மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்

துரை ஆதீனம் மிகப் பழமை வாய்ந்த ஆதீனம். திருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்ட மடம் என்பர் பெரியோர். அந்த மடத்தின் ஆதீனகர்த்தர் அரசியலிலும் ஈடுபட்டு ஒரு குறிப்பிட்ட மனிதரின் ஆதரவாளராகப் பல இடங்களில் பேசவும் செய்திருக்கிறார். பல ஆலயங்கள் மதுரை ஆதீனத்தாரின் கீழ் இயங்கிக் கொண்டு வருகின்றன. அப்படிப்பட்ட மதுரை ஆதீனகர்த்தர் அடுத்த பீடாதிபதியாக சமீப காலமாகப் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, பத்திரிகைகள், ஊடகங்கள் மூலம் பிரபலமான நித்யானந்தா சுவாமியாரை வாரிசாக நியமித்திருக்கிறார் என்கிற செய்திதான் இப்போதைய தலைப்புச் செய்தியாக விளங்குகிறது.

ஒரு செல்வந்தர் தனது வாரிசாக யாரையாவது நியமனம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அது அவருடைய சொந்த விவகாரம். நாம் அதற்காகக் கவலைப்படுவது தேவையில்லை. ஒரு அரசியல் கட்சித் தலைவர் தன் மகனை அல்லது நெருங்கிய சொந்தக்காரரை அடுத்த தலைவராக நியமிக்கிறார் என்றாலும் அது அந்தக் கட்சியின் சொந்த விவகாரம், அன்னியர் தலையிடத் தேவையில்லை. சரியா தவறா என்பதை அந்தக் கட்சிக்காரர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் தென் தமிழ் நாட்டின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த ஒரு சைவ மடம் ஒருவரை தலைவராக ஏற்கிறது எனும்போது இந்துக்கள், குறிப்பாக சைவர்கள் அது குறித்து கவனம் செலுத்துவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதன் கருத்து, “சீசரின் மனைவி சந்தேகத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்” என்பது. அதன்படி மக்கள், மக்களின் நம்பிக்கை, வழிபாடு, சமயம் சார்ந்த செயல்பாடுகள் இவற்றில் வழிகாட்டும் பொறுப்பில் இருக்கும் ஒரு மடத்துக்கு எந்த குற்றச்சாட்டோ அல்லது குறைபாடுகளோ இல்லாத நபர் தலைமை ஏற்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஒரு தனியார் அல்லது அரசாங்க அலுவலகம் இருக்கிறது. அதில் பணிபுரியும் அதிகாரி அல்லது ஊழியர் மீது குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்படுகிறது. அப்போது அந்த நிறுவனம் அல்லது அலுவலகம் என்ன செய்கிறது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்கிறது. அந்த விசாரணை முடிந்து அவர் மீது குற்றம் இல்லை நிரபராதி என்று முடிவாகும் வரை அவரை இடைக்கால பணி நீக்கம் செய்து வைக்கின்றனர். குற்றம் சுமத்திய பிறகு தான் அந்த குற்றத்தைச் செய்யவில்லை என்று அசைக்கமுடியாத ஆதாரங்களைக் காட்டி அதிலிருந்து வெளிவருவதுதான் சரியான வழி. குற்றச்சாட்டுக்கு ஆளான எவரும் முதலில் சொல்வது நான் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்பதுதான். ஆனால் குற்றம் சாட்டுபவர்கள் சான்றுகளைக் காட்டி குற்றத்தை நிரூபிப்பாரானால் குற்றம் உறுதியாகும். அப்படி அவர் குற்றம் செய்யாதவர் என்று விடுவிக்கப்பட்டாலும், அவர் மீது அந்த கறை படிந்துதான் இருக்கும். நீதிமன்றமும், பொதுமக்களும் அவர் குற்றம் செய்யவில்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் தர்மம் என்றாலும், மக்கள் மனத்தில் ஒரு நெருடல் இருந்து கொண்டுதான் இருக்கும். இன்னார் இன்ன குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ஆச்சே, இவர் இந்த பெரும் பதவியை வகிக்கலாமா என்ற எண்ணம் தோன்றத்தான் செய்யும். இப்படிப்பட்ட சூழ்நிலை தமிழகத்தில் தோன்றுவது இது முதன்முறை இல்லை. இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சி நடந்து இன்னமும் முடிவாக நிலையில் இருந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் இப்போது வந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மதுரை ஆதீனத்தின் தற்போதைய தலைவர் பெங்களூரில் நித்யானந்தாவுக்கு மதுரை ஆதீனத்தின் 293ஆவது மடாதிபதியாக முடிசூட்டியிருக்கிறார். அதை மதுரையில் செய்யாமல் எதற்காக பெங்களூரில் நடத்தினார் தெரியவில்லை.

இன்று மதுரை ஆதீன வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நித்யானந்த சுவாமி கடந்த காலத்தில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானவர். என்னதான் அவர் தன்னை நிரபராதி என்று கூறிக்கொண்டாலும், அது குறித்து பல சான்றுகளை உருவாக்கிக் காட்டினாலும், அவர் மீது படிந்த கறை முற்றிலும் நீங்கிடாத நிலையில் ஒரு கெளரவமிக்க, பாரம்பரியமிக்க பொது சைவ மடத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.

நித்யானந்தவை மதுரை ஆதீனத்துக்குத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற வினாவை முன்வைத்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சோலை கண்ணன், பாரதிய பார்வார்டு பிளாக் முருகன், தேவர் தேசிய பேரவை திருமாறன் உள்ளிட்டோர் தற்போதைய ஆதீனத்தைச் சந்தித்து பேச முயன்றனர். ஆனால் அதற்கு மதுரை ஆதீனம் சம்மதிக்கவில்லை. மடாதிபதியின் இந்தப் போக்கைக் கண்டித்து இந்து இயக்கங்களின் தலைவர்கள் மடத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

எங்காவது உண்ணாவிரதம் என்றால், எதிர் கோஷ்டியினர் ‘உண்ணும் போராட்டம்’ நடத்தி போராளிகளைக் கேவலப்படுத்துவது தமிழ் நாட்டு வழக்கம் அல்லவா? அது போல நித்யானந்தரின் ஆதரவாளர்கள் இந்து இயக்கங்களின் தலைவர்களுக்கு எதிராகவும், நித்யானந்தாவுக்கு ஆதரவாகவும் அவருக்கு ஜே போட்டு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இரு தரப்பாரும் வாக்குவாதம் செய்ய காவல்துறை தலையிட்டு சமரசப் பேச்சு நடத்தினர். ஒரே ஒரு நபரை மட்டும் மதுரை ஆதீனம் சந்திக்க அனுமதி கிடைத்தது. அவர் சுரேஷ் பாபு என்பவர். இவர் போரூர் திருப்பனந்தாள் ஆதீனப் பிரதிநிதி.

அப்படி சந்தித்த சுரேஷ் பாபுவிடம் மதுரை ஆதீனம் இது குறித்து யாரிடமும் பேச முடியாது என்றும், கேள்வி கேட்க யாருக்கும் தகுதி கிடையாது என்றும் கூறியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து நித்யானந்தர் நியமனத்துக்கு எதிரானவர்களும் ஆதரவாளர்களும் எதிரெதிராக கோஷங்களைப் போட்டுக் கலைந்திருக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து அர்ஜுன் சம்பத், ‘ஆதீனத்தில் நடந்தவை வேதனை அளிக்கின்றன. பொதுவாக ஒரு மடத்தில் வாரிசு நியமிக்கப்படுவதற்கு முன்பு தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்குச் சரியான பயிற்சிகளைக் கொடுத்து, அந்த ஆதீனத்தின் கொள்கைகளுக்கேற்ப அவருக்குக் கல்வி தகுதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பின் சிவதீட்சை கொடுப்பார்கள். அதற்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டவர் தன் தகுதிகளை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பது விதி. சில ஆதீனங்களில் சிவ தீட்சை பெற்ற சிலர் அவர்கள் ஆதீன கோயில்களில் கட்டளைத் தம்பிரான்களாகப் பல காலம் பணியாற்றித் தங்களை பக்குவப் படுத்திக் கொண்டு அவர்களில் தகுதி அடிப்படையில் அந்த ஆதீனத் தலைமை பண்டாரமாக நியமிக்கப் பெறுகின்றனர். இப்படி இளமையில் துறவு பூண்டவர்கள் தங்களது முதிய வயதில் கூட அந்தத் தலைமை கிடைக்காமல் போனவர்களும் உண்டு.

அர்ஜுன் சம்பத் அவர்களும் மற்ற எதிர்ப்பாளர்களும் கூறும் கருத்து என்னவென்றால், இந்த நித்யானந்தர் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் என்றும், குறிப்பாக துறவு பூண்டவர்கள் மீது பெண்கள் விவகாரக் குற்றச்சாட்டு என்பது அவர்களது துறவையே கேள்விக்குறியாக்கும் குற்றச்சாட்டு என்றும் தெரிவிக்கிறார்கள். எத்தனையோ சிவபக்தர்கள், அடியார்கள், சைவத்தை உயிர்மூச்சாகக் கொண்டு சைவ ஆகமங்கள், வழிமுறைகள் இவைகளைக் கடைப்பிடித்து நெறியோடு வாழ்பவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை யெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், பல்வேறு வழக்குகளிலும், பிரச்சினைகளும் சிக்கித் தவித்த ஒருவரை, திடீரென்று தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்வியை சைவம் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, பொது வாழ்வில் நேர்மையை விரும்பும் அனைத்துத் தரப்பாரும் கேட்கின்றனர்.

மதுரை ஆதீனத்துக்கு நித்யானந்தர் தேர்ந்தெடுத்த செய்தி பொதுவாக தமிழகத்திலுள்ள எல்லா ஆதீனங்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பது திண்ணம். மடாதிபதியாக இருப்பவர் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் சரி, அல்லது குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மடாதிபதியாக நியமிக்கப்பட்டலும் சரி அது அந்த தனிப்பட்ட மனிதரை மட்டும் பாதிப்பது அல்ல. இந்து சமுதாயம் முழுவதையும் அது கேவலத்துக்கு உள்ளாக்கும் செயல் என்பதை நல்ல மனம் கொண்ட அத்தனை இந்து சமூகத்தினரும் கவலையோடு கவனித்து வருகின்றனர்.

மதுரை ஆதீனத்துக்கு வந்த இளைப்பு நோயை நித்யானந்தர் குணப்படுத்தினாராம், அது, தான் செய்த புண்ணியம் அதனால்தான் அவரை ஆதீனத் தலைவர் ஆக்கினேன் என்கிறார் மதுரை ஆதீனம். ஞானம், புலமை, போர்க்குணம் இவை அனைத்தையும் கொண்ட் நித்யானந்தா தன் வாரிசாக வந்தது தாங்கள் செய்த புண்ணியம் என்கிறார் மதுரை ஆதீனகர்த்தர். நித்யானந்தாவுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிப்பது அவர்களுடைய அறியாமையை, பொறாமையைக் காட்டுகிறது என்கிறார் தற்போதைய மதுரை ஆதீனகர்த்தர்.

அதோடு விட்டால் பரவாயில்லை. நித்யானந்தாவுக்கு சான்றிதழும் கொடுக்கிறார். என்னவென்று? நித்யானந்தாவை தவறான கண்ணோட்டத்திலேயே மக்கள் பார்க்கின்றனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. யாரை நியமிக்கலாம் என எட்டு ஆண்டுகளாகத் தேடுதல் இருந்தது. பெங்களூரில் நித்யானந்தாவை சந்தித்த போது அவரை நியமிக்கலாம் என உள்ளத்தில் உதித்தது. அங்கு அவருக்கு பகதர்கள் அதிகம் என்பதால், அங்கேயே முடிசூட்டினேன் என்கிறார் மதுரை ஆதீனம்.

ஒரு கோடி ரூபாய் கொடுத்து இப்பதவியை அவர் பெறவில்லை என்று இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து பதிலளித்திருக்கிறார். அவர் சொல்கிறார், ‘அது அவர் குருவுக்குச் செய்த பாதகாணிக்கை’ என்று. இதில் அவர் என்ன சொல்ல வருகிறார்? ஒரு கோடி ரூபாய் கொடுத்தார், ஆனால் அது இந்தப் பதவிக்கான விலை அல்ல, குரு காணிக்கை என்கிறாரா தெரியவில்லை. 1865க்கு முன்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது பின் அரசிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது இப்படிச் சொல்பவர் மதுரை ஆதீனம்.

கோயிலை மீண்டும் ஆதீன நிர்வாகத்துக்கே தரவேண்டும் என நித்யானந்தர் கோரிக்கை வைத்துள்ளாராம். மதுரை ஆதீனத்துக்குக் கடந்த ஒரு ஆண்டாக காவல்துறை பாதுகாப்புக் கொடுக்கப்படவில்லையாம். அதை இப்போது கேட்டிருக்கிறாராம்.

பத்திரிகையாளர்கள் ஆதீனத்திடம், “ஆதீன விதிகளின்படி ஓலைச்சுவடிகள் மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும். அப்படியிருக்க நித்யானந்தாவை யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் திடீரென நியமித்து விட்டீர்களே?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் ஓலைச்சுவடிகளைப் பாருங்கள். அதில் நிச்சயம் நித்யானந்தாவின் பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்து விட்டனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே நித்யானந்தாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்கிறார் மதுரை ஆதீனகர்த்தர்.

ஆதீனம் பட்டத்துக்கு வரும்போது, அணிகின்ற ருத்திராட்ச மாலை கழுத்தில் ஏறும் சமயம், துறவறம் பெற்று தலை முண்டகம் செய்யப்பட்டு இருக்க வேண்டுமென்று இதுபோன்று தீட்சை பெற்ற ஒருவர் கூறுகிறார். இப்படிப் பல சடங்குகள் இருக்க திடீர் சாம்பார் போல திடீர் மடாதிபதியாக ஆவது எப்படி என்பது புரியாத புதிராக இருக்கிறது.

அரசியல் போன்றது அல்ல சமயப் பணி. சமயங்களை விரிவுபடுத்தவும், வழிகாட்டவும் ஏற்பட்டது இதுபோன்ற மடங்கள். இவற்றில் அரசியல் பாணி நிகழ்வுகள் தீய விளைவுகளைத்தான் தரும். இன்றை சூழலில் இந்துமதத்தில் பிறந்த அரசியல் தலைவர்களே இந்து மதத்தையும், நமது வழிபாட்டு முறைகளையும், இந்து கடவுளர்களையும் தரம் தாழ்ந்து பேசிவரும் சூழ்நிலையில், எப்போது எந்த இந்து மதத் தலைவர் தவறு செய்வார் என்று பார்த்திருந்து பேனை பெருமாளாக்கும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் இருக்கும் சூழ்நிலையில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் இந்து மதத்திற்கு பெரும் அபாயமாக அமைந்துவிடும்.

எல்லாவற்றையும் தூக்கியடிக்கும் குண்டு ஒன்றையும் மதுரை ஆதீனம் போட்டிருக்கிறார். ‘நித்யானந்தாவின் நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்துக்குப் போனாலும், அது செல்லாது’ என்று தீர்ப்பளித்துவிட்டார் மதுரை ஆதீனகர்த்தர். மக்கள் மன்றமும், நீதிமன்றங்களும் என்ன சொல்லப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்து சமயம் என்பது ‘சிவபெருமானின் அடி முடி காணமுடியாது’ என்பது போல எப்போது யாரால் துவங்கியது என்பது தெரியாத ஒரு பழம்பெரும் வாழ்க்கை முறை. அதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் சில தடைகளும், சோதனைகளும் ஏற்படத்தான் செய்தன. இப்போதும் அப்படியொரு சோதனை. முடிவு என்னவாகும்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

195 Replies to “மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்”

  1. ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் காஞ்சி மடத்தில் தொடர்ந்து இருக்கும் பொது, நித்தியானந்தா நியமனம் மட்டும் எப்படி தவறு ஆகும்?

  2. அன்புள்ள நாகராஜன் ,

    சம்பந்தமில்லாத ஒப்பீடு. ஏற்கனவே மடத்தில் இருப்போர் மீது குற்றச்சாட்டு உள்ளது. விசாரணை நடக்கிறது. ஆனால் மதுரை விவகாரம் வேறு. குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ஒருவரை மடத்தில் சேர்க்க , இப்போதைய ஆதீனம் அனுமதி அளித்துள்ளார். மடங்களின் தலைமை பீடத்துக்கு குடும்பஸ்தர்களை சேர்ப்பதே சரி. சந்நியாசிகள் மடத்தில் இருக்க கூடாது.

    இவ்வளவு எழுதும் தாங்கள் ஒரு நல்ல குடும்பஸ்தரை காஞ்சி மடத்தில் அதிபதி ஆக்க என்ன செய்தீர்கள்?

    அது சரி, குவாத்ரோச்சியை தப்பவிட்ட சி பி ஐ யை நாம் என்ன கலைத்துவிட்டோமா ? இருபது வருடம் வழக்காடி அல்லவா பணத்தை திருப்பி கொடுத்தார்கள் ? ஏதோ நம் நாட்டில் எல்லாம் சரியாக இருப்பது போலவும் , காஞ்சி மற்றும் மதுரை மடங்கள் மட்டும் சரியில்லை என்றும் சொல்வது ஒரு பெரிய ஜோக்கு தான். இந்தியாவில் எல்லாமே ஊழல் ஆகிவிட்டது. அதற்காக நம் நாட்டை அழித்துவிட முடியாது. திருத்த தான் வேண்டும்.

    இப்போது காஞ்சிமடத்துக்கு செல்வோர் எண்ணிக்கை தொண்ணூறு சதவீதம் குறைந்து விட்டது. இதே கதி தான் மதுரை மடத்துக்கும் நடக்கும். எல்லாம் நல்லதற்கே.

    இந்தியாவை காங்கிரசு என்ற ஏழரை நாட்டு சனியன் பிடித்துள்ளது.தேர்தல் என்ற பரிகாரம் மூலம் காங்கிரசு சனியனை நாட்டை விட்டு விரட்டினால், நம் நாடு உலகிலேயே சிறந்த நாடாக ஆகும். நேரு குடும்பம் இந்திய அரசியலில் இருக்கும் வரை இந்தியா உருப்படாது ஏனெனில் அவர்களது பொருளாதார கொள்கை, அரசியல் கொள்கை இரண்டுமே ஒரே சுயநலம் அடிப்படையாக அமைந்தவை ஆகும். காங்கிரசு அழிந்தால் இந்தியா ஒளிமயமாகும்.

  3. மடியில் கனமில்லை என்றால் அச்சப்படத்தேவயில்லை. ஜெயேந்திரர் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது அவர் எங்கும் ஓடிவிடவில்லை. இதே தமிழ்நாட்டில் தான் சுற்றிக்கொண்டிருந்தார். ஆனால், 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி சன் டிவியில் ஆபாசப்படம் ஒளிபரப்பான உடனேயே அப்ச்காண்டான நித்தி ‘கும்பமேளாவிற்கு சென்றிருந்தேன்’ என்று ஒரு பிட்டைப்போட்டு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு வந்து தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று சொன்னார்..
    சற்று சிந்தித்தால் உண்மை புரியும். நானும் ஜெயேந்திரர் கைதானபோது அவரைத் தூற்றியவந்தான். ஆனால் இருவரும் குற்றங்களுக்கு ரியாக்ட் செய்த விதத்தை ஒப்பிட்டு பார்த்தல் அவசியம்…
    எது எப்படியோ, உண்மை இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம்!

  4. ஓப்பனாக எல்லோர் முன்னிலையிலும் , சிகரெட்டு, மது, பாலியல் இன்பம் என்று இல்லாமல் எல்லாம் மறைவாக நடக்கும் வரை ஒ கே . சி டி வெளிவந்தவரை வீணாக மடத்துக்கு அதிபர் ஆக்கியுள்ளனர். எல்லாம் காலத்தின் கோலம் தான். மனித இனம் முழுவதும் இறைவன் கையில் சிறு விளையாட்டு கருவிகளே ஆகும் என்ற உண்மை இதன்மூலம் வெளிப்படுகிறது. பெண் பித்தன் ஆதீனமா ? வேறு ஆள் கிடைக்கவில்லையா? விதியின் விளையாட்டு.

    சைவர்கள் அனைவரும் மிக மனம் வருந்துகிறார்கள். நித்தியாவை விட அழகாக பேசும் திறன் படைத்தவர் மஞ்சள் துண்டார். பேசாமல் அவரையே மதுரை மடத்துக்கு தலைவர் ஆக்கிவிடலாம். ஒன்றும் குறைந்து போய்விடாது.

    ( கதவைத்திற , காற்றுவரட்டும் என்ற நித்தியாவின் நூலை நான் இருமுறை படித்தேன். ஆனால் அவரோ இப்போது மதுரை ஆதீன கதவை திறந்து விட்டார். )

  5. Another interesting point. Only Saiva Vellalars can become the head of Madurai Athithnam. I have not heard any protest about this, from any of the EVR disciples! Every DK/Dmk wallahs and the usual Parpan haters have had a field day in the past, in having a go at Kanchi Madam for picking only Brahmins to be the head. Where are they now?
    Oh, your silence is deafening.
    Double standard? You bet.

  6. Great Hindu,

    நாகராஜன் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி. அவர் இருவருக்கும் பொதுவான குற்றச்சாட்டைப் பற்றிப் பேசுகிறார். நீங்கள் குற்றம் சாட்டப்பட்டபோது அவர்கள் எந்த ஊரில் இருந்தார்கள் என்பதுதான் முக்கியம் என்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

    .

  7. இந்த செய்திகேட்டு மனம் மிகவும் வேதனை படுகின்றது. என்னை போலவே பலரும் மனம் வேதனை அடைந்து உள்ளனர். சைவ சமயத்திற்கு ஏற்றப்பட்ட தலைகுனிவு.

    //மதுரை ஆதீனம் மிகப் பழமை வாய்ந்த ஆதீனம். திருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்ட மடம் என்பர் பெரியோர்.//

    மதுரை ஆதீனம் திருஞானசம்பந்தரின் காலத்திற்கு முற்ப்பட்டது. திருஞானசம்பந்தர் அங்கு வந்து தங்கினர் என்பது சேக்கிழார் வாக்கு. இதை “சைவ ஆதீனங்களின் வரலாறு” நூலில் திரு ஊரன் அடிகள் குறிப்பிட்டுள்ளார்.

  8. ஒரு மணி நேரம் முன்பு பத்து பதினைந்து வரி எழுதினேன் திடீரென்று மறைந்து விட்டது. எந்த பட்டனைத் தொட்டேனோ என்னவோ சரி மறுபடியும் எழுதுகிறேன்.

    மதுரை ஆதினம் என்ன, நித்யா என்ன எல்லாம் எல்லா ஸ்தாபனங்களையும் தலைவர்களையும் மடங்களையும் போல மதிக்கவோ மரியாதை செய்யவோ லாயக்கில்லாத கண்றாவிகள் தான். எது ஒழுங்கு? எது கண்ணியம் கொண்டது? மண் மோகன் சிங்? சோனியா காந்தி? பிரதிபா பாட்டில்? இதில் யாரைத் தனித்து குற்றம் சாட்ட? காலத்தின் விளைச்சல்கள்? எது எக்கேடு கேட்டால் என்ன? இனியும் கெடுவதற்கு இருக்கிறதா என்ன? 105 வயசு கிழட்டு மடத்து சாமி ஒன்று சோனியா காந்திக்கு 50000 ரூபாய்க்கு சால்வை லக்ஷம் ரூபாய்க்கு புடவை வாங்கிக் கொடுக்கறது.
    emergency யின் போது காஞ்சி பெரியவர் இந்திரா காந்தியை மடத்துக்குள்ளே விடவில்லை. நல்ல நாளில் எல்லாரையும் போல எதிரே உட்கார்ந்து பார்த்து விட்டுப் போகலாம் அவ்வளவே. “இது என் பையன் அமிதாப் சினிமாலே நடிக்கறான்” என்று ஹர்பன்ஸ்ராய் சொல்ல க.நா சு. உட்கார்ந்த படியே நிமிர்ந்து அவன் செலவுக்கு வேண்டியது சம்பாதிக்கிறான இல்லியா? என்று கேட்டு விட்டு விட்ட இடத்தில் தன பேச்சைத் தொடர்ந்தார் என்று அமிதாபே சொன்னான் ஒரு மீட்டிங்கில். அது ஒரு காலம், அப்படி மனிதர்கள்.

    ஆனால் நித்யாவுக்கு ஒரே பெண் ரசிகைகள் பக்தைகள் கூட்டம். கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது எல்லா மூலைகளிலிருந்தும். என்ன சொல்ல இருக்கிறது?

  9. பார்சியை திருமணம் செய்த இந்திரா காந்தி கணவனை இழந்த கைம்பெண் என்பதால் அவரை மரியாதையாக நடத்த மறுத்தது எவ்வளவு பெரிய செயற்கரிய செயலாக பார்க்கபடுவது புல்லரிக்க வைக்கிறது
    சுப்ரமணிய சுவாமியிடம் காட்டிய பாசம் எதை காட்டுகிறது
    https://www.brahmintoday.org/magazine/2011_issues/bt93-1107_paramacharya.php

    in 1992, the two junior swamis, Jayendra Saraswati and Vijendra Saraswati had asked me to collect some funds for a Ghatikasthanam library that they wanted to build in honour of the Parmacharya. They even printed letter heads to make me the “Patron” of the project, but insisted on a donation.

    With great difficulty, I collected Rs.15 lakhs and gave it to them as Janata Party’s gift. When Parmacharya came to know about it, he sent me a query: “Why should you donate to the Mutt when you are yourself begging for funds from the people to run your party? Please do not do it in the future”. Since then I have stopped giving donations to any cause. Beggars cannot donate.

    ஜெயேந்திரர் வெளிமாநிலத்தில் (ஆந்திராவில்)நேபாளத்திற்கு தப்பி ஓடும் முயற்சியில் இருந்த போது கைது செய்யப்பட்டதாக தானே செய்திகள் வந்தன,வாதங்களும் நடை பெற்றன .வழக்கு முடிவதற்குள் வீரத்தோடு எதிர்கொண்ட மாதிரி காவியங்கள் வர ஆரம்பித்து விட்டதே

  10. வெங்கட சாமி நாதன்,

    உங்கள் பின்னூட்டம் அறியாமையில் எழுதப்பட்டதா அல்லது விரக்தியில் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த பல துறவிகள் உள்ளனர். அவர்கள் பிச்சைகாரர்கள் போல் தான் வாழ்கிறார்கள்.

    குற்றம் இல்லாத மனிதர் உலகில் இல்லை. . கலிகாலத்தில்
    இது அதிகரித்துவிட்டது என்பது முற்றிலும் உண்மை. ஆனாலும் பல சான்றோர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

    அடுத்து சோனியா சந்திப்பு பற்றிய விசயம். இது ஒரு சாதாராண நிகழ்வு. இதை இவ்வளவு பெரிய பிரச்சனையாக எடுத்து கொள்ள தேவையில்லை.

    அவர் பெரியவர்.. அநாகரீகமான கருத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

    நல்லவர்களும் எல்லா இடத்திலும் உள்ளனர்.

  11. இந்த கட்டுரை தமிழ் ஹிந்துவில் இடம் பெற்றிருக்கலாகாது. மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீ பரமாச்சாரியார் ஸ்ரீ நித்யானந்தரை நியமிக்க முழு உரிமை அதிகாரம் படைத்தவர் அதை தவறு என்று கூறிட யாருக்கும் அதிகாரம் இல்லை. இளைய பட்டத்துக்கு உரியவரை நியமிக்கும் அதிகாரம் மூத்த ஆதீனத்திற்கு மட்டும் என்பது வழக்காறு.ஸ்ரீ நித்யானந்த ஸ்வாமிகள் சைவ சாஸ்திரங்களிலும் சாதனை முதலியவற்றில் அனுபவம் படைத்தவர் என்பதை அவரது சொற்பொழிவுகளைக் கேட்ட எம் போன்ற சைவர்கள் அறிவர்
    குறிப்பாக ஸ்ரீ நித்யானந்தர் மீது அபவாதப் போர்தொடுத்த மிசனரிகளிக்கும் (அ)சூரியதொலைக்காட்சிக்கும் பக்கபலமாக இருக்கும் போலி இந்துத்துவர்களுக்கு அருகதை இல்லவே இல்லை.
    ஸ்ரீ நித்யானந்தர் அன்னிய விரோதிகளும் ஹிந்து சமயத்திற்குள்ளே உள்ள துரோகிகளின் அபவாத சதியை வெற்றிகரமாக் எதிர்கொண்டார். அவர் மீதான எந்தக்குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் எதையும் காட்டமுடியவில்லை என்பதுதான் உண்மை.
    சிவஸ்ரீ. விபூதிபூஷண்

  12. பொதுவாக சைவ மடங்களில் ஆதீனகர்த்தர்கள் தமது வாரிசாக தமது சொந்த பந்தங்களை நியமித்துவருவது சமீப காலங்களில் நடந்து வந்தது . அப்படி இல்லாமல் ஒரு அனுபவம் வாய்ந்த ஒரு துறவியை உலகெங்கும் சைவத்தையும் தியானத்தையும் பரப்புவதில் வெற்றி பெற்ற ஒருவரை ஆண் பெண் என்ற பேதமின்றி சாதி பேதமின்றி அனைவருக்கும் ஆன்மீகத்தை அளித்த ஒருவரை ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்தரை நியமனம் செய்திருக்கிறார் ஸ்ரீ மதுரைஆதீன கர்த்தர். அதனை எதிர்ப்பவர்கள் சன் குழுமத்தின் மறைமுக ஆதரவாளர்கள். நம்பகத்தன்மை இல்லாத அவர்களை எம் போன்ற சைவர்கள் ஒருகாலமும் ஏற்கமாட்டார்கள்.

  13. சிவஸ்ரீ.விபூதிபூஷண்

    அவருக்கு மடாதிபதி ஆவதற்கு கல்வி தகுதி இருக்கிறதா? இல்லையா என்பது இங்கு கேள்வி இல்லை.

    குழந்தைகளுடன் ஹோமோ செக்ஸ் செய்வது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு அல்ல என்று சொன்ன கத்தோலிக்க போப்பை நோக்கும் பொழுதும் விடுதலை புரட்சி என்று சொல்லி பெண்களை மானபங்கப்படுத்திய மாவோயிஸ கம்யூனிஸ்டுகளை நோக்கும் பொழுது நித்தியானந்தா எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை.

    அவர் மீதான ஒழுக்க குறைப்பாடு பெரும்பான்மையான மக்களால் ஆதார பூர்வாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே இதை அனைவரும் எதிர்க்கின்றனர்.

    அவர் மீது ஒழுக்க குறைபாடு இல்லாமல் இருந்தாலும் நான் இதை ஆதரிக்க மாட்டேன். ஏன் என்றால் சன்யாசத்திற்கு தேவை ஆடம்பரத்தை ஒதுக்கி வைப்பது, ‘அகங்காரத்தை ஒழிப்பது. இவை இரண்டும் நித்தியானந்தாவிற்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    ஆதலால் மதுரை ஆதினம் செய்தது தவறு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

  14. சிவஸ்ரீ.விபூதிபூஷண்

    நீங்களே பாருங்கள். அவர்கள் அணிந்துள்ள மலர் மாலையை.. அதனுடைய விலை என்னவென்று தெரியுமா? எத்தனையோ ஹிந்து சகோதரர்கள் குறிப்பாக சங்கத்தை சேர்ந்தவர்கள் தனது குடும்பம் தனது வாழ்க்கை என்று இல்லாமல் ஒரு வேலை உணவு உண்டு சமுதாயத்திற்காகவும் நாட்டிற்காகவும் உழைத்து கொண்டு இருக்கின்றனர்.

    அப்படி இருக்க இவர்களுக்கு இது போன்ற ஆடம்பர செலவு தேவைதானா?

  15. என் தந்தையார் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் அவர்களிடமிருந்து சிவதீக்ஷை பெற்றவர். அவரிடம் இப்போதைய நிகழ்வைப் பற்றி பேசும் போது தனக்கு முக்கியம் திருஞான சம்பந்தர் மட்டுமே. மற்றவர்கள் அல்ல என்றார்.

    தற்போதைய ஆதினம் சிவதீக்ஷை தருவதில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!!

  16. காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ ஜெயநேதிரர் பற்றி எழுதிகிறீர்கள். அவருக்கு ஜாமீன் வழங்கும்போது சுப்ரீம் கோர்ட் கூறியது – பார்க்க லிங்க்.https://www.hindu.com/thehindu/nic/0034/bailplea.pdf – இதை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தமிழ் ஹிந்து வேறு மாதிரி எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது. இங்கிலீஷ் ஹிந்து கூட இந்த விஷயத்தில் மிக நேர்மையாக நடந்துகொண்டிருக்க தமிழ் ஹிந்து நேர் மாறாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.கொஞ்ச நாளாகவே தமிழ் ஹிந்து ஒரு மாதிரியாகத்தான் போய்க் கொண்டு இருக்கிறது.

  17. ர நாகராஜன்&கவிமிகு கணபதி அவர்களே மதுரை ஆதீனம் விவகாரம் வேறு காஞ்சி சங்கரச்சர்யர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வழக்கு வேறு.இன்றும் அவர்களின் சத்ய போராட்டம் நீதி மன்றத்தில் உள்ளத்தால் அதை பற்றி பேசுவது அநாகரீகம்.என்றுமே சத்தியமே வெல்லும்.சத்யமேவ ஜயதி

  18. Ramesh,

    நித்யானந்தர் பற்றிய கட்டுரைகள் வெளியிட வேண்டும். ஆனால், அதே போலக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஜெயேந்திரர் பற்றி ஒப்பிடும் கமெண்டுகளைக்கூட வெளியிடக்கூடாது. நல்ல நியாயம்.

    ஜெயேந்திரர் போலவே நித்யானந்தர் மேலும் பொய்யான வழக்கு ஏன் போடப் பட்டிருக்கக் கூடாது ?

    .

  19. காமாக்‌ஷி தாசன்,

    நித்யானந்தர் பற்றிய வழக்கும் கோர்ட்டில் நிலுவையில்தான் உள்ளது. அவரைப் பற்றி மட்டும் குறைகள் சொல்லலாமோ?

    .

  20. காஞ்சிப் பெரியவர் இந்திரா காந்தியை பார்க்காமல் இருந்ததற்கு காரணம் நெருக்கடி நிலை அமுல் படுத்தியதால் அல்ல. கணவனை இழந்த இந்திரா காந்தி தலையை மழிக்காமல் வந்ததால் தான். தன்னுடைய ஜாதி சார்ந்த வழக்கங்களை / மடத்து மரபுகளை (சரியா தவறா என்று கூறவில்லை – இதனைத் தனிப் பதிவாக விவாதிக்காலாம்) கடைப்பிடித்து வந்தார்.

    இன்று எந்த மடமாக இருந்தாலும் (காஞ்சி / மதுரை ), தலைமைப் பொறுப்பு மிகவும் முக்கியமானது, ஏனெனில், அனைத்து மடங்களுக்கும் கணக்கிலடங்கா சொத்துக்கள் உள்ளன.

  21. எதையெல்லாமோ அரசியலாக்குகிறார்கள்.

    இதை அரசியலாக்குங்கள் தயவு செய்து. அரசியல் கட்சிகளும் மக்களும் இந்து அமைப்புகளும் கோஷம் எழுப்பட்டும்.

    தவறில்லை.

  22. //emergency யின் போது காஞ்சி பெரியவர் இந்திரா காந்தியை மடத்துக்குள்ளே விடவில்லை. நல்ல நாளில் எல்லாரையும் போல எதிரே உட்கார்ந்து பார்த்து விட்டுப் போகலாம் அவ்வளவே.//

    இந்த பின்னூட்டம் பெரியவர் எமர்ஜென்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இந்திரா காந்தியை சந்திக்க மறுத்தார் என்று சொல்கிறது..

    ஆனால் மற்ற பின்னூட்டங்களோ மடத்து மரபுகளை காக்க இந்திரா காந்தியை சந்திக்க பெரியவர் மறுத்தார் என்கின்றன. வேறு சந்தர்ப்பங்களில் பெரியவர் இந்திரா காந்தியை மடத்துக்குள் (மாட்டுத் தொழுவத்தில் கூட) சந்தித்ததில்லையா?

  23. தமிழ் ஹிந்து என்ற பெயரை தமிழ் ஹிந்து நேசன் என்று மாற்றிவிடலாம்.மஞ்சள் பத்திரிக்கையாக மாறிவிட்டது.

  24. சிவஸ்ரீ விபூதிபூஷன்,

    நீங்கள்தானா ? நிஜமாகவேதானா ?

    ஒரேயடியாக ‘சப்பக் சப்பக்’ என்று முத்திரை குத்தவேண்டியதில்லை.

    மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், நூற்றாண்டுகள் பெருமை வாய்ந்த – வணக்கத்திற்குரிய மத சான்றோர்கள் தலைமை பீடத்திலிருந்து நிர்வகித்து வந்த – மதுரை ஆதீனம் போன்றதொரு மடத்துக்கு துறவி என்பதற்கு நேர் எதிர்ப்பதமாக இருக்கும் – புலன்களுக்கு அடிமையாக இருக்கும் ஒரு சாதாரண காவியுடைதாரியான இந்த நபர் அநேர்மையான வழியில் தலைமை பதவியை வாங்கியிருப்பது உங்களுக்கு சரிதான் என்று தோன்றுகிறதா ?

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

  25. காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திரர் மற்ற சங்கராச்சாரியார்களைப் போல இல்லாமல் …

    தாழ்த்தப் பட்ட மக்களுடன் உரையாடுகிறார்.
    அவர்களது சேரிகளுக்குச் சென்று உரையாற்றுகிறார்.
    மடத்தின் சார்பில் வரும் நிதியை சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை அமைத்து நிர்வகிக்கிறார்.
    சங்கர நேத்ராலயா (சென்னையில் நிறுவியது மகா பெரியவர், நிறுவ உந்துதல் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால்), சென்னை, கோவை, குவஹாத்தி முதலிய இடங்களில் நிறுவக் காரணமாக அமைந்தார்.
    ஹிந்து மிஷன் ஹாஸ்பிடல், நுங்கம்பாக்கம் சைல்ட் ட்ரஸ்ட் ஹாஸ்பிடல் நிறுவி நிர்வாகம் அமைத்து நடத்தி வருகிறார்.
    சங்கரா தொலைக் காட்சி நிறுவி அதனைத் தனித்தன்மையோடு ஆன்மீக நிகழ்ச்சிகள் மட்டுமே வைத்து அதிலும் சைவம், அத்வைதம், வைணவம் என்ற பாகுபாடு இல்லாமல் சிருங்கேரி உள்ளிட்ட எல்லா சந்நிதாங்களின் உரைகளையும் வெளியிடும் அளவுக்கு ஹிந்து மதம் என்ற பரந்த மனதோடு நடத்தி வருகிறார்.

    அவர் கிறித்தவ மத மாறிகளுக்கு வேண்டாதவர்.
    அதே சமயம் ஹிந்துக்களில் குறிப்பாக சில பிரிவு பிராமணர்களில் அதுவும் சாதி உயர்வு தாழ்வில் பிடிமானம் உள்ளவர்களுக்கு வேண்டாதவர்.

    மகா பெரியவர் ஆன்மிகம் தவிர வேறெதிலும் நாட்டமில்லாதவர் ஆனாலும் இந்த தேசத்தின்மீது பெரும் பற்றுடைய மகத்தான தியாகி. அவர் காலத்தில் காஞ்சித் திருமடத்தில் பணவசதிகள் குறைந்து நில/ சொத்து நிர்வாகத்தில் திறமை அருகிவருவது குறித்து அவரே கொண்ட கவலை காரணமாகவே அவராகவே ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தேர்ந்தெடுத்து அவருக்கும் தக்க சுதந்திரத்தை வழங்கி மடத்தை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூலம் திறம்பட நடத்தி வந்தார்.

    ‘இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து
    அதனை அவன் கண் விடல்’
    என்ற குறட்பா இங்கு நோக்கத் தக்கது.

    ஜெயேந்திர சுவாமிகளை மகா சுவாமிகளுடன் ஒப்பிட்டு முன்னவரைக் குறை கூறும் போக்கு பழமைவாதிகளான சாதீய உறவு தாழ்வைக் கைவிட மனமில்லாத பிராமணர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு அது இந்த அளவுக்கு விபரீதத்தைக் கொண்டு வந்துவிட்டது. சங்கரராமனும் அப்படிப்பட்ட ஒரு சாதீய உயர்வு தாழ்வில் திளைத்த பிராமணர்தான் என்பதைக் கவனத்தில் இருத்தவேண்டும்.

    சுனாமி தாக்கியபோது விழுப்புரத்தில் சுவாமிகள் தங்கி விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை மாவட்ட மக்களுக்கு ஆற்றிய தொண்டைத் தடை செய்யவே அவர் மீது மேலும் மேலும் வழக்குகள் பதியப்பட்டன. அப்போதைய முதல்வரின் காழ்ப்புணர்ச்சியால் விளைந்த விபரீதங்கள் இன்னமும் தொடர்கின்றன.

    ஜெயேந்திர சுவாமிகளைக் குறை கூறுவோர் மறைமுகமாக அவரைத் தேர்ந்தெடுத்த மகா சுவாமிகளின் திறமை, தீர்க்க தரிசனம் ஆகியவற்றைக் குறை கூறுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

  26. ///நேபாளத்திற்கு தப்பி ஓடும் முயற்சியில் இருந்த போது கைது செய்யப்பட்டதாக தானே செய்திகள் வந்தன,///

    எப்படிப்பட்ட பொய்கள் எல்லாம் சொல்லப் பட்டன. அபாண்டமான குற்றச் சாட்டுக்கள் வைக்கப் பட்டன என்பதற்கு ஒரு மாதிரி இதுதான். பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்லி உண்மை என்று நம்பவைக்கும் முயற்சி சிலகாலத்துக்குப் பலிக்கும். நெடுங்காலத்தில் நிலைக்காது.

  27. காஞ்சி மகா பெரியவர் இந்திராவைப் பார்க்க மறுத்ததன் காரணத்தி அவராகவே சொல்லவில்லை. அவரவருக்குத் தோன்றியதை சொல்வதால் வருகின்ற அவப் பெயர் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு இங்குள்ள மறுமொழிகளே சாட்சி.

    நமது மதத்தின் பெரியவர்களது நடவடிக்கைகளுக்கு நமது மக்களே பலவித வியாக்கியானங்களை அவரவருக்குத் தோன்றியபடி கொடுத்தே நமக்கு சங்கடத்தை உருவாக்குகிறார்கள்.

    105 வரை வாழ்ந்து சிவத் தொண்டு செய்த ஒரு சந்நியாசி வேறெந்த மதத்தில் இருந்திருந்தாலும் அவரைப் போற்றிக் கொண்டாடி இருப்பார்கள். இங்கே தான் அவர் தம்மை வந்து பார்ப்பவருக்கு ஆசி கொடுத்தாலும் மரியாதை செய்தாலும் அதையும் குற்றம் காணும் போக்கு இருக்கிறது.

  28. காஞ்சிப் பெரியவர் இந்திரா காந்தியை எமெர்ஜென்சி விஷயமாகத்தான் பார்க்கவில்லை. அவர் பின் அதற்காக மன்னிப்பு கேட்டவுடன், இனி இது போல் செய்ய மாட்டேன் என்றதும்தான் அவரை சந்தித்தார். ஜெயேந்திரர் வழக்கமான் பிரயானத்தில்தான் கைது செய்யாப்பட்டார். செய்திகள் எது வேண்டுமானாலும் எழுதாலாம். இப்போது வரை எத்தனை போலி டேப் போன்ற இடையூறுகள். சுப்ரீம் கோர்ட் உத்தரவைப் பாருங்கள். நித்யானந்தா பெண்களுடன் இப்போதும் சுற்றுகிறார். இரண்டும் வேறு.

  29. அன்புள்ள களிமிகு கணபதி,

    உங்கள் ஒப்பீடு சரியானதல்ல. காஞ்சி மடாதிபதி மீது உள்ள வழக்குக்கு பிறகு, அது முடிந்து தீர்ப்பு வரும்வரை, அவரை புதியதாக வேறு ஒரு மடத்துக்கு அதிபராக எவராவது நியமனம் செய்தால், நிச்சயம் இதே போல எதிர்ப்பு குரல் எழுப்புவார்கள்.

    நித்தியானந்தா ஏற்கனவே ஒரு பீடத்தின் அதிபராக உள்ளார். குற்றச்சாட்டுக்கள் மீது தீர்ப்பு வந்து , விடுவிக்கும் வரை , அவருக்கு புதியதாக வேறொரு மடத்தின் ஆதீன தலைமைப்பதவி கொடுப்பது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மேலும் மதுரை மடாதிபதி ஆக வருபவர், அந்த மடத்தின் வழக்கப்படி தலையை மொட்டை அடித்து , உருத்திராட்சம் அணிய வேண்டும். கிராப்பு தலையுடன் தலையில் உருத்திராட்சம் அணியக்கூடாது.

    நித்தியானந்தாவுக்கு பதிலாக பேசாமல் , மஞ்சள் துண்டு மாமுனிவரையே மதுரை ஆதீனம் ஆக்கிவிடலாம். என்ன குடி முழுகிவிடப்போகிறது? நன்றாக பேசத்தெரிந்தவர் தான் , ஆதீன பதவிக்கு தகுந்தவர் என்றால், பரிசுத்த ஆவியை, பெரியார் திடலில் பகுத்தறிவு வியாபாரம் செய்யும் , வீரமணி கூட , இதுபோன்ற பதவிகளுக்கு ஏற்றவரே.

    ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் , தங்கள் மீதான வழக்கில் தீர்ப்பு வரும்வரை , மடத்தின் பொறுப்பை , வேறு ஏதாவது ஒரு சங்கராச்சாரியாரிடம் ஒப்படைத்துவிட்டு , ஒதுங்கியிருந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக வரவேற்றிருப்பார்கள்.

    மேலும், தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் , பொய்யான தகவலை சொல்லி வாதிட்டது என்று , மேலே இதே தளத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள , உச்ச நீதிமன்றத்து உத்தரவின் மூலம் தெரியவருகிறது. இதிலிருந்து, என்ன தெரிகிறது? ஏதேனும் பொய்களை சொல்லி, ஜெயேந்திர சரஸ்வதியின் ஜாமீன் மனுவை நிராகரிக்க , அப்போதைய தமிழக அரசின் காவல் துறை முயன்றது என்பது உண்மை. அதுவும் ஒரு தண்டிக்க தக்க குற்றமே. அக்குற்றத்தை செய்த ஐ பி எஸ் அதிகாரி, பென்ஷனும் இல்லாமல் இறந்துபோய் விட்டார். எனவே, இறந்தவர் மேல் , வழக்கு தொடர முடியாது.

    பொது மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றால், போபார்சு வழக்கில், உலகப்புகழ் பெற்ற சி பி ஐ , இருபது வருடங்களுக்கு மேல் இழுத்தடித்து, கடைசியில் தங்கத்தட்டில் வைத்து, குவாத்ரோச்சியிடம் பணம் முழுவதையும் வட்டியுடன் திருப்பி கொடுத்தனர். அதே போல, இந்தக் கேசிலும், குற்றம் சுமத்தப்பட்டவர்களில் , வயதான சிலரோ, அல்லது பலரோ, வழக்கு முடிவதற்குள் , இறைவன் அடி சேர்ந்து விடுவார்கள். கேசும் மண்டையை போட்டுவிடும். அவ்வளவுதான்.

    நமது மத ஆதீன தலைமைகளுக்கு நித்தியா போன்றவர்களை , அவர்கள் மீதான குற்றச்சாட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்னரே, அவசரமாக வேறொரு ஆதீனத்தில் தலைவராக நியமிக்க வேண்டும் என்றால் , அதைவிட கொடுமை ஒன்றும் இல்லை. அப்படி ஒரு மடம் இருப்பது எல்லோருக்கும் அவமானமே.

    காஞ்சி மடத்தில் ரிக் வேதம் அத்யயனம் செய்தபார்ப்பனர்களே மடாதிபதியாக முடியும். யசுர் , சாமம், அதர்வணம் ஆகிய மூன்று வேதம் படிப்பவர்கள் , மடாதிபதியாக முடியாது.

    தொன்று தொட்டு வரும் மரபுகளை துச்சமாக மதித்து, உதறி தள்ளுவது என்று முடிவெடுத்துவிட்டால், அதன் பிறகு சைவ மடங்களில் , வைணவர்களையும், வைணவ மடங்களில் சைவர்களையும் கூட நியமிக்கலாம். ஒன்றும் தப்பில்லை.

    சார்வாகம் நமது இந்து மதத்தின் ஒரு சிறப்பான பகுதியே ஆகும். எனவே, தமிழகத்திலுள்ள சார்வாக மதத்தலைவர் ஆன, வீரமணி போன்றோரையும் ஆதீனமாக நியமிக்கலாம். ஒன்றும் குடி முழுகிவிடாது.

  30. இந்த கட்டுரையை எந்த தொடர்பிலும் இல்லாத பதிவாக வைக்க தமிழ் ஹிந்துவை கேட்டுகொள்கிறேன் அல்லது குறைந்தபட்சம் இதுபோன்ற செய்திகளை தனியாக ஒரு தலைப்பிட்டு பாவிகள், பஞ்சமா பாதகர்கள் போன்ற தலைப்பில் மட்டுமே வரும் செய்தியாக வைக்கவும் அல்லது இவர்களை போன்ற வர்களுக்கு மட்டுமே தொடர்புடைய செய்திப்பிரிவில் வைக்க வேண்டி கேட்டுகொள்கிறேன் மற்ற தூயவர்களின் தொடர்புடைய பதிவு என்பதை இந்த நிகழ்வுடன் கற்பனைக்கு கூட ஏற்க முடியவில்லை.

    க வ கார்த்திகேயன்.

  31. திரு கோமதி செட்டி
    “குழந்தைகளுடன் ஹோமோ செக்ஸ் செய்வது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு அல்ல என்று சொன்ன கத்தோலிக்க போப்பை நோக்கும் பொழுதும் விடுதலை புரட்சி என்று சொல்லி பெண்களை மானபங்கப்படுத்திய மாவோயிஸ கம்யூனிஸ்டுகளை நோக்கும் பொழுது நித்தியானந்தா எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை”.
    செட்டியார் அவர்களே சும்மா சும்மா சொல்லக்கூடாது. எங்கே ஆதாரம். காட்டுங்கள் பார்க்கலாம். அடியேனைபொருத்தவரை நித்யானந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஹிந்து எழுச்சிக்கு எதிரானவை. ஏன் என்றால் அவருக்கு எதிராக ப்போர்கொடி தூக்கியுள்ளவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறி.
    திரு கோமதி செட்டி
    “இவர்களுக்கு இது போன்ற ஆடம்பர செலவு தேவைதானா?”
    ஆடம்பரம் பற்றி க்கேள்வி எழுப்பினால் கோயில் திருவிழா யாகம் இவை யாவும் தேவை இல்லை. ஆன்மீகத்திலும் பலவகை பாணிகள் உண்டு. ஒவ்வொருவருக்கும். ஸ்ரீ நித்யானந்தர் ஒரு ராஜ சன்யாசி மடாதிபதி. ஆரண்ய சன்யாசி அல்ல. மடாதிபதிகளுக்கு சிம்மாசனமும் க்ரீடமும் உண்டு.

  32. மதுரை ஆதீனத்தின் இளவரசு பட்டம் நித்யானந்தருக்குச் சூட்டப்பட்டது குறித்ததுதான் கட்டுரை. அவரது பின்னணி பற்றி சொல்லும் போது காஞ்சி ஆச்சாரியார் ஜெயேந்திரர் மீதான குற்றச்சாட்டு மற்றும் வழக்கு குறித்தும் சில கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன. இவர் நல்லவர், அவர் கேட்டவர் என்பது அல்ல இப்போதைய பிரச்சினை. மடாலயங்களின் நோக்கம், நமது சமயம் நன்கு பராமரிக்கப் பட வேண்டும்; மக்களின் வாழ்க்கையில் தர்மங்களும், நெறி முறைகளும், பாரம்பரிய பெருமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதுதான் . அந்த நோக்கத்துக்கு எதிரான வகையில் அந்த மடங்களை நிர்வகிப்போர் நடப்பது, மக்களின் நம்பிக்கையைத் தகர்த்து விடும் என்பதில் ஐயமில்லை. பழைய பாரம்பரிய முறைப்படி மடங்கள் தங்களுக்கு உரிய பணிகளை நியமத்தோடு செய்து வருமானால் புகார்களுக்கு இடம் வராது. சிருங்கேரி மடம் போன்ற சில மடாதிபதிகளை எடுத்துக் கொண்டால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் ஆன்மிகம், மதம், பண்பாடு இவற்றைப் பற்றி பேசியும், நடந்தும் காண்பிப்பதிலிருந்து அணு அளவும் மாறுபட்டு , அரசியல், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுவதோ அல்லது பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சாட்டுகளுக்கு ஆளாவதோ கிடையாது. இதைச் சொல்வதால் வீம்புக்கு அந்த உயர்ந்த பீடங்களைக் குறித்து வீணான அவதூறுகளைக் கூறி, இவைகளெல்லாம் இல்லையா என்று யாரும் தயவு செய்து கேட்க வேண்டாம். ஒரு உதாரணத்துக்குத்தான் அவர்களைக் குறிப்பிட்டேன். காஞ்சி மடத்துக்கு அறுபத்திஎட்டாம் பீடாதிபதியாக இருந்த மகா பெரியவர் சுமார் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்தார். எந்தக் காலத்திலாவது, யாராவது ஒருவர் அவர் மீது ஏதாவது ஒரு குற்றச் சாட்டைச் சொல்லியிருக்கிறார்களா? அல்லது சொல்லத்தான் முடியுமா? நடமாடும் தெய்வமாக அவர் இருந்தது எதனால்? நான் நேரில் பார்த்த ஒரு நிகழ்ச்சி. ஆந்திராவில் கர்னூல் நகரத்தில் ஒரு அரிசி ஆலையில் அவர் தங்கி இருந்தார். இரவு நேரம். அவரைக் காண பல்லாயிரக் கணக்கில் மக்கள் வந்து போய்க்கொண்டு இருந்தனர். நானும் என் நண்பர் ஒருவரும் அவர் உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிரில் தடுப்புக்கு அப்புறமாக உட்கார்ந்து கொண்டு அவரிடம் வந்து செல்வோரையும், அவர் ஆசீர்வதிக்கும் அழகையும் பார்த்துக் கொண்டு இருந்தோம். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு நிலக்கிழாரின் மகன் அமெரிக்காவில் காது மூக்கு தொண்டை நிபுணர் ஆச்சாரிய சுவாமிகளை தரிசிக்க மனைவி மக்களோடு வந்திருந்தார். பெரியவர் அவரை யார்? என்றார். அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். உடனே சுவாமிகள் அப்படியா? நான் உங்க ஆத்திலே தங்கி பூஜை செய்திருக்கேன் உனக்குத் தெரியுமோ? என்றார். ஆமாம் தெரியும் என்றார் டாக்டர். அப்போ நான் உன்னைப் பார்த்து, நீ பெரியவன் ஆனா என்னவா ஆகப் போறே என்றேன், நீ டாக்டராக ஆகப்போறேன் அப்படீன்னு சொன்னே நினைவு இருக்கா? இப்போ ஆயிட்டியா என்றார். அந்த டாக்டர் குலுங்கிக் குலுங்கி அழுது, அவர் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தார். அது பக்தி, அது ஒரு குருவின் அன்பு, பாசம். அந்த மகானின் ஆசிர்வாதம் அவர் டாக்டராக ஆனார் என்பதை அந்த டாக்டரும் புரிந்து கொண்டார். அதுதான் ஒரு மடாதிபதி அல்லது குருவின் கடமை. எந்தக் காலத்திலும் அந்த மகான் பணத்தைப் பற்றி சிந்தித்ததில்லை. பணத்தைக் கையால் தொட்டதில்லை. இந்திராவை அவர் சந்தித்த நிகழ்ச்சி பற்றி சிலர் சொன்னார்கள். அது அவரது கொள்கை. விதவையாக இருந்து தலைமுடியோடு வருபவர்களை அவர் ஒரு காலத்தில் பார்த்து ஆசி வழங்குவது இல்லை. இந்திராவை பெரியவர் முன்பு அழைத்துக் கொண்டு போனவர் என்னுடைய தாய்மாமன் அரக்கோணம் ராஜகோபால ஐயர் . பின்னர் ஒரு முறை ஜெயேந்திரர் மடத்தை விட்டு சொல்லாமல் நீங்கி தலைக்காவேரிக்குப் போனபோது அவரை மடத்துக்கு மீண்டும் அழைத்துக் கொண்டு வந்து விட்டவரும் அதே என் மாமன் தான். அவருடைய மருமான் நான் என்று சொல்லி இவரை நான் நமஸ்காரம் செய்தேன் காசியில். அவர் என்னைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை, ஆசி வழங்கி பிரசாதம் கொடுக்கவும் இல்லை. மகா பெரியவருக்கும், இவருக்கும் இருந்த மாற்றத்தை மனத்தால் நினைத்துப் பார்த்தேன். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும். வகிக்கும் பதவி, பீடம் இவற்றின் பெருமைக்கு களங்கம் வராமல் காக்க வேண்டிய பொறுப்பு மடாதிபதிகளுக்கு உண்டு. அப்படி இருந்தால், மகா பெரியவர் போல் இருந்தால் யாரும் எதிராக ஒரு சொல் சொல்லக்கூட அஞ்சுவார்கள். மகா உயர்ந்த ஸ்தானத்தில் இருப்போர் கல்லடியும் சொல்லடியும் படக்கூடிய நிலையில் இருக்கக்கூடாது ஏனென்றால், மக்கள் அவர்களை கடவுளுக்கு அடுத்த குரு ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். இந்த கண்ணோட்டத்தில் மட்டும் பிரச்சினையை அணுகுங்கள். தனிப்பட்ட மனிதர்களைப் பற்றிய தவறான விமர்சனங்களைத் தவிர்த்துவிடுங்கள். நன்றி.

  33. \\செட்டியார் அவர்களே சும்மா சும்மா சொல்லக்கூடாது. எங்கே ஆதாரம். காட்டுங்கள் பார்க்கலாம். \\

    மிஷி-நரியின் கட்டுபாட்டில் உள்ள எல்லா தொலைக்காட்சியிலும் இது ஒளிபரப்பட்டது. ஆனால் இதன் நம்பகதனமை கேள்விக்குறியது என்பதை நானும் அறிவேன்.

    மடாதிபதி சொத்துகளை பாதுக்காக்க நித்யானந்தா அவர்களால் மட்டுமே முடியும் என்பதையும் வேறு யார் அந்த இடத்திற்கு வந்தாலும் அவர்களை அழித்துவிடுவார்கள் என்பதையும் நான் அறிவேன். ஆயினும் இந்த சமயத்தில் இது போன்ற பட்டமளிப்பு தேவையற்றது என்பது எனது கருத்து.

    \\ஸ்ரீ நித்யானந்தர் ஒரு ராஜ சன்யாசி மடாதிபதி. ஆரண்ய சன்யாசி அல்ல\\

    இதை பற்றி நான் கேள்விப்பட்டது இல்லை. நித்யானந்தரை பற்றிய எனது கருத்து தங்களை பாதித்து இருந்தால் அதற்கு வருத்ததை தெரிவித்து கொள்கிறேன்.

    @ களிமிகு கணபதி,

    சங்கராச்சாரியார் மீதான தங்கள் கருத்து தவறானவை. அவர் தனது தர்மத்தை மீறி சில அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்து இருந்தது தவறு தான் என்றாலும், அவர் மீதான் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க திரிக்கப்பட்டவை, பொய்யானவை என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

    அவர் கைது செய்யப்பட்ட பொழுது நடத்தப்பட்ட அனைத்தும் ஒரு திட்டமிட்ட படுபாதக செயல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

    அவர் தான் உண்டு தன் தர்மம் உண்டு என்று இருந்து இருந்தால் இந்த பிரச்சனையே வந்து இருக்காது.

  34. Sivasri,

    Jayendra Sarwaswathi’s case cannot be compared with the present case.

    As for Nithyananda, I have attended a few of his sessions & also interacted with his disciples.

    This was before the video incident.

    I can vouch for the fact that the contents of the video are true, there is no forgery here.

    Nithyananda himself has given contradictory statements. First he said it was not him, then he claimed that there is nothing wrong in a swami engaging in a spiritual exercise with his female disciples.

    Actress Ranjeetha is present in almost all his public appearances.

    I am not saying that his disciple, who brought out this accusation is a saint. He is a crook. he wanted to blackmail Nithi & make money. Nithi also had discussions with him. But when the talks failed, he handed over the tape to a TV channel & made money.

    Regarding this controversy, even when Nithi visited the aadheenum mutt a couple of times some time back, there were strong rumours that he is going to be appointed successor.

    Those fears have come true now.

  35. //சார்வாகம் நமது இந்து மதத்தின் ஒரு சிறப்பான பகுதியே ஆகும். எனவே, தமிழகத்திலுள்ள சார்வாக மதத்தலைவர் ஆன, வீரமணி போன்றோரையும் ஆதீனமாக நியமிக்கலாம். ஒன்றும் குடி முழுகிவிடாது.//

    இந்தியாவில் சார்வாகம் என்ற பிரிவு இருந்ததே கிடையாது. சார்வாகனது கேள்விகளைப் படித்தால், அவனது சிந்தனை வழிவந்தவராக வீரமணி போன்ற காசுக்குத் தொழில் செய்கிற ஆட்களைச் சொல்லிச் சார்வாகனைக் கேவலப்படுத்த மாட்டீர்கள்.

    .

  36. //அவர் தான் உண்டு தன் தர்மம் உண்டு என்று இருந்து இருந்தால் இந்த பிரச்சனையே வந்து இருக்காது.//

    அவர் தான் உண்டு என்றிராமல் தன் தர்மமும் உண்டு என்பதுபோலச் சேரிகளுக்குச் செல்ல ஆரம்பித்ததால்தான் பிரச்சினையே வந்தது.

    சாதியவாதிகளின் வெறுப்புக்கு அவர் ஆளானார்.

    .

  37. Editorial in ‘dinamani”

    மதுரைக்கு வந்த சோதனை!

    மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சன்னிதானமாக, சுவாமி நித்யானந்த பரமஹம்சர் நியமிக்கப்பட்டிருப்பது அந்த ஆதீனத்தின் தனியுரிமையாக இருக்கலாம். இந்த நியமனத்துக்குத் தடை விதிக்க நீதிமன்றமும்கூட மறுத்துவிட்டது என்றாலும்கூட, மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் எடுத்த முடிவு ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தி இருக்கிறது என்றால், பொதுமக்களைத் திகைப்பிலும் நகைப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு பழம்பெரும் கோயில் கோபுரம் சரிந்து விழுந்தால், பக்தர்களின் மனங்கள் பதறுவதற்கு ஒப்பானது இந்தத் தவறான வாரிசு நியமன முடிவு என்பதுதான் உண்மை.

    சைவத் திருமடங்கள் சமயத்தையும் தமிழையும் வளர்ப்பதற்காக நிறுவப்பட்டவை. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்டது மதுரை ஆதீனம் என்பது வரலாறு. இந்த ஆதீனத்தின் தலைவர் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைப்பது என்பது அறிவிப்பின் மூலம் நிகழ்த்தப்படுவதல்ல.

    சைவப் பாரம்பரியத்தில் வந்த ஒருவர்தான் மடாதிபதியாக முடியும் என்பது மட்டுமல்லாமல், அப்படி மடாதிபதியாக நியமனம் பெறுவதற்குப் பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். திருநீறு அணிந்து ருத்திராட்சம் தரித்து பஞ்சாட்சர மந்திரம் முறையாகக் குருமகா சன்னிதானத்திடமிருந்து உபதேசிக்கப்பட்டு தீட்சை பெறுவது முதல் கட்டம். கட்டளைத் தம்பிரானாக மகா சன்னிதானத்தின் ஏவல்களைக் கவனித்து, விசேஷ தீட்சை பெற்றபிறகு பூசைத் தம்பிரானாக நித்திய பூஜைகளைச் செய்து, ஒடுக்கத் தம்பிரானாகத் தன்னை உணரும் தியானப் பயிற்சியிலும் தேர்ந்த பிறகுதான் இளைய பட்டத்திற்கான தகுதியைப் பெற முடியும்.

    இப்போதைய மதுரை ஆதீனத்தின் 292-வது குரு மகா சன்னிதானம் தனது பூர்வாசிரமத்தில் அருணகிரியாக இருந்து தருமபுரம் ஆதீனத்தில் மூன்று ஆண்டுகள் சைவ சித்தாந்தத்தில் பயிற்சி பெற்றவர். 291-வது மகா சன்னிதானம் வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் அடுத்த வாரிசு பற்றிய சூசகம் பெற்றதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    நித்யானந்தர் சைவ வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே ஓர் ஆதீனத்தின் வாரிசாகப் பட்டம் சூட்டுவதற்குப் போதுமான தகுதி அல்ல. ஏனெனில், சுவாமி நித்யானந்த பரமஹம்சர் ஒரு யோக குரு. வேதம், தாந்தீரிகம், யோகம் பயின்றவர். அவருக்கு சைவ சித்தாந்தத்தில் போதுமான பயிற்சி கிடையாது.

    பக்தி மார்க்கம் அவரது வழிமுறை அல்ல. அவரது சீடர்கள் பக்தி செய்தாலும், அவரது படத்துக்குத்தான் பூஜை செய்கிறார்களே தவிர, அவர்கள் சைவ சித்தாந்திகள் அல்லர். சுவாமி நித்யானந்தரின் பயிற்சிகள் ஹதயோகம் சார்ந்தவை; சித்தர் வழிமுறை. சித்தர்கள் மனவெளி மனிதர்கள். சாதாரண மனிதர்களின் மனஒழுங்குகள் சித்தர்களிடம் கிடையாது. அவர்களும் அவர்களது பயிற்சிகளும் சமயச் சடங்குகளுக்குக் கட்டுப்படாதவை.

    ஆனால், மதுரை ஆதீனத்தின் அடிப்படையோ, சடங்குகள், மரபுகள் சார்ந்தது. சாதாரண எளிய மனிதர்களை உருவ வழிபாட்டின் மூலம் மனதைக் கனியச் செய்து, கடைத்தேற்றம் செய்யும் பக்தி மார்க்கம். மேலும், மடாதிபதிகள் என்பவர்கள் அவர்கள் சார்ந்த திருமடங்களில் திரண்ட சொத்துகளைப் பராமரிக்கும் நிர்வாகிகளும்கூட. சைவ சித்தாந்த வகுப்புகளில் தொடங்கி, அவர்களது திருமடத்துக்குச் சொந்தமான, சம்பந்தப்பட்ட ஆலயங்களின் சமயச் சடங்குகளை நிர்வகிக்கும் பொறுப்புகளையும் கொண்டவர்கள்.

    மதுரை ஆதீனத்தின் திரண்ட சொத்துகளை அபகரிக்க நித்யானந்தர் முயற்சிக்கிறார் என்கிற குற்றச்சாட்டில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. நித்யானந்த தியான பீடத்துக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. அவற்றின் சொத்துகள் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். ஆகவே, ஆதீனத்தின் சொத்துகளை அவர் அழித்துவிடுவார் என்ற அச்சம் அர்த்தமில்லாதது.

    தனது சீடர்கள் உதவியுடன் உலகம் முழுவதிலும் 40 இடங்களில் மதுரை ஆதீனத்தின் கிளைகள் தொடங்கப்படும் என்று பட்டமேற்ற நாளில் சுவாமி நித்யானந்தர் கூறியிருக்கிறார். ஒரு மதம் எவ்வாறு வழிபாட்டுக்கூடங்களின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்பட முடியாதோ, அதேபோன்று ஒரு மடம் அல்லது ஆதீனத்தின் சமயக் கொள்கையை அதன் கிளைகளின் எண்ணிக்கையால் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. மனிதர்கள் தேடி வந்தால் அது ஆன்மிகம். மனிதர்களைத் தேடிச் சென்றால் அது வணிகம்.

    மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் குருமகா சன்னிதானமாக நித்யானந்தர் தரிசனத்துக்கு வருவதும் அவரது சீடர்கள் நித்யானந்தரைப் போற்றி கோஷம் எழுப்புவதும் மதுரை ஆதீனத்துக்கு இழைக்கப்படும் அவமானம் என்பதை அவர் ஏன் உணரவில்லை? உலகளாவிய அளவில் தனது ஆன்மிகப் பணியை எடுத்துச் செல்லும் வாய்ப்புள்ள நித்யானந்தர் தன்னை ஏன் மதுரை ஆதீனமாகச் சுருக்கிக் கொள்ள வேண்டும்?

    ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் அடையாளம் உள்ளது. பெயர் உள்ளது. முகவரி உள்ளது. ஆதீனங்களும் அப்படித்தான். மதுரை ஆதீனத்துக்கு ஒரு வரலாறும், தனிஅடையாளமும் பாரம்பரியமும் உள்ளது. நித்யானந்தருக்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. பக்தர்கள் இருக்கிறார்கள். நித்யானந்த தியான பீடத்துக்குள் மதுரை ஆதீனம் கரைந்துவிடுவதும் தவறு. மதுரை ஆதீனத்தில் நித்யானந்த தியான பீடம் கலந்துவிடுவதும் தவறு. இவையென்ன அரசியல் கட்சிகளா ஒன்றோடு ஒன்று இணைவதற்கும் பிரிவதற்கும்? இல்லை, இதென்ன வணிக நிறுவனங்களா ஒன்றை ஒன்று விழுங்குவதற்கு?

    பக்தர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவதிலும் மக்களோடு மக்களாய் மாற வேண்டிய அணுகுமுறைகளிலும் அக்கறை கொள்ள வேண்டிய மடாலயங்கள், தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி, கேலிப் பொருளாவது வேதனையிலும் வேதனை. இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படும் சலிப்பு, மக்களின் தெய்வ நம்பிக்கையை பலவீனப்படுத்தும். இதை மதுரை ஆதீனம், சுவாமி நித்யானந்தர் இருவருமே புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், இவர்களை சரித்திரம் ருத்திராட்சப் பூனைகள் என்று எள்ளி நகையாடும்!

  38. // மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீ பரமாச்சாரியார் ஸ்ரீ நித்யானந்தரை நியமிக்க முழு உரிமை அதிகாரம் படைத்தவர் அதை தவறு என்று கூறிட யாருக்கும் அதிகாரம் இல்லை. இளைய பட்டத்துக்கு உரியவரை நியமிக்கும் அதிகாரம் மூத்த ஆதீனத்திற்கு மட்டும் என்பது வழக்காறு.ஸ்ரீ நித்யானந்த ஸ்வாமிகள் சைவ சாஸ்திரங்களிலும் சாதனை முதலியவற்றில் அனுபவம் படைத்தவர் என்பதை அவரது சொற்பொழிவுகளைக் கேட்ட எம் போன்ற சைவர்கள் அறிவர் //

    சிவஸ்ரீ விபூதிபூஷண் அவர்களே,

    தமிழகத்தின் எல்லா சைவ மடாதிபதிகளும் நித்யாவின் நியமனத்தை ஏன் எதிர்க்கிறார்கள்..?! அவர்கள் சைவர்களே இல்லையா.?!!

  39. @அத்விகா/வெ.கோபாலன்; சாதாரண மக்களாகிய நாம் ஒரு மடாதிபதியையோ/
    நாட்டின் தலைவனையோ/பிரதம மந்திரியியோ விமர்சனம் செய்கின்றோம் என்றால் அந்த அளவுக்கு அவர்கள் நடத்தையில் பழுது இருப்பதால் தான்.
    இவ்விவாதங்கள் அதிகமாக நடந்தால் நாட்டிற்கு மிக நல்லது.மேற்கத்திய நாடுகளில் தனி மனிதர்களின் வாழ்க்கை முறை மோசமாக இருக்கும்.ஆனால் அவர்கள் நாட்டை ஆளுகின்ற தலைவன் தன்னைப்போல் ஒழுங்கீனமாக இல்லாது கண்ணியமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிரான்.
    இங்கே நிலமை தலை கீழ்.

  40. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும். வகிக்கும் பதவி, பீடம் இவற்றின் பெருமைக்கு களங்கம் வராமல் காக்க வேண்டிய பொறுப்பு மடாதிபதிகளுக்கு உண்டு. – கோபாலன் சார் – இப்போ நான் உங்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு சொன்னால் உடனே நீங்கள் களங்கம் ஆகி விடுவீர்களா? உங்களுக்கு எல்லாம் சங்கராச்சாரியர் நீங்கள் எப்போது போய் – மச்சினனுக்கு கலியாணம், பேத்திக்கு குழந்தை பிறக்கணும்னு கேட்டால் உடனே ஆசி கொடுக்கும் ஒருவர் என்ற நினைப்பு. நீங்கள் மஹா பெரியவரையும் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. அவர் எதோ உங்களுக்கு மட்டும் ஆசி கொடுப்பவர் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அவர் மதமாற்றத்துக்கு எதிராக, நம் வேத/தமிழ்/மற்றமொழி/கலை விஷயங்களுக்காக செய்தது, அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும்போது அம்பேத்கார் மூலமாக இந்து சமய அமைப்புகளுக்கு பாதுகாப்பு உண்டாக்கியது எல்லாம் தெரியாது. சுப்ரமணியம் சாமியும் நிறைய எழுதியிருக்கிறார். உங்களுக்கு இவர் அவர் போல கோபாலா வா என்று கூப்பிட்டு பிரசாதம் கொடுக்கவில்லை என்று கோபம். அவர் உங்களுக்கு மட்டும் அல்ல.எல்லாருக்கும் ஆச்சாரியார். ஆந்திரா போய் பாருங்கள். அங்கே கிராமங்களில் என்ன நிலைமை என்று. அங்கே ஓடி உழைக்கும் ஒரே பெரியவர் இவர்தான். சங்கர நேத்ராலயா மாதிரி, புற்று நோயாளிகளுக்கு உதவும் ஸ்ரீ மாதா டிரஸ்ட் மாதிரி எத்தனை செய்து இருக்கிறார்? கோபாலன் சார் – நீங்கள் உங்கள் மாமா/ தாத்தா செய்த நித்ய கர்மனுஷ்டங்களை எல்லாம் விடாமல் செய்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் செய்கிறார்களா? ஆனால் அவர் குறைந்தது வருடம் 5000 பேர் வேதம் படிக்க ஏற்ப்பாடு செய்துள்ளார். கிராமக் கோவில் அர்ச்சகர்களுக்கும், பூசாரிகளுக்கும் மாதம் பணம் ஏற்ப்பாடு செய்துள்ளார். 77 வயதில் அவர் எத்தனை பயணம் செய்கிறார்? நீங்கள் சொன்ன இன்னொரு மடாதிபதி 17 வருஷமா வெளியவே வரவில்லை. இப்போதான் ரொம்ப கெஞ்சி கேட்டபிறகு கிளம்பியிருக்கிறார். ஜெயேந்திரரும், பெஜாவர் சுவாமியும் செய்யும் பணிகள் கணக்கில் அடங்காது.
    சும்மா உலக நடப்பு தெரியாமலும், அவர் செய்யும் பணிகள் தெரியாமலும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.

  41. களிமிகு கணபதி on May 4, 2012 at 2:35 pm

    ” சார்வாகனது கேள்விகளைப் படித்தால், அவனது சிந்தனை வழிவந்தவராக வீரமணி போன்ற காசுக்குத் தொழில் செய்கிற ஆட்களைச் சொல்லிச் சார்வாகனைக் கேவலப்படுத்த மாட்டீர்கள்.”

    என் தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.

  42. @VGopalan

    // இந்திராவை அவர் சந்தித்த நிகழ்ச்சி பற்றி சிலர் சொன்னார்கள். அது அவரது கொள்கை. விதவையாக இருந்து தலைமுடியோடு வருபவர்களை அவர் ஒரு காலத்தில் பார்த்து ஆசி வழங்குவது இல்லை. இந்திராவை பெரியவர் முன்பு அழைத்துக் கொண்டு போனவர் என்னுடைய தாய்மாமன் அரக்கோணம் ராஜகோபால ஐயர் . //

    தகவலுக்கு நன்றிகள்.

    பெரியவர் தனக்கு விதிக்கப்பட்ட மரபுப்படி இந்திராவை சந்திக்க மறுத்ததை கேள்வி கேட்பது தவறு. அவர் தனக்கு விதிக்கப்பட்ட கடமையை சிறப்பாக செய்தவர்.

    ஆனால் எமர்ஜென்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சந்திக்க மறுத்தார் என்று எழுதப்பட்ட கருத்துகள் தவறானவை.

  43. நாம் எல்லாம் காஷ்மீர் பிரச்சினை பற்றி வாயால் பேசிக்கொண்டு, கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கிறோம். 10 நாள் முன்பு அவர் ஸ்ரீநகர் ஜேஷ்டா தேவி கோவிலில் 4 நாள் தங்கி இருந்து எல்லா விழாவும் நடத்திவிட்டு வந்திருக்கிறார். படத்தைப் பாருங்கள்.ஒரு பாதுகாப்பும் இல்லை. எதாவது நடந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. நாம் எல்லாம் வெறும் வாய்ச் சவடாலோடு சரி. அவர்தான் இறங்கி செய்கிறார். படத்தைப் பாருங்கள்.
    https://www.kamakoti.org/kamakoti/news/Adi%20Shankara%20Jayanthi%202012%20Shrinagar.html

  44. ஜன கல்யாண் மூலமாக ஜெயேந்திரர் செய்யும் பணி மிகவும் மகத்தானது என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. அதே போல், நித்யானந்தா ஆஸ்ரமும் பல சமுதாயப் பணிகள் செய்து வரலாம். விவரங்கள் இல்லை.

    இங்கு எழுந்த கேள்வி : குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் தலைமைப் பீடத்தை அலங்கரிக்கலாமா என்பதுதான். எனக்குத் தெரிந்த பதில் – கூடாது என்பதுதான்.

    அவர்களால் ஏன் தலைமைப் பொறுப்பை விட்டு விட முடியவில்லை? மடங்களின் கணக்கிலடங்கா சொத்துக்கள். அவற்றை யாரிடம் விடுவது ?

    ஜெயேந்திரர் / விஜயேந்திரர் உண்மையிலேயே குற்றமற்றவர்கள் என்றால், அவர்கள் ஏன் வழக்கினை 8 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறார்கள் ?

  45. ரமேஷ் அவர்களே ஸ்ரீநகர் கோவிலுக்கு போயிருக்கிறீர்களா
    மூன்றடுக்கு பாதுகாப்பு அதற்க்கு உண்டு.
    முதலில் மாநில காவல் துறை.அடுத்து CRPF .வண்டியில் இருந்து அனைவரையும் மெட்டல் detector வைத்து ஆராய்வர்.பிறகு 250 படிகள் ஏறுவதற்கு முன்பும் ஒவ்வொருவரையும் முழுதாக சோதித்த பிறகே அனுமதிப்பர்.கோவிலை ஒட்டி ராணுவத்தின் ராடார் இருப்பதால் ராணுவத்தினரும் உண்டு.
    இதில் வீரம் எங்கே வருகிறது.
    திரு செட்டி அவர்களே
    இது போன்ற திருப்பணிகளை பற்றி தான் கூறினேன்.இப்போது ஆதி சங்கரர் பூஜை செய்த குகை பிர்லா மந்திர் போல பல பல என்று மாறி விட்டிருக்கும்.
    ஜோஷிமதிலும் உள்ள கோவில்/குகை அழகாக டைலிங் செய்யப்பட்டு விட்டது.

  46. ரமேஷின் தேவையற்ற சிருங்கேரி ஆச்சாரியார் பற்றிய விம்ர்சனத்தைக் கண்டிக்கிறேன்.இந்த விவாதத்தில் அவரைக்கொண்டு வந்திருக்க வேண்டாம்.
    17 ஆண்டுகள் வெளியில் வராமல் இருந்தது ஒரு குற்றமா? இருந்த இடத்திலிருந்தே அவர் பணிகளைச் செய்ய முடியாதா?

    சிருங்கேரி மடம் ஈடுபட்டுள்ள சமுதாயப்பணிகள் எல்லாவற்றையும் இங்கே பட்டியல் போட வேண்டுமா?

    அத்வைத மடங்களின் வேலை வேத ரக்ஷணமும், நமது மரபுகள் பாரம்பரிய‌த்தையும் பேணிக்காப்பதுவே. அதனை ஒருமடம் சரியாகச் செய்துள்ளதா என்பதுதான் பார்க்கப்பட வேண்டியது.

    காஞ்சி‍=சிருங்கேரி, 5 மடமா, 4 மடமா விதண்டாவாதமும் இதுபோலவே மதகடிப் பேச்சாகத் துவக்கப்பட்டு, சிருங்கேரி மடாதிப‌திகளின் பெரும்போக்கால் மேலும் சிக்கலாகாமல் கட்டுக்குள் வைக்கப்பட்டது.

  47. இந்திரா காங்கிரசுக்கு கை சின்னத்தை சொன்னதே காஞ்சி பெரியவர் தான் என கேள்விப்பட்டிருக்கிறேன்— தெரிந்தோர் விளக்கலாம்.என்னை பொறுத்தவரை மடங்கள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதை நிறைவேற்றவில்லை. மதுரை ஆதீனத்திற்கு நித்யா வராவிட்டால் அதேபோல் ஒரு ஆள் தான் ஆதீனமாக வருவார்.என்னமோ இப்ப உள்ள ஆதீனம் யோக்கிய சிகாமணி மாதிரி பேசுகிறீர்கள்.ஆயிரம் கோடி சொத்து , ராஜபோக வாழ்வு, சேவைக்கு இளம் வயசு பெண்,தேவையற்ற அரசியல்வாதிகளுடனான நெருக்கமான உறவு, இதுவா ஆதீனத்திற்கு அழகு? ஏழைகளுக்கு என்ன செய்தார்? இந்துக்களுக்கு என்ன செய்தார்? குறைந்தபட்சம் மதத்திற்காவது அல்லது சைவ பிள்ளைகளுக்காவது என்ன செய்தார் இந்த ஆதீனம்?
    ஜெயேந்திரர் கதை வேறு,நித்யா கதை வேறுதான். நித்யா கதை கண்ணால் பார்த்தது, சாந்தி சிரித்தது,சரி வீடியோ பொய், இன்னும் ரஞ்சிதாவுடனே சுத்துவது எந்த அடிப்படையில்? சுற்றி அழகான ஐடங்களுடன் இருந்தால் தான் ஞானம் கிடைக்குமா? இது போன்ற ஆட்களால் தெருவில் போகிறவன் -சின்ன பிள்ளையை கட்டிய,பதினாறு கல்யாணம் முடித்த கிழவரை நம்புகிறவன்,ஒழுக்கம் என்றால் என்ன என்றே தெரியாத பாரம்பர்யமுடைய ஆட்களெல்லாம் -என் மதத்தை விமர்சிக்க வந்து விட்டனர்.
    ஜெயேந்திரர் மீது போட்டது பொய் வழக்காக இருக்கலாம். ஆனால் ஏன் நான்கு கோடி தமிழ்நாட்டு இந்துக்களில் நானூறு பேர் கூட அ.தி.மு.க வை எதிர்க்கவில்லை? பிற மக்களுக்கு அவர் ஒரு ஜாதி(பிராமணர்) பெரியவராகத்தான் தெரியும்.இவர்களெல்லாம் வெகு ஜனங்களுக்காக என்ன செய்தார்கள்? இன்னும் சொல்கிறேன்,ஜெயேந்திரரையோ, மதுரை ஆதீனத்தையோ பத்து சதவீதம் பேருக்கு கூட தெரியாது என்பதே உண்மை. ரஞ்சிதா புண்ணியத்தில் நித்தியை கொஞ்சம் பேருக்கு தெரியும். இதைஎல்லாம் கூறுவதால் என்னை மத துவேஷி ,நாத்திகன்,வீரமணி,கருணா கும்பல் என முடிவுகட்டி பதில் கூற வேண்டாம், உங்களைப்போல், உங்களைவிட என் மதத்தின் மேல் அன்பும்,நம்பிக்கையும்,எதிர்பார்ப்பும் அதிகம் உடையவன் தான்,
    முடிவாக ஒன்று, இது போன்ற நிகழ்வுகளால் எல்லாம் மதத்திற்கு மாசு வந்துவிடாது, சாக்கடை கலந்தால் நாறிவிட இது குட்டை அல்ல, சமுத்திரம், இந்து மகா சமுத்திரம்.இதை அழித்துவிட இதுவரை பல கோடி பேர் முயன்று முடியாமல் மடிந்திருக்கின்றனர்.

  48. கண் மூடித்தனமான பக்தியைப் பாராட்டுகிறேன் மிஸ்டர் ரமேஷ். ஆயிரம் சப்பை கட்டு கட்டினாலும், காஷ்மீர் கோயிலுக்குப் போய் வழிபட்டாலும், கிராமத்து மக்களுக்கு கண் வைத்தியம் செய்திருந்தாலும், உலகளாவிய சேவைகளை யாரும் செய்யாத அளவுக்குச் செய்தாலும், தன்னுடைய பீடத்துக்குக் களங்கம் சேர்க்கும் வகையில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைப் பற்றி கருத்து எதுவும் கூறக்கூடாது என்றால், உலக நடப்பு தெரியாமலும், செய்யும் பணிகள் தெரியாமலும் ஏதோ எழுதும் என் போன்றவர்கள் செய்தது குற்றம் தான். என்ன செய்வது? தனி மனித விமர்சனம் வேண்டாம் என்பதற்காகத்தான் கருத்துக்களை அளவோடு முன் வைத்தேன். இனியும் பல வாதங்களை முன் வைக்க வேண்டுமானால், எந்த தனி மனித விமர்சனம் கூடாது என்றேனோ அதை இன்னும் வலுவாக எடுத்து வைக்க வேண்டியிருக்கும். அழுக்குத் துணிகளை அம்பலத்தில் அலச வேண்டி இருக்கும் ரமேஷ் போன்றவர்களுக்கு கடவுளாகத் தெரிபவர்கள் என் போன்ற உலக நடப்புகள் தெரியாதவர்களுக்குக் கல்லாகத் தெரியலாம். உண்மையை உள்ளபடி சொன்னால் உடல் எரிந்தால் என்ன செய்ய முடியும். கடும் சொற்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல. வேதம் படித்தால் மட்டும் போதாது. வேதம் படித்தவர்கள் வாழ வேண்டிய முறைகளும் உண்டு. காசுக்கு அலைந்துவிட்டு மூக்கைப் பிடித்துக் கொண்டு காயத்ரி மந்திரம் சொன்னால் மட்டும் உத்தமனாக முடியாது என்பதை உலக நடப்பு அறிந்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வியாபாரி தன வியாபாரத்தில் கவனம் செலுத்துதல் எத்தனை அவசியமோ, அத்தனை அவசியம் ஒரு துறவி, மக்களுக்கு நல் வழி காட்டுதலில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். சாமியார் வியாபாரியாக ஆக நினைத்தால், மக்கள் கண்களுக்குத் தெரிய மாட்டார்கள். பணமும், பவிசும், மருத்துவ மனைகளும்தான் கண்களுக்குத் தெரியும். இது போதும் மிஸ்டர் ரமேஷ். வார்த்தைகளை அளந்து வெளியிடுங்கள்.

  49. என்னுடைய பின்னூட்டமொன்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் தன ஆன்மீகப் பணியில் மட்டும் கவனம் செலுத்தும் சிருங்கேரி பீடம் பற்றி குறிப்பிட்டு விட்டு, நான் அவரைக் குறிப்பிட்டேன் என்பதற்காகவே அவரைப் பற்றி தவறான விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தும், திரு ரமேஷ், அவரை வெளியவே வராதவர் என்று குத்திக் காட்டியிருக்கிறார். எந்த பிரச்சினைக்கும் வராத அவரை இவர் குறை சொல்லக் காரணம் என்னவோ அதுவே இவர் காஞ்சி ஆச்சாரியாருக்கு வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு தருவதற்கும் காரணம். அந்த இரு மடங்களும் எந்த விரோத பாவமும் காட்டிக் கொள்ளாத நிலையில் சில அரை குறைகள் அவர் வேறு இவர் வேறு என்று பேதம் பாராட்டிக் கொண்டு குறை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இரு பீடங்களும் மகத்தானவை. பாரம்பரிய பெருமை கொண்டவை. அவற்றுக்குத் தலைமை தாங்குபவர் “சீசரின் மனைவி போல சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருத்தல்” அவசியம் என்பதைத்தான் என் கட்டுரையில் வலியுறுத்தி இருந்தேன். தேவை இல்லாமல் யாருக்கோ வக்காலத்து வாங்கிக்கொண்டு திரு ரமேஷ், கடுமையான சொற்களால் விமர்சித்து என்னைத் தனிப்பட்ட முறையில் வெளி உலக நடப்பு தெரியாதவன் என்று கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  50. சார், நான் நீங்கள் மற்றொரு மடப் பெரியவரைப் பற்றிக் குறிப்பிட்டதால் நான் அவர் பற்றி சொன்னேன். மஹா பெரியவர் 1970 இல் ஜெயேந்திரரிடம் பொறுப்புகளைக் கொடுத்துவிட்டு தேனம்பாக்கம், சிவச்தானம் போன்ற இடங்களிலும் பின் சதாராவிலும் சென்றுவிட்டார்.அதே போல் ஜெயேந்திரரும் தனக்குப் பின் ஒரு சீடரைத் தயார் செய்துவிட்டு சமூகப் பணிக்காக செல்கிறேன் என்று சென்றுவிட்டார். அவர் அளவில் அவர் பதவியை உதறிவிட்டுச் சென்று விட்டார். கோபாலன் சார் அவர்களின் மாமா போன்றவர்கள் அவரிடம் சென்று -அவரை – on his terms – அழைத்துக் கொண்டு வந்தார்கள். நீங்கள் எல்லாம் அவரை அழைத்து வராமல் இருந்திருந்தால் சமுதாயாத்துக்கும் ஒரு சந்நியாசி கிடைத்து இருப்பார். மடத்துக்கும் பிரச்சினை வந்திருக்காது. பிரச்சினை வேண்டாம் என்று உதறிச் சென்ற சன்யாசியை திரும்ப அழைத்து வந்துவிட்டு, பிரச்சினை வந்த பிறகு இப்ப திரும்பிச் செல் என்கிறீர்கள். நான் ஒன்றும் கண் மூடித்தனமாக ஆதரிக்கவில்லை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பார்த்தீர்கள் அல்லவா?. நீங்கள் அதைப் பார்க்காமல் கண் மூடித்தனமாக பேசுகிறீர்கள். அவர் வழக்கை இழுத்து அடிக்கவில்லை. பொய் டேப் மூலமாக யார் இழுத்து அடிக்கிறார்கள்?

    அப்புறம் மகா பெரியவர் காந்தியைப் பார்த்தது பற்றிய தவறாக எழுதிய ஒரு எழுத்தாளருக்கு பதில், மஹா பெரியவர் இந்திரா காந்தியை சந்தித்தது, மஹா பெரியவா சமுதாயப் பணி, காஞ்சி பெரியவா – ஸ்ரின்கேறி மகா சந்நிதானம் இடையே இருந்த நல் உறவு எல்லாம் ராத்திரி போஸ்ட் செய்கிறேன்.

    ஒன்று மட்டும் தெளிவு. ஒரு சாராருக்கு காஞ்சி மடத்தின் மேல் காழ்ப்பு.ஒரு சாராருக்கு அந்த சன்யாசி நமக்கு மட்டும்தான் என்று. ஒரு சாராருக்கு அவர் செய்வதால் எங்கே நம் பிழைப்பு கேட்டு விடுமோ என்று? எந்த பதிலும் ஆதாரத்தோடுதான் இருக்க வேண்டும். நான் அதாரத்தோடு பதில் தருகிறேன். நீங்கள் ஆத்திரத்தோடு பதில் தருகிறீர்கள்.

  51. ரமேஷ் அவர்களே ஸ்ரீநகர் கோவிலுக்கு போயிருக்கிறீர்களா
    மூன்றடுக்கு பாதுகாப்பு அதற்க்கு உண்டு.
    முதலில் மாநில காவல் துறை.அடுத்து CRPF .வண்டியில் இருந்து அனைவரையும் மெட்டல் detector வைத்து ஆராய்வர்.பிறகு 250 படிகள் ஏறுவதற்கு முன்பும் ஒவ்வொருவரையும் முழுதாக சோதித்த பிறகே அனுமதிப்பர்.கோவிலை ஒட்டி ராணுவத்தின் ராடார் இருப்பதால் ராணுவத்தினரும் உண்டு.
    இதில் வீரம் எங்கே வருகிறது.

    சரி – இவ்வளவும் இருக்கிறது. எத்தனை பேர் போனார்கள்? போக வேண்டியதுதானே?

  52. ஓவ்வொருவர் மேலும் ஒவ்வொரு விமர்சனங்களை முன் வைக்கலாம். மனிதனாகப் பிறந்த எவரும் குறைகளுடையவர்களே.. ஆதலில் குற்றம் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை..

    எனவே, இவைகளைப் பற்றி மிகச்சிறியவனான எனக்குச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.. இவைகளைப் பற்றி எனக்கு ஒன்றும் புரியவுமில்லை..

    ஆகவே, நீண்ட காலமாக இக்கட்டுரைக்கு எதாவது எழுதுவோம்.. எழுதுவோம் என்று தொடங்கித் தொடங்கி.. ஏதும் எழுதாமல் போய் விடுகிறது..

    ஓன்று மட்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. இங்கே வீபூதிபூஷண் அவர்கள் ‘ராஜரிஷி’ என்று ஒரு போடு போட்டிருக்கிறார்..

    உண்மை தான்.. ஆதீன மஹா சந்நிதானங்கள் ‘ராஜரிஷி’ என்றே அழைக்கப்படுகிறார்கள். இது குறித்து யாழ்ப்பாணத்து நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் குருமஹாசந்நிதானம் சுவாமிகளுடனும், திருப்பனந்தாள் காசி மடம் இளைய சுவாமிகளுடனும், பேசியிருக்கிறேன். விவாதித்திருக்கிறேன்..

    எனவே, இது குறித்து சொல்ல வேண்டும்.. ஆதீன சந்நதிதானங்களுக்கு துறவிகளுக்குரிய சாதுர்மாஷ்யம் போன்ற கட்டுப்பாடுகள்.. ஓரிடத்தில் தங்கக் கூடாது போன்ற கட்டமைப்புகள் இல்லை.. என்றாலும் வேறு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.. அவற்றில் பலவற்றினையும் இப்போது விட்டு விட்டு வருவதைக் காண்கிறோம்.

    தற்போதிருக்கிற சம்பிரதாயங்களின் படி சைவ ஆதீன சந்நிதானங்கள் கட்டாயம் தலை முடி எடுக்க வேண்டும், இல்லாது விட்டால் தாடி, முடி வைத்துக் கொள்ள வேண்டும் (இரண்டும் உடல் பற்றினை குறைப்பதற்காக..)

    கல்லாடை என்ற தைக்காத ஒரே நீள மஞ்சள் ஆடை மட்டுமே அணியலாம்.. சிவபூஜா நியமங்களும் இருக்கின்றன..

    எனினும், இன்றைக்கு மதுரை ஆதீன சந்நிதானங்கள் பட்டாடை புனைந்து.. தங்க மகுடம் தாங்கி இருக்கிறதற்கு எங்கு இடமுண்டோ அறியோம்..

    முற்றுமுழுதாக ஒரு சந்நியாசிக்குரிய கட்டமைப்பு ஆதீன சந்நிதிகளுக்கு இல்லாத போதும், ஒரு பிரம்மச்சாரிக்கு… அல்லது, வனப்பிரஸ்தருக்கு உரிய கட்டுப்பாடுகள் உள்ளன எனலாம்..

    ஆனால், சில கால கட்டங்களில் சைவாதீனங்களில் இல்லறத்தார் தலைமை தாங்கியிருக்கலாம் என்று தெரிகிறது.. (திருஞானசம்பந்தரே பிரம்மச்சாரியாக இருந்து கிருஹஸ்தரானவரே.. அவர் ஒரு போதும் சந்நியாசியாக இருக்கவில்லை).. அப்போது நான் கூறிய இந்த கல்லாடை,முடி நியமங்களில் ஏதும் மாற்றம் இருந்ததோ தெரியவில்லை..

    இப்படி எல்லாம் பிரச்சினைகள் வந்தால் அதற்குத் தீர்வு இல்லறத்தாரை ஆதீன குருமஹா சந்நிதானங்கள் ஆக்குவதே ஆகும். ஆனால், அதில் கூட குடும்ப ஆட்சி என்று வேறு பிரச்சினைகள் வரலாம்..

    ஏதோ திருஞானசம்பந்தர் அருளாலே நல்லது நடக்க பிரார்த்திப்போம்..

    “வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்கப்
    பூதப் பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
    சீத வள வயற் புகலி திரு ஞானசம்பந்தர்
    பாதமலர் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்”

  53. ஒரு துறவி, மக்களுக்கு நல் வழி காட்டுதலில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். சாமியார் வியாபாரியாக ஆக நினைத்தால், மக்கள் கண்களுக்குத் தெரிய மாட்டார்கள். பணமும், பவிசும், மருத்துவ மனைகளும்தான் கண்களுக்குத் தெரியும் –

    சார் -அப்பரும் சம்பந்தரும் அப்படி நினைக்கவில்லை.முதலில் மதம் என்ற ஒன்று இருந்தால்தான் இதெல்லாம் செய்ய முடியும். அதனால்தான் அவர்கள் அரசனையே எதிர்ப்பது முதல், எல்லவிதமான் வாதங்களை செய்வது வரை, மந்திர மாயம் முதல் – அறச் சாலைகளை நிறுவுவது வரை செய்தார்கள். குமரில்ல பட்டர் பௌத்தர் வேஷம் போட்டது முதல் – ஆதி சங்கரர் மண்டன் மிஸ்ரர் வீட்டுச் சுவர் ஏறி குதித்தது முதல், அரசன் உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்தது வரை, ஸ்ரிங்கேறி ஆச்சார்யார் ஸ்ரீ வித்யாரண்யர் ஒரு ராஜ்யத்தையே ஸ்தாபித்தது முதல், பின் அதே போல் அவதூத சமர்த ராமதாசர் ஒரு மராட்டிய சாம்ராஜ்யம் நிறுவியது வரை, ஒரு விவேகானந்தர் உலகம் எங்கும் சுற்றி இந்த நாடு பற்றிய விழிப்புணர்ச்சி உண்டாக்கியது வரை எப்பொழுதெல்லாம் ஒரு சன்யாசி ராஜ்ய விவகாரங்களில் நுழைய வேண்டுமோ அப்போதேல்லாம் நுழைந்து இருக்கிறார்கள். ஆசுபத்திரி என்ன? சாம்ராஜ்யத்தை கூட உண்டாக்கி இருக்கிறார்கள்.- இன்னும் இது போல் சொல்லிக்கொண்டே போகலாம்.

  54. வேதம் படித்தால் மட்டும் போதாது. வேதம் படித்தவர்கள் வாழ வேண்டிய முறைகளும் உண்டு – இதெல்லாம் சாதாரண நாட்களில்தான். இப்படித்தான் ஒருநாள். திருவரங்கத்தை சூறையாட ஒரு பெரும்படை வந்தது. அரங்கனை பாதுகாப்பாக எழுந்தருளச்செய்துவிட்டு 12 ,000 வைஷ்ணவர்கள் கத்தி எடுத்து சண்டை போட்டு உயிரிழந்தார்கள். இப்படி வேதம் படித்தவன் கத்தியும் எடுத்து காப்பாற்றிக் கொடுத்ததுதான் நம் மதம். நம்மள மாதிரி வெளிநாட்டுக்குப் போறது, தண்ணி அடிக்கறது, எல்லாம் சாப்பிடறது, வெளிநாடுக்காரிய கல்யாணம் பண்ணிக்கறது – அப்பறம் மடத்துக்கு பஞ்ச கச்சம் கட்டிக்கிட்டு வந்து பெரியவாங்கறது- பெரியவா எப்படி இருக்கணும்னு பஞ்ச் டயலாக் அடிக்கறது. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். இப்ப நாம் எதிர மஹா பெரியவர் வந்து நின்னா அவர் எதிர தைரியமா போய் நின்னு என் பிக்ஷய எற்றுக்கொள்ளுங்க ன்னு சொல்ல முடியுமா? நம்மள மாதிரி ஆட்களின் பிக்ஷை அவர் ஏற்றுக்கொள்வாரா?

  55. நான் ஸ்ரின்கேறி ஆச்சார்யர் மீதும் மரியாதை வைத்து இருப்பவன்தான். அதே சமயம் ஒரு சன்னியாசி என்பவர் எப்போது தன் பணியைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் என்கிறேன். நோ வொர்க் நோ ப்ரோப்லேம் என்று இருக்கக் கூடாது என்கிறேன். அவர் வழி அவருக்கு. நீங்கள் சொன்னதால்தான் நானும் பதில் அளித்தேன்.ஆதி சங்கரர் எதற்கு அவதாரம் செய்தார்? எதற்கு மடங்களை நிறுவினார்? ஒரு சாராருக்கு ஆசிர்வாதம் வழங்க மட்டுமா?

    என்னைத் தனிப்பட்ட முறையில் வெளி உலக நடப்பு தெரியாதவன் என்று கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ஆமாம் – அதில் என்ன தவறு.? நான் கொடுத்த லிங்கைப் படித்தீர்கள் அல்லவா? உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்? ஏன் உங்கள் தனிப்பட்ட கோபத்தை சுவாமிகள் மீது காட்டுகிறீர்கள்? நானா எழுதினேன்? நீங்கள் அவரைப் பற்றி எழுதியதற்கு பதில் கொடுத்தேன்.நீங்கள் மட்டும் எழுதலாம்? நான் பதில் கொடுத்தால் தவறா? போய் கிராமங்களில் இருக்கும் இருப்பைப் பாருங்கள்.

  56. இன்று தினகரனில் வந்த செய்தி:

    இந்து சமய அறநிலை துறை சார்ப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறீஞர் முகமது மைதீன் என்பவர் வாதிடுகையில், தேவைப்பட்டால் மடத்தை இந்து சமய அறநிலை துறை சட்டம் 59 ன் படி அரசே மடத்தை எடுத்து எடுத்து நடத்தும் என்று சொல்கிறார்.

    ஏன் அரசாங்கத்திற்கு இந்து சமய அறநிலை துறைக்கு ஆதரவாக வாதாட ஒரு ஹிந்து கூடவா கிடைக்கவில்லை.

    பல அரசு துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் பொழுது கோயில்களை மட்டும் அரசாங்கமே எடுத்து நடத்த அரசாங்கம் விருப்படுவது ஏனோ? ஹிந்துகள் மீது மட்டும் அரசுக்கு அப்படி என்ன கரிசனம்? சிறுபானமையினர் மீது ஏன் அரசுக்கு காழ்புணர்ச்சி. ஏன் மசூதிகளையும் சர்சையும் அரசாங்கம் எடுத்து நடத்த கூடாது.

  57. பொதுவாகவே மகா பெரியவரையும், புதுப் பெரியவரையும் ஒப்பிட்டு அவர்போல இவர் இல்லை என்று சொல்பவர்கள் பிறப்பால் உயர்வு தாழ்வு சொல்பவர்களாகவே அப்படி வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள்.

    இவர்கள் சொல்லும் இன்னொரு குற்றம் – புதுப் பெரியவர் அரசிய தொடர்பு கொண்டு விட்டார். அரசியலில் தலையிட்டு விட்டார் என்பது.

    யார் செய்ய வில்லை?

    ரமேஷ் சொல்வதுபோல நூற்றாண்டுக் கணக்காக சமயப் பெரியவர்கள் அரசருடன் தொடர்பு உடையவர்களே.

    அப்பர் பெருமானிடம் திருஞானசம்பந்தப் பெருமானிடம் மாணிக்க வாசகப் பெருமானிடம் ராமானுஜாச்சாரியாரிடம் ஆசி வாங்காத அரசர் எவர் உண்டு? அவர்கள் காட்டும் வலி நடக்காத அரசர் எவர் உண்டு. அவர்கள் அரசர்களுக்கு ஆலோசனை சொன்னவர்கள்தான்.

    சிருங்கேரி மடம் எப்படி ராஜகுரு மடம் ஆனது? மூன்றாம் வல்லாளன் குழந்தை இல்லாமல் இறக்க அவரது ராஜ்ஜியத்தை அவரது சேனாபதியே எடுத்து நடத்தலாம் என்று சிருங்கேரி ஆச்சாரியார் அவருக்குப் பட்டம் கட்டியதால்தானே?

    ராகவேந்திரர் முஸ்லிம் மன்னனிடம் தொடர்பில் இல்லையா?

    மகா பெரியவர் இந்திராவுக்கும், ஆர். வேங்கடராமனுக்கும் இப்போதும் உள்ள சுப்பிரமணியம் சுவாமிக்கும் அரசியல் வழிகாட்டுதல் செய்யவில்லையா?

    மகா பெரியவர் மகாத்மா காந்திக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் நிறுவனருக்கும் அரசியல்/ சமுதாய ஆலோசனை சொல்ல வில்லையா ?

    மகா பெரியவரின் வழிகாட்டுதலின் பேரில்தான் புதுப் பெரியவர் தமது அரசியல் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டார் என்பதும் அப்படித்தான் நடந்து வந்தார் என்பதும் உண்மை.

    புதுப் பெரியவர் மனிதர் எவரையும் பிறப்பினால் உயர்ச்சி தாழ்ச்சி பார்த்தல் கூடாது என்ற கொள்கை காரணமாகவே மேல்சாதியினர் பலரும், குறிப்பாக பிராமணர்கள் பலரும் அவரைப் பலவிதமாகக் குறை சொல்லி வந்து எப்படிப்பட்ட அவதூறான பழியையும் அவர் மீது சுமத்தினால் எதிர்ப்பு வராது என்ற நிலையை உருவாக்கி விட்டனர். இன்னமும் அவர்களது உயர் பிறப்புக் கொள்கை அதே போக்கில் புதுப் பெரியவர் மீது தொடர்ந்து அவதூறு செய்ய வைக்கிறது என்பதே உண்மை.

  58. ரமேஷ் மீதுள்ள கோபத்தில் கோபாலன் திருமடங்களையும் அவற்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களையும் கண்ட படி எழுதுவதை தமிழ் ஹிந்து அனுமதிக்கக் கூடாது என்று ஆசிரியர் குழுவுக்கு விண்ணப்பிக்கிறேன்.

    கோபாலனுக்குக் கோபம் கண்மூடித்தனமாக வருகிறது என்பது புலப்படுகிறது.

  59. இரண்டுபேரும் மாறி,மாறி தங்கத்தாலும்,பணத்தாலும் பரிவர்த்தனை செய்துகொண்டு இருக்கிறார்கள்.எல்லா ஊடகங்களிலும்,பத்திரிகைகளிலும் படங்களாக வெளிவந்து ,அவலங்களை வெளிச்சம்போட்டு காட்டியபோதும்,நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு இயந்திரங்கள் தானே புயலில் காணாமல் போய்விட்டன.எதிர்மறையான செயல்கள் நாட்டில் நடந்தேறும்போது ,நீதிதேவதையாவது தனது எழுதுகோலை திறந்திருக்கலாம்.இந்து சமய அறநிலையத்துறைக்கு யாரும் புகார்கொடுக்கவில்லை என்று அரசு சார்பாக நீதிமன்றத்தில் ,பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு தமிழ்நாட்டில்தான் தலைமை அலுவலகம் இருக்கும்.அவர்களும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் பார்ப்பார்கள் என்று எண்ணுகிறேன்.தவறு செய்பவர்களை தண்டிக்கவேண்டிய இடத்தில் உள்ளவர்கள்,அதனை செய்ய மறுக்கும்போது ,அவர்களும் நடக்கும் அக்கிரமங்களுக்கு,துணை போனவர்களே.

  60. இந்த ஒரு பதிலை நான் எழுதுவதன் காரணம் இரண்டு. ஒன்று இந்தப் பின்னூட்டதில் ஒருவர் மாட்டுக் கொட்டகை சந்திப்பு என்று எழுதியது. மற்றது மஹா பெரியவர் சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது இல்லை என்றது. இந்த மாட்டுக் கொட்டகைப் பேச்சு வந்ததன் காரணம் ஒரு எழுத்தாளர் காந்தியின் ஜாதி காரணமாக மஹா பெரியவர் அவரை மாட்டுக் கொட்டகையில் வைத்து சந்தித்தார். அவர் கும்பகோணத்திலி இருந்து ஹரிஜன ஆலயப் பிரவேசம் வேண்டாம் என்று காந்தியை மன்றாடிக் கேட்பதற்காக பாலக்காடு வந்தார். அதுவும் சாதூர் மாச்ய காலத்தில் மடத்தை விட்டு வெளியில் வந்தார். ஆனாலும் காந்தியை மாட்டுக் கொட்டகையில் வைத்துப் பார்த்தார் என்று எழுதி இருந்தார்.

    முதலில்மஹா பெரியவர் இஸ்லாமிய, கிறிஸ்துவ, வெளிநாட்டுக்காரர்களை எல்லாம் கூட மடத்திலும், வெளியிலும் சந்தித்து இருக்கிறார். இது எல்லாருக்கும் தெரியும்.

    மஹா பெரியவர் பாலக்காடு வந்தது கேரளா விஜயத்துக்காக. பாலக்காட்டில் இருந்து பின் கேரள யாத்திரை சென்றார். காந்தியின் விருப்பத்துக்கு ஏற்பதான் சந்தித்தார். துறவிகள் சாதுர்மாசம் எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள். மடத்தில்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. அந்தக் காலம் முழுவதும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அவ்வளவுதான். அதை எங்கே வேண்டுமானாலும் செய்யலாம். சொல்லப் போனால் சன்யாசி மடத்திலே கூட ரொம்ப தங்கக் கூடாது. அதான் பெரியவா காஞ்சிபுரத்தில் கூட வரதராஜர்சந்நிதி,உபநிஷத் ப்ரம்மேன்ற மேடம், தேனம்பாக்கம், ஓரிக்கை, சிவச்தானம் என்று மாறி மாறித் தங்குவார். மஹா பெரியவா அந்த ஆண்டு பாலக்காட்டிலும், ஸ்ரிங்கேறி மகா சாநிதானம் கோயம்பத்துரிலும் சாதுர்மாசம் இருந்தார்கள்.

    எழுத்தாளர் மஹா பெரியவரின் பக்தர்கள் காந்தி அவரிடம் ஆசி வாங்கியதாக கதை விடுகிறார்கள். ஆனால் பெரியவர்தான் காந்தியிடம் கெஞ்ச வந்தார் என்று எழுதியுள்ளார்.

    நான் இப்போது தரவுகளைத் தருகிறேன். source – The collected works of mahatma Gandhi .

    1 . Mahatma Gandhi promised to do his best. He informed his hearers that he was
    soon to lay aside khadi work to take up the solution of untouchability. He thanked
    them for having waited in deputations. He was just going to Sabari Ashram—where
    the removal of untouchability was going on—and thence on a visit to His Holiness
    Shri Shankaracharya of Kumbakonam Mutt, to have an interview, with a view to
    convert the Swamiji, if he could, to his view in the matter of the removal of
    untouchability.1
    The Hindu, 17-10-1927

    2 162. SPEECH AT PUBLIC MEETING, PALGHAT
    October 15, 1927
    FRIENDS,
    I thank you for your addresses and the several purses. As you
    are aware, this is not my first visit to Palghat. I have vivid recollec tions
    of your kindness when I was here last. I am glad that the Taluk Board
    is devoting some of its attention to the spinning-wheel. I hope you will
    organize spinning in all your schools in a scientific manner. I had
    occasion yesterday in Trichur to see a number, nearly four or five
    1The Hindu report adds: “Mahatmaji and party motored to the Nellichery
    village. Here he was met and received by Shri Shankaracharya of the Kamakoti
    Peetham, Kumbakonam Mutt. There was a heart-to-heart talk between the two great
    men. The interview lasted some 30 minutes and was strictly private.” For a report of
    the meeting between Gandhiji and the Shankracharya, Vide Appendix “Interview with
    Shri Shankaracharya of Kanchi”, February 12, 1948.
    ௩. APPENDIX IV
    INTERVIEW WITH SHRI SHANKARACHARYA OF KANCHI1
    In the latter half of 1927, Mahatma Gandhi was touring the South to
    popularize Congress objectives and collect funds. Gandhiji, who had already heard
    about the Acharya through Mr. A. Rengaswamy Iyengar, Manager, The Hindu, and
    Mr. S. Satyamurti, decided to call on him. The historical meeting took place on
    October 15,1927 in a cattle-shed adjoining the Acharya’s camp at Nellicheri in
    Palghat. Only a few persons were present, but no Press reporter.
    Gandhiji paid his respects to the Acharya in the traditional Hindu style. The
    overwhelming saintliness of the sannyasi, clad in ochre-coloured khadi and seated on
    the floor, made a deep impression on Gandhiji mind. A spell of silence ensued. Then
    the Acharya spoke a few words in Sanskrit by way of welcome and asked him to be
    seated. Gandhiji sat down and said that he was not used to speaking in Sanskrit, but
    could understand the language somewhat, and wanted permission to speak in Hindi.
    Since the Acharya could understand Hindi, this arrangement suited both. Gandhiji
    spoke in Hindi and the Acharya in Sanskrit.
    The Acharya expressed appreciation of Gandhiji’s efforts to spiritualize
    politics, since healthy national life should be based on spiritual foundations and
    nations devoid of religion and dependent on materialistic forces were bound to perish.
    On the question of temple-entry for Harijans the Acharya thought that it might
    amount to a form of himsa to wound the feelings of those who still believed in the
    supremacy of Shastras and tradition. The discussion continued on spiritual matters;
    it was open-hearted and reflected mutual regard. There was no disputation or
    polemics. . . .
    The conversation went on for about an hour. . . . On taking leave, Gandhiji
    said that he was immensely benefited by this visit, and that he would keep the
    Acharya’s wishes in mind and fulfil them to the best of the capacity.

    கல்கியின் பேத்தி இந்த சந்திப்பில் மஹா பெரியவர் இந்த விஷயத்தால் வன்முறை வந்துவிடக் கூடாது.மன மாற்றம் தீவிர பிரச்சாரத்தால் வரவேண்டும் என்று பெரியவர் காந்தியிடம் சொன்னதாகக் கூறுகிறார். இப்போது தெரிகிறதா இது காந்தியால் நடந்த சந்திப்பே அல்லாது பெரியவர் முனைந்து நடந்த சந்திப்பு அல்ல என்று.

    ஏன் மாட்டுக் கொட்டகை சந்திப்பு என்றால் – அந்தக் காலத்தில் காந்தி கடல் கடந்து சென்றவர். கடல் கடந்து சென்றவர்களை அப்போது பெரியவர் ஏற்றுக்கொள்வதில்லை. பெரியவர் கடைசி வரை கடல் கடந்து சென்றவர்களிடம் பிக்ஷை வாங்கியதில்லை. இந்த கடல் கடந்த விவகாரத்தால்தான் மாட்டுக் கொட்டகைச் சந்திப்பு. அவர் இந்த சந்திப்பிற்கு முன்பே அனைவரயும் மடத்தில் வைத்து சந்தித்திருக்கிறார்.

    ஆனால் எழுத்தாளர் சொன்ன அத்தனையும் தவறு. அவர் இந்த விஷயத்தில் யார் என்ன சொன்னாலும் பிராமண வெறியன் என்று பட்டம் கட்டிவிட்டார்.

    அவர் தமிழ் ஹிந்துவில் எந்த கட்டுரைக்கு எத்தனை பின்னூட்டம் வருகிறது என்று எண்ணிப் பார்ப்பவர் என்பதால் இங்கே பின்னூட்டம் போட்டேன். தமிழ் ஹிந்துவில் நிறைய கட்டுரைகள் எழுதும் ஒருவரும் எழுத்தாளருக்கு ஆமாம் சாமி போட்டார். தமிழ் ஹிந்து தயவு செய்து இந்தப் பின்னூட்டத்தை பதிவு செய்தால் உலகத்துக்கு உண்மை விளங்கும். முடிந்தால் இதை எழுத்தாளருக்கும் அனுப்பவும்.

  61. இதையெல்லாம் படியுங்கள். பல பேருக்கு மஹா பெரியவரையும் தெரியாது. சும்மா அவர் மாதிரி உண்டானு உடான்ஸ் உடுவதுதான். அல்லது அவர் இவர்களை அந்த லெவெலில் வைத்து சும்மா பிரசாதம் கொடுத்து அனுப்பியிருப்பார். அவர் எந்த அளவுக்கு இதெல்லாம் செய்தார் என்பது சிலருக்குதான் தெரியும்.

  62. நண்பர்களே இங்கு நாம் இவ்வாறு அடித்துக்கொண்டிருக்கிறோம், எங்கள் மதுரையில் நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா, ஊரே விழாக்கோலம் பூண்டுள்ளது. “சிறு பிள்ளையை கட்டிய , பணத்துக்காக பதினாறு பெண்களை கட்டிய புத்தி பேதலித்த கிழவன் “வழி நடக்கும் தீவிரவாதிகள் நல்லபிள்ளை போல் மத பிரச்சாரம் செய்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். ” படைத்தவனை வணங்கு, படைப்பினை வணங்காதே, —ஒருவரே உண்மையான கடவுள், அவரைத் தவிர நீங்கள் வணங்கும் எவரும் ஒரு ஈயை கூட நகட்ட சக்தி உடையவரல்லர் ” போன்ற அப்பட்ட விஷம் தோய்ந்த வம்பிழுக்கும் வாசகங்கள் அழகர் வரும் வழியெல்லாம். என்ன செய்யப்போகிறோம்? இது எனக்கு தெரிந்து சில ஆண்டுகளாகவே நடக்கிறது.

  63. “இந்தியாவில் சார்வாகம் என்ற பிரிவு இருந்ததே கிடையாது.” -களிமிகு கணபதி on May 4, 2012 at 2:35 pm

    நமது வலைத்தளத்தில் திரு வ சோமு அவர்கள் எழுதிவரும் தொடர்கட்டுரையிலிருந்து, சுவாமி சித்பவானந்தர் கம்யூனிசம் பற்றி தெரிவித்த கருத்தில், ‘ லோகாயதவாதம் ‘ என்ற சொல்லை சுவாமிகள் அழகாக கையாண்டு விளக்கம் தந்துள்ளார். இந்த லோகாயதம் என்பதன் இன்னொரு பெயரே “சார்வாகம்” ஆகும். காப்பி செய்து கீழே ஒட்டியுள்ளேன்.

    ” உதாரணமாகக் கம்யூனிசத்தைப் பற்றி இருபது வருடங்களுக்கு முன்பு சுவாமிஜி கூறியது மிகப் பிரமாதமாக இருந்தது. அப்போது சோவியத் யூனியன் ஓகோவென்று இருந்தது. அது சிதறுண்டு போகும் என யாருமே கற்பனை கூடப் பண்ணியிருக்க மாட்டார்கள். முதன் முதலில் விண்வெளியில் சாட்டிலைட் அனுப்பிய ருஷ்யாவைப் பற்றி மகோன்னதமான பிம்பங்கள் இருந்தன.

    அந்தக் காலக்கட்டத்தில் ருஷ்யாவின் கம்யூனிசத்தைப் பற்றி சுவாமிஜியிடம் கேட்டோம். சுவாமிஜி மிக அழகாகப் பதில் சொன்னார்கள்:

    “நம்முடைய கருத்தை எதுவும் தடைசெய்யவோ, கட்டுப்படுத்தவோ கூடாது. பழைய காலங்களிலே கருத்துச் சுதந்திரம் எந்த அளவு இருந்தது என்பதற்கு நம்முடைய சாஸ்திரங்களே சாட்சி.

    நாஸ்திக வாதத்திற்கும் தத்துவ அந்தஸ்து கொடுத்து, அதை ஒரு a system of logic, a system of philosophy என்று வகுத்துக் கொடுத்திருக்கிறோம்.

    உலகத்திலேயே “லோகாயாத வாதம்” என்பதை நாம்தான் செய்திருக்கிறோம். அதைச் சொன்ன “ஜாபாலி” என்பவரும் ரிஷியாக நம்மால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார்.

    நம்முடைய உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றுக்கு வாக்கியங்கள் தோறும் உரை சொல்லுவார்கள்.

    அதற்கு ஒருவர் மறுப்புச் சொல்லுவார்.
    மறுப்புக்கு உரையாசிரியர் மறுபடியும் பதில் சொல்வார்.

    மறுப்புக்குப் “பூர்வபட்சம்” என்றும், அதற்கு அளிக்கப்படும் பதில் விளக்கத்திற்கு “சித்தாந்தம்” என்றும் பெயர்.

    சூத்திரத்திலே என்ன சந்தேகங்கள் வரும், அதை எப்படி விளக்க வேண்டும் என்று சூத்திர பாஷ்யத்திலேயே கூறுவார்கள்.

    இது நம் ஹிந்துப் பண்பாட்டில் உள்ள சிந்தனா சுதந்திரம்.

    எனவே, சிந்தனா சுதந்திரம் இல்லாமல் எந்த அமைப்பும் சரிவராது. சிந்தனா சுதந்திரம் இல்லாமல் ஒரு அமைப்பு வந்தால், அது சிறிது காலம் நன்றாக இருப்பது போலத் தெரியும். பின்பு, அது உடைந்து போய் விடும்” என்றார்கள். சுவாமிஜி இவ்வாறு கூறிய 15 வருடங்களுக்குள் அந்தக் கம்யூனிச அமைப்பே உடைந்து போய்விட்டது.”

    ஏதேனும் தவறோ, மாறுபட்ட கருத்தோ இருப்பின் தெரிவித்தால் , சிந்திக்கவும், ஐயங்களை பகிர்ந்து தெளிவு பெறவும் எனக்கு உதவியாக இருக்கும்.

  64. //////நித்யானந்தன் நியமிக்கப்பட்டதில் இன்னொரு அபாயமும் இருக்கிறது. தற்போது இதுபோன்ற ஆதீன மடங்களில் இருப்பவர்கள் யாரும் மக்களுக்கு அறிமுகமானவர்களோ, மக்களை ஈர்க்கும் திறணுள்ளவர்களோ அல்லர். இந்த ஞானசம்பந்த தேசிகரை எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் நித்தி போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் அதை ஈடுகட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நித்தியிடம் ஈர்க்கும் பேச்சாற்றல் உண்டு. கட்டுப்பட்டு வேலை செய்ய தொண்டர்படை உண்டு. இவை பாரம்பரிய மடங்களோடு இணையும் போது, மக்கள் இன்னும் அதிகமாக மூடநம்பிக்கைகளுக்குள் ஈர்க்கப்படுவதற்கும், அன்றாடம் அவர்கள் உழன்று கொண்டிருக்கும் வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து, அவைகளுக்கான தீர்வுகளை நோக்கிய பயணத்திலிருந்து தடம்மாறிச் செல்வத்ற்குமே பயன்படும். மக்களை நேசிப்பவர்கள் மெய்யாகவே கவலைப்பட வேண்டிய விசயம் இது தான்.//////////
    இது தான் தோழர் செங்கொடியின் கவலை, அவர் தளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் வரிகள்.

  65. தஞ்சை வெ.கோபாலனின் இந்தக் கட்டுரை முன் வைக்கும் கருத்தை நான் ஆணித்தரமாக எதிர்க்கிறேன்.

    இவர் நினைத்து எழுதுவது என்னவோ அதுவே பெரும்பான்மை ஹிந்துக்களின் எண்ணமும் ஆகும் என்று வேறு நினைக்கிறார் இவர். இதில் இவர் சற்று சருக்கியிருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

    தவறான கருதுகோள்களை உருவாக்குவதில் ஊடகங்களின் வலிமை பற்றி இவரே இக்கட்டுரையில் பேசிவிட்டு, அவ்வூடகங்கள் வழி வெளியான நித்யானந்தர் பற்றிய செய்திகள் எல்லாவற்றையும் எப்படி இறுதி உண்மையாக ஏற்க முடியும்?

    ஒரு காலத்தில் Bofors என்று ஒரு பிரச்னை. இன்று அதில் அன்றைய ப்ரதமர் ஸ்ரீமான் ராஜீவுக்குப் பணப் பட்டுவாடாப் பங்கு இருந்திருக்க முடியாது என்று தீர்ப்புக் கிடைக்கிறது. ஆனால் இந்த அபாண்டமான குற்றச் சாட்டால் ஆட்சியுரிமை இழந்த நிலை அவருக்கு வந்தது மாறிவிடுமா?

    கட்டுரையாளரே சொல்லியுள்ளதுபோல் நித்யானந்தருக்கு மக்களிடத்தில் கெட்ட பெயர் ஏற்படுத்த முனைந்த ஊடகங்களின் முயற்சியும் அதன் பாதிப்பும் அவர் நிரபராதி என்று நிரூபணமானால் மாறிவிடுமா?

    ஏற்கனவே இருந்த மதுரை மடமும் தற்போதைய குன்றக்குடி ஆதீனமும் ஆன்மீகத்தின் முழு விரோதிகளாக விளங்குபவர்களின் சேர்க்கையை வெளிப்படையாகத் தவிர்க்காமல், ஒட்டி, உறவாடி வருவதைக் கட்டுரையாளர் கண்டித்ததுண்டா?

    ஒரு மடத்துக்கு வாரிசாக நியமனம் (முடிசூட்டப் பெறல்) பெற, இக்கட்டுரை கூறுவதுபோல், பல கட்டுப்பாடுகள் உண்டுதாம். அவை முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பதெல்லாம் சரியான கேள்விகள்தாம். ஆனால் பிறரால் குற்றம் சுமத்தப்பட்ட காரணத்துக்காகவே நித்யானந்தருக்கு வாரிசுரிமை தரக் கூடாது என்கிற நிலைப்பாட்டைஎல்லாம் ஒரு மடம் எடுக்க முடியாது. அது சரியாகவும் இருக்காது.

  66. ஒன்றே ஒன்று மட்டும் கூறிக் கொள்கிறேன். விவேகானந்தர் கூறியதுதான். ஒரு துறவிக்குத் தேவை இரண்டு லக்ஷணங்கள். ஒன்று celibacy ( பிரமச்சர்யம்) மற்றது poverty .( எளிமை) ஆனால் பெரும்பாலான துறவிகள் இது இரண்டிலும் பாதியை எடுத்துக்கொண்டு celibraty ஆகி விடுகிறார்கள். அதான் பிரச்சினை.

  67. //நமது வலைத்தளத்தில் திரு வ சோமு அவர்கள் எழுதிவரும் தொடர்கட்டுரையிலிருந்து, சுவாமி சித்பவானந்தர் கம்யூனிசம் பற்றி தெரிவித்த கருத்தில், ‘ லோகாயதவாதம் ‘ என்ற சொல்லை சுவாமிகள் அழகாக கையாண்டு விளக்கம் தந்துள்ளார். இந்த லோகாயதம் என்பதன் இன்னொரு பெயரே “சார்வாகம்” ஆகும். //

    அத்விகா,

    ஸ்வாமி சித்பவானந்தர், நாஸ்திக ”வாதம்” என்று சொல்கிறார். லோகாயாத ”வாதம்” என்று சொல்கிறார்.

    வாதம் என்பது மதம் அல்ல. தத்துவப் பிரிவு அல்ல.

    இந்திய தத்துவ மரபின்படிச் சொல்லப்படும் “நாஸ்திகத்தின்” பொருள் வேறு. மேற்கத்திய தத்துவ மரபின்படியான நாஸ்திகத்தின் பொருள் வேறு.

    மேலும், லோகாயாதவாதம் என்பதன் பொருள் நாஸ்திகம் இல்லை.

    தன் பிழைப்பை மட்டும், தன் புலன் இன்பத்தை மட்டும் உன்னதமாகக் கருதிச் சொல்லப்படும் வாதங்கள்தான் லோகாயாத வாதம்.

    சார்வாகம் என்ற தத்துவப் பிரிவு எப்போதும் இருந்ததே இல்லை.

    ஆனால், மார்க்ஸிய வழி வந்த ராதகிருஷ்ணன் உள்ளிட்ட பெரும் தத்துவத் துறைப் பேராசிரியர்கள் லோகாயாத வாதம் மற்றும் சார்வாகம் என்பவற்றை ஒரு பெரிய தத்துவப் பிரிவு என்று திரித்துவிட்டார்கள்.

    .

  68. //மகா பெரியவர் ஆன்மிகம் தவிர வேறெதிலும் நாட்டமில்லாதவர் ஆனாலும் இந்த தேசத்தின்மீது பெரும் பற்றுடைய மகத்தான தியாகி. அவர் காலத்தில் காஞ்சித் திருமடத்தில் பணவசதிகள் குறைந்து நில/ சொத்து நிர்வாகத்தில் திறமை அருகிவருவது குறித்து அவரே கொண்ட கவலை காரணமாகவே அவராகவே ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தேர்ந்தெடுத்து அவருக்கும் தக்க சுதந்திரத்தை வழங்கி மடத்தை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூலம் திறம்பட நடத்தி வந்தார்.//
    நீங்கள் எழுதியுள்ள இந்த வாசகங்கள் பெரியவருக்குப் பெருமை சேர்க்கக் கூடியதா? யோசனை செய்துதான் எழுதினீர்களா? பெரியவர் கண் காட்டியிருந்தால் பணத்தைக் கொட்டப் பலரும் காத்திருந்த போதும் அவர் அதனை விரும்பவில்லை என்பதே உண்மை. சதாராவில் இருந்து கூட்டி வந்தபோது ஜயேந்திரர் சொன்ன ‘டெர்ம்ஸ்’க்கெல்லாம் பெரியவர் ஒப்புக்கொண்டார் என்பது போல் கோடிகாட்டி எழுதி, ஜயந்திரரைத் தூக்கும் சாக்கில் மற்றவர்கள் எல்லோரையும் , பெரியவர் உட்பட, அனைவரையும் கீழே தள்ளி விட்டீர்களே!

    ‘கைச்சின்னம் பெரியவர் எடுத்துக் கொடுத்தது!’ என்ன ஒரு கண்டுபிடிப்பு?!
    விட்டால் ஜயேந்திரர் அரசியல்வாதிகளுடன் அதிகமாகப் பழகிவிட்டார் என்பதை
    நியாய‌ப்படுத்த ‘ராமர் அரசியல்வாதிதானே;அவருடன் வசிஷ்டரும், விஸ்வாமித்ரரும், பரத்வாஜரும் பழகவில்லையா என்றுகூட கேட்பார்கள் போல் இருக்கிறது.போதுமடா சாமி!

  69. பெரியவர் கண் காட்டியிருந்தால் பணத்தைக் கொட்டப் பலரும் காத்திருந்த போதும் அவர் அதனை விரும்பவில்லை என்பதே உண்மை – இல்லை. இது அரை உண்மை. பெரியவர் பிர்லா உட்பட எவ்வளவோ பேர் பணம் தருகிறேன் என்று சொன்னபோதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவர் சாஸ்திர விரோதமாக வரும் பணத்தை ஏற்கவில்லை. அதே சமயம் நேர்மையான வழியில் வந்த பணத்தைக் கொண்டு பல டிரஸ்ட் தொடங்கியுள்ளார். அவர் காலத்தில் நில உச்சவரம்பு, சீர்திருத்தங்களால் பெரும் பணக் கஷ்டம் வந்தது. ( இதே கஷ்டம் ஸ்ரிங்கேரியிலும் வந்தது. மஹா சந்நிதானம் சாரதாம்பாள் தவிர மீதி எல்லாத்தையும் கவர்ன்மென்ட் எடுத்துக்கட்டும் என்று அவரும் சொல்லி விட்டார்.) ஆனால் அதற்க்கு முன்பு மடம் காஞ்சியில் இருந்தபோது பல கிராமங்கள் மடத்துக்கு சொந்தமாக இருந்தன. விஜய கண்ட கோபாலன் முதல் கிருஷ்ணா தேவ ராயர் வரை பல அரசர்கள் மடத்துக்கு கிராமங்களை வழங்கிய காப்பர் பிளாடேகள் உள்ளன. தொட்ட உடையார் என்று ஏகாம்பர சுவாமியும், சிக்க உடையார் என்று காஞ்சி ஆச்சார்யர் குறிப்பிடப்பட்டு, பல கிராமங்களில் கோவிலுக்கும், மடத்துக்கும் செலுத்தும் வரி இருந்தது. பின் கும்பகோணம் சென்றபின் நாயக, மராத்தா அரசர்கள் பல நிலங்களைக் கொடுத்துள்ளனர். மஹா பெரியவாளின் தாய் வழித் தாத்தா ஸ்ரீ மடத்தின் இளையத்தன்குடி பெரியவளின் காலத்தில் மேனேஜர் ஆகா இருந்தபோது, தஞ்சை பிரதாப சிம்ஹன் செய்த கனகாபிஷேகத்தைக் கொண்டு – கபிஸ்தலம் மூப்பனார் உதவியால் மடத்துக்கு 1000 வேலி நிலம் வாங்கினார். அதுவும் பின் அரசாங்கத்திடம் போயிற்று. மடம் என்பது மதத்துக்கு பல பணிகளைச் செய்வதற்காகவே உள்ளது. காஞ்சி மடம் பல அரசர்களின் ஆதரவோடு வசதியாகத்தான் இருந்தது.பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. வேத பாட சாலைகளை நடத்த, பலருக்கும் மாத சம்பளம் கொடுக்க எல்லாம் பணம் வேணும். நாம் எல்லாம் என்ன கஷ்டம் வந்தாலும் வைதீகமாக இருந்தால் பணம் வேண்டாம். நாம் எல்லாம் பணத்தை தேடி வெளி நாட்டுக்கு ஓடி விடுவோம். மடாதிபதி பிச்சை எடுத்துக் கொண்டு நமக்கு ஒரு show piece போல இருக்கணும். நாமும் எப்பவாது பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு – நம்ம பெரியவாதான் எப்படி இருக்கானு சொல்லிட்டு – திரும்ப போயிடணும். காசு இல்லாமல் வைதீகன் எல்லாம் உசிர விட்டுட்டு – oh vedas – our culture – we lost yaar -நு வருத்தப்பட்டு போய்டலாம். காசு இல்லைனா ஒண்ணும் இல்ல மஹா பெரியவர் இந்த யதார்த்தத்தை ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொண்டார்.. ஏசுநாதர் சொன்னா மாதிரி – மஹா பெரியவா சொனன மாதிரி வாழறவங்க பெரியவர் மேல குற்றம், சொல்லுங்க. உங்களால முடியல. பெரியவா யாகம் , வைதீகம் முதல், தாழ்த்தப்பட்ட மக்களை மதத்தோடு ஓட்டுவது வரை எல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.

  70. மஹா பெரியவர் கருத்துக்கள். அவர் முதலில் என்ன எதிர்பார்த்தார். பின் மெதுவாக அவர் அரசும் உதவாது. பணமும் வராது என்பதால் மெதுவாக சில மாற்றங்களை வரட்டும் என்று விட்டு விட்டார்.
    https://www.kamakoti.org/tamil/7dk115.htm
    இதிலிருந்து next -next என்று போகவும். மஹா பெரியவர் சொன்னதைத்தான் பெரியவரும் செய்கிறார் என்று புரியும்.

  71. ///சதாராவில் இருந்து கூட்டி வந்தபோது ஜயேந்திரர் சொன்ன ‘டெர்ம்ஸ்’க்கெல்லாம் பெரியவர் ஒப்புக்கொண்டார் என்பது போல் கோடிகாட்டி எழுதி, ///

    நான் எழுதிய எந்த இடத்திலும் சதாராவோ, அங்கிருந்து வந்ததோ இல்லவே இல்லையே. திரு முத்து கிருஷ்ணன் இப்படி சொல்லாததை எல்லாம் சொல்லித் திரிக்க வேண்டிய அவசியம் என்ன? ஏதோ ‘டெர்ம்ஸ்’ என்று வேறு. உண்மை நிலை என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகிறது. சிலர் எப்படியாவது சந்நியாசிகளின் நடவடிக்கைகளைக் குறை கூறும் விதாமாகக் காரணங்களைக் கற்பிப்பதில் உற்சாகமாக இருக்கிறார்கள். இது போன்ற போக்கின் விளைவுதான் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது எந்த அபவாதத்தையும் யாரும் சுமத்தாலாம் என்ற துணிவை ஆட்சியாளர்களுக்குக் கொடுத்தது என்பது மட்டுமே நான் சொல்லியது. இது மீண்டும் ஒருமுறை நிரூபித்ததற்கு வருத்தத்துடன் நன்றி.

  72. “ஆண்டவனே! என் எதிரிகளிடமிருந்து என்னை நானே காப்பாற்றிக் கொள்கிறேன்.
    என் நண்பர்களிடமிருந்து நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும். எனக்கு அந்தத் திறமை இல்லை”

    இதைப் போலத் தான் காஞ்சி பீடமும் வேண்டிக் கொள்ள வேண்டிவரும்.அதன் ஆதரவாளர்கள் இன்னது சொல்கிறோம் அதற்கு இன்ன பொருள் என்று தெரியாமல் பேசுகிறார்கள்.

    இதைப் போலத்தான் ஒரு பிரபல பெண் எழுத்தாளர் புகார் படித்தபோது,”இவ மூஞ்சிக்கு நாய் கூட இவளை சீண்டாது” என்று காஞ்சி”பக்தர்கள்” பதிலடி கொடுத்தார்கள்.”அப்போ நல்ல முகம் உள்ளவர்களாகத்தான் சீண்டுவார்களோ?’ என்று பதில் கேள்வி கேட்க இடம் கொடுத்தார்கள்.

    அப்படித்தான் இங்கேயும் நடந்து கொண்டிருக்கிறது.மஹாப் பெரியவரை காசுக்கு அலைந்தார் என்று கூறுமளவு ஏதோ ஒன்று கண்ணை மறைக்கிறது..

  73. அடியவன் சார் – ஒன்று புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் சொல்வதெல்லாம் என்ன.? நாங்கள் வைதீஹமா இருந்தோம்! சேவை செய்தோம் என்றா? இல்லையே ! நாங்கள்தான் பெரியவாகிட்ட இந்திரா காந்திய அழைச்சுகிட்டு வருவோம்? அமெரிகாவுலேருந்து வந்து ஆசிர்வாதம் வாங்குவோம் என்றுதானே? நான் மஹா பெரியவர் கிட்ட பழகியவர்கள்கிட்ட இருந்து தெரிஞ்சுகிட்டது என்னன்னா மஹா பெரியவர் இந்த மாதிரி ஆளுங்க வந்தா – வா வான்னு கூப்பிட்டு, நலம் விசாரிச்சு முதல்ல பிரசாத் கொடுத்து அனுப்புவார். அதாவது இவர்களை சுருக்க கழட்டி விட்டுருவார். இவர்களும் ஆஹா ! பெரியவா நம்மளத்தான் முதல்ல கூப்பிடுவார்னு சந்தோஷப்பட்டுக் கொண்டு இருப்பார்கள்.யார் மூலமா சமுக/வேத/சேவை வேலைகள் ஆகணுமோ அவர்களை வெயிட் பண்ண வச்சு ஒழிவாக இருக்கும்போது கூப்பிட்டு விரிவாகப் பேசி காரியம் நடக்கப் பண்ணுவார். நான் பார்த்தவரை மஹா பெரியவாள் இந்த மாதிரி சேவை செய்வபவர்கள் பல பேரிடம் ஒரே ஒரு முறைதான் இது பற்றி பேசியிருப்பார். அவர்கள் வாழ்நாள் முழுவதும் பணி செய்து வருவார்கள்.

  74. முத்துகிருஷ்ணன் போன்றவர்களிடமிருந்து காஞ்சி மடத்தை மட்டும் அல்ல, இந்து மதத்தையே காப்பாற்ற முடியாது. அவர் நேரடியாக அவதூறைச் சொல்லாமல், மறைமுகமாக எதற்கோ பதில் சொல்வது போல அவதூறைச் சொல்லி வருகிறார். ஈ.வே.ராவும் வீரமணியும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் செய்யாததை வஞ்சப் புகழ்ச்சி அணியில் செய்து வருகிறார்.

  75. திரு ரமேஷ்

    சில பிராமணர்களுக்கு ஒரு வழக்கம். அவர்கள் மகா பெரியவருக்கும் புதுப் பெரியவருக்கும் சர்டிபிகேட் கொடுப்பார்கள். அதை மற்றவர்கள் எல்லாரும் அப்படியே ஏற்றுக் கொண்டு விட வேண்டும். இவர்களுக்கு அப்படிப்பட்ட சந்நியாசிகளையும் மகான்களையும் அளவிடும் தகுதி இருக்கிறதா என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள மாட்டார்கள். அடுத்தவன் கேட்டுவிட்டாலோ, அதற்குப் பதில் சொல்வது போல அந்த மகான்கலையே இழிவு படுத்திப் பேசி விடுவார்கள். இவர்களால்தான், காஞ்சி மதத்தின் மீது எப்படிப் பட்ட அவதொரையும் செய்யலாம் என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது.

    மகா பெரியவருக்கும் புதுப் பெரியவருக்கும் சர்டிபிகேட் கொடுக்கும் அளவுக்குத் “தான்” இருப்பதாக எண்ணும் அகந்தை ஒழிந்தால்தான் உருப்படும்.

  76. திரு ரமேஷ்

    இன்று ஒரு செய்தி.

    ///அடையாறு, ஸ்ரீ மாதா டிரஸ்ட் புற்றுநோயாளிகளுக்கு இலவச தங்கும் வசதியுடன், உணவளித்து சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் சேவையாற்றி வருகிறது.
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று ஸ்ரீ மாதா டிரஸ்டிற்கு நேரில் சென்றார். நோயாளிகளிடம் உரையாடினார். டிரஸ்ட் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தியிடம், டிரஸ்ட் நடக்கும் விதம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து, அமைச்சர் தனது சம்பளத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாயும், உடன் சென்றிருந்த வேளச்சேரி எம்.எல்.ஏ., அசோக் 52 ஆயிரம் ரூபாயும் நன்கொடையாக வழங்கினர்.அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது: தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து ஏழை எளிய புற்றுநோயாளிகள் இந்த டிரஸ்டில் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

    இதன் நிறுவனர் மற்றும் ஊழியர்கள் நோயாளிகளை மிகவும் சிரத்தையுடன் கவனித்துக் கொள்கின்றனர். மூன்றாம் மற்றும் இறுதி நிலையில் உள்ள நோயாளிகள் கடைசி காலத்தை சிரமமின்றி கழிப்பதற்காக தாம்பரம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் டிரஸ்ட் சார்பில் கோரப்பட்டுள்ளது. அந்த இடத்தைப் பெற்றுத் தரும் வகையில் முதல்வரின் தனி கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.///

    சிலருக்கு இப்படிப்பட்ட சேவைகள் எதுவுக் கண்ணில் படாது. பட்டாலும் பணம் பற்றி மட்டும்தான் படும். அதனால் பலனடையும் ஏழை மக்கள் அவர்களது துயரம் இவை எதுவும் தென்படாது. ஏனெறால் அவர்களது ஒரே நோக்கம் “ஏதாவது குறை சொல்ல வேண்டும்”. அவ்வளவுதான்.

    மற்றவர்கள் இதைப் பற்றிச் சொன்னால் ஆஹா, சாமியார் சாமியாராகத் தான் இருக்கவேண்டும் அவருக்கு எதற்கு இந்த வேலைகள் என்று புத்திசாலித் தனமாகக் கேட்பார்கள். இல்லறத்தில் இருக்கும் இவர்கள் அந்த சேவையைச் செய்வார்களா? மாட்டார்கள். இல்லறத்தில் இருக்கும் எல்லாரும் இதுபோன்ற சேவையைச் செய்தால் சாமியார் ஏன் இதற்குள் வரப் போகிறார்? அது அவர்களுக்கு சொன்னாலும் உரைக்காது.

    இந்த மாதா திருச்டையே பாருங்கள். கிருஷ்ணமூர்த்தி என்கின்ற இல்லறத்தில் இருப்பவரை இதற்காக உருவாக்கி அவரிடம் பெரும்பொறுப்பை ஒப்படைத்து காஞ்சி மட ஆசாரியார்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களா பணத்தை வாங்கி நடத்துகிறார்கள்? இல்லறத்தில் இருப்பவர்கள்தான் அத்தனை வேலையும் செய்கிறார்கள். அதாவது சாமியாரின் வேலை இல்லறத்தில் இருப்பவனை நல்லறத்தில் செலுத்தி மக்களது துயரத்தைத் துடைத்தல். இதை காஞ்சி ஆசாரியார்கள் செய்கிறார்கள். சங்கர நேத்ராலயாவை டாக்டர் பத்ரிநாத்திடம் கொடுத்தது மகா பெரியவர்தானே. ஒரே வாரத்தில் எழு கோடி ரூபாய் நன்கொடை வர வகை செய்து ஹாஸ்பிடல் உருவாக மகா பெரியவர் முன் நின்றார். இதைச் சொன்னால் உடனே மகா பெரியவர் பற்றி சொல்லத் தகாததைச் சொல்லி அதை நாம் சொன்னதாகச் சொல்லும் அளவுக்கு இல்லறத்தில் இருப்பவர்களது மனம் பேதலித்து இருக்கிறது. என்ன செய்ய முடியும்?

    இல்லறத்தில் இருப்பவரன் ஒழுங்காக நல்லறத்தைச் செய்தால் துறவறத்தில் இருப்பவர் பூஜையைத் தவிர வேறேதும் செய்ய வேண்டியதில்லை என்பதைக் கூட உணராதவர்கள் மகா பெரியவருக்கும் புதுப் பெரியவருக்கும் சர்டிபிகேட் கொடுக்கப் புறப்பட்டது மகா பாவம்.

  77. இக்கட்டுரைக்கு வரும் பின்னூட்டங்களில் பலரும் பலவாறாக நமது திருமடங்களின் தலைவர்களை அவதூறாக விமர்சித்து பதிவிட்டு வருவது வேதனை அளிக்கிறது.

    முக்கியமாக, காஞ்சி காமகோடி மடம் சங்கராச்சார்ய ஸ்வாமிகள் பற்றி பலவாறாக விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது.

    நமது ஆச்சார்யர்களைப் பற்றி இவ்வாறு எழுதுதலால் விளையும் பயன் யாதோ நாம் அறியோம்..? நாம் ஜெயேந்த்ர, விஜயேந்த்ர ஸ்வாமிகளை நேரில் தரிசித்த அளவிலும் காஞ்சி மடத்தைச் சுற்றிப் பார்த்த அளவிலும் இப்பெரியவர்களிடத்தே அற்புதமான அடக்கம், எளிமை, துறவு என்பனவும் பக்தி, பாரம்பரியம் என்பனவும் நிறைந்திருக்கக் கண்டோம்.

    இதை விட, ஜகத்குரு என்ற நாமத்திற்கு ஏற்ப ஒட்டு மொத்த ஹிந்து தர்மத்தின் பல்வேறு பிரிவினரையும் ஓரளவேனும் அரவணைத்துச் செல்ல வல்ல தகுதியும் பாரம்பரியமும் காஞ்சி, சிருங்கேரி சங்காராச்சார்யார்களுக்கே உரியதெனலாம்.
    பலரும் கூறுவது போல சில மாற்றங்கள் தேவையாகலாம்.. வரலாறு மீள எழுதப்படலாம்.. ஆனால், இதற்காக இவ்வாறான பாரம்பரியச் சிறப்பு மிக்க ஸ்ரீ மடங்களைத் தூற்றுதல் சிறிதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று..

    அது நிற்க, மதுரை திருஞானசம்பந்தர் திருமடம் பற்றி நோக்கினாலும், அதன் குரு பாரம்பரியம் அழியாமல் பாதுகாக்கப்பெற வேண்டும். ஆனால், நித்யானந்தர் போன்றவர்கள் நகைச் சுவை நிகழ்ச்சி நடத்துவதை கண்டு கொண்டு இருக்க முடியாது.

    பட்டாபிஷேகங்களும், வானவேடிக்கைகளும் நடக்கிறதற்காக ஞானசம்பந்தர் கட்டி விட்ட மடமல்ல அது..?

    இங்கே ஒரு அன்பர் சித்தி பெற்ற மதுரை ஆதீன மஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகளிடம் தமது தந்தையார் சிவதீக்ஷை பெற்றதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

    இதே போல, இதே பரமாச்சார்யார் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுப்பிரம்மண்ய ஐயர் என்ற மணிபாகவதருக்கு சந்நியாச தீக்ஷை கொடுத்து “ஸ்வாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள்” என்ற நாமமும் கொடுத்து யாழ்ப்பாணத்து நல்லூரில் 1955 அளவில் ஞானசம்பந்தர் ஆதீனம் நிறுவியிருக்கிறார்கள்.

    சில சமயம் இப்படி எல்லாம் நேரும் என்று அவர் அறிந்திருந்தாரோ..? என்னவோ..? இந்த நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் 2ஆவது குரு மஹா சந்நிதானமாக தற்போது ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் விளங்குகிறார்.

    இங்கே இப்போது சொல்லிக் கொள்வது போல, ஏதோ தொண்டை மண்டலச் சைவவேளாளரே மதுரை ஆதீனத்து பாரம்பரிய சந்நிதானங்களாக வரமுடியும் என்ற நிலையும் இங்கே உடைகிறது.

    நல்லை ஆதீன முதலாவது சந்நிதானம் யாழ்ப்பாணத்துப் பிராமணர், இரண்டாமவர் கூட தொண்டை மண்டலச் சைவ வேளாள வகுப்பினைச் சார்ந்தவரல்ல.. அது சரி ஏன்..? இப்படி ஆதீனமான பிறகு ஜாதி பேசுகிறார்கள்..? இது சைவ மடம் இல்லையோ..?

    நாம் இப்போது ஸ்வாமி நித்யானந்தரிடம் பணிவோடு விண்ணப்பிப்பது என்ன எனில், மதுரை ஆதீனத்தின் பாரம்பரியச் சிறப்பையும், பண்பையும், சைவசித்தாந்தச் செல்நெறியையும் உடைத்து விட வேண்டாம் என்பதேயாம்.. இதனை யாழ்ப்பாணத்துச் சைவப் பெருமக்கள் சார்பிலும் இங்கே விண்ணப்பமாக அவரிடம் சமர்ப்பிக்கிறோம்.. (அவர் கண்டு கொள்வது அவரையும் சிவனையும் பொறுத்த விஷயம்..)

    ஆதிசங்கரர், ஞானசம்பந்தர் ஆதிய ஜகத்குருக்களின் திவ்ய மலர்ப் பாதங்களை வணங்கி.. வாழ்த்தி.. மீண்டும் … இங்கே வந்து தர்மசம்ரக்ஷணம் செய்தருள வேண்டும் என்று பிரார்த்திப்போமாக..

    வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
    வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
    வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
    உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது- ஸ்வாமி விபுலானந்தர்..

    பணிவுடன்..
    தி.மயூரகிரி சர்மா

  78. நண்பர்களே, தயவு செய்து காஞ்சி, சிருங்கேரி மடங்கள் மற்றும் இன்னபிற சைவ ஆதீனங்கள் குறித்த அவதூறுகளை நிறுத்தி விட்டு, ஆக்கபூர்வமாக உரையாடுங்களேன்.

    பாரம்பரியமிக்க மதுரை ஆதீனம் காக்கப் படவேண்டும் என்ற ஆதங்கத்தை முன்வைத்தே பெரியவர் கோபாலன் அவர்கள் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார். அதிலிருந்து விவாதம் திசைதிரும்பி எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது.

  79. Ramesh,

    மஹா பெரியவர் 1970 இல் ஜெயேந்திரரிடம் பொறுப்புகளைக் கொடுத்துவிட்டு தேனம்பாக்கம், சிவச்தானம் போன்ற இடங்களிலும் பின் சதாராவிலும் சென்றுவிட்டார்.அதே போல் ஜெயேந்திரரும் தனக்குப் பின் ஒரு சீடரைத் தயார் செய்துவிட்டு சமூகப் பணிக்காக செல்கிறேன் என்று சென்றுவிட்டார். அவர் அளவில் அவர் பதவியை உதறிவிட்டுச் சென்று விட்டார். கோபாலன் சார் அவர்களின் மாமா போன்றவர்கள் அவரிடம் சென்று -அவரை – on his terms – அழைத்துக் கொண்டு வந்தார்கள். நீங்கள் எல்லாம் அவரை அழைத்து வராமல் இருந்திருந்தால் சமுதாயாத்துக்கும் ஒரு சந்நியாசி கிடைத்து இருப்பார். மடத்துக்கும் பிரச்சினை வந்திருக்காது. பிரச்சினை வேண்டாம் என்று உதறிச் சென்ற சன்யாசியை திரும்ப அழைத்து வந்துவிட்டு, பிரச்சினை வந்த பிறகு இப்ப திரும்பிச் செல் என்கிறீர்கள்

    U are grossly mistaken. Jayendrar left the mutt without even informing Maha Periyava. He should not have done that. He even left behind his staff, which is an indication that he has renounced sanyasm.

    Periyava waited for a couple ofd days & as per the rules of the mutt, nominated Vijayendra Sarwaswathi.

    Now, the question is why did Jayendrar return? Nobody forced him to. He came back to the mutt, reclaimed his staff & said that vijayendrar’s accession is not valid.

    Periyava was hurt & relations between the two were never the same again. Also, the relationship between Jayendarar & Vijayendrar has been strained since the beginning.

  80. தஞ்சாவூரில் பல்லாண்டுகளாக ஒரு மருந்தகம் சங்கரமடத்தில் “இல்லறத்தார்”களின் பெரு முயற்சியால் நடந்து வருகிறது.

    காஞ்சிமட தர்மாதிகாரியின் மேற்பார்வையில் நடக்கும் ஓரியண்டல் பள்ளி வளாகத்தில் ஒரு சிறு அறை மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மடம் வேறு உதவிகள் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. மிகுந்த சிரமத்திற்கு இடையில் சில நல்ல உள்ளங்கள் நடத்தும் பணி பெரிய வளர்ச்சி அடையாமல் 25 ஆண்டுகளாக‌ நொண்டி அடித்துக் கொண்டு இருக்கிறது. உள்ளூரில் இருக்கும் தர்மாதிகாரி(தற்போதைய காஞ்சி ஆச்சார்யரின் உறவினர்தான்) மற்றும் மடமும் ஏனென்று கேட்பதுகூட இல்லை என்று கேள்வி.’சாஸ்திரா’போன்ற பெரிய திட்டங்களிட‌ந்தான் மடம் அக்கறை கொண்டுள்ளது.அது ஏன் என்றும் ர‌மேஷ்/அடிய‌வ‌ன் கூற‌லாமே.

  81. Adiyavan,

    இவர்கள் சொல்லும் இன்னொரு குற்றம் – புதுப் பெரியவர் அரசிய தொடர்பு கொண்டு விட்டார். அரசியலில் தலையிட்டு விட்டார் என்பது.

    யார் செய்ய வில்லை?

    ரமேஷ் சொல்வதுபோல நூற்றாண்டுக் கணக்காக சமயப் பெரியவர்கள் அரசருடன் தொடர்பு உடையவர்களே.

    அப்பர் பெருமானிடம் திருஞானசம்பந்தப் பெருமானிடம் மாணிக்க வாசகப் பெருமானிடம் ராமானுஜாச்சாரியாரிடம் ஆசி வாங்காத அரசர் எவர் உண்டு? அவர்கள் காட்டும் வலி நடக்காத அரசர் எவர் உண்டு. அவர்கள் அரசர்களுக்கு ஆலோசனை சொன்னவர்கள்தான்.

    சிருங்கேரி மடம் எப்படி ராஜகுரு மடம் ஆனது? மூன்றாம் வல்லாளன் குழந்தை இல்லாமல் இறக்க அவரது ராஜ்ஜியத்தை அவரது சேனாபதியே எடுத்து நடத்தலாம் என்று சிருங்கேரி ஆச்சாரியார் அவருக்குப் பட்டம் கட்டியதால்தானே?

    ராகவேந்திரர் முஸ்லிம் மன்னனிடம் தொடர்பில் இல்லையா?

    All the above saints did not have any relationship with the kindgs. They gave advice that too only when asked.

    Jayendrar’s case was different. He hobnobbed with politicians, made comments on politics & politicians. I have quoted some examples also in my post. That is the mistake.

    Ramesh,

    Your comments on the Sringerui mutt are not in good taste. Just bcos U have high regard for the Paramacharya does not mean that U can make such comments on the Sringeri Mutt head.

    Sringeri Mutt in its own way is contributing to the welfare of the society & to hindu religion.

  82. ஜடாயுவின் கோரிக்கை உடனடியாக ஏற்கப் படவேண்டியது.

    தமிழ் ஹிந்து தளத்தாரும் திருமடன்களைப் பற்றி அவதூறாக அதுவும் பக்தர்கள் வேடத்தில் அவதூறாக எழுத்வதைத் தடை செய்தால் நல்லது.

  83. திரு ஜடாயு அவர்களின் வேண்டுகோள் நியாயமானதுதான். ஆனால் ஸ்வாமி நித்யானந்தர் மீதான இத்தகைய கட்டுரைகளைத் தமிழ் ஹிந்துவில் வெளியிடுவதையும் தவிர்க்கலாமே. காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளும் அசோக் சிங்கல் ஜியும் ஸ்ரீ நித்யானந்தர் தேர்வை வரவேற்கும் போது அதற்கான எதிர் கருத்துக்களை தமிழ் ஹிந்த்துவில் எதிரொலிப்பது நன்றன்று. சிலர் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ளும் ஒரு முயற்சியே ஸ்ரீ நித்யானந்தர் மீதான தாக்குதலில் ஹிந்து விரோதிகளுடன் இவர்களின் இணைந்த செயல்பாடு.
    ஸ்ரீ நித்யானந்தர் நேர்மையாளர் ஹிந்து விழிப்புணர்வை சாமானியர்களுக்கும் அளிக்கவல்லவர் என்பதால் அவரை விட்டுக்கொடுத்தல் ஹிந்துத்துவத்திற்கும் ஹிந்து சமயத்திற்கும் குறிப்பாக சைவத்திற்கும் நல்லதல்ல என்பது அடியேனுடைய நம்பிக்கை. சத்யமேவ ஜயதே!

    (Edited and Published)

  84. நண்பர் திராவிடன் கோடிட்டுக்காட்டிய தோழர் செங்கொடியின் கட்டுரைவரிகள் நிச்சயம் சிந்தனைக்குரியன. இதிலிருந்து ஸ்ரீ மதுரை ஆதீனத்திற்கு வாரீசாக ஸ்ரீ நித்யானந்தர் நியமிக்கப்பட்டதை ஏன் ஹிந்து விரோதிகள்(ஜடவாதிகளான கம்யூனிஸ்டுகள்) எதிர்க்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இடதுசாரிகள் இதனை தெளிவுபடுத்தியதைப் போல மிசனரிகளும் அறிவார்கள் ஆனால் அவர்களின் ஏஜெண்டுகளும் அவர்கள் துணை ஏஜெண்டுகளும் இதை அறிவார்களோ. அது தெரியவில்லை. அனால் ஒன்றுமட்டும் நிச்சயம் ஏஜெண்டுகளும் துணை ஏஜெண்டுகளும் மிசநரிகளை விட ஆபத்தானவர்கள். இதனை சக ஹிந்துத்துவர்கள் உணராதது துரதிர்ஷ்டம்.

  85. பாரம்பரியமிக்க மதுரை ஆதீனம் காக்கப் படவேண்டும் என்ற ஆதங்கத்தை முன்வைத்தே பெரியவர் கோபாலன் அவர்கள் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார். அதிலிருந்து விவாதம் திசைதிரும்பி எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது.

    கோபாலன் கட்டுரையில் என்ன சொன்னார்? இப்படிப்பட்ட சூழ்நிலை தமிழகத்தில் தோன்றுவது இது முதன்முறை இல்லை. இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சி நடந்து இன்னமும் முடிவாக நிலையில் இருந்து வருகிறது.- போற போக்குல இப்படி ஒரு கமெண்ட் அடித்துவிட்டு இப்ப நாங்க திருப்பி சொல்ல ஆரம்பிச்ச உடனே அப்படியே பல்டி அடிச்சு – அவதூறுகளை நிறுத்தி விட்டு, ஆக்கபூர்வமாக உரையாடுங்களேன்னு கம்மேன்ட்டா? ஜடாயு சார் – அந்த எழுத்தாளர் காஞ்சி மகாஸ்வாமி பற்றி எழுதிய கட்டுரைக்கு ஒரு விஷயத்த எல்லா சைடுலையும் பாக்கணும், நீங்க நல்லா எழுதியிருக்கீங்கனுதானே சொன்னீங்க. இப்ப நாங்களும் எல்லா சைடையும் பாக்கறோம். – அப்புறம் – மகாத்மா காந்தியும் சந்திரசேகரரும் – கட்டுரை ஆசிரியருக்கு என் பதில அனுபிச்சி சார் அவர் ஆதாரம் அனுப்பியிருக்காருனு சொன்னீங்களா? நீங்க விட்டதெல்லாம் ரீலுனு சொன்னீங்களா?

  86. 1. Jayendrar’s case was different. He hobnobbed with politicians, made comments on politics & politicians. I have quoted some examples also in my post. That is the mistake.

    why he hanobbed with politicians? for protecting the reliogion. not for anything else? Those days Kings themselves were Hindus and hence no issue. Only when Kings like Mahendra Pallava and Koon Pandiya went out of the way – some one had to intervene occassionally. Today what is the situation?. 1000s of crores money is coming. If the Govt wishes it can be stopped in a single day. Do you want such money to flow and people get converted or do you want some one to ensure a Govt that protects Hinduism? For that one has to be with Politicians.

    2. Your comments on the Sringerui mutt are not in good taste. Just bcos U have high regard for the Paramacharya does not mean that U can make such comments on the Sringeri Mutt head.Sringeri Mutt in its own way is contributing to the welfare of the society & to hindu religion.

    What did i say wrong about the Sringeri Mutt? Is that not true that when the situation demanded a Sringeri Acharya cretaed a big Kingdom and kept guiding that. I have only prasied him. I also praised him that when the Govt took over all the lands , he just accepted that. But at the same time – i have mentioned that he has reduced his yatras to bare minimum. We want all our mutt heads to come out and mingle with people ( of course maintaing their acharaam and i don’t mean that he has to shake hand with every one. It is not related to caste but due to the rule that a sanyasi is not allowed to have any of the 5 sensory thing including touching. – ). Maha swami created awe not buy staying in mutt but by his yatras, where he stayed even ( or shoud i say only on) road side dialapted buildings, tempels and so on. Only when ordinary masses which never come to mutts realsie that we too have our swamijis and they too come to bless them, they will have a bonding with religion. I don’t want swamijis to do ala Rahulgandhi but why not the chandramouleeswara pooja be performed in village temples?

  87. நண்பர்களே, தயவு செய்து காஞ்சி, சிருங்கேரி மடங்கள் மற்றும் இன்னபிற சைவ ஆதீனங்கள் குறித்த அவதூறுகளை நிறுத்தி விட்டு, ஆக்கபூர்வமாக உரையாடுங்களேன்
    என்கிறார் ஜடாயு.

    அதாவது கஞ்சி மடத்தான் ஏமாந்தவன் என்று நினைத்து ஏதாவது சொல்லவேண்டியது.அவன் திருப்பி அடித்தால் அவமானம் தாங்காமல் அலறவேண்டியது இதுதானே தமிழ் ஹிந்துவின் கொள்கை?
    சமாதான சகவாழ்வு வேண்டும் என்று நினைத்தால் தமிழ் ஹிந்துவில் காஞ்சி மடத்தைத் தாக்கி எழுதியதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும்.

  88. சஞ்சய் – கோபாலன் எங்க மாமா கூட்டிட்டு வந்தார்னு சொல்றார். நீங்க வேற மாதிரி சொல்றீங்க. 1 . சென்றார் மடத்து தண்டத்த விட்டுவிட்டு வேற ஒரு தண்டத்தோடு சென்றார். 2 . தண்டத்த விட்டுட்டா சந்யாசத்த விட்டதா அர்த்தம் இல்ல. அவர் இந்திர சரஸ்வதி பட்டத்ததான் துறந்தார். நீங்களே பாருங்கள். ஆரண்ய, தீர்த்த பட்ட சன்யாசிகள் எப்போதும் தண்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டாம். நீங்கள் தசநாமி என்று தேடித் பாருங்கள்.

    தஞ்சாவூர் மருந்துக் கடைக்கு உதவி செய்யவில்லை. அப்புறம் குமப்கொனத்துல ஒரு வயசான தாத்தாவுக்கு உதவி செய்யல. வேறே ஏதாவது லிஸ்ட் இருக்க? ஒரு மருண்டு சாலை உங்களால சேர்ந்து செய்ய முடியல? இதுக்கும் அவர்க் குத்தம் சொல்லிக்கிட்டு

  89. கோபாலனின் இந்தக் கட்டுரையின் நோக்கமே மதுரை ஆதீனம் இல்லை, அவர் சுவாமிகளைத் தாக்கதான் இந்தக் கட்டுரையை எழுதினர், அவரே பின் பின்னூட்டமும் போட ஆரம்பித்தார். பின்னூட்டத்தில் அவர் மதுரை ஆதீனத்தைப் பற்றி ஒரு வரி எழுதவில்லை, அவர் சொல்ல வருவதே இவரே இருக்கையில் அவர் கூடாதா என்பதுதான். ஜடாயுவோ காஞ்சி மட எதிரி. தெய்வத்தின் குரல் என்று எழுதினால் அவர் தெய்வமா என்று கேட்டவர். எழுத்தாளர் மஹா சுவாமியைப் பற்றி தவறாக எழுதிய கட்டுரைக்கு ஆமாம் சாமி போட்டவர். இப்போ நைசா வந்து மடத்தைப் பற்றி எழுதாதீர்கள் என்று அறிவுரை. இவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்துவதுதான் தமிழ் ஹிந்து. பேசாமல் ஹிந்து வினவு என்று வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் ஹிந்து தளம் ஹிந்துக்களுக்காக என்றால் இந்தக் கட்டுரையே இதில் வரக் கூடாது, எடுத்துவிடுங்கள்.

  90. யோவ். உங்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் கேக்கறா மாதிரி நேரடி விவாதம் தான் லாயக்கு,. போதும் உங்க அறிவுஜீவித்தனம் எல்லாம். நீங்கள் ஒவ்வருவரும் எப்படி என்று சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் மற்றவர்களை விமர்சிக்கலாம்( நித்தியை குறிப்பிட்டு சொல்லவில்லை. , நித்தியுடைய ஆட்க்கள் முகமதுவின் பட்டாளம் செய்தமாதிரி இருக்கிறது. இன்றைய செய்தியை படித்தீர்களா?)

    (edited and published)

  91. Ramana maharishi stayed only in his ashram and created more awe!
    Each one has his own way. Mahaswami preferred to walk after seeing the mass response to Dandhi march undertook by Gandhiji. His successor flies.

  92. 1. இந்திராவை பெரியவர் முன்பு அழைத்துக் கொண்டு போனவர் என்னுடைய தாய்மாமன் அரக்கோணம் ராஜகோபால ஐயர்

    2. . பின்னர் ஒரு முறை ஜெயேந்திரர் மடத்தை விட்டு சொல்லாமல் நீங்கி தலைக்காவேரிக்குப் போனபோது அவரை மடத்துக்கு மீண்டும் அழைத்துக் கொண்டு வந்து விட்டவரும் அதே என் மாமன் தான்.

    3.அவருடைய மருமான் நான் என்று சொல்லி இவரை நான் நமஸ்காரம் செய்தேன் காசியில். அவர் என்னைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை, ஆசி வழங்கி பிரசாதம் கொடுக்கவும் இல்லை. மகா பெரியவருக்கும், இவருக்கும் இருந்த மாற்றத்தை மனத்தால் நினைத்துப் பார்த்தேன்.

    4. எந்த தனி மனித விமர்சனம் கூடாது என்றேனோ அதை இன்னும் வலுவாக எடுத்து வைக்க வேண்டியிருக்கும். அழுக்குத் துணிகளை அம்பலத்தில் அலச வேண்டி இருக்கும்.

    5. அவர் உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிரில் தடுப்புக்கு அப்புறமாக உட்கார்ந்து கொண்டு அவரிடம் வந்து செல்வோரையும், அவர் ஆசீர்வதிக்கும் அழகையும் பார்த்துக் கொண்டு இருந்தோம் – நல்லா இருக்கு திரு கோபாலன். ஆகா உங்களை தனியாக, உங்கள் குடும்பம் செய்த மகா பெரிய சேவைகளைக் கண்டு உங்களுக்கு தனி மரியாதை செய்யவில்லை. அந்தக் கோபம்.

    இப்ப நான் என்னைப் பற்றி சொல்கிறேன். எங்கள் தாய் வழிப் பாட்டனார் தேவி ஆராதனை செய்பவர். மஹா பெரியவர் நீ இதைச் செய்வதே பெரிய விஷயம் என்று அதை செய்வதே உன் பணி என்று சொல்வார். என் தந்தை பல கல்லூரிகள் உள்ள ஒரு ஊரில் பேராசிரியராகப் பணி புரிந்தார். அவர் அந்த ஊரில் உள்ள அனைத்து கல்லூரி ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பாடம் சொல்லித் தருவார். மஹா பெரியவா அதைத் தொடர்ந்து செய் என்று சொல்லி விட்டார். நாங்கள் கல்லூரியில் இருக்கும்போது அடுத்தடுத்து என் தந்தையும், பாட்டனாரும் தவறி விட்டார்கள். maமஹா சுவாமி நான் வேலைக்கு சேர்ந்த அன்று ஆசி செய்தார். பின் நான்கு ஆண்டுகளில் பார்க்க முடியாத தெய்வம் ஆகி விட்டார். அதன் பின் நான் சில காலம் பல ஊர் சுற்றி விட்டு பெரியவரைப் பார்த்தேன். உடனே அவர் – நீங்கள் அந்த பரம்பரை ஆயிற்றே. இப்ப அமபாளை யார் வச்சி இருக்கா ? என்று கேட்டார். நான் ஏதோ எனக்கு தெரிந்தவரை பூஜை செய்கிறேன் என்றேன். உடனே அவர் இல்லை. உங்களுக்கு மந்த்ரோபதேசம் அவசியம். இப்போ இந்த மாதிரி வேலையில் இருப்பதால் இந்த உபதேசம் வாங்கிக்கொண்டு செய்யுங்கள். ஐம்பது வயது ஆனவுடன் இந்த உபதேசம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னது மட்டும் அல்லாமல், உங்களுக்கு ஐம்பது வயதாகும்போது இந்த உபதேசம் என்று பால பெரியவரிடம் சொன்னார். அதாவது ஒரு வேளை தான் இல்லாவிட்டாலும் எனக்கு அந்த உபதேசம் கிடைக்க வேண்டும் என்று சீடரிடம் உத்தரவு. அப்புறம் மஹா பெரியவரின் தொண்டராக இருந்த சந்திரமௌலி மாமாவை கூப்பிட்டு எனக்கு மஹா பெரியவா அதிஷ்டானத்திலேயே வைத்து உபதேசம் கொடுக்க வைத்தார்.இதற்கு காரணம் மஹா பெரியவா சொன்ன ஒரு வேலையை எங்கள் தை வழி + தந்தை+ மனைவி வழி மூன்று குடும்பமும் மஹா பெரியவா சொன்ன வேலைகளை தங்கள் சக்திக்கு உட்பட்டு செய்து வருவதுதான். நான் பெரியவாளை வருஷம் ஒரு தடவை பார்த்ஹாலே பெரிது. நானும் அவரிடம் இதைத் தவற வேற வாங்கியதில்லை. அவரும் என்னிடம் எந்தப் பணமும் கேட்டதில்லை. மடத்தில் இப்போ எல்லாரும் கும்பலாக வருகிறார்கள். ஆளுக்கு அரை நிமிடம் கூட செலவழிக்க முடியாது. அப்போ காலம் வேறு. கொஞ்சம் பேர்தான் வருவார்கள். நாம் மடத்தில் பார்த்தால் கொஞ்சம் பேச முடியும். யாத்திரையில் என்ன பேச முடியும்? குரு தரிசனமே பிரசாதம். அந்த குரு நம் நடுவில் நின்று பொது அறிவுரை வழங்கினாலே போதும்.

  93. ramesh,

    // கோபாலனின் இந்தக் கட்டுரையின் நோக்கமே மதுரை ஆதீனம் இல்லை, அவர் சுவாமிகளைத் தாக்கதான் இந்தக் கட்டுரையை எழுதினர் //

    இவ்வளவு பெரிய கட்டுரையில் ஒரே ஒரு வாசகம் “இப்படிப்பட்ட சூழ்நிலை தமிழகத்தில் தோன்றுவது இது முதன்முறை இல்லை. இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சி நடந்து இன்னமும் முடிவாக நிலையில் இருந்து வருகிறது” என்று, அதுவும் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருக்கிறார். நீங்கள் சொல்வது அபாண்டம். வேண்டுமென்றே கட்டுரையாளரின் நல்ல நோக்கத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கிறீர்கள். திரு கோபாலன் அவர்கள் தமிழ் ஹிந்துவில் எழுதியுள்ள கட்டுரைகள் பலதையும் நான் படித்திருக்கிறேன். நிதானமாகவும் கண்ணியமாகவுமே எழுதி வருபவர் அவர்.

    // ஜடாயுவோ காஞ்சி மட எதிரி. தெய்வத்தின் குரல் என்று எழுதினால் அவர் தெய்வமா என்று கேட்டவர். எழுத்தாளர் மஹா சுவாமியைப் பற்றி தவறாக எழுதிய கட்டுரைக்கு ஆமாம் சாமி போட்டவர். //

    இதுவும் அபாண்டம். ஜடாயு எல்லா இந்து பெரியோர்கள் மீதும் அடிப்படை மரியாதை கொன்டவர். விமர்சிக்கும் போதும் நடுநிலை தவறாதவர். எழுத்தாளர் என்று நீங்கள் சொல்வது ஜெயமோகனை (அவர் பேரைச் சொன்னா தான் என்ன, அது கூட ஏதோ தீட்டு என்றூ நினைக்கிறீர்கள் போல). ஜடாயு ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம் உண்மையில் நீங்கள் சொல்வதற்கு நேர்மாறாக இருக்கிறது. ஜாதி குறித்து காஞ்சி, சிருங்கேரி எல்லா பழைய மடாதிபதிகளும் ஒரே மாதிரியான காலத்திற்கு ஒவ்வாத கொள்கை தான் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஒரு கருத்தை மட்டும் வைத்து அவர்களை வெறுக்கவோ, அல்லது அவர்களது பெரிய பங்களிக்கை நிராகரிக்கவோ கூடாது என்பதைத் தான் ஜடாயு தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.. நீங்கள் அனாவசியமாக அவர் சொல்வதை திரிக்கிறீர்கள்.

    இந்த இணையதளத்தின் மரியாதைக்குரிய எழுத்தாளர்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்பும் ரமேஷை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    https://www.jeyamohan.in/?p=26232

    அன்புள்ள ஜெ,

    இந்தக் கட்டுரைக்கு மிக்க நன்றி. இந்து வேத மரபு, கலைகள், சமயம், காவியம் ஆகியவற்றின் மீதும், நவீனக் கல்வி, சாதிய மறுப்பு, சமுதாய சமத்துவம் ஆகியவற்றின் மீதும் இணையான பற்றும் மதிப்பும் கொண்டிருப்பவன் நான். என்னைப் போன்ற ஒருவனுக்கு, இதில் விளையும் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் சமநிலையில் நோக்க வேண்டியதன் அவசியத்தை அருமையாக உணர்த்தியது இந்தக் கட்டுரை.

    // ஆனால் சந்திரசேகர சரஸ்வதி அவர்களை நான் வெறுக்கமுடியாது. ஏனென்றால் நியாயஉணர்ச்சியும், மகத்தான நட்புணர்ச்சியும், அப்பழுக்கற்ற நேர்மையும் கொண்டவரான ; அதேசமயம் சாதிவெறியரும், ஆணாதிக்கவாதியுமான என் அப்பா வயக்கவீட்டில் பாகுலேயன் பிள்ளையை நான் இன்னும் வெறுக்கவில்லை. //

    இந்த வரிகள் நெகிழ்ச்சியூட்டி விட்டன. என் நினைவில் இவை என்றும் நீங்காமல் இருக்கும்.

    அன்புடன்,
    ஜடாயு

  94. ஆசிரியர் குழுவினருக்கு,

    வாராது வந்த மாமணி போல தமிழ் இணையத்தில் அருமையாக சேவை செய்து வரும் உங்கள் தளத்தின் பெயரைக்
    கெடுப்பதற்காக என்றே இப்படி திட்டமிட்டு மறுமொழிகள் போடுகிறார்கள் ரமேஷ் போன்ற புல்லுருவிகள். நீங்கள் இவற்றைக் கண்டு அயர்ந்து விடவேண்டாம்.

    இந்துமதம் மீது உண்மையிலேயே பற்றுக் கொண்ட பெரும்பாலான எங்களைப் போன்ற வாசகர்களின் ஆதரவு உங்களுக்கு என்றேன்றும் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேண்.

    நன்றி.

  95. I see that the discussions have completely gone off tangent.

    We have discussed about Sankara mutt here whereas the article is about the Madurai Aadheenam.

    I disagree with the comment that all the people who criticise Nithyananda are anti hindu.

    As I have mentioned earlier, I have attended many sessions of Nithi & interacted with his disciples closely.

    During his sessions, his disciples used to distribute paper slips for the devotees to pen their questions. After the discourse, Nithi used to answer them.

    1 devotee had asked whether it was proper for Nithi used to embrace his disciples (male or female) when they go near him to seek his blessings. He had not mentioned his name. Nithi pointed that out & abused the devotee. He then went on to explain that he is a sanyasi, he has the same feelings whether it is male or female etc., etc.,

    Coming to the video incident, it sure is not fabricated. More so, when Nithi used to advocate celibacy in his discourses.

    Nithi says that no female has filed a case against him for molestation. That ia a superfluous argument. The video shows that the female partner too was willing.

    Even if the courts pronounce Nithi as innocent, he cannot be absolved of his misconduct.

    Also, it is strange that Madurai Aadheenam crowned Nithi in his Bidadi ashram throwing all norms to the winds.

    He also said that since Nithi cured his ailment, he crowned him. Then he said that Nithi belongs to the saiva vellalar community, hence he crowned him.

    The aadheenam’s comments seem confused.

    He has given room for atheists & anti hindu propogandists to make comments now.

    It is sad that a mutt that has been blessed by Swami Thirugnana sambandar is now facing flak.

    The prime reason for all this is money. Money corrupts.

    There is talk that he was hypnotised into

  96. ரமேஷ் நான் முன்பே கூறியது போல நீங்கள் இன்னது சொல்கிறோம் என்று அறியாமல் பேசுகிறீர்கள்.

    இல்லறத்தான் எல்லாம் சும்மா இருப்பது போலவும், அதனால் துறவி இறங்கி வேலை செய்கிறார்;அப்படியே சமூக சேவை செய்து இந்து மதத்தைக் காப்பாற்றுகிறார்; மாதா டிரஸ்ட் என்ன , சங்கர நேத்ராலயா என்ன என்றெல்லாம் தாங்கள் சொன்னதற்காக இல்லறத்தான் செய்துவரும் எளிய பணியைச் சுட்டிக் காட்டினேன்.

    அது ஒரு ஏழை எளிய மக்களுக்கான டிஸ்பென்சரி..(மருந்துக்கடை என்று கொச்சைப் படுத்துகிறீர்கள்) கன்சல்டேஷனுக்கு ஒரு கிறித்துவப் பெண் டாக்டர்தான் நீண்ட நாட்களாக இருந்து வருகிறார்.ஓர் இந்து டாக்ட‌ரை ஏற்பாடு செய்யவோ, அந்த டிஸ்பென்சரி முன்னேற்றமடைய வேண்டிய ஏற்பாடுகளையோ மடம் எடுக்கவே இல்லை.எவ்வளவோ சிரமங்களுக்கிடையில் சில நல்ல உள்ளங்கள் கால் நூற்றாண்டாக ஒற்றுமையாக நடத்தி வருகிறார்கள்.அவர்களையும் அவர்கள் பணிகளையும்
    மடத்தைப்போலவே தூக்கிக் குப்பையிலே போடுகிறீர்கள்.

    சாஸ்திரா பல்கலைக்கழகம் போன்றவற்றில் ‘கையிலே காசு வாயிலே தோசை’
    என்று கறாராராகப் பேசி வசூல் செய்யும் இடங்களில் ஆச்சார்யாள் அட்மிஷன் முடிந்தவுடன் வருவதும், எல்லோரும் தங்க கூடிய கெஸ்ட் ஹவுஸிலேயே தானும் தங்குவதும், வேனில் ஏறிப் பறப்பதுமாக இருப்பது …..? என்னமோ கைகுலுக்காத குறையாக எல்லோருக்குமாக இந்து மதத்தினைக் காப்பாற்றுகிறார் என்று நீங்கள் பேசுவது சரியா? இப்படியா இந்துமதம் காக்கப் பட வேண்டும்?

  97. வாராது வந்த மாமணி போல தமிழ் இணையத்தில் அருமையாக சேவை செய்து வரும் உங்கள் தளத்தின் பெயரைக்
    கெடுப்பதற்காக என்றே இப்படி திட்டமிட்டு மறுமொழிகள் போடுகிறார்கள் ரமேஷ் போன்ற புல்லுருவிகள். நீங்கள் இவற்றைக் கண்டு அயர்ந்து விடவேண்டாம் –

    1. முதலில் இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரையே காஞ்சி மடத்தைத் தாக்கும் மணிகளால் எழுதப் பட்டது. ஆனால் இந்தப் புல்லுர்வி சுப்ப்ரீம் கோர்ட் உத்தரவை – அதுவும் ஆங்கில ஹிந்து எழுதியது – கொடுத்த பின்னும் – உடையும் இந்தியா என்ற புத்தகத்தைக் காட்டி எப்படிப்பட்ட சதிகள் எல்லாம் நடகஈறது என்று எழுதிய மணிகள் – அதைக் கண்டுகொள்ளாமல் ஜெயேந்திரரைத் திட்டி ஹிந்து சமூகப் பணி செய்வதும்.

    2 . ஏன் – எழுத்தாளரின் முதல் கட்டுரை வெளியிடாமல் ரெண்டாவது கட்டுரையை வெளியிட்டு இருக்கீறீர்கள். முதல் கட்டுரை இதோ.

    https://www.jeyamohan.in/?p=26022 – இதில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் நான் works of mahathma புத்தகத்திலிருந்தே எடுத்து எழுதி இந்தப் புல்லுருவி மறுத்து இருக்கிறேன். இந்தப் பின்னூட்டத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறது. ஆனால் எழுத்தாளரோ ஆதாரம் கொடுக்காமல் எல்லாம் கேரளாவுல பேசிக்காரங்க என்று எழுதினர். இப்ப நாடு நிலமையாளர்கள் சொல்லுங்கள். விக்கி சரியா? ஜெயமோகன் சரியா?

    3 .ஆதாரங்கள் வந்ததும் ஜெயமோகன் பல விதமாக இப்படியும் அப்படியுமாக எழுத ஆரம்பித்தார். இந்தக் கட்டுரைகளுக்குதான் ஜடாயு இதுக்கு கொஞ்சம், அதுக்கு கொஞ்சம் என்று ஒரு கடிதம் எழுதினர். சந்திரசேகரர் பற்றி ஜெயமோகன் எழுதியது அனைத்தும் அவர் ப்ளாக்கில் இருக்கிறது. நான் கொடுத்த மகாத்மாவின் வார்த்தைகளுக்கும் ஜெயமோகன் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லை. ஜெயமோகன் பதில் சொன்னவர்கள் எல்லாரையும் வெறியன் என்ற ஒரே பதிலைத்தான் கொடுத்தார். ஆனால் காந்தியே வேறு மாதிரி சொல்கிறார்.

    4 . தமிழ் ஹிந்துவில் வந்த ஆதி சங்கரர் காலம் பற்றிய ஜடாயுவின் கட்டுரை. அதில் ஒருவர் ஆதி சங்கரர் காலம் பற்றி தெய்வத்தின் குரலில் வேறு மாதிரி வந்திருக்கிறதே என்றதற்கு – அவர் அந்தக் கருத்தை வேறு ஆதாரங்கள் மூலம் மறுத்திருக்கலாம் – ஆனால் அவரோ தெய்வத்தின் குரல் என்று எழுதினால் தெய்வமா? சந்திரசேகரர் குரல் என்று எழுதுங்கள் என்றார் – அப்புறம் ஏன் ரா. கணபதிக்கு அஞ்சலி என்று ஒரு கட்டுரை. தப்பா எழுதியதுக்கு அஞ்சலியா?

    4 . சொல்லும் கருத்துக்கு ஆதாரம் கொடுக்கும் நான் புல்லுருவி. வாய்க்கு வந்தபடி எழுதுபவர்கள் வராமல் வந்த மா மணி. நான் எழுதியது தவறு என்று ஆதாரம் காட்டுங்களேன்? இந்தப் புல்லுருவியும் திருந்துகிறேன். ஆதாரம் இல்லாமல் அபாண்டம் சுமத்தும் நீங்கள் எல்லாம் மா மணி என்றால் அப்புறம் உடையும் இந்தியாவில் வரும் பத்திரிக்கைகள், சேனல்கள் எல்லாம் கூட மாமணிதான்.

  98. “மஹாப் பெரியவர் காலத்தில் பக்தர்கள் வரவு குறைவு. அதனால் அத்தைப் பாட்டிக் கதை பேசிக் கொண்டு இருந்தார்.இப்போ கூட்டம் அப்படியே நெரியறது
    அத‌னால பெரியவாளாலே எல்லோரிடமும் பேச முடியவில்லை”இதுதானே உங்கள் டோன்?

    இதை விட பெரிய இன்சல்ட் எதுவும் இருக்க முடியாது.காஞ்சிபுரம் என்றால் காமாட்சிக்கு அப்புறம் மஹாப் பெரியவா என்று அவர் காலத்தில்தான் மடத்திற்கு கூட்டம் வ‌ர ஆரம்பித்தது. அந்தக் கூட்டமெல்லாம் இன்று மடத்திற்கு வருவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகின்றன.

    பூஜையெல்லாம் செய்யக் கூடிய நீங்கள், பூஜை மீது நம்பிக்கை இல்லாமல்,
    வெளி நாட்டுப் பணம் வந்து இந்து மதமே அழிந்துவிடும், அதனால் ஆச்சார்யாள் பூஜை செய்யாமல் சமூக சேவை/அரசியல் தொடர்பு செய்ய வேண்டும் என்று பேசுவது சரியான முர‌ண்.

  99. அதுவும் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருக்கிறார். நீங்கள் சொல்வது அபாண்டம். வேண்டுமென்றே கட்டுரையாளரின் நல்ல நோக்கத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கிறீர்கள். – அப்புறம்தான் பின்நூட்டஹ்தில் போட்டு தாக்கிவிட்டார். அதுக்கப்புரம்தானே நாங்க எழுதினோம்.

  100. எதையும் ஒரு டிப்ளமேடிக்காக மஹா பெரியவர் செய்தார். அதனை அவருக்குப் பின் வந்தவர் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளவே இல்லை.எல்லாவற்றிலும் தானே நேரடியாக ஈடுபட்டு தனக்கும் பீடத்திற்கும் அழிக்க முடியாத களங்கங்களை ஏற்படுத்தி விட்டார். இனி வழக்குகளின் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அளிக்கப்பட்டாலும் ஏற்பட்ட தலை குனிவை மாற்ற முடியுமா?

    மஹாப் பெரியவரின் டிப்ள‌மசிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

    சுதந்திரப் போராட்ட காலத்தில் பிராமண இளைஞர்கள் பலரும் அதில் ஈடுபட்டு இருந்தனர்.என் தகப்பனாரும் அவர்களுள் ஒருவர். ஒன்ற‌ரையாண்டு காலம் சிறைவாசம் அனுபவிததவர். இந்த பிராமண இளைஞர்கள் காராகிரஹ வாசம் செய்ததாலும், சாதி, மத பேதமின்றி எல்லோருடனும் பழகுவதாலும், பரான்ன போஜனம் செய்வதாலும், அக்கிரஹாரங்களில் அவர்களை ஜாதிப்பிரஷ்டம் போல நடத்தியுள்ளனர்.

    இதற்குப் பரிஹாரம் தேட அந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மஹாப் பெரியவரை சந்தித்து தங்களுடைய மனக் குறையைச் சொல்லியுள்ளனர்.

    “பீடம் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”என்று கேட்டுள்ளார்.

    “பெரியவா ஓர் அறிக்கை மூலமா சுதந்திரப் போராட்டத்தை ஆதரிப்பதையும், போராட்டத்தில் பிராமண இளைஞர்களைப் பாராட்டியும் பொதுவில் கூற வேண்டும்”என்று கூறியுள்ளார்கள்.

    “அதனால பல வேண்டாத விளைவுகள் வரலாம். நீங்கள் சொல்வதை விட இன்னும் எஃபெக்டிவா செய்யறேன்” என்று கூறி மறு நாள் கதர் வாங்கி வரச் சொல்லி காவியில் தோய்த்து அணிய ஆரம்பித்தாராம்.

    கதராடையைப் பார்த்து விலகி ஓடிய‌ அக்கிரஹாரவாசிகள், ‘பெரியவாளே கதர் போட்டுக்கறா’ என்று கதர் கட்டிய பிராமணனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை கொடுக்க ஆரம்பித்தார்களாம்.

    என் தகப்பனார் சுதந்திரப்போராட்ட வீரர், சிறைசென்ற தியாகி காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் கூறக்கேட்டு எழுதியுள்ளேன்.
    என் தகப்பனாரைப் பற்றி இங்கே படியுங்கள்.

    https://gandhiashramkrishnan.blogspot.in

  101. ௧. மஹாப் பெரியவர் காலத்தில் பக்தர்கள் வரவு குறைவு. அதனால் அத்தைப் பாட்டிக் கதை பேசிக் கொண்டு இருந்தார்.இப்போ கூட்டம் அப்படியே நெரியறது
    அத‌னால பெரியவாளாலே எல்லோரிடமும் பேச முடியவில்லை”இதுதானே உங்கள் டோன்?இதை விட பெரிய இன்சல்ட் எதுவும் இருக்க முடியாது.காஞ்சிபுரம் என்றால் காமாட்சிக்கு அப்புறம் மஹாப் பெரியவா என்று அவர் காலத்தில்தான் மடத்திற்கு கூட்டம் வ‌ர ஆரம்பித்தது. அந்தக் கூட்டமெல்லாம் இன்று மடத்திற்கு வருவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகின்றன.

    இல்லவே இல்லை. நான் சொன்னது பலவிஷயங்களையும் கூட்டி நீங்கள் சுருக்க முயல்கிறீர்கள். மஹா பெரியவா பூஜை எல்லாம் பெரியவா கிட்ட கொடுத்துவிட்டு சிவச்தானம், தேனாம் பக்கம் என்று அறுபதுகளின் இறுதியில் போய் விட்டார்.பின்ன சதார போய்விட்டார். அப்ப இத்தனை பஸ் கார் எல்லாம் கிடையாது. அந்தக் கூட்டத்தில் நீங்கள் வேணா இப்ப வராம இருக்கலாம். எங்கள மாதிரி எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறோம். பெரும் கூட்டம் பாம்பே, அமெரிக்க கூடத்தான் போயிரிச்சு: அதே சமயம் இப்பவும் மடத்துல பெரியவ இருக்கும்போது நீண்ட நேரம் தரிசனம் தந்து முடிந்தவரை பேசுகிறார். ஆசி வழங்குகிறார். பால பெரியவர் மூன்று கால பூஜை செய்கிறார். இன்னைக்கும் ரெண்டு பெரும் பல கும்பாபிஷேகம் எல்லாம் போகிறார்கள். நான் சொன்னபடி கஷ்மிர்க்கே போய் பூஜை செய்கிறார்,

    அது என்னது காஞ்சிபுரம் என்றால் காமாட்சிக்கு அப்புறம் மஹாப் பெரியவா என்று அவர் காலத்தில்தான் மடத்திற்கு கூட்டம் வ‌ர ஆரம்பித்தது. – அதாவது காஞ்சிபுரத்துக்கு புடவை வாங்கிட்டு அப்படியே காமாக்ஷி, பெரியவா. அப்படித்தானே போய்கிட்டு இருந்தீங்க. இது இன்சல்ட்டா? நான் சொன்னது இன்சல்ட்டா?

    2 . பூஜையெல்லாம் செய்யக் கூடிய நீங்கள், பூஜை மீது நம்பிக்கை இல்லாமல்,
    வெளி நாட்டுப் பணம் வந்து இந்து மதமே அழிந்துவிடும், அதனால் ஆச்சார்யாள் பூஜை செய்யாமல் சமூக சேவை/அரசியல் தொடர்பு செய்ய வேண்டும் என்று பேசுவது சரியான முர‌ண்.

    இதவிட ஒரு முரணான வாதமே இருக்க முடியாது. பூஜை மட்டுமே மதத்தைக் காக்கும் என்றால் எதற்கு இந்த ” தமிழ் ஹிந்து” பேசாம ஒரு பஜனை வெப் சைட் ஆரம்பிக்கலாமே?

    அது ஒரு ஏழை எளிய மக்களுக்கான டிஸ்பென்சரி..(மருந்துக்கடை என்று கொச்சைப் படுத்துகிறீர்கள்) கன்சல்டேஷனுக்கு ஒரு கிறித்துவப் பெண் டாக்டர்தான் நீண்ட நாட்களாக இருந்து வருகிறார்.ஓர் இந்து டாக்ட‌ரை ஏற்பாடு செய்யவோ, அந்த டிஸ்பென்சரி முன்னேற்றமடைய வேண்டிய ஏற்பாடுகளையோ மடம் எடுக்கவே இல்லை.எவ்வளவோ சிரமங்களுக்கிடையில் சில நல்ல உள்ளங்கள் கால் நூற்றாண்டாக ஒற்றுமையாக நடத்தி வருகிறார்கள்.அவர்களையும் அவர்கள் பணிகளையும்
    மடத்தைப்போலவே தூக்கிக் குப்பையிலே போடுகிறீர்கள்.

    சாஸ்திரா பல்கலைக்கழகம் போன்றவற்றில் ‘கையிலே காசு வாயிலே தோசை’
    என்று கறாராராகப் பேசி வசூல் செய்யும் இடங்களில் ஆச்சார்யாள் அட்மிஷன் முடிந்தவுடன் வருவதும், எல்லோரும் தங்க கூடிய கெஸ்ட் ஹவுஸிலேயே தானும் தங்குவதும், வேனில் ஏறிப் பறப்பதுமாக இருப்பது …..? என்னமோ கைகுலுக்காத குறையாக எல்லோருக்குமாக இந்து மதத்தினைக் காப்பாற்றுகிறார் என்று நீங்கள் பேசுவது சரியா? இப்படியா இந்துமதம் காக்கப் பட வேண்டும்?

    சாமி – ஊர்ல இந்த மாதிரி பல சர்வீஸ் நடக்கும். அத்தனைக்கும் பெரியவாதான் காசு கொடுக்க முடியுமா? 100 பேர் மாசம் 250 ரூபா போட முடியாதா? ஏன் உங்கள் ஊரில் எந்த கோவில் பூசாரி, குருக்கள் அல்லது வேத வித்து மடத்து stipend /பென்ஷன் வாங்கவில்லையா? மடத்துல நடக்கற மற்ற வைத்யசாலைகள் தெரியலையா?
    சாஸ்திரா காசு வாங்காம எப்படி நடத்தறது? காருண்யா மாதிரி நடத்தணுமா? ஒண்ணு நிச்சயம் – உங்களுக்கு ஏதோ நடக்கல. எனக்கு எதிர்பார்ப்பு இல்ல? எனக்கு அவர் ஒரு சின்ன வழிகாட்டல் போதுமானதாக இருந்தது. என் பசங்களை அவர் சம்ஷேப ராமாயணம் அடுத்தவாட்டி சொல்லனும்னு சொன்னார். பசங்க அதப் படிச்சுகிட்டு இருக்காங்க. நான் சாஸ்திர,சங்கர, வெங்கடேஸ்வர காலேஜ்ல சீட் கேட்டுப் போக மாட்டேன். உங்களுக்கு எதிர்பார்ர்ப்பு ஜாஸ்தி. அதனால இத்தனை குற்றம் சொல்லிக்கிட்டு அவர் எதுவுமே பண்ணாத மாதிரி சொல்றீங்க.

  102. கதராடையைப் பார்த்து விலகி ஓடிய‌ அக்கிரஹாரவாசிகள், ‘பெரியவாளே கதர் போட்டுக்கறா’ என்று கதர் கட்டிய பிராமணனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை கொடுக்க ஆரம்பித்தார்களாம்

    அப்படியா – ஹரிஜனன்களைப் பார்த்து ஓடின நீங்கள் ஏன் பின் சேரிக்கு போன சாமியார ஏன் மடத்துல உக்காரலன்னு கேட்கறீங்க? அப்பறம் ஏன் ஜெயமோகன் அப்படி எழுதறாரு? ஏன் மேல பாயறதுக்கு கொஞ்சம் அங்கயும் பேசலாம்ல. நான் பதில் கொடுக்கறேன். அவர் பார்ப்பன வெறியன்னு டைட்டில் கொடுத்துருவாரு.

  103. சுதந்திரப் போராட்ட காலத்தில் பிராமண இளைஞர்கள் பலரும் அதில் ஈடுபட்டு இருந்தனர்.என் தகப்பனாரும் அவர்களுள் ஒருவர். ஒன்ற‌ரையாண்டு காலம் சிறைவாசம் அனுபவிததவர். இந்த பிராமண இளைஞர்கள் காராகிரஹ வாசம் செய்ததாலும், சாதி, மத பேதமின்றி எல்லோருடனும் பழகுவதாலும், பரான்ன போஜனம் செய்வதாலும், அக்கிரஹாரங்களில் அவர்களை ஜாதிப்பிரஷ்டம் போல நடத்தியுள்ளனர்

    பரமாச்சார்யார் பிராணன் போஜனம் எல்லாம் கடைசிவரை ஏற்றுக்கொள்ளவே இல்லை. கதர் விஷயம் அவர் ச்வதேசிக் கொள்கையை ஆதரித்ததால்தான். அவர் உண்ணாவிரதம், சத்யாக்ரகாம் எல்லாம் பின்னே சொந்த சர்க்காரையும் ப்ளாக்மெயில் பண்ணத்தான் போகுதுன்னு அப்பவே சொன்னார். நீங்க சொல்ற எந்த சீர்திருத்தத்தையும் அவர் நேர்முகமாவோ அல்லது நாசுக்காவோ ஏற்றுக்கொள்ளவே இல்லை.

    இப்ப உள்ள பெரியவர் பழசையும் விடாமல், அதே சமயம் அதற்குள் சமுதாய ஒற்றுமையும் வேண்டும் என்று உழைக்கிறார். இவர் சாஸ்திர விரோதமாக செய்யும் ஒன்றைக் காட்டுங்கள் பார்ப்போம்? உணவு, உடை, யாரும் தொடாமல் இருப்பது உட்பட ஒரு விலக்கைக் காண்பியுங்கள். பிரயாண முறைகள் இப்போ எல்ல துறவிகளும் மாற்றிக் கொண்டுள்ளார்கள். அது ஒன்றுதான் வித்யாசம்.

  104. R NAGARAJAN on May 2, 2012 at 7:40 pm

    ” ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் காஞ்சி மடத்தில் தொடர்ந்து இருக்கும் பொது, நித்தியானந்தா நியமனம் மட்டும் எப்படி தவறு ஆகும் ?”

    திரு ஆர்.நாகராஜன் அவர்களின் மேலே சுட்டிக்காட்டிய கடிதத்திலிருந்து தான் விவாதம் திசை திரும்பி விட்டது. நாரதர் கலகப்பிரியர் என்றும் ஆனால் அவரின் கலக்கம் நன்மையில் முடியும் என்றும் கூறுவார்கள். அதுபோல , இந்தவிவாதமும் விரைவில் நல்ல திசைக்கு திரும்பும் என்றும் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

    ஒன்று:- இந்து மத தலைவர்கள் கல்வி கூடங்கள் நடத்தவும் , மருத்துவ மனைகள் நடத்தவும் அரசு பண உதவி எதுவும் செய்வதில்லை. இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல , அரசு பணஉதவி ( மான்யம் ) தருகிறது. ஆனால் இந்துக்கள் காசி அல்லது ஹரித்துவார் செல்ல அரசு உதவி எதுவும் செய்வது கிடையாது. எனவே, பணம் திரட்டாமல் , ஜெயேந்திரர் மட்டும் அல்ல வேறு எந்த இந்து மத தலைவரும் , திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற முடியாது.

    ஆபிரகாமிய மத தலைமைக்கு , மத மாற்றத்துக்காக வெளிநாட்டு ஆபிரகாமிய பீடங்கள் கோடி கோடியாக, அந்நியச்செலாவணியை அனுப்பி வைக்கின்றன. ஆனால், நமது மத தலைவர்கள் அது போல எந்த உதவியும் பெறமுடியாது என்பதை நண்பர்கள் நினைவு கொள்ள வேண்டும். எனவே, தர்ம காரியத்துக்கு பணம் திரட்டுவது , ஒரு அவசிய தேவை ஆகும். அது கூடாது எனில், இந்த நிறுவனங்கள் எப்படி இயங்கும்?

    தானே ஈடு படாமல், பிறர் மூலம் செய்தால் மேலும் பல பிரச்சினைகள் வரும். ஜனகல்யான் என்ற அமைப்பை வேறு ஒருவர் மூலம் காஞ்சி மேடம் செயல்படுத்தி அதில் பல புகார்கள் வந்த பின்னர் , ஜனகல்யான் முடங்கிப்போனது என்று என் நினைவு.

    ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிடுவது மகா தவறு. கருத்து எழுதும் அன்பர்கள் , மதுரை ஆதீன விஷயத்தில் நடந்தது சரியா இல்லையா என்ற கோணத்தில் மட்டும் இங்கு எழுதிவிட்டு, காஞ்சி மேடம் மற்றும் வேறு ஏதாவது இடம் பற்றி எழுத விரும்பினால் , தனி கட்டுரையாக எழுதினால் நன்றாக இருக்கும். இந்த திசை மாற்றம் எப்படி ஆரம்பித்தது என்று நான் மேலே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

  105. இப்போது பீடத்தில் இருப்பவரை வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும் என்று மற்ற எல்லோரையும், மாஹாபெரியவர் உட்பட, மட்டம் தட்ட முனைந்து நிற்கிறீர்கள்.

    உங்கள் பின்னூட்டங்களில் பார்க்கலாம், ஏதோ இவர் ஒருவ்ர்தான் இந்து மதத்தை ஓடி ஓடி காப்பாற்றுவது போலவும், மற்றவர்கள் எல்லாம் மடத்தில் சும்மா பூஜை செய்து கொண்டு வெட்டிப் பொழுது போக்குவது போலவும் தொனிக்கும்படி எழுதி வருகிறீர்கள்.

    அவர்கள் இடத்திலேயே, காமாட்சி பெயரால் நடந்துவரும் ஏழைகளுக்கான மருத்துவமனையைக் கூட ஏன் கருடா என்று மடம் கேட்கவில்லை என்பதுதான் சுட்டிக் காட்ட‌ப் படுகிறது. அதே நேரத்தில் பணக்காரார்களுக்கான கல்விக் கூடத்திற்குப் பீடம் அளிக்கும் முக்கியத்துவத்தை எளியவர்களுக்கான நிறுவனத்திற்கு அளிக்கவில்லை என்பதற்காகத்தான் அந்தச் செய்தி சொல்லப்பட்டது.

    எனக்கு ஏதோ சொந்த முறையில் காரியம் நடக்காததால்தான் இதனைச் சொல்கிறேன் என்று கூறி பெர்சனல் அட்டாக் ஆரம்பித்துவிட்டீர்கள்.எப்போது பெர்சனலாகத் தாக்கத் துவங்கிவிட்டீர்களோ அப்போதே உங்கள் பக்கம் வீக் என்பது புலனாகிறது.

    மேற்கொண்டு பேசுவதால் மேலும் பெர்சனல் அட்டாக்தான் மிஞ்சும்.

    ‘சம்பந்தமில்லாமல் ஜெயமோகனிடம் போய் சொல்லு, தமிழ் ஹிந்துவை பேரை மாற்றிக்கொள்ளச் சொல்’ என்றெல்லாம் சொல்வது வெறும் கூச்சல்.

    நீங்கள் பூஜை செய்யும் அம்பாள் உங்களுக்கு நிதானத்தைக் கொடுக்கப் பிரார்த்திக்கிறேன்.

  106. சபாஷ் , சரியான போட்டி. வெளுத்து வாங்குங்கள். நீங்கள் அனைவரும் செய்வது,பெரியவர் சரியா, சின்னவர் சரியா அல்லது இளையவர் சரியா என்பது பற்றியல்ல . நீங்கள் எல்லோரும் செய்வது ,ஒரு பாம்பரியம் மிக்க ஹிந்து மடத்தை மட்டம் தட்டுவது தான். தொடருங்கள் உங்களின் ஹிந்து பணியை. இதில் காஞ்சியை மட்டம் தட்டினாலும் சரி , ஷிறிங்கேரிங்கேறிமடத்ததை மடத்தை மட்டம் தட்டினாலும் அல்லது மதுரை ஆதினத்தை மட்டம் தட்டினாலும், நீங்காள் ஹிந்து மதத்தை மட்டம் தட்டுகிறீர்கள். நாம் இப்போது இருக்கும் காலம் அப்படிப்பட்டது. பாலைவன தீய சக்திகள் நம்மில் ஊடுருவ சமயம் பார்த்து காத்திருக்கிறது. அதற்கு இடம் கொடுக்கவேண்டாமே. இந்த முட்டாள் தனமான விவாதங்கள் இண்டெர் நெட்டில் வேண்டாமே? .. இதற்கு மேலும் விவாதிக்கவேண்டும் என்றால் . ஒரு மண்டபத்தை பதிவுசெய்து அங்கு விவாதிப்போம் . வாங்க அங்கே பார்க்கல்லாம். என்ன சரியா?.

    அது சரி , இந்த R NAGARAJAN என்னும் பெயரில் பின்னூட்டமிடும் ஒரு ஜந்து , முதலில் ஒரு ஹிந்து தானா? அல்லது ஏசுராஜனா?. இவர் போடும் பின்னூட்டமெல்லாம் பி.ஜே.பிக்கு எதிரானது. அதாவது கூட இருந்தே குழிபறிப்பது போல் இருக்கிறது. இவரது பின்னூட்டங்களை பார்த்தபின் தான் இந்த ஞானோதயம் வந்தது. அதனால் அறிவு ஜீவிகளா , பிடிக்கவில்லை என்றால் பின்னூட்டமிடவேண்டாம். உங்களது அறிவை , கண்ணாடியில் பார்த்து நீங்களே மெச்சிக்கொள்ளுங்கள்.

  107. @உமை ஒரு பாகன் , நண்பரே, இந்த பின்னுட்டம் இட்டபின் தான். உங்களின் பின்னூட்டத்தைப்பார்த்தேன். 🙂 , நிங்களும் என்னை மாதிரியே(உங்களை மட்டம் தட்டுவதாக எண்ணவேண்டாம்). இந்த யேசுராஜன். முன்பே ஒரு பதிவில் அப்பாவியாக , பி.ஜே.பி யைப்பற்றி என்னமோ ரொம்பவும் அக்கரையுள்ளவர் மாதிரி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அப்பவே எனக்கு பொறிதட்டியது. இன்று வந்த பதிவிலும் இரண்டாவது ஆளாக பி.ஜி.பி என்பது 10தோட பதினொன்னு என்று பின்னூட்டம் இட்டிருக்கிறார். கீழே உள்ள இணைப்பிலும் போய் பாருங்கள்.

    https://tamilhindu.com/2012/03/up-and-state-elections-mar-2012/

  108. Sane voices from ” sanjay ” and “உமை ஒரு பாகன் ” in this melee.
    Thank you both .

  109. முத்துக் கிருஷ்ணன் மேலும் மேலும் சேற்றை வாரி இறைப்பதிலேயே குறியாக இருக்கிறார், ஜடாயு வேண்டுகோளை ஏற்று அமைதியாக இருந்தேன். ஆனால், அதை ஏற்கும் பக்குவம் முத்துக் கிருஷ்ணன் போன்றவர்களுக்குக் கிடையாது. நான் முன்னரே சொன்ன கருத்தான “இவரைப் போன்றவர்கள் வாய்க்கு வந்த படி பேசித்தான் எல்லாருக்கும் காஞ்சி மேடம் என்றால் எந்த அவதூறையும் சொல்லலாம்” என்ற எண்ணம் எல்லாருக்கும் வந்தது என்பதை திருப்பித் திருப்பி நிரூபிக்கிறார் .

    ஒரு கிளினிக் அதற்கு சங்கராச்சாரியார் போகவில்லை என்பது இவருக்கு குற்றம். அதாவது இவர் நினைக்கும் படியெல்லாம் எல்லா இடத்துக்கும் சங்கராச்சாரியார் போகாவிட்டால் அவர் மோசம்.

    சாஸ்திரா பல்கலைக் கலகத்தை நிறுவி நடத்துபவர்களிடம் இவருக்கு ஏதோ தனிப்பட்ட தகராறு இருக்கும் என்றே சந்தேகம் வருகிறது. இவர்களைப் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் வதந்தி புரளி பண்ணி சங்கராச்சாரியார் சாஸ்திரா பல்கலைக் கழகத்தார் அழைத்தால் அங்கே போகாமல் நின்று விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

    எப்படியாவது ஒரு ஹிந்து, பிராமணனை வளரவிடாமல் செய்து விடவேண்டும் என்பதில் மற்ற சில பிரானமனர்களுக்கு ஒரே ஆசை.

    சாஸ்திராவும் எஸ்.பி.ஒ.ஏ போல கிறிஸ்துவர்கள் கையில் போய் விட்டால் இவர்களுக்கு நிம்மதியாக இருக்கும். போனபின்னால் இந்து முன்னணி வந்து போராடும். அது வரை இந்த மாதிரி பிராமணர்கள் வாய் ஓயாது.

  110. பர்சனல் அட்டாக் பற்றி முத்துகிருஷ்ணன் பேசுகிறார். அவர் இதுவரை செய்தது காஞ்சி சங்கராச்சாரியார்களான மக பெரியவர் ஒஉதுப் பெரியவர் மீதான பர்சனல் அட்டாக்தானே?

  111. ரமேஷ்

    //பிரயாண முறைகள் இப்போ எல்ல துறவிகளும் மாற்றிக் கொண்டுள்ளார்கள். அது ஒன்றுதான் வித்யாசம்.//

    ஒரே ஒரு சங்கராச்சாரியார் மட்டும்தான் பென்ஸ் காரில் ஏறலாம். இவர் எப்படி விமானத்தில் ஏறப் போச்சு என்றதாலதானே இத்தனை அக்கப் போரும் வந்தது?

  112. மஹா பெரியவரை நான் மட்டம் தட்டுகிறேனா? அவர் மீது பக்தி இருப்பதால்தான் ஜெயமோகன் கட்டுரை தவறு என்று – ஆதாரத்துடன் நான் மறுக்கிறேன்.நான் கூச்சல் இடுகிறேனா? நீங்கள் உளறிக் கொட்டுகிரீர்களா? நான் ஆதாரம் கொடுக்கிறேன். நீங்கள் வயத்தெரிச்சலில் உளறுகிறீர்கள். உமை ஒரு பாகன். கட்டுரையை நாகராஜன் பின்னூட்டம் திசை திருப்பவில்லை. கட்டுரையாளர் கட்டுரையில் எடுத்துக் கொடுத்தார் இன்னும் சில பேர்கள் இருக்கிறார்கள் என்று. பின்னர் பின்னூட்டம் வந்தவுடன், அவர் – தன கருத்தை விளக்காமல் ஜெயேந்திரர் மீது புழுதி வாரித் தூற்றிவிட்டு எனக்கு ஏன் எரிகிறது என்று கேட்டார். ஒரு பக்கத்து மாநில முதல் மந்திரி இறந்தவுடன் – நோட் இறந்தவுடன் – வீர தீரமாக நீங்கள் எல்லாம் கட்டுரை எழுதினீர்கள். சுவாமிகளோ அவர் இருக்கும்போதே தீவிர களப்பணி செய்தார். உங்களுக்கு மஹா பெரியவரையும் தெரியாது. பெரியவரையும் தெரியாது. மஹா சந்நிதானங்களையும் தெரியாது நீங்கள் யாரும் எந்த சேவையும் செய்ததும் கிடையாது. செய்திருந்தால்தானே கஷ்டம் தெரியும்.

    தமிழ் ஹிந்துவுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் நெகடிவ் நன்றாகச் செய்கிறீர்கள். பாசிடிவ்தான் செய்வதில்லை. வேர்ல்ட் விஷனுக்கு நிதி கொடுக்காதீர்கள் என்பது சரி. யாருக்கு நிதி கொடுக்கணும்னு ஒரு campaign நடத்துங்களேன். ஏன் தஞ்சை கோபாலன் போன்றவர்கள் அந்த இலவச மருந்துச் சாலைக்கு நிதி திரட்டி நடத்தக் கூடாது? அப்ப தெரியும் கஷ்டம். நூறு கட்டுரை எழ்துவதை விட ஒரு தர்ம காரியம் செய்யுங்கள். தஞ்சை கோபாலனும், முத்துக்க்ரிஷ்ணன்னும் செய்ய அம்பாளைப் பிரார்த்திக்கிறேன். இந்த பின்னூட்டம் அதற்க்கு தூண்டுகோலாக இருக்கட்டும்.

    நீங்கள் சாஸ்திர, பெரியவா எல்லாரையும் தூற்றலாம். நான் பதில் சொன்னால் பர்சனல் அட்டாக்கா?

    (edit and published)

  113. தமிழ் ஹிந்துவை தொடர்ந்து படித்து வருகிறேன்.பாரதியாரைப் பற்றி ஹரிக்ரிஷ்ணன் எழுதியதும் திராவிட இயக்கத்தின் தோலுரித்து ம வெங்கடேசன் காட்டியதும் தமிழ்ச்செல்வன் கட்டுரைகளும் அரவிந்தனின் படைப்புகளும் கோமதி செட்டின் எழுத்துக்களும் நான் அதிகம் ரசித்தவை.போக போக தெரியும் தொடரை விடாமல் படிப்பேன்.ஆனால் தமிழ் ஹிந்து தடம் மாறிவிட்டது,ஹிந்து ஒற்றுமை என்று முதலில் பேசியது உண்மைதான்.ஆனால் என்ன காரணத்தாலோ காஞ்சி மடத்தை தாக்குவது என்பதும் அவ்வப்போது தொடர்ந்தது.இப்போது பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது.இன்னும் நூறு பேர் எழுந்து வந்தாலும் இணையத்தில் இஷ்டப்படி உளறினாலும் காஞ்சி மடத்தை கால் இன்ச் கூட நகர்த்த முடியாது.

  114. பொது வாழ்க்கைக்கு வந்து விட்டவர்களை அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்களுடன் இணைத்துப் பார்ப்பதும், அப்போது ஏற்படும் விமர்சனமும்
    ‘பெர்சனல் அட்டாக்’ ஆகாது.அந்த நிறுவனங்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பாதைகளில் இருந்து மாறிப்போகும் போது விமர்சனத்திற்கு ஆளாவதும் இயற்கையே.

    ஒரு விவாதத்தில் உங்களுக்கு ‘ஏதோ காரியம் ஆகாததால்தான் இப்படிப் பேசுகிறீர்கள்’அல்லது ‘என்ன ஆதாயம் அடைந்ததால் இப்படிப் பேசுகிறீர்கள்? என்று கேட்பதுதான் பெர்சனல் அட்டாக்.

  115. ///ஹிந்து ஒற்றுமை என்று முதலில் பேசியது உண்மைதான்.ஆனால் என்ன காரணத்தாலோ காஞ்சி மடத்தை தாக்குவது என்பதும் அவ்வப்போது தொடர்ந்தது.///

    வனவாணியின் கருத்துக்களில் உண்மை உள்ளது. முத்துகிருஷ்ணன் போன்றவர்களின் அவதூறான கருத்தை அனுமதிப்பதால் இந்தத் தளத்தின் மீது சந்தேகம் வருகிறது.

  116. ‘பிராமணன்,அதனாலே எதுவும் அவனைப் பற்றிப் பேசாதே!’ என்பது சரியா?

    “உன் தகப்பனார் சிரார்த்ததிற்கு ஒரு 3000/ ரூபாய் கூட செலவு பண்ண முடியாவிட்டால் நீ சிரார்த்தமே பண்ண வேண்டாம்” என்று ஒரு ஏழையை அவமானப்படுத்தும் பிரஹஸ்பதிகளும் பிராமணர்கள் தானே?

  117. காரில் போகலாம் என்று ஸ்ரின்கேறி மகா சந்நிதானம் – மற்றொரு நடமாடும் தெய்வமாக விளங்கிய சந்திர சேகர பாரதி சுவாமிகள்தான் தனது சீடருக்கு ஒப்புக் கொண்டார். நம் பெரியவாளும் நம் மடத்துக்குக் காரியம் இல்லாத பொதுக் காரியம் எல்லாம் அவரிடம் சொல்லிவிட்டு அவர் அனுமதி கேட்டுத்தான் செய்வார். அதே போல ஆதீனங்கள், ஜீயர்களிடம் சொல்லுவார். இன்று சாலையில் செல்வது பாதுகாப்பு கிடையாது. பென்ஸ் காரைவிட இன்னொரு பெரிய பாதுகாப்பான கார் வந்தால் அதில்தான் சுவாமிகளும், மஹா சந்நிதானமும் செல்ல வேண்டும். அதுதான் என் கருத்து.

  118. நண்பர்களே

    இந்த கட்டுரையில் இருந்து அல்ல, சாதி மறுப்பு திருமணம் பற்றிய கட்டுரையிலேயே சம்பந்தமின்றி சங்கர மடம் பற்றிய பேச்சு , பல ஏச்சு எழுந்தது.
    அதன் தொடர்ச்சியே இது. இதற்கு தனியே ஒரு பதிவு போடலாம்.

    தமிழ் நாட்டில் பல மடங்கள், ஆதீனங்கள் , மடத்தலைவர் தேர்வுக்கு தனித்தனியே அவரவர் சட்டதிட்டங்கள் வைத்திருக்கலாம். அதையெல்லாம் பற்றி எவரும் கேள்வி எழுப்பியதில்லை. ஆனால் என்றும் கழக கண்மணிகள் தாக்க விரும்பியது காஞ்சி சங்கர மடத்தை தான்.

    அரசு , நம்மைப்பொறுத்த வரை ஆள்வது இவரோ , அவரோ, ஹிந்துக்கள் வசம் உள்ள மிச்ச சொச்ச அமைப்புகளையும் தான் எடுத்து நடத்தவே அடங்காத ஆசை. அதன் விளைவே நாம் காணும் பல விஷயங்கள்.
    தமிழ் நாட்டிற்கு வெளியே பார்த்தாலும் உடுப்பி பெஜாவர் மடமும் சிலர் கண்ணை உறுத்த தொடங்கியுள்ளது.

    எழுத்தாளர் ஜெயமோகனின் சுட்டிக்கு நன்றி.பெரிவவர் -பெரியார் ஒப்பிடல், எங்கிருந்து வந்தது இப்போது புரிகிறது.:-)

  119. திரு தமிழன் அவர்களுக்கு
    வணக்கம்

    தங்கள் பின்னூட்டத்தில் யேசுராஜன் என்று எனது பெயரை தவறாக குறிப்பிட்டு உள்ளீர்கள். தயவு செய்து, திட்டுவதானால் கூட, நாகராஜன் என்று எழுதியே திட்டுங்கள்.

    பிஜேபி பற்றிய அக்கறையினால்தான் அவ்வாறு எழுதினேன். பிஜேபி ஹிந்துக்களுக்கான கட்சி என்ற தகுதியை இழந்து வருகிறது. தேசியச் சிந்தனையை முற்றிலுமாக விட்டு விட்டது. (காவிரி நீர் விவகாரத்தில் இரட்டை நிலை – பெரியாறு விவகாரம், பெல்காம் விவகாரம், என்ற எதிலும் மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு நிலையை எடுத்திரிக்கிறது).

    இன்று, இக்கட்சிக்கு, உட்பூசல் இல்லாத மாநிலங்களே இல்லை. 2008ல், ராஜஸ்தானிலும், 2012ல், உத்தரகாண்டிலும் பின்பு ஏன் தோற்க வேண்டும்?

    மீண்டும் மீண்டும் நல்ல நிர்வாகத்திற்கு குஜராத்தையே காட்ட வேண்டியுள்ளதே? மற்ற பிஜேபி ஆளும் மாநிலங்களை ஏன் கூற முடியவில்லை? டெல்லி மாநில ஆட்சியை ஏன் வெல்ல முடியவில்லை? உ பி யில் 36 % வாக்கு ஏன் 14 % ஆனது?

    இதுவரை அடுத்த பொதுத் தேர்தலுக்கு பிரதமர் பதவிக்கு உரிய வேட்பாளர் யார் எனக் கூறவில்லை?

  120. சேவையைப்பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது என்ற‌ உங்கள் கண்டுபிடிப்புக்கு நன்றி.எல்லாவற்றுக்கும் “ஆதாரத்துடன்” பேசும் நீங்கள் இந்த
    விஷயத்தில் யூகத்தில் பேசுகிறீர்கள். என் பெருமையை நானே சொல்லிக் கொள்ளக் கூடாது என்ற அடக்கத்தால் மெள‌னம் சாதிக்கிறேன்.

  121. ஒரு சரித்திர ஆர்வலன் என்ற முறையின் எனக்கு பலகாலமாக எப்படி இவ்வளவு ஹிந்துக்களை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த வெள்ளையர்களும், கொள்ளையர்களும் அடக்கி ஆண்டு மத மாற்றம் செய்ய முடிந்தது என்று ஒரு சந்தேகம் இருந்தது. அது எப்படி நடந்திருக்கும் என்று புரிய வைத்த தஞ்சை திரு கோபாலன் அவர்களுக்கும், திரு முத்து கிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழ் ஹிந்துவுக்கும் நன்றி. கோர்ட் தீர்ப்பு கொடுத்தாலும் அது செல்லாது என்று சொன்ன பஞ்சாயத்து நாட்டாமைகளின் தீர்ப்புக்கு என் பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் சேவை. இன்னும் இது போன்ற பல கட்டுரைகளை வழங்குமாறு இந்த வராது வந்த மா மணியை சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன். – பணிவுடன் பிராம்மண வெறியன் ( எ) புல்லுருவி (எ) ரமேஷ் ஸ்ரீநிவாசன்.

  122. @திரு நாகராஜன் அவர்களுக்கு,

    //ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் காஞ்சி மடத்தில் தொடர்ந்து இருக்கும் பொது, நித்தியானந்தா நியமனம் மட்டும் எப்படி தவறு ஆகும்?//
    இந்த் பின்னூட்டத்தின் மூலமாக நீங்கள் சொல்லவருவது என்ன ?.

    1.நித்தியின் இந்த நியமனம் சரியே.
    2. நித்தியின் மீது கேஸ் இருப்பதால் இது சரியல்ல. அதனால் காஞ்சி மடாதிபதிகளும் விலக வேண்டும்.

    //
    //மீண்டும் மீண்டும் நல்ல நிர்வாகத்திற்கு குஜராத்தையே காட்ட வேண்டியுள்ளதே//
    இதே வாய்தான் கீழே உள்ள கருத்தையும் கூறியது?
    Mr. Modi is not a team leader. Who is next to Mr. Modi in Gujarat?
    இந்த மாதிரி அனைத்து விஷயங்களிலும் எதிர்மறையாக உள்ள கருத்துக்களை கூறியதால் தான் “உங்களை ஏசுராஜன் என்று அழைக்கவேண்டி வந்தது
    சரி உங்களின் பின்னூட்டங்களை போய் பாருங்கள் எங்கேயாவது பி.ஜே.பி எப்படி நடக்கவேண்டும் என்று இருக்கிறதா என்று.? இல்லை. குறைகூறுவது மட்டுமே குறிக்கோளாககொண்டு சொல்வது தான்.
    இனி வரும் பின்னூட்டத்தைப்பார்த்து ஏசுராஜனா இல்லை நாகராஜானா என்று முடிவுசெய்யலாம்.

  123. உங்களுக்கு எதிர் வினை ஆற்ற வேண்டாம் என்ற முடிவை மாற்றிக் கொள்ளூம் படியாகவே மீண்டும் புதிது புதிதாக எதையோ சொல்கிறீர்கள்.

    என்னைப்போல விமர்சிப்பவர்களால் அல்ல, உங்களைப்போல ஆதரவாளர்களாலேயே அதிகக் குழப்பங்கள்.

    பொதுக் காரியங்களில் மற்ற பீடாதிபதி, மடாதிபதிகளையெல்லாம் கேட்டு ஒப்புதல் பெற்றுத்தான் காஞ்சி மடம் இயங்குகிறது என்று விளைவுகளுக்கெல்லாம் எல்லோரையும் பொறுப்பாக்குகிறீர்கள்.

    இவர்கள் கேட்டதற்கும், அவர்கள் என்ன அபிப்பிராயம் கூறினார்கள் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், இப்படியெல்லாம் எனக்குத்தான் எல்லாம் தெரியும் நீங்கள் எல்லாம் ஒன்றும் தெரியாதவர்கள் என்ற மனோபாவத்தை ரமேஷ் கைவிட்டால் இந்த விவாதம் முற்றுப்பெறும். இல்லாவிட்டால் லாவணிக் கச்சேரிதான்.

    ஆதியில் இருந்து எல்லாவற்றையும் ஆரம்பித்து ஒரு ரவுண்ட் பார்த்துவிடலாம்.எல்லோரிடமும் ஆதாரம் இருக்கிறது.

  124. This seems to be a forum for “Ramesh v/s others”.

    I have forgotten the topic itself.

  125. Today’s news

    Kanchi seer Jayendra Saraswati today voiced his opposition to self-styled godman Nityananda’s appointment as the head of the Madurai Adheenam.

    “Madurai Adeenam is one of the oldest mutts in India and headed by famous saints like Thirgnana Sambandar. The pontiffs of Madurai Adheenam should tonsure their head and wear ‘Rudraksha’,” the Kanchi seer told reporters.

    Nityananda has not tonsured his head. Besides this, he is involved in a sex scandal.”….His appointment is not entirely acceptable,” he said. The Kanchi seer was talking to reporters after visiting the Sankara Mutt here to release the ‘Panchangam’ (religious almanac) prepared by Tamil Nadu Brahminar Sangam for the current ‘Nandana’ (spiritual) year.

    The appointment of Nithyananda as head of 1,500-year-old Saivite mutt has triggered protests from several quarters, including heads of different mutts in the state, in view of pending criminal charges, including rape, against him.

  126. இந்த விவாதம் திசை மாறிப்போய்விட்டது. ஸ்ரீ நித்யானந்தருக்கு ஒரு நீதி ஸ்ரீ ஜயேந்திரருக்கு ஒரு நீதி என்ற மனோபாவம் பல ப்பின்னூட்டங்களில் தெரிவது துரதிர்ஷ்டம். ஸ்ரீ நித்யானந்த சுவாமிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பலவும் ஸ்ரீ ஜயேந்திரருக்கும் எதிராகவும் தொடுக்கப்பட்டன. ஆனால் அதைப்பற்றி கண்டுகொள்ளாத புண்ணியாத்மாக்கள் ஸ்ரீ நித்யானந்தருக்கு எதிராக புழுதிவாரிக்கொட்டினார்கள் கொட்டுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கருத்துக்களை இந்தக்கட்டுரையிலும் பின்னூட்டங்களிலும் காண்கிறேன். இது சரியன்று.

    ஆசிரியர் குழுவினருக்கு. ஐயா சில ப்பின்னூட்டக்காரர்கள் ஜந்து என்றும் புல்லுருவி என்றும் சக பின்னூட்டக்காரர்களை விமர்சிக்கிறார்களே இதனை அனுமதிப்பது நியாயமா.

  127. Sivasri,

    I disagree with your comment that many accusations against Nithi have also been hurled at Jayendrar. The latter has not been involved in a sex scandal. Also, kanchi mutt is not privy to crores of rupees like the bidadi ashram.

    Nithyananda’s accession as the madurai aadheenam is totally unacceptable.

  128. //ஆதியில் இருந்து எல்லாவற்றையும் ஆரம்பித்து ஒரு ரவுண்ட் பார்த்துவிடலாம்.எல்லோரிடமும் ஆதாரம் இருக்கிறது.///

    “சண்ட வந்தது பிராமணா கூடையை இறக்கி வை” என்கின்ற மனோபாவம் போகவே இல்லை.

    எத்தனை சொன்னாலும் இப்படிப்பட்ட பொதுத்தளத்தில் வந்தி காஞ்சி மடத்தைப் பற்றி முத்துக் கிருஷ்ணன் எழுதுவது அவதூறாகவே இருக்கிறது, இன்னமும் அவதூறு செய்வேன் நீ என்னை என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வியே மேற்கூறிய வரியில் உள்ளது. மாதா திருச்டு செய்யும் சேவையோ சங்கர நேத்ராலயா செய்யும் சேவையோ கண்ணுக்குத் தெரியாது சாஸ்த்ரா வளர்கிறதே என்ற பொறாமைதான் மேல் தூக்கி நிற்கிறது. அதில் பெர்சனல் அட்டாக் என்பதற்கு விளக்கம் வேறு. இப்படி வியாக்கியானம் செய்தேதான் காஞ்சி மதத்தின் மீது யார் வேண்டுமானாலும் என்ன அவதூறு வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை பிராமணர்களே உருவாக்கி விட்டார்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.

  129. பொதுக் காரியங்களில் மற்ற பீடாதிபதி, மடாதிபதிகளையெல்லாம் கேட்டு ஒப்புதல் பெற்றுத்தான் காஞ்சி மடம் இயங்குகிறது என்று விளைவுகளுக்கெல்லாம் எல்லோரையும் பொறுப்பாக்குகிறீர்கள்.
    நான் சொன்னது மகா பெரியவா செய்த பொதுக் காரியங்கள். வண்டியில் போவது அப்படித்தான் முடிவு செய்யப் பட்டது. நான் தெளிவாகவே, மடத்துக் காரியம் அல்லாத பொதுக் காரியங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.. ராம ஜன்மபூமி பிரச்சினையிலும் அவாறே முடிவு செய்யப்பட்டது.

  130. It is not Ramesh vs others. It is the anti kanchi mutt gang vs pro truth group

  131. எனக்குத்தான் எல்லாம் தெரியும் நீங்கள் எல்லாம் ஒன்றும் தெரியாதவர்கள் என்ற மனோபாவத்தை ரமேஷ் கைவிட்டால் இந்த விவாதம் முற்றுப்பெறும். இல்லாவிட்டால் லாவணிக் கச்சேரிதான் – நீங்கள்தான் எதையுமே படிப்பதில்லை என்று முடிவு எடுத்துவிட்டீர்களே. அது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பானாலும், ர கணபதி கட்டுரை ஆனாலும், ஏன் மகாத்மாவின் மொழிகள் ஆனாலும் படிப்பதில்லை என்று. அதுவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பானாலும் செல்லாது செல்லாது என்று நாட்டாமை தீர்ப்பு சொல்லிவிட்டீர்களே. அப்புறம் ஏன் ஆதாரம் தேடி அலைகிறீர்கள். நீங்கள்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல் நாட்டாமை ஆயிற்றே. உங்கள் தீர்ப்பை கொடுத்துக் கொண்டு இருங்கள்

    (edited and published)

  132. ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் பீடத்தில் இருக்கும் ஸ்ரீ ஜயேந்திரர் பற்றி இருந்த மதிப்பு ஸ்ரீ நித்யானந்தர் விவகாரத்தில் அவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது ஏற்புடையது அல்ல. இதுவரை அடியேன் அவரிடத்தில் மதிப்பு கொண்டிருந்த்தது உண்மைதான். இனி வேறு வழி இல்லை கண்டிக்கவேண்டியது அவசியம் தான்.
    ஸ்ரீ நித்யானந்தர் தலை மொட்டையடிக்காததைப்பற்றி கேள்வி எழுப்பும் ஸ்ரீ ஜெயேந்திரர் சங்கர சன்யாசிகளோடு எப்போதும் வைத்திருக்கும் தண்டத்தைக்கூடவிட்டுவிட்டு பெரிய சாமியிடம் கோபித்துக்கொண்டு எங்கோ சென்றாறே அதை இப்போது அவர் நினைத்துப் பார்க்க மறந்த்தது ஏனோ. ஸ்ரீ நித்யானந்தர் மீது வழ்க்குகள் உள்ளன ஆனால் அவர் மீது வழக்குப் போட்டது யார். பாதிக்கப்பட்டவர்கள் யார். குற்றப்பத்திரிக்கை எங்கே. ஸ்ரீ ஜயேந்திரர் மீதான வழக்குக்கு குற்றப்பத்திரிக்கை எங்கே.
    ஸ்ரீ நித்யானந்தருக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் தார்மீக உரிமை குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீ ஜயேந்திரருக்கொ அல்லது அவரது ஆதரவாளர்களுக்கோ இருக்கிறதா?

    (edited and published)

  133. ” சிவஸ்ரீ.விபூதிபூஷண் on May 10, 2012 at 12:12 pm”

    ” இந்த விவாதம் திசை மாறிப்போய்விட்டது. ஸ்ரீ நித்யானந்தருக்கு ஒரு நீதி ஸ்ரீ ஜயேந்திரருக்கு ஒரு நீதி என்ற மனோபாவம் பல ப்பின்னூட்டங்களில் தெரிவது துரதிர்ஷ்டம். ஸ்ரீ நித்யானந்த சுவாமிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பலவும் ஸ்ரீ ஜயேந்திரருக்கும் எதிராகவும் தொடுக்கப்பட்டன.”

    அன்புள்ள சிவஸ்ரீ விபூதிபூஷண்,

    2004- ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காஞ்சி பீடாதிபதி மேலே அன்றைய தமிழக அரசினால் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபிறகு , காஞ்சி பீடாதிபதிக்கு யாரும் கூடுதலாக வேறொரு மடத்தின் பொறுப்பை இன்று வரை கொடுக்கவில்லை.

    ஆனால், நித்யாநந்தரை பொறுத்தவரை வழக்குக்கு முன்னர் அவர் ஏற்கனவே பீடாதிபதியாக இருக்கிறார். அவரிடம் மதுரை ஆதீனத்தின் பதவியும் கூடுதலாக கொடுக்கப்படுகிறது. எனவே, காஞ்சி மற்றும் மதுரை மட விவரங்களை ஒப்பிடுதல் எந்த நியாயமும் இல்லாதது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    குற்றச்சாட்டுக்கு ஆளாகிய மட, மற்றும் பீட தலைவர்கள் யாராயினும் , பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, வழக்கு முடிந்தபின், விடுதலை பெற்று , அதன் பின்னரே பீடத்தை அலங்கரிக்க வேண்டும்.அது எந்த மடமாயினும் சரி. எந்த ஆதீனமாயினும் சரி.

    காஞ்சி மடத்தைப்பற்றி விமரிசிக்க வேண்டும் என்று நினைப்போர் , அதற்கு மதுரை ஆதீனம் பற்றியுள்ள இந்த தலைப்பில் எழுதாமல், வேறுபுதிய கட்டுரையில் எழுதுவதே முறை.

    After the charges against the Kanchi Peedam, the Adhipadhis have not been given any additional posts. But after the charges against the Nithyaanandhaa Peedam, he has been given the posting as head of Madurai Adheenam .

    Whether the Adheenams and Madaadhipathis who are facing charges should continue in their earlier postings is a matter to be discussed in a different topic. We are ready to discuss anywhere.

  134. 1. Is it morally right to offer post of head Adeenam when new selected person already having cases on court ?

    Ans : Nothing wrong in it. It is completely the ownership and responsibility of the existing adeenam to get his successor. Absolutely there is no harm in avoid or over look few old rules which had natural death in the changing era. These all smruithi.

    2. Can Nithayanada accept the post of Adinam ?

    A: Yes. He can.There is no rule that if any cases going on X, he should not be accepting the same.

    He claimed that he would set a trend in how the old mutt has to be run. The operational efficiency, can be brought to revive from the current status. Only time has to tell, how good or bad these decision is. !

    3. He is not following the tradition of Mottai and dressing etc . ?

    A: The person who revived the whole mutt, the great Thiru gnana sampandar, had not shaved his head. He was wearing colour dress. And ofcourse, all these custom would have developed over the period of time.

    4. Is it right to bring some already known person and make him as Peedathi pathi ?

    A: It happened in hindu tradition. Swami narayan was one of the enlighten wonderer who brought by their community people to head the mutt. Rest is the history. Technically swami narayan was not fitting the so many bills of existing terms. But the dedication, devotion, passion the enlighten swami narayan put on the mutt, made the entire sampradaya to the U turn.

    Hindu society as whole in public space had undergone lot of changes. That is the first level indicator. Second there are new thought [spritual] leaders who took hinduisam to outer world and gave according to their need. These is second change.

    Still the old mutt and caste bounded mutt are untouched from the changes and still running in the own way it is running. There is need for these sort of entities and their contribution to the hinduisam should not be forgiven. For example all adeenamas had given tremoundous contribution for taking religion to local masses and enriched tamil languages. But still they too have to tighten their belt and grow up with efficiency and join the main stream without losing the identity.

    Anybody look at the current state of all mutt, it is absolutely in dangerous conditions. Most of the adeenam properties are swallowed by few people. Most of the temples are not in the position to run properly and improve their contribution to society which earlier year they were supported by kings and others. To tell the truth most of the adeenam mutt leaders are not having the cook for themselves and taking food from some hotels. With these financial conditions, not effiecient work group, not having devotees where is the possibility for revival ?

    The change is happening in faster way. It is very impossible to keep our same old rules for accepting, operating when we are executing any organisation. Let us understand now in the small world it is tough to run organisation like older days where there is no attacking media, corrupt politicians, changed social structure, western influences, the GREAT machineries.

    It is high time, ALL mutt has to LOOK in and gear for the long term and Next generation ?

    If any body tries to do these exercise will come to conclusion that, instead of looking for weak person with no personality, let my successor be with passion, knowledge and result oriented man, who can revive my mutt, siva siddhanam and over all hindusiam.

    Fake cases, falling hair, dressing will not be matter much before the big concern, big canvas, big purpose.

    If any of the viewer, have any issue which you feel will be the hindrance for the big purposes then the mentioned one, i would like to request you to pen down.

    I will get answer from reliable sources and share with you.

    Thanks for many hindu leaders, guru who congratulate Nithya for his new dimension.
    I being close victim of the happening, i can vouch one thing. It is not thro money X bought Y. Pls let us not lower our ranks and talk like these.

    The best think, our enemies are the best judge of our strength some times. Just read quote from Some “THOZHAR ” in these feed back column. They got the spot right. It is time to go to the mass and starting signals for great spiritual revolutions.

  135. ஸ்ரீ ஜெயேந்திரர் சங்கர சன்யாசிகளோடு எப்போதும் வைத்திருக்கும் தண்டத்தைக்கூடவிட்டுவிட்டு – எதனை முறைதான் சொல்வது. பெரியவர் தன சமூகப் பணிகளுக்காகத் தன பதவியை விட்டுவிட்டுச் சென்றார். எல்லா சன்யாசிகளும் தண்டம் வைத்துக் கொள்ளவேண்டியதில்லை. அவர் தனக்குப் பின் ஒரு சீடரை வைத்துவிட்டு, அதுவும் தான் காஞ்சி மடாதிபதியாக இருந்தபோதுதான் சென்றார். ஸ்ரீ ஜெயேந்திரர் வெளியேறியபோது அவர்தான் மடாதிபதி. அவருக்கு முன்பு மஹா பெரியவாளும் தன பொறுப்புகளை ஜெயேந்திரரிடம் கொடுத்துவிட்டு 70 இல் மடத்தைவிட்டுப் பெரும்பாலும் வேறு இடங்களிலும், பின் 10 வருடம் வட மாநிலங்களிலும் சஞ்சரித்தார். 70 தொடக்கத்தில் இருந்தே ஜெயேந்திரர்தான் காஞ்சி மடாதிபதி. 85 இல் அவர் தன மடாதிபதி பட்டத்தைதான் துறந்தார். நீங்கள் நினைப்பது போல் அப்போது அவர் இளைய ஸ்வாமிகள் இல்லை. பல அத்வைத சன்யாசிகள் தண்டம் வைத்துக் கொள்வதில்லை.

    அவர் வழக்குகளை கோர்ட் தெளிவாகவே தீர்ப்பு தந்தது. ஆனால் நித்யாந்தரோ சந்நியாசி அல்ல. ஆன்மீக ஆராய்ச்சி எல்லாம் செய்பவர்.

  136. இதுவரை அடியேன் அவரிடத்தில் மதிப்பு கொண்டிருந்த்தது உண்மைதான். இனி வேறு வழி இல்லை கண்டிக்கவேண்டியது அவசியம் தான். – இது என்ன? எங்க மாமா கூட்டிகிட்டு போனா அரசியல்வாதிகளைப் பாக்காலாம்ன்கர மாதிரி, நித்யானந்தாவ ஏத்துகிட்டா கண்டிக்க மாட்டீங்களா? என்ன சார் இது. நீங்களுமா? ஒரு விஷயம் ஒண்ணு தப்பு. இல்ல சரி. இது என்ன சார் நித்யாவ ஏத்துக்கிட்டா மதிப்பு. தண்டத்த விட்டது ஓக்கே. இல்லைனா பெரியவர் கிட்ட கோபிச்சுகிட்டவரா? நல்லாருக்கு ஞாயம்.

  137. It is between people who want mutt heads to follow the beaten path shown by earlier aacharys vs who want mutt heads to adopt new dangerous methods.

    It is between people who want aacharyas to value silence vs who want aacharyas to be vociferous

    It is between people who think Dharma saastras are more powerful vs who take court laws are supreme.

  138. a காந்திஜியின் கம்ப்ளீட் ஒர்க்ஸ் இணையத்தில் ஏறுவதற்கு முன்பே காசு கொடுத்து வாங்கி வைத்துள்ளேன். நான் படித்துள்ளேன் என்று சொன்னால் ‘என்னைப் போலப் படித்தீர்களா’ என்று லாவணியைத் தொடர்வீர்கள்.காந்தியின் பக்கங்கள் 70000 க்கும் மேல்.நீங்கள் அத்தனையும் படித்து முடித்து விட்டீர்களா?

    நீங்கள் ஜயமோகனுக்காக காந்தியைக் கூறியதற்கு அவர்தான் பதில் கூற வேண்டும். நான் ஏன் கூற வேண்டூம்?

    தெய்வத்தின் குரலிலும் சரி , காந்தியின் எழுத்துக்களிலும் சரி நமக்கு வேண்டியதை மட்டும் எடுத்து எழுதி அவ‌ர்கள் முரண்பாடு உடையவர்கள் என்று தர்கபூர்வமாக நிருபிக்க முடியும்.அப்படிச் செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    வேறு யாரோ ஒருவர் உங்களை கடுமையான சொற்களைச் சொன்னதால்
    இங்கே நாகரீகமாக எதிர்வினை ஆற்றுபவர்களையும் ‘கேங்’என்று சொல்லலாமா? உங்களுக்குக் கோபம் அதிகமாக வருகிறது.

    கோபம் தவிர்த்து வாருங்கள்.வேண்டுமானால் என் மின் அஞ்சல் முகவரியையும், அகத்து விலாசத்தையும் பகிரங்கமாகத் தருகிறேன்.

  139. 1. Is it morally right to offer post of head Adeenam when new selected person already having cases on court ?

    Ans : Nothing wrong in it. It is completely the ownership and responsibility of the existing adeenam to get his successor. Absolutely there is no harm in avoid or over look few old rules which had natural death in the changing era. These all smruithi.

    2. Can Nithayanada accept the post of Adinam ?

    A: Yes. He can.There is no rule that if any cases going on X, he should not be accepting the same.

    He claimed that he would set a trend in how the old mutt has to be run. The operational efficiency, can be brought to revive from the current status. Only time has to tell, how good or bad these decision is. !

    3. He is not following the tradition of Mottai and dressing etc . ?

    A: The person who revived the whole mutt, the great Thiru gnana sampandar, had not shaved his head. He was wearing colour dress. And ofcourse, all these custom would have developed over the period of time.

    4. Is it right to bring some already known person and make him as Peedathi pathi ?

    A: It happened in hindu tradition. Swami narayan was one of the enlighten wonderer who brought by their community people to head the mutt. Rest is the history. Technically swami narayan was not fitting the so many bills of existing terms. But the dedication, devotion, passion the enlighten swami narayan put on the mutt, made the entire sampradaya to the U turn.

    Hindu society as whole in public space had undergone lot of changes. That is the first level indicator. Second there are new thought [spritual] leaders who took hinduisam to outer world and gave according to their need. These is second change.

    Still the old mutt and caste bounded mutt are untouched from the changes and still running in the own way it is running. There is need for these sort of entities and their contribution to the hinduisam should not be forgiven. For example all adeenamas had given tremoundous contribution for taking religion to local masses and enriched tamil languages. But still they too have to tighten their belt and grow up with efficiency and join the main stream without losing the identity.

    Anybody look at the current state of all mutt, it is absolutely in dangerous conditions. Most of the adeenam properties are swallowed by few people. Most of the temples are not in the position to run properly and improve their contribution to society which earlier year they were supported by kings and others. To tell the truth most of the adeenam mutt leaders are not having the cook for themselves and taking food from some hotels. With these financial conditions, not effiecient work group, not having devotees where is the possibility for revival ?

    The change is happening in faster way. It is very impossible to keep our same old rules for accepting, operating when we are executing any organisation. Let us understand now in the small world it is tough to run organisation like older days where there is no attacking media, corrupt politicians, changed social structure, western influences, the GREAT machineries.

    It is high time, ALL mutt has to LOOK in and gear for the long term and Next generation ?

    If any body tries to do these exercise will come to conclusion that, instead of looking for weak person with no personality, let my successor be with passion, knowledge and result oriented man, who can revive my mutt, siva siddhanam and over all hindusiam.

    Fake cases, falling hair, dressing will not be matter much before the big concern, big canvas, big purpose.

    If any of the viewer, have any issue which you feel will be the hindrance for the big purposes then the mentioned one, i would like to request you to pen down.

    I will get answer from reliable sources and share with you.

    Thanks for many hindu leaders, guru who congratulate Nithya for his new dimension.
    I being close victim of the happening, i can vouch one thing. It is not thro money X bought Y. Pls let us not lower our ranks and talk like these.

    The best think, our enemies are the best judge of our strength some times. Just read quote from Some “THOZHAR ” in these feed back column. They got the spot right. It is time to go to the mass and starting signals for great spiritual revolutions.


    Mani K R
    TIPL – CEO
    09820232002

  140. வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது – எங்க நடக்கவே விடவில்லையே. எத்தனை முட்டுக் கட்டைகள்.? நடு நிலையாளர்கள் நான் கொடுத்த கோர்ட் லிங்கைப் படியுங்கள். அப்புறம் புரியும். என்ன சொல்வது?. ஆங்கில ஹிந்து இந்த விஷயத்தில் நேர்மையாக நடந்துகொண்டுள்ளது.

  141. 1. பணத்திற்காக நித்தியா இந்த பதவிக்கு வந்திருக்கிறார்

    [ மதுரை தியான பீடத்தின் ஒரு வருடம் வரவு, தியான பீடத்தின் ஒரு நாள் வரவு செலவு. one day of dyana peetam financial is equvalent to one year of madurai addenam ]

    2. புகழ், பதவிக்கா இந்த பதவியை ஏற்றிருக்கிறார்.

    பல இலட்சம் பக்தர்களை ஏற்கனவே கொண்டவர். 200க்கு மேற்பட்ட நாடுகளில் அவரது பக்தர்களும், 30 நாடுகளில் கோவிலை நடத்தி கொண்டவர்.

    எல்லா ஆதின பக்தர்களையும் ஓன்று சேர்த்தால் கூட அதைவிட பத்து மடங்கு பக்தர்களை கொண்டவராகயிருப்பார் நித்தியானந்தர்.

    கடந்த சில நூறு வருடங்களில் எல்லா ஆதினங்கள் கட்டிய கோவில்களை விடவும், சமூக பணிகளை விடவும் மிக மிக அதிகமான பணிகளையும், சமூக பணிகளையும் செய்தவர்.

    தனி ஆளாக பத்து வருடங்களில் தனது உழைப்பால் மட்டுமே இதை கட்டி எழுப்பியவர்.

    உலகத்தில் தலை சிறந்த 100 ஆன்மீக குருக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். யூ டிப்பில் http://www.youtube.com/lifeblissfoundation நம்பெர் ஓன் குருவாக இன்றும் கோலாச்சிகிறார். [ரவிசங்கர், ஜக்கி எல்லாம் இவருக்கு பின் தான்]

    எந்த விதத்திலும் இந்த பதவி ஏற்பு நித்தியானந்தாவிற்கு பணமோ, புகழோ, பதவியோ கொடுக்கப் போவதில்லை. மாறாக நிறைய தொல்லைகளை மட்டுமே வழங்கப் போகிறது.

    திராவிட போர்வையில், பிராமணீயத்திற்கு எதிராகவும், வேத நெறிகளுக்கு எதிராகவும் பேசி கடந்த அறுபது வருடங்களாக தமிழகத்தை, வேத நெறி தமிழகத்தை – மறுபடியும் கொண்டு வர இருக்கும் ஒரே வாய்ப்பு. நித்தியானந்தா..

    யோக, தந்திரம் மட்டுமல்ல, கோவிலும், வேதநெறியும், சமஸ்கிருதமும், மறுபடியும் தழைக்க எந்த காழ்ப்புணர்வுமின்றி எல்லா இந்து தரிசனங்களையும் அணைத்து, அழைத்து அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கனவுகளோடு, செயல் திட்டங்களோடும் இருக்கும் நித்தியானந்தாவை ஏதோதோ காரணங்கள் சொல்லி அடிப்பது, நமது வளர்ச்சிக்காக பாடுபடும் ஒருவரை நாமே கல்லெறிவது போல..

    ஞானசம்பந்தர் சொன்னது போல “ உலகெலாம் வேத நெறி தழைத்து ஓங்க “ – அது மட்டுமே குறிக்கோளாக, அதை செய்ய, அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யாராவது பட்டியலிட்டால் சரியான செவிகளுக்கு கொண்டு செல்ல முடியும்.

    இளம் முறுக்கேறிய தசைகள், வேத நெறியில் ஆழ ஊன்றிய கால்கள், இந்து மரபின் அனைத்து மரபுகளையும் மதித்து பொது நதியில் சங்கமிக்க வைக்கும் தொலைநோக்கும், ஆன்மீகத்தை அறிவியலோடு இணைக்க வைக்கும் அவா, உலகத்தை திரும்பி பார்க்க வைக்கும் தொடர்பாற்றல் உள்ள ஆன்மீக தலைவர்கள் நம்க்கு எப்போதும் கிடைப்பதில்லை.

    ஈக்களின் கூச்சலால் யானைகள் நிற்பதில்லை.
    என்றாலும் இந்த தளத்தை ஏன் ஆலோசனை கொடுக்குமிடமாக பயன்படுத்தக் கூடாது ?

  142. அத்விகா அவர்களே
    அடியேனைப்பொறுத்தவரையில் ஸ்ரீ ஜயேந்திரோ அல்லது ஸ்ரீ நித்யானந்தரோ குற்றம் செய்திருப்பதாக நம்ப வில்லை. இந்த இரு வழக்குகளும் ஹிந்து விரோதிகளின் சதிவழக்குகளே என்பது எனது நம்பிக்கை.
    இந்த இரு வழக்குகளை வென்று இருவரும் வீரர்களாக திரும்புவர் என்பது உறுதி.
    இதில் சிக்கல் என்ன வென்றால் ஸ்ரீ நித்யானந்தர் தமது பீடத்தை விட்டு இறங்கவேண்டும் என்று கூறியவர்கள் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு அந்த அறிவுரை வழங்கவில்லை. ஸ்ரீ நித்யானந்தரை கடுமையாக கண்டிக்கிறவர்கள் காஞ்சி ஆச்சாரியாரை ஆதரிக்கிறார்கள். ஏன் இந்த ஒரவஞ்சனை என்பதே எனது கேள்வி.
    சட்டத்தின் முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமயப் பீடம் ஏறக்கூடாது என்றால் அப்படிப்பட்டவர்கள் பீடத்தில் இருந்தால் கீழே இறங்கவேண்டும் என்பதே சரி.

    இன்னும் சில பின்னூட்ட அன்பர்கள் சீசரின் மனைவி சந்தேகதிற்கு அப்பாற்பட்டவள் என்பதை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த்க்கூற்றின் பொருள் சீசரின் மனைவியை (அதிகாரத்தில் உள்ளவர்களை) சந்தேகிக்க கூடாது(அப்படிசெய்தால் தலை இருக்காது) என்பதே அன்றி அத்தகையவர்கள் சந்தேகத்திற்கு உள்ளாகக்கூடாது என்பது அல்ல. ஏன் என்றால் அவன் சீசர்தான் அன்றி இராமர் அல்ல.

  143. நித்யானந்த பகதர் கேபிடல் ‘ஆர்’ ரமேஷும், ஏற்கனவே எழுதிவரும் காஞ்சி மட பக்தர் ரமேஷும் ஒருவரேவா வெவ்வேறா?

  144. திரு சிவஸ்ரீ.விபூதிபூஷண்

    உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

    மீடியாக்களின் தொந்திரவினால் அவர்களும் ஏதாவது பேசியாக வேண்டியிருக்கிறது. ஜெயந்திரர் சொன்னது உண்மையில் தேவையற்ற ஓன்று. அதுவும் அவர் பாலியில் பற்றிய குற்றச் சாட்டுகளை சொல்லும்போது எப்படிப்பட்ட எதிர்வினைகள் வரும் என்று தெரிந்து சொல்லியிருக்கலாம்.

    பொதுவாக பின்னூட்டமிடும் மடத்தின்/ பீடத்தின் பக்தர்கள், தங்களின் கருத்தை மடத்தின் கருத்தாக வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுவுமின்றி,
    இரண்டு மடங்கள் ஒரு கருத்தை கொண்டிருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமுமில்லை.

    குற்றப் பிண்ணனியோடு ஏன் பதவி ஏற்க வேண்டும் என்கிற வாதத்தில் உள்ளவர்கள், தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது உடனே தனது எல்லா பதவிகளையும் துறந்து விட்டு நீதிமன்றத்தில் குற்றம் களையப்பட்ட பின்பு தான் பதவி ஏற்றிருக்க வேண்டும்.

    ஆனாலும் எனது தனி கருத்து ஜெயந்திரர் அப்படி செய்யத் தேவையில்லை. ஸீரி நித்தியானந்தரும் வந்த பதவியை மறுக்கத் தேவையில்லை.

    இந்து மதத் தலைவர்கள் தங்கள் மற்றவருக்கு complementary ஆக இருக்க முனைய வேண்டும். Competing என்ற நினைப்பு கூடாது. மடங்கள் மட்டுமல்ல, பக்தர்களும் அந்த முதிர்ந்த தன்மைக்கு வரவேண்டும்.

    சங்கர மடங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாய் இருக்கின்றன. நித்தியா, ரவிசங்கர், ஜக்கி போன்றோர் ஆற்ற வேண்டிய பணிகளும் வேறு திசையில் நிறையவே இருக்கின்றன.

    நித்தியாவின் தலைமையில் மதுரை ஆதீனம் இன்னும் சில காலங்களில் தழைத்து பெருகும் போது மற்ற ஆதீனங்கள் இதை உண்ரலாம். வேத நெறிக்கு நித்தியாவின் Contribution புரியும்போது மடங்களும் இதை உணரும்.

    குறிப்பாக, நாத்திகம் பேசி மக்களை நாசம் செய்யும் கும்பலின் முதுகெலும்புகளை சங்கர மடத்தால் நொறுக்க முடியாது. அவர்கள் மடத்தை மட்டும் மட்டம் தட்டவில்லை. வேதநெறிக்கே எதிரானவர்கள். அத்தகைய தடைகள் உடைக்க வேதநெறியையும், சங்கரரையும் பின்பற்றுகிற ஸீரி நித்தியா போன்றவர்கள் இயற்கையால் வழங்கப்பட்ட வரம். காலத்தின் தேவை.

    இறுதியாய், இந்தியா ஆன்மீக மடங்களும், ஆதினங்களும் தங்களுக்கான உறவுகளை புதிய முறையில் இணைத்து, புதுப்பித்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு போவதற்கான நேரமிது. இஸ்கான், சுவாமி நாராயன் பீடங்கள் தங்களுக்குள்ளே சில பரிவர்த்தனைகளை செய்து கொள்கின்றன.

    ஏனோ தெற்கத்திய மத நிறுவனங்கள் அதிகம் சாதியால் கட்டுண்டு கிடக்கிறதோ என்பது என் ஐயம்.

  145. ஒரு விசயத்தைக் கட்டுரையாளர் சொல்லாமல் விட்டிருக்கிறார். ஆதீனம் தன்னுடைய கனவில் சிவபெருமான் தோன்றி இப்படிச் செய்யுமாறு ஆணையிட்டதாக ஆனந்த விகடன் சென்ற இதழில் பேட்டியளித்துள்ளார். பின்னர் சிவபெருமான் நித்தியானந்தாவின் கனவில் தோன்றி தாம்தான் நித்தியின் பெயரை டிக் செய்ததாக கன்பர்மேசனும் செய்திருக்கிறார். இதைத் தெளிவாக ஆதீனமும், நித்தி சுவாமிகளும் சொல்லிவிட்ட பிறகு கேள்வி கேட்க நாம் யார்?

  146. சிவஸ்ரீ.விபூதிபூஷண் on May 11, 2012 at 3:04 pm

    ” இதில் சிக்கல் என்ன வென்றால் ஸ்ரீ நித்யானந்தர் தமது பீடத்தை விட்டு இறங்கவேண்டும் என்று கூறியவர்கள் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு அந்த அறிவுரை வழங்கவில்லை.”

    அன்புள்ள சிவஸ்ரீ.விபூதிபூஷண்,

    தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். ஏனெனில், தமிழ் இந்து.காம் இணையதளம் துவக்கப்பட்ட ஆண்டு பிப்ரவரி 2008- என்பது தான் உண்மை. எனவே, 2004- நவம்பரில் நடந்த காஞ்சி மடம் பற்றிய நிகழ்வுகளை, இந்த இணைய தளத்தில் விமர்சிக்கும் , கருத்துப்பரிமாற்றம் செய்யும் வாய்ப்பு அப்போது இல்லை என்பதை தாங்கள் உணர்வீர்கள்.

    காஞ்சி மடத்தின் அதிபர்களுக்கு , வேறு யாதாவது இந்த 2012-ம் ஆண்டிலேயே , மதுரை மடம் போல, கூடுதல் பதவிகளை கொடுத்தால், அப்போதும் இதே போல இந்துக்கள் எல்லோரும் கண்டிப்பார்கள்.ஒரு சில மதங்களை போல, இந்துக்கள் ஆட்டு மந்தைகள் அல்ல. சுய சிந்தனை உள்ளவர்கள். என் முந்திய கடிதத்தில் தெரிவித்த சில வரிகளை தாங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவற்றை மீண்டும் கீழே ஒட்டியுள்ளேன்.

    ” குற்றச்சாட்டுக்கு ஆளாகிய மட, மற்றும் பீட தலைவர்கள் யாராயினும் , பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, வழக்கு முடிந்தபின், விடுதலை பெற்று , அதன் பின்னரே பீடத்தை அலங்கரிக்க வேண்டும்.அது எந்த மடமாயினும் சரி. எந்த ஆதீனமாயினும் சரி.”:

  147. திரு நாகராஜன் அவர்கள், பாஜக பற்றிய அனைத்து தகவல்களையும் , காலவரிசைப்படுத்தி , அழகாக தந்துள்ளார். அவருக்கு நம் நன்றிகள்.

  148. //சிவஸ்ரீ.விபூதிபூஷண் on May 11, 2012 at 3:04 பம்//
    உங்கள் கருத்து என் கருத்து. மிக அருமையாகப்ப்பதிவு செய்திருக்கிறீர்கள். என்ன பெயரில் எவர் எதிர்த்தாலும் தடுமாற வேண்டாம். இறைவன் நம் பக்கம்.

  149. 1. It is between people who want mutt heads to follow the beaten path shown by earlier acharys vs who want mutt heads to adopt new dangerous methods.
    How do you say like this?. Various Acharyas have stood up ( Like Sri Vidyaranya, Ramadas, GURU Tej Bahdur) when the situation requires. You must be knowing that the current Dwaraka Acahrya ஸ்ரீ ஸ்வரூபானந்த சரஸ்வதி was a freedom fighter and jailed in freedom struggle. When the earlier Dwarka acharya wanted him to be his successor, there was a lot of objection to him. The then Sringeri Maha sannidhaanam Sri Abhinava Vidya theerthar said going to jail for the country is the most sacred thing of all and personally went for the pattabishegam of Dwaraka Acharya Sri Swaroopananda Saraswathi. Dwaraka Acharya courted arrest for Rama Janambhoomi once.

    2. It is between people who want aacharyas to value silence vs who want aacharyas to be vociferous – Oh I don’t know that. Then we should condemn swami Vivekanada also for that.

    3. It is between people who think Dharma saastras are more powerful vs who take court laws are supreme. – Oh then why Kanchi and Sringeri mutts fought in court both during the time of 65th Acharya and then again during the time of our Mahaswami and Mahasannidhaanm Sri Vridha Narasimha Bharathi on Thiruvanaikkaval rights?

    4.நீங்கள் ஜயமோகனுக்காக காந்தியைக் கூறியதற்கு அவர்தான் பதில் கூற வேண்டும். நான் ஏன் கூற வேண்டூம்? -நான் உங்களைக் கேக்கவே இல்லையே? அதான் தெளிவாகக் கூறிவிட்டேனே. அவருக்கு மெயில் அனுப்பினால் கண்டுகொள்வதில்லைஅவர் தமிழ் ஹிந்துவில் எந்தக் கட்டுரைக்கு எத்தனை பின்னூட்டம் வருகிறது என்று எண்ணிப் பார்ப்பார். அதான் இங்கே பதில்.

    5. நித்யானந்த பகதர் கேபிடல் ‘ஆர்’ ரமேஷும், ஏற்கனவே எழுதிவரும் காஞ்சி மட பக்தர் ரமேஷும் ஒருவரேவா வெவ்வேறா – வெவ்வேறு. நான் காஞ்சி மட பக்தர் ரமேஷ் – ரமேஷ்ஸ்ரீனிவாசன். henceforth write as Ramesh Srinivasan to avoid this confusion.

    6. நித்யானந்தரை கடுமையாக கண்டிக்கிறவர்கள் காஞ்சி ஆச்சாரியாரை ஆதரிக்கிறார்கள். ஏன் இந்த ஒரவஞ்சனை என்பதே எனது கேள்வி.?

    -பெரியவர் கைது ஆனார். அவர் சுப்ரேம் கோர்ட் வரை சென்றார். சுப்ரேம் கோர்ட் ஜாமீன் வழங்கும்போது எல்லா ஆதாரங்களையும் நிராகரித்து தீர்ப்பு வழங்கியது.

    7. குற்றப் பிண்ணனியோடு ஏன் பதவி ஏற்க வேண்டும் என்கிற வாதத்தில் உள்ளவர்கள், தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது உடனே தனது எல்லா பதவிகளையும் துறந்து விட்டு நீதிமன்றத்தில் குற்றம் களையப்பட்ட பின்பு தான் பதவி ஏற்றிருக்க வேண்டும். –

    அவர் கைது செயப்பட்டார். தெளிவான தீர்ப்போடு வெளியில் வந்தார். சிலைத் திருட்டு என்று கூட வழக்கு பதிவாகியது. இப்ப பொய் டேப். இப்படியே பொய் வழக்கு போட்டுக் கொண்டே இருந்தால்?

    நித்யானந்தர் சன்யாசி இல்லை. அவர் வழக்கும் நிற்காது. டேப் சரியாக இருந்தாலும் அது செக்ஸ் வித் consent . சட்டப்படி அந்த டேப்பை ரெகார்ட் செய்தவர்கள், ஒளிப்பதிவு செய்தவர்கள்தான் கைது செய்யப்பட வேண்டியவர்கள். சட்டமும் அதுதான் செய்யும். அவர் dyaana பீடத் தலைவராக இருப்பதிலோ அல்லது ஒரு கிருஹஸ்தர் தலைவராகும் வேலாக்குறிச்சி, திருப் போரூர், போன்ற ஆதீனம் ஆனாலும் தவறில்லை. மதுரை ஆதீனம் ஒரு பிரம்மச்சாரி தலைவராகும் ஆதீனம். அதற்கு அவர் தலைவர் ஆனதுதான் கேள்வி.

  150. //என்ன பெயரில் எவர் எதிர்த்தாலும் தடுமாற வேண்டாம். இறைவன் நம் பக்கம்.//
    ஆக நான ஒரு நாத்திகன் என்று முடிவுகட்டிவிட்டீர்கள். என்னமோ இறைவன் என் பக்கம் இல்லாத மாதிரி :). என்னுடையை நிலையை தெளிவுபடுத்திவிடுகிறேன் முதலில். நான நாத்திகன் அல்ல . அந்த பரபிரம்த்தின் மீது நம்பிக்கை உள்ளவன் தான்.(ஹம்ம்ம். அப்படியும் சொல்லலாம்). நான் ஒரு நாளும் ஹிந்துக்களுக்கோ ஹிந்து மதத்துக்கோ எதிரி அல்ல. நான் விரும்புவது நமது பாரதம் ஹிந்து நாடாக இருக்கவேண்டும் என்பது தான். ஆனால் இங்கே விவாதிக்கும் புத்திசாலிகள் தனக்குத்தானே குழிபறித்துக்கொள்கிறார்கள்.(ஆட்டுமந்தைகள் எவ்வளவோ தேவலை). நாம் செய்வது என்ன? நம்மை நாமே சப்போர்ட் செய்து கொள்ளாதது தான். அதைத்தான் எதிர்க்கிறேன். நான் ஒன்றும் சங்கரார்ச்சாரியாரை ஆதரிப்பவன் இல்லை(இது வரை). அதே மாதிரி நித்தியின் மேலும் நல்ல அபிப்பிராயம் ஒன்றும் இல்லை. (இன்றைய செய்தி – நித்தி சப்போர்ட்ர்ஸ் , இலங்கையில் ஹிந்து கோவிலை இடிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்- இதை நான் வரவேற்கிறேன்) இந்த காலத்தில் , (அனைவரும் ஹிந்துகளுக்கு எதிராக செயல்படுவதால்) இந்த மாதிரி செய்தால் தான் எடுபடும். இல்லை நமது சந்ததியினர். புர்காபோட்டுக்கொண்டோ, சர்ச்சுக்கு போய்க்கொண்டோ தான் இருப்பார்கள். அதுவா நமக்கு வேண்டும். அதானால் தான் ரொம்பவும் யோசிக்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டுகிறேன். வேறு ஒன்றும் இல்லை. சரி . அதிபுத்திசாலிகள் . பிஜேபியும் , காங்கிரஸும் ஒரே மாதிரிதான் என்று நிருபித்து உள்ளார்கள். அதானால் என்ன செய்யப்போகிறார்கள்? ஹிந்து விரோத காங்கிரஸுக்கு ஓட்டுப்போடப்போகிறார்களா?????. நான் போட்ட வேறுசில பின்னூட்டங்களை தமிழ் ஹிந்து வெளியிடவில்லை. இப்படி கையை கட்டிப்போட்டுவிட்டு சண்டைபோடு என்றால் எப்படி?

  151. @அத்விகா, உங்கள் பெயரைவைத்து ஆம்பிளையா , பெண்பிள்ளையா என்று தெரியவில்லை . நாகராஜனுக்கு இந்த பதிவில் நன்றிசொல்லியதும் சரி,
    //” குற்றச்சாட்டுக்கு ஆளாகிய மட, மற்றும் பீட தலைவர்கள் யாராயினும் , பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, வழக்கு முடிந்தபின், விடுதலை பெற்று , அதன் பின்னரே பீடத்தை அலங்கரிக்க வேண்டும்.அது எந்த மடமாயினும் சரி. எந்த ஆதீனமாயினும் சரி.”:
    // இந்த மாதிரி பின்னுட்டமிட்டதினாலும் சரி . என்னத்தை கண்டுவிட்டீர்கள்? நீங்கள் ஒரு நடு நிலையாளர் என்று காட்டிக்கொள்கிறீர்களா? இல்லை நீங்களும் அறிவுஜிவிதான் என்று காட்டிக்கொள்கிறீர்களா? இந்த மாதிரியான மன நிலையில் அனைத்து புத்திசாலிகளும் இருப்பதால் தான் நாம் இந்தமாதிரி இருக்கிறோம் (கையாகாலாமல் புலம்பிக்கொண்டு) இந்த மாதிரி இருந்தால் ஒரு நாள் நாம் எல்லோரும் நடு ரோட்டுக்கு வந்து விடவேண்டியது தான்.

  152. அத்விகா அவர்கள்

    தங்கள் கருத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

    குற்றப் பிண்ணணியில் இருப்பவர்கள் புதிதாக ஒரு பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாதேயொழிய தங்கள் ஏற்கனவே வகிக்கிற பதவியை தொடரலாம் என்பது அவரது வாதம்.

    இது ஒரு பாதிக்கிணறு தாண்டும் தீர்வு.

    சந்தேகம் என்று வந்தவுடன் இருப்பதை எல்லாம் துறந்து விட்டு தெருவில் நின்று போராடிய, குற்றமற்றவர் என்று நீதித் தீயில் இறங்கி நிருபீத்தபின்பு தான் அவர் பீடத்திலே உட்கார வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தால் நாம் மேற்கொண்டு விவாதிக்கலாம். அது ஒரு பெரும் தூய நிலை வாதம்.

    அவரது பிரச்சனை புதுப் பதவி ஏற்பதில் தான் என்பது தெளிவாகிறது. இது பாதி ஆட்டு மந்தை தீர்வு.

    ஈக்களின் கூச்சலில் யானைகள் கவலையுறுவதில்லை.
    நான் யானை என்று சொல்வது ஜெயந்திரரையும், நித்தியாவையும் சேர்த்து தான்.
    ஈக்கள் என்று சொல்வது மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து நம்மிலிருந்து வெளியாகும் பயக் குரலையே.

  153. 1.பணத்திற்காக நித்தியானந்தா ஆதீனத்தைக் கைப்பற்ற நினைக்கவில்லை;
    ஏனெனில் அவருடைய தியானபீடத்தின் வருமானம் மலைக்க வைக்கக்கூடியது
    என்பது ஒரு கூற்று.

    எவ்வளவு பெரிய பணக்காரன் ஆனபிறகும் மேலும் பணத்தை குவிக்க நினைக்கும் ஆசை மனித இயற்கை. போதும் என்று நினைக்க வைக்காத ஆசைகளில் முதலிடம் பணம்; இரண்டாவது பெண்ணின்பம்; மூன்றாவது புகழ்.உணவு மட்டும்தான் போதும் என்று சொல்ல வைக்கக்கூடியது.

    “ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும்..”
    (தாயுமானவர்)

    எனவே மதுரை ஆதீனத்தின் சொத்துக்கள் மீது நித்தியானந்தாவுக்குக்கு ஆசையில்லை/ஒரு கண்ணில்லை என்று புறந்தள்ள அவரிடம் ஏற்கனவே உள்ள பணக்குவியலே ஒரு காரணமாக முடியாது.

    2.நித்யானந்தாவின் பக்தர் கூட்டம் மிகப்பெரியது.அகில உலகத்திலும் பரவியுள்ளது என்பது ஒரு கூற்று.

    ‘கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றல் இன்றி நாட்டத்தில் கொள்ளாத கூட்டம்’இருந்தாலென்ன, இல்லாவிட்டால் என்ன? யோகப்பயிற்சி, உடல் நிலை சரியாக,பிடித்த பைத்தியம் தெளிய என்று பலரும் வந்து போகும் கணக்கு,அவர்களிடம் செய்யும் கறார் வசூல் மட்டுமே அவர்களை நிரந்தர பக்தர்கள் ஆக்க/கருத முடியாது.

    அரசியல் கட்சிகள் போல ‘இந்தப்படை போதுமா,இன்னும் கொஞ்சம் வேணுமா’ என்றெல்லாம் கோஷம் போடுவதால் இந்துமதம் வளர முடியுமா? எண்ணிக்கை விளையாட்டு நமக்குத் தேவையில்லை என்பது என் எண்ணம். மேலும் நித்யானந்தாவின் சீடராக 10 பக்க மீறமுடியாத ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வேண்டும்.அப்படி கண்டிஷனை ஏற்பதைவிட நான் மதமே வேண்டாம் என்று ஒதுங்கி விடுவேன்.மதம் என்றால் சுதந்திரம் என்பது நான் அறிந்தது.

    3.பல கோவில்களையும். சமூகப்பணிகளையும் செய்தவர், தானே தனியாளாகச் செய்தவர் என்பது ஒரு கூற்று.

    நித்யானந்தா கட்டியதைவிட பல கோவில்களை தங்கள் தேவைக்கு ஏற்ப
    மக்களே கட்டியுள்ளார்கள். இந்து மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளாமல் இயல்பாகக் கோவில் அமைத்து வழிபாடும் செய்பவர்கள் நம் மக்கள்.

    புதிய கோவில்கள் அமைப்பது அல்ல.இருக்கும் புராதனக் கோவில்களை சீரமைத்து, விட்டுப்போன பூஜைகளைச் செய்ய ஏற்பாடு செய்வதே இன்றைய தேவை.

    4. நாஸ்திகர்களுக்கு நித்யானந்தாவால்தான் பதிலடி கொடுக்க முடியும் என்பது ஒரு கூற்று. அவருடைய கடந்த கால நடவடிக்கைகள் அவ்வாறு பெருமை சேர்ப்பதாக இல்லை.மாறாக நாஸ்திகர்களின் வெறும் வாய்க்கு அவல் கொடுப்பது போலத்தான் நடந்து கொள்கிறார்.

    (Edited and published)

  154. Ramesh,
    ஸ்ரீ ஜெயேந்திரர் சங்கர சன்யாசிகளோடு எப்போதும் வைத்திருக்கும் தண்டத்தைக்கூடவிட்டுவிட்டு – எதனை முறைதான் சொல்வது. பெரியவர் தன சமூகப் பணிகளுக்காகத் தன பதவியை விட்டுவிட்டுச் சென்றார். எல்லா சன்யாசிகளும் தண்டம் வைத்துக் கொள்ளவேண்டியதில்லை. அவர் தனக்குப் பின் ஒரு சீடரை வைத்துவிட்டு, அதுவும் தான் காஞ்சி மடாதிபதியாக இருந்தபோதுதான் சென்றார். ஸ்ரீ ஜெயேந்திரர் வெளியேறியபோது அவர்தான் மடாதிபதி. அவருக்கு முன்பு மஹா பெரியவாளும் தன பொறுப்புகளை ஜெயேந்திரரிடம் கொடுத்துவிட்டு 70 இல் மடத்தைவிட்டுப் பெரும்பாலும் வேறு இடங்களிலும், பின் 10 வருடம் வட மாநிலங்களிலும் சஞ்சரித்தார். 70 தொடக்கத்தில் இருந்தே ஜெயேந்திரர்தான் காஞ்சி மடாதிபதி. 85 இல் அவர் தன மடாதிபதி பட்டத்தைதான் துறந்தார். நீங்கள் நினைப்பது போல் அப்போது அவர் இளைய ஸ்வாமிகள் இல்லை. பல அத்வைத சன்யாசிகள் தண்டம் வைத்துக் கொள்வதில்லை.

    You are completely off tangent on this. Maha Periyava nominated Jayendrar as his successor, yes, but he never left the mutt for good. He used to travel & then return. There is a difference.

    First , no one has been able to answer why jayendrar left the mutt, that too at midnight, that too without even informing Periyava? Why this tearing hurry?

    Also, there was no news from him for the next 3 days. Since he had left behind the staff (which is an indication that U have renounced sanyasm), Periyava did the next logical thing. He nominated Vijayendar in his place. Jayendrar is to be blamed in this.

    Many sanyasis do not have a staff, yes, but rules are different for different mutts.

  155. நல்லது முத்து கிருஸ்ணன்.

    அ) நித்தியாவில் பக்தராவதற்கு பத்து பக்கம் நோட்டில் கையெழுத்திட வேண்டும்.
    பதில் : இது முற்றிலும் தவறு. தயவு செய்து சன் செய்திகளை திரும்ப ஒலிபரப்பாதீர்கள். இதற்கு எத்தனையோ முறை பதில் சொல்லியாகிவிட்டது. இதில் எந்த வித உண்மையுமில்லை. ஏராளமான புது பக்தர்களும் வந்திருக்கிறார்கள். வீடியோ பிரச்சனையினால் நிறைய பழைய தூண்களும் தாங்களாகவே கழன்று போயிருக்கிறார்கள்.

    வெறுமனே வந்து எந்த செலவுமில்லாமல் ஆசி வாங்கி, ஒருநாள் சாப்பிட்டுவிட்டு போகும் மக்கள் ஏராளம். அதே போல, அங்கு நடக்கும் வகுப்புகளுக்கு, அதுவும் அவரே எடுக்கும் சில வகுப்புகளுக்கு மட்டும் தான் சார்ஜ் செய்கிறார்கள்.

    எங்குமுள்ள சுகந்திரமே இங்கும் இருக்கிறது. இன்னும் சொன்னப்போனால், சீடர்களுக்கு மட்டுமில்லை, அங்கு பயின்ற பிரம்மாச்சாரி, பிரம்மச்சாரினிகளுக்கும் எப்போதும் வெளியே போகும் சுகந்திரமும் உண்டு.

    அவர்கள் விருப்பபட்டால் கிரகஸ்த வாழ்க்கைக்கும் அவர்கள் போய்க் கொள்ளலாம். ஓரிரு வருடங்கள் வாழ்ந்து தங்களுக்கான வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

    கமான் ஐயா, இந்தக் காலத்தில் யாரையாவது அப்படி கட்டிப்போட்டு வைக்க முடியுமா என்ன ?

    ஆ) ” ஆதீனத்தின் சொத்துக்கள் மீது நித்தியானந்தாவுக்குக்கு ஆசையில்லை/ஒரு கண்ணில்லை என்று புறந்தள்ள அவரிடம் ஏற்கனவே உள்ள பணக்குவியலே ஒரு காரணமாக முடியாது. “

    நித்தியாவின் சொத்துகளை கம்பேர் செய்ய, ஆதீனத்தின் இயக்கத்தில் உள்ள சொத்துகள் குறைவே.

    ஒரு நிறுவனம், சேவையில் ஈடுபடும்போது அது தன்னை எப்போது என் ஜீ ஓ என்று அழைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சின்ன பெஞ்ச் மார்க் உள்ளது. அதாவது உங்களுக்கு ரூ 100 வருமானமாக வருகிறதென்றால் அதில் வெறும் 2 ரூபாயிலிருந்து 13 ரூபாய் வரைக்கும் செலவு செய்தால் மட்டுமே நீங்கள் தன்னார்வ நிறுவனமாக, சேவை செய்யும் நிறுவனமாக அறிவிக்கப்படுவீர்கள்.

    அதாவது உங்கள் செலவு குறைந்தும், சமூகத்திற்கு செய்யும் பணிகள் மிகுந்தும் இருக்க வேண்டியது கட்டாயம்.

    நித்தியாவின் கணக்கில் வருகிற 100 ரூபாய் 128 ரூபாயாக மாறி சமூகத்திற்கு செலவிடப்படுகிறது. அதாவது அதன் பயன் மிகுந்து சமூகத்திற்கு போய்ச் சேருகிறது. [ இங்கு ஒரு மியூச்சல் பண்டின் நிலைப்பாட்டை நினைவில் கொண்டால் இந்த புள்ளிவிபரம் நன்றாய் பிடிபடும் ]

    பணத்தில் கண், தாயுமானவர் பாட்டு என்று சொல்கிற தாங்கள் ஏன் கொஞ்சம் உண்மையை உரசிப் பார்க்க கூடாது ?

    பணவிபரம், சேவைக்கான செலவுகள் எல்லாமே ஓபனிலே இருக்கிறது.

    இ) “நித்யானந்தா கட்டியதைவிட பல கோவில்களை தங்கள் தேவைக்கு ஏற்ப
    மக்களே கட்டியுள்ளார்கள் “

    பதில் : நித்தியானந்தர் மக்களை விட அதிக கோவில்களை கட்டியுள்ளார் என்று எவரும் சொன்னதாக ஞாபகமில்லை. அப்படி ஏதாவது உளறல்கள் இருந்தால் கடாசி விடுங்கள்.

    கோவில்களை பராமரிப்பதும், புதிய கோவில்களை உலகம் முழுவதும் கட்டுவதும் மடத்தின் ஆதினத்தின் பணி. எந்த ஆதினமும், மடமும் எத்தனை புதுக்கோவில்களை கட்டியுள்ளன, எத்தனை பழைய கோவில்களை புதுப்பித்துள்ளன என்கிற விவரம் உங்களிடமிருந்தால் நாம் இன்னும் அறிவுப் பூர்வமாய் விவாதிக்கலாம்.

    விவாதத்தின் என்னுடைய சரடு மற்றவர்களோடு ஓப்பிடுவதில்லை. அவர்களை மட்டும் தட்டுவதில்லை. ஆயினும் அவர்கள் செய்ய வேண்டிய பணியை, ஒரு இளந்துறவி வெறும் பத்தே ஆண்டுகளில் செய்ய முடியும் என்று காட்டப்பட்டு விட்டது.

    இது வேதநெறியின் மீது அவரது கமிட்மெண்டை காட்டுகிறது.

    ” இந்து மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளாமல் இயல்பாகக் கோவில் அமைத்து வழிபாடும் செய்பவர்கள் நம் மக்கள்.
    புதிய கோவில்கள் அமைப்பது அல்ல.இருக்கும் புராதனக் கோவில்களை சீரமைத்து, விட்டுப்போன பூஜைகளைச் செய்ய ஏற்பாடு செய்வதே இன்றைய தேவை. “

    பதில் : தியான பீடம் இந்து மதத்தை காப்பாற்றுகிறேன் என்று பீற்றிக் கொண்டதில்லை. இந்து மதத்திற்கு தன்னாலான காண்டிரிபியூசனை இவ்வளவு செய்தேன் என்று மட்டுமே சொல்ல முனைகிறது.

    இதில் எங்கே பீற்றிக் கொள்ளல் வருகிறது. அது உண்மை. அதுவும் நாங்கள் தொன்மையானவர்கள், பீடம், மடம், கடம் என்று விவாதம் வரும்போது, அவர்களிடம் வாட் இஸ் யூவர் காண்டிரிபியூசன், புதுசாய் என்னத்தை கிழித்திருக்கீறீர்கள் என்று கேட்பது இயல்பு தானே ?

    ஈ) ” நாஸ்திகர்களுக்கு நித்யானந்தாவால்தான் பதிலடி கொடுக்க முடியும் என்பது ஒரு கூற்று. அவருடைய கடந்த கால நடவடிக்கைகள் அவ்வாறு பெருமை சேர்ப்பதாக இல்லை.மாறாக நாஸ்திகர்களின் வெறும் வாய்க்கு அவல் கொடுப்பது போலத்தான் நடந்து கொள்கிறார். “

    எனக்கு தெரிந்து திராவிட கட்சிகளை கிழித்து தோரணம் போட்டு, கிறிஸ்துவ மிஸனரிகளை தேவையான இடத்தில் நிற்க வைத்து, சரியான இந்துத்துவ கொள்கைகளை பூசி மெழுகாமல், அப்பட்டமாய் அடித்து சொல்லும், ஒரே இளைய ஆன்மீக குரு தமிழகத்தில் அவர் தான்.

    வேறு யார் பெயராவது நீங்கள் சொன்னால் நான் செவிசாய்ப்பேன்.

    ”வாய்க்கு அவல் போடுவது போல “ – ஏதாவது கிடைக்கவில்லையென்றால் அவர்கள் எதையாவது எடுத்து மென்று கொண்டுதானிருப்பார்கள்.

    உங்களின் கோழைத்தனத்தை நினைத்து உங்களுக்கு வெட்காமாயில்லை ? கமான்,

    நித்தியாவின் சிடி வந்தது. அதை பொய் என்கிறோம். சங்கர மடத்து வழக்குகள் பொய் என்று நிரூபிக்கப்படலாம்.. இதையெல்லாம் அவல், சவல் என்று பேசி நமநமத்து போகாதீர்கள்.

    அமைதியாய், ரொம்ப புத்திசாலித்தனமாய், மெளினியாய் இருக்க நித்தியா என்ன எம்பது வயது சாமியாரா ? நாத்திகர்களை நோக்கி கர்ஜீக்க வேண்டாமா, அப்படி ஒரு குரலை நாம் ஆமோதிக்க வேண்டாமா.

    நாத்திக வேரை எதிர்க்க யார் குரல் கொடுத்தாலும் நான் உடன் நிற்கிறேன் என்கிற அத்தண்டிக் பார்வை வேண்டாமா.. சோதனைக் குடுவைகளை இப்போதுதான் சிறுநீர் கழிக்குமிடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமா..

  156. Ramesh,
    1. Is it morally right to offer post of head Adeenam when new selected person already having cases on court ?
    Ans : Nothing wrong in it. It is completely the ownership and responsibility of the existing adeenam to get his successor. Absolutely there is no harm in avoid or over look few old rules which had natural death in the changing era. These all smruithi.

    Rules may change but not responsibilities. It is the respsonsibility of the present adheenam to nominate a successor who is non controversial.

    2. Can Nithayanada accept the post of Adinam ?
    A: Yes. He can.There is no rule that if any cases going on X, he should not be accepting the same.

    He can accept, legally, but there is something called moral responsibility which even a common man is expected to follow.

    3. He is not following the tradition of Mottai and dressing etc . ?
    A: The person who revived the whole mutt, the great Thiru gnana sampandar, had not shaved his head. He was wearing colour dress. And ofcourse, all these custom would have developed over the period of time.

    Do not insult Thiru Gnana Sambandar by comparing Him with Nithi

    4. Is it right to bring some already known person and make him as Peedathi pathi ?
    A: It happened in hindu tradition. Swami narayan was one of the enlighten wonderer who brought by their community people to head the mutt. Rest is the history. Technically swami narayan was not fitting the so many bills of existing terms. But the dedication, devotion, passion the enlighten swami narayan put on the mutt, made the entire sampradaya to the U turn.

    Correct, but Swami Narayan did not have court cases pending against him.

    Spreading Hindusim across the globe is fine. Swami Vivekananda has done it, so has Prabhupada. But they did it without blemish.

  157. Ramesh,

    Doi not try to project as if only you are the torch bearere of hinduism. Labelling people who criticise Nithi as being anti hindu is not only childish, but a totally false statement.

    Before the scnadal broke out, Nithi had many disciples, many of whom were renowned doctors, filmstars, engineers & politicians. But now, it is not the case. That is bcos what Nithi preached & what he practised were different.

    I have attended many sessions of Nithi & know more about him than you.

    Even when the video broke out, Nithi ran away to Kashi. If he had nothing to hide, he should have surrendered to the police. Instead, he got caught while he was hiding.

    Talking of the case, first he said that the video is a fraud. Then he said that it was some kind of religious exercise. Now, he is claiming no woman has filed a molestation case against him.

    Who, in the first place accused nithi of rape?

    His finances was not what it was. Earlier he gave discuourses all over India & in many places in tamilnadu. Now, it is only restricted to his bidadi ashram.

    Know hotel kanchi in chennai, egmore. That is where every month , every month his disciples used to conduct (paid) sessions. Now, there is no sign of it.

    He came to worship in the early hours of the morning through the back door of the Tiruvannamali temple some months back.

    Only now, he has boldly come out in the open.

    He was the most watched personality in You tube, yes. Nithi himself used to proclaim this in every session of his. Every discuourse of his was captured by his disciples on camera.

    Not any longer. yes, he is still watched but for all the wrong reasons.

    Nobody asked Nithi to resign from his post as head of the Bidadi ashram. We are only saying that a new responsinbility cannot & should not be conferred on a tainted person.

    Also, there is no tearing hurry to nominate anyone as a scucessor to the Madurai Aathenam.
    Nithi is still young, he can wait. (it al all)

  158. Hindusim is at danger from many quarters – conversions, malicious campaign etc.,

    But that does not in any way justify this act.

    The outcome of this Nithi episode is this – Hindu religion has become a laughing stock, atleast in tamilnadu.

    Read Nithi’s press statements every day. I have already published some.

    He has asked questions like :

    Are the mutt heads willing to let camers be placed in their rooms?

    I am young, I will come to the street, you also come. Let us see who earns more in 1 month.

    Is this the way for a religious leader to talk & behave?

  159. எது நடந்தோ அது நன்றாக நடந்தது,
    இனி எது நடக்கிறதோ அதுஊம் நன்றாக நடக்கிறது
    ஆகா, எது நடக்கணுமோ அதுஊம் நன்றாக நடக்கும்,
    அன்பர்களே, இது நம் திட்டமோ என்னமோ அல்ல. இறை சித்தம் என்ன என்று ஆராயுங்கள்.

    அன்புடன்
    அகஸ்தியன் அந்தோனிசாமி

  160. காஞ்சி மட பக்தர் ரமேஸீ ஸீனிவாசனுக்கு, நித்தியா பக்தர் ரமேஸ்

    சுகந்திரப் போராட்டத்தில் சிறைக்கு போய் வந்த மடாதிபதி, சிருங்கேரி சன்னிதானத்தின் ஆதரவு என சில நல்ல விடயங்களை பதிவு செய்தமைக்கு நன்றி.

    ” அவர் கைது செயப்பட்டார். தெளிவான தீர்ப்போடு வெளியில் வந்தார். சிலைத் திருட்டு என்று கூட வழக்கு பதிவாகியது. இப்ப பொய் டேப். இப்படியே பொய் வழக்கு போட்டுக் கொண்டே இருந்தால்? “

    சிலை திருட்டு, பொய் டேப் போலத்தான் நித்தியா மேலும், கிட்டத்தட்ட 12 கேசுகளுக்கு மேலே பதிவாகின. சந்தனக்கட்டை, வெளிநாட்டு மோசடி என்று நிறைய.. மத்திய அரசின் 13 துறைகள் ஒரே நேரத்தில் இறக்கப்பட்டு தியான பீடத்தை தரை மட்டமாக்க துணிந்தன. கேசட் கேசை விடுத்து எல்லா வழக்குகள்லிருந்தும் நித்தியா குற்றமற்றவர் என்றே தீர்ப்பு வழங்கப்பட்டது. நீங்கள் சொன்னது போல் இந்த கேசும் கிட்டதட்ட முடிந்த நிலை தான்.

    மீடியாவின் தொடர்ந்த தாக்குதல், நக்கீரன் அவரின் கேசட்டை பட்டி, தொட்டிகளிலெல்லாம் விற்று அசிங்கப்படுத்தியது, இதையெல்லாம் தாண்டி ஒரு மனிதர் நின்று கொஞ்சம் கூட கவலையின்றி எதிர் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

    ஏற்கனவே போலிசு கேசுகளால் அவதிப்பட்ட மடாதிபதிகளின் உடல் நிலை எவ்வளவு மோசமானதாகி விட்டதென்றும், எவ்வளவு கவலைக்குள்ளானார்கள் என்றும், கொஞ்சம் கூட கவலையின்றி ஆனந்தமாய், அதே உக்கிரத்தோடு நிறுவனத்தை நடத்திக்கொண்டிருக்கிறாரே என்றும் மடத்திலிருந்தே பாராட்டு வந்தது. [ எந்த மடத்திலிருந்து கால் வந்தது என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம். ]

    மென்மையா பேசிக்கொண்டு வந்த நீங்கள் படக்கென்று ஒரு குண்டு போடுகிறீர்கள்.

    “ நித்யானந்தர் சன்யாசி இல்லை.”

    எங்கிருந்தய்யா இந்த முடிவுக்கு வந்தீர்கள். கேசட்டை வைத்து நீங்களே வந்த முடிவா.. யார் பிரம்மச்சாரி என்று எதை வைத்து பார்ப்பீர்கள். ஏதாவது இலக்கணம் தாங்களிடம் இருந்தால் தயவு செய்து சமர்பிக்கவும்.

    ”அவர் dyaana பீடத் தலைவராக இருப்பதிலோ அல்லது ஒரு கிருஹஸ்தர் தலைவராகும் வேலாக்குறிச்சி, திருப் போரூர், போன்ற ஆதீனம் ஆனாலும் தவறில்லை. மதுரை ஆதீனம் ஒரு பிரம்மச்சாரி தலைவராகும் ஆதீனம். அதற்கு அவர் தலைவர் ஆனதுதான் கேள்வி “

    தங்களது கருணை அளவிடமுடியாதது. அவரை தியான பீட தலைவராக இருக்க செய்வதில் உங்களுக்கு எந்த வித கஸ்டமும் இல்லை என்பதை நினைக்க பார்க்க மிக்க மகிழ்ச்சி தருகிறது. என்னே உங்களது கருணை, தெய்வத்தின் குரலாக நீங்கள் நிற்பது மிக்க தென்பூட்டுகிறது.

    நித்தியா ஒரு சந்நியாசியல்ல. ஒரு பிரம்மாச்சாரியல்ல என்று சொல்லும் நீங்கள் பெரியவர் கேசு பற்றி பேசும் போது ரொம்ப சாதரணமாய் பொய்க் கேசு வந்தது, தீர்ப்பு வந்தது , இன்னும் கேசு வந்து கொண்டேயிருக்கும், அதற்காக பதவியிலிருந்து இறங்க வா முடியும் என்று கேட்டுக்கொண்டே மிகுந்த விழுமியமான கேள்விகளை தாண்டி செல்கீறீர்கள் ?

    இதுவரை எந்த அப்பழுக்கும் வராத மடத்தின் குரு மீது என்னென்னமான வழக்குகள் வந்தன. ஐயோ !.. அப்போதெல்லாம் இவ்வளவு குரல்கள் எழுந்த மாதிரி தெரியவில்லையே..

    விழுமியங்களை உடைத்து, புதிய ஸ்மிருதிகளை காலத்திற்கேற்ப செய்து கொள்வதில்லை தவறென்றுமில்லை என்று எண்ணுகிற நீங்கள், அந்த சட்டம் மற்றவருக்கும் இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

    உங்களின் உரையாடலின் இழையாய், ஒரு சின்ன போலித்தனம் பரவுவதை பார்க்கிறேன். இந்து மதத்தின் மொத்த பொறுப்பும் தாங்கள் சார்ந்த மடமே கஸ்டப்பட்டு தூக்கி கொண்டு வருகிறது என்கிற எண்ணம் பீடத்திற்கு இருக்கிறதோ இல்லையோ உங்களைப் போன்ற பக்தர்களுக்கு இருக்கிறது.

    கவலைப்படாதீர்கள், அந்த பொறுப்புகளை, சுமைகளை நீங்கள் இறக்கி வைத்தாலும் இந்து மதததிற்கு பேரிழப்பு எதுவும் ஆகிவிடாது.

    உங்களின் பதட்டம் நிறைந்த எழுத்து, கடந்த கால தவறுகளை காபந்து செய்வதிலும், அதை சப்பைக் கட்டுவதிலும் செலுத்தபடுகிறதோ என்று எண்ண வைக்கிறது. எனது கருத்து தவறாகவும் இருக்கலாம்.

    நித்தியானந்தர் சந்நியாசியல்ல, அவர் வந்தது தப்பு என்றும், பெரியவர் மீது கேசு இருந்தது, எல்லாம் சரின்னு தீர்ப்பாயிடுத்து, அதுனால ஓன்னுமில்ல என்றும் எழுகிற எண்ணத்தின் – அடித்தளம் எது ?

    சாதியின் அதீத பிடிப்பா, பிரமீடின் மேட்டிமை தன்னிலே நிறைவுறுகிறது என்கிற எண்ணமா, தனது நியாயங்கள் மற்றவர்களுக்கு இருக்கலாகாது என்று எண்ணுகிற அந்த அடிமனதில் தங்கியிருக்கிற கசடு எது ? அதை விட்டு பரந்து பட்டு மேலெழுந்து வந்து இந்து மதத்தின் மீது மிகப்பெரிய கரிசனை கொள்ள எது தடுக்கிறது. ?

    சில சமயம் வேர்களையே குலுக்கி சுயபரிசோதனைக்கு தயார் செய்து கொள்ள வேண்டும்தானே.. ?

    காஞ்சி மடத்திற்கும் சில கேள்விகள் :

    தங்களின் மீது பாலியில் கேசு, சிலை திருட்டு கேசு, ஓடிப்போன போது அடைபட்டது [ இது எல்லாமே கற்பனை என்பதில எனக்கு எந்தளவும் சந்தேகமில்லை ] என்பது போன்ற பல கேசுகளால் தாக்கப்பட்ட ஒரு ஆன்மீக குருவால் மற்றொருவர் ஆதினத்திற்கு வந்த போது “ மொட்டையடிக்க வேணாமோ ? இன்னொரு பெண்ணோட எப்பவும் சுத்திண்டிருக்கார் “ இப்படியெல்லாமா சொல்லுவார் ?

    இங்கே இன்னொரு விசயத்தை கவனிக்க. விசயம் கேள்விப்பட்ட ரவிசங்கர் போன் செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இரண்டு நிறுவனங்களுக்கும் சில மன வேறுபாடுகள் உண்டு என்றாலும் அதை தாண்டி ரவிசங்கர் இதை இந்து மதத்தின் நல்ல நிகழ்வாய் பார்த்திருக்கிறார். ஜெயந்திரருக்கு ஏற்றுக் கொள்வதில்லை என்ன பிரச்சனை ?

    [மற்ற மடத்து ஆதினங்களின் புகைச்சலையும், சில தீவீர சைவத்தை நாங்கள் தான் காப்போம் என்று எண்ணுகிற சில அபத்த செயல் வீரர்களையும் விட்டுவிடுவோம்.]

    ஏன் ஜெயந்திரர் இப்படி திறக்க வேண்டும் ? கோர்டு கேசு என்று வந்தவுடன் ஆளை அனுப்பி ஸ்டேட்மெண்டை வாபஸ் பெற வேண்டும். [ இதெல்லாம் பத்திரிக்கையில் ஏற்கனவே வந்துவிட்டது ]

    நித்தியா தனது உரையில் தான் சங்கர மடத்தின் மீது வைத்திருக்கிற மிகப் பெரிய மதிப்பை எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறார். ஜெயந்திரரின் விசயத்தை மீடியாக்கள் நாறடித்த போது , மடத்திற்கு சப்போர்டாகவே நிலையெடுத்திருக்கிறார்.
    ஜக்கி போன்ற குருக்களுக்கு வேத நெறி மீது எந்த நம்பிக்கையும் இல்லை. அவர்கள் பக்தி மயமற்ற கார்ப்பரேட் குருக்கள். நித்தியா வேத நெறிக்கு கொடுக்கும் மதிப்பு உண்மையானது. போலியற்றது.

    இத்தகைய தருணத்தில் உண்மை நிலையை, அவரிடம் பேசி தெரிந்து கொண்டிருக்கலாம். மற்றவர்கள் வழியாக அறிந்து கொண்டிருக்கலாம். இல்லை இரு குழுக்களிடம் பேசி சமரசத்திற்கு முனைந்திருக்கலாம். இல்லையென்றால், பொத்தம் பொதுவாக எதாவது அறிக்கை விட்டிருக்கலாம். அதுவுமில்லையென்றால் வாயை மூடி மெளனம் சாதித்திருக்கலாம்.

    எது அவரை பேச வைத்தது ? ரமேஸ் ஸீரிவாசன் அவர்களே உங்களை எது நியாயக் கண்ணாடிகளை மாற்றி பார்க்க வைக்கிறதோ அதுவே அவரையும் பேச வைக்கிறது. பாவம் அவர் தோள்கள் தான் எவ்வளவு பெரிய சுமையை சுமக்கின்றன. 80 கோடி மக்களின் இந்து தத்துவத்தையும், சடங்கையும் காப்பாற்றுவதென்பதென்றால் சும்மாவா ?

    எவ்வளவு நாள் தான் பாவம் நீங்கள், நீங்கள் சார்ந்த மடமும் இத்தகைய பாரமான பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்க போகீறீர்கள். சுமைகளை இறக்கி வையுங்கள். இல்லை ஓரே கண்ணாடியை கொண்டு எல்லா காட்சியையும் பார்க்க பழகுங்கள்.

  161. நன்றி ஸ்ரீ ரமேஷ் மற்றும் ஸ்ரீ பெருந்துறையான் அவர்களுக்கு நன்றிகள் பல. ஊடக மாயை மிசனரி மாயை, இத்தாலிய மாயை ஆகிய வற்றுள் மயங்கியவர் ஸ்ரீ பரமஹம்சரை விமர்சிக்கின்றனர். அன்று தொலைக்காட்சி கண்டுகொண்டிருந்தேன் அவரைப் பற்றி போர்ஜரி வீடியோவை க்காட்டினார்கள் அதை நம்பவில்லை. என்றும் நம்பமாட்டேன். யான் அறிந்தவரை உணர்ந்தவரை மெய்யாகவே வேதனெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க்கவந்தவர் ஸ்ரீ நித்யானந்தர் தான். உலகெங்கும் அவரைப்பற்றிய உண்மையை மறுக்கமுடியாமல் ஸ்ரீ முத்துராமகிருஷ்ணன் போன்றவர்களின் பிதற்றல்களை நாம் பொருட்படுத்தமாட்டோம். யாருடைய எந்த காட்டுக்கூச்சலும் வழக்கும் வம்பும் ஸ்ரீ நித்யானந்தரை எதுவும் செய்யாது. மாறாக அவரை எதிர்ப்பவர்கள் காணாமல் போவது உறுதி.
    ஸ்ரீனிவாசன் ரமேஷ் ஸ்ரீ நித்யானந்தர் சன்யாசிதான். அவர் தான் ஆண் பெண் என்ற தன்மைகளை கடந்துவிட்டதாக மருத்துவ ஆய்வு மூலம் நிரூபிப்பதாக உறுதி கூறுகிறார். ஏன் அதை அரசு செய்யவில்லை.
    “அவர் கைது செயப்பட்டார். தெளிவான தீர்ப்போடு வெளியில் வந்தார்”.
    ஏன் நீதிமன்றத்தில் இன்னும் வழ்க்கு நடைபெறுகிறது? சும்மா சப்பைகட்டு கட்டாதீர்கள்.

  162. தமிழன் அவர்களே….

    // அதிபுத்திசாலிகள் . பிஜேபியும் , காங்கிரஸும் ஒரே மாதிரிதான் என்று நிருபித்து உள்ளார்கள். அதானால் என்ன செய்யப்போகிறார்கள்? ஹிந்து விரோத காங்கிரஸுக்கு ஓட்டுப்போடப்போகிறார்களா? //

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அதி புத்திசாலிகளில் நானும் ஒருவன்….

    நிச்சயமாக நான் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்…..ஆனால் நீங்களும் நானும் மட்டும் பா.ஜ.க வுக்கு வாக்களித்துக்கொண்டிருந்தால் போதுமா? இதர பொதுமக்கள் வாக்களிக்க வேண்டாமா?

    எந்த கட்சியையும் சாராத பொதுமக்களின் ஆதரவை பெற்றால்தான் ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியும்….அதற்கான வழிகளைத்தான் குறிப்பிட்டிருந்தேன்…
    என் கருத்தில் தவறிருந்தால் தவறை சுட்டிக்காட்டுங்கள் …..திருத்திக்கொள்கிறேன்…….

  163. தொடர்ந்து எழுதும் நண்பர்களுக்கு,
    நம்முடைய சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் இணக்கத்திற்கும் இத்தகைய வாதங்களால் என்ன பிரயோஜனம்.காஞ்சி மடத்திலும் குற்றம் இருக்கிறது என்று சொல்பவர்கள் புதிது புதிதாக எழுதுகிறார்கள்.சில குற்றச்சாட்டுக்கள் சிரிக்கும்படியாக இருக்கின்றன சில விஷயங்கள் தனிப்பட்டவரின் பிரச்சினைகள்.அதைப் பொதுவில் பேச வேண்டிய அவசியம் என்ன?.மடத்தின் பெருமையைக் காப்பாற்ற எழுதுபவர்கள் காட்டடி அடிக்கிறார்கள். தமிழ் ஹிந்து அன்பர்கள் இது தொடரவேண்டுமா என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.ஊடகங்களில் வியாபார நோக்கத்தோடு பிரச்சினைகளை பெரிதாக்குவது வழக்கம்.தமிழ் ஹிந்துவும் அதைச் செய்ய வேண்டுமா என்பது என்னுடைய கேள்வி. என்னுடைய அக்கறையின் காரணமாக இதை எழுதுகிறேன்.

  164. @சிவஸ்ரீ.விபூதிபூஷண், சுவாமி , நான் முதலில் உங்களை குறிப்பிட்டே பின்னூட்டமிட்டேன். என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் , நாம் அனைவரும் நம்க்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து இருக்கிறோம். அது வேண்டாம் என்பது தான். நான் ஏதவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

  165. மற்றவர்கள் கருத்துக்களைப் பிதற்றல் என்றெல்லாம் கூறாமல் இருந்தால் விவாதம் பயனுள்ளதாக இருக்கும்.

    நித்யானந்தா ஆசிரமத்தில் வாங்கும் 10 பக்க‌ ஒப்பந்த நகல் வலைதளத்தில் கிடைக்கிறது.அந்த ஆசிரம முன்னாள் பக்தர்களாலேயே வெளியிடப்பட்டுள்ளது.
    நான் சன் டி வியை மட்டும் நம்பவில்லை.

    ஓர் உரையில் நித்யானந்தர் சன்யாசிகளைப் பற்றிச் சொல்லும் போது ச‌மூகத்தில் யாரெல்லாம் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியவில்லையோ அவர்களைச் சமூகம் வெளியேற்றித் தனியாக அமரவைத்து வழிபடத் துவங்கி விடும் என்கிறார். ஃட்ராப் அவுட்ஸ்,கட்டுக்கோப்பான சமூக அமைப்புக்கு ஒத்துவராத‌வர்கள் ஆகியவர்களே சன்னியாசி ஆகிறார்கள் என்கிறார்.சன்னியாசத்தைப் பற்றிய என்ன ஒரு தெளிவான பார்வை!!!
    நித்யானந்தாவுக்கு எப்போது, யாரால் சன்னியாசம் கொடுக்கப்பட்டது?

    தஞ்சை மாவட்டத்தில் ஆதீனங்களுடைய மேற்பார்வையில் நடக்கும் கோவில்கள் யாவும் நன்கு பராமரிக்கப்படுகின்றன. முக்கியமான கோவில்களுக்குக் கட்டளைத் தம்பிரான் நியமிக்கப்பட்டு நேரடி நிர்வாகம் நடை பெறுகிறது.மற்ற ஆதீன மடங்கள் என்ன செய்து கொண்டுள்ளன என்பது கூடத் தெரிந்து கொள்ளாமல் தூஷிப்பது சரியில்லை.இந்த விவாதம் வரும் என்று முன்பே தெரிந்து இருந்தால் புள்ளிவிவரங்களோடு தயாராக இருந்திருக்கலாம்.
    Nithyaanandha caught everyone unawares.

    இங்கேயுள்ள நாஸ்திகர்களுக்கு அவ்வளவு பெரிய கர்ஜனையெல்லாம் தேவையில்லை. இங்கே நாஸ்திகம் பேசுவது நாஸ்திகத்திற்காக அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ‘நானும் நாஸ்திகம் பேசுகிறேன்’ என்று போகின்ற அய்யர் சாதியானை ‘நீயெல்லாம் நாஸ்திகம் பேசினால் எங்க பிழைப்பு என்னாவது’ என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள் நமது தமிழக நாஸ்திகர்கள்.

    இந்து மதத்திற்கு ‘ஆதென்டிசிடி’ கொடுப்பது இனிமேல் நித்யானந்தாவால்தான் நடைபெறப்போகிறது? என்னடா இது இந்து மதத்திற்கு வந்த சோதனை?!
    இவ்வளவு நாள் வாழ்ந்து பக்கம் பக்கமாக எழுதியும் பேசியும் வந்த மகான்கள் எழுத்தெல்லாம் இனி குப்பையிலா? அதெல்லாம் ‘ஆதென்டிக்’ இல்லை. இவர் இனி சொல்லுவதுதான் ‘ஆதென்டிக்’!

  166. ” தமிழன் on May 13, 2012 at 12:59 am ”

    ஆண் பெண் என்று பிரித்து பார்க்காமல், கேட்ட கேள்விக்கு பதிலையும், கருத்து தவறு என்று கருதினால் , என்ன தவறு என்று சுட்டி காட்டினால் , யாராயிருப்பினும் பரிசீலனை செய்து தவறு இருப்பின் திருத்திக்கொள்ளலாம். பெண் என்பதால் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று தாங்கள் கருதினால், தங்களுக்கு ஒரு உண்மையை தெரிவிக்க விரும்புகிறேன். ஆன்மீக விஷயங்களை விவாதிக்கும் அரங்குகளில் பெண்களை ஒதுக்கி வைப்பது இனி எக்காலத்திலும் நடக்காது.

    உதாரணமாக, ஆணாதிக்க வெறியர்கள், பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக, பெண்கள் காரோட்ட கூடாது என்றெல்லாம் சொல்லி சவூதி அரேபியாவில் அழிச்சாட்டியம் செய்துவந்தனர். பல அரேபிய , இஸ்லாமிய நாடுகளில் தற்போது ஏற்பட்டுவரும் புரட்சியின் விளைவாக, சவூதி அரேபியாவில் காரோட்டும் உரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. பெண்ணடிமை இனி எந்த காலத்திலும் எந்த நாட்டிலும் எடுபடாது.

    என் கடிதங்களை சரியாக படிக்காமல் , கருத்து தெரிவித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். காவி உடை மட்டுமே புனிதம் என்று நாம் கருதக்கூடாது. குடும்ப வாழ்க்கை வாழ்பவர்களும், துறவு வாழ்க்கை வாழ்பவனை போல புனிதமானவர்களே. எந்த ஒரு துறையும் தனித்தன்மை கொண்டதே. நம் சமூகத்தில் காவி உடுத்தி ஆதீனம் , மற்றும் மட தலைவராக இருப்பவர்கள் , பெண் தொடர்பு தேவை என்று கருதினால், காவி உடையை விடுத்து, வெள்ளுடை அணிவதே சரியானது. காவி உடையுடன் இருப்பவர்கள் சில ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டும். எல்லா மடங்களிலும், ஆதீனங்களிலும் , ஒழுங்கான சாமியார்கள் கிடைக்காவிட்டால், வெள்ளுடை அணிந்தோரை அமர்த்துவதில் தவறில்லை.

    மடங்கள், புத்தர் உருவாக்கிய பல உதவாக்கரை விஷயங்களில் ஒன்று.. அவற்றை மேலும் நீடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேவைப்பட்டால் மாறுதல் செய்வதில் தவறில்லை.

    மதுரை ஆதீனம் வாரிசு நியமனம் செய்யும் போது, அந்த ஆதீனத்தின் மரபுப்படி நியமனம் நடந்ததா என்பதே கேள்வி. அதிலிருந்து விலகி , ஆணா, பெண்ணா, என்று பிரித்து பேசினால், பெண்களை ஒதுக்கி வைத்துவிட்டு, எந்த மதமும் செயல்பட முடியாது என்று எச்சரிக்கிறேன்.

  167. என்னுடைய கட்டுரை பலரை உசுப்பி விட்டு, கருத்துக்களும் பின்னூட்டங்களும் எங்கெங்கோ போய்விட்டதாகக் கருதுகிறேன். யாரும் யாரையும் வெகு நாட்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. உண்மை என்பது சூரியன் போன்றது. மற்றவை அனைத்தும் அந்த சூரியனின் கதிர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதுதான். யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது, பின்பொரு நாளில் அவர்கள் செய்த தவறினை உணரும் காலம் வரும். மடங்கள் என்பது தமிழகத்தில் சமயத்தையும் மொழியையும் வளர்ப்பதற்காகவும், மக்களை ஆன்மீக வழியில் இட்டுச் செல்வதர்காக்கவும்தான் ஏற்பட்டது. அவை, அதன் நோக்கத்துக்கான வழியில் செல்லவில்லையானால் தட்டிக் கேட்கும் உரிமை அன்று மன்னர்களுக்கு இருந்தது, இன்று மக்களுக்கு இருக்கிறது. அப்படிச் சுட்டிக் காட்டுபவர்களைச் சொற்களால் தாக்கி அடக்கிவிட முயல்வது பேதைமை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என மூச்சு அடங்கும் வரை வாதிடுவது அறிவு வளர்ச்சிக்கு ஆகாது. அரசியல் வாதிகளுக்குச் சுற்றிலும் முரட்டு தொண்டர்கள் தேவை. ஆன்மீகவாதிகளுக்கு அப்படிப்பட்டவர்கள் தேவை இல்லை. மடத்தில் இருக்கும் குறு தன ஆன்மீக கடமைகளைச் சரிவர செய்தாலே போதும். கூட இருக்க நூற்றுக்கணக்கான அடியார்களை சோறு போட்டு வளர்க்க வேண்டியதில்லை. இந்த மடங்கள் தோன்றிய ஆயிரக்கணக்கான வருடங்களில் சமயமும், தமிழும் எந்த அளவுக்கு இவர்களால் வளர்ந்திருக்கிறது என்பதை இவர்கள் சற்றுச் சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டுமே தவிர தேவையற்ற தனிமனித விமர்சனங்கள் தேவை இல்லை. நடந்த நிகழ்ச்சிதான் விமர்சனத்துக்கு உட்பட வேண்டும். சாமியார் எனக்கு மந்திரோபதேசம் செய்தார் அதனால் நான் அவருக்கு அடிமை என்ற எண்ணம் தேவையில்லை. ஊருக்கு நல்லது செய்வோன் எவராக இருந்தாலும் வரவேற்போம், மக்களின் கலாச்சார, பண்பாட்டுக்கு எதிரானவர்களை கண்டிப்போம். அந்த உரிமை நமக்கு உண்டு.

  168. @அத்விகா, தாயே, நீங்கள் போட்ட இந்த பின்னூட்டம் இங்கே சிலபேருக்கு வேண்டுமானால் பிடிக்காமல் போகலாம். நான் கேட்டதற்கு காரணம் , சிலசமயம் நான் போடும் பின்னூட்டங்கள் கொஞ்சம் காட்டமாக இருக்கும். நீங்கள் தாய்குலம் என்று தெரிந்தால் , ஒரு சில வார்த்தை பிரயோகத்தை தவிர்க்கலாமே என்ற எண்ணம் தானே ஒழிய, நீங்கள் பெண் என்பதால் ஆன்மிக விஷயங்களை பேசக்கூடாது என்பதற்கு அல்ல.
    //ஆன்மீக விஷயங்களை விவாதிக்கும் அரங்குகளில் பெண்களை ஒதுக்கி வைப்பது இனி எக்காலத்திலும் நடக்காது.//
    நான் எந்த இடத்திலாவது இந்த மாதிரி சொல்லி இருக்கிறேனா?

  169. @சான்றோன் ,
    //எந்த கட்சியையும் சாராத பொதுமக்களின் ஆதரவை பெற்றால்தான் ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியும்// ஒரு கட்சியைப்பற்றி நல்லவிதமாக கட்டுரை வரும் இடத்தில் , அது அப்படி இல்லை , நீயும் பத்தோடு பதினொன்னுதான் என்று பின்னூட்டம் போட்டால் , அதைப்படிக்கும் ”எந்த கட்சியையும் சாராத பொதுமக்களில் ஒருவர் ” (ஒருவன் என்று முதலில் போட்டேன். அப்புறம் அது என்ன “ஒருவன்” அது ஒருத்தியாக இருக்ககூடாதா என்ற விவாதம் வரவேண்டாம் என்று ஒருவராக மாற்றிவிட்டேன்), பிஜேபிக்கு ஒட்டுப்போடவேண்டும் என்ற எண்ணம் வந்தாலும் அதை மாற்றிக்கொள்ளுவார். அந்த மாதிரியான பின்னூட்டங்களைத்தான் திரு நாகராஜன் போட்டுக்கொண்டு இருக்கிறார்.

  170. அத்வீகாவின் கருத்துக்கு செவி சாய்க்கிறேன்.
    வேலைக்கு போகிற பெண்கள் எல்லாம் சரியானவர்கள் அல்ல என்று சொல்கிற பழமை வாதத்திலிருந்து ஒரு மடம் திரும்ப வர வேண்டும் என்று ஒரு நவீன இந்துவாய் நான் விரும்புவது தவறா. எனது குடும்பத்தால் நான் மடத்திற்கு எடுத்து செல்லப்பட்டாலும் வேத நெறிகளை எல்லோரையும் இணைத்து நவீன தளத்திற்கு எடுத்து செல்பவர்கள் தவறா..
    அத்வீகா அவர்களே, தனது வாழ்க்கையை முழுக்க முழுக்க நித்தியா ஆசிரமத்தில் அர்பணித்துக் கொண்ட பெண் சந்நியாசிகளை பாருங்கள். பெண்ணுக்கு எதற்கு ஆன்மீகம் என்று பேசுகிற உலகத்தில், ஆதினங்களில், காமம் துறக்க பெண்களை தள்ளி வைக்கிற சொல்லுகிற மடங்களின் மத்தியில் நூற்றூக்கணக்கான பெண் சந்நியாசினிகளை உருவாக்குகிற ஒரு ஆன்மீகத் துறவியை அடித்து அடித்து துவைக்கிறது மீடியா.
    சாமியாருக்கு கால் அமுக்க அனுப்பும் பெற்றோர்கள் என்று உமிழ்கிறார் 2ஜீ ஊழல் கனிமொழி. [பெரியாரிய பார்வையாம் ]

    அத்வைதி அக்கம்மாவும், சாரததேவியும் இருந்த மண்ணில் நாம் எத்தனை பெண் துறவிகளை உருவாக்க போகிறோம்.

    எனக்கு தெரியும், இதற்கு கண்டமேணிக்கு பின்னூட்டம் இட்டு கலாக்கய் போகிறார்கள் ? இன்னும் இருபது வருடங்கள் தமிழ் இந்து.காம் இருக்கும் பட்சத்தில், பின்னூட்டங்கள் உயிர் வாழும் பட்சத்தில் இதன் உண்மை தெரியும்.

    நீங்கள் பெண் என்று எழுதியதால் மனம் குவிந்து இதை எழுத முனைந்தேன். இந்த சர்ச்சையின் போது அந்த மடத்து சந்நியாசிகள் எவ்வளவு கேவலப்படுத்தப் பட்டார்கள் என்று தெரிய வருமானால், பெண் மீது இந்த சமுதாயம் இன்னும் எத்தனை வக்கிரங்களை சுமந்து வருகிறது என்று தெரிய வரும்.

  171. முத்துகிருஸ்ணன் என்னத்த சொல்ல ?

    1.
    “ நித்யானந்தா ஆசிரமத்தில் வாங்கும் 10 பக்க‌ ஒப்பந்த நகல் வலைதளத்தில் கிடைக்கிறது.அந்த ஆசிரம முன்னாள் பக்தர்களாலேயே வெளியிடப்பட்டுள்ளது.
    நான் சன் டி வியை மட்டும் நம்பவில்லை. “

    சன் டிவி, முன்னாள் பக்தர்கள் இவற்றை விட இப்போது ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்று நேரடியாக நீங்கள் செக் செய்யலாமே.

    நம்புங்கள். இவையெல்லாம் முழுக்க முழுக்க பொய். சில வழக்கப்படி சட்ட ரீதியான பாதுகாப்பிற்காக சில டாகுமெண்டுகள் இருந்தன. இவைகள் யாவும் இப்போதும் பொது வெளியில் இருப்பவை.

    2.

    ” ஓர் உரையில் நித்யானந்தர் சன்யாசிகளைப் பற்றிச் சொல்லும் போது ச‌மூகத்தில் யாரெல்லாம் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியவில்லையோ அவர்களைச் சமூகம் வெளியேற்றித் தனியாக அமரவைத்து வழிபடத் துவங்கி விடும் என்கிறார். ஃட்ராப் அவுட்ஸ்,கட்டுக்கோப்பான சமூக அமைப்புக்கு ஒத்துவராத‌வர்கள் ஆகியவர்களே சன்னியாசி ஆகிறார்கள் என்கிறார்.சன்னியாசத்தைப் பற்றிய என்ன ஒரு தெளிவான பார்வை!!! “

    சந்நியாசம் பற்றி, பிரம்மச்சரியம் பற்றி [ தனது உடம்பால் மகிழ்ச்சி கிட்டாது அடுத்த உடல் தேடலே பிரம்மசரியமின்மை. தனது உடலாலே மகிழ்ச்சி/மோட்சம் கிட்டுமெனில் அது பிரம்மசரிய்ம். ] இந்த பொருள் பட ஒரு கருத்து.

    உங்களுக்கு ஏதாவது மெல்ல அவல் வேண்டும் என்பதற்குத் தான் இந்த விளக்கத்தையும் கொடுத்தான். இந்த லிங்குகள் எல்லாம் யூடிப்பில் இருக்கின்றன.

    தயவு செய்து சொன்னவைகள் கத்திரித்து மீடியாக்கள் போல பொருள் சொல்லாதீர்கள். பிரம்மசரியத்திற்கு சதாசிவ பிரம்மேந்தரின் உதாரணத்தோடு முழுக்க பொருள் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

    நுனிப்புல் மேய்ந்து, காட்சிகளை இணைத்து, இசை சேர்த்து மார்பிங் செய்கிறது உங்கள் மனம். என்ன சொல்ல.

    3.
    “தஞ்சை மாவட்டத்தில் ஆதீனங்களுடைய மேற்பார்வையில் நடக்கும் கோவில்கள் யாவும் நன்கு பராமரிக்கப்படுகின்றன. முக்கியமான கோவில்களுக்குக் கட்டளைத் தம்பிரான் நியமிக்கப்பட்டு நேரடி நிர்வாகம் நடை பெறுகிறது.மற்ற ஆதீன மடங்கள் என்ன செய்து கொண்டுள்ளன என்பது கூடத் தெரிந்து கொள்ளாமல் தூஷிப்பது சரியில்லை.இந்த விவாதம் வரும் என்று முன்பே தெரிந்து இருந்தால் புள்ளிவிவரங்களோடு தயாராக இருந்திருக்கலாம்.
    Nithyaanandha caught everyone unawares. “

    எந்த ஆதினமும் தங்களது சொத்துக்களை வளர்த்து, எக்ஸ்பெண்டு ஆனதாக வரலாறே இல்லை. கடந்த நூறூ வருடங்களில் எந்த புதுச் சொத்தும் சேர்க்கப்படவில்லை. கோயில் பணிகள் மட்டும் இத்தனை வருட ஆதினங்களால் செய்ய முடிகிறது என்பதை கேட்க வெக்கமாயிருக்கிறது.

    தூ.. ஒரு நாத்திக அரசாங்கம்.. இதை செய்யுமே.

    தஞ்சாவூர் தம்பிரானாம். நிலங்களை விற்று, வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிற மடங்களின் நிலைமை தான் பத்திரிக்கைகளின் சிரிப்பாய் சிரிக்கிறதே.. ஏற்கனவே எதிர்த்த 13 பேரில் 8 மடத்து தலைகள் பின் வாங்கி விட்டன. இன்னும் 5 விக்கெட்டுத்தான் பாக்கி.
    ஐயா.. முத்துகிருஸ்ணன் அவர்களே, தாங்கள் தம்பிரானிடமிருந்து மற்ற சுத்த வீர சைவர்களிடமிருந்து அவர்களின் சாதனைகளை கொஞ்சம் வாங்கி தாருங்கள்.. ஓப்பனாய் தளத்தில் அதை விவாதிப்போம்.

    அவர்கள் கிழித்து தோரணமிட்டு குத்து விளக்கேற்றிய சாதனைகளின் முன் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அதைவிட அதிகமாக கிழிக்க முயற்சிப்போம் என்பது என் பணிவான விண்ணப்பம். [கிழித்த என்பதற்கு செய்த என ஆன்மீக பொருள் கொள்க ]

    4.

    ”இந்து மதத்திற்கு ‘ஆதென்டிசிடி’ கொடுப்பது இனிமேல் நித்யானந்தாவால்தான் நடைபெறப்போகிறது? என்னடா இது இந்து மதத்திற்கு வந்த சோதனை?!
    இவ்வளவு நாள் வாழ்ந்து பக்கம் பக்கமாக எழுதியும் பேசியும் வந்த மகான்கள் எழுத்தெல்லாம் இனி குப்பையிலா? அதெல்லாம் ‘ஆதென்டிக்’ இல்லை. இவர் இனி சொல்லுவதுதான் ‘ஆதென்டிக்’! “

    இவர் மட்டுமே இந்து மதத்திற்கு ஆதெண்டிசிடி என்று என்றுமே சொன்னதில்லை.
    என்ன சொல்ல, அடிச்சுக்க இரண்டு கை போதாது, உங்களின் வாதத்தை கேட்டு.

  172. You are completely off tangent on this. Maha Periyava nominated Jayendrar as his successor, yes, but he never left the mutt for good. He used to travel & then return. There is a difference.
    Sanjay – It shows that you are not aware of the facts. When Sri Jayendra Saraswati left, he was the mutt head. Since Maha Periyavaa left the post very long back, Bala Periyava took charge as Mutt head. Please verify your facts.

    நித்யானந்தர் சன்யாசி இல்லை.” – Yes of course. I believe the video. But that dosenot prevent him to do work for religion or for that matter take sanyasam now.

    But chossing a successor is purely the proragtive of the previous head and the action of the current adheenam cannotbe questioned in a court of law.

    I was now told by my friends that:

    1. Pudukkottai Sri Santhanatha swami was a freedom fighter and served in Jail for that.
    2. Puri Sankaracharyas take at late age and some are even after Grahastashram.

  173. அன்புள்ள நண்பர்களுக்கு,

    மதுரை ஆதீனம் தொடர்பான கட்டுரை வெளியான உடனேயே நான் நினைத்தது, இதற்கு எந்த எதிர்வினையும் காட்டக் கூடாது என்பது தான். அதனால் தான் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தேன். ஆனால், இனிமேலும் பேசாமல் இருப்பது நல்லதில்லை என்ற எண்ணம், இங்கு வந்த சில பின்னூட்டங்களால் ஏற்பட்டுவிட்டது.

    நித்யானந்தா – சன் டிவியில் ‘பிரபலமானபோது’ கடுமையாக அவரை விமர்சித்தவர்களுள் நானும் ஒருவன். அதே சமயம், மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அவர் பொறுபேற்ற உடன் (அது விலைக்கு வாங்கப்பட்டதாகவே இருக்கட்டும்) அப்பாடி, மதுரை ஆதீனம் அருணகிரியாரிடம் (தற்போதைய ஆதீனம்) இருந்து தப்பித்தது என்றே நான் நினைத்தேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. அது பற்றி விரிவான கட்டுரை எழுத திட்டமிட்டிருக்கிறேன்.

    ஆனால், திரு. தஞ்சை கோபாலன் என்ன நோக்கத்தில் கட்டுரை எழுதினாரோ, அது நமது அன்பர்களின் ஜாதிச் சண்டையால் வீணாகி விட்டது. இங்கு பின்னூட்டம் இட்ட பலரும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை முதன்மைப்படுத்துவதையே காண்கிறேன். மதுரை ஆதீனம் விஷயத்துடன் சங்கர மட விவகாரத்தை இழுத்திருக்க வேண்டியதில்லை. இது ஏற்கனவே புகையும் சிலருக்கு சாம்பிராணி போட்டது போலாகி விட்டது. இரண்டும் வெவ்வேறானவை என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், ஜெயேந்திரரை வம்புக்கு இழுத்து தமிழ் ஹிந்துவின் நோக்கத்தையே சிதிலப்படுத்தி இருக்கிறார்கள் சில அன்பர்கள். அந்த அன்பர்களுக்கு பதில் சொல்லக் கிளம்பிய வேறு சில அன்பர்கள் மேலும் பிரச்னையை பெரிதாக்குகிறார்கள். பரமாச்சாரியரும், சிருங்கேரி பீடாதிபதியும் கூட அவர்களிடம் தப்பவில்லை. மொத்தத்தில் இந்தப் பின்னூட்டங்களில் நமது ஒற்றுமையின்மையே வெளிப்படுகிறது.

    இதுகுறித்து திருவாளர்கள் ஜடாயு, கோபாலன், சிவஸ்ரீ விபூதிபூஷன் போன்றவர்கள் நாசூக்காக எச்சரித்தும், இந்த விவாதம் இதே திசையில் தொடர்வது நல்லதாகத் தெரியவில்லை. எனது சந்தேகம் என்னவென்றால், ஹிந்து பெயருடன் நமது எதிரிகள் இந்த விவாதங்களில் பங்கேற்று பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறார்களோ என்பது தான். ஆகவே, உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஹிந்து மக்களுக்கு தமிழக நிலவரத்தை வெளிப்படுத்த வேண்டிய நமது தளம் நமது மன மாச்சரியங்களை வெளிப்படுத்தக் காரணமாகிவிடக் கூடாது என்று அஞ்சுகிறேன். பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்வதன் அவசியம் குறித்து தள நிர்வாகிகள் சிந்திப்பது நல்லது.

    தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக திராவிட இயக்கத்தால் பரப்பப்பட்ட பிரிவினை நஞ்சு இன்னும் முறிந்துவிடவில்லை என்பதையே இந்தப் பின்னூட்டங்கள் காட்டுகின்றன. உணர்ச்சிகரமான நேரத்தில் அறிவுப்பூர்வமாக செயல்படவேண்டும். அறிவு ஸ்தம்பிக்கும் நிலையில் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்போதுதான் நியாயமான முடிவுகளை எடுக்க முடியும். நாமோ, எதிரிடையாக செயல்படுகிறோம். இது வருத்தம் அளிக்கிறது.

    நமது சமுதாயம் ஒரே சீருடையை அனைவரும் அணியுமாறு கட்டாயப்படுத்துவதல்ல. ஹிந்துத்துவத்தின் சிறப்பே இதன் தன்னிகரற்ற சுதந்திரமும் சுய கட்டுப்பாடும் தான். பல சம்பிரதாயங்கள் சேர்ந்தது தான் ஹிந்து மதம் . இதில் ஒரு சம்பிரதாயத்தை இழிவுபடுத்துவது என்பது ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும் இழிவு படுத்துவதாகவே அமையும். வானை நோக்கி காறி உமிழ்ந்தால் யார் மீது எச்சில் தெறிக்கும்?

    ஆகவே , தமிழ் ஹிந்து அன்பர்கள் அனைவரும் தங்கள் வேற்றுமையை மறந்து, ஹிந்து சமுதாய நன்மையைக் கருதி விவாதத்தில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமாய், ஒரு சகோதர ஹிந்துவாக கரம் கூப்பி வேண்டுகிறேன்.

    ”வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
    ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
    சூழ்க வையக முந்துயர் தீர்கவே”.

    -திருஞான சம்பந்தர்

    என,
    சேக்கிழான்

  174. Ramesh,
    You say Jayendrar was the mutt head, fine, then he is all the more responsible for the mutt, not just run off in the middle of the night without even informing anyone.

    You say,
    But that dosenot prevent him to do work for religion or for that matter take sanyasam now.
    But chossing a successor is purely the proragtive of the previous head and the action of the current adheenam cannotbe questioned in a court of law.

    So, now Nithi has become a sanyasi. Great. First you said he was a sanyasi, then you say U agree with the video & now he has become a sanyasi. So, was he not a sanyasi when the video was taken?

    Why so much confusion?

    Nobody is discussing whether what the Aathenam did is correct as per the court of law. We are talking of principles here being thrown to the wind.

    If you believe the nithi video, then on what basis would you accept him as a religious leader?

    Here was a person indulging in **** with a woman

  175. Sekkiyan & Ramesh,

    First of all, please stop saying tha whoever is criticising Nithi is against hindusim.

    In fact, these people are more concerned about the hindu religion than you.

    Just look at the happenings in the last few days.

    Nith visited the madurai mutt a couple of times & made generous donations to the mutt.

    Why? What was the need? No answer.

    Then madurai head visited the bidadi ashram. His disciples were nmot allowed inside the private halls. Only he went in.

    After some time, he came out & announced that Nithi is the successor. He even went 1 step further & crowned nithi at bidadi itself.

    Why this tearing hurry? No answer.

    He came back & nithi was sworn in again.

    In the press conference both of them were asked questions. The aathenam said that Nithi had cured his ailment so he was made the head. Then he said Lord Shiva came in his dreams & commanded him to crown Nithi.

    When he was asked how a person not belonging to the saiva vellalar community was made the head, Nithi said that he belongs to that caste. The aadhenam intervened & said that Nithi belonged to mudlaiar caste but caste does not matter.

    Why these divergent replies? No answer.

    Nithi said that ranjeetha is no longer with him. But she is present with him all the time in full view of the cameras right in the first row.

    I have again posted the editorial from the “dinamani”. Please read it with an open mind.

    மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சன்னிதானமாக, சுவாமி நித்யானந்த பரமஹம்சர் நியமிக்கப்பட்டிருப்பது அந்த ஆதீனத்தின் தனியுரிமையாக இருக்கலாம். இந்த நியமனத்துக்குத் தடை விதிக்க நீதிமன்றமும்கூட மறுத்துவிட்டது என்றாலும்கூட, மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் எடுத்த முடிவு ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தி இருக்கிறது என்றால், பொதுமக்களைத் திகைப்பிலும் நகைப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு பழம்பெரும் கோயில் கோபுரம் சரிந்து விழுந்தால், பக்தர்களின் மனங்கள் பதறுவதற்கு ஒப்பானது இந்தத் தவறான வாரிசு நியமன முடிவு என்பதுதான் உண்மை.

    சைவத் திருமடங்கள் சமயத்தையும் தமிழையும் வளர்ப்பதற்காக நிறுவப்பட்டவை. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்டது மதுரை ஆதீனம் என்பது வரலாறு. இந்த ஆதீனத்தின் தலைவர் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைப்பது என்பது அறிவிப்பின் மூலம் நிகழ்த்தப்படுவதல்ல.

    சைவப் பாரம்பரியத்தில் வந்த ஒருவர்தான் மடாதிபதியாக முடியும் என்பது மட்டுமல்லாமல், அப்படி மடாதிபதியாக நியமனம் பெறுவதற்குப் பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். திருநீறு அணிந்து ருத்திராட்சம் தரித்து பஞ்சாட்சர மந்திரம் முறையாகக் குருமகா சன்னிதானத்திடமிருந்து உபதேசிக்கப்பட்டு தீட்சை பெறுவது முதல் கட்டம். கட்டளைத் தம்பிரானாக மகா சன்னிதானத்தின் ஏவல்களைக் கவனித்து, விசேஷ தீட்சை பெற்றபிறகு பூசைத் தம்பிரானாக நித்திய பூஜைகளைச் செய்து, ஒடுக்கத் தம்பிரானாகத் தன்னை உணரும் தியானப் பயிற்சியிலும் தேர்ந்த பிறகுதான் இளைய பட்டத்திற்கான தகுதியைப் பெற முடியும்.

    இப்போதைய மதுரை ஆதீனத்தின் 292-வது குரு மகா சன்னிதானம் தனது பூர்வாசிரமத்தில் அருணகிரியாக இருந்து தருமபுரம் ஆதீனத்தில் மூன்று ஆண்டுகள் சைவ சித்தாந்தத்தில் பயிற்சி பெற்றவர். 291-வது மகா சன்னிதானம் வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் அடுத்த வாரிசு பற்றிய சூசகம் பெற்றதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    நித்யானந்தர் சைவ வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே ஓர் ஆதீனத்தின் வாரிசாகப் பட்டம் சூட்டுவதற்குப் போதுமான தகுதி அல்ல. ஏனெனில், சுவாமி நித்யானந்த பரமஹம்சர் ஒரு யோக குரு. வேதம், தாந்தீரிகம், யோகம் பயின்றவர். அவருக்கு சைவ சித்தாந்தத்தில் போதுமான பயிற்சி கிடையாது.

    பக்தி மார்க்கம் அவரது வழிமுறை அல்ல. அவரது சீடர்கள் பக்தி செய்தாலும், அவரது படத்துக்குத்தான் பூஜை செய்கிறார்களே தவிர, அவர்கள் சைவ சித்தாந்திகள் அல்லர். சுவாமி நித்யானந்தரின் பயிற்சிகள் ஹதயோகம் சார்ந்தவை; சித்தர் வழிமுறை. சித்தர்கள் மனவெளி மனிதர்கள். சாதாரண மனிதர்களின் மனஒழுங்குகள் சித்தர்களிடம் கிடையாது. அவர்களும் அவர்களது பயிற்சிகளும் சமயச் சடங்குகளுக்குக் கட்டுப்படாதவை.

    ஆனால், மதுரை ஆதீனத்தின் அடிப்படையோ, சடங்குகள், மரபுகள் சார்ந்தது. சாதாரண எளிய மனிதர்களை உருவ வழிபாட்டின் மூலம் மனதைக் கனியச் செய்து, கடைத்தேற்றம் செய்யும் பக்தி மார்க்கம். மேலும், மடாதிபதிகள் என்பவர்கள் அவர்கள் சார்ந்த திருமடங்களில் திரண்ட சொத்துகளைப் பராமரிக்கும் நிர்வாகிகளும்கூட. சைவ சித்தாந்த வகுப்புகளில் தொடங்கி, அவர்களது திருமடத்துக்குச் சொந்தமான, சம்பந்தப்பட்ட ஆலயங்களின் சமயச் சடங்குகளை நிர்வகிக்கும் பொறுப்புகளையும் கொண்டவர்கள்.

    மதுரை ஆதீனத்தின் திரண்ட சொத்துகளை அபகரிக்க நித்யானந்தர் முயற்சிக்கிறார் என்கிற குற்றச்சாட்டில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. நித்யானந்த தியான பீடத்துக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. அவற்றின் சொத்துகள் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். ஆகவே, ஆதீனத்தின் சொத்துகளை அவர் அழித்துவிடுவார் என்ற அச்சம் அர்த்தமில்லாதது.

    தனது சீடர்கள் உதவியுடன் உலகம் முழுவதிலும் 40 இடங்களில் மதுரை ஆதீனத்தின் கிளைகள் தொடங்கப்படும் என்று பட்டமேற்ற நாளில் சுவாமி நித்யானந்தர் கூறியிருக்கிறார். ஒரு மதம் எவ்வாறு வழிபாட்டுக்கூடங்களின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்பட முடியாதோ, அதேபோன்று ஒரு மடம் அல்லது ஆதீனத்தின் சமயக் கொள்கையை அதன் கிளைகளின் எண்ணிக்கையால் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. மனிதர்கள் தேடி வந்தால் அது ஆன்மிகம். மனிதர்களைத் தேடிச் சென்றால் அது வணிகம்.

    மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் குருமகா சன்னிதானமாக நித்யானந்தர் தரிசனத்துக்கு வருவதும் அவரது சீடர்கள் நித்யானந்தரைப் போற்றி கோஷம் எழுப்புவதும் மதுரை ஆதீனத்துக்கு இழைக்கப்படும் அவமானம் என்பதை அவர் ஏன் உணரவில்லை? உலகளாவிய அளவில் தனது ஆன்மிகப் பணியை எடுத்துச் செல்லும் வாய்ப்புள்ள நித்யானந்தர் தன்னை ஏன் மதுரை ஆதீனமாகச் சுருக்கிக் கொள்ள வேண்டும்?

    ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் அடையாளம் உள்ளது. பெயர் உள்ளது. முகவரி உள்ளது. ஆதீனங்களும் அப்படித்தான். மதுரை ஆதீனத்துக்கு ஒரு வரலாறும், தனிஅடையாளமும் பாரம்பரியமும் உள்ளது. நித்யானந்தருக்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. பக்தர்கள் இருக்கிறார்கள். நித்யானந்த தியான பீடத்துக்குள் மதுரை ஆதீனம் கரைந்துவிடுவதும் தவறு. மதுரை ஆதீனத்தில் நித்யானந்த தியான பீடம் கலந்துவிடுவதும் தவறு. இவையென்ன அரசியல் கட்சிகளா ஒன்றோடு ஒன்று இணைவதற்கும் பிரிவதற்கும்? இல்லை, இதென்ன வணிக நிறுவனங்களா ஒன்றை ஒன்று விழுங்குவதற்கு?

    பக்தர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவதிலும் மக்களோடு மக்களாய் மாற வேண்டிய அணுகுமுறைகளிலும் அக்கறை கொள்ள வேண்டிய மடாலயங்கள், தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி, கேலிப் பொருளாவது வேதனையிலும் வேதனை. இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படும் சலிப்பு, மக்களின் தெய்வ நம்பிக்கையை பலவீனப்படுத்தும். இதை மதுரை ஆதீனம், சுவாமி நித்யானந்தர் இருவருமே புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், இவர்களை சரித்திரம் ருத்திராட்சப் பூனைகள் என்று எள்ளி நகையாடும்!

    Nithi was asked why as per the rules, he did not shave his head. He said that even Thirugnana sambandar did not do so. Is this reply you expect?

    Every mutt has certain rules which have to be adhered to. You may or may not agree with it, that is a different story.

    If all the ruels can be flouted then anyone can become a mutt head.

    It is a matter of utmost concern that the world’s oldest religion is being undermined by certain unscrupuluous individuals.

    We all must unite to reverse this decision either by law or by other rightful means.

  176. ஏன் நீதிமன்றத்தில் இன்னும் வழ்க்கு நடைபெறுகிறது? சும்மா சப்பைகட்டு கட்டாதீர்கள். – சும்மா நான் எதையுமே படிக்க மாட்டேன் என்று வெட்டியாக பேசிக்கொண்டிருந்தால்? ஒரு பொய் டேபை வெளியிட்டு 10 மாதமாக வழக்கைத் தாமதப் படுத்தியது யார்? ஹாய் கோர்ட் அது ஒரு பொய் டேப் என்று கூறிய பிறகு அந்த செய்தியயிக் கூட யாரும் வெளியிடவில்லை. வழக்கு நடைப்ற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். எப்படி ஆரியன் ஆரியன் என்று ஒரே பொய்யை சொல்லி அதை உருவாக்கியது போல், சங்கர மடத்தின் மேலும் இப்படி திரும்ப திரும்ப பொய் சொல்லி ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். சங்கர நேத்ராலய, கோவை சங்கர் மிஷன், ஸ்ரீ மாத டிரஸ்ட் பற்றி எல்லாம் நீங்கள் சொல்வதே இல்லை.

    சாமியார் எனக்கு மந்திரோபதேசம் செய்தார் அதனால் நான் அவருக்கு அடிமை என்ற எண்ணம் தேவையில்லை – பின்ன சாமியார் சாமி காரியம் சொன்னாலும் குத்தம். சமூக காரியம் செய்தாலும் குத்தம். அதாவது இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவோடு எல்லாம் இருந்தவரை குற்றம் இல்லை. ஆனால் பி ஜே பி யுடன் சேர்ந்தது தவறு.

    மடங்கள் என்பது தமிழகத்தில் சமயத்தையும் மொழியையும் வளர்ப்பதற்காகவும், மக்களை ஆன்மீக வழியில் இட்டுச் செல்வதர்காக்கவும்தான் ஏற்பட்டது. – அரசாங்கம் ஹிந்து மதத்தைக் காப்பாற்றியவரை சரி. இப்போ இன்றய நிலையில்? ஒரு பக்கம் அரசு ஒரு மதத்தை எக்கச்சக்கமாக பண வரவு கொள்ள வைக்கிறது. இன்னொரு பக்கம் ஹிந்துக்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிப்பது இல்லை அல்லது சாமி கும்பிதுவதே பரிகாரத்துக்கு என்று ஆகிவிட்டது. இன்னொரு பக்கம் ஹிந்து மதத்தைக் குறிவைத்து தாக்கும் மீடியா மற்றும் காசு பார்க்க முடியாத விஷமிகள். இந்த நிலையில் சங்கர மேடம் செய்வது சரிதான். கோபாலன் சாரே ஒரு மின் நிலையம் துவங்கக் கூட இன்று யாரோ அனுமதிக்க வேண்டும் நிலையைப் பற்றி கட்டுரை எழுதி ஒரு மாதம்தான் ஆகிறது.

    வாழ்க உங்கள் பணி.

    ஒரு சந்தேகம். எல்லா கருத்துகளும் வெளியாகின்றன. தமிழ் ஹிந்து பற்றிய கருத்துகள் மட்டும் ஏன் எடிட் ஆகின்றன? படிப்பவர்கள் நான் ஏதோ அவர்களைப் பற்றி தவறாகக் கூறியதாக நினைக்க வேண்டாம். எடிட் ஆனது எல்லாம் தமிழ் ஹிந்துவுக்கு எழுப்பிய கேள்விகள்தான்.

  177. மற்ற ஆதீன மடங்கள் என்ன செய்து கொண்டுள்ளன என்பது கூடத் தெரிந்து கொள்ளாமல் தூஷிப்பது சரியில்லை.இந்த விவாதம் வரும் என்று முன்பே தெரிந்து இருந்தால் புள்ளிவிவரங்களோடு தயாராக இருந்திருக்கலாம். – தருமபுர ஆதீனம் இன்றைய இன்டர்நெட் காலத்துக்கு ஏற்ப திருமுறைகளை www .thevaaram .org என்று ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். அது மட்டும் அல்ல. தருமபுர, திருவாவடுதுறை ஆதீனங்களையும் முடக்க வாரம் இருமுறை இதழ்கள் முயல்கின்றன.

    காஞ்சி மடம்:
    A Note about Trusts

    His Holiness does not own any trust. A Trust cannot be owned. Unfortunately, the media has misrepresented all of these facts. They have made it look as if His Holiness owns these trusts and exerts tremendous monetary control over these trusts, both of which are completely incorrect. Every Trust is managed by an independent Board of Trustees, comprising of professionals and achievers in their respective field, and having a mind for social service. His Holiness is the inspiration to bring eminent individuals together to create Trusts and run social activities through them. These Trusts are independent, fully audited and are law – abiding. The Kanchi Kamakoti Matham has floated 183 such trusts which are all well managed.

    Each of these charitable institutions has its auditors and bank accounts. These Trusts are independent of one another. The Shankara Nethralaya Trust will have nothing to do with the Hindu Mission Hospital trust. It is not one big company as the media likes to potray. They are all independent and are run by a completely diverse un-connected group of individuals. The individuals who run the trust get the guidance and blessings of His Holiness. For Example: the Sankara Nethralaya is managed by Dr Badrinath assisted by professionals. The Sankara Hospital in Coimbatore is managed by Dr Ramani assisted by professionals. The Guruvara Sadhas Trust is managed by Raghavan a Chartered Accountant and his professional team. No institution is lacking in professional manpower. The Acharya has achieved all these with his limited formal education on all the modern management, but with the inherent Gnana attained by the teachings of Pramacharya and His own Tapas. One cannot expect the methods adopted by a MBA, Chartered Accountant, Company Secretary, HR Manager, Attorney, or any such professional to be adopted by the Acharya.
    https://www.sankaranethralaya.org/
    https://www.sankaraeye.com/Aboutus.aspx
    https://www.srimathatrust.org/
    complete list of all charitable organisations are in the list below.
    https://www.kanchiforum.org/interesting/institutions.htm

  178. சைவத் தமிழ்ப் பெருங்குரவரான திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளின் பேரால்.. புகழால்.. அருளால் வளர்ந்த.. வாழ்கின்ற.. என்றும் வாழ வேண்டிய.. அமைப்புகள் தங்களுக்குள் மோதிக் கொள்வதனையும், மரபுகள் சிதைக்கப்படுவதையும், சைவத்திருநெறியை உலகம் சிரிக்க வைப்பதையும் பார்க்கிற போது சைவசமயிகள் மனம் கலங்குதல் இயற்கையே..

    இங்கே இக்கட்டுரை வெளியான பிறகு, ஏராளமான மறுமொழிகள் வெளியாகியிருக்கின்றன.. இவற்றின் மூலம் ஏதோ ஒரு நல்ல.. உறுதியான தகவல் கிடைக்கும் என்று படித்தால், இவை இன்னும் குழப்பமடையவே செய்கின்றன.

    இனி இங்கே.. இப்பிரச்சினையில், எனக்கு எழுதுதற்கு ஒன்றுமே தோன்றவில்லை.. ஆனால், உள் மன ஆதங்கத்தால், ஏதோ எழுதவேண்டும் என்ற உணர்வு மட்டும் இன்னும் விடுவதாக இல்லை..

    ஆதலில் அதனை ஞானசம்பந்தர் மேலான ஸ்துதியாகவே, சொல்லி இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து சைவத் திருநெறியைக் காத்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க விழைகிறோம்..

    செந்தமிழால் செம்பொருளைப் பாடியவருக்கு சங்கதத்தால் அவர் தம் வாழ்வியல் அற்புதம் சொல்லிப் பாடல் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற அவசர ஆவலில் எழுதியது..

    ஸ்ரீமத் ஞானசம்பந்த குரு அஷ்டக ஸ்தோத்ரம்
    ——————— ———————- ———————–

    ப்ரஹ்மபுர ஸ்தல அவதாரம்
    பார்வதீ ப்ரிய பாலகம்//
    பகவதி ஹ்ருதய ஆனந்தம்
    ஜ்ஞாந ஸம்பந்த குரும் நமஸ்தே//

    ஸ்வயமேவ வித்யா கலாபம்
    ஸ்வபர ப்ரகாச நாயகம்//
    சிவபாத ஹ்ருதய புத்ரம்
    ஜ்ஞாந ஸம்பந்த குரும் நமஸ்தே//

    பாண்ட்ய ராஜ தேசிகம்
    பரமத துவம்ஸ கேசரீம்//
    சிவஜ்ஞாந தாள ஹஸ்தம்
    ஜ்ஞாந ஸம்பந்த குரும் நமஸ்தே//

    அஸ்தி சாதிக கந்யகம்
    ஸ்கந்த ஸ்வாமி ஸ்வரூபகம்//
    திராவிட பாஷா ரக்ஷகம்
    ஜ்ஞாந ஸம்பந்த குரும் நமஸ்தே//

    பஸ்மோத் தூளித தேஹம்
    பரம ச்யாமள சுந்தரம்//
    கௌண்டின்ய குல திலகம்
    ஜ்ஞாந ஸம்பந்த குரும் நமஸ்தே//

    வேதவன கபாட ஸாதன காரிணம்
    வேத சிவாகம ஸம்ரக்ஷணம்//
    வாகீசநாத மதுரகவி ஸ்நேகம்
    ஜ்ஞாந ஸம்பந்த குரும் நமஸ்தே//

    ராஜ கந்யா ரோக நிவர்த்தகம்
    ஜ்ஞாந விக்ஞாந ஜகத்குரும்//
    ஸர்வ கிரஹ தோஷ நிவாரணம்
    ஜ்ஞாந ஸம்பந்த குரும் நமஸ்தே//

    மோக்ஷ ப்ரத கல்யாணம்
    ரூத்ராக்ஷ மாலா பூஷணம்//
    அபார கருணா மூர்த்திம்
    ஜ்ஞாந ஸம்பந்த குரும் நமஸ்தே//

    தி.மயூரகிரி சர்மா
    நீரவாடீபுரம், வீணாவித்வபுரம், ஸ்ரீலங்கா

  179. 1. உங்களின் உரையாடலின் இழையாய், ஒரு சின்ன போலித்தனம் பரவுவதை பார்க்கிறேன். இந்து மதத்தின் மொத்த பொறுப்பும் தாங்கள் சார்ந்த மடமே கஸ்டப்பட்டு தூக்கி கொண்டு வருகிறது என்கிற எண்ணம் பீடத்திற்கு இருக்கிறதோ இல்லையோ உங்களைப் போன்ற பக்தர்களுக்கு இருக்கிறது

    Ans – இல்லவே இல்லை. சத்ய சாய் பாபா, மாதா அம்ரிதானதமாயி போன்றவர்களின் சேவைகள் சங்கர மடத்தைவிட பன்மடங்கு மேலானவை.

    2.அதே சமயம் நித்யாநந்தர் டேப் உண்மை என்று நம்புகிறேன். அவர் சட்டப்படி தவறு செய்யவில்லை என்றும், மதுரை ஆதீனத்துக்கு அவரை வாரிசாகத் தேர்ந்தெடுக்க சட்டப்படி உரிமை உண்டு என்றும் கூறியுள்ளேன். நித்யாநந்தர் இந்து சமய சேவை செய்வதை வரவேற்கிறேன். ஆனால் அவர் ஆதீனமாவது மரபுப்படியும், பிரம்மச்சாரி என்ற முறையிலும் தவறு என்று கூறுகிறேன்.

    My view is a Nityandar is not a sanyasi as per the rules. But he is a practisioner of certain practises which are also part of Hindu religion. It is not necessary that only Sanyasis have to do religious teaching . All the Video tapes cannot stand in a court of Law. The actions against Madurai Adheenam also cannot stand in a court of law. I am surprised that the other Adheenams went to Court with the wrong legal advise.

    3. Many people have advised that the other mutts have to do social services. First the properties of the mutts both in TN and Karnataka were all either taken away or the mutts could not collect money from tennants. The Karnataka Mutts started colleges to sustain themselves. Simillarly the followers of the mutts support their mutts and the swamjis there also now politically becoming active.

    In Case of Tamilnadu we neither follow our swamis nor support them. We neither visit them. How many of you know about the activities of Dharumapuram Adheenam. In Tamil nadu we have a false imaginations that the Mutt heads have to do only poojas and give us prasadams, give blessings.But the Mutts have to engage people. Now various swamijis like Sri Sri, Swami Dayanda Saraswati engage people in various activities. Instead of Calling Sankara Mutt a Brahmin mutt, each one have to go their traditional mutts, follow them. In my view 40% of Tamilnadu people can trace their roots to Thiruvaavaduthurai or Dharumai Adheenams. The Thiruvaavaduthurai Adhenam tried to go to Villages and engage people and work against conversion. But he was not allowed to go as the weekly twice medias started focussing on him. Dharumai adheenam also faced the simillar onsalught. Instead of preaching to on sankara mutt, Go to your own adheenam, support them and work with them, Once a crowd starts supporting them, they will restart their works.

    More than the media, the fear of Gopalans and Muthukrishnans only deter the adheenams.

    4. இதுகுறித்து திருவாளர்கள் ஜடாயு, கோபாலன், சிவஸ்ரீ விபூதிபூஷன் போன்றவர்கள் நாசூக்காக எச்சரித்தும், இந்த விவாதம் இதே திசையில் தொடர்வது நல்லதாகத் தெரியவில்லை. எனது சந்தேகம் என்னவென்றால், ஹிந்து பெயருடன் நமது எதிரிகள் இந்த விவாதங்களில் பங்கேற்று பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறார்களோ என்பது தான்.

    Not at all. Mr Gopalan was clear in his article. Even if we had any doubt, he came back and clarified that he is against the Kanchi Acharya as 1. It was only the right of his family to take politicians to Kanchi Mutt. 2. He met the seer at Kashi and introduced himself as the one who belonged to a family that brought the Acharya to the right path back. 3. The Acharya not wishing to talk to him. 4. Told that Acharya is behind money and what not?

    Now you doubt the intention of the readers. As I have repeatedly pointing out that this website is confused. On one side it wants religious leader to work in social activities and bring Hindus together. On the other side it instead of supporting them – I have given all the court verdicts – does the same thing what the media does.

    I am asking a straight question? Can the editorial of Tamilhindu can come out and clarify on what exactly you stand for?

    5. And to Advika – You cannot expect role for woman in religious mutts if you say that in case of an allegation mutt heads have to relinquish their post. Then mutts and religious leaders will try to avoid role for women in religion. It will be easy for people to thorw allegations when women are around . why invite trouble?

  180. “Nith visited the madurai mutt a couple of times & made generous donations to the mutt.”

    Answer : Nithiya not only visited madurai mutt. He had visited all other mutt. And so many mutt people regularly visiting his mutt also.

    “Why? What was the need? No answer.”

    Answer : Please go through the nithi idea on how all mutt should work together. It has spoken long back before all these discussion. Working with all tradition and all mutt or part of the dhynapeetam style. Infact so many karnataka mutt gurus comes and regularly stay their in ashram for healing and yoga purposes.

    https://www.youtube.com/watch?v=CmdOrFJfjrU&feature=BFa&list=PL211F325202041136

    “Then madurai head visited the bidadi ashram. His disciples were nmot allowed inside the private halls. Only he went in. After some time, he came out & announced that Nithi is the successor. He even went 1 step further & crowned nithi at bidadi itself.

    Why this tearing hurry? No answer. He came back & nithi was sworn in again. ”

    Answer : Pls dont make whole event as crime thriller. You are assuming both parties as comedian or absolute villian who planned great bomb planting event.

    How offer was given, what nithya suggested, why he was hesistant, why current 292 adheenam was insisting him to take care of that immediately – all had valid reason. Both have explained in thiruvannamalai press meet in detail. Regarding money it is offer, as symbol of gratitude from nithya.

    ” On caste .. Why these divergent replies? No answer. ”

    Answer : Regarding caste it already cleared very much by issuing caste certificate. Entire thiruvannamali particular caste has given vouch for it. Swami grand father had given some detail
    family hierarchy.

    ” Nithi said that ranjeetha is no longer with him. But she is present with him all the time in full view of the cameras right in the first row. ”

    Answer : These show how ignorant you are. She is just one more devotee in the ashram. But any time press meet happenes these people take all the effort to cover up particular person and do the remaining in the editing stuff.

    When i was in meeting where atleast 7000 people were attending and few very demonstrating levitation, oh god, particularly few press behaved very badly to capture few figures. And how they termed in the news were height of non sense.

    Well we all know what media is all about !!

    But what is surprising to me is, even tamil hindu readers are strongly saying a) video is true b) the lady is always roaming around.. etc. etc.. I can see the impact of suntv and nakkeran.

  181. சில விவாதிக்க வேண்டிய கருத்துப் பாதைகள்

    ” 1. அவருக்கு சைவ சித்தாந்தத்தில் போதுமான பயிற்சி கிடையாது.”
    ஒருவருக்கு இளைய சந்நிதானமாக இருந்து பயிற்சி பெற்ற பின்பு தான் மற்றவருக்கு வர முழு தகுதியிருக்கிறது.

    பதில் : சித்தாந்தத்தில் அவருக்கு உள்ள அறிவைப் பற்றி எனக்குத் தெரிந்து யாருக்கு கேட்க அருகதையில்லை. சிவ சூத்ரம், பிரம்ம சூத்ரம் என்று அவர் பேசிய பேச்சுகளே கிட்டத்தட்ட சில நூறு மணி நேரங்களுக்கு ஓடும் யூடிப்பில்.

    எப்படி துணி அணிவது, மடத்து வழக்கங்கள் அவருக்கு எப்படி தெரியும் என்று கேட்பது புதிதாக வந்த ஒருவருக்கு வேண்டுமானால் புதிதாய் இருக்கலாம். ஏற்கனவே நிறைய கோவில்களை ஆகம விதிப்படி நடத்தும் ஆதினத்தை விட பெரிய நிறுவன நிறுவனரிடம் இந்த கேள்வியை கேட்பது நகைப்புக்குரியது.

    ஆனாலும் நித்தியா இந்த கேள்விக்கு மிக பணிவாகவே பதில் சொல்லியிருக்கிறார். எதை எதை கற்றுக் கொள்ள வேண்டுமோ அதை அப்படியே கற்றுக் கொள்வேன் என்றும் சொல்லி, கடந்த தினங்களில் கற்று கொண்டும் பூசைகளை ஆரம்பித்துமிருக்கிறார்.

    ஒரு முறை தியான பீடத்தின் செயல்முறைகளை கண்டவர்களுக்கு இந்த கேள்வி எழ வாய்ப்பேயில்லை. 292 குரு மகா சந்நிதானம் இதை பல முறை கண்டு ஆச்சரியத்த பின்னரே இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.

    2. உலகளாவிய அளவில் தனது ஆன்மிகப் பணியை எடுத்துச் செல்லும் வாய்ப்புள்ள நித்யானந்தர் தன்னை ஏன் மதுரை ஆதீனமாகச் சுருக்கிக் கொள்ள வேண்டும்? “

    பதில் : இதை ஒரு முக்கியமான கேள்வியாக கருதுகிறேன். உண்மையில் சொல்லப்போனால் நித்தியா பக்தர்கள் பெரும்பாலானவர்களுக்கு இந்த கேள்வி இருக்கத்தான் செய்கிறது. எனக்குள்ளும் இந்த கேள்வி இருக்கிறது.

    இதன் பதிலை பின்னூட்டமாக போட முடியாது. ஒரு கட்டுரையாகத்தான் எழுத முடியும்.

    பொதுவாகவே இந்த பின்னூட்டஙக்ள் போகும் பாதை மிகவே சலிப்பூட்டுகிறது.
    இதில் கீழ்வரும் கருத்து நீரோடைகள் இருக்கின்றன.

    நித்தியாவின் பக்கம், காஞ்சி மடத்து குரல்கள், சநாதன குரல்கள் ( மொட்டை, சாதி )
    நவீன பயங்கர குரல்கள் ( பணம் வாங்கியிருப்பார், ஏமாத்து கோலம், அவர் சந்நியாசியல்ல, வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது இன்னொரு பதவி ஏற்க கூடாது )

    நிறைய மக்களின் பதிவில் அவர்களுக்கு செய்தி உணவுகள் மீடியாக்கள் மூலம் வழங்கப்படுவதால் அவற்றை பற்றிய செய்திகளே முதன்மையடைகின்றன. அவ்ர்களின் வார்த்தை வழியாக இவர்களும் மேலேறுகிறார்கள்.

    ஹிம். சலிப்பூட்டுகிறது .. நன்றி. வணக்கம்..
    சதாசிவ சாமரம்பாம் ஞானசம்பந்தாச்சார்ய மத்யமாம்.
    அஸ்தமாச்சார்ய பர்யாந்தாம் வந்தே குரு பராம்பராம்..

  182. Nithyavuku sombu thookum periyavarkal plz answer my following questions:

    1) What happend to DOB issues.. poosi moliki answer panna vendam..he decalared himself enlighten when new millenium born.. its fancy number he is playing with…
    2) 1crore prize for who can tell truth behind why he was thrown from 2 initial places
    – initially in Erode district before coming to bangalore
    – From that car shed in miller bunk road near by cunningham road in bangalore
    3) who wrote the initial episodes in kumumdam and what happend in between with original author and nihty..

    His teachings are copied from Osho to satisfy intellect minds.. his dressings are like Ramakrishna mutt to hold spiritual desires.. his activities are like politician to hold control on society.. his hidden activites are worster than criminal..

    I was saved by Teachings of Ramakrishna and Vivekandna and my honesty made me to come out of him..

    he is trying to hold the current place just to escape from court proceedings nothing else…

  183. Ramesh

    சைவ சித்தாந்தத்தின் அடிப்படை பிரம்மா சூத்திரம் அல்ல. சிவஞான போதம்.

  184. ///இதுகுறித்து திருவாளர்கள் ஜடாயு, கோபாலன், சிவஸ்ரீ விபூதிபூஷன் போன்றவர்கள் நாசூக்காக எச்சரித்தும், இந்த விவாதம் இதே திசையில் தொடர்வது நல்லதாகத் தெரியவில்லை.///

    கோபாலன் எச்சரித்ததாக அதுவும் நாசூக்காக எச்சரித்ததாகத் தெரியவில்லை.
    ஜடாயு எச்சரித்த உடனே நான் அது ஏற்கப் படவேண்டும் என்று எழுதினேன். அதனை நான் வலி மொழிந்தும் சிலர் விடாப் பிடியாக காஞ்சி மடத்தின் மீது திருப்பித் திருப்பிச் சேற்றை வாரி இறைத்துக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையாகவே இப்படிப் பட்டவர்களால்தான் காஞ்சி மேடம் அனைவரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது. சொன்னாலும் ஏற்கும் பக்குவம் இவர்களுக்குக் கிடையாது.

    ரமேஷ் ஸ்ரீநிவாசன் காஞ்சி மேடம் ஆரம்பித்த டிரஸ்டுகள் குறித்துக் கொடுத்த விளக்கம் அருமை. ஆனால் ஏதாவது குறை சொல்லியே ஆக வேண்டும் என்று இருப்பவர்களுக்கு இதெல்லாம் கண்ணில் படவே படாது.

    மயூரகிரி சர்மா அவர்களின் சமஸ்கிருதப் பாடல் அமிர்தம். பாராட்டுக்கள்.

    திருஞான சம்பந்தர் வந்துதான் இனிமேல் இந்து மதத்தைக் காக்க வேண்டும் போல இருக்கிறது.

  185. ஆம். நம் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வந்தாலோ, நம்மால் சரியான பதில்களைக் கொடுக்க முடியாமல் போனாலோ, அல்லது மற்றவர்கள் எல்லாம் நம்மைவிட அறிவு,ஆற்றலில் குறைநதவர்கள்(‘இவர்களிடம் என்ன பேச்சு?’) என்று எண்ணம் வந்தாலோ சலிப்பு எற்படுவது இயற்கைதான்.

    ‘இளமை முறுக்கோடு நித்யானந்தா வந்துவிட்டார், எல்லோரும் விலகிவிடுங்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அவர் கோவர்தன மலையையே தூக்கிவிடுவார்’என்று கூறினால் ‘ஆமாம் சாமி’ போட்டால் சலிப்பு ஏற்படாது.மேலும் உற்சாகமாக மாற்றுக் கருத்துக் கூறுபவர்கள் மீது ‘தூ’ என்று துப்பலாம்.

    எல்லாவற்றுக்கும் பாயின்ட் பாயின்டாக பதில் கூறியவர்கள் நித்யானந்தா எப்போது,எங்கே, யாரால் சந்நியாசத்திற்கு அழைக்கப்பட்டவர் என்ற கேள்வியை மட்டும் தாண்டிச் சென்றது ஏனோ?

  186. Dear All Sisters and Brothers,

    Enough is enough. The charges and counter charges are not good for Hinduism.
    Please stop this. I am puzzled to see the silence of Tamilhindu editorial board for not stopping this. Please editors, please understand that you are not doing service to Hinduism by encouraging this.
    Please stop this immediately.
    Regards.

  187. சைவ சமயத்தில் நல்ல மறுமலர்ச்சி ஏற்பட்டு சிவ வழிபாடு/ சிவ தீட்சை எடுப்பவர் எண்ணிக்கை கூடி வருகிறது. ஒவ்வொரு சிவாலயத்திலும் சிவனடியார் திருக்கூட்டங்கள் அமைந்து, திருவாசகம் முற்றோதல், சிவபுராணம் பாராயணம் என்று ஆன்மீகத்தில் அதிகமானோர் உள்ளன்புடன் ஈடுபட்டு வருவதை கண் கூடாகக் காண்கிறோம்.ஆதினங்கள் நடத்தும் சித்தாந்த வகுப்புக்களில் தேறிய இளைஞர்கள் பலர் உள்ளனர்.

    சமீபத்தில் மயிலை கற்பாகாம்பாள் சன்னிதியில் ஒரு மூலையில் கைகட்டி நின்று தேவாரப் பாடல்களை மனம் உருகிப் பாடிக் கொண்டிருந்த 20 வயது இளைஞரைக் கண்டேன்.இவர்களைப்போன்ற சிவனடியார்களால் சைவம் என்றும் வாழும். சைவம்/இந்துமதம் பணத்தாலும் சொத்துக்களாலும் தான் வாழும் என்று எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்:” தங்கள் கருத்துடன் நான் உடன்படவில்லை”

  188. Ramesh,

    Ur experience is only with you tube.

    I have attended NSP sessions with NIthi which ran for 1 week. Also, many other 1 day sessions.

    The video is authentic & there is absolutely no doubt in that.

    I was shocked beyond words when that video came out.

    More so, because Nithi advocated celebacy.

    Many discples of nithi were disillusioned. So many young girls who had left their family & joined the mutt have many sad stories to relate.

    In chennai, in hotel kanchi there used to be 3 days sessions held by a Nithi disciple, who incidentally hapens to be one of the directors of the hotel.

    During one of the sessions, when one of the girls who attended asked him whether she could become a full time disciple at the mutt, he said ” You can but I suggest you do not. It is not advisable”.

    I did not understand the meaning then. Now I do.

    Even a few days back, Nithi disciples hurled chappals at the crowd which tried to enter the mutt in the full presence of the police.

    The happenings in one of the most celebrated mutts in the country has brought a very bad name to hindu religion.

    The sooner it is reversed, the better.

  189. உண்மையான இந்துத்துவ நெறிகளின் அடிப்படையில், தமிழ்ஹிந்து எப்போதும் கருத்து சுதந்திரந்திற்கும், அறிவார்ந்த விவாதங்களுக்கும் இடமளித்து வரும் தளம் என்பதை வாசகர்கள் நன்கு அறிவார்கள். அதனடிப்படையிலேயே, இங்கு பலதரப்பட்ட இந்துப் பார்வைகளையும் அளிக்க முயல்கிறோம். இவற்றுள் சில ஒன்றுக்கொன்று முரணானதாகவும் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் அவை இந்து அறிவியக்கத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.. மேலும் ஒவ்வொரு கட்டுரையின் கருத்தும் தமிழ்ஹிந்துவின் கருத்தல்ல, அக்கட்டுரையாளரே அதற்கு முழுப் பொறுப்பு என்பதையும் பலமுறை முன்பே தெளிவு படுத்தியிருக்கிறோம்.

    இந்தப் பதிவின் மறுமொழிகள் அத்துமீறிச் சென்று கொண்டிருப்பதாகவும், இனிமேல் இவை எந்த ஆக்கபூர்வமான உரையாடலுக்கும் வழிவகுக்கப் போவதில்லை என்றும் பல வாசகர்கள் எங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
    எனவே இந்தப் பதிவின் மறுமொழிப் பெட்டி மூடப் படுகிறது.

    பங்களித்த வாசகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

Comments are closed.