ருத்ர தாண்டவம் – திரைப்பார்வை

ருத்ர தாண்டவம் படத்தை சென்ற ஞாயிறு மாலை முக்கால்வாசி நிறைந்திருந்த ஒரு பெங்களூர் திரையரங்கில் சென்று குடும்பத்துடன் பார்த்தேன்.

டிரெய்லரில் வந்த காட்சிகளை வைத்து கிறிஸ்தவ மதமாற்ற அபாயம் அழுத்தமாக பேசப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிறு ஏமாற்றம். ஆயினும், போதைப் பொருள் பரவல், பட்டியல் சமுதாயத்தினரின் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்ட வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் (PCR) துஷ்பிரயோகம், “க்ரிப்டோ கிறிஸ்டியன்ஸ்” ஏன்று பெயர்சுட்டப்பட்டும் முகமூடி கிறிஸ்தவர்கள், தேசவிரோத “போராட்ட” என்ஜிஓ அரசியல் என நான்கு பரபரப்பான சமாசாரங்களைப் போட்டுக் காய்ச்சி காட்டமான காக்டெயிலாக இப்படி ஒரு அதிரடி திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. இந்த ஒரு விஷயத்துக்காகவே அவருக்கும் மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இறுதிக்காட்சியில் வில்லன் வாதாபி சாகும்போது அவன் மார்பு மங்கலாக்கப் படுகிறது (blur). அங்கு ஒரு பெரிய சிலுவை தொங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுவதை சென்சார் அனுமதிக்கவில்லை போல. மேலும், “மதத்தை விட இங்க சாதிதான் முக்கியம்… ” என்று டிரெய்லரில் தாடிக்காரன் பேசிய வசனம் திரையில் மௌனமாக்கப்பட்டு உதட்டசைவாக மட்டுமே வந்தது. அப்பட்டமான இந்துமத வெறுப்பு, எதிர்ப்புக் காட்சிகளை சகஜமாக ஏராளமான படங்களில் அனுமதித்த சென்சார், இத்தகைய சாதாரணமான சித்தரிப்புகளைக்கூட முடக்குவது கொடுமை.

ஒரு அரசியல் படமாக, தான் முன்வைக்கும் அரசியல் தரப்பை இந்தப் படம் மங்கலாக கோடிகாட்டிச் செல்கிறதே அன்றி, உறுதியாக முன்வைக்கவில்லை என்பதே உண்மை. கிறிஸ்தவ மதமாற்றம் அதனளவில் கண்டிக்கப் படவில்லை. கிறிஸ்தவம் பட்டியல் சமுதாய மக்களின் குடும்பங்களுக்குள் ஊடுருவி, இளைஞர்களை உளவியல் ரீதியாக ஆக்கிரமித்து மதமாற்றுகிறது என்பது உணர்வுபூர்வமாக சொல்லப் படவில்லை. பாதிரியார் மூலம் ஞானஸ்நானம் பெறும் புகைப்படம் போலீஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கில் ஒரு நல்ல “துப்பு” என்ற அளவிலேயே படம் போகிறது. அதில் தவறில்லை. ஆனால், இது காண்பவர்கள் மனதில் இயல்பாக உருவாக்கக் கூடிய தாக்கத்தை இன்ஸ்பெக்டர் ஜோசஃப் என்ற “நல்ல கிறிஸ்தவர்” பாத்திரம் சுத்தமாக மழுங்கடித்து விடுகிறது.

‘கிரிப்டோ கிறிஸ்தவர்’ என்ற மாபெரும் மோசடி அதுபற்றிய எந்த வெட்கமும் இல்லாமல் நடப்பதற்குக் காரணம் சாதி ரீதியான இட ஒதுக்கீடு. எஸ்.சி/எஸ்.டி. பட்டியல் சமுதாயம் மட்டுமல்ல, இந்தப் படத்தில் “பூடகமாக” 🙂 பேசப்படும் “தர்மபுரி” சமுதாயம் உட்பட தமிழ்நாட்டின் பல BC, MBC சமுதாயங்களிலும் இந்த மோசடி பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் பா.ம.க. கட்சியால் பாராட்டுப் பெறவேண்டிய அனைத்து நியாயங்களையும் இந்தப் படம் கொண்டிருந்தும், அது கிடைக்காமல் செய்யவைக்க்க கூடிய அளவுக்கு “கிறிஸ்தவ வன்னியர்” ஆதிக்கம் அந்தக் கட்சிக்குள்ளேயே பரவி விட்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம். தமிழ்நாட்டு அரசியலில் சாதி ரீதியான இட ஒதுக்கீடு என்பது ஒரு பெரிய வெடிகுண்டு என்பது இயக்குனருக்கு நன்கு தெரியும். அதனால், சாதுர்யமாக அதைப் பற்றிய எந்தக் குறிப்பும் வந்துவிடாதபடி கவனமாக இருந்திருக்கிறார். ஆனால், உண்மையில் “கிரிப்டோ கிறிஸ்தவ” மோசடியின் ஆணிவேரே அதுதான். இப்படம் அதுகுறித்த ஒரு விவாதத்தை தமிழ்ச் சூழலில் ஏற்படுத்தினால் அது ஒரு நேர்மறையான விளைவாக இருக்கும். ஆனால் அது நடக்கும் என்று தோன்றவில்லை.

மற்றபடி, படத்தின் பயங்கரமான பின்னணி இசை, சிலபல அமெச்சூர்த்தனமான காட்சிகள், அங்கங்கு தென்படும் தர்க்கப் பிழைகள், படத்துடன் ஒட்டாமல் செல்லும் பாத்திரப் படைப்புகள் இத்யாதி குறித்தெல்லாம் எதுவும் கூறப்போவதில்லை. முற்றிலும் இந்திய-விரோத, இந்து-விரோத கருத்தியல்களால் சூழப்பட்டுள்ள தமிழ் சினிமா என்ற நச்சுப்பொய்கையில், இப்படி ஒரு படம் வந்திருப்பது என்பதே அதை ஆதரிப்பதற்கும் பாராட்டுவதற்குமான நியாயமான, தார்மீக காரணமாக அமைகிறது. இது போன்ற மேலும் பல படங்களை, இன்னும் சிறப்பான கலை அம்சங்களுடன், இன்னும் கூர்மையான அரசியல் பார்வையுடன் மோகன் ஜி எடுக்க வாழ்த்துக்கள்.

திமுக அடிமை ஊடகங்களின் எதிர்மறை பிரசாரங்களையும் மீறி, இந்தப் படத்திற்கு தமிழ் மக்களிடம் பரவலான, நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது உவகையும் நம்பிக்கையும் அளிக்கிறது. இப்படத்தின் வெற்றி மேலும் சில தர்ம, நியாய உணர்வும் இந்துமதப் பற்றும் கொண்ட திரைக்கலைஞர்களை இத்தகைய முயற்சிகளில் மேன்மேலும் ஈடுபடுத்துவதற்கு அன்னை பராசக்தி அருள்க. ஓம் சக்தி.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

53 Replies to “ருத்ர தாண்டவம் – திரைப்பார்வை”

  1. இந்துமதம் மானிடரின் வாழ்வியலை மனவோட்டத்தை மிக நுணுக்கமாக அணுகிய மதம், கொண்டாட்டம் வாழ்வுக்கும் மனது உற்சாகத்துக்கும் அவசியம் என சொன்ன மதம்

    அனுதினமும் உழைத்து ஒரே வேலை ஒரே உணவு ஒரே வீடு என்றிருக்கும் மனம் அலுத்து போகாமல் அதை உற்சாகபடுத்த சிந்தித்த மதம், இதனால் அது ஏகபட்ட திருவிழாக்களை உருவாக்கியது

    மானிட மனநலனை சிந்தித்த ஒரே மதம் இந்துமதம் மட்டுமே

    அதிலும் பெண்களின் மனநிலையினை சரியாக புரிந்த மதம் அதுதான், பெண்களுக்கு வேலைகள் அதிகம், சிந்தனையும் ஆற்றலும் படைக்கும் திறமும் அதிகம்

    இது போக‌ மனரீதியாக அவர்களுக்கு ஏக பட்ட அழுத்தமும் உண்டு, அவர்கள் மனம் இலகுவாக சில வழிகள் அவசியம், அவர்கள் மன அழுத்தம் நீங்கி உறவாடி மகிழ சில கொண்டாட்டம் அவசியம்

    குழந்தைகளை வளர்ப்பவர்கள் எனும் முறையிலும், குடும்ப அஸ்திவாரம், இணைப்பு சங்கிலி எனும் வகையில் அவர்கள் ஞானமும் அறிவும் சமூக நோக்கமும் எல்லோருடனும் நல்லுறவும் கொண்டவர்களாக இருத்தல் இன்னும் மகா அவசியம்

    அதை எல்லாம் சிந்தித்து சிந்தித்துதான் இந்துமதம் ஞானமாக அதன் விழாக்களை வடிவமைத்தது, அதன் ஒவ்வொரு விழாவும் அவ்வளவு பலனுள்ளது

    நவராத்திரியில் பெண்கள் கொலு, கோலம், சமையல், பாடல், ஆடல் என எல்லாவற்றுக்கும் வழி செய்த அந்த மதம் அவர்களை உடலாலும் மனதாலும் உற்சாகபடுத்தியது.

    இன்று மனிதர்களுக்கு கட்டாயம் “ஸ்ட்ரெஸ் ரிலீஸ்” வேண்டும் என மனோதத்துவ அறிஞர்கள் சொல்வதை, அது இல்லாவிட்டால் மனம் இறுகி விபரீதம் ஏற்படும் என சொல்வதை என்றோ உணர்ந்த மதம் இந்துமதம்

    இதனால் அது ஆழ சிந்தித்து மனிதன் மனம்விட்டு கொண்டாடவும், அதே நேரம் சனாதான தர்மம் காலம் காலமாக தொடரவும், சமூக பிணைப்பு ஏற்படவும், எல்லா சமூக மக்களும் பயன்பெறவும் மிக நுணுக்கமாக திருவிழாக்களை உருவாக்கிற்று

    அந்த விழா கொண்டாட்டத்தையும் தெய்வத்தை நோக்கி மனிதனை திருப்பி அவன் தெய்வ சிந்தனையுடன் தன் மன அழுத்தம் குறைய வழி செய்து, இறை சிந்தனையிலே உற்சாகம் கொள்ள செய்து அந்த உற்சாகத்துடனே அவனை மறுபடி உழைப்புக்கு அனுப்பியது இந்துமதம்

    உழைப்பும் உழைத்து களைத்தால் திருவிழாக்களும் அதனோடு கூட உடல் நலம் பேண விரதங்களும், மன நலம் பேண பல ஏற்பாடுகளும் செய்து மனிதனை மனிதனாக வைத்திருந்தது அந்த ஞான மதம்

    இந்த கொண்டாட்டங்களே அன்று அவனை நல்வழியில் வைத்தன, அன்று அவன் ஒழுங்காக உழைத்ததற்கும் இன்றும் உருவாக்கமுடியா ஏரிகள் குளங்கள் போன்ற பிரமாண்டங்களை படைத்தற்கும் தஞ்சை கோவில் போன்ற அதிசயங்களுக்கும், காவேரி டெல்டா போன்ற பிரமாண்ட பாசனங்களுக்கும் இதுதான் அடிப்படை

    இது இந்துக்கள் வாழ்ந்த இடமெங்கும் இருந்ததால் பாரதம் உழைப்பில் மின்னியது, வளம் கொழித்தது

    வேலை செய், தெய்வத்தை நினை, கொண்டாடு, ஓய்வெடு, களைப்பு நீங்கு, மறுபடி வேலை செய் எனும் அந்த சுழற்சியில் ஆயிரம் மனநல நுணுக்கம் நிறைந்திருந்தது.

    காலம் காலமாக இந்துமதம் நிலைத்திருக்க இந்த பண்டிகைகளும் அந்த கொண்டாட்டங்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது

    பாரதம் முழுக்க ஒரே கலாச்சாரம், ஒரே மதம் , ஒரே சங்கிலி இணைப்பு என அடித்து சொல்வதும் பண்டிகைகளே

    அதில் நவராத்திரி விழா மகா முக்கியமானது, தேசமே கொண்டாடும் பண்டிகை இது

    பாரத கண்டத்தின் தனிபெரும் திருவிழா நவராத்திரி, தீபாவளி போல் ஒரு நாளில் அல்லாமல் மிகபெரும் திருவிழாவாக 10 நாள் கொண்டாடும் கொண்டாட்டம் அது

    அந்த நவராத்திரி பண்டிகை சொல்லும் தத்துவமும் சிறப்பும் வாழ்வியல் நோக்கமும் ஆன்மீகமும் மகா உன்னதமானவை, அன்று வாழ்ந்த மிகபெரிய ஞான சமூகத்தின் தத்துவ தேடலை, மாபெரும் இறை சக்தியின் தத்துவத்தை, மானிட வாழ்வின் அதி உன்னத தேடலின் மகத்துவத்தை வலுயுறுத்துமாறு ஏற்படுத்தபட்டவை

    இந்த நவராத்த்திரி எனும் 9 இரவுகளும் அன்று மிக உற்சாகமாக இருந்தன, பகலெல்லாம் விரதமும் இரவு விருந்தும் , ஆன்மீக சொற்பொழிவும் நடனமுமாக கொண்டாடபட்டது.

    (இந்த நவம் எனும் ஒன்பது நாள் கொண்டாட்டமே ஐரோப்பாவுக்கு கடத்தபட்டு இன்று கன்னிமரியாளுக்கு கொண்டாடபட்டு நவநாள் அல்லது நவனோ என முன்னாள் இந்துக்களான தமிழக கிறிஸ்தவர்களுக்கு இங்கு திரும்பவும் கொண்டுவரபட்டது , அது இன்று கத்தோலிக்க ஆலயங்களில் சடங்காய் தொடர்கின்றது

    ஐரோப்பாவின் எல்லா விஷயங்களும் இந்துக்களிடம் இருந்து திருடபட்டதேப்)

    இந்த 9 நாட்களும் ஆலயங்கள் மட்டுமல்ல வீடுகளிலும் ஆன்மீக சிந்தனையிலே மக்கள் இருக்க கொலு வைக்கும் தத்துவத்தையும் முன்னோர்கள் சொல்லியிருந்தார்கள், அதற்கான வழிகளையும் சொல்லியிருந்தார்கள்

    சும்மா வைத்துவிடுவதல்ல கொலு, அதில் முறையான ஏற்பாடும் உன்னதமான தத்துவங்களும் உண்டு
    கொலு என்றால் அழகோடு வீற்றிருத்தல் என பொருள்,

    கொலு மேடை அமைப்பதற்கென்றே முன்னோர் அழகான விதிகளை வகுத்தனர், 7 அல்லது 9 அடுக்கில் அமைக்கலாம்

    முதல் அடுக்கில் ஒர் உயிர் அதாவது புல்,தாவர வடிவம்,

    2ம் அடுக்கில் சங்கு போன்ற ஈருயிர்களின் வடிவம்,

    3ம் படியில் கரையான் போன்ற மூவுயிர் உருவம்.

    4ம் படியில் வண்டு நாலுயிர் உருவம்,

    5ம் அடுக்கில் விலங்கு,பறவை போன்ற ஐந்து அறிவு உயிர் வடிவங்களும்,

    6ம் அடுக்கில் மனிதன் அதாவது நல்ல மனிதர்கள் அல்லது தலைவர்கள் சிலை என வைத்து

    7ம் அடுக்கில் மனிதனிலிருந்து தெய்வ நிலைக்கு சென்ற மகான்கள்,ரிஷிகள் உருவமும்

    , 8ம் அடுக்கில் தேவர்கள்,தேவதைகளும்,

    9ம் அடுக்கில் மூல கடவுளும் கொண்டு அமைக்கவேண்டும்,

    ( 7ம் அடுக்கின் சிலைகள் பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் மட்டும் அமைக்கபடவேண்டும் என்பது சாஸ்திர விதி, காரணம் மண்ணில் இருந்து வந்தவன் மனிதன்.)

    9 நாளும் விரத காலங்களில் இதனை பார்க்கும் பொழுதெல்லாம் மனிதனுக்கு இறைவனின் தத்துவத்தில் தனது நிலை புரியும், தானும் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும், மனித நிலையிலிருந்து இறங்கவே கூடாது என்ற வைராக்கியம் உருவாகும்

    அதை பின்பற்றினால் மனிதன் மனிதனாக இருப்பான், அல்லது தெய்வமாவான்.

    மனிதன் அப்படி ஆவானோ இல்லையோ, ஒவ்வொரு வீட்டிலும் வைக்கும் கொலுவிற்கும், கூட்டு பிரார்த்தனை மற்றும் பாடல்களின் மூலம் ஒரு சமூக பிணைப்பும் அதிகமாகும்.

    உணவும் அதை பகிர்தலும் உறவினை வளர்க்கும், தாம்பூலம் உட்பட பொருட்கள் கொடுப்பது இன்னும் உறவினை வளர்க்கும்

    உன்னத சிந்தனை காலங்களும் அந்த உறவுகளும் நிலைத்திருக்கவே இரவு உணவும் இதர பொருட்கள் கொடுக்கும் உன்னத கலாச்சாரமும் ஏற்பாடாயின, அதை இந்த ஞான சமூகம் இதுகாலமும் காப்பாற்றியும் வருகின்றது

    இந்த 9 நாளும் இன்னும் சில தத்துவங்களையும் சொன்னார்கள், அதில் மகா கீதையின் போதனை அப்படியே இறங்கியது

    ஆம், வீரம் என்பது ரஜோ குணத்தின் சாயல். பலத்தால் எல்லாமும் அடையும் அந்த ரஜோ குணத்தின் ஆளபிறந்த சாயல் அதை தெய்வத்தின் உதவியுடன் வெல்லுதல் வேண்டும் என்பதே துர்கா பூஜைக்கான வழிபாடு

    செல்வம் என்பது தமஸ் எனப்படும் சோம்பல் குணத்து சாயல் , செல்வம் ஒருவித செருக்கு சோம்பலை கொடுக்கும், எல்லாமே விலை கொடுத்து வாங்கமுடியும் எனும் அகம்பாவத்தை கொடுக்கும்

    நம்மிடம் ஏகபட்ட செல்வம் இருகின்றதே, எல்லோருக்கும் பிச்சை இடுகின்றோமே, கோவிலே நம்மை நம்பித்தானே இயங்குகின்றது எனும் செருக்கு மனிதனை ஞானம் பெற விடாது மாறாக வேறு வீழ்ச்சிக்கு இழுத்து செல்லும்

    வீடெங்கும் வேலைக்காரர், நாடெங்கும் சேவகர் எனும் பொழுது மனம் தாம்ஸ குணம் எனும் சோம்பேறித்தனத்தில் சிக்கி கடவுளை தேடாமல் அகங்காரத்தில் விழும்

    அதை ஒழித்து ஞானம் பெற சொன்னதே லட்சுமி வழிபாடு

    மனதாலும் அறிவாலும் உலகை உணர்ந்து, தெய்வத்தின் பாதமே சரணும் நித்தியமாகும் என்பதை தானும் உணர்ந்து ஊரையும் உணரும்படி கலை வடிவிலோ போதனை வடிவிலோ மக்களை சிந்திக்க வைத்து அவர்களை ஞானத்தில் நிலைபெற செய்ய வழிவைப்பது சரஸ்வதி பூஜை

    எதையுமே அறிவாலும் மனதாலும் நோக்காமல் பயனில்லை என்பதுபடியும், சத்வம் எனும் சாத்வீக குணத்தால் ரஜோ குணத்தையும் , தமஸ் குணத்தையும் எரித்து அதாவது ஒரு தீக்குச்சியால் அந்த ஒரு குணங்களையும் எரித்து கடைசியில் தீக்குச்சியினையும் எரித்து ஒன்றுமில்லா சூனியமாகி ஞானம் பெறுதல் என்பதே சரஸ்வதி வழிபாடு

    கங்கா யமுனா சரஸ்வதி எனும் மூன்று நதிகளும் கடலில் சங்கமாவது போல இந்த மூவகை குணம் கொண்ட மனிதனும் ஞானத்தின் மூலம் இறைவனை அடைதல் வேண்டும் என்பதே பத்தாம் நாள் அதி உச்ச கொண்டாட்டம்

    ஆயுத பூஜை என்பது வேறொன்றும் அல்ல இந்த வாழ்வில் உன் கையில் இருக்கும் இந்த ஆயுதமே உன் கர்மா, இதுவழியாக தொழில் செய்யவே நீ படைக்கபட்டிருக்கின்றாய். இதுவே உன் கர்மா இதில் விருப்பு வெறுப்பற்று மூழ்கி இறைவனை அடைவாய் என்பதாகும்

    அது வாளேந்திய வீரன் முதல் தராசு ஏந்தும் வணிகனோ இல்லை ஏட்டில் எழுதும் எழுத்தாணி கொண்ட புலவனோ யாராயினும் சரி, அதுதான் அவனுக்கு தெய்வம்

    ஆயுத பூஜையன்று கருவிகளுக்கு செய்யபடும் வழிபாடெல்லாம் சாட்சாத் இறைவனுக்கு அன்றி அவைகளுக்கு அல்ல‌

    இந்த தத்துவங்களெல்லாம் ஒரு புறம் இருக்க சில புராண கதைகளும் அன்று சொல்லபடும் அது ராவணனை ராமன் வதைத்த நாள், மகிஷாசூரனை தேவி கொன்ற நாள் என்பார்கள்

    அக்காட்சிகளெல்லாம் கொண்டாடபடும், மிக விமரிசையாக கொண்டாடபடும்

    பெண்ணாசை , மண்ணாசை , பொருளாசை, அதிகார ஆசை என்பவையெல்லாம் அதாவது கல்வியோ செல்வவோ வீரமோ தவத்தின் சக்தியோ மிக மிக பேராசையாக மாறினால் ஒரு காலமும் நிலைக்காது என்பதே பொருள்

    கல்வி செல்வம் வீரம் இவற்றில் ஆணவம் கலக்க கூடாது என்பதும் அப்படி ஆணவம் கலந்தால் அதை அழிக்க வரம் அருளிய அன்னையே இறங்கி வருவாள் என்பதுமே பொருள்

    சீதை ராவணனுக்கு எமனாக வந்தாள், சூரனுக்கு அன்னையே சூலம் ஏந்தி வந்தாள், வதைத்தாள்
    இதில் இன்னொரு சூட்சுமமான அடையாளமும் உண்டு

    அந்த மகிஷாசூரனுக்கு ஏன் எருமை (மகிஷம்) தலை வைத்தார்கள்?, எத்தனையோ விலங்குகள் இருக்க மிக சரியாக ஏன் எருமையினை தேர்ந்தெடுத்து வைத்தார்கள்?

    எருமை சுகங்களில் ஊறும் தன்மை கொண்டது, அசமந்தம் பிடித்தது, சுறுசுறுப்பே இல்லாத ஒருவகை மந்தமான மிருகம்

    அந்த மந்தமான மிருகத்தின் மேலேதான் எமன் வருவான் என்றார்கள், வாழ்வில் எமன் மெதுவாக உன்னை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றான், கவனமாய் இரு என ஒவ்வொரு மனிதனுக்கும் தத்துவமாக சொல்ல அப்படி சொன்னார்கள்

    மகிஷாசூரன் எனும் எருமை தலை அரக்கனை அன்னை வதம் செய்தாள் என்பது புராணத்தில் என்றோ நடந்து முடிந்த விஷயம் அல்ல‌

    ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஒரு எருமை குணம் உண்டு, அது மனிதனை இறைவழியில் செல்ல விடாது, பலவகை சோம்பலை அது கொடுத்து பாதை மாற்றும்

    சோம்பல் கொடுப்பது ஒருவகை கெடுதி என்றால் எருமை சகதியில் ஊறிகிடப்பது போல மானிட மனம் சுகங்களில் சொக்கிகிடக்கும், அதைவிடுத்து வராது

    மானிட மனதுக்கு சேறுகளான குடி, கொண்டாட்டம், உல்லாசம், போதை, புகழ் இவற்றில் எளிதில் சிக்கும் தன்மை உண்டு, சிக்கினாலும் வெளிவரமாட்டேன் என அடம்பிடிக்கும் தன்மை உண்டு

    எவ்வளவோ பராக்கிரமசாலிகளின் வாழ்வு அப்படித்தான் வீணாயிற்று

    சோம்பல் என்பது கோவிலுக்கு செல் என அறிவு சொன்னால் மனம் எருமை போல் நிற்க வைக்கும், காலையில் எழுந்து வணங்க சொன்னால் நீண்ட நேரம் தூங்க வைக்கும்

    இறை வழிபாட்டில் மனதினை செலுத்த சோம்பல் எக்காலமும் தடை, லவுகீக உலகில் உழலும் மன‌தை இறைவழிபாட்டில் திருப்ப அந்த எருமை குணம் எக்காலமும் பெரும் தடை

    அந்த தடையினை அந்த அரக்க எருமையினை அடக்க மனித குணத்தால் முடியாது, மனிதனின் மனம் பலகீனமானது, சேறு கண்ட இடத்தில் கிடக்கும் எருமை போல் அது உலக இன்பங்களில் எளிதாக சிக்கிவிடும்

    சுகங்களில் அது சொர்கமே இருப்பதாக நினைத்து கலந்துவிடும். அந்த சுகமே சொர்க்கம் எனவும் இன்பம் எனவும் கருதி தெய்வத்தையோ உண்மையான ஞானத்தையோ ஏறேடுத்தும் பார்க்காமல் மாபெரும் வீழ்ச்சிக்கு மனிதனை இழுத்து சென்று அவன் பிறவியினை கடக்க முடியாமல் செய்துவிட்டும்

    எல்லா மனதிலும் தேவர் குணமான நற்குணமும் அசுர குணமான எருமை குணமும் உண்டு. அந்த எருமை குணத்தை வெல்ல எல்லாம் வல்ல அன்னையினை அழைப்பதே இந்த நவராத்திரி காலம்

    செல்வத்தால் ஏற்படும் எருமை குணத்தில் நான் வீழாதபடி, வீரத்தால் வரும் அகங்கார எருமையால் நான் வீழாதபடி, ஞானி எனும் இறுமாப்பில் எருமையாய் நான் உழலாதபடி என்னை காப்பாய் அன்னையே என அவளை சரணடைவதே இந்த விரதகாலத்தின் நோக்கம்

    வைராக்கியமாய் விரதம் இருங்கள், செல்வத்தை தானம் செய்யுங்கள், அவளிடம் மனதை கொடுத்து ஞானமாய் சிந்தியுங்கள்

    விரதங்கள் உடலுக்கு நல்லது என்பது மருத்துவமே ஒப்பு கொண்ட ஒன்று, விரதங்கள் மனிதனை ஓரிடத்தில் ஒடுக்கி அடக்கி வைக்கும்

    அப்படி அடங்கி இருத்தலில் சுகங்களில் இருந்து அவன் விலகி இருத்தலின்போது அவனுக்கு பல நல்ல ஞானங்கள் உருவாகும், அதில் தெய்வீக சிந்தனை மேலோங்கும்

    இதனால் இம்மாதிரி காலங்களில் விரதம் இருத்தல் என்பது மகா அவசியமாகின்றது

    அதைவிட முக்கியமாக எனக்கு வீரமோ, கல்வியோ, செல்வமோ இல்லையென்றால் இப்படி பசியோடு இருந்திருப்பேன் அதில் இருந்து தெய்வம் என்னை காத்திருகின்றது எனும் நன்றி உருவாகின்றது

    அந்த நன்றி தெய்வத்தை வணங்க சொல்லி பசியோடு இருப்பவரின் தேவையினை உணர் வழி செய்து தானம் செய்ய வாசலை திறக்கின்றது, அதில் பாவ கர்மாக்கள் தீர்க்கபடுகின்றன‌

    இந்த நவராத்திரி காலம், பாரத ஞானத்தின் தனி அடையாளம். கிடைக்கும் ஆசிகளில் கடவுளை தேடுதல் அல்லது வாழ்வியல் நெருக்கடி தீர அதுவரை இல்லா ஆசிகளை பெற்று அதில் கடவுளை தேடுதல் என கடவுளை நினைத்து நெருங்கும் காலம்

    தேவைகள் தீர்ந்து நிம்மதி பிறக்கும் மனிதனே நிறைவடைவான் அவன் சிந்தனை மேலோங்கும்.

    அப்படி மனிதன் தன்னிறைவு அடைய இந்த மூவகை ஆசிகளும் அவசியம் அதில் தெய்வத்தை காணுதல் அதைவிட‌ அவசியம் என்பதை உணர்த்தும் காலம்

    இந்த தெய்வீக காலத்தை தொடங்க போகும் அனைவருக்கும் நல்வாழ்ந்த்துக்கள் இந்த நவநாட்களும் நல்ல சிந்தனைகளை கொடுக்கட்டும், வீடுதோறும் கொலுவும் நல்ல சிந்தனைகளும் உற்சாகமாய் பெருகட்டும்

    ஆலயமெல்லாம் தெய்வங்களுக்கு சிறப்பு விழாக்களும் கொண்டாட்டமும் நடக்கட்டும், ஞானிகளும் ஆன்றோர்களும் சொற்பொழிவும் உபதேசங்களும் ஞானமாய் அருளட்டும்

    ஒவ்வொரு வீடும் தன்னிறைவு அடையட்டும், பாரத கண்டம் மூவகை அருளையும் நிரம்ப பெற்று பாரினில் ஜொலிக்க அந்த முப்பெரும் தேவியர் தனி அருள் பொழியட்டும்

    எந்த இனத்திலும் இல்லாதவாறு 3 வகை ஆசிகளையும் அதற்கான காரணங்களையும் அதனால் மானிட இனம் பெறும் நலன்களையும் அந்த நலனால் ஒரு ஆத்மா ஞானம் பெறுவதை இந்துக்கள் இந்நாளில் சிந்திக்க சொன்னார்கள்

    கலை, பொருள், வீரம் என அதை பிரித்தார்கள். மூன்றும் மூன்று தேவியரின் அருள் என்றார்கள், அவைகளின் முக்கியத்துவத்தை சொல்லி தேவியின் ஆசியோடு அதை இணைத்து சிந்திக்க சொன்னார்கள்

    அதை இந்த நவராத்திரி காலங்களில் அவ்வப்போது பார்க்கலாம்.

  2. மகாளய பட்சம் என்பது ஒரு காலத்தில் ஆசியா முழுக்க இருந்த நம்பிக்கை, ஆசியா முழுக்க இந்துமதம் இருந்ததற்கான பெரும் ஆதாரம்

    ( சீனருக்கும் இம்மாதம் முன்னோர்களுக்கான மாதமே, அவர்கள் நம்பிக்கைபடி இரு வகையில் கொண்டாடுவார்கள், முதலில் நம்மை போல இந்த மாதத்தின் தேய்பிறை காலம் முன்னோர்கள் வந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள் என பூஜை, படையல் என அனுசரிப்பார்கள்

    இரண்டாம் பட்சம் அதாவது வளர்பிறை காலம் என்பது பேய் வரும் காலமாம் அதை வெடிபோட்டு விரட்டி அடிப்பார்கள்

    இம்மாதம் முதல்பாதியில் சொர்க்கமும் பின் இரண்டாம் பாதியில் நரகமும் திறக்கபடும் என்பது அவர்கள் நம்பிக்கை

    முன்னோர்கள் சொர்க்கத்தில் இருந்தால் மாதத்தின் முதல் பாதியில் சந்திக்கவும், நரகத்தில் இருந்தால் இரண்டாம் பாதியில் சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்களோ என்னமோ?)

    இது இன்றைய சீன மக்களின் கிழக்காசிய மக்களின் நம்பிக்கை என்றாலும் நம் இந்தியாவின் மகாளாய பட்சத்தின் நம்பிக்கையோடு பொருந்தி வருதலை நீங்கள் உணரலாம்

    மகாளயம் என்றால் கூட்டம், பட்சம் என்றால் பதினைந்து நாட்கள், அன்று முன்னோர்கள் பெரும் கூட்டமாக வருவார்கள் என்பதே அதன் பொருள்

    இந்து தர்ம சாஸ்திரம் மூன்று முக்கிய கடமைகளை சொல்கின்றது. சந்ததிகளை வழிநடத்தி பாதுகாத்தல், பெற்றவர்களை பராமரித்தல் அப்படியே முன்னோரின் ஆத்மாவிற்கான வழிபாடுகளை சரியாக செய்தல்

    ஆம், பெற்றவருக்கும் பிள்ளைகளுக்கும் செய்யும் அதே கடமைகளை மறைந்தோருக்கும் நல்ல இந்து செய்ய வேண்டும் என்கின்றது அது. அவர்கள் நினைவுகளை மறப்பது பாவம் என்றும், அவர்களுக்கான திதியினை மிக சரியாக செய்யாதது மகா பாவம் என்றும் சொல்கின்றது

    ஒரு மனிதனின் வாழ்வு அவன் மரணத்தோடு முடிவதில்லை, சூட்சும சக்தியாக குறிப்பிட்ட காலம் வரை அந்த ஆன்மா தன் குடும்பத்தை காக்கின்றது, அரூப சக்தியாக பல நலங்களை தன் சந்ததிக்கு வழங்குகின்றது என்பது இந்துக்களின் நம்பிக்கை

    அப்படி புரட்டாசி மாதத்தின் தேய்பிறை காலமான 15 நாட்கள் இங்கு மகா முக்கிய மகாளய காலம், கடைசியில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை.

    தை அமாவாசை, ஆடி அமாவாசையினை போல மிக சிறந்தது மகாளய அமாவாசை

    அன்று மட்டும் அல்ல, மற்ற 15 நாட்களும் அவர்களை நினைந்து பிரார்த்தித்தலும் அவசியம் ஒவ்வொரு நாள் பிரார்த்தனைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு, 15ம் நாள் மொத்த ஆசியும் கிடைக்கும்

    இந்த 15 நாளில் தன் வீட்டு முன்னோர்கள் தவிர யாரும் நினையாத ஆத்மாக்களுக்கும் நமக்கு நல்வழி காட்டிய ஆத்மாக்களுக்கும் ஒரு நாள் உண்டு.

    ஆண்டுக்கு முன்னோருக்கு 96 தர்பணங்கள் கொடுக்க வேண்டும் என்பது விதி, ஆனால் 3 முதல் 4 தர்பணங்களே கொடுக்கபடுகின்றன அதையும் முறையாய் கொடுத்தல் நலம்

    இந்த சாஸ்திரங்களையெல்லாம் முன்னோரின் ஆன்மாவுக்கு இதனால் பலன் உண்டா என பகுத்தறிவில் கேட்டால் அது மடமை

    முன்னோரின் அருளோ ஆசியோ அது ஒருபக்கம் நிச்சயம் கிடைக்கும் என்றாலும் அதைவிட முக்கியமானது நாம் காட்டும் நன்றிகடன்

    முன்னோர்கள் எவ்வளவோ காரியங்களை உழைத்து வைத்து உருவாக்கி சென்றார்கள், காட்டை திருத்தி கழனியாக்கியது முதல் காட்டு மாட்டை பிடித்து பழக்கி பால் கண்டு நெய்கண்டது முதல்
    வெறும் பயிரை பெரும் விளைச்சலாக்கி உணவினை கொடுத்து, சிந்தனை மூலம் மொழி கொடுத்து வழி கொடுத்து வாழும் நெறி கொடுத்தெல்லாம் சாதாரண விஷயம் அல்ல‌

    ஒரு குவளை சாதம் வைத்து அதில் ஒரு அகப்பை குழம்பு ஊற்றும்பொழுது ஒரு கணம் சிந்தியுங்கள்
    வீடு கட்ட செங்கலை கண்டறிந்தது ஒருவன், மரம் அறுக்க இரும்பை செய்தவன் ஒருவன், வீடு கட்டும் வழி அறிந்தவன் ஒருவன் அதில் நாம் அமர்ந்திருக்கின்றோம்

    நெல்லை கண்டறிந்தவன் ஒருவன், வளர்க்கும் முறை அறிந்தவன் ஒருவன் , அதை அரிசியாக்கும் வழி கண்டவன் ஒருவன்

    ஒரு அகப்பை குழம்பில் எத்தனை வகை பொருள் சேர்க்க வேண்டும் அதை விளையவைத்தவன் யார்? சேர்க்க சொல்லி கொடுத்தவன் யார்?

    எத்தனை வகை சமையல், எவ்வளவு கலவை, எவ்வளவு பொருட்கள் இதையெல்லாம் சேர்த்தது யார்? சமையல் கலையினை உருவாக்கியது யார்?

    ஒவ்வொன்றையும் இப்படி நினைத்து பாருங்கள், தலைக்கு எண்ணெய் வைப்பதில் இருந்து, அந்த எண்ணெயினை எப்படி கண்டறிந்தார்கள் என்பதிலிருந்து , அணியும் உடை நகையில் இருந்து காலில் மாட்டும் செருப்புவரை நினைத்தாலே மலைப்பாகும்

    வீடு,காடு, கழனி, கிணறு என ஒவ்வொன்றாய் சிந்தியுங்கள் மாபெரும் உழைப்பினை அவர்கள் கொட்டியிருப்பது தெரியும்

    அவர்கள் வெட்டிய குளங்களையும் கட்டி வைத்த ஆலயங்களையும் பாருங்கள் நன்றாய் புரியும்

    நாமெல்லாம் சுகமாய் வாழ அவர்கள் செய்திருக்கும் காரியம் மிக உன்னதமானது, யாருக்காய் செய்து வைத்தார்கள், நமக்காய் உழைத்தார்கள்

    அந்த நன்றிகடனில் அவர்களுக்கு சில மணிதுளிகளை தினமும் ஒதுக்க சொல்வதே இந்த மகாளய பட்சம் நாட்கள்

    இந்துக்களின் ஒவ்வொரு ஏற்பாடும் அர்த்தமுள்ளது, ஆழ்ந்த ஞானமிக்கது

    ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர் நினைவு என சொன்னார்களே, இந்த தை அமாவாசை, ஆடி அமாவாசை ,மகாளய அமாவாசை என முன்னோரை வணங்க சொன்னார்களே ஏன்?

    அவர்கள் நினைவு அடிக்கடி ஒருமனிதனுக்கு வரவேண்டும் , அது வர வர அவர்கள் பாடுபட்டு உருவாக்கியதை காக்கும் கடப்பாடும் நினைவும் மனிதனுக்கு வரும்

    அரும்பாடுபட்டு முன்னோர் உருவாக்கியதை இப்படி அழியவிட கூடாது எனும் எண்ணம் பெருகும், அதில் வீட்டின் சொத்து முதல் செல்வம் வரை நிலைத்திருக்கும்

    அந்த நினைப்பு ஒவ்வொரு இந்துவுக்கும் இருந்திருந்தால் இந்து ஆலயங்கள் இப்படி பாழ்பட்டிருக்காது

    முன்னோர் நினைவு சரியாக கொண்டிருந்தால் அவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய சிலைகள் கொள்ளை போயிருக்காது

    இப்பொழுது கோவில் தங்கத்தை உருக்குவோம் என அரசு சொல்லவும் முடியாது.

    முன்னோரின் தியாகம் அடிக்கடி நினைவுகூறபட்டால் குளங்களும் ஏரிகளும் இப்படி நாசமாயிராது, கால்வாய்கள் மறைந்திருக்காது

    முன்னோரின் தியாகம் அடிக்கடி நினைவுகூறபட்டால் சுதந்திர இந்தியாவில் இவ்வளவு லஞ்சமும் லாவண்யமும் பெருகியிருக்காது

    ஆம் முன்னோர்களின் நினைவு அவசியம், அது எக்காலமும் இருந்து ஒருவனை வழிநடத்துதல் வேண்டும்

    இஸ்ரேலிய யூதர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பது விஷயமல்ல ஆனால் பலம் வாய்ந்தவர்கள் பணக்காரர்கள், எப்படி அப்படி உருவானார்கள்?

    முன்னோர் வாழ்ந்த இஸ்ரேலை காக்க வேண்டும், அவர்கள் ஆசைபட்டபடி அது யூதநாடாக வீற்றிருக்க வேண்டும் எனும் முன்னோர் நினைவே அவர்களை இவ்வளவு தூரம் வளர்த்திருக்கின்றது

    இது யூத இனத்தில் மட்டுமல்ல, பல குடும்பங்களில் கூட காணலாம்

    முன்னோர் மேல் கொண்ட பற்றும் பாசமும் ஒருவனை நல்வழிபடுத்தும், உழைக்க சொல்லும், கடமையினை சரியாக செய்ய சொல்லும் அதில் நல்வழியில் தானே அவன் நடப்பான்

    எந்த முன்னோரும் நாசமாகும் வழியினை சொல்லியிருக்க மாட்டார்கள், எந்த முன்னோரும் தன் வாரிசுகள் சண்டையிட்டு சாகும் வழியினை சொல்லியிருக்கமாட்டார்கள், அவர்கள் தன் வாரிசு உருப்பட நிச்சயம் ஒரு நல்வழி சொல்லியிருபார்கள் அதை மிக சரியாக பிடித்து நடத்தல் வேண்டும்

    அப்படி நடந்தால் அவன் மிக சரியானவனாக இருப்பான் முன்னோர் விட்டு சென்ற பாரம்பரியத்தையும் பொருளையும் உழைப்பையும் காப்பான் அதை இன்னும் மேம்படுத்தி தன் சந்ததிக்கு விட்டு செல்வான்
    இந்த நுட்பத்திலே இந்துக்கள் மூதாதையரை வழிபட சொன்னார்கள்

    அதை அமாவாசையில் வைத்தார்களே ஏன்? ஏ முன்னோர்களே நீங்கள் இல்லாவிடில் நாங்கள் இருட்டிலே இருப்போம், அமாவாசைக்கு அடுத்து வளர்பிறை வருவது போல உங்களால் நாங்கள் வளர்ந்தோம் என குறிப்பால் உணர்த்துவதற்காக‌

    ஆற்றங்கரையிலே, குளத்து கரையிலே தர்ப்பணம் என சொன்னார்களே ஏன்?

    ஆற்றங்கரையில்தான் , குளத்து வரப்பிலேதான் முன்னோர்கள் உழைத்தார்கள் என்பதை சொல்வதற்காக,
    அந்த பிண்டத்தையும் தானியத்தையும் வைக்க சொன்னார்களே ஏன்?

    இந்த சோற்றதைத்தான் இந்த தானியத்தைத்தான் அவர்கள் விளையவைத்து உனக்கு ஊட்ட பாடுபட்டார்கள், இன்று நீ நலமாய் உண்ண அவர்கள் உருவாக்கிய வயலும் கழனியும் காரணம் அவர்களை மறக்காதே என சொல்வதற்காக‌

    தெய்வத்தின் முன்னால் செய்ய சொல்லி சூரியனை நோக்க வைத்தார்களே ஏன்?

    இந்த தெய்வம் உன் மூதாதையர் வணங்கியது, இந்த சூரியன் அவர்கள் வழிபட்டது இதையெல்லாம் நீயும் தொடரவேண்டும் என்பதற்காக‌

    முன்னோர் வழிபாட்டின் ஒவ்வொரு செயலும் ஆழ்ந்த அர்த்தமும் சிந்தனையும் கொண்டவை, சில ஏற்பாடுகள் அப்படியே கண்ணீரை வரவழைப்பவை

    மிக ஞானமான இந்து சமூகம் மானிட மனம் அறிந்து குணம் அறிந்து அன்றே அந்த ஏற்பாடுகளை செய்திருந்தது

    வழிபடல் என்பது அவர்களை நினைத்து மந்திரம் சொல்லி வணங்கிவிட்டு வருவதல்ல, அவர்கள் நினைவில் கலந்திருப்பதும் அவர்கள் விட்டு சென்றவற்றை காத்து நிற்பதுமாகும்

    அந்த பொறுப்பும் நினைவும் ஒவ்வொருவனுக்கும் வந்துவிட்டால் வீடு நலமாகும் ஊர் நலமாகும் , நீர் நிலையும் ஏரிகளும் ஆலயங்களும் ஆலய நிலங்களும் அப்படி காக்கபடும், எதுவும் அழியாது

    முன்னோர்களை வணங்கினால் எல்லா நலமும் கைகூடும் என்பது இதனாலே, மகாளய பட்சத்தின் ஏற்பாடும் வழிபாடும் இந்த நோக்கத்தினாலே

    ஒவ்வொருவரும் இந்நாட்களில் அவர்கள் முன்னோரை வணங்கலாம், பிரார்த்திக்கலாம், விரதமிருந்து படையலிட்டு வழிபடலாம்

    முன்னோர்கள் என்றால் உங்கள் வீட்டு முன்னோர்கள் மட்டுமல்ல. குளம் வெட்டியவர்கள், அணை கட்டியவர்கள், விவசாயம் சொல்லி தந்தவர்கள். ஆலயம் அமைத்தவர்கள்,

    வழிபாட்டு முறையினை சொல்லிதந்தவர்கள், கலைகளையும் இன்னும் பலவற்றையும் வளர்த்தெடுத்தவர்கள் தொடங்கி நாட்டின் சுதந்திர போராட்ட தலைவர்களும் இப்பொழுதும் நாட்டுக்காய் செத்தவர்கள் வரை நீண்ட வரிசை உண்டு,

    உங்களுக்கு கல்வி தந்த ஆசிரியரும் உண்டு அதற்கான சாலைகள் அமைத்த பெரியவர்களும் உண்டு

    அவர்களுக்காக இக்காலகட்டத்தில் பிரார்த்தியுங்கள், மனம் விட்டு பிரார்த்தியுங்கள், எவ்வளவு செய்யமுடியுமோ அவ்வளவு மனமார செய்து பிரார்த்தியுங்கள்

    நிச்சயம் அவர்கள் வந்து ஆசீர்வதிப்பார்கள், ஒருவேளை அவர்கள் வராவிட்டால் அந்த நன்றி உணர்வுக்காக தெய்வமே வந்து உங்களை ஆசீர்வதிக்கும், உங்கள் வாழ்வு செழிக்கும்

    சோறும் நீரும் எள்ளும் இன்னும் பலவும் வைத்து தர்ப்பணம் செய்வதெல்லாம் முன்னோர்கள் விளை நிலம் கொடுத்தார்கள், நீர் நிலை அமைத்தார்கள், தானியம் பெருக வைத்தார்கள், கோவில் கட்டினார்கள், தெய்வத்தை காட்டினார்கள், இன்னும் நமக்கு எவ்வளவோ செய்தார்கள் என்ற நன்றிக்கு நினைவு கூறவே

    முன்னோர்கள் நினைவு ஒரு குலத்தை எழ வைக்கும், சிந்தனை பெருக வைக்கும், அக்குலத்தை மென்மேலும் உயர்த்தும்

    அப்படி முன்னோர் பெருமையும், தான் ஒரு இந்து எனும் நினைவும் தமிழனுக்கு வரகூடாது என்றுதான் ஆலயங்களுக்கு இந்நாளில் தடை, தர்பணத்துக்கு தடை என தமிழக அரசு விதித்திருக்கலாம்

    கொரோனா கால தளர்வு, தடுப்பூசி பெற்றாயிற்று எனும் நிலையிலும் அரசு அடம்பிடித்து தர்பணங்களுக்கு தடை விதிக்கிறதென்றால் அது ஒன்றுதான் அவர்கள் திட்டமாய் இருக்க முடியும்

  3. ஆப்கானிஸ்தானின் தாலிபன்கள் மறுபடியும் இந்தியாவினை சீண்டுகின்றார்கள், பகிரங்கமாக எச்சரிக்கை விடபட்டிருக்கின்றது

    ஆப்கனில் சிறுபான்மையாக இந்துக்களும் சீக்கியர்களும் உண்டு, அவர்களின் வழிபாட்டு தலங்களும் உண்டு

    நேற்று சீக்கியர்களின் குருத்வாராவினை சேதபடுத்திய தாலிபன்கள் சீக்கியர்களை பிடித்து வைத்திருக்கின்றனர்

    இது உலகின் பார்வைக்கு சாதாரணமாக தோன்றினாலும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் சதி என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

    இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் உண்டு, இந்திய ராணுவத்திலும் இன்னும் பல இடங்களிலும் உண்டு, பொற்கோவில் விவகாரம் முதல் இன்றைய விவசாய சட்டம் வரை சீக்கியருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் உண்டு

    இப்பொழுது ஆப்கனில் சீக்கியருக்கு ஆபத்து என்றால் இந்தியா தலையிட வேண்டும் எனும் நெருக்கடி உருவாகும், விவசாய போராட்டம் செய்யும் சீக்கியர்கள் கூடுதலாக இதையும் சேர்ப்பார்கள்

    “தனி சீக்கிய நாடு” எனும் கோஷம் வலுபெறலாம்

    இதனால் இந்திய அரசும் நடக்கும் காட்சிகளை உன்னிப்பாக பார்த்து வருகின்றது

    தாலிபன்கள் இந்தியாவோடு உரசபோவதன் அறிகுறி இது, எதிர்பார்க்கபட்ட ஒன்றேதான். பாகிஸ்தானின் வளர்ப்பான தாலிபன் இதை செய்யும் என்பதை இந்தியா எப்பொழுதோ உணர்ந்திருந்தது

    தாலிபனின் தற்போதைய பலம் அவர்களிடம் சிக்கிய அமெரிக்க ஆயுதங்கள் அதை கொண்டு இந்திய எல்லையில் தொல்லை கொடுக்க அது திட்டமிடலாம்

    ஆனால் அமெரிக்க ஆயுதமெல்லாம் எங்கிருந்தும் கண்காணிக்கபடும் தொழில்நுட்ப வசதி கொண்டது என்பதால் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியாவால் அதை எளிதில் களைய முடியும்

    நேற்று தாலிபன் தலைவன் ஹக்கானி கஜினி முகமது எனும் அந்த கொள்ளையனை பாராட்டி அவன் அன்று இந்தியாவில் செய்த கோவில் இடிப்பினை எல்லாம் வாழ்த்தியிருக்கின்றான், இது இந்தியாவுக்கு சூசகமான எச்சரிக்கை

    ஆனால் கஜினி வரும்பொழுது இருந்த் அந்த இந்தியா அல்ல இது, இது இப்பொழுது மவுரிய, குப்த, வீரசிவாஜி காலம் போல வலுவானது, ஒரு பயலும் தொட முடியாது தொட்டால் இருக்க முடியாது

    அமெரிக்கா பல மில்லியன் டாலருக்கு தேடும் ஒருவன், உலகமெல்லாம் தீவிரவாதி என ஒதுக்கபட்ட ஒருவனெல்லாம் தன்னை கஜினியாக கருதி இந்தியாவுக்கு சவால்விடுகின்றான்

    முடிந்தால் வரட்டும் அவர்கள்

    முன்பு போல 17 முறை அவனை விரட்டும் அவசியமில்லை ஒரே முறையில் முடித்துவிடலாம் பாகிஸ்தானையும் சேர்த்து.

  4. துர்காம்மா நீங்க பக்தர்களோட கஷ்டம் அறிஞ்சவா, விரத நேரம் கோவில் பூட்டி கிடந்தா பக்தா மனசு என்ன பாடும் படும்னு உங்களுக்கு தெரியும் அவர்கிட்டட நவராத்திரி காலத்துல எல்லா நாளும் இந்து கோவில திறக்க சொல்லலாம், ஜனம் மகாளய அமாவாசைக்கு தர்பணம் கொடுக்க முடியாம எவ்வளவு பாடு பட்டிச்சி? அந்த மனவலியெல்லாம் உங்களுக்கு புரியாமலா இருக்கும் சொல்லுங்கோ?

    இதெல்லாம் நீங்க அவர்கிட்ட‌ எடுத்து சொல்லலாம், இந்த தங்க கொள்ளையெல்லாம் தடுக்க சொல்லலாம்

    இந்த கூன்பாண்டியன் சமணர்கிட்ட சிக்கி கிடந்து இந்து கோவிலெல்லாம் நாசமானபோ மனைவி மங்கையர்கரசிதான் அவன் மனச மாத்தி கோவிலெல்லாம் காப்பாத்தினாள், உங்களுக்கும் அந்த பாக்கியம் பகவான் கொடுத்திருக்கார்

    ஆனா நீங்க அதை செய்யிறமாதிரி தெரியலை

    புருஷன் கொள்கை முக்கியம்னா நீங்க‌ காந்தாரி மாதிரி கண்ண கட்டிண்டு அவர் பக்கத்திலே உட்கார்ந்திருக்கலாம் அதையும் நீங்க செய்யலை, கோவிலெல்லாம் வர்ரேள்

    உங்க ஆத்துல உங்க மாமனார், உங்க ஆத்துக்காரர், உங்க மகன், உங்க நாத்தனார்னு எல்லாருக்கும் “டபுள் ஸ்டேண்ட்” உண்டு, அந்த தோஷம் உங்களையும் ஓட்டிண்டு இருக்கு, அதுக்கு முதல்ல பரிகாரம் பண்ணனும்

  5. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு தேசாபிமானம் திடீரென வந்துவிட்டது, கைது செய்யபட்ட புலிகளுடன் தொடர்பில் இருந்த சீமானை கைது செய்யவேண்டுமாம்

    இதனை தங்கள் கூட்டணி கட்சி தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினை சந்தித்து சொன்னால் என்ன?

    10 சீட் வாங்க தேர்தல் நேரம் அறிவாலயம் ஓடும் இந்த அழகிரி, தேசத்துக்காக ஏன் முதல்வரை சந்திக்கவில்லை அல்லது ஆளுநரை சந்திக்கவில்லை?

    இது பற்றியெல்லாம் நாம் கேட்க கூடாது, இதெல்லாம் “நேருயிசம்”.

  6. ஆப்கானிஸ்தானின் கட்டுபாடு தீவிரவாதிகள் கைக்கு செல்லும்பொழுதெல்லாம் காஷ்மீரில் பதற்றம் உருவாகும் என்பது எதிர்பார்க்கபடுவதே, இம்முறையும் அது தொடங்கிவிட்டது. ஆப்கானிய சாயலில் கொலைகள் நடக்க தொடங்கிவிட்டது, அதுவும் பள்ளி ஆசிரியர்கள் கொல்லபடுவது அப்படியே அவர்கள் பாணி

    இந்திய பாதுகாப்பு அமைப்புகள் பலத்த நடவடிக்கையினை முன்பே எடுத்திருந்தன, அதையும் மீறி இதை செய்திருப்பது முன்பே தயாரான ஸ்லீப்பர் செல் கொலையாளிகளாக இருக்கலாம், விரைவில் கடும் நடவடிக்கையில் இம்மாதிரி அசம்பாவிதம் தடுக்கபடும்

    அதே நேரம் முன்பெல்லாம் இந்திய ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் தாக்குவார்கள், இம்முறை அது நடக்கவில்லை, காரணம் முன்பு புல்வாமாவில் அவர்கள் இந்திய ராணுவத்தை தாக்கி நம் ராணுவம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் புகுந்து குண்டுவீசி அடித்தது, இனியும் இந்திய ராணுவத்தை தாக்கினால் அதே அடிவிடும் என யோசிக்கும் தீவிரவாத கோஷ்டி அப்பாவி மக்கள் மேல் பாய்ந்திருக்கின்றது

    தமிழகத்திலும் கேரளத்திலும் விடுதலைபுலிகள் சர்வதேச தொடர்புகளுடன் கைதாகியிருக்கின்றனர். போதை பொருள் தொடர்பான தேடலின் பொழுது இவர்கள் கைது செய்யபட்டிருக்கின்றனர்

    விடுதலை புலிகள் ஈழபோராட்டம் மட்டும் செய்யவில்லை, தங்கம் முதல் போதை கடத்தல் வரை செய்தனர். அது தீவிரவாத இயக்கங்களின் இயல்பு, கடத்தலில் கொட்டும் பணம் மற்றும் ஆயுதம் என இது தவிர்க்க முடியாதது

    ராஜிவினை கொல்ல வந்த சிவராசனே கடத்தல் தங்கத்துடன் இந்தியா வந்தான்

    புலிகள் வீழ்ந்தாலும் இந்த கடத்தலும் அந்த வலைபின்னலும் இன்னும் நீடிக்கின்றது என்பது அதிர்ச்சி, இந்த கடத்தல் புலிகள் தமிழகத்திலும் சில அரசியல் தலைவர்களை சந்தித்திருக்கின்றார்கள்

    ராஜிவ் கொலை விவகாரத்தில் புலிகள் சந்தித்த தமிழக அரசியல்வாதிகளை காங்கிரஸ் தப்பவிட்டது போல் பாஜக அரசு செய்யாது இம்முறை சர்ச்சைகுரியவர்கள் சரியாக கைதுசெய்யபடுவர் என தேசம் நம்புகின்றது

  7. திருவள்ளுவன் இந்து அல்ல, திருகுறள் ஒரு இந்து நூல் அல்ல என சில திராவிட பதர்களும் திராவிட வேடமிட்ட கிறிஸ்தவ விஷமிகளும் அடிக்கடி குதிப்பது தமிழக வாடிக்கை

    இதை தொடங்கி வைத்த பெருமகன் கருணாநிதி, அவருக்கு தன் தொண்டர்கள் எதையுமே படிக்கமாட்டார்கள் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது எனும் நம்பிக்கை எக்காலமும் உண்டு, தொண்டர்களும் அதை இக்காலம் வரை அரும்பாடு பட்டு காப்பாற்றி வருகின்றனர் அவரின் மகன் உள்பட‌

    திருகுறள் ஒரு இந்துநூல் என சொல்லி வள்ளுவனுக்கு காவி உடுத்தினால் அவர்கள் அழுது உருண்டு புலம்புவார்கள், அவர்கள் தமிழர்கள்தான் ஆனால் தமிழ் தெரியாத தமிழர்கள்

    தமிழ் தெரிந்தால் வள்ளுவனை படித்திருப்பார்கள், அவன் ஒரு இந்து என்பது தெரிந்திருக்கும்

    ஆம், லட்சுமி வழிபாடு இந்துக்களுக்கே உரியது. வேறு எந்த மதமும் அதை சொன்னதில்லை சொன்னதாக அந்த மத போதகர்களே காட்ட முடியாது

    அதுவும் பெண் அடிமைதனம் கொண்ட சமணம் அதை நினைத்தே பார்க்கமுடியாது, பெண்ணை தெய்வமாக அவர்களால் கற்பனை கூட செய்யமுடியாது

    ஜெஹோவா எனும் யூத கடவுளை மூல தெய்வமாகவும் அவருடைய ஒரே ஒரு “டியர் சன்” என்பவரை இயேசுவாகவும் கருதும் கிறிஸ்தவர்களால் இதை ஏற்றுகொள்ளவும் முடியாது

    ஆக குறள் சமண நூல், கிறிஸ்த நூல் என்பதெல்லாம் வள்ளுவன் சொல்லும் லட்சுமி வழிபாட்டிலே அடிபட்டு போகின்றன‌

    திருமகள் என இந்துக்கள் சொல்லும் லட்சுமியினை வள்ளுவன் பல இடங்களில் காட்டுகின்றான், அந்த குறள்கள் சிலவற்றை காணலாம்

    செய்யாள் என்றால் லட்சுமி, அதை புரிந்து கொண்டு இந்த குறளை படியுங்கள்

    “அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்”

    அதாவது மலர்ந்த முகத்துடன் விருந்தினர்களை வரவேற்று நல்ல முறையில் உபசரிப்பவன் எவனோ அவனது இல்லத்தில் லட்சுமிதேவி (செய்யாள்) அவன் உள்ளம் மகிழுமாறு வாசம் செய்வாள்.

    “அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்”

    அதாவது பொறாமை உள்ளவன் வீட்டில் திருமகள் (செய்யவள்) வந்து தங்கமாட்டாள். தன் அக்கா மூதேவிக்கு அவள் கைகாட்டி விடுவாள். எனவே மூதேவிதான் அவன் வீட்டில் வாசம் செய்வாள்.

    “மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
    தாள் உளாள் தாமரையி னாள்”

    அதாவது சோம்பல் உள்ளவனிடம் மூதேவி குடியிருப்பாள். சோம்பல் இல்லாது உழைப்பவனின் காலடியில் வாசம் செய்வாள் தாமரைச் செல்வியான திருமகள்

    “இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு”

    அதாவது இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரிடம் கொள்ளும் உறவு, கள்ளுண்ணல், சூதாடுதல் ஆகிய இந்த மூன்று வகையான தீய பழக்கங்களைக் கொண்டிருப்பவரை விட்டு லட்சுமி தேவி விலகிவிடுவாள்

    ஆம், திருகுறள் முழுக்க இந்து தெய்வங்கள் உண்டு. அதில் இந்திரன் உண்டு, திருமால் உண்டு, எமன் உண்டு, சிவன் உண்டு, பார்வதி உண்டு, லட்சுமியும் உண்டு

    இப்படியெல்லாம் வலுத்த ஆதாரங்கள் இருந்தும் திருவள்ளுவன் இந்து அல்ல குறளும் இந்துமத நூல் அல்ல என்பவன் நிச்சயம் தமிழ்படித்தவனாக இருக்கமுடியாது, அவனை சோதித்து தமிழ்பள்ளிக்கோ அல்லது பைத்தியகார மருத்துவமனைக்கோ அனுப்புதல் நலம்

    ஆக என்ன அடுத்து செய்யவேண்டும்? அதேதான்

    கன்னியாகுமரியில் காவிதுறவி விவேகானந்தரின் மண்டபம் அடுத்திருக்கும் இந்துஞானி வள்ளுவன் சிலையினை காவி நிறத்தில் உடனே மாற்றி நெற்றியில் திருநீறும் குங்குமமும் பூச‌ வேண்டும்

  8. சரஸ்வதி எனும் கல்விக்கும் அறிவுக்குமான தெய்வத்தின் அருள் எளிதல்ல, அதை பெற்றவர்கள் தீரா புகழுடன் யுகம் யுகம் தாண்டி நிற்பார்கள் என்பதே முக்கால உண்மை

    எத்தனை கவிஞர்கள் இந்தியாவில் வந்தாலும் காளிதாசனுக்கும் கம்பனுக்கும் தனி இடம் உண்டு. இருவருமே சரஸ்வதியின் தனி அருள் பெற்றவர்கள்.

    ஆம், வரலாறு தோறும் இது காண கிடக்கின்றது. கம்பன் வாழ்ந்த காலத்தில் இருந்த பணக்காரர்களை உலகுக்கு தெரியாது, மன்னனை தெரியாது, ஆனால் கம்பனை அறியாதோர் இல்லை

    காளிதாசனை எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவனை ஆதரித்த போஜ மன்னனை காளிதாசன் இல்லாவிட்டால் யாருக்கு வரலாற்றில் தெரியும்

    இது கம்பன், காளிதாசனோடு முடிந்துவிடும் விஷயமல்ல. தெனாலி ராமன், பாரதியார் முதல் விவேகானந்தர் போன்ற மகான்கள் வரை, சீனிவாச ராமானுஜம் போன்ற விஞ்ஞானிகள் வரை இது உண்மை

    இம்மாதிரி சரஸ்வதி அருள் பெற்றவர்களுக்கு ஒரு பெரும் சிக்கல் உண்டு அது அவர்களுக்கு ஆயுள் குறைவு அல்லது வாழும் காலம் வரை நிம்மதி இராது என்பது

    ஆம், அது இவர்களுக்குள்ள பொது நியதி. அவர்களின் மிகபெருத்த ஞானத்தையும் மரியாதையினையும் பாமர மனம் புரிவதில்லை

    அதனால் அவர்களை அவமானபடுத்துவது முதல் கொல்வது வரை மிகபெரிய கொடுமைகளெல்லாம் அவர்களுக்கு இழைக்கபடும்

    ஆனால் அறிவுள்ளவர்களை அவமானபடுத்தும் எந்த இனமும் அதன் பின் செழிக்காது, மிகபெரும் அவமானமும் இழிவும் அவர்களை சேரும், சரஸ்வதி கொடுக்கும் சாபம் அது, அறிவினை புறக்கணிக்கும் இனம் அடையும் மிகபெரும் அவமானம் அது

    காளிதாசன் கொல்லபட்டான் அவனுக்கு பின் அந்த மத்தியபிரதேசம் எனும் அந்த அவந்தி நாடும் உஜ்ஜையினி நாடும் நாசமாயிற்று

    கம்பனை விரட்டியபின் சோழநாடு அந்த வீழ்ச்சியினை சந்தித்தது, அதன் பின் சோழவம்சம் கடைசிவரை தலையெடுக்கவில்லை

    விவேகாந்தரை ஏற்காத வங்கம் நாசமாயிற்று, சீனிவாச ராமானுஜனை விரட்டிய கும்பகோண அக்கிரஹாரம் தன் பெருமையினை இழந்தது

    பாரதியினை விரட்டிய இடங்களுக்கும் அதுவேதான் நடந்தது.

    தெனாலி ராமனுக்கு பின் விஜயநகர சாம்ராஜ்யம் பெரிதும் தளைக்கவில்லை, பாரதிக்கும், சீனிவாச ராமானுஜனுக்கும் நிகழ்ந்தா தீரா அவமானத்துக்கு பின் அவர்களின் சொந்த இனம் தமிழகத்தில் பட்டபாடு கொஞ்சமல்ல‌

    ஆம், அறிவாளிகளையும் ஞானிகளையும் விரட்டும் நாடு உருப்படாது, அவர்களுக்குரிய பாவ பரிகாரம் செய்யும் வரை அவர்கள் பூமி வாழாது. சரஸ்வதி அருளை பெற்றோரை புறக்கணிப்பது பாவத்திலெல்லாம் பெரும்பாவம்

    எத்தனையோ பெரும் உதாரணங்கள் உண்டெனினும் கம்பனின் வாழ்வினை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்

    கம்பனை விரட்டிய சோழநாடும், அவனை காக்க தவறிய பாண்டி நாடும் வீழ்ந்தன, ஆனால் கம்பனை ஆதரித்த சேர நாடு தன்னை இக்காலம் வரை தற்காத்து கொண்டது

    கம்பன் கவிசக்கரவர்த்தி எனும் பட்டத்துக்கு உரிய ஒரே கவிராஜன், 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த அவன் ஒட்டகூத்தர், சேக்கிழார் போன்றோருக்கு சரிசமமாக அல்ல அவர்களை விட மேலாக இரண்டாம் குலோதுங்க சோழன் அவையில் வீற்றிருந்தார்

    கம்பன் திருவிழுந்தூர் எனும் திருவெழுந்தூர் எனும் சோழநாட்டு ஊரின் பிறப்பு, இன்றும் அந்த ஊர் இன்றும் உண்டு. சரஸ்வதியினை அவன் தொழுதவன். சரஸ்வதிக்கு ஒரே ஆலயம் கூத்தனூர் எனும் சோழநாட்டில்தான் தமிழகத்திலே உண்டு

    அந்த ஒரே சரஸ்வதி கோவிலின் முழு வரமும் கம்பனுக்கு கிடைத்திருந்தது, அவனும் தன் வீட்டிலே ஒரு சரஸ்வதி சிலையினை வைத்து பூஜித்தான்

    அப்பொழுது சமண ஆதிக்கத்தையும் தவறான போதனைகளையும் ஒழிக்க இரண்டாம் குலோத்துங்கன் முடிவு செய்திருந்தான், ராஜராஜன் ஏற்றிவைத்த பெரும் சைவ எழுச்சியின் தொடர்ச்சியாக அவன் மிகபெரும் சைவனாக ஆண்டுகொண்டிருந்தான்

    நாயமாரின் வரலாற்றை சேக்கிழாரை எழுத சொன்ன அவன், ராமாயணத்தை கம்பனிடம் எழுத சொன்னான்

    கம்பன் அதற்கு முன்பே கவிஞன், பெயர் பெற்ற கவிஞன் சடையப்பன் எனும் பணக்காரனால் ஆதரிக்கபட்ட கவிஞன், அரசவைக்கு வந்தததெல்லாம் அதன் பின்பே

    மன்னனின் கோரிக்கைபடி அழியா காவியமும் தமிழின் ஒப்பற்ற இலக்கியமுமான “கம்ப ராமாயணம்” எனும் தேன்சுவை காவியத்தை இயற்றி அழியா புகழ்பெற்றான் கம்பன்

    கம்பனை மதித்து வணங்கிய இரண்டாம் குலோத்துங்கன் வயதால் கம்பனுக்கு மூத்தவன், அவன் காலமானதும் அவன் காலத்துக்கு பின் மூன்றாம் குலோதுங்கன் பட்டம் ஏறினான்

    அவனுக்கு கம்பன் மேல் அபிமானமில்லை, காசுக்கு பாடும் புலவர் கூட்டம் எனும் ஒரு ஏளனம் அவனிடம் இருந்தது, அவனின் மகள்தான் அமராவதி

    கம்பனின் மகன் அம்பிகாபதி, கலைமகளின் பெயரையே தன் மகனுக்கும் இட்டு வளர்த்து வந்தான் கம்பன், அம்பிகாவதியும் பெரும் கவிஞனாக திகழ்ந்தான்

    அவனுக்கும் அரசனின் மகள் அம்பிகாவதிக்கும் காதல் உண்டாயிற்று, மன்னனுக்கு அது பொறுக்கவில்லை.
    காசுக்கு கவிபாடும் புலவன் சர்வ சக்தியும் படைத்த மன்னனுக்கு இணையா என ஆணவத்தில் கொக்கரித்தான்
    செல்வமும் அறிவும் ஒரே இடத்தில் பொருந்தி இருக்கமுடியாதல்லவா? காதல் விவகாரம் கொலுமண்டபத்துக்கே வந்தது

    சபையினை மீற அவனால் முடியவில்லை, இறுதியில் அம்பிகாபதி தொடர்ந்து 100 பாடல்கள் பாடினால் அவனுக்கு இளவரசியினை மணமுடித்து கொடுப்பேன், அவன் தோற்றால் அவன் தலை வெட்டுபடும் என்கின்றான் மன்னன்.

    கம்பனின் மகன் கவிக்கு அஞ்சுவதா என தைரியமாக சவாலை ஏற்றான் அம்பிகாபதி

    100 பாடல்களும் இறைவனை நினைந்தே இருக்க வேண்டும், சிற்றின்பமோ உலக ஆசைகளோ இருக்க கூடாது என்பது அங்கு நிபந்தனையாயிற்று.

    அதற்கொரு காரணமும் இருந்தது, ஆம் கவிஞர்களுக்கு உள்ள பெரும் சிக்கல் அல்லது சோதனை மாதரார் உறவு. அந்த சோதனைக்கு எந்த கவிஞனும் எளிதில் தப்ப முடியாது

    கம்பன் மிகபெரிய கவிஞன் சந்தேகமில்லை ஆனால் அவனுக்கு மாதரார் தொடர்பும் கொண்டாட்டமும் ஏராளம் உண்டு

    அது கவிஞர்களின் மிகபெரும் பலவீனம், எளிதில் உணர்ச்சிகளில் சிக்கும் மனம் அவர்களுடையது, அதுவன்றி அவர்களால் உணர்ச்சியில் கலந்து பாடமுடியாது

    அவர்களின் பலம் அது, பலவீனமும் அது. இந்த பலவீனத்தில் சிருங்கார உணர்ச்சியிலும் அவர்கள் எளிதில் வீழ்வார்கள், தங்கள் ஆறுதலும் மகிழ்வும் அடைக்கலமுகாக பெண்கள் கையில் அடங்கி தன்னை மறப்பதென்பது அவர்கள் இயல்பு

    மிகபெரும் கவிஞர்களெக்கெல்லாம் இச்சோதனை உண்டு, நம் தலைமுறையில் நாம் கண்டது கண்ணதாசன், அவரே ஒப்புகொண்ட உண்மையும் அது

    இன்னொன்று பெண்கள் அளவு கலைகளை கவிகளை ஆண்களால் ரசிக்க முடியாது, பெண்கள் ரசிப்பு தன்மை மிக்கவர்கள் எனும் வகையிலும், அறிவுடை பெண்டீர் அறிவில் சிறந்த கலைஞனை வலியசென்று அடிபணிவார்கள் என்பதும் இன்னொரு கோணம்

    அதுவும் ஆடலில் சிறந்த அழகு மங்கையர் அழகிய பாடல்கள் வேண்டி பூக்களை சுற்றும் வண்டாக அவ்ர்களை மொய்த்ததும் இன்னொரு காரணம்

    எப்பெண்ணுக்கும் தன் அழகை இன்னொருவர் வர்னித்து புகழ்வது பிடிக்கும், கவிஞர்கள் அதில் தன்னிகரற்றவர்கள் என்பதால் கவிஞர்களால் எளிதில் அவர்கள் மனதை கவர முடிந்தது.

    காளிதாசன் வாழ்வில் இருந்து பல இடங்களில் இது உண்டு

    கம்பன் மகனும் அப்படி இருப்பான் , கவிஞர்கள், கலைஞர்களை பெண்கள் ரசிக்கலாமே தவிர அவர்களோடு வாழ்வது சிரமம் எனும் கூற்றுபடிதான் மன்னன் மறுத்தான், அப்படி அல்ல அவனால் இறைசிந்தனையில் நிலைக்க முடியும் என்பதற்கான சோதனைதான் 100 பாடல்

    குறிப்பிட்ட நாளில் சபை கூடியது, 100 பூக்களுடன் திரைமறைவில் இருந்தாள் அமராவதி. கம்பனும் இதர புலவர்களும் கூடியிருக்கும் சபையில் நடுவில் வந்து பாடல்களை பாட ஆரம்பித்தான்

    கடவுள் வாழ்த்தினை கலைமகளுக்கு சமர்பித்தான், அவள் நாவில் இருந்து பாட வேண்டினான்
    முதல் பூவினை எடுத்து தனியே வைத்தாள் அமராவதி

    பாடல்கள் குற்றால அருவி போல் கொட்டின சில நாழிகைகளிலே 99 பாடல்களையும் இறைவனை வேண்டி பாடிவிட்டான், அமராவதி தட்டில் இருந்த 99 பூக்களையும் காலி செய்துவிட்டு மகிழ்ச்சியில் திரைவிலக்கி அம்பிகாபதியினை கண்டாள்

    அவளை கண்டதும் 100 பாடல்கள் முடிந்ததாக கருதி சிற்றின்ப பாடலை பாடிவிட்டான் அம்பிகாபதி

    “சற்றே பருத்த தனமே குலங்கத் தரளவடம்
    துற்றே அசையக் குழல்ஊச லாடத்துவர் கொள்செவ்வாய்
    நல்தேன் ஒழுக நடனசிங்கார நடையழகின்
    பொன்தோ் இருக்கத் தலையலங் காரம் பறப்பட்டதே..” எனும் பாடல் அது

    சபையின் விதிபடி கடவுள் வாழ்த்து எண்ணிக்கையில் சேராது, ஆனால் அமராவதி அதையும் சேர்த்து எண்ணிவிட்டு ஓடிவந்ததில் ஒரு பாடல் குறைந்தது

    பாருங்கள் 100ம் பாடலை சிற்றின்ப பாடலாக பாடிவிட்டான் என சொல்லியபடி அம்பிகாபதியின் தலையினை வெட்ட சொன்னான் மன்னன், அவன் நினைத்தபடி எல்லாம் முடிந்தது

    அமராவதி கதறி அழுதும் ஆவது ஒன்றுமில்லை, விதி அவள் வழியாகத்தானே ஆடி அம்பிகாபதியினை முடித்தது

    அம்பிகாபதி இருந்திருந்தால் கம்பனை மிஞ்சும் காவியங்களை எழுதியிருப்பான் என அச்சபட்ட தெய்வம் கம்பனுக்கு போட்டியின்றி கதையினை முடித்தது

    மகனை இழந்த கம்பன் அதன் பின் சோழநாட்டில் இருக்க விரும்பவில்லை, கூத்தனூர் சரஸ்வதியிடம் கதறி அழுத அவன் தான் வணங்கிய சரஸ்வதி சிலையுடன் பாண்டிநாடு வந்தான்

    அங்கு “சடகோப அந்தாதி” பாடினான், பாண்டிய மன்னன் அவனை மதுரையில் இருந்து தொலைதூரத்தில் இருந்த தன் கோட்டை ஒன்றில் தங்க சொன்னான்

    அது வள்ளியூர் கோட்டை

    ஆம் இன்று நெல்லைமாவட்டம் வள்ளியூரில் இருக்கும் அந்த ஊரில் பாண்டியனுக்கு ஒரு கோட்டை இருந்தது, குலசேகரன் பட்டினம் பக்கம் முத்துகுளிப்பு முதல் சேர எல்லை தொடங்கும் முப்பந்தல் வரை கண்காணிக்க அவனுக்கு ஒரு அரண்மனையும் படைகளும் அங்கு இருந்தன‌

    அருணகிரி நாதர் பாடிய குகை முருகன் கோவில் வள்ளியூரில்தான் உண்டு.

    இன்று வள்ளியூர் நகருக்கு கீழ்பக்கம் ரயில் செல்லும் அந்த பகுதியில்தான் அக்கோட்டை இருந்தது, இன்றும் அது மேடான பகுதியே, கோட்டையினை அடுத்த குடியிருப்பு இன்றும் கோட்டையடி என்றே அழைக்கபடும்
    அந்த அரண்மனையில் கம்பன் தங்கினான், அப்பொழுது கம்பன் தன் சரஸ்வதி சிலையினை அங்கு வைத்து வழிபட்டான். அக்கோட்டையில் உள்ளவர்களுக்கு அதுபோல ஒரு சிலை செய்ய ஆசை வந்தது

    அவர்களும் செய்து ஒரு கோவில் எழுப்பினார்கள், அது முதலில் சரஸ்வதி ஆலயமாகத்தான் இருந்தது

    பின்னாளில் அதாவது கம்பன் அவ்விடம் விட்டு அகன்றபின் முப்பெரும் தேவியரின் நினைவாக மூன்று வரமும் அருளும் அம்மன் என அழைக்கபட்டு, நவராத்திரி கொண்டாட்டத்தின் ஏதுவாக “மூன்று முகம் கொண்ட அம்மன்” என மாறிற்று

    பின்னாளில் மூன்று யுகம் கண்ட அம்மன் என மருவி, இன்று “மூன்று யுகம் கண்ட அம்மன்” என மாறி நிற்கின்றது

    பாண்டியர் வீழ்ந்து, நாயக்கரும் வந்து, பின் இஸ்லாமியரும் கிறிஸ்தவனும் வந்ததில் அக்கோவிலின் அடையாளமே சிதைந்தது, கோவிலுக்கு உண்டான அரசன் குளம் இன்று பன்றி மேயும் குளமாகவும், அடுத்த இடம் கிறிஸ்தவ கல்லறை தோட்டமுமாக மாறிற்று

    கோவிலுக்கு முன் ரயில் தண்டவாளம் வந்ததில் அது ஒடுக்கவும் பட்டது

    ஆயினும் கம்பனின் நினைவினை சுமந்தபடி தனித்து நிற்கின்றது அந்த ஆலயம், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் செல்வோர் வள்ளியூரை நெருங்கும் பொழுது அதை காணலாம்

    சோழ மன்னனுக்கு அஞ்சி மதுரையில் தன்னை அமர்த்தாமல் தூரத்தில் பாண்டியன் அமர்த்தி அவமானாத்தியதை நினைத்து வெம்பினான் கம்பன்

    வள்ளியூரில் இருந்த கம்பனை சேரநாட்டு மன்னன் ஆளனுப்பி வரவேற்றான், அங்கு தன் சரஸ்வதி சிலையோடு கிளம்பினான் கம்பன்

    முப்பந்தல் அம்மனையும் அவ்வையாரையும் வணங்கிவிட்டு சேரநாடு புகுந்தான்.

    சேரநாட்டு அரசன் அவனை அங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டினான், முதிர்ந்துவிட்ட கம்பர் அங்கேயே தங்கினான் அங்கு அவர் பாடியதுதான் “சரஸ்வதி அந்தாதி”

    திருவனந்தபுரம் அருகில்தான் இறுதிகாலத்தில் வசித்த கம்பன் அங்கேயே மரித்தார், அவருக்கு சேரநாட்டில்தான் காரியங்கள் நடந்தன‌

    அவரின் சரஸ்வதி சிலை சேர மன்னர்களின் மிக பெரும் அடையாளங்களில் ஒன்றாயிற்று, திருவனந்த புரத்தில் இருந்து பத்மநாபபுரம் அரண்மனைக்கு அது மாற்றபட்டது

    இன்றும் அச்சிலை அங்கு உண்டு, நவராத்திரி பண்டிகை தோறும் அது யானைமேல் ஊர்வலமாக கொண்டு செல்லபடும்

    அதன் பெயர் “தேவாரகட்டு சரஸ்வதி”

    ஆம், தேவனுக்குரிய பாமாலைகளை கட்டுகட்டாக வழங்கும் சரஸ்வதி என பொருள்

    இந்தவருடம் ஊரடங்கு காரணமாக சில கட்டுபாடுகள் இருக்கலாம் என்றாலும் யானைமேல் கம்பன் வணங்கிய சிலை பவனிவரும்

    ஆம், கம்பனை அரவணைத்த சேரதேசம் பெரும் வீழ்ச்சியில் சிக்கவில்லை இன்றுவரை அவர்கள் கல்வியில் நம்பர் 1 மாநிலம் என்றே அறியபடுகின்றார்கள்

    கம்பனை விரட்டிய சோழவம்சம் அடியோடு சரிந்தது, அவனை தக்க வைக்க தவறிய பாண்டிய மன்னனும் நாயக்கரிடம் வீழ்ந்து அழிந்தான்

    மறுபடியும் முதல்வரியினை படியுங்கள், ஆம் அறிவு ஒன்றே எல்லாவற்றுக்கும் அடிப்படை, அறிவு இருந்தால்தான் செல்வமும் அதை காக்கும் பாதுகாப்பான வீரமும் வரும்

    சாணக்கியன் எனும் அறிவாளி அப்படித்தான் மகா சாம்ராஜ்யத்தையே உருவாக்கினான்

    அறிவே எல்லாவற்றுக்கும் அடிப்படை, அது இருந்தால் செல்வமும் செல்வத்தால் உருவாகும் பாதுகாப்பும் எளிதாக வரும், வந்ததும் நிலைக்கும்

    அறிவில்லா செல்வமும் நிலைக்காது, அறிவுடையனை ஓட விரட்டும் சமூகமும் நாடும் சிறக்காது

    “அறிவே அற்றம் காக்கும் கருவி” என வள்ளுவன் சொன்னது இதனலதான்

    அந்த அறிவினை கொடுப்பவள் சரஸ்வதி, அவளை வணங்குங்கள் எல்லா நலமும் அருளும் பெறுவீர்கள்
    அதைவிட முக்கியம் கால காலமும் சரஸ்வதி அருள் பெற்றோர் நிற்பார்கள், எக்காலமும் அவர்களுக்கு அழிவே இல்லை

    வாழும் காலத்தில் தீரா புகழனுடனும் அதே நேரம் அவர்கள் சில சோகங்களுடனும் மானிட வாழ்வினை முடித்திருக்கலாம், சரஸ்வதி என்பவள் அறிவோடு கொடுக்கும் வலி அது

    ஆனால் அவர்கள் வாழ்வுக்கு பின் அந்த புகழே எஞ்சியிருக்கும், ஆயிரமாயிரம் சந்ததிக்கு அவர்களின் அறிவும் ஞானமும் வழிகாட்டி வரும், எக்காலமும் அவர்கள் வாழ்வார்கள்

    அறிவு ஒன்றே உலகாளும், அறிவு ஒன்றே நிலைக்கும், அதன் ஆதாரம் சரஸ்வதி

    ஏன் இந்துக்கள் மற்ற தெய்வங்களுக்கு வைத்த அளவு கோவில் வைக்காமல் சரஸ்வதிக்கு மிக மிக சில இடங்களில் மட்டும் வைத்தார்கள்?

    ஆம் அவளை தேடி தேடித்தான் வணங்க வேண்டும், மிக மிக தீவிரமான தேடலில் மட்டுமே அவள் வந்து அருள்புரிவாள் என்பதன் அடையாளம் அது, அபூர்வமான பொருள் அறிவு என்பதற்கான ஏற்பாடு அது

    ஏராளமான மக்களில் மிக சிலரே அறிவு கொண்டிருப்பர் அவர்களை போற்றி பாதுகாக்க வேண்டும் எனும் தத்துவம் அது

    அவளை தேடுங்கள் ஓடுங்கள், கால காலத்துக்கும் நிற்கும் வரத்தை அவள் அருள்வாள்.
    இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது நிச்சயம் அருளுவாள், தனிபெரும் அறிவாளிகள் பிறவி ஞானிகள் உருவாகி வருவது அப்படித்தான்

    சரஸ்வதிக்கான நாட்களில் கம்பனை மறக்க முடியாது, அவளின் கருணைக்கோர் மகனாக அவனேதான் இருந்தான், “சரஸ்வதி அந்தாதி” எனும் அற்புதமான நூலை தன்னை உருவாக்கி அன்னைக்கு காணிக்கை கல்வெட்டு சாட்சியாக விட்டு சென்றவனும் அவனேதான்

    இந்த பூஜா காலங்களில் சரஸ்வதி அந்தாதி பாடுவதும் மிகபெரிய பலன் தரும், காலத்தை வெல்லும் அருளை தரும்

    “ஆய கலைக ளறுபத்து நான்கினையும்
    ஏய வுணர்விக்கு மென்னம்மை – தூய
    வுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே
    யிருப்பளிங்கு வாரா திடர்.

    படிக நிறமும் பவளச்செவ் வாயும்
    கடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் – துடியிடையும்
    அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
    கல்லுஞ்சொல் லாதோ கவி…”

  9. ஈரோட்டு ராம்சாமிக்கு அன்றே கோடிகணக்கில் சொத்து இருந்தது, அவரிடம் இருந்த புரட்சி குழுக்களான அண்ணாதுரை, கருணாநிதி, வீரமணி போன்றோரின் சொத்து கணக்கு கிழிந்த வேட்டியாக இருந்தது

    கடைசிவரை ராம்சாமியின் சொத்து அப்படியே இருந்தது, கூட இருந்தவர்கள் அவருக்கு கூலிகளாகவே இருந்தார்கள்

    ஏன் ராம்சாமி தன் சொத்துக்களை எல்லோருக்கும் பகிர்ந்தளித்து “சமூக நீதி” காக்கவில்லை என நாம் கேட்க கூடாது

    சமூக நீதி என்பது கல்வியிலும், கோவில் அர்ச்சகர் வேலையிலும், அரசு பணியிலும் மட்டும்தான் உண்டாம், சொத்து, பணம், நிலம், தங்க கையிருப்பு, வீடு , தொழிற்சாலை இவற்றில் எல்லாம் சமூக நீதியே கிடையாதாம்

    கல்வி எல்லோருக்கும் வேண்டும், வேலை வாய்ப்பில் இட இதுக்கீடு வேண்டும் ஆனால் சொத்துக்களை மட்டும் ஒருவரே வைத்து கொள்ள வேண்டும் அதில் இட ஒதுக்கீடு எல்லாம் பேசவே கூடாது

    அதாவது பிராமணனுடன் தாழ்த்தபட்டோர் சண்டையிட சமூக நீதி வேண்டும் அங்கே தாழ்த்தபட்டோரெல்லாம் மனிதர்கள் சமூகம்.

    ஆனால் பணக்கார நிலவுடமை சமூகத்திடம் நிலமில்லா கூலிகளோ தாழ்த்தாட்டோரோ சண்டையிடவே கூடாது காரணம் அவர்கள் பணக்கார உலகில் ஏழைகள் என்பவர்கள் மானிட சமூகம் அல்ல, அவர்கள் உழைக்கும் மிருகங்கள்

    அவனுகளும் அவனுக உருவாக்குன சமூக நீதியும்…

  10. கலை என்பது வெறும் ரசிக்க கூடிய படைப்பினை மட்டும் கொடுக்காது, வெறும் தற்காலிக புகழை கொடுக்காது, சில இடங்களில் செல்வத்தை மட்டும் கொடுக்காது. கலையினை தெய்வ நினைவோடு ஒருவன் தொடரும் பொழுது அது அவனை முக்திக்கு சேர்க்கும் ஞான நிலைக்கு இழுத்து செல்கின்றது

    “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்”

    என தெளிவாக சொன்னான் வள்ளுவன், ஆம் கலையோ கல்வியோ அதன் உச்சபட்ட நிலை கடவுளை உணர்வது உணர்ந்ததை உணர்த்துவது.

    கலை படைப்பு என்பது சாமான்யம் அல்ல எல்லோருக்கும் வராது, இதனால்தான் கலைஞர்களை சரஸ்வதியின் அம்சம் பெற்றோர் என்றது இந்துமதம்

    அந்த கலைஞானமும் அது கொடுக்கும் புகழும் ஒருவனை மிகபெரிய இடத்துக்கு இட்டு செல்லும் அக்காலத்தில் புலவனும் ஓவியனும் சிற்பியும் அரச ஆணைகளால் கொண்டாடபட்டார்கள்

    இக்காலத்தில் விஞ்ஞான விஷயங்கள் அதை செய்கின்றன, கலைஞர்களால் மக்களின் மனங்களை நெருங்க முடிகின்றது, அப்படியே ஒரு ஜாலத்தில் கட்டி போட முடிகின்றது, அந்த மக்கள்திரளை தனக்கான படைகளாக உருவாக்க கூட அவர்களால் முடிகின்றது

    அதுதான் சரஸ்வதி என்ற கலைமகள் கொடுக்கும் பெரும் வரம்

    ஆனால் உலகமே கவனிக்கும் அந்த பெரும் இடத்திற்கு கலைமகளின் ஆசியால் வந்தவன் தன்னை கவனிக்கும் கோடான கோடி மக்களுக்கு நல்வழி காட்டினால் தெய்வத்தை காட்டினால் அவன் காலம் காலமாக நிற்பான்

    கலைமனம் கொண்டவன் வடிக்கும் படைப்புக்களெல்லாம் தெய்வத்துக்கானவை என்றால் அவை நிலைக்கும், முக்காலமும் நிலைக்கும் ஆனால் தன்சுயநலத்துக்கும் காசுக்கும் குழப்பத்துக்கும் என்றால் நிலைக்காது

    தெய்வத்துக்கென படைப்புகளை தரும் ஆத்திகனின் படைப்பும் புகழும் கோவில் கோபுரம் போல் நிற்கும் மாறாக அந்த வரத்தை சுயநலத்துக்காக படைத்து கொள்பவன் காற்றில் பறக்கும் தூசு கோபுரத்தினை விட உயரமாக பறப்பது போல் சில நொடிகள் பறப்பான் பின் காலத்தால் அழிந்தே விடுவான்

    கலை என்பது ஒரு வரம், அதை கடவுளுக்கு கொடுத்தவன் முக்காலமும் நிற்பான், அதில் அழியா படைப்புக்களை தெய்வத்துக்கு கொடுத்தவன் எக்காலமும் நிற்பான்

    கம்பன், காளிதாசன், சேக்கிழார் போன்ற கவிஞர்கள் முதல் ரவிவர்மா போன்ற ஓவியர்கள் வரை எத்தனையோ அடையாளங்களை காட்ட முடியும், எவ்வளவோ சிற்பிகளையும் இன்னும் சாஸ்திர கல்வி மேதைகளையும் காட்ட முடியும்

    இவர்கள் காலத்தில் இவர்களை விட திறமையானவர்கள் அச்சபையில் இருந்தார்கள் ஆனால் அவர்கள் சுயநலத்துக்காய் ஏதேதோ செய்தார்கள் காலத்தால் அழிந்தார்கள், நிலைக்கவில்லை

    கலைமகளின் அருள் பெற்றோருக்கு பெரும் கூட்டம் வரும், மக்கள் படை திரளும் ஆனால் அவர்களுக்கு நல்வழி காட்டுதலே அந்த வரம் கொடுத்த தெய்வத்துக்க்கு செய்யும் கைமாறு.அதை செய்தால் வரமருளிய தெய்வம் மகிழும் அவனுக்கு முக்தியும் கிட்டும்

    அதுவன்றி தவறான வழிகாட்டினால் தெய்வம் மனம் வருந்தும், அப்படி செய்யும் எந்த கலைஞனின் மரணமும் நிம்மதியாய் இராது, அவன் வம்சமும் வாழா, ஆவன் அழியா புகழை அடையமாட்டான் விரைவில் அவன் அடையாளமற்று போவான், முக்தியும் கிட்டாமல் பிறவி சுழலில் சிக்கி உழலுவான்.

    கலைஞன் செய்யும் மிகபெரிய கடமை தெய்வத்தை தானும் உணர்ந்து அதை தன் கலையால் அழகுற‌ படைத்து மக்களுக்கும் காட்டுவதே

    கலை என்பது கலைஞனுக்கு ஒரு தவம் போன்றது, அதில் இன்னும் சிறப்பாக செய்ய செய்ய அவன் அதில் மூழ்குகின்றான், அவன் சிந்தனை முழுக்க அதிலே செலுத்தபடுகின்றது

    அப்படி அவன் முழு மனமும் அதிலே குவியும் பொழுது அது யோக தவமாகின்றது

    இதனாலேதான் ஆகசிறந்த கலைஞர்களான பாடகர்கள், இசை மேதைகள், இன்னும் பெரும் கலா வித்வான்களின் முகத்தில் தவஞானிக்குரிய ஒரு சாந்தமன தேஜஸை கவனிக்க முடியும்

    ஆம், கலையினை முழு மனதோடும் ஆன்மாவோடும் செய்பவர்களுக்கு இது சாத்தியம், தன் கர்மாவினை முழு ரசனையோடு அணுகுகின்றவர்களுக்கு இது சாத்தியம்

    கலை அறிவு கொண்ட மனம் எவ்வளவு வரமோ அவ்வளவுக்கு அது சாபமும் கூட‌

    பிரபஞ்சம் எதையும் சும்மா தருவதில்லை, தான் கொடுக்கும் வரத்தில் பலமும் பலவீனமும் கொண்டேதான் அது வரமருளும்

    ஒரு கலைஞன் தன் கலையால் கோடான கோடி மக்களை ஈர்க்கும்பொழுது அது கூர்ந்து பார்க்கும், அவன் அந்த புகழை தலைக்கு ஏற்றாமல் வெற்றி மற்றும் சறுக்காமல் கலங்காமல் இருக்கின்றானா என சோதிக்கும்

    இதெல்லாம் என்னால் என்னால் மட்டும்தான் என அவன் ஆடுகின்றானா?, கலையால் கிடைத்த பொன்னையும் புகழையும் கொண்டு தவறான ஆட்டமெல்லாம் ஆடி தீர்க்கின்றானா என கவனித்து கொண்டே இருக்கும்

    அவன் அதில் சறுக்கவில்லையென்றால் அது மகிழும் அவனுக்கு தீரா புகழை கொடுத்து அவன் கர்மாவினை முடித்து தன்னோடு அழைத்து கொள்ளும்

    காளிதாசன், அவ்வையார் முதல் சீனிவாச ராமானுஜம் என எத்தனையோ பெரும் தனி அருள் பெற்றவர்களை இதில் சொல்லமுடியும்

    அவர்கள் தங்கள் கலையில் ஆணவம் கொள்ளவில்லை, ஆடி தீர்க்கவில்லை தவறாக ஒரு அடி எடுத்து வைக்கவில்லை

    அதே நேரம் கலை கொடுக்கும் வரத்தை தெய்வம் அருளியது என புரியாமல் அந்த புகழ் போதையிலும் பொருள் குவியலிலும் “நான்” என ஆடி தீர்ப்பவர்களை தெய்வம் குறித்து கொள்கின்றது

    “நான்” “எனது” “என்னால்” என தன்னை மட்டும் நம்பும் கலைஞன் தோல்வியில் சறுக்கினால் இல்லை வேறு அவமானத்திலோ வெற்றியிலோ சிக்கினால் தவறான வழக்கங்களில் தன்னை அழித்துவிடுவான்

    கலைஞர்களின் மிகபெரிய சாபம் அந்த ரசனையும், இளகிய மனமும், நுண்ணிய மனவோட்டமும், உணர்ச்சி வேகமும்

    கலைஞனின் பலம் இதுதான் அதே நேரம் பலவீனமும் இதுதான்

    அந்த கலை அவனுக்கு ஆயிரம் வாய்ப்புகளை கொடுக்கும் அதில் வெற்றியில் அவன் ஆடவும் கூடாது, தோல்வியில் கலங்கவும் கூடாது

    அவனுக்கு கிடைக்கும் பெயரும் புகழும் எல்லா சுகங்களையும் அவன் காலடியில் கொட்டும், அதையெல்லாம் எவன் பக்குவமாய் கடந்து செல்வானோ அவனே தன் கலை மனம் எனும் சோதனையில் வென்றவன்

    எவனெல்லாம் அது தன்னால் கிடைத்தது என கருதி தெய்வத்தை மறந்து அடாதன செய்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி தவறான வழி செல்வானோ அவன் வீழ்வான்

    வரலாற்றில் கூட வேண்டாம், தமிழ் திரை உலகிலே கூட பாருங்கள் இதற்கான உதாரணம் ஏகபட்டது உண்டு

    தெய்வத்தை உணராத எந்த கலைஞனும் நிலைப்பதில்லை, வெகு சில காலம் நிலைத்தாலும் அவன் காலம் காலம் பேசபடுவதுமில்லை

    தமிழ் திரையுலகம் எனும் வெகு சிறிய வட்டத்திலும், தமிழ் இலக்கிய உலகம், பாடல் உலகம், இசை உலகம் என்ற சிறிய வட்டத்திலும் பாருங்கள் புரியும்

    தெய்வத்துக்காய் பாடிய கவிஞனும் பாடகனும் இசை அமைப்பாளரும் காலத்துக்கும் நிற்பார்கள் நாத்திகனுக்கு அது வாய்க்காது

    தெய்வத்துக்காய் எழுதியனின் இலக்கியம் எக்காலமும் பேசபடும் நாத்திகனுக்கு அது சில நாட்கள் கூட வாய்க்காது, அடுத்த தலைமுறை அதை தூக்கி எறியும்

    ஆத்திக கலைஞன் படைத்ததெல்லாம் நிலைக்கும், காலத்தால் அது வீழ்ந்தாலும் மீண்டெழும். ஆத்திகனுக்கு அப்படி ஏதும் வாய்க்காது, அவன் படைப்பும் அவனோடு அடையாளமற்று அழியும்

    இதைத்தான் நவராத்திரியில் கலைமகளுக்கான நாளில் சிந்திக்க சொன்னார்கள் இந்துக்கள்

    தனக்கு கிடைத்த கலை தெய்வத்தின் வரம் என கருதும் கலைஞனின் வாழ்வு நல்ல விதிமுறைக்கு உட்படுகின்றது

    அவனுக்கு கடவுள் பக்தி குடிகொள்ளும், அதிகாலை எழுந்து கடவுளை தன் கலையால் தொழுவான், தன் கலையால் தெய்வத்தை வணங்குவான்

    அதில் அவனும் மகிழ்வான் அவனால் அவனை கொண்டாடும் கோடான கோடி மக்களும் வணங்குவார்கள், அவன் அவர்களுக்கு நல்வழி காட்டுவான்

    தெய்வத்தை கலையால் படைக்கும் தான் கட்டுப்பாடோடு இருக்க அவன் தீர்மானிப்பான், எவ்வகை போதை வழக்கமோ தகாத செயல்களோ அவனை நெருங்காது

    எந்த அவமானமும் அவனை நெருங்காது, அவன் வாழ்வு சிறக்கும் கலையினை தெய்வத்துகுரியது என்றும் தான் அதன் அடிமை என கருதுபவன் வாழ்வு அமைதியான நதியாக அழகாக நிம்மதியாக கழியும், அவனும் வாழ்ந்து மற்றவர்களுக்கும் நல்வழி காட்டுவான்

    அவன் பாடகனோ, ஓவியனோ, குருவோ, கவிஞனோ,விஞ்ஞானியோ எவனாயிலும் தெய்வத்தில் தன் மனதை நிலைதிருக்கும் வரை அவமானம் அவனை சூழாது, நிம்மதி அவனை கைவிடாது, வெற்றியும் தோல்வியும் அவனை பாதிக்காது

    ஆனால் தெய்வத்தை மறந்த கலைஞன் “நான்” என ஆடுவான், எந்த வரையறைக்குள்ளும் அவன் சிக்கமாட்டான், எல்லா பாவமும் குற்றமும் எல்லா கெட்ட வழக்கமும் அவனில் குடிகொள்ளும்

    நிச்சயம் அவன் திறமையாளனாக இருப்பான், அதி அற்புத திறமையெல்லாம் அவனிடம் இருக்கும் ஆனால் அவன் நெஞ்சில் தெய்வம் இல்லாததால் சாத்தான் குடிகொண்டு அவனை வீழ்த்திவிடும்

    எத்தனையோ உதாரணங்கள் உண்டு

    கலை என்பதும் படைக்கும் திறமை என்பதும் சாதாரணம் அல்ல அது மகா கூரிய ரகசிய‌ வாள். அந்த வாளை தெய்வத்தை முன்னிறுத்தி சுழற்றினால் அவன் வாழ்வான் மாறாக அதை மறந்து தன்னை முன்னுறித்தி வீசினால் அவன் அழிவான்

    கலைஞனுக்கு மனம் என்பது மென்மையானது ரசனையானது அது எளிதில் மயங்கும், குழம்பும், மகிழும் கொண்டாடும், அழும், சிரிக்கும், உணர்ச்சியில் மூழ்கும் இன்னும் என்னென்னவோ செய்யும்

    அதில் இருந்து தப்ப தெய்வத்தை அவன் சரணடைய வேண்டும்

    எந்த கலைஞனும் தன் திறமையில் 100% பயன்படுத்தினான் என்பதை சொல்லவே முடியாது, ஒவ்வொரு கலைஞனும் தன் படைப்பில் ஒரு முழுமையின்மையினை உணர்வான்

    மற்றவர் கண்ணுக்கு அதில் முழுமை தெரிந்தாலும் கலைஞனின் மனம் அதில் ஏதோ ஒன்று குறைவதை சொல்லி கொண்டே இருக்கும் அதை தேடி கொண்டே இருப்பான்

    கலைமகளின் அருள் பெற்றவன் அதை புரிந்து மனிதன் குறைவுள்ளவன், ஒரு காலமும் பரிபூரணமான படைபுக்களை அவனால் படைக்க முடியாது, தெய்வம் பரிபூரணமானது அதன் படைப்பில் ஒரு மாற்றமும் தேவைபடாது என உணர்ந்து நிம்மதி கொள்கின்றான்

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் சரஸ்வதிக்கானவை என இந்து ஞானியர் சொன்னார்களே ஏன்?

    சரஸ் எனும் வார்த்தைக்கு வசீகர கலைகள் என பெயர், அந்த கலைகளின் சொந்தகாரி அதிபதி என பொருள்படும்

    பாரத்ததில் கலைகளை குறிக்கும் பெயர் சரஸ் என்பது மேற்குலகில் சாரா என்றாயிற்று, அது இங்கிருந்து சென்ற பெயரே

    கலையே வாழ்வின் அடிப்படை, அந்த கலையும் அதன் சிந்தனையுமே படைப்பினை கொடுக்கும். அந்த படைபுத்தான் விலையாகி செல்வத்தை கொடுக்கும், அந்த செல்வத்தை காக்க வீரம் வேண்டும்

    இதனால் இந்த நவநாட்களில் எல்லாவற்றுக்கும் அடிப்படையான சிந்தனையினை கல்வியினை வேண்டி வணங்க சொன்னார்கள்

    குறிப்பாக கலை மனமும், சிந்தனையும், கல்வி ஞானமும் கொண்டவர்கள் தங்கள் திறமை தெய்வத்தால் வந்தது என்பதை உணர்ந்து நல்வழியில் தானும் நடந்து உலகுக்கும் நல்வழி காட்ட சொன்னார்கள்

    எல்லா தெய்வங்களுக்கும் கோவில் கொடுத்த இந்தும்தம் பிரம்மனுக்கும் சரஸ்வதிக்கும் கோவில் கொடுக்கவில்லையே ஏன்?

    படைப்பு எனும் கலைவடிவினை கொடுக்கும் தெய்வத்தை தேடி அலையவேண்டாம், அது உன்னுள்ளேதான் இருக்கின்றது, உன் மனதிலேதான் இருக்கின்றது என குறிப்பால் சொன்னார்கள்.

    சரஸ்வதிக்கு கோவில் இல்லாமல் போனது இதனாலேதான், ஆம் கலைமகள் எல்லோர் நெஞ்சிலும் குடியிருகின்றாள், சிந்தனையின் ஓரத்தில் கோவிலாக காட்சியளிக்கின்றாள், புத்தியின் நுனியில் அவளுக்கு ராஜகோபுரம் உண்டு, அறிவு எனும் கர்ப்பகிரகத்தில் அவளே வீற்றிருக்கின்றாள்

    மனதால் அவளை தேடுங்கள், சிந்தியுங்கள் அவள் அருள் உங்களுக்கு கிடைக்கும் என சொன்னது இந்துமதம், அந்த இந்து தேசமும் அந்த போதனைபடியே கோவில் இல்லாமல் மனதால் அவளை வணங்கி கொண்டிருகின்றது

    எல்லா தெய்வங்களையும் கோவிலில் பார்க்கலாம் ஆனால் கலைமகள் மட்டும் மனதில்தான் தெரிவாள் அவள் அருள் மட்டுமே கலைஞனின் படைப்பாக வரும்

    அந்த தாத்பரியத்தில் நவராத்திரியின் தொடக்கத்தை அவளுக்காக கொண்டாடிகொண்டிருக்கின்றது இந்துமதம்,

    கலைஞர்களும் சிந்தனையாளர்களும் தெய்வத்தில் தோய்ந்து நிலைத்து தன்னையும் தன்னை நம்பும் கூட்டத்துக்கும் எக்காலமும் நல்வழி காட்டவேண்டும், கலை என்பது இறைவனை உணர்ந்து அடையும் வழி இறைவனை காட்டும் வழி என்பதை சரஸ்வதி வழிபாட்டில் கவனமாக போதித்து கொண்டிருக்கின்றது இந்த நவராத்திரி

  11. மோகன் சி லாசரஸ் என்பவர் எங்கோ இந்து மக்களை கிறிஸ்தவத்தில் கொண்டுவரவேண்டும் என பேசியிருப்பதாக சிலர் சொல்லிகொண்டிருகின்றார்கள்

    வரலாற்றை ஆழ கவனித்தால் அதாவது கிறிஸ்துவத்தின் தொடக்கத்தை கவனித்தால் ஒன்று புரியும்

    கிறிஸ்தவ அன்பர்கள் கோபிக்க கூடாது,
    அட கோபித்தாலும் பரவாயில்லை போங்கடா டேய்

    அதாவது இயேசு கிறிஸ்து தனிமதம் தொடங்க வந்தவர் அல்ல, அவருக்கு அந்த ஆசையும் அறவே இல்லை

    அவரை பழைய எலியாஸின் சீடராக இல்லை அவரின் மறுபிறப்பாக மக்கள் கருதினார்கள், சிலுவையில் அவர் கத்தும் போது கூட அவன் எலியாஸை அழைக்கின்றான் என சொன்ன யூதர்கள் உண்டு

    இயேசு சாகும்பொழுது கூட யூதருக்காக மன்றாடி செத்தார், யூதர்மேல் அவருக்கான பாசம் அப்படி. தன்னை சிலுவையில் கொல்லும்பொழுதும் அவர்களை அவர் பழிக்கவில்லை சபிக்கவில்லை

    அப்படிபட்ட இயேசு உயிர்த்து 40 நாட்கள் பூமியில் சுற்றியபொழுதும் அவர் யூதருக்கு சவால்விடவில்லை, அம்மதம் தளைக்க எண்ணிணார்

    தொடக்கத்தில் அவரின் சீடர்கள் யூதருக்கு இயேசுவினை பற்றி சொன்னார்கள் மாறாக மதம் மாற சொல்லவே இல்லை. இயேசு சொன்ன வழியில் யூதமதத்தை பின்பற்றுங்கள் என்பதே அவர்கள் போதனையாய் இருந்தது, கிறிஸ்தவம் யூதத்தின் ஒரு பிரிவாகத்தான் இருந்தது

    யூதரை தாண்டி யாருக்கும் முதலில் இயேசு போதிக்கபடவில்லை

    சிக்கல் பால் எனும் யூதர் சபைக்குள் வரும்பொழுது தொடங்கிற்று, யூதர்கள் கிறிஸ்துவத்தை தழுவுவதும் யூத சடங்குகளை கைவிடுவதும் யூதருக்கு வெறுப்பாயிற்று

    யூதமதத்தை கிறிஸ்தவம் அழித்துவிடும் என எண்ணிய அவர்கள் இயேசுவினை மீறி அதை அடுத்த மக்களுக்கு திருப்பிவிட்டார்கள், இதில் பால் முக்கியமானவர்

    கிறிஸ்தவம் அடுத்த மக்களை நோக்கி குறிவைத்து செல்ல நிம்மதி பெருமூச்சு விட்டது யூதமதம்

    கிறிஸ்தவம் அந்த வேகத்தில் ரோம், கிரேக்கம் உட்பட பல மதங்களை சுவடின்றி ஒழித்து போட்டது, ஆனால் யூத மதத்தை தொடவே இல்லை

    ஆம் எந்த கிறிஸ்தவம் தனக்கு எதிராக எழும்பியதோ, எந்த கிறிஸ்தவம் ரோம் மற்றும் கிரேக்க மதங்களை ஒழித்தது போல யூதமதத்துக்கும் சவால் விட்டதோ அந்த மதத்தை தன் பாதுகாவலாக்கியது யூதம்

    ஆம் இன்றும் சிந்தனையே இல்லா கிறிஸ்தவன் யூதனை பழிக்கமாட்டான், அறிவுள்ள சில ஐரோப்பியர் அடிக்கடி அவர்களை போட்டு சாத்தினர், ஹிட்லர் அதில் முக்கியமானவன்

    கிறிஸ்து வந்தபின் எதற்கு யூதம்? எதற்கு அந்த மதம் என ஐரோப்பா அன்று கேட்ட கேள்வி எல்லாம் இன்று மறைக்கபட்டுவிட்டன‌

    நிச்சயம் கிறிஸ்தவனுக்கு பைபிளில் பழைய ஏற்பாடு தேவையே இல்லை, ஆனால் வலிய புகுத்தபட்டது ஏன்?

    அதுதான் விஷ ஊசி அல்லது மெல்ல கொல்லும் விஷம் அல்லது போதை

    2 ஆயிரம் ஆண்டுக்கு முன் யூதன் ஏற்றிவிட்ட ஊசி இன்று எதில் நிற்கும் தெரியுமா?

    இஸ்ரேல் ஒரு ஆசீர்வதிக்கபட்ட கர்த்தரின் நாடு, ஜெருசலேம் யூதனுக்கு சொந்தம்

    இதுதான் வரலாறு, முக்கால உண்மையும் கூட‌

    ஆக இந்த தமிழக கிறிஸ்தவர்களுக்கு அறிவும் கிடையாது சிந்தனையும் கிடையாது வரலாறும் தெரியாது

    இந்நாடு கிறிஸ்தவநாடானால் அதனால் இஸ்ரேலுக்கும் இன்னும் பலருக்கும் எவ்வளவு லாபம் என்பதும் தெரியாது அல்லது மறைப்பார்கள்

    இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றினால் ஐரோப்பிய அடிமை நாடு கூடுதலாக இஸ்ரேலிய ஆதரவு நாடு ஒன்று உருவாகும்

    அதுதான் இவர்கள் நோக்கம், உண்மையில் இது இவர்களுக்கே தெரியுமா என்றால் பலருக்கு தெரியாது

    இதிலும் உள் அரசியல் உண்டு, கத்தோலிக்க நாடுகளை சில பிரிவினை கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளுக்கு பிடிக்காது. இதனால் அவர்களுக்குள்ளான சண்டை உலகெல்லாம் பரவி அதில் மீன்பிடிப்பதில் அவர்களுக்கொரு ஆனந்தம்

    ஐரோப்பிய வியாபாரம் கத்தோலிக்க கிறிஸ்தவ தலமையில் கன ஜோராக நடந்ததையும், சிலுவை போர்களின் தோல்வியும் இன்னும் போப் இருக்கும் வரை இஸ்ரேலுக்குள் யூதன் செல்லமுடியாது என கணித்த யூத மூளைகளின் உருவாக்கமே பிரிவினை சபைகள்

    அதிலிருந்து தொடங்கியதுதான் கத்தோலிக்கம் மற்றும் அல்லேலூயா மோதல், யூதரின் பக்கம் கொஞ்சம் சாய்ந்தான் நெப்போலியன் அதன் பின் நடந்ததுதான் போப்பின் அதிகார குறைப்பும் இன்னும் ஏராளமும்

    போப் சரிந்தபின்பே பிரிட்டனும் அமெரிக்காவும் மேல்நிலை பெற்றன.

    கம்யூனிச புரட்சி என்பது மன்னர்களை ஒழிக்க நடந்தது மன்னனும் மதமும் சரியும் இடத்தில் குழப்பம் அதிகமாகி சூழல் கெடும் நாடு ஸ்திரதன்மை இழக்கும் என்பதே கணக்கு

    (இதனால்தான் கடைசிவரை கம்யூனிஸ்டுகளை எதிர்த்தே வந்தான் ஹிட்லர், அவன் சொன்னது உணமை என்பதை காலம் காட்டிற்று )

    மெக்ஸிகோ கிறிஸ்தவர் உள்ளே வரகூடாது என சொல்லும் அமெரிக்கா வடக்கு கன்டா எல்லையில் ஒரு சுவரும் கட்டாது, காரணம் இதுதான்.

    இதெல்லாம் கிறிஸ்தவ அரசியல், சரி இந்த போதகர்கள் பக்கம் வரலாம்

    இந்த நல்லவர்கள் இந்துக்களை விட்டுவிட்டு இயேசு வழியில் 2 கோடி யூதர்கள் உலகில் இருக்கின்றார்கள் அவர்களை மனம் திருப்பினால் என்ன?

    2கோடி யூதரையும் மனம் திருப்பிவிட்டு அந்த யூதமதத்தை ரோம, கிரேக்க பாபிலோனிய மதம் போல அழித்துவிட்டு கிறிஸ்துவத்தை மலர செய்து பாலஸ்தீன மக்களுக்கு நியாயம் கொடுத்தால் என்ன?

    அதெல்லாம் செய்யமாட்டார்கள்

    இயேசு எதை செய்தாரோ அல்லது செய்ய நினைத்தாரோ அதை சுத்தமாக செய்யாமல் விட்டுவிட்டு இயேசு எதை செய்யாமல் தவிர்த்தாரோ அதை நற்செய்தி என சொல்லி ஒப்பாரி வைப்பது இவர்கள் ஸ்டைல்

    இயேசுவே அக்கால இஸ்ரேலை விட்டு அதுவும் யூதேயா எனப்படும் பகுதியினை விட்டு அரை இன்ஞ் நகர்ந்தவரல்ல‌

    ஆனால் இவர்கள் ஆடும் ஆட்டம் கடும் அழிச்சாட்டியம்

    எல்லாம் கிறிஸ்தவத்தில் ஊடுருவி அதை யூதமதத்துக்கு எதிரே வராமல் திருப்பிவிட்ட யூத கிறிஸ்தவ உளவாளிகளின் தந்திரம்

    அதை அறியாமல் இங்குள்ளவன் புலம்பினால் புலம்பிகொண்டே இருக்கட்டும்

    கேட்டால் செத்தபின்பு உனக்கு மீட்பு உண்டு, ரட்சிப்பு உண்டு என்பார்கள். எல்லோரும் செத்த பின்பு என்ன நடந்தால் என்ன? வாழும் பொழுது அமைதி வேண்டாமா? மகிழ்ச்சி வேண்டாமா? என்றால் அவர்களிடம் பதில் இருக்காது.

    உண்மையில் கிறிஸ்து ஒரு ஞானி, அவர்களை யூதர்களும் புரிந்து கொள்ளவில்லை தமிழக கிறிஸ்தவர்களும் புரிந்து கொள்ளவில்லை அவர் கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக தரு போல் இங்கு மாற்றபட்டிருக்கின்றார் அதில் பலரின் வியாபாரம் கன ஜோராக நடந்து கொண்டிருகின்றது என்பதன்றி வேறல்ல விஷயம்

    அதனால் தங்களுக்கு பயிற்றுவிக்கபடி யூதரை விட்டுவிட்டு இன்னும் பலரை விட்டுவிட்டு இந்துக்களைத்தான் குறிவைப்பார்கள் இப்போதகர்கள், அவர்களிடம் கவனமாய் இருப்பது நல்லது

    மீறி சென்றால் ஐ.எஸ் இயக்கம் போல உங்களையும் ஆக்கிவிடுவார்கள், எமக்கு தெரிந்து இக்கும்பல் ஏராளமானோர் வாழ்வினை அழித்திருக்கின்றார்கள், எந்த சிக்கலுக்கும் இவர்களிடம் தீர்வே இல்லை, செய்வதெல்லாம் மூளை சலவை அன்றி வேறல்ல..

    ஜாகீர் நாயக் இஸ்லாமில் மட்டும் உண்டென நம்புவீர்கள் என்றால் உங்களை ஒன்றும்ச் செய்ய முடியாது, கிறிஸ்துவத்தில் பல நாயக்குகள் பசுதோல் போர்த்திய புலியாக வலம் வருவார்கள் என்பதுதான் உண்மை

    அதிகம் வேண்டாம் கொச்சியிலும் மும்பை பகுதியிலும் சில யூதர்கள் இன்றும் உண்டு, அவர்களிடம் சென்று இந்த கோஷ்டியில் ஒரு பயல் நற்செய்தி சொல்லிவிடட்டும் பார்க்கலாம்.

    தங்கள் அடையாளத்தை வழக்கொழித்து கிறிஸ்துவத்தை ஏற்று இன்று அந்நாடுகள் இஸ்ரேலுக்கு காவலாய் இருப்பது போல கிழக்கே இந்தியா சைனா மற்றும் இதர நாடுகளையும் அப்படி ஆக்கிவிட வேண்டும் என்பதில் பல சக்திகள் குறியாய் இருக்கின்றன‌

    கிறிஸ்துவத்தின் மூலம் ஆசியா முழுக்க ஊடுருவலாம் என மேற்குலகமும் திட்டமிடுகின்றது

    அந்த சதி தெரியாமல் சிக்கி கொண்ட ஆடுகள் இன்னும் பல பலியாடுகளை தேடி திரிகின்ன்றன அவ்வளவுதான் விஷயம்..

  12. இங்கிலாந்து, ஐரோப்பா, சீனாவிலே எரிபொருள் பற்றாக்குறை – மின்சாரம் இல்லை

    ஒருவேளை நமது பாரதத்திலே பெட்ரோல் பங்க் களுக்கு பெட்ரோல் கொண்டு வர லாரி ஓட்ட ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தால்

    ஒருவேளை நமது நகரங்களிலே மின்சாரம் இல்லாமல் எல்லோரும் டார்ச் லைட் பயன்படுத்தி நடந்து போனால்

    ஒருவேளை நமது நகரங்களிலே மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தால்

    ஒருவேளை நமது கடைகளிலே பொருட்கள் இல்லாமல் வெறுமனே காலியாக இருந்திருந்தால்

    ஒருவேளை நமது வீடுகளுக்கு ஒரு துளி தண்ணீர் கூட குடிக்க இல்லாமல் இருந்திருந்தால்

    இதெல்லாம் ஐரோப்பாவிலும் சீனாவிலும் இங்கிலாந்திலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் நடக்கிறது.

    ஐரோப்பாவிலே மின்சாரம், இயற்கை எரிவாயு விலைகள் உச்சத்தை தொடுகின்றன.

    சீனாவிலே பல மாகாணங்களிலே சுத்தமாக மின்சாரம் இல்லை. பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்கள் மின்சாரத்திற்கு ரேஷன் அதாவது கட்டுப்பாடு விதித்திருக்கின்றன.

    இங்கிலாந்திலே பெட்ரோல் பங்க்களிலே பெட்ரோல் இல்லை. ராணுவ வீரர்களை கொண்டு பெட்ரோல் லாரிகளை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் இதைபற்றி உள்ளூர் மீடியாக்களிலோ ஏன் உலக மீடியாக்களிலே கொந்தளித்து பார்த்தது உண்டா?

    அந்த நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள், தலைவர்களை பார்த்து பாசிஸ்ட், கையாலாகதவர்கள் என்றெல்லாம் எழுதியது உண்டா?

    கிடையாது எழுதவே மாட்டார்கள் ஏன்னென்றால் அது அவர்கள் நாடு. சிக்கலான நேரத்திலே நாட்டின் தலைமையை கேள்வி கேட்க மாட்டார்கள். நாட்டின் மொத்தமே இழக்கப்படுமே. இந்த மொத்த மீடியாவுமே இந்த நாடுகளின் கட்டுப்பாட்டிலே தானே இருக்கிறது.

    இந்த நிலையிலே 2015 இல் இருந்து மோடி அரசு பாரதத்திலேயே நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்த செய்த முயற்சிகளை நினைவு கூறுகிறேன்.

    எல்லா நிலக்கரி சுரங்களிலும் நிலக்கரி உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டது.
    நிலக்கரி சுரங்கங்களுக்கு பக்கத்திலே இருக்கும் அனல்மின் நிலையங்களூக்கு நிலக்கரி போகும்படி செய்யப்பட்டது.
    இதிலே பண்டமாற்றமும் அதாவது இந்த நிலக்கரியை பக்கத்திலே இருக்கும் மின்சார உற்பத்தி நிலையத்துக்கு கொடுத்துவிடு உன் மின்சார நிலையத்துக்கு அருகிலே இருக்கும் சுரங்கத்திலே இருக்கும் நிலக்கரியை பெற்றுக்கொள் என செய்தார்கள்.

    உலக சூரியசக்தி கூட்டமைப்பு எனும் அமைப்பை நிறுவி அதன் மூலம் சூரிய ஓளி மின்சாரத்தை எங்கு பயன்படுத்த முடியுமோ அங்கு பயன்படுத்தினார்கள்.

    இன்றைக்கு தங்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது.

    388 ஜிகா வாட் உற்பத்தி திறனும் கொண்
    1583 டெராவாட் மின் உற்பத்தியும் ஒருவருடத்திற்கு செய்கிறோம்.

    2012 இல் 199 ஜிகா வாட் ஆன இருந்த உற்பத்தி திறன் பத்தே வருடங்களிலே 388 ஜிகா வாட் ஆக அதாவது இரட்டிப்பு ஆகியிருக்கிறது. இன்னும் ஒரு 32 ஜிகா வாட் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    அதே போலவே 2014 க்கு முன்பு இருந்ததை விட மூன்றில் ஒருமடங்கு அதிகமாக மின்உற்பத்தி செய்கிறோம்.

    இவ்வளவு செய்தும் மோடி தொடர்ந்து தாக்கப்படுகிறார்? ஏன்?

    இந்த இடதுசாரி அல்லைக்கை முண்டங்களின் திட்டங்களை கேட்காததால்.

    அனல்மின் நிலையங்களை அணுமின்சார உற்பத்தியை மூடி சூரிய ஒளி சக்தி மூலமே எல்லாம் செய்யவேண்டும் என போன ஐரோப்பா இன்று அவதிப்படுகிறது
    அணைக்கட்டு மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் போதுமென்றிருந்த பிரேசில் கஷ்டப்படுகிறது.

    ஆனால் இங்கே நாம் அதையெல்லம் கண்மூடித்தனமாக செய்யவில்லை.
    கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறூகிறோம்.

    அதை பொறுக்காமல்
    அதுவும் மாட்டை வழிபட்டு மாட்டு மூத்திரம் குடிக்கும் இந்துக்கள் எப்படி வாழலாம் என வெறூப்பிலே கிடந்து துடிக்கும் வெறுப்பின வியாதிகள் சும்மா இருப்பார்களா?

    ஞாபகம் இருக்கிறதா?

    2012 களிலே பத்திரிக்கைகளை தொறந்தாலே
    இந்தியாவிலே உள்கட்டமைப்பு இல்லை
    இந்தியாவிலே மின்சாரம் இல்லை
    இந்தியாவிலே நகரங்கள் இருளிலே மூழ்கின

    இப்படியே தான் இருக்கும்.

    இன்றைக்கு அப்படி ஒரு செய்தியை படிக்க முடியுமா?

    ஏன் இதுகள் எரிந்து விழுகின்றன?
    எதுக்கெடுத்தாலும் அது சரியில்லை இது சரியில்லை என நொட்டை சொல்கிறது என?

    இந்த ஐரோப்பிய பத்திரிக்கைகள் அதுகளின் கையாலாகதனத்திற்கு ரஷ்யாவை திட்டுகின்றன.
    ரஷ்யா விலை ஏற்றிவிட்டதாம்.
    ஏத்தாம பின்னே கொஞ்சுவாங்களா?

    நாம் செய்த புண்ணியம் மோடி இருக்கிறார்.
    இல்லையேல்
    நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

  13. நாட்டுக்கு என்ன செய்தார் பிரதமர் மோடி ?

    நாடு பற்றிய எந்த கவனமும் இல்லாமல் வதந்திகளை நம்பி இன்னமும் இந்த மாரி கேள்வி கேட்பவர்களை கண்டால் வாய்லயே அடிக்கணும்னு தோணுது .

    கடன் ஏற்படாமல் பட்ஜெட் போட முடியாத நிலைமையில் ஊழல் தலைவிரித்து ஆடிய ஒரு பெரிய நாட்டுக்கு பொறுப்பேற்று ,பாதுகாப்பை பலப்படுத்தி வரியை ஒழுங்குபடுத்தி விலையேற்றத்தை தடுத்து வெளியுறவை மேம்படுத்தி ,

    வட கிழக்கில் வளராமலே கிடந்த மாநிலங்களை புணரமைத்து ,

    மின் பற்றாக் குறையால் நாடே இருண்டு கிடந்த அவலத்தை மாற்றி 21 ஆயிரம் கிராமங்களுக்கு புதிய மின் வசதியும் ஏற்படுத்தி ,கோடிக்கணக்கான இலவச எரிவாயு கொடுத்து 8 கோடி புதிய கழிப்பறை கட்டி கொடுத்து ,

    கங்கை ஆக்கிரமிப்புகளை அகற்றி
    இனி அவ்ளோ தான் என்றிருந்த கங்கையை சுத்தப்படுத்தி போலியாக செயல்பட்டு வந்த வங்கி கணக்குகள் நிறுவனங்கள் ,

    மற்றும் பல நியமனங்களை களைந்து ,வெறும் எண்ணிக்கை அளவில் பெரிய இராணுவம் என்றிருந்ததை மாற்றி வலிமையான இராணுவம் அமைத்து ,

    கையெடுத்து கும்பிடும் படி பல்வேறு காப்பீடுகள் தந்து ,

    திவாலாக இருந்த வங்கிகளை மீட்டு ,

    இழுத்து மூட இருந்த அஞ்சல் துறையை காப்பாற்றி வருமான வரியில் சலுகை தந்து ,மருந்து விலையை குறைத்து ஆண்டுக்கு ஐந்து லட்சம் மருத்துவ காப்பீடு கொடுத்து விவசாயிக்கு பென்சன் கொடுத்து ,

    உணவு உற்பத்தியை பெருக்கி டாலர் கையிருப்பை பெருக்கி ,

    பெட்ரோல் விலையில் ஒரு ரூபாய் ஏறினாலும் மற்ற அனைத்து பொருட்களையும் விலையேற்றும் ,பதுக்கல் காரர்களின் சூழச்சியை முறியடித்து ,

    வரி ஏய்ப்பு செய்தவர்களை வலிக்காமல் வரிகட்ட வைத்து பெரிய அளவில் கருப்பு பணத்தை ஒழித்து ஊழல் வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி ,

    இத்தனை எதிரிகள் சூழ்ந்து எதிர்த்து வரும் நிலையிலும் ஒரு மத்திய அமைச்சர் கூட ஊழல் செய்தார் ,என்ற கெட்ட செய்தியே இல்லாமல் ,

    ஒரே தவணையில் நாட்டில் இது போன்ற எவ்வளவோ நல்ல மாற்றங்களை கொடுத்த நரேந்திர மோடியை பார்த்து

    போதை தெளியாதவன்

    ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்வது போல ,

    மோடி அப்படி என்ன செய்தார்னு கேட்குறீங்களே ?இன்னும் என்ன தான்யா செய்யணும் ?

    அல்லது நீங்கள் எதிர்பார்த்ததை செய்ய வேற எவனாவது ,

    இந்த நாட்டில் பிரதமர் வேட்பாளருக்கான தகுதியுடன் இருக்கிறார்களா ?

  14. அன்பு மவனே,நீ என்னையும் மிஞ்சிட்டியே டா….!

    என்னாலும், இப்படி யோசிக்க முடிய வில்லையே !!

    பிள்ளையோ பிள்ளை ! கொள்ளையோ கொள்ளை !!

    *கோவில் கொள்ளை எப்படி செய்யணும் தெரியுமா ???*

    இந்தக் கேடிகள் தான் விஞ்ஞானப்பூர்வமா கொள்ளையடிக்கிறவனுகளாச்சே? ஆனால், ஆண்டவன் மேலே சத்தியமா நகை உருக்குவதில் ஒரு தவறும் நடக்காதுனு சொல்றாய்ங்களே….

    எங்கேயோ உதைக்குதேன்னு ரொம்ப நேரமா மண்டை குடைஞ்சுட்டே இருந்தது.

    அடேய் ஆனந்தா…. கேடிகள் நோக்கத்தை கேடி மாதிரி யோசி என்று பட்சி சொல்லிட்டே இருந்தது. டக்குனு ஒரு விசயம் தோணுச்சு…. லாஜிக் சரியானு பாருங்க மக்கா…

    இரண்டாயிரம் கிலோ நகைகளை உருக்கி அதை பேங்கில் வைத்து அதன் வருமானத்தை வைத்து கோவில் நிர்வாகம் பண்ணப் போறாய்ங்களாமாம்! ஏன் நகைகளை அப்படியே கொடுத்தால் பேங்க்ல/கருவூலத்தில் ஒத்துக்க மாட்டாங்களா? தங்கம் எப்படியும் தங்கம் தானேடா…?

    உருக்கினால், ரெண்டு விசயம் நடக்க வாய்ப்பிருக்கு.
    1, நகைகளில் பாதி 18 டச்சு 20 டச்சு தான் இருந்தது. உருக்கியதும் 25% குறைந்து 500 கிலோ ஷார்டேஜ்னு ஒரு கணக்கு காட்டிடுவாய்ங்க… (குறைந்தது 200 கோடி அமுக்கிடுவாய்ங்க)

    2, உலக அளவில் புராதன நகை/டிசைன்களுக்கு பயங்கர கிராக்கி இருக்கு. குறைந்தது பத்து மடங்கு விலை அதிகம் கிடைக்கும். இந்த நகைகளை எல்லாம் அங்கே வித்துட்டு, அதற்கு பதிலாக தங்கத்தை வாங்கி கருவூலத்தில் கொடுத்துட்டா நேர்மையாளர்கள் மாதிரியும் காட்டிக்கலாம். நாளைக்கு தணிக்கை வந்தாலும் தப்பிச்சுடலாம். பணமும் பெரியளவில் கொள்ளையடிச்சுடலாம்.

    அடேய்… கட்டுமரமே கிடுகிடுத்துப் போற அளவுக்கு ப்ளான் பண்றீங்களேடா…?

    அரைகுறை கேடியான எனக்கே இவ்வளவு தோன்றினால், ஒரிஜினல் கேடிகளான நீங்க இன்னும் என்னென்ன ப்ளான் வச்சிருப்பீங்க?

    ஆராவது சட்டுபுட்டுனு ஸ்டே வாங்குங்க நாயமாரே!!!

    #விஞ்ஞான_ஊழல். #திருட்டு_திமுக

    பின்னூட்டம் :-

    (கல் வைத்த நகைகளில் உள்ள விலை உயர்ந்த கற்களின் நிலை என்ன? உருக்க போகும்போது நீக்கப்பட்ட கற்களை யாரிடம் ஒப்படைப்பார்கள்?)

    (மேலும் நகையை அப்படியே வைத்து இருந்தால் ஐட்டம் வாரியா கணக்குக் காட்டணும்.

    இது அம்மனுடைய அட்டிகை, இது அம்பாளின் தங்கத் தோடா, இது பெருமாளின் தங்கக் கேயூரம்…. இப்படி வகை வாரியா “இன்வென்டரி” மெயின்டெய்ன் பண்ண வேண்டும்.

    இப்பவும் “இன்வென்டரி”- “ஸ்டாக் ரிஜிஸ்டர்”- எல்லாமே இருக்கும்!

    எந்த லட்சணத்துல இருக்கும்னு தெரியாது!

    உருக்கிட்டு எல்லாத்தையும் தங்கக் கட்டி ஆக்கிவிட்டால்? எது கேயூரம், எது அட்டிகைனு தெரியப் போகுது?!)

    (நமது ஆலயங்களின் தொன்மை ,மன்னா்கள் அளித்த கொடைகளின் தொன்மைக்கு அடையாளமே நகைகளின் பழமை தான் அதை யும் உருக்கிவிட்டால் நமது கோயில்களின் தொன்மை ஆராதாரத்திற்கு எதையும் காட்டமுடியாது ,

    ஏற்கனவே விக்கிரகங்களை கடத்தி விற்றாயிற்கு ,

    கல்வெட்டு ,தூண்களையும் நொறுக்கிப் போட்டு சிமிண்டில் கட்டி கொள்ளையடித்தாயிற்று ,

    மீதமிருப்பது தொன்மையை பறைசாற்றும் அணிகலன்களே ,
    அதையும் அழித்தபின் மிஷனாிகளின் ஆதார அழிப்பு சதி முழுமை பெற்றுவிடும் ,

    சுடலை சாியாகத்தானய்யா திட்டம் போடுகிறான்

    எப்பாடு பட்டாவது இதை தடுத்தே ஆகவேண்டும்

    இவனுக விஞ்ஞானத்திருடன்கள் என்பது 1972 லேயே நிரூபணமானது ,

    மத்திய அரசுக்கும் ,உச்ச நீதிமன்றத்திற்கும் பொதுமக்களின் கோாிக்கைகள் மனுவாக லட்சங்களில் அனுப்பப் படவேண்டும்)

  15. எங்களை தவிர எல்லோரும் சாத்தான், இந்து மதமெல்லாம் சாத்தான் என கிறிஸ்தவரில் சிலர் சொல்லி கொண்டிருப்பது பற்றி சிலர் கேட்பதால் விளக்குகின்றோம்.

    சாத்தான்குளம் எனும் ஊரெல்லாம் சாத்தானை குறிக்குமா? சாத்தான் கோவில் என்றால் சாத்தான்கள் குடியிருப்ப்பா என்றெல்லாம் கேட்டால் அதெல்லாம் அபத்தம்

    சாத்தன் என்றால் தலைவன் என பொருள். மாசாத்தன் என சிலப்பதிகாரமும் சீத்தலை சாத்தனார் என இலக்கியங்களும் அதை சொல்கின்றன‌

    சாஸ்தா என்பதும் சாத்தன் என்பதும் தலைவனை குறிப்பதே, சாத்தன் கோவில் என்பதே சாத்தான் என மருவிற்று

    கிறிஸ்தவர்கள் சொல்லும் சாத்தான் என்பது வேறு, வேறு என்பதை விட ஆன்மீக தத்துவத்தை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே பொருள்

    இந்துமதம் பரம்பொருள் நன்மை தீமையினை கடந்தது என சொல்கின்றது, தீமையினையும் நன்மையும் கடந்து அவரிடம் செல்லவேண்டும் இரண்டும் இறைவனால் ஏற்படுத்தபட்டது என்கின்றது

    சாத்தான்கள் பற்றி கிறிஸ்தவர்கள் வைக்கும் ஒப்பாரி கொஞ்சமல்ல‌

    சாத்தான் என ஒருவன் இருப்பதாகவும் அவனை இயேசு ரத்தத்தால் வென்றதாகவும் அடிக்கடி கிறிஸ்தவ மேடைகளில் கத்துவார்கள், உண்மையில் இயேசுவினை விட அங்கு அதிகம் உச்சரிக்கபடும் பெயர் சாத்தான், சாத்தான் இல்லாவிட்டால் கிறிஸ்துவத்துக்கே வேலை இருக்காது போல‌

    உண்மையில் பேய் உண்டா இல்லையா என்பதல்ல இங்கு விஷயம், அப்படி பேய் இருந்தால் அதை விரட்டு சுடுகாட்டு மந்திரவாதி போதும், ஏசு எனும் மாபெரும் மகான் எதற்கு?

    உண்மையில் சாத்தான் என்பவன் யார்?

    இதற்கு இரண்டாயிரம் ஆண்டுகால கிறிஸ்துவத்தையும் தாண்டி, மூன்றாயிரம் ஆண்டு பழமையான யூத மதத்தையும் தாண்டி பன்னெடுங்காலத்துக்கு முன்செல்ல வேண்டும்

    ஆம் உலகம் அதற்கு முன்பே இருந்தது, மானிட இனம் இருந்தது. இந்த ஆபிரகாமை அவரின் கடவுள் இழுத்து யூதமதம் தொடங்கியது வெறும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பேதான்

    அதற்கு முன்னரான உலகிலே மானிட இனமும் நாகரீகமும் வானியல் அறிவும் இருந்தது, அந்த சமூகம் இந்து சமூகமாய் இருந்தது

    அவர்கள் ஒவ்வொரு கோளின் சாயலும் மானிட வாழ்வில் பிரதிபலிப்பதை கண்டார்கள். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு நாள் கொடுத்து நாள் அமைத்தார்கள், அது ஒரு வாரம் ஆயிற்று

    மானிட இனம் ஆங்காங்கே பிரிந்து செல்லும் பொழுது அந்த ஞானமும் பரவிற்று அல்லது ஒரு இனத்தில் இருந்து எடுத்துகொண்டார்கள்

    அப்படி வானியல் கிரகங்களை அன்றே அறிந்து ஜோதிடகலை எல்லா இனத்திலும் இருந்தது, இந்துக்களிடம் இருந்தது, கிரேக்கர் கற்றனர் , சுக்கிரன் வீனஸ் எனும் தெய்வமானார், குரு ஜூபிட்டர் எனும் தெய்வமானர் . ரோமர் அதை வேறு வகையாக கொண்டிருந்தனர்

    இதில் நாம் சனிகிரகம் என சொல்வதை அவர்கள் சாட்டன் என சொல்லி சனியின் ஆதிக்கம் மிகுந்த நாளுக்கு சனி என்றும் பெயரிட்டனர்

    ஜாதகஞானம் மிகுந்த அந்நாட்களில் சனிகிழமைக்கு அஞ்சினர், அது விலக்கபட்ட நாளாகவே இருந்தது. சனி கிழமை எங்கும் நடமாட கூடாது என்றும் எதுவும் செய்யகூடாது என்றும் விதி வகுத்து வீட்டுக்குள்ளே அடைந்திருந்தனர்

    இந்த மரபே யூதருக்கு சனிகிழமை முழு ஓய்வுநாளான மரபு, இன்றும் சனிகிழமை அவர்களுக்கு மகா ஓய்வுநாள், பாத்ரூமுக்கு செல்வது கூட நடக்கும் வேலை என அதை கூட முடிந்தால் தள்ளிபோட வேண்டும் எனும் அளவு சனிகிழமை கட்டுப்பாடு உண்டு

    உண்மையில் சாட்டன் எனப்படும் லத்தீன் பொருளின் பெயர் சோதிக்க வருபவன், கஷ்டத்தை கொடுப்பவன் என்பதே

    யூத மதம் கூட சோதனை காலத்தை சாத்தானின் காலம் என்றுதான் சொன்னது. யூதருக்கும் ஜோதிடம் ஜாதகம் ஆவிகளுடன் பேசுதல் என எல்லா வழக்கமும் இருந்தது, அப்படி சோதனையான காலத்தை சாத்தானின் காலம் என்றார்கள்

    இதை பைபிளின் பல இடங்களில் காணலாம், “சோதிப்பவன் அவரை அணுகி” எனும் வார்த்தையினை பழைய ஏற்பாட்டில் இருந்து புதிய ஏற்பாடு வரை காணமுடியும்

    ஆதியாகமத்தில் ஆதாமுக்கு பழம் கொடுத்தது ஒரு சக்தி என்றுதான் மூல பாஷையில் சொல்லபட்டது, கெட்ட சக்தி எல்லாம் சாட்டனின் கைங்கரியம் எனும் வகையில் அதை சாத்தான் ஆக்கினார்கள்

    உண்மையில் சாத்தான் என ஒன்று உண்டா என்றால் இல்லை மாறாக கொடிய தூதன் என ஒன்றை பைபிளும் தோராவும் சொல்கின்றன. அதாவது ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு இயல்பாம், அப்படி சிலரை தண்டிக்க கொடிய தூதனை ஆக்ரோஷமான தூதனை கடவுள் அனுப்புவாராம்

    உண்மையில் எல்லாமே கடவ்ளின் படைப்பே, அவரின் சித்தபடி மானிடரை வழிநடத்தவே அவை பயன்படுகின்றன‌

    வறண்ட நிலத்து பயிர் வானை எதிர்பார்க்கும், ஆம் வறடசியே நீரின் அருமையினை உணர செய்யும் , அப்படி சங்கடமும் துயரமும் வரும்பொழுதே மனிதமனம் கடவுளை நாடும் அப்படி மானிட வாழ்வில் சங்கடம் கொடுத்து ஞானம் கொடுக்க சில சக்திகளை கடவுள் உருவாக்கினார்

    அப்படி உருவானதுதான் சனி கிரகம், மேல்நாட்டவர் அதை சாத்தன் என்றனர்.

    ஆம் பின்னாளைய மேல்நாட்டார் அதை கொம்பு முளைத்த சாத்தானாகவும், நரகத்து அதிபதியாகவும், யாரையும் உருப்பட விடாத கெட்ட எண்ணம் பிடித்தவனாகவும் மாற்றிவிட்டனர்

    அது இன்று கிறிஸ்துவத்துக்கு கைகொடுக்கின்றது, சாட்டன் எனும் சாத்தான் சோதிப்பவன் மட்டுமே அவன் யோபுவினை சோதித்தான், இயேசுவினையும் சோதித்தான் அவர்கள் வென்றதும் அவன் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றினான் என சிந்திப்பார் யாருமில்லை

    ஆம் கடவுள் நியமிக்கும் தேர்வுதுறை அதிகாரியே சாத்தான்

    மேல்நாட்டவர் அய்யயோ சாத்தான் , பேய் , பிசாசு, இருட்டு என அந்த சாட்டன் எனப்படும் சனியினையும் அவன் கிரகத்தையும் அந்த ஆறாம் எண்ணையும் சாபம் என எண்ணி பயந்து ஒளிந்த்து குழம்பி எல்லாவற்றையும் மாற்றி, கிறிஸ்துவே சாத்தானை வென்றால் அல்லேலூயா என திசைமாறிவிட்டனர்

    ஆனால் இந்துமதம் அந்த தத்துவத்தை தத்துவமாக பார்த்தது, சனி என்பவன் கடவுள் அல்ல, சாத்தானும் அல்ல மாறாக சோதிப்பவன் என்பதை தெளிவாக சொன்னது

    ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் சனியிடம் அகப்படும் காலம் உண்டு, அக்காலத்தில் கஷ்டம் வரும் நஷ்டம் வரும் அதில் ஞானம் வரும் என தெளிவாக சொன்னது

    சனிக்கு யாரும் தப்பமுடியாது ஆனால் கடவுளை நோக்கி ஓடினால் அதன் பாதிப்பு குறையும் என அறுதியிட்டு சொன்னது

    மனிதனுக்கு அவனை சோதனையில் புடம்போட்டு ஞானத்தை வழங்குவதால் அவனை சனீஸ்வரர் என தெளிவாக சொன்னது

    சனிக்கு ஆலயம் அமைத்தாலும் சிவனை வழிபட்டு சனியிடம் அடைக்கலம் கேள் என தெளிவாக சொன்னது, ஆம் கடவ்ளுக்கு சனி கட்டுபட்டவன் என உணர்த்தியது

    கூடவே விநாயகர் எனும் முழுமுதல் கடவுளுக்கு சனி பிடிக்கவில்லை என்றும், அந்த ஞானபிம்பம் சனியிடமிருந்து நம்மை பாதுகாக்கும் என நம்பிக்கை ஊட்டியது, விநாயகர் என்பது அறிவின் அடையாளம்

    ஆம் மானிட வாழ்வு என வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் சனியின் கரங்களில் விழ கடவுள் ஏற்பாடு செய்திருகின்றார், சோதனை காலம் என்பது அதுவே.

    அந்த சோதனை எதற்காக என்றால் அப்பொழுது மனிதன் உலகின் நிலையற்ற தன்மையினை உணர்ந்து தன்னைதேடுகின்றானா, ஞானத்தை அடைகின்றானா என பார்ப்பதற்காக?

    அப்பொழுது தேடும் மனிதனை தெய்வம் அரவணைக்கின்றது, குறிப்பிட்ட காலம் முடிந்து அவன் எல்லா வளமும் திரும்ப பெறுவது அப்படியே

    தேடாத மனிதனை மறுபடியும் ஞானம் பெற அந்த பரம்பொருள் மறுபடி பிறக்கவைத்து மறுபடியும் சனியின் கரங்களில் ஒப்படைத்து உண்மை உணர வைக்க வாய்ப்பு அருளுகின்றான்

    சனியின் காலங்களில் ஒரு மனிதனுக்கு பதற்றமான மனம் இருக்கும், அந்த பதற்றமும் குழப்பமுமே அவனை கஷ்டத்தில் தள்ளும்

    இதனால் பதற்றமான உடலை குளிர்விக்க நல்லெண்ணெய் குளியலை சொன்னார்கள், எள் உணவு இன்னபிற விஷயங்களை சொன்னார்கள். அதில் அறிவியலும் கலந்திருந்தது

    மேற்குலகம் சோதிப்பவனை அய்யோ பேய் பிசாசு என ஒதுக்கிய காலங்களில் , உண்மையில் சனி என்பவன் ஞானத்தை அருளும் ஆண்டவன் என அவனை சனீஸவரன் என கொண்டாடிய மதம் இந்துதம்
    அது யாருக்கும் எதிரானது அல்ல, அதன் தன்மை அப்படி

    ஏ சனியா உன்னை விரட்டுகின்றேன் பார், ஓட அடிகின்றேன் பார் என அது முழங்காலில் நின்று கதறவில்லை, மாறாக மாற்றமுடியாத காரியங்களை ஏற்க சொன்னது

    “ஏ சனீஸ்வரனே, நீ பகவான் அல்ல, முழு முதல் கடவுள் அல ஆனால் இது உனக்கான காலம். வா வந்து என் வாழ்வில் இறை சிந்தனையினை கொடுக்க இறை ஞானத்தை கொடுக்கும் காலத்துக்காக நீ வந்திருக்கின்றாய், வா வந்து உனக்கு இடபட்ட கட்டளை படி எம்மை ஆட்டு” என தம்மை ஒப்புகொடுத்த மதம் இந்துமதம்

    அது சனிக்கு விளக்கும் இட்டது, வணங்கியது வாழ்வின் சோதனை காலத்தை மங்கு சனி என்றது, அதேசனி ஞானம் கொடுத்தபின் அள்ளி கொடுப்பதை பொங்கு சனி என்றும் சொன்னது

    சனி என்பவர் சோதிப்பவர், அவரின் சோதனைக்கு தெய்வ அவதாரங்களே தப்பமுடியாது

    ராமனும் கண்ணனுமே அவனின் சோதனைக்கு தப்பமுடியாது எனும்பொழுது மானிடர் எப்படி தப்பமுடியும்?
    ஆனால் இந்துமதம் வழி சொன்னது, நிச்சயம் சனி இருட்டு ஆனால் கடவுளை தேடி விளக்கினை வை வழிபிறக்கும், நிச்சயம் சனி சூறைகாற்று தெய்வத்தை தேடு அது உன்னை காக்கும்

    நிச்சயம் சனி பொருள் இழக்க வைக்கும், மனதை அலையாய வைக்கும், மதிப்பிழக்க வைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும், நீ கடவுளை தேடு ஆறுதல் கிடைக்கும்

    அந்த காட்டாற்றுவெள்ளம் ஓய்ந்தபின் உனக்கானது பன்மடங்காய் திரும்பும்

    சனி இல்லையேல் சோதிப்பவன் யார்? அந்த சோதனையும் துன்பமும் இன்றி கடவுளை தேடுபவன் யார்?
    குந்திக்கு சனி பிடிக்காமல் இருந்தால் கண்ணனின் அருள் தேவைபட்டிருக்குமா? பாரத போர்தான் நடந்திருக்குமா?

    அரிசந்திரனுக்கு சனி பிடிக்காமல் இருந்தால் அந்த ஞான எடுத்துகாட்டு கிடைத்திருக்குமா?
    புராணங்களில் சனியின் கதையினை சொல்லிவைத்தார்களே ஏன், அதை கவனியுங்கள் அதெல்லாம் சோதனையினை கடந்து கடவுளின் அருளை பெற்றவர்களின் கதை

    பரம்பொருளே எல்லோருக்கும் பொறுப்பு, எல்லோரின் வாழ்வுக்கும் காவலுக்கும் பொறுப்பு
    சாட்டர்ன், சாத்தான், சனி என்பவன் குறிப்பிட்ட காலத்தில் மானிடரை புடம்போட நியமிக்கபட்ட வேலையாள்
    அதை தெளிவாக சொல்லி இன்றும் மக்களுக்கு நல்வழியும் தத்துவமும் சொல்வது இந்துமதம்

    அது தத்துவ பொக்கிஷம், அது யாரையும் பயமுறுத்தாது, அதோ சாத்தான் உன்னை விழுங்க போகின்றான் என பயமுறுத்தாது, கொம்பும் வாலும் பயங்கர உருவமாகவும் வருகின்றான் வாலில் உன்னை கட்டி இழுத்து செல்ல போகின்றான் என்றெல்லாம் மானிட மனதை நொறுக்காது

    மாறாக சோதிப்பவன் உன்னை சோதிக்க வருகின்றான், இது கடவுளை உணரும் ஒரு தருணம் உன்னை தயார்படுத்திகொள் என தைரியம் கொடுக்கும்

    சனியிடமே என்னை அதிகம் சோதிக்காதே என அவனுக்கு விளக்கேற்றி நண்பனாக்க சொல்லும்

    எதிரி என்றோ, இந்துக்கு எதிரானவன் என்றோ யாரையும் காட்டாது, மாறாக ஞானத்தை அடையும் வழி இது என்றுமட்டும் பொறுமையாய் எடுத்து சொல்லும்

    மூன்றாயிரம் ஆண்டுக்கு முன்பு உலகம் இப்படித்தான் இருந்தது, அதை அந்த நல்வழியினை இன்று இந்துமதம் மட்டும் தொடர்ந்து வருகின்றது

    மற்றபடி மாயை எனும் ஆசையே மானிட மனதின் ஆசையே பல அழிவுக்கு காரணம், அதற்கும் சோதிக்கும் சனி கிரகத்துக்கும் சம்பந்தம் இல்லை எனினும் அந்நேரம் சில சிந்தனைகள் மாறகூடும்

    இந்த உலகில் எல்லாம் வெறும் மாயை, எங்கிருந்தோ வந்து எங்கோ செல்லபோகும் ஆன்மாவுக்கு உண்மையினை உணராமல் இவ்வுலகின் சகல விஷயங்களையும் அடைய சொல்லி ஆசை காட்டும் மாயை
    இயேசு வென்றது அந்த மாயை

    ஆம் அவர் பசி எனும் மாயையினை வென்றார், அரசு எனும் மாயையினை வென்றார், பெண்கள் எனும் மாயையினை வென்றார்
    அதை ஒரு பயலும் சொல்லமாட்டான் மாறாக அவர் கொம்பு முளைத்த சாத்தானை வென்றதாக அவன் போக்கில் கதை அளப்பான்

    சோதனை காலமே சனியின் காலம், அப்பொழுது மனம் சோதிக்கபடும் வண்ணம் நிகழ்வுகள் நிகழும், வாழ்வு தலைகீழாக புரட்டி போட்டு அடிக்கும், வாழ்வே இருட்டாகும்

    ஆனால் அந்நிலையிலும் கடவுளில் நிலைத்திருந்தால் ஞானம் பெருகும், ஒளி கிடைக்கும், வழி கிடைக்கும் காலம் மாறும்பொழுது எல்லாமும் மாறும்

    அதனால்தான் இந்துக்கள் சனியின் கதைகளை, புராணத்தில் ஒவ்வொருவனையும் அவர் படுத்திய பாடுகளை படிக்க சொல்கின்றார்கள்

    அதை எல்லாம் படிக்கும் பொழுது நமக்கு வந்த கஷ்டம் சாதாரணம் எனும் நம்பிக்கை வரும், தனி உற்சாகம் வரும் , சோதனை காலத்தை மிக எளிதாக தாண்ட தோன்றும்

    வாழ்வின் முற்காலமோ பிற்காலமோ இல்லை அவ்வப்போதோ சோதனை காணா மனிதன் எவனுமில்லை, அதெல்லாம் சனி சோதிக்கும் காலமே

    கடவுளின் ஆணைபடி அவன் சோதிக்க, அந்த கட்வுளின் திருவடி பணிபவருக்கு ஒரு சிக்கலும் வரபோவதில்லை வந்தாலும் பனிபோல் நீங்கும் இல்லையேல் மலையாய் அழுத்தும்

    இந்துமதம் மானிட வாழ்வின் யதார்த்ததை சனி கிரககம் கொண்டு விளக்க, மேற்கத்திய மதங்கள் சாத்தான் என பயமுறுத்துகின்றன‌

    சாத்தான் எனவோ பொல்லாதது எனவோ கடவுளிடம் எதுவுமில்லை, கடவுள் நன்மை தீமையினை கடந்தவர், மனிதனும் சில ஞானங்களை பெறும்பொருட்டு கொஞ்ச காலங்களை அவனுக்கு சோதனையில் தள்ளுகின்றார்

    அதில் தேவை பொறுமையும் நிதானமும் அமைதியுமான வழிபாடே, காட்டாற்று வெள்ளம் வரும்பொழுது ஒதுங்கியும், சூறைகாற்று அடிக்கும் பொழுது அமைதியாக தள்ளி நிற்பதும் அறிவுடமை

    அக்காலம் முடிந்தபின் பெரும் நன்மை கிடைக்கும், மாறாக அந்த காட்டாற்றில் இறங்கினால் கரையேற முடியாது

    இந்துமதம் சனி எனும் காட்டாற்றின் பொழுது கடவுளை கைக்கொள்ள சொல்கின்றது ஆதிகால உலக தர்மத்தை, மானிட வாழ்வுக்கும் அமைதியான மனதுக்கும் அக்காலத்தில் தொடங்கி இக்காலம் வரை நல்வழி காட்டி வருகின்றது

    அதன் ஒவ்வொரு வடிவமும் புராணமும் தத்துவமும் யாரும் தப்பமுடியா உலக நியதியினையும், அமைதியான வாழ்வுக்கும், ஞானம் பெறுவதற்கும் ஏதுவாகவே இருக்குமன்றி வேறல்ல..

  16. Copied. “நேரு காஷ்மீர் பண்டிட் இல்லை ”
    அதிர்ச்சி அளிக்கும் #நேரு பரம்பரையின் மறைக்கப்பட்ட வரலாறு!

    நேரு குடும்பம் ஒரு இசுலாமியரிடம் இருந்து தொடங்குகிறது.

    #கியாசுதீன்_காஸி, 1850 -களில் இந்தியாவில் முகலாய ஆட்சி நடந்தபோது நகர கோட்வால்(நகர ஆணையர் என வைத்துக் கொள்ளலாம்) பணிபுரிந்தவர்.

    கியாசுதீன் #பார்சி இனத்தை சேர்ந்தவர்.

    கோட்வால் பணிக்கு அப்போதைய முகலாய அரசு வெளிநாட்டு குடிகளையே அமர்த்துவது வழக்கம்.

    1857-ல் நடந்த முதல் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரிடம் டில்லி வீழ்ந்தபின், இசுலாமியர் அனைவரையும் ஆங்கிலேய அரசு வேட்டையாட தொடங்கியது.

    இந்துக்களை கடுமையாக நடத்தியபோதும் கொலை செய்யும் அளவுக்கு போகவில்லை. இதனால் பல இசுலாமியர்கள் இந்துக்களாக மாறி வாழத் தொடங்கினர்.

    குறைந்தபட்சம் பெயரை மாற்றிக் கொண்டனர்.

    அப்படி மாற்றிக் கொண்டவர்களில் ஒருவர் தான் கியாசுதீன்.

    #கங்காதர்_நேரு என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

    செங்க்கோட்டைக்கு அருகில் இருந்த “நேரு” கால்வாய் பக்கம் அவர் வாழ்ந்து வந்ததால், அதனையே தனது குடும்பப் பெயராகவும் வைத்துக் கொண்டார்.

    மற்றபடி வேறு யாருக்கும் நேரு என்ற குடும்பப் பெயர் கிடையாது என்பது கவனித்துப் பார்த்தால் தெரியும்.

    உதாரணம், இந்திரா காந்தி

    . நேரு தன் மகளுக்கு கூட தன் குடும்பப் பெயரை வைக்கவில்லை.
    (ஏனெனில் அது அவர்களின் குடும்பப் பெயர் இல்லை. உயிர் பிழைக்க ஒரு வழி மட்டுமே).

    இப்படி பெயரை மாற்றி தான் ஒரு #காஷ்மீர்_பண்டிட் என ஆங்கிலேயரை நம்பவைத்து தப்பித்துக் கொண்டார்.

    நேரு பிறந்த இடத்தில் ஏன் அவருக்கு நினைவிடம் அமைக்கவில்லை?

    பலருக்கு அவர் ஆனந்த் பவனில் பிறந்தார் என்ற வரலாறு தான் சொல்லப்படுறது.

    ஆனால், அவர் பிறந்தது அலாகாபத்தில் உள்ள #மிர்கான்ச்.

    இந்த இடம் ஒரு சிவப்பு விளக்கு பகுதி எனவே நேருவிற்கு அவர் பிறந்த இடத்தில் நினைவிடம் கிடையாது.

    அவரது தந்தை மோதிலால் அதை விற்றுவிட்டு தான், தங்களது பூர்விக இடமான ஆனந்த் பவனில் குடியேரினார்.

    #இந்திரா_காந்தி

    உண்மையில் அவர் இயற்பெயர் இந்திரா. #காந்தி என்பதும் ஒரு வகையான ஏமாற்றுவேலை.

    இந்திரா ஆக்ஸ்பார்டு பல்கலைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, திறன்கள் அடிப்ப்டையில் பாதியிலேயே பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டார்.

    பின்னர் இந்தியாவில் சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தபோது நேருவின் வீட்டிற்கு மதுபானம் கொண்டுவரும் நவாப் கானின் மகன் #ஃபெரோஸ்கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    ஃபிரொஸ்கான் லண்டன் செல்லும்போது இந்திராவும் உடன் சென்றார்.

    இசுலாம் மததிற்கு மாறி #மைமுனாபேகம் என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டு ஃபெரொஸ் கானைத் திருமணம் செய்துகொண்டார்.

    தனது மகளின் #மதமாற்றம் தன் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் ஃபெரோஸ் கானை அழைத்து, தனது பெயரை ஃபெரோஸ் காந்தி என மாற்றிக் கொள்ள சொன்னார்.

    இப்படி பெயரை மாற்றிக் கொண்டதும், இந்திரா தனது கணவரின் கடைசி பெயரை சேர்த்ததும், நேரு குடும்பத்திற்கு காந்தி பெயர் வந்தது.

    இருவரும் இந்தியா வந்ததும் இந்தியர்களை ஏமாற்ற இந்திய வேத முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்யப்பட்டது.

    இந்திராவிற்கு ராஜிவ், சஞ்சய் என இரண்டு குழந்தைகள்.

    முதலில் #சஞ்சய் …

    இவரின் உண்மையான பெயர் #சஞ்சிவ்.

    இங்கிலாந்தில் ஒரு கார் திருட்டு வழக்கில் பிடிபட்ட இவரின் பாஸ்போர்ட் அந்நாட்டு காவல் துறையால் கைப்பற்ற்ப்பட்டது.

    இந்திராவின் தலையீட்டால், அப்போதைய இங்கிலாந்து தூதர் #கிருஷ்ணன்_மேனன், சஞ்சய் என்ற பெயரில் வேறு ஒரு கடவுச்சீட்டு தயார் செய்து இந்தியா அழைத்து வந்தார்.

    ராஜிவ் பிறந்தபின் இந்திராவும் ஃபெரோஸ் கானும் பிரிந்து வாழ்ந்தனர்.

    அவரது இரண்டாம் மகன் சஞ்சய்,

    மற்றொரு இசுலாமியரான #முகமதுயுனிஸ் (ஃபோட்டோவில் இடது ஓரத்தில் இருப்பவர்) என்பவருக்கு பிறந்தவர் என கூறப்படுகிறது.

    சஞ்சய் ஒரு சீக்கிய பெண்ணை(#மேனகாகாந்தி) திருமணம் செய்து கொண்டதும், திருமணம் நடந்தது கூட யுனிஸின் வீட்டில்.

    சஞ்சய் இந்திய அரசியலில் தனக்கென ஒரு நிழல் அரசாங்கத்தை அமைத்து நடத்திவந்தார்.

    இந்திராவை தனது உண்மையான தந்தை ரகசியத்தை வத்து பலமுறை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் மர்மமான முறையில் #விமான_விபத்தில் பலியானார்.

    அவரின் மரணம் இந்திராவின் கவனத்திற்கு வந்தபோது அவர் கேட்ட கேள்வி “சஞ்சய் கைகடிகாரம் கிடைத்ததா?” என்பதுதான்.

    அதில் தான் நேரு குடும்பத்தின் பல ரகசியங்கள் அடங்கியதாக கூறப்படுகிறது.

    ராஜிவ் காந்தி #காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் சேர்ந்து, குறைந்த மதிப்பெண்களுடன் பாதியிலேயே வெளியேரினார்.

    பின்னர் #இம்பீரியல் கல்லூரியிலும் இதே கதை தான்.

    கே.என்.ராவ் தனது புத்தகத்தில் , சோனியாவை திருமணம் செய்ய அவர் #கத்தோலிக்க மதத்திற்கு மாறியதாகவும் தனது பெயரை #ராபர்டோ என மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் #ரவுல், #பியங்கா.

    ராஜிவ் தனது நடத்தைகளில் அதிகளவு #இசுலாமியராக நடந்து கொள்வார்.

    செங்கோட்டையில் உரையாற்றும்போது, “300 வருடங்களுக்கு முன் நம் நாடு இருந்ததைப்போல நாம் மாற வேண்டும்.” என்றார்.

    பிரதமரானதும் #லண்டனில் “தான் ஒரு பார்சி” எனக் குறிப்பிட்டார்.

    இது எப்படியெனில், அவரின் தாத்தா #நவாப்கானின் மனைவி பார்சி இனத்தை சேர்ந்தவர்.

    நவாப் தனது மனைவியை இசுலாமியராக மாற்றி பின் திருமணம் செய்து கொண்டார்.

    ராஜிவ் தனது பாட்டியும், தனது கொள்ளுத் தாத்தா(கங்காதர்/கியாசுதீன்) வகையாரக்களை மனதில் வைத்து தன்னை ஒரு பார்சியாக வெளிப்படுத்தவதில் தான் ஆர்வம் கொண்டிருந்தார்.

    ஆனால் இந்தியர்களை ஏமாற்ற அவரது #இறுதி_சடங்குகள் இந்திய வேத முறைப்படி நடந்தன.

    சோனியா காந்தியின் உண்மையான பெயர்
    #அண்டொனியாமைனோ.

    காம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர் என கூறிக்கொண்டாலும், கல்லூரி கோப்புகளில் இவர் பெயர் கிடையாது.

    காம்பிரிட்ஜ் வாசலில் உள்ள ஒரு ஆங்கில திறன்பள்ளியில் சில காலம் ஆங்கிலம் கற்றுள்ளார்.

    ஆனால் வெளியில் தான் காம்பிரிட்ஜ்-ல் படித்தேன் என திரித்து பரப்பியுள்ளார்.

    இவரின் தந்தை நாசி படையினருக்கு உதவியதற்காக #ரஷ்யாவில் சிறையில் இருந்த காலத்தில் தன் குடும்பத் தேவைகளுக்காக சிற்றுண்டி கடைகளில் #பணிப்பென்ணாக வேலை பார்த்து வந்தார்.
    அப்போது ராஜிவுடன் ஏற்பட்ட பழக்கத்தில் இருவருக்கும்
    இடையே காதல் மலர்ந்தது.

    (சோனியா மாதவ் ராவ் சிந்தியாவிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும்
    இருவரும் ஒருமுறை அதிகாலை 2 மணியளவில் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமையில் பிடிபட்டதாகவும் சில ஊடகங்கள் வெளியிட்டன)

    பலமுறை டில்லி மற்றும் சென்னை விமான நிலையங்களில் இந்திய கோவில் சிலைகள் சுங்க சோதனைகளின்றி ரோம் நகருக்கு அனுப்பபட்டதும் அவைகள் அங்கு இவரின் தங்கை #மைனோவின்சி என்பவரின் கடையில் விற்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ளன.

    #மாதவ்ராவ்_சிந்தியா, #ராஜேஷ்பைலட் இருவரும் ராஜிவிற்கு பிரதமர் வேட்பாளர் போட்டியாக கட்சியில் செல்வாக்கோடு இருந்தவர்கள்.

    ஆனால் இருவரும் #மர்மமான_முறையில் கொல்லப்பட்டார்கள்.

    சோனியாவின் உறவினர்கள் ராஜிவை கொல்ல விடுதலைப்புலிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திதாக ஒரு கருத்தும் கூறப்படுகிறது.

    சோனியா 1992-ல் தனது கடவுச்சீட்டை இத்தாலிய குடியுறிமைப்படி புதுப்பித்துக் கொண்டார்.

    இத்தாலியருக்கு பிறந்ததால் ராகுல், ப்ரியங்கா இருவரும் இத்தாலிய குடிமக்கள் ஆனார்கள்.

    இப்பதிவில் முன்பே கூறியதைப் போல இவர்களின் உண்மையான பெயர்கள் ரவுல் மற்றும் பியங்கா(இத்தாலிய பெயர்கள்).

    இந்தியா வந்தவுடன் ஒரே மாதிரியாக ஒலிக்கும் பெயராக #ராகுல், #ப்ரியங்கா என வைத்துக்கொண்டனர்.

    இருவரிடமும் இருப்பது இத்தாலிய கடவுச்சீட்டுகளே.

    பயணம் செய்ய அதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

    ராகுல் 1992-ல் டில்லியில் உள்ள #ஸ்டீபன்_கல்லூரியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் விளையாட்டு கோட்டவில் தான் இடம் வாங்கினார்.

    அதையும் முழுதாக முடிக்காமல் , #ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து “B.A” படித்தார்.
    (அந்த “B.A” இங்கேயே படித்திருக்கலாமே.) பின் 1995-ல் ட்ரினிடி கல்லூரியில் “M.Phil” பட்டம் பெற்றர், அதுவும் நேரிடையாக “B.A” பின் “M.Phil”.( நடுவில் “M.A” முடிக்க வேண்டும் என்று தலைவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்.)

    ஒரு முறை இவர் இத்தாலிய கடவுச்சீட்டில் வருவது செல்லாது என பாஸ்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிறகு வழக்கம்போல் இங்கிருந்து தூதர் இந்திய கடவுச்சீட்டில் வெளியே அழைத்துவந்தார்.

    (26/11 அன்று நாடு பற்றிக் கொண்டு எரிந்த போது தலைவர் தன் சக்ககளுடன் 5-நட்சத்திர விடுதியில் இருந்தார்.)

    வெளிநாட்டு குடிமக்கள் நம் நாட்டில் எந்த அரசியல் கட்சியிலும் சேர முடியாது, தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் போட்டால் முதலில் வெளியேறும் குடும்பம் நேரு குடும்பமாகத்தான் இருக்கும்.

    (விமான விபத்தில் தப்பிய நேதாஜியை இந்தியாவில் நுழைய விடாமல் ரஷ்ய சிறையில் தள்ளிய தேசத்துரோகி நேரு என்பதை
    சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட ஆவணங்கள் மூலம் அறியலாம்.)

    இந்தப் பதிவின் சுருக்கம் இதுதான்!

    நேரு முதல் ராஜிவ் வரை காங்கிரஸ் ஆட்சி முஸ்லிம்களின் முகலாயர்கள் ஆட்சியாக நடந்தது.

    சோனியா தலைவரான பின் நடந்த காங்கிரஸ் ஆட்சி கிறிஸ்தவ இத்தாலி ரோம் ஆட்சியாக நடந்தது.
    இதுவே உண்மை!

    More details..

    https://www.speakingtree.in/blog/hidden-facts-about-gandhi-nehru-family

    https://archive.org/details/ReminiscencesOfTheNehruAgeBy-m-o-mathai

  17. திருச்சி அருகே இறந்தவர் உயிரோடு வர‌ 6 நாட்களாக பிணத்துடன் பிரார்த்தித்த கிறிஸ்தவர்கள் : செய்தி

    இம்மாதிரி பரிதாபமான காமெடிகளுக்கு முதல் காரணம் கிறிஸ்தவ கும்பல் செய்யும் “இயேசு இறந்தவர்களை உயிரோடு எழுப்புவார், காரணம் அவர் உயிர்த்த தெய்வம்” என அந்த கும்பல் செய்யும் மடதனமான மூளை சலவையே

    கிறிஸ்து உயிரோடு எழும்பினாரா இல்லையா எனும் சர்ச்சைக்குள் நாம் செல்லவில்லை, அது நம்பிக்கை சார்ந்தது

    ஆனால் யூதரிடம் இக்காலம் வரை சில கேள்விகள் உண்டு அதற்கு எந்த கிறிஸ்தவ கொம்பனிடம் பதிலே இல்லை

    “சிலுவையில் ஊர் அறிய கொல்லபட்ட இயேசு, உயிர்த்தபின் அதேபோல் ஜெருசலேமில் கம்பீரமாக அமர்ந்திருந்தால் சிக்கலே இல்லையே, ஆனால் அவர் அப்படி வரவில்லையே ஏன்?

    அவர் உயிர்த்தது நிஜமானால் உயிரோடு வந்து பிலாத்து, அன்னாஸ், கைப்பாஸ், ஏரோது என தன்னை கொல்ல உத்தரவிட்டவர் முன் கம்பீரமாக நின்றிருக்கலாமே, நிற்கவில்லையே ஏன்?

    அவர் கல்லறையினை புரட்டி போட்டது வானதூதன் என சொல்கின்றது பைபிள், ஏன் இயேசு புரட்டவே இல்லை?

    உயிர்த்தாக நீங்கள் சொல்லும் இயேசு ஏன் ஜெருசலேமில் அதன் பின் நடமாடவில்லை போதிக்கவில்லை” என யூதரின் கேள்விக்கெல்லாம் இரண்டாயிரம் ஆண்டாக பதிலே இல்லை

    இந்த கேள்வி கேட்டதற்குத்தான் ரோமையரில் இருந்து ஹிட்லர் வரை யூதர்களை போட்டு சாத்தினார்கள், பரிதாபம்

    உலகில் எந்த நாட்டு இனமும் இயேசு உயிரோடு தோன்றியதை அதிசயமாக பார்த்தாலோ இல்லை இறந்தவர் உயிரோடு வந்ததை கண்டாலோ அதிசயமாக காணலாம்

    ஆனால் ஞானத்திலும் யோக வித்தையிலும் மிக தேர்ந்த இந்து சன்னியாசிகள் வாழும் நாட்டில், அடிக்கடி அவர்கள் அரூபியாகவும் மானிட உருவிலும் காட்சி கொடுக்கும் நாட்டில் எங்கோ மேற்காசியாவில் கிறிஸ்து ஒருவர்தான் உயிரோடு வந்தார் என்பதை அதிசயமாக காண்பதுதான் மாபெரும் விசித்திரம்

    இந்தியாவில் இல்லா சித்தர்கள் இல்லை, ஞானியர் இல்லை

    இமயத்தின் பாபா தொடங்கி, யோகானந்த பரமஹம்சர் தொடங்கி தென்னகத்தின் நேரூர் சித்தர், அகத்தியர், நெல்லை மாவட்டத்தின் பிரதான சித்தர்களெல்லாம் இறந்தபின்பும் எங்கெல்லாமோ தோன்றினார்கள்

    ஆனால் அவர்களெல்லாம் உயிர்த்தெழுந்தார்கள் என இந்துக்கள் ஓலமிடவில்லை, கத்தவில்லை, ஆர்பாட்டம் செய்யவில்லை

    மானிட உடல் அழிய கூடியது, ஆனால் ஆன்மா அழியாதது, அதுவும் இறைவனில் கலந்துவிட்ட சக்திமிக்க ஆன்மா எல்லா வகை சக்திகளையும் பெற்ற ஒன்று தெய்வம் போல் அதனால் தோன்றமுடியும் மறைய முடியும் நினைத்த வடிவில் தோன்றமுடியும் என்பதை உணர்ந்தது

    பல்லாயிரம் ஆண்டு இந்து பாரம்பரியத்தில் சித்தர்கள் இறப்பதும் பின் அவர்கள் அரூபியாய் தோன்றுவதும் சாதாரணம்

    ஆனால் மேற்காசியாவில் இது புதிது, அதுவும் ஒருமாதிரியான மார்க்கமான யூத மதத்துக்கு இது முற்றிலும் புதிது, அதில் இயேசுவின் ஆன்ம தரிசனத்தை அவர்கள் வியந்து கொண்டாடினார்கள்

    இதை ஐரோப்பா கொண்டாடலாம், ஆப்ரிக்கா கொண்டாலலாம், 500 வயதான அமெரிக்கா கொண்டாடலாம்

    ஆனால் பல்லாயிர வருட பாரம்பரியமும், வெட்டி போட்டாலும் கையினை ஒட்ட வைத்து அவர்போக்கில் நடந்த நேரூர் சதாசிவ பிரம்மேந்திரர் வரை எத்தனையோ நம்பவியலாத சம்பபங்களை செய்த, டெல்லியில் சுல்தான் முன் சிங்கத்தில் அமர்ந்து உருது மொழியில் வாதம் செய்த குமரகுருபரர் போல் எத்தனையோ மகான்களை கண்ட தேசத்தில்

    இமயத்தில் தமிழக மலைகளில் இன்றும் பக்தர்முன் தோன்றும் சித்தர்கள் வசிக்கும் தேசத்தில் இயேசுதான் இறந்தபின் மறுபடியும் தோன்றிய ஒரே ஒருவர் என்பதெல்லாம் உச்சகட்ட காமெடி

    ஆனால் அந்த காமெடி இங்கு அதிதீவிர மூளைச்சலவை செய்யபட இந்துக்கள் தங்களின் மதம் பற்றியும் ஆன்மீக கலாச்சாரம் பற்றியும் தெரியாமல் போனதே அந்த அறியாமைதான் முதல் காரணம்

    சுவாமி விவேகானந்தர் இந்த அறியாமையினைத்தான் நீக்க விரும்பினார், இந்த தெளிவு ஏற்பட்டால் ஒரு இந்து தன் ஆன்மீக கலாச்சார வேரை உணர்ந்தால் அவன் சிந்தனை தெளியும் அவன் மோசடியில் ஏமாறமாட்டான் என தெளிவாக உணர்ந்து சொன்னார்

    இந்துமதம் சில யதார்த்தங்களை போதித்தது, அது மரணம் தவிர்க்கமுடியாது என்பதையும் எந்த மகானோ, பக்தனோ, எவனோ ஆயினும் பூலோக விதிபடி தன் உடலை உதிர்க்க ஒரு காலம் உண்டு, அதை ஏற்றுகொள்ள வலியுறுத்தியது

    இறந்தவன் இனி எழுவதே இல்லை என சொல்லத்தான் அது உடலை சுட்டெரிக்க சொன்னது, அந்த சாம்பலில் உண்மையினை முகத்தில் அறைந்து உணர்த்தியது

    எது தவிர்க்கமுடியாதோ அதை ஏற்றுகொள்ள சொன்னது இந்துமதம்

    அது மாய வேலைகள் செய்து மயக்காது, பொய்களை சொல்லி குழப்பாது, பிறந்தவன் சாகவே மாட்டான் என போதிக்காது

    இயேசு யாரையோ உயிர்பித்தார், இயேசு சாவை வென்றார் என கிறிஸ்தவ மேடைகளில் முழங்கும் முன்னாள் இந்துக்களின் தமிழக வாரிசுகளான அந்த போதகர்கள் பரிதாபத்துகுரியவர்கள்

    இயேசு எங்கோ யாரையோ உயிர்பித்தது இருக்கட்டும், தமிழக சைவ வரலாறு சொல்வதென்ன?

    இங்கு திருஞான சம்பந்தர் சாம்பலில் இருந்து பெண்ணை உயிர்பித்தார், திருநாவுக்கரசர் பாம்புகடித்து செத்தவனையே உயிரோடு எழுப்பினார்

    சுந்தரர் மகா அதிசயமாக முதலை விழுங்கிய சிறுவனை அதுவும் அந்த முதலையே மறைந்து குளமே வற்றிவிட்ட நிலையிலும் அதிசயமாக குளம் தோன்ற வைத்து, முதலைவரவைத்து பின் அந்த முதலையே அந்த சிறுவனை உயிரோடு துப்ப செய்தார்

    இயேசு செய்த அதிசயங்களை விட மகா அதிசயங்கள் நிகழ்ந்த மண் இது, அதையெல்லாம் முன்னாள் இந்துக்கள் மறந்து இந்நாள் கிறிஸ்துவர்களாக அலறுவதெல்லாம் காலத்தின் கோலம்

    உண்மையில் இறந்தவர் வரமுடியுமா என்றால் பிரபஞ்ச சக்தியால் அது முடியும், ஆனால் அது செத்தவனுக்காக அல்ல செத்தவனுக்காக எந்த உத்தம பக்தன் அழுவானோ அவனுக்காக‌

    அவனின் பக்தியும் கடவுளில் கலந்த அந்த பக்த மனதினை தெய்வம் உலகறிய பெருமைபடுத்துவதற்காக‌

    அது ஒன்றுக்குத்தான் இந்த அதிசயம் நடக்குமே தவிர, எல்லாருக்காகவும் எல்லா நேரத்திற்காகவும் அல்ல, அப்படி நடந்தால் இறைவனின் ரகசியம் வீணானது என பொருள் அதை அந்த பரம்சக்தி அனுமதிக்காது

    சாவித்திரியின் பக்தியில் சத்தியவான் மீண்டான். நாயன்மார்களின் பக்தியில் சென்றவர்கள் திரும்பினர்

    ஆனால் என்னாயிற்று? காலம் காலமாக யார் வாழ்ந்தார்கள்? ஒருவருமில்லை

    அந்த பரம்சக்தி தன்னை நம்பிய பக்தனுக்காக ஒரு அதிசயத்தை உலகறிய செய்கின்றது, பின் எது யதார்த்தமோ அதை ஏற்றுகொள்ள சொல்கின்றது

    இந்துமதம் மானிட வாழ்வில் ஒரு தோழனாக ஆசானாக குருவாக வரும் மதம். அதை படித்தாலோ உணர்ந்தாலோ ஆறுதல் கோடி வரும்

    அதை விடுத்து அதனை மறந்து அந்நிய ஆன்மீக தர்மத்தின் பக்கம் சென்றால் இப்படித்தான் மனம் குழம்பி பைத்தியகார நிலைக்கு செல்லும்

    தமிழக மக்கள் தாங்கள் இந்து என்பதை அறியாமலும், இந்து தர்மத்தின் ஞானவழிகளை புரியாமலும் அறியாமையில் சிக்கி இருப்பதை பயன்படுத்தி அந்த அப்பாவி ஆடுகளை இப்படி பைத்தியமாக்குகின்றன கிறிஸ்தவ பிழைப்புவாத ஓநாய்கள்

    மேய்ப்பன் இல்லா ஆடுகளான இந்துமக்கள் அந்த ஓநாய்களால் குதறபடுகின்றனர், அந்த ஆடுகளுக்கு ஒரு மேய்ப்பன் கண்ணன் போல் வராமல் இந்த ஓநாய்கள் தொல்லை அடங்காது.

    விரைவில் இந்து மந்தைக்கு நல்மேய்பன் வரட்டும், இந்த ஓநாய்களை அடித்து தலைகீழாய் தொங்கவிடட்டும்

  18. ஏர் இந்தியா நிறுவணம் டாடாவினால் தொடங்கபட்டது நல்ல முறையில்தான் இயங்கிற்று, அதை வலியபிடுங்கினார் நேரு அதன் பின் அந்த ஏர் இந்தியா அரசுடமை ஆயிற்று

    தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவினை தலைமுழுகிவிட்டது இந்திய அரசு, மறுபடி அதை டாடாவிடமே தள்ளிவிட்டது

    இனியாவது ஏர் இந்தியாவில் புளிசோறு இருக்காது, அவ்வப்போது பாம்பு மற்றும் எலிகள் ஓடாது, ஏர் ஹோஸ்டர் பெண்கள் இளம் வயதினராக இருப்பார்கள் என நம்புவோம்

    தமிழகத்தில் முன்பு நிறைய பஸ் போக்குவரத்து கழங்கங்கள் இருந்தன, டிவிஎஸ் பயனோரியர் போன்ற பல நிறுவணங்கள் இருந்தன சேவை சிறந்து இருந்தது

    பிராமணர் எனும் வகையில் டிவிஎஸ் குறிவைக்கபட்டு அதன் பேருந்துகளெல்லாம் அரசுடமையாயின, நெல்லுக்கு விழுந்த அறுவடையில் மற்ற செடிகளும் மாட்டின‌

    (இதையெல்லாம் அரசுடமையாக்கிய கருணாநிதி அரசு அதன் பின் பர்வீன் டிரான்ஸ்போர்ட், பேரின்பவிலாஸ், எஸ்.ஆர்.எம் இன்னும் பல வகை தனியார் சொகுசு பேருந்து மற்றும் மினி பஸ்களை ஏன் இயக்க அனுமதி கொடுத்தது என்றால் அதுதான் திராவிடம்)

    இப்பொழுது தமிழக அரசு போக்குவரத்து கழகமும் கடும் நஷ்டத்தில்தான் இயங்குகின்றது, ஏர் இந்தியா வழியே இதுவும் மறுபடி டிவிஎஸ் கம்பெனியிடம் ஒப்படைக்கபடுமா என தெரியவில்லை, விரைவில் நடந்தால் நல்லது

    ஏர் இந்தியா டாடா என பொங்கும் உபிக்கள், கொஞ்சம் தமிழக போக்குவரத்து துறை நிலையினையும் அதன் கடந்த காலத்தையும் புரட்டி பார்த்தால் நல்லது

  19. இந்த திமுகவினர் அடிக்கடி சொல்லும் விஷயம், சங்கரலிங்கம் என்றொரு தியாகி இருந்தார், தமிழ் உணர்வாளர் அவர் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார், காமராஜர் ஈவிரக்கம் இன்றி அவரை கொன்றார் என்பதாகும்

    உண்மையில் இது மகா மோசடி, இதுபற்றி இன்னொரு தகவல் உண்டு. அரு.சங்கர் எழுதிய “பெருந்தலைவர் காமராசர்” எனும் நூல் இப்படி சொல்கின்றது

    சங்கரலிங்கம் இந்தி படித்தால்தான் தமிழன் அகில இந்திய அளவில் நன்னிலை அடைய முடியும் என்பதில் உறுதியாய் இருந்தார்

    ராஜாஜி மேல் அவருக்கு பற்று அதிகம். சங்கரலிங்கத்தின் மகள் திருமணமே 1931ல் நடந்திருக்கின்றது

    அப்படி ஒரு தேசாபிமானி சங்கரலிங்கம்
    1944ல் சங்கரலிங்கம் வாழ்வு தடம்மாறுகின்றது, மும்பையில் அவர் மகன் இறந்துவிடுகின்றான்.

    அத்தோடு மனைவியோடும் மகளோடும் உறவை அறுக்கும் சங்கரலிங்கம் ஒரு மாதிரி மனமுடைந்து சந்நியாச கோலத்துக்கு வருகின்றார்.

    தன் பணம் ஐந்தாயிரத்தை பெண்கள் கல்விக்கு கொடுத்துவிட்டு தன் சொந்த ஊரான விருந்துநகருக்கு அன்மைய கிராமமான மண்மலைமேடு எனும் ஊருக்கு வருகின்றார்.

    அங்கு 1956ல் ஒரு தானியகடை திறக்கின்றார், அந்த கடை ஒரு நள்ளிரவில் கொள்ளையடிக்கபடுகின்றது, மனமுடைந்த சங்கரலிங்கம் பட்டிணி போராட்டத்தை தொடங்குகின்றார், அவர் சுய அறிவில் எழுதிய கோரிக்கைகள் நான்கு

    1) நாட்டை ஆள்வோர் ஆடம்பரமின்றி காமராஜர் போல் எளிய வாழ்வினை காந்தி வழியில் தொடர வேண்டும்

    2) அரசு ஊழியர் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும்

    3) தமிழ்நாட்டு பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்க பட வேண்டும்

    4) தன் சொந்த கடையில் காணாமல் போன பொருளுக்காய் நீதி வேண்டும்,

    இந்நாட்டுக்காய் தான் தொடர்ந்து உழைக்க அந்த நீதி வேண்டும்

    இவை நாலும்தான் அவரின் உண்மையான கோரிக்கைகள், இதில் தமிழ்நாடு எனும் பெயர் கோரிக்கையே இல்லை.

    அவரின் கோரிக்கையினை யாரும் லட்சியம் செய்யவில்லை.

    அந்நேரம் நாம் தமிழர் போல் சுற்றிகொண்டிருந்த அனாமயதேய கோஷ்டியான திராவிட புலிகள் அவரிடம் சென்று, இங்கே இருந்தால் உங்களை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் , நகருக்குள் வாருங்கள் என அழைத்து ஓலை பந்தல் போட்டு அவரை விருதுநகர் அம்மன் கோவில் பக்கம் அமர வைத்துவிட்டது

    அத்தோடு 4 கோரிக்கையினை வைத்து அவரை பந்தலுக்குள் போட்டது

    அவர் பந்தலுக்குள் கிடக்க, இவர்கள் 4 கோரிக்கைக்கும் மேல் அவர்களாக எழுதி கொண்டே போனார்கள்.

    சந்தண வீரப்பன் கோரிக்கை காட்டைவிட்டு வெளிவரும் பொழுது குட்டி போடுவது போல, ஜல்லிகட்டுக்கான‌ மெரீனா போராட்டத்தின் கடைசியில் பலவகையான “குபீர்” கோரிக்கைகள் வந்தது போல அங்கும் வந்தது

    சங்கரலிங்கம் நினைவிழக்க, இங்கு கோரிக்கைகளின் எண்ணிக்கை கூடி, 70ம் கோரிக்கையாக வந்ததுதான் “சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு” என பெயர் சூட்டபட வேண்டும் இந்தி ஒழிக்கபட வேண்டும்” என்பது

    ஆம், 70 நாட்கள் போராட்டம் நடத்தினார் சங்கரலிங்கம், நாளுக்கொரு கோரிக்கையாக இவர்களே எழுதி கடைசியாக தமிழ்நாடு பெயர்மாற்றம் என எழுதிய அன்று செத்துவிட்டார் சங்கரலிங்கம்

    இல்லையென்றால் தனி தமிழ்நாடு என்ற கோரிக்கை 71ம் நாள் எழுதபட்டிருக்கும்

    ஆக சங்கரலிங்கனாரின் உண்மை கோரிக்கை என்ன? இந்த திராவிட கும்பல்கள் கிளப்பிவிட்ட அரசியல் என்ன என்பதை இனி நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

    காமராஜர் ஏன் தயங்கினார் என்றால் சங்கரலிங்கம் ஒரு நாடார், போராட்டம் நடந்தது காமராஜரின் சொந்த ஊரில், இது போக கோரிக்கை எழுதியதெல்லாம் தேச விரோத கும்பல்

    இதில் காமராஜர் எப்படி தலையிட முடியும்? அதுவும் 70 கோரிக்கைகள்

    ஆக சங்கரலிங்கம் இந்தி வேண்டும் என சொன்னது மறைக்கபட்டது, அவரின் தேசியம் மறைக்கபட்டது.
    அவரின் வறுமை மறைக்கபட்டு, இவர்களாகவே எழுதிய 70 கோரிக்கையாக எழுந்த , சங்கரலிங்கம் கனவிலும் சொல்லாத “சென்னை மாகாணம் தமிழ்நாடு பெயர்மாற்றம்” என்பது ஊதிபெருக்கபட்டு , காமராஜர்மேல் பழி போடபட்டு , சங்கரலிங்கனார் கனவினை அண்ணா நிறைவேற்றினார் என இல்லா பொய்களோடு வரலாறுகளை சொல்லி கொண்டே இருக்கின்றார்கள்.

    வரலாற்றை திருத்துவதில் தங்களுக்கு ஏற்ப வளைப்பதில் அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம், வரலாற்று திரிபுக்கே ஒரு கட்சி நடத்தபடுகின்றது என்றால் அது திமுக ஒன்றுதான்.

    இதில் ஆச்சரியம் என்னவென்றால் தன் பெயரில் தமிழ்நாடு எனும் கோரிக்கை எழுப்பபட்டது என்பது அவருக்கு கடைசிவரை தெரியவே இல்லை என்பதுதான்

  20. இந்த அரசு இந்து ஆலயங்களை புனிதமான ஆலயமாக எண்ணாமல் ஏதோ பெட்ரோலிய நிறுவணங்களை போல நடத்த தொடங்கிவிட்டது, இது ஒன்றும் ஆச்சரியமல்ல அவர்கள் கொள்கை அப்படித்தான்

    முன்பு தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதியமைச்சர், அதே போல் ஒரு அறிக்கையினை வெளியிட்டார் இந்து அறநிலையதுறை அமைச்சர்

    எவ்வளவு கோவில்கள் உண்டு, அதற்கு எவ்வளவு நிலங்கள் உண்டு இணையத்தில் காணலாம் என சொன்ன அமைச்சர் அந்த அறிக்கையில் கோவில் தங்கம் எவ்வளவு என சொல்லவே இல்லை.

    இப்பொழுது தங்கம் உருக்கும் திட்டம் எதிர்ப்புகளை மீறி செயல்படுத்தபடுகின்றது, அதிகாரம் அவர்கள் கையில் இருப்பதால் அதை அவர்கள் செய்கின்றார்கள், மத்திய அரசோ இதர உச்ச பீடங்களோ இதையெல்லாம் கவனிக்கவே இல்லை, ஏன் என்பதுதான் தெரியவில்லை

    இதுவே ராமர்கோவில் தங்கம், சோமநாதபுரி தங்கமென்றால் நிச்சயம் பொங்குவார்கள், தமிழக ஆலயம் பற்றி அவர்களுக்கு அவ்வளவு அக்கறை இல்லை போலிருக்கின்றது

    ஆக, தமிழக இந்துக்களுக்கு நாதி இல்லா நிலையில் அந்த அபலையான பரிதாப இனத்தின் கண்ணீர் கோரிக்கை இதுதான்

    தமிழக கோவில் தங்கத்தின் மொத்த கையிருப்பு எவ்வளவு? இதுகாலம் உருக்கிய தங்கம் எங்கே டெப்பாசிட் செய்யபட்டிருகின்றது? அதன் வருமானம் என்ன?

    உருக்கிய நகைகளின் வைரம் போன்ற கற்கள் என்னாயின?

    இப்பொழுது எவ்வளவு உருக்க போகின்றார்கள், எங்கே டெப்பாசிட் செய்வார்கள், இதில் எவ்வளவு வருமானம் பெறுவார்கள்?

    மன்னர் கால கலைநகைகளை உருக்கினார்களா? அப்படி உருக்கினால் அதில் இருந்த வைரமும், மாணிக்கமும் என்ன ஆனது?

    சரி, இப்படியெல்லாம் தங்கம் உருக்கி வருமானம் தேட என்ன அவசியம்? என்ன செலவு? செலவழிக்க பணமில்லை என்றால் கோவில்களை மக்களிடமே கொடுக்கலாமே, நகையினை விற்று நிர்வகிக்க ஏன் அரசு வேண்டும்?

    இதுபற்றியெல்லாம் ஒரு வெள்ளை அறிக்கை கொடுப்பார்களா?

    கேட்பது நம் கடமை கேட்டுவிட்டோம், நிச்சயம் இவர்கள் சொல்லபோவதே இல்லை அதை ஆலயங்களின் உரிமையாளர்களான தெய்வங்களாவது கேட்டு கொள்ளட்டும்

  21. நேற்று இந்தியா உலகினை மிரள வைக்கும் திட்டம் ஒன்றை முறையாக அறிவித்துள்ளது, இது வெளியே சாதரண திட்டமாக தெரிந்தாலும் கொடுக்கபோகும் விளைவுகள் மிக முக்கியமானவை

    இந்தியா தன் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விண்வெளிதுறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கின்றது, இத்திட்டம் Indian Space Association (ISpA) என அழைப்பபடும்

    இதில் தனியார்கள் அரச அனுமதியுடன் விண்வெளி ஓடங்கள், செயற்கை கோள்கள் இன்னும் பல விஷயங்களை செய்யலாம், பறக்கவிடலாம்

    இது பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு பலனளிக்கும், இந்தியா விண்வெளி பலத்தில் முதல் 5 இடங்களுக்குள் வரும் நாடு என்பதால் ஏராளமான நாடுகளும் கம்பெனிகளும் இனி இந்தியாவில் இத்தொழிலில் ஆர்வம் காட்டும், வேலை வாய்ப்பும் தொழில்நுட்பமும் பெருகும்

    அமெரிக்க ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவணங்கள் இந்தியாவிலும் வளரும், எதிர்காலத்தில் வெளிநாடுகளின் எந்த வளர்ச்சிக்கும் குறையா வளர்ச்சி இந்தியாவில் வரும்

    மகா முக்கியமான விஷயம் ராக்கெட் நுணுக்கங்களில் புது புது ஆய்வுகள் வர வர அவை ஏவுகனை போர் விமானம் இன்னும் வான்வெளி பலத்துக்கு பயன்படும்

    அமெரிக்காவின் லாக்ஹீன் மார்ட்டின் போன்ற நிறுவணங்கள் இங்கே உருவாகும். 6ம் தலைமுறை விமானம் ராக்கெட் ஏவுகனை ஏவுகனை தடுப்ப்பு இவை இனி இந்தியாவிலே செய்ய வாய்ப்புகள் பிரகாசமாக உண்டு

    இதில் ஒரு சில கேள்விகள் எழலாம், இந்த தொழில்நுட்பம் இதர நாடுகளுக்கு கடத்தபடாதா என்பது

    அமெரிக்காவின் லாக்ஹீன் மார்ட்டின் நிறுவண நுட்பமோ இல்லை ஸ்பேஸ் எக்ஸ் நுட்பமோ சீனாவாலும் ரஷ்யாவாலும் திருட முடியுமா? முடியாது

    காரணம் மொத்த முழு பாதுகாப்பும் தொழில்நுட்பமும் அரச கண்காணிப்பில் இருக்கும், யாரும் எதையும் கடத்த முடியாது

    மோடி அறிவித்திருக்கும் ISpA திட்டம் உலக அரங்கில் வான்வெளியில் இந்திய பலத்தை உயர்த்தி அந்த ஆய்வுகள் இந்திய ராணுவத்துக்கும் தேச பாதுகாப்புக்கும் வளங்களை வழங்கி இன்னும் பொருளாதாரத்துக்கும் பெரும் வாய்ப்பினை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை

    மிக சரியான திட்டத்தை செய்திருக்கும் மோடிக்கு வாழ்த்துக்கள்

    தேசம் புதிய உலகில் கால் வைக்கின்றது, மிக பெரிய வான்வெளி விஞ்ஞான புரட்சிக்கு இந்தியாவினை அழைத்து செல்கின்றது மோடி அரசு

    ஆனால் உபியும் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கோஷ்டிகளும் மோடி விண்வெளியினை விற்றுவிட்டார் என கூப்பாடு போடத்தான் செய்வார்கள், காரணம் தேசத்தையும் தேச நலன்களையும் விற்பது ஒன்றே அவர்களுக்கு தெரிந்தது என்பதால் அதையேதான் சொல்வார்கள்

    ஆனால் நாளையே இத்தாலி கம்பெனி இந்தியாவில் வந்து ராக்கெட் செய்யட்டும் சத்தம் வராது, கியூப அரச கம்பெனி வரட்டும் சத்தமே வராது

    சன் குழுமத்தின் கலாநிதி மாறன் கனரக தொழிலில் இறங்கி ராக்கெட்டுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கட்டும் கொஞ்சமும் சத்தம் வராது

    அட அவ்வளவு ஏன்? விரைவில் இந்தியாவில் விண்வெளி சுற்றுலா திட்டம் இங்கே தொழில் செய்யும் பன்னாட்டு கம்பெனியால் அறிவிக்கபட்டால், அந்த அறிவிப்பினை நல்ல விலைக்கு விளம்பரபடுத்துவது யாரென்றால் கலைஞர் டிவியும் சன் டிவியுமாகத்தான் இருக்கும்

    இன்னும் அந்த திட்டத்தில் உபியும் திராவிட கும்பலும் விண்வெளி சுற்றுலாவெல்லாம் செல்வார்கள், ஏன் என கேட்டால் “கடவுளை வானத்தில் தேட போகின்றேன், ஏனென்றால் நான் பகுத்தறிவாளன்” என சிரிக்காமல் சொல்வார்கள்

  22. மானிட வாழ்வில் கல்வி கலைகள் முக்கியம் என்றும் அதனால் உருவாகும் செல்வம் முக்கியம் என கவனித்த இந்துமதம் அதை காக்க வீரம் மகா அவசியம் என்பதை உணர்ந்தது

    அணை இல்லா நதியும், வேலி இல்லா பயிறும், காவல் இல்லா செல்வமும் வீணாகும் என்பதை அது உணர்ந்திருந்தது

    இதனால் கல்வி, செல்வம் போலவே வீரமும் தைரியமும் மகா அவசியம் என சொன்ன மதம் அதற்கொரு தெய்வத்தினையும் சொன்னது

    மானிட உலகில் எல்லோரும் வீரர்களாவதில்லை, எல்லோருக்கும் துணிவும் தைரியமும் வாய்ப்பதில்லை. எவன் துணிந்து எழுகின்றானோ, எவன் தன் சக்தியெல்லாம் காவலுக்கும் ஆபத்துகளை எதிர்கொள்ளவும் பயன்படுத்துகின்றானோ, எவன் சாவுக்கு துணிகின்றானோ அவனுக்கு தனி தெய்வ அனுகிரகம் இருப்பதை ஞானியர் உணர்ந்து அதற்குரிய தெய்வ அருளை சொன்னார்கள்

    கோள்களின் சஞ்சாரத்தில் செவ்வாய் கிரகம் காவலுக்கான கிரகம் என்றார்கள், ரத்தத்தில் புஷ்டியும் வேகமும் கொண்டவர்கள் துணிவும் வீரமும் கொண்டவர்களாய் இருப்பார்கள், செவ்வாய் எனும் சிவப்பு கிரஹம் அதற்கு அனுக்கிரஹம் செய்யும் என வானியல் சாஸ்திரத்திலும் கணித்தனர்

    போர் தெய்வங்களுக்கெல்லாம் இதனாலே செவ்வாய் உகந்த நாளாயிற்று முருகன் முதல் பல தெய்வங்களுக்கு அந்த நாள் உகந்தது என சொல்லும் தத்துவம் இதுதான்

    எல்லா வீரமும் ஒரு மூல சக்தியிடம் இருந்து வருவதை உணர்ந்த இதுமதம் முருகனுக்கு வேல் கொடுத்தது முதல் தானே வந்து அரக்கர்களை அழித்தது வரை கவனித்து அந்த மூல சக்தியினை பராசக்தி என்றது, பார்வதி அவள் அம்சம் என்றது

    வீரத்துக்கும் காவலுக்கும் முதல் தகுதி வலுவான உடலும் தைரியமான மனமும்

    மானிடர் இந்த வலுவான உடலையும் மனதையும் பெற மலைமேல் பார்வதிக்கு கோவில் அமைதார்கள், அந்த மலையில் ஏறி இறங்கி காட்டு மிருகங்களுக்கு அஞ்சாமல் செல்ல பழகினால் மன வலிமையும் உடல் வலிமையும் எளிதில் வரும் எனும் ஏற்பாடு அது

    மலைமகள் என வீரத்துக்கான அன்னை பெயர் பெற்றது இப்படித்தான். மலை என்பது உறுதியானது காவலானது எனும் தத்துவகுறியீடும் அதில் அடங்கியிருந்தது.

    மானிட சுபாவத்தை இந்துமதம் முழுக்க அறிந்திருந்தது, எல்லா மனிதரும் நல்லவர்கள் அல்ல மனிதரில் வஞ்சகர் உண்டு, பேராசையும் ஆணவமும் அகங்காரிகளும் எல்லாம் தனக்கே என கொண்டாடும் கொடியவர்கள் உண்டு. மாயையும் பேராசையும் பெற்றெடுத்து அகங்கார தொட்டிலில் வளர்ந்த அவர்கள் யார் தங்கள் பலத்தால் எல்லா மானிடரையும் அடிமைபடுத்தி கொடுமை செய்வார்கள், நல்லோரும் எல்லோரும் அவர்களால் மிகுந்தை கொடுமைக்கு உள்ளாவார்கள்

    இதை தடுக்க வீரம் அவசியம் என சொன்ன இந்துமதம், வீரத்தையும் ஒரு வழிபாடாக்கி அதற்கு தெய்வங்களையும் கொடுத்தது

    போர் என்பது ரத்தமும் சதையும் குவியும் இடம், ஆயுதம் ஏந்தி உக்கிர தாண்டவமாடி தீர வேண்டிய இடம்.

    ஆயுதம் ஏந்தாமலும் ரத்தம் சதையினை தாண்டாமலும் இன்னும் மிகபெரிய மனவலிமையோடு இவற்றை எல்லாம் கடக்காதவனும் வீரனாக முடியாது, வெற்றிகளை பெற முடியாது, காவல் செய்ய முடியாது

    இதனால் உக்கிரமான தெய்வங்களை போர் தெய்வங்கள் என்றார்கள். அவை சிம்மம் புலி இவற்றில் அமர்ந்திருப்பதாய் இன்னும் உக்கிர காட்சிகளை கொடுத்தார்கள், அவர்களை வழிபட்டால் வெல்லமுடியாத பலமிக்க விலங்குகளை போல பாயும் வலிமை கிடைக்கும் என்றார்கள்

    வீரன் தன் பெயராலும் கர்ஜனையாலுமே எதிரிகளை மிரள வைப்பான், அதற்கான வல்லமையினை அன்னை தருவாள் என உணர்ந்து வழிபட சொன்னார்கள்

    இந்து உக்கிர தெய்வங்களையெல்லாம் ஆயுதத்தோடு நிறுத்திய காட்சியில் மனரீதியாக ஒரு பலம் வீரனுக்கு கிடைத்தது, தெய்வதுக்கு அஞ்சும் குணம் மற்றவர்களுக்கும் வந்தது

    காளி உள்ளிட்ட காவல் தெய்வங்கள் போர் தெய்வங்களுக்கெல்லாம் உயிர்பலி கொடுத்து வணங்க சொன்னார்களே ஏன்?

    தேசத்துக்காக அல்லது ஊருக்காக போருக்கு செல்பவன் ரத்தம் கண்டு அஞ்ச கூடாது, உயிர்வதைக்கு தயங்க கூடாது என மனரீதியாக அவனை தயார்படுத்தும் விஷயம் அது, மனதை கல்லாக்கி செய்ய வேண்டிய யுத்தத்துக்கான தயாரிப்பு அது

    தெய்வத்தை முன்னிட்டு மனிதனை ரத்தத்துக்கு அஞ்சாமல் துண்டு துண்டாக வெட்ட அஞ்சாமல் கோவிலில் பலி என பழக்கம் கொடுத்தார்கள், அந்த வழக்கமே இன்றும் உக்கிர ஆலயங்களில் மிருக பலியாக தொடர்கின்றது

    போருக்கான தெய்வங்கள் என வராகி முதல் நிசும்ப சூதனி , காளி என பல வகைபடுத்தபட்டு அவற்றின் வழிபாட்டில் உக்கிரமான வீரம் புகட்டபட்டது.

    அஸ்வமேத யாகம் உள்ளிட்டவற்றை மிருக பலி என கொடுத்தார்களே ஏன்? அதெல்லாம் காட்டுமிராண்டிதனமா?

    இல்லை, ஒரு காலமும் இல்லை

    யுத்தம் என்பதில் குதிரை சாகும், யானை சாகும், ரத்தம் தெரிக்கும், கொள்ளை நடக்கும், பொருள் போகும், நண்பன் சாவான், எதிரி வைக்கும் தீயில் ஏதேதோ எரியும் இன்னும் எல்லா இழப்புக்கும் கலங்காத மனம் வேண்டும் பற்றில்லா மனம் வேண்டும், எதை இழந்தாலும் கலங்காத‌ மனம் வேண்டும் என்பதற்காக யாகம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்தார்கள்

    யாகம் தெய்வ அருளை பெற்றுதருவதுதான் சந்தேகமில்லை, ஆனால் அதன் மூலம் பல காரியங்களை செய்து மனரீதியாக

    விளையாட்டு உடலை வலுவாக்கும் என்பதால் இந்துக்களின் வழிபாட்டிலும் கொண்டாட்டதிலும் வீர விளையாட்டுக்கள் கண்டிப்பாய் இருந்தன‌

    காளையினை அடக்குதல் முதல் யானையோடு விளையாடுவது வரை, கத்தி சண்டை முதல் எல்லா வீர கலைகளும் ஆலய விழாக்களில் நடத்தபட்டன‌

    அக்காலத்தில் தற்காப்பு கலை எல்லா இந்துவுக்கும் தெரிந்திருந்தது, ஒவ்வொருவனும் களறி உள்ளிட்ட பல வீர கலைகளை கற்றிருந்தார்கள், பின்னாளைய பவுத்த இஸ்லாமிய ஆட்சியில் அவை அழிந்தன ஆனால் இவை அதிகம் தொடாத கேரள மண்ணில் இந்த வழக்கம் இன்றும் உண்டு, அது இந்துக்களின் வாழ்வியல்

    நல்ல சிந்தனையும் அந்த சிந்தனையால் எழும் உழைப்பையும் அந்த உழைப்பில் எழும் செல்வத்தையும் காக்க வீரம் அவசியம் என கண்டா இந்துக்கள் செய்த ஏற்பாட்டின் தொடர்ச்சி அது.

    இந்த வீரத்தோடு இருப்பவனோடு அவனை கூர் தீட்ட ஞானத்தால் முதிர்ந்தவர்களையும் அருகில் வைத்து அவனை சமூகத்தின் காவலாக்கியானர்கள் இந்துக்கள்

    அந்த காவல்காரனே மன்னன் என்றானான், அவனை சுற்றி இருக்கும் அறிவுடை சமூகம் மன்னன் சமூகம் என்றாயிற்று

    ராஜவாழ்க்கை, ராஜ உபச்சாரம் என்பதல்ல விஷயம். யுத்தம் என்றால் அவனே படை நடத்தி செல்வான் உயிர் கொடுத்து போரிடுவான், தோற்றால் அவன் வம்சமின்றி வீழ்வான் எனும் பெரும் ஆபத்தும் அவனுக்கே இருந்தது, சாவை அனுதினமும் எதிர்பார்க்கும் வீரனே மன்னனாக இருக்க முடியும்

    அந்த வீரத்துக்கும் சில இலக்கணங்களை எழுதியது இந்துமதம்

    பராகிரமத்தை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதையும் அது சொல்லிற்று, அப்பாவி மக்களையும் அறியாதோரையும் இன்னும் வலுகட்டாயமாக வீரத்தை காட்டி தனக்கு வேண்டியதை பெறும் சுயநலத்தை அது கொள்ளை, கொலை என்றது அதை செய்பவன் குற்றவாளி என்றது

    எவன் தர்மத்துக்காய் பொது நலனுக்காய் மக்களுக்காய் தன் உயிரை துச்சமென மதித்து நிற்கின்றானோ அவனைதான் வீரன் என்றது இந்துமதம்

    வீரபராகிரமத்திலும் தர்மம் ஒன்றைத்தான் செய்யவேண்டும், வீரம் எனும் அருள்பெற்றவன் தன் கர்மத்தினை மட்டுமே செய்யவேண்டும் என வலியுறுத்தினர் இந்துக்கள்

    இதற்கு மிகபெரிய உதாரணம் பகவத் கீதை உபதேசிக்கபட்ட இடம்

    அர்ஜூனன் பெரும் வீரன், ஆனால் யுத்த களத்தில் உறவுகளை பார்த்துவிட்டு தன்கடமையில் இருந்து தவற விளைகின்றான், அவன் மனம் சொந்தங்களுக்காய் இரங்குகின்றது

    அந்த இடத்தில்தான் இந்துமதம் மிகபெரிய போதனையினை கொடுத்தது, வீரன் என்பவன் தர்மத்தை மட்டுமே கர்மமாக பார்க்க வேண்டும், சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்கட்டு தன் கடமையினை மட்டும் செய்யவேண்டும் என சொன்னது

    இன்றளவும் அந்த போதனை நிலைத்து நிற்கின்றது, வீரத்துக்கு அடிப்படை இலக்கணம் கொடுத்த மதம் இந்துமதம், தர்மம் ஒன்றுக்கே வீரன் யுத்தம் செய்ய வேண்டும் என சொன்ன மதமும் அதுவே

    வீரம் என இந்துமதம் வலியுறுத்தும் மானிட குணம் அதுதான், தர்மத்துக்கான காவலேதான், தெய்வம் சிலருக்கு அந்த அருளை கொடுத்து மானிட இனத்தை காப்பதை அறிந்த இந்துக்கள் வீர கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்

    இந்து வழிபாடுகளும் பக்தியும் வீரத்தை வளக்க வழி செய்திருந்தன, உக்கிர தெய்வங்களுக்கான ரத்த பூஜை முதல் வீர விளையாட்டுக்களெல்லாம் அவ்வகையே

    சில இடங்களின் மனித ரத்தத்தால் செய்யபடும் வழிபாடுகளும் இருந்தன, அதெல்லாம் வீரனின் மனதை கல்லாக்கும் துணிவினை கொடுக்கும் பயிற்சி அன்றி வேறல்ல‌

    மானிடரில் பொல்லா கூட்டத்தை, மனிதநேயம் மறந்த இரக்கமற்ற அரக்க மானிட கூட்டத்தை அழிக்க இதை தவிர வேறு வழி இல்லை என்பதை இந்துமதம் உணர்ந்திருந்தது

    அதன் புராணங்கள் கூட வீரத்தை முன்னிட்டுத்தான் சொல்லபட்டன, அன்னை சக்தி முதல் ராமன் கண்ணன் வரை அசுர்களை அழித்த வீர சம்பவங்கள் நிறைய அதில் வலியுறுத்தபட்டன‌

    வெறும் வீரம் என்பது முரட்டுதனம், அதில் விவேகமும் சேரவேண்டும் என்பதால் அனுபவஸ்தர்கள் ஆசான்களாக நின்று பயிற்சி கொடுத்தார்கள்

    யோக கலை முதல் வீரகலை வரை இந்துமதம் வலியுறுத்தியது, இன்றும் இந்துமத தெய்வ சிற்பங்கள் அல்லது சாதாரண சிற்பங்கள் ஏதாவது தொப்பையும் தொந்தியுமாக பார்த்ததுண்டா?

    இல்லை,கட்டுகோப்பான உடலுக்கும் அந்த உடலால் விளையும் பலத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த மதம் இது

    வீரம் மிகவும் போற்றபட்டது, எல்லா வகை பயிற்சியும் வழியும் தெய்வத்தின் பெயரால் தெய்வ வழிபாட்டின் பெயரால் மக்களுக்கு போதிக்கபட்டது

    அதில்தான் இந்நாடு செல்வத்தில் மிகுந்திருந்தது, அலெக்ஸாண்டர் எனும் மாவீரன் இந்தியாவுக்குள் வரும்பொழுது இந்துமதம் உருவாக்கிய இந்து வீரம் அவனை ஓடவிட்டது

    ஆனால் புத்தமதம் எனும் சாத்வீக மதம் மனிதநேயம், ஜீவகாருண்யம்,கொல்லாமை என பல விஷயங்களை மானிட குணநலன்களுக்கு எதிராக போதித்தது, ஜைனமதமும் அதையே சொன்னது

    மானிட குணத்துக்கு எதிரான எந்த போதனையும் பின்னாளில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தும்

    இந்த மனிதநேயம் , மக்கள் நேயம், கம்யூனிசம், சமதர்மமெல்லாம் பேசுவதற்கும் கற்பனைக்கும் சரி. ஆனால் மானிடர்களின் சுபாவத்துக்கும் கூடி வாழும் சமூகத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் பொருந்தாது

    புத்தம் இந்துக்களின் போர்குணத்தை அடக்கியது, ஒருமாதிரி சமூகத்தை அது உருவாக்கிற்று, ஜைனமும் அதை தொடர்ந்தது

    அதனாலே ஆப்கானிய கொள்ளைகள் நடந்தன, சோமநாதபுரி போன்ற எத்தனையோ ஆலயம் தாக்கபட்டு பின் அந்நியர் ஆட்சியும் தலைதூக்கிற்று, என்னென்ன கொள்ளைகளெல்லாமோ நடந்தன‌

    மதுரை வரை ஆப்கானியர் வந்து தாக்க பெரும் காரணம் இங்கே புத்த சமண தாக்கத்தில் இந்துக்களிடம் ஏற்பட்ட குழப்பத்தில் வீரம் குறைந்து போனதன்றி வேறல்ல‌

    ராஜராஜ சோழன், ஜடாவர்மன் போன்ற சுத்தமான இந்து வீரன் இருந்தவரை இங்கே இம்மண்ணை தொட்டுபார்க்கும் தைரியம் எவனுக்குமில்லை

    ஆப்கானியர் முதல் ஐரோப்பியர் வரை இங்கே வந்து ஆள இந்துக்கள் தங்கள் போர்குணத்தை இழந்ததுதான் காரணம், காந்தியும் அதைத்தான் செய்தார், அவரும் இந்துக்களின் போர்குணத்தை இழக்க வைத்தார்

    இந்திய வரலாற்றில் இந்துக்கள் தங்களை இந்துக்களாய் உணர்ந்து போரும் வீரமும் மானிட கடமை என இந்து வழியில் சிந்தித்து பயிற்சி பெற்ற பொழுது அதிசயங்கள் நிகழ்ந்தன‌

    விஜயநகர பேரரசும்,மராட்டிய பேரரசும் பெரும் சக்தியாய் எழும்பி ஆப்கானியரை அலற வைத்தன இந்தியா முழு இஸ்லாமிய நாடாக மாறாமல் இருக்க இந்த வீரமான அரசுகளே காரணம்

    அதனையும் மீறி ஆப்கானியரின் திரண்ட படை இந்தியாவுக்குள் வந்து கொண்டே இருந்தது

    கூர்ந்து கவனித்த இந்துமதம் தன் இயல்பில் ஒன்றான சீக்கிய சமூகத்தை கொடுத்தது, சீக்கியரின் எழுச்சியே ஆப்கானியர் வருகையினை தடுத்தது, அந்த வீரமான இனம் எழும்பாவிட்டால் இன்று பாகிஸ்தான் வங்க தேசம் வரை நீண்டிருக்கும்

    வீர சீக்கிய இனம் அவர்கள் வருகையினை தடுத்து இந்தியாவுக்கும் ஆப்கானுக்கும் இடையே அரணாக வீரமுடன் நின்றது

    இந்தியாவுக்குள் ஆப்கான் இனம் பொறியில் சிக்கிய எலியாக மாட்ட பிரிட்டிஷாருக்கு அவர்களை ஒழிப்பது எளிதாயிற்று

    பின் பிரிட்டிசாரை எதிர்த்து காந்தியின் அஹிம்சா வழி ஒரு புல்லையும் புடுங்கா நிலையில் வீரமான இந்திய சிங்கம் போஸ் கொடுத்த அச்சத்திலுமே விடுதலை கிடைத்தது

    போஸ் கொடுத்த எழுச்சி அப்படி, இனி அவன் வழியில் யார் வந்தாலும் ஆபத்து என அஞ்சித்தான் இத்தேசத்தை காந்தியின் துணையோடு இரண்டாக உடைத்துபோட்டான் வெள்ளையன்

    இன்று இந்தியாவின் பலமிக்க வீர ராணுவ இனமே அதிலும் வீர சீக்கிய இனம் அதிகம் கொண்ட இந்திய ராணுவமே தேசத்தை காக்கின்றதே அன்றி காந்தியின் கொள்கை அல்ல‌

    சமாதானம் செய்பவன் பலமானவனாக இருத்தல் வேண்டும் , பலமில்லாதவன் ஒரு சவாலும் கொடுக்க முடியாது

    இத்தேசம் காந்தி தேசம் என எல்லையில் எல்லோரும் அஹிம்சா, உண்ணாவிரதம் என இருந்தால் உலகம் சிரித்துவிடும், நாடு நாடாய் இராது

    மேற்கத்திய நாடுகளின் பலமே அவைகளை பல நாடுகளில் சமாதானத்தை உருவாக்க வைக்கின்றது

    அன்பே போதித்து சிலுவையில் தன்னை கொன்றவனுக்கும் மன்னிப்பு அருளியவர் கிறிஸ்து என்பார்கள், ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஒரு பிடி மண்ணையோ அவர்கள் தொழிலையோ ஒருவன் தொட்டுவிட முடியும்?

    ரஷ்யாவின் எண்ணையினை ஒருவன் ஒரு சொட்டு அள்ள முடியும்?

    முடியாது, அவர்களின் பலமான ராணுவம் அந்த காவலை வழங்குகின்றது, அதில் அவை செழிக்கின்றன். அன்றல்ல இன்றல்ல என்றும் பலமான வீரமே நாட்டையும் மக்களையும் காக்கும் வாழவைக்கும்

    ஜப்பான் பவுத்த நாடுதான் ஆனால் உலகளவில் பல முத்திரைகளை அவர்கள் பதிக்க காரணம் அவர்களின் ராணுவ பலமே அன்றி புத்த கொள்கை அல்ல‌

    ஆம், வீரம் மகா அவசியம், சமூக வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் காவலுக்கும் வீரம் முழு அவசியம் என சொன்னது இந்துமதம்

    வீரம் துணிவில் பிறக்கும் அந்த துணிவினை கொடுப்பது தெய்வம், அந்த தெய்வத்தை மலைமகள் என்றும் துரிகை என்றும் போதித்தது இந்துமதம்

    அதுவும் வீரம் என்பது அதர்மத்தை களையும் தர்மத்துக்கான போராக மட்டும் இருக்க வேண்டும் என அது சொல்லி வலியுறுதிற்று கீதை அதை விளக்கமாக சொல்லிற்று

    தேவியர் அவதாரமும் அவர்கள் யுத்தமும் சொல்வதென்ன? வீரம் வாழ்வுக்கு அவசியம் என்பதை மட்டுமா சொல்லிற்று இல்லை அதில் கூர்ந்த நுணுக்கமான போதனை உண்டு

    தேவியரால் கொல்லபட்ட அசுரர்கள் எல்லாம் பக்திமான்கள், மிகபெரிய தவவலிமை கொண்டு வரம் பெற்றவர்கள்

    ஆனால் அதர்மம் செய்தவர்கள் என்பதற்காக தேவியே வந்து வதம் செய்தாள் என்பதில் இரு விஷயங்களை இந்துமதம் போதித்தது

    முதலில் பிரபஞ்ச சக்தி தர்மம் எதுவோ அதை செய்யும், பக்திமான் பக்தியில்லாதவன் தனக்கு பிடித்தவன் பிடிக்காதவன் தன் துணையிடம் வரம்வாங்கி நெருக்கமானவன் என்பதெல்லாம் அதற்கு தெரியாது, தர்மம் ஒன்றே தேவியின் தீர்ப்பு

    இரண்டாவது மாபெரும் பலம் பெற்ற வீரனும் பராக்கிரமசாலியும் அதர்மம் செய்தால் அழிவான்

    ஆம், வீரம் என்றால் என்ன என்பது பற்றியும் வீரத்தை எங்கே எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும், அதர்மத்துக்கு துணைபோகும் வீரம் எப்படி அழியும் என்பது பற்றியும் புராணமெங்கும் சொல்லி வைத்தனர் இந்துக்கள்

    அதைத்தான் நவராத்திரியில் இந்து சமூகம் சிந்தித்து கொண்டிருக்கின்றது

    சரி, இந்துசமூகம் ஞான சமூகம் அல்லவா? அது எல்லா விஷயங்களையும் லவுகீகம் ஆன்மீகம் எனும் ஒரு தத்துவங்களுக்காக ஒரே பொருளில் போதித்த உன்னத மார்க்கம் அல்லவா?

    அது லவுகீக வாழ்வுக்கு வீரம் அவசியம் என சொல்லிற்று, ஆன்மீக மனவியலில் ஆத்ம ஞானம் பெற வீரம் அவசியம் என சொல்லிற்றா என்றால் நிச்சயம் சொல்லிற்று

    உண்மையான வீரம் தன்னை நம்பியோரை காக்கும், அதர்மத்தை அழிக்கும், ஒரு சிகரத்தில் அவனை ஏற்றிவைக்கும், அந்த சிகரத்தின் உச்சியில் தெய்வத்தை உணரவைக்கும்

    இந்திய எல்லையில் தன்வீரத்தால் கால்வைத்து இந்துக்களின் ஞானத்தால் ஞானியான அலெக்ஸாண்டரும், இனி வெல்ல எதிரி இல்லை எனும் நிலையில் வீரத்தின் உச்சம் ஞானம் என சிவனடியாராக வாழ்ந்த ராஜராஜசோழனும், சேரமான் பெருமான் நாயனார், காடவர்கோன் போன்றவர்களும் அதற்கு மிகபெரும் எடுத்துகாட்டுக்கள்

    ஒரு மனிதனின் ரஜோ குணம் வீரமாக வெளிபடும், அந்த வீரத்தை கூர்மையாக்கினால் அதை தர்மம் எனும் நெருப்பில் சுத்தமாக்கினால், இறைசக்தி எனும் பிரபஞ்ச சக்தியில் குளிரவைத்தால் ஞானம் பெருகும் அதில் முக்தி கிடைக்கும்

    இதில் மிக முக்கியமான நிலை தன் மனதை வெல்லுதல், தன்னிலையினை உணர்ந்து துணிவுடன் அதை ஏற்றுகொள்ளுதல், அந்த துணிவுதான் ஞானமும் தெளிவும் தேடி அலையும் ஒவ்வொருவருக்கும் அவசியம்

    அதை அன்னை தருவாள்

    எப்படி தருவாள், அந்த துணிவு என்னென்ன செய்யும்? அந்த துணிவில் இறைவனை அடைவது எப்படி என்பதை நாளை காணலாம், இந்துமதன் ஆன்மீக வழிக்கும் துணிவும் வீரமும் வேண்டும் என வலியுறுத்திய தத்துவ விசாரங்கள் அவை

  23. துரோணர் ஏகலைவனிடம் கட்டை விரலை வாங்கினார், அவர் ஒரு ஆரிய பிராமண சூது பிடித்தவர் , இரக்கமில்லாதவர், பார்ப்பன கொடூரக்காரர் என ஏக குற்றசாட்டுகள் பகுத்தறிவு கோஷ்டிகளிடம் இருந்து வரும்

    உண்மையில் நடந்தது என்ன? அந்த துரோணரின் நிலை பரிதாபமானது

    ஆம், துரோணர் அந்த அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது.

    சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர்

    அந்நாளில் ராஜவம்சத்துக்கு மட்டுமே ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும், எல்லோரும் எல்லாம் பயின்றால் அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும் எனும் தந்திரம் அது

    இன்று இந்திய ராணுவ வித்தகர்கள் அங்கீகரிக்கபடா வீரர்களுக்கு அல்லது தெரு ரவுடிகளுக்கெல்லாம் துப்பாக்கி சுடுதலும் இதர பயிற்சியும் தர முடியுமா? முடியாதல்லவா?

    இதே நிலையில்தான் துரோணர் இருந்தார்

    அவ்வகையில் பாண்டவரும், கவுரவரும் பயில்கின்றார்கள், தேரோட்டி மகனான கர்ணனும் படிக்கின்றான்
    அவர்கள் அரங்கேற்றம் முடிந்தபின்புதான் ஏகலைவன் என்றொருவன் இருப்பதும் அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகின்றது

    அரசவாரிசுகளையும் மீறி ஒரு வேட்டுவன் வித்தையில் மிஞ்சி நிற்பது அரசகுடும்பத்துக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரிகையில் வீழ்ந்தால் முடிந்தது கதை,

    நாட்டு மக்களை சேர்த்து கலகம் செய்தால் இன்னும் மோசம்

    அதற்காக வேட்டுவனை அரண்மனைக்கும் அழைக்கமுடியாது சட்டம் இடம் கொடாது

    இப்படி ஒரு சிக்கல் இருக்க அவனை சந்திக்க கிளம்புகின்றது மேலிடமும், துரோணரும் அர்ஜூனனும், ஏகலைவனின் வித்தையில் அஞ்சுகின்றான்.

    அர்ஜூனனை மீறி ஜொலித்து நிற்கின்றான் ஏகலைவன், அவனை விட்டுவைப்பது நல்லதலல் என மேலிடம் முடிவெடுக்கின்றது

    ஏகலைவன் குரு என யார் என கேட்க அவன் துரோணர் சிலையினை காட்டுகின்றான், ஆம் துரோணரை மனதால் வணங்கி வளர்ந்து தானே வித்தை கற்றவன் ஏகலைவன்

    எல்லோரும் அதிர்கின்றனர், காரணம் துரோணர் அரசகுடும்பத்துக்கு மட்டுமே ஆசிரியர்..

    அப்படியானால் இவனை இவ்வளவு திறமையாக அவர் உருவாக்க காரணம் என்ன எனும் சந்தேக கேள்விகள் எழுகின்றன‌

    துரோணர் அரச குடும்பத்துக்கு எதிராக ஒருவனை ரகசியமாக வளர்ப்பதாக சந்தேகம் அவர்மீதே படர்கின்றது,
    ஆம்,அரசகுடும்பத்துடன் உறவாடுவது ராஜநாகத்துடன் உறவாடுவதற்கு சமம்

    சிக்கலில் தவிக்கின்றார் துரோணர், ராஜதுரோக குற்றசாட்டு அவர்மேல் சுமத்தபடும் ஆபத்து நெருங்கிற்று,

    இதன் சூத்திரதாரி கண்ணன், ஏகலைவன் கவுரவர் பக்கம் கர்ணனை போல் சிக்கிவிட கூடாது என்பது அந்த நாடகத்தின் பொருள்

    துரோணர் மிக பெரும் இக்கட்டில் வீழ்ந்தார், அவரை காக்கும் ஒரே நம்பிக்கையாக ஏகலைவன் நிற்கின்றான்,
    அவன் நிச்சயம் துரோணரின் பெருமை, துரோணரின் மாபெரும் மகிழ்ச்சியும் சாதனையும் அவன்

    ஆனால் விதி?

    துரோணருக்கு அவனை விடவும் முடியவில்லை எடுக்கவும் முடியவில்லை, தவிக்கின்றார்.

    ஆம் அரச கட்டளை மீறி அவர் என்ன செய்யமுடியும்?

    அவனை கொல்லவேண்டிய இடம் அது, ஆம் அரசனின் கோபம் அவனை முதலில் கொல்லும் துரோணரை அடுத்து கொல்லும், ராஜதுரோகம் எனும் குற்றத்துக்கான தண்டனை அது

    யோசித்தார் துரோணர், அந்த சீடன் அழிவதில் அவருக்கு விருப்பமில்லை அவனை பலமிழக்க வைத்தால் போதுமென குருதட்சனையாக கட்டைவிரலை கேட்கின்றார்

    குரு கேட்டால் தலைகொடுக்கவும் துணியும் ஏகலைவன் கட்டை விரலை மகிழ்வாய் கொடுத்து பலமிழக்கின்றான், இனி அவனால் வில்வித்தை அவ்வளவு துல்லியமாக செய்யமுடியாது

    குருவுக்கு சிஷ்யன் கொடுக்கும் காணிக்கை அவரை காக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை , கண்ணீரோடு அவனின் கட்டை விரலை தாயத்தில் வைத்து கழுத்தில் கட்டிகொள்கின்றார் துரோணர்

    அந்த காட்சி உருக்கமானது, கண்ணீர் வரவழைக்கும் காட்சி அது. துரோணருக்கு அவனை போல மாணவன் இல்லை, நல்ல ஆசிரியனுக்கு சிறந்த மாணவனை விட பெருமை எது?

    ஆனால் விதி பொல்லாதது அல்லவா?

    அப்பக்கம் ஏகலவைனுக்கோ குருநாதருக்காக வித்தையினையே கொடுத்துவிட்ட தியாக மகிழ்ச்சி, தன் கட்டைவிரல் அவர் கழுத்தில் இருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி

    தானே அவரின் மார்பில் சாய்ந்ததாக மகிழ்ந்தான், துரோணர் அரண்மனை திரும்பினார்

    ஆம் துரோணர் அவன் உயிரை காத்தார், அவன் துரோணர் உயிரை காத்தான்

    காலங்கள் ஓடின பாண்டவருக்கும், கவுரவருக்கும் யுத்தம் நெருங்கிற்று, ஒவ்வொருவரின் பலத்தையும் அளந்த கண்ணன் துரோணர் பக்கமும் வருகின்றான், ஏற்கனவே கட்டை விரல் வாங்க காரணமே அந்த மாயவனே

    துரோணர் கழுத்தில் இருப்பது உன்னதமான சிஷ்யனின் காணிக்கை, ஒரு ஆத்மார்த்தமான காணிக்கை அது, அதன் சக்தி வலியது, துரோணரின் உயிர்காக்க கொடுக்கபட்ட அக்காணிக்கையின் சக்தி துரோரணை சாகவிடாது , அது இருக்கும்வரை துரோணர் வீழமாட்டார்

    என்ன செய்யலாம்?

    அதே வித்தைதான், ஏழை அந்தணராக மாறிய கண்ணன் யாசகனாய் வந்தான், தன் மகளுக்கு திருமணமென்றும் ஒரு தாலிக்கும் வழியில்லை எனவும் அழுது அந்த தாயத்தையே உற்று பார்த்தான்

    குறிப்பறிந்த துரோணர் இதைவிட பெரும் தாலி இல்லை, இது ஆசிமிக்கது என அதை வழங்கினார், துரோணரின் கழுத்தில் இருந்து அந்த பெரும் கவசத்தை அகற்றினான் கண்ணன்

    அதன்பின் எல்லாம் முடிந்தது, சாகும் வேளையில் துரோணர் முன் தன் புல்லாங்குழலை காட்டினான் கண்ணன், ஆம் அதில் அந்த விரலை பதித்திருந்தான்

    அதை கண்டவுடன் துரோணருக்கு எல்லாம் விளங்கிற்று, மெல்ல பேசினான் கண்ணன் அவன் குரல் அந்த ஞான தத்துவத்தை போதித்தது

    “துரோணாச்சாரியே.. சிஷ்யர்களில் எல்லாம் உயர்ந்தவன் ஏகலைவன், ஆசிரியரில் எல்லாம் உயந்தவன் நீ
    உங்களுக்குள்ளான உணர்வும் புரிந்துணர்வும் பாசமும் எந்த குருவுக்கும் சீடனுக்கும் அமையாது
    அவனை அன்றே நீ கொன்றிருந்தால் நீ பாவிபாயிருப்பாய், விட்டிருந்தால் அவனை நீனே வளர்த்தாய் என பழிசுமந்திருப்பாய் , அவன் பாண்டவர் பக்கம் வந்தாலும் கவுரவர் பக்கம் வந்தாலும் பழி உனக்கே

    உன் மாணவர்களின் அர்ஜூனன் பெரும் அடையாளம் ஆனால் நீ நேரடியாக பயிற்றுவித்தாய், ஆனால் உன்னை மனதால் வணங்கி வளர்ந்த ஏகலைவனே அவனை விட உயர்ந்தவன், ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் அடையாளம்

    அங்கு உன் உயிரை அவன் காத்து மாணவனின் கடமையினை செய்தான், நீ அவன் உயிரை காப்பாற்றி ஆசிரியனுக்குரிய கடமையினை காத்தாய்

    நீ கேட்டவுடன் கொடுத்த அந்த விரல் அவனின் தியாகத்துக்கும் குருசிஷ்ய பாவத்துக்கும் என்றும் எடுத்துகாட்டாய் இருக்கும், உன் பெயர் இருக்குமிடமெல்லாம் அவனும் இருப்பான்…”

    அந்த புல்லாங்குழலின் இருந்த விரலை நோக்கியபடியே உயிர்நீத்தார் துரோணர்

    ஆம் நல்ல மாணவன் ஆசிரியர் அளவு வரலாற்றில் நிலைப்பான் என்பதுதான் ஏகலைவன் வாழ்வின் தத்துவம்
    மகாபாரதத்தின் ஒவ்வொரு காட்சியும் சிலாகிப்பானவை, வெற்று பாத்திரம் என்றோ தேவையற்ற திணிப்பு என்றோ எதுவுமில்லை

    மணிரத்னம் புராண காட்சிகளை சுட்டு படமெடுப்பதில் கெட்டிக்காரர் ஆனால் அவரும் ஏகலைவன்
    பக்கமே வரவில்லை

    அவன் கதையினை மிக மிக அழகான படமாக எடுக்கலாம், எடுப்பார் யாருமில்லை, இதைவிடுத்து பூரா இயக்குநரும் கதை திருட்டு காட்சி திருட்டு என கோர்ட் படி ஏறிகொண்டிருக்கின்றான்.’

    ஆயிரம் அர்த்தமும் உருக்கமும் தியாகமும் நிறைந்த காட்சி ஏகலைவன் துரோணர் காட்சி, அது சொல்லும் தத்துவம் ஏராளம்

    இந்த கருப்பு சட்டைகள் , திராவிட இம்சைகளுக்கு ஒருமண்ணும் தெரியாது, அவைகளின் மனமும் புத்தியும் கருப்பு, எல்லாவற்றையும் தப்பு தப்பாக உணர்ந்து பிராமணன் ஒழிக என முடிப்பது ஒன்றே அவர்கள் ஏற்றுகொண்ட கொள்கை

    அவர்களின் புரட்டு செய்தியினை புறந்தள்ளுங்கள், ஏகலைவன் கதை போல கொண்டாடபட வேண்டிய ஆயிரம் கதைகள் இங்கு உண்டு

    அவற்றை எல்லாம் படியுங்கள், பெரும் அர்த்தமும் ஞானமும் விளங்கும்

    உங்களுக்கு புரியாவிட்டால் எம்மிடம் கேளுங்கள் எப்பொழுதும் விளக்க தயாராக இருக்கின்றோம்

    நமது நாட்டின் பெரும் அறிவார்ந்த ஞான புதையலை நாம் விளக்கமால் சீனனும் பாகிஸ்தானியுமா வந்து விளக்குவான்?

    நாம்தான் விளக்க வேண்டும், நமக்கு அந்த கடப்பாடும் பொறுப்பும் எக்காலமும் உண்டு

  24. உலகின் முதல் ஏவுகனையினை சோதித்தவன் இந்து, உலகின் முதல் கடிகாரத்தை சூரியனார் கோவில் என சொன்னவன் இந்து

    வானியல் கோள்களை ஜோதிடம் என வகுத்தவன் இந்து, வானியல் சூத்திரங்களை முதலில் சொன்ன பாஸ்கரா ஒரு இந்து

    இன்னும் ஆரியபட்டர் முதல் சீனிவாச ராமானுஜம் வரை உலக புகழ்பெற்ற கணித மேதைகள் இந்து

    உலோகவியலில் அன்றே கரை கண்டிருந்தவன் இந்து,

    உலகுக்கே நீதியும் ஆட்சி முறையும் சொன்ன வள்ளுவனும் சாணக்கியனும் இந்து

    இன்றும் புலபடாத அளவில் அன்றே கல்லணை கட்டியவன் இந்து, தஞ்சை கோவிலை கட்டியவன் இந்து

    வெள்ளையனுக்கு முன்பே கடல் கடந்து கண்டங்களை வென்றவன் இந்து

    வானத்தை அளந்த சர்.சி.வி ராமனும் இந்து, கடலை அளந்த விஞ்ஞானியும் இந்து

    சுதந்திர இந்தியாவிலும் அணுசக்தி முதல் வானியல் சாதனை வரை செய்தவன் இந்து தர்மம் உணர்ந்த இந்தியனே

    அய்யா அண்ணா அவர்களே,

    நீங்கள் வழிபட்ட குருநாதன் ரேம்சாமியும், உங்கள் தம்பி கருணாநிதியும் அவர் கூட்டமும் செய்த விஞ்ஞானம் ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா?

    நீங்கள்தான் ராக்கெட் செய்தீர்களா? இல்லை உங்கள் தம்பி கருணாநிதி அணுசக்தி செய்தாரா, நெடுஞ்செழியனும் அன்பழகனும் புகழ்பெற்ற மருத்துவர்களா?

    திராவிட நாத்திக கும்பல் உருவாக்கிய ஒரு உருப்படியான விஞ்ஞான கருவியினை சொல்லமுடியுமா?

    சரி, அக்கும்பல் உருவாக்கிய ஒரு தேசிய அடையாளத்தை வழக்கறிஞாராக சொல்ல முடியுமா? கனிமொழி வழக்குக்கே ஆரிய வழக்கறிஞர்தான் வந்தார்

    ஒரு நல்ல மருத்துவரை காட்ட முடியுமா? இன்றளவும் இல்லை

    உங்கள் இதயகனி முதல் உங்களுக்கு பக்கோடா வாங்கி தந்த சிறுவன் வரை விஞ்ஞானத்தில் என்னய்யா சாதித்தார்கள் சொல்லுங்கள்?

    சுதந்திர இந்தியாவின் தமிழகத்தில் உருவான கலாம் முதல் சிவன் வரை யாரும் உங்கள் நாத்திக கும்பலிலே இல்லையே, இருந்தால் உருபட்டிருக்க முடியுமா?

    ஆக திராவிடம் உருப்படியாக விஞ்ஞான ஊழலை தவிர ஏதும் செய்யவில்லை என்பது தெரிகின்றதல்லவா?

    சுதந்திர இந்தியாவில் அதாவது உங்கள் ஒருநாதர் ராம்சாமி எதிர்த்த சுதந்திர இந்தியாவில் ஏவுகனைகளும், ராக்கெட்டும், ஐடி தொழிலும் இன்னும் பல விஞ்ஞானமும் வளர்ந்திருக்கின்றதே எப்படி? சொல்லமுடியுமா?

    சொல்ல தெரியாது அல்லவா? அதனால் கண்ணை மூடி கல்லறையில் படுத்து கொள்ளவும்.

    அய்யா அண்ணா அவர்களே,

    ஆயுத பூஜை செய்த இந்து கல்லணை கட்டி தஞ்சை கோவில் கட்டி இத்தேசத்திலே ஆலயங்கள் பல எழுப்பி வாழ்வாங்கு வாழ்ந்தான், அவனுக்கு நாடு நாடாய் திரியும் அவலம் அன்று இல்லை

    ஆனால் ஆயுத பூஜை செய்யாத கொலம்பஸ் பாவம் கடல் கடலாய் ஓடி கடைசியில் அமெரிக்கா பக்கம் கொல்லபட்ட்டான், அலெக்ஸாண்டர் இந்து மன்னன் போரஸிடம் தோற்று ஓடி பாக்தாத் பக்கம் பரிதாபமாய் செத்தான்

    வாஸ்கோடகாமா இந்து நாட்டின் மிளகு சந்தையினை தேடித்தானே இந்தியா வந்தான்? வந்தவன் இங்கே வம்பிழுத்து இந்துக்களால் கள்ளிகோட்டையில் செத்தான்.

    நீர் சொன்ன கொலம்பஸும், அலெக்ஸாண்டரும் வாஸ்கோடகாவும் இந்துக்களின் செல்வத்தை ஆயுத பூஜையால் விளைந்த செல்வத்தை தேடி வந்தார்களா இல்லை “படிதாண்டா பத்தினியினை” தேடி வந்ததார்களா?

    ஆயுத பூஜை செய்து வளமாய் இருந்த இந்துக்களை தேடித்தான் அவர்கள் இங்கே கடல் கடந்து மலை கடந்து ஓடிவர முயன்றார்கள் என்பதையும், ஆயுத பூஜைதான் அவர்கள் தேடிய இந்து செல்வத்தையெல்லாம் உருவாக்கியது என்பதையும் ஏனப்பா சொல்லவில்லை

    ஆயுத பூஜை செய்த இந்து நிம்மதியாக வாழ்ந்தான், அதை செய்யாத கிறிஸ்தவனும் கிரேக்கனும் கடலும் மலையுமாக ஓடி கொள்ளையிட திரிந்தான்

    இது கூட புரியாத அறிவா பகுத்தறிவு?

    இது கூட புரியாத நீவிரா பேரரிஞர்?

    குரங்குக்கு சட்டமும் உமக்கு பேரரிஞர் பட்டமும் தேவையா அய்யா?

  25. பிருத்வி என இந்தியா ஏன் ஏவுகனைக்கு பெயர் சூட்டியது, அதுவும் இஸ்லாமியரான கலாம் இந்தியனாக உருவாக்கிய அந்த ஏவுகனைக்கு அப்பெயரை ஏன் பரிந்துரைத்தார் என்றால் விஷயம் மிக பெரிய வரலாற்றை கொண்டது

    பிரித்வி எனும் வரலாற்றில் ஒளிந்திருக்கின்றது இந்தியாவின் வீரமான வரலாறும், இங்கு நிலைத்துவிட்ட அந்த வீர காவியமும், காதல் காவியமும்

    இன்றும் கண்ணனுக்கும் வீரசிவாஜிக்கும் அடுத்தபடி கொண்டாடபடும் வீரவரலாறு அது

    அன்று கங்கையாலும் சிந்துவாலும் செல்வ செழிப்பில் மிதந்த இந்தியா மேல் ஆப்கானிய கொள்ளையர்களுக்கு கண் இருந்தது, அடிக்கடி கொள்ளையிட வருவர், கொள்ளை அடித்துவிட்டு ஓடிவிடுவர்

    இங்கு இருந்து ஆளும் தைரியமும் ஆசையும் அவர்களுக்கு இல்லை, ராஜ்புத் வீர இனமும் இன்னும் பல இந்திய குழுக்களும் அவர்களுக்கான பதிலடியினை கொடுத்து கொண்டே இருந்தன‌

    அலெக்ஸாண்டரை போரஸ் விரட்டியது போல முகமது பின் காசிம் எனும் அரபு தளபதியின் படைகளை பாபா ராவல் எனும் இந்து மன்னன் எல்லையிலே விரட்டினான், அப்பொழுது அவன் பாதுகாப்புக்காக கட்டிய ஊர்தான் இன்றைய ராவல்பிண்டி

    யாரோ யாரோ வருவார்கள் அந்நாளில் அடிபட்டு ஓடுவார்கள் அல்லது கிடைத்ததை சுருட்டி தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்

    ஆப்கனின் கஸ்னி அல்லது கஜினி ஊரின் மன்னன் முகமது எனும் கஜினி முகமது கூட அப்படி கொள்ளை அடித்துவிட்டு ஓடியவனே தவிர மாவீரன் அல்ல‌

    17 முறையில் சிலமுறை வென்ற கஜினி தன் நாட்டில் மிகபெரும் அரசை ஸ்தாபித்தான் அவன் வம்சத்தை பின்னாளில் விரட்டி ஆட்சியினை கைபற்றினான் கோரி முகமது

    அதாவது அந்த ஊரில் ஏகபட்ட முகமதுகள், கஜினியினை ஆண்டவன் கஜினி முகமது, கோரி எனும் ஊரினை ஆண்டவன் கோரி முகமது

    கோரி என்பது கோவ்ரி, காவ்ரி, காவேரி என பொருள்படும், ஆப்கனில் ஏகபட்ட தமிழ்பெயர் உண்டு, காவேரிதான் கோரி ஆனது. விஷயம் அது அல்ல இப்போதைய விஷயம் கோரி முகமது

    அவன் கஜினி பாணியில் இந்தியாவினை தாக்க திட்டமிட்ட பொழுது இங்கு அவனுக்கு பெரும் சவால் இருந்தது
    அந்த சவாலின் பெயர் பிரித்வி ராஜன், இன்றைய டெல்லி, ஆஜ்மீர் பகுதிகளின் ராஜா அவன், 20 வயதிலே அரியணை ஏறினான், மாவீரனும் அழகனுமாய் இருந்தான் கூடவே அரசனுக்குள்ள அறிவும் ஏராளம் இருந்தது
    வட இந்தியா முழுக்க அவனுக்கு பெரும் செல்வாக்கும் இருந்தது

    அப்பொழுது கன்னோசி நாடு அதாவது இன்றைய உபி பகுதியில் ஜெயசந்திரன் என்றொரு அரசன் இருந்தான், அவன் ஒரு யாகம் நடத்தினான் , தன்னை தலைவராக ஏற்கும் படி பலருக்கு ஓலை அனுப்பினான் எல்லோரும் வந்து வணங்கி யாகத்தில் கலந்து கொண்டனர்

    ஆனால் பிரித்விராஜன் வரவில்லை, தன்னை அவன் அவமதித்ததாக மனதில் புழுங்கிகொண்டிருந்தான் ஜெய்சந்திரன் என்றாலும் மோதிபார்க்கும் ஆசை எல்லாம் இல்லை

    எனினும் அரண்மனையில் பிரித்விராஜன் பற்றி அவன் விவாதிப்பதும் அதை நாலுபேர் மறுத்து பிரித்வியின் பெருமைகளையும் அவனின் மாவீரத்தையும் பற்றி பேசுவதும் வழக்கமானது

    அதை அவ்வப்போது கேட்டுகொண்டிருந்த ஜெயசந்திரன் மகள் சம்யுத்தாவிற்கு பிரித்வி மேல் காதலே வந்தது

    ஆம் பார்க்காமலே வந்த காதல் அது, அப்படியும் காதல் சாத்தியமாய் இருக்கின்றது.

    பிரித்விராஜன் பற்றிய செய்திகளை கேட்டே அவள் காதலில் விழுந்தாள்
    என்ன இருந்தாலும் அரச குடும்பம் அல்லவா? உரிய முறையில் யாரையோ பிடித்து அனுப்பி தன் காதலை பிரித்விராஜனிடம் சொல்ல சொல்லிவிட்டாள்

    அவனுக்கும் ஆச்சரியம், சம்யுக்தா பற்றி கேள்விபட்ட அவனும் அவள் காதலை ஏற்றுகொண்டான், ஆனால் சந்திப்போ டேட்டிங்கோ இல்லை, எல்லாம் கனவில் மட்டுமே

    வீரனை காதலித்த பின் சம்யுக்தா சும்மா இருப்பாளா? அவளுக்கும் தைரியம் வந்தது, மிக தைரியமாக ஜெயசந்திரனிடமே தன் காதலை சொன்னாள், “மணந்தால் பிரித்வியினை மணப்பேன் இல்லை என்றால் மரணத்தை தவிர யாரையும் மணக்க மாட்டேன்”

    ஆத்திரத்தில் பொங்கினான் ஜெயசந்திரன், பிரித்வி என் அரண்மனைக்கு வரவே தகுதியற்றவன், அவன் என் அரண்மனை காவலாளி வேலைக்கே சரி என சொல்லி பிரித்வி போலவே ஒரு சிலை செய்து வாசலில் வைத்தான்

    அதை அடிக்கடி மிதித்தானா, காரி உமிழ்ந்தானா, செருப்பு மாலை இட்டானா? யானை கொண்டு சாணமிட செய்தானா என்ற தகவல் இல்லை, ஆனால் பிரித்விராஜன் தகுதி இதுதான் என சொல்லிகொண்டிருந்தான்

    சம்யுக்தையோ அச்சிலைக்கு மாலையிடுவதும் திலகமிடுவதும் அதை சுற்றி ஆடுவதுமாக இருந்தாள்

    பொறுத்து பார்த்த மன்னன் ஒரு நாள் சுயம்வரம் நடத்தினான், மகளிடம் சொன்னான் ” பிரித்விராஜனை தவிர எல்லா ராஜகுமாரரும் சுயம்வரத்திற்கு வருவார்கள், ஒருவனுக்கு மாலையிடு, என்னை மீறி அவனும் வரமுடியாது, நீனும் செல்லமுடியாது”

    சம்யுக்தாவிற்கு வேறுவழியில்லை, ஆனாலும் பிரித்வி ராஜனை நம்பினாள்

    சுயம்வர நாளும் வந்தது, ராஜகுமாரர் எல்லாம் கூடி இருந்தனர், சம்யுக்தா கையில் மாலை கொடுக்கபட்டது, விரும்பியவன் கழுத்தில் மாலையிட உரிமையும் கொடுக்கபட்டது

    சம்யுக்தா நல்ல அழகி என்பதால் ராஜகுமாரர் எல்லாம் பல்லை மட்டுமல்ல‌ கழுத்தையும் காட்டியபடி நின்றனர்

    எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தாள் சம்யுக்தா தேசமே, ஏன் தேசங்களே திரண்டிருந்தது, தன் காதலை காட்ட மிக சரியான சந்தர்ப்பம் இது என எண்ணிய சம்யுக்தா சட்டென ஓடி சென்று பிரித்வி சிலைக்கு மாலையிட்டாள்

    சபை அதிர்ந்தது, சிலையினை இடித்துவிட்டு அவளை இழுத்துவர ஜெயசந்திரன் அடியெடுத்து வைத்தபொழுது அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது

    சட்டனெ சிலைக்கு உயிர்வந்து சம்யுக்தாவினை அள்ளி குதிரையில் வைத்து பறந்தது

    ஆம் நடக்கும் விஷயங்களை மிக துல்லியமாக கண்காணித்த பிரித்விராஜன் சுயம்வரம் அன்று சிலைக்கு பதிலாக அவனே நின்றிருந்தான், சிலை போலவே நின்றிருந்தான்

    யாருக்கும் சந்தேகம் வராதாடி நின்றிருந்தது அவனின் சாமார்த்தியம்

    துள்ளியோடிய குதிரை இருவரையும் சுமந்து ஓடியது, பெரும் படையுடன் பின் தொடர்ந்தான் ஜெயசந்திரன், தொலைவில் தன் படையினை நிறுத்தி வைத்திருந்தான் பிருத்வி, அந்த இடத்தை அடைந்ததும் யுத்தம் தொடங்கிற்று

    யுத்தம் நடக்கும் சாக்கில் சம்யுக்தாவோடு டெல்லிக்கு வந்தான் பிரித்வி,ஜெயசந்திரனால் அவன் படைகளை தாண்டி வரமுடியவில்லை

    காதலர்கள் சந்தித்ததும், காந்தர்வ மணம் புரிந்ததும் ஒரே நாளிலே

    அவர்கள் வாழ்வு ஆனந்தமாக சென்றுகொண்டிருந்தது, இருமுறை தன்னை அவமானபடுத்திய பிரித்வி ராஜனை ஒழிக்க தூக்கமின்றி வழிதேடினான் ஜெய்சந்திரன்

    அந்நேரம் அதாவது கிபி 1191ம் ஆண்டு , இந்தியா மேல் முதன்முறையாக படையெடுத்தான் கோரி முகமது

    ஆப்கனை அடக்கி வெற்றி கொண்ட கோரி டெல்லி நோக்கி வந்தான், அவனை அரியானாவின் தராய் அருகே எதிர்கொண்டான் பிரித்விராஜன்

    மிக கடுமையான யுத்தம் அது, வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிக பெரும் வீரம் காட்டி நின்ற பிரித்விராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை

    ஆப்கனை அடக்கிய கோரி முகமது பிரித்வி முன்னால் திணறினான், ஒரு கட்டத்தில் கோரி முகமதுவினை வளைத்துபிடித்தான் பிரித்வி

    அன்றே கோரியின் தலையினை சீவியிருந்தால் இந்திய வரலாறே மாறியிருக்கும், ஆனால் உயிர்பிச்சை அளித்து அவனை ஆப்கனுக்கு விரட்டினான் பிரித்வி

    அடிபட்ட பாம்பாக ஆப்கன் திரும்பிய கோரி அவமானத்தில் நொந்தான், பெரும் படை திரட்டி மறுபடியும் டில்லி நோக்கி வந்தான்

    இம்முறை வலுவான குதிரைபடையோடு வந்தான் கோரி, பிரித்விராஜனிடம் யானைபடை வலுவாக இருந்தது என்பதால் அரபு குதிரைகள் சகிதம் வலுவாக வந்தான் கோரி

    இம்முறை கோரியினை விடவே கூடாது என முடிவு செய்த பிரித்வி பல மன்னர்களை திரட்டினான், அப்படியே மாமன் ஜெயசந்திரனிடமும் உதவி கேட்டான்

    ஜெய்சந்திரனோ பகைமையினால் உதவ மறுத்தான், உதவ சென்றவர்களையும் தடுத்தான் ஆயினும் களம் கண்டான் பிரித்வி

    உதவ மறுத்ததோடு இல்லாமல் கோரிக்கு ஆதரவான காரியங்களை செய்தான் ஜெயசந்திரன்
    தன் இருபெரும் எதிரிகளை தனியாக சந்தித்தான் பிரித்வி,

    போரில் மாவீரம் காட்டி நின்ற பிரித்வியினை கோரியினால் வெல்ல முடியவில்லை, ஆயினும் அவன் திரட்டி வந்த பெரும்படை அவனுக்கு பலமாக களத்துக்கு வந்து கொண்டே இருந்தது , யுத்தம் நீடித்தது

    யுத்த நெறிகளை மீறி காட்டுமிராண்டிதனமான போரில் ஈடுபட்ட கோரி, நள்ளிரவில் பாசறையில் புகுந்து பிரித்வியினை பிடித்தான், இதற்கு ஜெயசந்திரனின் கொடூரமான திட்டமும் இருந்தது

    துரோகத்தால் வீழ்த்தபட்டான் பிரித்வி ராஜன்

    கடந்த முறை தனக்கு உயிர்பிச்சை அளித்தவன் என்ற நன்றி கூட இல்லாமல் அவனின் கண்களை குருடாக்கினான் கோரி

    எதிரி வென்றதும் ராஜபுத்திர இந்து பெண்கள் என்ன செய்வார்களோ அதை சம்யுக்தாவும் செய்தாள், ஆம் தீகுளித்து இறந்தாள் அவளோடு பல பெண்கள் செத்தனர்

    டெல்லியினை வென்ற கோரி மற்ற ஆப்கன் மன்னர்களை போல கொள்ளை அடித்துவிட்டு ஓடவில்லை, தன் அடிமைகளில் ஒருவனை தன் பிரதிநிதியாக அமர்த்தினான்

    அத்தோடு மிக முக்கியமான காரியத்தை செய்தான், ஆம் தனக்கு உதவிய ஜெயசந்திரனை கொன்றான் கோரி. எதற்காக என்றால் அந்நாளைய வழக்கபடி பிரித்வியின் நாடு ஜெயசந்திரன் பக்கம் போயிருக்கும், கொள்ளைகளோடு கோரி ஊர் திரும்ப வேண்டி இருக்கும்

    ஜெயசந்திரன் கணக்கு இதுதான், ஆனால் கொடூரமான கோரி காரியம் முடிந்ததும் அவனை காவு வாங்கினான்

    குருடானான பிரித்விராஜனை வைத்து தன் சபையில் வேடிக்கை காட்டுவது அவனுக்கு வழக்கமாயிருந்தது

    பலசாலி அகபட்டால் உடனே அவனை குருடனாக்கி அவனை தடுமாற வைத்து ரசித்து பழிவாங்கும் கொடூர பழக்கம் அன்று அரேபியாவிலும் ஆப்கனிலும் இருந்தது

    குருடனான பிரித்வியினை அடிக்கடி சபையில் நிறுத்தி அவமானபடுத்தி விளையாடுவது அவனுக்கு வழக்கமாயிற்று

    “ஒரு நாள் நீதான் பெரும் வில்லாளி ஆயிற்றே? இப்பொழுது வில்லும் அம்பும் கொடுத்தால் சரியாக அடிப்பாயா?” என நகையாடினான் கோரி

    தன்னால் ஒலிவரும் இலக்கினை துல்லியமாக தாக்கமுடியும் என்றான் பிரித்வி ராஜன்

    அரை போதையில் இருந்த கோரி, அவன் கையில் வில்லை கொடுத்து, இப்பொழுது மணி ஒலிக்கும் அதுதான் இலக்கு நீ அதை சரியாக அடிக்க வேண்டும் என உத்தரவிட்டதுதான் தாமதம்

    மிக சரியாக கோரியின் மேல் அம்பை செலுத்தினான் பிரித்வி

    ஆம், ஓய்வு என்பதாலும் பிரித்வி குருடன் என்பதாலும் கவச உடை இன்றி உத்தரவிட்ட கோரியினை, அவன் குரல் வந்த திசை நோக்கி மிக சரியாக அம்புவிட்டு கொன்றான் பிரித்வி

    அதன் பின்பு பிரித்வி கொல்லபடுகின்றான், அவனுக்கு வயது 24

    24 வயதிற்குள் மங்கா புகழ்பெற்றவன் பிரித்வி, கோரி முகமதுவினை முதலில் ஓட அடித்தவன் அவனே

    இந்தியரிடையே ஒற்றுமை இருந்தால் இரண்டாம் முறையும் அவனால் வென்றிருக்க முடியும், ஜெயசந்திரனின் துரோகமும் பிரித்வியினை சாய்த்தது

    துரோகத்தால் வீழ்த்தபட்டான் மாவீரன் பிரித்வி, அவனின் வாழ்வும் காதலும் வீரமும் கடைசியில் பழிதீர்த்த நுட்பமும் மங்கா காவிய பாடல்களாயின

    இன்றும் வட இந்தியாவின் கிராமிய பாடல்களில் அவன் கதையும் காவியமும் உண்டு

    ஆப்கானிய கொடூர மன்னர்களை மாவீரனாக எதிர்கொண்ட அவனின் பெயரை இந்தியா தன் ஏவுகனைக்கு சூட்டியது

    ஆம் இந்தியா தன் ஏவுகனைக்கு “பிரித்வி ” என‌ அவன் பெயரையே சூட்டியது

    இதை கவனித்த பாகிஸ்தான் அவசரமாக சீனாவிடமிருந்து ஏவுகனை வாங்கிய பாகிஸ்தான் அதற்கு “கோரி” என பெயரிட்டு வைத்திருக்கின்றது

    900 ஆண்டுகளை கடந்தாலும் கோரியும் பிரித்வியும் இன்றும் ஏவுகனைகளாக எதிர் எதிரே நிற்கின்றார்கள்

    நிச்சயம் பிரித்வி இனி தோற்கமாட்டான், காரணம் அன்று அவனுக்கு துரோகம் செய்ய‌ ஜெயசந்திரன் இருந்தான் இன்று மொத்த இந்தியாவும் அவனுக்கு ஆதரவாய் இருகின்றது

    பிரித்த்வி மேம்படுத்தபட்டு பாகிஸ்தானின் எந்த மூலையினையும் அணுகுண்டோடு தாக்கும் அளவு வலிமையானதாக இந்தியாவின் பாதுகாப்பாக நிற்கின்றது

    அதில் பிரித்விராஜன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான், உண்மையான இந்துவீரன் ஒரு காலமும் அழிவதே இல்லை

  26. நால்வகை வர்ணம் என இங்கே இந்து சமூக வாழ்வியல் இருந்தது, அது மேல் சாதி கீழ்சாதி எனும் அமைப்பில் அல்ல மாறாக பள்ளிகளில் ஒரே வகுப்பு ஏ, பி, சி, டி என இருந்தது போல் இருந்தது. தொழில் ரீதியான சில அணுகுமுறைகள் இருந்ததே தவிர சாதி பாகுபாடு அன்றைய சமூகத்தில் இல்லை

    இதனால்தான் மீணவ பெண் மகனான வியாசர் வேதங்களை தொகுக்கவும் இன்னும் பலர் தங்கள் குலதொழிலுக்கு சம்பந்தமில்லா அளவு ஆட்சி, இலக்கியம், என அடையாளமிட்டார்கள்

    அந்த சமூகம் 4 வகை வர்ணம் ஐந்தாம் பிரிவினரையும் கணக்க்கில் எடுத்தது , ஐந்து என்றால் பஞ்ச என பொருள் அல்லவா? அவர்களை பஞ்ச வர்ணத்தார் என சொல்லிற்று

    இவர்கள் பெரும்பாலும் அகதிகள், போர் கைதிகள் இன்னும் சில வழிகளில் பாரத கண்டத்தின் தேசங்களில் வந்தவர்கள், இவர்களை பாரத தேசத்தின் நாடுகள் ஆங்காங்கே அரவணைப்பதும் அவர்கள் குடியிருக்கவும் வாழவும் நிலங்களை கொடுக்கும் வழமையும் இருந்து, இதுவே பஞ்சமி நிலம் என முற்காலத்தில் அழைக்கபட்டது

    உலகெல்லாம் மனிதனை மனிதன் அடிமையாக வாங்கி விற்ற கொடிய காலங்களில் இந்துதர்மம் அதை செய்யவில்லை, மேற்காசியாவில் கூட , ஏன் இயேசுநாதரோ அவரின் கிறிஸ்தவமோ கூட கண்டிக்காத அடிமை முறையினை, 17ம் நூற்றாண்டு வரை கிறிஸ்தவம் மன சுத்தியுடன் செய்த அடிமை முறையினை எக்காலமும் இந்துதர்மம் ஏறெடுத்தும் பார்த்ததில்லை

    அது மனிதனை மனிதனாக நடத்திற்று

    அப்படிபட்ட இந்து பகுதியான தமிழகத்தில் தமிழக பாண்டிய வம்சம் வீழ்ந்து ஆப்கானிய கொடும் ஆட்சி நடந்தபொழுது நாயக்க ஆட்சி வந்தது

    ஒரு அரசன் வென்றால் நிலமெல்லாம் அவனுக்கும் அவன் குலத்துக்கும் என்பது உலக நீதி, அப்படி தமிழக நிலமெல்லாம் அவர்களுடையதாயின‌

    பின்னாளில் ஆப்கானிய நவாபுக்கு அவர்கள் கப்பம் கட்டினாலும் பெருவாரி நிலம் தெலுங்கு பேசும் மக்களிடமே இருந்தது இதை மறுக்க முடியாது

    ஆனால் நாயக்கர்களை முழுக்க குறை சொல்லவும் முடியாது, காரணம் இங்கு வெறும் காடாய் கிடந்த தரிசில் பெரும் விளைநிலங்களை அமைத்தது அவர்கள்தான்

    தமிழரின் விவசாயம் ஆற்றங்கரையிலேதான் இருந்தது, ஆற்றிலிருந்து நீர் வரும் அதை வைத்து சிரமபடாமல் விவசாயம் செய்வார்கள் , அதன் அருகில் ஒரு புலவன் பாடிகொண்டிருப்பான்

    வறண்ட நிலத்துவிவசாயம் தமிழருக்கு தெரியாது அல்லது சிரமபட விரும்பவில்லை

    நாயக்கர்கள் தமிழகத்து வறண்ட நிலங்களில் ஏரிகளும் குளங்களும் வெட்டினார்கள், மதுரைக்கு தெற்கே பெரும்பாலும் அவர்கள் காலத்தில்தான் புதிய குடியிருப்புகள் உருவாகின,

    வறண்ட நிலத்தில் குளங்களை அமைத்தல் அதையொட்டி வயல்களை திருத்துதல் என காடுகழனியினை உருவாக்கினார்கள்

    காட்டை திருத்தி கழனியாக்கியது அவர்கள்தான்

    வைகை, காவேரி டெல்ட்டா என ஆற்றங்கரையில் நாயக்கர்கள் வைத்திருந்த நிலம் வேண்டுமானால் அரசை கைபற்றும் பொழுது அவர்களுக்கு கிடைத்திருக்கலாம்

    ஆனால் பெரும்பாலான விவசாய நிலம் அவர்கள் உருவாக்கியது

    ஒன்றுமில்லா நிலத்தை பொன்கொழிக்கும் பூமியாக‌ உருவாக்கித்தான் நிலவுடமையாளராக உருவானார்கள் அதை மறுக்க முடியாது

    என்னது நிலத்தை திருத்தி அவர்களே வைத்து கொண்டார்களா? காவேரி நிலத்தை வைகை நிலத்தை வைத்தார்களா? என கேட்டால் இன்றல்ல அன்றல்ல என்றுமே அரசியல் அப்படித்தான் திமுகவில் கருணாநிதி குடும்பமும் காங்கிரஸில் நேரு குடும்பமும் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றதோ அப்படித்தான்

    அதே நேரம் தமிழகத்தில் கோவில் நிலங்கள் பெருவாரி இருந்தன, நாயக்க மன்னர்களும் கோவில்களுக்கு திருபணி செய்து ஏகபட்ட விளை நிலங்களை கொடுத்திருந்தனர்

    இக்காலகட்டத்தில்தான் வெள்ளையன் உள்ளே வந்தான், வரி வசூல் அவனின் தொழிலாயிற்று அதை செய்கின்றேன் என்றுதான் இந்தியாவினை பிடித்தான்

    வரிவசூலுக்காக நிலங்களை அவன் அளந்த பொழுதுதான் அரச வம்ச, நிலமுடை வம்சத்தைவிட ஏராளமான நிலங்கள் கோவில்களுக்கு இருப்பதை கண்டான்

    இந்திய ஆட்சிமுறையினை கற்ற வெள்ளையன் அரசனால் பஞ்சமர் எனபடும் கடைநிலை மக்களுக்கு பஞ்சமி நிலம் எனும் நிலம் கொடுக்கபடும் என்பதை தெரிந்து கொண்டான்

    அதை நுணுக்கமாக கோவில் நிலத்தில் காட்டினான், மாறாக ஜமீன் நிலம் , சமஸ்தான மன்னர் நிலங்களையோ அவன் தொடவில்லை

    இந்து நிலங்களை குறிவைத்தால் அது மெல்ல சரியும், கோவில் நிலங்கள் குறைந்தால் மடங்கள் வீழும் என கணகிட்டான், அன்று தமிழகம் முழுக்க 3 ஆயிரம் மடங்கள் இருந்தன‌

    இவற்றை குறிவைத்து பஞ்சமி நிலம் என கோவில் நிலங்களை கொடுக்க ஆரம்பித்தான், அது அக்கால நிலமுடை சமூகத்தால் சில இடங்களில் சர்ச்சையானது

    இதெல்லாம் ஏன் சொல்கின்றோம் என்றால், ஈரோட்டு ரேம்சாமி என்றாவது பஞ்சமி நிலம் அதற்குரிய மக்களிடம் செல்லவேண்டும் என போராடியதா?

    ஏ வெள்ளையனே அதை ஒழுங்காக கொடு என சொல்லியதா? தன் சக நிலவுடமை சமூகம் அந்த மக்களுக்கான நிலத்தை வைத்திருப்பதை பற்றி மூச்சு விட்டதா?

    அப்படி ஒரு சம்பவமே வரலாற்றில் இல்லை

    கடைசி வரை கேட்கவே இல்லையே? மாறாக பார்ப்பானையே ஏன் சீண்டிகொண்டிருந்தார்?

    நிலமுதலாளிகள் பற்றி கடைசிவரை பேசாத, அவர்கள் நிலம் நிலமற்றவருக்கு கொடுக்கபட வேண்டும் என கடைசிவரை சொல்லாத ரோமசாமி எப்படி புரட்சியாளர் ஆவார்?

    ஆக அவர் புரட்சி செய்யவில்லை மாறாக பெரும் புரட்டு மட்டும் செய்திருக்கின்றார்

  27. 1962ல் அந்த சீன யுத்தம் படுதோல்வியில் முடிந்தது, சீனாவின் எல்லைகோட்டை தாண்டி கூட இந்திய குண்டுகள் பாயமுடியவில்லை, இந்திய பலவீனமான டாங்கிகள் மலைக்கு செல்லமுடியா நிலையில் , பீரங்கிகளும் இல்லா நிலையில் துப்பாக்கி ஒன்றையே நம்பி சென்ற இந்தியா மிகபெரும் தோல்வியினை சந்தித்தது

    அன்றுவிமானபடையில் ஹெலிகாப்டர் மட்டும் இருந்தது அதுவும் தாக்குதல் ரகம் அல்ல‌

    ஆம், எல்லை தாண்டி ஒரு வலுவான ஆயுதம் கூட வீசமுடியாத பலவீனமான இந்தியாவாக அது இருந்தது.
    அப்பொழுதும் “பாதுகாப்பு அறிவியல் மையம்” இருந்தது, ஆனால் அன்றுபிறந்த குழந்தை போல் அது திணறிகொண்டிருந்தது

    எல்லையில் சீனாவிடம் இந்தியா பகிரங்கமாக அடிவாங்கும் பொழுது சாதாரண அனுபவமற்ற இளைஞனாக, விமான பொறியியல் பட்டயபடிப்பு மட்டும் வைத்திருந்த இளைஞனாக அழுது கொண்டிருந்தார் கலாம்

    இந்தியா வீழ்ந்தது டெல்லி கூட சீனாவால் கைப்ற்றபடலாம் எனும் செய்திகள் வந்த நிலையில் கண்ணீர் விட்டு அழுத விஞ்ஞானிகளில் அவரும் ஒருவர்.

    ஆம், அந்த அவமானத்தை தன் அவமானமாக கண்டார், அந்த பாதுகாப்பு அறிவியல் மையத்தின் அமைப்பின் அவசியமும் நாட்டுக்கு அது ஆற்ற வேண்டிய மிகபெரிய கடமையும் அவர் கண்முன் நின்றன, வெறும் 29 வயது வாலிபனான கலாம், அன்றுதான் உறுதி எடுத்தார்

    இனி இந்தியா மிகபெரிய ஏவுகனை பலம் வாய்ந்த நாடாக மாறும் வரை சொந்தமில்லை, பந்தமில்லை, திருமணமில்லை, வாரிசு இல்லை, ஊர் இல்லை உலகம் இல்லை

    ஆம் அப்பொழுதுதான் அந்த விஞ்ஞான துறவினை அந்த விஞ்ஞானி ஏற்றார், தவத்தில் இறங்கினார்
    அந்த தலைமுறைக்கு சாஸ்திரி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர், நமது தலைமுறைகக்கு அப்துல் கலாம் உருவானது அப்படித்தான்

    இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட விஞ்ஞானி அவர்

    ஒரு பின் தங்கிய தீவுபகுதி,பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, பெரும் சவால் நிறைந்தது,

    மத ரீதி, ஜாதி ரீதியாயக தன்னை காட்டி அனுதாபம் தேடியவரில்லை, இட ஒதுகீடு, போராட்டம் , பார்ப்பணீயம் என ஒப்பாரி வைத்தவர் அல்ல‌

    அவருக்கு தெரிந்ததெல்லாம் உழைப்பு, தேசாபிமானம் மட்டுமே

    நவீன இந்தியாவில் விக்ரம்சாராபாய், ஜஹாங்கீர் பாபா, சதிஷ் தவான் , அணுசக்தி சிதம்பரம் (ப.சிதம்பரம் அல்ல) , போன்ற வரிசையில் மிக முக்கியமான பெயர் அப்துல்கலாம்.

    இரண்டாம் உலகப்போருக்கு பின் யுத்தம் என்பது விண்வெளிக்கு மாறிற்று, செயற்கை கோள்களும், ஏவுகனைகளும்தான் ஒரு தேசத்தின் பாதுகாப்பினை நிர்ணயம் செய்தன.

    அது இல்லாத சமயத்தில் தான் சீனா நமது முதுகில் குத்திய வஞ்சம் நடந்தது.

    உலக நாடுகள் எல்லாம் மிக ஏளனமாக பார்த்த இந்திய ராணுவ ஏவுகனை துறையையும், அதற்கு மிக பக்கபலமான விண்வெளி துறையும் உலகின் மிக முண்ணனி நாடாகளுள் ஒன்றாக மாற்றிய பெருமை அப்துலகாலாமிற்கு உண்டு,

    அவரது முதல் படைப்பே மிக சிறியரக ராணுவ ஹெலிகாப்டர், இறுதியாக கொடுத்தது (ஓய்வுபெற்றாலும் அவரின் வழிகாட்டல் உண்டு) இன்று உலகின், கவனியுங்கள் உலகிலே அதிவேக ஏவுகனையான பிரம்மோஸ், இன்று இந்தியாவின் பிரம்மாஸ்திரம், இன்று சீனாவின் தூக்கத்தை தொலைதுவிட்ட பாசுபதகனை.

    ஆம் ஒலிவேக ஏவுகனைகளுக்கு அவர் முன்வடிவம் கொடுத்துவிட்டுத்தான் சென்றார்

    1980வரை இந்தியாவிடம் சொல்லிகொள்ளும் ஏவுகனைகள் கிடையாது, ரஷ்யா ஒருவகையான‌ நண்பன் தான் எனினும் சொல்லிதராது, அல்லது சொல்லிதர விடமாட்டார்கள். இந்திராவின் எழுச்சியான இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவணத்தில் ஒரு பகுதி தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி அலுவலகம் என மாற்றபட்ட பின் அப்துல் கலாம் யுகம் உருவாகிறது.

    பெரும் தோல்விகள், ஏராளமான அவமானங்கள் எல்லாவற்றையும் தாண்டித்தான் அவரால் ஏவுகனை திட்டத்தை செயல்படுத்த முடிந்தது, காரணம் ஏவுகனை என்பது மிக மிக சக்திவாய்ந்தது மட்டும் அல்ல பெரும் சிக்கல் வாய்ந்த நுட்பம்., விமான அறிவும் விண்வெளி தொழில்நுட்ப அறிவும் நிரம்ப கலந்து இல்லாமல் அது சாத்தியமே இல்லை.

    அதுவும் அன்று செயற்கை கோள் வழிகாட்டல் இல்லாமல் அட்சரேகை தீர்க்க ரேகை பயன்படுத்தி செலுத்தபட்ட ஏவுகனைகள் மிகுந்த சிரமமான விஷயம்

    அக்னி,ப்ரித்வி,நாக்,திரிசூல்,ஆகாஷ் என வரிசையாக செய்து கொடுக்கும்பொழுது உலகம் ஆடத்தான் செய்தது, அக்னி நீண்ட தூர ஏவுகனை சீனாவிற்கானது என சொல்லி தெரிவதில்லை.

    இன்று பிஜீங்க் வரை அதனால் தாக்க முடியும்

    ஆனால் பிரித்வி நடுத்தரமானது, அதன் தாக்கும் தூரத்தை கூட கணிக்காமல் “பிரித்வி” என்ற பெயரை கேட்டதும் அலறியது

    பாகிஸ்தான், காரணம் பிரித்விராஜன் என்ற இந்திய‌ மன்னன் அக்காலத்தில் ஆப்கான் முஸ்லீம் கொள்ளையனுக்கு பெரும் எதிரி.

    (அந்த ராஜஸ்தான் மன்னனை குறிப்பிட்டு அதாவது இதனை ராஜஸ்தான் எல்லையில் நிறுத்துவோம் என சொல்லாமல் சொல்லது இந்தியா )

    உடனே புறவாசல் வழியாக ஏதோ ஒரு மொக்கை ஏவுகனையை வாங்கி “கோரி” (கோரி முகமது) என பெயரிட்டு மகிழ்ந்து பாகிஸ்தான் (ஆனால் அது வேலை செய்யுமா என கூட தெரியாது )

    இன்றும் ஐரோப்பாவில் களவெடுத்து சீனாவிடம் கொடுத்து, 1950 மாடலில் செய்த பழைய அணுகுண்டு பாகிஸ்தானிடம் இருப்பதாக நம்பபடுகின்றது,

    மற்றபடி சொந்த தொழில்நுட்பம் ஏதும் அவர்களிடம் கிடையாது தீவிரவாதம் தவிர.

    ஆனால் நிச்சயமாக சொல்லலாம் இந்தியா ஓரளவு சொந்த தயாரிப்பு கொண்டது, இன்று ஓரளவிற்கு இந்திய ராணுவம் வலிமையுடையது என்றால் அதன் ஏவுகனை பலம் ஒரு காரணம், அதன் மூலம் சந்தேகமே இல்லாமல் அப்துல் கலாம்.

    அன்று கிரையோஜெனிக் நுட்பம் இல்லா நிலையில் அப்துல் கலாம் முன்னோட்டமாக சாதித்து நின்றார்
    ஒய்வு பெற்றபின் அல்ல, அவர் நினைத்திருந்தால் உலகில் எந்த நாட்டிற்கும் சென்று கோடிமேல் கோடி குவித்திருக்கலாம், அந்த துறை அப்படி.அவர் கல்வி அப்படி, அனுபவம் அப்படி,

    எல்லாவற்றிற்கும் மேல் ஒரு மாபெரும் தேசத்தின் ராணுவத்தையே உயர்த்திய சாதுர்யம், இதற்கு மேல் என்ன வேண்டும்?

    எல்லா நாடுகளும் ரத்தின கம்பளம் குவித்து வரவேற்றிருக்கும். அது கூட வேண்டாம் தனியாக ஒரு ஆயுதகம்பெனி தொடங்கியிருந்தாலும் அவர் உலகின் முண்ணனி வியாபாரியாக மாறி இருப்பார்,

    அட வியாபாரம் வேண்டாம் ஆலோசகராக இருந்தாலும் “அள்ளி அள்ளி” எடுத்திருப்பார், அவர்களும் தங்க வீட்டிலே வைத்து தாங்கியிருப்பர். கிட்டதட்ட அரபு அரசர்கள் அல்லது ஐரோப்பிய தொழிலதிபர்களின் அளவிற்கு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கலாம்,

    ஆயுத வியாபாரம் என்றென்றும் உலகில் நம்பர் 1 லாபகரமான தொழில்

    உண்மையில் அவர் அதற்கெல்லாம் ஆசைபடவில்லை, நாடு உயரவேண்டும், சுபிட்சமாக வாழ பாதுகாப்பு அவசியம், அதற்காகத்தான் உழைத்தார். குடியரசு தலைவர் பதவி அவரை தேடிவந்தது, அங்கு உரை நிகழ்த்தும் பொழுதெல்லாம் “திருகுறளை” மேற்கோள் காட்டி தமிழராக நின்றார்.

    உலகமெல்லாம் கொண்டாடிய அந்த படித்த விஞ்ஞான தமிழன், தமிழகத்தின் சில இடங்களிலும் சில அரசியல் காட்சிகளிலும், 5ம்வகுப்பு கூட தாண்டாத தமிழக அரசியல்வாதிகளால் மட்டம் தட்டபட்டு அவமானபடுத்தபட்டார்,

    ஆனால் அப்துல்கலாம் ஒரு வார்த்தை கூட பதில்பேசாது தனது பெருந்தன்மையை காட்டிய நிகழ்வுகளும் உண்டு.

    இரண்டாம் முறை அவர் ஜனாதிபதியாகும் வாய்ப்பும் இருந்தது, அவ்வாறு நடந்தும் இருக்கலாம், ஆனால் சில வஞ்சக திட்டங்களால் வீழ்த்தபட்டார்.

    நிச்சயமாக அவர்கள் வட இந்தியர்கள் அல்ல, திராவிடர்கள் தான்.

    கலாம் .ராமேஸ்வரத்து மண்ணை சேர்ந்தவர், அம்மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, என இன்னும் ஏராளமான சர்ச்சைகள் அவர்மேல் உண்டு, அணுசக்தியை ஆதரித்தார் என்ற பழியும் உண்டு, நிச்சயமாக அவர் அணுவிஞ்ஞானி அல்ல ஆனால் மூத்த விஞ்ஞானி எனும் பதவியில் இந்திய அணுசக்தி குறித்த அனுபவம் அவருக்கு அத்துப்படி.

    இன்னொன்று அணுஆலை என்பது சர்வதேச அரசியல், பல மர்மங்களை கொண்டது, அந்த அரசியல் அவருக்கு தெரியாது, ஆனால் ஒரு இந்திய தலமை விஞ்ஞானியாக ஒரு பதிலை கொடுக்கவேண்டிய கட்டாயம், ஆனால் கவனித்து பாருங்கள் அவர் சொல்வது எல்லாம் ஆறுகள் இணைப்பு, சூரிய ஓளி மின்சாரம், இயற்கையோடு இணைந்த அறிவியல்.

    சிலர் சொல்வார்கள் கலாம் ராமேஸ்வரம் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, கூடங்குளம் அணுவுலையினை நிறுத்தவில்லை, அவர் தமிழுக்கு என்ன செய்தார்? ஈழ மக்கள் விடுதலைக்கு என்ன செய்தார்? சிலர் ஒருபடி மேலே சென்று சொல்வார்கள், நல்ல தமிழர் என்றால் கலாம் ராக்கெட் நுட்பத்தை புலிகளுக்கு சொல்லி கொடுத்திருக்க வேண்டமா?

    அவர் இந்திய குடிமகனாக வாழ்ந்தார், அதனால் சிலர் அவரை ஒரு வகை ஆர்எஸ்எஸ் என்றார்கள். அப்படியானால் காமராஜரும் ஆர் எஸ்எஸ் , காந்தி என சகலரும் அப்படியே
    இந்த மொத்த தேசத்தின் பாதுகாப்பையும், வளத்தையுமே பற்றி கவலைபட்டாரே ஒழிய , தனியாக தமிழருக்கு மட்டும் என்ன செய்ய முடியும்?

    அப்படி தமிழகத்திலே முடங்கி இருந்தால் கலாம் கிடைத்திருப்பாரா?, சரி வாதத்திற்கு அப்படி தமிழக பிரச்சினையில் இறங்கினாலும் என்ன நடக்கும்?

    வீண் அரசியலும் வெற்று கூச்சலுமாகவே அவர் வாழ்வு முடிந்திருகும்

    கலாமினை குறை கூறுபவர்களுக்கு ஒன்று மனசாட்சி இல்லாமல் இருக்கவேண்டும், அல்லது நாட்டுபற்றில்லா குறுகிய மனப்பான்மை இருக்கவேண்டும்

    அழிவு ஆயுதங்களை உருவாக்கிய கலாம் நல்ல மனிதராக இருக்கமுடியுமா? என்று சில வாதங்கள். அணுகுண்டை உருவாக்கிய ஐன்ஸ்டீனை விடவா மனிதநேயம் பேசிவிட முடியும்?

    இது பாதுகாப்பு, தேச பாதுகாப்பு இத்தனை ஏவுகனைகளை வைத்திருக்கின்றோமே தவிர யார் மீது வீசினோம், மீணவனை காப்பாற்ற நாட்டிற்கு ஏவுகனை எதற்கு என்பதெல்லாம் அலட்டல். அது தேசபிரச்சினை என்றால் என்றோ கடற்படை புகுந்துவிடும், இது வேறு அரசியல் விட்டுவிடலாம்

    காமராஜர் (அவரும் விருதுநகருக்கு என்ன செய்தார்?) வரிசையில் ஒரு சலசல்ப்புமே இல்லாமல் கலாமையும் வைக்கலாம்.

    இந்தியா அவருக்கு பாரத ரத்னா கொடுத்து கௌரவ படுத்தியது, மோடியின் அரசு புதிய ஏவுகனை திட்டங்களுக்கு கலாம் சீரியஸ் என பெயரிட்டிருக்கின்றார்கள் , அதுதான் உண்மையான‌ மரியாதை.

    அதைவிட இன்னொரு உச்சபெருமை வேண்டுமென்றால், விரைவில் குலசேகரபட்டனத்தில் ஸ்ரிகரிஹோட்டா போல ஒரு தளம் அமைக்கும் திட்டத்தில் இஸ்ரோ இருக்கின்றது, காரணம் அதன் அமைவிடம் மற்றும் கண்ணாணிக்கும் வசதிகள் மிக மிக பொருத்தமானது,
    அப்படி அமையும் பட்சத்தில் அதற்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டினால் அது பெரும் பாராட்டாக‌க அமையும்.

    வெடிமருந்து நிரம்பிய மூங்கில் குழாய்களில் ஆயுதம் வைத்து ஏவுகனை உருவாக்கியது வீர சிவாஜியின் தந்த ஷாஹாஜி என்வரே, கிபி 1632ம் ஆண்டு மொகலாயருக்கு எதிரான பட்டோடி போரில் அவன் அதை பயன்படுத்தினான் அந்நாளைய பீரங்கி தத்துவத்தில் இருந்து அவன் அதை உருவாக்கினான்

    அது ஈட்டிகள் எறியபடும் இடத்தில் அது கொஞ்சம் தூரமாக செல்ல உதவிற்று; அதை மறுபடி பரிசீலித்து பார்த்தான் பிஜப்பூர் சுல்தான படைவீரனின் வாரிசும் சமயம் பார்த்து மைசூரை கைபற்றியவனுமான ஹதர் அலியின் மகன் திப்பு

    ஆம், ஷாஹாஜி பிஜப்பூர் சுல்தானுக்கு கீழ் பணியாற்றிவன் அவனாலே ஹைதர் குடும்பத்துக்கு அந்த ராக்கெட் நுட்பம் வந்தது

    15,000 அடி பாயும் ஏவுகனையை திப்பு உருவாக்கினான் (இன்றும் அதன் மாதிரி அமெரிக்க ஏவுகனை திட்ட அலுவலகத்தில் உண்டு )அதன்பின் அதனை செயல்படுத்தியது ஜெர்மன்.

    நவீன ஏவுகனைகளின் தந்தை என “வார்ண் பிரவுன்” ணை கொண்டாடும் உலகம், ஹிட்லரிடம் பணியாற்றியவர் பின்னாளில் அமெரிக்காவிற்கு யுத்த கைதியாக கொண்டு செல்லபட்டார், அதன்பின் செயற்கை கோள் ராக்கெட் மற்றும் ஏவுகனைகளை தயாரித்து அமெரிக்காவை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்றார்,
    அந்த தலைமுறைக்கு ஐன்ஸ்டீனுக்கு அடுத்து அவர்தான் ஹீரோ.

    இந்தியாவிற்கு ஏவுகனைகளை கொடுத்து பலமான நாடாகியதில் இந்த எளிய தமிழனின் சாதனை மிக பலமானது, அதனினும் மேல் இன்னும் இந்த நாட்டையும் அதன் தூண்களாகிய மாணவர்களையும் நேசித்த‌ அவரின் மனமும் மிக விலாசமானது.

    மொழி,இனம்,மதம் என சகலமும் கடந்து ஓரு இந்தியனாக தன்னை முன்னிலைபடுத்திய தமிழர்களின் வரிசையில் காமராஜருக்கு பின் இடம்பிடித்துகொண்டவர் கலாம், இருவருக்கும் குடும்பமில்லை, இருவருமே சொந்தபந்தங்களுக்கோ அல்லது சொந்தமக்களுக்கோ ஏதும் செய்ததுமில்லை.

    கலாம் காலமாகி இருக்கலாம், ஆனால் அவரது முத்திரை இந்தியாவில் அழிந்துவிடகூடியது அல்ல. இந்திய ராணுவம் இருக்கும் வரைக்கும் என்றல்ல, இந்திய கல்விநிலையங்கள் இருக்கும் வரை, மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

    பலநூறு ஆண்டுகள் செய்யவேண்டிய சேவையை 60 ஆண்டுகள் உழைப்பினில் இந்தியாவிற்கு செய்திருக்கும் விஞ்ஞான மகான் அவர்.

    ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள், இந்நாடு விசாலமான மனதுடையது, நாட்டிற்காய் நீங்கள் உழைத்தால், நல்ல கல்வியோடு பெரும் சிந்தனையோடு உழைத்தால் எந்த சாதியில் பிறந்தாலும், எந்த மதத்தில் பிறந்தாலும், எந்த குலத்தில் பிறந்தாலும் இந்நாடு அதற்குரிய அங்கீகாரத்தை கொடுக்காமல் போகாது

    கலாம், இஸ்ரோ சிவன் போன்றோரெல்லாம் கல்வியாலும் நாட்டு சிந்தனையாலும் முத்திரை பதித்தவர்கள், தங்கள் சாதியாலோ மதத்தாலோ அல்ல, மாறாக கல்வியால், பரந்த சிந்தனையால்
    சிந்தனை பெரிதாகவும் பரந்த மனத்தோடும் இருந்துவிட்டால் அவனுக்கு சாதி, மத, இன அடையாளம் தேவைபடாது, இந்தியன் எனும் ஒற்றை அடையாளம் போதும்

    அப்படித்தான் தமிழக மீணவ தீவில் பிறந்த ஏழை இஸ்லாமிய தமிழனை இந்ந்தியா இன்று நாடெங்கும் வணங்கிகொண்டிருக்கின்றது, அவனை அறியா இந்தியரில்லை அவர் படமில்லா பள்ளிகளில்லை.
    கலாமிற்கு இந்த பாஜக அரசு செய்யும் மரியாதை பாராட்டதக்கது, அவருக்கு பாரத ரத்னா வழங்கினார்கள், ஜனாதிபதியாக ஆக்கி வைத்தார்கள்

    கலாம் சீரியல் ஏவுகனை என அந்த திட்டத்திற்கு பெயரிட்டார்கள், இதோ பெரும் மணிமண்டபமும் திறந்தார்கள்
    மாநில அரசு அப்படி ஒரு மணிமண்டபம் கட்டியிருக்கும் என நம்புகின்றீர்கள்? ஒரு காலமும் நடந்திருக்காது
    மாணவர்களை நிரம்ப நேசித்தவர் அவர், அவரின் இன்னாளில் மாணவர்கள் நிச்சயம் அவரை நினைவு கூறவேண்டும்,எல்லா மாணவர்களும் அவரை படிக்கட்டும் கோடி மாணவர்களில் ஒரு கலாம் வருங்காலத்தில் வரமாட்டானா?

    நிச்சயம் வருவான்

    இத்தேசத்தை அரசியல்வாதி காக்க மாட்டான், போலி சிந்தனைவாதியோ இம்சை பிடித்த கொள்கைகளை வைத்திருப்பவனோ காக்க மாட்டான், சுயநலம் கொண்ட கும்பலெல்லாம் காக்காது
    நாட்டுபற்றோடு கூடிய அறிவாளியே இத்தேசத்தை காக்க முடியும் கலாம் அப்படி காத்தார்,

    கலாமின் காலடி சுவடில் இருந்து பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள், வந்து கொண்டே இருப்பார்கள்

    1962ல் ஒரு மோட்டார் குண்டை கூட எதிரி எல்லையில் வீசமுடியா நிலையில் இருந்தது இந்தியபடை
    இன்று அந்த இந்தியாவிடம் அக்னி, நாக், திரிசூல்,பிரித்த்வி, அஸ்திரா, நிர்பாய், பிரம்மோஸ், தனுஷ், ருத்திரம், பிரகார், ஆகாஷ் என ஏகபட்ட வகைகள் உண்டு

    இது செயற்கை கோளை தகர்க்கும் தரையில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகனை முதல், விமானம், ஏவுகனை, கப்பல், டாங்கி , நீர்மூழ்கி என எல்லா வகை ஆபத்துக்களையும் விரட்டி அடிக்கும்
    மிக நுட்பமான வகையில் எதிரியின் இலக்கினை தேடி பிடித்து அழிக்கும் வகையில் அவை இப்பொழுது வடிமைக்கபட்டுள்ளன‌

    இதன் மேம்படுத்தபடும் வடிவம் ரஷ்ய எஸ் 400 , இஸ்ரேலிய அயன்டோம் போல நமக்கு வான் தடுப்பு சாதனமாகவும் விரைவில் மாறும்

    கலாம் காலத்தால் பிரிந்திருக்கலாம் ஆனால் அவரின் உழைப்பால் இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்
    கே சீரிஸ் ஏவுகனைகள் நாட்டை காத்து கொண்டிருகின்றன, ஓடிசா பக்கம் அப்துல் கலாம் தீவு (முன்பு வீலர் தீவு) அனுதினமும் ஏவுகனை சோதனைகளை செய்து கொண்டே இருக்கின்றது

    சீனாவுடன் யுத்த நிலை பரபரப்பு காணப்படும் நேரம் சீனா பின்வாங்கி நிற்க இந்த ஏவுகனைகளும் காரணம்
    1962ல் பெரும் தோல்வியில் திரும்பிய இந்தியா, இன்று மாபெரும் பலத்துடன் எதிர்த்து நிற்க கலாம் மிக பெரும் காரணம், அவர் ஏற்றிவைத்த வெளிச்சமும், கட்டி வைத்த வான் கோட்டையும் அவ்வளவு பெரும் விஷயங்கள்
    ஆனால் அந்த தமிழன் பெயரில் தமிழ்நாட்டில் ஒரு பல்கலைகழகம் கிடையாது, கல்லூரி கிடையாது
    ஒரு சிலை கூட கிடையாது

    கல்வி அறிவு இல்லா, தேசபிரிவினைவாதி ஈரோட்டு ராம்சாமிக்கும், அவரின் அடிப்பொடி அண்ணாதுரை, கேமரா ஹீரோ ராம்சந்தருக்கு இருக்கும் சிலைகளில் 1000ல் ஒரு பங்கு கூட கலாமுக்கு இங்கு கிடையாது
    இந்நிலை மாற வேண்டும், கலாம் நினைவு போற்றபட வேண்டும், மாணவர்களில் பலர் அவர் வழியில் நாட்டுக்காய் வருதல் வேண்டும்

    ஒருமனிதன் நாட்டுக்காய் 100% வாழ்ந்தான், இந்தியனாக கடைசிவரை வாழ்ந்தான், மதம் இனம் மொழி தாண்டி இந்தியனாய் நின்றான் என்றால் அப்துல்கலாம் எனும் விஞ்ஞான ரிஷிக்கு தனி இடம் உண்டு

    அந்த தவமுனிக்கு, பிரம்மாஸ்திரமும் பாசுபத கனையும் கொடுத்த ரிஷிக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்

    (காமராஜர் திமுகவினரால் எப்படி அவமானபடுத்தபட்டார் என்பதை நமக்கு முந்தைய தலைமுறை கண்டது

    கலாம் எப்படியெல்லாம் திமுகவினரால் அவமானபடுத்தபட்டார் என்பதை கண்ட தலைமுறை நாம்

    ஆம், நாட்டுபற்றாளர்களாக ஒரு தமிழர் இருந்தால் திமுகவுக்கு ஒரு காலமும் பொறுக்காது என்பதற்கு இவை எல்லாம் சாட்சிகள், கலாம் எனும் மாமனிதனுக்கு திமுக செய்த இழிவுகளெல்லாம் ஒரு காலமும் மனதில் இருந்து நீங்காதவை

    இன்றும் பாருங்கள், டிரவிடிய அண்ணாடுரை ரேம்சாமி கருணாநிதி, ஜெயா என அவர்கள் பிறந்தநாளில் அவரவர் கல்லறைக்கு ஓடும் தமிழக ஆட்சி பீடம் இன்றும் தமிழகம் பேய்கரும்பில் அமைந்திருக்கும் கலாம் சமாதிக்கு செல்லாது

    தமிழகத்தின் திராவிட முதல்வர்கள் கலாமின் சமாதிக்கு செல்லவே மாட்டார்கள், ஏனென்றால் அதுதான் திராவிடம் , இந்திய தேசாபிமானிகளை முழுக்க வெறுக்கும் திராவிடம்)

  28. கஜினி முகமது சோமநாதபுரி ஆலயத்தை கொள்ளையடித்தான், ஆனால் ராபர்ட் கிளைவுக்கு அவன் குதிரையின் கால்முட்டிவரை தங்கம் இந்திய அரசர்களால் கொட்டபட்டது, அதில் தனக்கு தேவையானதை அவன் எடுத்து கொண்டான், கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் ராணிக்கு “அன்பளிப்பாக” கொடுக்கபட்டது என்பதில் இருந்து தொடங்குகின்றது வரலாற்று திரிபு

    வீரமாமுனிவனும் கால்டுவெல்லும் தமிழ்படித்த தமிழ் ஆர்வலர்கள், ஆனால் வீரமாமுனி எனும் பெஸ்கி கடைசி வரை கம்பராமாயணத்தை திருவாசகத்தை தொடாமல் இயேசுவின் வளர்ப்பு தந்தைக்கு ஏன் தேம்பவானி பாடினான், என்பதில் இருக்கின்றது ஐரோப்பியரின் தமிழ் ஆர்வம்

    எங்கிருந்தோ வந்த கால்டுவெல்லுக்கு இந்நாட்டின் வரலாறு எப்படி தெரியும்? திருசெந்தூர் ஆலயத்தினை கட்டியது யார் என கூட சொல்லாதவனா இந்து தமிழக வரலாற்றை எழுதினான்?

    இங்கிருந்துதான் தொடங்குகின்றது “திராவிட திரிபு”

  29. இந்தியாவில் இதுகாலம் நடந்திரா மிகபெரிய ஊழலாக தமிழக இந்து கோவில் தங்கநகை ஊழல் வெடிக்கும் போலிருக்கின்றது, இதில் திமுக அதிமுக என இரண்டு கட்சிகளும் சம்பந்தபட்டிருக்கின்றன‌

    விஷயம் உண்மை என்பது போல் பழைய புராதான நகைகள், தமிழகத்துக்கே உரிய அழகான‌ முத்து மாலைகள் என என்னென்னவோ காணாமல் போயிருக்கின்றன‌

    தமிழக ஆலயங்கள் 13ம் நூற்றாண்டில் கொள்ளையிடபட்டன ஆனால் அதன் பின்னும் தங்கம் குவிந்தது, நாயக்க மன்ன்னர்கள் பிற்கால பாண்டியர்கள் ஏன் வெள்ளையன் கொடுத்த நகைகளே உண்டு

    நேபாள மன்னர்கள் தமிழக ராமேஸ்வரம் போன்ற ஆலயங்களில் அறப்பணிக்கு அள்ளி கொடுத்திருந்தர்கள், இன்றும் ராமேஸ்வர ஆலயத்தின் அறங்காவலரில் அவரும் ஒருவர், அவர்கள் கொடுத்த நகையெல்லாம் என்னாயிற்று என தெரியவில்லை

    இந்த விஷயம் சாதாரமானது அல்ல, மிகபெரிய ஊழல் இந்தியா அல்ல உலகமே கண்டிராத மிகபெரிய ஊழல் இதுதான்

    அதிமுக அதை ரகசியமாக செய்தது, கருணாநிதியும் செய்தார், இப்பொழுது ஸ்டாலின் அரசு பகிரங்கமாக சொல்லி மாட்டிகொண்டது

    இதில் ஸ்டாலின் அரசை நிச்சயம் பெரிதும் குறை சொல்லமுடியாது, விவகாரம் 1977ல் இருந்தே வெடித்தது என்றால் அதிமுகவும் ஸ்டாலினுக்கு முந்தைய திமுகவுமே பெரும் குற்றவாளிகள்

    பல லட்சம் கோடி இவ்விவகாரத்தில் சுருட்டபட்டிருக்கலாம், வெள்ளையனும் செய்யாத அக்கிரமத்தை இவர்கள் செய்திருக்கலாம்

    இதில் மத்திய அரசு தலையிட வேண்டிய நேரமிது, கடத்தபட்ட சிலைகள் போல இவை நாட்டின் கலை சொத்துக்கள், அவை பாழாயிருக்கும் என்றால் இங்கு நடந்த உச்சகட்ட கொடுமை அதுதான்

    இதில் திமுக மட்டும் சம்பந்தபட்டிருக்கும் என்றால் இந்நேரம் டெல்லி களத்தில் இறங்கியிருக்கும் ஆனால் அதிமுகமேல் டெல்லிக்கு எப்பொழுதுமே ரகசிய கரிசனை உண்டு, இதனால் விசாரணை தொடங்குமா என தெரியவில்லை

    விவகாரத்தை தமிழக‌ இந்துக்கள், இந்தியாவில் இருக்கும் எல்லா இந்து அமைப்புகளையும் சேர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டு உரிய நடவடிக்கை கோரலாம், சிபிஐ விசாரணை போன்றவை நடைபெறாமல் உண்மை வராது

    தனி நீதிமன்றம் அமைத்து இனி இந்துக்களின் வழக்குகளை வேகமாக விசாரித்து அதிரடி தீர்ப்புகளை பெற்றால் தவிர ஜனநாயக முறையில் தமிழகத்தில் இந்து ஆலயங்களையும் அதன் சொத்துக்களையும் காக்க முடியாது, நிலமை எங்கோ சென்றுவிட்டது

    நீதிகட்சி, காங்கிரஸ், திமுக, அதிமுக என இந்துவிரோதிகள் தொடர்ந்து ஆண்ட மாநிலத்தில் இது நடக்காவிட்டால்தான் ஆச்சரியம். இந்துக்கள் ஏதேனும் நடவடிக்கை தொடங்கினால் இருப்பதை காக்கலாம்

    இல்லையேல் ஒரு காலத்தில் இங்குதான் பெரிய கோவில் இருந்தது அதற்கு நகையும் சிலையும் தேரும் இருந்தது என வருங்கால குழந்தைகளுக்கு கதை சொல்லும் அவல நிலை வரும், அதை களைவது இந்துக்கள் கையில்தான் இருக்கின்றது

  30. வாயில் வடை சுடும் திராவிடர்களுக்கு

    நேரு தேசத்தை உருவாக்கினார்!!!
    #மன்மோகன்_சிங் அதை பாதுகாத்தார்!!!!
    #நரேந்திர_மோடிஜி அவற்றை விற்பனை செய்கிறார்!!!!

    இன்று கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப்பெரிய பொய்,………..
    சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்படுகிறது!!!!!

    #காங்கிரஸ் ஒரு அரசாங்க வங்கியை உருவாக்குகிறது…. மோடி அரசாங்கம் அதை விற்கிறது,….. பலர் இந்த பொய்யையும் நம்புகிறார்கள்……! விளையாட்டுஎன்று ஒரு அற்புதமான பொய் பரப்பப்படுகிறது°

    இன்று, தனியார் துறையில் உள்ள மூன்று பெரிய வங்கிகள், அதாவது ICICI வங்கி, HDFC வங்கி, மற்றும் AXIS வங்கி, இவை மூன்றுமே அரசாங்க வங்கிகளாக இருந்தன,

    ஆனால் பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அவற்றை தனியாருக்கு விற்றார்

    ஐ.சி.ஐ.சியின் முழுப்பெயர் “இந்திய தொழில்துறை கடன் மற்றும் முதலீட்டுக் கூட்டு ஸ்தாபனம் ”.. இது இந்திய அரசாங்கத்தின் அமைப்பாகும், இது பெரிய தொழில்களுக்கு கடன் வழங்குவதாக இருந்தது, ஆனால் ஒரே ஒரு கட்டத்தில், நிதியமைச்சர் மன்மோகன் சிங் அதை முதலீடு செய்து தனிமைப்படுத்தினார்.

    இன்று, எச்.டி.எஃப்.சி வங்கி, அதன் முழுப்பெயர் “”இந்திய வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம்”, இது இந்திய அரசின் ஒரு அமைப்பாக இருந்தது, இது நடுத்தர வர்க்க மக்களுக்கு வீட்டுக் கடன்களை மலிவான வட்டிக்கு வழங்கிவந்தது.
    நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், அரசாங்கத்தின் வேலை ஆளுகை மட்டுமே, வீட்டுக் கடன்களை விற்க வேண்டாம் என்று கூறினார்.

    மன்மோகன் சிங் இதை ஒரு அவசியமான நடவடிக்கை என்று கூறி, அரசாங்கத்தின் வேலை அரசாங்கத்தை நடத்துவதே, ஒரு வங்கியை நடத்துவதோ, கடன்களை வழங்குவதோ இல்லை என்று கூறினார்.

    ஒரு கட்டத்தில், நிதி மந்திரி மன்மோகன் சிங் எச்.டி.எஃப்.சி வங்கியை விற்றார், அது ஒரு தனியார் துறை வங்கியாக மாறியது.

    இது ஆக்ஸிஸ் வங்கியின் மிகவும் சுவாரஸ்யமான கதை!!!!!

    இந்திய அரசாங்கத்தின் ஒரு அமைப்பாக இருந்தது, அதன் பெயர் ” #யூனிட்_டிரஸ்ட்_ஆஃப்_இந்தியா” இந்த நிறுவனம் சிறிய சேமிப்புகளை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது, அதாவது நீங்கள் அதில் சிறிய தொகையை டெபாசிட் செய்யலாம். , முதலில் அதற்கு யுடிஐ வங்கி என்று பெயரிடப்பட்டது, பின்னர் அதற்கு ஆக்சிஸ் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    இன்று இதேபோல், ஐடிபிஐ வங்கி ஒரு தனியார் வங்கியாகும். ஒரு காலத்தில் இது “இந்திய தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்” என்றழைக்கப்படும் இந்திய அரசாங்க அமைப்பாக இருந்தது.இதன் வேலை தொழில்களுக்கு கடன் வழங்குவதாகும், ஆனால் மன்மோகன் சிங்கும் , ஒருபோதும் பலவீனமடைய விட வேண்டாம்!!!!

    இந்தியாவுக்கு முதலீட்டுக் கொள்கையை யார் கொண்டு வந்தார்கள்?, நரசிம்மராவின் காலத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது யோசித்துப் பாருங்கள்,………. மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில், அதிகபட்ச அரசு………
    Less governance என்று கூறியபோது, ​​அரசாங்கத்தின் பணிகள் நிர்வாகம் செய்வது மட்டுமே!!!!!

    கடன் கொடுப்பதோ, வாங்குவதோ அல்ல!!! என்று கூறினார்.

    முதன்முதலில் சுங்க வரிக் கொள்கையை கொண்டுவந்தது மன்மோகன் சிங் தான்…

    அதாவது, தனியார் நிறுவனங்களால் சாலை அமைத்து, அந்த நிறுவனங்களுக்கு கட்டண வரி வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    மன்மோகன் சிங் முதலில் #விமான_நிலையங்களை
    #தனியார்_மயமாக்குவதை_தொடங்கினார்,….

    டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையம் #GMR_குழுமத்திற்கு_வழங்கப்பட்டது…

    இன்று ராகுல் குதித்து நடனமாடி, மெல்லிசை ராகத்தை பாடுகிறார், “மோடி அதை அவரது நண்பர்களுக்கு விற்றுவிட்டார் என்று ..

    மன்மோகன் சிங் அதைச் செய்தால் – #முதலீடு

    மோடி செய்தால் – #நாட்டை_விற்கிறார் .. !!
    என்ன நியாயமடா..?

    மன்மோகன் சிங் 2009-10 ஆம் ஆண்டில் 4 நிறுவனங்களை விற்றார் –

    1) NHPC ஆயில் லிமிடெட்.-
    ஆயில் இந்தியா லிமிடெட்

    2)NTPC- தேசிய வெப்ப மின் கழகம்

    3)REC – கிராமப்புற மின்மயமாக்கல் கழகம்

    4)NMDC – தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம்

    2010-11 ஆம் ஆண்டில், மன்மோகன் சிங் 6 நிறுவனங்களை விற்றார்!

    1) SJVNL – சட்லுஜ் ஜல் வித்யுத் நிகம் லிமிடெட்

    2)EIL – பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்

    3)CIL- கோல் இந்தியா லிமிடெட்

    4)PGCIL – பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

    5)MOIL – மாங்கனீஸ் ஓர் இந்தியா லிமிடெட்

    6)ISC – இந்திய கப்பல் கழகம்.

    மன்மோகன் சிங் 2011-12 ஆம் ஆண்டில் 2 நிறுவனங்களை விற்றார்

    1)PFC- பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்.

    2)ONGC- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்

    *2012-13 ஆம் ஆண்டில், மன்மோகன் சிங் 6 நிறுவனங்களை விற்றார்-*

    1) SAIL – ஸ்டீல் ஆணையம் ஆஃப் இந்தியா லிமிடெட்

    2)NALCO – நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்

    3)RCF – தேசிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள்

    4)OIL – ஆயில் இந்தியா லிமிடெட்

    5)HCL – இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்

    6)N.P.C.C.

    2013 மன்மோகன் சிங் 2013-14 ஆம் ஆண்டில் 12 நிறுவனங்களை விற்றார் –

    1)NHPC – தேசிய நீர்மின்சாரக் கழகம்

    2)BHEL- பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்

    3)EIL – பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்

    4) NMDC- தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம்

    5)CPSE-எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்

    6)PGCI- பவர் கிரிட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்.

    7)NFL – தேசிய உர லிமிடெட்

    8)MMDCஎம் – உலோகம் மற்றும் தாதுக்கள் வர்த்தகக் கழகம்

    9)HCL – இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்

    10)ஐ.டி.டி.சி – இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்

    11)SDC- மாநில வர்த்தக கழகம்

    12)NLC- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்

    இவை அனைத்திற்கும் சான்றுகள் உள்ளன …

    1.) மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ், முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் அதிகாரப்பூர்வ வலை தளத்தைப் பார்வையிடவும்: http://www.dipam.gov. இல்.

    2.) முதலில் Dis-Investment ஐக் கிளிக் செய்க. பின்னர் Past Dis-Investment ஐக் கிளிக் செய்க

    3.) இடுகையில் கொடுக்கப்பட்ட அனைத்து தரவுகளும் அங்கு கிடைக்கின்றன.

    மோடி நாட்டை விற்கிறார் என்று நினைப்பவர்களின் கண்களைத் திறக்கவே இந்த பதிவு.

    மோடி நாட்டை விற்கவில்லை
    மன்மோகன் ஏற்கனவே நாட்டை விற்றுவிட்டார்

    உங்கள் மொழியில் –
    மன்மோகன் சிங் 2009-14 ஆம் ஆண்டில் 5 ஆண்டுகளில் 26 அரசு நிறுவனங்களை 33 முறை விற்றிருக்கிறார்!

    உண்மையை ஊருக்கு உரக்க சொல்வோம்!!!!

    நம் பாரத நாட்டை பாதுகாக்க உண்மையான குடிமகனாக இருப்போம்!!!!!

  31. நாம் கோவில் உண்டியலில் போடும் பணத்தை, அர்ச்சனை உட்பட எந்த டிக்கெட்டுக்கும் செலுத்தும் பணத்தை அரசு எடுத்துக் கொண்டு அந்தப் பணத்திலேயே கடவுள் இல்லை என்று சொன்ன இழிந்தவனுக்கு அதே கோவில் முன்னால் சிலை வைக்கும்.

    புதிது புதிதாக மற்ற மத வழிபாட்டிடங்கள் கட்டப்படும் போது, இருக்கும் ஹிந்து கொவில்களை மூடவும், அழிக்கவும் மட்டுமே அந்தப் பணம் உதவும். அரசு அந்தப் பணத்தை ஸ்திலமடைந்துள்ள ஹிந்து கோவில்களைப் புதுப்பிக்கவோ அல்லது ஹிந்து கலாசாரத்தை கற்பிக்கும் பள்ளிகளை உருவாக்கவோ ஒரு போதும் உபயோகிக்காது.

    அது மட்டுமல்ல யார் யாருக்கோ புனிதப் பயணம் செல்ல அந்தப் பணத்தை வாரி வழங்கும், அந்தப் பணத்தில் ஹிந்துக்களை மதம் மாற்ற மத வியாபாரிகளுக்கு வசதிகள் செய்து தரும்.

    உண்டியலில் பணம் போடுவது, அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு நன்கொடை வழங்குவது, இல்லை எந்த விதத்திலாவது பணம் தருவது நம் கையாலேயே நம் கண்களைக் குத்திக் கொள்வதற்குச் சமம்

  32. தமிழ்பண்பாடு, கலாச்சாரம், தெய்வீகம் நாகரீகம் என்று பெருமை பேசுகிறோம். ஆனால் இவற்றில் எதையுமே ஏற்றுக் கொள்ளாத சமுதாய மக்களை தமிழர்கள் என்று சொல்லி தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். இவர்கள் தமிழைவைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் புரோக்கர்கள். எனவேதான் யார் தமிழன் என்பதை பச்சைத் தமிழர்களுக்கு உணர்த்தவே இந்த சிறிய முயற்சி.

    தமிழ்நாட்டில் பிறந்து விட்டாலே தமிழர்களா?
    தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்மொழி மட்டுமே பேசுபவர்கள் தமிழர்களா?
    தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், பேசினால் தமிழர்களா இல்லையா?
    தமிழ்நாட்டில் பிறந்து பிழைப்பிற்காக வெளிநாடு சென்று பல தலைமுறைகளாக அங்கேயே இருந்துகொண்டு தமிழ்மொழி மறந்து அந்தந்த நாட்டு மொழி பேசினாலும் தமிழ் கலாச்சாரம் பண்பாட்டோடு வாழ்பவர்கள் தமிழர்களா? இல்லையா? அல்லது தமிழனின் கலாச்சாரம் பண்பாடு, நாகரீகம், வரலாறு, நடை, உடை பாவனை எல்லாம் மாறி வெளிநாட்டுக்காரன மாறி மொழிமட்டும் தமிழ் பேசினால் தமிழனா?
    தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்து எந்த மொழி பேசினாலும் போலி பகுத்தறிவு பேசும் திமுக கட்சிக்கு ஓட்டு போடுபவன் மட்டும் தமிழனா? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி பேசிக்கொண்டு, பா.ஜ.க, அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக, பா.மா.க, வி. சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போடுபவன் தமிழனா இல்லையா?
    அரசாங்கம், தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை கொடுத்தும் ஓட்டு போட மறுப்பவன் பகுத்தறிவு பெற்ற தமிழனா?
    அடுத்தவன் ஓட்டை திருட்டு ஓட்டாக போட்டுவிட்டு மார்தட்டி கொள்கிறானே அவனும் தமிழனா?
    தமிழ், தமிழர் பண்பாட்டு வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் அகந்தியர், நக்கீரன், கம்பன், இளங்கோ, பாரதியார், வள்ளுவர் போன்றவர்கள் பெயர்களையும் நாட்டிற்காக உழைத்த காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கர், வ.வு.சிதம்பரனார், வாஞ்சிநாதன், தியாகி செண்பகராமன், தமிழ் தாத்தா, உ.வே. சாமிநாதர், போன்றவர்கள் பெயர்களையும் தமிழுக்காக பாடுபட்டதாகக் கூறிக்கொள்ளும் ஈ.வே.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, வீரமணி, சம்பத், வைரமுத்து, போன்றோர் பெயர்களைத் தன் குழந்தைக்கு வைப்பவன் தமிழனா?
    யார் இவர்கள், இவர்களுக்கும் எங்களுக்கும் என்ன உறவு, என்று சொல்லி கொண்டு, முகமது கோரி, சவுக்கத் அலி, லியாகத் அலி, நூர், பீர், கபீர் பகரூன்னிஷா, ஆயிஷா, பர்கத் என்று தன் குழந்தைக்கு பெயர் வைப்பது தமிழனா.
    நாங்கள் எவரையும் (தமிழர்கள்) முன்னுதாரனமாக ஏற்க முடியாது என்று கூறி பீட்டர், அல்போன்ஸ், மைக்கேல், டெய்சி, ரூபி, ரீட்டா, ஸ்டெல்லா, ஜான்சன், ஜாக்சன் என்று பைந்தமிழில் பெயர் வைப்பவன் தமிழனா?
    மதுரை, காஞ்சி, திருவாரூர், ராமேஸ்வரம், எட்டையபுரம், பசும்பொன் விருதுநகர், ஈரோடு எங்கள் புனித நகரம் என்பவன் தமிழனா?
    அருள் மணக்குது அன்பு சுரக்குது அரபு நாட்டிலே, ஈச்சமரந்து இன்பச் சோலை என்று பாடுகிறவன், தமிழனா?
    இல்லை, இல்லை, ஏற்கமுடியாது. வாடிகன் சிட்டி இஸ்தி கோலி சிட்டி என்பவன் தமிழனா?
    தமிழ்நாட்டிலே பிறந்து தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு அழகு தமிழில் வணக்கம். நன்றி என்று சொல்பவன் தமிழனா?
    சலாம் அலைக்கும், அலைக்கும் சலாம் என்பவன் தமிழனா?hindu-tamilan
    எணிணிஞீ ட்ணிணூணடிணஞ், ஞ்ணிணிஞீ ச்ஞூணாஞுணூணணிணிண, ஞ்ணிணிஞீ ணடிஞ்டணா, கூடச்ணடுண். என்பவன் தமிழனா?
    இன்பத் தமிழில் அம்மா, அப்பா, என்பவன் தமிழனா?
    வாப்பா, உம்மா, அத்தா என்பவன் தமிழனா?
    தமிழ் புத்தாண்டு சித்திரை, என்னுடைய பத்தாண்டு என்று கொண்டாடுபவன் தமிழனா?
    இல்லை., இல்லை, என்னுடைய புத்தாண்டு இரண்டும் இல்லை, என்னுடைய புத்தாண்டு ஒச்ணதச்ணூதூ 1, டச்ணீணீதூ ணஞுதீ தூஞுச்ணூ என்பவன் தமிழனா?
    தமிழர் திருநாள், உலகம் போற்றும் உழவர் திருநாள் என்பவன் தமிழனா?
    ஏற்க முடியாது. என்னுடைய திருநாள் ‘ரம்ஜான்’ என்பவன் தமிழனா?
    இல்லவே இல்லை. என்னுடைய திருநாள் கிறிஸ்துமஸ் என்பவன் தமிழனா?
    குமரியிலே 133 அடி உயரத்திற்கு சிலை எழுப்பி பெருமை சேர்க்கும் நமது திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ எனது புனித நூல் என்பவன் தமிழனா?
    ஏற்கமாட்டோம். எனது புனிதநூல் ‘குரான்’தான் என்பவன் தமிழனா?
    இல்லவே இல்லை. எனது புனிதநூல் பைபிள் என்பவன் தமிழனா?
    காவிரி, வைகை, தாமிரபரணி, ஆற்றுநீர் புனிதம் என்பவன் தமிழனா?
    இல்லை. இல்லை. மெக்காவில் உள்ள ஙூஅ–ஙூஅ– தான் எனக்குப் புனிதம் என்பவன் தமிழனா?
    ஞானஸ்தானத்தின் போது விழுங்குவது மட்டுமே புனித நீர் என்பவன் தமிழனா?
    நமது நாட்டில் வாழ்ந்துகொண்டு வியாபாரம் செய்வது, திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, மதம்மாற்றுவது, லவ் ஜிகாத், என்ற பெயரில் பணக்கார வீட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வது, நாட்டைத் துண்டாட நினைப்பது, பயங்கரவாதிகளுக்கு துணைபோவது, நமது மொழியைத் திட்டம் போட்டு அழித்து ஆங்கில மொழியையும் அரபு மொழியையும் வளர்ப்பது, குண்டு வைத்து மக்களை அச்சுறுத்துவது, அந்நிய நாட்டினருக்கு ஏஜண்டாக வேலை செய்வது, பத்வா என்று சொல்லி தமிழர்களைக் கொல்வது என அத்தனை சமூக விரோத தேச துரோக செயல்களைச் செய்பவர்கள் தமிழர்களா இருக்க முடியுமா?

    பிறகு யார் தமிழர்? யார்யார் தமிழராக இருக்க முடியும்?

    இதோ.

    மஞ்சளையும், மஞ்சள் கயிற்றையும், திருநீறு, திருமண், குங்குமம் போன்றவற்றையும் புனிதமாக மதிக்கின்றார்கள்.
    கோமாதா எங்கள் குலமாதா என்று பசுவை தெய்வமாக வணங்குகிறவர்கள்.
    மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டு.
    கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். நீரில்லலா நெற்றி பாழ் என்பதை உணர்ந்து.
    கங்கை, காவிரி, வைகை, தாமிரபரணி, போன்ற ந்திகளையும் மலைகளையும் புனிதமாக கருதி.
    ஒருவனுக்கு ஒருத்தி – மக்களைப் பெற்றவள் மகராசி என்ற பழமொழிகளை ஏற்று.
    புனித நாட்களில் வாசலில் சாணம் தெளித்து, கோலமிட்டு, வாசலில் வாழைமரம் தோரணம் கட்டி, மங்கள வாத்தியம் முழங்க குத்து விளக்கேற்றி பாரம் பரியத்தை கட்டி காத்து.
    உலகத்தின் எந்த மூலையில் வசித்து வந்தாலும் என்ன மொழி பேசினாலும் உணவு, உடை ஏதுவாக இருப்பினும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை ஒரே நாடு ஒரே மக்கள். அனைவரும் பாரதமாதாவின் தமிழ்தாயின் குழந்தைகள் என்பதை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள் மட்டுமே தமிழர்கள்.
    அப்படிப் பார்த்தால் நமது தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் மட்டுமே தமிழர்கள்.

  33. பண்டிகைகளும் நம் நாட்டின் பொருளாதாரமும்.

    ஆயுத பூஜை நேற்று முடிவடைந்தது
    சும்மா ஒரு சின்னதா கணக்கு போடுவோம்

    1. பூ மற்றும் மாலை – 4 கோடி மக்கள்
    கார், cycle, bike two wheeler , auto riksha …
    – 8 கோடி மாலை ஒரு மாலை 100 ரூபாய் வைத்தால் கூட 800 கோடி

    2. வாழை கன்று – 8 கோடி கன்றுகள் தொழிற்சாலை, லாரி, பஸ், ரூபாய் 50 என்று வைத்தால் கூட 400 கோடி

    3. இனிப்பு ஒரு ஆளுக்கு கால் கிலோ என்று வைத்தால் 2 கோடி பேர் – 400 கோடி

    4. வீட்டுக்கு தேவையான பூஜை சாமான்கள் ஒரு குடும்பத்துக்கு 100 என்று வைத்து கொண்டால் கூட 200 கோடி

    5. இது தவிர தொழிற்சாலைகள் ஒரு கோடி மக்களுக்கு பரிசு பொருட்கள் 500 என்று வைத்து கொண்டால் 500 கோடி

    கூட்டினால் 2500 ல இருந்து 3000 கோடி வருது

    ஒரு நாளில் அதுவும் ஏழை எளிய மக்கள் பயன் அடையும் வழியில் நமது பண்டிகைகள் உள்ளன. இந்த முறையை கிண்டல் செய்து ஓசியில் பொறி கடலை மற்றும் சுண்டல் சாப்பிடும் ஒரு கூட்டம் பகுத்து அறிவு பேசி இதையும் அழிக்க பார்க்கிறது

    இந்த பண்டிகைக்கு வரும் முக்கால் வாசி பொருட்கள் விவசாயம் சார்ந்தது

    இந்தியாவில் ஹிந்து பண்டிகைகளும் திருவிழாக்களும் தான் பொருளாதாரத்தை தூக்கி பிடிக்கின்றன என்பதை எல்லாரும் உணர வேண்டும்

    இதை எல்லாம் அழித்தால் பின் நம் பொருளாதாரம் அழிந்து விடும் பிறகு ஆப்ரிக்கா நாடுகள் போல நாமும் நமது பாரம்பரியத்தை இழந்து வெள்ளையனிடம் கை ஏந்தி நிற்க வேண்டும்

    இப்பொழுது பகுத்து அறிவு பேசுபவர்கள் ஒன்று சொல்ல வேண்டும் எந்த நிலையில் இருந்து கடவுளை எதிர்க்கிறார்கள்.

    கடவுளை கும்பிடுங்கள் பல பேர் வாழ்வார்கள்.

    ஒவ்வொரு இந்து பண்டிகைகளும் திருவிழாக்களும் சாதாரண வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மிகப்பெரிய அளவில் மாற்றுகிறது. அதை தகர்க்க பல திராவிட தீய சக்திகள் முயன்று தோற்று வருகின்றன.

  34. வங்கதேச போரின் பொன்விழாவினை கொண்டாட தேசம் தயாராகின்றது, அந்த கிழக்கு பாகிஸ்தானை பிரித்து தனி நாடாக்கியது இந்தியா, ஆனால் அதே வங்கதேசம் இன்று இந்துக்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்துவதல்லாம் காலத்தின் கோலம்

    இந்தியா எனும் இந்துநாடுதான் தங்களுக்கு சுதந்திரம் பெற்று தந்தது எனும் நன்றி கூட அவர்களுக்கு இல்லை, 1971ல் வென்றபொழுதும் அந்த நாட்டை சுதந்திரமாக விடாதீர்கள் இந்திய ஆளுகையின் தன்னாட்சி பிரதேசமாக அறிவியுங்கள் எனும் கோரிக்கை இருந்தது, அதன் அர்த்தம் இன்றுதான் தெரிகின்றது

    வங்க போர் இந்திய சரித்திரத்தின் பெருமிதங்களில் ஒன்று அந்த நினைவுகளில் மூழ்கியிருந்தால் அதிமுக பொன்விழா என இங்கே ஒரு கோஷ்டி கிளம்புகின்றது

    அட அவர்களுக்கும் இந்த ஆண்டுதான் பொன்விழா

    அதிமுக ஆரம்பிக்கபட்டதில் ஏகபட்ட மர்மங்கள் உண்டு, தன்னை விட பலமிக்க ஒருவனை அருகில் அமர்த்தும் பொழுது அவன் ஆயுதத்தை களைந்துவிடு என்பது ராஜநீதி, கருணாநிதி அதை செய்தார் எம்ஜிஆர் எனும் மகத்தான மக்கள் சக்தி பெற்ற நடிகனை அருகில் அமர்த்தும்பொழுது சினிமாவினை விட்டு அவர் ஒதுங்க வேண்டும் என நினைத்தார்

    ஆனால் நாம் தமிழர் போல அல்லது கமலஹாசனின் மையத்தை போல இருந்த அக்கால திமுகவினை ஆட்சியில் அமர்த்தியது எம்ஜிஆரின் முகம் என்பதை நிரூபிக்கும் அவசியம் எம்ஜிஆருக்கும் இருந்தது

    தேர்ந்த தந்திரசாலியான எம்ஜிஆர் ஒரு காலமும் அரசியலை பெரிதாக விரும்பியவர் இல்லை, சினிமாவில் தன் ஆதிக்கம் நிலைக்கவேண்டும் என்று மட்டும்தான் விரும்பினார்

    ஆனால் குபீரென முளைத்த மு.க முத்து ரசிகர் மன்றங்களும் இன்னும் பல சவால்களும் அவருக்கு நெருக்கடியினை கொடுத்தன‌

    தன் சினிமா ஆதிக்கத்தை நிலைக்க வைக்கவே அவர் திமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தினார், ஆனால் கட்சியினை விட்டு நீக்கினால் அவர் அடங்கிவிடுவார் தன்னை மீறி அவர் வெல்லமுடியாது என தவறாக கணக்கிட்ட கருணாநிதியால் கட்சி தொடங்கும் அவசியம் அவருக்கு வந்தது

    அதுவும் காமராஜருடன் தன்னை இணைக்கத்தான் அவர் விரும்பினார், காமராஜர் காங்கிரஸில் ஒரு கருணாநிதி மனபான்மை கொண்டவர் யாரையும் நம்ப மாட்டார், வளர விடவும் மாட்டார்

    இதனால் அவர் மறுத்தபின்னர்தான் கட்சி தொடங்கினார் எம்ஜிஆர்

    அதன் பின் தமிழகம் உண்மையினை சொன்னது,எங்களுக்கு தேவை திமுகவோ அதன் கொள்கைகளோ அல்ல ராமசந்திரனின் முகம் என அறுதியிட்டு சொன்னது

    திண்டுக்கல் இடைதேர்தலிலே அசத்தினார் எம்ஜிஆர், அதன் பின் அவர் தமிழக முடிசூடிய அரசர், தேர்தல் எல்லாம் சும்மா சம்பிரதாயம்

    திமுகவினை உடைத்ததில் டெல்லி பங்கும் உண்டு என்பது முன்னாள் அரச அதிகாரிகளே சொன்ன விஷயம், அதுபற்றி உறுதியான தகவல் இல்லை என்றாலும் மறுக்கவும் முடியாது

    அதிமுக எம்ஜிஆர் இருந்த 11 ஆண்டு காலமும் வெற்றிமேல் வெற்றி பெற்ற பெரும் கட்சி, இவ்வளவுக்கும் அதற்கு கொள்கை கோட்பாடு என எதுவுமில்லை, ஆனால் வெற்றி பெற்று கொண்டே இருக்கும்

    அதை லாவகமாக எம்ஜிஆருக்கு பின் கைபற்றினார் ஜெயா அதற்கு சசிகலா கோஷ்டியின் தொடக்க கால உதவி இருந்தது , ஜெயாவிற்கான மிரட்டல்களை அவர்கள் சமாளித்தார்கள் உண்மை

    ஆனால் நவாப் குடும்பத்தில் புகுந்த ராபர்ட் கிளைவ் பின்னாளில் நவாபினை அகற்றி தானே அமர்ந்தது போல் சசிகலாவின் நடவடிக்கைகள் இருந்தன, ஜெயாவும் அவரை முழுக்க வெளியே தள்ள முடியவில்லை

    அதன் பின் நடந்ததெல்லாம் தமிழகம் அறிந்தவை, இன்று ஜெயாவும் இல்லை

    இந்நேரத்தில் அதிமுக தடுமாறுகின்றது,திமுக தொடங்கும் பொழுது கருணாநிதி சொன்ன வார்த்தைகள் இங்கு முக்கியம்

    “அதிமுக என்பது தனிமனித கவர்ச்சியில் உருவான கட்சி, அம்முகங்கள் ஒன்றே கட்சியின் பலம்” அது முழுக்க சரி, ஆனால் அதே முககவர்ச்சிதான் திமுகவுக்கும் பலமாக இருந்தது என்பதை அவர் மறைத்தார்

    இன்று வசீகரமான இரு முகங்களை இழந்து அதிமுக தடுமாறுகின்றது

    சரி, அதிமுக எனும் கட்சி என்ன தமிழகத்துக்கு என்ன செய்தது என்றால் அதுதான் விஷயம்

    அது இங்கு தேசியம் எழாமல் பார்த்து கொண்டது, திமுகவும் அதிமுகவும் மோதிகொண்டதில் மற்ற கட்சிகள் இல்லாது செய்யபட்டன, மூப்பனாரின் முயற்சிகளும் தோற்றோடின‌

    அதிமுக எனும் கட்சி உதயமாகாமல் இருந்திருந்தால் திண்டுக்கல் இடைதேர்தல் முதல் சட்டமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் கைபற்றும் வாய்ப்பு இருந்தது

    அதை இந்த பிளவு தடுத்தது, இவர்களின் கூட்டு அரசியல் அல்லது எதிரணி அரசியலில் தேசியம் இங்கே எழாமமே போனது

    இக்கட்சிகளை இணைத்து வைக்கும் காட்சிகளும் நடந்தன, பீகாரின் பிஜூ பட்நாயக் காங்கிரசுக்கு எதிராக பலமான கூட்டணியினை அமைக்க இவர்களை ஒருங்கிணைக்க முயன்றார் ஆனால் கடைசி நேரத்தில் நழுவினார் எம்ஜி ராம்சந்திரன்

    நிச்சயம் அதிமுக ஊழல் கட்சி என்பதை மறுக்க முடியாது, அவர்களால் தேசியமும் எழவில்லை ஆனால் திமுகவுக்கு பல விஷயங்களில் மாற்றை கொடுத்தது அதிமுக‌

    குறிப்பாக நாத்திக தமிழகம் என திமுக சென்ற இலக்கை அடித்து நொறுக்கியது அதிமுக, திருச்சி திருவரங்கம் தென்காசி கோவில் என அக்கட்சி கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்ததெல்லாம் வரலாறு

    காஞ்சி பெரியவரை சந்தித்து பெசன்ட் நகர் முருகன் கோவிலுக்கெல்லாம் இடம் கொடுத்தார் ராமசந்திரன்

    திமுகவின் நாத்திக வாதத்தை, மிஷனரிகள் மற்றும் இந்துவிரோத சக்திகளோடு அது ஆடிய ஆட்டத்தை எல்லாம் கட்டுபடுத்தும் சக்தியாக அதிமுக இருந்ததை மறுக்க முடியாது

    நாத்திக திமுகவில் இருந்து பிரிந்த அதிமுகவுக்கு பிராமண ஜெயலலிதா தலைவராகி முதல்வருமாகி கோவில் நிகழ்வுகளில் பங்குபெற்றபொழுது திமுக மானமுள்ள கட்சி என்றால் தன்னை கலைத்திருக்க வேண்டும், ஆனால் அதை செய்யவில்லை

    ராமசந்திரனுக்கு பின் தனிபட்ட மக்கள் செல்வாக்கு ஜெயலலிதாவுக்கு இருந்தது, அது இந்து ஆதரவு எனும் வகையில் இருந்தது

    ஜெயா எத்தனையோ தவறுகளை செய்தாலும் அவர் வென்று கொண்டே இருக்க அந்த ஆதரவுதான் காரணம்

    ஆனால் கூடா நட்பு ஜெயாவினை கெடுத்தது, இன்று ஜெயா இருந்திருந்தாலும் அவர் நிச்சயம் குற்றவாளியாக இருந்திருக்கலாம்

    ராமசந்திரன் ஜெயாவோடு இங்கு அதிமுக ஓரளவு முடிவுக்கு வந்தாயிற்று, இனி அதன் திமுக எதிர்ப்பு மற்றும் இந்து ஆதரவு வாக்குகளை எதிர்காலத்தில் பாஜக அள்ளலாம்

    ஒட்டுமொத்தமாக அதிமுகவின் சாதனை என்னவென்றால் திமுகவின் இந்து எதிர்ப்பினை, தேச விரோத அரசியலை பாஜக எழும் வரை தாக்குபிடித்த கட்சி என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை மற்றபடி ஊழல் என்பது இருவருக்கும் பொதுவான விஷயம், அது அன்றி இரு கட்சிகளுமே இல்லை

    இந்த பொன்விழா தொடக்கத்தில் ஒரு காமெடி நிகழ்ந்துள்ளது, சசிகலா இன்று கட்சி கொடியேற்றி ஏதேதோ செய்திருக்கின்றார்

    அதிமுக எனும் கட்சி 1987ல் உடைந்தபொழுது அதை மீள கட்டி எழுப்பியதில் சசிகலா பங்கு அதிகம், ஆனால் அன்று ராஜிவ் , நடராஜன், சோ ராமசாமி என பல சக்திகள் இருந்தன‌

    இனி அதனை எதிர்பார்க்க முடியாது எனும் நிலையில் சசிகலாவின் காமெடி தொடர்கின்றது, இனி அதிமுகவின் எழுச்சி சாத்தியமில்லை, சினிமா மோகம் விடைபெற்ற தமிழகத்தில், இந்துக்களுக்கான வலுவான கட்சியாக பாஜக அழுத்தமாக எழும் நிலையில் அதிமுக எனும் கட்சி இனி சாத்தியமில்லை

    ஆனால் சசிகலா காமெசியினை நோக்கும் பொழுது ஒரு பயமே பீடிக்கின்றது

    அதாவது அதிமுகவில் பெரும் ஆளுமையாக இருந்தவர் இன்றைய திருச்சி எம்பி திருநாவுக்கரசு, எம்ஜிஆரின் வலதுகரமாக இருந்தார்

    ஆனால் அதிமுக பிளவுபட்டபொழுது ஜெயவால் ஓட அடிக்கபட்டார், அப்பொழுது அவரே கட்சி தொடங்கி அதன் தலைவரனார், எம்ஜிஆர் வழியில் சினிமாவில் எல்லாம் நடித்து அதிரடி சண்டை காட்சிகளில் நடித்தார்

    ஜெயாமேல் காட்ட முடியா கோபத்தினை சினிமாவில் வில்லன்மேல் காட்டி கும்மாங்குத்து குத்தினார், ஆனால் ஒன்றும் செல்லுபடியாகவில்லை

    இதனால் அவர் பாஜக காங்கிரஸ் என சுற்றி என்னவோ ஆகிவிட்டார்

    அதே பாணியில் சசிகலாவும்… வேண்டாம் அப்படி ஒரு துன்பநிலை தமிழரருக்கு ஒரு காலமும் வரவேண்டாம், அவர் அரசியலில் மட்டும் நடிக்கட்டும்

  35. அவன் பெரும் பேரரசன் அல்ல, மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்தவன் அல்ல, ஆனால் அவனின் துணிவும் தைரியமும் மான உணர்வும் அவனை நிலைக்க செய்தது ஆம் தமிழக வரலாற்றில் பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ் அடைந்தவர் கட்டபொம்மன்

    அவன் இந்த பாரதத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாய் எரிந்து கொண்டிருந்த ஒரு நெருப்புக்கு சாட்சி, அந்நிய ஆப்கன் ஆட்சியினை எதிர்த்து வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இம்மண் சீறியதன் சாட்சி

    1300ம் வாக்கிலே தென்னகத்தில் அவர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து விஜயநகர சாம்ராஜயம் எழும்பிற்று, அந்த வாரிசில் வந்தவன் கட்டபொம்மன்

    அது மொகலாய சாம்ராஜ்யத்தின் சாவு மணியினை வீரசிவாஜி அடித்து வைத்திருந்த காலம், அவனை தொடர்ந்து மராட்டியர்கள் மிகபெரிய எதிர்ப்பாக எழ அந்த மொகலாய அரசு அசைக்கபட்டது

    மேற்கே சீக்கியர்கள் எழும்பி ஆப்கானியரின் படை வரவுகளை தடுத்திருந்தனர், இதனால் மேற்கொண்டு ஆட்பலம் இல்லாமல் மேலும் திணறியது மொகலாய கோஷ்டி

    அந்த இடத்தில்தான் வெள்ளையன் அடிக்க ஆரம்பித்தான், பெரும் படையுடனோ ஆயுதத்துடனோ இத்தேசத்தை அவன் பிடிக்கவில்லை, வட இந்தியாவில் அவன் மிகபெரிய வெற்றிகளை பெற மொகலாயருக்கு எதிரான அந்த உணர்வு கைகொடுத்தது இந்தியாவிலே பலர் வெள்ளையனை ஆதரித்தனர் அதில்தான் வெள்ளையன் வென்றான்

    ஆம், இம்மண் ஆப்கானியரை விரட்ட அவனுக்கு உதவித்தான் அடிமையானது, புலிக்கு தப்பி நரிவாயில் வீழ்ந்தது

    ஆப்கானியர் சிவாஜியின் மராட்டிய படையிடமும், சீக்கியபடையினரிடமும் அடிவாங்கி நிலை குலைந்தபொழுது ஆங்காங்கே அரசுகள் தங்களை தனி நாடாக ஆக்கி கொண்டிருந்தன‌

    தெற்கே அப்படி அரசுகள் அடங்க மறுத்தன, ஆற்காடு நவாபே மொகலாயரிடம் இருந்து விடுதலை பெற முயன்று கொண்டிருந்தான், அதை அறிந்த நாயக்க அரசுகளும் தனி அரசாக தயாராயின‌

    இந்த காலத்தில்தான் கட்டபொம்மன் எழுச்சியும் போரும் இருந்தது

    இந்த பின்னணியில் கட்டபொம்மன் கதையினை பார்த்தால்தான் உண்மை வரலாறு விளங்கும்

    தனி இந்து சாம்ராஜ்யமாக இருந்த நாயக்க அரசு 16ம் நூற்றாண்டில் பலமிழந்தது, கட்டபொம்மன் காலத்திற்கு சற்றுமுன் நாயக்க அரசு ஆற்காடு நவாப்பிற்கு கைமாறிற்று, மொத்த தமிழக பகுதிக்கும் நவாப் தான் முதல்வர். ஆனால் பாளையக்காரர் எனப்படும் குறுநிலமன்னர்கள் அப்படியே நாயக்கர்களாய் இருந்தார்கள், அப்படி மதுரை அரசின் 72 பாளையங்களில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி

    அதாவது நாயக்கர்கள் மதுரை அரசினை 72 பாளையமாக பிரித்திருந்தார்கள், அதில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி, நாயக்கரின் வீழ்ச்சிக்கு பின் நவாபுக்கு கப்பம் கட்டி கொண்டிருந்தது

    வீரபாண்டியபுரம் எனும் ஊரில் பிறந்து வளர்ந்த கெட்டிபொம்மு எனும் பெயரால் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆனார்

    பலவீனமான மொகலாய அரசு பிரிட்டானியரின் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தது, கிளைவின் அதிரடியில்,கல்கத்தா தொடங்கி வெள்ளையன் ஒவ்வொரு அரசனாக பெண்டு நிமிர்த்தி மொத்த இந்தியாவை விழுங்கினர் என்றாலும் தொடக்கம் நவாப் குடும்பத்தில்தான் இருந்தது

    ஆற்காடு நவாப் குடும்பத்தின் மோதலில் கூலிபடையாக புகுந்த கிழக்கிந்திய கம்பெனியும் அதன் தளபதி கிளைவும் மெல்ல நவாபினை வளைத்தனர்

    வெள்ளையனின் பெரும் கூலிக்கு நவாப்பினால் கொடுத்து முடியவில்லை, ஒரு கட்டத்தில் வரி வசூலிக்கும் உரினையினை வெள்ளையனுக்கே கொடுத்தார் நவாப்

    “நாட்டை நான் வச்சிக்கிறேன்..கப்பத்தை நீ வச்சிக்க” எனும் ஒப்பந்தம் அது

    இதுதானே வெள்ளையருக்கு வேண்டும், நவாப் பாளையத்தாரிடம் வரிபிரிப்பார், அதனை கமிஷன் எடுத்துகொண்டு வெள்ளையருக்கு கொடுப்பார், அவர்களும் “தேங்க் யூ..தேங்க் யூ” என வாங்கிகொள்வர். யாராவது வரிகொடுக்காமல் அடம்பிடித்தால் அவர்களை வெள்ளையனுக்கு கை காட்டிவிடுவார், அவர்கள் வந்து அன்னாரை தண்டிப்பார்கள்.

    வல்லாட்சி நடந்தது.

    அதே நேரம் மொகலாயகருக்கு கட்டுபடாத நவாபுக்கு நாம் ஏன் ஏன் வரிகட்ட வேண்டும், நாம் சுதந்திரமானவர்கள் என சிலர் சொல்ல ஆரம்பிக்க அவர்களை நோக்கி கைநீட்டுவான் நவாப், ஆங்கிலேயன் எனும் வேட்டை நாய் அங்கே பாயும்

    அப்படி நவாப் முதலில் கைகாட்டியது பூலித்தேவன், ஒரு குறுநிலமன்னர் எப்படியோ நாயக்கரை மீறி ஆட்சி செய்த தமிழ்மன்னன். பெரும் படையோடு வந்து அவரை ஆட்சி அகற்றியது யூசுப்கான் எனும் ராமநாதபுர தளபதி

    அவர் பின்னாளில் மருதநாயகம்.

    பூலித்தேவனை இறுதி வரை யாரும் கைதுசெய்யவில்லை. பெர்முடா மர்மம் போல இவரும் விடை தெரியா மகா மர்மம்.

    ஆனால் நாயக்க மன்னர்களின் உதவி கிட்டவில்லை, தனிமனிதனாக போராடினார்,வீழ்ந்தார்.

    மிக சரியாக 40 வருடம் கழித்து ஒரு நாயக்க மன்னனும் அதேபோல வெள்ளையனை எதிர்க்க ஆரம்பித்தார், ஆச்சரியமாக அவருக்கும் எந்த பாளையமும் உதவவில்லை, உயிரை விட்டார்.

    அந்த நாயக்கமன்னன் தான் கட்டபொம்மன், எல்லோருக்கும் அவரைபற்றி தெரியும் என்பதால் அ,ஆ,இ.. என தொடங்கவேண்டாம். ஆனால் அவரை ஆழ்ந்து படித்தால் பல உண்மைகள் தெரியும்.

    அதாவது அந்த காலத்தில் வெள்ளையருக்கு பெரும் சவால் திப்புசுல்தான். அவன் மொகலாயர் வீழ்ந்த நேரம் சிவாஜிக்கு பின் மராட்டியரும் குழம்பிய காலத்தில் மைசூரை பிடித்த ஹைதர் அலியின் மகன்

    அவன் சுதந்திர அரசாக தன்னை அறிவித்தான், அவனை அடக்க கடும் முயற்சி செய்தது பிரிட்டானிய படை அதற்கு படை திரட்டவும் போர் செய்யவும் செலவுகள் கூடின, இதனால் கடும் பண நெருக்கடியால் வரிகளை உயர்த்தினர்.

    பெட்ரோல் விலை உயர்ந்தால், காய்கறிவிலையும் உயரும் அல்லவா?, நவாப்பும் வரி உயர்த்தினார். இங்குதான் கட்டபொம்மனுக்கு கோபம் வந்தது, ஆனால் நியாயமான வரியை அவன் செலுத்தித்தான் வந்தான்.

    “வாருங்கள் இதற்கொரு முடிவு கட்டுவோம்” என எல்லா பாளையத்தையும் அழைத்தான் யாரும் வரவில்லை, மறைமுகமாக அந்த பாளையத்தாரை எச்சரித்தான், எச்சரிப்பு என்றால் எல்லை தகறாறு, “நீங்கள் வரவில்லை என்றால் உங்கள் கிராமங்களில் வரிபிரிப்பேன், வரியின் கொடுமையினை அப்படியாவது நீங்கள் உணர்ந்தால்ச் சரி” என்ற அதிரடி அறிவிப்பு அது

    அப்படி செய்தும் காட்டினார்.

    மற்ற‌ பாளையத்தார் கட்டபொம்மனை குறிவைத்தார்கள். வரிசை பெரிது எட்டயபுர ளையம்,சிவகிரிபாளையம் என எல்லோருக்கும் கட்டபொம்மன் எதிரி ஆனார்.

    உச்சமாக கூடுதல் வரியை செலுத்தவில்லை என கட்டபொம்மனுக்கு உரித்தான‌ திருவைகுண்டம் பகுதியை வெள்ளையர் கைபற்றினர்.

    அப்பகுதி முப்போகம் விளைந்து அள்ளிகொடுக்கும் பகுதி சுருக்கமாக சொன்னால் இன்றைய பெட்ரோல் கிணறு.

    பாஞ்சாலங்குறிச்சி வானம்பார்த்த பூமி.

    வரி வசூல் பிரச்சினை இருந்தபொழுதே ஒரு பஞ்சகாலத்தில் திருவைகுண்டம் நெல்குடோனை அடித்து சென்றான் கட்டபொம்மன், இங்குதான் பிரச்சினை பெரிதானது.

    ஆனால் திப்பு சுல்தானை தீவிரமாக எதிர்கொண்ட வெள்ளையர், கட்டபொம்மனை பின்னாளுக்கு மாற்றினர்.

    அதாவது சர்ச்சைக்கிடமான கலெக்டர் ஜாக்சன் துரையை கூட இடம்மாற்றி தாங்கள் உத்தமர் என்பது போல காட்டிகொண்டனர், அதே நேரம் கட்டபொம்மனுக்கு பின்னால் எந்த பாளையமும் செல்லாதவாறு தந்திரமாக பார்த்தும் கொண்டனர்.

    அக்காலம் கம்பெனி ஆட்சி, கம்பெனி எப்படிபட்ட ஆட்களை இந்தியாவிற்கு கொண்டுவந்தது என்றால் அது சுவாரஸ்யமானது

    லண்டன் தெருக்களில் ரவுடிதனம் செய்தவர்கள், படிக்காதோர், கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாதோர், கொலை செய்துவிட்டு தலைமறைவானோர் எல்லோரையும் பிடித்து இந்தியாவில் நீ கலெக்டர், நீ தாசில்தார், நீ எழுதுவியா? அப்படியானால் கவர்ணர் என அனுப்பிகொண்டிருந்தார்கள்

    ஆம் தொலைதூர இந்தியாவுக்கு வர அன்று படித்த நல்ல லண்டன்வாசிகளுக்கு ஆசையில்லை, வந்ததெல்லாம் ஒரு மாதிரி கூட்டம்

    ஜாக்சன் துரை அப்படி பட்டவன். கட்டபொம்மன் முதலில் செலுத்திய வரிகளை குழப்பி அவனுக்கு சினமூட்டியதே ஜாக்சன் துரைதான், அது பெரும் சர்ச்சையாகி ஜாக்சன் மாற்றபட்டாலும் கட்டபொம்மன் வெள்ளையன் கண்களில் அச்சமூட்டுபவனாகவே இருந்தான்.

    ஒருவழியாக திப்புவினை வீழ்த்தினார்கள் வெள்ளையர்கள், ஏற்கனவே ஆப்கானியர் மேல் ஆத்திரமாக இருந்த இந்திய மக்கள் அவனை வீழ்த்த ஆதரவும் கொடுத்தனர், குறிப்பாக மராட்டிய படைகள் நிறைய வந்தன‌

    திப்பு ஒழிக்கபட்ட பின் மொத்த கோபத்தை கட்டபொம்மன் மேல் காட்டினர், பின்னர் விரட்டினர். வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பின் மருது சகோதரர்கள் ராமநாதபுரம் பக்கம் போராடிகொண்டிருந்தனர்.

    அவர்களிடம் உதவிபெரும் பொருட்டுதான், கட்டபொம்மன் புதுகோட்டை ராமநாதபுரம் பகுதிகளில் சுற்றிகொண்டிருந்தார், அப்படி நடந்திருந்தால் வரலாறு மாறி இருக்கலாம்.

    எட்டப்பன் காட்டிகொடுத்தான் என்பது வரலாற்று பதிவாயினும் உண்மையில் கட்டபொம்மன் கைதுக்கு காரணம் புதுகோட்டை சமஸ்தானம் என்பது இன்னொரு கோணம்.

    புதுகோட்டையில் கைது செய்து பெரும் குற்றபத்திரிகை வாசித்தனர். அடுத்த பாளையங்களை அச்சுறுத்தியது,நெல்குடோனை கொள்ளையிட்டது (அது கொள்ளையா?), வரிகட்ட மறுத்தது, என என்னவெல்லாமோ குற்றம் சொல்லி அவரை தூக்கிலிட்டது கம்பெனி.

    இது நடந்த வீர சம்பவம், ஒரு பெரும் வரலாறு, ஒரு சுதந்திர போராட்டம். நடந்தநாள் அக்டோபர் 16, 1799

    நெல்லை பகுதியில் 1940வரை கதைபாடலாக அல்லது ஜக்கம்மா கோயில்கொடை போன்ற கொண்டாட்டங்களில் நடைபெற்ற நாடகம் இது. அப்பொழுதெல்லாம் கட்டபொம்மனை பற்றி நெல்லை தாண்டி யாருக்கும் தெரியாது.

    சிலம்பு செல்வர் ம.பொ.சி தான் முதன்முதலாக “அட இங்கேயும் ஒருத்தன் வெள்ளைக்காரனை அடிச்சிருக்கான்” என ஆச்சரியபட்டு அந்த வரலாற்றை வெளிகொணர்ந்தார்.

    உண்மையில் தமிழருக்கும், தமிழக உரிமைகளுக்கும், வரலாறுகள் நிலைத்திருக்கவும் பாடுபட்ட தமிழர்களுள் தலையானவர் ம.பொ.சி.

    இன்று கட்டபொம்மனின் நினைவுநாள், ம.பொ.சி கண்ணில் பட்டபின் கட்டபொம்மன் தமிழகம் தாண்டி,இந்தியா தாண்டி எகிப்து அதிபரால் கூட கொண்டாடபட்டார்.

    உபயம் சிவாஜி கணேசன்

    தனக்கு மங்கா புகழ் கிடைக்க காரணமான கட்டபொம்மன் தூக்கிலடபட்ட இடத்தினில் சிவாஜி கணேசன் சொந்தமாக நினைவு சின்னம் நிறுவினார்

    கயத்தாறில் முன்பு கட்டபொம்மன் தூக்க்கிலிடபட்ட இடத்தில் மக்கள் கல் வைத்து அஞ்சலி செலுத்துவார்களாம், மிக பெரும் கல் குவியல் குவிந்து கிடந்தது என்கின்றார்கள்

    பின்னாளில் சிவாஜி சிலை வைக்கும்பொழுது அதெல்லாம் அப்புறபடுத்தபட்டு விட்டதாம், என்ன தான் சிவாஜி கணேசன் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தாலும், மக்கள் குவித்து வைத்த அந்த கற்குவியலே மாபெரும் நினைவு சின்னம்

    அது அழிந்திருக்க கூடாது.

    மக்கள் நாடி பார்ப்பதில் கருணாநிதிக்கு நிகர் இல்லை, மக்கள் அபிமானம் பெற்றவர் யாராக இருந்தாலும் கருணாநிதி ஓடிப்போய் இணைத்துகொள்வார், அவர் இறந்திருந்தால் சிலைவைத்து போற்றுவார், அவரின் அரசு ஒரு பாஞ்சாலங்குறிச்சியில் மாதிரி கோட்டையை கட்டிவைத்து அவரின் அடையாளத்தை பாதுகாத்தது.

    ஆங்கிலேயனை ஆதரித்த ஈரோட்டு ராம்சாமி நாயக்கன் அவருக்கு குரு, ஆங்கிலேயனை எதிர்த்து உயிரை விட்ட கட்டபொம்ம நாயக்கனுக்கு அவரே சிலையும் வைத்தார், இதுதன கருணாநிதி

    ஆயினும் பழம் கோட்டையின் அழிவுகளை கருணாநிதி அரசு கை வைக்கவில்லை, அவரால் முடியவும் முடியாது காரணம் அது தொல்பொருள் கட்டுபாட்டுக்கு சென்றாயிற்று, அது வேலியிடபட்டு அப்படியே இருக்கின்றது

    முன்பு நெல்லை மாவட்டத்துக்கு கட்டபொம்மன் மாவட்டம் எனும் பெயர் இருந்தது

    இன்று கட்டபொம்மன் மாவட்டம் பெயர் மாற்றமாகிவிட்டது, கட்டபொம்மன் போக்குவரத்து கழகமும் மாறிற்று,
    ஆனால் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் ஒருகாலமும் மாறபோவதில்லை, காரணம் ராணுவத்திற்குத்தான் போராட்டத்தின் கடினமும்,பெருமையும் புரியும்.

    கட்டபொம்மனை தூக்கிலிட்ட மரம் இப்போது இல்லை, அவரை விசாரித்த சிறை பாழ்பட்டு கிடக்கிறது. கோட்டை தரைமட்டமாக்கபட்டிருக்கின்றது.

    அவரை தூக்கிலிட்ட கயிறு நெடுங்காலம் பத்திரமாக இருந்தது இப்பொழுது காணவில்லையாம்

    பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து 90 கி.மீ தொலைவில் பத்மநாபபுரம் அரண்மனை மிக அழகாக எழுந்து நிற்கிறது நிற்கட்டும். ஆனால் இரண்டையும் காணும் ஒரு இந்தியனின் மனதில் உயர்ந்து நிற்பது இன்னும் பாஞ்சாலங்குறிச்சி மண்கட்டை இடம்தான் சந்தேகமே இல்லை.

    இதுதான் கட்டபொம்மனின் வெற்றி.

    தாமிரபரணி நதிக்கரை நெல்லின் மீது உங்களுக்கு என்ன உரிமை என கேட்ட கட்ட பொம்மனுக்கும், ஈராக்கிய எண்ணையின் மீது உங்களுக்கு என்ன உரிமை என கேட்ட சதாம் ஹூசைனுக்கும் என்ன வித்தியாசம் காட்டமுடியும்?

    இருவரும் தூக்கு கயிற்றுமுன் வீரமாக முழங்கினார்கள், அவர் அரேபியாவின் கட்டபொம்மன் என்றால் இவர் நெல்லையின் சதாம் உசைன். நிச்சயமாக சொல்லலாம்.

    நெல்லை சீமையின் பெரும் வீரனும் இந்நாட்டின் மிகபெரும் சுதந்திர போராட்ட வீரனுமான அந்த கட்டபொம்மனுக்கு வீர வணக்கம்.

    இன்றும் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் எனும் கடற்படை கேந்திரமாக இந்நாட்டையும் தென்னகத்தையும் காத்து நிற்கின்றான் அந்த மாவீரன் கட்டபொம்மன்

    கட்டபொம்மன் மேல் சில சர்ச்சைகள் உண்டு என்பார்கள் சில ஆங்கில கைகூலிகள், ஆனால் அவன் தாமிரபரணி நெல்லில் எமக்கு உரிமையா எங்கிருந்தோ கடல்தாண்டி வந்த வெள்ளையனுக்கு உரிமையா என கேட்டதில் நியாயம் இல்லை என யார் சொல்லமுடியும்?

    அந்த பின்னாளில் உப்புக்கும் வரி என இந்தியா திரண்டபொழுது அதில் கட்டபொம்மனின் முகம் தெரிந்தது
    கட்டபொம்மனின் கோட்டையும் திருசெந்தூர் ஆலயத்தில் இன்றும் இருக்கும் அவன் வணங்கிய சிலைகளும் அவனின் பெயரை எக்காலமும் சொல்லிகொண்டே இருக்கும், இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் எக்காலமும் அவன் பெயர் இருக்கும்

    இந்திய கடற்படை இருக்குமளவும் தென்னகத்தில் அவன் பெயர் இருக்கும், அவன் வணங்கிய திருசெந்தூர் முருகன் அவனுக்கு அருளிய பெரும் வரம் அது.

    திருசெந்தூர் ஆலயம் சென்றால் அவன் வணங்கிய சிலைகளை காண தவறாதீர்கள், அதை காணும் பொழுது உங்களை அறியாமல் சில சொட்டு கண்ணீர் நிச்சயம் வரும்,

    அந்த கட்டபொம்மன் கொண்டிருந்த தேசபற்றினை போலவே அந்த கண்ணீர் இந்த தேசத்தின் மேல் நீங்கள் கொண்டிருக்கும் பற்றை காட்டும்

  36. கலை என்பது ஒரு வரம், அந்த வரத்தை அறிந்து அதை தர்மத்துக்கும் இறைவனுக்கும் மட்டும் சமர்பிக்க வேண்டும், அப்படி செய்யும் கலைஞன் காலத்துக்கும் நிலைப்பான்

    தன் திறனை கலையினை அறிவினை நாட்டுக்கும் அதன் மதத்துக்கும் கொடுப்பேன் அதுவே என் சுதர்மம் என நினைப்பவன் எவனோ அவன் காலத்தால் அழியமாட்டான், எந்த பிரளயமும் அவனை அசைக்காது

    இதை அவன் உணர்ந்து இறைவனில் சரணடைய ஒரு வரமும் இறை அனுக்கிரஹமும் வேண்டும், எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை வெகு சிலருக்கே அது வாய்த்து அவர்களும் இறைவனை அடைந்து அழியா புகழ் அடைகின்றார்கள்

    வெகு சிலருக்கே வாய்த்த இந்த வரம் கண்ணதாசன் நினைவு எனும் கவிஞனுக்கும் வாய்த்தது, அவரின் புலமையும் கவிதைமொழியும் நிச்சயம் தெய்வத்தின் அனுகிர்ஹம், சிவநேச செல்வர்களான செட்டியார்கள் செய்த சிவபணியெல்லாம் அருளாய் பெருகி பிறந்த பிறப்பு, பட்டினத்தார் ஞானத்தின் மீதியில் வந்த பிறப்பு

    அவரை காலமும் இறை அருளும் மிக சரியாக நடத்தின , இளம் வயதிலே ஏகபட்ட அனுபவங்கள் எல்லா திசையில் இருந்தும் கொட்டின, எல்லா வகை அனுபவங்களும் அவருக்கு கிடைத்தன‌

    அந்த அனுபவமே அவரை எழுதவைத்தது, ஆம் முழுக்க ஒரு விஷயத்தை உணராத ஒருவனால் எதையும் விளக்கமாக தெளிவாக எழுத முடியாது

    அவர் எல்லா திசைகளையும் அனுபவித்து உணர்ந்தார், இதனால் எல்லாம் அவருக்கு எளிதாயிற்று அவரின் தனிவரமான கவிமொழி அவருக்கு அற்புத கருவியாயிற்று

    அவர் அனுபவ பூர்வமாக ரசித்து மனதின் அடியாளத்தில் இருந்து எழுதியதுதான் இன்று காலத்தை வென்று நிற்கின்றது

    தமிழுக்கு அவ்வப்போது அற்புத கவிஞர்கள் வருவார்கள், காலம் அந்த கொடையினை வழங்கும். தமிழை காக்கும் தெய்வம் தமிழின் அழகும் வனப்பும் நிலைத்திருக்க காலம்தோறும் ஒரு கவிஞனை அனுப்பும், சிவபெருமானால் உருவாக்கபட்டு முருகபெருமானால் காக்கபடும் மொழி என கொண்டாபடும் மொழியினை காக்க, சிறப்பிக்க காலம்தோறும் ஒரு கவிமேகத்தை பிரபஞ்சம் கொடுக்கும்.

    அவர்களிடம் தமிழ் பொங்கும், அருவியாய் கொட்டும், வர்ணணைகளும் உவமையும் வார்த்தைகளும் காவேரி வெள்ளமாய் கொட்டும், அதில் தத்துவமும் ஆன்மீகமும் வாழ்வியல் விஷயமும் இன்னும் ஏகபட்ட உணர்ச்சிகளும் அழகு தமிழில் குற்றால அருவியாய் வழிந்தோடும்

    எதையுமே அழகாகவும் உருக்கமாகவும் பொருத்தமாகவும் அவர்களால் பாட முடியும்

    அப்படி வள்ளுவன், இளங்கோ, கம்பன், பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன்.
    முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் பொருந்தும். மூன்று தமிழும் அவரிட‌ம் கொஞ்சியது. ஆம் அவன் வாழ்ந்த காலத்தில் அவனே முத்தமிழின் மொத்த அறிஞன்.

    பாடல், எழுத்து, பேச்சு என எல்லாவற்றிலும் அவரின் தமிழ் அப்படி இருந்தது, அதிலும் உண்மை மட்டும் பேசிய உத்தம கவிஞன் அவன்.
    கவிதைகளை தவிர எதிலும் பொய்சொல்லாத தூயமனம் அவருடையது

    கடவுள், காதல், இயற்கை, மதம், தத்துவம், அரசியல் பாசம், காதல், கடமை, நட்பு, தாய்மை , நன்றி, சோகம், பிரிவு, நேசம், மோசம், நம்பிக்கை என எல்லாவகை உணர்வுகளுக்கும் அற்புதமாக வரிகள் கொடுத்த அபூர்வ கவிஞன்.

    எந்த வண்ணத்தை கலந்தாலும் அவ்வண்ணத்துக்கு மாறும் நீர்போல, எந்த வாசத்தை கலந்தாலும் அதை பரப்பும் காற்றுபோல ஒரு உணர்ச்சிக்கு அப்படியே இறங்கி கலந்து அதை பாடலாக்கும் திறமை அவருக்கு உண்டு

    அவ்வளவு எளிமையாக சந்தத்தோடு ஒட்டி, ராகத்தோடு இணைந்து உணர்ச்சிகளை மொழியாக கொட்டும் கலை அவருக்கு மிக மிக எளிதாக வந்தது.

    எல்லா வகையிலும், எல்லா நிலையிலும், எச்சூழலுக்கும் அவரால் மிக மிக பொருத்தமான வரிகளை எழுத முடியும்.

    குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர்.

    இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும்.

    அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் மோதும்.ஒட்டுமொத்த இந்தியபிரச்சினைகளையும் ஒரே பாடலில் விளக்கிய பெருமை அவருக்கு உண்டு.

    கோகுலாஷ்டமி என்றால் அவரின் கிருஷ்ணகானம் பாடல்கள் நினைவில் வராமல் போகாது

    இந்து மதத்திற்கு கண்ணன் அருளியது பகவத் கீதை என்றால், கண்ணதாசன் கொடுத்தது அர்த்தமுள்ள இந்துமதம். இரண்டும் இந்து மதத்தின் மாபெரும் அடையாளங்கள்.

    பணத்தாசை மிக்க சினிமா உலகம், பத்திரிகை,மோசடி அரசியல், அவமானம்,துரோகங்கள், தீராத கடன் தொல்லை என பல துன்பங்களும் அவரே தேடிகொண்ட போதை பழக்கத்தின் பாதிப்புகளும் தாண்டியே இவ்வளவு பிரகாசித்திருக்கின்றார் என்றால், அவரது மொத்த திறமை எவ்வளவு இருந்திருக்கும்?

    எல்லாம் வெறுத்து, ஆன்மீகத்தில் கலந்து இனி என் வாழ்வு எழுத்துலகமே என அவர் புத்துணர்ச்சி பெற்றபொழுது பாவம் உடல்நிலை இடம்கொடுக்கவில்லை, அந்த சூரியனின் சில கதிர்கள் மட்டுமே உலகிற்கு தெரிந்தது.

    மதுப்பழக்கமும்,போதை பழக்கமும் எப்படியெல்லாம் ஒரு மனிதனை அழிக்கும் என்பதற்கு அவரது வாழ்வு பெரும் எடுத்துகாட்டு.

    அவரே சொன்னது போல “ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழகூடாது என்பதற்கு எனது வாழ்வு பெரும் உதாரணம்”

    வனவாசமும் மனவாசமும் அக்கால மோசடி அரசியலை அப்படியே படம்பிடித்து காட்டும் வரலாற்று கல்வெட்டுக்கள்

    ( அவைகளில் எல்லாம் கவிஞர் மிகபடுத்தி எழுதினார் என்பவர்கள் உண்டு, ஆனால் “நெஞ்சுக்கு நீதி” மட்டும் அப்படியே அனைத்து பாகமும் உண்மையாம்

    வ‌னவாசத்தில் கலைஞரை விமர்சித்தார் என்றால் அதைவிட மோசமாக மனவாசத்தில் காமராஜை விமர்சித்தவர் அவர் )

    தனது வாழ்வினை திறந்த புத்தகமாக்கி, தான் கண்ட நல்லவர்களையும், துரோகிகளையும் அப்படியே புட்டுவைத்த ஒரே தமிழக திரை,அரசியல் பிரபலம் கண்ணதாசன் மட்டுமே.

    பெரும் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் வரும் பக்குவம் இது.

    தமிழ்சாதியில் “நல்ல தமிழ்” கவிஞர்களுக்கு மட்டும் ஆயுள் குறைவு,

    பாரதி,பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் வரிசையில் கண்ணதாசனும் இடம்பிடித்ததுதான் கொடுமை.

    கவிதையோ, பாடலோ அவை அழகுணர்ச்சியோடு அமையவேண்டும், விஷயத்தை மறைமுகமாக புரியவைக்கவேண்டும், மொழியை கையாளும் வார்த்தை ஜாலங்களும், வர்ணனைகளும் மிக அவசியம், அதாவது கேட்பவர்கள் புரிந்துகொண்டு மனதால் ஒன்றி, கவிஞன் காட்டும் சூழ்நிலைக்கு அப்படியே செல்லவேண்டும்.

    வெகு சிலருக்கு மட்டுமே அந்த வரம் சாத்தியம், கண்ணதாசனும் அவர்களில் ஒருவர்.

    இன்றுள்ள கொடுமையான கவிதை உலகம் உங்களுக்கு தெரியும், நாற்றமடிக்கும் மலர்களை கொண்டாடுகின்றார்கள், பைத்தியகார உளறல்களை உச்சியில் வைக்கின்றார்கள், மனநலம் பாதித்தவனின் உளறல் கூட கவிதையாகின்றது எனும் அளவு தமிழும் அதன் அழகும் கெட்டுவிட்ட காலம் இது

    கூவத்தை விட மிக மோசமாக கெட்டு கிடப்பது தமிழும் அதன் அழகும் அந்த அற்புதமான இலக்கணமும்

    இப்படியான காலங்களில் அடிக்கடி கண்ணதாசன் நினைவுக்கு வருவார், இந்த கவிஞன் மட்டும் ஐரோப்பாவில் உலகில் பிறந்திருந்தால் இன்று உலக கவிஞனாக அவனை கொண்டாடியிருப்பார்கள், பாவம் தமிழனாய் பிறந்துவிட்டான்.

    “இல்லையொரு பிள்ளையென ஏங்குவோர் பலரிருக்க‌
    இங்குவந்து ஏன்பிறந்தாய் செல்வமகனே”

    என்ற கவிஞரின் வரி அவருக்கே பொருந்தும்.

    இன்று கண்ணதாசனின் நினைவுநாள்

    தமிழ் அறிந்த, தமிழ் சிறப்பறிந்த யாரும் அவரை மறக்க மாட்டார்கள், நாமும் மறக்க முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் அல்லது எல்லா பிரச்சினை சூழலுக்கு மிக அற்புதமான பாடல்களை எழுதிய ஒரு கவிஞன் உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது கவியரசர் மட்டுமே.

    தமிழகத்தின் மிக சிறந்த கவிஞர் என்றவகையில் அவருக்கு அழியா இடமுண்டு, ஒரு காலமும் மறைந்துபோகாத கவிதை கல்வெட்டு அவர்.

    அவர் மிகவும் நேசித்த கண்ணனுக்கு அவர் பாடிய பாடலை ஒரு முறை கேளுங்கள், அக்கவிஞன் தேனில் குழைத்து தந்த பலாப்பழத்தின் ஒரு சுளை

    “ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்” எந்த மதத்தவராயினும் உருகுவார்கள், ஏன் கம்சனுக்கே தமிழ்தெரிந்தால் அப்பாடலுக்காக கண்ணனை கொண்டாடுவான்.

    எப்படிபட்ட கவிஞன் அவர்? இனி அப்படி ஒரு கவிதை மேகம் இனி தமிழில் சாத்தியமில்லை

    “ஆனந்தமானது அற்புதமானது” என்பதெல்லாம் மானிடன் பாடகூடிய பாடல் அல்ல, சித்தர்களால் மட்டுமே சாத்தியம்.

    சாகாவரம் பெற்ற கவிஞன் அவர். எல்லாவற்றிற்கும் மேல் அவரின் நாட்டுபற்று வாழ்த்துகுரியது.

    திராவிடத்தின் சில பொய் முகங்களை அவர் உரித்துகாட்டிய அளவு இன்னொரு நாட்டுபற்றாளன் செய்யமுடியாது

    திராவிட அழிச்சாட்டியம் அரசியல் உள்நோக்கம் கொண்டது, மாயமானை பிடிக்க ஓடுவது என முதலில் எச்சரித்தது அவனே..

    கிட்டதட்ட 30 ஆண்டுகள் அற்புத பாடல்களை கொடுத்து செங்கோல் ஆட்சி செலுத்திய கவிஞர் அவர். திரையில் கவிஞர் பெயரினை கண்டவுடன் தமிழகம் கைதட்டிய காலமும் இருந்தது

    எமனுக்கும் தமிழ் தெரிந்திருக்கும், ஆனால் விதிக்கு தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் இவ்வளவு விரைவில் அழகிய தமிழ்கவிதையை கொண்டுசென்றிருக்காது.

    எம்மை பொறுத்தவரை ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும், அந்த சிறுகூடல்பட்டி செட்டி ஒரு தெய்வீக கவிஞன், அந்த கிராமத்தில் இருந்து சிகாகோ வரை ஒரு தேவதை அவரை நடத்தியது

    வாழ்வின் ஒவ்வொரு நிலைபாட்டையும் அவரை அனுபவிக்க வைத்தது. சூது, வஞ்சகம்,மோசடி, ஏமாற்றம் , அவமானம் என எல்லாவற்றையும் அவர் தெரிந்து புரிந்து கொள்ள வாய்ப்புகளை வழங்கியது

    அதில்தான் அவர் திமுகவில் இருக்க வேண்டிய காலமும் வந்தது. அம்மனிதன் அனுபவம் பெற்றபின் அவனை அந்த தெய்வம் ஆன்மீக பாதைக்கு இழுத்து வந்தது

    அவன் கவிஞனானதும், அரசியல்வாதியாக அனுபவம் பெற்றதும், எல்லா வகை நன்மை தீமை ரோகம் போகம் என எல்லாவற்றிலும் விழுந்து எழுந்ததும் அனுபவம் பெறவே

    அந்த அனுபவத்தை கொட்டித்தான் அவன் “அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினான்”, இந்துமதத்தின் பொக்கிஷம் அது. தெய்வம் அவன்மூலம் கொடுத்த வரம் அது.

    எம்மை பொறுத்தவரை பாரதிக்கும் அவனுக்கும் பல ஒற்றுமைகளை காட்டமுடியும். ஆனால் பாரதி பெரும் வட்டம் ஞான தீ. கண்ணதாசன் ஆடி களைத்து ஆன்மீகத்தில் இளைப்பாறிய பத்ருஹரி சித்தர் சாயல்

    இருவருமே கண்ணன் பக்தர்கள்

    இருவருமே தேசியவாதிகள், பாரதிக்கு பிரிட்டானியர் எதிரி. கண்ணதாசனுக்கு திமுகவினர் எதிரி
    கடைசி காலங்கள் இருவருக்கும் ஒன்றாய் இருந்தன, இருவரும் தங்கள் கடைசி காலத்தில் உடல் நலத்துக்காய் ஏங்கினர், பாரதி நலம்பெற்று இன்னும் எழுதமுடியும் என நம்பினான், கண்ணதாசனும் ஆழ்வார்கள் அடியார்கள் வரலாறை எல்லாம் எழுதுவேன் என சொல்லிகொண்டிருந்தார்

    இன்னும் ஒரு ஒற்றுமை உண்டு, பொதுவாக கவிஞர்கள் என்பவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள், சிரிப்பவனுடன் சிரிப்பார்கள், அழுபவனோடு அழுவார்கள்.

    கொண்டாடும் இடத்தில் இருக்கும் குழந்தை மனம் அவர்களுடையது, ஆனால் எங்கிருந்தாலும் அங்கீகாரத்துக்கும் அரவணைப்புக்கும் ஏங்குவார்கள்.

    உண்மையே பேசும் அவர்கள் மனம் அப்படி ஏங்கும், அழும், ஒரு அரவணைப்பை தேடி ஓடும்
    இதை பக்குவமாக கையாளும் வஞ்சக கூட்டம் உண்டு, அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி வளைக்கபார்ப்பார்கள், அப்படித்தான் பாரதிக்கும் கடைசி காலத்தில் சோகங்கள் வந்தன, அவன் அகப்படவில்லை, இதனால் அவன் அஞ்சலிக்கு கூட யாரும் வரவில்லை

    பாரதி தன் தேசத்து விடுதலையினை பார்க்கமாலே மறைந்தான், கண்ணதாசன் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இந்து எழுச்சியினை காணாமலே மறைந்தான், இருவருமே அவ்வகையில் பரிதாபத்துகுரியவர்கள்

    ஆனால் தேசபற்றுக்கும் இந்துமத சிறப்பான வரிகளுக்கும் இவர்கள் ஆதார சக்திகள், எக்காலமும் நினைவில் நிற்கும் தூண்கள்

    ஆனால் கண்ணதாசனை கடைசியில் கிறிஸ்தவ மிஷனரிகள் வளைத்தன. தன்னை யாரும் கண்டுகொள்ளா நிலையில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கா நிலையில் மன வேதனையில் இருந்த அவரை அந்த சக்திகள் வளைத்தன‌

    (இது திமுக, காங்கிரஸ் , தமிழக அரசின் புலவர் என பல இடங்களில் இருந்தபொழுதும் அவருக்கு கிடைக்கவில்லை

    இந்துக்கள் அவரை கொண்டாடினார்கள், ஆனால் இன்றுள்ள இந்து எழுச்சி அன்று இல்லை. அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை)

    அவரை கிறிஸ்தவ கும்பல் வளைத்து பாட வைத்தது, “இயேசு காவியம்” தயாரானது, அடுத்து 100 கிறிஸ்தவ பாடல்கள் வர இருந்தன, அவருக்குள் விஷ ஊசி செலுத்தபட்டு கொண்டே இருந்தது, கண்ணதாசனின் போக்கு மாறிற்று

    இத்தோடு அவரின் விதி சிகாகோவில் முடிந்தது, இல்லாவிடில் அவரின் கடைசி வாழ்க்கை மாறியிருக்க கூடும்.
    ஆம் எத்தனையோ விபத்து, ஏமாற்றம், கடன், குடி, பெத்தடின் என அவரை மீட்டு வந்த அந்த வழிகாட்டும் தெய்வம், அவர் “அர்த்தமுள்ள இந்துமதம்” எழுதும் பொழுதும் கிருஷ்ணகானம் எழுதும் பொழுதும் துணையிருந்த தெய்வம், அவரின் போக்கு மாறிய பின் கைவிட்டது

    பிறந்த கடனை அத்தோடு முடிக்க அவருக்கு விதி வழிசெய்தது, இயேசு காவியம் புத்தகத்தை பிரமாண்டமாக வெளியிடுவேன் என சொல்லி அமெரிக்கா சென்ற கண்ணதாசனின் உடல் மட்டும் திரும்பியது

    ஆம் சித்தர்கோலத்துக்கு வந்துவிட்ட அவர், மறுபடி தடுமாறி சில வலையில் வீழ்ந்தார். கண்ணனை தவிர வேறு தெய்வத்தை பாடுவது எந்த பெரும் சக்திக்கோ பிடிக்கவில்லை என்பது அவர் வாழ்வில் உண்மையாயிற்று
    ராமானுஜரை தொடாவிட்டால் கருணாநிதி சிலகாலம் இருந்திருப்பார், அப்பக்கம் செல்லாவிட்டால் கண்ணதாசனும் 53 வயதில் தவறியிருக்கமாட்டார்.

    ஒருவனுக்கு விதி எவ்வழி பாதை போடுகின்றதோ அவ்வழியில் மட்டும் செல்லல் வேண்டும், தெய்வத்து பணியினை ஒழுங்காக செய்ய தேர்ந்தெடுக்கபட்டவன் அதை விடுத்து தன் சுயவிருப்பில் சென்றால் என்னாகும் என்பதை கண்ணதாசன் வாழ்வு காட்டிற்று

    கண்ணதாசனின் பாடல்கள் ஒரு சுகம், அவரின் எழுத்து இன்னொரு சுகம். பின்னாளைய பாலகுமாரனின் எழுத்து வடிவில் அந்த சாயலை நீங்கள் காணலாம், கட்டிபோடும் எழுத்து அது.

    அந்த மகா கவிஞன் தமிழரின் முத்து, தமிழின் அழியா சொத்து.

    கவிஞரின் மகா சிறந்த பாடல்கள் எல்லா படங்களிலும் உண்டென்றாலும் ஞானத்தில் ஓங்கி, தன் இயல்பில் பொருந்தி தன் நிலையில் , அதாவது தனக்கான பாத்திரமாக உணர்ந்து அவர் எழுதிய பாடல்கள் அவருக்கானவை

    “மகாகவி காளிதாஸ்” படம் அதில் முக்கியமானது, மகாகவி காளிதாசன் தமிழில் தன்னை பற்றி பாடினால் அப்படித்தான் பாடியிருப்பானோ, அதை அந்த கம்பீர தொணியோடும், அடக்கத்தோடும் பாடினார் கண்ணதாசன், ஆம் தென்னகத்து காளிதாசனாக தன்னை பொருத்தி பாடினார்

    “குழந்தையின் கோடுகள் ஓவியமாம்
    இந்த குருடன் வரைவது காவியமாம்
    நினைந்தை உரைத்தேன் புலவர்களே
    குற்றம் நினைந்திருந்தாலும் அருளுங்களேன்

    கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்
    சில காவிய பொருட்களை பாட வைத்தாள்
    அலை எனும் எண்ணங்கள் ஓடவிட்டாள்
    அதை ஆயிரம் உவமையில் பாடவிட்டாள்”

    “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்பது அவர் தன் இயல்பினை மறைக்க சொன்ன பாடல், திசை திருப்ப சொன்ன பாடல்

    அவனின் உண்மையான வாக்குமூலம், அடிமனதில் இருந்து வந்த வாக்குமூலம் அவன் மனதை மீறி மகாகவி காளிதாஸ் பட பாடல்களிலேதான் வந்தது.

    அவன் தென்னக காளிதாசன் என்பதில் மாற்றுகருத்தே இல்லை , ஒரு தேவதையின் வரம் அவன்.

    தன் அழியா வரிகள் மூலம் தமிழுக்கும் இந்துமதத்துக்கும் பெரும் தொண்டு செய்த அந்த தமிழ் ஞானிக்கு, காலம் கொடுத்த அற்புத கவிஞனுக்கு, சரஸ்வதியோ கண்ணனோ காளியோ ஞானம் ஊட்டி வளர்த்து கைபிடித்து வந்த ஞான கவிஞனுக்கு அஞ்சலிகள்

    அஞ்சலி செலுத்தும் நேரம் பாரதியும் நினைவுக்கு வருகின்றார், தன் கடைசி காலங்களில் இருவரின் வரிகளையும் கவனியுங்கள்

    “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ, சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன் என்னை படைத்துவிட்டாய்” என அழுகின்றான் பாரதி

    “விதியும் மதியும் வேறம்மா,
    விளக்கம் நான் தான் பாரம்மா.
    மயக்கம் எனது தாயகம்
    மவுனம் எனது தாய்மொழி
    கலக்கம் எனது காவியம்
    நான் கண்ணீர் வரைந்த ஓவியம்” என தனிமையில் அழுது கொண்டான் கண்ணதாசன்.

    எழுத்தும், பாடலும் தெய்வத்தின் வரம், அதை கொடுக்கும் தெய்வம் பலத்த சோதனையும் கொடுக்கும், அவர்களால் உலகோடு ஒட்டமுடியாது, வாழமுடியாது, தெய்வம் கோவிலில் தனித்திருப்பது போல தனித்திருந்தே அழுது புலம்பி முடியும் அவர்கள் வாழ்வு

    அதுவும் தமிழ்நாட்டில் பிறந்துவிட்டால் அதைபோன்றதொரு துன்பம் வேறேதுமில்லை, அதை பாரதி, ஜெயகாந்தன் என பலர் அனுபவித்தனர், கண்ணதாசன் எனும் மாபெரும் ஞான தமிழ் அவதாரத்துக்கும் அது நடந்தது.

    இன்றிருக்கும் தேச எழுச்சியும் இந்து எழுச்சியும் கண்ணதாசன் காலத்தில் இருந்திருந்தால் அவன் மிகபெரும் பலமாக நாட்டுக்கு இருந்திருப்பான், காங்கிரஸ் அவனை கடலில் கரைத்த பெருங்காயமாக ஆக்கிற்று
    ஆனாலும் அவன் பாடலும் எழுத்தும் எக்காலமும் தேசத்துக்கும் இந்துமதத்துக்கும் தமிழுக்கும் சேவை ஆற்றிகொண்டே இருக்கும்.

    பட்டணத்து செட்டி வழியில் வந்த கெட்டிக்கார சித்தனவன், செந்தமிழ் பித்தனவன். அந்த மகா கவிஞனுக்கு தென்னாட்டு காளிதாசனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

    அவனின் பிரசித்தி பெற்ற வரிகள் எதுவென்றால், காலத்துக்கும் நிற்கும் வரிகள் எதுவென்றால் அக்கால திமுகவினை அவர்களின் திராவிட நாடு கொள்கையினை மறைமுகமாக தாக்கி எழுதிய அந்த வரிகளை சொல்லமுடியும்

    “மேய்ய்பனே மேய்ப்பனே நான் விடுதலை அடையும் வழியினை கண்டடைந்தேன் என்றான் ஏய்ப்பன்

    என்ன கண்டாய் ஏய்ப்பனே என்றான் மேய்ப்பன்

    மேய்ச்சலுக்கு சென்ற நம் ஆடுகள் ஒரு தங்க சுரங்கத்தை கண்டிருக்கின்றன ஏய்ப்பனே, அதை கொண்டு இனி நாம் நாட்டை வென்றுவிடலாம் போரும் வீரமும் ஆயுதமும் தேவையில்லை என்றான் ஏய்ப்பன்

    ஆடுகள் தங்கத்தோடு வந்தன

    அவர்களின் போர் பாசறை போக பாசறையாயிற்று, அவர்களின் முரசுகள் அடுப்பெரித்தன, அவர்களின் வாள்கள் வாள்களோடு மோதி தாளமிட்டன‌

    “எங்கே பகைவர்?” என முழங்கிய கூட்டம் இப்பொழுது “எங்கே பகைவர்..” என நீட்டி பாட ஆரம்பித்தது

    எதிரியினை தாக்க ஓங்கிய காலில் சலங்கை மாட்டபட்டது, எங்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

    ஆடுகள் கொடுத்த தங்கம் பெருக பெருக போரை மறந்தார்கள், லட்சியத்தை மறந்தார்கள் தங்க வேட்டை ஒன்றிலே கவனமானார்கள்

    ஆட்டமும், பாட்டமும், கொண்டாட்டமுயாய் அவர்களின் தங்க வேட்டை தொடர்ந்தது

    தன் வழி என்ன? போக வேண்டிய தொலைவு என்ன? இந்த ஆடுகளை அழைத்து வந்த லட்சியமென்ன? ஆனால் தங்கம் கிடைத்ததும் நடப்பதென்ன என கலங்கி நின்றான் மேய்ப்பன்

    மேய்ப்பனே ஆடுகள் ஆடிபாடும் சந்தோஷம் நமக்கு போதாதா, இதோ பார் எவ்வளவு ஆட்டம் பாட்டம் என மகிழ்ந்து கொண்டிருந்தான் ஏய்ப்பன்..”

    இப்படி நீளும் அந்த ஒரு கட்டுரைக்காக அம்மனிதனை எக்காலமும் கொண்டாடி கொண்டே இருக்கலாம், அவனுக்காக எவ்வளவு கண்ணீர் சிந்தினாலும் தகும்..

  37. இப்பொழுதெல்லாம் சமூக தளங்களில் இயங்குவோரை கைது செய்யும் நடவடிகைகள் அதிகரிக்கின்றன, எல்லை மீறுவோரை கைது செய்கின்றோம் என விளக்களிக்கின்றார்கள் காவல் தரப்பு

    ஆனால் டிவி, மீடியா என லைசென்ஸ் வைத்து கொண்டு எல்லை மீறிய பொய்களை சொல்வோரை எல்லாம் விட்டிவிடுகின்றார்கள், ஏனென்றால் அது அப்படித்தான். அவர்களுக்கு லைசென்ஸ் முக்கியம் அதற்கு அரசு முக்கியம், இதனால் அரசுக்கான ஜால்ரா முக்கியம்

    விரைவில் சமூக ஊடகங்களில் இயங்கவும் அரச அனுமதி தேவை என ஒரு சட்டம் தமிழகத்தில் வந்தாலும் வரலாம், அப்படி வந்தபின் என்னாகும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை

    சரி விஷயத்துக்கு வரலாம்

    கைது வரிசையில் “சீதையின் மைந்தன்” என்றொருவர் கைது என்றார்கள், எமக்கு அவரை தெரியாது. பெயரை கேட்டவுடன் ஏதோ இந்துமத அபிமானி என தோன்றியதால் அவர் எதற்காக கைது செய்யபட்டாரோ அந்த வீடியோவினை நாமும் பார்த்தோம்

    சில நிமிடங்களுக்கு மேல் அதை பார்க்க முடியவில்லை, ஈரோட்டு ராம்சாமி சம்பவம் ஒரு சிலவற்றை தவிர வேறு எல்லாமே பிதற்றல்கள், ஒரு கட்டத்துக்கு மேல் என்ன பேசுகின்றார் என அவருக்கே தெரியவில்லை

    முழு தமிழ்தேசிய போதையில் என்னமோ உளறிகொண்டிருந்தார்

    அவரை கைது செய்திருப்பதாக செய்தி, அவரை காவல் நிலையத்தில் வைத்திருப்பதோ சிறைக்கு அனுப்புவதோ சரியல்ல, அவரை நல்ல மனநல மருத்துவமனைக்கு அனுப்புதல் சிறந்தது

    அப்படியே அவர் பெயரை “சீதையின் மைந்தன்” என்பதை மாற்றி “சீமானின் சித்தப்பா” என மாற்றினால் இன்னும் பொருத்தமானது

  38. பலர் சமூக ஊடகங்களை மிகவும் எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அது ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.

    *ஒரு நிமிடம் ஒதுக்கி வாசிக்கவும்:*

    1: இந்துக்களின் ஒற்றுமை அதிகரித்து வருவதால், *பாலிவுட் முழுவதும் அழுத்தத்தில் உள்ளது.

    2: இந்து ஒற்றுமை காரணமாக, கரீனா சீதாமாதா வேடத்தில் நடிக்கப் போகிறார். *இப்போது கங்கனா*

    3: இந்து ஒற்றுமை கிறிஸ்தவர்களின் இந்து மத மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள தந்திரங்களையும் சதியையும் வெளிக்கொணர்ந்தது & *அமித் ஷா 4 முக்கிய கிறிஸ்தவ அமைப்புகளை தடை செய்துள்ளார் *

    4: இந்துக்களின் ஒற்றுமை காரணமாக, லவ் ஜிஹாத் 50%ஆக கட்டுப்படுத்தப்பட்டது, இது பல மாநிலங்களில் சட்டமாக மாறியது.

    5: இந்துக்களின் ஒற்றுமை காரணமாக, எதிர்க்கட்சிகள் கூட போராடி வருகின்றன.

    6: இந்துக்களின் ஒற்றுமை காரணமாக, ஜிஹாதி வணிகம் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

    7: இந்து ஒற்றுமை காரணமாக, வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் உங்கள் பண்டிகைகள் & கலாச்சாரம் பற்றிய நகைச்சுவைகள் கிட்டத்தட்ட 80%குறைந்துள்ளது.

    8: இந்து ஒற்றுமை காரணமாக, இந்து தர்மத்திற்கு எதிராக பேசும் மக்கள் 70% அமைதியாகிவிட்டனர்.

    9: இந்துக்கள் முன்பு போல் அமைதியாக இல்லை, அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு இந்துவுக்கும் குறைந்தது 200 இந்து நண்பர்கள் இருந்தாலும், நாங்கள் எங்கள் எண்ணங்களை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் பரப்புகிறோம்.

    *அறியாமல் நீங்கள் எழுதிய / பகிரப்பட்ட விஷயங்கள் மில்லியன் கணக்கான இந்துக்களை சென்றடைகிறது என்பதை கவனிக்கவும்*

    எனவே உங்களால் எழுத முடியாவிட்டால், குறைந்தபட்சம் முன்னோக்கி, பகிரவும், பேசும் / எழுதுபவர்களின் எண்ணங்களை நகலெடுக்கவும்.

    சமூக ஊடகங்கள் மூலம் இந்து மதத்தின் விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, போலி மதச்சார்பற்றவர்கள் கூட இதைப் பற்றி சிந்திக்கிறார்கள்.

    எதிரிகள் இந்துக்களின் வலிமையையும் கவனித்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிலர் சும்மா இல்லை, சிலர் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், சிலர் வியாபாரம் செய்கிறார்கள், சிலர் வேலை செய்கிறார்கள், சிலர் கற்றுக்கொள்கிறார்கள். அனைவரும் தர்மகாரியம் செய்கிறார்கள்.

    எதுவும் செய்யாமல் இறப்பதற்கு பதிலாக, உங்கள் நாட்டின் ஒற்றுமைக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள். குறைந்தபட்சம் உங்கள் அடுத்த தலைமுறையாவது என் தந்தை நாட்டுக்காக போராடினார் என்றும் அது ஒற்றுமை என்றும் பெருமையாக கூறுவார்கள்.

    நீங்கள் இங்கு இருப்பது விருப்புக்காக அல்ல, உங்கள் நாட்டின் ஒற்றுமைக்காக என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    _*சமூக ஊடகங்களில் நல்ல வேலையைத் தொடருங்கள். உங்கள் வலிமை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்துக்களுக்கு கண்ணுக்கு தெரியாத சக்தி கிடைத்துள்ளது*_

    _ உங்கள் மக்களுடன் இணைந்திருங்கள் மற்றும் அதையே பரப்புங்கள் …

    சாதி வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் உதவுங்கள்_ *நாம் அனைவரும் இந்துக்கள் *

  39. தமிழகத்தில் கிரேசி மோகன் முதல் கமலஹாசனார் வரை பலர் இந்து பாரம்பரியங்களை, புராண காட்சிகளை மேடை நாடகம் முதல் சினிமாவரை காமெடியாக அரங்கேற்றுவது வழமை, தமிழகத்தில் அது இயல்பான ஒன்று என ஒரு பிம்பம் உருவாயிற்று

    அக்கால “நந்தனார் கிந்தனார்” என என்.எஸ் கிருஷ்ணன் நாடகம் தொடங்கி இக்கால சில திரைபடங்களில் காட்டபடும் இந்து வெறுப்பை, இந்துமத கிண்டலை சகித்து கொள்ளும் மாநிலம் இது

    ஆனால் வட இந்தியா அப்படி அல்ல‌

    ஏய்ம்ஸ் பலகலைகழகத்தில் ராம்லீலா கொண்டாட்டத்தில் ராமயணத்தை வைத்து காமெடி செய்கின்றோம் என மாணவர்கள் அரங்கேற்றிய நாடகம் பெரும் சர்ச்சையினை கிளப்பிவிட விவகாரம் பெரிதாகி இப்பொழுது அந்த மாணவர்கள் முழங்காலில் நின்று மன்னிப்பு கேட்டு கொண்டிருக்கின்றார்கள்

    1930களிலே இப்படி இந்து மதத்தை சீண்டுவோரை முழங்காலில் தமிழகமும் நிறுத்தியிருந்தால் இவ்வளவு பெரும் இந்து வீழ்ச்சி நடந்திருக்காது

    இம்மாதிரி விஷயங்களில் சிறு விட்டுகொடுப்பும் பெரும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தமிழ்நாட்டில் அதுதான் நடந்து தொலைந்துவிட்டது, இனியாவது அம்மாநிலம் திருந்தட்டும்

  40. இந்தியா புதிய சாதனைகளை படைக்க தொடங்கிவிட்டது, வரலாற்றில் தன் விஞ்ஞான பொற்காலங்களில் அது காலெடுத்து வைக்கின்றது

    ஆம், மிகபெரிய சாதனையினை இந்தியா செய்திருக்கின்றது

    இதுகாலமும் ஆயுதங்கள் மற்றும் போர்விமானங்களை இறக்குமதி செய்யும் நாடு என பெயர் பெற்ற இந்தியா முதன் முறையாக சொந்த போர் விமானங்களை விற்பனை செய்யும் அளவு வளர்ந்திருக்கின்றது

    நடுத்தரமான போர் விமானங்கள் தேவைபடும் நாடுகள் இப்பொழுது இந்தியாவினை தேர்ந்தெடுக்கின்றன, இந்தியாவின் தேஜஸ் விமானங்கள் அவைகளால் விரும்பபடுகின்றத‌

    சீனாவின் சி18 விமான ரகங்களுக்கு மாற்றாக இந்திய தேஜஸ் விமானங்கள் கொண்டாடபடுகின்றன‌

    கிழக்காசியாவில் சீனா மற்றும் தென்கொரியாவினை ஓரம் கட்டி தேஜஸ் முன்னிலை பெறும் நிலையில் அர்ஜென்டினாவும் தேஜஸ் விமானங்களை வாங்க முன்வந்திருக்கின்றது

    தேஜஸ் விமானம் முழுக்க இந்திய தயாரிப்பு, முன்பு காங்கிரஸ் காலத்தில் தொடங்கபட்ட அதன் வளர்ச்சியும் சோதனையும் மந்த வேகத்தில் இருந்தன, ஒரு கட்டத்த்தில் அதை கைவிடும் அளவு வெறுத்து போனது எச்.ஏ.எல் நிறுவணம்

    ஆம், உலகளாவிய சில தொழில்நுட்பம் கிடைக்காது. அதை கிடைக்க பல நாடுகள் விடாது, மேற்கத்திய நாடுகள் சிலவும் சீனா போன்ற நாடுகளும் இந்தியாவில் இந்த வளர்ச்சி வந்தால் தங்கள் சரக்கு விற்காது என தெரிந்தே பல சதிகளை செய்தன‌

    இதனால் தேஜஸ் விமானம் அறிவிப்போடு நின்றது

    2014ல் மோடி வந்தபின் காட்சிகள் மாறின, தேஜஸ் விமானத்தின் என்சின் நுட்பம் புதிய தொழில்நுட்பத்தால் மாற்றபட்டது, சர்வதேச சதிகள் அகற்றபட்டன, வெற்றிகரமாக பறந்தது தேஜஸ்

    இன்று உலக நாடுகள் விரும்பும் விமானமாக அது மாறியிருக்கின்றது, மோடி அரசு உலக அரங்கில் தேச பெருமையினை உயர்த்தி இருக்கின்றது

    இது இன்னும் வளர்ந்து விரைவில் 6ம் தலைமுறை விமானத்தை இந்தியா தயாரிக்கும் என எதிர்பார்க்க படுகின்றது, சில வருடங்களில் அது சாத்தியமாகலாம்

    1940களில் இந்திய சுதந்திரம் கோரிய பொழுது பிரிட்டன் இளவரசரும் அந்நாளைய பிரதமர் சர்ச்சிலும் சேர்ந்து சொன்ன வார்த்தைகள் காயமானவை “ஒரு குண்டூசி கூட சொந்தமாக செய்ய அறிவில்லாத இந்தியருக்கு ஏன் சுதந்திரம்? அவர்கள் என்ன எந்திரம் செய்து கிழிப்பார்கள்?”

    ஆம், லண்டன் பாராளுமன்றத்திலே இதை சொன்னான் சர்ச்சில்

    இன்று கிழக்காசியாவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இந்திய விமானம் ஏற்றுமதியாகின்றது, நாளை ஐரோப்பா அமெரிக்காவுக்கே இது நடக்கலாம்

    இது நம் தேசிய கவிஞன் , பாரதீய கவிஞன் பாரதியாரின் கனவுகள் பலிக்கும் நேரம், 1920களிலே அவன் கனவு கண்டு, மிக ஆவேசமாய் பொங்கி எழுதிய அந்த வரிகள்

    வெள்ளையனின் விமானத்தையும், கப்பலையும், ஆலைகளையும் கண்டு அது போல் இத்தேசமும் ஒரு நாள் செய்ய்யும் என மனதால் உணர்ந்து எழுதிய தீர்க்கமான வரிகள் பலிக்கும் நேரம்

    “ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
    ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
    ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
    உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

    குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
    கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
    நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
    ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்”

    ஆம் நடையும் பறப்பும் கொண்ட‌ வண்டிகளை இந்தியா செய்து ஏற்றுமதியும் தொடங்கிவிட்டது, ஞாலம் நடுங்க வரும் கப்பல்களும் தயாராகின்றன‌

    அந்த மகிழ்வில் அவன் வரிகளை உற்சாகமாக சொல்லலாம்

    “பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்
    பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்”

    வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்

  41. சீனாவின் போர் பரணி இப்பொழுது இந்தியா தைவானை தாண்டி கண்ணுக்கு தெரியாத அமெரிக்க உளவுதுறையுடன் தொடர்கின்றது

    அமெரிக்க சி.ஐ.ஏ தலைவர் சீனாவுக்கான தனி உளவுதுறை திறக்கபட்டது பற்றியும் அதில் சீன மாண்டரின், கெண்டனிஸ், ஹாக்கியான் உள்ளிட்ட மொழிகள் தெரிந்தவர்கள், பாம்பு சூப் முதல் கரப்பான் நூடுல்ஸ் வரை தயாரிக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு எனவும் சில தினங்களுக்கு முன்பு சொன்னார்

    ஒரு உளவுதுறை தலைவர் இப்படி பகிரங்கமாக சொல்வாரா என்றால் அந்த அளவு பகிரங்கமாக சீனாவினை எச்சரிக்கின்றார்கள் அல்லது சீண்டுகின்றார்கள் என பொருள்

    முன்பு சோவியத் யூனியனுக்காக தனி உளவுதுறையினை திறந்த அமெரிக்கா பின் மூடிற்று, இப்பொழுது அடைத்த கதையினை சீன லேபலோடு திறக்கின்றார்கள்

    விஷயம் சீனாவினை சீண்ட சீன முரசொலியான குளோபல் டைம்ஸ் ஆடி தீர்த்துவிட்டது, ஏற்கனவே இந்தியா தைவானை சீனா வென்று தன்னோடு இணைத்து கொண்டதை பலமுறை சொன்ன அப்பத்திரிகை “ஏ சி.ஐ.ஏ வாடா, வந்து பாருடா” என சவால் விட்டு நிற்கின்றது

    “ஏ சி.ஐ.ஏ உனக்கு வச்சிருக்கோம்டா ஐ.ஐ.ஐய்ய்ய் ” என டி.ஆர் பாணியில் ஒரே அழிச்சாட்டியம்

    இந்நிலையில் சீன ராணுவத்துக்கும் ஒரு இதழ் உண்டு, தமிழக முரசொலிக்கு வீரமணியின் விடுதலை பத்திரிகை போல குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு இந்த “மக்கள் விடுதலை ராணுவ தினசரி” பத்திரிகை

    அது சீன மக்கள் அமெரிக்க சி.ஐ.ஏ மேல் தாக்குதல் நடத்த திரண்டு போர்கோலம் பூண்டு நிற்கின்றார்கள், சி.ஐ.ஏ இனி நொறுக்கபடும் “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என பரணி பாடிகொண்டிருக்கின்றது

    சி.ஐ.ஏ வுடன் எப்படி மோதுவார்கள் என்பதுதான் தெரியவில்லை, இந்த சீனத்து போர்பரணி பாடும் ஆட்களே சி.ஐ.ஏவின் ரகசிய நபர்களாக இருக்கலாம் என்பதுதான் காமெடி

  42. குருநானக்கிற்கு முன்
    சீக்கியர்களே கிடையாது .
    இயேசு கிறிஸ்துவுக்கு
    முன் கிருத்துவர்களே கிடையாது.
    முகம்மதுவுக்கு முன்
    முஸ்லீம்களே கிடையாது .

    ரிஷப தேவருக்கு முன்
    ஜெயினர்களே கிடையாது.
    புத்தருக்கு முன்
    பௌத்தர்களே கிடையாது.
    கார்ல் மார்க்ஸ்கிற்கு முன் இடதுசாரிகளே கிடையாது .

    ஆனால்
    ஸ்ரீ கிருஷ்ணருக்கு முன்னதாக
    ஸ்ரீராமருக்கு முன்னதாக
    ரிஷி ஜமதக்கினிக்கு முன்னதாக
    ரிஷி அத்திரிக்கு முன்னதாக
    ரிஷி அகத்தியருக்கு முன்னதாக

    ரிஷி பதஞ்சலிக்கு முன்னதாக
    முனி கனட் முனிக்கு முன்னதாக
    அனைத்து சனாதன வேதங்கள் தான் ஆதாரம் அடிப்படை

    திராவிட அரசியல்வாதிகளே பார்த்துப் பேசுங்கள் வரலாறு தெரிந்துபேசுங்கள்

    நாங்கள் ஆதி அனாதி காலத்தவர் என்பதில் பெருமை கொள்கிறோம் .

    ஒரு கையில் சாஸ்திரம் மறுகையில் சனாதனத்தையும் ஆயுதங்களையும் கொண்டு உள்ளோம்
    .
    சமுதாயத்திற்காக வாழுங்கள் மதத்திற்காக வாழுங்கள்
    நித்திய மதம் வாழ்க.
    சத்திய மதம் வாழ்க

    இந்தப் புண்ணிய பூமிக்கு
    வந்தே மாதரம்.
    பாரத் மாதா கி ஜே.

  43. முதல்வர் என்பவர் ஜாதி மத, இனம் கடந்து அனைவருக்கும் பொதுவானவர். மத சார்பற்ற அரசு என்பதன் அர்த்தம் ஒரு மதத்தை மட்டும் சார்ந்திராமல் எல்லோரையும் சமமாக பாவித்தல் என்பதாகத்தான் அர்த்தம்.

    ஒரு கட்சியின் தலைவர் என்பவர் எந்த மதத்தையும் சார்ந்தோ சார்ந்திராமலோ இருக்கலாம்,அது அவருடைய, அவர் கட்சியின் கொள்கை சார்ந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது. ஆனால் அவரே முதல்வர் என்னும் பதவியில் அமரும்போது எல்லோருக்கும் பொதுவானவர்.

    ஓட்டு போட்டவர்களுக்கும் அவர்தான் முதல்வர். ஓட்டு போடாதவர்களுக்கும் அவர்தான் முதல்வர். ஓட்டு போடாதவர்கள் எப்படி அவரை முதல்வராக ஏற்று கொள்ள நிர்பந்திக்க படுகிறார்களோ, அதே போன்ற நிர்பந்தம் முதல்வருக்கும் உண்டு.

    இந்துக்களும் இந்து மதமும் அவருக்கு உவப்பானதாக இல்லாமல் இருந்தாலும் அவர்கள் எப்படி மத நம்பிக்கை அற்ற ஸ்டாலின் என்பவரை முதல்வரை ஏற்று கொண்டார்களோ அதே போன்று முதல்வர் என்னும் இடத்தில் அமர்ந்திருக்கும் ஸ்டாலின் என்னும் மனிதனுக்கு அதே இந்துக்களையும் அவர்கள் மத நம்பிக்கைகளையும் மதிக்கும், மற்ற மதத்தினருக்கு சமமாக நடத்தும் தார்மீக பொறுப்பு நிச்சயம் உண்டு.

    கழக அரசுக்கு இஸ்லாமியர்கள் மீது உள்ளார்ந்த பாச உணர்வு உண்டு என்பதை பொது வெளியில் பட்டவர்த்தனமாக ஒரு மாநில முதல்வர் என்ற அடைமொழியுடன் கூடிய வாழ்த்து செய்தியில் சொல்கிறார் என்றால் இது வன்மையாக கண்டிக்க தக்கது. அவர் வாழ்த்து சொல்லட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அவர்கள் மீது உள்ளார்ந்த பாசம் உண்டு என்று பூடகமாக சொல்வதும், இந்துக்கள் பண்டிகைகளை மவுனமாக கடப்பதும் என்ன மாதிரியான மனநிலை?

    இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத குற்றத்தை விட கேவலமான இழி செயல் இது போன்று மக்களை மதம் ரீதியாக ஏற்ற தாழ்வுடன் நடத்துவது. இதில் எங்கே மதசார்பற்ற தன்மை உள்ளது? மக்களை மதம் ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியே ஓங்கி நிற்கிறது.

    தமிழக அரசின் இது போன்ற ஒருதலை பட்ச செயல்கள் குறித்து இந்து அமைப்புகளும், இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் பாஜகவும் தங்கள் தரப்பு கண்டனங்களை அழுத்தமாக பதிவு செய்வதுடன் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யவேண்டும்.இந்த பிரித்தாளும் “கலக அரசு” பதவி விலக அழுத்தமான கோரிக்கை கவர்னரிடம் வைக்கபட வேண்டும்.

    முளையிலேயே இது போன்ற செயல்கள் கிள்ளி எறியபட்டால் தான் கோயில்கள் திறக்கபட்டது போன்று இதற்கும் ஒரு தீர்வு கிடைக்கும். இனியும் இவர் வாழ்த்து எங்களுக்கு தேவை இல்லை என வீம்பாக கடந்து செல்வதும் கிண்டல் கேலி செய்வதும் மிகப்பெரிய தவறு.

    மதத்தை முன் வைத்து பிழைப்பு நடத்தும் “கலக அரசு பதவி விலக வேண்டும்”என்பதை இந்துக்களின் கோரிக்கையாக வைத்து நம் கண்டனங்களை பதிவு செய்வோம்.

  44. 1962ல் இதே நாளில்தான் இந்திய சீன யுத்தம் வெடித்தது

    18ம் நூற்றாண்டின் இறுதியில் அந்த சீனா நிறைய பலவீனமாகியிருந்தது அப்பொழுது இந்திய சீன எல்லை என ஒன்று கிடையாது மாறாக திபெத் நேபாளம் காஷ்மீர் என அந்த எல்லைகள் இருந்தன‌

    திபெத் எங்களுக்கு கட்டுபட்ட பகுதி என சீனா சொல்லிகொண்டிருந்தாலும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை, அவர்களை அழைக்கும் அவசியமுமில்லை

    ஏதோ சம்பிரதாயத்துக்கு இந்திய எல்லைகள் அந்த பனிமலையில் மக்மோகன் என்பரால் இடபட்டதே தவிர முழுக்க அங்கும் எதுவும் தீர்மானமாக அமைக்கபடவில்லை

    காரணம் வெள்ளையனுக்கு அந்த பனிமலையில் ஏதும் வருமானமில்லை என்பதால் அக்கறைகாட்டவில்லை, ரஷ்யா அம்மலையினை தாண்டி வந்துவிட கூடாது என்பதற்காக ஏதோ செய்துவைத்தான்

    சீனா அன்று காட்சியில் இல்லை, திபெத் தனிநாடாக இருந்தது

    முதல் முறுகல் 1959ல் வந்தது, இந்தியாவினை விட்டு வெள்ளையன் வெளியேறி இருந்தான், சீனாவில் புரட்சி செய்து ஆட்சியினை பிடித்திருந்தான் மாவோ

    புரட்சியின் முக்கியமே சொன்னதை செய்வது அல்லவா? பலவீனமான சீன அரசுக்கு பதில் பலமான எம் அரசு என சொல்வதல்லவா? அதை செய்ய காலம் பார்த்திருந்தான், ஒரு கட்டத்தில் திபெத்தை பிடித்து தன் காலடியில் வைத்து கொண்டான்

    அது கம்யூனிச தேசங்கள் மத பீடங்களை அடக்கி வைத்த காலம், வாடிகனை ஒழிப்போம் கிறிஸ்துவத்தை புதைப்போம் என சோவியத் ரஷ்யா முழங்கி கொண்டிருக்க, சீனா புத்த தலமையிடத்தை குறிவைத்தது

    மதம் கம்யூனிசத்துக்கு எதிரானது என்பதால் மதமே அவர்களுக்கு எதிரி, இந்த கம்யூனிச கொள்கையால் புத்த மத தலமையகமான திபெத்தை பிடித்தான் மாவோ, அங்கு சீன அட்டகாசம் அதிகரித்தது

    தலாய்லாமா தப்பி இந்தியா வந்தார், அவரை ஒப்படைக்கும்படி சீனா கேட்க நேரு மறுத்தார்

    அதுவரை இனிப்பாக் இருந்த உறவுகள், சீனாவுக்கு இந்தியா ஐ.நாவில் இடம் வாங்கி தரும் அளவு வலுவாக இருந்த உறவுகள் அதன்பின் கசந்தன, இந்தியா தனக்கு எதிராக இருப்பதாகவும் அதனாலே திட்டமிட்டு தலாய்லாமாவினை அடைக்கலத்தில் வைத்திருப்பதாகவும் சந்தேகபட்ட மாவோ சீறினான்

    ஆனால் காலம் அவனுக்கு வாய்க்கவில்லை

    காரணம் இந்தியாமேல் பாய்ந்தால் சோவியத் அல்லது அமெரிக்க தலையீடு இருக்கும் என அஞ்சினான், இந்தியாவினை கம்யூனிச தேசமாக்க ரஷ்யா கடுமையாக முயன்ற காலம் அது என்பதால், இந்தியாவிலும் கம்யூனிச புரட்சி வெடிக்கும் என எதிர்பார்ப்புகள் இருந்ததால் அவன் யோசித்தான்

    அவனுக்கு வாய்ப்பு 1962ல் வந்தது, அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கியூபாவில் யுத்த முனைப்பில் இருந்த பரபரப்பில் தன் ராணுவத்தை இந்தியாவினை நோக்கி ஏவி, சுமார் 13ம் நூற்றாண்டில் சீனாவின் எல்லை எதுவரை உண்டோ அதுவரை எங்களுக்கு என உள்ளே வந்தான்

    இதில் மறைக்கபட்ட‌ சில மர்மங்களும் உண்டு, அவன் முழுக்க வரவில்லை ஒரு கட்டத்தில் இந்துக்களின் கயிலாய மலையினை பிடித்து கொண்டால் இந்துக்கள் நேருவுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் அப்பொழுது சில விவகாரங்களை பேசலாம் என்பதே அவன் திட்டம்

    ஆனால் இந்திய இந்துக்கள் இன்றைய தமிழக இந்துக்கள் போல் கவலையற்று இருந்தார்கள் இது சீனாவுக்கு ஆத்திரமாயிற்று

    உண்மையில் எல்லையில் தீர்க்கபடாத சில சிக்கல்கள் உண்டு, மாவோ முழுக்க நல்லவன் அல்ல என்றாலும் நேருவினை பேச்சுவார்த்தைக்கு அழைக்கத்தான் படையெடுத்து வந்தான்

    அவனுக்கு கயிலாய மலையினை ஒப்படைத்துவிட்டு அருணாச்சல பிரதேச புத்த தலங்கள் சிலவற்றை தன் கட்டுபாட்டில் எடுக்கும் யோசனையெல்லாம் இருந்தது

    திபெத் தன் கட்டுபாட்டில் இருந்தாலும் இந்தியாவின் தவாங்கில் இருக்கும் மடாலயம் தனக்கு ஆபத்து என்பது அவன் கணக்கு தலாய்லாமா அங்கேதான் தங்கியிருந்தார்

    நேரு அந்நேரம் ஒன்று வல்லரசின் துணையோடு யுத்தம் செய்திருக்க வேண்டும் அல்லது பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்க வேண்டும்

    மாறாக தனக்கு சீனா அஞ்சும் என்றும், தான் மிகபெரிய உலக தலைவன் என்றும், தன் ராணுவம் வந்தால் சீனா தனக்காக பின்வாங்கும் எனவும் கணக்கிட்டார், அதுதான் தவறு

    வெள்ளையன் காலில் விழுந்து அஹிம்சா என அழுது கொண்டிருந்தவனுக்கும், துப்பாக்கி முனையில் அரசனை விரட்டியவனுக்கும் வித்தியாசம் உண்டு என நிரூபித்தான் மாவோ

    நேரு செய்த தவறு இந்திய படைகளை சீன ஆக்கிரமிப்பு பகுதிக்குள் செல்ல அனுமதித்தது, நேரு உத்தரவிட்டால் சீனா அஞ்சும் என நினைத்தார், ஆனால் மாவோ நேருவினை …க்கும் மதிக்கவில்லை

    நேருவின் இரண்டாம் தவறு கிருஷ்னமேனன் என தனக்கு அடிமையான ஒரு அதிகாரியிடம் அந்த போரை ஒப்படைத்தது, தன் இறுமாப்பால் மிகபெரிய இழப்பினை ஏற்படுத்தியது அவரேதான்

    மூன்றாம் பெரும் குழப்பம் மானக்சா கரியப்பா போன்ற தளபதிகளை ஆலோசிக்காமல் நேருவின் நெருங்கிய சகாவான தாப்பர் என்பவரை தளபதியாக்கி அனுப்பியது

    இதுதான் இந்தியா அடிபட காரணம்

    சீன ராணுவம் அணுகுண்டுவரை செய்து நவீனமாய் இருந்தது, அவர்கள் படையும் வாகனங்களும் பலமாய் இருந்தன‌

    இந்திய நிலை அப்படி அல்ல, சீருடை கூட சரியில்லை, காலணி இல்லை, குளிர்தாங்கும் ஆடை இல்லை, துப்பாக்கி இல்லை இன்னும் ஏகபட்டது இல்லை

    ஆனால் இந்திய வீரர்களிடம் மன உறுதிமட்டும் இருந்தது

    போர் தொடங்காது என நேரு நினைக்க காட்சிகள் மாறின அடித்து பிரிக்க ஆரம்பித்தது சீனா, நேரு அதை நம்பவில்லை

    அவருக்கு அதைவிட அதிர்ச்சி சோவியத்தின் அமைதி, அவர்களோ நேருவுக்கு எதிராக கம்யூனிச அலைவீசும் அப்பொழுது களமிறங்கலாம் என காத்திருந்தார்கள்

    இந்தியாவின் அப்போதைய ஒரே எதிர்கட்சி அதுதான் என்பதால் ரஷ்யர்கள் அப்படி சிந்தித்தனர்

    ஒவ்வொருவரின் சுயரூபமாக தெரிய அஞ்சினார் நேரு, அதன் பின் அமெரிக்கா களத்துக்கு வந்தது, கென்னடி தனி கவனம் எடுத்து உதவ வந்தார், அமெரிக்க விமானபடை கூட வரும் என தகவல்கள் கசிந்தன‌

    இதனால் ஒரு கட்டத்தில் சீனாவே போரை நிறுத்தியது, இந்தியா இழந்த பகுதிகள் தொடர்ந்து சர்ச்சையாயின, கயிலாய மலை அவர்களிடமே சிக்கி கொண்டது

    அந்த போர் அதாவது நேருவின் தவறான முடிவுகளால் ஒருவித இறுமாப்பால் தொடங்கபட்ட நாள் அக்டோபர் 20.

  45. இப்பொழுது வல்லரசுகள் நேரடியாக மோதும் களம் ஒன்று உண்டென்றால் அது சிரியா

    முன்பு இஸ்ரேலுடன் மட்டும் மோதிய அந்நாடு இப்பொழுது ஏகபட்ட சிக்கலில் சிக்கி கிடக்கின்றது, அதன் எதிர்காலம் என்னாகும் என்பது ஆண்டவன் ஒருவனுக்கே தெரியும் அந்த அளவு சிக்கல் மேல் சிக்கல்

    சிக்கலின் தொடக்கம் வேறொன்றும் அல்ல, சிரியாவழியாக ஐரோப்பாவுக்கு நிலவழி எண்ணெய் குழாய் அமைக்க முடிவெடுத்தன உலகை ஆளும் எண்ணெய் கம்பெனிகள், இப்படி ஒரு திட்டம் நிறைவேறினால் ஐரோப்பாவில் தன் எண்ணெய் வியாபாரம் பலிக்காது என்பதால் அங்கே உள்ளே வரவேண்டிய தேவை ரஷ்யாவுக்கு இருந்தது, வாய்ப்புக்கு காத்திருந்தார்கள்

    (இதே காட்சிதான் முன்னாள் சோவியத் நாடுகளில் இருந்து எரிவாயு எண்ணெயினை ஆப்கன் ஊடாக பாகிஸ்தான் துறைமுகத்துக்கு வரகூடாது என ஆப்கனிலும் நடந்தது )

    சதாம் முடிந்துவிட்டார், பின்லேடனும் இல்லை இனி ஏன் அமெரிக்கா அரேபியாவில் இருக்க வேண்டும் எனும் கேள்விகளும் எழுந்தன‌

    அந்நேரம் தான் ஐ.எஸ் இயக்க எழுச்சி இருந்தது சிரியா ஈராக் என அவர்கள் கடும் அழிச்சாட்டியம் செய்ய களத்தில் குதித்தது அமெரிக்கா

    யாரும் அழைக்காமலே அது சிரியாவில் வந்து அமர்ந்து கொண்டது, ஏதும் கேட்டால் ஐ.எஸ் இயக்கத்தை ஒழிக்க வந்தேன் என சொல்லிகொண்டது

    ஆனால் உண்மையில் வடசிரியாவில் இருக்கும் எண்ணெயினை அது உறிஞ்சிகொண்டிருந்தது, அதே நேரம் ஐ.எஸ் இயக்கத்தை ஒழிக்க குர்திஸ்தான் போராளிகளை வளர்த்தது

    குர்திஸ் மக்கள் துருக்கியில் அதிகம் இருப்பதால் குர்துகள் பலம்பெற்றால் தனக்கு ஆபத்து என அந்நாடும் களத்துக்கு வந்தது, தாதா எர்டோகன் இதிலெல்லாம் கில்லாடி, வந்தவர்கள் அவர்களும் சிரியாவின் எண்ணெயினை உறிஞ்சினார்கள்

    அமெரிக்கா இருப்பதால் பிரிட்டன் உள்ளிட்ட அடியாள் நாடுகளும் வந்தன, இஸ்ரேலும் மகிழ்ச்சியில் அடிக்கடி சிரியாவினை சாத்தியது

    இனி ஏதும் பெரிதாக செய்யாவிட்டால் சிரியா நமக்கல்ல என உணர்ந்த சிரியா ரஷ்யாவினை வலிய அழைத்தது, இதற்காக காத்திருந்த ரஷ்யா தான் மட்டும் செல்லாமல் ஈரானையும் அழைத்து வந்தது

    ஆக சீனா, இந்தியா தவிர எல்லா வல்லரசுகளும் சிரியாவுக்குள் புகுந்தாயிற்று

    இதில் ஈரானிய இலக்குகளை இஸ்ரேல் அடிக்கும் ஆனால் ரஷ்யாவினை தொடாது, ரஷ்யா அமெரிக்காவினை தொடாது என புரிந்துணர்வும் உண்டு

    சுருக்கமாக சொன்னால் வல்லரசுகள் தங்கள் ஆயுதங்களை மட்டும் சோதித்தது, ரஷ்யா தன் எஸ் 400 சிஸ்டத்தை சோதித்து தவறுகளை திருத்தியது, அமெரிக்காவும் தன் நவீன ஆயுதங்களை சோதித்தது

    இந்நிலையில் சிரியாவில் இருக்கும் அந்நிய நாடுகள் வெளியேற வேண்டும் என கோரியது துருக்கி, அமெரிக்காவுக்கு எல்லா நாடும் அவர்களுடையது என்பதால் அவர்கள் இதையெல்லாம் காதில் வாங்கமாட்டார்கள்

    குறி துருக்கிக்கு வைக்கபட்டது, ஆனால் தாதா எர்டோகன் சாதாரணமானவரா? இஸ்லாமிய நாடுகளின் நாட்டாமையாக தன்னை நினைத்து அசர்பைஜான், பாகிஸ்தான் என எங்கெல்லாமோ தீர்ப்பு சொல்பவர், ரஷ்யஆதரவு பெற்ற ஆர்மினியாவினை அசர்பைஜான் ஒரு போரில் வெல்ல துருக்கி காரணம் எனும் வகையில் துருக்கியினை வல்லரசாக கருதிகொண்டார்

    அந்த துருக்கி சிரியாவுக்கு மேலதிக ஆட்களை அனுப்பியது, சிரியா எச்சரித்தும் கேட்காமல் துருக்கி வாகனங்களும் டாங்கிகளும் கவசவண்டிகளும் சிரியாவுக்குள் புகுந்து நிலை கொண்டன‌

    இந்நிலையில் ரஷ்யா இரு தினங்களுக்கு முன் உலகை மிரட்டும் குண்டு ஒன்றை அங்கு வீசியது

    ஆம், வீசபட்டது ஒரே ஒரு குண்டுதான் ஆனால் மேற்காசியாவும் துருக்கியும் ஆடிகிடக்கின்றது

    அது அணுகுண்டு அல்ல, ஆனால் ஓரளவு அதே அழிவினை கொடுக்கும் விவகாரமான குண்டு, அதை தெர்மோபாரிக் என்பார்கள், ரஷ்யா இதனை வெடிகுன்டுகளின் அரசன் என சொல்லும்

    இந்த குண்டு அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் அதில் அப்பகுதியில் இருக்கும் எல்லாம் உருகிவிடும் , மேற்கொண்டு காற்றின் ஆக்ஸிஜனை இக்குண்டு ஈர்ப்பதால் சுற்றியிருப்போர் உடனே சாகும் கொடுமையும் உண்டு

    அந்த குண்டை சிரியாவில் இருக்கும் துருக்கி துருப்புக்கள் மேல் வீசியிருக்கின்றது ரஷ்யா, இதன் சேதம் கடுமையாக இருக்கலாம் துருக்கி வாகனங்கள் உருகி துருக்கி வீரர்கள் யாரும் தப்பியிருக்க முடியாதபடி சேதம் மிக அதிகம்

    ஆனால் இந்த செய்தி எங்காவது வரபார்த்தீர்களா வராது

    ஏனென்றால் அமெரிக்கா இதே சிரியாவில் இருக்கின்றது, துருக்கி அடிவாங்குவது அவர்களுக்கு முக்கியம் இதனால் சிக்கலே வராது

    இதே குண்டு அமெரிக்காவுக்கு எதிராக எங்காவது வீசபட்டிருக்குமானால் இந்நேரம் உலகமே அல்லோலபட்டிருக்கும்

    தமிழக முன்கலப்பைகள் திமுகவுக்கு என்றால் உலக முன்கலப்பைகள் அமெரிக்காவுக்கு, எல்லா இடத்திலும் முன் கலப்பைகள் இப்படித்தான் இருக்கின்றன, பாவம் அவற்றின் தலைவிதி அப்படி

  46. அந்த கங்கை கரையில் சாதுக்கள் நிரம்பிருப்பர், திரும்பும் இடமெல்லாம் சாதுக்களை காணமுடியும், எக்காலமும் அங்கு இருக்கும் சாதுக்கள் ஆப்கானியர் ஆட்சியிலும் இருந்தார்கள்

    இந்துக்களை பகைத்தால் இங்கு ஆளமுடியாது என்றும், இந்து சாதுக்கள் சக்தி நிரம்பியவர்கள் என்றும் அஞ்சிய பாபர் முதல் பல ஆப்கானியர்கள் அவர்கள் விவகாரங்களில் தலையிடுவதில்லை, இந்து சாதுக்களும் ஆட்சியாளர் பற்றி பெரும் கவலை கொள்ளவில்லை

    அவர்கள் உலகையே புறக்கணித்தவர்கள் என்பதால் ஆப்கானிய பேரரசனும் அவர்களுக்கு துரும்பு, அவர்கள் போக்கில் இருந்தார்கள்

    ஆயினும் சிற்சில வடுக்கள் இருந்தன, தீரா கவலைகள் இருந்தன, என்று இந்நாடு இதிலிருந்து விடுபடும் எனும் ஏக்கமும் இருந்தது, சில ஆலயங்கள் பாழ்பட்டும் இந்து தர்மம் மிகபெரிய வீழ்ச்சியிலும் இருந்தது சிலருக்கு வருத்தமாய் இருந்தது

    காவி அடையாளம் புள்ளியாய் சுருங்கி எங்கும் பச்சை நிற கொடி பெரிதாய் படர்ந்திருந்த நேரம் அது

    அது மாமன்னன் ஷாஜகான் காலம், உலகின் மிகபெரும் வல்லரசாகவும் வளம்கொழிக்கும் அரசாகவும் முகலாய சாம்ராஜ்யம் கருதபட்ட காலம்

    இனி ஆயிரம் ஆண்டுகள் அவர்களை அசைக்கமுடியாது என உலகம் உணர்ந்திருந்த காலம், ஐரோப்பியரும் சீனரும் இன்னும் பலரும் வியாபார அனுமதிக்கு அவன் செருப்பு கிடக்கும் இடத்தில் நாள் கணக்காய் காத்திருந்த காலம்

    அவனின் மயிலாசனம் உலகின் மிகபெரும் கலைபொருளாய் இருந்தது, அதில் பதிக்கபட்ட கோஹினூர் அரண்மனைக்குள் சூரியன் போல் மின்னியது, இப்படியும் மானிடரால் அமைக்கமுடியுமா என வெளிநாட்டவர் வாய்பிளந்து நிற்கும் வண்ணம் அவன் மாளிகை தங்கத்தில் பளபளத்தது

    அவ்வப்போது ஆக்ரா பக்கமும் டெல்லி பக்கமும் நகர்வலம் வருவான் ஷாஜகான், அவன் சேனைகள் முன் செல்ல , தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிக்கபட்ட யானையில் தங்க அம்பாரியில் உலகின் ஒப்பற்ற ரத்தினங்கள் வீச வீற்றிருப்பான் ஷாஜகான்

    உலகின் மன்னர்ளெல்லம ஏக்கபார்வை பார்க்க அவர்களை எகத்தாள பார்வை பார்க்கும் ஷாஜஹான், அன்று அப்படி வந்து கொண்டிருந்தான்

    திடீரென அவரின் யானை முன் வந்து நின்றார் அந்த சாது, நீண்ட தாடியும் அவர் அணிந்த ருத்திராட்சமும், கையில் இருந்த மண்டைஓடும் அவர் ஒரு அகோரி என்பதை காட்டிற்று

    வந்தவர் அவனை பார்த்தபடி கடந்து சென்றார், வணக்கமும் சொல்லவில்லை, ஏதும் மரியாதையும் செய்யவில்லை அதை பெரிதாக எடுக்காமல் கடந்து சென்றான் ஷாஜகான்

    பின்னாளில் அவன் மும்தாஜிடம் மனதை பறிகொடுத்தான், அவளே உலகமென கண்டான், மொகலாய சாம்ராஜ்யத்தையே அவளிடம் பறிகொடுக்க துணிந்தான்

    அது அவன் மனதளவில் இருக்கும் பொழுது அதே நகர்வலம் வந்தபொழுது அதே சாது குறுக்கே வந்தார், மெல்ல சிரித்துவிட்டு சென்றார்

    இம்முறையும் அவன் பெரிதாக நினைக்கவில்லை

    அடுத்தமுறை மும்தாஜுடன் வந்தான் ஷாஜகான், அதே துறவி திடீரென மக்களை பிரித்து உள்ளே வந்தார், இம்முறை சத்தமிட்டு சிரித்தார், அது பிரபஞ்சம் வெடித்து சிரிப்பது போல் இருந்தது

    காரணம் புரியாமல் திகைத்தான் ஷாஜகான், வீரர்கள் வாளை உருவினாலும் இந்து சாதுக்கள் மேல் கைவைக்க கூடாது எனும் சட்டத்தை அவனே விதித்திருந்ததால் அடங்கினார்கள்

    இந்நிலையில் மும்தாஜ் மரணமடைந்தாள், உலகமே இருண்டது போல் சரிந்து கிடந்தான் ஷாஜகான், மன்னன் தீரா சோகத்தில் சரிய மொகலாயருக்கு கட்டுபட்ட நாடெல்லாம் கொஞ்சம் சுதாரித்தன, சில தனியாக செல்ல முயன்றன‌

    இதெல்லாம் ஷாஜகான் தடுக்காதது அவுரங்கசீப்புக்கு ஆத்திரத்தை கொடுத்தது, 6ம் மகனான தானே சோகத்தை கடந்தபின் ஒரு அரசன் ஏன் இப்படி முடங்கி கிடக்கவேண்டும் என மனதால் பொங்கிகொண்டிருந்தான்

    ஆனால் ஷாஜகான் தெளியவில்லை, அவள் நினைவாக மொகலாய அரசின் மொத்த கஜானாவினையும் கட்டி தாஜ்மஹாலை கட்ட தொடங்கினான்

    இது அவன் மகன் அவுரங்கசீப்புக்கு வருத்தம் அளித்தது, பெருகிய வருத்தம் வெறுப்பாயிற்று

    தந்தை மேல் பெரும் வெறுப்பு அவனுக்கு வந்தது, மனதை எதிலெல்லாமோ திருப்பி பார்த்தான் அதுவும் அவனுக்கு முழு நிம்மதி வரவில்லை

    அவன் வாழ்வே ஷாஜகான் எது செய்தாலும் தலைகீழாக செய்யும்படி மாறிற்று, அவன் ஆடம்ப்ரம் என்றால் இவன் எளிமை, அவன் அன்பு என்றால் இவன் கடுமை, அவன் போர் வேண்டாம் என்றால் போர்

    அவன் இந்துக்கள் மேல் வன்மம் வேண்டாம் என்றால் இவனுக்கு வன்மம் தானாக வந்தது
    தெற்கே அதிகம் பாயாதே என்றால் அவன் தெற்கு நோக்கி ராஜ்யம் விஸ்தரிப்பிலே சிந்தித்தான்

    ஏற்கனவே ஷாஜகான் மும்தாஜிக்கு அரண்மனையும் இன்னபிறவும் கட்டி கஜானாவினை வீணாக்குகின்றார் என எல்லோரிடமும் புலம்பி வந்தான்

    ராணுவத்துக்கு பணம் முக்கியம், இவரோ அதை ஆடம்பரத்தில் வீணாக்குகின்றார், என்னிடம் மட்டும் இப்பணம் இருந்தால் தெற்கத்திய குமரி வரை பிடிப்பேன், பாரசீகத்தை பிடிப்பேன், பட்டுசாலை வழி சீனத்தை பிடிப்பேன் என உறுமி கொண்டிருந்தான்

    அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தாஜ்மகாலை செதுக்குவதிலே கவனமாய் இருந்தான் ஷாஜகான், அன்பினை சொல்லும் வார்த்தைகள் மறையும் ஆனால் கட்டடங்கள் காலத்துகும் பெயர் சொல்லும், தன் காதலின் பெயர் சொல்லும் காதலின் கட்டடமாய் அதை பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருந்தான் ஷாஜஹான்

    ஒரு நாள் மும்தாஜ் கல்லறையில் அழுதுவிட்டு மெல்ல அவன் வெளிவரும் பொழுது யமுனை ஆற்றின் கரையில் அந்த உருவம் நின்றது, ஆம் அதே அகோரி

    அதே வெடிசிரிப்பினை சிரித்துவிட்டு, மாயை மாயை என ஒன்றை கைகாட்டி சொல்லிவிட்டு ஓடிவிட்டார் அகோரி

    அவர் கைகாட்டிய இடத்தில் மும்தாஜின் கல்லறை இருந்தது

    தாஜ்மகாலை மிகபெரும் செலவில் கட்டி அதை 20 ஆண்டுகளாக இழைத்து இழைத்து அழகாக்கிவிட்டு அதன் எதிரே ஆற்றுக்கு அப்பக்கம் இன்னொரு கருப்பு தாஜ்மகாலை தனக்காக உருவாக்க எண்ணினான் ஷாஜகான்

    பேரரசின் வருமானத்தை எல்லாம் தாஜ்மகால் தின்று கொண்டே இருந்தது, பேரரசை இயக்க வேண்டிய செல்வமெல்லாம் அந்த மகாலில் கொட்டபட நிர்வாக சிக்கல் அதிகரித்தது

    கப்பம் கட்டும் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன, மொகலாய வீரர்களுக்கு நிதி குறைந்தது, அரசு ஸ்தம்பித்தது, சிற்றரசுகளெல்லாம் விடுதலை என அறிவித்தன, எல்லையில் நிலமை எல்லை மீறி சென்றது

    ஆனால் அதுபற்றியெல்லாம் கவலையின்றி தாஜ்மகாலை செதுக்கி கொண்டிருந்தான் ஷாஜகான்

    கடும் வெறுப்பில் இருந்த அவுரங்கசீப் அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் வெறியாட்டத்தில் இறங்கினான், சகோதர கொலைகள் உட்பட எதிர்த்தோரை எல்லாம் கொன்று படிகட்டாக்கி சிம்மாசனத்தை கைபற்றினான்

    ஆக்ரா அரண்மனையில் ஒரு அறை சிறையில் அடைபட்டார் ஷாஜகான், அந்த ஜன்னல் வழியாக தாஜ்மஹாலை மட்டும் பார்க்க முடிந்தது

    ஆட்சிக்கு வந்த அவுரங்கசீப் தன் கனவுகளை மெய்பிக்க தொடங்கினான், எதெல்லாம் மொகலாயர்கள் தீவிரமாக செய்யவில்லையோ அதை எல்லாம் மிக சரியாக ஆத்ம சுத்தமாக செய்தான்

    அவன் சாம்ராஜ்ய விஸ்தரிப்பில் மராட்டியருக்கும் அவனுக்கும் மோதிற்று, பெரும் சிக்கல்கள் வர தொடங்கின‌

    அவுரங்கசீப்பின் மூர்க்கம் அதிகரிக்க தேசமெங்கும் இந்துக்களின் சீற்றமும் எகிறிற்று. தேசம் மெல்ல மெல்ல இந்து எழுச்சிக்கும் ஆப்கானியர் எதிர்புக்கும் சென்றது

    சிறையில் இருந்த ஷாஜகானுக்கு தகவல்கள் சோகமாக வர தொடங்கின, ஒரு அரசனாக தன் பாரம்பரியமிக்க மொகலாய சாம்ராஜ்யம் சரிவதை அவனால் உணரமுடிந்தது

    பாபரும் அக்பரும் காத்த வம்சத்தை தன்னால் எப்படி காக்கமுடியவில்லை என அவன் மாறி மாறி யோசித்தான்

    யோசித்தபடி தாஜ்மஹாலை பார்த்தபொழுது அவனுக்கு அர்த்தம் விளங்கிற்று

    “ஆ.. அவள்தான் அந்த மும்தாஜ் வந்த பின்புதான் இவ்வளவு சிக்கல், அப்படியானால் அவள் யார்? இந்துஸ்தானத்தின் விடுதலைக்காக என்னிடம் வந்தவளா?

    அவளிடம் மயங்கி நாம் செய்த செலவிலும் இந்த தாஜ்மஹாலிலுமே மனம் கொதித்த மகன் இப்படி மூர்க்கனாகிவிட்டான், அப்படியானால் என்னை அப்படி செய்ய வைத்த சக்தி எது?

    இதோ இந்த தாஜ்மகால் காதலின் அடையாளம் என போற்றபடும், கலையின் உச்சம் என போற்றபடும், உலகெல்லாம் இருந்து வந்து கொண்டாடுவார்கள்

    யார் கொண்டாடுவார்? கவலையற்ற காதலர் கூட்டம் கொண்டாடும், நாம் கொண்டாடா காதலையா அவர்கள் கொண்டாட முடியும்?

    ஆனால் அரசர்களும் வரலாறும் என்ன சொல்லும்? இந்துஸ்தான் விடுதலையினை தொடங்கி வைத்த மாய கட்டடம் என்றல்லவா இதை சொல்லும்

    இவ்வளவு செலவழித்து, கிட்டதட்ட 20 ஆண்டு கால மொகலாய அரச வருமானத்தை கொட்டி இதை உருவாக்காமல் விட்டிருந்தால் கூட அவுரங்கசீப் இப்படி ஆகியிருக்க மாட்டான்

    என் அப்பன் வெட்டி செலவுகளில் கஜானாவினை காலியாக்கிவிட்டான், அரசினை நடத்த வேறு வழியில்லை அதனால் வரிகளை அதிகரித்தேன் அதில் இந்துக்களும் பாதிக்கபடுகின்றார்கள் நான் என்ன செய்ய? அவன் பேச வாய்ப்பே இருந்திருக்காது

    ஆக இதுதான், இந்த அழகிய மாயைதான் எல்லா வீழ்ச்சியும் தொடங்கியது, உலகின் ஒப்பற்ற பேரரசனான நான் வீழ இதுதான் காரணமா?

    இங்கு யார் ஆளமுடியும்? கஜினியும் கோரியும் அடிபட்டு ஓடியபொழுது மொகலாயர் மட்ட்டும் நிரந்தரமாக ஆள ஒரே காரணம் இந்துக்கள் அனுசரிப்பு

    அக்பர் அதனால் இந்து பெண்ணையே திருமணம் செய்தார், அந்த சமரசத்தில்தான் இங்கு ஆட்சி நடந்தது

    ஆனால் அவுரங்கசீப் அப்படி அல்ல, அவனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தவன் நான், என் காதல், என் மும்தாஜ், என் அன்பு, என் அன்பு காணிக்கையான அந்த தாஜ்மகால்

    நான் சரியாக இருந்திருந்தால் அவன் ஆட்சிக்கே வந்திருக்கமாட்டான், எல்லாம் நான் மும்தாஜின் நினைவில் மூழ்கியதால் வந்த நிலை

    அய்யோ…” என அவன் அழுது புலம்பியபொழுது அவன் கண்முன் மும்தாஜ் வந்தாள், அவளை அவன் உற்று பார்த்து கொண்டே “இந்த முகத்தின் பின்னாலா மொகலாய சாம்ராஜ்ய அழிவு இருந்தது?” என சொன்னபொழுதே அம்முகம் மாறிற்று

    ஆம் அந்த சாதுவின் முகம் வந்தது, அதே வெடிசிரிப்பினை சிரித்தார், முதல் முறையாக அவர் பேசினார்

    “சக்கரவர்த்தியே என் சிரிப்பின் அர்த்தம் புரிந்ததா?”

    ஆம் , என தலையாட்டியபடியே சரிந்தான் ஷாஜகான் அவன் உயிர் அத்தோடு போயிற்று

    அவன் உடல் அடக்கம் செய்யபடபொழுது தள்ளி இருந்து தாஜ்மகாலை பார்த்துவிட்டு வானம் பார்த்து வணங்கிவிட்டு நடந்தார் சாது

    அதன் பின் அவுரங்கசீப்புக்கும் மராட்டியருக்கும் வேகமாக மோதிற்று, வீர சிவாஜி மாபெரும் வீர யுத்தம் நடத்த்தினன்

    அவன் பின்னால் நாயக்க அரசும் வலுவாக இருந்தது

    போரில் இறங்கிய அவுரங்கசீப் தவறு மேல் தவறு செய்தான் குழப்பம் கூடிற்று, அந்த குழபபத்தில் மொகலாய் சாம்ராஜ்யம் வலுவிழந்தது
    சாதாரண மராட்டிய வீரனான சிவாஜி தன் அறிவும் வீரமும் கலந்த போரால் அவுரங்கசீப் கண்ணில் விரலை விட்டு ஆட்டி அவன் முன்பே, அவன் கண் எதிரே சத்திரபதி சிவாஜி என இந்து பேரரசை அறிவித்தான்

    அது அன்று பலத்த ஆச்சரியம், யாராலும் செய்யமுடியா சாதனை, நம்பமுடியா ஆச்சரியம். ஆயிரம் ஆண்டு நிலைக்கும் என கருதபட்ட பலமிக்க அரசு முன்னால் சிவாஜி நாடு அடைந்து முடிசூட்டி தானும் இந்து சக்கரவர்த்தி என அமரந்ததெல்லாம் வீரவரலாறு

    ஆனால் சிவாஜிக்கு பின் மராட்டிய அரசின் நிலை மோசமாயிற்று, சிவாஜிக்கு பின் மராட்டியரை அவுரங்கசீப் பழி தீர்த்தாலும் மராட்டியர் மறுபடி எழுந்து அடித்து கொண்டே இருந்தனர்

    அதே நேரம் மராட்டியரின் தொடர்ச்சியாக சீக்கியர்களும் வீரத்துடன் எழுந்தனர், சிவாஜி வைத்த வீர தீ சீக்கியருக்கும் பரவிற்று

    இந்த எழுச்சி கொடுத்த அடியில் மொகலாய அரசு தள்ளாட அப்பொழுதுதான் ஐரோப்பியர் வந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவினை வளைத்து கைபற்றினர், அவுரங்க சீப்புக்கான அடுத்த 80 வருடங்களில் இந்தியாவில் மொகலாயர் ஆட்சி முடிவுக்கு வந்தது

    பிரிட்டிசார் இங்கு வெற்றிபெற மொகலாயருக்கு எதிரான இந்துக்களின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது என்பதுதான் வரலாற்றில் மறைமுகமாக நிற்கும் உண்மை

    தாஜ்மகால் காதல் சின்னம் என்பவருக்கு காதல் சின்னம், கலை என்பவர்களுக்கு கலை

    இந்தியாவில் மொகலாயர் குவித்த செல்வத்தின் அடையாளம் என வரலாறு சொல்பவர்களுக்கு அது வரலாறு

    ஆனால் அது இந்தியாவில் மொகலாய அரசு வீழ மாயையினை காட்டி பிரபஞ்ச சக்தி ஆடிய ஆட்டம் என்பது ஆன்மீக கண்களுக்கு மட்டும்தான் தெரியும்

    இன்றும் ஆக்ராவில் அது அதைத்தான் சொல்லியபடி நிற்கின்றது, இந்திய வரலாற்றை மாற்றிவைத்த இந்துக்களை ஒன்றாக எழவைத்த மாயத்தின் வடிவம் அது…..

  47. ஆப்கானிஸ்தானுக்கு ஐம்பதாயிரம் மெட்ரிக் டன் கோதுமையினை இந்தியா வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

    ஆப்கானிஸ்தான் தாலிபன் கும்பலால் இந்தியா அடைந்த இப்பொழுதும் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம், ஆனாலும் அம்மக்கள் பசியால் வாடுவதை அடுத்து இந்த மனிதாபிமான உதவியினை இந்தியா செய்கின்றது

    ஆப்கனின் நிலை பரிதாபமாக உள்ளது, தாலிபன்கள் அந்நாட்டை நாசமாக்கியது ஒருபக்கம் என்றாலும் அம்மக்களின் பசியும் பட்டினியும் கல்மனதையும் கரைக்க கூடியவை

    ஒரு பக்கம் தாலிபன்கள் அகன்றால்தான் உதவுவோம் என சில இஸ்லாமிய நாடுகளே அடம் பிடிக்க, இந்து தேசமோ மனிதாபிமானமாக உதவுகின்றது

    இந்த மண்ணின் தர்மமும் தாத்பரியமும் அப்படியானது, எதிரி என்றாலும் அவனிடமும் ஒரு தர்மம் கடைபிடிக்கும் உயர்ந்த சித்தாந்தம் கொண்ட சனாதான பூமி இது

    அக்கிரமே செய்தாலும் அவர்களுக்கு எதிராக ஆயுதம் எடுக்கமாட்டேன் என மனமுருகிய அர்ஜூனனும், எதிரியாயினும் ஆயுதமற்ற ராவணனிடம் “இன்று போய் நாளை வா” என பெருந்தன்மையாய் சொன்ன ராமனும் வாழ்ந்த மண் இது.

    அதன் ஆன்ம நம்பிக்கையும் தாத்பரியமும் எல்லோரும் பசியாற வேண்டும், எதிரியாயினும் அவனை பசிக்க விட கூடாது எனும் மாபெரும் ஞானமரபில் அமைக்கபட்டது

    வாடிய பயிரை கண்டபொழுதெல்லாம் வாடிய வள்ளலாரும் இன்னும் எத்தனையோ அவதாரங்களும் பசிதீர்த்த புண்ணிய பூமி இது

    அது தன் இயல்பில் எக்காலமும் மாறாது, அதன் மண்ணும் மனமும் சனாதானம் எனும் மாபெரும் உன்னத தத்துவத்தால் முக்காலமும் நிரம்பியுள்ளது

    அதன் இரக்கமும் தர்மமும் பல இடங்களில் அதற்கு வஞ்சக வீழ்ச்சியினை கொடுத்தாலும் தர்மத்தால் எழும் அந்த பூமி தன் ஞான இயல்பினை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது

    “எதிரிக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என இங்கே சொல்லி கொடுத்த போதனை வாய்வழி வார்த்தை அல்ல, அது இங்கே காலம் காலமாக நிலைபெற்ற தத்துவத்தின் வடிவம்

    “வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
    வாழும் மனிதருக் கெல்லாம்”

    என்ற மகாகவியின் வரிகளின் படி ஆப்கானுக்கு உணவு வழங்குகின்றது இந்தியா, இந்திய உதவியினை கண்ணீர் மல்க வரவேற்கின்றனர் ஆப்கன் மக்கள்

  48. சீனா மற்றும் பாகிஸ்தானின் தூக்கத்தை கெடுத்துவிட்டது அமெரிக்கா, அதிலும் பாகிஸ்தான் வாயில் துணி அல்லது வெடிகுண்டு வைத்து அழுது கொண்டிருக்கின்றது

    சீனாவுக்கான அமெரிக்க தூதர் விஷயத்தை செய்திருக்கின்றார், இது அமெரிக்க அரசின் நிலைப்பாடு என்பதால் விஷயம் பெரிதாகின்றது

    அதாவது சீனாவுக்கான அமெரிக்க தூதராக நிக் பண்ஸ் நியமிக்கபட்டார், அமெரிக்க சட்டபடி அதிபரால் நியமிக்கபடும் ஒருவர் அந்த பணிக்கு தகுதியானவரா என அமெரிக்க செனட் சோதிக்கும்

    அப்படி நிக் பென்ஸிடமும் கேள்வி கேட்டார்கள், அங்கு அவர் சொன்ன பதில்தான் இன்று சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அடிவயிற்றை கலக்கும் செய்தி

    என்ன சொன்னார் பென்ஸ்

    “சீனா அண்டை நாடுகளையெல்லாம் ஆக்கிரமித்து வம்பு செய்து கொண்டிருக்கின்றது, மேலாக நம் நெருங்கிய நட்புநாடு இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்து இந்தியாவினை வம்புசண்டைக்கு இழுக்கின்றது, இந்தியா நல்ல நாடு அது ஒருநாளும் வீணாக சண்டைக்கு செல்லாது ஆனால் சீனா நம் நட்பு நாடான இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கின்றது

    நட்புநாடு எனும் அடிப்படையில் நாம் இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவினை அடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்”

    போதாதா?

    சீனா கடும் கோபத்தில் கொந்தளித்தது, நேற்றே எங்கள் நாட்டில் கொரோனா 3.0 வந்துவிட்டது என விமான நிலையங்களை மூடுகின்றது, அதாவது புதிய அமெரிக்க தூதரை மிரட்டுகின்றார்களாம்

    பாகிஸ்தானோ மனதுக்குள் கருவி கொண்டிருக்கின்றது, 2010க்கு முன்புவரை அவர்கள்தான் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்தார்கள், இனி அது இல்லை என்றாயிற்று அனேகமாக எப்16 விமானங்கள் வரை திரும்ப பெறபடலாம் என்பதால் அந்த விமானங்களை தடவி தடவி அழுது கொண்டிருக்கின்றது அத்தேசம்

    விஷயம் இதுதான்

    எல்லையில் சீனாவுடன் போர்சூழல் நிலவும் நிலையில் இந்தியா எம் நட்பு நாடு என அறிவித்து இந்தியா மேல் சீனா கைவைத்தால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் என எச்சரித்திருகின்றது அமெரிக்கா, இது நாட்டுக்கு நல்லது

    1962 போரிலும் அமெரிக்கா உதவ வந்தது, ஆனால் கம்யூனிஸ்டுகள் தொழிற்சங்கங்கள் எல்லாம் தன்னை விடாது என அஞ்சிய நேரு ரகசியமாக அமெரிக்காவிடம் உதவி கோரினாரே தவிர நேரடியாக கேட்க அஞ்சினார்

    காரணம் கம்யூனிஸ்டுகள் அட்டகாசம்

    ஆனால் சோவியத் யூனியனும் இந்தியாவினை காக்கவில்லை என்பதுதான் விஷயம், அப்பொழுதும் கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் மகா அமைதி எனபதுதான் தேசவிரோதம்

    இன்று மோடி கம்பீரமாக அமர்ந்திருக்கின்றார், கம்யூனிஸ்டுகள் காலாவதியாகிவிட்டனர், அமெரிக்கா இந்தியா எம் நட்பு நாடு என சொல்கின்றது

    2006ல் மோடிக்கு விசா இல்லை என சொன்ன வல்லரசு இன்று மோடியினை புரிந்து கொண்டு இந்தியா எங்கள் கூட்டாளி என உலக அரங்கில் தன் நிலைபாட்டை உரக்க சொல்கின்றது, மோடியினை நாங்கள் சரியாக புரிந்து கொண்டோம் என பகிரங்கமாக சொல்கின்றது

    ஆனால் தமிழக இம்சைகள்தான் இன்னும் மோடியினை புரிந்துகொள்ளாமல் அழுது கொண்டிருக்கின்றன‌

    ஆம், அமெரிக்கனுக்கு யோசனை அதிகம் அறிவும் அதிகம் அவன் புரிந்துகொண்டான், திராவிட இம்சைகளுக்கு ஏது அவ்வளவு சிந்தனை? அது இருந்தால் அவை ஏன் அந்த கும்பலில் இருக்க போகின்றன?

  49. ஆப்கானிஸ்தானில் இன்று நடக்கும் கொடூரங்கள்தான் இந்தியா முழுக்க சுமார் 500 ஆண்டுகாலம் நடந்தது, அவர்களை எதிர்த்து நாயக்க மன்னர்கள், வீரசிவாஜி தலமையில் மராட்டியர்கள், ரஞ்சித்சிங் தலமையில் சீக்கியர்கள் என பெரும் எதிர்ப்பு எழுந்து கொண்டே இருந்தது

    ஆப்கானியரின் தொடக்க கால இம்சையினை தென்பகுதியில் பரவாமல் காத்து கொண்டவர்கள் நாயக்க மன்னர்கள், ஆனால் வடக்கே அப்படி அல்ல வட இந்தியாவின் பஞ்சாப் முதல் வங்கம் வரை அவர்களிடம் வசமாக சிக்கிற்று

    தென்னகத்திலும் நாயக்க அரசுகள் வீழ தொடங்கிய காலத்தில் பாமினி சுல்தான்கள் பலம் பெற்றனர்

    வீரசிவாஜி துணிந்து அடித்தார், முதலில் பாமினி சுல்தான்களை அடக்கிய அவர் மொகலாய வம்சத்தின் ஆட்டத்தை தொடங்கி வைத்தார்

    இந்தியாவின் பாதி அவர் ஆளுகைக்குள் வந்தது இந்து சக்கரவர்த்தியாக முடிசூடினார்

    ஆனால் ஆப்கானியருக்கு இருந்த வசதி மேற்காசியா மத்தியகிழக்கில் இருந்து ஆட்களை குவிப்பது, கூலிக்கு ஏகபட்டவர்கள் கிடைத்தார்கள் , இந்த சப்ளை இருந்ததால் சிவாஜிக்கு பின்னும் ஆப்கானியர் எழுந்தனர்

    ஆனால் காலம் சீக்கியர் வடிவில் எழும்பிற்று, சீக்கியர் டெல்லிக்கும் காபுலுக்கும் இடையே அரணாக எழும்பி ஒரு நிலபகுதியினை துண்டாடி நின்றனர், அவர்களை தாண்டி ஆப்கனில் இருந்து ஆட்கள் வரமுடியவில்லை

    இந்த நிலையில்தான் வெள்ளையன் வந்தான், அவனுக்கு ஆதரவாக இந்துமக்கள் சேர காரணமே ஆப்கானியரை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை அன்றி வேறல்ல‌

    இதனாலேதான் சிறுகுழுவாக இருந்த வெள்ளையனால் தேசத்தை வெல்ல முடிந்தது, அவனின் ஆட்சினையும் தேசம் முடித்து இன்று இந்து தேசமாக எழுகின்றது

    ஆப்கானிய தாலிப கும்பலின் அட்டகாசத்தில் ஆயுதங்கள் மட்டும் புதிது, மற்றபடி அதே கொடுமைகள்தான் இங்கும் அரங்கேறின, இன்று அங்கு நடப்பதுதான் இங்கு காசி முதல் மதுரை வரை அரங்கேறின‌

    இந்திய தேசம் எவ்வளவு கொடும்காலத்தில் சிக்கியிருந்தது என்பதையும், நாயக்கரும் சிவாஜியும் இன்னும் ரஞ்சித்சிங்கும் எவ்வளவு சிரமபட்டு போராடியிருப்பார்கள் என்பதை கலங்கிய கண்களுடனும் இதயத்தில் வழியும் ரத்தத்துடனும் உணரும் நேரம் இது

  50. தமிழகம் மதசார்பற்ற மாநிலம், ஆனால் தீபாவளிக்கு மட்டும் அரசு ஊழியருக்கு போனஸ் உண்டு, இன்னும் அரசு சார்பில் ஸ்வீட்பாக்ஸ் உண்டு, அதில் வழக்கம் போல் ஊழலும் உண்டு

    சரி, தீபாவளிக்கு மட்டும் ஏன் சிறப்பான போனஸ்?

    இது வெள்ளையன் தொடங்கி வைத்த விஷயம், இது இந்துநாடு என்பதிலும் தீபாவளி இந்தியா கொண்டாடும் பெரும் பண்டிகை என்பதையும் உணர்ந்த அவன் இந்த விஷயத்தை ஏற்படுத்தி வைத்தான்

    அது இன்றும் தொடர்கின்றது, இந்தியா ஒரு இந்து நாடு என்பதை இது தெளிவாக சொல்கின்றது

    பாருங்கள், தீபாவளி என ஒரு இந்து பண்டிகையினை இருப்பதை உணர்ந்து, அதை ஏற்றுகொண்டு தமிழக அரசு தீபாவளி போனஸ் எல்லாம் கொடுக்கின்றது, ஆனால் தமிழக முதல்வர் அதற்கு வாழ்த்து சொல்லமாட்டார்

    காரணம் அவர் கட்சியின் கொள்கை தீபாவளி கட்டுகதை என சொல்லிவிட்டதாம்

    ஆம், அவர் கட்சிக்கு தீபாவளி இல்லை, ஆனால் அவர் கட்சி அமைக்கும் அரசுக்கு தீபாவளி உண்டு ஆனால் அந்த அரசின் முதல்வராக ஸ்டாலின் தீபாவளிவாழ்த்து சொல்லமாட்டார்

    ஏதாவது புரியுமா?

    இந்துக்களை அடிமுட்டாள்களாகவும், சிந்திக்க தெரியாத மடையர்களாகவும் வைத்திருக்கும் வரை இங்கு எதுவும் யாருக்கும் புரியபோவதே இல்லை

  51. கருணாநிதியும் ஜெயலலிதாவும் தனித்து நிற்க ஒரு காரணம் அவர்களிடம் இருந்தது அல்லது இருப்பதாக நம்பவைக்கபட்டது

    அது அவர்களின் ஆளுமைதிறன், அதாவது அதற்காக அமெரிக்காவினை மிரட்டி ரஷ்யாவினை அடக்கி என நினைத்துவிட கூடாது மாறாக கட்சி அடிமைகளை கட்டுபடுத்தும் ஒரு சாட்டை அவர்களிடம் இருந்தது

    இருவரின் கட்சியுமே ஊழல் கட்சிதான் சந்தேகமில்லை, ஆனால் அமைச்சர்கள் மேல் அல்லது கட்சிக்காரன் மேல் ஏதும் சர்ச்சை என்றால் உடனே சாட்டையினை சுழற்றுவார்கள் கருணாநிதி சிரித்து கொண்டே ஒதுக்கி வைப்பார், ஜெயாவோ தலைகீழக வவ்வால் போல தொங்கவிடுவார் அப்பொழுது பாக்கெட்டில் இருந்து விழுவதையெல்லாம் சசிகலா பத்திரமாக எடுத்து வைத்து கொள்வார்

    அப்படி அமைச்சர்களை கட்சியினரை கட்டுபடுத்தும் வித்தை அவர்களுக்கு இருந்தது, அமைச்சரோ கட்சிக்காரனோ செய்யும் செயல்கள் அவர்கள்மேல் விழும் சர்ச்சைகள் தங்களை பாதிக்கும் என அவசரமாக முடிவுகளை எடுத்தனர்

    ஆனால் மு.க ஸ்டாலின் அந்த ஆளுமையில் இல்லை, கட்சியினரை கட்டுபடுத்தமுடியாமல் அவர் திணறுகின்றார்

    செந்தில் பாலாஜி முதல் ஏகபட்ட அமைச்சர்கள் மேல் புகார்கள் குவிகின்றன, கட்சி எம்பிக்கள் மேல் கொலை முதல் கட்டபஞ்சாயத்துவரை புகார்கள் கரைபுரள்கின்றன‌

    வரலாறு காணா தில்லுமுல்லுகளில் எம்பி, எம்.எல்.ஏ மற்றும் கட்சி செயலாளர்களின் மனைவி மகன் கொழுந்தியார் என எல்லோரும் உள்ளாட்சி அமைப்புகளில் புகுந்து இனி குடும்ப சேவை செய்வார்கள் எனும் அளவு நிலமை மோசமாயிற்று

    நிச்சயம் தமிழகம் முக ஸ்டாலினை முழுக்க நம்பி ஆட்சியினை கொடுக்கவில்லை, 10 வருடம் அலுத்து போன அதிமுக ஆட்சியினை அகற்ற வேறுவழி அவர்களுக்கும் தெரியவில்லை

    அது ஏதோ தனக்கு முடிசூட்டிய அங்கீகாரம் என அவர் நினைத்தால் அது சரியல்ல‌

    மிகபெரிய ஊழல் வெள்ளம் கிளம்பியிருப்பதை அறிய முடிகின்றது, என்னதான் முன்களபணியாளர் என திசைதிருப்பிவிட்டாலும், எரிவதை மறைத்தாலும் புகையினை யார் கட்டுபடுத்தமுடியும்?

    முக ஸ்டாலின் திணறுகின்றார், மருமகன் முதல் கட்சி அமைச்சர் வரை பிரமுகர்கள் வரை அவரால் தொடமுடியவில்லை திகைகின்றார்

    தன் ஆளுமையினை வேகமாக இழந்துவருகின்றார் கட்சி தலைவரும் முதல்வருமான ஸ்டாலினார், ஆட்சிக்கு வந்த சிலமாதங்களிலே அவர் சந்திக்கும் வீழ்ச்சி எதையோ சூசகமாக் காட்டி நிற்கின்றது

  52. துபாயும், ஜம்மு காஷ்மீரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (Memorandum of Understanding MoU) கையெழுத்திட, பன்றிஸ்தான் கதறல், “காஷ்மீர் கையை விட்டு போய் விட்டது” என!

    மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் என பல திட்டங்களில் முதலீடு செய்ய துபாய் அரசு ஜம்மு காஷ்மீர் அரசுடன் MoU கையெழுத்திட்டுள்ளது.

    சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்ற பிரதமரின் திட்டப்படி, ஜம்மு காஷ்மீரில் அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை முடுக்கி விட்டுள்ளது மோதி அரசு. (கிட்டத்தட்ட ரூ 80 ஆயிரம் கோடி பட்ஜெட்). அது தவிர, அடுத்த வருடம் மாநில தேர்தல்களை நடத்தவும் திட்டம்.

    ஜம்மு – காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதை கண்டு பொறுக்காத அப்துல்லா – மெஹபூபா – சூனியா – பன்றிஸ்தான் கூட்டம் அங்கே வெளிமாநில இந்துக்களை குறி வைத்து தாக்கி கொன்றது. அந்த கொலைகாரர்களை அழித்தது இந்தியப் படை.

    இப்போது, ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைதிமார்க்க துபாயின் முதலீடு வந்தால், அதை அமைதிமார்க்க பன்றிஸ்தான் தடுப்பது கடினம் .

    பன்றிஸ்தான் அப்துல் பாஸித் தன் யூடியூப் சேனலில், “அமைதிமார்க்க நாடுகள் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்து, அங்கே தங்கள் தூதரகங்களை திறந்தால், அந்தப் பகுதியை பற்றி இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் எவரும் பேசக் கூட முடியாது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்பதை ஒப்புக் கொண்டதாகி விடும். பன்றிஸ்தானின் இத்தனை ஆண்டு ‘முயற்சி’ வீணாகிவிடும். அதை தடுக்கும் நிலையில் பன்றிஸ்தான் இன்று இல்லை” என கதறல்.

    —> அமைதிமார்க்கத்தவருக்கு என்று நேரு உதவியுடன் திருடப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதியை மோதி ஜி தலைமையில் பாரதம் மீட்டெடுக்குமென்று கனவில் கூட கண்டிருக்க மாட்டார்கள் பன்றிஸ்தானிகள்.

    ஜெய் மோதி சர்க்கார்.

    India, Dubai sign pact to build infrastructure; former Pak high commissioner hails it as major success

    https://www.indiatoday.in/india/story/india-dubai-sign-pact-build-infrastructure-former-pak-high-commissioner-hails-major-success-1867284-2021-10-21

  53. ஒரு ஐபிஎஸ் அதிகாரி அரசியல்வாதியான எப்படி இருக்கும் என்பதற்க்கு அண்ணாமலை சிறந்த உதாரணம் 10 வருடத்திற்க்கு பிறகு ஆட்சி !
    அதுவும் தனிமெஜாரிட்டியுடன்…

    ஜெயலலிதா இல்லாத எதிா்க்கட்சி..
    சட்டசபையில் மட்டுமின்றி…
    பொதுஇடங்களிலும் புகழ்ந்த ஒபிஎஸ் முதலான அதிமுக தலைவா்கள்..

    கூட்டணிகட்சியினரின் பிடுங்கல் இல்லாத நிலை…

    எங்கு தேடினாலும் எதிரி இல்லாத நிலை என்ற நிலையில்…..

    குருட்டு தைரியத்தில்,
    முதன்முதலில் நிதி அமைச்சா் மூலம் பாஜகவை ஒன்றிய அரசு என உரசி பாா்த்தால்…….
    பற்றவில்லை !

    அந்த தைரியத்தில் பாஜக மாநில தலைவரை ஏய் என ஒருமையில் பேசிய தயா….

    இனி மரியாதை இன்றி பேசினால் தயாவின் வருமானத்தில் கை வைப்போம் என முதல்அடி சம்மட்டி அடி அடித்தபின் சன்டிவியில் காணவில்லை தயாநிதி மாறன் என போட்டு தான் தேடவேண்டிய நிலையில் தயா !

    மத்தியரசின் ஊரடங்கு வழிகாட்டுதலை காரணம் காட்டி மனசாட்சியையும்-கடவுள் நம்பிக்கையையும் மூட்டை கட்டி ஸ்டாலின் காலில் வைத்துவிட்டு கோவில்களை இழுத்து பூட்டிவிட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சேகா்பாபுவிற்கு, கோவில் பூட்டு அகற்றும் போராட்டம் மூலம் கொடுத்த அடுத்த சம்மட்டி அடி..

    அடுத்து..
    திருட நினைக்கிறப்பவே கையும் களவுமாக மாட்டிக்கொண்டு விழிபிதுங்கிய செந்தில்…
    அரசு ஊழியா்களை தன் வீட்டில் பணியமைா்த்திய சமூகநலத்துறை அமைச்சருக்கு கண்ணில் விட்ட விரல்….

    திமுக மீது ஆதாரம் இல்லாமல் குற்றசாட்டு வைத்தால் நடவடிக்கை என மீண்டும் தானாக வந்து தலையை கொடுத்த சேகா்பாபு….

    17 மாநிலத்தில் ஆட்சிபுரியும் பாஜக…
    8 வருடமாக எந்த வித ஊழல்-குற்றசாட்டு இல்லாமல் உலக நாடுகளே வியக்கும் வண்ணம் ஆட்சி நடத்தும் மோடிஜியை கொண்ட கட்சி பாஜகவை மிரட்டி பாா்த்தால்………….

    பாஜகவை திமுக மிரட்டினால்….

    #வட்டியும்_முதலுமாக_சோ்த்து_திருப்பி_கொடுக்கப்படும் என்ற வாா்த்தை திமுகவை ஆட்டிபாா்த்ததோ இல்லையோ….

    பாஜகவை உசுப்பி பாா்த்துவிட்டது….

    இப்படி தானே ஒரு தலைவனை எதிா்ப்பாா்த்தோம் என பெருமை கொள்ள வைத்தது……

    திமுகவும்-உபிக்களும்….
    இனி புது பாஜக வை பாா்ப்பீா்கள் !!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *