தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?

ஜெயலலிதாவிற்கு வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில்  நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், 100கோடி அபராதத் தொகையையும் விதித்து சிறப்பு தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதையொட்டி சமூக வலைத்தளங்களில் வெளிவந்த பெரும்பாலான கருத்துகள்   பிஜேபி வளர இது அருமையான வாய்ப்பாகவே அமையும் என்கிறார்கள். ஆனால் பிஜேபி வளர வேண்டுமானால் எதைச் செய்ய வேண்டும்? தற்போதைய முறையில் பிஜேபி வளர சாத்தியமில்லை என்பதற்கான காரணங்களைத் தான் கீழே  எழுதியுள்ளேன்.

bjp_nagerkovil_meeting_july_2010_2நடுநிலையாளர்கள் இங்கே பிஜேபி வளர்வதற்கே இந்தத் தீர்ப்பு வழிவகுக்கும் என்று அஞ்சுகிறார்கள். அதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் ரொம்பவே வேடிக்கையானது. அதேபோல நிறைய பிஜேபி ஆதரவாளர்களும் இதைப் பயன்படுத்தி பிஜேபி தமிழ்நாட்டில் எளிதாக வளர்ந்து விடும் எனக் கனவு காண்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில்,  பிஜேபி தலைவர்களைத் தற்போது  தேர்வு செய்யும் முறையைக் கொண்டு  பிஜேபியை வளர்க்க இயலாது. பிரபலமான ஒரு முகம் தமது  கட்சிக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணி பிஜேபி செயல்படுகிற வரைக்கும்  தமிழக பிஜேபி வளர வாய்ப்பே இல்லை. ரஜினியை அழைப்போமா, விஜயகாந்தைக் கட்சியைக் கலைக்கச் சொல்வோமா என அழைப்பு விடுத்துக் கொண்டு செயல்படுதல் என்பது  கட்சியின் பலவீனமாகவேக் கருதப்படும். அவர்களை வலுக்கட்டாயமாகவோ, தாங்குவதென்பதோ  கட்சி தமது தலைமையை நம்பாமலும், தலைமையே தன்னை நம்பாமல் விடுக்கிற அழைப்புகள் உள்ள வரை பிஜேபி வளர வாய்ப்பே இல்லை. இது போன்ற அதிமுக, திமுக கட்சிகளுக்குப் பாதகங்கள் வருகிற போது வளர்கிற மாதிரி தெரியும்.  பின்னர் வீழ்ந்து விடும் என்பதே யதார்த்தம்.

தற்போதுள்ள  தலைவர்களில் H. ராஜா(உதாரணம் மட்டுமே) போன்ற யாரையாவது ஒருவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி, அந்த ஒரு தலைவரை “ஹீரோயிச” லெவலுக்குக் கொண்டு வந்து பிஜேபி வெற்றி பெற்றால் இவர் தான் முதல்வர் என்ற நம்பிக்கையைக் கட்சி மக்களிடத்தில் ஏற்படுத்தாத வரை தமிழ்நாட்டில் பிஜேபி ஒரு போதும் ஆட்சி அமைக்க இயலாது. ஏனென்றால் தமிழ் மக்களுக்கு ஹீரோயிசப் பாணி அரசியல் செய்யும் போது மட்டுமே ஒருவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் (மன வியாதி) இருக்கிறது.

பிஜேபி தலைவர்களில் யார் ஒருவரேனும்  கட்சி சார்பாகத் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளாரா என யோசியுங்கள். தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரஸ் போல இரு வருடங்களுக்குத் தலைமையை மட்டும் மாற்றுவது காங்கிரசுக்கு எந்த அளவிற்குப் பின்னடைவைத் தந்ததோ அதே போலவே பிஜேபியும் உள்ளது என்பது கட்சிக்குப் பின்னடைவேயன்றி முன்னேறுவதற்கான எந்தப் பயனையும் தராது.

தேசியக் கட்சியாகத் தலைவரை மாற்றி மாற்றித் தேர்ந்தெடுப்பதற்கும், மாநிலத்தில் தலைமையை மாற்றுவதற்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. தேசியக் கட்சியாக இருக்கும் போது குறிப்பிட்ட சில வருடங்களுக்கு ஒரு முறை கட்சித் தலைமையாக வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கட்சி அனைத்து மாநிலத்தில் உள்ள நிர்வாகிகளுக்கும் பொறுப்புகளை வழங்குகிறது, மேலும் கட்சியை அது வளர்க்கவும் வடக்கில் உள்ள தலைமைக்கு மட்டும் முக்கியத்துவம் என்பதல்லாமல் தென் மாநிலத்தில் உள்ளவர்களையும் தலைமையாகக் கொண்டு வருவதன் மூலம் தமது கட்சியைத் தேசியக் கட்சியாக அடையாளப்படுத்த அது உதவும் . அது தேவையும் கூட.  சரியான முறையும் கூட.

th_bjp_protest_rally

ஆனால் மாநிலத் தலைமை என்பது அம்மாநிலத்தில் கட்சி அரசியல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அங்குள்ள மாநிலக் கட்சிகள் எத்தகைய முறையில் செயல்படுகிறது என்பதைக் கணக்கில் கொண்டே அதற்குரிய வகையில் தலைமைப் பொறுப்பிற்கு ஒரேயொரு நபரை நெடிய காலத்திற்கு பதவி வகிக்கும் வண்ணம் பிஜேபி சிந்தித்து , நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்திலுள்ள மாநிலக் கட்சியைப் பாருங்கள். அனைத்து மாநிலக் கட்சிகளுமே ஒரு தலைமை அடிமையாகவே உள்ளது. அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மாநில ஆட்சியைக் கைப்பிடிக்க பிஜேபி தகுதியான  ஒரேயொரு தலைவரைக் குறைந்த பட்சம் பத்து வருடங்களுக்காகவாவது வைத்துக் கொள்ளாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது.  தலைவரை அடிக்கடி மாற்றுவது என்பது மாநிலத்தில் நான் உன்னை விடப் பெரியவன் என்ற மனோவியாதியை மட்டுமே தலைவர்களுக்குள்ளாக உருவாக்கும். மேலும் தமக்கு ஜால்ரா அடிக்கும் தொண்டர்படைக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை பிஜேபி உணராத வரை மாநிலத்தில் கட்சி வளர்ச்சி என்பதைக் கனவு காணாதீர்கள் பிஜேபி விசுவாசிகளே!!! இதை நாம் காங்கிரசிலும் காணலாம். பிஜேபியிலும் காணலாம்.

திமுகவில் வேறு வழியில்லாமல் கலைஞர் இருக்கும் வரை அவரே தலைவர் என்று வெட்டிக் கொண்டும் வெட்டாமலும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை.

இங்கு கொள்கை, கட்சி அனைத்தையும் தாண்டி தனி நபர் துதிதான் மிக முக்கியமானது என்ற அடிப்படையில் தான் தமிழ்ச்சமூகம் இருக்கிறது. விஜயகாந்திற்கு முதல் இரு தேர்தல்களில் விழுந்த ஓட்டாக இருக்கட்டும், அதிமுகவில் யாரை நிறுத்தினாலும் மக்கள் தேர்ந்தெடுப்பதாக இருக்கட்டும். இரண்டிலுமே தலைவர் என்பவர் யார் என்பதைப் பார்த்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள்தான் நாம். ஆதலால் மக்களின் உணர்ச்சியைப் பெருக்குகிற, ஹீரோயிச பாணியிலான ஒரு தலைவரை பிஜேபியினர் அடையாளம் காணாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது.

நான் முன்வைக்கிற கருத்தாக்கம் என்பது அறிவிலிருந்து நோக்கினால் தவறுதான். ஆனால் ஒரு சமூகத்தை , அவர்களின் மனவோட்டத்தில் சென்று அவர்களை உங்கள் பக்கம் திசை திருப்பி வெற்றி பெற்றால் மட்டுமே நீங்கள் ஆளத் தகுதியைப் பெற இயலும். மேலும் பிஜேபி  என்ற கட்சியை வளர்க்கவும்,  மக்கள் சேவையைத் தொடரவும் உதவும்.

(லட்சுமண பெருமாள் மின்சாரத் துறை பொறியாளர் மற்றும் சமூக ஆர்வலர்.  தனது சிந்தனைகளையும் எண்ணங்களையும்  தொடர்ந்து  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி வருகிறார்). 

58 Replies to “தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?”

  1. 100% very good put a very good leader for tamil nadu and also cover the minorty people to erase the bad name of bjp from there heart this is way to grow

  2. ஐம்பது வருட தமிழக அரசியலில் ஒரு மத்திய கதாநாயகனை வைத்தே அரசியல் பிழைப்பு இது நாள் வரை நடந்தது. சினிமாவும் அரசியலும் பின்னி பிணையபட்டு சுவர் போஸ்டர்களில் சினிமா நடிகர்களா அல்லது அரசியல் தலைவர்களா என்றே வித்தியாசம் தெரியாத அளவிற்க்கு தமிழகத்தை கடந்த திராவிட ஆட்சியாளர்கள் சீர்கெட்டு குட்டிச்சுவர் ஆக்கியது போதும். பாரதத்தில் சங்கம்(RSS) வளர்ந்த விதம் எந்த ஒரு தலைவனையும் முன்னிருத்தி அல்ல,மாறாக பாரத் மாதாவை மட்டுமே நம்பி என்பதை நினைவில் கொள்க. தற்போது உள்ளது புதிய தலைமுறை.. இது புதிய ரத்தம்.. இணைய காலம்.. உண்மை எது பொய் எது என்று ஆராய்ச்சி செய்து உணர்ந்துகொள்ள பல வழிகள் உண்டு. 2016 க்கு பிறகு இது கான்கூடாக தெரியும்.

  3. இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நிலையில் பா ஜ கட்சி ஆட்ச்சிக்கு வருவது மிகவும் கடினம். திராவிட கட்சிகளின் இடைவிடாத மொழிவெறி கூடிய வெறுப்பு அரசியல் தமிழர்களை பாரத நாட்டிலிருந்து தனிமைபடுத்திவிட்டது. இங்கு ஜாதி அரசியலே ஓங்கி விட்டது. இதற்கு அகில இந்திய கட்சிகள் டில்லியின் தலைமையே நாடி வருவது ஓர் காரணம். பா ஜ கட்சி இங்கு வளரவேண்டுமானால் தாங்கள் கூர்யதுபோல் முதலில் நல்ல (இளம்) தலைவரின் கீழ் ஜனநாயகமுறையில் கீழ்மட்டதிலிருந்து கட்சியை வளர்க்கவேண்டும். தவிர ஆங்கிலத்தை அரசியல் மொழியாக வளர்க்க ஆவன செய்யவேண்டு. இந்தி மற்ற நாட்டுமொழிகளுக்கு இணையாக மட்டும் இருக்கவேண்டும். .

  4. அருமை! அருமை! சரியாக அடித்தீர்கள் நெற்றிப் பொட்டில்! மேலும் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன்:
    1. ஆட்சிக்கு வருமுன்பே கட்சி உள்பூசல்கள், பிஜெபி வளர்ச்சிக்கு பெரிய தடை! இந்துத்துவ கருத்துக்கள் கொண்ட எல்லொரையும் அணைத்துச் செல்லாமல் காழ்புணர்ச்சியுடன் செயல் பட்டது. உதாரணம் சுப்ரமணிய சுவாமியை ஒதுக்கியது; அவருக்கு மந்திரி கிடைக்கக்கூடாது என்று செயல் பட்ட சிலர்!
    2. தமிழக இந்துக்களை இந்துக்களாக மாற்றுவது தலையாய கடமை! திராவிட மாயையில் சிக்கி தங்களை தாங்களே அழித்துக்கொள்ளும் self destructive mode-ல் இருக்கும் தமிழக இந்துக்களை மனம் மாற்றுவது முக்கியம். இதற்கு பிஜெபி அடிமட்ட தொண்டர்களின் செயல் பாடுகள் மிக முக்கியம். கிரிஸ்தவ மதமாற்ற ஊழியற்கள் வேலை செய்வது போல் அடிமட்டத்தில் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஒரு இந்து மையம் அமைக்க வேண்டும்; அதில் முழு நேரத் தன்னார்வத் தொண்டர்கள் செயல் பட்டு, அந்த ஊரிலுள்ள இந்துக்களிடம் நேரடித் தொடர்பு வைத்து, வாரம் ஒரு முறை அவர்களைக் கூட்டி, பேச்சுத் திறன் மிக்க இந்துத்துவ தலைவர்களை அழைத்து, பட்டிமன்றம், சமய வகுப்புகள் நடத்த வெண்டும். இந்து மதத்தை பற்றிய அறியாமையே இந்துக்களின் அவலத்திற்குக் காரணம். சைவ நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள் வரலாறுகளையும், அவர்கள் ஆற்றிய அற்புதங்களையும் எடுத்துச் சொன்னால் மனம் மறாதொரும் உண்டோ? அகஸ்த்தியர் முதல் வாரியார் வரை பலரும் ஆற்றிய தமிழ் பணியை அறிந்து நெகிழாதோர் இருப்பரோ?
    3. திராவிட மாயையில் சிக்கி பிராமண வெறுப்பில் தவிப்போர் பலர்! ஏன் வெறுக்கிறோம் என்று அறியாமலேயே வெறுப்போர் பலர்! ஆரியன்- திராவிடன் என்ற பாகுபாடெல்லாம் கடந்த 150 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப் பட்டது; உண்மையில் ஆரியர், திராவிடர் என்ற இனங்கள் இல்லை! அது ஆங்கிலேயராலும், மிஷனரிகளாலும் தோற்றுவிக்கப் பட்ட பிரித்தாளும் சூழ்ச்சி என்று ஆதாரங்களோடு எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளாதோர் உண்டோ?
    4.பெரியாரின் சமூகப் புரட்சி உண்மையில் இந்துக்களை பிளவு படுத்தும் யுக்தியே என்று ஆதாரத்தோடு விளக்கினால் திருந்தாதொர் உண்டோ?
    5.ஹிந்தி ஒழிக என்ற கோஷங்கள் உண்மையில் தமிழர்களை, இந்தியாவில் இருந்து பிரித்து, அவர்களது வேலை வாய்ப்பினை குறைத்தது தவிர வேறு ஒன்றையும் சாதிக்கவில்லை என்று தமிழர்களை புரிய வைப்பது கடிமனமா என்ன? மோடி அவர்கள் முதன் முறையாக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கேட்டு அழாத ஒரே இனம் தமிழ் இனம் மட்டும் தான்! இது தான் திராவிடக்கட்சிகளின் வெற்றி.
    இந்த விஷயங்களை தமிழன் புரிந்து கொண்டால் அவனை விட இந்து விசுவாசி வேறு யாரும் இருக்கமட்டார்கள்!

  5. BJP never grow in tamilnadu unless it takes real interest in the development of poor & downtrodden people.

  6. திரு. லட்சுமண பெருமாள எழுதியுள்ள கட்டுரையை படித்தேன் மிகவும் அருமையாக அமைந்திருக்கிறது. சில கருத்துக்கள் அகில இந்திய தலைமைக்கு ஒவ்வாத கருத்துக்கள். ஜனசங்கம் துவக்க்ப்பட்ட காலத்திலிருந்தே, தனி நபரை முன்னிலைப் படுத்தி கட்சியை வளர்க்க முயல கூடாது என்பதற்காகவே, அமைப்பு ரீதியாக தலைவர் பதவி என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும் என்பதாகும். இதன் காரணமாக பல மாநிலங்களில் கட்சியில் கட்டுப்பாட்டை மீறிய மூத்த தலைவர்கள் வெளியேற்றிய போது கூட கட்சி ஆட்டம் காண வில்லை. குஜராத்தில் கேசுபாய் பட்டேல், அவருக்கு முன் சங்கர்சிங் வகேலா, டெல்லியில் மதன்லால் குராணா, ராஸ்தானில் ஜெஸ்வந்த் சிங். கர்நாடகாவில் ஏ.கே.சுப்பையா இப்படி பல மாநிலங்களில் அதன் தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறிய போது அவர்கள் பின்னால் கட்சியின் தொண்டர்கள் வெளியேற வில்லை. அகில இந்திய தலைவராக இருந்தவர் பேராசிரியர் பால்ராஜ் மதோக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் வெளியேற்றப்பட்டார். இதற்கு அடிப்படை காரணம் கட்சியில் தனிநபர் துதிபாடக் கூடாது, கட்டுப்பாட்டை மீறியவர்கள் எவராக இருந்தாலும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது தான். தமிழகத்தை பொறுத்த வரை பாரதிய ஜனதா கட்சி வளர வேண்டுமானால், துடிப்புள்ள இளைஞர்கள் கட்சியில் தன்னலம் கருதாமல் இணைந்து பணியாற்ற வேண்டும். உதாரணமாக கோவையில் பாராளுமன்ற தேர்தலின் போது, கட்சியின் வேட்பாளருக்கு எதிராக உண்ணாவிரம் இருந்த மாவட்ட தலைவர் மீது உரிய நடவடிக்கை கிடையாது, ஆனால் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவர் மேயர் வேட்பாளர் ஆனால் இன்று இதற்கு நேர்மாறாக பல சம்பவங்கள் நடக்கின்றன. ஜனசங்கமாக இருந்த போது, அகில இந்திய தவைர்களாகட்டும், மாநில தலைவர்களாகட்டும், சுற்றுபயனத்தின் போது. தொண்டர்களின் இல்லங்களில் மட்டுமே தங்குவார்கள், ஆனால் திராவிட இயக்கத்துடன் கூட்டு வைத்துக் கொண்டதால், குளிர்சாதனம் பொருத்திய விடுதியில் தங்கும் கலாச்சாரம் வளர்ந்துள்ளது. பண்டிட் தீனதாயாள் உபாத்தியாயா கூறிய கருத்துக்கள், நடத்திக் காட்டிய வழிகாட்டிகள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழகத்தில் ஜெயல்லிதாவை கைது செய்த்தால் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து விடும் என்ற எண்ணமே தவறானது. மற்ற கட்சியின் தொண்டர்களை நம்பி பாரதிய ஜனதா கட்சி இருக்க கூடாது. சித்தாந்த்த்தின் அடிப்படையில் உருவாகும் தொண்டர்களோ நிலையாக இருப்பார்கள், அகவே அப்படிப்பட்ட தொண்டர்களை உருவாக்க வேண்டும்

  7. உலக அரசியலில் கட்சிகள் என்றுமே , தலைவர்களை அடிப்படையாக, மையமாக வைத்தே வளர்ந்தன. இப்போதும் அப்படித்தான். அமெரிக்காவில் இருக்கும் ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி, இங்கிலாந்தில் இருக்கும் கன்சர்வேடிவே கட்சி, லேபர் கட்சி, அதே போல இந்தியாவில் இருந்த காங்கிரஸ், மற்றும் இந்தியாவில் இருக்கும் பாஜக, தமிழ் நாட்டில் இருந்த திமுக, மற்றும் தமிழ் நாட்டில் இருக்கும் அதிமுக என்று எல்லா கட்சிகளுக்குமே தலைவர்களை மையமாக கொண்டே கட்சிகள் வளர்ந்தன. கம்யூனிசம் என்ற தவறான கொள்கை கொண்ட கட்சி கூட, சிறிதுகாலம் உலகில் சில நாடுகளில் அதிகாரம் செய்யும் வாய்ப்பைப் பெற்றது, அந்தகட்சிக்கு கிடைத்த தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் தான். தலைமை என்ற ஒன்றை அடையாளம் காட்டினால் தான் மாநில அளவிலும், மத்திய அளவிலும் கட்சிக்கு செல்வாக்கு பெருகும். அந்த தலைமை டெல்லியில் இருந்து திணித்ததால் காங்கிரஸ் கட்சி அழிந்தது. உள்கட்சி ஜனநாயகம் இல்லாவிட்டால் எந்த கட்சியானாலும் இதே கதி தான். இன்றைக்கு தமிழக பாஜகவில் நல்ல டீம் இருக்கிறது.ஹெச்.ராஜா, தமிழிசை, வானதி சீனிவாசன் என்று சிறந்த பேச்சாளர்களும், நல்ல ஆற்றல் பெற்றோரும் ஏராளமாக இருக்கின்றனர். இவர்களில் நிச்சயம் எதிர்காலத்தில் சிறந்த பங்கு ஆற்றும் தேசீயத் தலைவர்கள் உருவாவார்கள் என்பது நிச்சயம். தலைவர்களே வரலாற்று திருப்புமுனைகளை ஏற்படுத்துகிறார்கள் என்பது அனுபவம். மோடி ஒரு உதாரணம். தமிழகத்தைப் பொருத்தவரை தன்னிகரற்ற தலைவராக விளங்கிய எம் ஜி ஆர் அவர்கள் தான் திமுக ஆட்சிக்கட்டிலில் ஏற அடிப்படையாக திகழ்ந்தார். அதனால் தான் எம் ஜி ஆரின் வாழ்நாள் தலைவர் ஆகிய அறிஞர் அண்ணா அவர்கள், தம்பி இராமச்சந்திரா, நீ கட்சிக்கு முப்பது லட்சம் தேர்தல் நிதி தரவேண்டாம். உன் முகத்தை நமது கூட்டங்களில் முப்பது நொடி காட்டு அது போதும்’- என்று சொல்லி திமுகவின் வியாபாரத்தை திறம்பட நடத்தினார்.

    எம் ஜி ஆரை 1967- தேர்தலுக்கு சுமார் இரண்டு மாதம் முன்னர் , அந்த நாள் வில்லன் நடிகர் திரு எம் ஆர் ராதா அவர்கள் சுட்டதனால்தான், காங்கிரஸ் கட்சிக்கு தமிழ் மக்கள் கருமாதி செய்தனர். உன்னத தலைவர் காமராஜர் கூட , ஒரு உருப்படாத வேட்பாளரிடம் தோற்று அரசியல் அஸ்தமனத்தினை சந்திக்க நேரிட்டது. எனவே எந்த அரசியல் இயக்கத்துக்கும் நல்ல தலைமை அவசியம். ஏனெனில் உண்மையான மக்கள் தலைவர்கள் அவர்கள் காலம் முடிந்தபின்னரும், தாங்கள் வளர்த்த இயக்கத்தின் ஒரு தூணாக தொடர்ந்து விளங்குவார்கள். உதாரணம் எம் ஜி ஆர் தான். அவர் இறந்து 27 வருடம் ஆன பின்னரும் இன்னமும் அதிமுகவுக்கு ஒரு டானிக் போல எம் ஜி ஆர் திகழ்கிறார். எந்த ஒரு கட்சிக்கும் கொள்கை என்பது ஒரு ஏமாற்று வேலை தான். ஏனெனில் கொள்கை என்பது பதவியைப் பிடிப்பதும், பதவியைப் பிடித்த பின்னர் , அந்த பதவியில் வேறு யாரும் வந்து உட்காராமல் கண்காணிப்பதும் தான். சுயநலம் இல்லாமல் பாடுபட்ட மொரார்ஜி, காமராஜர் போன்றோர் பெரிய பதவிகளில் அதிக காலம் நீடிக்க முடியாமல் போனது. ஏனெனில், அவர்களுக்கு பதவி மற்றும் அதிகார ஆசை இல்லாததுதான்.

    எங்கள் பாட்டி 90 வயது வாழ்ந்தவர். அவர் அடிக்கடி சொல்லுவார். எந்த ராஜா நம்ம பட்டணத்தில் ஆண்டாலும், நாட்டிலே போதிய மழை பெய்தால் தான், பயிர் பச்சை வளரும். உணவு தானியம் செழிக்கும். பால், தயிர்,மோர், வெண்ணை. நெய் எல்லாம் நிறையும். இயற்கை ஒத்துழைக்காவிட்டால், உலகம் எங்கும் வெறும் பசி, பஞ்சம், ,பட்டினி ,கொலை,கொள்ளை ,திருட்டு ,போன்ற தீய நிகழ்வுகள் தான் நிகழும். எனவே உலகம் அமைதி ஆனந்தம் பெறவேண்டுமானால் , பஞ்ச பூதங்களையும் நாம் மதித்து தினசரி மனதிலே வணங்கிவந்தால் , நிச்சயம் மனித வாழ்வு சிறக்கும், நமக்கு நல்ல அரசன் அல்லது தலைவன் கிடைப்பான் என்பாள். எங்க பட்டி சொன்னது நூற்றுக்கு நூறு சரி என்பதை அனுபவத்தில் நான் உணர்கிறேன். அனைத்து துறைகளிலும் உற்பத்தி பெருகட்டும் .மனித வாழ்வு சிறப்படையும். சிறந்த ஆய்வுக்கட்டுரையை வழங்கிய திரு இலட்சுமணப் பெருமாளுக்கு நம் வாழ்த்துக்கள்.

  8. எங்க பாட்டி சொன்னது நூற்றுக்கு நூறு சரி – என்று திருத்திப்படிக்கவும். தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.

  9. இங்கு கொள்கை, கட்சி அனைத்தையும் தாண்டி தனி நபர் துதிதான் மிக முக்கியமானது என்ற அடிப்படையில் தான் தமிழ்ச்சமூகம் இருக்கிறது.

    This applies to the entire country.

    How did the BJP come to power tihs time? By projecting Modi as PM whereas the congress did not project anyone as PM (that would not have made any difference anyway, but still….).

    BJP cannot be a force to reckon with in TN. There is no unity amongst the leaders. Raja does not get along with Ila Ganesan or with tamizhisai & vice versa. The leaders do not mingle with the public. They do not organise meetings, demonstrations or rallies, they simply give press statements.

    Even the Narendra Modi wave did not work in the recent Lok sabha elections.

    There are reports that Amit Shah has been assigned the task of roping in actor Rajinikanth to lead the party. Shows the confidence they have in the present leaders.

    Also, it is largely conceived to be a north indian party with a partiality towards Hindi.

    Even now, Modi promised a lot but delivered little atleast with respect to TN issues. The woes of tamil fishermen issue continue. Modi had promised to set up a fisheries dept. but still no news on it.

    On the Cauvery water issue, BJP keeps quiet since there are 4 central ministers from Karnataka.

    At best, they can ride piggyback on other parties (like the congress) in TN & bag a few assy seats.

  10. அருமையான பதிவு.

    பாரதீய ஜனதா கட்சியில் தற்போது குழுக்கள் அதிகமுள்ளதாக அறிகிறேன். அதன் தாக்கத்தை அவர்கள் ஒரே நேரத்தில் இரு வேறு தலைவர்கள் ஒரே இடத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்கும்பொழுதே புரிந்து கொள்ள முடிகிறது.

    கட்சியில் நீண்ட காலம் உழைத்துக் கொண்டிருப்பவர்களை மதிக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கிறது.

    லாபி செய்பவர்கள் மேலே விரைவில் வந்துவிட முடியும் என்ற நிலை இருப்பதாகவே உணர்கிறேன்.

    கோயிலுக்கும் மதத்துக்கும் மட்டும் போராடும் போராளிகளாகவும், மக்கள் பிரச்சினைக்கு போராடத் தயாராகாதவர்களாகவும் ஒரு தோற்றம் இருக்கிறது.

    வாய்புகளை பயன்படுத்தத் தவறுகிறார்கள்.

    பணமிருப்பவர்களின் பாக்கெட்டில் கட்சி இனி இருக்கும் என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொழிலதிபர்கள் இனி மாவட்ட பொறுப்பில் யார் இருந்தால் நல்லது என்று நிர்ணயிக்கும் காலம் விரைவில் வரும் இன்றைய நிலையிலேயே கட்சி இருந்தால்.

    களப்பணி செய்ய இயலாதவர்கள் அதிகாரத்தில் இருந்தால் அதுவும் இழப்பினை ஏற்படுத்தும்.

  11. வணக்கம்
    திராவிடக் கட்சிகளை மீறித் தமிழ் நாட்டில் எந்த ஒரு கட்சியும் வளர்வது அவ்வளவு எளிதல்ல. திராவிடம் என்பது புதைகுழிக்குப் போய்ப் பல ஆண்டுகளாகி விட்டன, ஆனால் அந்தச் சொல்லை வைத்துக் கட்சி நடத்துபவர்கள் தமிழுக்கோ தமிழருக்கோ செய்த நலன்களை விரல் விட்டு எண்ண முயன்றால் ஒரு விரலைக் கூட நீட்ட முடியாது.
    பி ஜே பி முதலில் தன்னை உணர வேண்டும். நல்ல பேச்சாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் முகங்கள் மறைக்கப் படுகின்றன. என்னைக் கவர்ந்த பேச்சாளர்கள் திரு ஹெச் ராஜா, திருமதி வானதி சீனிவாசன்,திருமதி தமிழிசை, சமீப காலமாக திரு ராகவன் மிகப் பொறுமையாகச் செவ்வி அளிக்கிறார்.

    பாஜக விற்கு ஊடகத்தின் வலிமை தெரியவில்லை. இதுவரை தமிழகத்தில் அவர்களுக்கென்று ஒரு பிரபலமான பத்திரிக்கை இல்லை. விலாசம் இல்லாதவர்கள் எல்லாம் மூன்று நான்கு தொலைக்காட்சி சேனல்கள் வைத்திருக்கின்றனர். இன்றளவும் அதற்கான முயற்சி எதனையும் அவர்கள் எடுக்கவில்லை. இருக்கின்ற ஒன்றே ஒன்று லோட்டஸ். அது கம்பி வடத்தில் எல்லோருக்கும் வருவதில்லை.

    உடனடியாகச் செய்ய வேண்டியது ஊடகத் துறையில் கவனம் செலுத்துவது, இரண்டாவது நல்ல தலைவர்களை அடையாளம் காட்டி அவர்களைத் தமிழகம் முழுவதும் பயணம் செய்ய வைத்து மக்கள் தொடர்பு ஏற்படுத்துதல் . இந்த இரண்டால் மட்டுமே பி ஜே பி தமிழ் நாட்டில் ஆளும் கட்சியாக வர முடியாமல் போனாலும் விலாசம் இல்லாத கட்சியாக இருக்காது

    நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவள் அல்லள்.ஆனால் தேச நலனிலும் நமது பாரம்பரியத்திலும் அக்கறை கொண்டவள்

  12. பொன் ராதா கிருஷ்னன் தலைமை நன்றாக இருந்தது. அவர் தலைமையில் நடைபெற்ற தாமரை மாநாடு நன்றாகவே நடந்தது.

    யார் தலைமை என்றாலும், கீழ்க்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.

    1) திமுக அதிமுக கூட்டணி கூடவே கூடாது.
    2) தனி ஈழம் – ஒத்துக்கொள்ளவே கூடாது.
    3) காவிரி பற்றி பிரதமரிடம் உறுதி மொழி வாங்க வேண்டும்
    4) விடுதலைப் புலி பாசம் இல்லாமல் இருந்தால் , ம தி மு க வுடன் கூட்டணி வைக்கலாம்
    5) ஜாதிக் கட்சிகளுடன் (பா ம க போன்ற ) சகவாசமே கூடாது .
    6) கட்சித் தலைவர் – குறைந்தது 5 ஆண்டுகளுக்கு – மாற்றவே கூடாது .
    7) உண்மையான எதிர்க் கட்சியாக நடந்து கொள்ள வேண்டும்

  13. இந்தி திணிப்பை விட்டுவிட்டு,
    — தமிழை உயர்த்துவதும்,
    — நல்ல தமிழில் பேசி,
    — உத்தரகண்ட் பா.ஜ.க. எம்.பி. மதிப்பிற்குரிய தருண் விஜய் முழக்கம் செய்ததுபோல, “தமிழ் இந்தியாவின் இரண்டாம் நாட்டு மொழி ஆக வேண்டும்!” என்று முழங்கி,
    — காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கை வழங்கவும்,
    — பாலாறு, முல்லைப் பெரியாறு போன்ற ஆறுகளின் போக்கத் தமிழத்துக்கு வரவிடாமல் தடுக்கும் மற்ற மாநிலங்களின் போக்கை கட்டுப்படுத்தினால் போதும்.

    — மதிப்பிற்கு உரிய மோடி அவர்களின் துணையை இந்த நற்பணிகளுக்கு வேண்டிக் கைக்கொண்டால் போதும்,

    — தமிழக மக்கள் பா.ஜ.கவை தமிழ்நாட்டின் அரியணையில் தாங்களாகவே ஏற்றி வைப்பார்கள்.

  14. நான் பொதுவாக இந்த இணைய தளத்தில் வரும் “பக்தி கதை”களுக்கு comment எழுதுவதில்லை. காரணம் இந்த 21 வது நூற்றாண்டிற்கு மற்றும் விஞ்ஞான அறிவுகளுக்கு பொருந்தாதவற்றை பேசி நம் பொன் போன்ற காலத்தை வீணாக கழிக்க கூடாது என்பது எண்ணம்.ஆனால் பிஜேபி பற்றிய தலைப்பு என்றால் முதல் comment என்னுடையதாகத்தான் இருக்கும். ஆனால் சமீப காலமாக (தமிழ்நாட்டு) பிஜேபி என்றாலே வெறுப்பாக இருக்கிறது. அவர்களின் போக்கே சரியில்லை. மனசுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. தற்போதுள்ள தலைவர்கள் (குறிப்பாக தமிழிசை) கட்சி தொண்டர்களின் கருத்துக்களுக்கு அணுவளவும் மதிப்பு கொடுப்பவர் அல்ல என்பது வெள்ளிடை மலை. அவருக்கு கட்சி வளர்ச்சி குறித்து மின்னஞ்சல் அனுப்பினால் நம்மை ஒரு பொருட்டாக நினைத்து அதற்கு பதில் அளிப்பதே இல்லை. மேலே பல சகோதரர்கள் நல்ல பல கருத்துக்களை கூறியுள்ளனர். அந்த கருத்துக்களை அந்த தலைவர்கள் படிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? இருந்தால் நல்லது. ஆனால் அப்படி இல்லாவிட்டால் விழலுக்கு இறைத்த நீர்தான். சென்றடைய வேண்டியவர்களை சென்று அடையாவிட்டால் அதனால் என்ன பயன்? குறைந்த பட்சம் இந்த இணையதளததினராகிலும் அது அவர்களை சென்றடைய வழி வகுக்க வேண்டும். இனியாகிலும் அவர்கள் அப்படி நிச்சயம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் எனது கருத்துக்களை இங்கே எழுதுகிறேன்.

    1. ஒருவர் கட்சியின் தலைவராக குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் இருக்கும் வகையில் கட்சியின் விதிகளை தக்கவாறு மாற்றவேண்டும்.

    2. ஊடகத்தின் பலத்தை நன்றாக அறிந்திருந்தும் தமிழ்நாட்டில் ஒரு தினசரியை இதுவரை துவக்காமல் இருப்பது பெரிய தவறு. அதேபோல ஒரு தொலைகாட்சியை துவக்காமல் இருப்பது தவறு. (Lotus டிவி இருப்பதும் ஒன்று அது இல்லாமல் இருப்பதும் ஒன்று)

    3. ஒவ்வொரு ஊருக்கும் சென்று கட்சி ஊழியர்களை சந்திக்க வேண்டும். அவர்களின் குறைகளை கேட்கவேண்டும். உறுப்பினர்களை சேர்க்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்படத்தை பற்றி கூறவேண்டும். காலையில் கட்சி ஊழியர் கூட்டம் முடித்தபின்னர். மாலையில் பொது கூட்டம் நடத்த வேண்டும். இப்படி மாதத்தில் 15 நாட்கள் சூறாவளி சுற்றுபயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் சிங்கார சென்னையில் அமர்ந்துகொண்டு ஊடகத்தினருக்கு பேட்டி கொடுத்தாலே கட்சி மளமள வென்று வளர்ந்துவிடும் என்று பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள்.மக்கள் தொடர்பு இல்லாத ஒரு தலைவரை நாய் கூட சீண்டாது.

    4. அவ்வபோது இந்தி மூலம் மக்களை வெறுப்படைய செய்யும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பிஜேபி எம்பி தருண் விஜய்யை தமிழ்நாட்டில் பல கூட்டங்களில் பேச வைத்தால் மக்களுக்கு ஒரு மனமாற்றம் ஏற்படும்.

    5. தமிழக நதிகளை இணைத்தாலே தண்ணீர் பஞ்சம் “ஓரளவிற்கு” தீர்ந்துவிடும். அதை முதலில் செய்யவேண்டும். அதன் பிறகு இந்திய நதிகளை இணைக்க வேண்டும். ஒருபக்கம் வெள்ளம் மறுபக்கம் வறட்சி. ஆனால் இரண்டுக்குமே நிவாரண நிதி தேவை. நதிகளை இணைத்தால் இரண்டையும்(=வெள்ளம், வறட்சி) தவிர்க்கமுடியும்.

    6. சொந்த காலில் நிற்க முயலவேண்டும். காங்கிரஸ் கட்சிக்கே உரிய அடுத்தவனின் முதுகில் சவாரி செய்ய நினைக்கும் புத்தி பிஜேபி க்கு வர கூடாது. உறுப்பினர்களை சேர்க்க தீவிர நடவடிக்கை எடுங்கள்.

    7. ரஜினி அரசியலுக்கு வர மாட்டார். அப்படிப்பட்ட ரஜினியை பிஜேபி கட்சிக்கு கொண்டுவருவது வேஸ்ட். கொள்கை சார்ந்த அரசியல் நடத்த நினைக்கும் உங்களுக்கு கவர்ச்சி அரசியல் புத்தி எதற்கு வருகிறது?

    8. கோஷ்டி பூசலில் தங்களது வேஷ்டிகளை கிழித்து கொள்ளும் காங்கிரஸ் கட்சி போல பிஜேபி யும் மாறிவிடுமோ என்று ரொம்ப பயமாக இருக்கிறது. Party is prominant . Person is not important என்பதை மனதில் வைத்து தமிழக பிஜேபி தலைவர்கள் செயல்படவேண்டும். நீயா நானா என்று போட்டி போட கூடாது.

    9. திரு நாராயணன் சொல்வது போல கோவில் விவகாரத்தை சற்று அடக்கி வாசிக்க வேண்டும். மக்கள் சார்ந்த பிரச்சனைகளை பேச வேண்டும். அதற்காக போராட வேண்டும்.அப்போதுதான் கட்சிக்கு Mass base தமிழ்நாட்டில் உருவாகும்.

    10. மீனவர் அமைச்சகம் உடனடியா அமைக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டு பிஜேபி காரர்களுக்கு மேலும் சிலருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும்.

    11. நியமன முறையில் தலைவர்களை அமர்த்துவதை தவிர்த்து தேர்தல் முறையில் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். உள்கட்சி ஜனநாயகம் வரவேண்டும்.

    12. கட்சி வளர்வதற்கு தடையாக இருப்பது திக மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் பற்றிய பொய்யான தகவல்களை தமிழ்நாட்டில் பரப்பியதுதான் காரணம். ஆகவே அவர்களது குற்றசாட்டுகளுக்கு ஆதாரத்துடன் பதில் தரவேண்டும்(மேடைகளில்) மற்றும் booklets வெளியிடவேண்டும். அதற்கு பிஜேபி தொண்டர்களுக்கு பேச்சு பயிற்சி (workshop ) நடத்த வேண்டும். நிறைய பேச்சாளர்களை உற்பத்தி செய்யவேண்டும். (இன்னும் பிறகு கூறுகிறேன்)

  15. திரு துளசி தாஸ் “சுப்ரமணிய சாமிக்கு மந்திரி பதவி கொடுக்கப்படவில்லை” என்று வருத்தபடுகிறார். அவர் ஒரு குழப்பவாதி. அவர் ஒரு மந்திரி ஆகிவிட்டால் தமிழ் நாட்டுக்கு வந்து இலங்கை பிரச்னையை பூதாகரமாக ஆக்கிவிடுவார். அப்புறம் பிஜேபி க்கு சமாதி கட்ட வேண்டியதுதான். அந்த கட்சி 2000 ஆண்டுகள் ஆனாலும் இங்கே வளரவே முடியாது. ஆகவே அவரை பற்றி கவலைபடவேண்டாம் என்று திரு துளசி தாசுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
    14. திருவாளர்கள் H ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், கே.டி.ராகவன், எஸ்.ஆர். சேகர், நாராயணன், ஆகியோர் டிவி விவாதங்களில் நன்கு பேசுகிறார்கள். ம்இன்னும் பலரை உருவாக்க வேண்டும். மேலும் இவர்கள் வெறும் டிவி விவ்வாதங்களில் மட்டும் பங்கேற்பதோடு நில்லாமல் ஊர் ஊற்றாக சென்று பொது கூட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டும்

    ///////இது போல சித்தாந்த்த்தின் அடிப்படையில் உருவாகும் தொண்டர்களோ நிலையாக இருப்பார்கள், அகவே அப்படிப்பட்ட தொண்டர்களை உருவாக்க வேண்டும் ஆனால் திராவிட இயக்கத்துடன் கூட்டு வைத்துக் கொண்டதால், குளிர்சாதனம் பொருத்திய விடுதியில் தங்கும் கலாச்சாரம் வளர்ந்துள்ளது//////////

    திரு ஈரோடு ஆ (=ஆறுமுகம்) சரவணன் (கட்சியின் பிரமுகர்) அவர்களே இப்படி மனம் வெறுத்து எழுதுகிறார். பிஜேபி யில் சேரும் தொண்டர்கள் அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அளிக்க வேண்டும்.அப்போதுதான் திரு ஆ சரவணன் சொல்வது போல சித்தாந்தத்தின் அடிப்படையில் தொண்டர்கள் உருவார்கள். அவர்கள் கட்சியில் நிலையாக இருப்பார்கள். இல்லையென்றால் திருநெல்வேலி வெள்ளையம்மாள் போன்றுதான் கட்சியை நட்டாற்றில் விட்டு விட்டு ஓடிவிடுவார்கள்.
    போதுகூட்டங்களுக்கு கலந்து கொள்ள செல்லும்போது தொண்டர்களின் வீடுகளில் தங்குங்கள். அவர்கள் தரும் எளிமையான உணவை அருந்துங்கள்.அவர்களில் ஒருவராக மாறுங்கள். அப்போதுதான் உங்கள் மீது தொண்டர்களுக்கு அன்பும் மரியாதையும் ஏற்படும்///////////கட்சியில் தனிநபர் துதிபாடக் கூடாது/////////// இந்த பழக்கம் திமுக அதிமுக கட்சிகளுக்கு மட்டும்தான் சொந்தம். ஆனால் அது பிஜேபி (தமிழ்நாட்டில்) க்கும் தொற்றிக்கொண்டுள்ளது. பிரதமர் ஆனபிறகும் மோடியை “மோடி” அல்லது மோடிஜி என்றே அழைக்கிறோம். அத்வானியை இன்றும் அத்வானிஜி என்றுதான் அழைக்கிறோம் ஆனால் இங்கே பாருங்கள். பொன் ராதாகிருஷ்ணனை “பொன்னார்” என்று அழைக்க தொடங்கினார்கள். மேலும், குமரி அனந்தன் ஆசையோடு தமிழிசை என்று தன மகளுக்கு பெயர் வைத்தார். ஆனால் அவரோ “அக்கா” என்று போஸ்டரில் போட்டு கொள்ள விரும்புகிறார். ( அண்ணா , பெரிய அய்யா, அம்மா என்ற பாணியில்). பிஜேபிகாரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்கள் அப்பா அம்மா ஆசையோடு வைத்த பெயரை எதற்காகவும் இழக்காதீர்கள்.

  16. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டுமே மாநிலங்களில் அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளில் நாங்களும் இருக்கிறோம் என்று குரல் கொடுக்கவேண்டும்.அதை விடுத்து அது அந்த மாநிலங்களை ஆட்சி செய்யும் மாநில கட்சிகளின் பொறுப்பு அல்லது தலைவலி என்று ஒதுங்கும் வரை இரு கட்சிகளுமே மாநிலங்களில் வளர்வது கடினம்தான் .

  17. நன்றி நண்பர்களே. இங்கு மறுமொழியிட்ட அனைவரின் கருத்துகளும் கட்சியில் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும். இதில் பிஜேபியின் கொள்கை சார்ந்த ஆதரவு நிலை, எதிர்ப்பு நிலை கருத்துகள் இரண்டையும் கட்சி பொருட்டாகக் கொண்டு எது மாநிலத்திற்கும் தேசத்திற்கும் பலன் அளிக்கும் என்பதன் அடிப்படையில் முடிவெடுத்து, அதை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்ல வேண்டும். RSS போல கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு , தமது கட்சியின் கொள்கைகளையும் , மாநில வளர்ச்சிக்கு எது அவசியம் என்பதைக் கட்சி தொடர்ச்சியாகச் செய்வதன் மூலமும், என்னைக் கேட்டால் கூட்டணி வலைக்குள் சிக்காமல் தனித்தே கட்சியை வளர்க்கப் பாடுபட வேண்டும். கூட்டணியில் செல்வதன் மூலம் அது அக்கட்சிக்கான வளர்ச்சியல்ல, வீழ்ச்சி தான் என்பதைத் தேசியக் கட்சியான பாஜக உணர வேண்டும். இதுவொன்றும் மாநிலக் கட்சியல்ல, கூட்டணியிலிருந்து சில வெற்றிகளைப் பெற்றால் போதும் என நினைத்துச் செயல்படுவதற்கு. கூட்டணி வைப்பது என்பது முன் வரிசை தலைவர்களுக்கு சில காலங்களில் பதவியையும் அந்தஸ்தையும் மட்டுமே வாங்கித் தர உதவும். ஆகையால் திராவிடக் கட்சிகள் தவறிழைத்தால் தீவிரமாகக் கண்டனத்தையும் , போராட்டங்கள் வாயிலாகவும் திடமிக்க தலைவரைக் கொண்டு செய்தால் பிஜேபி வளரும். இல்லையேல் நண்பர்கள் சொன்னது போல , அது இந்த விவாதத் தளத்திற்குள் முடங்குமேயானால் விழலுக்கு இறைத்த நீரே!!!

  18. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் தெரியும், எந்தவொரு கட்சியும் கால ஓட்டத்தில் வளர்ந்து விடவில்லை. ஏதாவதொரு திடீர் நிகழ்ச்சி அல்லது திருப்பம் ஏற்பட வேண்டும். மக்கள் எதிர்பாராத விதமாக அந்தக் கட்சி மீது பற்று ஏற்படும்படியான சந்தர்ப்பம் அமைய வேண்டும். இந்திரா காந்தி மரணத்தையொட்டி அந்த கட்சிக்கு ஓகோவென வரவேற்பு கிடைத்தது. இந்திராவுக்கு எதிரான திடீர் புரட்சி, அத்தனை கட்சிகளும் ஒன்று சேர்ந்ததன் விளைவு ஜெயப்பிரகாஷ் நாராயண் மீண்டும் அரசியலுக்கு வந்தது ஜனதா கட்சியின் தோற்றம். ராஜீவ் காந்தியின் மரணமும், அந்த பழி ஒரு திராவிட கட்சியின் மீது விழ, அந்த கட்சி படுதோல்வி அடைந்தது. இப்படி எந்த கட்சி திடீரென்று வளர்ச்சியடைய வேண்டுமானால் ஒரு எதிர்பாராத மாற்றம் வேண்டும். அந்த மாற்றம் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஒரு நடிகர் வருவதால் கட்சி பெரிதாகி விடாது. அதிமுக தலைவி சிறைப்பட்டதால் பாஜக வளரும் என்பது பகல் கனவு. அரிசோனன் சொல்லியிருப்பது போல முதலில் தமிழ் தமிழ் என்று உயிரைக் கொடுக்க வேண்டும். இந்தி திணிப்பை நினைத்துக்கூட பார்க்ககூடாது. பேசும் சொற்களில் நல்ல தமிழ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். முன்னைக்கு இப்போ கொஞ்சம் மாறியிருக்கிறார்கள், இன்னமும் மாற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலக தமிழக மக்களின் பொதுப் பிரச்சினைகளுக்காக போராட்டங்கள் நடத்த வேண்டும்.

  19. 15. கடந்த தேர்தலுக்கு சற்று முன் பிஜேபி கட்சியில் சேர்ந்த தொண்டர்களுக்கு இன்னும் “உறுப்பினர் அட்டை” கிடைக்க வில்லை. உறுப்பினர் அட்டையை கூட உடனடியாக கொடுக்க துப்பில்லை. அப்படி என்னதான் கட்சி தலைமை அலுவலகத்தில் இவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்? என்னத்த இவர்கள் கட்சியை வளர்க்கிறார்களோ!

    16. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு நல்லவர்தான். யாரும் மறுக்கவில்லை. அண்ணாதுரையும் (கருணாநிதியோடு ஒப்பிடும்போது) நல்லவர்தான். ஆனால் இருவரில் புகழ் பெற்றவர் யார்? அன்னாதுரைதான். காரணம் என்ன? நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. (பேச்சில்) வல்லவராகவும் இருக்க வேண்டும்.தனது திறமையான பேச்சால் குறுகிய காலத்திலேயே இவரது கட்சி ஆட்சியை பிடித்தது. அவரும் முதல்வரானார். ஆகவே திறமையான நல்ல குரல் வளமுடைய மற்றும் அழகு தமிழில் பேசக்கூடிய இளம் பேச்சாளர்களை உருவாக்கவேண்டும். அவர்கள் மேடையில் பேசும்போது மக்கள் பெருந்திரளாக கூடவேண்டும். அப்போதுதான் நம் கருத்துக்கள் பெரும்பாலான மக்களை சென்று அடையும். பிஜேபி கட்சிகாரர்கள் மேடையில் பேசும்போது கூட்டம் கூடுவதில்லை . காரணம் அவர்கள் பேச்சு மக்களை கவரவில்லை. இந்த குறைபாட்டை விரைந்து சரி செய்யவேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டும் கிடைக்கும் வார்த்தையாகும்.

    17. நாட்டில் எந்த ஒரு (கெட்ட (அ) நல்ல ) நிகழ்ச்சி நடந்தாலும் பாமக ராமதாசு போன்றவர்கள் முந்திக்கொண்டு அதற்கு கண்டனமோ அல்லது பாராட்டோ தெரிவிக்கிறார்கள். அது செய்திதாளில் வருகிறது. ஆனால் அந்த பத்திரிக்கையை பூத கண்ணாடி கொண்டு தேடி பார்த்தாலும் பிஜேபி ஆட்களின் கண்டனம் அல்லது பாராட்டை பார்க்க முடிவதில்லை. ஒரு பண்டிகை வந்தால் சுண்டைக்காய் கட்சி தலைவர் சரத்குமாரின் வாழ்த்து செய்தி வருகிறது. ஆனால் பிஜேபிகாரர்களின் வாழ்த்து செய்தியை பார்க்க முடிவதில்லை. ஒன்று அவர்கள் வாழ்த்து தெரிவிக்காமல் இருக்க வேண்டும். அல்லது அந்த பத்திரிகைகள் அந்த செய்தியை இருட்டடிப்பு செய்ய வேண்டும். அதனால்தான் நமக்கென்று ஒரு தினசரி (daily ) செய்திதாள் தேவை என்று காட்டுகததலாக கத்துகிறேன். But it is a cry in the wilderness . கடந்த 5 ஆண்டுகளாக 0-50 பைசா வீதம் மாதந்தோறும் டீசல் விலையை காங்கிரஸ் ஆட்சி உயர்த்தி கொண்டே வந்தது. ஆனால் பிஜேபி ஆட்சி பெட்ரோல் விலையை ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3 முறை குறைத்தது. இன்று (அல்லது நேற்று நள்ளிரவு முதல்) மீண்டும் ஒரு முறை குறைக்க பட்டுள்ளது. பிரதமர் வந்ததும் டீசல் விலையும் குறைக்க பட உள்ளது. இந்த நல்ல செய்திகளை நமக்கென்று ஒரு தினசரி பத்திரிகை இருந்தால் அதன் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வெளியிடலாமே.

    18. BJP is a party with difference என்று சொல்கிறார்கள். சொல்வதற்கு ஏற்றார்போல சொல்லிலும் செயலில் நடத்தி காட்ட வேண்டும். மேடைகளில் தலைவர்களுக்கு மிகவும் விலை உயர்ந்த மாலைகள் போடுவதற்கு பதிலாக ஒரே ஒரு தாமரை பூவை மட்டும் (அதவும் முதன்மை பேச்சாளருக்கு மட்டும்) கையில் கொடுக்க வேண்டும்.இதனால் அவரை மரியாதை செய்தது போலவும் ஆச்சி. நமது சின்னத்தை மக்களுக்கு விளம்பரம் செய்ததது போலவும் ஆச்சி. நமக்கு வைத்த சின்னம் போல வேறு கட்சிகளுக்கு வைக்கவில்லை. யாரும் உதய சூரியனை கொடுக்க முடியாது. ஒரு பம்பரத்தை கொடுத்தால் சிறு பிள்ளைத்தனமாக இருக்கும்.அல்லது drum , cycle , elephant எதையும் தரமுடியாது. மலர் மட்டுமே மரியாதைக்கு உரியது.

    19. அதேபோல பிஜேபிக்கு தேசபக்தியும் தெய்வபக்தியும் இரு கண்களை போன்றது. ஆகவே கட்சி பொதுகூட்டம் துவங்கும் முன்பாக இறைத்துதி பாடலும் கூட்டம் முடிந்த பின்னர் தேசிய கீதமும் கண்டிப்பாக பாடவேண்டும். மேலும் கூட்டம் நடத்துமிடத்தில் ஒரு புத்தக ஸ்டால் ஒன்றை அமைத்து மக்கள் திராவிட மயக்கதிலிருந்து விடுபட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி பற்றிய நூல்களை குறைந்த விலையில் விற்க வேண்டும்.

    20. கட்சி தலைமை ஒவ்வொரு கட்சியின் நகர மற்றும் கிராம கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். என்னவென்று? ஒவ்வொரு கிளையிலும் உள்ள கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வாரத்தில் ஒருநாள் அதாவது ஞாயிறு கிழமை அன்று அவர்கள் வாழும் பகுதிகளில் ஒரு தெருவினை தேர்ந்தெடுத்து அவர்கள் ஒரு குழுவாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அவர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு தக்க பதில் விளக்கம் தர வேண்டும். இப்படியாக ஞாயிறு தோறும் ஒரு தெரு என்ற ரீதியில் சென்று உறுபினர்களை சேர்க்க வேண்டும். உறுப்பினர்கள் பெருமளவில் சேர்ந்தபின்னர். மாவட்ட அளவில் மாநாடு நடத்துங்கள். பிறகு மாநில அளவில் மாநாடு நடத்துங்கள்.

    இந்த இணைய தள ஆசிரியர் குழுவிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்:- மேற்கண்ட எனது கருத்துக்கள் எந்த வகையிலாவது தமிழ்நாடு கட்சி தலைமைக்கு சென்று அடையும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி வணங்கி கேட்டு கொள்கிறேன். அவ்வாறு செய்ததால் உங்களுக்கு கோடி கோடி புண்ணியம் உண்டு. அவர்கள் அவற்றை பார்த்து கட்சி வளர்வதற்கு இந்த “இருபதும் இனியவை” என்று கருதி செயல் பட்டால் செய்ல்படட்டும். அல்லது அவர்கள் தலை எழுத்து எப்படியோ அதுபடியே நடக்கட்டும். ஆனால் நீங்கள் என் கோரிக்கையை மட்டும் மறக்காமல் மறுக்காமல் மறைக்காமல் தயை கூர்ந்து அருள்கூர்ந்து நிறைவேற்றுங்கள். ப்ளீஸ், நன்றி வணக்கம்.

  20. ஹலோ Honest man, ஒற்றுமையின்றி ஒரு கட்சியும் வளர்ந்ததாக சரித்திரத்தில் இல்லை! சு சாமி மந்திரி ஆக வேண்டும் என்ற அவா எனக்கு இல்லை. அவர் மந்திரி ஆவதை தடுக்க நினைத்த பிஜெபி யினரின் ஒற்றுமையை பாரட்டாமல் இருக்க முடியவில்லை! சபாஷ்! காழ்ப்புணர்ச்சி, தனி மனித வெறுப்பு ஆகியவற்றை தாண்டி நாட்டு நலனையும், கட்சியின் நலனையும், வளர்ச்சியையும் முன்வைத்து தொண்டர்கள் செயல் படும் போது தான் கட்சி வளரும். கட்சி தலைமையே அவரை ஏற்றுக் கொண்ட போது தொண்டர்கள் ஏற்றுகொள்ளாதது விந்தையிலும் விந்தை! அவருக்கு மூளை இருக்கிறது, அறிவு இருக்கிறது, சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருக்கிறது! 2ஜி மற்றும் ஜெஜெயின் ஊழல்களை வெளிக்கொணர்ந்த அவரது திறமையை பிஜெபி உபயோகப்படுத்தாமல் விட்டால் இழப்பு பிஜெபிக்குத் தான். திறமையை பாராட்டத்தெரியாத தலைவர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் வரை பிஜெபி ஸ்வாஹா!!!!!

  21. //அவருக்கு மூளை இருக்கிறது, அறிவு இருக்கிறது, சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருக்கிறது!//

    ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no peace of mind!

  22. Ito is premature to assume avavaccuum has occurred and the state is ripe for BJP to fill it up.It is rightly pointed out in the absence of media support and effective extempore bilingual speakers it wil be difficult to remove the notion thatBJP is a party of HINDI AND hindu fanatics.Thirty years of mud thrown at it AND THE HIGH INCIDENCE OF LINGUISTIC CHAVINISM AND CASTE POLITICS HAVE EFFECTIVELY CREATED the disappearance of national parties.It requires ayouthful leader articulate informed and capable of countering the regional parties..actively supported bythe national HQ,It should go all out to expand its cadre cashing on the mody charishma

  23. Honest man நீங்கள் கூறிய எல்ல கருத்துக்களுக்கும் எனக்கு உடன்பாடு உண்டு! தமிழ் மக்கள் திராவிட மாயையில் இன்னும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் மனது மாற சில ஆரிய, திராவிட, பிராமண, சைவ, வைணவ உண்மைகள் அவர்களை சென்றடைய வேண்டும். பிஜெபி பிரசார பத்திரிகையும், தொலைக்காட்சியும் உடனடித் தேவை. இறுதியில் மக்கள் மனம் மாற அடிமட்டத் தொண்டர்கள் மக்களோடு னேரடித் தொடர்பு வைத்து அவர்களை கிராம, மாவட்டக் கூட்டங்களுக்கு வருமாறு ஊக்கப்படுத்த வேண்டும்.தினமும் பிஜெபி சம்மந்தப்பட்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கவேண்டும்; மக்களை சென்றடைய வேண்டும். பிஜெபி இந்த மானிலத்தையே தத்து எடுத்தது பொன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும். We should make the presence of BJP felt evey day in their lives! Finally unity and discipline are of paramount importance!

  24. //அவருக்கு மூளை இருக்கிறது, அறிவு இருக்கிறது, சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருக்கிறது!// சு சாமிக்கு!!!!
    அதனால் தான் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜா, கனிமொழி, ஜெயலலிதா போன்றவர்கள் peace of mind இல்லாமல் தவிக்கிறார்கள் ஆனந்த் சாகர் அவர்களே!

  25. ஹெல்லொ ஆனந்த் சாகர் //அவருக்கு மூளை இருக்கிறது, அறிவு இருக்கிறது, சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருக்கிறது!// சு சாமிக்கு!!!!
    அதனால் தான் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜா, கனிமொழி, ஜெயலலிதா போன்றவர்கள் peace of mind இல்லாமல் தவிக்கிறார்கள் ஆனந்த் சாகர் அவர்களே!

  26. இப்போது நாடு இருக்கும் நிலையை பார்த்தல் சோவியத் ரஷ்யாவை சிறப்பாக ஆட்சி செய்த ஸ்டாலின் போன்ற இரும்பு மனிதர்கள் தான் தேவை என எண்ண தோன்றுகிறது…

  27. //பிஜெபி இந்த மானிலத்தையே தத்து எடுத்தது பொன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும்//

    அது சரியான அறிவுரை ஆகுமா? பி.ஜே.பி தமிழ்நாட்டைத் தத்து எடுக்கவேண்டும் என்று கூறினாலே, அது அவர்களுடையது அல்ல என்றே பொருள் படுகிறது. அதிலும் “தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும்!” என்றால் நடிப்பு என்றே பொருள்கொள்ளவேண்டும்.

    தாங்கள் பி.ஜே.பியை ஒரு நாடகம் ஆடச் சொல்கிறீர்களா, அல்லது தமிழகத்தைத் தனதாக்கித் தொண்டு செய்யச் சொல்கிறீர்களா?

    அரசியல் அறியாத நானே இப்படிப் பொருள் கொள்ளும்போது, பி.ஜே.பி தலைவர்கள் நீங்கள் சொல்வதுபோன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினால், அது வெறும் வாயை மேல்பவர்கள் வாயில் அவல் இட்டதற்கு ஒப்பாகாதா?

  28. இப்படி நுனிப்புல் மேய்கிறவர்கள் இருக்கும் வரை தமிழ் நாட்டில் பிஜெபி ஸ்வாஹா தான் ஒரு அரிசோனன் அவர்களே! ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்து பொருள் திரித்துக் கொள்வது அழகல்ல!

  29. //////சோவியத் ரஷ்யாவை சிறப்பாக ஆட்சி செய்த ஸ்டாலின் போன்ற இரும்பு மனிதர்கள்/////

    ஸ்டாலின் ரஷியாவை “சிறப்பாக” ஆட்சி செய்தாராம். எப்படி? அவர் ஆண்ட 30 ஆண்டுகளில் 20 மில்லியன் மக்களை கொன்றான். அதாவது 1 நாளைக்கு 1830 கொலைகள் என்ற கணக்கில். 1957 ல் ஸ்டாலின் NKVD ஏஜண்டுகளை மங்- கோலியாவிற்கு அனுப்பி 35000 பேரை கொன்றான் அதில் 18000 பேர் புத்தமதத்தினர். 1940ல் NKVD 21857 போலந்து போர் கைதிகளை கொன்றது. இப்படிப்பட்ட ஒரு “இரும்பு மனிதர்” வேண்டும் என்று ஒரு கரும்பு மனிதர் கூறுகிறார்.

  30. உயர்திரு துளசிதாஸ் அவர்களே,

    அரசியலில் அப்படித்தான் நுனிப்புல் மேய்ந்து, ஓட்டைப் பிரித்து, தமது கட்சி வெற்றிபெற முயலுவார்கள். எனவேதான் எதையும் கவனித்துப் பேசவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் பேசியது, எழுதியது எல்லாவற்றையும் மேற்கோள் எடுத்துக் கொடுப்பார்கள். இது தங்களுக்குத் தெரியாதது அல்லவே!

    தாங்கள் எழுதியதற்கு விளக்கம் கொடுத்தேன். What I wrote is a corrollery for your statement. தமிழ்நாட்டில் பி.ஜே.பி நிலைபெறவேண்டும் என்றால் நல்ல தமிழில் பேச வேண்டும் என்று முன்பு நான் குறிப்பிட்டதும் இதனால்தான்.

  31. அப்புறம் இன்னொன்று “Honest Man” …

    //1957 ல் ஸ்டாலின் NKVD ஏஜண்டுகளை மங்- கோலியாவிற்கு அனுப்பி 35000 பேரை கொன்றான்..//

    ஸ்டாலின் 1953ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார், அவதூறு கூறுவதிலும் ஒரு நியாயம் வேண்டும் இப்படி எல்லாம் அடித்து விடக்கூடாது

  32. ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன். அவனுக்கு சாமரம் வீசுவோர் யாராயினும் இன்று ரஷ்யாவில் கம்யூனிசம் செத்துவிட்டதால், இரஷ்யாவுக்கு பதிலாக சீன நாட்டுக்கு நிரந்தரமாக அனுப்பப் படவேண்டும்.

  33. https://en.wikipedia.org/wiki/Joseph_Stalin#Calculating_the_number_of_victims

    மேலே கொடுத்துள்ள இணைப்பிற்கு சென்று ஸ்டாலின் கொன்ற மக்கள் தொகை விவரம் அறியலாம்.1957- என்பது தட்டச்சுப் பிழை . கொடுங்கோலர்களுக்கு வக்காலத்து வாங்கும் நண்பர்களை என்ன சொல்வது ?

  34. தமிழன் தான் சாதிக்க வேண்டிய காரியத்தை விட்டு நீ பெரியவனா, நான் பெரியவனா என்று சண்டை பொட்டுக் கொண்டிருப்பான்! இந்த மறு மொழிகளை படித்தாலே அது விளங்கும்.சினிமாக்காரன் வந்து நின்னா வாயப் பொளந்து நிப்பான்! டமில் வால்க, பிஜெபி வால்கன்னு கோஷம் பொட்டால் மட்டும் எதுவும் வளராது! ஒற்றுமையோடு செயல் பட்டால் மட்டுமே எதுவும் வெற்றி பெறும்!

  35. எனது 4-10-2014 தேதியிட்ட மறுமொழியில் “குறும்பு மனிதர்” என்று type செய்வதற்கு பதிலாக “கரும்பு மனிதர்” என்று தவறாக type செய்து விட்டேன். அதேபோல 1937 என type செய்வதற்கு பதிலாக 1957 என்று தவறாக type செய்துவிட்டேன். The error is regretted .

    எனது தவறுகளை சுட்டிகாட்டிநீர்கள். நான் அதற்காக வருந்தி திருத்திக்கொண்டேன். இவர் பெரிதும் விரும்பும் மனிதனான ஸ்டாலின் என்ற நல்லவர் செய்த (பாவ)தவறுகளை சுட்டிக்காட்டினேனே! அது பற்றி பேச்சு மூச்சி காணோம்.

    தமிழ் மீது அளவற்ற காதலும் வடமொழி மீது அளவற்ற வெறுப்பும் கொண்ட இவர் எதற்கு ரஷ்யா, ஸ்டாலின் என்று வடமொழி எழுத்துக்களை ) (ஷ் , ஸ்) பயன்படுத்தவேண்டும்?

  36. *****நாட்டில் எந்த ஒரு (கெட்ட (அ) நல்ல ) நிகழ்ச்சி நடந்தாலும் பாமக ராமதாசு போன்றவர்கள் முந்திக்கொண்டு அதற்கு கண்டனமோ அல்லது பாராட்டோ தெரிவிக்கிறார்கள். அது செய்திதாளில் வருகிறது. ஆனால் அந்த பத்திரிக்கையை பூத கண்ணாடி கொண்டு தேடி பார்த்தாலும் பிஜேபி ஆட்களின் கண்டனம் அல்லது பாராட்டை பார்க்க முடிவதில்லை.******

    பிஜேபி தலைவர்கள் சிந்திப்பார்களா?

    அதற்காக, இராமதாஸ் போல் வாரத்தில் ஏழு நாளும் அறிக்கை வெளியீட்டு போரடிக்காதிர்கள்.

  37. ————————–An open letter to SISTER Tamilisai Soundararajan ———————————-

    1. மாதத்தில் 15 நாட்கள் சூறாவளி சுற்றுபயணம் மேற்கொள்ளுங்கள். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நாளை செலவிடுங்கள். காலையில் கட்சி கொடியேற்றுங்கள். மதியம் கட்சி தொண்டர்கள் கூட்டம் நடத்துங்கள். அதற்கு பிறகு அந்த ஊரில் பிஜேபி கட்சிக்கு சேரக்கூடிய பிரபலங்களை சந்தித்து அவர்களை அன்று இரவு அந்த ஊரில் நடைபெறபோகும் பொது கூட்டத்தில் அறிமுகபடுத்தி கட்சியில் சேருங்கள். இப்படியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் செயலாற்றுங்கள்.

    2. நம் கட்சிக்கென டிவி சேனலை துவக்குங்கள். அதற்கு ”மோடி தொ.கா” என்று பெயர் சூட்டுங்கள் . அதில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு நீங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் உரையாற்றும் பேச்சை ஒளிபரப்புங்கள். அதற்கு ”தமிழிசை முழக்கம்” என்று பெயர் சூட்டுங்கள். நமது பிஜேபி பிரமுகர்கள் இருவரை அழைத்து “கருத்து மோதல்” என்ற பெயரில் அன்றாட பிரச்சனைகளை அலசுங்கள். மேலும் ஆர்.எஸ்.எஸ் பற்றிய அபாண்டமான குற்றசாட்டுகளுக்கு தக்க பதில் கூறலாம். மேலும் அவர்கள் natural calamity ஏற்பட்ட காலத்தில் அவர்கள் ஆற்றிய பணிகளை (போட்டோ வுடன்) விவரிக்கலாம்.

    3. நம் கட்சிக்கென ஒரு தமிழ் தினசரியும் மகளிருக்கென ஒரு வார இதழும் துவங்குங்கள். தினசரிக்கு கமலம் என்றும் வார இதழுக்கு செந்தாமரை என்று பெயர் சூட்டுங்கள். தினசரியில் கட்சி தொண்டர்களின் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.(வாரம் இருமுறை). நாத்திகம் பேசும் பல ஆண்கள் அவர்களின் மனைவிமாருக்கு பயந்து கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஆண்களின் மனைவியரை ”செந்தாமரை” வார இதழ் மூலம் பிஜேபி வசம் வயபடுத்தி அவர்களின் கணவர்மாரையும் பிஜேபி கட்சியில் சேர வைக்கலாம். மீளும் அந்த வார இதழில் பக்தி கதைகள், சமையல் பகுதி, ஒப்பனை பகுதி போன்றவற்றை சேர்க்கலாம்.

    4. கட்சி தலைமை பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் குறித்த எதிராளிகளின் குற்றசாடுகளுக்கான பதில்கள் கொண்ட booklets பிரிண்ட் செய்து கட்சி கிளைகளுக்கு அனுப்புங்கள். அதை கிளை தலைவர்கள் ஒரு ஞாயிறு அன்று அவர்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு விநியோகித்து படிக்க சொல்லவேண்டும். அடுத்த ஞாயிறு அன்று மீண்டும் சென்று அவர்களை பிஜேபி கட்சியில் சேர சொன்னால் நிச்சயம் விரும்பி சேருவார்கள். காரணம் அவர்களின் மனம் எனும் வானத்தில் கவ்வியிருந்த சந்தேகம் எனும் மேக கூட்டத்தை ஆதவன் எனும் booklets விலக உதவியிருக்கும். இப்போது மனம் தெளிந்த நீரோடையானதால் நல்ல முடிவு எடுப்பார்கள். இதுபோல பிஜேபி காரர்கள் அவர்கள் வாழும் பகுதிகளில் ஒவ்வொரு ஞாயிறும் சென்று சென்று உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதுதான் உறுப்பினர்களை பெருமளவில் சேர்ப்பதற்கு உகந்த வழி. உறுப்பினர்களை பெருமளவில் சேர்த்து கட்சியை பலபடுத்துவோம். எள்ளி நகையாடிய எதிராளிகளுக்கு நாம் யார் என்பதை புலபடுத்துவோம்.ஆகவே booklets தயார் செய்வீர்களா? உண்மையிலேயே உங்களுக்கு கட்சி வளரவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் நான் கூறியதை நிதானமாக வாசியுங்கள். பின்னர் அது குறித்து யோசியுங்கள். உங்கள் தலைவர் பதவி காலத்தில் பிஜேபி நன்கு ச்ழித்து வளர்ந்தது என்ற பெயர் உங்களுக்கு வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இவற்றையெல்லாம் எழுதுகிறேன்.

  38. அவர் புண்ணியம் செய்தாரா இல்லை பாவம் செய்தாரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.. ஆனால், தன் நாட்டை ஜப்பான்,சீனா,அமெரிக்க போன்ற ஏகாதிபத்திய வல்லூறுகளின் காலடியில் தாரை வார்க்கவில்லை. எங்கள் நாட்டிற்க்கு வந்து உங்களின் கடையை விரியுங்கள்(முதலீடு செய்யும்படி), உங்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு காத்திருக்கிறது என்று அந்நிய மூலதனத்தின் காலில் விழாத குறையாக வருந்தி அழைக்கவில்லை. உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் சமுக உடமை ஆக்கப்பட்டு, தொழில் வளத் துறையில் உலகிலேயே தன்னிகரற்ற நாடாக ரஷ்யாவை மாற்றினார் என்பது வரலாறு.

    லாபம் என்றால் என்ன, முதலாளிகள் என்றால் என்னவென்றே தெரியாத சமுகம் ஒன்று அங்கு உருவானது. இதை நான் கூறவில்லை, இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரே கூறி இருக்கிறார். ரவீந்திரநாத் தாகூரும் ரஷ்யாவில் பயணம் செய்தார். ரஷ்யர்கள் கற்பிக்கும் புதிய கலாசாரத்தை சோதித்து பார்க்க அவர் விரும்பினார். ஒரு ஆரம்ப பள்ளிக்குச் சென்றார்.அவரது பேனாவை அங்கிருந்த குழந்தைகளிடம் காட்டி, இதனி 5 ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் என்ன கிடைக்கும் என்று வினவினார். உடனடியாக அந்த குழந்தைகள் 6 மாத சிறை தண்டனை கிடைக்கும் என்றனர். ஒரு பொருளை வாங்கி அதிக விலைக்கு விற்பது பாவமாகவும், குற்றமாகவும் கருதப்பட்டது. இதனால் அவர் மிகவும் கவரப்பட்டார்.

    இதற்க்கு பெயர் தான் மக்கள் அரசு என்பது, இதற்க்கு பெயர் தான் சமூகத்திற்கான உற்பத்தி என்பது. இங்கும் ஒரு அரசு இருக்கிறது. MAKE IN INDIA என்று கூறிக்கொண்டு தன் நாட்டையே வளர்ச்சி என்கிற பெயரில் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு வழி ஏற்ப்படுத்தி கொண்டிருக்கிறது. பார்ப்போம், எம்பெருமானார் தான் இந்நாட்டை காக்க வேண்டும்..

  39. அன்பின் ஸ்ரீ தாயுமானவன், நலமா.

    \\\\ இதற்க்கு பெயர் தான் மக்கள் அரசு என்பது, இதற்க்கு பெயர் தான் சமூகத்திற்கான உற்பத்தி என்பது. இங்கும் ஒரு அரசு இருக்கிறது. MAKE IN INDIA என்று கூறிக்கொண்டு தன் நாட்டையே வளர்ச்சி என்கிற பெயரில் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு வழி ஏற்ப்படுத்தி கொண்டிருக்கிறது. பார்ப்போம், எம்பெருமானார் தான் இந்நாட்டை காக்க வேண்டும். \\\

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

    ஏன் இப்போதும் ஊரறிய உலகறிய மக்கள் தேர்ந்தெடுத்துத் தானே ஹிந்து ஹ்ருதய சாம்ராட் ஆன மோதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இது மக்கள் அரசில்லாது வேறென்னவாம்.

    உழைக்கும் மக்களை ஈவிரக்கமில்லாமல் சுரண்டும் முதலாளித்துவ பயங்கரத்தை நீங்கள் எதிர்க்க விழைந்தால் நானும் உங்களுடன் கூட சேர்ந்து இன் குலாப் ஜிந்தாபாத் என்று சொல்லுவேன். அங்காடித்தெரு படத்திலிருந்து ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிலாளிகளின் ரத்தம் உறிஞ்சி எடுக்கப்படும் அவலத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் சம்சயமே இல்லை.

    ஆனால் வெற்று கோஷங்களால் உலகத்தை கம்யூனிஸம், கேபிடலிஸம் என்று புத்தகத்தில் புதைக்கும் இடதுசாரி அறிவு சீவி அவலம் கேட்பாரற்றுப் போய் விட்டது இன்று.

    இதற்கு பெரும் மாற்று அகண்ட ஹிந்துஸ்தானம் அமைக்க உறுதியாக இருக்கும் சங்கத்தவரின் செயல்பாடுகள். சங்க பரிவாரங்களின் செயல்பாடுகளில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் குறைபாடுகளைக் களைந்து கொண்டே பீடு நடை போட்டு ……தேசத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்காகவும் மட்டும் செயல்படும் இயக்கத்தால் …………. தேசம் நிச்சயம் வளர்ச்சியின் பாதையில் செல்லும்.

    திருச்சிற்றம்பலம்
    சிவசிதம்பரம்

  40. ஸ்ரீ. சண்முகநாதன்ஜி அவர்களை தமிழகத்துக்கு நியமிக்க வேண்டும் அல்லது அவருக்கு இணையாக வளர்க்க கூடிய மக்களுக்கு புரியக்கூடிய வகையில் தன்னம்பிக்கையுடன் உள்ள , பேச்கூடிய அப்பளுக்கட்ட்ற ஸ்ரீ.பொன்ஜி போன்ற ஹ.ராஜாஜி போன்ற தலைவர்கள் நல்லவர்கள் ஆனால் எடுபடவில்லை ? ஒரு நபர் தலைவர் வேண்டும் அவர் சுயநலம் அட்ட்ரவராக வேண்டும்,, ஜாதி துவேசம் முக்கியமாக இருக்க கூடாது,,

  41. சிந்து சமவெளி நாகரீகதின் மொழி தமிழ் எனக் கூறும் இதே குழு தான் புனித தோமையாரின் சீடர் திருவள்ளூவர்; அவர் பைபிளை படித்துத் தான் திருக்குறள் எழுதினார் எனக்கூறுகிறது. இதே குழு தான், சிந்து சமவெளியில் கொடி கட்டிப் பறந்த திராவிடனை வெளியில் இருந்து வந்த ஆரியர்கள் தெற்கு பக்கமாக விரட்டினார்கள் என கதை கட்டி விடுகிறது! இதே குழு தான் பிராமணன் ஆரியன் வம்சத்தில் வந்தவன்; திராவிடர்களை அடக்கியாள வந்த வந்தேறிகள் என கொக்கரிக்கிறது. இது உண்மை என்றால் தெற்கு நோக்கி விரட்டப் பட்ட நமது முன்னோர்களிடம் அல்லவா இதன் தாக்கம் அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எந்த இலக்கியத்திலும் இது பற்றி எந்தக் குறிப்பும் காணப் படவில்லையே தமிழா! 5000 ஆண்டுகளாக தமிழ் இலக்கியங்களை படைத்து வந்த நமது முன்னோர்கள் அறியாத திராவிட இனத்தை மத மாற்றம் செய்ய வந்த பாதிரி றாபர்ட் கால்ட்வெல் வெறும் 150 வருடங்கள் முன் கண்டுபிடித்து விட்டாரா? ஆரியன் திராவிடன் எனக் கூறி இந்தியர்களையும் தமிழர்களையும் பிரித்தாழ்வது தான் இவர்களது சூழ்ச்சி! இவர்களின் உள் நொக்கம் புரியாத தமிழா உணற்ச்சி வசப்பட்டு கூத்தாடு! பிரிவினையால் அழிந்து போ.

  42. எனது 30-9-2014 தேதிய மறுமொழியின் 7 வது point ல் ரஜினி பற்றி எழுதிருந்தேன். “அவரை நம்ப கூடாது. அவர் ஒரு மண்குதிரை (=broken reed ) என்பது ஊரறிந்த உண்மை. அரசியலில் ஆர்வமில்லாத ஒருவரை வலிய வலிய இழுப்பது இழுப்பவருக்குதான் (=பிஜேபி ) இழுக்கு. இப்போது பாருங்கள் முன்னாள் பிஜேபி தலைவர் இல கணேசன் “ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்” என்று சொல்லிவிட்டார். அவர் சொல்வது பொய்யாக இருக்காது. உண்மையைத்தான் சொல்லி இருப்பார். ஆனால் இந்நாள் பிஜேபி தலைவியோ (=தமிழிசை) ரஜினியின் மனைவியின் கொலு அழைப்பிற்கு சென்று இருக்கிறார். ரஜினியை எப்படியாகிலும் பிஜேபி க்கு கொண்டுவர போராடுகிறார். இவர் கொலு பொம்மை போல சென்னையில் உட்கார்ந்துகொண்டு கட்சி வளர்க்க நினைத்தால் கட்சி சத்தியமாக வளராது. தமிழ் நாடு முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொள்ள வேண்டும்.

    திரு வெங்கடேஷ் என்பவர் “சண்முகநாதன் அவர்களை தலைவராக நியமிக்க வேண்டும்” ஜனங்களுக்கு அவர் யார் என்றே தெரியவில்லை. அறிமுகமில்லாத நபர்களை நியமிப்பது கட்சி வளர்ச்சிக்கு உதவாது. தமிழிசை மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது நியமனத்தில் தவறில்லை. ஆனால் அவர் கவர்ச்சி நடிகர்களை நம்பாமல் மக்களை நம்ப வேண்டும். அவர்களோடு நேரடி தொடர்பு கொள்ள வேண்டும். அதற்கு ஊர் ஊராக செல்லவேண்டும். பட்டி தொட்டி எங்கும் அவர் தனது காலை பதிக்க வேண்டும். அதை அவர் செய்வாரா?

  43. திரு தாயுமானவன்

    //இதற்க்கு பெயர் தான் மக்கள் அரசு என்பது, இதற்க்கு பெயர் தான் சமூகத்திற்கான உற்பத்தி என்பது. //

    நாங்களும் அப்படித்தான் எழுபதுகளில் நினைத்துக் கொண்டிருந்தோம். உலகமெங்கும் பரவி இருக்க வேண்டுமே இது. ? ஏன் இன்றைக்கு வட கொரியாவில் மட்டும் இன்று இந்த “மக்கள் அரசு” உள்ளது ? (கியூபா மாறிக்கொண்டு வருகிறது.நம் பாரதத்தில் பெயருக்கு இருந்து வருகிறது.)

    “அமெரிக்காவின் சதி” என்ற பதிலைத் தவிர வேறு எதாவது உண்டா ? தவிர இன்று உலகில் எத்தனை பேர் வட கொரியாவுக்கு சென்று விடுவோம் என்று “துடிக்கிறார்கள்” என்று விளக்க முடியுமா ?

    Communism is anti life என்பதை POL POT வந்தபோதே நாங்கள் புரிந்து கொண்டு விட்டோம்.

  44. Dr தமிழிசை அவர்களே! ஒரு Matinee idol ஐ நம்பி எதிர் வரும் நல்ல நாட்களை idle ஆக கழிக்க வேண்டாம். ரஜினி என்பவர் ஒரு riddle (=புரியாத புதிர்). But you are trying to saddle him with a responsibility . அது சரியல்ல. அதற்காக அவரை நான் மிகவும் மோசமானவர் என்று கூறவில்லை. அவர் நல்லவர்தான் ஆனால் அவர் அரசியலை பொருத்தவரை, he is a round peg into a square hole .Please understand this and come out of the puddle.

  45. இதில் தேவை இல்லாமல் ரஜினியை இழுப்பது தவறு. தற்போது உள்ள அரசியல் அவருக்கு சரிப்பட்டு வராது. பொய், புரட்டு, என சாக்கடையாக உள்ள அரசியல் அவருக்கு தேவை இல்லை. சிறந்த ஆன்மீகவாதியான அவருக்கு பெருந்தலைவர் காமராஜருக்கு நேர்ந்த கதி வரவேண்டாம் என நினைக்கிறேன். பலர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொன்னாலும் ஊடகங்கள் திரித்தி சொல்வதே வேலையாக போய் விட்டது. அவரை புரிந்து கொண்டவர்களுக்கு புயல் புரியாதவர்களுக்கு என்றுமே புதிர் தான். அவர் ஒரு பொது மனிதன் திரு ராஜ்குமாரை போல.

  46. Ramesh,
    U are right that rajini will not come to politics, but the reasons for that are different. He will always keeps confusing his fans saying ” I may come, God only knows” blah blah.

    If you have noticed, he will only speak about this topic just before the release of his films. This is a publicity stunt to promote his films. Once the film is released, he will disappear from public view & again reappear only before his next film’ release.

    This is a shrewd business exercise & poor fans like U are being taken for a ride every time. The sad part is that you do not even realise this.

  47. BJP is trying its level best to rope in rajini. They have even recently given him an ward at the recent international film festival. But rajani is too shrewd. He will have his cake & eat his too.

    After all, he has been fooling the entire tamil population for so long, is fooling the BJP a matter at all for him?

  48. தி.மு.க; அ.தி.மு.க; ம.தி.மு.க; போன்ற கட்சிகள் ஆண்டு தோறும் பெரியார்,அண்ணா
    போன்றவர்களின் பெயர்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள்;
    பேச்சுப் போட்டிகள் போன்றவற்றை நடத்துகின்றன.

    அதே போல் தமிழ்நாடு ப.ஜ.க வும் அண்டு தோறும் பள்ளி,கல்லூரி மாணவர்களிடம் தேசிய
    கருத்துகளை, தேசத் தலைவர்களின் கருத்துகளை விதைக்கும் விதமாக பேச்சுப் போட்டிகள் ; கட்டுரை போட்டிகள் போன்றவற்றை நடத்த வேண்டும்.

    மாணவர்களின் மத்தியில் தேசிய சிந்தனையை வளர்க்க வேண்டும் !
    பிரிவினைவாத கருத்துகளை வளர விடக்கூடாது !

  49. இனி (தமிழக பா.ஜ.க) நாம் செய்ய வேண்டியது ?
    (இந்தச் சிறுவனின் அறிவுக்கு எட்டியதைச் சொல்கிறேன்)

    முதலில் இலக்கிய அணியை பலப் படுத்த வேண்டும்.
    ஏன் இலக்கிய அணி ? பா.ஜ.க தமிழர்களுக்கான, தமிழர்களின் கட்சி என்று நிரூபிக்க. இன்றைய சூழலில் இது தேவையாக இருக்கிறது.

    தி.மு.க வும் அ.தி.மு.க வும் தமிழ்நாட்டில் ஆட்சியைப்பிடித்ததே இலக்கியம் பேசித்தான். தி.மு.க வளர்ந்தேதமிழாசிரியர்கள் மூலம் தான், இன்று நாம் இதைக் கையில்எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பி.ஜே.பி கட்சிமூலமாக, பல பேச்சுப் போட்டிகள், இலக்கிய விழாக்களை,பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு நடத்த வேண்டும். நம்நாட்டின் உண்மையான வரலாறுகளை, நம் கருத்துகளைமாணவர்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும்.

    இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் நம் தேசியக் குரல்ஒழிக்கத் தொடங்கும். பள்ளி, கல்லூரி, ஆசிரியர்களை நம்பக்கம் திருப்பவேண்டும். “ஒரு நாட்டின் ஆசிரியர்களைப்பிடித்தல், அந்த நாட்டையே பிடித்து விடலாம்” இது ஹிட்லர் சொன்னது (சொன்னவர் முக்கியம் அல்ல சொன்னது முக்கியம் ) நம்முடைய இதிகாசங்கள், நம் நாட்டிற்காகப்போராடியவர்கள், நம் தலைவர்கள் ஆகியோரின்வரலாறுகளை நம் மக்களிடம், நம் மாணவனிடம்
    கொண்டு சேர்த்தால் அவர்கள் நம்பக்கம் நம்மோடு இருப்பர்.

    காலம் நமக்காகக் கனிந்து இருக்கிறது, தமிழக பிஜேபி யின்முகம் ஒளிர ஆரம்பித்து இருக்கிறது, இதை நாம் சரியாகப்பயன் படுத்தினால் 2016 நம் வசமாகும்.

    தேசியக் கருத்துகளை மக்கள் மனதில் பதிவு செய்ய,
    தேசியக் கருத்துகளைப் பரப்புரை செய்ய,
    தேசியக் கருத்துகளை மக்களிடம் நிர்மாணிக்க,
    ஒரு நல்ல காலம், ஒரு நல்ல வாய்ப்பு நமக்குக்கிடைத்திருகிறது.

    கழகங்கள் வளர்ந்ததே “டீ கடையிலும், சலூன் கடையிலும் ” தான் தமிழக பி.ஜே.பி இனி வளரப்போவது”வகுப்பறையிலும்,வீட்டிலும் ” தான்.

    பலப்படுத்துவோம் நம் இலக்கிய அணியை !
    “மாநிலம் முழுவதும் நம் இலக்கிய அணியை, நம் கட்சியின் வேர்களைப் பலப்படுத்தும் கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம்”
    · தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை ஒற்றுமையோடு, உணர்வோடு பணியாற்றினால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விடலாம்.
    · முதலில் கட்சியில் உள்ள அணைத்துப் பிரிவுகளையும், அணிகளையும் அடி முதல் முடி வரை பலப்படுத்த வேண்டும்.
    · வலிமையான தொண்டர் படையை உருவாக்க வேண்டும், அதற்கான நேரம் இப்பொழுது வந்து விட்டது.
    · மோடி அரசின் நன்மைகளை மக்களிடம் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். சிறந்த பிரச்சார அணியை உருவாக்க வேண்டும்.
    · கட்சிக் கென்று தி.மு.க ; அ.தி.மு.க போல சிறந்த இலக்கிய அணி, பேச்சாளர் அணி ஆகியவற்றை உருவாக்க வேண்டும். தொடர்ந்து தெருமுனைக் கூட்டமும், சிறு சிறு பொதுக் கூட்டமும் நடத்தப்பட வேண்டும்.

    என்னுடைய சிறு அறிவுக்கு எட்டிய விருப்பம் இது.
    கற்றறிந்த சான்றோர் பெருமக்கள் ; பெரும் தலைவர்கள் ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும் .
    என் தாழ்மையான வேண்டுகோள் இது .

  50. //மாணவர்களின் மத்தியில் தேசிய சிந்தனையை வளர்க்க வேண்டும் !
    பிரிவினைவாத கருத்துகளை வளர விடக்கூடாது !//

    BJP எல்லா போஸ்டர் ல் தேசியம் தெய்வீகமும் இறண்டு கண்கள் என்ற சொல்லை நீங்கள் பார்த்தது இல்லையா? ஆட்சர்யம்.

  51. நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்து இப்போது மேல்முறையீடும் முடிவடைந்து இன்னும் அதிக பட்சம் போனால் மார்ச் கடைசி வாரத்திற்குள் தீர்ப்பு வந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நாம் சிலவற்றை கவனிக்க வேண்டி உள்ளது.

    1. பீகார், இமாச்சலப்பிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் , தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் அல்லது முன்னாள் முதல்வர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு சிறை சென்றுள்ளனர். எல்லா மாநிலங்களிலும் முன்னாள் முதல்வர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அதே மாநிலத்தில்தான் விசாரணை நடை பெற்றது. ஆனால் திமுகவினர் இந்த வழக்கை வேண்டுமென்றே வெளிமாநிலத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து, ஜெயலலிதா பழிவாங்கப்படுகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர்.

    2.லல்லு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்தபோது , மாட்டு தீவன வழக்கில் அவருக்கு சி பி ஐ கைது வாரண்ட் பிறப்பித்தது. உடனே அவர் தன்னுடைய மனைவியை முதல்வர் நாற்காலியில் அமர்த்திவிட்டு, சிறைக்கு சென்றார். வழக்கு விசாரணை பீகாரில் தான் நடை பெற்றது. லல்லூவின் கட்சி ஆளுங்கட்சியாகத்தான் இருந்தது. இருந்தபோதும், விசாரணை வெளி மாநிலங்களுக்கு மாற்றப்படவில்லை.பீகாரில் மனைவி முதல்மந்திரியாக இருந்துகொண்டு, கணவருக்கு எதிரான சாட்சிகளை கலைக்க முடியாதா ?

    3. எம் எல் ஏ ,எம் பி, அமைச்சர், முதல் அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்தபோது ஊழல் செய்தார்கள் என்ற காரணத்துக்காக மாநில காவல் துறையினர் விசாரணை செய்து வழக்கு நடத்தி பல வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் எந்த மாநிலம் ஆனாலும் சரி , ஒரு அரசியல்வாதி மீது வழக்கு தொடுக்கப்படும் போது, அதனை மாநில அரசின் காவல் துறை தான் வழக்கை நடத்தும். அந்த அரசியல்வாதியின் கட்சிக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களை அந்த வழக்குகளில் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்வது எங்குமே நடக்காத ஒன்று. ஆனால் தமிழகத்தில் மட்டும் திமுகவினர் எப்படியாவது ஜெயை சிறைக்கு அனுப்பிவிட்டால், தங்கள் குடும்பம் ஆட்டையைப்போடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு, தேவை இல்லாமல் ஜே வழக்கில் தலையிட்டு, தங்களை ஒரு தரப்பாக சேர்த்துக்கொண்டு, தங்கள் பழிவாங்கும் உணர்ச்சியை அப்பட்டமாக வெளியே காட்டி விட்டனர். இதனால் ஜெவுக்கு அனுதாபமும் ஆதரவும் தான் கூடுகிறதே தவிர , திமுகவுக்கு மேலும் இடிதான் விழ வாய்ப்பு உள்ளது. அதே சமயம் நம் மக்கள் இன்னொன்றையும் கவனிக்கிறார்கள். திமுகவினரின் தலைமை குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது பலவிதமான பெரிய வழக்குகள் நடந்துவந்தபோதும், அதிமுகவினர் அந்த வழக்குகளில் தலையீடு செய்வதில்லை என்பதுதான் அது. எனவே நிச்சயம் மேல்முறையீட்டில் கூட்டு சதி நடை பெற்றது என்பது நிரூபிக்கப்படவில்லை என்றே தீர்ப்பு வரும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். இன்னமும் 3- வாரத்தில் முடிவு தெரிந்துவிடும்.மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு எதுவாயினும் தலைவணங்கி ஏற்போம்.

  52. //////கழகங்கள் வளர்ந்ததே “டீ கடையிலும், சலூன் கடையிலும் ” தான்///////

    திரு பரிவழகன் போல தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வரவேண்டும் என்று எங்கும் உள்ளங்கள் ஏராளம். அவரவர் மனதிலிலுள்ள (கட்சி வளர்ச்சிக்கான) நல்ல கருத்துக்களை கூறுகின்றனர். நானும் பலமுறை பல கருத்துக்களை பலவகையிலும் கூறியுள்ளேன். அது சேரவேண்டிய நபர்களை அடைந்ததா என்பதுதான் தெரியவில்லை. நாங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் நல்ல கருத்துக்கள் என்று சொல்லமுடியாது. என்றாலும் நாங்கள் கூறுவதில் ஒன்றுகூடவா உருப்படியான கருத்து இல்லாமல் போய்விடும்? அப்படிப்பட்ட கருத்துக்களை இந்த இணையத்தில் கட்டுரை எழுதும் பிஜேபி நிர்வாகிகளான திரு ஈரோடு ஆ சரவணன் மற்றும் திரு வீர ராஜமாணிக்கம் ஆகியோர் தமிழக தலைமைக்கு கொண்டு செல்லலாமே! அதற்கு என்ன தடை? (பலமுறை கொண்டு சென்றுள்ளோம் என்று அவர்கள் இங்கே எதிர்வினை எழுதுவார்கள் என எனக்கொரு நப்பாசை – எழுதுவார்களா?) எனக்கு பிஜேபி வளர்ந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீராத ஆசை. என் கோரிக்கைகள் உதாசீநபபடுத்தபட்டு அவை கேட்பாரரற்று போகும்போது அதனால் ஏற்படும் மன உளைச்சலில் பிஜேபியையும் அதன் தமிழக தலைமையும் கண்டபடி (இந்த இணையத்தில் பல இடங்களில்) திட்டி எழுதி உள்ளேன்.

    திரு பரிவழகன் சொல்வது போல திமுக டீ கடைகளில் வளர்ந்தது உண்மை. அதாவது டி கடைக்கு சென்றால் அங்கே டீ மட்டும் கிடைக்காது. அந்த டீ கடை பென்ச்சில் newspaper ம் இருக்கும். கடைக்காரன் திமுகாரன் என்றால் அங்கே கண்டிப்பாக முரசொலி இருக்கும். அதில் கருணாநிதியின் கட்டுரை இருக்கும். அதை படிப்பான். அவன் மனம் மெல்ல மெல்ல திமுக மீது சாயும். ஆனால் பிஜேபி பக்கம் சாய டீ கடைகளில் பிஜேபி சார்பாக எந்த தமிழ் தினசரி உள்ளது என்று சொல்லுங்கள்? ஒரு கட்சியின் தலைவன் கேடியா ஒருந்தாலும் அவனை நல்லவன் என்று ஊர் மக்கள் நம்பும்படியாக செய்ய மீடியா தேவை. ஊடகத்தின் அவசியத்தை உணராதவர்களாக தமிழக பிஜேபி காரர்கள் உள்ளனர். எந்த கோவிலில் போய் இதை சொல்ல?

    ///சிறந்த பிரச்சார அணியை உருவாக்க வேண்டும்.///

    மேலே கட்சி வளர ஊடகம் தேவை என்று சொன்னேன். அடுத்த தேவை என்னவெனின் அது நாடகம். தற்போது இசை அமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் எஸ்.வி. சேகர், டைரக்டர் கஸ்தூரி ராஜா, நடிகர் நெப்போலியன் ஆகியோரை பயன்படுத்தி நாடகங்களை தயாரித்து அவை மூலம் கட்சி கொள்கைகளை மக்கள் அறிய செய்யலாமே ! அறிஞர் அண்ணா அப்படிதானே திமுகவை வளர்த்தார்.நாடகம் என்பது பிரச்சாரத்தின் ஒரு உருவம். 100 கூட்டங்கள் போடுவதை விட ஒரு நாடகம் மூலம் மக்கள் மனதில் நம் கருத்துக்களை ஆழமாக பதிய செய்யலாம்.

    தமிழக பிஜேபி தலைமைக்கு இதையெல்லாம் யார் எடுத்து சொல்வது? நாம் நம் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் அவர்களுக்கு தெரிவித்தால் அதை அங்கே கண்டு கொள்ள ஆளில்லை. கால் தூசுக்கும் கூட மதிப்பதில்லை. இது ஒரு குறைக்கும் நாய் என்று கருதி அவர்கள் பாட்டுக்கு பேசாமல் இருக்கிறார்கள்.
    /////தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை ஒற்றுமையோடு, உணர்வோடு பணியாற்றினால்///// தலைமை கட்சி தொண்டர்களை தம்பிடிக்கு கூட மதிக்காதபோது கட்சி எப்படி வளரும்? அங்கே எப்படி ஒற்றுமை இருக்கும்? மின்னஞ்சலுக்கு ஒரு வரி பதில் அளித்தால் குறைந்தா போய்விடுவார்கள்? அவ்வளவு பிஸியா? அவ்வளவு பிஸியாக இருந்து அப்படி என்ன வோட்டு (திருவரங்கத்தில்) வாங்கிவிடீர்கள்?

  53. ”புதிய தலைமுறை” என்ற சேனலை SRM பல்கலைகழக வேந்தர் பச்சைமுத்து நடத்தி வருகிறார் என்று தகவல். அவர் பிஜேபியுடன் கூட்டு வைத்துள்ளார். ஆனால் பிஜேபிக்கு எதிரான கருத்துக்களையே தலைப்பாக்கி தினமும் அந்த டிவி யில் விவாதம் நடத்துகிறார்கள். கட்சியை விடுங்கள். அவரும் ஒரு இந்துதானே? அவரும் அவரது மனைவிக்கு தாலி கட்டியிருப்பாரே! அந்த தாலியால் அவரது மனைவி சிறுமைபட்டாரா அல்லது பெருமை அடைந்தாரா என்று அவரை கேட்டு இருக்கலாமே! அதை விடுத்து சில அயோக்கியர்களை அங்கே அழைத்து (வீண்) விவாதம் செய் ஏற்பாடு செய்கிறார்கள். ஆகவே அந்த ஆள் பச்சமுத்து அல்ல (இந்துக்களுக்கு) பச்சை துரோகி. இந்துக்கள் என்றாலே இவர்களுக்கு இளிச்சவாயன் என்று நினைப்பு.துலுக்கன் கூட அவனது மனைவிக்கு திருமணத்தின்போது “கருமணி” கட்டுகிறான் . கிறிஸ்தவன் மோதிரம் போடுகிறான் . அவைகளால் அவர்களது மனைவிமார்கள் சிறுமை அடைகிறார்களா அல்லது பெருமை அடைகிறார்களா என்று விவாதம் நடத்த தயாரா? இவர்கள் நடத்தவும் மாட்டார்கள் அதை விவாதிக்க வேலை வெட்டியற்ற “அதுகள்’ வரவும் வராது. அதில் தவறி கலந்து கொண்டால் அவர்களது வீட்டில் மறுநாளே ‘குண்டு’ விழும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இந்த இந்து முன்னணிகாரர்கள் வெறுமனே தெருவில் நின்று கோஷம் போடத்தான் தெரியும். ஆனால் அவர்களுக்கு (கோஷா போட்ட பெண்கள் உட்பட) குண்டு போட தெரியும். இந்து முன்னணியினர் பிஜேபி மூலம் அந்த பச்ச முத்துவை சந்தித்து முறையிட வேண்டும்.

    ‘தி ஹிந்து’ என்ற தமிழ் இணையத்தில் வரும் கட்டுரைகளுக்கு (பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு ஆதரவான கருத்துக்கள் அடங்கியவை) நிறைய முஸ்லிம்கள் மறுமொழி எழுதுகின்றனர். அங்கே இந்துக்கள் எழுதுவது மிக மிக குறைவு. ‘தமிழ் ஹிந்து’ வில் எழுதும் ஜாம்பவான்கள் அந்த பக்கம் ஏன் எட்டி பார்க்கவே மாட்டேன்கிறார்கள்? இங்கே நல்ல கருத்துக்களை பகிரும் அவர்கள் அங்கே சென்றால் அங்கே (தி ஹிந்து தமிழ் இணையம்) பேயாட்டம் ஆடும் முஸ்லிம்களின் கொழுப்பை கொஞ்சம் அடக்கி வைக்கலாமே! இனியாகிலும் செய்வார்களா? (நிச்சயம் எனக்கு தெரியும் அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள் என்று. அதுதான் இந்துக்களின் தலை எழுத்து. நோந்துகொல்வதை தவிர என்ன செய்ய?)

  54. திரு HonestMan,அவர்களுடைய ஆதங்கம் சரியானதுதான், ஆனால் அந்த (தி இந்து )இணையதளத்தில் எழுதும் மிகப்பெரும்பாலான நீங்கள் குறிப்பிடும் கொழுப்புள்ளவர்கள் எழுதும் எழுத்தைக் கவனித்தீர்களா, எவ்வளவு மரியாதை குறைவான வார்த்தைகள், அதற்காகத்தான் எங்கள் ஜாம்பவான்கள் போவதில்லை என்று நினைக்கிறேன், ஆனாலும் ஒருசில நண்பர்கள் பதில் எழுதிக்கொண்டுதான் உள்ளனர் அவர்களை பாராட்டுவதைத்தவிர வேறென்ன செய்யமுடியும் . ————————அன்புடன் -பிறேமதாசன் திருமேனி .

  55. The press & media in general are anti hindu. The Indian express is to a certain extent, passable. The Hindu, specially after N.Ram took over has been vehemently pro muslim in its outlook.

    One reason these guys are emboldened to speak against Hinduism is because most of the so called ‘secularists” are hindus. When hindus themselves speak against their own religion, it gives the opposition an upper hand.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *