நரேந்திரர் வழியில் நாளைய இந்தியா

மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நேர்த்தியாகத் தயாரிக்கப் பட்ட கிரிக்கெட், வாலிபால் சாதனங்ளை 12 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு வழங்கியுள்ளது. அந்த விளையாட்டு ‘கிட்’களில் பொறிக்கப் பட்டுள்ளது பிரபல விளையாட்டு வீரரின் படமோ திரைப்பட நடிகரின் படமோ அல்ல, ஒரு புகழ்பெற்ற இந்துத் துறவியின் படம். “எனது வாலிப நண்பர்களே, நீங்கள் கீதையைப் படிப்பதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு இன்னும் அருகில் செல்வீர்கள்… உங்கள் புஜங்களிலும், தசைகளிலும் இன்னும் கொஞ்சம் திண்மையேறினால், கீதையை நீங்கள் இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்” என்று சொன்ன வீரத் துறவியின் படம். இந்த நற்பணியைச் செய்திருப்பது குஜராத் மாநில அரசு.

சுவாமி விவேகானந்தரின் 150வது நூற்றாண்டு விழாவை முன்னிறுத்தி மாபெரும் இளைஞர் எழுச்சியை குஜராத் மாநிலம் முழுவதும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது நரேந்திர மோடி தலைமையில் இயங்கும் குஜராத் மாநில அரசு. 13,000 கிராமங்களில் விவேகானந்த இளைஞர் மன்றங்கள் அமைப்பதற்கான பணிகள் துவக்கப் பட்டுள்ளன. அனைத்து அரசு நூலகங்களிலும் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கும் நூல்கள் முழுவதுமாகக் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. விவேகானந்தா திறன்வளர்ப்பு திட்டத்தின் கீழ் நான்கு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் இணைந்த திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்கப் பட உள்ளன. ’விவேக வாணி’ என்ற தலைப்பில் சுவாமிஜியின் வாழ்வையும் செய்தியையும் விளக்கும் 3-நிமிட குறும்படங்கள் நேர்த்தியாகத் தயாரிக்கப் பட்டு வெளியிடப் பட்டுள்ளன. தனது முக நூல் பக்கத்திலும், டிவிட்டரிலும் நரேந்திர மோடி தினந்தோறும் எழுச்சியூட்டும் விவேகானந்தர் மேற்கோள்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

சுவாமிஜியின் சிகாகோ சொற்பொழிவு தினமான செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி ஒரு மாதம் முழுவதும் விவேகானந்த யுவ விகாஸ் யாத்ரா என்ற யாத்திரையை நரேந்திர மோடி நடத்தி முடித்துள்ளார். மாநிலத்தின் நல்லாட்சி குறித்த தனது சாதனைகளையும், கனவுகளையும் இளைஞர்களிடம் இதன் மூலம் நேரடியாகப் பகிர்ந்து கொள்ள மாநில முதல்வருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. யாத்திரை செல்லும் ஒவ்வொரு இடத்திலும் மாபெரும் உற்சாக வரவேற்பு அவரை எதிர்கொண்டதில் ஆச்சரியமில்லை.

தமிழகம், மகாராஷ்டிரம் போன்ற வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களின் தலைமைகள் அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்குவது எப்படி என்ற சிக்கலில் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் குஜராத் மாநிலமெங்கும் பல்வேறு வகையான நீர் மேலாண்மை கட்டமைப்புகளையும், எல்லா கிராமங்களிலும் வெட்டுகள் இல்லாத தடையறாத மின்சாரம் வரும் வகையிலான மின் உற்பத்தி மற்றும் வினியோக அமைப்புகளையும் ஏற்கனவே மோடியின் தலைமையில் அமைந்த அரசு உருவாக்கி முடித்து விட்டது. இப்போது நரேந்திர மோடி பேசிக் கொண்டிருப்பதெல்லாம் மாநிலத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றித் தான்!

ஐந்து முன்னுதாரணமான முத்திரைத் திட்டங்களை மோடியின் தலைமையிலான குஜ்ராத் அரசு செயல்படுத்தி வருகிறது.

குணோத்ஸவ் – சாமானிய மக்களுக்கு தரமான, சீரான கல்வியை அரசுப் பள்ளிகளிலேயே வழங்கும் திட்டம்.

கடந்த பத்தாண்டுகளில் 80,000 புதிய வகுப்பறைகளையும், 22000 கம்ப்யூட்டர் பரிசோதனை சாலைகளையும், சுத்தமாகப் பராமரிக்கப் படும் 52,0000 கழிப்பறைகளையும் அரசுப் பள்ளிகளில் குஜராத் மாநில அரசு நிறுவியுள்ளது. தமிழகத்தில் கடைசியாக எப்போது அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் திறக்கப் பட்டன, அது பற்றி செய்தித் தாள்களில் செய்தி வந்தது என்பது யாருக்காவது ஞாபகம் வருகிறதா? கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப் பட்டு, அப்துல் கலாம் போன்ற சாதனையாளர்களை உருவாக்கிய தமிழகத்தின் அரசுப் பள்ளிகள், திட்டமிட்டு மாநிலக் கல்வித் துறைகளால் சீரழிக்கப் பட்டு வருவதை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் சோகப் படலாம்.

கிருஷி மகோத்சவ் – விவசாயத் திருவிழாக்கள்

”கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக விவசாய உற்பத்தி 3 சதவீதம் வளர்ந்துள்ளது. ஆனால் குஜராத்தில் மட்டும் எப்படி அது 9 சதவீதமாக வளர முடிந்தது? குஜராத்தின் இந்த அபாரமான திருப்பு முனை தேசத்திற்கே ஒரு மாபெரும் கண் திறப்பாக அமைய வேண்டும்” என்று சொல்கிறார் டாக்டர் அப்துல் கலாம். ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் விவசாயத் திருவிழாக்களை நரேந்திர மோடியின் அரசு மாநிலத்தின் பல இடங்களில் மிக வெற்றீகரமாக நடத்தி வருகிறது. குஜராத் விவசாயத் துறையில் அடைந்து வரும் மாபெரும் வளர்ச்சியை இந்த விழாக்கள் அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த வருடத்திய கிருஷி மகோத்சவ விழா ஒன்றில், 8000க்கும் மேற்பட்ட விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 27 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு 8000 கோடி ரூபாய்களுக்கு மேல் நேரடி நிதி உதவி வழங்கப் பட்டது என்று மோடி அறிவிக்கிறார். இயற்கை விவசாயம் குஜராத்தில் எந்த அளவு பரவலாக்கப் பட்டுள்ளது என்று இன்னொரு கூட்டத்தில் பேசுகிறார். மாநிலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் விவசாய நிலம் உள்ளது, அதை இதற்கு மேல் அதிகரிக்க முடியாது. எனவே இருக்கும் நிலத்தில் உற்பத்தித் திறனை (productivity) அதிகரிப்பது எப்படி என்பது பற்றித் தான் நாம் மையமாக இப்போது சிந்திக்க வேண்டும் என்று மற்றொரு விவசாயக் கூட்டத்தில் அருமையாக எடுத்துரைக்கிறார். எந்த அளவுக்கு சிரத்தையுடனும், ஈடுபாட்டுடனும் இந்த விஷயங்களை அவர் பேசுகிறார் என்பதை அறிய குஜராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அம்மாநில உழவர்களின் பூரித்த முகங்களும், தரிசு நிலமாகக் காய்ந்து கிடந்த கட்ச் பாலைவனம் முழுதும் இன்று சாலைகளின் இருமருங்கிலும் அலையடிக்கும் பசுமையுமே அதை நமக்கு உணர்த்தி விடும்.

கேல் மஹாகும்ப் – மாநிலம் தழுவிய விளையாட்டுத் திருவிழா

ஆர் எஸ் எஸ் மைதானத்தின் புழுதியிலும் வேர்வையிலும், விவேகானந்தரின் வீர மொழிகளிலும் தான் ஒரு மாபெரும் தலைவருக்கு அத்தியாவசியாக இருக்க வேண்டிய ஆளுமைத் திறன்களைக் கற்றுக் கொண்டார் மோடி. எனவே தான் கும்ப மேளா போன்று லட்சக் கணக்கான மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மேளாக்களை நடத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்திருக்கிறது.

வைப்ரண்ட் குஜராத் என்ற பெயரில் வருடம் தோறும் குஜராத் மாநிலம் நடத்தும் முதலீட்டாளர்கள் மாநாடு. இம்மாநாடு இந்திய தேசிய அளவில் மட்டுமல்ல, ஆசிய அளவிலேயே ஒரு முக்கியமான நிகழ்வாகப் பிரபலமடைந்துள்ளது. 2011ம் ஆண்டில் மட்டும் 450 பில்லியன் டாலர்களுக்கும் மேலான முதலீடு குஜராத் மாநிலத்தில் குவிந்துள்ளது.

மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக “வாஞ்சே குஜராத்” என்ற திட்டமும் செயல்பட்டு வருகிறது. புத்தகக் கண்காட்சிகள், நூலக மேம்பாடு ஆகியவற்றுக்காக மாநில அரசு பிரத்யேக நிதி ஒதுக்கி நிர்வகித்து வருகிறது.

மாற்று சக்தி உற்பத்தி செயல்பாடுகளில் இந்தியாவிலேயே முன்னணியில் நிற்கும் மாநிலமாக குஜராத் உள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய சூரிய சக்தி மையம் குஜராத்தில் தான் இயங்கி வருகிறது. நர்மதை நதிக் கால்வாய்கள் ஓடும் பாதைகளில் நீர்ப்பரப்பு மீது சோலார் பேனல்களைப் பொருத்திய ஐடியா உலகத்தின் கவனம் முழுவதையும் குஜராத்தின் பால் ஈர்த்தது.

சில வாரங்கள் முன்பு கூகிள் நிறுவனம் தனது கூகிள் ஹேங்க் அவுட் என்ற பல்முனை வீடியோ உரையாடல் தொழில்நுட்பத்தை விமர்சையாக இந்தியாவில் அறிமுகப் படுத்த நரேந்திர மோடியுடனான இணைய வீடியோ சந்திப்பை ஏற்பாடு செய்தது. உலகெங்கும் இருந்து ஆயிரக் கணக்கானோர் மோடியுடன் உரையாட விரும்பினர்.. நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் மோடி அளித்த அருமையான பதில்கள் அவரது சிந்தனைத் தெளிவையும், நேர்மையையும் பறைசாற்றுவதாக அமைந்தன (உரையாடல்கள் அனைத்தையும் இங்கு பார்க்கலாம்).

எப்படி சார் இந்த வயதிலும் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று ஒரு அஸ்ஸாமிய இளம்பெண் கேட்டார். ‘நான் எனது இளமையில் 25 வருடங்களுக்கும் மேலாக பரிவ்ராஜகனாக, பிட்சுவாக அலைந்து திரிந்திருக்கிறேன். கிடைத்ததை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி, உடல் களைத்து விழும் வரை வேலை செய்திருக்கிறேன்.. எனது உடல் எப்போதும் தேசத்திற்காக தேய்ந்து கொண்டிருக்க வேண்டுமே தவிர, ஒரு போதும் தேசத்திற்கும், சமூகத்திற்கும் பாரமாகி விடக் கூடாது – இந்த எண்ணம் தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எப்போதும் எனக்கு உந்துதல் அளிக்கிறது’ என்றார்.

குஜராத் மக்கள் தொகையில் பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத் தக்க அளவு அதிகரித்திருக்கிறது, இந்த விழிப்புணர்வை உருவாக்க என்ன செய்தீர்கள்? என்று ஒரு பெண்மணி கேட்டார்.. ”நமது வனவாசி,பழங்குடி மக்களின் சமூகங்களை நான் பல காலமாக அவதானித்து வருகிறேன். அவர்கள் பெண் குழந்தைகளை ஒரு போதும் சுமையாகக் கருதுவதில்லை.. படித்த, நடுத்தட்டு மேல்தட்டு மக்களே அப்படிக் கருதுகிறார்கள் என்பதை மக்களின் மனதில் பதியவைத்தோம். சாதுக்கள், சமயத் தலைவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மாணவ மாணவிகள் எல்லாரையும் ஒன்றிணைத்து இந்த விழிப்புணர்வை உண்டாக்கினோம்” என்றூ பதிலளித்தார் மோடி.

”எனது கனவு பதவியோ அதிகாரமோ அல்ல, பாரதத்தை மீண்டும் உலகின் குருவாக ஆக்கிட வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் கனவே என் கனவும். அதற்கு என்னால் முடிந்ததைச் செய்ய இறைவன் அளித்த வரமாகவே இந்தப் பதவியைக் கருதுகிறேன்” என்றும் ஓரிடத்தில் குறிப்பிட்டார்.

*****

சுவாமி விவேகானந்தரை வைத்து மோடி அரசியல் செய்கிறார் என்று புலம்புகிறார்கள் ஒரு சாரார். பாஜகவில் மக்களைக் கவர்ந்திழுக்கும் ஆளுமைகள் யாருமே இப்போது இல்லை. அதனால் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று நரேந்திர மோடி விவேகானந்தரைக் கையில் எடுத்திருக்கிறார் என்பது இந்த அறிவுசீவிகளின் வாதம்.

உண்மை என்னவெனில், வீர நரேந்திரரின் கருத்துக்களால் தனது இளமைக் காலம் முதலே ஈர்க்கப் பட்டவர் நரேந்திர மோடி. அவர் ஆர் எஸ் எஸ் பிரசாரகராக இருந்த போதும் சரி, பாஜக செயல்வீரராக, ஒருங்கிணைப்பாளராக இருந்த போதும் சரி, விவேகானந்தரின் மேற்கோள்களே அவரது தாரக மந்திரமாக விளங்கின. சுவாமிஜியின் 150வது பிறந்த நாள் நூற்றாண்டு இது என்பதால், தனது ஆதர்சமான சுவாமிஜியின் மகோன்னதமான விழிப்புணர்வுச் செய்திகளை மாநில முதல்வர் என்ற வகையில், தனது மாநிலத்தின் எல்லா இளைஞர்களிடத்தும் கொண்டு செல்ல வேண்டும் என்று கூடுதல் உத்வேகத்துடன் செயல்படுகிறார் மோடி.

இதில் என்ன தவறு? சுவாமி விவேகானந்தரின் 150வது நூற்றாண்டு என்பது நாடெங்கும் தேச பக்தியையும், இளைஞர் சக்தியையும் மீள் எழுப்பிட ஒரு நல்வாய்ப்பு அல்லவா? உண்மையில் மத்திய அரசு அல்லவா இதைவிடக் கூடுதல் முனைப்புடன் சுவாமிஜியின் நினைவைக் கொண்டாடியிருக்க வேண்டும்? தேசிய எழுச்சி நாயகரான விவேகானந்தரின் நினைவை ஒவ்வொரு மாநிலமும் குஜராத் செய்வதைப் போல பத்தில் ஒரு பங்கு முனைப்புடனாவது கொண்டாட வேண்டாமா?

’சுவாமி விவேகானந்தர் ஒரு சன்னியாசி, ஒரு spiritual leader. அவரை அரசியலுக்கு இழுத்து வருவது அபாயகரமானது. செக்யுலர் சக்திகள் இதைத் தடுக்க வேண்டும்’ என்கிறார் ஒரு தில்லி ஜே.என்.யு பல்கலை அறிவுஜீவி (இந்தியா டுடே இதழில்). பின்னே, அரசியலிலும் சரி, அரசுத் திட்டங்களிலும் சரி மீண்டும் மீண்டும் நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் இவர்களது புனிதப் பெயர்கள் தானே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்க வேண்டும்? அதில் விவேகானந்தர்களோ அவர்களது சீடர்களோ எப்படி அத்துமீறி நுழையலாம்? – இது தான் அவரது உண்மையான கவலை.

தேசிய அடையாளமான சுவாமிஜியின் விசாலமான ஆளுமையைக் குறுக்கி, அவரை ஒரு மதத் தலைவர் என்ற குப்பிக்குள் அடைக்கும் விஷமத் தனம் தான் இதில் தெரியவருகிறது. சுவாமிஜி இந்தியாவின் அரசியல் விடுதலை, சமூக விடுதலை, ஆன்மீக விடுதலை ஆகிய மூன்றையும் குறித்து சிந்தித்தவர் என்பது தான் அவரை மற்ற துறவிகளில் இருந்து வேறுபடுத்துகிறது, அவரது தனிச்சிறப்பே அது தான். சுவாமிஜியை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, அவரது சிந்தனைகளைக் கற்று உள்வாங்கி இருப்பவர் நரேந்திர மோடி.

தனது தனி வாழ்க்கையில் மிகுந்த எளிமையைக் கடைப்பிடிப்பவர் நரேந்திர மோடி. ஆயிரமாயிரம் கோடிகள் காங்கிரசின் ஊழல்கள் வெடித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், காங்கிரஸ் காரர்கள் நரேந்திர மோடி மீது வைக்கும் அதிக பட்ச ஊழல் ’குற்றச் சாட்டு’ அவரிடம் 200க்கும் மேற்பட்ட ’குர்தா’க்கள் இருக்கின்றன என்பது தான். அவையும் பட்டுப் பீதாம்பரங்கள் அல்ல. காதி கிராப்ஃட் அமைப்புகள் மோடிக்காக உருவாக்கித் தரும் “மோடி குர்தா” என்ற கதராடைகள்! அவரது சொந்தங்கள் என்ற வகையில் உலகுக்குத் தெரிய வருபவர் தவமே உருக்கொண்ட அவரது தாய் மட்டுமே. அந்த மூதாட்டியும் குஜராத்தில் ஒரு சிறிய கிராமத்தில் எளிய வீட்டில் வசித்து வருகிறார்.

அந்த வகையில் இன்றைய அரசியல் தலைவர்களில் மோடி தான் உண்மையான காந்திய வாதி. ஆனால் மாநிலத்தின் வளர்ச்சி என்று வரும்போது பெருந்தொழில்களையும் அன்னிய முதலீடுகளையும் மோடியின் அரசு ஊக்குவிக்கிறது. பொதுவாகவே தொழில் துறையிலும் வர்த்தகத்திலும் முனைப்பு கொண்ட குஜராத் மாநிலம் உலகமயமாக்கப் பட்ட சந்தைப் பொருளாதாரத்தில் தேங்கி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். சமீபத்தில் துணி உற்பத்தியாளர்கள், பருத்தி விளைவிக்கும் விவசாயிகள் இருவரது நலன்களையும் சமன் செய்து, தனது மாநில பருத்தி விவசாயிகளுக்கு உலக சந்தையைத் திறந்து விடும் வகையில் அவரது அரசு செய்த முயற்சிகள் நரேந்திர மோடியின் கச்சிதமான பொருளாதார செயல்பாடுகளுக்கு ஒரு எடுத்துக் காட்டு. காந்தியத்தையும், சுதேசி பொருளாதாரத்தையும், உலக மயமாக்கலையும் எப்படி சமன் செய்வது என்பதற்கு அவரது அரசாட்சி செயல்பாடுகள் சிறந்த முன்னுதாரணங்கள் ஆகக் கூடும்.

******

எல்லா மக்கள் தலைவர்களுக்கும் இரண்டு முக்கியமான முகங்கள் உண்டு – ஒன்று அரசாட்சி (governance), மற்றொன்று அரசியல் (politics). முன்னாள் பிரதமர், கர்நாடக முதல்வர் தேவ கவுடா பற்றி He is a 365 day politician என்று எஸ். எம். கிருஷ்ணா ஒருமுறை குறிப்பிட்டார். உண்மையில் இந்தியாவின் பல அரசியல்வாதிகள் இதற்குக் கச்சிதமாகப் பொருந்தி வருவார்கள். அவர்கள் பதவியில் இருக்கும் போதும் கூட அரசாட்சி செய்வதில்லை, அரசியல் செய்வதில் மட்டுமே தான் தங்களது எண்ணங்களையும், சக்தியையும் செலவழிக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பெருமளவு குடைச்சல் கொடுக்காத போதிலும் கூட அவர்கள் செம்மையாக அரசாட்சி செய்வதில்லை.

இந்த சூழலில் தான் நரேந்திர மோடி இந்திய அரசியல் வானில் ஒரு ஒளிவீசும் தாரகையாகத் திகழ்கிறார். மானிலத்தின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவுமே தனது அதிக நேரத்தையும், உழைப்பையும் அவர் செலவழிக்கிறார். தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல்வாதி முகமூடி அணிந்து தன்னை அவதூறு செய்யும் எதிர்க் கட்சித் தலைமைகளை சமரசமின்றி விளாசித் தள்ளுகிறார். இத்தனைக்கும் 2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் ஊடகங்களும், மத்திய அரசும் பல்வேறு விதமான அவதூறுகளையும், சிக்கல்களையும் அவருக்கு உண்டாக்கி வந்திருக்கின்றன. இவற்றுக்கு நடுவிலும் உறுதி குலையாமல் நின்று வெற்றிகரமாக மீண்டெழுந்து இதோ குஜராத்தில் மூன்றாவது முறையாக ஒரு தேர்தல் வெற்றியை நோக்கிப் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி.

இந்த குஜராத் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் தான் மோடியின் முக்கிய எதிரி. அடுத்த எதிரி சாதிய அரசியல் என்கிற பழம் பெருச்சாளி. இந்தியாவே கொண்டாடும், உலகமே புகழ்ந்து போற்றும் உன்னதத் தலைவராக இருந்தாலும், அவர் பலான சாதியைச் சேர்ந்தவர் இல்லை, அவர் “ஆண்ட பரம்பரை” இல்லை என்று அவரது கட்சிக்குள்ளேயே ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. சாதி எண்ணிக்கை சவடால்களை முன்னிறுத்தி, ஒரு மாபெரும் தலைவனை வீழ்த்தி விடலாம் என்று எண்ணுகின்றனர் இந்தக் குறுமதியாளர்கள். இவர்கள் முறியடிக்கப் படவேண்டும். சாதிரீதியாக மட்டுமே வாக்களிப்பது என்பது இந்திய வாக்காளனின் இயல்போ பரம்பரைக் குணமோ அல்ல, அது ஒரு வக்கிரம். சாதிய உணர்வுகளைத் தாண்டி, நல்லாட்சி வழங்கும், ஆளுமைத் திறன் கொண்ட தலைவர்களையே மக்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை குஜராத் தேர்தல் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும்.

I don’t see dreams, I sow dreams! I try to sow a new dream everyday in the eyes of the people of Gujarat. If these dreams realize, what else do I need..

”நான் கனவு காண்பதில்லை. கனவுகளை விதைக்கிறேன். ஒவ்வொரு நாளும் குஜராத் மக்களின் விழித்திரைகளில் புதிய கனவொன்றை விதைக்கிறேன். அந்தக் கனவுகள் மெய்ப்படுமானால், அதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்?”

என்கிறார் மோடி.

நரேந்திர மோடியைப் போன்றதொரு தலைவர் அடிக்கடி வாய்ப்பதில்லை. ஒரு தேசத்தின் அரசியல் வரலாற்றில், அதன் கொந்தளிப்புகளின் ஊடாக, மக்களின் கனவுகளையும் அபேட்சைகளையும் சுமந்து, தங்கள் சுய உழைப்பாலும் தியாகத்தாலும் இலட்சியவாதத்தாலும் மேலேறி வருகிறார்கள் அவர்கள். அந்தத் தருணத்தில் வரலாற்றின் போக்கையே மாற்றுகிறார்கள். கனவுகளை விதைத்து, அவற்றை மெய்ப்படச் செய்கிறார்கள்.

குஜராத் அத்தகைய தலைவருக்கு தொடர்ந்து வெற்றி மாலை சூட்டுகிறது. எதிர்கால இந்தியா அவரை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

44 Replies to “நரேந்திரர் வழியில் நாளைய இந்தியா”

  1. எந்தவொரு மனிதனுக்கும் வாய்ப்பு கிடைத்த பின்புதான், அவனுடைய திறமை வெளிப்படும். மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் வைரத்தின் மதிப்பை யார் அறிவார்? குஜராத்தில் தன்னுடைய முத்திரையைப் பதித்து விட்டவர் நரேந்திர மோடி. அவருக்கு எதிராக ஒருவரா இருவரா, ஒட்டுமொத்த பத்திரிகை உலகமும், காங்கிரசாரும் கொதித்தெழுந்து ஆனவரை அவர் மீது கரிபூச நினைத்தும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில் அவர் காலை எழு ஞாயிறென ஒளிவீசி மேலெழுந்து வருகிறார். அவர் இந்திய பிரதமரானால்தான் பாரதத்தின் புகழ் உலகம் முழுதும் பரவும். ஊழல், லஞ்சம், திறமையின்மை ஆகிய இருளில் மூழ்கி தத்தளிக்கும் இந்திய ஆட்சி அவர் உட்கார்ந்த பின் நிச்சயம் பெருமை பெரும். உலகுக்கு இந்தியா வழிகாட்டியாக இருக்கும், பாரதி சொன்னது போல், ஆம், ஆம், ஆம், இந்தியா உலகுக்கு வழிகாட்டும். ஜடாயு இராமனுக்குத் துணை புரிந்ததைப் போல, மோடியின் புகழை எழுதிய ஜடாயுவுக்கும் நன்றி செலுத்த வேண்டும்.

  2. உலகின் குருவாய் பாரதம் உயர மோடி என்னும் உயர்த்த மனிதரால் முடியும். அதற்கு பாரத மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அத்வானி போன்ற அனுபவசாலிகள் அவருக்கு ஒத்துளைப்பு தரவேண்டும்.

    Arise! Awake!! and stop not till the goal is reached!!!

  3. Adakki vasingappa illenna 50 roobavo 60 roobavo oolal nadandadhu nu solli modiya ulla vaika poranga. jakkradhai…………….

    Rs 21 lakh oolal panni matina karnataka CM, CM post manatha vangitar.

    National party leader 1 lakh lanjam vangi judgment vandhachu but 71 lakh ellam oru oolala? enru central minister ketkirar?

  4. மோடி புகழ் பாடுபவர்கள் சில கேள்விகளுக்கும் பதில் கூறலாமே
    2001 ஆண் பெண் குழந்தை ratio 1000 :883
    பத்து வருடங்கள் கழித்து 1000 :886 எம்மாம் பெரிய சாதனை.உலகமே வியக்கும் சாதனை
    தண்ட மாநிலங்களான கேரளா,தமிழ்நாடோடு ஒப்பிட்டு பார்த்தால் மோடியின் மகத்துவம் புரியும்

    பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடடா
    சென்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் குஜராத்துக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தது ,மின்சாரம் இல்லாத,லட்சக்கணக்கான கோடி அந்நிய முதலீடு இல்லாத மனிபூருக்கு வெறும் நாப்பத்தெட்டு தங்கம்.(இதற்க்கு மோடி என்ன செய்வார் என்று குதிப்பவர்கள் குஜராத்திகள் பல ஆண்டுகளாக பல தொழில்களில் ஈடுபடுவதால் அதிகமாக இருக்கும் GDP க்கு சொந்தம் கொண்டாடும் போது,இவரால் தான் மாற்றம் என்று பீற்றி கொள்ளும் போது இதை சுட்டிக்காட்டுவது தவறா.நாப்பத்தெட்டு தங்கத்திற்கு மணிபூர் முதல்வர் உரிமை கொண்டாடுவது எப்படி நகைச்சுவையோ அதே தான் மோடியை கொண்டாடுவதும்

    நாம் ஐந்து நமக்கு இருபத்தியிந்து என்ற முஸ்லிம்களை உயர்த்தும் தத்துவங்களை தேர்தல் நேரத்தில் உருவாக்கி மத நல்லிணக்கத்தை வளர்த்தவராயிற்றே
    ஒன்பது சதவீதத்திற்கு மேல் இஸ்லாமியர்கள் இருந்தாலும் இதுவரை ஒரு மந்திரியாகவோ,எம் எல் ஏ வாகவோ அவர்களை ஆக்கி அவர்களின் வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற வல்லவர் ஆயிற்றே மோடி

    நம்ம ஊரில் படித்த டாக்டர்,engineer அரசு வேலைக்காக பல எக்ஸாம் எழுத வேண்டும்.EMPLOYMENT exchange பதிவு செய்து பல வருடம் காத்திருக்க வேண்டும்.இங்கயே படித்த ஆனால் வெளிமாநிலத்தில் பள்ளி முடித்தவர்களுக்கு கூட இங்கு வேலை வாய்ப்பு கிடையாது.ஆனால் குஜராத்தில் யார் வேண்டுமானாலும் சென்று சேரலாம்.ஏனென்றால் அங்கு படித்தவர்கள் மிக குறைவு.எப்பேர்பட்ட பெருமை.

    சில மாநிலங்களில் மின்சாரம் உபரிதம்,படித்தவர் பற்றாக்குறை என்றால் சில மாநிலங்களில் படித்தவர் உபரிதம்.இதில் ஒன்றை கொண்டாடுவது என்ன ஞாயம்

  5. மோடி பெரும்பான்மையானோர் சைவர்களாக இருப்பதால் தான் குஜராத் பெரும்பான்மையான மக்கள் மாட்டு கறி உண்ணும் கேரளாவை விட தாய் சேய் இறப்பு,சத்து குறைவான குழந்தைகள் போன்ற குறியீடுகளில் பல நிலைகள் கீழே உள்ளோம் என்று சொன்னதை கட்டுரையில் காணவில்லையே
    அவர் மாநிலத்தில் சைவர்கள் எவ்வளவு எனபது கூட அவருக்கு தெரியாது.ஆர் எஸ் எஸ் கற்று தரும் ஞானம் அப்படி

    https://www.firstpost.com/india/gujarat-the-non-vegetarian-gourmet%E2%80%99s-paradise-in-india-119878.html

    Senior sociologist professor Ghanshyam Shah believes the myth that Gujarat is a vegetarian state was exploded a decade ago by a survey of Anthropological Survey of India, which said 70 percent of the state was non-vegetarian. “Ten per cent Muslims, seven percent Dalits, 40 percent OBCs and 14 percent Adivasis are all meat eating,” he says. “Among the OBCs, only smaller artisan communities like Prajapatis and Suthars, forming seven percent, are traditionally vegetarian. Among upper castes, Rajputs are traditionally meat eaters”

    ராணுவத்தில் ஜவான்களாக சேர எல்லா மாவட்டங்களுக்கும் குறிப்பிட்ட அளவு இடங்கள் ஒதுக்கீடு உண்டு .அதில் இந்தியாவிலேயே ஆட்கள் சேராமல் இடங்கள் நிறையாமல் இருப்பது குஜராத்தில் தான் .இந்த பெருமையை விட்டு விட்டீர்களே .காஷ்மீரிகள் கூட குஜராத்திகளை விட அதிகமாக ராணுவத்தில் சேருகிறார்கள்
    அதிகாரிகளில் மாவட்ட அளவிலான ஒதுக்கீடு கிடையாது.குஜராத்திகள் 0 .1 சதவீதம் கூட இருக்க மாட்டார்கள்.இந்த பெருமையும் அவருக்கு சேர வேண்டிய ஒன்று ஆயிற்றே
    சீக்கியர்கள் அதிக அளவில் போட்டி போடுகிறார்கள் என்றால் அவர்கள் முதல்வருக்கு பெருமை சேருமா.ஆனால் மோடி முதல்வராக இருந்தால் அப்படி பிரச்சாரம் தூள் பறக்கும்

  6. அருமையான கட்டுரை. எனது நண்பரின் அலுவலகத்தில் சுவாமிஜி படம் போட்ட கடந்த ஆண்டு (2012) காலண்டரில் கீழ்க்கண்ட வாசகத்தை படித்தேன் வியந்தேன்.

    “அதி ஆச்சரியமான, மகிமை வாய்ந்த இந்தியா தோன்றப் போகிறது. இதற்குமுன் எப்போதுமிருந்ததைவிட அது பெருமை பொருந்தி விளங்கும். பண்டைக்கால ரிஷிகளையும்விட பெரிய மகான்கள் தோன்றுவார்கள். நம்புங்கள் ; உறுதியாக நம்புங்கள். இந்தியர் கண்விழித்து எழுந்திருக்க வேண்டுமென்று ஆண்டவன் கட்டளை பிறந்து விட்டது”.

    எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள் ! இந்த வாசகத்தை கோடிக்கணக்கில் அச்சடித்து மக்களிடையே பரப்ப வேண்டுமென்ற ஆசை ஏற்படுகிறது. எனக்கு மேற்கண்ட வார்த்தைகளில் முழு நம்பிக்கை உள்ளது.

  7. சிறிய திருத்தும் – கடந்த ஆண்டு (2012) அல்ல (இந்த ஆண்டு) என் மாற்றவும்..

  8. நன்றி. பாரதம் இன்னும் வலிமை பெற வேண்டும், எனில் தேசத்தை வழி நடத்த நரேந்திர மோடி போல இன்னும் நிறைய மனிதர்கள் வேண்டும்.
    பா ஜ க வில் மோடிக்கு உள்ள எதிர்ப்பை முழுவதுமாக அகற்றி எல்லோரையும் ஒன்று படுத்த வேண்டும். அத்வானி அவர்கள் நாட்டின் நலன் கருதி இதை செய்ய வேண்டும்.
    தமிழகம் மோடி அவர்களின் செயல்பாட்டிலிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். மக்களும் சரியான படி செயல் பட வேண்டும்.
    வெறும் விவாதங்களில் மட்டும் ஈடுபட்டு விட்டு செயல் படாமல் இருந்தால் மாற்றம் எவ்வாறு வரும்?.
    நன்றி. வாழ்க பாரதம்.

  9. பூவண்ணன், சம்பந்தமே இல்லாமல் குஜராத்திகளையும், குஜ்ராத் மானிலத்தையும் ஏளனம் செய்கிறீர்கள்.. இது தான் உங்களைப் போன்ற ‘தமிளனின்’ உயர்ந்த பண்பாடு போலும்! நல்லது.

    குஜ்ராத்தில் படிச்சவனே கிடையாது என்கிறீர்கள்.. ஆனால் அடுத்த வரியில் தொழில் துறையில் உலகம் முழுவதும் நெடுங்காலமாகவே குஜராத்திகள் முன்னணியில் இருக்கிறார்கள் (படிப்பறிவில்லாதவனுங்களுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்தைப் பார்த்தியா), மோடி வந்து ஒண்ணும் செய்யவில்லை என்கிறீர்கள்.. ஆனால் அந்த குஜ்ராத்தி சமூகமே ஒட்டுமொத்தமாக மோடி தான் தங்கள் வளர்ச்சிக்குக் காரணம் என்று அவரைக் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறதே, ஏன் சார்? அவர்களைப் பற்றி, அவர்கள் மானிலத்தைப் பற்றி அவர்களை விட, உங்களுக்கு நல்லா தெரியும் போல..

    குஜ்ராத் அரசின் Beti bachao என்ற திட்டம் செயல்படுத்தப் பட்ட விதம் குறித்து மோடி அந்த உரையாடலில் கூறியவற்றைத் தான் கட்டுரை சொல்கிறது.. ஆம், தமிழகமும் கேரளமும் இருபதாண்டுகள் முன்பு சமநிலையான ஆண்-பெண் விகிதத்தை எட்டியிருக்கலாம் தான், அதனால் குஜராத்தின் சாதனைகள் மட்டமாகி விடுமா என்ன? மேலும், அந்தக் குறிப்பு நரேந்திர மோடியின் சமூக பல்முனை ஒருங்கிணைப்புத் திட்டத்தை சுட்டிக் காட்டவே தரப்பட்டதே அன்றி, அது பெரும் சாதனை என்பதற்காக அல்ல..

    இன்னொன்று – பெண் கல்வி கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் மிகப் பெரிய அளவு வளர்ந்துள்ளது

    https://www.dnaindia.com/analysis/comment_analysis-gujarat-female-literacy-up-12-93pct-kanya-kelavani-a-hit_1594601
    current female literacy rate in Gujarat stands at 70.73% as compared to the national average of 65.46%.

    Gujarat witnessed a phenomenal jump of 12.93% decadal increase in female literacy, overtaking states like Tamil Nadu, Maharashtra, Karnataka, Andhra Pradesh, Madhya Pradesh and Rajasthan. The significant increase in number of literate women and female literacy rate has been witnessed in both rural and urban areas of Gujarat.

  10. // ஒன்பது சதவீதத்திற்கு மேல் இஸ்லாமியர்கள் இருந்தாலும் இதுவரை ஒரு மந்திரியாகவோ,எம் எல் ஏ வாகவோ அவர்களை ஆக்கி அவர்களின் வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற வல்லவர் ஆயிற்றே மோடி //

    கேரளத்தில் இந்துக்கள் 52%க்கு மேல்.. ஆனால் இப்போது உள்ள உம்மன் சாண்டியின் கிறிஸ்தவ அரசின் டாப் அமைச்சர்களில் ஒருவர் கூட இந்து இல்லை.. அமைச்சராவது இருக்கட்டும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1980கள் வரை 25% இந்துக்கள் வாழ்ந்தனர்.. இன அழிப்புக்கு உள்ளாகி, உரிமைகல் பறிக்கப் பட்டு, இன்று தங்கள் தாயகத்தை விட்டு துரத்தியடிக்கப் பட்டுள்ளனர். இதெல்லாம் கேட்க மாட்டீர்களா?

    குஜ்ராத்தில் 2002ல் நடந்தது பெரும் துயரம் சம்பவம் தான். ஆனால் அது அது ஒரு மதக்கலவரம் மட்டுமே – இன அழிப்பு அல்ல. அந்தக் கலவரத்தை அடக்க மோடியின் மாநில அரசு துரிதமாக உரிய நேர்த்தில் செயல்பட்டு தன் கட்மையை ஆற்றியது என்று நீதிமன்றங்களும் மத்திய அரசு அமைக்கும் ஒவ்வொரு விசாரணை கமிஷனும் சான்று பகர்ந்துள்ளன்.. இன்று, பத்தாண்டுகளுக்குப் பின், பாதிக்கப் பட்ட மக்க்ள் முஸ்லீம்களும் சரி, இந்துக்களும் சரி, தங்கள் இடங்களுக்குத் திரும்பி சகஜ வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். மோடி அரசின் சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு இது ஒன்றே சாட்சி.

    கிராமத்தில் விளையாட்டு மையம் ஆரம்பித்த வருடத்திலேயே மானாவாரியாக பதக்கம் வாங்கினால் தான் அந்த திட்டம் “வெற்றி” அடைந்தது என்ற உங்கள் “லாஜிக்” புல்லரிக்க வைக்கிறது.. அடேயப்பா!

    தமிழகத்தின் கல்வி, தொழில், நீர்ப்பாசன கட்டமைப்புக்ளில் பெரும்பான்மை திராவிடக் கட்சிகளுக்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளால், ஆர், வெங்கட்ராமன், காமராஜர் போன்றவர்களால் உருவாக்கப் பட்டவை. அவற்றின் நீண்ட காலப் பயன் தான் இப்பொது நாம் காண்பது.. இவை திரவிட கட்சிகளின் “சாதனைகள்” அல்ல, சொல்லப் போனால், அந்த அமைப்புகளை முற்றீலும் சீரழித்ததே திராவிட கட்சிகளின் சாதனை..

    குஜ்ராத் சென்றூ நர்மதை, தப்தி, சபர்மதி ஆறுகள் எவ்வளவு சிறப்பாக பேண்ப் படுகின்றன என்றூ ஒருமுறை பார்த்து விட்டு வாருங்கள். மணல் படுகை கொள்ளையடிக்கப் பட்டு நதிகளை சாக்கடைகளாக ஆக்கி விட்ட தமிழனின், தமிழக அரசின் சாதனைகளைப் பற்றீ பிறகு புளகாங்கிதமடையலாம்..

  11. பூவண்ணனுக்கு பதில் தர முனைந்து அமர்ந்தேன். நல்ல வேளையாக ஜடாயுவே சரியாகப்பதில் அளித்துவிட்டார்.

    விளையாட்டுத் துறையில் பின் தங்கிய மாநிலம் என்றே வைத்துக் கொள்வோமே. அதனால் மின்தட்டுப்பாடு இல்லாத மாநிலம் என்ற பெருமை எப்படி மங்கிவிடும்?

    “நான் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் இலவசங்கள் இருக்காது. வரிகளைக் கூட்டுவேன். ஆனால் இன்னின்ன நன்மைகளைச் செய்வேன் என்று கூறி எந்த அரசியல்வாதியாவது ஓட்டுக்கேட்டார்களா, மோடியைத் தவிர?

    அணிந்திருக்கும் கலர் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு நிதர்சனமான உண்மைகளை பூவண்ணன்மார் காண வேண்டுகிறேன்.

  12. “குஜராத் அத்தகைய தலைவருக்கு தொடர்ந்து வெற்றி மாலை சூட்டுகிறது.
    எதிர்கால இந்தியா அவரை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது”.
    ஆம் பாரதம் ஸ்ரீ நரேந்த்ர மோடியின் தலைமை ஏற்க காத்திருக்கிறது.

  13. நன்றி ஜடாயு,
    தொழிற்கல்விக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை (அதை கபில் சிபல் கொணர்ந்தது அபத்தமே முடிந்தால் அது பற்றி எழுதுகிறேன்) முதலில் ஏற்ற மாநிலம் குஜராத் தான். சலுகைகளை மட்டும் கொடுத்து சவலைக் குழந்தைகளாக எல்லோரையும் வளர்க்கும் மற்ற மாநிலங்கள் எதிர்க்கவோ தயங்கவோ செய்கின்றன. போட்டித்தேர்வுகளில் குஜராத் முன்னேற்றமடைந்து வருகிறது. அரசின் வலுவான செய்தி அதன் காரணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன். மக்களும் மாணவர்களும் சவால்களை சந்தித்து வளர வேண்டுமென மோடி அரசு விரும்புகிறது. 4000 பெண்கள் கலந்துகொண்ட சதுரங்க போட்டி இவ்வாண்டு நடந்த பேரு விழா. கல்வி போட்டிகளுக்கு இணையான மனவலிமை தயாரிப்பை சதுரங்க விளையாட்டு மூலம் பல ஆண்டுகளாக குஜராத் ஊக்குவிற்கிறது.

  14. திரு.ஜடாயு,

    என் கட்டுரை ஒன்றில், இன்றைய நவீன இந்தியாவின் சவால்களை சந்திக்கும் ஆற்றல் திரு.மோடி அவர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும், இந்திய பொருளாதாரத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச்செல்லவும் திரு.மோடி அவர்களாலேயே முடியும் என்றும் எழுதியிருந்தேன். ஹிந்துத்துவா அமைப்புகளில் கிட்டத்தட்ட ஒரு கருத்தொற்றுமை வந்துள்ளதாகவே
    தெரிகிறது.

    (1) முதலில் ஒரு திருத்தம்.
    “2011ம் ஆண்டில் மட்டும் 450 பில்லியன் டாலர்களுக்கும் மேலான முதலீடு குஜராத் மாநிலத்தில் குவிந்துள்ளது.”
    இந்த முதலீட்டு தொகை என்பது முதலீட்டாளர்கள் Committ செய்த தொகைதானே தவிர, 2011லேயே முதலீடு செய்யப் பட்டதல்ல. 450 பில்லியன் டாலர்கள் என்பது இந்திய ரூபாயில் 20 இலட்சம் கோடிகளுக்கு மேல். இதில் 2 முதல் 3 இலட்சம் கோடி ரூபாய்கள் மட்டுமே முதலீடு 2011ல் செய்யப்பட்டது. வரும் காலங்களில் பிற நிறுவனங்கள் செய்யப் போகும் முதலீட்டைப் பொறுத்து இது பிற்காலத்தில் தீர்மானிக்கப்படும்.

    “எதிர்கால இந்தியா அவரை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.” என்று உங்கள் கட்டுரை முடிந்துள்ளதால், அதைப் பற்றி பேசவும் புலம்பவும் செய்துதான் ஆக வேண்டியுள்ளது.

    (2) சமீபத்தில் “Ek Tha Tiger” என்ற ஹிந்தி திரைப்படம் பார்த்தேன். அதில் ஒரு வசனம் வரும். ஒரு உளவாளி எப்பொழுதும் “புத்தி சொல்வதையே கேட்க வேண்டும். மனம் கூறுவதை கேட்கக்கூடாது”. என் அப்பன் சங்கரனைப் போன்ற
    தத்துவவாதிகள் கூட இதைக்குறித்து எழுதியுள்ளார்கள்.

    நம்மைப் போன்றவர்கள் திரு.மோடியைப் பற்றி கூறுவதெல்லாம் “மனம் ஆசைப்படுவது” என்ற வகையைச்சார்ந்தது.

    (3)ஆனால் என் மூளை இந்த ஆசை நடக்காது என்றுதான் கூறிக் கொண்டிருக்கிறது. இதை தவ்லீன் சிங்க் “இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகையில் அழகாக விளக்கியிருந்தார்.

    பெரும்பாலான மாநிலங்களில் பிராந்திய கட்சிகள்தான் வலுவாக உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 100 சீட்கள் கூட கிடைக்காது என்றாலும், பா.ஜ.கவிற்கு 175 சீட்களுக்கு மேல் கிடைப்பதும் கடினமாகவே இருக்கும். (இன்றைய சூழலில்). தேர்தலுக்குப் பிறகான சூழலில் “மதச்சார்பின்மை” வியாபார கிராக்கி அதிகமாகி 3ம் அணி என்ற கிச்சடி உருவாகி, காங்கிரஸின் ஆதரவுடன் 3 வருடங்கள் ஆட்சி நடக்கும் என்றும், பிறகு அடுத்த தேர்தலில் மக்கள் காங்கிரஸே தேவலை என்று
    மீண்டும் அந்த கட்சிக்கே ஓட்டளிப்பார்கள் என்றும் எழுதியிருந்தார். எனக்கும் இந்த விளக்கம் சரியாக உள்ளதாகவே தெரிகிறது.

    டிசம்பரில் நடக்கப்போகும் குஜராத் சட்டசபைத்தேர்தலில் திரு.மோடி அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு, டில்லி அரசியல் சூழலில் ஏதேனும் எதிர்பாராத நிகழ்வு நடந்தால் மாற்றங்கள் வரலாம். (இதுவும் என்
    மன ஆசைதான். மூளை ஒப்புக் கொள்ள மறுக்கிறது.)

  15. பாலாஜி சார்…..அதெல்லாம் அப்புறம்…..

    முதலில் நரேந்திர மோடி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க தயாராக இருக்கிறதா?

    கிட்டதட்ட ஒருடஜன் பேர் அந்த கட்சியில் பிரதமர் கனவில் மிதக்கிறார்கள்….அவரவர் அளவில் ஆதரவு திரட்டும் படலத்தில் ஈடுபட்டுள்ளார்கள்…..[பால்தாக்கரே வீட்டுக்கு சுஷ்மா சுவராஜ் சென்று வந்தவுடன் , பா.ஜ.கவில் உள்ள ஒரே புத்திசாலி தலைவர் சுஷ்மா மட்டுமே என்கிறார் தாக்கரே …[அப்போ மற்றவர்கள்?]

    நிதிஷ் போன்ற போலி மதச்சார்பின்மை வியாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்…..

    பா.ஜ. க தொட்டால் மத சார்பு தீட்டு ஒட்டிக்கொண்டு விடும் என்பது பல கட்சிகளின் கவலை……

    நம் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்க இன்னும் வெகு காலம் ஆகும் போலிருக்கிறது…….

  16. கொஞ்ச நாளைக்கு மோடியை தற்காலிகமாக தமிழக முதல்வராகின்னல் என்ன ?(பகல் கனவுதான் இருந்தாலும் நல்ல கனவாக இருந்துவிட்டு போகட்டும். காசா பணமா செலவு?)

  17. நானும் மோடி ஆதரவாளன் தான். வலை தளங்களில் தேடி தேடி மோடி ஆதரவு கருத்து தெரிவித்து வந்தேன் (2006 முதல் ).

    எனினும் சில சந்தேகங்கள் உள்ளது. சமூக வளர்ச்சி, மனித வள மேம்பாடு, கல்வி, ஊட்டசத்து , பொது விநியோகம் முதலியவற்றில் குஜராத் பிற வளர்ந்த மாநிலங்களை விட பின் தங்கி உள்ளதாகவே புள்ளியில் காண்பிக்கிறது.

    சமீபத்தில் ஊட்டசத்து குறித்த கேள்விக்கு மோடியின் பதில் ((மிடில் கிளாஸ் அழகை பற்றி கருதுதால் பால் உண்ணுவதை தவிர்பதே ) எனக்கு அதிர்ச்சி அளித்தது.

    பூவண்ணன் கூறியுள்ளதில் சில சதவிகிதம் உண்மை உள்ளது.

    குஜராத்தின் தொழில் வளர்ச்சிக்கு , குஜராதியரின் வர்த்தக மனநிலையே காரணம்.
    நீர் மேலாண்மை, மின்சாரம் (சோலார் உற்பத்தி) , விவசாயம் போன்ற விஷயங்களில் மோடி அரசை பாராட்டலாம்.

    பாலாஜி.ர கூறியுள்ளது போல் – நம்மைப் போன்றவர்கள் திரு.மோடியைப் பற்றி கூறுவதெல்லாம் “மனம் ஆசைப்படுவது” என்ற வகையைச்சார்ந்தது.

    மோடி மிகை படுத்த படுகிறார். எனக்கு என்னவோ காங்கிரெஸ் இந்த தேர்தலில் முன்னேற்றம் காண்பிக்கும் (பிஜேபி செய்தாலும் கூட) என தோன்றுகிறது . உள்ளூர் பிரச்சனைகள் , ஜாதி எதிரொலிக்கலாம் (சமீபத்தில் காங்கிரஸ் வென்ற குஜராத் மானசா இடை தேர்தல் உதாரணம்)

  18. https://www.indiaonlinepages.com/population/literacy-rate-in-india.html

    ஜடாயு சார்
    நான் கேட்டது என்ன
    நீங்க பதில் சொல்றது என்ன

    ஆண் கல்விக்கும் பெண் கல்விக்கும் உள்ள வித்தியாசம் இப்போதும் குஜராத்தில் 17 சதவீதம்.நாப்பது சதவீத மதிப்பெண் எடுத்தவன் அடுத்த தேர்வில் அறுவது சதவீதம் எடுத்தால் ஐம்பது சதவீத வளர்ச்சி .90 எடுத்தவன் 99 எடுத்தால் அது பத்து சதவீத வளர்ச்சி தான்.அதனால் அறுவது சதவீதம் தான் சிறந்தது என்று லிங்க் கொடுக்கிறீர்கள்

    மற்ற மாநிலங்களை விட (GDP ) அதிக பணம் இருந்தும் ஏன் பிரசவத்தின் போது பெண்கள் அதிகம் இறக்கிறார்கள்,வளர்ச்சி குறைவான குழந்தைகள் அதிக சதவீதத்தில் இருக்கின்றனர்,ஒரு வயதிற்கு முன் இறக்கும் குழந்தைகள் சதவீதம் அதிகமாக உள்ளது என்று கேட்டால் குஜராத் கலவரத்திற்கு செல்கிறீர்கள்,நான் குஜராத்திகளை ஏளனம் செய்கிறேன் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்

    என் உறவினர்கள்,கிராமத்தை,மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் ராணுவத்தில் இருக்கிறார்கள்,சிலர் மத்திய அரசு பணியில் இருக்கிறார்கள் ,சிலர் வணிகம் செய்கிறார்கள் ,சிலர் விளையாட்டு வீரர்களாக,வீராங்கனைகளாக இருக்கிறார்கள் என்பதை விட எல்லாரும் வணிகராக உள்ளனர் என்பதில் பெரிய பெருமை போல நீங்களும் பேசுவது பெரும் வியப்பளிக்கிறது

    மற்ற மாநிலங்களை விட உபரி மின்சாரம் இருந்தாலும் ,மின்வெட்டு உள்ள மாநிலங்களில் ஏற்படும் தாய்சேய் இழப்பை விட அதிகமாக இருப்பது ஏன் என்று கேட்பது தவறா

  19. இன்று திரு. ராம்ஜெத்மலானி அவர்கள் பா.ஜ.க தலைவர் திரு.நிதின் கட்கரி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ,திரு.நரேந்திர மோடி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்….

    அவர் வாழ்க்கையிலேயே செய்துள்ள ஒரே உருப்படியான காரியம் இதுதான் என்று நினைக்கிறேன்……

  20. ஆண்-பெண் குழந்தை விகித்தாச்சாரத்தைக் குறித்து திரு.மோடியின் மீது, மறுமொழியில் ஒரு விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

    திரு.மோடி அவர்களின் பேட்டியில் கூறப்பட்டுள்ளதைத்தான் திரு.ஜடாயு சுட்டிக்காட்டியுள்ளார்.

    திரு.மோடி அவர்களின் அரசு எந்த முன்னேற்றத்தையும் செய்ய வில்லை என்பதும் ஏற்கத்தக்கதில்லை.

    அதே நேரத்தில் இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் ஆண்-பெண் விகித்தாச்சாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    உண்மை இரண்டிற்கும் இடையில் உள்ளது.

    2001ல் 1000:883லிருந்து 2011ல் 1000:886 என்ற நிலைக்கு வந்தது ஒரு சாதனையா? என்று கேட்பது, நாம் தகவலை சரியாக கவனிக்க வில்லை என்று அர்த்தம்.

    நான் மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) இணைய தளத்தை அவதானித்தேன்.

    நகரம்-கிராமம் என்ற விகித்தாச்சரத்தில் இந்த தகவலை அவதானித்தால்தான் உண்மை புரியும்.

    கிராமங்களைப் பொறுத்தவரை, 1000:906 என்ற நிலை 2001ல் இருந்தது அப்படியே 2011ல் தொடர்கிறது.

    முன்னேற்றம் நகரங்களில்தான் ஏற்பட்டுள்ளது.
    2001ல் 1000:837 ஆக இருந்தது 2011ல் 1000:852ஆக முன்னேறியுள்ளது. அதாவது 1000ல் 15 பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கிறார்கள். மொத்தத்தில் மாநில அளவில் பார்க்கையில், முன்னேற்றம் 4ஆக மட்டுமே தெரிகிறது. இது Statistics.

    ஆகவே திரு.மோடி அவர்கள் நகரங்களில் ஆண்-பெண் விகித்தாச்சாரத்தை முன்னேற்றியுள்ளார் என்பது சத்தியமான உண்மைதான்.

    அதே நேரத்தில் வேறு சில மாநிலங்களும் இந்த முயற்சியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்பதும் உண்மைதான்.

    அதற்காக, திரு.மோடி சாதித்ததை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வது தவறே இல்லை.

    பாதி தகவலை சுட்டிக்காட்டி குஜராத்தின் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மறைக்க முடியாது.

  21. பூவண்ணன், எதுக்காக படிக்கனும்.. படிச்சவ பாட்ட கெடுத்தான், எழுதுனவன் ஏட்ட கெடுத்தான்.
    மெக்காலே கல்வி முறை ஒரு உருப்படாத கல்வி. அந்த உருப்படாத கல்வி முறையை வைத்தே நம் மக்கள் இவ்வளவு முன்னேறி இருக்கும் பொழுது , சிறந்த கல்வி முறை இருந்தால் எவ்வளோ முன்னேறி இருக்கலாம். காங்கிரஸ் என்ற ஆப்பிரகாமிய அடிவருடி கட்சியின் 30 வருட ஆட்சியில் சீரழிந்து போன குஜராத பாஜாக ஆட்சியில் புத்துணர்வு பெற்று உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

    நீங்கள் கொடுத்த லிங்கில் உள்ள விசயங்கள் எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. மத்திய காங்கிரஸ் அரசு 24/7 குஜராத்தை எப்படி கேவலப்படுத்தலாம். எப்படி மோடி அரசை வம்புக்கு இழுக்கலாம் என்று தான் யோசித்து கொண்டு இருக்கிறது. அந்த முட்டாள்கள் எடுக்கும் சென்ஸ்ஸை எடுத்து கொண்டு பேசுவது வீண். அதுவும் தவிர பல இலட்சம் காஷ்மீர் ஹிந்துகள் படுகொலை செய்யப்படும் பொழுது அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த கொடுங்கோளன் குலாம் நபி ஆசாத் போன்ற சோனியாவின் அடிவருடிகள் மத்திய நலத்துறையை வைத்து கொண்டு இருக்கும் பொழுது எப்படி சரியான புள்ளி விவரங்கள் வரும்.

    அடுத்து தொழில் வளமும், மனித வளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஊட்டசத்து குறைந்த மக்கள் இருக்கும் மாநிலத்தில் தொழில் வளம் எப்படி உருவாகும்? இது புரியாத புதிர்.

    அது சரி குஜராத மக்கள் சதவிகிதம் iradunvaththil குறைவு என்று சொல்கிறீர்களே? எதை வைத்து சொல்கிறீர்கள். எனக்கு தெரிந்து இது போன்ற விசயங்களை இராணுவம் வெளியில் சொல்வது கிடையாது.

  22. \\மற்ற மாநிலங்களை விட உபரி மின்சாரம் இருந்தாலும் ,மின்வெட்டு உள்ள மாநிலங்களில் ஏற்படும் தாய்சேய் இழப்பை விட அதிகமாக இருப்பது ஏன் என்று கேட்பது தவ\\

    https://mohfw.nic.in/WriteReadData/l892s/972971120FW%20Statistics%202011%20Revised%2031%2010%2011.pdf

    I would request you to refer the document available in the above link. Under the administration of sikular congress… the whole north India is starving… Under the administration of Modi ji, the condition of health is improved a Lot.

    By the way… The nonavailability of power is nothing to do with child birth rate. Your comments are meaning less. But it works well among the people who hardly uses their brain.

    மாட்டு கறி பற்றி நீங்கள் சொன்ன விசயம் சூப்பர் பூவண்ணன், எல்லா மாடுகளையும் சாப்பிட்டு ஒட்டு மொத்த தென் இந்தியாவின் விவசாய வளத்தையே கேரளா அழித்து கொண்டு இருக்கிறது. இந்த கொடுங்கோல் செயலுக்கு விரைவில் முற்று புள்ளி வைக்கப்படும்.

    @ பாலாஜீ,

    உங்கள் மூளை ஏற்று கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. மூளை எப்பொழுதும் அதற்கு கிடைக்கும் தகவல்களை மட்டுமே அடிப்படையாக வைத்து கணக்கிடுகிறது, நமக்கு கிடைக்கும் தகவல்கள் எல்லாம் கிறித்துவ போலி கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் தொலைக்காட்சிகள் மூலம் தான் கிடைக்கிறது.
    அதனால் தான் உங்களுக்கு அப்படி தெரிகிறது.

    சரி பொருத்து இருந்து பார்ப்போம்.

  23. அன்பார்ந்த ஸ்ரீமான் பூவண்ணன், சுபிக்ஷம் என்ற மந்த்ரத்திற்கு மிகவும் அபார சக்தி உள்ளது.

    நீங்கள் குறிப்பிட்ட பல விஷயங்களில் குஜராத் பின் தங்கியுள்ளது. நீங்கள் குற்றம் கண்டுள்ளீர்கள். உண்மை தான். ஆனால் பாருங்கள் யாருக்குத்தான் குறையில்லை. ஹிந்துத்வவாதிகளில் கூட ஸ்ரீமான் ப்ரவீண் பாய் டொகடியா போன்றவர்களுக்கு சாலை புனர்நிர்மாணத்திற்காக வேண்டி இவர் மந்திர் மற்றும் தர்காக்களை அகற்றியது குறையாகப்படுகிறது. ஆனால் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி எல்லோருடைய ந்யாயமான குறைகளையும் நிவர்த்தி செய்ய யத்தனிக்கிறார் என்பதை அறிவீர்கள். ராஜ்யத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார் என்பதை கவனியுங்கள்.

    சுபிக்ஷம் என்ற மறுமலர்ச்சி காண்பது மிகவும் அரிது. இதை அடைந்த பின் சுபிக்ஷத்தை அயராது தக்கவைக்க முற்படுகையில் ஒட்டுமொத்த வளர்ச்சி என்ற இலக்கை எட்டுவது சாத்யமானதே. நீங்கள் குறிப்பிட்ட பல விஷயங்களிலும் அபிவிருத்தி அவசியமே. அந்த இலக்கை நோக்கி குஜராத் பயணத்தில் உள்ளது என்பதை வ்யாசத்தில் கண்ட பல திட்டங்கள் தெரிவிக்கிறது. சமயம் பதில் சொல்லும்.

    \\\மோடி பெரும்பான்மையானோர் சைவர்களாக இருப்பதால் தான் குஜராத் பெரும்பான்மையான மக்கள் மாட்டு கறி உண்ணும் கேரளாவை விட தாய் சேய் இறப்பு,சத்து குறைவான குழந்தைகள் போன்ற குறியீடுகளில் பல நிலைகள் கீழே உள்ளோம் என்று சொன்னதை கட்டுரையில் காணவில்லையே\\\\

    சந்தடி சாக்கில் உடனே கறி புராணம் பாட ஆரம்பித்து விடுவீர்களே. உத்தர பாரதத்தில் தேவையில்லாத கறி புராணம் எடுபடாது. மோடி அவர்களே கறி புராணம் பாடினாலும் சரி.

    இங்கு பெரிய பெரிய விளையாட்டு வீரர்களான பயில்வானகள் விஜேந்தர் சிங்க் மற்றும் அவர் மாகாணமான ஹரியாணாவைச் சார்ந்த பல பயில்வான்கள் லோட்டா லோட்டாவாக மாட்டுப்பால் குடித்தே மேலும் மாம்சாஹாரம் சாப்பிடாமலேயே ஒலிம்பிக்கில் மெடல் வாங்கியதாக டிவி டிவியாக பேட்டியளித்துள்ளார்களே. இதெல்லாம் உங்கள் கண்ணில் படாதா.

    உங்களுக்கு கறி பிடித்தால் நீங்கள் அவசியம் சாப்பிடுங்கள். ஆனால் கறி சாப்பிட்டால் தான் விமோசனம் என்ற பிலாக்கணம் எதற்கு? கறி சாப்பிடாதவர் சோப்ளாங்கி என்ற கதைகளை தவிர்க்கலாமே!!!! நாடு முழுதும் ஒளிபரப்பும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் கூட சைவ உணவு சாப்பிடும் தாய்மார்கள் எதை எதை சாப்பிட்டால் தாய் சேய் நலனுக்கு நல்லது என்றெல்லாம் விளக்குகிறார்கள். இதையெல்லாமும் பாருங்கள்.

    பாரதத்தில் பலரும் பல்லாயிரம் வருஷமாக மாம்சாஹாரம் சாப்பிடுகிறார்கள். உண்மை தான். நன்றே. ஆனால் பூரணமான சைவ உணவு சரியான உடல் ஊட்டம் அளிக்காது என்ற விஷமத்தனமான துஷ்ப்ரசாரம் வேண்டாமே.

    \\\\நிதிஷ் போன்ற போலி மதச்சார்பின்மை வியாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்\\\\

    அன்பார்ந்த ஸ்ரீ சான்றோன், பீஹார் முக்ய மந்த்ரி, ஸ்ரீ நிதீஷ் பாபு அவர்கள் சிலமாதங்களாகவே ஸ்ரீ லாலு யாதவ் அவர்களின் மார்க்கத்தை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார் என்பதை நீங்கள் கவனிக்கவில்லை? உத்தர பாரதத்திற்கே உரிய துப்பாக்கி அரசியல், துப்பாக்கியாளர்களை ஆட்சியாளர்கள் ஆதரிப்பது போன்ற ஆதர்சமான பாதையை அவர் துவக்கி விட்டாரே!!!!

    இவருடைய அதிகார் யாத்ரைக்குத் தான் பீஹார் முழுதிலும் எப்படிப்பட்ட வரவேற்பு!!!! மெச்சிக்கொள்ள வேண்டியது தான்!!!! அதிகாரம் என்ற செருக்கு தலைக்கு ஏறினால் இப்படியெல்லாம் ஆகும் போலும்!!!!

    ஒரு விஷயம் பாக்கி. லாலு சாலிஸா மாதிரி இது வரை நிதீஷ் சாலிஸா என்று எழுத யாரையும் இவர் இதுவரை பணிக்கவில்லை. என்ன தான் இருந்தாலும் லாலு சமோசாவிற்கும் நிதீஷ் சத்துமாவிற்கும் வித்யாசமில்லை?

  24. மோடி தான் துப்பாக்கியை எடுத்து கொண்டு போய் எல்லாரையும் சுட்ட மாதிரி அவரை மட்டும் குற்றம் சாட்டியது ஒரு வகை என்றால் அவர் மின்சாரம் வரவழைக்கிறார்,நல்ல விளைச்சலுக்கு காரணகர்த்தா ,மோடி மஸ்தான் வித்தை காட்டி குஜராத்தை எங்கயோ எடுத்து சென்று விட்டார் எனபது போன்ற வாதங்கள் ஒரு வகை
    மோடி பிரவீன் தொகாடியாவை அடக்கி வைத்திருப்பது மிகவும் பாராட்ட தகுந்த ஒன்று தான்.ஆனால் அவர் பட்ட பிறகு தான் திருந்துகிறார்
    பல உயர் போலீஸ் அதிகாரிகள் போலி என்குண்டேர்களுக்காக சிறை சென்ற பிறகு அவரை தேடி கொல்ல வந்தவர்கள் என்று சுட்டு கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அப்படியே நின்று விட்டது
    உச்ச நீதி மன்றம் போலி என்சௌண்டேர் வழக்குகளில் அரசுக்கு எதிரான தீர்ப்புகள்,உத்தரவுகள் வழங்காமல் இருந்திருந்தால் அவை ஒரு தொடர்கதையாக இன்றும் தொடர்ந்திருக்கும்

    வாஜ்பேயி போல அத்வானி போல அகில இந்திய அளவில் கட்சியினரை அரவணைத்து செல்லும் பண்பு அவருக்கு இருப்பதாக தெரியவில்லை.குஜராத் ஆட்சி என்றால் தெரியும் ஒரே முகம் மோடி தான்.அவரோடு இளமையில் கட்சி பணி புரிந்த ஜோஷி என்பவரை மறுபடியும் சேர்த்து கொண்டார்கள் என்பதற்காக கட்சியின் முக்கிய கூட்டங்களை புறக்கணித்து நினைத்ததை சாதிக்கும் குணம் காட்டுவது என்ன.
    ஜோஷி அவர்களை வைத்து வெளிவந்த சி டி க்கு காரணம் மோடி தான் என்ற கருத்தும் உண்டே

    திடீரென்று எந்த தேர்தலிலும் நின்ற அனுபவம் இல்லாத மோடி முதலவரானவுடன் அவர் எளிதாக ஜெயிப்பதற்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை(மக்கள் ஆதரவு பெற்ற கேஷுபாய் தோற்கடித்து விடுவாரோ என்ற பயம்),சுலபமான தொகுதி என்று நினைத்து திரு ஹரேன் பாண்ட்யா அவர்களின் தொகுதிக்கு அடி போட்டார்.அவர் விடாபிடியாக மறுத்தால் அவர் மீது வன்மம் கொண்டு அவருக்கு சீட் கொடுக்க அவர் ஆட்சி போகாமல் காப்பாற்றிய அத்வானி முயற்சித்தும் ,அவரோடு பேச விரும்பாமல் மருத்துவமனையில் சென்று சேர்ந்து கொண்டாரே அவரை தலைமை பதவிக்கு தகுதியானவர் என்று எப்படி கருதுவது
    தன் கட்சிகாரர்களுக்கே இந்த நிலை எற்படுத்துபவரை பெரிய தலைவரை போல புகழ்வது ஏற்று கொள்ள கூடியதா

  25. செட்டி சார்

    மின்சாரம் உபரி உபரி என்று கத்தும் போது மற்ற விஷயனகளையும் கவனிக்க வேண்டாமா எனபது தான் கேள்வி.மின்தடை ஏற்பட்டாலும் தமிழகத்தில் emergency விளக்கு வைத்து கொண்டு அறுவை சிகிச்சை செய்து தாய் காப்பற்றபடுகிறாள் என்பதற்கும் ,மருத்துவர்கள் இல்லாததால் குஜராத்தில் தாய்மார்கள் இறப்பு அதிகமாக உள்ளது என்பதற்கும் வித்தியாசம் இல்லையா .உபரியாக மருத்துவர்கள் இருக்கும் நிலை உபரியாக மின்சாரம் இருக்கும் நிலையை விட குறைவா

    https://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=8522

    In Tamil Nadu, the PHCs reported 160,000 normal deliveries in 2008-09; in 2009-10 this number rose to 250,000, indicating an increase in institutional deliveries. “Now there is 99.5 per cent institutional deliveries in the state of Tamil Nadu,” reveals Kuppulakshmi. As a result, infant mortality has fallen from 11.9/100 complicated neonatal admissions to 5.7/100 such admissions. Maternal deaths were 74 for 161,000 live births in 2009-10.

    Tamil Nadu has taken the lead to rectify this situation. The state has filled 24,064 vacancies in the last four years, including more than 7,000 hospital nurses and 3,000 village nurses and another 3,000 hospital workers and 6,000 paramedics.

    Finally, it is all about administrative will. “It is team effort that is slowly changing the picture in Tamil Nadu,

  26. பூவண்ணன் அவர்களே, மோடி அரசின் ‘சிரஞ்சீவி’, ‘ஈ-மம்தா’ திட்டங்கள் குறித்து தேடி பாருங்கள்.

  27. கணேசன் சார்

    https://news.outlookindia.com/items.aspx?artid=717327

    Even launch of the extended Chiranjeevi scheme in April 2008, providing one time assistance of Rs 5.40 lakh to encourage private practitioners for joining the yojana in 40 identified under represented talukas of 16 districts, did not evoke much response, the report said.

    After two years of introduction of the extended scheme, out of the 40 talukas in the State, private practioners came forward to register under this modified yojana in only two talukas, it said.

    The monitoring of the scheme could not be done due to non-convening of meetings of governing bodies and executive committees at the prescribed intervals, the CAG observed.

    CAG சொல்வதை பாருங்கள்

    https://www.deccanherald.com/content/243330/modis-gujarat-propaganda-masks-below.html

    In Modi’s ‘garvi Gujarat,’ infant mortality rate fell 10 points from 60 to 50 from 2001-08, when the national average IMR fell 13 points from 66 to 53. States that ought to be compared to Gujarat performed better: Maharashtra IMR down 12 points from 45 to 33; Tamil Nadu lower by 18 points to 31 and Karnataka down 13 points to 45.

    The sample registration system showed mothers in Gujarat fared no better than their newborns. Between 2004 and 2009 maternal mortality rate in Gujarat fell by 12 points from 160 to 148. Many states did out-shine Gujarat: in Kerala MMR was down 14 points from 95 to 81; Tamil Nadu lowered it by 14 points to 97 and Maharashtra 26 points from 130 to 104. The national average came down by 40 points from 254 to 212. These statistics are a telling beam of light that dissipate the fog of Modi’s propaganda.

    Take literacy. The latest census figures showed Gujarat dropping one state rank over the decade: from 17th in 2001 to 18th in 2011, a far cry from Modi’s 2001 ‘vision’ of a 100 per cent literate Gujarat by 2010.
    இது எல்லாம் சொல்வது தலை கீழாக இருக்கிறதே

  28. பூவண்ணன் சார்,

    அட நீங்க சொல்றதல்லாம் சரிண்ணே வச்சுக்குவோம் இன்றைய தேதியில் இந்திய அரசியலில் திரு.மோடியை விட நேர்மையான,திறமையான ஒரு நபரை நீங்கள் அடயாளம் காட்டினால் அவருக்கு ஓட்டுப்போட நான் தயார்,அப்படி உங்களால் கட்ட முடியவில்லை என்றால் வருகிற 2014 ஆம் ஆண்டு பொது தேர்தலில் ஒரு நல்ல குடிமகனாக திரு.மோடி அவகளுக்கு நீங்கள் ஒட்டு போட்டுதான் ஆக வேண்டும்..என்ன நான் சொல்றது??…….

    நமஸ்காரம்
    Anantha Saithanyan

  29. பூவண்ணன் அவர்களே ,

    ‘சோசியல் இன்டிகேடர்ஸ்’ சிலவற்றில் தமிழகத்தை விட குஜராத் பின் தங்கி இருக்கலாம். ஒப்பு கொள்கிறேன். எனினும் ‘கேஜ் ரிப்போர்ட்’ வைத்து கொண்டு மட்டும் குஜராத் மட்டம் என்று சொல்லாதீர்கள்.

    இன்டர்நெட்டில் தேடினால் குஜராத்திற்கு ஆதரவான செய்திகளை கூட காண முடிகிறது.

    https://www.harneedi.com/index.php/healthcare/53-who-hails-gujarat-govts-chiranjeevi-yojana-for-pregnant-வோமேன்

    https://www.business-standard.com/india/news/gujs-chiranjeevi-scheme-adopted-by-eight-states/337111/

    CAG report பொதுவாக எல்லா மாநிலத்தின் குறைகளையும் சுட்டி காட்டும்.

    Check https://saiindia.gov.in/english/home/Our_Products/Audit_Report/Government_Wise/state_audit/state_audit.html

    தமிழகத்தை ஆஹா ஓஹோ என்று சொல்கிறோம் .CAG சுகாதாரத்தில் தமிழகத்தின் குறைகளை கூட(ஒதுக்கப்பட்ட நிதியை திருப்புவது, பணியிடம் நிரப்பாதது) சுட்டி காட்டியுள்ளது. கீழுள்ள லிங்கை படித்து பாருங்கள்

    https://saiindia.gov.in/english/home/Our_Products/Audit_Report/Government_Wise/state_audit/recent_reports/Tamil_Nadu/2009/Civil/Civil_Tamilnadu_2009/civil_chap1.pdf
    Page no: 26.

    மற்ற துறைகளின் குறைபாடுகளை (எல்லா மாநிலம்) கூட மேற்கண்ட வெப்சைடில் காணலாம்.

  30. வர வர இந்த பின்னூட்டங்களை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் விவாதத்திறனை வியந்து நிற்கிறேன். நல்ல ஒரு தளத்திலும் மட்டமான விவாதங்கள் கூட நிகழ முடியும் என்பதை இது உறுதி படுத்துகிறது. உதாரணமாக:
    ஒருவன் : கொக்கு கருப்பு நிறத்தில் இருக்கிறது.
    இன்னொருவன்: கொக்கு கருப்பு கிடையாது வெள்ளை.
    ஒருவன் : நான் பார்க்கும் கொக்கு கருப்புத்தான்.
    இன்னொருவன் : எல்லா கொக்குமே வெள்ளை கொக்கு தான். உன் கண்ணுல தான் பிரச்சனை.
    ஒருவன்: அப்போ ஒரு கொக்கு கூட கருப்பு கிடையாதா?
    இன்னொருவன்: ஆமாம் கொக்கு வெள்ளை தான்.
    ஒருவன் : சரி, அப்போ நாரை கருப்பு தானே?
    இன்னொருவன்: நாரையும் வெள்ளை தான் ஆனால் கொக்கு கருப்பு அல்ல.
    ஒருவன் : சரி, அப்போ புலி? ஒருவேளை தேவாங்கு?
    இன்னொருவன்: அது ஒரு மாதிரி பழுப்பு இல்ல?
    ஒருவன்: பாத்தியா? அது பளுப்புன்னா கொக்கு கருப்பு தானே?

    இப்படியே தான் போகிறது. இதுதான் விவாதமா? ஒரு தரமான உரையாடலை, விவாதத்தை கூட நடத்தமுடியாத திராணி அற்ற சோற்றில் அடித்த பிண்டங்கள் தாமா நாம்? அரசியல் விவாதங்கள் மிக மிக கூர்மையான வாத பிரதி வாதங்களை முன்வைத்து உரையாடுவது. இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னே இதையெல்லாம் நல்லா பேசி காட்டியிருக்காங்க. உருப்படியா எதையும் படிக்காமல், படிப்பதிலேயே ஆகச்சிறந்த படைப்பு தினத்தந்தி தான் என்றால் இது போன்ற சப்பை விவாதங்கள் தான் நடக்கும். கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சமாவது தரத்தை உயர்த்துங்கள் அய்யா. டீக்கடை விவாதங்களை எத்தனை நாட்கள் தான் இணைய பின்னூட்டத்தில் நிகழ்த்துவீர்கள்?

  31. குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான இந்தியா டுடே கருத்துக் கணிப்புகள்:

    https://www.youtube.com/watch?v=JtbO7ZzuTnw&feature=youtu.be

    குஜராத்தில் மோடி அசைக்க முடியாத தலைவர். வெற்றி உறுதி. 56% மக்கள் மோடி பிரதமர் ஆகவேண்டும் என்று விரும்புகின்றனர்.

  32. I am more than impressed with the following opinion poll result.
    “54 per cent of the Muslim voters believed that Modi has been fair to their community”.

    I strongly believe that a true leader should be in a position to cater to the needs of all communities
    irrespective of differences. Mr.Modi did achieve this trait after 10 years of leadership evolution.
    If I remember correctly, even an alleged soft face of BJP, Mr.Vajpayee was not able to achieve this
    goal.

  33. ஸ்ரீ ஜடாயு அவர்கள் சுட்டிக்காட்டிய இந்தியா டுடே கருத்துக்கணிப்பைக்கண்டேன். இன்னும் அதிகப்படியான ஒட்டுக்களின் விகிதத்தையும் சட்டப்பேரவையில் இடங்களையும் ஸ்ரீ மோதி அவர்களின் தலைமையில் பாஜக வெல்லும் என்பது எனது கணிப்பு.தேர்தல் முடிவதற்கு முன்னரே திரு மோதி அவர்களைப் வரும் பொதுத்தேர்தலுக்கு பிரதமர் போட்டியாளர் என்று அறிவித்தால் குஜராத்தில் பாஜகவின் வெற்றி வரலாறு காணாததாக இருக்கும்.
    ஆகவே இப்பொழுதே திரு மோதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும். மானிலக்கட்சிகள் கூட்டணிக் கட்சிகள் இவற்றை யெல்லாம் பற்றிக் கவலைப்படாது பாஜகவின் தேசியத்தலைமை இந்த மாபெரும் முடிவை எடுக்கவேண்டும். திருமதி சுஸ்மா சுவராஜ் அல்லது திரு அருண் ஜேட்லி இவர்களெல்லாம் பிரதமர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால் பெரிய வெற்றிகிடைக்காது.மாண்புமிகு நரேந்திர மோதி தான் இன்றைக்கு நமக்கு உள்ள ஒரே ஆனால் மாபெரும் நம்பிக்கை நட்சத்திரம்.விரைவில் பாஜகவின் மத்திய தலைமை இதனை உணரும் என்று நம்புகிறேன்.

  34. திரு பூவண்ணன் சமூகக் குறியீட்டு எண்களைக்காட்டி குஜராத் சமூக வளர்ச்சியில் தமிழகத்தைக்காட்டிலும் பின் தங்கிய மானிலமே என்று வாதிட்டு வருகிறார். பொருளாதார வளர்ச்சியைக்காட்டிலும் சமூக முன்னேற்றம் முக்கியமானது என்பது உண்மை. ஆனால் சமூக வளர்ச்சிக்கு பொருளாதார வளர்ச்சி அவசியம். அது மட்டுமன்று சமூக வளர்ச்சின் வேகம் பொதுவாகவே பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைக்காட்டிலும் குறைவாகவே இருக்கும். பொருளாதார வளர்ச்சி பொருளாதார முன்னேற்றத்தினைவிட குறைவாக இருப்பது போலவேதான் இதுவும். தமிழகத்தின் சமூக முன்னேற்றத்திற்கு பெருந்தலைவர் காமராஜருடைய காலத்து ஆட்சியின் செயல்பாடுகள் இன்றும் கூடக்காரணம்.ஒரே பத்தாண்டுகளில் எல்லா சமூகக்குறியீடுகளிலும் மாற்றம் வந்துவிடாது.
    திராவிட இயக்கத்தினருக்கு இலவசமாக பிச்சைப் போடுகிறத்திட்டங்கள் போடவும் நிறைவேற்றவும் தெரியும். மெய்யான வளர்ச்சித்திட்டங்கள் அவர்கள் சித்தாந்தத்தில் இல்லை. வெறும் மயக்கப்பேச்சு மட்டும் பேசுவார்கள். பராசக்தி படத்தில் ஒரு இலவச அன்னச்சத்திரம் இறுதிக்காட்சியில் தீர்வாகக்காட்டப்படும். அதுதான் திராவிட இயக்கத்தின் இலட்சணம். சமூகக்கொள்கையைக் கேட்டால் குறைந்த பட்சம் இரண்டு மனைவிகளாவது தலைவர்களுக்கு இருக்கவேண்டும் என்பது இவர்களின் நடைமுறை.
    சிவஸ்ரீ.

  35. திரு. மோடி அவர்கள் வென்று விட்டார். காங்கிரஸின் இலவச வீடு உடான்சை குஜராத் மக்கள் நம்பவில்லை. நேர்மையான அவரை மீண்டும் அங்கீகரித்து விட்டனர். அவர் நம்ப கழகங்களை போல் இலவசங்களை அள்ளி விட வில்லை. திருமங்கலம் பார்முலாவை பயன் படுத்தவும் இல்லை. நியாயமாக நேர்மையாக வென்றிருக்கிறார். திரு. பூவண்ணன் போன்ற வெட்டி நியாயம் பேசும் ஆட்களுக்கு குஜராத் மக்களே பதிலடி கொடுத்து விட்டார்கள். இனி என்ன? நம்ம ப.சி மாதிரி பூவன்னனும் குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று மகிழட்டும். ஆனால் மக்களுக்கு எப்போதுமே யார் நல்லவர்கள் என்று தெரிகிறது.

  36. பூவண்ணன் போன்றோர் பொய்ப் பிரச்சாரங்களால் மயங்கியவர்கள். காங்கிரசை போன்ற தீய சக்தி ஆளும் நாட்டில் மாநில அரசுகளுக்கு ஏகப்பட்ட இடையூறுகளை கொடுத்துவருகிறார்கள் மத்திய அரசினர். இந்தியாவில் இப்போது உள்ள மாநில அரசுகளிலேயே குஜராத் அரசு தான் மிக சிறந்தது.பூவண்ணன் போன்றோர் தங்கள் மஞ்சள் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்க்கவேண்டும்.

  37. மோடியின் வெற்றியும் பா ஜ கா வின் தோல்வியும் நேரடியாக தொடொர்புல்லவை.அதை இன்னும் பா ஜ கா வின் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ளாதது வியப்பு தான்
    2002 இல் மோடி தோற்றிருந்தால் பா ஜ கா 2004 இல் தோற்றிருக்காது.2007 இல் தோற்றிருந்தால் 2009இல் காங்கிரஸ் 200 சீட் தாண்டி இருக்காது
    .பால் தாக்கரேயின் ஷிவ் சேனா மும்பையில் மாநகராட்சியில் மட்டும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.ஷிவ் சேனா பூதத்தை காட்டி எவ்வளவு மட்டமாக ஆட்சி செய்தாலும் காங்கிரெஸ் இரண்டாக பிரிந்தாலும்,பவாரோடு சேர்ந்து எப்படி கொள்ளை அடித்தாலும் தொடர்ந்து மகாராஸ்ட்ராவில் வெற்றி பெறுவது தான் மத்தியிலும் நடக்கும்
    மோடியை பா ஜ கா வாக பார்ப்பதால் பல கோடி வாக்காளர்கள் எதிர் பக்கத்தில் எந்த வித முயற்சிகள் இல்லை என்றாலும் தாமாக சென்று விடுகிறார்கள் .காங்கிரஸ்ற்கு கிடைத்த வரபிரசாதம் மோடி

  38. அப்படியா? என்ன ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பு? பாஜக தோற்பதற்கும் மோடி வெல்வதற்கும் நேரடி ஒற்றுமை இருக்கிறதா? மோடி வென்று கொண்டே இருப்பதால் தான் பாஜக தோற்றுக் கொண்டே இருக்கிறதா? இத்தனை நாட்களாக தெரியவில்லையே சார்?

    முதலில் மோடி சரியான ஆட்சியாளர் இல்லை என்று சொன்னீர்கள். வளர்ச்சிக்கு குஜராத்தை அழைத்து செல்கிறார் என்றதும் குஜராத் இரண்டு பதக்கங்கள் வாங்கியதற்கும் மோடிக்கும் என்ன சம்மந்தமோ அதே தான் அம்மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கும் அவருக்கும் உள்ள சம்மந்தம் என்ற ரீதியில் பதிலளித்தீர்கள். குஜராத் எதிலெல்லாம் பின் தங்கியுள்ளது என்று புள்ளி விவரம் கொடுத்தீர்கள். குஜராத் மக்களை விட உங்களுக்கு அவரை பற்றி மிக நன்கு தெரிந்திருப்பது போல பேசினீர்கள்.

    இப்போது அவர் வென்று விட்டார் என்று நாங்கள் சொன்னால், அது மக்கள் அவருக்கு அளித்த அங்கீகாரம் என்பதை ஒத்துக் கொள்ளாமல் அது பாஜக வின் பின்னடைவு என்று மறுபடியும் இழுத்து பிடித்து தம் கட்டுகிறீர்கள். மிக்க நன்று. அப்படியெனில் மோடி இல்லையென்றால் பாஜக தேசிய அளவில் ஆட்சியைப் பிடித்து விடும் என்று கூறுகிறீர்கள்.

    ஒன்றைப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். பாஜக வின் மற்ற தலைவர்களுக்கு மோடியின் அளவிற்கு நாட்டில் செல்வாக்கு இல்லை சார். அவர்கள் உட்கட்சி அரசியல் செய்வதால் மட்டுமே காங்கிரஸ் ஆட்சிக்கு இருமுறை வந்திருக்கிறது. இடையில் பிரமோத் மகாஜன் போன்ற மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் ஜனரஞ்சக அரசியல் செய்வோர் மறைந்ததும் , வாஜ்பாய் ஐயா ஓய்வு பெற்றதும் பாஜக வின் மிகப் பெரிய பின்னடைவு. ராஜ்நாத் சிங், நிதின் கடகரி போன்றோருக்கு பெரிய செல்வாக்கு மக்கள் மத்தியில் இல்லை. இது தான் பாஜக வின் பின்னடைவுக்கு காரணம். தாங்கள் முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது போல் திரு. பால் தாக்கரே அவர்களோடு மோடியை ஒப்பிட்டு பேசியுள்ளீர்கள்.

    ஆனால் நாட்டின் தலைவிதி நாளை மோடியை பிரதமர் வேட்பாளர் ஆக்கினால் அப்போது தெரியும். இந்திய மக்கள் அனைவரும் என்னவோ குஜராத்தில் மோடி முதல்வராக இருப்பதை வைத்து மட்டும் தான் காங்கிரஸ் ஐ ஆட்சியில் அமர்த்தியது போல் பேசுவது பக்கா மூளைச்சலவை. மோடி பிரதமர் வேட்பாளர் ஆகாதவரை நம் நாட்டிற்கு இந்த ஊழல் வாத, போலி செச்யுலரிச காங்கிரஸ்இடமிருந்து விமோசனம் இல்லை. ஹைதராபாத்தில் மிகத் தெனாவெட்டாக அக்பரிதீன் ஒவைசி என்ற முஸ்லிம் தலைவர் “15 நிமிடங்கள் போலிசை நிறுத்தி வைத்தால், 25 கோடி முஸ்லிம்களும் 100 கோடி உள்ள ஹிந்துஸ்தானை அழித்து விடுவோம்” என்று பேசுகிறார். காங்கிரஸ் வேடிக்கை பார்கிறது. நீங்கள் அதையெல்லாம் கண்டுக்கவே மாட்டீர்கள். நியாயமான, நேர்மையான, ஊழல் அற்ற நிர்வாகத்தைத் தந்து ஒருவர் முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டால் அதை ஒத்துக் கொள்ள மறுத்து விதண்டா வாதம் செய்வீர்கள். எது சார் மதவாதம்? ஹிந்துக்களை முற்றிலும் அழிப்போம் என்று ஒருவர் துணிந்து சொல்கிறார் என்றால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆட்சி நல்லாட்சி. செக்யுலரிச ஆட்சி. இப்படி போலி செக்யுலரிசம் பேசி பேசி நாட்டை சுரண்டி விட்டீர்கள். ஓட்டு வங்கி அரசியல் செய்பவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவீர்கள். ஒருவர் மக்கள் ஆதரவில் முதல்வரானால் மதவாதி என்று முத்திரை குத்துவீர்கள். அவர் சார்ந்துள்ள கட்சிக்கு அவரால் பின்னடைவு என்றும் பொய் பிரசாரம் செய்வீர்கள். நடத்துங்கள் ஐயா. நடத்துங்கள்.

  39. மோதி என்னாய்யா மோதி ,என்னமோ எல்லாரும் சேந்துகினு கூப்பாடு போடறிங்க .
    ஒரு மாப்பிள்ளை கூட இல்லாம , அவனுக்கு குஜராத்தில் உள்ள ஒரு பெரிய்ய கம்பெநிலேந்து ஒரு பத்து இல்ல இரவது லட்சத்துக்கு சோக்கா மனைய வாங்கிப் போட்டு கொஞ்ச மாசம் கழிச்சி அவனுங்களுக்கே ஒரு நூறு கோடி ரூபாய்க்கு தள்ளி வுட துப்பு இல்ல இந்த மோதிஎல்லாம் ஒரு தலைவனா ?
    இது ஒரு ஆட்சியா?

    அட , அது தான் வேண்டாம் ஐயா,குறைந்த பட்சம் ரெண்டு நிலக்கரி சுரங்கமாவது தனக்கு வேண்டியவனுக்கோ இல்ல கூட வேல செய்ற மந்திரி மாமனுக்கோ , மச்சானுக்கோ குடுக்க துப்பு இல்ல. இந்த மோதி ஒரு முதல் அமைச்சராம்

    அட அதுதான் இல்ல, ஒரு 2 லட்சம் கோடி இல்ல3 லட்சம் கோடி காண்ட்ராக்ட எவனுக்காவது தாரை வாத்துட்டு இந்த கைக்கி அந்த கை ஒரு அம்பத்தி அஞ்சாயிரம் கோடி அறுபதாயிரம் கோடின்னு லஞ்சமும் வாங்க தெரியாத ஜன்மம் ஒரு ஜன்மமா? மோதியாம் ,முதல் அமைச்சராம் , வெங்காயம்.
    அட காமன்வெல்த் போட்டி மாரி ஒரு வெள்ளாட்டு போட்டி வெச்சி ஒரு நாப்பதாயிரம் கோடியோ அம்பதாயிரம் கோடியோ சுருட்டத் தெரியாதவனெல்லாம் ஒரு தலைவனா? .

    போகட்டும்யா, கல்யாணம் காட்சி ஆயி ஒரு பையனோ , பெண்ணோ இருக்க ஜால்ராக்கள வெச்சி ‘ , தொபார்பா இந்த பையன் கண்டி இல்லன்னு வெச்சிக்க , இந்த நாட்டுக்கு கதி மோட்சமே இல்லபாநு’ சொல்ல நாதி இர்க்கா இந்த மன்சனுக்கு?
    மோதியாம் பிரதமராம்.
    ஜன்பத் ரோடுக்கு வாங்கய்யா , சும்மா வாத்யார் கணக்கா சொல்லி குடுக்றோம்!

    இரா.ஸ்ரீதரன்

  40. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பாருங்கள். ஒவைசியின் அடாவடிப் பேச்சு. ஹிந்தியில் இருக்கிறது. இருப்பினும் ஏன் எந்த செக்யுலர் மாமாக்களும், செக்யுலர் மீடியாவும் இதைத் தட்டிக் கேட்கவில்லை?

    https://www.youtube.com/watch?v=1h5H5H1tneg

    Youtube இதை அழித்த பின்னும் இதை அப்லோட் செய்தவர் மீண்டும் செய்துள்ளார். உங்களுக்கு கிடைத்தால் முழுவதும் download செய்து கொள்ளுங்கள். செக்யுலர் கவர்மண்ட், செக்யுலர் மீடியா, செக்யுலர் பூவண்ணன் அனைவரும் திருந்தட்டும்.

  41. பாஜகவைப் பொறுத்தவரை யார் பிரதம மந்திரி வேட்பாளர் என்ற கேள்வி காங்கிரஸ் ஆதரவு ஊடகங்களும் ஹிந்து விரோதிகளும்தான் வேண்டுமென்றே எழுப்பிக் கொண்டே இருக்கிறார்களே ஒழிய பாஜக அதைப் பற்றி தானாக எதையும் பேசவே இல்லை
    இவர்களே ஒரு செய்தியைக் கசிய விடுவது, பின்பு அதை நன்றாக ஊதி விடுவது ,எல்லோரிடமும் போய் அவர்கள் கருத்தைக் கேட்பது பின்பு எதோ பாஜகவில் சண்டை போல் சித்தரிப்பது – ஆஹா என்ன குள்ள நரித்தனம்!

    இப்போது கருணாநிதி கூடத்தான் சிதம்பரம் பிரதமராக வரத் தகுதி உள்ளவர் என்று கூறியுள்ளார். அதற்கு நாராயணசாமி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
    முன்பே பல முறை மன்மோகன் சிங் பதவி விலக நிர்ப்பந்தப்படுத்தப் படுகிறார் என்றும் ஆனால் அவர் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன .ஏன் , மன்மோகனுக்கும் ப்ரணாப் முகர்ஜிக்குமே பிரதமர் பதவிக்கு போட்டி இருந்தது என்றும் சோனியா முகர்ஜியை நம்பாமல் தான் ‘தளுக்காக’ அவரை ஜனாதிபதியாக்கி விட்டார் என்றும் செய்திகள் வந்தன .
    மேலும் பாஜக என்ன காங்கிரஸ் போல கட்சியை குடும்ப சொத்தாகவா வைத்துள்ளது ?
    இவ்வளவு பேசுபவர்கள், சோனியாவை நீக்கி விட்டு வேறு யாரையாவது காங்கிரஸ் தலைவராக்க வேண்டியதுதானே?
    அந்தப் பதவி என்ன அந்தக் குடும்பத்தின் ‘தெய்வீக அதிகார’மா?
    காங்கிரஸ் பொதுக்குழுவில் சீதாரம் கேசரி ‘கால் கழுவச் ‘ சென்ற போது அவர் இருக்கையில் சோனியாவை அவசர அவசரமாக உட்கார வைத்து தலைவி ஆக்கியது மறக்க முடியுமா?

  42. \\\\\\\\ஹைதராபாத்தில் மிகத் தெனாவெட்டாக அக்பரிதீன் ஒவைசி என்ற முஸ்லிம் தலைவர் “15 நிமிடங்கள் போலிசை நிறுத்தி வைத்தால், 25 கோடி முஸ்லிம்களும் 100 கோடி உள்ள ஹிந்துஸ்தானை அழித்து விடுவோம்” என்று பேசுகிறார். காங்கிரஸ் வேடிக்கை பார்கிறது. நீங்கள் அதையெல்லாம் கண்டுக்கவே மாட்டீர்கள்.\\\\\\

    ஸ்ரீமான். ப்ரசன்னா, பூவண்ணன் சாரிடம் கேட்கிறீர்கள்!!!!!!!! அவர் ஏன் பதில் சொல்லமாட்டார் என்பதற்கும் நீங்களே விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.

    \\\\\\\\ஹிந்துக்களை முற்றிலும் அழிப்போம் என்று ஒருவர் துணிந்து சொல்கிறார் என்றால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆட்சி நல்லாட்சி. செக்யுலரிச ஆட்சி.\\\\\\

    பூவண்ணன் சார் அகராதியில் ஜெனாப் அக்பருத்தீன் ஓவைசி அவர்கள் பேசுவது போல் பேசுவது தான் மதசார்பின்மை.

    இதற்கு அடுத்த மறுமொழியில் பூவண்ணன் சார் காக்காய்க்கு மூக்குல வேர்த்தது மாதிரி ஜெனாப்-ஏ-ஆலமிற்கு வக்காலத்து வாங்குகிறாரா இல்லையா என்று பாருங்கள்.

    பூவண்ணன் சாரின் இடதுசாரி ஜோல்னாப்பையிலிருந்து மதசார்பின்மை பற்றி என்னென்ன வ்யாக்யானாதிகளெல்லாம் உதிரும் என்பது அவரது மறுமொழி பதியப்படும் வரை சஸ்பென்ஸ்!!!!!!!!!

  43. Dear Survana priyan,

    Maulana Barani, was himself a turk and he recommended and got the Delhi Sultans to implement brutal caste discrimination against Indian muslims, lower caste muslim converts and in favor of higher caste and foreign muslims

    Ajlaf, Ashraf and Razil, are not Sanskrit words but arabic words

    Islam also has the concept of kufa or rank, implemented by Caliph Umar, wherein low born men cant marry high ranked women

    Even today, Saudi Arabia, the homeland of islam has a clear caste system,

    White and Arab muslims on top
    Desi and black muslims on bottom

    Even within the arab muslim tribes there is a caste like ranking
    Even Madudi could not get buried in Medina as he is a Miskeen

  44. மேலே பதிவாகி இருக்கும் பூவண்ணனின் மறுமொழிகளையும் அதற்கு திரு ஜடாயு கொடுத்துள்ள பதில்களையும் இன்று தான் படித்தேன். தக்க பதில் தந்த ஜடாயுவுக்கு நன்றிகள்.

    செக்குலர் அரசியல்வாதிகள் என்ற போர்வையில் அரசியல் செய்யும் மோசடிக்காரர்களில் இருவகை உண்டு. முதல் ரகம் முழு மோசடிக்காரர்கள் மற்றும் ஏமாற்றுவித்தைக்காரர்கள். இரண்டாவது ரகம் முதல் ரகத்தை சேர்ந்தவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை கேட்டு அவற்றை உண்மை என நம்பி ஏமாந்தவர்கள்.

    கடந்த 22 வருடக்காலமாகவே, , செக்குலர் சுண்டல்கள் , 1992- அயோத்தி சம்பவத்துக்கு பிறகுதான் நாட்டில் தீவிரவாதம் வளர்ந்தது என்பது போல, பொய்ப் பிரச்சாரம் செய்துவருகின்றனர். உண்மை என்ன ? நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக வருவதற்கு இரண்டு வருடம் முன்னரே, 1989-90 காலக்கட்டத்தில், நம் நாட்டிலேயே காஷ்மீரில் இருந்து , சுமார் 5 லட்சம் இந்துக்கள் துரத்தி அடிக்கப்பட்டனர். மேலும் அதே காலக் கட்டத்தில், ஜம்மு காஷ்மீரிலும், பங்களா தேசத்திலும் சுமார் 30-க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. இப்போது கூட, இந்துக்கள் வழிபடும் ஒரு இடத்தில், காஷ்மீர இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து உள்ளனர் என்று செய்திகள் ஆதாரத்துடன் முகநூலிலும், ட்விட்டரிலும் வந்த வண்ணம் உள்ளன.

    எப்போதுமே இந்துக்கள் பதிலடி தான் கொடுக்கிறார்களே தவிர, இந்துக்கள் யாரையும் தாக்குவது கிடையாது. பாகிஸ்தான் விவகாரத்தில் கூட அப்படித்தான். ராஜ்நாத் சிங் அவர்கள் கூட, பாகிஸ்தான் தாக்கினால் தக்க பதில் அடி கொடுங்கள் என்றுதான் உத்தரவிட்டுள்ளார்.

    பூவண்ணன் அவர்கள் நியாயமாக சிந்திப்பவராக இருந்தால், அவருக்கு இந்த உண்மைகள் புலப்படும். மேலும் ஜவஹர்லால் நேருவில் ஆரம்பித்து, இன்றுவரை மத்திய ஆட்சிக்கட்டிலில் இருந்த பல காங்கிரஸ் பிரதமர்களின் ஆட்சிக் காலத்தில், லால் பகதூர் சாஸ்திரி, நரசிம்மராவ் ஆகிய இருவர் தவிர மற்ற காங்கிரஸ் பிரதமர்களின் ஆட்சிகளால், இந்தியாவுக்கு அதிகக் கெடுதல்கள் மட்டுமே வந்துள்ளது. காங்கிரஸ் என்பது ஒட்டுமொத்த தீயசக்தி ஆகி 45 வருடம் ஆகிவிட்டது. 1966- ஆம் ஆண்டு இந்திரா பிரதமர் ஆன போது இந்த தீங்கு காலூன்றியது.

    1966-லே இந்திராவைப் பிரதமர் ஆக்கிய பாவத்துக்காக , பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் , எமெர்ஜென்சி காலத்தில் 1975-லே திருத்தணியில் நடந்த கூட்டத்தில் , இது நான் செய்த தவறு- இந்த அம்மாவை அங்கே அமர்த்திய பாவி நான் தான் என்று சொல்லி கண்ணீர் சிந்தினார். அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே இந்த உண்மைகள் தெரியும். பத்திரிகை தணிக்கை இருந்ததால் அவரது பேச்சு தணிக்கை செய்யப்பட்டு , சுருக்கமாகவே வெளிவந்தது. பூவண்ணன் போன்றோர் காமராஜரைப் பற்றி அறிவாரா என்பது எனக்கு தெரியாது.

    இன்னமும் 30- ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சி அதிகாரம் இன்றி , தெருவில் அலைந்தால் தான், நல்ல புத்தி ஏற்பட்டு, அந்த கட்சியில் எதிர்காலத்திலாவது, அடிமைப் புத்தி இல்லாத, நேரு குடும்ப தலைமை இல்லாத தலைவர்கள் உருவாவார்கள். காலம் தான் தக்க தீர்ப்பு வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *