மதர் தெரசா: ஒரு பார்வை

1997ம் ஆண்டு அன்னை தெரேசாவின் இறுதி ஊர்வல சடங்குகள் இதுவரை யாரும் கண்டிராத ஆர்பாட்டத்துடன் நடத்தப்பட்டது. இதில் நமது செக்யூலர் தலைவர்கள் பொறுமையாக வாடிகனினால் நடத்தப்பட்ட 2 மணிநேர சடங்கை பார்வையிட்டு பிறகுதான் அவர்களை இறுதி மரியாதை செய்ய அனுமதித்தார்கள். நேதாஜி மூடிய விளையாட்டு அரங்கம் அன்று இந்தியர்க்ளின் வரிப்பணத்தை கொண்டு இரங்கல் மரியாதை செய்தது ஒரு வாடிகனின் தலைநகரை போல் காட்சியளித்தது. இது அரசர்களுக்கு நடத்தம் இறுதி மரியாதை போல்தான் இருந்தது.

இதில் பணம் படைத்தவர்களும் செக்யூலர்களும்தான் கலந்து கொண்டார்கள், ஏழைகள் அல்ல. மீறிவந்த ஏழை கூட்டத்தை ஒரு மென்மையான லத்தி உதைமூலம் கலையச் செய்ததாகப் பொய் செய்திகள் வெளிவந்தன. இனிமேல் அவர்களின் தேவை மிஷினரிகளுக்கு தேவையில்லை. தாங்கள் திட்டமிட்டபடி அவரை ஒரு தன்னிகரில்லா கிருஸ்துவ தொண்டராக உலக அரங்கில் உயர்த்தியாகி விட்டது. இவரை கல்கத்தாக்காரர்கள் தங்களுக்கு கிடைத்த வரபிரசாதமாக எண்ணி பெருமைப்படுகிறார்கள். ஆக்நஸ் பேஜாஜியூ என்ற தெரேசா தன் பிறந்த ஊரான அல்பேனியாவில் இருந்திருந்தால் இவ்வளவு புகழ் பெற்று இருக்க மாட்டார். அந்த அல்பேனியா இந்தியாவை விட மிகவும் ஏழ்மையான நாடு. தம் மக்களுக்கு தொண்டு செய்வதை விட்டு இவருக்கு இங்கே என்ன வேலை? நீண்ட நெடுநாளைய மதம் பரப்பும் திட்டத்திற்கு வாடிகனால் தேர்வு செய்யப்பட்டு இங்கே சோனியாவை இறக்குமதி செய்தது போல் இவரையும் இறக்குமதி செய்தார்கள்.

இன்று கல்கத்தாவிற்கு என்ன பயன் தெரேசாவால் என்பதைவிட கல்கத்தாவால் தெரேசா உலக அரங்கில் சிறந்த சமூகசேவகியாக நிறுத்தப்பட்டுவிட்டார் என்பதுதான் நிதர்சனம். இவரது முதன்மைப் பணி பிணியில் இறப்பை எதிர் நோக்கும் நோயாளிகளுக்குத் தொண்டு செய்வது என்று அறியப் பட்டது. ஆனால் உண்மையில் அவர் வெளிநாட்டு கிருஸ்துவப் பணக்காரர்களிடமிருந்து பணம் திரட்டும் வேலையைதான் தீவிரமாக செய்து வந்தார் என்று பல வெளிநாட்டு எழுத்தாளர்கள் கூறியுள்ளார்கள். அவர் நடத்திய நோயாளிகளின் இருப்பிடம் நம் ஊர் அரசாங்க மருத்துவ மனையைவிட மிகக் கேவலமான முறையில்தான் இயங்கி வந்தது. வசதிகள் ஏதும் இன்றி சுகாதாரமற்ற முறையில்தான் இயங்கியது என்று பலர் பகிங்கரமாக குற்றம் சாட்டியுள்ளார்கள். உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்காமலும் பெயின் கில்லர் போன்ற மருந்துக்களை செலுத்தாமலும் ஏசு ஜபம் செய்தால் எல்லாம் தானே குணமாகிவிடும் என்று அறிவுரை சொல்லியே பலர் மரணம் அடைந்தார்கள். இதே நிலையைதான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த குழுந்தைகள் காப்பக இல்லங்களிலும் இருந்தது.

httpsv://www.youtube.com/watch?v=dSvFCwGmGow

httpsv://www.youtube.com/watch?v=6Pei8lSiv6s

இப்படி மோசமான நிலையில் நடத்தப்பட்ட காப்பகங்கள் மருத்துவமனைகள் பற்றி உலகில் மிகவும் பிரபலமான மருத்துவச் செய்திகளை வெளியிடும் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்சன்ட் (Lancent) என்ற பத்திரிகையின் தலைமை ஆசிரியர் டாக்டர் ராபின் காக்ஸ் (Dr.Robin Cox) கடுமையாக சாடியிருந்தார். இந்த இடங்களில் நோயாளிகள் படுக்கப் படுக்கை வசதி இல்லாமல் வெறும் தரையில் படுக்க வைக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சில குறுகிய அறைகளில் 60க்கு மேறப்பட்ட நோயாளிகளை அடைக்கிறார்கள் என்றும் ஊசிபோடும் சிரிஞ்சுகளை மறுபடி மறுபடி பச்சை தண்ணீரில் நனைத்து உபயோகிக்கிறார்கள் என்றும் கூறுகிறார். பல தீவிர சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் இல்லாமலும் நோயாளிகளை மாற்று மருத்துவமனைக்கு அனுப்பாமலும் அங்கேயே சாகடிக்கப் படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இப்படி சுகாதாரமற்ற முறையில் நேயாளிகளை நடத்துவதால் அங்கே பணியில் இருக்கும் பல நர்ஸ்கள் காசநோய் எயிட்ஸ் போன்ற நோய் தொற்றிக்கொண்டு அவதிப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். இந்த குறைகளுக்கெல்லாம தெரேசாவின் ஒரே மருந்து ஏசு ஜபம்தான். இந்த ஜபம் செய்ய பொருள் செலவோ வங்கிக் கணக்கோ தேவையில்லை!

இதுதான் அவர் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் செய்துவந்த பிரார்த்தனை தொண்டு. பல சமயம் அவர் நோய்வாய்ப் பட்டால் இங்கே சிகிச்சை மேற்கொள்ளாமல் பாஸ்டன் போன்ற வெளிநாட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். தனது கடைசிக் காலத்தில் நோய்வாய் பட்டபோது பயணம் செய்ய இயலாததால் கல்கத்தாவில் உள்ள ஆர்.கே.பிர்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இது ஹிந்துக்கள் நடத்தும் அதி நவீன தொண்டு நிறுவனம். இங்கே அவருக்கு கிருஸ்துவர்களது பணமோ அல்லது பிரார்தனையோ தேவையில்லை!

அவரது கொள்கை ஏழைகளுக்கு மட்டும் பணம் செலவு இல்லாமல் கூட்டுப்பிரார்த்தனை ஒன்றுதான் – அதாவது ஆன்மீக சுத்திகரிப்பினால் மன நிறைவை ஏற்படுத்தி ஏசுவிடம் அனுப்புவது. இப்படித்தான் அவரது தொண்டு நிறுவனங்கள் வசதிகள் ஏதும் இன்றி ஏழைகளுக்கு உதவுவதாக கண்துடைப்பு செய்துகொண்டு உலக கிருஸ்துவ நாடுகளிலிருந்து கணக்கிலடங்கா நன்கொடைகளை பெற்று அதில் பெரும் பங்கை வாடிகன் பாங்கில் செலுத்தி மேலும் உலகில் பலநாடுகளில் ஆட்டு மந்தை வியாபாரத்தை (Soul Harvesting Business: ஆன்ம அறுவடை வணிகம்) விரிவாக்கம் செய்ய உதவி வந்தார். இதில் பெரும் பங்கு சர்சு கட்டுவதற்கும் கான்வென்ட் பள்ளிகள் கட்டுவதற்கும் செலவு செய்யப்பட்டன. அவர் நடத்தி வந்த ”மிஷனரிஸ் ஆஃப் சாரிடிஸ்” என்ற நிறுவனம் உலகில் மிகவும் பணம் படைத்த ஒன்று. இவர்களது வெளிநாட்டு வங்கி நியூயார்கில் உள்ளது. அதில் கரண்ட் கணக்கில் வைத்திருந்த தொகை 50 மில்லியன் டாலர்களுக்குமேல். இருந்தும் தங்களிடம் பணம் இல்லை என்று சொல்லி மேன்மேலும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்று வந்தார்.

தெரேசா ஏழைகளின் பாதுகாவலர் என்ற ஒரு பிம்பம் பரப்பப் பட்டாலும் அவர் பல நேரங்களில் பணக்காரர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தான் காணப்பட்டார். சந்திரசாமி போன்றவர்களிடம் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர் இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை வெளிப்படையாகவே ஆதரித்தார். சஞ்சய் காந்தியின் கட்டாய குடும்ப கட்டுபாடு திட்டத்தை ஆதரித்தார். ஆனால் கருச்சிதைவையும் தற்காலிகக் குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகள் சாதனங்களின் உபயோகத்தையும் எதிர்த்தார்!

இவர் பெரும் பணக்காரர்களிடமிருந்து பணம் பெறுவதைவிட கிரிமினல்களிடமிருந்து பணம் பெறுவது எளிது என்பதை அறிந்து அதன்படி செயல்ப்பட்டார். அதில் முக்கியமான இருவர் ”சார்லஸ் கீடிங்”. இவர் இன்று கலிபோர்னியாவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் ஒருவர் ”ராபர்ட் மாக்ஸ்வெல் ” என்ற கிரிமினல். இவர் ஸ்காட்லாந்து போலீஸ் தன்னை பிடிக்க நெருங்கிவந்த பொழுது பிடிபடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் இருவருமே தங்கள் வங்கிகளில் பணம்போட்டவர்களை மோசடி செய்து பெரும் பணக்காரர்கள் ஆனவர்கள்.

இந்த கீடிங் என்பவன் சுமார் 900 மில்லியன் டாலர் பொதுமக்கள் சொத்தை சூறையாடியவன். இவனது கேஸ் கோர்டில் நடந்து வந்தபொழுதுதான் தெரேசா இவனிடமிருந்து 1 மில்லியன் டாலர் மேல் நன்கொடை பெற்றுக்கொண்டு அந்த கோர்ட்டின் நீதிபதிக்கு அவனை மன்னித்து விடுமாறும் அவன் ஏழைகளுக்கு தொண்டு செய்தவன் என்றும் சிபாரிசு கடிதம் எழுதினார். மேலும் அவர் குற்றாவாளியின் விலாசமான மனதை ஜீசஸ் எவ்வாறு அணுகுவாறோ அவ்வாறே அணுகவேண்டும் என்று எழுதினார். இதனால் கோபம் கொண்ட நீதிபதி, ‘அதுசரி அவனை மன்னிக்கலாம் ஆனால் அவன் மோசடி செய்த பணத்தைத் தங்களால் கொடுக்க முடியுமானால் அந்த பணத்தை உரியவரிடம் சேர்ப்பித்து அவனை விடுதலை செய்கிறேன்’ என்று பதில் எழுதினார். ஏன் வாய் திறப்பார் இந்த பரோபகாரி!

வேறு ஒரு சமயம் அரசியல் சார்ந்த சினிமா பிரசார படம் எடுப்பதற்காக ஹைட்டி (Haiti) நாட்டை சேர்ந்த டுவேலியர் மிச்சேல் தம்பதிகளுக்கு உதவி செய்தார்.  இவர்கள் அந்த நாட்டின் ஏழைகளிடமிருந்து மில்லியன் கணக்கில் பணம் மோசடி செய்து ஸ்பெயின் நாட்டிற்கு ஓடியவர்கள். இதன் பிரதிபலனாக டுவேலியரிடமிருந்து (ஒரு நாட்டின் மொத்த குடிகளும் தண்டிக்க தயாராக உள்ள ஒருவனிடமிருந்து) மில்லியன் கணக்கில் நன்கொடையும் பாராட்டுப் பட்டங்களையும் பெற்றார்.

அவர் ஏன் கல்கத்தாவை தனது சேவைசெய்யும் இடமாக தேர்தெடுத்தார் என்றால் இங்கே தான் ஜனத்தொகையும் ஏழ்மையும் அதிகம். இது தன் ” மிஷினரிஸ் ஆஃப் சாரிடி”  நிறுவனத்தை வலுபடுத்த ஏழ்மையை பறைசாற்றி உலக கிருஸ்துவ பணக்காரர்களிடமிருந்து நன்கொடை பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார். அத்தோடு அல்லாமல் இங்கே உள்ள அரைகுறை அரசியல்வாதிகள் அறிஞர்கள் பத்திரிகையாளர்கள் தன் தொண்டு நிறுவனத்தை குறை சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையால். ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கொடிய தொற்றுநோய் உள்ளவர்களிடமும் பொது மக்கள் பார்வையில் பரிவுகாட்டினார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்த பாவனைதான் தொழிலின் மூலதனம் என்பது பலருக்கு தெரியாது.

இப்படி இந்தியாவில் பல ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்த இவர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை வெளிநாடுகளில் தான் கழித்துள்ளார். பணம் திரட்டுவது வெளிநாடுகளில் தன்னுடைய சேவை நிறுவனத்தின் கிளைகள் திறப்பது என்பது அவரது முதன்மை பணியாக இருந்தது. அவர் வாழ்ந்த நாளில் இயற்கை சீற்றங்கள் பல இந்தியாவில் நிகழ்ந்தது. ஏதோ குறிபிட்டு சொல்லும் ஒரு இரு நிவாரண பணிகளை தவிர்த்து மற்றவற்றில் இவரது நிறுவனம் பங்கு கொள்ளவே இல்லை.  அப்படியே பங்கு கொண்டாலும் அதற்கான பகட்டான பல விளம்பரங்கள் செய்து விழா கொண்டாடியதை தவிர உண்மையான நிவாரண பணி மேற்கொள்ளப் படவில்லை.

நோயாளிகளுக்கு உருப்படியான சிகிச்சை செய்வது அவருக்கு அறவே பிடிக்காது. நோய் முற்றிவிட்டால் அவர்களிடம் ஜீசஸ் நெருங்கிவிட்டார் என்றும் அவரை மருந்து செலுத்தி குணப்படுத்துவதை விட ஜபம் செய்து ஜீசஸிடம் சேர்ப்பதுதான் உண்மையான கிருஸ்து நெறி என்பார். கல்காதாவில் உள்ள இந்த காப்பகத்தில் (Nirmal Hriday – House for dying destitute)  இதுவரை 86170 நோயாளிகள் சேர்கப்பட்டார்கள் என்றும் அதில் 34815 பேர் ஜீசஸிடம் போய் சேர்ந்தார்கள் என்றும்  சிஸ்டர் கிளெண்டா (Sister Glenda) என்ற கன்யாஸ்திரி தெரிவிக்கிறார்.  அவரது தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்த பல கன்யாஸ்திரிகள் அவரது அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டினால் வேலையை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

முடிவாக, ஐரோப்பாவிலிருந்து இந்திய இறக்குமதி வரிசையில் ராபரட் கிளைவ் 18 ஆம் நூற்றாண்டில்.  சோனியாவும் குட்ரோச்சியும் சமீபத்தில். பின்பு வந்தவர் தெரேசா.  இவர்கள் எல்லோரும் தங்கள் நாட்டில் பெறமுடியாத பணத்தையும் புகழையும் இங்கே பெற்றார்கள்.  இன்று தெரேசாவின் வாரிசு சகோதரி நிர்மலா. இவர் “ஏழைகள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்; அவர்கள் இல்லையேல் எங்களுக்கு வேலை கிடையாது” என்கிறார். ஏன் சொல்ல மாட்டார்?

“கான்வெண்டுகள் மற்றும் சர்ச்களின் மதிள் சுவர்களுக்குள் கற்பழிப்புகளும், கொலைகளும் காலம்காலமாக நடந்து வருவது தான். ஆனால் சர்ச்சுக்கு வெளியில் “கன்யாஸ்திரீ கற்பழிப்பு” என்பது மட்டும் தான் இங்கே பற்றி எரியும் செய்தியாகிறது …

சகோதரி பிரேமா சொல்வது போல, அவரது நிறுவனம் ஏழைகளுக்காகவே பணியாற்றுகிறது என்றால், இந்த நாட்டின் ஏழைகளுக்காக வந்த பணம், ஏன் ரோம் நகரின் (வத்திக்கான்) பணக்கருவூலங்களுக்குப் போகவேண்டும்? மிஷநரிஸ் ஆஃப் சாரிடி அமைப்பின் கணக்குகள் தணிக்கை செய்யப் படுகின்றனவா? சர்ச் நிலங்களும், சொத்துக்களும் ஏன் தணிக்கை செய்யப் படுவதில்லை? ஏன் அவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்? இது ஒரு தேசவிரோத செயல் இல்லையா? …

இவர்கள் ஏன் ஏழைகளை நிம்மதியாக இருக்கவிடக் கூடாது? யார் யாரைச் சுரண்டுகிறார்கள்? ஏழைகளை ஏழ்மையிலேயே வைத்திருக்கவேண்டும் என்பது தான் தேவ ஆசிர்வாதமா? பிற்போக்குத் தனம் அப்படியே இருக்கவேண்டும் அல்லது வளர வேண்டும் என்பது தான் பிரார்த்தனையா?…

முழுதும் படிக்க: மதர் தெரசாவின் மகளுக்கு: சில கேள்விகள் – டாக்டர். திருமதி ஹில்டா ராஜா

67 Replies to “மதர் தெரசா: ஒரு பார்வை”

  1. ஆனால் நெடு காலமாக முதன் மந்திரியாக இருந்த ஜ்யொதிர் பாசு இவரைப்பற்றி குறை சொன்னபோதெல்லாம் ” நீங்கள் ஒரு குஷ்டரோஹியை” ஆரத்தழுவிக்காட்டுங்கள் அப்போது நீங்கள் சொன்ன குறைகளுக்கு தெராசா மீது விசாரணை நடத்துகிறேன் என்று சொல்வார்.மற்றும் ஜ்யோதிர்பாசு அவர்கள் தேசியவாதி/நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்.நேதாஜி வழியில் வந்தவர்.பிரிவினை வாத பெரியார் வழிகண்டதிராவிடஇயக்கத்தலைவர்கள் போல்
    அவர் சுயநல மிக்கவரோ/சந்தர்ப்பவாதியோ/குடும்பமே கட்சி என்ற கொள்கை உடையவரோ/கொள்ளை அடிப்பவரோ/மற்றும் “தெராசா”க்களிடமிருந்து பணம் பறிக்கும் “உத்திகளை கையாள்பவரோ” அல்லர்.
    மேலும் மாநில உள் புலனாய்வுத்துறை அவரிடம் இருந்தது.அவர்களும் எவ்விதமான
    குற்றங்களும் தெரெசா/மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி செய்ததாக பதிவுகள் இல்லை.

  2. நமது நாட்டில் இல்லாத பெண் துறவிகளா? அவர்கள் செய்யாத தொண்டு பணிகளா?
    அவ்வையார், திலகவதியார், காரைக்கால் அம்மையார் தொடங்கி, சாரதா அம்மையார்,அன்னை மிரா, மற்றும் தற்காலத்தில் அமிர்தானந்தமயி அம்மையார் உட்பட, எத்தனை பெண் துறவிகள், அவர்கள் செய்த மற்றும் செய்யும் தொண்டுகள். அத்துணை பெண் துறவிகளுக்கும் என் சிரந்தாழ்ந்த நமஸ்காரங்கள்.

  3. மதர் தெரிஸா ஒரு கிறித்துவ பிரசாரகர் தான். சந்தேகமில்லை. ஆனால் வெறும் பிரசாரகர் இல்லையே. தினகரனும் பிரசாரகர் தான். ஆனால் மதர் தெரிசா செய்யும் காரியங்கள் எதுவும் செய்ய மனம் வராது. அருவெறுப்பில் நெளிவார். அவர் மாத்திரம் இல்லை. எல்லா எவாஞ்செலிஸ்டுகளும் தான். கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு உல்லாசமாக உலகம் சுற்றிக்கொண்டு ஏதோ தேவதை மாதிரி லக்ஷக்கணக்கில் விரியன் பாம்புக்குட்டிகளுக்கு உபதேசம் செய்து கொண்டு…..

    இதற்கு அர்த்தம் மதர் தெரிஸாவை ஏதோ தேவதை என்று நான் சொல்லவில்லை. “நீ ஒரு முஸ்லீமைக் கொலை செய்த பாபத்திற்கு ஒரு அநாதை முஸ்லீம் குழந்தையை தத்து எடுத்துக்கொண்டு அதை முஸ்லீமாக வளர். அதுதான் உன பாபத்துக்கு பிராயச்சித்தம் என்று சொன்ன காந்தியைப் போல தெரிஸா ஒரு ஹிந்துவுக்கு, அந்த சேவை செய்ய மாட்டார். அதே சமயம் காந்தியும் ஹிந்துவைக் கொலை செய்த முஸ்லீமை, “நீ செய்த பாபத்துக்கு பிராயச் சித்தமாக ஒரு ஹிந்து குழந்தைக்கு தகப்பனாகி அதை ஹிந்துவாக வளர் “ என்று சொன்னதாக சரித்திரம் இல்லை. சொல்லவும் மாட்டார். ஏனெனி.ல் ஹிந்துக்கள் முஸ்லீம்களின் வன்முறைக்கு இரையான இடங்களுக்கு சென்றதாக செய்தி இல்லை. எல்லாமே இப்படித்தான். மதர் தெரிஸா செய்த காரியத்தை, ஹிந்து ஸ்தாபனம் ஏதும் செய்ததாக செய்தி இல்லை. இருந்திருந்தால், மதர் தெரிஸா கல்கத்தாவுக்கு வர பிரமேயமே இருந்திராது.

    அடுத்து ஜோதி பாசு. ஆமாம், நம் அரசியல் வாதிகள் போல இல்லைஅவர். கருணாநிதி இல்லை அவர். ஆனால் மார்க்ஸிசம் ஒரு ஸயன்ஸ என்று எண்பது தொன்னூறுகளிலும் சொல்லிக்கொண்டிருந்தவர். சட்ட விரோதமாக பங்கலாதேசிலிருந்து இங்கு தங்கி ரேஷன் கார்டு சகிதம் இந்திய குடிஉரிமையை அனுபவித்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கில் சில் நூறுகளை திருப்பி அனுப்ப வாஜ்பாயி அரசு முயன்ற போது வாஜ்பாயி அரசை Barbarians என்ற வசை பாடிய மகான் அவர். தொழிற்சாலைகள் நிறைந்திருந்த மேற்கு வங்காள்த்தை எந்த தொழிலும் வர பயப்படும் வன்முறை நாடாக்கிய மகான். வன்முறைக்கு பதில் வன்முறை தான் என்று திருண்மூல காங்கிரஸையும் வன்முறைக் கட்சியாக மாற்றிய மகான். ஜோதிபாசு வின் மகன் அப்பா பேரைச் சொல்லி இன்னொரு தயாநிதி மாரன் ஆக முடிந்திருக்கிறது.ஆனால் மம்தா பானர்ஜி அந்த சபலம் எதுவும் இல்லாதவர். எளிய வாழ்க்கை,இன்னமும் பழைய இரண்டு அறை வீட்டிலேயே வாழ்பவர். பாலிகஞ்சின் பிரபுக்கள் காலனியில் அல்ல.

    நம்மை எல்லோரும் அல்பேனியாவிலிருந்தும்இத்தாலியிலிருந்தும் வாஷிங்டனிலிருந்தும் மாஸ்கோ, பீகிங்கிலிருந்தும் வருபவர்கள் எல்லாம் முட்டாளாக்குகிறார்கள், சுரண்டுகிறார்கள் .முட்டாளாக்குகிறார்களென்றால், நாமும் நம் முகத்தைக் கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நல்லது. .

  4. அன்னிய தெரசாவின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் கட்டுரையாளர் ஸ்ரீ வேதம் கோபால். அந்த பவ்யமான முகத்திற்குப்பின்னால் இவ்வளவு ப்போலித்தனமா? அவரை ப்புனிதர் என்று போற்றும் போலி மதச்சார்பின்மை வாதிகள்.
    இருந்தாலும் இந்த கட்டுரைக்கு பின்னூட்டமாக ஸ்ரீ வெ சா கூறுவது சிந்திக்கத்தக்கதே.
    “மதர் தெரிஸா செய்த காரியத்தை, ஹிந்து ஸ்தாபனம் ஏதும் செய்ததாக செய்தி இல்லை. இருந்திருந்தால், மதர் தெரிஸா கல்கத்தாவுக்கு வர பிரமேயமே இருந்திராது”.
    உண்மைதான் கருணையை போதித்த பாரத தேசத்தில் சேவைக்குத்தட்டுப்பாடு வந்ததால் அன்னிய தெரேசாக்களின் நடமாட்டம் இன்னும் இருக்கிறது. இப்போது நமது சமய அமைப்புக்கள் மானுட சேவையில் பெருமளவில் இறங்கியுள்ளனர். இன்னும் அது போதாது. உள்ளவர்கள் கருணை உடையவர்களாய். கருணை உடையவர்கள் மக்கள் சேவைக்கு வந்தால் இந்த இழி நிலை மாறும்.

  5. இவருடைய மதமாற்ற நடவடிக்கைகளை கண்டித்து அல்பேனியாவில் இருந்து விரட்டியது அங்கு இருந்த கம்யூனிஸ அரசாங்கம். ஆனால் அதே கம்யூனிஸ மேற்கு வங்க அரசாங்கம் இவரை மதமாற்ற செயலுக்கு ஊக்கம் அளித்து நிதி உதவியும் செய்தது.

    பல ஆயிரம் குழந்தைகளை அவர்கள் குடும்பத்தில் இருந்து கடத்தி கொண்டு வந்து மதம் மாற்றி, அவர்களை காட்டி காசு சம்மபாதித்த கேவலமான இந்த ஜந்துகளை என்னவென்று சொல்வது? இவர்கள் ஆப்பிரிக்காவில் செய்த கொடுமைகள் ஏராளம்.

    உலக அரசியலை வாய் கிழிய பேசும் காமரேட்டுகளுக்கு இது எல்லாம் தெரியாமல் போனது ஆச்சரியமான விசயம்.

    இந்த சூனியாகாரியின் முகத்திரையை கிழித்ததற்கு நன்றி.

  6. தமிழ் ஹிந்து ஆசிரியர் மத வெறியின் உச்ச கட்டத்தில் இருக்கிறார் என்பது இந்த கட்டுரையை பார்க்கும் போது தெரிகிறது . உங்கள் மத வெறியை நீங்களாக அடக்கிவிடுங்கள் அது உங்களுக்கு நல்லது, நாங்கள் உங்கள் வெறியை அடக்கினால் ……… தாங்க மாட்டீர்கள். பயங்கரமா இருக்கும் .

  7. குளச்சல் ராஜா…..
    // நாங்கள் உங்கள் வெறியை அடக்கினால் ……… தாங்க மாட்டீர்கள். பயங்கரமா இருக்கும் .//

    அது எப்படி இருக்கும்னு கொஞ்சம் சொல்லிடுங்களேன்……பயமா இருக்கு……..

    ஒரு வேளை ,செவ்விந்தியர்களுக்கு உதவி செய்யறோம்னு சொல்லிட்டு பெரியம்மை நோய்க்கிருமிகள் தொற்றிய போர்வைகளை கொடுத்து அவங்களை கூட்டம் கூட்டமா கொன்று குவிச்சீங்களே ,அப்படி இருக்குமோ?

  8. ” குளச்சல் J.RAJA on May 23, 2012 at 5:44 pm

    தமிழ் ஹிந்து ஆசிரியர் மத வெறியின் உச்ச கட்டத்தில் இருக்கிறார் என்பது இந்த கட்டுரையை பார்க்கும் போது தெரிகிறது . உங்கள் மத வெறியை நீங்களாக அடக்கிவிடுங்கள் அது உங்களுக்கு நல்லது, நாங்கள் உங்கள் வெறியை அடக்கினால் ……… தாங்க மாட்டீர்கள். பயங்கரமா இருக்கும் .”

    கட்டுரையாளர் மிக தெளிவாக , தெரசா அவர்கள் நன்கொடை பெற்றது ஒரு டுபாக்கூர் புள்ளியிடம் என்பதையும் , பெற்ற நன்கொடைக்கு பதிலாக அந்த மோசடிக்கர்ரனை மன்னிக்க கோரி , மாண்புமிகு நீதிபதிக்கு கடிதம் எழுதினார் என்ற உண்மையையும் வெளிக்கொணர்ந்துள்ளார். நியாயமான காரணங்களுக்காகவே, தெரசாவின் கோரிக்கையை நீதிபதி அவர்கள் நிராகரித்துள்ளார்.

    திருட்டுதனம் மற்றும் கேப்மாரித்தனம் செய்யும் மோசடிக்காரர்களுக்கு , ஆன்மீகத்தலைவர்கள் வக்காலத்து வாங்கக்கூடாது. குளச்சல் ராஜா என்ற பெயரில் கடிதம் எழுதியிருக்கும் அன்பர், கிறித்தவத்தின் பெயரை மேலும் கெடுத்துவிடுவார் என்பது உறுதி. பாவம் இவர் போன்றவர்கள் ஏசு கிறிஸ்துவின் உண்மையான போதனைகளை அறியாதவர்கள். இயேசு பிரான் இவர்களை மன்னிக்கட்டும்.

  9. ” கல்காதாவில் உள்ள இந்த காப்பகத்தில் (Nirmal Hriday – House for dying destitute) இதுவரை 86170 நோயாளிகள் சேர்கப்பட்டார்கள் என்றும் அதில் 34815 பேர் ஜீசஸிடம் போய் சேர்ந்தார்கள் என்றும் சிஸ்டர் கிளெண்டா (Sister Glenda) என்ற கன்யாஸ்திரி தெரிவிக்கிறார். ”

    நோயை குணப்படுத்துவது இவர்களின் முக்கிய நோக்கம் அல்ல. அழுக்கு பிடித்த ஆபிரகாமிய மதமாற்றமே அவரின் குறிக்கோள். இவருக்கு வால் பிடித்த கம்யூனிஸ்டுகள் பாவம்.

  10. “நாங்கள் உங்கள் வெறியை அடக்கினால் ……… தாங்க மாட்டீர்கள். பயங்கரமா இருக்கும்” .

    அடடா! கருணையின் உன்னத வடிவம்; excellent ‘revelation’.

  11. @ குளச்சல் ராஜா,

    கட்டுரையில் கன்னியாஸ்திரி என்ற பெயரில் ஊரை ஏமாற்றி கல்லா கட்டிய ஒரு வெளி நாட்டை சேர்ந்த கிறித்துவ சாமியாரை பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள் சொல்லப்பட்டு உள்ளது. இதில் மதவெறி எங்கு இருந்து வந்தது என்று எனக்கு புரியவில்லை. சற்று விளக்கமாக எழுதவும்.

  12. @அத்விகா ,
    //பாவம் இவர் போன்றவர்கள் ஏசு கிறிஸ்துவின் உண்மையான போதனைகளை அறியாதவர்கள். இயேசு பிரான் இவர்களை மன்னிக்கட்டும்.//
    அவரின் உண்மையான போதனை என்ன கொஞ்சம் சொல்லமுடியுமா? அடியேன் ஒன்றும் அறியாத பரதேசி ? அதைத்தெரிந்து சுவர்க்கம் அடையலாம் என்ற நல்லெண்ணம் தான். கூறுங்கள் தாயே.

  13. @குளச்சல் J.RAJA , உங்களின் மறுமொழியைப்பார்த்து பயந்து நடுங்கிவிட்டேன். தயவுசெய்து எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்.

  14. ஏசு பிரானின் உண்மையான போதனை ” மலைப்பிரசங்கம்” மட்டும் தான். பைபிளின் மற்றப்பகுதிகள் அவருக்கு பின் வந்தவர்களால் இட்டுக்கட்டி சேர்க்கப்பட்டவை. பைபிள் காப்பி தெருவெங்கும் குப்பைத்தொட்டி உட்பட எல்லா இடத்திலும் இலவசமாக ஆபிரகாமிய வெறியர்கள் வழங்குகிறார்கள். தேவையானால் வாங்கி படித்துக்கொள்ளவும். இது பைபிள் பிரசங்க மேடை அல்ல.

  15. @அத்விகா , நான் கூறிய மறுமொழி உங்களை எதிர்ப்பதற்காக அல்ல . ஏசுவின் போதனை பற்றிய உங்களின் தவறுதலான புறிதலை சரி செய்யவேண்டும் என்ற எண்ணமே தவிர வேறு இல்லை இன்ன்னைக்கு வரைக்கும் கிறிஸ்துவ்னுக ஏமாத்தி மதம் மற்றுவதக்கு , காரணம் ஏசுவே. நீங்கள் அதைப்புரிந்து கொண்டால் சரிதான்.

  16. உண்மையிலேயே சேவை மட்டுமே செய்பவர்கள் வெளியில் தெரிவதில்லை. வெளியில் தெரிபவர்கள் சேவையுடன், தன்னையும் இயக்கத்தையும் முன்னிறுத்தி கொள்பவர்கள். சேவை மட்டுமே செய்ய விரும்புபவர்கள் வெறும் மனிதர்களாக வர வேண்டும். கன்னியாஸ்திரிகள்-ஆகவோ, சாமியார்களாகவோ வேண்டியதில்லை.

  17. ஐரோப்பியர்களின் தொலை நோக்கிலான மதமாற்ற திட்டங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் கூட நம்மவர்களுக்கு இல்லை. உலகில் உள்ள எல்லா மதங்களின் தத்துவங்களையும் கருத்துக்களையும் ஒருவனுக்கு புரிய வைத்து கடைசியாக எந்த மதத்தில் இருக்கு விரும்புகிறாய் என்று கேட்டால் அவன் “இந்து மதம்” என்று சொல்வான். சகிப்பு தன்மையும், பரந்த மனித தன்மையும் உள்ள மதம் எனக்கு தெரிந்து இந்து மதம் தான்.

  18. சென்ற நூற்றாண்டில் பிகாரில் கொடுமையான பூகம்பம் ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி நடந்த நேரம். பாபு ராஜேந்திர பிரசாத் முயற்சியால் நிவாரணப் பணிகள் நடந்தன. பின்னர் இராமகிருஷ்ண மடத்தார் எங்கு இயற்கை விபரீதங்கள் நடக்கின்றனவோ அங்கு ஓடிப்போய் உதவி செய்தனர், விளம்பரம் இல்லாமல். ஒரிசாவில் புயல், நிவாரண உதவிகளை முன்னின்று நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தார். டில்லியில் வீடு வீடா சென்று துணிமணிகள், போர்வைகள், உணவுப் பொருட்கள் வசூல் செய்த காட்சியை நேரில் பார்த்து வியந்தேன். தமிழகத்தில் சுனாமி, முன்வந்து உதவி புரிந்தோர் எண்ணிக்கை அளவில் அடங்காது. ஆர்.எஸ்.எஸ்., ராமகிருஷ்ண மடம், மாதா அமிர்தானந்த மயி, இந்தி நடிகர்கள் இப்படி பலர். அப்படியிருக்கும் போது மாணவர்கள் மனதில் சேவை என்றால் உடனே மதர் தெரசா என்று விதைத்து விட்டார்கள். அவர் சேவையையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் சேவை என்றால் இவர்தான் என்பது போல ஒரு பிரமையை உருவாக்கி விட்டார்கள். இந்தியாவில் சேவைக்கு என்று வந்தவர்களும் சரி, நமது புராதன வேத கால பெருமையை உலகுக்குப் பறை சாற்ற வென்று வந்த பலரும் இங்கு மத மாற்றம் செய்ய வந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாக்ஸ் முல்லர் உட்பட இதில் அடங்குவர். ராஜா ராம்மோகன் ராயை மதமாற்றம் செய்ய ரோமிலிருந்து ஒரு பாதிரியார் அனுப்பப்பட்டார். ஆனால் பாவம் அந்த பாதிரியார் இந்துவாக மாறினார், ராஜா ராம் மோகன் ராயை மதமாற்றம் செய்ய முடியவில்லை. நிலைமை இவ்வாறிருக்க இந்த காலகட்டத்தில், தமிழ் இந்து ஆசிரியருக்கு எச்சரிக்கை விடும் அளவுக்கு துணிச்சல் இருப்பதைப் பார்த்து என்ன சொல்வது? இதுபோன்ற பிதற்றல் பின்னூட்டங்களை ஆசிரியர் வெளியிட வேண்டுமா?

  19. குளச்சல் ராஜா…..
    // நாங்கள் உங்கள் வெறியை அடக்கினால் ……… தாங்க மாட்டீர்கள். பயங்கரமா இருக்கும் .//
    மிஸ்டர் குளச்சல் ராசா,
    ஒ ஹோ மதவெறியை அடக்க வருகிறீர்கள. முதலில் நீங்கள் யார் என்ற அடையாளத்தை சொல்லும். அப்புறம் மதவெறியின் நாற்றான்காலான மதமாற்றி ஆபிரகாமியர்களின் மதவெறியை அடக்கிக்கட்டும். பார்க்கலாம்.

  20. “இதுபோன்ற பிதற்றல் பின்னூட்டங்களை ஆசிரியர் வெளியிட வேண்டுமா?”

    பிதற்றல் என்பது வெளியிட்ட பிறகு தானே தெரிகிறது. வெளியிடவில்லை என்றால், இம்மாதிரி மன அமைப்பு கொண்டவர்கள், தம் வெறித்தனத்தை (அதாவது நீங்கள் சொன்ன “பிதற்றலை) கருத்து என்பார்கள். கருத்து சுதந்திரம் மறுக்கப் படுகிறது என்பார்கள். நீங்களும் நானும் அந்த கருத்து என்று சொல்லப்பட்ட வெறித்தந்த்தை/பிதற்றளை, கருத்து என்று தவறாகப் புரிந்து கொண்டு, தமிழ் ஹிந்து ஆசிரியருக்கு கண்டனம் தெரிவிப்போம். ஏன்யா மாற்றுக்கருத்துக்கு இடம் கொடுக்க மறுக்கிறீர்கள் என்று. அதை வெளியிட்ட பிறகு தானே அதன் லக்ஷணமும், அதை எழுதுபவர் லக்ஷணமும் தெரிகிறது. அது வரை,தமிழ் ஹிந்துவில் எல்லோருக்கும் இடம் உண்டு. கருத்து பரிமாற்றலுக்கும் இடம் உண்டு. உளறலுக்கும் இடம் உண்டு. வெறிபிடித்து அலைவோருக்கும் இடம் உண்டு. தமிழ் ஹிந்து அவலக்ஷணங்களை வெளிதெரியாது பாதுகாக்கவேண்டாம். அவரவர் லக்ஷணங்களோ அவலக்ஷண்ங்களோ முகமூடி இன்றி பாது காப்பு இன்றி உலவட்டுமே இங்கு சுதந்திரமாக. .

  21. @வெங்கட்சாமிநாதன்.ஆரம்பத்தில் தெரெசா கிறித்துவ மதத்தை பரப்ப/விவரிக்க வந்ததாக அவரே சொல்லி உள்ளார்.ஆனால் இங்கு வந்து ஹிந்து மக்களோடு பழகிய பின் மற்றும் ஹிந்து மதத்தை நன்கு ஊன்றிப்படித்தம்,காந்திஜியின் மற்ற இந்தியாவின் அக்கால பெரும்தலைவர்களின் வாழ்க்கை முறைகளை நேரில் பார்த்தபின் கிறித்துவ மதத்தை பரப்ப மிக்கவே பின் வாங்கி “சேவை”யில் ஈடுபட்டுள்ளார்.கட்டுரைஆசிரியர் சொல்லியபடி ஏமாற்றுப்பேர்வழியாக
    இருந்திருப்பின் அக்காலத்தலைவர்கள் இவரை எப்படி மறுபடியும் அல்பேனியாவுக்கு
    அனுப்ப வேண்டுமோ அப்பவே செய்திருப்பர்.இக்காலத்தலைவர்கள் போல் சந்தர்ப்பவாதம் புரிந்து அவரை பணம் காய்க்கும் மரமாக கருதி பணத்தை கறந்து அவர் செய்த மோசடிகளுக்கு வாய்தா வாங்கி உடன் போயிருக்க மாட்டர்.தெரசா அவர்கள் இந்தியாவில் எவ்விதமான மோசடிகளிளும் ஈடுபடவில்லை என்பதனால் தான் பெரும்தலைவர்கள் ஜோதிபசு அவர்கள் உட்பட நடுநிலை காத்தனர்.

  22. தெரசா ஏழை மக்களை மதம் மாற்றவே தன்னுடைய ‘சேவையை’ உபயோகித்தார்.
    தெரசா மறைந்த போது வாஜ்பாய் அஞ்சலி செலுத்தினாரே, ஏன்? அடக்கம் செய்யும் வரை இருந்தாரே ஏன்? மத சார்பற்ற நபர் என்ற பெயர் வாங்கத்தானே?

  23. ட்ராஸ்கிய அறிஞரும் ஒரிஜினல் கிறிஸ்தவருமான கிறிஸ்டோஃபர் ஹிட்சன்ஸ் எழுதிய The Missionary Position: Mother Teresa in Theory and Practice என்ற புத்தகம் ஒன்று போதும். தெரசாவின் முகத்திரையைக் கிழிக்க.

    ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து இயக்கங்கள் இப்புத்தகத்தை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து அப்போதே விநியோகித்திருக்க வேண்டும். செய்யவில்லை. இனியும் செய்ய மாட்டார்கள்.

  24. @ராமச்சந்திரசேகரன்,

    //இருந்திருப்பின் அக்காலத்தலைவர்கள் இவரை எப்படி மறுபடியும் அல்பேனியாவுக்கு
    அனுப்ப வேண்டுமோ அப்பவே செய்திருப்பர்.//
    தலைவரே , நீங்கள் எந்த ”அக்காலத்தலைவைப்பற்றி” கூறுகிறீர்கள்? . மேலும் யார்,யாரை திருப்பி அனுப்பகூடிய நிலையில் இருந்தார்கள். , கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா?

  25. அன்புள்ள ஆசிரியர் குழுவுக்கு, இந்த கட்டுரையை ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு, ஹிந்து சேவை அமைப்புகளின் முழுப் பட்டியலைத் தொகுத்து வெளியிடலாமே. அது மட்டுமில்லாமல், ராமகிருஷ்ண மடம் என்று பொதுவாக இல்லாமல், அவர்களின் அனைத்து சேவை அமைப்புகளையும் பட்டியல் இட்டால், அனைவருக்கும் உதவியாக இருக்கும். இங்கு இருக்கும் பட்டியல் மிகச் சிறியதாக இருக்கிறது. அவர்களைத் திட்டுவதை விட – நாம் செய்யாலாமே! நாம் செய்வதைச் சொல்லலாமே. ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து சேவை அமைப்புகளின் கண்காட்சி நடக்கிறது. அங்கு வெளியிடப் படும் பட்டியலை இங்கும் வெளியிடலாம். உதாரணமாக ஒருவருக்கு தேவாரத்தில் ஈடுபாடு இருக்கும், அவர் அதற்கு உதவ வேண்டும் என்றால் தருமபுர ஆதீனம் – thevaaram .org என்று ஒரு வெப் சைட் வைத்து திருமுறைகளை பல மொழிகளில் இணையத்தில் வெளியிடுகிறார்கள். இல்லை கண் மருத்துவத்துக்கு உதவ வேண்டும் என்றால் அரவிந்த், சங்கர நேத்ராலய, கோவை காமகோடி மிச்ஷன் என்று உள்ளான. ஒரு comprehensive லிஸ்ட் நீங்கள் வெளியிடலாம்.

  26. ஐரோப்பாவிலேயே மிக ஏழ்மை மிகுந்த நாடு அல்பேனியா.அந்நாட்டில் பிறந்த தெரசா அம்மையார் தனது தாய் நாட்டின் வறுமையை போக்க போராடாமல் இந்தியாவின் வறுமையை போக்க கிளம்பி வந்தது சர்ச்சைக்குரியது மட்டுமல்ல அறிவுக்கு ஒவ்வாததும் ஆகும்.எனக்கு சமூக சேவை செய்யும் ஆர்வம் உண்டானால் நான் பிறந்த ஊரான பள்ளிபாளையத்தில் செய்வேன்.அல்லது என் ஊர் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் செய்வேன்.அல்லது என் மாவட்டம் அமைந்துள்ள தமிழ்நாட்டுக்கு செய்வேன்.அல்லது என் மாநிலம் அமைந்துள்ள பாரத நாட்டிற்கு செய்வேன்.அதை விட்டுவிட்டு அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் வாழும் ஏழைகளுக்கு நான் சமூகசேவை செய்யப்போகிறேன் என்று நான் சொன்னால் அது எவ்வளவு மோசடி .அதைப்போலத்தான் இருக்கிறது தெரசா அம்மையாரின் செயலும் ஆகும்.இந்த மோசடியை அம்பலப்படுத்துவது எப்படி மதவெறியாகும் என குலச்சல்காரர் சொல்லட்டும்.புராதன யூத மரபுகுளுக்களுக்கு எதிராக பேசியதால் வைதீக யூதர்களால் கொல்லப்பட்டவர் ஏசு.அவருடைய உபதேசங்கள் அனைத்தும் யூதர்களுக்காக சொல்லப்பட்டது.அவரால் உபதேசிக்க பட்டது எல்லாம் சாதாரண விஷயங்கள் தான்.பெரிய தத்துவ ஞானங்கள் அல்ல.ஆனால் நம்மூர் மூளைசலவைக்காரர்கள் தங்கள் மதமாற்ற தொழிலுக்கு ஏசுவின் பிதற்றல்களை மூலதனமாக்கிவிட்டார்கள்.இவர்களுக்கு தெரசா அம்மையார் போன்றவர்கள் ஒரு வழிகாட்டி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

  27. @தமிழன்; தாங்கள் மேலோட்டமாக கருத்தைவெளியிடுகிறீர்கள்.அவசரப்பட்டு கருத்தை எழுதாதீர்கள்.அக்கால இந்தியத்தலைவர்கள் தங்களுக்கு புரியவில்லை என்றால் நான் என்ன செய்யமுடியும்.மற்றும் தெரெசா அவர்கள் இந்திய மண்ணில் எவ்விதமான மோசடிகளையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டு இருந்தேன்.அதையே
    மறுபடியும் கூறுகிறேன்.

  28. Ramesh Srinivasan, மிக அருமையான யோசனை சொல்லியுள்ளார். அதை செய்யுங்களேன்.

  29. ஸ்ரீ ரெங்கதுரை
    “ட்ராஸ்கிய அறிஞரும் ஒரிஜினல் கிறிஸ்தவருமான கிறிஸ்டோஃபர் ஹிட்சன்ஸ் எழுதிய The Missionary Position: Mother Teresa in Theory and Practice என்ற புத்தகம் ஒன்று போதும். தெரசாவின் முகத்திரையைக் கிழிக்க”.
    கம்யூணீஷ்டுகரன் புத்தகங்களை ஆர் எஸ் எஸ் எப்படி வெளியிடும் என்ன ஸ்ரீ துரை இப்படி சொல்கிறீர்கள். எப்படி ட்ரஸ்கியர் கிறித்தவராக இருக்க இயலும்.

  30. Ramesh Srinivasan
    அன்புள்ள ஆசிரியர் குழுவுக்கு, இந்த கட்டுரையை ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு, ஹிந்து சேவை அமைப்புகளின் முழுப் பட்டியலைத் தொகுத்து வெளியிடலாமே.
    நிச்சயம் நல்ல யோசனை வரவேற்கதக்கது.
    இதை எளிதாக்க இன்னொரு யோசனை தமிழ் ஹிந்து வாசகர்கள் நமது பகுதியில் உள்ள ஹிந்துக்களால் நடத்தப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைப்பற்றிய விவரங்களை சேகரித்து தமிழ் ஹிந்துவுக்கு அனுப்பலாமே.
    பல ஹிந்துக்கள் இன்று அனாதை விடுதிகளுக்கு தங்கள் பிறந்த நாளன்று சென்று அவர்களுக்கு உணவளித்து ஆதரவுக்கரங்கள் நீட்டுகிறார்கள். இதில் மதமாற்றி நிறுவனங்களுக்கு செல்லாம் நம் நிறுவனங்களுக்கு செல்ல உதவுமே.

  31. @சோமசுந்தரம்;” தான் பிறந்த நாடான அல்பேனியா வறுமையில் இருக்கும்போது தெரெசா அங்குசேவை செயாமல் இந்தியாவில் ஏன் சேவை செய்ய வேண்டும் என கேட்டுள்ளீர்.”
    மக்களின் வரிப்பணத்தில் இந்தியாவில் IIT, IIM மற்றும் அரசு கல்லூரிகளில் படித்த மாணவ/மாணவியர் இங்கு உழைத்து தாய் நாட்டுக்கு செவை செய்வதைவிடுத்து
    பணத்தாசை/மற்றும் தேசப்பற்று இலாமல் அமெரிக்கா/மேற்கு ஐரோப்பா
    /ஆஸ்திரேலியா/அரபு நாடுகளில் சுயமரியாதையை இழந்து அடி ,உதை பட்டு சம்பாதிக்கிசெல்கிறார்கள்.
    மேலும் இங்குள்ள பணக்கார/உயர் மத்திய தரக்குடும்ப பெற்றொரும் தங்கள் பிள்ளைகளை,இங்கு தரமான கல்லூரிகள் இருந்தும் மேற்சொன்ன இடங்களில் தான் படிக்க வைக்கின்றனர்.
    தெரெசாவுக்கு குறைந்தபட்சம் சேவை மனப்பான்மையாவாது இருந்துள்ளது.

  32. ///வைதீக யூதர்களால் கொல்லப்பட்டவர் ஏசு.///

    யூதர்களில் கூடவா “வைதீக” யூதர்கள்? ஆக வைதீகம் என்பது வைவதற்கான சொல்லாக மாறியது துரதிர்ஷ்டமே.

  33. iit ,iim போன்றவற்றில் படித்தவர்கள் யாரையும் மதமாற்றம் செய்ய வெளிநாடு செல்வதில்லை.வயிற்று பிழைப்பும் சமூக சேவையும் ஒன்றாகாது.அடியவனுக்கு என் பதில்;ஏசு வைதீக யூதர்களான பாரிசீகளால் (pharisee )கொல்லப்பட்டவர்.புதிய ஏற்பாட்டில் (new testament )அவ்வாறுதான் எழுதபட்டிருக்கிறது.வைதீகம் என்ற வார்த்தையில் நீங்கள் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை.உலகம் முழுவதும் எல்லா மதங்களிலும் வைதீகம் இருக்கிறது.மத ஆதார நூல்களின் அடிப்படையில் இருந்து சிறிதும் விலகாத கொள்கையே வைதீகம் எனப்படும்.

  34. வைதீகம் என்றால் வேதம் சார்ந்த, என்று பொருள். Orthodox என்று சொல்ல வந்த நீங்கள் அதற்கு வைதீக என்ற சொல்லைப் பயன்படுத்திவிட்டு, தவறென்ன என்றும் கேட்கிறீர்கள். இன்னொருவர் முஸ்லீம், தம் மதத்து முல்லாக்களையும், காஜிகளையும் குறிக்க புரொகிதர் என்ற சொல்லையே திரும்பத் திரும்ப கவனமாகத் திட்டமிட்டுச் சொல்லி வந்தார். அதில் விஷமத்தனத்தைத் தான் நான் கண்டேன்.

    ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் ஒன்றேயானாலும் அதன் பயன்பாட்டில் வேறுபாடுகள் உண்டு. உங்கள் தந்தையார் பூஜை அறையில் இருந்தால், தொழுகையில் இருக்கிறார் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஒரு முஸ்லீம் பள்ளி வாசலுக்கு சாமி கும்பிடப் போவதாகச் சொல்ல மாட்டார். எல்லாம் ஒரே அர்த்தம் தான் என்றாலும். வேதம் சார்ந்து இருத்தல் அடிப்படை வாதம் இல்லை. இன்றைய பொருளில்.

  35. திரு அடியவன் அவர்களின் கேள்வி கிறித்தவத்திலுமா வைதீகம் என்று கேட்டுள்ளார். ஸ்ரீ சோமசுந்தரம் வைதீகம் எங்கும் உண்டு. “மத ஆதார நூல்களின் அடிப்படையில் இருந்து சிறிதும் விலகாத கொள்கையே வைதீகம் எனப்படும்”. ஸ்ரீ சோமசுந்தரம் அவர்களே நீங்கள் குறிப்பிடுவது அடிப்படைவாதம் fundamentalism. பழமைவாதம். வைதீகம் வேதத்தை அடிப்படையாகக்கொள்வது. வைதீகர்கள் வேதமார்கத்தினரையே குறிக்கும். ஒரு குழுவினருக்கே உரித்தான கருத்துரு(concept) ஒன்றை எல்லா இடத்துக்கும் பொதுவானதாக பயன்படுத்துவது அபத்தம். இன்னும் ஒன்று வைதீகத்தில் பன்மையம் அதாவது diversity உண்டு வைதீக தத்துவ தரிசனங்கள் என்று குறிப்பிடப்படுவன சாங்கியம், யோகம், நியாயம் வைசேசிகம், மீமாம்சை, வேதாந்தம் என்பன. இவற்றினுள்ளும் வேறுபட்ட நிலைப்பாடு உடையவர்களை க்காணலாம். ஆகவே வைதீகம் என்ற இந்திய ஹிந்துக்கருத்தாகத்தை அடிப்படைவாதத்திற்கும் பழமை வாதத்திற்கும் ஒப்பாக வைப்பது சரியானதன்று.
    அன்புடன்
    விபூதிபூஷண்

  36. நீங்கள் சேவை நிறுவனங்கள் பெயரை அனுப்பினால் அதை தொகுக்கத் தொடங்கலாம். யாரிடமாவது கடந்த ஆண்டு சேவை நிறுவனக் கண்காட்சி லீப்லேட்கள் இருந்தால் அதை லிஸ்ட் செய்யுங்கள்.

  37. கிருஸ்தவர்கள் பைபிளை வேதாகமம் என்றே அழைக்கிறார்கள்.என் பதிலும் அதை ஒட்டியே அமைந்துள்ளது.

  38. மரியாதைக்குரிய ஸ்ரீ வெங்கட் சாமிநாதன் மற்றும் ஸ்ரீ விபூதிபூஷன் ஆகியோருக்கு என் நமஸ்காரங்கள்.உங்கள் கருத்துக்கள் எனக்கும் உடன்பாடானதுதான்.எனினும் நடைமுறையில் கிறிஸ்தவர்களின் வேதநூல் பைபிள் என்றும்,முஸ்லிம்களின் வேதநூல் குரான் என்றுமே தமிழ்நாட்டில் குறிப்பிடப்படுகிறது.இது முற்றிலும் தவறானதே.வேதா,தர்மா,முக்தி,கர்மா,போன்ற பல சொற்கள் ஹிந்து மதத்திற்கு மட்டுமே பொருந்தும்.ஆபிரகாமிய செமிட்டிக் மதங்களுக்கு எக்காலத்திலும் பொருந்தாது.உதாரணதிற்கு தர்மா என்ற சொல் வேத இலக்கியங்களில் இடத்திற்கு தகுந்த ஏராளமான அர்த்தங்களை கொடுக்கிறது.அனால் அவ்வார்த்தைக்கு நிகரான வேறு சொல் பிற மத இலக்கியங்களில் வலைப்போட்டு தேடினாலும் கிடைக்காது.வைதீக யூதர் என்ற வார்த்தையை பொறுத்தவரை சென்னையில் உள்ள the little flower நிறுவனம் வெளியிட்டுள்ள ஆங்கில தமிழ் அகராதியில் உள்ளதை குறிப்பிட்டுள்ளேன்.pharisee என்ற வார்த்தைக்கு வைதீக யூதர் என்றே அர்த்தம் கொடுத்துள்ளனர்.அந்த அகராதியை உருவாக்கியவரும் ஒரு ஹிந்து வைதீகர்தான்.

  39. இந்து பூமியை ஆக்கிரமித்த அன்னியர்கள் இங்கு தங்கள் மதங்களைப் பரப்ப வேண்டுமானால் இந்துக்களின் மத வழிபாட்டு முறைகளை மாற்றாமல், அங்கு இந்துக்கள் வழிபடும் கடவுள்களை மட்டும் மாறிவிட்டு மற்ற சொற்பிரயோகங்களை அப்படியே கையாண்டார்கள். பைபிள் வேத நூல் ஆயிற்று. பாதிரியார் ஐயர் ஆனார். அவர்களுடைய வேண்டுதல்களும்/முறையீடுகளும் ஜபம் ஆயிற்று. அவர்கள் மத வழிபாட்டில் இல்லாத தேர் பவனி, சப்பர, ரத பவனிகள் உருவாயின. இந்துக்களின் வேத மந்திர ஒளியின் அடிச்சுவட்டில் மாதா கோயில்களில், அவர்களது ‘வசனங்கள்’ பலரால் படிக்கப் படுகின்றன. இந்துக்களை இயல்பாகக் கவர்ந்து மதமாற்றம் செய்யப் பயன்படும் வழிகள் இவை. அதே பாணியில்தான் வேத, வைதீக, போன்ற சொற்களைப் பயன் படுத்துகின்றன. சில மதங்கள் மக்களைத் தங்கள் வழிக்குக் கொண்டு வர அமைதி வழியையோ, முடியாவிட்டால் ஆயுத வழியையோ பின்பற்றலாம் என கொள்கை முடிவு வைத்திருக்கின்றனர். அறியாமை, வறுமை இவர்களே அவர்களுக்கு வியாபாரம் செய்ய ஏற்ற இடமாக இருக்கின்றன. நம் சொற்களை வைத்தே நம்மை ஏமாற்றும் முறை அவர்களுடையது. எந்த மதமாற்ற இயக்கங்களுக்கும் ஆட்சியில் இருப்போர் ஆதரவு இருந்தால் விந்தைகள் பல புரிய முடியும்.

  40. @வி.கோபாலன்/சோமசுந்தரம்.
    “ஞானஸ்நானம்,ஆசீர்வாதம்,ஜெபம்,வேதம்,மனுஷன்,கர்த்தா(ர்),(ஸ்)தோத்திரம்,ஜீவன்,
    பாபம்,புண்ணியம்,பிதா,தேவன்,ஆன்மா…..” இன்னும் பல ஹிந்து சமஸ்கிருதசொற்கள்
    கிருத்தவ பாதிரியார்களால் use செய்து பரப்புகிறார்கள்.இவை தமிழ்ச் சொற்கள் அல்ல
    என்பதை முக்கியமாக கவனிக்கவேண்டும்.ஆனால் ஹிந்து மதத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற சித்தாந்தத்தை கொண்ட “இந்தியர்கள்” இவர்கள்.
    திரு.சிவாஜி கணேசன் “ஞானஒளி”என்ற திரைப்படத்தில் “பிதாவே,எங்கள் ஆட்டு மந்தையிலிருந்து,2 ஆடுகள் வெவ்வேறு திசைமாறிப்போய் திண்டாடிக்கொண்டு
    இருக்கிறது” என்று சொல்வார்.அந்த ஆட்டு மந்தை தான் ஹிந்து மதம்.அவ்விரண்டு
    பிரிந்துபோன ஆட்டுக்குட்டிகள் தான் கிருத்தவரும்/இஸ்லாமியத்தவரும் என்ற உவமையில் கொண்டு காலம் கனியும் போது அந்த ஆட்டுக்குட்டிகள்
    ஆட்டு மந்தையில் வந்து சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை டாக்டர்.சுப்ரமணிய ஸ்வாமியின் முயற்சிகள்/அவருடைய “இஸ்லாமியர்/கிருத்தவர் முன்னோர்கள் ஹிந்துக்கள்” என்ற கட்டுரை/மற்றும் நாடு முழுவதுமான அதற்கு கிடைத்து இருக்கும் அங்கீஹாரம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கிறது.
    மத மாற்ற “எவ்விதமான தந்திர யுக்தியைக்கையாண்டாலும்” அது சில காலத்திற்கு
    தான் பலன் தரும் நெடுங்கால பயன் கொடுக்காது.

  41. அடப்போங்கயா.. செங்கொடி அவர்னி தளத்தில் குரான் வேதமென்றும் , ஹதிஸ் உபதிடதம் என்றும் குறிப்பிட்டு இஸ்லாமை சாடியிருந்தார்… இந்த ஹதிஸை உபனிடதம் என்று கூறியதைப்பார்த்து எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. இது வேண்டுமென்றே, நமது நூல்களை இழிவுபடுத்தக்கூறுவர்க்கா?
    கழுதைக்குக்கு தெரியுமா கற்பூரவாசனை.

  42. இங்கு சிலர் தெரசா இந்தியாவிற்கு சேவை என்ற பெயரில் மதம் மாற்ற வந்தார்கள் என்று தவறாக நினைத்து உள்ளனர். ஆனால் உண்மை அதுவல்ல.

    முஸ்லீம் நாடான அல்பேனியாவில் முஸ்லீம்களை மதமாற்றம் செய்ய முயற்சி செய்தார் இந்த தெரசா. எப்பொழுதும் போல முகமது நபி பற்றி அவதூறு பிரச்சாரம் செய்ததோடு மட்டும் இன்றி பண உதவி என்ற பெயரில் மதமாற்ற தொழிலையும் செய்தார்.

    ஹிந்துகளை போன்று பல தெய்வ கோட்பாடுகளையும் இயற்கை வழிபாட்டையும் கொண்ட மக்கள் வாழ்ந்த அல்பேனியா 11 நூற்றாண்டில் கிறித்துவ படைகளால் கிறித்துவர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டு, பின்பு இஸ்லாமிய அரசாட்சியான ஓட்டமன் அரசாட்சியில் வால் முனையில் அனைவரும் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.

    இத்தாலிய குள்ள நரிகள் ஓட்டமன் இஸ்லாமிய அரசாட்சியை முதுகில் குத்தி உடைத்து அதன் பகுதியை ஆக்கிரமித்து மீண்டும் மத மாற்றம் செய்ய தொடங்கினர்.

    தற்காலிகமாக உருவான ஜோக் என்ற மன்னராட்சி கீழ் அல்பேனியா வந்தாலும் பெரும்பாலான இடங்கள் கம்யூனிஸத்தின் கீழ் வந்தது. கிறித்துவ மிஷினரிகள் ஆளும் மன்னராட்சி மற்றும் கம்யூனிஸ கூட்டத்திற்கு எதிராக ஒற்றர் படை போல செயல்பட்டு இத்தாலிய அரசாங்கத்திற்கு உதவி செய்து கொண்டு இருந்தனர்.

    இத்தாலி அரசாங்கம் கொட்டிய பணத்தில் கத்தோலிக்க கிறித்துவம் விஷம் போல பரவ தொடங்கியது. தன்னுடைய நாட்டை இத்தாலிய கிறித்துவ வெறியர்களிடம் இருந்து காப்பாற்ற கிறித்துவ மிஷினரிகளை விரட்டி அடித்தார்.

    அவ்வாறு விரட்டி அடிக்கப்பட்ட தேச துரோகி தான் இந்த “Agnes Gonxha Bojaxhiu” என்ற தெரசா. அங்கு இருந்து விரட்டி அடிக்கப்பட்டு அயர்லாந்து சென்று பின்னர் அங்கு இருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார்.

    தனது சொந்த நாடான அல்பேனியாவிற்கே இத்தாலிக்காக துரோகம் செய்த இந்த கிறித்துவ தீவிரவாதிக்கு இந்தியா எம்மாத்திரம்???

    இவளை எல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆடும் செக்யூலர் ஹிந்துகளை என்னவென்று சொல்வது?

  43. தமிழன்,

    செங்கொடி இன்னும் பழைய கம்யுனிஸ்டு வாதங்களை சொல்லி போர் அடிச்சுக்கொண்டு இருக்கிறார். கோவில்ல சேரும் பணமெல்லாம் ஏழை மக்களை சுரண்டி சேர்த்த பணம் என்று போட்டு தாக்குகிறார். சும்மா உதாரணத்திற்கு பாத்தாலும் இன்றைய நிலைமையில் கூட பஞ்சத்தில் இருப்பவன் யாரும் கோவிலுக்கு சென்று காசு போடமாட்டான், பணக்காரன் தான் காசு போடறான். இதை சொன்னா உடனே செங்கொடி அந்த பணக்காரனுக்கு எங்கேருந்து வந்தது காசு ஏழை உழைப்பாளியிடமிருந்து பிடுங்கியது தானே என்பார். ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள் என்பதற்கு உருப்பிடியா ஒரு காரணத்தையும் இன்னிவரைக்கும் இவங்க கண்டுபிடிக்கல, கண்டுபிடக்க போறதும் இல்லை.

    செங்கொடி போன்றோருக்கு ஒரு ஆதரவு கூட்டம் இருந்துகிட்டே இருக்கும் ஒண்ணுமே பண்ணிகிரமுடியாது.

  44. @ குளச்சல் ராஜா,

    /// நாங்கள் உங்கள் வெறியை அடக்கினால் ……… தாங்க மாட்டீர்கள். பயங்கரமா இருக்கும் .//

    “நாங்கள்” என்கிற வார்த்தையில் மறைந்திருக்கும் நீங்கள் யார் ராசா?

  45. // இப்படி சுகாதாரமற்ற முறையில் நேயாளிகளை நடத்துவதால் அங்கே பணியில் இருக்கும் பல நர்ஸ்கள் காசநோய் எயிட்ஸ் போன்ற நோய் தொற்றிக்கொண்டு அவதிப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். //

    //எயிட்ஸ் போன்ற நோய் தொற்றிக்கொண்டு // எயிட்ஸ் தொற்று வியாதி அல்லவே! நர்சுகளுக்கு எப்படி தொற்றியிருக்கும்? நோயாளிக்கு போட்ட ஊசியையே நர்சுகளும் அவசரத்திற்கு போட்டுக்கொண்டிருப்பார்களோ? சந்தேகத்தின் பலனை (benifit of doubt) ‘கன்னியாஸ்திரிகளுக்கே விட்டுவிடுவோம்’!

  46. ///சென்னையில் உள்ள the little flower நிறுவனம் வெளியிட்டுள்ள ஆங்கில தமிழ் அகராதியில் உள்ளதை குறிப்பிட்டுள்ளேன்.pharisee என்ற வார்த்தைக்கு வைதீக யூதர் என்றே அர்த்தம் கொடுத்துள்ளனர்.அந்த அகராதியை உருவாக்கியவரும் ஒரு ஹிந்து வைதீகர்தான்.///

    திரு சோமசுந்தரம் கொடுத்த தகவலுக்கு நன்றி.

    நம்மில் யாராவது அல்லது யாரால் எல்லாம் முடியுமோ அவர்களெல்லாம் LIFCO பதிப்பகத்தாரிடம் சொல்லி இந்த அர்த்தத்தைத் திருத்த ஏற்பாடு செய்வோம். அதுதான் ஆக்க பூர்வமான நடவடிக்கை ஆகும்.

    இல்லாவிட்டால் கருணாநிதி ‘ஹிந்து என்றால் திருடன்’ என்று ஒரு குப்பை அகராதியை மேற்கோள் காட்டியது போல இதையும் சொல்லிவிட்டு LIFCO அகராதியை மேற்கோள் காட்டுவார் !

  47. The truth about “Satyamev Jayate” – Masjid construction !

    https://haindavakeralam.com/HKPage.aspx?PageID=16011&SKIN=B

    https://www.satyamevjayate.in/issue04/donate/

    The foundation where your donations and income via SMSs will go is called “Humanity Trust” and this is the website of this trust:

    https://humanitytrust.com/

    Objective:
    ·Free medical helps for people in emergency.
    ·Educational Scholarships/financial assistance for school students (Fees/Schoolbags/Uniforms/Accessories).
    ·Masjid Construction assistance. (Bore/construction helps)
    ·Etheemkhana (Feeding/helping/Sheltering the Orphan)
    ·Placement assistance for Islamic youngsters (notifications about jobs across various geographies)
    ·Counseling of school or college students regarding education or career guidance.
    ·Bore-Well in the most water scarcity areas.
    ·Widows, Old people rehabilitation programs.

  48. mother therasha va pathi ippadi poi solrinkale ungaluku manasatchi unda. tamil nadu-la ennaiku than yara kura solloma irunthirukkinga. ponnana polothugale ellam veenai kurai pesi veen polothugale pol marruvathu thamalanin sirappu.
    (itha neenga net la podatinalum mother therasha va pathi ippadi eluthinavangaluku itha sollidunga intha mari ini poiya eluthitu iruntha nan summa iruka maten manusana vida jesus-a athima nambura ennala ethayum seyya mudiyum. itha padicha konja days-ye neenga atha purinchipinga be careful)

  49. கோமதி செட்டி இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல. சரி தெரசா வ பத்தி இப்படி பேசுறிங்களே நீங்க கண்ணாடி முன்னாடி நின்னு நம்ம ஒழுங்கா இந்த உலகத்துல இருக்கோம்னு யோச்சி பாருங்க தெரசா என்ன உங்க வீட்டு வேலைகாரியா ? வேலைகாரிய கூட மரியாதையா நடத்தனும்னு தான் எங்க jesus சொல்லி இருக்காங்க . நீங்க என்னன்னா அவ இவ னு பேசிருக்கிங்க. உங்களுக்கு என்ன தகுதி இருக்கு பேசுறதுக்கு? நம்மள நேசிக்கதாவங்களையும் கூட நேசிக்கனும்னு தான் jesus சொல்லி இருக்காங்க .அதனால உங்கள சும்மா விடுறேன் இனி jesus பத்தி எதாச்சும் பேசினிங்க நான் சும்மா இருக்க மாட்டேன் .இத படிச்சா கொஞ்ச நாளில் அத புரிஞ்சிப்பிங்க .

  50. பிரியா அவர்களே,
    கோமதி செட்டி என்ன எழுதுனாங்க நு நான் படிக்கல. ஆனா உங்க கடவுள பத்தியும் துறைவிகள பத்தியும் எழுதுனா மட்டும் பொங்கி எழரீங்களே, நீங்க நாவுகூசாமே எங்க கடவுள்கள பத்தியும் துறவிங்கள பத்தியும் கத்துகத்து கத்தறீங்களே, எங்களுக்கு எப்படி இருக்கும்?

    //சரி தெரசா வ பத்தி இப்படி பேசுறிங்களே நீங்க கண்ணாடி முன்னாடி நின்னு நம்ம ஒழுங்கா இந்த உலகத்துல இருக்கோம்னு யோச்சி பாருங்க தெரசா என்ன உங்க வீட்டு வேலைகாரியா ?//

    அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு முன்னாடி நீங்க அத பாலோ பண்றீங்களா நு பாருங்க!

    //அதனால உங்கள சும்மா விடுறேன் இனி jesus பத்தி எதாச்சும் பேசினிங்க நான் சும்மா இருக்க மாட்டேன் .இத படிச்சா கொஞ்ச நாளில் அத புரிஞ்சிப்பிங்க .//

    இல்லனா என்ன மேடம் நடக்கும்? என்ன செய்வீங்க? இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி குளச்சல் ராஜ நு ஒருத்தர் ஒரு பிட்ட போட்டாரு. அப்பறம் ஆள காணும்!

    இறுதியா, உங்க கடவுள பத்தி மட்டும் யாரும் எதுவும் சொல்லக் கூடாதுங்கறீங்க. நீங்க மட்டும் அடுத்தவங்க நம்பக்கையும் கடவுள்களையும் கேலி பண்ணலாமா?
    அதுக்கு இந்திய ஜனநாயகம் உங்களுக்கு ஏதாவது சலுகை குடுத்துருக்கா??

    //mother therasha va pathi ippadi poi solrinkale ungaluku manasatchi உண்ட//

    இத சொல்ல உங்களுக்கு மனசாட்சி உண்டா???

  51. கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் என்ற பிரபல ஆங்கில-அமெரிக்க எழுத்தாளர் எழுதிய கட்டுரையைப் படித்து பாருங்கள். கோமதி செட்டி எவ்வளவோ தேவலாம் என்று உங்களுக்கே புரியும்:-

    https://www.slate.com/articles/news_and_politics/fighting_words/2003/10/mommie_dearest.html

  52. @priya,
    அருமை ப்ரியாவே. , தேவப்ரியா என்னும் ஒரு அன்பரின் தளத்தைப்போய் பாருங்கள்
    https://pagadhu.blogspot.in/
    . உங்களுக்கு நிரம்ப்ப ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.

  53. என்ன சொன்னிங்க பாலாஜி ,என்ன செய்வீங்கனா? நன் எதுவும் செய்ய மாட்டேன்.நீங்க குறை சொல்றிங்களே என் jesus அவங்க செய்வாங்க.உடனே வேற மாறி நினைக்காதிங்க.நீங்க தெரியாம பேசுறிங்க அதனால கண்டிப்பா உங்களுக்கு புரியும்.நீங்களே சொல்விங்க. என்னாகும் தெரியும் jesus பெயர சொல்லி நிறைய தப்பு நடக்குதுன்னு.ஏன் உங்க மதத்துல நடக்கலையா இந்த மாதிரியான தப்பு. உங்களுக்கு ஒருநாள் கண்டிப்பா புரியும். நான் ஒன்னும் மத்தவங்கள மாதிரி காணாம போக மாட்டேன்.

  54. // நம்மை எல்லோரும் அல்பேனியாவிலிருந்தும்இத்தாலியிலிருந்தும் வாஷிங்டனிலிருந்தும் மாஸ்கோ, பீகிங்கிலிருந்தும் வருபவர்கள் எல்லாம் முட்டாளாக்குகிறார்கள், சுரண்டுகிறார்கள் .முட்டாளாக்குகிறார்களென்றால், நாமும் நம் முகத்தைக் கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நல்லது. .//

    அதை மட்டும் செய்யமாட்டோம்..

    ஓய்வூதியம் வாங்கும் வயோதிகர்களை வீதிக்கு கொண்டுவரும் முனைப்புள்ளவர்களால் அதைச் செய்ய முடியுமா திரு.வெங்கட் சாமிநாதன் அவர்களே.! நானும் செய்யமாட்டேன், செய்பவர்களையும் குறை சொல்லாமல் இருக்கமாட்டேன் என்பதுதான் நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியம்..

  55. ஹலோ ஹலோ கொழந்தே, போதும்! இந்த மாதிரி போலி சாபமெல்லாம் நிறைய கேட்டாச்சு.. வேறேதாவுது இருந்தா முயற்ச்சி செய்யுங்க.
    “Who can tell what the Lord can do?” நு பாடுறீங்க, அப்றோம் அவரு என்ன செய்வாருன்னு நீங்க எப்படி சொல்றீங்க? உங்களுக்கு எப்படித் தெரியும்?

    //உடனே வேற மாறி நினைக்காதிங்க.//

    கடவுளுக்கும் பக்தனுக்கும் இருக்கும் புனிதமான உறவை நாங்க எப்பவுமே கொச்சை படுத்துனதில்லை, அதெல்லாம் உங்க ஆளுங்க செய்றதுதான்!

    // நம்மள நேசிக்கதாவங்களையும் கூட நேசிக்கனும்னு தான் jesus சொல்லி இருக்காங்க.//

    இத உங்க முதல் மறுமொழில எழுதுனீங்க.

    //இத படிச்சா கொஞ்ச நாளில் அத புரிஞ்சிப்பிங்க. நீங்க குறை சொல்றிங்களே என் jesus அவங்க செய்வாங்க. நீங்க தெரியாம பேசுறிங்க அதனால கண்டிப்பா உங்களுக்கு புரியும்.நீங்களே சொல்விங்க.//

    ஒரு கன்னத்துல அரேஞ்சா மறு கன்னத்த காட்ட சொன்னாருன்னு சொல்றீங்க. இங்கே கன்னத்துல அடிக்கவே இல்ல, ஆனா கொலவெறியோட சாபம் கொடுக்கறீங்க. இது தான் உங்க கருணையா? இல்ல நீங்க சொல்ற ஜீசசொட கருணையா??

    கருணை நா என்னனு தெரியுமா உங்களுக்கு?

    தன்ன கொல்ல மனித விரல்களை மாலையாக அணிந்துகொண்டு கொடூரமா ஓடிவந்த அங்குலிமாலாவ பாத்து “குழந்தாய்” என்று அழைத்து, கொலைகாரனையும் பெரிய துறவியா மாத்துனாரு இந்த மண்ணுல நடந்த ஒரு மாமனிதர். அவர புத்தர்னு கூப்புடுவாங்க. கேள்விபட்டிருக்கீங்களா?

    தன்ன கடிக்கவந்த வெஷப்பாம்பக்கூட மன்னிச்சு விட்டாரு இன்னொரு மாமனிதர். அவர்தாம் மகாவீரர்!

    அடுத்தேன்னமோ அதிசயம் அதிசயம் நு சொல்றீங்க. இந்த மண்ணுல கூட செத்தவங்க பெழச்சிருக்காங்க, ஊமைகள் பேசியிருக்காங்க, காலூனமுற்றவர்கள் நடந்துருக்காங்க.

    தன்ன அவமானப்படுத்த கொடுத்த ஆட்டுமாமிசத்தை ஒரு மந்திர உச்சரிப்பால பூக்களகாவும் பழங்களாகவும் மாற்றி நாவாப் சித்தீக் மசூத்கானை வாயடைக்க வெச்சாரு ஒரு பெரியவர். அவர் பெயர் ராகவேந்திரர். ஜீவசமாதி அடேஞ்சப்புரம்கூட சமாதிய விட்டு வெளிய வந்து பேசியிருக்காரு. இத ஸ்காட்லாந்துல பிறந்து 1800 ல பெள்ளறியோட கலெக்டரா இருந்து (பிறகு மெட்ராசொட கலெக்டரா) பணிபுரிஞ்ச சர் தாமஸ் மன்றோ பாத்ததா மெட்ராஸ் கவர்மன்ட் கசெட், 11 ஆம் புத்தகம், 213 ஆம் பக்கத்துல எழுதி வெச்சுருக்காரு. இன்னைக்கும் அது போர்ட் செயின்ட் ஜார்ஜ் கோட்டைல இருக்கு!

    தண்ணிய வூத்தி வெளக்கேத்தியிருக்காங்க, கொதிக்கிற தண்ணில கய்யவுட்டு சோறு வெந்துருக்கானு பாத்துருக்காங்க. நீங்க சொல்றவங்களுக்கு பாட்டன், பூட்டன், முப்பாட்டங்கள எல்லாம் இந்த நாடு பாத்துர்க்கு.

    எல்.கே.ஜி. சிலபஸ் போல இருக்கும் மதத்த பிரசாரம் செய்யும் உங்களிடம், பீ.எச்.டி. சிலபஸ் போல இருக்கும் எங்க மதத்த பிரசாரம் செய்தா உங்களுக்கு தூக்கம் கூட வராது! பத்து நிமிஷம் பேஞ்ச மழைல தேங்கி இருக்குற தண்ணிகூட பஸிபிக் மகாசமுத்திரத்த ஒப்பிட எனக்கு விருப்பமில்லை!!

    //ஏன் உங்க மதத்துல நடக்கலையா இந்த மாதிரியான தப்பு.//

    எந்த தப்பு? அப்படினா தப்பு நடந்ததுனு ஒத்துக்கறீங்களா? கட்டுரைல சொன்ன குற்றச்சாட்டுகளும், மருமொழிகள்ள போட்டிருக்குற குற்றச்சாட்டுகளும் உண்மைன்னு சொல்றீங்களா?? 🙂

    டைவர்ட் பண்ணாம தொடங்கிய பிரச்சனைக்கு வரேன். அன்னை தேரேசாவோட வயதுக்காகவாது ‘அவள், இவள்’ நு எழுதாம இருந்துரிக்கலாம். தப்புதான். எங்களுக்கு உங்க துறவிகள் மீதோ உங்க jesus மீதோ எந்த காழ்புணர்ச்சியும் இல்ல. “மதமாற்றம் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு” நு நீங்க சொல்றப்போ, அத தடுக்கற உரிமை எங்களுக்கும் உண்டு!

    When you have the right to offend or attack, we have every right to defend ourselves!!

    இறுதியாக:-
    //உங்களுக்கு ஒருநாள் கண்டிப்பா புரியும். நான் ஒன்னும் மத்தவங்கள மாதிரி காணாம போக மாட்டேன்.//

    யாரோட விதி எப்படின்னு யாருக்கும் தெரியாது. யாரும் சாஸ்வதமா இந்த உலகத்துல தங்கப்போவதுமில்ல. அப்படி இருக்குறப்போ நீங்க என்னமோ நூறுவயசு வாழபோவது போலவும், நாங்க என்னமோ அல்பாயசுல போவதுபோலவும் காமெடி பண்றீங்க.

    லூசுத்தனமா சாபம் குடுத்துட்டிருகாதீங்க. அதெல்லாம் நல்லவங்க குடுத்தாதான் பலிக்கும்! நீங்க இவ்வளவு தடவ என்ன நாசமாபோகசொல்லியும் எனக்கு உங்க மேல கோவமே வரல. காரணம் யாரையும் வெருக்கசொல்லியோ அழிக்கசொல்லியோ எங்க இறைவன் எங்களுக்கு சொல்லல. எது நடக்குதோ அது நடந்துகிட்டே இருக்கும். யாரு கூச்சல் போட்டும் நடக்கறத மாத்தமுடியாது.

    உங்கள நெனெச்சா எனக்கு பாவமாதான் இருக்கு. இப்படி கத்துனவங்களுக்கேல்லாம் கடைசீல பைத்தியம் தான் புடிச்சிருக்கு. நீங்களும் அந்த லிஸ்ட்ல சேராம இருங்க. நீங்க சொல்ற அதே ‘Father of the Heavens’ உங்களுக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்!

    கடைசீயா சுவாமி விவேகானந்தர் சொன்ன ஒரு கதைய சொல்லீகறேன். சுதந்தரத்துக்கு முன்னாடி வெள்ளைகார கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் ஒரு படிப்பறிவு இல்லாத இந்துவைப்பார்த்து கேட்டாராம்:- “அந்த கல்ல விழுந்து விழுந்து கும்படரீயே, அதே நான் கம்பால அடிச்சா அது என்ன என்ன செய்யும்னு? (If I hit the idol with the stick, what will it do to me?”. அதுக்கந்த பாமர இந்து பதிலளித்தானாம்:- “நான் உன் கடவுளை கேவலமாகப் பேசினால், அவர் என்னை என்ன செய்திடுவார்? (If I abuse your god, what will he do to me?”.

    கிறிஸ்தவராக இருந்ததால் மட்டும், அந்த போதகரும் சொர்கத்திற்கு சென்றிருக்கப் போவதில்லை! இந்துவாக பிறந்ததனால் மட்டும், அந்த பாமரனும் நரகத்திற்கு, உங்கள் பாஷையில் eternal hell இற்கு சென்றிருக்கப் போவதில்லை!!

    எனவே இந்த சாபங்கள எல்லாம் குடுத்து பயமுருத்தலாம்னு நினைக்காதீங்க… உங்கள் முன்னோர்களைக் கேட்டுப்பாருங்கள்:- இந்த மண்ணில் பிறந்த ஏழு வயதுச்சிறுவன் ஏழுதலை நாகத்தின் மீது எவ்வாறு நடனமாடினான் என்று!

    உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்! நரகத்தில் சந்திப்போம்!!

    அன்புடன்,
    பாலாஜி.

  56. பிரியாவுக்கு நல்ல சூடு கொடுத்தீர்கள் பாலாஜி. பாராட்டுக்கள்.

    மதர் தெரசாவின் மதமாற்ற பணியை யாரும் பாராட்டமுடியாது. இந்துக்கள் இயேசு கிறிஸ்துவை இறைவனின் பல்வேறு அவதாரங்களில் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் கிறித்தவர்கள் இந்து கடவுளரையும், இந்து மத ஞானியரையும் இழிவு படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள். ஏசுபிரானின் வாழ்க்கையில் பதினாறு வருட காலம் இடைவெளி உள்ளது. இந்த ஆண்டுகளில் அவர் இந்தியாவில் வந்து , தியானம் மற்றும் யோக கலைகளை பயின்று சித்தி அடைந்தார்.மதர் தெரசா அபிரகாமிய மத மாற்ற கும்பலின் பல்வேறு ஏஜெண்டுகளில் ஒருவர் . அவ்வளவு தான்.

  57. //பிரியாவுக்கு நல்ல சூடு கொடுத்தீர்கள் பாலாஜி. பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி அத்விகா அவர்களே..

    பிரியா போன்றவர்கள் தந்த சாபங்களைப் போல பலவற்றைப் பார்த்தாகிவிட்டது. இந்துக்கள் என்றாலே தங்கள் மதத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது என்பது பிறமதத்தினரின் (கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என படிக்கவும்) நம்பிக்கை! என்வாழ்நாளில் பாதினாட்களுக்கு மேலாக ஜான், பால், கொரின்தியன்ஸ், யோவான், சாமுவேல், இம்மானுவேல் போன்ற வார்த்தைகளைத் தான் கேட்டிருக்கிறேன். கண் எதிர்கே பல மதமாற்ற சூழ்சிகளைப் பார்த்திருக்கிறேன். என்னையும் மதமாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். என்னால் இந்துக்களாக மாற்றப்படாமல் எஸ்கேப் ஆனது அவர்களது அதிர்ஷ்டம்!

    //இந்துக்கள் இயேசு கிறிஸ்துவை இறைவனின் பல்வேறு அவதாரங்களில் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் கிறித்தவர்கள் இந்து கடவுளரையும், இந்து மத ஞானியரையும் இழிவு படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள். ஏசுபிரானின் வாழ்க்கையில் பதினாறு வருட காலம் இடைவெளி உள்ளது. இந்த ஆண்டுகளில் அவர் இந்தியாவில் வந்து , தியானம் மற்றும் யோக கலைகளை பயின்று சித்தி அடைந்தார்.//

    இதை பல இந்துக்கள் கூறி கேள்விபட்டிருக்கிறேன். சுவாமி பரமஹம்ச யோகானந்தர் எழுதிய புகழ்பெற்ற நூலான ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ (Autobiograph of a Yogi) என்ற புத்தகத்தில் இவை குறிப்பிடப் பட்டதாக அறிகிறேன். ஒருகாலத்தில் நானும் நம்பியிருக்கிறேன். ஆனால் இனியுமில்லை.
    ஓல இந்துக்கள் செய்யும் தவறு இதுதான். “புத்தர் வேண்டும், பௌத்த மதம் வேண்டாம்; மகாவீரர் வேண்டும், ஜைன மதம் வேண்டாம்; குரு நானக் வேண்டும், சீக்கிய மதம் வேண்டாம்” என்பது பெரும்பாலான இந்துக்களின் கொள்கை. மகாத்மா காந்திகூட “I like your Christ, but I don’t like your Christians; your Christians are so unlike your Christ” என்று கூறியதை நினைவில் கொள்ளவும். போலி மதச்சார்பின்மைக்கு (pseudo-secularism) அஸ்திவாரமே இதுதான். புத்தர், மகாவீரர், குரு நானக், குரு கோவிந்தா சிங், இயேசு கிறிஸ்து, சராஸ்துரா போன்ற பிற மதத்தலைவர்களுக்கு மரியாதை செய்வதில் தவறில்லை. அவர்கள் மரியாதைக்குரியவர்களே! ஆனால் அவர்களையும் நம் தெய்வங்களைப் போல வணங்குகிறேன் என்று சொல்வதில்தான் பிரச்சனை தொடங்குகிறது. அது தேவையற்ற ஒன்றும் கூட.
    ஒரு உதாரணம்:- எனக்கு அய்யப்பன்மீது மிகுந்த நம்பிக்கை. என் வாழ்கையில் நான் நினைத்துக் கூடபார்க்க முடியாத அதிசயங்களை செய்துள்ளான் அப்பெருமான். ஆனால் ஒரு இஸ்கான் நண்பரிடம் பேசும்பொழுது அவர் ஏசுநாதர் கண்ணனின் மகன் என்றுக் கூறினார். ஆதாரம் பவிஷ்ய புராணத்தில் ஏதோ ஒரு மூலையில் ஏசுவை ‘ஈசபுத்திரன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். இருக்கலாம். இந்துமதத்தைப் பொறுத்தவரை எல்லா உயிர்களும் இறைவனின் குழந்தைகளே. “God gave His only begotten son” என்ற கொள்கை நமது மதத்தில் இல்லை. கண்ணனின் பார்வையில் ஆதரவற்ற ஒரு ஏறும்புமுதல் இஸ்கான் பக்தர்கள் சொல்லும் எசுகிரிஸ்துவரை அனைவரும் கண்ணனின் பிள்ளைகளே! இவருக்குமட்டும் எந்த ஒரு பாகுபடயோ சலுகையையோ கண்ணன் கொடுத்துவிடவில்லை.

    ஆனால் அந்த இஸ்கான் நண்பருடன் ஒரு முறை ஐயப்பன் பற்றி உரையாடுகையில் அவர் அய்யப்பனைபற்றி ஒன்று சொன்னார். அதைப் படித்தவுடன் என் நெஞ்சம் வெடித்துவிட்டது. ஐயப்பன் தகாத செயலைச் செய்து சாபம் பெற்று கைலாயத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்ட பூதகணமாம். அதாவது ஏதோ ஒரு நாட்டில் பிறந்து இயேசு கிறிஸ்து கண்ணனின் மகனாம்; அரக்கியான மகிஷியை சம்மாரம் செய்து தேவர்களுக்குப் பரோபகாரம் செய்த என்னிறைவன் பாவப்பட்ட ஆத்மாவாம். நான் அவரிடம் கேட்டேன்:- “ஏன் சார், கோனைஸ் பார்த்தவுடன் குச்சியைஸ் கசக்குதா??” நு.

    உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

    யோகாவைப்பற்றிப் பேசும்பொழுது ஒரு கிறிஸ்தவ போதகர் சொன்னார்:- “இயேசு கிறிஸ்துதான் உலகிலேயே சிறந்த யோகி. கை கால்களில் ஆணிகள் அறையப்பட்டு சிலுவையில் மூன்று நாட்கள் வலியைப் பொறுத்துக்கொண்டார். ஒரு யோகியால்தான் அத்தனை வலியைப் பொருத்துக்கொள்ளமுடியும்” என்று.

    உண்மைதான். அத்தனை வலியைப் பொருத்துக்கொண்டது பெரியவிஷயம் தான். சற்று நம் நாட்டு இதிகாசங்களுக்கு வருவோம். தன் நாட்டு நலனுக்காக உடல் முழுவதும் 240 கூர்மையான பாணங்களைத் தாங்கிக்கொண்டு இரத்தம் சொட்டச்சொட்ட அம்புப்படுக்கையில் 50 நாட்களுக்கும் மேலாக கம்பீரமாக ஒரு வயோதிகர் வலியைப்பொருத்துக்கொண்டு படுத்திருந்தாரே, அவரை எந்த லிஸ்டில் சேர்ப்பது???

    ஆன், அதெல்லாம் கட்டுக்கதை, பொய் புராணம். நாங்கள் சொல்வதுதான் உண்மை என்று ஏதோ பெரிய logical point ஐப் பிடித்து வழக்கின் தீர்பையே மாற்றி விட்டதாக மார்தட்டிக்கொள்வர். ஆம்! நாம் தான் பாட்டி வடை சுட்டக் கதையை பெரிதாகச் சொல்கிறோம். ஏவாளுக்குச் சாத்தான் பாம்புவடிவில் வந்து பழத்தைச் சாப்பிடச் சொன்னதும், பத்து கட்டளைகளை மழையின் மீது வாங்கிக்கொண்டதையும், சிகப்புக் கடலை இரண்டாகப் பிரித்து அதன் நடுவில் நடந்து சென்றதையும் அவர்கள் டிஜிட்டல் கேமராவில் பதிவு செய்து youtube இல் upload செய்தார்கள், நாம்தான் பார்க்காமல் உளறுகிறோம்!!

    ஒன்றுமில்லை. மேலே பிரியா அவர்கள் எழுதிய அதே மறுமொழியை ஒரு இந்துப்பெண் ஒரு ஆண் தெய்வத்தைக் குறித்து எழுதியிருந்தாலும், ஒரு ஆண் ஒரு பெண்தெய்வத்தை குறித்து எழுதியிருந்தாலும் காதால் கேட்க முடியாத அளவிற்கு கேவலமாகப் பேசியிருப்பார்கள் அந்த போதகர்களும், அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட நமது பகுத்தறிவு வா(ந்)திகளும்!

    அது சரி, முஸ்லிம் பாய் ஒருவர் “திருக்குறளைவிட குரானே பெரியது” என்று கூச்சலிட்டபொழுது வேடிக்கை பார்த்தவர்கள் தான் இந்த சூரப்புலிகள்!!

    முடிவாக, பிரமதத்தலைவர்களை மரியாதை செய்வதிலோ, ஏன் வணங்குவதிலோ எந்தத் தவறுமில்லை. ஆனால் “அவர்களும் நம் தெய்வங்கள்தான், எல்லா மதங்களும் ஒன்றுதான்” என்று இந்துக்கள் சொல்வது சொந்தசெலவில் செய்வினை வைத்துக்கொள்வதைப் போலத்தான்.
    உங்கள் நம்பிக்கையை புண் படுத்தியிருந்தால், என்னை மன்னிக்கவும்.

    நன்றி,
    பாலாஜி.

  58. அத்விகா சகோதிரியே நீங்க தயுவு செய்து //பிரியாவுக்கு நல்ல சூடு கொடுத்தீர்கள் // என்ற பேச்சல்லாம் இனி பேசாதிங்க .என்ன பேச்சு இது சூடு கொடுத்தீர்கள் நு .நீங்க commands குடுங்க அத நான் ஒன்னும் சொல்லல ஆனா plz இந்த மாறி words use பண்றத விடுங்க.இந்த பேச்சுக்கு உங்களுக்கு மிக்க நன்றி வேற பாலாஜி சொல்றாங்க. என்ன சொன்னிங்க //மதர் தெரசா அபிரகாமிய மத மாற்ற கும்பலின் பல்வேறு ஏஜெண்டுகளில் ஒருவர் . அவ்வளவு தான்.// யாரா என்ன சொல்றிங்க உங்கள என்ன சொல்றது புரிஞ்சிக்காம பேசுறிங்க அவளுவுதான் .

  59. //இந்த பேச்சுக்கு உங்களுக்கு மிக்க நன்றி வேற பாலாஜி சொல்றாங்க.//

    சுதந்திர போராட்டத்துலயும், கார்கில் போர்லயும், மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல் லயும் நாட்டுக்காக போராடி உயிரவிட்டாவங்கங்கள “எனக்காக இறந்தனர், உனக்காக இறந்தனர்” நு சொன்னா ஒரு லாஜிக் இருக்கும். 2000 வருஷத்துக்குமுன்னாடி இந்தியாவுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு நாட்டுல பிறந்து “நான்தான் கடவுள்” நு சொல்லி தன்னோட மக்களாலேயே வெறுக்கப்பட்டு கொல்லப்பட்டதா ‘சொல்லப்படற’ ஒருத்தர “எனக்காக இறந்தார், உனக்காக இறந்தார்’ நு சொல்லி நீங்க நன்றி சொல்றப்போ (thanksgiving day) ‘பாராட்டுக்கள்’ சொன்ன அத்விகாவுக்கு நன்றி சொன்னதுல என்ன தவறு இருக்கு??
    அது சரி, இருக்க எடம் குடுத்து, நாட்ல வாழவிட்ட இந்துக்கள மனசாட்சி, ஈவுஇரக்கமில்லாம கொன்னுகுவிச்ச்சவங்ககிட்ட நன்றியோ பன்றியோ எதிர்பார்க்கமுடியாது…

    //யாரா என்ன சொல்றிங்க உங்கள என்ன சொல்றது புரிஞ்சிக்காம பேசுறிங்க அவளுவுதான்.//

    உங்களோட வேட்டிவாதம்பன்றது வேஸ்ட்! உங்களுக்கு முத்தீடுச்சு.. இனியும் உங்களோட பேசுனா எனக்கும் பைத்தியம் புடிச்சிடும்.
    அதுசரி, யாரு என்ன சொன்னா என்ன, நீங்கபாட்டுக்கு உளறிகிட்டே இருங்க!!

  60. அன்புள்ள பிரியா,

    தக்க பதில் என்பதற்கு பதிலாக நல்ல சூடு என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தேன். ஆனால் இதுதான் எங்கள் மாவட்டங்களில் புழக்கத்தில் உள்ள சொல் ஆகும். அந்த சொல் தங்கள் மனதை வருத்தப்படுத்தி இருந்தால் , நான் தங்களுடன் என் பணிவான வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதர் தெரசா அனாதைக்குழந்தைகளுக்கும் , ஆதரவற்றோருக்கும் சேவை புரிந்தார் என்பது உண்மைதான். ஆனால் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில், கருத்தடைக்கு எதிராக, அதாவது அரசின் சீர்திருத்த திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்த பிற்போக்கு வாதி தான் அவர். எனவே, யாராக இருந்தாலும் ஒருவர் நல்லது செய்யும் போது, பாராட்ட வேண்டும். தவறு செய்யும் போது கண்டிக்க வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை.

    தாங்கள் உண்மை பைபிளை படிக்க வேண்டும். வாட்டிகனால் வெளியிடப்பட்டுள்ள பைபிள் உண்மையானது அன்று. புதிய ஏற்பாட்டில் , ஏசுபிரானின் மலைப்பிரசங்கம் மட்டுமே ஏசுவின் போதனை. மற்ற பகுதிகள் எல்லாம் ஏசுவின் போதனைகள் அல்ல. உண்மையான பைபிளைப்பற்றி அறிய , ஓஷோவின் The Mustard Seed – என்ற நூலை வாங்கி படிக்க அன்புடன் வேண்டுகிறேன். புனித தாமசின் உண்மையான பைபிளை வாட்டிகன் மூடி மறைத்து விட்டது. எனவே, உங்கள் கிறித்துவம் என்பது நிழலுடன் செய்யும் கருத்துப்பரிமாற்றம் போன்று உள்ளது.

    அன்புள்ள பாலாஜி,

    இந்து மதம் என்பது all inclusive. Nothing can be excluded from Hindu religion. நமக்கு ராமனும் கடவுளே , ராவணனும் கூட இறைவனின் அம்சமே. ஏனெனில், எங்கும் நிறைந்த ஒரே பரம்பொருள் தான் பல வேறு வடிவங்களில், மனித இனம், தாவரம், விலங்கு, மலை, ஆறு, கடல், காடுகள் , மண், காற்று , தீ, ஆகாயம், தண்ணீர் என்று எங்கும் பரந்துள்ளது என்பது தான் உண்மை. எனவே, ஒரு இஸ்கான் அன்பர் தெரிவித்த தவறான கருத்தை கேட்டு , தாங்கள் வருத்தப்பட வேண்டாம். உலகம் முழுவதும் புரியாத அன்பர்கள் ஏராளம் உள்ளனர். இதற்கு எந்த நாடும், மொழியும், மதமும், விலக்கு அன்று.

  61. அன்புள்ள அத்விகா சகோதிரியே,
    //தக்க பதில் என்பதற்கு பதிலாக நல்ல சூடு என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தேன். ஆனால் இதுதான் எங்கள் மாவட்டங்களில் புழக்கத்தில் உள்ள சொல் ஆகும். அந்த சொல் தங்கள் மனதை வருத்தப்படுத்தி இருந்தால் , நான் தங்களுடன் என் பணிவான வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.//
    இந்த பதிலா நீங்க எனக்கு சொன்னதுக்கு ரொம்ப thanks நீங்க சொன்ன The Mustard Seed– என்ற நூலை நான் கண்டிப்பா படிக்குறேன் .

  62. பாலாஜி நான் பேசினதுக்கும் நீங்க சொல்றதுக்கும் சம்மந்தமே இல்லாம இருக்கு. first நான் உங்கள சபிக்காம நீங்க எதுக்கு அவளவு பேசிருந்திங்க நு பதில் சொல்லுங்க .
    //உங்களோட வேட்டிவாதம்பன்றது வேஸ்ட்! உங்களுக்கு முத்தீடுச்சு.. இனியும் உங்களோட பேசுனா எனக்கும் பைத்தியம் புடிச்சிடும்.//
    thanks நான் பைத்தியம் ஆகவே இருக்குறேன் என் jesus பத்தி பேசி நான் பைத்தியம் ங்குற பேர் எடுக்குறதுக்கு சந்தோசம் படுறேன்
    //நீங்கபாட்டுக்கு உளறிகிட்டே இருங்க!!//
    நானா உளருறேன் கொஞ்சம் யோசிச்சி பாருங்க நான் உங்கள சபிக்கமாலையே அவளவு பேசிருந்திங்க அப்போ நீங்க உளருரிங்களா நான் உளறுரென?

  63. அன்புள்ள பிரியா,

    சுவாமி சிவானந்தரின் ” ஏசு பிரானின் வாழ்க்கையும், போதனைகளும்”- ( LIFE AND TEACHINGS OF LORD JESUS) -( PUBLISHED BY THE DIVINE LIFE SOCIETY, UTTARAANCHAL) வாங்கி படித்து பயன்பெற வேண்டுகிறேன். உண்மையான ஏசு பிரானை அறிய அதுவே சிறந்த வழி.

  64. ஒரேபேறான குமாரனே புனையல்
    யோவான்1:18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.(யோவான்1:18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார். )
    மூல கிரேக்கச் சொல் மோனோகெனஸ்-MONOGENUSGREEK IS ‘MONOGENUS’. MONO MEANS ‘ONE’ AND GENUS MEANS ‘SPECIES’ OR ‘TYPE’ OR ‘KIND’. IT IS WORTH NOTING THAT THE WORD IS MONOGENUS, NOTMONOGENESIS (WHICH WOULD MEAN CAME FROM ONE SOURCE, RATHER THAN OF A UNIQUE KIND).

    ஒரு தன்மையிலான, அல்லது தனிதன்மையிலான என்பதான சொல்லே யோவான் சுவி பயன்படுத்தியுள்ளது.

    பாலாஜி, மிக அருமையாய் எழுதினீர்கள்.

    // “God gave His only begotten son” என்ற கொள்கை நமது மதத்தில் இல்லை. //

    பைபிள் சுவிசேஷத்திலும் இல்லை. தவறான மொழிபெயர்ப்பை தொடரும் திருட்டுத்தனமே
    https://www.pagadhu.blogspot.in/2012/08/blog-post_4.html
    நன்றி-தேவப்ரியா சாலமன்
    5ம் நூற்றாண்டில் ஜெரோம் லத்தீன் வல்காத்து மொழிபெயர்ப்பில் மாற்றித் தவறாக மொழி பெயர்த்ததே – “ONLY BEGOTTEN”; மோனோகெனஸ் எனில் லத்தீனில் யுனீக் என ஆகும் ஆனல் அவர் யுனிகஸ் எனத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இதே மோனோகெனஸ் மேலும் பல இடங்களில் புதிய ஏற்பாட்டில் வரும்போது சரியான பொருள் தரும்படியாக மொழிபெயர்க்கின்றனர்.

    மூல கிரேக்கத்தில் “ஒரேபேறான ” இல்லவே இல்லை.

  65. கருப்பய்யா அவர்களே,
    நீங்கள் சொல்கின்ற etymology எனக்குப் புரிகிறது. ஆனால் இது அவர்கள் மதக் கோட்பாட்டில் எப்படி அப்ளை ஆகிறது என்று எனக்கு விளங்கவில்லை. எனக்கு அதில் பெரிதளவுக்கு விருப்பவுமில்லை (மன்னிக்கவும்!). என்றுமே பிறமதத்தவர்களை புன்படுத்தவேண்டுமென்று நான் நினைத்ததுகூட கிடையாது. “இயேசு கிறிஸ்து கண்ணனின் மகன்” என்று எந்த கிறித்தவரும் கூறமாட்டார்கள். ஏனெனில் கண்ணன் மட்டுமல்ல, மற்ற எல்லா இந்து தெய்வங்களும் (பிற பாகன் மத தெய்வங்களும்) அவர்களுக்கு கற்பனைக் கதாபாத்திரங்களே! இதை சொல்வது இஸ்கான் பக்தர்களே. மேலே எழுதியதுபோல, எல்லா உயிர்களும் கண்ணனின் பிள்ளைகளே, இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு எல்லாம் இங்கில்லை (சாதிப் பாகுபாடுகள் கூட இங்கு எடுபடாது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பிறந்த பக்தர்கள் மற்றும் மகான்கள் எத்தகைய நற்கதி அடைந்தனர் என்று வரலாறு கூறும்). கிறித்தவர்கள் மற்றும் பிற மதத்தினரை ஈற்பதற்கு மற்ற இந்து தெய்வங்களை எந்த அளவுக்கு தூற்றுகிறார்கள் என்பதை எனது மறுமொழியை படித்தீர்களானால் உங்களுக்குப் புரியும்!

    அத்விகா அவர்களுக்கு,
    இந்து மதம் எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்கிறது என்பது உண்மைதான். அதற்காக யானை தனது தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொள்வதுபோல அடிக்கடி இதை சொல்லிக் கொண்டிருந்தால் இறுதியில் நமக்குப் பாடைகட்டி சங்கை ஊதிவிடுவார்கள். நீங்கள் நிறைய படித்தவர். பல புத்தகங்களை பரிந்துரைக்கிறீர்கள். நான் ஒரு புத்தகத்தை பரிந்திரைக்கிறேன். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ‘உலக மதங்களின் கூட்டத்தில்’ பங்கேற்று இந்தியா திரும்பியவுடன் இந்தியர்களுக்கு ஒரு சிறப்புரை அளித்தார். ‘In defense of Hinduism’ என்ற பெயரில் சென்னை இராமகிருஷ்ணா மடம் அதனை ஒரு குட்டிப் புத்தகமாக வெளியிட்டுள்ளது. விலை ஏழே ரூபாய் தான். தயவுசெய்து அதை வாங்கி படியுங்கள் என்று உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அதனை படித்தீர்கள் என்றால், நான் என்ன சொல்லவருகிறேன் என்று உங்களுக்கே புரியும்..

    நன்றி,
    பாலாஜி.

  66. இதில் கடைந்தெடுத்த அயோக்யத்தனம் என்னவென்றால் தெரேச பிறந்து வளர்ந்த அல்பேனிய நாட்டில் மத வழிபாடோ, அதைப் பற்றிப் பேசுவதோ மற்ற கதைச் சார்ந்த எந்த நடவடிக்கைகளோ தடை செய்யப் பட்டுள்ளது என்பதுதான்
    தெர்ச உண்மையிலேயே அவ்வளவு யோக்கியம் என்றால் நேர்மையானவர் என்றால் அங்கிருந்து கொண்டே இதையெல்லாம் எதிர்த்து போராடி இருக்கலாமே
    மேலும் அல்பேனியா ஏழை நாடு . அங்குள்ள மக்களுக்கு சேவை செய்யாமல் இங்கு ஏன் வர வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *