப்பனரின் பாசாங்கு சாமானியனை கடவுளை நெருங்கவிடாமல் செய்தது. தமிழ் நாடாகா இருந்த தற்க்கால கேரளம் இந்த பார்ப்பனர்களால் தனி மொழியாகி தனியாக பிரிந்து விட்டது . வெறும் புத்தக அறிவு மட்டும் இருந்தால் போதாது. ஊர் ஊராக சென்று பாருங்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்பது புலப்படும்.

  19. ஜெனில்

    இயேசு கிறிஸ்து என்ற தேவ குமாரன் வானத்திலிருந்து வந்தார்.

    யூதர்கள் எகிப்திலிருந்து வந்தார்கள்

    முஹம்மத் இப்னு அப்துல்லா வானத்திலிருந்து வந்தார் மெக்காவிலிருந்து வந்தார் வசதிக்கு ஏற்றவாறு

    ஐரோப்பவிற்கு கிறிஸ்தவம் பாலைவன நாட்டிலிருந்து வந்தது

    பாகிஸ்தானுக்கு இஸ்லாம் அராபியாவிலிருந்து வந்தது

    அப்பா கிட்டேந்து ஈ-மெயில் வந்தது

    காலைல பேப்பர் வந்தது

    சுண்டெலி பக்கத்து வீட்டிலிருந்து வந்தது

    கிறுக்கு பய்யன் குகைக்குள் இருந்து வந்தான்

    தீமுக தீகாவிலிருந்து வந்தது

    21G பஸ் தாம்பரத்திலிருந்து வந்தது

    இதே ரேஞ்சில் தான் நீங்கள் கேட்கிறீர்கள்

    சமஸ்க்ருதம் எங்கிருந்து வந்தது?

    சமஸ்க்ருதம் எங்கிருந்தாவது வந்தே தீர வேண்டும் என்று ஏன் நினைகிறீர்கள் ? அது என்ன அப்பத்தாவா ஊர்லேருந்து மாட்டுவண்டில வந்து டவுன்ல பஸ் புடிச்சு வாரத்துக்கு.

  20. \\தமிழ்தான் இந்த உலகின் முதல் மொழி. அதிலிருந்து பக்குவமாக சமைக்கப்பட்டது \\

    ஹ்ம்ம்… தமிழ் முதல் மொழி என்று சொல்வதும் சரி சமஸ்க்ருதம் முதல் மொழி என்று சொல்வதும் சரி. இது இரண்டுமே ஒரு நம்பிக்கை அடிப்படையிலான ஒரு விசயமே?

    ஒரு மொழி எந்த காலத்திலும் இனமாக முடியாது… இனம் என்பதற்கும் இடத்தை அடிப்படையாக இருக்கும் மக்கள் கூட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாதா? விட்டால் தெலுங்கனா கூட ஒரு இனம் என்று சொல்விர்கள் போல இருக்கிறதே?

    \\ தமிழ் நாடாகா இருந்த தற்க்கால கேரளம் இந்த பார்ப்பனர்களால் தனி மொழியாகி தனியாக பிரிந்து விட்டது\\

    உங்கள் நகைசுவைக்கு அளவே இல்லை போங்கள் 🙂

  21. பாலாஜி

    //
    தமிழ் நாடாகா இருந்த தற்க்கால கேரளம் இந்த பார்ப்பனர்களால் தனி மொழியாகி தனியாக பிரிந்து விட்டது . வெறும் புத்தக அறிவு மட்டும் இருந்தால் போதாது. ஊர் ஊராக சென்று பாருங்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்பது புலப்படும்.
    //

    வெய்யில்ல தெருத்தெருவா சுத்திரிக்கீங்கன்னு நல்லா தெறியுது

  22. Subbu noted that supreme courts judge’s phrase. it is neither judgment nor his point.
    Going through the records of Koldwell

  23. ரகு

    //

    தமிழன் வெளியே இருந்து வந்தான் என்றால் அவன் கொடுக்கும் தட்சிணையை பிராமணன் ஏன் வாங்குகிறான்?

    //
    ப்ராமனன் எங்கிருந்தோ வந்தான்னு வெச்சுகோங்க அப்புரம் தமிழன் எதுக்கு ப்ராமனனை கூப்பிட்டு அவன் சொல்வதை செய்து தக்ஷனையும் தருகிரான். ஹீ ஹீ

  24. Rahu,
    I thing this is not your real name. You may be belongs to so called Dravidian party. Please just came out from Tamil Nadu and talk with other language speaking people. You know, no body ready to give respect to Tamils.
    Here, you like people think sanskrit is language of Brahmins and bashing only HIndu religion.
    You know or not that Great Dailt leader Ambedkar thundered that Sankrit must put as common language of India.
    Even all buddhist and Jain text books also in Sanskrit language. Then, all jains and buddhists are brahimins by your arguement.
    Even , Malayallis not accept that malayalam came from Tamil.Your beloved great leader Periyar rediculed Tamil is kattumirandi language because he said himself as kanndiga not Tamil.
    You are all talk about Drviadiam, Dravidam. I ask one question, you ever go to Kerala or Karnataka and Andra Pradesh and talk about dravidam. Answer is No.
    Hence, you people try to cheat Tamils.

  25. //எடுத்துக்காட்டாக கடந்த சட்டசபை தேர்தலில் கருணாநிதி சொன்னது தனது கட்சியின் தோல்விக்குச் சில பிராமணர்கள் காரணம் என்று. இதில் பொதிந்து கிடக்கும் உண்மையை நேர்மை சிந்தனை உள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த அறுபது ஆண்டுகளாக நாக்கு தழும்பேற பேசியும் எழுதியும் வந்த பின், பிராமணர்கள் இவரை எப்படி ஆதரிப்பார்கள்//

    “சில பிராமணர்கள்” எனபதை தமிழ்ப்பார்ப்பன சமூகத்தையே குறிக்கிறது என்பதுதான் கோபாலன் எழுதியதில் உள்ள பேதமை. இப்பேதமை பரவலாக வெகுகாலமாகச் செய்யப்பட்டுவருமொன்று என்பது இதிலுள்ள வேதனை.

    ‘சில பிராமணர்கள்’ எனபது அந்தச்சில பிராமணர்களை மட்டுமே குறிக்கும்போது, அவர்கள் எவரெவர் என்பதைத் தேடாமல் பொத்தாம் பொதுவாகப் பேசினால் எப்படி? நானறிந்தவரை, அச்சில பிராமணர்கள் என்பது தமிழ் ஆங்கில ஊடகங்க்களில் ஆசிரியர்களாகவோ எழுத்தாளர்களோ இருப்போரையேக் குறிக்கும். அவர்கள: தினமலர், திணமணி ஆசிரியர்களும், சோ இராமசாமி போன்ற பத்திரிக்கையாளரும் ஆவார். இவர்கள் கருனாநிதி மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தங்கள் ஊடகத்தைப்பயன்படுத்தினார்கள். சோ ஜெயலலிதாவின் மென்டர் (mentor) என்பது ஊரறிந்த உண்மை.

    இவர்கள் அனைவரும் பிராமணர்கள். அ-பிராமணர்களும் கருனநானிதி எதிர்ப்பில் உண்டு. ஆனால் அவர்கள் செயல்பாடுகளைக் கருனாநிதியால் முறிக்க முடியும். இவர்கள் செயல்பாடுகளை முறிக்கமுடியவில்லை. அதனால் எழுந்த யதார்த்தமான புலம்பலே அது.

  26. Mr Krishnakumar
    It is not wild imagination to feel that this website is pro Brahmins. As a matter of fact, It can’t help it as it has to back the religious practices of Tamil Brahmins on the whole. The pity with Tamil brahjmins is that they have made a lot of Hindu practices as exclusive to them. Alas! Outside such practices does exist the same Hindu religion in myriad forms, about which, no doubt, this site occasionally write but such efforts are few and far between. Further, the writers, except a few, are from the said community. The commenters too. They cant brook even a slender adverse comment against their community.
    Even the non Brahmins writers here are heavily literary so much that an ordinary Hindu feels out of sync with them. While their services are important, yet they cant serve a villager.
    Hence, on reading the site and the comments, one gets the impression which you call wild imagination. Our impressions are formed out of general look.
    By including more and more non Brahmin writers and allowing or encouraging comments from across a motley crowd, this site can reach across Tamil speaking Hindu population.
    Tamilhindu.com should take the comment criticized by Krishna Kumar seriously and take pains to give general colour and tenor to the site, which does not mean we need to exclude the Brahmins from here, but to give equal opportunities to all.
    Kallalagar festival is round the corner. To start with, Tamilhindu.com may commission a non literary figure to write on it.
    Criticism helps us know how others look at us. Also avoid using harsh language against the so-called dravidian leaders and their fans like me in your site. If their criticism is decorously worded, controvert them, if you will, in the same decorous language. Karunanithdi too is a Hindu. If you don’t accept that, no problem; but you ought to accept that his family members are all Hindu. It is due to their fervent prayers to the Gods that Mrs Kanimozhi got bail. Should I need to remind you that their Gods are Srikalahasti, Tirupathi and Pazhani?

  27. //Sanskrit is common language including Tamil Nadu even upto 18th centuary CE. Mind it.//
    யார் கூறியது? எதாவது ஆதாரம் உண்டா?
    தமிழ் மொழியின் வரலாறு, பெருமை தெரியாதவர்கள்.
    இது போன்றவர்களிடம் விவாதிப்பது நேர விரயம்!

    இன்றும் தமிழ் நாட்டில் தங்களை “ஆரியர்கள்” என்று கூறிக்கொண்டு சைவ திருமுறைகளை நிந்திபவர்களும் உண்டு.
    இது பற்றி திரு சுப்பு அவர்களுக்கும் ‘தமிழ் ஹிந்துக்கும்’ தெரியவில்லை. இதை பற்றி ஒருவரும் எழுதுவதில்லை.
    ஆரிய-திராவிட சர்ச்சைகள் எல்லாம் இப்பொழுது மொழியின் சர்ச்சையாகி விட்டன.

  28. அன்புக்கு இனியவர்களே,
    உண்மை என்பது வேறு நம்பிக்கை என்பது வேறு. திரு சுப்பு பகிர்வது உண்மை இங்கு சிலர் உளறுவது தங்கள் நம்பிக்கை அடிபடையில். உண்மை என்பது சத்தியன் நித்தியம் அதுவே அது. ஆனால் நம்பிக்கை மாறலாம் மாறும் மாற்றப்படும். மாறியவர்களே மாறுங்கள்.
    நம் புராணம் இதிகாசம் தெரிந்து புரிந்து பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
    முதலில் படிகொனோ, அப்பறம் புரியோனோ, புரிஞ்சாத தெரிஞ்சிகொனோ, அப்பறம் அறிஞ்சிகொனோம்.
    அம்மாவின் அறிஊம் அப்பாவின் ஞானமும் இறைவனின் அருளும் இருக்கும் வாழ்வை தருவது பாரத நாட்டின் வரலாறு. யாரோ சொன்ன கோளாரால் எதற்கு இந்த தகறாரு.

    https://www.youtube.com/watch?v=MO8-JCK45tc
    https://www.youtube.com/watch?v=_K0aTOTW8hU&feature=related
    https://www.youtube.com/watch?v=zsLbejnRjV8&feature=related

    என்றும் பண்புடன்
    அகஸ்தியன்

  29. ஆரியம் திராவிட ஆராய்ச்சிகள் ரொம்ப முக்கியம் இப்போ நாட்டுக்கு. ஆரியனாம் திரவிடனாம் தமிழனாம்!! எவன் இங்கே ஆரியன் ஏன் இங்கே திராவிடன், எவன் இங்கே தமிழன்? ஸ்ரீலங்காவில், மலேசியாவில் இருக்கும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு குரல் கொடுப்பவர்கள், தமிழ்நாட்டில் ஜாதி வெறியால் மக்கள் கொல்லபடும் போது வாயை இருக்க மூடி கொண்டு இருக்கிறார்கள். இதில் இவனுகளுக்கு ஆரிய, திராவிட, தமிழ் சமஸ்கிருத பிரிவினை பேச்சுக்கள் வேற…. தூ…

  30. கருணாநிதி………….
    தமிழ்நாட்டை இனத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் தனிமை படுத்தி அரசியல் சுகம் கண்டவர். திருடர்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கொள்ளை கூட்டத்திற்கே தலைவர். ஜெயலலிதா ஒரு அனைத்திந்திய அனைத்து திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர். ரெண்டு பெரும் ஜாதியை வைத்து அரசியல் நடத்தும் [**]கள். ரெண்டுபேரும் தமிழ்நாட்டில் இருக்கும் வரை தமிழ்நாடு ஜாதியாலும், மததளும் பிரிந்துதான் கிடக்கும். அவர்களை பற்றி விமர்சிப்பதை தவிர்த்து நாட்டில் என்ன நடக்கிறது எனபதை விவாதித்தால் நலம்.

    [Edited and published]

  31. Dear Somasundram,
    What you mean to say about Arayans. Do you really know the meaning of Aryan. I ask you show me any evidence about Aryans are Brahimns in any old Tamil Text books upto 18th centuary. How Kamban translate Ramayana from Sanskrit. How ottakuttar translates uttrakandam of Ramayanam into Tamil.
    Before 18th centuray , many Tamils knows Sanskrit. Only, brainwashed by MIssionaries and Bristish Invadars some Tamil scholars started to think about difference between Aryans and Dravidians.

  32. சுப்பு எழுதிய கட்டுரைத் தொகுப்புகளுக்கு மானமிகு சுப வீர பாண்டியன் ஏற்கனவே பதில் கொடுத்துள்ளார்.அப்போது காணாமல் போன சுப்பு இப்போது மீண்டும் கதை பரப்ப வந்துள்ளார்.சுப்பு கொடுத்துள்ளது தவறான தகவல். உச்ச நீதி மன்ற நீதிபதி அப்படி சொல்லவே இல்லை.இது முழுக்க முழுக்க பிராமண புரட்டு.

  33. சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிப்பதாக தமிழ் ஹிந்து முகப்பில் அறிவிப்பு. பிறகு சுப்புவின் கட்டுரைக்கு ஆதரவாக கோமதி செட்டியின் மறுமொழி. உண்மையில் நீங்கள் சாதி மறுப்பாளராக இருந்தால் சாதி பெயரை பின்னொட்டாக போட்டு வரும் கடிதங்களை வெளியிடாமல் இருப்பதுதான் முறை.

  34. திரு.வெற்றிவேல்- உச்சநீதிமன்றம் அப்படி சொல்லவே இல்லை இது மூழுக்க பிராமிண புரட்டு
    If North America is predominantly made up of new immigrants, India is largely a country of old immigrants, which explains its tremendous diversity. It follows that tolerance and equal respect for all communities and sects are an absolute imperative if we wish to keep India united. If it was believed at one time that Dravidians were the original inhabitants of India, that view has since been considerably modified. Now the generally accepted belief is that the pre-Dravidian aborigines, that is, the ancestors of the present tribals or Adivasis (Scheduled Tribes), were the original inhabitants. This is the thesis put forward in a judgment delivered on January 5, 2011 by a Supreme Court of India Bench comprising Justice Markandey Katju and Justice Gyan Sudha Misra. This historical disquisition came in Criminal Appeal No. 11 of 2011, arising out of Special Leave Petition No. 10367 of 2010 in Kailas & Others versus State of Maharashtra TR. Taluka P.S.
    https://www.google.co.in/url?url=https://www.thehindu.com/opinion/&rct=j&sa=X&ei=a48rT630JI2IrAfWgaXMDA&sqi=2&ved=0CDkQ6QUoADAD&q=supreme+court+comment+on+dravidian+race&usg=AFQjCNEyxHqeeMt0ME_jW0QG9_6xK6dbpA&cad=rja
    சுப.வீரபாண்டியன் ஏற்கனவே பதில் கொடுத்துள்ளார் – என்ன பதில் கேட்டுள்ளார் என்பதை எங்கே தேடினால் கிடைக்கும். முடிந்தால் அதற்கு மற்றவர்கள் விளக்கம் தறலாம்.

  35. வர்த்தமான்

    தமிழ் ஹிந்து சாதியை மறுப்பதாக தெரியவில்லை, சாதியால் எழும் பேதத்ததை தான் மறுக்கிறது.

    ஆனந்த் ஷர்மா என்பவறின் பின்னூட்டத்தை அனுமதித்து கோமதி செட்டியின் பின்னூட்டத்தை கருத்து அடிப்படையில் அல்லாமல் ஜாதி அடிப்படையில் அனுமதிக்காமல் இருந்தால் தான் தவறு. அதை தமிழ் ஹிந்து ஒரு நாளும் செய்யாது.

    ஜாதி ஒழிய வேண்டும் என்றால் பிராமணனும் கௌன்டரும், செட்டியார்களும் ஒழிய வேண்டும் என்று அர்த்தம் அல்ல. இதனால் எழும் பேதங்கள் ஒழிய வேண்டும் என்பதே அர்த்தம்.

    தமிழ் ஹிந்து என்று பெயர் வைத்துக் கொண்டு, வர்த்தமான் என்று முழுக்க முழுக்க சமஸ்க்ருத பெயரை கொண்ட உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்க வில்லையா அது போல தான்.

  36. Dear Sri, super thinker,
    I think you don’t know the history and beauty of Tamil language and Tamilnadu.
    Kindly read some good books or articles about the tamil language. There are so many things in Tamil, which are not come from Saskrit.
    Please don’t confuse with Dravidian and language issues together.
    As for as I understand that Dravidian is society of people who speaks Tamil language (irrespective of their cast).

    Why nobody is objecting when some one says that he/she is from Ariyan culture?

  37. திரு சாரங் !

    உங்கள் எதிர்கருத்து நிறைய சொற்களை அள்ளித்தெளித்த‌ கோலம் நேரம் விரையமாக்கப்பட்டிருக்கிறது.

    போகட்டும். அவர் கேட்டதை இப்படியும் எதிர் நோக்கலாம். முயன்று பாருங்கள்.

    வடமொழி (சமசுகிருதம்)தமிழகத்துக்கு எங்கிருந்து வந்தது?

    உடனேயே அஃது ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது என்றெல்லாம் சொல்லக்கூடாது. அது தமிழரின் தாய்மொழியன்று. அவர்தம் தாய் மொழி தமிழே. பிறமொழிகள் – அவையெவையாயினும் ஈண்டிழுத்து வரப்பட்டவையே. இதுகொண்டு, வடமொழி எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பதில் உங்களுக்குத் தெரியும். ஆனால் சொல்லக்கூச்சம் போலும்.

    உண்மைகளை ஒத்துக்கொள்வதனால் யாதொறு கேவலமில்லை. அப்படி ஒத்துக்கொள்ளும்போது “அதன் பின்னர் யாது செய்யலாம் நலத்திற்காக?” என எண்ணம் தோன்ற நலல சமூகம் சம்பவிக்கும். மறுக்கமறுக்க உங்கள் கட்சி வலியிழந்தே போகும். மேலும், புண்கள் ஆழப்படும். குணமாகா.

    ரா. ராகவையங்காரின் ‘தமிழர் வரலாறு’ கண்டிப்பாக உங்களைப்போன்றோர் படிக்கவேண்டிய பனுவல் அவர் எழுதுகிறார் “…இதனால், கூடலில் வடமொழிப் பட்டிமண்ட்பம் ஒன்றிருந்ததென்றும் அதன்கணிருந்த குயக்கோடன் “ஆரிய நன்று தமிழ் தீது” எனக் கூறினன் என்றும் அது கேட்டு நக்கீரர் தமிழன்னையின் சார்பாக அவனைச்சபித்தனர் என்றும் பின் பலர் வேண்ட உயிரிபபித்தனர் என்றும் தெரியலாம்….”

    ஆக, திரு சாரங், ஆரியம் என்றழைக்கபபடுவது வடமொழியே. அஃது சங்ககாலம் தொட்டே தமிழோடு மோதி வந்திருக்கிறது. அஃதாவது இப்படிப்பட்ட குயக்கோடன்கள் இன்று மட்டும்ன்று; தொன்று தொட்டு தமிழகத்தில் நின்று நிலவி தமிழை இழிவுபடுத்தியே வந்திருக்கின்றனர்.

    அந்த நக்கீரருக்கு இருக்கும் தாய்மொழிப்பற்று நமக்கிருக்கவேண்டும்.

    தமிழே தமிழரின் முதல் மொழி. தாய் மொழி. ஒருவனுக்குத் தாய் ஒருத்தி மட்டுமே. மற்றவரெவராயினும் அவள் செவிலித்தாய் மட்டுமே. நம் தாயை நாம் விட்டுக்கொடுக்கலாமா? அல்லது, அவளை இன்னொருத்திக்குச் சமம் எனப்பிதற்றலாமா அந்த இன்னொருத்தி தேவதையேயாயினும் ?

  38. @ சோமசுந்தரம்,

    \\Dravidian is society of people who speaks Tamil language \\

    அப்படி என்றால் தெலுங்கு பேசுபவர்கள், கன்னடம் பேசுபவர்கள் எல்லாம் யார்? சரி யார் தன்னை ஆரியன் என்று சொல்லி கொண்டது. நீங்கள் தமிழ் ஹிந்துவுக்கு புதியவரா?

    ஆரியம் திராவிடம் என்ற இனவாதம் இரண்டுமே கட்டு கதை என்பதை தான் காலம் காலமாக ஹிந்துக்கள் சொல்லி கொண்டு இருக்கிறோம்.

    அடுத்து தமிழின் அழகை பற்றி இங்கு யாரும் விமர்சனம் செய்யவில்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு…. மொழி இனவாதத்தை தான் இங்கு எதிர்க்கிறோம்… மொழியை அல்ல…

  39. //இவர்கள் கருனாநிதி மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தங்கள் ஊடகத்தைப்பயன்படுத்தினார்கள். //

    2G விஷயம் ஊர் உலகமெல்லாம் சிரிப்பாய் சிரித்துகொண்டிருக்கிறது. ஏன் மீண்டும் கருணாநிதி பதவிக்கு
    வரவேண்டும் ?

    //சோ ஜெயலலிதாவின் மென்டர் (mentor) என்பது ஊரறிந்த உண்மை.//

    இருக்கட்டுமே – நாட்டுக்கு நல்லது எது நடந்தாலும் சரி !!

  40. ஆரியம் திராவிடம் இல்லையெனில் ஏன் பழந்தமிழ் இலக்கியங்கள் தேவ பாஷை ஆகிய சமஸ்கிருதத்தை வெறும் ‘ வடமொழி’ , ‘வட சொல்’ ஆகிய சொற்களால் குறிப்பிட்டன. யாராவது விளக்கம் சொல்ல முடியுமா?

  41. உயர் திரு. கோமதி செட்டி.

    ////ஒரு மொழி எந்த காலத்திலும் இனமாக முடியாது… இனம் என்பதற்கும் இடத்தை அடிப்படையாக இருக்கும் மக்கள் கூட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாதா? விட்டால் தெலுங்கனா கூட ஒரு இனம் என்று சொல்விர்கள் போல இருக்கிறதே?///

    மொழிதான் ஒரு இனத்தை உருவாக்குகிரது. இல்லை என்று மறுக்க முடியுமா? மொழிவாரியாகத்தான் இனக்குழுக்கள் உருவாகின்றன, உருவாகின. பிறப்பின் அடிப்படையில் அல்ல. பிறப்பின் அடிப்படையில் இனக்குழுக்கள் என்பது ஆதிக்க சக்திகளின் பித்தாளும் சூழ்ச்சி, சுயனலனுக்காக இன்னொருவரை அல்லது இன்னுரு குழுவை அடிமையாக வைத்திருப்பது பலம் (பணம்)பொருந்தியவர்களின் இயல்பு. இது இன்றளவும் உள்ளது. இன்கேதான் ஜாதிகள் பிரிக்கப்பட்டன. அராபியர்கள் மற்றும் சமஸ்கிருதத்தின் தாக்கத்தில் உருவான மொழி மலையாளம் என்பதை நான் அனுபவமூலமாக தெரிந்து கொண்டவன்.அதற்க்கு நம்பூதிரிகள் எனப்படும் பார்ப்பனர்கள் ஒருகாரணம்.

    ///வெய்யில்ல தெருத்தெருவா சுத்திரிக்கீங்கன்னு நல்லா தெறியுது/// திரு சரங். வெயில்ல தெருத்தெருவா, ஊர் ஊரா சுத்துனதால தான் மொழிகளும், அவற்றிக்கிடையே ஒற்றுமை வேற்றுமை அறிய்முடிகிறது. சும்மா நாலு புத்தகம், அஞ்சு வெப்சைட்டு காப்பி, பேஸ்டு பண்ணணும்னா என்னெ வேணுண்ணாலுனம் தமாசு அடிக்கலாம். கன்னியாகுமரில இருந்து காஷ்மீர் வர ஊர் ஊரா போய்ப்பாரு தெரியும் உனக்கும் எல்லாம்.

  42. திரு நெஞ்சுக்கு நீத,
    மிக அழகாக கூறியுள்ளிர்கள். உண்மையும் அதுவே.

    கோமதி செட்டி,
    // சரி யார் தன்னை ஆரியன் என்று சொல்லி கொண்டது. நீங்கள் தமிழ் ஹிந்துவுக்கு புதியவரா?//
    உங்களுக்கு தெரியவில்லை போலும். தமிழ்நாட்டில் பலரும் தங்களை ஆரியர்கள் என்று கூறுகின்றனர். அதைவிட கொடுமை அவர்கள் தமிழை நீசபாஷை என்று கூறுவது தான். சிவபெருமானால் மொழிய பெற்றது தமிழ் மொழி. அது எவ்வாறு நீசபாஷையாகும்.

  43. நெஞ்சுக்கு நீதி அவர்களே
    ரா ராகவையங்காரைப் படிக்கச் சொல்கிறீர்கள்.நல்லது.கட்டாயம் படிக்கிறோம். நீங்கள் குறிப்பிடும் நக்கீரரின் திருமுருகாற்றுப் படையை நீங்கள் படித்திருக்கிறீர்களா?அது முழுக்க முழுக்க ஹிந்து மத நூல் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?நக்கீரர் வழியில் தாய் மொழிப் பற்று கொள்ளவேண்டும் என்று சொல்லும் நீங்கள் நக்கீரர் வழியில் ஹிந்து மதப் பற்று கொண்டிருக்கிறீர்களா? போகட்டும். நெஞ்சுக்கு நீதி என்பதே பாரதியாரிடமிருந்து கழகத் தலைவர் களவாடியது என்பதை அறிவீர்களா/

  44. \\அராபியர்கள் மற்றும் சமஸ்கிருதத்தின் தாக்கத்தில் உருவான மொழி மலையாளம் என்பதை நான் அனுபவமூலமாக தெரிந்து கொண்டவன்.அதற்க்கு நம்பூதிரிகள் எனப்படும் பார்ப்பனர்கள் ஒருகாரணம். \\

    உங்கள் நகைசுவை உணர்வுக்கு அள்வே இல்லை போங்கள்…. அரேபிய மொழிக்கும் மலையாளத்திற்கும் என்ன சம்மந்தம். கொஞ்சமாவது அடிப்படை மொழியியல் கூட உங்களுக்கு இல்லை என்பதை உங்கள் பின்னூட்டம் காட்டுகிறது.

    //வெய்யில்ல தெருத்தெருவா சுத்திரிக்கீங்கன்னு நல்லா தெறியுது// சாரங் அவர்கள் சரியாக தான் எழுதியுள்ளார் 🙂

    நமது ஊரில் துளு என்ற மொழி கூட தான் உள்ளது. அப்படி என்றால் துளு ஒரு இனமா?

    \\மொழிதான் ஒரு இனத்தை உருவாக்குகிரது. இல்லை என்று மறுக்க முடியுமா? \\

    இனம் என்பதே ஒரு தவறான பைபிலை அடிப்படையாக கொண்டு 18 ஆம் நூற்றாண்டில ஜெர்மனிய அறிவு ஜீவிகளால் உருவாக்கப்பட்டவை. நீங்கள் போய் கர்நாடகாவிலோ அல்லது கேரளாவிலோ சென்று கேட்டால் அவர்கள் மொழியில் இருந்து தான் தமிழ் வந்தது என்று கூறுவார்கள்.

    கன்னடமும் ஒரு செம்மொழி என்பதை தாங்கள் மறந்து விட முடியாது. அப்படி என்றால் இவைகள் அனைத்தும் கூட இனமா?

    அடுத்து இனம் என்ற வார்த்தையை நீங்கள் மரபியல் ரீதியாக சொல்கிறீர்களா? இல்லை கலாச்சார ரீதியாக சொல்கிறீர்களா?

  45. நெஞ்சுக்கு நீதி,
    //வடமொழி (சமசுகிருதம்)தமிழகத்துக்கு எங்கிருந்து வந்தது?

    உடனேயே அஃது ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது என்றெல்லாம் சொல்லக்கூடாது. //

    அசோகர் கல்வெட்டுகளில் மைசூர் கல்வெட்டு தமிழில் உள்ளது, மீதமுள்ள எல்லாமே வடமொழியில் அதாவது சம்ஸ்க்ருதத்தின் பேச்சு மொழி ப்ராக்க்ருத மொழியில் தான் உள்ளது.
    பொ.மு. கல்வெட்ட்களில், தெலுங்கு கன்னட மொழி சொற்கள் உள்ளன.
    தொல்காப்பியம் சம்ஸ்க்ருத இலக்கணத்தை சொல்கிறதே
    இன்று வளர்ந்துள்ள அறிவியல் ஆய்வுப் பின்னணியில் ராகவயங்கார், பி.டி.சீனிவாசயங்கார் எழுத்துக்கள் வெற்று பொய்த்துப் போன ஊகங்களே. அவற்றை மீண்டும் சொல்வது அறிவற்ற செயலே ஆகும்.

    பயனில் சொல் பாராட்டுவானை மக்கட் பதர் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

  46. ஆரிய, திராவிட இனங்கள் இருப்பது உண்மை. Biology படித்தவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். மனித உடலில் உள்ள செல்களில் இரண்டு இடங்களில் டி.என்.ஏ. இருக்கிறது. 1.உட்கரு (Nucleus) 2.மைட்டோகாண்ட்ரியா. இதிலே உட்கரு டி.என்.ஏ. என்பது தாயிடமிருந்து பாதி குரோமோசோம்கள், தந்தையிடமிருந்து பாதி குரோமோசோம்கள் இணைந்து உருவாகிறது. மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. தாயிடமிருந்து மட்டுமே செல்கிறது. இந்தியாவின் பலதரப்பட்ட மக்களை ஆராய்ந்து எடுக்கப்பட்ட அறிவியல்பூர்வமான ஆய்வுகள் ஒரு விஷயத்தை தெளிவாக கூறுகின்றன. தென்னிந்தியர்களுடைய ( பிராமணர் அல்லாதோர் ) உட்கரு டி.என்.ஏ. மற்றும் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. இரண்டுமே திராவிட ( தென்னிந்திய ) வகையை சார்ந்தவை. அதாவது அவர்களது தாய்வழி குரோமோசோம்களும் தந்தை வழி குரோமோசோம்களும் திராவிட வகையை சார்ந்தவை. மாறாக பிராமணர், வட இந்தியாவின் பெரும்பாலான மக்களுடைய செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. திராவிட வகையை சார்ந்தவை. ஆனால் அவர்களுடைய உட்கரு டி.என்.ஏ.வில் தாய்வழி திராவிட வகை குரோமோசோம்களும், தந்தைவழி ஆரிய வகை குரோமோசோம்களும் உள்ளன. இதிலே ராஜபுத் போன்ற இனத்தாருடைய தந்தைவழி குரோமோசோம்கள் நார்டிக்-ஆரியர்களுடைய குரோமோசோம்களை ஒத்தும், பிராமணர்களுடைய தந்தை வழி குரோமோசோகள் மத்திய ஆசியா மற்றும் யூதர்களின் குரோமோசோம்களை ஒத்தும் காணப்படுகின்றன. இப்போ இதனோடு சிந்துசமவெளி நாகரீகம் அழிக்கப்பட்டதையும், அந்த மக்களின் பெண்களை ஆரியர்கள் அபகரித்துக்கொண்டனர் என்று சொல்லப்படுவதையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை புரியும். இந்த ஆய்வை பிரிட்டிஷ்காரர்கள் செய்யவில்லை. பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் இதை பொத்தாம்பொதுவாக சொல்லிவிட முடியாது. ஏன்னா இதை சொன்னது ஃபின்லாந்து நாட்டு அறிவியலமைப்பு. சொல்லப்பட்ட காலமும் சுதந்திரத்துக்கு முன்பு அல்ல பிரித்தாளும் சூழ்ச்சி என்று சொல்வதற்கு. இதை அவர்கள் 2000வது ஆண்டு வெளியிட்டனர். அப்போதிருந்த பா.ஜ.க. ஆட்சி இதை வெளியே பரவலாக தெரிந்துவிடாதபடி பார்த்துக்கொண்டது. இதை தவிர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஆய்விலும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய குதிரையின் படிமங்கள் கிடைக்கவில்லை. ஆரியர்கள் தமது குதிரைப்படையின் காரணமாகத்தான் திராவிடர்களை தோற்கடித்தனர் என்பதும், 5000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சிந்துசமவெளி நாகரீகம் அழிக்கப்பட்டது என்பதையும் கவனிக்கவும். தவிர இந்த 5000 வருடத்துக்குட்பட்ட மன்னர்கள்தான் குதிரைப்படை வைத்திருந்தனர். இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என்னதான் விளக்கம் சொன்னாலும் ஏற்க விரும்பாத சிலருக்காக இந்த விளக்கம்.: ஆரியர்கள் திராவிடர்கள் என்று இரண்டு இனங்கள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை. ஆணும், ஆணும் சேர்ந்து பிள்ளை பெற்றுக்கொள்ள முடியும், பூமியை பாயாக சுருட்டமுடியும், மனித இனம் உருவாகி 1 லட்சம் வருடங்களே ஆகியுள்ள நிலையில் 17 லட்சத்து 50 ஆயிரம் வருடத்துக்கு முன்னாடி ஒரு மனிதர் பாலம் கட்ட முடியும், பூமியும் வராகமும் சேர்ந்து மனிதக்குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும் என்று சிலர் நம்பும்போது ( இதில் சிலவற்றை நானும் நம்புகிறேன் என்பது வேறு விஷயம் ) ஆரியர், திராவிடர் என்று நம்புவது முற்றிலும் சரியே.

  47. ஈழப் போர் நடக்கும் சமயத்திலும் பார்த்திருக்கிறேன் செய்திகளில் எப்படி இருக்கும் என்றால் Tamils, Sinhalese and Muslims! இரண்டு மொழி ஒரு மதம்!! அங்கு முஸ்லிம்கள் கூட தமிழ்தான் பேசியிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் தனி இனம்!!! at least on paper…
    இங்கோ ஆரியம் திராவிடம் என்றவுடனேயே தமிழ் சம்ஸ்கிருதம் பிராமணர்கள் பிராமணர்கள் அல்லாதோர் என்று ஆரம்பித்து விடுகிறார்கள்! கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி என்றால் western historians ஒத்துக் கொள்வார்களா? அவர்களைப் பொறுத்த வரை முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான் பிறகு வேறு பிரதேசங்களில் குடியேறினான். அதை ஒத்துக் கொள்வதென்றால் இப்போது சண்டை யார் இங்கு முதலில் குடியேறியது என்பதைக் குறித்துதானா?!
    யாராவது வேதங்கள் அல்லது சங்க இலக்கியங்கள் இந்த முதல் மனிதன் concept குறித்து என்ன சொல்கின்றன என்று விவரித்தால் நலம்…

  48. சுப்பு அவர்கள் இங்கு துணுக்குகளாக சில செய்திகளை எழுதியிருக்கிறார். ஒரு quick reference போல. இந்த சமாசாரம் பற்றி இந்த வலைத்தளத்திலேயே நிறைய கட்டுரைகள் வந்திருக்கிறது. அவற்றை எல்லாம் படித்தால் தான் முழுமையான தகவல் கிடைக்கும்.

    தமிழ் – சம்ஸ்கிருத மொழிகளுக்கு இடையே ஆன “பிளவு” என்பது 19ம் நூற்றாண்டில் தான் உருவாக்கப் பட்டது. அதற்கு முன்பு எல்லா புலவர்களும், அறிஞர்களும் இருமொழிகளிலும் புலவர்களாகவே இருந்தார்கள். இரு மொழிகளும் தெய்வத் தன்மை கொண்டவை என்றே கருதினார்கள்.

    19ம் நூற்றாண்டியில் மொழியியல் வகைப்பாடுகள் ஐரோப்பியர்களால் தப்பாக தாறுமாறாக உருவாக்ககப் பட்டு ஆரிய திராவிட இனவாதத்தில் முடிந்தது.

    அரவிந்தன் நீலகன்டன் 6 வருடம் மாங்கு மாங்கெண்று ஆராய்ச்சி செய்து ‘உடையும் இந்தியா’ புத்தகம் எழுதியிருக்கிறார். மறூமொழி போடுபவ்ர்கள் எத்தனை பேர் அந்தப் புத்தகத்தை படித்தார்கல் என்று தெரியவ்ல்லை. குறிப்பாக அந்த புத்தகத்தில் 2வது அத்தியாயம் முதல் 10வது அத்தியாயம் வரை இந்த விஷயம் குறித்து அக்குவேறு ஆணி வேறாக அலசி இருக்கிறார். பேசுபவர்கள் எல்லாம் அதைப் படித்துவிட்டு வந்து பேசுங்கள்

  49. சோமசுந்தரம்,

    // உங்களுக்கு தெரியவில்லை போலும். தமிழ்நாட்டில் பலரும் தங்களை ஆரியர்கள் என்று கூறுகின்றனர். அதைவிட கொடுமை அவர்கள் தமிழை நீசபாஷை என்று கூறுவது தான்.//

    ஆரிய வைஸ்யர் என்று ஒரு ஜாதியினர் தான் தமிழ்நாட்டில் “ஆரிய’ என்பதை தங்கள் பெயர் கூடவே சேர்த்து வைத்துக் கொண்டுள்ளார்கள். அவர்களை சொல்கிறீர்கள் போலும். சரி இருக்கட்டும். அந்த ஜாதி தமிழ் நாட்டில் வாழ உரிமை இல்லையா என்ன? அவர்கள் இந்த தேசத்தின் குடிமக்கள் இல்லையா? அரபி மொழி பளளிககூடம் வைத்து அந்த மொழியை ராப்பகலாக படிப்பவர்களும், உருது மொழி பேசுபவர்களும் இருக்கும் தமிழ்நாட்டில் ஆரியர் என்று தங்களை சிலர் அழைத்துக் கொள்ளக் கூடாதா? அதில் என்ன தவறு?

    *பலரும்* என்கிறீர்கள். சரி. உங்களிடம் நேரடியாக எத்தனை பேர் அப்படி கூறினார்கள்? கடந்த 25 வருடங்கள் வந்த தமிழ் தினசரிகள், பத்திரிகைககள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் அலசுங்கள். “தமிழ் நீசபாஷை” என்று யாராவது சொன்னதற்கு ஆதாரம் காட்டுங்கள். அப்போது தான் நீங்கள் சொல்வதை நம்ப முடியும். இல்லையென்றால் ஒரு ஆதாரமில்லாத பொய்ப் பிரசாரத்தை வேண்டுமெனறே மறு சுழற்சி செய்ததாகத் தான் கருதமுடியும்.

    வெறுப்புக்குத் தான் எத்தனை முகங்கள், எத்தனை போலி பாவனைகள்.

  50. சுப்பு தொட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரிவான விடை காண விரும்புவோர் வழக்கறிஞ்சர் கே சக்திவேல் எழுதிய தமிழ்நாடு தமிழருக்கே என்ற புத்தகத்தைப் படிக்கவும்.

  51. சோமசுந்தரம் அர்களுக்கு தமிழ் பற்றை விட திருமறை மீதுதான் பற்றுதல் அதிகம். சிலர் திருமறையை எற்கமால் வேதத்தை மட்டும் ஏற்பதால் அவருக்கு கோவம். அந்த கோவத்தின் வெளிப்பாடே அவர் இங்கு எழுதுவது . முன்பு கூட பல முறை எழுதி உள்ளார். சமஸ்க்ருதத்தை உள்வாங்காமல் தமிழ் தான் உலகிலேயே சிறந்த மொழி என்கிறார். தமிழ் மொழி அல்ல, அது பண்பாடு என்பார். இதெல்லாம் மதமல்ல மார்கம் என்றும், இவர் தான் இறுதி தூதர், இவர் தான் ஒரே கடவுள் என்றும் சிலர் சொல்லுவது போலவே உள்ளது.
    நமக்கு பற்று இருக்கலாம் அனால் நிதர்சனம் வேறு என்பதை மனதில் கொண்டால் நல்லது

  52. திரு பாலா,
    //“இல்லையென்றால் ஒரு ஆதாரமில்லாத பொய்ப் பிரசாரத்தை வேண்டுமெனறே மறு சுழற்சி செய்ததாகத் தான் கருதமுடியும். //
    உங்களின் கருது அதுவாகவே இருக்கட்டும். என் அனுபவத்தை தான் எழுதினேன்.
    நன்றி
    சோமசுந்தரம்

  53. நிஷாதன் சதானந்தசிவம்
    பெயரே நிறைய நீங்கள் சொல்லும் ஆரியவாடை அடிக்கிறது. இந்த இன ஆராய்ச்சி என்பது காலணிஆட்சி தொடங்கியபின் அரசியல் ஆகிவிட்டது. இது இனத்தோடு நிற்காமல் சரித்திர கலாசார திரிபுகளையும் திட்டமிட்டே செய்கின்றார்கள். எனவே எல்லா ஆராச்சிகளும் ஒரு உள்நோக்கதுடனேயே முடிவுகளை வெளியிடுகின்றனர். இந்த டி.என்.ஏ. ஆராய்சிகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வலை தளத்திற்கு சென்று சமீபத்திய டி.என்.ஏ ஆராய்ச்சி (திராவிட-ஆரிய இனம் பற்றி) என்று டைப் செய்தால் நிறைய ஆராய்ச்சி முடிவுகள் சில இதற்கு ஆதரவாகவும் சில இதற்கு பாதகமாகவும் தான் உள்ளது. இது எப்படி இருக்கிறது என்றால் இரண்டு குருடர்கள் யானையை தடவிபார்த்து இப்படி இப்படி என்ற விளக்குவதற்கு ஒப்பாகும். தொன்மையான தமிழ் இலக்கியங்களிலும் புராணங்களிலும் இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்டு எழுதப்பட்டவை அல்ல. அங்கே எல்லாம் இது இனமாக கூறப்படவில்லை என்பது நிதர்சன உண்மை.
    சரி அப்படி ஒன்று இருப்பதாக வைத்துகொண்டால் இப்பொழுது நாம் எல்லோரும் ஒர் இனம் தான் என்று சொல்லூபவர்களை என்ன செய்ய வேண்டும் என்று எதிபார்கிறீர்கள் ?

  54. தமிழை நீசமொழி என்று யார் சொன்னார்கள், எங்கு சொன்னார்கள் எப்பொழுது சொன்னார்கள் எனப்தை யாராவது அதிகார பூர்வமாகத் தெரிவித்தால் என்னைப் போன்றவர்கள் விளக்கம் பெறுவர். அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியர் என்பவர் நக்கீரன் பத்திரிக்கையில் எழுதிய ம்ஞ்சட்பத்த்ரிக்கை செய்திகள் மட்டும் வேண்டாம். மெய்கண்டார், அவருடைய மாணாக்கர் அருணந்திசிவாசாரியர்ர், உமாபதிசிவம், சிவஞான முனிவர், அவர் மாணாக்கர் கச்சியப்பமுனிவர், இலக்கணக் கொத்து ஆசிரியர் திருவாவடுதுறை சாமிநாத தேசிகர் முதலிய சைவசித்தாந்த ஞானாச்சாரியர்கள் அனைவரும் இருமொழிகளிலும் வல்லவர்கள். சந்த மறியும் தமிழும் வல்ல பாம்பன் சுவாமிகளின் வடமொழிப் புலமையும் வேதக் கல்வியும் வியக்கத் தக்கது. இருமொழியின் பயனை அறியாதவர்களைத் திருஞானசம்பந்தர் ‘மந்திபோல் திரி ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறிகிலார்’ என்று கண்டித்தார். வடமொழி அறியாமை ஒரு பெரிய குறை அல்ல. சைவர்கள் வடமொழியிலிருந்து அறிய் வேண்டுவனவற்றை நமக்கு மொழிபெயர்த்து சாத்திரமாகவும் தோத்திரமாகவும் இலக்கியங்களாகவும் அளித்துள்ளனர். அவற்றைக் கற்றாலே போதும் சைவர்களுக்கு வடமொழிப் பயிற்சி இல்லவிட்டால் பரவாயில்லை. ஆனால் வடமொழித் துவேஷம் அறவே கூடாது. அதனால் வரும் இழப்புப் பெரிதாம். நம் ஞானாச்சாரியர்களின் வாக்குக்களின் மீதே சந்தேகப்படும் பாவத்துக்கு நம்மைக் கொண்டு செலுத்திவிடும். இம்மொழிகளினால் ஆன்மலாபம் விரும்புவோர் இச்சண்டைகளில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாகவே இருப்பர்.

  55. இவர்கள் கருனாநிதி மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தங்கள் ஊடகத்தைப்பயன்படுத்தினார்கள். //

    2G விஷயம் ஊர் உலகமெல்லாம் சிரிப்பாய் சிரித்துகொண்டிருக்கிறது. ஏன் மீண்டும் கருணாநிதி பதவிக்கு
    வரவேண்டும் ?

    //சோ ஜெயலலிதாவின் மென்டர் (mentor) என்பது ஊரறிந்த உண்மை.//

    இருக்கட்டுமே – நாட்டுக்கு நல்லது எது நடந்தாலும் சரி !!//

    @திரு ர‌ங்க‌ராஜ‌ன்

    நான் எழுதிய‌து க‌ருனாநிதியின் புல‌ம்ப‌லை ஒருவ‌ர் அடிப்ப‌டையாக‌ வைத்து ‘சில‌ பிராம‌ண‌ர்க‌ள்’ என்ப‌து ஒட்டுமொத்த‌மாக‌ ஒரு ஜாதியின‌ரைக்குறிக்கிற‌து என்று சொல்லி ஜாதி வாத‌ம் புரிகிறார். க‌ருனானிதியின் புல‌ம்ப‌ல் ய‌தார்த்த‌மான‌து. அவ‌ரைப்பொறுத்த‌வ‌ரை நியாய‌மான‌து என்ப‌தைச் சொல்லவே என் பின்னூட்ட‌ம். அர‌சிய்ல‌ ச‌ரி, த‌வ‌றுக‌ளைப்ப‌ற்றி எழுத‌ வேறிட‌ம் பார்ப்போம்.

  56. அசோகர் கல்வெட்டுகளில் மைசூர் கல்வெட்டு தமிழில் உள்ளது, மீதமுள்ள எல்லாமே வடமொழியில் அதாவது சம்ஸ்க்ருதத்தின் பேச்சு மொழி ப்ராக்க்ருத மொழியில் தான் உள்ளது.
    பொ.மு. கல்வெட்ட்களில், தெலுங்கு கன்னட மொழி சொற்கள் உள்ளன.
    தொல்காப்பியம் சம்ஸ்க்ருத இலக்கணத்தை சொல்கிறதே
    இன்று வளர்ந்துள்ள அறிவியல் ஆய்வுப் பின்னணியில் ராகவயங்கார், பி.டி.சீனிவாசயங்கார் எழுத்துக்கள் வெற்று பொய்த்துப் போன ஊகங்களே. அவற்றை மீண்டும் சொல்வது அறிவற்ற செயலே ஆகும்.

    பயனில் சொல் பாராட்டுவானை மக்கட் பதர் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை
    அசோகர் கல்வெட்டுகளில் மைசூர் கல்வெட்டு தமிழில் உள்ளது, மீதமுள்ள எல்லாமே வடமொழியில் அதாவது சம்ஸ்க்ருதத்தின் பேச்சு மொழி ப்ராக்க்ருத மொழியில் தான் உள்ளது.
    பொ.மு. கல்வெட்ட்களில், தெலுங்கு கன்னட மொழி சொற்கள் உள்ளன.
    தொல்காப்பியம் சம்ஸ்க்ருத இலக்கணத்தை சொல்கிறதே
    இன்று வளர்ந்துள்ள அறிவியல் ஆய்வுப் பின்னணியில் ராகவயங்கார், பி.டி.சீனிவாசயங்கார் எழுத்துக்கள் வெற்று பொய்த்துப் போன ஊகங்களே. அவற்றை மீண்டும் சொல்வது அறிவற்ற செயலே ஆகும்.

    பயனில் சொல் பாராட்டுவானை மக்கட் பதர் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை
    //

    ஐயா பைந்தமிழரே !

    உங்களுக்குப்பிடிக்கா கருத்துக்களை எவர் சொல்லினும் அவை ‘அறிவற்ற செயலகள்’ அவர்கள் மக்கட் பதர்கள்.

    அய்யோ பாவம் தமிழறிஞர்கள். இந்தவிரு ஐயங்கார்களும் எந்தவித உள்ளோக்கத்துடனும் எழுதவில்லை ! ஒரு ஐயரும் இருக்கிறார். அவரைத்தான் தற்போது படித்துவருகிறேன். அவர் பெயர் கோபாலைய்யர். உங்களுக்கு ஒரு விடயம் சொல்கிறேன். அவரும் இப்படி ஆரிய, வடமொழி என்றெல்லாம் கதைக்கிறார். அவருக்குத் தமிழறிஞர்கள் கொடுததப்பட்டம் ‘கல்விக்கடல்’. ஆக‌, இவ‌ர்க‌ளையெல்லாம் நான் ஏன் எடுத்துக்காட்டுகிறேன் என்றால், இவ‌ர்க‌ள் ‘திராவிட‌க்கூட்ட‌த்துக்கு’ அப்பாற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இல்லையா?

    போக‌ட்டும், வ‌ட‌மொழிகே வ‌ருவோம். நீங்க‌ளே வ‌ட‌மொழியென்று சொல்லிவிட்டீர்க‌ள். கேஸ் டிஸ்மிஸ்ட் இல் லிமினி. பின் என்ன‌ பிர்ச்சினை? ஆழ்வார்க‌ள் சொல்லிவிட்டார்க‌ள். நாய‌ன்மார்க‌ள் சொல்லிவிட்டார்க‌ள். ப‌ழ‌ன்த‌மிழ் அறிஞ‌ர்க‌ள் சொல்லிவிட்டார்க‌ள். அனைவ‌ரும் ‘வ‌ட‌மொழி’யென்றே ச‌ம‌சுகிருத‌த்தை அழைத்து அது ஒரு வ‌ட‌க்கில் உதித்த‌ த‌மிழ‌க‌த்துக்க்கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌ மொழியென்று சொல்லிவிட்டார்க‌ள். எத்த‌னையாயிர‌த்துக்கு முன் க‌ல்வெட்டு சொன்னாலென்ன‌? அது த‌மிழ‌ரின் தாய்மொழியாகிவிடுமா? அம்மொழியை உருவாக்கிய‌வ‌ர் யார்? நாமில்லையே? இதை ம‌ட்டும் உணர்ந்ததால் போதும். ஒருவ‌ருக்கு இரு தாய்மொழிக‌ள் இருக்கா. என‌க்கில்லை ! பைந்த‌மிழ‌ருக்கு ?

  57. //தமிழை நீசமொழி என்று யார் சொன்னார்கள், எங்கு சொன்னார்கள் எப்பொழுது சொன்னார்கள் எனப்தை யாராவது அதிகார பூர்வமாகத் தெரிவித்தால் என்னைப் போன்றவர்கள் விளக்கம் பெறுவர். அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியர் என்பவர் நக்கீரன் பத்திரிக்கையில் எழுதிய ம்ஞ்சட்பத்த்ரிக்கை செய்திகள் மட்டும் வேண்டாம். மெய்கண்டார், அவருடைய மாணாக்கர் அருணந்திசிவாசாரியர்ர், உமாபதிசிவம், சிவஞான முனிவர், அவர் மாணாக்கர் கச்சியப்பமுனிவர், இலக்கணக் கொத்து ஆசிரியர் திருவாவடுதுறை சாமிநாத தேசிகர் முதலிய சைவசித்தாந்த ஞானாச்சாரியர்கள் அனைவரும் இருமொழிகளிலும் வல்லவர்கள். சந்த மறியும் தமிழும் வல்ல பாம்பன் சுவாமிகளின் வடமொழிப் புலமையும் வேதக் கல்வியும் வியக்கத் தக்கது. இருமொழியின் பயனை அறியாதவர்களைத் திருஞானசம்பந்தர் ‘மந்திபோல் திரி ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறிகிலார்’ என்று கண்டித்தார். //.

    சொல்லப்பட்ட கருத்து வடமொழி உயர்வா? இல்லைத் தமிழ்மொழியா ?
    தமிழருக்கு தாய்மொழி முதலில் வைக்கப்பட்டுச் சிறப்பு செய்யப்படவேண்டுமா ? இல்லை, அன்னிய மொழியொன்றா? இவையே கேள்விகள்.

    வடமொழி எவர் கற்றார்? அதில் உள்ள அருமை பெருமைகள் எவை என்ற கேள்விகள் எழுப்பப்படவில்லை.

    மேலும், வட மொழியா தென்மொழியா என்ற கேள்வி திராவிடக்கட்சியினரால் எழுப்பட்டது என்பது உண்மை அன்று. மாறாக, சங்ககாலமுதற்கொண்டு இக்கேள்வி எழுப்பட்டே வந்திருக்கிறது என்பதை தொல்காப்பியச் செய்யுளுரையிலிருந்து எடுத்துக்காட்டியவர் அண்ணாமலைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவராக இருந்தவரும் இராமநாதபுர அரசவை வித்வான் பாஷா கவிசேகரர் ரா ராகவையங்கார்.

    தமிழ் நீச பாசை என்று எவர் சொன்னார் என்ற ஆராய்ச்சி வேண்டாம். தமிழுக்குத் தெய்வத்தைப்பற்றிப்பாட தகுதியில்லை என்றாலும் நீச பாசை என்றாலும் ஒன்றே. வடமொழிக்கே அத்தகுதியென்றார்கள். எனவே அது தேவபாசையாகும் என்றார்கள். எனவேதான் ஆழ்வார் பாசுரங்களை ஏறக் மறுத்தார்கள். தமிழுக்கும் தேவனைப்பற்றிப்பாட தகுதி உண்டு. ஆழ்வார் பாசுரங்கள் திருமாலை நேரடியாகச்சென்றடைகின்றன. அவை திருமால் வண்க்கத்தில் இடம் பெறவேண்டும் என்ற உறுதியையும் வெற்றியையும் அடைய இராமானுஜர் போராட வேண்டியதிருந்தது என்ற உண்மை ஆச்சாரியர்களால் எழுதப்பட்டு விட்டது. எவராலும் மறைக்க முடியாது.

    இன்னும் எவ்வளவோ எழுதலாம். ஆனால் தூங்குபவர்களைப்போல நடிப்பவர்களை எழுப்ப முயல்வதாம். போகட்டும். தாய்மொழிக்கு ஈடாக வேறெந்த மொழியையும் வைத்து வண்ங்க முடியாது.

    இது மொழிப்போர் அன்று. இம்மொழி சிறந்ததா? அம்மொழியா என்ற வாதமன்று இங்கே. இங்கே நடப்பது உரிமைப்போர். தமிழர்கள் தங்கள் தாய்மொழியை முதலில் வைத்துப் போற்ற தமிழர்களிடமே போராடவேண்டிய பரிதாப நிலை இங்கே!

    எம்மொழியையும் கற்பார்கள் தமிழர்கள். ஆங்கிலப்புலமையால் புலம்சென்று புகழைடந்தோர் இவர்கள். எங்கு சென்றாலும் அவ்வூர் மொழியைக்கற்பவர்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எங்கள் முப்பாட்டன் எங்களுக்குக் கற்றுத்தந்தான். ஆயினும் நாங்கள் கேடபது ஒன்றேயொன்றே: எங்கள் தாய்மொழியே எங்கள் நாட்டின் அரியணையில் அமரத் தகுதியுடைய்வள் என்பதே. இந்த் உரிமைக்குரல் எழுப்பினால் வடமொழித்துவேசமா ?

  58. நிஷாதன் சதானந்தசிவம்
    ;
    // மாறாக பிராமணர், வட இந்தியாவின் பெரும்பாலான மக்களுடைய செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. திராவிட வகையை சார்ந்தவை. ஆனால் அவர்களுடைய உட்கரு டி.என்.ஏ.வில் தாய்வழி திராவிட வகை குரோமோசோம்களும், தந்தைவழி ஆரிய வகை குரோமோசோம்களும் உள்ளன.//
    என்ன சொல்லுகிறார் என்று pவிளங்கவில்லை. இங்கேயுள்ள பிராமிணர்கள் எல்லாம் திராவிடதாய்களுக்கு பிறந்தவர்கள் என்கிறாறா ? வந்த ஆரியர்களுக்கு குடும்பம் கிடையாதா ? அவர்களை விட்டுவிட்டு வந்தார்கள் என்றால் அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள். பிராமிணரகளின் பழக்கவழக்கங்கள் தெய்வ வழிபாடுகள் இந்தியாவை தவிற வேறு எங்கும் காணாவில்லையே. ஏன? இது ஒரு குதர்கமான குய புத்தி விளக்கம். குதிரை பற்றி மறுபடியும் ஆரம்பித்துவிட்டார். அஸ்வமேத யாகத்தை பற்றி புராணங்கள் கூறுகி்ன்றன. சரி இங்கே வந்த துலுக்கர்களும் வெள்ளையர்களும் பல இன கலப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களும் தாய் வழி திராவிடர்கள் தானா ? கயறுதிரிக்க அளவு இல்லைபோலும்.

  59. `வால்மீகி வாய்மையும் கம்பன் புளுகும்` என்று ஒரு புத்தகத்தை ஒரு முதலியார் எழுதியிருக்கிறார்.என்ன செய்யலாம். தமிழைப் பழித்தார் என்று சொல்லி எல்லா முதலியார்களையும் ஓரம் கட்டி விடலாமா?

  60. திருய் சுப்பு அவர்களின் ” திராவிட மாயை ” என்ற புத்தகத்தைப் படித்துள்ளேன்.
    இங்கு அவர் எழுதியுள்ள ஆரியமும் திரவிடமும் – இலக்கிய ஆதாரங்கள் என்பதையும் படித்தேன். அதற்கு வந்துள்ள மறுமொழிகளையும் படித்தேன்.

    1. “திராவிட மாயை ” என்னும் புத்தகம் முன்னர் இதே வலைத்தளத்தில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. அது ஓர் ஆராய்ச்சி நூல். மிகவும் கஷ்டப்பட்டு அனைத்து விஷயங்களுக்கும் ஆதாரங்களைத் தேடிக் கொடுத்திருக்கிறார். இதன் இரண்டாம் பாகமும் வரவிருப்பதாக அறிகிறேன்.

    2. இக்கட்டுரையிலும் ஆதாரங்களோடு ஆரிய திராவிட தில்லு முல்லுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

    3. அவற்றைப் படிப்பதனால் உண்மை நிலவரம் — 1917 முதல் 1947 வரை – என்ன என்பதும், திராவிடக் கட்சிகளின் ஏமாற்று வேலையும் , புளுகும் விளங்குகின்றன.
    அவ்வளவே.

    இதில் ஏன் ஜாதி, சமய வம்புகளை இழுக்கிறார்கள்; ஏன் தனிப்பட்ட முறையில் மறைமுகமாக தாக்குகிறார்கள் என்று புரியவில்லை.
    கடின வசை மொழிகள் இல்லாமல். உண்மைகளை ஆதாரங்களோடு வெளியிடும் மாண்பை வரவேற்காது, அதற்கும் பொய்க்குற்றாம் சுமத்தினால் என்னாவது? எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி தம்மைத்தாமே ஏமாற்றிக் கொண்டு மற்றவரையும் குழப்புவார்களோ ? பொறியற்ற விலங்குகள் போல் திரியும் இந்தத் தமிழ்ச் சாதியை, இறைவா நீ என்ன செய்யப்போகிறாய் ?

  61. உலகில் உள்ள எல்லா மொழிகளும் ஒரே தரத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் மூல மொழிகள் அனைத்தும் நம்மைப் படைத்த இறைவன் மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்ததே! தனது தாய் மொழியின் மேல் ஒருவனுக்கு பற்று இருக்க வேண்டும். அது வெறியாக மாறி மற்ற மொழிகளை அழிக்க நினைக்கக் கூடாது. மற்ற மொழிகளை கீழாக நினைக்கக் கூடாது.

    அதெல்லாம் இருக்கட்டும். தமிழ் மொழியும் வட மொழியும் ஒன்றுதான் எனபவர்கள் கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு தமிழை அனுமதிப்பதில்லை ஏன்?

  62. சுவனபிரியன்
    அறநிலைதுறை கட்டுபாட்டில் இருக்கும் கோயில்களில் தமிழிலும் அர்சனை செய்ப்படும் என்று போர்ட்டு உள்ளது. சில இடங்களில் தமிழிலும் அர்சனை செய்கிறார்கள் ஆனால் பல இடங்களில் தமிழ் அர்சனை செய்ய ஆட்கள் இல்லை. அது சரி நீங்கள் எப்பொழுது ஒலிபெருக்கியில் தமிழில் நமாஸ் படிப்பீர்கள். ஏன் என்றால் நீங்கள் தினம் ஐந்து முறை ஒலிபெருக்கியில் நமாஸ் சொல்லும் போது ” அல்லாவை தவிற வேறு கடவுள் இல்லை” என்பதையும் சொல்கிறீர்கள் என்கிறார்கள் இது உண்மையா ?

  63. இங்கு ஒருவர் எழுதியிருக்கிறார் மொழியிலிருந்து இனமில்லையென்று. இவ்வாதம் வழக்காடுமன்றத்தில் செல்லுபடியாகலாம். அன்றாட வாழ்க்கையில்?

    இன்றையதினம் மதுரையில் வைக்கோ தலைமையில் திருமலை நாயக்கரின் 499 ம் (to be corrected) ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. காலை 10 மணிக்கு காள்வாசலருகில். ஊரெங்கும் சுவரெட்டிகள். நடாத்துபவர்கள் தென்னிந்திய நாயுடு மஹா ஜனம் என்றமைப்பு.

    சுவரொட்டிகள் அலறுகின்றன:

    “தெலுங்கினமே திரண்டு வா?”

    இங்கு மொழியிலிருந்து இனம் வராது என்றெழுதியவர் தந்த வீட்டில் (ivory tower) வாழாமல் தெருக்களில் என்ன நடக்கிறதென்பதை பார்க்கவேண்டும்.

    500 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வந்தே[..] தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டோர் தங்களைத் தமிழினம் எனவழைகக்வில்லை. தெலுங்கினம் என்றுதானே அழைக்கிறார்கள்?

    அப்போது நாங்கள் எங்களைத் தமிழினம் எனவழைத்தால் மட்டும் பகடி பண்ணி இன்புறுகிறீர்களே ஏன்?

    Brahmins put Sanskrit first; Nayudus put Telugu only. WHY SHOULD NOT WE TAMILS PUT OUR MOTHER TONGUE FIRST ?

    [Edited and published]

  64. திரு வேதம் கோபால்!
    //சுவனபிரியன்
    அறநிலைதுறை கட்டுபாட்டில் இருக்கும் கோயில்களில் தமிழிலும் அர்சனை செய்ப்படும் என்று போர்ட்டு உள்ளது. சில இடங்களில் தமிழிலும் அர்சனை செய்கிறார்கள் ஆனால் பல இடங்களில் தமிழ் அர்சனை செய்ய ஆட்கள் இல்லை. அது சரி நீங்கள் எப்பொழுது ஒலிபெருக்கியில் தமிழில் நமாஸ் படிப்பீர்கள். ஏன் என்றால் நீங்கள் தினம் ஐந்து முறை ஒலிபெருக்கியில் நமாஸ் சொல்லும் போது ” அல்லாவை தவிற வேறு கடவுள் இல்லை” என்பதையும் சொல்கிறீர்கள் என்கிறார்கள் இது உண்மையா ?//

    இஸ்லாம் ஒரு உலகலாவிய மதம். ஆப்ரிக்காவுக்கு நீங்கள் சென்றாலும் பாங்கு ஒலியைக் கேட்டு இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது என்ற முடிவுக்கு வருவீர்கள். அதேசமயம் குர்ஆன் அரபி மொழியில் இருப்பதால் அரபி தேவ மொழியாகி விடாது. ஏனெனில் உலகில் உள்ள அனைத்து மூல மொழிகளுக்கும் இறைவன் வேதத்தை அருளியதாக குர்அனிலேயே கூறுகிறான். எனவே ஒரு முஸ்லிம் தனது தாய் மொழி தமிழை எப்படி நேசிக்கிறானோ அதே அளவுகோலோடுதான் மற்ற உலக மொழிகளையும் பார்க்க வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடு.

    மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
    திருக்குர்ஆன் 49:13

  65. vedamgopal ///என்ன சொல்லுகிறார் என்று pவிளங்கவில்லை. இங்கேயுள்ள பிராமிணர்கள் எல்லாம் திராவிடதாய்களுக்கு பிறந்தவர்கள் என்கிறாறா ? வந்த ஆரியர்களுக்கு குடும்பம் கிடையாதா ? அவர்களை விட்டுவிட்டு வந்தார்கள் என்றால் அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள். பிராமிணரகளின் பழக்கவழக்கங்கள் தெய்வ வழிபாடுகள் இந்தியாவை தவிற வேறு எங்கும் காணாவில்லையே. ஏன? இது ஒரு குதர்கமான குய புத்தி விளக்கம். குதிரை பற்றி மறுபடியும் ஆரம்பித்துவிட்டார். அஸ்வமேத யாகத்தை பற்றி புராணங்கள் கூறுகி்ன்றன. சரி இங்கே வந்த துலுக்கர்களும் வெள்ளையர்களும் பல இன கலப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களும் தாய் வழி திராவிடர்கள் தானா ? கயறுதிரிக்க அளவு இல்லைபோலும்.////

    ஆம் இங்குள்ள பிராமணர்கள் எல்லோரும் திராவிடப் பெண்களுக்குப் பிறந்தவர்கள் தான் ,குடும்பத்தை விட்டு விட்டுத் தான் இவர்கள் வந்தார்கள் .பிராமணப் பழக்கவழக்கங்கள்,தெய்வ வழிபாடுகள் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இல்லை என்று நீங்கள் சொல்லுவது உங்களின் அறியாமையைக் காட்டுகிறது ,யாகம் செய்வது ,குருமாரின் விசேட உடைகள் ,புனித தினங்கள் ,விசேட உணவுகள் ,ஆத்துமா அழியாமை, நல்லவர்கள் சொர்க்கத்துக்கும் ,பொல்லாதவர்கள் நரகத்துக்கும் போவது ,பாவ நிவர்த்திக்காக பலிகளைச் செலுத்துவது ,ஏறக்குறைய எல்லா மனிதரையும் தண்ணீர் அழித்தது என்கிற புராணக் கதை ,சிவன் என்கிற ஒரு பொதுப் பெயர் ,சைவாலயங்கள் கட்டும் முறை ,கும்பாபிசேகம் செய்யும் முறை ,ஆலயங்களின் வெளிச்சுவரில் சிவப்பு வர்ணம் அடிக்கும் பழக்கம் ,வெள்ளிக்கிழமை புனித நாள் ,குருக்களுக்கு மக்கள் எல்லோரும் தான தர்மம் செய்ய வேண்டும் என்கிற போதனை ,மக்களில் கோத்திர அமைப்பு முறை ,தம்மைத் தான் கடவுள் தேர்ந்தெடுத்த மக்கள் என்று கூறிக்கொள்வது ,வீட்டிலும் பொது இடங்களிலும் சடங்குகள் செய்வதற்கான முறைகள் ,என்று அத்தனை பிராமணர்களுக்கு உரிய பழக்கங்களும் பண்டைய இரானிய ,பபிலோனிய போதனைகளின் அடிப்படையிலேயே இருக்கின்றன ,இங்கு நான் வெள்ளையர் அல்லது அரபுக்கள் ஏற்படுத்திய இனக்கலப்பு எதையுமே மறுக்கவில்லை .

  66. ஜனாப் சுவனபிரியன்,
    உங்கள் மார்க்க தலைவர்கள் கூறும் விளக்கங்களை கூறுகிறீர்.தமிழ்நாட்டில் கடையநல்லூரில் அல்லது அதிராம்பட்டினத்தில் அல்லது நாகூரில் வேறு மொழிக்காரர் யாரேனும் வந்து தமிழில் சொல்லும் பாங்கு புரியாது முழிப்பாரா? என்னமா சப்பை கட்டுகிறீர்? நீங்கள் தமிழில் பாங்கு சொல்ல உங்கள் மதம் அனுமதிக்கிறதா? தமிழில் தமிழ் நாட்டில் ஒரு மசூதியில் மட்டுமாவது செய்ய வேண்டியதுதானே?
    மேலும்உங்கள் ஸ்டைலில் சொல்வதானால் இந்துக்கள் அனைவரும் சடங்குகளை செய்யும் பொழுது இந்தியா முழுதும் ஒரே மொழியில் (அதாவது காஸ்மீரில் நடக்கும் யாகத்தில் கன்யாகுமரியில் வேதம் பயின்ற ஒருவர் நடத்த) ஒரு பொதுவான மொழி இருப்பது தவறு இல்லை.இங்கு தமிழில் யாகம் செய்வோரும் உண்டு. உங்களால் ஒரு இடத்திலாவது தமிழில் பாங்கு நமாஸ் சொல்ல முடியுமா?இதுதான் கேள்வி,
    இரண்டாவதாக “லாஹிலாஹா ஹிள்ளல்லா” தமிழ்படுத்தி நீங்கள் பாங்கு கூற முடியுமா?இதுவே வேதம் கோபால் சாரின் கேள்வி?
    தமிழ் வேதங்களான தேவார திருவாசகங்கள் சிவாலயங்களில் ஓதுவார் மூர்த்திகளால் தினம் ஓதப்படுகின்றன. நாலாயிரத்திவ்ய பிரபந்தமும் ஒவ்வோர் வைணவ ஆலயத்திலும் தினமும் பாடபெறுகின்றன. மேலும் ஒவ்வோர் வைணவரும் பிரபந்தங்களை நிச்சயம் ஓதுகின்றனர் ஒவோர் சைவரும் திருவாசகம் நிச்சயம் ஓதுகின்றனர். தமிழில் தான் வேற்று மொழியில் அல்ல.
    உங்களால் முடியாது தமிழ் வழிபாடு எங்களிடம் உள்ளது

  67. //suvanappiriyan on February 7, 2012 at 2:10 am//

    ‘உலகிலுள்ள எல்லா மொழிகளும் ஒரே தரத்தில் வைத்துப் பார்க்கப்பட வேண்டும்’ என்னும் உங்கள் கருத்து என்னைப் பொறுத்தவரை மிகச் சரியானது. ஆனால் இந்தக் கருத்தை முன்மொழியும் தாங்கள், ‘தமிழ் அர்ச்சனை செய்ய வேண்டும்’ என்றும் கூறுவது சமஸ்கிருததத்தை மற்ற மொழிகளுக்குச் சமமாகத் தாங்கள் மதிக்காததாலா?

    இது ஒரு புறமிருக்க, ‘இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் நமாசுக்கு ஏன் ஒரே மொழியைப் பயன்படுத்துகிறீர்கள்?’ என்னும் கேள்விக்கு, ‘எல்லா மொழிகளையும் சமமாகப் பார்க்க வேண்டும்’ என்று பதில் தரும் நீங்கள், சமஸ்கிருதத்துக்கு பதிலாக மட்டும் தமிழைப் பயன்படுத்தும் முன்மொழிவைச் செய்வது பொருந்தவில்லையே..!

    மேலும் தமிழில் தேவாரமோ திருவாசகமோ திவ்யப் பிரபந்தமோ திருப்புகழோ இசைத்து இறை வழிபாடு இயற்ற எவருக்கும் பூரண உரிமை இருக்கிறது. ஆனால், தமிழில் 108 நாமாவளிகளைச் சொல்லி அர்ச்சிக்கும் முறையெல்லாம் போட்டிக்காகப் பின்னர் உருவாக்கப்பட்டவை.

    பள்ளி வாசலில் சென்று இறைவனை எந்த மொழியில் வணங்கினாலும் அவர்களை அங்கு வரவழைக்க, ‘அல்லாஹு அக்பர்…’ என்கிற ஒரே மொழித் தொடரை அங்கீகரித்திருப்பதுபோல், கோயில் வழிபாட்டுக்கும் மந்திரத் தொகுப்புகளும் நாமாவளிகளும் ஆகம முறைகளும் சொல்லப்பட்டுள்ளன. இதில் இந்த மொழியைப் பின் தள்ளிவிட்டு அந்த மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் சரியான பாதை அல்ல.

    இந்த மொழிச் சண்டைகள் எல்லாம் ஹிந்து சமய நம்பிக்கைகளை அர்த்தமற்றதாக்க முயலும் ஒரு சிறு பகுதியினரின் வீண் முயற்சி. சகோதர மதத்தைச் சேர்ந்த தங்களைப் போன்றோர் இக்கருத்தினை நன்கு மனத்தில் பதியவைத்துக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

  68. \\அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில்\\

    அப்படி என்றால் அல்லாவும் ஜாதியை உருவாக்கினேன் என்று சொல்கிறாரா?

    \\அதெல்லாம் இருக்கட்டும். தமிழ் மொழியும் வட மொழியும் ஒன்றுதான் எனபவர்கள் கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு தமிழை அனுமதிப்பதில்லை ஏன்?\\

    உங்களுக்கு கோயில் பற்றி எதுவும் தெரியாது என்பது உங்கள் மதத்தை வைத்தே தெரிந்து கொண்டேன். தவிர கோயில் தமிழில் பாடுவது கிடையாது என்று எந்த மடையன் சொன்னான். அர்ச்சனைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம். உங்கள் மண்ணில் உருவான விசயத்தை படிக்காமல் சம்மந்தமே இல்லாமல் அரேபிய இறையியலை படிக்கிறீர்கள்.

    வைண மற்றும் சைவ கோயில்களில் தமிழ் வளர்த்த சைவ மற்றும் வைண பெரியர்வளான் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தான் தெய்வமாக வீற்று இருக்கிறார்கள். சும்மா கம்யூனிஸ கிறித்துவ கூட்டணி சொல்லும் பொய்களை நம்பி எழுதுவது தங்கள் அறிவின் அளவை படம் பிடித்து காட்டுகிறது.

    ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. சைவ, வைண, கிராம, குல கோயில்கள், மடாதிபதிகள் நிர்வாக கோயில்கள், எல்லை சாமிகள், சக்தி தளங்கள், ஜீவசாமதி அடைந்தவர்கள் என்று பல விதமான வழிபாடுகள் அந்தந்த மண்ணுக்கு ஏற்றபடி உண்டு. அதற்கு என்று வழிபாட்டு முறை உண்டு.

    இது எல்லாம் உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் இந்த விசயத்தில் சற்று நீங்கள் தள்ளி இருப்பது நன்று….

  69. @ சுவபிரியன்,

    \\எனவே ஒரு முஸ்லிம் தனது தாய் மொழி தமிழை எப்படி நேசிக்கிறானோ அதே அளவுகோலோடுதான் மற்ற உலக மொழிகளையும் பார்க்க வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடு\\

    அப்படி என்றால் ஒரு இடத்திலாவது தமிழில் பாங்கு ஓதலாமே…..

    எல்லா கோயில்களிலும் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் என்ற இரண்டு மொழிகளிலும் தான் காலம் காலமாக பூஜைகள் நடக்கின்றன. சைவ வைண திரு தளங்களில் இறைவனுக்கு பாசுரங்கள் பாடி தான் பூஜைகள் நடக்கின்றன. திருப்பதியில் எல்லா மொழிகளிலும் பாடல்கள் மற்றும் அர்ச்சனைகள் நடக்கின்றன.

    ஒரு இடத்திலாவது நீங்கள் தமிழில் பாங்கை ஓதலாமே?

  70. சுவனபிரியன்
    அது சரி நீங்கள் எப்பொழுது ஒலிபெருக்கியில் தமிழில் நமாஸ் படிப்பீர்கள். ஏன் என்றால் நீங்கள் தினம் ஐந்து முறை ஒலிபெருக்கியில் நமாஸ் சொல்லும் போது ” அல்லாவை தவிற வேறு கடவுள் இல்லை” என்பதையும் சொல்கிறீர்கள் என்கிறார்கள் இது உண்மையா ?
    கேட்ட கேள்விக்கு நீங்கள் சொல்லுவது பதில் அல்ல. தமிழில் நமாமஸ் படிக்கலாமா கூடாதா. நேரான பதில் (படிக்கலாம் என்றால் ஏன் படிப்பதில்லை கூடாது என்றால் அதற்கான காரணம் என்ன) தினம் நீங்கள் நமாஸில் சொல்லும் வாசகம்தான் என்ன ? சற்று தமிழில் விளக்கமுடியுமா?

  71. நிஷாதன் சதானந்தசிவம்
    // ஆம் இங்கேயுள்ள பிராமிணர்கள் எல்லோரும் திராவிடதாய் மார்களுக்கு பிறந்தவர்கள்தான். அவர்கள் பெண்டு பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்தனர். இவர்கள் சாயல் (பழக்கங்களின்) ஈரானிலும் பாபிலோனியாவிலம் உள்ளது // என்று ஒரு பெரிய கற்பனை சரடுகளை அள்ளி வீசியுள்ளீர்கள். இந்த இடத்தில் உள்ளவர்கள் தங்களை பிராமிணர்கள் என்றோ ஆரியர் என்றோ அழைத்துகொள்கிறார்களா ? ஹிட்லர் முதல் பல ஐரோப்பியர்கள் jhdதங்களை ஆரியர் என்று அழைத்து கொண்டனர். இங்கே உள்ள வெள்ளாளர்கள் சிலர் தங்களை சின்தியன் (Scythian) ரேஸ் சாகா ரஜபுத்திரர்கள் என்று சொல்கிறார்கள்.
    ஆரியu ஆண்கள் மட்டும், படைஎடுத்து வந்தார்களா அல்லது பிழைப்பைதேடி வந்தார்களா. பிராமிணன் மற்றவரை அடித்து சிறு ரத்தகாயம் ஏற்ப்பட்டதாக பரவலான எந்த நிகழ்வும் கிடையாது. உங்கள் கதைபடி அவர்கள் யாரும் திரும்பி செல்லவில்லை. இங்கே உள்ள திராவிட பெண்களை மணந்து கொண்டார்கள். சரி துலுகர்களும் வெள்ளயர்களும் ஆண்கள் மட்டும் படையுடன் வந்து ஆக்கிரமித்தார்கள் பின்பு குடும்பத்துடன் வந்து வந்து சென்றார்கள். என்பதை ஒத்து கொள்வீர்கள் என நினைகிறேன். அவர்களாலும் இன கலப்பு ஏற்ப்பட்டது என்கிறீர்கள். அவர்கள் இங்கே உள்ள திராவிட பெண்களை மணந்துகொண்டார்களா [..] ?. இவர்கள் தாய்வழி குரோமோசோன் திராவிடவகை என்றால் இவர்களுக்கு தாய் வழி திராவிட உறவு உள்ளதுதானே ? cqஉங்கள் கதைபடி இந்த தாய்வழி கலபின திராவிடர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமா ? தங்கள் பின்லாந்து டீ.என்.ஏ ஆராய்சி முடிவுகள் என்பதற்கான ஆராரத்தை நீங்கள் கட்டாயம் கொடுக்கவேண்டும். ஏன் என்றால் இது உங்கள் கற்பனையா அல்லது அரசியலுக்கான ஆராய்சியா அல்லது உண்மையான எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    [Edited and Published]

  72. திரு வேதம் கோபால்!

    //தினம் நீங்கள் நமாஸில் சொல்லும் வாசகம்தான் என்ன ? சற்று தமிழில் விளக்கமுடியுமா?//

    அல்லாஹு அக்பர் : இறைவன் மிகப்பெரியவன்
    அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் : ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
    அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் : ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
    அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
    அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் : முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
    ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) : தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
    ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் : வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
    அல்லாஹு அக்பர் : இறைவன் மிகப்பெரியவன்
    அல்லாஹு அக்பர் : இறைவன் மிகப்பெரியவன்
    லா இலாஹ இல்லல்லாஹ் : ஏக இறைவனைத் தவிர வேறு இறைவனில்லை

    //தமிழில் நமாமஸ் படிக்கலாமா கூடாதா. நேரான பதில் (படிக்கலாம் என்றால் ஏன் படிப்பதில்லை கூடாது என்றால் அதற்கான காரணம் என்ன)//

    நமாஸ் படிக்கும் போது முடிவில் தொழக் கூடியவர் தொழுகையிலேயே அவருக்கான பிரார்த்தனையைச் செய்ய வேண்டும். அதை அவரவர் சொந்த மொழியிலேயே கேட்கிறார்கள். ஏனெனில் எல்லோருக்கும் அரபி தெரியாது. இறைவனுக்கோ எல்லா மொழிகளும் தெரியும். உலக ஒற்றுமைக்காக ஆரம்பத்தில் அரபியில் தொழ ஆரம்பிக்கும் ஒருவர் முடிக்கும் தருவாயில் தனது சொந்த மொழியில் நமாஸை முடிக்கிறார். இங்கு மொழிக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை நாம் விளங்குகிறோம்.

    திரு மயில் வாகனன்!

    //ஆனால் இந்தக் கருத்தை முன்மொழியும் தாங்கள், ‘தமிழ் அர்ச்சனை செய்ய வேண்டும்’ என்றும் கூறுவது சமஸ்கிருததத்தை மற்ற மொழிகளுக்குச் சமமாகத் தாங்கள் மதிக்காததாலா?//

    நான் மதிக்காததால் அல்ல! தமிழ் நீச மொழி என்றும் சமஸ்கிரதமே தேவ மொழி என்றும் நமது சான்றோர்கள் கூறியதாலேயே இந்த கேள்வி வருகிறது.

    திரு திராவிடன்!

    //இரண்டாவதாக “லாஹிலாஹா ஹிள்ளல்லா” தமிழ்படுத்தி நீங்கள் பாங்கு கூற முடியுமா?இதுவே வேதம் கோபால் சாரின் கேள்வி?//

    உலக ஒற்றுமைக்காக என்று முன்பே கூறியுள்ளேன். ‘ஜன கன மன’ என்று நமது தேசிய கீதத்தை ஒரு வங்காள மொழியில் பாட வேண்டிய அவசியம் என்ன? ஏன் அதை தமிழ்ப்படுத்தவில்லை என்று சிந்தித்தீர்கள் என்றால் உங்களின் கேள்விக்கு விடை கிடைக்கும். அடுத்து இங்கு சவுதியில் பள்ளிவாசலில் தொழுகைக்கு பிறகு விளக்க உரை 15 அல்லது 20 நிமிடம் நடைபெறும். பல மொழிகளை உடையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தேமதுர தமிழில் பொழிப்புரை கூறப்படும். சவுதி பள்ளியிலேயே தமிழில் மொழி பெயர்த்து அதுவும் ஸ்பிக்கர் துணை கொண்டு பள்ளிக்கு வெளியிலும் சொல்லப்படுகிறது. இதிலிருந்தே அரபு மொழி தேவ மொழி இல்லை என்றும் தெரிந்து கொள்கிறோம். முகமது நபி தமிழராக இருந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறங்கியிருக்கும்.

  73. திரு.சுவனபிரியன்
    தங்களது நமாஸ் பற்றிய தமிழ் விளக்கம் தந்ததற்கு எனது நன்றியை முதலில் சொல்லிக்கொள்கிறேன். தமிழில் ஏன் நமாஸ் சொல்லகூடாது என்பதன் விளக்கம் மூக்கைசுத்தி தொடுவதாக உள்ளது. அது எனக்கு ஏற்புடையது அல்ல அதைபற்றி மேலும் விவாதிக்க விரும்பவில்லை. நமாஸ் விளக்கம் –
    1.இறைவன் மிக பெரியவன்
    2.ஏக இறைவனைதவிர வேறு இறைவன் இல்லை
    3.முஹமது அவர்கள் இறைவனின் தூதன்
    4.தொழுகையின் பக்கம் வாருங்கள்
    5.வெற்றியின் பக்கம் வாருங்கள்
    இதைதான் திரும்ப திரும்ப சொல்வதாக சொல்கிறீர்கள். வீக்கியில் உள்ள விளக்கம் இவ்வாறு உள்ளது –
    1. God is greatest
    2. I bear witness that there is no God except Allah
    3. I bear witness that Mohammad is God’s messenger
    4. Come to Salat (Prayer worship)
    5. Come to success
    There is no God except Allah (la ilaha illallah)

    ஏக இறைவனைதவிர வேறு இறைவன் இல்லை. உண்மை – இந்த ஏக இறைவனை பற்றி ஹிந்துக்கள் பர பிரம்பம் என்று என்றோ சொல்லிவிட்டார்கள். அதற்கு உருவம் கிடையாது பார்கமுடியாது எல்லைகள் இல்லாதது அளக்கமுடியாதது என்று. எனவே இந்த ஏக இறைவனுக்கு (பர பிரமம்) அல்லா என்று பெயர் சூட்டுவதும் அவரைதவிற வேறு கடவுள் யாரும் இல்லை. அவருடைய கடைசி தூதுவன் முகமதுதான். அவர் சொன்னதைத்தான் கேட்கவேண்டும் என்பதெல்லாம் உங்கள் நம்பிக்கை. அதை உலகில் மற்றவர் மீது திணிப்பதும் கட்டாயபடுத்துவதும் அதர்ம பாவ செயலே அன்றி வேறு இல்லை.

    இதை பற்றிய விவாதம் இங்கே வேண்டாம் அது கட்டுரையின் போக்கை தலைப்பை பற்றிய விவாதத்தையே மாற்றிவிடும். இப்ப்டி ஹிந்துக்கள் தளங்களில் தங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் இஸ்லாமியரும் கிருஸ்துவரும் பதில் என்ற பெயரில் திசை திருப்பும் வேலையை கச்சிதமாக செய்கிறார்கள். நீஙகளும் அப்படி மாறக்கூடாது என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்.

  74. என்ன சொல்லுகிறார் என்று pவிளங்கவில்லை. இங்கேயுள்ள பிராமிணர்கள் எல்லாம் திராவிடதாய்களுக்கு பிறந்தவர்கள் என்கிறாறா?//

    He seems to mean that there is no pure blood anywhere.

  75. ஜெனாப் சுவனப்ரியன், ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமிய க்றைஸ்தவர்களிடையேயான சம்பாஷணம் மதநல்லிணக்கத்துக்கு வித்திடாது என்ற த்ருட நம்பிக்கை உடையவன் நான். தேசவிரோதக் கருத்துக்களும் வசவு மழைகளும் மதவெறியும் ததும்பிய க்றைஸ்தவ உத்தரங்களிலிருந்து வித்யாசமாக முதன் முதலில் தங்களது ஓரிரு உத்தரங்களை வாசித்ததில் என் அபிப்ராயம் மாற்றிக் கொள்ள வேண்டுமோ என தோன்றியது. ஆனால் ஹிந்துத்வம் பற்றிய தங்களது உத்தரமும் தமிழ் ஸம்ஸ்க்ருதத்திற்கு இடையே சண்டை மூட்டும்படியான தங்களது இந்த உத்தரமும் வாசிக்கையில் என் நம்பிக்கை ஸ்திரப்படுகிறது. மத நல்லிணக்கம் வேண்டியதான உத்தரங்கள் தங்களது எனில் தமிழ் ஹிந்து தளத்தில் ஹிந்து மதம் பற்றியோ மொழிகள் பற்றியோ ஜாதிகள் பற்றியோ மதிப்புக்குறைவான உத்தரங்களை தாங்கள் தவிர்த்தல் நலம்.

    \\\\அதெல்லாம் இருக்கட்டும். தமிழ் மொழியும் வட மொழியும் ஒன்றுதான் எனபவர்கள் கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு தமிழை அனுமதிப்பதில்லை ஏன்?\\\\\

    நான் தமிழகத்திலிருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் தமிழகம் வரும்போது செல்லும் எல்லாப் பெரிய ஆலயங்களிலும் கணீரென தமிழில் அர்ச்சனைகளை பூஜாரி மற்றும் அர்ச்சகர் வாயிலாய் கேட்டதுண்டு. தமிழகத்து சர்க்கார் எல்லா ஆலயங்களிலும் தமிழ் அர்ச்சனை செய்ய அனுமதித்துள்ளது. இது வரை எந்த ஆலயத்திலும் அனுமதியை மறுத்ததாக ஆதார பூர்வ தகவலில்லை. ஆகவே அனுமதிப்பதில்லை என்ற தங்களது தகவல் மிகவும் தவறானது.

    பின்னும் ஆ ஸேது ஹிமாசலம் ஹிந்துஸ்தானமுழுதிலும் உள்ள மஸ்ஜித்களில் நமாஸ் அரபியிலேயே ஓதப்படுகிறது என்பதை தாங்கள் மறுக்க இயலாது. எங்கள் மஸ்ஜிதுகளில் தமிழில் நமாஸ் ஓதுவோம் என சொல்ல நீங்கள் துணியாத வரை ஹிந்துக்கள் மிகவும் மதிக்கும் தமிழ் மற்றும் ஸம்ஸ்க்ருதத்திற்கு பகை போன்று ஒரு தோற்றமளிக்கும் உத்தரம் பதிவது மத நல்லிணக்கத்திற்கு வழி வகுக்காது. க்ருத்ரிமமான ஒரு உத்தரமாகவே வாசிக்கப்படும்.

    எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் முத்தமிழோனே, தமிழ்த்ரய விநோதப்பெருமாளே என முத்தமிழ்ப் பெருமானான முருகப்பெருமானை விவிதமான சந்தங்களில் பாடியருளியும் தமிழை தேவ பாஷை என்றறியாதாரும் ஸம்ஸ்க்ருதமும் தமிழும் தேவசேனாபதியான முருகப்பெருமானின் இரு கண்களென அறியாதாரும் அவன் புகழ் பாடும் தேனினுமினிய திருப்புகழை தம் நாவால் ஓதாதவராகவே இருப்பர்.

    ஹிந்துஸ்தானமுழுதும் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் தமிழ், தெலுகு, கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, கஷ்மீரி, பாங்க்ளா, ஒரியா என எந்த பாஷை பேசுபவராய் இருப்பினும் தங்கள் மொழிகள் அனைத்தும் இறைவனிடமிருந்தே உண்டானதாகக் கொள்கின்றனர். ஆக தமிழ் மற்றும் ஸம்ஸ்க்ருதம் மட்டுமில்லை; ஹிந்துஸ்தானத்து அனைத்து பாஷைகளுமே தேவ பாஷைகளே. மக்கள் தங்களிடையே உரையாட மற்றுமின்றி தெய்வங்களைத் தொழ பாஷைகள் ஹேதுவாக இருப்பதால் அவை தேவ பாஷைகளே. எவனிடமிருந்து உதித்ததோ அவன் திருதாட்களில் சமர்ப்பணமாகின்றன என்பதால் எனவும் அறியவும்.

    நீச பாஷை என்று யாரோ சொன்னார் என ஆதாரமில்லாத பொய்களை திரும்பத் திரும்ப கூறுவதால் பொய் உண்மையாகி விடாதல்லவா ஆதாரமளிக்கப்படாத வரை.

    \\\\உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். \\\\\\

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி; பக்தியால் யான் உனைப்பலகாலும் என சான்றோர்கள் இறைவனிடத்து அன்பு செய்யவே சொல்கின்றனர். இறைவனது ரூபம் எவ்வாறாயினும் அவனிடத்து அன்பு செய்யவே சாஸ்த்ரம் மற்றும் ஸ்தோத்ர நூற்கள் சொல்கின்றன.

    \\\\\\\\\\மேலும் தமிழில் தேவாரமோ திருவாசகமோ திவ்யப் பிரபந்தமோ திருப்புகழோ இசைத்து இறை வழிபாடு இயற்ற எவருக்கும் பூரண உரிமை இருக்கிறது. ஆனால், தமிழில் 108 நாமாவளிகளைச் சொல்லி அர்ச்சிக்கும் முறையெல்லாம் போட்டிக்காகப் பின்னர் உருவாக்கப்பட்டவை.\\\\\

    அன்பர் மயில்வாகனன், யாரால் செய்யப்பட்டது என்று தெரியாது தமிழில் சொல்லப்படும் 108 போற்றிகள் அருளாளர் அருளிய திருப்புகழ், தேவாரம் மற்றும் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் இவற்றைப் போன்று இறைவனடியார் சம்பந்தமில்லாது இருக்கலாம். “பாவ க்ராஹி ஜனார்த்தன:” – இறைவன் அடியார்களிடம் இருந்து ஸ்வீகரித்துக் கொள்வது அவர்களின் அன்பே என்பதால் இறைவன் பெயரைக் கொண்ட நாமாவளிகள் என்பதால் அவையும் உயர்வானவையே என்று பார்த்தால் குறைவு தெரியாது.

    போட்டிக்காகவேனும் முருகா போற்றி; மால்மருகா போற்றி என்று தொடுக்கப்பட்ட நாமாவளியானாலும் போற்றப்படுவது முருகன் என்பதால் மனதிற்கு நிறைவையும் பக்தியையுமே அந்த நாமாவளிகள் அளிக்கும் என்பதை மறுக்க இயலாதல்லவா.

    பின்னும் பல முருகன் ஸ்தலங்களில் செய்யப்படும் நாமாவளிகள் திருப்புகழ்ப்பாமாலைகளால் தொடுக்கப்பட்ட நாமாவளிகள் என்றும் கண்டுள்ளேன்.

  76. நெஞ்சுக்கு நீதி//எத்த‌னையாயிர‌த்துக்கு முன் க‌ல்வெட்டு சொன்னாலென்ன‌? அது த‌மிழ‌ரின் தாய்மொழியாகிவிடுமா? அம்மொழியை உருவாக்கிய‌வ‌ர் யார்? நாமில்லையே? இதை ம‌ட்டும் உணர்ந்ததால் போதும். ஒருவ‌ருக்கு இரு தாய்மொழிக‌ள் இருக்கா. என‌க்கில்லை ! பைந்த‌மிழ‌ருக்கு ?//

    சிவனின் இருப்பிடம் இமய மலையில் உள்ள கையிலாயம் என 2000 ஆண்டுகட்கு முன் சங்க இலக்கியம் கூறுகிறது. தமிழ் மொழி பேசியோர் பெருமளவில் விந்டியமலைக்கு கீழேயும், வடமொழி பேசியோர் அப்புரமும் இருந்ததால் வடமொழி என பெயர் பெற்றது. பேச்சு வழக்கில் உள்ள மொழி நடை சொல் பொருட்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

    உ-ம். கழகம்- இச்சொல் சங்க இலக்கியத்தில் கிடையாது. திருக்குறளில்- சூது அதிகாரத்தில் 3 முறை உள்ளது. வடமொழியில் கலக் என்றால் பந்தயப் பொருள்- இதன் அடிப்படையில் சூதாடிகள் கூடிமிடம் எனும் பொருளில் வள்ளுவர் பயன்படுத்திய சொல் தற்போது கல்விக்கூடம் என்னும் பொருளுக்கு மாறியுள்ளது.
    நாற்றமிகு உணவினர் என்னும் சொல் வானோர் தேவர்கள் என்னும் பொருளில் சங்க இலக்கியத்தில் உள்ளது. பின் இச்சொல் எத்ரிமறையாக கெட்ட மணம் என்னும் பொருள் பெற்றது.
    பாணினி பொ.மு.5ம் Wஊற்றாண்டில் சமஸ்க்ருத இலக்கணம் வரந்தபின் இம்மொழி முழுமையாக இலக்கிய- ஆன்மிக துறைக்கு என ஒதுக்கப் பட்டது. எனவெ பாரதம் முழுக்க அனைவருக்கும் உரிய மொழி தான் அது.

    தமிழர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள்-திராவிடர்கள் என்பது கால்ட்வெல் பைபிள்வாக்கு.

    சுவனபிரியன்.-குரான் பைபிள் கதைகளை பின்பற்றி மாற்றங்களோடு சொல்கிறது- ஆனால்
    Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
    https://www.mediafire.com/download.php?y177tc2oa3tegam
    இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
    இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.
    1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
    2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
    3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
    4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
    5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
    6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
    7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.
    Quran follows and repeats mostly the Bible- what use

    உண்மை இப்படி இருக்க எங்கள் முன்னோர்கள் முகமதியார்களகா மாற்றப்பட நாங்கள் அந்த மூட நம்பிக்கயை பின்பற்றி அதை பரப்ப மேலும் பல கதை விடுவோம் என்பதில் உறுதியார் உள்ளார் சுவனபிரியன்.

    அதற்கு பாதிரிகள் பரப்பிய கதை ஆரிய திராவிட பொய்களை முகமதியர்களும் பிடித்துகொண்டு அலைகிறர்கள்

  77. இந்துக்களின் வழிபாடுகளில், அதிலும் குறிப்பாக சைவர்களின் வழிபாடுகளில் இரு வகை உண்டு. ஒன்று ஆத்மார்த வழிபாடு. மற்றுஒன்று பரார்த்த வழிபாடு. ஆன்மார்த்தவழிபாட்டில் தீக்கை அருளிய குருநாதர் திருமுறைகளில் உள்ள பெயரோடு ஒரு இலிங்கத்தை மாணாக்கனுக்கு அளித்து வழிபாடு செய்ய் அருளுவார். பரார்த்த வழிபாடு திருக்கோவில்களில் உலகநன்மையின் பொருட்டு ஆதிசைவப் பிராமனர்களால் நிகழ்த்தப் பெறுவது. இவர்களை முப்போதும் திருமேனி தீண்டுவார் என்று சுந்தரமூர்த்திசுவாமிகள் போற்றுவார்

    எப்போதும் திருமேனி தீண்டி வழிபடும் பூசை ஆன்மார்த்த வழிபாடு. இதில் ஆசமனம் முதலிய கிரியைகளில் ஆகம முறைப்படி வடமொழி மந்திரங்களைச் சொன்னாலும் வழிபாடு முழுக்கத் திருமுறைகளே சாதிக்கப்படுகின்றன. திருக்கோவில்வழிபாட்டின்போது அங்கு நடைபெறும் பூசைகளுக்கும் ஏனையவர்களுக்கும் இடையூறின்றித் திருமுறை சொல்லி வழிபடத் தடையொன்றும் இல்லை. மேலும் சிலகோவில்களில் இன்னிசையுடன் திருமுறைகளைச் சொல்லி பூசை நிகழ்த்தும் சிவாச்சாரியர்களுக்கு மதிப்பு அதிகம். குழப்பம் விளைவிப்பவர்கள் பெரும்பாலும் கோயிலுக்குச் சசெல்லாதவர்கள்; இறைவழிபாட்டில் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள்; பிராமணர்கள் மீது அதீத துவேஷம் உடையவர்கள். கிறித்தவர்கள் முசுலீம்கள். சைவர்களின் வழிபாட்டில் இன்றியமையாத பொருள் செறிந்த சித்தாந்த சாத்திர உண்மைகளை அனுபவத்திற்குக் கொண்டுவருகின்ற பஞ்சப் பிரம மந்திரங்கள் ஷட்டங்க மந்திரங்கள் அனைத்தும் வடமொழியில்தான் உள்ளன. அதை எமக்குக் கற்பித்த பரமாச்சாரியர் பிராமணர் அல்லர். தமிழ்ப் பேரறிஞர். அவரளவுக்கு அண்மைக் காலத்தில் தமிழ் இலக்கண இலக்கியத்திலும் சைவசித்தாந்தத்திலும் திருமுறைகளிலும் பேரறிவு படைத்தவர் ஒருவரும் இலர் என்பது எளியேனுடையகருத்து மட்டுமன்று. இத்துறைகளில் வல்லவர்கள் கூறியது. அவர் வடமொழியிலும் ஆகமங்களிலும் தேர்ந்தவர். தொண்டைமண்டல ஆதீனத்துத் தலைவராக வீற்றிருந்தவர்.
    ஆன்ம இலாபம் கருதுவோருக்கு வடமொழி தென்மொழிச் சண்டையும் ஆரிய திராவிடச் சண்டையும் வீண்செயல். பெரும்பாலான பண்டைய மரபுவழித் தமிழறிஞர்கள் வடமொழி அறிவும் பெற்ரிருந்தனர். வடமொழி ஒன்றே அறிந்தவர்களைக் காட்டிலும் இவர்கள் சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியுள்ளனர்.

  78. ///உலக ஒற்றுமைக்காக என்று முன்பே கூறியுள்ளேன். ‘ஜன கன மன’ என்று நமது தேசிய கீதத்தை ஒரு வங்காள மொழியில் பாட வேண்டிய அவசியம் என்ன? ஏன் அதை தமிழ்ப்படுத்தவில்லை என்று சிந்தித்தீர்கள் என்றால் உங்களின் கேள்விக்கு விடை கிடைக்கும்.////////
    சுவன பிரியன் சார் நீங்கள் கூறுவது போல தேசிய ஒற்றுமைக்காக தான் ஒரு யுனிவேர்சல் மொழி ஆக இந்தியா முழுதும் பல்வேறு மொழி பேசும் மக்களுக்கிடைய ஒரு common tool ஆக மந்திரங்களை கண்டுபிடித்தோர் சமஸ்கிருதத்தை கொண்டனர். பின்னர் பயன்பாடும் அப்படியே நடைமுறைக்கு வந்து வழக்கமாயிற்று. பின் அந்தந்த மொழியிலும் பல வழிபாட்டு பாடல்கள் உருவாக்கி அவையும் கோயில்களில் வழிபாட்டிற்கு பலகாலமாக பழக்கத்தில் இருந்து கொண்டுதான் உள்ளது.இதையும் தாங்கள் சிந்தித்து பார்த்தால் உங்களுக்கு பதில் கிடைக்கும்.
    ////// அடுத்து இங்கு சவுதியில் பள்ளிவாசலில் தொழுகைக்கு பிறகு விளக்க உரை 15 அல்லது 20 நிமிடம் நடைபெறும். பல மொழிகளை உடையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தேமதுர தமிழில் பொழிப்புரை கூறப்படும். சவுதி பள்ளியிலேயே தமிழில் மொழி பெயர்த்து அதுவும் ஸ்பிக்கர் துணை கொண்டு பள்ளிக்கு வெளியிலும் சொல்லப்படுகிறது. இதிலிருந்தே அரபு மொழி தேவ மொழி இல்லை என்றும் தெரிந்து கொள்கிறோம். முகமது நபி தமிழராக இருந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறங்கியிருக்கும்////////
    ஏன் உங்கள் பள்ளிகளில் அரபியில் பொதுவான வழிபாடுகளை தவிர அந்தந்த வட்டார மொழிகளிலும் வழிபாடு பாடல்கள் இல்லை. திருப்பதியிலே சுப்ரபாத சேவையில் அடுத்து ஆண்டாளின் பாசுரங்கள் ஓதபடுகின்றன, அங்கும் தமிழ் தான் . ஏன் நேபாளிகள் தமிழ்நாட்டில் ஒரு பெருமாள் கோயிலுக்கு வந்திருந்தனர் அவர்கள் தமிழ் பாசுரங்களை பாட ஆரம்பித்தனர். அன்று உணர்ந்தேன் வைணவம் தமிழை எந்த அளவு நேபாள தேசம் வரை பரவ செய்திருக்கிறது என்று.தமிழை குறைவாக கருதி இருந்தால் இந்த அளவு தமிழ் பாசுரங்களை ஏற்று பிற பகுதிகளுக்கும் பரப்பி இருப்பார்களா?

    பின்னர் உலக மக்களிலேயே அரபி மட்டுமே உயர்ந்தவர் அவருள்ளும் ஒரு பிரிவினரே உயர்ந்தவர் அவர்களை விட நபி தோன்றிய குலத்தினரே உயர்ந்தவர் என்று எங்கோ படித்தேன். இது சரியா,தவறா?

  79. \\நான் மதிக்காததால் அல்ல! தமிழ் நீச மொழி என்றும் சமஸ்கிரதமே தேவ மொழி என்றும் நமது சான்றோர்கள் கூறியதாலேயே இந்த கேள்வி வருகிறது.\\

    எவனாவது இழிச்சவாயன் இருந்தால் அவனிடம் போய் சொல்லுங்கள்.. யார் சொன்னார்கள் என்று தெளிவாக எழுத வேண்டியது தானே? இதற்கு தெளிவான பதிலை ஏற்கனவே எழுதியாகிவிட்டது. சும்மா உங்க பங்காளி கிறித்துவ மிஷினரி கட்டிவிடும் போலி கதைகளை இங்கு அவிழ்த்து விடாதீர்கள்….

    பாமியான் புத்தர் சிலைகள் உலகின் பார்வையில் உடைக்க படும் பொழுதே உங்கள் மதத்தின் யோக்கியதை என்ன என்று தெரிந்துவிட்டது.

    உங்கள் மதத்தின் யோக்கியதை என்ன என்பதை காசியிலும் மதுராவிலும் சென்றாலே தெரியும். இது மட்டுமா அவ்வளவு ஏன் ஹிந்து கோயில்களூக்கு சொந்தமா இடத்தை ஆக்கிரமித்து அங்கு மசூதி கட்டி திருநெல்வேலி பகுதிகளில் ரௌடியிசம் செய்யும் பகுதிகள் ஏறாலம்….

    எவனாவது இழிச்சவாய ஹிந்து இருப்பான் அவனிடம் போய் சொல்லுங்கள்…. இதை எல்லாம் நம்புவான்…

  80. தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணம் இறைவனாலேயே எற்றுகொள்ளபட்டது.அதனை தாழ்வானது என்றால் இறைவன் அதனை ஏற்றிருப்பாரா? ஆழ்வார் நாயன்மார்கள் பாடல்களை எல்லாம் தமிழிலேயே இயற்றினர்.திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது முன்னோர் வாக்கு.
    தமிழ் தாழ்ந்தது என இந்துமதம் ஒருபோது கூறவில்லை, மாறாக தமிழை உயர்த்தவே விழைந்திருக்கிறது.

  81. நெஞ்க்கு நீதி,

    \\என்ன சொல்லுகிறார் என்று pவிளங்கவில்லை. இங்கேயுள்ள பிராமிணர்கள் எல்லாம் திராவிடதாய்களுக்கு பிறந்தவர்கள் என்கிறாறா?//

    He seems to mean that there is no pure blood anywhere.

    எங்கள் இரத்தம் எல்லாம் சுத்தமாக தான் இருக்கிறது. ஆனால் சிலர் இரத்ததில் தான் கிறித்துவ பாதரியார்களின் திராவிட சாக்கடை இரத்தம் கலந்து இருக்கிறது. அதை சுத்தபடுத்தும் செயலை தான் தமிழ் ஹிந்து செய்து கொண்டு இருக்கிறது,

  82. திரு.சுவனபிரியன்
    அல்லாவை தவிற வேறு இறைவன் இல்லை என்றுதான் விக்கி சொல்கிறது ஆனால் நீஙகள் ஏக இறைவன் என்கிறீர்கள். விக்கியில் சொன்னது தவறு என்றால் இத்தனை நாள் அந்த தளத்தை நீங்கள் விட்டு வைப்பீர்களா ?
    அல்லாவை தவிற வேறு இறைவன் இல்லை என்பதும் மற்ற மதத்தவர்கள் வணங்கும் கடவுள்கள் பொய் என்பதற்கும் வித்தியாசம் இல்லை. இது நிச்சயம் மாநில மொழிகளில் தினம் ஐந்துமுறையும் ஒவ்வொருமுறையும் நான்கு ஐந்துதடவை அல்லாவை தவிற வேறு கடவுள் இல்லை என்று ஒலிபெருக்கியில் ஓதினால் நிச்சயம் மற்ற மதத்தவர் வெறுப்பை சம்பாதிப்பதோடு இது மத நல்லிணக்கத்தையும் கெடுக்கும். இது இந்திய சட்டபடி குற்றமே ஆகும்.

  83. ஆரியமாவது திராவிமாவது – நாமகல் கவிஞர்
    உண்மையில் தழிழ்நாட்டில் ஆரியர்களும் இல்லை திராவிடர்களும் இல்லை. திராவிடம் என்பது தமிழ்பதம் அல்ல.. இந்தியாவின் வட பாகத்தை வடமொழிகாரர்கள் ஆரியா வர்த்தம் என்று சொல்லிக் கொண்டார்கள். அதே வடமொழிகாரர்கள் இந்தியாவின் தென் பாகத்தை திராவிடம் என்று சொன்னார்கள். தமிழர்களையும் தமிழ்நாட்டையும் குறிக்கின்ற இடங்களில் எல்லாம் வடமொழிகாரர்கள் திராவிடம் என்ற பதத்தைதான் உபயோகப்படுத்தி உள்ளார்கள். இந்த திராவிடம் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது என்றால் அது அவர்களுக்கே தெரியாது. ஆர்யாவர்த்தம் எப்படி வந்ததோ அப்படிதான் திராவிடாவும் வந்திருக்கும். பின்னால் வந்தவர்கள் இந்த இரண்டு பாகத்தையும் சேர்த்து இமயம் முதல் குமரிவரை உள்ள நாட்டை சேர்த்து ஆரிய தேசம் என்று சொல்லி விட்டார்கள். பிற்கால தமிழ் இலக்கியங்களிலும் இந்தியாவை ஆரியநாடு என்று அநேக இடங்களில் சொல்லப்படுகிறது. பாரதியாரும் ” ஆரிய யூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தேமாதரம்” என்று பாடுகிறார். தமிழ் இலக்கியங்களில் எந்த இடத்திலும் தமிழனை திராவிடர் என்று சொன்னதில்லை.
    தமிழன் தன்னை திராவிடன் என்று சொல்லிக் கொண்டால் அவன் கூசாமல் தன்னை ஆரியன் என்றும் சொல்லிக் கொள்ளலாம். யாரோ ஒருவர் நம்மை என்னவோ என்று கூப்பிட்டால் அந்த ”என்னவோ” என்பது நமது பெயராவிடுமா? இங்கிலாந்தை சேர்ந்த ஒருவனை நாம் ”ஆங்கிலேயன்” என்று சொல்கிறோம் இதனாலேயே அவன் தன்னை ஆங்கிலேயன் என்று சொல்லிக்கொள்ள சம்மதிப்பானா ?

  84. ஆரியமாவது திராவிமாவது – நாமகல் கவிஞர்
    வெகு காலமாகத் தமிழர்கள் திரைகடலோடித் திரவியம் தேடினார்கள். திரவியத்தை மட்டுமல்லாமல் அயல் நாடுகளில் அங்கங்கேயிருந்த கலையறிவுகளையும் திரட்டிக் கொண்டு வந்து தங்களுடைய தனி நாகரிகத்தையும் பண்புகளையும் வளர்த்தவர்கள். அறிவுகளை தேடுவதிலும், அறிவாளிகளை ஆதரிப்பதிலும் தமிழர்களுக்கு மிஞ்சியவர்கள் தரணியி்ல் இருந்ததில்லை.
    அந்த அருங்குணத்தால் வடமொழியில் இருந்த பல நல்ல ஆண்ம விசாரணைக்கான சாஸ்திரங்களையும், கதைகளையும் தமிழ் நாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் மென்று ஆர்வம்கொண்டு வடமொழி படிப்பை தமிழ்நாட்டில் போற்றி வளர்த்தார்கள். அதற்காக வடமொழியை நன்றாக படித்து அதிலுள்ள அறிவுகளைத் தமிழ் மக்களிடையே பரவச் செய்வதே வாழ்க்கையாகக் கொள்ளும்படி தமிழ் நாட்டு மக்களுள் ஒரு சிறு தொகுதியை அதற்கென்றே ஏற்படுத்தினார்கள். அப்படி ஏற்படுத்தப்பட்ட வடமொழி ஆராய்ச்சிக்காரரகளுக்கு சேர சோழ பாண்டிய மன்னர்கள் தனியாக மானியங்களையும், மரியாதைகளையும் ஏற்பாடு செய்தார்கள்.
    இந்த வழக்கம் இன்றைக்கும் செட்டிமார் நாட்டில் இருந்து வருவதைக் கண்ணாரப் பார்க்கலாம். அனேக செட்டிமார்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு கோவிலைக் கட்டி அருகே ஒரு குளத்தை வெட்டி அதைசுற்றிலும் ஒரு அக்ரஹாரத்தை கட்டி அதில் வடமொழி வேத பாடசாலை ஒன்றை உண்டாக்கி அந்த கோயிலுக்கு வேண்டிய மானியத்தைக் கொடுத்து, வேத பாடசாலைக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் நிரந்தரமாக்கி, அந்த வீடுகளைப் பார்பனர்களுக்கென்றே இலவசமாக விட்டு, அவர்களில் சிலரை அந்தக் கோயிலுக்குப் பூசாரிகளாக இருக்க செய்து, கோயில் திருவிழாக்களை நடத்த திரவிய சகாயமும் செய்து வைத்திருக்கிறார்கள்.
    cont…

  85. இந்த பழக்கத்தை ஓர் உயர்ந்த தர்மமாகச் செய்து வைக்கிறார்கள். இது இன்று நேற்று ஏற்பட்ட பழக்கமல்ல. நெடுங்காலத்துக்கு முன்னால் தமிழ்நாட்டு வேந்தர்களும், குறுநில மன்னர்களும், பணக்காரர்களும் செய்து வைத்த பழக்கம்.
    இப்படி ஆரியமொழி என்று சொல்லப்பட்ட சம்ஸ்கிருத நூல்களைப் படித்து அவற்றிலுள்ள நல்லறிவுகளைத் தமிழர்களுக்குச் சொல்லுவதற்கேன்றெ ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியார் அந்த வடமொழியை அதிகமாகப் படித்து வந்தார்கள். அவர்களுக்கு தாய்மொழி தமிழ்தான் என்றாலும் வடமொழியைத் தான் அவர்கள் வருந்திக் கற்றார்கள். ஏனெனில் அதிலேதான் அவர்களுடைய பிழைப்புக்கு வழி இருந்தது. அவர்களுடைய வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் மன்னவனும் மற்றத் தமிழர்களும் சேர்ந்து தனியாகச் செய்து வைத்து ஊரின் ஒரு தனிப்பகுதியில் இவர்களை ஒரு தனி இனமாக வைத்துத் தாங்கி வந்தார்கள்.
    cont

  86. தமிழ் சமூகத்திலுள்ள மற்றவர்களை விட்டு விலக்காக வாழ்ந்து வந்ததினால் இவர்கள் தங்களுக்கென்று ஒரு தனியான பழக்க வழக்க சம்பிரதாயத்தை உண்டாக்கிக் கொள்ள நேர்ந்தது. அந்த சம்பிரதாயங்கள் சரியென்று மற்ற தமிழர்களும் மதிப்புக் கொடுத்து வந்தார்கள். கொஞசம் கொஞ்சமாக இவர்கள் தங்களை ஒரு தனி இனமாகவே எண்ணிக் கொண்டு தாங்கள் புதிதாக மேற்கொண்ட பழக்க வழக்கங்களே தங்கள் குல வழக்கமென்றும் தாங்கள் புதிதாக கற்றுக் கொண்ட வடமொழியே தங்களுடைய வம்ச பாஷை என்றும் அந்த வடமொழியிலுள் ஆரிய குலம் கோத்திரங்களையே தங்களுடைய குலம் கோத்திரங்களாகவும் பழகிக் கொண்டு மற்ற தமிழர்களை விட்டு வேறாக விலகிவிட்டார்கள்.
    (என் கருத்து – இனமாக வரை சரி பின்பு சொல்லப்பட்டவை சரியா என்று எனக்கு சந்தேகமே – மற்ற தமிழர்களை விட்டு………… இது சரி என்றெ தோன்றுகிறது) மற்ற தமிழர்கள் அதை ஒப்புக்கொண்டு மரியாதை செய்து வந்தார்கள் ( என் கருத்து – ஒன்று அறியாமை பார்பனின் சாபம் நமக்கேன் என்று ஒதுங்கியது இவை உள்ளே புகைச்சலை ஏற்படுத்தியது தான் மிச்சம்) தமிழர்களுடைய வாழ்கையின் எல்லாத் துறைகளிலும் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்கப்பட்டது. (என் கருத்து – இப்படி ஆதிக்கம் செய்ய வழி செய்த தமிழர்களை சரியாக மதிக்காமல் வந்தது பார்பனர்கள் தவறுதான் – இந்த விஷயத்தில் பெரியாரின் கொள்கைகளை ஏற்காத நான் அவர் பிராமிணனின் ஆணவத்தை அடக்கினார் என்பதில் சந்தேகம் இல்லை – ஆனால் அவர் தேவையற்ற பல எல்லை மீறல் வேலைகளையும் செய்தார் என்பது ஏற்புடையது அல்ல – ஆதிக்கம் செய்யவைத்ததும் தவறு அதற்காக அவர்கள் மதிப்பை பாதளத்தில் தள்ளியதும் தவறு )

  87. திரு வேதம் கோபால்!

    //அல்லாவை தவிற வேறு இறைவன் இல்லை என்பதும் மற்ற மதத்தவர்கள் வணங்கும் கடவுள்கள் பொய் என்பதற்கும் வித்தியாசம் இல்லை. இது நிச்சயம் மாநில மொழிகளில் தினம் ஐந்துமுறையும் ஒவ்வொருமுறையும் நான்கு ஐந்துதடவை அல்லாவை தவிற வேறு கடவுள் இல்லை என்று ஒலிபெருக்கியில் ஓதினால் நிச்சயம் மற்ற மதத்தவர் வெறுப்பை சம்பாதிப்பதோடு இது மத நல்லிணக்கத்தையும் கெடுக்கும். இது இந்திய சட்டபடி குற்றமே ஆகும்.//

    ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திரு மூலர் மந்திரத்தை என்ன செய்வீர்கள்?

  88. ஏக இறைவன் ஒருவனே தேவன் என்பதெல்லாம் கடவுள் ஒருவர் என்பதை தான் குறிக்கும். கடவுள் என்பவர் இருக்கிறார் என்பதே ஒரு நம்பிக்கைதான். அவருக்கு இது தான் நாமகரணம் என்பது அவர் அவர் நம்பிக்கை. இது அல்லாவாக இருக்கலாம் சிவனாக இருக்கலாம் விஷ்னுவாக இருக்கலாம் கர்தராக இருக்கலாம். கண்ணால் பார்கமுடியாத ஒன்றிற்கு அந்த ஒருவருக்கு பெயர் அல்லாதான் அவர் தூதுவன் மொகமது என்பது இஸ்லாமியர் நம்பிக்கை. அதை மற்ற மீது திணிப்பது அதர்மம்.
    பகவத் கீதையில் ஸ்ரீ.கிருஷ்ணர் சொல்லியிருப்பது என்ன ?

    ”இவ் அகிலம் எல்லாம் அகிலமறியாத எனது தோன்றா உருவில் என்னால் புகப்பட்டிருக்கிறது. எல்லா ஜீவர்களும் என்னில் இருக்கின்றன. ஆனால் அவைகளை சார்ந்து நான் இல்லை (அத்தியாயம் – 9 சுலோகம் – 4 )”

    ”என்னிலும் மேலான உண்மையில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளது போல் எல்லாம் என்னை சார்ந்துள்ளன. ( அத்தியாயம் – 7 சுலோகம் – 7 ) ”

    ” எல்லா உயிரினங்களின் மூலவிதை நானே. அறிஞர்களின் அறிவும் பலவான்களின் பலமும் நானே ( அத்தியாயம் – 7 சுலோகம் – 10 )”

    மேற்சொன்னவற்றிலிருந்து கடவுள் எவ்விடத்திலும் என்றும் எப்பொழுதும் வியாபித்துள்ளார் என்பதையும். அவரே மூல விதையாக மனிதனிடத்திலும் மற்ற உயிர், உயிர் அற்ற ஜிவராசிகளிடமும் இருகின்றார் என்பது விளங்கும்.

    மேலும் ” எங்கு வேண்டுமானாலும் எந்த வடிவிலும் உண்மையான பக்தி கொண்டு வணங்கினால் நானும் அங்கு சென்று அந்த வடிவிலேயே ஆசீர்வதிக்கின்றேன் (அத்தியாயம் – 7 சுவோகம் – 21 )

    ”எந்தெந்த வழிமுறைகளைக்கொண்டு என்னை நெருங்க நினைக்கின்றார்களோ நானும் அந்த வழிப்படி அவர்களுக்கு ஆசி வழங்குவேன். ஓ பிராத்தனே ! மனிதஇனம் என்னிடம் சரண்அடைய எல்லா வழிமுறைகளையும் நான் அளித்துள்ளேன் (அத்தியாயம் – 4 சுலோகம் – 2 )

    இதிலிருந்து தெரிவது என்னனவென்றால் கடவுள் எங்கும் வியாபித்துருக்கிறான் அவனது கிருபையை பெற ஜாதி, மத, இன பேதங்கள் தடையாக இல்லை என்பதே ஆகும். மேலும் ஒருவர் மற்றவரை குறைத்து மதிப்பிடுவதோ அல்லது ஆதிக்கம் செலுத்துவதோ கூடாது. ஒருவரை ஒருவர் அனுசரித்து, அரவணைத்து செல்லவேண்டும் என்பது புலனாகிறது. இவை எல்லாம் சுய சிந்தனையுள்ள மனிதனிடம் பிறவியிலேயே இருக்கும் அடிப்படை நீதியாகும். இந்த தர்மசிந்தனைதான் சமூகத்தில் நல்லிணகத்தை ஏற்படுத்தும்.

  89. அன்புள்ள சுவனப்ரியன்…

    ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்…’ என்பதும் ‘என்னுடையதைத் தவிர மற்றெல்லாம் பொய்’ என்பதும் ஒன்றா?

    ‘அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்; லா இலாஹா இல் அல்லாஹ்’ என்றால், ‘இறைவனே ஆண்டவன்/ஆள்பவன்; வேறு எவரும் அல்லர்’ என்றுதான் பொருள் என்று நான் கருதுகிறேன்.

    ‘இறைவனே சக்ரவர்த்தி; அந்த இறைவன் ஒருவனே (அந்தச் சக்ரவர்த்தி ஒருவனே)’.

    இப்படிச் சொல்வதில் திருமூலரின் திருவாக்குக்கும் திருமறை என நீங்கள் போற்றும் குர்-ஆனுக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

    இவை இரண்டுமே ‘இறைவன் ஒருவனே’ என்னும் கருத்திலிருந்து பிறழவில்லை.

    பின் எங்கு சிக்கல் எழுகிறது?

    ‘அல்லாஹ்’ என்பதை, ‘இறைவன்’ என்றோ அல்லது வேறு சொல்லாலோ அல்லது வேறு மொழிச் சொல்லாலோ குறிப்பதைப் ‘பள்ளிவாசல்கள்’ ஏற்காது என்பதில்தான் இந்தச் சிக்கல் எழுகிறது.

    ‘இறைவனை இன்ன பெயரிட்டு அழைத்தால் அது தவறு’ என்று இந்தியச் சமயம் கூறவில்லை.

    ‘இன்னின்ன குணம் குறிகளைச் சொன்னால், அது இறைவனுக்கு விரோதம்’ என்றும் இந்தியக் கலாச்சாரங்கள் கூறவில்லை.

    இறைவனின் அளப்பரும் ஆற்றல்களைக் குறைத்து மதிப்பிட்டு, ‘அவர் கல்லில் இல்லை, பொன்னில் இல்லை, மண்ணில் இல்லை, மரத்தில் இல்லை, திருநாமங்களில் இல்லை…இல்லை,இல்லை,இல்லை…’ என்று அவரின் வசிப்பிடத்தை மிக மிகக் குறுக்கி, நம்மைப்போல் அவரையும் வரையறைக்கு உட்பட்டவராகக் காட்டும் அறிவுக்குப் புறம்பான கோட்பாடும்..! இந்தியச் சமயங்களில் இல்லை.

    இறைவன் மிகப் பெரியவன்; வரம்பில்லாத ஆற்றல்களின் இருப்பிடம். வரம்பில்லாத ஆற்றல் உடையவன் ஒரு அணுவுக்குள் இல்லை என்று சொன்னால், அவன் ஆற்றல் வரம்புக்கு உட்பட்டதாகுமல்லவா?

    இறைவன் ஒருவன் என்பதும் அவனுக்குத் திருநாமங்களும் திவுருவங்களும் அவனது ஆற்றலும் அளவிலடங்காதவை என்பதும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று கருதுவது சரியான அணுகுமுறை அல்ல.

  90. திரு சுவனப்ரியன்…

    தங்களது மற்றொரு மறுமொழியில் தாங்கள் குறிப்பிட்டிருப்பது போல், ‘தமிழ் நீச மொழி; சமஸ்க்ரிதமே தேவ மொழி’ என்று சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை.

    அப்படிச் சொல்பவர் எவராக இருந்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். அதே நேரம், இப்படி ஒரு கருத்தைச் சொன்னதற்காகவே ஒருவரை நாங்கள் ஒதுக்கவும் மாட்டோம்.

    ஏனெனில் ‘இவ்வுலகில் கலப்பில்லாத நன்மை இல்லவே இல்லை (இறைவனைத் தவிர)’, என்று ஹிந்து சமயம் அடித்துச் சொல்கிறது. அதை நாங்கள் ஏற்கிறோம். ஏனெனில் மறுக்க முடியாத் உண்மை அது.

    ஒரே ஒருவர் தான் இறைவனின் தூதர் என்பதும், அவருடைய சொற்களைத் தவிர மற்றவை ஏற்கத்தக்கவை அல்ல என்பதும், குறையுடைய கருத்தைச் சொல்பவர் நிராகரிக்கத் தக்கவர் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

    இப்படி நிராகரிக்க ஆரம்பித்தால், ஒருவரிடமிருந்து வெளிப்படும் பல நல்ல விஷயங்களை நாம் இழந்துவிடுவோம்.

  91. திரு.சுவனபிரியன்,
    பைபிள் படைப்பு பற்றியும் இஸ்ரேல் ஆப்ர ஹாம் பற்றி சொன்னதையே அப்படியே குரான் சொகிறது. பைபிள் உள்ளவை வெறும் ஊகக் கதைகள்- புனையப்பட்டவையே என பைபிளியலாளர்கள் ஏற்கின்றனர்.

    தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய
    புதிகளுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது.
    – பக்கம் 15 “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி -பதில்; – கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் S.S.தெயோபிலஸ்
    எழுதிய நூல்- : “நிஜங்கள்- விவிலியம் பற்றிய கேள்வி – பதில்கள்”, இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர்.

    இதே போல இஸ்ரேலின் அக்ழ்வாய்வு முடிவுகள் ஆபிரகாம் ஸாலமோன் வரை உள்ளவை அனைத்தும் புனையப்பட்டவை என்கின்றனர்.
    இன்னுமொரு நூல் – The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts
    https://wp.me/PxRSh-7E
    • Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
    இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
    இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்)

    உலகம் படைக்கப் பட்டு 6000 வருடங்கள் தான் ஆகிறது என கதை புனைகின்றது விவிலியம்.
    உலகம் படைக்கப்பட்டதின் பைபிள் தரும் துல்லியக் வரலாற்று கணக்கு
    சந்ததி பிறந்த ஆதாமிய வருடம் வாழ்நாட்கள் இறந்த ஆதாமிய வருடம்
    ஆதாம் ——————-000——————-930—————930
    சேத்————————-130————————912—————1042
    ஏனோஸ் —————–235————————-905—————1140
    கேனான்——————–325———————–910—————1235
    மகலாலெயேல்————395———————–895—————1290
    யாரேத்———————-460————————962—————1422
    ஏனோக்கு——————622————————-365————–987
    மெத்தூசலா—————-687————————-969————–1656
    லாமேக்கு ——————874————————-777————–1651
    நோவா———————-1056———————-950—————2006
    சேம்————————–1556———————-600—————2156
    அர்பக்சாத்——————1658———————-438—————2096
    ************************************************************************
    சாலா————————-1693———————433—————2122
    ஏபேர்————————1723———————-464—————2187
    பேலேகு———————1757———————–239————–1996
    ரெகூ————————-1787———————–239————–2026
    செரூகு———————–1819———————–230————–2049
    நாகோர்———————1849————————148————–1997
    தேராகு———————-1878————————-205————-2083
    ஆபிராம்———————1948————————175————-2123
    இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து
    எடுக்கப்பட்டுள்ளது

    பைபிளில் இல்லாத ஒரு நபி(பிற மத) பெயர் கூட குரானில் உள்ளதாக தெரியவில்லை.

    பாதிரியார்கள் இந்தியாவை பிரித்து ஆள்வதற்கும் மதமாற்ற வசதிக்காவும் புனைந்த ஆரியர்-திராவிடர் கதை தொடர முமதியர்களும் ஏன் உதவுகிறார்கள்

  92. “தமிழ் நீசமொழி என்று சொன்னவர் யார்? எப்பொழுது சொன்னார்கள்/ ஏதேனும் ஆதாரம் உண்டா? திருப்பித்திருப்பிச் சொல்லுவதால் பொய்யை மெய்யாக்கிவிட முடியாது.

  93. உயர் திரு கிருஷ்ண குமார் அவர்களே…

    வணக்கம்.

    திருவாளர் சுவனப்ரியனுக்கு நான் தந்துள்ள மறுமொழியில், ‘தமிழ் மொழி’ குறித்தும் ‘தமிழில் வழிபாடு’ இயற்றுவது குறித்தும் எதுவும் தவறாகவோ அல்லது மதிப்புக் குறைவாகவோ கருத்துக் கூறியிருக்கவில்லை என்று இப்போதும் நம்புகிறேன்.

    என் மறுமொழியின் மையக் கருத்து இதுதான். “வழிபாடு இயற்றுவதில் மொழிச் சண்டைக்கு வேலையில்லை.”

    “திருப்புகழ் உள்ளிட்ட அருள் நூல்களில் பயின்று வந்துள்ள சொற்றொடர்களைப் பயன்படுத்தி 108 போற்றிகள் சொல்வது தவறு” என நான் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை ஐயா.

  94. அன்பார்ந்த ஸ்ரீ மயில்வாகனன்,

    பெயர் எழுதும்போதே மனதில் நிறைவு வருகிறது.

    நான் தங்களது கருத்தில் இருந்து மாறுபட்டது போட்டிக்காக செய்யப்பட்ட 108 போற்றி பற்றி மட்டும் தான்.

    அருளாளர்களால் அருளப்பட்ட திருப்புகழ், நாலாயிரம், திருமுறை இவற்றினைப் போல யாரோ செய்த 108 போற்றிகள் இறைவனுடைய பேரருளால் அனுபவத்தை சொல்லும் நூற்கள் இல்லை தான். என்றாலும், போட்டிக்காக செய்யப்பட்டிருப்பினும் இறைவனுடைய நாமங்களால் தொகுக்கப்பட்ட நாமாவளி என்ற படியால் அதுவும் மனதிற்கு நிறைவையே தரும் என்பதையே நான் சொல்ல வந்தது. இறைவன் நாமங்களை உள்ளடக்கியவை என்பதால் அதைக்கூட நாம் நிறைவாகவே போற்றுவோமே என்று தான் சொல்லியுள்ளேன்.

    \\\\\“திருப்புகழ் உள்ளிட்ட அருள் நூல்களில் பயின்று வந்துள்ள சொற்றொடர்களைப் பயன்படுத்தி 108 போற்றிகள் சொல்வது தவறு” என நான் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை ஐயா.\\\\

    அன்பரே ஆம் தாங்கள் அப்படிக் கூறவில்லை. பல முருகன் ஆலயங்களில் தமிழ் அர்ச்சனையில் நான் கேட்டு மகிழ்ந்தது திருப்புகழ்ப்பாமாலைகளில் இருந்து தொடுக்கப்பட்ட நாமாவளி. முருகா போற்றி மால்மருகா போற்றி என்று நாமாவளி அர்ச்சனையாக செய்யப்பட்டால் முருகன் மட்டும் நினைவில் வருகிறான். ஆனால் திருப்புகழால் தொடுக்கப்பட்ட நாமாவளி என்றால் மனது முருகனை மட்டுமின்றி வள்ளல் அருணகிரிப்பெருமானையும் நினைவூட்டுகிறதே. இரட்டிப்பாக இறைவனையும் இறைவனடியாரையும் ஒருங்கே நினைவுறும் பாக்யம். அவ்வளவே

    மொழிகள் பற்றி மதிப்புக் குறைவாக வித்யாசங்கள் தொனிக்க கருத்து எழுதியமையை சுட்டியது ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் பக்ஷத்தில் அதுவும் அவர் மற்ற ஆப்ரஹாமியர் போலன்றி சற்று கண்யத்துடன் கருத்துப் பரிவர்த்தனம் செய்கிறார் என்பதால்.

  95. அன்புள்ள மயில்வாகனன்!

    //‘அல்லாஹ்’ என்பதை, ‘இறைவன்’ என்றோ அல்லது வேறு சொல்லாலோ அல்லது வேறு மொழிச் சொல்லாலோ குறிப்பதைப் ‘பள்ளிவாசல்கள்’ ஏற்காது என்பதில்தான் இந்தச் சிக்கல் எழுகிறது. //

    யார் சொன்ன்து? இறைவன் என்றோ கடவுள் என்றோ பாதுகாப்பவன் என்றோ அவனது பண்புகளில் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். குர்ஆன் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

    ‘அல்லாஹ் என்று அழையுங்கள்: ரஹ்மான் என்று அழையுங்கள்: நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.’
    -குர்ஆன் 17:110

    இங்கு இறைவனை எப்படி வேண்டுமானாலும் அவனது பண்புகளை குறித்துக் கூட அழைக்கலாம் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது. இறைவனுக்கு காத்தல், படைத்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையும் நாம் மூன்று தெய்வங்களாக ஆக்கி விட்டோம். இது போல் இறைவனின் தன்மைகளை பல இடங்களில் குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

    //‘இன்னின்ன குணம் குறிகளைச் சொன்னால், அது இறைவனுக்கு விரோதம்’ என்றும் இந்தியக் கலாச்சாரங்கள் கூறவில்லை. //

    குணம் குறிகளைச் சொன்னதோடு நாம் நிற்கவில்லையே! படைப்புத் தொழிலுக்கு பிரம்மனையும், மற்றும் விஷ்ணு என்று பாகுபடுத்தி அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட உருவத்தையும் கொடுத்தது யார்? அந்த உருவங்களை ரிக் யஜீர் சாம அதர்வண வேதங்களில் காணக்கிடைக்கிறதா?

    மயில்வாகனனை யாரென்றே இதுவரை பார்த்திராமல் எனது கற்பனையில் உங்களை வரைந்தால் அது உங்களைப் போல் இல்லாதிருந்தால் நீங்கள் என் மீது கோபப்படுவீர்கள் அல்லவா? ஒரு சாதாரண மனிதனே தனது உருவம் சிதைக்கப்படுவதை பொறுக்காத போது அகில உலகையும் கட்டி ஆளும் சர்வ சக்தனை பல விலங்குகள் ரூபத்தில் நாம் வரைந்தால் பற்களை கொடூரமாக வெளியே தள்ளி வழிபாடு செய்தால் அவனுக்கு கோபம் வராதா?

    //இறைவன் ஒருவன் என்பதும் அவனுக்குத் திருநாமங்களும் திவுருவங்களும் அவனது ஆற்றலும் அளவிலடங்காதவை என்பதும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று கருதுவது சரியான அணுகுமுறை அல்ல.//

    இதற்கு ஆதாரத்தைத்தான் நான் இந்து மத வேதங்களிலிருந்து கேட்கிறேன்.

    //ஒரே ஒருவர் தான் இறைவனின் தூதர் என்பதும், அவருடைய சொற்களைத் தவிர மற்றவை ஏற்கத்தக்கவை அல்ல என்பதும், குறையுடைய கருத்தைச் சொல்பவர் நிராகரிக்கத் தக்கவர் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. //

    ‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்க்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்’
    -குர்ஆன் 14:4

    இந்த வசனத்தின் மூலம் நம் தமிழ் மொழிக்கும் ஒரு தூதர் வந்திருப்பதாக குர்ஆன் கூறுகிறது. அவர் திருவள்ளுவராகக் கூட இருக்கலாம், கிருஷ்ணனாகக் கூட இருக்கலாம் திருமூலராகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்களின் வரலாறு நம்மிடம் பாதுகாக்கப்படவில்லை.

    இறைவனே யாவற்றையும் அறிந்தவன்.

  96. திரு பைந்தமிழன்!

    //திரு.சுவனபிரியன்,
    பைபிள் படைப்பு பற்றியும் இஸ்ரேல் ஆப்ர ஹாம் பற்றி சொன்னதையே அப்படியே குரான் சொகிறது. பைபிள் உள்ளவை வெறும் ஊகக் கதைகள்- புனையப்பட்டவையே என பைபிளியலாளர்கள் ஏற்கின்றனர்.//

    பைபிளுக்கும் குர்ஆனுக்கும் பெயர்களிலும் இடங்களிலும் பல ஒற்றுமைகள் உள்ளதை நான் ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால் அதை ஒட்டி வரக் கூடிய சம்பவங்கள் அனைத்தும் இரு வெதங்களுக்கும் நிறைய மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. ஏசுவின் இறப்பிலேயே இரு வேதங்களுக்கும் நிறைய முரண்பாடு உள்ளது. இரு வேதங்களையும் நன்கு படித்தவர் இந்த வித்தியாசத்தை இலகுவில் உணர முடியும்.

    //பைபிளில் இல்லாத ஒரு நபி(பிற மத) பெயர் கூட குரானில் உள்ளதாக தெரியவில்லை.//

    திருத்தப்படாத பைபிளும் இறை வேதம்தானே! அவரது சீடர்களால் அந்த வேதம் திருத்தப்பட்டதால்தான் தற்போது அதன் பொலிவிழந்து காணப்படுகிறது.

  97. Dear svanapriyan,
    you people one time eagerly searching any reverence about mohameed in Bible and take many quotations from Bible.

    At the same time, also claimed bible is corrupted. If Kur-on is protected by God then why Bible not protected by same GOD.
    I read both Bible and kur-on. whatever we can say about bible, but bible contained many historical documents. But , kur-on like novel take many ideas from bible and Biblical apocryphas.

    but, both chirstians and Muslims claimed themselves only true followers of GOD and Others are devil(satan) worshipers.

    But, the fact(supreme) is not asset of one person. It is comes to everybody.

  98. Here Historical documents does not mean world creation and ideas about GOD in bible. Rather,the history of jews, how they came from Egypt to Isreal and Invansion of various kings in Isreal.

  99. சுவனப்ரியன்

    //
    பைபிளுக்கும் குர்ஆனுக்கும் பெயர்களிலும் இடங்களிலும் பல ஒற்றுமைகள் உள்ளதை நான் ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால் அதை ஒட்டி வரக் கூடிய சம்பவங்கள் அனைத்தும் இரு வெதங்களுக்கும் நிறைய மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. ஏசுவின் இறப்பிலேயே இரு வேதங்களுக்கும் நிறைய முரண்பாடு உள்ளது. இரு வேதங்களையும் நன்கு படித்தவர் இந்த வித்தியாசத்தை இலகுவில் உணர முடியும்
    //

    சார் உங்க பொறுமையை திறமையை பார்த்து சொக்கிட்டேன். சும்மா அடிச்சு விடுறீங்க.

    இயேசுவை பத்தி நல்லேதேல்லாம் அல்லா சொன்னதாக நபி சொன்னார் எப்போ அவரும் அவரது தாதா கூட்டமும் பெலஹீனமாக இருந்தப்போ. அப்புறம் பலம் பெற்ற பின்பு தான் நபி பைபிள் டுபாகூர் அத மாத்திபுட்டாங்கன்னு அவுத்து உட்டதெல்லாம்.

    அதென்ன நபி அவுத்துவுட்டா இயேசு மூணு நாள் கழிச்சு மீண்டும் எழவில்லை என்று நம்ப மாட்டீங்களா. ஏன் அதை நம்ப வேண்டியது தானே. நம்பினா பிரச்சனையை, நபிக்கு ஆப்பூ, தானே அல்லாவின் படைப்பில் ரெம்ப நல்லவன்ர புரட்டு வெளிச்சத்திற்கு வரும், அவுற படச்சடால தான் உலகத்தையே படைச்சார் அல்லா என்கிறதா இஸ்லாமியரல்லாத கேனயன் கூட நம்ப மாட்டான்.

    ஒரு மட்டேற கவனிச்சீங்களா குரான்லா இயேசுவை தான் அல்லா ரெம்ப புகழ்ந்து நல்லவருன்னு சொல்லிருக்கார்.

    இயேசு யாரையும் அடிக்கமாட்டார் அட்ச வாங்கிப்பார் மறுக்க அடிப்பான்னு சொல்வார். நபிகள் 🙂 சும்மா பறந்து பறந்து அடிப்பார் அடிக்க வைப்பார்

    இயேசு உண்மையின் சொருபம் இன்னிக்கொரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு இல்லை. நபிகள் நிமிசத்துக்க் நிமிஷம் மாத்தி மாத்தி பேசுவார்.

    இயேசு கண்ணாலமே கட்டிக்காம மத்தவுங்களுக்காக வாழ்ந்தார். நபிகள் 🙂 கண்ணுல பட்ட இருபத்தி ஐந்து வயதுக்கு குறைவான பெண்களையெல்லாம் அபேஸ்.

    இயேசு சாதரணமாக இறந்தார் (according to kuraan). நபிகளை ஒரு யூத பெண் விஷம் வெச்சு முடித்துவிடுவார்.

    இயேசு தனது இரத்தைத்தை பங்கு கொடுத்தார். நபிகள் பிறரை ரத்தம் சிந்த வைத்து போரில் பெற்ற பொருட்களை ஆட்டைய போட்டார்.

    ஒரே ஒரு ஒற்றுமை ஏசுவும் மரிப்பதற்கு முன்னே பரம பிதாவி என்னை கை விட்டீரே என்று புலம்பினார் (according to bible).

    நபிகள் வாழ்கை பூரா அல்ல என்ன வரவா போறார்ன்னு நினச்சுகிட்டு நான் பொய் சொன்ன அல்ல என் இதய குழாய் அறுத்து கொன்றுவிடுவார் என்று சொல்லி வந்தார். கடசிலா விஷம் வைக்கப்பட்ட பின் அல்லா என் இதய குழாயை யாரோ அறுப்பது போல இருக்கேன்னு புலம்பினார்.

    குரான்ல அல்லா இயேசு மீண்டேழலேன்னு சொன்னாரான் அதனால நீங்க அதை அப்படியே நம்பி சுவனத்துக்கு போய் டேரா போடபோரீங்கலாக்கும். சரி உங்கள பிப்ள்ள வர சாத்தான் புடிச்சிக்கிட்டு போய் நரகத்துல போட்ட எப்பா பயம்ம்மா இல்ல.

  100. பைபிள் எனப்படும் விவிலியம் ஒரு இலக்கிய நிகழ்ந்த வரலாற்று -அரசியல் நூல் எனவே கூற முடியுமே அன்றி அவற்றில் இறையியல் உள்ளது என்பது மிக அரிது. குரானும் அப்படியே எனச் சொல்லவும் தெளிவாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

    பைபிள் தோண்டப்படுகிறது- இஸ்ரேல் டெல்அவிவ் பல்கலைக்கழக புதைபொருளாய்வுத் தலைவர் முழுநூலின் இணைப்பு.
    https://www.mediafire.com/download.php?y177tc2oa3tegam
    இவர் பல ஆய்வாளர்கள் முன்பு கூறியவற்றை தெளிவாகத் தருகிறார்.

    எபிரேயர்கள் என்பவர்கள் இஸ்ரேலில் தொடர்ந்து வாழ்ந்துவரும் குடியே. பைபிள் விடும் காணான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, அதனை பாபிலோனைச் சேர்ந்த நபரான ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து இஸ்ரேலின் ஆட்சியுரிமை அவர் சந்ததிகளுக்கு என்று சொன்னார் எல்லாம் கட்டுக்கதை.
    எபிரேயர்கள் எகிப்து சென்றதாகவும், மீண்டும் வரும்போது யாத்திரையாகமம் மோசஸ் அல்லது மூசா நபி தலைமையில் 20 லட்சம் எபிரேயர்கள் அதிகமானோர் 40 வருடம் வந்த்தாகவும் கதை பண்ணுகிறது, வரும் வழியில் செங்கடல் இரண்டாகப் பிழந்து வழி விட்டதாகவும் கதை. இவை அனைத்துமே கட்டுக்கதை. புதைபொருள் ஆய்வுகள் எகிப்தில் எபிரேயர்கள் இருந்ததாகவோ, யாத்திரை நடந்ததான எவ்வித ஆதாரமும் இல்லை என தெளிவாக காட்டுகிறனர்.
    ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள். ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.
    https://wp.me/PxRSh-7E

    R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”
    இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.
    New Catholic Encyclopedia Vol-5 page-745
    “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus.
    The Hebrew term Yamsup signifies Reed sea. ”
    New Catholic Encyclopedia Vol-5 page-745
    மோசஸ் அல்லது மூசா நபி எழுதியதான தௌரத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள் தவறான மொழி பெயர்ப்பு காரணமாம்-அமெர்க்க கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது. இது நியாயப்பிராமாணங்கள் அல்லது புனையப் பட்டதே பொ.மு. 300-200 வாக்கில் என்பதை நிருபிக்கும்.

    ஒட்டகங்கள் முதலில் மனிதர்களால் பழக்கப்பட்டு பயன் படுத்தப் பட்டது BCE-1000 வாக்கிலே; ஆனால் ஆபிரஹாம் வீட்டில் ஒட்டகங்கள் இருந்ததாகக் கதை கட்டுகிறது. பரம்பரைப் பட்டியல்களில் பாபிலோனிய/கிரேக்க பின்பற்றுதல்கள் பைபிள் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
    Sharjah’s 3,000-year-old clue to the first domesticated camels
    https://newindian.activeboard.com/t36782212/semmozhi-tamil-ancient-archaeology-findings/?page=5
    மோசஸ் அல்லது மூசா நபி பைபிளில் எதையும் எழுதவில்லை. தாவீது எதையும் எழுதவில்லை. யேசுவும் எழுதவில்லை. பைபிளின் நபி என்பவர் குறி சொல்வது போல் சொல்பவர்கள், குடித்துவிட்டு நிர்வாணமாக ஆடி குறி சொல்வதை பைபிள் சொல்கிறது. இவர்கள் வெறியில் பேசினார்களெ தவிர எந்த வார்த்தையையும் கடவுளிடமிருந்து பெறவில்லை.
    சுவனபிரியன்-//பைபிளுக்கும் குர்ஆனுக்கும் பெயர்களிலும் இடங்களிலும் பல ஒற்றுமைகள் உள்ளதை நான் ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால் அதை ஒட்டி வரக் கூடிய சம்பவங்கள் அனைத்தும் இரு வெதங்களுக்கும் நிறைய மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. ஏசுவின் இறப்பிலேயே இரு வேதங்களுக்கும் நிறைய முரண்பாடு உள்ளது. இரு வேதங்களையும் நன்கு படித்தவர் இந்த வித்தியாசத்தை இலகுவில் உணர முடியும்.
    திருத்தப்படாத பைபிளும் இறை வேதம்தானே! அவரது சீடர்களால் அந்த வேதம் திருத்தப்பட்டதால்தான் தற்போது அதன் பொலிவிழந்து காணப்படுகிறது.//
    //super thinker on February 13, 2012 at 7:35 pm
    Here Historical documents does not mean world creation and ideas about GOD in bible. Rather,the history of jews, how they came from Egypt to Isreal and Invansion of various kings in Isreal.//
    Please read above that Egypt Israel stories are not history at all.
    குரான் யாத்திரையை சொல்கிறது, மோசஸை சொல்கிறது. செங்கடல் வழிவிட்டதை 80 வசங்களில் பேசுகிறது. யாத்திரையின் போது தௌரத் வந்ததாகப் பேசுகிறது.
    நீங்களே சொல்லுங்கள் இப்படி புனைந்த கதாசிரியர் யாராக இருக்க முடியும் திரு.சுவனபிரியன், அவர்களே

  101. Dear paitamilian,
    I am sorry I am not able to write in Tamil because I donot know Tamil typewriting like you.

    Anyway, Bible clearly indicated exodus of Jews from Egypt to Isreal whether it may be miracle or not.
    Also, you can see the chronicle I and II also Kings I and II , it is given history of Isreal written by contemporary writers unlike kur-on where all stories only told by so called yah-Allah.

  102. இங்கிலாந்தை சேர்ந்த ஒருவனை நாம் ”ஆங்கிலேயன்” என்று சொல்கிறோம் இதனாலேயே அவன் தன்னை ஆங்கிலேயன் என்று சொல்லிக்கொள்ள சம்மதிப்பானா ?//

    வேதம் கோபால்!

    ஆங்கிலேயன் என்பது இங்கிலீஷ் மேன் என்பதைத் தமிழ்ப்படுத்தியச்சொல்.

    ஆங்கிலேயன் தன்னை ஆங்கிலேயன் எனறு தானும் சொல்கிறான். பிறர் அழைக்கவும் விரும்புகிறான். இதிலென்ன ஐயம்?‌

  103. ஆன்ம இலாபம் கருதுவோருக்கு வடமொழி தென்மொழிச் சண்டையும் ஆரிய திராவிடச் சண்டையும் வீண்செயல். பெரும்பாலான பண்டைய மரபுவழித் தமிழறிஞர்கள் வடமொழி அறிவும் பெற்ரிருந்தனர். வடமொழி ஒன்றே அறிந்தவர்களைக் காட்டிலும் இவர்கள் சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியுள்ளனர்.//

    முனைவர் திரு முத்துக்குமாரசாமி!

    நீங்கள் நான் எழுதியவற்றைப்படித்தீர்களா என்பது ஐயமே.

    மொழிப்பிரச்சினை இருவகையாக நிலவும் இங்கே:

    ஒன்று மதவழியாக; மற்றொன்று சமூகவழியாக.

    நீங்கள் எழுதியது முதலாவதே. அதிலும் கூட பாதியைத்தான் சொல்லியிருக்கிறீர்கள் !

    இன்னொரு பாதி எங்கே?

    உங்கள் பாதி சைவத்தைப்பற்றி. இன்னொரு பாதி வைணவத்திலிருந்தே வருகிறது. அதைப்பற்றி நான் எழுதிவிட்டேன்.

    ஆங்கு நடந்த வடமொழியா தென்மொழியா என்ற பிணக்கு திராவிடக்கட்சிகள்; ஈவெராமசாமி நாயக்கர்; தேவநாயப்பாவாணர்; மறைமலைகள்; கிருத்துவப்பாதிரிகள் தமிழ்கத்தில் தோன்றிய / வந்த காலத்திற்கு முன்பே, 1500 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதாகும்.

    அதன் விளைவுகளுள் ஒன்று வடகலை; தென்கலை.

    நம்மாழ்வார் பாடலகளுக்கு மதிப்பில்லை தமிழில் எழ்தப்பட்டதால் என்று எதிர்க்கப்பட்டது என்பது பல ஆச்சாரியர்களால் எழுத்ப்பட்டது.

    நம்பிள்ளை தம் ஈட்டுக்கு எழுதிய அவதாரிகை தூய தமிழில் தெய்வத்திரு பேரா புருடோத்தம நாயுடு அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்; ஏன் படிக்கக்கூடாது?

    ஆன்ம‌ இலாப‌த்தைப்ப‌ற்றியெல்லாம் பேசுகிறீர்க‌ள்? ஏன் த‌மிழில் நான் புரின்து ப‌டிக்கும் போது என‌க்கு அது கிட்டுமா? புரியா மொழியில் ப‌டிக்கும்போது கிட்டுமா?

    இறைவன் நம் தாயும் தந்தையும் ஆவான். ‘அம்மையே அப்பா ஒப்பிலா மணியே!’

    அவனை, அம்மா என்றோ, அப்பா என்றோ அழைக்கும் ஒரு தமிழன், மாதாஜி, பிதாஜி என்றழைக்கும்படி ஆகிறது. இதில் எதில் அவனுக்கு ஆன்மீக இலாபம் கிடைக்கும்?

    கொஞ்ச‌ம் சொல்லுங்க‌ளேன்.

    ச‌மூக‌ வ‌ழிவ‌ரும் மொழிப்பிர‌ச்சினையைப்ப‌ற்றிப்பேசும் போது சொல்ல‌ப்ப‌டுவ‌துதான் நாத்திக‌ர்க‌ளும் நானும் சொல்வ‌து. தாய் மொழியைத்த‌ள்ளியோ; அல்ல‌து அதையும் பிற‌மொழியொன்றையும் த‌ன் இருக‌ண்க‌ள் என‌ப்பித‌ற்றுவோன், த‌ன் தாயை ம‌றுத‌லித்த‌வ‌னாகிறான். இவ‌னுக்குத் தாயொருத்தி உண்டா என்ப‌து வேத‌னைக்குரிய‌ கேள்வி !

  104. அன்புள்ள சுவனப்ரியன் அவர்களே..!

    தங்களுக்கு மறுமொழி மீண்டும் எழுதும் வாய்ப்பு அமைந்துள்ளதில் மகிழ்ச்சி.

    “இறைவன், கடவுள், பாதுகாப்பவன்… என்றெல்லாம் ‘அல்லாஹ்’வை அழைக்கலாம்” என்கிறீர்கள். நானும் மறுக்கவில்லை. ஆனால், பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அழைக்கும்போது ‘அல்லாஹ்’வை’, ‘இறைவா..’ என்று எங்கும் அழைப்பதாகத் தெரியவில்லையே.

    ‘குணம்’ உண்டு என்றாலே ‘குணி’யும் உண்டு (குணி=குணத்தினை உடையவன்/ர்/து). இறைவனுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட உருவத்தையும் வேதங்கள் கொடுத்ததாக நாங்கள் சொல்லவில்லை. எல்லா உருவங்களுமே அவனுடையவை என்கிறோம். குணம், குறிகளும் திரு நாமங்களும் அதற்கேற்ப உருவங்களும் எடுப்பது இறைவனால் ஆகாத கடினமான காரியமா?

    ரிக், யஜுஸ், சாம வேதங்களில் இறைவனைப் பற்றிய வடிவ வர்ணனைகள் நிறையவே இருக்கின்றன. முழுமையாக வேதங்களை அறிந்தவர்கள் யார் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. குறைந்த பக்ஷம் ருத்ரம் (யஜுர்) மற்றும் புருஷ சூக்தம் (ரிக்) ஆகியவற்றில் இறைவனின் குண/உருவ வர்ணனைகள் வருகின்றன. அந்த வர்ணனைகளையெல்லாம் வைத்துச் சமைக்கப்பட்டதுதானா இறை வடிவங்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. சில காயத்ரிகளும் வேதத்திலிருந்து வந்தவைதாம். அவையும் பிரத்யேகமாக மூர்த்திகளைப் பற்றிப் பேசுகின்றன.

    இன்னொன்று. வெளியில் விகாரமாக நீண்டு உள்ள பற்கள், கோரமான தோற்றமுள்ள முகம் ஆகியவையெல்லாம் மட்டும் இறைவனையன்றி வேறானவை என்று கருதுகிறீர்களா? எவை எவை நம் பார்வைக்கும் மனதுக்கும் அழகாகத் தோன்றுகின்ற்னவோ அவை மட்டுமே இறை அம்சம் என்று கொள்வதா? மற்றவைஎல்லாம் இறைவனின் இருப்புக்கும் படைப்புக்கும் அப்பாற்பட்டவையா? இறைவனுக்கு அப்பாற்பட்ட ஒன்று (இல்லை) இருக்கும் என்றால், பின்பு இறைவனில் என்ன முழுமை இருக்கிறது?

    அவரவர் மொழியிலேயே தூதரை இறைவன் அனுப்பியிருக்கிறார் என்றால், இந்தியாவில் நபிகள் பெருமானுக்கும் ஜீசஸ் க்ரைஸ்ட்டுக்கும் வேலை இருக்காதே..!

    பின், தமிழ் அல்லது இந்திய மொழிகளுள் ஏதோ ஒன்றைத் தன் மொழியாகக் கொண்டு தோன்றியவர் தானே உங்களுக்கும் தூதராக் இருக்க முடியும்? நிச்சயமாக அவர் நபிகள் பெருமான் அல்லவே?

    சிந்திக்கத் துணியும் ஒரு இஸ்லாமிய சகோதரரை இத்தளத்தின் மூலமாகச் சந்திக்கும் வாய்ப்பளித்துள்ள இறைவனுக்கு நன்றி..!

  105. மயில் வாகனன் சார்

    //
    சிந்திக்கத் துணியும் ஒரு இஸ்லாமிய சகோதரரை இத்தளத்தின் மூலமாகச் சந்திக்கும் வாய்ப்பளித்துள்ள இறைவனுக்கு நன்றி..!
    //

    யார் சுவனப்ரியனா 🙂 . சார் அவர் குரான் என்னும் ஆழ்கடலில் அறிவியல் முத்திய தேடிக் கொண்டு ரொம்ப பிஸியாக இருக்கிறார். கடலுக்கடிலா தான் பவளம் இருக்குன்னு யாருக்குமே தெரியாததா அல்லா கண்டுபிட்சு சொல்றார் அதை கண்டுபிடிச்சு புட்டு புட்ட வெக்கறார் சுவனப்ரியன்.

    நீங்கள் அல்லா சொல்வதை கேட்டதில்லையா (அதாவது தெரிந்துகொள்ள வில்லையா) சும்மா வா சொன்னார் அல்லா “இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளது”, “சிந்திக்க மாட்டீர்களா”

    இதை அல்லா அடிக்கடி குரான்ல சொல்றார். சுவனப்ரியன் அல்லாவை நம்பறார். இந்த இரண்டிலிருந்தும் நீங்கள் சிந்தித்து தெரிந்து கொள்ள நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

  106. //யார் சுவனப்ரியனா . சார் அவர் குரான் என்னும் ஆழ்கடலில் அறிவியல் முத்திய தேடிக் கொண்டு ரொம்ப பிஸியாக இருக்கிறார். கடலுக்கடிலா தான் பவளம் இருக்குன்னு யாருக்குமே தெரியாததா அல்லா கண்டுபிட்சு சொல்றார் அதை கண்டுபிடிச்சு புட்டு புட்ட வெக்கறார் சுவனப்ரியன்.
    நீங்கள் அல்லா சொல்வதை கேட்டதில்லையா (அதாவது தெரிந்துகொள்ள வில்லையா) சும்மா வா சொன்னார் அல்லா “இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளது”, “சிந்திக்க மாட்டீர்களா” //

    சாரங்க் கிண்டலடிக்க ஆரம்பித்த விட்டார். ஏனெனில் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை எனும் போது இது போன்று கோபமும் கிண்டலும் வருவது சராசரி மனித இயல்பே! 🙂

  107. சுவனப்ரியன்

    //
    சாரங்க் கிண்டலடிக்க ஆரம்பித்த விட்டார். ஏனெனில் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை எனும் போது இது போன்று கோபமும் கிண்டலும் வருவது சராசரி மனித இயல்பே
    //

    சார் என்ன கேள்வி சார் கேட்டீங்க. மறுபடியும் படிக்க முடியுமா. கேள்விஎட்டால் ஒரு வாரம் லீவு விடுவது நீங்க தான் சார். பழைய மறுமொழிகளை பாருங்க சார். சார் நான் சராசரி மனிதன் தான் சார் நீங்க ஒரு மும்மீன் சார்

  108. அன்புள்ள சாரங்..!

    இந்த வலைத் தளத்தில் பண்புடன் பதில் எழுதும் எவரும் என் கணக்கில் ஒரு ஹிந்துதான்.

    பொதுவாக இஸ்லாமியர் சிலர், அல்லது அவர்களின் பெயரில் யாரோ சிலர், சபை நாகரிகமில்லாத சொற்களைப் பயன்படுத்தி இந்தத் தளத்தில் எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்களை நோக்கினால், சுவனப்ரியன் என்பவர் ‘சிந்திக்கத் துணியும் இஸ்லாமிய நண்பர்’ என்று அழைக்கப் படுவதில் தவறில்லை.

    ஒருவர் நம் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், முதலில் அதை நாம் அவருக்குப் புரிய வைக்க வேண்டும். இதில் நாம் தோல்வி கண்டதால் அல்லது அந்த முயற்சியையே செய்யாததால்தான் இவ்வளவு இழிநிலை என்று எனக்குத் தோன்றுகிறது.

    விவாதம் என்று வரும்போது விளக்கங்கள் தருவது நம் கடமையாகும். அதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் அறிவு விளக்கத்தின் அளவைப் பொறுத்தது.

    என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். நாம் நாகரீகமாகவே கருத்துக்களை வெளியிடுவோம். அதனால் நமக்கு நஷ்டம் எதுவும் வராது.

    உண்மை ஒரு போதும் அழியாது. மறைந்திருக்கும்; நேரம் பார்த்து நிச்சயம் வெளிப்படும்.

  109. அன்புள்ள மயில்வாகனன்!

    //அவரவர் மொழியிலேயே தூதரை இறைவன் அனுப்பியிருக்கிறார் என்றால், இந்தியாவில் நபிகள் பெருமானுக்கும் ஜீசஸ் க்ரைஸ்ட்டுக்கும் வேலை இருக்காதே..!//

    //பின், தமிழ் அல்லது இந்திய மொழிகளுள் ஏதோ ஒன்றைத் தன் மொழியாகக் கொண்டு தோன்றியவர் தானே உங்களுக்கும் தூதராக் இருக்க முடியும்? நிச்சயமாக அவர் நபிகள் பெருமான் அல்லவே?//

    ‘உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்.’
    -குர்ஆன் 4:79

    ‘மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும் உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும் நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும் அருளும் வந்து விட்டன.’
    -குர்ஆன் 10:57

    இந்த இரண்டு வசனங்களும் இது போல் இன்னும் பல வசனங்களும் அரபிகளே! என்று கூப்பிடாமல் அல்லது முஸ்லிம்களே என்றும் கூப்பிடாமல் ‘மனிதர்களே’ என்று பொதுவாக உலக மக்கள் அனைவரையும் பார்த்து கூறுகிறது. இனி தூதர்கள் வரப் பொவதில்லை. முகமது நபியே கடைசி தூதர். இவர் உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்ட்டவர். எனவே தான் குர்ஆன் முழு உலக மக்களையும் பார்த்து உபதேசிக்கிறது.

    //“இறைவன், கடவுள், பாதுகாப்பவன்… என்றெல்லாம் ‘அல்லாஹ்’வை அழைக்கலாம்” என்கிறீர்கள். நானும் மறுக்கவில்லை. ஆனால், பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அழைக்கும்போது ‘அல்லாஹ்’வை’, ‘இறைவா..’ என்று எங்கும் அழைப்பதாகத் தெரியவில்லையே.//

    உலக ஒற்றுமைக்காக என்று முன்பே கூறியிருக்கிறேனே! அதற்கு உதாரணமாக நமது தேசிய கீதம் ‘ஜனகனமன’ வையும் சொல்லியிருக்கிறேன். சவுதியில் சில நேரங்களில் மசூதியில் நானே தலைவராக நின்று தொழுகை நடத்தியிருக்கிறேன். என்னை பின் பற்றி சவுதி, எகிப்து, சூடான், பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டவர் பலரும் தொழுதிருக்கின்றனர். அங்கு அவர்கள் என்னை ஒரு தமிழனாக பார்க்கவில்லை. உலக முஸ்லிம்களில் ஒருவனாக பார்க்கின்றனர். இந்த ஒற்றுமை வர தொழுகையில் மட்டும் அரபியில் ஓதவும அழைப்பு கொடுப்பதை அரபியிலும் சொல்கிறோம். இது உலக ஒற்றுமைக்காகவே யொழிய அரபி மொழி சிறந்தது என்பதற்காக அல்ல.

    //சிந்திக்கத் துணியும் ஒரு இஸ்லாமிய சகோதரரை இத்தளத்தின் மூலமாகச் சந்திக்கும் வாய்ப்பளித்துள்ள இறைவனுக்கு நன்றி..!//

    கோபப்படாமல் கேள்வியும் பதிலையும் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றோர்களோடு கலந்துரையாட் வாய்ப்பளிக்கும் அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

  110. பாத்தீங்களா மயில்வாகனன்

    //உலக ஒற்றுமைக்காக என்று முன்பே கூறியிருக்கிறேனே! // 🙂 🙂 🙂 யப்பா யப்பா

    எல்லாரையும் குல்லா போட வெச்சிட்டா அப்புறம் உலகம் பூரா இஸ்லாமியர்கள் ஒற்றுமயா ஷியா சன்னி சன்டை போட்டுக்கலாம் இந்த காபிர்கள் சச்சரவு இருக்காது

    எவ்வளவு அன்பா வி(ல)க்கரார் பாருங்கள்

    கலந்துரையாட் வாய்ப்பளிக்கும் அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்

  111. சுவனப்ரியன்

    //
    ‘உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்.’
    -குர்ஆன் 4:79

    ‘மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும் உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும் நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும் அருளும் வந்து விட்டன.’
    -குர்ஆன் 10:57
    //

    என் இப்படி எல்லாம் தேவை இல்லாம பேசி மாட்டி கொல்கிறீர்கள். நபிகள் தான் மனிதானான எனக்கும் தூதராக கடவுளா அனுப்பப்பட்டவர் என்றால் நான் இன்றே தற்கொலை செய்து கொள்வேன்

    அப்புறம் காட்டியுள்ள விஷ்யங்களுக்க் நேர் மாறாக குரானிலிருந்தே அல்லாவின் சொல்லாக நபிகள் அவுத்துவுட்ட வஹிக்களை கொடுக்கட்டுமா ?

    ஏன் பொய் சொல்லி பிழைக்கிரீர்கள். இஸ்லாம் மனித குளத்தின் மதாமா (மார்கமா)?

    மொழி வேற்றுமை இல்லை என்றால் என் எல்லா முஸ்லிமும் அரபு மொழி பியி வைத்துக் கொல்கிறீர்கள். எனக்கு தெரிந்து கொஞ்சம் தமிழ் பெயர்கள் தான். அல்லா பிச்சை போன்று

  112. Dear Sarang,

    Scholars divideds Isalm into Mecca Islam and Mediana Islam. Mecca Islam is nothing but when Mohemmad had not strong.So, at that time peaceful verses believed to come to Mohammed.

    when Mohammed gone to Mediana, he gained strength enough to attack innocoent Arabs. At the time ,strong verses believed to come to Mohammed. It nullified pervious peaceful verses.
    so , you can find verses like wherever you find people , kill them all.

    Also, in Muslims, there are sufi sect , wahabhi sect and Deobend sect people. 75% of Indian Musllims belongs to Sufi sect which practices somewhat peaceful methods.But, Deobend and Wahabhi are dangerous sects probagated by Gulf money. Nowadays, it gained popular among Indian Muslims because of money.

    But, psuedo secular politicans does not understand those dangerous sects and give importance to them not sufi sect. Because those dangerous sect give money to them . It created all type of problem. So, Hindus come forward and help sufi sect Muslim people. It will create harmony among us.

  113. திரு சாரங்க்!

    //‘மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும் உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும் நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும் அருளும் வந்து விட்டன.’
    -குர்ஆன் 10:57

    என் இப்படி எல்லாம் தேவை இல்லாம பேசி மாட்டி கொல்கிறீர்கள். நபிகள் தான் மனிதானான எனக்கும் தூதராக கடவுளா அனுப்பப்பட்டவர் என்றால் நான் இன்றே தற்கொலை செய்து கொள்வேன் //

    அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள். உங்கள் வேதங்களே முகமது நபியின் வருகையைப் பற்றி கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆதாரம் கேட்டால் தருகிறேன். மேலும் தற்கொலை செய்து கொள்வதை அனைத்து மதங்களும் தடுக்கின்றன.

    //ஏன் பொய் சொல்லி பிழைக்கிரீர்கள். இஸ்லாம் மனித குளத்தின் மதாமா (மார்கமா)?//

    நான் உழைத்து சம்பாதிக்கிறேன். பொய் சொல்லி சம்பாரிக்க எந்த தேவையுமில்லை.

    //இஸ்லாம் மனித குளத்தின் மதாமா (மார்கமா)?//

    மனித குளம் என்பது தினமும் கோவிலுக்கு அருகில் சென்று குளிக்கிறீர்களே அந்த குளம். நான் சொல்வது மனித குலம். ஸ்ஸ்ஸ்…யப்பா தமிழ் அறிஞர்கள் யாராவது சாரங்குக்கு பாடம் எடுங்களேன். 🙂

    சரி இனி விளக்கத்தக்கு வருவோம். இஸ்லாம் என்பது மதம் அல்ல. அது மார்க்கம். பிறப்பினால் வருவதல்ல இஸ்லாம். கருணாநிதியும் வீரமணியும் தாங்கள் இந்து இல்லை என்றாலும் இந்திய சட்டப்படி அவர்கள் இந்துக்களே! நாததிகத்தையும் ஒரு பிரிவாகவே எடுத்துக் கொள்கிறது இந்து மதம்.

    ஆனால் குர்ஆன் மற்றும் அதற்கு விளக்கவுரையாக அமைந்த ஹதீதுகள் இவற்றைப் பின்பற்றி வாழ்பவனே முஸ்லிம். அதற்கு மாற்றமாக நடப்பவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறான். எனவே இஸ்லாம் ஒரு மார்க்கம். மதமன்று.

    //மொழி வேற்றுமை இல்லை என்றால் என் எல்லா முஸ்லிமும் அரபு மொழி பியி வைத்துக் கொல்கிறீர்கள். எனக்கு தெரிந்து கொஞ்சம் தமிழ் பெயர்கள் தான். அல்லா பிச்சை போன்று//

    தாராளமாக தமிழில் பெயர் வைக்கலாம். அன்பழகன், அறிவழகன், சுவனப்பிரியன், ஆரோக்கியம், மல்லிகா, என்ற அழகிய தமிழ் பெயர்களை வைப்பதற்கு இஸ்லாம் தடை சொல்லவில்லை. ஆனால் முருகன், கணேசன், போன்ற சிலைகளையுடைய கடவுள் பெயர்களை வைக்க இஸ்லாம் தடை சொல்கிறது. அதே போல் ‘அல்லா பிச்சை’ என்ற பெயரும் அர்த்தம் சரியாக இருந்தாலும் பெயர்கள் சற்று உயர்வாக இருக்க வேண்டும் என்பது முகமது நபியவர்களின் கட்டளை. தன்னை இழிவுபடுத்தி வைத்துக் கொண்ட பெயரை முகமது நபி அவரது தோழருக்கு மாற்றியவரலாறு உண்டு. ‘அல்லா பிச்சை’ என்பதை மாற்றி ‘அல்லாவின் அடிமை’ என்று வைத்துக் கொள்ளலாம்.

    இப்ராஹிம்(ஆப்ரஹாம்) என்ற பெயர் அரபு பெயர் அல்ல. இதை பல முஸ்லிம்களும் வைத்துள்ளனர்.

  114. நண்பர் சுவனப்ரியனுக்கு…

    முதலில் இந்தக் கட்டுரைக்கும் (ஆர்யம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்) இப்போது நாம் எழுதிக் கொண்டிருக்கும் மறுமொழிகளுக்கும் விலக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    இன்னும் இன்னும் எத்தனை நாட்கள், எத்தனை முறை எழுதினாலும் ‘நான் சொல்வதுதான் சரி’ என்று முன்பே முடிவு செய்துகொண்டுவிட்டால், பின்னர் விவாதத்தில் எந்தப் பயனும் இருக்காது.

    நானாக இஸ்லாமியத் திருமறை பற்றி இந்தத் தளத்தில் எதுவும் எழுத முன்வரவில்லை. தங்கள் கூற்றுகளின் வழி, ‘இறைவன் அவரவர் மொழியிலேயே தூதர்களை அனுப்பியிருக்கிறார்’ என்று அறிந்து, ‘அவர், அந்தத் தூதர், திருமூலராகவோ திருவள்ளுவராகவோ இருக்கலாம்’ என்றெல்லாம் தாங்கள் சொல்வது கேட்டு, என் மறுமொழிகளைப் பதிவு செய்தேன்.

    நபிகள் பெருமானுக்குப் பிறகு வந்த எவரும் ‘இறைத் தூதர்’ என்னும் தகுதிக்கு உரியவரல்லர் என்பது ஏற்க முடியாதது. இது மறைமுகமாக, இந்திய மண்ணில் கடந்த 1500 ஆண்டுகளுக்கு இடையில் தோன்றிய அத்தனை மகான்களையும் ஒரேயடியாக மறுக்கிறது. ‘இந்திய மொழிகளில் ஒன்றை அங்கீகரித்து அதில் ஒரு தூதுவரைக் கடைசித் தூதராக இறைவன் ஏன் அனுப்பவில்லை?’ என்கிற ஞாயமான கேள்வி ஒரு இந்தியனுக்குப் பிறப்பது தவறல்லவே?

    உலக ஒற்றுமையை அரபு மொழி வழிதான் வலியுறுத்த வேண்டுமா என்ன? சமஸ்க்ரிதத்தில் சொல்லும் வேத மந்த்ரங்களால் அந்த ஒற்றுமையை வலியுறுத்தக் கூடாதா? எந்த மொழியிலும் வழிபடும் உரிமை எல்லாக் கோயில்களிலும் இருக்கின்றன. ஆனால் வேத மந்த்ரங்கள் பொதுவானவை. என்பதை நானும் ஏற்கனவே பதிவு செய்திருக்கின்றேனே..! அரபுவில் ‘அழைப்பு விடுவதை’ நான் மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை. அது போலவே, சமஸ்க்ரிதத்தில் அர்ச்சிப்பதையும் எவரும் எதிர்க்க, மறுக்கக் கூடாது என்பதுதான் என் நிலை.

    உண்மைகள் பொதிந்திருக்கும் மந்தரத் தொகுப்புகளைப் பயன்படுத்துவதில், அந்த மொழியின் உயர்வு அல்லது பிற மொழிகளின் தாழ்வு பற்றிய பேச்சுக்கு இடமெதுவும் இல்லை. இதுதான் நோக்கம் என்று தெளிவாக்கிய பிறகும் இங்கு சிலர் ‘தமிழுக்குச் சப்பைக் கட்டுக் கட்டுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு வேதத்தைப் பயன்படுத்துவோரின் ‘தாயைக் கொச்சைப் படுத்தும் அளவு’க்கு மறுமொழிகளைப் பதிவு செய்கிறார்கள் (நிச்சயம் நீங்கள் அல்ல). இந்தத் தலைப்பிலேயே அத்தகு மறுமொழிகள் இடம்பெற்றுள்ளன. பிறரின் தாயை இழிபடுத்தும் அளவுக்கு இவர்களுக்கு மொழி வெறி பிடித்திருக்கிறது.

    (தாழ்வான) உணர்வுக்கு இடமளித்து, அறிவுக்கும் அன்புக்கும் புறம்பாகப் பதிவு செய்யப் படும் கருத்துக்களை இந்தத் தளமும் அப்படியே வெளியிடுவது நன்றாக இல்லை.

    எப்படியோ, தேவையறிந்து, உலகில் இத்தனை மொழிகளை இறைவனே உருவாகியிருக்கிறான். ‘அனைத்து மொழிகளும் என் உடுக்கை ஒலியிலிருந்தே தோன்றியுள்ளன’ என்று சிவனாக நின்று இறைவன் அபூர்வ ராமாயணத்தில் கூறுகிறான்.

    இதில் இவர்தான் தூதர், இதுவே ஒற்றுமைக்கான மொழி என்று ஒரு தூதுவரையோ ஒரு மொழியையோ எல்லோர் மீதும் திணிக்கவே முடியாது. இதனைப் பரந்த இதயமுள்ள எவரும் ஒப்புவர். எந்த நூலானாலும் அதில் காணும் நன்மைகளை ஏற்கும் அதே நேரம், ஏற்கத் தக்கதல்லாத கருத்து இருந்தால், அதை நிராகரிக்கத் துணிவது பகுத்தறிவின் வேலை.

    இந்த Rational Thinking க்கு எங்கு இடம் இருக்கிறதோ அங்கு ஹிந்து இருக்கிறான். இந்தப் பெயர் (ஹிந்து என்கிற பெயர்), நில எல்லைகள் குறித்தும் வழங்கப் பட்டு வந்தாலும், உலகுக்கு நான் இப்போது குறிப்பிட்டுள்ள சிந்தனை பொதுவானது. பகுத்தறிந்து வாழும் எவரும், எங்கு இருந்தாலும், என்ன பெயரால் இருந்தாலும், அவர் ஹிந்துவே..!

    அரபு மொழியில் ‘தொழுகை’ மற்றும் ‘அழைப்புக் கொடுப்பது’ போல், வேதத்தைச் சொல்லி இறைவனை வழிபடுவதிலும் எந்தத் தவறும் இல்லையே..! இதில் உங்களிடம் விவாதம் செய்ய என்ன இருக்கிறது என்றால், ஹிந்துக்களில் ஒரு சாரார் கிளப்பும் மொழிவழிப் பிரச்சினையை நீங்களும் உங்களின் மறுமொழி ஒன்றில் குறிப்பிட்டதால்தான் இவற்றை உங்களுக்கு எழுத நேர்கிறது.

    தம் அறியாமையால் மக்கள் வேறு தெய்வங்களை (இருப்பதாகக் கருதி) வழிபட்டாலும், அவர்கள் தன்னையே (ஒரே கடவுளையே) வழிபடுவதாக இறைவன் (கண்ணனாக இருந்து) கூறியிருக்கிறார். அதாவது, ‘இருப்பது ஒரே இறைவன் தான்’ என்று கூறுகிறார். அதே நேரம், இதன் மூலம் இறைவனை ஒரே வழிமுறையில், உருவத்தில், அருவத்தில்தான் வழிபட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லை என்பதையும் உணர்த்துகிறார். இந்தத் தெளிவான சொற்கள், இறைவனை வழிபட வேறு வேறு வழிகள்,உருவங்கள், திருநாமங்கள், அருவம்… என எல்லாவற்றையுமே அங்கீகரிக்கிறது.

    இத்தகு பரந்த மனம் நிச்சயமாக இந்த உலகில் தோன்றியுள்ள அல்லது தோன்றப் போகும் எந்தச் சமயத்துக்கும் அல்லது மொழிக்கும் எதிரியே அல்ல. அது எல்லாவற்றையும் தன்னுள் கொண்டது. நிராகரிப்புக்கு இதில் இடம் இல்லை.

    தங்கள் மதம் உட்பட உலகின் பிற எல்லா மதங்களும் இந்தக் கருத்தின் அங்கங்கள் என்கிற வகையில் ஒரு ஹிந்துவால் ஏற்றுக்கொள்ளப்படுமே தவிர நிராகரிக்கப்படவே படாது. எந்த வழி முறையையும் மறுக்காத இந்தச் சமயமே பல மொழிகள், பல இனங்கள்… இத்யாதி வேறுபாடுகள் கொண்ட இந்த உலகத்துக்குரிய பொதுச் சமயமாக இருக்கத் தகுதியுள்ள சமயமாகும். இப்படி ஒரு நிலை பிற மதங்களில் கிடையாது. ஏனெனில் அவை குறிப்பிடும் வழிமுறைகளைத் தவிர மற்றவற்றை அவை ஏற்பதில்லை.

    இந்த உபதேசத்தையும் கடவுள் ‘கண்ணனை மட்டுமே வழிபட வேண்டும்’ என்று கூறியிருப்பதாகக் கொள்பவர்களும் உண்டு. அதையும் நாங்கள் மறுக்கவில்லை. அவன் இல்லாத இடம், செயல், பொருள், காலம், மொழி… எதுவும் இல்லை.

    பேதம் நம்முடையது; அவனுடையதல்ல. பொறுமையுடன் படித்ததற்கு நன்றிகள். இன்னும் எளிமையாக எழுதிடத் தெரியவில்லை.

    வாழ்க..!

  115. Ibrahim is Arabic name of prophet Abrahim which is mentioned in Bible.
    What we asking if Islam is Global religion, why Mohammed must be last prophet. After that, why should not God or Allah sending prophets to mankind. So, Mohammed wanted to take whole credit by saying he is last prophet of Global religion.
    For this reason, obviously , Islam is Arabic religion fit only for Gulf countries. If it is Global religion what supposed to said that God is one and GOD send messengers to mankind in everytime. That is what Hinduisam preaching.
    But, onething I endorsed with svanapriyan that Arabic is common language of Muslims. If all languages allowed, then confusion and mutual struggle will come like Sanskrit is common language in Dharamic religions.

  116. @ திரு மயில் வாகனன்,

    மிகவும் அருமையான, தெளிவான, அழகான மறுமொழி, பாராட்டுக்கள் பல பல.

    திரு.சுவனபிரியன் போன்றவர்களுக்கு நபியை அவர்கள் கடவுளை பற்றி நிறைய தெரியும்( புத்தகங்களில் நிறைய படித்திருக்கிறார்). ஆனால் அவரை பற்றி அவருக்கு என்ன தெரியும்? (சமூக அடியாளங்களை தவிர்த்து). அதை செய்ய அவர்கள் மதம் அல்லது மார்க்கம் அனுமதிப்பது இல்லை அதற்க்கு முனைவதும் கூட இல்லை. அவர்கள் எண்ணமெல்லாம் அனைத்தும் அவர்கள் புத்தகத்தில் சொல்லப்பட்டுவிட்டது என்ற முடிவு தான். அப்படியே வளர்க்க பட்டுவிட்டார்கள். சிறு வயது முதலே. அதை தாண்டி அவர்கள் வெளி வர அவர்கள் மதம் அல்லது மார்க்கம் அனுமதிப்பது இல்லை. ஆகையால் என்ன செய்ய முடியும். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்டவேண்டியது தான். மூடிய கோப்பையில் எதுவும் ஊற்ற முடியாது. முயற்சிப்போம்.

    வாழ்த்துக்கள்..

  117. முகமது அவர்கள்தான் கடைசி நபி. நல்லவர். வல்லவர். நாலும் தெரிஞ்சவர்.

    .

  118. சுவனப்ரியன்

    //
    அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள். உங்கள் வேதங்களே முகமது நபியின் வருகையைப் பற்றி கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆதாரம் கேட்டால் தருகிறேன். மேலும் தற்கொலை செய்து கொள்வதை அனைத்து மதங்களும் தடுக்கின்றன.
    //

    🙂 🙂 செம்ம போடு போட்டீங்கா.

    வேதத்தை ஜோசிய நூலாக்கிட்டீங்க. சார் வேதத்துல predictions கிடையாது சார். இப்படியே நீங்களும் தினகரன் மாதிரி டி ஆத்தாதீங்க

    //
    ஆனால் குர்ஆன் மற்றும் அதற்கு விளக்கவுரையாக அமைந்த ஹதீதுகள் இவற்றைப் பின்பற்றி வாழ்பவனே முஸ்லிம். அதற்கு மாற்றமாக நடப்பவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறான். எனவே இஸ்லாம் ஒரு மார்க்கம். மதமன்று.
    //

    நாங்களும் அத தான் சொல்றோம் – இஸ்லாம் ஒரு மார்கமா தான் இருக்குன்னு 🙂

    குரான் அதை பின்பற்றி வரும் அதீதுகளை பின்பற்றி நடந்தால் அவன் ஒரு உண்மையான நல்ல முஸ்லீம் இல்லாவிட்டால் அவன் ஒரு உண்மையான நல்ல மனிதன். இதை தானே உலகமே சொல்லுது.

  119. @ ragu on February 1, 2012 at 9:37 pm

    //ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த ஆரியன் இறுதியாக தமிழனின் தலையிலேயே கைவைக்க்றான்.தமிழன் வெளியே இருந்து வந்தான் என்றால் அவன் கொடுக்கும் தட்சிணையை பிராமணன் ஏன் வாங்குகிறான்?//

    இங்கு இருப்பவருள் சிலரை ஆரியர்கள் என்று நீங்கள் பொய்யாக இனம் பிரித்துக்கொண்டே இருந்தாலும், தமிழர்கள் ஏன் அந்த ஆரியனைத் தேடித் தேடி தக்ஷணை கொடுக்கிறார்கள்? நீங்கள் சொல்வதில் உண்மை கடுகளவும் இல்லை என்பது பெரும்பான்மை இந்தியர்களுக்கு நன்றாகவே தெரியும்.

    இப்படியெல்லாம் அபத்தமாகப் பேசிக்கொண்டே இருந்தால் முடிவேது? கோயில்களுக்கு வெளியே இருந்துகொண்டு எவ்வளவு எதிர்ப் பிரசாரம் செய்து வந்தாலும் தமிழர்கள் கோயில்களை விடவே மாட்டார்கள்.

    இப்போது எவரெவர் இந்த நாட்டில் ஆரியர்? பட்டியலை அரசிடம் சமர்ப்பித்து, அவர்களை முழுவதும் இந்த நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுங்கள். வீண் பேச்சுப் பேசிக்கொண்டிருக்காதீர்கள்.

    அதற்கு முன்பாக, ஆரியர்களுக்குரிய தேசம் எது என்று கண்டுபிடித்து முடியுங்கள்.

  120. @ சோமசுந்தரம் on February 6, 2012 at 10:55 am

    //திரு பாலா,
    //“இல்லையென்றால் ஒரு ஆதாரமில்லாத பொய்ப் பிரசாரத்தை வேண்டுமெனறே மறு சுழற்சி செய்ததாகத் தான் கருதமுடியும். //
    உங்களின் கருது அதுவாகவே இருக்கட்டும். என் அனுபவத்தை தான் எழுதினேன்.
    நன்றி
    சோமசுந்தரம்//

    திரு பாலா அவர்கள் உங்களின் மேற்படி மறுமொழிக்கு முன்பே, ‘கடந்த 25 ஆண்டுகளில் யார் தமிழை நீச பாஷை என்று சொல்லியிருக்கிறார்கள்?’ என்றும் ‘அப்படி யாராவது சொல்லியிருந்தாலும், சொன்னவர் ஆரியர் என்பதற்கு என்ன ஆதாரம்?’ என்றும் தெளிவாகவே வினவியிருக்கிறார்.

    அந்த இரண்டு வினாக்களுக்கும் பதிலைத் தராமல், ‘உங்கள் கருத்து அதுவாகவே இருக்கட்டும்’ என்று பதில் தருவது Escapism ஆ? இங்கு ஒரு ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்திய காரணம் என்னவென்றால், உங்கள் மறுமொழிகளில் பல ஆங்கிலத்திலேயே இந்தக் கட்டுரையில் பதிவாகியிருப்பதைப் பார்த்தேன். அதனால்தான்.

    காலக்கொடுமை. தமிழுக்கு வக்காலத்து வாங்கும் பலர், தமிழ் நூல்களை மேற்கோள் காட்டித் தமிழில் எழுதுவதை விட்டுவிட்டு, ஆங்கிலத்திலேயே எழுதுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ், திராவிடம், ஆரியம்… உள்ளிட்ட விஷயங்களை, இந்த தேச ஒற்றுமைக்கு எதிராகச் சிந்தித்த சில ஆங்கிலேயர்களின் நூல்களைப் படித்துத்தான் தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதால்தான் இந்த மோசமான நிலை.

    சற்று முயன்றால், சிந்திக்கத் தயங்காமல் இருந்தால், என் தமிழ் நண்பராகிய நீங்கள் இந்தக் குறுகிய வட்டத்தை விட்டு விரைவில் வெளியில் வர முடியும். முதலில் திரு பாலாவுக்கு ஏதேனும் 2 ஆதாரங்களைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

  121. சூபர் திங்கர்!

    //Also, in Muslims, there are sufi sect , wahabhi sect and Deobend sect people. 75% of Indian Musllims belongs to Sufi sect which practices somewhat peaceful methods.But, Deobend and Wahabhi are dangerous sects probagated by Gulf money. Nowadays, it gained popular among Indian Muslims because of money.//

    குர்ஆனையும் அதற்கு விளக்கமாக அமைந்த முகமது நபியின் வழிமுறைகளையும் தங்களால் முடிந்த வரை பின் பற்றுபவர்கள் முஸ்லிம்கள். இதைப் பிரசாரம் பண்ணுபவர்களை நீங்கள் வஹாபிகள் என்று இனம் காணுகிறீர்கள். என்னையும் வஹாபி என்றே சொல்வீர்கள். அரபு நாட்டு பணம் எங்கு வருகிறது. யாருக்கு தருகிறாரக்ள் என்ற விபரத்தைச் சொன்னால் நானும் போய் வாங்கிக் கொள்வேன். கொஞ்சம் உதவி பண்ணுங்களேன்.

    //It created all type of problem. So, Hindus come forward and help sufi sect Muslim people. It will create harmony among us.//

    ஒரு பிரச்னையும் வராது. முன்பெல்லாம் இந்து முஸ்லிம் கலவரங்கள் தமிழகத்திலும் நடக்கும். வகாபியிசம் பெருகியதால் முஸ்லிம்கள் உண்மையான இஸ்லாத்தை அறிந்து கொண்டார்கள். ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்து மக்களும் இஸ்லாத்தின் பெருமையை உணர்ந்து வருகின்றனர். வட நாடுகளில் சூஃபியிசம் பெருகியதால் உண்மை இஸ்லாம் அவர்களை சென்றடையவில்லை. குர்ஆனை விளங்கிய ஒரு முஸ்லிம் எந்த காலத்திலும் தனது சகோதர மதத்தவனை வன்மையான எண்ணம் கொண்டு பார்க்க மாட்டான்.

    வஹாபியிசம் பெருகுவதால் இந்தியாவுக்கு நன்மைதானே ஒழிய தீமை கிடையாது.

  122. நண்பர் மயில்வாகனன்!

    //நபிகள் பெருமானுக்குப் பிறகு வந்த எவரும் ‘இறைத் தூதர்’ என்னும் தகுதிக்கு உரியவரல்லர் என்பது ஏற்க முடியாதது. இது மறைமுகமாக, இந்திய மண்ணில் கடந்த 1500 ஆண்டுகளுக்கு இடையில் தோன்றிய அத்தனை மகான்களையும் ஒரேயடியாக மறுக்கிறது.//

    இந்திய மண்ணில் மட்டும் அல்ல உலகம் முழுமைக்குமே முகமது நபிக்கு பிறகு வேறு இறைத்தூதர் இல்லை என்கிறது இஸ்லாம். இதில் ஏன் பாரதத்தை மட்டும் தனியாக பிரிக்க வேண்டும்.

    இறைத் தூதர் என்பதும் மகான்கள் என்பதும் இரு வேறாக பிரித்துப் பார்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக குழப்பியதால்தான் நம் நாட்டில் இத்தனை குழப்பமே! இறைத் தூதர் என்பவர் இறைவனால் நியமிக்கப்படுவதும் இறைவனிடமிருந்து மனிதர்களின் நல்வாழ்வுக்காக இறைச் செய்தியை கொண்டு வருபவருமாவார். முகமது நபிக்கு பின் வந்த அபுபக்கர், உமர், உதுமான் போன்ற மிகச் சிறந்த அறிஞர்களை முஸ்லிம்கள் யாரும் இறைத் தூதர் என்று சொல்வதில்லை. மகான்கள், ஜனாதிபதிகள் என்றுதான் கூறுகின்றனர். முகமது நபி காலத்துக்கு முன்பு பல தூதர்கள் இந்தியாவுக்கும் வந்ததை குர்ஆனும் மறுக்கவில்லை.

    //‘இந்திய மொழிகளில் ஒன்றை அங்கீகரித்து அதில் ஒரு தூதுவரைக் கடைசித் தூதராக இறைவன் ஏன் அனுப்பவில்லை?’ என்கிற ஞாயமான கேள்வி ஒரு இந்தியனுக்குப் பிறப்பது தவறல்லவே?//

    இப்படி ஒவ்வொரு தேசத்தவனும் நினைத்தால் உலக ஒற்றுமை எப்படி வரும்? உலக மாந்தர் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர உலக மொழி ஏதாவது ஒன்றிலிருந்துதான் கொடுக்க முடியும். நாட்டு ஒற்றுமைக்காக வங்காள மொழியான ஜனகனமனவுக்கு இந்த வாதத்தை நீங்கள் வைப்பதில்லை.

    //உலக ஒற்றுமையை அரபு மொழி வழிதான் வலியுறுத்த வேண்டுமா என்ன? சமஸ்க்ரிதத்தில் சொல்லும் வேத மந்த்ரங்களால் அந்த ஒற்றுமையை வலியுறுத்தக் கூடாதா?//

    தாராளமாக செய்யலாம். அதை இறைவன் அல்லவா முடிவு செய்ய வேண்டும்! குர்ஆன் இறங்கிய காலத்தில் அரபு நாடுகள் அராஜகத்தின் உச்சத்தில் இருந்தது. எனவே அந்த மொழியில் ஒரு தூதரையும் வேதத்தையும் தர இறைவன் முடிவு செய்தான். அதே அராஜகம் அந்த நேரத்தில் நமது நாட்டில் இருந்திருந்தால் கடைசி தூதர் நமது மொழியிலேயே வந்திருப்பார். எனவே இங்கு மொழிக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

    //இதுதான் நோக்கம் என்று தெளிவாக்கிய பிறகும் இங்கு சிலர் ‘தமிழுக்குச் சப்பைக் கட்டுக் கட்டுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு வேதத்தைப் பயன்படுத்துவோரின் ‘தாயைக் கொச்சைப் படுத்தும் அளவு’க்கு மறுமொழிகளைப் பதிவு செய்கிறார்கள் (நிச்சயம் நீங்கள் அல்ல). இந்தத் தலைப்பிலேயே அத்தகு மறுமொழிகள் இடம்பெற்றுள்ளன. பிறரின் தாயை இழிபடுத்தும் அளவுக்கு இவர்களுக்கு மொழி வெறி பிடித்திருக்கிறது.//

    இது தவறு. மொழிப் பற்று இருக்கலாம். மொழி வெறி இருக்கக் கூடாது. சரியான வாதத்தை வைத்திருக்கிறீர்கள். உங்கள் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன்.

    //தம் அறியாமையால் மக்கள் வேறு தெய்வங்களை (இருப்பதாகக் கருதி) வழிபட்டாலும், அவர்கள் தன்னையே (ஒரே கடவுளையே) வழிபடுவதாக இறைவன் (கண்ணனாக இருந்து) கூறியிருக்கிறார். அதாவது, ‘இருப்பது ஒரே இறைவன் தான்’ என்று கூறுகிறார்.//

    இதைத்தான் நானும் சொல்ல வந்தேன். கண்ணியமான முறையில் விவாதித்த உங்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.

  123. திரு சூப்பர் திங்கர்!

    //Ibrahim is Arabic name of prophet Abrahim which is mentioned in Bible.//

    தவறான புரிதல். அப்ரஹாம் பாலஸ்தீனை தாயகமாக கொண்டவர். அந்த நேரத்தில் அங்கு அரபி பேசப்படவில்லை. சவுதி அரேபியாவின் பூர்வீக மொழி அரபி அல்ல என்பது பலருக்கு புதிய செய்தியாக இருக்கும்.

    அரபு மொழியின் பூர்வீகம் ஏமன் நாடாகும. ஆப்ரஹாமின் மகன் இஸ்மாயில் ஏமனிலிருந்து வந்த ஒரு அரபு கூட்டத்தின் மகளை திருமணம் முடிக்கிறார். அன்றிலிருந்து அரபி மொழியை கற்கவும் ஆரம்பிக்கிறார். இந்த கால கட்டத்தில்தான் சவுதி அரேபியாவுக்கு அரபி மொழி அறிமுகமாகிறது. அவர்களின் வழித்தோன்றல்கள்தான் சவுதியில் அரபி மொழியை பரப்புகின்றனர். காலப்போக்கில் சவுதியின் பூர்வீக மொழிபோய் அந்த இடத்தில் அரபி அமர்ந்து கொண்டது.

    அன்றைய சவுதி மக்களுக்கு எந்த மொழி வியாபாரத்துக்கு உகந்ததாக இருந்ததோ அந்த மொழியான அரபியை சுவீகரித்துக் கொண்டார்கள். காலத்துக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டார்கள். இந்த தளத்தில் கூட தமிழா சமஸ்கிரதமா என்ற விவாதம் சூடு பரக்கிறது. இது தேவையே இல்லை. தற்போதய வாழ்வாதாரத்துக்கு எது முக்கியமோ அதை எடுத்துக் கொண்டு எல்லாமே இறைவன் படைத்த மொழிதான் என்ற பொதுப் புத்திக்கு வந்து விட்டால் சிக்கல் ஏது?

  124. முஹம்மத் அவர்கள்தான் இறுதித் தூதர். அவர் மூலம் வெளியாகிய அல் குர்ஆனே இதை சொல்லும்போது வேறு ஆதாரங்கள் தேவை இல்லை. ஏனெனில், அல் குர்ஆனே இறுதி ஆதாரம் என்று முஹமத் அவர்களே சொல்லி விட்டார்.

    .

  125. //களிமிகு கணபதி on February 19, 2012 at 11:39 am
    முஹம்மத் அவர்கள்தான் இறுதித் தூதர். அவர் மூலம் வெளியாகிய அல் குர்ஆனே இதை சொல்லும்போது வேறு ஆதாரங்கள் தேவை இல்லை. ஏனெனில், அல் குர்ஆனே இறுதி ஆதாரம் என்று முஹமத் அவர்களே சொல்லி விட்டார்.//

    தொல்காப்பியம் புறத்திணையின் சூத்திரம்…

    கொடிநிலை கந்தழி வள்ளியென்ற
    வடுநீங்கு சிறப்பின் முதலன
    முன்றுங் கடவுள் வாழ்த்தொடு
    கண்ணியமே வருமே

    இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கிணியர், கொடிநிலை வெங்கதிர் சூரியன் எனவும், வள்ளி இடை நின்ற கந்தழி ஒரு பற்றுக் கோடுமின்றி, அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள் ஆகும்! என விவரித்துள்ளார்.
    ஆதித் தமிழர் இறைவனை உருவமற்ற அருவமாகவே வழுபட்டுத் தொழுதனர். இதை கா.சு. பிள்ளை, முழு முதற்கடவுளின் உண்மையும் – தன்மையும் உணர்ந்து, அவரை அருவமாக வழிபடக் கருதிய தமிழர், அவருடைய குணங்களையும் நினைத்து அவரைத் தொழுதனர். அந்நெறியே தமிழர் செந்நெறியாகும் என விவரித்துள்ளார். (தமிழர் சமயம்.)

    பவிஸ்ய புராணம்

    ‘இந்த வேற்று நாட்டுத் தூதர் அரபுலகம் அனைத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவார். ஆரிய தர்மம் அவரது நாட்டில் காணப்படாது.பல தெய்வ வணக்கம் ஒழிக்கப்படும்அவருக்கு பல எதிரிகள் உண்டாவார்கள்.அனைவரையும் வெற்றிக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவார்.அவர்கள் தாடி வைத்திருப்பார்கள்.மாமிசத்தை சாப்பிடுவார்கள்.பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். வேதம் அனுமதித்த அனைத்தையும் சாப்பிடுவார்கள். பிரார்த்தனைக்காக அழைப்பும்(பாஙகு) கொடுப்பார்கள். அவர்கள் முசல்மான் என்று அழைக்கப் படுவார்கள்.

    பவிஸ்ய புராணா – பிரதி சரக் பர்வ் – காண்டம் 3 – அத்தியாயம் 3 – ஸ்லோகம் பத்திலிருந்து இருபத்தி ஏழுவரை.

    ——————————————————
    ‘அஹமத் இறைவனிடமிருந்து மனிதர்கள் பின் பற்றக் கூடிய சட்டத்தைக் கொண்டு வருவார். நான் அவரிடமிருந்து சூரியன் தரும் ஒளியைப் போன்ற ஞானத்தைப் பெறுவேன்.’

    – சாம வேதம் – இந்திரா அதிகாரம் 2 – மந்த்ரா 152 – புத்தகம் 2 – செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை

    ——————————————————–

    அல்லோ ஜியேஸ்டம் பரமம் பூர்ணம் பிரஷ்மாண்டம் அல்லாம் அல்லோ அல்லாம் ஆதல்லா பூக மேகம் அல்லா பூகணி வாதகம் அல்லா பஞ்ஞென ஹுதா ஹிறுத்தவா அல்லா சூரிய சந்திர ஸர்வ திவ்வியாம இந்திராய பூர்வம் மாயா பரமந்த ரிஷா அல்லா பித்ததிவ்விய அந்தரிஷம் விசுவரூபம் இல்லாம் கபர இல்லாம் இல்லல்தீ இல்லல்லா ஓம் அல்லா இல்லல்லா அனாகிஸ் வரூபா அத்தர் வணா சியாமா ஹும் ஹிரிம் ஜனான பகன ஸித்தான ஜலசாரன் அதிர்டம் குருகுரு புடஸபரஸட ஸமஹாரனீ ஹூம் ஹிரீம் அல்லா ரசூல மஹமத சுபரஸ் அல்லா அல்லா இல்லல்லலேதி இல்லல்லா

    – அல்லோப நிஷத் (அதர்வன வேதம்) 1:10

    தமிழில் : அல்லா முழுமையானவர், எல்லா பிரபஞ்சமுமவனுடையது. சிவனின் ஸ்தானத்தை அல்ங்கரிக்கும் மஹாமத் அல்லாவுடைய தூதராய் இருக்கின்றார். அல்லா எல்லாஎல்லா பூமியையும் இயக்குகின்ற இறைவன். பூமியின் பரிபாலனும் அவனே! இறைவன் ஒருவனேயன்றி வேறு இல்லை. அரூபியான இறைவனின் ஓங்கார நாதத்தைப் பாருங்கள். ஓம் ஹரீம் மந்திரங்கள் அடங்கிய அதர்வண வேதத்தை இறக்கிய இறைவனே மக்களையும், பசுக்களையும் ஏனைய எல்லாவற்றையும் படைத்தான். அரூபியான அந்த ஆண்டவனையே துதி செய்யுங்கள்.

  126. @ suvanappiriyan on February 18, 2012 at 10:04 pm

    //தாராளமாகச் செய்யலாம். அதை இறைவன் அல்லவா முடிவு செய்ய வேண்டும்! குர்ஆன் இறங்கிய காலத்தில் அரபு நாடுகள் அராஜகத்தின் உச்சத்தில் இருந்தன. எனவே அந்த மொழியில் ஒரு தூதரையும் வேதத்தையும் தர இறைவன் முடிவு செய்தான். அதே அராஜகம் அந்த நேரத்தில் நமது நாட்டில் இருந்திருந்தால் கடைசித் தூதர் நமது மொழியிலேயே வந்திருப்பார்.//

    உங்களைப் புண் படுத்தும் நோக்கம் எனக்கில்லை. மேலே படியுங்கள்.

    அதாவது பாரதத்துக்கு இந்தத் தூதரின் அவசியமே இருந்திருக்கவில்லை என்றாகிறதே. எங்கு அராஜகம் நிகழ்கிறதோ அங்கு அந்த மொழியில் தூதரை அனுப்பும்போது, நபிகளின் வரவு பிரத்தியேகமாக இந்தியாவுக்கோ அல்லது பொதுவாக உலகத்துக்கோ என்று எடுத்துக் கொள்ள முடியவில்லையே. அது நிச்சயமாக ஒரு பிரதேசத்துக்கானது என்பதில் எனக்கெல்லாம் எந்த ஐயமும் இல்லவும் இல்லையே.

    தேசிய கீதம் ஒரே மொழியில் பாடப்படுவதை நான் ஆதரிக்கிறேன். நீங்களும் மறுக்கவில்லை. அதனால்தான் அதுபற்றி எதுவும் நான் எதுவும் எழுதவில்லை.

    வழிபாட்டிலும் நீங்கள் இஸ்லாமிய முறையில் வழிபடுவதை நான் எவ்விதத்திலும் எதிர்க்கவில்லை. இந்த மண்ணே எதிர்க்காது.

    ஒன்றே ஒன்று. உங்கள் மதம் அல்லது மத நூல் மட்டுமே நிறைவானதும் இறுதியானதும் என்னும் இடத்தில் மட்டுமே நான் ஒப்பவில்லை. உங்கள் மதம் கூறும் வழிகள் அனைத்தும் ஹிந்து சமயத்தின் பிரிவுக்கூறு என்கிற வகையில் நான் மட்டுமல்ல சிந்திக்கும் எவரும் ஏற்பார்கள்.

    உங்கள் வழிபாட்டை நாங்கள் மறுக்கவில்லை. மற்றவர் வழிபாட்டில் பொருள் இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால் அது போதும். கேலி, எதிர்ப்பு, மத மாற்றம்… இவற்றுக்கெல்லாம் வேலையே இருக்காது.

    சிந்திப்போம். சந்திப்போம்.

  127. திரு மயில் வாகனன் அவர்களே,
    நான் மறுமொழி வாயிலாக விவாதிப்பதை நிறுத்திவிட்டேன். உங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றால், சிலரின் பெயரை குறிப்பிட வேண்டியிருக்கும். அதற்க்கு அவசியம் இல்லை.
    வடமொழியை வைத்துக்கொண்டு உயிரினும் மேலான ‘சைவ திருமுறைகளை’ நிந்திப்பவர்களை பற்றி தான் என் கவலை. அதை பற்றி தமிழ் ஹிந்துவும், உங்களை போன்றவர்களுக்கும் அக்கறை/அவசியமும் இல்லை.

  128. அன்புள்ள மயில் வாகனன்,

    அது மட்டுமே புனிதநூல், அவரே கடைசி தூதர் என்று குறுகிய எல்லைகள் வகுத்துவிட்டவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. பிற மதத்தினரை கொன்றுவிடும்படி அவர்களின் மதநூல்களில் ஏராளம் கட்டளைகள் உள்ளன. அங்கு அன்பு இல்லை. அகிம்சை இல்லை. மதத்தின் பெயரால் பெண்ணடிமையும், கொலை வெறியுமே நிறைந்துள்ளன. பிறரை கொல்ல சொல்லும் முறை ஒரு மதம் என்றே பெயர் பெரும் தகுதி இல்லாதது. உங்கள் முயற்சி வீண்.

  129. Dear Mayil vahanannan,

    you are prasing about suvanapriyan who thinks differently . But he is just belongs to wahabhi sect of saudi Arabia. It is revealed from his words. ok, now time is less for me.we can see elaborately about wahabhi sect .

  130. சுவனப்ரியன் சூப்பர் மா

    எதையோ எடைக்கு மடக்கா சொல்லி பாரு வேடத்துல அல்லா கீறாரு அப்படிங்க வேண்டியது. மொதல்ல மேட்டர் நபிகளை பற்றினது – அதை இன்னும் நீங்கள் சுட்டிக் காட்டவில்லை.

    தொல்காப்பியம் என்ன அதற்க்கு முன் கூட வேதங்கள் பிரம்மம் உருவமற்றது என்று தான் சொல்கிறது.

    அல்லா உருவமற்றவர் என்று எங்கே உள்ளது. அவரது உருவத்தை பார்க்க முடியாது என்று தானே நீங்கள் சொல்கிறீர்கள் (ரெம்ப பயன்கரமானவராத்தான் இருக்கணும்). உருவம் இல்லாது ஒரு ஆசாமி ஏழு சுவர்க்கத்தின் மேல் அரசில் எப்படி அமர்ந்திருக்க முடியும்?

    பவிஷ்யத் புராணம் வேதமல்ல. நீங்கள் எடுத்து விடுவது பரங்கியன் விட்ட சரடு பவிஷ்யத் புராணம் 🙂

    அல்லா உபநிஷத்? எழுதினது யாரு வேத வ்யாசரா

    நான் கூட ஒரு உபநிஷத் (சுவப்ரியோபநிஷத்) என்று எழுதி சாம வேதஹ்தில் சேற்று விட விடமுடியும். இது என்னமோ வடிவேலை வைத்து பாச மலர் பார்ட் டு எடுக்குற மாதிரி தான்.

    நீங்கள் கொடுத்துள்ள அல்லா உபநிஷத் ச்லோகத்திருக்கும் நீங்கள் சொல்லும் அர்த்தத்திற்கும் ரெம்ப தூரம்.

    ச்லோகஹ்திலேயே இலக்கண பிழை (குர்ஆனில் அதிகம் உள்ளது போல).

    உதாரணம் : இந்திராய பூர்வம், இது இந்திராத் பூர்வம் என்றிருக்க வேண்டும். அந்த வரி பூரா அபத்தம்.

    அல்லோ ஜ்யேஷ்டம் என்றால் அல்லா முழுமையானவர் என்றல்ல அல்லா வயசானவர் என்று பொருள் 🙂 போன போவுதுன்னு சொன்ன அல்லா பெரியவர் என்று அர்த்தம். அதுவு அல்லோ அல்ல அல்லா என்று தான் இருக்க வேண்டும்.

    ஸ்லோகத்தில் சந்தஸ் ஓட்டவே வில்லை

    அல்ல என்பது அரபு மொழியில் கடவுளை குறிக்கும் சொல் தானே. அது சமஸ்க்ரிதஹ்தில் இல்லை. இது மாதிரிச்வர்கத்தில் இருக்கு தேவிவங்களுக்கு சமஸ்க்ரிதத்தில் தேவாதஹ என்று பெயர். அல்லா என்பது சமச்கித சொல் இல்லை.

  131. மயில்வாகனன்

    //
    ஒன்றே ஒன்று. உங்கள் மதம் அல்லது மத நூல் மட்டுமே நிறைவானதும் இறுதியானதும் என்னும் இடத்தில் மட்டுமே நான் ஒப்பவில்லை. உங்கள் மதம் கூறும் வழிகள் அனைத்தும் ஹிந்து சமயத்தின் பிரிவுக்கூறு என்கிற வகையில் நான் மட்டுமல்ல சிந்திக்கும் எவரும் ஏற்பார்கள்
    //

    நீங்கள் அல்லாவின் காரெக்டரையே புரிஞ்சிக்காம எழுதுகிறீர்கள். குரான் ஹிந்துத்வத்தின் அந்தர் பாகம் என்றால் நான் இன்றே ஹிந்டுத்த்வத்திளிருந்து வெளியேறிவிடுவேன் 🙂

    ஒரு முறையாவது குரானையும் ஹதீதையும் சேர்த்து வைத்து படியுங்கள் அப்புறம் தெரியும் யார் இந்த நபிகள் யார் இந்த அல்லா. ரெண்டு பேரும் ஒருவரா இல்லையா என்று.

  132. @ suvanappiriyan on February 19, 2012 at 5:28 பம்

    தாங்கள் குறிப்பிட்டுள்ள அல்லோபநிஷத் 1:10 (அதர்வண வேதம்), சாம வேதம் – இந்திர அதிகாரம் 2 – மந்த்ரா 152 – புத்தகம் 2 – செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை, என்பதெல்லாம் எந்த வெளியீட்டில் உள்ளன? தெரியப் படுத்துங்கள்.

    பொதுவாக, இஸ்லாமியர்கள்/கிறிஸ்துவர்கள், தங்கள் மறை நூலை வைத்திருப்பது போல ஹிந்துக்களிடம் நான்கு வேதங்கள் மூலமும் இருப்பதில்லை; இருந்தாலும் தமிழாக்கத்தோடு இருக்காது; அப்படி இருப்பவர்களும் அவற்றைப் படித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

    என்னிடம் உள்ள நூல்களில், சாம, அதர்வண வேதங்களின் நீங்கள் குறிப்பிட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் மந்த்ரங்களில், தாங்கள் குறிப்பிடும் பொருளுள்ள எதுவும் இல்லை. தங்கள் வெளியீடு எது என்று முழு விபரம் தந்தால், அதுவும் தரவிறக்கம் செய்ய இணைப்பு வசதியும் இருந்தால் தெரியப் படுத்துங்கள்.

    ஹிந்துக்களின் இத்தகைய நிலையை நன்கு அறிந்துவைத்திருக்கும் பிறர், இவர்களிலேயே பலரை ஏவிவிட்டு, மோசமான கருத்துக்கள் கொண்டதாக வேதம் இருக்கிறது என்று அவதூறு பரப்பி வருவது வெகு நாட்களாகத் தொடர்ந்து வருகிறது.

    வேதத்தினைத் தரக் குறைவாக விமரிசனம் செய்வோர் பலர் அதை முழுமையாக அறிந்தவர்களில்லை என்பது வெள்ளிடை மலை.

    தமிழ் மொழி பெயர்ப்புடன் கூடிய சாம, அதர்வ வேதங்கள் தங்களுக்குக் கிட்டியிருக்கிறது. என்னிடம் இல்லை. தெரிந்து, தெளிந்து பின்னர் தொடர்வோம்.

    @ super thinker on February 20, 2012 at 10:25 am

    அன்பரே..!

    நான் திருவாளர் சுவனப்ரியனை அவரது கருத்துக்களின் வழி ஆதரித்ததாகத் தாங்கள் புரிந்து கொண்டிருந்தால், தவறுக்கு நான் பொறுப்பல்லன். இதே தளத்தில் மிக மிக அநாகரீகமாக எழுதியுள்ள இஸ்லாமியருக்கும் நான் பதில் தந்திருக்கிறேன்.

    அவர்களைப் பார்க்கிலும் முறையாக விவாதிக்க வருபவர் உயர்ந்தவரே என்று நான் கருதுகிறேன். அவ்வளவே.

    வஹாபியிசம் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். தெரிந்து கொள்கிறேன்.

    @ Sarang on February 20, 2012 at 12:07 pm

    திருமிகு சாரங்..!

    குர்-ஆனையோ ஹதீஸ்-ஐயோ படித்துத்தான் ஆக வேண்டும் என்று நமக்கு/எனக்கு எதுவும் விதிக்கப் படவில்லை. திருவாளர் சுவனப்ரியன் அவர்களே ,’அராஜகத்தின் உச்சத்தில் இருந்த அரபுவுக்கு வந்த தூதர் தாம் நபிகள்’ என்பதை மேற்கோளிட்டிருக்கிறார். அதில் எனக்கு எந்த மறுப்புமில்லையே.

    இஸ்லாம் மட்டுமல்ல. எம்மதக் கோட்பாடும் ஹிந்துத்வத்தினுள் அடங்கியதுதான். இதனினும் வேறான எதுவும் உலகில் இல்லை(நல்ல பொருளில் சொல்கிறேன்). எதையும் ஹிந்துத்வம் தனக்குள் கிரஹித்துத் தன்மயமாக்கிவிடும். அந்த அடிப்படையிலே அவரிடம் அன்புடன் அணுகுகிறேன்.

    அதற்காக, பயங்கரவாதம், அப்பாவிகளைக் கொலை செய்தல், வழிபாட்டுத் தலங்களை அரசுரிமை மற்றும் சக்தியைக் கொண்டு நாசமாக்குதல், பெண்ணடிமைத் தனம், மிரட்டி மத மாற்றம் செய்தல்… இன்ன பிற சகிப்புத் தன்மையில்லாச் செயல்களை எல்லாம் நான் ‘ஹிந்துத்வத்தின் அந்தர் பாகம்’ என்று குறிப்பிட்டதாக நினைக்க வேண்டாம்.

    இவை தொடர்பாகவெல்லாம் நானும் அவரும் இதுவரை விவாதிக்கவேயில்லை.

    ஹிந்து சமயத்தை விட்டு உங்களாலும் சரி வேறு யாராலும் சரி வெளியில் போகவே முடியாது. போய்விட்டதாகச் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். என்னிடம் தாங்கள் குறை கண்டாலும் இவ்வலைத் தளத்தின் மூலம் விவரியுங்கள். ஞாயம் இருந்தால், அது உணர்த்தப்பட்டால், ஏற்பதற்கு என்னைத் தயாராகவே வைத்திருக்கிறேன்.

    தற்போதைய நிலையிலிருந்து ஒரு படி மேலான நிலை இருக்குமானாலும் அதை நோக்கி முன்னேறுவதுதான் பகுத்தறிவு. பிடித்ததையே பிடித்துக்கொண்டு அழுவதல்ல. ஆனால், எத்தகு முழுமையையும் ஹிந்துத்வத்தினும் மேலானதாக நான் கருதவில்லை. முழுமையே ஹிந்து சமயம் தானே..!

    @ chiththiraiththingal on February 20, 2012 at 10:08 am

    //பிற மதத்தினரை கொன்றுவிடும்படி அவர்களின் மதநூல்களில் ஏராளம் கட்டளைகள் உள்ளன. அங்கு அன்பு இல்லை. அகிம்சை இல்லை. மதத்தின் பெயரால் பெண்ணடிமையும், கொலை வெறியுமே நிறைந்துள்ளன.//

    எனக்கு இதிலெல்லாம் உடன்பாடு என்று எப்படிக் கருதுகிறீர்கள்? விவாதத்தினிடையே வந்துள்ள கருத்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இங்கு மறுமொழிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன(என்னைப் பொறுத்தவரை).

    அவருக்கு நான் எழுதிய மறுமொழியிலே ‘இவ்விவாதம், கட்டுரைத் தலைப்பிலிருந்து மிகவும் விலகிச் சென்று கொண்டிருக்கிறது’ என்பதையும் பதிவு செய்திருக்கிறேன்.

    அவர் தரும் கருத்துக்களின் அடிப்படையில் தான் நான் பதில் தருகிறேனே தவிர, அதுதான் எனது அணுகுமுறையே தவிர, நம்மிடம் இருப்பதையெல்லாம் அவரிடம் அள்ளிக் கொட்டிக் கொண்டிருப்பது அல்ல.

    @ சோமசுந்தரம் on February 19, 2012 at 10:54 pm

    தமிழ் ஹிந்துவோ நானோ கவலைப் படத் தேவையில்லாத ஒரு விஷயத்தை, நீங்கள் இந்த வலைத் தளத்தில் ஏன் பதிவு செய்கிறீர்கள்? இன்னின்ன பதிவுகளை இன்னின்னவர்தாம் வாசிக்கவும் மறுமொழி தரவும் வேண்டும் என்று எதுவும் இவ்வலைத் தளம் வரையறை செய்திருக்கிறதா என்ன?

    எழுத வந்த போக்கில், ஒரு அவதூறைத் தெரிந்தோ தெரியாமலோ சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு ஆதாரம் சொல்லுங்கள் என்று அந்த நண்பர் கேட்டிருந்தார். இடைப்பட்ட இந்த நிலையில் பின் வாங்குவதாக இருந்தால், அந்த நண்பர் சொன்ன கருத்து ‘சரிதான்’ என்று ஒப்புக்கொண்டு விவாதத்தை நிறுத்துவதுதான் அழகு.

    ஏதோ உங்களுக்கும் திரு பாலாவுக்கும் இடைப்பட்ட தனிப்பட்ட விவாதமாக இது இருக்குமானால், பொது வலைத் தளத்துக்கு வருவது தவறல்லவா? மேலும், விவாதத்தை நிறுத்திவிட்ட ஒருவர், ஏன் மீண்டும் தொடர்ந்தும் மறுமொழிகளைப் படிக்கவும் பதிலுரை தரவும் வேண்டும்?

  133. // தொல்காப்பியம் புறத்திணையின் சூத்திரம்…

    கொடிநிலை கந்தழி வள்ளியென்ற
    வடுநீங்கு சிறப்பின் முதலன
    முன்றுங் கடவுள் வாழ்த்தொடு
    கண்ணியமே வருமே

    இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கிணியர், கொடிநிலை வெங்கதிர் சூரியன் எனவும், வள்ளி இடை நின்ற கந்தழி ஒரு பற்றுக் கோடுமின்றி, அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள் ஆகும்! என விவரித்துள்ளார்.
    ஆதித் தமிழர் இறைவனை உருவமற்ற அருவமாகவே வழுபட்டுத் தொழுதனர். இதை கா.சு. பிள்ளை, முழு முதற்கடவுளின் உண்மையும் – தன்மையும் உணர்ந்து, அவரை அருவமாக வழிபடக் கருதிய தமிழர், அவருடைய குணங்களையும் நினைத்து அவரைத் தொழுதனர். அந்நெறியே தமிழர் செந்நெறியாகும் என விவரித்துள்ளார். (தமிழர் சமயம்.) //

    சுவனப்பிரியன்,

    தொல்காப்பியரின் அகத்திணைப் பாடல்,

    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
    சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

    இதற்கான விளக்கமும் கொடுங்கள்..

  134. திரு சாரங்க்!

    //அல்லா உருவமற்றவர் என்று எங்கே உள்ளது. அவரது உருவத்தை பார்க்க முடியாது என்று தானே நீங்கள் சொல்கிறீர்கள் (ரெம்ப பயன்கரமானவராத்தான் இருக்கணும்). உருவம் இல்லாது ஒரு ஆசாமி ஏழு சுவர்க்கத்தின் மேல் அரசில் எப்படி அமர்ந்திருக்க முடியும்?//

    உருவமற்றவர் என்று நானும் சொல்லவில்லையே! இறைவனுக்கு உருவம் இதுதான் என்று நீங்களாக ஒரு உருவத்தை எப்படி கொடுக்கப் போயிற்று? எந்த நூலின் ஆதாரத்தில் சிவன் இந்த உருவம் என்று கண்டு கொண்டீர்கள்? இதை விளக்குவீர்களா?

    //பவிஷ்யத் புராணம் வேதமல்ல. நீங்கள் எடுத்து விடுவது பரங்கியன் விட்ட சரடு பவிஷ்யத் புராணம்//

    ஆத்தாடி……ஆரியன் என்ற சொல்லைக் கொடுத்தது கால்டுவெல் என்ற பரங்கியன். பவிஷ்ய புராணம் தந்ததும் பரங்கியன் அதாவது வெள்ளைக்காரன். அப்போ இந்து மதத்துக்காக சாரங்கன் எதையும் செய்யவில்லையா? அப்படியே பவிஷ்ய புராணத்தில் இடைச்செருகலை வெள்ளைக்காரன் கொண்டு வந்திருந்தால் ஏசுவையும் கன்னி மேரியையும் அல்லவா கொண்டு வந்திருக்க வேண்டும். இஸ்லாத்தை தூக்கிப் பிடிக்க வெள்ளையனுக்கு என்ன அவசியம் வந்தது?

    அடுத்து உங்கள் வாதம் உண்மையாக இருந்தால் வெள்ளையன் வந்து கை வைத்து வேதங்களிலும் புராணங்களிலும் இஷ்டத்துக்கு விளையாட நீங்கள் அனுமதி கொடுத்துள்ளீர்கள் என்றுதானே ஆகிறது. இது போல்தான் வேதங்களிலும் பல தெய்வ வணக்க வசனங்கள் ஊடுருவியிருக்க வேண்டும்.

    //அல்லா உபநிஷத்? எழுதினது யாரு வேத வ்யாசரா
    நான் கூட ஒரு உபநிஷத் (சுவப்ரியோபநிஷத்) என்று எழுதி சாம வேதஹ்தில் சேற்று விட விடமுடியும். இது என்னமோ வடிவேலை வைத்து பாச மலர் பார்ட் டு எடுக்குற மாதிரி தான். //

    இப்படித்தான் வேதங்களும் புராணங்களும் பாதுகாக்ப்பட்டு வந்துள்ளன என்று அழகாக கூறியமைக்கு நன்றி!

    இன்னும் இதுபோல் எத்தனை இடங்களில் வேதங்களிலும் புராணங்களிலும் வெள்ளையன் கை வைத்துள்ளான் என்ற லிஸ்டையும் கொஞசம் கொடுங்களேன்.

    சாரங்கன் உண்மையை இப்படி எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்திருக்க வேண்டாம். 🙂

  135. திரு குமரன்!

    //சுவனப்பிரியன்,
    தொல்காப்பியரின் அகத்திணைப் பாடல்,
    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
    சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
    இதற்கான விளக்கமும் கொடுங்கள்..//

    ‘ மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.’

    இறைவனின் ஆற்றலை விளக்க இந்த பாடல் பயன்படுகிறது. உதாரணமாக ரிக் வேதத்தில் வரும் ஒரு வரியை பார்ப்போம்.

    ‘ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்’
    -ரிக் வேதம் (1:164:46)

    இறைவனை பலர் ‘பிரம்மா’ அதாவது ‘படைப்பாளன்’ என்று கூறுகின்றனர். அதேபோல் இறைவனை ‘விஷ்னு’ அதாவது ‘பரிபாலிப்பவன்’ என்றும் கூறுகிறோம். இது போல் இறைவனுடைய ஆற்றலை நாம் தவறாக ஒவ்வொரு ஆற்றலுக்கும் ஒரு உருவத்தை கொடுத்து அதை தனி கடவுளாக்கி விட்டோம்.
    ‘முருகன்’ என்ற சொல்லுக்கு ‘அழகிய தோற்றமுடையவன்’ என்ற பொருள் வரும். நம்மை படைத்த இறைவனும் அழகிய தோற்றம் உடையவனே! இந்த பண்புகளைத்தான் இங்கு தொல்காப்பியர் உதாரணமாக விளக்குகிறார்.

    ஆனால் வழக்கில் நாம் விஷ்ணுவுக்கு நான்கு கைகளையும் கைகளில் சக்கரமும், பிரம்மனுக்கு நான்கு தலைகளையும், முருகனுக்கு நாமாக ஒரு அழகிய உருவத்தையும் கையில் வேலையும் கொடுத்து விட்டோம். இறைவன் ஒருவன்தான்: அவனுக்குரிய பண்புகள் தான் இவை என்று நாம் புரிந்து கொண்டால் குழப்பம் இருக்காது. இந்து மத வேதங்களும், இஸ்லாமிய கிறித்தவ மத வேதங்களும் இதைத்தான் கூறுகின்றன.

    ‘அவன் வடிவத்தை காண முடியாது. எவர் கண்ணுக்கும் புலப்படாதவன். எவர்கள் மனதாலும் இதயத்தாலும் அவனை அறிந்திருக்கின்றார்களோ அவர்களின் இதயத்தில் நிலையாக இருப்பவன்.’

    -ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20

  136. மயில் வாகனன் on February 20, 2012 at 5:22 pm
    Your comment is awaiting moderation.

    @ suvanappiriyan on February 19, 2012 at 5:28 பம்

    தாங்கள் குறிப்பிட்டுள்ள அல்லோபநிஷத் 1:10 (அதர்வண வேதம்), சாம வேதம் – இந்திர அதிகாரம் 2 – மந்த்ரா 152 – புத்தகம் 2 – செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை, என்பதெல்லாம் எந்த வெளியீட்டில் உள்ளன? தெரியப் படுத்துங்கள்.

    பொதுவாக, இஸ்லாமியர்கள்/கிறிஸ்துவர்கள், தங்கள் மறை நூலை வைத்திருப்பது போல ஹிந்துக்களிடம் நான்கு வேதங்கள் மூலமும் இருப்பதில்லை; இருந்தாலும் தமிழாக்கத்தோடு இருக்காது; அப்படி இருப்பவர்களும் அவற்றைப் படித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

    என்னிடம் உள்ள நூல்களில், சாம, அதர்வண வேதங்களின் நீங்கள் குறிப்பிட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் மந்த்ரங்களில், தாங்கள் குறிப்பிடும் பொருளுள்ள எதுவும் இல்லை. தங்கள் வெளியீடு எது என்று முழு விபரம் தந்தால், அதுவும் தரவிறக்கம் செய்ய இணைப்பு வசதியும் இருந்தால் தெரியப் படுத்துங்கள்.

    ஹிந்துக்களின் இத்தகைய நிலையை நன்கு அறிந்துவைத்திருக்கும் பிறர், இவர்களிலேயே பலரை ஏவிவிட்டு, மோசமான கருத்துக்கள் கொண்டதாக வேதம் இருக்கிறது என்று அவதூறு பரப்பி வருவது வெகு நாட்களாகத் தொடர்ந்து வருகிறது.

    வேதத்தினைத் தரக் குறைவாக விமரிசனம் செய்வோர் பலர் அதை முழுமையாக அறிந்தவர்களில்லை என்பது வெள்ளிடை மலை.

    தமிழ் மொழி பெயர்ப்புடன் கூடிய சாம, அதர்வ வேதங்கள் தங்களுக்குக் கிட்டியிருக்கிறது. என்னிடம் இல்லை. தெரிந்து, தெளிந்து பின்னர் தொடர்வோம்.

    @ super thinker on February 20, 2012 at 10:25 am

    அன்பரே..!

    நான் திருவாளர் சுவனப்ரியனை அவரது கருத்துக்களின் வழி ஆதரித்ததாகத் தாங்கள் புரிந்து கொண்டிருந்தால், தவறுக்கு நான் பொறுப்பல்லன். இதே தளத்தில் மிக மிக அநாகரீகமாக எழுதியுள்ள இஸ்லாமியருக்கும் நான் பதில் தந்திருக்கிறேன்.

    அவர்களைப் பார்க்கிலும் முறையாக விவாதிக்க வருபவர் உயர்ந்தவரே என்று நான் கருதுகிறேன். அவ்வளவே.

    வஹாபியிசம் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். தெரிந்து கொள்கிறேன்.

    @ Sarang on February 20, 2012 at 12:07 pm

    திருமிகு சாரங்..!

    குர்-ஆனையோ ஹதீஸ்-ஐயோ படித்துத்தான் ஆக வேண்டும் என்று நமக்கு/எனக்கு எதுவும் விதிக்கப் படவில்லை. திருவாளர் சுவனப்ரியன் அவர்களே ,’அராஜகத்தின் உச்சத்தில் இருந்த அரபுவுக்கு வந்த தூதர் தாம் நபிகள்’ என்பதை மேற்கோளிட்டிருக்கிறார். அதில் எனக்கு எந்த மறுப்புமில்லையே.

    இஸ்லாம் மட்டுமல்ல. எம்மதக் கோட்பாடும் ஹிந்துத்வத்தினுள் அடங்கியதுதான். இதனினும் வேறான எதுவும் உலகில் இல்லை(நல்ல பொருளில் சொல்கிறேன்). எதையும் ஹிந்துத்வம் தனக்குள் கிரஹித்துத் தன்மயமாக்கிவிடும். அந்த அடிப்படையிலே அவரிடம் அன்புடன் அணுகுகிறேன்.

    அதற்காக, பயங்கரவாதம், அப்பாவிகளைக் கொலை செய்தல், வழிபாட்டுத் தலங்களை அரசுரிமை மற்றும் சக்தியைக் கொண்டு நாசமாக்குதல், பெண்ணடிமைத் தனம், மிரட்டி மத மாற்றம் செய்தல்… இன்ன பிற சகிப்புத் தன்மையில்லாச் செயல்களை எல்லாம் நான் ‘ஹிந்துத்வத்தின் அந்தர் பாகம்’ என்று குறிப்பிட்டதாக நினைக்க வேண்டாம்.

    இவை தொடர்பாகவெல்லாம் நானும் அவரும் இதுவரை விவாதிக்கவேயில்லை.

    ஹிந்து சமயத்தை விட்டு உங்களாலும் சரி வேறு யாராலும் சரி வெளியில் போகவே முடியாது. போய்விட்டதாகச் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். என்னிடம் தாங்கள் குறை கண்டாலும் இவ்வலைத் தளத்தின் மூலம் விவரியுங்கள். ஞாயம் இருந்தால், அது உணர்த்தப்பட்டால், ஏற்பதற்கு என்னைத் தயாராகவே வைத்திருக்கிறேன்.

    தற்போதைய நிலையிலிருந்து ஒரு படி மேலான நிலை இருக்குமானாலும் அதை நோக்கி முன்னேறுவதுதான் பகுத்தறிவு. பிடித்ததையே பிடித்துக்கொண்டு அழுவதல்ல. ஆனால், எத்தகு முழுமையையும் ஹிந்துத்வத்தினும் மேலானதாக நான் கருதவில்லை. முழுமையே ஹிந்து சமயம் தானே..!

    @ chiththiraiththingal on February 20, 2012 at 10:08 am

    //பிற மதத்தினரை கொன்றுவிடும்படி அவர்களின் மதநூல்களில் ஏராளம் கட்டளைகள் உள்ளன. அங்கு அன்பு இல்லை. அகிம்சை இல்லை. மதத்தின் பெயரால் பெண்ணடிமையும், கொலை வெறியுமே நிறைந்துள்ளன.//

    எனக்கு இதிலெல்லாம் உடன்பாடு என்று எப்படிக் கருதுகிறீர்கள்? விவாதத்தினிடையே வந்துள்ள கருத்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இங்கு மறுமொழிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன(என்னைப் பொறுத்தவரை).

    அவருக்கு நான் எழுதிய மறுமொழியிலே ‘இவ்விவாதம், கட்டுரைத் தலைப்பிலிருந்து மிகவும் விலகிச் சென்று கொண்டிருக்கிறது’ என்பதையும் பதிவு செய்திருக்கிறேன்.

    அவர் தரும் கருத்துக்களின் அடிப்படையில் தான் நான் பதில் தருகிறேனே தவிர, அதுதான் எனது அணுகுமுறையே தவிர, நம்மிடம் இருப்பதையெல்லாம் அவரிடம் அள்ளிக் கொட்டிக் கொண்டிருப்பது அல்ல.

    @ சோமசுந்தரம் on February 19, 2012 at 10:54 pm

    தமிழ் ஹிந்துவோ நானோ கவலைப் படத் தேவையில்லாத ஒரு விஷயத்தை, நீங்கள் இந்த வலைத் தளத்தில் ஏன் பதிவு செய்கிறீர்கள்? இன்னின்ன பதிவுகளை இன்னின்னவர்தாம் வாசிக்கவும் மறுமொழி தரவும் வேண்டும் என்று எதுவும் இவ்வலைத் தளம் வரையறை செய்திருக்கிறதா என்ன?

    எழுத வந்த போக்கில், ஒரு அவதூறைத் தெரிந்தோ தெரியாமலோ சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு ஆதாரம் சொல்லுங்கள் என்று அந்த நண்பர் கேட்டிருந்தார். இடைப்பட்ட இந்த நிலையில் பின் வாங்குவதாக இருந்தால், அந்த நண்பர் சொன்ன கருத்து ‘சரிதான்’ என்று ஒப்புக்கொண்டு விவாதத்தை நிறுத்துவதுதான் அழகு.

    ஏதோ உங்களுக்கும் திரு பாலாவுக்கும் இடைப்பட்ட தனிப்பட்ட விவாதமாக இது இருக்குமானால், பொது வலைத் தளத்துக்கு வருவது தவறல்லவா? மேலும், விவாதத்தை நிறுத்திவிட்ட ஒருவர், ஏன் மீண்டும் தொடர்ந்தும் மறுமொழிகளைப் படிக்கவும் பதிலுரை தரவும் வேண்டும்?

  137. சுவன்னப்பிரியன் அறிவு ஜீவி,

    // இறைவனை பலர் ‘பிரம்மா’ அதாவது ‘படைப்பாளன்’ என்று கூறுகின்றனர். அதேபோல் இறைவனை ‘விஷ்னு’ அதாவது ‘பரிபாலிப்பவன்’ என்றும் கூறுகிறோம். //

    ‘பிரம்மா’ என்பதற்குப் ‘பெரியவன்’ என்று பெயர். ‘படைப்பாளன்’ என்று அர்த்தம் அல்ல. ‘விஷ்ணு’ என்பதற்கு ‘எங்கும் வியாபித்து இருப்பவன்’ என்று பொருள் (அதாவது, அல்லாவைப் போல வானத்தில் மாத்திரம் உட்கார்ந்து கொண்டு மிரட்டுபவன் அல்ல என்று அர்த்தம்). இது கூடத் தெரியாமல் வேதத்தில் வல்லவனைப் போல இங்கு எதற்கு பாவலா காட்டறீங்க?

    //ஆனால் வழக்கில் நாம் விஷ்ணுவுக்கு நான்கு கைகளையும் கைகளில் சக்கரமும், பிரம்மனுக்கு நான்கு தலைகளையும், முருகனுக்கு நாமாக ஒரு அழகிய உருவத்தையும் கையில் வேலையும் கொடுத்து விட்டோம்//

    அறிவு ஜீவி சுவன்னப்பிரியனுக்காக சங்க இலக்கியங்களிலிருந்து சில வரிகள் –

    ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
    தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
    மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,
    சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
    வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை;
    எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
    விரிமலர் புரையும் மேனியை; மேனித்
    திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
    தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
    எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை-
    சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
    ஏவல் உழந்தமை கூறும்,
    நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

    – பரிபாடல், முதல் பாட்டு

    பொருள்:

    நீ, ஆதிசேடனுடைய ஆயிரந்தலைகளும் நின் திருமுடிக்கு மேலே விரிந்து நிழற்றாநிற்ப மார்பினிடத்தே திருமகள் வீற்றிருப்ப விளங்காநின்றனை; மேலும் பலதேவனாகவும் இருக்கின்றனை. நீ, தாமரைமலரை ஒத்த கண்களை உடையை; காயாம்பூவை ஒத்த திருமேனியை உடையை; திருமகள் விரும்பியுறையும் மார்பினை உடையை; அந்த மார்பினிடத்தே விளங்குகின்ற கௌத்துவமணி அணியை உடையை; பொன்னாடையை அணிந்துள்ளனை; நினது பெருமையை அந்தணருடைய வேதம் விளங்கக் கூறாநிற்கும்.

    இது தான் சங்க கால நிலை. தமிழர் சமயம் என்றென்றுமே உருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு இந்த சான்று போதும்.

    // ‘அவன் வடிவத்தை காண முடியாது. எவர் கண்ணுக்கும் புலப்படாதவன். எவர்கள் மனதாலும் இதயத்தாலும் அவனை அறிந்திருக்கின்றார்களோ அவர்களின் இதயத்தில் நிலையாக இருப்பவன்.’

    -ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20 //

    ‘ஸ்வதேஸ் வதரா’? இப்படி ஒரு உபநிடதமா… வேடிக்கையாக இருக்கிறது. ச்வேதாச்வதார என்பதை ஒரு முல்லா எழுத்துக் கூட்டிப் படிக்கக் கூடத் தெரியாமல் உளறியிருக்கிறது. அதை இங்கு வந்து வாந்தி எடுத்தது சுவன்னப்பிரியன்.

    சரி, ‘ச்வேதாச்வதார’ என்பதற்கு ஒரு பொருள் கூறட்டுமா? ‘ஸ்வேத அச்வேன தரதி இதி ச்வேதாச்வதார’ – அதாவது, ஸ்வேத அச்வமாகிய ஹயக்ரீவரை உபாசித்து சம்சாரத்தைக் கடக்கின்றவர் (ஸ்வேத அச்வம் = வெள்ளைக் குதிரை, தரதி = கடக்கிறார்) என்று பொருள். இதுவும் உருவ வழிபாட்டைத் தான் காட்டுகிறது பார்த்தீர்களா?

  138. சுவன்னப்பிரியன்,

    // அப்படியே பவிஷ்ய புராணத்தில் இடைச்செருகலை வெள்ளைக்காரன் கொண்டு வந்திருந்தால் ஏசுவையும் கன்னி மேரியையும் அல்லவா கொண்டு வந்திருக்க வேண்டும். இஸ்லாத்தை தூக்கிப் பிடிக்க வெள்ளையனுக்கு என்ன அவசியம் வந்தது? //

    நீங்கள் காட்டும் வெள்ளையன் எழுதிய பவிஷ்ய புராணத்தில், முகம்மது ஒரு அசுரனின் மறுபிறவி, அவன் தோற்றுவித்த மதம் தீயவர்களால் பின்பற்றப்படும் என்று இருக்கிறது. இதோ பாருங்கள் (https://agniveer.com/479/prophet-puran/) –

    // “Shri Suta Goswami said that a demon called Tripurasur who was earlier burnt to ashes by Shiva has taken birth again in form of Mahamada (Muhammad) and his deeds are like that of an evil ghost. The ghost was rebuked by Kalidas as “O rascal, you have created an illusion to bewilder the king, I will kill you, you are the lowest…”

    Further, the ghost called Mahamada comes in dream of King Bhoja and says,

    “O king, your religion is of course known as the best religion among all. Still I am going to establish a terrible and demoniac religion by the order of the Lord . The symptoms of my followers will be that they first of all will cut their genitals, have no shikha, but having beard, be wicked, make noise loudly and eat everything. They should eat animals without performing any rituals. This is my opinion. They will perform purificatory act with the musala or a pestle as you purify your things with kusha. Therefore, they will be known as musalman, the corrupters of religion. Thus the demoniac religion will be founded by me.”

    It is amply clear that contrary to Dr Naik’s claims, Mahamada (Muhammad) is being condemned here as a demon and not as a spiritual person. Far from being a Kalki Avatar, Muhammad is being foretold as a devil harbinger of nuisance!

    Having analyzed the verses, let us analyze a few more points regarding Bhavishya Puran:

    Bhavishya Puran is not considered an authoritative religious scripture. It is amply clear that the book continued to be written till late 19th century. Because it also contains stories of Jesus Christ, Akbar, Sawai Jai Singh, Alha Udal, Tulsidas, Surdas, Guru Nanak, Shahjahan, Aurangzeb, Shivaji and even Queen Victoria and her Parliament. Bulk of the material seems to be written during foreign rule. Thus, Bhavishya Puran does not even come in category of evidence, when it comes to Hindu religion.
    Still if Dr Zakir Naik has infallible faith in Bhavishya Puran, he should also admit that Muhammad was a devil and reincarnation of Tripurasur.
    Also, if Dr Naik has so much trust on Bhavishya Puran and considers the book so prophetic, why does he not admit other advices of the book – the fastings on specific days and their benefits, worship of different idols, avoidance of meat, celibacy, shraadh, prohibition of marriage among close relatives, agnihotra, holy places, cow protection etc. And accordingly, he should refuse to believe in those verses of Quran which are against the precepts of Bhavishya Puran.
    //

    இதைக் கூடத் திரித்து உமது முல்லாக்கள் முகம்மதுவை பவிஷ்யத் புராணம் பெருமையாகப் பேசியிருப்பதாக உளறுகிறார்கள்.

  139. மதமல்ல மார்க்க சகோ சுவனப்ரியன்

    ரெம்ப அடிவாங்கிடீங்க போல இருக்கு எக்கு தப்பு தெரியாம உளர்றீங்க அவசரப் படறீங்களே. அல்லா சொல்வதை ஒரு கணம் மனதில் நிறுத்தி யோசித்துப்பாருங்கள். அவர் யோசிக்கமாட்டீர்களா என்று எவ்வளோ கெஞ்சுறார். நீங்கெல்லாம் என்னடான்னா மூளை அல்லாவோடது அதை நாங்க பயன் படுத்த மாட்டோம்னு அடம் பிடிக்கிறீங்களே

    நான் ஒரு நூறு வஹிக்களை (நபியை விட பெட்டரா) உருவாக்கி அதை திருக் குர்ஆனில் சேர்த்து பாரு பாரு இது திருக் குர்ஆனில் இருக்கு என்று எல்லா அரபிகளிடம் சொன்னால். அரபிகள் கூட என்னை முட்டாள் லூசு என்று எப்படி சொல்வார்களோ அது போல தான் சுவனப்ரிய உபநிஷத் எழுதி அது சாம வேதத்தில் உள்ளது என்று சொல்வது. அது போல தான் அல்லா உபநிஷத்தும் அதர்வண வேதமும். புரியலேன்ன இன்னும் விளக்கமா சொல்றேன்.

    வேதத்தை ஹிந்துக்கள் மிக துல்லியமாக பாது காத்து கொண்டு வருகிறார்கள். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் அதிலிருந்து ஒரு அக்ஷரம் பிசகாமல் த்வனி மாறாமல் இன்றும் உள்ளது.

    சுவனப்ரியன் வந்து புது உபநிஷத் எழுதி அதை நான் வேதத்தோடு சேர்த்தேன் என்றால் ஹிந்துக்கள் சிரித்து விட்டு சரி என்பார்கள் 🙂
    முட்டாள்களோடு மட்டுமே மோத ஹிந்துக்கள் அரபுகள் கிடையாது

    இங்க்லீஷ் காரன் அவனா ஒரு பவிஷ்யத் புராணம் எழுதி. இது தான் இது தான் பவிஷ்யத் புராணம் என்றான். ஹிந்துக்கள் எவரும் அதை கண்டு கொள்ளவில்லை. அதை தூக்கிப் பிடிப்பது சுவனப்ரியங்களும் சில்லி சாம்களும் தான்.

    ஒரிஜினல் பவிஷ்யத் புராணம் ஒரிகினலாகவே இருக்கு. சீனா காரன் ஐ பாட காப்பி அடிச்சு சீபாட் செஞ்சாலும் ஐபாட் அபாட் தான் சீபாட் சீபாட் தான்

    இந்த லட்சணத்துல 🙂 எல்லாம் போட்டு பகிரங்கமா நான் ஒத்துக் கொண்டிருக்க வேண்டாம்நேல்லாம் எழுதுறீங்க. சகோ அல்ல சொல்றத நல்லா கேளுங்கு. சிந்திக்க மாட்டீர்களா?

  140. திரு கந்தர்வன்!

    //இது தான் சங்க கால நிலை. தமிழர் சமயம் என்றென்றுமே உருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு இந்த சான்று போதும்.//

    விக்கிபீடியா தரும் தகவல்:

    வேதகாலக் கடவுள்கள்
    வேதகாலக் கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேதகாலத்தில் உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்ட பல கடவுள்கள் தற்காலத்தில் அந்நிலையை இழந்துள்ளார்கள். அக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த கடவுள்கள் இன்று உயர்நிலையில் மதிக்கப்படுகிறார்கள்.
    வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவர்களுள், இந்திரன், பிரஜாபதிஆகிய கடவுள்கள் தவிர, 8 கடவுள்கள் வசுக்கள் எனவும், 11 பேர் உருத்திரர்கள் எனவும், 12 பேர் ஆதித்தர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

    இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின்ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதாஎன்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.

    “எல்லாவுலகங்களும் அரசனின்றி அச்சத்தால் எப்பக்கங்களிலும் சிதறுண்டிருக்குங்கால் அவ் வெல்லாவற்றையும் காத்தற் பொருட்டுப் பிரம்ம தேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன் அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு அரசனைப் படைத்தான்.”
    -“சுக்கிர நீதி” என்ற வட மொழி நூல்

    “பல்வேறு தெய்வங்களின் மனித வடிவமே மன்னன்”
    -நாரத ஸ்மிருதி,- ஆ.சிவசுப்பிரமணியன்

    அதாவது இறைவனுக்கு உரிய தகுதிகள் அனைத்தையும் நமது முன்னோர்களின் வேதங்கள் அரசனுக்கு தாராளமாக கொடுத்து வந்ததையே மேலே உள்ள வாக்கியங்கள் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த கருத்துக்களை சாதாரண மனிதன் சொன்னதாக சொல்லாமல் இறை பக்தியை ஊட்டி வேதங்களின் மூலமாக சொன்னதால் நம் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட்டது.

    “மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தாரால் நடை பெறுகின்றதோ அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போலக் கண் முன்னே துன்பமுறுகின்றது’ என்று குறிப்பிடுகிறார்” (8.21) மனு

    நம் நாட்டு சட்டத்தை அம்பேத்கார் தலைமையில்தான் வகுத்ததாக சொல்வார்கள். நமது நாடு முன்னேறாமல் இருக்க இதுவும் ஒரு காரணமோ!

    ——————————————————————————-

    தம்புள்ள, இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் A9 பாதையில் இருக்கிறது. தம்புள்ளையில் ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், இன்று சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக உள்ளன. எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், அந்தக் குகைகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று தெரியவில்லை. கி.மு. முதலாம் நூற்றாண்டில் இருந்து, அதாவது பௌத்த மதம் பரவிய காலத்தில் இருந்து தான், குகையின் நவீன கால வரலாறு ஆரம்பிக்கின்றது. இன்றைக்கு அந்த குகைகளுக்குள் புத்தர் சிலைகளும், விஷ்ணு போன்ற இந்துக் கடவுளரின் சிலைகளும் மட்டுமே காணப்படுகின்றன.

    இவை எல்லாம் பிற்காலத்தில், பௌத்த மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்டவை. தம்புள்ள குகைகளை (அது இன்று குகைக் கோயில் என்று அழைக்கப் படுகின்றது.) யுனெஸ்கோ பொறுப்பேற்று பராமரித்து வருகின்றது. ஆசியக் கண்டத்திலேயே, இது போன்ற ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த விசாலமான குகைகள் மிக அரிது என்று கூறப் படுகின்றது. உண்மையில் அது ஒரு குகை அல்ல. குறைந்தது ஐந்து குகைகள் ஒன்றுக்கொன்று தொடர்பாக உள்ளன. இந்தக் குகைகளை இணைக்கும் சுரங்கப் பாதைகள் உள்ளன. ஒரு காலத்தில், அந்தக் குகைகள் எல்லாம் ஒரு நகரம் போன்று உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். அதாவது மனிதர்கள் வாழ்ந்த பாதாள உலகம்!

    வட இலங்கையில், நாகநாடு இருந்ததாக மணிமேகலை எனும் தமிழ்க் காப்பியம் கூறுகின்றது. நாகதீபத்தில் (இன்று: நயினா தீவு) இருந்த ஆலயம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், நாக தம்பிரான் கோயில்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் திருவிழா நடக்கும் பிரபலமான கோயில்கள் அவை. “இந்து மதத்தில் இல்லாத, இந்து மதம் அங்கீகரிக்காத,” நாக வழிபாடு, நாகர்கள் என்ற இனத்திற்கு உரியது.

    பொதுவாகவே, பல தெய்வ வழிபாட்டைக் கடைபிடிக்கும் இந்துக்கள் வாழ்ந்த பூமியில், ஒரே இறைவனை மட்டும் வழிபடும் மதத்தை பின்பற்றும் மக்கள் வாழ்ந்தனரா? இந்தியாவில், நாகலாந்து மாநிலத்தில் சேமே இன நாகர்கள் என்றொரு பிரிவுண்டு. சேமே இன நாகர்கள், பல தெய்வ வழிபாட்டைக் கைவிட்டு விட்டு, காலப்போக்கில் தாமாகவே ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள். வட-கிழக்கு இந்தியாவில் வாழ்ந்த Bnei Menashe பழங்குடி இன மக்களை, “தொலைந்து போன யூத இனக் குடிகளில் ஒன்று” என யூதர்கள் நம்புகின்றனர். இன்று அந்த மக்கள், இஸ்ரேலில் குடியேறி முழுமையான யூதர்களாக மாறி விட்டனர். இந்த தகவலும், நாகர்களின் ஓரிறைக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்கின்றது.

    “ஓரிறைக் கோட்பாட்டை பின்பற்றிய நாகர்கள்”, எதற்காக குகைகளில் வசித்தார்கள்? தொன்று தொட்டு நிலவி வரும் மூட நம்பிக்கை காரணமாகவே, நாகர்கள் குகை வாழ்வை தேர்ந்தெடுத்தனர் என்று, நாகர்கள் பற்றிய புராணக் கதைகள் கூறுகின்றன. அதாவது, வேட்டையாடும் கருடனிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்காக, நாகங்கள் பாதாள லோகத்தில் வாழ்வதாக ஐதீகம் ஒன்றுண்டு. கருடனும், பாம்பும் ஜென்ம விரோதிகள் என்பது எமக்கெல்லாம் தெரிந்தது தான். ஆனால், நாங்கள் இங்கே விலங்கினங்களைப் பற்றிப் பேசவில்லை. நாகர்கள் என்பது ஒரு மனித இனத்தை சேர்ந்தவர்களைக் குறிக்கும் பெயர். அப்படியானால், கருடன் என்பதும் இன்னொரு மனித இனத்தைக் குறிக்கும் பெயரா?

    நாகர் இனம் போன்று, கருட இனத்தவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருப்பார்களா? ஆதி காலத்தில், கருட இனத்தவருக்கும், நாக இனத்தவருக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றிருக்குமா? யுத்தத்தில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்கும், மறைந்திருந்து தாக்குவதற்கும் வசதியாக, நாகர்கள் குகைகளில் வசித்திருப்பார்களா? ஆன்னிய ஆக்கிரமிப்பாளர்களினால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள், காடுகளிலும், மலைகளிலும் புகலிடம் தேடுவது சரித்திர காலம் தொட்டு நடந்து வரும் நிகழ்வு ஆகும். இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த நாகர் இன மக்களை அழிக்கத் துடித்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் யார்? அவர்களுக்கும் கருடனுக்கும் என்ன தொடர்பு? யார் அந்தக் கருடர்கள்? அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்?

    -https://kalaiy.blogspot.com/2011/12/blog-post_28.html

  141. @ சுவனபிர்யன்,

    முடியல… என்ன தான் சொல்லவறீங்க? முடிவா சொல்லுங்க..
    விவாதம்ன்னு பேர்ல தோன்றுவதை எல்லாம் சொல்வது தான் விவாதமா? திரு. மயில்வாகனன், திரு. கந்தர்வன், போன்றவர்கள் தெளிவாக, பொறுமையாக விளக்கம் அளித்தாலும். இல்ல அது இது தான் இப்படி தான். என்று ஒரு முன் முடிவுடன் விவாதிப்பதால் யாருக்கு என்ன பலன். உங்கள் மதமோ மார்க்கமோ ஏதோ ஒண்ணு அதில் வரையறுத்தது போல் கடவுளை ஒரு புத்தகத்தில் வரையறுப்பது அல்ல ஹிந்து மதம். இறையவன் எல்லை இல்லாதவன் என்று சொன்னாலும் அதுவும் ஒரு எல்லைதான். நாங்கள் எதிலும் இறைவனை காண்கிறோம். எங்களுக்கு எதுவும் சாத்தான் படைத்தது அல்ல எல்லாம் இறைவன் படைப்புதான் நாங்கள் எதையும் பிரித்து பார்ப்பது இல்லை.
    இவ்வழி இதை செய்தால் தான் அவன் ஹிந்து என்று வரையறுப்பது கிடையாது.
    நீங்க சுவனத்துக்கு போக பிரியாம தாராளமா போங்க. அதை விடுத்து வரலைன்னு சொல்றவனை வலுகட்டாயமா கொண்டு பொய் சொர்க்கத்தில் விட்டாலும் அது அவனுக்கு நரகம் தான் இந்த அடிபடையாவது புரிந்து கொள்ளுங்கள்.
    உங்கள் நம்பிக்கை படி நாங்கள் எல்லாம் நரகம் சென்றாலும் அதனால் எங்களுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை.
    இங்கு நாங்கள் செய்து கொண்டு இருப்பது மத மாற்றம் அல்ல. நாங்கள் இங்கு செய்வது இந்த இந்திய மண்ணில் அரிசி, பருப்பு, பழங்கள், பூ போன்று அனைத்தும் விளையும் விளைகிறது அவை அனைத்தும் நமது உடலுக்கு தேவையான அனைத்தையும் தரும். அராபிய நாட்டில் விளையும் விளைந்த பேரிச்சம் பழம் நமக்கு தேவை இல்லை என்பது தான். அப்படியும் அவசியம் எனில் உங்கள் தோட்டத்தில் ஒரு ஓரத்தில் வைத்து கொள்ளுங்கள் அதற்காக தோட்டத்தையே அளித்து பேரிச்சம் மரங்களாய் நட்டால் இந்த இந்திய மண் பாலைவனமாகும் என்பது தான்.
    இந்த புரிதல் கூட இல்லாமல் தானியங்கள், பழம், பூ அனைத்தும் பேரிச்சம் பழத்தை போல் வயத்துக்கு தான் போகுது அதனால் பேரிச்சம் பழம் மட்டும் சாப்பிடுங்கன்னு அல்லது எல்லாம் பேரிச்சம் பழம் தான்னு. விவாதிப்பதில் அர்த்தமில்லை.

    நன்றி..

  142. இதற்க்கு மேல் எப்படி தெளிவாக சொல்வது??!! .எனது மறுமொழியில் உள்ள எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்.

    நன்றி

  143. மதமல்ல மார்க்க சகோ சுவனப்ரியன்

    //
    நமது நாடு முன்னேறாமல் இருக்க இதுவும் ஒரு காரணமோ!
    //

    இல்லை அல்லாவுதீன் கில்ஜி என்ற கேனயன் வந்தாதால் தான். பேரு மும்மீன் பேரு மாதிரி இருக்குல்ல.

    பேத்து பேத்துன்னு பேத்திட்டு பவிஷ்யத் புராண வாக்கியம் ஒன்றை கந்தர்வன் கொடுத்ததும் வேற பேத்தலுக்கு மாறி விட்டீர்கள்.

    உங்கள் ஏக இறைவன் கொள்கை பற்றி எழுதி சப்மிட் செய்தேன் உங்கள் ஏக இறைவனுக்கு பிடிக்கவில்ல போல் இருக்கிறது “Web page expired” என்று வந்து விட்டது.

    நேரம் கிடைக்கும் பொது மறுபடியும் எழுதுகிறேன்.

    நாகர்கள் பற்றியும் எழுதுகிறேன். நீங்கள் கொடுத்துள்ளது பேத்தல் என்பது புரியம்.

  144. திரு மயில்வாகனன்!

    //தாங்கள் குறிப்பிட்டுள்ள அல்லோபநிஷத் 1:10 (அதர்வண வேதம்), சாம வேதம் – இந்திர அதிகாரம் 2 – மந்த்ரா 152 – புத்தகம் 2 – செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை, என்பதெல்லாம் எந்த வெளியீட்டில் உள்ளன? தெரியப் படுத்துங்கள்.//

    ஜாகிர் நாயக்கின் புத்தகத்திலிருந்து எடுத்தது அது. அது அல்லாமல் முழுவதுமாக டவுன்லோட் செய்ய கீழே நான் கொடுத்துள்ள தளத்திற்க்குச் செல்லுங்கள். இதை நான் ஒரு தகவலுக்காக திரு களிமிகு கணபதியின் பின்னூட்டத்திற்காக பவிஷ்ய புராணத்தைக் குறிப்பிட்டேன். குர்ஆனை நிரூபிக்க வேறு பல ஆதாரங்கள் முஸ்லிம்களிடம் உண்டு. முந்தய வேதங்களில் இந்த செய்திகள் இருந்ததால்தான் புராணங்களிலும் அது பற்றிய செய்திகள் காணக்கிடைக்கிறது. எழுதுபவரின் மன நிலையைப் பொறுத்து புராணங்களின் கதையும் மாறும். எனவே இதை தகவலுக்காகத்தான் குறிப்பிட்டேன்.

    இந்து வேதங்களின் மூலப்பிரதி நம்மிடம் கைவசம் இல்லாததும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு பெறும் தடங்கலாக உள்ளது. தெரிந்தே பலர் அதனை அழித்து விட்டனர்.

    11.2 ThePrediction of Islam
    [From thethird part of thePratisarga Parva.]Shri Suta Gosvamisaid: In thedynasty of kingShalivahana,there were tenkings who went tothe heavenlyplanets afterruling for over500 years. Thengradually themorality declinedon the earth. Atthat timeBhojaraja was thetenth of the kingson the earth.When he saw thatthe moral law of conduct wasdeclining he wentto conquer all thedirections of hiscountry with ten-thousand soldierscommanded byKalidasa. Hecrossed the riverSindhu andconquered overthe gandharas,mlecchas, shakas,kasmiris, naravasand sathas. Hepunished themand collected alarge ammount of wealth. Then theking went alongwith
    Mahamada(Mohammad),the preceptor of mleccha-dharma,
    and hisfollowers to thegreat god, LordShiva, situated inthe desert. Hebathed Lord Shivawith Ganges

    water andworshipped him inhis mind withpancagavya (milk,ghee, yoghurt,cow dung, andcow urine) andsandalwoodpaste, etc. Afterhe offered someprayers andpleased him.SutaGoswami said:After hearing theking’s prayers,Lord Shiva said: Oking Bhojaraja,you should go tothe place calledMahakakshvara,that land is calledVahika and now isbeingcontaminated bythe mlecchas. Inthat terriblecountry there nolonger existsdharma. Therewas a mysticdemon named Tripura, whom Ihave alreadyburnt to ashes, hehas come againby the order of Bali. He has noorigin but heachieved abenediction fromme. His name isMahaoda and hisdeeds are likethat of a ghost. Therefore, O king,you should not goto this land of theevil ghost. By mymercy yourintelligence willbe purified.Hearing this theking came back tohis country……. That city is knownas their site of

    pilgrimage, aplace which was
    Madina
    or freefrom intoxication.Having a form of aghost (Bhuta), The symptoms of my followers willbe that they firstof all will
    cuttheir genitals
    ,have no shikha,but
    havingbeard
    …….Theref ore, they will beknown as
    musalman
    .Theintelligent king,Bhojarajestablished thelanguage of Sanskrit in threevarnas – thebrahmanas,kshatriyas andvaisyas – and forthe shudras heestablishedprakrita-bhasha,the ordinarylanguage spokenby common men.After ruling hiskingdom for 50years, he went tothe heavenlyplanet. The morallaws establishedby him werehonored even bythe demigods. The arya-varta,the pious land issituated betweenVindhyacala andHimacala or themountains knownas Vindhya andHimalaya. TheAryans residethere, but varna-sankaras resideon the lower partof Vindhya. Themusalman peoplewere kept on the

    other side of theriver Sindhu. Onthe island of Barbara, Tushaand many othersalso the followersof Isamsiha werealso situated asthey weremanaged by aking or demigods.

    பவிஷ்ய புராணத்தின் முழு பகுதியையும் டவுன்லோட் செய்ய இந்த தளத்துக்கு செல்லுங்கள். ஆங்கிலத்திலும் சமஸ்கிரதத்திலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

    https://www.scribd.com/doc/36063659/Bhavishya

  145. The compiler of the Puranas, Mahrishi Vyasa, is highly honored among the Hindus as a great rishi and learned person. He was a pious and God fearing man. He also wrote the Gita and the Maha Bharat. Among the eighteen volumes of the Puranas is one by the title ‘Bhavishya Puran,’ literally meaning future events. The Hindus regard it as the Word of God. The prophecy containing Prophet Muhammad by name is found in Prati Sarg Parv III: 3, 3, Verse 5.

    Before the English translation is presented, a note on the word Malechha that appears in the first part of verse 5 is in order. The word Malechha means a man belonging to a foreign country and speaking foreign language. This word is now used to degrade people meaning unclean or even worse. Its usage varies and depends on who is using it and for whom. Sir William Jones had great difficulty in recruiting a Pundit to teach him Sanskrit because he was considered unclean (Malechha). It was only after the direct intervention of Maharaja (King) Shiv Chandra that Pundit Ram Lochna agreed to teach him Sanskrit.

    It is not known when this word began to be used in the derogatory sense, whether before the advent of Prophet Muhammad (s), after the conversion of Hindu King Chakrawati Farmas (of Malabar, located on the southwest coast of India) to Islam during the lifetime of the Prophet, soon after the arrival of Muslims in India (711 CE) or sometime later. Mahrishi Vyasa, the compiler of the Puranas, has defined a wise Malechha as “a man of good actions, sharp intellect, spiritual eminence, and showing reverence to the deity (God).

    The translation of Verses 5-27 (Sanskrit text of the Puranas, Prati Sarg Parv III: 3, 3) is presented below from the work of Dr. Vidyarthi.

    “A malechha (belonging to a foreign country and speaking foreign language) spiritual teacher will appear with his companions. His name will be Mahamad. Raja (Bhoj) after giving this Mahadev Arab (of angelic disposition) a bath in the ‘Panchgavya’ and the Ganges water, (i.e. purging him of all sins) offered him the presents of his sincere devotion and showing him all reverence said, ‘I make obeisance to thee.’ ‘O Ye! the pride of mankind, the dweller in Arabia, Ye have collected a great force to kill the Devil and you yourself have been protected from the malechha opponents (idol worshipers, pagans).’ ‘O Ye! the image of the Most Pious God the biggest Lord, I am a slave to thee, take me as one lying on thy feet.’

    “The Malechhas have spoiled the well-known land of the Arabs. Arya Dharma is not to be found in that country. Before also there appeared a misguided fiend whom I had killed [note: e.g., Abraha Al-Ashram, the Abyssinian viceroy of Yemen, who attacked Mecca]; he has now again appeared being sent by a powerful enemy. To show these enemies the right path and to give them guidance the well-known Mahamad (Mohammad), who has been given by me the epithet of Brahma is busy in bringing the Pishachas to the right path. O Raja! You need not go to the land of the foolish Pishachas, you will be purified through my kindness even where you are. At night, he of the angelic disposition, the shrewd man, in the guise of a Pishacha said to Raja Bhoj, “O Raja! Your Arya Dharma has been made to prevail over all religions, but according to the commandments of ‘Ashwar Parmatma (God, Supreme Spirit), I shall enforce the strong creed of the meat-eaters. My follower will be a man circumcised, without a tail (on his head), keeping beard, creating a revolution, announcing call for prayer and will be eating all lawful things. He will eat all sorts of animals except swine. They will not seek purification from the holy shrubs, but will be purified through warfare. Because of their fighting the irreligious nations, they will be known as Musalmans (Muslims). I shall be the originator of this religion of the meat-eating nation.”

  146. @Sarang
    இயேசு கிறிஸ்து என்ற தேவ குமாரன் வானத்திலிருந்து வந்தார்.

    யூதர்கள் எகிப்திலிருந்து வந்தார்கள்

    முஹம்மத் இப்னு அப்துல்லா வானத்திலிருந்து வந்தார் மெக்காவிலிருந்து வந்தார் வசதிக்கு ஏற்றவாறு

    ஐரோப்பவிற்கு கிறிஸ்தவம் பாலைவன நாட்டிலிருந்து வந்தது

    பாகிஸ்தானுக்கு இஸ்லாம் அராபியாவிலிருந்து வந்தது

    U forgot one line

    HINDUISM(Iam meaning hinduism which needs prayer in sanskrit) came from central ASIA

    I never said Christianity or Islam didnt come from outside of present day INDIA, Iam just trying to say even HINDUISM(Iam saying the HINDUISM which requires prayers in sanskrit) also came from outside present day TAMILNADU.. My question is did Sanskrit evolved in present day INDIA or NOT …

    Instead of answering my question u r trying to prove ur humor skills…

    இயேசு கிறிஸ்து என்ற தேவ குமாரன் வானத்திலிருந்து வந்தார்.

    யூதர்கள் எகிப்திலிருந்து வந்தார்கள்

    முஹம்மத் இப்னு அப்துல்லா வானத்திலிருந்து வந்தார் மெக்காவிலிருந்து வந்தார் வசதிக்கு ஏற்றவாறு

    ஐரோப்பவிற்கு கிறிஸ்தவம் பாலைவன நாட்டிலிருந்து வந்தது

    பாகிஸ்தானுக்கு இஸ்லாம் அராபியாவிலிருந்து வந்தது

    U forgot one line

    HINDUISM(Iam meaning hinduism which needs prayer in sanskrit) came from central ASIA

  147. //why Tamilian not being hindus. Tamilans are backbone of Hindu religion. Christianity and Islam is only foreign religions. Mind it. Sanskrit is common language including Tamil Nadu even upto 18th centuary CE. Mind it.//

    I do agree Islam and Christianity came from outside and also HINDUISM(Which needs prayer in SANSKRIT) also came from outside only….. The only difference is HINDUISM(Which needs prayer in SANSKRIT) intruded Tamil Nadu earlier to other religions

  148. திரு பிரபு!

    //பேரிச்சம் மரங்களாய் நட்டால் இந்த இந்திய மண் பாலைவனமாகும் என்பது தான்.
    இந்த புரிதல் கூட இல்லாமல் தானியங்கள், பழம், பூ அனைத்தும் பேரிச்சம் பழத்தை போல் வயத்துக்கு தான் போகுது அதனால் பேரிச்சம் பழம் மட்டும் சாப்பிடுங்கன்னு அல்லது எல்லாம் பேரிச்சம் பழம் தான்னு. விவாதிப்பதில் அர்த்தமில்லை.//

    ஒரு கிலோ விலையுயர்ந்த ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை பழங்களை ஒருவன் சாப்பிடுவதை விட விலை குறைந்த ஒரு பேரித்தம் பழத்தை ஒருவன் உட்கொண்டால் முன்னால் சொன்ன பழங்களை விட அதிக இரும்பு சத்தை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். சந்தேகம் இருநதால் மருத்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்.

    இதற்காக நம் நாட்டில் பேரித்தம் பழம் பயிரிட தேவையில்லை. இறக்குமதி செய்து கொள்ளலாம்.:-)

  149. சுவனப்ரியன்

    //
    ஜாகிர் நாயக்கின் புத்தகத்திலிருந்து எடுத்தது அது.
    //

    இது ஒன்றே போதும் 🙂

    கந்தர்வன் அதே பவிஷ்யத் புராணத்திலிருந்து [..] ஒரு காட்டுமிராண்டி என்றுள்ளதை காட்டி உள்ளார். என்னே தீர்க்க தரிசனம்

    பவிஷ்யத் புராணத்தில் உள்ள பிரதி சரக பர்வம் என்பது டுபாகூர் என்பது எல்லோரும் அறிந்ததே. இதை வைத்துக் கொண்டு ஜாகிர் நாக் போன்ற கேணயர்கள் புத்தகம் எழுதுவார்கள். அதை படிக்க ஒரு பில்லியன் பேரால் தான் முடியும்.

    உடனே பாருங்கள் நீங்கள் புராணத்தை பாதுகாத்த அழகை என்று கேனத்தனமாக குதிக்க வேண்டாம். சுவனப்ரியன் கூட பவிஷ்யத் புராணத்தில் ஒரு சுலோகம் சேர்க்கலாம் அதை நெட்டில் போடலாம் என்ன அதை நம்ப ஒரு பில்லியன் பேர் இருப்பார்கள் அவ்வளவே. அது உண்மையாகாது.

    இரண்டு பிரசித்தி பெற்ற போஜ ராஜாக்கள் இருந்தனர். காளிதாசரின் காலத்தில் இருந்தவர். காளிடாசிரின் காலம் நான்காம் நூற்றாண்டு (முஹம்மத் இப்னு அப்துல்லாவிற்கு) ரெம்ப முன்னாடி. இன்னொருவர் பதினோராம் நூற்றாண்டை சேர்ந்தவர். [..] குதிரையில ஜோய்ங்குன்னு பல வருடங்களுக்கு அப்புறம்.

    எப்படி போஜ ராஜாவும் நம்ம [..]ம் கான்பிரன்ஸ் கால் போட்டு பேசினார்கள் என்று தெரியவில்லை. இது சம்மந்தமாக அல்லா ஒரு வஹியை கூட இறக்கவில்லையே. ஒரு ஹதீத்து கூடா இல்லையே. [..] நைட்டு யார் யார் வீட்டுகெல்லாம் போனார், [..] எப்படி உச்சா போனார் என்றெல்லாம் விலாவரியா விவரிக்கும் ஹதீத்துக்கள் இதை விட்டு விட்டது மிக தர்ம சங்கடமாக உள்ளது.

    [Edited and Published]

  150. மதமல்ல மார்க்க சகோ சுவனப்ரியன்,

    ஏன் ஹதீத்துக்கள் இல்லை என்று மார்க்க அறிந்ஞர்களை (தௌஹீத் அன்னான் இத்யாதிகளை) கேட்டு சொல்வீர்களா

    பலமான ஹதீத் இல்லாட்டி கூட பரவா இல்லை பலஹீனமான ஹதீத் கூட இல்லையே. அய்யோட போச்சே.

    உங்களுக்கு உண்மையிலயே ஏதாவது இருக்கும் என்று தோணினால் இனிமேல் ஜாகிர் நாயக் போன்ற கிறுக்கர்களின் புத்தகத்தை படிப்பதை நீங்கள் நிறுத்துவீர்கள் என்று எதிர் பார்க்கலாம் (என்னால் முடிந்த வரை நேராக சொல்லாமல் சொல்லிவிட்டேன்) .

  151. ஜெனில்,

    \\The only difference is HINDUISM(Which needs prayer in SANSKRIT) intruded Tamil Nadu earlier to other religions\\

    இது போன்ற ஒரு விஷயம் புதிதான சொல்லப்படும் ஒன்று அல்ல. செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் பூர்வ குடிமக்களையும் இவ்வாறு சொல்லி அழித்தார்கள். நீங்கள் எங்களுக்கு சற்று முன்பு தான் இங்கு வந்து இருக்கிறீர்கள். அவ்வளவு தானே தவிர நீங்களும் அமெரிக்காவிற்கு வந்தேரிகள் தான் என்று சொன்னார்கள். அதையே உல்டாவாக இந்தியாவில் அதாவது ஹிந்துகளை சொல்கிறார்கள்.

    அதையே தான் இங்கும் செய்கிறார்கள்.

    இது மட்டுமா? இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். தென் அமெரிக்காவில் தாம்ஸ் தான் சென்று மாயன் மக்களுக்கு விஞ்ஞானத்தை போதித்தார் என்று ஊறுகாய் போட்டு மதம் மாற்றினார்கள். அதே பொய்யை இங்கும் சொல்லி திருவள்ளுவருக்கு திருக்குறளை சொல்லி கொடுத்தார் என்று விஷத்தை கக்கு கிறார்கள்.

    \\HINDUISM(Which needs prayer in SANSKRIT)\\

    எந்த முட்டாள் சொன்னான். ஹிந்து கடவுள்களை வணங்க சம்ஸ்கிரிதம் தான் அவசியம் என்று. தேவாரமும் பாசுரங்களும் பிறந்த பூமி இது. இப்படி லூசு தனமாக பேசி ஆப்பிரகாமியர்களோடு ஹிந்து மதத்தை ஒப்பிட்டு உங்கள் மூதாதையர்களை அவமானப்படுத்தாதீர்கள்.

    அது என்ன சென்ரல் ஆசியா? ஆதாரம் இருக்கிறதா? அது சரி பைபில் மற்றும் குரானில் பாலைவன பகுதிகள் மற்றும் அவை சார்ந்த இயற்கை பற்றி குறிப்புகள் இருக்கின்றன. அதனால் அவை வெளி நாட்டு மதம் என்று தெளிவாக தெரிகிறது. எந்த மத்திய ஆசியா இடத்தை பற்றி ஹிந்து வேதங்களிலோ அல்லது புராணங்களிலோ உள்ளது.

    உண்மையில் ஐரோப்பிய வெள்ளைகாரர்கள் புத்திசாலிதான். நம்ம ஊரு காரங்கள வைச்சே நமக்கு எதிராக எழுத வைத்து விட்டார்களே!!!!

  152. @ சுவனபிரியன்,

    உங்களுடைய கருத்தை முழுமையாக படித்தேன். இது உங்களுடைய ஹிந்துமத புரிதலின் தவறு. வேதங்களில் வள்ளலார் பற்றியோ அல்லது ராகவேந்திரரை பற்றி கூட தான் இல்லை. அதனால் அவர்கள் எல்லாம் தெய்வம் இல்லை என்று சொல்வீர்களா?

    அடுத்து வேதங்களை ஆப்பிரகாமிய இறையியல் புத்தகத்துடன் ஒப்பிடுவது என்பது பீஸாவை தோசை கல்லில் செய்வது போன்றது.

    வேதங்கள் ஹிந்து மதத்தின் ஒரு முக்கிய மூல நூல் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அது மட்டுமே மூலம் மற்றவை எல்லாம் ஏற்க மாட்டேன் என்று சொல்ல நாங்கள் ஒன்றும் மூலையை அடகு வைத்த காட்டுமிராண்டிகள் அல்லவே…

    ஒரே புத்தகத்தில் எல்லாமே இருக்கிறது என்று நாங்கள் ஊறுகாய் போடுவது கிடையாது. அடுத்து விக்கிபீடியாவை கொடுத்த நீங்கள் அது வீக்கிக்கு எங்கு இருந்து அந்த தகவல் எடுக்கப்பட்டது என்ற தகவலை கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். நீங்கள் கொடுத்த கலையரசனின் வலைதளம். அந்த வலை தளத்தை நான் பல நாட்களாக படித்து கொண்டு தான் இருக்கிறேன். அவர் கட்டுரைகளை கவனமாக படித்தால் அதில் கிறித்துவ ஆப்பிரகாமிய கபோதிகளின் சதியும், முருகனை புத்த மதத்தோடு இணைத்து அதன் மூலம் தமிழரின் பாரம்பரிய மதத்தை இழிவு படுத்து அவர்களை குழப்பி பிறகு அவர்களை கிறித்துவ பரிசுத்த ஆவிக்கு விற்கும் ஈன செயலை செய்வது தெளிவாக தெரியும். இது உங்களை போன்ற இஸ்லாமிய அறிவு ஜீவிகளுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் தான். இது உங்களுக்கு தெரியாதா? இல்லை எதிரிக்கு எதிரி நண்பன் என்று அதை பற்றீ விமர்சனம் செய்யவில்லையா? அவர் தனது கட்டுரையில் எந்த இடத்திலாவது reference எதாவது கொடுத்து இருக்கிறார்களா? நான் கூட தான் எழுதுவேன். அரேபியர்களை முட்டாள் அவர்களின் உண்மையான மதத்தை அழித்து முகமது நபி என்ற இல்லாத ஒரு ஆளை செயற்கையாக உருவாக்கி வரலாற்று மோசடியை 6 ஆன் நூற்றாண்டில் கிறித்துவர்கள் உருவாக்கினர் என்று… இதை ஏற்று கொள்வீர்களா?

    அதை விட கொடுமை அகத்தியர் குள்ள மனிதராம். அதனால் அவர் சீனாவில் இருந்து வந்தார் என்று.. சரியான லூசு… ஜப்பானியர்கள் பொதுவாக குள்ளமாக இருப்பார்கள். சீனாவில் பெரும்பாலானவர்கள் உயரமானவர்கள், ஒரு அகத்தியர் படத்தை காட்டி அதை நன்றாக உற்று பாருங்கள். அது சீனர்களை போன்றே இருக்கும் என்று சொல்கிறான் இந்த முட்டாள். அது சரி நமது நாட்டில் எத்தனை இலடசம் மக்கள் குள்ளமாக உள்ளனர். இப்படி லூசுதனமாக உளறுவது கிறித்துவர்கள் தான் செய்வார்கள். இஸ்லாமியர்கள் இது போன்று செய்யமாட்டார்கள் என்று இருந்தேன். கிறித்துவ கபோதிகளுக்கு சற்றும் குறைந்தவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்பதை சமீபத்திய பல நிகழ்வுகள் எடுத்து உரைக்கின்றன.

    அடுத்தவனை அழிக்க நினைக்கு எவனும் வாழ்ந்த தாக சரித்திரம் இல்லை. கிறித்துவமும் இஸ்லாமும் கண்டிப்பாக ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு உலகை நாசம் செய்ய தான் போகிறார்கள். அப்பொழுது தெரியும் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று?

  153. \\இந்து வேதங்களின் மூலப்பிரதி நம்மிடம் கைவசம் இல்லாததும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு பெறும் தடங்கலாக உள்ளது. தெரிந்தே பலர் அதனை அழித்து விட்டனர்.\\

    அதிபுத்திசாலி தனமான பேச்சு. இஸ்லாமிய மதம் உருவாகி ஒரு 1500 வருடங்கள் கூட இருக்காது. ஆனால் சனாதன ஹிந்து மதமோ காலம் கடந்து நிற்கிறது. அது மட்டும் இன்றி எந்த ஒரு இயற்கையான பொருளும் மறு சுழற்சிக்கு உட்பட்டு தான் ஆகிறது. செப்பு பட்டையங்கள் மற்றும் கல்வெட்டுகளை தவிர மற்ற அனைத்துமே மக்கவிட கூடியவை… இப்படி உளறுவதை விட்டு விட்டு எதையாவது உருப்படியாக எழுதுங்கள்…

    அடுத்தவர் எழுதியதை காப்பி அடிக்காமல் நீங்கள் எழுதிய விசயத்தை குறைந்தது ஒரு நான்கு வரிகளையாவது சம்ஸ்கிரிததில் எழுதி அதன் தமிழ் அர்த்தை கொடுங்கள் பிறகு அதை நம்புவதா வேண்டாம என்று யோசிக்கலாம்.

    மீண்டும் சொல்கிறேன். நீங்கள் சொன்ன ஒரு வரியையாவது சம்ஸ்கிரிததில் எழுதி அதனை தமிழில் மொழி பெயர்த்து இங்கு எழுதுங்கள்

  154. @ suvanapiriyan

    //ஒரு கிலோ விலையுயர்ந்த ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை பழங்களை ஒருவன் சாப்பிடுவதை விட விலை குறைந்த ஒரு பேரித்தம் பழத்தை ஒருவன் உட்கொண்டால் முன்னால் சொன்ன பழங்களை விட அதிக இரும்பு சத்தை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். சந்தேகம் இருநதால் மருத்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்.

    இதற்காக நம் நாட்டில் பேரித்தம் பழம் பயிரிட தேவையில்லை. இறக்குமதி செய்து கொள்ளலாம்.:-) //

    வாழ்வதற்கு வெறும் இரும்பு சத்து மட்டும் போதாது நீங்களும் சந்தேகம் இருநதால் மருத்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்.

    எனது முந்தைய மறுமொழியில் இருந்து .
    //அப்படியும் அவசியம் எனில் உங்கள் தோட்டத்தில் ஒரு ஓரத்தில் வைத்து கொள்ளுங்கள் //

    என் நாட்டில் எல்லாம் வகை வகையாய் கிடைக்க நான் எதற்காக இறக்குமதி செய்யவேண்டும்? :-))

  155. தமிழ் ஹிந்து தள நிர்வாகிகளுக்கு ஓர் வேண்டுகோள்
    தயவு செய்து பழைய ஸ்டைலில் உள்ளது போல் மாற்றினால் பாடிய வசதியாக இருக்கும். இப்போது மறுமொழிகளை எளிதாக படிக்கச் முடியவில்லை.,நிறைய நேரம் ஆகிறது.

  156. திரு சாரங்கன்!

    // நீங்கள் அல்லாவின் காரெக்டரையே புரிஞ்சிக்காம எழுதுகிறீர்கள். குரான் ஹிந்துத்வத்தின் அந்தர் பாகம் என்றால் நான் இன்றே ஹிந்டுத்த்வத்திளிருந்து வெளியேறிவிடுவேன்//

    அப்படி எல்லாம் கோபப்பட்டு எதையும் செஞ்சுடாதீங்க. 🙂
    கண்ணதாசன் ‘சேரமான் காதலி’ என்ற தொடரை கல்கியில் எழுதியதை அனைவரும் படித்திருப்போம். இவர் இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியராக பதியப்படுகிறார். இது அந்த கதையிலும் வரும். இவரது அளுகையில் கேரளா இருந்தபோது தனது ஆஸ்தான குருமார்கள் முகமது நபியைப் பற்றி புராணங்களிலும் வேதங்களிலும் உள்ள மேற்கோள்களை காட்டுகின்றனர். அந்த நேரத்தில் அரபு வணிகக் கூட்டமும் சேரமான் பெருமாளை சந்தித்து முகமது நபி வருகையை உறுதிப் படுத்துகின்றனர். உடன் தனது ஆட்சி அதிகாரத்தை தனது வாரிசுகளிடம் கொடுத்து விட்டு முகமது நபியை காண மெக்கா புறப்படுகிறார். அங்கு அவருக்கு தாஜூதீன் என்ற பெயரையும் முகமது நபி சூட்டுகிறார். அதன் பிறகு இந்தியா திரும்பும் வழியில் ஓமனில் நோய்வாய்ப்படுகிறார். தனது கையால் ‘இந்தியாவில் மசூதிகள் கட்டி ஓரிறை பிரசாரத்தை துவக்குங்கள்’ என்ற கடிதத்தை மாலிக் இப்னு தீனார் என்பவரிடம் கொடுத்தனுப்புகிறார். இதை ஏற்றுக் கொண்ட சேரமான் பெருமாளின் வாரிசுகள் 14 மசூதிகளை அந்த நேரத்தில் கேரளாவில் கட்டுகின்றனர்.

    நோய் முற்றவே சேரமான் பெருமாள் ஓமனிலேயே மரணமடைகிறார். அவரது அடக்கஸ்தலம் இன்றும் ஓமனில் உள்ளது.

    நான் கேட்பது கால்டுவெல் வந்துதான் வேதங்களையும் புராணங்களையும் மாற்றி விட்டதாக சொல்கிறீர்கள். கால்டுவெல்லின் காலம் 1789. ஆனால் சேரமான் பெருமாள் காலமோ 1400 வருடங்களுக்கு முந்தயது. அந்த நேரத்திலேயே வேதங்களை பார்த்து முகமது நபியின் வருகையை எவ்வாறு அந்த வேதம் படித்த பண்டிதர்களால் சொல்ல முடிந்தது.

    சேரமான் பெருமாளால் கட்டப்பட்ட முதல் பள்ளி இன்றும் கேரளாவில் உள்ளது. இது அரசாங்கத்தால் ஆவணமாக பாதுகாக்கப்பட்டும் வருகிறது.

    https://ramanans.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

    https://www.iosworld.org/interview_cheramul.htm

    https://www.indiatraveltimes.com/travelogue/mosque.html

    https://www.youtube.com/watch?v=BU2duvVicuI

  157. சுவனப்ரியன்,

    [..] கொட்டினார் என்ற ஒரே காரணத்திற்காக பேரீச்சம் பழத்திற்கு லா பாயின்ட் சொல்லி வாதிட்டு சுவனத்தில் என்பது வகை பழங்களை சுவைக்க துடித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்

    பேரீச்சம் பழத்தை விட ரெம்ப குறைந்த விலையில் பெரிய நெல்லிக்காய் ரோட்டில் கொட்டிக் கிடக்கிறது. அதை சாப்பிட்டால் எல்லா சத்தும் கிடைக்கும் என்று மருத்துவர் அல்ல சாதாரண கிராமத்தானும் கூறுவானே.

    சிந்திக்கமாட்டீர்களா. இதில் நிச்சயமாக நிறைய அத்தாட்சி உண்டு.

    அப்புறம் போஜ ராஜ [..] கான்பிரன்ஸ் கால் பற்றி வஹியோ ஹதீசோ இருந்தால் சொல்லுங்கள். கார்பன் கூட்டாளியை எதுக்கும் கேட்டுப் பாருங்கள் அவர் தான் குரானை நிறைய தோண்டி புதையல் எடுத்துள்ளார்.

    அல்லாவிடம் கேட்டு பயனில்லை. நீங்கள் கேட்டதை அவர் கேட்கும் முன் (கீ பீ 3012) நான் பூடுவேன். இப்பவே வயசாச்சு.

    [Edited and Published]

  158. /////முன்னால் சொன்ன பழங்களை விட அதிக இரும்பு சத்தை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். சந்தேகம் இருநதால் மருத்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்.//////
    அதை விட எளிதாக இலவசமாகவே வீட்டு தோட்டத்தில் உள்ள புளிச்ச் கீரை மற்றும்,முருங்கை கீரையில் பலமடங்கு பெறலாம்.

  159. ///எந்த முட்டாள் சொன்னான். ஹிந்து கடவுள்களை வணங்க சம்ஸ்கிரிதம் தான் அவசியம் என்று. தேவாரமும் பாசுரங்களும் பிறந்த பூமி இது////
    மயில்வாகனன் சார்,
    இதனை பலமுறை இங்கு பலர் (நான் உட்பட) எடுத்து கூறி விட்டனர், அதனை மட்டும் இவர்கள் போன்ற அறிவு ஜீவிகள் படிப்பதே இல்லை.

  160. சுவனபிரியன்

    முன்னோர்கள் கடவுள் மதத்திலிருந்து விலக்கப்பட்டு புத்தக மதத்திற்கு மாறிட்டதால் நீங்கள் முகமதியர். ஆனால் பைபிளை பின்பற்றி புனையப்பட்டுள்ள குரானைப் பற்றி என் கேள்விகளுக்கு பதிலே இல்லை.

    கொடுங்கல்லுர் பகுதியில் நிகழ்ந்த அகழ்வாய்வு முடிவுகள், 8ம் நுற்றாண்டிற்குப்பின் தான் மனிதகுலம் அங்கு குடியேரியது, வெறும் ஊகங்களை பரப்பப்பட்ட செவெளிக்கதை என்னும் பொய்களை லிங்க் கொடுப்பதால் என்ன பயன்.

    தோமோ வந்து இறங்கியதான கொடுங்கல்லூர் அகழ்வாய்வுகள் முடிவுகள்
    கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது….
    கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.
    கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுஅள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
    கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..
    திருவஞ்சிக்களம் இங்கே ந்டந்த அகழ்வாய்வு கலவையான(M) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.
    திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை.
    பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது.
    பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள்
    and this article was earlier published in Araichi, 170, under the Heading “Archaeological Investigations in Kerala”

    பைபிளில் மேசியா-கிறிஸ்து-இறுதித் தூதர் என யாரும் வரவேண்டியதில்லை என இன்று நடுநிலை பைபிளியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், உலகம் அழியும் கடைசி சந்ததியில் வந்து எபிரேயர்களை நேரடியாக சொர்கத்துக்கு கூட்டி செல்வார் என்பது எழுந்த மூட நம்பிக்கை மேசியா-இறுதிதூதர் கட்டுக்கதை நம்பிக்கைகள்

    ஹிந்துமதம் பற்றி சாகீர் நாயக்கை பின்பற்றுவதாக சொல்வதைல் உங்கள் தரம்(?) தெரிகிறது.
    Muhammad is not predicted in Hindu scriptures- By S. Prasadh
    https://newindian.activeboard.com/t36847612/muslim-world-happeinings/?sort=oldestFirst&page=7
    என் முன் பதிவிற்கு பதிலே தரவில்லையே-பைந்தமிழன் on February 14, 2012 at 9:27 am
    பைபிள் எனப்படும் விவிலியம் ஒரு இலக்கிய நிகழ்ந்த வரலாற்று -அரசியல் நூல் எனவே கூற முடியுமே அன்றி அவற்றில் இறையியல் உள்ளது என்பது மிக அரிது. குரானும் அப்படியே எனச் சொல்லவும் தெளிவாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

    பைபிள் தோண்டப்படுகிறது- இஸ்ரேல் டெல்அவிவ் பல்கலைக்கழக புதைபொருளாய்வுத் தலைவர் முழுநூலின் இணைப்பு.
    https://www.mediafire.com/download.php?y177tc2oa3tegam
    இவர் பல ஆய்வாளர்கள் முன்பு கூறியவற்றை தெளிவாகத் தருகிறார்.

    எபிரேயர்கள் என்பவர்கள் இஸ்ரேலில் தொடர்ந்து வாழ்ந்துவரும் குடியே. பைபிள் விடும் காணான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, அதனை பாபிலோனைச் சேர்ந்த நபரான ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து இஸ்ரேலின் ஆட்சியுரிமை அவர் சந்ததிகளுக்கு என்று சொன்னார் எல்லாம் கட்டுக்கதை.
    எபிரேயர்கள் எகிப்து சென்றதாகவும், மீண்டும் வரும்போது யாத்திரையாகமம் மோசஸ் அல்லது மூசா நபி தலைமையில் 20 லட்சம் எபிரேயர்கள் அதிகமானோர் 40 வருடம் வந்த்தாகவும் கதை பண்ணுகிறது, வரும் வழியில் செங்கடல் இரண்டாகப் பிழந்து வழி விட்டதாகவும் கதை. இவை அனைத்துமே கட்டுக்கதை. புதைபொருள் ஆய்வுகள் எகிப்தில் எபிரேயர்கள் இருந்ததாகவோ, யாத்திரை நடந்ததான எவ்வித ஆதாரமும் இல்லை என தெளிவாக காட்டுகிறனர்.
    ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள். ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.
    https://wp.me/PxRSh-7E

    R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”
    இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.
    New Catholic Encyclopedia Vol-5 page-745
    “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus.
    The Hebrew term Yamsup signifies Reed sea. ”
    New Catholic Encyclopedia Vol-5 page-745
    மோசஸ் அல்லது மூசா நபி எழுதியதான தௌரத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள் தவறான மொழி பெயர்ப்பு காரணமாம்-அமெர்க்க கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது. இது நியாயப்பிராமாணங்கள் அல்லது புனையப் பட்டதே பொ.மு. 300-200 வாக்கில் என்பதை நிருபிக்கும்.

    ஒட்டகங்கள் முதலில் மனிதர்களால் பழக்கப்பட்டு பயன் படுத்தப் பட்டது BCE-1000 வாக்கிலே; ஆனால் ஆபிரஹாம் வீட்டில் ஒட்டகங்கள் இருந்ததாகக் கதை கட்டுகிறது. பரம்பரைப் பட்டியல்களில் பாபிலோனிய/கிரேக்க பின்பற்றுதல்கள் பைபிள் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
    Sharjah’s 3,000-year-old clue to the first domesticated camels
    https://newindian.activeboard.com/t36782212/semmozhi-tamil-ancient-archaeology-findings/?page=5
    மோசஸ் அல்லது மூசா நபி பைபிளில் எதையும் எழுதவில்லை. தாவீது எதையும் எழுதவில்லை. யேசுவும் எழுதவில்லை. பைபிளின் நபி என்பவர் குறி சொல்வது போல் சொல்பவர்கள், குடித்துவிட்டு நிர்வாணமாக ஆடி குறி சொல்வதை பைபிள் சொல்கிறது. இவர்கள் வெறியில் பேசினார்களெ தவிர எந்த வார்த்தையையும் கடவுளிடமிருந்து பெறவில்லை.
    சுவனபிரியன்-//பைபிளுக்கும் குர்ஆனுக்கும் பெயர்களிலும் இடங்களிலும் பல ஒற்றுமைகள் உள்ளதை நான் ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால் அதை ஒட்டி வரக் கூடிய சம்பவங்கள் அனைத்தும் இரு வெதங்களுக்கும் நிறைய மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. ஏசுவின் இறப்பிலேயே இரு வேதங்களுக்கும் நிறைய முரண்பாடு உள்ளது. இரு வேதங்களையும் நன்கு படித்தவர் இந்த வித்தியாசத்தை இலகுவில் உணர முடியும்.
    திருத்தப்படாத பைபிளும் இறை வேதம்தானே! அவரது சீடர்களால் அந்த வேதம் திருத்தப்பட்டதால்தான் தற்போது அதன் பொலிவிழந்து காணப்படுகிறது.//
    //super thinker on February 13, 2012 at 7:35 pm
    Here Historical documents does not mean world creation and ideas about GOD in bible. Rather,the history of jews, how they came from Egypt to Isreal and Invansion of various kings in Isreal.//
    Please read above that Egypt Israel stories are not history at all.
    குரான் யாத்திரையை சொல்கிறது, மோசஸை சொல்கிறது. செங்கடல் வழிவிட்டதை 80 வசங்களில் பேசுகிறது. யாத்திரையின் போது தௌரத் வந்ததாகப் பேசுகிறது.
    நீங்களே சொல்லுங்கள் இப்படி புனைந்த கதாசிரியர் யாராக இருக்க முடியும் திரு.சுவனபிரியன், அவர்களே

  161. உண்மையில் தமிழை அவர்கள் திட்டினார்கள் இவர்கள் திட்டினார்கள் என்று திரும்ப திரும்ப இங்கே உளறுபவர்கள் உண்மையில் தாங்கள் தான் பெரும் தமிழ் வெறுப்பாளர்கள்.

    சமஸ்க்ரிததுடன் பிறந்து சிவபெருமானால் அகத்தியரிடம் வழங்கப்பட்ட மொழியை காட்டுமிராண்டி பாஷை என்ற மனிதரின் சீடர்கள் மற்றும் சந்தர்ப்பவாத நண்பர்கள் வேறெப்படி இருப்பார்கள்?
    வீட்டில் தெலுங்கு, தங்கள் சொந்த தொலைக்காட்சியில் ஆங்கிலம் என்று ஆட்டம் போடும் தற்கால தலைவர்கள் வேறு.
    இவர்களுக்கு தமிழைத்திட்டுவதில் அலாதி ஆசை. அதற்க்கு நீச பாஷை என்று யாரோ சொன்னார்கள் என்ற பொய் சொல்லி ஆசையைதீர்த்துக் கொள்கிறார்கள். நல்ல இது ஒரு அரதப் பழைய டெக்னிக் . மாத்தி யோசிங்கப்பா கொஞ்சம்.

  162. /////நான் கேட்பது கால்டுவெல் வந்துதான் வேதங்களையும் புராணங்களையும் மாற்றி விட்டதாக சொல்கிறீர்கள். கால்டுவெல்லின் காலம் 1789. ஆனால் சேரமான் பெருமாள் காலமோ 1400 வருடங்களுக்கு முந்தயது. அந்த நேரத்திலேயே வேதங்களை பார்த்து முகமது நபியின் வருகையை எவ்வாறு அந்த வேதம் படித்த பண்டிதர்களால் சொல்ல முடிந்தது.//////
    ஏன் சார் கிருஷ்ண பகவானே முகமதுவின் வருகையை கூறி உள்ளார் என்று கூறுங்களேன். இன்னும் சில பத்து ஆண்டுகளில் அதற்கும் ஏற்பாடு செய்வீர்கள்.
    ஏனென்றால் அல் தக்கியா இப்படித்தான் செய்ய சொல்கிறது. போலும்
    உங்களால் முடியாதா என்ன? திருமூலரையும் முகமதையும் ஒப்பிட்டு நீங்கள் செய்த தாவாவை படித்து புல்லரித்து ஒரு மும்மின் நித்தியாவுடன் முகமதை ஒப்பிட்டு தன பணியை செய்திருக்கிறார், அவர் கட்டுரையை நீங்கள் படித்து விட்டீர்களா?
    திரு மூலரும் வேத புராண இதிகாசங்களும் உங்களுக்கு தாவா பணி செய்யும் அளவு வளைத்து என்னமாய் அல் தக்கியா செய்கிறீர்கள். உங்களுக்கு சேரமான் எல்லாம் எம்மாத்திரம் ஜுஜுபி.
    அடுத்து விவேகானந்தர் போன்ற மகான்களையும் இஸ்லாத்தை தழுவியவர்கள் பட்டியலில் சேர்த்து விடுங்கள். நல்ல அறுவடை செய்யலாம். .

  163. திரு சாரங் மற்றும் திரு திராவிடன் அவர்களுக்கு மிக்க நன்றி,

    திரு சுவனப்ரியன் போன்றவர்களுக்கு நமது அருகில் இருபவைகளின் அருமை தெரியாது தெரிந்தாலும் ஏற்றுகொள்ள மாட்டார்கள். பாலைவன பேரிச்சம் பழம் மரம் போன்றவை இந்த மண்ணிற்கு வந்தால் இந்த பாரத தேசமும் பாலைவனமாகும் என்று தெரிந்தாலும் அவர்களுக்கு தேவை எல்லாம் அது மட்டும் தான்.

    இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பொழுது அவர்கள் பிரித்த- கராச்சி போன்றவை மிகவும் வளமான பகுதி ஆனால் இன்று ???. அவர்களை தாங்கும் இந்த இந்திய மண் அதன் பண்பாடு, கலாச்சாரம் எத்தனையோ வேற்றுமைகள் இருந்தும் அமைதியாக வாழும் இந்த நாடு அதன் மகத்துவம் தெரியாமல். அவர்கள் மாற்ற நினைப்பது சோமாலியாவை போல், பாகிஸ்தானை போல். அவர்களுக்கு முக்கியம் அவர்கள் நபியும் அந்த புத்தகமும் தான். இங்கு இருக்கும் சொர்க்கம் தெரியாமல் யாரோ சொன்ன சொர்க்கத்திற்காக அறிவை அடகு வைத்து விட்டு இங்கு விவாதம் என்னும் பேரில் எதனுடனோ எதை எதையோ ஒப்பிட்டு கொண்டிருக்கிறார்.

    அவர் முடிவாக என்ன சொல்லவருகிறார் என்று கேட்டதற்கு இது வரை பதில் இல்லை. ஒரு தலைப்பில் விவாதிக்கும் பொழுது அதற்க்கு சரியான தெளிவான விளக்கம் கிடத்தாலும் அதை ஏற்காமல் அவர் சொல்வது மட்டும் தான் சரி என்ற முன்முடிவுடன்(அதுவும் அவர் சொன்னதாக இருக்காது யாரோ சொன்னதாக தான் இருக்கும்) வைத்துகொண்டு விவாதம் என்ற பெயரில் பேசுவதால் என்ன பயன்? இங்கு ஹிந்துவாக வாழும் நமக்கு நாம் ஹிந்துவாக வாழ்வதெப்படி என்று சொல்லிகொடுகிறார். சனாதன தர்மம் என்பது உணர்வின் வெளிபாடு அது அனைத்தையும் அரவணித்து செல்லும். மற்ற மதங்களை (போல்) பிரித்து பார்த்து ஒதுக்கி அழித்து செல்லாது.

    நன்றி..

  164. திருவாளர் சுவனப்ரியன் அவர்களே..!

    தாங்கள் ஒரு வலைத்தள இணைப்பையும் நூல் மூலத்தையும் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றிகள்.

    தங்கள் வரிகளிலேயே, ‘…ஒப்பிட்டுப் பார்க்க ‘ஹிந்து வேதங்கள்’ புழக்கத்தில் சரளமாக இல்லாத நிலையையும்’ ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். இந்த நிலையில், (‘ஹிந்து வேதம்’ என்று குறிப்பிடுவது சரியல்ல. அவை ‘வேதம்’ என்று குறிப்பிடப்படுவதுதான் சரி.) வேதங்களிலுள்ள உயர்வான கருத்துக்களை, இருட்டடிப்புச் செய்யாமல், திரிக்காமல், மக்களிடம் கொடுப்பது தான் சரியே அன்றி, ‘வேதத்தில், மொழியாலும் சமுதாயப் பார்வையாலும் தீங்கு நிறைந்திருக்கிறது’ என ‘அபாண்டம்’ பேசுவது தவிர்க்கப் படுவதுதானே நல்லது?

    திருக்குர் ஆனையோ விவிலியத்தையோ இன்று முழுமையாகப் (பெரும்பாலோர்) காண்கிறார்கள். அவற்றிலுள்ள கருத்துக்கள் எல்லோருக்கும் ஒப்புவதாகவோ அனைவரையும் இணைப்பதாகவோ இருப்பதைவிட ‘ஒரு தனி மனிதக் கூட்டத்தை, மொத்த மக்களினத்திலிருந்து பிரித்து, வைப்பதாக வெளிப்படுவதை’, ஹிந்துக்கள் ஏற்கவில்லை; மறுக்கிறார்கள். இவ்விரண்டு மறை நூல்களிலும், குறிப்பாக, குர் ஆனில், பிறரை வலியத் தாக்குவது குறித்துச் சொல்லியிருப்பதை, ஸ்வாமி தயானந்தரின் (ஆர்ய சமாஜம் கண்டவர்) படைப்புக்களின்மூலம் அறிதுள்ளேன். இன்றைய திருக்குர் ஆனிலிருந்து அத்தகைய வசனங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக உங்களால் கூற முடியுமா? அந்நூல்தான் முழுமையாகக் கிடைக்கிறதே?

    சிலர் உடனே பகவத் கீதை கூறும் போர் பற்றி அங்கலாய்க்கிறார்கள். அது போருக்கு வருபவனை எதிர்ப்பது பற்றிப் பேசுகிறது. ஆனால், குர் ஆன் ஒரு குறிப்பிட்ட கொள்கையை? ஏற்காதவரைக் கொலை செய்யத் தூண்டுகிறது. இவை இரண்டும் ஒரு தட்டில் வைத்துப் பார்க்கப் படுவது அறிவாகாது.

    ஒரு நூலில் நன்மையும் தீமையும் கலந்திருந்தாலும், நன்மையை உலகுக்குக் கொண்டு செல்வதுதான் சிறந்தது. அதுபோலவே (இந்திய) வேதங்களில் உலக ஒற்றுமை, உலகப் பொது நன்மை, உலக வாழ்க்கை சிறக்க உயர்ந்த வழிகள்… என இருக்கும் நன்மைகளை எடுத்துச் சொல்பவர்களிடம் போய், ‘வேதத்தில் பிரிவினை இருக்கிறது, அது மனிதர்களிடம் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கிறது’ என்றெல்லாம் சரடுகளை விடுபவர்கள், முழு வேதமும் அறிந்துதான் பேசுகிறார்களா என்ன? என்றுதான் நான் வினவுகிறேன். முதலில் முழுமையான் வேத நூல்களை மக்களிடம் அவரவர் தாய் மொழியில் மொழி பெயர்த்துச் சேர்த்துவிட்டுப் பிறகு விமர்சனம் செய்தால் ஓரளவு பொருத்தமாக இருக்கும்.

    நல்லதைப் பரப்ப வேதம் முழுதாகத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. கல்லாதவரும் நன்மைகளை நிறையச் செய்ய முடியும். ஆனால், தீமை என்று உணர்த்த விரும்புபவர், வேதத்தை முழுதாக அறிந்து சொல்ல வேண்டும். வெகு ஜனங்களிடம் இல்லாத் வேத நூல்கள் பற்றி ஏன் இட்டுக் கட்டி, ஆகாத் செய்திகளைப் பரப்ப வேண்டும்? ஏன் பயமுறுத்த வேண்டும்?

    வேதம் படித்து அல்லது ஓதப்படுவதைக் கேட்டு, இங்கு எந்தத் தமிழர் அதோகதிக்குச் சென்றுவிட்டார்? அதில் இல்லாத எந்த நன்மையை மற்ற மறை நூல்கள் சொல்லுகின்றன? (இங்கு வேதம் என்பதோடு எண்ணில்லாத தமிழ் மற்றும் மற்ற இந்திய மொழி நூல்களையும் சேர்த்துத்தான் குறிப்பிடுகிறேன்.) இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் மனிதனை நல்வழியில் வாழ வைக்கப் போதுமான செய்திகள் உள்ளன. இங்கு பிரத்யேகமாகத் தமிழ் மற்றும் சமஸ்க்ரிதம் ஆகிய இரண்டு பற்றி மட்டும் பேசுகிறோம். அவ்வளவே.

    இன்னொரு நண்பர் ‘ஜெனில்’ விவேகானந்தரையே வம்புக்கு இழுத்த முதல் (எனக்குத் தெரிந்து) நபர். அவர் எழுதியதைத் திரித்து, இவர் போக்குக்குப் பொருள் தந்து, ஆர்ய திராவிட (இல்லாத) இனப் பிரிவினைக்கு வலுச் சேர்க்கப் படாத பாடு படுகிறார்.

    விவேகானந்தர் எல்லா மக்களுக்கும் சமஸ்க்ரித்த அறிவை வழங்கச் சொன்னவர். இந்தியா நலம்பெற விரும்பியவர்களுள் அவர் முதன்மையானவர். சமஸ்க்ரிதம் கற்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்று அவர் சொன்னார். மக்கள் அம்மொழியைக் கற்றால், அது பற்றிப் பூச்சாண்டி காட்டுபவர்களின் ஜால வேலைகள் எடுபடாமல் போய், உண்மை விளங்கும் என்பதே அவருடைய நிலை. தமிழக (சென்னை) இளைஞர்களிடம் அளவு கடந்த நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர். இந்த நிலை தமிழுக்கு விரோதமானதல்ல. வேதங்கள் பற்றிய தவறான பிரச்சாரத்துக்கு முற்றுப் புள்ளியாகத் திகழும் நிலையே அது.

    “உதவி செய்ய விரும்புபவர்கள், கல்வி உள்ளிட்ட உலகத் தேவைகளைக் கொடுத்து இந்தியர்களுக்கு உதவினால் போதும். அவர்களுக்குத் தேவையான் ‘சமயம்’ அவர்களிடம் உள்ளது. அதை அவர்களுக்குப் பிறர் தரும் அளவுக்கு அவர்கள் ஏழைகள் இல்லை”, என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இன்றும், ஒரு ஹிந்துவாக, எங்களால் ‘பள்ளிகளுக்கும் தேவாலயங்களுக்கும்’ வர முடியும். ஆனால், ‘இங்கு வந்த பின் மற்ற இடங்களுக்குப் போகக் கூடாது’ என்று இவ்விரு மதங்களும் தடை சொல்கின்றனவே. அங்குதான் பிரிவினை வருகிறது. மாறாக, கிறிஸ்துவர், சிறப்பாக இஸ்லாமியர், ஒரு திருக்கோயிலுக்கு வருவது என்பது காணக் கண்கோடி வேண்டிய சமாசாரம்.

    ஒரு கிறிஸ்துவ நண்பர் விவிலிய வசனங்கள் கொண்ட, ஜீஸசின் படம் போட்ட பிரசுரங்கள், காலண்டர்கள்… ஆகியவற்றை ஒரு ஹிந்துவிடம் தருகிறார். தான் கொடுப்பதை மற்றவர் வாங்கிப் பயன்படுத்தவேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார். ஆனால், இதையே ஒரு முருகன் படமோ வேறு ஏதாவது திருவுருவங்களோ இடம்பெற்றுள்ள காலண்டர்களோ பிரசுரங்களோ ஜீஸசின் படத்தோடு படமாகக்கூட வைத்துக்கொள்ள அவர் மறுக்கிறார்.

    யார் செயலில் இணைப்பு உள்ளது? யார் செயலில் பிரிவினை உள்ளது? யார், யாருக்கு, ஆன்மீக அறிவு, உலக ஒற்றுமை… இன்ன பிறவற்றை எல்லாம் சொல்லித் தருவது? இது இந்தியச் சமயத்தினால் மட்டுமே சாத்தியமாகும். என்றைக்கு உலகின் எல்லா மக்களும் இஸ்லாமியராவது அல்லது என்றைக்கு அனைவரும் கிறிஸ்துவராவது? அப்படி ஆன பின், என்றைக்கு இவ்விரண்டனுள் ஒன்று மற்றொன்றை முடித்து, ‘ஒரே மறை நூல்; ஒரே கொள்கை’ என வாழ்வது? அந்தக் காலம் ஒன்று வரப் போவதாக என அறிவு ஒப்புக் கொள்ளவில்லை. அதுவரை, அந்தக் காலம் வரை, உலக மக்களும், குறிப்பாக இந்திய மக்களும், ஒற்றுமையாக வாழவே கூடாதா?

    அவரவர் பின்பற்றும் மத வழி முறைகளை ஒழுங்காகப் பின்பற்றுவது நல்லது. மேலும் மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும் நல்லது. அதை விடுத்து, ஏதோ உலகிலுள்ள எல்லாச் சமயங்கள் பற்றியும் தான் கரைத்துக் குடித்திருப்பதாகவும் தன்னுடையதைத் தவிர எல்லாமே தவறு என்றும் கருதி, மற்றவரின் வழிபாடுகள் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றத் துடிப்பது பெரும் தவறு.

    நான் எதுவும் இம்மறுமொழி மூலம் புதிதாக எழுதவில்லை. இவை எல்லாமே இந்நாட்டின் பெரியவர்கள் ஏற்கனவே சொல்லியிருப்பவைதாம். இதற்கு மேலும் இந்தத் தலைப்பில் எழுதிக்கொண்டிருப்பது ‘விழலுக்கு நீர் பாய்ச்சும் செயலா’கப் போகும்.

    வாழ்க பாரதமும் உலகமும்.

  165. மதமல்ல மார்க்க சகோ சுவனப்ரியன்,

    எனக்கு ரெம்ப பிடித்த தமிழ் படங்களுள் ஒன்று இருபத்தி மூணாம் புலிகேசி. அதில் ஒரு காட்சி. வடிவேலுவின் படத்தை ஒரு ஓவியர் சிக்ஸ் பாக்ஸ் பாடி பில்டர் போல வரைந்து கொண்டிருப்பார். இதை பற்றி நாசர் வினவ. அப்போ வடிவேலு சொல்வார். ஏன்னா தான் வீரனாக இருந்தாலும், எனது உருவம் கொஞ்சம் டொக்கு தான். நான் கழிவறையில் அமர்ந்து யோச்கிக்கும் பொது இந்த யோசனை வந்தது. என்னை ஒரு பாடி பில்டர் போல வரைந்து விட்டால் எனக்கு இருநூறு வருடத்திற்கு பின்னால் வரும் கேனயர்களுக்கு ஏன்னா தெரியப் போகிறது என்று. இந்த காட்சியை பார்த்து நான் அப்பொழுது சிரித்தேன். இன்று உங்கள் மறுமொழியை பார்த்து அந்த காட்சியை மீண்டும் நினைத்துப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்.

    நீங்கள் சொல்லும் குலசேகர மன்னரின் காலம் பதினோராவது நூற்றாண்டு. நபிகளின் காலம் ஏழாம் நூற்றாண்டு. இந்த மீட்டிங்கும் புதுசா இருக்கு. அந்த மஸ்ஜித் 1124 ஆம் ஆண்டு கட்டியதாக ஆதாரங்கள் வந்து விட்டன.

    முஹம்மதுவின் காலத்தில் வாழ்ந்த சேர மானருக்கு இன்னொரு பெயர் இருக்கு. அது தான் குலசேகர் ஆழ்வார். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். அவர் திருப்பதியில் புல்லை பிறக்கவோ, படியாய் கிடக்கவோ ஆசை பட்டவர். அவர் அல்லாவுக்கு மஸ்ஜித் கட்டினார் என்பது நினைத்துப் பார்த்தாலே குபீர் சிரிப்பாய் இருக்கிறது. இப்படி நிச்சயம் ஜாகிர் நாயக்கால் மட்டும் தான் யோசிக்க முடியும். அதை தைரியமாக நம்பி தமிழ் ஹிந்துவில் எழுத என்பதில் கண்வைத்தவர்களால் மட்டுமே முடியும்.

    சார் இஸ்லாமியர் எழுதும் புரட்டுகளை மட்டும் படித்து பல்டி அடிப்பதை விடுத்து. கொஞ்சம் சுயமாக ஆராய்ச்சி செய்யங்கள். அல்லாவை விட வலிமை மிக்க எல்லாம் தெரிந்த கூகிள் ஆண்டவர் இருக்கிறார். அவர் நீங்கள் கேட்ட உடனேயே பதில் தருவார். அல்லாவுக்கு ஆயிரம் ஆண்டகுல் ஆகும்.

    நம்ம நபியும் சேரனும் மீட் பண்ணி காபி குடிச்சதா எந்த ஹதீதிலும் இல்லை. வஹியுமில்லை. 🙂
    இதை பற்றி இந்தியா வந்த சுலைமானும் எழுதவில்லை 🙂

    அப்புறம் ஒரு முக்கிய விஷயம். வஹியிலோ, ஹதீதிலோ இல்லாத ஒரு விஷயத்தை நம்புபவன் ஒரு உண்மையான வஹாபி முஸ்லீமாக இருக்க முடியாது. அப்புறம் உங்க இழ்டம் அந்த எழுவத்தி ரெண்டு இல்லாம உங்களுக்கு தான் அப்புறம் கஷ்டம்.

    வேதத்தில் நபியை பற்றி சொல்லியுள்ள தென்றால் வேதமும் அல்லாவிடமிருந்து வந்ததாக ஆகிவிடும். அல்லா இதை பற்றி ஒரு வார்த்தை கூட மூச்சே விடவில்லை. அவர் பழைய புதிய ஏற்பாடுகளை பற்றி நிறைய சொல்லி உள்ளார்.
    அல்ல வேதத்தை கொடுத்தார் என்றால் செம்ம காமடியாகிவிடும். வேததமும் குரானும் நூற்றி என்பது டிகிரி மாறானவை. அப்புறம் அல்லா தான் வேதம் கொடுத்தார் என்றால் சமஸ்க்ரிதமும் உயர்ந்த மொழியாகிவிடும் (உங்கள் பார்வையில் கூட ) 🙂

    வேதத்தில் ஆதாமும் ஏவாளும் தான் முதல் மனிதர்கள் என்று இல்லை. வேடத்தில் கடவுள் மனிதனை படைப்பதாக இல்லை. வேதம் பரிணாமவியலை தான் முன் வைக்கிறது 🙂

    இதை எல்லாம் நீங்கள் எப்படி சமாளிப்பீர்கல். வேதம் அல்லா தான் கொடுத்தார் அதை பின்னவர்கள் மாற்றி விட்டனர் இப்போ இருப்பது அல்லா கொடுத்த வேதமில்லை என்று தானே. இந்த லாவ் பாய்ண்டு படி பார்த்தால் அல்லா கொடுத்ததை மனிதால் மாற்றியமைக்கப்பட்ட ஒரு நூலை நீங்கள் ஆதாரமாக எடுக்கவே முடியாது என் என்றால் அதை மனிதன் மாறி அமைத்து விட்டான் அது அல்லா சொன்னதல்ல அதனால் அது உண்மையல்ல அது பலஹீனமான நூல். 🙂

    சகோ இதற்க்கு மேலும் நீங்கள் அடிபட விரும்பினால் அது உங்கள் இஷ்டம்.

  166. ஜெனில் அவர்கள் ‘சம்ஸ்கிருத வழிபாடு கொண்ட ஹிந்து சமயம்’ பற்றி மிகவும் கவலை கொள்கிறார். அந்நியச் சமயங்களான இஸ்லாமிய, கிறிஸ்துவ, (இவர் பார்வையில் சம்ஸ்கிருத) ஹிந்து சமயங்களை விட்டுவிட்டு, இந்திய மொழியான தமிழ் ஏற்றிப் பிடிக்கும் சைவராகவோ வைணவராகவோ தான் வாழலாமே..! தமிழ் நிச்சயமாக வேற்றுக் கண்டத்திலிருந்து வரவில்லை அல்லவா?

    இதைக் கேட்டால், ‘நான் எல்லா சமயங்களையும் கரைத்துக் குடித்துவிட்டேன். அதனால்தான் நான் நாத்திகனானேன்’ என்று பதிவு செய்கிறார். இவர் போன்றவர்களுக்கு மொழி வேண்டுமா அல்லது சரியான சமய அறிவு வேண்டுமா என்பதிலேயே முடிவு தெரியவில்லை.

    மொழிதான் உயர்வு எனில், தாராளமாக மாணிக்க வாசகரையும் அருணகிரி நாதரையும் வழிகாட்டியரகளாகக் கொண்டு திருவாசகமும் திருப்புகழும் படிக்கட்டுமே..! அவை தமிழரின் ஆக்கங்கள் தாமே?

    இவற்றைப் படிப்பதன் மூலம் சமஸ்கிருதம் சொல்லாத ஹிந்து சமயத்தை அவர் பின்பற்றினால் மகிழ்ச்சியே..!

  167. இந்தப் பதிவின் மறுமொழிப் பெட்டி மூடப் படுகிறது. சுவனப் பிரியனின் இஸ்லாமிச பிரசார கருத்துக்களுக்கு திட்டவட்டமான, உறுதியான எதிர்வினைகளை அளித்த எமது வாசகர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments are closed.