ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1

மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
மார்க்க முடித்த விலாளிகள் நாயகன் மருகோனே

பிரசித்தி பெற்ற, அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில் (அசோகவனத்தில்) (சீதாபிராட்டியை) சிறை வைத்தபோது, அந்த ராவணனின் வம்சமே வேரோடு அற்றுப்போகும்படி, அதற்குரிய வழியை நிறைவேற்றிய வில்லாதி வீரர்களின் தலைவனாம் ராமபிரான்.

அந்த ராமபிரானின் மருமகன்,

சீதாராம சரித்ரத்தை வால்மீகி முனிவர் உரைத்தபடி என் சென்னியிலிருத்த இறைஞ்சுகிறேன்.

ramayana

சமீபத்தில் மதிப்பிற்குறிய விக்ஞானி ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் சீதாயணம் என்ற பெயரில் படைத்துள்ள ஓரங்க நாடகத்தை வாசிக்க நேர்ந்தது. இந்த சுட்டியில் – *சீதாயணம்* என்ற இந்த படைப்பு அன்பர் அவர்களால் அவருடைய இணையதளத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பை அன்பர் அவர்கள் நூலாகவும் வெளியிட்டுள்ளார். திண்ணை தளத்தில் கோட்டுச் சித்திரங்களால் ஆன படங்களுடன் தொடராகவும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படைப்பினூடே ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் இன த்வேஷம், ஹிந்துமதக்காழ்ப்பு மற்றும் வால்மீகி ராமாயணத்தைப் பற்றிய பல அபுரிதல்களை பகிர்ந்துள்ளார். இந்த விஷயங்களை அன்பர் அவர்களால் பகிரப்பட்ட கருத்துக்களின் சாரம் சார்ந்தும் மேலும் மூல சான்றாதாரமான வால்மீகி ராமாயணம் சார்ந்தும் பின்னர் பார்ப்போம்.

குறிப்பாக நாடகத்தின் முகவுரையில்,

\\ வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. \\

எனவும்

\\ இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. \\

கருத்துப் பகிர்ந்துள்ளார்.

தான் பகிருவதான ராமகதை மெய்யென்றும் தற்போது புழக்கத்தில் இருக்கும் வால்மீகி ராமாயணம் என்ற காவ்யம் மூலம் நாம் அறியும் ராமகதை பொய்க்கதை எனவும் அன்பர் அவர்கள் கருத்துப்பகிர்ந்துள்ளார்.

ராமகதை சரித்ரத்தில் உண்மையாக நிகழ்ந்ததா என்பது சரித்ர ஆராய்ச்சிக்குறியது. சரித்ர பூர்வமாக இந்த விஷயம் சார்ந்த பரிச்சயம் இல்லாத நான் அந்த விஷயத்தைப் பற்றி இங்கு என் கருத்துக்களை முன்வைக்கப் போவதில்லை.

ராமகதையைச் சொல்லும் வால்மீகி ராமாயணம் என்ற காவ்யம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டது. இமயம் முதல் குமரி வரை இன்றும் பல கோடி மக்களால் இந்தக் காவ்யம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. படிக்கப்பட்டு வருகிறது.

பல்லாயிரம் ஆண்டுகள் முன் படைக்கப்பட்ட இந்தக் காவ்யத்தில் இடைச்செருகல்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு என்பது புரிந்துகொள்ள முடிந்த விஷயம் தான். ஆனால் ராமாயண காவ்யத்தில் நுழைக்கப்பட்ட இடைச்செருகல்கள் மிகுந்த ப்ரபாவம் மிக்கவையா? இவை வால்மீகி முனிவர் படைத்த மூல காவ்யத்தை உருத்தெரியாமல் சிதைத்துள்ளனவா?

நம்மிடையே இன்று புழக்கத்தில் உள்ள வால்மீகி ராமாயணம் என்ற நூல் இடைச்செருகல்களால் ப்ரபாவிக்கப்பட்டு வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட வால்மீகி ராமாயணம் என்ற மூலநூலுடன் முற்றிலும் வேறுபட்டு கிட்டத்தட்ட ஒரு பொய்க்கதையாக நம்மிடையே உலா வருகிறதா?

இந்த விஷயத்தையே தற்போது நாம் விசாரிக்க உள்ளோம்.

சம்ஸ்க்ருத பாஷையிலோ அல்லது வால்மீகி ராமாயண நூலிலோ சிறியேனுக்கு ஆழ்ந்த பாண்டித்யம் இல்லை. ஆயினும் பல வருஷங்களாக வால்மீகி ராமாயண நூலை வாசித்து மற்றும் கேட்டு வரும் எனது வாசிப்பனுபவமே எனது விசாரத்திற்கு அடிப்படை.

இந்த விஷயத்தை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்த அன்பர்களின் கருத்துக்களை பரிசீலனை செய்து நம் புரிதலை மெருகேற்ற விழவதே என் ப்ரயாசை.

பாரதம் முழுதும் வால்மீகி ராமாயணம் என்ற நூல் பற்பல பாட பேதங்களுடன் புழக்கத்தில் இருந்துள்ளது. பரோடா ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட் (Baroda Oriental Institute) என்ற நிறுவனம் 1960 ம் வருஷம் முதல் 1975ம் வருஷம் வரை 15 வருஷ காலம் உழைத்து கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடி ப்ரதிகளை பரிசீலனை செய்து பரோடா க்ரிடிகல் எடிஷன் என்ற வால்மீகி ராமாயண ப்ரதியை ப்ரசுரம் செய்துள்ளனர். பல சம்ஸ்க்ருத அறிஞர் பெருமக்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு அறுதியான ப்ரதி ப்ரசுரமாக முனைந்துள்ளனர்.

இந்த முயற்சியையும் இதற்கு முன் இந்தியவியலாளர்கள் ராமாயண காவ்யத்தை ஆராய்ந்ததையும் பரிசீலித்து ஸ்ரீமான் ராமாஷ்ரய ஷர்மா என்ற அன்பர் ஒரு வ்யாசமாக ஆங்க்லத்தில் தொகுத்துள்ளார். இந்த வ்யாசம் அதன் ஒட்டு மொத்த மொழியாக்கம் அன்று.

ஆயினும் ஸ்ரீ ஷர்மா அவர்களது வ்யாசத்தின் சாராம்சப்படி வால்மீகி ராமாயணம் என்ற நூல் பக்தர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் போன்ற பலராலும் எவ்வாறு அணுகப்படுகின்றது என்பதைப் பகிரும் முயற்சி.

இந்த வ்யாசத்தில் ஸ்ரீ ஷர்மா அவர்கள் ராமாயண காவ்யத்தை அணுகுதல் என்ற விஷயத்தில் 5 விதமான பார்வைகளை முன்வைக்கிறார். அவையாவன :-

  1. தொன்மையான மரபு சார்ந்த பார்வை
  2. ராமாயண காவ்யத்திற்கு விரிவுரை எழுதிய விரிவுரையாளர்களின் பார்வை
  3. ராமாயண காவ்யத்தின் முதல் காண்டமான பாலகாண்டமும் கடைசீ காண்டமான உத்தர காண்டமும் பிற்சேர்க்கை என்ற முடிபுகளுடைய இந்தியவியலாளர்களின் பார்வை.
  4. க்ரிடிகல் எடிஷனில் ஈடுபட்ட அறிஞர் பெருமக்களின் பார்வை.
  5. டாக்டர் ஜே.எல்.ப்ராக்கிங்க்டன் (Dr.J.L.Brockington) அவர்களின் பார்வை

1. தொன்மையான மரபு சார்ந்த பார்வை :-

ராமபிரான் த்ரேதாயுகத்தைச் சார்ந்தவர் என மரபார்ந்த ஹிந்து கருதுகிறார். நவீன அறிஞர்கள் கையாளும் காலக்கணிப்பு முறையின் பாற்பட்ட யுகக்கணிப்பின் படி இது சற்றேறக்குறைய 8,67,102 பொ.மு காலத்தைச் சார்ந்ததாகும். ராமாயண காவ்யத்தை இயற்றிய ஆதிகவியாகிய வால்மீகி முனிவர் ராமபிரானின் காலத்தைச் சார்ந்தவராகக் கருதப்படுகிறார். வால்மீகி முனிவர் இயற்றிய சம்பூர்ண ராமாயணம் என்பது சதகோடி ச்லோகங்களால் (நூறு கோடி) ஆன ராமாயணம் என்பது மரபு சார்ந்த பார்வை. தற்போது புழக்கத்தில் உள்ள 24000 ச்லோகங்களால் ஆன வால்மீகி ராமாயணம் என்பது சதகோடி ச்லோகங்களால் ஆன ராமாயணத்தின் சுருக்கமான வடிவம் என மரபாளர்கள் கருதுகிறார்கள்.

காலக்ரமத்தில் பாரதம் முழுதும் ராமகதை பரவியதில் தேசமுழுதும் பாடபேதங்கள் உள்ள பல முழுமையான பாடாந்தரங்கள் (Recension) புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இதைத் தவிர வால்மீகி ராமயணத்தை அடியொற்றி தமிழில் கம்பநாட்டாழ்வாரால் இயற்றப்பட்ட ராமாவதாரம் என்ற கம்பராமாயணம் மற்றும் அவதி பாஷையில் துளசிதாசரால் இயற்றப்பட்ட ராம்சரித்மானஸ் போன்று பல பாஷைகளில் பல அருட்கவிகளால் ராமாயண காவ்யம் பாடப்பெற்றுள்ளது. வால்மீகி ராமாயணத்தின் புழக்கத்தில் உள்ள பாடபேதங்களடங்கிய விவிதமான முழுமையான பாடாந்தரங்களையும் (Recensions) பற்பல பாஷைகளில் இயற்றப்பட்ட ராமாயண காவ்யங்களையும் மரபாளர்கள் அதிகாரபூர்வமானவை என்றே கருதுகின்றனர். இவற்றை ஆர்ஷ வசனம் – அதாவது – இறையருள் பெற்ற அருளாளர்களின் கருத்துக்கள் என்றே மரபாளர்கள் கருதுகின்றனர். இவற்றில் உள்ள பாடபேதங்களை அந்தந்த சம்ப்ரதாய பிரிவுகளைச் சார்ந்த வேறுபாடுகள் என்று மட்டிலும் மரபாளர்கள் கருதுகின்றனர்.

இது போன்ற ஒரு பார்வை விக்ஞான பூர்வமான ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆய்வாளர்களால் ஏற்கப்படுவதில்லை.

2. விரிவுரையாளர்களின் பார்வை :-

வால்மீகி ராமாயணத்திற்கு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வ்யாக்யானங்கள் (விரிவுரைகள்) எழுதப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 6 வ்யாக்யானங்கள் இன்று அச்சில் உள்ளன. இவை பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான காலத்திற்குட்பட்டவை. மஹேச்வர தீர்த்தரால் எழுதப்பட்ட தத்வதீபம், கோவிந்தராஜரால் எழுதப்பட்ட பூஷணம் அல்லது கோவிந்தராஜீயம், மாதவ யோகிகளால் எழுதப்பட்ட அம்ருத கடகம், நாகோஜிபட்டர் எனும் ராமவர்மரால் எழுதப்பட்ட திலகடீகை, சிவசஹாயரால் எழுதப்பட்ட சிரோமணி டீகை மற்றும் த்ர்யம்பகராஜ மகி அவர்களால் எழுதப்பட்ட தர்மாகூட டீகை போன்றவை அச்சிலுள்ள ஆறு ப்ரபலமான வ்யாக்யானங்களாகும்.

முழுமையான பாடாந்தரங்கள் (Recensions) கிட்டத்தட்ட ஸ்திரமான பின்னும் வாய்மொழியில் மனனம் செய்யப்பட்ட காலத்திலிருந்து படைப்புகள் மிக அதிகமாக எழுத்தில் வடிக்கப்பட்ட காலத்திலும் எழுதப்பட்டவை இந்த வ்யாக்யானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வ்யாக்யானங்களும் ராமாயண காவ்யத்தில் உள்ள பாடபேதங்களை ப்ரஸ்தாபித்துள்ளன. மேலும் வ்யாக்யான கர்த்தர்கள் இந்த பாடபேதங்களைப் பற்றிய தங்கள் அபிப்ராயங்களை தங்கள் வ்யாக்யானங்களில் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கத் தகுந்த பாடங்கள் ஏற்கவொண்ணா பாடங்கள் என வ்யாக்யான கர்த்தாக்கள் பாடங்களை ஏற்றும் மறுதலித்தும் உள்ளனர்.

ஏற்கத் தகுந்த பாடங்களை முறையே ப்ராசீன (தொன்மையான) ஸாம்ப்ரதாயிக ( மரபு சார்ந்த) பஹுபுஸ்தக சம்மத ( பல பாடங்களால் ஏற்கப்பட்ட) என்ற அடைமொழிகளால் அங்கீகரித்துள்ளனர்.

ஏற்கவொண்ணா பாடங்களை முறையே அபாங்க்த ( மரபு சாராத) ஆதுனிக கல்பிதா: பாடா: ( நூதன சிந்தனையில் கல்பிக்கப்பட்ட பாடங்கள்) ப்ரக்ஷிப்த (இடைச்செருகல்கள்) என்ற அடைமொழிகளுடன் மறுதலித்துள்ளனர்.

இது போன்ற மறுதலிப்புகள் ஒரு ச்லோகத்தின் பாதிவரி (hemistich) அல்லது முழுச்லோகம் (verse) அல்லது ஒரு சர்க்கம் (Canto) என்ற அளவுக்கு மட்டிலும் வ்யாக்யான கர்த்தாக்களால் மறுதலிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த வ்யாக்யான கர்த்தாவும் வால்மீகி ராமாயணத்தின் எந்த ஒரு காண்டத்தையும் இது சற்றளவேனும் சந்தேகத்திற்குறியது என ஒதுக்கவில்லை என்பது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது. எல்லா வ்யாக்யான கர்த்தாக்களின் நோக்கமும் ராமாயண காவ்யத்தின் ஆழ்கருத்துக்களை விரிவுரை செய்தல் என்றிருந்தாலும் இந்த ஒரு முயற்சி தான் நூலை கருத்தாழத்துடன் ஆராயும் செயல்பாட்டின் முதற்படி என்பது குறிப்பிடத் தக்கது.

நூதன ஆராய்ச்சியாளர்கள் இந்த முதல் முயற்சி அல்லது முன்னகர்தலில் இருந்து மேலும் முன்னகர்ந்து தங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள் என அவதானிக்கலாம்.

3. ராமாயணத்தின் பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டம் பிற்சேர்க்கை என்ற கருத்துக்கள் கொண்ட இந்தியவியலாளர்களின் பார்வைகள் :-

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய உலகில் இந்தியவியல் ஆய்வுகள் (Indological Studies) ப்ரபலமாகி வருகையில் இந்தியவியலாளர்களின் பார்வை ராமாயண காவ்யத்தின் பால் சென்றது. ராமாயண காவ்யம் மூன்று விவிதமான முழுமையான பாடாந்தரங்களில் (Recensions) புழக்கத்தில் இருந்ததை இந்த ஆய்வாளர்கள் கருத்தில் கொண்டனர். வடமேற்கத்திய, கிழக்கத்திய, தெற்கத்திய பாடங்களான (North Western, East and Southern) இவற்றை “A”, “B” மற்றும் “C” என இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

ஜெர்மனி தேசத்தைச் சார்ந்த டாக்டர். ஹெர்மன் ஜார்ஜ் ஜேக்கபி (Dr. Hermann Georg Jacobi) (11-02-1850 — 19-10-1937) மற்றும் ஆர்த்தர் ஆண்டனி மேக்டொனல் (Arthur Anthony Macdonell) (11-05-1854 — 28-12-1930) என்ற இரு இந்தியவியலாளர்களின் ராமாயண ஆய்வுகள் முக்யமானவையாகக் கருதப்படுகின்றன.

டாக்டர் ஜேக்கபி பெர்லின் பல்கலைக்கழகத்தில் கணிதத்தைப் பாடமாக கற்றாலும் பின்னர் பான் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்க்ருதத்தில் பட்டம் பெற்றார். ஜோதிஷத்தில் *ஹோரை* என்ற விஷயத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். 1893ம் வருஷம் டஸ் ராமாயணா (Das Ramayana) என்ற தலைப்பில் ராமாயண ஆய்வை ஜெர்மானிய பாஷையில் பதிப்பித்தார்.

ஹிந்துஸ்தான ராணுவத்தில் பணி புரிந்த சார்லஸ் அலெக்ஸாந்தர் மேக்டொனல் (Charles Alexander Macdonell) என்ற ராணுவ வீரருக்கு முஜ்ஃபர்பூரில் மகனாகப் பிறந்தவர் ஆர்த்தர் ஆண்டனி மேக்டொனல் ( Arthur Anthony Macdonell) . இவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் 1883 ம் வருஷம் லெய்ப்ஜிக் (Leipzig) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். வேதங்கள் மற்றும் சம்ஸ்க்ருத பாஷையில் பல ஆராய்ச்சிகள் செய்து நூற்கள் பல இயற்றினார் இவர்.

இந்த இருவரின் ராமாயண ஆராய்ச்சிகளும் ஆய்வாளர்களால் முக்யமானவையாக கருதப்படுகின்றன.

இவர்களது கருத்துக்களைப் பார்க்குமுன் விவிதமான முழுமையான பாடாந்தரங்கள் (Recensions) எவ்வாறு புழக்கத்துக்கு வந்தன என்பது பற்றியதான டாக்டர். பி.எல். வைத்யா (Dr.P.L.Vaidya) அவர்களது கருத்தைப் பார்ப்போம். ராமாயண க்ரிடிகல் எடிஷன் முயற்சியின் பதிப்பாசிரியர் குழுவில் அங்கம் வகித்தவர் ஸ்ரீ வைத்யா அவர்கள்.

ராமாயணம் ஆதிகவி வால்மீகி அவர்களால் இயற்றப்பட்டது எல்லோரும் அறிந்த விஷயம். தன்னால் இயற்றப்பட்ட காவ்யத்தை வால்மீகி முனிவர் தன் சிஷ்யர்களான குச லவர்களுக்கு முதன் முதலில் போதிக்கிறார். இந்த சிறுவர்கள் ராமாயண காவ்யத்தை அயோத்தி நகரிலும் ராமபிரானின் ராஜ சபையில் இசையுடன் பொலிவு மிக பாடினார்கள். இதற்குப் பின் காவ்யத்திலும் இசையின் சுவையிலும் மனதைச் செலுத்திய பாணர்கள் பலர் இந்த காவ்யத்தைக் கற்றனர். இந்த பாணர்கள் பல குழுக்களாக தேசமுழுதும் சென்று இந்தக் காவ்யத்தை பாடிப் பரப்பியிருக்க வேண்டும். இவ்வாறான தேசமுழுதுமான ப்ரசாரத்தில் மூல காவ்யத்தின் பாதையில் பாணர்கள் ராமாயண காவ்யத்தில் பல ச்லோகங்களை மட்டுமில்லாது பல சம்பவங்களையும் நிகழ்வுகளையும் சேர்த்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பரப்பப்பட்ட காவ்யம் அந்தந்த ப்ரதேசத்தில் உள்ள பாணர்களாலும் அத்யயனம் செய்யப்பட்டு அவர்களால் உள்வாங்கப்பட்டு பிற்காலத்தில் எழுத்தில் வடிக்கப்படுகையில் முழுமையான பாடாந்தரங்களாக (Recensions) உருப்பெற்றிருக்க வேண்டும்.

முதன் முதலாக ராமாயண காவ்யத்தின் பல்வேறு பாடாந்தரங்களை (Recensions) ஆய்வுக்குட்படுத்திய ஜேக்கபி அவர்கள் கணிசமான அளவு அவற்றில் உள்ள வேறுபாடுகளை அவதானிக்கிறார். ஒரு பாடாந்தரத்தில் பரிசீலனை செய்யப்பட்ட செய்யுள்கள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மற்றொரு பாடாந்தரத்தில் வேறுபடுவது அவரால் ஆய்வில் கண்டறியப்பட்டது.

வெவ்வேறு பாடாந்தரங்களுக்கிடையே கண்டறியப்பட்ட வேறுபாடுகள் மட்டுமின்றி ஒரே பாடாந்தரத்தில் விவரிக்கப்பட்ட சில சம்பவங்கள் மற்றும் சில பகுதிகளின் நம்பகத் தன்மையை முதன் முதலாக கேழ்விக்கு உட்படுத்தினார் ஜேக்கபி அவர்கள். இரண்டாம் காண்டம் முதல் ஐந்தாம் காண்டம் வரையிலும் முறையே அயோத்யாகாண்டம், ஆரண்ட்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டம் ஆகிய காண்டங்களையே வால்மீகி முனிவர் வடித்த மூல ராமாயணத்தைச் சார்ந்த பகுதிகளாக இவர் கருத்துப் பகிர்ந்தார். முதலாவதான பாலகாண்டம் மற்றும் அறுதியான உத்தரகாண்டம் போன்ற காண்டங்கள் வால்மீகி ராமாயணத்தின் முற்சேர்க்கையாகவும் பிற்சேர்க்கையாகவும் (prefixed and suffixed) பிற்காலத்தில் ஒரு அல்லது பல ஆசிரியர்களால் வால்மீகி ராமாயணத்துடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என மரபிலிருந்து பெருமளவு விலகி துணிவான மாற்றுக்கருத்தை முதலாவதாக முன் வைத்தார்.

எப்போது ஜேக்கபி அவர்கள் இது போன்றதொரு கருத்தை முன்வைத்தாரோ அவரைத் தொடர்ந்த மேற்கத்திய மற்றும் ஓரியண்டல் ஆய்வறிஞர்கள் பலரும் அதே கருத்தை அடியொற்றினார்கள்.

ஜேக்கபி மற்றும் மேக்டொனல் இருவரும் எழுப்பிய ஆக்ஷேபங்களும் அவற்றை பரிசீலனை செய்த அறிஞர்களின் கருத்துக்களையும் பார்ப்போம்.

1. முரண்படும் அனுக்ரமணிகைகள் :-

ராமாயணத்தின் பாலகாண்டத்தில் முதல் மற்றும் மூன்றாம் சர்க்கங்களில் ராமாயணத்தின் அனுக்ரமணிகை (ராமாயண கதையின் உள்ளடக்கம் – Table of Contents) சொல்லப்படுகிறது. இந்த அனுக்ரமணிகைகள் ஒன்றுடன் ஒன்று வேறுபடுகிறது என்றும் வெவ்வேறு காலத்தில் ராமாயண காவ்யத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் மேக்டொனல் தன்னுடைய ” A History of Sanskrit Literature” என்ற நூலில் ஆக்ஷேபம் தெரிவித்துள்ளார். ஒரு அனுக்ரமணிகையில் முதல் மற்றும் கடைசீ காண்டங்கள் சொல்லப்படுவதில்லை என்றாலும் மற்றொன்றில் அவை சொல்லப்படுகின்றன. ஆகவே எந்த அனுக்ரமணிகையில் முதல் மற்றும் கடைசீ காண்டங்கள் சொல்லப்படுகின்றனவோ அது பிற்சேர்க்கை எனக் கருதப்பட வேண்டும் என்பது அவர் ஆக்ஷேபம். அறிஞர் அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனது ஆய்வை நிகழ்த்தியுள்ளார். ஆய்வுக்கு அவர் கையாண்ட பாடாந்தரம் / பாடாந்தரங்கள் எவை என்றதான் குறிப்புகளை அணுக முடியவில்லை.

கீழே கொடுக்கப்படும் விவரணைகள் தற்போது புழக்கத்தில் இருக்கும் கோரக்பூர் வால்மீகி மூல ராமாயண நூலை அனுசரித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சர்க்கம் (அத்யாயம்) நாரத வால்மீகி சம்வாதமாக (உரையாடால்) விவரிக்கப்படுகிறது. இது காவ்ய பீஜமாகக் (விதை) கருதப்படுகிறது. நற்குணங்கள் பலவும் ஒருங்கே அமையப்பெற்ற மானுடன் யாரையும் நீங்கள் அறிவீர்களோ என வால்மீகி முனிவர் நாரதரைக் கேழ்க்கிறார். நாரதர் அப்படிப்பட்ட குணங்கள் ஒருங்கே அமையப்பெற்ற இக்ஷ்வாகு குலதிலகமான ராமபிரானைப் பற்றிச் சொல்லுமுகமாக ராமாயணத்தின் கதைக்கருவை வால்மீகி முனிவரிடம் விவரிக்கிறார். இதுமுதல் சர்க்கத்தில் விவரிக்கப்படுகிறது. ச்லோக எண்கள் 8 முதல் 97 வரை பாலகாண்டம் முதலாக உத்தரகாண்டம் வரையிலான கதைக்கரு இந்த ச்லோகங்களில் விவரிக்கப்படுகிறது. ச்லோகம் 98 முதல் 100 வரை இந்த ராமாயணத்தை வாசிப்பதன் பலன் யாது என விவரிக்கப்படுகிறது. இது பால ராமாயணம் என்றும் சம்க்ஷேப ராமாயணம் (சுருக்கமான ராமாயணம்) அழைக்கப்படுகிறது.

தமஸா நதிக்கரையில் ஸ்னானத்திற்காக வந்த வால்மீகி முனிவர் அங்கே வேடனொருவன் ஒன்று கூடியிருக்கும் ஆண் பெண் புறாக்களில் ஆண் புறாவை தன் அம்பினால் கொய்வதைக் கண்ணுறுகிறார். தன் துணையான ஆண் புறாவைப் பறிகொடுத்து அழும் பெண் புறாவைக் கண்டு விசனப்படுகிறார். உடன் கருணையும் கோபமும் ஒருங்கே மேலிட வேடனைக்குறித்து அவர் வாயிலிருந்து அவரை அறியாது ஒரு ச்லோகம் உதிக்கிறது. தன் வாயிலிருந்து ஏன் இப்படி ஒரு ச்லோகம் தன்னையறியாது வந்துள்ளது என்று யோசிக்கையில் ப்ரம்மதேவன் அவர் முன் ப்ரத்யக்ஷமாகிறார். ப்ரம்மன் வால்மீகி முனிவரை ராமகதையை எழுதுவதற்குப் பணிக்கிறார். மேலும் அவரால் எழுதப்படும் ராமகதை பூவுலகில் மலைகளும் நதிகளும் இருக்கும் வரை மானுடரால் கொண்டாடப்படும் என ஆசீர்வதிக்கிறார். இவையெல்லாம் சிந்தனையில் ஓட ஆசனத்தில் அமர்ந்து முனிபுங்கவர் த்யானத்தில் ஆழ்கையில் ராம கதை அவர் மனதில் ஒன்றன் பின் ஒன்றான நிகழ்வுகளாக வெளிப்படுகிறது. இங்கும் முழு ராமகதை ராமபிரான் பிறப்பிலிருந்து ராமபட்டாபிஷேகம் வரையிலும் பின்னர் சீதா பிராட்டியை விஸர்ஜனம் செய்வது வரை அவர் மனக்கண்ணில் தோன்றுகிறது. இது மூன்றாவது சர்க்கத்தில்.

முதற்கண் வால்மீகி ராமாயணத்தில் அனுக்ரமணிகை என்ற படிக்கான பதம் காணக்கிட்டுவதில்லை. மேலும் முதல் சர்க்கத்தில் சொல்லப்படும் நாரத வால்மீகி சம்வாதம் கதா பீஜமாக மட்டிலும் சொல்லப்படுகிறது. மூன்றாம் சர்க்கத்தில் வால்மீகி முனிவரின் ஹ்ருதயத்தில் விதையிலிருந்து கிளைத்தெழுந்த வ்ருக்ஷமாக ராமகதை விரிவடைகிறது. ஆகவே ராமகதை முறையாக வால்மீகி முனிவரின் ஹ்ருதயத்தில் கிளைத்தெழுந்த படிக்கு முறைப்படியான உள்ளடக்கம் (அது உள்ளடக்கம் என சொல்லப்படாவிடினும்) மூன்றாம் சர்க்கத்தில் மட்டிலும் உள்ளது என்பது இந்த ஆக்ஷேபத்திற்கு சமாதானமாகச் சொல்லப்படுகிறது.

தற்போது புழக்கத்தில் உள்ள ராமாயண காவ்யத்தில் முதல் மற்றும் மூன்றாம் சர்க்கங்களை வாசிக்கையில் இரண்டிலும் பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டங்களின் சுவடுகளைக் காண இயலும். முதல் சர்க்கத்தில் அஸ்வமேத யக்ஞமும் மூன்றாம் சர்க்கத்தில் சீதாபிராட்டியின் பரித்யாகமும் சொல்லப்படுகிறது. அப்படியானால் மேக்டொனல் தன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட Recension வேறாக இருக்கலாம் எனத்தெரிகிறது.

2. யுத்தகாண்டத்தின் இறுதியில் காவ்ய ப்ரசஸ்தி சொல்லப்படுவதால் காவ்யம் அத்துடன் நிறைவு பெறுகிறது

யுத்தகாண்டத்தின் கடைசீ சர்க்கமான 128ம் சர்க்கத்தில் 107ம் ச்லோகமுதல் 125ம் ச்லோகம் வரை காவ்யத்தின் பலச்ருதி (காவ்யத்தை வாசிப்பதால் கிட்டும் பலன்) / காவ்ய ப்ரசஸ்தி (காவ்யத்தின் புகழ்) சொல்லப்படுகிறது. ஆகையால் காவ்யம் இத்துடன் நிறைவு பெறுகிறது என்பதும் உத்தரகாண்டம் பிற்சேர்க்கை என்பதும் மேக்டொனல் அவர்களால் “A History of Sanskrit Literature” என்ற அவரது நூலில் ஆக்ஷேபிக்கப்படுகிறது.

ஸ்ரீ ஷர்மா அவர்கள் இதற்கான சமதானத்தைப் பதிவு செய்கிறார்.

உத்தரகாண்டம் என்ற பாகத்தின் குணாதிசயத்தை அறியாமை இந்த பாகத்தை பிற்சேர்க்கை என்று சொல்லத்தூண்டுகிறது. உத்தரகாண்டம் என்ற பாகத்தில் *உத்தர* என்ற பதம் சுட்டும்படிக்கு இந்த பாகம் காவ்யத்தின் அனுபந்தமாக இணைக்கப்பட்டுள்ளது என்பது வாஸ்தவம் தான். ப்ரதான காவ்யத்தில் ராம ராவண மோதல் விவரிக்கப்பட்டு பின்னர் அது ராவணவதத்துடன் நிறைவு பெறுகிறது. இதில் ராம குணார்ணவம் முழுதும் ஆழ்ந்து விவரிக்கப்பட்டாலும் ராவணனுடைய சரித்ரம் மற்றும் சௌர்யம் தெரிவிக்கப்படாமையால் ராமபிரான் எப்படிப்பட்ட ஒரு வ்யக்தியை சமர் செய்து வென்றான் என்ற முழுமையான ஒரு சித்திரம் கிட்டுவதில்லை என்ற குறைபாடு உத்தரகாண்டத்தில் சரிசெய்யப்படுகிறது.

ப்ரதான காவ்யத்தின் முக்ய கரு ராம ராவண மோதல் (ஸ்ரீ ஷர்மா அவர்களின் கூற்றுப்படி). ஆகவே அது நிறைவு பெற்ற படிக்கு யுத்தகாண்டத்தின் அறுதியில் காவ்யப்ரசஸ்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் முழுமையான காவ்யம் (உத்தரகாண்டத்துடன் கூடிய படிக்கு) நிறைவு பெறுகையில் அங்கும் காவ்ய ப்ரசஸ்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே உத்தரகாண்டத்துடனேயே ராமாயண காவ்யம் நிறைவு பெறுகிறது என்பது நோக்கத்தக்கது.

க்ரிடிகல் எடிஷனில் இரண்டு காவ்யப்ரசஸ்திகளும் பிற்சேர்க்கை என்று சுட்டப்பட்டு ஒதுக்கப்படுகிறது என்பது நோக்கத் தகுந்தது.

3. மூல ராமாயணத்தின் நிஜமான பகுதிகள் என்று இந்தியவியலாளர் கருதும் இரண்டு முதல் ஆறு வரையிலான காண்டங்களில் பால காண்டம் மற்றும் உத்தரகாண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளைச் சார்ந்த குறிப்புகள் இல்லையாதலால் முதல் மற்றும் ஏழாம் காண்டங்கள் பிற்சேர்க்கை என்பது ஆக்ஷேபமாக முன்வைக்கப்படுகிறது.

இரண்டு முதல் ஆறாம் காண்டம் வரையில் விவரிக்கப்படும் எண்ணிறந்த நிகழ்வுகளின் சுவடுகளை முதல் மற்றும் ஏழாம் காண்டத்தில் காண இயலும் என்பதால் இது சரியான ஆக்ஷேபம் இல்லை என நிராகரிக்கப்படுகிறது. இதை விளக்குமுகமாக பல நிகழ்வுகள் அனுபந்தமாக ஸ்ரீ ஷர்மா அவர்களது வ்யாசத்தில கொடுக்கப்பட்டு அவை முதல் மற்றும் ஏழாம் காண்டத்துடன் சம்பந்தப்பட்டவை என்பது விவரிக்கப்பட்டுள்ளது.

அனுபந்தத்தில் கொடுக்கப்பட்ட குறிப்புகள் புழக்கத்தில் உள்ள ராமாயண ப்ரதியுடன் பரிசீலனை செய்த படிக்கு அதில் ஒரு நிகழ்வு இங்கு உதாரணமாக வைக்கப்படுகிறது.

விஸ்வகர்மாவினால் நிர்மாணம் செய்யப்பட்ட லங்காபுரி :-

சுந்தரகாண்டம் – சர்க்கம் -2 ச்லோகங்கள் 18-20

4. இரண்டு முதல் ஆறாம் காண்டங்களில் சொல்லப்படும் விஷயங்களில் சில பாலகாண்டத்துடன் ஒத்துப்போகாததால் பாலகாண்டம் மூலகாவ்யத்தின் அங்கம் ஆகாது என்று ஆக்ஷேபம் சொல்லப்படுகிறது. முழு ராமாயண காவ்யத்தில் இப்படிப்பட்ட முரண்களாக இரண்டு விஷயங்கள் மட்டும் சொல்லப்படுகின்றது. அவற்றைப் பார்ப்போம்.

1. ஆரண்ய காண்டத்தில் ராமபிரான் இளையபெருமாளான லக்ஷ்மணரை *அக்ருததார:*(மனைவியற்றவன்) என்ற பதத்தினால் சுட்டுகிறார் எனினும் பாலகாண்டத்தில் லக்ஷ்மணருக்கும் ஊர்மிளைக்குமான விவாஹம் முன்னமேயே விவரிக்கப்பட்டுள்ளது.

अपूर्वी भार्यया च अर्थी तरुणः प्रिय दर्शनः |
अनुरूपः च ते भर्ता रूपस्य अस्य भविष्यति ||

அபூர்வீ பார்யயாசார்த்தீ தருண: ப்ரிய தர்சன:
அனுரூபஸ்ச தே பர்தா ரூபஸ்யாஸ பவிஷ்யதி

“மனைவியற்றிருக்கும் இவனுக்கு (சஹோதரனான லக்ஷ்மணன்) ஒரு மனைவி தேவை. ஆகவே பொலிவும் இளமையும் பொருந்திய இவன் உன்னுடைய ரூப சௌந்தர்யங்களுக்குப் பொருத்தமானவன்” என்று ராமபிரான் ஹாஸ்யம் மிக சூர்ப்பணகையிடம் தெரிவிக்கிறார்.

www.valmikiramayan.net என்ற தளத்தில் இந்த சம்பவம் ஹாஸ்யமும் ச்லேடையும் மிக விவரிக்கப்பட்டுள்ளது:-

The word apuurvi means in the viewpoint of Rama ‘one who has been missing the company of wife for a long’ but in Shuurpanakha’s view it is ‘one who is missing the company of ANY wife for a long…’ The word bhaaryaa ca arthii is from Rama’s view ‘desiring his own wife, Urmila’ but in Shuurpanakha’s view ‘desiring ANY woman as wife’ and the word te bhartaa is declined as te.abhartaa= te a bhartaa ‘unfit to be your husband’ because of your ruupasya asyaa ‘by your aspect, your repulsive aspect.’ Govindaraja.

In another way akR^ita daaraH ‘already a married man’ apuurvii ‘one who does not have the comfort from wife’ so bharyayaa ca arthii; a + puurva bhaaryayaa ca arthii ‘for a new wife, also, desiring one; one who is desiring new wife; thus you are a fitly wife for him by your aspect, anuruupascha te . This is on joculary side of the statement.

அபூர்வீ பார்யயாசார்த்தீ (அக்ருத தார:) என்பது ஹாஸ்யம் பொங்கவும் ச்லேடையுடனும் சொல்லப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது.

2. பாலகாண்டத்தில் விவாஹத்திற்குப் பிறகு பரதன் தன் தாய்மாமனோடு கேகயபுரிக்கு சென்றதாக விவரிக்கப்பட்ட பின்பும் அயோத்யாகாண்டத்தில் மந்தரை பரதனை *பாலன்* (சிறுவன்) எனக்குறிப்பிடுவது முரண்பாட்டைச் சுட்டுகிறது.

டாக்டர் சி.எம்.பௌரா (Dr C.M.Bowra) என்ற அறிஞர் இதை விளக்குகிறார். ராமாயண காவ்யம் வெகுகாலம் வாய்மொழியாக பல நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்த படிக்கு இது போன்ற மிகவும் அரிதான முரண்பாடுகளை வைத்து காவ்யத்தின் ஆசிரியர் யார் என்ற விஷயத்தையோ காவ்யத்தின் நம்பகத்தன்மையையோ கேழ்விக்கு உட்படுத்த முடியாது என மறுதலிக்கிறார்.

“The conditions of oral performance may mean that sooner or later a poet contradicts himself or muddles something in his narrative. There are few heroic poems in which some such contradiction which can not be found. The poet so concentrates on his immediate task that may not remember all that has gone before or foresee all that will come later. The chances are that any such sllip will be of little importance, since, if the poet does not notice it, it is not likely that his audience will notice it either. But when this poem is written down and subjected to sharp eyes of critical scholars, what was originally a trivial slip may be regarded as a grave error and made a foundation for bold theories of multiple authorship.”

C.M Bowra, “Heroic Poetry, PP-299-300, London, 1952

ஸ்ரீ ஜேக்கபி அவர்களின் மற்றைய ஆக்ஷேபங்களையும் அதற்கான சமாதானங்களையும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!*
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்!* செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!*
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ.

(தொடரும்)

99 Replies to “ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1”

  1. ஆஹா, அருமையான தகவல் களஞ்சியம். மீண்டும் நிதானமாய்ப் படிக்க வேண்டும். இப்போது கொஞ்ச நாட்களாக அனைவர் மனதிலும், அல்லது எழுத்திலும் ராமாயணமே! 🙂

  2. மத நூல்கள் எல்லாமே பல இடைச்செருகல்களுக்கு உட்பட்டவை தான். ஆனால் இராமாயணம் மத நூல் அல்ல. அது இதிகாசம் ( இது இவ்வாறு நடந்தது ) என்று சொல்லும் ஒரு காவியம். தர்மம் என்பது என்ன என்பது இராமாயணத்தில் பல இடங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஒரு குடிமகனுக்கு தெரியவேண்டிய நீதிகளை நாம் இராமாயணத்தை படிப்பதன் மூலம் நிச்சயம் அறியமுடியும். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, ஒரு சொல், ஒரு அம்பு, ஒரு மனைவி என்பது இராமாயணத்தின் மூலம் நாம் கற்கவேண்டிய அழகு. இராமாயணம் உண்மை என்றோ ,பொய் என்றோ யாரும் வாதம் செய்வதில் ஒரு பொருளும் இல்லை. வால்மீகி எழுதியதை பலர் சிறிது மாற்றி , பலவேறு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு , புதிய சில இடைச்செருகல்கள் ஏற்பட்டாலும், அடிப்படை கருத்து மாறாது. இராமன் ஏகபத்தினி விரதன் என்பதை விடவும், அவனுக்கு சிறப்பு சேர்த்தது என்னவெனில், ஜாபாலி மகரிஷியின் சார்வாக கருத்துக்களை நிராகரித்து, அவருக்கு தக்க பதில் அளித்த இராமபிரான் தான் பெருந்தகை என்பதை நிரூபித்தான். இராமனை தெய்வமாக மட்டும் பார்ப்பது ஒரு சிறு குறுகிய மனப்பாங்கு ஆகும். இராமன் தெய்வத்திலும் உயர்ந்தவன். உயர்வு என்பது மனித உடலுக்கு கிடைப்பதல்ல. மனித உடலுக்குள் உறையும் , உயர்ந்த உணர்வுகளுக்கு கிடைப்பது ஆகும். இராமன் ராஜரிஷியாகவே வாழ்ந்த தோன்றல். இராமபிரானின் உணர்வுகள் புத்தர் சொல்லிய எதிலும் பற்று இல்லாத நிலை ஆகும். இராமனின் இந்த உணர்வையே புத்தர் பெற்று உயர்ந்தார். ஆனால் இன்றைய பவுத்தர்கள் கொலைவெறி பிடித்து இனப்படுகொலை செய்து , தாழ்ந்துவிட்டனர்.மனித இனம் இருக்கும் வரை இராமாயணத்தின் தாக்கம் நிரந்தரம் ஆகும். பிரபஞ்சம் அழிந்து புதிய பிரபஞ்சம் படைக்கப்படும் அல்லது தோன்றும்போதும் இந்தராமாயணம் மீண்டும் அடுத்த பிரபஞ்சத்திலும் உருவாகும். இது சத்தியம்.

  3. அன்புள்ள கிருஷ்ணகுமார்,
    நன்கு ஆய்வு செய்து எழுதிய சிறப்பான கட்டுரை! அன்பர் ஜயபாரதன் அவர்கள் ராமாயணக் காவியம் நடந்த கதை என ஏற்றுக் கொள்வதே பெரிய விஷயம். நவீன Astro- Archeological ஆராய்ச்சி மூலம் ராமாயணத்திலும், மஹாபாரதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள ஜோதிடக் குறிப்புகளை வைத்து, இவ்விதிஹாசங்களில் விவரிக்கப் பட்டுள்ள சம்பவங்களை, BCE, CE, காலக்கணக்கில் துல்லியமாக கண்டறிந்துள்ளார்கள் பாரத் க்யான் என்ற நிறுவனத்தார். அவர்களது ஒளினாடாக்களை https://www.youtube.com/watch?v=FgSINZO_VuI
    https://www.youtube.com/watch?v=jCmRi3EHgEI என்ற இணைப்புகளில் கண்டு களிக்கலாம்.
    அன்பர் ஜயபாரதன், இன்றய இந்திய கல்வி திட்டத்தின் படைப்பு! இந்திய படைப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்காத மன நிலை; ஊடுரிவிகளையும், மேற்கத்திய படைப்புகளையும் உயர்த்திப்பிடிக்கும் பாங்கு. மாற்று கருத்துக்களுக்கும் இடமளிக்கும் இந்து மதம் இதனையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வாத, எதிர் வாதக் கருத்துக்களை எரிக்கும் பழக்கம் இந்துக்களுக்கு இல்லையே! ராவணகாவியத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா?
    படைப்பு சுதந்திரம் படைப்பாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். அந்த வகையில் ஏற்கனவே இருக்கும் 345 வகையான ராமாயணங்களுடன் 346 ஆக இதை வைத்துக்கொள்ளலாம். உலகின் நான்கு தலையாய இதிஹாசங்களுள், இரண்டு இந்தியாவிலிருந்து பிறந்ததை நினைத்து பெருமைப்படாமல், கொச்சைப்படுத்த முனைந்தது வருத்தம் அளிக்கிறது. ஆயிரம் ஜயபாரதர்கள் வந்தாலும் வால்மீகி ராமாயணத்தின் மாற்று குறையாது!
    பொ. துளசி தாஸ்.

  4. ராமாயணம் பலவிதமான இனிய பழங்களைக்கொடுக்கும் 24000 மரங்களால் வ்யாபிக்கப் பட்ட ஒரு சோலை. ஒவ்வொரு ஸ்லோகமும் ஒவ்வொரு மரத்தைப்போல் பலன்களைக் (பழங்கள்) கொடுக்கும் வல்லமை மிக்கது. பலன்கள் இம்மையிலும் மறுமையிலும் நன்மை பயக்கக் கூடியவை. அந்தப் பழங்களை உண்டு அனுபவிக்காமல், மரங்களை யார் நட்டார்கள், எத்தனை மரங்கள் முதலில் இருந்தன, பின்னர் எவை நடப்பட்டன என்பது போல உபயோகமற்ற ஆராய்சிகளில் காலத்தை வீண் போக்குவது ஏனோ? பல ஆண்டுகள் ராமாயணத்தைப் படித்து அதன் பயனை நன்றாகத் தெரிந்துகொண்டதால் தான் இவ்வாறு ஆணித் தரமாக எழுத முடிகிறது. இன்றும் பலர் ராமாயணத்தை படித்து வாழ்க்கையில் பல சங்கடங்களில் இருந்து விடுபடுவதைப் பார்க்கலாம். மகாத்மா காந்தி கூட அவருடைய ‘சத்ய சோதனை’ – சுய சரிதையில் ஒரு ராமாயண உபன்யாசகர் தன்னுடைய குஷ்ட ரோகத்திலிருந்து விடுபட ராமாயண பாராயணம் மருந்தாக அமைந்தது என்பதைத் திண்ணமாகக் கூறி இருக்கிறார்.
    ஆகவே, ஹிந்துக்களாகிய நாம் ராமாயணத்தை ஒரு மகிமை வாய்ந்த மந்திர சாஸ்த்ரமாகவும் தர்ம சாஸ்த்ரமாகவும் எண்ணி போற்றவேண்டும். ஒவ்வொரு 1000 ஸ்லோகத்திற்கும் ஒரு அக்ஷரமாக 24 காயத்ரி அக்ஷரங்களுக்கும் அடிப்படையாக அமைந்த புனித காவ்யம்.
    ராம பிரானே!! சீதாப் பிராட்டியே!! எல்லோருக்கும் நல்ல எண்ணங்களைக் கொடுத்து காப்பாற்று!!!

  5. // தான் பகிருவதான ராமகதை மெய்யென்றும் தற்போது புழக்கத்தில் இருக்கும் வால்மீகி ராமாயணம் என்ற காவ்யம் மூலம் நாம் அறியும் ராமகதை பொய்க்கதை எனவும் அன்பர் அவர்கள் கருத்துப்பகிர்ந்துள்ளார். //

    துரியோதனனும் தான் ஒருவன் தான் யோக்கியன் என்றும், உலகத்திலுள்ள மற்ற அனைவரும் அயோக்கியர்கள் என்றும் கூறியிருப்பதை மகாபாரதத்தில் படிக்கிறோம்.

  6. கருத்துப் பகிர்ந்த ஸ்ரீமதி கீதாசாம்பசிவம், ஸ்ரீமதி அத்விகா மற்றும் ஸ்ரீ துளசிதாஸ் ஸ்ரீ சங்கரநாராயணன் ஸ்ரீ ஆர்.எஸ். அவர்களுக்கு நன்றிகள்.

    இந்த வ்யாசம் நான்கு பாகங்களாக படைக்கப்பட்டுள்ளது.

    “ஆதிகவி வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணம் என்ற மூல நூல் பிற்காலத்திலான இடைச்செருகல்களால் முற்றிலுமாக சிதைந்து பொய்க்கதையாகப் போனதா” ?…….

    என்ற விஷயத்தை மட்டிலும்…….. ஆழ்ந்து……. ஆய்வாளர்களின் விசாரம் மூலம் அறிய விழையும் முயற்சி இந்த வ்யாசம்.

    அன்பார்ந்த ஸ்ரீ துளசிதாஸ், மூல ஆங்க்ல வ்யாசத்தினை https://www.indologica.com/volumes/vol21-22/vol21-22_art19_RSHARMA.pdf உரலில் காணலாம். அதன் சாரமே மேலதிகத் தகவல்களுடன் இங்கு என்னால் பகிரப்பட்டுள்ளது.

    ராமகதை சரித்ர நிகழ்வா என்பது பல கோணங்களில் பல விஷயங்களுடன் அணுகப்பட வேண்டிய ஆராய்ச்சி. தாங்கள் பகிர்ந்த சுட்டிகளை அவசியம் காண்பேன்.

    இந்த வ்யாசம் எதிர்வினையன்று. ஆனால் இந்த வ்யாசத்தைத் தொடர்ந்து என்னால் சமர்ப்பிக்கப்பட இருக்கும் வ்யாசம் நிச்சயம் விக்ஞானி ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது ஓரங்க நாடகத்திற்கு எதிர்வினையாக அமையும்.

    படைப்பாளி என்ற படிக்கு விக்ஞானி அவர்கள் இப்படி ஒரு படைப்பினை சமர்ப்பிக்கலாமா என்பது என் விசாரம் அன்று. அது அவரது உரிமை.ஆயினும் படைப்பாளியான விக்ஞானி அவர்கள் இனத்வேஷம், ஹிந்துமதக்காழ்ப்பு மற்றும் வால்மீகி ராமாயணம் பற்றிய அபுரிதல்களைப் பகிர்ந்ததை……… எனக்கு எட்டிய வரை விஷயம் விஷயமாக அணுகி ………. ஒவ்வொரு விஷயத்தையும் அதன் முழு பரிமாணங்களுடன் பகிர விழைவது…… அடுத்த வ்யாசத் தொடரின் ப்ரயாசை. ஸ்ரீமதி அத்விகா அவர்கள் எழுப்பியுள்ள சில விஷயங்கள் அடுத்த வ்யாசத் தொடரில் விசாரிக்கப்படும்.

    ஸ்ரீ சங்கரநாராயணன் அவர்களே, ராமாயண ஆய்வு சம்பந்தமாகத் தாங்கள் பகிர்ந்த சுட்டிகளை அவசியம் இணையத்தில் பார்த்துப் பயனடைய விழைகிறேன்.

  7. ப்ரபன்னர்களுக்கு ஒளிவிளக்காக விளங்கும் சாஸ்த்ரம் ராமாயணம்.

    ராமாயண காவ்ய படன முறைகள் ஸ்காந்த புராணம் மற்றும் வாயுபுராணத்தின் உமா சம்ஹிதையில் விளக்கப்பட்டுள்ளன.

    கற்பார் ராமபிரானையல்லால் மற்றொன்றும் கற்பரோ என்ற ஆழ்வாராதிகளின் அமுதமொழிக்கொப்ப ராமாயண காவ்யத்தை சிந்தையிலிருத்தி…… அதை பாராயணம் செய்வதிலேயே ராமபிரானுடன் ஐக்யமாகும் அன்பர்கள் பாக்யவான்களே.

    இப்படி ஆழ்வாராதிகளால் உகக்கப்பட்டு ஹிந்துக்களிடையே மிகவும் உயர்ந்த பக்தி சாஸ்த்ரமாகவும் மனித குலத்துக்குப் பல பாடங்களை கற்பிக்கும் சாஸ்த்ரமாகவும் இருக்கும் வால்மீகி ராமாயணம் என்ற பெயரில் இன்று நம்மிடையே புழங்கும் மஹாகாவ்யம் இடைச்செருகல்களால் பொய்க்கதையாக மங்கிப்போனது என்ற கருத்தை……….

    எந்த அடிப்படைப்புரிதலும் இல்லாது போகிற போக்கில் விஷமத் தனமாக பொதுதளத்தில் முன்வைத்துள்ளார் விக்ஞானி ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள்.

    இப்படிப்பட்ட விஷமத்தனமான கருத்தை அணுகுவதற்கு இரண்டு வழி இருக்கிறது.

    பாவுகர்களாக மட்டிலும் ராமாயண காவ்யத்தை அணுக விழையும் அன்பர்கள் இப்படிப் பட்ட கருத்தை புறந்தள்ளி முன்செல்வர்.

    ஹிந்துக்களை மதிமயக்கும் மதிஹீனமான பொய்க்கருத்துக்களை…… விஷமத்தனமான கருத்துக்களை……சான்றோர்கள் மற்றும் ஆய்வாளர்கள் விசாரம் செய்த ஆய்வுகளை அணுகி அதன்வழியாக இடித்துறைத்து சாரமான கருத்துக்களை முன்வைக்க விழைவது இன்னொரு வழி.

    சிறியேன் இரண்டாவது வழியை அனுசரித்து இந்த வ்யாசத்தை சமர்ப்பித்துள்ளேன்.

    ராமபக்தி சாம்ராஜ்யத்தில் ஆழ்ந்தவர்களுக்கு ராமாயணமே முதலும் அறுதியும். அதுவே சர்வ சாஸ்த்ரம். அவர்கள் முதல் வழியில் செல்வர்.

    தேவர்களையே வென்ற ராவணனே ஆயினும் கபட நாடகம் ஆட விழைந்தால் ராமபாணத்தால் காபட்யம் களையறுக்கப்படும் என்பது ராமகாவ்யம் காட்டும் கருத்து. மறுவாசிப்பு என்ற காபட்யத்துடன் பொதுதளத்தில் வைக்கப்படும் கருத்துக்கள் சான்றோர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துக்கள் என்ற ராமபாணத்தால் களையறுக்கப்படுவதும் அதையொட்டியே.

    கபடமானது மறுவாசிப்பு, இலக்கியம், அலக்கியம் என எத்தனை வேஷங்கள் அல்லது முகமூடிகள் அணிந்தாலும் அறுதியில் களையறுக்கப்படுவது உறுதி.

    தர்மோ ரக்ஷதி ரக்ஷித: – தன்னைக்காப்பவரை தர்மம் காக்கும்.
    அதர்மம் எத்தனை வேஷம் தரித்தாலும் அழிவது உறுதி.

    சீதாராமஜெயம்.

  8. \\ இராமாயணம் உண்மை என்றோ ,பொய் என்றோ யாரும் வாதம் செய்வதில் ஒரு பொருளும் இல்லை. \\

    சஹோதரி ஸ்ரீமதி அத்விகா.. மிகவும் சரியான கருத்து.

    இந்த வ்யாசம்…..

    ராமாயணம் உண்மையா அல்லது பொய்யா……

    அல்லது இக்கதை சரித்ரத்தில் நிகழ்ந்ததா இல்லையா…….

    என்பதை விசாரிக்க இல்லை.

    மாறாக…….

    மிகக் குறிப்பாக

    “ஆதிகவி வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணம் என்ற மூல நூல் பிற்காலத்திலான இடைச்செருகல்களால் முற்றிலுமாக சிதைந்து பொய்க்கதையாகப் போனதா” ?…….

    என்ற கருத்தை விசாரிக்க மட்டிலும்.

    வரும் பாகங்களில் இந்த விஷயம் ஆய்வாளர்களது மற்றைய கருத்துக்களால் ஆழ்ந்து அணுகப்படும்.

    விஷமித்தனமான கருத்துக்கள் முழு ராமாயண காவ்யத்தையும் இடைச்செருகல் என்று அடையாளப்படுத்தி சிறுமைப்படுத்த விழைவதை ……. சான்றோர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்து சார்ந்து அறிவு பூர்வமாக….. இடைச்செருகல்கள் என்ற விஷயத்தின் ப்ரபாவத்தை அணுக விழைவது இந்த வ்யாசத்தின் ப்ரயாசை.

    ராமாயண காவ்யத்தை சாக்குப்போக்குகள் சொல்லி சிறுமைப்படுத்துவதில்…… ஹிந்து விரோத சக்திகள் முனைந்து ஈடுபட்டு வருகின்றனர்……..அதை களையறுப்பதான ஒரு சிறு ப்ரயாசை இந்த வ்யாசம்.

  9. https://jayabarathan.wordpress.com/seethayanam/ [சீதாயணம் முழு நாடகம்]

    அன்புள்ள நண்பர்களே,

    “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.

    அன்புடன்,
    ஜெயபாரதன், கனடா

    +++++++++++++

    தீண்டப்படாத சீதா

    ~ சீதாயணம் ~

    (ஓரங்க நாடகம்)

    சி. ஜெயபாரதன், கனடா

    முகவுரை: வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

    கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.

    உத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை. உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார் (1). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து! இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!

    உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டு களாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது! தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது! இது வால்மீகி இராமாயணம் அன்று! இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை! பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்பட வில்லை! தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.

    அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் ஹிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா! வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

    உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவ தில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.

    லவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது! வேறொன்றில் அசுவமேத யாகத்தின் போது லவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு வில் போரிட்டதாக கூறப் படுகிறது. இரண்டு சம்பவங்களும் மெய்யாக நடந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் லவா, குசா முதன் முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுமமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் லவா, குசா இராமனைச் சந்தித்த சம்பவத்தை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.

    ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!

    ++++++++++++

  10. https://jayabarathan.wordpress.com/seethayanam/ [சீதாயணம் முழு நாடகம்]

    சி.. ஜெயபாரதன், கனடா.

    தகவல்

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    **************
    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]
    https://jayabarathan.wordpress.com/

  11. அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்

    உங்களுடைய *சீதாயணம்* என்ற படைப்பு ஹிந்துமதக்காழ்ப்பு, போலிப்பகுத்தறிவு ப்ரசாரம், போலி மதசார்பின்மை, வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படாத செய்திகளை சொல்லியதாக பொய் ப்ரசாரம் செய்வது போன்ற அவலங்களை உள்ளடக்கிய படைப்பு என்று சொன்னால் மிகையாகாது. ஆகவே இந்த படைப்பை அலக்கிய படைப்பு என்றே *நான்* அடையாளப்படுத்தியுள்ளேன்.

    எந்த ஒரு விஷயத்தையும் எப்படியும் படைக்க முனைவது படைப்பாளியாகிய உங்களது அடிப்படை சுதந்திரம் என்பதனை ஒப்புக்கொள்கிறேன். அதேபோல் தங்களது படைப்பில் உள்ள மேற்கண்ட அவலங்களை காரண காரியங்களுடன் மறுதலிப்பது என்பதும் சிறியேனுடைய உரிமை என்பதை தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

    ஆதிகவி வால்மீகி முனிவர் எழுதிய வால்மீகி ராமாயணம் என்ற மஹாகாவ்யம் *இடைச்செருகல்களுக்கும்* உட்பட்டிருக்கலாம் என்ற கருத்து ஏற்கத்தக்கதே.

    ஆனால் ஆதிகவி வால்மீகி முனிவர் எழுதிய வால்மீகி ராமாயணம் இடைச்செருகல்களால் உருக்குலைந்து போய்விட்டது என்றும்….

    இன்று நம்மிடையே புழங்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணத்திற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லாத படிக்கு…… இன்று நம்மிடையே உள்ள வால்மீகி ராமாயணம் உருக்குலைந்த பொய்க்கதை — என்று தாங்கள் பகிர்ந்த அடிப்படை புரிதல் அற்ற விஷயம் — மேற்கொண்டு தாங்கள் எந்த விளக்கமும் அளிக்காத விஷயம் — பொது தளத்தில் விஷமிக விஷமத்தனமாக முனைந்து பரப்புரை செய்யும் படிக்காகவே கருதப்படும் என்பதனை அறிக.

    உரக்கப்பேசுவதால் மட்டிலும் அடிப்படைப் புரிதலற்ற ஒரு விஷயத்திற்கு ஜபர்தஸ்தியாக ஒரு புரிதலை தாங்கள் கொடுக்க முடியாது என்று பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்.

    மேலும், பல பொய்க்கருத்துக்களை ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்களை உள்ளடக்கிய *சீதாயணம்* என்ற தங்களது அலக்கியப் படைப்பினை தாங்கள்,

    \\ வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது \\

    என்றும் தாங்கள் கருத்துப் பகிர்ந்துள்ளீர்கள்.

    இந்த தளத்து வாசகர்களின் முன்னால் தங்களால் படைக்கப்பட்ட *சீதாயணம்* என்ற அலக்கியம் தங்கள் ஹிந்துமதக்காழ்ப்புக் கற்பனையில் உதித்த ஒரு மறுவாசிப்பு — என்று தாங்கள் சொல்லிவிட்டால்….. தங்களுடைய அலக்கியம் *மெய்* என்ற *மெய்ஞானத்தை* தாங்கள் எப்படி பெற்றீர்கள் என்று நானோ…… அல்லது இந்த தளத்து வாசகர்களோ தங்களை கேழ்க்க மாட்டார்கள்.

    அவ்வாறில்லாது தங்களுடைய படைப்பு ஒரு மறுவாசிப்பு — ஒரு கற்பனை — என்றில்லாது தாங்கள் முன்வைக்கும் ஒரு படைப்பை *மெய்* என்று எந்த ஆதாரமும் கொடுக்காது வெறுமனே உரக்கப்பேசுவது எப்படித் தகும்.

    கால யந்த்ரத்திலே ப்ரயாணம் செய்து யுகங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைத் தாங்கள் கண்முன்னால் கண்டு வந்துள்ளீர்களா? பகிரலாமே.

    தங்களது கற்பனையான மறுவாசிப்பை பொதுதளத்தில் *மெய்* என்றும்…….

    கோடானுகோடி ஹிந்துக்கள் பக்தி மிக ஹிந்துஸ்தானமுழுதும் உலகமுழுதும் பாராயணம் செய்து வரும் ஒரு க்ரந்தத்தை இடைச்செருகல்களால் உருக்குலைந்து *பொய்*யாகி ஆகி விட்ட நூல் என்றும்……

    எந்தக் காரணமும் — எந்த ஆதாரமும் — எந்த விளக்கங்களும் இல்லாது — கூசாது — தாங்கள் பரப்புரை செய்வது ஹிந்துமதக்காழ்ப்பு என்றில்லாது……… பொய்ப்பரப்புரை என்றில்லாது…… வேறு என்னவாகும் என்பதனை வாசகர்களுக்கு விளக்கவும்.

    வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றபடிக்கு இல்லாது…….. மிகுந்த கருத்து நேர்மையுடன்……. வால்மீகி ராமாயணம் என்ற நூல் எப்படி படைக்கப்பட்டிருக்க வேண்டும்…….. என்ற விஷயத்தை……சான்றோர்கள் மற்றும் ஆய்வாளர்கள்…… முறையான ஆய்வுக்கு உட்படுத்தியபடி……. அக்கருத்துக்களை உள்வாங்கி அதைப் பொதுதளத்தில் பகிரும் முயற்சி சிறியேனுடைய வ்யாசத் தொடர்.

    ஆதாரங்கள் ஏதும் இல்லாது…… விளக்கங்கள் ஏதும் கொடுக்காது……. முனைந்து ஒரு நச்சுக் கருத்தை உரக்கப் பேசுவதன் மூலம் மட்டிலும் பொது தளத்தில் வைக்கும் தங்கள் ப்ரயாசைக்கு முற்றிலும் எதிரான செயல்பாடு என்பதனை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    க்ருஸேட் மற்றும் இன் க்விசிஷன் போன்ற கொடுமை மிக்க முறைமகளால் உலக முழுதும் பலகோடி மாற்று மத மக்களை துன்பத்திலாழ்த்திய க்றைஸ்தவ மதத்தினையும் க்றைஸ்தவர்களது பித்தலாட்டம் மிகுந்த மதமாற்ற நடவடிக்கைகளையும் முனைந்து விதந்தோதும் தாங்கள்………

    தங்களை மதம் பிடிக்கா ஹிந்து என்று தங்களை பொது தளத்தில் பரிச்சயம் தெரிவித்து உள்ளீர்கள்.

    தங்கள் தனிப்பட்ட மதநம்பிக்கைகள் யாதாக இருந்தாலும் அவற்றை தனியொரு நபரின் மத சுதந்திரம் என்ற படிக்கு நான் மதிக்கிறேன். போற்றுகிறேன்.

    தாங்கள் விதந்தோதும் க்றைஸ்தவர்களது மதநூலான *பைபள்* என்ற க்ரந்தமும் *சரித்ரத்தில் இருந்திருக்க சாத்தியமே இல்லாத* ஏசுபிரான் என்ற நபர் — இருந்ததாக சொல்லப்படும் காலத்துக்கு — ஓரிரு நூற்றாண்டுகள் பின்னரே இயற்றப்பட்டதாகவும் அந்த க்ரந்தமும் பல முறை இடைச்செருகல்கள் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    பைபள் என்ற க்ரந்தத்தை ஒருவர் நம்புதல் அல்லது நம்பாமை என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

    *பைபள்* என்ற க்ரந்தத்தில் இருந்திருக்க சாத்தியமான இடைச்செருகல்களையே மிகப்பெரிதாக ஊதி — இன்று புழங்கும் *பைபள்* என்ற க்ரந்தம் இடைச்செருகல்களால் *பொய்*யாகிப் போன ஒரு க்ரந்தம் என்று எந்த ஒரு முகாந்தரமும் இல்லாது — எந்த ஆய்வும் இல்லாது சொல்லுதல் — மதவெறி கொண்டு க்றைஸ்தவத்தை இழிவு செய்ய விழைபவர் செய்யும் ஒரு கார்யமாக அல்லவோ தங்களால் சுட்டப்படும்? ******ஆய்வு பூர்வமாக அன்றி****** “”””” வெறும் உரத்துப்பேசுதல் மூலம்”””””” இப்படியொரு கருத்தைப் பகிர்பவரை மதவெறியர் என்று மட்டிலும் அன்றோ கருத்து நேர்மையுள்ளவர் சுட்டுவர்?

    பொலிவு மிகு தூய தமிழில் விக்ஞானம் சம்பந்தமாக தாங்கள் தொடர்ந்து சமர்ப்பித்து வரும் வ்யாசங்களை நான் மிகவும் உகப்பு மிகவும் மதிப்பு மிகவும் வாசித்து வருகிறேன். என் புரிதலுக்கு உட்பட்ட…. நான் பயனடைந்த தங்களது சில வ்யாசங்களை நான் விதந்தோதியும் உள்ளேன். இது தங்களுக்குத் தெரிந்ததே.

    ஆனால் என் மதிப்பிற்குறிய விக்ஞானியாகிய தாங்கள் முனைந்து பகிரும் பொய் பரப்புரைகளை….. ஹிந்து மதக்காழ்ப்புகளை ……. உரிய காரணங்களுக்காக …….. உரிய காரணங்களை பொதுத் தளத்தில் முன்வைத்து…… இடித்துறைப்பது……

    என்பதே நான் தங்களை மதிப்பது மற்றும் தங்கள் மீது வைத்திருக்கும் அன்பின் *மெய்*யான வெளிப்பாடு எனக் கருதுகிறேன்.

    நான்கு பாகங்களால் ஆன இந்த வ்யாசத்தொடர் எதிர் வினை அன்று.. இந்த வ்யாசத் தொடரில் வால்மீகி ராமாயணப் படைப்பாய்வுகள் மட்டிலும் ஆய்வாளர்களின் கருத்துக்கள் சார்ந்து விசாரிக்கப்படுகின்றன.

    தங்களது அலக்கியப்படைப்பில் உள்ள போற்றத் தகுந்த விஷயங்கள் மற்றும் அதில் செய்யப்பட்டுள்ள பொய்ப்பரப்புரைகள், ஹிந்துமதக்காழ்ப்புகள், வால்மீகி ராமாயணம் பற்றிய அபுரிதல்கள், போலிப் பகுத்தறிவுப் பரப்புரைகள் போன்றவை ஒவ்வொரு விஷயமாக இதைத் தொடரும் வ்யாசத் தொடரில் கண்யத்துடனும்…… ஆழ்ந்தும்…… மூல நூலான வால்மீகி ராமாயணம் சார்ந்தும்…… விசாரிக்கப்படும் என்பதனையும் தங்களுக்கும் வாசகர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பணிவன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  12. நண்பர் திரு. கிருஷ்ணகுமார்,

    ////இன்று நம்மிடையே புழங்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணத்திற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லாத படிக்கு…… இன்று நம்மிடையே உள்ள வால்மீகி ராமாயணம் உருக்குலைந்த பொய்க்கதை — என்று தாங்கள் பகிர்ந்த அடிப்படை புரிதல் அற்ற விஷயம் — மேற்கொண்டு தாங்கள் எந்த விளக்கமும் அளிக்காத விஷயம் — பொது தளத்தில் விஷமிக விஷமத்தனமாக முனைந்து பரப்புரை செய்யும் படிக்காகவே கருதப்படும் என்பதனை அறிக. ////////

    இதில் உள்ள ” விஷமிக விஷமத்தனமாக” என்னும் தனி மனிதத் தாக்கல் சொற்களை எப்படித் தணிக்கையாளர் வடிகட்டாமல் விட்டு விட்டார் ? அவை நீக்கப் பட வேண்டும்.

    சீதாயணம் நாடகத்தில் இந்து மதம் எங்கே இகழப்படுகிறது ? மத மாற்றம் எங்கே
    கூறப்படுகிறது ?

    கிறித்துவ மதம், பைபிள் ஏன் வருகின்றன ?

    சி. ஜெயபாரதன்

  13. அன்புள்ள ஜெயபாரதன் அவர்களுக்கு,

    இந்த விவாதத்தின் பகுதியாக வாசகர்களுக்கு உங்களது நாடகத்தை கவனப் படுத்த வேண்டும் என விரும்பினால், அதற்கான சுட்டியை அளித்தாலே போதுமானது. முழு நாடகத்தின் ஒவ்வொரு பகுதியையும் மறுமொழிகளில் வெட்டி ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை. அத்தகைய நீண்ட மறுமொழிகள் பிரசுரிக்கப் பட மாட்டாது. தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

  14. அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்

    தாங்கள் மறுவாசிப்பு என்ற பெயரில் மூல நூலான ராமாயணத்திலிருந்து வேறுபட்டு பொதுதளத்தில் சமர்ப்பித்துள்ள தங்கள் படைப்பு *மெய்*யாலும் நடந்த நிகழ்வு என்றும் கோடானு கோடி மக்களால் ஹிந்துஸ்தானத்திலும் உலக முழுதும் வாசிக்கப்படும் வால்மீகிராமாயணம் இடைச்செருகல்களால் பொய்க்கதையாக ஆகியுள்ளது என்று கருத்துப்பகிர்ந்துள்ளீர்கள்.

    இந்த இரண்டு கருத்திற்கும் தங்கள் வசம் உள்ள ஆதாரங்கள் என்ன என்று கேட்டிருக்கிறேன். இது வரை தாங்கள் அதற்கு பதிலிறுக்கவில்லை.

    இந்த வ்யாசத்தில் ஆய்வாளர்களுடைய ஆதாரங்கள் மற்றும் அவர்களது ஆய்வுக்கோட்பாடுகள் மூலம்……

    மூல நூலான வால்மீகி ராமாயணம் இடைச்செருகல்களுக்கு உட்பட்டிருப்பினும் தாங்கள் சொன்னது போல முற்று முழுதும் உருக்குலைந்து போய்விடவில்லை என்ற விஷயம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

    இங்கு ஆதாரங்களுடன் மறுதலிக்கப்பட்டுள்ளது தாங்கள் எந்த ஆதாரமும் இல்லாது எந்த முகாந்தரமும் இல்லாது வைத்துள்ள கருத்து.

    வால்மீகி ராமாயணத்தைப் போன்றே மிகவும் புராதானமான ஒரு நூல் க்றைஸ்தவர்களுடைய மதநூலான பைபள். இந்த நூலும் இடைச்செருகல்களுக்கு உள்ளான நூல் என்று அறியப்படுகிறது. இப்படி ஒரு கருத்தை மட்டிலும் மனதிலேற்றி *பைபள்* என்று ஒருகாலத்தில் படைக்கப்பட்ட நூல் பின்னர் வந்த இடைச்செருகல்களால் உருக்குலைந்து போய் விட்டது என்று சொல்லி அதற்கு ஆதாரங்களும் முன் வைக்கப்படாவிடில்……. அக்கருத்தை விஷமத்தனமான கருத்து…. மதவெறியின் பாற்பட்ட கருத்து என்று தானே அறியப்படும்.

    இதே தளத்தில் *பைபள்* க்ரந்தத்தில் சொல்லப்பட்டுள்ள *முதல்பாவம்* போன்ற கருத்துக்கள் மறுதலிக்கப்பட்டதையும் தாங்கள் வாசிக்கலாம். அவை முறையான காரணங்களுடன் முழுமையான தர்க்கங்கள் சார்ந்து என்றும் தாங்கள் பார்க்கலாம் ஐயா.

    தங்களது இரண்டு நிலைப்பாடுகளும் எந்த ஆதாரங்களையும் எந்த விளக்கங்களையும் சாராதவையாக உள்ளனவே.

    நான் தங்களின் மீது வைத்துள்ள மதிப்பையும் தங்களது மற்ற வ்யாசங்களை விதந்தோதியமையும் வெளிப்படையாக என் உத்தரத்தில் பகிர்ந்துள்ளேன், ஐயா. இன்னமும் நான் உங்கள் மீது வைத்துள்ள மதிப்பில் லவலேசமும் குறைவு இல்லை.

    இங்கு மறுதலிக்கப்படுவது எந்த ஆதாரமும் இன்றி தாங்கள் இன்று ஹிந்துக்களிடையே புழங்கும் வால்மீகி ராமாயணம் என்ற நூல் இடைச்செருகல்களால் உருக்குலைந்து பொய்க்கதையாகிப்போனது என்ற கருத்தை என்று அறிக. எந்த ஆதாரமும் இன்றி கோடானு கோடி மக்களிடையே இன்று புழக்கத்தில் இருக்கும் ஒரு நூல் இடைச்செருகல்களால் பொய்யாகிப்போனது என்பதை விஷமத்தனமான கருத்து என்றும் விஷக்கருத்து என்றும் அல்லாது எப்படி சுட்ட இயலும்?

    தங்களுடைய படைப்பு ஒரு புனைவு என்றால் புரிந்து கொள்ளலாம். ஆனால் தங்களுடைய படைப்பு *மெய்* என்றால் அந்த *மெய்ஞானத்தின்* ஆதாரம் எது என்பதும் நிச்சயமாகக் கேழ்க்கப்படும் ஐயா.

    இரண்டு நிலைப்பாடுகளுக்கும் தாங்கள் அறிவுபூர்வமாக விளக்கம் அளித்தால் நான் என்னுடைய நிலைப்பாடுகளை நிச்சயம் பரிசீலிப்பேன்.

    \\ சீதாயணம் நாடகத்தில் இந்து மதம் எங்கே இகழப்படுகிறது ? \\

    மேலே தாங்கள் பகிர்ந்துள்ள ஆதாரமற்ற இரண்டு நிலைப்பாடுகளையும் ஹிந்துமதக்காழ்ப்பு என்றில்லாது வேறு எப்படி எடுத்துக்கொள்ள முடியும்

    \\ மத மாற்றம் எங்கே கூறப்படுகிறது ? \\

    தங்களது படைப்பு மதமாற்றம் பற்றிப்பேசுகிறது என்று நான் குறிப்பிடவில்லையே!!!!

    \\ கிறித்துவ மதம், பைபிள் ஏன் வருகின்றன ? \\

    ஹிந்துக்களுக்குப் புனிதமான புராதனமான ராமாயணம் போலவே க்றைஸ்தவ சஹோதரர்களுக்குப் புனிதமான புராதனமான நூலான *பைபள்* நூலைப் பற்றி எந்த ஆதாரமும் இல்லாது அந்த நூல் இடைச்செருகல்களால் *பொய்* யாகிப்போனது என்ற கருத்து முன் வைக்கப்படின் — தாங்கள் அக்கருத்தை எப்படி ஏற்பீர்கள் என்பதனைப் பகிரலாமே.

    ராமாயணத்தைப்பற்றி இழிவு செய்யும் ஒரு கருத்தை கணிதத்தில் எழுதப்பட்ட ஒரு நூலுடனா ஒப்பிட முடியும்.

    எந்த ஆய்வும் இன்றி *பைபள்* என்ற க்ரந்தம் இடைச்செருகல்களால் *பொய்*யாகிப்போன நூல் என்று ஒரு அன்பர் கருத்துப்பகிர்ந்தால் —- என்னுடைய அலகீடுகள் மாறாது. அக்கருத்தை விஷமிக்க விஷமத்தனமான கருத்து என்றே சுட்டுவேன்.

    பணிவன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  15. அன்புள்ள கிருஷ்ணகுமார்,

    நல்ல தொடரை வழங்கி வருகிறீர்கள். இராமாயணம், மகாபாரதம், இரண்டுமே பல்வேறு இந்திய மற்றும் உலகமொழிகளில் பல்வேறு ஆசிரியர்களால் பல்வேறு காலக்கட்டத்தில் விரிவாகவும், சுருக்கமாகவும் (abridged ) எழுதப்பட்டுள்ளன. இனியும் எதிர்காலத்திலும் பலர் மேலும் எழுதுவர்.

    வால்மீகி இராமாயணம் உருக்குலையவில்லை. தமிழில் கம்பராமாயணம் போலவும் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பிற இந்திய மொழிகளில் மொழிமாற்றத்துடன்அந்த மாநிலங்களில் உள்ள மக்களின் மானிலச்சுவை கூடும் பொருட்டு , சில மாற்றங்கள் வந்துள்ளன என்பது உண்மைதான். அதனை இங்கு யாரும் மறுக்கவில்லை.சீதையை இராவணன் தூக்கிச்சென்றதை, வால்மீகி விவரிப்பதை போல கம்பர் விவரிக்கவில்லை. தமிழ்க் கலாசாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து , பக்குவப்படுத்தி உள்ளார். எனக்கு நேரம் இருந்தால் நானும் கூட ஒரு புது இராமாயணம் எழுதுவேன். நான் எழுதும் இராமாயணத்தில் , இராவணனால் கைது செய்து கடத்திச் செல்லப்பட்ட இராமபிரானை ,சீதாப்பிராட்டி போர் தொடுத்து மீட்டு வந்ததாக எழுதுவேன். அந்த உரிமை தான் இந்துமதத்தின் சிறப்பு.

    இராமன் என்பவனை அயோத்தியின் மன்னன் என்று மட்டும் பார்ப்பது ஒரு பார்வை. ராம என்பது சிவ சக்தி ஐக்கியம் மற்றும் சிவ விஷ்ணு ஐக்கியத்தினை குறிக்கும், இணைவு மந்திரம். இராமன் என்பவன் இந்த மண்ணுலகில் அவதரிக்கும் முன்னரே ராம என்னும் மந்திரம் என்றும் உள்ளது. மின்சாரத்தை ஒரு விஞ்ஞானி கண்டுபிடிக்கும் முன்னரே மின்சாரம் இருந்ததைப்போல. அது சக்தி வாய்ந்த ஒரு மகா மந்திரம் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். ஜெயபாரதன் அவர்களின் எழுத்து நன்றாக உள்ளது. அதே சமயத்தில், அவரது எழுத்துக்களில் எல்லோரையும் போல, தான் எழுதுவது தான் சரியான உண்மையான ராமாயணம் என்ற எண்ணம் பிரதிபலிக்கிறது அவ்வளவுதான். இன்னும் பல கோடி புதிய ராமாயணங்கள் பல்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டாலும், அடிப்படை என்னவெனில்,
    1. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை,

    2. ஒரு வாக்கு, ஒரு பாணம், ஒரு மனைவி என்பது தான்.

    அதுமாறாது.ஆணாதிக்க ஆபிரகாமிய வெறியர்களின் தவறான பொய்ப் பிரச்சாரங்களினால், எதிர்காலத்தில் இதே ராமாயனத்தினை மாற்றி எழுதும்போது, சீதாப்பிராட்டி தன் கணவனின் நடத்தையில் சந்தேகப்பட்டு, இராமனை தீக்குளிக்கச்சொன்னாள் என்று எழுதி இராமன் தீக்குளித்து மீண்டான் என்று வரும் அவ்வளவுதான். இணையத்தில் எழுதும் பல எழுத்தாளர்களும் இந்து காவியங்களில் மட்டும் தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்துகிறார்கள். ஆபிரகாமியரோ, பாவம் தஸ்லிமா நஸ் ரீன் , சாத்தானின் கவிதைகள் என்று மிரட்டல் மற்றும் வாய்ப்பூட்டு , வன்முறை மூலம் உண்மைகளைப் புதைக்கின்றனர்.

  16. Dear Krishnakumar,

    /////வால்மீகி ராமாயணத்தைப் போன்றே மிகவும் புராதானமான ஒரு நூல் க்றைஸ்தவர்களுடைய மதநூலான பைபள். இந்த நூலும் இடைச்செருகல்களுக்கு உள்ளான நூல் என்று அறியப்படுகிறது. இப்படி ஒரு கருத்தை மட்டிலும் மனதிலேற்றி *பைபள்* என்று ஒருகாலத்தில் படைக்கப்பட்ட நூல் பின்னர் வந்த இடைச்செருகல்களால் உருக்குலைந்து போய் விட்டது என்று சொல்லி அதற்கு ஆதாரங்களும் முன் வைக்கப்படாவிடில்……. அக்கருத்தை விஷமத்தனமான கருத்து…. மதவெறியின் பாற்பட்ட கருத்து என்று தானே அறியப்படும்.//////

    This great discovery statement is yours not mine. This is not relevant to my Seethayanam Drama debate.

    ////எந்த ஆய்வும் இன்றி *பைபள்* என்ற க்ரந்தம் இடைச்செருகல்களால் *பொய்*யாகிப் போன நூல் என்று ஒரு அன்பர் கருத்துப்பகிர்ந்தால் —- என்னுடைய அலகீடுகள் மாறாது. அக்கருத்தை விஷமிக்க விஷமத்தனமான கருத்து என்றே சுட்டுவேன்.////

    This is not relevant to my Seethayanam Drama.

    S. Jayabarathan

  17. Who is Mr. Krishnakumar to threaten me, as the Great Ayatollah Khomeini of Iran did arrogantly on Salman Rushdie’s book “Satanic Verses.”

    Who is this Great Indian age Krishnakumar to tell me what I should write or what should I not ?

    Writing is my Birth Right. I do not want to reply to his uncivilzed and mean comments.

    S. Jayabarathan

  18. அன்பார்ந்த ஸ்ரீ கதிரவன்,

    மதிப்பிற்குறிய ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் தான் படைத்துள்ள ராமகதை *மெய்*யாக நடந்த நிகழ்வு என்றும்……..

    மேலும் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட மூல ராமாயண நூல் தொடர்ந்த இடைச்செருகல்களால் முற்றிலும் உருக்குலைந்து இன்று நம்மிடம் புழங்கும் வால்மீகி ராமாயணம் என்ற நூல் — வால்மீகி முனிவரால் படைக்கப்பட்ட மூல ராமாயணத்துடன் தொடர்பிலாத – ஒரு பொய்க்கதை என்றும்……

    எந்த ஆதாரங்களும் எந்த தர்க்கங்களும் எந்த விளக்கங்களும் இல்லாது கருத்துப் பகிர்ந்துள்ளார்.

    தன் படைப்பு ஒரு புனைவு என்றால் அது எப்படி *மெய்* என்ற கேழ்வி எழாது.

    இரண்டாம் நிலைப்பாட்டை துலக்குமுகமாக — என்ற நோக்கத்துடன் முழுக்கவும் இல்லாது — ஆனால் பொதுவில் ஆய்வாளர்கள் வால்மீகி ராமாயண படைப்பினைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதனை அறிய விழையும் ப்ரயாசை இந்த வ்யாசம்.

    எந்த படைப்பாளியும் எந்தப் படைப்பையும் எப்படியும் படைக்க உள்ள உரிமையை நான் எங்கும் கேழ்விக்கு உட்படுத்தியதில்லை.

    ஆனால் அதில் உள்ள உள்நோக்கங்கள் — விமர்சிக்கப்படும். அன்பர் அவர்களது அலக்கியப்படைப்பில் உள்ள குறைகள் மட்டுமின்றி நிறைகளும் விசாரம் செய்யப்படும்.

    தங்களுக்கு மேம்போக்காக சாதுவாகத் தெரியும் அன்பர் அவர்களின் அலக்கிய படைப்பிலும் — அதைத் தொடர்ந்த விவாதங்களிலும் — போலிப் பகுத்தறிவு ப்ரசாரம், போலி மதசார்பின்மை மற்றும் வால்மீகி ராமாயணம் பற்றிய பல அபுரிதல்கள் அன்பர் அவர்களால் பகிரப்பட்டுள்ளன. இவற்றை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயங்களை அதன் முழு பரிமாணங்களுடன் விளக்கியும் மூல சான்றாதாரமான வால்மீகி ராமாயணம் சார்ந்தும் இதைத் தொடரும் மற்றொரு வ்யாசத் தொடரில் சமர்ப்பிக்க உள்ளேன்.

    பொதுவில் ராமாயணப்படைப்புகள் சார்ந்து நான் இந்த ஆய்வுகள் மூலமாக அறிந்த விஷயத்தை – என் புரிதலை – இந்த வ்யாசத் தொடர் நிறைவுறும் போது பகிர்கிறேன்.

    விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் அவர்களுடன் நான் கருத்து வேறுபடும் இரண்டாவது வ்யாசம் இந்தத் தொடர்.

    அன்பர் அவர்கள் மஹாத்மா காந்தியின் மரணம் என்ற பெயரில் திண்ணை தளத்தில் சமர்ப்பித்த வ்யாசத்தில் – ஹிந்து மத த்வேஷக் கருத்துக்கள், க்றைஸ்தவ துஷ்ப்ரசாரம் மற்றும் மஹாத்மா காந்தியடிகளின் கருத்துக்களை சிதைத்தமை போன்றவற்றை மறுதலித்து இரண்டு பகுதிகளாலான வ்யாசத் தொடரை திண்ணை தளத்தில் சமர்ப்பித்திருந்தேன். கீழே சுட்டிகள். அவற்றையும் தாங்கள் வாசித்தால் — நான் இதைத் தொடர்ந்து சமர்ப்பிக்க இருக்கின்ற வ்யாசத்தொடரில் உள்ள ந்யாயங்களை முழுமையாக உள்வாங்கலாம்.

    https://puthu.thinnai.com/?p=18734

    https://puthu.thinnai.com/?p=18975

    நன்றி
    க்ருஷ்ணகுமார்

  19. அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    நீங்கள் என்னை அயதொல்லா கொமெய்னி என்று அழைத்தாலும் நான் உங்களை அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் என்று மட்டிலும் சுட்டுவேன்.

    \\ Writing is my Birth Right. \\

    Nowhere I had ever questioned your right to write anything. But it is equally my right to pinpoint the flaws in what you write, sir.

    \\ Who is this Great Indian Sage Krishnakumar to tell me what I should write or what should I not ? \\

    Sir, I have never said what you should write. But I have every right to say what are the flaws in your writings.

    \\ Who is Mr. Krishnakumar to threaten me \\

    Dear Shri.Jeyabharathan, Where is the threatening?

    Do you consider the fact that I would address every issue which you wrongly raised in your *nataka* as a threat? thats childish.

    With all due respects, You have not given even a single explanation to two of your flawed baseless statements. Without a single explanation from your end, what you have written would be construed as pure *BLUFF*

    What I have shared in this article and try to counter in my forthcoming article is based ……….and would also be fully based …………. on facts, sir

    \\ Who is Mr. Krishnakumar to threaten me, as the Great Ayatollah Khomeini of Iran did arrogantly on Salman Rushdie’s book “Satanic Verses.” \\

    And sir, I leave it to the readers to conclude as to whether I am responding to you in a civilised manner or not. By the way, do you think that the above comment is submitted in a civilised maaner?

    And this is not the first time I get this sort of comment from your end and my way of counter comments would be sharp, focussed and as well fully civilised. Thats assured.

    \\ This great discovery statement is yours not mine. This is not relevant to my Seethayanam Drama debate.\\

    மதிப்பிற்குறிய ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் தான் படைத்துள்ள ராமகதை *மெய்*யாக நடந்த நிகழ்வு என்றும்……..

    மேலும் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட மூல ராமாயண நூல் தொடர்ந்த இடைச்செருகல்களால் முற்றிலும் உருக்குலைந்து இன்று நம்மிடம் புழங்கும் வால்மீகி ராமாயணம் என்ற நூல் — வால்மீகி முனிவரால் படைக்கப்பட்ட மூல ராமாயணத்துடன் தொடர்பிலாத – ஒரு பொய்க்கதை என்றும்……

    இது உங்கள் சீதாயணத்தில் தானே சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் தாங்கள் இதுவரை எந்த ஆதாரங்களையோ தர்க்கங்களையோ விளக்கங்களையோ அளிக்கவில்லை.

    இதே போன்ற *ஆதாரமற்ற* *தர்க்கமற்ற* விளக்கங்களில்லாத* ஒரு இழிவான கருத்தை *பைபள்* க்ரந்தம் சார்ந்து ஒருவர் சொன்னால் நீங்கள் ஏற்பீர்களா?

  20. ////மதிப்பிற்குறிய ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் தான் படைத்துள்ள ராமகதை *மெய்*யாக நடந்த நிகழ்வு என்றும்……..

    மேலும் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட மூல ராமாயண நூல் தொடர்ந்த இடைச்செருகல்களால் முற்றிலும் உருக்குலைந்து இன்று நம்மிடம் புழங்கும் வால்மீகி ராமாயணம் என்ற நூல் — வால்மீகி முனிவரால் படைக்கப்பட்ட மூல ராமாயணத்துடன் தொடர்பிலாத – ஒரு பொய்க்கதை என்றும்…///

    இது என் கூற்றில்லை. திரு. கிருஷ்ணகுமார் மாற்றித் திரித்த கயிறு.
    +++++++++++++

    இதுதான் என் சீதாயணப் படைப்பு.

    1. ////சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.

    2. முகவுரை: வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து.

    3. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப் பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார்.////

    சி. ஜெயபாரதன்

  21. கலியுக சாணக்கியர் திரு. கிருஷ்ணகுமார் இப்போது இராம கதையில் பின்வாங்கி சாமர்த்தியமாக காந்திஜி பற்றியும், வீரசாவர்க்கர் பற்றியும் வாசகரைக் குழப்ப இழுத்துக் கொண்டு போவது கோமாளித்தனமாய் இருக்கிறது.

    இது அடி வாங்கிக் காயம் ஆறாத புலி. செத்த விஷயங்களை மீண்டும் புதுப்பித்து தன் பெருமை பீற்ற டமாரம் அடிக்கிறது !!!

    ////விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் அவர்களுடன் நான் கருத்து வேறுபடும் இரண்டாவது வ்யாசம் இந்தத் தொடர்.

    அன்பர் அவர்கள் மஹாத்மா காந்தியின் மரணம் என்ற பெயரில் திண்ணை தளத்தில் சமர்ப்பித்த வ்யாசத்தில் – ஹிந்து மத த்வேஷக் கருத்துக்கள், க்றைஸ்தவ துஷ்ப்ரசாரம் மற்றும் மஹாத்மா காந்தியடிகளின் கருத்துக்களை சிதைத்தமை போன்றவற்றை மறுதலித்து இரண்டு பகுதிகளாலான வ்யாசத் தொடரை திண்ணை தளத்தில் சமர்ப்பித்திருந்தேன். கீழே சுட்டிகள். அவற்றையும் தாங்கள் வாசித்தால் — நான் இதைத் தொடர்ந்து சமர்ப்பிக்க இருக்கின்ற வ்யாசத்தொடரில் உள்ள ந்யாயங்களை முழுமையாக உள்வாங்கலாம்.

    https://puthu.thinnai.com/?p=18734
    https://puthu.thinnai.com/?p=18975 /////

    சி. ஜெயபாரதன்.

  22. வசமாக மாட்டிக்கொண்டு ஏதேதோ உளறுகிறார் இந்த ஜெயபாரதன்…

    // சீதாயணம் நாடகத்தில் இந்து மதம் எங்கே இகழப்படுகிறது ? //

    இவர் எழுதிய பின்னுரைப் பகுதியிலிருந்து சில பகுதிகள்:

    // இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன் வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை! //

    //அவனது வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, பொறிக்கத் தகுந்த எந்தப் பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை! //

    // பூமியில் அவதரித்து யுத்த களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவரில் அர்ச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும் தர்க்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப் பின்னால் வந்தவர், கிருஷ்ண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும் பெற தெய்வீக முலாம் பூசி விட்டர்கள். //

    //இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண கதைகள் அனைத்தும் ஆணாதிக்க வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன!//

    //கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மதப்போரை மறுபடியும் துவக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும் புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் கோயில் எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல் மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வர்க்கமும் இராமன் அவதார தேவன் அல்லன் என்று பலமுறைகள் பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்த தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப் போராட்டம் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!//

    அது தவிர இந்து மத விரோதியான கி.வீரமணியின் பாராட்டுக்குப் பாத்திரமாகி வீரமணியின் விஷம் கக்கும் செயலுக்கு உடந்தையாக இருந்து வருவதைப் பெருமையுடன் காண்பித்திருக்கிறார் தமது தளத்தில்: https://jayabarathan.wordpress.com/seethayanam/#comment-116105

    திரு. ஜெயபாரதன் அவர்கள்,

    வணக்கம். தங்களது மின்அஞ்சல் கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி!

    துணிச்சலான தங்களது ‘சீதாயணம்’ ஒரு புதிய சிந்தனை. இராமாயணம் நடந்த கதை என்பதை எங்களைப் போன்றவர்களால் ஏற்க முடியாது என்றபோதிலும், தங்களது கருத்து வடிவம், எழுத்து நடை எல்லாம் அணுசக்தி விஞ்ஞானியாக இருந்துள்ள நிலையில் இவ்வளவு சிறப்புடன் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

    அந்நூல்பற்றி நான் விரைவில் சென்னை பெரியார் திடலில் வாரந்தோறும் நடைபெறும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் விளக்கி உரையாற்றவிருக்கிறேன்.

    நிறைய இதுபோல் சுதந்திர சிந்தனையுடன் எழுதுங்கள்.

    இங்கு வரும்போது பெரியார் கல்வி நிறுவனங்களுக்கும் வந்து பாருங்கள்.

    தங்களன்புள்ள,
    கி.வீரமணி

  23. இராமாயணம் இந்து மதத்தைப் பரப்பவில்லை. இராமனும் இந்து மதத்தைப் பற்றி எதுவும் தன் வாழ்க்கையில் கூறவில்லை. இராமாயணம் மத நூல் இல்லை.

    மகாபாரதமும் இந்து மதத்தைப் பற்றி எங்கே விளக்கம் தருகிறது ? வியாச முனிவர் படைத்த பகவத் கீதையில் இந்து மதப் பிரச்சாரம் உள்ளதா ?

    இந்து மதத்தை இராமனோ, கிருஷ்ண பரமாத்மாவோ போன்ற ஒற்றைக் குருஜி எவரும் உருவாக்கவில்லை.

    இந்து மதம் பல ஞானிகளின் சித்தாந்த நதிகள் சங்கமித்த ஒரு கடல். அதில் என் சிறு சீதாயண நாடகம் எந்த அலையும் உண்டாக்காது.

    “புலி வருது, புலி வருது” என்று இராம பக்தர்கள் கிருஷ்ண குமாரும், கந்தர்வனும் அலற வேண்டாம், அஞ்ச வேண்டாம்.

    சி. ஜெயபாரதன்.

  24. //கலியுக சாணக்கியர் திரு. கிருஷ்ணகுமார்//

    தனிப்பட்ட ஒருவரை விமர்சிக்கும் பண்பு பற்ரி சிறிதும் தெரியாத ஒருவர் இந்த சி. ஜெயபாரதன். திண்ணை தளத்தில் அதற்க்கு அவரைவிட கேவலமாக பதிலடி கொடுத்தவன் நான். இங்கு ஆசிரியர் அதை சரி பண்ண வேண்டும். இல்லை எனில் விவாதம் திசை மாற வாய்ப்பு உண்டு.

  25. \\ இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. \\ மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப் பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. \\

    அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன் இது நீங்கள் திரித்த கயிறு தானே

    உங்கள் அலக்கியம் கற்பனை இல்லை மெய் என்று நீங்கள் தானே எழுதினீர்கள்.
    மூல ராமாயணம் பொய்க்கதையாக மங்கிப் போனது என்று நீங்கள் தானே எழுதினீர்கள்.

    மெய் ஞானம் எப்படி பெற்றீர்கள். வால்மீகி ராமாயணம் என்ற தலைப்பை தவிர நீங்கள் இதன் ஆங்கல மொழியாக்கம் கூட வாசித்தது இல்லை என்பது திண்ணம் ஐயா. இது வரை உங்கள் பொய்களுக்கு உங்கள் கயிறு திரித்தலுக்கு எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கவில்லை.

  26. Sriman jeyabharathan, the rebuttal has not yet started.

    the sort of cherry picking, pseudo rationalism, pseudo secularism, half truths, laugh riots you have indulged in your write up, sir, that has to be explained point by point, sir.

    veer savarkar, adipatta puli. Respected sir, you want me to place before this august audience also, the lie you wrote in your article, the question I raised,the evidence you submitted, and the evidence which blasted your lie.

    your famous quote there, that 1984 delhi sikh riots was one of Hindu Sikh riots…………

    Sir, what you wrote is here for all to see. And the fact that you have no explanations on what you wrote is also there for all to see, sir.

  27. ஐயா ஜெயபாரதன் ராமாயணம், மகாபாரதம், கீதை எதுவுமே இந்துமதம் இல்லை என்கிறார்… இதே ரீதியில் பிள்ளையார், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு, கோயில், குளம், யோகம், அத்வைதம், த்வைதம், தீபாவளி, பொங்கல் எதுவுமே இந்துமதம் இல்லை என்று சொல்லிவிடலாமே..இந்த அடிப்படை தர்க்கப் பிழை கூட அவருக்குப் புரியவில்லையா என்ன? வால்மீகி ராமாயணத்தில் “இது இந்து மதத்தின் புனித நூல்” என்று லேபிள் ஒட்டி ஒரு சுலோகம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரா? பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட ஒரு மதம் எப்படி படிப்படியாக தோன்றி வளர்கிறது என்ற அடிப்படை புரிதல் கூட அவருக்கு இல்லையா என்ன? அடக் கொடுமையே..

    “ராமாயணமும், ராமனும் *மட்டுமே* இந்துமதம் இல்லை” என்று சொல்ல வந்து அதை தவறாக ஐயா ஜெ.பா. எழுதி விட்டார் என்று தோன்றுகிறது.. அந்தக் கூற்று சரிதான். ஆனால் அதன் பொருள் ராமாயணத்தையும், ராமனையும் குறித்து அபத்தமாக யாராவது பேசினால் இந்துக்கள் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்பதல்ல. இந்துமதத்தின் *எந்த ஒரு தெய்வ அவதாரமும்* புனித நூலும், மரபுகளும், ஆன்மீக மையங்களும் அவதூறு செய்யப் பட்டாலும், தவறாக சித்தரிக்கப் பட்டாலும், அது ஒட்டுமொத்த இந்துமதத்தின் மீது செய்யப் பட்ட அவமரியாதை தான். எனவே, ஜெயபாரதனின் தவறுகளை ஐயா கிருஷ்ணகுமார் அவர்கள் அருமையாக அம்பலப் படுத்தி சுட்டிக் காட்டுவது மிகச் சரியானது.

    ஆதாரபூர்வமாக க்ருஷ்ண குமார் ஐயாவின் கேள்விகளுக்கு விடையளிப்பதே ஐயா ஜெயபாரதன் செய்ய வேன்டியது. அதை விடுத்து, தனது திரிபுவாதங்களுக்கு இந்து மதத்தில் அளிக்கப் பட்டுள்ள கருத்து சுதந்திரத்தையே ஒரு சாக்காக சொல்லி மழுப்புவதல்ல.

  28. \\ இராமாயணம் இந்து மதத்தைப் பரப்பவில்லை. இராமனும் இந்து மதத்தைப் பற்றி எதுவும் தன் வாழ்க்கையில் கூறவில்லை. இராமாயணம் மத நூல் இல்லை.\\

    மதிப்பிற்குறிய ஸ்ரீமான் ஜெயபாரதன் வால்மீகி ராமாயணம் என்ற நூலின் தலைப்பையல்லாது வேறொன்றும் வாசித்ததில்லை என்றும் ராமாயணம் பற்றிய அடிப்படைப் புரிதல் ஏதும் கொண்டாரில்லை என்பதையும் அவர் கருத்துக்கள் சார்ந்தும் மூலச் சான்றான ராமாயணம் மூலமும் விவாதிக்கப்படும்.

    ராஜாஜி பற்றி தாங்கள் திரித்துச் சொல்லிய விஷயங்கள் மற்றும் cherry picking செய்து பரப்பிய half truths இவையும் பகிரப்படும் ஐயா.

    ஸ்ரீமான் கந்தர்வனோ அல்லது சிறியேனோ நாங்கள் யாரும் அலறவில்லை. மாறாக தாங்கள் கண்யம் குறைந்து தங்கள் கருத்துக்களைப் பதிக்கிறீர்கள்.

    அன்பின் ஸ்ரீ பாண்டியன், மதிப்பிற்குறிய ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் கண்யக்குறைவாகத் தன் கருத்துக்களைப் பகிர விழைந்தால் அவர் எப்போதும் செய்வது போல் தரம் தாழ்ந்து கண்யமின்றி தன் கருத்துக்களை பதிவு செய்யட்டும். ஆனால் நானோ நீங்களோ நம் தளத்தில் கருத்துப் பதியும் வாசகர்களோ சிறிதளவும் நம் கருத்துக்களில் கண்யக் குறைவுடன் பதிலிறுக்க வேண்டாம் என்று விக்ஞாபித்துக்கொள்கிறேன். நமது கருத்துக்கள் அறிவு பூர்வமான விவாதமாக மட்டிலும் இருக்கட்டும்.

    ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    \\ \\ இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. \\ மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப் பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. \\

    மேற்கண்டவை உங்கள் கருத்துக்கள். உங்கள் ஹிந்துமதக்காழ்ப்பு அலக்கியத்தைக் கற்பனை என்று கருத வேண்டாம், மெய் என்று சொல்லியுள்ளீர்கள்.

    மூல நூல் இடைச்செருகல்களால் பொய்க்கதையாய் மங்கிப்போனது என்று தெரிவித்துள்ளீர்கள்.

    இரண்டிற்கும் எந்த விளக்கங்களும் தர்க்கங்களும் ஆதாரங்களும் தங்கள் தரப்பிலிருந்து இல்லை.

    சொன்னதைத் திருப்பித் திருப்பி சொல்வதில் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

    இடைச்செருகல்களால் மூல ராமாயணம் பொய்க்கதையாகப் போகவில்லை என்பதனை என்னுடைய நான்கு பகுதிகளும் ஆய்வுகள் சார்ந்து தெளிவாக்குகின்றன.

    உங்களுடைய திரிபுக்கருத்துக்கள், விவாதங்களினூடே பகிர்ந்த க்றைஸ்தவ துஷ்ப்ரசாரம் மற்றும் இனத்வேஷக் கருத்துக்கள் போன்றவை அடுத்த தொகுப்பில் அதனதன் முழு பரிமாணத்துடன் விவரிக்கப்படும்.

    நன்றி
    க்ருஷ்ணகுமார்

  29. கிருஷ்ணகுமார் ஜி!!

    பட்டையைக் கிளப்பி விட்டீர்கள் ஐயா. ஜெயபாரதன் ஏன் இனிமேல் இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கப் போகிறார்? எட்டிக் கூடப் பார்க்க மாட்டார். வீரமணியிடம் எதாவது கேடயம் வாங்கப் போயிருப்பார் என்று நினைக்கிறேன்.

  30. //இராமாயணம் இந்து மதத்தைப் பரப்பவில்லை. இராமனும் இந்து மதத்தைப் பற்றி எதுவும் தன் வாழ்க்கையில் கூறவில்லை. இராமாயணம் மத நூல் இல்லை.

    மகாபாரதமும் இந்து மதத்தைப் பற்றி எங்கே விளக்கம் தருகிறது ? வியாச முனிவர் படைத்த பகவத் கீதையில் இந்து மதப் பிரச்சாரம் உள்ளதா ?//

    படித்ததை உள்வாங்கும் திறன் உள்ள எந்த வெண்ணைவெட்டியும் கூட மகாபாரதத்தில் பகவத் கீதை அடங்கும் என்றும், அதில் கண்ணன் கர்ம வினையைப் பற்றியும், ஒருவனின் ஸ்வதர்மத்தைப் பற்றியும், அவனே பரமாத்மன் என்று உரைப்பதையும் படித்தறியலாம். இதில் இந்து மத பிரச்சாரம் இருக்கிறதோ இல்லையோ, தெளிவாக்கக்கூடிய விளக்கங்கள் பக்கம் பக்கமாக உண்டு. பீஷ்மர் கண்ணனே விஷ்ணு என்றும், அவன் பெருமையை அம்புப் படுக்கையில் படுத்தவாறே யுதிஷ்டிரனுக்கு விளக்குவதும் இந்து மத விளக்கங்கள் இல்லையா?

    சரியான திராபைத்தனமான தற்குறி புத்தியுள்ளவருக்குத் தான் இதெல்லாம் படித்தாலும் விளங்காமல் போகும். மேலும், ராமாயணம் பாலகாண்டத்திற்கு முன்பே அதாவது துவங்கும்போதே வால்மீகி முனிவர் நாரதரிடம் கேள்வி கேட்பது போல தான் அமைந்துள்ளது. அதாவது இவ்வுலகில் இந்திரனுக்கும், சூரியனுக்கும் ஒப்பான ஒரு மாமனிதன் யார் என்று வினவுவதாகவும், அதற்கு நாரதர் ஸ்ரீ ராமனைப் பற்றி வால்மீகிக்கு கூறுவதாகவும் துவங்குகிறது. அதில் ராமன் வேதங்களை முறையே பயின்றவனென்றும், இணையில்லா மாவீரனென்றும் விவரிக்கிறார். இதையெல்லாம் படித்து ராமாயணம் ஹிந்து மதநூல் தான் என்று புரிந்து கொள்ள பக்தி தேவை இல்லை. கொஞ்சத்திற்கு கொஞ்சம் அறிவிருந்தாலே போதும். இதையே தெரிந்து கொள்ளாமல் என்ன கண்றாவியை எழுதி வைத்துள்ளார் இந்த ஜெயபாரதன்? இதில் நம்மிடம் மதநூலா என்று கேள்வி வேறு! கண்றாவி!!

  31. நண்பர்களே,

    1. இராமனைத் தேவனாகப் கருதினால், தொடர்ந்து நாட்டில் மதச் சண்டைகள், கொலைகள் பெறுக வாய்ப்புக்கள் உண்டாகும்.

    2. இராமனைக் குறைபாடு, நிறைபாடு கொண்ட வெறும் மானிட வேந்தனாய்க் கருதினால், நாட்டில் மதச்சண்டைகள், கொலைகள் குறையும்.

    எது வேண்டும் என்று இராம பக்தர்கள் தேர்வு செய்வது அவரது தனிப்பட்ட உரிமை.

    சீதாயணம் நாடகத்தை நான் எழுதியதற்கு முதற் காரணம் : இராமன் முழுக்க முழுக்க ஒரு மானிடன் என்பதே.

    இராமனைத் தேவனாகக் கருதும் இந்திய மக்களை சீதாயண நாடகம் தடுக்கவில்லை.

    சி. ஜெயபாரதன்

  32. ராமாயணம் மாபெரும் இந்து மத காவியம் . ஸ்ரீ ராமன் மக்களுக்காக வாழ்ந்த இறைவன் அவதாரம் . இவரை போன்றவர்கள் இப்படி எழுதுவதால் , ஒன்றும் ஆகிவிடபோவது இல்லை ! பல நுற்றண்டுகள் சென்ற போதும் , இவர்கள் ராமாயணத்தை பற்றி பேசுகிறார்கள் என்றால், ஸ்ரீ ராமன் காலத்தை வென்றவன் !

  33. What is that Tamil proverb about the fly in Iron Smith’s workshop? Why should scientist and a rabid Christian Mr Jayabarathan worry about Hinduism? He should rather spend his time and energy on 1) Pedophilia in the Church 2) Sexual abuse of Nuns in Christianity.3) Caste discrimination in Christianity . He can make a movie on all this.
    He also can read about Christian priest’s sexual abuse in the book ” A Nun’s story”.
    I won’t go into drugs, murder and arms dealings of the Vatican.(Yet!!) Vatican is too big for even Mr JB to take on .

  34. ராமன் அவதார புருஷன் அல்லன். மனிதனே என்று சிலர்-பாரா பாராவாக எழுதி விடாமல் விவாதிப்பதன் அரசியல் காரணங்கள் அப்பட்டமாக தெரிகிறது.

    அதை தன் மறுமொழிகள் மூலம் அழகுற தெரிவித்த , புரிய வைத்த பெருந்தகைக்கு என் பணிவான வணக்கங்கள்!:-)

    சாய்

  35. அடுத்த அடுத்த பகுதிகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் ஸ்ரீ கிருஷ்ணகுமார் அவர்களே.
    மகாபாரதம் பட்டியல் கட்டுரையில் தற்போது எழுதிய எனது மறுமொழியை எங்கு “மீள் பதிவு” செய்கிறேன்-பொருத்தம் உள்ளது என்பதால்.

    இது மீள் வாசிப்பு பற்றிய எனது நெடுநாள் கருத்து.

    “ஆனால் சில நேரங்களில் “மறு வாசிப்பு ” என்று சொல்லபடுவது மூல நூலின் மூலக்கருத்துக்கு 180 டிக்ரீ எதிராக மட்டுமே போகும் ஒரு வித வக்கிரம் என்பது நவீன கால நியாயமாக உள்ளது.

    உதாரணம் த்ரௌபதி பஞ்ச பாண்டவரை தவிர கர்ணன், மற்றும் கிருஷ்ணரையும் விரும்பியதாக உள்ள ஒரு ஆங்கில “மறு வாசிப்பு” [ ஸ்ரீமதி சித்ரா பனெர்ஜி என்று நினைக்கிறேன்]

    IPR [ INTELLECTUAL PROPERTY RIGHTS] என்பதன் படி தனது கற்பனையில் உதித்த கதைகளை கவனமாக காப்பாற்றும் நவீன எழுத்தாளர்கள் , தனது நாவலை வேறொருவர் “மீள் வாசிப்பு” செய்து கதையை முற்றிலும் மாற்றினால் என் செய்வர் என்பது ஒரு பெரும் கேள்வி.

    ராமாயணம் , பாரதம் இவை முறையே வால்மீகி மற்றும் வியாசர் மட்டும் எழுதியது அல்ல என்ற வாதம் மிக உதவுகிறது.:-)

    சாய்

  36. \\ கிருஷ்ணகுமார் ஜி!!

    பட்டையைக் கிளப்பி விட்டீர்கள் ஐயா. ஜெயபாரதன் ஏன் இனிமேல் இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கப் போகிறார்? எட்டிக் கூடப் பார்க்க மாட்டார். வீரமணியிடம் எதாவது கேடயம் வாங்கப் போயிருப்பார் என்று நினைக்கிறேன். \\

    அன்பின் ஸ்ரீ ப்ரசன்னா சுந்தர்,

    மதிப்பிற்குறிய ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் எந்த ஆதாராமும் விளக்கங்களும் தர்க்கமும் இல்லாது உதிர்த்து விட்ட கருத்தான

    இவருடைய நாடகம் கற்பனையல்ல மெய் என்பதும் மூலநூலான வால்மீகி ராமாயணம் இடைச்செருகல்களால் பொய்யாகி விட்டது என்ற பொய் மட்டும் இவருடைய புளுகு மூட்டையில் இருந்து இந்த வ்யாசத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த வ்யாசம் எதிர்வினையே இல்லை. இதற்கே அன்பர் அவர்கள் வசவுகள் பொழிந்து கண்ணியமின்றி கருத்துக்கள் பதிந்து ………. ஆனால் தன்னுடைய பொய்க்கருத்துக்கு விளக்கம் மட்டும் கொடுக்காது கதைகளையும் தனது ஹிந்துமதக்காழ்ப்புப் புராணங்களையும் தொடருகிறார்.

    இவருடைய புளுகுமூட்டைகள், போலிப்பகுத்தறிவு ப்ரசாரம், போலி மதசார்பின்மை, ராமாயணம் பற்றிய அபுரிதல்கள் போன்றவை……… இனிமேல் தான் அடுத்த தொகுப்பில் விசாரிக்கவே படவே உள்ளது.

    அன்பர் அவர்க்ள் கூசாது பொது தளத்தில் பொய் சொல்வதற்கு ஒரு உதாரணம் கீழே கொடுத்துள்ளேன். கண்டு களிக்கவும். இதற்கு அன்பர் அவர்கள் வ்யாக்யானாதிகளையும் கொடுத்து தன்னுடைய பூசி மொழுகும் திறனையும் இந்த தள வாசகர்களுக்கும் நல்குவார் என நம்புகிறேன்.

    அன்பர் அவர்கள் அவர் சொன்ன பொய்யை பொது தளத்தில் சந்தேகத்திற்கப்பாற்பட்டு நிரூபணம் செய்த பின் செய்த பூசி மொழுகல் சமாசாரத்தை இங்கும் செய்து இந்த தளத்து வாசகர்களின் புரிதலையும் மேம்படுத்தவும்.

    .

  37. அன்பர் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் “மஹாத்மா காந்தியின் மரணம்” என்ற தனது வ்யாசத்தில் (திண்ணை தளத்தில் பதிவானது) கீழ்க்கண்டபடி கருத்து தெரிவித்திருந்தார்

    \\\\\ காந்திஜி கோட்சேவால் கொலை செய்யப்பட்ட மோது, வீர சாவர்க்கர் கண்ணீர் விட்டாரா? வருந்தினாரா ? மகிழ்ந்தாரா ? அல்லது எங்காவது இரங்கல் வாசகம் எதுவும் எழுதினாரா ? \\\\ காந்திஜி இறந்ததைக் கொண்டாடியவர் வீர சாவர்க்கர்.\\\\

    இதற்கு என்னுடைய எதிர்வினையான வ்யாசத்தில் விவாதம் தொடர்ந்தது. (URL மேலே கொடுக்கப்பட்டுளது) .

    காந்தியடிகள் கொலை வழக்கில் வீரசாவர்க்கர் ந்யாயலயங்களால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவரைக் குறை கூறுகிறீர்களே, சம்பந்தப்பட்ட வழக்காவணங்களை வாசித்ததுண்டா என்று பின்னூட்டங்களில் வினவியதற்கு, ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் படாலென்று ஒரு உரலை copy paste செய்து பகிர்ந்திருந்தார்.

    https://www.savarkar.org/en/biography/written-statement-savarkar

    இதன் கடைசீ பக்கத்தில் உள்ள Annexure – D கீழே கொடுக்கப்பட்டுள்ளது

    ANNEXURE D.
    A cutting from the “Times of India”, Bombay dated 7th February 1948 vide Sec.29, page 55 above.
    MR. SAVARKAR’S VIEW.
    In a statement issued on February 4, the day previous to his arrest, Mr. V.D. Savarkar, former President of the Hindu Mahasabha said : “The statement of the President and the joint statement of some members of the Working Committee at Delhi have done well in expressing authoritatively the feelings and in clearing the position of the Hindu Mahasabha as a democratic and public organization as regards the gruesome assassination of Mahatma Gandhi. I too as one of the Vice-presidents of the Mahasabha subscribe to their feelings and condemn unequivocally such fratricidal crime whether they are perpetrated by individual frenzy or mob fury.

    “Let every patriotic citizen set to his heart the stern warning which history utters that a successful national revolution and a newly-born national State can have no worse enemy than a
    fratricidal civil war, especially so when it is encompassed from outside by alien hostility.

    இதில் மிகத்தெளிவாக காந்தியடிகள் இறந்ததற்கு வீரசாவர்க்கர் அவர்கள் தெரிவித்த இரங்கலும் அது Times of India பத்திரிக்கையில் பதிவான விபரங்களும் கொடுக்கப்பட்டிருந்தது.

    தான் பகிரும் ஒரு விபரத்திலிருந்து தன்னுடைய கருத்தான “காந்திஜி இறந்ததைக் கொண்டாடியவர் வீர சாவர்க்கர்.” என்ற கருத்துக்கு மறுக்குமுகமாக ஆதாரங்கள் உள்ளன என்று அறியாது தன் விபரத்தைப் பகிர்ந்தார்.

    தனக்கு ஆனா ஆவன்னா கூடத் தெரியாத ஒரு விபரத்தை எல்லாம் தெரிந்தது போன்ற ஒரு தோரணையில் பொய்க்கருத்துக்களை புளுகு மூட்டைகளாகப் பகிர்வது ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது வழக்கம். அதற்கு மேற்கண்ட விபரம் ஒரு சான்று. எப்படி தன் சீதாயண அலக்கியப் படைப்பில் தன்னுடைய படைப்பு *கற்பனை அல்ல மெய்* என்று உரத்துக்கூறியது போதாது என்று “மூலநூல் இடைச்செருகல்களால் பொய்க்கதையாகிப்போனது* என்று அடித்து விட்டாரோ அப்படி.

    தான் கூசாது சொன்ன பொய் பொது தளத்தில் சான்றாதாரங்களுடன் சந்தேஹத்திற்கப்பாற்பட்டு *பொய்* என்று நிரூபணம் ஆன பின்னரும் அவர் தனது விதண்டா வாதத்தைத் தொடர்ந்து, “சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசுகொடு” டயலாக் மாதிரி சொன்னதை திருப்பி திருப்பிச் சொன்ன நகைச்சுவை கலாட்டாவை ஒரு வருஷம் முன்னர் திண்ணை தளத்தில் முன்னர் இங்கு பகிர்ந்த உரல்களில் பார்க்கலாம்.

    இதைத் தான் அன்பர் அவர்கள் என்னைப் பற்றிக்குறிக்க காயம்பட்ட புலி என்று சொல்கிறார். ஸ்ரீமான் ஜெயபாரதன் எப்போது உண்மைகள் பேச கற்றுக்க்கொள்ளப் போகிறார்?

    இது அன்பர் அவர்களுடைய புளுகு மூட்டையிலிருந்து ஒரு துணுக்கு. இன்னும் கிடங்கு கிடங்காக அவர் அடித்து விட்ட பொய்களை இதைத் தொடரும் வ்யாசத்தொடரில் சுருக்கமாக அன்பர் அவர்கள் தனது சீதாயண அலக்கியத்தில் பகிர்ந்த போலிமதசார்பின்மை விஷயங்களுக்கான விமர்சனங்களைப் பகிரும் போது பகிருகிறேன்.

  38. அன்பார்ந்த ஸ்ரீ சாய்

    இந்த வ்யாசம் ராமாயணப்படைப்பாய்வுகளைப் பற்றி மட்டிலும் பேசுகிறது. இது வரை இரண்டு பாகங்கள் பதிவாகியுள்ளது. இன்னமும் இரண்டு பாகங்கள் பதிவாகும். இது எதிர்வினையல்ல. மாறாக அறிஞர்களின் படைப்பாய்வுகள் சார்ந்து ராமாயண காவ்யத்தில் இடைச்செருகல்கள் உள்ளனவா? அவை எத்தகையவை? எப்படியெல்லாம் இந்த விஷயத்தை அணுகுகிறார்கள் என்பதனை அறியும் முயற்சி.

    நான் வ்யாசத்தின் துவக்கத்தில் சொன்ன படி சம்ஸ்க்ருத பாஷையிலோ வால்மீகி ராமாயண காவ்யத்திலோ சிறியேனுக்கு பாண்டித்யம் கிடையாது. ஆனால் பல வருஷங்களாக வால்மீகி ராமாயணத்தைப் பாராயணம் செய்து வரும்படிக்கு ஆய்வுகளில் சொல்லப்பட்ட விஷயங்களை என் வசம் உள்ள மூல புஸ்தகத்திலும் ஆங்க்ல வ்யாக்யானாதிகளிலும் பரிசீலனை செய்து எனக்கு புரிபட்ட கருத்துக்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.

    மதிப்பிற்குறிய ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் சொன்ன மிகப்பல பிறழ்வான கருத்துக்கள் மற்றும் அவரது அலக்கியப்படைப்பான சீதாயணத்தின் நிறைகுறைகள் இதைத்தொடரும் அடுத்த வ்யாசத்தொடரில் பகிருகிறேன்.

    நன்றி
    க்ருஷ்ணகுமார்

  39. ஒருமுறை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இஸ்ரேசிய அரசியல் விமர்சகர் ஒருவர் கூறினார் – பாலஸ்தீனிய ஜிகாதி பயங்கரவாதிகளின், இஸ்லாமிய மதவெறீயர்களின் பிரசினை என்ன? “இஸ்ரேல்” என்று ஒரு நாடும் அதில் மக்களும் உயிரோடு இருப்பது என்பதே அவர்களுக்கு ஒரு பிரசினை” என்று.

    இந்துப் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் செக்யுலர் செம்மல் ஜெயபாரதன் சொல்கிறார் – ராமனை தெய்வமாகக் கருதினால் மதச்சண்டை பெருகுமாம், எனவே அதை தவிர்ப்பதற்காக ராமனை இஷ்டத்துக்கு இவர் மாற்றி அவமதித்து எழுதுவாராம்.. வெட்கமாக இல்லையா? என்ன ஒரு கேவலமான, கீழ்த்தரமான, திம்மித் தனமான, கருத்து. இதைக் கூறியதற்காக தன் மீதே அவர் காறி உமிழ்ந்து கொள்ள வேண்டும்.

    இந்த தேசத்தின் லட்சோப லட்சம் மக்களுக்கு அன்பையும் அறத்தையும் ஒழுக்கத்தையும் ஆதர்சமாக்கியமாக ஸ்ரீராமனின் தெய்வீகம், வால்மீகி, கம்பன் முதல் துளசிதாசர், தியாகராஜர் வரை அருளாளர்கள் நூற்றாண்டுகளாகப் போற்றித் தொழுத ஆன்மீகப் பாரம்பரியத்தின் ஊற்றுமுகமான ஸ்ரீராமனின் தெய்வீகம் “மதச்சண்டையை உருவாக்கும்” என்று எழுதுகிறீர்களே? உங்களுக்கு வரலாறும், கலாசாரமும், ஒரு மண்ணும் தெரியாது என்பது இதிலிருந்தே தெளிவாகவில்லையா?

    இதோடு ஏன் நிறுத்திக் கொள்கிறீர்கள்? இந்துமதம் என்றூ ஒரு இருப்பதால் தானே மதச்சண்டை வருகிறது? பேசாமல் அதையே ஒழித்து விடலாம் என்று அடுத்து சொல்லுங்களேன். இந்தியாவின் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதவெறியர்கள் அதற்காகத் தானே அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

    உலகில் ஏராள்மான மக்களை கொன்று குவித்து, தேசங்களை அழித்து, காலனிய அதிகாரத்தை செலுத்திய மானுட விரோத ஆபிரகாமிய மதங்களின் கடவுள்களான அல்லாவையும், ஏசுவையும் கடவுள்களாக கருத வேன்டாம், ரத்தக் காட்டேரிகளாக கருதுவோம் என்று கட்டுரை எழுதுங்களேன் ஜெயபாரதன் – சத்தியம் மீது நம்பிக்கையும், மனதில் தைரியமும் இருந்தால்.

  40. சீதாயணம் என்ற அலக்கியம் பற்றி ஒரு அன்பர் பகிர்ந்த உத்தரத்துக்கு திண்ணை தளத்தில் நான் பதிவு செய்துள்ள உத்தரம். இங்கு பகிரப்பட்ட விஷயங்களுடன் சம்பந்தம் உள்ளதால் இங்கும் உத்தரம் பகிரப்படுகிறது.

    \\ சீதாயாணம் எழுத‌ துணிவும் சுதந்திர சிந்தனையும் வேண்டும். சுதந்திர சிந்தனையை பழமைவாதிகளில் கூட்டம் எக்காலத்திலும் அழிக்கத்தான் பார்க்கும். \\

    அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ,

    பேத்தல்.

    என்னுடைய ஒரு உத்தரத்தில் கூட ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் இந்த அலக்கியத்தை எழுதுவதற்கான உரிமை பற்றி கேழ்வி எழுப்பியது கிடையாது. இந்த தளத்திலாவது அல்லது தமிழ் ஹிந்து தளத்திலாவது ஸ்ரீமான் ஜெயபாரதனுக்கு சீதாயணம் என்ற அலக்கியத்தை எழுதுவதற்கான உரிமையை நானோ அல்லது வேறு எந்த நபர்களோ கேழ்விக்கு உட்படுத்தியிருந்தால் …… மிகக் குறிப்பாக உத்தரத்தைச் சுட்டவும்.

    ஜெயபாரதனுக்குப் பாலாபிஷேகம் செய்யும் கும்பல் போல சீதாயணத்துக்கு அல்லேலூயா பாடத் தயாராக இருப்பவர்கள் அதை மட்டிலும் செய்வர்.

    என்னுடைய விமர்சனங்களில் சீதாயணம் என்ற அலக்கியத்தைப் பற்றிய குறைகள் மட்டிலும் பகிரப்படவில்லை. அதிலுள்ள நிறைகளும் என்னால் பகிரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் அது பதிவும் ஆகியுள்ளது. வாசித்துப்பார்க்கவும்.

    \\ நூலவடிவில் வந்தால் நன்று. \\

    நூல் வடிவில் இந்த அலக்கியம் ஏற்கனவே ப்ரசுரிக்கப்பட்டுள்ளது என்பது என் புரிதல். ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் விளக்கமளிக்கலாம்.

    \\ இராமாயாணம் என்று ஒன்றிருந்தால் சீதாயாணம் ஒன்று எப்போதே எழுதப்பட்டிருக்கவேண்டும். சீதையில் நிலையிலிருந்து அக்காவியம் சொல்லப்படவேண்டும். \\

    சீதாயணம் என்ற அலக்கியம் சீதையின் நிலையிலிருந்து எழுதப்பட்டிருந்தால் ஸ்ரீமான் ஜெயபாரதன் சீதையை கொலை செய்திருக்க மாட்டார். எப்படி இந்த்ரஜித் மாயாசீதையை வாளால் கொலை செய்தானோ…… அப்படியே தீரா விட அசுர சக்திகளால் கொண்டாடப்படும் ஸ்ரீமான் ஜெயபாரதன் சீதையைக் கொலை செய்துள்ளார். இந்தக் கந்தற கோள அலக்கியத்தை சீதையின் நிலையில் இருந்து எழுதியதாகச் சொல்வது வெட்கம். வெட்கம். மஹாகவிகளான பவபூதி மற்றும் பல உத்தரராமாயணத்தை சீதையின் நிலையில் இருந்து எழுதிய உண்மையான கவிகளுக்கு செய்யும் இழிவு.

    ம்………… எதை வேண்டுமானாலும் பேத்துவதற்கு ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுக்கு உரிமை உண்டே. வேண்டுமானால் முக்கோணத்துக்கு நான்கு கோணம் மற்றும் சதுரத்திற்கு மூன்று கோணம் என்று புஸ்தகம் எழுதினால் — பேத்தல்களுக்கு ஆதரவு அளிப்பதையே வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்ட தீரா விட கும்பல் இதைக் கூடப் போற்றலாமே.

    இவருக்குப் பாலாபிஷேகம் செய்யும் கும்பல் இவருக்கு இதற்கும் கூட பாலாபிஷேகம் செய்யலாமே.

    துப்பாக்கி குண்டுகளால் காந்தியை ஸ்ரீ நாதுராம் கோட்சே செய்த கொலை என்ன கொலை……. என தனது ஜபர்தஸ்தியான ஆப்ரஹாமிய பித்தலாட்ட மதமாற்றக்கருத்துக்களுக்கு கூசாமல் ஆதரவு அளித்து மஹாத்மா காந்தியின் மரணம் என்ற வ்யாசத்தில் காந்தியடிகளை…… பித்தலாட்ட க்றைஸ்தவ மதமாற்றத்துக்கு எதிரான அவரது கருத்துக்களை கொலை செய்தது மூலமாக……. ஸ்ரீமான் ஜெயபாரதன் மீண்டும் ஒரு முறை கொலை செய்துள்ளார்.

    சீதையின் நிலையில் சீதாயணம் எழுதப்பட்டிருந்தால் ஸ்ரீமான் ஜெயபாரதன் சீதாபிராட்டியின் மூலம் நீதி பேசி ராமபிரானுடன் சீதையை தன் குழந்தைகளுடன் சேர்த்திருக்க வேண்டும்.

    ஜெயபாரதன் சீதையின் நிலையில் சீதாயணம் எழுதவில்லை. மிஷ நரியின் நிலையில் சீதையையும் ராமனையும் இழிவு செய்ய இந்த அலக்கியத்தை எழுதியுள்ளார்.

    இவருக்கு ஆனா ஆவன்னா கூடத் தெரியாத வால்மீகி ராமாயணம் என்ற நூலில் சொல்லாத விஷயங்களைச் சொன்னதாக புளுகு மூட்டைகளை உதிர்த்துள்ளார். *கேடு கெட்ட வண்ணான்* என்று தன் உரைநடையை உதிர்த்துப்போட்ட கவிதை என்ற கழுதையில் பாட்டிகதையை பகிர்ந்துள்ளார். எந்த ராமாயணத்தில் இது சொல்லப்பட்டுள்ளது. முகமூடி சுவிசேஷப்படையினர் இது வரை ஒரு ஸ்லோகம் கூட சுட்ட இயலாது ஆனால் விடாது ஜெபம் பண்ணும் பௌத்த ராமாயணத்திலா அல்லது ஜின ராமாயணத்திலா? இந்தக் கந்தறகோளக் கவிதை அல்லது கழுதை ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது புனைவு என்றால் அதில் *கேடு கெட்ட விக்ஞானி* என்று போட்டிருக்கலாமே.

    ஜெயபாரதன் எப்போது தான் எழுதும் விக்ஞானம் சாராத பேத்தல் வ்யாசங்களைப் படிப்பவர்கள் அடிமுட்டாள்கள் என்று கருதாது……. தான் அடித்து விடும் புளுகு மூட்டைகளை விடுத்து ………ஒரு விஷயத்தை எழுது முன்னர் முதலில் அடிப்படையாக அந்த விஷயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்?

  41. திரு. ஜெயபாரதன் அவர்களே!

    நீங்கள் உங்கள் முகவுரையில் கூறியது: //கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். //

    1.//வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார்.//

    இராஜாஜி எழுதியது வால்மீகியின், சித்தரிப்பையும், இராமனின் தன்னைப் பற்றிய கருத்தையுமே ஆகும். இராமன் தன்னை ஒரு அவதாரமாக கருதிக்கொள்ளவில்லையே தவிர அவன் ஒரு அவதாரம் தான் என்று அடுத்த வரியிலேயே இராஜாஜி சொன்னதாக நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

    2.//இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார்.// இதற்கு என்ன அர்த்தம்? இராமன் ஒரு அவதாரம் என்று அவரும் ஒத்துக் கொள்கிறார். இராஜாஜி கூறியது, இராமனின் அவதாரப் பணி, இராவணனை அழிப்பதுவே! இராவணனை அழிக்க மனித சக்தியால் மட்டுமே முடியும். ஏனெனில் இராவணன் பிரம்மனிடம் வாங்கிய வரம் அப்படி. அதற்காகவே தான் இராமன் எந்த மாயாவித்தைகளும் காண்பித்து அவதாரமாக தோன்றவில்லை.

    3.//அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார்.//ஆமாம், நிறை குறைகள் நிரம்பிய சாதாரண மனிதன் இராமன், அவதாரப் பணியை முடித்த இராமன், பணி முடிந்த பின்பும் தன் கடமையை எவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் தவறாமல் நிறைவேற்றினான், எப்படி வாழ்ந்தான் என்பது தான் இராமாயணம்.

    மேலும், //அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! //

    அனுமானை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், வால் முளைத்த வானரமாகக் காட்டியிருக்க முடியாது என்பது உங்கள் கருத்து மட்டுமே! அதை உண்மையாகக் கொள்ள முடியாது. என் கருத்து என்னவெனில் டார்வின் தியரியை எடுத்துக் கொண்டால் கூட ‘ஹோமோசேபியன்ஸ்’ எனப்படும் நமது மனித இனம் பல்வேறு தோற்ற மாறுபாடுகளுக்குட்பட்டு தான் இந்த நிலைக்கு வந்துள்ளது. அதற்கு முன்னே நியாண்டர்தால் மனித வகை எனும் இனம் இருந்து முற்றிலும் அழிந்ததாக அறிவியல் கூறுகிறது. அந்த இனமே சிறிதான குரங்கு முகத்துடன் தான் அறிவியலாளர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது. அவ்வாறிருக்கும்போது திரேதா யுகத்தில் நிகழ்ந்த இராமாயணத்தில் வாலுடன் கூடிய குரங்கு மனிதனுடன் பேசியிருக்காதா? இது என் கருத்து. என் கருத்து மட்டுமே! இது தான் சரி என்று நான் கூறவில்லை.

    மேலும், //மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை// என்பது தங்கள் கருத்து. என் கேள்வி என்னவெனில், இராமாயணம் 3000 வருடங்களுக்கு முன்பு தான் நிகழ்ந்தது என்று எப்படி உறுதியான முடிவுக்கு வந்தீர்கள்? தங்களிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளதா?

  42. இராமன் அவதார தேவன் இல்லை என்னும் என் சீதாயண நாடகம் தமிழ் வலை இணைத்த உலகெங்கும் பரவி விட்டது. யாரும் அதைத் தடுக்க முடியாது ! அழிக்கவும் முடியாது.

    சி. ஜெயபாரதன்.

  43. வெறும் ஆங்கில சயின்ஸ் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து அதை மாதம் ஒரு புக் என்று போடும் இவரை நீங்கள் கண்டுகொள்வது தேவை இல்லாத வேலை என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து. இதை அவரின் கட்டுரைகளில் தெளிவாக, ஆதாரத்துடடன் திண்ணையில் சொல்லிவிட்டேன் பல நாள் முன்பு. இவரின் கட்டுரைகளுக்கு திண்ணையில் ஜால்ரா போடுவது மொத்தம் இரண்டு பேர்- அதுவும் கிறிஸ்துவ பாசக்கார்கள் என்பதே போதாதா?

  44. ////சீதையின் நிலையில் சீதாயணம் எழுதப்பட்டிருந்தால் ஸ்ரீமான் ஜெயபாரதன் சீதா பிராட்டியின் மூலம் நீதி பேசி ராம பிரானுடன் சீதையை தன் குழந்தைகளுடன் சேர்த்திருக்க வேண்டும்.////

    என் சீதாயண நாடகத்தை வெறுக்கும் திரு. கிருஷ்ண குமார், தான் விரும்பும் ஒரு சீதாவைப் படைத்து, ஒரு புது இடைச் செருகளை தன் இராமாயணத்தில் நுழைக்கிறார்.

    இப்படித்தான் வால்மீகி மூல இராமாயணம் பலரால், பன்முறை மாற்றப் பட்டு சிதைந்து போயுள்ளது.

    சி. ஜெயபாரதன்

  45. சக்தி வேல் தன் தேள் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    ///இந்துப் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் செக்யுலர் செம்மல் ஜெயபாரதன் சொல்கிறார் – ராமனை தெய்வமாகக் கருதினால் மதச்சண்டை பெருகுமாம், எனவே அதை தவிர்ப்பதற்காக ராமனை இஷ்டத்துக்கு இவர் மாற்றி அவமதித்து எழுதுவாராம்.. வெட்கமாக இல்லையா? என்ன ஒரு கேவலமான, கீழ்த்தரமான, திம்மித் தனமான, கருத்து. இதைக் கூறியதற்காக தன் மீதே அவர் காறி உமிழ்ந்து கொள்ள வேண்டும். ////

    இதில் வரும் அநாகரீகக் கடைசி வரி நீக்கப் பட வேண்டும்.

    தர்க்கம் செய்ய முடியாதவர் எழுத்து நெறி தவறி ஆவேசமாய் வசை பாட வருகிறார்.

    விடுதலை நாட்டில் என் விருப்படி நான் எழுதுவது என் பிறப்புரிமை.

    சி. ஜெயபாரதன்.

  46. விடுதலை நாட்டில் என் விருப்படி நான் எழுதுவது என் பிறப்புரிமை. — அது என்ன லாஜிக்? அப்போ அடிமை நாட்டில் அது பாவமா இல்லை இறப்பு உரிமையா? வீரமணி லெட்டர் வேலை இது எல்லாம்… கலி காலம்.

  47. \\ இராமன் அவதார தேவன் இல்லை என்னும் என் சீதாயண நாடகம் தமிழ் வலை இணைத்த உலகெங்கும் பரவி விட்டது. யாரும் அதைத் தடுக்க முடியாது ! அழிக்கவும் முடியாது. \\

    விக்ஞானி அவர்களுடைய அருமையான கண்டுபிடிப்பு.

    வீரசாவர்க்கர் அவர்கள் காந்தி இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்று தன் வ்யாசத்தில் கூசாது ஸ்ரீமான் ஜெயபாரதன் புளுகி அதற்கு எதிர்வினையான வ்யாசத்தில் விசாரணை நடந்ததில் —- அன்பர் அவர்கள் வீருகொண்டெழுந்து பகிர்ந்த உரல் அவருடைய பொய்யை உலகிற்கு அம்பலப்படுத்தி —- அது தமிழ் வலை இணையம் முழுதும் பரவி விட்டது; யாரும் அதைத் தடுக்க முடியாது. அழிக்கவும் முடியாது. ஸ்ரீமான் ஜெயபாரதன் தமிழ் இணைய உலகிலேயே தானே சொன்ன புளுகை தானே ஆதாரம் கொடுத்து இது புளுகு தான் என்று நிரூபணம் செய்த முதல் மனிதராக இருப்பார் போலும்.

    சீதாயணம் என்ற அலக்கியம் எப்படி அழிக்க முடியாதோ — அப்படியே அழிக்க முடியாதது — ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் சமூஹ நல்லிணக்கத்தைக் குலைக்கக்கூடிய மதநல்லிணக்கத்தைக் குலைக்கக்கூடிய ஹிந்துமதக்காழ்ப்புகளை முனைந்து பரப்புரை செய்பவர் என்று அவர் இந்த அலக்கியத்தில் ஆணித்தரமாகப் பதிவு செய்த கருத்துக்கள்.

    சீதாயாணம் என்ற அலக்கியம் எப்படி அழிக்க முடியாதோ – அப்படியே அழிக்க முடியாதது — வால்மீகி ராமாயணம் என்ற நூலைப்பற்றி ஆனா ஆவன்னா கூடத்தெரியாது — ஆனால் எல்லாம் அறிந்த தோரணையில் ஸ்ரீமான் ஜெயபாரதன் பகிர்ந்த புளுகுமூட்டைக்கருத்துக்கள்.

    சரிதானே ஐயன்மீர்

  48. \\ என் சீதாயண நாடகத்தை வெறுக்கும் திரு. கிருஷ்ண குமார், தான் விரும்பும் ஒரு சீதாவைப் படைத்து, ஒரு புது இடைச் செருகளை தன் இராமாயணத்தில் நுழைக்கிறார். \\

    அன்பின் ஜெயபாரதன்,

    சீதாயணம் என்ற அலக்கியத்தில் நான் குறைகளை மட்டிலும் பட்டியலிடவில்லையே. அதில் உள்ள நிறைகளையும் தானே பகிர்ந்துள்ளேன். இதில் விருப்பு வெறுப்பு எங்கே?

    வால்மீகி ராமாயணம் என்ற க்ரந்தம் படைக்கப்பட்ட பின் தேசமுழுதும் பல பாஷைகளில் பல அன்பர்கள் அந்த மூல நூலை ஒட்டி சிறு சிறு மாற்றங்களுடன் தங்கள் ராமாயணத்தைப் படைத்தனர். அப்படிப்பட்ட ஒன்று பவபூதியால் படைக்கப்பட்ட உத்தரராம சரிதம்.

    \\ தான் விரும்பும் ஒரு சீதாவைப் படைத்து, ஒரு புது இடைச் செருகளை தன் இராமாயணத்தில் நுழைக்கிறார். \\

    நான் இது வரை ராமாயணம் என்று ஒரு படைப்பையே எழுதாத போது எப்படி ஐயா அதில் இடைச்செருகலை நுழைக்க முடியும் 🙁

    மட்டற்ற ஹிந்துமதக்காழ்ப்பை உங்கள் அலக்கியம் பகிருவதால் அது மிகக் கடுமையாக காரண கார்யங்களுடன் விமர்சிக்கப்படின் இப்படி நிலைகுலைந்து போகலாமோ?

    நான் பகிர்ந்தது சீதையின் தரப்பிலிருந்து வடிக்கப்பட்ட உண்மையான சீதாயணம். மஹாகவி பவபூதி அவர்களால் வடிக்கப்பட்ட சம்ஸ்க்ருத நாடகம்.

    ஒரு மிஷ நரியின் தரப்பிலிருந்து படைக்கப்பட்டதைப் போன்ற தோரணையில் தங்களால் படைக்கப்பட்டது சீதாயணம் அன்று அன்பரே. அது ஹிந்துமதவெறுப்பாயணம்.

    \\ இப்படித்தான் வால்மீகி மூல இராமாயணம் பலரால், பன்முறை மாற்றப் பட்டு சிதைந்து போயுள்ளது. \\

    க்றைஸ்தவர்களுடைய மதநூலான *பைபள்* என்ற க்ரந்தம் இடைச்செருகல்களுக்கு உட்பட்டுள்ளது என்பது விஷயம். ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் பைபள் இடைச்செருகல்களால் சிதைந்து போயுள்ளது என்று தெரிவிப்பாரோ?

    கடவுளே. வால்மீகி ராமாயணம் என்ற நூல் இடைச்செருகல்களுக்கு ஆளாகியிருக்கலாமெனினும் அவற்றால் மூல நூல் அதன் வடிவத்தில் சிதைவுறவில்லை என்பதனைத் தான் முறையாக நடந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    எதையாவது உளறுவதற்கு முன்னர் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் வால்மீகி ராமாயணம் என்பதப்பற்றி ஆனா ஆவன்னாவாவது தெரிந்து கொண்டால் பரவாயில்லையே?

    தனக்குப் புரியாத விஷயங்களைப் பற்றி தான் லவலேசமும் — ஒரு சுக்குக்கும் — ஒன்றும் அறியாத விஷயங்களைப் பற்றி கருத்துக்கூறும் அவலத்தை ஸ்ரீமான் ஜெயபாரதன் எப்போது விடப்போகிறார்?

  49. திரு ஜெயபாரதன்
    “இராமன் அவதார தேவன் இல்லை என்னும் என் சீதாயண நாடகம் தமிழ் வலை இணைத்த உலகெங்கும் பரவி விட்டது. யாரும் அதைத் தடுக்க முடியாது !”
    ஹாஹா இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை கமெண்ட் இது தான். கோடிக்கணக்கான ஹிந்துக்களின் பூஜை அறைகளை அலங்கரிக்கும் ஸ்ரீ ராமனின் திருவுருவப்படங்கள் இந்த சீதாயணத்தால் வெளியே போடப்பட்டுவிடுமா என்ன? ஸ்ரீ ராமனின் திரு நாமமும் ஸ்ரீ மத் ராமாயணமும் கோடி கோடி ஹிந்துக்களின் ரத்தத்தில் ஏன் ஜீன் களில் வாழ்கின்றன என்பதை அபிராஹாமியர்களான ஜெயபரதன் போன்றவர்களால் புரிந்து கொள்ளவோ அறிந்துகொள்ளவோ முடியாது.எம்மைப்போன்ற வீரசைவர்கள் கூட ராம நாமம் இசைக்கப்படும் போதும் ராமாயணக்கதை கேட்பதிலும் பேசுவதிலும் காண்பதிலும் அளவிலா ஆனந்தம் அடைகிறோம். காரணம் ஸ்ரீ ராமன் வழிவந்தோ நாம் என்று எண்ணுகிறோம். அபிராஹாமின் வழியிலோ சாலமனின் கிளையிலோ வந்தவர்கள் அல்லர் என்று முழுமையாக உணர்ந்திருக்கிறோம்.
    அன்புடன்
    சிவசிவ

  50. ////வெறும் ஆங்கில சயின்ஸ் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து அதை மாதம் ஒரு புக் என்று போடும் இவரை நீங்கள் கண்டுகொள்வது தேவை இல்லாத வேலை என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து. ////

    திரு பாண்டியனார் எத்தனை கீழான பிற்போக்குவாதி என்பது அவரது வரிகளே சொல்கின்றன. திண்ணையில் கடந்த 12 ஆண்டுகளாக அணுசக்தி பற்றியும், அண்ட வெளிப் பயணங்கள் பற்றியும், சூடேறும் பூகோளம், சுனாமி இயற்கை இடர்கள், உலக விஞ்ஞானிகள் பற்றியும் 600 மேற்பட்ட என் விஞ்ஞானக் கட்டுரைகள் தமிழில் தொடர்ந்து சுடச்சுட வந்து கொண்டிருக்கின்றன.

    இவ்விதம் பிற இந்திய மொழிகளில் இப்படி யாரும் எழுதி வருவதாக எனக்குத் தோன்ற வில்லை. விஞ்ஞானப் படைப்புகள் எழுதுபவர் கோடியில் ஒருவர்.

    இதை எள்ளி நகையாடும் இந்த மாமேதையின் முரணான மன நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    சீதாயண நாடகத்தை நானே வந்து கட்டாயமாய்த் தமிழ்ஹிந்துவில் புகுத்த வில்லை. திரு. கிருஷ்ணகுமார் தான் முன்வந்து அப்படிச் செய்தது ! அதற்கு என் நன்றி.

    இப்போது என் விஞ்ஞானக் கட்டுரைகளை அறிமுகம் செய்த திரு. பாண்டினுக்கும் என் நன்றி.

    எனது விஞ்ஞானக் கட்டுரைகள் தமிழ்ஹிந்துவிலும் முன்பு வலை ஏறியுள்ளன.

    சி. ஜெயபாரதன்

  51. A scientist should have an analytical mind and a yearning for truth. I believe many in this forum think Mr JB is a scientist. Congress also proclaim that Rahul Gandhi is a visionary. It all must be true, isn’t it?

  52. ////வீரசாவர்க்கர் அவர்கள் காந்தி இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்று தன் வ்யாசத்தில் கூசாது ஸ்ரீமான் ஜெயபாரதன் புளுகி அதற்கு எதிர்வினையான வ்யாசத்தில் விசாரணை நடந்ததில் —- அன்பர் அவர்கள் வீருகொண்டெழுந்து பகிர்ந்த உரல் அவருடைய பொய்யை உலகிற்கு அம்பலப்படுத்தி —- அது தமிழ் வலை இணையம் முழுதும் பரவி விட்டது; யாரும் அதைத் தடுக்க முடியாது. அழிக்கவும் முடியாது.///

    கிளிப்பிள்ளை போல் [சிறு பிள்ளை போல்] நான் சொல்வதை அப்படியே தனக்குத் திருப்பிச் சொல்கிறார் திரு. கிருஷ்ணகுமார். நல்ல காப்பி கேட் !!!

    “மகாத்மா காந்தியின் மரணம்” என்னும் எனது கட்டுரையை நான் தமிழ்ஹிந்துக்கு அனுப்பி இருக்கிறேன்.

    அதை தமிழ்ஹிந்து ஆசிரியர்கள் வெளியிடுகிறாரா என்று பார்க்கிறேன்.

    சி. ஜெயபாரதன்.

  53. எனது அன்பார்ந்த விக்ஞானி ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுடைய மற்றொரு வெற்றுப்புலம்பல்

    ——————————-

    \\\\\ //இந்தக் கந்தறகோள கவிதை அல்லது கழுதை ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது புனைவு என்றால் அதில் *கேடு கெட்ட விக்ஞானி* என்று போட்டிருக்கலாமே.

    ஜெயபாரதன் எப்போது தான் எழுதும் பேத்தல் வ்யாசங்களைப் படிப்பவர்கள் அடிமுட்டாள்கள் என்று கருதாது……. தான் அடித்து விடும் புளுகு மூட்டைகளை விடுத்து ………ஒரு விஷயத்தை எழுது முன்னர் முதலில் அடிப்படையாக அந்த விஷயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்? ///

    மிகவும் திமிரான எழுத்து. அநாகரீகப் போக்கு. அவர் யார் நான் எப்படி எழுத வேண்டும் என்று அழுத்திச் சொல்ல ?

    திரு. கிருஷ்ணகுமார் ஒரு தாலிபான் போல் மிரட்டலுடன், கர்வமுடன் அவரது மூர்க்க குணத்தை தன் ஆவேச எழுத்தில் காட்டுகிறார்.

    சீதாயண நாடகம் தமிழ்வலை உலக மெங்கும் பரவி விட்டது.

    அவர் ஒரே மாவைத் திருப்பித் திருப்பி அரைக்கிறார் !!!

    சீதையும், இராமனும் எப்படிச் செத்தார் என்று இதுவரைச் சொல்லாமல் செக்கு மாடு போல் சுற்றிச் சுற்றி வருகிறார். \\\

    ————————————

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்

    முக்கோணத்துக்கு நாலு கோணம் என்றும் சதுரத்துக்கு மூன்று கோணம் என்றும் நீங்கள் எழுதிவிட்டு அதில் உள்ள அவலத்தை ஒருவர் சுட்டிக்காட்டினால்,

    அதைத் திமிரான எழுத்து அநாகரீகப்போக்கு என்று சொல்வீர்களா?

    \\ அவர் யார் நான் எப்படி எழுத வேண்டும் என்று அழுத்திச் சொல்ல? \\

    என்று சொல்வீர்களா?

    *கேடுகெட்ட வண்ணான்* என்று வால்மீகி ராமாயணத்தின் எந்த சர்க்கத்தில் எந்த ச்லோகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று இந்த தளத்து வாசகர்களுக்கு தெரிவிப்பீர்களா? அப்படித் தெரிவிக்க முனைந்தால் நீங்கள் அறிவு பூர்வமான ஒரு விவாதத்தில் நம்பிக்கை உடையவர் என்று கருதப்படும்.

    சீதாபிராட்டியின் மீது அபவாதம் சொன்னது கேடுகெட்ட செயல் என்று நீங்கள் கருதுவது புரிகிறது. அந்தக் கேடுகெட்ட செயலை செய்ததான ஒரு பழியை எதற்காக ஒரு வண்ணான் மீது போடுகிறீர்கள்?

    கேடு கெட்ட வண்ணான் என்று ஆதாரம் இல்லாத செய்தியை எந்த ஒரு தயக்கமும் இல்லாது உரைநடையை உதிர்த்துப் போட்ட கவிதை என்ற கழுதையின் மீது சுமர்த்திய உங்கள் செயல் ந்யாயமானது என்றால் வண்ணான் என்ற பதத்திற்குப் பதில் விக்ஞானி என்ற பதம் அங்கு மாற்றப்பட்டால் எந்த கோபாவேசமும் வரக்கூடாது.

    வண்ணான் ஒரு கேடுகெட்ட செயலை செய்ய முடியும் என்று விக்ஞானியாகிய நீங்கள் ……….

    எந்த ஒரு *திமிரில்* எந்த ஒரு ராமாயணத்திலும் சொல்லப்படாத செய்தியை *கேடு கெட்ட வண்ணான்* என்று கூறினீர்கள் என்று கண்டிப்பாகப் பொது தளத்தில் உங்கள் அறியாமையை பறை சாற்றுவது கேழ்விக்கு உட்படுத்தப்படும் ஐயா.

    எந்த ஒரு விஷயத்தைப்பற்றியும் அடிப்படைப்புரிதல் கூட இல்லாது மதக்காழ்ப்புகளையே பேத்தல்களையே வ்யாசங்களாகவும் நாடகங்களாகவும் எழுதுவது உங்கள் உரிமையே. உங்களை வாசிக்கும் வாசகர்களை அடிமுட்டாள்கள் என்று கருதுவதால் தானே அப்படி எழுத முடியும். ஆனால் நீங்கள் எழுதும் புளுகு மூட்டைகள் தோய்த்து வெளுத்துக் காயப்போடப்படும் என்பதனை மறவாதீர்கள்

    உண்மையில் நீங்கள் வால்மீகி ராமாயணம் என்ற க்ரந்தத்தையோ அல்லது நீங்கள் அனுபந்தமாகக் கொடுத்த நூற்களையோ அதன் தலைப்பைத் தவிர வேறொன்றையும் வாசிக்கவில்லை என்பதனையே உங்கள் உத்தரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த்ரஜித் என்ற அசுரன் மாயாசீதையை வாளால் வெட்டியது போன்று நீங்கள் உருக்குலைத்தை மாயாசீதையை நீங்கள் கொலை செய்திருக்கிறீர்கள். ஆனால் ராமாயணத்தில் சீதை எப்படிச் செத்தாள் என்று நீங்கள் கேழ்வி கேட்டிருப்பதிலிருந்தே நீங்கள் உங்களால் கொடுக்கப்பட்ட எந்த ஒரு நூலையும் தலைப்பையன்றி வேறு ஏதும் வாசிக்கவில்லை என்ற செய்தியை மதில் மீது ஏறி பொது தளத்தில் உரக்கக் கூவுகிறீர்கள்.

    சீதாபிராட்டியின் அந்தர்தானம் (இறப்பு அல்ல) மட்டுமல்ல ஐயா, மற்றும் நீங்கள் பேத்தியுள்ள பேத்தல்கள் உளறல்கள் மற்றும் புளுகு மூட்டைகளை ஒவ்வொரு விஷயமாகப் பொது தளத்தில் எனது அடுத்த வ்யாசத்தொடர் அம்பலமாக்கும் ஐயன்மீர். ஒவ்வொரு விஷயமும் அதனுடைய முழுப்பரிமாணத்துடன் வைக்கப்பட வேண்டும் என்பது என் ப்ரயாசையாதலால் அள்ளித்தெளித்த கோலமாக உங்கள் பினாத்தல்களுக்கு ஒரு வரி அரைவரியில் உத்தரமளிக்க இப்போது விழையவில்லை என்பதைத் தெரிவித்துகொள்கிறேன்.

    பணிவன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  54. “.எம்மைப்போன்ற வீரசைவர்கள் கூட ராம நாமம் இசைக்கப்படும் போதும் ராமாயணக்கதை கேட்பதிலும் பேசுவதிலும் காண்பதிலும் அளவிலா ஆனந்தம் அடைகிறோம். காரணம் ஸ்ரீ ராமன் வழிவந்தோ நாம் என்று எண்ணுகிறோம்”

    அருமை , அருமை திரு சிவஸ்ரீ அவர்களே. பிரிவினை சக்திகளுக்கு சரியான பதிலடி. கோணல் எழுத்துக்களின் உண்மை அறிய ராம கதையை தீவிரமாக படிக்க தொடங்கியிருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

    ஸ்ரீ கிருஷ்ணகுமார் அவர்களின் தொடரின் நோக்கம் எனக்கு விளங்குகிறது. சீதாயணம் நானும் படிக்க முயன்றேன். அதை பொறுமையாக படித்து , தெளிவான விளக்கங்கள் கொடுக்கும் தங்கள் முயற்சி மிக அரியது.

    நான் மறு வாசிப்பு பற்றி குறிப்பிட்டது [தாங்கள் அலக்கியம் என்று அழகாகக் குறிப்பிடும்] கோணல் பார்வை தற்போது ஒரே பார்வையாகிக் கொண்டு வருகிறது -என்று எடுத்து காட்டவே.

    “பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால்
    மெய்போலும்மே; மெய்போலும்மே
    மெய்யுடை யொருவன் சொல்லமாட்டாமையால்
    பொய்போலும்மே பொய்போலும்மே.”

    என்று அதிவீர ராம [ அட இங்கேயும் ராம!] பாண்டியர் சொல்வது போல ஆகி விடக் கூடாது.

    அதி தீவிரத்துடன் முனைந்து செய்யப் படும் அவதூறுகளுக்கு தாங்கள் செய்வது போல ஆத்திரம் தவிர்த்து ,தெளிவாக பதில் கொடுக்கப் பட்டே ஆக வேண்டும்.

    இப்போதே இளைய தலைமுறையினர் ராமனா , அவர் ரொம்ப மோசம் என்று உளறுவதைக் கேட்க முடிகிறது,நாம் எடுத்து சொல்லாவிட்டால் நஷ்டம் அவர்களுக்கே.

    உங்கள் பொறுமைக்கு , அயராத முயற்சிக்கு நிச்சயம் நல்ல பலன் இருக்கும். நிஜமாகவே தூங்குவோர் ஒருவர் விழித்தாலும் சிறப்பல்லவா? ராம ரசாயனத்தை” பருக ஒரு வாய்ப்பல்லவா ? நடிப்போரை ஒன்றும் செய்ய முடியாது.

    சாய்
    .

  55. அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    ஏன் இப்படி நகைச்சுவை கலாட்டா செய்கிறீர்கள்?

    \\ தர்க்கம் செய்ய முடியாதவர் எழுத்து நெறி தவறி ஆவேசமாய் வசை பாட வருகிறார். \\

    என்று அன்பர் ஸ்ரீ சக்திவேல் அவர்களை சாடியுள்ளீர்கள்

    உங்களுடைய சீதாயண இலக்கியம் *கற்பனையல்ல* ராமகதையில் *மெய்யாக* நடந்த நிகழ்வு என்பதற்கு நீங்கள் இதுவரை ஒரு வரி அல்லது அரை வரி எந்த தர்க்கம் இந்த தளத்தில் அல்லது *திண்ணையில்* கொடுத்துள்ளீர்கள்?

    இடைச்செருகல்களால் வால்மீகி ராமாயணம் சிதைந்து *பொய்க்கதையாகிப்போனது* என்ற உங்கள் அறியாமைக் கருத்தினை –ஆய்வாளர்களின் கருத்து சார்ந்து இது சாரமே இல்லாத கருத்து என எனது வ்யாசத்தின் இரண்டு பாகங்களும் தெரிவிக்கின்றன. இதைப்பற்றி ஒரு வரி அல்லது அரை வரி எந்த தர்க்கமாவது இந்த தளத்திலாவது அல்லது வேறெங்காவது கொடுத்துள்ளீர்களா?

    இடைச்செருகல்களால் ராமாயணம் பொய்க்கதையாகிப்போனது என்று உச்சாடனம் மட்டும் செய்வது எப்படித் தர்க்கமாகும்?

    சீதாபிராட்டியைப் பற்றி அபவாதம் சொன்னது ஒரு வண்ணான் என்று எந்த நூலாதாரப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்? இதற்கு நீங்கள் வைக்கும் தர்க்கம் என்ன?

    கண்ணாடி மாளிகையில் இருப்பவர்கள் கல்லெறியலாமா?

    இணைய உலகில் வசைபாடுவதில் உங்களை மிஞ்ச வேறுயாருமில்லை என்றளவுக்கு வசை பாடியுள்ள நீங்கள் வசை பற்றி பேசலாமோ?

    \\ இது அடி வாங்கிக் காயம் ஆறாத புலி. \\ கலியுக சாணக்கியர் திரு. கிருஷ்ணகுமார் இப்போது இராம கதையில் பின்வாங்கி சாமர்த்தியமாக காந்திஜி பற்றியும், வீரசாவர்க்கர் பற்றியும் வாசகரைக் குழப்ப இழுத்துக் கொண்டு போவது கோமாளித்தனமாய் இருக்கிறது. \\ “புலி வருது, புலி வருது” என்று இராம பக்தர்கள் கிருஷ்ண குமாரும், கந்தர்வனும் அலற வேண்டாம், அஞ்ச வேண்டாம். \\

    வசை பொழிவது தவறு தான் ஐயா, ஆனால் வசை பொழியாதீர் என்று சொல்வதற்கான அடிப்படைத் தகுதியை முதலில் நீங்கள் வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். முதலில் கருத்துப்பகிரும் சக வாசகர்களை வசை பொழியாது கருத்துக்களைத் தர்க்க பூர்வமாக எதிர்க்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

    கூடவே வெற்று உச்சாடனங்களை உரக்கப்பேசாது தர்க்க பூர்வமாக கருத்துக்களை முன்வைக்க முயலவும்.

    \\ சக்தி வேல் தன் தேள் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். \\

    என்று அன்பர் ஸ்ரீ சக்திவேல் அவர்கள் பற்றி நீங்கள் சாடியுள்ளீர்கள்

    \\ இராமனைத் தேவனாகப் கருதினால், தொடர்ந்து நாட்டில் மதச் சண்டைகள், கொலைகள் பெறுக வாய்ப்புக்கள் உண்டாகும். \\ இராமனைத் தேவனாகக் கருதும் இந்திய மக்களை சீதாயண நாடகம் தடுக்கவில்லை. \\

    ஹிந்துஸ்தானமுழுவதும் உலகமுழுதும் கோடானுகோடி ஹிந்துக்கள் ராமபிரானைத் தெய்வமாகவே கருதுகிறார்கள். அப்படிக்கருதுவதால் நாட்டில் மதச்சண்டைகள் பெருகும் கொலைகள் பெருகும் என்று நீங்கள் சொல்வது கோடானுகோடி ஹிந்துக்கள் பால் காழ்ப்புமிக எந்த ஆதாரமும் இல்லாது சாடுவதாக அமையும் என்று ஏன் யோசிக்கவில்லை?

    அன்பர் ஸ்ரீ சக்திவேல் அவர்கள் மீது நீங்கள் முனைந்த புறங்கூறலை உங்கள் மீது ஏன் ஆரோகணிக்கக்கூடாது? மேற்கண்ட விஷக்கருத்தை முனைந்து சொல்லும் அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் தன் தேள் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஏன் சொல்லக்கூடாது?

  56. \\ வெறும் ஆங்கில சயின்ஸ் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து அதை மாதம் ஒரு புக் என்று போடும் இவரை நீங்கள் கண்டுகொள்வது தேவை இல்லாத வேலை என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து. இதை அவரின் கட்டுரைகளில் தெளிவாக, ஆதாரத்துடடன் திண்ணையில் சொல்லிவிட்டேன் பல நாள் முன்பு. \\

    அன்பார்ந்த ஸ்ரீ பாண்டியன்

    மஹாத்மா காந்தியின் மரணம் என்ற வ்யாசத்தில் அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் உதிர்த்துப்போட்ட புளுகுமூட்டைகளைத் துவைத்து வெளுத்து காயப்போட்ட எனது எதிர்வினையான வ்யாசத்தின் உத்தரங்களினூடே தன்னுடைய *சீதாயணம்* என்ற அலக்கியத்தை வாசிக்குமாறு விக்ஞாபித்துக்கொண்ட அன்பர் அவர்களுக்கு அப்போதே இந்த அலக்கியம் துவைத்து வெளுத்துக் காயப்போடப்படும் என்று சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும்.

    அன்பர் அவர்களுடைய விக்ஞான வ்யாசங்கள் ஆங்க்லபாஷையில் எழுதப்பட்ட வ்யாசங்களின் மொழியாக்கங்கள் என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்ததாக நினைவிலில்லை. அருமையான ஆங்க்ல வ்யாசங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படல் நல்லது தானே? ஆனால் இவை மொழிபெயர்ப்புகள் என்ற தகவல் அல்லாது சுயமாகப் படைக்கப்பட்டவை என்ற த்வனியுடன் இருந்தால் அது இடித்துறைக்கப்பட வேண்டியது தான். இது பற்றி மேலதிகத் தகவல்கள் பகிரவும்.

    அன்பர் அவர்கள் இந்த அலக்கியத்தில் பகிர்ந்துள்ள புளுகுமூட்டைகள் மற்றும் மதக்காழ்ப்புக்கருத்துக்கள் போன்றவற்றைஅவரது க்றைஸ்தவ துஷ்ப்ரசாரக்கருத்துக்களுடன் ஒன்று சேர்ந்து முன்வைக்கப்பட்டால் தான் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுடைய ஹிந்துமதக்காழ்ப்புக்கருத்துக்களின் முழுவீச்சு வாசகர்களுக்குத் துலங்கும். அதை என்னுடைய அடுத்த வ்யாசத் தொடர் முழுமையாகச் செய்யும்.

    அன்பின் ஸ்ரீ ப்ரசன்னா சுந்தர்,

    என்னுடைய அடுத்த வ்யாசத்தொடரில் தாங்கள் எழுப்பியுள்ள் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுடைய பல புளுகுமூட்டைகள் மற்றும் காழ்ப்புக்கருத்துக்கள் அதன் முழு பரிமாணங்களுடன் விசாரிக்கப்படும். அன்பர் அவர்கள் தன் அலக்கியத்தில் காழ்ப்பு மிக வைத்துள்ள முன்பின் முரணான கருத்துக்களை நான் அவதானிக்கவில்லை. இந்தக்கருத்துக்களையும் என் அடுத்த வ்யாசத்தொடரில் முழுமையாக முன்வைக்கிறேன். தர்க்கம் பற்றியெல்லாம் குதர்க்கமாகவே பேசும் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் வாயையே திறக்கமாட்டார் என்பது திண்ணம்.

  57. அன்பார்ந்த ஸ்ரீமான் சாய்

    பொறுமையுடன் நான் பதிலிறுப்பதாகத் தாங்கள் கருத்துப்பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

    அகஸ்மாத்தாகவா என்று தெரியவில்லை. அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களது கருத்தை வாசிக்க நேர்ந்தது — அதுவும் வள்ளல் அருணகிரிப்பெருமான் சம்பந்தப்பட்ட வ்யாசத்தில் – கீழே அருமையன கருத்துக்கள் :-

    //அருணகிரிநாத சுவாமிகள் நம்மை போன்றவர்களுக்காக, நம்மை எச்சரிக்கும் வகையில் பாடிஉள்ளர்கள். – ஸ்ரீ சோமசுந்தரம்//
    இதுவே மிகச் சரியான பார்வை என்பது என் கருத்து. பிறரை நல்வழிப் படுத்தும் நோக்கத்துடனும் அதே சமயம் மனம் புண்படாதவாறு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற பரிவினாலும் பிழையைத் தம்மீது சுமத்திக்கொண்டு பேசுதல் பெரியோர் அணுகுமுறை. நம் குடும்பங்களில் கூடப் பெரியவர்கள் சில சமயம் பிறரால் ஏதேனும் பிழை ஏற்பட்டு விட்டால் தவறு என்னுடையதுதான், நான் முன்னதாக கவனித்திருக்க வேண்டும் என்று பழியைத் தம்மீதே போட்டுக்கொள்ளும் பெருந்தன்மையைப் பார்க்கிறோம்.

    இந்தக் கருத்துக்களை ஏகாதசியான இன்று மீள் நினைவு கூறுதல் கூட முருகப்பெருமான் திருவுளம் போலும்.

    கறாரன கருத்துப் பகிருவதைக் கூட கடுமையற்ற சொற்களால் பகிரவேண்டும் என முருகப்பெருமான் சுட்டுகிறான் என நினைக்கிறேன்.

    இந்த வ்யாசத்தொடர் எதிர்வினையல்ல. ஆகவே சொற்ப்ரயோகம் பற்றி அதிக கவனம் எடுக்க வேண்டிய ஒரு மஜ்பூரி இல்லை.

    ஆனால் அடுத்த வ்யாசத் தொடர் எதிர்வினையாதலால் முழு வ்யாசத் தொடரையும் இந்த அம்சம் சார்ந்து மிகக் கவனமாக ஒரு முறை மீள் வாசிப்பு செய்து பின் சமர்ப்பிப்பேன்.

    மறுவாசிப்பு பற்றிய தங்கள் வினா சம்பந்தமான சில கருத்துக்கள் க்ரிடிகல் எடிஷன் பதிப்பு பற்றிய அடுத்த பாகத்தில் பதிப்பாசிரியர் குழுவினரின் கருத்துக்களால் விசாரிக்கப்பட்டுள்ளது. முழுமையான context சார்ந்து அங்கு இக்கருத்தை என் புரிதலின் படி விசாரிக்க முடியும் என்பதால் விவாதத்தை சற்றே ஒத்திப்போடுகிறேன்.

    \\ உங்கள் பொறுமைக்கு , அயராத முயற்சிக்கு நிச்சயம் நல்ல பலன் இருக்கும். நிஜமாகவே தூங்குவோர் ஒருவர் விழித்தாலும் சிறப்பல்லவா? ராம ரசாயனத்தை” பருக ஒரு வாய்ப்பல்லவா ? நடிப்போரை ஒன்றும் செய்ய முடியாது. \\

    ஆம் ஐயா, கறாரான ஆனால் இன்னமும் மிகக் கவனமான் சொற்களுடன் எதிர்வினையான என்னுடைய அடுத்த வ்யாசத் தொடரினை அன்பர் அவர்களின் பிறழ்வுக் கருத்து ஒவ்வொன்றையும் அலசி அதற்கு மாற்றுக் கருத்துக்களை சமர்ப்பிக்கிறேன்.

    அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன் அவர்களுடைய கருத்துப் பிறழ்வுகள் மட்டிலும் அன்று. அன்பர் அவர்கள் ராமாயணம் சார்ந்த பொதுப் புரிதல்களை — பொதுப்புரிதல்களாக அல்லாது – ராமாயண நூல் சார்ந்ததாக வைத்துள்ளார். அவற்றை ராமாயண நூல் சார்ந்து விசாரிக்கையில் – வேறுபாடுகளும் சாரமான உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும் என நினைக்கிறேன்

  58. ////வீரசாவர்க்கர் அவர்கள் காந்தி இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்று தன் வ்யாசத்தில் கூசாது ஸ்ரீமான் ஜெயபாரதன் புளுகி அதற்கு எதிர்வினையான வ்யாசத்தில் விசாரணை நடந்ததில் —- அன்பர் அவர்கள் வீருகொண்டெழுந்து பகிர்ந்த உரல் அவருடைய பொய்யை உலகிற்கு அம்பலப்படுத்தி —- அது தமிழ் வலை இணையம் முழுதும் பரவி விட்டது; யாரும் அதைத் தடுக்க முடியாது. அழிக்கவும் முடியாது.////

    “மகாத்மா காந்தியின் மரணம்” என்னும் என் கட்டுரையைப் பற்றி திரு. கிருஷ்ண குமார் தனது எதிர்ப்புக் கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால் அதில் என் கட்டுரைக்கு எந்த இணைப்பு மில்லை. ஆதலால் நான் முழுக் கட்டுரையை தமிழ்ஹிந்து வலையிதழுக்கு எல்லாரும் படிக்க அனுப்பி இருந்தேன். அது இதுவரை வெளியிடப் பட வில்லை.

    ராம மந்திரம் ஓதி வந்த இந்து மகாத்மாவின் கட்டுரைக்கு தமிழ்ஹிந்துவில் வரவேற்பு இல்லை என்பது மிகவும் வருந்தத் தக்கது !!!

    வந்தே மாதரம்.

    சி. ஜெயபாரதன்.

  59. திண்ணையில் பல வருடங்களாக எழுதிவருபவர் ஜெயபாரதன் என்பதை அறிவேன். அவரது அறிவியல் கட்டுரைகள் செறிவுடன் கூடியவை. பொதுவாக தமிழ் வாசகர்களுக்கு தெரியாத பல அறிவியல் தகவல்களை உள்ளடக்கியவை. அவரது மொழியாக்க முயற்சிகளில் நிறைய பிசிறுகள் உண்டு. சில வருடங்கள் முன்பு திண்ணையிலேயே நான் சிலவற்றை சுட்டிக் காட்டியதாக ஞாபகம்.

    அவரது இந்த நாடக முயற்சி மிகவும் தட்டையானது, கலை நோக்கற்றது. ராமகதையின் ஜீவனைப் பற்றிய எந்தப் புரிதலும் ஆழமும் இல்லாதது.. குறைந்த பட்ச வாசிப்பு அளவுகோலிலேயே வாசகர்கள் அந்த “படைப்பை” புறக்கணித்து விடுவார்கள். அது போகட்டும், அந்த நாடகத்தை தான் எழுதியதற்கான நோக்கங்களாக அவர் முன்வைக்கும் வாதங்கள் அபத்தமாக இருக்கின்றன.. It is total perversion of logic. மதச் சண்டைகள் உருவாவதற்கு ராமனை மக்கள் தெய்வமாக வணங்குவது தான் காரணம் என்று இவர் “கண்டுபிடித்து” அதனால் மனம் நொந்து ராமனை கட்டுடைத்து அவன் கொலைகாரன் என்று நிறுவி, மத நல்லிணக்கத்தை உருவாக்குவாராம்.. பாபர் கும்மட்டம் இடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு, மதக் கலவரங்கள் என்று பிலுபிலுவென்று ஆரம்பித்து விடுகிறார். இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் பல வரலாற்று, அரசியல், சமூக காரணிகள் உள்ளன என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.

    இன்று நேற்றல்ல, 1500 வருடமாக ராமனை தெய்வமாக *தமிழர்கள்* வணங்கி வருகின்றார்கள்.. அகநானூறிலும், சிலப்பதிகாரத்திலும் அதற்கான குறீப்புகள் உண்டு.. “தொல்லிலங்ககை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே” என்று இளங்கோ சொல்கிறார். காஷ்மீரம் முதல் கம்போடியா வரை ஆசியக் கண்டமெங்கும் பற்பல நூற்றாண்டுகளாக ராமகாதை பண்பாட்டின் ஊற்றுமுகமாக உள்ளது. ஜெயபாரதனின் லாஜிக் படி இத்தனை வருடங்களாக இந்த எல்லா பிரதேசங்களிலும் மதச்சண்டைகளால் ரத்த ஆறு அல்லவா ஓடியிருக்க வேண்டும்! அப்படி நடக்கவில்லையே.. இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் இந்த தேசத்தையும் பண்பாட்டையும் வன்முறை மூலம் அழிக்க முயற்சி செய்யும் போது தான், அதை எதிர்த்து யுத்தங்கள் தோன்றின.. எனவே, “மதச் சண்டைகளுக்கு” காரணம் ஸ்ரீராமனின் தெய்விகம் அல்ல, இஸ்லாம் என்ற ஆபிரமாகிய மதத்தின் ஆக்கிரமிப்பும் வன்முறையும் தான். இந்த அடிப்படை புரிதல் கூட ஜெயபாரதனுக்கு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது.

    இதை முகாந்திரமாக எடுத்துக் கொண்டு க்ருஷ்ண குமார் வால்மீகி ராமாயணம் குறித்து ஒரு நல்ல தொடரை எழுத ஆரம்பித்திருப்பது இதனால் விளைந்த நற்பயன்.

  60. /////இன்று நேற்றல்ல, 1500 வருடமாக ராமனை தெய்வமாக *தமிழர்கள்* வணங்கி வருகின்றார்கள்.. அகநானூறிலும், சிலப்பதிகாரத்திலும் அதற்கான குறீப்புகள் உண்டு.. “தொல்லிலங்ககை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே” என்று இளங்கோ சொல்கிறார். காஷ்மீரம் முதல் கம்போடியா வரை ஆசியக் கண்டமெங்கும் பற்பல நூற்றாண்டுகளாக ராமகாதை பண்பாட்டின் ஊற்றுமுகமாக உள்ளது. ஜெயபாரதனின் லாஜிக் படி இத்தனை வருடங்களாக இந்த எல்லா பிரதேசங்களிலும் மதச்சண்டைகளால் ரத்த ஆறு அல்லவா ஓடியிருக்க வேண்டும்! அப்படி நடக்க வில்லையே.////

    நான் கடந்த ஆண்டுகளைப் பற்றிக் குறிப்பிட வில்லை..

    \\ இராமனைத் தேவனாகப் கருதினால், தொடர்ந்து நாட்டில் மதச் சண்டைகள், கொலைகள் பெருக வாய்ப்புக்கள் உண்டாகும். \\

    இதுதான் என் கருத்து..

    என் ஆதாரங்கள் விடுதலை நாட்டில் சமீபத்தில் நிகழ்ந்தவை..

    Here are the evidences.

    1. https://en.wikipedia.org/wiki/Demolition_of_Babri_Masjid [1992] [Dated January 18, 2014]

    2. https://en.wikipedia.org/wiki/Godhra_train_burning [2002] [Dated [Dated January 26, 2014]

    3. https://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence [2002] [Dated January 27, 2014]

    S. Jayabarathan

  61. அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் சீதாபிராட்டியைப் பற்றிய அவதூறு சொல்லியது ஒரு வண்ணான் என்ற கருத்து ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ற புரட்டை தன் கருத்தாக முன்வைத்துள்ளார்.

    வால்மீகி ராமாயணத்தின் கோரக்பூர் பதிப்பு, விக்கியிலுள்ள வால்மீகி ராமாயண மூலம், ஸ்ரீ ஷர்மா அவர்களது ஹிந்தி வால்மீகி ராமாயண வ்யாக்யானம் மற்றும் மன்மத நாத தத்தரின் ஆங்க்ல வ்யாக்யானம் – போன்று பல ராமாயணப்பதிப்புகளில் நான் இந்த விஷயத்தை பரிசீலித்து விட்டேன். அவற்றில் அபவாதம் சொல்லியது சில நகர மாந்தர்கள் என்று மட்டிலும் சொல்லப்பட்டுள்ளது. இதைத் தவிர உத்தரராம சரிதம் பேசும் மற்றைய சில படைப்புகளையும் நான் பார்த்து விட்டேன் அதிலும் அபவாதம் சொல்லியது ஒரு வண்ணான் என்று சொல்லப்படவில்லை. என்னுடைய அடுத்து வரும் வ்யாசத்தொடரில் முழு விபரங்களையும் இது சம்பந்தமாக விரிவாகப் பகிர்வேன்.

    எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய பேராசிரியப்பெருந்தகை அவர்கள் இக்கருத்தை எந்த ராமாயண நூலாதாரத்தின் பாற்பட்டு பகிர்ந்துள்ளார் என்பதனை இந்த தளத்து வாசகர்களுடன் பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    இதற்கு முன்னரும் தனது மஹாத்மா காந்தியின் மரணம் என்ற வ்யாசத்தில் அன்பர் அவர்கள் பகிர்ந்துள்ள எண்ணற்ற பொய்ப்பரப்புரைகள் ஆதாரமற்ற அவதூறுகள் போன்றவை கேழ்விக்குட்படுத்தப்பட்டதில் எவற்றுக்கும் அன்பர் தரப்பிலிருந்து விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை என்பது நினைவு கூறத்தக்கது.

    நூலாதாரத்தின் பாற்பட்டு அல்லாது, வண்ணான் விஷயம் புனைவு என்றால்…… ஒரு புனைவில் அபவாதம் சொல்லும் ஒரு இழிசெயலை செய்தமையை பொதுப்படையாக ஒரு “மனிதன்” என்று சொல்லாது “கேடுகெட்ட வண்ணான்” என்று சொன்னமைக்கு அன்பர் தரப்பிலிருந்து என்ன விளக்கம் என்பதனையும் இந்த தளத்து வாசகர்கள் அறிய விழைவர்.

    நமது துணிகளை வெளுத்து நாம் தூய்மையாக இருக்க நமக்கு உபகாரம் செய்யும் தொழிலில் உள்ள “வண்ணானை” எதற்காக எனது மதிப்பிற்குறிய விக்ஞானி இழிவு செய்ய விழைகிறார்? அப்படிப்பட்ட ஒரு இழிசெயலை ஒரு பண்டிதர், ஒரு விக்ஞானி அல்லது ஒரு வ்யாபாரி மேல் ஏன் அன்பர் அவர்கள் சுமத்த விழையவில்லை. எதற்காக நாம் தூய்மையாக இருக்க நமக்கு உபகாரம் செய்யும் தொழில் செய்பவர்களை அன்பர் அவர்கள் இழிவான செயலைச் செய்ததாக புனைவு செய்துள்ளார் என்பதனை முன்வைக்குமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    “கேடு கெட்ட வண்ணான்” என்ற பதத்திற்கு பதில் “கேடு கெட்ட விக்ஞானி” என்று ஏன் இருக்கக்கூடாது என்ற வினா எழுப்பியமையை அன்பர் அவர்கள் தன் மீது சுமத்தப்பட்ட ஆரோபமாக எடுத்துக்கொண்டமையை அறிந்தேன். என் வினாவில் தனியொரு நபரைச் சுட்டாது பொதுப்படையாக ‘விக்ஞானி” என்று மட்டிலும் சொல்லப்பட்டுள்ளது என்பது வெளிப்படை.

    பொதுப்படையக அன்பர் அவர்கள் சமர்ப்பிக்கும் வ்யாசங்களில் எனக்கு மிகக்காட்டமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பர் அவர்களுடைய விக்ஞானம் சார்ந்த வ்யாசங்களை நான் உகப்புடன் வாசித்து வருகிறேன் என்றும் அவற்றை விதந்தோதியுள்ளேன் என்பதையும் பகிர்கிறேன். அன்பர் அவர்கள் சமர்ப்பித்து வரும் விக்ஞானம் சார்ந்த வ்யாசங்களுக்காக அவர் மீது என்னுடைய அபிமானம் என்றென்றும் உண்டு என்பதனையும் அதில் மாறுபாடு ஏதும் இல்லை என்பதனையும் பகிர்கிறேன்.

    மாற்றுக்கருத்து பகிர்ந்தமைக்காக சிறியேனை “ஆவேச நர்த்தனம் ஆடுவதாகவும்” “செக்குமாடு” என்றும் “மேதாவி” என்றெல்லாமும் அன்பர் அவர்கள் கருத்துப் பகிர்ந்துள்ளார்கள். அன்பர்கள் சிறியேனை மேலும் சாட விழைந்தாலும் சாடுவதில் எமக்கு ஆக்ஷேபம் ஏதுமில்லை. ஆனால் கூடவே தான் முன் வைத்த புரட்டுக் கருத்துக்களுக்கு விளக்கமளிக்கவும் விழையலாமே என்று விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    கருத்துத் தெளிவுகளே உரையாடல்களின் உரித்தான பயன் என்பது என் புரிதல். அன்பர் அவர்களின் புரிதலும் அவ்வாறே இருக்கும்?

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  62. \\ அவரது இந்த நாடக முயற்சி மிகவும் தட்டையானது, கலை நோக்கற்றது. ராமகதையின் ஜீவனைப் பற்றிய எந்தப் புரிதலும் ஆழமும் இல்லாதது.. குறைந்த பட்ச வாசிப்பு அளவுகோலிலேயே வாசகர்கள் அந்த “படைப்பை” புறக்கணித்து விடுவார்கள். \\

    ஸ்ரீ ஜடாயு அவர்களின் மிகக் கறாரான மற்றும் நேர்மையான விமர்சனம்.

    மதிப்பிற்குறிய விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் என் வ்யாசத்தொடர் தமிழ் ஹிந்து தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாலும் அதில் அன்பர் அவர்களுடைய அலக்கியப்படைப்பின் உரல் கொடுக்கப்பட்டிருப்பதாலும் ஐம்பது நூறு வாசகர்கள் அவர் தளத்திற்கு வந்து அன்பர் அவர்களுடைய அலக்கியப்படைப்பை வாசித்துச் சென்றாலும் எவரும் அதைப்பற்றிய திறனாய்வைப் பகிரவில்லை என்ற கருத்துப்பகிர்ந்திருந்தார்.

    அன்பர் அவர்கள் சமர்ப்பித்த அலக்கியப் படைப்பில் ஆய்வு செய்வதற்கு என்று ஏதும் இல்லை என்பதும் அதில் உள்ள புரட்டுகள் மற்றும் மதக்காழ்ப்புக்கருத்துக்களை சுட்டுவதற்கு திறன் என்று ஏதும் தேவையில்லை என்பதும் சிறியேனின் அபிப்ராயம்.

    ERC (Exact Reference to Context) என்று முப்பது நாற்பது வருஷ முன்னர் ஆங்க்ல பாடங்களில் பள்ளிகளில் ஒரு வினா கேழ்க்கப்படும். வாசிக்கும் மாணவன் குறைந்த பக்ஷ வாசிப்பு உடையவனா என்பதனை பரிசீலனை செய்ய. வால்மீகி ராமாயணம் வாசித்தவர்களுக்கு – கருத்துடன் வாசித்தவர்களுக்கு மட்டிலும் சரி — அன்பர் அவர்களது அலக்கியத்தில் பகிரப்பட்ட பொய்ப்பரப்புரைகள் தெள்ளெனத் தெளிவாகத் துலங்கும் என்பது திண்ணம்.

    எந்த பாண்டித்யமும் அறவே அற்ற மேதமை என்பது சற்றும் அற்ற ……. ஆனால் அடிப்படை வாசிப்பறிவு உள்ள சிறியேனின் ப்ரயாசையே இந்த வ்யாசத் தொடரும் இதைத் தொடர இருக்கும் அடுத்த வ்யாசத் தொடரும்.

  63. திரு. கிருஷ்ணகுமார்,

    கொம்பை விட்டுவிட்டு, வாலைப் பிடித்துத் தொங்குகிறார்.

    /////அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் சீதாபிராட்டியைப் பற்றிய அவதூறு சொல்லியது ஒரு வண்ணான் என்ற கருத்து ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ற புரட்டை தன் கருத்தாக முன்வைத்துள்ளார்.

    வால்மீகி ராமாயணத்தின் கோரக்பூர் பதிப்பு, விக்கியிலுள்ள வால்மீகி ராமாயண மூலம், ஸ்ரீ ஷர்மா அவர்களது ஹிந்தி வால்மீகி ராமாயண வ்யாக்யானம் மற்றும் மன்மத நாத தத்தரின் ஆங்க்ல வ்யாக்யானம் – போன்று பல ராமாயணப்பதிப்புகளில் நான் இந்த விஷயத்தை பரிசீலித்து விட்டேன். அவற்றில் அபவாதம் சொல்லியது சில நகர மாந்தர்கள் என்று மட்டிலும் சொல்லப்பட்டுள்ளது. இதைத் தவிர உத்தரராம சரிதம் பேசும் மற்றைய சில படைப்புகளையும் நான் பார்த்து விட்டேன் அதிலும் அபவாதம் சொல்லியது ஒரு வண்ணான் என்று சொல்லப்படவில்லை. என்னுடைய அடுத்து வரும் வ்யாசத்தொடரில் முழு விபரங்களையும் இது சம்பந்தமாக விரிவாகப் பகிர்வேன்.////

    As the king, so the subjects’! This is what the people say, in their ignorance”.

    Ram’s whole face changed when he heard this slanderous accusation against him and his immaculate wife. He could not speak a word. His friends tried to comfort him and said, “Your Majesty, it is the nature of common people to speak ill of the nobility. A king need not pay heed to such false accusations”.

    Ram hardly heard what they were saying. Taking leave of then in his usual, courteous manner, he went to the garden and sat immersed in thought. He decided that it was his duty to check on this matter before coming to a decision. That evening, he wore the clothes of an ordinary citizen of Ayodhya and went incognito on a tour of the city. As luck would have it, as he passed the house of a washer-man, in one of the small streets of the city, he heard the sound of raised voices and went close to the door of the house and stood outside listening. The husband was berating his wife. “I have heard reports of your indecent behaviour. You have been seen talking to the nobleman who comes for a walk down this street. You may go back to your own home. I will not keep you here any longer. I belong to a respectable family and will not keep a loose woman as my wife. You are free to go where you please”.

    The poor woman pleaded that she was totally innocent and had only answered some questions, the man had put to her. The washerman replied sternly, “Do you think I am Ram to tolerate such behaviour? He is the king and can do as he pleases. But, as for me, I will never keep a wife who has been seen with another man”

    The Ramayana By Rishi Valmiki
    Chapter 7 Uttara Kanda
    Canto I – Sita Abandoned

    https://www.astrojyoti.com/ramayanavalmikuttarakanda.htm

    S. Jayabarathan

  64. அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்

    \\ கொம்பை விட்டுவிட்டு, வாலைப் பிடித்துத் தொங்குகிறார். \\

    எனக்குத் தமிழில் ஆளுமை இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    தும்பை விட்டு வாலைப் பிடித்துத் தொங்குவது என்பது தானே சொல்லாடல். பேராசிரியரின் தமிழ் ஏன் தடுமாறுகிறது?

    ஆக “வண்ணான்” விஷயம் பற்றி சொல்லியுள்ள எதுவும் நீங்கள் ஆராய்ந்து அறிந்த விஷயம் இல்லை.

    அன்பர் ஷாலி என்ற வாசகர் திண்ணை தளத்தில் astrojyothi தளத்தில் இருந்து copy paste செய்த விஷயத்தை அங்கு பகிர்ந்திருந்தார். அதை நீங்கள் இங்கு தமிழ் ஹிந்து தளத்தில் காபி பேஸ்ட் செய்து இருக்கின்றீர்கள்.

    Chapter 7 Uttara Kanda Canto I – Sita Abandoned. மேற்கண்ட தளத்தில் கதைச்சுருக்கம் என்று பகிர்ந்துள்ளார்கள்.

    copy paste செய்வது ஒரு பேராசிரியப் பெருந்தகை தன் மேதாவிலாஸத்தை பொதுதளத்தில் தெரிவுக்கும் பாங்கா என்பதனை இந்த தளத்தில் உள்ளவர்கள் தீர்மானிக்கட்டும்.

    உத்தரகாண்டம் வால்மீகி ராமாயணத்தின் ஏழாவது காண்டம். அதில் முதல் சர்க்கத்திலும் சரி ஏழாவது சர்க்கத்திலும் சரி இந்த விஷயம் கிடையாது. விக்ஞானி ஜெயபாரதன் அவர்கள் காபிபேஸ்ட் செய்யட்டும். அதன் முன் தான் சொல்ல வரும் விஷயம் வால்மீகி ராமாயணத்தின் குறிப்பிட்ட சர்க்கம் / அத்யாயத்தில் உள்ளதா என்று சரிபார்க்கவும் முயலவேண்டும்.

    பேராசிரியப்பெருந்தகை அவர்கள் ராமாயணத்தில் சீதாபிராட்டியின் மீது அவதூறு கூறியது வண்ணான் என்று கூறியபடிக்கு அதற்கான ஆதாரங்களை ராமாயணத்திலிருந்து பகிர வேண்டும். ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று சொல்லப்படும் கதையை எங்கிருந்தாவது copy paste செய்து அல்ல.

    மேற்கண்ட விஷயம் சிறியேனால் ஐந்து வேறு வேறான மூல வால்மீகி ராமாயணம் source சார்ந்து பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அதில் விக்ஞானி ஜெயபாரதன் அவர்கள் சொன்ன படிக்கான செய்தி இல்லை. இதை எனது தொடரும் வ்யாசத்தில் விபரமாக பகிர்வேன்.

    கீதாப்ரஸ் வால்மீகி ராமாயண மூலக்ரந்தம், விக்கிபீடியாவில் உலகப்பொதுமக்களின் பார்வையில் உள்ள வால்மீகி ராமாயண மூலம், பாடபேதமுள்ள ஸ்ரீமான் மன்மதநாத தத்தரின் வால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டத்தின் ஆங்க்ல மொழியாக்கம் மற்றும் ஸ்ரீமான் த்வாரகாப்ரசாத் ஷர்மா அவர்களின் வால்மீகி ராமாயணத்தின் மூல ச்லோகத்துடன் கூடிய உத்தரகாண்டத்தின் ஹிந்தி வ்யாக்யானம் போன்ற நான்கு தனித்தனியான மூலராமாயணப் பதிப்பைப் பற்றி முன்னர் தெரிவித்திருந்தேன்.

    இன்னொரு source

    வால்மீகிராமாயணத்துக்கான https://www.valmikiramayan.net தளத்தில் உத்தரகாண்டம் காணக்கிட்டாது. ஆயினும் valmiki.iitk.ac.in/‎ தளத்தில் உத்தரகாண்டத்து மூலச்லோகங்களைப் பார்க்கலாம். கீதாப்ரஸ் பதிப்புடன் ஒத்துப்போகும் நூற்றுப்பதினொரு சர்க்கங்களும் அதைத்தவிர அதிகபாடம் எனும்படிக்கு மேற்கொண்டு பதின்மூன்று சர்க்கங்கள் கொண்ட பதிப்பு இது. இதிலும் வண்ணான் விஷயம் காணக்கிட்டாது.

    வண்ணான் விஷயம் மூல வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ற விஷயம் சரியல்ல என்பது நான் மேற்குறிப்பிட்ட ஐந்து வேறு வேறு பதிப்புகளின் மூலம் துலக்கியுள்ளேன்.

    இல்லை இந்த விஷயம் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது என நிறுவ விரும்புபவர், அந்த விஷயத்தை உள்ளடக்கிய மூல ராமாயணப்பதிப்பை பகிரவும். குறிப்பிட்ட சர்க்கம் மற்றும் ச்லோகங்களுடன்.

    குறிப்பான பாடபேதமுள்ள மூலபாடாந்தரத்தை பொதுதளத்தில் முன்வைக்காது பொதுப்புரிதல்களை வால்மீகி ராமாயணத்தின் மீது சுமத்துவது அறிவுபூர்வமான செயலாகாது.

    எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களிடம்

    பாண்டியன் சபையில் கண்ணகி உடைத்த சிலம்புகளின் எண்ணிக்கை எவ்வளவு என்றும் கண்ணகி மதுரையை எரித்தது எப்படி என்றும் சிலப்பதிகாரத்தின் படி கூறுங்கள் என்றால் ……………….

    பேராசிரியப் பெருந்தகை அவர்கள் கலைஞர் மு. கருணாநிதி வசனம் எழுதிய பூம்புகார் திரைப்படத்தில் இருந்து விளக்கம் அளிப்பாரா அல்லது சிலப்பதிகாரப்பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கம் அளிப்பாரா?

    பேராசிரியர் செய்ய வேண்டியது கூகுள் சர்ச் இல்லை. மூல ராமாயணத்தில் இருந்து சர்ச் செய்ய வேண்டும். அதற்கு ராமாயணத்தைப் பற்றிய அடிப்படைப்புரிதல் இருக்க வேண்டும். வால்மீகி ராமாயணம் என்ற தலைப்பை மட்டிலும் படித்து விட்டும் பொதுதளத்தில் வால்மீகி ராமாயணம் பற்றி கருத்தாடல் செய்தலை முகம் தெரியாத நபர்கள் செய்யலாம். எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய உலகம் புகழும் விக்ஞானியான பேராசிரியப்பெருந்தகை செய்யக்கூடாது.

    வால்மீகி ராமாயணம் என்ற நூலின் தலைப்பை மட்டிலும் படித்து விட்டும் வால்மீகி ராமாயணத்தை படித்தது போன்ற ஒரு தோற்றத்தை பேராசிரியப்பெருந்தகை அளிக்க விழையக்கூடாது.

    பணிவன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  65. https://www.mantraonnet.com/ramayan/book7-canto1.html

    Bhadra folded his palms and said, “Sire, people speak only good about you. Sometimes they discuss the events of past years, when you achieved the impossible, by killing the demon king, Ravana and rescuing the princess of Videha. Your exploits are recounted with great enthusiasm by everyone “What else do they say, Bhadra. Tell me all. Why do you avert your d face? Is there something, which you feel should not be reported to me? ~ Have no fear? I want to know the good and the bad. No king can afford to ignore what people say of him, so tell me”.

    In a faltering, low tone, Bhadra said, “They also remark that though your action in having killed the rakshasa, is to be applauded, your conduct with regard to your wife, is shameful. How could the king have accepted a woman who had been kept on Ravana’s lap and who had lived in his palace for so many months? How can the queen forge the indignities which she must have suffered? We will have to put with similar insults. Our wives will be able to go as they please as we will be forced to condone them. As the king, so the subjects’! This is what the people say, in their ignorance”.

    Ram’s whole face changed when he heard this slanderous accusation against him and his immaculate wife. He could not speak a word. His friends tried to comfort him and said, “Your Majesty, it is the nature of common people to speak ill of the nobility. A king need not pay heed to such false accusations”.

    Ram hardly heard what they were saying. Taking leave of then in his usual, courteous manner, he went to the garden and sat immersed in thought. He decided that it was his duty to check on this matter before coming to a decision. That evening, he wore the clothes of an ordinary citizen of Ayodhya and went incognito on a tour of the city. As luck would have it, as he passed the house of a washer-man, in one of the small streets of the city, he heard the sound of raised voices and went close to the door of the house and stood outside listening. The husband was berating his wife. “I have heard reports of your indecent behaviour. You have been seen talking to the nobleman who comes for a walk down this street. You may go back to your own home. I will not keep you here any longer. I belong to a respectable family and will not keep a loose woman as my wife. You are free to go where you please”.

    The poor woman pleaded that she was totally innocent and had only answered some questions, the man had put to her. The washerman replied sternly, “Do you think I am Ram to tolerate such behaviour? He is the king and can do as he pleases. But, as for me, I will never keep a wife who has been seen with another man”

    Ram stood riveted to the spot for a few seconds. He felt like a tree which had been struck by lightning. The tender buds and leaves of hope which had sprouted in his heart after their return from Lanka, were scorched and the naked, charred and blackened, branches raised their arms, in mute appeal to the heavens. He felt as if his whole body was on fire. All the fresh, green leaves had fallen off and only the stark, bare branches remained. He managed somehow to stagger back to the palace and going to a private chamber, he requested his brothers to come to him at once. They came immediately and were surprised to see Ram’s demeanour. He stood with his back to the door, looking out on the wintry garden. His face was pale and his eyes had a glazed look as he turned to face his brothers. His hands trembled slightly.

    Lakshman knelt before him and said, “Brother what is it? Tell me. Where is the enemy? You know that you have but to command and I shall obey”.

    Ram spoke in a voice which was drained of all emotion, “Do you know what the citizens are saying about me and Sita”?

    All of them hung their heads and Ram continued, “I see that all of you know and have hidden the truth from me all these years. O Lakshman! You are witness to the fact that I refused to take her back after the war, until her purity was proved in the ordeal by fire. Yet these people now talk as if I had done a heinous act. My heart is breaking and I am drowning in sorrow, yet my duty as a king is clear before me. The first duty of a king is to his subjects and not to himself. Sita is dearer to me than life itself but I have no choice but to abandon her for the sake of my subjects.

    Lakshman, take her away in the chariot with Sumantra, and leave her on the other side of the Ganga near the Tamasa river, where we stayed a long time ago. Just this morning she requested me to take her there. Let her have her wish. She will suspect nothing”.

    Lakshman jumped to his feet and said, “Ram, you cannot do this to her! She is burnished gold, purified in fire. Please do not ask me to do this. I will do anything else you ask, but not this. Don’t you know that she is carrying your child in her womb. How can you bear to do this! Can you not wait till the child is born”?

    His face carved out of stone, Ram said in a stern voice, “After the child is born, you will say, let her stay while she suckles the infant and then you’ll say, let her stay till he is five years old and thus it will go on and on and eventually Ram would have betrayed his country for the sake of his own felicity”.

    He continued in a hard, loud voice, “I do not want to hear another word from any of you. I want none of your advice. I am your king and I demand only implicit obedience”. For a few stunned moments there was absolute silence, except for Ram’s heavy breathing due to his effort to suppress an emotion which threatened to overpower him.

    At last, ashen in hue and mask-like face he said, “Go Lakshman! Leave her in a secluded spot on the banks of the Tamasa river, near the holy Ganga, close to some of the hermitages, and return immediately. Do not wait to talk to her. Do not try to explain anything. Let her think the worst of me or else she will die of a broken heart. Do not look at me so accusingly. Anyone who objects to my decision is my bitter enemy. Take her away this very instant, O Lakshman! If I see her even once, I am doomed. I will be unable to carry out my own command. If I see her fawn-like gaze fixed on me with a beseeching look, I will be lost and not all slander in the world will enable me to let her go. So go now! Go, before my heart fails me – before emotion weakens my adamantine resolve. Why do you hesitate? It is I, the king of the country who is commanding you”. His brothers could not speak a word. Lakshman cursed his luck for having been chosen to carry out this terrible command.

    His eyes brimming with tears, Ram stumbled out of the room and went to an enclosed spot in the garden where he would not be able to see Sita.

    +++++++++++
    S. Jayabarathan

  66. 1. https://creative.sulekha.com/a-comment-about-the-uttarakanda-or-uttara-ramayana_595972_blog

    2. https://www.mediafire.com/view/zwlzhmm2dtn/Valmiki+Ramayana+-+MN+Dutt+-+Volume+7+-+Uttara+Kanda.pdf

    +++++++++++++++++++

    This type of superficial linking of Ram’s story to Uttarakanda by later authors / contributors by showing Valmiki either living before Ram or contemporarily (which is inconsistent with Narada’s narration about Ram to Valmiki in the Balakanda) is further evident in the Ayodhyakanda (VR-2-56-15) where Ram, Sita and Lakshman are shown to visit Valmiki’s ashram / hermitage (in the Chitrakuta mountains) and pay homage to him. This episode seems to open the door later (in the Uttarakanda) for pregnant Sita to move to Valmiki’s ashram, after being abandoned and exiled by Ram from Ayodhya because of questions / gossip by a dhobi (or washerman) about her character during her imprisonment by Ravan in the final year of Ram’s exile.

    Anyway, after the pregnant Sita ends up in Valmiki’s ashram (according to the Uttarakanda), she gives birth to sons Lava and Kush who, along with their mother Sita, are supported and cared for by Valmiki who also teaches and trains Lava and Kush and eventually guides them in their fight against Ram (their father).

    ++++++++++++++++++++++++++++

    https://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=1579

    A question that naturally arises is if the Purana’s attempt to exonerate Rama succeeds or not. The answer is in the negative. The story of the birds does in no way exonerate Rama from the responsibility for his action. Even if we take the story at its face value, it only gives a reason for the washerman to accuse Sita – it does not give a valid reason for Rama to abandon her. In fact, in the Padma Purana, Rama’s action becomes all the more glaringly disturbing. While in the Ramayana he has the reason, however invalid it is, that all of Ayodhya is speaking against his continuing to keep Sita as his wife after she has lived in Ravana’s ‘house’, here he has one only single man speaking against it – an intemperate man whose name itself, the Purana tells us, isKrodhana, Short Temper. Also, frightening is Rama’s determination to get rid of Sita the moment he hears the accusation. He calls Bharata, who faints at Rama’s order. While he is lying unconscious in the chamber, Rama calls Shatrughna and gives him the same order. He too faints and while both Bharata and Shatrughna are lying unconscious at his feet, he calls Lakshmana to him and gives him the order. The only choice Rama gives his brothers is between chopping off his, Rama’s, head and abandoning Sita in the jungle.

    +++++++++++++++

  67. அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன்

    என்னுடைய வாத விவாதம் ஜெயம் அபஜெயம் போன்ற அற்ப விஷயங்களுக்கல்ல. விஷயத்தெளிவுக்கு என்பதை அறியவும்.

    வால்மீகி ராமாயணத்தில் ஒரு விஷயம் சொல்லப்பட்டுள்ளது என்றால் அதை விளக்குமுகமாக நீங்கள் பகிர வேண்டியது மூன்று விஷயங்கள்

    அணுகிய பதிப்பின் பெயர்
    அந்தப் பதிப்பில் நீங்கள் அணுகிய சர்க்கத்தின் எண்
    அந்த சர்க்கத்தில் நீங்கள் அணுகிய ச்லோகங்களின் எண்கள்

    நான் ஐந்து வேறு வேறான பதிப்புகளிலிருந்து இந்த விஷயத்தை அணுகியுள்ளேன். அவற்றில் சீதாபிராட்டியின் மீது அபவாதம் சொல்லியது ஒரு சில பொதுஜனங்கள் என்று தானேயல்லாது ஒரு வண்ணான் என்று இல்லை என்பது திண்ணம்.

    ஓரிரு பக்கங்களில் எழுதினாலன்றி முழுக்குறிப்புகளுடன் இந்த விஷயத்தை விளக்க முடியாது.

    ஸ்ரீ மன்மதநாத தத்தரின் ஆங்க்ல மொழியாக்கத்தின் உரலை நீங்கள் காபிபேஸ்ட் செய்து இங்கு பகிர்ந்துள்ளீர்கள். ஒருமுறை அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை வாசிக்க முனைந்திருந்தீர்கள் என்றால் அந்த உரலை இங்கு பகிர்ந்திருக்க மாட்டீர்கள். 314 பக்கங்களில் ஆன அந்த பிடெஃப் கோப்பை வாசிப்பதற்கு முன் வால்மீகி ராமாயணத்தில் எந்த விஷயம் எங்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று குத்துமதிப்பாகவாவது ஒரு புரிதல் இருக்க வேண்டும். அல்லது கருத்துப்பகிர்வதில் நேர்மை இருக்கும் பக்ஷத்தில் முழு கோப்பையும் வாசித்தால் விஷயத் தெளிவு கிட்டும். உங்கள் தொடரும் உத்தரங்கள் நீங்கள் வால்மீகி ராமாயணத்தைப்பற்றி ஆனா ஆவன்னா கூட அறியாதவர் என்பதை பறைசாற்றுகின்றன என்றால் மிகையாகாது. மேலும் நீங்கள் பொறுமையுடன் நீங்களே பகிர்ந்த பிடிஃப் கோப்பைப் பகிரும் விஷயம். அதில் உங்களுக்கு நாட்டம் இல்லை. இது புதிதும் இல்லை. வீரசாவர்க்கர் காந்தியடிகள் இறப்பிற்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று கூசாது நீங்கள் சொல்லிய விஷயத்தில் நீங்கள் இதோ என்று பகிர்ந்த கோப்பு தானே உங்களது பொய்யை உலகத்திற்கு அம்பலப்படுத்தியது.

    சிறியேனுக்கு லவலேசமும் மேதமை இல்லை. ஆனால் இந்த க்ரந்தத்தை வாசித்திருக்கிறேனே. எந்த விஷயம் எங்கு சொல்லப்பட்டிருக்கும் என்ற புரிதலும் அடிப்படை சம்ஸ்க்ருத அறிவையும் வைத்து விஷயங்களை ஐந்து வேறு வேறு பதிப்புகளில் ஆழ்ந்து அணுகிய பின்னரே இந்த விஷயத்தைப் பகிர்ந்துள்ளேனே. பதிப்புகள் ஐந்து என்றாலும் பாடபேதம் இரண்டு.

    சீதாபிராட்டியின் மீது அபவாதம் பேசியது ஒரு வண்ணான் என்று சொல்லக்கூடிய பதிப்பு ஏதேனும் உள்ளது என்று திண்ணமாக நீங்கள் கருதினால் உள்ளபடி அந்த பதிப்பைப் பற்றியும் மேற்குறிப்புகளையும் அறிய மிகவும் ஆவலாக உள்ளேன் என்பதும் திண்ணம்.

    ஆகவே நீங்கள் தேட வேண்டியது இணையம் அல்ல. வேறு வேறு பதிப்பான வால்மீகி ராமாயணங்கள் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். எங்கெங்கோ ஓடி ஓடித் தேடுகிறீர்கள். உங்கள் அலக்கியப்படைப்பின் கீழ் நீங்கள் அணுகியபடிக்கு ஐந்தாறு நூற்களைப் பகிர்ந்துள்ளீர்கள். அதில் இருந்து இதுவரை ஒரு வரியாவது உங்களுடைய நிலைப்பாடுகளுக்கு சான்றாக பகிர்ந்துள்ளீர்கள்? ஓ அவற்றை நீங்கள் வாசித்திருந்தாலல்லவோ அதிலிருந்து பகிர முடியும்?

    மாயமானைத் தேடப்புகுமுன் லக்ஷ்மண ரேகை என்ற கோட்டை நிலத்தில் பதிந்து இளைய பெருமாள் தேடச்சென்றார் என்பது பொதுப்புரிதல். வால்மீகி ராமாயணத்தில் அப்படி சொல்லப்படவில்லை. வெறும் பொதுப்புரிதலை வைத்துக்கொண்டு வால்மீகி ராமாயணத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது என்று கூரை மீதேறிக் கூவினாலும் இல்லாதது உள்ளதாகுமோ.

    நீங்கள் உங்களது பிறழ்வுப் புரிதலை பொது தளத்தில் வைத்துள்ள படியால் இந்த பிறழ்வுப் பொதுப்புரிதலையும் மூலகாவ்யம் சார்ந்து என்னுடைய தொடர இருக்கும் வ்யாசத் தொடரில் விளக்கி விடுகிறேன்.

    வாலைப்பிடித்து தொங்குகிறேன். சதாம்ஹுஸைன், தாலிபான், செக்குமாடு என்று நீங்கள் சிறியேனை வசவிட முனைந்தால் உகப்புடன் நன்றாக வசவிடுங்கள். கூடவே மாற்றுக்கருத்து என்று நீங்கள் கூரைமீதேறிக்கூவும் விஷயம் பற்றி மிகக் குறிப்பான சான்றாதாரங்களையும் பகிர முனையலாமே.

    முறையான ஆதாரங்கள் இன்றி வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படாத விஷயங்களை சொன்னதாக பதைப்புடன் நீங்கள் சாதிக்க முனைவதில் உங்களுக்கு கிட்ட இருப்பது என்ன? மாறாக வால்மீகி ராமாயணத்தில் எந்தப் பதிப்பிலாவது சீதாபிராட்டியின் மீது அபவாதம் சொன்னது ஒரு வண்ணான் என்பது மிகக் குறிப்பாக இருப்பின் பதிப்பின் பெயருடனும் மூல ச்லோகங்களுடனும் பகிரப்பட்டால் நான் வால்மீகி ராமாயணம் பற்றிய எனது புரிதலை இன்னமும் மேம்படுத்திக்கொள்வேன். இப்படியும் ஒரு பதிப்பில் விஷயம் பகிரப்பட்டுள்ளது என மிகக் குறிப்பாக அறிவேன்.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  68. Jayabarathan should read below contents many times before copy/paste it from other blog contents.

    //பேராசிரியப் பெருந்தகை அவர்கள் கலைஞர் மு. கருணாநிதி வசனம் எழுதிய பூம்புகார் திரைப்படத்தில் இருந்து விளக்கம் அளிப்பாரா அல்லது சிலப்பதிகாரப்பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கம் அளிப்பாரா?

    பேராசிரியர் செய்ய வேண்டியது கூகுள் சர்ச் இல்லை. மூல ராமாயணத்தில் இருந்து சர்ச் செய்ய வேண்டும். அதற்கு ராமாயணத்தைப் பற்றிய அடிப்படைப்புரிதல் இருக்க வேண்டும். வால்மீகி ராமாயணம் என்ற தலைப்பை மட்டிலும் படித்து விட்டும் பொதுதளத்தில் வால்மீகி ராமாயணம் பற்றி கருத்தாடல் செய்தலை முகம் தெரியாத நபர்கள் செய்யலாம். எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய உலகம் புகழும் விக்ஞானியான பேராசிரியப்பெருந்தகை செய்யக்கூடாது.

    வால்மீகி ராமாயணம் என்ற நூலின் தலைப்பை மட்டிலும் படித்து விட்டும் வால்மீகி ராமாயணத்தை படித்தது போன்ற ஒரு தோற்றத்தை பேராசிரியப்பெருந்தகை அளிக்க விழையக்கூடாது.

    //

  69. Great Drama Writers like Shakespeare and Bernard Shaw followed their own intuitive style of wisdom to express their point of view when they wrote Dramas like Julius Caesar, Antony and Cleopatra, Saint Joan [Joan of Arc], Caesar and Cleopatra, The Man of Destiny [Napoleon], The Devil’s Disciple [American War of Independence].

    I have translated all these English Dramas in Tamil which are available in http://www.thinnai.com [old & new].

    They all deviated to some extent from the original historical records, written by the Greek Historian Plutarch.

    S. Jayabarathan

  70. அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் மட்டிலுமில்லை. அன்பர் ஷாலி அவர்களுக்கும் திண்ணை தளத்தின் பதினாலாம் பகுதி சீதாயண அலக்கியத்தில் பதில் கொடுத்திருக்கிறேன். ஜெயபாரதன் மட்டிலும் தன் பொய்யை தானே போட்டு உடைப்பவர் இல்லை என்பது துலங்கும். விதண்டாவாதங்களின் முன் தெளிவான கருத்துக்கள் வைக்கப்படின் அவை தவிடுபொடியாகும் என்பது திண்ணம். விக்ஞானியின் கையில் சிக்கிய ராமாயணப்பூமாலை பட்ட பாட்டினை விபரமாக அடுத்த வ்யாசத்தொடர் பகிரும்.

  71. சமர்ப்பிக்க இருக்கும் வ்யாசத் தொடரில் தனியாக ஒரு பாகம் ஜெயபாரதன் அவர்கள் “கேடுகெட்ட வண்ணான்” என்று இழிவுடன் சொன்ன விஷயத்தை மட்டிலும் வால்மீகி ராமாயணம் சார்ந்து விசாரிக்கும். விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் தன் பொய்க்கு ஆதாரமாக கொடுத்துள்ள மன்மத நாத தத்தரின் ஆங்க்ல மொழியாக்க பிடிஎஃப் கோப்பு அவரது பொய்யை எப்படி அம்பலப்படுத்துகிறது என்ற விஷயமும் கூடவே விளக்கப்படும். எப்பொழுதுமே தன் பொய்யை தானே அம்பலப்படுத்துவது எனது அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது வழக்கம். இப்போதும் அதில் தவறவில்லை.

    “வண்ணான்” என்ற தொழில் செய்யும் சஹோதரர்கள் ஹிந்து தர்மத்திற்கு ஆற்றிய பெரும் ஒப்பிலாத் தொண்டுக்கு ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயமும் எந்த அளவுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்பதனையும் அந்த வ்யாசத் தொடர் பகிரும்.

  72. இராமாயணமும் மஹாபாரதமும் தேசிய ஒற்றுமை மற்றும் ஹிந்துப்பண்பாடு ஆகிய வற்றின் சின்னங்களாக ஆயிரமாயிராமாண்டுகளாக விளங்கிவருகின்றன. தேசத்தினையும் பண்பாட்டையும் பிளக்க நினைக்கும் அபிராஹாமியர்கள் அவற்றை இழிவு படுத்த முனைகின்றனர் என்பது கண்கூடு.
    பாரதமக்களின் உயிரிலும் உணர்விலும் கலந்துவிட்ட இதிகாசங்களை மதிப்பிளக்க செய்வது என்பது பகற்கனவே.
    சிவசிவ

  73. Mr. Krishnakumar,

    Who are you ?

    Why should I prove to you what I have written in Seethayana is correct or not according to your birds-eye point of view ?

    Your birds eye views of Valmiki Ramayana are corrupted to the core and polluted in volume by many over the years with several additions and subtractions, as one can see in various websites.

    https://www.google.ca/search?client=opera&q=Valmiki+ramayana&sourceid=opera&ie=UTF-8&oe=UTF-8

    I will write what I think “right” to my point of view. You can write whatever you want. But don’t expect or insist for a reply from me to your repeated questions.

    S. Jayabarathan.

  74. As I had mentioned before, we should ignore such persons like S Jayabharathan who are on their frivolous pursuits. Ultimately falsehood, hatred and malice will not stand scrutiny. Such persons are like dogs that bark at the sun and finally it is the dog that gets kicked in its balls!

  75. \\ Great Drama Writers like Shakespeare and Bernard Shaw followed their own intuitive style of wisdom to express their point of view when they wrote Dramas like Julius Caesar, Antony and Cleopatra, Saint Joan [Joan of Arc], Caesar and Cleopatra, The Man of Destiny [Napoleon], The Devil’s Disciple [American War of Independence].

    I have translated all these English Dramas in Tamil which are available in https://www.thinnai.com [old & new].

    They all deviated to some extent from the original historical records, written by the Greek Historian Plutarch. \\

    இதற்கு நான் மறுப்பு சொல்லவில்லையே. கதைக்கருவிலிருந்து மாறுபட்டு உங்கள் போக்கில் நீங்கள் எழுதுவது என்பது வேறு. கதைக்கருவில் இருந்து மாறுபட்டு எழுதி அத்துடன் கூட மூலக்கதாசிரியர் சொல்லாத விஷயத்தை அவர் சொன்னது போல பொதுதளத்தில் பொய் கூறினால், நிச்சயமாக நீங்கள் கூறும் பொய் மூலக்கதாசிரியர் எழுதியதுடன் ஒப்பிடப்பட்டு நீங்கள் சொல்லிய விஷயம் உண்மையா பொய்யா என்பது விஷயமறிந்தவர்களால் துலக்கப்படும்.

    \\ Who are you ? \\

    உங்களின் மீது பேரன்பும் பெருமதிப்பும் உடைய உங்களுடைய வாசகன். உங்களுடைய ஏற்கத் தகுந்த கருத்துக்களை ஏற்று விதந்தோதி ஏற்கவொண்ணா கருத்துக்களை பொதுதளத்தில் அக்கு வேறு ஆணி வேறாக அலச விழையும் உங்கள் மீது அன்புள்ள உங்கள் வாசகன். முறையான தர்க்கத்தில் பிடிவாதமுள்ள வாசகன்.

    \\ Your birds eye views of Valmiki Ramayana are corrupted to the core and polluted in volume by many over the years with several additions and subtractions, as one can see in various websites. https://www.google.ca/search?client=opera&q=Valmiki+ramayana&sourceid=opera&ie=UTF-8&oe=UTF-8 \\

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் என்னுடைய வ்யாசமான வால்மீகி ராமாயணத்தின் படைப்பாய்வுகளின் மீதான பறவைப்பார்வை என்பது முற்றிலும் என்னுடைய பார்வை அன்று ஐயா. எனக்கு அந்த அளவு இந்த காவ்யத்தை புரிந்துகொள்ளும் மேதமையோ அல்லது பாண்டித்யமோ இல்லை. மாறாக இந்த ஆதிகாவ்யத்தை ஆழ்ந்து வாசித்து அனுபவித்து அதை புரிந்துகொள்ள விழைந்த ஹிந்துஸ்தானிய மற்றும் மேற்கத்திய அறிஞர் பெருமக்களுடைய புரிதல்களை பகிரும் ஒரு ப்ரயாசை. ஒவ்வொரு ஆய்வுக்கூறுகளும் தெளிவாக விவரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் உள்ள அதன் நிறைகுறைகள் தர்க்கபூர்வமாக என் வ்யாசத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

    வால்மீகி ராமாயணம் என்ற காவ்யத்தில் பின்னாட்களில் சேர்க்கை மற்றும் விடுபடல்கள் உண்டு என்பதனை என்னுடைய வ்யாசமும் கூட ஆய்வாளர்களின் கருத்து சார்ந்து பகிர்ந்துள்ளதே. ஆனால் இந்த பிற்சேர்க்கைகள் மற்றும் விடுபடல்கள் யாவை என்பதனை தான் தோன்றித்தனமாக அடையாளம் காணப்படவில்லை. முழுமையான ஆய்வின் மூலம் அடையாளம் காணப்பட்டவை. அவை மூலகாவ்யத்தின் வடிவத்தினையோ கருவையோ முற்றிலுமாகச் சிதைக்கவில்லை என்பது முறையான ஆய்வுகளின் பாற்பட்டு ஆய்வாளர்கள் அடைந்த முடிபு.

    நீங்கள் விதந்தோதும் பைபள் க்ரந்தத்தினை ஒட்டியும் இதுபோன்று ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது நீங்கள் அறியாததா?

    நீங்கள் முறையான ஆய்வின் பாற்பட்டு ஒரு மாற்றுக்கருத்தை முன் வைக்க விழைந்தால் அதை ஆர்வமுடன் வாசிக்க முனைபவர்களில் நான் முதலாவதாக இருப்பேன்.

    ஆனால் நீங்கள் பகிர்ந்துள்ள உரல் வால்மீகி ராமாயணம் என்று கூகுளில் சர்ச் செய்யப்பட்டால் என்ன ஒரு ரிசல்ட் காண்பிக்குமோ அதைக் காண்பிக்கிறது. இதை அடிப்படையாக வைத்து வால்மீகி ராமாயணம் என்ற நூல் உருக்குலைந்து விட்டது என்ற உங்கள் கருத்தை ஒரு பொதுதளத்தில் வைத்தால் நீங்கள் எள்ளி நகையாடப்படுவீர்கள் என்றாவது யோசித்திருக்க வேண்டாமா ஐயா?

    \\ I will write what I think “right” to my point of view. You can write whatever you want. \\

    என்னுடைய உத்தரங்கள் எதிலும் உங்களுடைய எழுத்துரிமையை நான் வினவியது கூட கிடையாதே. ஆனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பொய்ப்பரப்புரையும் ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்களும் போலிப்பகுத்தறிவுப் பரப்புரைகளும் மிகக் கடுமையான விமர்சனத்துடன் மறுதலிக்கப்படும் என்பதனையும் எனது பெருமதிப்பிற்குரிய விக்ஞானி அவர்கள் மறக்கலாகாது.

    \\ But don’t expect or insist for a reply from me to your repeated questions. \\

    நீங்கள் பொது தளத்தில் வைத்த பொய்ப்பரப்புரைகளுக்கு ஜவாப்தாரி உங்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.

    உங்களுடைய கருத்துக்கள் பொய்யானவை அன்று போலியானவை அன்று என்ற தர்க்கங்களை நீங்கள் தான் முன் வைக்க முடியும். வேண்டும். ஆனால் இது வரை ஒரு அரை வரி ஒரு வரி கூட உங்களால் தர்க்கபூர்வமாக ஒரு கருத்தும் முன்வைக்கப்படவில்லை என்பது திண்ணம்.

    உங்கள் படைப்பில் உள்ள பிறழ்வுக்கருத்துக்கள் இனி வர இருக்கும் வ்யாசத் தொடரிலேயே முழுமையான சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தப்படும்.

    உங்களால் பகிரப்பட்ட பிறழ்வுக்கருத்துக்களுக்கு தர்க்கபூர்வமாக பதிலிறுக்காமல் புறமுதுகிட்டோட நீங்கள் விழைந்தால் யார் அதை தடுக்க முடியும் ஐயா. புறமுதுகிடுவது என்பது உங்களுக்குப் புதிதுமில்லையே ஐயா.

    என்றென்றும் அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  76. Mr. Jayabharathan,
    Whenever an author writes anything, and publishes it, it will draw accolades as well as critical comments. If an essay is treated as a thesis, people would provide counter-points and seek clarifications from the author. Since your ‘Seethayanam’ is considered as a good study, it has drawn attention, points and counter-points. I think these points indicate that your essay is studied deeply, and, it should create a sense of pride in you.
    Having said that, it is your privilege to ignore any, and all counter-points, or, respond to them in a scholarly way. Since your book/essay draws comments, I consider you a scholar. Responding even to rude comments in a scholarly way will raise your stature very much. Do not worry whether people agree or disagree with you. Whenever people cite your work and discuss it, it is a mark of respect. Please, let us all behave in a respectable way. Sorry, if my comments hurt your ego. The question raised by you, ‘Who are you? Why should I prove to you what I have written in Seethayana is correct or not according to your birds-eye point of view?’ has made me respond.
    Please treat my comment for what it is. Ignore it, if it is not worth responding.

  77. Mr Arizona,
    Not because JB’s book/essay is ‘considered a good study’; but because it is malicious, hateful, hurtful and false, that so many objections have been raised against it. It seldom gets attention if you write a scholarly book or essay; but if you write a scurrilous and scandalous piece, now a days it may even get you a Booker Prize! That way, you might say that JB is a scholar!! I won’t argue with you.
    It is some kind of a voyeur-like curiosity that attracts people to such scurrilous writings. Therefore, in my view, the honorable way is to ignore JB and his writings. Anything that must find its place in the dustbin, certainly will one day.

  78. \\ Since your ‘Seethayanam’ is considered as a good study, it has drawn attention, points and counter-points. \\

    Sure there were a couple of points good about the “alakkiyam” which were appreciated by me in thinnai web site and would be further shared in my coming series. On the whole, its a bad study. Bad in content. bad in intentions and worst in facts.

    \\ Having said that, it is your privilege to ignore any, and all counter-points, or, respond to them in a scholarly way. \\

    Sure Shriman Jeyabharathan is a reputed and respected scientist. I still have lots and lots of regards to him in this respect.

    Somewhere down the line, I remember he does not know sanskrit. But he had listed a good lot of books beneath his “alakkiyam” which he proudly displayed in this website too. He had the competency to read; analyse and articulate every material on Valmiki Ramayana in Tamizh and English. The fact is he did not. He just depdended on stereotyped factually wrong scribblings over internet written about ramayana.

    See for yourself the link he had given for rebutting the opinions of researchers, A GOOGLE SEARCH TYTLED VALMIKI RAMAYANA. That does not demonstrate Scholarship but just the opposite, INTELLECTUAL BANKRUPTCY.

    \\ I consider you a scholar. \\

    I too consider Sriman Jeyabharathan a great and respected scholar with regard to his articles on science (perhaps I also remember caveats of Sh.Jatayu and Sh.Pandiyan). I personally liked some of his writeups and appreciated them too.

    He has demonstrated through his replies across the board that he does not know A,B,C of Valmiki Ramayana.

    \\ Responding even to rude comments in a scholarly way will raise your stature very much \\

    Scholarly way………to reply about something on VR respected Sh JB does not know even A,B,C is asking too much

    \\ It is some kind of a voyeur-like curiosity that attracts people to such scurrilous writings. Therefore, in my view, the honorable way is to ignore JB and his writings \\

    Nope. If someone has written bad and ugly about esteemed epic Ramayana………….. and you have enough knowledge to rebut the wrongs with strong facts, IMHO that shall be done forthwith. And that shall be done not just for the sake of rebutting Sh. JB but mainly for the sake of putting across the board, the facts in their correct prespective. And above all, in the process, if that takes you to dwell in the nectar of Ramayana, thats a blessing in disguise.

  79. Dear Mr. Arizonan,

    My only objective in writing Seethayanam Drama has been to bring out greatness and weakness of Rama, treating him as a human king rather than a divine one.

    Also I wanted to show that ILanga king, Ravana too was a human being like Rama. Most importantly, the Southerners Hanuman and his warriors who helped Rama to regain Seetha, are not talking monkeys but human beings.

    One cannot show or prove Rama’s merits or mighty skills treating him as a divine being. It is conflict of interest as divine beings are always supposed to be omnipotent, omniscient and omnipresent.

    Rama does not fit into the divine formula of an omniscient or omnipresent being. If he were omnipotent, why should he hide himself to kill the super-powered Vaali, unless he was nothing but a human being. All Rama’s great achievements or faults are nothing but only human deeds.

    Thanks for your comments and compliments.

    With kind regards,
    S. Jayabarathan.

  80. Dear Sri RS. Iyer and Sri Krishnakumar,
    I never read ‘Seethayanam.’ I assumed that it had positive, and negative points. As Sri Krishnakumar had quoted about it in his response, and I found a rude response from Mr. Jayabharatan, I penned a response to him, asking him to be polite in his response. To be polite to him, I wrote that his essay has drawn counterpoints, and it is good study, meaning that people study it good, and respond to it. Please note that ‘good study’ does not necessarily mean ‘good’. I read ‘Keemayanam’, and know what it contains. Though EVR tried to eradicate caste differences, went off-tangent by hurting people’s hearts, going after only one caste, calling it evil. I believe in Iistening to a person, who has negative opinions about me, my language, my caste, my country, and my religion. I also study their point of view. It gives me good grasp of where they come from, and to respond to them in a fitting manner. I have never read any essays of Mr. Jayabharatan. I wanted Mr. Jaybharathan to have a logical interchange of ideas. Since it never hurts to be polite, I called him a scholar, hoping him to respond in a scholarly way.
    Finally, I agree with Krishnakumar. If we do not repond to people who belittle us, we are agreeing to the belittlement. There is a time to ignore, there is a time to respond. The time has come to respond to belittlement, swiftly, and with points.

  81. I agree with Sri Arizonan and Sri Krishna Kumar. We need to answer those points written by JB where the general public may get misled.
    Now, JB has written, “My only objective in writing Seethayanam Drama has been to bring out greatness and weakness of Rama, treating him as a human king rather than a divine one.” This is a travesty of truth as he hides his intentions.
    Look at his remarks on Rama’s killing of Vaali.
    Obviously he has not studied the reasons for the killing of Vaali, which is mentioned by Lakshmana to Vaali when he was about to die. This is found in Valmiki Ramayanam itself. And if one further studies how Vaali admitted that Rama did the right thing, no one can ever say that Rama was an ordinary human being. (Of course, JB might still say so, since he seems to follow EVR in his appraoch). If ever JB were to study Valmiki Ramayanam in original (in Sanskrit) from beginning to end and if he has an iota of fairness, he would not write scandalous books and assert his opinion without proper understanding.

  82. Dear Mr. Jayabharathan,
    First, accept my respects since Mr. Krishnakumar himself has praised you as a scientist. As an engineer, I always respect scientists. Without them, the world would have been a difficult place to live. I wish you a long life and pray Lord Nataraja to shower his blessings so that you can contribute humanity with your continued scientific research.
    I have not read ‘Seethayanam’ written by you. I assumed that you have told the story of Ramayana from the point of view of Seetha, an important character of the great epic Ramayana. We can approach that epic in many different point of views. Like the great Thirukkural, it is translated, and rewritten in many languages. We can comment on any masterpiece from different points of view. People call Thirukkural as Hindu work, Jain work, as well as Christian work. Each one cite certain couplets in Thirukkural to validate their point. Bible is also commented that way. I have seen many different comments, good and bad, about bible. In the same way, I have read many different views of Ramayana, good and bad.
    If we are commenting on Ramayana, about the original written by Saint Valmiki, or other versions, written by great Tamil poet Kambar, or Tulsidas, or Krithivas (Bengali), we can read and write our point of view. No problem at all. You want to take the approach treating all the characters as human beings. No problem. Poet Kambar (I have the complete Kamba Ramayanam with me, and I have read it.) has treated Rama as a a divine being. Ravana is depicted as the direct descendent of creator Brahma and is as a Brahmin, who by his inner nature, had become a rakshasa (having inhuman characteristics, in Tamil, arakkan) , not a demon (though English dictionaries depict rakshasa as ‘demons’ or ‘goblins’. Ravana was a great Siva devotee, and knew all the Vedas. He was counted as one of the few Nava-vyakarana Panditas, meaning, who can interpret anything from nine-different points of view. Some versions of Ramayanas describe that Rama asked his brother Lakshmana to learn Raja Neethi (Politics) from Ravana, when he was at his death bed, in the battlefield. It shows that how Rama respected Ravana. Hanuman is also another Nava-vayakarana Pandita. He is much-more of a scholar than Rama, the human. But he devoted himself to Rama so much, Hanuman is called ‘Parama Bhagavatha’, meaning supreme devotee.
    Some believe Hanuman is an incarnation of Lord Siva Himself. Hence, there are many temples for Hanuman and he is worshipped. If the intent of Valmiki or anyone to describe Hanuman is just a monkey to bring down his capability, Hanuman would not have been described as a Nava-vyakarana Panditha, even a greater scholar as Rama. He will not worshipped by millions of Hindus. The same applies to Ravana also.
    Let us come back to Rama. He is depicted as a human being throughout Ramayana. Though others look at him as divine, he considers himself as a human. He does not have any special divine powers throughout his life as Rama. Even when Ahalya comes to life from that of a stone, he acts surprised, does not believe he has special powers. Though it is common for men to take more than one wife at the time of Ramayana, he was married to only one woman (Seetha) and was true to her throughout his life. After he freed Seetha from Ravana, he asks her to go wherever he pleases. I have read the original Sanskrit version of that passage, since it was my lesson in my school. He addresses Seetha with respect, and uses very polite words (भद्रे meaning, ‘with good character’). In response, Seetha addresses Rama also very politely, using the words, वृत्था चौंड़ीरा (person of exemplary character). . We all human beings are not perfect. And so, as a human being, Rama was not perfect like Gods. In Ramayana, it is described that Vaali cannot be defeated by anyone who comes in front of him. Half of the opponent’s strength comes to Vaali. Hence it is a no-win situation to confront Vaali directly. Hence, after a lot of soul-searching, Rama decides to kill him, hiding from Vaali. This is a great black spot in otherwise a spotless character of Rama. Everyone knows about it. There is no way to say that it is a proud thing for Rama. When Vaali asks Rama at his final throws of life, “Why didn’t you ask me for help? I would have brought Seetha back from Ravana without any difficulty. Ravana was defeated by me easily long back.” Rama’s response may not be satisfactory from the point of view many. It is the way it is. It is the way Valmiki had written.
    We are not here to judge why any character of Ramayana behaved the way it did.
    In commenting any work, we can take a contrarian view, no issues at all. As long as we do it without hurting anyone’s beliefs, it is okay. As a Hindu, I do not accept Jesus as son of God. It does not mean that I do not respect him as a human being. As long as Jesus lived, he preached peace, brotherly love, etc.; he never proselytized, or asked anyone to form a separate religion, or accept him as son of god. But, all the Christians believe he came back alive, and asked his disciples to ‘spread the good word’, which is the foundation stone of Christian faith. Whatever is my belief, I do not want to hurt any Christian’s feelings by denying them their faith in Jesus as the son of God.
    Alison Williams, a student of The University of Tennessee at Chattanooga, Department of English, has written a thesis named, “Jesus and Rama: Interpretations of the Incarnation” for her examination in March 27, 2007. She compares Jesus and Rama in her thesis. It is a very good study. She has done an excellent work without hurting anyone’s feelings. I want to end my response with giving her conclusions verbatim.

    “Just as some comment on the monotheism of Christianity, so others comment
    on the polytheism of Hinduism. We see the Christian perspective looking down on
    the multiple avatars and gods of the Hindu tradition. One could easily ask why
    Hinduism needs so many avatars? Noel Sheth explains this hard question in a unique
    and remarkably simple way.
    There are many and repeated avataras, while Christ comes only once. This is
    in keeping with the respective cyclic and linear worldviews of the two
    traditions. […] In Hinduism there are cycles of evolution and dissolution, and
    so in this worldview it makes sense that avataras come again and again in
    different ages (yugas). In Christianity, however, the world is created only
    once, and it moves in a linear fashion toward a final goal, and so it makes
    sense that the incarnation takes place once and for all (Sheth 106).
    Simply, Christ has one incarnation for its one lifetime while Hinduism has many
    incarnations for its many lifetimes. This so easily strikes down an argument that has
    troubled monotheists about polytheists or polytheists about monotheists. It seems less
    troubling to understand the worldview of another religion than it is to understand the
    religion itself. One could easily understand that some timelines are straight and some
    are circular. Each circle and the line contain an incarnation. For Christians, this is
    Jesus; for Hindus, Rama.
    Essentially, the similarities are impossible to ignore even in the midst of the
    differences. It seems that some of the larger differences can be overcome by
    understanding the cultures the views come from. Arguments could be made at length
    about the remaining differences between Jesus and Rama, but I believe I have
    satisfied the most troubling of the arguments, however. What comes after is
    conversation and healthy debate between scholars, between average human beings,
    and hopefully among believers of Christ and Rama. We seek common ground and we
    find it successfully in the incarnation.”

    Mr. Jayabharathan, let us leave all the arguments about whether Rama is divine or not, and enjoy the poetry and the good messages contained in Ramayana, whichever version we choose to read. If we choose to analyze and comment, let us do it in a very scholarly way, without hurting feelings.
    Finally, I wish to bring to your notice (you may be aware of it already) that Hinduism (Sanathana Dharma) is the only religion which cherishes lively discussion, disagreements, and even atheism. Only in Hindu religion, even atheists can get salvation; only in this religion, gods are white, red, green, black, humans, animals; only in this religion, gods marry goddesses, who are different in color, promoting racial harmony. It does not ask its followers to kill or capture non-believers as slaves. Let us have a healthy discussion amongst ourselves without belittling anyone.

    Hope, to have many healthy exchange of ideas.

  83. Dear Arizonan,

    Kindly read first my Seethayanam Drama, if you wish and have time. I have not offended King Rama or criticized our Great & Oldest Hindu Religion in any way. As I said before, Hinduism is a great ocean and my Seethayam Drama will hardly make a tiny wave in it.

    I am a retired Nuclear Power Engineer who worked over 45 years in the Indian and Canadian Nuclear Power Plants. I have been writing science articles in Tamil since 1960. I have published several science Tamil books also. I have translated Tagore’s Gitanjali and several English dramas.

    I am 80 years old and still I am contributing to the Tamil literature via internet, by God’s grace.

    http://www.thinnai.com/
    https://jayabarathan.wordpress.com/

    Dear Aravidan Neelakandan is my friend.

    With Kind Regards,
    S. Jayabarathan

  84. JB says, “…poor seetha and her devine husband committed suicide…”

    Just to show how Mr JB distorts facts, I am verbatim reproducing the lines written by Sw Vivekanada from the same link given by JB:-
    ” ….She appealed to the gods to testify to her innocence, when the Earth opened and Sita exclaimed, “Here is the test”, and vanished into the bosom of the Earth. The people were taken aback at this tragic end. And Rama was overwhelmed with grief.”
    It is for the readers to judge how truthful JB is in his writings. I wonder how he may present scientific facts to the lay public if he distorts everything he touches. He has not even spared Sw Vivekanada. It is a shame!

  85. /////All of a sudden, the old murmur arose: “The test! The test!” Poor Sita was so terribly overcome by the repeated cruel slight on her reputation that it was more than she could bear. She appealed to the gods to testify to her innocence, when the Earth opened and Sita exclaimed, “Here is the test”, and vanished into the bosom of the Earth. The people were taken aback at this tragic end. And Rama was overwhelmed with grief.

    A few days after Sita’s disappearance, a messenger came to Rama from the gods, who intimated to him that his mission on earth was finished and he was to return to heaven. These tidings brought to him the recognition of his own real Self. He plunged into the waters of Sarayu, the mighty river that laved his capital, and joined Sita in the other world.///////

    These are the lines of Swami Vivekananda. I have shown how human beings Rama and Seetha died in the End. I do not know how divine beings have died.

    The Great Human Mahatma Jesus Christ also also died as a human being, crucified in the cross.

    S. Jayabarathan

  86. \\ I am 80 years old and still I am contributing to the Tamil literature via internet, by God’s grace. \\

    Respected and Dear Shriman Jeyabharathan, my best wishes that you live for hundred more years with good health and write a lot. And another sincere wish is you stop misquotes and get out of the clutches of phoney secularism. Have a balanced world and religious view based on proper reasoning.

    \\ I have not offended King Rama or criticized our Great & Oldest Hindu Religion in any way \\

    Thats incorrect as has already been seen in the debates in this forum. And your own words on Rama from seethayana and on Christian Religion would be presented before the people at large so that the camouflage is torn off. They may know for themselves your unbalanced, communal and biased world vision. Your quotes both from *Seethayana* *alakkiyam* along with your quotes in the other article on *Gandhiji’s death* followed by *counter article* clubbed with your replies would be presented.

    \\ As I said before, Hinduism is a great ocean and my Seethayam Drama will hardly make a tiny wave in it. \\

    But should we be silet spectators to some one intentionally polluting the ocean and not expose the misdeed?

    \\ The Great Human Mahatma Jesus Christ also also died as a human being, crucified in the cross. \\

    thats poor and historically incorrect marketing of Jesus Christ. Rubbish Christian Propoganda in a Hindu Website. Bad in conent. Worse in intention. Worst in facts.

    With all due respects to the belief of christians in their saviour Jesus, one has to understand that History is not written or weighed by beliefs but by facts.

    If my christian brethern say they consider **Jesus** as a son of God, I would respect such a mythical religious belief.

    But not if some one says that there existed a person on this earth called Jesus Christ and he was crucified in the cross and resurrected three days after his death. Loads of historical analysis prove that there never was a person called Jesus Christ who ever lived on this earth. Such a fact portrayed as history is just fabrication of imperial white church to fool the world at large so that they can rule the world by hook or crook.

    With the word **Gospel** the suffix truth is always added. But when it comes to the life and times of Jesus, what one would find in the Gospels are far from truth. And the world at large (my christian brethern included) would find them to be a bundle of lies and contradictions with respect to birth, ministry,death and resurrection of Jesus.

    The subsequent account in Qoran-e-karim with respect to the end of Jesus christ differ from the account of christian bible.

    Both are narratives told to world at large as stories and can not by any yardstick be historical facts.

    Mythical Jesus could be saviour to christians. I respect such a belief of christians on a Jesus who is perceived as son of God, a mythological figure.

    But I would rubbish any marketing of a person by name Jesus Christ to mean that such a person ever lived on earth; crucified and died who subsequently also resurrected.

    And not at all such a marketing of superstitious beliefs from the accounts of a scientist who would try to view Valmiki Ramayana from the spectacles of reasoning.

    Cheers!!!!!!!!!!

  87. Dear Mr JB,
    First you said Rama and Seetha committed suicide. Now you asking how humans have died.
    Sw Vivekananda says Rama was an incarnation of God, which is as follows:-

    “Learning everything about Sita from Hanuman, Rama collected an army, and with it marched towards the southernmost point of India. There Rama’s monkeys built a huge bridge, called Setu-Bandha, connecting India with Ceylon. In very low water even now it is possible to cross from India to Ceylon over the sand-banks there.
    Now Rama was God incarnate, otherwise, how could he have done all these things? He was an Incarnation of God, according to the Hindus. They in India believe him to be the seventh Incarnation of God…..”
    Krishna was an incarnation, but remember, he also died. Nobody denies it.
    Devine beings also have their ends as Lord Krishna says in Bh Gita. Anything that has a form has an end. He says if you aspire to go to heaven, you may try and by doing good deeds you may attain heaven, but you will have to come back to this earth again. This cycle of birth and death can be ended only if you become perfectly desireless, detached from material pleasures and think only of God at all times without break. You will attain wisdom and freedom from this transitory existence. This principle is also clearly asserted by Lord Buddha (who had also said he was Lord Rama in his earlier birth and many Hindus believe that he was indeed a devine incarnation), Christ and all mahatmas all over the world. Bh Gita also says that wherever you find any being very powerful and full of wisdom, you should know that God is manifesting through that being. Therefore, Hindus do not have any problem in accepting that Jesus may also be a devine manifestation of God.

  88. Please read correctly my lines”…..you are asking how devine beings have died….”, (instead of “how humans have died” – mistyped by me)

  89. Dear Mr. R.S. Iyer and Mr. Krishnakumar,

    /////But not if some one says that there existed a person on this earth called Jesus Christ and he was crucified in the cross and resurrected three days after his death. Loads of historical analysis prove that there never was a person called Jesus Christ who ever lived on this earth. Such a fact portrayed as history is just fabrication of imperial white church to fool the world at large so that they can rule the world by hook or crook.

    With the word **Gospel** the suffix truth is always added. But when it comes to the life and times of Jesus, what one would find in the Gospels are far from truth. And the world at large (my christian brethern included) would find them to be a bundle of lies and contradictions with respect to birth, ministry,death and resurrection of Jesus.///

    In the 21 century, one need not believe the resurrection of Jesus, his divine deeds, curing the sick like giving sight to the blind or life [uyir] to a dead man.

    I strongly believe that a poor messenger & Mahatma Jesus was born 2000 years ago, lived like a wise man, giving great sermons to the ignorant and eventually crucified by the heartless and wild Romans.

    Our great Swami Vivekananda believes that Jesus Christ lived and served the people. He says Buddha & Jesus Christ were two greatest human beings ever lived on this Earth, and he had admired them most.

    If Mr. Krishnakumar does not believe in Jesus Christ’s real birth, so be it. Who cares ?

    ///This principle is also clearly asserted by Lord Buddha (who had also said he was Lord Rama in his earlier birth and many Hindus believe that he was indeed a devine incarnation), Christ and all mahatmas all over the world. Bh Gita also says that wherever you find any being very powerful and full of wisdom, you should know that God is manifesting through that being. Therefore, Hindus do not have any problem in accepting that Jesus may also be a divine manifestation of God. /////

    A brilliant statement indeed.

    Thanks for speaking like our great Swami Vivekananda. These are real Words of Wisdom.

    With Kind Regards,
    S. Jayabarathan

  90. கட்டுரைக்கோ அல்லது அதன் அடிப்படைக்கோ எதிரான கருத்துக்களை ஏனோ இந்து தளம் வெளியிடுவதில்லை.

  91. ///This principle is also clearly asserted by Lord Buddha (who had also said he was Lord Rama in his earlier birth and many Hindus believe that he was indeed a devine incarnation),//
    இதற்கு மேலும் எப்படி கதை விடுவதாக எண்ணம் திரு. கிருஷ்ணகுமார் அவர்களே, புத்தரின் தத்துவ அடிப்படையே “உயர்வு தாழ்வு மனிதனின் பிறப்பின் அடிப்படையில் இருக்க கூடாது” என்பதே. இது இப்படி இருக்க பிறப்பின் அடிப்படையிலான வர்ணத்தை காக்க சம்பூகனை கொலை செய்த ராமன் எப்படி புத்தரின் அவதாரமாக முடியும்?

  92. தீபக்,

    நீங்கள் சொல்வது முழு பிதற்றல் ஆக உள்ளது. இராமபிரான் முந்தைய யுகத்தில் வாழ்ந்தவர். மகான் புத்தர் இன்றைக்கு சற்றேறக்குறைய 2677 ஆண்டுகளுக்குள் நமது கலியுகத்தில் பிறந்து வாழ்ந்தவர். காலத்தால் முற்பட்ட இராமபிரானின் அவதாரம் தான் மகான் புத்தர் என்பது உண்மை. சம்பூகனை இராமன் கொலை செய்ததை நேரில் பார்த்தவர் போல நீங்கள் எழுதுவதைப் பார்த்தால், இராமாயணம் உண்மை என்று நம்புபவர் என்று தெரிகிறது. பரிசுத்த ஆவியை பெரியார் திடலில் எழுப்பும் சொம்பு வீரமணி மற்றும் அவரது கைத்தடிகள் குழு, பல கூட்டங்களில் பேசும்போது, வேதங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள் , இதிகாசங்கள் ( இராமாயணமும், மகாபாரதமும்) கற்பனை சரக்கு என்று உளறுவது வழக்கம். அப்படி சொல்லிவிட்டு, இராமாயணத்தை கொளுத்துகிறோம், இராமன் படத்தை செருப்பால் அடிக்கிறோம், இராமன் படத்துக்கு செருப்பு மாலை போடுகிறோம் என்று பெட்டைப் புலம்பல் புலம்புவார்கள். உங்களைப் பொறுத்த மட்டில், அந்தப் பிரச்சினை இல்லை. ஏனென்றால் இராமன் கற்பனை அல்ல என்று சொல்லிவிட்டீர்கள் மேலும் அவர் சம்புகனை கொன்றதை நேரில் பார்த்த தங்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

  93. \\ ///This principle is also clearly asserted by Lord Buddha (who had also said he was Lord Rama in his earlier birth and many Hindus believe that he was indeed a devine incarnation),//

    That was not my opinion, and the time passer Deepak may better take up the issue with the person who shared the opinion.

  94. தீபக் அவர்களே, இராமபிரான் வர்ணத்தைக் காப்பதற்காக சம்பூகனைக் கொன்றார் என்பது தங்களுடைய கற்பனையே. அவனைக்கொன்ற காரணம் அவன் செய்த தவம் தவறான முறையில் தவறான நோக்கத்துடன் செய்யப்பட்டதால் தான் என்பது பௌராணிகரின் கருத்து. மேலும் இராமன் வர்ணத்திற்குள் வராத சபரியையும், மீனவர் தலைவனான குஹனையும் மிகவும் ஆதரித்தான் என்பது உங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம் இராமாயணத்தை கொஞ்சம் படித்திருந்தால்!!
    மேலும், புத்தர் பிரான் வர்ணத்தை எதிர்கவில்லை என்பது கொஞ்சம் அவருடைய வரலாற்றைப் பற்றித் தெரிந்தவர்கள் அறிவார்கள். கீழ்க் கண்ட லிங்க்-ஐப் பார்க்கவும்:
    https://koenraadelst.blogspot.in/2013/08/when-did-buddha-break-away-from-hinduism.html
    சில வரிகளை மட்டும் இங்கே நான் கொடுக்கிறேன்:
    “….He (the Buddhar) predicted the coming of a future Awakened leader like himself, the Maitreya (“the one practising friendship/charity”), and specified that he would be born in a Brahmin family. When king Prasenadi discovered that his wife was not a Shakya princess but the daughter of the Shakya ruler by a maid-servant, he repudiated her and their son; but his friend the Buddha made him take them back.
    Did he achieve this by saying that birth is unimportant, that “caste is bad” or that “caste doesn’t matter”, as the Ambedkarites claim? No, he reminded the king of the old view (then apparently in the process of being replaced with a stricter view) that caste was passed on exclusively in the paternal line. Among hybrids of horses and donkeys, the progeny of a horse stallion and a donkey mare whinnies, like its father, while the progeny of a donkey stallion and a horse mare brays, also like its father. So, in the oldest Upanishad, Satyakama Jabala is accepted by his Brahmins-only teacher because his father is deduced to be a Brahmin, regardless of his mother being a maid-servant. And similarly, king Prasenadi should accept his son as a Kshatriya, eventhough his mother was not a full-blooded Shakya Kshatriya…”

  95. தமிழில் வால்மீகி ராமாயணத்தை என் குரலில் பதிவு செய்து இந்த இணைய தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளேன் https://valmikiramayanam.in/

    கணபதி சுப்ரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *