வன்முறையே வரலாறாய்… – 4

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery by M.A. Khan (pdf, can be downloaded)
தமிழில் : அ. ரூபன்

சிறந்த வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் தனது நூலில் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன என்பதனைவும் மிக விளக்கமாக எடுத்துரைக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப் பட்டுள்ளன.

முந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2, பகுதி 3

தொடர்ச்சி..

இனி இந்தியாவில் ஜிஸியா எவ்வாறு வசூலிக்கப்பட்டது என்று பார்க்கலாம்.

ஜிஸியா பேரரசர் அக்பரால் நீக்கப்பட்டு, மதவெறியனான அவுரங்கசீப் காலத்தில் மீண்டும் ஹிந்துக்களின் மீது விதிக்கப்பட்டது. ஹிந்து காஃபிர்கள் எவ்வாறு ஜிஸியா கொடுக்க வேண்டுமென கீழ்க்கண்ட உத்தரவு விளக்குக்கிறது.

“அமைதி மார்க்கமான இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத காஃபிர்கள், அவர்களின் மரணத்திலிருந்து தப்புவதற்காக இந்த ஜிஸியா வரி விதிக்கப்படுகிறது. ஜிஸியாவைச் செலுத்துவதற்காக காஃபிர்கள் ஒவ்வொரு வருடமும் நேரடியாக வரவேண்டும். அவர்கள் சார்பாக வேறொருவர் மூலம் கொடுத்தனுப்புவது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு வரி செலுத்த வரும் காஃபிரானவன் நின்று கொண்டிருக்க வேண்டும், அதனை வசூலிக்கும் அதிகாரி உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். நிச்சயமாக காஃபிரின் கை கீழும், அதிகாரியின் கை மேலேயும் இருக்க வேண்டும். அந்த அதிகாரியானவன் காஃபிரைப் பார்த்து,’ ஜிஸியாவைச் செலுத்துவாயாக; ஓ காஃபிர்….’

என உரத்துச் சொல்ல வேண்டும்.

அமைதி தவழும் மார்க்கமான இஸ்லாம் ஆட்சிபுரியும் நாடுகளில் யூத, கிறிஸ்தவ, ஹிந்து ‘திம்மி’ காஃபிர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்; எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பதற்கான சிறிய உதாரணம் இது.

****

காஜி மொஹிதீன் என்பவரிடம், சுல்தான் முகமது கஜினி காஃபிர்களிடம் எவ்வாறு சுராஜ் (நிலவரி) வசூலிக்க வேண்டும் என்று ஆலோசனை கேட்கிறார். அதற்கு காஜியானாவர், மேற்கண்ட ஜிஸியா வரி வசூல் முறைகளைக் கூறிவிட்டு அதற்கும் மேலாக, “வரி கொடுக்கும் காஃபிர் வாய் திறந்து எதுவும் சொன்னால், வரி வசூலிக்கும் அதிகாரி அவன் வாயிலே எச்சிலைத் துப்ப வேண்டும். இவ்வாறு செய்வதனால் அந்த காஃபிர் தான் எத்தனை கீழான அடிமை என்பது, இஸ்லாம் எத்தனை மேலான மார்க்கம் என்பதுவும், பொய்யான கடவுள்களை அவன் வணங்கும் கேவலமும் அவனுக்கு விளங்கும்” என சுல்தானுக்கு எடுத்துக் கொடுக்கிறார்.

aurangzeb-jizya-tax

இதைப் போலவே, பாரசீக இஸ்லாமிய அறிஞரான முல்லா அகமது, மதச் சகிப்புத்தன்மை கொண்டவரான காஷ்மீரின் சுல்தான் ஜெயினுலாப்தீனுக்கு (1417-67) எழுதிய கடிதத்தில், “காஃபிர்களுக்கு ஜிஸியா வரி விதிப்பதற்கு முக்கிய காரணம் அந்தக் காஃபிர்களை அவமானப்படுத்துவது மட்டுமே. எனவே ஜிஸியாவை உடனே அமல்படுத்தி காஃபிர்களை கேவலப்படுத்துக; அவர்களை அவ்வாறு கேவலப்படுத்துவதால் மட்டுமே முஸ்லிம்களின் மரியாதையும், செல்வாக்கும் காஃபிர்களிடையே உயரும்” என்கிறார்.

பேரரசர் அக்பரின் மதச்சகிப்புத் தன்மையை எதிர்க்கும் சூஃபியான ஷாய்க்-ஷிரிண்டி (1564-1624), உடனடியாக காஃபிர்களின் மீது ஜிஸியா வரியை விதிக்கும்படி அக்பரிடம் கோருகிறார். அவ்வாறு ஜிஸியா விதிக்கப்பட்டால் “ஹிந்து காஃபிர்கள் முஸ்லிம்களைக் கண்டு அஞ்சி, நடு நடுங்கிக் கொண்டிருப்பார்கள்” என்கிறார்.

காரஜ் என்னும் கொடிய நிலவரிமுறை காரணமாக அலாவுதீன் கில்ஜியின் (1296-1316) காலத்தில் இந்திய விவசாயிகள் ஏறக்குறைய அரசாங்க அடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். அவர்கள் விளைவித்த பொருட்களிலிருந்து ஏறக்குறைய 50 முதல் 75 சதவீதம் வரை அரசாங்கத்தின் நிலவரியாக வசூல் செய்யப்பட்டது. அந்த முறையே பின்னால் வந்த பிற முகலாய அரசர்களாலும் கடைபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே பலமுறை சொன்னபடி, இந்திய ஹிந்துக்கள் ஷஹாதாவை (Shahadha) உச்சரிப்பதன் மூலம் (“இறைவன் ஒருவனே; முகமது அவரின் தூதர்”) இந்தக் கொடுமைகளிலிருந்து எளிதாகத் தப்பியிருக்க முடியும். ஆனால் பெரும்பான்மையான ஹிந்துக்கள் காடுகளில் ஒளிந்து வாழ்வதனைத் தேர்ந்தெடுத்தார்களே அன்றி ஒருபோதும் இஸ்லாமிய ஷஹாதாவை உச்சரிக்க முன்வரவில்லை என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுல்தான் ஃபிரோஸ்-ஷா-துக்ளக் அவரது பதுஹத்-இ-ஃபிரோஸ்-ஷாவில், தான் ஹிந்துக் காஃபிர்களுக்கு இழைத்த பல கொடுமைகள் காரணமாக அவர்கள் கூட்டம், கூட்டமாக அமைதி மார்க்கமான இஸ்லாமைத் தழுவியதாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

“எனது காஃபிர் குடிமக்களை இஸ்லாமிற்கு மாறுமாறு ஊக்கப்படுத்தினேன். அவர்கள் அவ்வாறு இறை தூதரின் மதத்திற்கு வந்தால் அவர்களுக்கு ஜிஸியா செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறினேன். இந்தத் தகவல் வெளியே பரவியதும் ஏராளமான காஃபிரி ஹிந்துக்கள் இஸ்லாமைத் தழுவ முன்வந்தார்கள். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அவர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக இஸ்லாமில் இணைந்தார்கள். அவர்களுக்கு ஜிஸியாவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது”

****

இந்திய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்களின் காஃபிர் குடிமக்களை மதம் மாற்றுவதற்கு ஏராளமான வழிமுறைகளைக் கையாண்டார்கள். அஸ்காரி என்பவர் அவரது அல்-தாரிக் என்னும் புத்தகத்தில் கூறுகிறார்:

“பேரரசர் அவுரங்கசீப் மதம் மாறிய ஹிந்துக்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க முன்வந்தார். அரசாங்க உயர்பதவிகள், சிறையிலடைக்கப்பட்ட பயங்கர குற்றவாளிகளுக்கு விடுதலையளித்தல், எல்லாவிதமான தாவாக்களிலும் (தகராறுகளிலும்) மதம் மாறிய முஸ்லிம்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் வழங்குதல், அரச மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுதல் போன்றவையே அவை”

இதன் காரணமாக பல படுபயங்கரமான கிரிமினல் குற்றவாளிகள் இஸ்லாமிற்கு மதம் மாறி தண்டனைகளிலிருந்து தப்பினர். இதே சூழ் நிலை இன்றும் உலகின் பல சிறைச்சாலைகளில் நிகழ்வதனைக் காணலாம். இரக்கமற்ற பல கிரிமினல்கள் இஸ்லாமைத் தழுவியதாக வரும் செய்திகளுக்கு இதுவும் ஒரு ஆதாரம்.

வட இந்தியாவில் இன்று காணப்படும் ஏராளமான முஸ்லிம்கள் அவுரங்கசீப்பின் காலத்தில் அவரால் பலவந்தமாக மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்து காஃபிர்களின் வழித் தோன்றல்களே ஆவார்கள்.

அவுரங்கசீப்பின் காலத்தில் இந்தியாவில் பயணம் செய்த ஐரோப்பியரான Niccolao Manucci இதனை உறுதி செய்கிறார். “ஜிஸியா வரியைச் செலுத்த இயலாத பல ஹிந்துக்கள் அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டார்கள்” என்கிறார். அவுரங்ககசீப் இதனைக் கண்டு மிகவும் மகிழ்ந்ததாகத் தெரிகிறது. அவுரங்கசீப்பின் காலத்தில் இன்றைய குஜாராத்தின், சூரத் நகரத்தில் தொழிற்சாலை நடத்தி வந்த Thomas Roll என்னும் ஆங்கிலேயர், “அவுரங்கசீப்பின் ஜிஸியா வரியைச் செலுத்த இயலாத ஏழை ஹிந்துக்களில் பலர் வேறு வழியின்றி முஸ்லிம்களாக மதம் மாறினர்” என்கிறார்.

aurangzeb_portrait1666-ஆம் வருடம் டிசம்பர் 15-ஆம் தேதி, அவுரங்கசீப் தனது ஆட்சியின் அனைத்துப் பகுதிகளிலிம் இருந்த ஹிந்து அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்து, அந்தப் பதவிகளில் முஸ்லிம்களை நியமிக்க உத்தரவிட்டார். ஏற்கனவே வரிச்சுமைகளாலும், இரண்டாம் தரக்குடிமக்களாகவும் அல்லலுற்றுக் கொண்டிருந்த ஹிந்துக்களின் முதுகெலும்பை ஒடித்தது. எனவே தங்களின் வாழ்வாதாரங்களைக் காக்க வேறு வழியின்றி பல ஹிந்து அதிகாரிகளும், அவரது உறவினர்களும் முஸ்லிம்களாக மதம் மாறினர்.

அவுரங்கசீப் அத்துடன் நில்லாமல், தனது பேரரசின் கீழிருக்கும் அத்தனை ஹிந்து ஜமீந்தார்களும் முஸ்லிம்களாக மதம் மாறவேண்டும் அல்லது மரணத்தைத் தழுவ வேண்டும் என அடுத்த ஒரு உத்தரவினை வெளியிடுகிறார். இதன்படி மனோகர்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த தேவிசந்த் என்னும் ஜமீந்தார் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவுரங்கசீப் தனது கோட்வாலை (executioner) தேவிசந்தின் சிறைக்கனுப்பி, அவர் உடனடியாக மதம் மாறினால் அவரை விட்டுவிடுவதாகவும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவரைக் கொல்லவும் உத்தரவிடுகிறான். இதன்படி தேவிசந்த் தனது உயிரைக் காத்துக் கொள்ள இஸ்லாமியராக மதம்மாறச் சம்மதிக்கிறார். எனவே அவரது பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்படுகிறது.

தேவிசந்தைப் போலவே மால்வாவின் ராம்பூரைச் சேர்ந்த ரத்தன் சிங் என்னும் ஜமீந்தாரும் இஸ்லாமியராக மதம் மாறித் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

இன்னும் சில சம்பவங்களில், அப்பாவி ஹிந்துக்கள் இஸ்லாமைக் கேவலமாகப் பேசியதாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, அதற்குத் தண்டனையாக இஸ்லாமியர்களாக மதம் மாறும்படி செய்யப்பட்டனர். சூரத்தில் வசித்த ஆங்கிலேயர் ஒருவர் 1668-ஆன் ஆண்டு செய்த ஒரு பதிவு இப்படிச் சொல்கிறது –

“முஸல்மான்கள், ஹிந்து பனியாக்களிடம் (Money Lenders) வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த விரும்பாமல், அவர்களின் காஜியிடம் (judge) சென்று மேற்படி பனியாவானவர் இறைதூதரையும், இஸ்லாமையும் பற்றிக் கேவலமாகப் பேசியதாக பொய் சொல்லி, அதற்குச் சாட்சியாக இரண்டு முஸ்லிம்களையும் அழைத்துச் சென்றார்கள். இதனால் காஜி அந்த பனியா தனது குடும்பத்தினருடன் உடனடியாக முஸ்லிமாக மதமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு அதன்படியே நடந்து முடிந்தது”.

 1685-ஆம் வருடம் அவுரங்கசீப் தனது அதிகாரிகளுக்கு விதித்த ஆணையொன்று, மதம் மாறுபவர்களுக்கு பணம் கொடுப்பதினைப் பற்றிக் கூறுகிறது. “மதம் மாறுகிற ஒவ்வொரு ஹிந்து ஆணுக்கு ரூபாய் நான்கும், ஹிந்துப் பெண்ணுக்கு ரூபாய் இரண்டும் அரசாங்க கஜானாவிலிருந்து சன்மானமாகக் கொடுக்கப்படும்” எனபதே அந்த உத்தரவு. அக்காலத்தில் நான்கு ரூபாய் என்பது ஏறக்குறைய ஒருமாத ஊழியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன், இவ்வாறு மதம் மாறிய ஹிந்து ஜிஸியா செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவான் என்றும் அந்த உத்தரவு மேலும் அறிவிக்கிறது. இதன் காரணமாக பல ஏழை ஹிந்துக்கள் முஸ்லிம்களாக மதம் மாறினார்கள்.

பிட்டூரைச் சேர்ந்த ஷெய்க்-அப்துல்-மொமின் என்னும் முகலாய ராணுவ அதிகாரி, அங்கிருந்த 150 ஹிந்துக் குடும்பங்களை இவ்வாறு பணம் கொடுத்து மதம் மாற்றியதாக ஒரு மொகலாய ஆவணம் கூறுகிறது.

அவுரங்கசீப் காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட்களை கூட்டம், கூட்டமாக கட்டாய மதமாற்றம் செய்தான். இதனால் துன்புற்ற காஷ்மீரி பண்டிட்டுகள் அன்றைய சீக்கிய குருவான தேஜ்பகதூர் சிங்கிடம் தஞ்சமடைந்து, அவரின் உதவியை வேண்டி நின்றார்கள். குரு தேஜ்பகதூர் அவுரங்கசீப்பின் அரசவையை அடைந்து இதுகுறித்து அவனிடம் எடுத்துரைக்கிறார். சினமடைந்த அவுரங்கசீப் தேஜ்பகதூரைச் சிறையிலைடைத்து, வாரக்கணக்கில் துன்புறுத்திப் பின்னர் அவரையும் இஸ்லாமியராக மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தான். இதனை ஏற்க மறுத்த குரு தேஜ்பகதூரும் அவரது இரண்டு சீடர்களும் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

Guru-Tegh-Bahadur-ji-martyrdom

இன்றைக்குக் கிடைக்கும் ஆவணங்களின்படி, அவுரங்கசீப்பின் காலம்வரையிலும் காஷ்மீரில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தது தெரியவருகிறது. அவுரங்கசீப்பின் கயமைத்தனமான போக்கின் காரணமாக இன்றைய காஷ்மீர் ஒரு இஸ்லாமிய மாநிலமாக மாறியிருப்பதுடன், மத அடிப்படைவாத, தீவிரவாதிகளின் சொர்க்கமாகவும் மாறியிருக்கிறது.

இதனையும் விட, மதம் மாறிய ஹிந்துக்களே தங்களின் சகோதர ஹிந்துக்களின் மீது கடுமையான வன்முறையக் கட்டவிழ்த்துப் படுகொலைகள் செய்திருப்பது இந்தியாவின் பல பாகங்களிலும் நடந்தேறியிருக்கிறது. உதாரணமாக, காஷ்மீரை ஆண்ட சிக்கந்தர் பட்ஷிகுன் (1349-1413) காலத்தில், அவரிடம் இருந்த ஒரு மதம் மாறிய பிராமண அமைச்சரொருவர் படுபயங்கரமான வன்முறையை ஹிந்துக்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட செய்திகள் ஆவணமாகியிருக்கின்றன.

இதே சிக்கந்தர் தனது ஃபரிஷ்டாவில் (Ferishtah), “இஸ்லாமியர்களைத் தவிர காஷ்மீரில் வாழும் பிற மதத்தினர் அனைவரும், குறிப்பாக ஹிந்துக்கள் எவரும் அவர்களின் மதச் சின்னங்களைத் தங்களின் நெற்றியில் அணிவது கூடாது. காஷ்மீரின் ஆலயங்களில் இருக்கும் எல்லா தங்க, வெள்ளிச் சிலைகளும் உடைக்கப்பட்டு, அவற்றை உருக்கி நாணயங்களாக மாற்றப்பட வேண்டும்.” என உத்தரவிட்டான்.

தங்களின் மதத்தை விட்டுப் பிரிய மனமில்லாத பல காஷ்மீரி பிராமணர்கள் விஷம் குடித்துச் செத்தார்கள். வேறு பலர் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஓடித்தப்பினார்கள். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் வேறு வழியின்றி இஸ்லாமியர்களாக மதம் மாறினர். இவைகள் நடந்து கொண்டிருக்கையிலேயே, காஷ்மீரின் அத்தனை ஹிந்துக் கோவில்களையும் இடித்துத் தள்ளும்படி உத்தரவிட்டான் சிக்கந்தர்.

சிக்கந்தரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அவனது மகன் அமீர்கான் (அல்லேஷா), முன்பு கூறிய அவனது தந்தையின் பிராமண அமைச்சரின் துணை கொண்டு காஷ்மீரில் தப்பிப் பிழைத்த ஹிந்துக்களை தேடித் தேடி கொலை செய்ய ஆரம்பித்தான். இது போன்ற செயல்களே அடுத்து வந்த மாலிக் ராணா மற்றும் காஜி சக்கின் காலத்திலும் காஷ்மீரில் தொடர்ந்தது.

(தொடரும்)

50 Replies to “வன்முறையே வரலாறாய்… – 4”

  1. \\ சிக்கந்தரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அவனது மகன் அமீர்கான் (அல்லேஷா), முன்பு கூறிய அவனது தந்தையின் பிராமண அமைச்சரின் துணை கொண்டு காஷ்மீரில் தப்பிப் பிழைத்த ஹிந்துக்களை தேடித் தேடி கொலை செய்ய ஆரம்பித்தான் \\

    காஷ்மீரத்தில் உள்ள ஹிந்துக்களைத் தேடித் தேடிக் கொலை செய்து அல்லது முஸல்மானாக மாற்றுதல் என்ற முயற்சியில் அக்கால பாத்ஷாக்கள் வேண்டுமானால் முழுமையாக வெற்றி பெறாது இருந்திருக்கலாம்.

    காங்க்ரஸ் கட்சியில் இருந்த ஒரே ஒரு மதசார்பற்ற முஸல்மான் என்று அறியப்பட்ட பண்டித நேருவும் அவரது புளுகு மூட்டை மதசார்பின்மை என்ற இஸ்லாமிய பயங்கரவாதமும்— காங்க்ரஸ் என்ற இஸ்லாமிய க்றைஸ்தவ மதவாதக்கட்சியும் — காஷ்மீரத்தில் விட்டுப்போன ஹிந்துக்களை ஹிம்சை செய்து அவர்களை காஷ்மீரத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்க முனைந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

    இந்த காங்க்ரஸ் எனும் ஆப்ரஹாமிய பயங்கரவாதக் கட்சி ஹிந்துஸ்தானத்தில் ஔரங்கசீப்பின் ஆட்சியை தொடர்கிறது.

    ஔரங்கசீப்பை அடியொற்றும் ஆப்ரஹாமிய மதவாத காங்க்ரஸ் கட்சி ஹிந்துக்களின் மீது மறைமுக ஜிஸியா வரியையும் விதிக்கிறது. ஹிந்துக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் முஸல்மாணியர் ஹஜ் யாத்ரை நிகழ்த்த தன உபகாரம் செய்கிறது ஆப்ரஹாமிய மதவாத காங்க்ரஸ் கட்சி. காஷ்மீரத்தில் உள்ள அமர்நாத்துக்கு ஹிந்துக்கள் யாத்ரை செய்வதற்கு இதே ஆப்ரஹாமிய மதவாத காங்க்ரஸ் கட்சி ஜிஸியா வரிவசூல் செய்கிறது.

  2. அருமையான கட்டுரை. தொடர்ந்து இன்னும் விஸ்தாரிப்புடன் எழுதுங்கள். நன்றி.

  3. All these violent blood history shows that god will not interfere. Act (y)ourselves to save (y)ourselves.

  4. இப்படி
    அபாண்டமாய்
    அவதூறை
    எழுத்தாக்கி வெளி
    இடுகிறீர்களே
    உங்களுக்கு
    கொஞ்சம்
    உறுத்தவில்லையா
    ஒரு இஸ்லாமிய
    அரசாங்கம்
    இருந்தால்
    அது
    முஸ்லிம்களிடம்
    சகாத்
    எனும்

    வரிஏய்
    கட்டாயம்
    பிடுங்கி
    ஆக
    வேண்டும்.இதுவே மற்ற
    சமுதாய
    மக்களிடம்
    ஜிஸ்யா எனும்
    பெயரில்
    வரிஏய்
    வாங்கியாகவேண்டும்
    இது
    எல்லா
    அரசுகளும்
    பொது
    மக்களுக்கு
    விதிக்கிற
    வரி
    முறைதான்
    இதோ
    நாம்
    வாழுகிற
    இந்த
    காலத்திலும்
    நாம்
    செலுத்துகிற
    வரிகள்
    கொஞ்சமா ஒரு
    பெரும்பான்மை
    சமுதாயத்தை
    ஒரு
    சிறுபான்மை
    அரசாங்கம்
    இவ்வளவு
    கொடூரமாய்
    நடத்தி
    இருக்க
    முடியுமா
    இவை
    எல்லாம்
    எழுதி
    இருப்பவர்க்கு
    நன்கு
    தெரியும்
    இருந்தாலும்
    வெறி.
    ஒரு
    சமுதாயதிர்க்கெதிரான கண்
    மூடித்தனமான
    வெறி
    இந்த
    வெறிதான்
    இவ்வளவு
    அப்பட்டமான
    அவதூறை
    அள்ளி
    வீச
    செய்கிறது
    இறைவன்
    மிக
    பெரியவன்
    அவனே
    நம்
    அனைவர்க்கும்
    சாட்சியாளன்
    அவனை
    அஞ்சிக்கொள்வோம்

    naam

  5. It wont be possible for The Akbar to abolish the normal tax itself from the majority Hindus. That means it is an additional tax.

  6. இஸ்லாம் மதம் இந்தியாவில் எப்படிப் பரப்பப்பட்டது, இதற்காக இந்துக்கள் எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்பன அறிந்து மனம் மிகவும் விசனப் படுகிறது. எங்கிருந்தோ வந்தவர்கள் இங்கு மன்னராகி மண்ணின் மைந்தர்களைப் படுத்தியபாட்டைப் படிக்கையில் மனம் ரணமாகியது.

  7. //நாம் செலுத்துகிற வரிகள் கொஞ்சமா //

    இது மக்கள் ஆட்சி – வரி செலுத்துவது கடமை. அரசாங்கம் ‘ஒ காபிர்’ என்று சொல்லி வரி வாங்குவதில்லை. அதிலும் சிறு பான்மையினருக்கு இந்த நாட்டில் செய்வது போன்ற சலுகைகள் வேறு எந்த நாட்டிலும் இல்லை.

    //பெரும்பான்மை சமுதாயத்தை ஒரு சிறுபான்மை அரசாங்கம் இவ்வளவு கொடூரமாய் நடத்தி இருக்க முடியுமா//

    மீரன்சாஹிப் – தாங்கள் முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கின்றீர்களா ?

  8. மீரான் சாகிபு,

    அவதூறா இது? இங்கு எழுதப்பட்டிருக்கும் தகவல்கள் எதுவும் நானாக கற்பனை செய்து எழுதியதல்ல. இங்கு எழுதியிருப்பவை அனைத்தும் இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களால் மற்றும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் ஏற்கனவே எழுதி வைத்திருப்பவை. இன்றைக்கும் கிடைக்கும் உண்மைத் தகவல்கள் அவை. வரலாற்றாசிரியரான எம். ஏ. கானின் புத்தகத்தில் அத்தனைத் தகவல்களுக்கும் ஆதாரங்கள் உண்டு. யாரால், எப்போது என்னும் தகவல்கள் உட்பட.

    கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள். இஸ்லாம் என்னும் மதத்தின் பெயரால் மானுடகுலத்திற்கு நிகழ்த்தப்பட்டிருக்கும், நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரங்கள் உங்களுக்குத் தெரியவரும்.

  9. கிருஷ்ணகுமார்,

    ஜவஹர்லால் நேருவும், மோதிலால் நேருவும் முஸ்லிம்கள் என்கிற உண்மை தமிழ்ஹிந்து தளத்தை வாசிப்பவர்களுக்குக் கூட தெரியாது என்றே நினைக்கிறேன். இந்திராகாந்தியின் உண்மைப் பெயர் ருக்ஸானா பேகம் என்பதோ, அவர் ஒரு முஸ்லிமான ஃபெரோஸ்கானைத்தான் மணந்தார் என்பதோ நமக்கு உறைப்பதில்லை. ஒரு ஹிந்துவை மணக்க ஜனாப் ஜவஹர் ஒருபோதும் சம்மதித்திருக்க மாட்டார். ஆக, சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தியா முஸ்லிம்களாலேயே ஆளப்பட்டது. ஆளப்படுகிறது.

    “பண்டித” ஜவஹர்லால் என்று வெட்கமில்லாமல் புளுகுகிறார்கள். காஷ்மீரில் நேரு என்று ஒரு குடும்பப் பெயரே இல்லை என சமீபத்தில் படித்தேன்.

  10. இங்க பாருப்பா மீரன்சாஹிப் சொல்றாரு வெறியாம்.சீக்கிய மதம் உருவானதே இஸ்லாமிய ஆட்சுயலர்களின் கொடுமையை எதிர்பதற்கு தான்.எண்களின் சோம்நாத் ஆலயத்தை பதினாறு முறை கொள்ளை அடிதானே கஜினி ,அப்போது இது அநியாயம் இல்லையா?.இதோ இரண்டு வருடங்கள் முன்பு கேரளத்தில் ஒரு ஆசிரியரின் கையை துண்டிதர்கலே அது அநியாயம் இல்லையா.இன்று வரை ஜம்மு காஷ்மீர் அரசு காஷ்மீர் பண்டிட்கள் வெளியேறியதற்கு கரணம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்கிறார்களே அது அநியாயம் இல்லையா??.இதற்க்கு எல்லாம் பதிலே வராது.

  11. மீரான் சாஹிப் அவர்களே ,

    உண்மை வரலாறு இஸ்லாமியப் படைஎடுப்பாளர்களால் எழுதப்பட்டது அல்ல. அந்த படை எடுப்பாளர்களின் சமகாலத்தில் வாழ்ந்த சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்டது. பொய் வரலாறுகளை ஏராளமாக உங்கள் சமுதாயத்தினர் மீது திணித்து, இஸ்லாம் என்பதே வன்முறை என்பதுபோல ஆக்கிவிட்டனர். இன்று தமிழகம் முழுவதும் இஸ்லாமியப்பெருமக்களில் ஒரு கும்பல் , இஸ்லாமிய ஞாநியர்களின் தர்காக்களை இடித்து அங்கு யாரும் வழிபட முடியாதபடி, இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலேயே செய்து வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ? இப்போதே இடிப்பு வேலைகளை செய்வோர் , ஆயிரம், ஆயிரத்து ஐநூறு வருடம் முன்னர் , சுமார் 12000 கோயில்களையும், புத்த விஹாரங்களையும், மாதா கோயில்களையும் , இடித்தும் தீக்கிரை ஆக்கியும் செய்து , இது வரை சுமார் 20 கோடி அப்பாவி மக்களை தற்கொலைப்படை என்ற பெயரில் படுகொலை செய்துள்ளனர். உண்மையான இஸ்லாமிய பெருமக்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி , கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் அமைதி குலைகிறது , கடவுளும் வேண்டாம், கடவுள் நம்பிக்கையும் வேண்டாம் என்று விலகி, நாத்திகர்கள் ஆகி வருகிறார்கள். இஸ்லாத்தின் கொடூர முகம் தான் இன்று உலகில் 16 இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை தோறும் , வாராந்திர தொழுகையின் போது, ஷியா முஸ்லீம்களை வஹாபி தீவிரவாத முஸ்லீம்கள் தற்கொலைப்படை ஆக மாறி , படுகொலை செய்வது ஆகும். இந்த படுகொலைகளை எதிர்த்து, தங்களைப்போன்ற அமைதி விரும்பும் இஸ்லாமியர்கள் tவாய் திறவாமல் மவுனம் சாதிப்பது ஏனுங்க ? உங்கள் மத தலைவர்கள் இதனை எதிர்த்து வாய் திறக்காமல் , தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்கள். தங்களுக்கு தமிழ் தெரிந்தால், tamil.alisina.org மற்றும் iraiyillaislam.blogspot. ஆகிய தளங்களில் உள்ள கட்டுரைகளைபடித்து உண்மைகளை அறியுங்கள்.

    மேலே ரூபன் அவர்கள், உண்மைகளை மட்டுமே சொல்லியுள்ளார். இது அவரது சொந்த கட்டுரை அல்ல. திரு எம் ஏ கான் அவர்கள் எழுதிய நூலை, தமிழில் மொழிபெயர்த்து மட்டுமே வெளியிட்டுள்ளார். அவரது இந்த தொண்டுக்கு தமிழ் கூறும் மனித இனம் முழுவதுமே கடமைப்பட்டுள்ளது.

  12. ஜெனாப் மீரான்சாஹேப்

    இந்த வ்யாசம் ஸ்ரீமான் அ.ரூபன் அவர்களது புனைவுகளல்ல என்று முதற்கண் அறிக. ஆங்க்ல பாஷையில் மற்றொரு முஸல்மாணிய சஹோதரரான ஜெனாப் எம்.ஏ.கான் சாஹேப் அவர்களால் எழுதப்பட்ட வ்யாசத்தின் மொழியாக்கம் இந்த வ்யாசம்.

    வ்யாசத்தின் துவக்கத்தில் தரவிறக்கம் செய்ய முடிந்த பிடிஎஃ கோப்பையும் கொடுத்துள்ளார்.

    “” பெரும்பான்மை சமுதாயத்தை ஒரு சிறுபான்மை அரசாங்கம் இவ்வளவு கொடூரமாய் நடத்தி இருக்க முடியுமா இவை எல்லாம் எழுதி இருப்பவர்க்கு நன்கு தெரியும் இருந்தாலும் வெறி.””

    அஹம்துலில்லாஹ்………. ஒன்னேகால் வரியில் எழுத முடிந்த வாசகத்தை பதினேழு வரியில் எழுதியுள்ளீர்களே. இது என்ன வெறியோ? அல்லது இப்படி எழுதி விட்டால் இந்த வ்யாசத்தின் ஆசிரியர் வெறிபிடித்தவர் என நிரூபணம் செய்ததாக ஆகிவிடுமோ? 🙁

    தாங்கள் ஆலிஃப், பே,பே, தே என உர்தூ வாசித்தவர் என்றால் ஆங்க்ல வ்யாசத்தை வாசித்து மேலும் உர்தூ மூலத்தில் என்ன எழுதியிருக்கிறது என்றும் வாசித்து …… இரண்டிற்கும் இடையே உண்மையிலேயே ……. வித்யாசங்கள் இருக்கின்றன என்றால் …..அதைப் பகிர்ந்தால் ……… ஜெனாப்-ஏ-அலி அவர்கள் சமூஹத்திற்கு தள வாசகர்கள் சுக்ர்குஜார் ஆக இருப்போமே.

    நேர்மையாக கருத்துப் பகிர விழையலாமே ஜெனாப்-ஏ-அலி அவர்கள்.

    இஸ்லாம் மதத்தைக் கபூல் செய்ய விழையாத மாற்று மதத்தைச் சார்ந்த காஃபிர் திம்மிகளின் மேல் சுமத்தப்பட்ட வரி ஜிஸியா என சரித்ர ஆவணங்கள் முகத்தில் அறைவது போல தெரிவிக்கின்றன. இதற்கு மாற்றுத் தரவுகள் அடுத்த பக்ஷம். முதலில் இங்கு வைக்கப்பட்ட தரவுகளின் உர்தூ மூலம் இதற்கு மாறாகத் தெரிவிக்கிறதா என்று பரிசீலனை செய்து கருத்துப் பகிரவும். மேலும் காஃபிர்களை அவமான கரமாகவும்….. இழிவு மிகவும்….. கொடுமை மிகவும்….. பித்தலாட்ட முறைமைகளிலும்…. மதமாற்றம் செய்ததான தரவுகள்….. இவற்றையும் உர்தூ மூலத்தை வாசித்து …… இங்கு பகிரப்பட்ட தரவுகள் சரியல்ல என்றால் …… ஜெனாப் எம்.ஏ. கான் சாஹேப் அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கலாமே.

    ஓலமிடுவதாலோ கூச்சலிடுவதாலோ தரவுகள் பொய்யாகிவிடாது……. முறையாகப் பரிசீலனை செய்து மூலத்தரவுகள் சொல்வது என்ன என்று கருத்துப் பகிர விழைந்தால் …… கருத்துப்பகிர்வதில் நேர்மை இருக்கிறது என அவதானிக்கலாம்.

    குதாஹாஃபீஸ்

  13. after reading all these things also, people like meeran saheb are not having any humanitarian feeling /consideration and want to justify the kiilings, tax and compulsory conversion.
    these people’s only hope is that sonia congress will do it for them again.
    if this trend continues again one section has to pay “jisya” and our constitution will change.

  14. the author is wrong in asserting 20 % people only embraced other religion.
    if you put afghanisthan, pakisthan, bangladesh and india together it is almost 50% people were converted.
    earlier indian rulers failed mainly due to
    older methods of war strategy,
    giving to importance to raja dharma,
    negligence of happenings in other kingdoms, ( for thyem fire in next house meant fire in other world)
    thinking about their kingdoms only.
    Above all, people who invaded behaved like animals.

  15. மீரான் அவர்களே,
    ஏன் எல்லோர்க்கும் ஜிசியா என்று இருந்தால் என்ன?
    எழுதியிருப்பவரும் ஒரு முஸ்லிம்தானே?உங்கள்ளில் பலர் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டவர்களே என்பதை உணருங்கள்.எல்லாம் இஸ்லாமியர்களால் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.ஆனால் நம் அரசாங்கம் வோட்டுக்காக அதை நம் சரித்திர புத்தகங்களில் எழுதுவதில்லை.

  16. @meeransahib
    Did you even read the article? The evidence of Islamic atrocities are from the horse’s mouth, from the PRIMARY SOURCES and not from the imagination of the author. Refute it with facts and not by Taqyya or emotions. Muslims are in denial of their barbaric atrocities.Way forward is accept and apologize and respect Hindu faith.Accept the fact that your fore fathers were Hindus and they got converted to Islam at the point of sword. We are not impressed with crocodile tears of Muslims.

  17. மீரான் சாஹிபுக்கு அவர் போக்கில தான் பதில் தரனும். இவஹல புரிஞ்சிகிடவே மாட்டேங்குறோம்.

    ஒரு சிறுபான்மை அரசு பெரும்பான்மை மக்களை அடக்கி ஆளுமா. இஸ்ரேல் எவ்வளோ சின்ன நாடு, அதன் மக்கள் தகை எவ்வளோ குறைவு அவங்க போய் அவர்களை சுற்றி இருக்கும் மா பெரும் இசுலாமிய அரசாங்ககள் மீது அத்து மீறுவார்களா மாட்டார்கள். நம்புங்கள் மாட்டார்கள் அவங்க சும்மா அப்பப்ப ராகேட் உடுவாங்க அது தெரியாம பக்கத்து நாட்ல விழுந்திருது

    ஜெசியா வரி. சரி வாத்யாரே, இப்போ நாம புதுசா ஒரு வரி அமைப்பு கொண்டு வருவோம். வருமான வரி + ஒருவனுக்கு எத்தனை புள்ளை குட்டி என்பதை வைத்து ஒரு வரி (இரு பிள்ளைகள் வரை வரி விலக்கு உண்டு). இது கட்டயாமாக பாரதத்தில் குடும்ப கட்டுப்பாட்டை கொண்டுவரவே ஒழிய முஸ்லீம்களின் பெருக்கத்தை தடுக்க அல்ல நம்புங்கள் அல்ல. யாஹ் அல்லா

    நீங்கள் எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் கேளுங்கள் மீரான் சகோ அல்லாவிற்கு பிடிக்காத காபிர் கடவுள்களின் அருளால் உங்களுக்கு தக்க பதில் தருவோம்.

  18. மீரானின் லாஜிக்கை வைத்து கொடூர கொலையாளி விடுதலையானார்

    கணம் கோர்டார் அவர்கள்: நீ நூறு கொலை பண்ணியா.

    கேடி பில்லா: இல்ல சாமி, நா எப்படிங்க ஒரு தனி ஆளு கொலையானவங்கலொ நூறு பேரு. ஒருத்தன் எப்படிங்க நூறு பேர கொள்ள முடியும். வேணும்னா மீரான் பாய கேட்டு பாருங்க அவர் விளக்கமா தர்க்கம் சொல்லுவார்

    கணம் கோர்டார் அவர்கள்: ஐயோ ஆள விடு, உன்னைய விடுதலை பண்ணிர்றேன்

  19. நண்பர் மீரான் சாயிபு ரொம்ப வருத்த பட வேண்டியதில்லை…..

    இன்றும் நம் மக்கள் இலவசம், வரி விதிப்பில் இருந்து விலக்கு என்பதற்க்கெல்லாம் அதை தரும் கட்சிகளை ஆதரிப்பவர்கள் ஆக இருப்பதனாலும், அந்த கட்சிகளில் சேருபவர்கலாக இருப்பதாலும் , அன்று கொள்ளை வரியாக இருந்த ஜிசியாவில் இருந்து தப்பிக்க ஹிந்து காபிர்கள் இஸ்லாமிய மார்கத்திற்க்கு மதம் மாறினார்கள் என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.இஸ்லாமியராக மாறினால் வரி சுமை கொஞ்சம்( வருமானத்தில் 2 இல் இருந்து 2.5 சதவிகிதம் தான்) தான் அதுவே ஹிந்து காபிராக இருந்தால் வருமானத்தில் முக்கால்வாசி (The highest rates ranged from 33% to 80% of all annual farm produce on land inside the Islamic empire நன்றி:விக்கிபீடியா-jizya ) என்று ஜிசிய விதித்தால் ஏன் தான் அன்று ஹிந்து காபிர்கள் மதம் மாறி இருக்க மாட்டார்கள்.

    அதோடு மட்டும் இல்லாமல், பஞ்சாப் சிந்து மற்றும் பல வட இந்திய பகுதிகளை ஆண்ட சுல்தானியர் ஹிந்து காபிர்கள் ஒட்டு மொத்தமாக இஸ்லாமிற்கு மதம் மாறுவதையும் விரும்பாமல் இருந்து இருக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் இருப்பதையும் நண்பர் மீரான் தெரிந்து கொண்டால் நல்லது. அது ஏன் மாறக்கூடாது என்று நீங்கள் கேட்ட்க விரும்பினால், அதற்கும் சாதாரண அரசியல் தெரிந்தவர்களும் சொல்லி விடுவார்கள். எல்லாரும் முஸ்லிம் ஆகி விட்டால் அரசாங்க வருமானம் குறைந்து விடுமே என்பது எல்லா குடிமகனுக்கும் புரியும் விஷயம்.

    ஆதலால் நண்பர் மீரான் தெளிவாக ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ளவேண்டும்.அது என்னவென்றால் அன்றைய ஹிந்து காபிர்கள் அதாவது இன்றைய பெரும்பான்மையான முஸ்லிம்களின் முன்னோர்கள் ஜிசிய வரியில் இருந்து தப்பிக்கவும்,அரசாங்கத்தின் சலுகைகளையும் ஆதாயங்களையும் பெறவும் வேண்டியும், நல்ல கலர்புல்லான மனைவிகளை (துர்க்கிய மங்கோலிய கலப்பின பெண்டீர்) பெறவும் வேண்டியும், சக ஹிந்துக்களின் சொத்துக்களை, அழகான பெண்களை தமக்கு வேண்டும் என்றால் எளிதாக எடுத்துக்கொள்ளவும் வேண்டியும், இஸ்லாமிய அரசாங்க அடக்கு முறைகளுக்கு பயந்தும்,இறப்பதை காட்டிலும் எதாவது ஒரு வகையில் வாழ்ந்து மடிவோம் என்று எண்ணியும்,கொஞ்சம் பேர் இஸ்லாமிய சுபி கொள்கைகள் பிடித்தும், இன்னும் கொஞ்சம் பேர் ஹிந்து மற்றும் முஸ்லிம் மதங்களில் உள்ள ஒத்த கருத்துக்கள் பிடித்து, ராஜாவும் அந்த மதத்தை செந்தவராக இருந்த காரணத்தினாலும் மதம் மாறினார்கள் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இன்னும் அதிகமான பேர் ஹிந்து மதத்தை காக்க வேண்டியும் இஸ்லாமிற்கு மதம் மாறி இருக்கிறார்கள் என்பதையும் மறுபதற்கு இல்லை!!! ஆனா இன்னைக்கி அது தெரியாம அவங்க சந்ததியினர் மிகவும் கொஞ்சம் பேர், தன் சகோதரனை,சகோதரியை கொல்ல துணியும் அளவில் பெற்றொடொல்லர் வேலை செய்ய வைக்கிறது.

    மதம் மாறாமல் விடாப்பிடியாக கொண்ட கருத்தில் உறுதியாக நின்ற சனாதானிகள் ஏராளமானோர் அன்று அந்நிய தேசத்தில் இருந்து வந்த முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள் என்பதையும் நண்பர் மீரான் நினைவில் கொண்டால் நல்லது.

    இருக்கும் அனைத்து ஹிந்துக்களையும் கொன்று விட்டால் அரசாங்க வருமானம் குறைந்து விடுமே என்ற காரணத்திற்காகவும் ஏவல் செய்தால் வேலை செய்ய அடிமைகளாக இருக்க ஆட்கள் வேண்டும் என்ற காரணத்திர்க்காகவும் உயிருடன் விடப்பட்ட ஹிந்துக்களின் சந்ததியினர் தான் இன்று மீதம் இருக்கும் பெரும்பான்மையான ஹிந்துக்களின் மிச்சம். அந்த நன்றி கடனுக்கு தான் இன்னைக்கும் அதுல கொஞ்சம் பேர் விணா போன போலி மத சார்பின்மைய பேசினு இருக்காங்க.

    மீரான் அண்ணா, கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.. இந்த இறைத்தூதர், இறைவசனம், இறைவன் இதெல்லாம் நம்ம ஆளுங்களுக்கு எப்பவுமே ஜுஜுபி தான் !!

  20. There is a identity issue(crisis?) for many(few?more?most?) Indian muslims who think they are descentants of Muslim rulers and nawabs (arabs?). Hence any real history hurts their emotions. I request Tamilhindu to post about Indian (Hindu) kings.

  21. நான் அவதூறு என்று ஆதங்க பட்டதை, இல்லை வரலாறுதான் என்று இங்கு
    அனைவருமே சாதித்திருக்கிறார்கள்.சரி உங்கள் வாதப்படியே
    இது வரலாறுதான்.இதற்கும் இஸ்லாமிய மார்கதிற்கும்
    என்ன சம்மந்தம் இருக்கிறது?முஸ்லிமாக பிறந்த சில மோசமான மன்னர்கள்
    என்றுதானே இதை எடுத்து கொள்ளவேண்டும் அனைத்திற்கும்
    வழி காட்டும் இஸ்லாம் ஒரு நல்ல ஆட்சியாளர் இஸ்லாமிய நெறிப்படி எப்படி
    ஆள வேண்டும் என்பதை மிக தெளிவாக சொல்லி இருக்கிறது.எந்த
    ஒரு முஸ்லீமால் மற்ற மனிதர்க்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லையோ
    அவனே நம்பிக்கையாளன் என்று தனி மனிதனுக்கும் சொல்கிறது.’நீங்கள் ஒரு
    சமுதாயத்தை விட மிகைதிருக்கிறீர்கள் என்ற காரணத்தால் வரம்புமீரிவிடாதீர்கள்’
    இது குரானுடய வார்த்தை.என் மரியாதைக்குரிய சகோதரர்களே என் மார்க்கம்
    ஒரு
    போதும் மக்களை எதிரியாக நினைக்க சொல்லவில்லை.ஆனால் ஒருபோதும் ஓரிறை கொள்கையில் சமரசம் செய்துவிடாதே என்று சொல்கிறது.பெற்ற தாய்-தந்தையாக இருந்தாலும் இறை கொள்கையில் கட்டுப்பாட்டு விடாதே அதே வேளை
    ஒரு மகனாக அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் நீ ஒருபோதும் தவறிவிடாதே என்றும் கட்டளைஇடுகிறது.என் நிறுவனத்தில் வேலை செய்யும்
    ஹிந்து சகோதரர்களோடு நான் இந்த முறையில்தான் நடந்து கொள்கிறேன்.அவர்களின் உரிமையை நல்ல முறையில் சேர்த்து விடுவதில் இறைவனுக்கு அஞ்சுகிறேன்.என்னை ஒருபோதும் என் மார்க்கம் மூர்கமானவனாக
    ஆக்கவில்லை.

    i

    .

  22. மீரான் சாகிபு,

    “தக்கியாவா”? பலே. 🙂

    இதை எவனாவது இளிச்சவாய் காஃபிரிடம் போய்ச் சொல்லுங்கள். உங்கள் அலுவலகத்திலேயே கூட அப்படிப்பட்ட காஃபிர்கள் இருப்பார்கள். அவர்களிடம்.

    குரான் அன்பைப் போதிக்கிறதாம். ஒரு சில அரசர்கள்தான் தவறு செய்துவிட்டார்களாம். மீரான் சாகிபு நமக்குப் பாடம் எடுக்கிறார்.

    ஏதேது, போகிற போக்கைப் பார்த்தால் நீங்கள் அமைதி மார்க்க வழிகாட்டியை, I mean குரானை ஒழுங்காகப் படிக்கவில்லை போலிருக்கிறதே மீரான். உடனே படித்துவிடுங்கள். அல்லா கோபித்துக் கொள்ளப் போகிறார். அல்லது அருகிலிருக்கும் முல்லாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

    பைஸாண்டியம், பெர்ஷியாவில் ஆரம்பித்து நேற்றைய சூடான் வரை அமைதி மார்க்கம் செய்த, செய்துகொண்டிருக்கிற அட்டூழியம் கொஞ்சமா நஞ்சமா? இறைதூதர் என்று நீங்கள் நம்புகிற முகமது நபியின் குரானை அடிப்படையாக வைத்துத்தானே இத்தனை பேரழிவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 200 மில்லியன் காஃபிர்களான இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ரத்த ஆறே ஓடியிருக்கிறது இங்கே. இந்தியாவில் நிகழ்ந்தது போன்ற பேரழிவு உலகில் இன்றுவரை வேறெங்கும் நடக்கவில்லை. ஹிட்லரால் கூட அதனைச் செய்ய முடியவில்லை. அந்தப் பேரழிவிலிருந்து இந்துக்களால் இன்றுவரை தலையெடுக்க முடியவில்லை. அத்தனையும் அமைதிமார்க்க வழிகாட்டியின் வழிகாட்டுதல்களின் பெயரில்தான் நடந்தது. நீங்கள் எங்களுக்குப் பாடம் எடுக்கிறீர்கள். சரிதான்.

    By the way, பைசாண்டியம் எங்கே இருக்கிறது? கூடுவாஞ்சேரிக்குப் பக்கத்திலா என்று அடுத்த செய்தி அனுப்பினாலும் அனுப்புவீர்கள் மீரான் சாகிபு. ஏனென்றால் குரானையே ஒழுங்காகப் படிக்காதவர் நீங்கள்!

    அடிக்கடி எழுதுங்கள் மீரான் சாகிபு. உங்களைப் போன்றவர்கள்தான் எனக்கு உற்சாக டானிக்கே.

  23. அன்புள்ள திரு மீரான் சாயப் அவர்களுக்கு,

    மனிதன் இறைவன் மீது நம்பிக்கை கொள்வதும் , நம்பிக்கை இல்லாமல் இருப்பதும் அவனுடைய சொந்த விவகாரம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும், இஸ்லாத்திலேயே பிற பிரிவினரையும்,(ஷியா மற்றும் அகமதியா போல ), பிற பெயர்களில் கடவுளை வணங்குவோரையும் இஸ்லாமியர்கள் பல நாடுகளிலும் கொடுமைப்படுத்தி , பல கோடி கொலைகளை செய்துவருகிறார்கள். இதனை தடுக்க தங்களைப் போன்றோர் ஒரு கண்டன அறிக்கை கூட விடுவதில்லை.

    உத்திரப்பிரதேசத்தில் மருமகளைக் கற்பழித்த மாமனாரையே அந்த பெண் கணவனாக ஏற்று வாழவேண்டும் எனவும் , அவள் கணவன் இந்த கற்பழிப்புக்கு பின்னர் , அவளுக்கு மகனாக மாறிவிட்டான் என்றும் இஸ்லாமிய ஷாரியா சட்டப்படி தீர்ப்பு வெளியிடப்பட்டது. இன்றுவரை இந்த தீர்ப்பை எதிர்த்தாவது , உங்களில் யாராவது வார்த்தைகளிலாவது கண்டனம் தெரிவித்தீர்களா ?

    வன்முறை, பெண்கொடுமை, இரண்டும் ஊக்குவிக்கப்படும் ஒரு மார்க்கமே அது என்று எல்லோரும் கருத ஆரம்பித்து விட்டனர். உலகெங்கும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் , கடவுள் நம்பிக்கையின் பெயரால் வன்முறை கூடாது என்று கருதி, இஸ்லாத்தை விட்டு விலகி, கடவுளே வேண்டாம், கடவுள் நம்பிக்கையால் நன்மைகள் மிக மிக குறைவு, தீமைகளோ அதிகம் உள்ளது என்பதை உணர்ந்து , நாத்திகர்களாக மாறிவருகிறார்கள். தயவு செய்து கற்பனைகளில், கற்பனை உலகில் வாழாதீர்கள். iraiyillaislam ,tamil.alisina.org ,மற்றும் senkodi ஆகிய தமிழ் தளங்களில் சென்று படித்து, விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை உலகில் இருக்கலாம், தவறில்லை, ஆனால் கடவுள் நம்பிக்கையின் பெயரால் , பிற மனிதனை அடிமையாக்க நினைப்பதும்,அச்சுறுத்துவதும், தன் கருத்தை ஏற்காதோரை கொல்வதும் தவறு. உங்கள் மத நூல்களில் அவற்றை நியாயப்படுத்தும் பகுதிகளை உங்களால் நீக்க முடியாது. எனவே தான் பலரும் தங்கள் மதத்தை விட்டு விலகி ஓடுகிறார்கள். உண்மை தெரியாதவர்கள் மட்டுமே தற்போது இருக்கிறார்கள். அவர்களும் விவரம் தெரிந்துவிட்டால் , ஓடிவிடுவார்கள்.

    இஸ்லாமிய ஞானிகளின் சமாதிகள் ஆகிய தர்காக்களில் , அனைத்து மதப் பொதுமக்களும் வழிபடுவது வழக்கம்.இது பல காலமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது ஒரு புதிய கூட்டம் உங்கள் மதத்தில் கிளம்பி, தர்காக்களை இடித்து சின்னாபின்னமாக்கி வருகிறது. உங்களை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

    அன்பை வளர்ப்போம், வெறுப்பை ஒழிப்போம்.

  24. தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் ஒரு தலித் பெண் இருக்கிறாள். அவள் இரவு நேரத்தில் தனியாகக் செல்கையில், அவளை 10 பேர் சேர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறார்கள். அவளை அந்த நிலைக்கு ஆளாக்கியதில் 6 பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பிள்ளைமார். பாதிப்புள்ளாகிய பெண், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

    V_mask_by_Sylent_Phantom

    இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. நடந்ததாக வைத்துக் கொள்வோம். என்ன நடந்திருக்கும் தெரியுமா ?

    முகநூலே கொந்தளித்திருக்கும். ஆதிக்க சாதியின் அராஜகம். தலித்துக்கெதிரான ஒடுக்குமுறை என்று ஒரு பக்கம். மற்றொரு பக்கம் பெண் என்றால், அதுவும் தலித் பெண் என்றால் இளக்காரமா.. என்று மற்றொரு பக்கமும் வாரக்கணக்கில் நிலைச் செய்திகள் ஆவேசமாக வெளி வந்தபடி இருந்திருக்கும்.

    விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் பட்டிருக்கும். முஸ்லீம் அமைப்புகள் வீதியில் இறங்கியிருக்கும். மனித உரிமைப் போராளிகள் மற்றும் நடுநிலையாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வோர், மாய்ந்து மாய்ந்து கட்டுரைகள் எழுதியிருப்பார்கள். உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களில், தலித்தியம், பைத்தியம், வைத்தியம், வெங்காயம் போன்ற தலைப்புகளில், படித்தாலே தலை வலி வருகிறார்ப்போல கட்டுரைகள் எழுதுவார்கள். அதைப் படித்து விட்டு, ஆகா ஓகோவென்று சிலாகித்து, முகநூலில் வர்ணிப்பார்கள் முற்போக்காளர்கள். இது தவறு என்று சொல்ல இயலாது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து முற்போக்காளர்கள் நிற்பதே நியாயமான விஷயம்.

    ஆனால், இது எதுவுமே காரைக்கால் விஷயத்தில் நடக்கவில்லை. காரைக்கால் சம்பவம் என்ன ?

    “பாண்டிச்சேரியை அடுத்த காரைக்காலுக்கு தோழியுடன் வந்த திருவாரூரைச் சேர்ந்த 21 வயது பெண், அடுத்தடுத்து இரண்டு முறை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவம் டிசம்பர் 25-ல் நடந்துள்ளது.

    தனது நண்பரைப் பார்ப்பதற்காக புதுச்சேரி வந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட இந்தப் பெண். தன்னுடன் வந்த தோழிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், இவர்கள் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வெளியே நின்றிருந்த அந்தப் பெண்ணை, மூன்று ஆண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    அந்தப் பாலியல் வல்லுறவுத் தாக்குதல் முடிந்ததும், தகவல் அறிந்து அந்தப் பெண்ணை அவரது நண்பர்கள் மீட்பதற்குள், அப்பெண்ணை மற்றொரு கும்பல் இன்னோர் இடத்துக்கு அழைத்துச் சென்று ஆறு முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் தொடக்கம் முதலே காரைக்கால் போலீஸார் கவனம் செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. சிலரது யோசனையின் பேரில் வெளியே தெரியாமல் இந்த வழக்கில் பேசித் தீர்வு காண போலீஸார் முயன்றனர். பின்னர், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை புதுச்சேரி மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என காரைக்காலைச் சேர்ந்த முகம்மது இர்பான், அப்துல்காசிம், முகம்மது அமீர் அலி, அக்பர் அலி, முகம்மது யூசுப், முப்பாயைத், அப்துல்நாசர், திருநள்ளாறைச் சேர்ந்த மதன், எழிலரசன், பாபுராஜன் ஆகிய 10 பேர்களைக் கைது செய்து வியாழக்கிழமை இரவு காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மீதமுள்ள 5 பேர்களில் இளம் குற்றவாளியை புதுச்சேரி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தேடப்பட்ட 4 பேரில் பைசல் என்பவர் வெள்ளிக்கிழமை காரைக்கால் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஜெயகாந்தன் என்பவரை வேளாங்கண்ணியில் போலீஸார் கைது செய்தனர்.

    இந்நிலையில் ஜெயகாந்தன் அளித்த தகவலின்பேரில் செல்லப்பா என்பவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் மணி என்பவரை குற்றப்புலனாய்வுத் துறையினர் தேடி வருகிறார்கள்.

    சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் வேலையை செய்து வந்தவரான மணிக்கு, நகரில் உள்ள பல்வேறு கும்பலுடனும் தொடர்புள்ளதாம். வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்ட ஜெயகாந்தன்தான் முதலில் இளம்பெண்ணை மிரட்டி மணியின் அறையில் வைத்துக்கொண்டு, தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    ஜெயகாந்தன் மீது ஒரு பெண்ணைத் தாக்கியது உள்ளிட்ட 2 வழக்குகள் உள்ளன. கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் 1994-ம் ஆண்டு ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டில் 18 மாத சிறை தண்டனை பெற்றவர். ரூ.5 ஆயிரம் பிணைத்தொகை கட்டி வெளியே வந்தநிலையில் மீண்டும் வல்லுறவு வழக்கில் அவர் சிக்கியுள்ளார்”.

    இதுதான் காரைக்கால் சம்பவம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் சரிபாதி தலித்துகள். சரிபாதி இஸ்லாமியர்கள். ஆனால், இந்த சம்பவம் குறித்து பெருமளவில் கண்டனங்களோ, எழவில்லை.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர், காரைக்கால் எம்.எல்.ஏ நஜீமின் உறவினர்கள். இந்த சம்பவம் குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நஜீம், பாதிக்கப்பட்ட பெண், விலை மாது, அதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று கொஞ்சமும் மனசாட்சி இன்றி பேட்டியளித்தார். இந்தப் பேட்டி மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஒரு சாதாரண சலனத்தைத் தாண்டி, பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறியது.

    13298_103380996372042_2005344_n

    நஜீம் எம்.எல்.ஏ

    திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் இப்படிப் பேசியதற்காக, அவரை கட்சி கண்டித்திருக்க வேண்டும். அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை.

    முற்போக்காளர்கள் என்று அழைத்துக் கொள்வோரின் கனத்த மவுனம், மிகவும் அதிர்ச்சியை வரவழைத்தது. எம்.எல்.ஏவை கண்டிக்காதது மட்டுமல்ல, அதில் சம்பந்தப்பட்டவர்கள் தலித் என்பதை கூட வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். ஒரு பெண்… அவள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும்…. இப்படிப்பட்ட மோசமான சீரழிவுக்கு உள்ளாகியிருக்கையில், அதில் ஈடுபட்டவர்களை அப்பட்டமாக துகிலுரிந்து அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளின் செல்வாக்கு எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள். 24ம் தேதி இரவு நடந்த நிகழ்வுக்கு 26ம் தேதி விடியற்காலை வரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதும், சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதும் எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், காவல்நிலையத்தில், அந்தப் பெண் மோசமானவள் என்றும், பாலியல் தொழிலாளி என்றும்

    தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அநீதி நடக்கையில் பொங்கியெழ வேண்டியது, நடுநிலையாளர்கள் மற்றும் மனசாட்சி உள்ளவர்களின் கடமை என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால், அதே தலித்துகளும், இஸ்லாமியர்களும், அயோக்கியத்தனங்களில் ஈடுபடுகையில், எவ்வித தயக்கமும் இன்றி அவர்களை விமர்சிக்கவும், கண்டிக்கவும் வேண்டும் என்பதுதான் ஒரு நடுநிலையாளருக்கான அடையாளம்.

    Source:
    https://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1910:2014-01-16-04-35-25&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19

  25. திரு. ரூபன்.

    அதிகம் இல்லை 5 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த இலங்கை வரலாறை பாருங்கள் அப்போது தெரியும். இதை விட கேவலமான அவலம் அங்கு நடந்து இருக்கிறது. அந்த அவலத்தை நடத்தியது இசுலாமிய ஆட்சியாளர்கள் கிடையாது. மகிந்த ராஜபட்சே என்கிற ஒரு பவுத்த சிங்கள இன வெறி மிருகம் அதை நடத்தி முடித்தது. உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமானால் திருப்பதிக்கு வந்து பூரண கும்ப மரியாதையுடன் பெருமாளை தரிசனம் செய்து விட்டு போன அதே பவுத்த பாசிச மிருகம் தான்.. வெறும் 2 ஆண்டுகளில் சிங்கள ராணுவத்தால் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் மன்னிக்கவும் இந்து தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்களின் கலாசார சின்னமான கோவில்கள் பல இடிக்கப்பட்டன… பல இந்து தமிழ் பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதை பற்றிஎல்லம் இந்த தளத்தில் யாரும் ஒரு மூச்சு கூட விடவில்லை. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி என்பது 300 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போன ஒன்று… ஆக, 400 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட இந்துகளுக்காக வார்த்தைக்கு வார்த்தை கண்ணீர் வடித்து இஸ்லாமியர்களுக்கு எதிராக கட்டுரை தீட்டும் தாங்கள் 4 ஆண்டுகளுக்கு முன்னாள் நம் கண் முன்னே இந்து தமிழர்களை கொன்றழித்த பவுத்த பாசிசத்தை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே ஏன்? தாங்கள் தான் என்றில்லை இந்த தளத்தில் இசுலாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக வரிந்து கட்டி கொண்டு கட்டுரை கணைகளை தொடுக்கும் எழுத்தாளர்கள் அனைவருமே ஈழ தமிழர் அழிப்பை கண்டுகொள்ளாதது ஏனோ? தமிழர்களை கொன்ற பவுத்தம் இந்திய மதம் என்பதாலா அல்லது விவேகானந்தர் கூறியது போல் பவுத்தம் இந்து மதத்தின் ஒரு கிளை மதம் என்பதாலா. ஒருவேளை ராஜபட்சே இசுலாமியனாக இருந்திருந்தால் இந்நேரம் தங்களின் வன்முறையே வரலாறாய் தொடர் இலங்கையில் இருந்து தொடங்கியிருக்கும் அப்படிதானே!!!! ஹ்ம்ம்… உங்களின் அடுத்த பாகமாவது இந்துகளுக்கு எதிரான பவுத்த மத அட்டுழியங்களை தோலுரித்து காட்டுகிறதா என்று பாப்போம்.. ஒரு மனசாட்சியுள்ள உண்மையான இந்துவாக இதை கேட்கிறேன்…

    //குறைந்தபட்சம் 200 மில்லியன் ஹிந்துக்கள் இந்தியாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ரத்த ஆறே ஓடியிருக்கிறது //

    200 மில்லியன் என்றால் 20 கோடி என்று அர்த்தம்.. 20 கோடி இந்துக்களை இசுலாமியர்கள் கொன்றார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. பாரதியார் காலத்திலேயே 30 கோடி தான் இந்தியாவின் மக்கள் தொகை. அதற்க்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு அதிகபடியாக 20 கோடி தான் இருக்கு வாய்ப்பு உண்டு. நீங்கள் கூறும் கணக்கு படி பார்த்தல் இந்தியாவில் இந்நேரம் இந்துகளோ இந்து மதமோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

    இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களில் சிலர் கொடுங்கோல் ஆட்சி புரிந்தார்கள் என்பது உண்மைதான். அவர்களால் இந்துகளின் உயிர் பறிக்க பட்டது என்பதும் உண்மை தான்.ஆனால் நீங்கள் கூறுவது போல் 200மில்லியன் இந்துக்களை கொன்றார்கள் என்பதெல்லாம் அபத்தம். இந்தியாவை ஆண்ட இசுலாமிய மன்னர்களை காட்டிலும் இந்தியாவை கொள்ளையடிக்க வந்த இசுலாமியர்களால் தான்(தைமூர் ,கஜினிமுகமது, கோரிமுகமது) போன்ற கொள்ளையர்களால் தான் இந்துகளின் உயிரிழப்பு அதிகம். அவர்களுக்கு தேவை இந்தியாவின் செல்வம் அது இருக்குமிடம் இந்து கோவில்களில்,இந்துகளின் கோவில்களில் மலை மலையாக செல்வம் குவிந்து இருப்பது அவர்களின் கண்களை உறுத்தியது. ஆகவே செல்வங்களை கொள்ளையடிக்க கோவிலை தாக்கினார்கள். அதை தடுக்க வந்த அப்பாவி இந்துக்கள் பலர் பலி ஆனார்கள் ..அதுவும் கூட பல ஆயிரங்களில் தானே தவிர.. நீங்கள் சொல்வது போல் கோடிகளில் எல்லாம் கிடையாது.. மற்றபடி இந்தியாவை ஆண்ட முகலாயர்கலான பாபர், ஹுமாயுன், அக்பர், ஜெஹன்கிர் போன்றோர்கள் நல்லாட்சியே தந்தார்கள். கடைசியாக வந்த அவுரங்கசிப் ஒரு மத வெறியன் என்பது உண்மையே ஆனால் அதற்காக இந்துக்களை கோடிகளில் கொலை செய்யும் அளவிற்கு அவன் செல்லவில்லை … மாறாக இந்துகளின் அடிப்படை உரிமைகளை பறித்தான். எப்படி ராஜபட்சே தமிழர்களின் உரிமையை பறித்தானோ அதே போன்று .. ஏற்கனவே உள்ள பழைய கோவில்களை விட்டு ,புதிதாக கட்டிய கட்டி கொண்டு இருக்கும் கோவில்களை இடிக்க ஆணையிட்டான் ஜிசியா என்னும் வரியை இந்துக்களின் தலையில் திணித்தான் இவ்வளவே.

  26. \\ குறைந்தபட்சம் 200 மில்லியன் ஹிந்துக்கள் இந்தியாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ரத்த ஆறே ஓடியிருக்கிறது இங்கே. உலகில் வேறெந்த மனிதக் கூட்டத்திற்கும் இத்தகைய அவலம் இன்றுவரை நேர்ந்ததில்லை. அத்தனையும் அமைதி மார்க்க வழிகாட்டியான குரானை அடிப்படையாக வைத்து, அது சொல்வதன்படி நடந்த ஒன்று. \\

    அதற்கு பின்னும் மிலேச்சர்களால் ஹிந்துக்களை முழுதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்ற முடியவில்லை. ஜெனாப் மீரான் அவர்களுடைய மூதாதையர்களின் ரத்தமும் இதில் அடங்கும்.

    இஸ்லாம் மதப் படி ஒழுகுவது உங்கள் விருப்பம். அது அமைதி மார்க்கம் என்று சொல்வதை உலக நிகழ்வுகள் மற்றும் உலக சரித்ரம் சார்ந்து ஏற்க முடியாது.

    சஹ ஹிந்துக்களுடன் அன்புடன் தாங்கள் பழகுவது நன்று. ஹிந்துக்களும் தங்களுடன் பணி புரியும் இஸ்லாமிய சஹோதரர்களுடன் அவ்வாறே பழகுகிறார்கள் என்பதனையும் அன்பர் அறிந்திருக்க வேண்டும்.

  27. India முஸ்லிம்களுக்கு அதிலும் தமிழ் முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனி தன்மைய உண்டு உறடனம் சுபி ப்ஹிலொச்ப்ஹிஎச் , சுபி படால்கல் , Dhargah என பல உண்டு தமிழ் இல் இல்ல்யகங்கல் என்று உண்டு …… வருத்தமான விஷயம் என்னவென்றால் வ்ஹபிய கொள்கைகளால் அவைகளின் குரல் கேட்காமல் போகின்றன

  28. தவறுகளுக்கு மன்னிக்கவம்
    உறடனம்-Example Udharanam

  29. //ஆனால் ஒருபோதும் ஓரிறை கொள்கையில் சமரசம் செய்துவிடாதே என்று சொல்கிறது.//

    ஓரிறை கொள்கையில் ஒன்றுபட்டிருந்தால் அவர்களிடம் நாட்டையும், நாட்டிலுள்ள ஹிந்துக்களையும் கூட தான் நீங்கள் அடகு வைக்கத் துணிவீர்கள். நீங்க இந்தியாவா, பாகிஸ்தான்ஆனு வந்தா எப்புடி இந்தியாவுக்கு ஆதரவா நிப்பீங்க? பாகிஸ்தான்காரன் மும்பையில நுழைஞ்சு 10 பேரா சேர்ந்து 500 பேர கொலை பண்ணா கூட நீங்க நாட்டுக்கும் முன்னாடி மதத்தைத் தான் வெப்பீங்க! ஏன்னா ஓரிறை கொள்கையில் ஒற்றுமை ஆயிடுதே! ஹிந்து செத்தா எனக்கென்ன? நாம சோனியாவுக்கு ஓட்டுப் போட்டு அல்லாவ கும்பிட்டா போதுமே! இதான சார் உங்க லாஜிக்கு?

    அடிபட்டு, மிதிபட்டு, வெட்டு வாங்கி, ரத்தம் சிந்தி, உயிரைக் கையில புடிச்சுக்கிட்டு எங்க பாட்டன் பூட்டன்லாம் சந்ததிய இங்க தழைச்சு விட்ருக்காங்க! அதையெல்லாம் படிச்சு ரத்தக் கண்ணீர் வராத குறையா வெதும்பிக்கிட்டு இருக்கோம். நீங்க எங்ககிட்ட வந்து அன்பு மார்க்கம், அஹிம்சை மார்கம்னு ரீல் ஒட்டீற்றுக்கீங்க. அவதூறா இது? உண்மை சார்! இறைங்கிறது அவனவன் உணர வேண்டிய விஷயம். நீங்க அல்லானு கும்புடுறீங்க! நாங்க லிங்கமா, சிவனா, பெருமாளா, முருகனா கும்புடுறோம். சம்சாரி கடவுளைக் குடும்பஸ்தனாகவும், யோகி இறையை இந்த மொத்த அண்டசராசரமாகவும், உருவமாகவும், உருவத்திலும், உருவமில்லாப் பேரறிவாகவும் பார்க்கிறான். அதை அல்லாஹ் நு தான் எல்லாரும் கூப்பிடணும்னு எப்புடி சொல்ல முடியும்? என் தாய்மொழியில அல்ல னா இல்லைன்னு தான் அர்த்தம். இல்லேன்னா இல்லாத ஒன்னை நான் ஏன் கும்பிடணும்? அல்லாவும், சிவனும், பெருமாளும் ஒண்ணு தானு எந்த முஸ்லீமாவது சொல்லீருக்கீங்களா?

    அல்லா என்னும் ஒரு பெயரால் எத்துணை உயிர்கள் பலி வாங்கப்பட்டிருக்கிறது? அதற்கு சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்த இந்தியர்களுள் ஒருவரான நீங்கள் இத்தகைய கொடுமைகள் (சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் சம்பவம் போன்று) சமகாலத்திலும் நிகழும்போது ஒரு எதிர்ப்புக் குரலாவது கொடுத்திருக்கிறீர்களா? சொல்லமாட்டீங்க! உங்க ஓரிறைக் கொள்கை லாஜிக்கு தடுத்துரும்.

  30. இங்கு இஸ்லாத்தின் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக வைக்கப்படுகின்றன. ஆனால் ஹிந்துக்களிலேயே 90 சதமான நல்லுள்ளம் கொண்டவர்கள் உங்களின் புரட்டுக்களை நம்பத் தயாரில்லை.

    ஏ ஆர் ரஹ்மானை தொடர்ந்து இளையராஜாவின் இளைய மகன் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறி விட்ட செய்தி தெரியுமா? இன்னும் சிறிது நாளில் வெளி உலகுக்கு தெரிய வரும். யுவன் சங்கர் ராஜாவை எந்த அரசர் கட்டாயப் படுத்தி மத மாற்றம் செய்தனர் சார்? கொஞ்சம் விளக்கினால் நல்லது? எந்த பெட்ரோ டாலர் அவரை மாற்றியது? அவரிடம் இல்லாத பணமா? சிந்தியுங்கள்.

  31. மீரான் அவர்களே
    ஈரானிலும் ஈராக்கிலும் மன்னர்களா அடித்துக் கொள்கிறார்கள் ;சாதாரண மக்கள்தானே ஷியா ,சன்னி என்று பிரிந்து அடித்துக்கொண்டு சாகிறார்கள்.
    ஜிசியா வரி உங்கள் மத சட்டத்தில்தானே உள்ளது?
    wafa sultan என்று டைப் செய்து you tube ல் பாருங்கள்.அதில் அவர் எப்படி இஸ்லாமையும் வறுத்து எடுக்கிறார் என்று.அதில் ஒரு அமெரிக்க முஸ்லிம் ஜிசியா வரி கொடுத்தால் முஸ்லிம்களோடு மற்றவர்கள் வாழலாம்;அதனால் நீங்களும் நாங்களும் சமமென்று அர்த்தமாகாது என்று உங்கள் மதத்தின் உண்மையை உண்மையை உடைக்கிறார்.

  32. திரு ரூபன் அவர்களே,
    கிறிஸ்தவர்களின் கொலை வெறி இஸ்லாமியர்களைவிட எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
    A.R. Priolkar எழுதி உள்ள Goa Inquisition பற்றி எழுதவும்.

  33. மீரான் அவர்களே,
    கஜினி,கோரி போன்றோர் வெறும் கொள்ளைக்காரர்கள் போல சித்தரித்து இஸ்லாம் மதத்தை தப்பிக்க வைக்கப் பார்க்கிறீர்கள்.wikepedia பார்க்கவும்.

    Mahmud, according to several contemporary accounts, considered himself a Ghazi who waged jihad on the Hindus. His plunder of Hindu temples and centers of learning is noted later in the article. Al-Biruni writes:
    In the interest of his successors he constructed, in order to weaken the Indian frontier, those roads on which afterwards his son Mahmud marched into India during a period of thirty years and more. God be merciful to both father and son! Mahmud utterly ruined the prosperity of the country, and performed there wonderful exploits, by which the Hindus became like atoms of dust scattered in all directions, and like a tale of old in the mouth of the people. Their scattered remains cherish, of course, the most inveterate aversion towards all Muslims. This is the reason, too, why Hindu sciences have retired far away from those parts of the country conquered by us, and have fled to places which our hand cannot yet reach, to Kashmir, Benares, and other places. And there the antagonism between them and all foreigners receives more and more nourishment both from political and religious sources.[18]
    Various historical sources such as Martin Ewans, E.J. Brill and Farishta have recorded the introduction of Islam to Kabul and other parts of Afghanistan to the conquests of and Mahmud:
    The Arabs advanced through Sistan and conquered Sindh early in the eighth century. Elsewhere however their incursions were no more than temporary, and it was not until the rise of the Saffarid dynasty in the ninth century that the frontiers of Islam effectively reached Ghazni and Kabul. Even then a Hindu dynasty the Hindushahis, held Gandhara and eastern borders. From the tenth century onwards as Persian language and culture continued to spread into Afghanistan, the focus of power shifted to Ghazni, where a Turkish dynasty, who started by ruling the town for the Samanid dynasty of Bokhara, proceeded to create an empire in their own right. The greatest of the Ghaznavids was Muhmad who ruled between 998 and 1030. He expelled the Hindus from Gandhara, made no fewer than 17 raids into India,[19]
    He encouraged mass conversions to Islam, in India as well as in Afghanistan[19]
    Attack on ‘Kafiristan’:
    Another crusade against idolatry was at length resolved on; and Mahmud led the seventh one against Nardain, the then boundary of India, or the eastern part of the Hindu Kush; separating as Firishta says, the countries of Hindustan and Turkistan and remarkable for its excellent fruit. The country into which the army of Ghazni marched appears to have been the same as that now called Kafirstan, where the inhabitants were and still are, idolaters and are named the Siah-Posh, or black-vested by the Muslims of later times. In Nardain there was a temple, which the army of Ghazni destroyed; and brought from thence a stone covered with certain inscriptions, which were according to the Hindus, of great antiquity.[20]
    The military of Pakistan has named its short-range ballistic missile in the honour of Mahmud of Ghazni, the Ghaznavi Missile.[25].

    பாகிஸ்தான்காரன் ஒரு ஏவுகணைக்கு கொள்ளைக்காரன் பெயரா வைப்பான்?
    கஜினி முஹமது தன்னை ஒரு காஜி என்றே கருதினான்.
    மீரான் அவர்களே -உண்மையை உணருங்கள்.உங்கள் முன்னோர்களும் ஒரு கொடுமைக்கு ஆளாகியே மதம் மாறியிருப்பார்கள்.

  34. தாயுமானவனுக்கு சிறிது கணக்கு சொல்லிக்கொடுக்கவேண்டுமா என்ன ? இந்தியாவில் இஸ்லாமிய மன்னர்கள் படை எடுப்பு ஆரம்பித்து இன்றுவரை, சுமார் 1100 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவின் மக்கள் தொகை என்பது பிறப்பும் , இறப்பும் மாறி மாறி வரும் விஷயம். எந்த நாட்டிலும் அப்படித்தான். பிறந்தவரில் இறந்தவரை கழித்தால் எவ்வளவு கூடுகிறதோ அவ்வளவு தான் மக்கள் தொகைப்பெருக்கத்தின் அளவு. இறந்தது என்பது ஒரே போரில் அல்ல, ஆயிரத்து நூறு வருட தாக்குதல்கள் மற்றும் போர் மற்றும் தற்கொலைப்படை எல்லாம் இதில் அடங்கும். 20 கோடி அல்ல அதற்கு மேலேயே இருக்கும். அதாவது சராசரியாக வருடத்துக்கு இரண்டு லட்சம் பேரை காவு வாங்கி இருக்கிறது இஸ்லாம். போர் நடக்கும் வருடங்களில் மிக அதிகமாகவும் , போர் இல்லாத வருடங்களில் சிறிது கம்மியாகவும் இந்த உயிர்ப் பலி நிகழ்ந்துள்ளது. போரில்லாத வருடங்களில், மத மாற்றம் செய்ய மறுப்போரை கொன்ற கணக்கு எவ்வளவு என்பதை அறிய , iraiyillaislam ,faithfreedominternational , senkodi , alisina .org இன்னும் ஏராளமான வலைத்தளங்களில் விவரங்கள் உள்ளன. படியுங்கள், உணர்வீர்கள்.

  35. தனி ஒருவர் விருப்பப்பட்டு இஸ்லாத்துக்கு மாறுவது அவரது தலை எழுத்து. ஆனால் அது வன்முறை, பெண்ணடிமை இவற்றின் மொத்த தொகுப்பு என்பதை மூடி மறைக்க முடியாது. சுவனப்பிரியன் , ஒரு இசை அமைப்பாளரின் மகனோ, மகளோ , மதம் மாறுவதால் உங்கள் குற்றங்களை மூடி மறைக்க முடியாது .ஏற்கனவே இஸ்லாம் ஆனவர்கள் இஸ்லாத்தை விட்டு விலகி கோடிக்கணக்கில் நாத்திகர்கள் ஆகிவருகிறார்கள். ஏனெனில் பெண்ணடிமையையும், வன்முறையையும் உலகில் விரும்புவோர் குறைவு.

  36. தாயுமானவன் அவர்களே,
    முந்தய என்னுடைய பதிவுகள் உங்களுக்கும் சேர்த்துதான்.கஜினி.கோரி பற்றிய உங்கள் கருத்துக்கும் பதில்கள்.
    இலங்கைத் தமிழர்கள் பற்றி – அங்கு ரத்த ஆறு ஓடியதற்குக் காரணம் பிரபாகரன் என்ற சுயநலம் பிடித்த மிருகத்தினால்தான்.விடுதலைப் புலிகள் கொன்ற தமிழர் பட்டியலை நீங்கள் உங்கள் பதிவில் வெளியிடுவீர்களா?வீரர்கள் என்று கூறிக்கொண்டு பொட்டைத்தனமாக சாதாரண மக்களின் நடுவில் இருந்து கொண்டு அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர்.இதனாலும் உயிரிழப்பு அதிகம்.
    ேண்டுமென்றே அப்பாவி மீது வன்முறை செய்த சிங்கள ராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டியவர்களே.
    இந்தத் தளத்தில் நம் நாட்டைப் பற்றியேதான் அதிகம் இடம் பெறுகிறது.இஸ்லாமியர்கள் இங்கு நிகழ்த்திய கொடுமைகள் இன்று வேறு ரூபங்களில் நம்மை பாதிக்கிறது.அதனால்தான் அதிகம் எழுகிறார்கள்.

  37. அன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன்

    காலம் கடந்த மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    சித்திரை மாதம் வரும்போது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களையும் தங்களுடன் பகிருவேன்.

    ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதனைத் தாங்கள் மட்டிலுமல்ல….. இந்த தளத்தில் சிறியேனும் இங்கு கருத்துப் பகிரும் ஏனைய வாசகர்களும் வலிமிக ஏற்கிறார்கள் என்பதனை அறிக.

    சிங்களப் பேரின வாதத்துக்குப் பலியான குட்டிமணி, ஜகன் போன்றோரை அடியொற்றி எழுந்து……

    ஒரு காலத்தில் புரட்சித் தலைவர் ஸ்ரீஎம்.ஜி.ராமச்சந்த்ரன் அவர்களுடைய அன்புக்கும் அன்றைய ப்ரதம மந்த்ரி ஸ்ரீ ராஜீவ் காந்தி அவர்களுடைய நம்பிக்கைக்கும் ஆதரவாக இருந்த …….. ஸ்ரீ ப்ரபாகரன் அவர்களது தலைமையில் எழுந்த விடுதலைப்புலிகள் ….. என்ற இயக்கம் தடம் மாறி சொந்தத் தமிழ்ச் சஹோதரர்களை…………தமிழ் பேசும் ஹிந்துக்கள், முஸல்மான்கள், க்றைஸ்தவர்கள் …… என்று பலரையும்………… மாற்றுக்கருத்துள்ளவர்கள் என்ற காரணத்தால் அழித்தொழித்ததை…………. ஈழத்தமிழர்கள் உட்பட இன்று அனைவரும் உரத்துப் பேசுகிறார்கள் என்பதனை மறவாதீர்கள்.

    மகிந்த ராஜபக்ஷே என்ற ஸ்ரீலங்காவின் ராஷ்ட்ரபதி யுத்த காலத்தில் நிகழ்த்திய அந்யாயங்கள் உலகப் பொது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற தங்கள் கருத்து ந்யாயமானதே……

    ஆனால் அதை அடிப்படையாக வைத்து ஒட்டு மொத்த பௌத்த மதத்தை அவலமிக்கதாக மறைமுகமாக தாங்கள் கருப்பு மசி தீட்ட முனைவது ந்யாயமாகுமா? ராஜபக்ஷே ஈழத்தில் நிகழ்த்திய கோரதாண்டவம் தான் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியதே அன்றி அன்னார் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது அல்ல. புறச்சமயத்தவர் வழிபட ஏழுமலையில் எந்தத் தடையும் இல்லை. இன்று ஜெனாப் சுவனப்ரியனோ அல்லது எந்த முஸல்மாணிய சஹோதரர்களோ க்றைஸ்தவ சஹோதரர்களோ ஏழுமலையானை தரிசனம் செய்ய விழைந்தாலும் ஹிந்துக்களான நாம் அனைவரும் மகிழ்ச்சியே அடைவோமா இல்லையா சொல்லுங்கள்?

    \\\ அதிகம் இல்லை 5 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த இலங்கை வரலாறை பாருங்கள் அப்போது தெரியும். இதை விட கேவலமான அவலம் அங்கு நடந்து இருக்கிறது. அந்த அவலத்தை நடத்தியது இசுலாமிய ஆட்சியாளர்கள் கிடையாது. \\

    ஈழத்தில் நடந்த அவலங்களை …….. ஹிந்துஸ்தானத்தை உடைத்து நொறுக்க விழையும்….. தமிழ்ப்பிரிவினை வாத தேச த்ரோஹப் பதர்கள் ……. உள்ளது உள்ள படி பொது தளத்தில் வைத்திருக்க மாட்டார்கள்

    https://tamilhindu.com/2012/02/snatched-up-lands-of-eastern-srilanka1/

    https://tamilhindu.com/2012/02/snatched-up-lands-of-eastern-srilanka2/

    https://tamilhindu.com/2012/03/snatched-up-lands-of-eastern-srilanka-3/

    மேற்கண்ட சுட்டிகளைப் பாருங்கள். தமிழ் ஹிந்துக்களை கிழக்கு ஈழத்தில் துன்பத்திலாழ்த்தி அவர்களுடைய கோவிலகளை உடைத்து நொறுக்கி அவர்களுடைய காணிகளை அபகரித்த இழி செயல் செய்தவர்கள் தமிழ் பேசும் முஸல்மாணியர் என்பதனை துன்பமிக தெரிவிக்கின்றன மேற்கண்ட வ்யாசத்தொடர்.

    ************* தமிழ் பேசும் முஸல்மான் கள் சிங்களக்காடயர்களுடன் ஒன்றிணைந்து தமிழ் பேசும் ஹிந்துக்களை கிழக்கு ஈழத்தில் அழித்தொழித்த அவலத்தை ஏற்கிறீர்களா என்பதனை இந்த தளத்து வாசகர்களுடன் பகிரவும்************

    பரங்கியன் எழுதிய தேம்பாவணியும் முஸல்மாணியர் எழுதிய சீறாப்புராணமும் தமிழில் எழுதப்பட்டவை என்பதனாலேயே என்னாலும் உங்களாலும் நம்முடைய அடுத்த தலைமுறைகளாலும் நம் தலைமீது சுமந்து என்றென்றும் பாதுகாக்கப்படும்.

    ஆனால் தேவாரமும், திவ்யப்ரபந்தமும், திருப்புகழும், திருவாசகமும்……….. புறச்சமயத்தை விதந்தோதுவதாலேயே………. தமிழ் பேசும் க்றைஸ்தவர்களாலும் முஸல்மான் களாலும் இழித்தும் பழித்தும் பேசப்பட்டும்…………. அழித்தொழிக்கவும் முனையப்படும் என்பதனை மறவாதீர்கள்.

    நம்முடன் கருத்துப் பகிரும் ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் ஆஃப்கனிஸ்தானத்தில் புத்தர் சிலைகளை தாலிபான் மதவெறியர்கள் குண்டு வைத்து தகர்த்ததை பொது தளத்தில் ந்யாயப்படுத்து உள்ளார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஹிந்துஸ்தானத்தை உடைத்து நொறுக்கி…… தமிழ் ஹிந்துக்களை க்றைஸ்தவ மதத்துக்கு பித்தலாட்ட முறைமைகளில் மதமாற்ற விழையும்…… பரங்கிப் பாதிரிகளுக்கு விலைபோனவர்கள்……..ச்ச்சீமான் போன்று சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இழிவு செய்யும் வீணர்கள்………..பரங்கிப் பாதிரிமார்களுடைய பணத்தில் கொழுத்த என்.ஜி.ஓ ஆன உதயகுமாரன் போன்றோர்கள்…………

    இவர்களுடைய தலைமையில் எழுந்த போராட்டங்களில் தமிழ் பேசும் முஸல்மான் கள் தமிழ் பேசும் ஹிந்துக்களுக்கு இழைத்த அநீதிகளை எப்போதும் சொல்லியிருக்க மாட்டார்களே?????

    அப்படி சொல்லாவிட்டால்………… அவர்கள் இழைத்த அநீதி மற்றும் கொடுமைகள் இல்லாமல் ஆகி விடுமா?

    ஏறாவூரில் தமிழ் பேசும் முஸல்மாணிய சஹோதரர்கள் ……. லிபியாவில் நிகழும் கொடுமைக்கு பதாகைகள் ஏந்துகிறார்களாம்………. ஆனால் அருகே சொந்த பந்தங்களான தமிழ் பேசும் சஹோதரர்களது ஆலயங்களை அடித்து நொறுக்குவார்களாம்; காணிகளை அபகரிப்பார்களாம்………….. அசிங்கமாக இல்லை……. இந்த மதவெறியர்கள் ஒஸாமா பின்லேடன்; அஜ்மல் கசாப், ஔரங்கஜீப், பாபர் போன்றோருக்கு வேண்டுமானால் சஹோதரர்களாக இருக்கலாம். உங்களுக்கும் எனக்கும் எப்படி சஹோதரர்களாக ஆவார்கள்.

    மாற்று மொழியே பேசினாலும் முஸல்மான் களுக்கும் கடந்த பத்தாண்டுகளாக நல்வாழ்வு அளித்து வரும் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி உங்களுடையவும் என்னுடையவும் சஹோதரர்………..

    மாற்று மதத்தையே சார்ந்திருந்தாலும்…………. உங்களுடையவும் என்னுடையவும் புனிதமான சிரபுராதனதமிழ்ப்பண்பாட்டைப் போற்று விதந்தோதும்…………. ஸ்ரீமான் ஜோ.டி.குரூஸ், ஸ்ரீ கே.ஜே.ஏசுதாஸ் அவர் மகன் விஜய் போன்றோர்……..உங்களுடையவும் என்னுடையவும் சஹோதரர்

    மாற்று மதத்தையே சார்ந்திருந்தாலும்…….உங்களுடையவும் என்னுடையவும் புனிதமான சிரபுராதன ஹிந்துப்பண்பாட்டுச் சுவடுகளை எல்லை கடந்தும் போற்ற விழையும் ஸ்ரீ அயாஸ் ரஸூல் நஸ்கி, ஸ்ரீ மீர் குலாம் ரஸூல் நஸ்கி, உஸ்தாத் ஸ்ரீ பிஸ்மில்லா கான் சாஹேப் போன்றோர் ………..உங்களுடையவும் என்னுடையவும் சஹோதரர்

  38. \\ இங்கு இஸ்லாத்தின் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக வைக்கப்படுகின்றன. \\

    ஜெனாப் சுவனப்ரியன், இங்கு இஸ்லாம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இஸ்லாமியரான ஜெனாப் எம்.ஏ.கான் சாஹேப் அவர்களால் எழுதப்பட்ட ஆங்க்ல வ்யாசத்தில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ அ.ரூபன் அவர்களது புனைவுகள் அல்ல இங்கு பகிரப்பட்ட கருத்துக்கள்.

    ஆலிஃப், பே,பே, தே என முறையாக தாங்கள் உர்தூ வாசித்திருந்தால்……….. மூல உர்தூ நூற்களில் கான் சாஹேப் அவர்கள் பகிர்ந்த கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்குமானால்….. அவருக்கும் இந்த தள வாசகர்களுக்கும் மூல நூற்கள் சார்ந்த மாற்றுக்கருத்துக்கள் யாவை என்பதனை முன் வையுங்கள்.

    வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாதவை என உரத்துப் பேச முயலவது சரியன்று.

    \\ ஆனால் ஹிந்துக்களிலேயே 90 சதமான நல்லுள்ளம் கொண்டவர்கள் உங்களின் புரட்டுக்களை நம்பத் தயாரில்லை. \\

    அப்படியா? ஏதாவது சர்வே எடுத்துள்ளீர்களா? அடித்து விடுவதெல்லாம் ஆதாரம் ஆகாது ஐயன்மீர்.

    உரக்கப்பேசி விட்டு ……… கல்லெறிந்து விட்டு சென்று விடுவது வாத முறைமை ஆகுமா?

    உங்களுடைய இஸ்லாமிய தேசங்களில் மாற்று மதங்களை ப்ரசாரம் செய்ய அனுமதி மட்டும் கொடுத்துப் பாருங்கள். எத்தனை கோடி பேர் இஸ்லாமை விட்டு விலகுகிறார்கள் என்பது தெரியவரும்.

  39. இந்துக்களை முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் கொஞ்சமாகத்தான் கொன்றார்களாம். நான் சொன்னது அபத்தமாம். சுவனப்பிரியன் இன்னொரு தக்கியாவை எடுத்து வீசுகிறார். இணையத்தில் தேடினால் மூட்டை, மூட்டையாக தகவல் கிடைக்கிறது.

    https://www.danielpipes.org/comments/45331
    https://www.danielpipes.org/comments/186810
    https://www.topix.com/forum/religion/islam/TQBFHTDDGV8CBQ6F9
    https://en.wikipedia.org/wiki/Muslim_conquest_in_the_Indian_subcontinent

    குரானைப் பற்றி அவதூறாக வேறு சொல்கிறேனாம். நம்பிக்கையாளன் ஒரு காஃபிரைக் கொன்றால் சுவனம் நிச்சயம் என்று அமைதிமார்க்க வழிகாட்டி தெளிவாக சொல்கிறதே சுவனப்பிரியன். அப்படியெல்லாம் மூடத்தனம் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    சுவனம் போவதற்கு Shortcut சொல்லித்தரும் அமைதிமார்க்க வழிகாட்டியின் பெருமைதான் என்னே!

  40. \\ தமிழர்களின் கலாசார சின்னமான கோவில்கள் பல இடிக்கப்பட்டன… பல இந்து தமிழ் பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதை பற்றிஎல்லம் இந்த தளத்தில் யாரும் ஒரு மூச்சு கூட விடவில்லை. \\

    அன்பின் ஸ்ரீ தாயுமானவன், உங்கள் மீதும் நீங்கள் கலப்பில்லாத் தூய தமிழ் மீது கொண்ட உயர்வான பற்றின் மீதும் நான் மிகவும் மதிப்பு வைத்துள்ளேன்.

    ஆனால் இந்த தளத்தின் மீது கூசாது ஒரு அவதூறு வைப்பதற்கு முன் தளத்தை ஒருமுறை அலசிப்பாருங்கள்.

    ஹிந்துஸ்தானத்தைப் பிளந்து தனித் தமிழ்நாடு அமைக்க விரும்பும் க்றைஸ்தவ முஸல்மாணிய கைக்கூலிகள் மக்கு மாணவர்களை சேர்த்துக்கொண்டு போராட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் பொதுச்சொத்துக்களை நாசம் செய்ததும்….. மக்கு மாணவர்களின் பெற்றோரின் உழைப்பை போராட்டம் என்ற பெயரில் இழிவு செய்ததையும் ஈழத் தமிழர்களுக்கு உபகாரம் செய்தது என்று கருதுகிறீர்களா அன்பரே? ஸ்ரீலங்காவிலிருந்து ஹிந்துஸ்தானத்தில் பௌத்த ஆலயங்களையும் ஹிந்து ஆலயங்களையும் க்றைஸ்தவ ஆலயங்களையும் தர்சனம் செய்யவரும் அப்பாவி சிங்கள சஹோதரர்களை தாக்குவதை ஈழத்தமிழர்களுக்கு செய்யும் உபகாரம் என்று கருதுகிறீர்களா?

    ஈழத் தமிழர்களுக்குத் தேவை நேரடி உபகாரங்கள். வாழ்வு சீரமைப்பு; சிங்களப்படை அழித்த மற்றும் தமிழ் பேசும் முஸல்மாணியர்கள் சிங்களக் காடயர்களுடன் சேர்ந்து சூறையாடிய பல தமிழ்ச் சைவ ஆலயங்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்; வீடுகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்; பள்ளிகள் ஆதுரசாலைகள் போன்றவை தமிழர் வாழும் பகுதிகளில் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.

    ராஜபக்ஷேவை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தறுவதை நிச்சயம் செய்யவேண்டும். ஆனால் அந்தக் காரியம் உடனே செய்யப்பட்டாலும் தாமதமாக செய்யப்பட்டாலும் பெரும் வித்யாசங்கள் இருக்கவியலாது.

    ஆனால் ஈழத்தமிழர்களுடைய புனர்வாழ்வுக்கான நற்பணிகள் எந்தக் காலதாமதமின்றியும் உடனேயே செய்யப்பட வேண்டிய பணி.

    ஹிந்து இயக்கங்கள் வெட்டிப் பேச்சு பேசுவதிலும் போராட்டம் என்ற பெயரில் பொதுச்சொத்துக்களை நாசம் செய்வதிலும் நாட்டம் கொண்டவர்கள் அன்று

    இந்த தளத்தில் இருக்கும் கீழ்க்கண்ட சுட்டியை வாசியுங்கள் :-

    https://tamilhindu.com/2010/09/help-rebuild-srilankan-hindu-temples/

    இது ஒரு சாம்பிள் மட்டும் தான். யுத்தத்தில் சீரழிக்கப்பட்ட பகுதிகளில் பிணம் தின்னிக் கழுகுகளாய் மிஷநரிகள் மதமாற்றப்பிணி செய்து வருகையில் அங்கு ஆன்மீகப் பணியாற்றவும் பல தமிழ் ஹிந்து இயக்கங்கள் முனைப்பில் உள்ளன. என்னால் அந்த சுட்டியையும் இதுபோன்ற தகவல்கள் தரும் பிற சுட்டிகளையும் உடன் தேட இயலவில்லை.

    நீங்கள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடும் இயக்கங்களுக்கு உங்களால் ஆன உபகாரங்கள் செய்திருந்தீர்களானால் உங்கள் திருத்தாள்களில் என் சென்னியிருப்பதாக.

    சிவலிங்கத்தையும் ராமபிரானையும் இழித்துப்பழித்து பொது தளங்களில் பிரிவினை வாதவீரம் பேசும் ச்ச்ச்ச்சீமான் செபாஸ்டியான் என்ற ஆப்ரஹாமிய மிஷநரியின் செயல்பாடுகள் தமிழர்களின் வாழ்வொடு ஒன்றியுள்ள சைவ சமயத்தையும் வைஷ்ணவ சமயத்தையும் இழிவு செய்வதை….. தங்களைப் போன்று சைவ சமயத்திலும் தமிழிலும் பற்று உள்ள அன்பர்கள் கேழ்விக்கு உட்படுத்தியதுண்டு என்றால் ……. அதை மதிக்கிறேன்.

    இது போன்ற பதர்களின் செயல்பாடுகள் தமிழுக்கோ ஹிந்து மதத்துக்கோ மதநல்லிணக்கத்துக்கோ ……. இவ்வளவு ஏன் க்றைஸ்தவ மதத்திற்கோ கூட நன்மை செய்யாது என்பது திண்ணம்.

    இந்த தளத்தின் மீது அவதூறு பேசு முன் பலமுறை தங்கள் தகவல்களை சரிபார்க்க முயலுங்கள்.

    தவறான அவதூறு உங்கள் மீது பேசப்படினும் இந்த தளத்தின் மீது பேசப்படினும் அது தவறு என்று தெரிந்தால் கண்டிப்பாக நான் இடித்துறைப்பேன்.

    ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர் தமை இகழ்வோர்கள் நரகுழல்வார் என எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் அமுதினுமினிய திருப்புகழில் பகர்ந்துள்ளார். என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஸ்ரீ தாயுமானவன் அவர்களை…… அவ்வளவு சுலபமாக ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர் தமை இகழ நான் எப்படி விட்டு விடுவேன்.

    தேவாரமும், திவ்யப்ரபந்தமும், திருவாசகமும் திருப்புகழும் தழைக்கப்பாடுபடுவோர் தமிழ் தழைக்கப் பாடுபடுவோர். இவற்றை இழிவு செய்பவர்கள் இவற்றை அழித்தொழிக்க அல்லும் பகலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாடுபடும் ஆப்ரஹாமியர்கள் மற்றும் நாஸ்திகப்பதர்கள் …..எனக்கும் உங்களுக்கும் உயர்வான தமிழ்மொழிக்கோ ஹிந்துப்பண்பாட்டிற்கோ….. அல்லது மனித குலத்திற்கோ நன்மை செய்பவர்கள் ஆகார்.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  41. மிரான் ச்வப்னபிரியன் போன்ற தர்குறிகள் இப்படிதான் பேசுவார்கள் . கஜினி முதல் ஒவ்ரகசிப் வரை கொலை கார கும்பல் தான் ! இஸ்லாம் செத்துக்கொண்டு வருகிறது ் அவர்களே ஒருவருக்கு ஒருவர் அழித்து கொள்வார்கள் .

  42. //யுவன் சங்கர் ராஜாவை எந்த அரசர் கட்டாயப் படுத்தி மத மாற்றம் செய்தனர் சார்? கொஞ்சம் விளக்கினால் நல்லது? எந்த பெட்ரோ டாலர் அவரை மாற்றியது? அவரிடம் இல்லாத பணமா? சிந்தியுங்கள்.//

    சிறிய வயதிலேயே பல ஹிட் படங்கள், பாடல்கள், பெயர், புகழ் என்று பார்த்து விட்டவர். ஆனால் சொந்த வாழ்வில் அவருக்கு 2ஆம் திருமணமும் வெற்றிகரமென்று கூறமுடியாத நிலையில் துரதிருஷ்டவசமாக அவரின் தாயார் ஜீவா அம்மையார் இறந்து போனார். மனநிம்மதியற்று இருப்பவரை மதம் மாறினார் என்று ஆதாரமில்லாமல் கூற வேண்டாம். அவர் அதிகாரபூர்வமாக மதம் மாறினார் என்று நிரூபிக்க முடியுமா? குரான் படித்ததாகவும் 5 வேளை தொழுவதாகவும் நல்லா கிளப்புரீங்கயா வதந்திய!

  43. // ஏ ஆர் ரஹ்மானை தொடர்ந்து இளையராஜாவின் இளைய மகன் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறி விட்ட செய்தி தெரியுமா? இன்னும் சிறிது நாளில் வெளி உலகுக்கு தெரிய வரும் //

    யாருக்குமே தெரியாத, இன்னும் வெளியுலகுக்கே தெரியாத, ‘இன்னும் சிறிது நாளில்’ வெளி உலகுக்கு தெரிய வரப்போகும் செய்தி உங்களுக்கு எப்படி அதற்குள்ளாகவே தெரிந்தது ஐயன்மீர் ? அதுவும் வெளிதேசத்தில் இருக்கும் உங்களுக்கு ? அரேபிய தேசத்தில் இருப்பதாலா ?

    ஏதோ தீய்ந்த வாசனை அடிக்கிறதே !!! திரைமறைவில் பற்றி எரிந்தது அதிகமோ ? 🙂

  44. இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறுவதற்கு முஸ்லிம்களுக்கு வெட்கமாக இல்லை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *