கம்யூ-நிஜம் கனவும் உண்மையும்

கம்யூனிஸ நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் இப்போது நடந்து வருகின்றன. . மவுண்ட்ரோடு மாவோக்களான தி ஹிந்து நாளிதழ் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டைப் பற்றி மிகப்பெருமிதமாக எழுதிகிறது. ஆனால், அடிப்படை சித்தாந்தத்திலே அதன் தோல்விக்கான குறைபாடு உடையது கம்யூனிஸம். அவர்களுக்கு இந்தக்கட்டுரையில் வரும் சங்கதிகள் அனைத்தும் சங்கடங்கள். அதனால், இவற்றைப்பற்றி எந்த RS பாரதி ஊடகமும் வாய் திறக்காது.

கம்யூனிசம் புரிந்ததுபோல் தன்னையும் பிறரையும் ஏமாற்றிக்கொண்டு திரிவோர் அது ஏதோ உயர்ந்த கருத்தியல் என்று பரப்புரை செய்கிறார்கள். எனது ஆசான் சுப்பு மணியன் “நாமெல்லாம் உணவை உண்டு வாழ்வதைப் போல, கம்யூனிஸ்டுகள் அறிவை உண்டு வாழ்பவர்கள்” என்பார். அந்த “அறிவு” வெறும் சித்தாந்தம், பேச்சு மட்டுமே. அது செயலாக மாறினால் அழிவு மட்டுமே மிஞ்சும். இது புரிந்தவர்கள் “போகாத ஊருக்கு ஆகாத வழியைக் காட்டிய ஒரு சித்தாந்தத்துக்கு எதற்குக் கொண்டாட்டம்?” என்ற எண்ணத்தால் அருவருப்படைகிறார்கள்.

பொதுவுடைமை, சம உரிமை “எல்லோருக்கும் எல்லாமும்” என்று கூறும் கம்யூனிஸத்தை எப்படிக் குறைகூறலாம்? என்று தோன்றும். சற்று விரிவாகப் பார்ப்போம்.

டாஸ் காபிடல் எனும் கம்யூனிஸ பைபிளாக விளங்கும் நூலில், கார்ல் மார்க்ஸ் கம்யூனிசத்தின் பரிணாம வளர்ச்சியை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கிறார்.

  1. ஏற்றத்தாழ்வு

ஒரு குறிப்பிட்ட பொருளாதார நிலையில் இருக்கும் மக்களின் குழு “வர்க்கம்”. இப்படி எந்தச் சமுதாயத்திலும் பல வர்கங்கள் இருக்கும். பொதுவாகப் பாட்டாளி வர்க்கம், முதலாளி வர்க்கம் என்று இரண்டு பாகுபாடுகளை செய்கிறார் மார்க்ஸ். முதலாளிகள் கொடுக்கும் வரிப்பணம் அரசாகத்துக்குத் தேவை. சிக்கல் இல்லாமல் உற்பத்தி, தொழில் செய்யத் தோதுவாக சட்டங்களை உருவாக்க அரசாங்கத்தின் உதவி முதலாளிகளுக்குத் தேவை. இந்த முதலாளி வர்கமும் அரசாங்கமும் கூட்டாளிகள் என்கிறார் மார்க்ஸ். உற்பத்தியின் வழிமுறைகள் அரசாங்கத்தின் உதவியுடன் முதலாளி வர்கத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது. அவர்கள்தான் பாட்டாளி வர்கத்துக்கு வேலையும், கூலியும் கொடுக்கிறார்கள். பாட்டாளிகளிடம் எந்த சக்தியும் இல்லை. இந்த நிலையில், பாட்டாளிகள் சுரண்டப்படுகிறார்கள். இதுதான் ஏற்றத்தாழ்வு எனும் முதல் நிலை.

  • வர்க்கப் புரட்சி

ஒரு கட்டத்துக்கு மேல் சுரண்டல் நடக்கும்போது, பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்கத்தையும், அரசு அமைப்பையும் எதிர்த்துச் செய்வது வர்கப் புரட்சி. இந்த புரட்சி அவசியம் ஆயுதப் புரட்சியாக மட்டுமே இருக்கமுடியும் என்பது மார்க்ஸின் முடிவு. அரசாங்க அமைப்பும், முதலாளி வர்க்கமும் இந்தப் புரட்சியின் மூலம் அழிக்கப்படும். உற்பத்தி வழிமுறைகளை பாட்டாளிகள் அமைக்கும் அரசாங்கம் முதலாளிகளிடம் இருந்து பிடுங்கி, தானே வைத்துக்கொள்ளும். இந்த ஆட்சியில் உற்பத்தியின் பயன் சமமாக அனைவருக்கும் கொடுக்கப்படும். ஆனால் இது முடிவு கிடையாது.

  • பாட்டாளிகளின் சர்வாதிகாரம்

வர்கப் புரட்சி வெற்றி அடைந்தாலும், முதலாளி வர்கத்தின் மிச்சங்கள் அவ்வளவு எளிதாக அழிந்துவிடாது. மீண்டும் மீண்டும் அது தலைதூக்க முயலும். அப்படி நடக்காமல் தடுப்பதற்காக ஒரு சர்வாதிகார ஆட்சி அமைப்பு வேண்டும். பாட்டாளிகள் புரட்சி மூலம் அமைத்த அரசாங்கம்தான் அந்த சர்வாதிகார அமைப்பு. அதனால், பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள, பொறுத்துக்கொள்ள வேண்டும்.

  • கம்யூனிசத்தின் முடிவு

மேற்கண்ட சர்வாதிகாரத்தில், தனி மனிதர்களுக்கு உரிமையும், உடைமையும் கிடையாது. அரசாங்கம் வன்முறையை உபயோகித்து ஆட்சி செய்யும். அப்படித் தொடர்ந்து பொதுவுடைமை வலுக்கட்டாயமாகச் சில தலைமுறைகள் தொடரும். அதன்பின் அனைவரும் இயல்பாகவே கம்யூனிஸ சித்தாந்தத்துடன் இருப்பார்கள். இப்போது சர்வாதிகாரத்துக்குத் தேவை இல்லாமல் போகும்.

  • அனைத்துலக சமநிலை

இந்த நிலைமை உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உருவாகும். பிற நாடுகளின் அரசாங்கத்திடம் இருந்து தனது நாட்டைக் காப்பாற்றும் தேவையும் இல்லாமல் போகும். அதன் பின்னர், உலக சமநிலை ஏற்படும். அந்த நிலையில் அரசாங்கம் எனும் அமைப்புக்கே தேவை இல்லாமல், உலகின் கம்யூனிஸ அரசாங்கங்கள் அனைத்தும், காய்ந்த மலர்கள் தானாகவே மரங்களில் இருந்து உதிர்வது போல் உதிர்ந்து மறைந்து போகும்.

கேட்பதற்கு அழகாக இருக்கும் கதைகள் எல்லாம் நிதர்சனத்தில் அப்படியே இருக்காது.ரஷியாவில் நடந்த புரட்சிக்கு மார்க்ஸியவாதிகள் காரணமா என்பதே சரித்திரத்தில் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. ஏதோ லெனின் தானே முன்னின்று ஜார் மன்னர் ஆட்சியை வீழ்த்தியது போன்ற ஒரு பிம்பம் கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில், ஒரு ஜனநாயக ஆட்சியை அழித்து உருவானதுதான் ரஷ்யாவின் கம்யூனிஸ சர்வாதிகாரம் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

ரஷியாவில் ஸோஷலிஸ்டுகளும், விவசாயிகளும், சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் (Social Revolutionist) கட்சியைச் சேர்ந்தவர்களும் உருவாக்கியது ரஷியப் புரட்சியின் வித்துக்கள். மார்க்ஸியக் கொள்கையில் உருவான கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பலர் லெனினுடன் ஒத்துப்போகவில்லை. அவர்களை சிறுபான்மையினர் அதாவது, மென்ஷிவிக்குகள். இந்த மென்ஷிவிக்குகள்கூட ரஷியப் புரட்சியில் பெரும்பங்கு ஆற்றினர்.

ரஷியப் புரட்சி என்பது பல படிநிலைகளில் பலரால் நடத்தப்பட்டது.

1905 ஜனவரி 9 அன்று ஜார் மன்னர் அரண்மனை முன்பு ஒரு பெரும் ஆர்பாட்டம் நிகழ்ந்தது. இது விவசாயிகள் போராட்டம். இந்த ஆர்பாட்டம்தான் ரஷிய முடியரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ஆனால், இந்த ஆர்பாட்டம் கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படவில்லை. இந்தப் போராட்டம் ஜியார்ஜ் கோபன் எனும் ஒரு பாதிரியார் தலைமையில் நடந்தது. இன்னமும் சொல்லபோனால், லெனின் இந்தப் போராட்டம் நிகழ்ந்தபோது ரஷ்யாவிலேயே இல்லை. அவர் ஜெனிவாவில் இருந்தார். 1905 இறுதியில்தான் ரஷ்யாவுக்கு வந்தார்.

இரண்டு ஆண்டுகாலம் ரஷ்யாவில் இருந்தார் லெனின். இந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, தனது விவசாயிகள் மீதான பார்வையை லேசாக மாற்றிகொண்டது. அப்படி மாற்றிகொண்டபோதும், அவர்களால் பெரிய அளவுக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட முடியவில்லை. ஏற்கனவே மென்ஷிவிக்குகள் துவங்கி, சோஷலிஸ்டுகள் வரை பலர் விவசாயிகளை ஆதரித்து வந்தது இதற்கு ஒரு காரணம். மேலும், மார்க்ஸிய சித்தாந்தப்படி, விவசாயிகளை “பாட்டாளி வர்க்கம்” என்று ஏற்றுக்கொள்ள இயலாது. அவர்களில் பல சிறு குறு விவசாயிகள் நிலம் வைத்திருந்தனர். இந்தக் காரணத்தால் அவர்களையும் குட்டிப் பூர்ஷ்வாக்களாகவே மார்க்ஸிசம் சித்தரிக்கிறது.

லெனினின் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பகாலத்தில் பெரும் கொள்ளைகளிலும், திருட்டிலும் ஈடுபட்டு வந்தது. இதையும் ஏதோ இருப்பவர்களிடம் பிடுங்கி, இல்லாதவர்களிடம் கொடுக்கும் ராபின் ஹுட் வேலை என்று நினைக்கவேண்டாம். கட்சியில் பதவியில் இருந்தவர்களுக்காக அடிக்கப்பட்ட கொள்ளை. திபிலிஸ் வங்கியில் இருந்து 2,00,000 ரூபிள்கள் கொள்ளையடித்தது முக்கியமான சம்பவம். இந்தக் கொள்ளையில் முக்கியத் தலைவர் காமோ. இவர் லெனினின் வலதுகை. 1907ஆம் ஆண்டு காமோ வேறு ஒரு வழக்கில் கைதுசெய்யப்படுகிறார். விசாரணையில் திபிலிஸ் கொள்ளை விவகாரமும் வருகிறது. இந்தக் கொள்ளையில் லெனின் பங்கு கணிசமானது. அதனால், கைதுக்குப் பயந்து, லெனின் மீண்டும் ரஷ்யாவை விட்டு வெளியேறுகிறார்.

அவர் முதலில் ஜெர்மனி சென்று, பின்னர் மீண்டும் சுவிட்சர்லாந்தில் வசித்துவந்தார். இந்தக் காலகட்டத்தில் விவசாய அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் தொடர்ந்து பல கிளர்சிகளை ரஷ்யா முழுவதும் நடத்திவந்தன. இந்தக் கிளர்சிகளில் லெனினை சார்ந்த போல்ஷிவிக்குகளின் பங்கு மிகவும் குறைவு. எல்லாப் போராட்டங்களும் மென்ஷிவிக்குகள், சொஷலிஸ்டுகளால் நடத்தப்பட்டவை. குறிப்பாக, அலெக்ஸாண்டர் கெரன்ஸ்கி எனும் ஒரு வழக்கறிஞர் பிரபல தலைவராக இருந்தார். இவர் பல தொழிற்சங்க வழக்குகளில் வாதாடி, மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர். ஜார் இரண்டாம் நிகோலாய் மன்னனிடம் புரட்சியின் தீவிரத்தை எடுத்துச் சொல்லி, அவர் பதவி விலகவும் இவர்தான் காரணம். ஆனால், “தனது ஆட்சியில் முடியரசு ஒரு முடிவுக்கு வந்தது என்று இருக்கக்கூடாது” என நினைத்தார் இரண்டாம் நிகோலாய். “வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே” என்று தனது சகோதரர் மிக்கயேல் அலெக்ஸாண்ட்ரோவிச்சை ஜார் பதவியில் அமர்த்திவிட்டுப் பதவி விலகுகிறார்.

மிக்கயேல் ஆரம்பத்தில் இருந்தே, தனது பொறுப்பு ஒரு ஜனநாயக அரசை உருவாக்குவதுதான் என்பதில் தீர்மானத்துடன் இருந்தார். கெரன்ஸ்கியின் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்படுகிறது. அப்போது ரஷ்யா ஜெர்மனி இடையே போர் நடந்துகொண்டு இருந்தது. இந்தப் போரில் வெற்றிபெற வேண்டும் என்று மிகவும் முனைப்புடன் செயல்பட்டது கெரன்ஸ்கி அரசு. இந்நிலையில், திடீரென்று 1917 ஜனவரி 22 அன்று நாடு திரும்புகிறார் லெனின்.

அதுவும் அவராகத் திரும்பவில்லை. ஜெர்மனி லெனினுக்குப் பணம் கொடுத்து, பத்திரமாகத் திருப்பி அனுப்புகிறது. ரஷ்யாவில் இருந்த இடைக்கால அரசாங்கம் லெனினை நிபந்தனைகள் இன்றி வரவேற்கிறது. மேலும், அவரது வரவை ஒட்டி போல்ஷிவிக்குகள் கொண்டாட்டம், நிகழ்சிகள் நடத்தலாம் என்றும் கூறுகிறது. ஆனால், மொத்தம் 3000 சோவியத் தலைவர்களில் வெறும் 40 பேர்தான் லெனினை ஆதரித்த போல்ஷிவிக்குகள். மிச்சம் இருந்தவர்கள் அனைவருமே சோஷலிஸ்டு அல்லது மென்ஷிவிக்குகள். இதனால் லெனின் வரவு பெரிதாகக் களைகட்டவில்லை.

ஜெர்மனியிடம் பணம் வாங்கிக்கொண்டு லெனின் ரஷியா வந்தார் என்று பார்த்தோம். இந்தப் பணம், ரஷ்ய-ஜெர்மனிப் போரில், ஜெர்மனிக்கு சாதகமாக சமரசம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தரப்பட்டது. அதனால், தொடர்ந்து போரை நடத்தவேண்டும் என்று முனைந்த கெரென்ஸ்கி அரசாங்கத்தை ஜெர்மனியிடம் காசு வாங்கிய விசுவாசத்துக்காக லெனின் எதிர்த்தார்.

இதன் பிறகு, லெனின் தலைமையில் ஆயுதப்புரட்சி நடந்தது. இதற்குக் காரணமாக அமைந்த சம்பவங்கள் கொஞ்சம் சிக்கலானது. கவனமாகப் படிக்கவும். ஒருபுறம், கெரென்ஸ்கி தலைமையில் இடைக்கால ஆட்சி இருந்தது என்று பார்த்தோம். கெரென்ஸ்கி பல விஷயங்களில் தனக்குத் தானே ஆப்பு வைத்துகொண்டார் என்று சொல்லலாம். குறிப்பாக, கோர்நிலோவ் எனும் ஒரு ராணுவ அதிகாரியை படைத்தலைவராக நியமித்தார். இவர் கம்யூனிஸ சித்தாந்தத்தின் எந்தப்பிரிவையும் ஆதரிக்காதவர். கோர்நிலோவை ஒரு வலதுசாரி என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

கோர்நிலோவ் போரை மிகவும் திறமையாக நடத்தினார். ஆனால், அவர் மனதில் கெரென்ஸ்கி ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவ ஆட்சி கொண்டுவர வேண்டும் எனும் எண்ணம் இருந்தது. அதனால், அடிக்கடி “அரசாங்கம் ராணுவத்துக்குத் தேவையானதைச் செய்யவில்லை” என்றும் “போரை நடத்தும் அளவுக்கு இந்த அரசுக்கு முடிவுகள் எடுக்கத் துணிவில்லை” என்றும் விமர்சனங்களை வைத்துவந்தார். இதனால், ராணுவத்தில் ஒரு பகுதியினர் இடைக்கால அரசைக் கவிழ்க்க முயன்றனர். இந்த முயற்சிக்கு மொத்த ராணுவமும் ஆதரவு அளிக்கவில்லை. கோர்நிலோவ் முயற்சி தோல்வி அடைந்தது.

அனால், இந்த முயற்சி கெரென்ஸ்கி மனதில் பெரும் குழப்பத்தை உருவாக்கியது. ராணுவத்தின் மீதும், கோர்நிலோவ் மீதும் விசாரணை கொண்டுவந்தார். இது மக்கள் இடையில் அதிருப்தியை உருவாக்கியது. இன்னொரு பக்கம், என்னதான் ஜனநாயக ஆட்சி, மக்களின் அரசு என்று முயன்றாலும், அரசு அதிகாரிகளில் பலர் இன்னும் பழைய முடியாட்சி முறைக்கு ஆதரவாக இருந்தனர். விவசாயிகளும் கூலிகளும் முதலாகளாக மேரி, ஜனநாயக ஆட்சி செய்வார்கள் என்பதை பல அதிகாரிகளால் முழுமையாக ஏற்க முடியவில்லை. மேலும், விவசாயிகள் விஷயத்திலும், ராணுவ விவகாரத்திலும் தற்காலிக அரசுக்கும் நல்ல பெயர் இல்லை.

இந்த நிலையில், “அனைத்து அதிகாரமும் சோவியத்துகளுக்கே!” என்ற லெனினின் முழக்கம் ஒரு கவர்ச்சிகரமான தீர்வாக இருந்தது. கூடவே போர் நிறுத்தக் கோரிக்கையும் லெனின் முன்வைத்தார். இதனால், ராணுவ வீரர்களும் “ஒரு வழியாகப் போர் முடிந்து நாம் அமைதியாக வீடு திரும்பலாம்” என்கிற நம்பிக்கையில் லெனினை ஆதரித்தனர். ஆனால், லெனின் நினைத்திருந்தால், ஆயுதப் புரட்சி இல்லாமலேயே அதிகாரத்தைப் பிடித்து இருக்கலாம். இதைப் பல போல்ஷிவிக்குகளும் லெனினிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால், லெனின் ஆயுதப்புரட்சி ஒன்றே வழி என்று அடம் பிடித்தார்.

ஆயுதப் புரட்சி வெறும் மன்னராட்சியை, அல்லது முதலாளித் துவத்தை எதிர்த்து மட்டும் நடத்தப்பட்டது அல்ல. தங்களுக்கு உள்ளே இருக்கும் விவசாயிகள்-தொழிற்சாலை கூலிகள், சோஷலிஸ்டுகள்-கம்யூனிஸ்டுகள், மென்ஷிவிக்குகள்-போல்ஷெவிக்குகள் என்ற பாகுபாடுகளின் பலப்பரிட்சையாகவும் மாறியது. அதாவது உள்நாட்டுப் போர். இந்த உள்நாட்டுப் போர் நிலையைத்தான் ஏற்கனவே ஜெர்மனியுடன் சண்டையிட்டு நொந்துபோய் ஊர் திரும்பிய ராணுவம் சந்தித்தது.

சரி, விவசாயிகள் அடங்கிய ஸோவியத்துகளுக்காவது லெனின் நன்றியுடன் இருந்தாரா? அதுவும் கிடையாது. போராட்டம் நடக்கும்வரை “பாட்டாளி”களாக இருந்த விவசாயிகள், ஆட்சியைப் பிடித்தவுடன் “குலாக்”களாக மாறினர். அதாவது, தனியுடைமை விரும்பிகள். தங்கள் சொந்த நிலத்தில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் செய்துவந்த ஏழை எளிய விவசாயிகள் கூட்டுவிவசாய கம்யூன் முறைக்குக் கீழே வரவழைக்கப்பட்டனர். உள்நாட்டு வர்த்தகம், உணவுத்தேவை ஆகியவை புறந்தள்ளப்பட்டன. உலக நாடுகளுக்கு “கம்யூனிஸத்தின் வெற்றி”யைப் பறைசாற்ற ஏற்றுமதிகள் அதிகரித்தன. இன்னொருபுறம், தொழிற்சாலைக் கூலிகள் இருந்த ஸோவியத்களும் கிட்டதட்ட கலைக்கப்பட்டு, அனைத்துமே அரசு கட்டுப்பாட்டில் வந்தது. இதுதான் பாட்டாளிகளின் சர்வாதிகாரம் செயல்முறையில் உருவான முதல் தருணம்.

மூன்றாவது நிலையில் அனைத்து கம்யூனிஸ நாடுகளும் இன்றும் நிற்கின்றன. கம்யூனிஸ நாடுகளில் புரட்சி ஏற்பட்டு, பாட்டாளிகளின் சர்வாதிகாரம் வரை உருவாகிவிட்டது. ஆனால், அதற்குமேல் கடந்து செல்ல இன்றுவரை எந்தக் கம்யூனிஸ அரசாங்கத்தாலும் முடியவில்லை என்பதே நிதர்சனம். மக்களின் உரிமையையும், உடமையையும் கட்டுப்படுத்தும் கம்யூனிஸ அரசுகள், சர்வாதிகாரத்தை விட்டுக்கொடுப்பதாக இல்லை.

இந்தக் கட்டுப்பாட்டின் காரணத்தால் ரஷியா பல துண்டுகளாக உடைந்தது. வடகொரியா கின் ஜா மூனை கடவுளாகவே வழிபடும் ஒரு நகைப்புக்கும் பரிதாபத்துக்கும் உரிய நிலையில் உள்ளது. சீனாவின் பாட்டாளி சர்வாதிகாரம் சமூக வலைதளங்களில் அரசின் கொள்கைக்கு எதிராகக் கருத்து சொல்லும் இளைஞர்களை தேசிய தொலைகாட்சியில் வந்து மன்னிப்புக் கேட்கச் சொல்கிறது. இதுதான் பாட்டாளி சர்வாதிகாரம் இன்று உள்ள நிலை.

Animal Farm என்ற நாவலில் George Orwell “All animals are equal but some are more equal than others” என்றார். கம்யூனிஸம் பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். கம்யூனிஸ அரசாங்கத்தின் தலைமை மற்றும் இதர பொறுப்புகளில் இருப்பவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் அடிப்படையான “நான் எனது” என்னும் எண்ணம் உண்டு. இந்த எண்ணம் அதிகாரம் அவர்கள் கையில் கிடைத்தபோது, நிச்சயமாகத் தன்னையும் பிறரையும் ஒன்றாகவே நினைக்க, செயல்பட அனுமதிக்காது. இன்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் மூன் 19 சொகுசு மாளிகைகளுகுச் சொந்தக்காரர். அதிபர் பதவியும் அவரது தந்தையிடம் இருந்து வாரிசு போலப் பெற்றது. ரஷ்யாவில் 1999 துவங்கி இன்றுவரை ஒரே பிரதமர் விளாடிமர் புடின். இதுதான் கம்யூனிஸ ஆட்சிகள் நடத்திக்காட்டிய சாதனை

“சரி, அப்படியானால் சமூக சமநிலை வரவே முடியாது என்று சொல்கிறீர்களா?”

“சமநிலை” சாத்தியம் இல்லை. ஆனால், யாரும் சுரண்டப்படாத சமூகம் சாத்தியம். தீன் தயாள் உபாத்யாயா தனது ஏகாத்ம மானவ வாதம் எனும் நூலில் இரண்டு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆட்சி, அரசாங்கம், பொருளாதாரம் போன்ற அமைப்புகள் மேலை நாடுகளில் உருவாகும் முன்பாகவே, அவை பாரதத்தில் இருந்தன. அப்படி இருந்தக் கட்டமைப்பில் கம்யூனிஸ்டுகள் கூறும் வகையான ‘புரட்சி’ என்று ஏதாவது நடந்துள்ளதா? நமது சுதந்திரத்தையே நாம் ஆயுதப் புரட்சி மூலம் பெறவில்லை. “காலம் காலமாக இருந்துவரும் இந்தியப் பொருளாதார அமைப்பில் அத்தகைய புரட்சிக்குத் தேவையே உருவாகவில்லை. இதற்கு பாரதத்தின் சமூகப்பொருளாதார அமைப்பு தன்னிறைவு பெற்று இருந்ததே காரணம். சுரண்டல் என்றால் என்ன என்றே அந்நியர்கள் வரும்வரை நமக்குத் தெரியாது!” என்கிறார்.

இரண்டாவதாக, “மேலை நாடுகளின் முதலாளித்துவம் சோஷலிஸம் இரண்டுமே நமக்கு ஒவ்வாத சித்தாந்தங்கள். அங்கே உருவான சுரண்டல், பேராசை மனோபாவத்தினால் ஆயுதப் புரட்சிகள் உருவாயின. அப்படி உருவான புரட்சிகள் தீர்வாக அமைவதற்குப் பதிலாக, அவையும் மென்மேலும் சிக்கல்களையே உருவாக்கின.” என்கிறார்.

இந்த நிலைக்கு அவர் கூறும் காரணம், “மேலை நாடுகளின் அனைத்து சித்தாந்தங்களும் டார்வீனிய விதியில் இருந்து உருவானவை. அவை மனிதனை வெறும் உடலாக மட்டுமே பார்கின்றன. அவனது உடல் சார்ந்த தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் நோக்கில், வெவ்வேறு அணுகுமுறைகளை உருவாக்கின. ஆனால், இந்த அணுகுமுறை எதுவுமே நல்ல பலனை இன்றுவரை உருவாக்கவில்லை.”

அடிப்படையில் கம்யூனிஸக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கம், “அரசாங்கமே குடும்பங்களையும் நிர்வகிக்கும்” எனும் கருத்து. இன்று கம்யூனிஸத்துக்கு நேரெதிரான நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் நடப்பதைக் கொஞ்சம் சிந்திக்கலாம். அங்கே உங்கள் குழந்தைகளை நீங்கள் அடித்தால், அரசாங்கம் குழந்தையைப் பறிமுதல் செய்ய வாய்ப்புண்டு. மேலும், Social Security என்ற பெயரில் முதியவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக்கொண்டுவிட்டது. கம்யூனிசத்தின் உச்சமட்ட நோக்கத்தை ஒரு முதலாளித்துவ நாடு செயல்படுத்துவது வேடிக்கையாக உள்ளது. ஆனால், இதில் இருந்து, கம்யூனிசமோ, முதலாளித்துவமோ இரண்டுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான். அந்த நாணயமும் மேலை நாடுகளில் மட்டுமே செல்லுபடியாகும் என்று மட்டும் புரிகிறது.

சமநீதி, எல்லோருக்கும் எல்லாமும் என்றெல்லாம் சொல்வதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், அதனை அரசாங்க மாற்றம் மூலமாகவோ பொருளாதாரப் புரட்சியின் மூலமோ கொண்டுவர முடியாது. மக்களின் அடிப்படை குணத்தில் மாற்றம் வேண்டும். இந்த மாற்றம் வெளிப்புறத் தூண்டுதலால் நிகழாது. உள்முகமாக ஒருமைப்பாடும், அனைத்தையும் சமமாகப் பார்க்கும் உள்முக மாற்றமும் நிகழவேண்டும். இது அரசியல் இல்லை ஆன்மிகம். இந்த மாற்றத்துக்கு வழிகோலும் முறைமைதான் “தர்மம்” சுய தர்மம், அரச தர்மம், தொழில் தர்மம் என்று ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு வழிமுறை ஏற்கனவே நமது பாரத கலாசாரத்தில் உள்ளது.

இந்த வழிமுறைகள் பல ஆயிரம் ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டவை. எந்தவிதச் சிக்கலும் இல்லாத ஒரு முன்னேறிய சமுதாயத்தை ஏற்கனவே நடத்திக்காட்டியவை. இவற்றை ஏற்பதை விட்டுவிட்டு “பாதிக் காட்டுமிராண்டிகள்” என்று இந்தியாவை அழைத்த மார்க்ஸின் சித்தாந்தத்துக்கு விழா எடுப்பது வேதனை அளிக்கும் முட்டாள்தனம்.

5 Replies to “கம்யூ-நிஜம் கனவும் உண்மையும்”

  1. திராவிடக் க(ல)ழகங்கள் கும்பலிடம் எனக்குச் சில சந்தேகங்கள்

    1. கடவுள் கிடையாது, கோவில் கூடாது.
    பிறகு எதற்கு சர்சும் மசூதியும ?

    2. மத சம்பந்தமான நம்பிக்கை விரதம் மூடநம்பிக்கை,
    பின் நீங்கள் அவர்களின் குல்லா அணிந்து நோன்பிற்குப் போவது ஏன்?

    3.கடவுள் இல்லை, கோவிலில் இருப்பது கல் தான் எனில்
    கல்லுக்கு ஏன் தமிழில் அர்ச்சனை? சமஸ்கிருதம் ஏமாற்று எனில் தமிழ் ஏமாற்று வேண்டுமா?

    4.கடவுளை கற்பிப்பவன் அயோக்கியன்? பின் ஏன் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் ? எல்லோரும் அயோக்கியன் ஆகவா?

    5. வேற மாநிலத்தில் போய் சாமி கும்பிடாதே, தமிழ்நாட்டில் கும்பிடு.
    இல்லாத சாமிய கும்பிடறவன் முட்டாள்னா,
    அந்த முட்டாள்தனத்த தமிழ்நாட்டில் தான் பண்ணணுமா?
    முழு முட்டாள்தனமும் தமிழுக்கு உரியதா?

    6.தெலுங்கு பாலாஜியையோ கேரள அய்யப்பனையோ கும்பிடாதே,
    தமிழ் கடவுளை மட்டும் கும்பிடு.
    (தமிழுக்கு மட்டும் தான் இவர்களுக்கு இல்லை )

    கடவுளுக்கு தனிதனியாக மாநிலம் மற்றும் , மொழி உண்டா?
    இது மெக்காவிற்கும் ஜெருசலத்திற்க்கும் பொருந்துமா?

    1956க்கு முன்பு சென்னை மாகாணம் பிரிப்பதற்கு முன் பாலாஜியும், அய்யப்பனும் தமிழர்களாக இருந்து ? பின் தெலுங்கு மற்றும் மலையாளி ஆக மாறி விட்டனரா?

    1956 முன் அவர்களுக்கு தமிழ் தெரிந்து இருக்குமே.
    பாவம் முருகனுக்கு மட்டும் தமிழை தவிர வேறு மொழி தெரியாது
    அது எப்பிடி ஒரு குடும்பத்துல அப்பா ஹிந்தி, அண்ணன் தமிழ், தம்பி மலையாளி ,

    7. உண்டியல்ல பணம் போடாமல் ஏழைக்கு கொடுங்கள்!
    ஆனால், ஏழைக்கு உதவ அரசுக்கு நாங்க கட்ற வரிப் பணத்துல மெக்காவிற்கு ஏன் ஆளை அனுப்புறிங்க.

    8. தமிழனுக்கு மதம் கிடையாது?
    தமிழன் இந்து இல்லை.
    அப்போ தமிழன்கிறித்துவனாக இல்லை வஹாபியனாக இருப்பானோ?

    தமிழன் இந்து இல்லை என்றால் இந்தியாவில் எந்த மாநிலத்திலேலேயும் இல்லாத
    அளவிற்கு அழகழகான கற்சிற்பங்களுடன் கூடிய பிரமாண்டமான கோவில்களை கட்டிய நமது முன்னோர்கள் இந்துக்கள் இல்லையா.? முட்டாள்களா?

    9. வீட்டுக்காரர் மாட்டுக்கறி தின்போம்னு போராடுறாரு

    வீட்டுக்காரம்மா பசு மாட்டை கும்பிட்டு கோமாதா பூஜை பண்ணிக்கிட்டு இருக்கு

    இதுதான் திராவிட கொள்(ளை)கை யா.?

    ஊருக்கு தான் உபதேசமா….

  2. ஹிட்லர் இன்று உலகத்தின் மிகப் பெரிய தீய சக்தியாகவும், மகா வில்லனாகவும், “கிறிஸ்துவுக்கு எதிரானவராகவும்” (anti Christ) மேற்குலத்தால் சித்தரிக்கப் படுகிறார். ஆனால் நாசிசத்தின் உருவாக்கத்திலும், யூத வெறுப்பிலும் கிறிஸ்தவத்தின் தாக்கம் மையமானது மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய கிறிஸ்தவ அதிகார பீடங்கள் நாசிசத்தை முழுமையாக ஆதரிக்கவும் செய்தன என்றும் சொன்னால் உங்களுக்கு வியப்பு ஏற்படுகிறது இல்லையா?? மேற்குலகில் நன்கறியப் பட்ட இந்த விஷயங்கள் இந்தியாவில் வெளிச்சத்துக்கு வரவே இல்லை

  3. கம்யூனிஸ்டு புத்தகத்தின் அட்டையையும், பெந்தெகொஸ்தே புத்தகத்தின் அட்டையையும் கிழித்து விட்டால் இரண்டும் ஒன்று தான். இவர்களுக்கு அதிகாரமே குறி. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். கிறித்துவம் எங்கெல்லாம் புக முடியாதோ அங்கெல்லாம் மிஷ-நரிகள் ஆட்கொல்லிக் கிருமியான கம்யூனிஸத்தை நுழைத்து அந்நாட்டின் பாரம்பரியக் கலாச்சாரத்தை அழிக்கின்றனர். கலாச்சார அழிப்பு நடந்தபின் மத மாற்றம் வெகு சுலபம் அல்லவா? சுருங்கச் சொன்னால் 90 சதவிகித நாட்டில் கம்யூனிஸ்டுகள் கிறித்துவ மிஷ-நரிகளுக்கு முகமூடியாகத்தான் பணியாற்றுகின்றனர்.

  4. கோவையில் உள்ள இராணுவ முகாம் நுழைவு வாயிலில் “வெற்றிவேல் வீரவேல்”என்று எழுதியிருப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அழுக்குதொப்பி தீவிரவாதிகள் தூண்டிவிட்டு அதை நீக்கவேண்டும் என்று மதசார்பற்ற (ஓ)நாய்கள் கத்துகின்றன.

    மோடி அரசு இராணுவத்தில் மதத்தை திணிக்கிறது என்றெல்லாம் ஊளையிடுகின்றன மதசார்பற்ற (ஓ)நாய்கள்.

    கோவை மதுக்கரையில் உள்ள இராணுவமுகாம் நிறுவப்பட்ட நாளில் இருந்தே அங்கு நுழைவுவாயிலில் “வெற்றிவேல் வீரவேல்”என்று எழுதியுள்ளனர். இது புதிதாக இப்போது எழுதப்பட்டது இல்லை என்று இராணுவ முகாம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    “வெற்றிவேல் வீரவேல்”என்பது தமிழர்களின் வீரமுழக்கம். அதை எந்த காரணம் கொண்டும் நீக்க கூடாது.

    இன்று “வெற்றிவேல் வீரவேல்”முழக்கம் இந்து மதத்துக்கு உரியது என்று அதை நீக்க சொல்வான்.

    நாளை “#ஜெய்ஹிந்த்”கூடாது ; அதில் ஹிந்த் வருகிறது என்பான்.

    பின்னர் “இந்தியா” கூடாது ,அதிலும் இந்து வருகிறது என்பான்.

    மதவெறியையே மதகோட்பாடாக கொண்டுள்ள அழுக்குதொப்பி துலுக்கன்கள் சொல்வதை எல்லாம் கேட்டு ஆடினால் நாளை நம் நாட்டை தாலிபான் நாடு ஆக்காமல் விடமாட்டானுங்க.

    எப்போது இந்துக்களோடு இணைந்து எங்களால் வாழமுடியாது என்று துலுக்கன்களுக்கு என்று தனியே இந்திய நிலப்பரப்புகளை பிரித்துக்கொண்டு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (பங்களாதேஷ்) என்று பிரித்துக்கொண்டு போனானுங்களோ ;அதன் பிறகு துலுக்கன்கள் சிலர் இங்கேயே தங்க இந்திய அரசாங்கம் அனுமதித்தது கிட்டதட்ட இந்திய குடியுரிமை பெற்ற அகதிகளை போலத்தான் ;இந்தியாவில் உள்ள அனைத்து கலாச்சாரம், பண்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு வாழுவோம் என்று துலுக்கன்கள் உறுதியளித்து அக்காலத்தில் எழுதப்பட்ட ஆணைகளை துலுக்கன்கள் மறந்து செயல்படுகிறான்கள். அதற்கு துலுக்கன்களின் மொத்தமாக விழும் மதவாத ஓட்டுக்காக கேடுகெட்ட காண்கிராஸ் அவனுங்களுக்கு தலைக்கு மேல் சலுகைகளை வாரிக்கொடுத்துவிட்டது. அதனால் துலுக்கன்கள் இந்தியாவில் பாவப்பட்டு தங்க வைக்கப்பட்ட பாகிஸ்தான் வந்தேறி அகதிகள் என்பதை மறந்துவிட்டு ரொம்பவே ஆட்டம் போடுகிறார்கள்.

    பழைய கோப்புகளை எல்லாம் தூசிதட்டி எடுத்து மதவெறி துலுக்கன்களின் மதகொழுப்பு ஆணவத்தை அடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

    கோவை இராணுவ முகாம் நுழைவு வாயிலில் இருந்து “வெற்றிவேல் வீரவேல்” தமிழர்களின் வீரமுழக்கம் அகற்றப்பட்டால் தமிழகத்தில் கோட்சேக்களாக பலர் உருமாறுவோம் என்பது நிச்சயம்.

    “இது சத்தியம்”.

    *#வேலும் மயிலும் துணை*
    *#ஜெய்ஹிந்த்*

  5. பாரதமாதா வாழ்க சொல்லாதீங்க இது மதசார்பற்ற நாடு-

    ஜெய்ஹிந்த் சொல்லாதீங்க தமிழர் மனசு புண்படும் –

    வெற்றிவேல் வீரவேல் சொல்லாதீங்க இது மதசார்பற்ற நாடு-

    தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த மாட்டோம் எங்க மத உணர்வு புண்படும் –

    வந்தேமாதரம் சொன்னா அல்லா கோச்சிப்பாரு –

    நாங்க தினமும் அஞ்சுவாட்டி அரபில தொழுவேன் ஏன்னா நான் மதசார்பற்றவன், ஆனா, நீ சமஸ்கிரதுத்துல மந்திரம் சொன்னா என் மனது புண்படும், மரியாதையா தமிழ்ல மந்திரம் சொல்லு –

    ஆண்டாள நாங்க ஆதாரமேயில்லாம தாசின்னு சொல்லுவோம், ஆனா நீ பதிலுக்கு கன்னி மேரி எப்படி கர்பமானாள்?, குழந்தை ஆயிஷாவை எப்படி முகம்மது மணந்து போக்ஸோ குற்றம் புரிந்தான்னு எதிர்கேள்வி கேட்டா எங்கள புண்படுத்திட்டாய்ங்கென்னு ஒப்பாரி வைப்பீங்க-

    ஆமா, தெரியாமதான் கேட்கறேன் நீங்க யாரோட மண்ணுல இருக்கீங்க தெரியுமா? –

    நீங்க இங்க எப்படி வந்தீங்க, எப்படி பெருகுனீங்க தெரியுமா?-

    எதுக்காக மதம் மாறுனீங்க தெரியுமா?-

    எதுவுமே தெரியாது உங்களுக்கு-

    இந்த நாடு ஹிந்துநாடு: ஹிந்து மக்கள் சொந்த நாடு –

    உங்களுக்கு எங்களோட வாழப்பிடிக்கலன்னா நீங்க பெரிசா மதிக்கற உங்க மத ஆட்கள் வாழற நாட்டுக்கு தயவு செஞ்சு போய்டுங்க –

    ஆனால், உங்கள் சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சி மீண்டும் ஒரு பிரிவிணை நடக்க நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம் –

    வெற்றிவேல், வீரவேல் –
    ️️️️️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *