ஜடாயுவின் இராமாயண உரை

இராமாயணம் சிறு வயது முதலே என் நெஞ்சிலும் உணர்விலும் கலந்தது. பல வருடங்களாகத் தொடர்ந்து கற்று, அவ்வப்போது இராம காதையைக் குறித்துப் பேசியும் உரையாடியும் வந்தாலும், தொடர்ச்சியாக இராமாயணக் கதையை ஒரு வீச்சில் சொல்லும் பேறு இதுவரை கிட்டியிருக்கவில்லை.

ஜூன் மாதம் 20,21 தேதிகளில், திருவண்ணாமலையில், தர்ம ரக்ஷண சமிதி அமைப்பின் ஆன்மீகப் பயிற்சி முகாமில், இரண்டு நாட்களாக, ஆறு அமர்வுகளில் இராம காதை முழுவதையும் அடியேன் உரையாற்றினேன் ( ஆறு காண்டங்கள்,  ஆறரை மணி நேரம்).  அந்தப் பதிவுகளை இந்த Playlistல் காணலாம்.

இந்த உரைகள் சம்பிரதாயமான கதாகாலட்சேப நடையிலோ, முற்றிலும் பண்டிதத் தமிழிலோ அல்லது மொத்தமும் பேச்சு வழக்கிலோ இல்லாமல் சகஜமாகவும், இயல்பாகவும் இருக்க வேண்டும் என்று முயற்சி எடுத்திருக்கிறேன். கதையின் சுவாரஸ்யம் குன்றாத வகையில் பொருத்தமான இடங்களில் கம்பராமாயணப் பாடல்களைக் கூறி, விளக்கிச் சென்றிருக்கிறேன். ஒரு காண்டத்தை ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற வரையறை இருப்பதால், அனாவசியமான தொடர்பற்ற விஷயங்கள் எதுவுமே உரைக்குள் வராமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். கலந்து கொண்டவர்கள் இந்த உரைகள் மிக நன்றாக, சிறப்பாக இருந்தததாகக் கூறினார்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

rj-all

கேட்பவர்கள்  இங்கோ ஃபேஸ்புக்கிலோ அல்லது யூ ட்யூப் மறுமொழிகளிலோ தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும். பிடித்திருந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த நிகழ்வுக்காக, கம்பனின் கவிதையை அறிமுகம் செய்யுமாறும், சுருக்கமான இராமாயண பாராயணமாக அமைவதாகவும், கம்பராமாயணத்திலிருந்து 66 பாடல்களைத் தேர்ந்தெடுத்து எளிய உரையுடன் தொகுத்திருந்தேன். வந்திருந்தவர்கள் அனைவருக்கும் அதன் அச்சுப் பிரதி வழங்கப் பட்டது. விரைவில் அதையும் இணையத்தில் வெளியிடுகிறேன்.

இராமனுடன் கூடிய அன்னை சீதையின் பொற்பாத கமலங்களில் இந்த எளிமையான சிறு மலர்களை பக்தியுடன் சமர்ப்பிக்கிறேன்.

உரையாற்றும் போது சில இடங்களில் தவறுதலாக ஏற்பட்ட ஒரு சில சொல், பொருட் குற்றங்களைப் பெரியோர்கள் பொறுத்தருள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீராமஜெயம்.

4 Replies to “ஜடாயுவின் இராமாயண உரை”

  1. அன்புள்ள இனிய நண்பர் ஜடாயு அவர்களுக்கு,

    அநேக கோடி நமஸ்காரம்,
    கம்பராமாயண பாடல்களை உங்கள் வாய்மொழியில், ஊட்டியில் கேட்டது என் பாக்கியம்,
    இந்த தொகுப்பு மேலும் ஒரு விருந்து.
    வாழ்த்துக்கள்
    நன்றி.

    அன்புடன்
    சௌந்தர்.G

  2. Namaskaram
    I kesavan from namakkal rasipuram ,i partion on 20,21 june 15 dharma rakshna samithi ramayana
    programa ur explain the ramayanam very nice and easy , ur explain new mesage for ramayanam,
    useful for my self thankyou jai jai ram hari hari ram jai jai ram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *