நமது வெளியுறவுத் துறை அமைச்சரின் ”அறம்”!

சமீபத்தில் மூங்கில் இசையாதல் என்ற நிகழ்ச்சிக்கு நண்பர்கள் அழைத்திருந்தார்கள்.எழுத்தாளர் ஷாஜி,மற்றும் இயக்குனர் பாலாஜி சக்தி வேல் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக சேலம் ஆதவ் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது.

வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி… இருவரும் சகோதரிகள். Muscular Dystrophy என்ற தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். எல்லா மனிதர்களுக்கும் உடலில் இருக்கும் செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. உடம்பின் தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத துயரம் நிரம்பிய இந்த நோய்க்கு எந்த மருந்தும் கிடையாது. தசைச் சிதைவு நோய்க்கான மருந்து இன்னமும் ஆராய்ச்சி மட்டத்தில்தான் இருக்கிறது. மாதேவியும் வல்லபியும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்த நோயோடு வாழ்கின்றனர். மின்சார வாரியத்தில் கடைநிலை ஊழியராக இருந்து ஓய்வுபெற்ற இளங்கோ-கலையரசி தம்பதியரின் மகள்கள் இவர்கள்.

நோயை பற்றியும் அதன் வலி வேதனைகளைப்பற்றியும் அவர்களின் பேட்டியில்” குழந்தைச் சிரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் அக்கா மாதேவி. “எங்களுக்குச் சொந்த ஊர் சேலம். எனக்கு இப்போ 30 வயசு. 10 வயசு வரைக்கும் துறுதுறுன்னு இருப்பேன். ஓட்டப் பந்தயத்தில் பரிசுகூட ஜெயிச்சிருக்கேன். அஞ்சாம் கிளாஸ் போக ஆரம்பிக்கும்போதுதான் உடம்புல சின்னச் சின்ன மாற்றங்கள். கெண்டக்கால் சதை இறுக ஆரம் பிச்சது. நடக்க முடியாம அடிக்கடி கால் தடுமாறிக் கீழே விழுந்தேன். மெள்ள மெள்ள இது அதிகமாகி, பள்ளிக்கூடம் போயிட்டு வர்றதுக்குள் 10 இடங்களிலாவது விழுவேன். உட்கார்ந்தா எழ முடியாது. பாத்ரூம், டாய்லெட் போறது ரொம்பக் கொடுமையானதா மாறுச்சு.

டாக்டர்கிட்ட போனதும் முதல் பரிசோதனையிலேயே என்ன நோய்னு தெரிஞ்சுடுச்சு. எனக்கு இந்தப் பிரச்னை வந்து ரெண்டாவது வருஷத்தில், என் தங்கச்சிக்கும் அதே வியாதி தாக்குச்சு. ‘இப்படி உடம்பு சரியில்லாத புள்ளையை எதுக்கு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பணும்?’னு அப்பா, அம்மாவை எல்லாரும் திட்டுவாங்க. அவங்களும் ‘ஸ்கூல் போக வேண்டாம்’னு சொல்லிப் பார்த்தாங்க. ஆனா, கீழே விழுந்து எழுந்திரிச்சே டென்த் வரை படிச்சோம். பிறகு, வீட்டில் இருந்தே ப்ளஸ் டூ பாஸ் பண்ணி, அஞ்சல் வழியில் டி.சி.ஏ. படிச்சோம். வீட்டுக்குள்ளேயே ஒரு பிளாஸ்டிக் நாற்காலியைப் பிடிச்சுக்கிட்டு, அதை நகர்த்திக்கிட்டேதான் நடக்க முடிஞ்சது. நாலஞ்சு வருஷத்தில் ரெண்டு பேரும் முழு செயல்பாடுகளையும் இழந்துட்டோம்.

எந்தச் செயலையும் தன்னிச்சையா செய்ய முடியாது. இடது கையைத் தூக்கி இந்த வீல் சேர் மேல வைக்கணும்னா, வலது கையை மெள்ள மெள்ள நகர்த்திட்டு வந்து, அதோட துணையோட இடது கையைத் தூக்கணும். செல்போனை யாராவது எடுத்து எங்க காதுல வெச்சாதான் பேச முடியும். பேசிட்டு இருக்கும்போதே, கழுத்து சாய்ஞ்சு தலை பின் பக்கமாப் போயிடும். சாய்ஞ்ச தலையை நிமிர்த்த இன்னொருத்தர் உதவி தேவை. இப்படி உடம்போட எல்லாத் தசைகளும் தங்களோட செயல்பாட்டை நிறுத்திட்டே வருது. இப்போ புரியுதா?”- மாறாத சிரிப்புடன் கேட்கிறார் வானவன் மாதேவி.” *

( https://www.facebook.com/pages/Aadhav-Trust/185118278177615 )

இவர்களின் முன் முயற்சியால் தமிழகம் முழுக்க உள்ள தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆக்கமும்,ஊக்கமும்,பயிற்சியும் அளிக்கிறார்கள் இந்த கடவுளின் குழந்தைகள். இந்த நிகழ்வின் தொடக்கத்தில் மேடைக்கு அழைக்கப்பட்ட இயல் இசை வல்லபியும்,வானவன் மாதேவியும் சக்கர நாற்காலியோடு தூக்கி வரப்பட்டு மேடையில் இருக்க வைக்கப்பட்டார்கள். அவருடைய பேச்சின் ஒவ்வொரு சொல்லிலும் வலி மிகுந்த வாழ்க்கையை தொடரும் குழந்தைகளையும், அவர்களுக்காக உருகும்,மறுகும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கை அளிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு பேசினார். தன் நோயையை பற்றி ,அதன் இயலாமையை பற்றி, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள்,இளைஞர்களின் வெறுமையைப்பற்றி, அவர்களின் நிஜ வாழ்வு ஏக்கங்களைப்பற்றி ,இந்த சமூகத்தின் பார்வையைப்பற்றி ஒவ்வொரு சொல்லும் மனத்தை உலுக்குகிறது உண்மையின் உக்கிரம் தாங்காமல் பார்த்தவர்கள், கண் கலங்கினார்கள். மாற்றுத்திறனாளிகள் பால் நாம் எவ்வளவு தூரம் கருணையோடு இருக்க வேண்டிய கால கட்டத்தில் அவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் சல்மான் குர்ஷித் என்ற கேவலமான காங்கிரஸ் அமைச்சரை பற்றி படிக்கையில் பற்றி எரிகிறது மனது.

இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சரும் ,முன்னாள் சட்ட அமைச்சர் என்ற பேரில் இருக்கும் இன்னொரு அடிமையான சல்மான் குர்ஷித், தன் கூட்டுக்கொள்ளைக்கார மனைவி லூயிஸ் உடன் தனது தாய் வழி தாத்தாவான முன்னாள் ஜனாதிபதி ஜாகீர் உசேன் பெயரில் ஒரு அறக்கட்டளை (!!!!!??) அமைப்பை 1986லிருந்து நடத்தி ஊனமுற்றோர் களுக்கு உதவி வழங்குகிறேன் என்ற பேரில் அரசுகளிடமிருந்தும்,கொஞ்சம் கருணை மிச்சமுள்ள மனிதர்களிமிருந்தும் பணம் பெற்று அவற்றை திருடித்தின்று வயிறு வளர்த்து வருகிறார்.இதை அவர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் போய் படித்து விட்டு வந்து இப்படி திருடித்தின்று கொண்டு வயிறு வளர்க்கத்தான் வேண்டுமா?

திரு குர்ஷித் அவர்களே, வழக்கறிஞராக இருக்கும் உங்களுக்கு காசுக்கோ,வசதிக்கோ என்ன குறைவு வந்து விட்டது. அரசாங்கச்செலவில் டாய்லெட் பேப்பர் முதல் கார் வரை அனுபவித்தாலும் உங்களுக்கு இந்த பணத்தை திருடித்தின்பதை பற்றி வெட்கம் வேண்டாம். அதுவும் ஊனமுற்ற, ஆதரவற்ற குழந்தைகளின் பேரை சொல்லி கொள்ளையடிக்க ! மனசாட்சி என்ற ஒன்றுள்ள மனிதன் எவனாவது இப்படிப்பட்ட படு பாதகச்செயலை செய்வானா?

ஒரு காங்கிரஸ் களவாணி வெறும் 71 லட்சத்தையெல்லாம் கொள்ளையே அடிக்க மாட்டான். அப்படி வெறும் 71 லட்சத்தை மட்டுமே திருடி இருந்தவனாக அதாவது நாகரீக காங்கிரஸ் மொழியில் ஊழல் செய்பவராக இருந்தால் அவன் காங்கிரஸ் காரனாக நிச்சயம் இருக்க மாட்டான். என்று உங்கள் சக திருடன் மன்னிக்க சக அமைச்சர் பேனி பிரசாத் வர்மா தெரிவித்தாரே?

கூட்டு கொள்ளையடிக்கும் சக காங்கிரஸ் காரனுக்கு கூட தெரிகிறதே 71 லட்சம் வெறும் 71 லட்சத்துக்கா இந்த கேவலம்? என்று .அதுவும் ஊனமுற்ற குழந்தைகளின் நிதியை திருடி அப்படி வயிறு வளர்க்க வேண்டிய தேவை தான் என்ன உங்களுக்கு. இதை விட நாகரீகமாக நகர வீதிகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தலாமே? திரு.சல்மான் குர்ஷித் அவர்களே. பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னுவது தானே சாத்திரங்களின் வேலை. சோனியா மாதிரி ஊழல் பிசாசுகளின் பின்னால் அடிமை சேவகம் செய்யும் உங்களிடம் நேர்மையையும் ஞாயத்தையும் எதிர்பார்ப்பது என்பதே ஒரு வீண் வேலை தான்.இப்படி திருடி தின்று தான் பிழைப்பு நடத்த வேண்டும் அதுவும் ஆதரவற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை என்று கேட்டதற்கு கேள்வி கேட்பவர்களை தைரியம் இருந்தால் என் தொகுதிக்கு வந்து உயிரோடு திரும்ப முடியுமா? என்று பார் அப்படி என்று மிரட்டி உங்கள் அயோக்கியத்தனத்தை, அடிப்படை தொழிலான அடியாள் வேலையை,கூலிக்கு ஆள் வைத்து கொலை பாதக செயல்களை செய்யும் உங்களை வெட்ட வெளிச்சமாக்கி சாயமிழந்து மக்கள் முன் நிற்கிறீர்களே?. இது பற்றி கேவலமாக இல்லை.அம்பேத்கர் போன்ற மாமேதைகள், மனித புனிதர்கள் அமர்ந்த சட்ட அமைச்சர் பதவியில் தார்மீக ரீதியில் தகுதியிழந்து அம்பலப்பட்டு நிற்கிறீர்கள்.

பிச்சை எடுப்பதை விடவும் கேவலமான செயலை என்றெல்லாம் கடுமையாக, அதுவும் வெறும் 71 லட்ச ரூபாய் ஊழலுக்கு ஏன் இவ்வளவு சீற்றம் அடைய வேண்டும் என சிலர் நினைக்கலாம்.உங்களுக்காக, காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஊழல் செய்யமாலோ,மக்கள் சொத்தை கொள்ளையிடிக்கமல் இருந்தால் தானே அதிசயம் என சொல்வதும், நினைப்பது எனக்கும் தெரியும்.ஆனால் இந்த இழிபிறவியின் செயல் என்பது 51 லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடித்து விட்டு ஒன்னும் தெரியாதது போல வேஷம் போடும் மன்மோகன் சிங்கை விட இது கொடியது. சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, சபிக்கப்பட்ட வாழ்க்கை வாழும் ஊனமுற்றோருடைய ஒதுக்கீட்டை ஊழல் செய்து விழுங்குவது என்பது மிகுந்த அறுவெறுப்புக்கும்,கண்டனத்துக்கும் உரியது. எத்தனை ஊனமுற்ற மனிதர்களின் உள்ளச்சிறகடிப்பை,வெளிச்சத்தை காணத்துடித்த அந்த ஆத்மாக்களின் ஒதுக்கீட்டை பிடுங்கி திங்க எவ்வளவு கொடூர மனம் வேண்டும். இதற்கு அமைச்சரின் மனைவியும்,தகப்பனாரும் துணை வேறு.

இதை முதன் முதலில் ஏதோ அரவிந்த் கேஜ்ரிவால் கொண்டு வந்ததாக பம்மாத்து பண்ணிக்கொண்டு சகட்டு மேனிக்கு கேஜ்ரிவாலை வசை பாடிக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் புரோக்கர்கள் கூட்டம்,ஆனால் இந்த ஊழலை உத்திரப்பிரதேச மாநில தணிக்கை துறையும் cagம் தான் முதலில் வெளிக்கொண்டு வந்தன. ஆனால் CAGன் அறிக்கை தயாரானாலும் வெளிப்பட்டால் தங்களுக்கு ஆபத்து என்பதற்காக காலம் தாழ்த்திக்கொண்டு இருந்திருக்கிறது அரசு.சமூக நலத்துறையின் ஆடிட் மட்டும் இவர்களை குற்றம் சொல்ல வில்லை. சில நேர்மையான சிவில் சர்வெண்ட்கள், தாசில்தார்கள், கூட இது சம்பந்தமாக புகார் அளித்திருக்கிறார்கள். இதை எல்லாம் பரிசிலீத்தால் தன் தகப்பனார் முலாயம் சிங் யாதவ் பண்ணிய தகிடு தத்தங்களுக்கு கம்பி எண்ணி களி தின்ன வைத்து விடுவர் அந்நிய சோனியா என்று தெரிந்து தான், கள்ள மெளனம் சாதித்துக்கொண்டு இருக்கிறது உத்திரப்பிரதேச அரசு.

2010 ஆண்டு மத்திய சமூக  நலத்துறை ஊனமுற்றோர்களுக்கும்,கண் பார்வையற்றோருக்கும் நிதி ஒதுக்கீடு செய்து அதை பல்வேறு காங்கிரஸ் ஆதரவு பெற்ற தனியார் தொண்டு நிறுவன அடையாளப்போர்வை போர்த்திக்கொண்டு இருப்பவர்களுக்கும்,தேச விரோத சக்திகளுக்கும் பிரித்து கொடுத்து வருகிறது மத்திய மண்ணு அரசாங்கம்.அந்த பணத்தை பல ஆண்டுகளாக போலியாக ஊனமுற்றோர்களுக்கு கொடுத்ததாக கணக்கு காண்பித்தும் ,அரசு அதிகாரிகள் பார்த்தது போல போலியாக கையெழுத்து போட்டும் 2010 ஆம் ஆண்டு 71 லட்சம் நிதியை வழக்கம் போல திருடி வயிறு வளர்த்திருக்கிறது சட்டத்துறை அமைச்சரின் குடும்பம். செப்டம்பர் மாதமே ஆஜ்தக் சேனல் இது சம்பந்தமாக அமைச்சருக்கு கடிதம் எழுதி விபரங்களை கேட்டிருக்கிறது. இமெயிலில் கேட்கப்பட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காத நம் மாண்புமிகு முன்னாள் சட்ட, இப்போதைய வெளி உறவு துறை அமைச்சர். எந்த ஒரு பதிலையும் அளிக்காததோடு ஆஜ்தக் சேனலிடம் பேரமும் பேசுகிறார்.ஒரு கட்டத்தில் ஆஜ்தக் காங்கிரஸ் அமைச்சர் மற்றும் அவரின் மனைவியின் ஊழல் திருவிளையாடல்களை வெளியிடுகிறது. அரசுத்துறையில் இருக்கும் சில நேர்மையான ஊழியர்கள் காங்கிரஸ் அமைச்சர் சல்மான் குர்ஷித் செய்த கயமைத்தனங்களுக்க்கான முழு ஆதாரங்களையும் முன்னாள் வருமானவரித்துறையில் பணியாற்றிய கேஜ்ரிவாலுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதை சரி பார்த்த கேஜ்ரிவாலும் பகிரங்கப் படுத்துகிறார்.

CAG சொல்கிறது ஜாகீர் உசேன் அறக்கட்டளை நல உதவிகள் வழங்கப்பட்டதாக சொல்லும் 17 மாவட்டங்களில் எந்த நல உதவிகளும் வழங்கப்பட வில்லை.அதிலுள்ள அரசு அதிகாரிகளின் கையெழுத்து போலியாக ஃபோர்ஜரி செய்யப்பட்டது. அரசு முத்திரையும் போலியானது என்று மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் தெரிவிக்கிறரே. அவரையும் உங்கள் தொகுதியில் வந்து விட்டு உயிரோடு திரும்ப முடியுமா என்று சவால் விடுவீர்களா திரு,சல்மான் குர்ஷித் அவர்களே?

ஆஜ்தக் சேனலை மிரட்டுகிறீர்களே, அவர்கள் தான் உங்களை தைரியம் இருந்தால் அவதூறு வழக்கு தொடருங்கள் நாங்கள் உரிய ஆவணத்துடன் வந்து நீதி மன்றத்தில் சந்திக்கிறோம் என்று சொல்கிறார்களே? அவதூறு வழக்கு தொடுக்க வேண்டியது தானே குர்ஷித் அவர்களே.

நீங்களும் உங்கள் மனைவியும் கூட இருந்து கொள்ளையடித்தவருமான லூயிஸிம் சேர்ந்து வெளிப்படுத்திய உண்மைகளை எப்படி மறைப்பீர்கள் ?

2010ல் நீங்கள் கூட்டம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க வில்லை என்று சொல்வதற்கு 2008ல் நடத்தி இருக்கிறோம் என்று  மக்களை mis guide பண்ணும் விதமாக சொல்லி அம்பலப்பட்டு நிற்கிறீர்களே?

சி.ஏ.ஜி உங்கள் மீது கூறும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்கள் தான் என்ன? என்று கேட்டால் என் பேனாவில் இங்க்கிற்கு பதில் கேஜ்ரிவாலின் ரத்தத்தை நிரப்பி எழுதுவேன் என்கிறீர்களே? என் தொகுதிக்கு வந்து விட்டு உயிரோடு திரும்பி போய்விடுவீர்களா? என மீடியாவில் தொடை தட்டி கொலை மிரட்டல் விடுக்கிறீர்களே?

இது தான் நீங்கள் கல்வி கற்ற லட்சணமா? நீங்கள் நாகரீமான உடை அணிந்து இருப்பது உங்கள் நாகரீத்தை காட்டாது . மற்றவர்களின் உரிமையை மதிக்கும் போதும், அறத்தை வழியாக கொண்டு நடக்கும் போதும் தான் நீங்கள் நாகரீகமான மனிதராக மதிக்கப்படுவீர்கள்.

1) உத்திரப் பிரதேச அரசு அதிகாரி chief development officer J.B.Singh செப்டம்பர் 2009ல் நடந்ததாக கூறப்பட்ட நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாகக் கூறப்படுவது  தவறு என்றும், அதைஒட்டிய செக்லிஸ்டில் காணப்படுவது தன் கையெழுத்து இல்லை என்றும் முன்பாக ஆஜ்தக் டிவி நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.  இந்த பேட்டியின் போது ஜெ.பி.சிங் தங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு அத்தாட்சி என்று கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்கள்.  அடுத்த இரண்டு மணி நேரங்களுக்குள்ளாக இது பொய்யான தகவல் என்பதை அர்விந்த் கெஜ்ரிவால் ஆதாரத்துடன்  நிரூபித்து விட்டார்.

2) போலி அப்பிடவிட்டை கொடுத்தது பற்றி கேள்வி எழுந்தபோது, தான் அதைப் பார்க்கவே இல்லை என்றும் லக்னோவிலிருந்து யாரோ வாங்கி, நேரடியாக அரசுக்கு அனுப்பி விட்டார்கள் என்றும் அது உண்மையா ? போலியா ? என்று தனக்குத் தெரியாது என்றும் சாதித்தார். தன் கணக்கு விவரங்களுடன், ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அப்பிடவிட் போலியாக இருந்தால் அதற்கு  அவர் அல்லாமல் வேறு யார் பொறுப்பாக முடியும் ?

3) மார்ச் மாத இறுதி நெருங்கி விட்டதால், நிதி ஆண்டு முடிவடைவதற்குள் மத்திய அரசிடம் இருந்து நிதியை  பெற்று விட வேண்டும் என்பதற்காக, முந்திய நிதி அனைத்தும் முறைப்படி செலவழிக்கப்பட்டிருப்பதாக  ராம்ராஜ் சிங் யாதவ் என்கிற உ.பி. அரசு அதிகாரி கொடுத்த மார்ச் 24, 2011 தேதியிட்ட ஒரு சர்டிபிகேட்டை  சல்மான் குர்ஷித் தின் மனைவி தானே நேரில் மத்திய அரசில் சம்பந்தப்பட்ட இலாகாவிடம் சமர்ப்பித்திருக்கிறார். இந்த ராம்ராஜ் சிங் யாதவ் என்கிற அதிகாரி, தான் ஜனவரி 2011லேயே ரிடையராகி விட்டதாகவும், எனவே இந்த சர்டிபிகேட்டை  தான் கொடுக்கவில்லை என்றும் வெளிப்படையாக பேட்டியில் கூறி விட்டார்.

இது போல் இன்னும் பல பிராடுகள்  செத்துப் போனவர் பெயர்  பயன் பெற்றவர் பட்டியலில் ஊனமுற்றவருக்கு காது கேட்கும் மெஷின் கொடுத்ததாக பட்டியல்,. எந்த குறையும் இல்லாதவர் பெயரை (வாக்காளர் பட்டியலில் இருந்து எடுத்திருக்கிறார்கள்) பயனாளியாக சேர்த்திருப்பது  அவர்கள் நடத்தியதாகக் கூறும் 17 முகாம்களில்  10 முகாம்கள் நடக்கவே இல்லை என்பது.

இதையெல்லாம் சொன்னதற்காக அரவிந்த் கேஜ்ரிவாலை ஒத்தைக்கு ஒத்தை வாடா என்பது போன்ற ஏக வசனத்தில் திட்டி கொலை மிரட்டல் (https://www.youtube.com/watch?v=ZTEnqZzvqlc) விட்டிருக்கும் சட்ட அமைச்சரை பதவி நீக்கம் செய்ய பிரதம அமைச்சருக்கோ,அல்லது மனசாட்சியும் ,மானமும் ,அற உணர்வும் உள்ள ஒரு நபர் கூடவா அதிகாரத்தில் இல்லை?. ஸ்பெக்ட்ரத்தில் திருடிகிறீர்கள், நிலக்கரி ஒதுக்கீட்டில் திருடுகிறிர்கள்.விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டில் திருட்டுத்தனம் செய்கிறீர்கள்,காமன் வெல்த் விளையாட்டு அதிலும் திருடுகிறீர்கள். இத்தனையிலும் திருடி விட்டு, பின்னும் பேராசையோடு  ஊனமுற்ற ,கண் பார்வையற்ற, காது கேட்காத இன்னும் பல்வேறு விதமான உபாதைகளுக்கு ஆளானவர்களின் மேம்பாட்டிற்கு ஆக அரசு ஒதுக்கும் கொஞ்ச நிதியை கூட கொள்ளையடித்து தின்பதற்கும்,அப்படி திருடி தின்றதை ஞாயப்படுத்தும் மனிஷ் திவாரி,திக்விஜய் சிங் ,அம்பிகா சோனி மற்றும் கபில் சிபல் களே, இப்படியான அக்கிரமங்களுக்கும் அநீதிகளுக்கும்,கொலை பாதகங்களுக்கும் துணை போய் வயிறு வளர்த்து வாழ்வதற்கு பதில்  நகர தெருக்களில் பிச்சை எடுத்து வாழலாம். அது எவ்வளவோ நாகரீமானதாக இருக்கும்.

மேலதிக விபரங்களுக்கு:

https://articles.timesofindia.indiatimes.com/2012-10-13/india/34431056_1_akhilesh-yadav-disabled-welfare-disabled-people

https://headlinestoday.intoday.in/headlines_today/programme/zakir-hussain-memorial-trust-salman-khurshid-louise-khurshid/1/224217.html

சோனியா,சல்மான் குர்ஷித் -ன் கருணை : அரவிந்த் கேஜ்ரிவால் மீது ஷீ வீச்சு.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், உடல் ஊனமுற்ற ஏழை குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கும், வறுமையால் நலிவுற்று வாழும் பாவப்பட்ட மக்களின் அடுத்த தலை முறைகளாவது கல்வி பெற்று நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அதுவும் ஒளிரும் இந்தியாவில் மிகவும் பின் தங்கி இருக்கும் உத்திர பிரதேசத்தின் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருடி தின்று விட்டு வெக்கமில்லாமல், துளியும் உறுத்தலுமின்றி ஜடமாக ஒரு மனிதர் அமைச்சராக இருக்கிறார்.

அவருடைய திருட்டுத்தனம் அம்பலப்பட்ட பிறகே அவர் முழுமையான காங்கிரஸ்காரர் என்பதை அவசரமாக உணர்ந்த அந்நிய சோனியா அம்மையார் துளி கூட மனசாட்சி இன்றியும், மான அவமான பயம் இல்லாமலும், எந்த விதமான அறமும் இன்றி உடல் ஊனமுற்றவர்களிடமும் கூட திருடி கொள்ளையடித்து தின்று விட்டு வெக்கமில்லாமல் கொலை மிரட்டல் விட க்கூடிய காங்கிரஸ் காரனை பாராட்டி உச்சி முகர்ந்து இவனே உண்மையான காங்கிரஸ் தொண்டன்  என்பதையும் பறைசாற்ற உடனடி பரிசாக வெளி உறவுத்துறையையும் அளித்த தியாக திரு விளக்கு சோனியா அம்மையார்.

இந்த ஊழலை வெளிக்கொணர்ந்த அரவிந்த் கேஜ்ரிவாலை சும்மா செருப்பாலடிக்க சொன்னதற்கே அதுவும் தங்களின் பொது   நண்பரான மற்றும் தன் குடும்ப அடியாளான மருமகன் ராபர்ட் வடேராவின் கைக்கூலி ஜெகதீஷ் சர்மா வை ஏற்பாடு செய்ததை பெரிய தவறாக அனைவரும் சித்தரிக்கிறார்கள். தன்னுடைய ஊழலை,திருட்டுத்தனத்தை,கூட்டாக கொள்ளையடிப்பதை தட்டிக்கேட்பவர்களை அம்மையார் அணுகுவதே தனி ஸ்டைல். அரவிந்த் கேஜ்ரிவாலை உயிரோடு விட்டிருப்பதே பெரிய அதிசயம் என்று அவருக்கு இன்னும் புரியவில்லை. பிரதமரோடும், தியாக திரு விளக்கோடும் அவரின் 3500 கோடி மருமகனோடும் இருக்கும் ஜெகதீஷ் சர்மா.இவரைத்தான் அவர் யாரென்று தெரியாது என்று திருவிளக்கு சோனியா அம்மையாரும் அவரின் மருமகன் ராபர்ட் வதேராவும் சொன்னவர்கள்.

 

5 Replies to “நமது வெளியுறவுத் துறை அமைச்சரின் ”அறம்”!”

  1. அழகான தெளிவான கருத்துகள் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் பத்தி பிரித்து போடாத காரணத்தால் மிகவும் கடினப் பட்டே படிக்க வேண்டி உள்ளது.

    புத்தக வாசிப்பு என்பது வேறு. கணினி மூலம் பொறுமையாக படிப்பது என்பது வேறு.

    பல முறை ராஜமாணிக்கத்திடமும் சொல்லி உள்ளேன்.

    ஆழமான கட்டுரைகள் நிறைய பேர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற அக்கறையும் வேண்டும்.

  2. சல்மான் குர்ஷித் எப்படிப்பட்டவ என்பதை இக்காட்டுரைன் வழியேதான் அறிந்துகொண்டேன்.

  3. why are we blaming congress? We should blame ourselves. Inspite of knowing that Congress has been looting India for the past 60 yeras+, we re-elected them to power in 2009. No fool in the world will be voting continuously for such a corrupt party and we Indians are the only fools. Even tyrants like Gaddafi were thrown out in 30-40 years. But we are not able to throw this rot out of this country.

    As long as Congress is alive (whether in power or not) India will never recover from corruption.

  4. யாரை நொந்தும் பயனில்லை. இன்றைய காங்கிரசின் நிலைமையைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. அந்தக் கட்சியைப் பார்த்து அல்ல! இந்திய மக்களைப் பார்த்து. “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!” என்பது திரைப்பட நகைச்சுவை மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு வந்த கேடும் கூடத்தான். மக்களைக் குறிப்பாக காங்கிரசை நம்பியவர்களைத்தான் குறை சொல்ல வேண்டும். திருக்குறளில் அன்றே சொல்லிவிட்டுப் போய்விட்டார் திருவள்ளுவர்.
    “இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்
    ததனை அவன் கண் விடல்”
    இந்திய மக்கள் இந்தக் குறளைப் படிக்கவில்லை போலிருக்கிறது.

  5. படிச்சவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்-னு நம்ம ஆளு சொல்லி இருக்கான்.

    ஆனா, இங்க அப்படி ஒன்னும் நடக்கிற மாதிரி தெரியலையே ? ஆஹா ஓஹோ-ன்னுல்ல இருக்கானுங்க காலி கயவாளிப்பசங்க. கொள்ளை அடிச்சி, பொருக்கி தின்னு, எல்ல்லா மொள்ளமாரித்தனமும் பண்ணி ஆண்டு அனுபவிச்சி செத்தும் போயிடுவானுங்க. பாதிக்கப்பட்டவங்கதான் என்னிக்கும் ஐயோ அம்மா-ன்னு வாயிலயும் வயத்துலயும் அடிசிகிட்டு இருக்காங்க (இருக்கோம்)

    ‘நல்லதோர் வீணை செய்தே’-ன்னு அவன் தலைல அடிச்சிக்கிட்டு போலம்பினது நம்ம இந்திய தேசத்துக்கு கச்சிதமா பொருந்தி போவது காலக்கொடுமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *