‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”

ண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிஇந்துப் பெண்களின் மங்கலச் சின்னமான தாலியை அவமதிக்கும் வகையில் ஒரு விவாத நிகழ்ச்சியை அறிவித்து, பிறகு எதிர்ப்புகள் மிகவும் வலுக்கவே, அதன் ஒளிபரப்பை ரத்து செய்தது .  இந்த பின்னணியில் புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது  நிகழ்த்தப் பட்ட டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  இதில்  ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன், பாஜக தேசியப் பொருளாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் ஆகிய தலைவர்கள்  இந்த டிபன் பாக்ஸ் குண்டு வீச்சுக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

puthiya_thalaimurai_tiffin_box_bomb_newsஇது தொடர்பாக சமூக வலைத் தளங்களில் தெரிவிக்கப் பட்ட சில கருத்துக்களை இங்கு தொகுத்தளிக்கிறோம்.

ஹர்ஷ் தமிழ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்:

தமிழகத்தில் ஒரு சில “இந்து” அமைபுகள் இருக்கின்றன. இவையெல்லாம் சில்லறை விளம்பரத்திற்காகவும், பணத்துக்காகவும் இயங்கக் கூடியவை. சில கிறிஸ்தவ நிறுவனங்களாலும், சில இஸ்லாமிய நிறுவனங்களாலும், சில திராவிடக் கட்சிகளாலும் ”சோறு” போட்டு வளர்க்கப்படுபவை.

தமிழகத்தில் உண்மையான ஹிந்துத்துவம் காலூன்றிவிடக் கூடாது என்பதற்காகவும், பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தங்களைச் சோறு போட்டு வளர்க்கும் நிறுவனங்களும் திராவிடக் கட்சிகளும் என்ன செய்யச் சொல்லி உத்தரவு போடுகிறார்களோ அவற்றை சிரமேற்கொண்டு செய்யக்கூடியவை இந்த சில்லறை அமைப்புகள்.

ஆர்.எஸ்.எஸ், வி.ஹி.ப மற்றும் இந்து முன்னணி போன்ற நேர்மையான, பண்பாடு மிக்க, உண்மையான தேசபக்தி கொண்ட ஹிந்து அமைப்புகள் ஜனநாயக முறையில் கையிலெடுக்கும் போராட்டங்களை இடையில் புகுந்து கெடுத்து நீர்த்துப்போகச் செய்வது; தேர்தல் சமயங்களில் பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் தாங்களும் திராவிடக் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தங்களுடைய வேட்பாளர்களை நிறுத்தி ஹிந்து வாக்குகளைப் பிரிப்பது; பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் களத்தில் வேலை செய்வது; ஆகிய துரோகச் செயல்களில் ஈடுபடுவது இந்தச் சில்லறை அமைப்புகளின் வழக்கம்.

“இந்து கலாச்சாரத்தைக் காப்பாறுகிறோம்” என்று கூறிக்கொண்டு மட்ட ரகமான தரம் குறைந்த போராட்டங்களை அறிவிப்பது; உதாரணத்திற்கு சமீபத்தில் ஒரு இஸ்லாமிய அமைப்பு மஹாராஷ்டிர பாஜக-சிவசேனா அரசுக்கு எதிராக சென்னை ராஜ்பவன் கவர்னர் மாளிகை முன்பு மாடு அறுக்கும் போராட்டம் அறிவித்தபோது, அதற்கு எதிராக பன்றி அறுக்கும் போராட்டம் அறிவித்ததைச் சொல்ல்லாம்.

இவர்கள் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.கவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட ஹிந்து விரோத சக்திகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றன இந்தச் சில்லறை அமைப்புகள்.

இந்தப் பின்னணியில்தான் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தில் குண்டு வீசியதாக்க்கூறி சரணடைந்தவரின் அமைப்பையும் நாம் பார்க்க வேண்டும். ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகள் இந்தியாவைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய சூனியா அரசு, “காவி பயங்கரவாதம்”, “இந்து பயங்கரவாதம்” என்று இல்லாத ஒன்றை, தேச விரோத ஊடகங்களின் உதவியுடன் கட்டமைத்துள்ளது. அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த சோரம் போன சில்லறை அமைப்புகள் நடந்துகொள்கின்றன.

தற்போது மத்தியில் வலிமையான பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. எனவே அதற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தவும், தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றிவிடாமல் செய்யவும், இனி இந்த சில்லறை அமைப்புகளின் ஆட்டம் அதிகமாக இருக்கும். தேச விரோத ஹிந்து விரோத ஊடகங்களும் ஹிந்துத்துவத்திற்கு எதிரான ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கும்.

இந்த சில்லறை அமைப்புகள் நமக்கு ஆபத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த மாதிரியான சில்லறை அமைப்புகளை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

*********

ஜடாயு  தனது  ஃபேஸ்புக் பக்கத்தில்:

‘தாலி’ ஒரு சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்தச் சர்ச்சைகளில் உண்மையிலேயே ஏதாவது சாரமிருக்கிறதா என்று பார்க்கலாம்.

thaali_mangalsutra1. மங்கல நாண் அணிவது தொன்மையான இந்துக் கலாசாரமே அல்ல. சங்க இலக்கியங்களில், சிலப்பதிகாரத்தில், வேதங்களில், இதிகாசங்களில் அது பற்றி எதுவும் இல்லை என்கிறார்கள் சில “ஆய்வாளர்கள்” (என்னவோ மற்ற எல்லா விஷயங்களையும் இந்த நூல்களில் உள்ளதா என்று பார்த்துத் தான் செய்வது போல). சரி, ஒரு வாதத்திற்காக அது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அதன் அடிப்படையில் தாலியை அவமதிக்கவோ, விலக்கவோ வேண்டும் என்று வாதிடுவது, அதுவும் இந்து எதிர்ப்பாளர்கள் அவ்வாறு பேசுவது அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது. நமது இன்றைய இந்துக் கலாசாரம் என்பது பல நூற்றாண்டுகளாக பரிமணித்து பல்வேறு கூறுகளை இணைத்துத் தொகுத்து வளர்ந்திருப்பது. அதிலுள்ள நல்ல கூறுகளை, அவை பிற்காலத்தவையாக இருந்தாலும் ஏற்பதும், தீய கூறுகள் பழமையானதாக இருந்தாலும் நிராகரிப்பதுமே ஆரோக்கியமான வழிமுறையாகும். இந்து மதத்தின் டி.என்.ஏவிலேயே இந்த இயைபுத் தன்மை (adaptability) உள்ளது.

மேலும் பொதுயுகம் 5-6ம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட பல நூல்களில் தாலி / மங்கல நாண் பற்றிக் குறிப்புகள் உள்ளன. லலிதா சகஸ்ர நாமத்தில் “காமேஸ்வரன் கட்டிய மங்கல நாண் அழகு செய்யும் கழுத்துடையவள்” (காமேஶ ப³த்³த⁴ மாங்க³ல்ய ஸூத்ர ஶோபி⁴த கந்த⁴ரா) என்றே ஒரு திருப்பெயர் உண்டு. “மன்றின் மணி விளக்கெனலா மருவு முக நகை போற்றி – ஒன்றிய மங்கல நாணின் ஒளி போற்றி” என்பது சிவகாமியம்மை துதி (காஞ்சிப் புராணம்). தாலியை இந்து சமூகம் திருமண உறவின் மங்கலச் சின்னமாக, புனிதமானதாக குறைந்தது 15 நூற்றாண்டுகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒன்றே அதை மதிப்பதற்கும் கட்டிக் காப்பதற்கும் போதுமானது. அதற்கு மேல் வேறு எந்த ஆதாரமும் தேவை இல்லை.

2. எதிர்மறை அம்சம் என்ற வகையில் கணவனை இழந்த பெண்கள் தாலியை சடங்குரீதியாக அறுப்பது என்பது மிகுந்த மனவேதனையை அளிப்பதாக உள்ளது என்று சொல்லப் படுகிறது. அது உண்மை தான். ஆனால் இறப்பு தொடர்பான எல்லா சடங்குகளுமே அந்த வகையானவை தான்; உற்றவரின் மரணம் என்ற மாபெரும் இழப்பை சகித்துக் கொண்டு அதிலிருந்து படிப்படியாக மீண்டு வர உளவியல் ரீதியாக மக்களைப் பக்குவப் படுத்துபவை அவை. அந்த சடங்குகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான் அவற்றை செய்கிறார்கள். கட்டாயமில்லை. மன முதிர்ச்சியுடன், புரிந்துணர்வுடன் அவற்றை அணுக வேண்டும்.

கசந்து போன திருமண உறவில், பிரிந்து வாழும் பெண் ஏன் அனாவசியமாக தாலியை சுமக்க வேண்டும் என்று கேட்கப் படுகிறது. அந்த சூழலில் தாலியை அணிவதும் விலக்குவதும் சம்பந்தப் பட்ட பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அதில் எந்த விதக் கட்டாயமும் இருக்கக் கூடாது, நடைமுறையில் அப்படி இருப்பதாகவும் தெரியவில்லை.

இந்த எதிர்மறை அம்சங்களைக் காரணமாகக் காட்டி, தாலி என்ற மங்கலச் சின்னத்தையே ஒட்டுமொத்தமாக மறுதலிப்பது தர்க்கபூர்வமானது அல்ல. இத்தகைய வாதத்தை வைத்து அறிவியலை, கல்வியை, ஜனநாயகத்தை எல்லாவற்றையுமே மறுதலித்து விட முடியும்.

3. நமது சமுதாயம் தனது விருப்பதற்குரிய மரபுகளைக் கூட காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற பல மாறுதல்களுடன் தான் கடைப்பிடித்து வருகிறது. தாலிக்கும் அது பொருந்தும். மஞ்சள் கயிறு, சங்கிலி, தாழ்வடம் என்று பலவிதங்களில் கோர்த்து இந்துப் பெண்கள் மங்கல நாணை அணிகிறார்கள். இந்த அணிகலன் சிறியதாக கழுத்தில் அணியப் படுகிறதே அன்றி இஸ்லாமியப் பெண்களின் கருப்பு பர்தாக்கள் போல நடைமுறையில் பெண்களின் ஆரோக்கியத்திலோ, அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதிலோ அல்லது பணிச்சூழலிலோ எந்த விதமான இடையூறுகளையும், தேவையற்ற கவன ஈர்ப்புகளையும் ஏற்படுத்துவதில்லை.

எனவே தாலியின் மீது அநாவசிய வெறுப்பை உருவாக்குவது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப் படும் வெறுப்புணர்வுப் பிரசாரம் என்றே கருத இடமிருக்கிறது.

நிற்க.

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது நடந்த அதிபயங்கரமான “குண்டுவெடிப்பு தாக்குதல்” இன்றைய தி கிண்டுவின் எல்லா தேசிய பதிப்புகளிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. முதல் பக்கத்தில் பாதிக்கு செய்தி, ஒரு தலையங்கம், நடுவில் ஒரு முழுப் பக்கதிற்கு வழக்கமான தி கிண்டு பாணி மசமச வளவளா கட்டுரைகள்.. அலுவலக காம்பவுண்டில் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்தாத பட்டாசு சத்தம் கேட்டு ராத்திரி ஐயோ அம்மா என்று திடுக்கிட்டு எழுந்த வாட்ச்மேன்களின் பெயர்களைக் கூட முதல் பக்கத்தில் போட்டு செய்தி ஊடக வரலாற்றில் புதிய புர்ச்சியை செய்து விட்டிருக்கிறது தி கிண்டு.

இந்த “தாலி தேவையா” கழிசடை விவாதம் “புதிய தலைமுறை”யின் ஒரு மூன்றாந்தரமான பரபரப்பு உத்தி. அதை இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கருத்தியல் ரீதியாக கண்டனம் செய்வது மிகச் சரியான வழிமுறை. அதோடு, அந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர்களிடம் நேரடியாகப் பேசி இதனால் அவர்கள் பொது மக்களிடத்தில் மதிப்பிழப்பது பற்றி எச்சரிக்க வேண்டும்; மீறினால் அவர்களது தயாரிப்புகளைப் புறக்கணிக்கக் கோரி பிரசாரம் செய்யவும் வேண்டும்.

ஒரு பம்மாத்து டிவி நிகழ்ச்சிக்கு எதிராக சில லெட்டர்பேடு இந்துப் பெயர்தாங்கி இயக்கக் கோமாளிகள் வீராவேசமாக “வெடித்து” கிளம்புவதே பெரிய காமெடி என்றால் புதிய தலைமுறை, தி கிண்டு போன்ற ஊடகக் கோமாளிக் கயவர்கள் அதை முன்வைத்து நடத்தும் கூத்துகள் அதைவிடப் பெரிய காமெடியாக இருக்கின்றன.

islam_jihad_burqa_women_slaveryஒரு சார்லி ஹெப்டோவாக ஆக முடியாவிட்டாலும், எப்படியாவது ஏதாவது கருத்து சுதந்திர தியாகியாக மாறியே தீரவேண்டும் என்று உங்களுக்கு உள்ளூர ஆசை இருக்கிறது என்பது புரிகிறது.. ஆனால் இதுவா அதற்கான வழி? அதற்கு நேரடியான எளிதான வழிகள் நிறைய இருக்கிறதே – பர்தா என்னும் இருட்சிறைக்குள் இஸ்லாமியப் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது, தமிழ் மரபின் நெறிகளுக்கு எதிராக ஹலால் என்ற குரூரமான முறையில் மிருகங்களை வெட்டி கசாப்பு போடுவது, பெண்ணுரிமைகள் அனைத்தையும் கடாசி விட்டு தலாக் முறையில் விவாகரத்து செய்வது – இந்த அதிமுக்கியமான விஷயங்களைப் பற்றி நீங்கள் ஏன் விவாதம் நடத்தி அதை ஒளிபரப்பக் கூடாது? குரானிய வசனங்களின் ரத்தக் களரியைப் பற்றி, இஸ்லாமிய வரலாற்றின் கொள்ளைகளை, குரூரங்களை, வன்புணர்வுகளைப் பற்றி ஏன் நிகழ்ச்சிகள் தயாரிக்கக் கூடாது?

மேற்சொன்னவற்றைச் செய்யுங்கள். உடனடியாக நீங்கள் விரும்பியது நடக்க மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்போது அதற்கான தகுதியும் கூட உங்களுக்கு வந்ததாக ஆகும். அட, அவ்வளவு பெரிய கருத்து சுதந்திர வீரப் புகழுக்காக சில அடிகளையும் உதைகளையும் வெட்டுகளையும், சில உண்மையான சின்ன குண்டுவெடிப்புகளையும் கூட உங்களால் சகிக்க முடியாதா என்ன?

அதை விட்டுவிட்டு தாலியை அவமதிக்கத் துடிக்கிறீர்களே தறுதலைகளே – உங்களுக்கு வெட்கமாயில்லையா? தமிழகத்தில் பூ விற்கும் பெண்கள் முதல் புகழின் உச்சியில் இருக்கும் உயரதிகாரிகள் வரை மதித்து அணியும் மங்கலச் சின்னமான தாலி. தங்கள் உழைப்பிலும் பண்பிலும் உண்மையாக நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்கள் மதித்து அணியும் தாலி. கட்டாயத்தின் பேரில் அல்ல, உள்ளார்ந்த அன்பினாலும், பாசத்தினாலும் கலாசார உணர்வாலுமே உந்தப் பட்டு தமிழ்ப் பெண்கள் மனமுவந்து அணியும் ஒரு அணிகலன். அது *அவசியமா* என்று கேட்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள்? தாலியைப் போன்ற ஒரு பண்பாட்டு அடையாளத்தை அருவருக்கத் தக்க வகையில் பொது நிகழ்ச்சியில் அவமதிப்பதன் மூலம் என்ன பெரிய எழவுப் புரட்சியைக் கொண்டு வரப் போகிறீர்கள்?

உங்கள் ஊடக போலித் தனத்தின் அவலட்சணத்தைப் பார்த்து ஊரும் உலகமும் சிரிக்கிறது. அதையாவது உணருங்கள் அறிவிலிகளே.

************

 நம்பி நாராயணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில்:

இந்த டிபன் பாக்ஸ் குண்டு வழக்கில் தற்போது சரணடந்து கைதாகி இருக்கும் ஜெயம் பாண்டியனின் பின்புலம் பற்பல சந்தேகங்களை எழுப்பி யுள்ளது. இந்த நபர் கோவை பெரியகடை வீதியில் உள்ள சான்மா காம்ப்ளெக்ஸ் இல் ஜெயம் டிவி என்கிற பெயரில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்தி வந்தவர். அரசுக்கு செலுத்த வேண்டிய சுமார் 25 லட்சம் ரூபாயை செலுத்தாமல் டிவியை பூட்டி கொண்டு தலைமறைவானவர். தற்போது சென்னை கோயம்பேட்டில் ஜெயம் டிராவல்ஸ் என்ற நிறுவனம் நடத்திவருபவர். இவர் இல்லாத கட்சிகளே இல்லை எனலாம். திமுகவில் இருந்திருக்கிறார். பிறகு நாம் தமிழர் கட்சியில் இணைந்து மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்திருக்கிறார். அதன்பின் இந்து மக்கள் கட்சியில் பணியாற்றிவந்துள்ளார். இவரது இந்து இளைஞர் சேனா துவக்கப்பட்டு மூன்று மாதங்களே ஆகின்றன. யாருடைய பின் புலத்தில் இவர் இந்த இயக்கத்தைத் துவக்கினார் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

சம்பவம் நடந்து ஏழு மணிநேரத்தில் இவர் மதுரையில் சரண் அடைந்து இருப்பது சந்தேகம் வருகிறது. தனது இயக்கத்தின் பெயர் குண்டு வெடிப்பிற்குக் காரணம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தான் மதுரையில் சரணடந்ததாக இவர் தெரிவிப்பது ஆச்சர்யமாக உள்ளது. எங்கே எப்போது யாரால் அப்படி அறிவிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இவரது கோயம்பேடு அலுவலத்தில் இருந்த ஐவரும் கூட கைதாகியுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கையோடு பிரச்சனை முடிந்ததாகக் கருத இடமில்லை. காரணம் இதில் அடங்கியுள்ள மர்மங்களும் சந்தேகங்களும் தான்.. தற்போது பிரச்சனையில் நான்கு தரப்பினர் உள்ளனர். முதலாவது, 2000 தொலைபேசி எதிர்ப்புகளுக்குப் பிறகும், முக்கிய ஹிந்துத்வ பிரமுகர்களின் வேண்டுதலுக்குப் பிறகும் நிகழ்ச்சியை நடத்துவது என பிடிவாதமாய் இருந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி. இரண்டாவது இவர்களின் உணர்வுகளை மதிக்காத போக்கால் வெகுண்டு எழுந்த ஹிந்துத்வ இயக்கங்கள். மூன்றாவது காவல்த்துறை. நானகாவது இந்த நிகழ்வுகளால் குளிர்காய நினைக்கும் பல மதவாத வகுப்புவாத இனவாத அமைப்புகள். இந்த நால்வரில் காவல்த்துறை மீது புதியதலைமுறை தனது ஊடகவலிமையால் தாக்குதல் செய்ய காவல்த்துறையும் நிலை தடுமாறி தேவையற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இரண்டாவதான, நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த முக்கிய ஹிந்து இயக்கம், ஒரு சாதாரண எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏதோ ஒரு மாபெரும் தாக்குதல் போன்று நாடகமாடி மக்கள் அரங்கில் அரேங்கேற்றிவிட்ட புதியதலைமுறையின் பொய் பிரசாரத்தை எப்படி எதிர் கொள்வது என திட்டமிட்டு வருகிறது. ஹிந்து பரிவார் இயக்கங்கள் என்றுமே வன்முறைகளில் ஈடுபட்டதில்லை என்பதுதான் உண்மையான வரலாறு. இதுவரை காங்கிரஸ் தலைமையில் இதர சிறுபாண்மை ஆதரவு ஹிந்து விரோத கட்சிகளால் புனையப்பட்ட ” ஹிந்து பயங்கரவாதம் ” என்ற சொல் எங்குமே நீடித்த வெற்றி பெறவில்லை. ஆக, மொத்த சந்தேகங்களும் மூன்றாவதும் நான்காவதுமான புதியதலைமுறை மீதும், இச்சம்பவங்களால் குளிர்காய நினைக்கும் மதவாத வகுப்புவாத இயங்கங்கள் மீதும் தான் படிகின்றன.

அது எப்படி புதிய தலைமுறையே அப்படி ஓர் காரியம் செய்ய முனையும், இதர கட்சிகள் அதற்கு உடன்பட முடியும் என்ற கேள்வி எழுவது நியாயம்தான். ஆனால் சமீபத்திய ஹிந்துத்வ எதிர்ப்பு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் செயல்களும், அவற்றிற்கு ஆதரவாக பல ஊடகங்கள் சதி செய்து வந்ததும், வருவதுமான வரலாறு இந்த ஐய்யபாடுகளில் உள்ள நியாயத்தை உணர்த்தும்.

 (தொடரும்)

அடுத்த பகுதி –  ‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா?

38 Replies to “‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்””

  1. “தினத்தந்தி” தொலைக்காட்சியில் பாண்டே என்பவர் இல. கணேசனை நேற்று பேட்டி கண்டார். இந்த தாலிப் பிரச்சனை குறித்தும், ஒரு தொலைகாட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்தும் விவாதம். மற்ற கட்சி தலைவர்களுடன் பேசும்போது அடக்கமாகவும் பணிவாகவும் பேசும் இந்த பாண்டே இல.கணேசனுடன் பேசும்போது அதிகார தோரணையுடனும், ஆணவத்துடனும், ஆத்திரமூட்டம் விதமாகவும், ஒரு காவல் துறை அதிகாரி குற்றவாளிகளை விசாரிப்பது போன்ற தோரணையில் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். இல.கணேசன் அவருக்கே உரிய அடக்கமான முறையிலும், ஆணித்தரமாகவும் தனது கருத்துக்களை முன்வைத்த போதும், அவர் பதில் சொல்லி முடிப்பதற்குள் அவசரக்குடுக்கையாக அந்த பாண்டே தான் சொல்லியதையே திரும்பத் திரும்ப கேட்டு அவரை கடுப்பேற்ற முயன்றது தெரிந்தது. இதில் அந்த பாண்டேயின் நோக்கம், பா.ஜ.க.காரர்கள் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்றோ அல்லது, இல கணேசன் போன்றவர்கள் தன்னை எதிர்த்துக் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்றோ அலட்சிய பாவம் தெரிந்தது. இந்த பாண்டே போன்றவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் பா.ஜ.க.தலைவர்கள் பதிலளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, பாண்டே எனும் நபரின் அதிகப்பிரசங்கம் தொடரக்கூடாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க. அலுவலகம் முன்பு தி.மு.க. முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம் ஜனநாயக முறையிலான எதிர்ப்புதானே என்று கோணல் கட்சி பேசினார் பாண்டே. ஆனால் இல.கணேசன் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை குறை சொல்லவில்லை, ஆனால் அவர்கள் கல் எடுத்து வீசி வன்முறையில் ஈடுபட்டதையும், கொடிக்கம்பத்தைப் பிடுங்கி கட்டடத்துக்குள் வீசியதையும் இவர் சொல்ல முனைந்த போது பதில் சொல்ல வொட்டாமல் பாண்டே குறுக்கே புகுந்தது அதிகப் பிரசங்கத்தனம், தவறை மறைக்கச் செய்த நாடகம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  2. முன்பு ஒருமுறை விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் இதே தாலியை வைத்து பெரிய ‘அறிவுஜீவி’ விவாதத்தை நடத்தினார். கருப்புச்சட்டை இயக்கத்தைச் சார்ந்த சில பெண்களை நிகழ்ச்சியின் போது தாலியை அறுத்து எறியும் படியெல்லாம் காட்சிகளை உருவாக்கியிருந்தார். நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர்தான் இந்து இயக்கங்கள் சார்பில் விஜய் டிவிக்கு கண்டனம் தெரிவித்தனர். பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு வருத்தம் கூட விஜய் டிவி தெரிவிக்கவில்லை.

    அதே சமயம் சிறிது நாட்களுக்குப் பின்னர் ‘இஸ்லாத்தில் பர்தா வேண்டுமா வேண்டமா’ என்று நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து அதன் டிரய்லர் காட்டி விளமபரம் வந்தவுடனேயே இஸ்லாமிய அமிப்புக்கள் விஜய் டிவியை கண்டித்து ஆர்பாட்டம் செய்து நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்து விட்டனர்.

  3. இதோ என் கருத்துக்கள்:

    போனவாரம் ஹானஸ்ட் மேன் இந்து முன்னணி புதிய தலைமுறை குண்டுபோடவேண்டும் என்ற கருத்தை அனுமதித்து ஜனநாயக உரிமை நிலைநாட்டிய நீங்கள் அது தவறு; அதை இந்துமதத்தைத் தீவிர மதமாக்கிவிடும் என்று சொன்ன என் கருத்தை ஏன் நிறுத்தினீர்கள்? புதிய தலைமுறை நடத்துபவரின் குடும்பத்துப் பெண்களைப்பற்றியும் இழுத்த்ப்பேசியிருந்தாரே எப்படி அனுமதித்திர்கள்?

    ஆக, நாகரிமாக எழுதப்படும் கருத்துக்களுக்கு ஜன்நாயக உரிமைகிடையாது; தீவிரவிதமாக எழுதப்படும் அநாகரீக கருத்துக்களுக்கு அவ்வுரிமை. இத்தனைக்கும் இக்கட்டுரையின் உங்கள் முன்னுரையில் என் கருத்தைத்தானே வழிமொழிந்திருக்கிறீர்கள்? அதாவது வன்முறை தவறே என்பதை.

    அடுத்து ஜடாயுக்கு என்பதில்:

    அடாப்டபிலிட்டி என்கிறீர்கள்; டி என் ஏயில் இருக்கிறதென்கிறீர்கள்! பின்னர் அழகாக 3 மறுமொழிகளை வைத்துவிட்டுப் பின்னர் நிற்க என்று போட்டு எழுதுவது முதலில் சொன்னவற்றைத் தாறுமாறாக்குகிறதே?

    ஜடாயுயின் சொற்கள் இவை:

    //மூன்றாதர விவாதம். கழிசடை உத்தி. பம்மாத்து பேர்வழிகள்; தறுதலைகள்; விளம்பரதாரிகளிடம் நேரடியாகப்பேச வேண்டும். அவர்கள் பொருட்களை நிராகரிக்கவேண்டும். சின்ன குண்டுவெடிப்புக்களைக் கூட தாங்க முடியாதா? உங்களுக்கு வெட்கமாயில்லை? ஊர் சிரிக்கிறது//

    இவையெல்லாம் குண்டுபோட்டவன் சொன்ன அதே சொற்களே. அவனுக்கும் உங்களுக்கும் வேறுபாடில்லை. அவன் குண்டுபோட்டான்; நீங்கள் போடவில்லை எனபது மட்டுமே வேறுபாடு.

    அடாப்பபிலிட்டு, டி என் ஏ என்பது இவ்விவாதத்தை அனுமதிப்பது, நாலு பேர் உட்கார்ந்து அவர்கள் விரும்பியவண்ணம் பேசட்டும் என விடுவதே. அஃதை இகழ்வது அதைத் தடுப்பதற்குச் சமமாகும். பின்னென்ன டி என் ஏவில் இருக்கிறது என்ற பேச்சு?

    இசுலாமியரைப்பற்றி ஏன் பேசவில்லை? என்று திரும்பத்திரும்ப எல்லாருமே எழதுகிறார்கள். ஜடாயும் எழுதிவிட்டார். மக்களே தயவு செய்து ஒன்றை உணருங்கள். நீங்கள்தான் டி என் ஏ, அடாப்டபிலிட்டி என்கிறீர்கள்; அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் ஒரே பேச்சு: கூடவே கூடாது. எங்கள் மதத்தில் ஜன்நாயகத்தனத்துக்கு அனுமதியில்லை.

    நிலைமை இப்படியிருக்க எப்படி உங்களால், இசுலாமியரைப்பற்றி பேசுவார்களா என்று கேட்க முடிகிறது?

    (Edited and Published)

  4. இன்னொரு ஃபேஸ் புக் பகிரல் — ஸ்ரீ சாங்கிய ரிஷி என்ற அன்பர் பகிரல்

    தெரியாமத்தான் கேக்கிறேன்…

    பாரிவேந்தர் மகன் மதன் என்னை அழகான இளம்பெண்களை அழைத்து வருமாறு கூறினார் என்று புகார் அளித்த இந்திய ஜனனாயகக் கட்சியைச் சேர்ந்த திலகா என்ற பெண்ணின் புகாரைப் பிரசுரித்த ஏகலைவன் இதழின் மீதான தாக்குதல் எந்த வகை?

    நடிகை கனகா இறந்து விட்டார் என்ற தவறான தகவலை ஒளிபரப்பிய புதியதலைமுறை மீது புகார் கொடுத்தது யார்?

    விடுதலை சிறுத்தைகளுக்கு :

    திருமாவளவன் மீது பாலியல் புகார் அளித்த கவிதாவின் பேட்டியைப் பிரசுரித்த நெற்றிக்கண் பத்திரிக்கை மீதான தாக்குதலை நிகழ்த்தியது யார்?
    அந்த இதழ்கள் கடைக்கு விற்பனைக்கு வரக் கூடாது என்று பேரம் பேசியவர் யார்? வந்த இதழ்களை தீயிட்டுக் கொளுத்தியது யார்?

    பத்திரிக்கையாளர் சங்கத்துக்கு :
    பத்திரிக்கையாளர் போர்வையில் இருந்த கவின் மலர் நெற்றிக் கண் நிருபரைத் தொலைபேசியில் அழைத்து, இது வெளிவரக் கூடாது என்று மிரட்டவில்லையா? அது உங்களுக்குத் தெரியாதா?

    இந்த செய்தியை வெளியிட்ட தினமலர் பத்திரிக்கை அலுவலகத்தை அடித்து நொறுக்கியது யார்?

    கம்யூனிஸ்ட்டுகளுக்கு :

    தோழர் வரதராசனைக் தற்கொலைக்கு தூண்டி அனாதையாக ஏரியில் மிதந்த செய்தியை ஒளிபரப்பியதற்காக மக்கள் தொலைக்காட்சியை அடித்து நொறுக்கிய சமூக விரோத கம்யூனிஸ்ட்டுகள் யார்?

    அதிமுகவினருக்கு :

    நக்கீரன் பத்திரிக்கையின் கட்டுரைக்காக, நக்கீரன் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது யார்?

    திமுகவினருக்கு :

    தினகரன் எரிப்பு சம்பவத்தில் மூன்று பேரை உயிரோடு கொளுத்தியது யார்?

    விகடன் செய்திக்காக விகடன் மீதான தாக்குதலை செய்தது யார்?

    ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு :

    சிபிஐ ரெய்ட் விடுவேன் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சியை கேமரா முன்பு மிரட்டியது யார் சார்?

    இதெல்லாம் சும்மா பொது அறிவை வளர்த்துக் கொள்ளவே கேட்கிறேன்.

    அப்புறம்…சொல்ல மறந்த்துட்டேன்

    இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது 🙂 🙂 🙂 🙂

  5. I think there is a big conspiracy brewing to topple Modi’s govt. Just read this report from Reuters https://week.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/theWeekContent.do?BV_ID=@@@&contentId=18552695&programId=1073754900 – Christians say under siege in Modi’s India after rape, attacks. What has Modi got to do with a rape/church attach in West Bengal? The news media in India are controlled by foreign elements and are hell bent upon in bringing down the BJP govt. Please note that there are no problems in BJP ruled states. All these problems are in the states ruled by the so-called secular parties. BJP should ensure that these news media don’t get government advertisements and they should go out of business. These media houses are like worms in stool and have no qualms in destroying India just for a few pieces of bread crumbs. Testing times for Modi. God has to be with him to save India.

  6. Although i disregard with puthiya thalaimurai for their insensitivity an attack is no means of snuffing out anyone’s views.

  7. //இசுலாமியரைப்பற்றி ஏன் பேசவில்லை? என்று திரும்பத்திரும்ப எல்லாருமே எழதுகிறார்கள். ஜடாயும் எழுதிவிட்டார். மக்களே தயவு செய்து ஒன்றை உணருங்கள். நீங்கள்தான் டி என் ஏ, அடாப்டபிலிட்டி என்கிறீர்கள்; அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் ஒரே பேச்சு: கூடவே கூடாது. எங்கள் மதத்தில் ஜன்நாயகத்தனத்துக்கு அனுமதியில்லை.

    நிலைமை இப்படியிருக்க எப்படி உங்களால், இசுலாமியரைப்பற்றி பேசுவார்களா என்று கேட்க முடிகிறது?//

    ஏங்க BS நாங்க என்ன சவூதி யில் இருந்து கொண்ட கேட்கிறோம். இந்தியாவில் இருந்துகொண்டுதானே கேட்கிறோம். சரி வேண்டாங்க அவங்களை விட்டு விடுவோம். இந்த தாலி விவாதத்துக்கு தமிழ் நட்டு (தாலி அணியும் ) கிறிஸ்தவர்களையும் அழைத்துப் பேசலாமே.

    இந்தியா ஜன நாயக நாடு. அப்படிப்பட்ட நாட்டிலே அது என்ன இந்து மதம் என்றால் செகுலர் கரண்டி. மற்ற மதங்க என்றால் //எங்கள் மதத்தில் ஜன்நாயகத்தனத்துக்கு அனுமதியில்லை.// ???

  8. BS

    //அடாப்டபிலிட்டி என்கிறீர்கள்; டி என் ஏயில் இருக்கிறதென்கிறீர்கள்! பின்னர் அழகாக 3 மறுமொழிகளை வைத்துவிட்டுப் பின்னர் நிற்க என்று போட்டு எழுதுவது முதலில் சொன்னவற்றைத் தாறுமாறாக்குகிறதே?//

    பஸ்ஸில் பிரயாணம் செய்கிறோம். ஒரு வயதான நபர் வருகிறார். எழுந்து இடம் கொடுக்கிறோம். இப்போது உங்கள் கூற்றுப் படி எந்த பஸ்சிலும் நாம் உட்காந்து செல்லக் கூடாது இனிமேல். ஏன் ? அதான் முன்பு ஒரு தரம் இடம் கொடுத்தாயே !.

    இப்படிதான் விட்டுக் கொடுத்தோம் – இன்று கத்தியாய் மாறி இருக்கிறது. இன்று உலகத்தில் இந்து மதம் இருக்கின்ற ஒரே நாடு பாரதம். இதைக் கெடுக்கத்தான் செகுலர் மூடர்கள் செய்கிறார்கள் என்று மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டனர்.

    இன்னொரு விஷயம். இறை மறுப்புக் கொள்கையுடன் வாழ முடியும் என்றால் அது இன்று இரண்டு நாடுகளில்தான் உண்டு. ஒன்று அமெரிக்கா, இன்னொன்று நம் நாடு. அமெரிக்கா எந்த மதத்தை வேண்டுமானாலும் பின் பற்றட்டும். ஒருவன் நாத்திகனாக இருக்கவேண்டுமானால் அதற்கு இந்த நாட்டில் சனாதன தர்மம் கண்டிப்பாக அழியக்கூடாது.

  9. //ஏங்க BS நாங்க என்ன சவூதி யில் இருந்து கொண்ட கேட்கிறோம். இந்தியாவில் இருந்துகொண்டுதானே கேட்கிறோம். சரி வேண்டாங்க அவங்களை விட்டு விடுவோம். இந்த தாலி விவாதத்துக்கு தமிழ் நட்டு (தாலி அணியும் ) கிறிஸ்தவர்களையும் அழைத்துப் பேசலாமே. இந்தியா ஜன நாயக நாடு. அப்படிப்பட்ட நாட்டிலே அது என்ன இந்து மதம் என்றால் செகுலர் கரண்டி. மற்ற மதங்க என்றால் //எங்கள் மதத்தில் ஜன்நாயகத்தனத்துக்கு அனுமதியில்லை.//

    முதலில் //நாங்க// //எங்கள் மதம்//என்ற பேச்சு முறையைக் கைவிடப்பழகுங்கள். அது உங்களை ஒரு இசுலாமியத்தீவிரவாதி போல ஆக்கிவிடும். பின் எப்படி நீங்கள் இந்துவாக முடியும்?

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்து-கிருத்துவ கலப்பு மணங்கள் ஏராளம். கிருத்துவர்கள் லிபரல்; இந்துக்களைப்போல. எனவே இந்துப்பெயர்களையும் இந்துமதச்சடங்குகளையும் தாராளமாக ஏற்று வாழ்கிறார்கள். இசுலாமியர் வேறு. அவர்கள் இந்துக்களிடம் கலப்பதில்லை. எனினும் உடனுறைந்து வாழ்வதால் சிலபழக்கங்கள் ஒட்டும். அவை இன்றும் இசுலாமிய தலைவர்களால், தமிழ்நாட்டில் சுட்டிக்காட்டப்பட்டு தடுக்கப்படுகின்றன. பொட்டு வைத்த இசுலாமியப் பெண்ணைப் பார்க்க முடியாது. பொட்டு பூவோடு எல்லாக்கிருத்துவப்பெண்களும் இருப்பார்கள். அவர்கள் தாலி போடுவதும் ஒரு இந்துப்பெண் போடுவதும் ஒன்றாகாது. அவர்களுக்கு உடனுறை பழக்க தோஷ‌ம். இந்துக்களுக்கு மதத்தால் வைக்கப்பட்ட சடங்கு. ஐயர் வந்து கிருத்துவ கலியாணத்தில் தாலியெடுத்துக்கொடுக்க மாட்டார். தேவாலாயத்தில் மோதிரம்தான் மாற்றுவர். இதை மறுக்க முடியுமா? எனவே கிருத்துவரை விட்டுவிட்டு, இசுலாமியருக்கே வாருங்கள்.

    செகுலர் என்று பேசிவிட்டால், கதை மாறிவிடும். அதை வேறிடத்தில் பேசிக்கொள்ளுங்கள். இங்கு நான் வைக்கும் விமர்சனம் ஒன்றே. அதாவது இசுலாமியருக்கு அடாப்டபிலிடியோ, டி என் ஏவில் இருக்கிறது என்றெல்லாம் கிடையாது. ஜனநாயக நாடோ, சர்வாதிகார நாடோ, எங்கு இசுலாமியர் வதிந்தாலும் அவர்கள் தம் மதக்கருத்தை விட்டுக்கொடுக்க மாட்டார். நீங்கள் சொன்னதுபோல நாத்திகருக்கு இந்துமதத்தில் இடமுண்டு. இசுலாமில் கிடையாது என்பது ஒரு எடுத்துக்காட்டு உங்களுக்கு. கீதையை கிருஸ்ணன் சொல்லவே இல்லையென்று பேசலாம். குரானை முகமதுநபிக்கு அல்லா சொல்லவே இல்லை என்று அங்கு பேசமுடியவே முடியாது. பேசினால் அவன் இசுலாமியன் இல்லை என்பது அவர்கள் ஒரே அசைக்க முடியா கருத்து.

    எனவே அவர்களுக்குத்தான் அடிப்படை வாதம். உங்களுக்கில்லை. ஆனால் ஜடாயு முதலில் அடாப்டபிலிடி, டி என் ஏ என்று பேசிவிட்டு பின்னர் அடிப்படை வாதியைப்போல தாலி பற்றிய விவாதத்தையும் விவாதிப்போரையும் இழிசொற்களால் தாக்குகிறார்.

    ஒன்று, தீவிர இந்துமதம் என்று ஒன்றை உருவாக்கிக்கொண்டு இசுலாமியரைப்போல வாழுங்கள். சரியாகும். அடாப்டபிலிடி, டி என் ஏ, எங்கள் மதத்தில் நாத்திகத்துக்கும் இடமுண்டு என்று பேசினால், தாலி பற்றிய விவாதிப்போரைத் தடுக்கக்கூடாது. குண்டு வீசியோ, அல்லது இழிசொற்களால் அவர்களைத்திட்டியோ.

    இந்துமதத்தில் பல்வேறு மாற்றுக்கருத்துக்களுக்கும் விவாதங்களுக்கும் இடம் கிடையா என்றால் எப்படி டி என் ஏவில் இருக்கிறது எனலாம்? ஓர் இந்து கண்டிப்பாக தாலிபற்றிய விவாதத்தைக் கண்டு சீறமாட்டான்.

  10. BS,

    ஜடாயு சொன்ன அடாப்டபிலிட்டி என்பது – இந்து மரபை (மதம் என்ற சொல்லை கவனமாக தவிர்க்கிறேன்) தொடர்ச்சியான விவாத – உரையாடல் களனுக்குள் வைத்திருக்கும் முகமாக செய்யப்படும் நேரிடையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பானது. அப்படி தொடர்ச்சியாக ஏற்றுக்கொண்டு வருவதன் மூலம் இந்து மரபு தன்னை சுத்திகரித்துக்கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் வருகிறது. அதற்கான framework இந்து மரபுக்குள் பலகாலமாக இருந்துகொண்டே வந்திருக்கிறது.

    ஆனால் ….

    மேற்கண்ட ”புதிய தறுதலை” தொலைக்காட்சிக்காரர்களோ ஆண்டனி நீயா நானா நடத்தும் (அதிலும் பாருங்கள், நிகழ்ச்சியின் மூலவரான கிறித்துவர் பின்னணியில் இருக்க, ஒரு இந்துவை முன்னிறுத்தி நிகழ்ச்சியை நடத்துவதன் சதியை) விஜய் டி.வி.காரர்களோ, இந்து வெறுப்பை உமிழ்ந்தே ”பொழப்பு” நடத்துபவர்களான சன் டி.வி.காரர்களோ செய்வது இது அல்ல. இந்து மரபை பிற்போக்குத்தனமானது – காட்டுமிராண்டித்தனமானது என்றெல்லாம் இளைய தலைமுறை மனதில் நஞ்சென விதைத்து அவர்களை இந்து மரபிலிருந்து விலகி இருக்கச்செய்யும் மாஆஆபெரும் சதி. எப்படி ஆங்கிலேயர்கள் நமது மனதில் நமது பாரம்பர்யத்தைக்குறித்த அசூயை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விதைத்து உளவியல் ரீதியாக முதுகெலும்பற்றவர்களாக்கினார்களோ அதே போல மத / ஆன்மீக / பண்பாட்டு ரீதியில் நம்மை வறியவர்களாக உணரச்செய்யத்துடிக்கும் அயோக்கியத்தனம் – கலாச்சார பண்பாட்டு சுரண்டல்.

    தாலி என்றல்ல, எல்லா இனங்களும் இப்படி தன்னடையாளங்களாக நிறைய குறியீடுகளை கொண்டிருக்கும். இதை கேள்விக்குள்ளாக்குவது என்பது நேர்மறையானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும். தாலி என்பதன் தொடக்கம், அது இலக்கியத்தில் எப்படியெல்லாம் இடம்பெற்றிருக்கிறது, அது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், அதன் மீதான ஒவ்வொரு மக்கள் குழுவினரது புரிதல், அறியாமை, பார்வை என ஒரு பரந்த தளத்தில் உரையாட இயலும். ஆனால் இந்த அயோக்கியர்கள் செய்வது அதல்ல. ‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி’ என்ற மரபின் நீட்சியே இவர்களது செயல்.

    இது போன்ற அழிவு சக்திகளுக்கு காதுகளுக்கிடையே இளித்துக்கொண்டு மல்லாந்து படுத்து நான்கு கால்களையும் தூக்கிக்காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பீராயின், மன்னிக்கவும், அதல்ல அடாப்டபிலிட்டி என்பதே எனது பதில்.

    மற்ற மதங்களில் ஜனநாயகம் இல்லை என்பதற்காக – இந்து மரபில் நிறுவனத்துவம் இல்லை என்பது தமக்கு அனுகூலமாக இருப்பதற்காக – இந்து மரபை எப்படி இழித்தாலும் (விமர்சித்தாலும் இல்லை, கவனிக்கவும்) கேட்பார் எவருமில்லை என்பதற்காக – இந்து மரபை அழிக்க நினைக்கும் கயவர்களை கண்டனம் செய்வது அடாப்டபிலிட்டிக்கு எதிரானதல்ல.

    சொல்லப்போனால் எங்கு ஜனநாயகம் இல்லையோ, எங்கு அடக்குமுறை உள்ளதோ, எங்கே தனி மனித உரிமைகள் மதிக்கப்படுகிறதோ அங்கேயல்லவா ஒரு ஊடகன் தனது எதிர்க்குரலை எழுப்பவேண்டும் ? அந்த அடக்குமுறையை – தனிமனித உரிமை மீறலை அல்லவா தோலுரித்துக்காட்டியிருக்கவேண்டும் ? அதல்லவா தான் வைத்திருக்கும் ஊடகத்திற்கு நீதி செய்யும் செயலாக இருக்கும் ? அதை விடுத்து, அவர்களைக்கண்டு மூத்திரம் விடும் தொடை நடுங்கிகள், சுய விமர்சனப்போக்கை தன்னகத்தே கொண்டிருக்கும் – மற்ற மதங்களுக்கிணையான அடக்குமுறையற்ற இந்து மரபை எதிர்த்து மீசை முறுக்கலாமா ? ஆபாசமில்லையா இது ?

    // நிலைமை இப்படியிருக்க எப்படி உங்களால், இசுலாமியரைப்பற்றி பேசுவார்களா என்று கேட்க முடிகிறது? //

    என்ன இது அபத்தம். நிலைமை இப்படி இருப்பதனால்தானே ஐயா ‘இஸ்லாமியரைப்பற்றி பேசுவார்களா’ என்ற கேள்வியே வருகிறது ? இஸ்லாமியரும் விமர்சனத்தை அங்கீகரிப்பவர்களாக இருந்து, ஊடகர்களும் அவர்கள் மீதான விமர்சனக்குரலை எழுப்புபவர்களாக இருந்திருந்தால் (சூரியன் மேற்கே உதிப்பதற்கிணையான நிகழ்வல்லவா இது ?) இந்த கேள்விக்கே – ஏன், இந்த பதிவுக்கே கூட – தேவையிருந்திருக்காதே ?

    ’புதிய தறுதலைக்காரர்கள் ஜட்டி போடலாமா அல்லது கோமணம் மட்டும் அவர்களுக்கு போதுமா’ என்று பொதுமேடையில் விவாதித்தால், ‘அப்படியே ஐயா’ என்றா ஒப்புதல் அளிப்பார்கள் ?

  11. // எங்கே தனி மனித உரிமைகள் மதிக்கப்படுகிறதோ //

    மன்னிக்கவும், மேற்கண்ட வாக்கியம் “எங்கே தனி மனித உரிமைகள் மிதிக்கப்படுகிறதோ” என்று இருந்திருக்கவேண்டும்.

  12. எங்கள் மதத்தில் ஜனநாயகம் இல்லை ,அதற்கு மரியாதை இல்லை ‘என்பவர்கள் எதற்கு ?தேர்தல் நாளில் அந்த பாவ காரியத்தில் பங்கேற்க ,அத்தனையும் இழுத்து மூடிக்கொண்டாவது ,ஓட்டு போட 100 % தெருவுக்கு ,குஞ்சு ,குளுவான்கலோட்டு,வருகிறார்கள் ?

  13. முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இதெல்லாம் ஒரு பிழைக்கும் வழி. இவர்கிடம் ஒரே ஒரு சேனல்தான் இருக்கிறது. எனவே பகுத்தறிவு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இதுவே பத்திரிக்கையாய் இருந்தால் தாலி தேவையா என்று சீனியர், அப்போர்டார் போன்றவர்த்தில் விவாதித்துவிட்டு, சக்தி – பக்தி என்று இன்னொரு பத்திரிகை வைத்துக் கொண்டு அதில் காரடையான் நோன்பு மகிமை, சதி சாவித்திரி என்று எழுதி இரண்டு பக்கமும் கல்லா கட்டலாம். இவர்களை ignore செய்வதே சிறந்தது.

  14. அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

    \\ தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்து-கிருத்துவ கலப்பு மணங்கள் ஏராளம். கிருத்துவர்கள் லிபரல்; இந்துக்களைப்போல. எனவே இந்துப்பெயர்களையும் இந்துமதச்சடங்குகளையும் தாராளமாக ஏற்று வாழ்கிறார்கள் \\

    ப்ரச்சினை இந்துப்பெயர்களில் இல்லை. பாருங்கள் ஜோ அமலன் என்று பெயர் இருந்து விட்டால் என்ன? ஹிந்து மதத்தை தொடர்ந்து இழிவு செய்வது என்ற நிலைப்பாடும் வைஷ்ணவத்தை இழிவு செய்ய வேண்டும் என்ற உங்களது செயல்பாடுகளும் மாறுவதே இல்லை தானே…… சரி தானே.

    \\ இசுலாமியர் வேறு. அவர்கள் இந்துக்களிடம் கலப்பதில்லை. எனினும் உடனுறைந்து வாழ்வதால் சிலபழக்கங்கள் ஒட்டும் \\

    அப்படியே ஒட்டினாலும் அவை ஒட்டாதது போல பொது தளத்தில் முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கிகளும் வஹாபியர்களும் கருத்துப் பகிர்ந்தால் முடிந்து விட்டது ப்ரச்சினை.

    தமிழகத்தில் தர்க்காஹ் ஷெரீஃபுகளில் இஸ்லாமிய சஹோதரர்களே மிக அதிக வழிபாடு செய்கிறார்கள். ஹிந்துக்களும் கூட அங்கு வழிபடுவது உண்டு. ஆனால் முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கம் செய்ய வேண்டும் என்றால் அப்படியே ப்ளேட்டை மாற்றி தர்க்காவில் ஹிந்துக்களே வழிபாடு செய்கிறார்கள் என்றும் முஸ்லீம்கள் தர்க்காஹ் பக்கத்தில் கூட போவதில்லை என்றும் அடித்து விட வேண்டும். அதாவது தாங்கள் பொதுதளத்தில் தாங்கள் கருத்துக்களை உண்மைக்கு மாறாக அடித்து விடுவது போல.

    \\ பொட்டு வைத்த இசுலாமியப் பெண்ணைப் பார்க்க முடியாது. பொட்டு பூவோடு எல்லாக்கிருத்துவப்பெண்களும் இருப்பார்கள். \\

    உத்தர பாரதத்தில் (உ.பி. பீஹார்) பொட்டு மட்டும் என்ன வகிடு நிறைய சிந்தூரும் வைத்துக்கொண்ட பெண்டிரை பார்க்க முடியும். மேலே புர்க்காவும் கூட. அட புர்க்கா போட்ட பெண் தலையில் சிந்தூர் எப்படி என்று கேழ்ப்பீர்கள். கேழ்க்க வேண்டும். இங்கு ஆந்தி எனும் பெருங்காற்று அடிக்கையில் முகத்திறை விலகிய பல இஸ்லாமியப் பெண்டிர் நெற்றியில் பொட்டும் தலைவகிட்டில் சிந்தூரும் பார்க்க முடிந்தது.

    எமது இஸ்லாமிய சஹோதரர்களுடன் இது பற்றி வினவியதில் உத்தரபாரதத்தில் இது மிகவும் பொதுவாகக் காணப்படும் விஷயம் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

    ஒரேயடியாக ஸ்டீரியோடைப் செய்து உண்மை எனும் பூஷணிக்காயை கபள சோற்றில் மறைக்க விழைவது ……………. முனைந்து விதண்டா வாதம் செய்வது……….. விவாதத்தை வ்யாசத்தின் தலைப்பிலிருந்து திசை திருப்புவது………….. இதெல்லாம் ஜோவுக்கு அல்வா சாப்பிடுவது போல 🙂 🙂

    \\ ஒன்று, தீவிர இந்துமதம் என்று ஒன்றை உருவாக்கிக்கொண்டு இசுலாமியரைப்போல வாழுங்கள். சரியாகும். \\

    அதாவது ஆப்ரஹாமியர்கள் செய்வதைச் செய்து கொண்டிருப்பார்கள். ஹிந்துக்கள் எல்லாரும் குறட்டை விட்டுத் தூங்குங்கள். அவர்கள் வசதியாக மதம் மாற்றிக்கொண்டு போகட்டும் என்று நீங்கள் சொல்லவருவது உங்கள் உள்ளக்கிடக்கை தெளிவாகத் தெரிகிறது.

    இனவெறி ஈ.வெ.ரா பஜனை கோஷ்டியினராய் ஆதிக்க ஜாதிவெறியைப் பரப்பும் தேவரீர் தலித் சஹோதரர்களின் மேம்பாடு என்றெல்லாம் உடனே முதலைக்கண்ணீர் விட விழையாதீர்கள். ஈ.வெ.ரா பஜனையாளர்களுக்கும் தலித் முன்னேற்றத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஹிந்துத்வ இயக்கத்தினர் தலித் சஹோதரர்கள் மேம்பாட்டுக்காக நிச்சயமாகப் பணி புரிகிறார்கள். உடனே சந்தடி சாக்கில் ஹிந்துத்வ இயக்கங்கள் தலித் முன்னேற்றத்துக்காக ஏதும் செய்யாதது போல உங்களுடைய உபதேச மஞ்சரியைத் தொடங்கி விடுவீர்கள்.

    \\ அடாப்டபிலிடி, டி என் ஏ, எங்கள் மதத்தில் நாத்திகத்துக்கும் இடமுண்டு என்று பேசினால், தாலி பற்றிய விவாதிப்போரைத் தடுக்கக்கூடாது. குண்டு வீசியோ, அல்லது இழிசொற்களால் அவர்களைத்திட்டியோ. \\\

    அப்பட்டமான முகமூடி சுவிசேஷ அதிகப்ரசங்கம் என்றால் அது இதுதான். இதுவே தான்.

    முதலில் அங்கு வீசப்பட்டது பட்டாசு என்று தமிழக புலீஸ் சொன்னதாக செய்தி. சரிபார்க்கவும். பட்டாசை குண்டு என்று குண்டு சட்டியில் குதிரை ஓட்ட முகமூடி சுவிசேஷிகள் முனைவது ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    அப்படி டிபன் பாக்ஸில் பட்டாசு வீசிய குண்டர்களுக்கும் ஹிந்து இயக்கங்களுக்கும் லவலேசமும் சம்பந்தம் இல்லை என்று ஹிந்து இயக்கங்கள் அறிவித்த பின்னரும்………… பட்டாசு வீசியவர்களின் பின்னணி பற்றி இந்த வ்யாசத்திலும் இதற்கு முந்திய வ்யாசத்திலும் தகவல் பகிரப்பட்ட பின்னரும்…………… இவர்களுக்கும் ஹிந்து இயக்கங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது ருஜுவான பின்பும்………….. பட்டாசு வீசிய நபர்களை முறையாக சட்டத்தின் பாற்பட்டு தண்டிக்க வேண்டும் ஹிந்து இயக்கங்கள் கூறிய பின்னரும்…………….. ஹிந்து இயக்கங்கள் குண்டு வீசியதாக புளுகுக் கருத்து பகிர விழைவது………….. முனைந்து புளுக முனைவது…………… தேவரீர் முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கத்தில் நாட்டம் கொண்டதையே தெரிவிக்கிறது.

  15. //முதலில் //நாங்க// //எங்கள் மதம்//என்ற பேச்சு முறையைக் கைவிடப்பழகுங்கள். அது உங்களை ஒரு இசுலாமியத்தீவிரவாதி போல ஆக்கிவிடும். பின் எப்படி நீங்கள் இந்துவாக முடியும்?//

    அதாவது திட்டும்போது இந்து மதம் என்று சொல்லிகொள்ளலாம். ஆனால் திட்டு வாங்குகிறவர்கள் இந்து மதம் என்று சொல்லகூடாது.

    //தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்து-கிருத்துவ கலப்பு மணங்கள் ஏராளம். கிருத்துவர்கள்…….//

    இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அய்யர் எடுத்துக் கொடுக்காவிட்டாலென்ன தாலி தாலிதானே . அவர்களும் விவாததுக்கு வரவேற்கப்படவேண்டும் – என்று நான் கிறிஸ்தவர்களைக் கேட்க வில்லை, புதிய தலைமுறை டிவி ஐக் கேட்கிறேன்.

    //தாலி பற்றிய விவாதிப்போரைத் தடுக்கக்கூடாது//

    பர்தா அவசியமா என்ற விவாதத்தை மனத்திலும் நினைக்கக் கூடாது.

    //ஒன்று, தீவிர இந்துமதம் என்று ஒன்றை உருவாக்கிக்கொண்டு இசுலாமியரைப்போல வாழுங்கள். //

    ஹிந்த்துவ தீவிரவாதம் என்ற ஒரு வார்த்தை காங்கிரஸ் அரசு பின்பற்றிய ஒரு தேர்தல் உத்தி.அதையே நீங்கள் கூறுகிறீர்கள் அவ்வளவுதான்.

    //இந்துமதத்தில் பல்வேறு மாற்றுக்கருத்துக்களுக்கும் விவாதங்களுக்கும் இடம் கிடையா என்றால் எப்படி டி என் ஏவில் இருக்கிறது எனலாம்? ஓர் இந்து கண்டிப்பாக தாலிபற்றிய விவாதத்தைக் கண்டு சீறமாட்டான்.//

    ஔரங்கசீப் வரைப் பொறுத்துக் கொடுத்தான் இருந்தான். ஆனால் இன்றோ நடப்பது வேறு. திருப்பியும் சொல்கிறேன் இன்று ஆபத்து செகுலர் ஆசாமிகளால். அவர்கள் இன்று இருக்கின்ற அத்தனை மதங்களும் தேவை இல்லை என்று வாதாடினால் எங்களக்கு ஒரு பிரச்சினையும் இல்லை – சீறவும் மாட்டோம்.

    ஒன்றை சொல்லி இத்துடன் முடிக்கிறேன். அடாப்டபிலிடி என்பதற்கு அடிமைத்தனம் என்று அர்த்தம் அல்ல.

  16. Why puthiiya thalaimurai, almost all the TV channels are anti hindu. To some extent, Jaya TV is ok. Vijay TV in its weekly “Neeya Naana” programme takes several digs at hinduism. The director Anthony gives directions to Gopinath to ask questions demeaning Hinduism.

  17. குரானை முகமதுநபிக்கு அல்லா சொல்லவே இல்லை என்று அங்கு பேசமுடியவே முடியாது. பேசினால் அவன் இசுலாமியன் இல்லை என்பது அவர்கள் ஒரே அசைக்க முடியா கருத்து.

    BS,
    You forgot to add 1 thing. You will issues fatwas to anyone who criticizes islam & kill him.

  18. எல்லோரின் கருத்து மிக ஆழமான விமேர்சனங்கள் ஆக்கபூர்வ சிந்தனை கொண்டது நாம் இது போல் ஹிந்து மத சம்பிரதாயம், கலாச்சாரத்திற்கும் எதிரான பிற்போக்கு சிந்தனை வுடைய எதிர்மரையள்ளர்கலாய் வூடங்களை சட்டபூர்வமாகவும் ,ஹிந்து சமுகவாரியகவும் கண்டனம் தெரிவிப்பது மிக சரியானதே இது நம் பாரத பண்பாட்டை காக்கும் அற செயல் ஆகும் ஹரி ஓம் .

  19. Sanjyay!

    That is correct: the issue of instant fatwas and putting booty on the person’s head. In fact, that is what I have been pointing out here.

    Some fellows under Hindu label throw bombs on the TV house. Here, all except me write that we will object to such TV channels if they debate our religion. One has already written that bombing is correct. Jadayu abuses the channel using their rate Tamil.

    This indicates that both Muslims and Hindus (I don’t mean all, because myself a Hindu and like me, billions of Hindus live in India and abroad, who don’t want violence in the religion) are of the same kind. They differ only in strategies – the Muslims issue fatwas and these Hindus abuse and threaten like We can be silent spectators! and the like). Such Muslims and Hindus say that some of their own religious people who don’t support them are being used by the enemies of their religion.

    This is my only point here.

  20. //ஹிந்து இயக்கங்கள் குண்டு வீசியதாக புளுகுக் கருத்து பகிர விழைவது………….. முனைந்து புளுக முனைவது…………… தேவரீர் முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கத்தில் நாட்டம் கொண்டதையே தெரிவிக்கிறது.//

    Krishna Kumar!

    I read you today.

    If you object to throwing of bombs at the TV channel, you should object to the abusive language used against the Channel people by Jadavu in this article ? My point is that the throwers and people like Jadayu are same in thinking: to abuse and intimidate the people who discuss the issue. What is your point? Are they different?

    I condemned Honest Man for writing that Hindu Munnani should throw bombs at the channel? Where is your condemnation? What is your view of Rangan saying our silence is not to be mistaken for cowardice? What is your view?

    Do you want to stop all debates about Hindu religious issues in TV channels? If you do want, then, what is the difference between the fanatical muslims who issue fatwas on anyone who debate their religion in public and you?

  21. பீ எஸ்

    விஷயம் புரியாதது மாதிரியே பேசினால் அறிவு ஜீவி பட்டம் கிடைக்கும் என்று ஏன் அலைகிறீர்கள். உங்கள மாதிரி நிறைய பேர் திரிகிறார்கள்.

    விஷயம் இது தான் – ஊடகங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு ஹிந்துத்வத்தை மட்டும் நாசம் செய்ய வேலை செய்கிறார்கள். இதே ஊடங்களுக்கு துள்ளகனயோ அல்லேலூயா கூட்டத்தயோ கேட்க துப்பு இல்லை. இந்த ஊடகங்களுக்கு பின்னால் சுவிசேஷ பணம் விளையாடுகிறது. இதை தான் இங்கு மையமாக வைத்து எதிர்ப்பு தெரிவிக்க படுகிறது.

    விஷயம் இப்படி இருக்க நரி வேலை செய்பவர்கள் என்ன செய்வார்கள். ஜட்டயுவை பார் அவர் அப்படி பேசினார், கிருஷ்ணகுமாரை பார் அவர் இப்படி பேசினார். நீங்கள் எல்லாம் ஹிந்துத்துவத்திற்கு நன்மையா செய்கிறீர்கள். துலக்கன் தீவிரவாதி என்றால் நீங்களும் தீவிர வாதிதான். இதெல்லாம் கடைந்தெடுத்த அறிவு ஜீவிகள் வெகு காலமாக பேசிவருவது. ரொம்ப போர் அடிக்குது சார், கொஞ்சமாவது பேச்ச மாத்துங்க. புது யுக்திகலயாவது கையாளுங்கள் ப்ளீஸ்.

  22. பேரன்பிற்குரிய ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் சமூஹத்திற்கு

    அது எப்படி ஸ்வாமின் எத்தனை அவதாரம் மாறினாலும் இந்த விதண்டாவாதம் மட்டும் உங்கள விட்டு போகவே மாட்டேங்குது

    \\ If you object to throwing of bombs at the TV channel, \\

    குசும்பு தானே.

    நான் கண்டனம் செய்தது ……………. தொல்லைக்காட்சி சேனலில் வீசப்பட்டது பட்டாசு என்றிருக்க அதை குண்டு என்று புளுகுவதை………….***If you object to throwing boms at the TV Channel*** …………… என்ற வாசகத்தை நீங்கள் எழுதப்புகுவது………….. உங்களுடைய புளுகுமூட்டையை உதிர்த்துப்போட்டு அது புளுகு என்று பொது தளத்தில் வைத்த பின்னரும் ……………. பழைய புளுகையே எழுத விழைவது……….. தேவரீர் ………….. எந்த அவதாரத்தில் நேர்மையுடன் கருத்துப் பகிருவதாக உத்தேசம்?

    சட்டுபுட்டுனு அஜ்மல் லேடன் ராம் கான் (ஜோ அமலன் ரேயன் மாதிரிக்கா ஜக ஜகான்னு) என்று புது அவதாரம் எடுத்து தமிழ் ஹிந்து வாசகர்களை ஒரு வழி பண்ணுவீங்களா………….. அத விட்டு ஒரே பேர்லயே இம்சை செஞ்சுகிட்டு இருக்கீங்க …………… போரடிச்சுப் போச்சு.

    \\ you should object to the abusive language used against the Channel people by Jadavu in this article ? \\

    இல்லே ஸ்ரீமான் ஜடாயு மேல உங்களுக்கு என்ன அப்படி பாசமழை ஸ்வாமின். ஆங்க்லத்துல பேரக்கூட காவு வாங்குறீங்க. அந்த வொய்ய எடுத்துட்டு வி போட்டீங்க பாருங்க அங்க தான் நிக்குறீங்க.

    தப்புன்னாத் தான் தப்புன்னு சொல்லணும். சாத்வியம்மா சொன்ன பேச்சில தப்பு இல்லன்னு சொன்னார். தப்புன்னு தோணியதால் வெளிப்படையாக தப்புன்னு பகிர்ந்திருந்தேன்.

    இங்க அவரு அப்படி என்ன சொல்லிருக்கார் :-

    \\ புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது நடந்த அதிபயங்கரமான “குண்டுவெடிப்பு தாக்குதல்” இன்றைய தி கிண்டுவின் எல்லா தேசிய பதிப்புகளிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. \\ இந்த “தாலி தேவையா” கழிசடை விவாதம் “புதிய தலைமுறை”யின் ஒரு மூன்றாந்தரமான பரபரப்பு உத்தி. \\ ஒரு பம்மாத்து டிவி நிகழ்ச்சிக்கு எதிராக சில லெட்டர்பேடு இந்துப் பெயர்தாங்கி இயக்கக் கோமாளிகள் வீராவேசமாக “வெடித்து” கிளம்புவதே பெரிய காமெடி என்றால் புதிய தலைமுறை, தி கிண்டு போன்ற ஊடகக் கோமாளிக் கயவர்கள் அதை முன்வைத்து நடத்தும் கூத்துகள் அதைவிடப் பெரிய காமெடியாக இருக்கின்றன. \\

    பாம்பின கால் பாம்பறியும் இல்லயா ஜோ ஸ்வாமின். வெவகாரம் என்னன்னா நீங்க செய்யற விதண்டாவாதத்தையே விவாதம் என்று நீங்க நெனச்சு அவல நெனச்சு ஒரல இடிக்கறதால, தொல்லைக்காட்சியில்………….. குஜாலா…………… கத்தோ கத்துன்னு கத்தி………….. யார் சொல்றதையும் யாரும் கேக்கவே கேக்காது………….. எல்லாரும் சேந்து கூச்சல் போடுறத விவாதம்னு நீங்க துண்டு தாண்டி சத்யம் செய்யலாம். செவிப்பற நோவுற வாசகர்கள் யாரும் இந்த கண்றாவிக் கருமாந்தறத்த விவாதம்னு சொல்ல மாட்டாங்க.

    இன்னொன்னு அப்படியே தப்பித் தவறி கூச்சல் இல்லாது ஒன்னு ரெண்டு கருத்து காதில விழுந்து தொலச்சாலும்…………..ஹிந்து சார்பான கருத்துக்கள் என்றால்…………. ஒன்னு ஆங்கர் நடுவுல கர் புர்ருன்னு பேசி அத அடக்குவார்………….. அல்லது சிவப்பு சட்ட கருப்பு சட்ட விசிலடிச்சான் குஞ்சப்பனார்கள் ஊடால பூந்து ஹிந்து சார்பான கருத்து முன்வைக்கப்படாமல் இருக்க கச முசன்னு காமா சோமான்னு எத்தையாவது பேசி அடக்கி விடுவார்கள். இல்லைன்னா இருக்கவே இருக்கு…………….. விளம்பர இடைவேளை. இது தமிழ்த் தொல்லைக்காட்சியில் மட்டும் இல்லை. அர்ணாப் கோஸ்வாமி என்ற ஊடகக் கூச்சலாளர் கூட இப்படியே தான். முழு ஹிந்துஸ்தானத்திலும் செவிப்பறய கிழிக்கறதுல இவருக்கு ஒன்னாம் நெம்பர். என் டி டி வி தன்னுடைய ஹிந்து மதத்தைச் சார்ந்த நிருபரையே ***ஜோ அமலன் ஸ்டைலில்*** முஸ்லீம் பேரில பொது நிகழ்ச்சி ஒன்றில் குசும்புத் தனமா கேழ்வி கேக்க வெச்சு அது நாறி நாசமாப் போயி இணையம் முழுதும் வலம் வந்தது இன்னொரு கண்றாவி.

    ஜடாயு இந்த கண்றாவிக் கந்தறகோள ***வெவாதத்த*** ரொம்ப ஆசாரமா *** கழிசடை** அப்படின்னு சொல்லிருக்கார். அப்யூஸே பண்ணலயே. இன்னும் காட்டமால்ல இந்த கயமைத் தனத்தை சொல்லிருக்கணும்.

    இந்த ****கிண்டு*** ****சிண்டு**** ***மவுண்ட் ரோடு மண்ணாங்கட்டி**** இதனுடைய கயமைத்தனங்களைப் பத்தி தனியா ஒரு வ்யாசமே எழுதி இத தோலுரிக்கணும். முழு ஹிந்துஸ்தானத்தில் அச்சு ஊடகத்தின் கயமைத்தனம் கோலோச்சுவது என்றால் அது இந்த சிண்டு பத்திரிக்கையில் என்றால் மிகையாகாது. இந்த கயமையாளர்களை ***ஊடகக் கோமாளி*** அப்படீன்னு காமெடியா ஜடாயு எழுதியது எனக்குக் கூட கடுப்பாத் தான் இருக்கு. இதுல அப்யூஸ் எங்க இருக்கு. ஹிந்துக்களைப் பற்றியும் முஸ்லீம்களைப் பற்றியும் க்றைஸ்தவர்களைப் பற்றியும் இவர்கள் செய்தி போடும் கயமையைப் பார்த்தால் இரட்டை அலகீடுகளைப் பார்த்தால் எந்த நேர்மையாளருக்கும் அருவருப்பு வரும்.

    ஜோவுக்கு ஏன் நோகுதுன்னு பிரியாதவங்களுக்கு இப்ப நல்லா பிரிஞ்சிருக்கும்.

    \\ My point is that the throwers and people like Jadayu are same in thinking: to abuse and intimidate the people who discuss the issue. What is your point? Are they different? \\

    அதாகப்பட்டது ஸ்வாமின் தேவரீருடைய பூர்வ அவதாரமான ***TAMIL**** அவதாரத்துல தேவரீர் வெ.சா ஐயாவுடைய வ்யாசத்துல கடல போடுவது என் உரிம அத பொருக்குவது உங்கள் கடமன்னு தப்பு தப்பா தமிழ்ல பெனாத்தி…………… அதே வ்யாசம் திண்ணை தளத்துல பதிவான போது அய் அய் எம் கணபதிராமன் அப்படீங்கற ப்ராம்மண அவதாரம் எடுத்து………… அங்கயானாக்க ………….. நான் குத்து குத்துன்னு குத்துவேன் …………… அது அவருக்கு வலிக்குதுன்னு தெரியும்…… அதுக்காகத் தான் அப்புடி எழுதினீங்கன்னு ஒரு டபுள் ஆக்ட் குடுத்தீங்க பாருங்க……….. ஜிவாஜி கணேசன்லாம் கத்துக்கணும் சாமி. இந்த பாண்டியன் பாண்டியன் ஒருத்தர் வருவாரு அவருக்கு நெனவு இருக்கும்னு நெனக்கிறேன். இதை இங்கயும் எழுதியிருக்கிறேன். அங்கயும் எழுதி இருக்கிறேன்.

    இப்பால சொல்லுங்க அப்யூஸ் செய்யுறது யாரு. அப்யூஸ் செய்யறதையே வித விதமா அவதாரம் பல எடுத்து டமாஸா அப்யூஸ் செய்யும் நீங்க ஊருக்கு உபதேசம் செய்யுறது சரியா.

    டிப்பன் பாக்ஸ் பட்டாசத் தூக்கிப் போட்டு ஓடிப்போன வீரர்களை ஒரு அவதாரத்துல வெ.சா ஐயாவைப் புகழ்ந்து மறா நாளக்கி வேறே அவதாரத்துல திண்ணையில முகமூடி போட்டுக்கொண்டு வசவு மழை பொழிந்த தேவரீருடன் ஒப்பிடுவது தானே ஸ்வாமின் சரியா இருக்கும். அது என்னா கெரில்லாத் தாக்குதல். அப்யூஸ், இண்டிமிடேஷன், முகமூடி சுவிசேஷ ப்ரசங்கம்…………… ஸ் ஸப்பா…………….

    ஜடாயுவாகட்டும் தமிழ் ஹிந்து தளமாகட்டும் யாரும் எந்த விஷயத்தையும் *****விவாதம்****** செய்யக்கூடாதுன்னு எப்பயும் சொன்னதில்ல. சொல்லவும் மாட்டார்கள். அப்படி ஒரு குற்றச்சாட்டை வைப்பது அபாண்டம். இப்ப நீங்க விவாதம் செய்யாமல் இங்கு களையெடுத்து வெவசாயமா செய்யுறீங்க.

    ஆனால் விவாதம் என்ற பெயரில் ………………..

    ஹிந்துக்களுடைய எதிர்த் தரப்புக் கருத்துக்களை மட்டும் உரத்து ஒலிக்கச் செய்யும் கண்றாவிக்கு விவாதம் என்று எந்த நேர்மையாளரும் சொல்ல மாட்டார்கள்.

    ஊடகம் என்ற பெயரில் மிகச் சரியாகக் குறிவைத்து ஹிந்துக்களை மட்டிலும் ஹிந்துக்களுடைய நம்பிக்கைகளை மட்டிலும் கயமைத்தனம் மிக ****விவாதம்**** என்ற போர்வையில் அசிங்கப்படுத்த முனைவதையும்………… ஆப்ரஹாமியக் கருத்துக்களை ஏறெடுத்தும் பார்க்காமையும் அப்படியே ஏறெடுத்துப் பார்த்து ஆப்ரஹாமியர் சத்தம் போட்ட உடனேயே ஜகா வாங்கி விடுவதையும்…………….. தயக்கமில்லாது ஊடகக் கயமைத்தனம் என்று சொல்லாமல் இருந்தால் அது தான் தப்பு. இந்தக் கண்றாவியை விவாதம் என்று சொல்ல விழைவது வடிகட்டிய அயோக்யத்தனம்.

    ஜடாயுவையும் டிப்பன் பாக்ஸ் பட்டாசு வீசிகளையும் ( இன்னொரு தபா குண்டு கிண்டு சொல்லி வக்காதீங்க) ஒப்பிடுதல் நேர்மையா என்று நீங்கள் உங்களுடைய ஏசப்பரிடம் கேட்டுப் பாருங்கள்.

    \\ புதிய தலைமுறை நடத்துபவரின் குடும்பத்துப் பெண்களைப்பற்றியும் இழுத்த்ப்பேசியிருந்தாரே எப்படி அனுமதித்திர்கள்? \\

    கொஞ்சமாவது………….லவலேசமாவது உங்கள் கருத்தில் நேர்மை இருக்கிறதான்னு யோசிச்சுப் பாருங்க. அது எப்படி சார் இந்த த்ராவிட விசிலடிச்சான் குஞ்சப்பனார்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருக்கீங்க.

    ஒங்கள மாதிரியே ஒத்திசைவு ராமசாமி ஐயாவுடன் ஒருத்தரு மல்லுக்கட்டறாரு பாருங்க. நொந்து நூலாயிப் போகணும்.

    https://othisaivu.wordpress.com/2015/03/20/post-470/#more-4464

    தாலியறுப்பது என்ற சொல்லில் தப்பு இல்லைன்னு நெனக்கிறவன் மட்டிலும் தான் அத பத்தி பேசுறதுக்குக் கூட தகுதியானவன் ஆவான். தாலி மேல செண்டிமெண்ட வச்சுக்கிட்டு ஊரான் வீட்டுல புகுந்து அடுத்த வீட்டுல இருக்குறவங்களோட தாலிய மட்டிலும் அறுக்க நெனப்பது வடி கட்டிய அயோக்யத்தனம். தாலியறுக்கறதுல தப்பில்லன்னு நெனச்சு புதிய…………… கண்றாவி தொல்லைக்காட்சி நிகழ்ச்சி நடத்தினால்………….. முதலில் அந்தக் கருத்து சொல்ல விழையும் அன்பர்கள் தங்களிடமிருந்து அதைத் துவக்குகிறார்களா என்று கேழ்ப்பது மிகவும் நேர்மையான கேழ்வி…………. நேர்மை என்பது தான் எத்தன வீசம்னு கேப்பீங்களே.

    \\\ ஆக, நாகரிமாக எழுதப்படும் கருத்துக்களுக்கு ஜன்நாயக உரிமைகிடையாது; தீவிரவிதமாக எழுதப்படும் அநாகரீக கருத்துக்களுக்கு அவ்வுரிமை. இத்தனைக்கும் இக்கட்டுரையின் உங்கள் முன்னுரையில் என் கருத்தைத்தானே வழிமொழிந்திருக்கிறீர்கள்? \\\

    டட்டடா டட்டடா டட்டடா. வாளுக ஈ.வெ.ராம்சாமி ஜன்நாய்க்கம்.

    \\ Do you want to stop all debates about Hindu religious issues in TV channels? \\

    மாடு சாணி போடுவதும் நிக்காது. டிவில கூச்சல் போடுறதும் நிக்காது. ஜோ அமலன் அவதாரம் எடுப்பதும் நிக்காது 🙂 🙂 🙂 🙂

    \\ I don’t mean all, because myself a Hindu \\

    நெசமாலுமா சாமி. சும்மனாச்சிக்கா. சொல்லவே இல்ல. எப்பங்க ஆச்சு கர் வாப்ஸி 🙂 🙂 🙂 🙂

  23. ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் விவாத ப்ரியர் என்று சொல்ல விழைகிறார். வாழ்க வெவாதம்.

    எனக்குத் தெரிந்த அதி ப்ராபல்யமான ரெண்டு விவாதங்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

    அப்பேஞ்சபாபதி மட்ராஸ் ரெயில்வே பற்றி எழுதிய வ்யாசமும் தமிழாசிரியர் அதை ச்லாகிப்பதும் சபாபதியின் தோப்பனார் முதலியார்வாள் கடுப்பாவதுமான தமிழகத்தின் அதி ப்ராசீனமான வெவாதம்

    https://www.youtube.com/watch?v=Qxs94r_J7-U

    குறளின் கொறவளையை ஒரு வழி பண்ணி………….. திருவள்ளுவரை இம்சை செய்து………… குறளை விவாதாஸ்பதமாக்கி விவாதிக்கும்……….. டி.ராசந்திரனார் அவர்களது காலக்ஷேபமயமான விவாதம்.

    https://www.youtube.com/watch?v=5A_YOX2AhwA

    ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோவாள் தளம் தளமாக வெவ்வேறு அவதாரங்களில் செய்யும் வெவாதம்.

    மேற்கண்ட விவாதங்களில் எது உத்க்ருஷ்டமான வெவாதம் என்று தமிழ்கூறும் நல்லுலகம் தீர்ப்பளிக்குமாறு விக்ஞாபித்துக் கொல்கிறேன் 🙁 🙁 🙁 🙁

  24. கிருஷ்ணகுமார் இவ்வளவு நீளமாக எழுதியதன் நோக்கம் குழப்ப. இதில் ஒருவரி கூட ஹானஸ்ட் மேனுக்கு கண்டனம் இல்லை. இந்துமுன்னணி புதிய தலைமுறை டிவி மீது குண்டு போடவேண்டும் என்றெழதியவர் அவர். என்னைத்தவிர எவருமே கண்டனம் செய்யவில்லை. Write replies to the questions raised w/o confusing readers. I took efforts to fish out the replies, but all confusing only.

    இரங்கன்: எங்கள் அமைதியை கோழைத்தனமென எடுக்கக்கூடாது என்கிறார். அதாவது எங்கள் வீரத்தைக்காட்டுவோம். அது என்ன மாதிரியான வீரம்? இப்படி எழுதி குண்டுபோட்டதைச்சரியெனத்தானே சொல்கிறார்? Am I correct in my guess?

    இந்துமதம் என்றுமே விமர்சனங்களையும் விவாதங்களையும் தடுக்கவில்லை. அவ்விவாதங்களிலும் விமர்சனங்களிலும் ஏற்கக்கூடிய மாற்றங்கள் இருப்பின் அவற்றைத்தழுவித்தான் வந்துள்ளது. இந்து மதம் வெறும் கடவுள் கோட்பாடுகளும் வழிபாட்டுமுறைகளும் மட்டுமல்ல. அஃது ஒரு வாழ்க்கை முறையும் கூட என்பதை நம் வாழ்க்கையிலேயே காண்கிறோம். அம்முறைகள் அன்று நிலவிய சமூகம் வாழ செய்யப்பட்டனவே. அச்சமூகம் இன்று நிலவவில்லை. எனவே காலத்துக்கேற்ப மாற்றம் என்பதுவே இந்துமதக்கொள்கையாகும் என்பதை இம்மத வரலாறு நன்கு காட்டுகிறது. Can anyone object to this?

    விவாதம், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. செயபவர்களுக்கு ஒரு தகுதி வேண்டுமென நிர்ணயிப்பது அவ்விவாதங்களையும் விமர்சனங்களையும் தடுக்கச் செய்யும் ஒரு தந்திரமே. தகுதி தேவையில்லை. பார்த்துமட்டுமே கூட விமர்சிக்கலாம். மறுமணம் செய்ய முடியா இளம்விதவைகளைப் பார்த்த ஒருவர். அய்யோ பாவம். இச்சின்ன வயதில் இப்படியோரு “கொடுமையா? என்று அவர்படும் கழிவிரக்கம் மட்டுமே அவரின் தகுதி.

    அதைப்போலவே, இந்துமதத்தில் உள்ள பலவிடயங்களைப்பற்றிய விவாதங்களும். இந்துமத மாநாடு ஒன்றை நடாத்தி அங்கு இந்துமத அறிஞர்கள் பேசுவது வேறு. வெறும் பார்த்தவரும் கேட்டவரும் தொலைக்காட்சியிலும் ஊடகங்களும் வேறு.

    நாம் எவரையும் தடுக்கக்கூடாது. பட்டாசு குண்டு போட்டாலும் நிஜ குண்டு போட்டாலும் கழிசடை, கருமாந்திரம் என்று அவச்சொற்களை வீசினாலும் எல்லாவழிகளுக்கும் நோக்கம் ஒன்றே: சொற்களால் மிரட்டி,; கொலை செய்வோமென மிரட்டி, விவாதத்தைத் தடுப்பது. இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பானிலானும் கெடும். இந்துமதத்தைக்கெடுக்க வழிபண்ண ஆசைப்படுவோருக்கு இக்குறள் ஒரு எச்சரிக்கை.

    விவாதங்கள் செல்லட்டும். இந்துமதத்தின் ஆதிதர்மத்தை நிலை நாட்டுவோம். இம்மதம் பிறம்தங்களைப்போலல்ல என்று உலகுக்குக் காட்டுவோம்.

    It is for Jadayu!

    He cites a lot of evidences to support Thali. But they are all ancient references. Present issue should be judged by the life lived by common Hindus in current society. All evidences should be brushed aside. We must see the wishes of people: if some feel that thali is hanging around their necks as a symbol of slavery; she must not be condemned as anti-Hindu and must be allowed to discard that burden. If someone feels that why should I carry this when the man who tied me turned out to be philanderer and kept many women and discarded me? Should I continue to hold him my husband with the thali around my neck? Is not this thali a symbol of oppression to me? Our answer should be: Yes, it is for you. Discard it.

    On the other hand, if someone feels, despite me being thrown out of the house by the man who tied it, I will continue to worship him carrying this thread? Allow it. If many feel that we are happy in our marriages and we venerate it, allow it.

    So, give freedom to do what they want to do with the thali. Assure them: there is no compulsion from the religion.

    If a TV debates all the above different view points, don’t interfere.

  25. சாரங்!

    இப்பொழுதுதான் உங்கள் பின்னூட்டத்தைககண்டேன். உங்கள் கருத்து: ஊடகங்கள் இந்துமதத்திற்கு மட்டும் எதிராக வேலை செய்கின்றன. அவை இசுலாமிய, கிருத்துவத்தைப் பற்றி விமர்சனம் செய்வதில்லை என்பது. ஈவேராவின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களுள் இதுவும் ஒன்று.

    அதில் எனக்கு கருத்து வேறுபாடில்லை. அதாவது எல்லா மதங்களும் விமர்சனத்துக்குள்ளாக வேண்டும். அதுவே கருத்துச் சுதந்திரவாதிகள் சமூகத்திற்குச் செய்ய வேண்டியது. இல்லையென்றால், மதங்களை வைத்து மக்களை வருத்தும் செயலை இம்மதவாதிகளும் அவர்கள் அடியாட்களும் செய்வார்கள் எப்பயமும் இல்லாமல்.

    ஆனால், இதைக்காரணம் காட்டிக்கொண்டு, இந்துமதத்தைப்பற்றி விமர்சனம் செய்யாதே என்பது சரியில்லை. எல்லா ஊடகங்களையும் எதிர்க்கிறீர்கள். ஏதாவது ஓர் ஊடகம் இந்துமதத்தை விமர்சித்தால் வாதம் பண்ணினால், உடனேயே நீங்கள் சீறி, அவர்கள் ஏன் கிருத்துவத்தை விட்டார்கள்; இசுலாமை விட்டார்கள் என்று கேட்கிறீர்கள். கிருத்துவர்கள் தலையையோ கையையோ இந்தியாவில் செய்யவில்லை. குறைந்தது தென்னாட்டில் இல்லை. இசுலாமியர்கள் கையை வெட்டுவார்கள். பேரா ஜோசப்பின் கையை கோட்டயத்தில் வெட்டியது போல. எனவே பயப்படுகிறார்கள்.

    நீங்களும் வெட்டிவிடுங்கள். ஒருதடவை செய்துவிட்டால் எவருமே உங்களையும் விட்டுவிடுவார்கள். பிரச்சினை முடிந்தது. ஆனால், அப்படி செய்தாலும் செய்ய வேண்டுமெனவும் இங்கு பின்னூட்டக்காரகள் எழுதுகிறார்கள்; ஜடாயு ஆபாசமாக திட்டுகிறார். இதை நான் எதிர்க்கிறேன். அப்படிச்செய்தால் நீங்களும் கையை வெட்டுவோரும் ஒன்று என்பதுதான் என் கருத்து. என் கருத்தையும் புரிய யோசிக்க முயற்சிக்கலாமே?

  26. பீ எஸ்

    எல்லா மதத்தையும் விட்டு விட்டு ஹிந்து மதத்தை மட்டும் குற்றம் சொன்னால் அதன் காரணம் என்ன . குற்றம் சொல்கிறவர் யார் என்பதை எலாம் பார்த்து தான் முடிவு kata வேண்டும்.

    என்ன சொல்லபடுகிறது என்பதை விட யார் சொல்கிறார் என்பது தான் முக்கியம்.

    ஹிந்து மத்தில் உள்ளவர்கள் தங்கள் மதத்தை தாங்களே சரி செய்து கொள்வார்கள். ஹிந்து மதத்தை மாற்றியவர்கள் அனைவரும் ஹிந்து மதத்திலிருந்து கொண்டு தான் அதை செய்திருக்கிறார்கள்.

    ஹிந்து மததத்த குறை சொல்ல காசு கொடுக்கம் துளுக்கனையும் அல்லேலூயா காரனையும் என்ன solvathu. அங்கேயே நாருதான் இங்க வந்து தண்ணி ஊத்தராங்கலாம்

  27. அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

    பின்னூட்டங்களால் இழையின் போக்கையே திசை மாற்றி ………..என்று ஜாம்பவான் களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட பெருமை பெற்றவராயிற்றே தாங்கள்.

    நான் உங்களுடைய ஒவ்வொரு குசும்பு திசை திருப்பலையும் பளிச் பளிச்சுன்னு தெளிவா விளக்கினா உங்களுக்கு கொடயத்தான் செய்யும்.

    நான் நீளமா எழுதியிருப்பது உங்களுடைய குசும்புத்தனத்தை தெளிவாக்க. நீங்கள் மீண்டும் நீளமா எழுதியிருப்பது சொதப்ப.

    ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற க்றைஸ்தவர் ஹிந்துவாகலாம். ஆனால் பட்டாசு எப்படி ஸ்வாமின் குண்டாகும். பட்டாசையும் குண்டையும் வேறே வேறேன்னு மெனக்கெட்டு தேவரீருக்கு வ்யாக்யானம் வழங்கியவுடன்………….. மிஷ நரித்தனமா அதை பட்டாசு குண்டு என்று எழுதி ………….. ஹிந்து இயக்கங்களுடன் சம்பந்தப்படாத விலைக்குப் பேசப்பட்ட ஒரு லெட்டர் பேட் இயக்கத்தை ஹிந்து இயக்கங்களுடன் சம்பந்தப்படுத்த தேவரீராலேயே முடியும்.

    \\ இரங்கன்: எங்கள் அமைதியை கோழைத்தனமென எடுக்கக்கூடாது என்கிறார். அதாவது எங்கள் வீரத்தைக்காட்டுவோம். \\\

    \\ அது என்ன மாதிரியான வீரம்? இப்படி எழுதி குண்டுபோட்டதைச்சரியெனத்தானே சொல்கிறார்? Am I correct in my guess? \\

    சந்துல சிந்து பாடறத்துக்குப் பேரு கெஸ் இல்லை. மிஷ நரித்தனம். அவரு இன்ன தான்னு சொல்லவே இல்லையாம். இவரே கெஸ் செய்து அட்ச்சுவிட்டு லபோதிப்போம்பாராம்.

    \\ விவாதம், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. செயபவர்களுக்கு ஒரு தகுதி வேண்டுமென நிர்ணயிப்பது அவ்விவாதங்களையும் விமர்சனங்களையும் தடுக்கச் செய்யும் ஒரு தந்திரமே \\

    அப்பேஞ்சபாபதி எழுதிய வ்யாசத்தையும் தொடர்ந்த பேச்சுக்களையும்…………. ராசேந்திரனாருடைய வ்யாக்யானாதிகளையும்………… ரெவ ரெண்டாகிய தாங்கள் விவாதம்னு சொல்லுவீர்கள். ஏசப்பர உங்களுக்கு வித்தாகணும்னா இப்படி எத்தையாவது போட்டு குழப்பித் தானே ஆகணும்.

    விவாதிப்பவர்களுக்கு தகுதி வேணும்னு யாரும் சொல்லல. அது உங்கள் புளுகு. கருத்துதிரிபு.

    ஜோ அமலன் பினாத்துவது போல…………….. காமா சோமான்னு டீவில கூச்சல் போட்டு ஹிந்துத்தரப்பினர் தங்கள் பக்ஷத்துக் கருத்துக்களை தப்பித்தவறிக் கூட முன்வைக்காத படிக்கு ஜோடனை செய்யப்படும் கட்டப்பஞ்சாயத்து………….. உங்களைப்போன்ற முகமூடி சுவிசேஷர்களுக்கு ஹல்வா சாப்பிடுவது போலத்தானே. அதனாலத்தானே இதை திருப்பித் திருப்பி **விவாதம்** என்று புளுக முனைகிறீர்கள்.

    \\ விவாதத்தைத் தடுப்பது. \\

    கூசாத புளுகு. டிவியில போடுற வெற்றுக்கூச்சலை…………… கட்டப்பஞ்சாயத்த…………. மிஷ நரித் தனமாக ***விவாதம்*** அப்படீன்னு துண்டு தாண்டி சத்தியம் செய்து…………. அய்யய்யோ வெவாதத்த தடுக்குறாங்கன்னு…………. திருக்குவளையார் மாதிரி கூச்சல்.

    \\ If a TV debates all the above different view points \\

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளரும் புலவர் பெருமானாகிய ரெவ ரெண்டு அவர்களுக்கே…….. டிவில வெற்றுக்கூச்சல் போடுவது விவாதமா இல்லையான்னு சம்சயம் அப்படீங்கறத்துனால ஒரு இப்பு போட்டு சொதப்பிருக்கீங்க………… மொதல்ல நீங்க தெளிவா இருங்க. அப்பறம் ஊருக்கு உபதேசம் சொல்லலாம்.

    தாலி அப்படீங்கறது தமிழ் கலாசாரத்துடன் பெருமளவு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஜடாயுவோ தமிழ் ஹிந்து தளமோ வாசகர்கள் யாருமோ …………தாங்களாக தாலியை விரும்பாத….. யாரைப்பற்றியும் எந்த விமர்சனமும் முன்வைக்காத போது………… ஜபர்தஸ்தியாக நீங்களாக உங்கள் வார்த்தைகளை அடுத்தவர்கள் வாயில் திணிப்பது உங்களுடைய குசும்புத்தனமே.

    ஸ்ரீ ஜடாயு மீது அப்யூஸ் பப்யூஸ் நு வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோன்னு பெனாத்தியதுக்கு ஹானஸ்ட்மேன் கேட்ட ந்யாயமான கேழ்விய த்ராவிட விசிலடிச்சான் குஞ்சப்பத் தனமா விமர்சனம் செய்ததுக்கு………..ரங்கனுடைய சொல்லப்படாத கருத்தை கெஸ் செய்து நீங்களா அட்ச்சுவிட்டதுக்கு……….. கொஞ்சமாவது வெக்கப்படுங்க. பட்டாச குண்டுன்னு புளுகியதுக்கு வெக்கப்படுங்க.

    சட்டுபுட்டுனு அவதாரத்த மாத்துங்க.

  28. அன்பின் சாரங்க், ரெவ ரெண்டு ஜோ வுக்கு பொழுது போகல.

    \\ பீ எஸ் ….விஷயம் புரியாதது மாதிரியே பேசினால் அறிவு ஜீவி பட்டம் கிடைக்கும் என்று ஏன் அலைகிறீர்கள். உங்கள மாதிரி நிறைய பேர் திரிகிறார்கள்.\\ விஷயம் இப்படி இருக்க நரி வேலை செய்பவர்கள் என்ன செய்வார்கள். ஜட்டயுவை பார் அவர் அப்படி பேசினார், கிருஷ்ணகுமாரை பார் அவர் இப்படி பேசினார். நீங்கள் எல்லாம் ஹிந்துத்துவத்திற்கு நன்மையா செய்கிறீர்கள். துலக்கன் தீவிரவாதி என்றால் நீங்களும் தீவிர வாதிதான். இதெல்லாம் கடைந்தெடுத்த அறிவு ஜீவிகள் வெகு காலமாக பேசிவருவது.\\

    அவர் எந்த அவதாரம் எடுத்தாலும் இப்படியே தான் எழுதுவார். அவருக்கும் பொழுது போக வேண்டாமா. எத்தன அவதாரத்துல பாத்தாச்சு.

    ***விவாதம்** அப்படீங்கற பேருல ஹிந்து மதத்தின் மீது கட்டப்பஞ்சாயத்துத் தனமா ஒளிபரப்பப்படும் அவதூறுகளை எப்படிக் கையாள்வது………. என்று வாசகர்கள் விவாதிப்பதை தடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கியாகிய ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களுக்கு.

    அத வித விதமா சர்க்கஸ் செஞ்சு ஆட்றா ராமா ஆட்றா ராமான்னு குட்டிக்கரணமாப் போடுறார்.

  29. My reply to Sarang wasn’t allowed. Perhaps it was due to its length. I have shortened it and hope it will be released. To clarify matters, it may be released.

    சாரங்!

    புதிய கருத்தில்லை. இங்கும் இந்துத்வாவினரின் பொதுக்கருத்தையே வழிமொழிந்திருக்கிறீர்கள்: “இந்துமதத்தை இந்துக்களைத் தவிர வேறெவரும் விமர்சிக்கக்கூடாது.” இல்லையா?

    அப்படியே எடுத்துக்கொண்டாலும், அந்த இந்துக்கள் யார் என்பதில்தான் பிரச்சினை? அவர்கள் கண்டிப்பாக இந்துத்வாவினர் கொள்கைகளை ஏற்றவர்களாகத்தான் இருக்கவேண்டும். வேறெவராவது சொன்னால், நீங்கள் அவர்களை கிருத்துவமதக்காரனின் கைக்கூலி, இசுலாமியரின் முகமூடி, அல்லது கிருத்துவ பாதிரி இந்துப்பெயரில் உள்ளே நுழைந்திருக்கிறான் என்பீர்கள். இங்கு மட்டுமல்ல வெளியிடங்களிலும், அவர்களைனைவரையுமே நீங்கள் இந்துமதத்தின் எதிரிகள் என்கிறீர்கள்.

    ஊடகங்களை எடுத்தால், ஆங்கிலத்தில் பயோனியர் தவிர்த்து பிற ஜனரஞ்சக நாளிதழ்கள், மாதவிதழ்கள்; தொலைக்காட்சியில் எல்லா ஆங்கில ஊடகங்கள். தமிழில், தினமலர், தினமணி தவிர்த்து, மற்றெல்லாம் ஊடகங்களையும் தாக்குகிறீர்கள். தினமலரின் கூட ஏதோ தவறுதலாக ஒரு விமர்சனம் புகுந்துவிட்டாலோ, அதையும் தாக்குகிறீர்கள். தினமணி, புதிய தலைமுறை தாக்குதலைக் கண்டித்து தலையங்கம் எழுத அதையும் தாக்கிவிட்டீர்கள்.
    விமர்சகர்கள் எவருமே இந்துக்களிடமிருந்து கூட வரமுடியாதபடி உயிருக்கும் பேருக்கும் அஞ்சும் நிலைமையை உருவாக்கிவிட்டீர்கள். இந்த லட்சணத்தில் விமர்சனம் இந்துக்களிடமிருந்து எப்படி வரும்?

    அடுத்து, இதே இணைய இதழிலேயே தாலி பற்றி விவாதம் நடாத்தப்பட்டால், என்ன ஆகும்? மாற்றுக்கருத்தே வராது. இங்கு உள்ள எழுத்தாளர்கள் மட்டுமே செய்ய வேண்டும். மற்றவர்கள் ? அதாவது ஒரு இரும்புத்திரை போடப்பட்டு இந்துக்களையும் வெளியேற்றுகிறீர்கள். இந்துவல்லா எவருமே பொதுவெளியில் இந்துமதத்தைப்பற்றிப்பேச தடை நீஙகள்தான் சொல்கிறீர்கள். மதம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் காட்டவும். தம் வீட்டை சுத்தப்படுத்திவிட்டு பிறரைச் சொல்லவும் என்பது பொதுக்கருத்து. அடிப்படை வாதம், அனுமதி உண்டா? இல்லையா? என்பதே.

    இந்துமதம் நல்கும் அளவற்ற சுதந்திரத்தால் கோடானுகோடி மக்கள் இம்மதத்தில் வாழ்கிறார்கள். அது தீவிரமான மதமாகி விட்டால் அவர்கள் வேறெங்கு சுதந்திரம் இருக்கிறதோ அங்கு போய்விடுவார்கள்.

  30. கிருஸ்ணகுமார்!

    இரு விண்ணப்பங்கள்

    1. கருத்துச் சுதந்திரம் இந்துமதத்தில் இருக்கிறது. அதைத் தடுக்கப்பார்க்காதீர்கள்.

    2. ஹானஸ்ட் மேன் என்பவர், இந்து முன்னணி, தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது குண்டு போட வேண்டுமென்று எழுதியதை நான் சுட்டிக்காட்டினேன். அவர் சொன்னதைக் கண்டனம் செய்யுங்கள். (தற்சமயம் இவ்வரிகள் தோன்றிய அவரின் கருத்து நீக்கப்பட்டுவிட்டதைப்போலத்தெரிகிறது!)

    இவையிரண்டையும் செய்யுங்கள் போதும். வேறுபேச்சுக்கிடமில்லை.

  31. ரெவ ரெண்டு ஜோ

    \\ கருத்துச் சுதந்திரம் இந்துமதத்தில் இருக்கிறது \\

    அப்புடீன்னு சொன்ன நீங்க

    \\ வேறுபேச்சுக்கிடமில்லை. \\

    என்று அடுத்த வரியில் நாட்டமை செய்வது டமாஸா இருக்கு.

    \\ ஹானஸ்ட் மேன் என்பவர், இந்து முன்னணி, தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது குண்டு போட வேண்டுமென்று எழுதியதை நான் சுட்டிக்காட்டினேன்.\\ ஹானஸ்ட்மேன் அவர்கள் புதியதலைமுறை தொல்லைக்காட்சியினர் தாலியறுப்புப் படலத்தைத் தங்கள் தரப்பிலிருந்து ஏன் தொடங்கக்கூடாது என்று விமர்சனம் செய்யக்கூடாது ……….. அப்படி ஒரு கருத்துச் சுதந்திரம் அவருக்கு இல்லை என்று இதே ரெவெரெண்டுடைய கை தானே எழுதியது?

    அதாவது ஹிந்து மதத்தை இழிவு செய்வதற்கு எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கு. அப்படி இழிவு செய்பவர்களை இடித்துரைப்பதற்கு ஹிந்து மதத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை. இது தானே ஏசப்பருக்கு வாக்கு தத்தம் கொடுத்துள்ள ஜோ சொல்ல வருவது.

    பெனாத்துவது உங்கள் பிறப்புரிமை.

  32. சங்க இலக்கியத்தில் தாலி உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
    https://newindian.activeboard.com/t48104418/topic-48104418/
    “ஈகை யரிய இழையணி மகளிர்” என புறநானூறு தாலி பற்றிய குறிப்பை காட்டுகிறது. தமிழ் சங்க இலக்கியங்கள் தாலி பற்றியும் அது தமிழ்நாட்டின் பண்டைய கலாசாரம் என்றும் தெளிவாக்குகிறது.
    திருமணத்திற்கு நாள் நட்சத்திரம் பார்த்தல் தமிழ் சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ளது “தீய கோள்களின் தொடர்பு நீக்கிய வளைந்த வெண்மையான சந்திரனைக் கேடற்ற சிறந்த புகழினையுடைய உரோகிணி என்னும் நாள்வந்து அடைந்த நல்ல நாள் அது” என்று மணநாள் பற்றி பதிவு செய்கிறது “கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென” அகநானூறு 86வது பாடல் 6,7 வரிகள்.
    அந்த தெளிந்த ஒளியையுடைய திங்களை உரோகிணி கூடியதனால் எல்லாத்தோஷமும் நீங்கிய சுபநாள் சேர்க்கையில் திருமண வீட்டை அலங்கரித்துக் கடவுளைப்பேணி என்பதாக திருமணத்திற்கு நல்லநாள் பார்த்தல் முதல் கடவுளை வணங்குதல் வரை உள்ள நிகழ்வுகளை பதிவுசெய்கிறது “புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள் ஒளி அம்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக் கடினர் புனைந்து கடவுட் பேணிப்” அகநானூறு 136வது பாடலின் 3-6 வரிகள்
    மணப்பெண்ணை ”வது” என்று அழைப்பது வழக்கம் இந்த சொல் பிராமணர்களிடையே வழக்கில் உள்ள வடமொழி சொல் “வதுவை நன்மணம்” என்கிறது அகநானூறு 86-17வது வரி.
    https://aggraharam.blogspot.in/2013/09/2.html

  33. ////////2. ஹானஸ்ட் மேன் என்பவர், இந்து முன்னணி, தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது குண்டு போட வேண்டுமென்று எழுதியதை நான் சுட்டிக்காட்டினேன். அவர் சொன்னதைக் கண்டனம் செய்யுங்கள். (தற்சமயம் இவ்வரிகள் தோன்றிய அவரின் கருத்து நீக்கப்பட்டுவிட்டதைப்போலத்தெரிகிறது!)//////////

    ஹலோ Mr BS , நீர் என்ன கோயபல்ஸின் மறுபிறவியோ? உம மெய் பூராவும் பொய் நிரம்பியுள்ளதோ? நான் எப்போது “””இந்து முன்னணி அந்த டிவி அலுவலகத்தின் மீது குண்டு போட வேண்டும்””” என்று எழுதினேன்? குழப்பத்தில் படித்தீரா அல்லது குடித்துவிட்டு படித்தீரா? ”தற்போது இவ்வரிகள் நீகபட்டுவிட்டது போல தெரிகிறது” என்று வேறு எழுதுகிறீர் . இந்த இணையதளத்தினர் அவ்வளவு மோசமானவர்களா? இந்து மதத்திற்கு என்றும் எதிராகவே எழுதும் உமது கருத்துகளையே பிரதானமாக வெளியிடும் இவர்களை இவ்வளவு கேவலமாக எழுத கூடாது. நான் எழுதியது என்னவென்றால் “தாலி அணிவது சரியா தவறா என்ற விவாதம் நடத்துவதற்கு முன் அந்த பச்சை முத்து தன மனைவியின் கழுத்தில் கட்டிய தாலிய அவிழ்த்து எறிந்துவிட்ட அந்த debate னை அனுமதித்திருக்க வேண்டும்” என்பதுதான். ஆனால் நாள் சொல்லாததை சொன்னதாக எழுதுகிறீர்.

  34. திரு கருப்பையா!

    இங்கு கேள்வி பழந்தமிழ் இலக்கியங்களில் தாலி கட்டியது சொல்லப்பட்டதா என்பதன்று! பழந்தமிழர் எப்படி வாழ்ந்தார் என்பதுமன்று! அன்று பெண்கள் வைக்கப்பட்டது போல இன்றுமா என்பதுதான் கேள்வி;

    இக்கேள்வியை பகுத்தறிவாளர் என்போர் கேட்டதல்ல. மற்றவரும் கேட்கின்றார். அன்று நாம் வாழ்ந்த சமூக மற்றும் மத வாழ்க்கை எல்லாமே மாற, இப்பெண் விடயத்தில் மட்டும் விடாப்பிடியாக இருப்பதன் மர்மமென்ன? ஆண்களே எப்படிப் பெண் வாழவேண்டும் என்றேன் சொல்கிறார்? ஆன்றோரும் சான்றோரும் பழமையைப் இப்படி உடும்புப்பிடியாகக் கொள்ளவில்லை. அவர்கள் மாறச்சொல்லிவிட்டார். எப்படி? இப்படி.

    ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
    வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

    மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
    மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
    வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
    வெட்டிவிட் டோமென்று கும்மியடி!

    நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
    நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
    கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
    கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.

    கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
    கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
    வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
    வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.

    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
    பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
    எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
    இளைப்பில்லை காணென்று கும்மியடி!

    வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
    வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
    சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
    சாதி படைக்கவும் செய்திடுவோம்.

    காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
    காரியம் யாவினும் கைகொடுத்து,
    மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
    மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!

  35. கடைசி இருவரிகளை திரு கருப்பையா மீண்டும் படிக்கவும்

  36. ///////வாழ்ந்த சமூக மற்றும் மத வாழ்க்கை எல்லாமே மாற, இப்பெண் விடயத்தில் மட்டும் விடாப்பிடியாக இருப்பதன் மர்மமென்ன?////

    இந்த கேள்வியை முஸ்லிம்களிடம் கேட்க உமக்கு துணிவிருக்கா? 1400 வருடங்களுக்கு முன் பின்பற்றிய புர்கா முறையை இன்னும் எதற்கு இப்படி விடா பிடியாக கட்டி மாரடிக்கிறீர்கள் என்று கேட்க தயாரா? அதுவும் பெண் விடயம்தான். அங்கு கேட்டு பாரு. அடுத்தநாள் உமது வீடு சேதமடையாமல் இருக்கிறதா என்று பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *