கம்பராமாயணத்தில்  சிவபெருமான் 

கட்டுரையாசிரியர்கள்:
கம்பபாத சேகரன்  (சங்கரன்)  & மீனாட்சி பாலகணேஷ்

உலகக் காப்பிய வானில் கதிரவனாய் ஒளிரும் கம்பன் தனது காப்பியத்தில் உணர்ச்சிச்சுவை, பாத்திரச்சுவை, பத்திச்சுவை, நாடகச்சுவை, அவலச்சுவை என பல சுவைகளைப் படைத்துள்ளான். அவற்றில் இலக்கியச் சுவையில் சிவபிரானைப் பற்றிய சில பகுதிகளைக் கண்டு களிப்பதே இக்கட்டுரையாகும்.

இக்கட்டுரையின் முக்கிய ஆசிரியரான எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு. கம்பபாத சேகரன் ஒரு எளிமையான மனிதர். கணினி கூட வைத்துக் கொள்ளாதவர். நாங்கள் இணைந்து எழுதிய  இக்கட்டுரையை அவர் சார்பாகவும் நானே கணினியில் ஏற்றி அனுப்புகிறேன். 

மிதிலைக் காட்சிப்படலத்தில் சூரிய உதயத்தைக் கூறவந்த கம்பன் சூரியனை சிவனாகக் காண்கிறான். மறைகளும் கின்னரர்களும் இசை பாடிட, உலகத்தவர்கள் தொழுது ஏத்த, விண்ணவர், முனிவர், வேதியர் கைகூப்பித் தொழ மார்ச்சனை எனும் மாவு பூசப்பட்ட முழவாகக் கடல் முழங்கிட, வான் வீதியிலே பொற்சடை விரித்து ஆடுகின்ற சிவபெருமானைப்போல சூரியன் தனது செங்கதிரைப் பரப்பி வந்தான் என்பதாம். இது தற்குறிப்பேற்ற அணி.

எண்ணரிய மறையினொடு கின்னரர்கள்
		இசைபாட, உலகம் ஏத்த,
	விண்ணவரும் முனிவர்களும் வேதியரும்
		கரம்குவிப்ப, வேலை என்னும்
	மண்ணும் அணிமுழவு அதிர வான் அரங்கின்
		நடம்புரி வாள்,இரவி ஆன
	கண்ணுதல் வானவன் கனகச்சடை விரித்தால்
		எனவிரிந்த கதிர்கள் எல்லாம். (கம்பன் 716)

என்பது அந்தப்பாடல்.

அடுத்து நாம் காண்பது இராமபிரான் சீதாபிராட்டியுடன் கங்கையில் நீராடும் நிகழ்வு; இப்பாடல் சிலேடை போன்று இருபொருளில் அமைந்துள்ளது. படிக்கவே மிகச் சுவையானது.

வெங்கண் நாகக் கரத்தினன் வெண்ணிறக்
	கங்கை வார்சடைக் கற்றையன் கற்புடை
	மங்கை காணநின்று ஆடுகின்றான் வகிர்த்
	திங்கள் சூடிய செல்வனில் தோன்றினான்  (கம்பன் 2033)

இப்பாடலை சிவனுக்காகப் பொருள் கொள்ளும்போது, சினம் கொண்ட அரவினைக் கையில் கொண்டவன், தூய்மையான கங்கையை சடையில் தாங்கிக் கொண்டவன், உமையம்மை காணக் கூத்தாடுகின்றவன், பிறைத்திங்களைச் சூடியவன் என்பதாகப் பொருள் கொள்ளலாம்.

இராமனுக்காகப் பொருள் கொள்ளும்போது சினம்கொண்ட யானையின் துதிக்கை போன்ற கைகளை உடையவன், நீராடுவதால் தூய்மையான கங்கை (நீர்) அவனது சடைமுடியில் விளங்குகின்றவன், கற்புடைய சீதாபிராட்டி காண நீராடுகிறான். இது சிவபிரானைப் போன்று உளது என்பதாம்

கம்பனுக்கு மலையைக் கண்டவுடன் சிவபிரானின் திருவடியே நினைவுக்கு வருகிறது. அதனை இரு இடத்துக் கூறுவான். இராமன் சீதைக்கு சித்திரகூடத்துச் சிறப்பினைக் கூறுகிறான்; பலவிதமான இயற்கைக் காட்சிகளையும் வருணித்து விவரிக்கிறான். ‘மலைமுகட்டில் திங்களும் அதனால் ஒளிரும் மணிகள் சடையாகவும் மலையிலிருந்து விழும் வெண்ணிற அருவியானது இளமையான இடபத்தில் (நந்திதேவர் மீது) ஏறிவரும் சிவபிரானின் முடியில் உள்ள கங்கையை ஒத்திருப்பதனைக் காணாய்!’ என்பதாக இராமன் கூறுவதாகக் கம்பன் கூறுவான்.

நீண்ட மால்வரை மதியுற நெடுமுடி நிவந்த
	தூண்டு மாமணிச் சுடர்சடைக் கற்றையில் தோன்ற
	மாண்ட வால்நிற அருவிஅம் மழவிடைப் பாகன்
	காண்தகும் சடைக் கங்கையை நிகர்ப்பன காணாய். (கம்பன் 2141)
என்பதாம்.

அடுத்து வானரர்கள் சீதையைத்தேடி விந்திய மலைப்பக்கம் வருகிறர்கள். அப்போது அம்மலையின் தோற்றம் சிவபிரானின் திருமுடி போலுள்ளது என்பான் கம்பன். மலைப்பகுதியில் அந்தியின் ஒளியால் அங்குள மணிகள் எல்லாம் ஒளிர்வதாலும், பாம்பும் மதியும் ஆறும் உளதாலும் அவ்விந்தமலை சிவபிரானின் திருமுடி போன்றுளது என்றான்.

சிந்து ராகத்தொடும் திரள்மணிச்  சுடர் செறிந்து
	அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினொடு
	இந்து யாறு எய்தலான் இறைவன் மாமௌலிநேர்
	விந்த நாகத்தின் மாடு எய்தினார் வெய்தினால் (கம்பன் 4629)
என்பது அந்தப்பாடல்.

இராமபிரானின் கணைகளின் உயர்வைக் கூறுமிடத்து அவை மூன்று கண்ணும் ஐந்து முகமும் கொண்டு சிவபிரானின் தோற்றம்கொண்டு விளங்குகின்றன என்கிறான், மேலும் அவை நெருப்பாக இருத்தலாலும், வான்கங்கை ஆடுதலாலும், விண்ணைத் தொட்டு நிமிர்தலாலும், புரம்சுடும் என மேல்நோக்கி எழுவதாலும் சிவபிரானின் தோற்றத்தை மட்டுமின்றி குணநலன்களையும் காட்டி நின்றன என்கிறான்.

மூன்றுகண் அமைந்தன ஐம்முகத்தன
	ஆன்ற மெய்தழலன புனலும் ஆடின
	வான்தொட நிமிர்வன வாளிமா மழை
	தோன்றின புரம்சுடும் ஒருவன் தோற்றத்த. (கம்பன் 9619)
என்பது அப்பாடல். 

அனுமன் மருந்துமலையைக் கொண்டுவரச் செல்லும்போது திருக்கயிலையைக் கண்டு தொழுகிறான். அந்தக் கயிலைக்காட்சியை ஆயிரம் சூரிய ஒளியுடன் ஐந்து முகங்களும் கமலம்போல் ஒளிர, மூவுலகத்தாரும் அருச்சித்த மலர்களால் சூழப்பட்டு உமாதேவியை பாகத்தில் கொண்ட எண்தோள் ஈசனாம் சிவபிரானை அனுமன் வணக்கம் செய்தான் என்பான்.

ஆயதன் வடகீழ்ப் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற
	காய்கதிர் பரப்பி ஐந்து கதிர்முகக் கமலம் காட்டி
	தூயபேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த
	சேயிழை பாகத்து எண்தோள் ஒருவனை வணக்கம் செய்தான்
								(கம்பன் 8753)

இன்னும் இராமகாதையில் சிவனோடு தொடர்புடைய 528 பாடல்கள் உள்ளன. போருக்கு எழும் இடங்களில் உருத்திரனைக் கூறுவான். நஞ்சுண்ட நிகழ்வையும் மார்க்கண்டேயருக்கு அருளியதையும் பிரம்மன் தலை கொய்ததும் சான்றாகக் காட்டுவதும் கம்பனில் காணலாம்.
Series Navigation<< கம்பன் காட்டும் இலக்கியச்சுவைசேக்கிழாரின் செழுந்தமிழ் >>

One Reply to “கம்பராமாயணத்தில்  சிவபெருமான் ”

  1. இந்தியாவில் எப்படி தாமரை மலர்ந்தது!

    பாஜக ஆட்சிக்கு வந்ததில் குஜராத்தின் பங்களிப்பு பெரியது.

    குஜராத்தை ஹிந்துத்துவாவின் ஆய்வுக்கூடம் என்று சொல்வார்கள் மீடியாக்கள்.

    பாஜக பாரத தேசத்தில் முதன்முதலாக ஆட்சிக்கு வந்த மாநிலம் குஜராத்,

    பாஜகவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த காலகட்டம் அது, நான் குஜராத்தில் உள்ள மெஹ்சானாவைச் சேர்ந்தவன்.

    குஜராத்தில் பாஜக எப்படி ஆட்சிக்கு வந்தது என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

    குஜராத்தில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில், பிரபல மாஃபியா கும்பலின் தலைவன் *அப்துல் லத்தீஃப்* பெரும் பங்கு வகித்தான், ஆச்சரியமாக இருக்கிறதா ஆம் மேலே படியுங்கள்.

    அப்துல் லத்தீப் இல்லை என்றால், பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்காது?

    அப்துல் லத்தீஃப் மிகவும் மோசமான ரவுடி,
    68 போலீஸ்காரர்கள் உட்பட 150 க்கும் மேல் அரசாங்க கணக்குப்படி கொன்று குவித்த அரக்கன் அவன்.

    பல கொலைகள், ஆள் கடத்தல், கள்ளக் கடத்தல், மதுவிலக்கு உள்ள குஜராத்தில் சாராயத்தை ஆறாக ஓட விட்டது,
    இதில் சாராயம் விற்பதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக *ராதிகா ஜிம்கானா கிளப்* என்கிற ஒரு ஓய்வு விடுதி, மீது லத்தீஃப் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரே நேரத்தில் 35 பேரைக் ஜஹாங்கீர் என்கிற ஆயுத வியாபாரி துணையுடன் கொலை செய்தான்.

    ராதிகா ஜிம்கானா கொலை மூலம் வெளியுலகுக்கு தெரிய வந்தான், மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் இது போன்ற பல சமூக விரோதச் செயலில் இவன் முக்கிய பங்காற்றினான்.

    மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ஆசீர்வாதம் இவனுக்கு இருந்தது,

    லத்தீப் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளில் உள்ள பெரும் தலைவர்களின் துணையுடன் வளமாக வாழ்ந்து வந்தான்,

    லத்தீப், குஜராத்தை காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த அந்தக் காலத்தில் அப்போதைய முதல்வர் சிமன்பாய் படேலின் அறைக்கு எந்தவித அனுமதியும் இல்லாமல் சென்று வரும் அளவுக்கு செல்வாக்கு வைத்திருந்தான்.

    தங்கம், வெள்ளி, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் பலகோடி ரூபாய் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அனைவரையும் விலைக்கு வாங்கியிருந்தான், மேலும் அவனுக்கு கட்டுப்படாதவர்களை கொலை செய்து சுற்றியுள்ளவர்களை பயத்தில் அழுத்தினாள்.

    லத்தீப் அல்லது அவன் கும்பலைச் சேர்ந்தவர்கள் யாராவது ஒரு இந்து பெண்ணை விரும்பினால், அன்றைய இரவு அந்தப் பெண்ணின் வாழ்க்கை முடிந்தது என்று அர்த்தம், திரும்பிய பக்கமெல்லாம் அராஜகம் நடந்தது.

    குஜராத்தில் உள்ள இந்துக்கள் யாராவது ஒரு ஆபத்பாந்தவன் வருவானா என்று தினமும் இறைவனை பிரார்த்தித்து கொண்டிருந்தார்கள்,

    அன்றைய காலகட்டத்தில்
    நரேந்திர மோடி, ஷங்கர் சிங் வகேலா, கேசுபாய் படேல் ஆகியோர் சைக்கிள், ஸ்கூட்டரில், ஊர் ஊராக சென்று பாரதிய ஜனதாவை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

    ஒரு நாள் குஜராத் கோம்திபூரில் பா.ஜ.க கூட்டம் நடந்த போது கேசுபாய் படேல் சொன்னார், ​​

    பாரதிய ஜனதா அரசு எப்போது ஆட்சிக்கு வருகிறதோ, அரக்கன் அப்துல் லத்தீப் அன்றைய தினமே என்கவுன்டர் செய்யப்படுவான் என்று ஆக்ரோசமாக உறுதி அளித்தார்.

    அப்துல் லத்தீப்பின் கோட்டையில் அவனை எதிர்த்து இவ்வளவு தைரியமாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள் என்ற செய்தி குஜராத் மக்களுக்குள் வேகமாக பரவியது,

    கேசுபாய் படேலின் இந்தப் உரைக்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் ​​குஜராத்தில் பா.ஜ.க. 35 இடங்களை பெற்று மகத்தான முதல் வெற்றியைப் பெற்றது,

    முதல் வேலையாக பாரதிய ஜனதா ஜெயித்த இடத்தில் அப்துல் லத்தீப் மற்றும் அவரது அடியாட்களுக்கு எதிராக பிஜேபி ஒரு குழுவை உருவாக்கியது, அதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள் மேலும் அவர்களுடைய செயல்களை வெளியுலகிற்கு கொண்டு வந்தார்கள்.

    அதன் பலனாக அடுத்த தேர்தலில், பிஜேபி முழு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் அமைக்கப்பட்டது,

    கேசுபாய் படேலின், அளித்த வாக்குறுதியின்படி முதல்வராக அமர்ந்த ஷங்கர் சிங் வகேலா அப்துல் லத்தீப்பின் என்கவுண்டரைச் செய்தார்.

    அப்துல் லத்தீஃப் என்கவுன்டரும் சுவாரசியமாக நடந்தது..

    டிஎஸ்பி ஜடேஜா என்பவர் சாஹிப் ஷங்கர் சிங் வகேலாவின் முன் வந்து, ஐயா லத்தீப்பை என்கவுன்டர் செய்ய எனக்கு அனுமதி வேண்டும்,

    ஏனென்றால் எங்களுடைய இன்ஸ்பெக்டர் தனது கர்ப்பிணி மனைவியைப் பார்க்க விடுமுறையில் செல்லும்போது அவரை கொலை செய்தார்கள், அதற்குப் பழிவாங்க இதற்கு மேல் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது ஆகவே எனக்கு அந்த வாய்ப்பு வழங்குங்கள் என்று கேட்டு வாங்கிச் சென்றார்.

    யாரும் எதிர்பாராத விதமாக அப்துல் லத்தீப் கைது செய்யப்பட்டு நவரங்புராவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட முடிவு செய்திருந்தார்கள்.

    அடுத்த நாள் காலை உணவை சாப்பிடுவதற்காக லத்தீஃப் கைவிலங்குகளை கழற்றி விட்டுள்ளார்கள், அப்போது காவலுக்கு வந்தவர்களின் துப்பாக்கியை பிடுங்கி சுட்டு விட்டு தப்பி ஓட முயன்றதாக போலீசாரால் சுட்டு
    கொல்லப்பட்டான்,

    அவன் மரணத்தை குஜராத்தி மக்கள் திருவிழாபோல் கொண்டாடினார்கள்.

    அதன் பிறகு சங்கர்சிங் வகேலா மற்றொரு நல்ல வேலையைச் செய்தார்.

    குஜராத்தின் இந்துக்களை முஸ்லிம்கள் அடக்கியாளும் பல பகுதிகள் குறிக்கப்பட்டன,

    இந்துக்களை அவர்கள் வசிக்கும் பகுதியை விட்டு துரத்தி கொண்டிருந்தார்கள் அந்த நிலை மாறியது, கூட்டமாக சேர்ந்து இந்துக்களை தாக்கினார்கள் அதுவும் மறைந்து போனது.

    அதன் பிறகு குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், கர்நாடகா, பாண்டிச்சேரி, வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் இன்று பாஜக வெற்றிவாகை சூடியுள்ளது.

    இப்பொழுது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு மீண்டும் சட்டமன்றத்தில் நுழைந்துள்ளது அடுத்தது பாரதிய ஜனதா ஆட்சி அமைய வேண்டும், அப்பொழுது தான் இந்த நாடும் பலமடையும். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நடைபெறாது என பல நல்ல பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது அதை யாரும் மறுப்பதற்கில்லை.

    நாட்டில் உள்ள பெரும்பான்மை யானவர்கள் ஆதரவுடன் மத்தியில் 303 இடங்களுடன் பாரதிய ஜனதா இன்று ஆட்சியில் உள்ளது.

    ஒரு இந்து தூங்கும் மற்ற இந்துக்களை எழுப்பும்போது தான் இந்த குஜராத் சூழல் உருவாகிறது, ஒருவகையில் இங்கே நாமும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    லத்தீஃப் என்கவுண்டர் செய்யப்பட்டதை கேசுபாய் அறிவித்தபோது, ​​குஜராத்திகள் எந்தக் கேள்வியும் பதிலும் இல்லாமல் பாஜகவுக்கு முழு ஆதரவை வழங்கினர்.

    நாடு முழுவதும் உள்ள குஜராத் முடிவுகளை இந்துக்கள் விரும்பினால், குஜராத்திகள் செய்ததை அனைவரும் செய்ய வேண்டும்.

    அதனால் பிஜேபியையும், மோடியையும் கேள்வி கேட்காமல் ஆதரியுங்கள், அப்போதுதான் நாடு முழுக்க நிறைந்துள்ள லத்திஃபாக்களை ஒழிக்க முடியும்.

    மோடிஜியையும் பிஜேபியையும் சின்ன விஷயங்களில் எதிர்க்காமல் அவர்களுக்கு உங்கள் முழு ஆதரவையும் கொடுங்கள்,

    அப்பொழுது தான் அவர்கள் தங்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியும்.

    வெற்றி வேல் வீர வேல்

    வெற்றி வேல் வீர வேல்

    வெற்றி வேல் வீர வேல்

    ஜெய் ஹிந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *