மோடியின் வெற்றி

morning_hindutvaரேந்திர மோடி – இந்தியாவின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தனி நபருக்கு எதிராக பத்தாண்டுகள் பெரும் ஊடக முதலாளிகளும் அரசாங்கமும் சேர்ந்து மிகப் பெரிய பிரச்சார தாக்குதல் நடத்தியது நரேந்திர மோடிக்கு எதிராகத்தான். தொடர்ந்து மோடி கலவரங்களுக்கு துணை போனதாக குற்றம் சாட்டப்பட்டார். கலவரம் முடிந்து ஒவ்வொரு நாளும் இந்த குற்றச்சாட்டுகள் புதிது புதிதாக வளர ஆரம்பித்தன. புது புது சாட்சிகள் உருவாக்கப்பட்டனர். m128 பிப்ரவரி 2002 இல் இஷான் ஜாஃப்ரி எனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலவரம் செய்த ஒரு ஹிந்து கும்பலால் கொல்லப்பட்டார். அவர் இருக்கும் இடம் பாதுகாப்பானது என புகலிடம் தேடி வந்த முஸ்லீம்களில் 68 பேர் கொல்லப்பட்டனர். குல்பர்கா படுகொலை என அழைக்கப்படும் இந்த படுகொலையில் மோடியை தொடர்பு படுத்துவதற்குதான் நம் போலி மதச்சார்பற்ற ஊடகங்களூம் அதிகார வர்க்கமும் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகின்றன.

மே 2002 இல் இந்த படுகொலை குறித்த முதல் பொய்யை பரப்பியவர் அருந்ததி ராய் ஆவார். இந்து கும்பலால் ஜாஃப்ரியின் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர் என விரிவாக விளக்கமாக ஒரு கட்டுரைடை அவுட்லுக் பத்திரிகையில் வெளியிட்டார். கூடவே மோடி இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு எதிராக ஜாஃப்ரி கடுமையாக பிரச்சாரம் செய்தார் என்றும் சொல்லி கோடி காட்டினார். ஆனால் ஜாஃப்ரியின் மகன் ஏற்கனவே ஆசியன் ஏஜ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அப்போது இந்தியாவில் வாழ்ந்த அவரது வாரிசு தான் மட்டுமே அவரது இதர சகோதர சகோதரிகள் வேறு வேறு இடங்களில் வாழ்ந்தனர் என்றும் கூறினார்.பகிரங்கமாக அசிங்கப்பட்ட அருந்ததி ராய் இப்படி பச்சையாக பொய் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தது. ஆனால் பொய்க்கு மன்னிப்பு கேட்பதில் m2கூட அருந்ததிராயால் பொய் சொல்ல முடியும். ‘அன்று சமன்புராவில் பலாத்காரம் செய்யப்பட்ட பத்து பெண்களில் ஜாஃப்ரியின் மகள்கள் இல்லை.’ ஆனால் மார்ச் 2002 முதல் வாரம் வரை இந்த பலாத்காரம் குறித்த செய்திகள் சமன்புராவிலிருந்து கலவரங்களை ரிப்போர்ட் செய்த பத்திரிகைகள் எதிலும் வரவில்லை. மார்ச் இரண்டாவது வாரம் முதலே வர ஆரம்பித்தன. பிப்ரவரி 28 கலவரங்கள் குறித்த செய்திகள் மார்ச் 1 ஆம் தேதி வந்த ரிப்போர்ட்கள் எதிலும் அவை இல்லை. ஒரு கட்டத்தில் இந்த போலி மதச்சார்பின்மை சக்திகளின் பிரச்சார பொய்கள் எந்த அளவு இருந்தது என்றால், ஏப்ரல் 2002 இல் நஃபீஸா ஹுசைன் எனும் (மோடிக்கு எதிரான) தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர் பல அமைப்புகளையும் ஊடகங்களையும் சிறுபான்மை சமுதாய பெண்கள் கலவரங்களில் சந்தித்த வன்முறைகளை பல மடங்கு அதிகரித்து செய்திகள் வெளியிடுவதாக குற்றம் சாட்டினார்.

உண்மையில் நடந்தது என்ன? காவல்துறை விரைந்து வந்தது. தீயணைக்கும் படையும் வந்தது. ஆனால் காவல்துறை ஒரு பெரிய கலவரக் கும்பலை எதிர்க்க வேண்டி இருந்தது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. கலவரக் கும்பலில் ஆறு இந்துக்கள் கொல்லப்பட்டனர். கலவரக் கும்பலால் தீயணைப்பு படை வேன் நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் மேல் காவல்துறை குல்பர்காவில் வாழ்ந்த 250க்கும் அதிகமான இஸ்லாமியரில் 200 பேரை காப்பாற்றினார். அவர்களால் காப்பாற்றப்பட முடியாமல் போன ஐம்பதுக்கும் அதிகமான இஸ்லாமியரில் ஜாஃப்ரியும் ஒருவர். sbhattஇந்த படுகொலை குறித்து போலி மதச்சார்பின்மைவாதிகள் செய்ய ஆரம்பித்த புனைவுகளில் 2006 க்கு பிறகுதான் ஜாஃப்ரியின் மனைவி தனது கணவர் முதலமைச்சர் மோடிக்கு தொலைபேசி உதவி கேட்டதாகவும் ஆனால் அதை முதலமைச்சர் வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் சொல்லப்பட்டார்.2002 இல் இருந்து 2006 க்குள் நானாவதி கமிஷன் முன்னால் சாட்சியமளித்த போது ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி இந்த குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. ஆனால் ஸாக்கியா ஜாஃப்ரி, மோடிக்கு எதிராக இயங்கும் போலீஸ் அதிகாரி சஞ்சய் பட், தீஸ்டா செதால்வத் ஆகியோர் இணைந்து மோடிக்கு எதிராக ஒரு வழக்கை உருவாக்கினார்கள். குல்பர்கா கலவர படுகொலையில் மோடிக்கு பங்கு உண்டு என்பதாக ஒரு பிரச்சார மாயையை அவர்கள் உருவாக்கினார்கள். இது நீதித்துறைக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றம் ஒரு தனி சிறப்பு புலனாய்வு பிரிவை ஏற்படுத்தியது.

சிறப்பு புலனாய்வு பிரிவு மோடியை பல மணி நேரங்கள் விசாரித்தது. இது போலி மதச்சார்பின்மை ஊடகங்களில் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்பட செய்தது. ஆனால் சிறப்பு புலனாய்வு பிரிவின் அறிக்கை வந்த போது அவை அதிர்ச்சிக்கு உள்ளாகின. எப்படி சஞ்சய் பட் பொய்கள் சொல்லியிருந்தார், போலி ஆதாரங்களை உருவாக்கியிருந்தார், எப்படி சில ஊடகங்கள், சில தனிமனிதர்கள் மோடிக்கு எதிராக எந்த அளவுக்கும் சென்று பொய் சொல்ல துணிந்திருந்தனர் என்பதையெல்லாம் சிறப்பு புலனாய்வுத் துறை தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தது. சஞ்சய் பட்டின் மின்னஞ்சல்களை ஆராய்ந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அறிக்கை கூறியது:

சஞ்சய் பட், பல்வேறு என்ஜிஓக்களி சில அரசியல் தலைவர்கள் என உள்நோக்கம் கொண்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தி தங்கள் தனிப்பட்ட விரோதங்களை தீர்த்து கொள்ள பார்க்கிறார்கள். திரு சஞ்சய் பட் இத்தகைய உள்நோக்கம் கொண்டவர்களுடன் ஒத்துழைப்பதன் காரணமே எப்படியாவது நரேந்திர மோடியின் மீது ஒரு குற்றப்பத்திரிகை பதிவாகிவிட வேண்டும் என்பதுதான்.

இதே சக்திகளால் மீண்டும் ஸாக்கியா ஜாஃப்ரி தூண்டிவிடப்பட்டார். சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைக்கு எதிராக மாஜிஸ்ரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் மோடி விசாரணை செய்யப்படவேண்டும். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வருவதாக இருந்தது. ஏறக்குறைய இத்துடன் மோடியின் அரசியல் வாழ்வே அஸ்தமித்துவிடும் என்கிற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் எழுதின. மோடியை பிரதமமந்திரியாக முன்வைத்து பாஜக இயங்கும் போது இந்த தீர்ப்பு வருகிறது. இது மிக முக்கியமான தீர்ப்பு. ஆனால் தீர்ப்பு வந்தது. நரேந்திர மோடிக்கு 2002 கலவரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை ஏற்புடையது என்கிறது நீதி மன்றம்.

மோடி 2002 குஜராத் கலவரம் குறித்து என்ன சொல்கிறார்?

எனக்கு இந்த கலவரத்துடன் தொடர்பு உண்டு என்றால் இந்த கலவரத்தை நான் அரசு உதவியுடன் அனுமதித்தேன் என்றால் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டாம். தூக்கில் போடுங்கள். எத்தகைய கொடுமையான தண்டனை இந்த குற்றத்துக்கு பொருத்தமானதோ அந்த தண்டனையை அளியுங்கள்.

இதைத்தான் அவர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். இதற்காகவே சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அல்ல ஒன்பது மணி நேரம் தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார். modi1ஆனால் போலி மதச்சார்பின்மை ஊடகங்களோ மீண்டும் மீண்டும் பொய்களையே அவருக்கு எதிராக பரப்பி வருகின்றனர். இந்த தீர்ப்பு மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்க மட்டும் செய்யவில்லை. மேலும் மோடி மிகுந்த வேகத்துடன் கலவரத்தை அடக்க ராணுவத்தை அழைத்ததும் பாராட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், போலி மதச்சார்பின்மை சக்திகள், காங்கிரஸினால் வளர்த்துவிடப்பட்ட செல்லபிராணிகளான் ஊடகங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க தவறிவிடுகின்றன. மோடியை எந்த அளவுக்கு நீங்கள் தாக்குகிறீர்களோ எந்த அளவுக்கு அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்களோ எந்த அளவுக்கு அவரை சுற்றி சக்கர வியூகங்கள் அமைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர் மேலும் மேலும் தடைகளை உடைத்து வளர்ந்து வருகிறார். அவருக்கு எதிராக நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு அவதூறு பிரச்சாரமும் இறுதியில் அவரது பாதையில் மலர்களாகவே விழுகின்றன. அவர் சவால்களை மீறி வளர்கிறார். வெறுப்பு பிரச்சாரங்கள வளர்ச்சியின் சாதனைகளால் சந்திக்கிறார். மதச்சார்பின்மை பேசும் சக்திகள் மத அடிப்படையிலான வெறுப்பு பிரச்சாரங்களை ஆயுதங்களாக வீச, இந்துத்துவரான நரேந்திர மோடியோ மதம் கடந்த மனித நேய சமூக பொருளாதார வளர்ச்சியை தன் ஒரே ஆயுதமாக முன்னிறுத்துகிறார். அவரது ஒரே கவசம் அவரது நேர்மை. ஆனால் போலி மதச்சார்பற்ற சக்திகளோ தங்கள் பாடத்தை படித்ததாக தெரியவில்லை.

55 Replies to “மோடியின் வெற்றி”

  1. நாட்டில் எங்கு ஹிந்து முஸ்லிம் கலவரம் ஏற்பட்டாலும் அது மோடி தூண்டித்தான் நடப்பதாக வெட்கமில்லாமல் சொல்கிறார்கள். இவர்களுக்கு மக்களிடையே மோடியின் செல்வாக்கு கண்டு அஸ்தியில் ஆட்டம் கொண்டுள்ளது. எப்படியாவது மோடியை பிரதமர் ஆவதை தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்திலேயே அவரைப்பற்றி கேவலமான முறையில் விமர்சனம் செய்து வருகிறார்கள் . எப்படிசொன்னால் அவரது பெயர் கெடும் என்று ஆராய்ச்சியே செய்து அவருக்கு பெண் தொடபு உள்ளதாக கதை அளக்கிறார்கள் .ஒரு வாதத்திற்காக ,அவர் ஓரடு பெண்ணால் விரும்புகிறார் என்றே வைத்துக்கொண்டாலும், அதில் என்ன தவ அரு இருக்கிறது? உலகமே ஆண் பெண் உறவில் தானே இயங்குகிறது?

  2. இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு வந்து மூக்கறுபட்டால் நாங்கள் விட்டுவிடுவோமா என்ன! பெண்ணை காவல் துறை உளவு பார்த்தை வழக்காக்குவதற்காக கமிஷன் போட்டுவிட்டோம்; எங்கள் அரசியல் நடவடிக்கை என்பதே பொய் வழக்குகள், உண்மை ஊழல்கள் வெளிவந்துவிடாமல் சிபிஐ விசாரணை; இவ்வளவுதான்.

  3. மோடியின் தாக்கம் இந்திய மக்கள் மத்தியில் காட்டாற்று வெள்ளம் போல பெருகிக் கொண்டிருப்பதைப் பார்க்கச் சகித்துக் கொள்ள முடியாமல் குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டும், அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்கிற ஆணவத்தில் விசாரணை கமிஷன் போடுவதும் கேலிக்கூத்து. இதுவரை எத்தனை விசாரணை கமிஷன் சொன்னதை ஏற்றுக் கொண்டு இவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். பெரிய தலைகள் மாட்டிக்கொண்டு தண்டனை பெற்றால், தங்கள் கட்சிக்கு ஆதரவு தந்தால் ஜாமீனில் விடுதலை செய்வார்கள். ‘கொரில்லா’ என்றொரு ஹாலிவுட் படம் வந்தது. அதில் நகரத்துள் அந்த கொரில்லா நுழையும்போது கூட்டமாய் நின்றுகொண்டு சுடுவார்கள். அது எதையும் சட்டை செய்யாமல் வரும் எதிரிகளை பந்தாடும். அந்த காட்சி ஏனோ எனக்கு நினைவுக்கு வருகிறது. எதிர்காலம் ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் கணிப்பு தவறினால் செய்த தவறுகளுக்கு தண்டனை தங்களுக்கும் காத்திருக்கிறது என்பதை புத்திசாலியாக இருந்தால் உணர்வார்கள்.

  4. சந்திரசேகர் பிரதம மந்திரியாக இருந்தபோது ராஜீவ் காந்தியை ஹரியான போலீஸ் வேவு பார்த்தது என்று சொல்லி ஆதரவை நீக்கிகொண்டது காங்கிரஸ். சரி அவர் அப்படி செய்திருந்தால் விசாரணை நடந்ததா? சந்திரசேகர் மீது வழக்கு தொடர்ந்தார்களா? தங்களுக்குக் காரியம் ஆகவேண்டுமானால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ப.சிதம்பரம் மீது, தனது தேத்தல் முடிவு சரியில்லை என்றொரு வழக்கு, அது என்ன ஆயிற்று? ஏழை ஏகாம்பரம் மீது வழக்கு என்றால் மூன்று நாட்களில் முடித்து அவனை சிறைக்கு அனுப்புவார்கள். மாளிகை வாசி என்றால் மூன்று ஜன்மம் எடுத்தாலும் வழக்கு முடியாது, நல்ல அரசியல், நல்ல ஜனநாயகம். வெட்கம் கெட்டவர்கள்.

  5. திரு அரவிந்தன், இந்துத் தலைவர்கள் மீது இது போன்ற அவதூறுகள் கூறப்படும்போது அவர்கள் கோர்ட் மூலம் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப் பட்டாலும் அவர்கள் மீது அவதூறு கூறிக்கொண்டே இருப்பவர்கள் இருக்கவே இருப்பார்கள். மோடி மீதான அவதூறும், காஞ்சி பெரியவர் மீதான அவதூறும் ஒரே மாதிரியானவை. இருவரும் எத்தனை கோர்டில் தாங்கள் நிரபராதி என்று நிரூபித்தாலும் அவதூறு கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள். இந்த தளத்திலேயே பெரியவர் விடுதலை ஆனபோது சிலர் கேட்ட கேள்விகளை மோடி வழக்கிலும் கேட்கலாம். இரண்டுக்குமே ஒரே விடைதான். பெரியவருக்கு சுப்ரீம் கோர்ட் பெயில் வழங்கும்போதே இந்த வழக்கும், சாட்சிகளும் நம்பத் தகுந்தவை இல்லை என்று கூறினார்கள். மோடி வழக்கிலும் சுப்ரீம் கோர்ட்டின் புலனாய்வுக்குழு சாட்சிகள் நம்பத்தகாதவை என்று கூறிவிட்டது. இருவருமே கோர்ட்டிலும் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

  6. விடுங்கள்.நாய்கள் சூரியானைபார்த்துக் குலைக்கின்றன .அவற்றால் வேறென்ன செய்ய முடியும். கிருஷ்ணமூர்த்தி

  7. ஜெயேந்திரரும், நரேந்திர மோடியும் இந்திய கோர்ட்டுகளின் தண்டனையிலிருந்து தப்பி விடலாம். ஆனால் இறைவன் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. காலம் கனியும். அது வரை பொறுப்போம்.

  8. காங்கிரஸ் கலாச்சாரம் காலம் காலமாக எதிர் கட்சிகளை எதிரிகளாகக் காண்பதுதான்.இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தால் இந்திய அரசியல் எப்படி இருக்கும். மொழி வாரி மாநிலங்கள், மத ரீதியான அரசியல் நடத்த விரும்பும் தலைவர்கள், ஜாதிக்கட்சிகள் இருக்கும் இந்தியாவில் இரு கட்சி முறையை நடைமுறைப் படுத்தமுடியுமா?…………. தலைநகரத்தில் நடந்த தேர்தலில் இந்திய மக்கள் ஓட்டளித்த விதம் ஆரோக்கியமான அரசியலுக்கு ஆணி அடித்தது போல் தான் தெரிகிறது…. ஓநாயும் ஆடும் ஆட்சி அமைக்க முடியுமா ? ஓநாய் உறுமிக் கொண்டே இருக்கும்……ஆடு நடுங்கிக் கொண்டே இருக்கும்……

  9. From ModiJis blog

    Dear sisters and brothers,

    The law of nature is that Truth alone triumphs – Satyameva Jayate. Our judiciary having spoken, I felt it important to share my inner thoughts and feelings with the nation at large.
    The end brings back memories of the beginning. The devastating earthquake of 2001 had plunged Gujarat into the gloom of death, destruction and sheer helplessness. Hundreds of lives were lost. Lakhs were rendered homeless. Entire livelihoods were destroyed. In such traumatic times of unimaginable suffering, I was given the responsibility to soothe and rebuild.
    And we had whole heartedly plunged ourselves into the challenge at hand.

    Within a mere five months however, the mindless violence of 2002 had dealt us another unexpected blow. Innocents were killed. Families rendered helpless. Property built through years of toil destroyed. Still struggling to get back on its feet from the natural devastation, this was a crippling blow to an already shattered and hurting Gujarat.

    I was shaken to the core. ‘Grief’, ‘Sadness’, ‘Misery’, ‘Pain’, ‘Anguish’, ‘Agony’ – mere words could not capture the absolute emptiness one felt on witnessing such inhumanity.

    On one side was the pain of the victims of the earthquake, and on the other the pain of the victims of the riots. In decisively confronting this great turmoil, I had to single-mindedly focus all the strength given to me by the almighty, on the task of peace, justice and rehabilitation; burying the pain and agony I was personally wracked with.

    During those challenging times, I often recollected the wisdom in our scriptures; explaining how those seating in positions of power did not have the right to share their own pain and anguish. They had to suffer it in solitude. I lived through the same,experiencing this anguish in searingly sharp intensity. In fact, whenever I remember those agonizing days, I have only one earnest prayer to God. That never again should such cruelly unfortunate days come in the lives of any other person, society, state or nation.

    This is the first time I am sharing the harrowing ordeal I had gone through in those days at a personal level.

    However, it was from these very built up emotions that I had appealed to the people of Gujarat on the day of the Godhra train burning itself; fervently urging for peace and restraint to ensure lives of innocents were not put at risk. I had repeatedly reiterated the same principles in my daily interactions with the media in those fateful days of February-March 2002 as well; publically underlining the political will as well as moral responsibility of the government to ensure peace, deliver justice and punish all guilty of violence. You will also find these deep emotions in my recent words at my Sadbhavana fasts, where I had emphasized how such deplorable incidents did not behove a civilized society and had pained me deeply.

    In fact, my emphasis has always been on developing and emphasizing a spirit of unity; with the now widely used concept of ‘my 5 crore Gujarati brothers and sisters’ having crystallised right at the beginning of my tenure as CM itself from this very space.

    However, as if all the suffering was not enough, I was also accused of the death and misery of my own loved ones, my Gujarati brothers and sisters. Can you imagine the inner turmoil and shock of being blamed for the very events that have shattered you!

    For so many years, they incessantly kept up their attack, leaving no stone unturned. What pained even more was that in their overzealousness to hit at me for their narrow personal and political ends, they ended up maligning my entire state and country. This heartlessly kept reopening the wounds that we were sincerely trying to heal. It ironically also delayed the very justice that these people claimed to be fighting for. Maybe they did not realize how much suffering they were adding to an already pained people.

    Gujarat however had decided its own path. We chose peace over violence. We chose unity over divisiveness. We chose goodwill over hatred. This was not easy, but we were determined to commit for the long haul. From a life of daily uncertainty and fear; my Gujarat transformed into one of Shanti, Ekta and Sadbhavana. I stand a satisfied and reassured man today. And for this, I credit each and every Gujarati.

    The Gujarat Government had responded to the violence more swiftly and decisively than ever done before in any previous riots in the country. Yesterday’s judgement culminated a process of unprecedented scrutiny closely monitored by the highest court of the land, the Honourable Supreme Court of India. Gujarat’s 12 years of trial by the fire have finally drawn to an end. I feel liberated and at peace.

    I am truly grateful to all those who stood by me in these trying times; seeing through the facade of lies and deceit. With this cloud of misinformation firmly dispelled, I will now also hope that the many others out there trying to understand and connect with the real Narendra Modi would feel more empowered to do so.

    Those who derive satisfaction by perpetuating pain in others will probably not stop their tirade against me. I do not expect them to. But, I pray in all humility, that they at least now stop irresponsibly maligning the 6 crore people of Gujarat.

    Emerging from this journey of pain and agony; I pray to God that no bitterness seeps into my heart. I sincerely do not see this judgement as a personal victory or defeat, and urge all – my friends and especially my opponents – to not do so as well. I was driven by this same principle at the time of the Honourable Supreme Court’s 2011 judgement on this matter. I fasted 37 days for Sadbhavana, choosing to translate the positive judgement into constructive action, reinforcing Unity and Sadbhavana in society at large.

    I am deeply convinced that the future of any society, state or country lies in harmony. This is the only foundation on which progress and prosperity can be built. Therefore, I urge one and all to join hands in working towards the same, ensuring smiles on each and every face.

    Once again, Satyameva Jayate!

    Vande Mataram!

  10. ஓராண்டுகளுக்கு முன்பு வரை சீண்ட ஆளில்லாமல் சரிந்து வீழ்ந்து கிடந்த பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல் இன்று நாட்டு மக்களின் விரக்தியான மனநிலையை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் நோக்கில் சேற்றில் இருந்து கிளம்பி வந்து பவுடர் போட்டுக் கொண்டு ‘வந்துவிட்டது வளர்ச்சி’ என்ற பெயரில் தலையெடுக்க முயற்சிக்கிறது.

    தனது இந்துத்துவ நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு மதக் கலவரங்களை கட்டவிழ்த்து விட்டு அகண்ட பாரதக் கனவை கண்டு கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் முற்போக்காளர்கள் என்றும் புரட்சியாளர்கள் என்றும் தம்மையே நினைத்துக் கொண்டு இருக்கும் வைகோ போன்ற சந்தரப்பவாதிகள், குஜராத்தின் கொலைகாரன் நரேந்திர மோடிக்கு கூலிக்கு மாரடிக்கும் கைக்கூலிகளாக சென்று கொண்டு இருக்கும் நேரத்தில் சந்தர்ப்பவாதமே கொள்கையாகவும் பிழைப்பு வாதத்தையே கோட்பாடாகவும் கொண்டுள்ள ஓட்டுக்கட்சிகள்
    எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது. சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும். இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது.இதைத்தாண்டி வழி ஏதும் இல்லை.

  11. @suvanappiriyan, முகமது எப்படி? . செய்த கொலை, கற்பழிப்புகளுக்கு தண்டனை உண்டு இல்லையா?

  12. அருண் கந்தன்,

    மோடியின் மீது நீதிமன்றம் மட்டுமல்ல , சோனியா அரசின் மத்தியப் புலனாய்வு குழுக்களும் விசாரணை செய்து, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்து, அவர்மீது எவ்வித குற்றமும் இல்லை என்று தெரிவித்து விட்டன. நீ வீணாக பொய்க் குற்றச்சாட்டினை மீண்டும் மீண்டும் சொல்லாதே. உனக்கு பாவத்தை சேர்த்துக்கொள்ளாதே.

  13. அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்கிற ஆணவத்தில் விசாரணை கமிஷன் போடுவதும் கேலிக்கூத்து. ஒரு பெரிய சக்திவாயிந்த ஒரு காங்கிரஸ் இயக்கத்தில் தற்போது தகுதிமிக்க அறிவுரை கூற சரியான ஆள் இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது தான் என்ன செய்கிறோம் என்பதே அவர்களுக்கு புரியவில்லை இயக்கம் அழிவுப்பாதையில் வெகு விரைவாக செல்வதையே இது காட்டுகிறது

  14. //ஜெயேந்திரரும், நரேந்திர மோடியும் இந்திய கோர்ட்டுகளின் தண்டனையிலிருந்து தப்பி விடலாம். ஆனால் இறைவன் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. காலம் கனியும். அது வரை பொறுப்போம்.//

    ஓகோ. இந்த தத்துவ அடிப்படையில்தான், எகிப்து, சிரியா , சூடான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உங்கள் இனம் பிட்சைகாரர்களாகவும் , பாகிஸ்தான், இந்தியாவில் பயங்கறவாதிகளாகும் இருக்கின்றார்களோ?

  15. //ஜெயேந்திரரும், நரேந்திர மோடியும் இந்திய கோர்ட்டுகளின் தண்டனையிலிருந்து தப்பி விடலாம். ஆனால் இறைவன் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. காலம் கனியும். அது வரை பொறுப்போம்.////

    நான்கு படிக்காத தற்கூறிகள் ஒன்று சேர்ந்து, ஒரு பெண்ணை கல்லால் அடித்துகொள்ளுங்கள் என்று ஆணையிட்டு அதை பார்த்து மகிழும் மிருகங்கலுக்கு – இந்திய நீதீமன்றம்கள் வித்தியாசமாக தெரிவதில் அதிசயம் இல்லயா .

  16. //@suvanappiriyan, முகமது எப்படி? . செய்த கொலை, கற்பழிப்புகளுக்கு தண்டனை உண்டு இல்லையா?//

    தண்டனை கிடையாது. குண்டுதான். சென்ரவாரம் மட்டும் சுமார் 200 பேரு வரை குண்டில், மண்டைய போட்டு இருக்கான். ஈரான் ஈராக் என்று. இன்னும் பல வரும் . எல்லாம் பண்ணிய பாவம் தான்.

  17. \\ ஜெயேந்திரரும், நரேந்திர மோடியும் இந்திய கோர்ட்டுகளின் தண்டனையிலிருந்து தப்பி விடலாம். ஆனால் இறைவன் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. காலம் கனியும். அது வரை பொறுப்போம். \\

    ஜெனாப் சுவனப்ரியன்

    எப்போதிலிருந்து பொய் வாக்குமூலங்கள் கொடுக்க கற்றுக்கொண்டீர்கள்

    suvanappiriyan on November 30, 2013 at 2:43 am
    ஜெயேந்திரர் விடுதலை…

    \\ உங்களின் மனதை சங்கடப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இந்த வழக்கைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. பாதிக்கப்பட்ட குடும்பம் சம்பந்தப்பட்டவர்களை மன்னித்து விட்டால் இடையில் நமக்கு பேச ஒரு அதிகாரமும் இல்லை. இஸ்லாமும் அதைத்தான் சொல்கிறது. \\

    மேற்கண்ட உத்தரம் தங்களால் பதிவு செய்யப்பட்டது என்பதை நினைவிற்கு கொணர்கிறேன்.

    பொய் சொல்வது தவறு என்று குரான்-ஏ-கரீமில் சொல்லப்படவில்லையா?

    ந்யாயாலயம் முறையாக விசாரித்து குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்தவர்களை குற்றவாளிகளாக தூஷணை செய்ய விழைவது மதவெறிஎன்ற இழிசெயலின் பாற்பட்டது. இவர்கள் இன்னமும் குற்றவாளிகள் என்று கருத உங்களுக்கு முகாந்தரமோ சாக்ஷிகளோ இருந்தால் மீண்டும் ந்யாயாலயத்தை அணுகி ந்யாயத்திற்குப் பாடுபடுங்கள்.

    மாறாகக் கல்லெறிதலையே வீரம் என்று கூவ நினைக்காதீர்கள். இப்படிக்குற்றமற்றவர்களை புறம் சொல்ல விழைபவர்களும் இறைத் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. காலம் கனியும். ஆயிரம் வருஷங்களாக இஸ்லாமிய மதவெறிக்கொடுமைகளையும் பயங்கரவதத்தையும் ஹிந்துஸ்தானம் முழுதும் பொறுத்தும் எதிர்த்தும் எதிர்கொண்ட ஹிந்துக்கள் அதைத் தொடர்ந்து செய்து வருவார்கள்.

  18. Shri Krishnakumar, you are wasting your time. Mr Swanapriyan is a hard core Islamist and he will wriggle his way out of answering awkward questions on Islam and on his earlier comments. Taqyy at it’s best. Keep mum or change the topic or accuse you back on some irrelevant matter is the usual techniques employed by these peace loving Muslims.

  19. Swanapriyan is confusing as.
    what he said erarlier:-
    இனி இந்த வழக்கைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. பாதிக்கப்பட்ட குடும்பம் சம்பந்தப்பட்டவர்களை மன்னித்து விட்டால் இடையில் நமக்கு பேச ஒரு அதிகாரமும் இல்லை. இஸ்லாமும் அதைத்தான் சொல்கிறது.

    and today news says:
    துபாயில் சவூதி இளவரசர் சல்மான் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரபியரை கொலை செய்துள்ளார்.அந்நாட்டு வழக்கப்படி கொலையாளி சார்பில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்க்கு பெருந்தொகை ஒன்றை கொடுத்து விட்டால் மரண தண்டனையிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

    ஆனால் இந்த வழக்கில் இளவரசர் தரப்பில் தரக்கூடிய தொகையை பெற்றுக்கொண்டு, மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர் குடும்பம் முன்வரவில்லை. இதனால் சவூதி இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நிலை உருவாகி உள்ளது.மேலும் சவூதியில் இதுவரை மன்னர் குடும்பத்தில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடதக்கது.

    and where it differs:
    –கொலையாளி சார்பில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்க்கு பெருந்தொகை ஒன்றை கொடுத்து விட்டால் மரண தண்டனையிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

  20. சூ பீ

    அந்த கடவுள் அல்லா தானே. ஷைத்தானிடமிருந்து இசுலாமியர்களை காப்பாற்ற முடியாத அல்லாவா இவர்களுக்கு தண்டனை கொடுக்க போறார்.

    உடனே ஏன் தண்டனை வரவில்லை. ஓகோ. எதுவுமே அல்லாவுக்கு ஒரு ஆயிரம் வருஷம் கழிச்சு தானே தெரிய வரும்னு குரான்ல சொல்லிருக்கு. இன்னும் தண்டனை வர தொன்னுத்தி ஒரு ஆண்டுகள் கிடக்குது.

    அல்லாவால் பீகாரில் மோடியை குண்டு வைத்து தீர்த்து விடுங்கள் என்று அனுப்பட்ட ஒரு கூட்டத்தை ஷைத்தான் காலி செய்து மோடியும் காப்பற்றி விட்டார் பாருங்கள்.

    அது சரி, இவ்வோளோ வருஷம் கழிச்சும் சைத்தானுக்கு ஒரு தண்டனையும் கொடுக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு அல்லா.

  21. பொளந்து கட்டிட்டீங்க சாரங்,

    கடவுளை விட சைத்தானே பெரியவன். ஏனெனில் சைத்தானை அழிக்க கடவுளால் முடியவில்லை. அழிப்பது கிடக்கட்டும். சைத்தானுக்கு ஒரு தண்டனை கொடுக்கக் கூட துப்பு கேட்ட கடவுள். அடப் புண்ணியமே ?

  22. //துபாயில் சவூதி இளவரசர் சல்மான் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரபியரை கொலை செய்துள்ளார்.//

    “There is no difference between big and small, rich and poor. The powerful are weak before God’s law until others get their rights from them while the weak are powerful until their rights are protected.

    Nobody is allowed to interfere with the judiciary’s decision. This is the tradition of this state. We are committed to following the Shariah.”

    The victim was a Saudi citizen and King Abdullah reportedly issued a royal decree stating that capital punishment would be enforced if the reconciliation process between the prince and the victim’s family failed.

    The victim’s father issued a statement saying he was not ready to pardon the prince and claimed the reconciliation committee was not fair to him.

    https://www.arabianbusiness.com/saudi-prince-be-executed-532621.html

    பாதிக்கப்பட்டவர்கள் சமாதானத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லையாதலால் அனேகமாக அந்த இளவரசரின் தலை வெட்டப்படலாம். ஜனநாயக நாடான நம் நாட்டில் கூட ஆள்வோரின் வாரிசுகள் தவறு செய்தால் இந்த அளவு தண்டிக்க மாட்டோம். அதுதான் ஷரியா!

  23. அய்யா சுவனப்பிரியன் அவர்களே,

    இந்தக்கதை எல்லாம் ஒன்றும் இங்கே வேண்டாங்க. ஒரு மனிதனைக் கொன்றவனுக்கு மரண தண்டனை கொடுப்பது 21-ஆம் நூற்றாண்டில் ஒன்றும் புதுமை இல்லை. எங்க மனுநீதிச்சோழன் என்ன செய்தான் தெரியுமா ,பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பசுவின் கன்று தேர்க்காலில் அடிபட்டு இறந்ததற்காக , தன் மகனையே தேர்க்காலில் பலி கொடுத்தான் அப்பா.

    உங்க சரியத்து கதை தான் ஊருக்கே இல்லை உலகத்துக்கே தெரியும். மாமனாரால் கெடுக்கப்பட்ட மருமகளை ( அதாவது மகனின் மனைவியை) , அந்த பெண்ணிடம் இனிமேல் உன் பழைய மாமனார் தான் உன் கணவன் . உன் பழைய கணவன் இனிமேல் உனக்கு கணவன் அல்ல. அவன் இனிமேல் உனக்கு மகன் என்று தீர்ப்பு சொல்லியது உங்கள் உத்திரப்பிரதேசத்து சரியத்து சட்டம் தம்பி. அசிங்கத்தை திறந்தவெளியில் கழுவாதே. கேவலம்.

  24. \\ Shri Krishnakumar, you are wasting your time. Mr Swanapriyan is a hard core Islamist and he will wriggle his way out of answering awkward questions on Islam and on his earlier comments. \\

    Dear Shri Rama, agreed Mr.Suvanapriyan is a hard core Islamist. Agreed that he has the fundamentalist approach to the social problems and happenings around.

    One another thing we have to take note is his everlasting and consistent approach in gently facing harsh comments hurled against his faith, Islam. Perhaps, thats an appreciable aspect which I always take note of and admire. Probably, since every other Islamist who submit their comment in this forum uses the most abusive comments, his way of approach stands unique. However, a fact is a fact. And good thing needs to be lauded.

    Neverthless, that does not mean that his undesirable – of-late-newly-taken-up- style of hit and run should be ignored.After all, a genuine discussion shall be on facts and not just on abuses. The sort of comment Jenaab-e-ali indulged in with regard to Shankaracharya and Narendrabhjai is just hate filled – biased – prejudiced and not based on substantiated facts.

    With regard to Hindu Hriday Samrat, Shri Narendrabhai, I would suggest jenaab-e-ali to go through facts filled deliberations of Madhu Kishwar and do not get into rhetorics of mud slinging money spinners like teesta seetalvad.

  25. //துபாயில் சவூதி இளவரசர் சல்மான் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரபியரை கொலை செய்துள்ளார்.//….

    The victim must be demanding huge blood money….

    Please note that powerful and rich can escape in any religion…

    what the shariah says if entire family was killed and there is no immediate relatives for reconciliation?

  26. what you said earlier;
    பாதிக்கப்பட்ட குடும்பம் சம்பந்தப்பட்டவர்களை மன்னித்து விட்டால் இடையில் நமக்கு பேச ஒரு அதிகாரமும் இல்லை

    and now;
    பாதிக்கப்பட்டவர்கள் சமாதானத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லையாதலால் அனேகமாக அந்த இளவரசரின் தலை வெட்டப்படலாம்.

    –முதலில் சொன்னது மன்னித்துவிட்டால் , இப்போ சமாதனம். என்ன அய்யா சமாதானம்??? criminal வழக்கில் என்ன சமாதானம் முதலில் ?

  27. சாரங்!

    //அது சரி, இவ்வோளோ வருஷம் கழிச்சும் சைத்தானுக்கு ஒரு தண்டனையும் கொடுக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு அல்லா.//

    ‘அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!’ என்று ஷைத்தான் கேட்டான்.

    ‘நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்’ என்று இறைவன் கூறினான்!

    குர்ஆன் 7:14,15

    மனிதர்களை வழி கெடுக்க இறைவனிடம் அனுமதி வாங்கிக் கொண்டே இத்தனை காரியங்களையும் ஷைத்தான் செய்து வருகிறான். அனைத்து மனிதர்களும் மறுபடியும் உயிர் பெற்று எழும் நாள் வரை இந்த நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். இந்த பரீட்சையில் நல்லவர்கள் அந்த ஷைத்தானின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார். பலஹினமானவர்களே(மோடி போன்றவர்கள்) அவனது ஆசைக்கு அடிபணிவர்.

    தவறு செய்பவர்கள் அந்த நிமிடமே தண்டனை கொடுத்தால் அது சரியான தண்டனையாக இருக்காது. ஒருவன் 10 பேரை கொலை செய்தால் உலகில் ஒரு முறைதான் அவனுக்கு தூக்கு தரப்படும். ஆனால் மறு உலகில் இறந்த அந்த 10 பேரும் அனுபவித்த அத்தனை வலிகளையும் கொலை செய்தவன் அனுபவிக்க வைக்கப்படுவான். மீண்டும் மீண்டும் அவனுக்கு உயிரூட்டப்படும். மறுமையில் கிடைக்கும் தண்டனைதான் நியாயமானது. இந்த உலகில் தப்பி விட்டாலும் மறு உலகில் தவறு செய்பவர்கள் வசமாக மாட்டிக் கொள்வர்.

  28. //முதலில் சொன்னது மன்னித்துவிட்டால் , இப்போ சமாதனம். என்ன அய்யா சமாதானம்??? criminal வழக்கில் என்ன சமாதானம் முதலில் ?//

    இறந்த அந்த மனிதனின் ரத்த பந்தங்களுக்குத்தான் அவரின் முக்கியத்துவம் தெரியும். போன உயிர் திரும்ப வரப் போவதில்லை. எனவே அந்த உயிருக்கான விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை அவரின் வாரிசுகளுக்கு அளிக்கிறது இஸ்லாம். 10 லட்சமோ இருபது லட்சமோ இறந்த அந்த உயிருக்காக வாங்கிக் கொள்வது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் என்னால் பணம் வாங்கிக் கொண்டு அந்த குற்றத்தை மன்னித்து விட முடியாது என்று ரத்த பந்தங்கள் கூறினால் ‘கண்ணுக்கு கண்’ என்ற குர்ஆனின் சட்டத்தின்படி உயிருக்கு கொலைகாரனின் உயிரையே எடுக்கச் சொல்கிறது குர்ஆன். இந்த கடுமையான சட்டங்கள் தான் உலகில் பல உயிர்களைக் காப்பாற்றுகிறது.

  29. ஜனாப் சுவனப்பிரியன்
    “மனிதர்களை வழி கெடுக்க இறைவனிடம் அனுமதி வாங்கிக் கொண்டே இத்தனை காரியங்களையும் ஷைத்தான் செய்து வருகிறான். அனைத்து மனிதர்களும் மறுபடியும் உயிர் பெற்று எழும் நாள் வரை இந்த நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும்”.
    ஆமா அந்த ஆண்டவனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா. இந்த சைத்தானை இல்லாமல் செய்து விட்டால் உலகத்தில் துன்பமே இல்லாமல் இருக்குமே. அப்படி அறிவே இல்லாதவனை இறைவன் கடவுள் என்று ஒத்துக்கொள்ளமுடியவில்லை.
    சுவனப்பிரியன்
    ” இந்த பரீட்சையில் நல்லவர்கள் அந்த ஷைத்தானின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார். பலஹினமானவர்களே(மோடி போன்றவர்கள்) அவனது ஆசைக்கு அடிபணிவர்’.
    ஆமா மோடி போன்ற ஹிந்துக்களுக்கு மட்டும் தான இது பொருந்தும். இடி அமீன், தைமூர், பின் லேடன், ஔரங்க சீப் போன்றவர்களுக்கு பொருந்தாதா. ஒழுக்கம் என்பதெல்லாம் இஸ்லாமியர்களுக்குள் மட்டும் தானாம். மற்றவர்களிடம் இது பொருந்தாதாம்.
    அப்படியா ஜனாப் சுவனப்பிரியன்.

  30. திரு சிவஸ்ரீ விபூதிபூஷன்!

    //ஆமா அந்த ஆண்டவனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா. இந்த சைத்தானை இல்லாமல் செய்து விட்டால் உலகத்தில் துன்பமே இல்லாமல் இருக்குமே. அப்படி அறிவே இல்லாதவனை இறைவன் கடவுள் என்று ஒத்துக்கொள்ளமுடியவில்லை.//

    உலகில் எல்லோரும் நல்லவராக இருந்து விட்டால் வாழ்வு போரடித்து விடும். உலகில் எல்லோருமே பணக்காரர்களாக இருந்தால் வாழ்க்கை சக்கரம் சுழலாது அல்லவா? ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன், அழகானவன் அழகில்லாதவன் என்ற இரு பக்கமும் ஆட்கள் இருப்பதால்தான் உலகம் சுவாரஸ்யமாக செல்கிறது.

    இப்படி ஒரு அமைப்பு தேவையா? என்று நாம் இறைவனை பார்த்து கேட்போம். அதற்கான பதிலை மறுமை வாழ்வில் தெளிவு படுத்துவதாக இறைவன் கூறுகிறான். அது வரை பொறுப்போமே!

    //இடி அமீன், தைமூர், பின் லேடன், ஔரங்க சீப் போன்றவர்களுக்கு பொருந்தாதா. ஒழுக்கம் என்பதெல்லாம் இஸ்லாமியர்களுக்குள் மட்டும் தானாம். மற்றவர்களிடம் இது பொருந்தாதாம்.
    அப்படியா ஜனாப் சுவனப்பிரியன்.//

    தவறு முஸ்லிம்கள் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஒரு உயர் குலத்து பெண் திருடி விட்டாள். அவள் கையை வெட்ட வேண்டாம் என்று பரிந்து பேசிக் கொண்டு சிலர் முகமது நபியிடம் வந்தனர். ‘எனது மகள் பாத்திமா திருடினாலும் அவள் கையையும் வெட்டுவேன்’ என்றார் முகமது நபி. இதுதான் இஸ்லாம்.

    உசாமா பின் லேடன் ஏன ஆயுதத்தை தூக்கினார். அமெரிக்கர்கள் செய்த அட்டூழியத்தினால் வெறுப்புற்று தீவிரவாதத்தின் பக்கம் சென்றார். முதல் தவறு அமெரிக்கர்களுடையது. ஒளரங்கசீப் ஒரு இந்து தாய்க்கு பிறந்தவர். எல்லா மதத்தவரிடமும் அன்புடனேயே ஆட்சி செய்தார். 50 வருடங்களுக்கு மேல் அகண்ட பாரதத்தை ஆட்சி செய்துள்ளார். பின்னால் வந்த வெள்ளையர்கள் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து வரலாறுகளை திரித்துள்ளனர். அவரின் உண்மை வரலாற்றை படித்துப் பாருங்கள். உண்மை தெரியும்.

  31. மனிதன் கெட்டு போவதற்கு இறைவனே சாத்தானுக்கு , அனுமதி கொடுக்கிறான் ! ஆஹா அற்புதம் ! அதனால் தான் தங்கள் வழிபாட்டு தலங்களுக்கு , ஈரான் லிபியா பாகிஸ்தான் சிரியா போன்ற நாடுகளில் , குண்டு வைத்து கொள்கிறார்கள் ! கஜினி, கோரி , திப்பு , பாபர் போன்ற பலகினமானவர்கள் தான் மாட்டிகொள்வார்கள் ! கீதை தான் மோடிக்கு தேவை . கண்ட புஸ்தகம் – கற்பனை கதைகள் – ஜோடித்த பொய்கள் தேவை இல்லை !

  32. சூ பீ ,

    பாத்தீங்களா பாத்தீங்களா, ஷைத்தானும், அல்லாவும் அப்போ கோயாளிஷன் ஆட்சி. அல்லா என்ன காங்க்ரஸ் காரரோ.

    சரி யார் அப்பீல் பண்ணாலும் அல்லா ஒத்துகிடுவாரோ.
    ஷைத்தானை படைத்தது யார். எதற்காக ஷைத்தான் படைக்கப்பட்டார். ஷைத்தானுக்கு கடைசியாக என்ன தண்டனை என்று குர்ஆனில் உள்ளது. ஷைத்தான் எத்தனை முறை உயிர்பிக்கப்படலாம்? இசுலாமியர்கள் செய்யாத எல்லா காரியங்களையும் ஷைத்தான் தான் தூண்டுகிறான் என்றால் அவருக்கு தானே எல்லா தண்டனையும் தர வேண்டும்.
    உங்களின் கணைக்குப்படி மோடி ஷைதாங்கி பச்சா வா இல்ல ஷைதானே வா.

    ஷைத்தான் செய்யும் காரியங்கள் என்ன. அவை முஹம்மது செய்த காரியங்களிலிருந்து எப்படி வேறுபடுகின்றன.

    //
    தவறு செய்பவர்கள் அந்த நிமிடமே தண்டனை கொடுத்தால் அது சரியான தண்டனையாக இருக்காது. ஒருவன் 10 பேரை கொலை செய்தால் உலகில் ஒரு முறைதான் அவனுக்கு தூக்கு தரப்படும். ஆனால் மறு உலகில் இறந்த அந்த 10 பேரும் அனுபவித்த அத்தனை வலிகளையும் கொலை செய்தவன் அனுபவிக்க வைக்கப்படுவான். மீண்டும் மீண்டும் அவனுக்கு உயிரூட்டப்படும். மறுமையில் கிடைக்கும் தண்டனைதான் நியாயமானது. இந்த உலகில் தப்பி விட்டாலும் மறு உலகில் தவறு செய்பவர்கள் வசமாக மாட்டிக் கொள்வர்.
    // (அவ்வை ஷண்முகி மணிவண்ணன் ஞாபகம் தான் வருது சார்)

    இது குரான்ல எங்க இருக்கு. சரி உயிர் என்றால் என்ன.குரானிலிருந்து சொல்லணும். ஒருவருக்கு எப்படி உயிரூட்டுவது. இதை அல்லா செய்வாரா அல்லது ஷைத்தான் செய்வாரா.

    இசுலாத்தில் free will உண்டா. இருந்தால் அல்லா ஒரு வெத்து வெட்டு என்றாகிவிடுமே? இல்லை என்றால் அல்ல ஒரு வடிகட்டின தீவிரவாதி என்றாகிவிடுமே?

  33. feeling the topic is getting diverted…let the discussion be what is the action/inaction of Modi during the riot and what can be done for that.

  34. சாரங்!

    //உயிர் என்றால் என்ன.குரானிலிருந்து சொல்லணும். ஒருவருக்கு எப்படி உயிரூட்டுவது. இதை அல்லா செய்வாரா அல்லது ஷைத்தான் செய்வாரா.//

    ‘முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்’ என்று கூறுவீராக!

    குர்ஆன் 17:85

    நீங்கள் மட்டும் அல்ல! அன்றைய அரபுகளும் முகமது நபியிடம் இதே கேள்வியைக் கேட்டனர். அதற்கு இறைவன் ‘உயிரை தெரிந்து கொள்ளும் அளவுக்கு மனிதர்களாகிய உங்களுக்கு நான் அறிவை தரவில்லை’ என்று முடித்துக் கொள்கிறான். இன்று வரை அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் விடை சொல்ல முடியாத ஒரு கேள்வி இந்த உயிரைப் பற்றித்தான்.

    இந்த உயிருக்கு சிறந்த விளக்கத்தை கொடுத்து விட்டால் அடுத்த வருட நோபல் பரிசு உங்களுக்குத்தான். குர்ஆனையும் பொய்யாக்கி விடலாம். முயற்சி செய்து பாருங்களேன். 🙂

  35. சூ. பீ,

    அதென்னங்க சார், சட்டரீதியில் குற்றவாளியல்ல என்று நிரூபிக்கப்பட்ட மோடியை ‘அவன் இவன்’ என்று ஒருமையில் கூறுவதும், ஒசாமா போன்ற வெட்கங்கெட்ட அயோக்கியர்களை ‘அவர் இவர்’ என்று மரியாதையுடன் பன்மையில்?

    உங்களுக்கு ஒரு சவால்… ஒசாமா செய்தது தவறு என்று நீங்கள் எண்ணினால் ‘அவனுக்கு நிச்சய நரகவாசம் தான்’ என்று தயங்காமல் சொல்லுங்கள் பார்ப்போம்?

    // உலகில் எல்லோரும் நல்லவராக இருந்து விட்டால் வாழ்வு போரடித்து விடும். //

    அப்போ உங்கள் அல்லா எத்தனை பெரிய sadist சைக்கோ என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அல்லாவுக்கும் அவருக்குப் பிடித்தவர்களுக்கும் பொழுது போவதற்காக சண்டை, சச்சரவு இதையெல்லாம் உண்டாக்கி இரத்த வெள்ளம் ஓடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். அபார கருணை!

    // அதற்கான பதிலை மறுமை வாழ்வில் தெளிவு படுத்துவதாக இறைவன் கூறுகிறான். //

    தேவையே இல்லை என்பது குழந்தைக்கும் தெரியும். நீங்கள் காத்துக்கொண்டு ஒண்ணும் சாதிக்கப் போவதில்லை.

    // ‘முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்’ என்று கூறுவீராக! //

    ஹை, எவ்வளவு நைசா நழுவப் பாக்கறாரு அல்லா? இந்தக் கேள்விக்கு எப்படி பதில் கூறினாலும் இடிக்கும் என்று தெரிந்து அல்லா (எ) முகம்மது இப்படிக் கூறியிருக்கிறார் போலும். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் இஸ்லாத்தில் ஆய்ந்து உண்மையை அறிதல் என்பது கிடையாது என்பது. இஸ்லாம் பரவியதே இந்த மாதிரியான மிரட்டல்களாலும் வெட்டு குத்துகளாலும் தான். வரலாற்றைப் படித்துவிட்டும் இன்றைக்கு இஸ்லாத்துக்கு மதம் மாறுபவர்கள் அறிவீனர்கள்; ஏதோ மயக்கத்தில் உள்ளவர்கள்.

    // குர்ஆனையும் பொய்யாக்கி விடலாம். //

    குர் ஆன் பொய் என்பது வெளிப்படையாகவே பல இடங்களில் தெரிகிறது. இதை இன்னும் உம் போன்றவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது அகங்காரம், ஆணவம், செல்வாக்கு முதலிய முட்டாள்தனமான பற்றுதல்களின் காரணமாக.

  36. சூ பீ

    உயிர் என்றால் என்ன என்பதற்கு பதினைந்து பாயிண்டு விளக்கம் ஏற்கனவே உள்ளது. கூகிள் செய்து பார்க்கவும். அதனால் நோபல் பரிசு யாருக்கும் கிடைக்காது.

    ரொம்ப சரளமாக சொல்ல வேண்டுமென்றால், சேதன வஸ்து தான் உயிர் எனப்படுவது. இதை புரிந்து கொள்ள கஷ்டப்பட வேண்டாம். இதை விளக்கினால், அல்லாவுக்குத்தான் டேஞ்சர் அதனால் தான் பதில் சொல்ல மாட்டேங்குறார். உயிர் என்றால் என்ன என்பதை நாங்கள் நன்றாக விளங்கி கொண்டுள்ளோம்.

    குரானின் படி, உயிர் அல்லாவின் கட்டளை படி உள்ளதன்றால், உயிரற்றவை யாரின் கட்டளைப்படி உள்ளன? குரானின் ஒரு வாக்கியமே இவ்வளவு பலவீனமாக உள்ளதே?

    உயிரை பற்றி தெரிந்து கொள்ளும் அளவுக்கு மூளையை கொடுக்காத அல்லா, அதை சொல்லி இருக்கலாமே. புரிந்தால் என்ன புரியாங்காட்டி என்ன. குரான்ல உள்ள அத்தனையும் புரியற மாதிரியா இருக்கு?

    உலகத்தில் எல்லோரும் நல்லோர்களாக இருந்தால் வாழ்வு போர் அடிக்காது சார். மானுடம் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
    அல்லா இருக்கும் சுவனத்திலும் அயோக்கியர்கள் இருக்கிறார்களா? அங்க மட்டும் எப்படி போர் அடிக்காம இருக்கு? அங்கே போர் அடிக்காம இருக்குன்னா, இங்கேயும் அப்படியே இருக்குமே.

    கடைசியாக என்ன சொல்ல வருகிறீர்கள். நல்லா போர் அடித்து கொண்டிருந்த உலகத்தில் நபிகள் தோன்றி அயோக்கியத்தனங்கள் செய்து உலக மக்களை போர் அடிப்பதிலிருந்து காப்பாற்றினார் என்றா? ஆகா எத்தனை பெரிய கோடை வல்ல நபிகள்.

    என்னுடைய மற்ற கேள்விகளுக்கு பதில்கள் ? ஷைத்தானை பற்றியவை அவை.

  37. \\ ஒளரங்கசீப் ஒரு இந்து தாய்க்கு பிறந்தவர். எல்லா மதத்தவரிடமும் அன்புடனேயே ஆட்சி செய்தார். 50 வருடங்களுக்கு மேல் அகண்ட பாரதத்தை ஆட்சி செய்துள்ளார். பின்னால் வந்த வெள்ளையர்கள் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து வரலாறுகளை திரித்துள்ளனர். அவரின் உண்மை வரலாற்றை படித்துப் பாருங்கள். உண்மை தெரியும். \\

    அப்படீங்களா? இஸ்லாமியர்கள் உர்தூவில் ஔரங்கசீப் பற்றி எழுதிய பயங்கரமெல்லாம் சரிதானுங்களே?

    இஸ்லாம் மதத்தைக் கபூல் செய்யாத ஹிந்துக்களின் மீது அவர் ஜிஸியா வரி விதித்தார். இதை ஜெனாப் அவர்கள் அன்புடன் ஆட்சி செய்ததன் அடையாளமாகக் கருதுகிறாரா என்று கருத்துப்பகிர்ந்தால் அன்பு என்று இஸ்லாமியர்கள் கருதுவதின் அலகீடு எது என்பதனை ஹிந்துக்கள் அறிவார்களே

  38. \\ இறைவன் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. \\

    ஜெனாப் சுவனப்ரியன்,

    ஹிந்துஸ்தான ந்யாயாலயத்தால் குற்றம் சாட்டப்படாத நபர்களைப் பற்றி நீங்கள் மேற்கண்ட வாசகத்திற்குள் அடைக்க முயன்றீர்கள்.

    ஹிந்துஸ்தானத்தில் தின்ற உப்பிற்கு த்ரோஹம் செய்த நபர்களைப் பற்றித் தாங்கள் நினைக்கவில்லை போலும். நான் சொல்ல வருவது மியான் பர்வேஸ் முஷர்ரஃப் மற்றும் அவரைப் போன்ற மொஹாஜிர்களும்.

    இவர் என்னதான் எல்லைதாண்டி — தாருல் இஸ்லாம் என்று ஹிந்துஸ்தானத்தைப் பிளந்து –உருவாக்கப்பட்ட தேசத்திற்குச் சென்று — அங்கு மாடாக உழைத்து — கார்கிலுக்காக யுத்தமே செய்திருப்பினும் — இன்று அவர் நிலை பாரீர். அன்று மியான் நவாஸ் ஷெரீஃப் அவர்களை தூக்கிலிட இவர் ப்ரயத்னம் செய்தார். முடியவில்லை. இன்று இவரை தூக்கில் போட பாபிஸ்தானில் அங்குள்ளவர்கள் சன்னத்தமாக உள்ளனர்.

    ஐம்பது அறுபது வருஷ முன் ஒருமுறை ஹிந்துஸ்தான உப்பிற்குத் த்ரோஹம் செய்த இவர் இன்று பாபிஸ்தான் என்னும் பாக்கி ஸ்தான(baqi sthan) உப்பிற்குத் த்ரோஹம் செய்ததாய் தேசத்ரோஹ குற்றத்திற்காக அந்த ஊர் ந்யாயாலயங்களுக்கு நடையாய் நடந்து வருகிறார். முடியாமற் போக — மற்ற அரசியல் வ்யாதிகளைப் போல ஆதுரசாலையில் படுத்துக்கொண்டு ஹடம் பிடிக்கிறார்.

    பாபிஸ்தான் உருவாக ஆதரவளித்த இவர் முன்னோர் செயலுக்காக அறுபது வருஷம் கழித்து இவருக்கு இன்று இறைவன் அளிக்கும் தண்டனையா இவருடைய இன்றைய கஷடங்கள்?

    மியான் அல்டாஃப் ஹுஸைன் என்ற மொஹாஜிர் க்வாமி கட்சியின் அத்யக்ஷகர் சொன்னது போல ஹிந்துஸ்தானப் பிரிவினை என்பது இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய பயங்கரமான தவறு என்பதே நினைவுக்கு வருகிறது. இந்தத் தவற்றுக்கு — தமிழகத்திலிருந்து — கயவனான காயிதே மில்லத் என்ற அரக்கப்பதரும் விழைந்தது சரித்ரமே.

  39. ////////////”உசாமா பின் லேடன் ஏன ஆயுதத்தை தூக்கினார். அமெரிக்கர்கள் செய்த அட்டூழியத்தினால் வெறுப்புற்று தீவிரவாதத்தின் பக்கம் சென்றார். முதல் தவறு அமெரிக்கர்களுடையது. “/////////////// ஒரு வேளை உக்காந்து ரொம்ப யோசிப்பாங்களோ ???

  40. நாம் மோடியின் மீது அவதூறு பரப்புபவர்களைப் பற்றி கட்டுரையில் படித்துக் கொண்டிருந்தோம். நடுவுல புகுந்து செம காமெடியா ஒரு கருத்த சொல்லிட்டு செமத்தியா கலாய் வாங்கிக்கிட்டு விளக்கத்த குடுத்துகிட்டு இருக்காரு ஒருத்தரு. பாய், இங்க இருக்கறவங்கல்லாம் சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவங்க பாய்! பக்தியானாலும் குருட்டு பக்தியா இல்லாம தெளிவா அறிவுக்கு ஒத்து வர்ற விஷயங்கள மட்டும் ஏத்துக்றவங்க! இங்க வந்து கன்னா பின்னான்னு காமெடி பண்ணி கலாய் வாங்குறீங்க!

    //நீங்கள் மட்டும் அல்ல! அன்றைய அரபுகளும் முகமது நபியிடம் இதே கேள்வியைக் கேட்டனர். அதற்கு இறைவன் ‘உயிரை தெரிந்து கொள்ளும் அளவுக்கு மனிதர்களாகிய உங்களுக்கு நான் அறிவை தரவில்லை’ என்று முடித்துக் கொள்கிறான்.//

    காதுல பூ கேள்விப்பட்ருக்கேன். காதையே அறுத்து பூ கூடைக்குள்ள போடப் பாக்குறீங்களே! சந்தேகம் கேட்கும் மாணவனை அதட்டி உட்கார்த்தி வைக்கும் ஒரு கூறுகெட்ட தற்குறி ஆசிரியர் செய்யும் செயல் தான் இது. உங்களையெல்லாம் பேச விட்டு கேட்டா நம்பளையே கலாய்க்ரீங்களே பாய்! தெரிலனா தெரிலன்னு ஒத்துகோங்க! உயிர்னா என்ன? ஆத்மானா என்ன இதெல்லாம் உபநிஷதங்கள்ல தெளிவா சொல்லியிருக்காங்க!

    நான் இத்தனை நாள் நாம கும்பிடுற நாராயணனைத் தான் நீங்களும் அல்லானு கும்பிடுறீங்கனு நெனச்சேன். ஆனா அவரு இவ்ளோ பெரிய டகல்பாஜி டகால்டியா இருப்பாருன்னு தெரிலயே! நீங்க ஒழுங்கா பகவத் கீதை படிக்க ஆரம்பிங்க! அப்புறம் உபநிஷதங்களுக்குப் போகலாம். இங்கே தேடலுக்கு சுதந்திரம் இருக்கு.

    என்ன தான் மனுஷன் இந்த பிரபஞ்சத்து முன்னாடி ஒரு சில்வண்டை விட சின்னவனாக இருந்தாலும் அந்த பிறப்பின் மூலம் கடவுளின் ஒரு சிறு துளியையாவது இயற்கையின் வழியே உணர முற்பட வேண்டுமல்லவா? அதற்குத் தேடல் வேண்டுமல்லவா? தேடலுக்கு சுதந்திரம் வேண்டுமல்லவா?

    “உனக்கு அறிவில்லை, நான் உன்ன அறிவில்லாதவனாக தான் படைச்சேன். செத்தப்பிறகு தான் உனக்கு அறிவே வரும்னு ஒருத்தன் சொன்னா, அது கடவுளா? உள்-கட. இது தான் கடவுள் ஆனது. உள்ளே கடக்கவும் சுதந்திரமற்றுப் போய், வெளியே தேடவும் வழியின்றி, இறைவனை உணராமலே அடிமையாய் வாழ்ந்து வீழ்ந்து படின், அது வாழ்வா?

  41. //இறந்த அந்த மனிதனின் ரத்த பந்தங்களுக்குத்தான் அவரின் முக்கியத்துவம் தெரியும். போன உயிர் திரும்ப வரப் போவதில்லை. எனவே அந்த உயிருக்கான விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை அவரின் வாரிசுகளுக்கு அளிக்கிறது இஸ்லாம். 10 லட்சமோ இருபது லட்சமோ இறந்த அந்த உயிருக்காக வாங்கிக் கொள்வது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.//

    கொலை பன்னி பணம் கொடுக்க மாட்டோம் ஆனால் பேசவா கூடாது, எங்கும் கருத்து சொல்லக்கூடாது முக்கியமாக ஓட்டு போட கூடாது – பணம் கொடுக்கின்றூம் என்று சொன்னால் — அதை அனுமதிகின்றதா?? எதற்க்கு என்றால் நாடும் ,மக்களும் நன்றாக இருப்பார்கள் அப்படி இருந்தால்.!!

    /ஒளரங்கசீப் ஒரு இந்து தாய்க்கு பிறந்தவர். எல்லா மதத்தவரிடமும் அன்புடனேயே ஆட்சி செய்தார்.//

  42. //ஒளரங்கசீப் ஒரு இந்து தாய்க்கு பிறந்தவர். எல்லா மதத்தவரிடமும் அன்புடனேயே ஆட்சி செய்தார்.////
    இது பொய் என்று வண்டி வண்டியாக எழுதலாம். எல்லாம் இனையத்தில் இருப்பவை . ஆனால் எனக்கு அந்த பெயரை கேட்டால வரும் சிந்தனை இது . துக்ளக்ல் பல வருடம் முன்பு வந்தது :-

    ஒளரங்கசீப் சக்கரவர்த்தியாக முடிசூட் டப்பட்ட பிறகு முல்லா சாஹேப் தனக்கு ஒளரங்க சீப்பின் அரச சபையில் கெளரவப் பதவியும், சன்மானமும் தர வேண்டுமென்று கோரியிருந்தார். அதற்குப் பதில்தான் ஒளரங்கசீப்பின் இந்தக் கடிதம்.

    கற்றவரே!

    நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரச வையில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்த வேண்டுமென்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல் லுகின்றேன் நீங்கள் எனக்கு எப்படிக்கல்வி போதித்திருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால், உங்களுக்கு நான் பதவியை அதருவது போன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஆனால் நீங்கள் எனக்கு போதித்த முறை யான கல்வி என்பது எங்கே இருக்கிறது?

    ஐரோப்பாவை ஒன்றுமே இல்லாத ஒரு சூன்யப்பிரதேசம் என்று போதித்தீர்கள். போர்த்துக்கீசிய நாட்டு மாபெரும் மன்னரைப்பற்றியோ, அவருக்கடுத்த ஹாலாந்து மன்னரைப்பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ நீர் எனக்கு ஒரு விவரமும் கூறவில்லை. பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாட்டு மன்னர்களையெல்லாம் நமக்கு அடங்கிய மிகச் சிறிய குறுநில மன்னர்களென்று கூறுனீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங் கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டுமென்பதற்காக உலகத்திலுள்ள மற்ற நாடுகளெல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள். ஆஹா…. வியந்து பாராட்டப்பட வெண்டிய சரித்திர அறிவு. எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? உலக நாடுகளிலெல்லாம் என்ன நடக்கிறது. அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர்முறை என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜதந்திரங்கள் என்ன? இவற்றையெல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்திருக்க வேண்டாமா? உண்மையான சரித்திரத்தை எனக்கு கற்றுக்கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும், தாழ்வையும், அவர்களது எழுச்சியையும், வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்திருக்க வேண்டாமா? எந்த விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால் அங்கே புரட்சிகள் தோன்றின. அந்த சாம்ராஜ்யங்கள் அழிந்தன என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?

    உங்களிடமிருந்து என்னுடைய முப்பாட்டனார்களின் பெயர்களைக் கூட நான் அறிந்துகொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்கு கற்பித்ததற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருந்தி ருக்கிறது.

    எனக்கு அரேபிய மொழியை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர்கள். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்கு பெருமையா? ராஜ பரிபாலனத்துக்கு அவசியமான – முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான் அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்.

    ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விடயங்களைக் கற்றுக்கொண்டால், அந்த நினைவு, வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும், சட்டம், மதவழிபாட்டு முறைகள், விஞ்ஞானம் இவற்றையெல்லாம் என் தாய் மொழியில் நான் கற்றிருக்க முடியாதா? அரேபிய மொழியை ஏன் என் தலையில் கட்டினீர்கள். என் தந்தை சாஜஹானிடம் எனக்கு மதத்துவங்களைப் போதிக்கப் போவதாக நீங்கள் சொன்னது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

    அர்த்தமே இல்லாத இருந்தாலும் புரிந்துகொள்ள முடியாத புரிந்து கொண்டாலும் மனத்திருப்தி அளிக்காத மனத்திருப்தி அளித்தாலும் கூட, இன்றைய சமுதாயத்தில் எந்தவிதப் பயனுமே இல்லாத புதிர்களையெல்லாம் என்னிடம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்தீர்கள், நீங்கள் கற்றுக்கொடுத்த தத்துவங்களைப் பற்றி இப்படித்தான் புகழ முடியும். அவையெல்லாம் புரிந்துகொள்ள மிகக் கடினமானவை, மறப்பதற்கு மிக எழியவை.

    நீங்கள் போதித்த மதத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனமான இருளடைந்த பெரிய பெரிய வார்த்தைகள்தான். உங்களைப் போன்றவர்களின் அறியாமை யையும், இறுமாப்பையும் மறைக்க உங்களைப் போன்றவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள், உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எங்களைப் போன்ற மகா மேதாவிக ளுக்குத்தான் இந்தப் பயங்கர வார்த்தைகளில் அடங்கியிருக்கிற அரிய தத்துவ ரகசியங்கள் புரியும் என்று மற்றவர்கள் நினைத்து ஏமாந்து போவதற்காக, உங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள்.

    காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தக்கூடிய மதத்தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் மனதை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும். அரிய தத்து வங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால் அதிர்ஸ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி துரதிஸ்டத்தினால் தாக்கப்பட்டு தோல்வியைத் தழுவினாலும் சரி, இரண்டுக்குமே மயங்காத மனோ தைரியத்தை அளிக்கக்கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்கு போதித்திருந்தால் நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்தப் பூமி இயங்குகிறது? என்பதையெல்லாம் நான் உணர்ந்துகொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதித்திருந்தால் இப்போதும் சொல்லுகிறேன், இந்த மாதிரி விசயங்களையும் தத்துவங்களையும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தால் நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப்பேன். அலக்சாண்டர் அவனுடைய குரு அரிஸ்டாட்டிலுக்கு செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன். நன்றி காட்டியிருப்பேன்.

    சதா என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜ பரிபாலனத்துக்குத் தேவையான விசயங்களை எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்திருக்க வேண்டாமா? குடிமக்களுக்கு அரசன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? அரசனுக்கு குடிமக்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?

  43. என்னுடிய மேல உள்ள கருத்தை படித்து விட்டீர்களா. இப்பொழுது இந்த பாராவை பாருங்கள்.

    //எனக்கு அரேபிய மொழியை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர்கள். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்கு பெருமையா? ராஜ பரிபாலனத்துக்கு அவசியமான – முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான் அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன். //

    பல முஸ்லிம் இணைய தளங்களில் இது இருக்காது. சாமர்த்தியமாக வெட்டி விட்டார்கள். இவர்கள் தான் வரலாறு திரிபு பற்ரி பேசும் உத்தம சீலர்கள். நாம் உத்தம சீலரும் இவ்வகைதான்;
    https://suvanappiriyan.blogspot.com/2013_03_01_archive.html
    Qus:
    உத்தம சீலார உண்மயின் பக்கம் இருக்கும் இந்த பாராவை நீக்கும் உங்கள் எண்ணம் என்ன? ??

    எனக்கு அரேபிய மொழியை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர்கள். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்கு பெருமையா? ராஜ பரிபாலனத்துக்கு அவசியமான – முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான் அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்.

  44. திரு பாண்டியன்!

    //பல முஸ்லிம் இணைய தளங்களில் இது இருக்காது. சாமர்த்தியமாக வெட்டி விட்டார்கள். இவர்கள் தான் வரலாறு திரிபு பற்ரி பேசும் உத்தம சீலர்கள். நாம் உத்தம சீலரும் இவ்வகைதான்;//

    நான் காப்பி பேஸ்ட் செய்த தளத்தில் இவ்வாறுதான் இருந்தது. வேண்டுமென்றே நான் எதையும் நீக்கவில்லை.

    அடுத்து அரபு மொழி தேவ மொழி என்று எங்கும் சொல்லப்படவில்லை. எனக்கு எனது தாய் மொழியான தமிழ்தான் மிகுந்த இன்பம் தரக் கூடிய மொழி. முகமது நபி அரபியராக இருந்ததால் குர்ஆன் அரபி மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழராக இருந்திருந்தால் இதே குர்ஆன் தமிழ் மொழியிலேயே நேரிடையாக அருளப்பட்டிருக்கும்.

    ஒளரங்கஜேப் தனது ஆசிரியரிடம் வருத்தப்பட்டது நியாயமானதே! ஒரு அரசருக்கு வாழும் நாட்டு மக்களின் மொழியை பிழையற பேசத் தெரிந்தருக்க வேண்டும். அதை செய்யத் தவறிய ஆசிரியரை அரசர் கடிந்து கொண்டது நியாயமானதே! ஒரு முஸ்லிம் குர்ஆனை தொழுகையில் ஓத வேண்டும். அதன் அர்த்தத்தை தனது தாய் மொழியல் படித்தால்தான் அதன் உண்மையான அர்த்தங்கள் விளங்க வரும். அரபு மொழி வெறி ஒளரங்கஜேப்புக்கு இல்லை என்பது இதிலிருந்து நமக்கு மேலும் விளங்குகிறது.

  45. இனிமேல் சுவனப் பிரியன் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார் என்றே நினைக்கிறன்.திரு.பாண்டியன் கொடுத்த அடி அப்படி. ஆனாலும் ஒரு குறை.பாண்டியனின் அடியால் ஒரு நல்ல காமெடியனை இழப்போம்.

  46. //இனிமேல் சுவனப் பிரியன் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார் என்றே நினைக்கிறன்.திரு.பாண்டியன் கொடுத்த அடி அப்படி. //

    அப்படி என்ன ஒரு பெரிய அடியை கொடுத்து விட்டார்? அதற்கான விளக்கத்தையும் நான் கொடுத்து விட்டேனே! 🙂

    //காமெடியனை இழப்போம்.//

    காமெடியனாக இருந்து நாலு பேரை சிரிக்க வைக்கலாம்!

    வில்லனாக இருந்து நாலு குடும்பம் நாசமாகக் காரணமாகி விடக் கூடாது.

  47. Note Mr SP does not answer awkward questions posted by Mr Krishna Kumar, Mr Gandhrvan and Mr Sarang. Normal Taqyya practice. Mr Pandiyan, SP copy pastes only materials that favour Islam. Obviously, he does not bother to check whether the statements are COMPLETE or even true. AS LONG ISLAM IS NOT IMPLICATED IN A BAD WAY, SP could and will not be bothered. With facts and findings by numerous courts and Commissions proclaiming NaMo’s innocence, he will parrot the tired old lines, knowing fully well that NaMo is innocent.

  48. சூ பீ

    //
    அடுத்து அரபு மொழி தேவ மொழி என்று எங்கும் சொல்லப்படவில்லை. எனக்கு எனது தாய் மொழியான தமிழ்தான் மிகுந்த இன்பம் தரக் கூடிய மொழி. முகமது நபி அரபியராக இருந்ததால் குர்ஆன் அரபி மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழராக இருந்திருந்தால் இதே குர்ஆன் தமிழ் மொழியிலேயே நேரிடையாக அருளப்பட்டிருக்கும்.
    //

    வாங்க வசமா மாட்டிகிடீங்க. அல்லா என்ன சொல்றார்,நபிகள் தான் கடைசி தூதர் அவருக்கு இறக்கின மறை தான் கலீச்சு இல்லாதது முன்னாடி வந்த தூதர்களுக்கு இரக்கினதெல்லாம் மக்கள் கலீச் பண்ணிட்டாங்க

    இப்படி இருக்க, முதலில் அல்லா இறக்கின மறை ஏன் ஹீப்ரூவில் இருக்கிறது, அடுத்தது லாடினில் அடுத்தது அரபு மொழியில்.
    நீங்கள் டபக்குன்னு சொல்லகூடிய பதில், அதான் சொன்னோம்ல, தூதர் எந்த மொழி பேசுராரோ அதுல தான் இறக்குவோம்னு. அல்லா குரான தூதருக்காக இறக்கினார இல்ல மக்களுக்காக இறக்கினாரா. மக்களுக்காக என்றால் குரான் வெறும் அரபு மக்களுக்கு மட்டும் தான். மக்களுக்காக என்றால் இன்னொரு பதிலையும் நீங்கள் தர வேண்டும். நபிகளின் காலத்தில், அரபு நாடு ஒரு டுபாகூர் நாடு அதை பேசுபவரும் மிக குறைந்தவரே. அல்லா ஏன் நபிகளை வேறிடத்தில் பிறக்க வைத்து அந்த இடத்து மொழியில் குரானை இறக்க வில்லை. தூதருக்காக என்றால் அது அவரோடே போகட்டும், மத்தவன ஏன் தொல்லை படுத்துறீங்க.

    தமிழ் மொழியிலேயே குரான சொல்லுவீர்களா? எதுக்கு ஊரெல்லாம் ஸ்பிகர் போட்டு அரபு மொழில கத்துறீங்க.

    அவுரங்கசீப்பு ரெம்ப நல்லவர்ன்னு சொல்றீங்க. அவரே கைப்பட எழுதின கடிதங்கள், அவருடைய படை தளபதிகள் அவருக்கு எழுதின கடிதங்கள், எல்லாம் இன்று கிடைக்கப் பெறுகின்றன, ஷாஜஹான் காலத்திலேயே, ஹிந்து கோவில்களை பழுது பார்பதற்கும், புதிய கோவில்களை கட்டுவதருக்கும் தடைகள் விதிக்கப்பட்டன. இது சீப்பு காலத்தில் மிக கொடூரமானது. சீப்பு, கோவில்களை நிர்மூலமாக்கி அதன் மேல் மசூதி கட்ட உத்தரவிட்டதர்கான ஆதாரங்கள் நிறைய இருக்கு. வீர சிவாஜி, இந்த உலகத்தின் மிகப் பெரிய தார்மிக போர் வீரன் ஜீப்பை எதிர்க்க மிக முக்கிய காரணமாக இருந்தது சீப்பு காசி விஸ்வநாதர் கோவிலை இடித்து அதன் மேல் மசூதி கட்டினதால் தான்.

    கையில் கணினி இருப்பதானால் எதை வேணும்னாலும் வாந்தி எடுத்து அனுப்ப வேண்டாம்.

    கேள்விகளுக்கு நேர்மையான பதில்கள் தாருங்கள், எங்க வீக்கா இருக்கீகளோ அங்கெல்லாம் சத்தமே போடாம நழுவுரீக, நேர்மையின் வடிவான ஒரு உண்மையான இசுலாமியனுக்கு இது அழகல்ல சூ பீ அழகல்ல.

  49. சூ பீ,

    உயிர் என்றால் என்ன என்பதற்கு இன்றைய சயின்சிலும், பாரதத்தின் ஞான பரம்பரையிலும் தெளிவான விளக்கங்கள் உள்ளன.

    (நான் ஆத்மாவை பற்றி எல்லாம் பேசவில்லை, உயிரை பற்றிதான் பேசுகிறேன்).

    அப்போ முடிவா என்ன நிக்கி, குரான் வெறும் சவுடால், அது பொய் என்றே நிக்கி. உடனே பீஜெவுக்கு போன போட்டு விளக்கம் கேக்க வேணாமா.

  50. சுவனப் பிரியன் நீங்கள் காபீ/பேஸ்ட் பண்ணியது தவறு என்றாலும், உண்மை இப்பொழுது வெளியில் வந்து விட்டதே. இன்னும் உங்கள் ஸைட் இல் மட்டும் மாறவில்லை? என்ன காரனம்..

  51. JANAB S. P IS OPENLY SUPPORTING TERRORISTS IN TAMIL HINDU COLOUMN.
    HIS HATREDNESS TOWARDS HINDUS WELL KNOWN. HIS DIVERTYING THE WHOLE ISSUE.
    SO MANY TIMES WE SAW HIS LIES. I REQUEST TAMIL HINDU NOT ALLOW S.P TO USE THIS PLATFORM TO PROPAGATE HIS LIES.
    LET HIM DEBATE IN SENGODI, IRAI ILLA ISLAM, PAGADU, ALI SINA BLOGS.
    TAMIL HINDU READERS MIGHT HAVE TO LEARN AND UNDERSATAND SO MANY THINGS, BUT
    NOT FROM JANAB S.P.

  52. \\ அரபு மொழி வெறி ஒளரங்கஜேப்புக்கு இல்லை என்பது இதிலிருந்து நமக்கு மேலும் விளங்குகிறது. \\

    தெளிவாக விளக்கியுள்ளீர்கள், ஜெனாப் சுவனப்ரியன் — ஆனால்

    இஸ்லாம் மதத்தை கபூல் செய்யாத ஹிந்துக்களின் மீது ஜிஸியா வரி விதித்த ஔரங்கஜேப்புக்கு இஸ்லாமிய மதவெறி இல்லை. மாறாக அவருக்கு அனைத்து மக்களின் மீது கருணை இருந்தது என்று எப்படி சொல்கிறீர்கள். இப்படி முழுக்கருத்து சொல்லாது அம்பேல் ஆகலாமா %)

    மியான் பர்வேஸ் முஷர்ரஃப் அவர்கள் இன்று துன்பப்படுவது இறைவன் கொடுத்த தண்டனை தானே? :`-(

    தேசப்பிரிவினைக்கு உழைத்த கயவன் காயிதேமில்லத் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது என்பது புரிகிறது :))

  53. மதவாதம் பற்றிப் பேச காங்கிரசுக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் என்ன அருகதை உள்ளது?

    1. 1969- இல் ஹிதேந்திர தேசாய் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்த குஜராத் வகுப்புக் கலவரங்களில் 660 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். லட்சக்கணக்கானோர் வீடு வாசல் இழந்தனர் என்கிறது அதிகாரபூர்வ செய்திகள். ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2000க்கும் அதிகம் என்று எழுதின பத்திரிகைகள். அந்த வகுப்புக் கலவரத்தின்போது தலைமைப் பொறுப்பில் இருந்தவர் நரேந்திர மோடியல்ல, இந்திரா காங்கிரஸ்.-

    2. 1989இல் பிகாரில் உள்ள பாகல்பூரும் அதைச் சுற்றியுள்ள 250 கிராமங்களும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அன்றைய பிகாரின் முதல்வர் காங்கிரஸ் கட்சியின் சத்யேந்திர நாராயண் சின்ஹா. காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு இந்த இனக் கலவரத்தில் பங்கு உண்டு என்று வெளிப்படையாக முதல்வர் சின்ஹாவே அறிவித்தார். அப்போது பிகாரில் ஆட்சியில் இருந்தது பா.ஜ.க. அல்ல, இந்திரா காங்கிரஸ்.

    3.1984இல் தில்லியில் நடந்த சீக்கியர் இனப் படுகொலைக்கு நேரடியாகவே காரணமான இந்திரா காங்கிரஸ் கட்சியா பேசுவது, இனப் படுகொலையின்போது தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் பிரதமரானால் அது இந்தியாவின் சீரழிவுக்கு வழிகோலும் என்று? தில்லியில் நடந்த சீக்கியர் இனப் படுகொலையை முன்னின்று நடத்திய கட்சியின் சார்பில் பிரதமராக இருக்கும் டாக்டர் மன்மோகன் சிங், கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகிறார். மதசார்பின்மை பற்றி எப்படிப் பேசலாம். இந்திரா காங்கிரஸூக்கு அதுபற்றி பேசும் உரிமையோ அருகதையோ கிடையாது.

    4. இந்திய அரசியலில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து , காங்கிரஸ் கட்சிக்கு நல்ல தலைவர்கள் மிக குறைவாகவே கிடைத்தனர். மொரார்ஜி, காமராஜ், வல்லபாய் படேல் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த நல்ல தலைவர்களும் இந்திராவின் சர்வாதிகார போக்கு பிடிக்காமல், அவசரநிலை ( எமெர்ஜென்சி ) காலத்துக்கு முன்னரே கட்சியை விட்டு விலகி, வேறு பெயர்களில் புதிய இயக்கங்களில் சேரவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படித்தான் மொரார்ஜி, காமராஜ், போன்றோர் ஸ்தாபன காங்கிரஸ் என்று பிரிந்து, பின்னர் அவசரநிலைக்கு எதிராக போராடினார்கள்.

    5. பிரதமர் பதவிக்கு சிறிதும் தகுதியில்லாத ஜடம் என்பதை , மமோசி- அவர்களின் பேச்சு தெளிவாக காட்டுகிறது. மதக்கலவரங்களை தூண்டுவது காங்கிரஸ் கட்சியினர் தான் என்பது ஏற்கனவே பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்னும் விவரங்களை எழுதினால் கடிதம் நீண்டு , ஒரு தனி புத்தகம் அளவுக்கு வருகிறது. காங்கிரசை ஒழிப்போம், நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்போம்.

    6.காங்கிரஸ் தயவில் ஆட்சி அமைத்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால் என்பவர் ஒரு குழப்பவாதி. ஊழலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்த அவர் , உண்ணாவிரதம் இருந்த அவர் , இப்படி அதே கட்சியுடைய ஆதரவை பெற்று ஆட்சி அமைத்ததால், அவரது இமேஜ் காலியாகி விட்டது. டெல்லிக்கு வெளியே வேறு எங்கும் அவரது கட்சி டெபாசிட் கூட திரும்ப வாங்காது.

    7. 3-ஆவது அணி என்பதோ, கம்யூனிஸ்ட், மற்றும் பல உதிர்க்கட்சிகள் உள்ள அமைப்பு. முலாம் சிங்கு, மாயாவதி, மமதா என்று ஒவ்வொருவரும் , வண்டியை பல திசைகளில் இழுக்கும் மாடுகள் போல. வண்டியே எங்கும் நகரமுடியாது. அப்படியே ஸ்டாண்ட் ஸ்டில் – ஆக நிற்கும். முலயாம் சிங்கும், மாயாவதியும் இந்திய அரசின் குல்லுக பட்டர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மோடி தலைமையில் அரசு அமைந்து , டெல்லியில் பிரதமராக மோடி பதவி ஏற்பார். நாடு முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடும். பொருளாதார சரிவு சிறிது சிறிதாக நிமிரும். தேசத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியைப் பெருக்கி அனைவர் வாழ்வையும் உயரச் செய்வோம்.

  54. சோனியாவும், பொம்மை மமோசியும், பேட்டிகளில் பேசும் போது, பல ஊழல்கள் பற்றி குற்றச்சாட்டு இருந்தபோதும், 2009-ஆம் ஆண்டு மீண்டும் எங்களுக்கு ஆதரவாக வாக்கு அளித்ததன் மூலம் , எங்கள் மீது உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து விட்டனர் என்று சொல்லி, தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

    இந்த வாதத்தை முன்வைக்கும் போதே , அவர்களை அறியாமலேயே அவர்கள் இன்னொருவிஷயத்தை ஒத்துக்கொள்கின்றனர். அது என்னவெனில், குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரங்களுக்கு மோடியை பொய்யாக பழிசுமத்தி பொய்க் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறுகிறது காங்கிரஸ் கட்சி. கலவரங்கள் நடந்த பின்னர் நடைபெற்ற 2002- 2007- 2012- ஆகிய மூன்று தேர்தல்களிலும் நரேந்திர மோடி வெற்றிபெற்றார். ஊழல் நடைபெற்ற பிறகு நடந்த 2009-தேர்தலில் வென்றதால், காங்கிரசின் மீது உள்ள குற்றசாட்டுக்களை மக்கள் நிராகரித்தனர் என்று சொன்னால், மோடிமீது உள்ள குற்றசாட்டுக்களை மக்கள் மூன்று தேர்தல்களில் நிராகரித்துள்ளனர். அப்படி இருக்க, மோடி மீதுமட்டும் தொடர்ந்து அதே பழைய குற்றசாட்டினை கூறுவது முறையா ? காங்கிரஸ் கொள்ளையர்களுக்கு எதுங்க முறை, நாணயம் எல்லாம் ?

  55. சுவனப்பிரியன்,

    இன்றுதான் உங்கள் பதிலைப் பார்த்தேன்.முகலாயக் காட்டுமிராண்டிகள் அனைவரும் வில்லன்களாய் இருந்ததுதான் பிரச்சினையே.
    முதலில் பாண்டியன் எதில் இருந்து காபி பேஸ்ட் செய்தார் என்று தெரிந்து கொண்டு அதை உங்கள் வெப் சைடில் போடவும்.நீங்கள் பார்க்கும் வெப் சைட்டுக்கு எழுதி அவர்களை சரி செய்யச் சொல்லுங்கள்.அவர்களின் தவறால் உங்கள் மானம் போனது ;ஏதோ சப்பைக்கட்டு கட்டி சமாளித்ததாக அவர்களிடம் புலம்புங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *