எங்கே போகிறேன்?

அந்த ஆதீனமே மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.  அனைவரின் முகத்திலும் கவலைகலந்த எதிர்பார்ப்பு.  எதையோ இழக்கப்போவது போலவும், அதேசமயம், முக்கியமான ஒன்று நிகழப்போகிறது என்ற பயம்கலந்த மரியாதையும் அங்கு நிலவியது. 

மிகவும் தணிந்த குரலில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர்.

“சுவாமிகள் எப்போது சித்தியடையப் போகிறார்?  ஒரு மாசமாக அப்படியே கண்ணைமூடி அமர்ந்திருக்கிறாரே!  உடலில் ஒரு அசைவும் இல்லையே!  மூச்சு போய்வருவதாகவும் தெரியவில்லை.  எல்லாம் அடங்கிவிட்டாற்போல இருக்கிறதே!  ஜீவசமாதிதான் செய்யப்போகிறார்களா?’ 

“அவர் உடம்பில் பிராணன் இருக்கா இல்லையான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? அவரை நாம தொட்டுப்பார்க்கவா முடியும்?”  இது இன்னொருவரின் கேள்வி/

“உசிர் இல்லாட்டா உடம்பு அப்படியேவா இருக்கும்?  இத்தனை நேரம் வாடை நம்ம மூக்கைத் துளைக்காதா?”  ‘பிணவாடை’ என்பதைத் தன் வாயால் சொல்லக்கூடாது என்று ‘வாடை’ என்ற பதில் கேள்வியும் பிறந்தது.

“ஆதீன அதிகாரி என்ன சொல்றார்?”

“ஜீவசமாதி பண்ணப் போறதாப் பேச்சு அடிபடறதே?  அப்படிப் பண்ணலாமா?  அதுக்கு கவர்மென்ட் பெர்மிஷன் கொடுக்குமா?”  மேலும் மேலும் கேள்விகள்.

“உமக்கு ஏனய்யா இந்த விசாரம்?”

“இல்லே!  எத்தனை நாள்தான் இப்படி எல்லோரும் குழம்பறது?” பொறுமை போவதைக் குரல் காட்டியது.

“உமக்கு அவசரம்னா நீர் கிளப்பிப் போவதுதானே?”

“சுவாமிகள் எப்படிப்பட்ட மகானுபாவர்?  எஞ்சினீரிங்ல பி.எச்டி வாங்கி, பெரிய கம்பெனி ஆரம்பிச்சுக் கோடிக்கோடியாக் குவிச்சவர். திடும்னு எதுவும் வேண்டாம்னு தலைமுழுகி, லௌகிக சுகம் எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு, தர்மவிசாரத்திலே இறங்கி, வேத அத்யயனம் செஞ்சு, உபநிஷத்து எல்லாத்தையும் கரைச்சுக் குடிச்சு, சந்நியாசம் வாங்கிண்டு, இந்த ஆதீனத்தைத் தொடங்கினார்.  சொத்து எல்லாத்தையும் ஆதீனத்துக்கு எழுதிவச்சுட்டு, பிரவசனம், பூஜை, உபதேசம்னு எல்லோருக்கும் எத்தனை நல்ல காரியம் செஞ்சார்?  ஆதீனகர்த்தானு பேருதானே தவிர, நிர்வாகம் எல்லாம் மத்த அதிகாரிகள்கிட்ட ஒப்படைச்சுட்டாரே!” தான் அங்கேயே இருப்பதற்குக் காரணம் மறைமுகமாக வெளிவந்தது.

“ஓய்!  எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயத்தை ஏன் எங்கிட்டச் சொல்றீர்?” மற்றவருக்குக் கேட்கப் பொறுமையில்லை.  மேலே என்ன நடக்கப்போகிறதோ என்ற ஆர்வம் அவருக்கு.

“அப்படிப்பட்ட மகானுபாவர் மூணு மாசமா யார்கிட்டயும் பேசறதையே நிறுத்திட்டார்.  எப்பப் பார்த்தாலும், கண்ணை மூடித் தியானம்தான், நிஷ்டைதான்!  இப்ப என்ன ஆகும்னு தெரியலை.  மனசு கிடந்து அடிச்சுக்கறது.  ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சுக்காம இங்கேந்து கிளம்பவும் மனசு வரல்லை,” என்று பெருமூச்சு வந்தது.

திடுமென்று மிகவும் பரபரப்பான பேச்சு தொடங்கியது, ஒருவர் காதை மற்றார் கடித்து விவரம் சொல்ல ஆரம்பித்தார்கள். 

அனைவரையும் அமைதியாக இருக்கும்படி யாரோ அறிவித்தார்கள்.

கிசுகிசுப் பேச்சு ஆர்வமிகுதியால் அடங்கியது.  அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவல், எதிர்பார்ப்பு.

“சுவாமிகள் எழுதிவைத்த திருமுகக் குறிப்பு ஆதீன அதிகாரிக்குக் கிடைத்திருக்கிறது.  அதில் அவர் ஒரு மாதமாகியும் தியானத்திலிருந்து எழாதுபோனால் ஜீவசமாதி செய்துவிடும்படி ஆஞ்ஞை கொடுத்திருக்கிறாராம்!”

இதைக் கேட்டதும் அனைவருக்கும் பேச்சே எழவில்லை.  ‘ஆ’ என்ற பேரொலி எழுந்து அடங்கியது.

‘ஜீவ சமாதியா?  உயிருடன் கண்மூடித் தியானத்தில் ஒன்றியிருக்கும் சுவாமிகளைச் சுற்றிச் சுவரெழுப்பி மூடி, அதிஷ்டானம் கட்டப்போகிறார்களா?  இதற்கு அரசு அனுமதி கொடுக்குமா?  அரசை மீறி ஆதீன அதிகாரி செயல்பட்டால், அத்தனை பேரையும் அரசு என்ன செய்யும்? சிறையில் அடைத்துவிட மாட்டார்களா?’ என்றுதான் பெரும்பாலோர் மனதில் கேள்வி எழுந்தது.

இதற்குள் ஒரு கூடை நிறையத் தேங்காய்களை ஒரு சிப்பந்தி எடுத்துக்கொண்டு போனான்.

இரண்டு மூன்று நிமிடங்களில் தேங்காய்கள் உடைபடும் சத்தம் கேட்டது.

பலரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்…

***

…இனம்புரியாத சூழ்நிலை. 

ஓலியும் இல்லை, அமைதியும் இல்லை. வெளிச்சமும் இல்லை, இருட்டும் இல்லை;  உணர்வும் இல்லை, உணர்ச்சிகளும் இல்லை, நுகர்வும் இல்லை, செயலும் இல்லை, சிந்தனையும் இல்லை; மகிழ்வும் இல்லை, கவலையும் இல்லை; அச்சமும் இல்லை, ஆணவமும் இல்லை.

எங்கிருக்கிறேன்?  என்ன செய்கிறேன்? ஒன்றும் புரியவில்லை.  யாரோ பேசுவதுபோலவும் இருக்கிறது, பேசாதது போலவும் இருக்கிறது.  இதென்ன இரண்டான்கெட்ட நிலை?  இதுதான் திரிசங்கு சுவர்க்கமா? இங்கா வந்திருக்கிறேன்?  இதையும் நான் எப்படி நினைக்க இயலும்?  எனக்கு இது எப்படித் தோன்றுகிறது?  எனக்குத்தான் சிந்தனையே இல்லையே?

உன் செயலை நான்தான் முடித்தேன் என்று யாரோ சொல்லுவதுபோல – இல்லையில்லை, அதை உணர்வதுபோலத்தான் இருக்கிறது. என்னிடம் ‘நான்’ என்று சொல்வது யார்?  உணர்வது யார்?  என் செயலை முடித்தது யார்? யார்? யார்?

எல்லாமே நான்தான்.  நீயும் நான்தான்.  நானும் நீதான்.   நீ இதுவரை கண்டது எல்லாமே நான்தான்.  என்னையன்றி எதுவுமே இல்லை.

அப்படியானால்?  என் செயலை முடித்த நீங்கள் யார்? இதையும் நான் என் சுய உணர்வுடன் கேட்டதுபோலத் தெரியவில்லையே?  உணர்வில்லாத, பேசமுடியாத, சிந்தனையில்லாத, வார்த்தகளற்ற, நான் எப்படி இதைக் கேட்கிறேன்?

கேட்பதும் நான்; உன்னைக் கேட்கவைப்பவனும் நான்.  காண்பதும் நான்; காணவைப்பதும் நான்.  உணர்வதும் நான்; உணரவைப்பதும் நான்.  உணர்வுக்கு அப்பாற்பட்டவனும் நான்.

நீங்கள்தான் நான் இதுவரை தேடிய பரமேஸ்வரனா? பரம்பொருளான பரப்பிரம்மமா? 

தேடியதும் நான், தேடவைத்ததும் நான்.

எனக்குப் புரியவில்லையே.

புரிவும் நான்; புரியவைப்பதும் நான். 

குழப்பமாக உள்ளதே!

குழப்பமும் நான், குழம்பவைப்பதும் நான்.  தெளிவும் நான், தெளியவைப்பதும் நான்.

யார் இந்த நான்?  எனக்கு விளக்கம் தேவை. இதுவரை நான் படித்தது, புரிந்துகொண்டது, செய்தது எல்லாமே பரம்பொருளான பரமேஸ்வரனை, பரப்பிரம்மத்தைத் தேடித்தான், அதை அறிந்துகொள்ளத்தான்., அந்த சச்சிதானந்தத்தைதேடி, எல்லையில்ல ஆனந்தத்தை தேடி அலைந்தது, தியானித்தது, அனைத்தையும் துறந்தது – இது எல்லாம் செய்தும், நான் இங்கு எங்கு வந்தேன்?  தெளிவு வேண்டும்!

உள்ளத்தால் உள்ள இயலதாவன் நான்.  உள்ளத்தைக் கடந்து நிற்பவன் நான்.  கண்களால் காணமுடியாதவன் நான்.  சொற்களால் சொல்லமுடியாதவன் நான்.  எதற்கும் அப்பாற்பட்டவன் நான்.

புரியும்படி விளக்கவேண்டுகிறேன்.  பரம்பொருளைப் பற்றி நான் படித்ததற்குத்தானே இப்பொழுது நான் விளக்கம் கேட்கிறேன்.  நான் எங்கு இருக்கிறேன்? எங்கு எதற்காக வந்துள்ளேன்? ஜீவாத்மனான நான் பரம்பொருளான உங்களுடன் ஒன்றிவிட்டேனா, இல்லை, இது இடைநிலையா?  இல்லை இன்னும் கனவுலகில் இருக்கிறேனா? ஆழ் உறக்கத்தில் இருந்தால் எதையும் எண்ணவோ, கேட்கவோ இயலாதே?

நீ படித்தது, உலகம் என்று நீ நினைத்தது,  அங்கு நீ கண்ட மனிதர், மிருகம், இயற்கை, ஏன் மொத்த அண்டமே ஒரு மயக்கம்தான்.  அனைத்தும் தனியான உனக்காக நான் தோற்றுவித்த மாயை.

மாயையா?  அப்படியானால் நான் உயிர்வாழவில்லையா?  குழந்தையாகப் பிறந்து வளரவில்லையா?  அத்தனை உறவு, குடும்பம், நண்பர், உலகம், நான் பெற்ற அறிவு, தத்துவ விசாரம், தியானம், மனதை ஒருநிலைப் படுத்த அமர்ந்தது, இதெல்லாம்…?

திரும்பத் திரும்ப அனைத்தையும் நீ உன் கோணத்துக்குள் அடக்க முயல்கிறாய்.  உனக்குப் புரியும்படி உரைக்கிறேன்.  சுருங்கச்சொன்னால் கம்ப்யூட்டர் விளையாட்டில் இருக்கும் ஒரு பாத்திரம்போலத்தான் நீ!  நீ உணர்ந்து எல்லாமே அந்த விளையாட்டுதான்!  கம்ப்யூட்டர் விளையாட்டு எவ்வளவு உண்மையோ, அத்தனை உண்மைதான் நீ இதுவரை கண்டது, கேட்டது, அறிந்தது, துறந்தது, தேடியது – அனைத்துமே!

என்னது?  நான் வாழ்ந்தது பொய்யா? துறவு பூண்டு உன்னைத் தேடியது பொய்யா?  நான் படித்த வேதங்கள் பொய்யா?  பரம்பொருளான நீயே பொய்யா?  என்னைத்தவிர வேறு எதுவுமே இந்த அண்டத்தில் இல்லையா?

இன்னும் உன் அகம்பாவம் நீங்கவில்லையே!  ‘நான்’ என்பது உன்னைவிட்டு நீங்கவில்லையே!  நீயே இல்லை என்றால், உலகமாவது, அண்டமாவது?  நீ கணிணி விளையாட்டில் வீடு கட்டுகிறாய், அரசனாகிறாய்?  படை சேர்க்கிறாய். போரிடுகிறாய்.  முதலில் சிறிதுசிறிதாகக் கற்கிறாய்.  அது பெரிதாகிறது.  அதற்காக கணினியில் இருக்கும் அனைத்தும் உண்மை ஆகிவிடுமா?  நீ விளையாடுவதைப்போல நான் விளையாடுகிறேன். அதில் நீ ஒரு சிறிய பாத்திரம்.  அதில் நீ அறிந்த வேதங்கள், உலகங்கள், மற்ற சமயங்கள், அவற்றின் வேதங்கள் எல்லாம் அந்த விளையாட்டில் அடங்கியதே!  கணினி விளையாட்டின் தொடக்கத்தில் உன்னைத்தவிர வேறு எதுவும் இருக்காது; அதுபோல, நீ உருவாக்கப்பட்டபோது உனக்கு வேறு எதுவும் புலனாகவில்லை.  நான் விளையாட விளையாட, நீ படித்த வரலாறு, போர்கள்,  சமாதானங்கள், மனிதப் பரிமாண வளர்ச்சி, என்று உனக்குப் புலப்படத் தொடங்கின.  ஆனால் அவை எதுவும் உண்மையல்ல; பெயர், உருவம், செயல் இவை அடங்கிய மாயத் தோற்றமே!

என்னால் இன்னும் எதையும் ஜீரணிக்க முடியவில்லை. எனது தர்மம், சனாதன தர்மம். அதுவும் மாயையா?

அதுவும் இந்த விளையாட்டில் நீ தெரிந்துகொண்டதே!  நீ ஒரு இஞ்சினியர்.  உனது கம்ப்யூட்டரில் இருக்கும் மைக்ரோ பிராசசர் மணல் துகள்தானே!  அதுதானே உனக்கு அத்தனை மயக்கத்தையும் தோற்றுவிக்கிறது. 

அதில் சாப்ட்வேர் உள்ளதே?

அது தானாகவா செயல்படுகிறது?  அதுவும் அந்த மணல் துகளுக்குள் புதைந்து கிடப்பதுதானே!  எப்பொழுது மின்சாரம் அதில் பாய்கிறதோ, அப்பொழுதுதானே அந்த மணல் துகளும் செயல்படுகிறது?

அந்த மின்சாரம் பரம்பொருளா?

மின்சாரத்தை நீ பார்க்கமுடியுமா?

ஷாக் அடித்தால் அதை உணரமுடிகிறதே!

அதுவா மின்சாரம்?  அது ஒன்றுக்கும் உதவாத உடம்பில் ஏற்படும் ஒரு உணர்ச்சி.  அந்த உணர்ச்சியை ஏற்படுத்தியதும் நான்.  இல்லாவிட்டால், அது உன்னைக் கொன்றுவிடுமே!  விளையாட்டு முடிந்துவிடுமே!  அதுவும் மாய உணர்வே?

எதுதான் உண்மை? 

உனக்குப் புரிவதற்காக ஒன்றைச் சொன்னால் அந்த ஒன்றைப் பற்றித்தானே நீ சிந்திக்கிறாய்?  அது எதற்காக, ஏன், எங்கு சொல்லப்பட்டது என்பதை அல்லவா உணரவேண்டும்!  என்னை எதற்காக அடையவிரும்பினாய்?

நான் பரம்பொருளை, பரப்பிரம்மத்தை, பரமேஸ்வரனைத் தேடினேன்…?

இப்பொழுது மூன்று பெயர்கள் சொன்னாயே, அந்த மூன்றில் எதை, ஏன், எங்கு தேடினாய்?

என்றும் குறையாத, அள்ளியள்ளிப் பருகினாலும் குறையாத அந்தச் சச்சிதானந்தப் பெருநிலையை அடையத்தான்.

ஆக பலனை விரும்பித்தான் என்னைத் தேடினாயா?

அப்பொழுது நீங்கள்தான் பரம்பொருளாகிய பரப்பிரம்மமா?

கேள்விகேட்கும் அளவுக்கு உன்னிடம் புரிதல் இல்லையே!

அப்படியானால் இதுவரை நான் தேடியது வீணா? அதுவும் மாயத் தோற்றமா?

ஐயமா உனக்கு?  பரம்பொருளைத் தேடியதற்குப் பலனை எதிர்பார்த்தாய்.  இப்போழுது தேடியதே வீண், மாயத் தோற்றம் என்ற எண்ணம் உனக்குத் தோன்றுகிறதே!  வீணான ஒன்றைத் தேடுவதே வீண்தானே!  அப்படி வீண் என்று நினைத்து என்னைத் தேடினால் , நீ எப்படி என்னை அடையமுடியும்? 

என் சிற்றறிவுக்கு எட்டவில்லையே!

அளக்கமுடியாத என்னை அளக்க முற்படுகிறாயே!

தவறுதான்.  பரம்பொருளை யாரால் அளக்கமுடியும்?

உனக்கு என்னவேண்டும்?

எனக்குள் இருக்கும் பரம்பொருளை நான் உணரவேண்டும்.  சச்சிதானந்தில் மூழ்கித் திளைக்கவேண்டும்.  குறைவில்லாத அந்த ஆனந்தத்தை அடையும் பக்குவம் வரவேண்டும்.

அப்பொழுது உனக்குப் பக்குவம் இல்லை என்பதை நீயே ஒப்புக்கொள்கிறாயா? 

அந்தப் பக்குவத்தை அடையும் வழிதான் என்ன?

நீ படித்த புத்தகங்கள் என்ன சொல்கின்றன?

ஒன்றொன்றாகப் பரம்பொருளைத் தேடி, இது அதுவல்ல, இது அதுவல்ல என்று உணர்ந்து அனைத்தையும் விடவேண்டும் என்று சொல்கிறது.

நீ சொல்லும் வழியிலேயே செல்வோம்.  எதுவானாலும் அது பரப்பிரம்மான நான் அல்ல என்றால், நீ தேடும் சச்சிதானந்தம் என்ற ஆனந்த அனுபவமாக நான் எப்படி இருக்க முடியும்?  என்றும் குறையாத ஆனந்தம் என்ற சுகமான ஒரு அனுபவத்தைத்தானே நீ தேடியிருக்கிறாய்?  அந்த ஆனந்தம் அள்ள அள்ளக் குறையாதது, அதில் மூழ்கவேண்டும் என்று சொன்னாயே, அந்த ஆனந்தமும் உடலுறுப்புகளின் உதவியுடன் மனத்தால்தானே அறிவது?  அதனால் அந்த ஆனந்த அனுபவமும் நான் அல்ல என்றுதானே நீ ஒதுக்கித் தள்ளியிருக்கவேண்டும்?

சச்சிதானந்த சொரூபம்தான் பரப்பிரம்மம் என்றல்லவா சுருதிகளான உபநிஷத்துகளும் ஸுமிருதிகளும் உரைக்கின்றன?

அதே வேதங்களும், வேதாந்தங்களான உபநிடதங்களும் ஆகமங்களும் எனக்கு உருவமில்லை. நான் பெயர், தோற்றம் (உருவம்), செயல் இவற்றுக்கு அப்பாற்பட்டவன் என்றும் கூறுகின்றனவே!  அதை ஏன் மறந்தாய்?  நீ தேடும்  குழப்பத்தைத் தீர்க்க இந்தக் கேள்விக்குப் பதில் சொல்!  எதற்காக இஞ்சினீயர் தொழிலைவிட்டுத் தத்துவ விசாரத்தில் இறங்கி என்னைக் குறித்துத் தியானத்தில் ஈடுபட்டாய்?

பரப்பிரம்மத்தை அடையத்தான்.

நான் உன்னுள் இருக்கிறேன் (அயம் ஆத்மா பிரம்ம) என்றும், நீதான் அதுவாக இருக்கிறாய் (தத்துவமஸி) என்றும், பரம்பொருளாக நான் இருக்கிறேன் (அஹம் ப்ரம்மாஸி) என்றும் மறைகள் பகர்கின்றனவே, அப்படியிருந்தும் என்னை எங்கு தேடினாய்?

தியானித்துத் தேடினேன்.  அதற்குமுன் அனைத்தையும் துறந்தேன்.  பசி, தாகத்தை மறந்து மனதை ஒருநிலைப்படுத்தினேன்.

அது இருக்கட்டும்.  ஏன் ஆதினத்தை ஆரம்பித்தாய்?

சனாதன தர்மம் தழைக்கத்தான்.

ஆக, பலனை வேண்டித்தானே அதை ஆரம்பித்தாய்?  பலனை எதிர்பார்த்தால் என்னை எப்படி அடையமுடியும்?  புண்ணியம், பாவம், நல்வினை, தீவினை இவை என்னை அறிந்தவரைப் பற்றாதே!  எது தழைப்பது, எது அழிவது என்பது உனக்கெதற்கு?

அப்படியானால் நான் செய்தது தவறா?  பரம்பொருள் எங்கும் எதிலும் இருக்கிறான் என்றுதானே நம்பினேன்!

அப்படி நம்பியிருந்தால் எதையும் பரம்பொருளின் போக்கில் விட்டுவிட வேண்டியதுதானே!

அதைத்தானே செய்தேன்!  ஆதின விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிட்டேனே!

இல்லையே! 

என்ன சொல்கிறீர்கள்?

இறுதிவரை ஆதீனத்தையும் உன் கைக்குள்தானே கட்டுப்படுத்தி வைத்திருந்தாய்!

அப்படியா?  எப்படி?

ஒரு மாதமாகியும் தியானத்திலிருந்து எழாதுபோனால் ஜீவசமாதி செய்துவிடும்படி ஆஞ்ஞை கொடுத்துத் திருமுகக் குறிப்பு எழுதினாயே, அது எதற்கு? 

ஜீவசமாதி ஆவது சனாதன தர்மத்தில் வழக்கம்தானே?

அந்த மரபை நான் குறைசொல்லவில்லை.  அது தானாக நிகழின் தவறில்லை அதை நிறைவேற்றும் அதிகாரி – உன் சொல்லை வேதவாக்காக மதிக்கும் ஆதீன அதிகாரி – அவரையும், அவருக்கு உதவியவர்களையும், சிறைக்குச் செல்லவைக்கும் கொடிய தண்டனை அல்லவா, உன் ஆக்ஞை?  அத்துடன், நீ எந்த சனாதன தர்மம் தழைக்கவேண்டும் என்று எந்த ஆதீனத்தை ஆரம்பித்தாயோ, அதுவே அரசால் இழுத்து மூடக் காரணமாகவும் உன் இறுதி விருப்பம் அமையும்படி செய்துவிட்டாயே!  இதுதான் பரம்பொருளைத் தேடும் முறைமையா? அதனால் மற்ற ஜீவர்களான எனக்குத் துன்பத்தை வரவழைக்கக் காரணமான செயலை \ஆக்ஞையாக, கட்டளையாக இட்டுச் செல்வது எப்படியிருக்கிறது என்றால், படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பதைப்போல இருக்கிறது.  இப்படிப்பட்ட நீ, என்னை அறிய இயலாது.  அதற்கான பக்குவம் உனக்கில்லை.  என் விளையாட்டில் நீ மீண்டும்  ஒரு பாத்திரமாகிப் பக்குவம்பெற முயலவேண்டும். 

வேண்டாம், வேண்டாம்,  எவரும் சிறைசெல்ல வேண்டாம்.  என்னால் ஆதினம் அழிய வேண்டாம்,  உடனே நான் என் தியானத்தை…

***

…படார் என்று உச்சந்தலையில் விழுந்து உடைந்து தெரித்த தேங்காய், மண்டையோட்டைப் பிளந்தது.  சுவாமிகளின் உயிர் பிரிந்தது.  உரையாடல் நின்றுபோனது.

“சுவாமிகள் கடைசிவரை ஒன்றுமே பேசாமல் ஜீவசமாதி ஆகிவிட்டார்!  அப்போது அவருடைய கண்கள் தானாகத் திறந்ததே! அதில் என்ன பிரகாசம்! என்ன ஆச்சரியம்!” என்ற பெரிய கோஷம், தூரத்தில் போலீஸ் ஊர்தி வரும் சங்கொலியையும் மீறி எழுந்தது.

***

(ஆசிரியன் குறிப்பு: பிருகதாரண்யக உபநிடதத்தின் சில பகுதிகள் கதைக்குக் கருவாக அமைந்தன,)

3 Replies to “எங்கே போகிறேன்?”

  1. * மோடி இல்லாவிட்டால், இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்திருக்கும்

    * முழு ஆதாரத்துடன் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஸ்ரீ ரகுராம் ராஜன் பரபரப்பு தகவல்.*

    * 2013 ஆகஸ்டில் நாட்டின் 5 லட்சம் கிலோ தங்கம் ஸ்தம்பித்தது. நாட்டின் பொருளாதாரத்தின் அந்த பயங்கரமான அவலத்தின் அவமானகரமான கதையை

    ராகுல் காந்தியும், லுட்யென்ஸ் ஊடகத்தின் சியோபான்ட் காங்கிரஸ் பத்திரிகையாளர்களும் ஏன் மறந்துவிட்டார்கள்?

    பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டார் என்று தற்போது ராகுல் காந்தியும், லுட்யன்ஸ் மீடியாவின் காங்கிரஸின் சிகோபான்ட் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து புலம்பி வருகின்றனர்.

    எனவே நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து போனதன் அர்த்தம் என்ன என்பதை இன்று நினைவுபடுத்த வேண்டியுள்ளது. 29 ஆகஸ்ட் 2013 அன்று, நாடு முழுவதும் உள்ள ஊடகங்களில் முக்கியமாக வெளியிடப்பட்ட ஒரு செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.* நாட்டின் இமேஜ் சர்வதேச அளவில் மோசமாக களங்கப்பட்டது.

    * நாட்டின் 5 லட்சம் கிலோ தங்கத்தை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கருத்து தெரிவிக்கும் அளவுக்கு நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகிவிட்டதாக இந்த செய்தியில் மிகத் தெளிவான வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டின் தங்க கார்பஸ். அடமானம் வைக்க வேண்டும்.*

    அப்போது, ​​அந்நாட்டின் தங்கக் காப்பகத்தில் 5 லட்சத்து 57 ஆயிரம் கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. அதாவது, நாட்டின் 90% தங்கச் சொத்தை அடகு வைக்க ஆலோசனை வழங்குவது வேறு யாருமல்ல, அப்போதைய மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாதான். அன்றைய சந்தை விலையின்படி (10 கிராமுக்கு 27,750) இவ்வளவு தங்கத்தின் விலை ரூ.1.38 லட்சம் கோடி.

    மாபெரும் பொருளாதார வல்லுனர் என்று அழைக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங், தான் பதவியேற்ற 10வது ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை இவ்வளவு பரிதாபமான நிலைக்கு கொண்டு வந்திருந்தார். ஊடகங்களில் வெளியான மேற்கண்ட பரபரப்பான செய்திக்குப் பிறகு, நாட்டில் உள்ள மக்களின் கோபத்தின் அழுத்தத்தின் கீழ், நாட்டின் அப்போதைய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் ஆனந்த் சர்மாவின் இந்த தெளிவு அடுத்த 2-3 மாதங்களில் நடந்த நிகழ்வுகளால் காற்றில் பறக்கவிடப்பட்டது. நாட்டிலும், உலகிலும் நடக்கும் மிகப்பெரிய அட்டகாசத்தால் தங்கம் அடகு வைக்கப்படவில்லை. ஆனால் நாட்டின் பரிதாபகரமான பொருளாதாரத்தை மறைக்க இரண்டாவது திருடன் கதவை அன்றைய மன்மோகனின் UPA அரசாங்கம் கண்டுபிடித்தது. அதன் ஆட்சியின் கடைசி ஆண்டில், UPA அரசாங்கம், செப்டம்பர் 2013 மற்றும் டிசம்பர் 2013 க்கு இடையில், வெளிநாட்டு நாணயம் (FCNR (B)) மூலம் சுமார் $ 32.32 பில்லியன் (ரூ 2.23 லட்சம் கோடி) கடன் உட்பட சுமார் $ 25 பில்லியன், நாட்டின் மொத்த கோரப்படாத கடன். நெற்றியில் போடப்பட்டது. இந்தக் கடனின் சுமையும் மோடி அரசால் வட்டியுடன் குறைக்கப்பட்டுள்ளது.

    * மன்மோகன் சிங் தனது ஆட்சியின் கடைசி ஆண்டில், நாட்டின் 90% தங்கத்தை அடகு வைத்து ரூ.1.38 லட்சம் கோடி சம்பாதித்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை பரிதாபகரமான மற்றும் ஏழ்மையான நிலைக்கு கொண்டு வந்தார் என்பதும் மேற்கண்ட உண்மையிலிருந்து தெளிவாகிறது.

    நிலைமை சீரடையவில்லை. அதனால்தான் UPA அரசாங்கம் “Foreign Currency Non Resident Deposit” அதாவது FCNR (B) மூலம் ரூ.2.23 லட்சம் கோடி கடனைத் திரட்டியது.

    *இறுதியாக, 2013 ஆகஸ்டில் 557 டன்னாக இருந்த நாட்டின் தங்கம் கையிருப்பை 148 டன்னாக மோடி அரசு உயர்த்தியுள்ளது. 30 ஜூன் 2021 அன்று, நாட்டின் தங்க இருப்பு 705 டன்களை எட்டியது.

    1. அப்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் இந்த * வாக்குமூலத்தை* படியுங்கள்.
    https://indianexpress.com/article/business/banking-and-finance/fcnr-bonds-were-least-bad-option-to-raise-dollars-raghuram-rajan-3011772/

    2.மோடி அரசு அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தியது. இதை உறுதிப்படுத்த இந்த இணைப்பைக் கிளிக் செய்து படிக்கவும்.
    https://www.thehindubusinessline.com/money-and-banking/fcnr-deposits-of-2013-set-to-mature-reserve-bank-ready-to-tackle-volatility/article8472235.ece

    * காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்றவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை அறிந்து புரிந்து கொள்ளுங்கள்.

    எனவே, நாட்டின் நலனில் விழித்துக்கொள்ளுங்கள்.

    கேளுங்கள், பப்புவோ- பிங்கியோ

    சுதந்திர இந்திய வரலாற்றில் இன்றுவரை யாராலும் செய்ய முடியாததை இந்த 7 ஆண்டுகளில் மோடி செய்தார். கண்டிப்பாக படிக்கவும், நடுவில் எங்காவது விட்டால், உங்கள் கண்கள் மூடியிருக்கும், எனவே கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்,,

    முதல் சாதனை
    200 ஆண்டுகளாக நம் நாட்டை அடிமைப்படுத்திய பிரிட்டனில் 53 நாடுகளின் கூட்டத்தில், மோடி ஜி அவர்கள் பொதுத் தலைவரானார்,,, இதன் மூலம், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் பெருமிதம் கொள்ள வேண்டும்,,,

    இரண்டாவது சாதனை
    ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவுக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது, அதிக வாக்குகள் பெற்ற உறுப்பினர், 97 வாக்குகள் தேவை, 188 வாக்குகள் பெற்றுள்ளது,,,, மோடி ஏன் வெளிநாடு செல்கிறார் என்று இந்திய மக்கள் இன்னும் கேட்பார்களா,,, ,

    மூன்றாவது சாதனை

    உலகின் சக்திவாய்ந்த 25 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

    நான்காவது சாதனை
    ஜிஎஸ்டியின் மாதாந்திர வரி வசூல் 1 லட்சம் கோடியைத் தாண்டியது,,,,, இது தேயிலை விற்பனையாளரின் பொருளாதாரம்,,,

    ஐந்தாவது சாதனை
    ,,, புதிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் அமெரிக்கா மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்தை அடைந்தது,,,,

    ஆறாவது சாதனை,,,,, 2017-18ல் சூரிய ஆற்றல் உற்பத்தி இரட்டிப்பாகும்,,,,
    சீனாவும் அமெரிக்காவும் திகைத்து நிற்கின்றன

    ஏழாவது சாதனை
    விண்ணை முட்டும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பார்க்கும்போது,,,
    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2%, சீனாவின் 6.7% மற்றும் அமெரிக்காவின் 4.2%. மோடி ஏன் வெளிநாடு செல்கிறார் என்று இப்போதும் இந்தியர்கள் சொல்வார்கள்,,,

    எட்டாவது சாதனை
    ,,, நிலம் மற்றும் வான் ஆகிய மூன்று பகுதிகளிலிருந்தும் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவிய உலகின் முதல் நாடு இந்தியா,,,, இது மோடி சகாப்தம்,,, பெருமை இருந்தால் மறக்காமல் ஜெய்ஹிந்த் என்று எழுதுங்கள்,,,,

    ஒன்பதாவது சாதனை,
    70 வருடங்களில் பாகிஸ்தானை ஏழையாக பார்த்ததில்லை, ஆனால் மோடி ஜி வந்தவுடன் பாகிஸ்தான் ஏழையாக மாறியது,,,

    பத்தாவது சாதனை
    இதையும் படியுங்கள்,,,,,, ஒன்று புரியவில்லை,,,
    2014ல் காங்கிரஸ் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. நாடு ஏழ்மையானது, ரஃபேல் போர் விமானம், சிறிய விமானம் கூட கிடைக்காது என்று ஆண்டனி கூறியிருந்தார், ஆனால் ஈரானின் கடனை மோடியும் அடைத்தார்
    ரஃபேல் ஒப்பந்தமும் முடிந்துவிட்டது, எஸ்-400 விமானமும் எடுக்கப்படுகிறது!
    எல்லாவற்றிற்கும் மேலாக, காங்கிரஸ் காலத்தில் நாட்டின் பணம் எங்கே போனது?

    பதினோராவது சாதனை
    ,, ராணுவத்திற்கு குண்டு துளைக்காத ஸ்கார்பியோவின் பாதுகாப்பு கவசம் கிடைத்தது,,,
    ஜம்மு காஷ்மீரில் 2500 குண்டு துளைக்காத ஸ்கார்பியோவை ராணுவம் கண்டுபிடித்துள்ளது

    வெளிப்புற சாதனை
    இந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி என்ன ஆனது என்று இப்போது சொல்கிறேன்,,,
    பொருளாதாரத்தில் பிரான்சை பின்னுக்குத் தள்ளி, 6வது இடத்தைப் பிடித்தது,,,

    பதின்மூன்றாவது சாதனை
    கார் சந்தையில் 4வது இடத்தைப் பிடித்தது, ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளியது,,,

    பதிநான்காவது சாதனை
    ,,, மின்சார உற்பத்தியில் ரஷ்யாவை பின்தள்ள வைத்து, 3வது இடத்தைப் பிடித்தது,,,

    * பதினைந்தாவது சாதனை *,, ஜவுளி உற்பத்தியில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி 2வது இடம் பிடித்தது,,,

    பதினாறாவது சாதனை,
    மொபைல் தயாரிப்பில் வியட்நாம் பின்தங்கி 2வது இடத்தைப் பிடித்தது

    பதினேழாவது சாதனை ,,, எஃகு உற்பத்தியில் ஜப்பானை விஞ்சி 2வது இடத்தைப் பிடித்தது,,,

    பதினெட்டாவது சாதனை ,,, சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது,,,

    பத்தொன்பதாவது சாதனை
    ராம் மந்திர், சட்டப்பிரிவு 370, முத்தலாக்,
    * CAA.NRC எந்த வேலையில் நடக்கிறது. சீரான சிவில் கோட், மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் போன்றவை*

    இருபதாவது சாதனை
    எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கும் இந்துக்கள்
    நான் தேசியத்தை விழித்தேன், உலகம் முழுவதும் 125 கோடி இந்துக்கள் உள்ள ஒரு தேசம் இல்லை.
    இந்தப் பணியை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

    இது மோடி சகாப்தம்
    மோடி ஆட்சியில் பயங்கரவாதிகள் பள்ளத்தாக்கில் இருந்து அழிக்கப்படுகிறார்கள்.
    லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி நவேத் வாட் கொல்லப்பட்டார்.
    ஹிஸ்புல் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    8 மாதங்களில், 230 பயங்கரவாதிகள் 72 ஹூரோன் அருகே நரகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

    காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் பீதியை பரப்பினர்
    மோடி ஆட்சியில், பயங்கரவாதிகளுக்கு ராணுவம் பீதியில் உள்ளது,,,
    இதுதான் மோடி ராஜ் ஃபார்முலா,,,,

    இப்போது மோடியின் ஊழல் தந்திரங்களால் வெற்றி பெற முடியாது, பின்னர் ஒரு அபிமன்யுவைக் கொல்ல, அனைத்து ஊழல்வாதிகளும் சேர்ந்து 2024 இல் மோடியை தோற்கடிக்க சக்கரவியூகத்தை உருவாக்குகிறார்கள், ஆனால் அந்த ஊழல் எஜமானர்கள் மோடியின் புகழ் அதிகரித்து வருவதைக் கண்டு ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் திகைத்து நிற்கிறது. துவாபருடைய கல்வியின் அபிமன்யு, சக்ரவியூஹத்தை உடைப்பதற்காக தாயின் வயிற்றில் எடுக்கப்பட்டதையும், அதுவும் உள்ளே நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மட்டுமல்ல, இந்த மோடி வடிவமான அபிமன்யு சக்ரவியூவைத் துளைத்து உடைக்க முயன்றார் என்பதை அறிவீர்கள். தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்து, வெல்ல முடியாத, தோற்கடிக்க முடியாத இந்த பாரதி அன்னையிடம் இருந்து கல்வி பெறப்படுகிறது,,,,

    2024-ல் இந்த அடியாரை அமோக பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைந்து இன்று தீர்மானம் எடுப்போம், அந்த எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் பதிவாகும், யாரும் தொட முடியாது,,,,,

    2024ல் மோடியை மீண்டும் இந்தியாவின் பிரதமராக்குங்கள்.
    வாழ்க இந்தியா

  2. Amazing story telling skills with extremely deep philosophical knowledge; just curious – a question to the author… by any chance where you writing under the name “moornam” many years ago? or were you inspired by that author’s writings?

  3. Satti Nayanar,
    தங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி. நான் ‘மூர்னம்’ என்ற பெயரில் எழுதியதில்லை. அவரின் எழுத்துக்களையும் படித்ததில்லை.
    நான் எழுதிய, ‘வீடுபெற நில்,’ ‘வீடுபெறச் செல்’ என்னும் கதைகளையும் படித்துக் கருத்துப் பதியுமாறு கேட்டுக்கொள்கிறென்.
    வணக்கம்.
    ஒரு அரிசோனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *