நமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்

நமது இந்துப் பண்பாட்டையும் சனாதன  தர்மத்தையும் நிறுவி, காலங்காலமாக அதனைக் கட்டிக்காத்து வரும் தூண்களான புனித குருமார்களின் மீதான ஒரு தியானமாக, வழிபாடாக  குருமண்டலம் (Galaxy of our Gurus) என்ற இந்த போஸ்டரை செய்தேன். எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டேன். தமிழ்ஹிந்து வாசகர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த குருமார்களின் திருவுருவங்களின் காட்சி அவர்களது நினைவையும், உபதேசங்களையும் நமது நெஞ்சில் எழுப்பும்.  இந்த போஸ்டரை மையமாக வைத்து அவர்கள் ஒவ்வொருவரது வாழ்க்கை வரலாற்றையும் போதனைகளையும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் அறிமுகப் படுத்தலாம்.  நமது கலாசாரத்தின் ஆதார சுருதியான “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதையும்  இந்த சித்திரம் நமக்கு நினைவுறுத்தும். கோயில்களிலும்,  பொது அரங்குகளிலும், கல்வி நிலையங்களிலும்,  இல்லங்களிலும் இந்தப் படத்தைக் காட்சிப் படுத்தலாம்.

Guru-Mandala-A3

(படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

பாரத தேசத்தின் அனைத்து பிரதேசங்களையும்,  அனைத்து முக்கியமான சமயப் பிரிவுகளையும், சம்பிரதாயங்களையும் சமுதாயங்களையும் பிரதிநிதித்துவப் படுத்த முயற்சித்திருக்கிறேன்.

ஆன்மீக குருமார்களை மட்டுமே குறித்த படம் இது; எனவே சத்ரபதி சிவாஜியோ, காந்திஜியோ ஏன் இல்லை என்று தயவு செய்து கேட்க வேண்டாம். வீரர்களையும் தலைவர்களையும் குறித்து வேறு போஸ்டர்கள் செய்தால் அவர்களை அதில் சேர்ப்பேன்.

அச்சிடுவதற்காக, அதிக resolution படங்கள் கீழ்க்கண்ட இணைப்புகளில்:

Poster with name strip below – A3 size: https://goo.gl/WGIkiA (pictures become slightly smaller due to scaling and margins)

Picture portion only filling entire A3 size –https://goo.gl/PjqdtF. Namestrip that can be printed separately and attached below the picture portion – https://goo.gl/TOAT08

136 Replies to “நமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்”

  1. இப்பதிவினை வெளியிட்ட தமிழ் ஹிந்து வலைதளத்திற்கும் , மரியாதைக்குரிய ஜடாயு அண்ணாவிற்கும் சிரம் தாழ்ந்த பாதம் பணிந்த நமஸ்காரங்கள்.

  2. இதில் வள்ளுவரும், வள்ளலாரும் எங்கிருந்து வந்தார்கள், அவர்களுக்கும் சனாதனதிற்க்கும் என்ன தொடர்பு… கொடுமையிலும் கொடுமையாக புத்தரையும் சனாதனதிற்க்குள் இழுத்து போடுவதேன், அவர் வைதீக மரபுகளை தீவிரமாக எதிர்த்த “பொருள் முதல் வாத” தத்துவத்தை முன்னெடுத்த ஞானி. அவரையுமா? ஒன்றும் பிடிப்படவில்லை…

  3. பேரன்புள்ள ஜடாயு அவர்களுக்கு,

    இந்த குருமார்களின் குருமண்டலத்தில் திருப்பராய்த்துறை தவத்திரு சுவாமி சித்பவானந்தரின் திருவுருவத்தையும் சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி- அப்பண்ணசுவாமி.

  4. அன்புள்ள அப்பண்ணசுவாமி அவர்களுக்கு,

    இது *முழுமையான* பட்டியலோ படமோ அல்ல. எல்லா முக்கிய சம்பிரதாயங்களையும், சமய மரபுகளையும் இணைக்க வேண்டும் என்பதே குறீக்கோள். உதாரணமாக, ஞானேஸ்வர், துகாராம் மட்டும் இருக்கிறார்கள். நாம்தேவ், ஏக்நாத், ஜனாபாய் போன்ற அதே மரபின் மற்ற மகத்தான குருமார்கள் இல்லை.

    இந்த போஸ்டருடன் நீங்கள் வணங்கும் குருமார்கள், ஆச்சாரியார்களின் படங்களையும் சேர்த்து நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

  5. தாயுமானவன், உங்களூக்கு பிடிபடாமல் போவது பற்றி பிரசினையில்லை, அதில் ஆச்சரியமும் இல்லை.

    புத்தரும், ஜினேந்திரரும் நமது ஒட்டுமொத்த ஞான மரபின் குருமார்கள், அந்த மரபு வைதிகம், அவைதிகம் இரண்டையும் உள்ளடக்கியது தான்.

    வேத ரிஷிகளைப் போலவே தர்மம், அர்த்தம், காமம் (அறம், பொருள், இன்பம்) ஆகிய மூன்று புருஷார்த்தங்களை எடுத்துரைத்த மகரிஷி வள்ளுவர். தெய்வப் புலவர் என்று தான் தமிழ் மரபு அவரைப் போற்றுகீறது.

    வள்ளலார், சைவ சித்தாந்தத்தின் தொடர்ச்சியே அன்றி வேறு யார்? “வாழையடி வாழையென வந்த திருக்கூட்டமதில் நான் ஒருவன்” என்று அவர் சொல்லும் திருக்கூட்டத்தில் தான் இந்தப் படத்தில் அவருக்கு முன்னே உள்ளவர்கள் 🙂

  6. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

    நமக்குத் தெரியாத விஷயங்களை நமக்குத் தெரிந்த கண்ணாடி வழியே பார்ப்பதில் ப்ரச்சினை இல்லை.

    ஆனால் முழுமையான விஷயத் தெளிவிற்கு திறந்த மனம் தேவை.

    வஹாபியம் என்பது பற்பல வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய இஸ்லாத்தில் ஒன்று மட்டிலும் தானே ஒழிய அதுவே இஸ்லாம் என்பது கிடையாது. பன்மை என்பதனை அறவே ஏற்காத இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவம் ஹிந்துஸ்தானத்திலும் உலகிலும் புழங்க நேர்கையில் பற்பல வழிபாட்டு முறைகளை ……… ஒன்றுடன் ஒன்று ஒவ்வாதவும் கூட (கத்தோலிக்க, ப்ராடஸ்டெண்ட்)……..(ஷியா, சுன்னி)……. இத்யாதி தன்னுள் ஏற்க நேர்கிறது. ஷியா சம்ப்ரதாயத்திலேயே இன்னமும் பற்பல கூறுகள். சுன்னி சம்ப்ரதாயத்திலும் பற்பல கூறுகள்.இப்படிப் பிரிவதெல்லாம் மிகவும் இயற்கையானதும் அடிப்படை மனித இயல்பும். அவ்வளவே.

    பௌத்தத்திற்கும் வைதிக சமயங்களுக்கும் சித்தாந்த ரீதியில் வித்யாசங்கள் உண்டு தான். அதே சமயம் பௌத்தத்தின் அங்கமான வஜ்ரயானம் மற்றும் ஹிந்து மதத்தின் அங்கமாகிய சாக்த தந்த்ரவாதம் போன்றவற்றினிடையே ஒற்றுமைகளும் நிச்சயமாகக் காணக்கிட்டுகின்றன (மிக வெளிப்படையான வேற்றுமைகளுக்கிடையேயும்).

    ஒரே நேர்கோட்டில் கருப்பு வெள்ளையாக மட்டிலும் உலகம் இயங்குவதில்லை 🙂

  7. //எல்லா முக்கிய சம்பிரதாயங்களையும், சமய மரபுகளையும் இணைக்க வேண்டும் என்பதே குறீக்கோள்.//

    இந்தக்குறிக்கோள் இருந்தால்,

    இப்படி சொல்லக்கூடாது // காலங்காலமாக நமது இந்துப் பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் நிறுவி, கட்டிக்காத்து வரும் தூண்களான நமது புனித குருமார்களின்//

    சனாதன தர்மம் தெரியாமலும் அதைப்பற்றி சட்டை பண்ணாமலும் கோடிக்கணக்கான இந்துககள் வாழ்கிறார்கள். வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். பலர் தெரிந்துமே அதை ஒதுக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.

    ஆயிரத்துக்கும் மேலான சமய மரபுகள் இருக்க உங்களுக்கு சனாதன மரபே முதலில் வந்து தலைப்பாக உட்கார்ந்துவிடுகிறது.

    அவ்வாயிரம் மரபுக்களில் சனாதன மரபும் ஒன்று என்று ஏன் தோன்றவில்லை?

    பொருத்தமான தலைப்பு,

    //இந்து ஞான மரபையும் இந்துப்பண்பாட்டையும் நிறுவியும் வளர்ந்தெடுத்தும் பேணியும் வாழ்ந்து மறைந்த புனித குருமார்கள்//

    எனபதே உங்கள் படங்களில் ஒரே தலைப்பாக இருக்க முடியும். எந்த மரபையும் தூக்கி மேலே வைத்தால், அது நாரதர் வேலை. நாரதர் வேலை இறுதியில் நன்றாக முடியும்? உங்கள் வேலை, சும்மாக் கிடக்கிற வாய்களுக்கு அவலைப்போடும்.

    Road to hell is paved with good intentions என்பார்கள். இந்துமதத்தைப் பொறுத்தவரை உங்களைப்போன்றவர்களால் அப்பழமொழி உறுதி seyyappadukiRathu.

  8. யோகி ராம் சுரத்குமார், தாயுமானவர் இவர்களையும் சேர்க்கமுடியுமா என்று பாருங்களேன்

  9. பேரன்பிற்குரிய ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

    (எ) காவ்யா (எ) Tamil (எ) திருவாழ்மார்பன் (எ) அய் அய் எம் கண்பட்ராமன் (எ)

    சமீப காலங்களில் தமிழ் ஹிந்துவில் பால சுந்தரம் கிருஷ்ணா என்று ஆகி……… பின்னர் தமிழ் ஹிந்துவின் மெய்யான தமிழ் அன்பரான பாலா அம்போவென சிவனேனு இருக்கையில்……… உத்சவமூர்த்தியாக தேவரீர் சில காலம் பாலா வாக உலாவந்து…… இப்போது தமிழ் ஹிந்துவிலும் திண்ணையிலும் …………BS என்று டைம் பாஸ் செய்யும் வேளையில்…………..அஃதாகப்பட்டது மொக்கை போடும் வேளை தனில்………

    கோபித்துக்கொள்ளக் கூடாது. தேவரீர், பூர்வ அவதாரமான Tamil அவதாரத்தில் நீங்கள் பின்னூட்டம் இடுவதெல்லாம் பொழுது போக்கத் தான் எனத் தெள்ளெனத் தெளிவாக முழங்கியுள்ளீர்கள்……… அது அவதானிக்கப்பட்டுள்ளது ……….. அவ்வளவே. (முழு ஈ ஆர் ஸி……….. தங்களுக்கோ மற்ற அன்பர்களுக்கோ தேவையானால் தேடிக்கொடுக்கப்படும்)

    அதற்கு முந்திய………. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து அவதாரமான ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவதாரத்தில் ஸ்ரீ வைஷ்ணவத்தை *சிரி* வைணவம் என்று இழித்துப் பழித்துள்ளீர்கள். அதற்கும் அதற்கு மேற்பட்டு ஆழ்வார் ஆசார்யாதிகளை இழித்துப் பழித்த படிக்கும் இந்த தளத்தில் மண்டகப்படியும் வாங்கிக்கட்டியுள்ளீர்கள்.

    வர்த்தமான அவதாரமான BS அவதாரத்தில் வைணவச் சுடராழி என்றும் ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமிகள் என்றும் வைஷ்ணவப்பெரியோர்களும் ஆசார்யாதிகளும் உகக்கும் பரம பாகவதோத்தமரான டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களைப் பற்றி தேவரீர் துஷ் ப்ரசாரம் செய்தருளியிருக்கிறீர்கள்.

    \\ உங்கள் வேலை, சும்மாக் கிடக்கிற வாய்களுக்கு அவலைப்போடும். \\

    சும்மா சொல்லக்கூடாது ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோவான தங்களுக்கு என்னே பணிவடக்கம். உங்கள் ஒரேயொரு வாயில் மெல்ல அவல் கிடைத்து விட்டது என்பதற்காக ……….. வாய்களுக்கு என்று சொல்லத் துணியலாமா.

    ம்……….. பட்டைய கிளப்புங்கள்……….. அல்லேலூயா பாடி ச சில்சாமுக்கு பூர்வ அவதாராத்தில் கொடுத்த வாக்கு தத்தத்தை நிறைவேற்றுவீர்களாக.

    எங்கயாவது தப்பித் தவறி வாசகர்கள் சைவ வைஷ்ணவ சாக்த பௌத்த ஜைன நாட்டார் வழிபாட்டு குருமார்களை நினைத்து பொழுதை வீண் செய்து விடப்போகிறார்கள்.

    மற்றெல்லா அவதாரம் போலவும் …….. இந்த அவதாரத்திலும் தொடரும்…….. பின்னூட்டங்களாலேயே இழையின் போக்கை திசைமாற்றும் தேவரீரது திருவிளையாடல் தொடரட்டும் 🙂

  10. சனாதனம் என்றால் ஆதியும் அந்தமும் அற்றது, அழிவில்லாதது என்று அர்த்தம். சனாதன தர்மம் என்றாலே அது இந்து மதம் தான், இந்து மதத்திற்குள் உள்ள ஒரு பிரிவு அல்ல. காந்தியடிகள் “நான் ஒரு சனாதனி ஹிந்து” என்று தான் கூறியுள்ளார்.

    உண்மையான இந்துமதப் பற்று உள்ளவர்களுக்கு இந்தப் படத்தைப் பார்த்தால் பக்தியும் பெருமிதமும் தான் ஏற்படும். அவ்வளவு அழகாக இருக்கிறது. ஆனால் B S, தாயுமானவன் போன்ற இந்து வெறுப்பாளர்களுக்கு அதையும் வைத்து ஒரு வெறுப்பு கமென்ட் போட வேண்டும் என்று தோன்றுகிறது. இவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது வெட்டி வேலை.

    இந்த போஸ்டரை பிரிண்ட் செய்து ஃபிரேம் போட்டு எங்கள் பகுதியில் உள்ள கோயிலில் மாட்டப் போகிறேன்.

  11. தமிழில் சனாதன தர்மத்தை பற்றி மிக விரிவாகவும், நாத்திகம் பரவிய வேளையில் அதை துணிவுடன் எதிர் கொண்டு சனாதனத்தை/ வேதத்தை தமிழ் நாட்டில் காப்பாற்றிய ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி (பெரியவாள்) படத்தை விட்டு விட்டீர்கள். ஒப்பு கொள்கிறேன் அவர் சங்கரரின் மறு அவதாரமென்று நீங்கள் விட்டிருக்கலாம். அதே போல் சத்ய சாயிபாபாவையையும் ஷீரடி சாயியின் மறு அவதாரமென்று நீங்கள் விட்டிருக்கலாம். நிகழகால குருமார்களாக அவர்கள் கண்ணெதிரே வாழ்ந்து மறைந்தவர்கள். தன்னலமற்று மனித சமுதாயத்திற்கு வாழ்ந்த மகான்கள் படங்களை வெளியிட்டுள்ளீர்கள். ஒவ்வொருவராக எல்லோரின் வாழ்கை சரிதத்தையும் வெளியிடும்படி வேண்டுகிறேன். வாழ்க உமது தொண்டு.

  12. //மற்றெல்லா அவதாரம் போலவும் …….. இந்த அவதாரத்திலும் தொடரும்…….. பின்னூட்டங்களாலேயே இழையின் போக்கை திசைமாற்றும் தேவரீரது திருவிளையாடல் தொடரட்டும் :-)//

    நன்றி.

    போற்றுவார் போற்றட்டும்; புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு செயலை என்மனது ஏற்றால் தொடர்ந்து செய்வேன். இங்குமட்டுமன்று. எங்கெங்கும். எத்தனை அவதாரமென்றாலும் ஒரே கொளகை. அது, இந்து மதம் பார்ப்பனருக்கு மட்டுமன்று. அதில் அனைவரும் தங்களுக்குமிடமுண்டு என்றுணர வேண்டும். அதைச்செய்யத்தான் தமிழ்ஹிந்து.காம் தொடங்கப்பட்டிருக்கிறது என்பதை கிருஸ்ணகுமார் உணர்ka.

    எனவேதான் சாதிகள் இந்துமதத்துக்கு கேடு என்றும். சனாதன தர்மத்தை முன்வைத்தால், பிறபிரிவினர் அதற்குமட்டுமேன் முன் வைப்பு என்று கேட்பதற்கு வழிவைத்தல் இம்மதத்துக்கு கேடு விளைவிக்கும் என்பது இதன் வரலாறு. எவர் என்ன மண்டகப்படி வைத்தாலும் – அவருக்குப்பிடிக்காத கருத்தென்றால் வைக்கத்தானே செய்வார்? – என் பணி கடன் செய்து கிடப்பதே.

    ரவிதாசின் படத்தையும் சேர்த்த ஜடாயு என் போலவே சிந்திக்கவேண்டும். நான் சொன்னவண்ணமே தலைப்பு இருப்பதுவே நன்று. படங்களில் உள்ள அனைவர் சனாதன தர்மத்தை ஏற்கவில்லை.

    சக்திவேல்! சனாதனம் என்ற சொல்லுக்குப் பொருள் எதுவாக இருந்தாலும், அது எப்படி பாமரர்களால் எடுக்கப்படுகிறது என்று வைத்தே நாம் பயணிக்க வேண்டும். அதுவே அறிவு. உண்மையான, போலியான, இந்து விருப்பாளர்கள், வெறுப்பாளர்கள் என்பனவெல்லாம் திறமையாக காய நகர்த்துவதற்குச் சமம்.

    இங்கு சனாதனத்தை விரும்புகிறாரா வெறுக்கிறாரா என்ற கேள்விக்கே இடமில்லை. அது மட்டுமா இந்துமதப்பிரிவு? இந்துமதத்தில் பலபல பிரிவுகள்; அதனால் நாம் பெருமைப்படுகிறோம் என்று சொல்லிவிட்டு இப்படி சேம் சைட் கோல் போட்டால் எப்படி சக்திவேல்?

    சக்திவேல்! நம்பூதிரிப்பார்ப்பனர் தமது கோயிலில் எதையும் செய்யவேண்டாமென்று சிவலிங்கத்தை நெய்யாட்டிங்கரையில் பிரதிஷ்டை பண்ண குரு முயன்ற போது, பிராமணர் கோபப்பட்டார்; ஏளனம் செய்தார்? ச்சக்திவேலைப்போலவே சொன்னார்: எம்மை ஒதுக்கினீராயின் நீர் இந்துமத வெறுப்பாளர் என்றார்.

    குரு சொன்னார்: நான் பிரிதிஷ்டை பண்ணியது நம்பூதிரி பிராமணரின் சிவனன்று. ஈழவர்களுக்கான சிவன்.

    இன்று அது மிகப்பெரிய சிவன் கோயிலாக வளர்ந்து புகழ்பெற்றுவிட்டது.

    அனைவருக்கும் இந்துமதம் – இதுவே உயர்ந்த கொள்கை. எதையும் இதுவே முதல் என்று சொல்லவே செய்யவோ கூடாது. உமது செயல் இந்துமதத்துக்கு நன்மை விளைவிக்காதென்றால், எம்மை இந்துமத வெறுப்பாளன் எனத்தூற்றுவது யார் உண்மையிலேயே வெறுப்பாளன் என்று காட்டும்.

  13. இங்கும் மற்றவிடங்களிலும் பலர் நினைப்பதென்னவென்றால், பிராமணர்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்து வெறுப்பாளன்; அவன் இந்துவே கிடையாது. இங்கே சக்திவேல் சொல்கிறபடி.

    இங்கு போடப்பட்டிருக்கும் குருமார்கள் பலர், போடாத இன்னும் பலர், வாழ்க்கை சரிதங்களை ஆராயட்டும் அவரகள்..

    பிராமணர்களை ஏற்றவன் இந்து; ஏற்காதவனும் இந்து.வருணாஷ்ரத்தை ஏற்கவில்லையென்றால், பிராமணர்களை ஏற்கவில்லையென்றாகும். இப்படி வருணாஷ்ரத்தை ஏற்காத குருமார்கள் ஏராளம். புத்தரின் பட்த்தையும் சேர்திருக்கிறாரல்லவா?
    சிலை வணக்கத்தை ஏற்றவன் இந்து; ஏற்காதவனும் இந்து; (ஆரிய சமாஜம்)
    சிவனைத் தொழுகின்றவன் இந்து;\ தொழாதவனும் இந்து;
    விஷ்ணுவைத் தொழுகின்றவன் இந்து;’ தொழாதவனும் இந்து;
    (அதாவது, தனக்கு இஷட் தெய்வத்தை மட்டும் வணங்கி பிறதெய்வங்களை மறுதலித்தல் இந்து வெறுப்பன்று என்று பொருள் படும். அதிலும் கூட, ஒரு சிலர், தம் இஷ்ட தெயத்தைக்கூட தாம் விரும்பிய உருவத்தில்தான் இல்லாவிட்டால் வணங்க மறுப்பார் என்பதை நான் சொல்லும் ஒரு சரிதக்கதையிலிருந்து தெரியலாம் (போடப்படுகிறது)
    கோயிலுக்குப்போய் கும்பிடுகிறவன் இந்து; வீட்டிலேயே பூஜையறையில் கும்பிடுகிறவனும் இந்து;
    இல்லை, கும்பிடவேயில்லையென்றாலும் இந்து (எந்தக்கட்டாயமும் இல்லையென்பதால்)
    சாதிகள் உண்டென்றாலும் இந்து; இல்லையென்றாலும் இந்து.

    இப்படி கணக்கிடலங்கா எதிர்மறைகளை தன்னுள் அடக்கியதுதான் இந்துமதம். இந்த எதிர்மறைகளுள் நாத்திகமும் அடங்கும்.

    இப்படிப்பட்ட உள்வாங்கலை மறுத்து,வ்ருணாஷ்ரத்தையும் பிராமணர்களையும் ஏற்றால் மட்டுமே நீவிர் இந்து. எமது வழியை நீர் ஏறகவில்லையென்றால் நீவிர் இந்துமத வெறுப்பாளர் என்று சொல்பவர் இந்துவன்று. வஹாபி முறையைப்பின்பற்றும் இசுலாமியன்.

    (கதை அடுத்த மடலில்)

  14. குரு ராமதாசின் சரிதம்.

    ராமதாஸ் மஹாராஷிட்ராவில் தோன்றிய குருமார்களில் சிறப்பானவர்கள். இவர் இராமன்-சீதையைத்தவிர வேறொரு தெய்வத்தை ஏற்கவில்லை.

    பந்தர்பூரில் விஷ்ணு மஹாலட்சுமியோடு விட்டோபா என்ற நாமத்தில் இருக்கிறார். பந்தர்பூர் மிகவும் புகழ்வாய்ந்த ஸ்தலம். மராட்டிய இந்துக்கள் அடிக்கடி போகுமிடம்.

    ஓர் தடவை ராமதாஸ் தன் குழுவோடு போனார். அங்கு சென்றவுடன் விஷ்ணுவாகவே விட்டோபா இருக்கிறார் என்று தெரிந்து உள்ளே வர மறுத்து நின்றார். இராமசீதையாக மட்டுமே நான் வணங்குபவன். வேறெந்த உருவிலும் வணங்க மாட்டேன் என்று திரும்பிச்சொல்வதை அறிந்த விட்டோபா தன் உருவத்தை இராம-சீதையாக மாற்றி அவருக்குத் தரிசனம் தந்ததாக வரலாறு.

    குரு ரவிதாசின் கதையின் கிட்டத்தட்ட இதே. இவர் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளி. அனைத்துச் செருப்புத்தைப்பவர் இடங்களிலும் இவரின் திருவுருப்படமும் இருக்கும். ஜடாயும் போட்டிருக்கிறார். இவர் சனாதனத்தையும் வருணாஷ்ரத்தையும் பிராமணர்களையும் நிராகரித்ததால் பிராமணர்களின் இழுச்சொல்களுக்க்ப் பலியாணவர். இவர் இராம சீதையைத் தன்பெற்றோராகப்பார்த்தவர். அனுமாரை வணக்கம் செய்யாமல் அவரை அண்னன் என அழைத்தது இவர் சரிதத்தில் விசேசம்.

    இவரின் கீர்த்தனைகள் பல ஆதிகிரந்ததில் சேர்க்கப்பட்டு குருத்வாரக்களில் ஓதப்படுகின்றன.

    எனவே நண்பர்களே, இந்துமதத்தை தயவு செய்து குறுக்கி அழிக்கப்பார்க்காதீர்கள். அவரவர் வழியில் அவர்கள் போகட்டும்.

  15. Guru Ravidass, the cobbler is in the 9th place in the second row. (Grateful thanks for honoring him Sirji);
    You could have added Haridas too.
    The gurus who defied varnahshramam are also found here: Buddha, Mahavira (first row), Naryana Guru – (one Caste, one Religion, one God for Humanity) is in the last row. One caste is a clear defiance and rejection of varnashradharmam – No brahamanan, no dalit Saaro
    Ramalingar who went his own way i.e. away from Brahamans, is in the fifth row.
    Dayanantha saraswati, who rejected idol worship and set up Arya Samajam, is in the last place in the fifth row.

    (But it requires extraordinary courage to add E V Ramasamy Naicker. He should be treated as a Hindu guru who rejected Brahmanans and many, many Hindu customs and practices. A correct gallery will include him definitely :-))

    If I say, no Caste, or, no idol, I will be called an anti-brahmanan – that’s ok. But I will also be called Hindu hater. If I say I won’t worship any God, but only my God (who is one of the three), I will be called anti Hindu. It all indicates Hindu religion is being appropriated by certain people like Sakti vels and Krishnakumars.

    Guru Ramdas, who refused to worship any form but Rama-Sita, is in the second picture of the 5th row; looking like Pattinathar.

  16. //வைணவச் சுடராழி என்றும் ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமிகள் என்றும் வைஷ்ணவப்பெரியோர்களும் ஆசார்யாதிகளும் உகக்கும்//

    தெரியாத விசயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. தமிழ் வைஷணவத்தில் ஜாதிகள் கிடையா. இங்கே ஓர் ஜாதி மட்டுமே (நாரயணகுரு சொன்ன மாதிரி) அஜ்ஜாதியின் பெயர் வைணவ அடியார் குலம். இக்குலத்தின் தலைவர் நம்மாழ்வார். அவர் குலபதி எனவழைக்கப்படுகிறார்.

    ஜோசப்புக்கு அய்யங்கார் போட்டு இப்படி அறியாமைக் காட்டக்கூடாது. தெரிந்தால் மடடுமே பேசுங்கள். கந்தர்வனிடம் போய அனைத்தையும் கேட்டுத் தெரிந்தபின் பின்னூட்டங்களைச் சரியாகப்போடவும்ஜி.

  17. // it requires extraordinary courage to add E V Ramasamy Naicker. He should be treated as a Hindu guru who rejected Brahmanans and many, many Hindu customs and practices. A correct gallery will include him definitely //

    B S, it requires extra ordinary ignorance, delusion, confusion, duplicity, hypocrisy and scheming to suggest something like this non sense. EVR was a man who spread baseless hatred and abuse against Hindu religion in total, led by colonial racist theories and his own meanness of the mind. He defiled and insulted every Hindu holy icon and symbol, from Ganesha and Temple Worship to Ramayanam & Periyapuranam.. You dare to add his name in line with the holiest and exemplary Gurus and Masters that are adorning this poster. This is an insult. Shame on you. This totally vindicates what Krishna Kumar has been saying about your “fake ids” all along.

    Beware – Tamil Hindus are not that much of an idiots to admire and hail those that work for the destruction and annihilation for their religion and culture. Not anymore.

  18. கிருஷ்ணா குமார்

    ஒரு மனிதனின் வாக், எண்ணம், செயல் என்ற மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். (B.S) என்ற short form ஐ பார்த்தீர்களா பெயர் கூட ஒத்துப் போகிறது.

  19. அன்பின் ஸ்ரீ சாரங்க்

    \\ ஒரு மனிதனின் வாக், எண்ணம், செயல் என்ற மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். (B.S) என்ற short form ஐ பார்த்தீர்களா பெயர் கூட ஒத்துப் போகிறது. \\

    ஒரு மறக்கக் கூடாத மேலதிகத் தகவலாக ……… இந்த அன்பர் தன்னுடைய பூர்வ அவதாரமான ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவதாரத்தில்…………. சில் சாம் என்ற க்றைஸ்தவ அன்பருடன் செய்த சம்வாதங்கள்……….

    அமரர் மலர் மன்னன் மஹாசயர் இந்த அன்பரை மங்களாசாசனம் செய்தமை…………

    இந்த அன்பர் ஸ்ரீ வைஷ்ணவத்தை இந்த தளத்தில் இழித்துப் பழித்து தொடர்ந்து பேசியது இங்கு புதிதாக வரும் வாசகர்களுக்கு நினைவில்லாமல் இருக்கலாம். பசுமையாக எனக்கு நினைவு இருக்கிறது.

    ஒவ்வொரு ஆழ்வாரையும் எப்படியெல்லாம் இழித்துப் பழித்துள்ளார். இவருக்கு நீங்களும் ஸ்ரீ கந்தர்வனும் வைஷ்ணவ நூற்களில் ஆழ்வார் பாசுரங்களில் ஸ்ரீ என்பது *சிரி* என்றில்லை *சிறீ* என்று பல சான்றுகளைக் காட்டி விளக்கியதும் நினைவில் உள்ளது. பெருமாளுக்காகப் பாடிய ஆழ்வார்களை க்றைஸ்தவத்தின் அபிமானம் உள்ள இந்த அன்பர் தரம் தாழ்த்தி தமிழர்களுக்காகப் பாடியவர் என்று இவர் இழித்துப்பழித்ததை………… வேற்றுமை உருபுகளை முன்னிறுத்தி……… ஆழ்வார்கள் தமிழி (ல்) பெருமாளுக்கா (க) பாடியுள்ளார் என்று நீங்கள் சொன்னதும் பசுமையாக நினைவில் உள்ளது.

    இந்த அன்பர் க்றைஸ்தவத்துக்கு வாக்கு தத்தம் செய்ததற்காக ஹிந்து மதத்தை இழித்துப் பழித்துப் பேச முனைவது இவருடைய உரிமை……….அதை க்றைஸ்தவப் பேரில் செய்வதை விட ஹிந்துப்பெயரில் செய்வது ஒசத்தி என முனைவது கூட அவரது உரிமை தான்.

    ஆனால் அவரது பேச்சுக்களில் உள்ள பொய்மைகளை ………….ஸ்ரீ வைஷ்ணவத்தை ஒவ்வொரு தளம் தளமாக தனது க்றைஸ்தவ அபிமானத்துக்காக *சிரி* வைணவம் என்று இழித்துப் பழித்து உவகை கொள்வதை ………. இவரது ஒவ்வொரு அவதாரத்திலும் தொடர்ந்து சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

  20. I agree with you, Jadayu, regarding EVR. That was just a teaser to get a reply from you. Provocation is all that I had wanted. The silent people should speak.

    However, you may note Rajaji called him an Alwar, maybe sarcastically. That is the correct defence, isn’t? This is not the place to discuss him. But I can remain reiterating my old view that a golden opportunity was missed by Hindu leaders not to have supported him and weaned him away from his ways. All joined only Tamil brahmins and none his side. Hindu leaders were unable to distinguish the social from religious issue. His hatred of Hinduism was an off shoot only. Not the germinating seed. He would have become a staunch supporter of Hindu religion and changed all his views, if they had cared to see what motivated him and how alleviate the motivation. In the end, the Brahmins won and he died having led a life which no one can fathom clearly. His hatred was all made-up to justify himself. Similarly Ambedkar could have been weaned away from his anti Hinduism and anti brahmanism. In other words, both EVR and Ambedkar were creations of those who wanted to protect Brahmins and Brahminism. The result: the religion had lost could-have-been champions of Hinduism. 

    Don’t post angry replies: the turn of discussions will change the topic of the essay: the photo. Make a separate topic somewhere. I can discuss with you. Now you may go back and ponder all that I wrote in your solitude and you may veer round to my point, I hope.

    Sarangan, what is in BS I am surprised ? Your response to what I have written is missing. If you hate your enemies, you can leave Vaishavisham. You can freely hate people there. In Vaishnavism, enemies also should be loved. I am your enemy, am I not? When are you going to love me? Pity it is that Hindu religion has no single leader. If there was, Sarangan, Krishnakumar, Jadayu, Sakthi vel and Neelakantan (who called me fake just because I reminded him of Ambedkar’s hatred of Manu) can ask such leader to ex-communicate me 

    To support Krishnakumar and attributing me fake IDs is to be too clever by half. You are supporting the exclusion of great Hindus who had gone before: uncharacteristically Jadayu has included some. LOL. If they were now with us, they would talk like me and would get called Fake ID, a Hindu hater by Krishnakumar and Sarangan Co. That was why I asked all of you to read their histories first. Even people born as Brahmins were called names and exiled to the forest: e.g. Gnaeshwar’s father and Graneshwar himself. There is no Hindu house in Maharatra which doesn’t possess a copy of Gnaneshwari. The family were exiled to the forest by the King. An attempt was made to kill Ramanujar, not by Saivites, but by the socalled Vaishvaites themselves. The only tower of a Hindu temple in TN where you are taken to the top storey and explained it is here that he stood and called the citizens. Saranaga, ya, call all of us. Why to hinder a man who want the call? Introspect. The photo should lead you to read the history of each and everyone shown here.

    It is a great sorrow to see in a site ostensibly created to bring the religion closer to all, a few men sitting and working against the very purpose. To call me fake is to admit that all that I have written above regarding the galaxy produced by Jadayu and the Krishnakumar’s hatred, anti-Hindu.

    Live and let live – Mahavirar.

  21. ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் சமூஹத்திற்கு……….

    இந்த தளத்திலோ அல்லது வேறெந்த தளத்திலும் க்ருஷ்ணகுமார் ஆகிய நான் என்னுடைய ஜாதி இன்னது என்று சொல்லியதில்லை. அதற்கான அவசியமும் எமக்கு இல்லை.

    இந்த தளத்தில் கருத்துப் பகிரும் ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஸ்ரீமான் ஜடாயு போன்றோரும் தாங்கள் இன்ன ஜாதி என்று கூறியதில்லை என்றே என் நினைவு.

    ஆனால் அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் முதற்கொண்டு உங்கள் கருத்துக்களுடன் மாறுபட்ட பலரை ப்ராம்மணர் என்று தாங்கள் சொல்லியுள்ளீர்கள். நிற்க…………

    இங்கு இந்த அளவு ப்ராம்மணரைப் பற்றிப்பேசும் நீங்கள்……….

    திண்ணை தளத்தில் உங்களது முந்தைய அவதாரமான அய் அய் எம் கணபதிராமன் அவதாரத்தில் உங்களை ப்ராம்மணராகச் சொல்லியிருக்கிறீர்கள். ஜோதிர்லதா கிரிஜா அம்மையாருடனான பல சம்வாதங்களில் ப்ராம்மணர்களுடைய சொல்லாடல்களில் சம்வாதம் நிகழ்த்தியிருக்கிறீர்கள்……….. எதற்கு இந்தப் பொய்மை?

    க்றைஸ்தவப் பெயரில் ஆத்யத்தில் ………பின்னர்………… காவ்யமாக பரிபூர்ண சுவிசேஷ சேவை செய்து………. பின்னர் ………… தமிழ்ப் பற்று உள்ளது போல நடித்து ……… TAMIL என்றே உங்கள் பெயரை எழுதி தங்க்லீஷில் எழுதுவதே (அது உங்கள் உரிமை என்றாலும்) …… அதையே தமிழ் என்றும் சாதித்திருக்கிறீர்கள்………… அய் அய் எம் கணபதிராமன் அவதாரத்தில் ப்ராம்மணராக நடித்திருக்கிறீர்கள்………… இப்போது வர்த்தமான அவதாரத்தில் ப்ராம்மண எதிரி அவதாரம்………

    இந்த அவதாரத்தை விரைவாக முடித்துக்கொள்ளுங்கள். ரொம்ப த்ருஷ்டி பட்டு விட்டது

  22. //The only tower of a Hindu temple in TN where you are taken to the top storey and explained it is here that he stood and called the citizens//

    some words missing.

    Please read as follows. The only tower of a Hindu temple in TN where you are taken to the top storey and explained: It is here that he stood and called all the citizens// is Thirukoshtiyoor in Sivaganga District. That is call you can find echoing here.

  23. ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் பரம பாகவதோத்தமரான வைணவச் சுடராழி ஸ்ரீ டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களைத் தொடர்ந்து இழித்துப்பழித்து வருகிறீர்கள்.

    \\\ //வைணவச் சுடராழி என்றும் ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமிகள் என்றும் வைஷ்ணவப்பெரியோர்களும் ஆசார்யாதிகளும் உகக்கும்//

    தெரியாத விசயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. தமிழ் வைஷணவத்தில் ஜாதிகள் கிடையா. \\\\

    ஆமாம். தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைத்து மூக்கறுபட ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோவுக்கு மட்டிலும் தான் உரிமை உள்ளது.

    கீழ்க்கண்ட உரலில் வணக்கத்துக்குரிய ஸ்ரீ ஜீயர் ஸ்வாமின் அவர்களே தமது வாயால் ஸ்ரீ ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களை மங்களாசாசனம் செய்வதைக் காண்பீர்.

    ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமிகள் என்பது கீழே கொடுக்கப்பட்ட உரலில் பகிரப்பட்டுள்ள இந்த குறும் செய்தியின் தலைப்பு.

    https://www.dajoseph.com/gallery/g13.html

    விஜயபாரதம் இதழில் ஸ்ரீ ஜோஸஃப் ஸ்வாமின் அவர்கள் பல வ்யாசங்கள் எழுதியுள்ளார். பூஜ்ய ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகள் அவர்கள் தன்னுடைய திருவாக்கினாலேயே ………… இவரை வாழ்த்தியுள்ளார்…. ஸ்ரீ ஜோஸஃப் அவர்கள் வேதம் கற்ற கல்விமான் என்று பூஜ்ய ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகள் அவர்களே வாழ்த்தியுள்ளமையை வாசகர்கள் வாசிப்பீர்களாக.

    எந்தெந்த வைஷ்ணவ சான்றோர்கள் ஆசார்யப் பெருமக்கள் ஸ்ரீ ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களை வாழ்த்தியருளியுள்ளார்கள் என்பதனை, கீழ்க்கண்ட உரலில் வாசிப்பீர்கள்

    https://www.dajoseph.com/bio-data.html

    ஹிந்துப்பெயரில் ஒளிந்து கொண்டு ஒவ்வொரு அவதாரத்திலும் மறைமுக முகமூடி சுவிசேஷ க்றைஸ்தவ ப்ரசாரம் செய்து வரும் இந்த அனபரின் செயல்பாட்டை( இந்த அவதாரத்தில் வைணவத்தைப் பற்றி ஒருபுறம் கதையளந்து கொண்டே தமது க்றைஸ்தவ இலக்கான உருவமற்ற வழிபாடு பற்றி முழக்கும் செயல்பாடு)………….பாருங்கள்.

    க்றைஸ்தவ குடும்பத்தில் பிறந்து தம்முடைய குருநாதர் பூஜ்ய ஸ்ரீ உபயவேதாந்தி ஸ்ரீ வீரராகவ ஐயங்கார் ஸ்வாமிகள் அவர்களால் ஆட்கொள்ளப்பட்டு………. வேதங்கள் கற்று………….. ஆழ்வார் ஆசார்யாதிகளுடைய அருளிச்செயல்களை குருமுகமாகக் கற்று தன் வாழ்க்கையை உலக நன்மைக்காகவும் ………….. ஹிந்து மத மேன்மைக்காகவும்………. வைஷ்ணவ சமயத்தைப் பரப்புவதற்காகவும் வாழ்வாங்கு வாழ்ந்து வரும் ப்ராதஸ்மரணீயரான ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களது செயல்பாட்டைப் பாருங்கள்.

    தனது குருநாதர் பற்றி ஜோஸஃப் ஸ்வாமின் அவர்கள் எழுதியுள்ளதை (இரண்டு வ்யாசங்கள்) வாசகர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும் என்று விக்ஞாபித்துக்கொள்கிறேன். கீழே உள்ள உரலில் :-

    https://www.dajoseph.com/His-Guru.html

    குருமார்களைப் பற்றி ஸ்ரீ ஜடாயு அவர்கள் பகிர்ந்த இந்த குறும் செய்திக்கு முத்தாய்ப்பாக………. ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களது இந்த இரண்டு வ்யாசங்களையும் வாசிக்கும் வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

    நமது ஹிந்து மதத்தில் ஒருவர் பிறந்த ஜாதி என்பதும் மதம் என்பதும்………… யாருக்கும் எப்போதும் தடையாக இருந்ததில்லை என்பதற்கு பரம பாகவதரான பூஜ்ய ஸ்ரீ ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களது வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையே உன்னதமான உதாரணம்.

    அன்பின் ஜோ …….. உங்களுக்கு……..த்ருட பக்தி நிஷ்டை பரலோகத்தில் இருக்கும் அந்த ஏக இறைவனால் கிட்டுவதாக. பகடி செய்வதற்காகவேனும் சரி ……..பாசுரங்களை சிதைத்து நீங்கள் சொல்ல முனைந்தாலும் சரி……….. பகடியாக வைஷ்ணவத்தை நீங்கள் இழிவு செய்தாலும் கூட……… ஆழ்வார் ஆசார்யர்களது வாக்குகள் உமக்கு சித்த சுத்தியையும் மனோரத பூர்த்தியும் தரும் என்பதில் சம்சயம் வேண்டாம்.

    அடியார் திருத்தூளி எம் சென்னியதே
    ஆழ்வார் திருவடிகளே சரணம்
    அடியேன் சரணம்.

  24. //ஆழ்வார் ஆசார்யர்களது வாக்குகள் உமக்கு சித்த சுத்தியையும் மனோரத பூர்த்தியும் தரும் என்பதில் சம்சயம் வேண்டாம்./

    Grateful thanks.

  25. Revendu amalan,

    don’t you know what B.S means. don’t give cock and bull stories here.

    Who are you to ask me to leave vaishnavam or for that matter continue to be in it.

    I have had a long history of discussions with you and i know your mental bent. You certainly are a fake and this fact is known to all who have been long timers at Tamil Hindu. com, Shri Krishnakumar has highlighted some of them. Not only in TH. We know your vandavaalam and thandavaalams from the comments you had made in many other blog sites.

    Let me give you two slokas

    வாசரம்பம் விஜிஞாசஸ்வ : சொல்வதை அல்ல யார் சொல்கிறார் என்பதை பார் என்கிறது இந்தத் உபநிஷத் வாக்கியம். நீங்கள் என்ன தான் கூவி கூவி கத்தினாலும் நீங்கள் சொல்வது எடுபடாது, ஏன் என்றால் நீங்கள் செய்ய நினைப்பது கிறிஸ்தவ பிரசாரம் மட்டுமே என்பது பலருக்கு தெரியும்.

    மணவாள மாமுனிகள் உபதேச இரத்தின மாலையில் சொல்கிறார்

    நாத்திகரும் நற்கலையின் நன்னரிசேர் ஆத்திகரும் ஆத்திக நாத்திகருமாம் இவரை
    ஓர்த்து நெஞ்சே முன்னவரும் பின்னவரும் மூர்கரென விட்டு நடுச்சொன்னவரை நாளும் தொடர் .

    நீங்கள் எனக்கு எதிரி இல்லை, கடையார்.

  26. ஆனால், என் அடிப்படைக்கோரிக்கையில் மாற்றம் எப்போதுமே இல்லை. It is permanent. க்ருஸ்ணகுமார்:

    அதாவது //இந்துமதம் பார்ப்பனர்களாகிய உங்களுக்கு மட்டுமன்று. அனைவருக்குமே.//

    இந்த நிலை என்று கிருஸ்ணகுமாரின் நிலையே அன்றுதான் என் உண்மையான நன்றிகள். அதுவரை இப்பேச்சு நிறுத்திவைக்கலாம்.

    //நாங்கள் பிராமணர்கள், சனாதனத்தை ஏற்றால்தான், வருணாஷிரத்தை ஏற்றால்தான் இந்துமதத்தில் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் விரட்டுவோம்//

    என்ற மிரட்டல், (சக்திவேலில் மிரட்டல்) என்ற தாலிபானித்தனதிலும் வயாபித்தனத்திலும் எனக்கு நம்பிக்கையும் விருப்பமுமில்லை. வெறுப்புதான் மிஞ்சுகிறது. இந்த மிரட்டல்காரர்களை எதிர்க்க முடியாமலே ஈவேராவும் அம்பேதகரும் வெளியேறினார்கள். இன்றும் அதே மிரட்டல்காரர்கள் வென்றாலெப்படி?ஏனென்றால், அது இம்மதத்தை பின் தள்ளி விடும்.

    வணக்கம். நன்றி.

  27. வள்ளுவரும் புத்தரும் குருமார்கள் என்றால் சரி. புனிதர்கள் என்றாலும் வள்ளுவரைப் பற்றி கொஞ்சம் தயக்கத்தோடு ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இவர்களை // காலங்காலமாக நமது இந்துப் பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் நிறுவி, கட்டிக்காத்து வரும் தூண்களான நமது புனித குருமார்களின் // என்பது கொஞ்சம் டூ மச்! புத்தர் தான் சனாதன தர்மத்தை நிறுவிக் கட்டிக் காத்தார் என்று தெரிந்து கொண்டால் அப்படியே ஷாக்காயிடுவார்!

    பசவரை கிரீடத்தோடு ராஜா மாதிரி சித்தரித்திருக்கிறீர்களே? (மூன்றாவது வரிசை, வலமிருந்து மூன்றாமவர்தானே?) அவர் மன்னராக இருந்தாரா என்ன?

  28. மிகவும் முயற்சி செய்து இந்த குருமண்டல போஸ்டரை உருவாக்கியிருக்கின்றீர்கள்… அதற்கு நன்றிகள்…. இலங்கையும் பரத கண்ட- பாரததேச நாடே ஆகும்.. எவே, இத்தேச குருமார்களும் இந்த போஸ்டரில் இணைக்கப்படின் நன்றாக இருக்கும் என இலங்கையைச் சேர்ந்தவன் என்ற வகையில் நினைக்கிறேன்…

    https://en.wikipedia.org/wiki/Yogaswami
    https://en.wikipedia.org/wiki/Swami_Vipulananda

  29. வேதமரபு, சங்கரமரபு, ராமானுஜமரபு, மத்வமரபு, பாகவதமரபு என்று எல்லாம் இணைக்கப்பட்டிருக்கிற போது, முருகபக்தியாளர்கள் ஒருவரையும் காண இயலவில்லையே…? அருணகிரிநாதரை சேர்க்கலாமா என்று சிந்திக்குமாறு பணிவோடு வேண்டுகின்றேன்…

  30. அன்பின் ஆர் வி

    \\ காலங்காலமாக நமது இந்துப் பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் நிறுவி, கட்டிக்காத்து வரும் தூண்களான நமது புனித குருமார்களின் // என்பது கொஞ்சம் டூ மச்! புத்தர் தான் சனாதன தர்மத்தை நிறுவிக் கட்டிக் காத்தார் என்று தெரிந்து கொண்டால் அப்படியே ஷாக்காயிடுவார்! \\

    Considering the fact that Shri Jatayu just shared a wonderful collection of a galaxy of gurus of Bharat Varsha with a small note on it………. what one is supposed to see through is…….. just the fact that it encompasses people from various regions, various social groups and from various school of thoughts.

    Picking up a wrongly inserted comma, left out full stop…………should be nit picking.

    மேற்கண்ட தொகுப்பை யாரோ ஒரு புண்யவான் பரிச்ரமப்பட்டு சேர்த்திருக்கிறார். அவர் வாழ்க. விடுபட்ட பல குருமார்களைப் பற்றிப் பலர் சொல்லியிருக்கிறார்கள். இதே போல் பரிச்ரமப்பட்டு இன்னொரு தொகுப்பு செய்ய முற்படலாம். அதில் நாம் அவர்களைச் சேர்க்க முனையலாம்.

    புத்தர் ஷாக்கெல்லாம் ஆகவே மாட்டார். அவர் தான் போதி சத்வர் ஆயிற்றே.

    அனேக கோடி போதிசத்வர்களில் ஒருவர் ஆர்யதாரா என்ற போதிசத்வர்.

    ஆர்யதாரா அஷ்டோத்தர சதநாமஸ்தோத்ரத்தில் பௌத்தர்கள் ஆர்யதாராவை எப்படியெல்லாம் ஸ்தோத்ரம் செய்கிறார்கள் பாருங்கள் .

    முழு ஸ்தோத்ரத்தையும் நீங்கள் தேவநாகர லிபியிலும் ஆங்க்ல ரோமன் லிபியிலும்

    https://www.dsbcproject.org/canon-text/titles/%E0%A4%86%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%A4%E0%A4%BE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%8D%E0%A4%9F%E0%A5%8B%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%A4%E0%A4%B0%E0%A4%B6%E0%A4%A4%E0%A4%A8%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%8B%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%AE%E0%A5%8D/%E0%A4%86%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%A4%E0%A4%BE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%8D%E0%A4%9F%E0%A5%8B%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%A4%E0%A4%B0%E0%A4%B6%E0%A4%A4%E0%A4%A8%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%8B%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%AE%E0%A5%8D

    மேற்கண்ட உரலில் வாசிக்கலாம்.

    सरस्वती विशालाक्षी प्रज्ञा श्रीर्बुद्धिवर्धिनी॥ २९॥

    ஸரஸ்வதீ விசாலாக்ஷி ப்ரக்ஞா ஸ்ரீர் புத்தி வர்த்தினி

    ब्रह्माणी वेदमाता च गुह्या च गुह्यवासिनी॥ ३५॥

    ப்ரம்ஹாணி வேதமாதா ச குஹ்யா ச குஹ்யவாஸினி

    புத்தரைப்போலவேயான போதிசத்வரான (நாரீ) ஆர்யதாராவை ஸரஸ்வதீ என்றும் ………… வேதமாதா (வேதத்தை ஏற்காத பௌத்தத்தின் ஒரு போதிசத்வர் வேதமாதா) சொல்லப்பட்டுள்ளார்.

    ஆர்யதாராவுடைய மந்த்ரத்தையும் இந்த ஸ்தோத்ரம் பகிர்கிறது

    ॐ लोचने सुलोचने तारे तारोद्भवे सर्वसत्त्वानुकम्पिनि सर्वसत्त्वतारिणि सहस्रभुजे सहस्रनेत्रे। ॐ नमो भगवते अवलोकय अवलोकय मां सर्वसत्त्वांश्च हुं हुँ फट् फट् स्वाहा। ॐ शुद्धे विशुद्धे सुगतात्मजे मैत्रीहृदये निर्मले श्यामे श्यामरूपि महाप्राज्ञे प्रबलवरभूषिते। अपराजिता महारौद्री विश्वरूपी महाबला। ॐ सुश्रिये॥२८॥

    ஓம் லோசனே ஸுலோசனே தாரே தாரோத்பவே ஸர்வஸத்வானுகம்பினி ஸர்வஸத்வதாரிணி ஸஹஸ்ரபுஜே ஸஹஸ்ரநேத்ரே.
    ஓம் நமோ பகவதே அவலோகய அவலோகய மாம் ஸர்வஸத்வாம்ஸ்ச ஹும் ஹூம் ஃபட் ஃபட் ஸ்வாஹா.
    ஓம் சுத்தே விசுத்தே ஸுகதாத்மஜே மைத்ரீஹ்ருதயே நிர்மலே ச்யாமே ச்யாமரூபி மஹாப்ராக்ஞே ப்ரபலவரபூஷிதே
    அபராஜிதா மஹாரௌத்ரீ விச்வரூபீ மஹாபலா.
    ஓம் ஸுச்ரியே

    முக்காலத்தையும் அறிந்த போதிசத்வ புத்தருக்கு தமது பௌத்த சமயத்தில் நிர்வாணத்தை அளிக்கவல்ல பற்பல யானங்கள் (ஊர்திகள் – வழிபாட்டுமுறைகள்) வரும் என்றோ அதில் ஒன்றாக வஜ்ரயானம் இருக்கும் என்றோ அதில் ஆர்யதாராவும் ஆர்ய அவலோகிதேச்வரரும் இருப்பார்கள் என்றும் புத்தருக்கு தெரிந்திருக்குமாதலால் புத்தருக்கு ஷாக்கெல்லாம் அடிக்காது.

    ஷாக் அடித்தால் அவர் புத்தராக இருக்க முடியாது. அவர்தான் மஹாப்ராக்ஞராயிற்றே. மஹாப்ராக்ஞருக்கு எப்படி ஷாக் அடிக்கும் 🙂

  31. அன்பின் ஆர் வி

    நீங்கள் கண்ட குற்றத்தில் குற்றம்

    \\ காலங்காலமாக நமது இந்துப் பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் நிறுவி, கட்டிக்காத்து வரும் தூண்களான நமது புனித குருமார்களின் // என்பது கொஞ்சம் டூ மச்! புத்தர் தான் சனாதன தர்மத்தை நிறுவிக் கட்டிக் காத்தார் என்று தெரிந்து கொண்டால் அப்படியே ஷாக்காயிடுவார்! \\

    மேற்கண்ட வாசகத்தை டிஸக்ட் செய்து குத்தம் பார்க்கிறீர்கள்.

    எனக்கு புரிபடாத ஒரே ஒரு சொல் “நிறுவி” என்பது மட்டுமே. தொகுப்பில் உள்ள ஒரு சில குருமார்கள் தங்களுடைய சித்தாந்தங்களை நிறுவினவர்களாகவும் இருக்கிறார்கள். ஆதலாம் ஒரு தொகுப்பு என்று வரும்போது அதுவும் அடிபட்டுப்போகிறது.

    ஹிந்துப்பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் கட்டிக்காத்து வரும் தூண்களான புத்தர் ………..

    என்பதில் ஹிந்துப்பண்பட்டைக் கட்டிக்காத்து வரும் புத்தர் என்பதில் உங்களுக்கு என்ன ஆக்ஷேபம்…………

    சித்தாந்த ரீதியில் பற்பல வேறுபாடுகள் இருந்தாலும்………… வஜ்ரயான பௌத்தம் என்பதற்கும் சனாதன தர்மத்தின் அங்கமான தாந்த்ரிக சாக்தத்துக்கும் பற்பல ஒற்றுமைகளும் உள்ளதே……….. அதன் படிக்கு சனாதன தர்மத்தை மற்றும் ஹிந்துப்பண்பாட்டைக் கட்டிக்காத்து வரும் தூண்களான என்பதில்…………….வஜ்ரயானம் போதிக்கும் புத்தரும் நிச்சயம் அடங்குவார்.

    போதிசத்வர்கள் என்ற படிக்கு சித்தார்த்த கௌதம புத்தருக்கும், ஆர்ய அவலோகிதேஸ்வரருக்கும், மஞ்சுஸ்ரீக்கும், மைத்ரேய புத்தருக்கும்…………பேதம் கிடையாதே………..

    பேதமெல்லாம் அதே பரிநிர்வாணத்தை அடைய ஒழுகும் யானங்களில் தானே………. அடைய வேண்டியதான பரிநிர்வாணத்தில் என்ன பேதம்………..

    ப்ரதிவாதி பயங்கரரான உங்களுடன் தர்க்கம் செய்வது ஆக்ப்பெரிய வேலை தான் 🙂

    Still my two cents 🙂

  32. Revend jo Amalan,

    after getting beaten thoroughly by Jatayu. You claim, you only made a provocative statement to get an answer from Jatayu. 🙂 Congress party is looking for you as their Ko. Paa. Saa.

    All of us can fairly now assume that, Revend Jo Amalan does B.S ing only to provoke answers from us. Do not take him seriously

  33. க்ருஷ்ணகுமார்,

    ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள், புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என்றே சொல்லிவிடலாமே! 🙂

  34. //ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள், புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என்றே சொல்லிவிடலாமே! :-)//

    சொல்லிவிடலாமே என்ன? … சொல்லியே விட்டார்கள்!!!.. இன்னும் அனைத்து வைணவ ஆலயங்களிலும் புத்தருக்கென்று ஒரு தனி பிரகாரம் அமைக்க வேண்டியது மட்டுமே பாக்கி….

  35. ஆர் வி!!!!!!!

    ஏதோ நான் தான் கௌதம புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என்று கண்டு பிடிச்ச மாதிரி………அல்லது நீங்கள் கண்டுபிடிச்ச மாதிரி சொல்லலாமா? இப்படி எசகு பெசகா சொன்னதுக்கு சாரங்கன் ஏற்கனவே மண்டகப்படி கொடுத்திருக்கிறார் 🙂

    ஏதோ வைதிக சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டிலும் ……….. புத்தரை இப்படி கபளீகரம் செய்பவர்களாகச் சொல்லலாமா?

    பௌத்த சமயத்திலும் கூடத் தான்……… அவர்களும் கூடத்தான்……….ப்ளேட்டை அப்படியே திருப்பியும் போட்டிருக்கிறார்களே?

    அது ஏன் உமது நேத்ரங்களிலிருந்து மறைகிறது 🙂

    ஜயதேவர் அஷ்டபதியில் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகச் சொல்லியிருக்கிறார் ஸ்வாமின்.

    அதுசரி………. ஷாக் ஆகாத புத்தர் ……….

    இப்படியெல்லாம் ஆர் வி வந்து எசகு பெசகா ஏதாவது சொன்னால் காரண்ட வ்யூஹ: ஸுத்ரத்திலிருந்து உதாஹரிக்குமாறு சொல்லியிருக்கிறார்………… நமது ஸ்ரீமான் விநோத ராஜன் மஹாசயருடைய வ்யாசம் த்வாரா :-

    அது இங்கே https://www.virtualvinodh.com/wp/stotra-karanda-vyuha-avalokitesvara/

    காரண்ட வ்யூஹ: ஸுத்ரம் பல ப்ரகரணங்கள் (பாகங்கள்) அடங்கியது

    மேற்கொண்டு மஹாயான பௌத்த ப்ரமாண க்ரந்தமான காரண்ட வ்யூஹ: ஸூத்ரத்திலிருந்து . ஸப்தம ப்ரகரணம் — ஏழாம் பாகம்

    மூலம் நாகரலிபியில் இங்கே :-

    https://www.dsbcproject.org/node/4355

    தேவ கணங்களுக்கு பௌத்த தத்வத்தை புத்தர் உபதேசித்தருளிய பின்னர் ஸாக்ஷாத் மஹேச்வரனும் உமாதேவியும் புத்தரை சரண் அடைகிறார்கள். அவரோவெனில் ஆர்ய அவலோகிதேஸ்வரரை தர்சிக்குமாறு ஆக்ஞாபிக்கிறார்.

    ஸாக்ஷாத் மஹேச்வரரும் உமா தேவியும் ஆர்ய அவலோகிதேஸ்வரரை தர்சித்து நமஸ்கரித்து ஆர்ய அவலோகிதேஸ்வரரை ஸ்துதி செய்கின்றனர் :-

    नमोऽस्त्वलोकितेश्वराय मेहेश्वराय प्राणंददाय पृथिवीवरलोचनकराय शुभपद्मश्रिये परिवृताय निर्वाणभूमिसंप्रस्थिताय सुचेतनकराय धर्मधराय॥

    நமோஸ்து அவலோகிதேச்வராய மஹேச்வராய ப்ராணந்ததாய ப்ருதிவீவர லோசனகராய சுப பத்மச்ரியே பரிவ்ருதாய நிர்வாண பூமி ஸம்ப்ரஸ்திதாய ஸுசேதனகராய தர்மதராய

    ப்ரசன்னமான ஆர்ய அவலோகிதேஸ்வரரும் ஸாக்ஷாத் மஹேச்வரனும் உமாதேவியும் பரிநிர்வாணம் பெற்று முறையே பச்மேச்வரர் எனவும் உமேச்வரர் எனவுமான போதிசத்வர்களாக ஆவர் என்று ஆசீர்வதிக்கிறார்.

    A merry vice versa for you 🙂

    இப்போ பரிபூர்ணத: த்ருப்தி தானே ஸ்வாமின் 🙂

  36. சாரங்கன்

    \\\ All of us can fairly now assume that, Revend Jo Amalan does B.S ing only to provoke answers from us. Do not take him seriously \\\

    என்ன இறுமாப்பு உங்களுக்கு 🙂

    அவரை நாம் யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நீங்களாகச் சொல்வதற்கு 🙂

    அவரை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சாக்ஷாத் ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களே Tamil அவதாரத்தில் சொல்லியிருக்கிறார். அவர் எழுதுவதெல்லாம் சும்மனாச்சிக்கு பொழுது போக்கத்தான் என்று.

    எப்பல்லாம் அவர் மீது பரிசுத்த ஆவி இறங்குகிறதோ அப்பல்லாம் வந்து ஹிந்து மதத்தையும்……….ஹிந்துத்வத்தையும்………. சைவ வைஷ்ணவ சமயங்களையும் இழிவு செய்து விட்டு தேமேனு அல்லேலூயான்னு மலையேறிடுவார். சில்சாமுக்கு கொடுத்த வாக்கு தத்தத்தை நிறைவேற்ற வேணாம்.

    அப்பறம் வெவ்வேறே அவதாரத்தில் வந்து வெவ்வேறா மாதிரி பேசறாப்பல நெனச்சுப்பார். ஆனால் ஒரே மாதிரியே பேசுவார். இதெல்லாம் புதுசான்ன.

  37. ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா அவர்களுக்கு

    \\ அருணகிரிநாதரை சேர்க்கலாமா என்று சிந்திக்குமாறு பணிவோடு வேண்டுகின்றேன்…\\

    அருமை.

    கூடவே வள்ளல் பெருமானின் கொலுவகுப்பு நினைவுக்கு வருகிறது. குருமண்டலம் என்ற படிக்கு இல்லாமல் ஒரு பெரும் ஸ்கந்த பரிவாரத்தை வள்ளல் பெருமான் கண்முன் நிறுத்தும் வகுப்பு அது.

    \\ இலங்கையும் பரத கண்ட- பாரததேச நாடே ஆகும்.. எவே, இத்தேச குருமார்களும் இந்த போஸ்டரில் இணைக்கப்படின் நன்றாக இருக்கும் என இலங்கையைச் சேர்ந்தவன் என்ற வகையில் நினைக்கிறேன்… \\

    ஆமாம். பாரத கண்டத்தில் அந்தர்கதம் தானே லங்காபுரி. விபீஷணாழ்வான் ஆண்ட பூமியாச்சே.

    ஈழத்து யோகஸ்வாமியும் விபுலானந்தரும் உங்கள் நினைவுக்கு வருகிறார்கள். காசிவாசி செந்திநாதைய்யரை ஆட்கொண்ட ஸ்ரீ ஆறுமுகநாவலர் எனது நினைவில் வருகிறார். செல்லப்ப ஸ்வாமிகள் காடை ஸ்வாமிகள் என எத்தனையெத்தனை தவயோகீச்வரர்களைப் பெற்ற பூமியாச்சே ஈழம்.

    உள்ளபடி இந்த குருமண்டலத்தில் மேற்கு சிந்த் ப்ராந்தியத்தைச் (இன்றைய பாக்கி ஸ்தான்) சேர்ந்த ஜூலேலால் போன்ற யோகீஸ்வரர்கள் உள்ளது போல ஈழத்து குருமார்களையும் இணைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

    அதுவும் சச்சதுரமான ஒரு தொகுப்பு சித்ரமாக இல்லாமல் அகண்டபாரதத்தின் ஒரு குத்து மதிப்பான வரைபடத்தில் பாரத மாதாவின் பின்னணியில் வரைபடம் முழுக்க நிறைக்க இந்த குருமார்களைக் காண்பது அழகாக இருக்கும். ஒரு கற்பனை தான்.

  38. @RV
    A one liner that is not funny will not be considered as a valid response to Shri Krishnakumar views. Please respond in a appropriate way .

  39. புத்தரையும் வள்ளலாரையும் இந்த லிஸ்டில் சேர்த்தாகி விட்டது. அப்படியே ஏசுநாதருக்கும், காந்திஜிக்கும், அஜ்மீரில் மற்றும் நாகூரில் அடங்கியுள்ள இஸ்லாமிய பெரியோர்களுக்கும் பூணூலை மாட்டி விட்டுட்டா ஒட்டு மொத்த இந்தியாவும் சனாதன மார்க்கமாகி விடும். தொல்லை விட்டுது 🙂

  40. மதம் என்பதே நம்பிக்கைகளின் அடிப்படையிலானது. வட இந்தியாவில் இருக்கும் பல கோடி இந்துக்களும் பகவான் புத்தரை மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமாகவே கருதுகிறார்கள். மகாவிஷ்ணுவுக்கு தசாவதாரம் என்று சொல்வது தமிழ் நாட்டில் மட்டும் தான். மகாவிஷ்ணுவுக்கு 24 அவதாரம் என்று ஏதோ ஒரு நூலில் நானே படித்துள்ளேன். நான் பகவான் புத்தரை சிவபிரானின் அவதாரமாகவே பார்க்கிறேன். அது எனது உரிமை. இது தான் இந்து மதத்தின் சிறப்பு. ஆர்வி போன்றோருக்கு அது எப்படி புரியும் ? ஏதோ ஒரு புத்தகத்தை மட்டும் கட்டிக்கொண்டு குறுகிய எல்லைக்குள் முடங்கிக் கிடப்பவன் இந்து அல்ல. ஒரே நூல் மட்டுமே புனிதநூல் மற்றவை புனிதம் அல்ல என்று சொல்வோர் கிணற்றுத்தவளைகள். அவ்வளவுதான்.இறைவன் தேவைப்படும் போது எவ்வளவு அவதாரங்கள் வேண்டுமானாலும் எடுப்பான். அவனுக்கு எல்லைகள் கிடையாது. மனிதர்களாகிய நமக்கு பலவிஷயங்கள் புரியாததால், நம்மை போலவே இறைவனையும் குறைகள் உடையவனாக பார்க்கும் வக்கிரபுத்தி ஏற்படுகிறது. இறைவனை எந்த பெயரிலும் எந்த முறையிலும் எந்த நேரத்திலும் வழிபடலாம். மதங்கள் என்ற பெயரால் சில குறுமதியாளர்கள் இது ஒன்றே வழி மற்றவை தவறு என்று சொல்லிக் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். புத்தம் என்பது மதம் அல்ல. இந்து என்பதும் மதம் அல்ல. ஆங்கிலேயன் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் வக்கிரமான பொய் வரலாறுகளை எழுதிவைத்து, ஆர்வி போன்றோரை அவ்வளவே.

  41. ஆர்வி போன்றோரை குழப்பிவிட்டுள்ளான் . தட்டச்சு பிழைசரிசெய்யப்பட்டுள்ளது.

  42. “In the beginning of the age of Kali, the Supreme Personality of Godhead will appear in the province of Gaya as Lord Buddha, the son of Anjana, to bewilder those who are always envious of the devotees of the Lord.” (Bhagavatam 1.3.24)- பாகவத மகாபுராணத்தில் மகான் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமாகவே வர்ணிக்கப்பட்டுள்ளார்.

  43. Reverend Sarangan!

    I have not been beaten by anyone here, let alone Jadayu. He came quickly to reply to me, only because it involved EVR who is taken to be the sworn enemy of all Tamil Brahamins (generally speaking). His blood boiled. His abrupt entry has no connection with the religion, but only with caste loyalty, which I called testing. It is easy to test and provoke such people. Say something bad about their caste, their blood will boil. Blood is thicker than water! Here it is thicker than religion. He is not defending sanatana dharma per se; he is defending his caste.

    His beating me thoroughly – should mean that he has made me change my views. Not at all. He hasn’t done that.

    My views remain as solid as ever, unshaken. They put the religion first. They disregard castes. I opposed Malarmannan when he passionately avowed by castes penning long essays justifying his pet theory that the castes cannot be removed from Hindu society and they are very necessary. Anyone holding that view, according to me, digs under the feet of the Hindu religion. It is dangerous. I said so to him. Here, my views are:

    • Anyone, who does not care, or bold enough to disregard sanatana dharma, can be a good Hindu also. He can even hate it.
    • He who loves and practises sanatana dharma, and he who does not love it and rejects it, – both can be good Hindus.
    • Buddha, Narayana Guru, Ravi Dass and others have been included here and he should reveal the reasons for that. Otherwise, Krishna Kumar will cook up a theory that they loved the Brahmins and Sanatana Dharma. If knowingly included them, then he accepts my point.

    (The cobbler was a sensitive person: he passed through acute mental agony over the insults and indignity and untouchability heaped on him by the Brahmins and upper caste on the Gangetic ghats where he plied his trade of mending sandals and shoes of yatris. The Sikhs loved him and included his songs. But his followers today don’t call him a Hindu or a Sikh. They have formed their own religion called Ravidassia Religion. What a tragedy his picture is included in this website where I am attacked for supporting Ravi dass and his rejection of Brahmins and Brahminism.)
    • EVR and Ambedkar, earlier Buddha and others, went out of Hinduism only because of Brahmins and their Brahminism, and hecklers like you. They found that Brahmins were projected out of proportions in the religion. They were made to feel that Brahminism should be accepted; if not, they are enemies to the religion. Love me and love my dog! In other words, these renegades were the creations of the very Brahmins and their Brahminism.
    • If some Brahmins, who mattered then, had supported them on their point (mine also) that a Hindu is safe in Hinduism even if he has rejected sanatana dharma and hating the orthodox Brahmins and their chelas. ( I leave Buddha out because it is hoary past we don’t know. I take only EVR and Ambedkar.) important people wouldn’t have gone out. True, there were Brahmins who mattered like Rajaji. But he had an ambivalent attitude to the religion; couldn’t see eye-to-eye with the orthodoxy. Finally he ended up pursuing a personal Hindu religion and never bothered about who pursued which. He might have thought himself ineligible to move so close to EVR so as to wean him away, because he (Rajaji) did’t take public Hinduism (as a VHP member does now) to canvass for the religion.

    • In Ambedkar’s case, the Brahmins he came into contact with positive attitude are small people: like his wife and school teacher. Further, they were like Rajaji – not passionate with their religion. In principles and philosophy which he passionately avowed and accepted, no Brahmin could come to talk to him to make a change in his mind. It was all taken to mean that – let’s face it’! – Brahmins, en masse, were against them – in principles as well as social life.

    These are my steadfast views and there are no changes in them. I hold to them dear to me.

    If someone can succeed in making me change them, only then you and Krishna kumar can easily write: So and so has beaten me soundly. Till then, you can enjoy wallowing in your comfortable imagination.

    If you are a good Hindu, your duty to the religion is to allow people to understand and pursue the religion in his or her own way, just like Rajaji remaining a Vaishnava even after rejecting the existence of Andaal.

    Hindu religion gives but you should also give freedom to people to take the religion as they wish. On the contrary, if you gang up against such persons, then why can’t call it a religion for parpanars only ? What’s wrong with that ?

  44. Krishna Kumar!

    I have stopped reading you. Don’t address any messages to me. Futile 🙂

    Keep your brand of Hinduism with you: Don’t force it upon others 🙂

  45. /புத்தரையும் வள்ளலாரையும் இந்த லிஸ்டில் சேர்த்தாகி விட்டது. அப்படியே ஏசுநாதருக்கும், காந்திஜிக்கும், அஜ்மீரில் மற்றும் நாகூரில் அடங்கியுள்ள இஸ்லாமிய பெரியோர்களுக்கும் பூணூலை மாட்டி விட்டுட்டா ஒட்டு மொத்த இந்தியாவும் சனாதன மார்க்கமாகி விடும். தொல்லை விட்டுது//

    எல்லாருக்கும் ஒரு குல்லா போட்டு சிறியாக்கு இன்ப சுர்ருலா அனுப்புங்கப்பா. உலகமே அமைதி பூங்காவா மாறி பூவா கொட்டும்!!.

  46. /Krishna Kumar!

    I have stopped reading you.
    //

    முன்னால் IIM மற்ரும் பல.. இந்நாள் BS, இதை ஆரம்பித்து வைத்ததே நீங்கள்தானே .. தன்னை சுடும்… கட்டுரைக்கு என்றாவது ஒரு நாள் பின்னூட்டாம் போட்ட பழக்கம் ஒருநாள் உண்டா உங்களிடம். என் கேள்வி கட்டுரை ஆசிரியருக்கு, உங்களுக்கு இல்லை என்று எத்தனை முறை நான் சொன்னேன். கேட்டீர்களா ..கேட்டீர்களா ..நீங்கள் கேட்டீர்களா

  47. /ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள், புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என்றே சொல்லிவிடலாமே//

    புத்தர் சிலையை இடித்து அவமரியாததை பண்ணும்போது வேடிக்கை பார்த்த கைக்கூலிகள் போல இல்லாமல், அவரை விஷ்ணுவாக கொண்டாடுவது எவ்வலுவோ மேல். அது மரியாதை. இடித்தபோது இருந்த அமைதி மார்க்கம் அப்போது என்ன பண்ணியது. அய்யோ என்று உயிரை விட்டு விட்டதா?

  48. அன்புள்ள ஆர்.வி,

    புத்தரும் ஜினேந்திரரும் காலங்காலமாக இந்துப் பண்பாட்டு வெளியில் மரியாதைக்குரிய குருமார்களாகத் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். வேத – சைவ – வைணவ மதங்களும் புத்த – ஜைன மதங்களும் முற்றிலும் முரண்பாடு கொண்ட இரட்டைகள் என்பது காலனிய, மார்க்சிய வரலாற்றாடல் விதைத்த ஒரு பொய்க் கருத்து. “புத்தரே விஷ்ணுவின் அவதாரம் தானே” என்பதை கிண்டலாகச் சொல்ல உங்களுக்குத் தெரிகிறது.. ஆனால், ஆரம்ப காலத்திய மூல பௌத்த சூத்திரங்களில் புத்தரே தன்னை ராமரின் வழிவந்தவர் என்று சொல்லியுள்ளது உங்களுக்குத் தெரியவில்லை அல்லது வரலாற்றாசிரியர்களால் சொல்லப் படவில்லை (புத்தரின் சாக்கிய குலமே தங்களை இக்ஷ்வாகு வம்சத்துடன் அடையாளப் படுத்திக் கொண்ட ஒன்று). ராமாயணத்தை எடுத்துக் கொண்டு, அதில் உள்ள போர், காதல், வீரம் போன்ற ரசமான பகுதிகளை எல்லாம் வடிகட்டி விட்டு, ராமரை “முந்தைய புத்தர்களில்” ஒருவராக சித்தரித்து பௌத்தர்கள் “தசரத ஜாதகம்” என்ற நூலை ஆக்கியிருப்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; எனவே உள்ளிழுத்துக் கொள்வது, இணைப்பது, தத்துவ ரீதியாக முரண்படுவது ஆகியவை இரண்டு பக்கங்களிலும் இருந்திருக்கின்றன. இந்திய சூழலில் இவையெல்லாம் பெரிதும் மோதல்களும், வன்முறைகளும் இல்லாமல் நிகழ்ந்திருக்கின்றன (மிகச் சில விதிவிலக்குகள் உண்டு; ஆனால் பொதுவாக இதுவே சரி). ஜைன மதத்தைப் பொறுத்த வரையிலும் இவ்வாறே குறிப்பிடலாம்.

    எல்லா மதப் பிரிவுளையும் அவற்றின் வேறுபாடுகளையும் மதிக்க வேண்டும் என்ற “சர்வ மத சமரச” நோக்கு, 20ம் நூற்றாண்டின் ஊசிப்போன செக்யுலரிசத்தால் வந்ததல்ல. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக உள்ளது தான்.

    உதாரணமாக, ஒரு காவிய இலக்கண நூலின் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ள இந்த 6ம் நூற்றாண்டு சம்ஸ்கிருதப் பாடலைப் பாருங்கள்.

    விஷ்ணுர்வா த்ரிபுராந்தகோ ப⁴வது வா ப்³ரஹ்மா ஸுரேந்த்³ரோ(அ)த²வா
    பா⁴னுர்வா ஶஶலக்ஷணோ(அ)த² ப⁴க³வான் பு³த்³தோ⁴(அ)த² ஸித்³தோ⁴(அ)த²வா |
    ராக³த்³வேஷ விஷார்தி மோஹரஹித​: ஸத்த்வானுகம்போத்³யதோ
    ய​: ஸர்வை​: ஸஹ ஸம்ʼஸ்க்ருʼதோ கு³ணக³ணை: தஸ்மை நம​: ஸர்வதா³ ||

    இதில் புத்தர், ஸித்தர் (ஜினேந்திரர்) உட்பட அனைத்து தெய்வீக வடிவங்களும் ஒருங்கே துதிக்கப் பட்டுள்ளன. இத்தகைய பல பாடல்களைக் காண்பிக்க முடியும்.

  49. @SP
    Life has been boring with ridiculous irrelevancies from the usual suspects like BS, RV and Shri தாயுமானவன். Suddenly it was all smiles and laughter everywhere. The ENTERTAINER is back in his glory best. Hooray! Glad to hear from you from your heavenly Saudi Arabia. This is my presumption. I mean, why would a hard core Wahabi waste time in a Kaffir land? I read somewhere that Saudis behead more people in one week than ISIS in an entire year..Only you can clarify this. By the way,your suggestion of” அப்படியே ஏசுநாதருக்கும், காந்திஜிக்கும், அஜ்மீரில் மற்றும் நாகூரில் அடங்கியுள்ள இஸ்லாமிய பெரியோர்களுக்கும் பூணூலை மாட்டி விட்டுட்டா ஒட்டு மொத்த இந்தியாவும் சனாதன மார்க்கமாகி விடும் ” is an excellent one. Ghar Wapsi is calling you too!

  50. சுவனப்பிரியன்,

    // புத்தரையும் வள்ளலாரையும் இந்த லிஸ்டில் சேர்த்தாகி விட்டது. //

    புத்தர் – நான் மேலே ஆர்.விக்கு எழுதியுள்ள பதிலைப் படிக்கவும்.

    வள்ளலாருடைய சமரச சுத்த சன்மார்க்கம், யோகம், அன்னதானம், ஜோதி வழிபாடு, ஜீவகாருணியம் அத்தனையும் முழுக்க முழுக்க இந்து சமய நெறிமுறைகள் அல்லாமல் வேறு என்ன? “வாழையடி வாழையென வந்த திருக்கூட்டமதில் யான் ஒருவன் அன்றோ” என்று சொன்ன வள்ளலார் இந்தக் கூட்டம் அல்லாமல் வேறு எங்கு பொருந்துவார் – நபிமார்களுடைய பட்டியலிலா, கிறிஸ்தவ புனிதர்களின் பட்டியலிலா, கம்யூனிச சித்தாந்திகளின் குழுவிலா அல்லது திராவிய இனவெறியர்களுடனா? 🙂

    // ஏசுநாதருக்கும், காந்திஜிக்கும், அஜ்மீரில் மற்றும் நாகூரில் அடங்கியுள்ள இஸ்லாமிய பெரியோர்களுக்கும் பூணூலை மாட்டி விட்டுட்டா ஒட்டு மொத்த இந்தியாவும் சனாதன மார்க்கமாகி விடும். தொல்லை விட்டுது//

    என்ற குதர்க்கம் எவ்வளவு அபத்தமானது என்று உங்களுக்கே தெரியும். இருந்தாலும் வெட்கமின்றி அதை உதிர்க்கிறீர்கள்.

    திக்கையே உடையாக உடுத்தவர்களும் (வேமனர்), கௌபீனம் மட்டுமே அணிந்தவர்களும் (சமர்த்த ராமதாசர்) கூட எங்கள் குருமார்களில் அடக்கம். எனவே பூணூலை மாட்டி விட வேண்டும் என்ற அவசியமோ (அல்லது கழற்றி வீசித் தான் ஆக வேண்டும் என்ற அவசியமோ) இல்லை. புனிதத்தை, தூய்மையை, ஞானத்தை, மெய்மையை அதன் விதவிதமான வேறுபட்ட வடிவங்களில் வணங்க முடியும் என்பதை ஒரு இந்துவை விட வேறு யாரால் உண்மையாக உணர முடியும்?

    ஏசுநாதர் என்ற செமிட்டிக் மத நிறுவனர் எப்படி இதில் சேர்வார்? தர்க்காக்களில் சமாதியடைந்துள்ள சூஃபி பெரியோர்களை இந்துக்களில் சிலர் தங்களது ஆன்மீக ஈடுபாடு காரணமாக வணங்கலாம். ஆனால் அவர்களில் யாரும் குருமார்களாக எந்த இந்து சமயப் பிரிவுகளிலும் ஏற்கப் படவில்லை. ஆன்மீக குருமார்கள் மட்டுமே என்பதால் காந்திஜியை சேர்க்கவில்லை என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்.

    உண்மையில் கபீர்தாசர், ரஸ்கான், ஷீர்டி சாயிபாபா – ஆகியோர் குறித்து கேள்வி எழுப்பி இருந்தாலாவது ஓரளவு அர்த்தம் இருந்திருக்கும்.

    கபீர்தாசர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சுவாமி ராமானந்தரால் ஆட்கொள்ளப் பட்டவர். இந்து, இஸ்லாம் என்ற இரு மதங்களிலும் உள்ள சடங்காசாரங்களையும் போலித் தனங்களையும் கண்டித்தவர். நிர்குண பிரம்ம உபாசனையை வலியுறுத்தியவர். இந்துக்கள் பரிபூரணமாக அவரைத் தங்கள் குருவாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். “பக்தமால சரிதம்” என்ற ஹிந்தி பெரியபுராணத்தில் மற்ற பல அடியார்களுடன் அவரது சரிதமும் உள்ளது. வட இந்திய பஜனைகளில் அவர் பாடல்களைப் பாடதவர்கள் கிடையாது. ஆனால், இஸ்லாமிய மத வரையறைப் படி, அவர் “பெரியவராக” அல்ல, உண்மையான முஸ்லீமாகவே கூட கருதப் பட முடியாது என்பதே நிதர்சனம்.

    ரஸ்கான், 15ம் நூற்றாண்டில் மகத்தான கிருஷ்ண பக்த சிரோமணி. சையத் இப்ராஹீம் கான் என்ற இயற்பெயர் கொண்ட அவர் “ரசத்தின் சுரங்கம்” என்று பொருள்பட “ரஸ் கான்” என்ற பெயர் புனைந்தார். கண்ணனைப் பற்றி உளமுருக்கும் பாடல்களை ஹிந்தி மொழியில் பாடியவர். கண்ணனின் தரிசனம் பெற்ற மகானாக மதித்து வணங்கப் படுபவர். அவரது படங்களில், இஸ்லாமிய உடைத் தோற்றத்துடனேயே சித்தரிக்கப் படுகிறார். இந்த போஸ்டரில் 4வது வரிசையில் குரு நானக் அருகில் இருக்கிறார்.

    ஷீர்டி சாயி பாபா என்ற சித்த புருஷர் ஷீர்டியில் பாழடைந்த மசூதி ஒன்றில் வாழ்ந்தார்.. ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்தார். அவரை இறை அவதாரமாக பல இந்துக்களும் கணிசமான முஸ்லிம்களும் வணங்குகின்றனர். ஆனால், இஸ்லாமிய மத வரையறையின் படி, அவருக்கு இஸ்லாமுக்கு உள்ளே எந்த போற்றுதலுக்குரிய இடமும் இடையாது. இந்து சமய மரபில் “சமர்த்த சத்குரு சாய்நாத் மகாராஜ்” என்று சத்குருவாக ஆகி விட்டார்!

  51. சுவனப்பிரியன் இந்த மாதிரி ஒன்று பண்ணினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். சிரிப்பா வருது.

  52. ஜெனாப் சுவனப்ரியன்

    உங்களுக்கோ அல்லது தொடர்ந்து பொய்ப்பெயர்களில் முகமூடி சுவிசேஷ ப்ரசாரம் செய்து வரும் ரெவ ரெண்டு ஜோ அமலனுக்கோ கூசாமல் பொய் சொல்வதற்கும்…..குதர்க்க வாதம் செய்வதற்கும் ………… அதுவும் *பூணூல்* என்ற சொல் *ப்ராம்மணர்* என்ற சொல்………… இரண்டையும் எடுத்துக்கொண்டு குத்தாட்டம் போடுவதில் அலாதி சுகம் 🙂

    க்றைஸ்தவராகப் பிறந்து உலகோருக்கு வைஷ்ணவத்தின் பெருமையையும் ஹிந்து மதத்தின் பெருமையையும் பறைசாற்றி வரும் ஸ்ரீ டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களை வைஷ்ணவர்களும் கோடானுகோடி ஹிந்துக்களும் மதித்துப்போற்றுவது………….. வைஷ்ணவப் பெரியோர்கள் அவரை ஜோஸஃப் ஐயங்கார் ஸ்வாமின் என்று கொண்டாடுவது…………. அவர் பூணூல் போட்டிருக்கிறாரா இல்லையா என்பதனை அலகீடாக வைத்து இல்லை என்று அறியக்கடவீர். ஏன் அவரது ஆசார்யனின் வாக்கை அனுசரித்து அவர் திருமண் கூட நெற்றியில் இட்டுக்கொள்ளாத போதிலும் அவரைக் கொண்டாடுவதில் ஹிந்துக்களுக்கோ வைஷ்ணவர்களுக்கோ எந்தத் தயக்கமும் இல்லை என்பதனையும் அறிவீர்.

    \\ ஏசுநாதருக்கும், காந்திஜிக்கும், அஜ்மீரில் மற்றும் நாகூரில் அடங்கியுள்ள இஸ்லாமிய பெரியோர்களுக்கும் பூணூலை மாட்டி விட்டுட்டா ஒட்டு மொத்த இந்தியாவும் சனாதன மார்க்கமாகி விடும். தொல்லை விட்டுது \\

    காந்திஜி பற்றி ஸ்ரீ ஜடாயு தெளிவாகச் சொல்லியுள்ளார்.

    ஜெனாப் எச்.ஜி. ரஸூல் சாஹேப் அவர்கள் சிங்கப்பூர் தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள் பற்றிய ஒரு வ்யாசம் திண்ணை தளத்தில் பகிர்ந்ததில்………. உலக அமைதிக்கு குந்தகத்தையும் பயங்கரவாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட வஹாபியம் ஒழுகும் தாங்கள் வந்து தர்க்காஹ் வழிபாட்டு இஸ்லாமிய முறை பற்றி விஷத்தை கக்கியிருந்தீர்கள். இதோ இங்கு பொய்ப்பெயரில் கருத்துப் பதியும் அன்பர் ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ …………அங்கு திண்ணை தளத்தில்……… அய் அய் எம் கணபதி ராமன் என்ற பெயரில் தன்னை ப்ராம்மணராக அறிமுகம் செய்து கொண்டு ……………… ஹிந்துஸ்தான இஸ்லாமியமான தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள் பால் விஷம் கக்கி…………… அராபிய விதேசி பயங்கர வாத வஹாபியத்துக்கு தூபம் போட்டு சூடம் கொளுத்திக்காண்பித்து ………….. இன்றைக்கும் பார்க்கக் கிட்டும்.

    ஸ்ரீ ஜடாயு அவர்கள் இது விஷயம் பகிர்ந்த சில விஷயங்களுக்கு மேலதிகமாக பகிரப்பட வேண்டிய விஷயங்கள்

    \\ ஏசுநாதர் என்ற செமிட்டிக் மத நிறுவனர் எப்படி இதில் சேர்வார்? தர்க்காக்களில் சமாதியடைந்துள்ள சூஃபி பெரியோர்களை இந்துக்களில் சிலர் தங்களது ஆன்மீக ஈடுபாடு காரணமாக வணங்கலாம். ஆனால் அவர்களில் யாரும் குருமார்களாக எந்த இந்து சமயப் பிரிவுகளிலும் ஏற்கப் படவில்லை. \\

    தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகளில் ஹிந்துஸ்தானத்தைச் சார்ந்த இஸ்லாமிய சஹோதரர்களும் ஹிந்துக்களூம் ஈடுபாடு கொள்வது………….. அது மண் சார்ந்த மூத்தோர் வழிபாட்டின் சுவடுகளைத் தன் வசம் கொண்டுள்ளது……………. என்பதை அவதானிக்க வேண்டியது மிக முக்யமான விஷயம். தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள் என்ற ஹிந்துஸ்தானத்து இஸ்லாமியத்தை……….. இந்த தேசத்தின் பண்பாட்டுச் சுவடுகளை………. வேரும் வேரடி மண்ணுமாக அழித்தொழித்து அராபிய மயமாக்க முயலும் வஹாபியர்களுக்கு………….. ஜீரணிப்பதில் கசப்பு இருக்கும் புரிகிறது.

    அதுவும் குரான்-ஏ-கரீம் என்ற ஒற்றைப் புஸ்தகத்துக்கு வெளியே சென்று தன் ஞானத்தேடலை அடைய விழைந்த அவுலியாவான குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் நந்தீச்வர சதகம் என்ற தன் க்ரந்தத்தில்……………

    ஆதியந்தங் கடந்தவுமை யாளருள் நாதாந்தச்

    சோதியந்தங் கடந்தசெழுஞ் சுடரேநந் தீஸ்வரனே

    முடியடியாய் நின்றநடு மூல மணிவிளக்கே

    அடிமுடியாய் நின்றநடு அணையேநந் தீஸ்வரனே

    என்றெல்லாம் பாடி இருப்பதால்…………..இது பயங்கரவாதத்தை விதந்தோதி மற்ற சமயங்களையும் மதங்களையும் த்வேஷிக்கக் கற்றுத்தரும் வஹாபியத்துக்கு வேட்டு வைப்பதாக இருப்பதால்…………. இவர்களைப் போன்ற பெரியோர்களைத் தாங்கள் விஷம் கக்கி இழித்துப்பழிக்க முனைவீர்கள். இதில் வியப்பிருக்க வாய்ப்பில்லை.

    ஆனால் தங்களது தேசப்பண்பாட்டின் சுவடுகளை இந்த செயல்பாடுகளில் கண்டு களிப்புறும் ஹிந்து மற்றும் இஸ்லாமிய சஹோதரர்கள்………… அவுலியாக்களான குணங்குடி மஸ்தான் சாகிபு மற்றும் சதக்கத்துல்லாஹ் அப்பா போன்றோரைக் கொண்டாடி மகிழ்வதில் ……………… ஹிந்துப்பண்பாடு போற்றும் யாருக்கும் எந்த வியப்பும் இருக்காது.

  53. பேரன்பிற்குரிய ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் சமூஹத்திற்கு

    \\ I have stopped reading you. Don’t address any messages to me. Futile 🙂 \\

    ரெவ ரெண்டு ஜோ அமலன் அவர்கள் எப்போதுமே யார் எழுதியதையும் எந்த அவதாரத்திலும் படித்ததே இல்லை என்பது தான் உலகமே அறிந்த விஷயமாயிற்றே. தனது பின்னூட்டங்களால் இழையின் போக்கையே மாற்றும் தெனவு உள்ள ரெவ ரெண்டு அவர்கள்……………. யார் எழதியதையும் படித்து விட்டு பின்னாடி தன்னுடைய பேத்தல் பினாத்தல்களைப் பதிவு செய்வது என்பது இது வரை இல்லை. இப்போதும் இல்லை. இனிமேலும் எந்த புதிதான அவதாரத்திலும் இருக்காது.

    தமிழ் தளங்களில் எழுதி இம்சை செய்வது போதாதென்று ஸ்வராஜ்யா என்ற ஆங்க்ல தளத்திலும் ERGO என்ற பெயரில் உங்கள் EGOவை வெளிப்படுத்தி மொக்கை போட்டு புளுகு மூட்டைகளை உதிர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அங்கே ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் தமிழ் ஹிந்து தளத்தில் ப்ராம்மண வாதத்தை அடிப்படையாகக் கொண்ட வ்யாசங்களை எழுதியுள்ளதாக புளுகு மூட்டைகளை உதிர்த்துள்ளீர்கள்.

    பொய் சொல்வதற்கு உங்களுக்கு கூசவே கூசாது.

    க்ருஷ்ணகுமாரது எழுத்துக்களிலோ அல்லது ஜடாயு அவர்களது எழுத்துக்களிலோ ப்ராம்மணவாதத்தை வெளிப்படுத்தும் ஒரு வாசகத்தைக் கூட உங்களால் உதாஹரிக்க முடியாது என்பது நீங்கள் வாக்கு தத்தம் செய்துள்ள உமது பரிசுத்த ஆவிக்கே கூடத் தெரியும் என்பது திண்ணம்.

    ஆனால் ரெவ ரெண்டு அவர்களின் கருத்துக்கள்…………… அவர் ஜோ அமலன் அவதாரத்தில்………..சில் சாம் என்ற க்றைஸ்தவ நபருடன் செய்த சம்வாதங்கள் அவர் வைஷ்ணவப் பெரியோர்களை இழித்துப்பழிப்பது ஆழ்வார்களை இழிவாகப் பேசுவது என்பதனை வாசகம் வாசகமாக மிகக் குறிப்பாகக் காட்ட முடியும். இதோ மிக சமீபத்தில் ஸ்ரீ டி ஏ ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களைப் பற்றி நீங்கள் துஷ் ப்ரசாரம் செய்வதிலேயே உங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிப் பல்லிளிக்கிறதே.

    அவரை ஜோஸஃப் ஐயங்கார் ஸ்வாமின் என்று போற்றிப் புகழும் வைஷ்ணவப் பெரியோர்களுக்கு வைஷ்ணவம் தெரியாது. அரைகுறையாக ஆழ்வார் பாசுரங்களை கட் பேஸ்ட் செய்யும் முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கியான தங்களுக்கு வைஷ்ணவம் தெரியும் என்பது தானே தாங்கள் முன்வைக்கும் விஷயம்.

    எங்களது மற்றும் உலகளாவிய ஹிந்து மதம் டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் போன்ற பாகவதோத்தமர்களை தலைமேல் ஏற்றிக் கொண்டாடும் ஹிந்து மதம். உங்களைப் போன்று மொக்கை போடுவதை செயல்பாடாகக் கொண்டு……………..க்றைஸ்தவ மதத்தை ப்ரசாரம் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும்…………. முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கியான தங்களுக்கு………………. டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் போன்ற சான்றோர்களை……………. வைஷ்ணவர்களும் ஹிந்துக்களும் தலைமீது ஏற்றிக்கொண்டாடுவதில் இரண்டு விசனம்.

    க்றைஸ்தவ ஜனத்தொகை குறைந்து விட்டது.

    ப்ராம்மண மற்றும் பூணூல் போன்ற சொல்லாடல்களை ஜபர்தஸ்தியாக முன்னிறுத்தி நீங்கள் குத்தாட்டம் போடக் கூடிய வாய்ப்புகள் கையை விட்டுப்போகிறது.

    கண் முன்னே உங்கள் துஷ் ப்ரசாரம் ……………… முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கம்………… செல்லாக்காசாகி பல்லிளிப்பதை மனசாக்ஷி உள்ள அனைத்து வாசகர்களும் நிச்சயம் வாசித்து மகிழ்வார்கள்.

  54. ப.S

    //
    Krishna Kumar!

    I have stopped reading you. Don’t address any messages to me. Futile 🙂

    Keep your brand of Hinduism with you: Don’t force it upon …..
    //

    so have i. don’t expect to me to read and respond to your B.S

  55. சுவனப் பிரியன்

    //
    ஆனால், இஸ்லாமிய மத வரையறையின் படி, அவருக்கு இஸ்லாமுக்கு உள்ளே எந்த போற்றுதலுக்குரிய இடமும் இடையாது. இந்து சமய மரபில் “சமர்த்த சத்குரு சாய்நாத் மகாராஜ்” என்று சத்குருவாக ஆகி விட்டார்!
    //

    இசுலாமிய முறைப்படி அவருக்கு பாழும் நகரம் கோடிக்கும் என்னை சட்டி தானே கிடைக்கும்.

    இசுலாத்துக்கும் ஹிந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடு பார்த்தீர்களா. நல்லது எங்கே இருந்தாலும் அதை ஏற்று அங்கு கடவுளை காணும் தன்மை கொண்டது ஹிந்து மதம்.

    இறைவனை எங்குமே காணத் தெரியாத மதம் இசுலாம்.

    ஹிந்து மதத்தின் மூல அம்சம் தர்மம் புருஷார்த்தம் (முக்தி) என்பது தான். இவ்விரண்டையும் புத்தரும், ஜிநேந்திரரும் ஏற்றுக் கொண்டு அதற்கு மார்கங்களை வகுத்துள்ளனர்.

    பூணல் போடாதவர்களை பல காலமாக தலை மேல் வைத்து கொண்டாடி உள்ள மதம் ஹிந்து மதம். குல்லா போடாதவர்கள் நரகம் சென்று நலிவர் என்பது இஸ்லாம் மதம். உங்களது வெட்டி கிண்டலை நிறுத்திக் கொள்ளவும்.

    பாகிஸ்தான்ல முந்தா நேத்து தான் எழுவது ஷியாக்களை குண்டு வைத்து கொலை பன்னிருகீங்க. அமைதி மார்க்கம், குள்ள போடுரதுலேயே இந்த மாதிரி போட்டாதான் ஒத்துகிருவேன் இல்லேன்னா கொன்னுபுடுவேன் என்கிற கூட்டம் நீங்கள். வெட்கமில்லாமல் இங்கு வந்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள்.

  56. //Glad to hear from you from your heavenly Saudi Arabia. This is my presumption. I mean, why would a hard core Wahabi waste time in a Kaffir land?//

    இஸ்லாமியருக்கு உலகில் எந்த நாடும் புனித நாடு கிடையாது. மெக்கா, மதினா, ஜெருஸலம் இந்த மூன்று இடங்களின் மசூதியில் தொழுதால் அதிக நன்மை அவ்வளவே. சவுதியாக இருந்தாலும் வேலை செய்தால்தான் சம்பளம். 🙂

    அடுத்து ‘காஃபிர் தேசம்’ என்று எனது இந்தியாவை நான் பிறந்த மண்ணை நினைப்பேனா? உங்களை விட அதிக அன்பும் பாசமும் எனது தாய் மண்ணின் மீது வைத்துள்ளேன். சில வருத்தங்கள் இருந்தாலும் எனது பிரியம் எனது தாய் மண்ணை விட்டு என்றுமே அகலாது.

    //is an excellent one. Ghar Wapsi is calling you too!//

    சனாதன மார்க்கம் உண்மையில் என்ன சொல்கிறது என்ற செய்தியை உள் வாங்கினால் முடிவில் நீங்கள் இஸ்லாமிய கொள்கையில் வந்து நிற்பீர்கள்.

    ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கைக்கு நீங்கள் வந்தால் நானும் அந்த இடத்துக்கு வந்து விடுவேன். நமது முன்னோர்கள் பின் பற்றிய மார்க்கம்தான் இஸ்லாம். அதை நோக்கி ‘கர் வாபஸி’ என்றால் நான் மகிழ்ச்சியுறுவேன்.

  57. இஸ்லாமியருக்கு உலகில் எந்த நாடும் புனித நாடு கிடையாது. மெக்கா, மதினா, ஜெருஸலம் இந்த மூன்று இடங்களின் மசூதியில் தொழுதால் அதிக நன்மை அவ்வளவே.

    romba confuse aa irrukka? eppadi?
    அதிக நன்மை !!! what percentage????

  58. சாரங்கன்!

    //நல்லது எங்கே இருந்தாலும் அதை ஏற்று அங்கு கடவுளை காணும் தன்மை கொண்டது ஹிந்து மதம்.//

    நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.
    – ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

    அப்போ இந்த தண்டனை எதற்கு சார்? இதை போதித்த மதம் எது?

    //குல்லா போடாதவர்கள் நரகம் சென்று நலிவர் என்பது இஸ்லாம் மதம்//

    குல்லா போடுவது யூதர்களின் பழக்கம். குர்ஆனிலோ நபி மொழிகளிலோ குல்லா போடச் சொல்லி எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. நானும் குல்லா போடுவதில்லை 🙂

    //பாகிஸ்தான்ல முந்தா நேத்து தான் எழுவது ஷியாக்களை குண்டு வைத்து கொலை பன்னிருகீங்க. //

    பாகிஸ்தான் காரன்கிட்டே கேட்டா இந்திய சதி என்று சொல்கிறான். அது யூதர்களின் வேலையா என்பதும் உறுதியாக தெரியவில்லை. சென்னை மண்ணடியில் ஷியாவும் சன்னியும் காலா காலமாக நட்போடு பழகி வருகிறார்களே! ஆக இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் இஸ்லாம் அல்ல. அரசியல் என்பது விளங்குகிறதா?

  59. //இந்து சமய நெறிமுறைகள் அல்லாமல் வேறு என்ன? “வாழையடி வாழையென வந்த திருக்கூட்டமதில் யான் ஒருவன் அன்றோ” என்று சொன்ன வள்ளலார் இந்தக் கூட்டம் //

    இதை எழுதியவர் ஜடாயு.

    இந்து சமய நெறிமுறைகள் இந்து ஞானமரபில் அடக்கம்.
    இந்து ஞான மரபில் இந்து சமய நெறிமுறைகள் மட்டுமே அடக்கமில்லை.

    மதத்தைத் தள்ளிய நாத்திகமும், இந்து சமய நெறிமுறைகளை ஒதுக்கிய கவுதமர், மஹாவீரர், குருநானக்கும் ஜடாயுவின் படத்தொக்குப்பில் இருப்பதேன்?

    பதில்:-

    அவர்கள் இந்துசமயத்தைவிட்டு விலகி, இந்து ஞான மரபின் அடிப்படையில் தங்கள்தங்கள் மதங்களை நிறுவிக்கொண்டார்கள்.
    வள்ளலார் இந்து குருவாகலாம். புத்தரும் மஹாவீரரும், குருநானக்கும், அப்படி ஆக முடியாது.

    எனவேதான் என் முதல் பின்னூட்டத்தில் இப்படத்தொகுப்புக்கு ஜடாயு கொடுத்த பெயர் பொருந்தாது என்று நானே இன்னொரு பெயர் சொல்லியிருக்கிறேன்.

    அப்பெயர் இக்கருத்துக்குழப்பத்தையும் தவறையும் நீக்கும்.

  60. @ ஜடாயு ….

    வள்ளலாருடைய சமரச சுத்த சன்மார்க்கம், யோகம், அன்னதானம், ஜோதி வழிபாடு, ஜீவகாருணியம் அத்தனையும் முழுக்க முழுக்க இந்து சமய நெறிமுறைகள் அல்லாமல் வேறு என்ன? “வாழையடி வாழையென வந்த திருக்கூட்டமதில் யான் ஒருவன் அன்றோ” என்று சொன்ன வள்ளலார் இந்தக் கூட்டம் அல்லாமல் வேறு எங்கு பொருந்துவார் – நபிமார்களுடைய பட்டியலிலா, கிறிஸ்தவ புனிதர்களின் பட்டியலிலா, கம்யூனிச சித்தாந்திகளின் குழுவிலா அல்லது திராவிய இனவெறியர்களுடனா?//

    வள்ளலார் தொடர்ப்பாக நீங்கள் திரு.சுவனப்பிரியன் அவர்களுக்கு அளித்த பதில் மிகவும் மோசடியானதாகும், இதே போன்றதொரு ஒரு பதிலை தான் நீங்கள் ஆரம்பத்தில் எனக்கும் கொடுத்தீர்கள்.. எப்படி என்றுப் பார்ப்போம்..

    வள்ளல் பெருமானார் எந்த இடத்திலும் சித்தாந்தி என்றோ வேதாந்தி என்றோ தன்னை என்றுமே அழைத்துக் கொண்டதில்லை. மாறாக அவர்களை அறிவற்ற அற்ப்பக்கூட்டம் என்றே சாடுவார்… மேலும் சித்தாந்தம், வேதாந்தம் போன்றக் கருத்துகளில் கவனம் செலுத்த வேண்டாம், அவற்றால் எந்தப் பயனுமில்லை என்றுத் தெளிவாகவே கூறி இருக்கிறார். இதை நான் கூறுவதை விட அவரின் மொழிகளிலேயே காணலாம்.

    திருஅருட்பா உரைநடை பகுதியில் கீழக்கண்டவாறு வேதாந்தம், சித்தாந்தம் போன்றவைகளை தோலுரிக்கிறார்..

    “சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழுஉக் குறியாகக் குறித்திருகிறதே யன்றி புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும்- அவ்வச்சமய மதங்களிலும்- அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமே யல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தை பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது”.

    ஆக, வள்ளல் பெருமானார் தன்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாகத் தான் இருக்கிறார். சித்தாந்தம், வேதாந்தம் போன்றவைகளில் கவனம் செலுத்தி காலத்தை வீணே விரயம் செய்ய வேண்டாம் என்றுக் காத்திரமாகத் தான் கூறுகிறார்.

    மேலும் வேதாந்திகள், சித்தாந்திகள் என்று கூறிக் கொண்டு அலங்கார சொற்களால் மக்களை ஏமாற்றுபவர்களையும் அவர் வெளிப்படையாக அமபலப்படுத்துகிறார்.. அதே பேருபதேசம் என்னும் தலைப்பில்..

    ” சமயம் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி, சித்தாந்தி என்று பெயரிட்டுக்கொண்ட பெரியவர்களும் உண்மையறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அது ஒன்றையும் நம்ப வேண்டாம், எவைகளிலும் தெய்வத்தை புறமுகமாகப் புலப்பட சொல்லவில்லை”.

    இந்த இடத்தில் போலி வேதாந்தி, உண்மை வேதாந்தி என்றெல்லாம் வள்ளல் பெருமானார் பேதம் பிரித்து பார்க்கவில்லை. மொத்தமாகவே வேதாந்தம் என்பதே உதவாக்கரை கொள்கைதான் என்பதை புற மண்டையில் விளாசினார் போன்றுக் கூறி விட்டார். இனி உங்களை போன்றவர்கள் இனி செய்ய வேண்டியது ஒன்று தான், வள்ளல் பெருமானாரை சனாதனம் என்னும் குழியில் இறக்குவதற்கு இதுப் போன்ற வீண் புரட்டல் வாத முயற்சிகளை செய்வது அற்பத்திலும் அற்பத்தனமானது என்பதை உணர்வது ஒன்றுத் தான்..

    //வள்ளலாருடைய சமரச சுத்த சன்மார்க்கம், யோகம், அன்னதானம், ஜோதி வழிபாடு, ஜீவகாருணியம் அத்தனையும் முழுக்க முழுக்க இந்து சமய நெறிமுறைகள் அல்லாமல் வேறு என்ன?//

    சன்மார்க்கம், ஜீவகாருண்யம் என்னும் உயிர்களுக்கு இரங்கல், அனைத்து உயிர்களையும் சமமாக பாவித்தல் என்பதெல்லாம் இந்து சமயத்திற்கு வெகு தூரம் என்பதை அனைத்து சாதி மாணவர்கள் அர்ச்சகராவதை தடுத்து அவர்களை நடு ரோட்டில் நிற்க வைத்த கண்ணியதிலேயே அம்பலப்பட்டுவிட்டது. நிலை இப்படியிருக்க சன்மார்க்கம், ஜீவகாருண்யம் என்று பன்றிக்கு வைர மூக்குத்தி போட்டுப் பார்க்கும் மதியீனம் எதற்க்காக?

    ஆகவே தங்களின் வாதம் இப்பொழுது பக்கவாதமாகத் தான் இருக்கிறது என்பதை மிக கடுமையான கண்டனங்களோடு தெரிவித்துக் கொள்கிறேன்..

  61. //பாகிஸ்தான் காரன்கிட்டே கேட்டா இந்திய சதி என்று சொல்கிறான்//

    இதுதான் தேசபக்தி. இது என் நாடு, என் நாடு இதை பண்ணாது என்று சொல்லுபவன் , தேசவிரோதி.

    பயங்கரவாதியை கூட நம்பலாம். பணம் வாங்கிக்கொண்டு விட்டுவிடுவான். ஆனால் இந்த முகமூடிகளை!!!! தேசவிரோத சக்திகளை???

  62. //பாகிஸ்தான் காரன்கிட்டே கேட்டா இந்திய சதி என்று சொல்கிறான்//

    நம்ப ஊரில் இருந்து சிரியாக்கு இன்ப சுர்ருலாப்போகினார்களா. ஆந்திர பொண்ணு, நம் மண்ணு மக்கள் என்று. அவர்கள் பாகிஸ்தான் வழியாக போயி இருப்பார்களோ?

  63. அய்யா சுவனப்பிரியன், எங்கள் மத சம்பந்தமாக நாங்கள் பார்த்துகொள்ளுகின்ர்ரோம். உங்கள் மதம் மூட நம்ம்பிக்கை, பெண் அடிமையால், குண்டு வைத்தல் என்று மக்குகளும் , மடயர்களுமாக மங்கி போய் இருக்கின்றது. அதை மாற்ற முயலுங்கள். ஊருக்கு உபதேசம் வேண்டாம்.

  64. தாயுமானவன்

    உங்களுக்கு பதில் சொல்வது தேவை இல்லாத ஒன்று. நீங்கள் இந்து மதத்தை படிப்பதை விட , flash ந்யூஸ் breaking ந்யூஸ் பார்ப்பது போல அண்ணா, கலைஞர் வழியில் ஹிந்து மதத்தை கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். ஒன்றும தெதவானை சொல்லிக்கொடுத்து தேற்‌றிவீடலாம். ஆனால் இந்த மாதிரி…. கொஞ்சம் கஸ்டம்தான்.
    பி கு.

    உங்கள் கடசி பதிலில் கூட முரண்பாடு நெறய இருக்கின்றது ஆனால் நீங்கள் கேள்வி உரக்க கேக்கின்றீர்கள்.

  65. சூ பீ

    பாகவத்தில் அந்த தண்டனை அயோக்கிய தடியர்களுக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது குழந்தையை கற்பழிப்பவனுக்கு, யுத்தம் முடிந்த கையோடு அங்குள்ள பெண்களை அலெக் செய்பவனுக்கு, அடுத்த மதக்காரனை தேவை இல்லாமல் கொல்பவனுக்கு.

    இசுலாத்தில் நரகம் முசுலிமா இல்லாட்டியே கிடைக்கும். அதாவது முந்நூறு குழந்தைகளை கொன்னவனுக்கு சொர்க்கம். புத்தருக்கு, அப்துல் கலாமுக்கு, கபீர் தாசருக்கு, காந்திக்கு, அம்பேத்காருக்கு ,… புல் டைம் நரகம் தான். ஆகா ஒட்டுமொத்த நல்லவர்களுக்கு நரகம், பொறுக்கிகளுக்கு சொர்க்கம். இது தானே இஸ்லாம்.

    உங்களுக்கே வெக்காமாக இல்லையா. இஸ்லாத்தில் நரகக் கொடுமை என்றால் உடனே எதையோ வெட்டி ஒட்டி பார் பாகவத்தில் இருக்கு என்று சொல்கிறீர்களே

  66. சிலருக்கு என்ன சொன்னாலும் புரிய மாட்டேங்குது.

    புத்த மதம் என்ன தொபுக்கடீர்னு குத்தித்து வந்ததா. அது சாங்கிய மதத்தின் ஒரு தொடர்ச்சி. சாங்கிய மதமாவது ஆஸ்திக மதம், வேதத்தை ஒத்துக் கொள்கிறது ஆனால் கடவுளை ஒத்துக் கொள்வதில்லை. சான்க்கியத்தின் பொருள் முதல் வாத கூறுகளை தான் புத்த மதம் வளர்த்தெடுத்தது. மீமாசா கார்கள் கூடத்தான் கடவுளை ஒத்துக் கொள்வதில்லை. உடனே அது ஹிந்து மதம் இல்லை என்று கத்துவதா.

    அசோகர் மரம் நட்டார் என்ற ரேஞ்சில் தான் பலர் புத்த மதத்தை பற்றி அறிந்து வைத்துள்ளனர். கொஞ்சமேனும் அதை படித்தால் புரிய வரும் அவர்கள் வேதத்திலிருந்து எவ்வளவு விஷயங்களை கடன் வாங்கியுள்ளார்கள் என்று.
    நிவிசேஷ பிரமம் என்று ஒரு விஷயத்தை அத்வைதத்திலிருந்து எடுத்து விட்டால் அது தத்துவ தளத்தில் கிட்ட தட்ட புத்த மதம் போன்றே இருக்கும். அத்வைதம் ஹிந்து மத்தில் தானே இருக்கு.

    இதே கதை தான் ஜைனர்களுக்கும்.

    1) ரொம்ப எளிமையாக சொல்லவேண்டும் என்றால் இந்த அனைத்து மதங்களும் கர்ம என்ற ஒன்றை ஒத்துக் கொள்கின்றன
    2) இந்த அனைத்து மதங்களும் முக்தி என்ற ஒன்றை ஒத்துக் கொள்கின்றன
    3) அனைத்து மதங்களும் மறு பிறவியை ஒத்துக் கொள்கின்றன
    4) அனைத்து மதங்களும் தர்மம் என்ற ஒன்றை ஒத்துக் கொள்கின்றன
    5) அனைத்து மதங்களும் அஹிம்சையை ஒத்துக் கொள்கின்றன
    6) நல்லவனாக இருந்தால் மட்டுமே சொர்க்கம், முக்தி என்ற கொள்கை எல்லா மத்ததிருக்கும் பொது.
    7) கடைசியாக ஹிந்து, பௌத்த, ஜைன, சீக்கிய மதங்களால் ஒருவருடன் ஒருவர் ஒத்துழைத்து இயங்க முடியும்

    நீங்கள் புத்தரை ஹிந்து மத்தில் சேர்க்கக் கூடாது என்று சொன்னால் அதே லாஜிக்கின் படி யாரையும் சேர்க்க முடியாமல் பொய் விடும். ஏன் என்றால் ஓவ்வொரு குரு மார்களும் தத்துவத்தை வெவ்வேறு வழியாக சொல்லியுள்ளனர்.

  67. தாயுமானவன்

    வள்ளலார் சைவத்தை தோலுரிக்கிறார் என்று அவர் சொன்னதாக நீங்கள் சொல்லுகிறீர்கள். நீங்கள் வள்ளலாரை பின்பற்றுபவரா.

    இன்றைக்கு வள்ளலாரை வழிபடுபவர்கள் ஹிந்துக்கள் என்று சொல்லப் படுகிறார்களா அல்லது வேறு ஏதாவது என்று அழைக்கப்படுகிரார்களா.

    சாங்கியர்கள் ஹிந்துக்களா இல்லையா, யோகா வாசிஷ்டர்கள் ஹிந்துக்களா இல்லையா. அவர்கள் கூடத்தான் உங்கள் பாஷையில் சொல்லப் போனால் வேதாந்தத்தை தொலுரிக்கிறார்கல்

  68. ஹூரி பிரியர்கள் , எப்படி வித விதமாக சாக அடிக்கலாம் என்று யோசித்தி ஐ எஸ் காரங்களுக்கு ஆலோசனை சொல்வதை விட்டு விட்டு இங்கே வந்து தக்கியா பண்ண வேண்டிய அவசியம் என்ன? ஐ எஸ் காரங்களுக்கு எப்படி ஆள் சேர்க்கலாம் என்று யோசனை பண்ணுங்க. நேரம் இருந்தால், இ. இ. இ. ப்ளாக்கில், ஆலோசனைகளை சொல்லுங்க.

  69. சுவனப்ரியன்

    //
    ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கைக்கு நீங்கள் வந்தால் நானும் அந்த இடத்துக்கு வந்து விடுவேன்.
    //

    சனாதன தர்மமானது ஒன்றே குலம் அந்த குலமான ஒருவனே தேவன் என்கிறது, கடவுளையும் மற்றவற்றையும் பிரித்து பார்ப்பதில்லை. இது உங்களுக்கு ஒத்த சிந்தனையா.
    சனாதன தர்மமானது ஒரே கடவுளின் அம்சங்களாக நாம் இருக்கிறோம் நமக்கு பெயரும் ரூபங்களும் மட்டுமே வேவ்வேறு [சதேவ இதமக்ர ஆஸீத் நாம ரூபாப்யாம் வ்யாகரவாணி. ஏகம் சாட் விப்ரா பஹுதா வதந்தி, ஏகமேவ அத்த்விதீயம்…] இது உங்களுக்கு ஒத்து வருமா.

    இஸ்லாத்தின் கொள்கை. இஸ்லாம் ஒன்றே குலம் அல்லா ஒருவரே தேவன். சரி இதை எப்படி நிறுவுவது. ஒத்துகாதவன தீர்த்துக் கட்டு அவன் பொண்டாட்டிய கற்பழி, மதம் மாத்து அவன் சந்ததி இஸ்லாமியனாக மாறும். நீங்கள் தான் முஸ்லிம் உம்மா, காபிர் என்று பிரித்து கொள்கை கொண்டுளீர்கள். ஒன்றே குலம் என்ற கொள்கை இஸ்லாத்திற்கு கிடையவே கிடையாது.
    ஒருவனே தேவன் என்றாவது உண்டா. கிடையாது. சாத்தானுக்கு கடவுளுக்கு நிகரான பவர் உண்டு.

  70. சாரங்கன்!

    //இசுலாத்தில் நரகம் முசுலிமா இல்லாட்டியே கிடைக்கும். அதாவது முந்நூறு குழந்தைகளை கொன்னவனுக்கு சொர்க்கம்.//

    ‘ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’ என்றும் “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’
    -குர்ஆன் 5:32

    மனித உயிர்களுக்கு முஸ்லிம்கள் இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்க அதற்கு மாற்றமாக முந்நூறு குழந்தைகளை கொன்றவன் சொர்க்கம் போவானா? அவனுக்கு நிரந்தர நரகமே. அரபு பெயரை வைத்திருப்பதால் ஒருவன் முஸ்லிம் ஆகி விட முடியாது. குர்ஆனின் கட்டளைகள் அவன் வாழ்வில் நடை முறை படுத்தியால் மட்டுமே இஸ்லாமியனாகிறான்.

    //புத்தருக்கு, அப்துல் கலாமுக்கு, கபீர் தாசருக்கு, காந்திக்கு, அம்பேத்காருக்கு ,… புல் டைம் நரகம் தான். ஆகா ஒட்டுமொத்த நல்லவர்களுக்கு நரகம், பொறுக்கிகளுக்கு சொர்க்கம். இது தானே இஸ்லாம்.//

    ‘நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், இறைச் செய்தியை கிடைக்கப் பெறாதவர்கள், மற்றும் கிறித்தவர்களில் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’
    -குர்ஆன் 5;69

    இந்த வசனத்தின் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களும் நற் காரியங்கள் செய்து ஏக இறைவனை தனது மனதுக்குள் நினைத்து மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்வார்களானால் அவர்கள் எந்த அச்சமும் படத் தேவையில்லை என்கிறான் இறைவன்.

    நீங்கள் சொன்ன புத்தராகட்டும், அப்துல் கலாமாகட்டும், கபீர்தாசராகட்டும், காந்தியாகட்டும் அல்லது அம்பேத்காராகட்டும் இவர்கள் அனைவரும் ஏக இறைவனை நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ் நாளில் மனித குலத்துக்கு நன்மை செய்திருந்தால் அவர்களை நான் தண்டிக்க மாட்டேன் என்று குர்ஆனில் இறைவன் உத்தரவாதம் தருகிறான். அவர்கள் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை இந்த வசனத்தில் பார்க்கிறோம். எனவே அவர்கள் மனதளவிலும் மனித குலத்துக்கு நன்மை செய்து ஏக இறைவனை வணங்கி இறந்திருப்பார்களானால் அவர்கள் சொர்க்கத்தில் உல்லாசமாக இருப்பர். காந்தியும் புத்தரும் இறந்து விட்டார்கள். அது அவர்கள் பாடு. உயிரோடு இருக்கும் நீங்கள் உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்.

  71. மதமல்ல மார்க்க சகோ சுவன பிரியன்

    எப்படி வரிந்து கட்டிக்கொண்டு சமாளிப்பு செய்கிரீகள் . வாங்க உரித்து பாப்போம்

    //
    ‘ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’ என்றும் “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’
    -குர்ஆன் 5:32
    //

    இது குரான் வசனம் அல்ல, யூதர்களின் இது தாளமுத் வசனம். ஸல்லவர்கள் கண்ணுமன்னு தெரியாம காப்பி அடித்து விட்டார்.
    பாவம் அவருக்கு தெரியாது இது தால்முத் வசனம் பைபிள் வசனம் இல்லை என்று. ஏக்க இறைவன் பைபிளை தான் எழுதினார் அதை மூளை கேட்டு பொய் யூதர்களும், கிறிஸ்தவர்களும் மாற்றி விட்டார்கள். தால்முத் என்பது மனிதர்களால் இயற்றப்பட்ட ஒரு நூல். குரான் ஒரு டுபாகூர் என்று நிரூபிக்க இந்த ஒரு வசனமே போதும்.
    மேலும் இந்த வசனத்தின் படி ஏக்க இறைவனின் கடைசி இறை தூதர் நரகத்தில் தான் வாடிக் கொண்டிருக்க வேண்டும்

    //
    ‘நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், இறைச் செய்தியை கிடைக்கப் பெறாதவர்கள், மற்றும் கிறித்தவர்களில் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’
    //

    இது வெறும் செமேடிக் மக்களுக்கு சொன்ன வார்த்தைகள். இதில் எங்கே ஒன்றே குலம் என்ற தத்துவம் வருகிறது. அல்லா குரானை இறக்கிய போது உலகில் ஏக்கசக்க நல்ல ஹிந்துக்களும், புத்திச்டுகளும் இருந்தார்கள் அவர்களை அல்லா ஏன் சேத்துக் கொள்ளலை. அவர்களை பற்றி தெரியாதா இல்ல அவர்கள் காபிர்கள் என்பதனாலா.

    //
    இந்த வசனத்தின் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களும் நற் காரியங்கள் செய்து ஏக இறைவனை தனது மனதுக்குள் நினைத்து மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்வார்களானால் அவர்கள் எந்த அச்சமும் படத் தேவையில்லை என்கிறான் இறைவன்.
    //
    ஏக இறைவனை மனதில் நினைத்து நற்காரியங்கள் செய்பவர்கள் எப்படி முஸ்லிம் அல்லாதவர்கள் ஆவார்கள். அவர்கள் தான் ஏக்க இறைவனை நம்புகிரார்களே. அப்புறம் என்ன.

    அய்யா ஹிந்து மதத்தில் இறைவனை நம்பாதவன் கூட நல்லவனாக இருந்தால் அவனுக்கு நற்கதி கிட்டும். இது தாங்கன்னே பரந்த நோக்கு.

    //
    நீங்கள் சொன்ன புத்தராகட்டும், அப்துல் கலாமாகட்டும், கபீர்தாசராகட்டும், காந்தியாகட்டும் அல்லது அம்பேத்காராகட்டும் இவர்கள் அனைவரும் ஏக இறைவனை நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ் நாளில் மனித குலத்துக்கு நன்மை செய்திருந்தால் அவர்களை நான் தண்டிக்க மாட்டேன் என்று குர்ஆனில் இறைவன் உத்தரவாதம் தருகிறான்.
    //

    அதாவது முசுலீமா பிரக்காதவன் அப்புறம் தன வாழ்நாளில் ஏக்க இறைவனை ஏற்றுக் கொண்டு (முசுலீமாக மாறி  ) பின்பு நல்லது செய்தால் அவனுக்கு சொர்க்கம் ஆனால், முசுலீமாக பிறந்தவன் களவாணிப் பயலானாலும் (உண்மையில் களவாணிப் பயலாகா இருந்தால் மட்டுமே) அவனுக்கு சொர்க்கம்.

    இது மதமல்ல மார்க்கம் தான்.

    //
    காந்தியும் புத்தரும் இறந்து விட்டார்கள். அது அவர்கள் பாடு. உயிரோடு இருக்கும் நீங்கள் உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்.
    //
    ஆதாவது என்ன சொல்ல வரீங்கன்னே – காந்தியும் புத்தரும் ஏக்க இறைவனை ஏத்துகிடல அதனால அவர்கள் நரகில் உழல்கிறார்கள் என்று தானே. இதை தெளிவா சொல்றத விட்டுபிட்டு நீங்க உசுரோட இருக்கீக நீங்க உங்க நன்மையை பாருங்கோ என்று மத மாற்ற முயற்சி வேறு. அதாவது நாங்களும் ஏக்க இறைவனை ஏத்துக்கிட்டு சுவனம் சென்று ஹூரிக்களுடன் உல்லாசமா இருக்கனுமாம்பா. .

    ஆகா என்ன தெளிவாகிறது.
    ௧) இஸ்லாம் ஒரு கேடு கெட்டவர்களின் மதம்.
    ௨) அதற்கும் சமத்துவத்திற்கும் சம்பந்தம் கிஞ்சித்தும் கிடையாது.
    ௩) சொர்க்கம் என்பதெல்லாம் மிஞ்சிப் போனால் செமடீக் மக்களுக்கு (அதுவும் நல்லது செய்தால்) கிடக்கும்
    ௫) இஸ்லாமியர்களுக்கு (மார்க்க சிந்தனை படி களவாணித்தனம் செய்தால்) சுவர்க்கம் நிச்சயம்
    ௬) களவாணித்தனம் செய்யாதவன் (அதாவத் மார்க்க சிந்தனை இல்லாதவன்) முசுலீமே அல்ல. அவனுக்கு சொர்க்கமும் இல்லை

    முடிவாக சில கேள்விகள்

    ௧) இஸ்லாத்தின் படி காந்திக்கு சொர்க்கம் உண்டா இல்லையா.
    ௨) உயிரோடு இருக்கும் நல்லவர் அப்துல் கலாம் (ஏக்க இறைவன் பற்றி கவலை படாததவர்)
    ௩) அவருக்கு சொர்க்கம் உண்டா இல்லையா
    ௪) எத்தனையோ நல்ல மனம் படைத்த ஷியாக்கள் அஹமதியாக்கள் உள்ளனர் அவர்களுக்கு சொர்க்கம் உண்டா இல்லையா.
    ௫) வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பாரதியாருக்கு சொர்க்கம் கிடைத்ததா இல்லையா.

    ஹிந்து மத கொள்கை படி ஒரு நல்லொழுக்கமுள்ள வஹாபியாக (எப்படிங்க சாத்தியம் இது ஒரு ஆக்ஸீ மோரான்  ) சூபியாக, கிறிஸ்தவனாக, பௌத்தனாக, ஷியாவாக, நாத்தீகனாக இருந்தால் கூட அவனுக்கு நற்கதி கிட்டும். ஒன்று தான் தேவை நல்ல மனது, நல்ல பேச்சு, நல்ல செயல்.

  72. சாரங்கன்!

    // சனாதன தர்மமானது ஒன்றே குலம் அந்த குலமான ஒருவனே தேவன் என்கிறது, கடவுளையும் மற்றவற்றையும் பிரித்து பார்ப்பதில்லை. இது உங்களுக்கு ஒத்த சிந்தனையா.

    சனாதன தர்மமானது ஒரே கடவுளின் அம்சங்களாக நாம் இருக்கிறோம் நமக்கு பெயரும் ரூபங்களும் மட்டுமே வேவ்வேறு [சதேவ இதமக்ர ஆஸீத் நாம ரூபாப்யாம் வ்யாகரவாணி. ஏகம் சாட் விப்ரா பஹுதா வதந்தி, ஏகமேவ அத்த்விதீயம்…] இது உங்களுக்கு ஒத்து வருமா.//

    இது பற்றி குர்ஆன் கூறுவதைப் பார்போம்….

    ‘மனிதனை சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான்’.
    -குர்ஆன் 32:9

    இந்த வசனத்தைத்தான் பலரும் தவறாக விளங்கியுள்ளனர். உதாரணத்துக்கு ஒரு பலூனை நீங்கள் ஊதி அதனை பறக்க விடுகிறீர்கள். நீங்கள் ஊதிய காற்றுதான் அந்த பலூனில் அடைக்கப்பட்டுள்ளது. உங்களின் காற்று இல்லை என்றால் அந்த பலூனானது சுருங்கி ஒரு மூலையில் கிடக்கும். இப்போது அந்த பலூனும் நீங்களும் ஒன்றாகி விடுவீர்களா? இதனை உங்களின் அறிவு ஒத்துக் கொள்ளுமா? கண்டிப்பாக இல்லை என்றே சொல்வீர்கள்.

    அதுபோலவே மனிதன் என்ற பலூனுக்கு இறைவன் தனது உயிரை ஊதி அந்த உடலுக்கு உயிர் உண்டாக்குகிறான். அதன் பிறகு அந்த மனிதனிலிருந்து ஒரு துணையை படைக்கிறான். இருவரையும் பூமிக்கு அனுப்புகிறான். அந்த இருவரின் புதல்வர்களின்…. புதல்வர்களின்….. புதல்வர்களின் …. புதல்வர்கள்தான் நாமெல்லாம். 🙂 ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவனின் உயிரானது இருந்து வருகிறது.

    அந்த பலூன் உடைந்து விட்டால் ஊதப்பட்ட உங்களின் காற்று எப்படி வெளியேறுகிறதோ அது போலவே இறைவனால் ஊதப்பட்ட மனித உடல் இறந்து விட்டால் அதன் ஆன்மாவானது பலூனின் காற்றைப் போலவே இறைவனின் வசம் சென்று விடுகிறது. உலக முடிவு நாளன்று அந்த ஆன்மாக்களை ஒன்று கூட்டி சொர்க்கம் நரகம் கொடுக்கப்படுவதாக ஏறத்தாழ எல்லா மத வேதங்களும் சொல்கிறது. குர்ஆனும் அதைத்தான் சொல்கிறது.

    ஆனால் இறைவன் ஊதிய அந்த உயிரை தவறாக விளங்கிக் கொண்டு அந்த இறைவனே நம்முள் இருக்கிறான் என்று பலரும் நம்புகின்றனர். கிருத்தவர்களும் பலரின் நம்பிக்கை இதுவாகத்தான் இருக்கிறது. இந்த நம்பிக்கையில் தான் கலெக்டர் உமா சங்கரும் தேவனோடு பேசினேன். தேவன் என்னுள் இருக்கிறார் என்றெல்லாம் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். இதனால்தான் அத்வைதம் உண்டானது. மனிதனும் தெய்வமாகலாம் என்ற கோட்பாடு உருவானதும் இந்த அடிப்படையில்தான். இஸ்லாத்திலும் சூஃபிக்களில் சில பிரிவினர் இந்த நம்பிக்கையில் இருப்பர்.

    மனிதன் எந்த காலத்திலும் தெய்வமாக முடியாது. வாழும் தெய்வங்கள் என்று கூறப்பட்ட பிரேமானந்தா, நித்தியானந்தா, சாய்பாபா என்று பலரையும் நம் காலத்திலேயே பார்த்து விட்டோம். இறைவனும் பார்கிறான் நீங்களும் பார்கிறீர்கள். உங்களின் பார்வை திறன் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான். ஆனால் நம்மை படைத்த இறைவன் ஒரே நேரத்தில் பூமி முதற்கொண்டு இந்த கேலக்ஸி முழுமையுமே கண்காணிக்கும் சக்தி படைத்தவன்.

    நீங்களும் கேட்கிறீர்கள். இறைவனும் கேட்கிறான். உங்களின் கேட்கும் திறன் 200 அடி அல்லது 300 அடிக்குள்தான் இருக்கும். ஆனால் நம்மைப் படைத்த இறைவனோ அமெரிக்காவிலிருந்து ஒருவன் அழைத்தாலும் அல்லது ஆண்டிப் பட்டியிலிருந்து ஒருவன் அழைத்தாலும் அந்த அழைப்பை கேட்கும் திறன் படைத்தவன்.

    இப்படி ஒவ்வொன்றிலும் மனிதனின் தன்மை இறைவனுக்கும் இருந்தாலும் இருவரின் சக்தியும் வேறு வேறு ஆனது. இதை சரி வர புரியாததானேலேயே கடவுளின் பெயரால் மனிதர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.

    இந்து, கிருத்தவம், யூதம், இஸ்லாம் இவற்றின் வேதங்கள் கூறும் கடவுள் கொள்ளை ஏறத்தாழ ஒன்றே. உங்களின் வேதங்களை நன்கு ஆய்வு செய்தால் இந்த உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்வீர்கள்.

  73. // இவர்கள் அனைவரும் ஏக இறைவனை நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ் நாளில் மனித குலத்துக்கு நன்மை செய்திருந்தால் அவர்களை நான் தண்டிக்க மாட்டேன் என்று குர்ஆனில் இறைவன் உத்தரவாதம் தருகிறான். //

    அப்படியானால் வாழ்நாளில் மனித குலத்துக்கு நன்மையே செய்த நாத்திகர்கள் கதி ?

  74. @SP, the Asthana entertainer
    Please keep up with your taqqya. You know very well that all the peaceful Mecca Koranic verses were superseded by the Medina verses. Death and eternal hell for Kaffirs is the central dogma of Koran and Islam. Millions have been slaughtered on the basis this dogma alone and you know this very well. Please do not BS. We can access Koran with the click of mouse in this modern age of communications.
    Have a look at this article from an ex Christian on Christianity and Islam. Not that it will change you but hopefully, it will stop your future BS.
    https://mariawirthblog.wordpress.com/2014/12/28/coming-home-to-intuition-and-reason-from-blind-belief/

  75. மதமல்ல மார்க்க சகோ சுவன பிரியன்

    இந்த பலூன் கதை எல்லாம் இங்க விடாதீங்க.

    //
    அந்த பலூன் உடைந்து விட்டால் ஊதப்பட்ட உங்களின் காற்று எப்படி வெளியேறுகிறதோ அது போலவே இறைவனால் ஊதப்பட்ட மனித உடல் இறந்து விட்டால் அதன் ஆன்மாவானது பலூனின் காற்றைப் போலவே இறைவனின் வசம் சென்று விடுகிறது. உலக முடிவு நாளன்று அந்த ஆன்மாக்களை ஒன்று கூட்டி சொர்க்கம் நரகம் கொடுக்கப்படுவதாக ஏறத்தாழ எல்லா மத வேதங்களும் சொல்கிறது. குர்ஆனும் அதைத்தான் சொல்கிறது.
    //

    இப்படி சனாதன தர்மம் சொல்லவில்லையே. இது செமேடிக் காரர்கள் கூத்து மட்டுமே.
    உலக முடிவு நாள் அப்புறம் சொர்கமோ நரகமோ அது வரை ஒருவன் தனது புதை குழியில் இருப்பான். அவனை புதை குழியில் இருந்து எழுப்பி அப்புறம் அவனுக்கு நீதி என்பதெல்லாம் நீங்கள் விடும் கதைகள். இதை ஏன் சந்தன தர்மத்துடன் சேர்கிறீர்கள்.

    சந்தன தர்மம் ஆன்மாவை ஒத்துக் கொள்கிறது. நீங்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை.

    இரண்டையும் முடிச்சிப்போட்டு காமடி செய்ய வேண்டாம்.

    அப்புறம் அண்ணே. நைசா மத்த விஷயத்துக்கு பதில் சொல்லாம எப்படி நழுவிடீங்க பாருங்க.

    ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்கண்ணே இருக்கு இஸ்லாத்தில்.

    கேடுகேட்டவர்களின் ஒரே குளம் அப்புறம் சைத்தான் அல்லா என்று இரண்டு தாதாக்களை கொண்டது தான் இஸ்லாம்.

  76. பொன் முத்து குமார்!

    // அப்படியானால் வாழ்நாளில் மனித குலத்துக்கு நன்மையே செய்த நாத்திகர்கள் கதி ?//

    ஒருவனின் மனைவி தனது கணவனுக்கு எல்லா பணி விடைகளையும் செய்கிறாள். வீட்டை அலங்கரிக்கிறாள். மாமியார் மாமனாரை தனது தாய் தந்தையைப் போல கவனிக்கிறாள். கணவன், மாமியார், மாமனாருக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுகிறாள். வயதான மாமனாரையும் மாமியாரையும் கழிவறைக்கு தூக்கிச் செல்வதும் இந்த பெண்தான். கணவனும் தனது மனைவிக்கு தனது சம்பாத்தியம் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டுகிறான். இவ்வளவு சரியாக நடக்கும் மனைவி இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு ஆடவனோடு கள்ள தொடர்பு கொள்கிறாள். இதை அந்த கணவனின் மனம் ஒப்புக் கொள்ளுமா? தனது மனைவி செய்து வரும் நல்ல காரியங்களுக்காக அவளை மன்னித்து விடுவானா அந்த கணவன்? அரிவாளை தூக்கிக் கொண்டு மனைவியை வெட்ட அந்த கணவன் வருவதை சாதாரணமாக பார்கிறோம்.

    நமது உடலை நோட்டமிடுங்கள். எவ்வளவு காரியங்கள் தினமும் எந்த சிக்கலும் இல்லாமல் நடந்து வருகிறது. இந்த உலகம் இவ்வளவு வேகமாக சுற்றியும் அதன் தாக்கம் நமக்கு தெரியாமல் ஒரு தாயைப் பொல் இந்த பூமி நம்மை அரவணைக்கிறது. நமது உடல் தாங்கும் அளவுக்கு சூரியனை தூரமாக்கி வைத்து அதன் மூலம் பல நன்மைகளை வாரி வழங்கும் சக்தி எது? எல்லா கோள்களும் ஒரே நேராக சுற்றிக் கொண்டிருக்க பூமியை மட்டும் சற்று சாய்வாக சுற்ற வைத்து குளிர், வெப்பம், நடுநிலை என்று முக்காலங்களையும் நாம் அனுபவிக்க ஏற்படுத்திய சக்தி எது? இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் பார்க்கும் ஒரு சராசரி மனிதன் நமக்கு மேல் ஒருவன் இருந்து இதனை எல்லாம் ஆட்டி வைக்கிறான் என்ற முடிவுக்கே வருவான்.

    இவை அனைத்தும் தானாக உருவாகிக் கொண்டது என்பதை நமது அறிவு ஒத்துக் கொள்ளவில்லை. அப்படி ஒத்துக் கொண்டால் அது பகுத்தறிவே கிடையாது. ஆனால் நாத்திகர்கள் வீம்புக்காக நாத்திக கொள்கையை பிடித்து தொங்கிக் கொண்டுள்ளனர். இது அறியாமையினால் அல்ல: இதனை மனிதனின் திமிர் வாதம் என்று கூட சொல்லலாம். ஏனெனில் பெரும்பாலான நாத்திகர்கள் நன்கு படித்து அறிவை தன்னகத்தே கொண்டவர்கள்.

    நாத்திகத்தை நிலை நிறுத்த பரிணாமக் கொள்கையை எப்படியாவது முட்டு கொடுத்து உயிர் கொடுக்கப் பார்கின்றனர். ஒரு உயிர் மற்றொரு உயிராக பரிணமித்ததற்கு இடைப்பட்ட இனங்களின் படிம ஆதாரங்கள் ஒன்றைக் கூட டார்வினிஷ்டுகள் சமர்ப்பிக்கவில்லை. ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிணமிக்க முதலில் ஜீன்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் உருவ ஒற்றுமைகளை வைத்து குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்று சொன்னால் நம்மை படைத்த இறைவனுக்கு கோபம் வராதா? உடல் ஆரோக்கியமும், செல்வ வளம், குழந்தைச் செல்வம், சமூக அந்தஸ்து என்று இத்தனையையும் இந்த மனிதனுக்கு வாரி வழங்கிய அந்த இறைவனை புறக்கணித்து விட்டு நாத்திகத்தின் பக்கம் சென்றால் அந்த மனிதனை அவன் வாழ்நாளில் என்னதான் நன்மைகள் செய்திருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக இறைவன் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று வேதங்களில் இறைவன் கூறுகிறான். அந்த கணவன் அறிவாளை தூக்கிக் கொண்டு வெட்ட வந்தது போல் நாத்திகர்களை நரகில் தள்ளுவேன் என்கிறான் இறைவன்.

  77. //இது குரான் வசனம் அல்ல, யூதர்களின் இது தாளமுத் வசனம். ஸல்லவர்கள் கண்ணுமன்னு தெரியாம காப்பி அடித்து விட்டார்.//

    இதை நான் மறுக்கவில்லையே! யூதர்கள், கிறித்தவர்களின் இறைவன் யார்? குர்ஆனை வழங்கிய அதே ஏக இறைவன் தானே. இறைவன் அருளிய வசனங்களோடு தங்கள் கருத்துகளையும் அதில் புரோகிதர்கள் சேர்த்ததால் தானே ‘இறை வசனம்’ என்ற அதன் பொலிவை இழந்தது? அதனால் தான் குர்ஆனே இறங்க காரணமானது.

    நாம் இருவருமே ஒரே கருத்தைத்தான் சொல்கிறோம். 🙂 இந்த வசனம் தல்மூதில் இருக்கிறது என்றும் குர்ஆன் கூறுகிறது. ‘இஸ்ரவேலர்களுக்கு இதனை விதியாக்கி இருந்தோம்’ என்றும் குர்ஆன் கூறுகிறது.

  78. சுவனபிரியன்

    கதை கட்டுவதில் கில்லாடி நீங்கள். தால்முத் என்பது இறை வசனம் இல்லை . பைபிள் தான் இறை வசனம். அல்லா சொல்வது பைபிளை பற்றி. தால்முதை பற்றி அல்ல. தால்முத் என்பது மனிதர்களால் இயற்றபட்ட ஒரு புத்தகம். ஏக்க இறைவன் தானே இறக்கியது என்பது பைபிள், குரான் மட்டுமே.

    விஷயம் ரொம்ப சிம்பிள். மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் காய்கறி கடை பக்கமா ஒக்காந்து பைபிள் கதை கேப்பார். அப்படி கேக்கும்போது எவனோ ஒருத்தன் இந்த தால்முத் வசனத்தையும் சொல்ல மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இதையும் பைபிள் வசனம் என்று நம்பி இதை அல்லா தான் இறக்கினார் என்று கதை கட்டி விட்டார்.

    இதே மாதிரி இன்னொரு பைபிள் கதையையும் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மாத்தி உளறி இருக்கிறார். மரியாவை யார் என்று தெரியாமல் ஒரு தபா உளறி இருக்கிறார்.

    எல்லாரையும் கேணயர்கள் என்று எண்ணாதீர்கள். உலகத்தில் 2 பில்லியன் கேணயர்கள் தான் இருக்கிறார்கள்.

  79. சுவனமன்னே

    //
    இவ்வளவு சரியாக நடக்கும் மனைவி இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு ஆடவனோடு கள்ள தொடர்பு கொள்கிறாள். இதை அந்த கணவனின் மனம் ஒப்புக் கொள்ளுமா? தனது மனைவி செய்து வரும் நல்ல காரியங்களுக்காக அவளை மன்னித்து விடுவானா அந்த கணவன்? அரிவாளை தூக்கிக் கொண்டு மனைவியை வெட்ட அந்த கணவன் வருவதை சாதாரணமாக பார்கிறோம்.
    //
    புல்லரிக்கிது போங்கள். எப்படி பட்ட கதை ஆஹா ஓஹோ இதற்க்கு நிகர் வைக்க முடியவே முடியாது.

    அது சரி சப்பாத்தியும் சோறும் கொண்டு வரும் கணவன் மட்டும் ஒம்போது பொம்பளைகளோட ஜல்சா பண்ணா எந்த பொண்ணும் அறிவால தூக்கிகிட்டு வரதில்லையே. அது ஏன்ண்ணே.

    மொதல்ல ஒன்னு புருஞ்சுகோங்க – அடுத்தவன் வீட்டுக்கு போகும் எந்த மனைவியும் நல்ல குணத்தோடு கணவனிடம் அன்போடு இருக்க மாட்டாள். அதே கதை தான் ஆணுக்கும். புருசனுக்கு பணிவிடை செய்வது என்பது கட்டாயத்தினால் இருக்கலாம் அல்லது உலகம் தூற்றுமே என்பதனால் இருக்கலாம். ஆனால் புத்தரும், காந்தியும், அப்துல் கலாமும், கபீர் தாசும் அப்படி பட்டவர்கள் இல்லை. உண்மையிலேயே தூய அன்புடன் ஒரு நிர்பந்தமும் இல்லாமல் மக்கட் சேவை செய்தனர்.

    கடைசியாக சாமி கும்பிடுவதையும் விபசாரம் ஆக்குபவர்கள் நீங்கள். கிட்டத்தட்ட அதையே தொழிலாக கொண்டிருந்த ஒருவரின் உளறல்களே புனித நூல் என்று கொண்டாடுபவர்கள் நீங்கள். இதுதாண்ணே மார்க்கம் என்பது.

  80. how much time you are spend to discuss,
    i think these are useless and time waste work,
    there are lost work is pennding in our organizations,
    please do some useful work
    speech less and do more, so I deleted my faceebook account yesterday.

  81. சு.பி :

    // ஒருவனின் மனைவி தனது கணவனுக்கு எல்லா பணி விடைகளையும் செய்கிறாள். … இதை அந்த கணவனின் மனம் ஒப்புக் கொள்ளுமா? தனது மனைவி செய்து வரும் நல்ல காரியங்களுக்காக அவளை மன்னித்து விடுவானா அந்த கணவன்? //

    மிக அபத்தமான உதாரணம் என்று உங்களுக்கே புரியவில்லை ?

    ஒரு இயற்பியலாளனால் நீங்கள் சொல்லும் எல்லா வாதங்களுக்கும் கடவுள் என்ற ஒருவர் தேவை இல்லை என்று மறுக்க முடியும். ஸ்டீபன் ஹாக்கிங் அப்படித்தான் சொல்கிறார். என்ன, ”Although Science may solve the problem of how the universe began, it can not answer the question: why does the universe bother to exist?” என்று சொல்லி ”Maybe only God can answer that.” என்று நகைச்சுவையாக முடித்துவிடுகிறார். இந்த இடைவெளியில் கடவுளை கொண்டுவந்து அமர்த்திவிடுகிறீர்கள் நீங்களும்.

    இந்து பண்பாட்டில் ‘என்னை நம்பலைன்னா போட்டுத்தள்ளிடுவேன் பாத்துக்கோ’ என்று மிரட்டும் தாதா கடவுளர்கள் எவருமில்லை, தேவையுமில்லை. நல்லவேளையாக போயிற்று. நம்பாமலுமிருக்கும் சுதந்தரமே இதன் சிறப்பு.

    மற்றபடி உங்களது நகைச்சுவை பதிலை மிகவும் ரசித்தேன். நன்றி.

  82. //
    ‘ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’ என்றும் “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’
    -குர்ஆன் 5:32
    //

    சுவனப்பிரியனின் இந்த தக்கியா ஜல்லிக்கு சரியான பதிலடியை இந்த சுட்டியில் காணலாம். எப்படி வசனத்திலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்துவிட்டு ஏமாற்றுகிறார் பாருங்கள்:

    https://skepticsannotatedbible.com/quran/5/index.htm

    //
    5:32 For that cause We decreed for the Children of Israel that whosoever killeth a human being for other than manslaughter or corruption in the earth, it shall be as if he had killed all mankind, and whoso saveth the life of one, it shall be as if he had saved the life of all mankind. Our messengers came unto them of old with clear proofs (of Allah’s Sovereignty), but afterwards lo! many of them became prodigals in the earth.

    (“We decreed for the Children of Israel”
    Unfortunately, the above law only applies to Jews, which is kind of obvious since the next verse says that the enemies of Allah and Muhammad will be killed, crucified, have their hands and feet cut off, or expelled. And after they die they will face “an awful doom.”)

    5:33 “Those who make war upon Allah and His messenger …. will be killed or crucified, or have their hands and feet on alternate sides cut off, or will be expelled out of the land. Such will be their degradation in the world, and in the Hereafter theirs will be an awful doom.”
    //

    அதென்ன, “spreading corruption on the earth”? அதாவது, இஸ்லாத்துக்கு முரணான (பல தெய்வ வழிபாடு, உருவ வழிபாடு கொண்ட) மதங்களைப் பரப்பினால் கொல்லலாம், அப்படித் தானே? பெருமாள், சிவனார், விநாயகர், முருகர், மாரியம்மன், கிராமிய தெய்வம் இப்படி ஏதாவது ஒரு கோயிலுக்குச் சென்று வணங்குபவனைக் கொல்லலாம் என்று அந்த வசனமே கூறுகிறதே!

    அப்புறம் அதென்ன சார் “Those who make war upon Allah and His messenger”? அதாவது அல்லாவையும் குரானையும் விமர்சிப்பவனுக்கு (நாத்திகன், யூதன், கிறித்தவன், ஹிந்து) தீராத நரகம், அவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், அப்படித் தானே?

    சுவனப்பிரியனே ஒத்துக்கொண்டுள்ளார் அவர் தூக்கிப் பிடிக்கும் பொல்லா இல்லா ‘அல்லா’ அரிவாள் வீசும் காட்டுமிராண்டி என்று:

    // இவ்வளவு சரியாக நடக்கும் மனைவி இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு ஆடவனோடு கள்ள தொடர்பு கொள்கிறாள். இதை அந்த கணவனின் மனம் ஒப்புக் கொள்ளுமா? தனது மனைவி செய்து வரும் நல்ல காரியங்களுக்காக அவளை மன்னித்து விடுவானா அந்த கணவன்? அரிவாளை தூக்கிக் கொண்டு மனைவியை வெட்ட அந்த கணவன் வருவதை சாதாரணமாக பார்கிறோம். //

    // இத்தனையையும் இந்த மனிதனுக்கு வாரி வழங்கிய அந்த இறைவனை புறக்கணித்து விட்டு நாத்திகத்தின் பக்கம் சென்றால் அந்த மனிதனை அவன் வாழ்நாளில் என்னதான் நன்மைகள் செய்திருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக இறைவன் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று வேதங்களில் இறைவன் கூறுகிறான். அந்த கணவன் அறிவாளை தூக்கிக் கொண்டு வெட்ட வந்தது போல் நாத்திகர்களை நரகில் தள்ளுவேன் என்கிறான் இறைவன். //

  83. // அறிவாளை தூக்கிக் கொண்டு வெட்ட வந்தது //

    சார், அது அரிவாள் , அறிவாள் அல்ல 🙂 :-).

    அல்லது

    “(தஸ்லீமா நாசரின், அயான் ஹிர்ஸி அலி போன்ற ஒரு) அறிவாளைத் தூக்கிக் கொண்டு வெட்ட வந்தது”

    என்பதும் நமது மார்க்க சகோக்களுக்குப் பொருந்தும்.

  84. (1) //////இவை அனைத்தும் தானாக உருவாகிக் கொண்டது என்பதை நமது அறிவு ஒத்துக் கொள்ளவில்லை///// இவை அனைத்தையும் உங்க அல்லா படைத்தான் என்றால் உங்கள் அல்லாவை யார் படைத்தது சுவனபிரியா? இவை அனைத்தும் தானாக உருவாகிக்கொண்டது என்பதை உமது அறிவு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அல்லா மட்டும் தானாக உருவாகி கொண்டார் என்பதை மட்டும் உமது அறிவு ஏற்றுகொள்கிறதோ?

    (2)////////கிறித்தவர்களின் இறைவன் யார்? குர்ஆனை வழங்கிய அதே ஏக இறைவன் தானே.///// கிறிஸ்தவர்களை படைத்ததும் முஸ்லிம்களை படைத்ததும் அல்லாதான் என்றால் வெவ்வேறு மதங்கள் எதற்கு? அவர்களை எதற்கு பாகிஸ்தானில் அடிக்கிறீர்கள்? ஒரு முஸ்லிம் பெண் ஒரு கிறிஸ்தவனை மணந்தால் அவளை எதற்கு துன்புறுத்துகிறீர்கள்? இதெற்கெல்லாம் பதில் உண்டா?(3)////////அதில் புரோகிதர்கள் சேர்த்ததால் தானே ‘இறை வசனம்’ என்ற அதன் பொலிவை இழந்தது?//////// குர் ஆனின் லட்சணம் மட்டுமென்ன? வஹி மூலம் வந்ததென உங்கள் நபி “God is mighty and விசே” என்று சொன்னபோது Abdullah Abi ஸர்ஹ் என்ற ஒரு Scribe “Knowing and wise” என்று எழுதினால் நன்றாக இருக்குமே என்று suggestion கூறியபோது அதை நபி “No objection ” என்று கூறி அவரது வார்த்தைகளை அப்படியே ஏற்றுகொண்டாரே! அப்போ குரானில் இருப்பது அல்லாவின் வார்த்தைகளா அல்லது நபியின் வார்த்தைகளா? இது போன்ற பல changes களை நபி அங்கீகரித்ததை பார்த்த அப்துல்லாஹ் இஸ்லாமை துறந்து மெக்காவிற்கு சென்று Qurayshite ல் இணைந்தார் Qurayshite களோடு நடந்த ஒரு போரின்போது நபி (இவரது forgery ரகசியத்தை அறிந்த) அந்த Abdullah வை தானே குறிவைத்து கொன்றார் என்பது வேறு விஷயம். My humble question:– Is your Quran direct literal word of Allah unmodified in any way?

    (3)////////அந்த இறைவனை புறக்கணித்து விட்டு நாத்திகத்தின் பக்கம் சென்றால் அந்த மனிதனை அவன் வாழ்நாளில் என்னதான் நன்மைகள் செய்திருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக இறைவன் //////// திருவள்ளுவரின் “”குணம் நாடி குற்றம் நாடி” என்ற குறள் apply ஆகாதோ? நல்ல “பல” காரியங்களை செய்தவன் அந்த அல்லாவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஒரே single காரனத்திற்காக அவனை நரகம் அனுப்புவிடுவானா? நான்தான் அல்லா என்று அவனிடம் நேரில் சொல்லியிருந்தால் அவன் ஏற்றுகொண்டிருக்க மாட்டானா? அல்லா பாட்டுக்கு எங்கேயோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு விட்டு எவரோ ஆள் “நான்தான் அல்லாவின் தூதர்” என்று வந்தால் யார் நம்புவது? அவர் என்ன ஒரு யோக்கியமான ஆளா? 13 மனைவியரை மணந்த ஆளை நான் எப்படி நம்புவது? சரி. நாத்திகனுக்கு நரகம்தான் என்று சுவனபிரியன் சொல்லியாச்சி. அதற்கு appeal எதுவும் கிடையாது. அவர் சொன்னா சொன்னதுதான். அதுபிரகாரம் வீரமணிக்கு நரகம்தான் என்று உறுதியாகிவிட்டது. ஆனால் அந்த எதிர்கால நரகவாசி மேடையில் இந்துமதத்தை திட்டி பேசினால் முஸ்லிம்கள் கை தட்டுகிறார்கள் விசில் அடிக்கிறார்கள். வசூலுக்கு உண்டி என்திவந்தால் ஜேபியில் உள்ள பணத்தை வாரி கொட்டுகிறீர்கள்? ஒரு நரகவாசிக்கு பணத்தை கொட்டுவது ஏனப்பா?

  85. ஹானஸ்ட் மேன்!

    //கிறிஸ்தவர்களை படைத்ததும் முஸ்லிம்களை படைத்ததும் அல்லாதான் என்றால் வெவ்வேறு மதங்கள் எதற்கு? //

    ‘அவர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்’
    -குர்ஆன் 2;75

    முன்பு இறைவன் வழங்கிய வேதத்தை மாற்றியதாலேயே குர்ஆன் இறங்க வேண்டிய அவசியம் வந்தது.

    //அவர்களை எதற்கு பாகிஸ்தானில் அடிக்கிறீர்கள்?//

    குற்றம் செய்த எவரையும் தண்டிப்பதற்கு ஒரு அரசுக்குத்தான் உரிமையுள்ளது. தனி மனிதன் ஆயுதம் தூக்குவதை இஸ்லாம் கண்டிக்கிறது. இந்த சட்டத்துக்கு மாற்றமாக நடப்பவர்கள் இஸ்லாமியர்களே அல்ல.

    //ஒரு முஸ்லிம் பெண் ஒரு கிறிஸ்தவனை மணந்தால் அவளை எதற்கு துன்புறுத்துகிறீர்கள்? இதெற்கெல்லாம் பதில் உண்டா?//

    திருமணம் என்பது ஒரு நாள் கூத்து அல்ல. வாழ்நாள் முழுக்க அவனோடு காலத்தை கழிக்க வேண்டும். திருமணத்துக்குப் பிறகு எந்த மதத்தைப் பின் பற்றுவது. குழந்தையை எந்த மதத்தில் சேர்ப்பது? குழந்தைக்கு பெண் எந்த மதத்தில் எடுப்பது? என்று பல சிக்கல்கள் வரும். இதனால் மனத்தாபம் வந்து திருமண முறிவு ஏற்படும். எனவே ஒத்த கொள்கையுடைய ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதே நல்லது. ஆண் எந்த சிக்கலையும் சமாளித்து வேறொரு திருமணம் செய்து கொண்டு விடுவான். ஆனால் பெண்ணின் வாழ்வு முறை மிகவும் சிக்கலானது. திருமணம் முடிந்து விவாகரத்து வாங்கினால் பிறகு வேறொரு திருமணம் முடிப்பது எல்லா சமூகத்திலும் பெரும் பிரச்னை. எனவே பெண்களை நாங்கள் கண்டித்து வைக்கிறோம் அவர்களின் எதிர்கால நலனுக்காக!

    //My humble question:– Is your Quran direct literal word of Allah unmodified in any way?//

    இறைவன் எவ்வாறு குர்ஆனை அருளினானோ அதில் ஒரு மாற்றமும் இல்லை என்பதுதான் உலக முஸ்லிம்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை போனால் அவன் இஸ்லாமியன் அல்ல.

    ஆனால் நபிகள் நாயகம் ஹதீதுகள் என்று சொன்னதில் சில குளறுபடிகள் உள்ளதை நானும் மறுக்கவில்லை. யூதர்கள் இஸ்லாத்தை ஏற்பது போல் நடித்து ‘முகமது நபி அதை சொன்னார்’ ‘முகமது நபி இதை சொன்னார்’ என்று நிறைய கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டனர். அது போன்ற ஒன்றைத்தான் நீங்களும் குறிப்பிடுவது.

    குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக வரும் ஹதீதுகள் அனைத்தும் யூதர்களால் புனையப்பட்டவை. அதை ஒதுக்கி விட வேண்டும் என்பதுதான் இஸ்லாமியர்களின் நிலைப்பாடு.

    //ஆனால் அந்த எதிர்கால நரகவாசி மேடையில் இந்துமதத்தை திட்டி பேசினால் முஸ்லிம்கள் கை தட்டுகிறார்கள் விசில் அடிக்கிறார்கள். வசூலுக்கு உண்டி என்திவந்தால் ஜேபியில் உள்ள பணத்தை வாரி கொட்டுகிறீர்கள்? ஒரு நரகவாசிக்கு பணத்தை கொட்டுவது ஏனப்பா?//

    எங்கள் ஊருக்கு மீலாது நபி விழாவுக்கு வீரமணி வந்த போது அவரிடம் ‘நபிகள் நாயகத்தை பற்றி மட்டும் பேசுங்கள். இந்து மத குறைகளை பேச வேண்டாம்’ என்று கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர் ‘எனக்கு தெரியாதா? நான் பேச மாட்டேன்’ என்று ஒத்துக் கொண்டார். எனவே முஸ்லிம்கள் தங்கள் விழாக்களில் இவ்வாறு பேசுவதை விரும்புவதில்லை.

    மற்ற மேடைகளில் அவர் உங்களை திட்டினால் அதற்கு நாங்கள் எவ்வாறு பொறுப்பாக முடியும்? வசூலுக்கு யார் வந்தாலும் வியாபாரிகள் பண உதவி செய்வார்கள். சில நேரம் இந்து முண்ணனி துண்டு ஏந்தி வந்தால் அவர்களுக்கும் பத்தோடு பதினொன்றாக பணம் கொடுக்கும் முஸ்லிம்களை பார்த்துள்ளேன். பல மதத்தவர் வாழும் நாட்டில் இதெல்லாம் சகஜம். 🙂

    //இவை அனைத்தும் தானாக உருவாகிக்கொண்டது என்பதை உமது அறிவு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அல்லா மட்டும் தானாக உருவாகி கொண்டார் என்பதை மட்டும் உமது அறிவு ஏற்றுகொள்கிறதோ?//

    நமக்கு அறிவு குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. நமக்குள் ஓடிக் கொண்டிருக்கும் ஆன்மா எங்கிருந்து வந்தது? அது எங்கு போகிறது என்பதை அறிவியல் இன்று வரை கண்டு பிடிக்கவில்லை. இந்த லட்சணத்தில்தான் நமது அறிவு உள்ளது. இறைவனை படைத்தது யார் என்பதற்கு நம்மிடம் பதில் இல்லை. இதற்கான பதில் உலக முடிவு நாளன்று அனைவருக்கும் விளக்கப்படும். இறைவனும் தன்னை முழுமையாக வெளிப்படுத்தி நம் அனைவருக்கும் காட்சி தருவான். அது வரை நாமும் பொறுப்போம்.

    நாத்திகர்கள் சொல்வது போல் இறைவன் இல்லாவிட்டால் இறப்புக்கு பிறகு எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் குர்ஆன், பைபிள், தோரா, ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் மற்றும் திருக்குறள் சொல்வது போல் இறைவன் உண்மையில் இருந்து விட்டால் அங்கு ஆத்திகனான நான் தப்பித்தக் கொள்வேன். நாத்திகர் அங்கும் மாட்டிக் கொள்வார்.

    மேலும் நான் இஸ்லாத்தை முழுமையாக பின் பற்றுவதால் பெரும் பலனை அடைந்துள்ளேன். திருமணம் முடிக்க, குழந்தை பெற்றுக் கொள்ள, பொருள் சம்பாதிக்க, வாழ்வை சந்தோஷமாக்கிக் கொள்ள பல சலுகைகளை எனக்கு குர்ஆன் தருகிறது. மன நிம்மதியோடு இருக்கிறேன். மனக் கஷ்டம் வந்தால் ஐந்து வேளை பள்ளி வாசல் சென்று இறைவன் முன்னால் வீழ்ந்து விட்டால் உடன் என் மனது லேசாகி விடுகிறது.

    ஆனால் நாத்திகர்களுக்கு மன அமைதி கிடைக்கும் எந்த வழியும் இல்லை. குடும்ப பிரச்னைகள் அதிகமாக போனால் டாஸ்மாக்குக்கு சென்று அரசுக்கு வருமானத்தை அதிகமாக்கிக் கொடுப்பர் 🙂

  86. //////இவ்வளவு சரியாக நடக்கும் மனைவி இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு ஆடவனோடு கள்ள தொடர்பு கொள்கிறாள்./////

    இவ்வளவு சரியாக நடக்கும் எந்த ஒரு மனைவியும் இரவு நேரத்தில் இந்த மாதிரியான
    திருட்டு வேலையை செய்யமாட்டாள். கை நிறைய சம்பாதிக்கும் நல்ல கணவன் அன்பான மாமனார் மற்றும் மாமியார் என்று இருக்கும்போது எந்த பெண்ணும் அப்படி போகமாட்டாள். கணவன் சம்பாதிக்காமல் மனைவி சம்பாத்தியத்தில் குடிகாரனாக வாழ்ந்து அவளை அடித்து துன்புருத்தியிருந்தால் மேலும் மாமியார் கொடுமைக்காரியாக இருந்தால் நீர் சொல்வது நடக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உமது கற்பனை கதையில் அப்படி ஒரு நிலைமை இல்லை. ஒரு வேலை முஸ்லிம் பெண்கள் அப்படி நடக்கிறார்களோ என்னவோ எனக்கு தெரியவில்லை. உமது சுற்றுவட்டாரத்தில் நீர் பார்த்த மற்றும் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து நீர் அப்படி சொல்கிறீராக்கும். அப்படியானால் அது முஸ்லிம் பெண்களின் விவகாரங்களாகத்தான் இருக்கும். இனிமேல் கடவுள் விஷயத்துடன் comparane செய்ய உதாரணம் சொல்லும்போது அசிங்கமான உதாரணங்களை மேற்கோள் காட்ட வேண்டாம். புரியுதா?

  87. (1)/////////முன்பு இறைவன் வழங்கிய வேதத்தை மாற்றியதாலேயே குர்ஆன் இறங்க வேண்டிய அவசியம்/////

    வேதத்தை மாற்றியதால் குரானை இறக்கவேண்டியுள்ளது என்று கூறுகிறீர். இப்போது குரான் படி அணுவளவும் பிசகாமல் முஸ்லிம்கள் நடக்கின்றனரா? எனக்கு தெரிந்து எத்தனையோ பேர் வட்டி வாங்குகின்றனர். அவர்கள் மது அருந்த வில்லையா? இன்சூரன்ஸ் இஸ்லாமில் ஹராமாகும். யாரும் இன்சூரன்ஸ் செய்யவில்லையா? இப்படி அடுக்கிகொண்டே போகலாம். வேதத்தை மாற்றிவிட்டு ஒழுங்காக நடந்தால் பரவாயில்லை. ஆனால் வேதம் ஒழுங்காக இருந்து மக்கள் அதன்படி நடக்க முடியவில்லை என்றால் வேதத்தை திருத்தம் செய்யவேண்டும் என்று பொருள். ஆகவே உங்க அல்லாவிற்கு லெட்டர் (கடுதாசி) போட்டு வேறு ஒரு நபியை அனுப்பி அவர் மூலம் புதிய குரானை (விஞ்ஞான காலத்திற்கு ஏற்பவும் நிதர்சன உலக வாழ்க்கைக்கு ஏற்பவும்) வழங்க சொல்லவும். செய்கிறீரா? உம்மிடம் எதற்கு சொல்கிறேன் என்றால் நீர்தான் அல்லாவிற்கும் நபிக்கும் agent போல அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறீரே!

    (1அ )////குடும்ப பிரச்னைகள் அதிகமாக போனால் டாஸ்மாக்குக்கு சென்று அரசுக்கு வருமானத்தை அதிகமாக்கிக் கொடுப்பர்////
    முஸ்லிம்களுக்கு குடும்ப பிரச்சனையே வருவதில்லையா? zee தமிழ் டிவி யில் “சொலவெதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி பார்ப்பதில்லையா? குடிகார முஸ்லிம் கணவன் அடிக்கிறான் என்று எத்தனை முஸ்லிம் பெண்கள் அங்கே அழுது புலம்புகின்றனர்? அதேபோல கேப்டன் டிவி யில் மனம் விட்டு பேசுவோம் நிகழ்ச்சியை பார்த்ததில்லையா?

    (2)////// திருமணத்துக்குப் பிறகு எந்த மதத்தைப் பின் பற்றுவது. குழந்தையை எந்த மதத்தில் சேர்ப்பது? குழந்தைக்கு பெண் எந்த மதத்தில் எடுப்பது?/////
    முஸ்லிம் ஆண்கள் ஹிந்து பெண்களை மணந்துகொண்டால் சந்தோஷமாக இருக்கு. ஆனால் முஸ்லிம் பெண்கள் ஹிந்து அல்லது கிறிஸ்தவ ஆண்களை மணந்தால் கஷ்டமாக இருக்கு அப்படிதானே! கரீனா கபூர் ஒரு முஸ்லிமா மணந்தால் தப்பு இல்லை. அப்போது நீர் சொல்லும் பிரச்சனைகள் எல்லாம் எழாதா?
    நான் சொன்னது ஒரே ஒரு உதாரணம்தான். பல உள்ளன. இங்கே சொல்ல இடமில்லை.. (3)////////யூதர்கள் இஸ்லாத்தை ஏற்பது போல் நடித்து ‘முகமது நபி அதை சொன்னார்’ ‘முகமது நபி இதை சொன்னார்’ என்று நிறைய கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டனர். அது போன்ற ஒன்றைத்தான் நீங்களும் குறிப்பிடுவது.//////

    இந்து புரானங்களிலும இந்துமத விரோதிகள் இதுபோல நிறைய செருகல்கள் செய்துள்ளனர் . அதை வைத்துகொண்டு திகவினர் மேடைகளில் ஆட்டம் போடுகின்றனர். அந்த கூட்டங்களில் நீங்களும் சேர்ந்து தாளம் போடுகின்றனர்.
    வீரமணி ஒரு கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர். இந்து மதத்தில் உள்ளவர்கள் மட்டும் கடவுள் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்களா? உங்கள் அல்லாவும் ஒரு கடவுள்தானே? அப்படியிருக்க அவரை எதற்கு உங்கள் ஊர் விழாவிற்கு அழைக்கிறீர்கள்? குசும்புதானே? கடவுளை வணங்குவன் ஒரு காட்டுமிராண்டி என்றால் அது உங்களை குறிக்கிறதோ? அல்லா ஒரு கடவுள் அல்லது இறைவன் அல்லது God இல்லையா? அவரை எதற்கு கூபிடுகிரீர்கள். அதற்கு பதிலாக இந்து மதத்தில் கடவுளை நம்பும் சில கூலிகள் உள்ளனர்.அவர்களை அழைத்து இருக்கலாமே? அதில் ஒரு அர்த்தம் இருக்குமே! ஆகவே வீரமணியை அழைப்பதில் எதோ ஒரு உள்நோக்கம் உள்ளது என்பது தெளிவாகிறது.

    (4)///நம் அனைவருக்கும் காட்சி தருவான்/// அப்போது அல்லாவிற்கு உருவம் வந்துவிடுமா?

  88. ///////திருமணம் முடிக்க, குழந்தை பெற்றுக் கொள்ள, பொருள் சம்பாதிக்க, வாழ்வை சந்தோஷமாக்கிக் கொள்ள பல சலுகைகளை எனக்கு குர்ஆன் தருகிறது. /////

    என்னது குரான் தருகிறதா? நீர் அஔதி அரேபியாவில் software engineer போன்று ஏதாகிலும் வேலை செய்கிறீரா? அல்லது இங்கிருந்து மத பிரச்சாரம் செய்ய அங்கு சென்றீரா? என் ஒரு உறவினர் கூட சாப்ட்வேர் engineer தான் . ஆனால் போன் செய்யா கூட டைம் இல்லை என்று கூறுகிறார். காரணம் கேட்டால் வேலைப்பளு என்கிறார் நீரோ சதா சர்வ காலமும் இங்கே பதில் (=மறுமொழி) எழுதுவதோடு வேறு சில இணையதளங்களிலும் எழுதுகிறீர். உங்களுக்கு என்னதான் அங்கே (சௌதி அரேபியாவில்) வேலை.? சரி விஷயத்திற்கு வருகிறேன். நாத்திகர்களுக்கோ (உங்கள் கணக்குப்படி பார்த்தால் இந்துக்களும் அல்லாவை நாம்பாததினால் அவர்களும் நாத்திகர்களே (காபிர்). அப்படியானால் அவர்களுக்கு திருமணம் நடக்கவில்லையா? குழந்தை பெறவில்லையா? பொருள் சம்பாதிக்கவில்லையா? எல்லோரும் மலடுகளாகவா உள்ளனர்? அது சரி. உங்க அல்லா இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லிம்களுக்கும் நல்ல பொருள்(பணம்) வசதியை தந்திருக்கலாமே! எதற்கு அவர்கள் ஆண்டவனை (=அல்லா) விட்டு இந்த இந்திய நாட்டை ஆண்டுகொண்டிருப்பவர்களை ”எங்களுக்கு reservation கொடு” என்று கெஞ்சி கேட்கவேண்டும். இப்படி அல்லா 5 velai தொழும் அவர்களை விடலாமா?

  89. @சுவனப்பிரியன்,

    //முன்பு இறைவன் வழங்கிய வேதத்தை மாற்றியதாலேயே குர்ஆன் இறங்க வேண்டிய அவசியம் வந்தது.//

    மற்றவர் பொருளை குறைகூறி தன் பொருள் உசத்தி என்று கூறி விற்கும் தந்திரம்தான் முஹம்மது செய்தது.

    //குற்றம் செய்த எவரையும் தண்டிப்பதற்கு ஒரு அரசுக்குத்தான் உரிமையுள்ளது. தனி மனிதன் ஆயுதம் தூக்குவதை இஸ்லாம் கண்டிக்கிறது. இந்த சட்டத்துக்கு மாற்றமாக நடப்பவர்கள் இஸ்லாமியர்களே அல்ல.//

    நீர் தகியா செய்வதையே முழு நேர தொழிலாக செய்யும் கோணல் புத்திக்காரர் என்பது உம்முடைய எழுத்துக்களை படிப்பவர் எல்லோருக்கும் நன்றாக தெரியும். நீர் என்னதான் தினமும் பொய்களை வாரி இறைத்துக்கொண்டிருந்தாலும் உம் பருப்பு எங்களிடம் வேகாது.

    முஹம்மது மதீனாவில் குடியேறிய புதிதில், அவரை விமர்சித்தார்கள் என்பதற்காகவே அஷ்ரப் என்ற யூத தலைவரையும் அஸ்மா என்ற 5 குழந்தைகளின் தாயான அரபி பெண்ணையும் 120 வயதான முதியவர் ஒருவரையும் கத்தியால் குத்தியும் ஈட்டியால் குத்தியும் கொலை செய்தது தனி மனிதர்கள்தானே? அவர்களை அனுப்பியதும் முகம்மதுதானே? அப்படி படுகொலை செய்ததற்காக அவர்களை பாராட்டியதும் அவர்தானே?

    //இறைவன் எவ்வாறு குர்ஆனை அருளினானோ அதில் ஒரு மாற்றமும் இல்லை என்பதுதான் உலக முஸ்லிம்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை போனால் அவன் இஸ்லாமியன் அல்ல.//

    இப்படிதான் பைபிள் மாற்றப்படவில்லை என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.

    //ஆனால் நபிகள் நாயகம் ஹதீதுகள் என்று சொன்னதில் சில குளறுபடிகள் உள்ளதை நானும் மறுக்கவில்லை. யூதர்கள் இஸ்லாத்தை ஏற்பது போல் நடித்து ‘முகமது நபி அதை சொன்னார்’ ‘முகமது நபி இதை சொன்னார்’ என்று நிறைய கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டனர். அது போன்ற ஒன்றைத்தான் நீங்களும் குறிப்பிடுவது.//

    இது உங்கள் அண்ணன் பி.ஜெய்னுல் ஆபிதீன் செய்யும் பித்தலாட்டம். அதை எங்களிடம் கதைக்க வேண்டாம். ஹதீஸ்கள் முஹம்மது இறந்து சுமார் 200 ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்டது. அப்படி தொகுக்கும்போது எந்த யூதர்கள் அரேபியாவில் வாழ்ந்தனர்? புகாரி,முஸ்லிம்,தாவூத் போன்றவர்கள் தங்கள் வாழ்நாளையே அதற்காக அர்ப்பணித்து அலசி ஆராய்ந்து பார்த்தபிறகே ஹதீஸ்களை தொகுத்தனர். அவர்களுக்கு தெரியாதது இப்பொழுது பி.ஜெ.க்கு மட்டும் தெரிய வந்தது எப்படி? நீங்கள் சொல்வதை மற்ற முஸ்லிம்கள் ஏற்கின்றனரா? எல்லோரும் ஏற்றால் முதலில் உலக இஸ்லாமிய அறிஞர்கள் சவூதி அரேபியாவில் கூடி நீங்கள் கூறும் ஹதீஸ்களை நீக்கிவிட்டு இனி இவைதான் நம்பகமான ஹதீஸ்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய ஹதீஸ் நூல்களை வெளியிட்டு, அதை எல்லா உலக முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்ட பிறகு இந்த கதையை பேசவும். அது நடக்கும் வரை நீங்கள் சொல்வது வெறும் தக்கியா மட்டுமே.

  90. @சுவனப்பிரியன்,

    //குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக வரும் ஹதீதுகள் அனைத்தும் யூதர்களால் புனையப்பட்டவை. அதை ஒதுக்கி விட வேண்டும் என்பதுதான் இஸ்லாமியர்களின் நிலைப்பாடு.//

    பி.ஜெ.வின் இந்த பித்தலாட்டத்தை அவரது விசிலடிச்சான் குஞ்சுகளை தவிர வேறு எந்த முஸ்லிம்கள் ஏற்கின்றனர்?

  91. @சுவனப்பிரியன்,

    //எங்கள் ஊருக்கு மீலாது நபி விழாவுக்கு வீரமணி வந்த போது அவரிடம் ‘நபிகள் நாயகத்தை பற்றி மட்டும் பேசுங்கள். இந்து மத குறைகளை பேச வேண்டாம்’ என்று கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர் ‘எனக்கு தெரியாதா? நான் பேச மாட்டேன்’ என்று ஒத்துக் கொண்டார். //

    வீரமணி எப்படிப்பட்ட அயோக்கியர் என்பதை அறிந்துகொள்க.

  92. @சுவனப்பிரியன்,

    //நமக்கு அறிவு குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. நமக்குள் ஓடிக் கொண்டிருக்கும் ஆன்மா எங்கிருந்து வந்தது? அது எங்கு போகிறது என்பதை அறிவியல் இன்று வரை கண்டு பிடிக்கவில்லை. இந்த லட்சணத்தில்தான் நமது அறிவு உள்ளது. இறைவனை படைத்தது யார் என்பதற்கு நம்மிடம் பதில் இல்லை.//

    அதனால்தான் நாத்திகர்கள் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். அவர்கள் கடவுளை காணவில்லை,புலன்களால் உணரவில்லை என்பதால் கடவுள் என்று ஒன்று இல்லை என்று நம்புகின்றனர். இதற்கு ஏன் உண்மையான கடவுள் கோபப்பட வேண்டும்? அதற்காக வெறிகொண்டு அவர்களை தண்டிக்க வேண்டும்? அவர்களுக்கு தன்னை வெளிக்காட்டாமல் மறைந்து,ஒளிந்துகொண்டு இருந்து அதேசமயம் தான் இருப்பதை அவர்கள் நம்பவில்லை என்று கோபப்படுவது அறிவுடைய இறைவன் செய்யக்கூடிய செயலா? இல்லை,நிச்சயமாக இல்லை. தன்னுடைய இருப்பை நம்பாத நாத்திகர்களையும் கடவுள் மற்றவர்களை போலவே நேசிப்பதுதான் உண்மையான கடவுளின் இயல்பாக இருக்க முடியும். ஹிந்து மத ஆன்மிகம் பேசுவது அப்படிப்பட்ட கடவுளைதான்.

    // இதற்கான பதில் உலக முடிவு நாளன்று அனைவருக்கும் விளக்கப்படும். இறைவனும் தன்னை முழுமையாக வெளிப்படுத்தி நம் அனைவருக்கும் காட்சி தருவான். அது வரை நாமும் பொறுப்போம்.//

    முஹம்மது உளறிய இந்த குரானின் கதையாடல் அறிவுக்கு சற்றும் ஏற்புடையது அல்ல.

  93. @சுவனப்பிரியன்,

    //இது பற்றி குர்ஆன் கூறுவதைப் பார்போம்….

    ‘மனிதனை சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான்’.
    -குர்ஆன் 32:9//

    இது பைபிளின் கதையை காப்பியடித்து முஹம்மது குர்ஆனில் சொன்னது.

    //இந்த வசனத்தைத்தான் பலரும் தவறாக விளங்கியுள்ளனர். உதாரணத்துக்கு ஒரு பலூனை நீங்கள் ஊதி அதனை பறக்க விடுகிறீர்கள். நீங்கள் ஊதிய காற்றுதான் அந்த பலூனில் அடைக்கப்பட்டுள்ளது. உங்களின் காற்று இல்லை என்றால் அந்த பலூனானது சுருங்கி ஒரு மூலையில் கிடக்கும். இப்போது அந்த பலூனும் நீங்களும் ஒன்றாகி விடுவீர்களா? இதனை உங்களின் அறிவு ஒத்துக் கொள்ளுமா? கண்டிப்பாக இல்லை என்றே சொல்வீர்கள்.//

    உங்களின் இந்த உதாரணத்திற்கே வருகிறேன். பலூனில் இருப்பது நான் ஊதிய என்னுடைய அங்கமான காற்று என்றால், அந்த பலூனுக்குள் காற்றாக இருப்பது நான் இல்லாமல் வேறு யார்? என்னுடைய அங்கமா இருக்கிற ஒன்று அது எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அது நான் இல்லாமல் வேறு என்ன?

    //அதுபோலவே மனிதன் என்ற பலூனுக்கு இறைவன் தனது உயிரை ஊதி அந்த உடலுக்கு உயிர் உண்டாக்குகிறான். அதன் பிறகு அந்த மனிதனிலிருந்து ஒரு துணையை படைக்கிறான். இருவரையும் பூமிக்கு அனுப்புகிறான். அந்த இருவரின் புதல்வர்களின்…. புதல்வர்களின்….. புதல்வர்களின் …. புதல்வர்கள்தான் நாமெல்லாம். :-)//

    மேற்கண்டபடி மனிதர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள்.

    // ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவனின் உயிரானது இருந்து வருகிறது.//

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவனின் உயிர் இருந்தால் எல்லோருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்பதுதான் சரியான பொருள். இதைதான் ஹிந்து மதம் கூறுகிறது. மனிதனுக்குள் இறைவனின் உயிர் இருக்கிறது, ஆனால் இறைவன் இல்லை என்றால், இறைவனும் இறைவனின் உயிரும் வேறுவேறா? இறைவன் என்று தனியாக ஏதோ ஒன்றும் இறைவனின் உயிர் என்று தனியாக வேறு ஏதோ ஒன்றும் இருக்கிறதா என்ன? இதற்கு உங்கள் பதில் என்ன?

  94. புகாரி, முஸ்லிம், தாவூத் ஆகியோர் முஸ்லிம் விசுவாசிகல்தானே? அந்த விசுவாசிகள் தனது குறு முகமதை தவறாக கூறுவார்களா? They called a spade a spade. That’s all. மேலே சொன்ன விசுவாசிகளில் ஒருவரான முஸ்லிம் கூறுகிறார் “”Mohamed Nabi used to kiss his wives while fasting and embrassed them while fasting” (ஆதாரம்:- Book 6 No 2439)

  95. //எங்கள் ஊருக்கு மீலாது நபி விழாவுக்கு வீரமணி வந்த போது அவரிடம் ‘நபிகள் நாயகத்தை பற்றி மட்டும் பேசுங்கள்.//
    kattumirandingal enru nambi poyi irruppar. at least I support veermani on this way!!!!

  96. சோரம்போன வீரமணியிடம் “இந்துமத குறைபாடுகளை பற்றி பேச வேண்டாம்” என்று கோரிக்கை வைத்தார்களாம். இந்து மதத்தில் குறைபாடுகள் உள்ளது அதை பற்றி மேடையில் பேச வேண்டாம் என்று கூற இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இவர்கள் முதுகில் உள்ள அழுக்கை துடைக்க வழி தெரியவில்லை. அடுத்தவனை குறை கூற வந்துவிட்டார்கள். இவர்கள் முஸ்லிம் மத்ததில் குறைபாடுகள் இல்லாதது போலவும் 100% perfection உள்ள மதம் போல தங்கள் (காட்டுமிராண்டி) மதத்தை நினைத்து கொண்டிருக்கின்றனர். எங்கள் மதத்தில் “சதி உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம்” போன்ற குறைகள் இருந்தன. அவற்றை ராஜா மோகன் ராய் போன்ற நல்ல பெரியவர்கள் சுட்டி காட்டியபோது அதை இந்து மதம் திருத்திகொண்டது. ஆனால் உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் “முடியாது. அது (பொல்லாத மற்றும் இல்லாத) அல்ல அருளிய வேதம். அதுபடிதான் நடப்போம். மாற்றிக்கொள்ள மாட்டோம்” என்று கூறுகிறீர்கள். “”மாற்றம் ஒன்றுதான் இந்த உலகில் மாறாதது”” என்பதை உணர மறுக்கிறீர்கள்.

  97. வெள்ளையர்கள் எழுதிய பொய் வரலாறுகளில் ஏதோ இந்தியாவுக்கும், இந்து மதத்துக்கும் தாங்கள் தான் ஒருங்கிணைத்து , இந்து என்று ஒரு பெயரை சூட்டிவிட்டதாகவும் இல்லையென்றால் , இந்துமதத்துக்கு பெயரே இருந்திருக்காது என்றும் சில நண்பர்கள் இணையத்தில் பொய்களை புரிந்தோ, புரியாமலோ எழுதிவருகிறார்கள். சிந்து நதிக்கு தெற்கே வாழ்ந்தோரை இந்துக்கள் என்று வெள்ளையர்கள் நாமகரணம் சூட்டியதாக பொய்கள் புழங்குகின்றன.

    ஆனால் உண்மை என்ன ? வெள்ளையர்கள் இந்தியாவுக்கு கிழக்கு இந்திய கம்பெனி என்ற பெயரில் வியாபாரம் செய்யவந்தனர் . அது கி பி 1600 ஆம் ஆண்டு. கிறித்தவம் தோன்றுவதற்கு முன்னரே மெகஸ்தனிஸ் என்ற வெளிநாட்டு யாத்திரீகர் , கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, இந்தியாமுழுவதும் சுற்றிப்பார்த்துவிட்டு இண்டிகா என்ற நூலை எழுதியுள்ளார். அவர் இண்டிகா என்று பெயர் சூட்டிய காரணம் இந்துமக்கள் வாழும் நாட்டை பற்றிய பயணக்குறிப்புகள் அடங்கிய நூல் என்பதால் வந்த காரணப்பெயர். இந்து என்பது சந்திரனின் பெயர். சிவபெருமானை பிறைசூடி என்கிறது தேவாரம். இந்துக்களின் பெரிய சிறப்பு சார்வாகம் போன்ற உண்மையான நாத்திக கருத்துக்களை சொந்தம் கொண்டாடியதோடு, சார்வாகத்துக்கு ஒரு பெரிய தத்துவம் என்ற அந்தஸ்து வழங்கியது தான். மேலும் இந்துக்கள் சுயசிந்தனை உடையவர்கள். ஆதலால் தான் ஆயிரம் மலர்கள் தத்துவத்தில் மலர்ந்தன. புதிய சிந்தனைகள், புதிய ஆய்வுகளுக்கு இங்கு எல்லையே இல்லை. விக்கிரகங்கள் மூலம் செய்யப்படும் இறைத்திருவாராதனை அல்லது இறைவழிபாட்டை நூற்றுக்கு நூறு ஆதரிப்பவனும் இந்துதான், அதனைக் கண்டிக்கும் ஆர்யா சமாஜின் சுவாமி தயானந்த சரஸ்வதியும் இந்துதான். சுவாமி தயானந்த சரஸ்வதியும் நமது பெருமைக்கும் வணக்கத்துக்கும் என்றென்றும் உரியவர் ஆவார். அவரது சத்திய அர்த்தப் பிரகாசம் என்ற நூல் , இந்துமதத்தை கண்டித்துப்பெசும் பிறருக்கு நல்ல கேள்விகளை எழுப்பி விளக்கம்கொடுத்து , அந்நிய மதத்தினரை யோசிக்க வைத்தது.

    இந்துக்களின் குருமார்களின் பட்டியல் எதிர்காலத்திலும் மேலும் நீளும். ஏனெனில் புதிய ஆசான்கள் மேலும் வருவார்கள். புதிய தத்துவங்களும், புதிய முறைகளும் மேலும் மலரும். சனாதன தர்மத்தின் தத்துவங்களுக்குள் நாத்திகமும் அடங்கும். நாத்திகர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. மற்ற மதத்தினர் நாத்திகர்களை உடனே கொன்றுவிடுவார்கள். அவர்கள் மதங்களில் உள்ள மத நூல்களில் இது குறித்து ஏராளம் கட்டளைகள் உள்ளன.

    இந்துக்களுக்கு எவ்வித எல்லைகளும் இல்லை. இவன்தான் தலைவன் என்று எவ்வித கட்டுப்பாடும் , அடிமைத்தனமும் இல்லை. எல்லோரும் தலைவரே. எல்லோரும் தொண்டரே.

  98. குரான் என்பது முஹமது நன்கு யோசித்து யோசித்து (இல்லாத அல்லா சொன்னதாக) மக்களிடம் சொன்னவை.அவை கற்பனை நிறைந்தவை ஆனால் Hadith என்பது முகமதுவின் செயல்கள், பேசிய பேச்சுகள் அனைத்தும் அடங்கியவை. அவை உண்மையான செய்திகள். இப்போது உண்மை செய்திகள் அவரின் முகமூடியை கிழிக்க வைக்கிறது. அதனால் அது வேண்டாம். அவை எங்களின் விரோதிகள் (யூதர்கள்) செய்த கைங்கரியம் என்று கூறி ஒதுக்குகிறீர்கள். ஆனால் முகமதுவின் மூளையில் உதித்த & பக்குவமாக புனையப்பட்ட கற்பனைகளை ஏற்றுகொல்கிறீர்கள். ( அதிலும் சில முன்னுக்கு பின் முரணான உளறல்கள் உள்ளன என்பது வேறு விஷயம் ஆனால் அவை முகமதுவை ரொம்பவும் பாதிக்கவில்லை என்பதால்)

  99. ஹானஸ்ட் மேன்!

    //என்னது குரான் தருகிறதா? நீர் சவுதி அரேபியாவில் software engineer போன்று ஏதாகிலும் வேலை செய்கிறீரா? அல்லது இங்கிருந்து மத பிரச்சாரம் செய்ய அங்கு சென்றீரா? என் ஒரு உறவினர் கூட சாப்ட்வேர் engineer தான் . ஆனால் போன் செய்ய கூட டைம் இல்லை என்று கூறுகிறார். காரணம் கேட்டால் வேலைப்பளு என்கிறார் நீரோ சதா சர்வ காலமும் இங்கே பதில் (=மறுமொழி) எழுதுவதோடு வேறு சில இணையதளங்களிலும் எழுதுகிறீர். உங்களுக்கு என்னதான் அங்கே (சௌதி அரேபியாவில்) வேலை.?//

    எனது கம்பெனி மரம் சம்பந்தப்பட்ட பொருட்களை சைனா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து சவுதி முழுக்க விற்பனை செய்கிறது. சவுதியிலும் பல மர பொருட்களை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு சப்ளை செய்கிறது. சொந்தமாக நான்கு பெரும் ஷோ ரூம்கள் எனது கம்பெனிக்கு உள்ளது. அந்த ஷோ ரூம்களின் வரவு செலவுகளை கணிணியில் ஏற்றி விட வேண்டும். பிறகு சம்பள நாட்களில் அனைவருக்கும் ஓவர் டைம், விடுப்பு கணக்கு பார்த்து அதனை சரி செய்ய வேண்டும். வருட முடிவில் ஷோ ரூம்களில் கணக்கெடுப்பு எடுத்து ஏதும் பொருட்கள் குறைகிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். ஷோ ரூம்களில் வேலை பார்பவர்கள் தனது நாட்டுக்கு விடுப்பில் சென்றால் மற்றொருவருக்கு பொருப்பை கொடுக்க பொருட்களை சரி பார்ப்பது. அவர்களிடம் பொருப்பை ஒப்படைப்பது. சில நேரங்களில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டு பணியாளர்கள் சண்டை போ ட்டாலோ அடி தடியில் இறங்கினாலோ அவர்களை அழைத்து அன்பாக பேசி சமாதானம் செய்விப்பது. 🙂 இதுதான் எனது வேலை.

    வருட கடைசியிலும், சேல்ஸ் மேன்கள் விடுப்பில் செல்லும் போதும் எனக்கு சற்று வேலை பளு அதிகமாகும். அது போன்ற நேரங்களில் நான் இணையத்தின் பக்கம் வருவதில்லை. மற்ற நாட்களில் எனது வேலை நேரமான 8 மணி நேரத்தில் 2 மணி நேரத்தில் எனது அன்றாட வேலைகளை முடித்து விடுவேன்.

    எனது அலுவலகமும் எனது தங்கும் இடமும் அருகருகே அமைந்துள்ளது. குடும்பம் தமிழகத்தில் இருக்கிறது. நான் மட்டும் தனியாக இங்கு உள்ளேன். வருடம் ஒரு முறை தமிழகம் சென்று விடுவேன். ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 2 மணி நேரம் அலுவலக வேலை. 8 மணி நேரம் தூங்கி விடுவேன். சாப்பாடு, குளியல், வீட்டுக்கு தொலைபேசி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு 2 மணி நேரம். இறைவனை தொழுவதற்கு ஒரு நாளில் மொத்தம் ஒரு மணி நேரம். அனைத்தையும் கூட்டினால் 13 மணி நேரம் வரும். 24 ல் 13 ஐ கழித்தால் மீதி வருவது 11 மணி நேரம். 24 மணி நேரமும் கம்பெனி செலவில் இணைய இணைப்பு. ஒரு நாளைக்கு 11 மணி நேரம் ஓய்வாக கிடைத்தால் நான் என்ன சார் செய்வேன்? 🙂

    இவ்வாறு அதிகம் ஓய்வு கிடைத்தால் பலர் அதிக நேரம் தூங்குவர். நண்பர்களோடு அரட்டை அடிப்பர். ஊர் சுற்றுவர். சீட்டு விளையாடுவர். சிலர் தினம் இரண்டு சினிமாக்களை பார்பர். அல்லது சாட்டிங்கில் தேவையில்லாமல் கடலை போட்டுக் கொண்டிருப்பர்.

    ஆனால் நான் எனது ஓய்வு நேரத்தை இறைவனைப் பற்றிய தேடலில் செலவழிக்கிறேன். அந்த தேடலில் கிடைக்கும் அனுபவங்களை பதிவுகளாக பகிர்கிறேன். அதனை ஏன் பொதுவில் பகிர்கிறீர்கள் என்று கேட்கலாம். குர்ஆன் கூறுகிறது.

    ‘தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. இறைவனின் திருப்தியை நாடி இவற்றைச் செய்வோருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.’
    -குர்ஆன் 4:114

    நாளை இறப்புக்குப் பின் மறுமை நாளில் இறைவன் முன்னால் ‘இறைவா! எல்லா உண்மைகளையும் தெரிந்த சுவனப்பிரியன் எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். எனவே என்னை மட்டும் தண்டிக்காமல் சுவனப்பிரியனையும் சேர்த்து தண்டிப்பாயாக’ என்று யாரேனும் என் மீது வழக்கு தொடர்ந்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே கை வலிக்க தமிழில் டைப் செய்து கொண்டிருக்கிறேன்.

    இது ஒரு பொது நலம் கலந்த சுய நலம் என்றால் மிகையாகாது. 🙂

  100. //மேற்கண்டபடி மனிதர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள். //

    மனிதன் பல்கி பெருகியது ஆதாம் ஏவாளிலிருந்து என்றிருக்க கடவுளின் குழந்தைகள் என்று எப்படி ஆவார்கள்? தெரிந்தே வரலாற்று புரட்டா? 🙂

  101. @ஆனந்த் சாகர்
    Welcome back. It looks like Pagadu is having a long break and your comments are refreshing . Do not expect SP to respond to you comments. Most of his comments are plain hit and run stuff.

  102. ஆனந்த் சாகர்!

    //இறைவனும் இறைவனின் உயிரும் வேறுவேறா? இறைவன் என்று தனியாக ஏதோ ஒன்றும் இறைவனின் உயிர் என்று தனியாக வேறு ஏதோ ஒன்றும் இருக்கிறதா என்ன? இதற்கு உங்கள் பதில் என்ன?//

    ஆன்மா இறைவனால் வானவர் மூலம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊதப்படுவதாக குர்ஆன் சொல்கிறது. அதனாலேயே நீங்கள் கடவுளாகி விட முடியாது. உங்களின் காற்றடைத்த ஒரு பலூன் உங்களின் காற்றை சுமந்திருந்தாலும் அந்த பலூன் உங்களின் தன்மையை பெற முடியாது.

    நீங்களும் கேட்கிறீர்கள். இறைவனும் கேட்கிறான். உங்களின் கேட்கும் திறன் 200 அடி அல்லது 300 அடிக்குள்தான் இருக்கும். ஆனால் நம்மைப் படைத்த இறைவனோ அமெரிக்காவிலிருந்து ஒருவன் அழைத்தாலும் அல்லது ஆண்டிப் பட்டியிலிருந்து ஒருவன் அழைத்தாலும் அந்த அழைப்பை கேட்கும் திறன் படைத்தவன்.

    இப்படி ஒவ்வொன்றிலும் மனிதனின் தன்மை இறைவனுக்கும் இருந்தாலும் இருவரின் சக்தியும் வேறு வேறு ஆனது. இதை சரி வர புரியாததானேலேயே கடவுளின் பெயரால் மனிதர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இதனைத்தான் முன்பும் சொன்னேன்.

  103. சுவனப்பிரியன்,

    //மனிதன் பல்கி பெருகியது ஆதாம் ஏவாளிலிருந்து என்றிருக்க கடவுளின் குழந்தைகள் என்று எப்படி ஆவார்கள்?//

    மனித இனம் ஆதாம்,ஏவாள் என்ற ஒரு ஜோடி மனிதர்களிலிருந்து பெருகியது என்பது பைபிளில் கூறப்பட்டுள்ள எந்த ஆதாரமுமற்ற, சிறுபிள்ளைதனமான கற்பனை கதை. அந்த கதையை கேட்ட முஹம்மது வழக்கம்போல அதை அப்படியே குர்ஆனில் அல்லாஹ்வின் பெயரால் இறக்கிவிட்டா! பைபிள் கதை எப்பொழுது வரலாறு ஆயிற்று?

    // தெரிந்தே வரலாற்று புரட்டா? :-)//

    நான் சொன்னது வரலாறு புரட்டு என்பதே ஒரு புரட்டுதானே! உம்முடைய பொய்,புரட்டல்களை நாங்கள் நிறைய பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்!

  104. சுவனப்பிரியன்,

    //ஆன்மா இறைவனால் வானவர் மூலம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊதப்படுவதாக குர்ஆன் சொல்கிறது.//

    குரான் சொல்வது எங்களுக்கு ஆதாரமல்ல.

    // அதனாலேயே நீங்கள் கடவுளாகி விட முடியாது. உங்களின் காற்றடைத்த ஒரு பலூன் உங்களின் காற்றை சுமந்திருந்தாலும் அந்த பலூன் உங்களின் தன்மையை பெற முடியாது.//

    குரானை படித்து,படித்து உங்கள் மூளை மிகவும் மழுங்கிவிட்டது நன்றாக புரிகிறது! எந்த சாதாரண விஷயத்தையும் எடுத்து சொன்னாலும் உங்களால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம்களின் நிலையும் இதுதான். உங்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது! ஐயோ பாவம்! சரி,இன்னொருமுறை விளக்குகிறேன்.

    ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்று ஹிந்துக்களும் மற்ற ஆன்மீகவாதிகளும் கூறுகின்றனர். உடல் உண்மையல்ல, அது மாறிக்கொண்டே இருப்பது; அதில் இருக்கும் ஆன்மாதான் உண்மை, அதுதான் கடவுள் என்பதும் அவர்களின் கூற்று. நீங்கள் கதைவிடுகிறமாதிரி உயிர் வேறு, ஆன்மா வேறு இல்லை. இரண்டும் ஒன்றே. உடல் என்கிற பலூனுக்குள் கடவுளின் உயிர்/ஆன்மா என்கிற காற்று இருக்கிறதென்றால் அந்த உடலாக இருக்கிற உயிரினதிற்குள் கடவுள் இருக்கிறார் என்றுதான் பொருள்.

    //நீங்களும் கேட்கிறீர்கள். இறைவனும் கேட்கிறான். உங்களின் கேட்கும் திறன் 200 அடி அல்லது 300 அடிக்குள்தான் இருக்கும். ஆனால் நம்மைப் படைத்த இறைவனோ அமெரிக்காவிலிருந்து ஒருவன் அழைத்தாலும் அல்லது ஆண்டிப் பட்டியிலிருந்து ஒருவன் அழைத்தாலும் அந்த அழைப்பை கேட்கும் திறன் படைத்தவன்.//

    எல்லா உயிருக்கும் இந்த திறன் இருக்கிறது.

    //இப்படி ஒவ்வொன்றிலும் மனிதனின் தன்மை இறைவனுக்கும் இருந்தாலும் இருவரின் சக்தியும் வேறு வேறு ஆனது. இதை சரி வர புரியாததானேலேயே கடவுளின் பெயரால் மனிதர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இதனைத்தான் முன்பும் சொன்னேன்.//

    இருப்பது ஒரே ஆன்மாதான். எனவே இருவேறு சக்திகள் கிடையாது. மனித சக்தி,கடவுள் சக்தி என்று வேறு வேறு சக்திகள் கிடையாது. குரானின் உளறல்களைதான் ஏற்பேன் என்கிற உங்களால் இதையெல்லாம் புரிந்துகொள்ளவே முடியாது என்பது எனக்கு தெரியும்.

  105. @Rama,

    //@ஆனந்த் சாகர்
    Welcome back. It looks like Pagadu is having a long break and your comments are refreshing . Do not expect SP to respond to you comments. Most of his comments are plain hit and run stuff.//

    Yes,it seems Pagadu is not active in his blog for quiet sometime. I am contributing to http://www.iraiyillaislam.org. Many articles exposing Muhammad and Islam are published on this blog, mostly by Dajjaal. You may visit that site.

  106. சுவனபிரியன் அண்ணே

    பைபிள் சொல்லுது மக்கள் ஆதாம் ஏவாளிலிருந்து பல்கி பெருகினர் என்று 🙂 ஆகா பைபிள் சொன்னா உண்மை.

    சரி ஆதாம் ஏவாளிடமிருந்து பல்கி பெருகினால் ஆன் சாதி பெண் சாதி என்று இரண்டும் தானே இருக்க வேண்டும். அலிகள் எங்கிருந்து வந்தனர்.

    பைபிள் சொல்லுது கடவுள் ஆறு நாட்களில் உலகத்தை படைத்தார் (அதாவது வானையும் மண்ணையும், பறவை செடி கொடி, பன்றிகள், நாய்கள், ஒட்டகங்கள், மனிதர்கள், மும்மீன்கள் இப்படி எல்லாரையும்) ஏழாவது நாள் ரெஸ்ட் எடுத்தார் என்று. உலகம் வெகுகாலம் மெல்ல தோன்றிற்று என்பதற்கு இன்றைக்கு நமக்கு நிறைய சான்றுகள் உள்ளன

    இதையும் நம்ப சொல்றீகளா

    பைபிள் சொல்லுது கடவுள் மூணாவது நாள் செடிகளை படைத்தார் அப்புறம் நாலாவது நாள் சூரியனை படைத்தார் என்று. சூரியன் இல்லை என்றால் எல்லாரும் அம்பேல் தான். சூரியன் இல்லாமல் செடிகள் எப்படின்னே உயிர் வாழ்ந்தன.

    இதையும் நம்ப சொல்றீகளா.

    கடவுள் தன்னுருவை போலவே மனிதர்களையும் படைத்தார் என்கிறது பைபிள். அப்போ அல்லாவும் மும்மீன் மாதிரியே எட்டு இஞ்சு தாடிவேச்சிகிட்டு, மீசை இல்லாம இருப்பாரா. ரொம்ப போர் போங்க.அவரு சவுதி காரவ மாதிரி செவப்பா இல்ல நம்ம ஊரு அல்லா பிச்சை மாதிரி கருப்பா.

    இதையும் நம்பனுமா

    அல்லா வானத்திலிருந்து பூமியை பிரித்து எடுத்தார் என்கிறது பைபிளும் குரான் கூடத்தான். வானம் என்ற ஒரு பொருளே இல்லை அப்புறம் அதை எப்படி பிரிப்பது. கேனத்தனமா இல்லை.

    இதையும் நம்பனுமா.

    இப்படியே நம்பிக்கிட்டே போனா கேனதனாமா இருக்கும், பாருங்கள் உலகில் எல்லத்த்தையும் வரலாறு என்று நம்பும் இரண்டு பில்லியன் கேனயர்களே உள்ளனர்.

  107. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் சுலைமான் ஷேக்(35). அவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டியுள்ளார். ஆபாச படத்தை பார்க்க மறுப்பவர்களை தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவேன் என்று மிரட்டி மிரட்டியே மாணவிகளை ஆபாச வீடியோ பார்க்க வைத்துள்ளார்.

  108. /////நம்மைப் படைத்த இறைவனோ அமெரிக்காவிலிருந்து ஒருவன் அழைத்தாலும் அல்லது ஆண்டிப் பட்டியிலிருந்து ஒருவன் அழைத்தாலும் அந்த அழைப்பை கேட்கும் திறன் படைத்தவன்./////

    நம்மை என்று அதில் எங்களையும் சேர்த்து கொள்ளாதீர்கள் .எங்களை அல்லா படைக்க வில்லை. ஆண்டிபட்டியிலிருந்து ஒருவன் அழைத்தாலும் அதை கேட்கும் திறன் கொண்டவர் அல்லா என்றால் மசூதிகளில் எதற்கு மைக் செட். (பக்தர்களை அழைக்க என்று சொல்லி தப்பிக்க வேண்டாம்) பக்தர்கள் அனைவரும் வந்தபிறகும் ஒலிபெருக்கியில் ஓதுவது ஏன்? அல்லாவிற்கு காது கேட்காதா?

    அறிவியல் மூலம் மனிதன் கருவிகளை கண்டுபிடித்து இப்போது ஆண்டிபட்டியில் அல்ல அந்த அமெரிக்காவில் அதன் ஜனாதிபதி டிவி யில் பேசினால் எங்கும் நம்மால் கேட்கமுடியும். அது தெரியுமா உமக்கு?.

  109. //அறிவியல் மூலம் மனிதன் கருவிகளை கண்டுபிடித்து இப்போது ஆண்டிபட்டியில் அல்ல அந்த அமெரிக்காவில் அதன் ஜனாதிபதி டிவி யில் பேசினால் எங்கும் நம்மால் கேட்கமுடியும். அது தெரியுமா உமக்கு?.//

    ஜனாதிபதி பேச தொலைக் காட்சி தேவை. ஆனால் இறைவன் நம்மோடு பேச இடையில் எந்த சாதனமும் தேவையில்லை. உங்களுக்கு அரிச்சுவடியிலிருந்து பாடம் எடுக்க வேண்டும். 🙂

  110. ஐயா சுவனப்பிரியன்( எனக்கொரு கேள்வி) ,எவ்வளவு காலத்துக்கு அம்புலிமாமா கதையை சொல்லிக்கொண்டு திரிவீர்கள் .ஆதாம் ஏவாளுக்கு காயீன் ஆபேல் இரண்டும் ஆண்பிள்ளைகள் எரிச்சல் காரணமாக காயீன் ஆபேலை போட்டுத்தள்ளி விடுகிறான் பின்பு உங்கள் கடவுளிடம் (கவனியுங்கள் உங்கள் கடவுளிடம்) கேட்டு மன்றாடி ஒரு அடையாளத்தையும் பெற்றுக்கொண்டு நோத் என்னும் நாட்டில் குடியிருந்தான் திடீரென்று பார்த்தால் அவனுக்கு ஒரு மனைவி எப்படிவந்தா எங்கிருந்து வந்தா என்று தெரியவில்லை அவள் கர்ப்பமாகி ஏனோக்கை பெற்றாள் இது ஒரு குழந்தை கேட்டால் கூட சிரிக்கும் ,விளக்குவீர்களா? உங்கள் கடவுள் படைத்த முதல் பெண்ணே அவர் சொல்லைக் கேட்கவில்லை, முதலில் படைத்த நான்கு பேரை கூட ஒழுங்காக காக்கவில்லை ஒருகொலை, இந்த லச்சணத்தில் எப்படி உலகை காப்பாற்றுவார்? என்போன்றோர் இதை எப்படி நம்புவது?எல்லா உண்மைகளையும் அறிந்த நீங்கள் கட்டாயம் இதை சொல்ல வேண்டும் .உங்கள் சகோதர மதத்தார் கூட கடவுள் கடைசி காலத்தில் தங்களை பாவிகளிடம் நீங்கள் ஏன் என்னைப்பற்றி கூறவில்லை என்று தங்களிடம் கேட்பார் என்றுதான் துண்டு பிரதிகளை கொடுத்துக்கொண்டு திரிகிறார்கள் நீங்களும் இதேமாதிரி சொல்கிறீர்கள் அன்புடன் பிறேமதாசன் திருமேனி

  111. /ஜனாதிபதி பேச தொலைக் காட்சி தேவை. ஆனால் இறைவன் நம்மோடு பேச இடையில் எந்த சாதனமும் தேவையில்லை. உங்களுக்கு அரிச்சுவடியிலிருந்து பாடம் எடுக்க வேண்டும்//

    சிரியா , லெபனோன், குர்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், போஸ்வர், சூடான் , Egypt ஆஃப்கான் என்று பல இடங்களில் அவர் பேசவே இல்லை போல? பக்கவாதம் வந்த மாதிரி இருப்பார் போல அந்த பக்கம் எல்லாம்.

  112. @சுவனப்பிரியன்,

    //ஜனாதிபதி பேச தொலைக் காட்சி தேவை. ஆனால் இறைவன் நம்மோடு பேச இடையில் எந்த சாதனமும் தேவையில்லை. உங்களுக்கு அரிச்சுவடியிலிருந்து பாடம் எடுக்க வேண்டும். :-)//

    ஜனாதிபதி பேச தொலைக்காட்சி தேவை. சரி. ஆனால் உங்கள் அல்லாஹ் மனிதர்களிடம் பேச திரையோ, இடையில் ஒரு தூதரோ, வஹியோ தேவைப்படுவதாக குர்ஆனில் சொல்கிறானே? ஏன்? இந்த சாதனங்கள் மட்டும் அவனுக்கு ஏன் தேவைப்படுகின்றன? எந்த விஷயத்திற்கும் உமக்கு அரிச்சுவடியிலிருந்து பாடம் எடுத்தாலும் எதுவுமே உமக்கு புரிவதில்லை. இந்த லட்சணத்தில் குரானின், ஹதீஸின் உளறல்களை தூக்கிகொண்டு வந்து எங்களுக்கு பாடம் எடுக்க, படம் காட்ட நீர் விரும்புவது படு தமாஷாக இருக்கிறது. நீர் சொல்கிற எந்த ஒரு விஷமும் மிகவும் சிறுபிள்ளைதனமாக இருக்கின்றது. உம்முடைய எந்த ஒரு சிந்தனையும் மிகவும் அடிமட்டத்தில், மிகவும் பாமரத்தனமாக இருக்கிறது. உமக்கு வயதுக்கேற்ற சிந்தனை முதிர்ச்சி கொஞ்சம்கூட இல்லை. உம்முடைய எழுத்துக்கள் படுமுட்டாள்தனமாக உள்ளன.

  113. @சுவனப்பிரியன்,

    //நாளை இறப்புக்குப் பின் மறுமை நாளில் இறைவன் முன்னால் ‘இறைவா! எல்லா உண்மைகளையும் தெரிந்த சுவனப்பிரியன் எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். எனவே என்னை மட்டும் தண்டிக்காமல் சுவனப்பிரியனையும் சேர்த்து தண்டிப்பாயாக’ என்று யாரேனும் என் மீது வழக்கு தொடர்ந்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே கை வலிக்க தமிழில் டைப் செய்து கொண்டிருக்கிறேன்.//

    உயிர்த்தெழுதல், நியாயதீர்ப்பு நாள், நியாயதீர்ப்பு வழங்குதல், மனிதர்களின் செயலுக்கேற்ப சொர்க்கம்,நரகம் என்பதெல்லாம் 100% பொய். உண்மைக்கு முற்றிலும் புறம்பான இந்த கற்பனை கட்டுக்கதைகளை நீர் மூடத்தனமாக நம்பிக்கொண்டு வீணாக உம்முடைய காலத்தை கழித்துக்கொண்டு இருக்கிறீர்.
    மற்றவர்களுக்கு உண்மைகளை ஏன் சொல்லவில்லை என்று உம்மை இறைவன் கேள்வி கேட்பான் என்று கற்பனை செய்துகொண்டு பயந்துகொண்டு இருப்பது படு தமாஷ்.

  114. @சுவனப்பிரியன்,

    //குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக வரும் ஹதீதுகள் அனைத்தும் யூதர்களால் புனையப்பட்டவை. அதை ஒதுக்கி விட வேண்டும் என்பதுதான் இஸ்லாமியர்களின் நிலைப்பாடு.//

    குரான் கூட தனக்குதானே முரண்படுகிறது. எனவே குரானும் யூதர்கள் எழுதியது, அதையும் இஸ்லாமியர்கள் ஒதுக்கி விட வேண்டும் என்று சொல்லலாமா?

  115. சுவனமன்னே

    //
    ஜனாதிபதி பேச தொலைக் காட்சி தேவை. ஆனால் இறைவன் நம்மோடு பேச இடையில் எந்த சாதனமும் தேவையில்லை. உங்களுக்கு அரிச்சுவடியிலிருந்து பாடம் எடுக்க வேண்டும்.
    //

    இதெப்படி ஒத்தொப்போகும். நீங்கள் இஸ்லாத்துக்கு முரணாக அல்லவா பேசுகிறீர்கள். உருவமற்ற இறைவன் எப்படி பேசுவார். அட அவர் பூமிக்கு ஒரு முறை இறங்கி வர நினைத்தபோதே ஒரு மலை கருகிரிச்சே. அவரு பேசுனா என்னாகும். மேலும் அல்லா பேசினா அத பூமில உள்ளவைக கேக்க ஆயிரம் வருடம் பிடிக்கும் (அப்படிதானே குரான் சொல்லுது). இது இப்படி இருக்க நீங்க என்னடான்னா அசால்ட இறைவன் நம்மோட பேச எந்த சாதனமும் தேவை இல்லை என்கிறீர்கள்.

    மேலும் அல்லாவுக்கு பேசத்தெரியாது அவர் வசநாமகத்தான் எல்லாத்தையும் இறக்குவார். அதையும் எல்லாரிடமும் இறக்க மாட்டார். களவாணி பய்யன், ஒம்போது பொண்டாட்டி காரன், மாபாதகன், கொலைகாரன், ஆததாயீ என்று எல்லா குணமும் பொருந்திய ஒருவனிடம் தான் அதை இறக்குவார்.

    வானத்திலிருந்து பூமியை பிரித்தெடுத்த அல்லாவுக்கு இதெல்லாம் ஜககஜமப்பா

  116. ////இறைவன் நம்மோடு பேச இடையில் எந்த சாதனமும் தேவையில்லை.//// அல்லா இதுவரை எத்தனை மனிதர்களுடன் (நம்மோடு என்று கூறியுள்ளதை கவனிக்கவும்) பேசியுள்ளார். அவர் உங்கள் முகமதுவுடன் கூட நேராக பேசியதில்லை அல்லாவின் agent கேப்ரியல் தானே நபியுடன் பேசியதாக புனித (இல்லை இல்லை புருடா) நூலான குர்ஆனில் கூறப்பட்டுள்ளது?

    ஒருவர் பேசுவதற்கு நாக்கு, தொண்டை, பற்கள் என்று பல சாதனங்கள் தேவை. அவை இன்றி எவராலும் பேசமுடியாது. “எந்த சாதனமும் தேவை இல்லை” என்று நீர் சொல்வது சரியல்ல. . கூடுதலாக ஒலிவாங்கியும் (microphone ) அந்த சாதனங்களின் பட்டியலில் சேர்கிறது. அவ்வளவுதான்.

    உங்கள் தொழில் (Job ) குறித்து நல்ல விளக்கங்கள் அளித்துவிட்டீர்கள். அந்த சந்தடி சாக்கில் எனது பல கேள்விகளுக்கு பதிலே சொல்லவில்லை. (மீண்டும் படித்து பாரும்.)

  117. சுவனப்பிரியருக்கு யார் பாடம் எடுப்பது? பிறருக்கு பாடம் எடுக்க எவருக்கும் தகுதி கிடையாது. கடவுள் நம்பிக்கை என்பது இன்று ஒரு மோசடியான விஷயம் என்று பலராலும் கருதும் நிலை வந்துவிட்டது. அதற்கு முக்கியக் காரணம் நான் சொல்வதே சரி , மற்றவர்கள் சொல்வது தவறு என்னும் மனநிலை தான். அதிலும் வக்கிர புத்தியின் உச்சக் கட்டம் என்னவென்றால் , பிற மதத்தினரை கொன்றால் , சொர்க்கத்தில் மட்டும் இருக்கும் கடவுள் நமக்கு பேரீச்சம் பழ ரசம் கொடுப்பார், 72+ மேலும் பிற சலுகைகள் கிடைக்கும் என்று போதிக்கும் கொள்கைகள்.

    இந்த உலகம் இருக்கும் வரை
    பல நிறம்,
    பல உணவுப்பழக்கம்,
    பல நம்பிக்கைகள் ,
    பல மொழிகள்,
    பல விதமான ஆட்சி முறைகள் – என்று ஒன்றுக்கு மேற்பட்டவை இருந்துதான் தீரும்.

    கிறிஸ்தவர்களில் சுமார் 38000- பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்திலும் ஷியா, அகமதியா, சன்னி, போரா என்று ஒவ்வொரு பிரிவும் சற்று வித்தியாசமான கொள்கைகளை கொண்டுதான் இயங்குகின்றன.

    கடவுள் மறுப்பாளர்களுக்கு தக்க பதில் சொல்ல முடியாமல் தோல்வி கண்ட ஆபிரகாமிய மதத்தவர் , தங்கள் மத நூல்களில் , கடவுள் மறுப்பாளர்களை கண்டவுடனேயே கொன்றுவிடும்படி கட்டளைகள் பிறப்பித்துள்ளனர். ஏனெனில் அவர்களது தோல்வி மனப்பான்மை.

    கடவுள் வணக்கம் அல்லது வழிபாடு என்பது மனித இனம் தானே உருவாக்கிக் கொண்டது. அதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் அதனை பிறர் மீது திணிக்க முற்படுவதும், ஏற்க மறுப்போரை கொள்வோம் என்று சொல்வதும் காட்டுமிராண்டிகளின் செயல். அப்படிப்பட்ட காட்டுமிராண்டிகள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆயினும் உலகம் அவர்களை முதலில் திருத்த முயற்சிக்கும். அவர்கள் திருந்தாவிட்டால், அவர்கள் உலகிலிருந்து முற்றிலும் தாங்களே அழிந்து போவார்கள்.

    இன்றுகூட பாகிஸ்தானின் பெஷாவரில் வெள்ளிக்கிழமை தொழுகை நாளில் ஷியா சமூகத்தை சேர்ந்தவர்களை கொல்ல வைத்த வெடிகுண்டு மூலம் சுமார் 20 பேர் படுகொலை. 65- பேருக்கு பலத்த காயம். இந்த வன்முறைகளை நியாயப்படுத்தி பேசும் மதங்கள் உலகில் இனி இருக்காது.

    பெண்ணடிமை, ஆணாதிக்கம், போன்ற காட்டுமிராண்டி தனமான விஷயங்களை பேசும் யாரும் இனி உலகில் வாழ உலகமே அனுமதிக்காது.

  118. மதமல்ல மார்க்க சகோ சுவனபிரியரே

    இன்னைக்கு இன்ஷா அல்லா பாகிஸ்தான்ல நம்ம மார்க்க படை வீரர்கள் குண்டு வெச்சு இருவத்திரண்டு பேர அல்லாஹு அக்பர் பண்ணிட்டாங்க போல. உங்களுக்கு நிறைய சமயம் இருக்குல்ல, அப்போ இறைவனை பத்தி சிந்திக்கிறதா தமிழ் ஹிண்டுல வந்தது சிண்டுமுடியரத விட்டுட்டு பாகிஸ்தான்ல குண்டு வெக்கரவங்கலுக்கு நல் புத்தி சொல்லலாமே.

    அட குண்டு வெச்சு தான் தீரனும் அப்ப தான் மார்க்கத்தை சரி வர கடை பிடிக்காதவர்கள் திருந்துவார்கள் என்கிறீர்களா. அது கூட சரி தான். இன்ஷா அல்லா எல்லாம் நல்லா நடந்தா சரி.

  119. திரு பிரேமதாசன் திருமேனி!

    நீங்கள் சொல்வது போல் குர்ஆனில் எங்கும் வரவில்லை. ஒருகால் பைபிளை பார்த்து சொல்கிறீர்களோ என்னவோ?

  120. (1) வடகிழக்கு நைஜீரியாவில் மைதுகிரி என்ற ஊருக்கு அருகில் உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் மீது Boko Haram என்ற புறம்போக்கு அமைப்பு வெள்ளிகிழமை அன்று (அதாவது நேற்று) தாக்குதல் நடத்தி 21 பேரின் உயிர்களை பறித்துள்ளது. அந்த புறம்போக்கு அமைப்பை சார்ந்த புறம்போக்கு பசங்களுடன் உங்க அல்லா நேரடியாக (எந்த சாதனங்களும் இன்றி) பேசி அறிவுரை கூறமாட்டாரா?
    (2) பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் நகரிலுள்ள Imamia மசூதியில் (இது ஷியாக்களின் மசூதி) குண்டு வைத்து 19 பேர் இறந்துள்ளனர்.

    (3) 2 வாரத்திற்கு முன்புதான் தெற்கு பாகிஸ்தானில் ஒரு ஷியா முஸ்லிம்களின் மசூதியில் குண்டு வைத்து 61 பேர் இறந்தனர். (மிலிடரி நடத்தும் பள்ளிகூடத்தில் எவ்வு இரக்கமின்றி பள்ளி குழந்தைகளை கொன்ற சம்பவம் மிருக மனம் படைத்தவர்களையும் உருக செய்யும்)

    இந்த மாதிரி கொலை வெறிபிடித்த கொடியவர்களுடன் உங்க அருமை அல்லா பேசமாட்டாரா? அல்லது அவருக்கு பேசவே தெரியாதா? தெரியாது என்றால் அவரை என்னிடம் வர சொல்லவும். நான் அவருக்கு பேசவும் படிக்கவும் எழுதவும் அரிச்சுவடி முதற்கொண்டு எல்லாவற்றையும் கற்று (free ஆக) தருகிறேன். ஆகவே “786” என்ற நம்பருடன் தொடர்பு கொண்டு இந்த விவரத்தை அவரது agent கேப்ரியலுக்கு சொல்லவும்.

    குரானை உலகிற்கு அனுப்பிவிட்டால் மட்டும் போதாது. அதன் பிறகு follow – up action என்னவென்று கவனிக்க வேண்டும் அந்த குரான் படி உங்க முஸ்லிம் மக்கள் நடக்கவில்லை என்றால் காலத்திற்கு தகுந்தமாறி ஒரு புதிய குரானை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் 9 பொண்டாட்டிகாரனான முகமது போன்றோரை தேர்ந்தெடுக்காமல் வேறு நல்ல உத்தமமான ஆளுக்கு வஹி மூலம் அனுப்பவேண்டும்.

  121. //சரி ஆதாம் ஏவாளிடமிருந்து பல்கி பெருகினால் ஆன் சாதி பெண் சாதி என்று இரண்டும் தானே இருக்க வேண்டும். அலிகள் எங்கிருந்து வந்தனர். //

    இஸ்லாமிய பார்வையில் திரு நங்கைகளும் ஆண்களே! ஹார்மோன் குறை பாட்டால் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அதனை மருத்துவ துறை தற்போது சரி செய்யும் அளவுக்கு வந்துள்ளது. சவுதியில் இவ்வாறு குறைபாடுள்ள நபர்களை சில மாதம் மருத்துவ மனையில் தங்க வைத்து அவர்களை முழு ஆணாகவோ முழு பெண்ணாகவோ வெளியாக்குகிறார்கள். நம் நாட்டில் திருநங்கைகள் என்று அவர்களை ஒதுக்கி பிச்சை எடுக்க வைத்து அழகு பார்கிறோம். மற்றும் சிலரை பாலியல் தொழிலாளியாக இந்த சமூகம் மாற்றி வைத்துள்ளது.

    சிவ…. சிவ….. கலி முத்திடுத்து.

  122. @சுவனப்பிரியன்,

    //இஸ்லாமிய பார்வையில் திரு நங்கைகளும் ஆண்களே!//

    இஸ்லாமிய பார்வை எந்த லட்சணம் என்றுதான் எங்களுக்கு தெரியுமே! உதாரணத்திற்கு சில, இணைவைப்பவர்களை கண்ட இடத்தில வெட்டி கொல்லலாம், அவர்கள் தெய்வம் என வணங்கும் சிலைகளை உடைத்து எறியலாம், காபிர்களின் பெண்களை கற்பழிக்கலாம், அவர்களின் செல்வதை கொள்ளை அடிக்கலாம், அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் அடிமைகளாக்கி வைத்துக்கொள்ளலாம், அல்லது அடிமை சந்தையில் விற்று பணம் பண்ணலாம், 6 வயது பெண் குழந்தையை எந்த வயது ஆணும் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்பதெல்லாம் கூட அழகிய இஸ்லாமிய பார்வைதான்! இதை எல்லாம் நாகரிக மனிதர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

    // ஹார்மோன் குறை பாட்டால் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அதனை மருத்துவ துறை தற்போது சரி செய்யும் அளவுக்கு வந்துள்ளது.//

    இந்த சப்பைகட்டுதான் வேணாங்குறது! ஆதாமோ ஏவாளோ அலி இல்லை எனும்போது அலி என்ற மூன்றாவது இனம் எங்கிருந்து வந்தது என்பதுதான் கேள்வி. ஹார்மோன் குறை என்பது ஏற்புடைய பதில் இல்லை.

    // சவுதியில் இவ்வாறு குறைபாடுள்ள நபர்களை சில மாதம் மருத்துவ மனையில் தங்க வைத்து அவர்களை முழு ஆணாகவோ முழு பெண்ணாகவோ வெளியாக்குகிறார்கள்.//

    அலிகளை ஆண்களாக பார்ப்பதுதான் இஸ்லாமிய பார்வை என்று முழங்கிவிட்டு அவர்களை சவுதியில் பெண்களாகவும் மாற்றுகிறார்கள் என்று கூறுவது ஏன்? அப்படியானால் அவர்கள் ஆண்கள் இல்லை என்றுதானே பொருள்படுகிறது?

    // நம் நாட்டில் திருநங்கைகள் என்று அவர்களை ஒதுக்கி பிச்சை எடுக்க வைத்து அழகு பார்கிறோம். மற்றும் சிலரை பாலியல் தொழிலாளியாக இந்த சமூகம் மாற்றி வைத்துள்ளது.//

    இந்தமாதிரி லூசுத்தனமான பேசுவதுதானே உம்முடைய வாடிக்கை! திருநங்கைகள் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதை இந்திய சமூகமோ அரசோ தடுக்கிறதா என்ன? அவர்கள் விரும்பி சிகிச்சை எடுத்துக்கொள்வதை யார் தடுக்கிறார்கள்?

    //சிவ…. சிவ….. கலி முத்திடுத்து.//

    மறுமை நெருங்கிவிட்டது என்று பயந்து அலறுகிறீரோ? யா அல்லாஹ்! யா அல்லாஹ்!

  123. ///////திரு நங்கைகளும் ஆண்களே!——— மருத்துவ மனையில் தங்க வைத்து அவர்களை முழு ஆணாகவோ முழு பெண்ணாகவோ வெளியாக்குகிறார்கள்.///////

    திருநங்கைகளும் ஆண்களாம் .சரி அப்படியென்றால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று திரும்பும்போது அவர்கள் ஆணாகத்தான் வெளியே வரவேண்டும். அதெப்படி பெண்ணாக வெளியே வருவார்கள்? வருகிறார்கள் என்பது நிதர்சனம். ஆனால் “”அவர்கள் ஆண்கள்”” என்று கூறுவதுதான் தவறு.

    மின்சார விஷயத்தில் positive charge என்றும் நெகடிவ் charge என்றும் 2 இருக்கும்போது neutral என்று ஒன்றும் இருப்பதில்லையா? ஒரு அணுவின் உட்கருவை சுற்றி electron ம் உட்கருவில் proton மட்டுமின்றி neutron ம் இருப்பது போல.

    தமிழ் எழுத்துக்களில் அ முதல் ஒள வரை உள்ளவை ஆண் இன எழுத்துக்கள். க் முதல் ன் வரையுள்ள எழுத்துக்கள் பெண் இன எழுத்துக்கள் (அதனால்தான் அந்த எழுத்துக்களின் தலை மீது பொட்டு (அதாவது dot ) ஒன்றுள்ளது. இவை அன்றி அக் என்று சொல்லகூடிய ஒரு எழுத்தை ஆயுத எழுத்து என்று கூறுகிறோம். அதுதான் அலி எழுத்து. இப்போது நாம் அதை மூன்றாம் இனம் ( = 3 rd sex ) என்று கூறுகிறோம். அதைத்தான் நம் தமிழ் முன்னோர்கள் அதை 3 புள்ளிகளால் (மேலே ஒன்றும் கீழே இரண்டும் ) குறித்தனர்.

    சௌதி அரேபியாவில் எல்லாமே நாளா நடப்பது போல அந்த நாட்டை வானளாவ புகழ்கிறார். அங்கே உள்ள பெண்கள் கார் ஓட்டமுடியுமா? உலகமெங்கும் மக்கள் ஆட்சி நடக்கும்போது இந்த 21 வது நூற்றாண்டிலும் அங்கே மன்னர் ஆட்சி நடக்குதே! தவறு செய்யும் பெண்களை கல்லால் அடித்து கொள்கிறார்களே! (ஆனால் தவறு செய்யும் ஆண்களை எதற்கு அப்படி கொள்வதில்லை?) நிலைமை இப்படி இருக்க “”அறம் மணக்குது அருள் மணக்குது அரபு நாட்டிலே”” என்று பாட்டு வேறு நமது சென்னை வானொலி நிலையத்தில் (முன்பு) ஒலிபரப்பப்பட்டது சரியா?

  124. //////மற்றும் சிலரை பாலியல் தொழிலாளியாக இந்த சமூகம் மாற்றி வைத்துள்ளது.

    சிவ…. சிவ….. கலி முத்திடுத்து.////

    அவர்கள i இந்த சமூகம்தானே அப்படி மாற்றியது. எனக்கு தெரிந்து இந்தியாவில் எத்தனையோ முஸ்லிம் அலிகள் (Eunuchs ) உள்ளனர். உமது வார்த்தைப்படி அதற்கும் இந்த சமூகம்தானே காரணம். சமூகம் என்பது நீரும் நாம் சேர்ந்ததுதான். அப்படியிருக்க உமது மறுமொழி கடைசியில் சிவ …சிவ…என்று முடித்திருப்பது எதற்கு? அதற்கு இந்து மதமும் இந்துக்களும்தான் காரணம் என்பதா? 365 நாளும் 24 மணி நேரமும் (எங்குமே இல்லா அந்த பொல்லா அல்லா பெயர் கூறி திரியும் நீர் இப்போது மட்டும் சிவ ..சிவ….உமக்கு பிடிக்காத கடவுள் பெயரை கூறியதன் காரணம் என்ன?

    பிறேமதாசன் திருமேனிக்கு பதில் எழுதும்போது ஒருவேளை பைபிளை பார்த்து சொல்லியிருப்பீர்கள் என்று கூறியுள்ளீர். அப்படியானால் பைபிள் தவறு என்று கூறுகிறீர்களா? அப்படியானால் உங்கள் முஸ்லிம் மக்கள் (இந்தியாவில்தான்) கிறிஸ்தவ மக்களுடன் கைகோர்த்து நிற்பதேன்?

  125. சுவனபிரியன் அண்ணே

    பார்த்தீங்களா அல்லா டுபாகூர் என்பதற்கு இதுவும் ஆதாரம்

    //
    இஸ்லாமிய பார்வையில் திரு நங்கைகளும் ஆண்களே! ஹார்மோன் குறை பாட்டால் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அதனை மருத்துவ துறை தற்போது சரி செய்யும் அளவுக்கு வந்துள்ளது. சவுதியில் இவ்வாறு குறைபாடுள்ள நபர்களை சில மாதம் மருத்துவ மனையில் தங்க வைத்து அவர்களை முழு ஆணாகவோ முழு பெண்ணாகவோ வெளியாக்குகிறார்கள். நம் நாட்டில் திருநங்கைகள் என்று அவர்களை ஒதுக்கி பிச்சை எடுக்க வைத்து அழகு பார்கிறோம். மற்றும் சிலரை பாலியல் தொழிலாளியாக இந்த சமூகம் மாற்றி வைத்துள்ளது.

    சிவ…. சிவ….. கலி முத்திடுத்து.
    //

    இதே டெக்னீக் கொண்டு ஒரு ஆணை பெண்ணாகவும் ஒரு பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியும். இதுவும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்போ ஆண் பெண் என்ற இரண்டு பாகபாடுகளும் கிடையாது. ஆக ஆதாம் ஏவாள் கதை ஒரு புருடா. சர் தானே.

    ஹிந்து தர்மம் என்ன சொல்கிறது, எல்லாம் அந்த கடவிளிடம் இருந்த வந்தது. ஆண் பெண் இந்த பேதமெல்லாம் ஆன்மாவிற்கு கிடையாது வெறும் உடலுக்கு தான் என்று.

    உலகை உருவாக்க அல்லா நினைத்திருந்தால் வெறும் ஆண்களை மட்டும் பிறக்க செய்திருக்கலாம். அட அப்படி செய்திருந்தால் ஆண்களை எப்படி எழுவத்தி இரண்டு உருப்படிகள் உண்டு என்று ஆசை காட்டி மயக்குவது. வெவரமான ஆளு தான் அல்லா.

  126. எகிப்து நாட்டிலிருந்து வேலை வாய்ப்பு தேடிப்போன இருபத்தொரு இளம்வயது கிறிஸ்தவ ஆண்களை சென்றமாதம் லிபியாவில் பிடித்த மதவெறிபிடித்த பயங்கரவாதிகள் இன்று கழுத்து அறுத்து கடலில் இரத்தம் கலக்கவிட்ட செய்தியை கேட்டதிலிருந்து இதயம் கனக்கிறது .கடவுள் பேரை சொல்லி கழுத்தறுக்கும் இவர்கள் எங்கே உணவுக்காக உயிர்களை கொலை செய்வதை விரும்பாத நம்சமயங்கள் எங்கே?

  127. ஜெனாப் சுவனப்ரியன், அல்ஹம்துலில்லாஹ்

    \\ சிவ…. சிவ….. கலி முத்திடுத்து. \\

    இப்புடியெல்லாம் அல்லாவுக்கே அல்வா குடுக்கலாமா?

    ரெண்டு தபா சிவ சிவ சொன்னதுக்காக பனிஷ்மெண்டா என்ன குடுப்பாங்க ஒங்க வஹாபியத்துல. நரகத்துல தள்ளுவாங்களா. அல்லது 72 ல ரெண்ட கொறச்சுடுவாங்களா 🙂

    எல்லாம் நீங்க தமிழ் ஹிந்து தளத்துல அவுலியா குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்களின் நந்தீஸ்வர சதகத்திலிருந்து ஒரு துளி வாசித்ததன் ப்ரபாவம்.

    இன்னிக்கு சிவ ராத்ரி வேறு. இப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா நல்ல விஷயங்களின் பால் உங்கள் கவனம் சென்று உங்களுடைய கர் வாப்ஸியாக நமது சைவ சமயத்துக்கு வருவீர்களாக. குரான்-ஏ-கரீம் படிப்பதல்லாமல் அப்பிடியே குணங்குடி மஸ்தான் சாஹிபு கண்ணிகளை வாசித்துய்வீர்களாக 🙂

  128. திரு பிரேமதாசன் திருமேனி அவர்களே! முஸ்லிம்களுக்கு தினமும் ஆட்டை “அல்லாவு அக்பர்”” என்று சொல்லி அறுத்து அறுத்து பழக்கம். அதனால் அவர்களுக்கு 21 தலைகள் என்ன 21000 தலைகளை கூட அறுப்பார்கள். இப்போது வந்துள்ள ஒரு செய்தி அதாவது தாலிபான்கள் தாகி 10 ஆப்கான் பொலிசார் இறந்துள்ளனர். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் 1) குண்டு 2 ) கத்தி.அல்லது துப்பாக்கி. ஒருபக்கம் ISIS இன்னொரு பக்கம் Boko Haram இன்னொரு பக்கம் தலிபான் இப்படி பக்கம் பக்கமாக உலகத்தையே கொலை களமாக மாற்றி வருகின்றனர். இந்திய முஸ்லிம்கள் (குறிப்பாக மனித நேய மக்கள் கட்சி தலைவன்) அவர்களை சும்மா கண்டிப்பது போல (only lip service ) அறிக்கை விட்டு மனசுக்குள் விரைவில் உலகம் பூராவும் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் காலம் வரும் என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். இவர்களுக்கு சாதகமான குர்ஆனில் 2 வசனங்களை அவிழ்த்து விடுவார்கள். அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அப்பட்டமான பொய் ஒன்றை கூறிவிடுவார்கள். அதை அப்படியே அச்சு ஊடகங்களும் மின்னணு ஊடகங்களும் உண்மை என்று நம்பி மீண்டும் மீண்டும் ஒலிபரப்புவார்கள்.

  129. premathasan thirumeni
    Two perfect answer. you choose which one is most appropriate;
    1. They are not Muslims but Muslim PEYAR THANGIGAL
    2. that’s war zone , may be some Indians, American, Russian had done this job and put blame to IS
    Option 3
    if both are not satisfied more explanation will follow here with IP Address.

  130. சுவனபிரியன்

    குரான் விஞாணத்தை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார் பாருங்கள் இவர்

    //
    https://tamil.oneindia.com/news/international/saudi-cleric-rejects-that-earth-revolves-around-the-sun-221201.html
    //

    பூமி நின்னுகிட்டு இருக்கு சூரியன் தான் பூமிய சுத்துதான்.. இது தான் குரான் கூறுகிறது. பெஜெவின் பித்தலாட்டங்கள் எல்லாம் அம்பலமாகிடிச்சு

  131. இதை (அதாவது பூமி தட்டை) சொன்ன சௌதி ஷேக் அல் கைபாரி என்ற மதகுருவை திட்டாதீர்கள். பாவம் அவர் என்ன செய்வார்? குரான் என்ற குப்பையை படித்து விட்டு அப்படியே அவர் வாந்தி எடுத்தார். வாந்தி நாற்றம் அடிக்கிறது என்று அவரை குற்றம் சொன்னால் என்ன லாபம்?

    ஜெய் ஹிந்த் என்பவர் அந்த கட்டுரைக்கு மறுமொழி எழுதினர். அதற்கு RAZA என்ற ஒரு துலுக்கன் “குர்ஆனில் எந்த வசனத்தில் பூமி தட்டை என்று கூறியிருக்கிறது” என்று கேள்வி கேட்டு எதிர்வினை எழுதியுள்ளார். அந்த கேள்விக்கு நான் பதில் இங்கே கூறுகிறேன். வசனம் 2 – 22 ல் அல்லா கூறுகிறார். “””உங்களுக்காக அவனே பூமியை ‘விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான்.” மேலும் 21: 32-33 ல் சூரியனும் சந்திரனும் தத்தம் வானத்தில் நீந்திகொண்டிருக்கின்றன.என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஒரு பாயை விரிக்கலாம். ஏனென்றால் அது தட்டையானது.ஆனால் ஒரு கண்ணாடி கோலியை விரிக்க முடியுமா? ஏனென்றால் அது உருண்டை. பூமியை விரிப்பாக ஆக்கினான் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அடுத்து சூரியனும் சந்திரனும் ”’தத்தம்”’ வானத்தில் நீந்திகொண்டிருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது சந்திரன் அதனது வானத்தில் நீந்திகொண்டிருக்கிறது என்று “மனித விஞ்ஞானிகள்” சொல்கின்றனர். சூரியனும் அதன் வானத்தில் நீந்துகிறது என்று “விஞ்ஞானி அல்லா” கூறுவதை ஏற்றுத்தான் ஆக வேண்டுமா? சந்திரன் நீந்துகிறான் என்றால் ஏற்கலாம். ஆனால் சூரியனும் நீந்துகிரான் என்றால் அவை இரண்டும் ஒரே செயலை(நீந்துவது) செய்கிறது என்று தானே அர்த்தம்?

  132. //முஸ்லிம்களுக்கு தினமும் ஆட்டை “அல்லாவு அக்பர்”” என்று சொல்லி அறுத்து அறுத்து பழக்கம். அதனால் அவர்களுக்கு 21 தலைகள் என்ன 21000 தலைகளை கூட அறுப்பார்கள்.//

    உண்மை தான் இவ்வளவு கொடூரமான ஒரு செயலை இது வரை உலகமே பார்த்ததில்லை.. சுவனப்ரியன் போன்றவர்கள் இப்படி பட்டவர்கள் இசுலாமியர்களே அல்ல என்று கூறுவதைத் தவிர வேறு எதாவது பரிகாரம் தேடலாம்…

    அந்தக் கொடூரமான காணொளியை இத்தோடு இங்கு இணைக்கிறேன்.. இசுலாமியர்களின் கொடூரங்களின் மிகப் பெரிய அவலம் இது. தயவு செய்து மென்மையான மனது கொண்டவர்கள் இந்த காணொளியை பார்க்க வேண்டாம்..

    https://www.bestgore.com/beheading/isis-beheading-21-christians-message-signed-with-blood-to-the-nation-of-the-cross/

  133. That is good to see Ramdas, the Cobbler honouired by you in the masthead.

    He is usualy seen at his work of mending shoes in all pictures in Northern States. He was a cobbler who plied his trade on the ghats of Kasi. Every cobbler in Delhi, UP, Punjab, Rajasthan, Uttranchal etc. has the said picture hung in his work place. You have chosen other famous picture, with his contemporary saint Meera. No problem with that.

    Perhaps you have thought your high caste readers will be offended to see a cobbler at his work in the masthead of their favoruite website. It makes good business sense not to offend our customers. isn’t?

    I thank you for accomodating Ramadas in your masthead.

    (I have chosen this place to post this as I don’t want to do it in Memon topic)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *