ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 2

வேத சாஸ்திரங்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கையின்படி திராவிடர் யார்?

சில சமயங்களில், இந்தியாவில் ஆரியத்திற்கு எதிரான சொல் திராவிடம் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. உண்மையில், திராவிடம் என்பது தென்னிந்திய தேசத்தையும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அவர்கள் புவியியல் ரீதியாக விந்திய மலைகளின் தெற்கில் வாழ்கிறார்கள். மூன்று பக்கமும் திரவத்தால் (கடல்) சூழ்ந்த இடமாகையால் திராவிடம் என்ற பெயர் உருவானது. விந்திய மலைக்கு தெற்கெ உள்ள நிலப்பகுதி பஞ்ச திராவிடம் என்று அழைக்கப்படுகிறது. அவையாவன : – கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு(கேரளாவும் சேர்த்து) , குஜாராத், மஹாராஷ்டிரம் ஆகும். இந்த மாநிலங்களில் உள்ள பல கோடி மக்கள் ஆரிய நாகரீகத்தை பின்பற்றுவதை நாம் காண்கிறோம். மேலும் இங்குள்ள தெய்வங்களை தரிசனம் செய்ய புகழ்பெற்ற கோவில்களில் எப்போதும் பெரிய வரிசையில் மக்கள் கூட்டம் அலை மோதுவதை காண்கின்றோம்.

புகைப்பட ஆதாரம் – mapsofindia.com

ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 11 அத்தியாயம் 5 ஸ்லோகம் 38-40 ஆனது திராவிட தேசத்தைப் பற்றியும் பக்தி இயக்கத்தைப் முன்னெடுக்க அங்கு பிறக்கப் போகும் பக்தர்களைப் பற்றியும் முன் கூட்டியே தெரிவிக்கிறது. சுகதேவ கோஸ்வாமி பரீக்சித் மகாராஜாவிடம் பேசும் போது பின்வருமாறு கூறினார் : “ என் அன்பான அரசரே, சத்ய யுகம் மற்றும் பிற யுகங்களில் வசிப்பவர்கள் இந்த கலி யுகத்தில் பிறக்க ஆவலுடன் விரும்புகிறார்கள், ஏனெனில் இந்த யுகத்தில் பரம பகவான் நாராயணரின் பக்தர்கள் பலர் இருப்பார்கள். இந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் தோன்றினாலும் குறிப்பாக திராவிட தேசத்தில் (தென்னிந்தியாவில்) அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். ஓ மானிடருள் முதன்மையானவரே, இந்த பக்தர்கள், கலி யுகத்தில் தாம்ரபரணி (தமிழ்நாட்டின் தாமிரபரணி நதி), கிருதமாலா (தமிழ்நாட்டின் வைகை நதி), பயஸ்வினி (சந்திரகிரி நதி), மிகவும் பக்தியுள்ள காவேரி மற்றும் பிரதிசி மகாநதி போன்ற திராவிட தேசத்தின் புனித நதிகளின் நீரைப் பருகுபவர்களாக இருப்பார்கள். அனைவரும் பரம புருஷரான வாசுதேவரின் முற்றிலும் தூய உள்ளமுள்ள பக்தர்களாக இருப்பார்கள்.”

இதேபோல், திராவிட தேசத்தில் உள்ள மக்கள், வேத சாஸ்திரங்களில் குறிப்பிடும் பல்வேறு தர்மங்களைப் பின்பற்றுவதற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. எனவே, ஒருவர் திராவிட தேசத்தில் வாழ்ந்தாலும், அதே சமயம் ஆரிய நாகரிகக் கொள்கையான சனாதன தர்மத்தைப் பின்பற்றுவதால், அவர் ஆரிய திராவிடராகவோஅல்லது திராவிட ஆரியராகவோ இருக்க முடியும். ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் திராவிட தேசத்தில் வாழ்ந்த அகஸ்திய முனிவர் ஆவார். ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 8 அத்தியாயம் 4 ஸ்லோகம் 8-12, அகஸ்திய முனிவர் சபித்ததால் இந்திரத்யும்னா என்ற அரசன் தனது அடுத்த ஜென்மத்தில் யானையாக பிறந்த நிகழ்வுகளை விவரிக்கிறது.

வேத சாஸ்திரங்களின்படி ஆரிய நாகரீகம் என்றால் என்ன?

கங்கை, சரஸ்வதி, யமுனை மற்றும் பிற புனித நதிகளின் கரையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிந்து சமவெளி நாகரிகம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் பண்டைய நாகரிகம் செழித்து வளர்ந்தது. வேதங்களின் பல ஸ்தோத்திரங்களில் சரஸ்வதி நதி போற்றப்படுகிறது. சரஸ்வதி ஞானத்தின் தெய்வம் மற்றும் வேதங்களின் மாதா என்றும் கூறப்படுகிறது.

ஆரிய நாகரீகம் என்பது மிகவும் வளர்ச்சியடைந்த நாகரீகம் ஆகும். அங்குள்ள மக்கள் ஆன்மீக அறிவில் முன்னேறி, திரேதா, துவாபர மற்றும் கலியுகங்களின் வரை லட்சக்கணக்கான ஆண்டுகளாக வர்ணாஸ்ரம தர்மத்தின் அடிப்படையில் ஒரு விதிவிலக்கான மற்றும் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பின்பற்றுகிறார்கள்.

சத்ய யுகத்தின் தொடக்கத்தில், இந்திய சமுதாயக் கட்டமைப்பில் ஹம்சா என்ற ஒரே ஒரு வர்ணம் (சமூக பிரிவு) இருந்தது. பின்னர், திரேதா யுகத்தின் தொடக்கத்தில் வர்ணாஸ்ரம தர்மம் உருவாக்கப்பட்டது. வர்ணமும் (சமூக பிரிவு) ஆஸ்ரமமும்(ஆன்மீக பிரிவு) வேத நாகரீகத்தின் சமூக மற்றும் ஆன்மீக பிரிவுகளும் முழு சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டன. மூன்றுவித இயற்கை குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப, மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகள் பகவான் கிருஷ்ணரால் ஏற்படுத்தப்பட்டன. வர்ணம் மற்றும் ஆஸ்ரமம் என்ற பிரிவுகள் ஒவ்வொருவருக்கும் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதற்கும் அமைதியான வாழ்வை உறுதி செய்வதற்குமாக உருவாக்கப்பட்டன. ஆனால், முக்கியமாக, அனைவரும் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும் பரமபுருஷ பகவான் ஆகிய ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குவதற்கு வழிநடத்தப்படுகிறார்கள்.

பிரம்மதேவர் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியபோது, ​​அவர் முனிவர்களையும் பிரஜாபதிகளையும் உருவாக்கி, ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்ட வேத ஞானத்தை அவர்களுக்கு வழங்கினார். முனிவர்கள் பின்னர் வேதங்களை விரிவுபடுத்தி, அரசர்கள்,மந்திரிகள் மற்றும் பொது மக்கள் பின்பற்றுவதற்காக தர்ம சாஸ்திரங்கள் மற்றும் நீதி சாஸ்திரங்கள் உட்பட பல ஸ்மிருதி சாஸ்திரங்களை தொகுத்தனர்.

ஒவ்வொரு நாகரீகமான மனித சமுதாயத்திலும், ஆரம்பத்திலிருந்தே பின்பற்றப்படும் சில சாஸ்திர விதிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக ஆரியர்கள், வேத நாகரிகத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மற்றும் மிகவும் மேம்பட்ட நாகரிக மக்கள் என்று அறியப்பட்டவர்கள். வேத சாஸ்திரங்களைப் பின்பற்றாதவர்கள் அசுர குணம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

வேத ஆரியர்களின் வாழ்வில் குதிரை முக்கிய பங்கு வகிக்கிறது. வேத ஆரியர்களின் வாழ்வில், பசு மற்ற எல்லா விலங்குகளையும் விட மதிக்கப்படுவதுடன், சிறப்பு வழிபாட்டுடன் வணங்கப்படுகிறது. வேத நாகரிகத்தில், பெண்கள் ஆண்களுக்கு தர்மத்தை கடைப்பிடிப்பதில் ஒத்துழைப்பு கொடுத்து, இதன் மூலம் இருவரும் தங்களை பக்திப் பாதையில் முன்னேறுவதற்கு வழி வகை செய்கிறது.

இது சம்பந்தமாக பல தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்டன. மேலும், சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள் மொஹஞ்சதாரோ, ஹரப்பா மற்றும் பிற இடங்களின் அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் ஆரிய நாகரிகத்தின் ஆழமான பாராட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வுகள் தொடர்பாக அறிஞர்கள் கூறிய சில கருத்துக்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

  • மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் உள்ள நாகரீகம் ஏற்கனவே பழமையானது,மற்றும் இந்திய மண்ணில் செழித்து வளர்ந்துள்ளது. அதன் பின்னால் பல ஆயிரம் ஆண்டுகால மனித முயற்சிகள் உள்ளன. எனவே, சமூகத்தின் நாகரீக செயல்முறைகள் ஆரம்பிக்கப்பட்டு, மற்றும் வளர்ந்த மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாக இந்தியா அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • தொலைந்த நகரங்களை வெளிக்கொணர்ந்தது, சிந்துவின் அகழ்வாராய்ச்சியின் ஒரு அற்புதமான தொல்லியல் கண்டுபிடிப்பு. அவர்கள் நகர திட்டமிடலில் ஒரு அசாதாரண துல்லியம் மற்றும் கண்கவர் வீட்டு வசதிகளை வெளிப்படுத்தினர். கிரேட் பாத் மற்றும் லோதலில் உள்ள நீர்த்தேக்கம் போன்ற அற்புதமான கட்டமைப்புகளுக்கு, கணிதம், குறிப்பாக வடிவவியலில் மேம்பட்ட அறிவு தேவைப்பட்டிருக்கும்.
  • மொஹெஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவை ஒரு கட்டடத் திட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட நேர்கோட்டு கட்டிடங்களுடன் சிறப்பான அமைப்பைக் கொண்டுள்ளன. பெரும்பாலானவை சுடப்பட்ட மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டன. போதுமான சுகாதாரம், குளியலறைகள், கிணறுகள் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய செங்கற்களால் ஆன திடமான, வசதியான வீடுகளைக் கொண்ட மக்கள் அடர்த்தியான நகரங்களில் வசித்து வந்தனர்.
  • மிகவும் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், ஓரே தன்மையுள்ள கலாச்சாரம் பெரிய அளவில் பரவியது மட்டுமில்லாமல் , கலை, கைபிரதிகள், தொழில்நுட்பம் மற்றும் எடைகள் மற்றும் அளவுகள் கூட ஒரே மாதிரியாக இருந்தன. சிந்து நகரங்கள் அரசியல் மற்றும் பொருளாதார மையங்களைக் கொண்டிருந்தன.
  • படிப்படியாக, சிந்து நாகரிகத்தின் பெரிய நகரங்களில், சிக்கலான கலாச்சார வடிவங்களின் வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்படுவதைக் காணலாம். இந்தியாவில் நாகரீகம் வளர்ச்சியடைய வெளியிலிருந்து ஒரு கலாச்சார பரவல் ஒரு முன்நிபந்தனை அல்ல என்பதை மெர்கரின் மிக சமீபத்திய கண்டுபிடிப்புகள் ஆழமாக வெளிப்படுத்தின. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் சொந்த பூர்வீக கடந்த காலத்தின் ஒரு பகுதியாகும்.
  • ரிக்வேத காலத்தில் இந்தோ-ஆரியர்கள் பயன்படுத்திய உலோகங்கள் தங்கம் மற்றும் செம்பு அல்லது வெண்கலம். ஆனால் சிறிது காலத்தின் பின்பு, யஜுர்வேதம் மற்றும் அதர்வவேத காலத்தில், இந்த உலோகங்களுடன் வெள்ளி மற்றும் இரும்பு போன்ற உலோகங்களும் வழக்கத்திற்கு வந்துள்ளன. சிந்து மக்கள் மத்தியில் தங்கத்தை விட வெள்ளி அதிகம் வழக்கத்தில் இருந்துள்ளது. மேலும் பாத்திரங்கள் சில நேரங்களில் கற்காலத்தின் நினைவுச்சின்னமாக, கற்களால் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் செம்பு மற்றும் வெண்கலம் கூட பாவனையில் இருந்துள்ளன.
  • வேதகால ஆரியர்கள் தாக்குதல் ஆயுதங்களுக்கு வில் , அம்பு, ஈட்டி, வாள்,கோடாரி, தற்காப்பு கவசத்திற்கு தலைக்கவசம் மற்றும் உலோகத்திலான மார்புக்கவசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் கதாயுதம், சூலாயுதம் முதலான ஆயுதங்களும் உள்ளன. சில சமயங்களில் கல்லாலும், சில சமயங்களில் உலோகத்தாலும் ஆன ஆயுதங்கள் அவர்களிடம் இருக்கும்.
  • அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த முத்திரைகளில் உள்ள படங்கள், அமர்ந்திருக்கும் யோகி மற்றும் சிவ வழிபாட்டில் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் போன்ற பொருட்களைக் காட்டுகின்றன. சில கட்டிடங்கள் யாகங்கள் செய்வதற்கான குண்டங்கள் மற்றும் வேத பலிபீடங்கள் போன்றவை.
புகைப்பட ஆதாரம் – lokvani.com,harappa.com

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு இடங்களின் காலகட்டம் 2500 கி.மு முதல் 7000 கி.மு வரை இருக்கும் என மதிப்பிடுகின்றனர். இது முதிர்ந்த நாகரிகத்தின் ஆரம்ப நகரங்களை உள்ளடக்கியது. ஆரிய நாகரிகத்தின் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினார்கள். இறைவனை வழிபடுதல், பல்வேறு சடங்குகளில் ஈடுபடுதல், தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுதல், குடும்பத்தைக் கவனித்து தர்மத்தின் வழியில் வாழ்க்கையை நடத்துவது போன்றவை அவர்களின் வாழ்க்கை முறையில் அடங்கும்.

மகா பாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களில் இந்தச் செயல்கள் அனைத்தையும் நாம் காணலாம். நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆரியர் என்று முத்திரை குத்திக்கொண்டு ஒருவரும் ஆரியர் ஆகிவிட முடியாது. ஆனால், ஆரிய நாகரீகத்தின் உண்மையான விதி முறைகளைப் பின்பற்றுபவரே ஆரியராக கொள்ளப்படுவார். ஆன்மிக அறிவைப் பற்றிய ஆழ்ந்த இருளில் ஒருவர் இருந்து கொண்டு, அதே சமயம் தன்னை ஆரியர் என்று பெருமையாகக் கூறுவது, ஆரியர் அல்லாத அனார்யருடைய நிலையையே குறிக்கும். எனவே, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள மக்களை சில மொழியியலாளர்கள் கூறுவது போல் ஆரியர்கள் என்று ஏற்கவோ அல்லது அழைக்கவோ முடியாது. ஏனென்றால் அவர்கள் வாழ்க்கை முறையில் வேத சாஸ்திரங்களைப் பின்பற்றவில்லை.

(தொடரும்)

Series Navigation<< ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 1ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 4 >>

One Reply to “ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *