தமிழக அரசின் அபத்தமான மற்றும் ஆபத்தான தீர்மானம்

மத்திய அரசு, 2019-ல்  பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள், 10 ஆண்டுகளாக இந்தியாவில்  வாழ்ந்து வரும் அகதிகளுக்கு, குடியுரிமை வழங்கும் விதமாக,  குடியுரிமை சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு,  நிறைவேற்றியது.  பின்னர், குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது.   தற்போது தமிழக அரசு இச் சட்டத்தை எதிர்த்து , சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  இதன் காரணமாக தமிழ் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தும்,  மற்றொரு அசாமாக மாற இந்த தீர்மானம் வழி வகுக்கும்.  

                தமிழக சட்டபேரவையில்  இத் தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் ,   “மத்திய அரசு கடந்த  2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதநல்லிணக்கம், மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை. இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.  இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது. நாட்டுக்கு அகதிகளாக வருவோரை மதரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த தனித்தீர்மானத்தை கொண்டுவந்துள்ளேன்”  என கூறியதை சற்றே விரிவாக பார்க்க வேண்டும்.

              திருவாளர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற பின்னர் ஒரு தீர்ப்பு பற்றிய விவரங்கள் தமிழக முதல்வரின் பார்வைக்கு செல்லவில்லை.    ஜீலை 3-ந்தேதி 2021 சென்னை உயர் நீதி மன்றத்தில் , குற்ற வழக்கில் சிக்கிய இலங்கைத் தமிழர் ஒருவர் ஜாமீன் கோரி  தாக்கல் செய்த மனுவின் மீது  நீதிபதி  திரு. தண்டபாணி அவர்கள்,  அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கருத்தை பதிய விட்டுள்ளார்.   பாரத நாட்டின் பல பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்  பலருக்கு  அச்சத்தை உருவாக்கும் உத்திரவு.   ”  இந்தியாவில்  வெளிநாட்டவர்கள் பலர் உரிய ஆவணங்களின்றி  பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக குடியிருந்து வருகின்றனர்.  அதிகாரிகளின் உதவியுடன் , அவர்கள் சொத்துக்களையும் வாங்கி இந்திய குடிமக்கள் போல சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.   உலகில் எந்தொரு நாட்டிலும் இது போன்ற நிலை இல்லை.  இதற்கு முடிவு கட்ட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை இனியும் அனுமதிக்க முடியாது ”  என குறிப்பிட்டுள்ளார்.  

                    நீதிபதி குறிப்பிட்டுள்ளது போல்,  தமிழகத்தில்  திருப்பூர், கோவை, சென்னை போன்ற தொழில் நகரங்களில் அதிக அளவில் பங்களா தேஷ்,  இலங்கை, மியான்மர் நாட்டிலிருந்து வந்துள்ள ரோஹிங்கிய முஸ்லீம்கள், நைஜீரியா நாட்டினர் சட்ட விரோதமாக தங்கியுள்ளார்கள்.  இவ்வாறு  தங்கியுள்ளவர்களில்  பலர்  சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுகின்றன.   பிடிப்படுகின்ற அந்நிய நாட்டினர், விசாரனையின் போது,  போதை பொருள் கடத்தல்,  பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல் ,  திருட்டு, கொள்ளையடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.   இது தெரிந்தும்  குடியுரிமை சட்ட திருத்த சட்டத்திற்கு எதிராக ஒரு தீர்மானம் ஏன் கொண்டு வர வேண்டும்.   சட்ட மன்றத்தில்  தமிழக முதல்வர் ஆற்றிய உரையிலேயே பல விவாதங்கள் எழப்  போகின்றன.

                இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.    தி.மு.க.  இலங்கை தமிழர் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி அரசியல் ஆதாயம் பெறவே முயலுகிறது.     இலங்கையில் நடப்பதும்,  பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடப்பதும் ஒன்று  போல் சித்தரிக்கிறார்கள்.    மத்தியில்  தி.மு.க.  2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தார்கள்.   10 ஆண்டுகளில்  எப்பொழுதாவது,  இலங்கை தமிழர்களுக்கு  குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியிருப்பார்களா என்ற கேள்விக்கு பதில் கொடுப்பதில்லை.  லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட போது, காலஞ்சென்ற பிரணாப் முகர்ஜி  வாக்குறுதி கொடுத்து விட்டார், இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது  என தவறான செய்தியின் மூலம்  உண்ணாவிரத நாடகத்தின் போதாவது,  குடியுரிமையைப் பற்றி பேசியிருக்கலாமே, ஏன்  பேசவில்லை.   சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.  இலங்கை தமிழர்கள் மீது பா.ஜ.க. விற்கு அக்கரையில்லாதது போல் பேசுவதும்,  எழுதுவதும்  தி.மு.க.வினருக்கு வாடிக்கையாகி விட்டது.

           இலங்கை தமிழர்களின் பிரச்சினையில்  1964வரை  எந்த முன்னேற்றமும் இல்லை. 1964ல் இலங்கையில் சுமார் 9,75,000 பேர் நாடற்றவர்களாக இருந்தனர். இந்த நிலையில், இவர்களில் 8,25,000 பேருக்குப் பொருந்தும் வகையில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் இலங்கையின் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தனர். அதன்படி, 3,00,000 நாடற்றவர்களுக்கும் அவர்கள் சந்ததிகளுக்கும் இலங்கை குடியுரிமை வழங்கும். 5,25,000 பேரை இந்தியா திரும்ப ஏற்றுக்கொள்ளும். மீதமிருந்த, 1,50,000 பேரைப் பற்றி ஏதும் ஒப்பந்தத்தில் சொல்லப்படவில்லை.  இது பற்றி அன்றைய தி.மு.க. தலைவர்கள் எவரும் கேள்வி எழுப்பவில்லை.

                இதற்குப் பிறகு எஞ்சியிருந்த 1,50,000 இந்திய வம்சாவளித் தமிழர்களில் தலா 75000 பேருக்கு குடியுரிமை வழங்க இரு நாடுகளும் 1974ல் ஒப்புக்கொண்டன. ஆக, ஒட்டுமொத்தமாக இந்தியா 6,00,000 பேரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஆனால், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது, இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவோர் தாங்களாகவே அதைச் செய்ய வேண்டும். அரசு யாரையும் வலியுறுத்தக்கூடாது என்பதுதான் . 1968வாக்கில் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியா திரும்பத் துவங்கினார்கள்.  ஆனால், 1986வாக்கில் இந்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில், வெறும் 5,06,000 பேர் மட்டுமே இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தனர். இதனால், இந்தியாவின் பங்கில் மீதமிருந்த 94,000 பேரையும் இலங்கை ஏற்றுக்கொண்டது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை வழங்கியதாக சுட்டிக்காட்டுவது இந்த இந்திய வம்சாவளியினரைத்தான். இவர்கள் இந்தியாவிலிருந்து சென்று இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த இந்தியத் தமிழர்களே தவிர, இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் அல்ல.  தற்போது தி.மு.க. பேசுவது  இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் பற்றியது என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.  பூர்வீக தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை பெற்றவர்கள், சொத்துகள் வாங்கி வாழ்க்கை நடத்தியவர்கள்.  

           தவிர, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த ஒருவருக்குமே இந்தியக் குடியுரிமை அளிக்கப்படவில்லை. சட்டப்படி அதற்கான வாய்ப்புகளும் இல்லை என்கிறார்கள் சட்ட வல்லூநர்கள்.   காரணம் அவர்கள் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பதை மறந்து விட்டு தி.மு.க. அரசியல் லாபத்திற்காக வாதாடுகிறது.  3 விதமான இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளார்கள். அதில் நாடற்ற தமிழர்கள் எனும் அடிப்படையில் இதுவரை 4,69,000 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.  ஒரு நாட்டில் குடியுரிமையை இழந்து மற்றொரு நாட்டில் குடியுரிமை பெற்றால் அவர்கள் வசித்த நாட்டில் உள்ள அவர்களின் சொத்துக்களை இழக்க நேரிடும் என்பதால் தமிழகத்திற்கு வந்த அகதிகளில் 59,000 நபர்கள்தான் வசிக்கிறார்கள்; மீதம் உள்ளவர்கள் தூதரகம் மூலம் அவர்களது நாட்டிற்கே சென்றுவிட்டார்கள்.  இந்த உண்மையையும்  தி.முக. தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக வாதாடுவதில்லை.

                இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க  இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.  ஏற்கனவே  பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி என நான்கு நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் பிறந்த ஒருவர் அந்த நான்கு நாடுகளில் ஒன்றில் குடியுரிமை பெற்று இருந்தாலும் இந்தியராகவே கருதப்படுவார்.  இதே போல் மத்திய அரசு இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால் போதும், ஈழத் தமிழர்களால் இந்திய குடியுரிமை பெற முடியும்.  பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்த தி.மு.க. ஏன் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முயற்சி எடுக்கவில்லை.  அல்லது இலங்கையில் ராஜபட்சேவை சந்தித்த தி.முக. கூட்டணி கட்சியின் தலைவர்கள் அவரிடம் இது பற்றிய கோரிக்கையை ஏன் வைக்கவில்லை என்பதற்கு சரியான காரணங்களை கூறாமல் மத்திய அரசின் மீது பழி போடுவது, அரசியல் ஆதாயம் என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.

              நாடாளுமன்றத்தில்  உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்து,   “பல உறுப்பினர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். நான் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. இருந்தாலும், வைகோ, திருச்சி சிவா போன்றவர்கள் இது குறித்துக் கேட்டார்கள். 1947ல் இருந்து இந்திய அரசு பல்வேறு காலகட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது. பல கட்சிகள் இதைச் செய்திருக்கின்றன. முதலில் 4,61,000 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. பிறகு, 94 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. பிறகு, ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். அவர்களில் 75 ஆயிரம் பேர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். 75 ஆயிரம் பேர் இந்தியாவிலேயே வைத்துக்கொள்ளப்பட்டார்கள். இரண்டு லட்சத்து 16 ஆயிரம் அகதிகள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். சிலர் இன்னும் இங்கே இருக்கிறார்கள். ஒரு அநீதியும் இழைக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

         இது தவறான தகவலாக இருந்தால் நீதி மன்றத்தில் முறையீடு செய்திருக்கலமே ஏன் தி.மு.க. செய்யவில்லை.   இந்தியச் சட்டப்படி குடியுரிமை பெற சில வழிகளே இருக்கின்றன. ஒன்று, சட்டபூர்வமாக குடியுரிமை உள்ள இந்தியப் பெற்றோருக்குப் பிறந்திருக்க வேண்டும். அல்லது, இந்தியாவில் வசிக்கத் தகுதிபெற்ற பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். அல்லது, 11 ஆண்டுகள் இந்தியாவில் சட்டபூர்வமாக வசித்திருக்க வேண்டும் அல்லது, இந்தியா எந்த நாட்டையாவது தன்னோடு இணைத்துக்கொண்டால் அங்கு வசிக்கும் குடிமக்களாக இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழிகளில் இந்தியக் குடிமகனாக முடியாது” என்கிற  சட்டத்தின் அடிப்படையில் தான் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.  

                 மதச்சார்பின்மை –  இன்று  இது ஒரு சர்வரோக நிவாரணியாக  அரசியல்வாதிகளுக்கு மாறிவிட்டது.    பா.ஜ.க. மீதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீதும் சுமத்தும் குற்றச்சாட்டுகளில்  முதன்மையான குற்றச்சாட்டு  மதச்சார்பின்மை என்பதே.   உண்மையில்  மதச்சார்பின்மையின் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.   டாக்டர் அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை கிடையாது. இது பற்றி டாக்டர் அம்பேத்கார், இந்த நாடு மதசார்பற்ற நாடு என்பதால், அரசியல் அமைப்பு சட்டத்தில் மதசார்பற்ற என்ற வார்த்தையை சேர்க்கவில்லை என்றார்.   1976-ல் இந்திரா காந்தியால்  42 வது திருத்தத்தின் மூலம்  முகப்பில்  சேர்க்கப்பட்டது.   தனது அரசியல் ஆதாயத்திற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டது.    42வது திருத்தம் கொண்டு வரப்பட்ட கால சூழ்நிலையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.   தி.மு.க. வின் பல தலைவர்கள்  தங்களின் பெயருக்கு முன்னால் மிசா என்ற வார்த்தையை பயன்படுத்தியதை நினைவுப்படுத்தி பார்த்தால் சில உண்மைகள் நன்கு தெரியும்.   எனது மகனுக்கு விழுந்த அடிகளை தாங்கி கொண்டு உயிர் துறந்த சிட்டிபாபு என புலம்பிய கருணாநிதியின் மகனுக்கு  இந்த விவகாரம் தெரிய வாய்ப்பில்லை.     

                 42 வது திருத்தத்திற்கு முன் இந்திரா காந்தி நடத்திய அரசியல் சித்து விளையாட்டையும் புரிந்து கொள்ள வேண்டும்.  அரசியலமைப்பின் 38 வது திருத்தம் ஜூலை 22, 1975 அன்று நிறைவேற்றப்பட்டது,  இதன் மூலம் அவசரநிலைக்குப் பிறகு முதல் முறையாக, அவசரகாலத்தை நீதித்துறை மறுஆய்வு செய்யும் உரிமையை நீதித்துறை இழந்தது. இந்த திருத்தத்தின் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்திரா காந்திக்கு பிரதமர் பதவியை தக்கவைக்கும் நோக்கத்துடன் அரசியலமைப்பின் 39 வது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திரா காந்தியின் தேர்தலை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால், நாட்டின் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவரைத் தேர்வு செய்யும் உயர் நீதிமன்றங்களின் உரிமையை 39 வது திருத்தம் ரத்து செய்தது. திருத்தத்தின் படி, பிரதமர் தேர்தலின் விசாரணை மற்றும் விசாரணையை நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு மட்டுமே செய்ய முடியும்.   இது பற்றி திருவாளர் ஸ்டாலின் விவாதிக்க முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வி குறியாகும்.

                29 ஆண்டு காலமாக  இந்த நாடு மதசார்பற்ற நாடாகவே இருந்தது.  இந்திரா காந்தி  42வது திருத்தத்தின் மூலம்  இந்தியா மதசார்பற்ற நாடாக மாறவில்லை.   தமிழகத்தில்  தி.மு.க. மற்றும் திராவிட இயக்கத்தினர் பார்வையில் மதசார்பற்ற நாடு என்றால், சிறுபான்மையினருக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கி விட்டு,  பெரும்பான்மையான இந்துக்களை வஞ்சிப்பது தான் மதசார்பற்ற தன்மை என்ற அளவு கோலை வைத்திருக்கிறார்கள்.   அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்திருக்க கூடாது என்பது மறைந்து,  முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கு சலுகை காட்டுவது தான் மதசார்பற்ற அரசு என மாறியதால் ஏற்பட்ட விளைவு.  

                       சட்ட பேரவையில் ,  நாட்டுக்கு அகதிகளாக வருவோரை மதரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது  என்றார்.    அகதிகள் யார் என்பதற்கு சரியான விளக்கத்தை ஐ.நா. சபை அறிவித்துள்ளது.  ஐ.நா . சபையின் வழிகாட்டுதலின் படி அகதிகள் பிரச்சினையில் இந்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.   இந்திய அரசு  ரோஹிங்கியா முஸ்லீம்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்து விட்டது.   மத்திய அரசின் முடிவுக்கு  உச்ச நீதிமன்றமும்  மறுப்பு தெரிவிக்கவில்லை.  ஆனால்  அகதிகளாக வந்தவர்களுக்கு  மத ரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது என்றால்,   அந்நிய நாட்டிலிருந்து வருபவர்களை ஏற்றுக் கொண்டு குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் கூறுகிறாரா என்பதை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும்.   குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை முழுமையாக படித்து விட்டு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கலாம்.   1947 ஆகஸ்ட் 15க்கு பின்னர் இந்தியாவில்  வாழ்ந்து வரும்  இஸ்லாமியர்களின் வாரிசுகளை வெளியேற்றவில்லை.    தவறான பிரச்சாரத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.   இவர்களின் நோக்கம்  சட்ட விரோதமாக ஊடுருவிய பங்களா தேஷ்  முஸ்லீம்களுக்கு  குடியுரிமை வழங்க வேண்டும்  என்பதாகும்.    

            கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.  இந்தியாவில் அவர்கள் குடியேறிய 5 ஆண்டுகளில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அது 11 ஆண்டுகளாக இருந்தது.  இந்தச் சட்டப்படி போதிய ஆவணம் இல்லை என்றாலும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

           குடியுரிமை அளிக்கப்படுபவர்களுக்கு அவர்கள் மீது ஏற்கனவே தொடரப்பட்டுள்ள சட்ட விரோதமாக குடியேறியதற்கான வழக்குகளிலிருந்து சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படும்.   அரசியலமைப்பின் 6 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அசாம், மிசோரம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட பழங்குடியினப் பகுதிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  எல்லைப்புற ஒழுங்குமுறை ஒப்பந்தத்துக்கு உட்பட்ட அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.     இது தான் குடியுரிமை திருத்த சட்டமாகும்.   ஆகவே பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்   முஸ்லீம்கள் மத ரீதியாக துன்புறத்தப்படவில்லை.   அவர்களுக்கு சகல விதமான உரிமைகளும் உள்ளது.  இதை முதலில் ஸ்டாலின் புரிந்து கொள்ள  வேண்டும்.

                திருவாளர்  ஸ்டாலின் கவனத்திற்கு தமிழகத்தில்  நடத்திய சில சம்பவங்களை நினைவுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.   திருவாளர்  நெடுமாறன் மற்றும்  வீரமணி போன்றவர்கள்  தமிழகத்தில்  தொழில் புரியும்  மார்வாடிகளை திரும்ப சொல்லி நடத்திய போராட்டங்கள்,  சில மாவட்டங்களில்  மார்வாடிகளை தாக்கிய சம்பவங்களும் உண்டு.   அன்றைக்கு ஸ்டாலின்  இன ரீதியாக பாகுபாடு பார்க்க கூடாது என தெரிவித்திருக்க வேண்டும்  அல்லது தனது தந்தையிடம் கூறி தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.  அப்பொழுது  தி.க. மற்றும்  பிரிவினைவாதிகளுக்கு துணை போனவர்கள்  இன்று ஒரு நியாயம்  பேசுகிறார்கள்.                

                அகதிகளாக  இந்நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல், மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது  என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  அகதிகளாக வருபவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது என்பது உலகில் எந்த நாட்டிலும் நடக்காத ஒன்று என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.   இஸ்லாமிய நாடுகளில் அகதிகளின் நிலையை பற்றி நன்கு தெரிந்து கொண்டு,  வக்காலத்து வாங்க வேண்டும்.   திருவாளர் ஸ்டாலினுக்கு அகதிகளுக்கும் , சட்ட விரோதமாக ஊடுருவியவர்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.   ஐ.நா.சபையின் அகதிகள் பற்றிய விதி முறைகள் 1951-ல் கொண்டு வரப்பட்ட போது, இந்தியா அதில் கையெழுத்திடவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  இரண்டாவது  நேரு பிரதமராக இருந்த போதே, திபெத்தியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் அகதிகளாக இந்தியா வந்த போது, அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.      2015-ல்  ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களில் 4,300 பேர்களுக்கு  குடியுரிமை வழங்கப்பட்டது.  அப்பொழுது  ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது தெரியவில்லை.   

                இலங்கை அகதிகள் பற்றி பேசும்  ஸ்டாலின் கவனத்திற்கு, 1960-ல் திபெத்திலிருந்து வந்த அகதிகளின் மறு வாழ்விற்காக  கர்நாடக அரசு 3,000 ஏக்கர் நிலத்தை கொடுத்து அவர்களுக்கு விவசாயம் செய்ய அனுமதி அளித்தது என்பதும், 2020-ல்  திபெத்திய மாணவர்களின் கல்வி வசதிக்காக 12 பள்ளிகள் திறக்கப்பட்டது என்பதையும் நினைவுப் படுத்தி,  ஒரு கேள்வி எழுப்ப வேண்டும்,  தாங்களும், தங்களின் தந்தையாரும் ஆட்சி செய்த காலத்தில்  இலங்கை அகதிகளின் புணர் வாழ்விற்கு செய்த பணிகள் என்ன என்பதை தெரியப்படுத்தினால் நலமாக இருக்கும்.

                இப்பொழுது பிரச்சனை அகதிகள் வடிவில் வந்த பிரச்சனையல்ல.  சட்ட விரோதமாக 1967 லிருந்து இந்தியாவில் ஊடுருவியவர்களை பற்றியது.  மேலும்  முறையான விசா பெற்று இந்தியாவிற்கு வருகை தந்த பங்களா தேஷ் இஸ்லாமியர்கள், விசா காலம் முடிந்த பின்னரும் அவர்களின் நாடுகளுக்கு திரும்பாதது பற்றியதும்  என்பதை ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.   சட்ட விரோதமாக இந்தியாவில் நுழைந்தவர்கள்  அதிக அளவில் ஊடுருவிய மாநிலம் அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலம், மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகும்.   1979 முதல் 1985 வரை அஸ்ஸாம் மாநிலத்தில்  மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது.   இந்த போராட்டம்,  சட்ட விரோதமாக  பங்களா தேஷ் நாட்டிலிருந்து ஊடுருவியவர்களின் ஆதிக்கத்தின் காரணமாக,  அஸ்ஸாமியர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது,  என்பதை வலியுறுத்தி நடந்த போராட்டம்.   இந்த ஆறு ஆண்டுகள் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும்  பள்ளிகள், கல்லூரிகள் இயங்கவில்லை என்பதை ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.

                1985- ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி  அஸ்ஸாம் மாணவர்களுக்கும்,  அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் படி,  1971 மார்ச்சு 25க்கு பின்னர்  சட்ட விரோதமாக ஊடுருவியவர்களை கண்டு பிடித்து வெளியேற்ற வேண்டும்  என்ற ஷரத்து இருந்தும்,  இது வரை ஒருவரை கூட வெளியேற்ற வில்லை.    இதற்கு முதன்மையான காரணம்,  உள்ளுர் அரசியல்வாதிகளின் துணையோடு, ஊடுருவியவர்கள்,  தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதால்,  அதையே ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்  என்ற உண்மை ஸ்டாலினுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.   தி.மு.க. அங்கம் வகித்த ஐ.மு.கூ. ஆட்சியின் முதல் கட்டத்தில்  அதாவது 2004-ல்  நாடாளுமன்றத்தில் எழுப்பிய ஒரு கேள்விக்கு மத்திய இணை அமைச்சர்  ஸ்ரீபிரகாஷ் ஜெய்வால் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில்,  சுமார் 12 மில்லியன் பங்களா தேஷ் நாட்டினர் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளார்கள்  என கூறியதை , அன்றைய மத்திய அமைச்சர்களாக இருந்த தயாநிதி மாறனிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

                ஸ்டாலினுக்கு துணையாக குரல் கொடுக்கும் மம்தா வின் வெற்றியே, ஊடுருவியவர்களின் கையில் உள்ளது என்பதாவது தெரியுமா. .  மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்ட மன்ற தொகுதிகளில் சுமார் 125க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் வாக்கு வங்கி முஸ்லீம் வாக்கு வங்கியாயும்.   முர்ஷிதாபாத், மால்டா, உத்தர் தீனேஷ்பூர்,  பிர்பூம், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானா ஆகிய ஆறு மாவட்டங்களும் முஸ்லீம் அதிக அளவில் வாழும் மாவட்டங்களாகும்.    இந்த ஆறு மாவட்டங்களில் மட்டும் 118 சட்ட மன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.   இந்த ஆறு மாவட்டங்களில்  பங்களா தேஷ் நாட்டிலிருந்து ஊடுருவியவர்கள்,   வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துள்ளதால்,  குடியுரிமை பெறாமலே வாக்களார் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.  இந்த கொடுமை தமிழகத்திலும் நடக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறாரா.

                    இதன் காரணமாக  முஸ்லீம் வாக்குகளை பெறுவதற்காகவே  2011 மற்றும் 2016-ல் அதிக சலுகைகளை வழங்கியவர் மம்தா. தனது அமைச்சரவையில்  ஒன்பது இஸ்லாமியர்களுக்கு அமைச்சார் பதவியும்,  அரசின் சார்பில் சுமார் 60 ஆயிரம் இமாம்களுக்கு மாதம் ரூ2500 நிதி உதவி,   வழங்கப்பட்டன. 2013-  கல்கத்தா உயர் நீதி மன்றம் அரசியல் ஷரத்து 14 மற்றும் 15-ல் 1வது பிரிவின் படி மாநில அரசு வழங்கியது செல்லாது என தீர்ப்பு வழங்கியவுடன்,  இமாம்களுக்கு கொடுக்கும் உதவியை வகஃப் வாரியத்தின் மூலம் வழங்குவதற்கு சில சட்ட திருத்தங்களை செய்தவர் மம்தா.  மதரஸாக்களில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கியும்,  மாதந்தொரும் ஒரு குறிப்பிட்ட தொகை உதவி தொகையாக வழங்கப்பட்டது.  60 வயதுக்கு மேற்பட்ட இமாம்களுக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கப்பட்டது.   இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் அரசின் தொடர்பு மொழியாக உருது மொழி செயல்பாட்டிலிருக்கும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.   மாநிலத்தில் 57க்கும் மேற்பட்ட சட்ட மன்ற தொகுதிகள் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் என உறுதி கொடுக்கப்பட்டு,  அவ்வாறே  ஆறு மாவட்டங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் , தஸ்லீமா நஸ்ரின் நாவல்கள் நாடங்களாக ஒளிபரப்புவது தடை செய்யப்பட்டது.  அங்கீகாரம் இல்லாத மதஸாக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட மதரஸாக்களின் எண்ணிக்கை 10,000 மேல் என கூறுகிறார்கள்.  இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்ட மதரஸாக்கள் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிட தக்கது.   

                இம்மாதிரியான நிகழ்வுகள் தமிழகத்திலும் நடைபெறும்,  ஏற்கனவே  முஸ்லீம்களின்  வாக்குகளை பெறுவதற்காகவே,  தி,மு.க.  முஸ்லீம்களுக்கு பல சலுகைகளை கொடுத்து வருகிறது.  பிரிவினைவாதிகளுக்கும்,  பயங்கரவாதிகளுக்கும் வக்காலத்து வாங்கும்  தி,மு.க.  ஊடுருவிய பங்களா தேஷ் மற்றும் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால்  தமிழகம்  விரைவில்  இஸ்லாமிய மாநிலமாக மாறாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.   

          இந்திய பாதுகாப்பு அமைப்புகள்  கூறுகையில், “பல ரோஹிங்கியாக்கள் பல போராளிக் குழுக்களின் சித்தாந்தங்களை  கடைபிடிப்பவர்கள்.     இவர்கள்  ஜம்மு, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மேவாத் ஆகிய இடங்களில் சட்ட விரோதமாக தங்கி செயல்படுகின்றனர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கு  மிகவும்  பெரிய அச்சுறுத்தலாக  அமைய கூடும் என்றார்கள் .   திபெத், ஆப்கானிஸ்தான், இலங்கை, மியான்மர், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து அகதிகள்/சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். திபெத், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து வரும் அகதிகள் ஓரளவு முறையாக கையாளப்பட்டாலும்,  இது ஒரு தற்காலிகமான ஏற்பாடாக  இருந்தாலும், வங்கதேசத்தில் இருந்து வரும்  அகதிகள்/சட்டவிரோதமாக குடியேறியவர்களின் வருகை பெரிதும் கவனிக்கப்படாமல் உள்ளதாகவும்,  இது மிகவும் ஆபத்தானது என தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

                 தமிழகத்தில்  சட்ட விரோதமாக ஊடுருவியவர்களில் பெரும்பாலனவர்கள்  பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்தவர்கள்.   இது பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் .      கொரோனா தொற்று பரவிய போது,  ஈரோடு மாவட்டம்  பெருந்துரையில் ஒரு தொழிற்சாலையில்  நூற்றுக் கணக்கான பங்களா தேஷ் நாட்டினர்  பணியில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.  விசரானையின் போது,  இவர்களில் பெரும்பாலோர்   சுற்றுலா விசாவில் வந்தவர்கள் என்பது தெரிய வந்தது.  திருப்பூர் மற்றும் கோவையில் அதிக அளவில் நிட்டிங் தொழிற் கூடங்கள் , தங்க நகை செய்பவர்கள்  இருப்பதால்,  குறைந்த கூலிக்கு,   சட்ட விரோதமாக ஊடுருவிய பங்களா தேஷ், இலங்கை நாட்டவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.   நமது நாட்டில் அரசாங்கத்தை ஏமாற்றும் விதமாக, தொழிலாளர் ஆவணங்களை முறையாக பராமரிப்பு   இல்லாத காரணத்தால்,  பங்களா தேஷ், இலங்கை, நைஜீரியா போன்ற நாட்டினர் அதிக அளவில் நுழைந்து விடுகிறார்கள்.  இவ்வாறு சட்ட விரோதமாக நுழைபவர்களுக்கு,  ஓட்டுநர் உரிமம்,  ஆதார் அடையாள அட்டை,  ரேஷன் கார்டு முதல்  கிடைப்பதற்கு உள்ளுர் அரசியல்வாதிகள் துணை போகிறார்கள். 

                 திருப்பூரில் , திருப்பூர் நைஜீரியா சமூக நலன் மற்றும் ஆடை வர்த்தகர்கள் சங்கம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.   இந்த அமைப்பின் பொறுப்பாளர் பிலிப் நிக்கோலஸ் என்பவர் 1.1.2018-ல் விடுத்த அறிக்கை,  காதர்பேட்டை கார்மென்ட் மார்க்கெட்டில்  வைக்கப்பட்டுள்ளது, அதில்       Any one who wish(s) to start a new business individually  or  in partnership with any Indian must submit copies of business documents to respective police authority and the Nigerian Association என குறிப்பிட்டுள்ளது,  நைஜீரியர்களின்  ஆதிக்கத்தையே காட்டுகிறது.    இந்த அறிவிப்பு பலகை சட்ட விரோதமாக உள்ளே நுழைந்த நைஜீரியர்கள் தொழில் செய்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறது.

சட்ட விரோதமாக நுழைபவர்களுக்கு திருப்பூர் ஒரு சொர்க்க பூமியாகும்.   காவல் துறையினரின் கணக்கு படி சுமார்  300க்கும் மேற்பட்ட பங்களா தேஷ் நாட்டினர் குடும்பத்துடன் வசிக்கிறார்கள்.    .தமிழகத்தில் பங்களா தேஷ் நாட்டினர் , மேற்கு வங்க மாநில ஆவணங்களை வைத்துக் கொண்டு தொழில் புரிகிறார்கள்.   பங்களா தேஷ் நாட்டின் குலுனா   டிவிஷனை சேர்ந்த முகமது பாபுல் ஹூசைன்  என்பவன்  13 ஆண்டுகளாக செவந்தம்பாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.   இவர் மூலமாகவே நூற்றுக்கணக்கான பங்களா தேஷ் நாட்டினர்  உள்ளே வருவதற்கு துணை புரிந்துள்ளார். .   இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும்.   சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பங்களா தேஷ் நாட்டு முஸ்லீம்கள் கோவையில்  வசிக்கிறார்கள்.  இவர்களில் பெரும்பாலோனோர்  தங்க நகை செய்யுமிடங்களிலும்,  மருத்துவ மனை,  ஹோட்டல்களிலும்  , கட்டிட பணிகளில்  உள்ளார்கள்.

கடந்த ஆண்டு, போல்வியா ( Bolivia)  நாட்டிலிருந்து கோவை வந்த இரண்டு நைஜீரியா பெண்கள் கோகைன் பொருட்களுடன் திருப்பூர் செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள்.   2018 ஜனவரி மாதம் வெளி வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில்,    கொலம்பியா, பெரு. போல்வியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கோகைன் இந்தியாவில் திருப்பூருக்கு வருவதாகவும், திருப்பூரிலிருந்து பெங்களுர், சென்னை, கொச்சி போன்ற பகுதிகளுக்கு அனுப்பபடுவதாகவும்  ஒரு வரைபடம் வெளியிட்டிருந்தார்கள்.    திருப்பூரிலிருந்து  பின்னர் மற்ற நகரங்களுக்கு அனுப்படுகிறது.   இந்த  போதை பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் நைஜீரியா நாட்டினர் என்பது விசாரனையில் தெரிய வந்தது.   திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிப்பாளையம்  கோழிப்பண்ணை பகுதியில் ஆறு ஆண்டுகளாக  மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தை சேர்ந்த மொஷிருதின்  என்பவர் வாழ்ந்து வந்தார்.  இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்.  மேலும்  பிர்பூம் மாவட்ட அடையாள அட்டை வைத்திருந்தாலும்,  பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்தவர் என்பது விசாரனையில் தெரிய வந்தது.  கேரளத்தில்  உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பவர்.

                     வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் ஊடுருவிய முஸ்லிம்களும், மியான்மரில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு, இந்தியாவினுள் அத்துமீறி ஊடுவிய ரோஹிங்கியா முஸ்லிம்களும் பழனிக்கு  அருகே உள்ள சிவகிரிபட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனர்.  இவர்கள் அப்பகுதி மக்களிடம், வட இந்தியாவிலிருந்து பிழைப்பிற்காக வந்தவர்கள் என்று கூறி, நம்ப வைத்து உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் இவர்கள் டென்ட் அடித்து உள்ளனர். பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் நடைபாதை கடைகள், சாலையோர கடைகள் என்று தங்களின் வியாபாரத்தை தொடங்கி அதன் மூலம் ஏற்கனவே அங்கே கடை நடத்தி வருகின்ற உள்ளூர் இந்துக்களின் வயிற்றிலும் இவர்கள் அடித்து வருகின்றனர்.  இப்படி வங்கதேசத்திலிருந்தும், மியான்மரில் இருந்தும் வந்து பழனி பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள முஸ்லிம்கள் இந்திய அரசிற்கு எதிராக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.   தமிழகத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம்கள் நடத்திய போராட்டத்தில், சட்ட விரோதமாக உள்ளே நுழைந்த அந்நிய நாட்டினர் கலந்து கொண்டார்கள் என்பது  அச்சத்திற்குறிய செய்தியாகும்.   இவர்களுக்கு துணையாக இருப்பவர்கள்,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவாகும்.

                சில மாதங்களுக்கு  முன் கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சி பகுதியில் ஒரு வீட்டை கண்காணித்து சோதனை நடத்தியதில் பல போலியன ஆவணங்களும்,  வெளி நாட்டினருடன் தொடர்ந்து பேசி வருவதும் கண்டு பிடிக்கப்பட்டது.  வீட்டில் தங்கியிருந்தவர்கள்  தங்களை மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வருவதாக கூறினார்கள்.  ஆனால் உண்மையில்  இவர்கள் பங்களா தேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.   மத்திய அரசு ரோஹிங்கியா முஸ்லீம்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியதும்,  இதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி படுத்திய பின்னரும் கூட,  தமிழகத்தில் தங்கியிருந்த ரோஹிங்கிய முஸ்லீம்கள் , தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பவில்லை.  2012லிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில்  19 குடும்பங்களை சேர்ந்த 92 ரோஹிங்கிய முஸ்லீம் தங்கியுள்ளார்கள்.  முந்தைய அரசு  இஸ்லாமியர்களின்  வாக்குக்காக அவர்களை திருப்பி அனுப்பவில்லை.  தற்போது ஆட்சியில்  தி.மு.க.வும் கூட  திருப்பி அனுப்பாது என்பது உண்மையாகும்.   

                ஒரு நாட்டின் நிருவாகம்  என்பது  அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும் உணர்வுகளையும் உணர்ந்து  அமைந்திருக்க வேண்டும்  என்றும் திருவாளர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.    

இந்த வாதம் அடிப்படையில் தவறானது.    தி.மு.,க.  1967 லிருந்து  கொண்டு வந்த  பல சட்டங்கள் பொது மக்களின்  கருத்தினையும்,  உணர்வுகளையும்  உணர்ந்து தான் செயல்படுத்தியதா?     தனியார் பள்ளிகளில்  இந்தி  சொல்லி கொடுக்க அனுமதி கொடுத்தவர்கள்,  அரசு பள்ளிகளில் மட்டும்  ஏன் தடை செய்ய வேண்டும்.   எல்லா மாநிலங்களிலும் நவவோதயா பள்ளி  நடக்கும் போது,  தமிழகத்தில் மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்?    அனைத்து மக்களின்  கருத்தினையும்,  உணர்வுகளையும் உணர்ந்து தான்  டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டதா?    முந்தைய தி.மு.க. ஆட்சியில்  லாட்டரி கொண்டு வந்தது  மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதா?  தற்போது கருணாநிதிக்கு  கோடிக் கணக்கில் செலவு செய்து  நினைவு மண்டபம் கட்ட எந்த பொது மக்களிடம் கருத்தினை கேட்டு முடிவு எடுக்கப்பட்டது.    இது பல கேள்விகள் எழுப்பினால்  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதில்  சொல்ல முடியுமா ?

                ஆகவே  தமிழக அரசு மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவும்,  அவர்கள் கூட்டணியில் உள்ள காரணத்தாலும்,  2024-ல் நடைபெறும்  நாடாளுமன்ற தேர்தலில்  பா.ஜ.க. தோல்வியை தழுவும்,  இவர்களின்    கூட்டணி வெற்றி பெறும்,  துணை பிரதமர் பதவி ஸ்டாலினுக்கு என இப்பொழுதே புலம்பியதின் விளைவு தான் இந்த தீர்மானம்.  

11 Replies to “தமிழக அரசின் அபத்தமான மற்றும் ஆபத்தான தீர்மானம்”

  1. பகிர்வு:

    3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது –

    ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் கடத்தப்பட்ட 3000 கிலோ ஹெராயின் குஜராத்தில் சிக்கியது, ஆர்டர் கொடுத்த சென்னையைச் சேர்ந்த மர்ம தம்பதிக்கு வலைவீச்சு –

    நானும் தினமும் பேப்பர் படிக்கறேன், TV நியூஸ் பாக்கறேன், ஒரே ஒரு நல்ல விஷயத்துலயாவது இவனுங்க பேர் வருதா?-

    டிக்கியில் தங்கம் கடத்திய மர்ம நபர்கள் பிடிபட்டனர்-

    வெளிநாட்டிலிருந்து போதைப்பொருட்கள் கடத்திய மர்ம நபர்கள் பிடிபட்டனர்_

    பாகிஸ்தான் பள்ளியில் குண்டுவெடித்து 60 குழந்தைகள் பலி-

    டில்லியில் குண்டுவைக்க வந்த 6 தீவிரவாதிகள் கைது –

    அப்படி என்னதான்டா இருக்கு அந்த பொஸ்தவுத்துல?_

    அத்தினி களவானித்தனமும் செய்யறீங்க, கேட்டா நாங்க அமைதி மார்க்கம்னு கம்பு சுத்தறீங்க-

    இதுவரைக்கும் ஏதாவது ஒரு, ஒரேயோரு நல்லது செஞ்சிருக்கோம்னு சொல்லுங்க பாப்போம் –

    சென்னை வெள்ளத்துல நாங்க பிஸ்கட் கொடுத்தோம்னு Photo – வ தூக்கிகிட்டு வரவேண்டாம், அதெல்லாம் ரொட்டி விளம்பரம்னு எங்களுக்குத் தெரியும் –

    சரி, நாங்க எங்க மதம் என்ன சொன்தோ அதும்படிதான் நடக்கறோம்னு சொன்னாகூட –

    அது நபிகளாருக்கு செய்யற அசிங்கம்னு உங்களுக்குத் தோணலயா?, இல்ல நபிகளாரும் இதத்தான் சொல்லியிருக்காரா? –

    எனக்குத் தெரிந்த இஸ்லாமிய நண்பர்கள் மது அருந்துவதைக் கூட இஸ்லாம் ஏற்காது என்றுதான் கூறுகிறார்கள் –

    அப்படியானால், உலகம் முழுவதும் நீங்கள் போதைப்பொருட்களை சப்ளை செய்வது ஏன்? –

    திருடுபவன் கையை வெட்டு என்று குரான் கூறுவதாக எனது இஸ்லாமிய நண்பன் கூறுகிறான், அப்படியானால் ஆசனவாயில் தங்கம் கடத்தும் எனது இஸ்லாமிய சகோதரிகளை என்ன செய்யலாம்? –

    அப்துல்கலாம் அவர்கள் சாகும்வரை இஸ்லாமியராக வாழ்ந்த ஒரு ஹிந்தியர்_

    மரணித்த நாளில் கூட அவர் கடைசியாகப் படித்தது குரானைத்தான், ஆனால் அவர் எப்படி உண்மையான பாரதீயனாக, மதசார்பற்றவனாக இருந்தார்?-

    கேட்டால் அவர் இஸ்லாமியரே கிடையாது என்பீர்கள்-

    குண்டுவைப்பவனையும், குண்டியில் தங்கம் கடத்துபவனையும்தான் நீங்கள் இஸ்லாமியர்கள் என்று ஏற்றுக்கொள்வீர்களானால், உங்களில் இருக்கும் அப்துல்கலாம்களை நாங்கள் பார்க்கவே முடியாது போய்விடும் –

    வெறும் ஓற்றை புத்தகத்திற்கு இத்தனை சக்தி இருக்கிறதென்றால், லட்சக்கணக்கான புத்தகங்களை வைத்துக்கொண்டிருக்கும் ஹிந்துதர்மத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்-

    மதம் என்பது வாழ்வியல் நெறிமுறை-

    எந்த ஹிந்துவும் தங்கம் கடத்தியதில்லை –

    எந்த ஹிந்துவும் குண்டுவைத்து அப்பாவிகளைக் கொன்றதில்லை –

    நாங்கள் எங்கள் மதத்தை வளர்ப்பதற்காக அல்ல –
    காப்பதற்காக போராடுகிறோம் –

    தேசப்பணியில் என்றும்

  2. தமிழக காவல் துறையில் முக்கியமான கடமை கண்ணியம் நேர்மை என்று இருந்த ஒரு அதிகாரியை பணியமர்த்தும்
    போது அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் அவர் நேர்மைக்கும் கடமைக்கும் பேர் போனவர் அப்படி இப்படி என்று வாழ்த்து மடல் வாசித்தார்கள்
    சட்டம் ஒழுங்கு இனிமே நேரான பாதையில் செல்லும்.. ஆ.. ஊ ..
    என குதித்தார்கள் அப்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் இப்போது “சைலண்ட் பாபு” வாக மாறிபோனதுதான் வெட்கக்கேடு…
    “தலைவி” முதல்வராக இருந்த காலகட்டத்தில் காவல் துறை அவரிடம் இருந்தபோது பல அதிரடி சம்பவங்களை தமிழகம் கண்டது..
    அதே காவல்துறை “கருநாய்”நிதி முதல்வரா இருந்தபோது சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்களை வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் படு பயங்கரமாக குத்துயிரும் கொலையியுருமாக தாக்கியபோது இதே தமிழக காவல்துறை சாவகாசமாக தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு யாருக்கோ சாவகாசமாக போனில் பேசிக்கொண்டிருந்தது… இது போல நிறைய சம்பவங்களை சொல்லலாம்…
    திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி….
    மேலும் தமிழக மக்களுக்கு இது போன்ற விஷயங்கள் தெரியக் கூடாது என்பதற்காகவே திவ்யா கள்ளச்சி போன்ற “பூச்சி”களை பிடிக்க தனிப்படை அமைத்து (..?) புடிச்சி உள்ள போட்டு மார்தட்டி கொள்வாங்க ….
    அதையாவது ஒழுங்கா செய்தார்களா..?
    இன்னும் ரவுடி பேபி சூர்யா .. திருச்சி சாதனா..சிக்கந்தர்.. ஜிபி.முத்து போன்ற சாக்கடைகளை இன்னும் வெளியில் விட்டு வைத்திருக்கிறார்கள்..கேட்டா இன்பா அவங்களோட ரசிகராம்..? த்தூ….
    வெட்ககேடு….

  3. இந்து ஆலயங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அதனால் இந்து ஆலய நகைகளை “உருக்கி” பயன்படுத்துவோம் என்றெல்லாம் அரசு சொல்வது சரியல்ல‌

    அவர்களால் நடத்த முடியா அளவு நஷ்டம் என்றால் ஆலயங்களை மக்களிடமே ஒப்படைக்கட்டும், ஆதீனங்களும் மடங்களும் பக்தர்களும் அவற்றை மிக நன்றாக பார்த்து கொள்வார்கள்

    அரசு தன் நஷ்டமடையா டாஸ்மாக் பிசினஸை மட்டும் நடத்தட்டும்

    இந்து ஆலயபராமரிப்பினை ஆலய சொத்துக்களை பறிகொடுத்து நடத்த ஒரு அரசுதுறை அவசியமென்றால் அப்படி ஒரு துறை அவசியமே இல்லை

  4. மிகபெரிய அநீதியும் வரலாற்று கொடுமையும் தமிழக ஆலயங்களுக்கு நடக்கின்றன, நினைத்து பார்க்க முடியா கொடூரம் இது,நினைத்தாலே உடல் நடுங்கும் மிக பெரிய வஞ்சனை இது

    அன்றொருநாள் சோமநாதபுரி ஆலயத்தை கொள்ளை அடித்த கஜினிக்கும், திருச்சி திருவரங்கம் தஞ்சை மதுரை என ரத்தமுனையில் தங்கத்தை அள்ளிய மாலிக்காபூருக்கும், முகமது பின் துக்ளக் எனும் உலுக்கானுக்கும் இந்த தமிழக அரசுக்கும் வித்தியாசமில்லை

    கோவில்களில் இருப்பவை மக்கள் காணிக்கையாக கொடுத்தவை, இதில் பயன்படா நகைகள் என எதுவும் எந்த வரையறையிலும் வாரா..

    இந்த நகைகளெல்லாம் வரலாற்று பெட்டகங்கள், அதில் அக்கால மன்னர் நகை முதல் இன்றைய தங்க வகைகள் வரை உண்டு

    ஒருவகையில் இவையெல்லாம் அக்கோவில்கள் போல் பெரும் வரலாறானவை. அதை தொட யாருக்கும் உரிமை இல்லை

    இதை இப்படி சொன்னால் எளிதில் புரியும்

    தமிழ்நாட்டில் ஆக பழமையான கலை பொக்கிஷங்கள் உண்டு, அவை ஆலயங்களிலும் உண்டு. யாராவது இந்த பழம் ஆலயத்தை இடித்துவிட்டு புதிய ஆலயம் கட்டவேண்டும் என கிளம்பினால் விட முடியுமா?

    பல்லாண்டு பழமையான சிலைகளை அழித்துவிட்டு நவீன பிளாஸ்டர் மண்ணில் சிலை வைப்போம் என்றால் விட்டுவிட முடியுமா?

    முடியாதல்லவா? ஆனால் அந்த கொடுமையினைத்தான் இந்த அரசு செய்ய துணிந்திருக்கின்றது

    இது எளிதில் விடமுடியா விஷயம், காரணம் மாபெரும் ஆபத்து அதில் ஒளிந்திருகின்றது

    இன்று காலபெட்டகமான, இந்து ஆலயங்களின் கால கணாடியான நகைகளை உருக்குதல் என்பது அதன் அடையாளத்தை கால தொன்மையினை அழிக்கும் விஷயம்

    இது இன்று தங்கத்தில் தொடங்கும், பின் கோவில் தூண்களுக்கு வரும், பின் கோபுரத்துக்கு வரும், பின் கருவறைக்கும் வரும்

    இந்த சதியில்தான் தங்கத்தில் கைவைக்கின்றார்கள்

    மற்ற நாடுகளெல்லாம் அரசனுக்கும் அரசிக்கும் தங்க தேர் பல்லக்கு நாற்காலி என செய்தபொழுது இந்த ஆன்மீக பூமிதான் தெய்வத்துக்கு நகையும் தங்கமும் கொடுத்து கொண்டாடியது

    அதை தன் இஷ்ட தெய்வத்துக்கு சூட்டி அழகு பார்த்தது

    அதனை வேண்டுதலாகவும் வைத்தது, அதில் சூட்சுமமும் இன்னும் பல விஷயங்களும் இருந்தன‌

    கோவில் விக்ரஹம் என்பது சூட்சுமம் நிறைந்தது, மகாலட்சுமியின் வடிவமாக கருதபடும் தங்கம் அதில் பக்தனால் சூட்டபடும் பொழுது விஷேஷ சக்திகளை அது கொடுத்தது

    இதனால்தான் இந்திய மன்னர்கள், இந்திய மக்கள் என்றில்லை முகமதியரும் ஆங்கிலேயருமே தங்க காணிக்கைகளை கொடுத்தனர்

    இன்றும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஆங்கில கலெக்டர் கொடுத்த தங்க நகைகளும், காஞ்சி கோவிலில் ராபர்ட் கிளைவ் கொடுத்த மகர கண்டிகையும் உண்டு

    பெரும் சிக்கலில் சிக்கிய அவர்கள் தாங்கள் நேர்ந்து கொண்டதால், அந்த தெய்வத்தின் அருளால் பிழைத்ததால் அந்த தங்க காணிக்கையினை செய்தார்கள்

    இன்னும் ஏராளம் சொல்லலாம்

    இந்த நகைகளை தொட எந்த அரசனுக்கும் உரிமை இல்லை, எந்த நிர்வாகிக்கும் உரிமை இல்லை

    இந்து ஆலயம் என்றால் புகுந்து ஆடும் அரசு, மனசாட்சியும் தெய்வ சாட்சியுமின்றி ஆடும் அரசு, வேளாங்கண்ணி கோவில் நகைகள் பற்றி பேசுமா? ஒரு வார்த்தை சொல்லுமா?

    மதசார்பற்ற அரசு என்றால் அதை செய்யவேண்டும் அல்லவா?

    அதை செய்யாமல் இந்து கோவில் நகைகளை உருக்குவோம் என்பது, இந்து ஆலயங்களை அழிக்கும் திட்டத்தின் அடுத்த கட்டம்

    முதலில் கோவில் நிலங்களை கைவைத்தார்கள், பின் வருமானத்தில் கைவைத்தார்கள், அர்ச்சகர் நிலையில் கால் வைத்தார்கள்

    இப்பொழுது முக்கியமான நகைகளிலும் கை வைக்கின்றார்கள்

    “செவ்வாழை தோட்டத்தில் குதித்தாடும்” குரங்குகள் போல அவர்களின் அட்டகாசம் எல்லை மீறி ஆடும் பொழுது பழைய சம்பவங்களைத்தான் சுட்டி காட்ட வேண்டும்

    இந்திய ஆலயங்களின் தங்கத்தை தொட்ட யாரும் நிலைத்ததில்லை

    கஜினியும், கோரியும், மாலிக்காபூரும், துக்ளக்கும் எவ்வளவோ டன் கணக்கு தங்கங்களை இந்து ஆலயங்களில் இருந்து எடுத்து உருக்கினர்

    இதில் தப்பியது இன்று திருச்சி திருவரங்கத்தில் இருக்கும் அந்த அரங்கன் சிலை மட்டுமே, அதை மட்டும்தான் காடு காடாக சுற்றி அலைந்து சுமார் 50 வருடங்கள் அலைந்து அந்த இந்து சமூகம் காத்தது

    அந்த சிலையினையும் தேடி அழித்து உருக்க சுல்தானிய படைகள் செய்த கொடுமை கொஞ்சமல்ல‌

    ஆனால் இந்த கோவில் நகைகளை உருக்கி எடுத்து சென்ற மன்னர்கள் என்ன ஆனார்கள்? அவலமாய் அழிந்தார்கள்

    அவர்களின் வாரிசு என்ன ஆனது?

    இதோ கண்ணீரிலும் கம்பலையுமாக ரத்த வெள்ளத்தின் நடுவே ஒரு துண்டு ரொட்டிக்கு கையேந்தி நிற்கின்றது

    இந்திய கோவில் தங்கத்தை எடுத்து சென்று வாழ்ந்துவிடலாம் என கணகிட்ட தேசமெல்லாம் இன்று தரித்திர கோலத்தில் கந்தலாகி நிற்கின்றது

    அதை கண்டபின்னும் இந்து கோவில் நகைகளை தொடுகின்றார்கள் என்றால் அவர்களுக்கு பின்னாளில் நிகழவேண்டியது நிகழட்டும்

    ஆனால் அதே நேரம் இந்து வரலாறு ஒரு நம்பிக்கையும் கொடுக்கின்றது

    அன்று கஜினியால் சிதைக்கபட்ட சோமநாதபுரியும், மாலிக்காபூரால் துக்ளக்கால் சிதைக்கபட்ட திருச்சி, மதுரை ஆலயமெல்லாம் பின் உயர்ந்து நின்றன‌

    ஆம் அதை அழித்தவர்கள்தான அழிந்தார்களே அன்றி அந்த ஆலயங்கள் எழும்பின‌

    இன்றும் அதே பேரழிவு அதாவது மாலிக்காபூரும், துக்ளக்கும் செய்த அதே நகை கொள்ளை திராவிட அரசு எனும் பெயரில் செய்ய துணிந்துவிட்டது

    ஆடட்டும், அவர்கள் ஆடும்வரை ஆடட்டும், ஆனால் ஆப்கானிஸ்தான் போல இவர்களுக்கும் ஒரு முடிவு உண்டு

    ஒரு நாள் இந்த தர்மம் துலங்கும், இந்த ஆலயங்கள் இதைவிட பெரும் இடத்தை எட்டும், அங்கு பொன்னும் பொருளும் குவிந்து அது தன் இயல்பால் தன் நிலையினை மீட்டு கொள்ளும்

    ஆனானபட்ட சமணரால், பவுத்தரால்,ஆப்கானியரால், பிரிட்டானியரால் அழிக்கமுடியா இந்த தர்மத்தையும் ஆலயத்தையும் இவர்கள் தொட்டு கூட பார்க்க முடியாது

    அது விழ விழ தளைக்கும், அடிபட அடிபட எழும்பும், ஒரு டன் தங்கம் போனால் ஆது ஓராயிரம் டன் தங்கத்தை உருவாக்கும்

    ஆடட்டும், இன்று ஆட்சியும் அதிகாரமும் இருக்கும் திமிரில் ஆடட்டும் அதை கண்ணீரோடு பார்ப்பதை தவிர யார் என்ன செய்ய முடியும்

    ஆனால் வருங்காலம் இவர்களுக்கு மகா கொடியதாய் இருக்கும் என்பதை ஆப்கானை நோக்கி பெருமூச்சு விட்டு சொல்லி கொள்ளலாம்

    மாலிக்காபூரின் மறுபிறப்புகள், துக்ளக்கின் திரும்பிய பிறவிகள் வந்தால் விஜயநகர பேரரசு எழும்பியது போல் வீரசிவாஜி போல் தர்மம் ஒரு சக்தியினை எழுப்பும் அல்லவா?

    ஆம், எழும்பும் நிச்சயம் எழும்பும். தர்மம் எழ அதர்மம் மகா உச்ச கட்ட அநியாகங்களை கொடூரங்களை செய்ய வேண்டும் என்பது விதி

    அது நடந்து கொண்டிருக்கின்றது, அவர்கள் தங்களால் முடிந்த எல்லா அக்கிரம கொடிய ஆட்டங்களையும் ஆடி தீர்க்கட்டும், கொடுக்கபட்ட காலம் வரை ஆடட்டும்

    ஆனால் அதன் பின் எழமுடியா அளவு சரிவார்கள், சரிந்து புதைவார்கள் இது சத்தியம்

    கீழடியில் கிடைத்த மண் சுவடுகளை பழம் பொருள் என பாதுகாப்பார்களாம், ஆனால் கோவிலில் இருக்கும் மகா பழமையான நகைகளை உருக்கி அழிப்பார்களாம்

    இதை எல்லாம் நினைக்கும் பொழுது நெஞ்சத்தின் அடி ஆழத்தில் இருந்து கண்ணீர் வராமல் என்ன செய்யும்?, இந்த கொடுமையில் கண்ணீருக்கு பதில் ரத்தமே வடிகின்றது.

    (பொய் சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டும், தங்க நகைகளில் ஏது பயன்பாடு தங்கம், பயன்பாட்டில் இல்லாத தங்கம் என்பதுதான் தெரியவில்லை

    இந்து ஆலயங்களின் கால அடையாளங்களை, பாரம்பரியங்களை சிதைக்கின்றார்கள்

    ஆப்கானிய தாலிபன்களின் பாமியான் சிலை தகர்ப்புக்கும் இந்த திராவிட தாலிபான்களின் நகை ஒழிப்புக்கும் வித்தியாசம் ஏதுமில்லை

    திமுககாரனுக்கு சொத்து குவிகின்றது, ஒவ்வொரு திமுக தலமையிடமும் இருக்கும் பணமும் சொத்தும் எண்ண முடியாதது

    அதே நேரம் கோவிலின் சொத்துக்களெல்லாம் எப்படி அழிகின்றன, நம் கண்முன் அழிகின்றன என்பதுதான் வலியோடு ஒவ்வொரு இந்துவும் நோக்க வேண்டிய கொடுமை )

  5. உலகில் இருவருக்கு சிக்கல் , சிக்கலின் வடிவம் வேறே தவிர அடிப்படை தன்மை ஒன்றேதான்

    முதலாவமர் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இவரால் தாலிபன்களை மேற்கத்திய நாடுகளின் விருப்பத்துக்கு ஏற்ப வழிக்கு கொண்டுவரமுடியவில்லை. அந்த தாலிபன்கள் பாகிஸ்தான் இல்லாமல் நொடி கூட வாழமுடியாது என்பது உலகறிந்த விஷயம் என்பதால் இந்த தீவிரவாதிகள் அல்லாத எல்லா மக்களும் கொண்ட ஆட்சி வேண்டும் அதை பாகிஸ்தான் செய்யமுடியும் என கருதுகின்றன மேலைநாடுகள்

    இதனால் அவை இம்ரானிடம் கோருகின்றன, பின் மெல்ல கண்களை உருட்டுகின்றன, பொருளாதார தடை தெரியுமா? என கத்தியினை காட்டுகின்றன‌

    அதே நேரம் தாலிபன்களோ “நீ இஸ்லாமிய நாடுதானே., எங்களை காப்பதுதானே உன் கடமை, எங்கள் ஆட்சி ஷரியத் ஆட்சி, நீ நல்ல இஸ்லாமியன் என்றால் எங்களை ஆதரி, காபிர்களை நம்பாதே. ஆம், எங்களோடு சேர்ந்தால் நீ நாசமாவாய் அது நன்றாய் தெரியும், அதற்கென்ன புனிதபோர் என்றால் அப்படித்தான் இருக்கும்

    அதனால் இம்ரான் அவர்களே, நீ இஸ்லாமியன் என்றால் எம்மோடு அந்து நாசமாய் போ, இல்லை நீ மேற்கத்திய அடிமை என்றால் நாங்கள் உன் நாட்டில் புகுந்து நாசமாக்குவோம், எப்படியும் உனக்கு அழிவுதான,எப்படி அழியவேண்டும் என்பதை முடிவுசெய்” என சொல்லிகொண்டிருக்கின்றன‌

    இருதலை கொள்ளி எறும்பாக சிக்கி தவிக்கின்றார் இம்ரான், அவரின் இஸ்லாமிய அடிப்படை கொள்கையினை வைத்தே அவரை மிரட்டுகின்றன தாலிபன்கள்

    சிக்கலில் இருக்கும் இரண்டாம் நபர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்

    இவருக்கு சிக்கல் நிதியமைச்சர் தியாகராஜன் வடிவில் வந்திருகின்றது, அரும்பாடுபட்டு அதுவும் பீகார் பார்ப்பனரை பிடித்து 400 கோடி வாங்கி அமர்ந்த ஆட்சியில் தியாகராஜர் திராவிட வாள் வீசுகின்றார்

    மத்திய அரசுக்கு எதிரான திராவிட போர் இன்னும் பல போர்வாளை அவர் சுழற்ற “அய்ய்யயோ” என தலையில் கைவைக்கின்றார் ஸ்டாலினார்

    “நீர் உண்மையான திராவிடன் என்றால் எம்மோடு வாரும், திராவிட யுத்தம் செய்யும், சங்கிகளை பிடியும், டெல்லியினை மிரட்டும், வாரும். ஆட்சி போனால் என்ன மானம் மிஞ்சட்டும், கொள்கை வெல்லட்டும்” என ஸ்டாலினாரை அழைக்கின்றார் நிதியமைச்சர்

    ஆச்சரியமாக ஒரு கோஷ்டி “இவனல்லவோ திராவிட வீரர், நீதி கட்சி நீலன்” என அவருக்கு வாள் பிடிக்கின்றன‌

    இப்பொழுது இருதலைகொள்ளியாகிவிட்டார் ஸ்டாலின் , நிதியமைச்சரை தட்டி வைக்காவிட்டால் டெல்லி விடாது, தட்டினால் கட்சியே விடாது போலிருக்கின்றது

    இரு டிவிட்டர் இந்தியவிரோத நண்பர்கள் ஒரே நேரத்தில் ஒரேமாதிரி கொள்கை சிக்கலில் சிக்கியிருப்பதுதான் விசித்திரம்

    கொள்கையா? ஆட்சியா? என தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றார்கள் இருவரும், இருவரும் எந்த வழி போனாலும் சிக்கல் மகா நிச்சயம்

  6. உள்ளாட்சி தேர்தல் என்பது பாஜகவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு, அதில் வெற்றி தோல்வி என்பதல்ல விஷயம் மாறாக வாக்களர்களை இந்துக்கள் வாரியாக ஒழுங்குபடுத்த நல்ல பயிற்சியும் அனுபவமும் அவர்களுக்கு கிடைக்கும்

    பாஜக இங்கு வளரும் கட்சி, அது இன்னும் செல்லவேண்டிய தூரமும் பயணமும் மிக அதிகம், சிலர் கருதுவது போல் அண்ணாமலை மட்டும் ஓரிரு ஆண்டுகளில் தமிழகத்தை புரட்டிபோடுவார் என்பதெல்லாம் மிகபெரிய எதிர்பார்ப்பு அப்படி நடக்கவும் வாய்ப்பில்லை

    ஒரு கட்சி தான் வளர்வதற்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புக்களையும் பயன்படுத்தி அடிப்படை வாக்குசாவடிகளில் இருந்து தன்னை வளர்க்க வேண்டும்

    இதற்கு மிகபெரிய உதாரணம் திமுக, 1948ல் அது முட்டையில் இருந்து வந்த கோழிகுஞ்சு போலத்தான் இருந்தது, அக்கட்சி ஆட்சியினை பிடிக்கும் என்பதெல்லாம் ஆப்கானிஸ்தான் உலக வல்லரசாகும் என சொல்வது போல் ஏளனமாகத்தான் பார்க்கபட்டது

    ஆனால் அவர்கள் அடிதட்டில் இருந்து போராடினார்கள், மேல்மட்டட்தில் காங்கிரசை எதிர்க்கின்றோம் என சொல்லிவிட்டு ஓயவில்லை, அவர்களின் களப்பணி உள்ளாட்சி தேர்தலில் இருந்துதான் தொடங்கிற்று

    முதல் குறிப்பிடதக்க வெற்றியே உள்ளாட்சி தேர்தலில்தான் தொடங்கினார்கள்

    ஆம், உள்ளாட்சி தேர்தல்தான் வாக்குகளை வாக்காளர்களை அடையாளபடுத்தும், உறுதிபடுத்தும். அங்கிருந்துதான் ஆட்சிக்கான செங்கல்கள் உருவாகும்

    அப்படி உருவான திமுகதான் அடுத்த 20 ஆண்டுகளில், ஆம் அவர்களின் அந்த அசுர உழைப்பு 20 ஆண்டுகாலம் இருந்தது, அதுதான் அவர்களை ஆட்சிகோபுரம் கட்டி அமர வைத்தது

    பாஜக அன்பர்கள் சும்மா காற்றில் கத்தி வீசுவதால் ஆகபோவது ஒன்றுமில்லை, களத்தில் இறங்கி வேலை செய்யாமல் காரியம் சித்தியாகாது

    களம் என்றால் என்ன? வாக்காளர்கள் என்றால் என்ன? வாக்குகள் எங்கே எப்படி ஒருங்கிணைக்கபடவேண்டும் என்பதற்கெல்லாம் உள்ளாட்சி தேர்தல் மிகபெரிய பயிற்சி

    இந்த பயிற்சியினை அவர்கள் பெறட்டும், அதில் அனுபவங்கள் பெருகட்டும் இந்த அனுபவங்கள் உரிய நேரத்தில் கைகொடுக்கும், உரிய காலம் வரும்பொழுது அது ஆட்சியினையும் கொடுக்கும்

    அரசியலில் பொறுமையும், நிதானமும் மகா அவசியம், தளராத பயணம் மிக அவசியம். அந்த பொறுமையுடனும் நிதானத்துடனும் இந்த உள்ளாட்சி தேர்தலில் பல பாடங்களை அக்கட்சி பெறட்டும்

    இன்றைய அனுபவம் நாளைய வெற்றி

  7. திமுகவில் நிதியமைச்சர் தியாகராஜனுக்கு எதிரான முதன் முறையாக தன் கருத்துக்களை பதிவு செய்திருகின்றார் திமுகவின் எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன்

    இது திமுக எனும் கட்சியின் மேலிடம் நிதியமைச்சருக்கு கொடுக்கும் பகிரங்க எச்சரிக்கை என்றே அரசியல் வட்டாரங்களின் அனுபவ மொழியில் கருதபடுகின்றது

    தலமை அல்லது தலமை குழுவின் ஒப்புதல் இல்லாமல் ஒரு எம்பி இப்படி பேசமுடியாது என்பது நிஜம், இதனால் நிதியமைச்சரின் மிதமிஞ்சிய போக்கு பற்றி கட்சி தலமை ஒரு முடிவுக்கு வந்தாயிற்று என்பது தெரிகின்றது

  8. இந்திய பங்குசந்தையும் பொருளாதார ஸ்திரதன்மையும் மிகபெரிய அளவில் உயர்கின்றன, டிரம்பர் சீனாவுக்கு மிரட்டல் விடும்பொழுதே பல நிறுவணங்கள் சீனாவில் இருந்து வெளியேறின‌

    அந்நிறுவணங்களை இந்தியாவில் தொழில்தொடங்க அழைத்தார் மோடி, அவை மெல்ல மெல்ல வந்தன, சில அடுத்த அதிபருக்காக காத்திருந்தன‌

    இப்பொழுது பிடனும் வந்து சீனாவுடனான மோதலை தொடரும் நிலையில் இனி இந்தியாவில்தான் எதிர்காலம் என பன்னாட்டு கம்பெனிகள் வந்து குவிகின்றன‌

    இந்த முதலீடுகள்தான் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, மோடி அரசின் பல சீர்திருத்தங்கள் முதலீட்டை எளிதாக்குகின்றன‌

    பொதுவாக பாஜக அரசின் செயல்பாடுகள் தெரிய சில ஆண்டுகளாகும்

    வாஜ்பாய் அறிவித்த தங்க நாற்கர திட்டம் முதலில் சொல்லபட்டபொழுது “இது தேவையா” என்றார்கள், இப்பொழுது அந்த சாலையின் பலனை அனுபவித்து கொண்டு நல்ல திட்டம் என அமைதிகாக்கின்றார்கள்

    அதை வாய்விட்டு சொல்லவும் மனமில்லை

    இன்னும் எத்தனையோ நல்ல திட்டங்களை வாஜ்பாய் கொடுத்துவிட்டு சென்றார், உதாரணமாக “அய்யயோ இஸ்ரேலுடன் கூட்டணியா? அரபு நாடுகள் என்ன சொல்லும் எண்ணெய் வராது..” என்றெல்லாம் மிரட்டினார்கள்

    இன்று இஸ்ரேலுடன் சவுதி அரேபியவே கைகுலுக்குகின்றது, இந்தியாவுக்கு இஸ்ரேலால் நன்மைகள் விளைகின்றன‌

    மோடி ஏன் நாடு நாடாய் சுற்றுகின்றார் என்றார்கள், இன்று அதன் பலன் தெரியவந்து உலகுக்கு இந்தியா முக்கியமான நாடு எனும் நிலையில் இருப்பதை கண்டு மவுனமாகி நிற்கின்றார்கள்

    பாஜக அரசின் திட்டங்கள் மிக தொலைநோக்கானவை, காங்கிரஸின் திட்டங்கள் கத்தரிக்காய் போல இரு மாதத்தில் பலன் கொடுத்து மூன்றாம் மாதம் செடி செத்துவிடும்

    திமுகவின் திட்டங்கள் பூக்கள் போன்றவை, ஒரே நாளோடு அவர்கள் திட்டம் சரி

    ஆனால் பாஜகவின் திட்டங்கள் ஆலமரம் , தென்னைமரம் போன்றவை அவை வேர்விட்டு வளர சில காலம் ஆகும், ஆனால் பலன்கள் பல்லாண்டுகள் தொடரும்

    இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக மாறி கொண்டிருக்கின்றது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் தாக்கம் தெரியும்

    இதெல்லாம் புரியாமல் மோடி இந்தியாவினை விற்கின்றார் என புலம்பி கொண்டிருப்பவனை பார்த்து பரிதாபபட மட்டும்தான் முடியும், வேண்டுமானால் கீழ்பாக்கத்துக்கோ இல்லை குணசீலத்துக்கோ அனுப்பலாம் அதை தவிர ஒன்றும் செய்ய முடியாது

    அங்கு இடமில்லை என்றால் அறிவாலயம் அனுப்பலாம் , ஆனால் அறிவாலயத்தில் சேர்க்கபட்டு குணமானவர்கள் என யாருமில்லை என்பதுதான் சோகம்.

  9. தமிழகத்தில் சுற்றுசூழல் துறை அனுமதியின்றி செங்கல் சூளைக்கும் இதர தேவைக்கும் மண் அள்ள அனுமதிக்கின்றது தமிழக அரசு

    அதாவது முன்பு இருந்தது போல் கலெக்டர் அனுமதி மட்டும் போதும் என்கின்றது

    மண் அள்ளுதல் என்பது கல்குவாரி போலவே மகா சிக்கலான காலங்கள் உண்டு, குளங்கள் பலநூறு அடிக்கு கீழ் சென்றன, செம்மண் கால்வாய்கள் முழுக்க பள்ளமாயின‌

    மண்சரிவு முதல் குளத்துநீர் மடைக்கு வராத அளவு நிலமை மோசமாயிற்று

    குறிப்பாக பனைமரங்கள் அழிந்தன, வயல்கள், விளைநிலங்களில் மிகபெரிய பள்ளங்கள் ஒரே நாளில் உருவாயிற்று

    இப்படி மிகபெரிய அழிவு நடந்ததால்தான் அதிமுக ஆட்சியில் மண் கொள்ளைக்கு கடிவாளம் இடபட்டது, இப்பொழுது அதை நீக்குகின்றார் ஸ்டாலின்

    இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் இனி குளங்களில் எந்திரங்களும் ட்ராக்டர்களும் லாரிகளும் வரப்ப்பினை ஊடறுத்து செல்லும்

    100 நாள் வேலைதிட்டம் எனும் திட்டமெல்லாம் நாசமாகும், விவசாய குளங்களும் ஏரிகளும் பெரும் சிக்கலில் சிக்கும்

    பராகசுரதனமாக செங்கல் முதலாளிகள் அள்ளி எரியும் மணலில் பூமி நாசமாகும்

    ஒருபக்கம் பனைமரம் வளர்ப்போம் என பட்ஜெட்டில் அறிவித்துவிட்டு இன்னொரு பக்கம் பனைமரம் அழியும் வண்ணம் மண்ணை அழிப்பதெல்லாம் என்னவகை கொள்கையோ தெரியவில்லை

    மிகபெரிய தவறான நடவடிக்கையினை ஸ்டாலினார் செய்திருக்கின்றார், முன்பெல்லாம் இந்த மணல் கொள்ளையினை தடுக்க போராடிய அப்பாவு அவர்கள் சபாநாயகராக இருக்கும் அரசா இது என்பதுதான் பல இடங்களில் எழும் கேள்வி

    ஆக என்னாயிற்று

    வந்த 100 நாட்களுக்குள் முதலில் இலவச மொட்டை போட்டார்கள், இப்பொழுது மண் அள்ளி போடுகின்றார்கள்.

    ஆம், “இலவச மொட்டை”யினை தொடர்ந்து “இலவச மண்”

    இதெல்லாம் செய்யும் அரசு, செம்மண்ணுக்கு இரங்கும் அரசு தாதுமணலுக்கு ஏன் வாய்திறக்கவில்லை என அலுத்து கொள்கின்றது வைகுண்டராஜன் தரப்பு

    “செங்கமால் வைச்சிருக்கவன் கையில மண் விழனும், தாதுமணல் குவாரிகாரன் கையில‌ மண் விழ கூடாதா? இதெல்லாம் என்ன நியாயம்டே” என அவர்கள் தரப்பு புலம்பி கொண்டிருக்கின்றது

  10. *மதமாற்ற அடிமைகளின் திகைக்க வைக்கும் தமிழ் மொழிப் பாசம்!* தமிழர் கலாச்சாரம் வேண்டாம் என்று விலகி மதம் மாறி வேற்று மண்ணின் கலாச்சாரத்தை மனமாரக் கடைபிடிக்கும் சிறுபான்மைத் தமிழர்களிடையே கடைசியாக மீதம் இருக்கும் அந்த அதீதமான வியக்க வைக்கும் மொழியார்வமும், பொங்கிப் பெருகும் பாஷா(!) உணர்ச்சியும் நம்மை அதாவது தமிழ் கலாச்சாரத்தை மட்டுமே என்றென்றும் பின்பற்றும் கலாச்சாரத் தமிழ் மக்களை உண்மையிலேயே மிகவும் வியக்க வைக்கிறது. தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானை இறந்து விட்டான் என்றாலோ, கந்த சஷ்டி கவசத்தைக் கேவலப்படுத்தினாலோ, தமிழ் மாமன்னன் இராஜராஜனைத் திருட்டு மன்னன் என்று குற்றம் சாட்டினாலோ, தமிழ்ப் பெண்கள் புனிதமாக நினைக்கும் தாலியை மேடை போட்டு அறுத்தாலோ, தமிழ் பாடிய திருஞானசம்பந்தரை, ஆண்டாளை, திருவள்ளுவரை, கம்பனை அசிங்கப்படுத்தினாலோ வரவே வராத கோபமும், கொந்தளிப்பும் தமிழ் மொழியை மட்டும், அதாவது “வெறும் எழுத்து, உரையாடல் என்ற வடிவில் மட்டுமே இருக்கும் தமிழ்” என்ற அளவில் மட்டுமே எடுத்துக் கொண்டு அப்படியே அணையை மீறி பொத்துக் கொண்டு வரும் அந்தக் கோவமும், போர்க்குணமும்(!) நகைக்க வைக்கிறது.
    அது எப்படி என்றுதான் ஒவ்வொரு கலாச்சாரத் தமிழனுக்கும் வியப்பாகவும் இருக்கிறது.
    தமிழ் மொழியின் இலக்கியச் சாரம், உயர்ந்த பக்தி நிலை, உள்ளார்ந்த இலக்கியச் சுவை போன்ற எல்லாவற்றையும் விடுத்து அதனைச் சாரமற்ற வெற்றுப் பேச்சு மற்றும் சத்தற்ற வெறும் எழுத்து வடிவமாக மட்டுமே எடுத்துக் கொண்டு, அதற்காக மட்டுமே போராடுவது போன்றதொரு போர்க்குணத்தை போலியாக வளர்த்துக் கொண்டதொரு கும்பல் இங்கே தமிழ்மொழிக்குக் காவலர்கள் போலத் திரிந்து கொண்டு இருக்கிறது. இந்தப் போலித் தமிழ் உணர்ச்சிக் கும்பல் தங்கள் மத வழிபாட்டில் தமிழ் மொழிக்கு எனச் சில எழுத்துக்களுக்காவது கூட இடம் கொடுத்தாரில்லை.தமிழ்க் கலாச்சாரம், தமிழ் மண்,அதன் பெருமைகளைப் போற்றுவாரா என்றால் அதற்கும் இல்லை என்பதுதான் விடை. மாறாக தமிழ்ப் பண்பாட்டைத் தூற்றி,அதனை அழிக்கவும் துணிந்தவராய் இருக்கும் நிலைதான் கலாச்சாரத் தமிழர்களால் கண்கொண்டு பார்க்கப் படுகிறது.இந்த தமிழ் கலாச்சார விரோதிகளின் வெற்றுத் தமிழ் உணர்ச்சியும், வெத்துவேட்டு மொழி அரசியலும் தங்களையும் தங்கள் மொழியையும் வாழவைப்பதற்காகத்தான் என்று ஒரு கலாச்சாரத் தமிழன் எண்ணினால் அவன்தான் மதசார்பற்ற நடுநிலைத் தமிழன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *