உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு

[ஜனவரி 3-ம் தேதி நடந்த உடையும் இந்தியா? நூல் வெளியீட்டு விழா வீடியோக்கள் வலையேற்றப் படுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு நடுவில் இப்படி ஒரு நிகழ்வு! – ஆசிரியர் குழு]

நேற்று திரு.கி.வீரமணியின் ‘உடையும் இந்தியாவா உடையும் ஆரியமா’ வசையரங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான வசையரங்கு என்பது மட்டுமல்ல. அவர்களின் அறியாமையை இந்த அளவு அப்பட்டமாக அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருந்திருக்க வேண்டாம் என தோன்றியது.

முதலில் முனைவர் மங்கள முருகேசன் ஆரம்பித்தார். முதல் கோணல் முற்றும் கோணல் என்பதாக திருஞானசம்பந்தர் ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று சொன்னதாக சொல்லி திராவிட இனத்தின் தொன்மையை நிறுவினார். முனைவருக்கு அந்த வார்த்தைகளை கூறியவர் திருஞானசம்பந்தர் அல்ல, அப்பர் என யாராவது சொன்னால் நல்லது.

அப்புறம் வந்தார் முனைவர் ராமசாமி. ஒரு ஆய்வு நூலுக்கு இரண்டு பெயரா? அதுவும் முடிவை முதலிலேயே சொல்லலாமா என்றெல்லாம் அகாடமிக்காக மிரட்டினார். “The Origin of Species by Means of Natural Selection, or The Preservation of Favoured Races in the Struggle for Life” என்று தன் நூலின் பெயருக்கு தலைப்பு வைத்த டார்வின் அன்னாரிடம் மாட்டியிருந்தால் என்னவாகியிருப்பார் என நினைத்து வியந்தேன். டார்வின் தப்பினார். அதோடு அவர் நிறுத்தவில்லை. குமரிக் கண்டம் இருப்பதற்கு சாட்டிலைட் சான்றுகள் இருப்பதாக உண்மையிலேயே ‘படம் காட்டுவதாக’ மிரட்டினார். அந்த ‘சாட்டிலைட் சான்றுகளை’ பெரியவர் வெளியிட்டால் நன்றாக இருக்கும். குமரி கண்டம் எனும் ‘திராவிட பெருமை’ குறித்து மற்றவர்களுக்கு என்ன என அவர் கேள்வி கேட்டார். ‘குமரி கண்டம்’ எனும் கோட்பாட்டை மிகக் கடுமையாக கேள்விக்கு உள்ளாக்கியவர் இவர்கள் ‘ஆரியர்’ என முத்திரையிடும் சமுதாயத்தைச் சேர்ந்தவரல்லர், சு.கிறிஸ்டோபர் ஜெயகரன் எனும் நிலவியலாளர்.

அப்புறம் இந்த நூலில் அண்ணாதுரையை சிஐஏ ஏஜென்ட் என கூறியிருப்பதாக சொன்னதுதான் அவர் பேச்சின் உச்சகட்ட காமெடி. உண்மையில் ‘உடையும் இந்தியா’ நூல் டி.என்.சேஷன் எழுதிய பிரபல நூலின் ஒரு பகுதியை மட்டுமே மேற்கோளாகக் கூறுகிறது:

(திராவிட) ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னால் மிகத் தெளிவாக அந்நியக் கரம் இருந்தது. சில திராவிட இயக்கத் தலைவர்கள் இலங்கை மூலமாகக் கிடைக்கப் பெற்ற அமெரிக்கப் பண உதவியால் தாக்கம் பெற்று தங்களை அறியாமலே சீர்குலைவு சக்திகளுக்குத் துணை போனார்கள். தாம் அமெரிக்க உளவுத்துறையின் இயக்கத்துக்குக் கைப்பாவை ஆகிறோம் என்பதே அண்ணாத்துரைக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

இது மட்டுமே சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து வெளிவந்துள்ள பகுதி. இப்பகுதி ஏற்கனவே பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. சேஷனின் குற்றச்சாட்டையும் அதன் விளைவாக ஏற்பட்ட தடையையும் கூறும் ‘உடையும் இந்தியா?’ நூல் அதனை உடனடியாகத் தொடர்ந்து, தெள்ளத்தெளிவாக அண்ணாதுரை இந்தியாவுக்கு எதிராக பிரிவினை எண்ணம் கொண்டவரல்ல என நிறுவப் பட்டதையும் மறக்காமல் கூறுகிறது:

அண்மையில் வெளியான அண்ணாதுரையின் வாழ்க்கையை ஆராயும் நூலில் அதன் ஆசிரியர் கண்ணன்,  அண்ணாதுரை தன் இதயத்தின் இதயத்தில் இந்திய எதிர்ப்பாளர் அல்லர் என்றும் , அவரது பிரிவினைவாதம் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் அவர் பயன்படுத்திய கருவிக்கு மேலல்ல என்றும் நிறுவுகிறார்.

எனவே எவ்விதத்திலும் இந்நூல் அண்ணாதுரையை சிஐஏ ஏஜெண்ட் என கூறவில்லை என்பது நூலை படிக்கும் எவருக்கும் தெரியும்.

அதன் பின்னர் பேசிய வீரமணியும் வழக்கம் போல மனுஸ்மிருதியில் திராவிடன் என்று உள்ளது என்றார். 56 தேசங்கள் இருப்பதாக தெருக்கூத்துகளில் கூட சொல்வதாக சொன்னார். 56 தேசங்களின் பெயர்களையும் (பார்த்து) வாசித்தார். திராவிடத்தில் சூத்திரர்கள் அரசாட்சி செய்வதாக மனுஸ்மிருதி சொல்வதாக சொன்னார்.

உண்மையில் அவர் கூறிய மனுஸ்மிருதி பகுதிகள் ‘உடையும் இந்தியா’ கூறும் வாதங்களுக்கே வலு சேர்ப்பதாக அமைந்தன. ‘உடையும் இந்தியா?’ நூல் என்ன சொல்கிறது? பிராம்மணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை சமூக வெளிகள். சாதிகள் என்பவை ஒவ்வொரு வர்ணம் எனும் சமூக வெளியின் உள்ளேயும் வெளியேயும் சென்று வருவதாக உள்ளன. அந்த இயக்கம் சமூக-பொருளாதார மற்றும் அரசியலதிகார காரணிகளால் நிர்ணயிக்கப் படுகின்றனவே அன்றி இனத்தால் அல்ல.

இதுதான் சாதியம் குறித்த – சாதியத்தை ஆதரிக்காத – ‘உடையும் இந்தியா?’ நூலின் நிலைபாடு. இந்த வரலாற்றுப் பார்வையையே வீரமணி சுட்டிய மனு ஸ்மிருதி பகுதிகள் (மனு 10:43-45) விளக்கின. ஏனெனில் அங்கு ‘திராவிட’ என்பது மிகத் தெளிவாக பிராந்தியம் சார்ந்த பதமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஆரிய’ என்பதும் சமூக அந்தஸ்து சார்ந்த பதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவு. புத்தரும் தமது தருமத்தை ஆரிய தருமம் என்றே கூறுகிறார்.

இவை தவிர பல நகைசுவை துணுக்குகளையும் கேட்க முடிந்தது. உதாரணமாக சிராஜ் உத் தவுலாவை பிரிட்டிஷாரிடம் காட்டிக் கொடுத்தது ஒரு பார்ப்பனன் என்று சொன்னார் வீரமணி. சிராஜ் உத் தவுலாவுக்கு எதிராக மிக முக்கியமாக செயல்பட்டவர் நால்வர். அவர்களில் இருவர் இஸ்லாமியர். ஒருவர் சீக்கியர். மற்றொருவர் இந்து. அந்த இந்துவும் பார்ப்பனரல்லர். சிராஜுக்கு எதிராக பிரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்பட்ட இந்த துரோக கும்பலின் தலைவர் மிர் ஜாபர். அவரே அடுத்த நவாபாக பிரிட்டிஷாரால் நியமிக்கப்பட்டார். வீரமணிக்கு முன்னால் பேசிய “பேராசியர் ராமசாமி” நாலந்தா பல்கலைக்கழகத்தை எரித்தவர் குமாரில பட்டர் என்று கூறினார். நாலந்தாவை எரியூட்டியவர் இஸ்லாமிய போர்த் தளபதியான பக்தியார் கில்ஜி. கூடவே இவர் இந்த நூலை எரிக்க வேண்டுமென்று சொன்னது புத்தகங்களை எரிக்கும் புத்தி கில்ஜிக்கு மட்டுமில்லை ஈவெராவின் சீடகோடிகளுக்கும் உண்டு என்பதை நிரூபித்தது.

மரபணு ஆராய்ச்சிகளை ‘ரத்தம் கலந்துவிட்டது’ ‘ரத்த குரூப்பை ஆராய்ச்சி செய்தால்’ என்றெல்லாம் சொன்னார் வீரமணி. மரபணு ஆராய்ச்சி வேறு ரத்த வகை குறித்த ஆராய்ச்சி வேறு. மானுட குழுக்களின் புலப்பெயர்வுகளை க்ரோமோஸோம்களில் –குறிப்பாக Y க்ரோமோஸோம்களில்- அமைந்துள்ள மரபணு அடையாளங்காட்டிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் ஆரிய திராவிட இனவாதம் இன்று உடைக்கப்படுகிறது.

ஆக, ‘உடையும் இந்தியா?’ நூலை உடைக்க கழகத்தவர்கள் இன்னும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். படிக்க வேண்டும்.

முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

67 Replies to “உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு”

  1. :))) அட்டகாசமா நடந்திருக்கு போலயே கருத்தரங்கு! அவ்வளவுதான் முடியும் போல. பாவம் விட்ருங்க அரவிந்தன்.

  2. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு படிக்காதவர்கள் நிறைய இருந்தார்கள். காதில் கொண்ட மட்டும் பூ சுற்ற முடிந்தது. இப்போது பட்டி தொட்டிகளில் எல்லாம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். பகுத்துணரும் தெளிந்தவர்கள் இருக்கிறார்கள். இப்போதும் பூ சுற்ற முயற்சிக்கிறார்கள். கையால் ஆகாத நேரத்தில் ஆரிய திராவிட பார்ப்பன பூச்சுக்கள். கேட்டுக் கேட்டு புளித்துப் போன, நைந்து போன அழுகிய செய்திகளைத் திரும்பத் திரும்ப பேசுகிறார்களே! அவர்களுக்கே சிரிப்பு வரவில்லையா?

  3. என்னமோ எனக்கு இவர்கள் கருத்து பரிமாற்றங்களால், வாதங்களால் மாறுபவர்களாக எனக்கு என்று மே தோன்றியதில்லை. எதைக் கேட்கவேண்டும், படிக்கவேண்டும், என்று இவர்க்ள் முன்னதாகவே தீர்மானித்துக் கோண்டுள்ளார்களோ அதையே பேசுவார்கள், திரும்பத் திரும்ப கூச்சலிடுவார்கள். சுமார் எண்பது வருடங்களாக இதுதான் நடந்து வருகிறது. மிக்க படித்தவர்கள், தோழமையோடு பழகுகிறவர்கள் கூட இப்படித்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு முன் உங்கள் வாதங்களை வைத்து இவர்களை மனமாற்றம் செய்துவிடலாம் என்று நினைத்தால் அது ஏமாற்றத்துக்கும் கோபத்துக்கும் தான் வழிவகுக்கும். வீரமணியே கூட உண்மையிலேயே மனமாற்றம் பெற்றாலும் அதை வெளி உலகைல் அவர் வைத்து விட முடியாது. அப்படி ஒரு கூட்டத்தை வளர்த்தாயிற்று. ஒரு வரலாற்றைப் படைத்தாயிற்று. இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்கள் தான் மனமாற்றம் பெறமுடியும். திறந்த மனத்தோடு எதையும் படிக்க ஆராய புரிந்து கொள்ள முடியும். க்ருணாநிதியின் வணடவாளங்கள் அன்பழகனுக்குத் தெரியாதா? சோனியாவின் வணடவாளங்கள் சிதம்பரத்துக்கோ, மன்மோகன் சிங்கிக்கோ தெரியாதா? அவர்கள் எப்படி வாய்திறப்பார்கள்? இழப்பதற்கு நிறைய உள்ளவர்கள் என்றுமே மூடுண்டு தான் கிடப்பார்கள். கடைசி மூச்சு வரை.

    இருப்பினும் நாம் இருப்பது போலத் தானே இருக்க முடியும்? சிலர் ஓயுந்து விடுவார்கள் என்னைப் போல. சிலர் இன்னமும் நம்பிக்கையுடன் முயல்வார்கள் உங்களை ப் போல. உங்கள் முயற்சிகள் வெல்ல வாழ்த்துக்கள்.

    ஒன்று கடைசியில். இழக்க ஒன்றுமில்லாத, திறந்த மனதுடன் இருக்கும் வளரும் இளம் தலைமுறையினருக்கு உங்கள் முயற்சிகள் விழிப்புணர்வைத் தரும்.

  4. எதாவது எசக்கு பிசக்காக கேட்டு நம்மை திகைக்க வைப்பார்கள் என்று பார்த்தல் கடைசியில் இப்படி லூசு தனமாக பேசி உள்ளார்கள்…

    அது என்னது குமரி கண்டம். பொய் சொல்வதற்கும் ஒரே அளவு வேண்டாம். இவர்கள் சொல்லும் நிலப்பரப்பு 2 கிலோ மீட்டர் கடலுக்கு அடியில் உள்ளது. எதோ 100 மீட்டர் ஆழத்தில் இருந்தால் கூட எதாவது இருக்கலாம் என்று சொல்லலாம். ௨ கிலோ மீட்டர் …ஹ்ம்ம்…. பூசணி காய் தோட்டத்தையே சோற்றில் மறைப்பார்கள் போல் இருக்கிறது…

  5. வேணாம் ;
    வலிக்குது;
    அழுதிருவேன்.
    # வீரமணி

  6. ”முனைவருக்கு அந்த வார்த்தைகளை கூறியவர் திருஞானசம்பந்தர் அல்ல அப்பர் என யாராவது சொன்னால் நல்லது.”—

    யார் பாடியிருந்தாலும் இதை இனத்தைச் சுட்ட பாடவில்லை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    அப்பர் பெருமான் இங்கே ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ (திருமறைக்காட்டு திருத்தாண்டகம்) என்று சிவபெருமானையே பாடுகிறார். ’பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே’ என்ற மாணிக்கவாசகத்தையும் நோக்குக.

  7. நான் தான் உங்க கிட்ட சொன்னேனே அரவிந்தன்.. ராமசாமிக்காவது எப்பவாவது சென்சிபிளா பேசவந்துரும். ஆனா அவர் சிஷ்ய கோடிகளுக்கு அதெல்லாம் வராது.. போகாதீங்கனு சொன்னேன்.. நீங்க precious gem அதனாலே கவனம் அப்படினு உங்க மேல் தனிப்பட அன்பும் பாசமும் கொண்டு எஸ் எம் எஸ் அனுப்பினேன்.

    சாக்கடைக்கு பக்கமா போய்ட்டு வந்துட்டு , அங்கே நல்ல வாசனை வரலைனு சொன்னா நான் உங்களைத் தான் கண்டிக்கaனும் அரவிந்தன்.

    நீங்க ரொம்ப மோசம்.. இரவு முழித்திருந்து பாதி புக் படிக்க வச்சிட்டீங்க

  8. //திறந்த மனதுடன் இருக்கும் வளரும் இளம் தலைமுறையினருக்கு உங்கள் முயற்சிகள் விழிப்புணர்வைத் தரும்.//

    இதையே நானும் சொல்கிறேன்

    க்ரேட் வொர்க் அரவிந்தன்

  9. வெங்கட் சாமிநாதன் on January 9, 2012 at 8:35 am

    என்னமோ எனக்கு இவர்கள் கருத்து பரிமாற்றங்களால், வாதங்களால் மாறுபவர்களாக எனக்கு என்று மே தோன்றியதில்லை. எதைக் கேட்கவேண்டும், படிக்கவேண்டும், என்று இவர்க்ள் முன்னதாகவே தீர்மானித்துக் கோண்டுள்ளார்களோ அதையே பேசுவார்கள், திரும்பத் திரும்ப கூச்சலிடுவார்கள். சுமார் எண்பது வருடங்களாக இதுதான் நடந்து வருகிறது. மிக்க படித்தவர்கள், தோழமையோடு பழகுகிறவர்கள் கூட இப்படித்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு முன் உங்கள் வாதங்களை வைத்து இவர்களை மனமாற்றம் செய்துவிடலாம் என்று நினைத்தால் அது ஏமாற்றத்துக்கும் கோபத்துக்கும் தான் வழிவகுக்கும்.

    ஒரு சந்தேகம்.நீங்க சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து ராமர் பாலம் ன்னு பேசறவங்கள,போராடரவங்கள சொல்றீங்களோன்னு
    அப்படியே பொருத்தமா இருக்கு.

  10. திராவிட கட்சிகள் எடுத்த இந்த “முக்கிய” முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள் …ஆனால் கழக கண்மணிகள் இன்னும் வளரனும் தம்பி ….
    இலங்கைக்கு முதன் முதலில் படை எடுத்து வந்தது வட-இந்தியர்களே என இலங்கையின் பொய்புரட்டு வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.அதில் அவர்கள் உபயோபடுதியுள்ள பதம் ஆரியர்கள்..ஆயினும் எந்த வரலாற்று ஆய்வாளராலும் இக்கூற்றை நிருபிக்க முடிந்ததாக தெரியவில்லை.
    தமிழ் மக்கள் உண்மை நிலையை அறிந்து கழக கண்மணிகளின் விஷமா பிரச்சராத்தை முறியடிக்க வேண்டும்

  11. மேக்ஸ்முல்லர் முதல் கால்ட்வெல் வரை மதம் பரப்ப இந்தியர்களை பிரித்தாள செய்த சூழ்ச்சி ஆரிய திராவிட பொய்யான ஊகங்கள்.
    இந்த ஊகங்களை பிழைப்பாகக் கொண்டுள்ள கூட்டங்கல் திருந்தாவிடிலும் மெதுவாக எனிலும் மக்களிடம் செல்கின்றது. அதற்கு இந்நூல் பெரும் உதவி ஆகும்.
    https://articles.timesofindia.indiatimes.com/2012-01-01/special-report/30578749_1_genetic-mutation-disease-population
    All Indians have the same genes
    Jan 1, 2012, 07.26AM IST
    Tags:
    Scientist|Lalji Singh|Kumarasamy Thangaraj
    Q. The study of Indian ancestry that you did along with the former CCMB director Lalji Singh and two US researchers was published in Nature in September 2009. It is said to have rewritten the history of Indian population…

    It established through genomic analyses that people in north India were no different from those in the south and that all shared the same genetic lineage . It also established that people of north and south were part of the same culture. We analyzed over 500,000 genetic markers across diverse groups, including the traditional “upper” /” lower” castes and tribal groups and proved that there was no difference between tribal populations and castes, and it was impossible to make a distinction between them.

  12. தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
    (சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் –
    இராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 ஆவது பக்கம்).

    This proves that ur Vivekanada himself has agreed that people who where living in south are potraied as ASURAs in RAMAYANA.. Do u agree this or NOT.????

  13. Also I have seen all the time u ppl saying USA wants to destruct INDIA because they are afraid of INDIA’s growth..

    What growth of INDIA ?? Infact a unified INDIA will give them advantage of BIG MARKET for their products..

    What growth we have achieved ??

    1. How many NOBEL prizes after independance in Science and Technology ?? (Do not include NRIs)
    2. How many product based companies such as GOOGLE, MICROSOFT ??
    4.How many patent rights ??
    4.How many types of weapons exported atleast created for domestice use ?? Nearly 70% still imported.

    The truth INDIA is never a competition for US even now because we lack a lot in R&D..We lack innovation simply because we do Software job for a lesser price doesn’t make us any better… Don’t make statement that “OBAMA warned to US students abt rising INDIA” those are just propaganda … Just answer my question above …

  14. According to a 2009 study published by Reich et al., the modern Indian population is composed of two genetically divergent and heterogeneous populations which mixed in ancient times (about 1,200-3,500 BC), known as Ancestral North Indians (ANI) and Ancestral South Indians (ASI). ASI corresponds to the Dravidian-speaking population of southern India, whereas ANI corresponds to the Indo-Aryan-speaking population of northern India

    https://www.nature.com/nature/journal/v461/n7263/abs/nature08365.html
    https://www.ichg2011.org/cgi-bin/showdetail.pl?absno=20758

  15. Well done v.ganesan… மற்ற நண்பர்களை விட நீங்கள் களத்தில் இறங்கி நான்கு புத்தகங்களை விற்றது பெருமையாக உள்ளது…. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்…

  16. பின்னுட்டங்கள் மறைக்கப்படுகின்றன

    பின்னுட்டங்களை வி

    The replies are getting obscured by advertisements, Please do needful.

  17. romba நாள் கழிச்சு தமிழ் இந்துல உடனே நிறைய மறுமொழி வந்துருக்கு.மறுமொழி இட்ட அன்பர்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

  18. அரவிந்தன் நீலகண்டன் உள்ளிட்ட பலரிடம் நான் காணும் குறையே இதுதான். ஒரு வெட்டி விஷயத்துக்கு மறுப்பு எழுதி அதை பிரபலப்படுத்துவது. Please don’t dignify these stupid remarks by responding to them.

  19. //வீரமணிக்கு முன்னால் பேசிய “பேராசியர் ராமசாமி” நாலந்தா பல்கலைக்கழகத்தை எரித்தவர் குமாரில பட்டர் என்று கூறினார். நாலந்தாவை எரியூட்டியவர் இஸ்லாமிய போர்த் தளபதியான பக்தியார் கில்ஜி. //

    இப்படிப் பேசியவர் ஒரு பல்கலைக்கழகத்தின் ரிஜிஸ்ட்ரர். அந்தப் பல்கலைக் கழகத்தின் தரம் தெரிகிறது. தமிழ் பல்கலைக் கழகங்களின் தரம் புரிகிறது.

    .

  20. “இவனையா கூப்பிட்டான் ? இவன் ஆத்துக்காரியவா கூப்பிட்டான் ? அண்ணாவத்தானே கூப்பிட்டான்…”

    இப்படி எல்லாம் நாகரீகமாகப் பேசி இருக்கிறார் பேராசிரியர் ராமாசாமி.

    .

  21. நான் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பொது அதிகார துஷ் பிரயோகம் செய்தேன் என்றும் ராமசாமி பீற்றிக் கொண்டார்.

    .

  22. \\How many NOBEL prizes after independance in Science and Technology ?? (Do not include NRIs)\\

    உங்கள் அடிமை தனம் உங்கள் கேள்விகளிலேயே உள்ளது. இந்தியா அமெரிக்காவுக்கு பிரச்சனை இல்லையா? பிறகு எதற்காக பாக்கிஸ்தானுக்கு கோடி கோடியாக கொட்டி கொண்டு இருக்கிறது.இப்பொழுது தான் ஆப்கான் பிரச்சனை எல்லாம்… ஒரு பத்து வருடத்திற்கு முன்பு என்ன நடந்தது.

    உங்கள் எழுத்துக்கள் உங்கள் அறியாமையை காட்டுகிறது. எகிப்து, ஈராக மற்றும் லிபியா எல்லாம் அமெரிக்காவுக்கு சமமான நாடா? பிறகு எதற்காக் அவர்கள் மீது நேரடி மறைமுக யுத்தம் செய்கிறார்கள்? ஏன் ஈரான் அணு உலைக்கு உலை வைக்க முயற்சி செய்கிறார்கள்.

    ஏன் வெளி நாட்டி வாழ் இந்தியர்களை கணக்கில் எடுத்து கொள்ள கூடாது. அடுத்து நோபல் பரிசு என்பது எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது என்பது உலகறிந்த விசயம். அதுவும் அமைத்திக்கான நோபல் பரிசு சொல்லவே தேவையில்லை…. அதற்கும் கலைஞரின் கலைமானணி விருதிற்கும் சற்றே வித்தியாசம்.

    2. How many product based companies such as GOOGLE, MICROSOFT ??

    தங்களுக்கே தெரியும். இவர்கள் செய்யும் முதாலாளிதுவ மோசடி என்ன என்பது? இந்த நிலையில் என்னையே இதை பற்றி எழுத சொல்கிறீர்கள். என்னுடைய கேள்வி அமெரிக்காவிலேயே இவர்களை எதிர்த்து எத்தனை கம்பெனிகள் உருவாகியுள்ளன. ஐரோப்பாவில் உருவாகியுள்ளன.

    4.How many patent rights ??

    அடுத்தவன் பேட்டண்டை திருட்டி பிழைக்கும் ஈன பிறவிகள் தானே அமெரிக்கர்கள். ஏன் துள்சிக்கும், மஞ்சளுக்கும் பேட்டண்ட் செய்த கபோதிகள் தானே? இந்த பேட்டண்ட் என்ற முறை மேற்கத்திய சித்தாந்தம். இப்பொழுது தான் அமெரிக்காவில் உருவாகி கொண்டு இருக்கிறது…. தாங்கள் நேரடியா இந்திய காப்புரிமை அமைப்பின் வலை தளத்தில் சென்று பார்த்து கொள்ளுங்கள். நான் எதுவும் சொல்வதற்கு இல்லை.. முக்கியமான விசயம். இரண்டு சிம் கார்டு தொழில் நுட்பத்தை பேட்டண்ட் செய்த ஒரு இந்தியரை வெளி நாட்டு கயவர்கள் எவ்வாறு கொன்றார்கள் என்று தெரியாதா? அவ்வளவு ஏன் கூடம் குளம் அணு உலைக்கு கிறித்துவ மிஷினரிகள் உதவியுடம் அமெரிக்க என்ன செய்து கொண்டு இருக்கிறது என்ற ஒன்றே போதும் அவர்கள் யோக்கியதை என்னவென்று சொல்ல? அது சரி பாபா மற்றும் விக்ரம்சாரா பாய் மர்ம படுகொலைகள் பற்றி தங்கள் என்றாவது படித்து உள்ளீர்களா?

    4.How many types of weapons exported atleast created for domestice use ?? Nearly 70% still imported.

    அணு உலைக்கு உலை வைக்கும் மதமாற்ற வியாபரிகள் பற்றியும், அணைகளை கட்டவிடாமல் செய்யும் கிறித்துவ கம்யூனிஸ தொடர்புகள் பற்றியும். மாவோயிஸ கிறித்துவ கூட்டணி பற்றியும் பல்வேறு தளங்கள் விரிவாக எழுதப்பட்டுள்ளன். மாவோயிஸ்கள் உடனான பாதாரியார்களின் காதலே இதற்கு உதாரணம்… நிலைமை இப்படி இருக்க எப்படி முன்னேற்றம் வரும். கையை பொத்தி கொண்டு எப்ப்டி உண்பது?

    கிறித்துவ ஊழல் தலைவி சோனியா போன்ற ஆட்கள் ஆட்சியில் இருந்தால் வேறு என்ன செய்ய முடியும்….. அணுகுண்டு வெடித்த இந்திராவுக்கு என்ன கதி நேர்ந்தது என்று தெரியாதா? அணுகுண்டு வெடித்து சோதனை செய்த பாஜாக பின்னர் மதவாத முத்திரையை குத்தப்பட்டு ஆட்சியில் இருந்து கீழ் இறங்கியது நினைவில்லையா? இதற்கு கிறித்துவ செய்தி ஊடகங்கள் செய்த திருட்டு வேலைகள் மறந்துவிட்டதா? ஹ்ம்ம்… செய்வதை எல்லாம் செய்து விட்டு கடைசியில் அடுத்தவர் மீது ப்ழி போடுவது…. எதுவுமே தெரியாதவர்கள் போல் சொல்கிறீர்களே?

    உங்கள் தன்னம்பிக்கை அற்ற எண்ணத்தையும் நினைத்து ஒரு இந்தியனாக வேதனை படுகிறேன்….

  23. ஜெனில்,

    நம்மிடம் பிரச்சனையே இல்லை என்று நான் பொய் சொல்ல விருமபவில்லை. ந்மது அரசாங்கதில் எண்ணற்ற ஓட்டைகள் உள்ளன. பெரும்பாலான ஓட்டைகள் அடைக்கபட கூடியவை….

    முதலில் நாம் செய்ய வேண்டியது… வெளி நாட்டு ப்த்திரிகைகளான times now, CNN iBN, NDTV போன்ற பத்திரிக்கைகளை தடை செய்ய வேண்டும்.

    அதற்காக அமெரிக்க செய்யும் திருட்டு வேலைகள் சொல்லாமல் இருக்க முடியாது. இதை பற்றி சூடானை உடைத்த டிராகுலாக்கள் என்ற பதிவை தமிழ் ஹிந்து வெளியிட்டுள்ளது… அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

  24. ஜெனில் //the modern Indian population is composed of two genetically divergent and heterogeneous populations which mixed in ancient times (about 1,200-3,500 BC), known as Ancestral North Indians (ANI) and Ancestral South Indians (ASI).// நீங்கள் சொல்லும் அந்த ஆராய்ச்சியின் முக்கிய விசயமே இந்த இரு மரபணு குழுக்களும் இந்தியாவைச் சார்ந்தவை என்பதுதான். இதை அதே ஆராய்ச்சியாளர்கள் 2011 மரபணு ஆராய்ச்சியில் கூறியிருப்பதுடன் ஆரிய படையெடுப்பு/புலப்பெயர்வு நடந்ததாக சொல்லப்படும் காலத்துக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ANI மரபணு குழு இந்தியாவில் இருந்து வருகிறது என்பதையும் கூறியுள்ளார்கள். அத்துடன் நீங்கள் கூறியுள்ள அதே ஆராய்ச்சி கட்டுரையில் // although our results do not rule other, older ANI-ASI admixture events// என்று கூறியுள்ளதையும் கவனிக்கவும். இதில் ANI என்பது வெளியில் இருந்து வந்தது -கிமு 1500 வாக்கில் கொண்டு வரப்பட்டது என்பது அடிபட்டு போய்விடுகிறது.

  25. உலகமே ஒரு கிராமம் எனக் குறுகும் காலத்தில் – பாபி ஜின்டால் அமெரிக்காவிலும், ராதிகா கனடாவிலும் நாடுளும் மன்ற உறுப்பினர் ஆனதை பெருமைப் படுகிறோம்.

    இங்கும் சோனியா ஆடுளும் மன்ற உறுப்பினர் தான். இத்தாலி உரிமையுள்ள இவர், ராகுல், பிரியங்காவிற்கு கூஜா தூக்கும் மதச்சாற்பற்ற என்னும் கும்பல்கள் இன்றும் பொ.மு.7000க்கும் முன் வந்து இங்கே நாகரீகம் வளர்த்தவருபவர்களை ஏன் விமர்சிக்க வேண்டும். வெறுமனே மக்களை பிரித்து கெடுக்க தொடரும் சூழ்ச்சிகள்

  26. jenil,

    நீங்கள் அளித்த முதல் சுட்டியில் ( Nature Website ) , Y- haplogroup R1a1 ன் orgin இந்தியாவில்தான் என்பது பிராமணர்களின் தாயகம் இந்தியாதான் என்று நிறுவும், ஆரிய திராவிட மாயை உடைக்கும், அறிவியல் ஆதாரம்.

    மிக்க நன்றி.

  27. திராவிட கழஹத்தவரை விடுங்கள்.இத்தாலிய சோனியாவை விரட்ட,சோனியா கட்சியை வேரோடு அழிக்க ராஜீவ் கொலையை கையில் எடுத்தால் போதும்.அதை எடுக்க துப்பிலாத நாம் ,என் ஒருவனைத் தவிர ,நாம் உடையும் இந்தியாவை குறித்து பேசுவது அபத்தம்.

  28. இந்தியா உடையும் என்று சொல்லும் வைகோபலசாமி,திக காரங்கள்,சீமான் என ஒரு பயலும் ராஜீவ் கொலை சதிகாரார்களை குறித்து வாஉ திறப்பது கிடையாது.வெளிப் படையாக பிரிவினை பேசும் இந்த தேச விரோதிகளை தட்டிகேட்கவோ அல்லது எதிர்த்து பேசவோ இந்த நாட்டில் யாரும் இல்லை என்பதும் கசப்பான உண்மை.

  29. அன்பே சிவமும் அன்பே சக்தியும்
    அன்பே ஹரியும் அன்பே பிரமனும்
    அன்பே தேவரும் அன்பே மனிதரும்
    அன்பே நீயும் அன்பே நானும்
    அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
    அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்
    அன்பே மௌனம் அன்பே மோக்ஷம்
    அன்பே ப்ரமமும் அன்பே அனைத்துமென்றாய்
    அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்
    எங்கும் நிறைந்த அன்பேஎன் குருநாதனப்பா
    ஆரிய கொள்கை பொய்

  30. @அரவிந்தன் நீலகண்டன்
    அம்பேத்கர் குறித்து நிறைய சொல்கிறீர்கள்!அவர் எழுதிய புத்தகங்கள் தமிழில் கிடைக்குமா?சற்று உதவுங்கள்

  31. aravindan – Congrats. I only wish your book should get more such criticism from the so called dravidians themselves (sort of negative publicity). Only then more people will start reading more about it and come to know about the real truth. I wish you all the very best for your sincere attempt in publishing this work. I only wish TamilNadu should get freedom from the Dravidian movement. We’ve had enough of these people and it’s high time these people have to retire.

  32. மரபணு சோதனைகள் எனபது குறிப்பிட்ட வியாதியின் பின்புலம் என்ன என்பதை ஆராய்வதில் தொடங்கியது.மனவளர்ச்சி குறைவாக உள்ள குழந்தைகளில் ஆராய்ச்சி நடத்திய போது குறிப்பிட்ட மனவளர்ச்சி (down syndrome )குறைவாக உள்ள குழந்தைகள் அனைவருக்கும் மரபணுக்களில் ஒரு குறிப்பிட்ட குறை இருப்பது தெரிந்தது.
    இப்படி ஆட்களை வைத்து அதற்குரிய காரணங்களை ஆராய்வது தான் ஆராய்ச்சி.அதை அரசியல் காரணன்களுக்காக பயன்படுத்துவது ஆராய்ச்சிக்கே இழுக்கு.
    சில நூற்றாண்டுகள் முன் நடந்த முஹலாய படையெடுப்பை மரபணு ஆராச்சி செய்து நடந்தது,இல்லை என்று கூற முடியுமா.
    இந்த கேள்விக்கு விடை தேட முற்பட்டால் உண்மைகள் விளங்கும்
    பல ஆயிரகணக்கான மக்களை வைத்து பல வருடங்களாக இந்தியர்களுக்கு மட்டும் ஏன் சில நோய்கள்(இங்கிலாந்தில் நாற்பது வயதிற்கு குறைந்த மாரடைப்பு நோயாளிகளில் ஒருவர் கூட வெள்ளையர் இல்லை.தொண்ணூறு சதவீதத்திற்கும் மேல் இந்திய வம்சாவளியை சார்ந்தவர்கள்)அதிகமாக தாக்குகின்றன என்று நடத்தப்படும் மரபணு ஆராய்ச்சிகளே முழி பிதுங்கி கிடக்கின்றன .இதில் 131 பேரை வைத்து ?ஆராய்ச்சி நடத்தி தெள்ளதெளிவாக சாதித்து விட்டார்கள் எனபது கேட்கறவன் கேனையனாக இருந்தால்

  33. தனி விதமான பழக்கங்கள்,மொழி ,உணவு,உடை,இறந்தவர்களை எடுக்கும் முறை,திருமணம் மற்றும் விதவைகளை நடத்தும் விதம்,தனியே அக்ரகாரங்களாக வசிக்கும் முறை.இந்தியா முழுதும் குறிப்பிட்ட வேலை,பொதுவான மந்திரங்கள் என்று இருக்கும் குழுவும் அவர்களிடம் இருந்து வேறுபடும் குழுக்களுக்கும் காரணங்கள் என்ன என்று நடைபெறும் பல்வேறு ஆராய்சிகளில் பல்வேறு முடிவுகள் வரும்.அது எப்படி சதியாகும்
    ரத்த பரிசோதனையை வைத்தும் சில ஆண்டுகளுக்கு முன் வரை பல ஆராய்சிகள் நடந்தன.
    குறிப்பிட்ட ரத்த வகைகள் அனைத்து ரத்தத்தையும் ஏற்று கொள்ளும் universal acceptor (AB POSITIVE ) குறிப்பிட்ட ரத்த வகைகள் அனைவருக்கும் தரலாம் universal donor கள் ( O நெகடிவ்)என்றும் வழக்கத்தில் இருந்தன.அது இப்போது பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை.ஒரே ரத்த வகையாக இருந்தாலும் தருவதற்கு முன் இருவரின் ரத்தத்தையும் கலந்து ஏதேனும் ரத்த கட்டிகள் உருவாகிறதா என்று பார்த்த பிறகே ரத்தம் ஏற்றுவார்கள்.இன்னும் கண்டு பிடிக்க படாத சில எதிர்ப்பு அணுக்கள் இருக்கும் வாய்ப்பு உள்ளதால்.அப்படியும் ரத்த மாற்றத்தால் இறந்தவர்கள் உண்டு.இது சதி சூழ்ச்சி எனபது தான் சூழ்ச்சி
    ரத்த வகைகளை வைத்தே இன்னார் தான் இன்னாருக்கு பிறந்தவர்களா (paternity டெஸ்ட்)என்று பார்க்கும் வழக்கமும் இருந்தது.அதை வைத்து இன்னார் இன்னாரின் குழந்தையாக இருக்க வாய்ப்பு இல்லை,அல்லது மிகவும் குறைவு என்று கூற முடியுமே தவிர இவர் என் டி திவாரியின் குழந்தை தான் என்று கூற முடியாது.
    இப்போது மரபணுக்களை வைத்து கூட இரண்டு பேரின் மரபணுக்களை ஆராய்ச்சி செய்து இவர் என் டி திவாரியின் குழந்தை தான் என்று கூறலாமே தவிர உத்தர் பிரதேசத்தில் உள்ள அனைவரின் மரபணுக்களை வைத்து யார் யார் அவருக்கு பிறந்தவர் என்று கண்டு பிடிக்க முடியாது.
    சென்ற நூற்றாண்டில் இருந்த விக்ஞான முறைகள் எல்லாம் வெளிநாட்டு சதி ,இந்த நூற்றாண்டு முறைகள் எல்லாம் ஏலியேன் சதி எனபது அறியாமை

  34. //jenil on January 9, 2012 at 3:37 pm
    தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
    (சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் –
    இராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 ஆவது பக்கம்).
    This proves that ur Vivekanada himself has agreed that people who where living in south are potraied as ASURAs in RAMAYANA.. Do u agree this or NOT.????//

    திருக்குறள் ‘கடவுள் வாழ்த்து’ப் பகுதிக்குக் கலைஞர் பொருள் தருவது போல், ஸ்வாமி விவேகானந்தரின் நூல்களுக்கு எவராவது அபத்தமாகப் பொருள் தந்திருக்கலாம். தாங்கள் குறிப்பிட்டுள்ள நூலின் வெளியீட்டுத் தகவல்களைத் தாருங்கள். அதில் அபத்தம் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சரியான தகவல்களை ஆதாரத்துடன் கொடுத்து உண்மைப் பொருளை விளக்க முயற்சி மேற்கொள்ள அது உதவிகரமாக இருக்கும்.

    இது ஸ்வாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாளை தென்னிந்தியர், வட இந்தியர் மட்டுமல்லாமல் உலகமே நன்றியுடன் கொண்டாடும் காலம். அவர் கருத்து என்று தவறான செய்திகளைப் பரப்பி அசிங்கப்படாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது.

    சிறந்த அந்த தேச பக்தத் துறவியின் நினைவிலும் வழியிலும் வாழ்க பாரதம்…!

  35. ஜெனில் என்ற பெயருடன் பாரத இனத்தையும் பாரதீயதையும் கேள்விக்கு ஆளாக்கும் உம்மைப் பற்றிதான் அரவிந்தன் தனது புத்தகத்தில் கவலைப் கொள்கிறார்.

  36. //திருக்குறள் ‘கடவுள் வாழ்த்து’ப் பகுதிக்குக் கலைஞர் பொருள் தருவது போல், ஸ்வாமி விவேகானந்தரின் நூல்களுக்கு எவராவது அபத்தமாகப் பொருள் தந்திருக்கலாம். தாங்கள் குறிப்பிட்டுள்ள நூலின் வெளியீட்டுத் தகவல்களைத் தாருங்கள். அதில் அபத்தம் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சரியான தகவல்களை ஆதாரத்துடன் கொடுத்து உண்மைப் பொருளை விளக்க முயற்சி மேற்கொள்ள அது உதவிகரமாக இருக்கும்.

    இது ஸ்வாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாளை தென்னிந்தியர், வட இந்தியர் மட்டுமல்லாமல் உலகமே நன்றியுடன் கொண்டாடும் காலம். அவர் கருத்து என்று தவறான செய்திகளைப் பரப்பி அசிங்கப்படாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது.

    சிறந்த அந்த தேச பக்தத் துறவியின் நினைவிலும் வழியிலும் வாழ்க பாரதம்…!//

    So can u give the correct meaning ???? Simpy don’t slip away by saying “Wrong Meaning” …

  37. //ஜெனில் என்ற பெயருடன் பாரத இனத்தையும் பாரதீயதையும் கேள்விக்கு ஆளாக்கும் உம்மைப் பற்றிதான் அரவிந்தன் தனது புத்தகத்தில் கவலைப் கொள்கிறார்.//

    There is no question on his good ambition for integrity of INDIA. Even i support that. INDIA shud exist together and shud become a great nation in all aspects.. But it should be based on facts. What he is trying to say is INDIA = HINDU. Which i can’t agree with. He is supporting united INDIA for religious reasons But i support for Logical reasons. The slogan in INDIA itself is UNITY IN DIVERSITY. But u ppl are not ready to agree on RELIGIOUS DIVERSITY. U ppl are trying to prove there was no DRAVIDANS all INDIANS are HINDUS all the time which is not at all true. There existed so many religions (nearly 450 i guess) in INDIA.. Where are those now ?? Is this not conversion to HINDUISM ?? Why u ppl are jumping only when CHRISTIANS and MUSLIMS convert ???. Aslo do not try to make people who have changed their RELIGION look like DESH DHROHI(TRAITOR).. Then wat will u call people who change their country just for money ??? Just go to AMERICAN EMBASSY and see the LONG queue waiting for US Visa..Who will be majority on it MUSLIMS or CHRISTIANS or ur PATRIOTIC HINDUS ??? Also to ur information there is no race called as BHARATHEYA RACE….The collection of many races only is called as INDIA…

    Also Iam a christian by birth.. And after reading Religious scripts of many religions (including BIBLE) i became an atheist… For me any religion is same(Can’t be true). What iam against is biased approach towards religions.. My dream is always a WORLD WITHOUT RELIGIONS. JAI HIND .

  38. திருவாளர் ஜெனில்
    ஒரு நாத்திகன் கடவுள் மறுப்பவன் எல்லா மத நம்பிக்கைகளையும் ஒரு சேர எதிர்பவனாக இருக்கவேண்டும் அல்லது அது அவர் அவர் நம்பிக்கை அது தம்மை பாதிக்காதவரையில் அவற்றை பற்றி கவலை கொள்ளாமல் இருக்கவேண்டும். மாறாக போலி நாத்திகர்கள் சுயநலத்தால் சந்தர்பத்தை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் எதிர்பது ஒரு அப்பட்டமான அயோக்யதனம் அல்லாது வேறு என்ன ? இப்படிபட்ட எட்டப்பர்கள் தான் அடிப்படை மதவாதிகளை தூண்டி இன கலவரங்களுக்கு வித்திடுகிறார்கள். இந்த புத்தகத்தில் கிருஸ்துவம் ஆரம்பிதத நாட்களிலிருந்து இன்று வரை கீழ்தரமானமுறையில் எவ்வாறெல்லாம் ஒரு நாட்டில் சமூகபிளவுகளை ஏற்படுத்தி இனபடுகொலைகளை தூண்டுகிறார்கள் என்பதை ஆணித்தரமான ஆதாரத்துடனும் விளக்கி இதன் தொடர் அபாயம் நம்நாட்டையும் வெகுவிரைவில் தாக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
    உருப்படியாக ஏதேனும் மேலே சொன்னவற்றை மறுத்து மறுமொழி செய்யுங்கள். நடக்காத கன்னிகாஸ்திரி கற்பழிப்புக்கு கவிதை எழுதும் ஒரு பேராசிரியர் தான் நடுநிலைகாப்பவன் என்று அடம்பிடிப்பது போல் உள்ளது.
    //make people who have changed their RELIGION look like DESH DHROHI(TRAITOR) //
    Now Nagaland, Mizoram, Manipur after kicking out all the Hindu they want to declare their state as Christian majority and rule the state as per Bible and also wanted special laws like Kashmir. This called Desha Dhroham do you understand or still talk rubbish like visa queue ………….

  39. சூத்திரன்

    ம்ம்ம்!!! இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு!!! இதே வேலையைதான் வங்கத்திலும் செய்தார்கள் பகுத்தறிவாளர்கள் வேடத்தில். அங்கே உண்டான ஆன்மிக புரட்சி, ஆன்மிகத்திற்கு ஆதாரமான இந்த தமிழ் மண்ணிலும் நடக்காமலா போய் விடும்? இதற்கெல்லாம் பதில் சொல்ல ஒருவன் வராமலா போய் விடுவான்?. எல்லாம் அறிந்த கடவுளை நம்புவோம்! அந்த நல்ல நாளுக்காக காத்திருப்போம் மேலோர்களே! விவேகானந்தர் போல் நாமும் அழைப்போம் – “பார்த்தசாரதி பெருமானே வருக உம் பிள்ளைகளை காக்க, தர்மத்தை காக்க” என்று!!

  40. //jenil on January 14, 2012 at 9:57-So can u give the correct meaning ???? Simpy don’t slip away by saying “Wrong Meaning” …//
    ஏன் உங்களுக்குத் தமிழில் எழுத வராதா? அல்லது தமிழ் புரியவில்லையா? என் அறிவு அறிந்தவரை ஸ்வாமி விவேகானந்தர் அப்படிப்பட்ட பொருள் தொனிக்கும் வண்ணம் எதுவும் எழுதவில்லை என்பதைப் பின்னணியாகக் கொண்டுதான் புத்தக வெளியீட்டுத் தகவல்களைத் தரச் சொல்லிப் பதிவு செய்திருந்தேன்.

    நான் கேட்டிருப்பது, ‘நூல் வெளியீட்டு நிறுவனம் எது?’ என்று. அதைச் சொன்னால்தானே அர்த்தம் பற்றிப் பேச முடியும்?சரியான arthth அம தருமுன்னால், அந்தக் குறிப்பிட்ட நூல் என்ன சொல்கிறது என்று அறிந்துகொண்டுதானே பேச முடியும்?

    அதனால்தான் இப்போதும் கேட்கிறேன். நூலின் பெயரும் பக்கமும் குறிப்பிட்டுள்ள நீங்கள், எந்த வெளியீடு என்று குறிப்பிடுங்கள், பிறகு நிச்சயம் பதில் தருகிறேன். இதில் மழுப்புவதற்கெல்லாம் ஒன்றும் வேலையில்லை.

  41. //…after reading Religious scripts of many religions (including BIBLE) I became an Atheist… For me any religion is same(can’t be true)…//

    திருவாளர் ஜெனில் அவர்களே…!

    பல மதங்களின் புனித நூல்களைப் படித்தபிறகுதான் தாங்கள் நாத்திகராக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ‘அதில் விவிலியமும் அடங்கும்’, என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் ‘ உண்மை மேய்ப்பர் இவரே; இவர் மட்டுமே’ என்பவர்களின் நிலையைப் பரிதாபமாக்கிவிட்டீர்கள். நன்றி.

    படிப்பறிவு மட்டும் இருந்தால் அது எதற்கும் உதவாது. உண்மை மதம் என்பது பின்பற்றுதலில் இருக்கிறது.

    குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மொழிகள் இவை: “பஞ்சாங்கத்தில் ‘இன்று மழை பெய்யும்’, என்று எழுதியிருக்கும். அதற்காகப் பஞ்சாங்கத்தைக் கசக்கிப் பிழிந்தால் மழை வந்து விடாது. மழை வருவதற்கு வேறு காரணிகள் வேண்டும்.”

    நீங்கள் உங்கள் மதத்தை மட்டுமாவது ஒழுங்காகப் புரிந்துகொண்டிருந்தால் உங்களுக்கும் உலகத்துக்கும் நன்மை செய்தவராகியிருப்பீர்கள்.

    அதை விடுத்து எல்லா மதங்களைப் பற்றியும் படித்துக் கடைசியில், ‘எல்லாம் பொய்’ என்று நீங்கள் முடிவு சொல்வதால், எண்ணற்ற மஹானுபாவர்களின் அனுபவ அறிவைப் புறந்தள்ளிவிட்டு இவ்வுலகம் உங்கள் கருத்தின் பின்னால் வந்துவிடப் போவதில்லை.

  42. ஜெனில், தாங்கள் கடவுள் மறுப்பை கொண்டவர். கடவுள் மறுப்பை கிறித்துவ மதம் ஏற்று கொள்கிறதா? அது சரி எல்லா மத புத்தகத்தையும் படித்தேன் என்று சொல்கிறீர்கள். இதை என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் ஹிந்து மதத்தின் எந்த புத்தகத்தை படித்துள்ளீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

  43. \\Also to ur information there is no race called as BHARATHEYA RACE….The collection of many races only is called as INDIA…\\

    FYI: we are completely against the concept of race. i was created in 19 th century by christian scholars for diving the people in the name of language and skin color… for the benefit of western European christian colonial government.

    \\Just go to AMERICAN EMBASSY and see the LONG queue waiting for US Visa..Who will be majority on it MUSLIMS or CHRISTIANS or ur PATRIOTIC HINDUS ??? \\

    western countries are standing in the queue to sell their product in India. Don’t you know that?

    ஹிந்துகள் செய்வது வியாபாரம். கிறித்துவர் நிறுவனங்கள் செய்வது ஆன்ம அறுவடை என்ற பெயரில் செய்யும் பித்தலாட்டம்….

    ஹிந்து என்பது மதம் அல்ல அது ஒரு கலாச்சாரத்தை குறிக்கும் சொல்…எல்லா பாரத பூமியின் பண்பாட்டை அடிப்படையாக கொண்ட மதங்களின் தொகுப்பு.. இதை தான் ஜெயமோகன் அழகாக தனது கட்டுரையில் எழுதியுள்ளார்….

    \\The collection of many races only is called as INDIA…\\

    இந்த பித்தலாட்டதை தான் நாங்கள் எதிர்கிறோம்… வெளி நாட்டுகாரர்கள் மட்டும் ‘pluralism” ஏற்று கொள்ளமாட்டார்களாம்… நாங்கள் மட்டும் ஏற்று கொள்ள வேண்டுமாம்…

    தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குவகளை போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது….

  44. \\தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
    (சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் –
    இராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 ஆவது பக்கம்).\\

    பித்தாலாட்ட தனமான ஒரு கடைந்து எடுத்த பொய்யை இங்கு எழுத வேண்டாம் என்று கூறி கொள்கிறேன்.. இதற்கான ஆதாரம் உண்டா? அல்லது அவர் சொன்ன விசயத்தை முழுமையாக பதிக்காமல் அறை குறையாக பதிப்பது அறிவுள்ளோர் செயல் அல்ல…

    அடுத்து அதே இராமயணம் தான் இராவணன் ஒரு பிராமணன் என்று சொல்கிறது…. அதாவது பார்ப்பணன் என்று….திராவிட பாஷையில் ஆரியன்….

  45. //Now Nagaland, Mizoram, Manipur after kicking out all the Hindu they want to declare their state as Christian majority and rule the state as per Bible and also wanted special laws like Kashmir. This called Desha Dhroham do you understand or still talk rubbish like visa queue ………….
    //
    Can u give proof for this ??? and Don’t bring kashmir here asking for spl rights is not wrong in case of kashmir becase they became part of INDIA only after we agreeing that they will be given spl rights. So we can’t go back on our word..

    Also if someone ask to rule according to KORAN or BIBLE its DESH DROHAM but if RSS says we want HINDU RASTRYA or RAMA RAJIYAM then its DESH BHAKTHI ??? This is wat i called biased thinking….

    And don’t think iam ony opposing HINDUISM even i talk with the same tone towards CHRISTIANITY when i talk to my CHRISTIAN friends and even to my parents.. If u can come out of ur biased thining even iam ready to support u even against christians for logical reasons. If CHRISTIANS in Nagaland or anywhere are asking for BIBLE rule i will be the first person to oppose that. JAI HIND

  46. //FYI: we are completely against the concept of race. i was created in 19 th century by christian scholars for diving the people in the name of language and skin color… for the benefit of western European christian colonial government.//

    So u r saying that even before christians came here there was a country called INDIA ?? And christian divided us , How can u lie like this ? Even present day tamil nadu was ruled by many kings at that time inspite of having the same language as mother tongue if english divided us why did TAMILS needed more than one king ? and y there are many wars between them ?? And u r trying to say CASTE system was introduced by the english ?? its simple to blame others for our mistakes but its very hard to accept and improve ourselves.

  47. //western countries are standing in the queue to sell their product in India. Don’t you know that?//

    Wat relation has the above stmt has with my question ?? Is selling ur product to other country and changing ur country it self are same ?? And y they are marketing their products here ?? e.g Computer processor, the reason is we are not able to create on ouir own ?? If they are marketing who asked u to buy it ?? Did westernerns said “Please come to our country” ?? They y u ppl are standing in queue for VISA ??

  48. //நான் கேட்டிருப்பது, ‘நூல் வெளியீட்டு நிறுவனம் எது?’ என்று. அதைச் சொன்னால்தானே அர்த்தம் பற்றிப் பேச முடியும்?சரியான arthth அம தருமுன்னால், அந்தக் குறிப்பிட்ட நூல் என்ன சொல்கிறது என்று அறிந்துகொண்டுதானே பேச முடியும்?//

    https://www.vivekananda.net/PDFBooks/SpeechesandWritings1899.pdf , “Speeches and writing of Swami Vivekananda. Published by G.A.Natesan & CO.Madras . Page No. 496. And this page also says “Aryans Do not know inhabited those places”.

  49. அருமை அண்ணன் அரவிந்தநிலகண்டன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி & அன்பும். வாழ்த்த நான் பெரியவனும் அல்ல பெரியாரும் அல்ல.
    திராவிடவாதிகள் இந்த யூதயுப்ப்பை பாருங்கள். தமிழ் கடவள் ஞான வேல் முருகன் இவர்களுக்கு அருள் தரட்டும்.

    https://www.youtube.com/watch?v=rfkbbgxPf8g&feature=related
    https://www.youtube.com/watch?v=EOolmQJaqB0&feature=related
    பண்புடன்
    Augestian அந்தோனிசாமி – Malaysia

  50. I searched the said book the pages mentioned by you are the narration of a brief English translation of Valmiki Ramayana written in Sanskrit by Swamiji. Here he mention that learned civilized people (Aryans) does not know about the inhabitant living in the dense forest of south India. After long searching, they found a group of monkeys, and in the midst of those was Hanuman, the divine monkey. Have you heard of Hindus worshipping the monkey? You see, by the monkeys and demons they mean the aborigines of Southern India. (This was during Ramayana period and not connected with current Kaliyuga period). Do you know that every human being is a by product of monkey according the science.

  51. https://www.vivekananda.net/PDFBooks/SpeechesandWritings1899.pdf என்கிற link-ல் 587-589 பக்கங்களில் ‘Work and its secret’ என்னும் தலைப்புத்தான் இருக்கிறது.

    தாங்கள், “(சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் –
    இராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 ஆவது பக்கம்)” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    அடுத்து, பக்கம் 492 முதல் ‘இராமாயணம்’ என்னும் தலைப்பு வருகிறது. ஆனாலும், தாங்கள் குறிப்பிடும் 496, 587-589 ஆகிய பக்கங்களை என்னால் தரவிறக்கம் செய்ய முடியவில்லை. ஏனோ இன்று முழுவதும் முயற்சி செய்தும் மற்ற பக்கங்கள் download ஆகின்றன. இந்தக் குறிப்பிட்ட பக்கங்கள் blank ஆகவே வருகின்றன.

    வேறு link இருந்தால் தெரிவியுங்கள். இந்த நூல் வேறு இடங்களில் கிடைத்தாலும் பார்த்துவிட்டு அவசியம் பதிலுரைக்கிறேன்.

    தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு…

    இந்த அன்பர் ஜெனில் குறிப்பிட்டுள்ள நூலின் குறிப்பிட்ட பக்கங்கள் கிடைத்தால், அந்தப் பக்கங்களிலுள்ள வரிகளை (ஆங்கிலத்தில் உள்ளது) அப்படியே இவ்வலைத்தளத்தில் பதிவு செய்யும்படி வேண்டுகிறேன்.

  52. இந்தியாவை உடைக்கும் போலி மதச் சார்பாளர்களுக்கு சம்மட்டி அடி

    ஆயுத பூஜை செய்வது சரியே- ஐகோர்ட் தீர்ப்பு
    Puja in govt offices won’t hurt secularism: HC

    A Subramani, TNN | Jan 18, 2012, 09.03AM IST
    https://timesofindia.indiatimes.com/city/chennai/Puja-in-govt-offices-wont-hurt-secularism-HC/articleshow/11534022.cms
    CHENNAI: Is conducting Ayudha Puja or Saraswathi Puja in government offices a non-secular activity deserving to be banned? ‘No’, theMadras high court has ruled.
    “Showing respect to the place of work and the objects of work will in no way offend the feelings of others or affect secularism. Ayudha Puja is referable to prayer, reverence or respect given to objects through which an individual performs his profession or occupation. Ayudha Puja in its real terms transcends all religion,” a division bench ofJustice R Sudhakar and Justice Aruna Jagadeesan has said.
    Dismissing a public interest writ petition, which sought a direction to the government to prohibit “all sorts of religious activities within the precincts of government offices”, the bench said an individual showing respect to his occupational tools cannot be said to offend the secular nature of the state.
    “Irrespectvie of religion, Ayudha Puja is a reverence shown by cobblers, weavers, farmers, autorickshaw drivers, rickshaw-pullers, carpenters, shopkeepers, chartered accountants, advocates, doctors etc., to objects which they use to earn their livelihood,” Justice Sudhakar, who wrote the judgment for the bench, observed.
    Similarly, Saraswathi Puja is referable to showing respect to education, knowledge and the script, the judge said, adding: “The form of worship or veneration to files and records at the close of the working day preceding the Ayudhua Puja or Saraswathi Puja holidays cannot be called as religious activity by the government, affecting the secular nature of the state.”
    The judges pointed out that Ayudha Puja and Saraswathi Puja fall on holidays and it could not be concluded that it was the state which performed these pujas at office. “In government offices, if an individual shows respect and reverence to the materials, books, files or records which are being handled by the individual, it will be referable to his individual freedom and there is nothing to show that it affects the secular nature of the state.”
    The petitioner, S P Muthuraman, cited a government order issued in 1993 and a circular dated April 22, 2010 to seek a ban on religious activities in government offices. In December 1993, a government order said no construction of any new structure for religious worship or prayer within the office campus or modification of any existing structure should be permitted. This was reiterated by a division bench order of the high court in March 2010. It was following the HC order that in April 2010 the government sent the circular.
    Justice Sudhakar, however, pointed out that the government order and the circular related to construction and enlargement of structures within government office complexes and had nothing to do with an individual’s right to offer puja for the place of work or tools. An individual’s right to freedom of conscience is permitted in Article 25 of the Constitution, he said, adding: “If the relief sought for by the petition is accepted, it is likely to cause disharmony among various groups.”

    ஒரு தமிழ் பத்திர்க்கையிலும் இது வரவில்லயே???

  53. //பைந்தமிழன் on January 18, 2012 at 10:24 am//

    இந்தத் தீர்ப்பு ஓரளவு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், ‘சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகியவற்றை மத நடவடிக்கைகளாகக் கருத முடியாது. உலக வாழ்க்கைக்கு மனிதருக்குத் தேவையானவற்றை அளிக்கிற உயிரில்லாக் கருவிகளுக்கும் உயிரில்லாக் கல்விக்கும் மரி யாதை செய்யும் நிகழ்வாகத்தான் கருத முடியும்’ என்று ஸ்ரீமான் நீதிபதி குறிப்பிட்டிருப்பது கவனிக்க வேண்டியது.

    இத்தீர்ப்பின் மூலம், ‘சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகியன மதம் கடந்து எல்லோருக்கும் பொதுவானவை’ என்கிற கருத்துப் படவும் ஸ்ரீமான் நீதிபதி பேசியிருப்பதைக் கவனியுங்கள்.

    உண்மையில், இவ்விரண்டு பூஜைகள் மட்டுமல்ல. ‘ஹிந்து சமயத்தினரின் எல்லாச் செயல்பாடுகளுமே சமய எல்லை கடந்து, பொதுவாக நிற்கும் வாழ்க்கை முறையே’ என்பதை இந்தச் சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

    ஒரு அரசு அலுவலகத்தில், ஒரு ஹிந்து வழிபாடு செய்வதை மற்ற சமயத்தினர் மறுப்பதாக எங்கும் காணவில்லை. இது secularist-கள் எனப் பேசப்படுவோரின் ‘விந்தையான’ ஹிந்து சமய எதிர்ப்பே..!

    எனக்குத் தெரிய, எங்கள் பகுதியில் ஒரு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இருக்கிறது. அங்கு, கல்விக்கூட வளாகத்துக்குள் ஒரு விநாயகர் கோயில் மற்றும் ஒரு அம்மன் ஆலயம் ஆகியனவும் இருக்கின்றன. இப்போது என்ன சிக்கல் என்றால், secular அரசுக் கல்விக் கூடம் செயல்படும் வளாகத்தில் சமய வழிபட்டுக் கட்டிடம் இருப்பதற்கு ஒரு சிலர்-pseudo secularist- கள்தான்-எதிர்ப்புக் காட்டுகிறார்கள்.

    கொடுமை என்னவென்றால், கல்விக்கூடத்துக்காக இடத்தை கிராம மக்கள் தந்தால்தான் அரசு கல்விக் கூடத்தைத் துவக்குகிறது. பாரம்பர்யமாகக் கோயில்கள் இருந்து வருகிற இடம் கல்விக்கூடத்துக்கு வழங்கப்பட்டு, இப்போது secular பிசாசு கோயில்களை விரட்டுகிறது. ‘ஒண்ட வந்த பிடரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதை’ என்று சொல்வார்களே..! அதுதானே இது?

    இங்கு மட்டுமல்ல. பல மேல்நிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகளின் நிலையும் இதே கதை தான். பெரும்பாலான பள்ளி வளாகங்கள், ஹிந்து சமயத்தினர் விசேஷ நாட்களில் கூடும் பொது இடங்களாகத்தான் இன்றும் இருக்கின்றன. secular கல்விக் கூடங்களும் அலுவலகங்களும் குடியேறப் பரந்த மனத்துடன் செயல்படும் ஹிந்துக்களுக்கு அனாதரவுதான் கதி.

    வேண்டுமானால், ‘ஆதரவற்றவர்களுக்கு ஆண்டவனே கதி’ என்று நாம் மன நிறைவடையலாம்.

    ‘இந்த நாட்டின் பாரம்பர்யமான சமய வழிபாட்டு உரிமைகளை விட்டுக் கொடுப்பதுதான் சமயச் சார்பின்மை’ என்று நினைக்காமல், நம்முடைய முறைகளை தைரியமாகவும் சுதந்திரமாகவும் கடைபித்துக் கொண்டு, பிறரின் வழிபாட்டு முறைகளையும் அனுமதிப்பது தவறல்ல, சரியே. ஆனால், அந்நியச் சமயங்களுக்காக ஹிந்து சமய வழிபாட்டு உரிமைகளை முழுதும் விட்டு விடுவது தேசத்துக்கு நல்லதல்ல.

    உலகின் எந்தவொரு சமயச் சார்பற்ற நாட்டிலும் இத்தகு இழி செயல் முறைகள் நடைமுறையில் இல்லை என்றே நினைக்கிறேன். விழித்துக்கொள்ள வேண்டியவர்கள் நாம்தான்.

  54. //jenil on January 9, 2012 at 3:37 pm
    தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
    (சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் –
    இராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 ஆவது பக்கம்).
    This proves that ur Vivekanada himself has agreed that people who where living in south are potraied as ASURAs in RAMAYANA.. Do u agree this or NOT.????//

    //jenil on January 15, 2012 at 6:08 pm
    “Speeches and writing of Swami Vivekananda. Published by G.A.Natesan & CO.Madras . Page No. 496. And this page also says “Aryans Do not know inhabited those places”//

    மீண்டும் சந்திக்கிறோம் நண்பர் ஜெனில் அவர்களே..!

    தாங்கள் குறிப்பிட்டுள்ள நூலின் 587-589 பக்கங்களில் ‘இராமாயணம்’ என்னும் தலைப்பும் இல்லை. அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்தும் இல்லை. ஆனால் பக்கம் 496-ல் கீழ்க்கண்ட செய்திகள் உள்ளன.

    ‘And the Aryans did not know who inhabited these places.’ இதற்கு, ‘இராமரும் லக்ஷ்மணரும் சீதையும் தாங்கள் அயோத்தியை விட்டுச் செல்ல வேண்டிய வனத்தில் யார் யார் வசிக்கிறார்கள் என்று அறிந்திருக்கவில்லை’ என்றுதான் பொருள்.

    ‘All the forest tribes of that day…’ என்பது, ‘தென் இந்தியாவில் இருந்த மக்களாக’ உங்களால் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதில் உங்களின் உள் நோக்கம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. யமுனை நதிக்கரையை அடையும் வரை இராமரும் சீதையும் லக்ஷ்மணரும் அடர்ந்த காட்டினுள் பயணிக்க வேண்டியிருந்தது. அங்கு இலங்கை வேந்தனின் சகோதரியை அவர்கள் சந்தித்தனர். காட்டுப் பகுதியைப் பற்றிக் கூறும்போது, அங்கு குரங்குகளும் அசுரர்களும் இருந்ததாகவும் அப்படிப்பட்ட இடத்துக்குத் தான் இந்த மூவரும் வனவாசமாகச் செல்லவேண்டியிருந்தது என்றும் வருகிறது. அந்தப் பயணத்துக்கு முன்னால், அவர்கள் அரண்மனை வாசிகளாவர்.

    ‘குரங்குகளும் அசுரர்களும் வனத்தில் இருந்தனர்’ என்பதும் ‘வனத்தில் இருந்தவர்கள் எல்லோரும் குரங்குகளும் அசுரர்களுமே’ என்பதும் வேறு வேறு. ‘ஜெனில், தமிழ் ஹிந்து தளத்தில் எழுதுகிறார்’ என்பதும் ‘தமிழ் ஹிந்து தளத்தில் எழுதுபவர்கள் எல்லோரும் ஜெனில்கள்’ என்பதும் வேறு வேறு தானே..!

    அப்படியே ‘வனத்தில் வசித்தவர்கள் இவர்கள்தாம்’ என்று கொண்டாலும், நீங்கள் குறிப்பிடும் பகுதியில், ‘யமுனைக்கும் அயோத்திக்கும் இடைப்பட்ட வனம்’தான் குறிக்கப்பட்டுள்ளது. அது எப்போது தென்னாடு அல்லது திராவிடப் பகுதி என்று ஆனது?

    தமிழில் நடத்தப் பெறும் தளத்தில் தமிழில் வரும் கட்டுரைகளையும் தெரிவுகளையும் மொழி பெயர்த்துத் தெரிந்துகொள்வதுபோல், மறுமொழிகளையும் ஆங்கிலத்தில் தயாரித்துத் தமிழில் மொழிபெயர்த்துப் பதிவு செய்ய முயலுங்கள்.

    நமக்குத்தான் ஆங்கிலம் தெரியும். அதைக்கொண்டு ஆங்கிலம் அறியாத தமிழர் பகுதியில் என்ன சரடு வேண்டுமானாலும் விடலாம் என்று வீண் முயற்சி செய்வதைத் தவிருங்கள்.

    நிறைவாக..!

    நீங்கள் எப்போது உலகப் பொது மனிதரான ஸ்வாமி விவேகானந்தரை, ‘…your Vivekananda…’ என்று பிரித்தீர்களோ அப்போதே உங்களிடம் சரியான கருத்தை எதிர்பார்ப்பது சரியல்ல என்று எவரும் முடிவு செய்து விடலாம். விவேகானந்தம் என்னும் நெருப்பில் எவர் விழுந்தாலும் சாம்பல்தான் ஆகலாம். ஆனால் அதில் விழும் தகுதியுள்ளவராக ஒருவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  55. வீரமணி போன்ற மூடர்கள் இதுபோன்ற பிரச்சாரங்களை அரபு நாட்டில் செய்ய வேண்டும்,செய்தபின் உயிரோடு இந்தியா வரட்டும் அப்புறம் கேட்கலாம் இவரது மேடை பிரச்சாரத்தை.

  56. //‘And the Aryans did not know who inhabited these places.’ இதற்கு, ‘இராமரும் லக்ஷ்மணரும் சீதையும் தாங்கள் அயோத்தியை விட்டுச் செல்ல வேண்டிய வனத்தில் யார் யார் வசிக்கிறார்கள் என்று அறிந்திருக்கவில்லை’ என்றுதான் பொருள்.//

    If u can interpret in this way nobody can argue with u. The statement is very clear “The Aryans do nothing about the tribals, They said whoever is ugly ias monkey and whoever is strong as ASURAs”. But u are giving a different meaning…. The point here iam making is there were people called Dravidans but u r saying there are no differentiation in Aryans and dravidans.

    Iam asking one simple question “Where did sanskrit came from “

  57. Jenil

    //Iam asking one simple question “Where did sanskrit came from “//

    according to deivanayagam and brave bell it came from tamizh 🙂

    //
    If u can interpret in this way nobody can argue with u. The statement is very clear “The Aryans do nothing about the tribals, They said whoever is ugly ias monkey and whoever is strong as ASURAs”. But u are giving a different meaning…. The point here iam making is there were people called Dravidans but u r saying there are no differentiation in Aryans and dravidans
    //

    this is interesting because, Kooni was supposed to be ugly. Guhan too was supposed to be ugly. i do not think they were called monkeys.

    Jenil is so soaked in Deivanaayaga ism that she is pushing ugly people to monkey hood. Well if that is how you can intrpret, that goes to show your mental outlook.

  58. மாலடியான் on January 29, 2012 at 4:44 pm

    உங்கள் பதில் மிக சரியானதும், தக்க பதிலும் ஆகும்.

  59. மாலடியான்,

    சரியான முறையில் தகவலை தந்து பொய் பேசுவோரை அம்பலபடுத்தியதர்க்கு மிக்க நன்றி 🙂

    ஜெனில்,

    உங்கள் முட்டாள் தனமான கால்டுவெல் பாதரியார் கதையை எல்லாம் இங்கு போட்டவுடன் ஏமாற இது ஒன்றும் ஏமாந்த போலி திராவிட கூட்டம் அல்ல…

    இவ்வளவு தெளிவாக மாலடியான் எழுதிய பிறகும் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் சப்பை கட்டு கட்டும் உங்கள் வாதம் முன்றாம் கட்ட அரசியல் வாதி போன்று உள்ளது. மீண்டும் ஒரு முறை கூறி கொள்கிறேன். இது கற்றோர் மற்றும் அனுபவம் மிக்க மக்கள் உள்ள தளம். ஆதலால் சற்று உண்மையான விஷயத்தை எழுதுங்கள்.

  60. சம்ஸ்கிருதமும் தமிழும் தான் ஆரியர் என்று சொல்லப்படுபவர்களையும் தமிழர் என்று சொல்லப்படுபவர்களையும் இணைக்கிறது. இருமொழியும் அடிப்படையில் ஒரே ஒலிப்புகளை உடையதால், ஒருகாலத்தில் இரண்டும் ஒரு பகுதியிலிருந்து வந்தது என்பது தெளிவு வெளியிலிருந்து வந்தவை அல்ல. ஆனால் எது முதலில் வந்தது என்ற கேள்வி நம்மை பிரிக்குமானால் அதை விவாதமாக்காமல் விடுவதே சிறந்தது.

  61. \\\\\பிறகு சுப்புவின் கட்டுரைக்கு ஆதரவாக கோமதி செட்டியின் மறுமொழி. உண்மையில் நீங்கள் சாதி மறுப்பாளராக இருந்தால் சாதி பெயரை பின்னொட்டாக போட்டு வரும் கடிதங்களை வெளியிடாமல் இருப்பதுதான் முறை.\\\\

    அன்பரே. பெயரில் ஜாதி உள்ளதா இல்லையா என்பது முக்யமில்லை. கருத்துக்களில் உள்ளதா இல்லையா என்று பாருங்கள். இங்கு உத்தரங்களெழுதும் ஹிந்து அன்பர்கள் அனைவரும் ஜாதி என்ற சமுதாயத் தடைகளைத் தாண்டி ஹிந்து என்ற அடிப்படையிலேயே தங்கள் கருத்துகளைப் பகிர்கிறார்கள் என்பதென் அபிப்ராயம்..

  62. நீங்கள் என் தமிழ் மறுமொழியைப் படித்துவிட்டுத்தான் பதில் தந்திருக்கிறீர்கள். பின்னர் ஏன் ஆங்கிலத்தில் எழுத வேண்டும்? இதை மாற்றிக் கொள்வது நல்லது.

    கண்டிப்பாக ஸ்ரீ ராமர் உள்ளிட்ட ‘உள்ளத்தால் உயர்ந்தவர்களை’த்தான் ஸ்ரீ ராமாயணம் ஆரியர்கள் என்று சொல்கிறது. திராவிடர்கள் என்கிற பதம் பயன்படுத்தப் பட்டிருக்கிற இடங்களில் அது பிரதேசத்தை ஒட்டிய சொல்லாகத்தான் வருகிறது.

    சமஸ்கிருதம் இறைவனால் அருளப்பட்ட மொழிகளுள் ஒன்று. தமிழும் அப்படியே. இந்த இடத்தில் ‘தமிழும்’ என்பதில் உள்ள ;உம்மை’ ‘எண்ணும்மை’ப் பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. இதையும் ‘இழிவு உம்மை’ என்று பொருள் கொண்டுவிடாதீர்கள். ஏனென்றால் ‘தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’ என்கிற அறிவிப்புப் பலகையில் காண்கிற ‘உம்மை’யை உங்களைப் போன்றவர்கள் ‘இழிவு உம்மை’யாகக் கருதி நீக்கச் சொல்லிப் போராடியிருக்கிறார்கள். அதனால்தான் குறிப்பிடுகிறேன்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள 587-589 என்கிற பக்கங்கள் தவறு என்று சுட்டியிருந்தேன். பதிலில்லை.

    496-ஆம் பக்கம் ஸ்வாமி விவேகானந்தர் குறிப்பிட்டிருக்கும் வனப் பகுதி திராவிடப் பகுதியல்ல என்பதை விளக்கியிருக்கிறேன். பதிலில்லை.

    அழகற்ற தோற்றமுள்ளவர்களைக் குரங்குகள் என்றும் ஆற்றல் மிக்கிருந்தவர்களை அசுரர்கள் என்றும் அன்றைய மனிதாகள் கருதியிருக்கலாம் என்று ஸ்வாமி விவேகானந்தர் எழுதியிருப்பதை நான் மறுக்கவில்லையே..! இதில், ‘திராவிடர்களைக் குரங்கு என்றும் அசுரர் என்றும் எங்கே அவர் குறிப்பிட்டுள்ளார்?’ என்கிற கேள்வியை ‘வசதியாக !’ மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, எங்கெங்கோ போகிறீர்கள்.

    உங்களைப் போன்றோரின் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறுபவர்கள் எல்லோரையும் என்னால் மாற்ற முடியாதுதான். ஆனால், உண்மையை எழுதினால், ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும் என்னும் அடிப்படையிலேயே இந்த மறுமொழியை எழுதுகிறேன்.

    ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குப் பெயர்ப்புச் செய்யும்போது அடிப்படைக் கருத்து மாறிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஸ்வாமி விவேகானந்தர் இந்தியாவை ஒரே தேசமாக, இங்கு வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் எல்லோரையும் ஒரே இனமாகப் பார்த்தவர். அவரின் அடிப்படைக் கருத்துக்கு முற்றிலும் மாறாக, அவர் சொன்னதாகவே ஒரு புரளியை அவிழ்த்துவிட்டால், அது மொழிபெயர்ப்பு அல்ல; கருத்துப் பிறழ்ச்சி.

    பாரதியும் இந்த மண்ணை ‘ஆரியத்தாய்’ என்றே குறிப்பிட்டுள்ளார். திருநாவுக்கரசர் தேவாரத்தில் ‘…ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று பாடியுள்ளார். இந்தியர்கள் ஆரியர்களே. ஆரியருள்ளும் தென் பகுதியில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என அழைக்கப் பட்டது நிலப் பகுதியை ஒட்டித்தான். பாரதியையும் நாவுக்கரசரையும் நான் அடியொற்றிப் பொருள் கொள்வது எப்படித் தவறாகும்?

    நீங்கள் இன்றைய பிராமணர்களைத்தான் ஆரியர் என்று கருதுகிறீர்களா? பலரிடம் நெருங்கிப் பேசினால் அப்படித்தான் சொல்கிறார்கள். அதனால்தான் இந்தக் கேள்வியை உங்களிடமும் வைக்கிறேன்.

    அப்படிஎன்றால், ஆரியர்களுள் இதர மூன்று வர்ணத்தார் என்ன ஆனார்கள்? பிராமணர், க்ஷத்ரியர், வைஸ்யர், சூத்ரர் என்கிற வர்ண முறையில் இடம்பெறும் பிராமணர் தவிர்ந்த பிற மூவர்ணத்தாரும் ஆரியர்கள் இல்லையா?

    இதில் சூத்ரர் என்பதை மிகவும் இழிவான பிரிவாகச் சிலர் கருதியதை, நடத்தியதை எல்லாம் நான் ஞாயப் படுத்தவில்லை. அது தவறுதான்.

    பஞ்சமர் என்பது கூட, சட்ட திட்டங்களை மீறியவர்களைச் சமுதாய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கிவைத்த ஒருவகை நீதி முறைதான். உண்மையில், சமுதாயம் ஏற்பாடு செய்துவைத்திருந்த கட்டமைப்பு முறைகளை மீறவும் தங்கள் விருப்பம்போல் வாழவும் மக்களுக்கு இருந்த உரிமையைப் பறை சாற்றுவதுதான் பஞ்சமர் என்னும் அமைப்பு முறை. ஆனால், அந்த முறைகளைஎல்லாம் அப்படியே இன்றும் கடைப் பிடிக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள்?

    ஆரியரல்லாத திராவிடச் சமுதாயத்தில் வர்ண முறை எப்படி வந்தது? தமிழின் தொன்மையான இலக்கியங்கள், ‘அந்தணர், அரசர், வணிகர், உழவர்’ என்று குறிப்பிடுகிற போது அதில் வரும் அந்தணர் யார்? சிலப்பதிகாரத்தைத் தமிழ் இலக்கியம் என்று ஏற்கிறீர்களா? அதில் ‘மறை முழங்கும் நகரமா’க மதுரை மாநகரம் குறிப்பிடப்பட்டிருப்பது தவறா?

    முதலில் ‘த்ராவிட’ என்பது தமிழ்ச் சொல்லா? ‘த்’ என்பது எப்படி மொழி முதலாகும்?

  63. நான் பழைய திக காரன். கொஞ்சம் பகுத்தறிவு இருந்ததால் சீக்கிரமே தப்பித்தேன். அவர்களெல்லாம் எதோ பாவப்பட்ட சீவர்கள், இன்னும் பெருமான் ஆட்கொள்ளவில்லை என்றே நினைத்திருந்தேன். Breaking India புத்தகம் வாசித்த பின்னர் தான் தெரிகிறது இவர்களின் உண்மை ஸ்வரூபம். பித்தலாட்ட அயோக்கிய முடிச்சவிக்கி மானங்கெட்ட ஒழுக்கங்கெட்ட ஜென்மங்கள் தான் திக திமுக அதிமுக என்னும் எல்லா திராவிட திராவிடர் கட்சியிலும் இருக்கும். இவர்களின் முதுகெலும்பை உடைக்கும் விதமாக சில நுல்களை மலிவு பதிப்பு செய்து பரப்ப வேண்டும். உடையும் இந்தியா, திராவிட மாயை, கொஞ்சம் விலை அதிகம். வனவாசம் விலை குறைவு தான். வனவாசம் தான் என்னை மீட்டது.

    2 suggestion வைக்கிறேன்.
    1. Abridged version கொண்டுவரலாம். மிக மலிவாக கொடுக்கலாம். செய்தி போய் சேரும். ஆர்வமுள்ளவர்கள் original version வாங்கி கொள்வார்கள். இந்நூல்களின் சாற்றை excerpts ஒரு காகிதமளவு துண்டு பிரசுரம் ஆக்கி பரப்ப வேண்டும்.
    2. பகவத் கீதை, பாகவதம் நூல்களை இஸ்கான் subsidize செய்து கொடுப்பது போல இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லவேண்டும். இது அத்தகைய பெரிய தொண்டு. ஒரு நிதி உருவாக்குங்கள். எங்களை போன்றோர் கொஞ்சம் தர முடியும். தேச பக்தி உள்ள தொழிலதிபர்கள் நிறைய அளிப்பார்கள். வாருங்கள் இந்த திராவிட காட்டுமிராண்டிகளின் மூலைச்சலவையை தகர்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *