பாஜகவும் இப்தார் விருந்தும்

பல இந்துத்துவ நண்பர்கள் (பாஜக ஆதரவாளர்கள் உள்பட) திரு.பொன்னார் அவர்களும், தமிழிசை அவர்களும் இப்தார் நோன்பு திறப்புக்கு சென்றுவந்ததை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது இணையத்திலும் வெளியிலும் கடுமையாக நடந்து வருகிறது. இதற்கு காரணம் நம் அறியாமைதான். islam_bjp2அதாவது நம்முடைய சங்க நிலைபாட்டையும், பாஜகவினுடைய சித்தாந்தத்தையும் சரியாக புரிந்துகொள்ளத தன் விளைவுதான் இது. உண்மையிலேயே இந்துத்துவர்களாகிய நாம் சிறுபான்மை சமூகம் கல்வியில் பொருளாதாரத்தில் சமுதாய சீர்திருத்தங்களில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள்.  இன்னும் சொன்னால் நாம் மட்டும்தான் அந்த எண்ணம் உடையவர்கள் என்று கூட சொல்லலாம். அவர்களின் உணர்வுகளை மதிப்பவர்கள். அவர்களின் வழிபாட்டு முறைகளுக்கு மதிப்பு கொடுப்பவர்கள் நாம்தான். அவர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்று மனதார விரும்புபவர்கள் நாம்.

  • பாஜகவில் சிறுபான்மையினர் அணி ஒன்று இருக்கிறது. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
  • பாஜகவில் உள்ள சிறுபான்மையினர் அணியில் உள்ளவர்கள் கவுன்சிலர் பதவிக்கோ, ஊராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கோ, ஏன் எம்எல்ஏ பதவிகளுக்கோ போட்டியிடும்போதும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
  • பாஜகவில் சிறுபான்மையினர் உறுப்பினர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
  • பாராளுமன்ற மேலவையில் பாஜகவுக்கு தலைவராக சிக்கந்தர் பக்த் எனும் இஸ்லாமியர் திறம்பட செயல்பட்டார் அப்போது எவரும் எதிர்க்கவில்லை.
  • பாஜக அரசில் முக்கியமான இலாகாக்களில் ஒன்றான தொழிற்சாலைகளுக்கான பொறுப்பில் அவர் மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது எவரும் எதிர்க்கவில்லை.
  • மதிப்பிற்குரிய டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசு தலைவர் ஆவதற்குரிய சூழலை உருவாக்கினோம் ஆதரவு தெரிவித்தோம். அப்போது யாரும் எதிர்க்கவில்லை.
  • கடந்த குடியரசு தேர்தலில் கிறிஸ்தவரும் வடகிழக்கு பிரதேச வனவாசி சமுதாயத்தவருமான சங்க்மா குடியரசு தலைவராக வேண்டுமென கடுமையாக உழைத்தோம். அதற்கும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
  • குஜராத்தில் சில நகராட்சிகளில் பாஜக சார்பில் சிறுபான்மையினர் அதிக அளவில் வேட்பாளராக நிற்க வைத்து வெற்றி பெற செய்திருக்கிறோம். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
  • சிறுபான்மையினர் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்கள் போட்டு செயல்படுத்தப்படுகிறது குஜராத்தில். அதை யாரும் எதிர்க்கவில்லை.
  • சிறுபான்மையினர் அணி சார்பில் மாநாடு போட்டு பாஜகவுக்கு வலிமை சேர்க்கிறபோது அதை யாரும் எதிர்க்கவில்லை.
  • பாஜகவில் தேசிய அளவில் சிறுபான்மை சமூகத்தினருக்கு மிக முக்கியமான பதவிகளை கொடுத்து வைத்திருக்கிறபோது அதை நாம் எதிர்க்க வில்லை.
  • தன் சிறுபான்மை சமூக மக்கள் பலபேர் எதிர்த்தும் கூட தமிழகத்தில் மோடியுன் மேடை ஏறியும், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து பாஜகவிற்கு துணைநின்ற சிறுபான்மை சமூகத்தினரை அப்போது எதிர்க்கவில்லை.

இதையெல்லாம் நாம் ஆக்கப்பூர்வமான செயல்முறை என்றே கருதிய காரணத்தால் நாம் எதிர்க்கவில்லை. அதாவது நமது சித்தாந்தம் இதுதான். இங்குள்ள பண்பாடு, கலாச்சாரம், தேசியத்தை ஏற்கின்றவர்களை நாம் சகோதரர்களாக ஏற்க வேண்டும். நாம் அவர்களை அரவணைக்க வேண்டும். மகாகவி பாரதி ஒரு கட்டுரையில் சொல்வார், ஆரிய சம்பத்து என்று. அதை படித்து பாருங்கள்.

நமது வேதம், bharathi-fullநமது சாஸ்திரம், நமது பாஷைகள், நமது சிற்பம், நமது சங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய சம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தியில் துளசிதாசர் செய்திருக்கும் இராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய சம்பத்து. தஞ்சைப் பெரியகோயில், திருமலைநாயக்கர் மஹால், தியாகய்யர் கீர்த்தனைகள், எல்லோராவின் குகைக் கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் இவை அனைத்துக்கும் பெயர் ஆரிய சம்பத்து.

அதுதான் நம்முடைய சித்தாந்தம். இந்துத்துவ சித்தாந்தம். ஆனால் பாஜக கட்சியில் உள்ள சிறுபான்மையினர் இப்தார் நோன்புக்கு அழைக்கும்போது அங்கு சென்றால் நாம் எதிர்க்கிறோம். islam1விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகருக்கு மரியாதை செய்து வழியனுப்ப சிறுபான்மையினர் வந்தால் நாம் புளகாங்கிதம் அடைகிறோம். இஸ்லாமிய சகோதரிகள் ராமருக்கு ஆரத்தி எடுத்தால் மெச்சுகிறோம்.  கிருஷ்ணாஷ்டமியில் நம் இஸ்லாமிய சகோதரிகள் அவர்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வடிவ அலங்காரம் செய்து அழைத்து வரும் போது அதை பாராட்டுகிறோம்.  அதையேநம் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு செய்தால் எதிர்க்கிறோம். நாம் என்ன வகாபிகளா? ஏன் இந்த இரட்டை டம்ளர் முறை? இந்த நாட்டை, இங்குள்ள பண்பாட்டை, கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி நாம் கடுமையாக எதிர்க்கிறோம். islam2அதே வேளையில் ஏற்றுக்கொள்பவர்களை ஆதரிக்க வேண்டும். அரவணைக்க வேண்டும். அவர்கள் நம்மவர்கள். நம் சொந்தங்கள். நம் தொப்புள்கொடி உறவுகள். முகமது கரிம் சாக்ளா சொன்னார், “நாங்கள் மார்க்கத்தால் மட்டுமே இஸ்லாமியர்கள். எங்கள் பண்பாடு எங்கள் ரத்தம் ஹிந்து”. அதே சாக்ளா மனம் வெதும்பி சொன்னார், “எங்களை போன்ற தேசிய முஸ்லீம்களை கைவிட்டு விட்டு காங்கிரஸ்காரர்கள் அடிப்படைவாத பிரிவினைவாத மூஸ்லீம்களை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள்.” நம் தேசபற்று கொண்ட இஸ்லாமிய சகோதர சகோதரிகளை இந்துத்துவ இயக்கங்கள் எக்காலத்திலும் எக்காரணத்துக்காகவும் கைவிடக் கூடாது. அவர்கள் நம் குடும்ப உறுப்பினர்கள்.  இதனை நன்கு உணர்ந்திருந்த காரணத்தால்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவராக இருந்த பரம் பூஜனீய சுதர்ஷன்ஜி  அவர்கள் வழிகாட்டுதலில் முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  இன்று பத்து லட்சம் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தேசபக்தியுடன் சமூக நல்லிணக்கத்துக்காகவும் இஸ்லாமிய சமுதாயத்தின் கல்வி-சமூக பொருளாதார மேம்பாட்டுக்காகவும் இந்த அமைப்பின் மூலம் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இஃப்தார் விருந்துக்கு அழைத்தால் மாட்டேன் என்று சொல்பவர் தேசபக்தியுள்ள இந்தியனாக இருக்க முடியாது.

இறைவனைத் தவிர யாரையும் கையெடுத்து கும்பிடக்கூடாது என்பது இஸ்லாமிய நெறியாகவே வகாபியத்தால் முன்வைக்கப்படுகிறது. வணக்கம் செய்வது வழிபாடு அல்ல என்கிற உண்மையை மறைத்து இந்திய பண்பாட்டு பழக்க வழக்கங்களை கொல்வதே இப்படிப்பட்ட செயல்பாடுகளின் நோக்கம். எனவே  சென்ற நாடாளுமன்ற islam_bjp1தேர்தலில்கூட அடிப்படைவாத இஸ்லாமிய வேட்பாளர்கள் கையெடுத்து கும்பிட்டு மக்களிடம் வாக்குகள் கேட்கவில்லை என்ற விமர்சனம் வந்த து. ஆனால் இங்குள்ள படத்தை பாருங்கள். இஸ்லாமியர்கள் கையெடுத்து கும்பிட்டு வரவேற்கிறார்கள். அதாவது அடிப்படைவாத கருத்தாக்கத்தை மறுதலித்து பாரத பண்பாட்டை ஏற்கிறார்கள்.

இந்த அடிப்படையில்தான் திருபொன்னார் அவர்களும் திருமதி தமிழசை அவர்களும் சென்றிருக்கிறார்கள்.  இஃப்தார் நோன்பு செல்பவர்கள் பிள்ளையார் கோவிலுக்கு வருவதில்லை என்பதுதானே போலி மதச்சார்பின்மையாளர்கள் குறித்த நம் குற்றச்சாட்டு. ஆனால் பாஜக தலைவர்கள் இந்து திருவிழாக்களுக்கு வருகிறார்கள். அதில் ஆத்மார்த்தமாக கலந்து கொள்கிறார்கள். அதை போலவே இஸ்லாமிய திருவிழா ஒன்றில் பங்கேற்பதில் என்ன தவறு? தவறு இந்த சமரச நல்லிணக்கம் ஒற்றைவழி பாதையாக வாக்குவங்கி அரசியல்வாதிகள் போலி மதச்சார்பின்மைகாரர்கள் ஆக்கிவிட்டதில்தான் இருக்கிறது. அந்த வக்கிரத்தை மட்டும்தான் நாம் எதிர்க்கிறோம். ஆகவே இதில் நாம் நம் சித்தாந்தத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய கோபத்தையும் ஆவேசத்தையும் எதில் காட்ட வேண்டுமோ அதில் காட்டுங்கள். நமக்குத் தேவை சரியான சித்தாந்த வழிகாட்டல்.

[கட்டுரையாசிரியர் ம.வெங்கடேசன் பாஜக மாநில எஸ்.ஸி அணியின் செயற்குழு உறுப்பினர். வரலாற்றாராய்ச்சியாளர். இவரது நூல்கள் ‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதி கட்சி?’ ‘புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?’ ஆகியவை சிறந்த ஆராய்ச்சி நூல்கள். இவர் தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழு உறுப்பினர்.]

68 Replies to “பாஜகவும் இப்தார் விருந்தும்”

  1. An Excellent article. Congratulations to the author. I wholly agree with the views of the author. Jai Hind! Jai Sri Ram!

  2. மதிப்பிற்குரிய வெங்கடேசன் அவர்களின் கண்ணோட்டம் மெச்சத்தக்கது. வாழ்த்துக்கள்.

  3. அற்புதமான கருத்து! சரியான நேரத்தில் சொல்லியுள்ளா வெங்கடேசன்.

    தமிழ் ஹிந்துவுக்கு நன்றி!

    -சேக்கிழான்

  4. தமிழகத்தில் புதிய கட்சி உதயம் – பாரதீய திராவிட ஜனதா கழகம் “பா தி ஜ க”

  5. இந்த கட்டுரை விசயம் நிராகரிக்கவேண்டிய ஒன்று. இப்தார் நோன்புல் எதற்க்கு அடுத்த மதம் சார்ந்தவர்கள் போக வேண்டும். அவர்கள் வழக்கம் அவர்களுக்கு. இதில் ஒரு மலிவு விளம்பரம் தவிர ஒன்றும் இல்லை. கடந்த இருண்டு வருடங்களில் துடிக்க துடிக்க நம் ஹிந்துகளை வெட்டி கொன்றார்கள் அந்த மதம் சார்ந்த தீவிரவாதிகள். அதை அவர்களும் , சென்றவர்களும் பேசி இருக்கலாமே அங்கு. ?

    திரு வெ சா கணித்த மாதிரி மோடி அரசாங்கம் ஜெயலலிதா போல வெகு விரவில் மாறிவிடும் என்ருதான் தோன்றுகின்றது , இவர்கள் விசயத்தில்

  6. “”உண்மையிலேயே இந்துத்துவர்களாகிய நாம் சிறுபான்மை சமூகம் கல்வியில் பொருளாதாரத்தில் சமுதாய சீர்திருத்தங்களில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள். இன்னும் சொன்னால் நாம் மட்டும்தான் அந்த எண்ணம் உடையவர்கள் என்று கூட சொல்லலாம். அவர்களின் உணர்வுகளை மதிப்பவர்கள். அவர்களின் வழிபாட்டு முறைகளுக்கு மதிப்பு கொடுப்பவர்கள் நாம்தான். அவர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்று மனதார விரும்புபவர்கள் நாம்.””. அருமை வெங்கடேசன் சார். இதை சிறுபான்மை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பு.

  7. நமக்கு என்ன ஆதங்கம் என்றால், இந்துக்களுக்காக பரிந்து பேசியவர்கள் என்பதால் தானே சுரேஷ் குமாரை, வெள்ளையப்பனை, ரமேஷை, ஐயா. பெ. ராஜ கோபாலனை, முனிய சாமியை, சின்னாளம்பட்டி நாகராஜை, கோவை கணேஷை ஆர் எஸ். எஸ் காரியாலயத்தில் 11 பேரை, இந்து முன்னணி அலுவலகத்தில் பைபிள் சண்முகத்தை திட்டமிட்டு துடி துடிக்க கொன்ற மத பயங்கரவாதிகளை நல்ல முஸ்லீம்கள் என்று ஆசிரியரால் சொல்லப்படும் யாரும் கண்டிக்ககூட இல்லையே? அந்த தியாக தீபங்களின் கல்லறை கூட காயும் முன்பு நமது பிரமுகர்களுக்கு இந்த கஞ்சி குடி கூத்து தேவையா? என்ற எண்ணம் வருவது தப்பா? தயவு செய்து இந்த கூத்துகளுக்கு நியாயம் கற்பிக்காதீர்கள். பல நூற்றாண்டுகளாக யார் யாரோ இந்த நல்லினக்கத்திற்க்கான முயற்சியை எடுக்கத்தான் செய்தனர், ஆனால் பலன் என்ன? தயவு செய்து விதி விலக்குகளை உதாரணமாக நிலைநாட்ட விளையாதீர்கள்.

  8. சரியான கருத்து. திரு வெங்கடேசனுக்கு என் வாழ்த்துக்கள்.

  9. முதலில் வெங்கடேசன் தன் பெயரின் முதல் எழுத்தை வே என மாற்றிக்கொள்ளவேண்டும் வெங்கடேசன் என்றால் (வெங்கடம் பாலைவனம் என பொருள் அதாவது பாலைவனத்துக்குத்தலைவன் என்றாகும்) வேங்கடேசன் என்றால் வேங்கட மலைக்குத்தலைவன் எனப்பொருள் .

    வேங்கடேசனின் கருத்துக்கள் கேட்பதற்க்கு நன்றாக இருக்கிறது ஆனால் சென்ற வருடம் வரை ஏன் இதைபோன்ற நோம்பு விருந்திற்க்கு நமது தங்க கம்பிகள் செல்லவில்லை ஆட்சி பதவி வந்தால் சமரச வாதம் வந்துவிடுகிறது . ஆம் பாரதிய திராவிட ஜனதா கட்சிதான்

  10. அன்பார்ந்த ஸ்ரீ வெங்கடேசன்

    \\\ “நாங்கள் மார்க்கத்தால் மட்டுமே இஸ்லாமியர்கள். எங்கள் பண்பாடு எங்கள் ரத்தம் ஹிந்து”. அதே சாக்ளா மனம் வெதும்பி சொன்னார், “எங்களை போன்ற தேசிய முஸ்லீம்களை கைவிட்டு விட்டு காங்கிரஸ்காரர்கள் அடிப்படைவாத பிரிவினைவாத மூஸ்லீம்களை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள்.” நம் தேசபற்று கொண்ட இஸ்லாமிய சகோதர சகோதரிகளை இந்துத்துவ இயக்கங்கள் எக்காலத்திலும் எக்காரணத்துக்காகவும் கைவிடக் கூடாது. \\\\

    அருமையான கருத்துக்கள். சங்கத்தின் கலாசார தேசிய வாதத்தை அழகாகப் பகிர்ந்து இருக்கிறீர்கள்.

    \\\\ கடந்த இருண்டு வருடங்களில் துடிக்க துடிக்க நம் ஹிந்துகளை வெட்டி கொன்றார்கள் அந்த மதம் சார்ந்த தீவிரவாதிகள். அதை அவர்களும் , சென்றவர்களும் பேசி இருக்கலாமே அங்கு. ? \\\

    அன்பின் ஸ்ரீ பாண்டியன்

    ஹிந்துக்களொடு கரம் கோர்த்து தேச வளர்ச்சியில் பங்கெடுக்க விழையும் இஸ்லாமிய சஹோதரர்களுடைய ஈத் கொண்டாட்ட மகிழ்ச்சியில் நாம் பங்கேற்பதில் என்ன தவறு?

    ஜிஹாதி பயங்கரவாதம் என்பது ஹிந்து சஹோதரர்களின் நலனில் அக்கறையுள்ள முஸ்லீம் சஹோதரர்களுடன் கண்டிப்பாக விவாதம் செய்யப்பட வேண்டிய விஷயம் என்பதில் யாருக்கும் எந்த சம்சயமும் இல்லை.

    ஆனால் இந்த விஷயம் இஃப்தாரின் போது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமில்லை.

    முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற அமைப்பின் நோக்கமே கலாசார தேசியத்தை வலுப்படுத்தலும் ……. தேச ஒருமைப்பாட்டில் அக்கறையுள்ள முஸல்மாணியரை ஒன்றிணைப்பது தானே. இந்த அமைப்பைச் சார்ந்த இஸ்லாமிய சஹோதரர்கள் பசு பாதுகாப்புக்கான இயக்கத்திலும் பெரும் பங்கு எடுத்திருக்கிறார்கள். இது போற்றப்பட வேண்டிய செயல்பாடு தானே.

  11. திரு பொன்னார் சென்றதற்காக எழுதினீர்களா இல்லையோ – கட்டுரை நன்றாக இருந்தது. இந்த எண்ணங்கள் அவர்களை சென்று அடைய வேண்டும். அடைந்தால் நல்லது.

  12. உயர்திரு வெங்கடேசன் அவர்களே,

    மிகவும் அருமையான கட்டுரை. இம்மாதிரியான வெளியீடுகள், அனைத்து சமயத்தினருக்கும் இடையே நட்புப்பாலமாக விளங்குகின்றன.

    இதை வெளியிட்டு, தாங்கள் மாற்றுச் சமய எதிரிகள் அல்லர் என்பதை நிரூபிக்கும் தமிழ் இந்து வலைய ஆசிரியர் குழாமை முழுமனதுடன் பாராட்டுகிறேன்.

    வணக்கம்.
    தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. நமச்சிவாய!

  13. இந்துத்துவவாதிகள் நோன்பு கஞ்சி குடிப்பதிலோ, முஸ்லீமாகவே மாறுவதிலோ எங்களுக்கு எந்த ஆக்ஷேபனையும் இல்லை. ஆனால் நாங்கள் கூற விளைவதெல்லாம் எங்களை முஸ்லீம்கள் பயங்கரவாதிகள், அவர்களும் இந்துக்களும் சேர்ந்து வாழவே முடியாது. நாம் தாடியை மழிப்போம், அவன் மீசையை மழிப்பான். நாம் மேலிருந்து கீழாக முகம் கழுவுவோம், அவன் கீழிருந்து மேலாக முகம் கழுவுவான், முஸ்லீம்கள் கடைகளைப் புறக்கணியுங்கள். லவ் ஜிகாத். இராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து ரத்து, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை கூடாது, காந்தி முஸ்லீம்களை நம்பி ஏமாந்தவர்… இப்படியெல்லாம் சொல்லி எங்களை உசுப்பேத்தி விட்டு விட்டு இத்தனை ஆண்டுகள் கஞ்சி குடிக்கப் போகாதவர்கள் இப்போது போவதேன் என்பதே கேள்வி. இத்தனை நாள் கஞ்சி குடித்திருந்தால், காந்தியைப் போல் எப்போதும் ஒரே பேச்சாயிருந்திருந்தால் ஏன் இவர்களைக் கேள்வி கேட்கப் போகிறோம். மோடி குல்லா போட்டாரா. கஞ்சி குடித்தாரா. இல்லையே. ஏன். அவரை எந்த நல்ல முஸ்லீமும் அழைக்க வில்லையா. ஸந்தர்ப்பவாதத்தைத் தான் கண்டிக்கிறோமே தவிர கஞ்சி குடித்ததை அன்று.

  14. கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் இஃப்தார் நோன்புக்கு சென்றால் வாக்குவங்கி அரசியல்வாதிகள் போலி மதச்சார்பின்மைகாரர்கள் என்ற தீர்ப்பு.

    பொன்னார், தமிழசை போன்றவர்கள் இஃப்தார் நோன்புக்கு சென்றால் பங்கேற்பதில் என்ன தவறு? என்ற கேள்வி. நல்ல வாதம்.

  15. I am sorry. I do not agree with the author. Until and unless Islam changes, Hindus and Muslims cannot coexist. Islam is bent on destroying us Kaffirs. Will these nice Muslims declare us Hindus first as non Kaffirs OPENLY? Why should this path of reconciliation be one sided, as always for yonks? Where is the reciprocity ? For Muslims to change, they have to discard all the violent parts against Kaffirs. Until they do so openly, there cannot be peace.
    Here is an example
    blob:https%3A//www.youtube.com/6ab6b9da-0b70-484b-9ccf-ae470bee3c96

  16. Greetings and Namesthe Mr. Krishna Kumar

    You have not mentioned why non-of the muslim organisation raise any voice against the violence to the Human life taken by their Ji-hadis . When there so much out pour of crying for Danish Cartoon all over the world. Non of Muslim organisation saying anything about when people killed by them especially Indian muslims.

    So much happened in Kashimir — I have not seen any leader coming up and saying anything about that even when our beloved Soldiers killed

  17. இப்தார் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஆனால் அரசியல் தலைவர்கள் நம்பிக்கை அடிப்படையில் கலந்து கொள்கிறார்களா? இல்லை அனைவரும் கலந்து கொள்கிறார்கள் என்பதற்காக கலந்து கொள்கிறார்களா? மதசார்பு என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்ற பயத்தில் கலந்து கொள்கிறார்களா? ஓட்டு அரசியலுக்காகத்தானே கலந்து கொள்கிறார்கள். ஆக மொத்தத்தில் அல்லாவை கும்பிடுவதால் விருந்து வைக்கிறார்கள். அதே போல் சிவனை கும்பிடுபவர்களுக்கு, விநாயகரை கும்பிடுபவர்க்கு,………. என்று ஏன் விருந்து வைக்க வில்லை? தவறு எவர் செய்தாலும் தவறு தான்.

    ஆமா இப்தார் விருந்துக்கு செல்பவர்கள் அன்று முழுதும் நோன்பு இருந்தா செல்கிறார்கள்?

  18. இப்தாரில் கலந்து கொள்வதும் சம்பிரதாயம், ஆட்சியையும் சம்பிரதாயமாக செய்யாமல் இருந்தால் சரி. இன்னும் செய்ய வேண்டியதில் ஒன்றை கூட செய்ய வில்லை, நீங்கள் இப்தாரில் கலந்து கொள்வதால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று விடலாம் என்று நினைக்கிறீர்களா? வேண்டுமானால் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு இது குளுமையாக இருக்கலாம், ஆனால் சாதாரண இஸ்லாமியன் வளர்ச்சியை மட்டும்தான் பார்ப்பான். அவனுக்கு இந்த கஞ்சி நக்கும் நாடகம் மேல் நம்பிக்கை இல்லை.

  19. பா.ஜ.க. அரசியல் கட்சிதான். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்துக்கள் நலனை அரசியல் ரீதியாக எடுத்து செல்ல ஆரம்பிக்கப்பட்ட கட்சி. மாறாக இப்தார் கஞ்சி குடிக்க ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல. இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று எண்ணுகிறேன்.

  20. ஏன் பா.ஜ.க.ஆரம்ப காலம் முதல் கஞ்சி குடிக்க வில்லை?

  21. ஓட்டுப்பொறுக்கிகள் பெருகி வருகிறார்கள் என்பது தெரிகிறது. இளந்தாமரை உள்ளிட்ட கட்சி வளர்ப்பு பணிகளுக்கு இந்துக்கள் வேண்டும், கஞ்சி குடிக்கும் போது மட்டும் மறக்காமல் நாங்கள் அனைவருக்குமான கட்சி என்று மார் தட்டி சொல்வோம்.அப்படித்தானே!

  22. மிக சிறப்பான மற்றும் தெளிவான கட்டுரை. ஒரு சில இடங்களில் மாறுபடுகிறேன்.

    //அதாவது நமது சித்தாந்தம் இதுதான். இங்குள்ள பண்பாடு, கலாச்சாரம், தேசியத்தை ஏற்கின்றவர்களை நாம் சகோதரர்களாக ஏற்க வேண்டும்.
    இந்த நாட்டை, இங்குள்ள பண்பாட்டை, கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அதே வேளையில் ஏற்றுக்கொள்பவர்களை ஆதரிக்க வேண்டும். அரவணைக்க வேண்டும்//

    பண்பாடு, கலாச்சாரம், தேசியத்தை ”ஏற்க வேண்டும்” என்பதைவிட, பரஸ்பர புரிதல் மற்றும் பரஸ்பர மதிப்பு இருந்தாலே போதுமானது. இது இந்துத்வ வட்டத்தை மேலும் விரிவடையச் செய்யும். ராமருக்கு ஆரத்தியோ, கிருஷ்ண அலங்காரமோ தனி நபர் விருப்பம்.

  23. நீங்கள் எத்தனை மேடைகளில் கஞ்சி குடித்தாலும் பா.ஜ.க. வை இஸ்லாமிய கிறிஸ்துவர்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. இந்துக்கள் ஒன்றுபட்டு, ஆட்சி வளர்ச்சியை காட்டினால் தானாக அவர்கள் கட்சியி நோக்கி வருவார்கள். மாறாக இந்த கஞ்சி நாடகத்தால் வரப் போவதில்லை. பா.ஜ.க. செய்யும் கஞ்சி நாடகத்தை விட மற்ற கட்சிகள் நன்றாகவே கஞ்சி நாடகம் செய்ய தெரியும்.

  24. ரமேஷ் மரணத்தை முன்னிட்டு போன தரம் இந்து துரோகி ஜெ. நாடகத்திற்காகவது கஞ்சியை தவிர்த்தார். ஆனால், சுரேஷ் படுகொலைக்காக பா.ஜ.க.கஞ்சியை விட தயாரில்லை.

  25. கசாப்பு பண்டிகை ரம்ஜானுக்கு வாழ்த்து சொன்ன இந்துக்களே!

    நீங்களும் கசாப்பு கடைக்காரரா?

    பொங்கலுக்கு வாழ்த்து சொல்லாத நடிகர் நாசர் சொல்லும் காரணத்தை கேளுங்கள்………… அவர் சொல்லாததற்கு உண்மையான காரணங்கள் அவை இல்லை. ஆனாலும் நீங்கள் அவர் பொய்யாக சொல்லும் காரணங்களை கேட்டு பாருங்கள். அப்போது அதில் உள்ள உண்மை உங்களுக்கு புரியவரும்.

    உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்; அவரது சமுதாய மக்கள் பாண்டிசேரியில் வெள்ளத்தால் அழிந்ததால் பொங்கலுக்கு வாழ்த்து சொல்ல வில்லையாம்………….

    உனது இனம் இஸ்லாமியரால் நேரடியாக பாதிக்கப்பட்டும் எப்படி உன்னால் ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்ல முடிகிறது?

    Nasser Refuses To Wish On pongal

    https://www.youtube.com/watch?v=W1Rp9nUB4zM

  26. நேற்று சில பகுதிகளில் ரம்ஜான் கொண்டாடியுள்ளார்கள்; இன்று சில பகுதிகளில் கொண்டாடியுள்ளார்கள்………….

    நீங்கள் தெரிவித்த வாழ்த்துக்கள் நேற்று கொண்டாடிய இஸ்லாமியர்களுக்காகவா? இல்லை இன்று கொண்டாடிய இஸ்லாமியர்களுக்காகவா?

    முதலில் ஷியா மற்றும் சுன்னி இஸ்லாமியர்கள் தங்களுள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்களா? இல்லை முறைத்துக் கொண்டார்களா? அதாவது தெரியுமா?

    வாழ்த்து என்பது சம்பிரதாயத்துக்காகவா? அல்லது மகிழ்ச்சி கொண்டு கூறுவதா?

    ரம்ஜான் வாழ்த்து கூற அந்த பண்டிகையை கண்டு நீங்கள் மகிழ்ந்து விட்டீர்களா?

    மகிழ்ந்தீர்கள் என்றால்……………. அது பசுவை வெட்டிக் கொன்றதாலா? இல்லை அவர்கள் பிரிவுக்குள்ளேயே அடித்து செத்துக் கொள்வதாலா?

    சம்பந்தமே இல்லாமல் வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்……….

    அவர்களுக்கு ஒரு துன்பம் உள்ளதென்றால் அவர்கள் அழைக்காமலே போய் உதவுங்கள்……….. ஆனால் அவன் முன்னால் நடிப்புக்காக வாழ்த்து சொல்லி உலகில் போலித்தனத்தை வளர்த்து விடாதீர்கள்……………

  27. ரம்ஜானுக்கு வாழ்த்து சொன்னால் தான் சமய சமரசவாதியா?

    இந்த ஆட்சியாளர்கள் எந்த பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லவே கூடாது. அது மோதியாக இருந்தாலும் கூட……அரசியல் வேறு; ஆன்மிகம் வேறு.

    மதங்களை எண்ணி விட்டாலும் உலகில் உள்ள ஒவ்வொருவருக்குமே தனித்தனி மதம் உண்டு. இல்லாவிட்டால் புத்த மதம் இன்னொரு புத்தனை உருவாக்கியிருக்கும்; கிறிஸ்துவம் இன்னொரு இயேசுவை உருவாக்கியிருக்கும்; ஆனால் அப்படி நடக்க வில்லை.

    எந்த இரு இந்துவை எடுத்துக் கொண்டாலும் சரி, எந்த இரு கிறிஸ்துவனை எடுத்துக் கொண்டாலும் சரி, எந்த இரு இஸ்லாமியரை எடுத்துக் கொண்டாலும் சரி, அவர்கள் இருவருக்கிடையிலேயே ஒத்த மத சிந்தைகள் இல்லை; அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் இன்னொரு மதக்காரனுக்கு வாழ்த்து சொல்கிறீர்கள்? வாழ்த்து சொல்வது நடிப்பு தானே!

    மனதிற்குள் மாரியாத்தாளை நினைத்து பயந்து கொண்டே வாழ்த்து சொன்னது எத்தனை பேரோ?

    இஸ்லாமிய ரத்தக்கறை படிந்த ஆயுதத்தை கண்டும் கூட வாழ்த்து சொல்லிக் கொள்கிறீர்களே………… அந்த ரம்ஜான் பண்டிகைக்காகவா வாழ்த்து சொல்லிக் கொண்டீர்கள்?

    இன்று வாழ்த்திய உங்கள் வாய்கள் நாளை அவர்களை பழிக்காமல் இருக்குமா? இல்லை நீங்கள் வாழ்த்தி விட்டீர்கள் என்பதற்காக நாளை இஸ்லாமிய பயங்கரவாதிகள் உங்களை விட்டு விடப் போகிறார்களா?

  28. இந்துக்களே!

    நீங்கள் உலகில் உள்ள அனைவரின் பிறந்த நாட்களுக்கும் வாழ்த்து சொல்கிறீர்களா? ஏனெனில் அவர்களும் அதனை கொண்டாடுகிறார்கள் தானே……….

    சரி, குறைந்த பட்சம் உங்களுக்கு தெரிந்த அல்லது உங்கள் பகுதி காரர்களின் பிறந்த நாளுக்காவது வாழ்த்து சொல்லி விடுகிறீர்களா?

    மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, குருநானக் பிறந்தநாள், அய்யா முத்துக்குட்டி சாமியார் பிறந்த தினம், நாராயண குரு பிறந்ததினம்,…………. இவைகளுக்கு வாழ்த்து சொல்லாத நீங்கள், ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லி உள்ளீர்கள்.

    ஆமா, மேலே உள்ள மகான்கள் சொல்லியதை விடவா இஸ்லாம் நல்லதை சொல்லி விட்டது; அல்லது இந்த ரம்ஜான் நல்லதை சொல்லி உள்ளது?

    பெரும்பான்மையோர் கொண்டாடுகிறார்கள், அனைவரும் வாழ்த்து சொல்கிறார்கள். அதனால் கண்ணை மூடிக் கொண்டு வாழ்த்து சொல்கிறீர்கள், அப்படித்தானே!

    விலங்குக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டால் நீங்கள் நான்கு கால்களாலும் நடந்து கொள்வீர்களோ?

  29. இந்தியும் வேண்டாம், சமஸ்கிருதமும் வேண்டாம், இந்து மதமும் வேண்டாம், தனித் தமிழ் நாடு வேண்டும் என்று சொல்லுவோரே!

    நீங்கள் மறக்காமல் ரம்ஜான் வாழ்த்து சொல்லிக் கொள்வதேன்?

    அரபி அல்லது உருது தமிழ்நாட்டு மொழியா? இல்லை அரபு தமிழ்நாடு அல்லது திராவிட நாட்டில் உள்ளதா?

    இல்லை, ரம்ஜான் திராவிட நாட்டு பண்டிகையா?

  30. இங்கு தனக்குள்ளேயே சாதிவாரியாக அடித்துக்கொள்ளும் சான்றிதழ் இந்துக்கள் ரம்ஜானுக்காக வாழ்த்து சொல்லிக் கொள்கிறார்கள்………..

  31. சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையேயான பிரச்சினையே தீர்ந்த பாடில்லை.

    இந்நிலையில் ரம்ஜான் வாழ்த்து சொல்கிறார்களாம்………

    ஏன்யா, இஸ்லாமியர்களிடம் காட்டும் பரிவை, இஸ்லாமியர் நம்பிக்கை மீது காட்டும் பரிவை உங்களுள் மாறி மாறி காட்டிக் கொள்ளக்கூடாதா?

  32. இந்துக்களை ஆலயத்துடன் இணைப்போம்; ஆலயங்களை இணைப்போம்!

    தமிழக பா.ஜ.க.வின் ஜூலை போராட்டம் என்ன ஆனது?

    ஏழை இந்து மாணவ மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை கிடைத்தாச்சோ?

    அந்த களைப்பு தீரத்தான் கஞ்சிக்கடை திறந்தார்களா?

  33. ஈழ உணர்வாளர்களை கூட ஒதுக்கிய இந்து உணர்வாளர்கள் பா.ஜ.க. நிர்வாகிகள் கஞ்சிக்கடைக்கு போய் வந்ததை நியாயப்படுத்துகிறார்கள்.

    என்ன ஆச்சரியம்……………..?

    ஜாதி உணர்வு வேண்டும், நோன்பு கஞ்சி குடிக்க வேண்டும், தமிழ் என்ற தனி உணர்வு வேண்டும்……….. இதை எல்லாவற்றின் கூடவே இந்து உணர்வும் உண்டு.

    இந்த எச்சில் பட்ட இந்து உணர்வு நம்மிடம் இருப்பதால் தான் மகத்தான காரியங்களை நம்மால் இன்னமும் செய்ய முடியாமல் உள்ளது.

    எந்த உணர்வு தேவை? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

    அன்று காங்கிரஸ்காரன் குல்லா வைத்தால் அது துதி பாடல், இன்று பா.ஜ.க. காரன் வைத்தால் மத சார்பின்மை.

    அன்று அரசர்கள் இஸ்லாமியருக்கு, கிறிஸ்துவருக்கு உதவியதை தவறு என்று மேடை போட்டு பேசுவோம்; ஆனால் அதே போன்று நாம் கஞ்சி குடிக்க செல்வோம்.

    தம்பிகளா கொஞ்சம் உங்கள் உணர்வை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். கஞ்சி குடித்து தான் உங்கள் சமய சமரசத்தை காட்ட வேண்டும் என்று இல்லை.

  34. நமஸ்தே

    பஜக இன்று வெற்றி பெற்ருபது ஹிந்து ஓட்டால் மட்டுமே. இதை மறக்காமல் இருதால் சேரி. கஞ்சி குடித்து ஹிந்துகளை புறக்கணித்தால் இவர்களுக்கு காங்கிரஸ் நிலைமை தான். மக்கள் இன்று போலி மதசார்பின்மையை எற்று கொள்ளவதில்லை.

  35. Shri Sadasivan, you are absolutely right. Thanks for being frank and not worried about political correctness . Hindus do not have chudu chorani. BJP is turning out to be another congress clone.

  36. முதலில் இந்த அரசியல் வியாதிகள் இது போன்ற ஆன்மீக விழாக்களில் அழைக்கப்படுவதை நாம் அனைவருமே கண்டிக்கவேண்டும் .எந்த மத விழாக்களாக இருந்தாலும் அவர்கள் அழைக்கப்பட்டால் அதன் புனிதம் கெட்டு அது அரசியல் விழாவாக மாறிவிடும்.இதுபோக ஒவ்வொரு மதமும் வெவ்வேறு சிந்தாந்தம் வெவ்வேறு கொள்கைகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.அதனால்தான் நாம் வெவ்வேறு மதத்தினராய் அவரவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.மதநல்லிணக்கம் என்று எதை சொல்வது தெரியுமா?என் மத நம்பிக்கைகளை வழிபாட்டு முறையை நீங்கள் புரிந்து அதை அனுமதிப்பதும் உங்கள் நம்பிக்கைகளை வழிபாடு முறையை புரிந்து நான் அனுமதிப்பதுமே. நான் செய்வதை நீ செய்தே ஆகவேண்டும் என்பதும் நீங்கள் செய்வதை நான் செய்தே ஆகவேண்டும் என்பதும் நல்லிணக்கம் ஆகாது அது சர்வாதிகாரம்.நாம் தனித்தனி மதத்தினராய் இருப்பதே தனித்தனி சிந்தாந்தம் பிடிதிருப்பதால்தானே.நாம் அனைவருமே மதக்கொள்கைகளில் தெளிவானவர்களாகவும் பிடிப்புள்ளவர்களாகவும் இருப்போம் .இடையில் அரசியல் வாதிகள் புகுந்து நம்மை பிரித்திடாவாறு காப்போம்

  37. ஜெனாப் மீரான் சாஹிப்

    \\ மதநல்லிணக்கம் என்று எதை சொல்வது தெரியுமா?என் மத நம்பிக்கைகளை வழிபாட்டு முறையை நீங்கள் புரிந்து அதை அனுமதிப்பதும் உங்கள் நம்பிக்கைகளை வழிபாடு முறையை புரிந்து நான் அனுமதிப்பதுமே. நான் செய்வதை நீ செய்தே ஆகவேண்டும் என்பதும் நீங்கள் செய்வதை நான் செய்தே ஆகவேண்டும் என்பதும் நல்லிணக்கம் ஆகாது அது சர்வாதிகாரம்.நாம் தனித்தனி மதத்தினராய் இருப்பதே தனித்தனி சிந்தாந்தம் பிடிதிருப்பதால்தானே \\\

    நீங்கள் பகிரும் அலகீட்டை செயல்பாட்டில் கொண்டுள்ளது ஹிந்துக்கள். செயல்பாட்டில் அறவே மறுத்து செயல்படுவது இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவ மதங்கள்.

    மேலும் முதலில் இதை ஜெனாப் சுவனப்ரியனிடம் உபதேசிக்கலாமே.

    வஹாபி சுன்னி இஸ்லாமை ஒழுகாததால் மேலும் தர்காஹ் ஷெரீஃப் வழிபாடுகளில் ஈடுபடுவதால் பரேல்வி சுன்னி இஸ்லாமை இழித்துப்பழித்து அஹ்மதியா முஸல்மான் சஹோதரர்கள் முஸ்லீம்களே இல்லை என்று ஹிந்துஸ்தானத்தில் சட்ட விரோதமாக ஃபத்வா விதிக்கும் ஜெனாப் சுவனப்ரியனிடம் மேற்கண்ட கருத்துச் சமநிலை பொதிந்த வாசகங்களைப் பகிருங்கள்

  38. நல்லது. மாற்று மதத்தவரின் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லுவது தவறல்ல.
    ஆனால் அவர்களைப் போல நோன்பு இருந்தவர்களைப் போல கஞ்சி குடிப்பது தவறு தானே.
    நாம் ஒன்றும் வாழ்த்து சொல்வதில் தவறு காணவில்லை.
    அவர்களின் விழாக்களுக்கு வாழ்த்துங்கள். இந்த முறை கஞ்சி குடித்தீர்கள், அவர்கள் உடம்பில் சாட்டையால், கத்தியாலும் காயப் படுத்திக் கொள்வார்களே, அப்போது நீங்களும் அதே போல செய்ய முடியுமா?.
    வாழ்க ஹிந்துஸ்தானம்!

  39. சிறுபான்மையினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதன் மூலம் அவர்களை தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்ய முடியும் என்பது கனவு அவர்களின் பண்டிகை எத்தன்மையது எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும் பசுவதைக்கு குரல் கொடுக்கும் நாம் குர்பானி செய்யும் பண்டிகையை ஆதரிக்க முடியுமா. நடுநிலை முஸ்லிம்கள் உங்களை நம்ப வேண்டுமா ஹிந்துவாகவே இருங்கள் நம்புவார்கள் வேக்ஷம் போட்டால் நம்ப மாட்டார்கள்

  40. திரு கிருஷண பிரசாத்!

    //இந்துத்துவவாதிகள் நோன்பு கஞ்சி குடிப்பதிலோ, முஸ்லீமாகவே மாறுவதிலோ எங்களுக்கு எந்த ஆக்ஷேபனையும் இல்லை. ஆனால் நாங்கள் கூற விளைவதெல்லாம் எங்களை முஸ்லீம்கள் பயங்கரவாதிகள், அவர்களும் இந்துக்களும் சேர்ந்து வாழவே முடியாது. நாம் தாடியை மழிப்போம், அவன் மீசையை மழிப்பான். நாம் மேலிருந்து கீழாக முகம் கழுவுவோம், அவன் கீழிருந்து மேலாக முகம் கழுவுவான், முஸ்லீம்கள் கடைகளைப் புறக்கணியுங்கள். லவ் ஜிகாத். இராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து ரத்து, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை கூடாது, காந்தி முஸ்லீம்களை நம்பி ஏமாந்தவர்… இப்படியெல்லாம் சொல்லி எங்களை உசுப்பேத்தி விட்டு விட்டு இத்தனை ஆண்டுகள் கஞ்சி குடிக்கப் போகாதவர்கள் இப்போது போவதேன் //

    சகோ கிருஷ;ண பிரசாத்தின் உள்ளக் குமுறலை நானும் ஆதரிக்கிறேன். இதையேதான் தேர்தலுக்கு முன்பும் நான் சொன்னேன். இஸ்லாமியர் எதிர்ப்பு என்பது உங்களிடமிருந்து ஓட்டுக்களைப் பெறுவதற்கே. இந்து மதத்தின் பெருமைகளை சொல்லி உங்களிடமிருந்து பிஜேபி ஓட்டுக்களை குவிக்க முடியாது. ராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ;மீர் தனி அந்தஸ்து, முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்காதே, லவ் ஜிஹாத் என்று எதையாவது சொல்லித்தான் ஓட்டு அறுவடையை உங்களிடமிருந்து பெற முடியும்.

    உபி முஸாஃபர் நகரில் நடந்ததென்ன? ஒரு இந்து பெண்ணை இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் சீண்டினார்கள் என்று ஊர் முழுக்க செய்திகளை பரப்பி கவலரத்தை உண்டு பண்ணினர். முடிவில் அந்த பெண்ணே அவரது குடும்பம் சகிதமாக ‘இப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை. அந்த இளைஞர்கள் என்னை தொடவே கிடையாது’ என்று பேட்டி கொடுத்ததை தொலைக் காட்சியிலே பார்த்தோம். அமீத்ஷ வின் திட்டமிடலால் மிகக் கச்சிதமாக காய்கள் நகர்த்தப்பட்டன. 50 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். பல கோடி ரூபாய் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. இதன் விளைவாக இந்துக்களின் ஓட்டை மிகச் சுலபமாக பெற்றது பிஜேபி. இன்று மோடி அருதி பெரும்பான்மை பெறுவதற்கு இந்த சம்பவம் மிக முக்கிய காரணமாக இருந்தது. பிஜேபியின் ஓட்டு பொறுக்கும் தந்திரம் இதுதான்.

    இனி ஐந்து வருடத்திற்கு ராமர் பாசம் எடுபட்டு விடும். இஸ்லாமிய எதிர்ப்பு குறைந்து விடும். இனி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்வார் மோடி. ஐநாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு: இஃப்தார் பார்ட்டி என்று இன்னொரு காங்கிரஸாக பிஜேபி மாறும் என்பது எனக்கு முன்பு நன்றாகவே தெரியும். இதை சற்றும் எதிர் பார்க்காத ஒரு சில இந்துத்வாவாதிகள் ஆச்சரியப்படுகின்றனர். அவர்களை நினைத்து பரிதாபம்தான் பட முடியும். எத்தனை முறைதான் அவர்களும் ஏமாறுவார்கள்? ஆனால் முஸ்லிம்களாகிய எங்களுக்கு எந்த வித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் பிஜேபியின் இஸ்லாமிய எதிர்ப்பு என்பது இந்துக்களின் ஓட்டை ஒருமுகப்படுத்துவதற்காக கைக்கொள்ளப்படும் தந்திரம் என்பது இந்திய அரசியலை அவதானிக்கும் அனைத்து மக்களுக்கும் தெரியும்.

  41. திரு கிருஷ்ணகுமார் எப்போதுமே இறுக்கத்தோடுதான் இருப்பாரோ!நான் சொல்ல வந்தது அரசியல்வாதிகளால் நம் மதப்புனிதம் கெட்டுவிடக்கூடாதே என்பதும் ஒரு மத நம்பிக்கையை இன்னொரு மத நம்பிக்கையாளர்கள் புரிந்து கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான்.ஒரு ஹிந்து இப்படிதான் இருப்பார் அவர் மதக்கொள்கை அது .ஒரு முஸ்லிம் இப்படித்தான் இருப்பார் அவர் மதக்கொள்கை அது .இந்த புரிதலில் இணக்கமும் ஒற்றுமையும் வந்துவிடும் .நான் ஒரு ஹிந்துவாக ஆனபிறகு உண்மையான ஹிந்துவாகத்தான் இறுக்க வேண்டும்.நடிக்கக்கூடாது .நான் ஒரு ரெண்டுங்கெட்டனாக இருந்தால் ஒரு ஹிந்துவாக நீங்கள் என்னை திருத்த வேண்டும் .இது ஒரு மதத்தினரின் உள் விவகாரம்.இதில் வேறு ஒரு மதத்தினர் தலை இடமுடியாது .ஆனால் மேல் உள்ள கட்டுரைக்கும் என் கருத்திற்கும் சம்மந்தமில்லாமல் சுவனப்பிரியன் நரகப்பிரியன் வகாபி அஹமதியா என்று உங்களுக்கும் இந்த கட்டுரைக்கும் தொடர்பே இல்லாமல் எதை பதிகிறீர்கள்

  42. கிருஷ்ணகுமார் கவனத்திற்கு, திரு சங்கரனார் அவர்களும் ஒரு கருத்தை பதிகிறார்கள் அதாவது கத்தியால் சட்டையால் காயம் எற்படுதிகொள்வார்களே என்று
    ஒரு முஸ்லிமாக நான் இதை கண்டிப்பேன் தன்னை வருத்திக்கொண்டு செய்கிற எந்த வழிபாட்டையும் இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை .அவர்கள் செய்வது வழிபாடும் அல்ல .ஒரு தனி மனிதரை முன்னிறுத்தி செய்கிற சடங்கு இதை இஸ்லாம் அனுமதிக்காதது மட்டுமல்ல கடுமையாய் கண்டிக்கிறது .இதை எடுத்து சொல்வதும் அவர்களை திருத்துவதும் என் கடமை .சங்கரனார் போன்று இஸ்லாத்தை தவறாக புரிந்து கொள்வதற்கும் இதுவே காரணம் .நான் என் சமூகத்தின் குறைகளை சுட்டினால் திருத்தினால் கடுமையாய் கண்டித்தால் கிருஷ்ணகுமார் ஆதங்கபட வேண்டியதே இல்லை

  43. \\ நான் ஒரு ஹிந்துவாக ஆனபிறகு உண்மையான ஹிந்துவாகத்தான் இறுக்க வேண்டும்.நடிக்கக்கூடாது \\

    அன்பின் மீரான் சாஹேப்

    இதில் என்ன சந்தேஹம்.

    நான் என் கருத்துக்களைப் பகிர்வதில் எந்த சமரசமும் செய்வதில்லையே. இஸ்லாத்தின் இறைக்கோட்பாட்டை நான் ஏற்பதில்லை என்பதை எந்த ஒளிவு மறைவுமில்லாமல் பகிர்ந்துள்ளேனே.

    உலகிலுள்ள அனைத்து மக்களும் எமது சஹோதரர்கள் என்று எம் மதம் போதிக்கிறது. நீங்கள் எங்கள் மதத்தைப் பின்பற்றாததால் நரகம் போவீர்கள் என்று எங்கள் மதம் போதிப்பதில்லை. உங்களது மதப்படி ஒரு பண்டிகையைக் கொண்டாடுகையில் உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு எங்கள் மதத்தில் எந்த தடையும் கிடையாது.

    அறிவு பூர்வமாக உங்கள் மதத்திலிருந்து கருத்துக்கள் முன்வைப்பவர் அனைவரிடமும் அறிவு பூர்வமாக கருத்துப்பகிர்வேன்.

    ஆனால் நான் சர்வ நிச்சயமாக உங்கள் குல்லாயெல்லாம் அணிய மாட்டேன். ஹிந்துத்வர்களின் தரப்பிலிருந்து எனக்குத் தெரிந்து ஹிந்துஸ்தானம் முழுதும் யாரும் குல்லாய் எல்லாம் அணிந்து வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை.

    ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்களும் இஸ்லாமிய சஹோதரர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

    \\ ஆனால் மேல் உள்ள கட்டுரைக்கும் என் கருத்திற்கும் சம்மந்தமில்லாமல் சுவனப்பிரியன் நரகப்பிரியன் வகாபி அஹமதியா என்று உங்களுக்கும் இந்த கட்டுரைக்கும் தொடர்பே இல்லாமல் எதை பதிகிறீர்கள் \\

    நரகப்ரியன் என்று எங்கு கருத்துப்பதிர்ந்திருந்தேன். சொல்லத கருத்தைப் பற்றி விவாதிப்பது வீணல்லவா.

    நீங்கள் வேறெங்கோ எனது உத்தரத்தை வாசித்து விட்டு இங்கு கருத்துப்பகிர்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    \\ நான் என் சமூகத்தின் குறைகளை சுட்டினால் திருத்தினால் கடுமையாய் கண்டித்தால் கிருஷ்ணகுமார் ஆதங்கபட வேண்டியதே இல்லை \\

    இங்கு பரேல்வி சுன்னி முஸல்மாணிய சஹோதரர்கள், ஷியா முஸல்மாணியசஹோதரர்கள், அஹ்மதியா முஸல்மாணிய சஹோதரர்கள் இவர்கள் கருத்துப்பதிவதில்லை. நிச்சயமாக அவர்களுக்கும் அவர்கள் தரப்பு ந்யாயம் இருக்கிறது என்பதை சர்வ நிச்சயமாக அறிவேன்.

    தியாலஜி பற்றி இவற்றினிடையே உள்ள வேறுபாடுகளில் எமக்கு அக்கறை இல்லை. ஆனால் ஹிந்துஸ்தானத்தில் இவர்கள் அனைவரும் சட்ட ரீதியாக இஸ்லாமியர் என்று அறிவேன். எமது ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் இவர்கள் அனைவருக்கும். வஹாபியரும் சேர்த்தியே.

    வெவ்வேறு பிரிவுகளால் ஆன ஹைந்தவ இஸ்லாம் கட்டுப்பட்டி வஹாபிய இஸ்லாத்துக்கு என்றும் கட்டுப்பட்டதில்லை என்பதை சரித்ரம் தெளிவாகப் பதிவு செய்கிறது. தனியாக அதைப்பற்றி விவாதிக்கலாம்.

  44. meeransahib// தன்னை வருத்திக்கொண்டு செய்கிற எந்த வழிபாட்டையும் இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை .// அடுத்த உயிர்களை வருத்திக் கொள்ள அங்கீகரிக்கிறதா? வருத்திக் கொள்ளல் அல்ல உங்கள் பிரச்சினை, ஷியா சுன்னி தான் உங்கள் பிரச்சினை என்று நான் நினைக்கிறேன்.

  45. அன்புசகோதரர் கிருஷ்ணகுமார் அவர்களே அரசியல் வாதிகள் ஆன்மீக விழாக்களில் கலந்து கொள்வதை பற்றிதான் நான் கருத்து பகிர்ந்திருந்தேன்.நீங்கள்தான் வஹாபி சன்னி பரலேவி என்றெல்லாம் கிளை தாவினீர்கள்.இது இஸ்லாமிய வட்டத்திற்கு உட்பட்ட விஷயங்கள்.இது இந்த கட்டுரைக்கும் தொடர்பில்லாத ஒன்று .அதே நேரத்தில் “உலகில் உள்ள அனைத்து மக்களும் எம் சகோதரர்கள் என்று எம்மதம் போதிக்கிறது”என்றும் சொல்லி இருந்தீர்கள்.மகிழ்ச்சி.இதை இஸ்லாம் மிக ஆணித்தரமாக சொல்லி இதைதான் மனித படைப்பின் மிக முக்கிய ஆதாரமாகவே காட்டுகிறது .”உங்களை ஓர் ஆண் பெண்ணிலிருந்தே படைத்தோம் உங்களில் உயர்ந்தவர் அதிக இறையச்சம் உடையவரே”என்று உலக சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது .அதே வேளை “எங்கள் மதத்தை பின் பற்றாததால் நரகம் போவீர்கள் என்று எங்கள் மதம் சொல்லவில்லை” என்றும் சொல்லியிருந்தீர்கள்.இது நம்பிக்கை தொடர்பான விஷயம்.நான் கடவுளை நம்புகிறேன் அவனை வணங்குவதற்கு-அவனை மட்டுமே வணங்குவதற்கே படைகப்பட்டிருக்கிறேன்.அவனுக்கு இணை கர்ப்பிப்பதோ அவனுக்கு வரலாறு புணைவதோ அவனுக்கு பாலியல் அடையாளம் கொடுப்பதோ இந்த அடையாளங்களோடு சிலை வடிப்பதோ அறவே கூடாதென்றும் இது அவனுக்கு செய்யும் மிகப்பெரிய நிந்தனை என்றும் நம்புகிறேன்.என் சகோதரரான உங்களிடமும் சொல்லி இந்த முறையில் இறைவனை நம்புங்கள் வணங்குங்கள் என்று அழைப்பு விடுக்கிறேன்.இதை இரண்டு முறையில் நீங்கள் எதிர் கொள்ளலாம்

  46. கிருஷ்ணகுமார் அவர்களே தொடர்கிறேன் ……..நீங்கள் எதிர் கொள்ளவேண்டிய முறை ஒன்று,இவன் என்ன சொல்கிறான் என்று என் தரப்பு வாதங்களை முழுமையாக கேட்பது .அல்லது தம்பி உளறுகிறான் என்று போய்கொண்டே இருப்பது.ஏனெனில் நான் சொல்லும் கடவுள் கொள்கையை நம்பினால்தான் நான் சொல்லும் நரகம் உங்களை பயமுறுத்த வேண்டும்.உங்கள் நம்பிக்கையில் இல்லாத நரகத்திற்கு ஏன் நீங்கள் விசனப்படவேண்டும்.என் நம்பிக்கையின் படியான நரகத்திலிருந்து என் அண்ணனான உங்களை காப்பதற்காக நான் தொடர்ந்து அழைப்பு கொடுத்துக்கொண்டே இருப்பேன் நீங்கள் தம்பியின் சொல்லை கேட்பதாயிருந்தால் கேளுங்கள்.அல்லது தம்பி சலம்புகிறான் என்று போய்கொண்டே இருங்கள்.என் நம்பிக்கை எனக்கு உங்கள் நம்பிக்கை உங்களுக்கு ஆனாலும் நீங்களும் நானும் அண்ணன் தம்பி என்ற உறவு மாறாது

  47. மீரான் சார், இராக்கில், நைஜீரியாவில், ஆப்கானில் பயங்கரவாதிகள் மதத்தின் பெயரால்தான் அனைத்து குண்டு வெடிப்புகளையும் நடத்துகின்றது. ஏன், நமது பாரதத்தில் நடந்த உங்கள் சமய மதமாற்றம், மதம் மாற மறுத்தவர்களுக்கு நடந்த கொடுமைகள் எல்லாம் உங்கள் மதத்தின் பெயராலேயே நடந்தது நடக்கின்றது. உங்கள் மக்கள் பெரும்பான்மையினராக உள்ள பகுதிகள் மட்டும் பதட்டமான பகுதிகளாக இன்றும் காவல் துறையினரால் அறிவிக்கும் அளவிற்கு நிலைமை இருக்க காரணம் என்ன? ஓமர் அப்துல்லா ஒரு மாநில முதல்வர் என்பதையும் மறந்து, “நாங்கள் தனி நாடாக போவோம்” என்ற பொழுது, எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் அதனை கண்டித்தீர்கள்? காஷ்மீரில், நமது தேசத்தை இரவு பகலாக தூக்கம் தொலைத்து, கண் விழித்து காக்கும் நமது ராணுவ சகோதரர்கள் மீது கல்வீசி தாக்குவதற்காகவே இன்றளவும் அங்கு கல்வீச ஒரு இயக்கமே உள்ளதே? எத்தனை இஸ்லாமிய அமைப்புகள் அதனை கண்டித்துள்ளனர்?

  48. அன்பின் மீரான் சாஹிப்

    இங்கு கருத்துப்பகிரும் முஸல்மாணிய சஹோதரர்கள் பலரும் ஜெனாப்-ஏ-அலி சுவனப்ரியன் தவிர்த்து கண்ணியக்குறைவாக மட்டிலும் சண்டித்தனமாகவே கருத்துப்பதிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஜெனாப்-ஏ-அலியைத் தவிரவும் இன்னொரு சஹோதரரான நீங்கள் தெஹ்ஸீபுடன் கருத்துப் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. ஜெனாப்-ஏ-அலி அவர்கள் முன்பெல்லாம் அல் தக்கியா செய்யும் போது மட்டிலும் பொய் பேசுவார் இப்போதெல்லாம் பொய் மட்டிலுமே பேசி வருகிறார். நிற்க.

    \\\ .நீங்கள்தான் வஹாபி சன்னி பரலேவி என்றெல்லாம் கிளை தாவினீர்கள். \\

    ம் ஹும். கிளையெல்லாம் தாவவில்லை.

    \\\ என் மத நம்பிக்கைகளை வழிபாட்டு முறையை நீங்கள் புரிந்து அதை அனுமதிப்பதும் உங்கள் நம்பிக்கைகளை வழிபாடு முறையை புரிந்து நான் அனுமதிப்பதுமே. \\\

    மேற்கண்ட கருத்து உங்கள் உத்தரத்திலிருந்து தானே.

    நீங்கள் சொன்னதில் உள்ள கருத்தாக்கங்களை உங்கள் சமுதாய சஹோதரர்களிடம் நீங்கள் ப்ரயோகம் செய்கிறீர்களா என்றால் இல்லை என்று சுட்டவே பரேல்வி சுன்னி இஸ்லாம்., தேவ்பந்தி சுன்னி இஸ்லாம், அஹ்மதியா இஸ்லாம், ஷியா இஸ்லாம் என ஹிந்துஸ்தானத்திய பன்முக இஸ்லாமியரை வஹாபி சுன்னி இஸ்லாமியர் இழித்துப்பழிப்பதை சுட்டிக்காட்டியுள்ளேன். ஹிந்துஸ்தானி உபசாஸ்த்ரீய சங்கீதம் வாயிலாக எமக்கு வஹாபியில்லா பல முஸல்மாணிய சஹோதரர்கள் பழக்கம் உண்டு. எங்களிடையே பகிரல் எப்போதும் சங்கீதம் பற்றி மட்டிலும் தான். யாரும் என்னிடம் இஸ்லாம் பற்றியெல்லாம் பகிர்வது இல்லை. பூஜ்ய கபீர், ரஹீம் மற்றும் ரஸ்கான் இவர்களுடைய தோஹாக்களே விசாரார்த்தமான விஷயம். அதிலும் குறிப்பாக ரஸ்கான்.

    \\ ஏனெனில் நான் சொல்லும் கடவுள் கொள்கையை நம்பினால்தான் நான் சொல்லும் நரகம் உங்களை பயமுறுத்த வேண்டும். \\

    மரணப்ரமாதம் எமக்கில்லையாம் என்று போதிப்பது எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான். மரணம் என்பது இந்த சரீரத்துக்குத் தான் என்று நம்புபவர் பயம் என்றால் என்ன என்று கூட அறியார். ஆனால் சித்தாந்த விஷயம் தெரியா அப்பாவி மக்களை இப்படியான தரம் தாழ்ந்த கோட்பாடுகள் அச்சுறுத்தும் என்பதால் இது போன்ற கோட்பாடுகளை கருவறுப்பது என்பதில் எமக்கு எந்த சம்சயமும் இல்லை.

    \\\ அல்லது தம்பி உளறுகிறான் என்று போய்கொண்டே இருப்பது. \\\

    ஹிந்துஸ்தானத்தில் பிறந்து தழைத்த சமயங்களான பௌத்தம் மற்றும் சமணம் முன்வைக்கும் சாதுர்யமான மதி மயக்கும் கருத்துக்கள் பூர்வபக்ஷமாக ஏற்கப்பட்டு ஆழ்ந்து விசாரம் செய்யப்பட்டு அநேக வேதாந்த சைவ வைஷ்ணவ சமய நூற்களால் மறுதலிக்கப்பட்டும் உள்ளது.

    சாரமற்ற ஆப்ரஹாமியக் கோட்பாடுகளை அப்படி ஒரு பேச்சுக்காகக் கூட பொருட்படுத்துவதில் அர்த்தமில்லை.

    அது பகிரும் முரண்களை சுட்டிக்காட்டி அதன் சாரமின்மையை கருவறுத்தலே போதுமானது.

    ஆனால் ஹிந்துஸ்தான கலாசாரக் கூறுகளை உள்வாங்கிய ஹிந்துஸ்தானத்தில் தழைத்த ஹைந்தவ இஸ்லாமிய சமயம் அர்த்தமற்ற வன்முறை இஸ்லாமிய இறைக்கோட்பாடுகளை அர்த்தமுள்ளதாக ஆக்கியது மட்டுமின்றி வேதாந்தக் கோட்பாடுகளுக்கு அணுக்கமாகவும் இருக்கின்றமையையும் உதாசீனப்படுத்துவதிற்கில்லை.

    உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலி கான் சாஹேபின் அல்லாஹூ பந்திஷ் அப்படியான ஒரு ஆதர்சமான பந்திஷ்.

    ஆம். நீங்கள் சொல்லும் கருத்தில் ஆழ்கையில் நான் வ்யாசத்தின் கருப்பொருளிலிருந்து விலகுகிறேன் என்பது புரிகிறது. க்ஷமிக்கவும். நான் வ்யாசத்தின் கருப்பொருளிலிருந்து விலகுவதை நீங்கள் சுட்டியமைக்கு நன்றி. பிறிதொரு சமயம் இது பற்றிப் பேசலாம்.

    அன்புடன்
    குதா ஹாஃபிஸ்

  49. //// தன்னை வருத்திக்கொண்டு செய்கிற எந்த வழிபாட்டையும் இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை .// //

    10 வயது சிறுமிக்கு வெடிகுண்டை வயிற்றில் கட்டி கட்டிக்கொண்டு போனானே ஒரு முஸ்லிம் நேற்று- அதைத்தான் அனுமதிக்கும் போல! 🙂

  50. கண்ணன் அவர்களே பொன்னார் அவர்கள் நோன்பு திறக்க வந்ததற்கும் இப்போது நாம் விவாதித்து கொண்டிருப்பதற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா?எவனாவது ஒருவன் மாட்டமாட்டான வைத்து தாக்குதாக்கென்று தாக்கிவிடுஒம் என்ற வேகம்தான் உங்களிடம் இருக்கின்றது.பயங்கரவாதிகள் மதத்தின் பெயரால் குண்டு வைக்கிறார்கள் என்று நீங்களே சொல்லிவிடுகிறீர்கள்.பயங்கரவாதி எதன் பெயரில் குண்டு வைத்தால் என்ன அவன் பயங்கரவாதிதான்.பயங்கரவாதம் எல்ல மதத்தின் பெயராலும் நடக்கின்றது.ஹிந்த்துவபயங்கரவாதம் க்ரிச்துவபயங்கரவாதம் யூத பயங்கரவாதம் அஹிம்சையை மட்டுமே போதித்த பௌத்தத்தின் பெயரால் இலங்கையில் நடக்கிற சிங்கள பயங்கரவாதம் என்று மதத்தின் பெயரால் மதம் பிடித்தவர்கள் உலகம் முழுக்க உண்டு.அதனால்தான் கம்முநிசுகள் மதத்தை அபினுக்கு ஒப்பிடுவார்கள்.இயக்கங்கள் கண்டிக்கின்றனவா என்று கேட்குகிரீர்கள் இயக்கங்கள் அரசியல்வாதிகளால் நிறைந்தது.அவர்கள் அரசியல் ஆதயங்களுக்காகத்தான் போராடுவார்கள்.நம் இருவரையும் துண்டித்து விடுவதில்தான் அவர்களின் ஆதாயம் நிறைந்திருக்கிறது.நாம்தான் மிக கவனமாய் இருக்கவேண்டும்.நாங்கள் மதத்தால் வேறுபட்டாலும் மனிதத்தோடு இருப்போம் என்று அவர்களுக்கு காட்டவேண்டும்.தத்தமது மதக்கொள்கைகளை கச்சிதமாய் ஒழுகினாலும் மதமாச்சரியங்களை ஒழித்து மனிதாபதோடு வாழ்வோம் .

  51. கிருஷ்ணகுமார் அவர்கள் எதை சொன்னாலும் தமிழில் சொல்லக்கூடாத?இதையே நான் செய்திருந்தால் என்னாகும்?சும்மாவே நீயெல்லாம் தமிழனில்லை இந்தியனில்லை உனக்கெல்லாம் தேசப்பற்றில்லை யன்று பட்டம்.முஸ்லிகளாகிய நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள்தான் கற்றுத்தருவோம்.எங்கள் மத கருத்திற்கு ஒட்டியதாகத்தான் உங்கள் மதக்கொள்கைகள் இருக்கவேண்டும்.இல்லையென்றால் நீங்கள் இந்தியர்களே கிடையாது.நல்ல சிந்தாந்தம்!

  52. சகோதரர் மீரான் சார், உங்களை காயபடுத்தும் எண்ணம் எதுவும் எமக்கு இல்லை. சில எதார்த்தங்களை கோடிட்டு காட்டினேன். ஆனால் அதற்க்கு தாங்கள் நேரடியாக பதில் தராதது என்போன்றோரை கவலையடையவே செய்யும். ஏனெனில், தங்கள் எழுத்தின் மூலம் ஓன்று மட்டும் புலனாகின்றது, அது, ‘தாங்கள் தவறான நபர் இல்லை’, நிதானமாக சிந்தித்து எண்ணத்தை வெளிப்படுத்துபவர் என்பது. அதனால் தான் அந்த வருத்தமும் கூட. ஏனெனில் சரியான நபர்களிடம் நியாயமான விளக்கத்தை எதிர்பார்ப்பது தவறன்றோ!.

  53. ஜனாப் மீரான் சாஹிப் அவர்களே,

    // இயக்கங்கள் அரசியல்வாதிகளால் நிறைந்தது.அவர்கள் அரசியல் ஆதயங்களுக்காகத்தான் போராடுவார்கள்.நம் இருவரையும் துண்டித்து விடுவதில்தான் அவர்களின் ஆதாயம் நிறைந்திருக்கிறது.நாம்தான் மிக கவனமாய் இருக்கவேண்டும்.நாங்கள் மதத்தால் வேறுபட்டாலும் மனிதத்தோடு இருப்போம் என்று அவர்களுக்கு காட்டவேண்டும்.தத்தமது மதக்கொள்கைகளை கச்சிதமாய் ஒழுகினாலும் மதமாச்சரியங்களை ஒழித்து மனிதாபதோடு வாழ்வோம் .//

    நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். நம்மைப் பிரித்து, நெருப்புமூட்டி, அதில் குளிர்காயும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியில் சிக்காதிருப்போமாக.

    எங்கள் வீட்டு நவராத்திரித் திருவிழாவுக்கு இஸ்லாமிய சகோதரிகளும், சகோதர்களும் வருவார்கள். “உங்களுக்காக, சைவச் சாப்பாடும் நிறையச் சமைத்திருக்கிறோம். வரவேண்டும்.” என்று அழைத்த எனது இஸ்லாமிய நண்பர் கொடுக்கும் இப்தார் விருந்துக்கு இன்று என் குடும்பத்துடன் செல்லப் போகிறேன்.

    ஈத் முபாரக்!

  54. இப்பொழுதுதான் ஒரு தமிழ் இஸ்லாமியர் கொடுத்த இப்தார் விருந்துக்குச் சென்று வந்தேன். படிக்குப்பாதி இந்துக்களும் இருந்தனர். தமிழ் நாடு தோசை, வடை,சட்னி, சாம்பார் என்று தடபுடல்தான். இந்துக்கள் இருக்கிறார்கள் என்று மாட்டிறைச்சி பரிமாறப்படவில்லை. அந்த அளவுக்கு இந்து நண்பர்களுக்கு மதிப்புக் கொடுத்திருந்தார்கள். மது அருந்தாத எனக்கு, இஸ்லாமிய வழக்கப்படி அங்கு மதுபானங்கள் இல்லாததும் மனதுக்கு நிறைவாகவே இருந்தது.

    இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக் சொல்லிவிட்டு வந்தேன். போகும்போது, ஒரு டப்பா நிறைய கராச்சி ஹல்வாவுடன் விடைகொடுத்து அனுப்பினார்கள்.

    மத நல்லிணக்கம் மனமகிழ்ச்சியைக் கொடுத்தது.

  55. நான் காயப்படவில்லை கண்ணன் அவர்களே! எதார்த்தம் என்று எதைசொல்கிரீர்கள்? ஆப்கான்,இராக் வன்முறையை பற்றி கேட்டிருந்தீர்கள்.அதற்கு நான் சொன்னேன்.பயங்கரவாதம் எதன் பெயரில் வந்தாலும் அது பயங்கரவாதம்தான்.அதை உலகம் முழுக்க கண்டித்து விரட்டவேண்டும் என்பதில் மாற்று கருதில்லை.அதிலும் நீங்கள் குறிப்படுகிற நாடுகளில் வல்லாதிக்க அரசியலும் குறிப்பாக எண்ணெய் அரசியலும் கலந்திருக்கிறது.இது போக மதமாற்றம் மதமாற்ற கொடுமை என்றெல்லாம் கேட்டீர்கள்.இது நிரூபிக்கப்படாத வரலாற்று அனுமானம்தான்.மிகக்குறைவான மக்கள் சில பைத்யகாரதனமான மன்னர்களால் இப்படி மிரட்டப்பட்டிருக்கலாம்.ஆனால் இப்படி மிரட்டி தன் மதத்திற்கு மாற்ற நினைப்பவனுக்கே அவனுடைய மதத்தில் பற்றோ பிடிப்போ ஒரு தெளிவோ இருக்கவே இருக்காது.குரான் மிகத்தெளிவாக சொல்கிறது.”இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் கிடையாது ,நேர் வழி தெளிவாகிவிட்டது.விரும்புபவர் பின்பற்றலாம்”.இதுதான் இஸ்லாமிய நெறிமுறை.இன்னொரு இடத்தில் குரான் சொல்கிறது,”நீங்கள் இன்னொரு சமுதாயத்தை விட மிகைதிருக்கிரீர்கள் என்ற காரணத்தால் வரம்பு மீறிவிடாதீர்கள் நிச்சயமாக வரம்பு மீறுபவர்களை அல்லா நேசிப்பதில்லை”. இதையெல்லாம் இஸ்லாத்தை தெரிந்திருப்பவன் கடைபிடிப்பான்.நாடு பிடிக்க வந்த மன்னன்களையல்லாம் இஸ்லாமிய அத்தாரிட்டியாக எண்ணாதீர்கள்.நான் கேட்கிறேன்,வன்முறையாலும் மிரட்டலாலும் எப்படி சார் ஒரு மதக்கொள்கையை இன்னொரு மனதிற்குள் திணிக்க முடியும்?நான் மிரட்டி நீங்கள் மாறுவார்கள?நீங்கள் மிரட்டி நான் மாறுவேனா?ஒருவனுடைய ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு நாம் இருக்கும்போது அவனுக்கு அஞ்சி நம்முடைய வெளிஅடையாளங்களை அவன் சொல்வதுபோல் மாற்றிக்கொள்ளலாம்.நம்முடைய உள்ளம் மாறுமா?ஏதோ நாம் சிறு கூட்டமாக இருந்தால்தான் இதுவும் நடக்கும்.நாம் பெரும் சமுதாயமாக இருந்தால் அவனால் மிரட்ட முடியுமா?அதிலும் அன்று இன்றுபோல் நவீனஆயுதங்கள் இல்லாத காலம்.படைபலம்தான் பெரும்பலம்.அப்படியிருக்கும்போது இங்கிருக்கும் மக்களை எப்படி அவன் மதத்திற்கு மாற்றி ஆட்சியையும் நடதிக்கொண்டிருப்பான்?அவ்வளவு சுலபத்தில் மக்கள் தங்கள் பாரம்பரிய மத அனுஷ்டானங்களை நம்பிக்கைகளை விட்டு தாங்கள் கேட்டே அறியாத ஒரு சித்தாந்தத்தை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?கொந்தளிதுவிடமாட்டார்களா?இருநூறு வருடம் வெள்ளைக்காரன் தாக்கு பிடிக்கமுடியவில்லை.இதற்கிடையில் பீரங்கி துப்பாக்கி என்ற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் இவன் காலம்.அவர்களோ கத்தி ஈட்டி அம்பு என்று மனித என்னிக்கயைகொண்டே போரில் வெற்றிபெற்ற காலத்தை சேர்ந்தவர்கள்.ஆகவே மிரட்டி மதம் மாற்றினார்கள் என்பதெல்லாம் சாத்தியமில்லை சார்.ஆசை வார்த்தை கூறி பணம் கொடுத்து சிலது நடந்திருக்கலாம்.ஆனால் இப்படி வெறும் உலகாதாயதிர்க்காக கொள்கை மாறி போகிறவனை நாம் பொருட்படுத்தவே கூடாது.இவன் எந்த மதத்திலும் ஒழுங்காய் இருக்க மாட்டான்.நன்றாய் தெரிந்துகொள்ளுங்கள் எங்களுடைய முன்னோர்களெல்லாம் அரபு வணிகர்களின் மூலம்தான் இஸ்லாத்திற்கு வந்தார்கள்.அவர்களுடைய நேர்மை வர்த்தக முறை பிறகு இஸ்லாத்தின் தெளிவான கடவுள் கொள்கை வழிபாட்டுமுறை இவையெல்லாம் கவர்ந்தது.மிரட்டி வந்திருந்தால் அன்றைக்கே நாங்கள் திரும்ப வந்திருப்போம்.இவ்வளவு உறுதியாக தெளிவாக இந்த மதத்தில் இருக்க முடியாது.முகலாயர்கள் வந்தோமா சொகுசாய் இருந்தோமா என்றுதான் இருந்தார்கள்.அதனால்தான் இத்தனை தலைமுறை இருக்க முடிந்தது.வரியை கூடகொடு படையில் சேர் என்றெல்லாம் சொன்னால் கூட மக்கள் பொறுத்துக்கொள்வார்கள் மத விஷயம் என்று வந்தால் மற்ற மதமக்களையும் சேர்த்துக்கொண்டு அடித்து விரட்டி இருப்பார்கள்.இதுதான் எதார்த்தமாக இருக்கும்.

  56. நான் காயப்படவில்லை கண்ணன் அவர்களே! எதார்த்தம் என்று innum எதைசொல்கிரீர்கள்? ஆப்கான்,இராக் வன்முறையை பற்றி கேட்டிருந்தீர்கள்.அதற்கு நான் சொன்னேன்.பயங்கரவாதம் எதன் பெயரில் வந்தாலும் அது பயங்கரவாதம்தான்.அதை உலகம் முழுக்க கண்டித்து விரட்டவேண்டும் என்பதில் மாற்று கருதில்லை.அதிலும் நீங்கள் குறிப்படுகிற நாடுகளில் வல்லாதிக்க அரசியலும் குறிப்பாக எண்ணெய் அரசியலும் கலந்திருக்கிறது.இது போக மதமாற்றம் மதமாற்ற கொடுமை என்றெல்லாம் கேட்டீர்கள்.இது நிரூபிக்கப்படாத வரலாற்று அனுமானம்தான்.மிகக்குறைவான மக்கள் சில பைத்யகாரதனமான மன்னர்களால் இப்படி மிரட்டப்பட்டிருக்கலாம்.ஆனால் இப்படி மிரட்டி தன் மதத்திற்கு மாற்ற நினைப்பவனுக்கே அவனுடைய மதத்தில் பற்றோ பிடிப்போ ஒரு தெளிவோ இருக்கவே இருக்காது.குரான் மிகத்தெளிவாக சொல்கிறது.”இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் கிடையாது ,நேர் வழி தெளிவாகிவிட்டது.விரும்புபவர் பின்பற்றலாம்”.இதுதான் இஸ்லாமிய நெறிமுறை.இன்னொரு இடத்தில் குரான் சொல்கிறது,”நீங்கள் இன்னொரு சமுதாயத்தை விட மிகைதிருக்கிரீர்கள் என்ற காரணத்தால் வரம்பு மீறிவிடாதீர்கள் நிச்சயமாக வரம்பு மீறுபவர்களை அல்லா நேசிப்பதில்லை”. இதையெல்லாம் இஸ்லாத்தை தெரிந்திருப்பவன் கடைபிடிப்பான்.நாடு பிடிக்க வந்த மன்னன்களையல்லாம் இஸ்லாமிய அத்தாரிட்டியாக எண்ணாதீர்கள்.நான் கேட்கிறேன்,வன்முறையாலும் மிரட்டலாலும் எப்படி சார் ஒரு மதக்கொள்கையை இன்னொரு மனதிற்குள் திணிக்க முடியும்?நான் மிரட்டி நீங்கள் மாறுவார்கள?நீங்கள் மிரட்டி நான் மாறுவேனா?ஒருவனுடைய ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு நாம் இருக்கும்போது அவனுக்கு அஞ்சி நம்முடைய வெளிஅடையாளங்களை அவன் சொல்வதுபோல் மாற்றிக்கொள்ளலாம்.நம்முடைய உள்ளம் மாறுமா?ஏதோ நாம் சிறு கூட்டமாக இருந்தால்தான் இதுவும் நடக்கும்.நாம் பெரும் சமுதாயமாக இருந்தால் அவனால் மிரட்ட முடியுமா?அதிலும் அன்று இன்றுபோல் நவீனஆயுதங்கள் இல்லாத காலம்.படைபலம்தான் பெரும்பலம்.அப்படியிருக்கும்போது இங்கிருக்கும் மக்களை எப்படி அவன் மதத்திற்கு மாற்றி ஆட்சியையும் நடதிக்கொண்டிருப்பான்?அவ்வளவு சுலபத்தில் மக்கள் தங்கள் பாரம்பரிய மத அனுஷ்டானங்களை நம்பிக்கைகளை விட்டு தாங்கள் கேட்டே அறியாத ஒரு சித்தாந்தத்தை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?கொந்தளிதுவிடமாட்டார்களா?இருநூறு வருடம் வெள்ளைக்காரன் தாக்கு பிடிக்கமுடியவில்லை.இதற்கிடையில் பீரங்கி துப்பாக்கி என்ற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் இவன் காலம்.அவர்களோ கத்தி ஈட்டி அம்பு என்று மனித என்னிக்கயைகொண்டே போரில் வெற்றிபெற்ற காலத்தை சேர்ந்தவர்கள்.ஆகவே மிரட்டி மதம் மாற்றினார்கள் என்பதெல்லாம் சாத்தியமில்லை சார்.ஆசை வார்த்தை கூறி பணம் கொடுத்து சிலது நடந்திருக்கலாம்.ஆனால் இப்படி வெறும் உலகாதாயதிர்க்காக கொள்கை மாறி போகிறவனை நாம் பொருட்படுத்தவே கூடாது.இவன் எந்த மதத்திலும் ஒழுங்காய் இருக்க மாட்டான்.நன்றாய் தெரிந்துகொள்ளுங்கள் எங்களுடைய முன்னோர்களெல்லாம் அரபு வணிகர்களின் மூலம்தான் இஸ்லாத்திற்கு வந்தார்கள்.அவர்களுடைய நேர்மை வர்த்தக முறை பிறகு இஸ்லாத்தின் தெளிவான கடவுள் கொள்கை வழிபாட்டுமுறை இவையெல்லாம் கவர்ந்தது.மிரட்டி வந்திருந்தால் அன்றைக்கே நாங்கள் திரும்ப வந்திருப்போம்.இவ்வளவு உறுதியாக தெளிவாக இந்த மதத்தில் இருக்க முடியாது.முகலாயர்கள் வந்தோமா சொகுசாய் இருந்தோமா என்றுதான் இருந்தார்கள்.அதனால்தான் இத்தனை தலைமுறை இருக்க முடிந்தது.வரியை கூடகொடு படையில் சேர் என்றெல்லாம் சொன்னால் கூட மக்கள் பொறுத்துக்கொள்வார்கள் மத விஷயம் என்று வந்தால் மற்ற மதமக்களையும் சேர்த்துக்கொண்டு அடித்து விரட்டி இருப்பார்கள்.இதுதான் எதார்த்தமாக இருக்கும்.

  57. இன்னும் விடுபற்றவற்றை தொடர்கிறேன் கண்ணன்…. நாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் பதட்டம் அதிகமாக இருப்பதாக சொல்லியிருந்தீர்கள்.இது புதுமையாக இருக்கிறது கண்ணன்.எந்த பகுதி என்று சொன்னால் நன்றாக இருக்கும்.தமிழ் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிகள் ஒன்றுபட்டு கணிசமாக இருக்கும் பகுதிகள் இருக்கின்றன.நான் சென்னையில் இருந்தாலும் என் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் எருவாடியில் முஸ்லிகள் மட்டும் தனித்துதான் இருக்கிறோம்.முஸ்லிகள் மட்டுமல்ல எல்லா இனமுமே தனித்தனி பகுதியில்தான் ஒரே ஊரில் வசிக்கிறோம்.எந்த பிரச்சனையுமே இல்லை.ஆனால் ஒன்றை ஒத்துக்கொள்வேன் சமீப காலங்களில் சில உரசல்கள் முறைப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.இதற்கு சில இயக்கங்கள்தான்தான் காரணம்.உதாரணத்திற்கு ஒன்றை கூறுகிறேன்,சுவாமி ஊர்வலம் போகின்றது.நான் இருப்பது மண்ணடி பகுதியில்.முஸ்லிகள் கணிசமாய் இருக்கும் பகுதி.அதிலும் நான் இருக்கும் தெரு முஸ்லிகள் தொண்ணூறு சதவிகிதம் இருப்பது.அங்கொன்றும் இங்கொன்றுமாக நான்கைந்து ஹிந்து குடும்பங்கள்தான் உள்ளது.இரவு பதினொன்றரை மணிக்கு முத்துமாரியம்மன் அலங்கரித்து ஊர்வலமாய் எடுத்து வரப்படும்.வானவேடிக்கை முழங்க தாரைதப்பட்டையோடு ஒவ்வொரு வாரமும் இது நடக்கும்.மிகச்சாதரணமாக நடந்து கொண்டிருக்கிற விஷயம் இது.நீங்கள் நன்றாக சிந்தித்துப்பாருங்கள் வருடம் ஒருமுறை நடக்கிற வினாயகச்சதுர்தியை.எத்தனை அலப்பரை எவ்வளவு போலீஸ் எப்படிப்பட்ட பதற்றம்.என்ன காரணம் முன்னது பக்தி.பின்னது அரசியல்.அரசியல் கலந்தால் நாசம்தான்.இதே வினாயகர்ச்சதுர்தியும் இருபது வருடங்களுக்கு முன்புவரை அமைதியாகவும் பக்திப்பூர்வமாகவும் நடந்துகொண்டுதாநிருன்தது.என்
    இப்போது இத்தனை பதற்றம்?முன்னர் மக்கள் மட்டும் கொண்டாடினார்கள்.இப்போது இயக்கங்கள் கையில் எடுத்துவிட்டன.இது எல்லா மத இயக்கங்களுக்கும் பொருந்தும்.நீங்கள் ஏதாவது இயக்க முகமூடிகளை அணிந்திருந்தால் அவற்றை கழற்றி வைத்துவிடுங்கள் புரியும்.நீங்கள் சொன்ன அரசியல் படுகொலைகளுக்கும் இது பொருந்தும்.நம் லேசாக தடுமாறி இவர்களின் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாநோமானால் இரு தரப்பிலும் உள்ள இயக்கவாதிகளின் படுகொலைகளைப்போல நாமும் பலியாகும் பரிதாப நிலை உண்டாகும்.இதுதான் அவர்களின் நோக்கம்.காஷ்மீர் பிரச்சனையை பற்றியும் கேட்டிருந்தீர்கள்,அது தனியாக விவாதிக்க வேண்டிய ஒன்று.காஷ்மீரத்து மக்கள் இந்திய பாகிஸ்தானிய அரசியலால் துயருற்றுநிற்கும் அவலம்.உமர்அப்துல்லா கருத்தெல்லாம் நாம் விவாதிக்க வேண்டிய விஷயங்களல்ல.காஷ்மீர் பிரச்சனைபற்றி நீங்கள் கொஞ்சம் படித்தால் இதைப்பற்றிய உங்கம் புரித மாறலாம்

  58. சகோதரர் அறிசோணன் அவர்களின் பதிவு எவ்வளவு இனிமையாய் இருந்தது தெரியுமா?மிகப்பெரிய நம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்தது சொந்த வாழ்க்கையின் சில சோகங்களைஎல்லாம் மறக்க செய்துவிட்டது.இப்படி நமக்குள் மனம் விட்டு பேசிவிட்டால் எந்த தீய சக்தியும் ஒன்றும் செய்யமுடியாது.

  59. அன்பின் ஜெனாப் மீரான் சாஹேப்

    பாருங்கள் மறுபடி என்னை வ்யாசத்தின் கருப்பொருளிலிருந்து விலக்க விழைகிறீர்கள்

    \\ கிருஷ்ணகுமார் அவர்கள் எதை சொன்னாலும் தமிழில் சொல்லக்கூடாத? \\

    சொல்லக்கூடாதா? — நெடில் – பிழையாக எழுதி விட்டீர்கள் இல்லை?

    நீங்கள் தளத்திற்குப் புதிது அல்லவா? என் மொழிநடையை பல அன்பர்கள் ரசித்திருக்கிறார்கள். பலர் கிண்டலடித்திருக்கிறார்கள். பலர் வைதும் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது. காக்கை கா கா என்று கூவுவதும் குயில் எப்படி குஹூ குஹூ என்று கூவுவதும் இயல்போ அப்படியே இயல்பானது எமது மொழிநடை.

    சில சமயம் மாற்றுமொழிப்பதங்கள் நிறைந்து செயற்கையாக இருக்கிறது என்று பல அன்பர்கள் கடிந்து கொண்டதும் உண்டு. அதில் உள்ள ந்யாயத்தையும் அறிவேன். வலிந்து முனைந்தால் தூய தமிழில் நிச்சயம் எழுதுவேன். இயல்பாக எழுதினால் கலப்பு மொழிநடை தான். வேண்டுமானால் அன்பின் பாற்பட்டு நீங்கள் வைதாலும் பிணக்கேதும் கொள்ளேன். சரியா? 🙂

    \\\ முஸ்லிகளாகிய நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள்தான் கற்றுத்தருவோம்.எங்கள் மத கருத்திற்கு ஒட்டியதாகத்தான் உங்கள் மதக்கொள்கைகள் இருக்கவேண்டும். நல்ல சிந்தாந்தம்! \\\\

    ஐயன்மீர் இப்படி நான் சொல்லாததை ஏன் தப்புத்தப்பாக என் கருத்தாகத் திணிக்கிறீர்கள்?

    உலகிலுள்ள அனைத்து மக்களும் எமது சஹோதரர்கள் என்று எம் மதம் போதிக்கிறது. நீங்கள் எங்கள் மதத்தைப் பின்பற்றாததால் நரகம் போவீர்கள் என்று எங்கள் மதம் போதிப்பதில்லை. இது தான் எம் மதம் போதிக்கும் கருத்து. இது நல்ல சித்தாந்தம் தான். 🙂

    அதே சமயம் உங்களது மற்றும் எமது சஹோதரர்களான அஹ்மதியா முஸல்மாணியர்களுக்கு, பரேல்வி சுன்னி முஸல்மாணியருக்கு, ஷியா முஸல்மாணியருக்கு, ஸூஃபி முஸல்மாணியருக்கு……… முஸ்லீம்களாகிய அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் தான் கற்றுத் தருவீர்கள். நீங்கள் சொல்லும் கருத்துக்களுடன் அவர்கள் கருத்து பேதம் கொண்டால் அவர்களை முஸ்லீம்களே இல்லை என்று சொல்வீர்கள்…… உங்கள் கருத்துக்களை ஒட்டியதாகத் தான் அவர்கள் மதக்கொள்கைகள் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது நல்ல சித்தாந்தம் இல்லை தானே 🙂

    ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் தான் இப்போதெல்லாம் நாம் சொல்லாத விஷயத்தை சொன்னது போன்று பாவலா செய்து பிழையான ராஸ்தவில் செல்கிறார் என்றால் …………. நீங்களும் அப்படி பிழையான ராஸ்தாவில் ஏன் செல்கிறீர்கள் 🙁

    \\\ எங்கள் மத கருத்திற்கு ஒட்டியதாகத்தான் உங்கள் மதக்கொள்கைகள் இருக்கவேண்டும் \\

    என்று எங்கும் நான் சொல்லியதில்லையே. அவரவருக்கு ஸ்வதந்த்ரமாக அவரவர் மதக்கொள்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு ஹிந்துஸ்தானத்தில் ஸ்வதந்த்ரம் உண்டே. ஹிந்துஸ்தானத்தை துண்டாடி மதவெறி இஸ்லாமியர் பாகிஸ்தான் என்று ஒரு இழிவு நிலப்பரப்பை உருவாக்கி………… எப்படி இருந்த பாகிஸ்தான்……….. இன்று இப்படிக்காக பாக்கி ஸ்தானாக (மீதி ஸ்தானக) இறையருளால் கருவறுக்கப்பட்ட ………… இழிவு நிலப்பரப்பில் மட்டிலும் தான் நீங்கள் சொல்லும் செயல்பாடுகள் சாத்யம். ஹிந்துஸ்தானத்திலில்லை 🙂

  60. அன்பார்ந்த ஸ்ரீ அரிசோனன்

    A few explanations, as far as I know, would be in order

    ரமதான் மாஸத்தில் இஸ்லாமிய சஹோதரர்கள் ஒழுகும் உண்ணா வ்ரதம் ROza என்று சுட்டப்படுகிறது.

    சூர்யோதயத்துக்கு முன் துயிலெழுந்து அந்தந்த ஸ்தலத்துக்கு விதிதமான நாழிகைக்கு முன் ஆஹாராதிகள் உட்கொண்டு விடுவார்கள்.

    சாயரக்ஷை நாள் முழுதும் கடைப்பிடித்த உண்ணா வ்ரதத்தை நிறைவு செய்து ஆஹாரம் உட்கொள்வது — to break the fast —- இஃப்தார் என்று சுட்டப்படுகிறது.

    ரமதான் மாதம் முடிந்த அன்று மறுநாள் காலை ஈத்(பண்டிகை) எனும் ஜஷ்ன் (கொண்டாட்டம்) அனுஷ்டிக்கப்படுகிறது.

    இந்த வருஷத்து ஈத் உல் ஃபித்ர் – (மீடி ஈத் – meethi Id – Festival of sweets) 28 ஜுலை அன்று அனுஷ்டிக்கப்பட்டது.

    ஈதிற்கு முந்தைய தினம் வரை சாயரக்ஷை தினப்படி ரமதான் மாஸத்தில் அந்தந்த ஸ்தலத்துக்கு தகுந்த படிக்கு விதிக்கப்பட்ட நாழிகையில் வ்ரதத்தை முறித்து ஆஹாரம் உட்கொள்வது இஃப்தார்.

    ஈத் முபாரக் (வாழ்த்து) தெரிவிக்கப்பட வேண்டியது ஈத் அன்று.

    நான் தெளிவு செய்திருக்கிறேனா அல்லது கொளப்பரிகேஷன் செய்திருக்கிறேனா என்பதை விஷயம் தெரிந்த உஸ்தாதுகளிடம் விட்டு விடுகிறேன்.

  61. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை எனக்கு டியூஷன் எடுத்தது ஒரு அந்தணர். பெரும்பாலும் அவர் வீட்டில்தான் இருப்பேன். என் வயதையொத்த அந்த ஆசிரியரின் மகளும் நானும் படிப்பு நேரம் போக அதிகம் விளையாடிக் கொண்டிருப்போம். நவராத்திரியில் கொலு பொம்மைகளை தூசி தட்டி அழகாக அடுக்கி வைப்போம். சுவைமிக்க பலகாரங்களும் கிடைக்கும். அவரது குடும்பத்தை சந்திப்போம் என்று சில நாட்களுக்கு முன் சென்றேன். அந்த வீட்டில் பெரிதாக பூட்டு தொங்கியது. இந்த முறை தமிழகம் சென்றால் அவசியம் அவரது குடும்பத்தினரை சந்திப்பேன்.

  62. Please Mr Meeranshaib, no more taqyyas.
    “குரான் மிகத்தெளிவாக சொல்கிறது.”இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் கிடையாது ,நேர் வழி தெளிவாகிவிட்டது.விரும்புபவர் பின்பற்றலாம்”.இதுதான் இஸ்லாமிய நெறிமுறை”
    This is the Meccan verses when Islam was minority force. The Madina verses supersede the earlier versions.The beauty about Koran is it’s pliability. God cannot make up his mind. Allah changes his mind so often!
    Will you or dare you declare openly in your mosque that a Muslim can leave Islam whenever he wants to because there is no compulsion in Islam?

  63. The problem is bcos the Koran is interpreted differently by different people. When I asked an islamic friend on why muslim women are not allowed into mosques, he said’ It is stated so in the Koran”.

    Another friend of mine, a shia, said that in his sect, wmen are allowed to pray in mosques. He claims that Ali is the true heir of the prophet which is not agreeable to everyone. He gave another info that there are nearly 70 sects in Islam.

    A girl was raped by her father-on-law & the verdict given by the clergy was that she had committed “haraam, so she must be kept away form the house for a while & then after the sentence, she must serve him as is husband.

    How shocking!

    Not a word uttered by the so called Islam scholars on this issue.

    A man divorces his wife over the internet by typing “Talaq” thrice, another man utters “talaq” thrice over the phoine to his wife & both the acts are branded correct by the Deoband clergy.

    Strange religion!

  64. பயங்கரவாதம் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. இதை குரான், ஹதீத், சீரா(இப்னு இஷாக், தபரி போன்றவர்கள் எழுதிய முஹம்மதின் வாழ்க்கை வரலாறு) என்ற ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்களை படித்தால் எவரும் தெரிந்து கொள்ளலாம்.

    அல் வலாஹ், அல் பராஹ் என்பதும் இஸ்லாமிய கொள்கை. இதற்கு அல்லாஹ்வுக்காக நேசிப்பது, அல்லாஹ்வுக்காக வெறுப்பது என்பது பொருள். அதாவது முஸ்லிம்கள் சக முஸ்லிம்களை அல்லாஹ்வின் உவப்பை பெறுவதற்காக நேசிக்க வேண்டும். அதேபோல் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் உவப்பை பெறுவதற்காக முஸ்லிமல்லாத மனிதர்களை வெறுக்க வேண்டும் என்பதுதான் இந்த அல் வலாஹ், அல் பராஹ் என்கிற இஸ்லாமிய கோட்பாட்டின் மைய்ய பொருள்.

    முஸ்லிம்கள் எங்கு மைனாரிட்டியாக, பலம் குறைந்தவர்களாக இருக்கிறார்களோ அங்கு மாற்று மதத்தினரை, நாத்திகர்களை மதிப்பதாக, அவர்களோடு நட்பு கொள்வதாக நடிப்பார்கள். இப்படி நடிக்கும்படியும் ஆனால் உள்ளத்தில் அவர்களை வெறுக்கும்படி இஸ்லாம் கூறுகிறது. இதற்கு ஆதாரம் வேண்டுமானால் தருகிறேன்.

    எனவே முஸ்லிம்களின் நடிப்பை நம்ப கூடாது, அவர்களோடு நோன்பு கஞ்சி குடிப்பது, அவர்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது போன்ற கேணத்தனமான அல்லது நாடக நடிப்பு தேவை இல்லை என்பது என் கருத்து. அதே சமயம் எந்த முஸ்லிமை கண்டாலும் நாம் அவர்களை வெறுக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.

  65. 1. “Kill the unbelievers wherever you find them.” Koran 2:191
    “Make war on the infidels(non believers of Islam) living in your neighborhood.” Koran 9:123
    “When opportunity arises, kill the infidels(non believers of Islam) wherever you catch them.” Koran 9:5

    “Any religion other than Islam is not acceptable.” Koran 3:85
    “The Jews and the Christians are perverts; fight them.”… Koran 9:30
    “Maim and crucify the infidels if they criticize Islam” Koran 5:33
    “Punish the unbelievers with garments of fire, hooked iron rods, boiling water; melt their skin and bellies.” Koran 22:19

    The unbelievers are stupid; urge the Muslims to fight them.” Koran 8:65
    “Muslims must not take the infidels(non belivers of Islam) as friends.” Koran 3:28
    “Terrorize and behead those who believe in scriptures other than the Qur’an.” Koran 8:12
    “Muslims must muster all weapons to terrorize the infidels(non belivers of Islam).” Koran 8:60)

    2. Qur’an 2:193 says; “Fight them until there is no more Al Fitnah (‘Al Fitnah’ meant Jews and Christians at the time, but in today’s context the word means all religious followers including Buddhists&Hindus) and religion is only for Allah. And Qur’an 9:5 says; “Fight and kill the disbelievers wherever you find them, take them captive, harass them, lie in wait and ambush them using every stratagem of war.”

    Referring to Hadith, Ishaq:324 says; “Fight them so that there is no more rebellion, and religion, all of it, is for Allah only. Allah must not have rivals.” And Ishaq:587 says; “Our onslaught will not be a weak faltering affair. We shall fight as long as we live. We will fight until you turn to Islam, humbly seeking refuge. We will fight not caring whom we meet. We will fight whether we destroy ancient holdings or newly gotten gains. We have mutilated every opponent. We have driven them violently before us at the command of Allah and Islam. We will fight until our religion is established. And we will plunder them, for they must suffer disgrace.”

    Islam oru Amaidhi Maargam!

  66. @ Anand Sagar,

    That’s what your master stroke. you like Ali Sina clearly understanding the mindset of Islam. Majority of muslims like meeran affected by this mind set.Even this guy not understand about Islam, qur-on and hadiths.

  67. now the time come to create the awareness about real Islam among HIndus and INdian muslims. Maximum muslims following sufi sect . Now, Gradually many people converting to wahabhi sect.
    we stop this wahbhaisam by educating about wahabisam among Indians.

  68. அரேபிய வல்லாதிக்கத்தின் மறுபெயா்தான் இசுலாம். அரேபியன் கலாச்சாரதம் தான் அல்லாவின் கலாச்சாரம் அதைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும்.அரேபிய்ன போல் வாழாதவன் அனைவரும் காலிகள்.கொல்லப்பட வேண்டும் என்பதே இசுலாம் .சாி எல்லாம் உண்மைதான் .பாக்கிஸ்தானில் உள்ளதுபோல்தான் மதரஸாக்கள் இந்தியாவிலும் உள்ளது. பண்டைய படையெடுப்பு காரணமாக மக்கள் மாறியிருக்கின்றாா்கள்.என்படி என்ன செய்வது. நாமும் வாள் எடுத்து இந்தியாவில் உள்ள அரேபிய மதவாதிகளை காலி செய்ய வேண்டும் என்கின்றீா்களா ? வேண்டாம் . வாகாபியா்கள் நிச்சயம் தோற்றுப் போவா்கள். இந்துக்கள் தங்களை ச்ற்று சாி செய்து கொண்டால். இந்துக்களுக்கு முறையாக சமய கல்வி விவேகானந்தாின் வழியில் அளிக்க வேண்டும்.அனைத்து இந்துக்களும் பத்மானசனத்தில் அமா்ந்து வழிபாடு செய்ய பழக்க வேண்டும். இந்துக்களின் நன்மை கருதி நாம் நமது கோவில்களில் சிறு தெய் வழிபாடுகளை முற்றிலும் கைவிட வேண்டும். ஒரு கோவில் ஒரு சிலை ஒரு விளக்கு ஒரு படையில் என்று நமது ஆலயங்கள் ஸ்ரீநாராயண குரு போதனையின் அடிப்படையியல் மாற்றி அமைக்க வேண்டும். நிச்சயம் இந்துக்கள் வலிமை பெறுவாா்கள். இந்துக்கள் வலிமை பெற்றால் மனித வளம் -பலம்-ஒற்றுமை பெற்றால் முஸ்லீம்கள் தானாகவே மாறி வீடுவா்கள். இன்றும் முஸலீம்கள் மனதில் இந்துத்துவா ஆழமாக உள்ளது. சமூக நெருக்கடிக்கு பயந்துதான் அரேபியா்கள் போல் நடிக்கின்றாா்கள். முகம்மது ஒரு பெருங்காய டப்பா என்ற உண்மையை உணா்ந்தவா்கள் ஏராளம் ஏராளம் முஸ்லீம்களாக உள்ளாா்கள்.குரானம மற்றும் முகம்மதுவின் மீது உள்ள அதிருப்திதான் ஏராளமான கிளை பிாிவுகள் ஜமாத்கள் உருவாகிக் கொண்டிருப்பதற்கு காரணம். அதைக்கண்டு பயந்து போய்தான் இசுலாமியபிரசாரத்தை நடத்த பல அமைப்புகள் அண்மை காலத்தில் தோன்று வருகின்றன.இந்து இயக்கங்களில் நல்ல இந்து சமய சொற்பொழிவாளா்கள் இலவசமாக உழைக்கக் 4டியவர்கள் இல்லையே. சமய கல்வி என்பது மறந்து போய்விட்டது. விவேகானந்தரை வீடு தோறும் அறிமுகப்படுத்தினாலே பிரமாதம் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *