குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம்

க்³ருʼணாதி உபதி³ஶதி இதி கு³ரு: – உபதேசிப்பவர் குரு.

சமஸ்கிருத மொழியில் ‘குரு:’ என்ற சொல்லுக்கு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது. பாரம்பரியமாக முன்னோரிடமிருந்து கிடைத்த ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் தன் சொந்த அனுபவத்தோடு சேர்த்து எளிதாகவும் சூட்சுமமாகவும் வாத்சல்யத்தோடும் சீடனுக்கு அளிக்கும் குரு மும்மூர்த்திகளுக்குச் சமம் என்று வேதம் கூறுகிறது.

வித்யை என்பது ஞானம், விஞ்ஞானம் இரண்டும் சேர்ந்தது. அதாவது பரா வித்யை, அபரா வித்யை இரண்டும் இணைந்தது. இதில் பரா வித்யை இறைவனை அறிவதற்கும் அபரா வித்யை லௌகீகமான வாழ்க்கைக்கும் பயன்படுகின்றன.

சீடன் குருவை விட எப்போது உயர்ந்தவனாகிறான்?

குருவை கடவுளாக எண்ணும் குருபக்தி உள்ள ஒவ்வொரு சீடனும் தன் குருவை விட உயர்ந்து விடுகிறான். உதாரணத்திற்கு வியாசரும் சுகபிரம்மமும். பாரத தேசத்தின் சம்பிரதாயப்படி குரு சிஷ்ய உறவு ஒரு இனிய நீரோட்டம் போன்றது. உயர்ந்த பனிப் பாறைகளைப் பாருங்கள். அவை குருவுக்கு அடையாளம். அவற்றின் மீதிருந்து பாயும் கங்கையை தரிசியுங்கள். அது சீடனுக்கு அடையாளம். அதாவது நம்மைச் சுற்றி உள்ள இயற்கைலேயே குரு சீட சம்பந்தம் நிறைந்துள்ளது. அதனால்தான் இயற்கையே முதல் குரு என்பார்கள். (Nature is our Teacher). அப்படிப்பட்ட மிக உன்னதமான குரு சம்பிரதாயத்தின் ஆதி குரு பாதராயண மகரிஷி. இவரையே கிருஷ்ண துவைபாயனர் என்றும் வேத வியாசர் என்றும் அழைக்கிறோம்.

ஆஷாட (ஆடி) மாதம் பௌர்ணமி திதியை வியாச பௌர்ணமியாக கடைபிடிக்கிறோம். பண்டைய குருகுலங்களில் இன்றைய நாளில்தான் ‘சமாவர்த்தன உற்சவம்’ (தற்காலத்தில் பட்டமளிப்பு விழா) நடத்துவார்கள்.

நமோ(அ)ஸ்து தே வ்யாஸ விஶாலபு³த்³தே⁴
பு²ல்லாரவிந்தா³யதபத்ரநேத்ர ।
யேந த்வயா பா⁴ரததைலபூர்ண:
ப்ரஜ்வாலிதோ ஜ்ஞாநமய: ப்ரதீ³ப:॥

குரு சீட சம்பிரதாயத்திற்கு மூல புருஷரான ஸ்ரீவியாச பகவானை நினைத்துத் தொடங்கினால் அறிவுப் பெரும் முயற்சியில் தடைகள் இருக்காதென்று சாட்சாத் விநாயகரின் வாயால் கூறப்பட்ட தியான சுலோகம் இது.

நிருக்தம் கூறும் பொருள்:-

வேதத்தின் ஒரு பகுதியான நிருக்தம் வியாச பகவானை இவ்விதம் புரிந்து கொள்ள வேண்டுமென்று போதிக்கிறது… வியாச பகவான் ஞானத்தை விஸ்தாரமாக விளக்கி அளித்தவர். ஞான விஷயங்களை பிறருக்கு விளக்கிக் கூறி புரிய வைக்கும் சாமர்த்தியம் கொண்டவர். உண்மையில் வேத வியாசர் என்ற பெயரிலேயே இந்த பொருள் உள்ளது. வேதம் என்றால் ஞானம். வியாசம் என்றால் விரிவான விளக்கம். வேத வியாசர் என்ற சொல்லுக்கு நிருக்தம் கூறும் உட்பொருள் இது.

குருவின் கோபம்:-

நம் கலாசாரத்தில் குரு என்பவர் பரா, அபரா வித்யைகளை அளிப்பவர். பரம்பொருளை அடைவதற்கு ஒளிபொருந்திய வழி காட்டுபவர். சிவபிரானின் கோபத்தைக் கூட குரு நீக்கக்கூடியவர். அப்படிப்பட்ட குருவுக்கு கோபம் வந்தால் பரமசிவன் கூட எதுவும் செய்ய இயலாது. அனைவருக்கும் குருகிருபை என்பது மிகவும் முக்கியம்.

குருவுக்கு சிரத்தையோடு சேவை செய்து உயர்ந்த இடத்தை அடைந்தவர்களுள் ராமர், கிருஷ்ணர், பாண்டவர்கள், பக்த கண்ணப்பா, சுகர், சத்தியகாம ஜாபாலி போன்றோர் புகழ் பெற்றவர்களாக மதிக்கப்படுகின்றனர். குருவை நிராகரித்த அருணி, கர்ணன் போன்றோர் தோல்வியடைந்தனர். அருணி குருவிடம் கற்ற கல்வி அனைத்தையும் இழக்க வேண்டி வந்தது.

குருமந்திரத்தின் உயர்வு:-

அதனால்தான் குருவுக்கு கௌரவம் அளிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டி, குரு மந்திரம் நம்மை பவ சாகரத்திலிருந்து உய்விப்பதற்கு மிக மிக தேவை என்று குருகீதையில் உள்ள இந்த சுலோகம் குறிப்பிடுகிறது.

ஸம்ʼஸார-ஸாக³ர-ஸமுத்³த⁴ரணைக-மந்த்ரம்
ப்³ரஹ்மாதி³-தே³வ-முநி-பூஜித-ஸித்³த⁴-மந்த்ரம்॥
தா³ரித்³ர்ய-து³꞉க²-ப⁴ய-ஶோக-விநாஶ-மந்த்ரம்
வந்தே³ மஹா-ப⁴ய-ஹரம்ʼ கு³ரு-ராஜ-மந்த்ரம்॥

நம்மை நல்வழியில் நடத்துவிப்பதற்கு குரு நம்மை தண்டித்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பகையை வளர்த்துக் கொண்டு குருவை தூஷிப்பதோ துன்புறுத்துவதோ கூடாதென்று ‘குரு சதகம்’ போதிக்கிறது.

அதிர்ஷ்டசாலி குரு யார்?

தனக்கு கல்வி போதிக்க மாட்டேன் எனறு நிராகரித்த குருவுக்கு விரலை வெட்டிக் கொடுத்த சீடன் ஒருவன். குருவின் புத்திர சோகத்தைப் போக்கடிப்பதற்கு வருண தேவனையே சபிப்பதற்கு பின்வாங்காத சீடன் ஒருவன். இதே வரிசையில் பயணித்து தன் குருவின் ஆசீர்வாத பலத்தோடு திக்பாலகர்களையே எதிர்த்த உதங்கன் போன்ற சிஷ்ய இரத்தினங்களை அடைந்த அந்த குருமார்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

குரு நிந்தை?

குருவையே கடவுளாக எண்னும் சீடர்கள் குரு நிந்தையை காதால் கூட கேட்க மாட்டார்கள் என்று ‘குரு ரத்னாகரம்’ போதிக்கிறது.

கு³ரோர்யத்ர பரீவாதோ³ நிந்தா³ வாபி ப்ரவர்ததே ।
கர்ணௌ தத்ர பிதா⁴தவ்யௌ க³ந்தவ்யம்ʼ வா ததோ(அ)ந்யத꞉ ॥

பொருள்: தன் குருவை யாராவது நிந்தித்தால் சீடன் அந்த நிந்தையை காதால் கேட்கக் கூடாது. காதுகளை கெட்டியாக மூடிக்கொண்டு சிவ சிவ என்று கூறவேண்டும். அல்லது அங்கிருந்து சென்று விட வேண்டும். குருவை நிந்திப்பதற்கு காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே முறையை பின்பற்ற வேண்டும். குரு உண்மையில் நிந்தைக்கு தகுதிள்ளவரே என்று தெரிந்தாலும் கூட குரு நிந்தையை கேட்கக் கூடாது. குரு நிந்தையை காதால் கேட்பதோ உற்சாகப்படுத்துவதோ நரகத்திற்கு வழி வகுக்கும் என்று மனுதர்ம சாத்திரம் தெரிவிக்கிறது.

குரு ஏன் தேவை?

பெண்ணிற்கு தாய்மை முழுமையளிப்பது போல் இல்லறத்தானுக்கும் பிரம்மச்சாரிக்கும் குருவின் சத்சங்கம் பரிபூரணத்தை அளிக்கிறது. நாம் எத்தனை மேதாவியானாலும் அந்த மேதமையில் உள்ள ஆத்ம ஜோதி தூண்டப்படாவிட்டால் நாம் முழுமையடைந்ததாக பொருள் அல்ல. அப்படிப்பட்ட தூண்டப்படுதல் அல்லது உத்தீபனம் அல்லது சக்தி பாதம் சத்குருவால் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்டவர்களே சத்குருமார்கள். அவர்கள் நமக்கு அளிப்பதே உண்மையான அறிவு.

குரு போதிக்காத கல்வி குருடு என்ற பழமொழி கூட உள்ளது. குருவின் தத்துவ ஜோதியை கவரும் சக்தி யாரிடம் உள்ளதோ அவரே குருவின் கிருபையைப் பெற்று உத்தம சீடமாரக வளர்ச்சி அடைவார்.

போலி குருமார்கள்:-

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த சுலோகத்தில் கூறப்படுவது போன்ற குருமார்களே அதிகமாக தென்படுகிறார்கள்

அவித்³யாயாமந்தரே வர்தமாநா꞉
ஸ்வயம்ʼ தீ⁴ரா பண்டி³தமந்யமாநா꞉।
ஜம்ʼக⁴ந்யமாநா꞉ பரியந்தி மூடா⁴
அந்தே⁴நைவ நீயமாநா யதா²ந்தா⁴꞉॥

பொருள்: மூடர்கள் அறியாமை இருளில் அலைந்தபடி தாம் அறிஞர்கள், தம்மை விட தீரர்கள் இல்லை என்று கூச்சலிட்டுக் கொண்டு குருடர்களால் வழிநடத்தப்படும் குருடர்களின் ஆதரவைப் பெற்று பிரமையில் ஆழ்ந்திருப்பார்கள்.

தற்கால உலகமெங்கும் மேற்சொன்ன குருமார்களால் நிறைந்திருப்பது கவலைக்குரியது. பொருளாசை கொண்ட குருமார்களிடையே பரபிரம்மத்தை போதிக்கும் குருவை அடையாளம் காண்பது உண்மையில் கத்தி மேல் நடப்பது போன்றது. ஒருவேளை இதனை கருத்தில் கொண்டுதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இவ்வாறு விளக்கினார் போலும்…

ஆசார்யம்ʼ மாம்ʼ விஜாநீயாந்நாவமந்யேத கர்ஹிசித் ।
ந மர்த்யபு³த்³த்⁴யாஸூயேத ஸர்வதே³வமயோ கு³ரு: ॥

பொருள்: One should know the Acārya as Myself and never disrespect him in any way. One should not envy him, thinking him an ordinary man, for he is the representative of all the gods.

(ஸ்ரீமத் பாகவதம் -11-17-27)

உண்மையான குருபூர்ணிமா எப்போது?

குருமார்கள் தம் குருத்துவத்தை நிலைநிறுத்திக் கொண்டு பொருளாசையின்றி ஞானம் நிறைந்தவர்களாய் குருகுலங்களை அரசியல்வாதிகளின் தலையீட்டால் தூய்மைக் கேடடையாமல் மாசுபடாமல் நடத்துவார்களானால் மாணவன் மனம், சொல், செயல் மூன்றும் திரிகரண சுத்தமாக உண்மையான வித்யையை பெற முடியும். அப்போதுதான் குரு சிஷ்யரின் இடையில் தந்தை மகன் உறவு நிலைபெறும். மாணவர்கள் குருவை கத்தியைக் காட்டி மிரட்டாமல் கௌரவமாக, நேர்மையாக தேர்வு எழுத முடியும். மாணவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் வழிமுறைகள் மாறும் போது ஞானமும் விஞ்ஞானமும் நிறைந்த குருமார்கள் அடையாளம் காணப்பட்டு முழுமையான குருஸ்தானத்தில் நிலை பெற முடியும் அப்போது மட்டுமே உண்மையான குருபூர்ணிமா திருநாளின் லட்சியம் பரிபூரணமாக நிறைவேறும்.

(நன்றி: ருஷிபீடம், 2004)

87 Replies to “குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம்”

  1. டேய் சங்கி

    யெஸ்

    இன்று அண்ட சராசரம் பற்றி விஞ்ஞானம் சொல்வதெல்லாம் சனாதரமம் சொன்னது என்கின்றாய்

    ஆம்

    அதையெல்லாம் அறிந்து என்ன கிழித்தீர்கள்?

    சரி, இப்பொழுது விஞ்ஞானம் மட்டும் இதையெல்லாம் அறிந்து என்ன கிழிக்கும்? அண்டங்களை மாற்றிவிடுமா இல்லை புது அண்டம் படைத்துவிடுமா? கோள்களை இழுத்துவந்து வந்து பூமியில் அமர்த்திவிடுமா? சொல்லுங்கள்

    அது..அது..முடியாது, ஆனால் எல்லாம் அறிந்து கொண்டு அமைதியாக இருக்கும்

    அதேதான், அப்படி எல்லாம் அறிந்துதான் மானிடனால் எல்லாம் ஆராயலாமே தவிர புதிதாக எந்த பிரபஞ்சத்தையும் படைத்துவிட முடியாது, மனிதன் வெறும் பார்வையாளன் என அடங்கி அமைதியாக இருப்பதுதான் இந்துமதம்

  2. ஆளுநர மாத்தணும் பரோ!

    ஏன்டா?

    அது ஒண்ணுமில்ல ப்ரோ ஆரிய திராவிட இனம்னு ஒண்ணு இல்லவே இல்லனு சொல்லிட்டாரு. இதெல்லாம் ஆங்கிலேயன் பிரிச்சதுனு சொல்லிட்டாரு ப்ரோ.!

    உண்மய தானடா சொல்லி இருக்காரு! இதுக்கு எதுக்குடா ஆளுநர மாத்தணும்?

    ஆரியர்கள் தமிழர்களை சூழ்ச்சி செய்து தமிழர் வரலாற்றை அழிச்சிட்டாங்க ப்ரோ! உங்களுக்கு வரலாறு தெரியல.

    ஆரியர்கள் தமிழர்களை சூழ்ச்சி செய்து அழிக்குறது வரை கடல் கடந்து படைதிரட்டி போர் செய்த தமிழர்கள் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க? தமிழர்கள் அவ்வளவு வீக்கா என்ன?

    அது அப்படி இல்ல ப்ரோ

    பின்ன எப்படிடா?

    வஞ்சகத்தால் சூழ்ச்சி செய்தார்கள்!

    யாருடா வஞ்சகத்தால் சூழ்ச்சி செய்தது?

    பார்ப்பனர்கள் ப்ரோ!

    பார்ப்பனர்களுக்கும் ஆரியர்களுக்கும் என்னடா சம்பந்தம்?

    பார்ப்பனர்கள் தான் ஆரியர்கள் ப்ரோ!

    அதை நீ எங்கடா படிச்ச?

    சங்க இலக்கியங்கள்ல இருக்கு ப்ரோ!

    சங்க இலக்கியங்கள்ல ஆரியர்கள்தான் பிராமணர்கள்னு எங்கடா இருக்கு?

    எடுத்துட்டு வரேன்‌‌ ப்ரோ!

    எப்படா வருவ?

    சீக்கிரமா வரேன் ப்ரோ!

    நாள் : 1

    நாள் : 2

    நாள் : 3

    மாசம் : 1

    மாசம் : 2

    மாசம் : 3

    வருசம் : 1

    வருசம் : 2

    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடா..!

  3. எக்காலமும் அவன் ஒரு அதிசயம், அவனை நினைத்தால் கண்களில் ஒருதுளி நீர்வராமல் நினைவு கலையாது, நெஞ்சில் ஒரு விம்மலோடுதான் அவனில் இருந்து மீள முடியும்

    “விருதுபட்டி பெற்றபிள்ளை உண்மையிலே தெய்வபிள்ளை” எனும் அந்த வைகுண்டரின் வாக்கும் அவனால் நிறைவேறிற்று

    இப்பொழுதும் இனிவரப்போகும் தமிழக மக்களுக்கு அவன் ஒரு அதிசயம், அப்படியும் ஒரு தலைவன் இருந்தான் என நம்ப மிகவும் கஷ்டம்தான், நம்ப முடியாத விஷயம்தான்

    ஆனால் அப்படியும் ஒரு மனிதன் இருந்திருக்கின்றான், அவன் ஆண்ட காலத்தில் தமிழகத்திற்கும் ஒரு பொற்காலம் இருந்திருக்கின்றது

    கண்ணதாசன் வரிகளில் சொன்னால் “காலத்தின் கடைசி கருணை அவன், ஞாலத்தில் பாரத சாட்சி அவன்”

    நாட்டை தன் போல் பாவித்த, ஒவ்வொரு நொடியும் நாட்டுக்காய் வாழ்ந்த, ஏங்கி நின்ற எந்த சாதி குழந்தையானாலும் அந்த இந்திய குழந்தைக்காக கண்கலங்கிய, தமிழக குழந்தை கல்விக்காக பிச்சை எடுத்த, தனக்கென வாழாமல் நாட்டுக்கே வாழ்ந்த‌ அந்த பெருமகன் காமராஜரின் பிறந்த நாள் இன்று.

    உறுதியாக சொல்லலாம், ஒரு ஜனநாயக நாட்டு அரசியல்வாதி எப்படி வாழவேண்டும், எப்படி ஆட்சி செய்யவேண்டும், எப்படி சிந்திக்கவேண்டும் என்பதற்கு அவர் ஒரு பெரும் இலக்கணம், அரிச்சுவடி.

    தமிழகத்தில் தர்மனின் ஆட்சியை, சித்திரகுப்தனின் துல்லியத்தில் கொடுத்துகொண்டிருந்தார். ஆனால் எதிர்கட்சி திராவிட கும்பல்கள் அவரை எதிர்த்தே அரசியல் செய்தன. அதில் மூதறிஞர் ராஜாஜியும் சேர்ந்ததுதான் காலகொடுமை, ராஜாஜி தன்னை அறியாமல் தடுமாறினார் திமுக பிடி தன் கையில் இருக்கும் என கணக்கிட்டார் அது பொய்த்தது

    ஆட்சியில் யார் இருந்தாலும் ஆதரிக்கும் ஈரோட்டு ராம்சாமி தவிர யாரும் அன்று தமிழகத்தில் காமராஜருக்கு ஆதரவில்லை. ராம்சாமி வாழ்க்கையில் சொன்ன ஒரே ஒரு நல்ல விஷயம் காமராஜர் ஆட்சி நீடிக்க வேண்டும் என்பது

    அவர் சொன்ன நல்ல விஷயத்தை திமுக என்றாவது கேட்குமா? கேட்டால் உருப்படத்தான் முடியுமா?

    என்ன செய்யவில்லை காமராஜர்?

    பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்தது, அவர்களுக்கு கஞ்சியும் ஊற்றியது என அந்த சாதனை ஒரு புறம்.

    இன்றும் எண்ணற்ற மக்களுக்கு சோறுபோடும் ஆவடி தொழிற்சாலை, திருச்சி பெல் கம்பெனி, துப்பாக்கி தொழிற்சாலை என முக்கியமானவற்றை தமிழகத்திற்கு கொண்டுவந்துவிட்டு, தேவிகுளம் பீர்மேடு மலைபகுதியை கேரளத்திற்கு கொடுத்து முப்போகம் விளையும் குமரிமாவட்டத்தை ராஜதந்திரமாய் தமிழகத்திற்கு சேர்த்தது மறுபுறம்.

    இன்னும் மேட்டூர் அணையினை உயர்த்தியது, வைகை அணையினை கட்டி மாபெரும் திருப்பம் கொடுத்தது என தமிழகத்தில் பிரமாண்ட திட்டமெல்லாம் அவர் கொடுத்தது

    இன்னும் ஏராளம், ஒவ்வொன்றும் ஆழ்ந்த தொலைநோக்கும், மக்கள் நலனும் தேச அபிமானமும் கொண்டது.

    (கன்னியாகுமரியினை அவர் தமிழகத்தோடு சேர்த்தற்கும் பின்னாளில் சாதி சாயம் பூசபட்டது. வரலாறு தெரிந்தவருக்கு தெரியும் விருதுநகர் நாடார்கள் தென்பகுதி நாடார்களோடு அக்காலத்தில் ஒட்டுவதே இல்லை,

    தென்பகுதி நாடார் மக்கள் விருதுநகர் நாடார்களுக்கு தாழ்த்தபட்டவர்கள், உட்சாடி விவகாரம் இது, காமராஜர் சாதிபார்த்தார் என்பதெல்லாம் வடிகட்டிய பொய்)

    11 ஆண்டுகள் முதல்வர், வெறும் 7 அமைச்சர்கள், நிதி இல்லா மாநிலத்தின் மிகபெரும் சிக்கன நடவடிக்கையில்தான் பத்தாயிரம் பள்ளிகளை திறந்து, பிச்சை எடுத்து சோறும் போட்டார்

    வேலை கொடுக்க தொழிற்சாலை, கல்வி கொடுக்க பள்ளிச்சாலை, நீர்கொடுக்க அணைகள் என அம்மனிதன் போட்ட அஸ்திவாரங்கள் கொஞ்சமல்ல‌

    தாழ்த்தபட்ட மக்களின் மேலான தாக்குதலுக்கு எந்த துப்பாக்கிசூட்டை நடத்தவும் அவர் தயங்கவில்லை, அது வாக்கினை பாதிக்கும் என்றாலும் கலங்கவில்லை.

    சூது அறியாத, எதிர்கட்சிகளை முடக்க தெரியாத, கட்சிக்கு அள்ளிகொடுக்கும் கறுப்புபண முதலாளிகளை மிரட்ட தெரியாத, சினிமாவை அதன் இயல்பான நாடகமாக அப்பாவியாக எண்ணிய, பத்திரிகைகள் உண்மையை மட்டும் பேசும் என எண்ணிய அந்த தலைவனை,
    இந்த தமிழகம் புறக்கணித்தது.

    சினிமா எனும் மாயையில் அந்த கர்ணனை வீழ்த்திற்று

    பொய்க்கும் வஞ்சகத்திற்கும் மயங்கியது.திராவிட கட்சிகளின் பொய்க்கே இலக்கணம் எழுதும் புரட்டுக்களில் அது காமராஜரை வீழ்த்திற்று. எல்லா பிரச்சினையும் காமராஜர் காரணம் என்ற கோஷம் வலுவாயிற்று

    இந்தி முதல் இதயகனி சுடபட்டது வரை எல்லா பிரச்சினையும் அவர்தான் என திராவிட கரம் நீண்டது.

    வாட்ச் கூட கட்டாத அவருக்கு சுவிஸில் வங்கி கணக்கு இருப்பதாக சுவிஸ்கடிகாரம் அணிந்த கரம் நீட்டி சொல்ல, ஒப்புகொண்டது தமிழகம்.

    தர்மனின் அரியணை சகுனிக்கு கிடைத்தால் என்னாகும்? அதுதான் இங்கு நடந்தது.

    அவனின் இலவச கல்வியை இவர்கள் காசாக்கினார்கள், கஞ்சி ஊற்றி கல்வி கொடுத்தவன் அவன், குழந்தைக்கும் மது கொடுப்பது இவர்கள்.

    தொழிற்சாலை எல்லாம் கொண்டுவந்தான் அவன், தொழிற்சாலைகளில் எல்லாம் சொந்த பங்கு வைத்திருப்பது இவர்கள்,

    அணை எல்லாம் கட்டி விவசாயம் பெருக்கியன் அவன். தண்ணீர் தொட்டி கட்டிவிட்டு அது அணை என சொல்பவர்கள் இவர்கள், கூடவே நீரையும் வியாபாரமாக்கியவர்கள் இவர்கள்

    மருத்துவமனை கட்டியது அவன், மருத்துவத்தை தொழிலாக்கியவர்கள் இவர்கள்

    கடைசிவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவன் அவன், இவர்களோ லண்டன் அமெரிக்கா அப்பல்லோ என ஓடிகொண்டிருப்பார்கள்

    கடைசிவரை சொந்தவீடு இன்றி வாழ்ந்தவன் அவன், ஊரெல்லாம் வீடு வைத்திருப்பவர்கள் இவர்கள்

    அவன் கட்டிய அணைகள், அவன் கட்டிய தொழிற்சாலைகள் போல் ஒன்று கூட பின்னாளில் கொண்டுவர முடியாத கையறு நிலையில் எதிர்கட்சிகள் இன்றுவரை தலைகுனிந்து நிற்பதுதான் அவனின் வெற்றி

    10 ஆயிரம் பள்ளிகள் அவன் திறந்ததை மூடி தனியார் கல்வி கொள்ளையினை வளர்த்து இவர்கள் தலைகுனிந்து நிற்பதுதான் அவனின் வெற்றி

    எத்தனையோ அணைகட்டி அவன் நீர்பெருக்கிய மாநிலத்தில் இன்று ரயிலிலும் வண்டியிலும் ஏன் ஒரு லாரி தண்ணீர் 5 ஆயிரம் என ஏலம் போடும் நிலைதான் அவனின் வெற்றி

    ஆம் காலம் கடந்தே அந்த மாமனிதனின் வெற்றி உலகிற்கு உரக்க சொல்லபடுகின்றது.

    சொன்னால் சொல்லிகொண்டே போகலாம்.

    இந்த தேசத்தை மனமார நேசித்த, இந்த மண்ணிற்காகவே வாழ்வினை அர்பணித்த அந்த உத்தம தலைவனுக்கு இந்த தேசம் கொடுத்தது என்ன?

    வாழும் காலத்தில் இந்தியாவில் காந்தி,நேரு வரிசையில் வைக்கபட்டவர் அவர். நேருவிற்கு பின் கென்னடி,குருச்சேவ்,காமராஜ் என உலகம் ஒரு வரிசை வைத்திருந்தது.

    ஐ.நாவின் உலக கல்வி பிரிவு அவரை உலகெல்லாம் சொல்லி சொல்லி கொண்டாட்யது. சோவியத் ரஷ்யா உண்மையான மக்கள் போராளி என மாஸ்கோ மாளிகையில் பாராட்டு பத்திரம் வாசித்தது.

    உலகமே அவரை கொண்டாடியது, அழைக்காத நாடில்லை, வணங்காத தலைவரில்லை.

    ஆனால் தமிழகம் மட்டும் அவரை கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் மகா சோகம்.

    அவர் சாதிகளையும், மதங்களையும் கடந்த மகான் வாழ்க்கை வாழ்ந்தவர், அவரின் உயரம் பெரிது.

    அவர் எங்கள் சாதி என மார்தட்டுபவர்கள் கொஞ்சம் சிந்திக்கலாம், அப்படி உங்கள் சாதிக்கு அவர் என்ன செய்துவிட்டார்? அல்லது என்ன உழைத்துவிட்டார்? அந்த பள்ளிகளில் எல்லாம் உங்கள் சாதி மட்டும் படித்ததா? அல்லது அவர் கொண்டுவந்த‌ ஆலைகள் எல்லாம் உங்கள் சாதி நிரம்பி வழிந்ததா?

    அவரின் அமைச்சரவை எல்லாம் உங்கள் சாதிக்காரர்கள் நிரம்பி இருந்தார்களா?

    ஒரே மகனாக பெற்றெடுத்த சொந்த அன்னைக்கும், தந்தையில்லா சகோதரிக்கும் கூட ஒன்றும் செய்யாமல் போனதை போலத்தான் உங்கள் சாதிக்கும் அவர் ஒன்றும் செய்யவில்லை.

    அப்படிபட்ட தியாக சாதி ஏன் இன்னொரு காமராஜரை கொடுக்கவில்லை என்றால் பதில்வராது.

    சதாம் உசேனின் பெருமை ஈராக்கில் தெரிகின்றது, கடாபியின் பெருமை சீரழிந்த லிபியாவில் அப்பட்டமாக தெரிகின்றது.

    அப்படியே சுயநல‌ கட்சிகளின் ஆட்சிகளின் தமிழகத்தின் நிலையில் காமராஜர் எப்பொழுதும் உயர மின்னிகொண்டே இருப்பார்.

    அவ்வகையில் அவரை வீழ்த்தியதாக நினைத்துகொள்ளும் கட்சிகள் அவருக்கு செய்த பெரும் உதவி இது.

    இவர்கள் ஆட்சியின் சீரழிவில் , இவர்கள் வீழ்த்தியதாக சொல்லபட்ட காமராஜர் புன்னகைத்துகொண்டே இருப்பார், அதுதான் அவரின் மாபெரும் வெற்றி

    அழியாத வெற்றி

    கர்ணனை வீழ்த்த நினைத்த கூட்டணி போல் காமராஜருக்கும் பலர் எழுந்தனர். காமராஜர் இந்திய தலமையினை நிர்ணயிப்பவர் என வல்லரசுகள் கணக்கிட்டன‌

    பாகிஸ்தான் போரில் எல்லைக்கே சென்று சாஸ்திரியுடன் அவர் காட்டிய துணிச்சல், ரஷ்யாவிடம் அடிபணிய கூடாது முழு காஷ்மீரையும் மீட்க வேண்டும் என அவர் சாஸ்திரிக்கு கொடுத்த அழுத்தமெல்லாம் பல நாடுகளுக்கு பொறுக்கவில்லை

    காங்கிரஸில் சில சி.ஐ.ஏ கரங்கள் ஊடுருவின, அவைதான் காமராஜருக்கு எதிராக திட்டமிட்டன, காங்கிரஸில் இருந்து அவர் வெளியேறியது அப்படித்தான்

    அதே கரங்கள் மிஷனரிகள், வியாபாரிகள், பத்திரிகை, ஊடகம் என திமுகவினை வளைத்து காமராஜரை இங்கும் விரட்டின‌

    நாட்டுக்காய் 11 வருடம் சிறையிருந்தான் அவன், ஒரு இடத்தில் அதை சொல்லி அனுதாபம் தேடினானா, பாடல் படித்தானா?

    அம்மனிதனை கொஞ்சபாடா படுத்தினார்கள்?

    அவன் பத்தாயிரம் பள்ளிகளை திறந்தான், படித்து முடித்தோருக்கு வேலை கொடுக்க இன்றுள்ள சூழல் அன்றில்லை, ஐடி இல்லை இவ்வளவு கம்பெனிகள் இல்லை

    இந்தி படித்தால் அவர்கள் வடக்கே வேலை செய்யும் வாய்ப்பு உண்டு என்று கணக்கிட்டான், அதில்தான் கட்டையினை போட்டன திராவிட கும்பல்கள்

    அம்மனிதன் 1965 போரை நடத்தியபொழுதுதான் அரிசி பஞ்சம் வந்தது, போர் என்றால் அது சகஜமே, இது தெரிந்தும் பட்டினி போட்டான் காமராஜ் என முழங்கின திராவிட கும்பல்கள்

    அம்மனிதன் செய்தது இரண்டே தவறு, ஒன்று தமிழனாய் பிறந்தது இன்னொன்று நாட்டை நேசித்த தேசபக்தனாய் இருந்தது

    இதற்குத்தான் அவ்வளவு விரட்டினார்கள், காமராஜரின் உதவியாளன் சொன்னது போல் அவர் சாமி கும்பிட்டு நான் பார்த்ததில்லை ஆனால் வீட்டில் அன்பளிப்பாக வந்த நடராஜர் சிலைமுன் சில நேரம் நிற்பார், உற்றுபார்ப்பார்

    மெல்ல கண்களை துடைத்துகொண்டு சென்றுவிடுவார்

    ஆம், அந்த மனிதனின் அழுகையினையெல்லாம் அந்த நடராஜர் சிலைதான் அறிந்திருந்தது, அது ஒன்றுதான் அறிந்திருந்தது. இந்ந நாட்டுக்கு இன்னும் நிறைய செய்யாமல் முடிந்துவிடுவோமோ எனும் ஏக்கம் இருந்தது, அன்று செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருந்தன‌

    நல்லவர்களின் கண்ணீர் வீணாகாது, தர்மம் பொய்க்காது

    ஆம் காமராஜரின் வடிவாக மோடி திரும்பி வந்தார், வந்து காமராஜர் நாட்டை பற்றி வைத்திருந்த ஒவ்வொரு திட்டத்தையும் செய்தார்

    காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டும், சீனாவுக்கு தகுந்த பாடம் கற்பித்து எல்லையினை நாம் வலுவாக்க வேண்டும், 1971ல் பாகிஸ்தானை வலிய இழுத்த இலங்கையினை கையில் எடுக்க வேண்டும் என ஏக கனவுகள் இருந்தன‌

    அம்மூன்றையும் இன்று செய்து முடித்திருக்கின்றார் மோடி

    ஆவடியும் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையும் காமராஜரின் கனவுபடி பெரும் ஆயுதங்களை தயாரிக்கின்றன‌

    இன்றும் காமராஜரின் கனவுபடி மேட்டூர் அணையின் காவேரி விவகாரம் மோடி அரசால் தீர்க்கபட்டது

    அநியாய பொய் சொல்லி காமராஜரை விரட்டிய திமுக மோடி எனும் இரும்பு மனிதன் முன் திகைத்து அஞ்சி நிற்கின்றது

    மாநில பிரிவினைவாதம் ஒழிந்து தேசமெல்லாம் தேசபற்று வளர்ந்து தனிபெரும் தலைவன் வரவேண்டும் என விரும்பினார் காமராஜர், மோடி அவர் கனவுபடிதான் வந்திருக்கின்றார்

    ஆம், நல்லோர் என்றும் ஒரே வரிசையே

    ஆம் தர்மம் இங்கு சாஸ்திரியாய் ஜொலித்தது, காமராஜராய் தேசத்தை தாங்கி நின்றது பின் மோடியாய் திரும்பி வந்தது.

    எக்காலமும் இங்கு மோடி போன்ற ஒரு உருவில் தர்மம் வாழ்ந்து கொண்டே இருக்கும், அன்று அது காமராஜராய் நம்மிடை வாழ்ந்து நாட்டை காத்தது

    ஒவ்வொரு இந்தியனும் நன்றி எனும் மலர்களால், கண்ணீர் எனும் தூபத்தால் அந்த தர்ம தேவனுக்கு பூஜை செய்யும் குருபூஜை நாள் இன்று..

    ஏழைக்காய் வாழ்ந்து , ஏழையாகவே கடைசிவரை வாழ்ந்த அவன் எக்காலமும் இங்கு ஒளிகாட்டும் விளக்கு, வழிகாட்டும் தெய்வம்

    அந்த அசாத்திய தேசபற்றாளனுக்கு, காலம் கொடுத்த கொடைக்கு, தர்மத்தின் வடிவானவனுக்கு, கர்ணனின் சாயலுக்கு ஆழ்ந்த அஞ்சலி

    தேசத்தையே நினைத்திருந்து, நாட்டுக்கே வாழ்ந்திருந்து, நாட்டுக்கே உயிர்விட்ட உத்தனனுக்கு நெஞ்சின் அடியாழத்திலிருந்து நன்றி கண்ணீரோடு ஆழ்ந்த அஞ்சலி

    காங்கிரஸின் துரோகத்தால் சரிந்த அந்த கர்ணனுக்கு, பாரத திருநாட்டிற்காக வாழ்ந்தற்காக திமுகவின் வஞ்சனையால் வீழ்த்தபட்ட நல்லவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

    வசனகர்த்தாவுக்கும் நடிகர்களுக்கும் மெரீனாவில் கல்லறையும் நினைவிடமும் உண்டு அந்த ஏழைபங்காளனுக்கு அவன் சாம்பல் வைத்த அடையாளமுமில்லை என்பதில்தான் திராவிட காங்கிரஸ் கள்ள கூட்டணியின் கணக்கு புரிகின்றது

    மோடியின் வடிவில் காமராஜரை காண்பது ஒன்றில்தான் இத்தேசம் நிம்மதி அடைகின்றது, தர்மம் ஏதோ ஒரு வடிவில் பிறந்து இத்தேசத்தை காக்கும் எனும் நம்பிக்கையில் விரல்கள் கண்ணீரை துடைத்து கொள்கின்றன

  4. இந்தியாவின் மிகபெரிய பிரச்சினை மதமாற்றம், தீவிரவாதம் உடனடி ஆபத்தென்றால் மதமாற்றம் மெல்ல கொல்லும் ஆபத்து

    உண்மையில் இதன் மிகபெரிய காரணம் இந்துக்கள் தங்கள் மதத்தின் ஞானமோ அதன் தாத்பரியங்களை அறியாமல் இருப்பது

    ஒருவன் மதம் மாறினால் மட்டும் அவன் வாழ்வின் சிக்கல்கள் தீராது, இயேசுவினை ஏற்றுகொள்ளாமல் வாழமுடியாது என்றால் ஜப்பானும் தென்கொரியாவும் அரபு நாடுகளும் இன்னும் பலவும் பிச்சை எடுக்க வேண்டும் ஆனால் அப்படி அல்ல‌

    இயேசுவினை நம்பினால்தான் அமைதி என்றால் ஐரோப்பா இரு உலக போர்களை கண்டிருக்காது, இன்று உக்ரைன் போர் நடந்திருக்காது, ஏன் கிறிஸ்தவ நாடுகளுக்கு எல்லையே இருக்காது

    ஆம், இதெல்லாம் புரியாமல் அறியாமல் இருக்கும் இந்துக்கள் மேல் இங்கு கிறிஸ்தவம் திணிக்கபடுகின்றது, ஒரு காலத்தில் அதிகாரத்தில் கிறிஸ்தவம் இருந்தபொழுது வேலை, வாழ்வு அந்தஸ்து என மாயமாய் திணிக்கபட்ட கிறிஸ்தவம் இன்று பல வழிகளில் திணிக்கபடுகின்றது

    இயேசுவினை நம்பினால் பரலோகம் செல்லலாம் என்பவனிடம் எங்கள் முன்னோர் காட்டாத சொர்க்கமா என இந்து கேட்டால் மதமாற்றம் நிகழாது

    உன் பாவங்களை மன்னிக்க இயேசு வல்லவர் உனக்காக அவர் ரத்தம் சிந்தினார் என போதகன் சொன்னால் அவனவன் கர்மாவினை சுமக்க சொன்னது எம்தர்மம் இயேசு அவர் கர்மாவினை சுமந்தார் என இந்து திருப்பி சொன்னால் அங்கு மதமாற்றம் நிகழாது

    இயேசுவினை நம்பினால் போதும் பரலோகம் கிடைக்கும் என அவன் சொன்னால் பரலோகம் என்பது நல்ல கர்மா செய்த வெகுமதி ஆனால் அதை கழிக்க திரும்பவும் பிறக்க வேண்டும், நல்லதோ கெட்டதோ எதை செய்தாலும் பிறவி சுழலில் வேக வேண்டும் இரண்டுமற்ற நிலையில் தன்னை உணர்ந்து முக்தி அடைவதே உன்னத நிலை அது பரலோகத்தை தாண்டிய நிலை என இந்து சொன்னால் போதகன் ஓடிவிடுவான்

    சுடுகாட்டு சாம்பலை பூசாதே அது சாத்தான் என்றால், வாழ்வின் முடிவினை ஞானமாக சொல்பவன் சாத்தானா? பைத்தியகாரா பாவத்தின் பரிகாரம் சாம்பல் பூசி வாழ்வின் நிலையாமை கருதி ஞானம் உணர்வதே அதைத்தானே யூதமதத்தில் செய்தார்கள் அதைத்தானே விபூதி புதன் என நீங்களும் செய்கின்றீர்கள்

    அதை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து செய்பவன் இந்து என சொன்னால் கள்ள போதகன் பறந்தே விடுவான்

    இதெல்லாம் சாத்தான்கள் என இந்து தெய்வங்களை காட்டினால் அதன் தத்துவழிபாட்டை சொன்னால் போதகன் ஓடுவான்

    சாத்தானுக்கு படைக்காதே என சொன்னால், சிலை உண்பதில்லை மடையனே இதனால் பலநூறு மக்கள் பசியாறுவார்கள் என இந்து திருப்பி சொன்னால் போதகனிடம் பதில் இராது

    கிறிஸ்தவ ஆன்மீக நிலை வேறு அதை யாரும் பின்பற்றவில்லை, என்றோ இங்கு வியாபாரம் பார்க்க வந்த சிறு கூட்டம் தனக்கு தோதான அடிமைகளை உருவாக்க திட்டமிட்டு பரப்பபட்ட மதம் கிறிஸ்தவம், அந்த அடிமைதனத்தைஇன்றும் பரப்ப முயற்சிக்கின்றன மேலை நாடுகள்

    ஒருவன் இந்துவாக இருக்கும் வரையில் நம் தேசம் நம்கோவில் நம்பாரம்பரியம் என காட்டும் பற்று தேசபற்றோடு வரும் , அவன் கிறிஸ்தவனாக மாறும்பொழுது ஜெருசலேம் ஐரோப்பா வாடிகன் என அவன் மனம் எங்கோ அடிமையாகும்

    ஒருவன் கிறிஸ்தவனாக மாறும்பொழுது அவன் வரலாறு, இலக்கியம், மண்ணின் தாத்பரியம், கலாச்சாரம் என எல்லாவற்றிலும் இருந்து இந்த மண்ணில் இருந்து துண்டித்து அந்நிய கலாச்சாரம், தாத்பரியம் என எல்லாவற்றிலும் கலந்திவிடுவான், அதன் பின் அவனிடம் இந்திய அபிமானம் இராது இத்தேசம் பற்றிய பெரும் பெருமையும் அவனுக்கு இராது மனதளவில் அவன் ஐரோப்பியனாகிவிடுவான்

    அவனுக்கு சக இந்துவிடம் பழகபிடிக்காது, வாழபிடிக்காது, அந்த இடத்தையே ஐரோப்பிய மயமாக்க துடிப்பான்

    எவ்வளவோ குழப்பமும் சிக்கலும் இதனால் தேசத்துக்கு வரும்

    (நாம் எல்லா கிறிஸ்தவர்களையும் சொல்லவில்லை மாறாக மதமாற்ற கும்பலின் மூளைசலவை இங்கு பல குழப்பங்களை ஏற்படுத்துவது ஒன்றும் ரகசியமல்ல)

    இந்து மதத்தில் எதுவும் இல்லை என்பதல்ல விஷயம் எல்லாம் இருந்தும் ஒன்றும் அறியாத இந்துவின் அப்பாவிதனத்தை அந்த நரிகள் பயன்படுத்துகின்றன‌

    அப்படிபட்ட நரிகளின் முகத்தை கிழிக்கும் படம் “நிலைமறந்தவன்”

    இப்படம் மலையாள டிரான்ஸ் படத்தின் தழுவல் என்றாலும் இங்கு அதைசொல்ல தமிழக சினிமாவில் யாருமில்லை அல்லது செய்யமாட்டார்கள்

    மலையாள கதைகளில் சிறந்ததை டப் செய்யும் விஜயண்ணா, கமலஹாசன் போன்றோர் இம்மாதிரி படங்களை தொடவே மாட்டார்கள் அதுதான் மிஷனரி கோலிவுட்

    இந்நிலையில் பெரும் சவால் எடுத்து இந்த படத்தை தமிழகத்துக்கு கொடுக்கின்றார் தேசாபிமானி Prakash

    இது அவர் எடுத்திருக்கும் பெரும் சவால், திமுக ஆட்சியில் மிஷனரிகள்கைகள் ஓங்கும் என்பதும் ஏகபட்ட சிக்கல்களை கொடுப்பார்கள் என்பதும் இயல்பான ஒன்று

    அப்படிபட்ட நிலையில் திரைக்கு வரும் இந்த படம் நிச்சயம் விழிப்புணர்வுபடம், இதை ஒவ்வொரு இந்துவும் தியேட்டரில் சென்று கண்டால் அவனுக்கும் நல்லது, நாட்டுக்கும் இந்துமதத்துக்கும் நல்லது, இந்த முயற்சியினை எடுத்த அவருக்கும் நல்லது

    அதனை எல்லா இந்துவும் செய்தல் வேண்டும், மிகபெரிய விழிப்புணர்வு படம் இது. அதனை ஒவ்வொரு இந்துவும் ஆதரிக்க வேண்டும்

  5. நேற்று ஓசைபடாத புரட்சி ஒன்றை செய்திருக்கின்றார் மோடி வழக்கம் போல் அதை மறைத்துவிட்டு தமிழக மீடியாக்கள் காவேரி மருத்துவமனை முன் புரண்டு அழுதுகொண்டிருக்கின்றன‌

    யுத்தம் வந்தால் ராணுவமேதையாகவும், எந்த நாட்டிலாவது சிக்கல் என்றால் பொருளாதாரமேதையாகவும் மாறும் பத்திரிகைகள் இப்பொழுது குபீர் மருத்துவ அவதாரம் எடுத்திருக்கின்றன‌

    அப்படிபட்ட ஊடகங்கள் இந்த இமாலய சாதனையினை எளிதாக கடக்கின்றன, உண்மையில் மோடி அரசு செய்திருப்பது இந்திய விவசாயத்தை உலகதரத்துக்கு உயர்த்தும் உன்னத திட்டம்

    ஆம் அமெரிக்காவும் ஐக்கிய அமீரகமும் இஸ்ரேலும் இந்தியாவும் இணைந்து ஒரு கூட்டணியினை I2U2 என‌ உருவாக்கியிருக்கின்றது அது அமெரிக்கா (USA) மற்றும் அமீரகத்தின் (UAE) இரண்டு U அப்படியே இந்தியா (India) மற்றும் இஸ்ரேலின் (Israel) இரு I களை எடுத்து I2U2 என்றாயிற்று

    இந்த கூட்டணி இனி வலுவாக பல விஷயங்களில் ஒத்துழைக்கும் , அதில் முக்கியமானது விவசாயம், இதற்கு மிக சரியானநாடு இந்தியா

    அமெரிக்கா பரந்த தேசம் வளமான ஆறுகள் ஓடும் தேசம் சந்தேகமில்லை ஆனால் அவர்களுக்கு விவசாய கட்டுமானங்கள் குறைவு மக்கள் தொகையும் குறைவு என்பதால் தங்கள் தேவைகேற்ப உணவு உற்பத்தி செய்வார்கள் ஏதும் சிக்கல் என்றால் உலகம் முழுக்க இருந்து சுரண்ட அவர்களால் முடியும், ஒரு வகையில் இந்த கூட்டணியில் அவர்கள் இருப்பது உணவு வியாபாரம் அல்லது அரசியல்

    இஸ்ரேல் தண்ணீர் வளமில்லா நாடு அவர்களுக்கு மழை அதிகமில்லை, ஜோர்டான் நதி எனும் சிறிய ஓடை தவிர ஆறுமில்லை, ஆனால் சொட்டு நீர்பாசனம், மிக குறைந்த நீரில் பிரமாதமான விவசாயம் என அசத்துகின்றார்கள் எனினும் நிலவளமும் நீர் வளமும் இல்லை தேசமும் இந்தியாவின் சென்னை நகரை விட மும்மடங்கு பெரியது அவ்வளவுதான்

    ஐக்கிய அமீரகம் பணக்கார நாடு ஆனால் நிலவளம் நீர்வளம் இல்லை எனினும் உணவு தேவை அவசியம் உள்ள தேசம்

    இந்நாடுகள் இப்பொழுது இந்தியாவினை வளைக்கின்றன, இந்தியா ஏகபட்ட ஆறுகளும் நதிகளும் ஓடும் ஆசீர்வதிக்கபட்ட பூமி

    இன்னொன்று குளம் இல்லா ஊரோ நகரமோ இல்லை, இந்தியா என்பது விவசாய பூமி அங்கு எல்லாநதியும் ஓடைகளும் வயல்களும் விளைச்சல் பூமியும் கொண்ட அற்புத தேசம்

    அந்த பூமியின் ஒவ்வொரு சொட்டு நீரும் விளைச்சலை கொடுக்கும்படி அதன் முன்னோர்கள் அமைத்திருக்கின்றார்கள், உலகிலே அதிக ஆறுகள் கொண்ட அந்த பூமியின் ஒவ்வொரு சொட்டு நீரும் விளைச்சலை வருடம் முழுக்க கொடுக்கும்படி அத்தேசம் கட்டமைக்கபட்டது

    வருடம் பூராவும் விளைச்சல் கொடுக்கும்படி அன்றே குளமும் கால்வாயும் அணைகளும் கொண்டதேசம் அது, அதன் செல்வமும் பொற்காலமும் விவசாயத்திலேதான் இருந்தன‌

    அப்படிபட்ட இந்தியாவினை இப்பொழுது விவசாய ஆய்வு மற்றும் ஏற்றுமதி நாடாக கைகாட்டுகின்றது அமெரிக்கா

    உக்ரைன் போர் கற்றுகொடுத்த பாடம், அங்கு கோதுமை விளைந்தாலும் கொண்டுவரமுடியா அளவு பாதை சிக்கல், இனி அதன் எதிர்காலம் உலகம் சந்தித்த சிக்கல் அதை களையும் வழி என நோக்கினால் பாரதமே உலகுக்கு ஒளிகாட்டுகின்றது

    இந்த அமைப்பு இந்தியாவினை விவசாய ஆய்வு மற்றும் முன்னேற்ற நாடாக அறிவித்திருப்பது சாதாரணம் அல்ல‌

    இனி இந்திய விவசாயத்தில் பல மாற்றமும் முன்னேற்றமும் வரும், விவசாயம் மெல்ல மெல்ல வளரும் அந்த விவசாயிகளின் பொருள் நல்ல வகையில் ஏற்றுமதியுமாகும்

    ஒருவகையில் தன் விவசாய சீர்திருத்த சட்டம் உள்நாட்டு எதிர்ப்பால் கைவிடபட்ட நிலையில் அதற்கு மூல காரணம் யாரோ அவர்களை உலக சண்டியர்களிடம் பிடித்து கொடுக்கின்றது மோடி அரசு

    இஸ்ரேலும் அமெரிக்காவும் அறியாமல் உலகில் ஒரு போராட்டமும் நடக்காது என்பதும் எதற்கு யார் காரணம் என்பதை அவர்கள் அறிவார்கள் என்பதும் உலக அரசியல் பாடம்

    மிக சரியான வகையில் சரியான விவசாய திட்டத்தை சரியான நாடுகள் மூலம் தொடங்குகின்றது மோடி அரசு, இனி இந்தியாவின் விவசாய முகம் மாறும்பொழுது சட்டங்களும் மாறும் யாரும் எதிர்க்கவும் முடியாது

    எதை எப்படி செய்து எந்த வளர்ச்சியினை நாட்டுக்கு கொண்டுவர வேண்டும், எதிர்ப்புகளை எப்படி சமாளிக்க வேண்டும் என உலகுக்கே பாடம் நடத்துகின்றார் மோடி

    ஆடிமாதம் தொடங்க இருக்கும் நிலையிலே ஆடி பெருக்கினை போல உற்சாகமான செய்தியினை இந்திய விவசாயிகளுக்கு சொல்லியிருக்கின்றார் அந்த பெருமகன்

    இனி உலகின் மிக முக்கிய விவசாய நாடாக இந்தியா மாறும், ஏற்கனவே தொழில்துறையிலும் இதர விஞ்ஞான விஷயங்களிலும் முன்னணியில் இருக்கும் இந்தியா, விவசாயத்தில் தன் வளர்ச்சியினை பதிவு செய்யும் பொழுது அது பெரும் பாய்ச்சலை காட்டும்

    நேற்று அமெரிக்க அதிபர் பிடன், இஸ்ரேலிய பிரதமர் லபீக், அமீரக மாமன்னர் ஆகியோருடன் மோடி கலந்து கொண்ட I2U2 கானோளி காட்சி சாதரணம் அல்ல, இந்திய விவசாயிகளின் வாழ்வினை மாற்றபோகும் பெரும் புரட்சியின் தொடக்கம்

    “”மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்க மினியுண்டோ
    மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை யினியுண்டோ?
    புலனில் வாழ்க்கை யினியுண்டோ
    நம்மிலந்த வாழ்க்கை யினியுண்டோ

    இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெரு நாடு
    கனியுங் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு
    இது கணக்கின்றித் தரும் நாடு
    நித்தநித்தம் கணக்கின்றித் தரும் நாடு

    இனியொரு விதி செய்வோம்
    அதை எந்த நாளும் காப்போம்
    தனியொரு வனுக்குணவிலை யெனில்
    ஜகத்தினை யழித்திடுவோம்”

    மகாகவி பாரதியின் வரிகள் மோடியால் நிறைவேறுகின்றது

  6. காமராஜர் வாழ்வின் இன்னொரு கோணம் இது, பிடிக்காதவர்கள் கடந்து செல்லலாம்

    அந்த காமராஜரர் அற்புதமான நாட்டுபற்றாளர் இந்த நாடும் மக்களும் வளமாக இருக்க அவரின் கடைசி நொடிவரை பாடுபட்டவர், அவருக்கு தெரிந்ததும் அக்கால வழியுமான காந்தியத்தில் கடைசிவரை நின்றவர்

    மோடி போல முதல்வராக இருந்து பிரதமராக வாழ்ந்து இரும்பு மனிதராக மாபெரும் வரலாற்றை படைத்திருக்க வேண்டிய அவர் ஏன் சறுக்கினார், எப்படி சறுக்கினார், கடைசி வரை தமிழகத்துக்குள்ளே ஏன் முடக்கபட்டார், தமிழகம் தாண்டி போட்டியிட ஏன் அவருக்கு விருப்பமில்லை என பல கோணங்களில் சிந்தித்தால் காந்தி, நேரு பிம்பங்களால் அவர் அரசியல் வாழ்வே அஸ்தமித்தது புரியும்

    ஆம், உண்மையில் அவர் சரிவுக்கு காரணம் காந்திய கொள்கை, நேரு வழி அவர்கள் வழியில் காமராஜர் சென்றதால் விழுந்த வீழ்ச்சி

    அவரின் நாட்டுபற்று அபூர்வமானது எனினும் அந்த நாட்டுபற்று இந்திய பாரம்பரியத்தின் மேல் அல்லாமல் அவரின் சுய அறிவில் அல்லாமல் காந்தி நேரு சொல்வதுதான் வேதம் என்ற அளவில் பதியபட்டது, தேசமே காந்தி காந்தியே தேசம் எனும் அளவில் நம் நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரம் இதனிலெலாம் அவர் ஆழபதியாமல் மதநல்லிணக்கம், சிறுபான்மை ஆதரவு, இன்னும் குழப்பமான சமூகநீதி போன்ற குழப்பங்களை தத்துவமாக படித்தார்

    இதனாலே பாகிஸ்தான் பிரிவினை அவரை பெரிதும் பாதிக்கவில்லை இயல்பான நிகழ்வாக கடந்து சென்றார், காந்தியின் தான தர்மும் நேருவின் பெரியமனது அவருக்கு ஆச்சரியமாக பட்டதே அன்றி அதன் ஆபத்தோ இத்தேசத்துக்கு அது கொண்டுவரும் சிக்கலோ பற்றி அவர் யோசிக்கவில்லை

    மிக எளிதாக பிரிவினையினை அணுகினார் அவரின் மிகபெரிய சறுக்கல் இது, இந்துக்கள் மனநிலை பற்றி கடைசிவரை அவர் கவலை கொள்ளவில்லை

    நேரு போல தன்னையும் நாகரீகமான நாத்திகனாக காட்டிகொண்டார், சமய ஈடுபாடோ ஆன்மீக கலாச்சாரமோ அவருக்கு விருப்பம் அல்ல, இந்த புள்ளிதான் அவரும் திமுகவும் ராம்சாமியும் ஒரே இடத்தில் சந்தித்த புள்ளி

    இந்த இடத்தில்தான் அவர் முதல்வரானார், ராஜா குமாரசாமி செய்த தவறை ராஜாஜியும் செய்தார் ஆம் திமுக எனும் தேசவிரோத சக்தியினை தொடக்கத்திலே முடக்கும் எளிதான வாய்ப்பு இருந்தும் அவர்கள் திமுகவினை முடக்கவில்லை அதேதவறை காமராஜரும் செய்தார்

    என்ன இருந்தாலும் தன் குருநாதர் சத்யமூர்த்திக்கு எதிரான ராஜாஜ்யினை வீழ்த்தி தனக்கு பதவி கிடைக்க திமுக ஒரு காரணம் எனும் ரகசிய பாசம் அவர் மனதில் இருந்தது அதை மறுக்கமுடியாது,இதனால்தான் 1950களின் குழப்பமான திமுகவினை முடக்கும் வாய்ப்பிருந்தும் தள்ளிவைத்தார்

    அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி எதிரணி காங்கிரஸில் இருந்து உருவாகாமல் இருக்க திமுகவின் வளர்ச்சியினை அனுமதித்தார், சிபா ஆதித்தன் போன்றோரின் தேசவிரோத பத்திரிகைகள் வளர காமராஜரின் அனுசரனை இருந்ததை மறுக்கமுடியாது, அதில்தான் தினதந்தி திமுக ஆதவுபத்திரிகையாக வளர்ந்தது

    சினிமா உலகை நொடித்துபோடும் வாய்ப்பு இருந்தும் தேசவிரோத கருத்துக்கள் குழப்பமான கருத்துக்கள் கொண்ட படமாயினும் அதை எளிதாக கடந்தார்

    அவர் தன் கட்டுபாட்டில் இந்தியாவும் தமிழகவும் இருப்பதாக கனவு கண்டுகொண்டிருந்தபொழுது மிஷனரிகளும் சர்வதேச அமைப்புக்களும் தனக்கு குறிவைத்திருப்பதை அவரால் உணரமுடியவில்லை

    மாறாக தேசாபிமானி முத்துராமலிங்க தேவரை முடக்குவது அவருக்கு சிக்கல்களை கொடுப்பது என அரசியல்
    ஆட்டம் ஆடினார்

    ராம்சாமி, அண்ணா கருணாநிதி என முடக்கவேண்டிய கோஷ்டிகள் இருக்கும்பொழுது பரிசுத்தமான தேசாபிமானியான தேவரை அவர் முழுக்க குறிவைத்து நின்றது நிச்சயம் சரியல்ல‌

    காமராஜர் பல காரணங்களுக்காக குறிவைக்கபட்டார் , அன்றைய உலக அரசியலில் சீனாவும் ரஷ்யாவும் இந்தியாவினை விழுங்க குறிபார்த்து நின்றன அதாவது மக்கள் புரட்சிவரும் என நம்பின அதற்காக பல ஆட்டங்களையும் ஆடின‌

    எதிரணி அமெரிக்காவுக்கு இந்தியா ரஷ்யா பக்கம் சாயலாம் எனும் அச்சம் இருந்தது

    இந்த மூன்று நாடுகளுமே இந்தியாவினை வளைப்பது எப்படி அல்லது உடைப்பது எப்படி என தீவிரமாக இருந்தன, காமராஜருக்கு அதுபற்றி கவலையின்றி சிந்தனையின்றி அவர்போக்கில் இருந்தார்

    மெல்ல மெல்ல தொழிலாளர், விவசாயி, சாதி ஒழிப்பு, புரட்சி என பல புரட்சி குரல்கள் பல நாட்டு உளவுதுறையின் மூலமாக கேட்க தொடங்கியபொழுதும் அவரின் வழக்கமான காந்தியிசம் அவற்றை வளர்விட்டது

    காமராஜர் கொஞ்சமும் அக்கறையின்றி இருந்த இடம் இரண்டு முதலாவது தமிழகம் இரண்டாவது காங்கிரஸில் புகுந்துவிட்ட அல்லது முகம்காட்ட தொடங்கிய அந்நிய கரங்கள்

    காமராஜரின் நிர்வாகம் சரியானது, சி.சுப்பிரமணியம் , நெ.து சுந்தரவடிவேலு, கக்கன் என மிகபெரும் தியாகமும் ஆற்றலும் நிறைந்தவர்களால் மாகாணத்தினை அவர் அவ்வளவு அழகாக ஆட்சி செய்தார்

    இந்த ஆட்சிதான் பலரை சிந்திக்க வைத்தது அல்லது அஞ்ச வைத்தது

    ஆம், ஒரு மாகாணம் நிதியிலும் கல்வியிலும் வளர்ச்சி அடைந்தால் அங்கிருக்கும் மிஷனரிகளுக்கும் மதமாற்ற சக்திகளுக்கும் வேலை இராது, அவை மூட்டை முடிச்சினை கட்டி கிளம்பவேண்டியதுதான், அப்படித்தான் 1947ல் தயாரானார்கள் ஆனால் நேருவால் மறுவாழ்வு பெற்றார்கள்

    பெற்ற மறுவாழ்வை முடக்கும் படி காமராஜர் பள்ளிகள் திறந்தார், அணைகள் திறந்தார் இன்னும் பல சாகசங்களை செய்து மாகாண வாழ்வினை உயர்த்தினார்

    ஏழ்மையிலும் வறுமையிலும் குழப்பத்திலும் தமிழகம் இருக்க வேண்டும், குறிப்பாக கல்வி என்பது தங்கள் கட்டுபாட்டில் இருக்கவேண்டும் என விரும்பிய கும்பல்கள் அவரை குறிவைத்தன‌

    சுமார் 16ம் நூற்றாண்டில் இருந்து 300 ஆண்டுகாலம் இங்கு கோலோச்சிய அவைகள் காமராஜரை ஒரு சைத்தானாக கண்டன, அலறின, அவருக்கு குறிவைத்தன‌

    தேச அளவில் வலுவான தலைவராக உயர்ந்த காமராஜரை வல்லரசுகளும் குறிவைத்தன, தேச அளவில் அவரை பலவீனமாக்க பல சதிகள் நடந்தது போல தமிழகத்திலும் நடந்தது

    அப்பொழுதும் காமராஜர் சுதாரிக்கவில்லை தன் காந்திய கொள்கையான அன்பு , ஜனநாயகம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சிறுபான்மை ஆதரவு என இருந்தார், தான் ஒரு இந்து என்பதிலோ இத்தேசம் இந்துதேசம் என்பதை சொல்லவோ அவருக்கு தோன்றவே இல்லை

    அதை சொன்ன தேவரை குற்றவாளி போல கருதிகொண்டிருந்தார்

    திமுகவின் அடாவடிகள் மெல்ல மெல்ல பெருகின அவர்கள் பின்னால் மிஷனரிகள் திரண்டனர், பன்னாட்டு உளவுதுறை திரண்டது, அண்ணாவுக்கு பத்திரிகை சினிமா என எல்லா பலமும் பெருகியது

    காமராஜர் வழக்கம் போல் அமைதிகாத்தார், ஒரு கட்டத்தில் நிலமை எல்லை மீறி சென்றிருப்பதை அறிந்து வருந்தினாரே தவிர அப்பொழுதும் அவரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை

    இஸ்லாமியர்க்கு தனி தேசம் தந்த கட்சி காங்கிரஸ் என அவரால் முஸ்லீம் லீக்கை கூட தன் அருகே வைக்கமுடியாதபடி பலகீனமானார்

    பத்திரிகை, மத நிலையங்கள், சினிமா என எங்கெல்லாமோ அவருக்கான எதிர்ப்பு அரசியல் விதைக்கபட்டது அவர் அதை தடுக்க நினைக்கவுமில்லை காரணம் காந்தியம்

    பத்திரிகையும் சினிமாவும் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பில் இருந்தபொழுது தேசபக்தி படங்களை கூட ஆதரிக்க அவர்முன்வரவில்லை

    காந்தியிசம் நேருயிசத்தில் அவர் நம்பிக்கை இழந்தது 1962 போருக்கு பின்பே, காந்தியின் கொள்கைகள் அவருக்கு அப்பொழுதுதான் கசக்க தொடங்கின ஆனாலும் வாய்விட்டு சொன்னார் இல்லை

    நேருவுக்கு பின் இந்திய அரசியல் அவருக்கெதிராக திரும்பியது அவர் வளர்த்து ஆளாக்கிய இந்திராவே அவர்மேல் பாய்ந்தார் , தமிழகம் இல்லாவிட்ட்டால் என்ன இந்தியாவின் எந்த மூலையிலும் ஜெயிப்பேன் என நம்பிய அவர் தமிழகத்துக்குள் முடக்கபட்டார்

    காங்கிரஸ் இப்படி அவர் முதுகில் குத்த, தமிழக திமுக அவர் நெஞ்சிலே குத்தியது

    அப்பொழுதும் அவர் சுதாரித்தாரா என்றால் இல்லை, ஒருவித குழப்பத்திலே இருந்தார் தனக்கெதிரான பெரும் சதியினை அவரால் உணரமுடியவில்லை

    ஏகபட்ட எதிரிகளை அவர் உருவாக்கிகொண்டார், உருவான எதிரிகளை திமுக அணியில் சேரவும் வாய்ப்பினை அவரே அருளினார், எல்லாம் காந்தியிசம்

    தன் கட்சியினை முழுக்க பலபடுத்தினாரா என்றால் தமிழகத்திலும் இல்லை, இந்திய அளவிலும் இல்லை

    தமிழகத்தில் வலுவான வாரிசை அல்லது அடுத்தகட்ட தலைவர்களை அவர் உருவாக்கவில்லை எல்லோர் மேலும் அவருக்கு சந்தேகமே வந்தது, அழகான வாய்ப்பாக கிடைத்த திமுகவின் முதல் பிளவினை அவர் பயன்படுத்தவில்லை

    திமுகவினைஉடைத்து வந்த சம்பத்தை வளர்த்திருக்கலாம் ஆனால் கடலில் கரைந்த பெருங்காயம் போல காணாமல் போக செய்தார் , இது திமுகவுக்கு வாய்பாயிற்று

    ஆம், சம்பத்தை காமராஜர் வளர்க்காமல் விட்டார். ஆனார் அண்ணாவோ கருணாநிதி எம்ஜிஆர் நெடுஞ்செழியன் என யாரையெல்லாமோ வளர்த்துகொண்டிருந்தார்

    காமராஜர் இந்த இடத்தில் திமுக வளரவும் அதற்கு வலுவான எதிர்கட்சி இல்லாமல் போகவும் தன்னை அறிந்து அல்லது அறியாமல் உதவினார் இது நிஜம்

    திமுகவுக்கு கடும் சவாலாக உருவாகிவிட கூடாது என பசும்பொன் தேவருக்கு காமராஜர் அரசு நெருக்கடிகள் கொடுத்ததும் காமராஜரின் தவறு, நிச்சயம் தேவர் பெருமான் திமுகவுக்கு கடும் சவாலை தன் இந்து அபிமான, தேசாபிமான வாதங்களால் கொடுத்தார், ஆனால் காமரஜரோ தேவரை பழிவாங்கி திமுகவுக்கு உதவினார்

    இன்னும் எவ்வளவோ தவறுகளை காமராஜர் தன் காந்தியிசம் எனும் குழப்பமான கொள்கையால் செய்தாய் திமுக வளர வளர காங்கிரஸ் தேய்ந்தது அப்பொழுதும் காமராஜர் காந்தி சீடனாகவே இருந்தார்

    அவரின் நாட்டுபற்று சரி ஆனால் அரசியலோ சுதந்திரத்துக்கு பின்னரான மக்களின் மனநிலையோ அவர் புரிந்துகொள்ளவில்லை

    காலம் காந்தியும் நேருவும் தவறு என காட்டிகொண்டே இருந்தது, அந்த தவறில்தான் திமுக வளர்கின்றது என்பதை அறிந்தும் காந்தி பிடிவாதத்தை அவர் விடவில்லை

    கடைசியில் எல்லா தவறும் ஒன்று சேர்ந்து அவரை வீழ்த்தின‌

    அப்பொழுதும் அவருக்கு வாய்ப்பு வந்தது, காங்கிரசின் சதியால் நாடெங்கும் செல்லமுடியாத அவர் நாகர்கோவிலில் எழுச்சி கண்டார்

    1960களில் சம்பத் கிடைத்தது போல 1972ல் எம்ஜி ராமசந்திரன் காமராஜருக்கு பெரும்வாய்ப்பாக கிடைத்தார், இந்திரா காந்தி காமராஜருக்கு அழகாக தட்டி விட்ட பந்து அந்த ராமசந்திரன்

    மிக அழகாக அந்த பந்தை கோலாக காமராஜர் அடித்திருக்கலாம் ஆனால் வேண்டுமென்றே தவறவிட்டார்

    ஆம், அவரை அணைத்து கட்சியினை தூக்கி நிறுத்தி திமுகவினை கதறவிட்டிருக்க வேண்டிய காமராஜர் திமுகவுக்கு சாதகமான முடிவினை எடுத்தார், எம்ஜிஆர் தனிகட்சி கண்டார்

    அப்பொழுதும் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலாவது திமுகவினை வீழ்த்தியிருக்கலாம், வழக்கமான காந்தியிசம் அதற்கும் இடம் கொடுக்கவில்லை

    கடைசியில் தோற்றுபோன அரசியல்வாதியாக செத்தும் போனார், அவருக்கு ஒரு கல்லறை கூட தமிழகத்தில் அமையகூடாது என விரும்பிய காங்கிரசும் திமுகவும் அதை சரியாக செய்தன‌

    ஒரு வகையில் அந்த காமராஜர் பரிதாபத்திற்குரியவர், அவரின் உழைப்பும் கனவும் காந்தியிசம் , நேருயிசம் எனும் குழப்பங்களால் நாசமாயின‌

    இன்று தமிழ்நாடு அடைந்திருக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் திமுக முதல் காரணம். கல்வி வியாபாரம், மதுகடை, ஏகபட்ட குழப்பம் என இம்மாநிலம் நாசமாகி கிடக்கவும், இந்து ஆலயங்களெல்லாம் சரிந்து, இந்துமதத்தை சந்தை கூட்டத்தில் மிதிப்பதை போல யாரும் மிதிக்கலாம் என நிலமை உருவாகவும் திமுகவே காரணம்

    அந்த திமுகவினை வளரவிட்டது யார் என்றால் காங்கிரஸை கைகாட்டலாம், அந்த காங்கிரஸில் அன்று இருந்த சக்திவாய்ந்த தலைவர் யாரென்றால் காமராஜரை நோக்கித்தான் தலைகுனிந்து கைகளை நீட்ட வேண்டும்

    ஆம், இந்து அபிமான தேவரை பகைத்து திமுகவுக்கு உதவியதும், கடைசிவரை திமுகவினை ரகசியமாக ஆதரித்ததும் காமராஜரின் பெரும் தவறு அதை எந்த கொம்பனும் மறுக்கமுடியாது

    காங்கிரஸ் என்பது வெள்ளையனால் தோற்றுவிக்கபட்டு பின் நேரு போன்ற வெள்ளை அபிமானிகளால் நடத்தபடும் கட்சி, அது ஒரு காலமும் இந்தியாவினை பலமாக்காது மாறாக வெள்ளையனின் தொழிலை காக்கவும் தொழிற்சாலைகளை காக்கவும் இந்தியாவினை அவர்களின் சந்தையாகவும் கூலியாகவும் மாற்றிவைக்கும் கொள்கை கொண்ட கட்சி அது

    இந்தியா அதன் பாரம்பரியங்களை மறக்க வேண்டும், இந்துநாடு என்பதை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கம் ஒன்றையே மனதிற்குள் கொண்ட கட்சி அது

    அதனால்தான் நேரு தொடங்கி சோனியா வரை இன்றுவரை யாரும் இந்து அபிமானிகள் அல்ல, இன்று மோடி என்றொரு மாமனிதன் இந்துதலைவன் வராவிட்டால் ராகுல் நெற்றியில் குங்குமம் இராது

    அப்படிபட்ட கட்சியினை காமராஜர் உண்மை என நம்பினார், அவரின் பால்போன்ற மனதில் காந்தி நேரு பிம்பங்கள் விஷத்தை கலந்தன‌

    காங்கிரசும் திமுகவும் ஒரே வெளிநாட்டு சக்தியால் இயக்கபடும் கட்சிகள். ஒன்று தேசிய கட்சி இன்னொன்று மாகாண கட்சியே தவிர நோக்கமும் கொள்கையும் பலவீனமான இந்தியா, அதீதமான சிறுபான்மை ஆதரவு,இந்து புறக்கணிப்பு என ஒன்றே

    அது தெரியாமல் அந்த சதியில் வீழ்ந்து சரிந்தார் காமராஜர்

    காமராஜரின் வாழ்வில் சரியாக பாடம் கற்றவர் மோடி ஒருவரே, அவர்தான் காமராஜரிடம் இருந்து முழு பாடமும் கற்றார்

    எதை செய்யவேண்டும் என்பதையும் எதை செய்யகூடாது என்பதையும் முழுக்க காமராஜரிடம் இருந்து பெற்றுகொண்டவர் மோடி

    இந்துக்கள் நிர்மபிய நாட்டில் இந்து ஆலயமும் பாரம்பரியமும் நிறைந்த நாட்டில் தனக்கென தனி கலாச்சாரமும் மதமும் அடையாளமும் கொண்ட நாட்டில் அதை தொடாமல் ஒரு தலைவன் வரமுடியாது வந்தாலும் நிலைக்க முடியாது என்பதற்கு தானே சாட்சி என்பதோடு முடிந்தார் காமராஜர், அவரின் வாழ்வின் இன்னொரு பக்கம் அதைத்தான் சொல்கின்றது

    அதனால்தான் காமராஜர் தொட தவறிய பிரதமர் பதவியினை அழகாக பிடித்து காமராஜர் மனதால் கண்ட வலுவான இந்தியாவினை அவர் உருவாக்கி கொண்டிருக்கின்றார்

    அவ்வகையில் மோடிக்கு வழிகாட்டி காமராஜர் என்பதையும் மறுக்கமுடியாது

    செஞ்சோற்று கடனுக்காக செத்த கர்னனை போல, குல பெருமைக்காக அழிந்த பீஷ்மரை போல, தன் சீடனால் கொல்லபட்ட துரோணரை போல எல்லா வகையிலும் பரிதாபமாகவும், சில வகைகளில் கோபமாகவும் நோக்க வேண்டியது காமராஜரின் வாழ்வு

    எது எப்படியாயினும் தூய்மையான ஆட்சியினை கொடுத்தவரும் இன்றுவரை தமிழக மக்கள் ஏங்கும் நல்லாட்சியினை கொடுத்தவரும் அவரே, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தியாகமும் தூய்மையும் அவருடையது என்பதில் எள்முனையளவும் யாரும் சந்தேகம் கொள்ளமுடியாது

    அவர் மனதுக்குள் நிச்சயம் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன் இருந்தான், காங்கிரசின் குழப்பமும் திமுகவின் எழுச்சியும் அவர் மனதில் ஆர்.எஸ்.எஸ் நோக்கி உயர்வான இடத்தைத்தான் கொடுத்தன‌

    அவர் இருக்க வேண்டிய இடம் ஆர்.எஸ்.எஸ் அல்லது ஜனசங்கம் என்பதை அவரும் உணரத்தான் செய்தார், ஆனால் அவர் இருந்த இடத்தின் பெருமையும் கவுரவமும் போலி அந்தஸ்தும் நன்றிகடனும் அவரை நகரவிடவில்லை

    கர்னன் இறந்தபின் நீ எங்களில் ஒருவனடா என குந்தியும் பாண்டவரும் கதறி அழுதது போல, இன்று காமராஜருக்காக ஒவ்வொரு பாஜகவினரும் அழுது கதறி கொண்டிருக்கின்றார்கள்

    “தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    ஊர் பழி ஏற்றாயடா
    நானும் உன் பழி கொண்டேனடா
    நானும் உன் பழி கொண்டேனடா
    .
    செஞ்சோற்று கடன் தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா “

  7. இலங்கையின் மக்கள் தொகை சுமார் 2 கோடி, அவர்களின் கடன் 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இதை சமாளிக்க முடியாமல்தான் “புத்தரே…” என தலைதெறிக்க ஓடிகொண்டிருக்கின்றார்கள் ராஜபக்சேக்கள்

    இவ்வளவுக்கும் இலங்கை எவ்வளவோ வளமான நாடு, அவர்களின் துறைமுகங்களே அந்நாடு சொர்க்கமாக போதுமானவை , மலை மழை மண் வளம் தனி, மீன் வளம் சொல்லமுடியா அளவு வளமானது

    அப்படிபட்ட இலன்கையே சர்வதேசம், உள்ளூர் அரசியலில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கும்பொழுது தமிழகம் தனிநாடாக இல்லை எனும் நிம்மதிதான் மேலெழுகின்றது

    ஆம், இலங்கையின் கடனை விட தமிழக அரசின் படன் பல லட்சம் கோடிகள் அதிகம் இவ்வளவுக்கும் ராணுவம் வெளிநாட்டு தூதரகம் உள்ளிட்ட செலவுகள் இல்லை

    ஆக தனிநாடாக தமிழகம் இருந்திருந்தால் இந்நேரம் தமிழக அதிபர்கள் செவ்வாய் கிரகத்துக்கே அடித்துவிரட்டபட்டிருப்பார்கள்

    இந்திய திருநாட்டோடு இருப்பதாலே தமிழகத்தில் மக்கள் இவ்வளவு அமைதியுடனும் எல்லா வகை பாதுகாப்புடனும் வாழமுடிகின்றது அதை எல்லோரும் உணர்தல் வேண்டும்

  8. இந்தியாவின் தமிழக மாகாண‌ முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கின்றார், நுரையீரல் சம்பந்தமான சோதனையும் சிகிச்சையும் முடிந்த நிலையில் இன்று மாலை வீடு திரும்புவார் என மருத்துமனை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன‌

    நிச்சயம் அந்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சில ஆலோசனைகளை சொல்லி வழியனுப்புவார்கள், என்ன தெரியுமா?

    “அய்யா ஸ்டாலின், கண்ட இடத்தில் டீ குடிப்பது, வீடு வீடாக போய் சாப்பிடுவது, அடிக்கடி தெருவில் இறங்கி ஏதாவது பள்ளிகூடத்தில் நுழைவது போன்றவற்றை நிறுத்திவிடுங்கள். கொரோனா பரவலை தடுக்க நீங்கள்தான் முன்னோடியாக இருக்க வேண்டுமே தவிர வீடுகள், சந்தைகள் என நீங்களே சுற்றி வந்து கொரோனாவினை பரப்ப முயன்றது தவறு

    மற்றபடி ஆளில்லா இடத்தில் சைக்கிள் ஓட்டலாம், சிகப்பு கம்பளத்தில் தனியே நடக்கலாம், மேடைகளில் தனியே அமரலாம் அதெல்லாம் சிக்கல் இல்லை, தமிழக மாகாணத்தை நம்பர் 1 ஆக்க நீங்கள் தனியே இருந்து உழைக்கலாம், வாழ்த்துக்கள்”

  9. ஔரங்கசீப்பின் கூலிப் படையாக வந்த ஹைதராபாத் நிஜாமின் ஒரு சிப்பாயின் வாரிசுதான் பஹருதீன் பிண்டாரி.

    பஹருதீன் பிண்டாரியின் மகன்தான் சாந்த் மியா நீங்கள் நம்பி வணங்கும் பாபா

    சாய் சத் சரிதம் நூல் சீரடி சாய்பாபா மேசானிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான சாய்பாபா வரலாற்று புத்தகத்தில் வரும் வரலாறு:

    சீர்டி சாய்பாபா எனும் சாந்த் மியா அவுரங்காபாத்தில் பிறந்த ஒரு பட்டாணி இசுலாமியர்

    சீர்டியில் உள்ள ஒரு பாழடைந்த மசூதியில் குடி இருந்தார் சாந்த் மியா

    சாந்த் மியா எனும் சீர்டி சாய்பாபா மூச்சுக்கு முன்னூறு தடவை அல்லா மாலிக் என்று சொல்லுவார்

    ❌ சாந்த் மியா எனும் சீர்டி பாபாதான் மசூதியில் தினமும் ஐந்து முறை தொழுகைக்கு அழைக்கும் ஆஜான் எனும் அல்லாஹ் அக்பர் பாட்டை பாடுபவர்

    ஐந்து முறை அவரே தொழுவார் சாந்த் மியா ஷிர்டி பாபா.

    தன் வாழ்நாளில் பூஜைகள் எதுவும் செய்தது இல்லை

    சாந்த்மியா எனும் சீர்டி சாய் பாபா இறந்த பின் இஸ்லாமிய முறைப் படி மஜார் என்ற கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

    இந்த மஜார் சாக்கிய பட்டாணியர்களின் ஓர் அங்கமான ஃபோர்டு பவுண்டேஷன் குழுமத்தால் பெயர் மாற்றப்பட்டு தற்போது இந்து கோயில் என சிர்டி சாந்த் மியாவை மக்களிடம் பிரச்சாரம் செய்து மோசடி செய்து வருகிறார்கள்.

    உண்மையான அகச்சமயத்தினரும், உண்மையான இசுலாமியர்களும் சாந்த் மியா எனும் போலி சிர்டி சாய்பாபாவை புறக்கணிப்பது இதனால்தான்

    கேசரி என்பது நம் கோயில் பிரசாத வழக்கமா என்று மூளை உள்ளவர்கள் யோசியுங்கள்.

    சாய்பாபா எனும் சாந்த் மியா வின் மாட்டு பிரியாணி அடுப்பின் சாம்பலான ‘உதி’ விபூதியாக வழங்கப்படுகிறது.

    சாந்த் மியா எனும் போலி இசுலாமிய சாய்பாபா எங்குமே நம் அகச்சமய கடவுள்களை பூசை செய்ததோ,வணங்கியதோ இல்லை.
    தனி மனித மாற்றமே சமூக மாற்றம்.

    “””எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் இந்து சமயம்..?

    இன்னும் ஐம்பது வருடங்களில், சிவன், பார்வதி, விஷ்ணு, முருகன், வினாயகர், எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்று நினைக்கிறேன்! சிவபெருமான், பெருமாள் என்றால் யார் என்று கேட்பார்கள் போல..!

    ஏனென்றால் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்???? ஸ்ரீடி சாய்பாபா மட்டும்தான் உலகிற்கே பிரம்மம்! அவர் தான் பரமாத்மா! அவரே பகவான் என்று ஹிந்துகள் பலருக்கு நம்பிக்கை வந்து விடும் என்று நினைக்கிறேன்!

    தேவாரம், திருமுறை என்றால் என்னவென்றே தெரியாமல், கீதையின் ஒரு சுலோகம் தெரியாமல் பத்து சாய்பாபா சென்டர் மலேசியாவில் ஒருவரே திறக்கிறார்! நான் எட்டு தடவை, ஒன்பது தடவை ஐய்யப்பன் மலைக்கு சென்றேன் என்று பிதற்றி பெருமை பட்டு கொள்வது போல நான் ஐந்து சாய்பாபா சென்டர் திறந்து விட்டேன் என்று பெருமை பட்டு கொள்கிறார்கள்!

    முகநூலில் காலை வணக்கம் படங்களாக

    இரண்டு பெருமாள் இரண்டு சிவன், ஆறு சாய்பாபா வருகிறார்கள்!

    வாட்சாப் குழுக்களில் அடிக்கடி பார்க்கலாம்!

    ஷேர் செய்யுங்கள் இன்று ஒரு அதிசயம் நடக்கும் என்கிறார்கள்!

    கீதை, வேதம், உபநிடதம், தேவாரம், திருமுறைகள், புராணம், இதிகாசம், கீதைகளில் எத்தனை எத்தனை ஆயிரம் மந்திரங்கள், சுலோகங்கள்! அதில் ஒன்றை கூட எவருக்கும் எழுதி காலை வணக்கம் சொல்ல தெரியவில்லை!

  10. இந்து மக்களுக்கு 1000 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த முறையான சமய கல்வியை பயிற்சியை அளிக்கும் நபா்தான் உண்மையான குரு ஆவார்கள். திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவத்தின் தலைவா் சுவாமிி சித்பவானந்தா்தான் உண்மையான குரு. அவரை பின்பற்றி அந்தா் யோகம் நடத்துகிறவர்கள் அனைவரும் குருமார்கள். மடத்திற்குள் தங்கள் வெள்ளி பாத்திரங்கள் உபகரணங்கள் கொண்டு வழிபாடு செய்பவர்கள் யாரும் எனக்கு குருவாகப் படவில்லை.

  11. பூமி பூஜை என்பது கடவுள் அல்லது மத வழிபாடல்ல

    மதத்தை வாழ்வியல் முறையாகக்கொண்ட இந்தியாவில் இயற்கையை மதிக்கும் வழக்கமுண்டு.

    இந்தியர்கள் பூமியை தாயாகப் பாவிக்கிறார்கள் .

    அந்த பூமியில் பெரிய கட்டிடங்கள் கட்டுமானங்கள் கட்டும்போது அந்த பூமித்தாய்க்கு மரியாதை செலுத்தும்விதமாகவோ அனுமதி கோரும் விதமாகவோ செய்யும் ஒரு நிகழ்ச்சிதான் பூமிபூஜை .

    கால்பந்துவிளையாட்டில் வரிசையாக உள்ளே நுழையும்போது மைதானத்தை தொட்டு வணங்கும் வழக்கம் இல்லையா?

    வண்டியை எடுக்கும் முன் ஓட்டுனர் தொட்டு வணங்குவதை பார்த்ததில்லையா ?

    அப்படிப்பட்டதுதான் பூமிபூஜையும் ..

    அந்த நம்பிக்கை வழக்கம் இல்லாத பாதிரியாரும் மவுலியும் எப்படி அங்கு வந்து பூமித்தாய்க்கு வணக்கம் செய்வார்கள் ?

    உண்மையில் எங்கள் மத வாழ்வியல் முறைக்கு எதிராக எங்களை தள்ளுகிறார்கள் என்று அந்த எம்பி மேல் அவர்கள் புகார் கொடுக்க வாய்ப்பிருக்கிறது

    ஆராய்ந்துபார்க்காமல்

    இப்படிசெய்தால்தான் எதிர்காலத்தில் ஓட்டுக்களை அள்ளலாம் என்ற சின்ன புத்தியுடன் நடந்திருக்கிறார் எம்பி .

    அந்த அதிகாரியின் இடத்தில் நான் இருந்திருந்தால் நாக்கை பிடுங்கிக்கொள்கிறமாதிரி கேட்டிருப்பேன்

    அவர் ஒன்றும் appointing அதாரிட்டி அல்ல …அதிகாரிகள் அவருக்குப் பயப்பட

    அந்த சிறுமதியாளர் கிட்டத்தட்ட ஒரு மதத்தை அவமதித்திருக்கிறார்

    அங்கு ஏதோ அசிங்கமான சமாச்சாரம் நடந்ததுபோல பேசி இருக்கிறார்..

    அவரது முக பாவம் ..

    உண்மையிலே காரி துப்பவேண்டும்போல எனக்கு கோபம் வருகிறது

    துர்கா மேடம் கொஞ்சம் கவனியுங்களேன் அந்த ஜென்மத்தை

  12. இந்துமதம் எனும் ஞானமார்க்கத்தை குழப்பவும், அது வலுபெறும்பொழுதெல்லாம் வீழ்த்தவும் எதிரிகள் கையில் எடுக்கும் ஆயுதம் இந்துமதம் பிராமண ஆதிக்க மதம், மற்றபடி இந்துமதம் என ஒன்று இல்லவே இல்லை அது எல்லாம் கதை என்பது

    இதனை புத்தம் செய்தது, சமணம் செய்தது பின் இந்துமதம் வலுவாகி மீண்ட வேளைக்கு பின் இந்து அரசுகள் வீழ்ந்து அந்நிய ஆட்சி வந்தபொழுது போர்ச்சுகீசியர் செய்தனர்,

    ஒருவனை மதம் மாற்றவேண்டுமெனில் அவனை வறுமையில் தள்ள வேண்டும் , சிக்கலில் சிக்கவைக்கவேண்டும், அவனின் மதமும் பெருமையும் நினைத்துபார்க்கா வகையில் அவனை அவமானபடுத்தி தன் பக்கம் சேர்க்கவேண்டும் என்பது வெள்ளையர் கணக்கு

    அந்நிய ஆட்சியினால் பாதிக்கபட்ட இந்துக்களை அதுவும் கடற்கரையோர இந்துக்களை உன் ஏழ்மைக்கு காரணம் அந்நிய ஆட்சி அல்ல உன் மதம், நீ மதம் மாறி எங்கள் மதத்துக்கு வந்தால் வாழலாம் என அவர்களை மூளைசலவை செய்து தங்கள் ஆட்சியினை நிறுவினார்கள் போர்ச்சுகீசியர்கள்

    தொடர்ந்து அவர்களுக்கு சவாலாக இருந்து இந்துமதம்

    அது பிச்சைகாரர்களை உருவாக்குவதில்லை , கேடுகெட்ட சமூகத்தினை உருவாக்கவில்லை, பெரும் நாகரீகமும் உன்னத வாழ்வும் கொண்ட இந்துமத்தை பிராமண சமூகம் தாங்கி நின்றது

    பிராமணர்களை குறிவைத்தால் இந்துமதம் ஒழியும் என முதலில் சொன்னது போர்ச்சுகீசியர், அதனை தமிழகத்தில் பலர் செய்து கடைசியில் கையில் எடுத்தது திராவிட கோஷ்டிகள்

    சிவனேச செல்வர்களும் ஏராளமான சிவாலயங்களும் நிரம்பிய தமிழகத்தில் அதனை இன்னொருவிதமாக குழப்பினார்கள்

    தமிழன் வழிபட்ட சிவன் வேறு, பிராமண வழிபாடு வேறு பிராமணன் நம்மை அடிமைபடுத்திவிட்டான் என குழப்பியடிப்பார்கள்

    இந்த சூழ்ச்சிக்கு இந்துக்கள் பலரே பலியாகி செல்வது வேதனை, அப்படி ஒரு கூட்டம் இப்பொழுது சமீபகாலமாக பெருகி, மிஷனரிகளின் கைகூலியான திராவிடத்தாரின் கைகூலிகளாகி பிராமண வெறுப்பும் இந்து குழப்பமும் செய்வதாக அறிகின்றோம்

    அதனை சகிக்க முடியா சவம், நெல்லை மக்கர் என பலர் செய்வதாகவும், செங்கல்லுக்கரசி போன்ற குழப்பவாதிகள் திராவிட மிஷனரி கைகூலிகளாக இருந்து இதனை பரப்பி வருவதாகவும் அறிகின்றோம்

    இந்துமக்கள் ஒரு உண்மையினை புரிந்து கொள்ள வேண்டும்

    இவர்கள் சில இடங்களில் திருமூலரின் “உள்ளமே பெரும் கோவில்” என்பது முதல் “அகம் பிரம்மாஸ்வி” வரை பெரிய தத்துவங்களை சொல்லி குழப்புவார்கள்

    “அகம் பிரம்மாஸ்மி” என சொல்வது எளிது “உள்ளமே கோவில் ” என சொல்வதும் எளிது , ஆனால் அதையெல்லாம் பின்பற்றி நிலைப்பது கடினம், அந்த அதி உன்னத நிலை கோடியில் ஒருவருக்கு வாய்க்கும்

    அது திருமூலர், ஒளவை, ரமணர் என கோடியில் ஒருவராலே சாத்தியம்

    அதை நம்பிகொண்டு தமிழன் வழி சித்தன் வழி என கிளம்பினால் கோவில் செல்லும் அவசியம் இராது, வழிபாடு நடக்காது, சரி சென்றவனாவது அகம் பிரம்மாஸ்மி என உண்மையினை உணர்வானா என்றால் அதுவுமில்லை

    இப்படி குழம்பி நிற்கும் சமூகத்தை மதமாற்ற சக்திகள் எளிதில் கவ்வும்

    ஆம், இந்துமத அடையாளத்தை பூசிகொண்டு இந்துமத மக்களை எதிரிகளிடம் பலிகொடுக்கும் வியாபாரத்தை இந்த துவேஷிகள் செய்கின்றார்கள் இந்துக்கள் இவர்களிடம் கவனமாக இருத்தல் வேண்டும்

    ஆனானபட்ட திருமூலரே சிவாலயத்தில்தான் அமர்ந்திருந்தார் என்பதும் ஒளவை விநாயக பெருமானின் பெரும் பக்தை என்பதும் எல்லோரும் அறியவேண்டும்

    உண்மையில் பிராமணர்கள் தமிழர்களை குழப்பினார்களா, வேதங்கள் எல்லாம் பொய்யா என்றால் அல்ல விஷயம் அதனை கொஞ்சம் விளக்கலாம்

    இந்துமதம் நுட்பமானது அது ஓசையால் இயங்கும் பிரபஞ்சத்துன் நுணுக்கத்தைபடித்தது , அந்த ஓசைகளை வேதங்கள் என சொல்லி மானிடருக்கு சமஸ்கிருத ஸ்லோலகங்களாக கொடுத்தது

    அதை தொகுத்த வியாசரும் பிராமணர் அல்ல, அதை வழி வழி காத்த மகான்களும், அரசர்களும் கூட பிராமணார் அல்ல‌

    பிராமணருக்கு வேதம் கற்கவும் ஓதவும் வழிசெய்த இந்துமதம் அது அவர்கள் குல சொத்து என சொல்லவுமில்லை, கொடுக்கவுமில்லை அவர்களின் இயல்பறிந்து குணமறிந்து பல விதிகளை வகுத்தது

    வேதங்கள் வலிமையானவை, வேதங்கள் உலகை இயக்குபவை , வேதங்கள் வழிவழியாக தொடரவேண்டியவை என்பதால் பிராமணர் தலைகணமோ கர்வமோ கொள்ளாத வகையில் பல சிரமங்களையும் கொடுத்தது

    பிராமணனுக்கு சுயதொழில் கூடாது, பிராமணன் யாசகம் ஒன்றாலே வாழவேண்டும், அவனுக்கு சொந்த சொத்தோ சுகமோ இருக்க கூடாது, சுருக்கமாக சொன்னால் பிச்சை ஒன்றாலே அவன் வாழவேண்டும் எனும் விதியும் வகுத்தது

    கற்றல் கற்பித்தல் அவர்கள் கடமை என்றது, ஆம் பிராமணன் எல்லா சாதிக்கும் கற்றும் கொடுக்க வேண்டும்

    தன் தொழில், தன் குடும்பம், தன் இனம், தன் செல்வாக்கு என ஒவ்வொருவரும் அல்லும் பகலும் போராடும் உலகில் கோவில் வேதம் யாகம் என அர்பணித்த பிராமணர்களை ஆதரிக்கும் பொறுப்பை அரசர்களே ஏற்றார்கள்

    பசுக்களும் , அந்தணர்களும் ஒன்று என்றார்கள். காரணம் இரண்டும் ஆதரவு தேவைபடுபவை, இரண்டுமே நீர் கரையில் வாழ்பவை, இரண்டும் இல்லாவிட்டால் உலகம் வாழமுடியாது

    அதே நேரம் அவர்களுக்கு சொந்தமாக வாழ காவலும் இல்லை வழியும் இல்லை தொழிலும் இல்லை என்பதால் அரவணைப்பு தேவை

    அப்படிபட்ட பரிதாப நிலையில்தான் பிராமண இனத்தை வைத்திருந்தது முன் இந்து சமுதாயம், அதை மறுக்கமுடியாது

    பிராமணர் அரசனுக்கு கட்டுபட்டவர்கள், நாட்டிற்கு யாகம் செய்தல், நல்ல நாள் குறித்த, போர் ஆபத்துக்களை அறிவித்தல், வான் கோள் அசைவில் நாள்குறித்து வெள்ளம் வறட்சி தவிர்த்தல் என பல சேவைகளைத்தான் செய்தார்கள், ஆளவில்லை

    இந்துமதம் இருவகையான மொழிகளை தேசம் முழுக்க அனுமதித்தது

    ஒன்று சமஸ்கிருதம் அது இமயம் முதல் தமிழகம் வரை பொது பூஜை மொழியாக இருந்தது, பல மொழிகள் கொண்ட பாரத கண்டத்தில் இணைப்பு மொழியாகவும் ஒரு வங்க ஞானி சொன்ன விஷயம் தமிழகம் வரை எட்டும் தகவல் மொழியாகவும் இருந்தது

    அதன் சில சிறப்பு ஒலிகள் ஞானமொழியாகவும் அதனை அடையாளம் காட்டின, பிரபஞ்ச அதிர்வுகளை கொடக்கும் மொழியாக அது இருந்தது

    இதனால் ஆலயம் முதலான இடங்களில் சக்திமிக்க கருவறையில் நல்ல அதிர்வுகளை கொடுக்க பூஜைக்குரிய மொழிகளாக அதை பயன்படுத்தினார்கள், யாகம், கும்பாபிஷேகம் என நல்ல அதிர்வுகளை கொடுக்க பூஜை மொழியாக அது இருந்தது

    இன்னொன்று வழிபாட்டு மொழி அது அந்தந்த பகுதி மக்களின் மொழி, அவர்கள் தங்கள் விருப்பத்தில் தங்கள் மொழியில் எவ்வளவும் கடவுளை வேண்டி பாடினார்கள்

    தமிழில் பக்தி இலக்கியங்கள் எல்லாமே இவ்வகை நாயன்மார்களும் அடியார்களும் பாடியதும் இதுவே

    ஆக சமஸ்கிருதமே தேசம் முழுக்க பூஜை மொழியாக இருந்தது, அதனை பிராமணர்கள் படித்தார்கள் என்றாலும் தகுதியுடையோர் படிக்க தடையே இல்லை

    ஆனால் வெறும் ஆண்டிபண்டாரங்களாகவும் சன்னியாசிகளாவும் விளங்கிய அவர்களிடம் கால் காசு கூட தேறாத அவர்களிடம் கற்றுகொள்ள யாருமில்லை என்பதுதான் அன்றைய யதார்த்தம்

    தங்கள் குலதர்மபடி உறிஞ்சவிருத்தி, யாசகம் என பிராமண குலம் அதனை தொடர்ந்து வந்தது

    இந்த பூஜைக்கு சமஸ்கிருதம், வழிபாட்டுக்கு அவரவர்மொழி என்பது பாரதம் முழுக்க இருந்த நிலை, சித்தர் வழிபாடு சிவாச்சாரி பட்டாச்சாரி என்பதெல்லாம் அடுத்த வகை

    பெரும் உதாரணம் ராஜராஜசோழன்

    அந்த சோழன் பிராமணர்களை ஆதரித்தான் பூஜைக்கு சமஸ்கிருதமே அனுமதித்தான் இவ்வளவுக்கும் அவன் கருவூர் சித்தரின் சீடன்

    ஆம் கருவூர் சித்தர் காலத்திலே தில்லை அந்தணர் முதல் எல்லா அந்தணர்களும் சிறப்புற்று இருந்தனர் எனும்பொழுது இப்பொழுது குபீர் என சித்தர் வழி, தமிழன் வழி பிராமணன் அதை அழித்தான் என்பதெல்லாம் உச்சகட்ட காமெடி

    இக்குழப்பம் இந்து அரசர்கள் இருந்தவரை இல்லை, மிக கடுமையாக அதை களைந்தார்கள்

    அதே நேரம் பிராமணர் ஏதும் ஆடினால் சிவனே இறங்கிவந்து அடக்கினார் “தில்லைவாழ் அந்தணருக்கு அடியேன்” என சொன்ன சிவன், சோமாசி மாற நாயனாரின் யாகத்தில் “சாதி பார்க்கும் அந்தணரெல்லாம் மத்தியான பறையர்” என சபிக்கவும் தயங்கவில்லை

    அப்படி இந்துமதம் அதன் இயல்பிலே தன்னை சரிபடுத்திகொண்டே வந்தது

    மானிட மனம் பல வகை மயக்கத்துக்கு ஆளாக கூடியது, அவனிடம் தொடக்கத்திலே தவம் மோட்சம் யோகம் “அகம் பிரம்மாஸ்மி” என்றால் புரியாது

    சிறு குழந்தையினை வேடிக்கை காட்டி வளர்த்து கொண்டுவருவது போல வழிபாடு, கோவில், என ஆன்மீகம் வழிக்கு மெல்லத்தான் பழக்கமுடியும், அதைத்தான் கோவில் வழிபாடு என இந்துமதம் செய்தது

    அதில் மெல்ல மெல்ல மனம் ஆன்மீகத்தில் கரையும் என்பதை அது உணர்ந்தது

    கோவில் வெறும் ஞானிகளுக்கும் மகான்களுக்கும் மட்டும் அல்ல எல்லாவகை மக்களும் பலன்பெற வருவார்கள் என்பதால் பிரபஞ்ச சக்திகளை பெற வேதங்கள் வழி யாகமும் இன்னும் பலவும் மன்னர்களால் நடத்தபட்டு ஆகம வழி பூஜைகள் நடத்தபட்டு ஆலயங்கள் சக்தியூட்டபட்டன‌

    அந்த சக்தியில்தான் தமிழகமும் இந்தியாவும் பெரும் செல்வத்தோடு திகழ்ந்தன‌

    பின்னாளில் ஆட்சி மாறிய குழப்பமும் பல குழப்பமும் இந்துமதத்தை வீழ்த்தின, இப்பொழுது தேசம் முழுக்க இந்து எழுச்சி ஏற்படும் நேரம் தமிழக இந்துக்களை குழப்ப திராவிட மிஷனரிகளின் கைகூலிகள் வழக்கமான பிராமண எதிர்ப்பு தமிழ் வழிபாடு என குதிக்கின்றன‌

    இது இந்து மக்களை திசை திருப்பும் செயல்

    அது உண்மை என்றால் இந்தியாவின் 32 மாகாணங்களிலும் 32 மொழிகளில் வழிபாடு நடக்கவேண்டும் அப்படி அல்லாமல் எல்லா இடத்திலும் பூஜைகுரிய மொழியில்தான் வழிபாடு நடக்கின்றது

    அவர்களெல்லாம் தவறு நாங்கள் மட்டும் சரி என குதிப்பது முழு கயவாளிதனம், வஞ்சகம்

    சிவவழி, திருமூலர் என்பதெல்லாம் அதி உச்ச ஞானிகளுக்கு சாத்தியம், சாமான்ய மக்களிடம் அதை சொன்னால் அவர்களால் அந்நிலையினை எட்டமுடியாது, எல்லோரும் அவ்வழிக்கு செல்லுமாரு குழப்பினால் ஆலயம் பலவீனமடையும்

    அதைத்தான் இந்த கள்ள தந்திரத்தைத்தான் இவர்கள் அரங்கேற்ற வந்திருக்கின்றார்கள்

    இன்று சமஸ்கிருத வழிபாடு வேண்டாம் என்பார்கள், மெல்ல பூஜை வேண்டாம் என்பார்கள், மெல்ல மெல்ல பண்டிகை வேண்டாம் என்பார்கள், எல்லாம் அநாவசியம் என்பார்கள், என்னென்னவோ சொல்லி குழப்பி அடித்து இந்துக்களை மொத்தமாய் நாசமாக்கி கலங்கடிப்பார்கள்

    கேட்டால் “அகம் பிரம்மாஸ்மி” என்பார்கள், இதை சொல்லும் ஒருவனாவது அந்நிலையினை எட்டியவனா என்றால் தலையினை குனிவார்கள், ஆம் தங்களால் அடையமுடியா ஒன்றை காட்டி மக்களை குழப்புவது அவர்களுக்கு கொடுக்கபட்ட திட்டம்

    இவர்களை புறந்தள்ளி ஆகம விதிகளையும் வழிபாடுகளையும் காக்க வேண்டியது இந்து மக்களின் கடமை

    இந்த உலகில் வேதவழிபாடும், யாக சாலையும், மந்திரங்களும் தனி ஆச்சரியமும் பாரம்பரியமுமானவை, இந்துக்களின் தனிபெரும் அடையாளம் அவை, அதனை ஒவ்வொரு இந்துவும் காக்க வேண்டும்

    அதனை ஒருவன் உடைக்க முயலுகின்றான் என்றால் அவன் இந்துமத ஆன்மாவினை அழிக்க முயலுகின்றான் என பொருள்

    அதை புத்தன் செய்தான், சமணர் செய்தார்கள் கடைசியில் வீழ்ந்தார்கள் வேதம் தன்னை நிறுத்தி கொண்டது

    திருமூலரும் பெரும் ஞானிகளும் அகம் பிரம்மாஸ்மி என உணர்ந்த நிலையிலும் பிராமண துவேஷமோ, ஆகம வழிபாட்டுக்கு எதிரானவர்களோ அல்லாதவர்களாக இருந்தார்கள் அதை இந்துக்கள் உணர்தல் வேண்டும்

    ஆம் சித்தர்களோ ஞானியரோ கோவில்களையோ பிராமணர்களையோ வெறுத்தவர்கள் அல்ல, வேதத்தின் அவசியம் அவர்களுக்கு தெரிந்திருந்தது

    இதனை உணர்ந்து இந்துமக்கள் இந்த கள்ளநரிகளிடம் விழிப்பாக இருத்தல் வேண்டும்

    தமிழனுக்கும் யாக வழிபாட்டுக்கும் ஆகமவிதிக்கும் தொடர்பில்லை என்றால் இவ்வளவு பெரும் ஆலயமும் ஆகமவிதி பூஜையும் எப்படி வந்தது?

    ஆசியா முழுக்க ஆண்ட ராஜராஜனும் இன்னும் பெரும் மன்னர்களும் ஏன் வேதங்களுக்கு பணிந்தார்கள்? உண்மையிலே அவை பொய் என்றால் அம்மன்னர்கள் ஏன் ஏற்க போகின்றார்கள்?

    மாறாக ஏற்று அவ்வளவு பெரும் அடையாளம் தந்தார்களே ஏன்?

    தமிழன் முழு வேதவழி இந்துவாக இருந்தான், அதை பல இடங்களில் காணலாம், இதோ பாடல்கள்

    ஆம், தமிழர்களுக்கும்,வேதத்திற்கும் தொடர்பே இல்லை, இந்திய ஞானமரபுக்கும் தமிழனுக்கும் தொடர்பே கிடையாது என்பது திராவிட கோஷ்டிகளின் புலம்பல்

    உண்மையில் அவைகளுக்கு தமிழ் இலக்கியம் முழுக்க தெரியுமா என்றால் தெரியாது, அவர்களாக சில குறட்பாக்களைப் படித்து வள்ளுவன் இந்து இல்லை என்பது மீதி திருக்குறளை மறைப்பது

    அவர்களாக சில புறநானூற்று பாடல்களை சொல்வது மீதியினை மறைப்பது, அவர்களுக்கு தெரிந்த கவிஞன் பாரதிதாசன் எனும் புலவனும் அவனின் தமிழ்வெறி வரியும், மற்றபடி பாரதியும் தெரியாது சங்கப் புலவனும் தெரியாது

    அவ்வையார் தெரிந்தாலும் அவர் பாடிய முருகனையும் பிள்ளையாரையும் பார்த்து கண்ணை மூடுவார்கள், இளங்கோவினை பார்த்தாலும் அவன் சொன்ன இயக்கி, இந்திரவிழா எல்லாம் பார்த்து முகத்தைப் பொத்திக் கொள்வார்கள்

    மூவேந்தர் என்பார்கள் மூவேந்தரும் இந்துக்கள் இந்து ஆலயம் கட்டினார்கள் என்பதை மறைப்பார்கள், பல்லவன் கலை என்பார்கள் அக்கலையில் கோவிலும் இந்துமத சிற்பங்களும் எழும்பின என்பதை சொல்லமாட்டார்கள், அவ்வளவு திருட்டுத்தனம்.

    இந்த திமுகவின் பிக்பிரதரும், முன்னாள் ஆர்மி ஜெனரலுமான அண்ணா எவ்வளவு பெரும் பொய்களைச் சொல்லியிருக்கின்றார் என்பதைப் பாருங்கள்

    தேவர்களை வேண்டி தீயில் வேட்பது அறக்கள வேள்வி.

    நான்மறையாளரைச் சுற்றமாகக் கொண்டு, அடிபணிந்த அர்சர் ஏவல் செய்ய, தலையங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தான் என மாங்குடிக்கிழார் கூறுவார்

    இந்தப் பதிற்றுப்பத்துப் பத்துப் பாடல் சொல்வதைப் பாருங்கள், சேரன் பார்ப்பனரைக் கேட்டு யாகம் செய்த காட்சியினைச் சொல்லும்.

    பல்யானை செல்கெழுகுட்டுவன் கௌதமனாருக்காக பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு பத்து பெருவேள்வி வேட்பித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 3)

    பெருஞ்சேரல் இரும்பொறை வேள்விக்குரிய விதிகளைக் கேட்டு வேள்வி வேட்பதற்கு முன், தான் இருக்க விரதங்களை முறைப்படி முடித்து வேள்வி முடித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 74)

    பாண்டியருக்கும் இக்காட்சி உண்டு

    பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல யாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப்பெயர் பெற்றான் என்பது வரலாறு

    சிலப்பதிகாரம் என்ன சொல்கின்றது?

    “”பேரிசை வஞ்சிமூதூர்ப்புறத்து தாழ்நீர் வேலி தண் மலர்ப்பூம் பொழில் வேள்விக்கான மாளிகை கட்டி நன் பெரு வேள்வி முடித்த பின்.”

    சேரமான் செங்குட்டுவன் வஞ்சிமாநகரின் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த இடத்தில் வேள்விச்சாலை அமைத்தான். வேள்விமாக்களைக் கேட்டு உரிய முறையில் ராஜசூயம் வேட்டான்

    அதை ஒட்டிச் சிறையிருந்த எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தான். வந்திருந்த மன்னருக்கேற்ப வரிசை முடித்தான்

    அதியமான் வாழ்வு பற்றி புற நானூறு இப்படி சொல்கின்றது

    அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்கள் “அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்” சிறப்பெய்தினர் (புறம்.99) வேளிர்கள் வேள்விக் குண்டத்தில் தோன்றியவர் என்ற வரலாறு உண்டு. சங்க காலத்தில் அரசர் வேள்வி வேட்டலை மிகச் சிறப்பாகக் கருதினர்.

    சங்க காலத்திற்குப்பின் வந்த பல்லவரும் பாண்டியரும் வேள்வியில் ஈடுபாடு நிறைந்து விளங்கினர். ஒரு பாண்டிய மன்னன் காலையிலும் மாலையிலும் அக்னியில் ஹோமம் செய்தான் என்று தளவாய்புரம் செப்பேடு கூறுகிறது.

    பாண்டியர்களில் அரிகேசரி மாறவர்மன் ஹிரண்யகருப்பம், துலாபாரம், பகு சுவர்ணம் என்பவற்றைச் செய்தான்

    தேர்மாறன் என்னும் பாண்டியனும் எண்ணிறைந்த கோசஹஸ்ரமும், ஹிரண்யகருப்பமும், துலாபாரமும், செய்தான் என்று வேள்விக்குடி செப்பேடுகள் குறிக்கின்றன.

    மாறவர்மன் இராஜசிம்மன் துலாபாரம் செய்தான் என்றும் சின்னமனூர் செப்பேடு கூறுகிறது.

    பல்லவர்கள் முறைப்படி பல வேள்விகளை வேட்டவர்கள் என்று அவர்களது கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவ ஸ்கந்தவர்மன் என்பான் அக்னிஷ்டோமம், அச்வமேதம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை வேட்டான்.

    குமார விஷ்ணு அச்வமேத யாகம் செய்தான். சோமயாகம் செய்யாதவரே பல்லவ குலத்தில் கிடையாது என ஒரு செப்பேடு குறிக்கிறது. அவர்கள் பல வேள்விகளை வேட்டதால் பிரும்மண்யம் நிறைந்தவராய் இருந்தனர். அதனால் பரம பிரும்மண்யர் என்று அழைக்கப்பட்டனர்.

    சோழர்களில் முதல் ராஜாதி ராஜன் அச்வமேத யாகம் செய்தான் என அவன் கல்வெட்டுகள் கூறுகின்றன. விஜயாலயன் வழிவந்தவர்களில் இராஜாதி ராஜன் ஒருவனே அச்வமேத யாகம் செய்தவன்.

    இதோ சங்க கால புலவன் முதுகுடுமி பெருவழுதியி எழுதிய பாடல்

    “நல் பனுவல், நால் வேதத்து
    அருஞ் சீர்த்திப் பெருங்கண்ணுறை
    நெய்மலி ஆவுதி பொங்க, பல் மாண்
    வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
    யூபம் நட்ட வியன் களம் பல கொல்?”

    அதாவது “வேத‌ நூல் சொன்னபடி வேதவிதிப்படி நெய்யும் சமித்தும் பொரியும் இட்டு நீ செய்த புகழ்மிக்க போற்றற்கரிய பெரும் யாகங்களை செய்த யாகசாலையில் நீ நிறுத்தி வைத்த தூண்களின் தொகை அதிகமா? ”

    இதில் தூண்களின் எண்ணிக்கை அல்ல விஷயம், தமிழன் நெய்யிட்டு யாகம் செய்திருக்கின்றான் என்பதுதான் கவனிக்கத் தக்கது

    அடுத்தபாடல்

    “எருவை நுகர்ச்சி, யூபநெடுந்தூண்
    வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம்
    அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்”

    இது கல்லணை கட்டிய கரிகாலனை பற்றி கருங்குழல் ஆதனார் பாடிய பாடல், பொருள் என்னவென்றால் “வட்ட வடிவமாக செய்யப்பட்ட மதில் சூழ்ந்த வேள்விச் சாலையில்,கருட சயனம் என்கிற வேள்வித் தூணை நட்டு வேள்விகள் பல செய்து அறிவுடையாளனாக விளங்கிய வேந்தனே”

    ஆக கரிகாலன் வேள்வி செய்திருக்கின்றான், வேள்வித் தூணை நட்டிருகின்றான்.

    அடுத்து ஒரு வாழ்வு தத்துவ பாடல்.

    “வாழச் செய்த நல்வினை அல்லது
    ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
    ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
    முத்தீப் புரையக் காண்தக இருந்த
    கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,
    யான்அறி அளவையோ இதுவே”

    அதாவது, நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்.

    ஆம் இங்கும் யாகம் பற்றி சொல்லபடுகின்றது

    மூவேந்தர் கூடிய இடத்தில் ஒளவையார் சொன்ன பாடல் இது.

    “ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
    நான்மறை முதல்வர் சுற்ற மாக
    மன்ன ரேவல் செய்ய மன்னிய
    வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே ” – புறம் 26

    இதன் பொருள் தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய மனவலிமையோடு,
    நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற மன்னர்கள் உன் சொற்படி கேட்டுப் பணிவிடை செய்ய, நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச் செய்து முடித்த பெருமை வாய்ந்த வாளினை உடைய வேந்தனே.

    இதோ கோவூர் கிழார் எனும் புலவனின் வரிகள்

    “மறவர் மலிந்த தன்
    கேள்வி மலிந்த வேள்வி தூணத்து” – புறம் 400

    அதாவது போர் மறவர்கள் மிகுந்த படைக்கலத்தையும், கேள்வி அறிவிற் சிறந்த மறையோர்கள் நிறைந்த வேள்விச் சாலையில் தூண்களை நிலைநாட்டியவன் என்று சோழன் நலங்கிள்ளியை கோவூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

    “கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
    அருங்கல நீரோடு சிதறிப் பெருந்தகை”
    – புறம் 362

    இதன் பொருள் பலநூல்களை படித்து வேள்வி செய்யும் அந்தணர்க்கு நீரைவார்த்து தானம் வழங்கும் பெருந்தகை.

    இன்னும் எவ்வளவோ உண்டு, ஆம் தமிழரின் இலக்கியமெல்லாம் அவன் அந்தணர்களை ஆதரித்த கதைகளும் அவர்கள் மன்னனுக்காக வேள்வி செய்த வரிகளும் எங்கும் நிறைந்திருக்கின்றன‌

    அது குறளில் உண்டு, புற நானூற்றில் உண்டு இன்னும் பல இடங்களில் உண்டு, அதை ஆதாரத்துடன் சொல்ல முடியும்

    இதனால் திராவிட மிஷனரி கைகூலிகளை புறம் தள்ளுங்கள், நெல்லை மக்கர் அதை சொன்னான் செத்த சவம் இதை சொன்னான் என்றால் புறந்தள்ளுங்கள், அதை மறுத்து சொல்ல ஆதாரம் வேண்டுமென்றால் எம்மிடம் வாருங்கள், நாம் தயாராக எப்பொழுதும் இருக்கின்றோம்

  13. இந்துக்களின் பஞ்சாங்கமும் நாள்காட்டியும் வானிலையினை அடிப்படையாக கொண்டவை, பருவகால நிலைகளை வானியல் அசைவுகளுடன் கோள்களின் சஞ்சாரத்துடனும் சரியாக சொல்பவை

    12 ராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை சரியாக 12 மாதங்களாக பிரித்தார்கள், அந்த பிரிவுகளை மாதங்கள் என்றார்கள், கோள்களின் சஞ்சாரபடி என்னென்ன பலனும் பாதிப்பும் பூமிக்கு வரும் என மானிடருக்கு உரைத்தார்கள்

    இன்றும் பரசுராமனின் கேரளத்தின் ஒவ்வொரு மாத பெயரும் 12 மாத பெயர்களே, இந்த ஆடிமாதம் அவர்களுக்கு கற்கடக மாதம்

    அதாவது கடகராசி மாதம்

    இந்த கடகராசியில் சூரியன் வரும் மாதம் ஆடிமாதம், கடகராசி சில விஷயங்களுக்கு அடையளம் காணபடுவது

    முதலாவது அது சந்திரனின் ராசி, இரண்டாவது அது பித்ருக்களின் சம்பந்தமான ராசி, மூன்றாவது அது நீர் ராசி

    அப்படிபட்ட ராசி மண்டலத்தின் சந்திரன் சூரியன் வரும் பொழுது தனி சக்தி பெறும், குரு அங்கு உச்சமடையும்

    சந்திரன் அன்னை ஆதிபராசக்தியின் அம்சமாகவும் சூரியன் சிவனின் அம்சனாகவும் அறிபடுவதால் அமமாதத்தில் சந்திரன் பெரும் சக்தி அன்னையின் தனிபெரும் சக்தியாகின்றது

    அந்த பாதிப்பு பூமியிலும் உண்டு அது அன்னையின் சக்தி பெருகி நிற்கும் மாதம் என்பதால் ஆடிமாதம் அம்மனுக்கு என வகுத்தது இந்துமதம், கடகராசியின் நீர் ராசியில் குரு அம்சமும் சேர்வதால் அந்த மாதத்தில் மழைபெருகும் அந்த மழையின் நீரில் குருவின் அருளால் சக்தி அதிகமாயிருக்கும்

    அந்த நீரை எல்லோரும் பாவிக்கும்படியும் அந்த சக்திமிக்க நீரில் குளித்தும் அதை தொட்டெடுத்து அன்னைக்கு அபிஷேகம் செய்து சக்திபெறவும் அது பல சம்பிரதாயங்களையும் விழாக்களையும் உருவாக்கிற்று

    அன்னை வழிபாடும், ஆடிபெருக்கும் இன்னும் பலவகை கொண்டாட்டமும் இதனாலே

    கடகராசி பித்ருக்களுக்குரியது என்பதால் ஆடி அமாவாசையினை அது பித்ருக்களுக்கான பெரும் நாளாக ஆக்கிற்று

    அந்த ஆடிமாத நீர்நிலைகள் குரு அருளால் தனித்து நிற்பதால் அந்த நீரை பயிர்களுக்கும் கொடுக்க சொன்னார்கள், “ஆடிபட்டம் தேடி விதை” என இந்துக்கள் சொன்னது அதனாலே

    சந்திரனின் ராசிஉச்சத்தில் இருக்கும் நேரம் அதுவும் சூரியனோடு சேர்ந்து நிற்கும் நேரம் அந்த பிரஞ்ச சக்தியின் தனி அருளை பெறுவதற்குத்தான் ஆடிமாத வழிபாடுகளை செய்தார்கள்

    இந்த ஆடிமாதமே மகாபாரத யுத்தம் நடந்ததாக ஒரு செய்தி உண்டு, அப்படியே ராமன் போரை தொடங்கியதாகவும் இன்னொரு புராண செய்தி உண்டு

    ஆடிமாதம் சூட்சும ரீதியாக சக்திமிக்கது என்பதால் துர்தேவதைகள் அல்லது துர்சக்திகளின் ஆதிக்கமும் கூடும், அதனை அம்மாதத்தில்தான் பரம்பொருள் அடக்கி வைத்ததாக சொல்லி நம்பிக்கை ஊட்டியது இந்துமதம்

    அன்று பாரதம் முழுக்க ஆடிமாதம் அம்மனுக்கான மாதம் என பெண்களை பெருமைபடுத்திற்று

    ராமகாதையும், பாரத தத்துவமும் நாடெங்கும் சொல்லிகொடுத்தபடியே அம்மனை கொண்டாடினார்கள் அதாவது பெண்களை கொண்டாடினார்கள்

    பெண்கள் கண்ணீர் எவ்வளவு வலுவானது என்பதையும் பெண்களை கொடுமைபடுத்தினாலோ அழவைத்தாலோ என்னாகும் என்பதை எல்லா கோவில் வாசலிலும் சொல்லி கொடுத்தார்கள், பெண் தெய்வங்களை கொண்டாட சொன்னார்கள்

    அன்று ஆடியின் முதல் 18 நாளும் கீதை உபதேசிக்கபட்ட காலம் உண்டு, பாரத போரின் 18 நாட்களில் 18 பெரும் சக்திகள் அழிந்த கதையினை சொன்ன காலமும் உண்டு

    ராமாயண பெருமை சொல்லி சீதை கண்ட துயரை சொல்லிகொடுத்த காலம் உண்டு, இன்றும் அந்த மரபு கேரளாவில் உண்டு ஆடி முழுக்க ராமகாதை பாடபடும், அன்றிலிருந்தே கேரளம் அப்படித்தான் இதனாலே கம்பராமாயணம் பாடிய கம்பன் சேரநாட்டில் அடைக்கலமானான்

    பின்னாளைய அந்நிய ஆட்சியில் இந்துமதன் தன் ஸ்தானத்தை இழந்து நலிவுற்றபொழுது எல்லாம் மாறிற்று, நிறைய சம்பிரதாயங்கள் இழக்கபட்டன ஆனால் அம்மனுக்கான கொண்டாட்டம் அதில் தனித்து நிற்கின்றது

    ஆடியில் திருமணம் செய்யகூடாது என்பதும் ஆடியில் மங்கள காரியங்கள் செய்யகூடாது என்பதும் மூட நம்பிக்கை அல்ல, ஆடியில் வெள்ளம் வந்து ஆவணியில் மணமும் மங்களமும் ஆரம்பிக்கும்

    அந்த வாழ்வு எவ்வளவு சிரமமானது என்பதையும், வாழ்வுக்கு புராணமும் தத்துவமும் என்னென்ன போதனைகள சொன்னது என்பதையும் இந்துக்களுக்கு கோவில்களில் சொல்லிகொடுத்தார்கள்

    ஆடிமாதம் என்பது வாழ்வின் ஞானம் பெறும் மாதம், வாழ்வினை தொடங்க பெற வேண்டிய ஞானத்தையும் தத்துவங்களையும் பெறும் மாதம், அந்த தியான நிலையில் இருக்கவேண்டும் என்றுதான் மங்கள காரியங்களை தவிர்க்க சொன்னார்கள், கொண்டாங்களை ஒதுக்கிவைக்க சொன்னார்கள்

    பாரதமும் ராமாயணமும் அம்மன் அவதார கதைகளும் கோவிலில் திருவிழா என ஏற்பாடுசெய்யபட்டு மக்களுக்கு புகட்டபட்டது

    ஞானகாரியங்களை தாண்டி வானியல் அம்சங்களை தாண்டி அம்மாதம் புதுமழை காலம், அம்மாதம் அடுத்து விவசாயம் களைகட்டும்

    அந்த புதுவெள்ளமும் காலமாற்றமும் சில நோய்களை ஏற்படுத்தும் இதனாலே கோவில்களிலும் தெருக்களிலும் மஞ்சள் தெளிக்க சொன்னார்கள், வேப்பிலையும் இன்னும் பல பொருட்களும் புழங்குமாறு பார்த்து கொண்டார்கள், அது அம்மனுக்கு பிடிக்கும் என்றார்கள்

    கூழ் போன்ற உணவுகளை கோவில்களில் கொட்டி கொடுக்க சொன்னார்கள்

    இது சீதோஷ்ன நோய்களை கட்டுபடுத்தும் இன்னொன்று மக்களிடம் ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தும் அந்த ஐக்கியம் ஆறு குளம் வயல் என எங்கும் சேர்ந்து உழைக்கும் மனதை கொடுக்கும்

    ஒவ்வொரு காரியத்தையும் இந்தமாதம் பார்த்து பார்த்து ஏற்படுத்தினார்கள் இந்துக்கள்

    இந்துமதம் மானிட வாழ்வில் அவர்கள் மனம் உணர்ந்து மனநிலை உணர்ந்து அவர்களை வழிநடத்தவும் அந்த வழிநடத்தலில் பிரபஞ்ச சக்தியினை கலந்து கொடுக்கவும் ஏற்பாடுகளை செய்த ஞானமதம்

    ஆடி கொண்ட்டாட்டமும் வழிபாடும் இதர சம்பிரதாயங்களும் அதைத்தான் சொல்கின்றன‌

    ஒவ்வொரு நாளும் ஆடியில் முக்கியமானது, அந்நாளில் அம்மனை தவறாது வணங்குங்கள் உங்களால் என்ன செய்யமுடியுமோ அதை ஒரு அம்மனுக்கு செய்யுங்கள், பலன் உண்டு

    முடிந்தால் ஒரு நேரமாவது சீதை கதையும் , பாரத பாஞ்சாலி கண்ட துயரங்களையும் மனதால் நிறுத்தி ஒரு ஆணும் பெண்ணும் என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யகூடாது என சிந்தியுங்கள்

    திருமணவாழ்வை தொடங்க இருப்பவர்களுக்கும் ., வாழ்வில் நிம்மதி இன்றி இருப்பவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு அது பெரும் நம்பிக்கையும் ஆறுதலையும் கொடுக்கும்

    கைகேயி, கூனி கதைகளை தாண்டி பொன்மானை கேட்டாள் சீதை என்பதையும் அவள் கேட்டதும் பொன்மான் உண்டா என யோசிக்காமல் ஓடிய ராமனின் நிலையும் நினைத்தாலே ஆயிரம் சிந்தனை பெருகும்

    ஆம் தவறு இரு பக்கமும் உண்டு, அந்த தவறுக்கான விலை என்னவென்று உணரமுடியும் பெரும் பாடம் படிக்கமுடியும்

    மனைவியின் விருப்பமின்றி சூதாடிய தர்மனின் நிலையினை படித்தாலே ஆண்களுக்கு ஞானம் வரும், பாஞ்சாலி கதையினை படித்தால் கண்ணனை பற்றினால் எப்பெண்ணும் வாழ்வாள் எனும் நம்பிக்கை வரும்

    அம்மன் ஆலயங்கள் பெண்களுக்கு தனி சக்தி கொடுப்பவை எனும் வகையில் பெண்களே இச்சமூகத்தின் இயக்கும் சக்திகள் எனும் வகையில் அம்மனுக்கு வழிபாடும் பெரும் யாகபூஜைகளும் செய்யபட்டால் நல்லது

    ஒவ்வொரு நாளும் முக்கியம் எனினும் ஆடிமாத வெள்ளியெல்லாம் தனி சிறப்பு வாய்ந்தது

    நீர்நிலைகளுக்கான மாதம் இதுவே ஆடிபெருக்கு அதை சொல்லும், பித்ருக்களுக்கான மாதமும் இதுவே

    தமிழகத்தில் இது கிராம கொடைவிழாக்கள் நடக்கும் காலம், இந்து தெய்வங்களில் ஒரு காலமும் பெரும் தெய்வம் சிறுதெய்வம் என்ற பிரிவினை எல்லாம் இல்லை, அதெல்லாம் மிஷனரிகள் தூண்டிவிட்ட வார்த்தைகள்

    மதுரை போன்ற பெரும் ஆலயங்களில் வீரபத்திரர் இருப்பார், அவர் கிராமத்தின் காவல் தெய்வமாகவும் இருப்பார்

    அதாவது சிவனின் அம்சங்கள், பார்வதியின் அம்சங்களே, விஷ்ணுவின் அம்சங்களே கிராம தெய்வங்களாயின‌

    சிவனின் அம்சம் சுடலை மாடன் என உக்கிர தெய்வங்களானது, அன்னையின் அம்சம் இயக்க்கி எனும் சக்தியாகி பின் இசக்கி என மருவிற்று

    இயக்கும் சக்தி கொண்டவள் அன்னை என்பதே இசக்கி என்றாயிற்று

    கருப்பன் போன்ற காவல் தெய்வங்கள் விஷ்ணுவின் அம்சமாயிற்று

    ஒவ்வொர் மானிடருக்கும் அவரவர் தொழில் வாழ்க்கைமுறைக்கு ஏற்றபடி தெய்வ அம்சங்களை சொன்ன இந்துமதம் கிராம மக்களுக்கும் அவர்கள் வாழ்வுக்கும் காவலுக்கும் மூல பரம்பொருளின் அம்சத்தை சொன்னது

    அவர்களுக்கு இந்த ஆடிமாதம் பெரும் திருவிழா நடக்கும்

    இன்றும் மேளம், வில்லுபாட்டு, கொடை, சமையல், அலங்காரம் என பண்டை இந்துக்களின் பாரம்பரியத்தை கொடைகள்தான் காட்டிகொண்டிருக்கின்றன‌

    ஊர் கூடி மகிழும் ஏற்பாடு அது, கவனியுங்கள் அந்த கோவில்களும் சாமிகளும் இல்லையென்றால் ஏன் ஊர் ஒன்றாக கூடபோகின்றது, ஒன்றுபட இருந்து உணவருந்த போகின்றது?

    கோவில்களே இந்துக்கள் ஒன்றுபட்ட இடம், நல்லது கெட்டது பேசி முடிவெடுத்த இடம், அம்மன் கோவிலோ சுடலை கோவிலோ ஊரின் உச்சநீதிமன்றமாய் இருந்த காலங்கள் அவை

    தெய்வத்தின் பெயரால் மனசாட்சியோடு வாழ்ந்தார்கள் அன்றைய இந்துக்கள் அதனால் நீதிமன்றமும் இல்லை காவல் நிலையமில்லை இன்னும் பல இல்லை, காவல் தெய்வங்கள் அந்த அற்புதத்தை செய்தன‌

    அம்மன் முன் சொல்லபடும் சத்தியம் எல்லா சட்டத்தையும் விட உயர்வாய் அன்றைய இந்துக்களுக்கு இருந்தது

    அப்படிபட்ட வாழ்வியல் முறைகளை வகுத்து மக்களை மக்களாக அமைதியாக நல்வழியில் வாழ சொன்னவை கிராம தெய்வங்கள், அவைகளின் அசைவில்தான் கிராமங்கள் ஜொலித்தன கிராமங்களின் செழிப்பில்தான் பாரதமே செல்வமாய் மின்னிற்று

    அந்த கிராம தெய்வங்களுக்கு ஆடி மாதமே பிரதானம்

    (பின்னாளைய மிஷனரிகள் தந்திரமாக கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் ஆடியில் திருவிழா என மாற்றினார்கள் , இந்துக்களின் சம்பிரதாயத்துக்கு ஏற்றபடி மாற்றினார்கள்

    இன்றும் தென்னக பிரதான கத்தோலிக்க ஆலயங்கள் ஆடிமாதமே கொண்டாடபடும், கொடியேற்றம் கடாவெட்டு, தேர் என எல்லா இந்து சம்பிரதாயத்தையும் அப்படியே பின்பற்றுவார்கள்

    ஆனால் தெய்வம் மட்டும் வேறு)

    ஆனி, ஆடி தென்னக மக்களின் வாழ்வில் பொருளாதார வளத்தை காட்டிய மாதங்கள்

    ஆனி ஆடி சாரலுக்கு நல்லமிளகு விளையும் அது மேற்கே, அதே ஆனி ஆடி மாதத்தில்தான் பனைபொருட்களின் விற்பனையும் உச்சத்தில் இருக்கும் கருப்புகட்டி போன்றவை அப்படியானவை இன்னும் புஞ்சை விளைச்சலும் கைகொடுக்கும்

    அம்மன் ஆலயமும், சுடலைமாடன் ஆலயமும் நிரம்பிய தென் மாவட்டத்தில் பனைபொருட்கள் அதிகம், அதனால் அந்நேரம் வருமானமும் அதிகம்

    வியாபாரத்துக்கு பெயர் பெற்ற நெல்லை வியாபாரிகள், அந்நேரம் மக்களிடம் பணம் விளையாடுவதை கண்டும் இன்னொரு பக்கம் கோவில் விழாக்கள் நடைபெறுவதை கண்டும் ஆடிமாதம் தள்ளுபடி அறிவித்தார்கள்

    அது ஆடி தள்ளுபடி என மெல்ல மெல்ல வளர்ந்தது, பின் நெல்லையர்கள் பல இடங்களுக்கு பரவி வியாபாரத்தில் ஜொலிக்க இன்று உலகெல்லாம் ஆடி தள்ளுபடி உண்டு

    ஆம் அன்று தென்னக மக்கள் பணம் வந்தவுடன் தெய்வத்தினை தேடி சென்று நன்றி தெரிவித்தார்கள், மனம் உவந்து அளித்த கொடைகள் பின்னாளில் அதே மாதங்களில் நிலைபெற்றது, தொடர்கிறது

    தென்னகத்தில் பல தெய்வங்களை வணங்கி வந்தாலும், இரு தெய்வங்களுக்கு அப்பகுதியில் சிறப்புகள் அதிகம்.

    ஒருவர் சிலப்பதிகார காலத்திலே சேரநாட்டின் (கேரளம்) எல்லைக்கு காவல் தெய்வம் என அழைக்கபட்ட இசக்கி அம்மன், கேரளாவில் இன்றும் அம்மனே பிராதான காவல் தெய்வம்.

    முற்காலத்திலே அப்பகுதியின் கேரள எல்லையான முப்பந்தல் இன்றும் என்றும் இசக்கியம்மனின் பிரதான கோயில்.

    இன்னொருவர் சுடலைமாடன்.

    இசக்கியம்மனாவது கேரளம் மற்றும் தென் தமிழக தெய்வம், ஆனால் நெல்லை,கன்னியாகுமரி பகுதிகளின் பிராதன காவல் அரசர் நிச்சயமாக சுடலைமாடன் சாமியே.

    அவரின் பிரதானம் எனவென்றால் மகா உக்கிரமான சிவ அம்சமான அவர் இந்த பகுதிகளை மிகவும் நேசிப்பவர், மண்ணை பிரிய மனமில்லாதவர், வேறு எங்கும் செல்ல மாட்டார், அவ்வளவு பிரியம் அவருக்கு அந்த மண்ணின் மீது.

    உலகில் வேறு எங்கும் அவரை காணமுடியாது, உலகினை விடுங்கள் தாமிரபரணிக்கு வடக்கே கூட கிடையாது.

    நெல்லை,தூத்துகுடி,கன்னியாகுமரி பகுதிகளை தவிர எங்கும் செல்லமாட்டார். மிக மிக பிராதான் கோயில்கள் அவருக்கு இங்கு மட்டுமே உண்டு.

    அங்கு எல்லா ஊர்களிலும் இருவருக்கும் அல்லது ஒருவருக்காவது கோயில்கள் உண்டு, ஊரின் மின்கம்பிகளை விட இவர்களின் ஆலயங்கள் அதிகமான ஊர்களும் உண்டு, எங்கும் வியாபித்திருப்பவர்கள், மக்களுக்கும் இவர்களின் மீது அவ்வளவு பக்தி, மரியாதை.

    ஒரு விஷயத்தினை இங்கு கவனிக்க வேண்டும்

    தமிழக மக்கள் ம‌க்கள் சாதாரமானவர்கள் அல்ல, 50பைசா மளிகையை கடைக்காரர் ஏமாற்றினால் கடையை மாற்றுவார்கள். அரசு சரியில்லை என்றால் 5 வருடத்தில் மாற்றுவார்கள்

    தொன்றுதொட்டு இன்றுவரை இந்த தெய்வங்களை கொண்டாடுகின்றார்கள் என்றால், நிச்சயமாக அந்த தெய்வங்களின் சக்தி மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை, வாழ வைக்கும் நம்பிக்கை.

    அந்த தெய்வம் அவர்களை வாழவைத்துகொண்டிருக்கும் நம்பிக்கை

    ஆம் ஆடிமாதம் அற்புதமானது, அம்மன் வழிபாட்டில் மனம் லயித்து ஏகபட்ட ஞானங்களை பெற வேண்டிய மாதம்

    சந்திரனும் சூரியனும் இல்லாவிட்டால் உலகில் மழை இல்லை, மழை இல்லாவிட்டால் உயிர்களில்லை. நிலம் நீர் பட்டவுடன் துளிப்பது போல அதாவது உயிர் சக்தி என்பது மழையும் மண்ணும் கலந்தவுடன் வெளிபட்டு எல்லா உயிருக்கும் ஆதாரமான உணவினை உயிர்சக்தியாய் கொடுப்பது போல பெண்ணும் பெரும் சக்தி என்பதை சிந்துக்கும் மாதம் இது

    ஆம் இயக்கும் பெரும் சக்தியே மழையாய் பொழிகின்றது அந்த மழை ஆறாய் ஓடிவந்து உலகுக்கு உணவூட்டுகின்றது, புல்முதல் மானிடர் வரை எல்லாருக்கும் உயிர்சக்தியாய் அது மாறிகொண்டே இருக்கின்றது, கடைசியில் எல்லா உயிர்சக்தியும் இறையிடம் தஞ்சமடைகின்றன‌

    மழைபோல் நிலம் போல் ஆறுபோல் பெண்ணும் பெரும் சக்தி என பெண்களை போற்ற சொன்ன மதம் இந்துமதம், அந்த பெரும் உயிர்சக்திக்கு பெண் தெய்வ வழிபாட்டை கொடுத்து மானிட ஞானம் முதல் பிரபஞ்ச சக்திவரை பெற்று, மானிடம் தானும்வாழ்ந்து பித்ருக்கள் கடமையினை செய்து இன்னும் பல வகையில் மேன்மை அடைய இம்மாதத்தில் பெரும் ஏற்பாடுகளை செய்த மதம் இந்துமதம்

    ஆடியில் செய்யவேண்டிய வழிபாடும் பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்களும் நிரம்ப உண்டு, நல்ல இந்துக்கள் அதை செய்யட்டும், இவ்வொரு இந்துவும் தான் யார் என்றும், தன் பாரம்பரியம் எது என்றும் உணரும் பட்சத்தில் தேசம் தன் பழைய பொற்காலத்தை மீட்டெடுக்கும்

    ஒவ்வொரு இந்துவும் ஆடிமாதத்தில் தங்கள் கடமையினை செய்யட்டும், பிரபஞ்சம் அருள் புரியட்டும், பாரதம் உய்யட்டும்

  14. அதுவரை சேரநாடு, சோழநாடு, பாண்டிநாடு, தொண்டைநாடு என பல பெயர்களில் துண்டு துண்டாக இருந்த தமிழகத்தை, மதுரை சீர்மை, சிவகங்கை சீர்மை என ஏகபட்ட சீமைகளாக இருந்த தமிழகத்தை, வெள்ளையன் மெட்ராஸ் ஸ்டேட் என சொன்ன தமிழகத்தை முதன் முதலில் “தமிழ்நாடு” என சொன்னவன் பாரதி

    “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
    தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
    தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
    சக்தி பிறக்குது மூச்சினிலே

    வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
    வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
    காதல் புரியும் அரம்பையர் போல் – இளங்
    கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

    காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
    கண்டதோர் வையை பொருனைநதி – என
    மேவிய யாறு பலவோடத் – திரு
    மேனி செழித்த தமிழ்நாடு

    முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று
    மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்
    எத்தனையுண்டு புவிமீதே – அவை
    யாவும் படைத்த தமிழ்நாடு

    நீலத் திரைக்கட லோரத்திலே – நின்று
    நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
    மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்
    மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு”

    வரலாற்றில் முதன் முதலாக தமிழ்நாடு எனும் சொல்லை அவனே பாடினான், அவன் அப்படி பாடிய பொழுது ராம்சாமியும் அண்ணாவும் எங்கிருந்தார்கள் என அவர்களுக்கே தெரியது

    கருணாநிதி பிறக்கவே இல்லை

    அதுவும் திராவிட நாடு என்பதை தாண்டி தமிழ்நாடு எனும் பெயருக்கு இவர்கள் வருவதற்கே 1968 ஆயிற்று..

    ஆக “தமிழ்நாடு தினம்” என ஒன்றை சொல்லவேண்டுமானால் அதற்கு மகாகவி பாரதியின் பிறந்தாளைத்தான் சொல்லமுடியும், தமிழ்பேசும் நிலபரப்பு தமிழ்நாடு என சொன்னவன் அவனே..

    இந்த திமுகவினர் அடிக்கடி சொல்லும் விஷயம், சங்கரலிங்கம் என்றொரு தியாகி இருந்தார், தமிழ் உணர்வாளர் அவர் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார், காமராஜர் ஈவிரக்கம் இன்றி அவரை கொன்றார் என்பதாகும்

    உண்மையில் இது மகா மோசடி, இதுபற்றி இன்னொரு தகவல் உண்டு. அரு.சங்கர் எழுதிய “பெருந்தலைவர் காமராசர்” எனும் நூல் இப்படி சொல்கின்றது

    சங்கரலிங்கம் இந்தி படித்தால்தான் தமிழன் அகில இந்திய அளவில் நன்னிலை அடைய முடியும் என்பதில் உறுதியாய் இருந்தார்

    ராஜாஜி மேல் அவருக்கு பற்று அதிகம். சங்கரலிங்கத்தின் மகள் திருமணமே அவரின் தலைமையில் 1931ல் நடந்திருக்கின்றது

    அப்படி ஒரு தேசாபிமானி சங்கரலிங்கம்

    1944ல் சங்கரலிங்கம் வாழ்வு தடம்மாறுகின்றது, மும்பையில் அவர் மகன் இறந்துவிடுகின்றான். அத்தோடு மனைவியோடும் மகளோடும் உறவை அறுக்கும் சங்கரலிங்கம் ஒரு மாதிரி மனமுடைந்து சந்நியாச கோலத்துக்கு வருகின்றார்.

    தன் பணம் ஐந்தாயிரத்தை பெண்கள் கல்விக்கு கொடுத்துவிட்டு தன் சொந்த ஊரான விருந்துநகருக்கு அன்மைய கிராமமான மண்மலைமேடு எனும் ஊருக்கு வருகின்றார்.

    அங்கு 1956ல் ஒரு தானியகடை திறக்கின்றார், அந்த கடை ஒரு நள்ளிரவில் கொள்ளையடிக்கபடுகின்றது, மனமுடைந்த சங்கரலிங்கம் பட்டிணி போராட்டத்தை தொடங்குகின்றார், அவர் சுய அறிவில் எழுதிய கோரிக்கைகள் நான்கு

    1) நாட்டை ஆள்வோர் ஆடம்பரமின்றி காமராஜர் போல் எளிய வாழ்வினை காந்தி வழியில் தொடர வேண்டும்

    2) அரசு ஊழியர் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும்

    3) தமிழ்நாட்டு பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்க பட வேண்டும்

    4) தன் சொந்த கடையில் காணாமல் போன பொருளுக்காய் நீதி வேண்டும், இந்நாட்டுக்காய் தான் தொடர்ந்து உழைக்க அந்த நீதி வேண்டும்

    இவை நாலும்தான் அவரின் உண்மையான கோரிக்கைகள், இதில் தமிழ்நாடு எனும் பெயர் கோரிக்கையே இல்லை.

    அவரின் கோரிக்கையினை யாரும் லட்சியம் செய்யவில்லை.

    அந்நேரம் நாம் தமிழர் போல் சுற்றிகொண்டிருந்த அனாமயதேய கோஷ்டியான திராவிட புலிகள் அவரிடம் சென்று, இங்கே இருந்தால் உங்களை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் , நகருக்குள் வாருங்கள் என அழைத்து ஓலை பந்தல் போட்டு அவரை விருதுநகர் அம்மன் கோவில் பக்கம் அமர வைத்துவிட்டது

    அத்தோடு 4 கோரிக்கையினை வைத்து அவரை பந்தலுக்குள் போட்டது

    அவர் பந்தலுக்குள் கிடக்க, இவர்கள் 4 கோரிக்கைக்கும் மேல் அவர்களாக எழுதி கொண்டே போனார்கள்.

    சந்தண வீரப்பன் கோரிக்கை காட்டைவிட்டு வெளிவரும் பொழுது குட்டி போடுவது போல, ஜல்லிகட்டுக்கான‌ மெரீனா போராட்டத்தின் கடைசியில் பலவகையான “குபீர்” கோரிக்கைகள் வந்தது போல அங்கும் வந்தது

    சங்கரலிங்கம் நினைவிழக்க, இங்கு கோரிக்கைகளின் எண்ணிக்கை கூடி, 70ம் கோரிக்கையாக வந்ததுதான் “சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு” என பெயர் சூட்டபட வேண்டும் இந்தி ஒழிக்கபட வேண்டும்” என்பது

    ஆம், 70 நாட்கள் போராட்டம் நடத்தினார் சங்கரலிங்கம், நாளுக்கொரு கோரிக்கையாக இவர்களே எழுதி கடைசியாக தமிழ்நாடு பெயர்மாற்றம் என எழுதிய அன்று செத்துவிட்டார் சங்கரலிங்கம்

    இல்லையென்றால் தனி தமிழ்நாடு என்ற கோரிக்கை 71ம் நாள் எழுதபட்டிருக்கும்

    ஆக சங்கரலிங்கனாரின் உண்மை கோரிக்கை என்ன? இந்த திராவிட கும்பல்கள் கிளப்பிவிட்ட அரசியல் என்ன என்பதை இனி நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

    காமராஜர் ஏன் தயங்கினார் என்றால் சங்கரலிங்கம் ஒரு நாடார், போராட்டம் நடந்தது காமராஜரின் சொந்த ஊரில், இது போக கோரிக்கை எழுதியதெல்லாம் தேச விரோத கும்பல்

    இதில் காமராஜர் எப்படி தலையிட முடியும்? அதுவும் 70 கோரிக்கைகள்

    ஆக சங்கரலிங்கம் இந்தி வேண்டும் என சொன்னது மறைக்கபட்டது, அவரின் தேசியம் மறைக்கபட்டது.

    அவரின் வறுமை மறைக்கபட்டு, இவர்களாகவே எழுதிய 70 கோரிக்கையாக எழுந்த , சங்கரலிங்கம் கனவிலும் சொல்லாத “சென்னை மாகாணம் தமிழ்நாடு பெயர்மாற்றம்” என்பது ஊதிபெருக்கபட்டு , காமராஜர்மேல் பழி போடபட்டு , சங்கரலிங்கனார் கனவினை அண்ணா நிறைவேற்றினார் என இல்லா பொய்களோடு வரலாறுகளை சொல்லி கொண்டே இருக்கின்றார்கள்.

    வரலாற்றை திருத்துவதில் தங்களுக்கு ஏற்ப வளைப்பதில் அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம், வரலாற்று திரிபுக்கே ஒரு கட்சி நடத்தபடுகின்றது என்றால் அது திமுக ஒன்றுதான்.

    இதில் ஆச்சரியம் என்னவென்றால் தன் பெயரில் தமிழ்நாடு எனும் கோரிக்கை எழுப்பபட்டது என்பது அவருக்கு கடைசிவரை தெரியவே இல்லை என்பதுதான்.

  15. கோடிபேர் அனுதினமும் பிறந்து சாகும் உலகில் எத்தனையோ பலகோடி மானிடர்கள் வந்து சென்ற உலகில் ஒருசிலரே வரலாறு படைக்கின்றார்கள், ஒரு சிலரே வரலாறு ஆகின்றார்கள்

    அந்த அதிசய வரலாற்றில் முக்கியமானவன் கிரேக்க அலெக்ஸாண்டர், உலகையே வென்று அதை கிரேக்க ஞானபடுத்துவேன், கிரேக்க ஞானம் தர்மமுமே அதி சிறந்தது என 16 வயதிலே படைதிரட்டினான்

    20 வயதுக்குள் மேற்காசியாவினை அலற வைத்தான் 25 வயதில் பெரும் அரசனான் , 30 வயதில் வீழ்த்தமுடியா பாரசீக அரசனை வீழ்த்தி மாபெரும் ராஜ்ஜியத்தை அமைத்து கிரேக்கம் முதல் எகிப்துவரை அப்படியே இன்றைய ஆப்கன் வரை பெரும் கிரேக்க தர்ம சாம்ராஜ்யத்தை அமைத்தான்

    இந்தியா எனும் கனவு பூமி அவனுக்கு பொம்மைவைத்து விளையாடிய காலத்திலே உண்டு, செல்வம் மிகுந்த அந்த பொற்கால இந்தியாவினை கைபற்றி மாபெரும் செல்வம் சேர்க்க்க வேண்டும் என்பதே அவன் பெரும் கனவு

    அந்த கனவிலே இந்திய எல்லையில் கால்வைத்தான், தான் ஒரு கிரேக்க மதத்தவன் என்பதும், கிரேக்க தர்மமே உலகில் சிறந்தது என்பதும் அவனின் அசைக்கமுடியா நம்பிக்கையாய் இருந்தது

    இந்தியாவினை கிரேக்கமயமாக்குவேன் என கங்கணம் கட்டி வந்திருந்த அவன், ஆங்காங்கே சாம்பல் பூசி ருத்திராட்டம் அணிந்து அரையாடை உடுத்திய ஆண்டிகளை பரிகாசமாய் பார்த்தான்

    எனினும் கூரிய மதியுள்ள்ள அவனுக்கு இந்திய தர்மத்தை வாதத்திலே வெல்லலாம் என தோன்றிற்று, தண்டமுனி எனும் ஞானியிடம் வாதிட வந்தான்.

    தண்ட முனியும் அலெக்ஸாண்டரும் பேச தொடங்கினார்கள், ஞானமான மறைபொருள் கொண்ட வார்த்தைகள் இவை, தெளிவான‌ ஞான மனங்களுக்கு அற்புதமாய் பொருள் விளங்கும்.

    மாமன்னன் கேட்க மாபெரும் ஞானி தண்டமில்ஸ் பதில் சொன்னார்

    ” உயிருள்ளவையா? இறந்தவைவா? உலகில் எது அதிகம்?

    நிச்சயம் உயிருள்ளவை, ஏனெனில் இறந்தவை என்பது இல்லவே இல்லை

    பெரிய மிருகம் பூமியில் உண்டா? கடலில் உண்டா?

    நிச்சயம் பூமியில் ஏனெனில் கடல் பூமியின் ஒரு பாகமே

    பகலா இரவா எது முதலானது?

    பகல்தான், ஏனென்றால் ஒளிதான் முதன்மையானது

    மனிதன் எந்த மிருகத்தை கண்டு அஞ்சுவான்

    இதுவரை காணாத மிருகத்தை

    ஒரு மனிதன் எப்பொழுது தெய்வம் ஆகின்றான்?

    மற்ற மனிதனால் செய்ய முடியா காரியத்தை செய்யும் பொழுது

    ஒரு மனிதன் தன்னை எல்லோரும் நேசிக்க என்ன செய்ய வேண்டும்?

    ஒரு மனிதன் பெரும் சக்திவாய்ந்தவனாக இருந்தாலும் பிறர் தன்னை கண்டு பயப்படாமல் இருக்க செய்கின்றானோ அவனை எல்லோரும் நேசிப்பர்

    வாழ்வா சாவா எது கொடுமையானது?

    வாழ்வுதான், செத்தபின் ஏது கொடுமை?”

    அதன் பின் அலெக்ஸாண்டர் பேசவில்லை, அவன் மனம் ஏதோ செயதது முதல் முறையாக கிரேக்க ஆன்மீக ஞானம் அவன் மனகண்முன்னால் சரிந்து விழுந்தது, இந்திய ஞானம் விஸ்வரூபமெடுத்து நின்றது

    ஆம், அந்த உரையாடல் வரிகள் சாதாரணமாக தோன்றலாம் அதன் அர்த்தம் அழுத்தமானது

    இறந்தவைகளை பற்றி நினையாதே, நடக்கும் காட்சிகளை மட்டும் பார் கவலை அறுபடும் என்கின்றது முதல் வாதம்

    மிருகம் என்பது உன் உள்ளே உள்ளது என்கின்றது இரண்டாம் வாதம்

    கடவுளே முதன்மையானவர் என்பது மூன்றாம் வாதம்

    மனிதனுக்கு ஆசை கூடிகொண்டே போகும், எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவான் என்பது நான்காம் வாதம்

    மக்களை வாழ வைப்பதே தெய்வத்தின் பணி என்பது ஐந்தாம் வாதம்

    நீ பிறரை பயமுறுத்தி நேசிக்க வைக்காதே அது நிலைக்காது, உண்மையான மதிப்பு உன் வாள்முனையில் உதிக்காது என அவன் செவிட்டில் சொல்கின்றது ஆறாம் வாதம்

    வாழ்வு போராட்டம் மிக்கது கடினமானது அந்த வாழ்வில் ஞானத்தை தேடி அடை, வீணாக ஒன்றும் அறியாமல் செத்துவிடாதே என்கின்றது 7ம் வாதம்

    கிரேக்க தத்துவமும், பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொடுக்கா பதிலை தண்டமில்ஸ் கொடுத்ததில் அப்படியே அமர்ந்துவிட்டான் அலெக்ஸாண்டர்

    பொன்னும் வெள்ளியும் தேடி இந்தியா வந்த அலெக்ஸாண்டர் கடைசியில் இந்து ஞானத்தில் ஞானம் அடைந்து அந்த தண்டமில்ஸை தன்னோடு கிரேக்கத்துக்கு வர அழைத்தான் இந்த ஞானம் கிரேக்கத்தில் பரவ வேண்டும் என்றும் கேட்டு கொண்டான்

    தண்டமில்ஸ் புன்னகை மட்டும் செய்தார், “நீ வந்த காரியத்தை செய் அதில் உனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கட்டும் அதன் பின் என்னை வந்து பார்” என மெல்ல சிரித்தார்

    அலெக்ஸாண்டருக்கு சுருக்கென தைத்தது ஆம் அவன் போரஸுடன் மோதும் முடிவில் இருந்தான், ஞானி ஏதோ சூசகமாக சொல்வது அவனுக்கு புரிந்தது

    நிலத்தில் நடந்தவன் ஏற்கனவே நீரில் விழுந்தவன் போல் திகைத்த நிலையில் இப்பொழுது சேற்றில் நடக்கும் யானைபோல் சிக்கினான்

    அவனின் 30 ஆண்டுகால நம்பிக்கை, கர்வம், கிரேக்க பெருமிதமெல்லாம் நொறுங்கி கிடந்தது, தண்டமில்ஸை தன் குருவாக எண்ண தொடங்கினான்

    இந்தியா ஞானிகளின் நாடு என்பது அவனுக்கு புரியலாயிற்று, ஒருவித ஞான மனம் அவனுக்குள் எட்டிபார்க்க ஆரம்பித்தது

    எவ்வளவு பெரிய ஞானி இவர், ஆனால் எவ்வளவு எளிமையாக ஒரு மரத்தடியில் அனாதையாக அமர்ந்திருக்கின்றார்? எப்படி இவரால் சாத்தியம்?

    அவர் சொல்வதும் சரி, அப்படியே சரி, கிரீஸில் இருந்து ஓடிய நான் இதோ ஓடி கொண்டிருக்கின்றேன், இன்னும் ஓடி கொண்டே இருப்பேன் ஆனால் எதுவரை ஓடுவேன்?

    நாடுகளை வென்றேன், அரசர்களை கொன்றேன், கோட்டைகளை பிடித்தேன், கிரேக்க கொடி பறக்க விட்டேன் இதோ இந்தியாவுக்கும் வந்துவிட்டேன்

    ஆனால் இதெல்லாம் எவ்வளவு காலம்? எதுவரை?

    இப்பொழுதே இந்த ராஜ்ஜியத்தை நடத்த மகா சிரமம் என் காலத்துக்கு பின் இது கலையும், அப்படியானால் எல்லாம் பொய்யா?

    ஒரு பொய்க்கு பின்னால்தான் இவ்வளவு காலம் இவ்வளவு மக்களோடு ரத்த சக்தியில் நீந்தி கொண்டிருக்கின்றேன் நான்?

    ஏன் கிரேக்க ஞானம் எனக்கு இதையெல்லாம் சொல்லவில்லை, சொல்லியிருந்தால் நான் அன்றே ஞானம் பெற்றிருப்பேனே?

    எல்லாம் மாயை என தெரிந்து உணர்ந்து அந்த மரத்தடியில் இருக்கும் அவர் எவ்வளவு உயர்வானர், சொன்னாரே ஒரு வார்த்தை உன்னை வெல்வதே முதல் வெற்றி என்று

    என்னை என்றால் யாரை? நான் உடலா ஆத்மாவா மனமா?

    என் மனதை நான் அடக்காதவரை நான் யாரை அடக்கி என்னாக போகின்றது, என் மனதை அடக்கினால் அல்லவா வெற்றி?

    இனி அதை செய்ய வேண்டும், இவ்வளவு பெரும் ஆர்ப்பாட்டம் போர் செய்தும் கிடைக்கா நிம்மதி அந்த ஞானியில் 4 நிமிட பேச்சில் கிடைத்ததென்றால் அவனல்லவா ஞானி

    இந்தியாவின் நுழைவாயிலே இப்படி ஒரு ஞானியென்றால் தேசமெல்லாம் எவ்வளவு பேர், இன்னும் என்னெல்லாம் போதிப்ப்பார்களோ?

    அவன் அகந்தையிலும் அகங்காரத்திலும் பாதி அழிந்தது அப்பொழுதே அழிந்தது, அந்த தண்டமுனி விஸ்வரூபமெடுத்து சிரிப்பதும் அவர்முன் அவன் அடங்குவதும் அவன் மனகண்ணிலே தெரிந்தது

    ஆனாலும் அவன் அடங்கவில்லை அவன் ஞானத்தை விழுங்கி அகங்கார பூதம் எழும்பி போரசுடன் மோத சொல்லிற்று

    போரஸ் அவனை எளிதாக அடக்கினான், அதுவரை தோல்விகாணாத அலெக்ஸாண்டர் முதல் தோல்வியிலே கலங்கினான், அந்த தோல்வி பெரிதாய் எதிரொலித்தது

    கோபுரத்தில் இருந்த அவன் கீழே விழவும் என்னென்ன குரலெல்லாமோ எழுந்தது, உலகை மெல்ல புரிந்துகொள்ள ஆரம்பித்தான் அலெக்ஸாண்டர்

    போரசுடனான தோல்வியும் இந்தியாவில் எழும்பிகொண்டிருந்த சாணக்கியனின் மகத அரசும் அவன் கனவுகளை தகர்த்தன‌

    எனினும் அடுத்த முயற்சிக்காக காத்திருந்த அவன் நிம்மதிக்காய் தண்டமுனியினை மறுபடி தேடி சென்றான்

    முன்பு அவரை சந்தித்தபொழுது “நீ வந்த காரியம் முடிந்ததும் என்னை சந்திப்பாய்” எனும் அந்த முனிவரின் வரிகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன‌

    அவரை காண ஓடினான், விரைந்தோடினான். தன் குழப்பத்துக்கெல்லாம் அவர் பதில் தருவார் என நம்பி ஓடினான்

    சிந்து நதியின் வெண்மணலில் அமர்ந்திருந்தான் தண்டமுனி, அவரை வணங்கினான்

    “நீ வந்த வேலை நல்லபடியாக முடிந்ததல்லவா?” என அவர் கேட்ட கேள்வியில் ஆடிபோய் நின்றான் அலெக்ஸாண்டர்

    அது அவமான கேள்வியாக வெளியில் தெரிந்தாலும் தன் மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துக்கு காரணமே அந்த போரின் தோல்விதான், அது நல்லதுக்குத்தான் நடந்தது என்ற தெளிவுடன் முனிவரை ஏறிட்டு பார்த்தான் அலெக்ஸாண்டர்

    முனிவர் புன்னனகையுடன் சொன்னார், “உன் கடைசி போரிலும் வெற்றி உனக்கே”

    “முனிவரே இனி போரிடும் திட்டமில்லை, கிரேக்கம் திரும்பும் வழியில் ஏதும் அந்த அவசியம் வருவதாகவும் தெரியவில்லை” என்றான்

    சத்தம்போட்டு சிரித்த முனி , “அப்பனே நான் சொல்வது உன் மனதோடு நீ தொடங்கியிருக்கும் போர்” என அலட்சியமாய் சொன்னார்

    அவர் காலடியில் அமர்ந்தான் அலெக்ஸாண்டர், அவன் மனம் முனிவர் தன் மனம் தெளிய வைப்பார் என நம்பிற்று .

    மாபெரும் மன்னன் , உலகின் பெரும் செல்வமும் படையும் வைத்திருந்த மன்னன் ஒரு இந்திய முனிவனின் காலில் நிம்மதி வேண்டி வீழ்ந்திருந்தான்.

    12

    தனக்கு முன் அமர்ந்திருந்த அலெக்ஸாண்டரை புன்னகை பூக்க நோக்கினார் தண்டமுனி

    தன் அகங்காரமும் மிகபெரிய கனவும் நொறுங்கிய நிலையில் இருந்த அலெக்ஸாண்டர் அவரின் தீர்க்கமான பார்வையினை தன் நீல கண்களால் எதிர்கொண்டான்

    அவன் கண்களை ஊடுருவி பார்த்த தண்டமுனி அவனின் மனவோட்டத்தை எளிதாக படித்தவராய் கேட்டார், அவர்களுக்குள் ஞான உரையாடல் தொடங்கிற்று

    “அலக்ஸாந்தா உனக்கு விதிக்கபட்டதை விட ஏன் அதிகமாக விரும்பி குழம்புகின்றாய்?, விதித்தது கிடைத்தாயிற்று அத்தோடு மனதை அமைதியாக்கு

    சுவாமி என்னால் முடியவில்லை, அப்படியானால் நான் நம்பியதும், இதுவரை சாதித்ததெல்லாம், நடந்ததெல்லாம் பொய்யா?

    என்ன நம்பினாய் அலெக்ஸாந்தா?

    நான் பலமானவன், யாராலும் வெல்ல முடியாதவன், மாபெரும் ஞானி அரிஸ்டாட்டிலால் உருவாக்கபட்ட நான் இந்த உலகை வெல்ல பிறந்தவன், மன்னாதி மன்னர்களை வென்று பலமிக்க கோட்டைகளையெல்லாம் பிடித்தநான் இங்கே எப்படி தடுமாறினேன், எப்படி தோற்றேன்?

    அலெக்ஸாந்தா இந்த நான் நான் என சொல்கின்றாயே அது யாரை?

    முனிவரே அது நான், நான் என்றால் இந்த கிரேக்க மாவீரன் அலெக்ஸாண்டர்

    அது இந்த உடலுக்கா, உன் ஆன்மாவுக்கா, உன்னை நடத்தும் விதிக்கா?

    விதி என்றால்?

    எங்கள் தர்மத்தில் அதை கர்மா என்போம் விரும்பியோ விரும்பாமலோ பூமியில் நீ உனக்கான விஷயங்களை பெற்றே தீரவேண்டும், அறியா மானிடர்கள் அது தங்களுக்கு சாதகம் என்றால் தங்கள் வெற்றி என மகிழ்கின்றார்கள் அவர்களுக்கு பாதகம் என்றால் தோல்வி என அழுகின்றார்கள் நீயும் அதில் சேர்ந்து கொண்டாய்

    கர்மா என்றால்?

    இந்த உலகில் எதெல்லாம் நீ அனுபவிக்க சந்திக்க வேண்டுமோ, எதையெல்லாம் நீ செய்ய வேண்டுமோ அந்த மொத்த வாழ்வு

    அப்படியானால் என் முயற்சி?

    உன்னை முயற்சிக்க வைப்பதே அதுதான், அதன்படிதான் உன் புத்தி இயங்கும், காட்சிகள் நடக்கும்

    புரியவில்லை சாமி, அப்படியனால் வாழ்வு?

    வாழ்வு என்பது கர்மம் கழிக்கும் காலம், அது நிலையற்றது, கனவு போன்றது, உனக்கு முன்பு இருந்தோரும் இனி வருவோரும் இங்கே நிலையாக இருக்க முடியுமா என்ன, அதை நினைத்து ஏன் குழம்புகின்றாய்

    என் லட்சியம் பேரரசை உருவாக்கி என் மக்களை பாதுகாப்பாக வாழ செய்வது ஒரு அரசனாக அதை செய்தேன், இது எப்படி தவறாகும்?

    ஆம், முயற்சி உன்னுடையது முடிவு அவனுடையது. அவன் முடிவை சொல்லி எல்லையினை இட்டுவிட்டான் அதை மீறாமல் மகிழ்வுடன் ஏற்றுகொள், அலெக்ஸாந்தா கர்மத்தை நினைத்து ஏன் குழம்புகின்றாய்? அதை உன்னால் மாற்ற முடியுமா? இல்லை விதித்ததில் ஒரு அங்குலம் நீ மீறத்தான் முடியுமா?

    குழம்பவில்லை முனிவரே, புரிந்து கொள்ள முடியாத நிலை இது

    அலெக்சாந்தா, குழப்பமே தெளிவின் தொடக்கம் நன்றாய் குழம்பு, குழம்பி தெளியும் ஞானம் நிலையானது.

    சுவாமி நான் ஒரு அரசன் என் குடிகளை காப்பதும் அவர்களுக்காய் யுத்தம் செய்வதும் தவறா?

    அது தவறேன்றால் நீ பாரசீகம் தாண்டியிருப்பாயா?, உணர்ந்துகொள் அலெக்சாந்தா உன் வெற்றிக்கெல்லாம் உன் கர்மா துணையிருந்தது, அது மிகபெரிய சிகரத்தில் உன்னை அமர வைத்து இவ்வளவுதான் வாழ்வு என்றது, நீ அந்த கட்டத்தை அடைந்துவிட்டதும் உலகில் ஒன்றுமில்லை என உன்னை இறங்க சொல்கின்றது. எல்லாம் கையில் கிடைக்கும் வரைதான் ஆசை அலெக்ஸாந்தா, கிடைத்துவிட்டால் அதை தக்கவைக்க நடத்தும் போராட்டமேதான் வாழ்வு அதில் நிம்மதி ஏது?

    ஆம் சுவாமி எதையும் போராடி பெற்றுவிட்டால் நிம்மதி வருவதல்ல, அதை தக்கவைக்க நடத்தும் போராட்டமே பெரும் பாடுதான், ஆனாலும் நான் அரசன் அல்லவா? குடிகளை காக்க வேண்டும் அல்லவா?

    எவ்வளவு நாளுக்கு காப்பாய் அலெக்ஸாந்தா, உனக்கு முன்னும் கிரேக்கம் இருந்தது, உனக்கு பின்னும் இருக்கும். பாரசீகமும் இந்த தட்சசீலமும் முன்பு உன்னுடையதல்ல நாளையும் உன்னுடையதல்ல கொஞ்ச காலம் ஒரு மாயையில் உனக்கானதாய் தெரியும், இதற்கா குழம்புகின்றாய்

    கொஞ்சம் தெளிகிறது மனது சுவாமி

    உன் குதிரை புக்கிலேஸை காக்க முடியாத நீயா, காலம் காலமாய் உன் மக்களை காப்பாய்? முடியுமா? காற்றை கையில் பிடிக்காதே, இந்த உலகில் எல்லாமே வீண் முயற்சி

    ஆம் சுவாமி புரிகின்றது

    நீ எதற்கு படைக்கபட்டாயோ அது நடந்து கொண்டிருக்கின்றது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கர்மா நீ உன் கர்மாவின் கடை நிலையில் இருக்கின்றாய்

    விளக்கி சொல்லுங்கள் சுவாமி

    இந்த உலகில் பிறந்த ஆத்மாவின் முடிவுஎன்ன அலெக்ஸாந்தா?

    அது புரியாமல்தானே உங்களிடம் வந்தேன்..

    அலெக்ஸாந்தா ஒவ்வொரு ஆத்மாவும் இறைவனை உணர ஒரு காலம் உண்டு, அது உனக்கும் வந்திருக்கின்றது நீ எதை நோக்கி ஓடிகொண்டிருக்கின்றாய்?

    வெற்றி, முழு வெற்றி இந்த உலகமே என் கையில் கிடைக்கும் வரை போர் என கிளம்பினேன்

    போரஸை நீ வென்றிருந்தால் ஏன் இந்த கண்டம் முழுக்க கைபற்றியிருந்தால் அடுத்து என்ன செய்திருப்பாய்?

    நிம்மதியாக ஆள ஆரம்பித்திருப்பேன்

    ஆக நிம்மதியினை தேடித்தான் ஓடினாய் அல்லவா?

    ஆம்

    அது போரில் கிடைக்கவில்லை என உணர்ந்து கொண்டாய் அல்லவா?

    தலைகுனிந்த அலெக்ஸாண்டர் சொன்னான், ஆம் கிடைக்கவில்லை

    நீ உலக முடிவுவரை வென்றாலும் உனக்கு அந்த நிம்மதி கிட்டாது, ஆசையில் உழல்பவனுக்கு ஏதப்பா நிம்மதி,
    ஆசையினை விட்டு உன்னில் உன்னை தேடு நிம்மதி வரும்

    என்னுள்ளா எப்படி?

    ஒவ்வொரு வாழ்விலும் வெற்றி மேல் வெற்றி என்பது விதிக்கபட்டபடி நடக்கும், எந்த இடத்தில் சூழல் மாறி நிலமை தலைகீழாகின்றதோ அங்கே தன் கர்மாவினை ஒருவன் நினைத்து தெய்வத்தை உணர்தல் வேண்டும், உண்மையினை உணர்தல் வேண்டும், இது உனக்கு உணரவேண்டிய நேரம்.

    அப்படியானால் என் வீரம், என் போர், என் படை, என் அதிகாரம், வியூகமெல்லாம் வீணா சுவாமி?

    அவை எல்லாம் உன் கர்மாவினை நீ செய்ய உனக்கு அனுமதிக்கபட்ட மாயைகள், அதிலிருந்து மனதை விலக்கி உண்மையினை தேடு, காற்றை கையில் பிடிக்க முயற்சிக்காதே

    முயற்சிக்கின்றேன் சாமி

    அலெக்ஸாந்தா, காலமே எல்லாம் முடிவு செய்யும். நீ வெல்ல ஒரு காலம் உண்டு, முடிசூட ஒரு காலம் உண்டு அதே போல சிகரம் ஏற ஒரு காலம் உண்டென்றால் இறங்கவும் ஒரு காலமுண்டு, அதை மனதில் கொள்

    உண்மைதான் சாமி

    அலெக்ஸாந்தா உலகெல்லாம் வென்றுவிட்டால் மட்டும் நிம்மதி வருமா? உன் குறிகோளில் நீ வெல்லலாம் ஆனால் நிம்மதி வருமா? வராது, சிக்கல்கள் எழுந்து கொண்டே இருக்கும் உருமாறி உருமாறி வந்து வந்து கொண்டே இருக்கும், நீ நிம்மதியினை வாளில் தேடினால் எப்படி கிடைக்கும்?

    எதிரி ஒழிந்தால், எதிர்ப்போரையெல்லாம் அழித்தால்?

    இந்த உலகில் வல்லவனுக்கு வல்லவன் எக்காலமும் உண்டு, ஆசையும் வஞ்சமும் இன்னும் பல கொடும் குணங்கள் நிறைந்த உலகில் ஒவ்வொரு சக்தியும் எழும்பி கொண்டே இருக்கும், அவர்களுடன் போராடி கொண்டே இருந்தால் ஏது நிம்மதி

    தெரியவில்லை சாமி

    நீ உன்னோடு போராடு, அனைத்து எண்ணங்களும் உதிக்கும் உன் மனதோடு போராடு, அதை அடக்கு, அதை சீர் தூக்கி பார், அதை அடக்கு, மனதை அடக்க அடக்க உண்மை தெளியும், அந்த தெளிவில் ஞானம் கிடைக்கும், அந்த ஞானத்தில் எது நிலையானது என்பது புரியும், அதை நோக்கி செல்”

    முனிவரின் வார்த்தைகள் அலெக்ஸாண்டரை சிந்திக்க வைத்தன, வாழ்வில் பெரும் இடம் நோக்கி ஏறும் ஒருவனுக்கு எந்த போதனையும் காதில் ஏறாது, ஆனால் மிக பெரும் இடத்தில் மாபெரும் சக்கரவர்த்தியாக எல்லாவற்றிலும் உச்ச சிகரத்தில் இருந்த அலெக்ஸாண்டருக்கு அவரின் போதனை சட்டென‌ புரிந்தது

    அவன் தன் கீரிடத்தை எடுத்துவிட்டு தன் செம்மபட்டை முடி கலைய முனிவர் முன் பணிந்தான், கையினை உயர்த்திய முனிவர் விரலை மூடினார், பின் அதனை விரிக்கும் பொழுது விபூதி இருந்தது

    ஆச்சரியத்தில் புருவங்களை உயர்த்திய அலெக்ஸாண்டர் வியந்து கேட்டான் “சுவாமி ஒரு சந்தேகம் கேட்கலாமா?”

    முனிவர் புன்னகைத்தார்

    “சுவாமி உங்கள் நாட்டில் யோகிகளும் மகா அனுமாஷ்ய சக்தி கொண்ட சித்தர்களும் அதிகம், அதை கொண்டே எல்லா பகையினையும் வெல்லலாமே எதற்கு அரசன்? எதற்கு ராணுவம்? ஏன் மக்களின் உழைப்பு

    முனிவர் சத்தமாக சிரித்து சொன்னார், “அலெக்சாந்தா, அவனவன் கர்மாவினை அவனவனேதான் சுமக்க வேண்டும், மன்னனும் ராணுவமும் அவர்கள் கர்மாவினை செய்யட்டும், நாங்கள் எங்கள் கர்மாவினை சுமக்கின்றோம், இந்த ஞான மார்க்கமும் கர்மாவினை கழிக்கும் காரியம்தான், கடைசியில் அவர்களும் நானும் மிஞ்சபோவது ஒரு பிடி சாம்பலாகத்தான்”

    அந்த வரி அலெக்ஸாண்டர் மனதை உலுக்கிற்று, மிஞ்ச போவது இதுதானா? இதற்கா இவ்வளவு போராட்டம் எனும் சிந்தனை அவனுக்கு உதித்தது, அவன் சிந்திப்பது அவன் முகத்திலே தெரிந்தது

    முனிவர் அவனுக்கு தியானம் செய்யும் வழிகளை சொன்னார், அந்தி மாலை அதை செய்யும் கால நேரமும் வழியும் சொன்னார்.

    அலெக்ஸாண்டர் தியானத்தில் மூழ்கினான் அதில் மூழ்கி மனதோடு போராடினான், அதை போராடி போராடி அடக்க தொடங்கினான்

    குதிரைகளை அடக்கி சவாரி செய்தவன், மன்னர்களை அடக்கி ஆட்சியினை செய்தவன் இப்பொழுது மனதை அடக்கி அதில் ஏறி அமர்ந்தான், அதில் பல விஷயங்கள் தெளிந்தன‌

    பொன்னும் வைரமும் தேடி எங்கெங்கோ அலைந்தவன் தனக்குள் இருக்கும் புதையலை கண்டு கொண்டான்

    அதுவரை இறுகிய முகத்தோடு அகங்காரத்தோடும் அரச கிரீடத்தோடும் உறுமிய குரலோடும் வலம் வந்தவன் புன்னகை பூக்க, ஒரு ஞான பழமாய் கனிந்த முகமாய் உலாவ தொடங்கினான்

    (அடிக்கடி தண்டமுனியினை சந்திக்கவும் அவன் தவறவில்லை.

    “அலெக்ஸாந்தா உன் கர்மபடி நீ இந்தியாவில் எதை தேடி வந்தாயோ எது உனக்கு கிடைத்ததோ அதை மேற்கே எடுத்து செல், அதற்குத்தான் நீ உருவானாய், அதற்குத்தான் விதி உனக்கு ஒத்துழைத்தது” என அவனுக்கு சொன்னார் தண்டமுனி

    இந்திய செல்வத்துக்காய் வந்தவன் இந்திய ஞானம் பெற்று அகந்தை ஒழிந்து இந்துவாய் , முழுமையான நிம்மதிபெற்ற இந்துவாய் திரும்பி சென்றான்

    33 வயதிலே பெரும் மன்னனாகி உலகின் பெரும் பகுதியினை கட்டியாண்டு, இந்தியாவினை கிரேக்கமயமாக்கும் கனவில் வந்து , இந்திய ஞானத்தால் சன்னியாசி கோலம் கொண்டு தன் ராஜ்ஜியத்தை தன் நண்பர்களுக்கே பிரித்து கொடுத்து இனி அடைய நாடுமில்லை ஞானமுமில்லை என முழு நிறைவோடு தனக்கு ஞானம் தந்த இந்தியாவினையும் இந்துமதத்தையும் வணங்கி கொண்டே மறைந்தான் மாவீரன் அலெக்ஸ்டாண்டர்….

  16. அந்த கொடியவன் ஆஷ் எனும் அயோக்கிய பிரிட்டிஷ்காரனுக்கு மணிமண்டப பராமரிப்பு அதுவும் இந்திய தமிழர்களின் செலவில் மணிமண்டப பராமரிப்பு என்பதெல்லாம் ஏன் சுதந்திரம் வாங்கியிருக்க வேண்டும், இதற்கு வெள்ளையனுக்கு அடிமையாக இருக்கலாமே என பெரும் ஆத்திரத்தை எழுப்பும் விஷயங்கள்

    அங்கு வ.உ.சிக்கு மண்டபம் அவர் பெயரில் துறைமுகம் என ஏகபட்ட அடையாளங்களை செய்துவிட்டு அவரின் நூற்றாண்டுவிழாவினை கொண்டாடிவிட்டு இப்பொழுது அவரை அழித்துபோட்ட ஆஷ் துரைக்கு ஆஷ் துரை மணிமண்டப பராமரிப்பு என்பதெல்லாம் மானமுள்ள இந்தியர் ஏற்கும் விஷயம் அல்ல‌

    என்றோ வெள்ளையன் ஆஷ்துரைக்காக கட்டிய மண்டபத்தை இன்றும் புணரமைத்து காப்போம் என்பது இந்நாட்டுக்கு செய்யும் துரோகம், வ உசிக்கு செய்யும் வஞ்சகம், நாங்கள் இந்தியர் அல்ல பிரிட்டிஷ் கைகூலிகள் என உரக்க சொல்லும் அவலம்

    காரணம் ஆஷ் செய்த கொடுமைகள் அப்படி

    இன்றும் உலகின் கப்பல் போக்குவரத்தின் பெரும் கட்டுப்பாடு அதாவது சரக்கு போக்கு கப்பல்வரத்து ஆதிக்கம் பிரிட்டன் கையில்தான் உண்டு என்றால் 1900கள் எப்படி இருந்திருக்கும்?

    அக்காலகட்டத்தில் பிரிட்டனை எதிர்த்து கப்பல் விட்ட ஒரே மனிதன் அந்த வ.உ.சி அகில உலகிலே ஒரே ஒருவன் அந்த வ.உ.சி

    அவன் செய்த புரட்சி உலகெல்லாம் பலத்த திருப்பங்களை ஏற்படுத்த அவனை உச்சகட்ட வெறியில் நசுக்க கிளம்பினான் வெள்ளையன், அதற்கு முழு சக்தியோடு ஆதரவளித்தான் அந்த ஆஷ்

    அந்த வரலாறு கொடுமையானது, வ.உ.சி இந்தியா முழுக்க அடைந்த புகழும் அவருக்கு மக்களிடம் இருந்த ஆதரவையும் பல்வேறு வகையான நயவஞ்சக செயல்களால் சரித்த ஆஷ் அவர்மேல் கடுமையான வழக்குகளை தொடுத்தான்

    திருநெல்வேலி செசன்ஸ் நீதிமன்றத்தில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் மூவர் மீதும் இ.பி.கோ. பிரிவு 108-ன் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுப் பின்னர் அது பிரிவு 107(4) ஆக மாற்றப்பட்டது.

    அவ்வழக்கை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே மூவரும் கைதுசெய்யப்பட்டனர். நன்னடத்தைக்காகச் செலுத்தச் சொன்ன பிணைத் தொகையை முதலில் கட்ட மறுத்து, பின்னர் ஒப்புக்கொண்டபோதும் அதை ஏற்க மறுத்துத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார் நீதிபதி விஞ்ச். சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த உத்தரவின் மீது மூவர் சார்பாகவும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அ

    ங்கே விஞ்ச்சின் உத்தரவு மறுக்கப்பட்டு வழக்கும் ரத்துசெய்யப்பட்டது. அதற்கான உத்தரவு நெல்லை வந்தும்கூட பத்மநாப அய்யங்காரை மட்டும் விடுவித்துவிட்டு வ.உ.சி., சுப்ரமணிய சிவா இருவர் மீதும் தலா இரண்டு வழக்குகள் புதிதாகப் பதிவுசெய்யப்பட்டன.

    சுப்ரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததாகப் பிரிவு – 124 ஏ, அரசுக்கு எதிராக மக்களிடம் பேசியதாகப் பிரிவு – 153 ஏ ஆகிய இரண்டு வழக்குகள் வ.உ.சி. மீது பதிவுசெய்யப்படுகின்றன.

    மூன்று மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு இரண்டு வழக்குகளுக்கும் (20 20) நாற்பது ஆண்டு காலம் ஒன்றன் பின் ஒன்றாக அந்தமான் சிறையில் தீவாந்திரக் கடுங்காவல் தண்டனையாக வ.உ.சி. கழிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தத் தீர்ப்பின் மீதும் மேல்முறையீடு செய்யப்படுகிறது. அங்கு நாற்பது ஆண்டு காலத் தண்டனையானது (4 6) பத்து ஆண்டு காலம் அனுபவிக்குமாறு குறைக்கப்படுகிறது.

    அதன் பின்னர் லண்டன் பிரிவியூ கவுன்சிலில் செய்யப்பட்ட முறையீட்டால் நாடு கடத்தல் ரத்துசெய்யப்பட்டு 10 ஆண்டுகளையும் ஒரே சமயத்தில், அதாவது 6 ஆண்டுகளுக்குள் 4 ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் 6 ஆண்டுகள் அனுபவிக்குமாறு குறைக்கப்படுகிறது.

    6 ஆண்டுகளில் மூன்று விசேஷ கால விடுதலைக்கான குறைப்புக் காலமாக ஒன்றரை ஆண்டுகள் போக மீதம் நான்கரை ஆண்டுகளுடன் ஏற்கெனவே விசாரணைக் கைதியாக 3 மாதங்களையும் சேர்த்து, ஆக மொத்தம் நான்கே முக்கால் ஆண்டுகளை வ.உ.சி. சிறையில் இழந்திருக்கிறார்.

    12.03.1908 மாலை 3 மணிக்கு பாளையங்கோட்டைச் சிறைக்குள் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் மூவரும் நுழைகிறார்கள். அங்கேயே அவரை கடும் கொடுமை செய்ய சொல்லி ரகசிய உத்தரவிட்டான் ஆஷ்

    ஆனால் பாளையங்கோட்டை சிறையில் அவரின் சொந்த பக்கத்து கைதிகள் இருந்ததால் அவரை தொட்டாலே சீறினார்கள், பெரும் கலவரம் நடப்பதை அறிந்த ஆஷ் அவரை வஞ்சகமாக கோவை சிறைக்கு மாற்றினான்

    கோவையில்தான் உலகின் கொடிய ஜெயிலர்களில் ஒருவரான மிஞ்ஜேல் இருந்தான், முதல் 10 படுபாவிகளில் அவனும் ஒருவன்

    அவனும் ஆஷூம் செய்த கூட்டு சதியில்தான் வ.உசி அந்த கொடுமை கண்டார்

    அவருக்கு சணல் ஆடை உடுத்தி தலையினை மொட்டை அடித்து ஒரு வேளை கூழ் ஊற்றி காற்றும் புகாத அறையில் அடைத்து கொடுமை செய்தான் மிஞ்ஜேல்

    அவர் உடல்நிலை சரியில்லாமல் போக அரிசி உணவு கொடுக்க மருத்துவர் சொன்னபொழுது புழு நெளிந்த கஞ்சியினை கொடுத்தான் அந்த கொடூரன்

    அந்நிலையிலும் அவரை சணல் பிரிக்கும் எந்திரத்தைச் சுழற்ற வைத்தான் மிஞ்ஜேல், அது கைகளை பதம்பார்க்கும் எந்திரம், வ.உ.சியின் கைகள் கிழிந்து ரத்தம் வந்தது

    அதனை கண்ட சக கைதிகள் பெரும் ஆவேசமாய் பொங்க, துப்பாக்கி சூடு நடத்தில் சிலரை கொன்று பலநாள் உணவில்லாமல் எல்லோரையும் போட்டு வைத்த மிஞ்ஜேல், அந்நிலையிலும் தன் குரூரத்தை விடவில்லை

    கை பிய்ந்து ரத்தம் கொட்டிய வ.உ.சி.யினை செக்குகு இழுக்க வைக்க வைத்தான். இக்கொடுமையெல்லாம் பின் நீதிமன்றம் சென்றுதான் அவருக்கு ஆறுதல் கிடைத்தது

    கோவைச் சிறையில் நடந்த கைதிகளின் போராட்டமும், அதற்கு நீதிமன்றத்தில் வ.உ.சி. சொன்ன துணிச்சலான சாட்சியமும், அவ்வாறு சொன்னதற்காக காங்கிரஸ் கட்சியால் அவர் கண்டிக்கப்பட்டதும் அவரது வரலாற்றில் மிகவும் முக்கியமானவை.

    சிறைக் கைதி ஒருவர் தனது தலைக்கு மேலாக இருகரங்களையும் கூப்பி வ.உ.சி.யை வணங்கினார்

    இதைப் பார்த்துப் பொறுக்க முடியாத ஜெயிலர் மிஞ்ஜேலால் தொடங்கப்பட்ட பிரச்சினையானது கைதிகளின் போராட்டமாக மாறி, அதை அடக்கச் செய்த முயற்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் உயிரிழக்க, இறுதியில் மிஞ்ஜேலை ஸ்டிரச்சரில் வைத்துத் தூக்கிச் செல்லும் நிலையில் முடிந்தது. துணை ஜெயிலராகப் பதவியிறக்கமும் பெற்றார்.

    வ உ சியின் நாற்பது ஆண்டு தண்டனைக் காலமானது பத்து (4 6) ஆண்டுக் காலம் சேர்த்து அனுபவிக்கும் கடுங்காவலாக மாற்றப்பட்டது.

    மீண்டு வந்த மிஞ்ஜேலும் காடன் என்பவனும் மீண்டும் அவரைச் செக்கிழுக்க வைத்தார்கள். சிறைக் கலவரம் குறித்து விசாரிக்க வந்த சிறைத் துறை ஐ.ஜி.யிடம் இருவரது அட்டூழியங்கள் குறித்தும் நேரடியாகப் புகார் சொன்னார் வ.உ.சி. அரசியல் கைதிகளை முறையாக நடத்துங்கள் என ஐ.ஜி. இருவரையும் கண்டித்தார அல்லது கண்டிப்பது போல் நடித்தார்

    இதனால், கோபத்தின் உச்சிக்குச் சென்ற இருவரும் வ.உ.சி.க்கு மனரீதியான உளைச்சலைக் கொடுத்து ஒடுக்க முயல்கிறார்கள். சிறை வளாகத்தைக் கூட்டிப் பெருக்கவும் மூத்திரச்சட்டியை எடுத்துப்போகவும் சட்ட விரோதமாக நிர்ப்பந்திக்கிறார்கள்.

    ஒருநாள் வ.உ.சி.க்குப் புத்திமதி சொல்ல முயன்றார் மிஞ்ஜேல். “உனக்கும் உன்னப்பனுக்கும் உன் சூப்பிரண்டிற்கும் உனையாளும் கவர்னருக்கும் புத்தி சொல்லும் தகுதி எனக்குண்டு” எனக் கூறுகிறார் வ.உ.சி அந்த துணிச்சல்தான் வ.உ.சி

    அதனால், 15 வாரங்கள் அபராதம் என அறிவிக்கிறார்கள்.

    ஆனால், ஒரே வாரத்தில் அவர் கண்ணனூருக்கு மாற்றப்படுகிறார். 01.12.1910 முதல் 24.12.1912 வரை கேரளத்தின் கண்ணனூரில் இருந்த 2 வருடங்கள் 22 நாட்களில் பெரிய அளவில் அவருக்குத் துன்பங்கள் தரப்படவில்லை.

    கோயமுத்தூர்போலவே இங்கும் ஆய்வுக்கு வந்த ஐ.ஜி.யிடம் அவர்களின் நடத்தைகளைச் சொல்கிறார் வ.உ.சி. அதனால், ஐ.ஜி. அவருக்கு எழுத்துக் கோக்கும் வேலையைத் தர உத்தரவிட்டார். ‘மெய்யறிவு’, ‘மெய்யறம்’ இரு நூல்களையும் அப்போதுதான் எழுதினார்.

    24.12.1912 அன்று வ.உ.சி. விடுதலையானார். சிறைக்குள் நுழையும்போது அவரை வழியனுப்ப நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தபோது சிறையிலிருந்து விடுதலையாகும் அவரை வரவேற்க நான்கு பேர் மட்டுமே காத்திருந்தனர்.

    ஆங்கிலேயர்கள் எந்த நோக்கத்துக்காக வ.உ.சி.யைச் சிறைக்கு அனுப்பினார்களோ அந்த நோக்கத்தை அவர்கள் ஈடேற்றிக்கொண்டனர்.

    அதன் பின்னும் வ.உ.சிக்கு வழக்கறிஞர் பட்டம் கிடைக்காமல் வெள்ளையன் நெருக்கடி கொடுத்தான், அவர் அரிசிகடைக்கு வேலைக்கு சென்றார், அந்த கடையினையே மூடவைத்தான் வெள்ளையன்

    காரணம் வ.உ.சிக்கு தினமும் எப்படி அரிசி கிடைக்கலாம்?

    இப்படியெல்லாம் வ.உ.சி பட்ட சித்திரவதைகளுக்கும் அவமானத்துக்கும் காரணம் அந்த ஆஷ், அந்த கொடியவனைத்தான் கோவை சிறை கொடுமைகளுக்காக சுட்டு கொன்றான் வாஞ்சிநாதன்

    அப்படிபட்ட அயோக்கிய ஆஷூக்கு இங்கு மணிமண்டபம் என்பது ஜாலியன் வாலாபாக் கொடுமை செய்த டயருக்கு மண்டபம் கட்டுவது போன்றது

    இதெல்லாம் வன்மையான கண்டனத்திற்குரியது, களையபட வேண்டியது

    உண்மையில் ஒருமண்டபம் கொண்டாடபட வேண்டுமானால் நெல்லை தாமிரபரணி கரையிலுள்ள தைபூச மண்டபம், அங்குதான் விபின் சந்திரபால் 1908ல் அடைந்த விடுதலையினை யானைமேல் பாரததாய் படத்தை வைத்து கொண்டாடினார் வ.உ.சி

    1908, மார்ச் 13ல் அந்த பெரும் ஊர்வலத்தை நடத்தினார்

    அதை பொறுக்காமல்தான் ஆஷ் துப்பாக்கி சூடு நடத்தி பலர் செத்து அதனை சாக்காக வைத்துத்தான் பிள்ளையினை கைது செய்து சிறையில் போட்டான் அக்கொடியவன்

    அந்த தைபூச மண்டபத்தை அழியவிட்டு ஆஷூக்கு மணிமண்டபம் என்பதெல்லாம் ஒவ்வொரு தேசாபிமானியும் தலைகுனிந்து வேதனையுடன் நிற்கும் அவமானம்

    காந்திக்கு உல்லாச சிறை, நேருவுக்கு பகோபகார சிறை, சாவர்க்கருக்கும், வஉசிக்கும் கொடுஞ்சிறை என்பதும் அவர்களை அப்படி கொடுமைபடுத்திய அந்நிய பாவிகளுக்கு மணிமண்டபம் என்பதும் இத்தேசம் இன்னும் விடுதலை பெறவில்லை என்பதையன்றி எதனை காட்டுகின்றது

    தேசத்தின் சுதந்திற்காக பாடுபட்ட ஒவ்வொரு தியாகிகளின் ஆன்மாவும் கலங்கி நிற்கும் நேரமிது, தமிழக அரசின் ஆட்சி யார் கைகளில் இருக்கின்றதோ என ஒவ்வொரு தேசாபிமானியும் பதறி துடிக்கும் நேரமிது

  17. பாரதத்தின் தென்முனை எப்பொழுதும் சூட்சுமமானது, அங்கு அதர்ம சக்திகள் அடிக்கடி ஆடும், புரிந்துகொள்ளமுடியா பெரும் சக்திகள் மானிட மனங்களை குழப்பும், அங்குள்ள மானிடருக்கு சோதனைகள் அதிகம், சிக்கல்கள் அதிகம், குழப்பமான மனநிலையில் அவர்கள் செய்யும் தவறுகள் அதிகம், அவர்கள் மீளவும் நல்வழியில் நடக்கவும் எப்பொழுதும் பிரபஞ்சம் ஒவ்வொரு சக்தியினை அனுப்பி கொண்டே இருக்கும்

    அகத்தியரை அப்படித்தான் சிவபெருமான் அனுப்பினார், முருகபெருமான் அப்படித்தான் தென்னகம் வந்தார், விசுவாமித்திரர் தாடகையினை அழிக்க ராமனையும் லட்சுமணனையும் தென்முனைக்கு அழைத்து வந்தார், பானாசுரனை அழிக்க அன்னை சக்தியே அந்த தென்முனையில்தான் தவமிருந்தாள்

    அப்படிபட்ட தென்முனையில் அதர்மம் தலைவிரித்தாட தொடங்கிற்று, மக்களிடம் தர்மம் ஒடுங்கி அதர்மம் தலைதூக்கிற்று

    எங்கும் கொலையும், கொள்ளையும் அதிகரித்தன, பெண்களின் கண்ணீர் கூடிற்று, ஏழைகளுக்கு அரைபடி அரிசி கொடுக்க கூட தனவான்களுக்கு மனமில்லை, பசியும் பட்டிணியும் தலைவிரித்தாடின‌

    இன்னும் பொல்மனம் படைத்தோர் அதர்வண வேதம் மூலம் துர்சக்திகளை கொண்டு அடாதன அத்தனையும் செய்தன. பெரும் குழப்பம் தலைதூக்கிற்று

    அப்பொழுது தென்னாட்டு முனை அதாவது தாமிரபரணியினை ஒட்டியிருந்த நெல்லை பகுதிவரை சேரநாடாக இருந்தது

    பாண்டிநாட்டின் தென்பக்கம் அடிக்கடி சேரநாட்டிடமே இருந்தது, பாண்டியர் எப்பொழுதாவது கைபற்றுவார்களே தவிர பெரும்பாலும் அது சேரநாடே, இன்றும் நெல்லைதமிழ் வித்தியாசமாக இருக்க அந்த மலையாள தொடர்பே காரணம்

    அந்த கொடுங்காலத்தில் நல்லோரெல்லாம் கதற, அதர்மம் செய்வோர் அத்தனைபேரும் வாழ தர்மம் நிலைகுலைந்தது. அந்த தென்முனை பகுதியின் தர்ம சக்தி நடக்கும் கொடுமைகள் பாராமல் அவர்களின் தேவி சோட்டானிக்கரை பகவதியிடம் சரணடைந்தது , நடக்கும் கொடுமைகளை ஏறெடுத்தும் பார்க்கமுடியா தேவி சிவனிடமே கோரிகை வைத்தாள்

    சிவபெருமானும் தர்மம் தளைக்கவும் , அதர்மம் வீழவும், கொடும் சக்திகளை ஒழிக்க ஒரு உக்கிரமான சக்தி வேண்டுமெனவும் சித்தம் கொண்டார், தென்முனை மக்களின் குழப்பத்திற்கெல்லாம் காரணம் ஞானமின்மையே என்றும், அந்த ஞானத்தை ஒரு உக்கிர சாயல் மூலம்கொடுக்கலாம் என்றும் திருவுளம் கொண்டார்

    சுடுகாட்டில் தன் உக்கிர சாயலில் ஒரு உக்கிர பூதத்தை தன் அம்சமாக உருவாக்கினார், சில வார்த்தைகளை அதற்கு அருளினார்

    “சுடுகாட்டில் பிறந்ததால் உன் பெயர் சுடலை என்றாகுக‌

    உனக்கு எப்பொழுதும் பலமூட்டை அரிசியும் ஆடும் மாடும் பன்றியும் உணவாய் பெற்று கொள்க‌

    தனித்திருப்பாய் எங்கும் மக்களுக்கு காவலாய் இருப்பார். அம்மக்களில் நல்லோர் கேட்காமலே அவர்களுக்கு நீ உதவுவாய் பொல்லார் யாராயினும் அழிப்பாய்

    உன்னிடம் மந்திரம் பலிக்காது, மாந்த்ரீகம் பலிக்காது பக்தி ஒன்றுக்கே கட்டுபடுவாய் ஆனால் உன் பக்தனாயினும் அக்கிரமகாரனை நீ விடமாட்டாய்

    சுடுகாட்டு தத்துவத்தை எல்லா மக்களுக்கும் தெரிவிக்கும் வண்ணமும், மக்கள் அமைதியாக வாழ காவல் இருக்கும் தெய்வமாகவும் உன்னை காவலாக அனுப்புவோம்” என சொல்லி அனுப்பினார்

    அந்த சுடலை தெய்வம் சோட்டானிக்கரை அம்மன் ஆலயம் வந்தார், அங்கு திருவிழா நடந்தது அந்த சாக்கில் அக்கிரமங்கள் ஏராளமாக நடந்தன‌

    பெண்களை சீண்டுதல், திருட்டு இன்னும் பலவகை அக்கிரமங்களை கண்ட சுடலை உக்கிரத்தை காட்ட ஆரம்பித்தார், அன்னை பகவதி அதுகண்டு புன்னகைத்தாள்

    உண்மையில் அவள் நினைத்திருந்தால் அம்மக்களை நொடியில் தண்டித்திருக்கலாம் ஆனால் சொந்த மக்களை துன்புறுத்த அந்த பாசமிகு தாய்க்கும் மனமில்லை, சிவனே வழிவிடுவார் என காத்திருந்தாள்

    சிவனின் அம்சம் வந்ததை கண்டு புன்னகைத்தாள்

    எங்கும் பயமும் பரபரப்பும் கூடிற்று, அக்கிரமகாரர்கள் தேரை இழுக்காதவாறு தடுத்து நின்றார் சுடலை , உண்மையான ஞானமில்லாதோருக்கு எதற்கு திருவிழா என கொடிமரத்தை ஆட்டிவைத்தார்

    மலையாள தாந்ரீகர்களும் மாந்தீரிகர்களும் கூடினார்கள், பிரசன்னமும் இதர கணிப்புகளும் பார்க்கபட்டன, வந்திருப்பது சிவ அம்சம் என்றும் அதற்கான பூஜைகளும் அவசியம் என்றும் உணர்தார்கள்

    தங்கள் பாவங்களுக்கான பெரும் பரிகாரங்களை செய்தார்கள், அங்கு கம்பீரமாக நின்ற சுடலை தேர் வழிபாடு என்பது புனிதமான வழிபாடு, அங்கு பக்தி இல்லாதோர் வந்தாலோ அடாதன செய்தாலோ நான் விடமாட்டேன் நான் இருக்கின்றேன் என எக்காலமும் சொல்ல தேருக்கு என் பெயரில் ஒரு பூஜை அவசியம் என உறுமினார்

    அப்படியே தேரடி மாடன் என தேர்பூஜை செய்யும் வழக்கம் வந்தது, அது இன்றுவரை உண்டு

    ஆலயத்தின் கொடியும் தேரும் புனிதமானவை அவைகள் என் கட்டுபாட்டில் இருக்கும் என காவல் இருந்தார் சுடலை , ஓரளவு அமைதி திரும்பிற்று

    அந்த மலையாள தேசத்தில் காளிபுலையன் என்றொரு மிகபெரிய மந்திரவாதி இருந்தான், அவனால் முடியாதது எதுவுமில்லை என பெரும் சக்திவாய்ந்தவாய் இருந்தான்

    அவனுக்கொரு மகள் இருந்தாள், அவளை மிகபெரிய இடத்தில் கட்டிகொடுக்க விரும்பியவன் அன்னை ஆலயத்தின் தங்கத்தை திருடி சென்றான், அன்னை அதனை அறியாதவள் அல்ல

    ஒரு சில தகவல் சொல்வது போல மாந்ரீகத்தால் கவர்ந்து சென்றான் என்பது அல்ல விஷயம், அன்னை நாடகத்துக்காக அவனை அனுமதித்தாள் அவனோ தன் மாந்த்ரீகம் வென்றது என கொண்டு சென்றான்

    சென்றவன் தன் மகளுக்கு பெரும் அலங்காரம் தங்கத்தால் செய்தான், மணமும் செய்தான்

    சுடலைக்கு விஷயம் தெரியும் எனினும் அன்னையே அனுமதித்ததால் அமைதி காத்தார்

    நகை காணாமல் போன விஷயமும், அதே நேரம் காளிபுலையன் தன் மகளுக்கு பெரும் தங்கம் கொட்டி ஏற்பாடு செய்ததும் அங்கு பரபரப்பாயின, ஆனால் காளிபுலையனை எதிர்க்க யாருக்கும் தைரியமில்லை

    தெய்வம் எப்பொழுதும் அக்கிரமத்தை அனுமதிக்கும் ஆனால் யாராவது ஒருவன் தன்னிடம் முறையிட்டால் அதை வைத்து புகுந்து ஆடி அக்கிரமத்தை அழிக்கும், அதற்கு தேவையெல்லாம் அக்கிரமகாரனால் பாதிக்கபட்டவரின் ஒரு சொட்டு கண்ணீர்

    அப்படி காலிபுலையனால் பாதிக்கபட்ட சிலர் வந்து அன்னையிடம் அழுது, உன் நகையினையே திருடியவனை தண்டிக்காதவளா எங்களுக்கு நியாயம் உரைப்பாய் என்றதும் அன்னை சுடலைக்கு உத்தரவிட்டாள்

    நொடியில் காளிபுலையனை மிரட்டினார் சுடலை, சர்வ சக்திவாய்ந்த தன்னை பெரும் பூதம் மிரட்டுவதை அறிந்து தன் பிரத்யோக வழிகளில் அது யாரென கண்ட காளிபுலையன் மிரண்டான்

    ஆனாலும் தன் முழு சக்தியினை பயன்படுத்தி விளையாட துணிந்தான்

    அன்னைக்குரிய நகைகளை ஒப்ப்டைத்து அன்னையிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் உன் குலம் அழிப்பேன் என்ற சுடலையினை தன் மந்திரசக்திமேல் கொண்ட நம்பிக்கையால் புறந்தள்ளி எட்டு அடுக்கு காவலில் தன் மகளை வைத்து காக்க முனைந்தான்

    சுடலை சிவனின் தனி அருள்படி அந்த வேலிகளை உடைத்தார், புலையனையும் அவன் குடும்பத்தையும் ஒழித்து அன்னையின் நகைகள் ஒரு துளி விடாமல் மீட்டு வந்து கொட்டினார்

    பெரும் மந்திரவாதியே ஒழிந்த நிலையில் சிறிய மந்திரவாதிகளெல்லாம் அஞ்சி ஒடுங்கினர், சோட்டானிக்கரை அம்மனின் புகழும் சக்தியும் பரவிற்று, மேற்கு சேர நாடெங்கும் ஒரு அமைதி நிலவிற்று

    அந்த அமைதி கிழக்குபக்கமும் நிலவ சோட்டானிக்கரை பகவதி அவரை அனுப்பிவைத்தாள் செங்கோட்டை வழியாக தாமிரபரணி கரைக்கும் வந்தார் சுடலை

    அங்கு திருட்டு, மாந்தீரிகம், அதர்மம், ஏமாற்று என என்னவெல்லாம் நடந்ததோ அங்கெல்லாம் ஏதோ ஒருவடிவில் புகுந்தார், பாதிக்கபட்டவன் அழுதான் என புகுந்தார், திருடன் சாமார்த்தியசாலி என்றால் என் கல்லை திருடிவிட்டாய் என புகுந்தார், எங்காவது அக்கிரமம் நடந்தால் அங்கு அவராக சென்று இவன் என் ஆலயத்தில் இருந்தான் அந்த மண் இவன் காலில் ஒட்டிவிட்டது அதனால் இங்கு வந்துவிட்டேன் என அமர்ந்து கொண்டார்

    இப்படி அந்த சேரநாட்டின் பகுதியெல்லாம் ஏதோ ஒரு வகையில் வந்து அமர்ந்தார்

    அவர் உக்கிரமான தெய்வம், பொல்லாதவர் என பெயர் எடுத்தாலும் அந்த உக்கிரத்தால் பல நன்மைகளும் அமைதியும் மக்களுக்கு ஏற்பட்டன‌

    ஊருக்கு காவலாக ஒற்றை பனையிலோ வேப்பமரத்து அடியிலோ அமர்ந்து கொண்டார் , காரணம் காவலாளி தனித்து இருக்க வேண்டும் என காட்டி கொண்டார், தனித்திருக்கும் மரத்தை சூழும் அதிகமான பிரபஞ்ச சக்தியும் அவருக்கு சரியாக இருந்தது

    தனித்திருக்கும் மனிதன் அதிகம் சிந்திப்பது போல தனித்து வளரும்மரங்களும் அசாத்திய சக்தி கொண்டவை, மரம் என அதனை ஒதுக்கிவிட முடியாது, அவைகளும் பல விஷயங்களை ஈர்த்து வைத்து கொள்கின்றன, இதனால்தான் கோவில்களின் தனிமரங்கள் எக்காலமும் சக்தி கொண்டவையாக விளங்கும்

    அப்படிபட்ட தனிமரங்களின் அடியில் அமர்ந்திருக்கும் சுடலை அந்த மரத்தின் பிரபஞ்ச பலன்களை மக்களும் பெருமாறு அவர்களை அறியாமல் செய்தார்

    கிராமங்களுக்கு அவரே நீதிபதியானார், எல்லா வழக்கும் அவர்முன்னால் முடிந்தன. அச்சமூட்டும் வகையில் தனக்கு அரிவாள் கம்புடன் சிலை வடிக்க சொன்னார் சுடலை, அதை கண்டோர் அவர்முன் பணிந்து வணங்கினர்

    அவர் சன்னதியில் நீதி கிடைத்தது, அக்கிரமிகள் தண்டனை பெற்றனர், துர்சக்திகள் ஓடின மக்களிடம் மகிழ்வும் வாழ்வும் முடிவந்தது

    மக்களின் ஒற்றுமைக்கும் இல்லாதொர் இருப்பவருக்கு பகிர்ந்துண்ணவும் விருப்பம் கொண்டார் சுடலை, அப்படி பலமூட்டை சோறும் ஏக்பட்ட விலங்குகளும் கேட்டார்

    அவருகு என படைக்கபட்டதில் எத்தனையோ ஆயிரம் மக்கள் பசியாறினார்கள், ஏழைகள் கேட்டால் கொடுக்காதவர்கள் சுடலை கேட்டால் மூட்டை மூட்டையாக சோறும் ஆடும் கோழியும் தர தயாரானார்கள்

    சுடலை சன்னதியில் அப்படி சோறும் கறியும் கொட்டி கிடக்க எல்லா சனமும் வயிறார உண்டது, அந்த உணவில் ஒரு ஒற்றுமைவந்தது, மக்களுக்கு சக்தி வந்தது

    அப்பொழுதும் ரத்தம் உடலுக்கு கேடு என்பதால் ரத்தத்தை தன் பீடத்தில் ஊற்ற சொல்லிவிட்டு தன்னை ரத்தவெறியனாக காட்டி கொண்டு மக்களுக்கு சத்தாண உணவை கொடுத்தார் சுடலை

    ஆம், பெரும் படையலிட்டு அவரை வணங்குவது அவருக்கல்ல அந்த மக்களுக்காக அந்த ஊருக்காக அந்த ஒற்றுமைக்காக‌

    தனக்கென திருவிழா கேட்டார் சுடலை, அந்த திருவிழாவில் ஒற்றுமை அதிகரித்தது, ஊர் சுத்தமானது சொந்தபந்தங்கள் கூடின, மக்களிடம் ஒரு ஐக்கியமும் சந்தோஷமும் கூடிற்று சுடலை மக்களை ஒன்றுபடுத்தினார்

    சுடலைக்கு படைக்கபடும் படையலும் பெரும் செலவில் நடத்தபடும் பூஜையும் சும்மா அல்ல, ஒவ்வொருவனின் கர்மாவினை அதில் சுடலை சரியாக சரி செய்கின்றார்

    ஒவ்வொரு மனிதன் கையில் வரும் பணத்திலும் பொருளிலும் யாரோ ஒருவனின் கண்ணீர் கலந்திருக்கும், யாரோ ஒருவனை ஏமாற்றி அப்பணம் இவன் கைக்கு வந்திருக்கும், அது பாவம் அது கெட்ட கர்மா அது குலசாபம்

    அதை போக்க தர்மம் செய்யவேண்டும், அன்னதானமும் இன்னும் பல தானமும் அவசியம், வஸ்திர தானம் முக்கியம்

    அதை சுடலை செய்யவைத்தார், தன் சன்னதியில் கொட்டபடும் சோற்றிலும் கிடாவிலும் தனக்கு காணிக்கையாக வரும் வேட்டியிலும் அவன் கர்மாவினை கழிக்க செய்தார்

    சுடலை கோவிலில் கொட்டபடும் சோறும் வெட்டபடும் கிடாவும் கட்டபடும் துணியும் ஒவ்வொருவனும் தன் கர்மாவினை ஒழிப்பதே, பாவத்தை குறைப்பதே

    அவனிடம் வாங்கி இல்லாதோருக்கு கொடுத்து அவன் கணக்கை அவன் அறியாமலே சரி செய்கின்றார் சுடலை

    அப்படி நடக்கும் கொடையில்தான் வாழ்வு நிலையற்றது என சொல்லும் மயான கொள்ளையினை நடத்துவார் சுடலை, அது வெறும் சடங்கல்ல, வெறும் சம்பிரதயமல்ல பெரும் ஞான தத்துவம்

    சுடுகாட்டில் சிவன் ஏன் சுடலையினை படைத்து அனுப்பினார் எனும் பெரும் தத்துவம்

    இன்றும் ஆடிமாதங்களி தென்னக கொடைகளில் நீங்கள் அதனை காணலாம், சுடலை சாமி சுடுகாட்டுக்கு சென்று எலும்பு கடிப்பதெல்லாமோ சுடலை பொடியினை பூசிவருவதெல்லாமோ வெறும் மூடநம்பிக்கை அல்ல, சுடுகாட்டு பேயின் தந்திரமுமல்ல‌

    எல்லாம் ஞானம் முழு ஞானம்

    அதை கவனித்தால் புரியும், அந்நாளில் சாமியாடி உடலில் இறங்கும் சுடலை கடுமையாக ஆடுவார். ஆட்டமென்றால் அகோரமாகத்தான் இருக்கும். அதில் ஆடு வெட்டுவார் , வாழை குலைகளை உரிப்பார் ஆடாத‌ ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு சுடுகாட்டுக்கு தனியே செல்வார்

    வரும்பொழுது சுடுகாட்டு சாம்பலோ எலும்போ கையில் இருக்கும்

    மானிட வாழ்வில் மட்டும் என்ன உண்டு? இதே காட்சிதான்

    மனிதன் ஆடுமட்டும் ஆடுகின்றான், வாழ்வில் அவ்வளவு ஆங்காரமாக ஆடுகின்றான். அவனின் மாளிகை என்ன? தோரணம் என்ன? உணவென்ன? ஆடு என்ன? கோழி என்ன? கொண்டாட்டமென்ன?

    ஆனால் கடைசியில் சுடுகாட்டுக்கு தனியே செல்கின்றான், சாம்பலே மிஞ்சுகின்றது

    இந்த தத்துவமே தென்னகத்து சுடலை மாடன் கொடைகளில் சொல்லபடுகின்றது, இன்னும் ஆழமாக சொன்னால் தெய்வம் மிக சரியாக மானிட வாழ்வினை காட்சியாய் சொல்லி பாடம் நடத்துகின்றது

    அதை புரிந்துகொள்ளத்தான் மானிடனுக்கு புத்தியில்லை, மாயை அவன் கண்களை மறைக்கின்றது

    சாமி என்னமோ ஆட்டுக்கும் எலும்புக்கும் ஆசைபட்டதாய் அவன் நினைத்து கொடை நடத்துகின்றான்

    சாமியோ அவனுக்கு ஞானத்தை போதிக்கின்றது

    எல்லா மனிதனும் கடைசியில் சுடுகாட்டில் சாம்பலாகி வேகாத எலும்புகளாய் முடியபோகின்றவர்கள் எனும் தத்துவத்தை விளக்கவே சாமியின் நள்ளிரவு மயான வேட்டை நடக்கும்

    சாமி தனியாகத்தான் சுடுகாட்டுக்கு செல்வார் ஏன்?

    அதேதான் என்னதான் ஆடினாலும் ஒருவன் தனியாகத்தான் கடைசியில் சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும் எனும் தத்துவம் அது

    சுடலை சாமி காவல் தெய்வம் மட்டுமல்ல, மானிட வாழ்வின் தத்துவத்தை விளக்கும் தெய்வமும் கூட‌

    சுடலை என்பவர் பேயோடு சுடுகாட்டில் ஆடுவார், பிணத்துக்கு காவல் இருப்பார் என்பதெல்லாம் “ஏ மனிதா என்றாவது ஒருநாள் நீ சுடுகாட்டுக்கு போவாய், அங்கே சுடலை இருப்பார் அதனால் சாவை கண்டு அஞ்சாதே..” என அவனை தைரியபடுத்த கூற பட்ட மொழிகள்

    ஆம் நாம் வணங்கும் தெய்வமே சுடுகாட்டில் இருக்கும் பொழுது சாவை கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும் என்ற தைரியம் எல்லோருக்கும் வரும்

    அந்த தைரியத்தை ஊட்ட சொன்ன வரிகளே அவையன்றி வேறொன்றுமில்லை

    அனுதினமும் சுடலை மாடன் கோவிலை பார்க்கும் ஒருவனுக்கு என்ன நினைப்பு வரவேண்டும்? சுடுகாடு போகுமட்டும் இச்சாமியே துணை என்றும், என்றேனும் ஒருநாள் மரிக்கபோகும் நாம் அந்த நீர் குமிழி வாழ்வின் தத்துவத்தை அனுதினமும் நெஞ்சில் நிறுத்தவேண்டும் எனும் நினைப்பு வரவேண்டும்,

    ஆங்காரமும் வீண் கவுரவத்தையும் விட்டொழிக்கும் நினைப்பு வரவேண்டும்.

    சுடலைமாடன் கோவிலை ஊரெல்லாம் வைத்திருப்பதும், அதற்கு கொடை நடத்துவதும் அதற்காகவே

    சுடலை அச்சுறுத்தும் சாமியோ இல்லை படு பயங்கர முரட்டுசாமி அல்ல, அது ஒரு ஞான தத்துவ வடிவம்.

    அதன் விழாக்களும் கொண்டாட்டமும் ஆடல் பாடலும் எல்லாமும் அதுவே

    ஆடாது ஆடி அடங்குவதுதான் வாழ்க்கை என்பதை சுடலை சாமியினை விட்டால் எந்த சாமியின் கொடையும் மயானம் சென்று போதிப்பதே இல்லை அதில் சுடலை தனித்து நிற்கின்றார்

    அப்படி அன்றொரு நாள் சிவனும் சோட்டானிக்கரை அம்மனும் தனக்கிட்ட உத்தரவுபடி எதெல்லாம் அவர் பகுதியோ அந்த எல்லையில் இன்றுவரை காவல் இருக்கின்றார் சுடலை

    அவரின் காவல் நடக்குமிடம் தாமிரபரணி நதிகரை தொடங்கி கேரளா வரை நீடிக்கும், அதாவது அன்றைய சேரநாட்டு எல்லை முழுக்க அவர் இருப்பார்

    பகவதி அம்மன் இருக்குமிடமெல்லாம் அவரும் இருப்பார்

    பெரும் ஆலயங்களில் தேரடி மாடனாகவும், கிராமங்களில் காவல் தெய்வமாகவும், பிரபஞ்ச சக்தியினை ஈர்த்து வைத்திருக்கும் ஒற்றை மரத்தடியில் மக்களுக்கு அருள் வழங்கும் தெய்வமாகவும் அவர் என்றும் இருப்பார்

    சுடலை வெறும் அசைவ சாமி என்பதில் அர்த்தமே இல்லை, மக்கள் அதுவும் உழைக்கும் கிராமத்து மக்கள் நல்ல உணவு உண்ணவும் மகிழவும் திருப்தியுறவும் அவர் ஆடுகோழி கேட்பதாக சொல்வாரே அன்றி அது அவருக்கு அல்ல‌

    அவர் மூட்டை மூட்டையாய் உணவு கேட்பதெல்லாம் இருப்போரிடம் இருந்து இல்லாதோருக்கு கொடுக்கும் பெரும் தத்துவமே

    அவருக்கு அன்பாக கொடுக்கும் சர்க்கரை பொங்கலும் ஒன்றுதான் வளர்த்து வெட்டும் கிடாவும் ஒன்றுதான்

    அவருக்கு தேவை நீதி, நேர்மை, உண்மையான அன்பு இவைதான். நீதிக்கும் தர்மத்துக்கும் களங்கம் வந்தால் அவர் தன் உருவம் காட்டுவார்

    சிலர் சொல்வது போல மாந்த்ரீகத்துக்கு அவர் கட்டுபடுவார் என்பதெல்லாம் சரியல்ல, மாந்தீரீகம் ஒரு வழிபாடு, உன்னதமான பக்தனுக்கு தெய்வம் கட்டுபடும் பக்தி வழிபாடு

    அப்படிபட்ட பக்தனின் கோரிக்கைக்கு தெய்வம் செவிமடுக்கும், சில கர்ம வினைகளுக்காக வழிவிடும் ஆனால் தெய்வம் தன் அடியாள் என நினைக்கும் மாந்தீரிகனை தெய்வம் கொன்றோழிக்காமல் விடாது

    சுடலையும் அப்படியானவரே அன்றி சிவனிடம் அவர் பெற்ற அருளின் காரணமாய் எல்லா துர்சக்திகள் மேலும் அவருக்கு அதிகாரம் உண்டு

    அவர் அகோர தெய்வம் அல்ல, அகோரி எனும் சுடுகாட்டு தத்துவத்தினை விளக்கும் தெய்வம்

    அவர் சில பிரிவினருக்கு என்பதும், பிராமணருக்கு தெய்வம் அல்ல என்பதும் சரியல்ல, தென்னகத்தில் பல இடங்களில் சுடலை கோவிலில் சாமியாடும் பிராமணர்கள் உண்டு

    அவர்கள் பெரும்பாலும் சர்க்கரைபொங்கலில்தான் அவரை வழிபடுகின்றார்கள்

    சுடலை தொட்டால் விடமாட்டார், அவரிடம் அருள் வாங்கினால் திருப்பி பொருள் கேட்பார் என்பதெல்லாம் பயமுறுத்த அல்ல, சுடலை அப்படியானவர் அல்ல‌

    இந்த சமூகத்தில் இருந்து நாம் பெற்றுகொண்டதை திரும்ப கொடுக்கவைப்பார் சுடலை
    “என்னால்ல் உனக்கு நன்மை கிடைத்ததா? வா 100 பேருக்கு சாப்பாடு போடு, என்னை இன்னும் பலரிடம் கொண்டு சேர்த்துவிடு நான் மக்களிடம் பரவியபடிபசி போக்குவேன், ஞானம் அருள்வேன் காவல் இருப்பேன், மக்கள் பெருக பெருக என் ஆலயமும் பெருகும் நானும் பெருகுவேன் மக்களை காப்பேன்

    என்னிடம் நலம்பெற்ற நீ நாலுபேருக்கு நல்லது செய்யவேண்டும், அல்லது விடமாட்டேன்” என்பதே சுடலையின் தத்துவம்

    அதெல்லாம் மக்கள் இந்த சமூகத்தை வாழ்வைக்கும் சூட்சுமம், தன் பக்தர்கள் மூலம் சுடலை இச்சமூகத்தை நலமாக்கும் சூட்சும தந்திரம், பிரபஞ்சத்தின் பெரும் கணக்கு

    தென் மாவட்டத்தில் மரங்களை விட அதிகம் இருப்பது சுடலை கோவில்கள்தான், அன்னை தனக்கிட்ட உத்தரவுபடி இன்றுவரை தென்னகத்தில் மக்கள் பெருக பெருக தன் கோவில்களையும் பெருக்கி நிற்பவர் அவர்தான்

    இன்றும் அவர் பெயரால் பசியாறும் மக்கள் பல்லாயிரத்தை அனுதினமும் தாண்டும், அவர் பெயரால் வளர்க்கபடும் கிடாவும் கோழியும் பன்றியும் எத்தனாயிரம் பேருக்கு உணவாகின்றன என்பதும் கவனிக்கதக்கது

    இலவசமாக ஆம் இல்லாதோருக்கு இருப்போரிடம் இருந்து வாங்கி அறுசுவை உணவூட்டும் பெரும் காரியத்தை செய்கின்றார் சுடலை

    எல்லோரும் எல்லாம் அறிந்திருக்க முடியாது, அதுவும் சாமான்ய மக்கள் உழைப்பை தவிர ஏதும் அறிய மகா சிரமம், அவர்கள் கீதை படிக்க முடியாது , மூவகை மலம் குணம் எல்லாம் அறிய முடியாது, அவர்கள் வாழ்வுக்கும் ஞானதேடலுக்கும் இடைவெளி அதிகம்

    அவர்களுக்கு கர்மா தெரியாது, தவமோ யோகமோ சூட்சும சக்திகளோ அதன் ஆற்றலோ தெரியாது

    ஆனால் சுடலை சுவாமி தத்துவத்தில் அவர்களை அறியாமலே அவர்களுக்கு ஞானம் புகட்டபடுகின்றது, அவர்கள் மொழியில் அவர்களுக்கு கர்மம் கரைய வைத்து ஞானவழி காட்டி கொண்டிருக்கின்றார்

    நீதியும் நியாயமும் மட்டும் அவர் வழங்கவில்லை சுடுகாட்டு தத்துவத்தை சொல்லி அதுவும் ஊரும் சனமும் கூடியிருக்கும் நேரம் சுடுகாட்டுக்கு சென்று எலும்பும் சாம்பலும் எடுத்து வந்து “இவ்வளவுதானடா வாழ்க்கை, எல்லார் வாழ்வும் பிடிசாம்பலும் எலும்புமாக மிஞ்சபோவதுதான்வாழ்க்கை, பற்றிவரபோவது பாவமும் புண்ணியமுமே, அதானால் நல்வாழ்வு வாழுங்கள்” என பெரும் ஞானமும் அவர் அருள்கின்றார்

    ஆடிமாதம் தென்னகம் முழுக்க அவருக்கானது, அதுவும் வெள்ளிகிழமைகள் முழுக்க அவருக்கானது

    ஒருவகையில் அவர்தான் இன்று மதமாற்றங்களை பெருமளவில் தடுத்து கொண்டிருக்கின்றார், அப்பாவி கிராம மக்களை மதமாற்ற முனையும் கும்பல்கள் பெரும் பணமும் அதிகாரமும் கொண்டிருந்தும் கிராமங்களில் தடுமாறி ஓடுகின்றதென்றால் அதற்கு காரணம் சுடலைமாடனே

    சக்திமிக்க சுடலைமாடன் தங்களை விடமாட்டார் என்றும், அவர் இருக்கும்பொழுது இன்னொரு தெய்வம் தேவையில்லை என தென்னக கிராம மக்கள் காட்டும் வைராக்கியமே அங்கு மதமாற்றத்தை தடுக்கின்றது

    புத்தர், சமணர், இஸ்லாமிய அரசுகள், போர்ச்சுகீசியன் வெள்ளையன் இன்றைய இம்சை சபைகள் என யார் வந்தாலும் தனி இந்துகிராமங்கள் இன்றளவும் நீடிக்க சுடலைமாடன் தெற்கே முக்கியமானவர்

    அவ்வகையில் கிராம காவல்களுக்கு மட்டும் அன்று, சமத்துவ காவல், நீதிகாவல், தத்துவ காவல், மதமாற்ற காவல் என பெரும் ஞானத்துடன் அவர் அங்கு நின்று ஆட்சி செய்கின்றார்

    அன்னை சக்தியும் சிவனும் எவ்வளவு ஞானமாக அவரை படைத்திருக்கின்றார்கள், அந்த ஞானம் இன்றளவும் எப்படி நல்வழி காட்டி மக்களை இந்துவாக தனி அடையாளத்துடன் பெரும் போதனையுடன் நிறுத்தி காத்து வருகின்றது என்பதில் பெரும் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார் சுடலைமாட சுவாமி

    அவர் இருப்பிடம் வேண்டுமானால் தாமிரபரணிக்கு தெற்கே இருக்கலாம், ஆனால் நீங்கள் மனமுவந்து அழைத்தால், உங்கள் கண்ணீரும் கதறலும் உண்மையானால் , உங்களுக்கு உதவி அவசியமானால் உடனே அங்கு வந்து நிற்பார் சுடலை

    அந்த நம்பிக்கையுடன் இந்த ஆடிமாதத்தில் அவரின் பக்தர்களெல்லாம் அவரை வணங்கி கொண்டிருக்கின்றார்கள், அந்த நீதி காவலர் எல்லா மக்களுக்கும் நல்ல அருளும் ஞானமும் கொடுக்கட்டும்

  18. இந்து பெண்களின் தனி அடையாளம் அவர், இன்றும் அவரே தமிழக பெண்களுக்கு மாபெரும் உத்வேகமும் வழிகாட்டியுமானவர்

    அந்த முத்துலெட்சுமி பிராமண பிறப்பு, அக்காலத்திலே அதாவது பெண்கள் பெரிதளவில் கல்வி பெறாத காலங்களிலே படிக்க விரும்பி போராடியவர்

    1900களில் பெண்களுக்கு கல்வி பிரதானமாக‌ இல்லை, அன்றைய காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகள் குறைவு , அதுவும் அக்காலத்தில் இன்றுள்ள வகை வகையான கல்விகள் என எதுவுமில்லை

    எனினும் சட்டம், மருத்துவம், பொறியியல் என ஒரு சில துறைகள் வளர்ந்து கொண்டிருந்தன‌

    அன்றைய மருத்துவ கல்வி வித்தியாசமானது சம்ஸ்கிருதமும் லத்தீனும் படிக்க வேண்டும் இன்னும் என்னவெல்லாமொ உண்டு, சிரமபட்டு கற்கவேண்டி இருந்ததால் அக்கால பெண்களுக்கு அது சாத்தியமில்லை

    ஆனால் முத்துலெட்சுமி போராடினார், தனியாக போராடினார் அவரின் உறுதியினை கண்ட புதுக்கோட்டை இந்து மன்னரே அவர் படிக்க வழிசெய்தார்

    ஆம், இந்து பெண்ணை படிக்க வைத்தவர் இந்து மன்னர்தான், அது அல்லாது அவள் படிக்க விரும்பியிருந்தால் மதமாற்றமே வழி, ஆனால் முத்துலட்சுமி அதை செய்யவில்லை

    ஒரு இந்துவாகவே நின்றாள், கற்றாள், மருத்துவரனார்

    இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமியே, தனி ஒருத்தியாக ஆண்களுக்கு நிகராக நின்று அவர் மருத்துவம் படித்ததெல்லாம் மன உறுதியின் உச்சம்

    மருத்துவர் ஆயினாலும் மணவாழ்வில் விருப்பமில்லை ஒரு மெழுகின் வாழ்வுபலன் ஆயிரம் மெழுகினை ஏற்றிவைப்பதே என பெண்களுக்காக போராடினார்

    பாரீசில் நடந்த மாநாட்டில் உலக பெண்களின் அடிமை நிலையினை 1926ல் முழங்கிய முதல் பெண் அவரே, உலக பெண்களுக்கான உரிமைகளை அவர்தான் பேசினார்

    1925 வாக்கில் வெள்ளை அரசுகுட்பட்ட உள்ளாட்சி அமைப்பு சென்னை ராஜ்தானியின் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினருமானார்

    சென்னை கோட்டையில் மக்கள் பிரதிநிதியாய் கால்வைத்த முதல் பெண் அவரே, அவரின் கல்வி அவரை அங்கு அமர்த்தியது

    அப்பொழுதுதான் திசைமாறி திரிந்த தேவதாசி ஒழிப்பு சட்டம் அவரால் கொண்டுவரபட்டது, பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானம் அவராலே கொண்டுவரபட்டது.

    தனக்கேற்ற துணையாக தன்னை புரிந்து கொண்ட சுந்தர ரெட்டி என்பவரை மணந்து முத்துலெட்சுமி ரெட்டியானார்

    அவர்களின் முயற்சியில் தொடங்கியத்தான் அடையாறு மருத்துவமனை, இன்று புற்றுநோய் சிகிச்சைக்கு தனி அடையாளமாக திகழும் அந்த மருத்துவாலயம்

    அனாதை பெண் குழந்தைகளை அரவணைக்கும் அவ்வையார் இல்லமும் அவர் ஏற்படுத்தியதே

    ஒரு வகையில் சொன்னால் பாரத பெண்களின் வழிகாட்டி முத்துலட்சுமி

    அந்த மருத்துவ மாமணிக்கு, தமிழக பெண்களின் விடுதலைக்கு முன்னோடிக்கு, என்றுமே தமிழக மகளிரின் தனிபெரும் அடையாளமாக திகழும் அந்த காரிகைக்கு இன்று நினைவுநாள்

    காலமுள்ள காலம் அவரின் பெயரும் சாதனையும் இங்கு நிலைக்கும்

    ராம்சாமி பெண்ணுரிமை பேசும் முன்பே பெண் உரிமையினை பெற்று பெற்றுகொண்டவர் அவர்

    யார் சொல்லியும் பெண் விடுதலை நடக்காது, பெண்களே தானாக விலங்கை உடைத்தால்தான் உண்டு என கிளம்பி தன்னை நிருபித்த அந்த சமுக போராளிக்கு இன்று பிறந்தநாள்

    இன்னொரு வகையில் அந்த பெண்ணுக்கு கல்வி கிடைக்க முழு பலமுமாய் நின்ற புதுகோட்டை மன்னரும் நினைவுக்கு வருவார்

    இந்தியாவின் முதல் பெண்மருத்துவரை கொடுத்தது இந்து சமூகம் , இந்தியாவிலே முதல் முறையாக பெண்களுக்கு கல்வியும், சொத்துரிமையும் கொடுத்த இடம் தமிழ= இந்து சமூகம்

    அனாதை பெண் குழந்தைகளை ஆதரிக்கும் அவ்வையார் மையங்களை திறந்தது தமிழக இந்து சமூகம்

    இப்படி இந்தியாவுக்கே பெண்விடுதலைக்கு வழிகாட்டிய தமிழச்சி முத்துலெட்சுமி ரெட்டி ஓர் இந்து.

    இந்நாலில் அவருக்கு அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு இந்தியரின் குறிப்பாக தமழரின் கடமையுமாகும்

    குறிப்பாக தமிழக மங்கையருக்கு பெரும் நன்றிகடன் உண்டு

    அவர் பாதை காட்டினார் நீங்கள் நடக்கின்றீர்கள், அவர் விளக்கேற்றினார் நீங்கள் பார்க்கின்றீர்கள்

    அவர் கைகாட்டியாய் நின்றார் நீவீர் சரியான பாதை கண்டீர்கள்

    அவர் அஸ்திவாரமாய் நின்றார் நீவீர் கோபுரமாய் உயர்ந்தீர்கள்

    ஒவ்வொரு தமிழக பெண்களின் நன்றிக்குரிய அந்த முத்துலெட்சுமி ரெட்டிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

    அவ்வையார், வேலுநாச்சியார் போன்ற வீர தமிழச்சிகள் வரிசையில் வந்த அறிவு தமிழச்சி அவர், அடிமை விலங்கை உடைக்க வந்த போராளி தமிழச்சி அவர்

    அவர் ஏற்றி வைத்த தீபமே இப்பொழுது பிரகாசமாய் எரிகின்றது

    ஆம் கவனிக்க வேண்டிய விஷயம் இந்தியாவின் முதல் நவீன பெண் மருத்துவர் ஒரு இந்து பிராமண பெண், தடைகளிடையே போராடி முதல் பெண் மருத்துவராக வந்தது பிராமண பெண்

    அவளும் பெரும் வசதியானவள் அல்ல , வறுமைதான் அதனால் புதுகோட்டை மன்னரால் படிக்கவைக்கபட்டவர் அவர்

    ஆக ஈரோட்டு ராம்சாமி திராவிட கும்பலுக்கு முன்பே இங்கு பெண்கள் படிக்க கிளம்பியிருந்தார்கள் மிக பெரும் சாதனையெல்லாம் செய்வதார்கள் என்பது தெரிகின்றது

    திராவிடம் பெண் விடுதலையினை கொடுத்தது என்பதெல்லாம் ராம்சாமிக்கு முன்பே முத்துலட்சுமி மருத்துவரானதும், திராவிட கும்பலில் மணியம்மையோ இல்லை வேறு போராளிகளோ படிக்க அனுப்படவில்லை என்பதும் திராவிடம் சொன்னதெல்லாம் சொல்வதெல்லாம் பொய் என்பதை காலம் காலமாக சொல்லிகொண்டிருக்கின்றது

    தனியாக போராடி மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் மாபெரும் சாதனை ராம்சாமி கோஷ்டியின் பிரச்சாரத்தை எக்காலமும் பொய் என நிரூபித்து கொண்டே இருக்கின்றது

    இங்கு பெண்களும் எல்லா துறையிலும் சாதிக்கலாம் என நிரூபித்தவள் ஒரு இந்து பெண், அதுவும் வறுமையான இந்து பிரமண பெண், பெண்களுக்கு இந்தியா முழுக்க பெரும் எடுத்துகாட்டாக இருந்தவள் இந்து பெண் என்பதில் சுக்கு நூறாக உடைகின்றது திராவிட கோஷ்டிகளின் பொய் பிம்பம்

  19. இந்த சிரிக்கவைக்கும் கொசுக்கடிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது கடுப்பான விஷயம்

    ராஜேந்திரசோழனை தமிழ்படுத்துகின்றோம் என அரசேந்திர சோழனாக்கிவிட்டார்களாம், அதாவது அவனுக்கு அவன் தந்தை ராஜராஜசோழன் சூட்டிய பெயரையே மாற்றி இவர்கள் பெயர்சூட்டுகின்றார்கள்

    ஏதும் சொன்னால் ராஜராஜன் பெயரையே அரசனுக்கு அரசன் என மாற்றிவிடுவார்கள்

    ஆனால் பிரபாகரன் எனும் சமஸ்கிருத பெயரை மட்டும் சூரியகாரன் என்றோ சூரியன் அருள் என்றோ மாற்றவே மாட்டார்கள், அதுதான் தமிழ்பற்று

    சரி அவ்வளவு ஏன்? முதல்வர் ச்டாலினுக்கு வாழ்த்து, ச்.எழும்பு செல்வம் (உதயநிதி) என ஒரு வார்த்தை இவர்கள் சொல்லட்டும் பார்க்கலாம்

    குறைந்தபட்சம் சுப.வீ என்பவரையாவது மங்கல.வீ என அழைப்பார்கள் என எதிர்பார்ப்போம்

    ராஜ இந்திரன் எனும் பெயரை அரச இந்திரன் என மாற்றியகும்பலுக்கு இந்திரன் என்பது தமிழ்பெயர் இல்லை அது சமஸ்கிருதம் என தெரியவில்லை அல்லவா?

    இந்த பரிதாபமான கோஷ்டிக்கு பெயர்தான் தும்பிகள், பாவம் அவர்கள் அப்படித்தான்

  20. உக்ரைன் யுத்தம் தொடங்கியபின் ரஷ்யா அதிபர் புட்டீன் தன் அணிக்கு ஆள்சேர்க்க கிளம்பிவிட்டார், ஈரான் இப்பொழுது முழுக்க ரஷ்ய அணிஎன்பது உறுதியாயிற்று

    நட்புநாடு என சிலநாடுகள் இல்லாமல் எந்த நாடும்போருக்கு கிளம்பாது அது உலக நியதி, இதனால்தான் ஆனானபட்ட அமெரிக்காவே தன் அடிபொடிகளை திரட்டிகொண்டுதான் போருக்கு வரும்

    நட்புநாடொன்று இல்லாமல் போர் தொடங்கினால் என்னாகும் என்பதற்கு 1962ல் நேரு நடத்திய யுத்தமே எடுத்துகாட்டு , யுத்தம் என்றால் நண்பர்கள் நிச்சயம் வேண்டும்

    புட்டீன் சீனாவினை நம்பினார், அப்படியே கியூபா வெனிசுலா என பலநாடுகளை நம்பினார் தனக்கு ஆபத்துக்கு கைகொடுக்கும் என நம்பினார்

    கியூபாவும் சீனாவும் கம்யூனிச பாசத்தில் தன்னை கைவிடாது என உறுதியாக நம்பினார்

    ஆனால் கம்யூனிஸ்டுகள் எவ்வளவு சுயநலவாதிகள் என்பதை உக்ரைன் போர் காட்டிற்று, எல்லா கம்யூனிஸ்டுகளும் புட்டீனை கைவிட்டார்கள், குறிப்பாக சீன அதிபர் ஜின்பெங் தன் நாட்டு நலனே பிரதானம் என முடிவு செய்தார்

    இதனால் ரஷ்யாவுக்கு ஆதரவு எனபெலாரஸ் (இது திமுகவும் திகவும் போல ரஷ்யாவம் பெலாரசும்), சிரியா, வடகொரியா என மூன்று நாடுகளாக இருக்கின்றன‌

    இவைதான் ரஷ்யாவினை பகிரங்கமாக‌
    ஆதரிக்கும் நாடுகள்

    ஆனால் பரிதாபமான நாடுகள் பொருளாதார பலமோ ஆயுத பலமோ இல்லை, எதிர்பார்க்கபட்ட வடகொரிய குண்டரோ “அண்ணே எங்க ஆயுதமெல்லாம் சும்மாண்ணே” என்பதுபோல் ஒதுங்கி கொண்டார்

    இதனால் உக்ரைனில் தனித்துவிடபட்ட ரஷ்யா இப்பொழுது தீவிரமாக அணி சேர்க்கின்றது,அவ்வகையில் ஈரான் அவர்களின் நல்ல தேர்வு

    பல காரணங்களுக்காக ஈரான் ரஷ்ய கூட்டணி ஏற்பட்டிருக்கின்றது, ஒரு மிரட்டலை அவர்களால் கொடுக்க முடியும்

    சில காரணங்களுக்கு ரஷ்யாவுக்கு ஈரான் தேவை, எப்பொழுது யார் அடிப்பார்களோ என அலையும் ஈரானுக்கு ரஷ்யா தேவை

    ஈரானை தொடர்ந்து உலகில் யாரெல்லாம் தங்களோடு வருவார்கள் என கையில் சாக்குபையோடு திரிகின்றார் புட்டீன்

    ஆனால் அவரை கண்டவுடன் அல்லது ரஷ்ய தூதர்கள் வேறுநாட்டின் தலைவரை நோக்கி ஜனகராஜ் ஸ்டைலில் சிரிக்கும்பொழுதே “அய்யய்யோ” என கதவை அடைக்கின்றன பல நாடுகள்

    ரஷ்யாவின் பெருவிருப்பம் கியூபா அல்லது வெனிசுலா

    அந்த நாடுகளில்மட்டும் கால்வைத்தால் அவை ரஷ்ய அணிக்குள் வந்திவிட்டால் தன் எல்லையில் அட்டகாசம் செய்யும் அமெரிக்காவினை அவர்கள் எல்லையில் நின்று அடிக்கலாம்

    ஆனால் கியூபா எனும் கம்யூனிச தேசம் வாயில் பெவிக்கால் போட்டு ஒட்டிகொண்டது, வெனிசுலா தான் ஒரு நாடு என இருப்பதாக கூட அறிவிக்கவில்லை

    எனினும் சுடுகாட்டில் எலும்பு தேடும் சாமி போல ஆக்ரோஷமாக‌ நாடுகளை தேடிகொண்டிருக்கின்றது ரஷ்யா

    இங்கு ஒரு கேள்வி எழலாம்

    சீனா, கியூபா, வடகொரியா எல்லாம் கம்யூனிச நாடுகள் அல்லவா? புட்டீனும் கிட்டதட்ட கம்யூனிச சாயல் அல்லவா? அவரை ஏன் இவர்கள் “சித்தாந்த” ரீதியாக ஆதரிக்கவில்லை?

    உண்மையில் கம்யூனிஸ்டுகளிடம் ஒரு யழவு சிந்தாந்தமும் பொதுவாக கிடையாது, அவனவன் தன் நாட்டை பிடித்து முன்னேற்ற தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என சொல்லிகொண்டான்

    கம்யூனிசம் என பேசினாலும் அவனவன் தன் நாட்டு நலனில் கடுமையாக இருப்பான், சீன அதிபரோ கியூப அதிபரோ ரஷ்யாவினை பகிரங்கமாக ஆதரித்து பொருளாதார தடை வாங்க அவசியமே இல்லை

    ஏற்கனவே முழுக்க பொருளாதார அடிபட்டு மரத்துபோன ஈரான் மட்டும் ரஷ்யாவினை ஆதரிக்கலாமே தவிர புதிதாக அடிவாங்க ஒருநாடும் தயாராக இல்லை

    இதனால்தான் சீனா, கியூபா என பல நாடுகள் தத்தம் நலனில் அக்கறை கொண்டு “சிந்தாந்தமாவது சிகையாவது” என ஒதுங்குகின்றன‌

    உலகிலே சொந்த நாட்டு நலனுக்கு எதிராக “சித்தாந்தம்” பேசுவது இந்தியாவின் கம்யூனிஸ்ட் கோஷ்டி ஒன்றுதான்

    அவர்களும் இப்பொழுது அவர்களும் ரஷ்யாவினை ஆதரிப்பதாக தெரியவில்லை காரணம் ரஷ்யாவினை ஆதரித்தால் இப்பொழுது சல்லிகாசு கிடைக்காது என்பது அவர்களுக்கு தெரியும்

  21. திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வரும் முன்னாள் முரசொலி ஆசிரியருமான கருணாநிதி அவர்களின் கல்லறை முன்னால் கடலில் பெரிய பேனா சிலைவைத்து மரியாதை என்பதெல்லாம் சரியல்ல‌

    சில உபிக்கள் அந்த பேனா அண்ணாவுக்கு, கருணாநிதிக்குமானது என வழக்கம் போல 200 ரூபாய்க்கு விளக்கம் சொல்வதெல்லாம் பரிதாபம், கூட இருநூறு கொடுத்தால் அது பிரபல எழுத்தாளர்கள் எம்ஜி ராமசந்திரனுக்கும், ஜெயாவுக்குமான அஞ்சலி எனவும் அவர்கள் சிரிக்காமல் சொல்வார்கள்

    கருணாநிதி எழுதினார் மறுப்பதற்கில்லை, ஆனால் அவரின் பேனா எதை எழுதிற்று என்பதுதான் கவனிக்கதக்கது

    அது அவரின் பிழைப்புக்காக கதைகளை எழுதியது, அது சினிமா வசனங்களை எழுதியது, முரசொலியில் காசுக்கு எழுதியது, அது கட்சிக்கு எழுதியது, கடைசியில் பொன்னர் சங்கர் வரை நல்ல சம்பளத்துக்கு எழுதியது

    நாட்டுக்கோ அதன் ஒற்றுமைக்கோ அந்த பேனா எதையும் தியாக மனப்பான்மையோடு எழுதவே இல்லை, எழுதிய எழுத்ததையெல்லாம் எப்படி விற்க வேண்டுமோ அப்படி நல்ல தொகைக்கு விற்றது

    அதனால் அவர் பேனாவுக்கு சிலை என்றால் கோபாலபுரத்தில் அவர் வீட்டில், முரசொலி அலுவலகத்தில், திருகுவளையில் அவர்கள் குடும்பத்தார் அதாவது அவர் பேனாவின் வருமானத்தை யார் அனுபவிக்கின்றார்களோ அவர்கள் சிலை வைக்கட்டும்

    அதைவிடுத்து அரசு பணத்தில் சிலை என்றால் அது சரியல்ல‌

    தன் சொத்தையெல்லாம் விற்று கப்பல் விட்டானே வ.உ.சி அவனுக்கு கப்பல் சிலை கடலில் உண்டா? , தன் பேனாவினை பிரிட்டிஷாருக்கு எதிராக வீசினானானே பாரதி அவனுக்கு ஒரு பேனா சிலை உண்டா?

    யார் நாட்டுக்காக எழுதவில்லை?

    எத்தனையோ ஆயிரம் பேர் நாட்டுக்காக எழுதி தங்கள் வாழ்வை தொலைத்த தேசமிது, ஒரு பைசா வருமானமில்லா நிலையிலும் எத்தனையோ பெரியவர்கள் பத்திரிகை நடத்தி நாட்டுக்காக அழிந்த மாகாணம் இது

    அப்படிபட்ட மாகாணத்தில் கருணாநிதி ஒருவரே எழுதினார் என்பதெல்லாம் அப்பட்டமான மோசடி

    அந்த கருணாநிதி தன் பேனா வருமானத்தின் ஒரு பகுதியினையாவது அரசுக்கு கொடுத்தாரா என்றால் அதுவுமில்லை, அந்த பேனா உருப்படியான திட்டங்களை கொடுத்ததா என்றால் அதுவுமில்லை

    அந்த கடற்கரை காந்தியினை கண்டது, விவேகானந்தரை கண்டது, பாரதி தன் பிரசித்தியான பாடல்களை அங்குதான் பாடினான்

    திலகரின் வீரமிகு உரைகள் அங்குதான் நடந்தன, அதனால்தான் “திலகர் திடல்” என்ற பெயரே அந்த கடற்கரைக்கு உண்டு

    அங்கு கடலில் சிலை வைக்க வேண்டுமானால் திலகரின் கைதடிக்கு வைக்கலாம், பாரதியின் பேனாவினை வைக்கலாம், அந்த முண்டாசு கவிஞனை கம்பீரமாக நிறுத்தலாம்

    அதையெல்லாம் விட்டுவிட்டு கருணாநிதி பேனாவுக்கு சிலையென்பது தேசாபிமானிகளின் வருத்தத்தை அதிகரிக்கும் செயல்

    எந்த கருணாநிதியின் பேனாவுக்கு சிலை?

    அதே வங்ககடலோரம் 1987ல் இலங்கையில் இருந்து திரும்பிய இந்திய ராணுவத்தை வரவேற்கமாட்டேன் என எந்த பேனாவால் கருணாநிதி எழுதினாரோ, அந்த பேனாவுக்கு அங்கு 136 அடி உயரத்தில் மக்கள் பணத்தில் பேனா என்பதெல்லாம் யாரும் ஏற்றுகொள்ள கூடியது அல்ல‌

    இதெல்லாம் நாம் காலமெல்லாம் ஆள்வோம், எம் ஆட்சிக்கு முடிவே இல்லை எனும் ஒருவித மயக்கத்தில் எடுக்கபடும் முடிவுகள்

    ஆனானபட்ட லெனின் சிலையே தகர்ந்தது, இன்னும் எத்தனையோ சர்வாதிகாரிகள் சிலை தகர்ந்தது, சென்னையில் இருந்து சில மைல் தொலைவில் உள்ள இலங்கையில் மாபெரும் சக்திவாய்ந்த குடும்பமே சிதறி ஓடியது

    இதையெல்லாம் கண்டும் அவர்கள் திருந்தவில்லை என்றால் காலம் ஒருநாள் அதை செயலில் காட்டும், அந்த அடி பலமானதாய் இருக்கும்

    ஆண்டவனின் பேனா எழுதும் ஒவ்வொரு வரியும் நிலையானது, அந்த எழுத்து தீர்ப்பாக வாசிக்கபடும் பொழுது பொய்யும் மோசடியும் நாத்திகமும் யாருக்கோ எதற்கோ செய்த கூலிகணக்கும் சரியாக தீர்க்கபடும்

  22. துரோணர் ஏகலைவனிடம் கட்டை விரலை வாங்கினார், அவர் ஒரு ஆரிய பிராமண சூது பிடித்தவர் , இரக்கமில்லாதவர், பார்ப்பன கொடூரக்காரர் என ஏக குற்றசாட்டுகள் பகுத்தறிவு கோஷ்டிகளிடம் இருந்து வரும்
    உண்மையில் நடந்தது என்ன? அந்த துரோணரின் நிலை பரிதாபமானது

    ஆம், துரோணர் அந்த அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது.

    சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர்

    அந்நாளில் ராஜவம்சத்துக்கு மட்டுமே ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும், எல்லோரும் எல்லாம் பயின்றால் அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும் எனும் தந்திரம் அது

    இன்று இந்திய ராணுவ வித்தகர்கள் அங்கீகரிக்கபடா வீரர்களுக்கு அல்லது தெரு ரவுடிகளுக்கெல்லாம் துப்பாக்கி சுடுதலும் இதர பயிற்சியும் தர முடியுமா? முடியாதல்லவா?

    இதே நிலையில்தான் துரோணர் இருந்தார்

    அவ்வகையில் பாண்டவரும், கவுரவரும் பயில்கின்றார்கள், தேரோட்டி மகனான கர்ணனும் படிக்கின்றான்
    அவர்கள் அரங்கேற்றம் முடிந்தபின்புதான் ஏகலைவன் என்றொருவன் இருப்பதும் அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகின்றது

    அர்ஜூனன் அதை நேரிலே பார்த்துவிட்டான்

    அதுவரை தானே பெரும் வீரன் என நம்பிகொண்டிருந்த அவனுக்கு அந்த காட்சி அதிரவைத்தது
    ஆம், ஒரு நாய் அவன் முன் சுருண்டு விழுந்தது எங்கிருந்தோ வந்த அம்புகள் அந்த நாயினை அர்ஜூனனே அசரும் வண்ணம் தைத்தன‌

    முதல் அம்பு நாயின் காலை தாக்கிற்று, இரண்டாம் அம்பு மரத்தில் பட்டு சரியாக திரும்பி தன் வாயில் குறுக்காக பாய்ந்தது. மின்னலென வந்த அம்புகள் மிக அதிசயிக்க வகையில் எங்கெங்கோ பட்டு திரும்பி நாயின் வாயினை பல வகையில் தைத்து நாயின் தலையினை கழுத்தோடு திருப்பி வைத்தது
    அசந்து நின்றார் அர்ஜூனன்

    இந்த அம்பினை யார் எய்தான் என வியந்து தேடினால் அங்கொரு வேடன் ஒரு சிலையினை வணங்கி கொண்டிருந்தான், அந்த சிலை துரோணாரின் சிலையாய் இருந்தது

    அர்ஜூனனுக்கு ரத்தம் கொதித்தது, துரோணர் மிக பெரும் துரோகத்தை செய்ததாக பொருமினான், அரசகுடும்பத்துக்கு செய்ய வேண்டிய காரியத்தை வேடுவனுக்கு சொல்லிதந்தாகவும் இது “ராஜதுரோகம்” எனவும் ஆத்திரமடைந்தான்

    துரோணரின் சிலையினை வணங்குபவன் எப்படிபட்ட சீடனாக இருக்கமுடியும்? துரோணர் இதுபற்றி ஏன் யாரிடமும் சொல்லவில்லை என கடும் குழப்பமும் கோபமும் கொண்ட அவன், ஏதோ காரணங்களுக்காக அவனை அவர் ரகசியமாக தயார்படுத்துவதாக சந்தேகித்தான்

    துரோணாருக்கும் எதிரிகள் இருந்தார்கள், ஒரு அரசனிடம் அவமானபட்டேதான் அஸ்தினாபுரத்துக்கு வந்தார், அப்படிபட்ட துரோணர் ஏதோ செய்கிறார் தங்களுக்கு தெரியாமல் செய்கின்றார் என்பதை அறிந்து கொதித்தான்

    அதை அவையிலே சொன்னால் நிச்சயம் துரோணாரின் தலை வெட்டபடும், அவ்வளவு கொடிய குற்றம் ராஜதுரோகம்

    ஆயினும் நிதானமான அரஜூனன் இதனை துரோரணிடமே சொன்னான்

    அதிர்ந்தத துரோணார், நிலமையின் விபரீதத்தை அறிந்து தான் யாருக்கும் அப்படி ஒருவனுக்கு பயிற்சி அளிக்கவில்லை என அலறி அவனை அழைத்து கொண்டு காட்டுக்கு விரைந்தார்

    அந்த நாயினை கண்டபொழுதே அவருக்கு வியர்த்தது, அவ்வளவு துல்லியமாக அம்பு எறியும் சக்தி அதுவும் அசையும் இலக்கினை வீழ்தும் சக்தி யாருக்குமில்லை

    அவனை தேடி சென்ற துரோணருக்கு இன்னும் அதிர்ச்சி இருந்தது

    அவன் ஆற்றுக்கு அந்த பக்கம் இருக்கும் மரத்திற்கு அம்படித்தான், அந்த அம்புக்களை தொடுத்து பாலமே கட்டினான், அதில் ஏறி செல்ல தயாரான பொழுதுதான் துரோணர் தடுத்தார்

    “நில், யார் நீ”

    அந்த சத்தம் கேட்டதும் ஏகலைவன் அதிர்ந்தான், “குருவே” என காலில் விழுந்தான், அர்ஜூனனக்கு கோபம் அதிகமாயிற்று

    துரோணர் கத்தினார், “என் சிலையினை வைத்து பூஜித்து என்னை பெரும் சிக்கலில்
    இழுத்துவிட்டிருகின்றாய்?, இப்பொழுது நான் ராஜதுரோக குற்றத்தில் சிக்க போகின்றேன்” என உறுமினார்
    குனிந்தபடி காதை பொத்திகொண்டு சொன்னான் வேடவன் “குருவே நான் ஏகலைவன், இந்த காட்டின் வேடுவன்

    சில வருடங்களுக்கு முன் உங்களை பற்றி கேள்விபட்டு என் தந்தை என்னை உங்களிடம் பயிற்சி பெற சேர்க்க வந்தார், ஆனால் ராஜகுருமார்களுக்கு தவிர் உங்களால் பயிற்சி அளிக்கமுடியாது என மறுத்தீர்கள்

    நான் இந்த காட்டில் உங்களை குருவாக கொண்டு மனதார வணங்கி நானே பயிற்சி பெற்றேன், நானே உங்கள் நினைவில் வித்தைகளை கற்றேன், அப்படி உருவானேன்

    இதெல்லாம் உங்கள் நினைவில் நான் கற்றது, என் மனதில் இருந்து நீங்கள் சொல்லிகொடுத்தது, உங்களால் உருவானவன் நான், இந்த வித்தை நீங்கள் போட்ட பிச்சை” என வணங்கி நின்றான்

    துரோணருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி, ஒரு குருவுக்கு பெருமை பொன் அல்ல புகழ் அல்ல இன்னும் எதுவும அல்ல, தன் சீடன் ஒருவன் சாதித்து நிற்பது ஒன்றுதான் மகிழ்ச்சி

    அதுவும் தன்னை காணாமல் தன் நினைவு ஒன்றிலே மாவீரன் உருவானது அதை விட மகிழ்ச்சி, நிச்சயம் அவன் வித்தை அர்ஜூனனை விட பெரிது. தான் நேரில் உருவாக்கிய அர்ஜூனனை விட தான் காணாமலே உருவான அந்த ஏகலைவன் துரோணருக்கு பெரிதாய் நின்றான்

    ஆனால் அதை துரோணாரால் வாய்விட்டு சொல்லமுடியாது

    துரோணரின் நிலை சிக்கலானது, அவனை சேர்த்துகொண்டால் சிக்கல் அவனை வெளிதள்ளவும் அவருக்கு மனமில்லை

    அரசவாரிசுகளையும் மீறி ஒரு வேட்டுவன் வித்தையில் மிஞ்சி நிற்பது அரசகுடும்பத்துக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரிகையில் வீழ்ந்தால் முடிந்தது கதை,

    நாட்டு மக்களை சேர்த்து கலகம் செய்தால் இன்னும் மோசம்

    அதற்காக வேட்டுவனை அரண்மனைக்கும் அழைக்கமுடியாது சட்டம் இடம் கொடாது

    இப்படி ஒரு சிக்கல் இருக்க அவனை சந்திக்க கிளம்புகின்றது மேலிடமும், துரோணரும் அர்ஜூனனும், ஏகலைவனின் வித்தையில் அஞ்சுகின்றான்.

    அர்ஜூனனை மீறி ஜொலித்து நிற்கின்றான் ஏகலைவன், அவனை விட்டுவைப்பது நல்லதலல் என மேலிடம் முடிவெடுக்கின்றது

    ஏகலைவன் குரு என யார் என கேட்க அவன் துரோணர் சிலையினை காட்டுகின்றான், ஆம் துரோணரை மனதால் வணங்கி வளர்ந்து தானே வித்தை கற்றவன் ஏகலைவன்

    எல்லோரும் அதிர்கின்றனர், காரணம் துரோணர் அரசகுடும்பத்துக்கு மட்டுமே ஆசிரியர்..

    அப்படியானால் இவனை இவ்வளவு திறமையாக அவர் உருவாக்க காரணம் என்ன எனும் சந்தேக கேள்விகள் எழுகின்றன‌

    துரோணர் அரச குடும்பத்துக்கு எதிராக ஒருவனை ரகசியமாக வளர்ப்பதாக சந்தேகம் அவர்மீதே படர்கின்றது,
    ஆம்,அரசகுடும்பத்துடன் உறவாடுவது ராஜநாகத்துடன் உறவாடுவதற்கு சமம்

    சிக்கலில் தவிக்கின்றார் துரோணர், ராஜதுரோக குற்றசாட்டு அவர்மேல் சுமத்தபடும் ஆபத்து நெருங்கிற்று,
    இதன் சூத்திரதாரி கண்ணன், ஏகலைவன் கவுரவர் பக்கம் கர்ணனை போல் சிக்கிவிட கூடாது என்பது அந்த நாடகத்தின் பொருள்

    துரோணர் மிக பெரும் இக்கட்டில் வீழ்ந்தார், அவரை காக்கும் ஒரே நம்பிக்கையாக ஏகலைவன் நிற்கின்றான்,
    அவன் நிச்சயம் துரோணரின் பெருமை, துரோணரின் மாபெரும் மகிழ்ச்சியும் சாதனையும் அவன்
    ஆனால் விதி?

    துரோணருக்கு அவனை விடவும் முடியவில்லை எடுக்கவும் முடியவில்லை, தவிக்கின்றார்.

    ஆம் அரச கட்டளை மீறி அவர் என்ன செய்யமுடியும்?

    அவனை கொல்லவேண்டிய இடம் அது, ஆம் அரசனின் கோபம் அவனை முதலில் கொல்லும் துரோணரை அடுத்து கொல்லும், ராஜதுரோகம் எனும் குற்றத்துக்கான தண்டனை அது

    யோசித்தார் துரோணர், அந்த சீடன் அழிவதில் அவருக்கு விருப்பமில்லை அவனை பலமிழக்க வைத்தால் போதுமென குருதட்சனையாக கட்டைவிரலை கேட்கின்றார்

    குரு கேட்டால் தலைகொடுக்கவும் துணியும் ஏகலைவன் கட்டை விரலை மகிழ்வாய் கொடுத்து பலமிழக்கின்றான், இனி அவனால் வில்வித்தை அவ்வளவு துல்லியமாக செய்யமுடியாது

    குருவுக்கு சிஷ்யன் கொடுக்கும் காணிக்கை அவரை காக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை , கண்ணீரோடு அவனின் கட்டை விரலை தாயத்தில் வைத்து கழுத்தில் கட்டிகொள்கின்றார் துரோணர்

    அந்த காட்சி உருக்கமானது, கண்ணீர் வரவழைக்கும் காட்சி அது. துரோணருக்கு அவனை போல மாணவன் இல்லை, நல்ல ஆசிரியனுக்கு சிறந்த மாணவனை விட பெருமை எது?

    ஆனால் விதி பொல்லாதது அல்லவா?

    அப்பக்கம் ஏகலவைனுக்கோ குருநாதருக்காக வித்தையினையே கொடுத்துவிட்ட தியாக மகிழ்ச்சி, தன் கட்டைவிரல் அவர் கழுத்தில் இருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி

    தானே அவரின் மார்பில் சாய்ந்ததாக மகிழ்ந்தான், துரோணர் அரண்மனை திரும்பினார்

    ஆம் துரோணர் அவன் உயிரை காத்தார், அவன் துரோணர் உயிரை காத்தான்

    காலங்கள் ஓடின பாண்டவருக்கும், கவுரவருக்கும் யுத்தம் நெருங்கிற்று, ஒவ்வொருவரின் பலத்தையும் அளந்த கண்ணன் துரோணர் பக்கமும் வருகின்றான், ஏற்கனவே கட்டை விரல் வாங்க காரணமே அந்த மாயவனே
    துரோணர் கழுத்தில் இருப்பது உன்னதமான சிஷ்யனின் காணிக்கை, ஒரு ஆத்மார்த்தமான காணிக்கை அது, அதன் சக்தி வலியது, துரோணரின் உயிர்காக்க கொடுக்கபட்ட அக்காணிக்கையின் சக்தி துரோரணை சாகவிடாது , அது இருக்கும்வரை துரோணர் வீழமாட்டார்

    என்ன செய்யலாம்?

    அதே வித்தைதான், ஏழை அந்தணராக மாறிய கண்ணன் யாசகனாய் வந்தான், தன் மகளுக்கு திருமணமென்றும் ஒரு தாலிக்கும் வழியில்லை எனவும் அழுது அந்த தாயத்தையே உற்று பார்த்தான்
    குறிப்பறிந்த துரோணர் இதைவிட பெரும் தாலி இல்லை, இது ஆசிமிக்கது என அதை வழங்கினார், துரோணரின் கழுத்தில் இருந்து அந்த பெரும் கவசத்தை அகற்றினான் கண்ணன்

    அதன்பின் எல்லாம் முடிந்தது, சாகும் வேளையில் துரோணர் முன் தன் புல்லாங்குழலை காட்டினான் கண்ணன், ஆம் அதில் அந்த விரலை பதித்திருந்தான்

    அதை கண்டவுடன் துரோணருக்கு எல்லாம் விளங்கிற்று, மெல்ல பேசினான் கண்ணன் அவன் குரல் அந்த ஞான தத்துவத்தை போதித்தது

    “துரோணாச்சாரியே.. சிஷ்யர்களில் எல்லாம் உயர்ந்தவன் ஏகலைவன், ஆசிரியரில் எல்லாம் உயந்தவன் நீ
    உங்களுக்குள்ளான உணர்வும் புரிந்துணர்வும் பாசமும் எந்த குருவுக்கும் சீடனுக்கும் அமையாது

    அவனை அன்றே நீ கொன்றிருந்தால் நீ பாவிபாயிருப்பாய், விட்டிருந்தால் அவனை நீனே வளர்த்தாய் என பழிசுமந்திருப்பாய் , அவன் பாண்டவர் பக்கம் வந்தாலும் கவுரவர் பக்கம் வந்தாலும் பழி உனக்கே
    உன் மாணவர்களின் அர்ஜூனன் பெரும் அடையாளம் ஆனால் நீ நேரடியாக பயிற்றுவித்தாய், ஆனால் உன்னை மனதால் வணங்கி வளர்ந்த ஏகலைவனே அவனை விட உயர்ந்தவன், ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் அடையாளம்

    அங்கு உன் உயிரை அவன் காத்து மாணவனின் கடமையினை செய்தான், நீ அவன் உயிரை காப்பாற்றி ஆசிரியனுக்குரிய கடமையினை காத்தாய்

    நீ கேட்டவுடன் கொடுத்த அந்த விரல் அவனின் தியாகத்துக்கும் குருசிஷ்ய பாவத்துக்கும் என்றும் எடுத்துகாட்டாய் இருக்கும், உன் பெயர் இருக்குமிடமெல்லாம் அவனும் இருப்பான்…”

    அந்த புல்லாங்குழலின் இருந்த விரலை நோக்கியபடியே உயிர்நீத்தார் துரோணர்

    ஆம் நல்ல மாணவன் ஆசிரியர் அளவு வரலாற்றில் நிலைப்பான் என்பதுதான் ஏகலைவன் வாழ்வின் தத்துவம்
    மகாபாரதத்தின் ஒவ்வொரு காட்சியும் சிலாகிப்பானவை, வெற்று பாத்திரம் என்றோ தேவையற்ற திணிப்பு என்றோ எதுவுமில்லை

    மணிரத்னம் புராண காட்சிகளை சுட்டு படமெடுப்பதில் கெட்டிக்காரர் ஆனால் அவரும் ஏகலைவன்
    பக்கமே வரவில்லை

    அவன் கதையினை மிக மிக அழகான படமாக எடுக்கலாம், எடுப்பார் யாருமில்லை, இதைவிடுத்து பூரா இயக்குநரும் கதை திருட்டு காட்சி திருட்டு என கோர்ட் படி ஏறிகொண்டிருக்கின்றான்.’

    ஆயிரம் அர்த்தமும் உருக்கமும் தியாகமும் நிறைந்த காட்சி ஏகலைவன் துரோணர் காட்சி, அது சொல்லும் தத்துவம் ஏராளம்

    இந்த கருப்பு சட்டைகள் , திராவிட இம்சைகளுக்கு ஒருமண்ணும் தெரியாது, அவைகளின் மனமும் புத்தியும் கருப்பு, எல்லாவற்றையும் தப்பு தப்பாக உணர்ந்து பிராமணன் ஒழிக என முடிப்பது ஒன்றே அவர்கள் ஏற்றுகொண்ட கொள்கை

    அவர்களின் புரட்டு செய்தியினை புறந்தள்ளுங்கள், ஏகலைவன் கதை போல கொண்டாடபட வேண்டிய ஆயிரம் கதைகள் இங்கு உண்டு

    அவற்றை எல்லாம் படியுங்கள், பெரும் அர்த்தமும் ஞானமும் விளங்கும்

    உங்களுக்கு புரியாவிட்டால் எம்மிடம் கேளுங்கள் எப்பொழுதும் விளக்க தயாராக இருக்கின்றோம்
    நமது நாட்டின் பெரும் அறிவார்ந்த ஞான புதையலை நாம் விளக்கமால் சீனனும் பாகிஸ்தானியுமா வந்து விளக்குவான்?

    நாம்தான் விளக்க வேண்டும், நமக்கு அந்த கடப்பாடும் பொறுப்பும் எக்காலமும் உண்டு

  23. ஒரு அரசு நாட்டுமக்களை நோக்கி தேசிய கொடியினை சுதந்திர நாளில் வீட்டில் அலுவலகத்தில் ஏற்றுங்கள் என வலிய சொல்வதும் அதை மக்களும் கண்டும் காணமலும் இருப்பதும் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்

    மக்கள் அவர்களாக கொண்டாடவேண்டிய கொண்டாட்டம் இது, ஆகஸ்ட் முதல் தேதியே எல்லா வீடுகளிலும் வாகனங்களிலும் வணிக நிலையங்களிலும் தேசியகொடி பறந்தாக வேண்டும், மக்களுக்கு கட்சி அரசியல் தாண்டி உண்மையான தேசாபிமானம் இருந்தால் அது நிச்சயம் நடக்கும்

    ஆனால் அரசு வலிய வலிய அறிவிப்பு செய்வது மக்களின் தேசபற்று இவ்வளவுதானா எனும் வருத்தமான விஷயத்தை சிந்திக்க வைக்கின்றது

    ஆகஸ்ட் 13 முதல் 15 என அரசு சொல்வதெல்லாம் சரியல்ல, ஆகஸ்ட் 1முதல் ஆகஸ்ட் 30 வரை தேசிய கொடி ஒவ்வொரு வீடு வாகனம் அலுவலகம் வணிக வளாகம் என பறந்தாக வேண்டும் இல்லையேல் வணிக வளாக அனுமதி ரத்து, வீட்டுக்கு மின்சாரம் ரேஷன் ரத்து என கடும் அறிவிப்பினை செய்யவேண்டும்

    தேசிய கொடி என்பது நாட்டின் அடையாளம், மக்கள் இந்நாட்டின் மேல் கொண்டிருக்கும் அன்பை நம்பிக்கையினை அதனை உயிரணைய நேசிக்கும் மாண்பை வெளிபடுத்தும் வாய்ப்பு

    அந்த வாய்ப்பை மக்களே முன்வந்து எடுக்கவேண்டுமே தவிர அரசு வலியுறுத்தி அந்த பற்று கடமைக்கு வருவது
    சரியல்ல‌

    இதற்கெல்லாம் காரணம் முந்தைய ஆட்சியில் உரிய நாளில் தேசியகொடியினை சரியான வகையில் பின்பற்ற வைக்காததே, இந்த குற்றசாட்டுக்கு மோடி அரசும் தப்பமுடியாது

    அவர்களாவது முதலாமாண்டு ஆட்சியில் இருந்து இதனை செய்திருக்கவேண்டும், இப்பொழுதாவது செய்ய தொடங்கியிருப்பது நல்ல விஷயம்

    இது வெறும் 75ம் ஆண்டு கொண்டாடமாக விடகூடாது ஒவ்வொரு வருடமும் இதனை உரிய அக்கறையுடனும் தேசாபிமானத்துடனும் கொண்டாட வழி செய்யவேண்டும் , ஒரு மாதமாவது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரத கொடி திரும்பும் இடமெல்லாம் பட்டொளி வீசி பறக்க வேண்டும்

  24. சூத்திரன்னு தானே ஏகலைவனின் விரலை பார்ப்பணரான துரோணர் வெட்டினார்?

    அது யாருடா? ஏகலைவன்?

    அதுதான் விஜய் டிவி மகாபாரதம் சீன்ல வேடனா வருவான்ல?

    அவனா நீ அவன்பேரு ஏகலைவன் இல்லடா “ஏகலவ்யன்” சொல்லு.. ஏகலவ்யன்.

    அப்படியா? அவன் சூத்திரன் என்பதால்தானே கட்டை விரல வெட்டினாரு?

    அடேய் நிஷாத மன்னன் ஹிரண்யதனுசின் மகனான ஏகலவ்யன் இளவரசன்டா.

    இளவரசனா.! அப்ப கர்ணனுக்கு அவன் சூத்திரன்னுதானே துரோணர் வில்வித்தை கற்றுத் தரல?

    அடேய் கிருபருக்கு பிறகு துரோணரும் கர்ணனின் குரு தான். அங்கிருந்த இளவரசர்களுடன் கர்ணனும் கல்வி பயின்றான்.

    பின்ன ஏன் துரோணர் குரு தட்சணைக்காக பாஞ்சாலத்தை எதிர்த்து போர்புரிய கர்ணனுக்கு அனுமதி அளிக்கல?

    அட ஞான சூனியமே விஜய் டிவி மகாபாரதத்தை வரலாறு இனிமேல் பேசுனனா மிதிச்சிருவேன். அந்த போரில் துருபதனுடன் போரிட்டு மண்ணைக் கவ்வியவன் கர்ணன். அப்போரில் கௌரவர்களுடன் கர்ணனும் இருந்தான்.!

    சோதிக்காதீங்கடா என்னைய

  25. வைரமுத்துவுக்கு ஏதும் மனநல பாதிப்பா? அல்லது வெளியில் இருந்து தமிழக புனிதமான இலக்கிய பிம்பங்களை உடைக்க சொல்லி நல்ல காசுக்கு உத்தரவா என்பது தெரியவில்லை தொடர்ந்து சர்ச்சையில் சிக்குகின்றார்

    ஆண்டாளை பற்றி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய வைரமுத்து இப்பொழுது கபிலர் இந்து அல்ல என தன் தமிழறாற்றுபடை நூலில் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன‌

    நாம் அந்நூலை படிக்கவில்லை எனினும் கபிலர் பற்றி சில விளக்கங்களை சொல்வது நம் கடமையாகின்றது

    ஒரே ஒரு கபிலர் மட்டும் வரலாற்றில் இல்லை, கபிலமுனி என்றொருவர் வேதங்களுக்கு பொருள் சொன்ன பெருமை கொண்டவர், இவர் மிக பழமையான ரிஷி

    கபில என்பது மாந்தளிர் நிறத்தை குறிக்கும் சொல், இந்த கபில முனிவர் மிக மூத்தவர், இமயமலை பக்கம் வாழ்ந்தவர்

    தமிழத்தில் கபிலர், கபிலதேவ நாயானார் என பலர் கபிலர் எனும் பெயரில் இருந்தார்கள், கபிலநாயனார் ஒரு சிவபக்தர் அவர் இலக்கியங்கள் பெரிதும் பாடவில்லை பக்திவழி ஒன்றே பாடினார்

    நாம் எடுத்துகொள்ளும் அதாவது வைரமுத்து சுட்டிகாட்டிய கபிலர், ஒளவையார் காலத்தில் அதியமானின் தோழராக இருந்தவர்

    கபிலர், நக்கீரர், பரணர் எனும் பெரு வரிசையில் கபிலருக்கே முதலிடம் உண்டு. இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை மூவருமே சிவபக்தர்கள் என்பது

    நக்கீரனார், பெருங்குன்றூர் கிழார், பொருந்தில் இளங்கீரனார், மாறோக்கத்து நப்பசலையார் என எல்லோருமே இந்த கபிலரை போற்றியிருகின்றார்கள்

    எப்படி கபிலர் கொண்டாடபட்டார் என்றால் “செட்டுவன் குடகடலில் பொன்னைக் கொண்டுவரும் நாவாய் ஓட்டியபோது பிற கலங்கள் கடலில் செல்ல அஞ்சியது போல கபிலர் பாடும்போது பிற புலவர்கள் பாடுவதில்லை என மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிடுகிறார். ‘

    நிலமிசைப் பரந்த மக்கட்டு எல்லாம் புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் இரந்து சென் மாக்கட்கு இனி இடன் இன்றிப் பரந்து இசை நிறகப் பாடினன்(புறநாநூறு 126)

    பொய்யா கவிஞன் எனவும் அவனுக்கு பெயர் உண்டு , “பொய்யா நாவிற் கபிலன் பாடிய மையணி நெடுவரை’ (புறநானூறு 174) என்பது அவ்வரி

    இந்த வரியினைத்தான் கபிலரை குறிப்பிட்டு தன் பாடலில் சுந்தரரும் பாடியிருப்பார்,அதாவது கபிலர் ஒரு சிவனடியார் என்பது சுந்தரரின் கருத்து

    கபிலர் குறிஞ்சிதினை பாடுவதில் வல்லவர், இன்று பாரிவள்ளலை பற்றியும் அவனின் பறம்புமலை பற்றியும் அவன் மேல் மூவேந்தர் போரிட்டது பற்றியும், அவனின் மகளான அங்கவை சங்கவை பற்றியும் இன்று அறியவரும் அனைத்து தகவலும் கபிலரும் ஒளவையும் கொடுத்தது

    கபிலர் பாரிவள்ளலை விட்டு அகலாமல் கூட இருந்தவர், ஒளவை எல்லா இடமும் சுற்றி வந்தவர்

    அப்படிபட்ட கபிலர் எவ்வளவோ பாடல்களை பாடினார், இலக்கியத்தில் அவருக்கு அழியா பெரும் இடம் உண்டு, குறிஞ்சிதினையில் அவரையன்றி யாரும் முத்திரை பதித்ததில்லை

    அவர் ஒரு இந்து என்பதை விளக்க, அதாவது வைரமுத்துவின் குழப்பத்தை நொறுக்க சில காட்சிகளை காண வேண்டும்

    அந்த கபிலர் நக்கீரருக்கு இணையாக மதிக்கபட்டவர், இதனால் மதுரை தமிழ்சங்கத்தின் முக்கிய கவிஞராக இருந்தார், அந்த சபைக்கு சிவனே தலைவர் என்பதால் கபிலர் ஒரு இந்துவழி என்பதில் மாற்றுகருத்தே இல்லை

    கபிலர் தன்னை அந்தணர் என்று கூறுகிறார், இந்துக்களை தவிர யாரும் அந்தணர் என தன்னை அடையாளபடுத்தமாட்டார்கள்

    கபிலர் பாரிமகளிருக்காக இருங்கோவேளிடம் பாடிய பாடலில் தன் அடையாளமாக முறையே ‘அந்தணன், புலவன்’ என்று குறிப்பிடுகிறார். ’யானே தந்தை தோழன், இவர் என் மகளிர். அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே ‘(புறநானூறு 201). மாறோக்கத்து நப்பசலையார் ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ என்று கபிலரை பாராட்டியிருக்கிறார் (புறம் 126) .

    சங்கப்பாடல்களின் சொல்லாட்சிமுறையை கொண்டு நோக்கினால் கபிலர் பிறப்பால் அந்தணர் என்று தெரியவருகிறது, அந்தணர் என்றால் இந்து

    கபிலர் சிவனையும் உமையையும், திருமாலையும் திருமகளையும், கண்ணனையும் பலராமனையும் உணர்ந்துள்ளார். மேருவை வில்லாக வளைத்து திரிபுரத்தை எரித்த சிவன் கதை, இமையமலையை உமை அஞ்ச தோள்கொடுத்து அசைத்த ராவணனின் கதை, துரியோதனின் தொடை கிழித்து உயிர்போக்கிய பீமன் கதை, மல்லரைக் கொன்ற கண்ணன் கதை ஆகியவற்றை கபிலர் பாடியுள்ளார்

    ஆதாரம் கொட்டி கிடக்கின்றது

    அப்படியே திருமாலின் கருநிறத்தையும், பலராமனின் வெண்ணிறத்தையும், இருபுறமும் யானைகள் நின்று நீர் சொரிய தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகளின் காட்சியையும் கூறுகிறார்’ என்று தன் நூலில் குறிப்பிடுகிறார்.

    மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
    வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி” என்பது கபிலரின் புகழ்பெற்ற வரி

    கபிலர் தேவருலகை பாடினார். (இனிதெனப்படும் புத்தேள் நாடு ) அருந்ததியைப் பற்றிய குறிப்பு அவர் பாடல்களில் வருகிறது. வடமீன் புரையும் கற்பு வேள்வி பற்றிய குறிப்புகள் அவர் பாடல்களில் உள்ளன ( அழல்புறந்தரும் அந்தணர் , நெய் பெருந்தீ ) தெய்வங்களை மலரிட்டு பூசை செய்தல் பற்றிச் சொல்கிறார்( நல்லவும் தீயவும் அல்ல குவியிணர் புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணாம் என்னா- புறநாநூற்ய் 106)

    கபிலரை ஆய்வு செய்த வையாபுரி பிள்ளை போன்ற மேதைகள் அந்த கபிலர் ஓர் இந்து என அழுத்தமாக சொன்னார்கள்

    இன்னும் கபிலர் ஓர் இந்து என்பதற்கு ஆதாரம் நிரம்ப உண்டு என்றாலும் சிலவற்றை சொல்லலாம்

    கபிலர் ஒளவையாரின் நண்பர், ஒளவையார் எழுதிய பிரசித்தியான “விநாயகர் அகவல்” போலவே கபிலரும் “கபிலர் அகவல்” என ஒன்றை எழுதியுள்ளார்

    இது முழுக்க முழுக்க இந்து தெய்வங்களை போற்றும் பாடல், அதை எந்த கொம்பனும் மறுக்க முடியாது

    கபிலர் எப்படிபட்ட முழு இந்து என்பதற்கு எல்லோரும் அறிந்த வரி ஒன்று போதும்

    எல்லா இந்துக்களும் பாடலில் சரஸ்வதி அல்லது விநாயகரை வணங்கிவிட்டுத்தான் பாடுவார்கள், அவ்வகையில் கபிலர் இன்றுவரை பாடபடும் பாடலை கொடுத்தார்

    ஒளவை போலவே விநாயக பக்தியில் சிறந்திருந்த கபிலர் அந்த பாடலை கொடுத்தார், இன்றும் நாம் பாடும் பாடல் அது

    “விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
    விநாயகனே வேட்கை தணி விப்பான்-விநாயகனே
    விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
    கண்ணிற் பணிமின் கனிந்து.”

    ஆம், இப்படி பட்டவர்த்தனமாக ஒரு பாடலை கபிலர் எழுதியிருக்கும் பொழுதும் கபிலர் ஒர் இந்து அல்ல என வைரமுத்து சொல்லவருவது மிக கடுமையாக கருதபடும் விஷயம்

    கருணாநிதி கல்லறை முன் கடலில் பேனா சிலை வைக்கபோகின்றார்களாம், அந்த கடற்கரையில் வைரமுத்துவின் இந்த பிதற்றல் புத்தகத்தையும் புதைப்பது மிக மிக நல்லது

    இதெல்லாம் தமிழறிஞகள், இந்து பெருமக்கள் நிரம்பிய சபையில் இருந்து கண்டிக்க வேண்டும் விஷயங்கள், தமிழர்களை குழப்பி மதமாற்றத்துக்கும் தமிழ் பெருமைகளை அழிக்கும் பெரும் பாவ செயலுக்கும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயங்கள்

    இங்கு இந்து தலைவர்கள் குழுவோ, இந்துதமிழ் அறிஞர் கழகமோ இல்லை என்பதுதான் இம்மாதிரி கொடுமைக்கெல்லாம் ஒரே காரணம்

    இருந்துபாருங்கள், விரைவில் நாயன்மார்களே சிவனடியார்கள் அல்ல, ஆழ்வார்கள் பெருமாள் பக்தர்கள் அல்ல எனும் பெரும் ஆய்வு முடிவுக்கு வருவார் அந்த வைரமுத்து

  26. உலகத்திலே….

    கவனிக்க இந்தியாவில் அல்ல உலகத்திலே

    நீண்டகாலம் ஆண்ட அரசபரம்பரை சோழ வம்சம் .
    கிட்டத்தட்ட 16 நூற்றாண்டுகள் ஆண்டிருக்கிறார்கள்

    வெறும் தமிழகத்தை அல்ல

    கிழக்கு ஆசியா இலங்கை வடக்கே கோதாவரி தாண்டி முழு ராஜ்யமாக ஆண்டிருக்கிறார்கள் .
    அதற்கு அப்பாலும் அவர்களது ஆணைகள் பறந்திருக்கிறது

    கணக்கிடமுடியாத , கிட்டத்தட்ட இதிகாசகாலத்தில் செம்பியன்கள் என்ற பட்டத்துடன் புறாவுக்காக சதையை அறுத்த, கன்றுக்காக தன்மகனை தேர்க்காலிலிட்ட சோழர்கள் இந்திரனுக்கு இணையாக இருந்திருக்கிறார்கள் .

    இந்திரன் எற கரி அளித்தார் ..என்ற பாடல்

    இந்திரனுக்கும் விருத்திராசனுக்கும் நடந்தப்போரில் இந்திரனின் ஐராவதம் வீழ ,சுந்தரச்சோழர் அதற்குக்கிணையாக யானையைஅளித்தார்

    சூரியபகவானுக்கு ராகுவுக்கு நடந்தப்போரில் சூரியனின் ஏழு குதிரைகளும் மடிய ய சோழமன்னன் வலிமையான அசுவங்களை அளித்தார்

    சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடக்க ஊர்வலம் நடத்த முத்து பல்லக்கு அளித்தார் சோழ சக்கரவர்த்தி

    அந்த பாடல் கற்பனையானாலும் அதற்கிணையாகத்தான் சோழமன்னர்களின் புகழ் இருந்தது

    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

    என்ற தெய்வ புலவரின் வரிகளுக்கு இணங்கதான் சோழமன்னர்கள் இருந்தார்கள்

    சரித்திர தோல்விகளை அடையவே இல்லை.

    கரிகால்பெருவளத்தான் உருவாக்கிய முற்கால சோழ அரசு

    பிற்காலத்தில் -பராந்தகன் ராஜராஜசோழன் ராஜேந்திரசோழன் காலத்தில் கிட்டத்தட்ட உலகத்துக்கே கட்டளை இட்டது

    கடைக்கால குலோத்துங்கன் காலத்தில் முழு இந்தியாவும் கப்பம் கட்டும் பேரரசாக இருந்தது .

    இதன் தொடர்ச்சி ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட 16 நூற்றாண்டுகள்

    ரோமராஜ்ஜியம்

    எகிப்து

    சீனம்

    ஐரோப்பா ஏன்

    சூரியன் மறையாத பிரிட்டனும்கூட சோழர்களின் கீர்த்திக்கு பக்கத்தில் கூட வரமுடியாது

    உறங்கும் பூதமென்று உலகையே பயமுறுத்திய சீன தேசம் சோழர்களிடம் பிரதிநிதியை அனுப்பி தங்கள் அரசவைக்கு சோழ பிரதிநிதியை அனுப்ப வேண்டியது .

    உலகத்துக்கே கடற்படை என்ற மாபெரும் சக்தியைக் காட்டியது சோழ தேசம்

    சோழர்களின் யானைப்படை மற்றநாடுகள் கற்பனையும் செய்யமுடியாதபடி பெரிதாக இருந்தது

    பொருளாதாரத்தில் நிறைவு என்பது உலகத்துக்கே உணஊட்டும்படி வளமாக இருந்தது.

    இந்தியாவின் சாம்ராட் என்று நாம் படிக்கும் அசோகர் சோழர்களால் தடுத்துநிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

    உலகின் அற்புத நகரான பாடலிபுத்திரத்தை ஆண்ட மன்னர்கள் சோழர்களால் தோற்கடிக்கப்பட்டனர் இமயத்தை அடைந்து து புலிக்கொடி நாட்டப்பட்டு இன்றும் இமயத்தின் கனவாய்கள் சில சோழர்களின் பெயரால் அழைக்கப்டுகிறது .

    இந்தியசரித்ரத்தில் முதலாவதாக இடம் பெறவேண்டியவர்கள் சோழர்கள்

    என் சி ஆர் டி சரித்திரத்தை ஆய்ந்துகொண்டிருக்கிறது .

    பொய்கள் தவறான கருத்துக்கள் சரித்திரத்தை புகட்டிய இடதுசாரிகளின் தவறுகளை பட்டியலிடப்படுகிறது
    விரைவில் இந்திய மாணவர்கள் படிக்கும் சரித்திரம் மாறும்..

    ஆனால் அதை ஆதாரம் தகவல்களில் மறுக்காமல் அரசியல் செய்கிறார்கள் காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும்.

    தாய்நாட்டின் பெருமைகளை மறக்கும் மறைக்கும் மனிதர்கள் மாக்கள் என்பதை பாரதம் அவர்களுக்கு உணர்த்தும்.

    #மறைக்கப்பட்டசரித்திரம்

  27. மாகாண அரசுகளுடன் கலந்தாலோசித்தபின்பே அதாவது எல்லா மாநிலங்களின் நிதியமைச்சர்களுடன் முடிவெடுத்த பின்பே உணவு பொருட்களின் மேலான ஐந்து சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கபட்டதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது

    வரி நிர்ணய குழு என ஒன்று அமைக்கபட்டு அதன் வழிகாட்டலில்தான் இந்தமுடிவு எட்டபட்டதாக அது அறிவிக்கின்றது

    இக்குழு ராஜஸ்தான், மேற்கு வங்கம், தமிழகம், பீஹார், உத்தர பிரதேசம், கர்நாடகா,
    மஹாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். ஜி.எஸ்.டி., கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர் என்கின்றது அந்த அறிக்கை

    இதற்கு காங்கிரஸ் மற்றும் மேற்குவங்க மம்தா சார்பில் மறுப்பு ஏதுமில்லை என்பது கவனிக்கதது, அப்படி மறுக்காத காங்கிரஸ்தான் இப்பொழுது பார்லிமென்டில் தன் கூட்டணியினரோடு குட்டிகரணம் அடித்து கொண்டிருக்கின்றது

    தமிழக நிதியமைச்சர் ஏன் வாய்திறக்கவில்லை என்பதற்கும் , தமிழக அரசு ஏன் பட்டினத்தார் போல மவுனம் காக்கின்றது என்பதற்கும் இப்பொழுது பொருள் விளங்கும்

    தமிழகம் விவசாயிகளுக்கு இலவசமின்சாரம் முதல் பலவற்றை வழங்கும் மாகாணம் என்பதால் இந்த வரி அவர்களுக்கு அவசியமாகின்றது, இந்த வரியில் தமிழக அரசுக்கும் பங்கு வருகின்றது

    தமிழக அரசோ இன்னும் எதெற்கெல்லாம் வரிபோடமுடியுமோ அவ்வளவவுக்கும் வரிவிதிக்கும் கட்டாயத்தில் இருக்கின்றது, தமிழக அரசின் நிலை பரிதாபம்

    முன்பு பிரிட்டானியரின் நெருக்கடியில் மலையாள தேச ராஜாக்கள் வகை வகையாக வரிவிதித்தனர், அதில்தான் அதுவரை தலைவரி என ஆண்களுக்கு மட்டும் அதாவது குடும்பத்தின் மூத்த தலைமகனான ஆண்களுக்கு இருந்த வரி பின் எல்லா ஆண்களுக்குமானது

    பின் பெண்களுக்கும் விதிக்கபட்டது, அப்பொழுடுதான் அது பெரிய பெண்களுக்கும் விதிக்கபட்டது, முலை வரி என்பது சிறுமியர் அல்லாத பெரிய பெண்களுக்கு விதிக்கபட்ட வரியே அன்றி வேறல்ல‌

    சிலர் சொல்வது போல இந்து பார்ப்பானியர் அளவை நாடாவை வைத்து கொண்டு அளந்த வரி என்பதெல்லாம் அபத்தம், அப்படியானால் இந்தியா முழுக்க அந்த வரி இருந்திருக்க வேண்டும்

    அக்காலத்தில் பிரிட்டிசாரிடம் இருந்து தங்களை காக்க மலையாள மன்னர்களுக்கு வரி அவசியம், பிரிட்டனின் நெருக்கடி அப்படி இருந்தது அதனால் இம்மாதிரி வரிகள் வந்தன‌

    தமிழக அரசும் தன்னை காப்பாற்றி கொள்ள கடும் பிரயர்த்தனம் செய்கின்றது, 500 வாக்குறுதிகளை கொடுத்து வந்த ஆட்சியில் தடுமாறுகின்றார்கள், எல்லா கட்டணமும் உயர்கின்றது நிச்சயம் பழைய மலையாள மன்னர்கள் வரிக்கு செல்லமாட்டார்கள் என நம்பிக்கை கொள்ளலாம்

    சரி, இப்படி எல்லா கட்டணமும் உயர்ந்து மக்களின் வரியும் கடுமையாக உயரும் பொழுது எல்லா பணமும் எங்கே செல்கின்றது?

    அது அரசு ஊழியர் சம்பளம் என ஒரு பக்கம் செல்லும், எம்.எல்.ஏக்கள் காரில் உல்லாசமாக சுற்றுவார்கள் நல்ல சம்பளத்தோடு செல்வார்கள், பெரும் செலவில் நடத்தபடும் சட்டமன்ற கூட்டத்தில் சின்னவர் வாழ்க என்பார்கள்

    நலதிட்டம் எனும் பெயரில் கோடிகணக்கான பணம் அள்ளி எறியபடும் ஆனால் பாலம் ஒரு மழைக்கு தாங்காது, சாலை ஒருமாதம் தாங்காது, உச்சமாக பேருந்து நிலையம் இடிந்துவிழும்.,பஸ்ஸுக்குள் மழை வரும், கால்வாய் குளம் வாய்க்கால் என எதுவும் சரியிராது

    இன்னும் முன்னாள் முதல்வர்களுக்கு பல கோடியில் மண்டபம், அவர்கள் பேனாவுக்கு மண்டபம், செருப்புக்கு சிலை என எப்படியெல்லாமோ சீரழிப்பார்கள்

    இப்பொழுதெல்லாம் நல்ல சம்பள இயக்குநர்களை கொண்டு அரசே ஷூட்டிங் செய்கின்றது

    இந்த சீரழிவுக்கு தமிழக மக்கள் வரிகட்டி வாடவேண்டும், டாஸ்மாக்கில் குடித்து அழியவேண்டும், உலகில் எங்குமில்லா இந்த கொடுமைக்கு பெயர் “திராவிட மாடல்”

  28. கருணாநிதி பேனாவுக்கு மெரினா கடலில் சிலை என்றால் பாம்பன் பாலம் அருகே அப்துல் கலாமுக்கு 150 அடி உயர்த்தில் ராக்கெட்டோடு சிலை அவசியம் என தமிழக பாஜக சீறியிருக்கவேண்டும் அல்லவா?

    குறைந்தது தூத்துகுடி கடலில் வ.உ.சி சிலை அவசியம் என கொந்தளிக்க வேண்டும் அல்லவா?

    ஆனால் பாருங்கள் சத்தமே வராது, அதுதான் தமிழக பாஜக அது இன்னும் முழுக்க திருந்தவில்லை

  29. உக்ரைன் யுத்தம் ஒவ்வொரு கட்டத்துக்கு செல்லும் பொழுதும் வித்தியாசமான நவீன ஆயுதங்களை கொடுத்து தான் யார் என்பதையும் , தன் ஆயுத வலிமையும் அதன் வியாபார நோக்கத்தையும் அழகாக தெரிவிக்கின்றது அமெரிக்கா

    முதல் உலகப்போரில் இருந்தே இந்த உலகில் மிக லாபமான தொழில் ஆயுதம் விற்பது என உணர்ந்தநாடு அமெரிக்கா, அந்த ஆயுதம் உலகில் என்னென்ன அழிவுகளை ஏற்படுத்தும், நாம் ஆயுத மேம்பாட்டை செய்து கொண்டே போனால் இன்னும் சில வருடங்களில் என்னென்ன கொடிய ஆயுதம் உருவாகும்? வருங்கால மானுடம் எப்படி அடித்துகொண்டு சாகும் என்பதெல்லாம் அவர்கள் சிந்தனையிலே இல்லை

    அவர்களுக்கு சாபம் கொடுத்து அடக்க பரசுராமனும் இல்லை, அந்த அஸ்வத்தாமனை ஒடுக்க கண்ணனும் இன்னும் வரவில்லை

    அதனால் அழிவு ஆயுதங்களை செய்து செய்து விற்பார்கள், ஒவ்வொரு முறையும் முன்பை விட ஆபத்தான ஆயுதங்களை காட்டிகொண்டே இருப்பார்கள், எதிர்காலம் எவ்வளவு விபரீதமான ஆயுதங்களை கொண்டிருக்கும் இது எதிரிகள் அல்லது எல்லார் கையிலும் எதிர்காலத்தில் கிடைக்காமலா போகும்? என்ற சிந்தனையெல்லாம் அறவே இல்லை

    காலம் வந்துகொண்டே இருக்கும், இந்த ஆயுதங்கள் மாறிகொண்டே இருக்கும் அதன் அழிவு சொல்லமுடியா கொடுமையில் இருக்கும் என்பதெல்லாம் அவர்களிடம் பேசவும் யாருமில்லை, சொன்னால் கேட்கவும் மாட்டார்கள்

    100 ஆண்டுகளாக அவர்கள் செய்யும் கொடுமை சாகசம் இது, இதனால் அவர்கள் சொல்லும் விஷயம் இரண்டு

    முதலாவது தாங்கள் பலசாலிகள் இரண்டாவது எங்களிடம் இந்த ஆயுதம் உண்டு யாரும் வாங்க வரலாம்

    இதை முதல் உலகபோரில்செய்தார்கள், ஹிட்லர் காலத்தில் செய்தார்கள்,வியட்நாம் யுத்தம், வளைகுடா யுத்தம், சதாம், சிரியா என எங்கெல்லாமோ செய்தார்கள்

    இப்பொழுது உக்ரைனில் செய்கின்றார்கள்

    அதுவும் தங்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பாய் வைத்துகொண்டு இன்னொரு நாட்டில்தான் இவற்றை சோதிப்பார்கள், யார் செத்தாலும் அழுதாலும் மனசாட்சியே இல்லாமல் இருப்பார்கள்

    அப்படி உக்ரைனில் இப்பொழுது தன் ஆயுத கண்காட்சியினை களத்தில் காட்டிகொண்டிருக்கின்றது அமெரிக்கா

    உக்ரைன் தலைநகர் கீவினை கைபற்ற ரஷ்யா சுமார் 60 மைல் நீளத்துக்கு டாங்கிபடைகளை அனுப்பியபொழுது அமெரிக்க ஜாவலின் ஏவுகனைகள் சாகசம் காட்டின, தோளில் வைத்து ஒரு வீரன் இயக்கும் துல்லியமான அந்த ஏவுகனைகள் ரஷ்ய டாங்கிகளை சிதறடித்தன‌

    ரஷ்யா உக்ரைன் கீவினை கைபற்றமுடியாமல் போக பெரும் காரணம் அந்த ஜாவலின் ரக ஏவுகனைகள், அதனாலே அந்த ஒன்றாலே ரஷ்ய தரைபடை பின்வாங்கி ஓடியது, பின் கிழக்கு உக்ரைனுக்கு தன் களத்தை அது மாற்றியது

    ஜாவலின் ஏவுகனை வலிமையினை உலகுக்கு காட்டியது அமெரிக்கா பல நாடுகள் உடனே ஆர்டர் செய்தன‌

    இப்பொழுது “ஹைமார்ஸ்” (M142 High Mobility Artillery Rocket System (HIMARS) )எனும் பல்குழல் ராக்கெட் ஏவிகளை உக்ரைனுக்கு அனுப்பி அடுத்தகட்ட கவனத்தை பெறுகின்றது

    இது வித்தியாசமான ராக்கெட் அமைப்பு

    பொதுவாக ஒரு ராக்கெட்டை ஏவ வேண்டுமானால் அதை பொறுத்தவேண்டும் இலக்கை குறிபார்க்கவேண்டும் பட்டனை தட்டவேண்டும், அது சென்று வெடித்தபின் அடுத்த ராக்கெட்டை வைக்கவேண்டும் இதெல்லாம் நேரமெடுக்கும் விஷயம்

    இந்த இடைவெளியில் எதிரி சுதாரிக்க வாய்ப்பு அதிகம்

    இந்த பகுழல் ராக்கெட்டுகள் அப்படி அல்ல, அடித்தால் எதிரி சுதாரிக்கவிடாமல் அடிக்கும், அண்ணாமலை திமுகவினை அடிப்பது போல் நொடிவிடாமல் அடிக்கும்

    இப்பொழுது ஒரு பாலம் இலக்கு என வையுங்கள், சாதாரண ஏவுகனை சிஸ்டம் ஒரு ஏவுகனையினை வீசும் நீண்ட நேரம் கழித்து அடுத்த கனையினை வீசும் அதற்குள் எதிரி சுதாரிக்கலாம்

    இது அப்படி அல்ல வைத்த குறியினை தொடர்ந்து அர்ஜூனன் அம்புபோல் அடித்து நில நொடிகளில் தரைமட்டமாக்கும் சக்தி கொண்டது

    இந்தவகை “சாரங்க பாணி” சிஸ்டத்தைத்தான் அமெரிக்கா இப்பொழுது களத்தில் உக்ரைனில் இறக்கியுள்ளது, இது கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவுக்கு தலைவலியாகிவிட்டது

    ரஷ்ய தளபதிகளே “ஹைமார்ஸ் சிஸ்டம் சவால்தான்” என்பதை ஒப்புகொள்கின்றார்கள், மிகுந்த கவனத்துடன் அதனை எதிர்கொள்கின்றார்கள்

    இந்த ஆயுத வருகை உக்ரைன் யுத்தத்தில் பெரும் திருப்பத்தை கொடுத்துகொண்டிருக்கும் நிலையில் இதனை கவனமாக எதிர்கொள்ளரஷ்யா பல தந்திரங்களை கையாண்டுகொண்டிருக்கின்றது

    அங்கே ஹைமார்ஸ் சாகசம் காட்ட, அமெரிக்கா ஆயுதசந்தையில் “பாருங்க சாமி, எங்க சிஸ்டம் சூப்பர் சாமி, இது உங்ககிட்ட இருந்தா ஒரு பயலும் கிட்ட வரமுடியாது சாமி, ஆரம்ப தொகை 700 பில்லியன் டாலர் சாமி” என ஏலத்தை தொடங்கிவிட்டது

    பல நாடுகள் சுற்றி சுற்றி வருகின்றன , புரோக்கர்களும் சுற்ற தொடங்கிவிட்டார்கள்

    ஆனால் இதெல்லாம் நிச்சயம் உலகுக்கு சவால், அமெரிக்கா ஆயுதங்கள் இப்படியெல்லாம் சக்திபெறுவது எதிர்தரப்பை நிச்சயம் ஒருநாள் அபாய ஆயுதங்களை இன்னும் தயாரிக்க சொல்லும்

    எதிர்தரப்பு என்பது எக்காலமும் எல்லாருக்கும் வரும், ரஷ்யா இல்லையேல் சீனா சீனா இல்லையேல் இன்னொரு நாடு எழும்

    இருவரும் மாறி மாறி அழிவு ஆயுதங்களை செய்வதும், தொடர்ந்து மேம்படுத்துவதும் ஒருகாலத்தில் மானிட இனமே இல்லாமல் அழியும் அளவு பெரும் ஆபத்துக்களை கொண்டுவரும்

    பணம் ஒன்றுக்காக அமெரிக்கா செய்யும் இந்த அட்டகாசம் ஒருநாள் உலகை அழிக்கும், ஆனால் அந்த கவலையெல்லாம் அவர்களுக்கு இல்லை

    எல்லாரிடமும் எல்லாம் கிடைக்க கூடாது, தகுதியும் பொறுமையும் இல்லாதவனிடம் சக்திமிக்க ஆயுதம் கிடைக்க கூடாது என பாரதமும் ராமாயணமும் ஏன் அவ்வளவு போதித்தது என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது

    பெரும் தவமும் சோதனையும் மனகட்டுப்பாடும் இன்னும் பலவும் கொண்டவனுக்கே , மூர்க்க குணம் இல்லாமல் எச்சூழலில் கலங்காமல், பணம் பொருளுக்கு ஆசைபடாமல் தர்மம் ஒன்றுக்கே கட்டுபடுபவனுக்கே சக்திமிக்க ஆயுதம் கொடுக்கபட வேண்டும் என பாரதமும் ராமாயணமும் காட்டின‌

    அர்ஜூனன் தவம், கர்னன், அஸ்வத்தாமன், இந்திரஜித்தன் என அது பல வழிகளில் பல பாத்திரங்களில் அந்த தத்துவத்தை போதித்தது

    நடக்கும் ஆயுத போட்டியின் அழிவிலும் வியாபாரத்திலும் அது நன்றாக தெரிகின்றது, இந்துக்களின் ஞானமும் தெளிவும் பட்டொளி வீசி உயர பறக்கின்றது

  30. இலங்கையில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே போராட்டகாரர்களை வலுகட்டாயமாக அப்புறபடுத்தி அதிபர் மாளிகையில் நுழைந்துவிட்டார்

    இதுவரை கடும்முகம் காட்டாத இலங்கை படைகள் சில தினங்களாக அடிதடியில் இறங்கி அடித்து ஆர்பாட்டகாரர்களை அடித்துவிரட்டி மாளிகையினை மீட்டிருக்கின்றன‌

    100 நாட்களுக்கு பின் அந்த மாளிகை திறக்கபட்டிருக்கின்றது

    போராட்டகாரர்கள் கோரிக்கைபடி ரணிலும் அரசியல் பதவியில் இருக்க கூடாது என்பது உண்டு, பிரதமரானதும் அவர் வீடெல்லாம் எரிக்கபட்டது, அவரே ராணுவமுகாமில்தான் ஒளிந்திருந்தார்

    இப்பொழுது அந்த ரணில்தான் ராணுவத்தை ஏவி மக்களை அடக்கி மாளிகைக்கும் வந்துவிட்டார்

    இந்த இடத்தில் உங்களுக்கு சில சந்தேகம் எழலாம்

    அதாவது இதே ராணுவத்தை கோத்தபாயா ஏன் ஏவவில்லை, அல்லது ராணுவம் ஏன் இறங்கவில்லை என்பது

    இதுதான் உலக அரசியலின் இன்னொருமுகம், ராஜ்பக்சேக்கள் இதை செய்திருந்தால் மனுகுல நெருக்கடி, இனஒழிப்பு சர்வாதிகாரம் என உலகம் பொங்கியிருக்கும் இந்தியா போன்ற நாடுகள் நேரடியாக தலையிட்டுருக்கும்

    ஆனால் அதனையே ரணில் செய்யும்பொழுது சத்தமே இல்லை செல்லமாக “ரணில் உங்கள் மக்களை கவனமாக அடித்தால் என்ன?” என்பதோடு நிறுத்திகொள்கின்றன உலகநாடுகள்

    ஆக இலங்கையில் நடந்தது எப்படியான காரியங்கள் என்பதை நீங்களே ஊகிக்கலாம், “யாரோ” திட்டமிட்டு ராஜபக்சேக்களை விரட்டி அடித்து ரணிலை வைத்துவிட்டார்கள்

    முன்னாள் அதிபர் கோத்தபாயா சிங்கப்பூரில் நெருக்கடிகளை சந்திக்கின்றார், பல சர்ச்சைகள் அவர்மேல் வருகின்றன, அவரால் இனி அங்கும் தங்கியிருக்கமுடியாது அதே நேரம் இலங்கை வந்தால் ரணிலும் “அப்புறபடுத்துவார்”

    இதனால் “ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜியம் இல்லை ஆள, அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகின்றேன் நாளும்” என பாடிகொண்டு அடுத்த நாட்டை தேடிகொண்டிருக்கின்றார் கோத்தபாயா

    கோத்தபாய முன்னாள் இலங்கை ராணுவ வீரர், இந்தியாவின் தமிழக‌ ஊட்டியில் பயிற்சிகளெல்லாம் பெற்றவர், பின் அமெரிக்காவில் குடியேறி அங்கு குடியுரிமையெல்லாம் வாங்கியவர்

    ஆனால் “அண்ணன்” சொல்கேட்டு இலங்கை வந்து மாட்டிகொண்டார் , இனி அமெரிக்காவுக்கும் செல்லமுடியாது

    ஆக “அண்ணா, அண்ணா” என நம்பினால் என்னாகும் என்றால் இப்படித்தான் ஆகும் ,

    “அன்னன் காட்டிய வழியம்மா” என்றால் அது இதுதான்

  31. ஸ்ம்ருதி ராணி மகள் கோவாவில் மதுபார் மற்றும் உணவகம் நடத்த லைசென்ஸை முறைகேடாக வாங்கியதாக காங்கிரஸ் குட்டிகரணம் அடித்துகொண்டிருக்கின்றது

    விஷயம் பற்றி அறிந்த ஸ்ம்ருதி ராணி தன் மகளுக்கு மது பார் இல்லை என்றும், இன்னும் உணவகம் பற்றி சர்ச்சைகளை ஏற்படுத்துவோர் ஆதாரங்களை சமர்பிக்கட்டும் என கேட்டுகொண்டார், ஒரு காங்கிரஸ்காரனும் ஆதாரம் காட்டவில்லை

    இதனால் வழக்கறிஞர்கள் மூலம் வழக்குதொடர்ந்திருக்கின்றார் இனி காங்கிரசார் மன்னிப்பு கேட்க வேண்டும்

    ஸ்மிருதி ராணியின் மகள் மதுபார் நடத்துவதாக வந்த செய்தியினை அடுத்து காங்கிரஸார் உற்சாகமாக களத்தில் குதித்தனர், தமிழகத்திலும் பெரும் குரல்கள் கேட்டன‌

    எந்த தமிழகம்?

    டாஸ்மாக்கும் மது ஆலைகளும் நிரம்பிய அதே தமிழகத்தில்

    ஆம், அங்கெல்லாம் மதுபார் பற்றியோ, டாஸ்மாக் பற்றியோ டாஸ்மாக் ஆலைபற்றியோ அந்த லைசென்ஸ் பற்றியோ வாய்திறக்காத தமிழக காங்கிரஸ் கோவா வதந்திக்கு “டிஸ்கோதே” ஆடிகொண்டிருந்தது

    ஸ்ம்ருதிராணியின் விளக்கம் மற்றும் ஆதாரமில்லா குற்றசாட்டுக்கு வழக்கு என்றவுன் ஆட்டம் முடிந்துவிட்டது

    காங்கிரசார் எப்பொழுதும் தமாஷானவர்கள், முன்பு “டைம்ஸ் ஆப் இண்டியா” காங்கிரஸை விமர்சித்ததற்கு “டைம்ஸ்” பத்திரிகையினை அமெரிக்க தூதரகம் முன்னால் எரித்து காமெடி செய்து உலகபுகழ் பெற்றவர்கள்

    அந்த புகழை தக்கவைக்க இப்பொழுது எனவெல்லாமோ செய்துகொண்டிருக்கின்றார்கள்

  32. 15ம் போர்ச்சுகீசியர் நூற்றாண்டில் அந்த கோவா பக்கம் மெல்ல மெல்ல கிறிஸ்துவத்தை புகுத்தினார்கள்

    ஆப்கானியரும் ஈரானியரும் வந்து பிடித்து தங்கள் மதத்தை பரப்பும் இந்தியாவில் தாங்களும் பரப்பினால் என்ன என அவர்களாக மதம் பரப்பினார்கள், அவர்கள் மதத்தின் பின்னால் காலணி ஆட்சி கணக்கு இருந்தது

    அந்த இந்துமக்கள் அன்று அந்நிய ஆட்சியில் சிக்கியிருந்தனர், அந்நியரான ஆப்கானியரும் ஈரானியரும் வந்து இஷ்டத்துக்கு ஆண்டுகொண்டிருந்ததில் அந்த மண்ணின் சொந்தமக்கள் வெகு பாதிப்புக்குள்ளாயினர், அவர்களுக்கென ஆட்சி இல்லை அதிகாரம் இல்லை ராணுவமில்லை எதுவுமில்லை எதுவுமே இல்லை

    அவர்கள் மதமும் ஆன்மீகமும் மட்டும் எஞ்சியிருந்தது அதற்கும் சுல்தான்களிடம் இருந்து பெரும் ஆபத்து வந்து கொண்டிருந்தது

    இந்த அபலைகளைத்தான் “நீங்கள் சாத்தானை வழிபடுவதால் வந்த சோதனை இது, உங்கள் மதம் சாத்தான் மதம், உங்கள் துன்பத்துக்கு அதுதான் காரணம். கிறிஸ்துவத்துக்கு வந்தால் வளமாக வாழலாம்” என ஆசைகாட்டி இழுத்தது போர்ச்சுகீசியம்

    அம்மக்களும் தங்களுக்கென தலைவனும் வழிகாட்டலும் இல்லா நிலையில் சிலர் மதம் மாறினார்கள், அதுவும் மிக சொற்பமே

    அந்த சொற்பத்தை வைத்து மெல்ல இந்திய நாடியினை பிடித்து பார்த்தார்கள் போர்ச்சுகீசியர், காரணம் கேரளத்தின் கள்ளிகோட்டையில் நடந்தது போல் கொங்கன் பக்கமும் நடந்தால் தலை தப்பாது

    ஆனால் கேரளத்தில் இருந்தது இந்து மன்னன் கொங்கனை ஆண்டது இஸ்லாமிய சுல்தான் அதுவும் அன்னிய சுல்தான் என்பதால் அவர்களுக்கு சில வாய்ப்புக்கள் வந்தன, இந்துக்களுக்கு எது நடந்தால் நமக்கென்ன? வரி வந்தால் போதாதா என அவர்கள் போக்கில் இருந்தார்கள் சுல்தான்கள்

    அந்நியன் ஒரு நாட்டை ஆள்வதற்கும் சொந்த மண்ணின் தலைவன் ஆள்வதற்கும் உள்ள வித்தியாசம் அன்று அழகாய் தெரிந்தது

    மெல்ல மெல்ல தங்கள் மிரட்டலை தொடங்கினார்கள்

    15ம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் மெல்ல மெல்ல சட்டங்களை அறிவித்தார்கள், அவை கிட்டதட்ட 230 சட்டங்களை கொண்டிருந்தன‌

    போர்ச்சுகீசியர் ஆளும் இடங்களில் இனி கிறிஸ்துவமே மதம் மற்ற மதங்கள் தடை செய்யபடுகின்றன ஆனால் அவர்கள் சில கட்டளைகளை கடைபிடித்தால் வாழலாம்

    இந்துக்கள் ஆலயங்களில் மணியோசை எழகூடாது, திருவிழா நடக்க கூடாது, இந்துக்கள் சந்தணம், குங்குமம் , விபூதி பூச கூடாது, கோவில்களுக்குரிய இசைகருவிகளை பயன்படுத்த கூடாது

    பிராமணர்கள் கிறிஸ்தவ விரோதிகள் அவர்களுடன் பழக்கம் வைத்திருப்போருக்கு அரசு சலுகை கிடையாது

    இந்து ஆலயங்களை புதிதாக கட்ட கூடாது, பழைய ஆலயங்களை பழுது பார்க்க அரசிடம் அனுமதி கேட்க வேண்டும், அரசு அனுமதி தராவிட்டால் அவை அழியட்டும்

    இந்துக்களின் சமூக குடும்ப வழக்கங்களும் தடை செய்யபடும், இறப்புக்கான சடங்குகள் ஏதுமில்லை இந்துக்களின் மரபான இறந்தவர் நினைவாக உணவிடுதல் போன்றவை தடை செய்யபடும், பிறந்த குழந்தைக்கான எல்லா சம்பிரதாயமும் நிறுத்தபடும்

    இந்துக்களின் பூமி பூஜை முதல் எல்லா பூஜையும் நிறுத்தபடும்

    மாட்டுகறி எங்கும் கிடைக்கும், யார் வீட்டு முன்னாலும் மாடு வெட்டபடும் அதை தடுப்பது சட்டவிரோதம்

    துளசி வளர்க்க கூடாது, இந்துக்கள் விபூதி குங்குமம் அணிய கூடாது, வீடுகளின் முன் இந்து அடையாளமெ இருக்க கூடாது

    எங்கள் ஆட்சியில் இந்து கிறிஸ்தவனை திருமணம் செய்தாலும் கிறிஸ்தவன் இந்துவினை திருமணம் செய்தாலும் அது கிறிஸ்தவ குடும்பம் அவர்கள் எல்லா வகை நிகழ்வும் கிறிஸ்தவ முறைபடி நடக்கும்

    கிறிஸ்துவத்தை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு வைக்க வேண்டும், அதை விமர்சிப்பதோ கேள்வி கேட்பதோ கூடாது, கேட்டால் தலை சீவபடும்

    இந்துக்கள் ஆயுதம் வைத்து கொள்ள அனுமதி இல்லை, குதிரை வைத்து கொள்ள அனுமதி இல்லை

    இந்துக்கள் சொத்து வாங்க அனுமதியில்லை, வாங்கும் சொத்துக்கு ஈடான பணத்தின் இருமடங்கை வரியாக‌ கட்டினால் அது பரிசீலிக்கபடும்

    போப்பையும் போர்ச்சுக்கல் மன்னனையும் வணங்கித்தான் எல்லா வேலையும் நிகழ்ச்சியும் தொடங்கபட வேண்டும், எல்லா புகழும் அவர்களை சாரவேண்டும்

    வேதசாலைகள் மூடபட வேண்டும் , மந்திரம் யாகம் என ஏதும் செய்தால் தொலைத்துவிடுவார்கள்

    இனி சமஸ்கிருதம் கொங்கனி பார்சி அராபிய மொழி என எதுவுமில்லை, ஒரே மொழி லத்தீன் மட்டுமே போர்சுக்கல் படிக்கபவர்களுக்கு சன்மானம் அதிகம்”

    இப்படி முதற்கட்ட அறிவிப்புக்களை செய்து பார்த்தனர், அது நாடிபிடித்து பார்க்கும் அறிவிப்பு, இந்திய தரப்பிடம் இருந்து எப்படி எதிர்ப்பு வருகின்றது என கணிக்கும் அறிவிப்பு

    ஆனால் சுல்தான்களிடம் இருந்து எதிர்ப்பே இல்லை, இந்துக்களின் எதிர்ப்பை காதுகொடுக்க கேட்க யாருமில்லை இது போர்ச்சுகீசியர் தங்கள் மிருக குணத்தை காட்ட தோதாயிற்று

    1530களில் கொடிய முகத்தை காட்ட தொடங்கினார்கள், இந்து ஆலயங்களெல்லாம் சாத்தான்கள் என சொல்லி இடிக்கபட்டன, இந்துக்களுக்கு காட்டுமிராண்டிகள் எனும் முத்திரை குத்தபட்டது

    இந்துக்களின் புனித நூல்கள் எல்லா மொழியில் இருந்தாலும் எரிக்கபட்டன, இந்துக்களின் சிலைகள் புதைக்கபட்டு சர்ச் சுவர்கள் எழும்பின‌

    15 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கிறிஸ்தவ போதனைகளை கேட்க வலியுறுத்தபட்டனர், மீறினோருக்கு சவுக்கடி வழங்கபட்டது

    பிராமண துவேஷம் உருவாக்கபட்டது, அவர்களை ஏளனபடுத்துவதும் முடிந்தால் அடித்து விரட்டுவதும் ஊக்குவிக்கபட்டது

    பிராமணர்களே எல்லா இந்து சடங்குகளையும் செய்வதால் இந்துமதத்தில் அவர்களுக்கு தனி இடம் இருந்ததால் அவர்களை இந்துமதத்தில் இருந்து பிரித்தால் அம்மதம் சரியும் என திட்டமிட்டனர்

    இந்துமத ஆணிவேராக அவர்கள் இருக்கும் நிலையில் எல்லா இணைப்பு சங்கிலியும் அவர்களிடம் இருக்கும் நிலையில் அவர்களை வெட்டிவிட்டால் இந்துமதம் குலையும் என கணக்கிட்டனர்

    பிராமண வெறுப்பு அப்படி விதைக்கபட்டது, பிராமணர் சமூக விரோதிகளாயினர் , கொல்லபட்டனர் விரட்டபட்டனர், மந்திரம் சொல்ல கூடாது என வாயடைக்கபட்டனர்

    ஆட்சி ஆப்கனியமிடம் இருக்க மக்கள் வரியெல்லாம் ஆப்கனுக்கும் போர்ச்சுகீசியருக்கும் செல்ல மக்களின் வறுமைக்கும் குழப்பத்துகும் பிராமணமே காரணம் என பொய் பரப்பபட்டது

    பிராமணர்கள் எந்த சடங்கிலும் அழைக்கபட கூடாது, அவர்கள் வந்து மந்திரம் சொல்ல கூடாது என்றெல்லாம் கடும் தடை விதிக்கபட்டது

    வாரிசு இல்லாதோர் சொத்துக்கள் தேவாலயங்களுக்கு வந்தன, பெற்றோர் இல்லா குழந்தைகளை சர்ச் எடுத்து கிறிஸ்தவராக்க்கியது, ஜனவரி 25 அப்போஸ்தலன் சின்னப்பனின் நினைவுநாளாக கருதபட்டு அனறு பல்லாயிரம் பேருக்கு கூட்டு ஞானஸ்நானம் ஒவ்வொரு வருடமும் வழங்கபட்டது

    சுமார் 300 ஆலயங்கள் இடிபட்டு சர்ச்சுகளாக மாற்றபட்டன இன்னும் பெரும் மிரட்டல் எல்லாம் நடந்தது

    இந்து ஆலயம் என்பதும் அதன் வழிபாடு என்பதும் மிகபெரிய பண சுழற்சி கொண்டவை, நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளாமான மக்கள் அதை நம்பி வாழும்படி ஏற்படுத்தபட்டவை

    அந்த பண சுழற்சித்தான் இந்திய கண்டத்தின் பொருளாதாரத்தை உயர நிறுத்தியிருந்தது, கோவிலுக்கும் திருபணிக்கும் இன்னும் பலவற்றுக்கும் நடக்கும் அந்த சுழற்சியில் அரசுக்கு வரவேண்டிய வரியும் இன்னபிறவும் குவியும், பணமும் சுழன்று கொண்டே இருக்க்கும்

    அந்த கோவில்களை மூடினால் பல்லாயிரம் பேர் வீதிக்கு வருவார்கள், அந்த அபலைகளை சர்ச் வேலைக்கு மதம் மாற்றுவதும் இன்னும் பல அடிமை வேலைக்கும் பயன்படுத்துதல் எளிதாகும் எனும் பெரும் சதியெல்லாம் அதனில் இருந்தது

    இவ்வளவு நடந்தும் அன்றைய மக்கள் தொகையில் சுமார் 10% கூட அவர்களால் மதம் மாற்றமுடியவில்லை இந்துக்களின் வேர் அப்படி இருந்தது

    அதிர்ந்த போர்ச்சுகீசியம் கடும் நெருக்கடிகளை கொடுத்தது, இந்து ஆண்கள் வேட்டி கட்ட தடை என்றும் பெண்கள் மார்பில் சோளி அணிய தடை எனவும் அறிவித்தது

    முதன் முதலில் முலைவரி கொடுமை கோவாவில்தான் அரங்கேறிற்று

    அரசு வழங்கும் மாட்டுகறி விருந்தில் எல்லோரும் பங்கு கொள்ள வேண்டும், மீறினால் சவுக்கால் விளாசபடுவார்கள், இந்துக்கள் வாயில் மாட்டுகறி வலிய திணிக்கபட்டது

    இந்த மாட்டுகறி விவகாரம் சுல்தான்களுக்கு ஒரு சமரசத்தை கொடுத்தது என்பது வேறுவிஷயம்

    இந்துக்கள் இனி குடும்ப பெயர்களை சொல்ல கூடாது, இந்து பெயர் சூட்ட கூடாது, ஜாதகம் பார்க்க கூடாது,கிராம வைத்தியம் பார்க்க கூடாது, குறி கேட்க கூடாது, குல தெய்வ வழிபாடு கூடாது அவை எல்லாம் சாத்தான் வழிபாடு என தடுக்கபட்டன‌

    பூச்சுடுதல் , பொட்டுவைத்தல் என எல்லாம் தடை செய்யபட்டன. ஆண்கள் கொண்டை வளர்க்கவும் தடை விழுந்தது, வெற்றிலை தாம்பூலமெல்லாம் ஒடுக்கபட்டன‌

    வரதட்சனை போன்ற குடும்ப நிகழ்வு கூட போர்ச்சுகீசிய அதிகாரியால் உறுதிசெய்யபட்டன அது வளமான குடும்பம் எனில் பெரும் தொகை போர்ச்சுகீசிய மாளிகைக்கு செல்ல வேண்டும்

    இந்துக்களின் குடும்பங்களுக்கு வகை வகையாக வரிகள் விதிக்கபட்டன, எப்படியெல்லாம் ஒடுக்கி பலவீனமாக்க முடியுமோ அப்படியெல்லாம் ஒடுக்கினார்கள்

    விழாக்கள், விரதங்கள் எல்லாம் தடைசெய்யபட்டன, தர்ப்ணங்கள் கூட செய்யகூடாது என்றானது

    இந்துக்கள் சமூகத்தில் பிச்சைக்காரர்கள் இருக்கமாட்டார்கள் அந்த அளவு தானமும் தர்மமும் சமூகத்தை சரியாக வைத்திருந்தது, தர்பணங்கள் கால உணவுதானம் பிச்சைக்காரர் இல்லாமல் செய்திருந்தது

    இப்படியெல்லாம் இந்து சம்பிரதாயம் நிறுத்தபட்டதால் வறுமையுற்றோர் பிச்சையெடுக்க தொடங்கினர்

    அவர்கள் உடனே போர்ச்சுகீசிய கிறிஸ்தவ கும்பலால் அள்ளி கொண்டு செல்லபட்டு ஞானஸ்நானம் கொடுக்கபட்டனர்

    கொடிய குற்றவாளிகளுக்கும் கிறிஸ்துவத்தை ஏற்றால் மன்னிப்பு என ஆசைகாட்டபட்டு மதமாற்றம் நடந்தது இன்னும் என்னவெல்லாமோ நடந்தது

    இந்துக்களுக்கு அரச வாய்ப்பு இல்லை, இந்துக்கள் சாட்சி சொன்னால் செல்லாது, இந்துக்கள் வழக்கு நடத்த முடியாது, இந்துக்களுக்கு நிலவரி பலமடங்கு அதிகம், இந்துக்கள் வயலுக்கு பாசனமில்லை என்றும் பலவகை கொடுமைகளை இழைத்தது

    இந்துக்கள் மேல் ஜெண்டா (புற இனம்) எனும் கடும் வரி விதிக்கபட்டது, கிறிஸ்தவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கபட்டது, இந்துக்கள் நீதிமன்றம் செல்லமுடியாது, நீதி கோர முடியாது

    இன்னும் கடுமையான இறுக்கங்களில் வாழ்ந்தால் கிறிஸ்தவமாகமட்டும் வாழ வாய்ப்பு அளிக்கபட்டது

    தேர் திருவிழா, இதர திருவிழா, கொடியேற்றம் என எல்லாமும் நிறுத்தபட்டு இந்துக்களின் தொடர்பே வலையறுக்கபட்டது.

    இந்துக்கள் முடிந்தவரை கண்ணீரில் வாழ்ந்து பார்த்தார்கள், அக்காலத்திலும் இந்துக்களாய் நிலைத்திருந்தார்கள்

    (இங்கே ஒரு சந்தேகம் எழலாம், இப்பொழுது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்துக்கள் போல் வாழ்கின்றார்கள், மாதாவுக்கு சேலை அந்தோணியாருக்கு கிடா வெட்டு என வாழ்கின்றார்களே அப்படியானால் இதெல்லாம் என்ன என கேள்வி எழலாம்

    இக்காலகட்டம் 15ம் நூற்றாண்டு அன்று போர்ச்சுகீசியருக்கு கிறிஸ்தவ போட்டியாளர் இல்லை, பின்னாளில் பிரான்ஸ், பிரிட்டிஷ் மிஷனரிகள் வந்தபொழுது இவர்களும் மாறினர் அப்பொழுதுதான் அதாவது 18ம் நூற்றாண்டில்தான் பல விஷயம் அனுமதிக்கபட்டது

    அப்பொழுதும் 1960 வரை லத்தீனே ரோமை கத்தோலிக்க ஆலயங்களில் வழிபாட்டு மொழியாய் இருந்தது)

    போர்ச்சுகீசியரின் இந்த அடாவடிகள் அங்கே மட்டும் நிற்கவில்லை, தமிழ்பேசும் பகுதியின் தென்னக பகுதிகள் வடக்கே சில பகுதிகள் என ஆட தொடங்கினார்கள்

    மதராஸ் எனும் அவர்கள் மாலுமி இறந்த இடத்தில் மதராசபட்டினம் என ஒரு நகரை உருவாக்க தொடங்கினார்கள். தோமை இந்தியா வந்ததாக கதை கட்டினார்கள்

    அந்த மலையில் தோமை இறந்தான் என்றும் அவன் கல்லறை இது எனவும் ஏதேதோ சொல்லி வரலாற்றை மாற்றினார்கள், 1500ம் ஆண்டுக்கு முன் இல்லா குழப்பமெல்லாம் அப்பொழுதுதான் வந்தன‌

    அப்பொழுது தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்களிடம் கடல்படை இல்லாததால் அதுவரை கடற்கரையில் இருந்த சோழ பாண்டிய வம்சம் ஆப்கானியரால் முடிந்திருந்ததால் வேறு வழியின்றி சங்கு முத்து குளித்தல் போன்ற வியாபாரங்களுக்கு இவர்களை அனுமதித்தனர்

    இதனால் தமிழ்பேசும் கடற்கரைகள் எளிதில் போர்ச்சுகீசியரால் வளைக்கபட்டு மதம் மாற்றபட்டது.

    அப்படியே இலங்கைக்கு தாவினார்கள் அங்கும் தோமா வந்த கதை உண்டு கடற்கரையோரெங்கும் இந்து ஆலயம் இடித்தல் கட்டாய மதமாற்றம் என தொடர்ந்தார்கள்

    கடாரத்தின் மலாக்கா பக்கம் இதையே செய்து சீனாவுக்கும் சென்றார்கள், ஆனால் சீன மன்னன் வலுவாக இருந்ததால் வாலை சுருட்டி மக்காவ் தீவிலே அமர்ந்துகொண்டார்கள்

    கோவா பக்கம் இந்துக்களுக்கு நெருக்கடிகள் நீண்டன, சுமார் 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த பக்கம் அதிதீவிர கொடுமைகள் அரங்கேறின, இதில் இஸ்லாமியரையும் பல இடங்களில் பாடாய் படுத்தினர்

    டையூ பக்கம் அவர்கள் செய்த அட்டகாசம் தாளாமல் அன்றைய குஜராத் சுல்தான் துருக்கி சுல்தானிடமே கடற்படை அனுப்ப கோரினான், ஆனால் சுல்தானிய கடற்படையும் போர்ச்சுகல் கடற்படையினை வெல்லமுடியாமல் போனதில் போர்ச்சுகீசிய ஆட்சி நிலைத்தது

    சுமார் 3 லட்சம் மக்கள் கொங்கனில் இப்படி சிக்கி கொண்டபொழுது அதில் சுமார் 10% கீழ் கிறிஸ்தவர்களாயிருந்தபொழுது மீதி 90 இந்துக்கள் வாழ்க்கை மிக கொடியதாயிற்று, அப்பொழுது கிறிஸ்தவ எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது

    வாழ்வுக்கும் வசதிக்கும் போர்ச்சுகல் மிரட்டலுக்கும் சுல்தானிய புறக்கணிப்புக்கும் பாதுகாப்புக்கும் அஞ்சி மாறினார்கள்

    அப்படி கிறிஸ்தவ எண்ணிக்கை 15% தொட்டது

    ஆனால் கிறிஸ்தவம் முழு மகிழ்ச்சியினை அம்மக்களுக்கு தரவில்லை, இந்துக்களின் வேர்களில் மூழ்கியிருந்த அவர்களுக்கு கிறிஸ்துவத்தின் குறைகள் பளிச்சென தெரிந்தன‌

    வேறுவழியின்றி கிறிஸ்துவத்துக்குள் வந்தாலும் தாய் மடி தேடும் குழந்தை போல அவர்கள் தேடினார்கள், காலம் காலமாக தொடர்ந்த சம்பிரதாயம் அவர்களை கிறிஸ்துவத்தில் இருக்கவிடாமல் கலைத்தது

    இந்திய கலாச்சாரத்தில் காலம் காலமாய் இருந்தவர்களுக்கு அந்த ஐரோப்பிய கலாச்சாரம் வெறுப்பை கொடுத்தது

    அனுதினமும் காலை எழுந்து குளித்து மந்திரம் சொல்லி சூரியனை வணங்கி பூமியினை வணங்கி பசுவினை வணங்கி வாழ்வினை தொடங்கிய இனம் அது, அவர்களுக்கு எல்லாமே தெய்வம்

    எக்காரியம் செய்தாலும் நல்ல நாள் பார்த்து நேரம் பார்த்து செய்து பழக்கபட்ட இனம் அது, ஒவ்வொரு காரியத்துக்கும் பூஜைகள் அவசியம்

    மஞ்சளும் குங்குமமும் சூடமும் வழிபாடும் அவர்கள் சம்பிரதாயமாயிற்று, காலை எழுந்து பூச்சூடி துளசிமாடம் சுற்றி வாசலில் கோலமிட்டு என்பதெல்லாம் அவர்கள் பாரம்பரியம் அதை தவிர்த்தால் சாவதற்கு சமம் என்ற வலியினை கொடுத்தது

    மஞ்சளும் குங்குமம் பூவும் இதர அடையாளங்களும் அவர்கள் ரத்ததில் கலந்தவை, அதனை திடீரென வெட்டிவிட அவர்களால் முடியவில்லை. இந்துவாய் வாழ்ந்துவிட்டு அதை விடமுடியும் என்பது கற்பனைக்கும் எட்டாத விஷயம் அதை அவர்கள் மெல்ல உணர்ந்தார்கள்

    திருமணம் முதல் இறப்புவரை அவர்களுக்கு பூஜை உண்டு, விளைச்சல் வந்தவுடன் குலதெய்வ வழிபாடு உண்டு இன்னும் தேர் உண்டு திருவிழா உண்டு கலையும் காட்சிகளும் இசையும் உண்டு

    நோய் என்றால் கிராம வைத்தியம் உண்டு , சூட்சும சக்திகளுடன் பேச அதர்வண வேதம் உண்டு யாகம் உண்டு இன்னும் என்னவெல்லாமோ உண்டு

    அந்த மதத்தில் இல்லா எதுவுமில்லை என்ற அளவு நிறைவாய் இருந்தது

    எப்பொழுது மழைகாலம், எப்பொழுது விளைச்சல் உண்டு இந்த மாதம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை அவர்கள் பஞ்சாங்கம் சரியாக சொல்லிற்று

    கிரகங்கள் கிரகணங்கள் என ஒவ்வொரு மனிதனுக்குமான கர்மாவினை அது சரியாக அளந்து சொல்லிற்று

    வீடு முதல் அரண்மனை வரை, விளையாட்டு முதல் ராணுவம் வரை அந்த இந்து கலாச்சாரம் உன்னதமான வாழ்வினை அம்மக்களுக்கு கொடுத்திருந்தது, தத்துவம் முதல் ஆன்மீகம் வரை எல்லா விஷயத்திலும் நிறைவு அடைந்திருந்தது

    இதில்தான் இந்துஸ்தானம் செழிப்பாய் இருந்தது, செல்வமிக்க நாடாய் இருந்தது அதை தேடித்தான் இக்கூட்டம் ஐரோப்பாவில் இருந்து வந்தது.

    அதையெல்லாம் விட்டுவிட அந்த மக்கள் தயாராக இல்லை, கிறிஸ்தவம் தங்களை ஐரோப்பிய அடிமையாக்கி குடியும் கூத்தும் அழுக்கும் கொண்டு ஒரு வாழ்வினை இந்திய கலாச்சாரத்துக்கு பொருத்தமில்லா வாழ்வினை கொடுப்பதாக உணர்ந்தனர்

    எதற்கெடுத்தாலும் ஜெருசலேம், வாடிகன் என அவர்கள் அங்கே கவனத்தை திருப்ப தங்கள் குழந்தைகள் குழப்பமான சூழலில் வளர்வதை உணர்ந்தனர், விபரீதங்கள் நடப்பதை உணர்ந்தனர்

    இன்னும் கிறிஸ்து பெயரை சொல்லி போச்சுகீசியர் தங்க வேட்டை நடத்தி தங்களை சுரண்டுவதையும், வலுவான தீர்வுகளை கொடுக்கமுடியா அம்மதம் குழம்பி நிற்பதையும் கண்டனர்

    பசுவதையும் மாட்டுகறி கொடுமையும் தங்கள் விவசாயத்தை பாதிப்பதை உணர்ந்து அதை நிறுத்த முயன்றார்கள்

    கலாச்சார இந்துமதமே தங்களை வாழ வைத்திருகின்றது என்பதை உணர்ந்து மெல்ல மெல்ல கலாச்சார பக்கம் திரும்பினார்கள் ஆனாலும் கிறிஸ்துவினை வணங்க அவர்கள் மறக்கவிலை

    இது போர்ச்சுகீசியருக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது, இந்துக்கள் பல இடங்களில் அதர்வண வேதங்களை நாடுவதை அறிந்தவர்கள் ஐரோப்பிய மந்திரவாதிகளை கொண்டு சில கிறிஸ்தவ கோவில்களை ஸ்தாபித்து என்னவோ சொல்லி சமாளித்து பார்த்தனர்

    எனினும் கிறிஸ்துவத்தின் குறைகள் பளிச்சென தெரிந்தன, மக்களிடம் முணுமுணுப்பு வந்தது, அவர்கள் ஜாதகம் பார்த்தல் இதர இந்து கலாசார விஷயம் குலதெய்வ வழிபாடு , தீபமும் மலரும் சாற்றி விக்ரக வழிபாடு என இல்லங்களில் ரகசியமாய் செய்தார்கள்

    காலம் காலமாய் பண்டிகைகளை கொண்டாடி மகிழ்ந்த அந்த இனம், விரதங்களை முறையாக அனுஷ்டித்த இனம் அதை விடமுடியாமல் ரகசியமாய் கொண்ட்டாடிற்று

    இந்நிலையில்தான் 1540ம் வாக்கில் அந்த துறவி கோவா வந்தான், அவர் அம்மக்கள் பெயருக்கு கிறிஸ்தவர்களாகவும் செயலில் ரகசியமாக இந்து பாரம்பரியத்தில் இருப்பதையும் கண்டான், இப்படியே விட்டால் இவர்கள் கிறிஸ்துவத்தை விட்டு ஓடிவிடுவார்கள் என அஞ்சினான்
    +
    மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி வாடிகனுக்கு கடிதம் எழுதியவன் அவனே, அம்மக்கள் கிறிஸ்துவத்தில் இருந்து நழுவுவது அவனுக்கு அவ்வளவு வெறுப்பை கொடுத்தது, அவர்களை மிக இழிவுபடுத்திய அவன் தீரா கோபம் கொண்டு “கடும் நடவடிக்கை” எடுக்க கடிதம் எழுதிவிட்டு தமிழக பக்கம் சென்றான்

    உண்மையில் போப் அனுப்பிய கண்காணிப்பாளன் அவன், போர்ச்சுக்கல் சொல்வதெல்லாம் உண்மையா? அங்கு நம் ஆட்சி உறுதி செய்யபட்டுவிட்டதா என்றெல்லாம் கண்காணிக்க வந்தவன்

    இயேசு சபை துறவியாக வந்து பெரும் விபரீதங்களுக்கு வித்திட்டவன்

    அவனேதான் மிகபெரிய கொடூரங்களை ஏற்பட காரணமானவன், இன்று புனித பிரான்ஸிஸ் சேவியர், தென்னகத்தில் தூய சவேரியார் என கிறிஸ்தவர்களால் வணங்கபடும் அந்த துறவி அன்று செய்வித்த காரியங்களின் விளைவு வரலாறு காணா கொடுமையாய் இருந்தது

    இம்மக்களை விசாரிக்க “புனித விசாரணை” என ஒரு அமைப்பு ஏற்படுத்தபட்டு அவர்களை விசாரிக்க இருவர் வந்தனர்

    அலெக்ஸியோ டயாஸ் பால்கோ , பிரான்ஸிஸ்கோ மார்குயஸ் என்ற இருவரும் அந்த பிரான்ஸிஸ் சேவியர் கொடுத்த அழுத்ததின் பெயரில் அந்த விசாரணையினை தொடங்கினர், அது சாத்தானே நடுங்கும் காட்சியாய் இருந்தது

    சந்தேகத்துகிடமான கிறிஸ்தவர்கள் அப்படியே மொத்தமாய் இழுத்துவரபட்டு பெரிய கூடங்களில் அடைக்கபடுவர், கதவுகள் மூடபடும்

    அவர்களிடம் கிறிஸ்துவுக்கு துரோகம் புரிந்தீர்களா, அரச சட்டத்தை மீறினீர்களா என விசாரணை கோரபடும், உண்மையினை கண்டறிய அவர்கள் செய்ததுதான் உச்சகட்ட கொடூரம்

    வரிசையாக கட்டி வைத்து எரிப்பது, கொதிக்கும் எண்ணெயில் மூழ்கி எடுப்பது என ஒருவகை தீர்ப்புகள்
    கையினை வெட்டி காலினை வெட்டி அங்கஹீனமாக்குவது ஒருவரை, குதிரை காலில் கட்டி இழுத்து செல்வது இன்னொரு வகை

    சிலுவையில் தலைகீழாக அறைதல் எனும் கொடியவகை தண்டனை கொடூரத்தின் உச்சம்.

    கூரிய கத்தியால் உடல் முழுக்க தோலை உரித்து விட்டு அப்படியே தீயில் வாட்டி சாகடிக்கும் கொடுமைகள்

    ஒரு கண்ணை தோண்டிவிட்டு இன்னொரு கண்ணை தோண்டுவோம் என மிரட்டுவது, நககண்களை பிடுங்கி எடுத்து அதில் மிளகோ உப்போ தேய்ப்பது

    கண்களின் இமைகளை கூரிய கத்தியால் வெட்டி எடுத்து சித்திரவதை செய்வது, ஆசன வாயில் கம்பினை திணித்து அந்த கம்பை அசைத்து சுழற்றி சித்திரவதை செய்வது

    இந்துக்கள் வணங்கும் நாகத்தையும் அவர்கள் மேல் ஏவிவிட்டு அலறவிட்டு கொன்ற கொடுமையும் ஒரு பக்கம் நடந்தது

    பெற்றோர் முன்னால் குழந்தைகளை வதைப்பது, குழந்தைகள் முன்னால் பெற்றோரை எரிப்ப்து என பெரும் கொடுமைகள் செய்தாலு உச்சகட்ட கொடுமை ஒன்று உண்டு

    சாணை பிடிக்கும் சக்கரம் போல ஒன்றை பெரிதாக செய்வார்கள் அதில் குற்றவாளியினை கட்டுவார்கள் இடையில் குறுகிய இடைவெளி கற்களுக்கு இடையே இருக்கும்

    சக்கரம் சுழலும் பொழுது கால் இடுப்பு என மெல்ல மெல்ல அந்த இடுக்கில் வைத்து நசுக்குவார்கள் எலும்புகளெல்லாம் முறிந்து கழுத்துவரை எல்லாம் நசுங்கி, தலைமட்டும் பரிதாப கோலத்துக்கு வரும் வரை அணு அணுவாய் சுழற்றுவார்கள்

    இந்த கொடுமையினை எதிர்த்து சில நேரம் இந்துக்கள் பொங்கி எதிர்தாக்குதல் நடத்துவதும் உண்டு, அப்பொழுது கொல்லபடும் பாதிரிகளை “புனிதர்” என அறிவிப்பார் போப்பாண்டவர்

    பெண்களின் நிலை கேட்கவே வேண்டாம், பாவியாகிவிட்ட அவளிடம் எல்லா வகை உணர்ச்சிகளும் மிருகத்தை விட கொடியதாக தீர்க்கபடும்

    சில இந்துக்கள் வணங்கிய இந்து கோவில் உறுதி செய்யபட்டால் அங்கு அவர்கள் அழைத்து செல்லபட்டு அங்கிருக்கும் தெய்வம் மேல் துப்பி அவமரியாதை செய்து அவர்கள் கையாலே அதனை உடைக்கும்படி சாட்டையால் அடிப்பார்கள், அவர்களின் ரத்தத்தால் அந்த சிலையோ லிங்கமோ நனையும்படி அடித்துவிட்டு அப்படியே அதை நொறுக்கி போடுவார்கள்

    வீட்டில் இந்துக்கள் ரகசிய பிரார்த்தனை செய்வதாக தகவல் வந்தால் வீட்டை எரிப்பார்கள், சிலையினை உடைப்பார்கள்

    சிறையில் இருக்கும் சந்தேக கைதிகளுக்கு மலம் ஜலம் கழிக்கும் பாத்திரத்திலே உணவும் தரபட்ட கொடுமை எல்லாம் உண்டு

    இன்னும் வார்த்தையிலும் அச்சிலும் வடிக்கமுடியா அக்கிரமங்கள் அங்கு நடந்தன, கோடரி முதல் வாள் வரை கூர்மையினை அவர்களிடமே சோதித்தன, இன்னும் பீரங்கிகளும் பலவும் அவர்களிடமே சக்தியினை காட்டின‌

    இந்த மாபெரும் கொடுமை 1540களில் தொடங்கி பல்லாண்டுகள் நீடித்தன, 1552ல் அந்த பிரான்ஸிச் சேவியர் இறந்தாலும் பாடம் செய்யபட்ட அவர் உடலை கோவாவில் வைத்து கொண்டு “இயேசுவால் அழியா உடல்” என சொல்லி அட்டகாசம் செய்தனர்

    (ராமானுஜருக்கே 3 திருமேனி கொண்ட இந்து சம்பிரதாயம் இது என அவர்களுக்கு சொல்ல யாருமில்லை, சொன்னால் புரியும் நிலையிலும் அவர்கள் இல்லை)

    புலிக்கு தப்பி நரியிடம் வீழ்ந்த கதையாக அந்த பகுதி மக்கள் அவ்வளவு துயரங்களை அனுபவித்தனர், நரகத்தில் நீங்கள் படும் பாட்டை குறைக்க உங்களை திருத்துகின்றோம் என போர்ச்சுக்கல் துறவிகளும் இரக்கமே இல்லாமல் சொல்லி கொண்டார்கள்

    அந்த கொடும் தண்டனைகள், மனுகுலம் கலங்கும் கொடூரங்களெல்லாம் ரோமையர் காலத்து அறிமுகங்கள், தங்கள் ஆட்சியினை நிறுத்த அவர்கள் பயன்படுத்திய வன்மங்கள்

    அந்த கொடூரங்களைத்தான் கொங்கனில் தங்கள் ஆட்சியினை நிறுவ போர்ச்சுகீசிய கும்பல் பயன்படுத்திற்று, அதில் கிறிஸ்துவம் இல்லை, அவரின் போதனை இல்லை, அவர் போதித்த அஹிம்சையும் ஆன்மீகமும் இல்லை, மாறாக ஒரு அரசை நிறுவும் படையெடுப்பு கிறிஸ்துவம் எனும் பெயரில் கொடூரமாக நடந்தது

    இப்படியெல்லாம் அவர்கள் அந்த 15ம் நூற்றாண்டில் தொடங்கி பல்லாண்டுகள் கொன்ற மக்களின் எண்ணிக்கை பல்லாயிரம் இருக்கலாம்

    இவர்களின் ஓலம் யாருக்கும் கேட்கவில்லை, அந்நேரம் பாபர் வந்து தொடங்கிவைத்த போர்கள், தென்னக சுல்தான்களுக்கு இடையே நடந்த போர்கள் என பல போர்களில் சுல்தான்கள் கவனமாக இருந்ததால் இக்குரல் அதுவும் கடற்கரையோர குரல் யாருக்கும் கேட்கவில்லை

    1660களில் இந்துக்களை அடித்தால் சிவாஜி வருவான் என்றொரு காலம் வரும் வரை இவர்கள் அட்டகாசம் தொடங்கியது

    சிவாஜி எழுந்து காவிகொடியினை பறக்கவிட்டு பிஜப்பூரை அடக்கும்பொழுதுதான் போர்ச்சுகீசிய கும்பல் அடங்க தொடங்கிற்று, முதன் முதலில் அவர்களை அடக்கிய மன்னன் சிவாஜிதான்

    அந்த சிவாஜி மொகலாயரிடம் முடக்கபட்டான் என்றதும் பழைய அட்டகாசங்களை போர்ச்சுகீசியர் தொடங்கினர், இப்பொழுது பர்தேஷ் கிராமவாசிகள்

    அவர்களின் புராதன சிவாலயத்தை அதாவது ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டுவந்து கொண்டு ஸ்தாபித்த லிங்கம் அமைந்த கோவிலை, ஆப்கனில் சுல்தான் அட்டகாசத்தில் உடைக்கபட இருந்த லிங்கத்தை கொண்டுவந்து ஸ்தாபித்த லிங்கம்

    இப்பொழுது அதைத்தான் குறிவைத்து போர்ச்சுக்கீசியர் நிற்பதாகவும் ஆண்டாண்டு காலம் காத்த அந்த லிங்கத்தை சிவாஜி காத்து தரவேண்டும் என்றும் கேட்க வந்திருந்தார்கள்

    (நிச்சயம் சிவாஜி இல்லையென்றால் அவர்களின் அட்டகாசத்தில் கொங்கன் மும்பை இன்னும் பல பகுதிகளெல்லாம் முழ் ஐரோப்பிய மயமாகியிருக்கும் சிவாஜியின் எழுச்சியே அவர்களை அடக்கிற்று

  33. இந்த பாரத கண்டம் முழுக்க அதன் தாத்பரியமும் அடையாளமும் கலாச்சாரமும் தனித்துவமுமான இந்துமதம் பல மன்னர்களை உருவாக்கி வைத்திருந்தது
    காலம் காலமாக பாரத கண்டத்தில் இந்துக்களுக்குள் ஒரு அரசன் பேரரசனாக வந்து கொண்டிருந்தான் அது புராண காலத்தில் இருந்து சந்திரகுப்தன் காலம் தொடங்கி வழி வழி வந்துகொண்டே இருந்தது
    இந்த தேசம் ஒரே தேசமாக அப்படித்தான் நின்றது, அடிக்கடி தனக்குரிய பேரரசர்களை அது வடக்கிலும் தெற்கிலும் உருவாக்கி கொள்ளும்

    சந்திரகுப்தன் ஒருகாலம் பாரதம் முழுக்க ஆண்டான் என்றால் அடுத்து பாண்டியரும் சோழரும் சேரரும் ஆண்டார்கள்

    இடையில் எத்தனையோ இந்து அரசுகள் வந்து ஒரே அரசாக பாரதம் முழுக்க ஆண்டது, அண்டை நாடுகளிலும் அதிகாரம் செலுத்தினார்கள்

    அதனில் சோழவம்சம் முக்கியமானது, இந்த ஆடி திருவாதிரை நாள் அதை உலகுக்கு சொல்கின்றது
    ஐப்பசி சதயம் ராஜராஜ சோழனுக்கு என்றால் ஆடி திருவாதிரை ராஜேந்திரனுக்கானது, இன்று ஆடி திருவாதிரை

    தமிழக மன்னர்களில் மிக பெரிய வரலாறு அவனுக்கு உண்டு, உலகில் தோல்வியே பெறாத அரசர்களில் ராஜராஜனை போல அவனுக்கு பெரும் இடம் உண்டு

    ராஜராஜசோழன் மிகபெரிய மன்னன், தோல்வியே பெறாமல் சோழ சாம்ராஜ்யத்தை மிக பெரிதாக உருவாக்கியிருந்தான் சந்தேகமில்லை

    ஆனால் அவன் பிறவியிலே அரசன் அல்ல , அரசபதவி ஆதித்த கரிகாலனின் கொலைக்குபின்பே அவனுக்கு வந்தது, அந்த குழப்பங்களை தாண்டி அவன் பதவிக்கு வரவே பல காலங்கள் ஆயின‌

    ராஜராஜசோழனின் ஆட்சி குறுகிய காலம் இருந்தது, அந்த குறுகிய காலத்தில் வலுவான அடிதளம் அமைத்தான்

    ஒரு கட்டத்தில் அவன் போர்கள் நடத்த அவசியமில்லாமல் பகைகள் ஒழிய ராஜராஜன் தன் அந்திமகாலங்களில் அவன் சிவனடியார் கோலத்துக்கு மாறியிருந்தான், சந்தேகமில்லை அவனும் நாயன்மார்களில் ஒருவராக வந்திருக்க வேண்டியவன்.

    சுந்தரர் பின்னாளில் வந்திருந்தால் நிச்சயம் ராஜராஜ சோழனை நாயன்மாராக்கியிருப்பார்
    அவனின் சிவபக்தி அப்படி இருந்தது, தமிழகத்தின் மற்ற பிரமாண்ட ஆலயமெல்லாம் சிறிதாக இருந்து மெல்ல மெல்ல விரிவுபடுத்தபட்டவை ஆனால் தஞ்சை பெரியகோவில் ஒன்றுதான் ஒரே மன்னனால் பிரமாண்டமாக கட்டபட்ட ஆலயம்

    சிவனுக்காக தன் முழு சக்தியும் செலவளித்து ராஜராஜன் அந்த கோவிலை கட்டினான், அவனின் ஆட்சி முடியும் பொழுது ஒரு சிவதேசமாக சோழ தேசம் மிளிர்ந்தது

    ராஜராஜன் சன்னியாசியாகி இறந்துவிட்டான், அவன் மகனோ அவன் அளவு இல்லை, இனி அங்கு படையெடுப்பது எளிது அல்லது சோழ பிடியில் இருந்து மீள்வது எளிது என ஒவ்வொரு நாடும் மெல்ல துளிர்த்த காலமது

    ஆனால் தந்தை 6 அடி என்றால் மகன் 16 அடி அல்ல 32 அடி பாய்ந்தான்

    அவனின் மிகசிறந்த மதிநுட்பம் தஞ்சையில் இருந்து தலைநகரை கங்கை கொண்ட சோழபுரம் எனும் ஊருக்கு மாற்றியது

    ஆம், அது தலைநகராக இருக்கும் பட்சத்தில் ஒருவேளை எதிரிகள் வென்றால் அந்நகரை தீக்கு இரையாக்கிவிடுவர், தன் தந்தை உருவாக்கிய சிவ அடையாளத்துக்கு எந்த நெருக்கடியும் ஆபத்தும் வர கூடாது என வடக்கே ஒரு நகரை உருவாக்கி அங்கே வசித்தான்

    ராஜராஜன் கொடுத்த அஸ்திபாரத்தில் மிக பெரிய சோழ பேரரசை எழுப்பினான் ராஜேந்திரன்

    ராஜராஜனை விட பலமடங்கு வெற்றிகளை குவித்தவன் ராஜேந்திரன். பிறவியிலே மன்னனின் மகன் என்பதால் அவனுக்கு ஆட்சியும் வீரமும் இயல்பாக வந்தன‌

    ராஜராஜனின் அரசு தஞ்சையிலும் , பாண்டிய நாட்டிலும் கொஞ்சம் சாளுக்கியத்திலும் இலங்கையின் வடபாகத்திலுமே இருந்தது, அதை கலிங்கம், சாளுக்கியம் வங்கம் கடல்தாண்டி கடாராம், கம்போடியா வியட்நாம், சுமத்ரா என எங்கெல்லாமோ விரிவாக்கி வைத்திருந்தான் ராஜராஜன்

    நிச்சயம் சரித்திரத்தின் அலெக்ஸாண்டருக்கும் சீசருக்கும், செங்கிஸ்கானுக்கும் இணையான அரசன் அவன். இன்னொரு இனத்தில் பிறந்திருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பார்கள்

    ஆனால் இந்திய இந்து தமிழனாக‌ பிறந்ததால் மறைக்கபட்டான்

    அக்கால தமிழினம் அவனை கொண்டாடி தீர்த்தது, ராஜேந்திரன் எனும் அப்பெயர் இன்றும் தமிழ்நாட்டில் சூட்டபடும் அளவு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் அவனை பெருமையாய் எண்ணிற்று

    ராஜேந்திர சோழ சக்கரவர்த்தி எனும் பெயர் இந்தியா முழுக்கவும் அதை தாண்டியும் ஒலித்ததால் ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக தமிழ்பேசும் குடிகளும் அவனை கொண்டாடின‌

    ஆம் இன்றும் “ராஜேந்திர” எனும் பெயர் தமிழகத்தில் விஷேஷம், அந்த அளவு ஆயிரம் ஆண்டு தாண்டியும் அவன் புகழ் இங்கு நிற்கின்றது

    அவன் தஞ்சை போலவே கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கி மாபெரும் ஆலயத்தை கட்டினான், காவேரிக்கு இப்பக்கம் தகப்பன் கட்டியது போல காவேரிக்கு அப்பக்கம் அதை கட்டி சிவ பக்தியின் உச்சத்தில் நின்றான்

    தகப்பனை போலவே ராஜேந்திரனின் இந்து ஆலயபணி சால சிறந்தது, அவன் கட்டிய கோவில்கள் ஏராளம் குறிப்பாக திருகாளத்தி எனும் தலத்தின் பெரும் கோவில் அவனால் கட்டபட்டது, அது தகப்பன் ராஜ ராஜன் புகட்டிய கண்ணப்ப நாயனாரின் பக்தியால் வந்தது

    ரஜேந்திரனுக்கு சண்டீஸ்வரர் மேல் பக்தி அதிகம், சண்டீஸ்வரரின் பக்தியின் உச்சத்தால் அவன் என்ன சொன்னாலும் சிவன் சந்தேகபடாமல் நம்புவார் எனும் அளவு சண்டீஸ்வரரின் பக்திமிக்க வாழ்வு ஏக பிரசித்தம்
    ஆம் அதை போலவே தானும் நிற்க வேண்டும் என அவரை வழிகாட்டியாக கொண்டு ஆலயபணி செய்தான் ராஜஜேந்திரன்

    பிலிப்புக்கு பின் அலெக்ஸாண்டர் மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்தது போல், செங்கிஸ்கானுக்கு பின்னால் குப்ளேகான் உலகை மிரட்டியது போல் பெரும் வரலாறு கொண்டவன் ராஜேந்திரன்

    வீர சிவாஜியின் இந்து மத காவல் சாயலும் அவனிடம் இருந்தது, சிவாஜிக்கு அரசியலில் ராஜேந்திரனே முன்னோடி

    அவன் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கிழக்கு ஆசியாவின் தலைநகராய் விளங்கிற்று, இந்த கண்டத்தின் அமைதியும் போரையும் அந்த ஊர்தான் முடிவு செய்தது

    வட இந்தியாவில் ஊடுருவிய ஆப்கானியர் கூட தென்னகம் வர அஞ்சினர், ராஜேந்திரன் எனும் பெயர் அவர்களுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இருந்தது

    கஜினி முகமதுவினை ஏன் ராஜேந்திர சோழன் ஒடுக்கவில்லை என்றால் காரணங்கள் பல உண்டு
    முதலாவது கஜினியின் முகமது முறையான படையெடுப்பை செய்யவில்லை, பெரும் படைதிரட்டி ஓலை அனுப்பி முரசு கொட்டி படையெடுக்கவில்லை

    அவன் செய்த்தெல்லாம் கொள்ளை முயற்சி, 16 முறை அவன் கொள்ளை முயற்சி தோற்றது, தோற்று தோற்று ஓடினான்

    பின் 17ம் முறை கொள்ளை பொருளோடு ஓடினான், இதனால் அவனை எதிர்கொள்ள ராஜேந்திரன் செல்லவில்லை இன்னொன்று அன்றைய மாவள (குஜராத்தி) மன்னனும் ராஜேந்திரனின் உதவியினை நாடவில்லை

    ஆனால் ராஜேந்திரன் எனும் பெயர் எந்த அந்நியனும் இந்திய கண்டத்துக்குள் நுழைய பெரும் அச்சுறுத்தலாக இருந்தது என்பது நிஜம்

    சீனா, அரேபியா, பாரசீகம் என எல்லா நாட்டு மன்னர்களும் அவனுக்கு அஞ்சியது நிஜம், கப்பம் கட்டியதும் நிஜம்

    இதுபற்றிய கல்வெட்டும் படமும் சுதை சிற்பமும் ஏராளம் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்தன, பின் வெள்ளையன் காவேரி கரையினை பலபடுத்த கல் வேண்டி அவற்றை அடித்து உடைத்து காவேரி கரைகளில் படியாகவும் ஆற்றுக்கல்லாகவும் புதைத்தான்

    இராஜேந்திரனின் வாழ்வின் மிக பெரும் ஆவணம் காவேரிகரை படிகளாக அலை கல்லாக மாறிவிட்டது வரலாற்று சோகம்

    இடையில் வந்த தெலுங்கர் இங்கு வரலாறு தொடர்பை துண்டித்ததும், பின் வந்த வெள்ளையர் அதை இன்னும் அழித்ததும் தமிழ்நாட்டின் கரும்காலங்கள்

    தமிழனை ஒழிக்க ஆலயங்களை குறிவைத்தான் வெள்ளையன் திருசெந்தூர் ஆலயம் முதல் தஞ்சை ஆலயம் வரை வெள்ளையனின் ஆயுத குடோன்களாக இருந்த காலமும் உண்டு, அப்படி பாழ்பட்ட நிலையில்தான் சோழபுரம் ஆலயமும் சிதைவுற்றது

    ஆனாலும் தீகுச்சியில் ஒரு குச்சி விளக்கேற்றும் என்பது போல எஞ்சியிருக்கும் கல்வெட்டுக்களே ராஜேந்திரனின் வரலாற்றை நமக்கு சொல்கின்றன‌

    அதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும், அவனின் வரலாற்றை மீட்டெடுத்தால் தமிழ்நாட்டில் இருந்த மாபெரும் இந்துமத பெருமையும் ஆளுமையும் வெளிவரும்

    சோழபுரத்தின் லிங்கம் போன்ற மிகபெரிய வரலாறு அது, இங்கு அது மறைக்கபட்டது

    புலித்தேவன், கட்டபொம்மனெல்லாம் கொண்டாடபடவேண்டியவர்கள் சந்தேகமில்லை ஆனால் மாமன்ன்னன் ராஜேந்திர சோழன் போற்றி வணங்கபடவேண்டியவன், தமிழனின் பெருமையும் இந்துமத அருமையும் அவனோடு தூங்கி கொண்டிருக்கின்றன‌

    அவனை மீட்டெடுத்து முன்னிலைபடுத்தல் வேண்டும்

    ஆடி திருவாதிரைக்கு அவனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் , ஆடி அமாவாசையன்று தமிழகத்தின் தனிபெரும் சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் கொடுத்து நினைவு கூறல் வேண்டும்

    ஆம் அவசியம் செய்தாக வேண்டும், அவன் மீண்டெழுந்தால் இந்துமதம் தானாய் மீண்டெழும்
    ராஜேந்திர சோழனின் மாபெரும் சாம்ராஜ்யம் சரிந்தபொழுது மின்னலாக எழும்பி அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை அப்படியே உருவாக்கினான் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்

    பாண்டிய நாட்டு சுந்தர பாண்டிய சோழனின் மிகபெரும் ஆலய பணிகள் கொஞ்சமல்ல‌
    ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் கொஞ்சமும் குறையாத சமயபணி அவனுடையது.

    இங்கு தேடி மீட்டெடுக்கவேண்டிய விளக்குகள் ஏராளம், அதை மீட்டெடுத்து ஜோதி ஏற்றினாலே போதும், காரிருள் விலகும்

    நாம் இனி அதைத்தான் செய்ய வேண்டும், நிச்சயம் செய்தாக வேண்டும்

    அதை ராஜேந்திர சோழனை தொழுதுவிட்டு தொடங்கலாம், தமிழ் இந்து பேரசசனாய் சிவபக்தனாய் ஆசியாவினை ஆட்டி வைத்து இந்துமத காவலனாய் நின்ற அவனை தொழுது நிற்போம்

    அவன் தமிழ் இந்து, சிவனை வணங்கி நின்ற தமிழினத்தின் தலைகமன். வேதங்களையும் அவற்றின் அடிநாதங்களையும் காத்து நின்ற பெருமகன்.

    ஆம் அவன் ஒரு கல்வெட்டில் இப்படி சொல்கின்றான் “காலவோட்டத்தில் இந்துமதமும் இவ்வாலயமும் பழுதுபடுமாயின் அதை மீட்டெடுக்க உதவுபவர்களின் காலில் விழுந்து நான் வணங்குகின்றேன்”
    எவ்வளவு பக்தியும் உருக்கமும் இருந்தால் ஒரு சக்கரவர்த்தி இப்படி எழுதியிருப்பான்?

    அவன் நம்காலில் விழவேண்டியது அல்ல, அரூபியாய் அவன் நம்மை வாழ்த்தும்படி வரலாற்றை தோண்டியெடுத்து விளக்கேற்றுவோம்

    சிவபெருமான் நம் எல்லோரையும் வழிநடத்துவார், ராஜராஜனுக்கு கொடுத்த வாய்ப்பினை நம் ஒவ்வொருவருக்கும் தருவார். அதில் தர்மத்தை மீட்டெடுத்து ஓளியேற்றுவோம்

    மேல் நாட்டில் அலெக்ஸாண்டரை போல, ஜூலியஸ் சீசரை போல ஏன் மராட்டியத்தில் வீர சிவாஜி போல மிக பெரிதாக கொண்டாட வேண்டியவன் ராஜேந்திர சோழன்

    உண்மையான தமிழனும் இந்துவாகவும் இந்தியனாக இருப்பவன் எவனோ அவன் அந்த மாமன்னனை பெருமையோடு கொண்டாடட்டும்

    தமிழகத்தில் வீதிக்கி வீதி எவன் எவனுக்கோ சிலைகள் உண்டு.வீதிகளுக்கு யார் யார் பெயரோ உண்டு.
    ஆனால்..?கிழக்கு ஆசியா கண்டைத்தையே ஆண்ட தமிழனுக்கு..?

    பல ஆயிரம் ஆண்டுக்கு மூத்த நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமைக்கொண்ட இந்து தமிழரின் பெருமை திராவிட ஆட்சிகளால் ஐம்பது ஆண்டுக்குள் குறுக்கப்பட்டுள்ளதை மீட்டெடுக்க வேண்டும்.

    அதிலிருந்து மீள்வதற்கு நமது இனவரலாறு, நமது முன்னோர்களுடைய வீரம் செறிந்த போராட்டங்கள், ஆட்சிமுறை, அவர்களுடைய ஒழுக்கம், அவர்களுடைய செயலாண்மைத் திறன் போன்றவற்றை அறிந்து தெரிந்து கொள்வதற்காக நமது பிள்ளைகளுக்குப் பாடமாக வைக்கப்பட வேண்டும்.

    ராஜேந்திர சோழனை காங்கிரஸ் கொண்டாடவில்லை, தமிழர் பெருமை பேசிய திராவிட கழகங்கள் கொண்டாடவில்லை

    மோடி அரசுதான் அவனை இந்தியா எங்கும் எடுத்து சென்றது

    உலகின் முதற் கப்பற்படை அமைத்த சோழப் பேரரசர் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவைப் போற்றும் வகையில் 2016 பாரதிய ஜனதா அரசு மும்பை மேஸகான் டாக் ( Mazagon Dock ) கப்பல் கட்டும் தளத்தில் அவரது படத்தை திறந்து வைத்து பெருமை சேர்த்தது

    அப்பொழுது பாரத வலிமைக்காக கப்பல் படையை அமைத்த மாபெரும் மன்னர் ராஜேந்திர சோழன் என்பதை தனது பேச்சில் பலமுறை தெரிவித்தார்

    வரலாறு என்பது கடந்த காலச் செய்திகளைச் சேமித்து வைக்கும் ஏடல்ல; அது நிகழ்காலத்திற்கான அடித்தளமும் எதிர்காலத்திற்கான உயிர்த்தொடர்பும் அதுதான்

    வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சி பெறமுடியாது!

    வேரை இழந்த மரமும், வரலாற்றை மறந்த இனமும் வாழாது! வளராது

    வேர்களை எப்பொழுதும் தேடி பராமரிக்க வேண்டும், அவ்வகையில் இந்நாள் ஒவ்வொரு தமிழக இந்துவும் தன் பாரம்பரிய இந்து அரசனான ராஜேந்திரசோழனை அவன் திருநீறு பூசி ருத்திராட்சம் அணிந்த சிவ பக்தனாக உலகாண்ட பெரும் கம்பீர காட்சியினை மனதில் நிறுத்தி அவனை வணங்கி நினைவு கூர்தல் வேண்டும்

    கங்கை கொண்ட சோழபுரம் ஆலயமும் அவன் கலமாடிய வங்க கடலும் எப்பொழுதும் அவன் பெயரை சொல்லிகொண்டே இருக்கும், அந்த நாகபட்டின கடற்கரையில் அவனுக்கான ஒரு சிலை விரைவில் அமைதல் வேண்டும், காலம் அதை சரியாக செய்யும்

  34. ஆடிமாதம் கடகராசியில் சூரியன் வரும் மாதம், அந்த ராசியே பித்ருக்களுக்கான இடமாக கருதபட்டு அந்த அமாவாசை பித்ருக்கள் எனும் முன்னோர்களுக்கானது என்றும் அன்று அவர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும் என வழி வகுத்தது இந்துமதம்

    அன்று நடக்கும் தர்ப்பணம் முக்கியமானது, தர்ப்பணம் என்றால் சந்தோஷபடுத்துதல் அல்லது திருப்தியாக்குதல் என பொருள், முன்னோர்களை திருப்திபடுத்துவது அன்றுதான்

    அம்மாவாசை என்பது வானியல் ரீதியாக முக்கியமான நாள், சூரிய சந்திர தாக்கங்கள் அதிகம் இருக்கும் அந்நாளில் கடலில் கூட நீர் குறையும்

    பிரபஞ்சத்தின் இந்த தாக்கம் மானிட மனதிலும் வரும், சந்திரன் இல்லாத அந்நாள் ஜாதகரீதியாகவும் சில தாக்கங்களை மனதில் கொடுக்கும், அந்த தாக்கம் முன்னோர்களை நினைக்க மிக ஏதுவானது, மனம் அதில் எளிதாக அன்று லயிக்கும்

    அந்த நாளில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது என்பதை சொன்ன இந்துமதம் எள்ளும் தண்ணீரும் காய்கறிகளும் கொடுக்க சொன்னது

    எள் ஏன் குறிக்கபட்டது என்றால் புராண ரீதியாக ஒரு செய்தியினையும் இந்துமதம் சொன்னது இந்துமதம் “எள் விஷ்ணுவின் வியர்வையில் இருந்து வந்ததால் புனிதமானது” என்றது

    எல்லா ஆத்மாக்களும் பரம்பொருளிடம் இருந்து வந்ததே, பரம்பொருளிடம் திரும்பி செல்கின்றது என்பதை குறிப்பால் உணர்த்த எள்ளை வைத்தார்கள்

    எள் எளிதில் முளைக்காது அதுவும் நீரோடு மூழ்கி இருந்தால் எளிதில் முளைக்காது, அப்படி முந்தைய ஆத்மாக்கள் பிறப்பில்லா நிலையினை எட்ட வழிபட சொன்னார்கள்

    அதாவது அந்த ஆத்மாக்கள் முக்தி அடைய, நற்கதி அடைய பிரார்த்திக்க சொன்னார்கள், எள் முக்கிய இடம் பெறுவது சூட்சும ரீதியாக நிறைய உண்டு எனினும் தத்துவரீதியாக இதுதான்

    எள்முனை அளவு அவர்கள் பாவத்தால் வருந்தினாலும் நற்கதி அடைய பிரார்த்திக்க சொன்னதன் அடையாளம் எள்

    சூட்சும ரீதியாக எள் சக்தி வாய்ந்தது, ஆலயங்களில் அதன் தீபங்கள் எள் எண்ணெயில்தான் ஏற்றபட வேண்டும் எனும் வகையில் அதன் பிரபஞ்ச ஈர்ப்புசக்தி அதிகம் இதனால் அதை முன் நிறுத்தினார்கள்

    எள்ளும் நீரும் பூவும் வைக்க சொன்னார்கள், பிறப்பில்லா நிலை ஆத்மாக்களுக்கு வேண்டும் என்பதையும் வாழ்ந்து முடித்த அவர்களை மலர்களை இட்டு வணங்க சொன்னார்கள்

    எள்ளும் நீரும் முன்னோர் ஆத்மாவுக்கானது, விரிந்த மலர் ஆகாயத்தில் கலந்துவிட்ட அவர்களின் நிலையினை குறிப்பது

    பிண்டம் வைப்பதும் காய்கறிகள் வைப்பதும் பல தத்துவங்களை கொண்டது

    இந்த உணவும் காய்கறிகளும் முன்னோர்கள் பசியாற செய்த ஏற்பாடு, அவர்கள் காட்டை திருத்தி கழனியாக்கி காய்கறிகளை பக்குவமாய் அறிந்து விதைத்து வழிவழியாக காத்து வந்ததன் நன்றிகடன்

    நெல்லும் காய்கறியும் எத்தனை தலைமுறையாக காத்து வரபட்டிருக்கும் அத்தனை தலைமுறைக்கும் நன்றி எனும் நன்றி கடன்

    பிண்டம் வைப்பதும் அப்படியே, எங்களுக்கு வயலும் குளமும் ஏரியும் ஆற்றுகாலுமாக தந்து நெல்விளைய பாடுபட்ட முன்னோர்களே உங்களை நினைவு கூர்ந்து உங்களுக்கு படைக்கின்றோம் எனும் நன்றி அது

    அந்த நன்றியில் முன்னோர் ஆத்மாக்கள் சாந்தி அடைகின்றன‌

    அன்றைய நாளில் அன்னதானம் அவசியம் என்றார்கள் இந்துக்கள், காரணம் முன்னோரின் பாவம் அதில் கரைகின்றது ஆசி கூடுகின்றது

    முன்னோர்கள் நினைவாக இடும் அன்னதானமும் வஸ்திரதானமும் சக்தி வாய்ந்தது

    இந்துக்களின் அந்த ஆடி அமாவாசை அற்புதமானது, ஆழமாக பார்த்தால் ஆயிரம் தத்துவங்களை கொடுப்பது

    பஞ்ச பூதத்தில் கலந்துவிட்ட முன்னோர்களை அந்த ஐந்து சக்திகளின் குறியீடுகளையும் வைத்து வணங்குவார்கள்

    தீபம், நீர், நெல் (நிலம்), மலர் (ஆகாயம்), குங்கிலிய புகை என ஐந்து சக்திகளிலும் அவர்கள் கலந்துவிட்டார்கள் என வணங்குவார்கள்

    (இந்துமதத்தை மட்டும் பழிக்கும் பகுத்தறிவு கும்பல்கள் இதுமட்டும் ஏன் முன்னோருக்கு, எள்ளும் நீரும் முன்னோர்க்கு செல்லுமா? அவர்கள் வருவதை காட்டமுடியுமா என விதண்டாவாதம் பேசலாம்

    ஒரு நாய்க்கு இருக்கும் மோப்பசக்தி மனிதனுக்கு இல்லை, ஒரு வவ்வால் கேட்கும் ஒலியினை கூட மானிட காதுகள் கேட்க முடியாது, ஆந்தைக்கு இருக்கும் பார்வையின் கூர்மை மானிடனுக்கு கிடையாது

    மானிடன் குறைவுள்ளவன் அதை உணர்ந்து ஞானியரும் ரிஷியரும் தங்கள் ஞானபார்வையால் ஏற்படுத்திய சம்பிரதாயங்களை பின்பற்றவேண்டுமே தவிர அதை மூடநம்பிக்கை என பழித்து விலக்குதல் ஆகாது

    மானிடனுக்கு பல விஷயங்கள் புரியாது அவன் மூளையும் அறிவும் சிறியது என்பதால் ஞானியர் சொன்னதை பின்பற்றுவதே சால சிறந்தது )

    இந்துமதம் முன்னோர் வழிபாட்டை வலியுறுத்தியது, வானிலை கோள்கள் , சூட்சும சக்தி, பிரபஞ்ச சக்தி, லவுகீக வாழ்வுக்கான விதிகள் என எல்லாமும் கலந்து அந்த ஏற்பாட்டை செய்தது அந்த ஞானமதம்

    பிராமணன் ஆண்டுக்கு 96 தர்பணமும் மற்றவர்கள் குறைந்தது தை அமாவாசைக்கும் ஆடி அமாவாசைக்கும் ஒருமுறை தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது இந்து தர்மம் வலியுறுத்தும் ஒன்று.

    வேதம் படித்தவன், அதை தவிர் ஏதும் தெரியாதவன், அந்த நிலையிலே வாழ்வினை யாசகத்தால் மட்டுமே கொண்டு செல்பவன் எனும் வகையில் பிராமணனுக்கு அது கடமையாக்கபட்டது

    அவன் இதரதொழிலுக்கு சென்றால் வேதம் உரைக்க , வேதம் காக்க யாருமில்லை என்பதால் யாசகம் அவனுக்கு கடமையாக்கபட்டது

    உழைத்து வாழும் மக்களுக்கு, உலகை உழைப்பால் சூத்திரதாரியாக நின்று இயக்கும் மக்களுக்கு வருடத்து இருமுறையாவது முன்னோரை நினைத்துபார் என அம்மதம் ஆலோசனையும் சொன்னது, ஆடி அமாவாசையும் புரட்டாசி அமாவாசையும் அவர்களுக்கு நீத்தாருக்கானது.

    ஆடி அமாவாசை அதில் முக்கியமானது

    இந்துமதம் இறந்தோரை நினைவு கூர்தல் போல எல்லா மதங்களிலும் பல சாயல் உண்டென்றாலும் இந்துக்களிடம் உள்ள அளவு ஆழமான சிந்தனை வேறேங்குமில்லை

    இந்த நீத்தார் வழிபாடு உலகெல்லாம் இருந்தாலும் தென்புலத்தார் எனும் தமிழரிடம் அதிகம் இருந்தது, வாழ்வின் மிகபெரும் கடமையாக அதை கருதினர்

    அது தமிழர்வாழ்வில் கலந்திருந்ததை புறனாற்று பாடலான
    “ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
    அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
    கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
    எங்கோ, வாழிய குடுமி தங் கோச்
    செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
    முந்நீர் விழவின் நெடியோன்” என்பது தெளிவாக சொல்கின்ன்றது

    வள்ளுவனும் அதை தெளிவாக சொல்கின்றான் இப்படியாக‌

    “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை..”

    இன்னும் ஏகபட்ட பண்டைய இலக்கியம் மற்றும் நீதி நூல்களில் அதன் அடையாளங்களை காணமுடியும்
    அது தமிழரின் அடையாளமாக இருந்தாலும் இந்துக்களின் கலாச்சாராமாக மட்டும் சுருங்கிவிட்டதுதான் சோகம், எனினும் இந்துக்களால் அந்த கலாச்சாரம் தொடர்கின்றது

    இன்றைய நாளில் அந்த வழக்கபடி இந்துக்கள் முன்னோர்களை வணங்கி நினைவுகூறுவார்கள், அதை கூர்ந்து கவனித்தால் பல அற்புதமான விஷயம் இருப்பதை காணமுடியும்

    அதிகாலை எழுந்து விரதம் இருப்பார்கள், முதலில் காக்கைகு சோறு வார்ப்பார்கள், தங்கள் முன்னோர்களே காக்கை உருவில் வந்ததாக கருதுவது இந்துக்கள் நம்பிக்கை

    காகம் பித்ருக்களின் வடிவம் என்பது இந்துக்கள் நம்பிக்கை, மனிதனை அண்டிவாழும் பறவை என்பதாலும் கூடி உண்ணும் அப்பறவையில் பல தத்துவங்கள் இருக்கலாம் என்பதாலும் அச்சம்பிரதாயம் ஏற்பட்டிருக்கலாம்
    தன் இனத்தை எல்லாம் கூடிஉண்ண செய்யும் அப்பறவையில் தன் இனத்துக்காக உழைத்து சோறிட்ட முன்னோர்களை அவர்கள் காண்பார்கள்

    அதன் பின் முன்னோர்களுக்கு பிடித்த ஆடையினை எடுத்து வைத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துவைத்து மறக்காமல் விளக்கேற்றுவார்கள்

    எவ்வளவு அருமையான ஏற்பாடு?

    முன்னோர்கள் நமக்கு உடை தந்தவர்கள், சுவையான உணவினை பாசமாய் தந்தவர்கள் என நினைவுகூறும் அற்புதமான நன்றிகடன் அது

    அதை பார்த்து பார்த்து அதில் மூழ்க செய்யும் நுட்பம் அது, மனமார அதில் கலந்துவிடும் ஏற்பாடு அது
    இன்னும் சிலர் முன்னோர்கள் கட்டி வைத்த கட்டங்கள் வீடுகள் அவர்கள் வளர்த்த செடிகொடிகளை எல்லாம் தொட்டு வணங்குவார்களாம், சிலருக்கு அச்சம்பிரதாயம் உண்டென்பார்கள்

    ஆம் முன்னோர்கள் விட்டு சென்ற சுவர்களை தொட்டாலே ஒருவித ஏகாந்தமும் நினைவும் வரும்.
    அதன் பின் மறக்காமல் நீர் நிலைகளுக்கு செல்வார்கள்

    அது ஏரி,குளம், ஆற்றங்கரை அல்லது கடற்கரை என செல்வார்கள்.

    அங்கு பிண்டம் வைத்து வணங்குவது அவர்கள் நம்பிக்கை எனினும் அதிலுள்ள தத்துவம் அந்த இடத்தில் அவர்கள் முன்னோர் நடமாடி இருப்பார்கள், குளித்திருப்பார்கள், அந்த குளகரையில் ஒன்றாக உண்டிருப்பார்கள்

    அந்த நீர்நிலையில் அவர்கள் கலந்து தங்களோடு இருப்பதாக கருதி அவர்களுக்கும் உணவளிப்பதாக அந்த பிண்டத்தை கரைப்பார்கள்

    ஏரியோ குளமோ அவர்கள் முன்னோர் கட்டியதாக இருக்கும், அவர்கள் உழைத்ததாக இருக்கும். ஆறு அவர்கள் வம்சத்துக்கு வாழ்வளித்த இடமாக‌ இருக்கும்

    அங்கு செல்வது சால சிறந்தது, நினைவாலயம் அவைகள்

    சிலர் கடலுக்கு செல்வார்கள், கடல் எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும் கடவுளுக்கு சமம், கடவுளில் கலந்துவிட்ட முன்னோரை கடற்கரையில் நின்று நினைத்தால் மனம் ஒருவித நிறைவடையும்

    கடற்கரையும் பிரபஞ்ச ஈர்ப்புமிக்க இடம் என்பதால் அதையும் குறித்தார்கள்

    அந்த ஆடி அமாவாசையின் ஒவ்வொரு ஏற்பாடும் மகா உன்னதமானது, அர்த்தம் மிகுந்தது.

    ஏன் அமாவாசையினை தேர்ந்தெடுத்தார்கள் எல்லா விஷயமும் இல்லாத ஒன்றில் இருந்தே தொடங்கும். நாங்கள் சூனியம் நீங்கள் ஒளிதர வாருங்கள் என அழைக்க அந்த இருட்டு நாளை தேர்ந்த்டுத்தார்கள்

    இன்னொரு கோணமும் உண்டு அது சாத்தியமான உண்மை.

    நிலா காலண்டர் உள்ள அக்காலத்தில் அதுவே மாத தொடக்கம், அதுவும் ஆடி அமாவாசை என்பது விவசாய பணிகளுக்கான தொடக்க நாள்

    அன்று தங்களுக்கு நிலமும் வயலும் குளமும் கால்வாயும் உருவாக்கி தந்த முன்னோரை மனமார வணங்கினார்கள்.

    நன்றியினை பெரிதாக கொண்ட தென்புல சமூகம் தன் முன்னோர்களை எண்ணி செய்த பெரும் ஏற்பாடு இது , உலகின் மற்ற இனங்களை விட இந்த இனம் நீத்தார் கடனில் தனித்து நின்றது

    அந்த மாபெரும் நன்றிவிழாவின் தொடர்ச்சியே இந்த ஆடி அமாவாசை

    அந்நாளில் வழிபட்டால் பித்ருக்கள் ஆசி கிடைக்கும் என நம்பாதவன் கூட அப்படி செய்தால் ஏற்படும் மன‌ நிறைவினை மறுக்க முடியாது

    முன்னோர்களின் சொத்து எப்படி வழிவழி வருகின்றதோ அப்படியே அவர்கள் செய்யும் நல்ல காரியங்களின் ஆசியும் அவர்கள் செய்த பாவத்தின் தொடர்ச்சி சாபமாக வருகின்றது என்பதும் இந்துக்களின் நம்பிக்கை

    இதில் பகுத்தறிவாளர் ஒரு கேள்வி எழுப்புவர் நல்லதோ கெட்டதோ செய்தவனையன்றி அவன் வம்சத்தை தொடர்வானேன்? எல்லாம் கட்டுகதை என்பார்கள்

    அவர்கள் அப்படித்தான்

    ஒருவனுக்கு முன்னோர் சொத்து வழிவழியாக வந்தால் அதைகொண்டு அவர்கள் பெயரில் நற்காரியம் செய்தல் வேண்டும்

    முன்னோர் செய்த பாவம் ஒருவனை தொடர்வதாக கருதினால் அதற்கு நிவாரணமாக தாழ கிடப்பவருக்கு சில உதவிகளை செய்து வாழவைக்க வேண்டும்

    யாரையோ அழித்து முன்னோர் செய்த பாவம் அவன் வம்சாவழி யாரையோ வாழவைக்கும் பொழுது சரியாகின்றது

    ஆண்டவனின் கணக்கு மிக துல்லியமாகின்றது

    இன்று அயோக்கியர்கள் கையில் சேரும் சொத்து பல ஆயிரம் கோடிகளுக்கான சொத்து எதற்கு சேருகிறதென்று நமக்கு தெரியாது

    ஆனால் அவன் சந்ததியில் ஒருவன் அந்த செல்வத்தால் 4 பேரை வாழவைப்பான் என்பது ஆண்டவனுக்கே தெரியும்

    இன்றுநடக்கும் அநியாயங்களின் கொடுமை கடவுளில்லைஎன தலையாட்ட சொல்லலாம் , ஆனால் நாளை அந்த அநியாயக்காரரின் வாரிசுகள் பின்னாளில் பலகாரியங்களை செய்யும்பொழுது ஆண்டவன் கணக்கு சரியாகும் என்பது தெரியும்

    இதெல்லாம் நம் அறிவுக்கு எட்டா விஷயங்கள், புரிந்து கொள்ள முடியா சூட்சுமங்கள்

    ஒவ்வொருவனின் முன்னோரும் தன் வம்சத்துக்கு ஒருவித காரியங்களை கடவுள் விருப்படிசெய்ய இங்கு வருகின்றான்

    அதை செய்துமுடித்துவிட்டு காலம் முடிந்து கிளம்புகின்றான்

    அதன் காரிய காரணங்களை அவனும் அறியமாட்டான், அதை தெரிந்துகொள்ளும் அறிவும் அவனுக்கு இல்லை

    ஆனால் அவன் வந்து சென்றதின் பலன் என்ன என்பது இப்பொழுது வாழும் தலைமுறைக்கே தெரியும்

    அதனால் குறிப்பிட்ட நாளில் தன் குலம் உதித்த காரணமும் அது செய்த நற்காரியங்களையும் தான் இந்த உலகுக்கும் உறவுக்கும் சமூகத்துக்கும் செய்யவேண்டிய காரியம் சாப நிவர்த்தி போன்றவற்றை செய்ய சிந்திது பார்க்க செய்யும் நாளே ஆடி அமாவாசை

    இந்த நாள் சொல்லும் தத்துவம் அதுவே

    எல்லா மதங்களிலும் நீத்தார் வழிபாடு உண்டெனினும் மதங்களுக்கு தாயான இந்துமதம் அதை மிக தெளிவாக தனக்கே உரித்தான எளிமையுடன் அழுத்தமான தத்துவத்துடன் சொல்கின்றது

    தென்புலத்தானாக அதில் பெருமை அடையலாம்

    அவரவர் முன்னோரை இந்நாளில் கூர்ந்து கவனித்து நினையுங்கள், அவர்கள் நினைவுகளில் மூழ்குங்கள்

    அது வாழ்வினை திரும்பி பார்க்க வைக்கும், முன்னோர்களின் நினைவுகள் நமக்கு ஏகபட்ட பாடங்களை சொல்லும்

    இன்று அவர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என நம்பினால் அது கிடைக்கும், இல்லை குறைந்த பட்சம் மனநிம்மதியும் நாம் ஆற்றவேண்டிய கடமைகளின் பட்டியலும் மனதில் அப்படியே வந்து அமரும்

    மிக அர்த்தம் பொதிந்த முன்னோர் நினைவுநாளை ஏற்படுத்திய இந்து தர்மத்தையும், அதை அடியொற்றி நடக்கும் இந்துக்களையும் பார்க்கும்பொழுது மனம் மகிழ்த்தான் செய்கின்றது

    முன்னோர்கள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும், முன்னோர்களின் கனவு இவர்கள் மூலம் நிறைவேறட்டும், உலகம் செழிக்கட்டும்

    தர்மம் நிலைக்கட்டும்

    இந்நாளில் தேசத்துக்காக பாடுபட்ட ஒவ்வொரு தியாகிகளையும் தலைவர்களையும் , மகான்களையும், யோகிகளையும் நினைத்து கொள்ளுதல் வேண்டும்

    நம் குடும்பம், நம் சொந்தம் என நினையாமல் இந்நாட்டுக்காய் வாழ்ந்த ஒவ்வொரு முன்னோரையும் நினைந்து வழிபட்டு அஞ்சலி செலுத்துதல் வேண்டும்

    வைக்கும் பிண்டத்தில் ஒரு பிண்டம் அவர்களுக்கும் வைக்கலாம் தேசம் அவர்கள் ஆசியில் எல்லா நலனையும் பெறும், தேசம் செழிக்கட்டும், தேசம் வாழட்டும், தேசம் முன்னோர்களால் ஆசீர்வதிக்கபடட்டும்

  35. வீடு தீபற்றி எரியும் பொழுது இது உன் அறை இது என் அறை இது தனிசுவர் அது பொதுசுவர் என சர்ச்சை செய்து சண்டையிடுவது மடதனம்

    முதலில் தீயினை அணைத்துவிட்டு வீட்டின் பாதுகாப்பை உறுதிசெய்தபின்பே உள்வீட்டு விவகாரத்தை தொடங்க வேண்டும்

    பலவகை முகமூடியுடன் இந்து அழிப்பு எனும் பெரும் தீயினை இந்துவிரோதிகள் கொளுத்திகொண்டிருக்கும் நேரம் இந்த ஸ்மார்த்த, சைவ, வைணவ சர்ச்சை எல்லாம் சரியல்ல‌

    முதலில் இந்துக்களுக்கு உரிய உரிமைகள் மீட்கபடட்டும், இந்த குழப்பவாத விவாதங்களை பின்னர் பார்த்து கொள்ளலாம்

  36. இங்கு கல்வி கிறிஸ்தவ துறவிகள் கொடுத்தார்கள் , வெள்ளையன் வராவிட்டால் தமிழகம் பீகார் போல ஆகியிருக்கும் என சபாநாயகர் பேசுவதெல்லாம் அவர் திமுவில் இருக்க வேண்டிய சரியான நபர், அங்கு இருப்பவர்களுக்கு அவ்வளவுதான் அறிவு என்பதை காட்டுகின்றது

    பீகார் சாணக்கியன் வாழ்ந்த பூமி ஒரு காலத்தில் இந்தியாவின் அடையாளம், வெள்ளையன் காலத்தில் கடற்கரைகள் வளர்ந்தன, கடல் இல்லா பகுதி வளராது அதில் பீகார் சிக்கியது இன்னொரு பெரும் சாபம் தமிழகத்தை தன் நேரடி ஆளுகையில் வைத்திருந்த வெள்ளையன் அப்பக்கங்களை சுல்தான்கள் கையில் விட்டுவைத்தான், அதுதான் அந்த பெரும் பின்னடைவுக்கு காரணம்

    சரி, கிறிஸ்தவ துறவிகள் கல்வி வளர்த்தார்கள் என்பது சரியா?

    நாளந்தா, தட்சசீலம் என எத்தனையோ கல்வி கூடங்கள் இருந்த பூமி இது, காஞ்சிபுரம் கல்வியில் சிறந்த நிலையங்களை கொண்டிருந்தது, மதுரை கல்வியின் தலைநகராக விளங்கியது

    அந்த கல்விதான் வானியல், கணக்கியல், சிற்பம், சிலை, கலை என என்னவெல்லாமோ வளர்த்ததுஅந்த கல்விதான் அர்த்தசாஸ்திரம், குற்ள், அரச நிர்வாகம் என எவ்வளவோ கொடுத்தது

    பண்டைய இந்தியாவும் தமிழகமும் நில அளவை, வரி, உற்பத்தி, வியாபாரம் என எல்லாவற்றிலும் முன்னணியில் இருந்தன அதற்கான கல்விமுறை நம்மிடமே இருந்தது

    இந்த நவீன கல்வி வந்து எல்லோரும் படித்தது இந்த வெறும் 100 ஆண்டு அல்லது 80 ஆண்டுகளுக்குள்ளேதான்

    அதைத்தான் கிறிஸ்தவன் இல்லை என்றால் கல்வி இல்லை என முழங்குகின்றன சில குரல்கள்

    100 வருடத்துக்கு முன் என்ன விஞ்ஞான கல்வி இருந்தது என்பதுதான் தெரியவில்லை

    ராக்கெட் சயின்ஸ் இருந்ததா? இல்லை கம்பியூட்டர் சயின்ஸ் இருந்ததா? இல்லை மருத்துவமோ இதர துறையோ இந்த அளவு இருந்ததா?

    உலகில் கல்வி என அன்று எதுவுமில்லை

    அன்றிருந்த கல்வியில் இருவகை இருந்தது, பொதுமுறை இருந்தது

    இருவகையில் அரசனுக்கான கல்வி வேறு, அது ஆட்சி, போர் முறை, ராஜநீதி என அவனுக்கு போதிக்கபட்டது. கற்ற அரசன் எவனும் பிராமணன் அல்ல‌

    சாதாரண மனிதனுக்கு ஓலை சுவடி எழுத்தும் கூட்டல் கழித்தல் போன்ற சாதாரண கணக்குகள் இருந்தன‌

    செட்டி இனம் இதில் வட்டியினை கணக்கிட கற்றது

    ஆக அரசனுக்கொரு கல்வி, பாமர மக்களுக்கு தனி கல்வி என நிலமை இருந்தது

    இது போக தொழில் எனப்படும் வாழ்க்கைகான கல்வி தகப்பனிடம் இருந்து மகனுக்கு சொல்லிதரபட்டது

    அது கொல்ல பட்டறை, விவசாயம், தச்சு வேலை, படகு செய்தல், சமையல், இரும்பு வேலை, சிற்பம் என குலதொழிலாக இருந்தது

    பிராமண இனம் அதை வானசாஸ்திரம் ஜோதிடம் என தன் குலத்துக்கு கற்று தந்தது

    அவனவன் தொழிலில் அவனவன் தேறினான், ஒவ்வொரு தந்தையும் தன் வித்தையினை அப்படியே மகனிடம் இறக்கிவைத்தான்

    வைத்தியமும் குலம் குலமாக வந்தது , சலவை தொழில் உட்பட எல்லாமும் அப்படியே தொடர்ந்து வந்தது

    அன்றொரு கொடுமை இருந்திருக்கின்றது, ஒருவன் தன் தொழிலை தன் குடும்பத்தாரை தவிர இன்னொருவனுக்கு கற்றுதர தயாராக இல்லை

    அது சிற்ப தொழில் முதல் போர்கலை வரை இருந்திருக்கின்றது, துரோணர் சம்பவங்களில் இதை காணலாம்

    ஒவ்வொருவனும் தன் வித்தை தன் குலம் ஒன்றுக்கே என உறுதியாய் இருந்திருக்கின்றான்

    இந்த தொழிலாளர்கள் எல்லாம் ஒன்றாக கூடித்தான் அச்சமூகம் வளமாக வாழ்ந்தது

    கொல்லனும் தச்சனும் ஒன்று கூடி மாட்டுவண்டி செய்தனர், கொல்லனும் கல் தச்சனும், தச்சனும் சேர்ந்து அழகிய ஆலயங்களை உருவாக்கினர்

    சமூகம் கலைகளிலும் அறிவிலும் வளர தொடங்கியது, ஒரு குலம் இன்னொரு குலத்திற்கு உதவியாக சமூக வாழ்வில் இருந்தது

    பிராமண இனம் ஆலயங்களிலும் அரசனிடமும் குனிந்தே நின்றது, என்னதான் அறிவான இனம் என்றாலும் அது அரசனுக்கு அடங்கி கிடந்தது

    அரசனே தெய்வம்

    அன்று இவ்வளவுதான் கல்வி அதாவது தமிழ் படிப்பது கொஞ்சம் கூட்டல் கழித்தல் , குலதொழில் கல்வி

    வெள்ளையன் வந்தே இங்கு நிலமையினை மாற்றினான்

    தன் அதிகாரத்தை நிறுத்த அவனுக்கு ஆங்கிலம் அதிகம் தெரிந்தோர் தேவைபட்டனர், பிராமண சமூகம் அதை பயன்படுத்தி ஆங்கிலம் கற்றது

    அரசன் முன் குனிந்து அவனுக்காக பலமொழி கற்ற அச்சமூகத்திற்கு ஆங்கிலம் கற்பதும் எளிதாக வந்தது

    இதெல்லாம் 1800களின் காலங்கள்

    அதன் பின் வெள்ளையன் நவீன கல்வியினை திறந்தான், அதில் பிராமணர் ஆசிரியராயினர்

    அவர்கள் கூலிக்கே பணியாற்றினர், எந்த சாதி படித்தாலும் அவர்கள் கற்பித்தனர்

    அதில் எல்லா சாதியும் படித்தது, எல்லோருக்கும் பிராமணர் கற்பித்தனர்

    வெள்ளையன் கல்வி கூடங்களில் கிறிஸ்தவ சாயல் தெரிய இந்துக்களின் கல்வி கூடங்கள் பெருகின, பச்சையப்ப வள்ளல், செட்டிகள், ஆதீனங்கள் கல்வி கூடங்களை திறந்தனர்

    அதிலும் பிராமண இனம் கூலிக்கு பணியாயிற்று

    பிராமணன் தனி கல்வி கூடங்களை நடத்தியதாகவும் அங்கு மற்ற சாதிக்கு கல்வி மறுக்கபட்டதாகவும் எங்காவது கேட்டிருக்க முடியுமா? காட்சிகள்தான் உண்டா?

    முதல் இரு உலக போர்கள் உலகை மாற்றிபோட விஞ்ஞானம் வேகமாக வளர்ந்தது, அது சுதந்திர இந்தியாவில் நவீன கல்வியினை கொடுத்தது

    இந்திய அரசும் சட்டம், மருத்துவம், விஞ்ஞானம் உட்பட ஏகபட்ட கல்விகளை உருவாக்கி தன் மக்களை படிக்க வைக்க தொடங்கியது

    அந்த கல்விதான் இன்று நாம் காணும் கல்வி

    இந்தியாவில் கல்வி இருந்த வரலாறு இதுதான்

    இதில் எங்கே பிராமணன் யாருக்கு எதை மறுத்தான் என சொல்லுங்கள்

    பிராமண ஆசிரியரிடமே அண்ணா படித்தார், அம்பேத்கர் படித்தார், கருணாநிதியும் தமிழ் படித்தார், கலாமும் படித்தார்

    திராவிட கும்பலை தமிழ் கற்க வைத்த அந்த இனமே அவர்களிடம் அடியும் வாங்கியது

    சும்மா 100 வருடத்துக்கு முன் நமக்கு கல்வி இல்லை பிராமணன் மறுத்தான் என்பவர்களிடம் 100 வருடத்துக்கு முன் இங்கு என்ன நவீன கல்வி இருந்தது என கேளுங்கள்

    அதன் பின் பேசவே மாட்டார்கள்

    சரி, ஒரு வாதத்துக்கு கிறிஸ்தவர் கல்வி கொடுத்தார்கள் என்றால் அவர்களின் வருமானம் என்ன? ஆட்சி யாரிடம் இருந்தது? கல்விக்கான நிதி எங்கிருந்து வந்தது?

    எல்லாம் இந்நாட்டில் உறிஞ்சபட்ட பணம் , இந்துக்களை கசக்கி பிழிந்து உறிஞ்சபட்ட வரிபணம், அந்த வருமானத்தில்தான் பிரிட்டிஷ் அரசு இயங்க்கியது அந்த வருமானத்தில்தான் கிறிஸ்தவ துறவிகள் பாடம் நடத்தினர்

    எங்கே இன்று வருமானமின்றி அதை அவர்கள் செய்யட்டும் பார்க்கலாம், பல்லாயிரம் கோடி சொத்து கொண்ட கிறிஸ்தவசபைகள் அரச ஊதியம் தேவையில்லை, நிதிவேண்டாம் என கல்விபணி ஆற்றட்டும் பார்க்கலாம்

    சேவை மனப்பான்மை கொண்ட கிறிஸ்தவர்கள் இப்பொழுது இலவச கல்வி வழங்க தயாரா என அவர் கேட்பாரா?

    அவர்களிடம் இதை அப்பாவு கோருவாரா? மாட்டார், கேட்கவே மாட்டார்

    அப்ப்பாவு முன்பு காமராஜரால் படித்தோம் என்றார் அப்பொழுது அவர் காங்கிரஸில் இருந்தார், இப்பொழுது கிறிஸ்தவர்களால் படித்தோம் என்கின்றார் இப்பொழுது திமுகவில் இருக்கின்றார்

    காமராஜர் சோறுபோட்டு படிக்க வைத்தார் என சொன்னவரும் அவர்தான்

    அதாவது தமிழன் சோறு போட்டால்தான் பள்ளிக்கு செல்வேன் என அடம்பிடித்திருக்கின்றான் அவனுக்கு சோறுபட்டு படிக்கவைத்தார் காமராஜர்

    இவ்வளவுதான் தமிழன் கல்வி தேடி ஓடிய காட்சி, காமராஜர் காலமே இப்படி என்றால் அதற்கு முந்தைய காலம் எப்படி இருந்திருக்கும்?

    ஆக சோறுகூட இல்லா வறுமையினை செய்தது கிறிஸ்தவ வெள்ளையன் ஆட்சி என்பதையும், எந்த கிறிஸ்தவ கல்வி நிறுவணமும் சோறுபோட்டு படிக்கவைக்கவில்லை என்பதையும் மறைமுகமாக தெரிவிக்கின்றார் சபாநாயகர்

  37. இந்திய தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட அபாய போதைபொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது மிக கவலையளிக்கும் விஷயம்

    டாஸ்மாக் சரக்கெல்லாம் இப்பொழுது குளிர்பானம் போல் ஆகிவிட்ட நிலையில் உச்ச ஆபத்தான போதை பொருட்களெல்லாம் எளிதாக புழங்குவதும் அதில் இளைய தலைமுறை சிக்கி சீரழிவதும் மாபெரும் சமூக ஆபத்து

    நிச்சயம் இவற்றில் சில கடற்கரையோரமாக கடத்திவரபட்டாலும் இங்கே விளைவிக்க கூடியதும் நிறைய உண்டு

    கிராமத்தில் பனங்கள் இறக்கினால் குற்றம் என ஓடிபிடிக்கும் காவல்துறை இம்மாதிரி கொடும் போதை பொருளை பிடிக்க தடுமாறுவதுதான் என்னவென தெரியவில்லை

    எனினும் இப்பொழுது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடுவதாக செய்திகள் வெளிவருகின்றன, தமிழக அரசு மிக தீவிரமான நடவடிக்கையில் இறங்கியிருகின்றது

    ஐ.ஜி அஸ்ரா கார்க் போன்ற சிறந்த அதிகாரிகள் தலமையில் போதை ஒழிப்பு நடப்பது நல்ல விஷயம்

    நல்ல குடிமகன் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும், அவ்வகையில் எமக்கு தெரிந்த சில தகவல்களளை நாம் தெரிவிப்போம்

    தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கஞ்சா உண்டு, எங்கெல்லாம் இதர உச்ச போதை பொருள் கிடைக்கும் அது எப்படியெல்லாம் கடத்தபடும் என தெரிந்தவர்கள் சிலர்தான்

    ஒருவர் இயக்குனர் பாலா, இன்னொருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர்கள் இருவருக்கும் எல்லா போதையும் அத்துபடி, இதை தவிர இயக்குநர் ஹரி போல சிலர் உண்டு என்றாலும் எல்லாம் அறிந்த “போதை மேதைகள்” இவர்கள்தான்

    தமிழக காவல்துறை இவர்களிடம் விசாரித்தாலே 99% போதை கும்பலை நொடியில் தூக்கிவிடலாம்

  38. கனடா சென்றிருக்கும் போப் ஆண்டவர் அங்கு பழங்குடிகளை மிஷனரி கிறிஸ்தவர்கள் மதம்மாற சொல்லி செய்த கொடுமைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்

    இது இரண்டாயிரம் வருட கிறிஸ்துவ பாரம்பரியத்தில் புதிது, மிக புதிது

    வழக்கமாக இயேசுவினை ஏற்காதவர்கள் சாகவேண்டியவர்கள் என கொள்கை கொண்ட கூட்டம் முதல் முறையாக மன்னிப்பு கோரியுள்ளது, கனடாவில் கண்டெடுகபட்ட அடையாளங்கள் அப்படி

    இனி விரைவில் போப் இந்தியா வந்து கோவாவில் அன்றொரு நாள் போர்ச்சுகீசியர் செய்த எல்லா கொடுமைகளுக்கும் இந்துக்களுக்கு எதிராக அவர்கள் செய்த அனைத்து கொடுமைகளுக்கும் மன்னிப்பு கோருவார் என எதிர்பார்க்கபடுகின்றது

    கன்டாவில் 1800களில் நடந்ததை விட பன்மடங்கு கொடியதும் வார்த்தைகளால் விளக்கமுடியாததுமானது கோவாவில் 1500களில் போப்பை தலைவராக கொண்ட கிறிஸ்தவ கூட்டம் செய்த கொடுமைகள்

  39. உலகில் சீனா இரண்டு காமெடிகளை செய்கின்றது, முதலில் ரஷ்யா தங்களின் நண்பன் என சொல்லிகொண்டு அவர்கள் பாக்கெட்டில் இருந்து உருவும் காமெடி, அது இப்படியானது

    “டேய் சீனா, அண்ணன் நிலமைய பாத்தியாடா

    ஆமாண்ணே, ஈரான்கிட்டெல்லாம் கையேந்திட்டீங்க‌

    என்ன பார்க்க பாவமா இல்லியாடா?

    அண்ணே, நீங்க நம்ம இனம்ணே, உங்க எதிரி எனக்கும் எதிரி

    பின்ன ஏண்டா உக்ரைன் சண்டையில எனக்கு துணையா வரவே இல்ல‌

    அண்ணே இது நீங்களா உருவாக்குன சண்ட, இன்னொரு நாட்டுக்குள்ள போய் அடிக்கிறீங்க அதுனால நான் வரமாட்டேன், ஆனா உங்கமேல ஒரு பய கை வச்சான்னு வைங்க, நா விடவே மாட்டேண்ணே

    டேய், முடியலடா ஏதாவது உதவி பண்ணுடா

    உங்ககிட்ட எண்ணெய் வாங்குறதுதான் ஒரே உதவி

    அதுக்காவது நல்ல விலைய குடுடா

    இங்கபாருங்க, கால்வாசி விலைக்கு தரணமும்ணா தாங்க, இல்ல நான் ஈரான்கிட்ட போயிருவேன், அப்புறம் அங்கேயும் நீங்க வரமுடியாது

    டேய்…”

    ரஷ்யாவிடம் இப்படி உரசும் சீனா, அமெரிக்க தலைநகரில் ஒரு அட்டகாசம் செய்கின்றது, அமெரிக்க நாடாளுமன்றம் அருகே சீனபாணி பூங்கா ஒன்றை அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்க்க கட்டும் சீனா, அங்கே ஒரு புத்தர்கோவிலை கட்டுமாம், ஆனால் அதன் மூலபொருட்களெல்லாம் சீனாவில் இருந்துவருமாம் யாரும் சோதிக்க கூடாதாம்

    இது ஏதோ உளவுவேலை என உணர்ந்த அமெரிக்கா புத்தர் கோவிலுக்கு அனுமதி கொடுக்கவில்லை

    “டேய் என்னடா செய்ற‌

    புத்தர் கோவில் கட்டுரோம்ணே, எங்க ஊர் பாரம்பரியம்

    அத ஏண்டா எங்க நாடாளுமன்றம் பக்கத்துல கட்டுற‌

    அண்ணே, கோவில் எங்க இருந்தா என்னண்ணே, மக்கள் வந்து தியானம் பண்ணிட்டு அமைதியா போவாங்க‌

    சரி இதெல்லாம் என்னது?

    எங்க நாட்டுல இருந்து வந்த செங்கல் சிமெண்ட் கம்பிண்ண்ணே

    இரு செக் பண்றேன்

    டோன்ட் டச், புனிதமான புத்தருக்கு நாங்க புனிதமான பொருளால கோவில் கட்டுறோம், நீங்கெல்லாம் இத தொடகூடாதுண்ணே தீட்டாயிரும்

    ஓஹோ

    ஆமாண்ணே

    ஏண்டா ஓடுறதுல ரயிலு , பறக்குறதுல பிளைனு தவிர எல்லா உயிரையும் தின்னு கண்ட நோய பரப்புர பய நீ, உங்க மூட்டைய நாங்க தொட்டா தீட்டா

    அண்ணே விளையாடாதீங்க, தொடாதீங்க‌

    ஓஹோ, சரி புத்தர் கோவில உங்க நாட்டுலே கட்டு , தீட்டு வராது

    இல்ல புத்தர் இங்கதான் கட்ட சொன்னாரு

    என்கிட்ட உன்ன கொல்ல சொன்னாரு , ஓடுடா படவா…”

  40. உக்ரைன் ரஷ்யா போருக்கு பின் அதிகம் கவனிக்கபடுவது ரஷ்யா இஸ்ரேல் மோதல்

    உக்ரைனில் யூதர்கள் அதிகம், அதிலும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஒரு யூதர் எனும் வகையில் இஸ்ரேலின் ரகசிய ஆதரவு உக்ரைனுக்கு இருந்தது

    இது ரஷ்யாவுக்கும் இஸ்ரேலுக்கும் உரசலை கொடுத்தது, ரஷ்யா இன்னும் சீண்ட உரசல் பெரிதாகி விரிசலானது

    சமீபத்தில் புட்டீனின் ஈரானிய பயணம் நிலமையினை இன்னும் சிக்கலாக்கியது , இஸ்ரேலின் பரம வைரியான ஈரானுடன் ரஷ்யா நெருங்குவதும் சிரியாவில் பல இடங்களில் ரஷ்ய ஈரானிய ராணுவம் இருப்பதும் இஸ்ரேலுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தின‌

    சிரியாவில் ரஷ்யாவின் பல ரகசிய இடங்களை , அதாவது ஈரான் ராணுவ மறைமுக நிலைகளை இஸ்ரேல் நொறுக்கி போட தொடங்கியுள்ளது, அதன் அதிரடிகள் தொடர்கின்றன‌

    இந்நிலையில் ரஷ்யாவின் யூத தொண்டு நிறுவணங்களுக்கு ரஷ்ய அரசு தடை விதித்து விவகாரம் ரஷ்ய நீதிமன்றம் வரை சென்றிருக்கின்றது

    இதை கடுமையாக கருதும் இஸ்ரேல் பெரும் மிரட்டலை செய்கின்றது, ஒருவேளை ரஷ்யாவில் யூத அமைப்புக்கு தடைவிதிக்கபட்டால் இஸ்ரேலில் இருக்கும் ரஷ்ய தூதர் வெளியேற்றபடுவார் என எச்சரிக்கின்றது

    அதாவது ரஷ்ய உறவையே வெட்டுவோம் என மிரட்டுகின்றது

    இஸ்ரேல் மற்ற நாடுகளை போல் அல்ல என்பதால் விவகாரம் உன்னிப்பாக கவனிக்கபடுகின்றது, உலகில் எல்லோரையும் பகைத்தே தீருவது என புட்டீன் முடிவு செய்துவிட்டது தெரிகின்றது, இந்த மோதல் பெரும் போருக்கும் காரணமாகலாம்

  41. உக்ரைன் போரில் அமெரிக்கா மிகபெரிய லாபத்தை ஈட்டி கொண்டிருக்கின்றது

    ஒரு எதிரியினைகாட்டி மிரட்டி, அவன் நமக்கு ஆபத்து தன் நண்பர்களை ஒரு அணியில் திரட்டி அவர்கள் பாக்கெட்டி இருப்பதை ரகசியமாக உருவதெல்லாம் ஒரு கலை, அந்த கலையில் கைதேர்ந்த நாடு அமெரிக்கா

    உக்ரைனில் ரஷ்யா யுத்தம் நடத்தும்நிலையில் ஒருவேளை அது அடுத்த பெரும் யுத்தமாக வெடிக்கலாம் என்ற அச்சம் ஐரோப்பாவில் பரவுகின்றது

    இந்த இடத்தில் தன் விமானம் மற்றும் ஆயுத விற்பனையினை அள்ளி குவிக்கின்றது அமெரிக்கா

    உக்ரைன் யுத்தத்தின் ஸ்டார் ஆயுதங்களான ஜாவலின் ஏவுகனை, ஹைமார்ஸ் போன்றவற்றை செய்ததும் எ 35 விமானத்தை செய்ததுமான லாக்கீன் மார்ட்டினும் அதன் உப நிறுவணங்களும் திமுக அமைச்சர்கள் போல 24 மணி நேரமும் பரபரப்பாய் இயங்குகின்றார்கள்

    பெட்டி பெட்டியாய் டாலர்கள் குவிக்கபடுகின்றன, அந்த கம்பெனிகள் நினைத்தே பார்த்திரா அளவு பெரும் ஆயுத கொள்முதலுக்கு பணம் கொட்டபடுகின்றது

    ஐரோப்பாவில் இருந்து இப்படி பில்லியன் டாலர்கள் அமெரிக்காவுக்கு கொட்டபடும்பொழுது அமெரிக்க டாலரின் மதிப்பு ஏறாமல் என்ன செய்யும்?

    அடைமழை அல்ல விடாத டாலர்மழை அமெரிக்காவுக்கு கொட்டி கொண்டிருக்கின்றது, விரைவில் அமெரிக்க ஆயுத கம்பெனிகள் ரஷ்ய புட்டீனுக்கு சிலை வைத்து வணங்கினாலும் வணங்கலாம்

    தன் நாட்டுக்கு பெருத்த லாபத்தை ஈட்டிதரும் புட்டீனுக்கு இனி சிறப்பு விருதுகளையும் அமெரிக்கா வழங்கலாம்

  42. இந்தியா ரிஷிகளின் நாடு தவமுனிகளின் தேசம், பரசுராமர் , விஸ்வாமித்திரர் என எத்தனையோ தவமுனிகள் தவருந்து அஸ்திரங்கள் செய்து காத்த தேசம்

    ராமனும், கண்ணனும் இன்னும் பல அவதாரங்களும் அஸ்திரங்களை அன்றே கையில் எடுத்து தர்மத்தையும் நாட்டையும் காத்த வரலாறு கொண்ட தேசம்

    அவ்வரிசையில் வந்த தவமுனி அவன், தேசத்துக்காய் வாழ்ந்த விஞ்ஞான ரிஷி அவன், என்றோ வாழ்ந்த முனிவன் ஒருவன் இந்நாட்டின் மேல் கொண்ட அன்பால் மறுபடி வந்துபிறந்து தன் கடமையினை தொடர்ந்த அதிசயம் அவன்

    ஆம் அவன் தவமுனி வரிசை..

    அந்த தலைமுறைக்கு நேதாஜி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர் மற்றும் சாஸ்திரி, நமது தலைமுறைகக்கு அப்துல் கலாம்.

    காலம் கொடுத்த வரிசை இதுதான்

    அவர் இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை அவர், ஒரு இந்தியனாக பகை நாடுகளுக்கு சவால் விட்டு இந்திய வான்வெளியினை காத்து எதிரியின் வான்வெளியினை நடுங்க செய்தவர்

    ஏவுகனை என்பது மராட்டிய மாவீரன் சிவாஜியின் தகப்பன் ஷாஹாஜியால் இந்தியாவில் அறிமுகமானது, தன் பிரசித்தியான பட்வாடி போரில் மொகலாய படைகளுக்கு எதிராக அவன் அதை பயன்படுத்தினான்.

    பிஜப்பூர் அடில்ஷாஹிகளிடம் அவன் பணியாற்றும்பொழுது பல அடி தூரம் பாயும் ஏவுகனைகளை மூங்கில் கொண்டு உருவாக்கினான், அவனுக்கு பின் அடில்ஷாஹிகளின் ஆயுதமாக அது இருந்தது, சிவாஜியினை அடக்க வந்த திலியர்கான் பிஜப்பூருடன் மோதும்பொழுது அது வலுவான ஆயுதமாக இருந்தது

    இன்றைய கர்நாடக பக்கம் அன்றைய பிஜப்பூர் பக்கம் அப்படி ஒரு ஆயுதம் அன்றே இருந்தது ஆனால் சில அடிகள்தான் பறக்கும்

    சிவாஜி காலத்துக்கு பின் பல்லாண்டுகள் கழித்து வந்த திப்பு சுல்தான் அதை மேம்படுத்தினான், அதைத்தான் வெள்ளையர் ஐரோப்பாவுக்கு எடுத்து சென்றனர், அந்த அடிப்படையில்தான் ஜெர்மானியர் ஏவுகனைகள் செய்ய இரண்டாம் உலகபோருக்கு பின் அந்த ஏவுகனை யுகம் எழுந்தது

    இந்தியாவில் அதை தொடங்கி வைத்தவர் சந்தேகமே இல்லாமல் அய்யா அப்துல் கலாம். அவர் வாழ்வு அவ்வளவு போராட்டமானது

    ஒரு பின் தங்கிய தீவுபகுதி,பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, பெரும் சவால் நிறைந்தது,

    மத ரீதி, ஜாதி ரீதியாயக தன்னை காட்டி அனுதாபம் தேடியவரில்லை, அவருக்கு தெரிந்ததெல்லாம் உழைப்பு, தேசாபிமானம் மட்டுமே

    நவீன இந்தியாவில் விக்ரம்சாராபாய், ஜஹாங்கீர் பாபா, சதிஷ் தவான் , சிதம்பரம் (ப.சிதம்பரம் அல்ல) , போன்ற வரிசையில் மிக முக்கியமான பெயர் அப்துல்கலாம்.

    இரண்டாம் உலகப்போருக்கு பின் யுத்தம் என்பது விண்வெளிக்கு மாறிற்று, செயற்கை கோள்களும், ஏவுகனைகளும்தான் ஒரு தேசத்தின் பாதுகாப்பினை நிர்ணயம் செய்தன, அது இல்லாத சமயத்தில் சீனா நமது முதுகில் குத்திய வஞ்சம் நடந்தது.

    உலக நாடுகள் எல்லாம் மிக ஏளனமாக பார்த்த இந்திய ராணுவ ஏவுகனை துறையையும், அதற்கு மிக பக்கபலமான விண்வெளி துறையும் உலகின் மிக முண்ணனி நாடாகளுள் ஒன்றாக மாற்றிய பெருமை அப்துலகாலாமிற்கு உண்டு,

    அவரது முதல் படைப்பே மிக சிறியரக ராணுவ ஹெலிகாப்டர், இறுதியாக கொடுத்தது (ஓய்வுபெற்றாலும் அவரின் வழிகாட்டல் உண்டு) இன்று உலகின், முக்கிய ஏவுகனைகளில் ஒன்றான பிரம்மோஸ்

    1980வரை இந்தியாவிடம் சொல்லிகொள்ளும் ஏவுகனைகள் கிடையாது, ரஷ்யா நண்பன் தான் எனினும் சொல்லிதராது ஆனால் நல்ல தொகைக்கு ஆயுதம் தரும் மற்றபடி வித்தை சொல்லிதர விடமாட்டார்கள்.

    இந்திராவின் காலத்தில் இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவணத்தில் ஒரு பகுதி தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி அலுவலகம் என மாற்றபட்ட பின் அப்துல் கலாம் யுகம் உருவாகிறது.

    பெரும் தோல்விகள், ஏராளமான அவமானங்கள் எல்லாவற்றையும் தாண்டித்தான் அவரால் ஏவுகனை திட்டத்தை செயல்படுத்த முடிந்தது, காரணம் ஏவுகனை என்பது மிக மிக சக்திவாய்ந்தது மட்டும் அல்ல பெரும் சிக்கல் வாய்ந்த நுட்பம்., விமான அறிவும் விண்வெளி தொழில்நுட்ப அறிவும் நிரம்ப கலந்து இல்லாமல் அது சாத்தியமே இல்லை.

    அக்னி,ப்ரித்வி,நாக்,திரிசூல்,ஆகாஷ் என வரிசையாக செய்து கொடுக்கும்பொழுது உலகம் ஆடத்தான் செய்தது, அக்னி நீண்ட தூர ஏவுகனை சீனாவிற்கானது என சொல்லி தெரிவதில்லை,

    காரணம் தலாய்லாமா எனும் புத்த துறவியின் அடைக்கலமும், அருணாலச பிரதேச புத்த மடாலயமுமே நமக்கும் சீனாவுக்கும் தகறாறுக்கு முதல் காரணம், யுத்தம் நடந்தது அதற்கே, இன்றுவரை சர்ச்சையும் அதற்கே

    அதனை மிரட்ட உருவாக்க பட்டதுதான் அக்னி, இந்திய வேதங்கள் அக்னியினை தொடக்கமாக கொண்டவை, எல்லா சக்தியும் அக்னியில் தொடக்கும் என நம்பிக்கை கொண்ட தேசமிது, அதனால் அக்னி இந்தியாவின் முதல் ஏவுகனை பெயராயிற்று

    ஆனால் பிரித்வி நடுத்தரமானது, அதன் தாக்கும் தூரத்தை கூட கணிக்காமல் “பிரித்வி” என்ற பெயரை கேட்டதும் அலறியது

    பாகிஸ்தான், காரணம் பிரித்விராஜன் என்ற மன்னன் அக்காலத்தில் ஆப்கான் முஸ்லீம் கொள்ளையனுக்கு பெரும் எதிரி.

    (அந்த ராஜஸ்தான் மன்னனை குறிப்பிட்டு அதாவது இதனை ராஜஸ்தான் எல்லையில் நிறுத்துவோம் என சொல்லாமல் சொல்லது இந்தியா :))

    உடனே புறவாசல் வழியாக ஏதோ ஒரு மொக்கை ஏவுகனையை வாங்கி “கோரி” (கோரி முகமது) என பெயரிட்டு மகிழ்ந்து பாகிஸ்தான் (ஆனால் அது வேலை செய்யுமா என கூட தெரியாது ), இன்றும் ஐரோப்பாவில் களவெடுத்து சீனாவிடம் கொடுத்து, 1950 மாடலில் செய்த பழைய அணுகுண்டு பாகிஸ்தானிடம் இருப்பதாக நம்பபடுகின்றது,

    மற்றபடி சொந்த தொழில்நுட்பம் ஏதும் அவர்களிடம் கிடையாது தீவிரவாதம் தவிர.

    இன்னொன்று பாகிஸ்தான் ஜாதகம் அபாரமானது, போராடமலே அவர்களுக்கு நாடு கிடைக்கும், அவர்கள் கேட்காமலே வல்லரசுகள் அவர்களுக்கு நவீன ஆயுதம் கொடுக்கும், அணுகுண்டு கொடுக்கும் எல்லாம் எதற்காக?

    இந்தியாவினை முடக்க

    (மோடி காலத்துக்கு முன்புவரை அப்படி இருந்த நிலை இப்பொழுது இல்லை, மோடியின் ராஜதந்திர நகர்வுகளில் பாகிஸ்தானுக்கு பழைய உலக ஆதரவு இல்லை)

    அப்படியும் யுத்ததில் அடிவாங்கும் பாகிஸ்தான், 4 தீவிரவாதிகளை வைத்து இந்தியாவில் குழப்பம் விளைவிக்கும், அதோடு வல்லரசுகளை நோக்கி கட்டை விரலை உயர்த்தும், அவர்கள் காரி துப்புவார்கள்.

    ஆனால் நிச்சயமாக சொல்லலாம் இந்தியா ஓரளவு சொந்த தயாரிப்பு கொண்டது, இன்று ஓரளவிற்கு இந்திய ராணுவம் வலிமையுடையது என்றால் அதன் ஏவுகனை பலம் ஒரு காரணம், அதன் மூலம் சந்தேகமே இல்லாமல் அப்துல் கலாம்.

    இதனால்தான் மிகநவீன கிரையோஜனிக் ராக்கெட் எஞ்சின்களை ரஷ்யா தர சம்மதித்தபொழுது குறுக்கே பாய்விரித்து படுத்து தடுத்தது அமெரிக்கா, அதனால்ததான் இன்னும் ஜி.எஸ்.எல்.வி தாண்டி அடுத்த கட்டம் நம்மால் செல்லமுடியவில்லை, இன்னும் நமது விண்வெளி ராக்கெட்டுகளுக்கு முழு சக்தி காணாது, சொந்த முயற்சியில் ஏதோ மங்கள்யான் வரை சாதிக்கின்றோம்.

    அதனால் தான் அப்துல்கலாமை அவர்களுக்கு பிடிப்பதில்லை,

    அமெரிக்கா தன் சொந்த ஏர்போர்ட்டில் அவரை ஏளனபடுத்தினாலும் “அப்படியா? அப்படி ஒருவரை எமக்கு தெரியாதே” என கிண்டலாய் சொல்வார்கள், அதாவது அவர்களை தவிர வேறு யார் ஆயுதம் செய்தாலும் பொறுக்காது,

    ஒய்வு பெற்றபின் அல்ல, அவர் நினைத்திருந்தால் உலகில் எந்த நாட்டிற்கும் சென்று கோடிமேல் கோடி குவித்திருக்கலாம், அந்த துறை அப்படி.

    அவர் கல்வி அப்படி, அனுபவம் அப்படி,

    எல்லாவற்றிற்கும் மேல் ஒரு மாபெரும் தேசத்தின் ராணுவத்தையே உயர்த்திய சாதுர்யம், இதற்கு மேல் என்ன வேண்டும்?

    எல்லா நாடுகளும் ரத்தின கம்பளம் குவித்து வரவேற்றிருக்கும். அது கூட வேண்டாம் தனியாக ஒரு ஆயுதகம்பெனி தொடங்கியிருந்தாலும் அவர் உலகின் முண்ணனி வியாபாரியாக மாறி இருப்பார்,

    அட வியாபாரம் வேண்டாம் ஆலோசகராக இருந்தாலும் “அள்ளி அள்ளி” எடுத்திருப்பார், அவர்களும் தங்க வீட்டிலே வைத்து தாங்கியிருப்பர். கிட்டதட்ட அரபு அரசர்கள் அல்லது ஐரோப்பிய தொழிலதிபர்களின் அளவிற்கு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கலாம்,

    ஆயுத வியாபாரம் என்றென்றும் உலகில் நம்பர் 1 லாபகரமான தொழில்

    உண்மையில் அவர் அதற்கெல்லாம் ஆசைபடவில்லை, நாடு உயரவேண்டும், சுபிட்சமாக வாழ பாதுகாப்பு அவசியம், அதற்காகத்தான் உழைத்தார். குடியரசு தலைவர் பதவி அவரை தேடிவந்தது, அங்கு உரை நிகழ்த்தும் பொழுதெல்லாம் “திருகுறளை” மேற்கோள் காட்டி தமிழராக நின்றார்.

    உலகமெல்லாம் கொண்டாடிய அந்த படித்த விஞ்ஞான தமிழன், தமிழகத்தின் சில இடங்களிலும் சில அரசியல் காட்சிகளிலும், 5ம்வகுப்பு கூட தாண்டாத தமிழக அரசியல்வாதிகளால் மட்டம் தட்டபட்டு அவமானபடுத்தபட்டார்,

    ஆனால் அப்துல்கலாம் ஒரு வார்த்தை கூட பதில்பேசாது தனது பெருந்தன்மையை காட்டிய நிகழ்வுகளும் உண்டு.

    இரண்டாம் முறை அவர் ஜனாதிபதியாகும் வாய்ப்பும் இருந்தது, அவ்வாறு நடந்தும் இருக்கலாம், ஆனால் சில வஞ்சக திட்டங்களால் வீழ்த்தபட்டார். இந்த உலக விஞ்ஞானி அவர்களை மதிக்கவில்லையாம் பொங்கிவிட்டார்கள், ஜனநாயக நாட்டில் எதுவும் சாத்தியம்.

    நிச்சயமாக அவர்கள் வட இந்தியர்கள் அல்ல, திராவிடர்கள் தான்.

    கலாம் .ராமேஸ்வரத்து மண்ணை சேர்ந்தவர், அம்மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, என இன்னும் ஏராளமான சர்ச்சைகள் அவர்மேல் உண்டு, அணுசக்தியை ஆதரித்தார் என்ற பழியும் உண்டு, நிச்சயமாக அவர் அணுவிஞ்ஞானி அல்ல ஆனால் மூத்த விஞ்ஞானி எனும் பதவியில் இந்திய அணுசக்தி குறித்த அனுபவம் அவருக்கு அத்துப்படி.

    இன்னொன்று அணுஆலை என்பது சர்வதேச அரசியல், பல மர்மங்களை கொண்டது, அந்த அரசியல் அவருக்கு தெரியாது, ஆனால் ஒரு இந்திய தலமை விஞ்ஞானியாக ஒரு பதிலை கொடுக்கவேண்டிய கட்டாயம், ஆனால் கவனித்து பாருங்கள் அவர் சொல்வது எல்லாம் ஆறுகள் இணைப்பு, சூரிய ஓளி மின்சாரம், இயற்கையோடு இணைந்த அறிவியல்.

    சிலர் சொல்வார்கள் கலாம் ராமேஸ்வரம் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, கூடங்குளம் அணுவுலையினை நிறுத்தவில்லை, அவர் தமிழுக்கு என்ன செய்தார்? ஈழ மக்கள் விடுதலைக்கு என்ன செய்தார்? சிலர் ஒருபடி மேலே சென்று சொல்வார்கள், நல்ல தமிழர் என்றால் கலாம் ராக்கெட் நுட்பத்தை புலிகளுக்கு சொல்லி கொடுத்திருக்க வேண்டமா?

    அவர் இந்திய குடிமகனாக வாழ்ந்தார், அதனால் சிலர் அவரை ஒரு வகை ஆர்எஸ்எஸ் என்றார்கள். அப்படியானால் காமராஜரும் ஆர் எஸ்எஸ் , சாஸ்திரி என நாட்டுபற்றாளர்கள் என சகலரும் அப்படியே

    இந்த மொத்த தேசத்தின் பாதுகாப்பையும், வளத்தையுமே பற்றி கவலைபட்டாரே ஒழிய , தனியாக தமிழருக்கு மட்டும் என்ன செய்ய முடியும்?

    கழுகு உயர பறக்கவேண்டியது, அது ஏன் கோழிகளுடன் குப்பை கிளரவில்லை என்றால் அது வாதமா?

    கலாமினை குறை கூறுபவர்களுக்கு ஒன்று மனசாட்சி இல்லாமல் இருக்கவேண்டும், அல்லது நாட்டுபற்றில்லா குறுகிய மனப்பான்மை இருக்கவேண்டும்

    அழிவு ஆயுதங்களை உருவாக்கிய கலாம் நல்ல மனிதராக இருக்கமுடியுமா? என்று சில வாதங்கள். அணுகுண்டை உருவாக்கிய ஐன்ஸ்டீனை விடவா மனிதநேயம் பேசிவிட முடியும்?

    இது பாதுகாப்பு, தேச பாதுகாப்பு இத்தனை ஏவுகனைகளை வைத்திருக்கின்றோமே தவிர யார் மீது வீசினோம், மீணவனை காப்பாற்ற நாட்டிற்கு ஏவுகனை எதற்கு என்பதெல்லாம் அலட்டல். அது தேசபிரச்சினை என்றால் என்றோ கடற்படை புகுந்துவிடும், இது வேறு அரசியல் விட்டுவிடலாம்
    .
    காந்தி,காமராஜர் (அவரும் விருதுநகருக்கு என்ன செய்தார்? )வரிசையில் ஒரு சலசல்ப்புமே இல்லாமல் கலாமையும் வைக்கலாம். இந்தியா அவருக்கு பாரத ரத்னா கொடுத்து கௌரவ படுத்தியது

    ஆனால் மோடியின் அரசு புதிய ஏவுகனை திட்டங்களுக்கு கலாம் சீரியஸ் என பெயரிட்டிருக்கின்றார்கள் அல்லவா? அதுதான் உண்மையான‌ மரியாதை.

    அதைவிட இன்னொரு உச்சபெருமை வேண்டுமென்றால், விரைவில் குலசேகரபட்டனத்தில் ஸ்ரிகரிஹோட்டா போல ஒரு தளம் அமைக்கும் திட்டத்தில் இஸ்ரோ இருக்கின்றது, காரணம் அதன் அமைவிடம் மற்றும் கண்ணாணிக்கும் வசதிகள் மிக மிக பொருத்தமானது, அப்படி அமையும் பட்சத்தில் அதற்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டினால் அது பெரும் பாராட்டக அமையும்.

    ஏவுகனைகளின் பிதாமகன் மிக உறுதியாக ஷாஹாஜி, பின்னர் அதை பிஜப்பூரின் அடில்ஷாஹிகள் மேம்படுத்தினார்கள், திப்பு அதை இன்னும் மேம்படுத்தினான் , அவனிடமிருந்து ஐரோப்பாவுக்கு ஏவுகனை சென்றது

    நவீன ஏவுகனைகளின் தந்தை என “வார்ண் பிரவுன்” ணை கொண்டாடும் உலகம், அமெரிக்காவுக்கு கொண்டு செல்லபட்ட ஜெர்மானியன் அவன், அதன்பின் செயற்கை கோள் ராக்கெட் மற்றும் ஏவுகனைகளை தயாரித்து அமெரிக்காவை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்றார்,

    அந்த தலைமுறைக்கு ஐன்ஸ்டீனுக்கு அடுத்து அவர்தான் ஹீரோ.

    இந்தியாவிற்கு ஏவுகனைகளை கொடுத்து பலமான நாடாகியதில் இந்த எளிய தமிழனின் சாதனை மிக பலமானது, அதனினும் மேல் இன்னும் இந்த நாட்டையும் அதன் தூண்களாகிய மாணவர்களையும் நேசித்த‌ அவரின் மனமும் மிக விலாசமானது.

    மொழி,இனம்,மதம் என சகலமும் கடந்து ஓரு இந்தியனாக தன்னை முன்னிலைபடுத்திய தமிழர்களின் வரிசையில் காமராஜருக்கு பின் இடம்பிடித்துகொண்டவர் கலாம், இருவருக்கும் குடும்பமில்லை, இருவருமே சொந்தபந்தங்களுக்கோ அல்லது சொந்தமக்களுக்கோ ஏதும் செய்ததுமில்லை.

    கலாம் காலமாகி இருக்கலாம், ஆனால் அவரது முத்திரை இந்தியாவில் அழிந்துவிடகூடியது அல்ல. இந்திய ராணுவம் இருக்கும் வரைக்கும் என்றல்ல, இந்திய கல்விநிலையங்கள் இருக்கும் வரை, மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

    பலநூறு ஆண்டுகள் செய்யவேண்டிய சேவையை 60 ஆண்டுகள் உழைப்பினில் இந்தியாவிற்கு செய்திருக்கும் விஞ்ஞான மகான் அவர்.

    ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள், இந்நாடு விசாலமான மனதுடையது, நாட்டிற்காய் நீங்கள் உழைத்தால், நல்ல கல்வியோடு பெரும் சிந்தனையோடு உழைத்தால் எந்த சாதியில் பிறந்தாலும், எந்த மதத்தில் பிறந்தாலும், எந்த குலத்தில் பிறந்தாலும் இந்நாடு அதற்குரிய அங்கீகாரத்தை கொடுக்காமல் போகாது

    கலாம், அம்பேத்கர் எல்லாம் அப்படி கல்வியாலும் நாட்டு சிந்தனையாலும் முத்திரை பதித்தவர்கள், தங்கள் சாதியாலோ மதத்தாலோ அல்ல, மாறாக கல்வியால், பரந்த சிந்தனையால்

    சிந்தனை பெரிதாகவும் பரந்த மனத்தோடும் இருந்துவிட்டால் அவனுக்கு சாதி, மத, இன அடையாளம் தேவைபடாது, இந்தியன் எனும் ஒற்றை அடையாளம் போதும்

    அப்படித்தான் தமிழக மீணவ தீவில் பிறந்த ஏழை இஸ்லாமிய தமிழனை இந்ந்தியா இன்று நாடெங்கும் வணங்கிகொண்டிருக்கின்றது, அவனை அறியா இந்தியரில்லை அவர் படமில்லா பள்ளிகளில்லை.

    கலாமிற்கு இந்த பாஜக அரசு செய்யும் மரியாதை பாராட்டதக்கது, அவருக்கு பாரத ரத்னா வழங்கினார்கள், கலாம் சீரியல் ஏவுகனை என அந்த திட்டத்திற்கு பெயரிட்டார்கள், மணிமண்டபமும் திறந்தார்கள்

    மோடி எனும் பெருமகன் அதை செய்தார், அவருக்கு இந்தியர் சார்பாக வாழ்த்துக்கள்

    இந்திய ஏவுகனைகள் சோதிக்கபடும் வீலர் தீவு இப்பொழுது அப்துல்கலாம் தீவு ஆயிற்று, வட இந்தியாவில் ஏகபட்ட கல்வி நிலையங்கள் அவர்பெயரில் உள்ளன‌

    தமிழக மாகாண அரசுகள் அப்துல்கலாமினை கொண்டாடாது அவைகளின் அரசியல் அப்படி, ஆனால் குலசேகரபட்டன ராக்க்ட் நிலையம் வந்தால் அவர் பெயர் சூட்டபட வேண்டும்

    அந்த பாம்பன் கடற்கரையில் அவருக்கு பிரமாண்ட நினைவிடம் வேண்டும்

    சாதாரண டிகிரி கைக்கு வந்தாலே சாதாரண வேலை கிடைத்தாலே வெளிநாடு பெரும் சம்பளம் உல்லாச வாழ்க்கை என கனவு காணும் இந்தியர் மத்தியில் மாபெரும் விஞ்ஞான அறிவு பெரும் படிப்பு இருந்தும் என் வாழ்வும் சேவையும் இந்தியாவுக்காக என வாழ்ந்த அந்த முனியினை மறக்க முடியாது

    பரசுராமனும் இன்னும் பல தவரிஷிகளும் தங்கள் அஸ்திரத்தால் காத்த தேசத்தை அவ்வழியிலே காக்க வந்த தவமுனி அவன்

    அவன் வாழ்வும் தவமும் அவ்வளவு கடுமையானது, அந்த தவத்தின் பலத்தில்தான் தேசம் இன்று இவ்வளவு பாதுகாப்பாக உலகின் 4ம் பெரிய ராணுவமாக நிலைபெற்று நிற்கின்றது

    ஒவ்வொரு பள்ளியிலும் தேசிய எழுச்சி நாளாக, விஞ்ஞான மீட்சி நாளாக கொண்டாடபட வேண்டிய நாள் இது

    மாணவர்களை நிரம்ப நேசித்தவர் அவர், அவரின் இன்னாளில் மாணவர்கள் நிச்சயம் அவரை நினைவு கூறவேண்டும்,எல்லா மாணவர்களும் அவரை படிக்கட்டும் கோடி மாணவர்களில் ஒரு கலாம் வருங்காலத்தில் வரமாட்டானா?

    வருவான் ஒருவன் வருவான், அவன் ஆயிரமாயிரம் சாதனைகளை செய்து தேசத்தை நிறுத்துவான்

    மாணவர் உலகம் அவருக்காக ஏங்கட்டும், பள்ளிகல்லூரிகளில் அவன் நினைவு பொங்கட்டும், விஞ்ஞான பீடங்கள் அவர் வழியில் நடக்கட்டும்

    அவரின் நினைவுகள் மாணவர் மனதில் பதியட்டும், இன்று மாணவர்கள் புரட்டும் புத்தகத்தில் அவர்களின் கண்ணீர் அப்துல் கலாமிற்காக விழுட்டும், அந்த கண்ணீரில் நாட்டுபற்றும் தேசியமும் முளைவிட்டு வளரட்டும்

    இந்தியனாய் , இந்த கணிணியில் எனது கண்ணீர் சொட்டு சொட்டாய் விழுவதனை போல விழட்டும்

    அவருக்கு இந்தியனாய் மனமார்ந்த அஞ்சலிகள், வான் நோக்கி மலர்தூவி அஞ்சலிகள்

    இந்திய தமிழகம் பேய்கரும்பு கிராமத்தில் உள்ள அவரின் சமாதி தேசபக்தர்களுக்கான ஆலயம், அந்த ஆலயத்தில் இந்த வரிகளுடன் அந்த மாமனிதனை வணங்கவேண்டும்

    “நாட்டையே நினைத்திருந்து
    நாட்டுக்கே வாழ்ந்திருந்து
    உயிர் கொடுத்து தேசம் காத்த‌
    உத்தமர்க்கோர் ஆலயம்

    உத்தமர்க்கோர் ஆலயம்

    ஒருவர் வாழும் ஆலயம்
    உருவமில்லா ஆலயம்
    நிலைத்து வாழும் ஆலயம்
    நெஞ்சில் ஓர் ஆலயம்

    கருணை தெய்வம் கைகள் நீட்டி
    அணைக்க தாவும் ஆலயம்

    காலமெல்லாம் திறந்து காணும் கதவில்லாத ஆலயம்

    பாசமென்னும் மலர்களாலே பூஜை செய்யும் ஆலயம்
    தியாகம் என்னும் ஒளியினாலே தீபம் ஏற்றும் ஆலயம்..

    தீபம் ஏற்றும் ஆலயம்”

  43. சோனியாவிடம் அமலாக்கதுறை விசாரணை நடத்த கூடாது என காங்கிரசார் போராட்டம், ராகுல் கைது : செய்தி

    அத்வாணி, மோடி, அமித்ஷா என எத்தனையோ பாஜக தலைவர்கள் மேலும் பல வழக்கில் விசாரணை நடந்தது, ஏன் வாஜ்பாயே பல விசாரணைக்கு அழைக்கபட்டார்

    ஆனால் ஒரு பாஜக தொண்டன் அப்பொழுதெல்லாம் நீதிமன்றத்தையோ இல்லை அதிகாரிகளையோ கண்டித்து கோஷமிட்டதாகவோ மறியல் செய்ததாகவோ ஒரு செய்தியுமில்லை

    அக்கட்சியின் இதர தலைவர்களும் சட்டத்தையும் அரசையும் அரச துறைகளையும் மதித்தார்கள், அந்த கட்டுகோப்பும் கண்ணியமும்தான் இன்று அவர்களை உச்சத்தில் வைத்திருக்கின்றது

  44. ‘தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அரசு முயற்சி’: முதல்வர் ஸ்டாலின்

    சில நாட்களுக்கு முன்புவரை தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம் , ஆக்கியே தீருவோம் என்றவர்கள் இப்பொழுது அப்படி ஆக்க முயற்சிக்கின்றோம் என்கின்றார்கள்

    இது அவர்கள் ஆட்சிமேல் அவர்களே கொண்டிருக்கும் அபிமானத்தை காட்டுகின்றது, இன்னும் நான்கு வருடங்களில் என்னாகுமோ தெரியாது

    நம்பிக்கை இன்னும் கீழே இரங்கி விரைவில் நம்பிக்கை, விரைவில் முயற்சி என்ற அளவுக்கு செல்லலாம்

  45. இந்த பாரத கண்டம் முழுக்க அதன் தாத்பரியமும் அடையாளமும் கலாச்சாரமும் தனித்துவமுமான இந்துமதம் பல மன்னர்களை உருவாக்கி வைத்திருந்தது

    காலம் காலமாக பாரத கண்டத்தில் இந்துக்களுக்குள் ஒரு அரசன் பேரரசனாக வந்து கொண்டிருந்தான் அது புராண காலத்தில் இருந்து சந்திரகுப்தன் காலம் தொடங்கி வழி வழி வந்துகொண்டே இருந்தது

    இந்த தேசம் ஒரே தேசமாக அப்படித்தான் நின்றது, அடிக்கடி தனக்குரிய பேரரசர்களை அது வடக்கிலும் தெற்கிலும் உருவாக்கி கொள்ளும்

    சந்திரகுப்தன் ஒருகாலம் பாரதம் முழுக்க ஆண்டான் என்றால் அடுத்து பாண்டியரும் சோழரும் சேரரும் ஆண்டார்கள்

    இடையில் எத்தனையோ இந்து அரசுகள் வந்து ஒரே அரசாக பாரதம் முழுக்க ஆண்டது, அண்டை நாடுகளிலும் அதிகாரம் செலுத்தினார்கள்

    அதனில் சோழவம்சம் முக்கியமானது, இந்த ஆடி திருவாதிரை நாள் அதை உலகுக்கு சொல்கின்றது

    ஐப்பசி சதயம் ராஜராஜ சோழனுக்கு என்றால் ஆடி திருவாதிரை ராஜேந்திரனுக்கானது, இன்று ஆடி திருவாதிரை

    தமிழக மன்னர்களில் மிக பெரிய வரலாறு அவனுக்கு உண்டு, உலகில் தோல்வியே பெறாத அரசர்களில் ராஜராஜனை போல அவனுக்கு பெரும் இடம் உண்டு

    ராஜராஜசோழன் மிகபெரிய மன்னன், தோல்வியே பெறாமல் சோழ சாம்ராஜ்யத்தை மிக பெரிதாக உருவாக்கியிருந்தான் சந்தேகமில்லை

    ஆனால் அவன் பிறவியிலே அரசன் அல்ல , அரசபதவி ஆதித்த கரிகாலனின் கொலைக்குபின்பே அவனுக்கு வந்தது, அந்த குழப்பங்களை தாண்டி அவன் பதவிக்கு வரவே பல காலங்கள் ஆயின‌

    ராஜராஜசோழனின் ஆட்சி குறுகிய காலம் இருந்தது, அந்த குறுகிய காலத்தில் வலுவான அடிதளம் அமைத்தான்

    ஒரு கட்டத்தில் அவன் போர்கள் நடத்த அவசியமில்லாமல் பகைகள் ஒழிய ராஜராஜன் தன் அந்திமகாலங்களில் அவன் சிவனடியார் கோலத்துக்கு மாறியிருந்தான், சந்தேகமில்லை அவனும் நாயன்மார்களில் ஒருவராக வந்திருக்க வேண்டியவன்.

    சுந்தரர் பின்னாளில் வந்திருந்தால் நிச்சயம் ராஜராஜ சோழனை நாயன்மாராக்கியிருப்பார்

    அவனின் சிவபக்தி அப்படி இருந்தது, தமிழகத்தின் மற்ற பிரமாண்ட ஆலயமெல்லாம் சிறிதாக இருந்து மெல்ல மெல்ல விரிவுபடுத்தபட்டவை ஆனால் தஞ்சை பெரியகோவில் ஒன்றுதான் ஒரே மன்னனால் பிரமாண்டமாக கட்டபட்ட ஆலயம்

    சிவனுக்காக தன் முழு சக்தியும் செலவளித்து ராஜராஜன் அந்த கோவிலை கட்டினான், அவனின் ஆட்சி முடியும் பொழுது ஒரு சிவதேசமாக சோழ தேசம் மிளிர்ந்தது

    ராஜராஜன் சன்னியாசியாகி இறந்துவிட்டான், அவன் மகனோ அவன் அளவு இல்லை, இனி அங்கு படையெடுப்பது எளிது அல்லது சோழ பிடியில் இருந்து மீள்வது எளிது என ஒவ்வொரு நாடும் மெல்ல துளிர்த்த காலமது

    ஆனால் தந்தை 6 அடி என்றால் மகன் 16 அடி அல்ல 32 அடி பாய்ந்தான்

    அவனின் மிகசிறந்த மதிநுட்பம் தஞ்சையில் இருந்து தலைநகரை கங்கை கொண்ட சோழபுரம் எனும் ஊருக்கு மாற்றியது

    ஆம், அது தலைநகராக இருக்கும் பட்சத்தில் ஒருவேளை எதிரிகள் வென்றால் அந்நகரை தீக்கு இரையாக்கிவிடுவர், தன் தந்தை உருவாக்கிய சிவ அடையாளத்துக்கு எந்த நெருக்கடியும் ஆபத்தும் வர கூடாது என வடக்கே ஒரு நகரை உருவாக்கி அங்கே வசித்தான்

    ராஜராஜன் கொடுத்த அஸ்திபாரத்தில் மிக பெரிய சோழ பேரரசை எழுப்பினான் ராஜேந்திரன்

    ராஜராஜனை விட பலமடங்கு வெற்றிகளை குவித்தவன் ராஜேந்திரன். பிறவியிலே மன்னனின் மகன் என்பதால் அவனுக்கு ஆட்சியும் வீரமும் இயல்பாக வந்தன‌

    ராஜராஜனின் அரசு தஞ்சையிலும் , பாண்டிய நாட்டிலும் கொஞ்சம் சாளுக்கியத்திலும் இலங்கையின் வடபாகத்திலுமே இருந்தது, அதை கலிங்கம், சாளுக்கியம் வங்கம் கடல்தாண்டி கடாராம், கம்போடியா வியட்நாம், சுமத்ரா என எங்கெல்லாமோ விரிவாக்கி வைத்திருந்தான் ராஜராஜன்

    நிச்சயம் சரித்திரத்தின் அலெக்ஸாண்டருக்கும் சீசருக்கும், செங்கிஸ்கானுக்கும் இணையான அரசன் அவன். இன்னொரு இனத்தில் பிறந்திருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பார்கள்

    ஆனால் இந்திய இந்து தமிழனாக‌ பிறந்ததால் மறைக்கபட்டான்

    அக்கால தமிழினம் அவனை கொண்டாடி தீர்த்தது, ராஜேந்திரன் எனும் அப்பெயர் இன்றும் தமிழ்நாட்டில் சூட்டபடும் அளவு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் அவனை பெருமையாய் எண்ணிற்று

    ராஜேந்திர சோழ சக்கரவர்த்தி எனும் பெயர் இந்தியா முழுக்கவும் அதை தாண்டியும் ஒலித்ததால் ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக தமிழ்பேசும் குடிகளும் அவனை கொண்டாடின‌

    ஆம் இன்றும் “ராஜேந்திர” எனும் பெயர் தமிழகத்தில் விஷேஷம், அந்த அளவு ஆயிரம் ஆண்டு தாண்டியும் அவன் புகழ் இங்கு நிற்கின்றது

    அவன் தஞ்சை போலவே கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கி மாபெரும் ஆலயத்தை கட்டினான், காவேரிக்கு இப்பக்கம் தகப்பன் கட்டியது போல காவேரிக்கு அப்பக்கம் அதை கட்டி சிவ பக்தியின் உச்சத்தில் நின்றான்

    தகப்பனை போலவே ராஜேந்திரனின் இந்து ஆலயபணி சால சிறந்தது, அவன் கட்டிய கோவில்கள் ஏராளம் குறிப்பாக திருகாளத்தி எனும் தலத்தின் பெரும் கோவில் அவனால் கட்டபட்டது, அது தகப்பன் ராஜ ராஜன் புகட்டிய கண்ணப்ப நாயனாரின் பக்தியால் வந்தது

    ரஜேந்திரனுக்கு சண்டீஸ்வரர் மேல் பக்தி அதிகம், சண்டீஸ்வரரின் பக்தியின் உச்சத்தால் அவன் என்ன சொன்னாலும் சிவன் சந்தேகபடாமல் நம்புவார் எனும் அளவு சண்டீஸ்வரரின் பக்திமிக்க வாழ்வு ஏக பிரசித்தம்
    ஆம் அதை போலவே தானும் நிற்க வேண்டும் என அவரை வழிகாட்டியாக கொண்டு ஆலயபணி செய்தான் ராஜஜேந்திரன்

    பிலிப்புக்கு பின் அலெக்ஸாண்டர் மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்தது போல், செங்கிஸ்கானுக்கு பின்னால் குப்ளேகான் உலகை மிரட்டியது போல் பெரும் வரலாறு கொண்டவன் ராஜேந்திரன்

    வீர சிவாஜியின் இந்து மத காவல் சாயலும் அவனிடம் இருந்தது, சிவாஜிக்கு அரசியலில் ராஜேந்திரனே முன்னோடி

    அவன் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கிழக்கு ஆசியாவின் தலைநகராய் விளங்கிற்று, இந்த கண்டத்தின் அமைதியும் போரையும் அந்த ஊர்தான் முடிவு செய்தது

    வட இந்தியாவில் ஊடுருவிய ஆப்கானியர் கூட தென்னகம் வர அஞ்சினர், ராஜேந்திரன் எனும் பெயர் அவர்களுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இருந்தது

    கஜினி முகமதுவினை ஏன் ராஜேந்திர சோழன் ஒடுக்கவில்லை என்றால் காரணங்கள் பல உண்டு

    முதலாவது கஜினியின் முகமது முறையான படையெடுப்பை செய்யவில்லை, பெரும் படைதிரட்டி ஓலை அனுப்பி முரசு கொட்டி படையெடுக்கவில்லை

    அவன் செய்த்தெல்லாம் கொள்ளை முயற்சி, 16 முறை அவன் கொள்ளை முயற்சி தோற்றது, தோற்று தோற்று ஓடினான்

    பின் 17ம் முறை கொள்ளை பொருளோடு ஓடினான், இதனால் அவனை எதிர்கொள்ள ராஜேந்திரன் செல்லவில்லை இன்னொன்று அன்றைய மாவள (குஜராத்தி) மன்னனும் ராஜேந்திரனின் உதவியினை நாடவில்லை

    ஆனால் ராஜேந்திரன் எனும் பெயர் எந்த அந்நியனும் இந்திய கண்டத்துக்குள் நுழைய பெரும் அச்சுறுத்தலாக இருந்தது என்பது நிஜம்

    சீனா, அரேபியா, பாரசீகம் என எல்லா நாட்டு மன்னர்களும் அவனுக்கு அஞ்சியது நிஜம், கப்பம் கட்டியதும் நிஜம்

    இதுபற்றிய கல்வெட்டும் படமும் சுதை சிற்பமும் ஏராளம் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்தன, பின் வெள்ளையன் காவேரி கரையினை பலபடுத்த கல் வேண்டி அவற்றை அடித்து உடைத்து காவேரி கரைகளில் படியாகவும் ஆற்றுக்கல்லாகவும் புதைத்தான்

    இராஜேந்திரனின் வாழ்வின் மிக பெரும் ஆவணம் காவேரிகரை படிகளாக அலை கல்லாக மாறிவிட்டது வரலாற்று சோகம்

    இடையில் வந்த தெலுங்கர் இங்கு வரலாறு தொடர்பை துண்டித்ததும், பின் வந்த வெள்ளையர் அதை இன்னும் அழித்ததும் தமிழ்நாட்டின் கரும்காலங்கள்

    தமிழனை ஒழிக்க ஆலயங்களை குறிவைத்தான் வெள்ளையன் திருசெந்தூர் ஆலயம் முதல் தஞ்சை ஆலயம் வரை வெள்ளையனின் ஆயுத குடோன்களாக இருந்த காலமும் உண்டு, அப்படி பாழ்பட்ட நிலையில்தான் சோழபுரம் ஆலயமும் சிதைவுற்றது

    ஆனாலும் தீகுச்சியில் ஒரு குச்சி விளக்கேற்றும் என்பது போல எஞ்சியிருக்கும் கல்வெட்டுக்களே ராஜேந்திரனின் வரலாற்றை நமக்கு சொல்கின்றன‌

    அதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும், அவனின் வரலாற்றை மீட்டெடுத்தால் தமிழ்நாட்டில் இருந்த மாபெரும் இந்துமத பெருமையும் ஆளுமையும் வெளிவரும்

    சோழபுரத்தின் லிங்கம் போன்ற மிகபெரிய வரலாறு அது, இங்கு அது மறைக்கபட்டது

    புலித்தேவன், கட்டபொம்மனெல்லாம் கொண்டாடபடவேண்டியவர்கள் சந்தேகமில்லை ஆனால் மாமன்ன்னன் ராஜேந்திர சோழன் போற்றி வணங்கபடவேண்டியவன், தமிழனின் பெருமையும் இந்துமத அருமையும் அவனோடு தூங்கி கொண்டிருக்கின்றன‌

    அவனை மீட்டெடுத்து முன்னிலைபடுத்தல் வேண்டும்

    ஆடி திருவாதிரைக்கு அவனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் , ஆடி அமாவாசையன்று தமிழகத்தின் தனிபெரும் சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் கொடுத்து நினைவு கூறல் வேண்டும்

    ஆம் அவசியம் செய்தாக வேண்டும், அவன் மீண்டெழுந்தால் இந்துமதம் தானாய் மீண்டெழும்

    ராஜேந்திர சோழனின் மாபெரும் சாம்ராஜ்யம் சரிந்தபொழுது மின்னலாக எழும்பி அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை அப்படியே உருவாக்கினான் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்

    பாண்டிய நாட்டு சுந்தர பாண்டிய சோழனின் மிகபெரும் ஆலய பணிகள் கொஞ்சமல்ல‌
    ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் கொஞ்சமும் குறையாத சமயபணி அவனுடையது.

    இங்கு தேடி மீட்டெடுக்கவேண்டிய விளக்குகள் ஏராளம், அதை மீட்டெடுத்து ஜோதி ஏற்றினாலே போதும், காரிருள் விலகும்

    நாம் இனி அதைத்தான் செய்ய வேண்டும், நிச்சயம் செய்தாக வேண்டும்

    அதை ராஜேந்திர சோழனை தொழுதுவிட்டு தொடங்கலாம், தமிழ் இந்து பேரசசனாய் சிவபக்தனாய் ஆசியாவினை ஆட்டி வைத்து இந்துமத காவலனாய் நின்ற அவனை தொழுது நிற்போம்

    அவன் தமிழ் இந்து, சிவனை வணங்கி நின்ற தமிழினத்தின் தலைகமன். வேதங்களையும் அவற்றின் அடிநாதங்களையும் காத்து நின்ற பெருமகன்.

    ஆம் அவன் ஒரு கல்வெட்டில் இப்படி சொல்கின்றான் “காலவோட்டத்தில் இந்துமதமும் இவ்வாலயமும் பழுதுபடுமாயின் அதை மீட்டெடுக்க உதவுபவர்களின் காலில் விழுந்து நான் வணங்குகின்றேன்”
    எவ்வளவு பக்தியும் உருக்கமும் இருந்தால் ஒரு சக்கரவர்த்தி இப்படி எழுதியிருப்பான்?

    அவன் நம்காலில் விழவேண்டியது அல்ல, அரூபியாய் அவன் நம்மை வாழ்த்தும்படி வரலாற்றை தோண்டியெடுத்து விளக்கேற்றுவோம்

    சிவபெருமான் நம் எல்லோரையும் வழிநடத்துவார், ராஜராஜனுக்கு கொடுத்த வாய்ப்பினை நம் ஒவ்வொருவருக்கும் தருவார். அதில் தர்மத்தை மீட்டெடுத்து ஓளியேற்றுவோம்

    மேல் நாட்டில் அலெக்ஸாண்டரை போல, ஜூலியஸ் சீசரை போல ஏன் மராட்டியத்தில் வீர சிவாஜி போல மிக பெரிதாக கொண்டாட வேண்டியவன் ராஜேந்திர சோழன்

    உண்மையான தமிழனும் இந்துவாகவும் இந்தியனாக இருப்பவன் எவனோ அவன் அந்த மாமன்னனை பெருமையோடு கொண்டாடட்டும்

    தமிழகத்தில் வீதிக்கி வீதி எவன் எவனுக்கோ சிலைகள் உண்டு.வீதிகளுக்கு யார் யார் பெயரோ உண்டு.

    ஆனால்..?கிழக்கு ஆசியா கண்டைத்தையே ஆண்ட தமிழனுக்கு..?

    பல ஆயிரம் ஆண்டுக்கு மூத்த நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமைக்கொண்ட இந்து தமிழரின் பெருமை திராவிட ஆட்சிகளால் ஐம்பது ஆண்டுக்குள் குறுக்கப்பட்டுள்ளதை மீட்டெடுக்க வேண்டும்.

    அதிலிருந்து மீள்வதற்கு நமது இனவரலாறு, நமது முன்னோர்களுடைய வீரம் செறிந்த போராட்டங்கள், ஆட்சிமுறை, அவர்களுடைய ஒழுக்கம், அவர்களுடைய செயலாண்மைத் திறன் போன்றவற்றை அறிந்து தெரிந்து கொள்வதற்காக நமது பிள்ளைகளுக்குப் பாடமாக வைக்கப்பட வேண்டும்.

    ராஜேந்திர சோழனை காங்கிரஸ் கொண்டாடவில்லை, தமிழர் பெருமை பேசிய திராவிட கழகங்கள் கொண்டாடவில்லை

    மோடி அரசுதான் அவனை இந்தியா எங்கும் எடுத்து சென்றது

    உலகின் முதற் கப்பற்படை அமைத்த சோழப் பேரரசர் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவைப் போற்றும் வகையில் 2016 பாரதிய ஜனதா அரசு மும்பை மேஸகான் டாக் ( Mazagon Dock ) கப்பல் கட்டும் தளத்தில் அவரது படத்தை திறந்து வைத்து பெருமை சேர்த்தது

    அப்பொழுது பாரத வலிமைக்காக கப்பல் படையை அமைத்த மாபெரும் மன்னர் ராஜேந்திர சோழன் என்பதை தனது பேச்சில் பலமுறை தெரிவித்தார்

    வரலாறு என்பது கடந்த காலச் செய்திகளைச் சேமித்து வைக்கும் ஏடல்ல; அது நிகழ்காலத்திற்கான அடித்தளமும் எதிர்காலத்திற்கான உயிர்த்தொடர்பும் அதுதான்

    வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சி பெறமுடியாது!

    வேரை இழந்த மரமும், வரலாற்றை மறந்த இனமும் வாழாது! வளராது

    வேர்களை எப்பொழுதும் தேடி பராமரிக்க வேண்டும், அவ்வகையில் இந்நாள் ஒவ்வொரு தமிழக இந்துவும் தன் பாரம்பரிய இந்து அரசனான ராஜேந்திரசோழனை அவன் திருநீறு பூசி ருத்திராட்சம் அணிந்த சிவ பக்தனாக உலகாண்ட பெரும் கம்பீர காட்சியினை மனதில் நிறுத்தி அவனை வணங்கி நினைவு கூர்தல் வேண்டும்

    கங்கை கொண்ட சோழபுரம் ஆலயமும் அவன் கலமாடிய வங்க கடலும் எப்பொழுதும் அவன் பெயரை சொல்லிகொண்டே இருக்கும், அந்த நாகபட்டின கடற்கரையில் அவனுக்கான ஒரு சிலை விரைவில் அமைதல் வேண்டும், காலம் அதை சரியாக செய்யும்

  46. இந்திய தமிழக மாகாண சட்டசபையின் நாயகர் அப்பாவு அவர்கள், ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் “இது உங்கள் அரசு, இது உங்களால் உருவான அரசு” என முழங்கும் காட்சி பரவலாகின்றது

    அப்பாவு அவர்கள் கிறிஸ்தவர்களால் வளர்ந்தவர் என்பது ஒன்றும் ரகசியமல்ல, அவரின் பள்ளி ஆசிரியர் வாழ்வு முதல் அரசியல் வாழ்வு வரை அப்பக்கம் உள்ள கத்தோலிக்கர்களாலே வளர்க்கபட்டது என்பது எல்லோரும் அறிந்தது

    அப்படிபட்ட அப்பாவு அவர்கள், இப்படி தன் (தற்போதைய) தலைவர் மு.க ஸ்டாலினார் வழியில் முழங்குவது ஆச்சரியம் அல்ல, அவர் அப்படி முழங்காவிட்டால்தான் ஆச்சரியம்

    ஆனால் இங்கே எழும் கேள்வி ஒன்று உண்டு

    இந்த சமூக நீதி காவலர் , மத நல்லிணக்க மகோதன்னர் அதே ராதாபுரம் தொகுதியின் வள்ளியூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தபொழுதும், தேர் திருவிழா நடந்தபொழுதும் அப்பக்கம் சென்றாரா என்றால் இல்லை

    இவ்வளவுக்கும் அவரின் பெயர் பல இடங்களில் தென்பட்டும் விழாவுக்கு அவர் செல்லவில்லை

    இந்துக்களின் பிரதான பண்டிகைகளை விழாக்களை கோவில் சிறப்புநாட்களை புறக்கணிப்பதும், கிறிஸ்தவர் கூட்டத்தில் சென்று இது உங்கள் அரசு என முழங்குவதும் சரியான விஷயமாக இருக்க முடியாது

    சிந்திக்கவேண்டிய சமூகம் சிந்திக்கட்டும்

  47. கருணாநிதி பேனாவுக்கு மெரினாவில் சிலை என்றால் ஏற்படபோகும் கொந்தளிப்பு காமராஜருக்கு அங்கே சிலை என்றால் எழுமா என்றால் எழாது

    இதனை கேட்க வேண்டிய கட்சி காங்கிரஸ், அவர்களோ ராகுலுக்காக புரண்டு அழுதுகொண்டிருக்கின்றார்கள்

    காலம் கடந்து காமராஜர் நிற்பதும், சில வருடங்களுக்குள்ளே கருணாநிதி சரிவதும் தர்மம் எப்பொழுதும் தோற்காது என்பதை தெளிவாக காட்டுகின்றது

    காலம் கடந்து ஒருவனுக்கு எது எஞ்சி நிற்குமோ அதுதான் புகழ், அவ்வகையில் காமராஜர் நிலைத்து நிற்பார், அரசியலில் அவரை வீழ்த்தினாலும் காலத்தால் அவரை யாரும் வீழ்த்தமுடியாதபடி காத்து நிற்கின்றது அவரின் தர்ம வாழ்வு

  48. வியாபாரிகள் அரசுக்கு ஏன் வரிகட்ட வேண்டும்? “எங்களோடு அரசு தராசு பிடித்ததா?, மூட்டை சுமந்ததா?, எடை போட்டதா? யாரை கேட்கின்றார்கள் வரி” என வியாபாரிகள் கூட்டம் சில கத்த தொடங்கியிருக்கின்றன‌

    வியாபாரம் என்பது மக்களுக்கான சேவை, அந்த சேவையில்தான் கூலியினை வியாபாரி பெற்றுகொள்ள முடியும், மக்களுக்கான சேவையினை கண்காணிப்பதும் மக்களுக்கு வியாபாரிகள் சரியான விலைக்கு பொருள் கொடுக்கின்றார்களா, தரமான பொருளை கொடுக்கின்றார்களா என உறுதிபடுத்தவேண்டியது அரசின் கடமை

    அவ்வகையில் அரசுக்கு செலவுகள் அதிகம், எடை கல் அல்லது எந்திரம் உறுதி செய்ய குழு, உணவு மற்றும் பொருளின் தரம் உறுதி செய்யகுழு, வியாபாரிகள் தங்கள் தொழிலாளர்களை நடத்தும் விதம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய குழு என அரசுக்கும் செலவு உண்டு

    இது போக கட்டட தரம், நெருப்பு தடுப்பு, நோய் பரவல் கண்காணிப்பு எனவும் பல குழுக்கள் அமைக்க வேண்டிய கட்டாயம் உண்டு

    இறக்குமதி செய்யபடும் பொருள் தரமானதா? மக்கள் பயன்படுத்தலாமா? என சோதனைசெய்யவும், கலப்படமோ உயிர் ஆபத்துக்களோ இல்லா பொருளை மக்களுக்கு கொடுக்க ஏகபட்ட குழுக்களை அரசு அமைக்க வேண்டியிருக்கின்றது

    இன்னும் தரமும் நலமும் உறுதிசெய்ய ஏகபட்ட அமைப்பும் ஊழியர்களும் அவசியம், அதிகாரிகளும் கற்றோரும் நிபுணர்களும் அவசியம்

    இதெல்லாம் அரசு செய்ய பணம் அவசியம், வியாபாரிகளை கண்காணிக்காவிட்டால் மக்கள்குடிகளை எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பது உலகறிந்தது

    இது போக அவர்கள் கடைக்கு வருவதற்கு சாலை வசதி, நடைபாதை வசதி என பல வசதிகளை அரசு செய்யவேண்டும்

    கடைபக்கம் தகறாறு என்றால் காவலர்கள் வரவேண்டும், காவலர்கள் அரச ஊழியர்கள். சர்ச்சைக்கும் அவர்கள்தான் வருவார்கள், வியாபாரி இரவில் நிம்மதியாக உறங்க அவர்கள்தான் காவலும் இருப்பார்கள்

    இது போக இன்னும் ஏகபட்ட விஷயங்களை செய்துதான் வியாபாரிகள் நலனையும் மக்கள் நலனையும் அரசுஒரு சேர காக்கின்றது

    இப்படி அரசுக்கும் சிக்கல் நிறைய இருக்க, வியாபாரிகள் “வரிகொடா இயக்கம்” என பேசிகொண்டிருப்பது சரியல்ல, மக்களையும் வியாபாரிகள் நலனையும் ஒரு சேர காக்கத்தான் வரி வசூலிக்கபடுகின்றதே அன்றி அரசு அதனை வசூலித்து அக்கால சுல்தான்கள் போல தாஜ்மகாலும் மயிலாசனமும் கட்டிகொண்டிருக்கவில்லை என்பதை மக்களும் வியாபாரிகளும் உணர்தல் வேண்டும்

  49. உக்ரைன் ரஷ்யா போர் ஒரு பக்கம் நடக்க, சீன அமெரிக்க முறுகல் இன்னொரு பக்கம் தொடங்குகின்றது

    அமெரிக்காவின் பாராளுமன்றம் சக்திவாய்ந்தது, அந்த சபையின் நாயகரும் அடுத்து அமெரிக்க அதிபராகலாம் என கருதபடுபவருமான நான்சி பெலோசி தைவானுக்கு செல்வதாக அறிவிப்பு வந்தது

    சீனா இதனை கேட்டு கொந்தளித்தது

    அமெரிக்காவின் சக்திவாய்ந்த தலைவர் தைவானுக்கு செல்வதை கடுமையாக கருதிய சீனாவின் ஆட்சேபம் அமெரிக்காவுக்கு கொஞ்சம் யோசனையினை கொடுத்தது

    காரணம் ரஷ்ய யுத்ததில் ஒதுங்கியிருக்கும் நாடு, இதுவரை ரஷ்யாவுக்கு ஆயுத நிதிஉதவியினை அந்நாடு செய்யவில்லை, இந்நேரம் ஏன் சீனாவினை சீண்டவேண்டும் என வெள்ளைமாளிகை கருதுகின்றது

    இதனால் சீன அதிபர் ஷி ஜின்பெங்குடன் அமெரிக்க அதிபர் பேச்சு நடத்தபோகின்றார், காணொளி வாயிலாக நடக்கும் இந்த சந்திப்பு சீன அதிபரை தாஜா செய்து சமாளிக்கும் பேச்சுவார்த்தை என்பது ஒன்றும் ரகசியமல்ல‌

    இந்நிலையில் இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு சீன அதிபர் வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கின்றார், இந்திய சீன உறவு வலுபடவேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்

    இந்திய ஜனாதிபதி முர்முவுக்கு உலகெல்லாம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தபடி இருக்கின்றன, மிக பின் தங்கிய சமூகத்தை சார்ந்த அவரை மாபெரும் இடத்துக்கு இந்தியாவின் பாஜக உயர்த்தியிருப்பது உலக அரங்கில் மோடியின் மரியாதையினை இன்னும் கூட்டுகின்றது

  50. இரு நாட்கள் பயணமாக தமிழகம் வருகின்றார் பிரதமர் மோடி

    சென்னை மாமல்லபுரத்தில் நடக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டை 28ம் தேதி மாலை அவர் தொடங்கி வைக்கின்றார், 29ம் தேதி சென்னை அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கின்றார் என்கின்றன செய்திகள்

    ஆக என்னதான் ரகுமானும் முதல்வரும் நேப்பியர் பாலம் மேல் நடந்து பாடி ஆடினாலும் ஒலிம்பியாட்டை தொடங்கி வைக்க மோடிதான் வருகின்றார், சர்வதேச விளையாட்டு என்பதால் அவர்தான் இந்திய பிரநிதியாக தொடங்கி வைத்தலும் வேண்டும்

    என்ன தெரிகின்றது?

    திருவிழாவில் விழாதலைவன் வருமுன் ஆடல்பாடல் கோஷ்டிகள் ஆடிபாடத்தான் செய்யும், தலைவன் வரும்பொழுது ஆட்டக்கார கோஷ்டிகள் ஒதுங்கி வழிவிடும் , இது இயல்பானது என்பது தெரிகின்றது

    மாமல்லபுரத்தில் இன்று செஸ் ஒலிம்பியாட் நடக்கலாம், ஆனால் அங்கு சீன அதிபரை அழைத்து மாமல்லபுரத்திற்கு உலக கவனம் பெற்று கொடுத்தவர் மோடி என்பது வரலாறு.

  51. உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் பரவலாம் என இந்திய மத்திய அரசு அறிவித்திருக்கின்றது

    குரங்கு அம்மை கொரோனா போல கடுமையானது அல்ல அதன் பரவும் வேகமும் அதிகமல்ல ஆட்கொல்லி நோயுமல்ல எனினும் சில பாதிப்புக்களை கொடுக்கின்றது

    பழைய பெரியம்மை நோயின் இன்னொரு வடிவமே இந்த குரங்கு அம்மை என்பதால் பெரிதாக அஞ்ச தேவையில்லை அதே நேரம் இது நேரடியாக வேகமாக பரவாது என்பதும் ஆறுதலான செய்தி

    இதற்கு இப்பொழுது மருந்தில்லை என்றாலும் பெரியம்மைக்குரிய மருந்தை செலுத்தலாம் என ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்திருக்கின்றன‌

    இது அம்மை நோயின் அனைத்து அடையாளங்களையும் அறிகுறிகளையும் கொண்டிருக்கும் கூடுதலாக அந்த தடிப்பும் முத்துக்கள் வடிவமும் கொஞ்சம் பெரியதாக இருக்கும்

    உலகெல்லாம் மிகசில இடங்களில் தென்படும் இந்நோய் கேரளாவிலும் அடையாளம் காணபட்டுள்ளதால் தமிழக அரசு கூடுதலாக விழித்திருக்கவேண்டிய அவசியம் உண்டு

    இந்த அம்மை நோய் குரங்கில் இருந்து தொடங்கியிருக்கலாம் என கருதபடுகின்றது, ஆராய்ச்சி முடிவுகள் அதை தெரிவிக்கின்றன‌

    ஆனால் அந்த குரங்கு தமிழ்குரங்கா இல்லை வேற்றுமொழி குரங்கா எனும் ஆராய்ச்சி இன்னும் தொடங்கபடவில்லை

  52. சதுரங்கம் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு, அக்கால பாரதத்தில் அரசர்கள் அதிகம் அவர்களுக்குள் போர்களும் அதிகம்

    போர் என்பது வெறும் ஆயுதங்களின் மோதலோ ஆட்களின் மோதலோ அல்ல, அங்கு புத்தியும் வியூகமும் களநிலைக்கு ஏற்ப மாறும் தந்திரோபாயங்களும் முக்கியம்

    இதனால் ஓய்வில் கூட அரசர்கள் போர் நினைவுடன் இருக்க யானை, குதிரை,சிப்பாய், அரசர், சேனாதிபதி என விளையாடவைக்கபட்டார்கள்

    பாரத கண்டத்தில் அன்று போர் செய்யும்பொழுதும் தர்மம் இருந்தது, சிப்பாய் இப்படி முன்னேற வேண்டும், சேனாதிபதி இப்படித்தான் வரவேண்டும், குதிரைபடை இப்படித்தான் பாய வேண்டும், வலுவான யானை இப்படித்தான் நகரவேண்டும் என்றெல்லாம் விதிகள் இருந்தன‌

    அந்த விதிகளுக்குள்தான் பலசாலி வியூகபடி போரிட வேண்டும், விளையாட்டின் ஒரே நோக்கம் மன்னனை காப்பது

    அந்த விதிப்படிதான் சதுரங்கம் அமைக்கபட்டது, அரண்மனையில் அவை ராஜ விளையாட்டுக்களாக இருந்தன, வெகுகாலம் அது அரச ரகசியமாக இருந்தது

    காலங்கள் மாற பிறநாட்டு அரசர்கள் வர வர அது அரண்மனை விட்டு இதர நாட்டு அரசவைக்கு பறந்தது
    இந்தியாவின் ஆரம்பகால சதுரங்கத்தில் ராணி இல்லை, அதற்கு பதிலாக தேர்படையினர் இருந்தார்கள் என்கின்றது ஒரு குறிப்பு, பல நாடுகளில் விளையாடும் பொழுது பிற்காலத்தில் மாறுபாடுகள் வந்தன, சுவாரஸ்யத்துக்காக ராணிக்கு அதிக அதிகாரம் கொடுக்கபட்டது

    இன்று உலகின் அறிவார்ந்த விளையாட்டுக்களில் நம்பர் 1 விளையாட்டாக செஸ் எனும் சதுரங்கம் விளங்குகின்றது

    சதுரங்கம் எனும் செஸ் போட்டி இந்தியாவில் தொடங்கியதற்கான ஆதாரம் எளிதானது, ஆம் அன்று இந்தியா தவிர எந்த நாட்டிலும் யானை படை இல்லை, யானைபடை இந்தியாவில் மட்டும்தான் இருந்தது

    அது ஒன்றே சதுரங்கம் இந்தியாவில் தோன்றியதற்கான பெரும் சாட்சி, பிற்காலத்தில் கோட்டை என அந்த காய் சொல்லபட்டாலும் நகரும் கோட்டை எந்த நாட்டு படையில் இருந்தது என்றால் யாரிடமும் பதில் இல்லை
    வெள்ளையன் செய்த திரிபு அது

    சதுரங்கம் இந்தியாவின் பெருமை, ஒரு காலத்தில் விதிகளுக்குட்பட்ட போரை இந்திய மன்னர்கள் தர்மபடி நடத்தினார்கள், அதுவும் ராஜாவினை உடனே கொல்லாமல் எச்சரிக்கை கொடுத்துத்தான் உரிய நேரமும் அவகாசமும் கொடுத்துத்தான் வீழ்த்தினார்கள் அந்த அளவு யுத்தத்திலும் தர்மம் காத்த பூமி இது என்பதை சொல்லும் விளையாட்டு

    அந்த மன்னர்கள் இந்து மன்னர்களாக இருந்தார்கள், இந்துக்களின் தர்மம் போர்களத்தில் எப்படி இருந்தது?, எவ்வளவு பெரும் தர்ம விதிகளை அம்மதம் வகுத்திருந்தது?, போரிலே தர்மம் காத்த மதம் வாழ்வியலில் எவ்வளவு தர்மத்தை போதித்திருக்கும் என இந்துக்களின் பெருமையினை சொல்லும் உன்னத விளையாட்டு அது
    இந்து ஞானத்தின் சாட்சி அது.

    அந்த விளையாட்டை,இந்திய பாரம்பரிய பெருஞான விளையாட்டை தொடங்கி வைக்க தமிழகத்துக்கு வருகின்றார் யாரும் செக் வைக்கமுடியாத ராஜா மோடி

    அவரை இந்திய தமிழக மாகாண மக்கள் வரவேற்கின்றார்கள், நாமும் வரவேற்போம்

    விஸ்வநாதன் ஆனந்த் முதல் பிரக்ஞானந்தா வரை எவ்வளவோ செஸ் சாம்பியன்களை கொடுத்த இந்திய மாகாணம் தமிழகம்

    பிரக்ஞானந்தாவின் சாதனை கொஞ்சமல்ல, உலக கால்பந்தில் இளம்வயதிலே கலக்கிய பீலே போலவும், கிரிக்கெட்டி சச்சின் டெண்டுல்கர் போலவும் மிக இளவயதிலே உலக கவனம் பெற்றிருக்கும் வித்தகன் அவன்

    இந்தியா அப்போட்டியில் வெற்றிமேல் வெற்றிபெற்று கோப்பையினை கைபற்றட்டும்

    முன்பு சர்வதேச ஆயுத கண்காட்சிக்கு மோடி வந்தபொழுது எதிர்கட்சியான திமுக கடும் அழிச்சாட்டியம் செய்து திருப்பி விரட்டியது, இப்பொழுது ஆளும் கட்சியாக திமுக இருக்கும்பொழுது கம்பீரமாக ஒரு சலசலப்பின்றி சென்னை வருகின்றார் , அந்த சக்தியாய்ந்த இந்திய சதுரங்க‌ ராஜா, யாரும் செக் வைக்கமுடியாத சதுரங்க ராஜா

  53. மோடி சென்னை வரும் நேரம், கபிலர் பாடிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது, அப்பாடலை பாடி அவரை வரவேற்கலாம்

    பல நாடுகளை வென்றுவந்த சேரமன்னனின் புகழை சூரியனை நோக்கி புலவர் பாடி சொல்வதாக அமைந்த பாடல் இது

    “”வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்,
    போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
    இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
    ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்,
    கடந்து அடு தானைச் சேரலாதனை

    யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்!
    பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
    மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
    அகல்இரு விசும்பி னானும்
    பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே. ”

    எம் ம‌ன்னன் மற்ற நாட்டு மன்னர்களும் வந்து வழிபட வீற்றிருப்பவன், அந்த மன்னர்கள் அவனிடம் இப்பூமி நமக்கு பொதுவானது என சொல்ல அஞ்சி நின்றபோதும் அந்த சிறிய நாட்டு மன்னர்களுக்கும் அள்ளி கொடுப்பவன்

    அவன் எதிர்ப்போரை எந்நேரமும் எதிர்ப்பவன், கொடுப்போருக்கு எந்நேரமும்கொடுப்பவன்

    ஆனால் சுழற்சியாய் பயணம் செய்யும் (உதய) சூரியனே, நீ அப்படியானவனா?

    நீ பகற்பொழுதில் மட்டும் வருகின்றாய், நிலவை பார்த்தால் புறமுதுகிட்டு ஓடி ஒளிகின்றாய், நித்தமும் ஒவ்வொரு ராசிக்கு மாறுகின்றாய்

    மலையில் ஒளிகின்றாய், மேகத்தில் ஒளிகின்றாய், ஒளிந்திருந்தே கிரகணங்களை வீசிவிட்டு மாலையில் நிலவுக்கும் நட்சதிரத்துக்கும் அஞ்சி ஓடுகின்றாய்

    இப்படி நிலையில்லாமல் ஓடும் நீ, நிலையானவனும் யாருக்கும் அஞ்சாதவனுமான என் தலைவனுக்கு எப்படி ஒப்பாவாய்? ஒரு காலமும் ஒப்பாகமாட்டாய்..

  54. ஒரு அரசனின் மகன் அரசனாவதற்கும் ஒரு முழு பக்தன் அரசனவாதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு, பக்தன் அரசனானால் இறைவன் பெருமைகளை கோவிலின் வரலாற்றை உலகெல்லாம் சொல்வான்

    இதனாலே அக்காலத்தில் மூர்த்திநாயனார் போன்ற சிவனடியார்களை அரசராக்கிய காட்சியெல்லாம் உண்டு, கூர்ந்து பார்த்தால் ராஜராஜசோழன் வரலாற்றிலும் இது தெரியும்

    நேற்று மோடி மாமல்லபுர சதுரங்க விளையாட்டு தொடக்க நிகழ்வில் தமிழகத்தில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோவிலை பற்றி குறிப்பிட்டு, சதுரங்கம் இந்துக்களின் விளையாட்டு, சிவபெருமானே ஆடிய பழம்பெரும் விளையாட்டு என உலகம் வியக்க சொன்னார்

    இந்தியான் அடையாளம் தாஜ்மஹால் எனும் சமீபகால‌ கல்லறை என உலகம் நம்பவைக்கபட்டிருந்த காலத்தை உடைத்து இந்தியாவின் பழம் பெருமைகளை உலகுக்கு காட்டுகின்றார் மோடி

    திராவிட அரசியலுக்கும் பாஜக‌ அரசியலுக்கும் உள்ள வித்தியாசம் எதுவென்றால் இதுதான், சிவன் கோவிலையும் திராவிட கட்டடகலை, தமிழர் கலை என திசைமாற்றி “இந்து” எனும் வார்த்தையினை மறைப்பது திராவிடம்

    புதைந்துவிட்ட வைரத்தை எடுத்து பட்டைதீட்டி தமிழன் இந்துவாய் இருந்தான் என ஆதாரத்தோடு சொல்வது பாஜக‌

    சரி, அந்த சதுரங்க வல்லபநாதர் ஆலய வரலாறு எதுவென்றால் இதுதான்

    அவ்வாலயம் காவிரி கரையில் சோழநாட்டின் பூவனூரில் இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது, தேவாரம் பாடபட்ட 103ம் தலமாகும்

    இத்தலம் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பதிகத்தில் இத்தல இறைவனைத் திருநாவுக்கரசர் “ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே” என்று இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

    இந்த தலத்தின் வரலாறு சுவாரஸ்யமானது, பல திருவிளையாடல்களை ஆடும் சிவபெருமான், அந்த திருவிளையாடலில் பல தத்துவங்களை போதிக்க திருவுளம் கொண்ட எம்பெருமான் இந்த நாடகத்தையும் ஆடினார்

    அதாவது எந்த போட்டியிலும் முடிவு பரம்பொருள் கையிலே, திறமை உள்ளவன் வெல்வதோ திறமை இல்லாதவன் வீழ்வதோ அல்ல விளையாட்டு, வெற்றியும் தோல்வியும் இறைவனால் முடிவு செய்யபட்டது என்பதை விளக்க அவர் திருவுளம் கொண்டார்

    சொக்கனாகிய அவர் இப்படி ஆடிய ஆட்டமே சொக்கனின் ஆட்டமாகி சொக்காட்டம் என்றானது

    அதாவது விளையாட்டின் முடிவு சொக்கன் தீர்மானிப்பது என்பதே தத்துவம்

    அடிக்கடி பலரின் ஆணவத்தை அடக்கும் அவர் சதுரங்கத்திலும் அதனை போதிக்க முடிவு செய்தார், அப்பொழுது சதுரங்கம் அரசர்கள் விளையாடும் விளையாட்டாய் இருந்தது

    நாம் முன்பே சொன்னபடி நால்வகை சேனை கொண்டதாய் இருந்தது, இந்தியருக்கே உரித்தான யானைபடை இருந்தது, பின்னாளில் வெள்ளயன் யானையினை கோட்டை என மாற்றினாலும் கோட்டை நகராது என்பதில் தெரிகின்றது அவனின் பொய்
    அரங்கத்தில் ஆடும் சதுர் ஆட்டம் என்பதே சதுரங்கமாயிற்று, சதுர் என்றால் நான்கு என பொருள் , நான்கு பக்கங்களை கொண்ட ஆட்டம் அது

    அப்படிபட்ட சதுரங்கம் மகாபாரத சகுனிபோல் பலரை கர்வம் கொள்ள வைத்தது, அந்த கர்வத்தை அடக்கத்தான் திருவுளம் கொண்டார் சிவன்

    அப்பகுதியினை ஆண்ட வசுதேவன் என்பவனுக்கு குழந்தை இல்லை , அக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் குழந்தை வரம் தருபவராக அறியபடுபவர் நெல்லையப்பர்

    நெல் என்பதை அவர் காத்த நிகழ்வு வெறும் அரிசிக்காக அல்ல, நெல் என்றால் முளைத்து வருவது, வயலில் பயிராகி பலநூறு நெல்லாக பெருகுவது, குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சந்ததிகளை பெருக்கும் மூல அடையாளம்

    இதனால் குழந்தைவரம் வேண்டி நெல்லையப்பரிடம் வருவோர் எக்காலமும் உண்டு, வசுதேவனும் அப்படி நெல்லைக்கு வந்தான்

    வந்தவன் தாமிரபரணியில் நீராடும்பொழுது ஒரு சங்கினை கையில் எடுத்தான் அது குழந்தையாக மாறியது அப்பொழுது அசரீரி கேட்டது

    “மன்னா இக்குழந்தை பார்வதியின் சாயல், சாமுண்டீஸ்வரியே இவளை வளர்ப்புதாயாக வளர்க்க வேண்டும் உரிய நேரம் வரும்பொழுது இவள் சிவனை அடைவாள்” என்றது

    மன்னனும் அதை ஏற்று திருவாரூர் திரும்பினான், சாமூண்டீஸ்வரி ஒரு தாதியாக வந்தும் சேர்ந்தாள்.

    அக்குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என பெயரிட்டான் மன்னன், ராஜேஸ்வரி எல்லா கலைகளையும் பயின்றாள் அதிலும் சதுரங்கத்தில் தன்னிகரற்று இருந்தாள், காரணம் அந்த தாதியின் பயிற்சி அப்படி இருந்தது

    ஒரு கட்டத்தில் எல்லா அரசர்களையும் வெல்ல ஆரம்பித்தாள் ராஜேஸ்வரி அவளுக்கு கர்வம் கூடிற்று, திருமண வயதில் யார் தன்னை சதுரங்கத்தில் வெல்வாரோ அவரைத்தான் திருமணம் செய்வேன் என உறுதியாய் இருந்தாள்

    அவளின் கர்வத்தை கண்டு கலங்கிய மன்னன் சிவனிடமே முறையிட்டான்

    சில நாட்களில் அடியார் கோலத்தில் ஒரு மனிதன் அங்கே வந்தான், அரண்மனை வாசலில் நின்ற அவன் இளவரசி தன்னோடு மோத தயாரா என சவால்விட்டான்

    ஆண்டி பண்டாரம் தனக்கு சவால்விடுவதா என ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி அவன் சவாலை ஏற்றாள், அரசகுடும்ப விளையாட்டான சதுரங்கத்தை அந்த பாமரனொடு ஆடினாள்

    நெற்றியில் நீரும் குடுமையும் ருத்திராட்டமும் அணிந்த அந்த பண்டாரம் எளிதில் வென்றான், அப்படியும் இன்னும் இரு வாய்ப்புக்களை கொடுத்தான்

    கடைசியில் அந்த ஆண்டியே வென்றான், தலைகுனிந்து நின்றாள் இளவரசி

    தோற்றவள் வென்றவனுக்கு சொந்தம், நான் ஆண்டி பரதேசி நீ என்னோடு வருவதுதான் முறை என அவளை கைபிடித்து அழைத்து சென்றான் அந்த ஆண்டி

    நாட்டுக்கே ராணி என எங்கு கம்பீரமாக வந்தாளோ, எத்தனையோ சதுரங்க வீரர்களை அந்த தெருவில் அவள் கண்ணீரோடு நடக்கவிட்டாளோ, அந்த தெருவில் குனிந்த தலையோடு கண்களில் நீரோடு கர்வம் உடைந்து அவனை பின்சென்றாள் இளவரசி

    பூவனூர் ஆலயத்துக்குள் அவளை அழைத்து சென்றான் ஆண்டி, அந்த சன்னதியில் அவளுக்கு தான் யாரென்ற உண்மை தெரிந்தது

    கர்ப்பகிரகத்துக்குள் சென்ற ஆண்டி சிவனாய் மாறி புன்னகைக்க, அவள் ஓடி சென்று அங்கே நுழைய இருவரும் காயத்தை கரைத்து கயிலாயம் ஏகினர்

    இதுதான் அந்த பூவனூர் சதுரங்க வல்லாபநாதர் கோவில் வரலாறு

    போர் மட்டுமல்ல எல்லா விளையாட்டிலும் திறமை மட்டும் வெல்லாது, அதற்கு இறை அனுக்கிரஹம் வேண்டும், அந்த அனுகிர்கத்தை அதிர்ஷ்டம் என்று பலர் சொன்னாலும், திறமை என நாத்திகன் சொன்னாலும் உண்மையில் எல்லாம் இறை அருளே

    (கல்வி தேர்வுகளும் கூட அப்படியே அங்கு முடிவினை அருள்பவன் இறைவனே, அந்த உண்மையினை உணர்ந்தால் நிச்சயம் விபரீதங்கள் நிகழாது

    இன்றைய தலைமுறை தற்கொலை ஆபத்தில் சிக்கியிருக்க காரணம் இந்து ஆன்மீகம் எனும் தங்கள் பாரம்பரியத்தில் இருந்து முழுக்க விலகியதன்றி வேறல்ல‌)

    எல்லா போட்டியும் இறைவன் நடத்தும் நாடகமே, அங்கு வெற்றியில் மகிழவோ தோல்வியில் துவளவோ ஒன்றுமில்லை

    இறைவனே ஆட்டத்தை நடத்துபவன், முடிவினை அவனே அறிந்திருக்க்கின்றான், அவனே வெற்றியாளனையும் தோல்வியாளையும் அந்த நாடகத்தில் நடிக்க வைக்கின்றான்

    இதனால் அங்கு வெற்றி என்பது இருவருக்கும் அல்ல அது இறைவனுக்கே, மானிடர் வெறும் பகடை காய்கள் என்பதே அந்த சதுரங்க வல்லபநாதர் கோவில் சொல்லும் தத்துவம்

    அந்த தத்துவத்தை சூசகமாக சொல்லி போட்டியினை தொடங்கி வைத்திருக்கின்றார் மோடி

    பாரத பெருமை இந்துமதத்தில் இருக்கின்றது, அதன் பெருமை ஞான தத்துவத்தில் இருக்கின்றது, இந்துக்களின் புராணமும் ஆலய வரலாறும் ஒவ்வொரு தத்துவ போதனை கொண்டவை

    அதை ஒரு திருநீறு பூசிய இந்துவாக சரியாக செய்கின்றார் மோடி

    உண்மையில் திராவிட கோஷ்டிகளை நாம் குற்றம் சொல்லமாட்டோம், அவர்களுக்கு இந்துக்களின் ஞானமும் பெருமையும் தெரியா வகையில் யாரோ போதித்து மனதை மயக்கி அறியாமையில் சிக்க வைத்திருக்கின்றார்கள்

    அந்த அறியாமையினை அகற்றும் வேலையினைத்தான் நேற்று மோடி செய்தார், இன்னும் அவர் நிரம்ப செய்வார், அவர் வழியில் பலர் செய்வார்கள் இந்துமதம் தன் ஞானபெருநிலையினை உலகுக்கு காட்டி உயர மின்னி துலங்குமென ஒவ்வொரு இந்துவும் நம்பிக்கை கொள்ளும் நேரமிது

    “எங்கிருந்தோ வந்தான்
    இந்துசாதி நான் என்றான்
    இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்..”

  55. நேற்று தமிழகம் வந்த மோடி மிக சரியான குறளை சொல்லி தன் பேச்சை தொடங்கினார்

    “இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு”

    இக்குறளுக்கு “வீடு நிறைய‌ பொருள்களைச் சேர்த்து காத்து வாழ்வதெல்லாம் வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே” என பொருள்

    அதாவது பலநாடுகளில் இருந்து வந்திருக்கும் செஸ் வீரர்களை போட்டியாளர்களாக கருதாமல் விருந்தினர்களாக கருதி வரவேற்கின்றோம், எங்கள் நாட்டின் பொருளெல்லாம் கொடுத்து உங்களை நன்கு உபசரிக்க காத்திருக்கின்றேம், வருவீர் வருவீர் என்பதாகும்

    மிக அழகான வரவேற்புரை இது

    தமிழ், தமிழனங்கு, வள்ளுவன், வள்ளுவனுக்கு சிலை, குறள் என்பதையே அரசியலாக கொண்ட திமுகவின் தலைவர் இப்பொழுதெல்லாம் குறளை அறவே மறந்து “மாடல்” நிலைக்கு சென்றாலும், பாரத பிரதமர் மோடி தான் மாமல்லையில் ஒரு தமிழன் என குறளில் வரவேற்றது மகிழ்ச்சியான செய்தி

    தமிழும் குறளும் மோடியால் உலகெல்லாம் எடுத்து செல்லபடுவது ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளும் தருணம்

    பாரதம் உலகுக்கு வழங்கிய செஸ் போட்டி பற்றி விளக்கமாக பேசிய பிரதமர், தமிழகத்துக்கும் சதுரங்கத்துக்குமான பல விஷயங்களை தொட்டு பேசினார்

    (திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில் அது, அக்கோவிலின் சிவன் தன் பக்தையின் மகளான பார்வதி அவதாரத்தை சதுரங்கத்தில் வெல்பவருக்கே கட்டி கொடுக்க வேண்டும் என்றும், சிவனே சதுரங்க ஆட்டக்காரராக வந்து வென்ற புராண செய்தி கொண்ட ஆலயம் அது

    மிக சரியாக மோடி அதனை தொட்டு பேசினார், இதனால் உலகளவில் சதுரங்க தாயகம் இந்தியா என்பதை கம்பீரமாக அறிவித்தார்)

    விழாவில் செஸ் ஒலிம்பியாட் மேடையில் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்யானந்தா மற்றும் பல கிராண்ட் மாஸ்டர்களை அழைத்து கவுரவித்தார் , எதனை செய்யவேண்டுமோ அதை சரியாக செய்தார்

    மொத்தத்தில் உலக செஸ் விளையாட்டு எப்படி தொடங்க வேண்டுமோ அப்படி முறையாக அதே நேரம் பாரத தமிழக அடையாளமும் பெருமையும் குறையாமல் தொடங்கியிருக்கின்றது

    காமராஜர் அண்ணாவுக்கு பின் வேட்டி சட்டைமேல் துண்டு அணிந்த முதல்வராக ஸ்டாலினார் நேற்று அறியபட்டார்

    முன்பு நேப்பியர் பால விளம்பர வீடியோவில் வந்த அவர் வேட்டி துண்டெல்லாம் மறந்து வடநாட்டு ஸ்டைலில் நடைபோட்டார், இப்பொழுது அவர் வேட்டி சட்டை துண்டு என தமிழர் உடையில் வர ஒரே காரணம் மோடி

    மோடிமட்டும் அந்த தமிழர் உடையில் வந்திராவிட்டால் ஸ்டாலினாரை தோளில் துண்டுடன் பார்த்திருக்க முடியுமா என்பது சந்தேகமே

    ஆக ஸ்டாலினை துண்டுபோட வைத்துவிட்டார் மோடி

    பொதுவாக செஸ் விளையாட்டில் ரஷ்யர்கள் கில்லாடிகள், கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா போல கால்பந்தில் பிரேசில் போல , தடகளத்தில் அமெரிக்கா போல , செஸ் விளையாட்டில் ரஷ்யர்கள் ஆதிக்கம் அதிகம்

    உக்ரைனில் போரை ரஷ்யா நடத்தும்பொழுது இப்பொழுது சதுரங்கபோரிலும் ரஷ்யர்கள் குதித்திருகின்றார்கள்

    பெரும் ஜாம்பவான்கள் களத்தில் இருக்கும் நேரம் தமிழக மிக இளம் வீரர் பிரக்யானந்தா பெரும் எதிர்பார்ப்பை பெறுகின்றார், பெரும் ஜாம்பவான்களெல்லாம் அவரை கண்டு அஞ்சிகொண்டேதான் களத்துக்கு வருகின்றார்கள்

    ஆக அதேவரிதான்

    “மன்னனின் கவுரவம் சதுரங்க வடிவிலே
    மறிக்கின்ற சேனையே பிரக்யானன் வடிவிலே
    ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே
    அறுபதை இருபது வெல்லுமா உலகிலே…”

  56. அரசியலில் எல்லாமே சாத்தியம், அரசியல் என்பது அறத்துக்கு அப்பாற்பட்டது, ஆனானபட்ட சிவாஜியும் அவுரங்கசீப்புமே நெருங்கி வந்த காலங்கள் உண்டு

    தமிழகத்தில் மோடி வந்து தமிழக முதல்வருடன் கைகுலூக்கி “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே” எனும் அளவு பாடி சிரித்து சென்றபின் பல வகையான அனுமானங்கள் ஒலிக்கின்றன‌

    காங்கிரஸ் முகத்தை திருப்பி முட்டி கொண்டது, கம்யூனிஸ்டுகள் “தடம் மாறுகின்றது” என சொல்லி தங்கள் குடம்(குதம்) எரிவதை வாய்விட்டு சொன்னார்கள், இன்னும் பலரை காணவில்லை

    திமுக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட கட்சி அல்ல, கொட்டையிலும் பருப்பெடுத்து பாயாசம் வைத்த கட்சி, ஆனானபட்ட ராமசந்திரன் இந்திரா காலத்திலே சமாளித்து வந்த கட்சி

    அது தான் பலவீனபட விரும்பாது, அதன் பலம் தமிழும் அல்ல தமிழுணர்வும் திராவிடமும் மதசார்பற்ற நிலையும் அல்ல, அப்படி சொன்னால் அவர்களே சிரித்துவிடுவார்கள்

    அதன் பலம் தந்திரம், பலவீனமான தலைவன் என்றால் காமராஜரை போல சரிப்பார்கள். பலமான இந்திரா என்றால் பம்மி கைகுலுக்குவார்கள், பின் பலவீனமான தலமை என்றால் பசையான இலாகா கேட்டு பந்தாவாக சிரிப்பார்கள்

    காலத்துக்கு ஏற்றபடி பந்தடிப்பார்கள் அல்லது பல்டி அடிப்பார்கள் அதுதான் திமுக‌

    அப்படிபட்ட திமுக இன்றல்ல 2011களிலே அதாவது காங்கிரஸ் தடுமாறும் பொழுதே இனி பாஜக காலம் என உணர்ந்தது, இதை முதலில் உணர்ந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்

    பாஜகவோடு மெல்ல நெருங்க அவர் விரும்பிய விவேகானந்தரையும் ராமானுஜரையும் கையில் எடுத்தார், முதலில் ராமானுஜரை தூசுதட்டினார், ஆனால் முந்திகொண்ட காலம் ஏற்கனவே தொல்காப்பியமும் திருகுறளும் அவரால் பட்டபாட்டை நினைத்து கடமையினை செய்தது

    அதன் பின் திமுகவில் அடுத்தகட்ட தலமை வந்தது

    என்னதான் வாக்குக்கு என்னென்ன பேசினாலும் கட்சி நிலைக்க சில சமரங்களை செய்யத்தான் வேண்டும், அதுவும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவ்வளவுதான்

    திமுக சில கணிப்புகளை போட்டு சில முயற்சிகளை செய்தது ஆனால் தேசிய அளவில் பெரிய எம்பி வைத்திருக்கும்கட்சி எனினும் திமுகவினை யாரும் கண்டுகொள்ளவில்லை, அது ஜனாதிபதி தேர்தலில் பட்டவர்த்தனமாக தெரிந்தது

    அடுத்தவருடம் தேர்தல் வரும் நிலையில் இனி காங்கிரசுக்கு வழியே இல்லை என்பதும் களம் பாஜக மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் என பிரிந்து இருமுனையில் நிற்பதும் எல்லோரும் அறிந்தது

    திமுக இதில்தான் யோசிக்கின்றது, அடுத்தும் ஹாட்ரிக் அடிக்கபோகும் பாஜகவினை வீணாக எதிர்த்து நாசமாய் போக அது தயாரில்லை, காரணம் எதிர்கட்சி எதுவும் உருப்படி இல்லை

    அதே நேரம் பாஜக கூட்டணிக்கு செல்லவும் அவர்கள் விரும்ப மாட்டார்கள், சென்றால் கருணாநிதி கல்லறை பக்கம் திமுகவினை புதைத்துவிடலாம் என்பதும் தெரியும்

    இதனால் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் சில அசைவுகளை செய்கின்றது திமுக‌, சதுரங்க வல்லபநாதர் கோவில் என மோடி வலிய சொல்லியும் வீரமணி & கோ அமைதி காப்பதே பெரும் சாட்சி

    பாஜகவும் இந்த நாடகத்துக்கு மகிழ்ந்தபடி துணைபோகின்றது, காரணம் இந்த கைகோர்ப்பு எதிர்கட்சிகளிடம் ஒரு குழப்பத்தினை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரியும்

    ஆச்சரியமாக இப்பொழுது காங்கிரஸின் கதறலும், திமுக “நோ வொர்ரி வி ஆர் வித் யூ” என்பதும் அதைத்தான் காட்டுகின்றது

    பாஜக மிக நிதானமாக தமிழகத்தில் கால்பதிக்கின்றது, அவர்கள் உடனே ஆட்சிக்கு அவசியமில்லை எனும் நிலையில் இருப்பவர்கள், தமிழகத்தில் இருந்து கணிசமான எம்பியும் அவர்களுக்கு இல்லை

    இதனால் மெல்ல சந்தைக்குள் நுழைகின்றார்கள், சந்தையில் இரு தாதாக்களில் ஒரு தாதா கோஷ்டி உடைந்து சிதறிகொண்டிருக்கின்றது அதை ரசிக்கின்றார்கள்

    இன்னொரு தாதா கோஷ்டியும் இப்பொழுது உடைந்தால் அது பாஜகவுக்கு லாபம் அல்ல‌

    இதனால் அதிமுக உடைந்து இனி என்னென்ன காட்சிகள் வரும் என காத்திருந்துதான் திமுக பக்கம் சரிவார்கள்

    மகராஷ்ராவுக்கும் தமிழகத்துக்கும் வித்தியாசம் உண்டு, அங்கு நிலமை வேறு தமிழக நிலமை வேறு

    இந்நிலையில் இரு பெரும் கட்சிகளும் ஒரே நேரம் உடைந்தால் அது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் அதனால் ஒரு கட்சி உடையும் நேரம் அமைதி காப்பதுதான் நல்லது

    திமுக தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் இந்த அபாயத்தை உணர்ந்து இந்நேரம் அதிமுகவில் பலரை வளைத்து சபாநாயகர், அமைச்சர், இணை அமைச்சர், இணைந்த அமைச்சர் என பதவி கொடுத்து பாஜகவினை நோக்கி சிரிப்பார்

    இந்த திமுக தலமை அதை செய்யாது, செய்ய முடியாது

    இதனால் அதிமுக உடையும் நேரம் திமுகவிடம் கைகுலுக்கி எதிர்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவது ஒரு ராஜதந்திர கலை அதனை பாஜக அழகாக செய்கின்றது

    ஆம்,திமுக உடையவும் அதை உடைக்கவும் அல்லது அதோடு கூட்டணி வைக்கவும் இது நேரம் அல்ல என்பது பாஜகவுக்கு தெரியும் என்பதால் அவர்களின் அரசியலே தேசிய அரசியல் என்பதால் அவர்கள் கணக்கே வேறு

    இப்பொழுது நடக்கும் குழபப்த்தை ரசிக்கின்றார்கள், கூடுதலாக பலரை குழப்புகின்றார்கள்

    ஆனால் ஒரு விஷயம் உண்மை

    இதுகாலம் கண்டும் காணமலும் இருந்த தமிழகத்தில் ஒரு முடிவோடு இறங்கிவிட்டார்கள், இறங்கி குட்டையினை குழப்பி அடிகக் தொடங்கியிருக்கின்றார்கள், அதுமட்டும் புரிகின்றது

    கண்ணன் மகாபாரத தூது சென்றது போல மோடி காட்சியினை தொடங்கி வைத்திருக்கின்றார்

    இதற்கு 14 ஆண்டெல்லாம் காத்திருக்க வேண்டாம், சில ஆண்டுகளிலே முடிவு தெரிந்துவிடும்

  57. டேய் உபி

    சொல்லுங்கண்ணே

    அந்த நீட் தேர்வு ரத்து?

    யோவ் மனுசனாய்யா நீயி, உன் சங்கி புத்தி இப்படித்தான் இருக்குமா? மனுஷனுக்கு ஆயிரம் வேலை, மாணவர்களெல்லாம் ஒழுங்கா நீட் தேர்வுக்கு படிக்கிறாங்க, அடுத்தவருஷம் மோடி வந்து பட்டம் கொடுப்பாரு தலைவர் கூட இருந்து இதெல்லாம் வரலாறுன்னு அழுத்தம் கொடுப்பாரு, போ.. போய் வேலைய பாரு

    இல்லடா ஆளுநர் அந்த மசோதா அனுப்பியும்…

    சோலிய பாரு சங்கி பயல. வந்துட்டான் நீட்டு நீட்டாததுண்ணு..

  58. ஆம், மோடி சுட்டிகாட்டிய சதுரங்க வல்லபநாதர் கோவில் போலவே இன்னும் ஏராளமான சான்றுகள் இந்துக்கள் வாழ்வில் சதுரங்கம் என்றோ கலந்திருந்தது என்பதை சொல்கின்றன‌

    தமிழக இந்து சோழமன்னனுக்கும் புலவருக்கும் நடந்த சுவாரஸ்யமான கதையும் உண்டு, ஆனால் அதுபற்றிய பாடல் கிடைக்காததால் மோடி தவிர்த்திருக்கலாம்

    தமிழகத்தில் பல பாடல்கள் இன்று ஏட்டுவடிவில் கிடைத்தாலும் பல வரலாறுகள் செல்லரிக்கபட்டுவிட்டன, சில வரலாறுகள் செவிவழி செய்தியாக மட்டும் வருகின்றன‌

    அப்படி வந்த வரலாறுதான் அது

    வறுமையில் வாடிய புலவன் சோழமன்னனிடம் பரிசுபெற சென்றான், ஏன் சோழனிடம் சென்றான் என்றால் காவேரிபாயும் நாட்டில் நெல் கொட்டிகிடக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியது அல்ல‌

    சோழனிடம் சென்ற புலவன் தனக்கு யாசகமாக தான் கேட்கும் படி நெல்மணிகள் மட்டும் போதும் என்றான், சபையே சிரித்தது

    “ஏனய்யா கேட்பதுதான் கேட்கின்றாய், ஒரு மூட்டை நிறைய அல்லது வண்டி நிறைய என கேட்டால்தான் என்ன? , சில நெல்மணிகள் என கேட்ட முட்டாள் புலவனய்யா நீர்.. ” என நகைத்தார்கள்

    அவனோ அரசனிடம் கோரிக்கை வைத்தான்

    ““அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்” என்று கூறினார்.

    அரசனும் உடனே உத்தரவு கொடுத்தான்

    முதல் கட்டத்தில் ஒரு நெல் இரு நெல்லானது, அடுத்து நான்கானது, அடுத்து நான்கு எட்டானது

    10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.

    20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.

    பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

    சபைக்கு வியர்த்தது, மன்னனுக்கு தலை சுற்றியது, இது இன்னும் பெருகினால் தன் ராஜ்ஜியமே ஈடாகாது என அஞ்சி அவருக்கு பெரும் அளவில் நெல்லும் பொன்னும் கொடுத்து அனுப்பி வைத்தான்

    தன்னை எள்ளி நகையாடிய புலவர்களை கண்டு சிரித்டு பெரும் பரிசுடனும் வண்டி வண்டியாய் நெல்லுடனும் கம்பீரமாக நடந்தான் அந்த கணக்கு புலவன்

    இந்த வரலாறு நடந்த ஒன்று, இது பாடலாகவும் அக்காலத்தில் பதியபட்டிருந்தது பின்னாளில் ஓலை கிடைக்கவில்லை ஆனால் சுவாரஸ்ய வரலாறு செவிவழியாக தொடர்ந்து வந்தது

    சதுரங்கம் அன்று இந்துக்களின் அரசவையில் இயல்பான ஆட்டமாக இருந்தது என்பதற்கு இப்படி சான்றுகள் ஏராளம்

  59. காலம் என்னென்ன மாயமெல்லாம் செய்யும், சரியான தலைவன் வந்தால் என்னென்ன நம்பமுடியா மாற்றமெல்லாம் நடக்கும் என்பதற்கு சில தினங்களுக்கு முன் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சொன்ன செய்தியே சாட்சி

    ஆங்கில ஆட்சி அல்ல அதற்கு முற்பட்ட கோல்கொண்டா சுல்தான்கள், மொகலயாரின் நவாபுகள் என 1500களில் இருந்து சுமார் 500 வருடமாக இங்கு ஒரு தலைவன் இந்துமதம் பற்றி பேசிவிட முடியாது

    நவாபுகள் காலத்தில் அது ராஜதுரோகமாக இருந்தது, வெள்ளையன் காலத்தில் “மதசார்பின்மை” என இருந்தது

    சுமார் 60 ஆண்டுக்கு முன் இப்படி நேருவோ காமராஜரோ ஒரு விழாவில் பேசியிருந்தால் தமிழகம் ரணகளம் ஆகியிருக்கும்

    “மூட நம்பிக்கையினை விதைக்கின்றாயா?” “ஆரிய கட்டுகதையினை பரப்புகின்றாயா?” “பகுத்தறிவினை புதைக்கும் பகைவினை விடோம்” என போர்முரசு கொட்டியிருப்பார்கள்

    என்னென்ன ஆட்டமோ நடந்திருக்கும் பெரும் களபேரம் ஏற்பட்டிருக்கும், அந்த அளவு இந்துமதம் பற்றி பேசவே கூடாது என்றொரு நிலமையினை உருவாக்கி வைத்திருந்தார்கள்

    இன்று அதே திமுகவினை மேடையில் வைத்துகொண்டே அழகாக இந்துமத பெருமையினை புகழ்கின்றார் மோடி, திமுகவின் முரசொலியில் ஒரு புள்ளி கூட இல்லை

    காலம் எப்படி மாறுகின்றது, மாய மானான திராவிடமும் அதன் போலி பகுத்தறிவும் எப்படியெல்லாம் சரிகின்றது எனபதற்கும், இந்துமதம் எப்படியெல்லாம் எழுகின்றது என்பதற்கும் நடக்கும் சம்பவங்களே சாட்சி

  60. உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை இந்து புராண ஆச்சரிய தகவலுடன் தொடங்கி வைத்தார் மோடி : உலக ஊடகங்கள்

    செஸ் ஒலிம்பியாட் போட்டியினை மாமல்லபுரத்தில் தொடங்கி வைத்த மோடி டெல்லி திரும்பினார் : இந்திய ஊடகங்கள்

    ஸ்டாலின் கையினை உயர்த்தியதும் அவசரமாக டெல்லிக்கு திரும்பி ஓடுகின்றார் மோடி, அவரின் விமானம் 1200 கிமீ வேகத்தில் திரும்பி பறக்கின்றது : தமிழக ஊடகங்கள்

  61. கம்பர் வடமொழி கற்கலேனா நமக்கு கம்பராமாயணம் கிடைத்திருக்குமா?

    – தமிழிசை சௌந்தரராஜன்.

    தோழர் : ராமாயணம் கற்பதால் மட்டும் என்ன பயன் கிடைத்துவிடும்?

    நாம் : இராமனிடமிருந்து அறம், தனிமனித ஒழுக்கம், சமூக அக்கரை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு, ஒரு அரசனின் கடமைகள் போன்ற எண்ணற்ற பண்புகளை கற்கலாம்.! இலட்சுமணனிடமிருந்து வீரத்தையும், அண்ணனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் கற்கலாம். பரதனிடமும் அன்பையும், அண்ணனின் வாக்கிற்கு கட்டுப்படும் மாண்பையும் கற்கலாம்.! சீதையிடமிருந்து மன தைரியத்தையும், எதிரியின் வீட்டில் இருந்தாலும் எப்படி கற்பு நெறியுடன் வாழ வேண்டும் என்பதையும், ஒரு அரசனின் மனைவியாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் கற்கலாம்.! அனுமனிடமிருந்து பக்தியையும், சமர்ப்பணத்தையும், அன்பையும் கற்கலாம்.! சுக்ரீவனிடமிருந்து உதவி நாடி வருவோருக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்கலாம், வாலி மற்றும் இராவணனிடமிருந்து ஒரு அரசன் எப்படியெல்லாம் நடந்துகொள்ளக்கூடாது என்பதையும், பெண்மீது ஆசைகொண்டால் என்ன நடக்கும் என்பதையும் கற்கலாம். ஜடாயுவின் மூலமாக மனிதாபிமானத்தை கற்கலாம்.! முக்கியமாக, திருக்குறள் கூறும் பிறர்மனை விழையாமையையும், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற ஔவையின் கொன்றை வேந்தனையும் ஒருசேர கற்கலாம். இன்னும் என்ன வேண்டும்?

    தோழர் : கம்பனுக்கு மட்டும்தானே வடமொழி தெரியும்?

    நாம் : கம்பனுக்கு மட்டுமல்ல, வடமொழி அறியாத தமிழ்ப் புலவர்களே இல்லை. திருவள்ளுவர், தொல்காப்பியர், பரணர், கபிலர் முதற்கொண்டு ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஔவையார், பாரதியார், சேர, சோழ பாண்டியர்கள் என்று வடமொழி அறியாத அரசர்களும் இல்லை. தமிழ்ப்புலவர்களும் இல்லை.!

    தோழர் : எல்லா தமிழ் புலவர்களுக்கும் வடமொழி தெரியுமா?

    நாம் : ஆம் தெரியும். அதானால்தான் தமிழையும் வடமொழியையும் இரு கண்போன்று போற்றி பாதுகாத்தும், வடமொழியோடு தமிழின் பயன் அறியாதோரை “குரங்குக் குப்பன்” என்று திட்டியும் வந்தனர்.!

  62. யாருப்பா இது அரசேந்திரச் சோழன்? இத்தனை நாளாக இப்படி ஒரு பேரரசன் (முப்பாட்டன்) இருந்தும் இவரைப்பற்றி அறியாமல் விட்டு விட்டோமே.. அவரை நினைவுபடுத்திய எங்கள் அண்ணன் சீமானுக்கு நன்றிகள்.!

    பதிவர் பகுதி : இராஜேந்திரச்சோழனைக் குறிப்பிடும் “ஏசலாம் செப்பேடு” அவனது பெயரை இவ்வாறு குறிப்பிடுகிறது,

    ” ராஜத் ராஜன்ய மகுட ச்ரேணி ரத்னேஷூ சாஷநம் ஏதத் ராஜேந்த்ர சோளஸ்ய பரகேசரி வர்ம்மண”

    பொருள் : அரசர்களின் மகுடங்களில் ரத்தினம் போன்று திகழும் இது பரகேசரி வர்மனான இராஜேந்திர சோழனின் சாசனம்.

    – ஏசலாம் செப்பேடு,

    காலம் : இச்செப்பேட்டில் இராசேந்திரச் சோழனின் 25ஆவது ஆட்சியாண்டு இடம்பெறுவதால் இதன் காலம் பொ.ஆ 1036-37 ஆகும்.

    அரசேந்திரனா? ராஜேந்திரனா? என்று நாம குழம்பிக்கத் தேவை இல்லை. ஏனெனில் இராஜேந்திரச் சோழனின் பிறந்த தேதி “ஆடித் திருவாதிரை” அதாவது 26 ஆம் தேதி. ஆனால் அண்ணன் சீமான் சொல்றது அரசேந்திரச் சோழன், அவர் சோழ குலத்தின் அரசர்க்கெல்லாம் அரசன், எங்கள் அண்ணனோட முப்பாட்டன். அவரைப்பற்றி எங்கள் அண்ணன் மூலமாக நாம் அறிந்துகொள்வோம்.! ஆனால் வரலாற்றில் இப்படியொரு சோழன் எந்த காலத்தில் ஆட்சி செய்தான்னு மட்டும் யாரும் கேட்கவும் கூடாது, வன்மத்தை கொட்டவும் கூடாது.!

    எங்கள் முப்பாட்டன் அரசர்க்கெல்லாம் அரசன் அரசேந்திரச்சோழன் வாழ்க!

  63. எதாவது ஒரு வதந்திகளை உருவாக்கி அதை ஆரிய பார்ப்பனர்கள் மீது திணித்து இதோ பார் ஆரியர்கள் இப்படி பண்ணிவிட்டாட்கள், அப்படி பண்ணிவிட்டார்கள் என்று அவரவர் அரசியல் லாபியை தீர்த்துக் கொள்கிறார்கள். அவ்வகையில் “சனிக்கிழமை” என்று ஒரு கிழமையே இல்லை எனவும், வாரத்திற்கு ஆறு நாட்கள்தான் உண்டு எனவும் ஒரு புரளியை கிளப்புகிறார்கள். கிழமைகள் தொடர்பான நேரடிக்குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இல்லை எனினும் இக்கேள்விக்கு என்னால் இயன்ற சில இலக்கிய, கல்வெட்டு தகவல்களைக் கொண்டு பதில் சொல்கிறேன்.!

    96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றான சதகம் வகையைச் சார்ந்த “அறப்பளீசுர சதகம்” என்ற நூலில் “முழுக்கு நாள்களைப்” பற்றி கூறும்போது வாரத்திற்கு உண்டான நாட்களையும், சனிக்கிழமையையும் குறிப்பிடுகிறது. இந்நூலை இயற்றியவர் அம்பலவாணக் கவிராயர் ஆவார். இவர் சீர்காழி அருணாசலக் கவிராயரின் மகனாவார். அறப்பளீச்சுர சதகம், கொல்லி மலையில் அமைந்துள்ள “அறப்பள்ளி ஈசுவரன்” மீது பாடப்பட்ட பாடலாகும். இந்நூலில்,

    “வரும் ஆதி வாரம் தலைக்கு எண்ணெய் ஆகாது வடிவ மிகும் அழகு போகும், வளர் திங்ளுக்கு அதிக பொருள் சேரும், அங்கார வாரம் தனக்கு இடர் வரும் திரு மேவு புதனுக்கு மிகு புத்தி வந்திடும், செம்பொனுக்கு உயர் அறிவுபோம்,தேடிய பொருள் சேதம் ஆம் வெள்ளி,சனி எண்ணெய் செல்வம் உண்டு ஆயுள் உண்டாம்”

    – அறப்பளீசுர சதகம்

    அம்பலவாணக் கவிராயரால் எழுதப்பட்ட இந்நூலில் திங்கள், புதன், வெள்ளி, சனி போன்ற நாட்கள் வருவதைக்காண்க. மேலும் சிலப்பதிகாரத்தின் கட்டுரைக்காதையில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் பயின்று வந்துள்ளது. உதாரணமாக,

    “ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
    அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
    வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண
    உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும் உரையு முண்டே நிரைதொடி யோயே”

    – சிலப்பதிகாரம்.

    ஆடித்திங்களின் கிருட்டின பக்கத்து அட்டமியும் கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று விளக்கமமைந்த தீக் கதுவலானே என்ற வரிகளில் வெள்ளிக்கிழமையானது வாரநாளாக வருவதைக்காண்க. மேலும் திருஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தில் கோள்களைப்பற்றி குறிப்பிடுகையில் மிகத்தெளிவாக இன்றைய வாரத்தின் பெயர்களை முதன்மைப்படுத்துவதை உற்றுநோக்க வேண்டும். உதாரணமாக,

    “வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
    மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்தவதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே”

    – திருஞானசம்பந்தர்.

    பொருள் : மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன் தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல் மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு களங்கமற்ற பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில் புகுந்து நிறைந்ததனால் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவை அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும். என்று கூறுமிடத்து இன்றைய வாரப்பெயர்களுக்கு காரணமான முதன்மை ஏழு கோள்களின் பெயரைக் குறிப்பிடுவதையும் கவனிக்க வேண்டும்.!

    மேலும் சோழர்கால கல்வெட்டுகளில் “சனிக்கிழமை” பற்றிய குறிப்புகள் ஏராளமாக உண்டு. உதாரணமாக திருவாரூரில் உள்ள மன்னார்குடியில் சுந்தரேஸ்வரர் கோவிலின் மகாமண்டபத்தில் உள்ள கல்வெட்டானது அக்கோவிலுக்கு விளக்கெரிக்க நிவந்தமும், இறைவனுக்கு அரிசி அமுது படைக்க நிவந்தமும் அளித்த செய்தியைத் தருகிறது.

    (கல்வெட்டுத்தகவல் : தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன்)

    “[ஸ்ரீ திரி] புவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ ரா ன்றாவது பங்குனி மாஸம் பிறன்ஹதிய தியதி “சனிக்கிழமை”

    என்ற வாசகத்தில் அந்த நிவந்தம் நடைபெற்ற நாளாக பங்குனி மாதம் சனிககிழமையைக் குறிக்கிறது. இது சோழர்காலத்தில் வாரத்திற்கு ஏழு நாட்கள் புழக்கத்தில் இருந்ததை காட்டுகிறது. மேலும், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் திருக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டில் “சநிக் கிழமையும் பஞ்சமியும்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதால் சோழர்காலத்தில் வாரத்திற்கு ஏழு நாட்கள் என்ற வழக்கமும் சனிக்கிழமையும் மக்களால் எளிமையாக பயன்படுத்தப்பட்ட பெயர்கள் என்பதாக அறிய முடிகிறது. மேலும் மணிமேகலையில் இந்திரவிழா நடந்த நாட்களைக் குறிப்பிடுகையில் மொத்த நாட்களை “மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த நாலேழ் நாளிலும் நன்கினி துறைக”
    என்று ஏழு ஏழாக பிரித்துக்கூறுவதிலிருந்து அக்காலததில் அவ்விழா மூன்று வாரங்கள் நடந்தது என்பதை அறிய முடிகிறது.!

    தீர்வு : இன்றிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை “சனிக்கிழமை” முதற்கொண்டு வாரத்திற்கு ஏழு நாட்கள் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கால அளவாகும். இதை ஆரியர்கள் புகுத்தியது என்றோ ஆறு நாட்கள் தான் உண்டு என்று சொல்வதற்கோ யாதொரு முகாந்திரமும் இல்லை.!

  64. ஆய்க்குடி ராமகிருஷ்ணன் அவர்களை பிரதமர் மோடிஜி சந்தித்திருப்பதை பதிந்த நிலையில் யார் அவர் என பலரும் கேட்டிருந்தனர். அவரை குறித்த அடியேனின் பழைய பதிவை பகிர்கிறேன்.

    கை, கால், ஏன் தலை கூட ஆட்ட இயலாது. கண்களின் மீது ஒரு ஈ வந்து அமர்ந்தாலும் உதவியாளர்தான் வந்து விரட்ட வேண்டும். இத்தகைய உடல் பிரச்சனை உள்ள ஒரு மனிதன் வியத்தகு சாதனையை புரிந்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா ?

    ஆதரவற்ற மக்களுக்கு மருத்துவ சேவை, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பலவிதமான மருத்துவ சேவைகள். Early Intervention என்று சொல்லப்படுகிற குழந்தைகளுக்கு வரும் பல பிரச்சனைகளை முன் கூட்டியே அறிவது, ஆதரவற்றவர்களுக்கு குடிசை தொழில் பயிற்சி என இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ !!

    சென்னைக்கு வருகை புரிந்திருந்த ஆயக்குடி அமர் சேவா ராமகிருஷ்ணன் ஐயா அவர்களை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். எதையுமே சாதிக்காதது போல் பேசிக் கொண்டிருந்தார். மாமனிதர்களுக்கே இருப்பது போல் தற்பெருமையோ, தான் என்கிற எண்ணமோ துளியும் இல்லை. அடியேன் வியக்கும் வகையில் கோவையை குறித்து பல விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். அத்தனை அற்புதமான நினைவாற்றல்.

    கோவை ஜி.சி.டி. பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கையில் ராணுவ ஆள்சேர்பு நடந்துள்ளது. அதில் தேர்ச்சி பெற கயிற்றில் ஏறிய போது கீழே விழுந்து முதுகு துண்டு உடைந்து உடல் முழுதும் செயல் இழந்து போனது. உட்கார்ந்த நிலையில் (கிட்டத்தட்ட விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் போல்) மட்டுமே செயல்பட இயலும். நம்மை போன்ற சாமான்யர்கள் என்றால் சுருண்டு போய் தற்கொலை செய்து கொள்ள கூட தயங்கி இருக்க மாட்டோம். ஆனால் ராமகிருஷ்ணன் ஜி இன்று பல லட்சம் பேருக்கு விடிவெள்ளி. அமர் சேவா என்ற அமைப்பை தொடங்கி பலரின் வாழ்வில் விளக்கேற்றி உள்ளார்.

    ஆனால் இவரையும் மிஞ்சிய சேவையாளர் இவரின் துணைவியார். இவரின் இந்த உடல்நிலை சவாலையும் கண்டு கொள்ளாமல் இவரை திருமணம் செய்துக் கொண்டு, மிகப்பெரும் சேவைகளை அவரும் செய்து வருகிறார். அடியேன் சென்றிருந்த போது தொலைபேசியில் அவர் அற்புதமாக ஒரு முருகன் பாடலை பாட மெய்மறந்து போனோம். நீண்ட நேரம் அவரோடு பேசிவிட்டு விடைபெறும் போது மனம் மிகவும் கனமாகி இருந்தது

    இப்படியெல்லாம் நாம் வாழும் இந்த உலகில் மாமனிதர்கள் இருக்கிறார்களா ? என ஆச்சரியப்பட வைத்த நிகழ்வு. தம்பதியர் பாத கமலங்களை வணங்கி பணிகிறேன். (ரத்தத்தில் முளைத்த என் தேசம் புத்தகத்தை அவர் திருமேனியில் வைக்கும் பாக்கியம் பெற்றேன்) இவர்கள்தான் அடியேனின் வி.வி.ஐ.பி.க்கள் !!

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

  65. கிறிஸ்தவமே திமுகவின் அஸ்திவாரம் என்று அப்பாவு சொன்னதில் பொய்யில்லை!

    இது போன்ற விஷயங்களை ஒரு ஏளனமான சிரிப்போடு கடந்து போகிறோம். ஏனெனில் அதன் ஆழமான உணமைகள் நமக்கு புரியாத காரணத்தால்! இதை பலர் முனெடுத்து பேசியுள்ளார்கள். ஆனால் ஆட்சி, மீடியா, துட்டு மூலம் அதை தகர்த்தெரிந்து நசுக்கி விட்டது திராவிட கட்சி. அவர்களுக்கு பின்னால் இருப்பது வெறும் துட்டு மட்டுமல்ல, சர்வதேச் சக்தியும், சதியும்!

    பிரிட்டிஷ் ஆட்சியின்போது வட இந்தியாவில் இந்தியர்களை பிரித்தாள இந்து, இஸ்லாமியம் எனும் மத பிரச்சினைகள் ஓரளவிற்கு உதவியது. ஆனால் தென் இந்தியாவில் அது போன்ற பிரச்சினைகள் இல்லாததால், இங்கு பிரித்தாள வேறுவிதமான யுக்திகள் தேவைப்பட்டது. அப்போது இங்கு கோயில்களை வைத்து ஒரு மிகப்பெரிய, ஆழமான புரிந்துணர்வும், சோஷியல் செட்டப் இருந்ததால், அந்த கட்டமைப்பை உடைக்க ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் பல, அதன் மூலம் அபரிதமாக வளர்ந்த அமைப்பு புதிய நீதிக்கட்சி என்ற திமுகவின் ஆணிவேர்.

    சுதந்திரத்திற்கு முன்பு ஒரு சமயம் காங்கிரஸ் தேர்தலில் பங்கெடுக்க மறுத்தபோது, அந்த வெற்றிடத்தை நிரப்ப புதிய நீதிக்கட்சி பிரிட்டிஷ் ஆட்சிக்கு சென்னை மாகாணத்தில் வெகுவாக உதவியது. அதற்கு ஆட்சியை கொடுத்த பிரிட்டிஷ் அரசாங்கம், அப்போதைய தேவையில் ஒருவருக்கு மாதம் ₹8 போதுமானதாக இருந்தபோது, சம்பளமாக ₹150 கொடுத்தது. அதுதான் அந்த கட்சியை முற்றிழும் தன் வசப்படுத்த பயன்படுத்திய பணம் என்ற மிகப்பெரிய ஆயுதம், அது இன்றும் தொடர்கிறது. அதன் மூலம், சமூகத்தில் நீதியை கொண்டுவருவதாக சொல்லிக்கொண்டு, சமூகத்தில் இருந்த இணக்கத்தை மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று விஷ(ம)த்தை அதன் மூலம் விதைத்தார்கள், வேற்றுமையை திணித்தார்கள்.

    அதில் மிக முக்கியமாக டார்கெட் செய்தது, அன்று கோயில் குருக்களாகவும், ஆசிரியர்களாகவும் இருந்த பிராமணர்களைத்தான். அவர்கள் சமூகத்தின் ஆசான்களாக இருந்து சமுதாயத்தை அறிவூட்டி, இணைத்தார்கள். அதற்கு இரண்டு வித யுக்திகளை பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தது, ஒன்று பிராமணர்களுக்கு அரசாங்கத்தில் வேலை கொடுத்த தன் அடிமைகள் ஆக்கியது ஒருபுறம், மறுபுறம் அவர்களுக்கு எதிரான வன்மத்தை இந்த புதிய நீதிக்கட்சி போன்ற அடிமை கட்சிகள் மூலம் விதைத்தது.

    அடுத்ததாக, கோயிலகள் மூலம் இணைந்திருந்த ஒற்றுமையை, மதமாற்றுதல் மூலம் பிரித்தார்கள். அதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த புதிய நீதிக்கட்ட்சிக்கும் பணத்தை வாரி வழங்கியது. அதனால்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த போது, சென்னை மாகானத்திற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டாம், அவர்கள் லண்டனில் இருந்தே ஆளட்டும், அடிமையாக நாங்கள் அவர்களுக்கு என்றும் விசுவாசமாக இருப்போம் என்று மன்றாடினார்கள். ஆனால பிரிட்டிஷ் அரசாங்கம் அதை ஏற்கமுடியவில்லை.

    இந்தியா சுதந்திரம் கொடுத்த பின், திராவிட கழகமாக மாறிய இந்த அடிமைகளுக்கு நிதியுதவியை நேரடியாக கொடுக்க முடியாமல் போக, இங்கிருக்கும் சர்ச்சுகள் மூலம் நிதி உதவியை தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தது. அதற்கு பிரதிபலனாக, கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு இவர்கள் எல்லா வகையிலும் உதவினார்கள். இப்போது புரிகிறதா, எந்த ஆட்சியிலும் இல்லாத அந்த திராவிட கழகத்திற்கு லட்சங்கோடிகளில் எப்படி சொத்து வந்தது என்று?

    மதமாற்றத்தை தீவிரப்படுத்த, அப்போதைய காங்கிரஸ் அரசு உதவி செய்யவில்லை. அது மட்டுமல்ல, கிறிஸ்தவ பள்ளிகளை விரிவாக்கி அதன் மூலம் மதமாற்றத்தை செய்ய, காமராஜரின் சத்துணவு திட்டங்கள் போல முன்னாளில் எடுத்த முயற்சிகள் தடையாக இருக்க, அரசாங்கத்தை தன் கைக்குள் கொண்டுவர திக அரசியலில் காலெடுத்து வைக்க சர்ச்சுகள் மூலம் அழுத்தம் கொடுத்தது. ஆனால் அதை ஏற்க ரோமசாமி முயற்சிகள் வெற்றி பெறாததால், அதை கைவிட நேர்ந்தது. ஆனால் திராவிட கட்சியை அடுத்த கட்ட தலைவர்கள் மூலம் உடைத்தார்கள். அதில் அண்ணாவும், ஐந்து முக்கிய தலைவர்களும் அடக்கம்.

    அதன் பின்னர், திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என்று பிரிந்தபோது, திக இந்துக்களின் மீது வெறுப்புணர்வை தூண்டி அதன் கட்டமைப்பை உடைக்க, இந்து மதத்தை சிதைக்க முயற்சித்தது. அதன் மூலம் வரும் பயனை, அரசியல் உதவி மூலம் கிறிஸிதவ அமைப்புகளுக்கு திமுக அரசியல் மூலம் உதவியது. அப்போது சர்ச் மூலம் கொடுக்கப்பட்ட நிதி இரண்டாக பிரிக்கப்பட்டு, வழங்கியது. இதில் விகதாச்சாரங்கள் அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறியதால் திக, திமுகவிற்கு இடையே கடுமையான பிரச்சினைகள் தோன்றியது, விளைவாக மிக கேவலமாக அவர்களுக்குள் திட்டிக்கொண்டார்கள்.

    பின்பு ஆட்சிக்கு வந்த அண்ணா தலைமையிலான அரசாங்கம், அவரின் உடல்நிலை காரணமாக எதுவும் பெரிதாக செய்து விடவில்லை. அதன் பின்னர் அந்த பதவியை புறவாசல் வழியாக பிடித்த கருணாநிதி, பல சலுகைகளை கிறிஸ்தவ அமைப்புகளுக்கு கொடுத்தது. அப்போது தலைமைக்கு மட்டுமில்லாமல், லோக்கல் தலைவர்களிடம் ஆங்காங்கே இருந்த சர்ச்சுகள் நிதி கொடுப்பதும், தேவையான காரியங்களை சாதித்துக்கொள்வதும் வழக்கமாக இருந்தது. இந்த நெருக்கத்தால் பல திமுக தலைவர்கள் மதமாறினர், மேலும் மதமாற்ற கட்சியின் அடுத்த நிலை ஊழியர்ளை ஆட்படுத்தினர். அதன் மூலம் கிறிஸ்தவ அமைப்புகளுக்கும், திமுகவிற்கும் கள்ள உறவு தொடர்ந்தது.

    பலவித அழுத்தங்களையும் மீறி, அவர்களால் எதிர்பாத்த அளவிற்கு மத மாற்றத்தை முன்னெடுத்து செல்ல இயலவில்லை. அதற்கு காரணம், கோயில்கள் மூலம் இன்னும் இருக்கின்ற சமுதாய தொடர்பு என்பதால், இந்து அறநிலையத்துறை மூலம் கோயிலகளை பாழாக்கினர். Kமலஹாசன் அமெரிக்கவில் கருணாநிதி தலைமையில் இந்து கோயில்களை அற நிலையத்துறை மூலம் தவறானவர்களை நியமித்து அழிக்கும்பணி வெற்றிகரமாக நடக்கிறது என்று கொடுத்த status update மூலம் அந்த உறவு சினிமாத்துறையில் அதன் பரவலை பரைசாற்றியது. சினிமா, பத்திரிக்கைகள் போன்ற அனைத்து மக்கள் தொடர்புகள் மூலம் தொடர்ந்து மதமாற்றம் ஒருபுறம் நிலழ்னது. மறுபுறம் திராவிட கட்சிகளின் ஆட்சிகள் மூலம் கோயில்களில் இருந்த கோடிக்கணக்கான ஆபரணங்கள், சொத்துக்களை திருடியது, அதற்கு மோசமாக பணத்தாசையால் ஊழல்கள் மூலம் தொடர்ந்து கோயில்களை சீரழித்தனர்.

    இந்த சூழலில், எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபின், அவருக்கிருந்த பக்தியால், அதை முன்பு போல முன்னெடுக்கவில்லை என்றாலும், தன்னிடம் இருந்த தொடர்புகளை வைத்து ஊழல் தலைவர்கள் மூலம் தங்கள் தேவைகளை சாதிப்பதை தொடர்ந்தனர். பின்னாளில் மிகப்பெரிய கல்வித்தந்தைகளாக மாறிய மைனாரிட்டி அமைப்புகளின் அடையாளத்தின் அர்த்தம் புரிகிறதா? ஆட்சியில் இல்லாதபோது, திமுகவிற்கு கிறிஸ்தவ அமைக்கபுகள் கொடுத்த நிதி உதவியே அதன் சர்வைவலுக்கு உதவியது என்பதில் சந்தேகம் உண்டா? அதே சமயம், கருணாநிதிக்கு மீண்டும் ஆட்சிக்கு வர பல யுக்திகளை பின்னிருந்து கொடுத்தது இந்த மேற்கத்திய அமைப்புகளே! திமுகவின் பல செயல்கள் மேற்கத்திய தாக்கம் இருப்பதை இன்று கூட உணரலாம். அதற்கு ஆதரவாக, அதே போல கிறிஸ்தவ அமைப்புகளின் உதவியை பெற்றுக்கொண்டிருந்த கம்யூனிச அமைப்புகளும், பத்திரிக்கைகளும் மிகப்பெரிய அளவில் உதவியது.

    எப்படி தமிழகத்தில் தங்கள் பிரதிநிதிகளை ஆட்சிக்கு கொண்டு வந்தததோ அது போல இந்திய அரசில் சோனியா மூலம் பின் வாசல் வழியாக தனக்கு தேவையான காரியங்களை சாதித்துக்கொண்டது. அதன் மிகப்பெரிய வெற்றியாக சோனியாவை காங்கிரஸ் தலைவராகவும், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் கிறிஸ்தவ அமைப்புகளின் மதமாற்றம் இந்தியா முழுவதும் உச்சத்தை தொட்டது. பல சர்ச்சுகளுக்கு அரசு வங்கிகள் மூலம் கடன்களை கொடுத்து, வெளிநாட்டு உதவிகள் மூலம் அதன் விஷ வேரை ஆழமாக பரப்பியது. சோனியாவின் மிக நெருக்கமான தலைவர்கள் யாரென்று பாருங்கள், அனைவரும் கிரிப்டோக்களே என்பதை எளிதாக உணரலாம். அதே சமயம் கிறிஸ்ரவம் இந்தியாவில் தனது மத மாற்றத்திற்கு கேடயமாக பயன்படுத்தியது இஸ்லாமியர்களை.

    ஏன் இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவர்கள் உதவ வேண்டும்?
    மத அடிப்படைவாதத்தை கொண்ட இஸ்லாமே, கிறிஸ்தவத்திற்கு உலகம் முழுவதும் போட்டியாக இருக்கும்போது, அதை விடுத்து ஏன் இந்து மதத்தை அழிக்க தீவிரம் காட்டியது? அதுவும் தன் எதிரியான இஸ்லாமிற்கு எதிரியான கிறிஸ்தவம் ஏன் அவர்களுக்கு மறை முகமாக உதவியது?

    உலகத்தில் இருக்கும் மதங்களில், காலங்களுக்கு ஏற்ப முன்னோக்கிய சிந்தனைதையும், மாற்றத்தையும், தீர்க்கமான ஆழத்தையும் கொண்ட இந்து மதத்தை கோட்பாடுகளை மக்கள் புரிந்து கொண்டால், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலாது என்பதை நன்கு புரிந்த அவர்கள், அதனால்தான், இந்து மதத்தை முதலில் வேறோடு அழித்து, அதன் பின் யார் பலசாலி என்று பின்னால் பார்த்துக்கொள்ள அவர்களுக்கும் ஒரு ஆழமான புரிதல் இருந்தது. கிறிஸ்தவம், அமெரிக்க, ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் மூலம் இஸ்லாமியத்தை எப்போது வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும் என்ற தீர்க்கமான நம்பிக்கையும் அதற்கு காரணம்.

    இப்படி கிறிஸ்தவத்தோடு பின்னிப்பிணைந்து, அவர்களால் ஆட்சிக்கு வந்து, அவர்கள் உதவி மூலம் வாழ்ந்து வரும் திராவிட கட்சிகள், கிறிஸ்தவர்களால் ஆட்சிக்கு வந்தோம், அவர்களே திமுகவின் அஸ்திவாரம்.என்று அப்பாவு என்ற கிரிப்டோ கைக்கூலி சொன்னதில் என்ன தவறு? தவறு அவனிடமல்ல, அதை புரிந்து கொள்ளாத நம்மிடமே!

    ஆனால், இது போன்ற கைக்கூலிகளிற்கு சிம்ம சொப்பனமாக பாஜக வளர்ந்து மிகப்பெரிய பிரச்சினையானது. அதுவும் மோடி இந்த மத அமைப்புகளுக்கு இங்கே மட்டும் சவாலாக இல்லை. கிறிஸ்தவத்தின் ஆணிவேரான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளுக்கும் கொடுக்கும் தடைகள், மிகப்பெரியவை. எனவே வரும் காலம் என்பது இந்திய அரசின் வளர்ச்சி மூலம், பெரிய மாற்றங்களை உலகளவில் எதிர்பார்க்கலாம். அதற்கு மிக முக்கிய காரணம் எல்லா நம்பிக்கையையும் மதிக்கும் இந்து மதத்தின் கோட்பாடுகள் மட்டுமல்ல, தன்னை மிதிக்கும் கோட்பாடுகளை நிர்மூலமாக்கும் புதிய யுக்தியும் கூட…

    இங்கே மிக முக்கியமாக பாராட்டப்பட வேண்டியவர்கள் இந்துக்கள் அல்ல, கிறிஸ்தவத்தை, இஸ்லாத்தையும் தழுவினாலும் அவர்களின் மத கட்டுப்பாடுகளை அழுத்தங்களை மீறி, இந்தியா என்ற நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் அவர்களே. மற்றவர்கள் நம்பிக்கையில் தலையிடுவதை எதிர்க்கும் அந்த போர் வீரர்களே. இன்று சிறிய அளவில் இருக்கும் அவர்கள்தான் உண்மையை புரிந்து கொண்டு வலிமையோடு எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு நாம் துணை நிற்போம்! ஆம், நம் நோக்கம் யார் நம்பிக்கையிலும் தலையிடுவதல்ல, அடுத்தவர் நம்பிக்கையில் தலையிடும் சக்திகளை அழித்து, தாய் நாட்டை நேசிப்பதே!

    ஜெய்ஹிந்த்!

  66. Recession என்றால் என்ன?

    இந்தியா Recession ஐ சந்திக்க வாய்ப்புகள் உண்டா? உலகின் பொருளாதார சக்தியான அமெரிக்கா வீழ்கிறதா?

    ஒரு நாடு Recession இல் உள்ளது என்பதை அதன் Gross Domestic Product (GDP) ஐ வைத்தே நிர்ணையிக்கிறார்கள். அதன் வளர்ச்சி Negative ஆக இருந்தால், அதாவது இந்தியாவின் GDP வளர்ச்சி இந்த காலாண்டில் 7.7% ஆக இருப்பது மாறி, -2% என்று 0% க்கு கீழே குறைந்தால் அந்த நாடு Recession ஐ சந்திக்கிறது என்று அர்த்தம். ஆனால் அது கொரானா போன்ற பெருந்தொற்று காலங்களில் அல்லது பேரிடர் காலங்களில் ஒரு சிறிய காலத்தில் வந்து அது மீண்டெழ முடியும் என்பதால், அந்த பொருளாதார வீழ்ச்சியை குறைந்த பட்சம் இரண்டு Quater களில் சரிவு தொடர்ந்து இருந்தால் மட்டுமே அதை Recession என்று கருதுகிறோம்.

    இது பெரும்பாலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே இதற்கு ஆளாகிறது. சராசரியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கே Recession நிகழ்கிறது என்று சொல்லலாம். 2000 த்தில் நிகழ்ந்த அது மீண்டும் 2008 ல் ஒரு பெரிய Recession ஐ சந்தித்தது அமெரிக்கா. அது அடுத்த 10 ஆண்டுகால் கழித்து 2018 மீண்டும் ஒரு Recession ஐ சந்தித்தது. ஆனால் கொரானா காலமான 2020 மீண்டுமொரு Recession ஐ குறுகிய காலமான 6 மாதங்களுக்கு மட்டுமே சந்தித்து மீண்டது. இப்போது அது மீண்டும் 2022 இன் முதல் காலாண்டான Q1 (Jan, Feb, Mar) ஒரு சரிவை சந்தித்த நிலையில் அதன் இரண்டாவது காலாண்டு Q2 (Apr, May, Jun) லும் சரிவை சந்தித்தால் அதை Recession என்று கொள்ளலாம். அமெரிக்காவின் Q2 GDP 0.9% என்று மயிரிழையில் தப்பித்ததாக சொன்னாலும், 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் அதை மிகப்பெரிய அளவில் காயப்பட்டுத்தி, அதன் எதிர்கலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

    பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த Recession, 2018 லிருந்து 5 ஆண்டுகளில் இது மீண்டும் நடந்தால், மூன்றாவது முறை என்றாகிவிடும்.
    அப்படி இந்த Recession இப்போது சந்தித்தால் அமெரிக்காவின் Economy becoming Volatile என்று சொல்லும் அளவிற்கு அதன் பொருளாதார ஸ்திர நிலை தாழ்ந்துவிட்டது என்றே சொல்லலாம். அதற்கு அமெரிக்கா உணவு முதல் பல விஷய்ங்களுக்கு சுயசார்பு இல்லாமல், மற்ற நாடுகளை சார்ந்திருப்பது ஒரு முக்கிய காரணம் என்றாலும், அதை எளிதில் சமாளித்து மீண்டுவர அதன் உலக நாடுகள் மீதான பொருளாதார கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதுவே இங்கு முக்கியம். ஏனெனில் கடந்த காலங்களில் அது ஒவ்வொரு முறை அது பொருளாதர சரிவை சந்திக்கும்போது, அதை மற்ற நாடுகள் மீது திணித்து, அது தன்னை சரி செய்து கொள்ளும். எப்படி என்று அதுபற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்!

    கொரானாவால் 2020 ல் 6 மாதங்கள் மட்டும் Recession ஐ சந்தித்தபோது அது தடுப்பூசி மூலம் ஓரளவு சமாளித்துக்கொண்டது.
    ஆனால் அமெரிக்காவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த கொரானவிற்கான தடுப்பூசியை இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்பதன் மூலம் அதன் பொருளாதாரத்தை பெரிய அளவில் உயர்த்திக்கொண்டு, மற்ற நாடுகளை பிரச்சினையில் வீழ்த்தி அது தன்னை காப்பாற்றிக்கொள்ளும். ஆம் Trillions of Dollars, தடுப்பூசிக்கு செயற்கையான டிமாண்ட் கிரேட் செய்து அதன் பொருளாதரத்தை ஸ்திரமாக்க முயப்றது. ஆனால் முக்கியமாக இந்தியாவும், சீனாவும் சொந்த தடுப்பூசி தயாரித்து கொண்டதால், அது முடியாமல் போய்விட்டது. அதனால இன்று அமெரிக்கா மீண்டும், மீண்டும் Recession ஐ சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு இந்தியாவின் தடுப்பூசி மிகப்பெரிய தடையாக அமைந்துவிட்டது முற்றிலும் அது எதிர்பார்க்காத ஒன்று.

    அடுத்ததாக, அமெரிக்கா எப்போதும் ஒரு Recession ஐ சந்தித்தால், அதை சமாளிக்க உலகத்தில் எங்காவது ஒரு போரை நிகழ்த்தும். அதன் மூலம் நேரடியாக போர் தளவாட உற்பத்தி அதிகரித்தும், Supply chain disconnection என்று ஒரு உறுதியற்ற நிலையை திணித்து, உலகில் கச்சா எண்ணெய் விலையை ஏற்றியும் அதன் டாலர் தேவையை செயற்கையாக அதிகரித்தும் அதன் பொருளாதாரத்தை மா(ஏ)ற்றிக்கொள்ளும். இப்போது உக்ரைன் போரை கொண்டுவர இதுவும் ஒரு முக்கிய காரணம். ஆனால அது எதிர்பார்த்த இரண்டு விஷயங்கள் நடக்காமல் போய்விட்டது என்பதுதான் இங்கே முக்கியம். முதலில் உக்ரைன் நாடு தனக்கு தேவையான ஆயுத கொள்முதலை செய்ய முடியாத அதன் பொருளாதர சூழலில், நேட்டோ நாடுகளே அதற்கு உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது. அதே சமயம் ஐரோப்பிய யூனியனில், நேட்டோ நாடுகள் பலவும் ரஷ்யாவை கேஸ் வேண்டி சார்ந்திருக்கும் மிக சிக்கலான சூழல்.

    இரண்டாவதாக, அது கச்சா எண்ணெயை உச்சத்திற்கு கொண்டு சென்று டாலர் தேவையை உலகளவில் அதிகரித்து அதன் பொருளாதாரத்தை தக்கவைத்து கொள்ள வழக்கம்போல நினைத்தது. ஆனால் உலகின் மிக்கப்பெரிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி ரஷ்யாவிடம் ரூபாயிலும், ரூபிளிலும் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்தது மட்டுமல்ல, சந்தை விலையை விட $30 டாலர் குறைவான விலையில் ரஷ்யா விற்பதால், அமெரிக்கா செயற்கையாக கச்சா எண்ணெய் விலையை உச்சத்தில் வைக்கவும், டாலர் தேவையை அதிகரிக்கவும் அதனால் முடியவில்லை.

    அதே நேரத்தில் உலகத்தின் பொதுவான கரன்சியாக அமெரிக்க டாலரை, உக்ரைன் போருக்கு பிறகு பயன்படுத்த முடியாமல் போனதால், இந்தியா, ரூபாயை உலகின் மாற்று கரன்ஸியாக முன் நிறுத்துகிறது. அது வெற்றி பெற்றால், அமெரிக்காவின் வீழ்ச்சி மட்டுமல்ல அதன் எதிர்காலமே கேள்விக்குறியாகி மேலும் மோசமாகும். அது போன்ற நிலையில் Recession ஐ அமெரிக்கா மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டிய சூழலைத்தான் இது காட்டுகிறது. அதாவது சுருக்கமாக சொன்னால், யானைக்கு முன்வரும் மணியோசை போல, அதன் வல்லரசு நிலையை பறிகொடுத்து, அதன் உலக பொருளாதார கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதே மீண்டும்,மீண்டும் வரும் ரிஸசன் பின்னால் மறைந்திருக்கும் ஆழமான உணமை.

    உலக கரன்ஸி பற்றி விரிவாக அறிய, எனது மற்றொரு பதிவை காண்க.

    அதே சமயம், சீனா கொரானாவிற்கு பிறகு அதன் நம்பகத்தனமையை வெகுவாக இழந்த நிலையில், இந்தியா அதன் தடுப்பூசி போன்ற உதவியை உலக நாடுகளுக்கு செய்ததன் மூலமும், உலக நாடுகளின் நம்பகத்தன்மையை பெருமளவில் ஏற்படுத்தி உள்ளது. இதனால், மாற்று கரன்ஸிக்கு முதலில் தடைகளை அமெரிக்கா பெருமளவில் முயலும்போது இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறையலாம். ஆனால் அது மீண்டெழும்போது அமெரிக்காவின் ஏகாபத்தியத்திற்கான முடிவுரையின் முன்னுரை எழுதப்பட்டுவிடும்!

    எனவே, அமெரிக்கா நினைத்தது போல, ரஷ்யாவோ, சீனாவோ அதன் வீழ்ச்சிக்கு காரணமாக இல்லை, ஆனால் இந்தியா அதை செய்யும் என்பதால், அமெரிக்காவின் பலவிதமான தொல்லைகள் வருங்காலத்தில் இந்தியாவிற்கு அதிகரிக்கும். அமெரிக்காவிலேயே இந்தியாவின் மறைமுகமான ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய, சீன நாடுகள் மீது வைக்கும் பொருளாதார தடைகள் எல்லாம், அதம் மோசமான பொருளாதார சூழ்நிலையில் சொந்த செலவில் வைக்கும் சூனியமாகி விடும் என்பதை அமெரிக்கா நன்கு புரிந்துள்ளது.

    அது காலகாலமாக பாகிஸ்தானை வைத்து விளையாடி இந்தியாவை கட்டுப்படுத்தி வந்த நிலையில், இன்று வலுவிழந்து திவாலாக்ப்போகும் நிலையில் இருக்கும் பாகிஸ்தானோ, மற்ற நாடுகளோ இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாத நிலையில், அது மிக முக்கியமான ஆயுதமாக கருதும் மத பிரச்சினை ஒன்றேதான் மீதமுள்ள சாத்தியமான வழியாக இருக்கும். அதன் அடிப்படையிலேயே வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படும்!

    அதே வேளையில், இந்தியா தனது உணவு முதல், போர் தளவாடங்கள் வரை தன்னிறைவை நோக்கிய முயற்சியில், அதன் வளர்ச்சியை தற்காலிகமாக குறைக்கலாம், ஆனால் Recession க்குள் செல்ல வாய்ப்புகள் குறைவு. இது சீனாவிற்கும் கூட பொறுந்தும்.

    ஆனால் கெடுவான் கேடு நினைப்பான் என்பது அமெரிக்காவிற்கு புரியும்போது அது மீண்டெழ முடியாத நிலையில் வீழ்ந்திருக்கும்!

  67. இந்திய சுதந்திர வரலாறு : 01

    இந்திய தேசத்தின் போராட்டம் என்பதும் அது அடைந்த விடுதலை நீண்டது, அது மறைமுக‌ சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆகியிருக்கலாம், இப்பொழுது பரிபூரண சுதந்திரம் நோக்கிய 9 ஆண்டு பயணத்தில் 75 ஆண்டை கடக்கலாம்

    ஆனால் அது வெள்ளையனுக்கு மட்டும் 200 ஆண்டுகளாய் அடிமையாய் இருந்தது என மட்டும் சொல்வது பெரும் தவறு, ஒவ்வொரு இந்தியகுழந்தைக்கும் இந்தியனுக்கும் சொல்லபடும் பெரும் அநீதி

    கிட்டதட்ட யூதர்கள் சந்தித்த இரண்டாயிரம் வருட நீண்ட யுத்தத்தைத்தான் பெரும் போராட்டத்தைத்தான் இந்திய தேசமும் சந்தித்தது, அந்த வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்ப்பது இந்த 75ம் ஆண்டுவிழா நாட்களில் இந்தியரின் கடமையாகின்றது

    எப்படி இருந்தது இந்திய தேசம்?

    அன்று ஐரோப்பா காட்டுமிராண்டி தேசமாக இருந்தது, செல்வமோ செழிப்போ சொல்லிகொள்ள கூடிய அளவு பெரும் பெருமையோ அந்த அடையாளமோ அவர்களிட்ம இல்லை

    சீனாவும் அரேபியாவும் பண்டைய நாகரீகங்களை கொண்டிருந்தன, அரேபியா என்பது நைல் நதி ஓரத்திலும் யூப்ரடீஸ் டைக்ரீஸ் ஆற்றங்கரையில் மட்டும் வலுவாய் இருந்தது

    இயமயத்துக்கு அப்பால் சீனா இருந்தது அதன் போக்கில் அமைதியாக இருந்தது எனினும் சீனர்களுக்கு இந்தியாமேல் வாஞ்சையும் ஆசையும் அதிகமாக இருந்தது, அவர்களின் கனவு இந்திய தேசமாக இருந்தது

    அந்த இந்தியா பெரும் ஆறுகள் ஓடிய செழிப்பான தேசமாக, வளமான மண் உடைய தேசமாக எல்லா வகை வளமும் கொண்ட தேசமாக உலகில் மின்னியது, எல்லா வகை செலவமும் பொன்னும் பொருளும் கலையும் நாகரீகமும் வாழ்வியலும் அதிசயங்களும் கொண்ட நாடாக உலகெல்லாம் அறியபட்டது

    நறுமணமென பரவிய இந்தியாவின் புகழ் உலகெல்லாம் எதிரொலித்தது, ஒவ்வொருவருக்கும் இந்தியா கனவு தேசமானது

    இந்தியா என்பது எல்லா நாட்டினராலும் விரும்பபட்ட செல்வந்த நாடு, இந்த உலகில் அன்று யாரிடமெல்லாம் பெரும் படை உண்டோ அவர்களெல்லாம் இந்தியாவினை நோக்கி வருவது வாடிக்கை, வந்து தங்கள் மதம் கலாச்சாரம் என புகுத்தி வளமான இந்தியாவினை தங்கள் சொத்தாக துடிப்பதும் வழமை

    எப்படி அந்த பெரும் இடத்தை இந்தியா பெற்றது?

    இந்துமதம் எனும் அருமையான வாழ்வியல் முறை அந்த செல்வத்தை ஏற்படுத்தியிருந்தது, அதே வாழ்க்கை முறை பலமான ராணுவத்தையும் கொண்டிருந்தது

    மக்களின் வாழ்வியலோடும் மனவியலோடும் கலந்திருந்த இந்துமத இந்தியா பிறநாட்டு மன்னர்களிடம் இருந்து வேறுபட்டிருந்தது

    இந்துமதத்தின் தன்மையே தனக்கென வைக்காமல் தானம் தர்மம் என மக்களை கொடுக்க வைப்பதும் புது புது ஆலயங்களை பெருக்குவதும், பிரபஞ்ச அருளோடும் ஆசியோடும் உலக உயிர்களுக்கும் தேவையான காரியங்களை மட்டும் செய்வது

    இந்து மன்னர்கள் பெரும்பாலும் தங்களுக்கென வாழவில்லை, மாபெரும் ஆடம்பரமும் பெரும் பொன்னும் பொருளும் கொண்ட பேராசை வாழ்வும் அவர்களுக்கு இல்லை

    சாதாரண மலர்களை சூடினர், எளிய ஆடையினை அணிந்தனர், அவர்களின் சபைகள் கூட கோவில்களில்தான் இருந்தன, மன்னனுக்கென பெரும் ஆடம்பரமான மனை இல்லை, ஆனால் காவல் மிகுந்த வீடுகள் இருந்தன‌

    மன்னனாலும் அவன் அமர்ந்துதான் உண்டான், அக்காலத்தில் இந்துமன்னர்கள் வாழ்வு எளிமையாய் இருந்தது, , எளிமைக்கு காரணம் இந்துமதமாய் இருந்தது

    ஆம் பணம் ஓரிடத்தில் குவிய இந்துமதம் அனுமதிக்கவில்லை, அது ஆலயங்களை பொதுவிடமாக கொண்டு செல்வங்களை அங்குதான் குவித்தது, குவிந்த செல்வம் மக்களையும் நாட்டையும் அழகாக நகர்த்தியது

    இந்துக்களுகு அனுதினமும் நல்ல வழக்கங்களும் வாழ்வியல் நம்பிக்கையும் உண்டு, அது அடுத்தவனுக்கு கொடுத்துகொண்டே இருக்கும்படி வலியுறுத்தியமதம், இதனால் எங்கும் பெரும் பேராசை அன்று இல்லை, உழைப்பதும் தானம் கொடுப்பதும் ஒவ்வொருவர் கடமையாயின இதனால் பிச்சைக்காரர் இல்லை

    இன்றும் இந்துக்களின் வழிபாடு பல இடங்களில் செலவு பிடித்திருக்கும் காரணம் அதுதான், மானிடன் கையில் பெரும் பணம் சிக்கினால் அது சமூக சீரழிவுக்கும் குழப்பத்துக்கும் வழிவகுக்கும் என உணர்ந்த இந்துமதம் தான தர்மங்களையும் ஆலய அறபணிகளையும் ஊக்குவித்தது

    அந்த தர்ம சுழற்சித்தான் பெரும் பணக்கார நாடாக எல்லோருக்கும் எல்லாம் இருக்கும் நாடாக இந்தியாவினை உயர்த்தியது, யாருக்கும் எந்த குறையும் இல்லை, அந்நிலையில் சமூகம் பெரு வாழ்வு வாழும்

    தானமும் தர்மமும் மிக்க நாட்டில் எந்த குழப்பமும் இராது, குழப்பமில்லா நாட்டில் சுபீட்சம் பெருகும், இந்துமதம் அப்படித்தான் இந்தியாவினை பெரும் செல்வந்த நாடாக ஆக்கிவைத்திருந்தது

    அதன் வேதங்களும் தாத்பரியமும் அப்படி இந்நாட்டை உருவாக்கி வைத்தன‌

    தட்சசீலம், நளந்தா என நாட்டின் பல இடங்களில் இருந்த பல்கலைகழகங்கள் இந்து பல்கலைகழகங்களாக பெரும் அறிவு சிந்தனையினை ஏற்படுத்தின, அவை இந்துக்களின் பெரும் அறிவின் அடையாளமாய் இருந்தது

    இந்தியாவினை வென்று அதை தக்கவைக்க அதன் முதுகெலும்பான இந்துமதம் ஒழிக்கபட்டு தங்கள் மதம் நிறுவபட்டால் தவர வேறு சாத்தியமில்லை என்பது எதிரிகளின் கனக்கு, அதில் தவறொன்றும் இருக்க முடியாது ஆட்சியின் நீதி அது

    ஒரு அரசன் கைபற்றும் நாட்டை தன் கலாச்சார அடிப்படைக்கு மாற்றி தன் மதம் தன் வாழ்க்கைமுறையினை திணித்தால்தான் அவன் அச்சமின்றி ஆளமுடியும்

    இதனால் இந்தியாவினை குறிவைத்த எதிரிக்கெல்லாம் இந்துமதம் பெரும் சவாலாக இருந்தது

    ஆனால் இந்துமதம் தன்னை அழிக்க வந்தவனையெல்லாம் அடித்து விரட்டி கொண்டே இருந்தது, அடித்து விரட்டமுடியா காலம் இருந்தாலும் அவன் இங்கே நிம்மதியாக வாழ அது விடாமல் தன் எதிர்ப்பினை கொடுத்து கொண்டே இருந்தது

    அந்த இந்துமதம் கொடுத்த எதிர்ப்புத்தான் வரலாற்றின் முதல் சுதந்திர போர்

    இதை முதலில் செய்தவன் இன்றைய பஞ்சாப் பக்கம் சீலம் நதிகரையில் அன்று ஆண்ட இந்துமன்னன் போரஸ் எனும் புருஷோத்தமன்

    அன்று இயேசு முமகது நபி என யாரும் பிறந்திருக்கவில்லை, கிமு 300ம் ஆண்டுகள் அவை

    ஐரோப்பாவில் ஆசியாவினை தொட்டு கொண்டிருக்கும் கிரேக்க நாட்டுக்கு அரேபியாவும் எகிப்தும் இந்தியாவும் பெரும் கனவாய் இருந்தன, எகிப்து அரேபிய தொடர்புகளால் அவர்களுக்கு சிந்தனைகள் வளர்ந்தன‌

    அந்த சிந்தனைகள் ஒரு ஞானியினை உருவாக்கின அவன் அரிஸ்ஸ்டாட்டில், அவன் கிரேக்க நாட்டின் பெரும் ஞானியாய் இருந்தான், அந்த ஞானி தன் கூர்மதியால் அலெக்ஸ்டர் எனும் வீரனை உருவாக்கினான்

    அவனை தன் சக்திமிக்க ஆயுதமாய் மாற்றி கிரேக்க மதமும் கலாச்சாரமும் உலகெல்லாம் பரவ ஏவிவிட்டான்

    அவனை தொழுது கிளம்பிய அலெக்ஸ்டாண்டர் துருக்கி எகிப்து பெர்ஷியா என அன்றைய வல்லரசுகளை எல்லாம் அடிமைபடுத்தி அவர்கள் அடையாளத்தை ஒழித்துகட்டி எங்கும் கிரேக்கமயமாக்கினான்

    எகிப்திய மதம் பண்டைய அராபிய மதமெல்லாம் ஒழிக்கபட்டு எங்கும் கிரேக்கம் கோலோச்சியது

    கிரீஸில் இருந்து ஆப்கன் வரை பெரும் ராஜ்ஜியம் அமைத்த அவன் தன் நீண்டநாள் கனவும் இறுதி இலக்குமான இந்தியாமேல் பாய்ந்தான்

    அதுவரை வடக்கே இமயம் தெற்கே கடல் மேற்கே பெரும் ஆறுகள் என காவலாக இருந்த இந்தியா அவன் காலத்தில் முதல் சோதனையினை சந்தித்தது

    புராண காலம் ராமன் காலம், கன்ணன் காலம் தாண்டி பிரிஹாட்ரத வம்சம், ஹரியங்க வம்சம், சிசுநாக வம்சம், ரோர் வம்சம் என கால காலமாக இந்தியாவினை இந்து வம்சங்கள் ஆண்ட வழக்கில் அப்பொழுது நந்த வம்சம் பலமாய் இருந்தது

    தெற்கே சேர சோழ பாண்டியர் எனவும் இன்னும் பல மன்னர்களும் வலுவாய் இருந்தனர், கடல்படை வலுவாய் இல்லாத காலத்தில் நாட்டின் ஆபத்து வடக்கேதான் இருந்தது, அலெக்ஸாண்டர் அப்படித்தான் வந்தான்

    இந்தியாவின் இயற்கை அரண் எப்பொழுதும் பலமானது எனினும் பெரும் கில்லாடியான அலெக்ஸாந்தர் சிந்துநதியின் பலவீனமான இடங்களை அடையாளம் கண்டு இந்தியாவுக்குள் ஊடுருவினான்

    அவனை எளிதாக முறியடித்தான் மாவீரன் போரஸ், அதுவரை தோல்வியே அடையாத அலெக்ஸாண்டர் முதல் தோல்வியிலே இந்தியாவின் பலம் அறிந்தான், ஒருவகை ஞான தேடல் கொண்ட அவன் இந்துமதம்பால் ஈர்க்கபட்டு தண்டமுனியின் சீடனாகி ஒரு ஞானியாக எல்லாம் வெறுத்து தன் ராஜ்ஜியத்தை தன் வீர்ர்களிடமெ கொடுத்துவிட்டு பாபிலோன் எனும் பாக்தாத்தில் மரித்தான்

    அவன் புருஷோத்தமனுடன் போராடிய காலங்களில் சாணக்கியன் எனும் பெரும் இந்துஞானி சமுத்திரகுப்தன் எனும் வேட்டைகாரனை மன்னனாக உருவாக்கி பெரும் இந்து ராஜ்ஜியம் படைத்திருந்தான்

    அலெக்சாண்டர் இறந்தாலும் ஆப்கானில் அவன் நண்பன் செலூகஸின் ஆட்சி இருந்தது , அவனுக்கு இந்தியா குறியாய் இருந்தது, இந்தியாவில் நுழைய வாய்ப்பு பார்த்து கொண்டே இருந்தான்

    (பின்னாளில் கஜினி கோரி என யாரெல்லாமோ இந்தியாவில் பாயும் அந்த முயற்சியினை செலுகஸ்தான் தொடங்கி வைத்தான்)

    ஆனால் குப்தபடைகள் எளிதாக செலுக்கஸின் படைகளை முறியடித்தன, பின் சில சமரங்களுக்கு பின் அமைதியானான் செலூகஸ், அவனால் இந்தியாவினை வெற்றி கொள்ளவே முடியவில்லை

    அலெக்சாண்டர் போல அவன் நண்பனும் தோற்று திரும்பினான்

    இந்தியா அப்படிபட்ட ஆச்சரியமான‌ நாடு, அதன் சவால் உலகில் எந்த மூலையில் எழுந்தாலும் அதற்கு சவாலான ஒருவன் இந்தியாவில் தானாக உருவாகி வருவான், அந்நாட்டின் வரம் அது

    கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில் உருவானபொழுது இந்தியாவில் சாணக்கியன் எனும் இந்துஞானி உருவானான்

    அலெக்ஸ்டாண்டர் எனும் கொம்பன் உருவானபொழுது இங்கே சந்திரகுப்தன் என்பவன் தானாக எழும்பினான்

    இப்படிபட்ட அதிசய இந்தியா சாணக்கியன் காலத்தில் பெரும் சக்தியாய் இருந்தது, அவன் இந்துக்களின் அடையாளங்களை சின்னமாக்கி வைத்திருந்தான்

    அதனில் அன்றைய சக்கரவழிபாடு பிரதானமானது, இந்துக்களின் பெரும் தெய்வமான கண்ணபிரான் கையில் இருந்த சக்கரத்தை சக்தியின்வடிவாய் கொண்டு அதன் அருகே இந்திய அடையாளமான யானையினையும் குதிரைகளையும் காளைகளையும் நிறுவி ஒரு அடையாளம் கொடுத்தான்

    அந்த சக்தியில் இத்தேசம் சிங்கமென நான்கு பக்கமும் சீறும் என அன்றே சொல்லி சிங்கங்களையும் குறியீடாக நிறுவினான்

    அதுவரை ஆபத்தில்லா இந்தியாவுக்கு இனி நான்கு பக்கமும் ஆபத்துவரும் அதை சிங்கமென சீறி இந்தியா நான்கு பக்கமும் பாய்ந்து தன்னை காக்கும் என முதலில் சொன்னது சாணக்கியனும் அவன் குப்த அரசுமே

    (அந்த சின்னம் பின்னாளில் அசோகன் கையில் கிடைத்து அதை அவனே உருவாக்கியது போல் ஒரு மாயை பின்னளைய வரலாற்று திரிபில் நடந்தாலும் காலம் அதை பொய் என சொன்னது )

    அவர்கள் காலத்தில் வலுவான இந்தியா உருவானது, இனி எதிரி வெளியில் இல்லை எந்த எதிரியும் இந்தியாவினை படையெடுத்து கைபற்றமுடியாது எனும் நிலையில் ஒரு ஆபத்து உள்ளே உருவானது

    அந்த ஆபத்தின் பெயர் புத்த மதம், அதுதான் அதன் கொல்லாமை அஹிம்சை கொள்கைதான் தேசத்தின் போர்குணத்தை பாதித்தது, அசோகன் போன்ற மன்னர்களே யுத்தம் வேண்டாம் சேனை வேண்டாம் என முடிவெடுத்தபொழுது இந்தியாவின் பாதுகாப்பு கேள்விகுறியானது

    தேசம் அடுத்த பெரு சவாலை சந்தித்தது, அலெக்சாண்டருக்கு பின் அதுதான் தேசம் கண்ட சவால்..

    (தொடரும்..)

  68. நாளை தொடங்குகின்றது பாரத சுதந்திரத்தின் 75ம் ஆண்டு விழா

    இதே 75ம் ஆண்டு சுதந்திர நாள்தான் பாகிஸ்தானிலும் கொண்டாடபட வேண்டும், ஆனால் அவர்களோ ஏன் பெற்றோம் சுதந்திரம் எனும் அளவில் மலங்க மலங்க முழித்துகொண்டிருப்பதுதான் பரிதாபம்

    இந்தியருடன் வாழமாட்டோம், இந்துக்களுடன் வாழமாட்டோம் என இந்துஸ்தானை பிரித்து பாகிஸ்தான் வாங்கி சென்றவர்கள் அந்த பெருநாளை கொண்டாடமுடியா அளவு தவிப்பதும் , பாரத பெரும் தேசம் பெரும் உற்சாகத்துடன் அதை கொண்டாட தொடங்கியிருப்பதும் காலத்தின் சாட்சிகள்

    இந்தியா எனும் தர்மபூமி எப்படி தர்மவழியில் நடந்து இன்று வளர்ந்து நிற்கின்றது என்பதையும்., பிரிவினைவாத பாகிஸ்தான் எப்படி நிலைகுலைந்துவிட்டது என்பதையும் காணமுடிகின்றது

    அடுத்து 100ம் ஆண்டு நூற்றாண்டுவிழாவிலாவது அவர்கள் உற்சாகமாக இருப்பார்களா என்றால் நிச்சயம் இல்லை, அப்பொழுது பாகிஸ்தான் என்றொரு நாடு இருக்குமா என்பதே சந்தேகம்

    காங்கிரஸ் சரியவும் பாகிஸ்தான் எப்படி சரிந்தது என்பதில் இருக்கின்றது இந்தியாவின் குழப்பங்களுக்கான காரணங்களின் ரகசியம்

  69. இந்திய சுதந்திரத்தின் அவசியத்தை முதன் முதலில் கம்பீரமாக கேட்ட ஜனநாயக தலைவர் அவர்தான், ஆயுத முனையில் இந்தியாவினை அடக்கிவிட்டு இன்னும் ஏகபட்ட குழப்பங்களை “புரட்சி” சமூக நீதி “சாதி ஒழிப்பு” “சமத்துவம்” என வெள்ளையன் விதைத்துவிட்டு இந்த குழப்பங்களிலே இனி இந்தியாவினை ஆளலாம் என ஓரளவு நிம்மதி கொண்டிருந்த நேரமது

    வெள்ளையனே இந்தியாவினை நல்வழியில் உயர்த்துவான் அவன் வராவிட்டால் இந்தியரெல்லாம் காட்டுமிராண்டிகள், வெள்ளையன் சென்றுவிட்டால் நாம் வாழமுடியாது எனும் விபரீத அடிமை எண்ணங்கள் விதைக்கபட்டு வளர்ந்த காலம் அது

    அப்பொழுதுதான் அந்த மனிதன் மகராஷ்டிரம் ரத்னகிரியில் 1856ல் பிறந்து வளர்ந்தார், அது கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்தியாவினை பெற்றிருந்த காலங்கள்

    அப்பொழுது பள்ளியில் கணித பிரிவில் முதல் மாணவனாக வந்திருந்தான் அந்த சிறுவன், அவன் கணித மேதையாக பெரும் பொறியாளராக வரும் வாய்ப்பு இருந்தது, ஆசிரியர் அதைத்தான் வற்புறுத்தினார்கள் அவனோ சட்டத்தை தேர்ந்தெடுத்தான்

    ஏன் என எல்லோரும் கேட்க அச்சிறிய வயதிலே சொன்னான் “நம் நாட்டில் சுதந்திர போராட்டம் நடக்கின்றது, நம் தலைவர்கள் கைதுசெய்யபடுகின்றார்கள், அவர்களை விடுவிக்க சட்டம் அவசியம் அந்த படிப்பு அவசியம்”

    மிக சிறிய வயதிலே இப்படி நேசித்த அந்த சிறுவன் பின் பால கங்காதர திலகராக சட்டம் பயின்ற வழக்கறிஞராக காங்கிரசில் சேர்ந்தார்

    அதுவரை காங்கிரஸ் இயக்கம் பிரிட்டிஷாரை விரட்ட முடியாது என்றே நம்பிகொண்டிருந்தது, உலக யதார்த்தபடி அதற்கு வழி இல்லாமலும் இருந்தது

    பிரிட்டிஷாரை எஜமானர்கள் என நம்பி உரிமை கேட்ட காங்கிரசில் முதன் முதலில் அவர்கள் அந்நியர்கள் என சொல்லி ஒரு குரல் ஒலித்தது அது பெரும் கலகத்தையும் ஏற்படுத்தியது

    மிக தைரியமாக அக்குரலை எழுப்பி பெரும் எழுச்சிக்கு வித்திட்டவர் பால கங்காதிர திலகர், அவரின் எழுச்சியே தேசத்தில் ஒரு அணலை எழுப்பியது, அது பின்னாளில் விடுதலையாக விடிந்தது

    தன் சட்டபடிப்பின் மூலம் அவர் ஒரு வேலி போட்டுகொண்டு பேசிய பேச்சும் எழுதிய எழுத்துமே அவரை லோகமான்யா எனும் அளவுக்கு உயர்த்தியது

    லோகமான்யா என்றால் மக்களின் பெரும் தலைவன் என பொருள்

    (இந்த லோகமான்யா எனும் பெயரை முறியடிக்கவே மகாத்மா எனும் பெயர் பின்னாளில் உருவாக்கபட்டது)

    காங்கிரஸ் போராட்டம் தவிர வேறு வழிதெரியாத திலகருக்கு ஞானபார்வை கொடுத்தவர் விவேகானந்தர், புனேவுக்கு வந்த விவேகானந்தர் சுமார் 10 நாட்கள் திலகரோடு தங்கியிருந்த காலமே இந்திய வரலாற்றின் புதிய பாதையினை திருப்பியது

    விவேகானந்தருடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு இந்துமத எழுச்சியே இத்தேசத்தின் விடிவு என்பதை ஆத்மார்தமாக நம்ப வைத்தது.

    மொழி, இனம் என பிரிந்து கிடந்த இந்தியாவினை இணைக்கும் ஒரே விஷயம் இந்துமதம், அது ஒன்றால் மட்டுமே இத்தேசம் பிணைக்கபட்டது

    நாடு முழுக்க மொழியாலும், இனத்தாலும் விடுதலை உணர்ச்சியினை எழுப்ப சிரமமான நிலையில் மதத்தால் அது எளிது என்பது திலகருக்கு புரிந்தது, மதத்தை விடுதலைக்கான ஆயுதமாக பயன்படுத்தினார்

    அரசியல் கட்சிக்கு தடை, அரசியல் பேச தடை என்றிருந்த காலங்களில் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்க பிரிட்டிசார் யோசித்தபொழுது அதுவரை சாதாரண நிகழ்வாக இருந்த பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தை இந்திய எழுச்சி ஊர்வலமாக சாதுர்யமாக நடத்தினார் திலகர்

    இந்திய சுதந்திரத்திற்காக இந்து மதம் எனும் சக்தியினை கையில் எடுத்தாரே தவிர, ஒருகாலமும் மற்ற மதங்களை அவர் பழித்தாரில்லை, வரலாறு அதை சொல்கின்றது

    கேசரி எனும் பத்திரிகையும் மராட்டா எனும் பத்திரிகையினையும் அவர் நடத்தினார், அதில் மராட்டா பத்திரிகை இந்தியா முழுக்க தனி செல்வாக்கை கொடுத்தது அதை தாண்டி ஐரோப்பாவிலும் அது கொண்டாடபட்டது

    வங்கத்து குதிராம் போஸ் வங்க பிரிவினையினை எதிர்த்து குண்டு வீசிய நேரம் அதை ஆதரித்து தன் இதழில் மிக தைரியமாக எழுதினார் திலகர்

    குதிராம் போஸுக்கு தூக்குவிதிக்கபட்டபொழுதும் அதை கண்டித்த ஒரே தலைவர் திலகர்தான்

    யாருக்கும் இல்லாத தைரியம் அவருக்கு இருந்தது, இதனால் திலகருக்கு ஆதரவு பெருகிற்று

    இதனை கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அரசு அவரை சிறையில் அடைக்தது அதுவும் பர்மாவில் உள்ள தனி சிறையில் அடைத்தது, அப்பொழுது அவரின் உடல் நலமும் பாதிக்கபட்டது

    உலகமே பிரிட்டனை கண்டித்தது. குறிப்பாக ஜெர்மனியின் மார்க்ஸ் முல்லர் பிரிட்டன் ராணிக்கே அதனை கண்டித்து கடிதம் எழுதினார், அம்மாதிரி அளவில் கண்டனம் பெருக பெருக‌ திலகருக்கு விடுதலை கிட்டியது

    திலகரின் வழியில் லாலா லஜபதிராய், வ.உ சிதம்பரனார் என மாபெரும் தியாகிகள் எல்லாம் உருவானார்கள், ஏராளமான தியாக தீபங்களை ஏற்றியவர் திலகர்

    உண்மையில் திலகரின் வழியில் வந்தவர்களே இத்தேசத்தின் மாபெரும் தியாகிகள் வரிசையில் நிற்கின்றனர் என்பதுதான் வரலாறு, அவரின் தியாகத்தால் எழுந்த எழுச்சி அப்படி இருந்திருக்கின்றது

    காந்தியின் வருகைக்கு பின் திலகர் தீவிரவாதி என முத்திரைகுத்தபட்டாலும் திலகருக்கான அபிமானம் இத்தேசத்தில் குறையவில்லை

    கிராமம் கிராமமாக சென்று மக்களை திரட்டினார், வெள்ளையனை இந்திய மக்கள் தூக்கி எறியமுடியும் என்ற நம்பிக்கையினை விதைத்தார்

    இந்தியர் மேல் அபிமானம் கொண்டிருந்த , இந்தியரின் நியாயத்தை ஓரளவு பேசிய பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியுடன் தொடர்பில் இருந்தார், அவர்களை சந்திக்க அவர் லண்டன் சென்ற வேளையில்தான் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது

    அதை தொடர்ந்து இந்தியா திரும்பினார், அதன் பின் உடல்நலம் பாதிக்கபட நோயுற்று இறந்தார்

    பின்னாளில் லேபர் கட்சியின் அட்லி இங்கிலாந்தில் பிரதமரான போழுதே இந்திய சுதந்திரம் கிடைத்தது, திலகர் இறந்து 27 வருடமான பின்பு அது நடந்தாலும் லேபர் கட்சி எனும் தொழிலாளர் கட்சியே இந்திய விடுதலையினை கொடுக்கும் என்ற திலகரின் தீர்க்க தரிசனம் தப்பவில்லை

    இந்நாட்டில் மாபெரும் சுதந்திர எழுச்சியினை ஏற்படுத்தியவர் என்ற முறையிலும், “சுதந்திரம் எமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்” என முழங்கி நின்ற சுதந்திர போராளி என்ற வகையிலும் திலகர் இந்நாட்டின் தலைமகன்

    சட்டம் படித்து நாட்டுக்கு போராட வந்து தன் வாழ்வின் ஒவ்வொரு மூச்சையும் தேசத்துக்காக அர்பணித்த மகான் அவர், ஏற்கனவே பர்மா சிறைவாசத்தால் நோயுற்ற அவர் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பாதிப்பில் அஞ்சலி செலுத்தி “இம்மக்களின் தியாகம் வீணாகாது” என சொல்லி மறைந்தார்

    அந்த தலைமகனுக்கு இன்று நினைவு நாள், தேசம் அந்த மாபெரும் தலைவனுக்கு அஞ்சலி செலுத்துகின்றது

    திலகருக்கு இந்தியாவில் பிடித்த மாகாணங்களில் சென்னை தமிழகமும் ஒன்று, சென்னை வரும்பொழுதெல்லாம் அவரும் பாரதியாரும் வ உ சியும் சென்னை கடற்கரையிலே உரையாடுவார்கள் பொது கூட்டம் நடத்துவார்கள்

    அதனால் அந்த இடம் “திலகர் திடல்” என்றானது

    தேசபற்று மிக்க அந்த இடத்தின் பெருமையினை மறைத்து தேசபக்தியினை குலைக்கும் விதமாகத்தான் திராவிட கல்லறைகள் அப்பக்கம் பின்னாளில் எழும்பி இன்று திலகர் திடல் சுருக்கபட்டிருக்கின்றது, சிலருக்கு அப்படி ஒரு இடம் அங்கு இருப்பதே தெரியாது

    அந்த திடலில் திலகருக்கு வ.உ.சி பாரதியுட பிரமாண்ட சிலை வைக்கபட வேண்டும், அதன் அடியில் “சுதந்திரம் எம் பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்” எனும் அந்த வீரமான முழக்கங்கள் சென்னை கடற்கரையின் எப்பக்கத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி வழிவகை செய்து வைக்கபடல் வேண்டும்

    காலம் அதை ஒருநாள் நிச்சயம், செய்யும்

    வெள்ளையனிடம் அடிமையாய் இருந்து அவன் தரும் உரிமைகளை பெற்று வாழ்வதை தவிர வேறு வழியே இந்தியாவுக்கு இல்லை என காங்கிரஸ் சொல்லிகொண்டிருந்த காலங்களில் , “சுதந்திரம் எம் உரிமை” என முதலில் முழங்கிய அம்மகானை தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் இந்நாளில் வணங்கி கொண்டிருக்கின்றார்கள்

    திலகர் கனவுகண்ட அந்த சுந்தந்திர இந்தியா இப்பொழுதுதான் உருவாகி கொண்டிருக்கின்றது எனும் வகையிலும் 75ம் ஆண்டு சுதந்திர கொண்டாட்டங்களிலும் அம்மகானின் வழிகாட்டலும் நினைவுகளும் எக்காலமும் இங்கு நிலைத்திருக்கும்

  70. முகம் மாறும் தமிழ் திரையுலகம்..

    முன்பு நமக்கு பிடித்தருந்த நடிகர்கள் எல்லாம் இப்போது நமக்கு பிடிக்காமல் போய் விட்டது .

    காரணம் இந்து மதத்தின் மீதான அவர்களின் பேச்சுக்கள், விமர்சனங்கள், இவர்களின் படங்களில் இந்து மதத்தை பற்றிய தவறான எண்ணங்களைப் பரப்புதல் போன்றவை.

    அந்த நடிகர்களில் சிவகுமாரும் உண்டு.

    ஒரு காலத்தில் ராமாயணத்தை கரைத்து குடித்து சொற்பொழிவாற்றியவர் சிவகுமார். ஆனால் இன்று அவர் மகன் சூர்யா இஸ்லாமியப் பெண் ஜோதிகாவைத் திருமணம் செய்த பின், இவரின் இந்து மத வெறுப்பு மேலோங்கியதாக அவரது பொது வெளி,பேச்சுக்களில் தெரிகிறது.

    கமல்ஹாசன்.. இவருக்கு மட்டுமே தனியாக ஒரு புத்தகம் எழுத வேண்டும்..

    (ஜோசப்)விஜய்,

    ஜோதிகா,

    சூர்யா,

    கார்த்தி,

    சித்தார்த்,

    விஜய்சேதுபதி .

    இன்னும் நிறைய பேர் உண்டு.

    இவர்களைப் பார்த்தாலே எரியுது. பிடிக்கவில்லை .

    டிவியில் அவர்கள் நடித்த படங்கள் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பானால் உடனே வேறு சேனல் மாற்றிச்செல்லும் அளவிற்கான வெறுப்பே மிஞ்சியிள்ளது.

    இவர்கள் எந்த மதத்திலுருந்தாலும் அது பற்றி நாம் கவலையில்லாமல் தான் இருந்தோம். இவர்கள் இந்து மதத்தைப் பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்ததால் மட்டுமே இவர்கள் என்ன மதம் என்று நாம் ஆராய வேண்டிய சூழல் வந்தது.

    இந்த கூத்தாடிகளில் எவரெல்லாம் இந்து மதத்தை பற்றியும் அதன் கலாச்சாரம் பழக்க வழக்கங்களைப் பற்றியும் விமர்சனம் செய்கின்றனரோ அவர்களின் படங்களைப் பார்காதீர்கள்.

    அப்படியே ஆசை என்றாலும் தியேட்டரில் சென்று காசு செலவழித்துப் பார்க்காதீர்கள்.

    இவர்கள் நாம் கொடுக்கும் பணத்தினால் தான் வாழ்கின்றனர்.

    அதில் ஒரு பகுதியை மதமாற்றம் செய்யப் பயன்படுத்துகின்றனர். அதற்கு படத் தயாரிப்பிலிருந்து ஒவ்வொன்றிற்கும் அந்நிய மத பணம் புகுந்து விளையாடுகிறது.

    நன்றாக கவனித்தால் இவர்கள்நடித்த படங்களில் எல்லாம், கிறித்வர்களையும் முஸ்லீம்களையும் நல்லவர்களாக் காண்பித்து ,நெற்றியில் திருநீறு குங்குமம் தறித்த இந்து பெயர் உள்ளவர்களை கெட்டவர்களாக காண்பிப்பர். இதில் நயன்தாராவும் உண்டு.

    நயன்தாராவின் மெஜாரிட்டியான படங்களை இயக்குபவர், கிறித்தவ இயக்குனராக இருப்பார். படத்தில் பல காட்சிகளில் இந்து துவேஷம் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ இருக்கும்.

    இவர் நடித்த ஒரு படத்தில் (இமைக்கா நொடிகள்) ஒரு காட்சி, பலரையும் அடித்து கொன்று விட்டு திரும்பும் வில்லன், திரும்பி செல்லும் போது ஓரமாக பயத்துடன் நிற்கும் ஒற்றை உத்திராட்சம் அணிந்த அப்பாவி இந்து இளைஞர் ஒருத்தரை, சரியாக தொண்டைக்குழியில் உள்ள உத்திராட்சத்தை ஒரே குத்து குத்துவார். உத்திராட்சம் தொண்டைக்குழிக்குள் சென்று விடும், அப்பாவி இந்து இறந்து விடுவான்.

    இன்னொரு படத்தில் போதைப்பொருள் கடத்தும் கும்பல், (கோலமாவு கோகிலா) பீரோவுக்குள் இந்து தெய்வங்கள் படத்தை வைத்து, தங்களது கடத்தல் தொழில் நல்ல படியாக நடக்க உதவி புரியங்கள் என்று வேண்டுவது மாதிரியான காட்சி. இவள் படத்தின் இயக்குனர்கள் பெரும்பாலானவர்கள் கிறித்தவர்கள் . நடிகன் ஜோசப் விஜயின் கடைசியாக வந்த பல படங்களின் இயக்குநர்களும் கிறித்தவர்களே.

    அது மட்டுமல்ல. தமிழ்த் திரையுலகமே கிறித்தவர்களின் பிடிக்குள் சென்று விட்டது . நிறைய பேர் லயோலாவில் விஸ்காம் படித்த கிறித்தவ மதவெறியர்கள்.
    கிறித்தவ மிஷனரிகள் சூதனமாக, இந்த நடிகர்கள் மூலமாக இந்து மத வெறுப்பை இளைஞர்கள் மத்தியில் உண்டாக்குகின்றனர்.
    மெல்ல கொல்லும் விஷஊசி ஏற்றுவது போல இளைஞர்கள் மத்தியில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும் . ஜோசப் விஜய் நடித்த படத்திற்கு, முதல்,நாள் முதல்ஷோ அதிக விலை கொடுத்து டிக்கட் வாங்கும் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுங்கள்.

    அவர்கள் கூறுகெட்ட முட்டாள்காக வளர்ந்தால், நம் அடுத்த தலைமுறை, வேறு மதத்திற்கு மாறியிருக்கும். தமிழ்க்
    கலாச்சாரம் அழிந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் இல்லாமல் போய் விடும்.

    இப்போதே லிவ் டுகதர், டைவர்ஸ் கேஸ்கள் அதிகம் வந்துவிட்டன.

    அதற்கெல்லாம் காரணம் அந்நிய மதங்களின் வரவும், அதைப்பரப்ப முயலும் அரசியல் கட்சிகள் , மற்றும் திரை உலகமுமே என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

    நம் உறவுகளாயிருந்தாலும், எவன் கேட்க போகிறான் என்று நினைக்காமல் ஊதுகிற சங்கை ஊதி வையுங்கள்….

  71. இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகையும் அதன் கொண்டாட்டமும் மானிட வாழ்வின் ஒவ்வொரு பக்கத்தையினையும் உணர செய்பவை, அர்த்தமில்லா பண்டிகைகள் என்றோ வெட்டி செலவு பண்டிகைகள் என்றோ அங்கு எதுவுமில்லை

    ஒவ்வொரு கொண்டாட்டமும் அவர்களுக்கு அவ்வளவு ஞானமானது , வானியல் பிரபஞ்ச கோள்களுடனும் அன்றைய நாளில் ஓங்கியிருக்கும் சக்தியுடனும் மிக நுணுக்கமாக பின்னபட்ட ஞானமதம் அது

    அதனில் ஒன்றுதான் இந்த ஆடிபூரம், ஆடிமாத பூர நட்சத்திரம் ஆடிபூரம் என்றாயிற்று

    பூர நட்சத்திரம் ஜாதகரீதியாக சிம்மராசிக்குரியது, அந்த நட்சத்திரம் சக்திதேவிக்கு உகந்தது அதாவது பிரபஞ்சத்தின் பெரும் சக்திக்கு உகந்த நட்சத்திரம்

    அந்த தேவிக்கு உகந்த நட்சத்திரம் ஆடிமாதம் வந்த‌ அன்றுதான் உமாதேவி அவதரித்ததாகவும் , மஹாலஷ்மியின் அருள் பெருகும் நட்சத்திரமாகவும் இந்து தர்மம் வலியுறுத்திற்று

    அந்த நாளில் ஒவ்வொரு பெண்ணும் அன்னையினை வணங்கவேண்டும் அதுவும் ஆடிமாதம் பூர நட்சத்திரத்தன்று விரதமிருந்து வணங்க வேண்டும் என்றும் இந்து ஞானியர் சொன்னார்கள்

    ஏன் சொன்னார்கள்? அங்கேதான் இருக்கின்றது ஆடிமாத போதனை

    ஆடிமாதம் அம்மன் வழிபாட்டுக்குரியது, பெண் சக்தியின் வழிபாட்டு மாதம் அது, அந்நேரம் பெண்கள் வெறும் வழிபாடு மட்டும் செய்யாமல் பல ஞான போதனைகளை, வாழ்க்கை தத்துவங்களை தெரிந்து கொள்ள வழி செய்தார்கள் இந்துக்கள்

    ஆடிபூரம் அன்று அன்னை உமாதேவியும், மஹாலெஷ்மியும் அவதரித்ததாக சொன்னார்கள், அதனில் இருந்து பெண்கள் பாடிக்க சொன்னார்கள்

    உமையவள் பெண்ணாக பூமியில் ஆடி பூரத்தில் அவதரித்தாள் அவள் கணவனுக்காக தவமிருந்து அடைந்த கதையினை சிந்திக்க சொன்னார்கள்

    அப்படியே மஹாலஷ்மி அவதாரம் பல எடுத்து பெருமாளை அடைய தவமிருந்ததை சிந்திக்க சொன்னார்கள்

    இதனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவன் முக்கியம், கணவன் மேலான பக்தி முக்கியம் என்பதை வலியுறுத்தினார்கள்

    சிவசக்தி தத்துவமும், பாற்கடலில் பரந்தாமனுக்கு சேவை செய்யும் லஷ்மியின் தத்துவமும் இல்லற வாழ்வின் போதனை என தெளிவாய் சொன்னார்கள், பெண்கள் இயக்கும் சக்தி ஆனால் அந்த இயக்கும் சக்தி இயங்க செயல்பட ஒரு நிலையான சக்தி வேண்டும் அதுதான் கணவன் என தெளிவாய் சொன்னார்கள்

    சக்தி சிவனை விஷத்தில் இருந்து காத்த கதையும், கண்ணனை ருக்மணி நரகாசுரனிடம் இருந்து காத்த கதையும் சொல்லி சிந்திக்க வைத்தார்கள்

    குடும்பபெண்ணின் முதல் கடமை கணவனை தொழுதல் என்பதையும், எல்லாம் வல்ல சக்தி கொண்ட தேவியரே கணவனை பணிந்து கடமை செய்தார்கள், ஆண் பெண் இணைந்த தாத்பரியமே இயக்கத்துக்கு அடிப்படை என்பதை போதித்தார்கள்

    உலக இயக்கத்துக்கே இறைசக்திகள் குடும்பமாய் இயங்கும் பொழுது, குடும்ப இயக்கத்துக்கு பெண்கள் கணவனுக்கு துணையாய் நிற்றல் வேண்டும் என்பதை தெளிவாக சொன்னார்கள்

    இதனாலே ஆடிபூரம் பெண்களுக்குரிய பெரும் போதனை நாளாயிற்று

    அன்று அம்மனுக்கு சேலையும் வளையலும் இதர மங்கல பொருட்கள் கொடுப்பதும் இந்துக்களின் வழமை குறிப்பாக மாங்கல்ய அடையாளம் உண்டு

    இந்த காணிக்கையில் இரு விஷயங்கள் உண்டு ஒன்று ஆத்மார்த்தமானது இன்னொன்று சமூகத்துக்கானது

    இந்த மங்கல பொருட்களை அன்னையின் பாதத்தில் வைத்து , இந்த மங்கலமெலலம் என் கணவனை குறிப்பது, இந்த மங்கல வாழ்வு உன்னால் வந்தது, காலமெல்லாம் இந்த மஞ்சள் குங்குமத்தையும் தாலியினையும் அன்னை நீகாத்து வரவேண்டும் என்பது

    அப்படியே தன் கணவனையும் அவனின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அன்னையிடம் அவனுக்காய் வேண்டி, குடும்ப வாழ்வின் எல்லா சிரமங்களையும் எதிர்கொள்ள சக்தி கேட்பது

    சேலையும் மங்கல அடையாளமும் குடும்ப பெண்களின் அடையாளம் மட்டுமல்ல, அவளுக்கு கணவன் உண்டு அவனாலே இதெல்லாம் அவளுக்கு சாத்தியம் எனும் அடையாளங்கள். அவற்றை அம்மனுக்கு சாற்றும்பொழுது தன் மங்கல ஸ்தானத்தை கணவனின் அடையாளத்தையே அவள் அன்னையிடம் காணிக்கையாக்குகின்றாள்

    ஒரு பெண்ணாக அம்மனுக்கும் அதன் அவசியம் தெரியும் என்பதால் அன்னையும் அப்பெண்ணின் கோரிக்கையினை ஏற்றுகொள்கின்றாள்

    அன்னைக்கு சாற்றபடும் அந்த சேலையும் வளையலும் கயிலாயத்துக்கோ பாற்கடலுக்கோ செல்லாது மாறாக இன்னொரு ஏழை பெண்ணுக்கோ ஏழை சமூகத்துக்கோ சென்று சேரும்

    ஒரு பெண்ணுக்கு வரமருளி அவளிடம் இருந்து பெற்று இல்லாதோருக்கு கொடுக்கும் மிகபெரிய சமூகநீதியினை இந்து ஆலயங்கள அக்காலம் முதல் இக்காலம் வரை எளிதாக செய்கின்றன, எந்த மதத்திலும் இல்லாதவாறு இந்துமதம் அந்த சமூக சமநிலையினை தெய்வத்தின் பெயரால் காக்கின்றது

    ஆடிமாதம் அம்மனுக்குரியது எனும் நாளில் அம்மனே தன் குடும்பத்தை பேணினாள், அப்படியே ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்தை கணவனை தொழுது பேணவேண்டும் என உறுதியெடுக்கும் நாளாக இதனை இந்துக்கள் கொண்டாடுகின்றார்கள்

    இந்நாளில் அம்மன் வழிபாடும் பெண்களுக்கு சேலையும் தாலிதானமும் வழங்குவது வழமை, தானமும் தர்மமும் ஒரு பெண்ணுக்கு மாங்கல்ய பலத்தை அதிகரிக்கும், இன்னொரு சுமங்கலியிடம் இருந்து சேலையும் குங்குமம் தாலியும் வாங்கும் பெண் மனமார வாழ்த்தும் வாழ்த்து பெரும் ஆசிகளை கொடுக்கும்

    அதனாலே இந்நாளில் அந்த வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்

    ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் பிறப்பும் இந்நாளில்தான் நடந்தது, எல்லா பெண்களும் கணவனுக்காய் வாழ அவளோ கண்ணனையே கடவுளாக பாவித்து வாழ்ந்து அவனோடு கலந்தும் விட்டாள்

    இந்து ஆன்மீக தத்துவபடி ஒவ்வொரு ஆன்மாவும் இறைவன் மேல் ஏக்கம்கொண்டு வாழ்ந்து அவனை அடைய வேண்டும் ஆண்டாள் அப்படித்தான் வாழ்ந்தான், உமையவள் அவதார நோக்கமும் அதைத்தான் பின்பற்றுகின்றது என்பார்கள்

    அதே நேரம் எல்லோரும் சித்தாந்தம் பேசி அதன்படி வாழ்ந்தால் உலக இயக்கம் நடக்காது அல்லவா?

    அதனால் லவுகீகத்தோடு ஆன்மீகத்தை கலந்து இந்நாளில் பெண்கள் கணவனுக்காய் வழிபாடு நடத்தவும் மகா சக்தியின் அருளில் தங்கள் குடும்பத்தில் எல்லா வளமும் பெற பிரார்த்திக்க இந்துமதம் வலியுறுத்தியது

    குடும்ப கடமையினை செய்யும் பெண்கள் தங்கள் வாழ்வின் பலமான கணவனுக்கு எல்லா நலமும் அருளும் வேண்டி குடும்பம் நன்முறையில் இயங்க பிரார்த்திக்கும் நாளிது

    அதே நாளில் கடமை முடிந்து ஓயந்த தென்னையாக நிற்கும் பெண்கள் அந்த பரமனை அடைய ஆண்டாள் போல தவமிருக்கும் நாளும் இதுவே

    லவுகீகம் ஆன்மீகம் என இருபெரும் விஷயங்களை போதித்தபடி ஆடிபூரம் இன்று கொண்டாடபடுகின்றது, அந்நாளில் பக்தி வழிபாடும் ஆலய வழிபாடும் அவசியம்

    அதே நேரம் இல்லாத பெண்களுக்கு தானமும் தர்மமும் அவசியம், ஒரு பெண்ணுக்கு எடுத்துகொடுக்கும் தாலியும் சேலையும் பல தலைமுறைக்கு குடும்பத்தை ஆசியாய் தாங்கும், அது சத்தியம்

    அவ்வகையில் ஒவ்வொரு இந்துவும் ஒரு இந்து பெண்ணுக்காவது உதவ வேண்டிய நாள் இது, அதை ஒவ்வொரு இந்துவும் செய்து புண்ணியம் தேடிகொள்ள வேண்டும்

    பெண்ணுக்கு தானமளிக்கும் ஒவ்வொரு விஷயமும் சாட்சாத் தேவி சக்தியினையே அடைகின்றது, பெண்களெல்லாம் அன்னையின் வடிவம் என வணங்கி தானம் செய்யவேண்டிய நாள் இது

    இந்த தர்மதாம் சனாதான தர்மத்தின் ஆணிவேர்

    இந்த தர்மம் எக்காலமும் இந்துக்களிடம் உண்டு, அங்கு சாதி இல்லை அந்தஸ்து இல்லை யாரிடம் கொடுக்கும் சக்தி உண்டோ அவர்கள் இன்னொரு இந்துவுக்கு கொடுப்பார்கள்

    வியபார சாதிகளும், போர்செல்லும் சாதிகளும், உழைக்கும் சாதிகளும் இந்நாளில் பிராமண ஏழைபெண்களுக்கு தானம் கொடுப்பதெல்லாம் அந்நாளில் வழமையான ஒன்று

    ஆம், உலகிலே சமத்துவமும் சமூகநீதியும் பேசிய முதல் மதம் இந்துமதம், அதன் ஏற்பாடுகளெல்லாம் அவ்வளவு ஞானமான சமத்துவம் கொண்டது

    அதை முறையாக பின்பற்றும் இடத்தில் எல்லா சமத்துவமும் சமூகநீதியும் எக்காலமும் இருக்கும் அங்கு ஏழ்மை என்பதோ இல்லாமை என்பதோ இராது, பெண்களுக்கு எவ்வித குறைவும் எக்காலமும் இராது

    அம்மதம் ஒன்றேதான் அந்த அற்புதத்தை செய்யும், காரணம் முழு ஞானத்தில் உருவான மதம் அது

  72. Recession தடுக்க முடியாது, நாம் தவிர்க்க வேண்டியது என்ன?

    அமெரிக்காவின் டெக்னாலஜியின் உச்சம் தொட்ட மாநிலம் என்றால் அது கலிஃபோர்னியாதான்! அங்கு 32,000 பேர் சென்ற மாதம் மட்டும் வேலை இழந்துள்ளனர்! Oracle உலகம் முழுவதும் Job cut தொடங்கி விட்ட நிலையில் அது Google வாசல் வரை வேலை இழப்பு தவிர்க்க முடியாதது என்பது இன்றைய சூழ்நிலை. அதற்கு தொடர் கோவிட் தாக்கமும், தற்போதைய குரங்கு அம்மையும், உக்ரைன் போர் என்று பெரும் பிரச்சினைகளை உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது. அடுத்து தைவான் போர் என்பது சீனாவிற்கு மிக அவசியம் என்பதும், அதை தடுத்தே ஆக வேண்டிய கட்டாயாம் அமெரிக்காவிற்கும் மிக அவசியம். இந்த மோசமான சூழலில் கிட்டத்தட 48 நாடுகள் திவாலை நோக்கிய நிலையில் இருக்க இலங்கை ஏற்கனவே வீழ்ந்துவிட்டது. அடுத்து பாகிஸ்தான் வரிசையில் காத்திருக்கிறது.

    உலகத்தின் ஜாம்பவான் என்று சொன்ன சீனாவின் இந்த ஆண்டு GDP 3.3% என உலக வங்கி யூகித்துள்ளது. அது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோடமான ஒன்று! சீன வங்கிகளில் அதிக பட்ச வங்கி வட்டி 5%. ஆனால் ஊரக வங்கிகள் போல சில வங்கிகள் 9% வரை வட்டி கொடுத்தது. அதனால் பலர் தங்கள் சேமிப்பை அந்த வங்கிகளில் முதலீடு செய்தார்கள். எக்கச்சக்கமான பணம். அதை குறைந்த பட்சம் 15% வட்டிக்கு கொடுத்தால்தான் வங்கி நடத்த முடியும் என்ற சூழலில், அதை வாங்க தொழில் துறையினர் முன்வரவில்லை. அதனால் ரியல் எஸ்டேட்டில் உள்ளவர்களுக்கு ரிஸ்க் எடுத்து கடன் கொடுக்க வேண்டிய கட்டாயம். சீனாவின் 27% முதலீடும், வருமானமும் ரியல் எஸ்டேட் சார்ந்தே இருந்ததாம். அதன் மூலம் பல முதலீடுகள், வானுயர்ந்த கட்டடங்கள் என்று அதன் வளர்ச்சி உச்சத்தை தொட்டது.

    அப்போது கொரானா எனும் அரக்கனை உருவாக்கிய சீனாவிற்கு மிகப்பெரிய பிரச்சினையை சில மாதங்கள் சீனாவிற்கு கொடுத்தாலும், அது முதலில் தாக்கத்தை கட்டுப்படுத்தி வெளியே வந்து அதன் உற்பத்தியை தொடங்கியது. ஆனால் உலகம் முழுதும் கொரானாவால் தாக்கம் கொண்டு அது உற்பத்தி செய்த பொருட்களை வாங்க சந்தை இல்லாமல் போய்விட்டது. பொருட்கள் அத்தனையும் தேக்கம். Supply Chain ப்ராப்ளம் என்று ஒன்றன் மீது ஒன்றாக வந்த அதற்கு மிகப்பெரிய மழை வெள்ளம் ஒரு பெரிய சேதத்தை உண்டாக்கி விட்டு சென்றுவிட்டது. எல்லோர்க்கும் ஒரளவு கொரானா வந்த ஓய்ந்தபின் சீனாவிற்கு அதன் தரமில்லாத தடுப்பூசிகளால் மீண்டும் கொரானா வலம் வந்தது. அதன் பரவல் மோசமானதாக இருக்க, அதை கட்டுப்படுத்த முடியாமல் போய் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. விளைவு மேலும் தொழில்கள் நசிந்தன.

    இப்படிப்பட்ட சூழலில் தொழில்கள் பாதிப்பால் மக்கள் வருமானம் இழக்க, ரியல் எஸ்டேட் படுத்தேவிட்டது. அப்படியெனில் அதில் போடப்பட்ட முதலீடுகள் வருமானமின்றி நின்றதால், அவர்களால் வட்டி கட்சி முடியவில்லை. அதனால் வங்கி டெபாஸிட்தாரர்களுக்கு வட்டி கொடுக்க முடியவில்லை. அந்த சூழலில் வருமானம் இழந்த மக்கள் பயந்துபோய் தங்கள் தொகைகளை வெளியே எடுக்க முயல, அங்கே பணமில்லாமல் 6 வங்கிகள் திவாலான நிலையில் உள்ளது. அதாவது மோடி கார்ப்பொரேட்டுக்கு கடன் கொடுக்கிறார் என்று சொன்ன உண்டியல் குலுக்கிகளின் எஜமான் கடன் கொடுத்தது அதே கார்ப்பொரேட்களுக்கு என்பதை பற்றி புரியாத அறிவுஜீவிகள் அவர்கள்.

    இந்த சூழலில் கொரானாவிற்கு பின்பு, சீனாவின் நம்பகத்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டதால், பல நாடுகள் சீனாவிடம் வர்த்தகத்தை குறைத்தது அல்லது அடியோடு நிறுத்தியது. சீனாவோ அதுவரை தன்னிடம் இருந்த அளவுக்கு அதிகமான பணத்தை உலக நாடுகளுக்கு கேட்டதற்கு அதிகமாக கடன் கொடுத்து மிக அதிக வட்டி வாங்கியது. அதில் இலங்கை, பாகிஸ்தான் போன்ற பல நாடுகள் திவால் ஆக, அதற்குரிய சொத்துக்களை அடமானமாக பெற்றது. உதாரணம் அம்பந்தோட்டா துறைமுகம். ஆனால் அவை யாவும் வருமானமில்லாத டெட் இன்வெஸ்மெண்ட் ஆக, சீனாவின் வருமானம் எல்லா வகையிலும் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது.

    இந்த நிலையில், நவம்பர் மாதம் சீன அதிபர் சின்பிங் பதவியை மீண்டும் தேர்ந்தெடுக்க கம்யூனிஸ்ட்டின் உயர் மட்ட குழு கூடுகிறது. இந்த சூழலில் அதன் பொருளாதாரம் 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலை. இந்தியாவிடம் மோதி அங்கு வாங்கிய செருப்படியில் ஆரம்பித்து ஒன்றன்பின் ஒன்றாக அதை தாக்குகிறது. இப்போதய சூழலில் அத்தனை பிரச்சினையையும் மறைக்க வேண்டுமெனில் தைவானை தன் வசப்படுத்தினால் மட்டுமே அதை அரசியல் ஆக்கி சீன அதிபர் கரை சேர முடியும்.

    உக்ரைனைப்போல அமெரிக்கா நேரடியாக போரில் குதிக்காமல் விட்டுவிட்டால் அதை வைத்து சமாளித்துவிடுவார். ஆனால் உக்ரைனுக்கு நான் இருக்கிறேன் என்று தூண்டிவிட்ட அமெரிக்காவால், உகரைன் நிலை என்ன? ஒரு வேளை நாளை தைவானையும் அதனால் காக்க முடியாமல் போய்விட்டது என்றால், அதன் நம்பகத்தன்மை பெரும் அடிவாங்கும், வல்லரசு என்பது கடந்த கால சரித்திரமாகிவிடும். எனவே அமெரிக்கா திருப்பி தாக்கினால், உலகம் முழுவதும் எதிரிகளை கொண்டிருக்கும் சீனாவின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏறிவிடும். சுருக்கமாக அதன் கம்யூனிச சாம்ராஜ்ய வீழ்ச்சி என்பது போர் தொடுத்தாலும், தொடுக்கா விட்டாலும் தவிர்க்க முடியாதது.

    ரஷ்யா கேஸ் கொடுக்காததால் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகள் மிக மோசமான சூழலை சந்தித்துள்ளது. அதுவும் வரப்போகும் கடும் குளிர் காலத்தில் ரஷ்யா எரிவாயு கொடுக்கவில்லை என்றால் மக்கள் குளிரில் சிக்கவேண்டிய சூழல். அப்படி நிகழ்ந்தால் 6% பொருளாதாரம் ஜெர்மனி போன்ற வளமான நாடுகளுக்கே அடிவாங்கும் என்று உலக வங்கி சொல்லியிருக்கிறது.

    அமெரிக்கா ஒவ்வொரு மோசமான காலங்களில் போர்கள் மூலம் கச்சா எண்ணெய் விலை ஏற்றி, செயற்கையாக டாலர் டிமாண்ட் கிரியேட் செய்து பிழைத்து வந்த அதற்கு, இப்போது இந்தியாவும, சீனாவும் ரூபாய், ரூபிளில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் அந்த வழியும் அடைபட்டு விட்டது. அமெரிக்காவில் 40 ஆண்டுகளாக இல்லாத விலைவாசி ஏற்றம், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    எனவே இந்த முறை உலகம் முழுதும் இருள் சூழ்ந்துள்ள வேலையில், தொழில்கள் பெருமளவு நசிபடும், அது நம்மைப்போல நடுத்தர மக்களைத்தான் வெகுவாக பாதிக்க வாய்ப்புகள் உண்டு. இந்தியாவின் வளர்ச்சி கிட்டத்தட்ட 8% ஆக இருந்தாலும், மேற்குலக நாடுகளை சார்ந்திருக்கும் IT Industry போன்ற முக்கியமான துறைகள் வருமானத்தை இழப்பதால், பெரும் நசிவும் அதனால் வேலை இழப்புகளும் இந்தியாவிலும் இருக்க வாய்ப்புகள மிக அதிகம்.

    இது ஏதோ பயமுறுத்தல் என்று நினைத்தால், அது தவறு! இது போன்ற சூழல்களில் உங்களிடம் குறைந்த பட்சம் 18 மாதங்கள் உங்கள் குடும்பத்தின் அடிப்படை தேவையை நிவர்த்தி செய்யும் அளவுக்கு பணம் உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். எனவே தேவையற்ற செலவுகளை செய்யும் முன் பல முறை யோசியுங்கள்.

    எனவே உலகளாவிய இந்த Recession தடுக்க முடியாதது என்று சொல்ல முடியாவிட்டாலும், நாம் செய்ய வேண்டியது சேமிப்பு, தேவையற்ற செலவுகளை தவிர்த்தல் போன்றவை மிக முக்கியம். ஒரு வேளை அது நடக்கவில்லை என்றால், அந்த சேமிப்பு உங்களோடுதான் இருக்கும். அதுவும் நம்மில் சிலர் செய்வதுபோல சேமித்தல் என்று முழுவதையும் ரியல் எஸ்டேட்டில் போட்டுவிடாதீர்கள்.

    வாழ்க்கையில் எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும்போது நானே கடவுள் என்ற மிதப்பு நமக்கு வந்துவிடும், அதை புரியவைக்க ஈசன் அவ்வப்போது நடத்தும் பாடம். ஒரு வேளை அதை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், வீழ்ந்து விடாதீர்கள். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை மிக அவசியம்! அதே சமயம், நம் பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வேண்டி மேலும் தேவையற்ற செலவுகளை செய்ய முயலாதீர்கள், இது ஒன்றும் குற்றம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நம்மை சுற்றியுள்ளவர்களை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு!

    பேராசை பெரு நஷ்டம் என்பது சீனாவிற்கு மட்டுமல்ல, நமக்கும் பொருந்தும்.

  73. உபிக்கள் மறுபடியும் தங்களுக்கு ஒரு மண்ணும் விஞ்ஞானம் தெரியாது என நிரூபித்து கொண்டிருக்கின்றன, 2ஜி ஏலம் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு கணக்கிடபட்டது, இப்பொழுது 5ஜி ஏலம் 10 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டுமே ஏன் செல்லவில்லை என முஷ்டி தூக்க தொடங்கிவிட்டன‌

    அவைகள் அறிவு அவ்வளவுதான் என்றோ அல்லது பாவம் அவர்கள் என சொல்லிவிட்டு நகரவேண்டியதுதான் என்றாலும் உண்மையினை சொல்ல வேண்டும்

    உலகில் விலைவாசி ஏற்றம் என்பது பல விஷயங்களுக்கு உண்டு, அதே நேரம் சில விஞ்ஞான விஷயம் தலைகீழாக மாறும்

    இங்கு தங்கம், நிலம், உணவு என விலைவாசி ஏறும். வீடு, தோட்டம் என விலை உயரும் அது உயர்ந்துகொண்டேதான் செல்லும் அதன் தன்மை வேறு

    ஆனால் விஞ்ஞான விஷயம் நாளுக்கொரு வடிவம் எடுப்பவை இதனால் மிக பெரிய வீழ்ச்சியினை அவை சந்திக்கும்

    உதாரணத்துக்கு 10 வருடத்துக்கு முன் ஒரு செட் பரோட்டா என்ன விலைக்கு விற்றது என்பதையும் இப்பொழுது விற்கும் விலையினையும் ஒப்பிட்டால் அது இப்பொழுது விலை பன்மடங்கு ஆகியிருக்கும்

    அதே நேரம் 10 வருடம் முன்பு போன் அழைபுக்கான விலை அதாவது உள்ளூர் அழைப்பு முதல் சர்வதேச அழைப்பு வரை இருந்த போன் அழைப்புக்களும், இணைய கட்டணமும் ஒப்பிட்டால் இன்று அந்த விலை எவ்வளவு குறைந்திருக்கின்றது என்பதும் தெரியும்

    இணையம் எவ்வளவு சல்லி விலையில் கிடைக்கின்றது என்பதும் எல்லோரும் அறிந்தது

    முன்பு சில நொடி சேவைக்கே பெரும் தொகை கொடுத்த காலத்தில் இப்பொழுது 30ஜிபி சல்லிவிலையில் கிடைப்பதை உணரலாம்

    முன்பெல்லாம் செல்போன் வரும் அழைப்பு செல்லும் அழைப்புக்கு காசு வாங்கியது, பின் செல்லும் அழைப்பும் காசானது, இப்பொழுது எல்லாமே இலவசம், உலகெல்லாம் இலவசம்

    இதுதான் தயிர்வடைக்கும் டெக்னாலஜிக்கும் உள்ள வேறுபாடு

    அந்நிலையில் 10 வருடத்துக்கு முன் இருந்த விலையினை 5ஜி ஏலம் தொட்டிருப்பதே பெரிய விஷயம்

    இன்னொன்று இந்த 5ஜி பெரும்பாலும் நிறுவணங்களின் உள்கட்டமைப்புக்கு தேவைபடுவது இதன் பலன் மறைமுகமாகத்தான் மக்களை அடையும்.

    ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல், கையில் போன் இருந்தும் அது கடந்துவந்த விலைவாசி கூட அறியாமல் அல்லது மறந்துவிட்டு, தொலைதொடர்பு விஷயம் நாளுக்கு நாள் விலைகுறையும் என்பது கூட தெரியாமல் அவர்கள் பேசுவதெல்லாம் உச்சகட்ட அபத்தம்

    பாவம் அவர்கள் அவர்களுக்கு தெரிந்த பகுத்தறிவும் விஞ்ஞானமும் அப்படித்தான்.

    தொலைதொடர்பு அலைவரிசை விலையும் தமிழக வோட்டு விலைபோல் ஏறிகொண்டே இருக்கும் என்ற நினைப்பிலே இருப்பார்கள் போல..

    அவர்களுக்கு அவர்கள் பிக்பிரதர் பாணியில்தான் சொல்லவேண்டும்

    “விஞ்ஞானத்தை பற்றி பேசினால் உபிக்கு புரியாது, ஆனால் கருணாநிதிக்கு பிடித்தது தயிர்வடை என்பான்”

  74. அசிங்கப்பட்ட சீனா!

    தைவான் விஷயத்தில் டோட்டலா இமேஜ் டேமேஜ் ஆகி அசிங்கப்பட்ட சீனாவும், விளையாடிய அமெரிக்காவும்!

    அமெரிக்காவின் நான்ஸி பெலோஸி, சபாநாயகர், அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு அடுத்து மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். அவர் இன்று மட்டுமல்ல, தியான்மென் சதுக்கத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனம் முதல், ஹாங்காங்கில் பிரச்சின்னை வெடித்தபோது அங்கு சென்றது வரை தீவிர சீன எதிர்ப்பை கொள்கையாக்கியவ்ர். அப்படிப்பட்ட் அவர் தைவான் செல்வதாக அறிவித்தார். அதற்கு சீனா, தைவான் என்னுடைய தீவு, அங்கே வந்தீன்னா உன்னுடைய விமானத்தை குருவி சுடரமாதிரி சுட்டு தள்ளிடுவேன் என்று இதுவரை வெளியே காட்டாத தன்னுடைய சூப்பர் சானிக் ஏவுகணையான DF 17, விமான படையில் Mighty Dragan என்ற J20, விமானந்தாங்கி கப்பல் என்று தென் சீனக்கடலில் தைவானை சுற்றி நிறுத்தியது. அது மட்டுமல்ல தனது முப்படைகளை அருகில் செலுத்தி மிலிட்டரி எக்ஸர்சைஸ் எல்லாம் செய்து பாவ்லா காட்டி பயமுறுத்தியது. அது காட்டிய ஆக்ரோஷத்தை பார்த்தால் கைப்புள்ள இந்த முறை என்ன செய்யப்போறானோ என்ற அளவில் அதன் பில்டப் இருந்தது.

    ஒரு நிலையில் அமெரிக்கா பின் வாங்கும் ஒரு நிலை கூட ஏற்பட்டது.
    ஆனால் முன்னால் ஜனாதிபதி ரொனால்ட் டரம்ப், அமெரிக்கா தன் கௌரவத்தை காக்க இப்போது இதை செய்தே ஆகவேண்டும், பின் வாங்கக்கூட்டாது என்று ஆதரவும், அதிபருக்கு நெருக்கடியும் கொடுத்தார். சிறு தயக்கம் காட்டிய அமெரிக்கா, இதில் பின் வாங்கினால் ஏற்கனவே உக்ரைன்ல ரஷ்யாவால் டேமேஜ் ஆன இமேஜ், மேலும் கிளிஞ்சுடும் என்று நான்ஸியின் சிங்கப்பூர், மலேசியா பயணத்தை முடித்துக்கொண்டு தென் சீனக்கடலை தவிர்த்து விட்டு, பிலிப்பைன்ஸ் வழியாக அமெரிக்க ஏர்போர்ஸுக்கு சொந்தமான பாதுகாப்பான விமானத்தில் நேற்றிரவு தாய்ப்பேய் (தைவான்) சென்று சேர்ந்துள்ளார். அவரது விமானத்தின் பயணத்தை உலகம் முழுதும் ஆன்லைன் ஃப்ளைட் ட்ராக்கிங் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டு இருந்தனர் என்றால் அதன் பதட்டம் உங்களுக்கு புரியும்.

    மேலும் நான் உன்னை சும்மா விட மாட்டேன் என்று அதன் நவீன ரக விமானம் தைவான் வான் எல்லையில் நுழைய, தைவான் வார்னிங் ஃபயர் கொடுத்தது. டுபாக்கூர் சீனா, வழக்கம்போல வீதிக்கு வந்துட்டயா, என் வீட்டுக்கு வந்து பார் என்ற வடிவேலு தொனியில் பேசி எஸ்கேப் ஆகி அசிங்கப்பட்டது.

    ஏன் சீனாவல் இதை செய்ய முடியவில்லை?

    ஏற்கனவே இந்திய எல்லையில் ராணுவ வீரர்களோடு முஷ்டி காட்டிய சீனா, வாங்கிய அடி அதன் வேஷம் கலைத்த முதல் அடி, அதன் மூலம் வெற்று உதார் என்பதை உலகம் அறிந்தது. காரணம் அதன் மிகச்சிறந்த ஆயுதங்கள், அதன் மிகப்பெரிய ராணுவம் என்று என்று சொல்லப்படும் எதுவுமே போர்களின் மூலம் சோதிக்கப்பட்டதல்ல. அதன் PLA ஆர்மி என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் ரவுடிகளைவிட மேலானது. அதனால்தான், நமது இந்திய ராணுவ வீரர்கள் வெறும் 80+ பேர், 340+ சீன ராணுவத்தை அடித்து துவம்சம் செய்தனர்.

    சீனாவின் சோப்லாங்கி டெக்னாலஜி என்பது எவ்வளவு டுபாக்கூர் என்றால், அதன் வான் பாதுக்காப்பு கவசம், அமெரிக்காவிடம் கூட இல்லாத சூப்பர்சோனிக் ஏவகணையைக்கூட சுட்டுத்தள்ளும் திறமை வாய்ந்தது என்று சென்ற வருடம் வரை கூவி வந்தது. அதனால் நமது பிரம்மோஸ் ஏவுகனையை வாங்க சீனாவின் எதிரி நாடுகள் தயக்கம் காட்டின. ஆனால் இந்தியா பாகிஸ்தானில், சீன வான்காப்பில் உள்ள அதன் எல்லையை மீறி 124 கிமீ பறந்து சென்று விழுந்தது நியாபகம் இருக்கிறதா? அதன் மூலம் சீனாபின் HQ-9 வான் பாதுகாப்பு ஒரு தீபாவளி புஷ்வானம் என்றாகி அப்போதே அசிங்கப்பட்டது. அது ஏதோ தவறுதலாக நடந்துவிட்டது என்று சொன்னாலும், அது திட்டமிட்டு இந்தியாவால் செயல்படுத்திய சோதனைதான். அதை அமெரிக்காவும் நன்கு அறியும்! அதன் பின்பு பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கியது. அது மட்டுமல்ல நமது Su-27 மிக் போர் விமானம் ஒவ்வொரு மாதமும் பாகிஸ்தானில் மட்டுமல்ல, சீனாவிலும் நுழைந்து வேவு பார்த்து திரும்பியுள்ளது. இது பற்றி விரிவாக அறிய என் முந்தைய பதிவை பார்க்க!
    https://m.facebook.com/story.php?story_fbid=5428476123852970&id=100000719089058

    அடுத்து சீனாவிற்கு உண்மையான நண்பர்களே இல்லை. இப்போதைக்கு நண்பர் என்று சொல்லும் ரஷ்யா ஏற்கனவே உகரைன் போரில் இருக்கும் அது சமயம், அதனால் சீனாவிற்கு உதவ முடியுமா? அதுவும் அதன் இன்னொரு நண்பனான இந்தியா முதல் உலகமே எதிர்க்கும் சீனாவை காப்பாற்ற சென்றால், அதற்கு இப்போது பொருளாதார ரீதியில் ஆதரவு தரும் இந்தியா தொடர்ந்து செய்யுமா? வட கொரியா வந்தால், அதை கவுண்டர் செய்ய தென்கொரியா உடனே அதை தாக்கும். ஆனால் சீனாவை சுற்றியுள்ள நாடுகள் எல்லாம் அதன் மிக மோசமான ஆறாத பகை கொண்ட நாடுகளே.

    அப்படி இருக்க, சீனா, தைவானை தாக்கினால் அதன் முழு படைகளை கிழக்கு எல்லைக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி கொண்டு சென்றால், இந்தியா அதற்காகத்தான் மேற்கில் காத்திருக்கிறது. கிழக்கில் அதன் போர் உச்சத்தை அடையும் பட்சத்தில், சீனாவின் சோதிக்கப்படாத பல தளவாடங்களின் உண்மை நிலையை உலகம் அறியும். அப்போது, 1962 ஆண்டு யுத்தத்தில் மாமா நேருவால் இழந்த கிழக்கு லடாக்கில் இந்திய படைகள் நுழைந்து அதை கைப்பற்றும். சீனா ஆக்கிரமித்துள்ள தீவுகளை ஜப்பான் கைப்பற்றும். சீனாவின் கரங்கள் தாளும் நிலையில் வியட்நாம், மங்கோலியா போன்ற 13 நாடுகளின் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தனது நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றும்.

    இப்படி பல எதிரிகள் இருந்தாலும், நேரடியாக களத்தில் இறங்கி அடிக்கும் இந்தியா என்ற ஒரே காரணத்தால்தான் அமெரிக்கா, இந்தியாவை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் அதற்கு உள்ளது. அதனால்தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினாலும், பொருளாதார தடையெல்லாம் போடவில்லை. ஆம் சீனாவை நேரடியாக எதிர்கொள்ள இந்தியாவைத்தவிர வேறு எந்த நாடுகளும் இல்லை என்ற பட்சத்தில், ஒரு வேளை சீனா நாளை தைவானை தாக்கினால், அதை ஒடுக்க இந்தியாவின் தயவு மிக அத்யாவசியம். அது மட்டுமல்ல அருகில் இருக்கும் ஒரு நாட்டின் மிலிட்டரியால் மட்டுமே சீனாவின் எல்லையில் உடனே எளிதாக நுழைய முடியும். இல்லாவிட்டால் தனது படைகளை அமெரிக்காவில் இருந்து சீனாவை நோக்கி நகர்த்துவது என்பது அசாதாரணம். இன்னும் சொல்லப்போனால், ஜப்பான் ஒரு சக்தி வாய்ந்த நாடாக இருந்தாலும், இந்தியாவைப்போல அதனால் சீனாவை தாக்க முடியாது.

    அதே வேளையில், சீனாவின் வீழ்ச்சி தொடங்கினால், திபெத் சுதந்திரத்தை அறிவிக்கும், ஜின்ஷியாங் போன்ற பல பகுதிகளில் இருக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் மாறி பெரும் உள் நாட்டு கலவரம் வெடிக்கும். சீனா உடைந்து சின்னாபின்னமாகும்.

    அதனால சீனாவோ தனது விமானந்தாங்கி கப்பலை தைவானை நோக்கி நிறுத்திவிட்டு, அதன் வான் எல்லையில் நுழைந்து வெறும் உதார் காட்டியுள்ளது. அங்கே ஏற்கனவே அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல் அங்கே நிற்பதால், அதற்கு மேல் ஒன்றும் செய்து விட முடியவில்லை. என்ன செய்வது, விவசாய மற்றும் கடல் சார்ந்த பொருட்களை தைவானிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு தடை செய்துள்ளது. அதாவது தன் நாட்டின் பகுதி என்று சொல்லும் சீனா, அதன் பகுதியையே தடை செய்யும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

    வடிவேலு ஸ்டைலில் என் வீட்டுக்கு வந்து பார் என்றளவில் பின்வாங்கியதால், இப்போதைக்கு சீனா இமேஜ் டோட்டலி டேமேஜ், அடுத்த என்ன நடக்கும் என்று உலகமே பார்த்துக்கொண்டு இருக்கிறது. இத்தோடு விட்டுவிட்டால் முடிந்து விடுமா என்றால், தேவையில்லாமல் அமெரிக்காவை சீண்டி அசிங்கப்பட்டதற்காக, சீன அதிபருக்கு உள் நாட்டிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் எதிர்ப்பு பலமாகும். இதெற்கெல்லாம் காரணம் அதன் பொருளாதாரமே என்ற சூழலில் அதன் வாணிபம் ஏற்கனவே உலக நாடுஜள் புறக்கணிக்க தொடங்கியதால் சரிய தொடங்கிவிட்ட சூழலில், மேலும் அதிக அளவில் பாதிக்கும், அது கோவிட்டிற்கு பின்பு தொடங்கிவிட்ட சரிவை சந்தித்து வரும் வேளையில், சீனாவின் சரிவு மேலும் எல்லா மார்க்கங்களிலும் தவிர்க்க முடியாதது.

    எனவே சீனா இதை எளிதில் விட்டுவிடாது. உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு பின் வாங்கியதுபோல, தைவானுக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் இறங்காது என்ற நம்பிக்கை அதற்கு உண்டு. ஆனால் அதை நம்பி தாக்கினால், அமெரிக்கா போரில் குதித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்வேறு. அதாவது திரிசங்கு சொர்க்கம் என்று முன்ன போனால் கடிக்குது, பின்ன வந்தா உதைக்குது என்று குழம்பிய நிலையில் சீனா இருக்கிறது.

    இது உலகின் புதிய சமன்பாட்டை செய்யப்போகும் முக்கியமான கட்டம் என்பதால் நான்ஸி போன விமானத்தை உலகம் .முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. இப்போதைய சூழலில் அமெரிக்காவின் கரங்கள் உயர்ந்துள்ளது. ஆனால் முடிவு எதுவாக இருந்தாலும் அதன் மூலம் நேரடியாக பயன்பெறப்போவது இந்தியாவே..சுவாராசியமான கட்டத்தில் இப்போது சீனாவும், அமெரிக்காவும்.. அடுத்து என்ன நடக்கப்போகிறது? உலகமே.கூர்ந்து கவனிக்கிறது, நாமும் கவனிப்போம்!

  75. இந்திய சுதந்திர வரலாறு : 03

    குப்த அரசு சில நூற்றாண்டுகளில் அதாவது 600களில் சரிய தொடங்கியபொழுது பாரத கண்டத்தின் பாதுகாப்பு நிலை குலைந்தது, இந்த பெருங்கண்டத்தில் ஒரு பெரும் அரசு நிலைக்கும் வரை பாதுகாப்பாய் இருக்கும் தேசம் அந்த அரசு சரிந்தவுடன் சிக்கலை சந்திக்கும்

    அப்படி ஆங்காங்கே சிற்றரசுகள் உருவாயின, இந்த சிறிய குழுக்களை அடித்து நொறுக்கி இந்தியாவினை கைபற்றுவது பலம் வாய்ந்த அன்னிய ஊடுருவல் கும்பலுக்கு எளிதாயிற்று

    (இங்கு சிலர் ஏன் வட இந்தியா வரலாறு பேசுகின்றாய் தென்னிந்திய வரலாறு பேசவில்லை என்றால் நாம் கடலால் மிகவும் பாதுகாப்பாக இருந்தவர்கள், 13ம் நூற்றாண்டு வரை இங்கு எந்த சிக்கலுமில்லை

    வடக்கே தான் நிலவழி தொடர்பு இருந்தது, அந்த வட இந்தியர்தான் நமக்கு காவலாய் இருந்தனர், 13ம் நூற்றாண்டில் அவர்கள் சரிந்தபின்புதான் திருவரங்கம், மதுரை, தஞ்சையெல்லாம் ஆப்கானியரால் சூறையாடபட்டது

    ஆம், அவர்கள்தான் நம் காவல்

    அன்றல்ல அதன் பின்புமல்ல இப்பொழுதும் எல்லையில் போர் என்றால் அவர்கள்தான் நம் காவல், நாம் மாலிக்காபூர் , துக்ளக் காலங்களை தவிர கொடிய காலம் எதையும் சந்திக்கவில்லை ஆனால் அவர்கள் உயிரை கொடுத்து கொடுத்து நம்மை காத்தார்கள்

    நிச்சயம் அவர்கள் இல்லையென்றால் இன்று ஆப்கானின் தொடர்ச்சியாக தமிழகம் மாறியிருக்கும் வாய்ப்பு உண்டு, அதனால்தான் இந்திய சுதந்திரபோரில் பெரும் யுத்தம் செய்த அவர்கள் வரலாறு முன்னால் நிற்கின்றது)

    இனி இந்தியா ஹூணர் கூட்டத்திடம் விழும் என பெரும் அச்சம் ஏற்பட்டபொழுதுதான் இன்றைய குருஷேத்திரம் அருகே தானேஸ்வரத்தை தளமாக கொண்டு ஒரு பலமான அரசு எழும்பிற்று அதை எழுப்பியவர்கள் ஆதித்தவர்த்தனும் அவர் சகோதரர் சூரியவர்த்தன் என்பவரும்

    இருவரும் சிவபக்தர்கள், மிக இறுக்கமான பக்தி கொண்ட சிவபக்தர்கள், சிவவழிபாட்டை காக்க வாளேந்தியவர்கள்

    அவர்களுக்கு பின் ராஜ்யவர்த்தனர் அரியணை ஏறினார், பல சிற்றரசுகளை அடக்கி ஒரு பெரும் அரசன் எழும்போது பெரும் சவால்களை சந்திக்கவேண்டும், அந்த சவாலில் ராஜ்யவர்த்தனர் கொல்லபட்டார்

    அப்பொழுதுதான் 16 வயதான ஹர்ஷர் அரியணை ஏறினார், அவரின் ஆற்றலும் அறிவும் விக்கிர்மாதித்தன், போஜ மன்னன், ராஜராஜ சோழன் , ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் போல பிரமாதமாய் இருந்தது மிக சிறிய வயதிலே எதிரிகளை ஒழித்து கட்டினான் அந்த சிவபக்தன்

    அவனின் அரசுதான் ஹூணர்களை விரட்டி அடித்தது, மேற்கே சிந்துமுதல் கிழக்கே வங்கம் வரை பிரமாண்ட அரசை அமைத்தான் ஹர்ஷவர்த்தன‌

    அந்த அர்சு மிக வலுவாய் இருந்தது, அவன் படையில் சுமார் 60 ஆயிரம் யானைகள் இருந்தன, லட்சகணக்கான குதிரைகள் இருந்தன, மிகபெரிய பலத்தோடு அவன் ஆளும்பொழுது அந்நியர் அடித்துவிரட்டபட்டனர்

    ஹூணர்கள் எனும் மத்திய ஆசிய இனம் இந்துகுஷ் மலைக்கு அப்பால் விரட்டபட்டது

    இந்த ஹர்ஷன் காலத்தில்தான் யுவான் சுவாங் இந்தியா வந்தான், அவன் எழுதிய குறிப்புகளில் இந்தியாவினை எவ்வளவு வளமான பலமான நாடாக ஷர்ஷர் ஆக்கியிருந்தான் என்பது தெரிகின்றது

    ஷர்ஷர் சத்திரியவம்சம் அல்ல என்பதும் அவன் வைசிக வம்சம் என்பதும் தெரிகின்றது

    யுவான் சுவாங்கின் குறிப்புகளே ஹர்ஷரின் பிரமாண்ட சாதனைகளை பறைசாற்றி நிற்கின்றன‌

    ஹர்ஷர் புத்தமத்தை தழுவினார் என்பார்கள் அதுபற்றி உறுதியான தகவல் இல்லை சீனா போன்ற சில அரச நல்லுறவுக்காக பவுத்தத்தை அவன் நல்லமுறையில்நடத்தினான் என்பதே வரலாறு, ஒரு சிவபக்தனாகவே அவன் அறியபடுகின்றான்

    ஹர்ஷர் இந்தியா முழுக்க பெரும் ஆளுமை செலுத்தினார் சுமார் 50 ஆண்டுகள் அவர் நேரடியாக ஆண்டார், அவருக்கு சில 100 ஆண்டுகள் அந்த சாம்ராஜ்யம் நிலைத்தது

    இந்நிலையில்தான் கிபி 700 வந்தது

    அப்பொழுதுதான் அரேபியாவில் நபிபெருமான் காலம் தொடங்கிற்று, அதுவரை சிறு சிறு குழுக்களாக இருந்தவர்கள் ஒரே அணியில் இஸ்லாம் என எழுந்தார்கள், அவர்களுக்கு கலீப்பாக்கள் எனும் தலைவர் இருந்தார்கள்

    கலீப்பாக்களின் ஆட்சி வரலாற்றில் குறிப்பிடதக்க ஒன்று, நபிபெருமான் ஒரு மதபோதகராக அறியபட்டாலும் அவர் போதனையினை பின்பற்றிய கூட்டம் பெரும் சக்தியாய் எழும்பிற்று

    இன்றைய ஈரான் முதல் மேற்கே எகிப்து, லிபியா, மொராக்கோ தாண்டி ஸ்பெயின் வரை அவர்கள் பெரும் சாம்ராஜ்யம் அமைத்தார்கள்

    இந்த் சாம்ராஜ்யத்தை இந்தியாவிலும் விரிவுபடுத்த நினைத்தார்கள்

    இந்தியா அடுத்த சோதனையினை எதிர்கொண்டது

    கிரேக்கம், சாகர்கள், ஹூணர்கள் என எதிர்கொண்ட இந்தியா இப்பொழுது கலீப்பாகளின் பெரும் படையினை எதிர்கொண்டது

    மதம் மட்டும் மாறிவந்ததே தவிர வளமான இந்தியாவினை பிடித்து ஆளவேண்டும் எனும் அந்நியரின் ஆசைமட்டும் மாறவே இல்லை அது எல்லோருக்கும் பொதுவானது

    கலீபாக்களின் தளபதி முகமது பின் காசிம் முதன் முதலில் படையெடுத்து வந்தான், அவன் மாபெரும் வீரனும் யாரும் எதிர்க்கமுடியாதவனுமாய் இருந்தான்

    எதிரி எப்பவடிவில் வந்தாலும் அவனைபோல் ஒருவனை உருவாக்குவது இந்திய தர்மம், அப்படி இந்துதர்மம் ஒருவனை உருவாக்கிற்று அவன் பெயர் பப்பா ராவல்

    அந்த காசிமின் படை பெரியது ஸ்பெயின் முதல் இன்றைய ஆப்கன் வரை பரவியிருந்த பெரும் அரசு, லட்சகணக்கான படைகளும் மிகபெரும் பலசாலிகளும் கொண்ட முரட்டு படை அது

    அந்த படையினை பாப்பா ராவல் எதிர்கொண்டபொழுது அவனிடம் இருந்த படை வெறும் 40 ஆயிரம்

    ஆம், அப்பொழுது இந்திய எல்லைபகுதிகள் கலீபா வசம் சென்றது ஒவ்வொரு சிற்றரசாக பிடித்து இந்தியாவினை மின்னல் வேகத்தில் கங்கை கரை நோக்கி முன்னேறினார்கள்

    அப்பொழுதுதான் அவர்களை முறியடிக்க தைரியமாக களமிறங்கினான் பாப்பா ராவல்

    மாபெரும் படையினை வெறும் 40 ஆயிரம் பேரோடு எதிர்ப்பது சாத்தியமா என்பது அவருக்கு குழப்பமாய் இருந்தது, ஆனால் வேற்வழியும் இல்லாமல் இருந்தது

    அந்த பாப்பா ராவலுக்கு ஒரு குருநாதர் இருந்தார், ஸ்ரீ கோரக்ஷநாதர் எனும் பாசுபத சைவப் பிரிவின் ஆச்சாரியர்

    ஸ்ரீ கோரக்ஷநாதர் சொன்னார், “பாவலே அஞ்சாதே, இது சிவபூமி இந்த நாட்டை சிவபக்தர் தவிர யாரும் நிலையாய் ஆளமுடியாது, சிவனின் சக்தியினை உணர பலர் வந்து அடிபட்டு திரும்புவார்கள் அதுதான் விதி

    அதை மாற்ற யாராலும் முடியாது, எத்தனை பேர் வந்து பிடித்தாலும் இத்தேசம் சிலிர்த்தெழுந்து அன்னியரை விரட்டி தன்னையும் தன் மதத்தையும் காத்து கொள்ளும

    எதிரிகள் எவ்வடிவில் வந்தாலும் அவனுகேற்ற வீரனை இம்மண் உருவாக்கும், இப்பொழுது உன்னை உருவாக்கியிருக்கின்றது, உன்னை வெல்வாருமில்லை உனக்கு தோல்வியுமில்லை”

    என்றவர் அவனுக்கு திருநீறு பூசி குக்ரி எனும் ஒரு வகை வீசும் கத்தியினை கொடுத்து அவருக்கு ஆசிவழங்கினார்

    அந்த ஆசியுடனும் திருநீற்றுடனும் குக்ரியுடனும் மாபெரும் கலீபா படையினை எதிர்த்து கிளம்பினான் அந்த ராவல்..

    அவனே கலீபாக்களை எதிர்த்த முதல் இந்திய இந்துவீரன்

    (தொடரும்)

  76. இந்திய சுதந்திர வரலாறு : 02

    அசோகரின் புத்த கொள்கையும் கொல்லாமையும் அஹிம்சையும் பெரும் பலவீனத்தை இந்தியாவுக்கு கொடுத்தது, இந்தியாவின் பெரும் அரசான அசோகரின் அரசு கொல்லாமையாலும் அஹிம்சையாலும் வீழ்ந்து பெரும் குழப்பத்தில் நாடு சிக்கியது

    அந்நேரம் கிரேக்க ஆட்சியும் வலுவிழந்தது, அலெக்ஸாண்டருக்கு பின் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் கிரேக்கம் முதல் ஆப்கன் வரை நின்ற கிரேக்க சாம்ராஜ்யம் வலுவிழந்து நொறுங்கியது

    அதில் பைசாண்டியர், பாக்ட்ரியா பல அரசுகள் ஆங்காங்கே தோன்றின, இன்றைய ஆப்கனை ஒட்டிய பகுதிகளில் இருந்தவர்கள் அப்படி கூடி இந்தியாவில் நுழைய முயன்றனர் அதில் வெற்றியும் பெற்றனர்

    அசோகருக்கு காலத்துக்கு பின் தேசம் தோல்வியில் தத்தளித்தது சாகர்கள் எனும் அந்நிய கிரேக்க மரபினர் எளிதாக முன்னேறி பல பகுதிகளை பிடித்து பெரும் ஆபத்தாய் எழும்பினர்

    கிமு 40 ஆண்டு காலங்கள் அவை

    இனி கிரேக்க கலப்பின கைகளில் இந்தியா வீழும் அந்நாட்டின் இந்துமதமும் கலாச்சாரமும் வீழும் எனும் கலக்கம் ஏற்பட்டது, காரணம் கால்வைத்த இடமெல்லாம் ஒருநாட்டின் மதத்தையும் கலாச்சாரத்தையும் அழிப்பது கிரேக்க பாணி

    அதை துருக்கி எகிப்து பாக்தாத் என எங்கெல்லாமோ செய்துவிட்டுத்தான் இந்தியாவுக்குள் வரபார்த்தபொழுது போரஸ் விரட்டினான், சாணக்கியனின் மவுரிய பேரரசு பெரும் சக்தியாய் அவர்களை தடுத்தது

    சுமார் 200 ஆண்டு கழித்து அதே அச்சறுத்தல் எற்பட்டபொழுது உஜ்ஜைனி காளி அருளில் ஒரு மாவீரன் உருவானான், அவன் இன்றளவும் ஆச்சரிய பிறப்பு

    அவனே விக்கிரமாதித்தன், காளியின் அருளால் தனி வீரனாக எழுந்த அவன் அந்த சாகர் கூட்டத்தை ஓட அடித்தான், அடித்தவம் மிகபெரும் இந்துராஜ்ஜியம் அமைத்து இந்துமதத்தையும் இந்நாட்டையும் காத்தான்

    அவன் இந்தியாவில் பெரும் சக்தியாய் எழும்பியபொழுதுதான் மேற்கே சீசரும் இன்னும் பலரும் எழும்பினார்கள், ஜூலியஸ் சீசரை விட பெரும் பராக்கிரமசாலியும் யாராலும் வெல்லமுடியாதவனுமாக இருந்தான் விக்ரமாதித்தன்

    உண்மையில் ரோமருக்கும் அதாவது ஜூலியஸ் சீசருக்கு பின்னரான அகஸ்டஸ் சீசர் காலங்களில் அவர்களும் அலெக்ஸாண்டர் பாணியில் இந்தியாவுக்குள் வரும் ஆசை இருந்தது, ஆனால் விக்கிரமாதித்தன் எனும் பெயர் அதனை தடுத்தது

    இக்காலத்தில் ரோமையர் கப்பல் தமிழகம் வந்தன, இங்கு மூவேந்தர்கள் பலமாக இருந்த காரணத்தால் சமத்தாக வியாபாரம் மட்டும் செய்தனர், ஆட்சி நிறுவ முயற்சிக்கவில்லை

    இந்த விக்கிரமாதித்தன் தன் தோளில் வேதாளத்தை போட்டு திரிந்தவன் என்பது ஒரு குறிப்பு

    விக்கிரமாதித்தனின் அரசு நூறாண்டுகள் நிலைத்த நிலையில் குஷான அரசு எழும்பிற்று, தொடக்கத்தில் அது இந்து அரசாகத்தான் மலர்ந்தது

    ஆனால் கனிஷ்கர் எனும் மன்னன் பின்னாளில் புத்தமதம் தழுவினான், எனினும் அசோகர் செய்த தவறை அவன் செய்யவில்லை, புத்தரின் கொள்கை வேறு அரசு ராஜ்ஜியம் வேறு என்பதில் சரியாக இருந்தான், அசோகரின் புத்தமத கருத்துகள் பலவற்றை அவன் மாற்றி வைத்தான்

    இக்காலங்களில் மேற்காசியாவில் ரோமர்களும் கிரேக்கர்களும் ஆங்காங்கே ஆண்டுகொண்டிருந்தனர்

    கனிஷ்கர் மிக பெரிய புத்த அபிமானி என்றாலும் இந்துமதத்தை அவன் வெறுக்கவில்லை வெறுத்தால் அது தன் ஆட்சிக்கு வீழ்ச்சியாகும் என கருதினான், ஆப்கானின் பிரமாண்ட புத்தசிலைகள் இன்னும் பல அவன் அமைத்தாலும் இந்துமதத்துகுரிய மரியாதையினை கொடுத்திருந்தான்

    பின்னாளில் அவனின் வாரிசுகள் இந்துமதம் புத்தமதம் என மாறி மாறி வந்தாலும் கடைசியில் பவுத்தம் வென்றது, அந்நேரம் அரசு மறுபடி சீரழிந்தது

    மேற்காசியாவில் இருந்து ஆப்கனில் இருந்தும் மறுபடியும் எதிரிகள் கூடினார்கள், வருடம் கிபி 350 முதல் 400ஐ எட்டிற்று

    இம்முறை அவர்கள் பலம் அதிகமாய் இருந்தது, ஆங்காங்கே கிறிஸ்தவமும் பரவிகொண்டிருந்தது, பெரும் பாய்ச்சலாக அவர்கள் இந்தியாவுக்குள் நுழையவரும்பொழ்து அதே உஜ்ஜைனி காளி இன்னொரு வீரனை உருவாக்கினாள்

    அவன் இரண்டாம் சந்திரகுப்தன்

    அவனின் எழுச்சி மிக பெரிதாய் இருந்தது , காளியின் அருளால் வெற்றிமேல் வெற்றிபெற்ற அவன் குப்த அரசு எனும் பிரமாண்ட இந்து அரசை தோற்றுவித்தான், அவன் முன்னால் நிற்கமுடியாமல் எதிரிகள் ஓடிமறைந்தனர்

    அவன் பெரும் தீர்க்கதரிசியாகவும் இருந்தான், வட நாடு முழுக்க அவன் கட்டுபாட்டில் இருக்க தென்னிந்தியா பக்கம் கடல்வழியாக எதிரிகள் வந்துவிட கூடாது என தக்காணத்தையும் தன் கட்டுபாட்டில் கொண்டுவந்தான் ஆனால் தென்னக மன்னர்களை அவன் அடிமையாக நடத்தவில்லை மாறாக அந்நியர் வராதவண்ணம் பார்த்து கொண்டான்

    இந்த இரண்டாம் விக்ரமாதித்தன் காலமே காளிதாசன் இருந்த காலம் என்கின்றார்கள்,

    அவன் மிகபெரும் பலமாய் இந்தியாவினை ஆண்டான் குபதர்க்ள் காலம் இந்தியாவின் பொற்காலம் எனும் பெரு நிலைக்கு ஆக்கிவைத்தான்

    இப்படி அன்னை காளியின் அருளால் இரு விக்கிரமாதித்தன்கள் உருவாகி நாட்டை காத்தார்கள், அந்நியரை புகவிடாமல் அடித்து இந்துமதமும் அதன் கலாச்சாரமும் அழியாமல் காத்தார்கள்

    இந்த இருவரால்தான் சுமார் 600 ஆண்டுகள் இந்தியா காக்கபட்டது, இருவரும் கொடுத்த அடிதளம் அப்படி. அதனில்தான் இந்துக்களுக்கு ஒரு நம்பிக்கையும் காவலும் இருந்தது, அன்னை உஜ்ஜைனி காளியின் அருள் அப்படி

    அவளே இந்த வீரர்களை உருவாக்கி இந்த இந்து பூமியினை காத்து கொண்டாள், இந்த இருவரும் இல்லையென்றால் இந்நேரம் இந்தியா திபெத், தாய்லாந்து, பர்மா போல முழு புத்தநாடாக இருந்திருக்கலாம் அந்நிலை முகமதியவர் வரும் வரையாவது நீடித்திருக்கலாம்

    விக்கிரமாதித்தன் பெயர் வரலாற்றில் ஏன் நிலைத்திருக்கின்றது என்பதும், இன்றும் இந்தியாவின் பாதுகாப்பு கப்பல்களுக்கு அவன் பெயர் ஏன் சூட்டபடுகின்றது என்பதும் சாதாரணம் அல்ல, அவர்கள் செய்த சாதனையும் கொடுத்த எழுச்சியும் அப்படி

    இக்காலத்தில்தான் ஆதிசங்கரர் போன்றோர் வந்து அவர்களால் இந்துமதம் புது வெளிச்சம் பெற்றது, ஆதிசங்கரரின் வரவுதான் பெரும் இந்து எழுச்சியினை கொடுத்து ராஜ்ஜியம் அமையவும் அடிதளமாயிற்று

    அப்பொழுது சரிந்த பவுத்தம் அதன் பின் பெரிதாக எழவில்லை

    குப்தர்காலம் ஓயும்பொழுது இன்னொரு புது எதிரி மத்திய ஆசியாவில் உருவானார்கள் அவர்கள் பெயர் ஹூனர்கர்கள்

    கிரேக்கர், சாகர்கள் இன்னும் பலர் முயன்ற அதேவழியில் சாகர்கள் இந்தியாவில் புகுந்தார்கள், மேற்கு பகுதிகள் அவர்கள் வசமாயிற்று

    அலெக்ஸாண்டர் வந்தால் சந்திரகுப்தன் வருவான், சாகர் முரட்டு கூட்டம் வந்தால் விக்கிரமாதித்தன் வருவான் அப்படி ஹூணர்கள் வந்தபொழுது கன்னோசி பகுதியில் ஒருவன் உருவானான், அவன் வயது வெறும் 17

    காலம் கிபி 600ஐ எட்டி இருந்தது, இந்துக்களுக்கும் இந்து தேசத்துக்கும் இடைவிடாத தொந்தரவுகள் அதன் செல்வத்தை முன்னிட்டு வந்தன‌

    இந்துமதம் எனும் வாழ்வியல் முறை இத்தேசத்தை அட்சயபாத்திரமாக வைத்திருந்தது, எவ்வளவு படையெடுப்பு வந்தாலும் அந்த இந்து வாழ்வியல் முறை தேசத்தை மறுபடி மறுபடி எழவைத்தது

    ஆம், அலெக்ஸ்டாண்டருக்கு பின் கிரேக்கம் இல்லை, சீசருக்கு பின் ரோம் இல்லை , செங்கிஸ்கானுக்கு பின் பெரும் அரசு நிலைக்கவில்லை அத்தேசங்கள் வறுமையில் சிக்கின‌

    ஆனால் இந்துமத இந்தியா எவ்வளவு அழிவினை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்தது, அதன் இந்துமத அடிப்படை வாழ்வும் அது கொடுத்த செல்வமுமே காரணம்

    அதுதான் அலெக்ஸாண்டருக்கு பின் 600 ஆண்டுகள் கழித்தும் அந்நியரை தேசத்துக்குள் வர துடிக்கவைத்தது

    கிரேக்கர்கள், சாகர்களை தொடர்ந்து ஹூணர்கள் வரும்பொழுது அந்த வீரன் எழுந்தான், இந்துமதம் அவனை எழுப்பிற்று, அவன் ஹர்ஷர் எனும் இந்துமன்னன்

    அவன் பவுத்தம் என்பதெல்லாம் வரலாற்று திரிபு, 17 வயதிலே பெரும் வீரம் காட்டிய அவன் ஹூணர்களை எதிர்த்து இந்துவாக களம் கண்டான்

    (தொடரும்)

  77. இந்தியாவில் எக்காலமும் பெண்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது, திறமையுள்ள பெண்கள் வெளிவரவும் சமூகபணி முதல் எல்லா பணிகளையும் செய்ய முழு வாய்ப்பும் வழங்கபட்டது

    ஏகபட்ட பெண்கள் அப்படி வந்து தேசத்துக்காய் உழைத்தார்கள், அவர்களில் ஒருவர்தான் பிகாஜி

    அவரின் இயற்பெயர் பிகாஜி, இதே நாளில் 1861ல் பம்பாயின் பார்ஸி இனத்தில் பிறந்த பணக்கார பிறப்பு. தேசபற்று அவரின் இயல்பில் இருந்தது

    குடும்பம் நிர்பந்தம் காரணமாக வழக்கறிஞர் ருஷ்டம் காமா என்பவரை திருமணம் செய்து மேடம் காமா என்றானார், தேசத்துக்காய் உழைக்கும் அவருக்கு திருமணமும் குடும்பமும் தடையாயின‌

    அதுவும் வழக்கறிஞரான கணவன் பிரிட்டிசாரை மனைவி எதிர்க்க அனுமதிக்கவில்லை

    ஆனால் அந்த இந்திய விடுதலைவேண்டிய பெண்மணி தன்னை நேசியாது தன் இல்வாழ்வை நேசியாது நாடு ஒன்றையே நேசித்து எந்த பெண்ணும் செய்யா காரியத்தை செய்தாள்

    ஆம், நாட்டுக்காக கணவனை தூக்கி எறிந்தார் அவர், வெள்ளையனை எதிர்ப்பதை கணவன் எதிர்த்தால் அந்த கணவனே தேவையில்லை என உறவை வெட்டிவிட்டாள்

    அவரின் போராட்டம் வேறுவழியாய் இருந்தது. இந்தியாவுக்குள் இருந்து விடுதலை கேட்பதில் அர்த்தமல்ல, கூண்டுக்குள்ளே சிக்கி இருந்து விடுவி என கதறுவதை விட வெளியில் இருந்து வந்து பூட்டை உடைக்க வேண்டும் என்பது அவள் சித்தாந்தம்

    பிரிட்டிஷ்காரனை அவனின் எதிரிகளோடு சேர்ந்து அழிக்க வேண்டும் என மிக அழகான திட்டத்தில் இருந்தார்
    இதனால் ஐரோப்பா சென்று ஜெர்மனில் தங்கினார், பெர்லின் அவரின் கோட்டையாயிற்று. ஜெர்மனிக்கும் பிரிட்டனுக்கும் பொருந்தா நிலையில் அவருக்கு அது பாதுகாப்பும் ஆயிற்று

    மாவீரன் சென்பகராமன் பிள்ளை, நேதாஜி போன்றோருக்கு வழிகாட்டியவர் மேடம் காமா

    அங்கிருந்தபடி ஐரோப்பா முழுக்க சுற்றி பெரும் ஆதரவு திரட்டினார், தேச விடுதலைக்கு முதன் முதலில் பிரிட்டன் எதிரிகளிடம் ஆதரவு திரட்டியவர் காமா ஒருவர்தான்

    காமாவின் உழைப்பு அபாரமாய் இருந்தது, இந்தியாவில் ஆயுதம் தாங்கிய புரட்சியாளருக்கெல்லாம் ஐரொப்பாவில் இருந்து நவீன துப்பாக்கியும், நிதியும் அவராலே வழங்கபட்டன‌

    வாஞ்சிநாதன் ஆஷ்துரையினை சுட்ட துப்பாக்கி முதல் இன்னும் பல சரித்திர துப்பாக்கிகளெல்லாம் அம்மையாரால்தான் அனுப்பபட்டது, ஆனால் சாட்சி இல்லாமல் வெள்ளையனால் ஒன்றும் செய்யமுடியவில்லை

    அதுவரை போராட்டம் இருந்ததே தவிர இந்தியாவுக்கான எந்த அடையாளமுமில்லை, முதன் முதலாக இந்திய தேசிய கொடியினை வடிவமைத்தவர் காமா

    அதை பெர்லினில் உள்ள தன் அலுவலகத்தில் 1904லே பறக்கவிட்டார், பின் அது 1907ல் அங்கீகார கொடியாயிற்று, மெல்ல மெல்ல அக்கொடி இந்தியா முழுக்க பரவலானது

    மூன்று வண்ணங்கள் இருக்க வேண்டும், இந்து இஸ்லாம் சமத்துவம் இருக்க வேண்டும், அதில் வந்தேமாதரம் என எழுதபட்டிருக வேண்டும் என மிக நுட்பமாக அக்கொடியினை வடிவமைத்தார் காமா

    மதரீதியாக பிரியாத அந்த முழு இந்தியாவுக்காக அவர் அமைத்த கொடி சால சிறந்தது.

    பின்னாளில் இக்கொடிதான் இன்றுகாணும் கொடியாக காங்கிரஸ் இம்சைகளால் மாற்றபட்டது, மத அடையாளத்தை நீக்கி அசோக சக்கரத்தை வைத்து என்னவெல்லாமோ இம்சையாக கொடியினை செய்தார்கள்

    இன்றுள்ள கொடியில் பச்சை நிறம் இஸ்லாமியரை குறிப்பது நல்லது, ஆனால் 1947க்கு பின் பாகிஸ்தான் தனி நாடு கண்டு இஸ்லாமிய தேசமாக முழு பச்சைக்கு மாறும் பொழுது இங்கும் முழு காவி மாற்றபட்டிருக்க வேண்டும் அல்லவா?

    செய்யவில்லை, கூடுதலாக நாங்கள் புத்தவழி அமைதிநாடு என அசோக சக்கரத்ததையும் வைத்தார்கள்

    இந்தியா சீனாவிடம் அடிவாங்கியபொழுதுதான் அசோக சக்கர “அமைதி” தத்துவமே புரிந்தது

    ஆம், காங்கிரஸ் கோஷ்டி இங்கு செய்திருக்கும் கொடுமைகள் கொஞ்சமல்ல.

    1900களில் மேடம் காமாவின் அதிரடி தொடர்ந்தது, ஜெர்மானிய பாதுகாப்பில் ஐரோப்பாவில் வலம் வந்த அவர் லண்டன் காக்ஸ்டன் ஹாலில் பேசிய அந்த பேச்சு வரலாற்று சிறப்பு மிக்கது

    அது 1915ல் பிரபல அன்றைய தலைவர்கள் லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால், மேடம் காமா, வீரசாவர்க்கர் , ஹர்ஷ தயாள், வ.வே.சு. அய்யர் ஆகியோர் பங்குபெற்று முழங்கினர்

    வ.வே.சு அய்யர் தமிழ்நாட்டுக்காரர் என்பது குறிப்பிடதக்கது

    இந்த காக்ஸ்டன் ஹாலில்தான் இந்திய சுதந்திர கொடியான மூவர்ண கொடியினை அறிமுகபடுத்தி உலக கவனத்தை பெற்றார் காமா

    காமா எனும் பெயருக்கு வெள்ளை வர்க்கம் அஞ்ச ஆரம்பித்தது, மிக தேர்ந்த ராஜதந்திரத்துடன் மிக அட்டகாசமான உத்திகளுடன் வெள்ளையனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்

    திலகர், வ.உ.சி, காமா, லஜபதிராய் பொன்றோர் வெள்ளையனுடன் சுதந்திரம் தவிர பேச ஏதுமில்லை என போராட்டத்தை உண்மையாக நடத்தினர்

    இந்நிலையில்தான் காந்தி 1919ல் வெள்ளையனால் தென்னாப்ரிக்காவில் இருந்து அழைத்துவரபட்டார், மிகபெரும் ஊடக வெளிச்சம் அவருக்கு கொடுக்கபட்டது

    இவ்வளவுக்கும் காந்தி தென்னாப்ரிக்காவில் தனிநாடு வாங்கி கொடுத்த வெற்றியாளரா என்றால் இல்லை, தனக்கு அடிமை வேலை செய்யும் இனம் போராட்டத்தில் இறங்கினால் தன் தொழிலுக்காக எந்த முதலாளியும் இறங்கி வருவான்

    தென்னாப்ரிக்காவில் வெள்ளையன் அதைத்தான் செய்தானே தவிர அங்கு காந்தியின் வெற்றி என எதுவுமில்லை

    ஆம், எந்த வெற்றியுமே பெறாத காந்தி இந்திய விடுதலைக்கு தலமையேறதெல்லாம் திட்டமிட்ட சதி

    காந்தியின் வருகைக்கு பின் இங்கு காட்சிகள் மாறின, காந்தியின் குழப்பியடிக்கும் அரசியலில் கடும்போக்குள்ள போராளிகள் மக்களிடமிருந்து மறைக்கபட்டு பின் அழிக்கபட்டனர்

    அதில் லஜபதிராய் , வ.உ.சி என ஏகபட்டோர் உண்டு

    அந்த கொடுமைக்கு மேடம் காமாவும் தப்பவில்லை , 1936ல் தன் 74 வயதில் பம்பாயில் ஆதவற்ற அனாதையாக செத்து கிடந்தார் காமா

    ஆம், இந்திய போராட்டத்தை அழிக்க மிக கடுமையான நிலைக்கு சென்ற வெள்ளையனின் நெருக்கடி அப்படி இருந்தது, வ.உ.சி போல் அனாதை ஆக்கபட்டு அனாதையாக செத்தாள் அந்த மகராசி

    அவளின் சொத்து அழிந்தது, உடல்நலம் அழிந்தது, இந்திய கொடியினை அமைத்ததற்காகவும், சுதந்திர போராட்டத்தில் முன்னால் நின்றதற்காகவும் தன் வாழ்வினை இழந்தாள் அந்த தேசதலைமகள்.

    அவள் இந்த தேசத்தின் தியாக சுடர், இநாட்டிற்காக தன் குடும்பம்,செல்வம், கணவன் என எல்லாம் தூக்கி எறிந்த போராளி

    அவள் நினைத்திருந்தால் அந்த பார்சி குடும்பத்தில் பணம் மேலும் சேர்த்து டாட்டா அளவு, வாடியா அளவு உயர்ந்திருக்கலாம்

    ஆனால் நாட்டுக்காய் உழைத்து அனாதையாய் செத்தாள்

    அந்தோ பரிதாபம் அப்படி ஒருத்தி இருந்தாள் என்றோ, அவள் இந்தியாவின் மூலகொடியினை வடிவமைத்தாள் என்றோ யாருக்கும் தெரியாது

    அந்த அளவு காங்கிரஸ் புரட்டாளர்கள் இத்தேசத்தின் வரலாற்றினை மண் அள்ளிபோட்டு மூடியிருக்கின்றார்கள்

    ஆனால் அவளை மறைத்தார்களே தவிர அவளின் கொடியின் வழிதான் இன்றும் மூவர்ணமாக மின்னி கொண்டிருக்கின்றது

    1907ல் அவள் ஏற்றிய கொடிதான் சில மாறுதல்களுடன் 1947ல் இங்கு சுதந்திர கொடியாக பறந்து இன்னும் மின்னிகொண்டிருக்கின்றது

    பாரதத்தின் மாபெரும் சுதந்திர போராளிக்கும், இன்று ராணுவத்தில் இருக்கும் பாரத பெண்களுக்கு துணிச்சல் மிக்க முன்னுதாரணமாய் இருக்கும் அந்த வீர தாய்க்கு வீர அஞ்சலிகள்

    புனேயில் அவள் உருவாக்கிய கொடி இன்றும் உண்டு, அவளுக்கு தபால்தலை தவிர வேறு பெருமை இல்லை

    இத்தேசத்தில் நாட்டுபற்றில் சாதிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் காமா அம்மையார் விருது வழங்கபட வேண்டும்

    தேசத்தின் மிகபெரும் நம்பிக்கையான பாஜக அதை உடனே செய்திடல் வேண்டும், அது இந்நாளில் வருடம் தோறும் வழங்கபடல் வேண்டும்

    இதை இந்நாளில் தேசம் கோரிக்கையாக அரசிடம் வைக்கின்றது

    தான் கண்ட கொடியில் தேசத்தின் ஞான குறியீடான தாமரையினை பதித்த அந்த திருமகளின் கண்ணீர் நினைவுகளுடன், பாரத பெருங்காவலாம் தாமரை கட்சியிடம் அக்கோரிக்கை சமர்பிக்கபடுகின்றது

    இந்திய கொடி எங்கு பறந்தாலும் அத்தோடு சேர்ந்து பட்டொளி வீசிகொண்டிருப்பார் காமா, பாரதம் உள்ள அளவும் அவள் பெயர் நிலைத்திருக்கும்

    (தேசத்துக்கு 1907ல் ஒரு பெண்மணி சுதந்திர கொடி அறிமுகபடுத்தும் அளவில் இங்கு பெண்விடுதலை இருந்தபொழுது ஈரோட்டு ராம்சாமி தன் 19வது வயதில் என்ன செய்து கொண்டிருந்தது தெரியுமா?

    அந்த வாலிப விளையாட்டெல்லாம் அதன் வரலாற்றிலே புதைந்து கிடக்கின்றது

    ஆம், பெண்ணுரிமை எங்கோ இருந்த காலத்தில் ராம்சாமி களத்திலே இல்லை, அந்த ராம்சாமி பின்னால் வந்து பெண் உரிமையினை பெற்று கொடுத்தார் என நம்புபவர்கள் நம்பி தொலையட்டும்,

    ஆனால் உண்மை காமா வடிவில் உலகுக்கே தெரிந்து கொண்டிருக்கின்றது)

  78. இந்துமதம் மனிதனுக்கு எதெல்லாம் மகா முக்கியமோ, எதையெல்லாம் மனிதனின் சொந்த முயற்சியில் ஒரு காலமும் உருவாக்க முடியாதோ, எது இன்றி மனிதன் வாழமுடியாதோ அவை எல்லாம் தெய்வத்தின் கருணை என உணர்ந்து அவையெல்லாம் தேவதை அம்சம் என சொல்லி கொடுத்தது

    எதெல்லாம் உயிர்களை உருவாக்கும் சக்தி கொண்டதோ அதையெல்லாம் பெண் தெய்வமாக்கிற்று, பெண்களால் உயிர்களை உருவாக்கமுடியும் என்பது போல ஆறுகளாலும் முடியும் என்பதால் ஆறுகளை தெய்வமாக்கிற்று

    மானிட உயிர்களை வளர்ப்பதில் ஆறுகள் தாய்போல் நிற்பதால் அதனை தாய் என கொண்டாடிற்று, அந்த தாயினை ஒரு நாளில் அதை வணங்கவும் சொன்னது. ஆடிமாதம் பெருக்கெடுத்து ஓடும் நதிகளை அம்மனின் அம்சமாக வணங்க சொன்னது

    வானியல் கோள்களின் சஞ்சாரபடி நீர் ராசி கொண்ட கடககராசியில் வரும் வெள்ளத்துக்கு குருவின் அருளால் சக்தி அதிகம், அந்த நீர் ஒவ்வொருவர் தலையிலும் படும்படி ஒரு நாளை குறித்தார்கள் முன்னோர்கள்

    எல்லா ஆறுகளுக்கும் அந்த வழிபாடு உண்டெனினும் காவேரிக்கு அது தனி அடையாளமாயிற்று, ஆடிமாதம் 18ம் நாள் தனி சிறப்பாயிற்று

    18 என்பது இந்துமதத்தின் சிறப்பான அம்சங்களில் ஒன்று, பாரத போர் முதல் ஆலய படிகட்டு வரை 18 என அன்றே குறித்துவைத்தது , மகா புராணங்களின் எண்ணிக்கையும் பதினெட்டு

    18 நாள் வழிபாடு என்பது அன்றைய வழக்கமாய் இருந்தது என்பார்கள்

    18 நாள் பக்தியோடு தவமிருந்து கோவில் விழாக்களை முடித்து, பெருகிவரும் வெள்ளத்தை வணங்கி விதைப்பினை தொடங்குதல் அன்று வழக்கமாயிற்று

    தமிழக ஆறுகளில் தனி சிறப்புமிக்கது காவேரி, அதுவல்லா தமிழகத்தை நினைத்துபார்த்தல் என்பதே முடியாது. அது தொடக்கத்தில் எங்கோ பாய்ந்தது எனவும் அகத்தியர் காலத்தில்தான் தமிழக பக்கம் திரும்பிற்று எனவும் சில புராண செய்திகள் உண்டு

    அதன் பலனோ என்னவோ கங்கைக்கு அடுத்து தொடக்கம் முதல் முடிவு வரை ஏகட்ட பிரசித்திபெற்ற ஆலயங்களை கொண்டது அந்த காவேரி ஆறு, நதிகளில் அது சிறப்பானது

    தலைக்காவேரி ஆலயம், சாமுண்டீஸ்வரி ஆலயம் என தொடங்கி தமிழகத்தின் கடைகோடிவரை பாருங்கள் அதன் கரை ஆலயமெல்லாம் மகா பிரசித்திபெற்றவையாகவும் தனி சக்தியாய்ந்தவை என்றும் தனித்து அறியபடும்

    தெய்வசக்தியும் வழி வழி வந்த மக்களின் ஆசியும் அந்த தனித்துவத்தை பெற்று கொடுத்திருகின்றன, அன்றைய தமிழகத்தின் பெரும் அடையாளம் காவேரி, தமிழும் கலையும் இசையும் அதன் கரையிலேதான் செழித்து வளர்ந்தது.

    அப்படியே பின்னாளில் அதன் கரையில் நாடாக இசை, கரை நாடாக இசை என உருவான அந்த இசை கர்நாடக இசை என மருவி பிரசித்திபெற்றது.

    உலகின் பழமையான‌ நாகரீக நகரங்களில் ஒன்றான கடலுள் மூழ்கிய பூம்புகார் அதன் கரையிலேதான் உருவானது

    இன்னும் ஏராளமான பெருமைகள் அதன் கரையிலே உருவாயின, ஒன்றல்ல இரண்டல்ல சொன்னால் பெருமை தாங்காது.

    சிலப்பதிகாரம், தஞ்சை பெரிய கோயில், திருவையாறு கர்நாடக இசை போன்ற அழியா கலைகள் ஒரு எடுத்துகாட்டே தவிர இன்னும் ஏராளம் உண்டு

    அந்த காவேரியில் ஆடிபெருக்கு மகா விஷேசமாக கொண்டாடபடும், அன்றைய காலங்களில் மிக சரியாக ஆடி மாதம் அது பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றது, அன்று கன்னடத்தில் அணைகள் இல்லை, தமிழகத்தின் அதன் துணையாறுகளான அமராவதி, பவானி, நொய்யலிலும் அணைகள் இல்லை,

    எப்படி பெருக்கெடுத்து வந்திருக்கும் காவேரி, நினைத்தாலே இனிகத்தான் செய்கிறது, அப்படியும் ஒரு காலம் இருந்திருக்குன்றது.

    ஒரு அணையுமின்றி அது எப்படி பொங்கி வந்திருக்கும் என்பதை நோக்கும் பொழுதே அந்த ஆற்றில் கல்லணையினை எப்படி கட்டினார்கள் என்பதில்தான் ஆச்சரியம் அதிகமாக மின்னும்

    எப்படி கல்லை கொண்டு சென்றார்கள், எப்படி அடித்தளமிட்டார்கள், எப்படி ஆற்றை திருப்பினார்கள் என்பதற்கு இன்றுவரை விடை இல்லை

    எகிப்தின் பழங்கால அணைகளுக்கு ஈடாக சொல்லபடும் கல்லணையில் எப்படிபட்ட நுட்பம் என இன்றுவரை தெரியாது, எல்லாமே அனுமானம்.

    அந்த கல்லணை மூலம் அக்கால சோழநாடே செழித்தது, செழித்தது என்றால் முப்போகம் தவறாமல் விளைந்தது, எல்லா வகை நெல்லும் அங்கே விளைந்தது என்கின்றார்கள்.

    வருடமெல்லாம் ஓடினாலும் இந்த ஆடிமாதம் அது புதுவெள்ளத்தோடு வரும், அதனை வணங்கி வரவேற்றிருக்கின்றார்கள்

    உண்மையில் காவேரி வற்றாத ஆறெல்லாம் அல்ல, ஆடியில் அது பொங்கி இருக்கின்றது மற்ற காலங்களில் ஏதோ ஓடியிருக்கின்றது

    அக்காலத்திலே ஆடியில்தான் புதுவெள்ளம் பொங்கி இருக்கின்றது, இன்று ஆடியில் மட்டும் தமிழக பக்கம் வருமாறு அதன் நிலை மாறிற்று

    ஆடியில் பொங்கி வரும், அந்த பெருக்கெடுத்த காவேரியினைத்தான் பூ தூவி வணங்கிவிட்டு விதைக்க சென்றிருக்கின்றார்கள், நன்றியோடு

    அந்த புதுவெள்ள காவேரியினை தன் அன்னையாகவே நினைத்து வணங்கி இருக்கின்றார்கள், பெண்கள் தங்கள் தாலிக்கு அந்த அன்னையின் ஆசீர்வாதம் வேண்டி வணங்கி அந்த நீரை தாலியில் தொட்டு வைக்கின்றார்கள்

    எல்லா தமிழ் இலக்கியங்களும் காவேரியினை பாடி இருக்கின்றன, வான் பொய்யினும் தான் பொய்யா காவேரி என புறநானூறு சொல்கின்றது,

    கம்பன் பல இடங்களில் அதனை எப்படியெல்லாமோ கொண்டாடி இருக்கின்றான், கோசலை நாடு கவேரி நாட்டுக்கு காவேரி கரைக்கு நிகரானது என ஒரே வரியில் அசத்தினான் கம்பன்

    சிலப்பதிகாரத்தில்

    “உழவர் ஓதை மதகுஓதை
    உடைநீர் ஓதை தன்பதங்கொள்
    விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப‌
    நடந்தாய் வாழி காவேரி” என

    இளங்கோ அடிகளும் ஆடி பெருக்கினை அழகாக வர்ணிக்கின்றார்.

    கங்கை நதிக்கு கொஞ்சமும் குறையா வரலாற்று பழமை கொண்டது காவேரி, உலகில் நைல், யூப்ரடீஸ் என பல பலநதிகளுக்கு உள்ள வரலாறும் அந்த நதிக்கே உண்டு

    அந்த காவேரி தமிழனின் அடையாளம், தமிழனை உருவாக்கிய ஆறு, தமிழ் கலைகளை வளரவைத்த ஆறு

    அந்த நன்றியோடு ஆடிபெருக்கினை கொண்டாடலாம், காவேரியினை நன்றியோடு வணங்கலாம்

    அந்த காவேரி அன்னைதான் தங்களுக்கும் தங்கள் பயிருக்கும், ஆடுமாடுகளுக்கும் நீர்வார்ப்பவள் என்ற நன்றி அன்றைய இந்துக்களிடம் ஓங்கி இருந்திருக்கின்றது

    இப்படிபட்ட நன்றியும் நாகரீகமும் உலகில் எந்த இனத்திடம் இருந்தது? இந்துக்களிடம் மட்டும்தான் இருந்தது

    ஆடிபெருக்கு என்பது தமிழரின் நன்றிதெரிவிக்கும் விழா, தமிழகம் வந்த காவேரி அன்னையினை பூத்தூவி வரவேற்கும் விழா

    தமிழரின் பெரும் நன்றிக்கு எடுத்துகாட்டான கலாச்சார விழா

    “இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
    அன்பின் அன்னையடி

    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
    தேவ மங்கையடி” என்ற வாலியின் நிதர்சன வரிகள் காதோடு கேட்கும் நேரமிது

    ஆயிரம் அர்த்தமுள்ள வரிகள் அது.

    ஆம் காவேரி கரை ஆலயங்களையும் காவேரி செழிக்க வைக்கும் நிலங்களையும் பாருங்கள், காவேரி என்பது ஆறே அல்ல, அது ஒரு வரம், தெய்வம் தமிழருக்கு கொடுத்த தனிவரம்

    அந்த தெய்வத்தை பூ தூவி வணங்கி வரவேற்று நன்றி பெருக்கில் நிறைந்து நிற்கும் நாள் ஆடிபெருக்கு

    காவேரி என்றல்ல ஒவ்வொரு நதியும் இந்நாளில் நன்றியோடு வணங்கபட வேண்டியது, அப்படியே அவற்றை காக்க உறுதி ஏற்க வேண்டிய நாளும் இதுவே

    காவேரி என்றல்ல எதெல்லாம் பழம்பெருமையும் புராதானமும் கொண்ட நகரமோ ஊரோ ஆலயமோ அதெல்லாம் ஆற்றங்கரையில்தான் அமைந்திருக்கும், அவ்வகையில் ஒவ்வொரு ஆறும் ஆயிரமாயிரம் வரலாறுகளை கொண்டிருக்கின்றது

    எத்தனையோ லட்சம் ஆன்மாக்கள் அதை சுற்றி நிற்கும், எத்தனையோ ஆயிரம் நினைவுகளை ஆறுகள் சுமந்து நிற்கும், அந்த நாளில் அந்த ஆற்றை வணங்கி அதன் சக்தியினை பெற்றுகொள்வது இந்துக்களின் கடமையாகின்றது

    ஆறு என்பது சாதாரணம் அல்ல, மழையாக பொழியும் உயிசக்தியினை நிலமெல்லாம் கொண்டு உயிரூட்டும் ஒரு பெரும் சக்தி

    அந்த சக்தியில் வானலோக பிரபஞ்ச சக்தி முதக் உயிர்சக்தியும் கலந்திருக்கின்றது, அந்த உயிர்சக்திதான் பயிராக விளைந்து மானிட உயிர்களை காக்கின்றது

    அதனால் அந்த சக்தியினை பெறத்தான் இந்துக்களுக்கு புதுவெள்ள ஆடிபெருக்கில் வணங்க சொன்னார்கள் முன்னோர்கள், அதனை ஒவ்வொரு நதியிலும் செய்தல் நல்லது

  79. பிலிப்பைன்ஸ் முன்பு உலகபோர் காலங்களில் எதிரணியிடம் சிக்கியிருந்தது அமெரிக்க படைகள்தான் வந்து மீட்டன, அப்பொழுது பிலிப்பைன்ஸ்க்கு ஆபத்து என்றால் அமெரிக்கா உதவிக்கு வரும் எனும் ஒப்பந்தம் எழுதபட்டது அது இன்றும் உண்டு

    இப்பொழுது சீனாவின் அட்டகாசம் எல்லைமீறும் நிலையில் அதன் தெனமேற்கு எல்லையில் பிலிப்பைன்ஸ் ஒரு நல்ல அமைவிடம் கொண்டது, அமெரிக்க படைகள் வந்தால் தென்சீன கடலில் சீனாவினை ரவுண்டு கட்டி அடிக்கலாம்

    1980களில் பிலிப்பைன்ஸின் சசிகலா எமல்டா மார்கோஸின் ஊழலால் அக்குடும்பமே அமெரிக்காவுக்க்கு தப்பி ஓடியது, பிலிப்பைன்ஸின் அதிபரான மார்கோஸ் அந்த மனைவியினையும் காப்பாற்றி கொண்டு மகனோடு அமெரிக்காவுக்கு ஓடி அங்கே காலமானார்

    மகன் ஜூனியர் மார்கோஸ் அங்குதான் வளர்ந்தான், அமெரிக்கா அவனை வளர்த்தது

    கடந்த ஆண்டு பழைய பிலிப்பைன்ஸ் அதிபரின் சீனபாசம் பொங்கி பொங்கி வழிந்த வேளை தேர்தலில் அவர் படுதோல்வியுற்று ஜூனியர் மார்கோஸ் இப்பொழுது அதிபரானார்

    ஒரு ஊழல் குடும்பத்தை அமெரிக்கா ஏன் காத்தது? அவர்கள் எப்படி நாடு திரும்பினார்கள்? அந்த ஊழலையும் தாண்டி அதிபர் பதவிக்கு அக்குடும்பம் எப்படி வந்தது?

    1980களில் பத்தாயிரம் ஜோடி செருப்பு குவித்தார் என விரட்டபட்ட எமல்டா இப்பொழுது 10 ஆயிரம் பல்செட் வாங்கலாம் எனும் ஆபத்தே இல்லாமல் அவரை மக்கள் வரவேற்றது எப்படி?

    இப்பொழுது சீனாவுக்கு எதிராக அமெரிக்காவினை அழைக்க அந்த பழைய ஒப்பந்தத்தை ஜூனியர் மார்கோஸ் சரியாக எடுப்பது எப்படி?

    இதற்கெல்லாம் வரலாற்றில் விடையே இல்லை, வல்லரசுகள் எப்படியெல்லாம் ஆடும் என்பதற்கான சாட்சிகள் இவை

    அதனால் இந்தியா படித்துகொள்ள வேண்டிய பாடம் ஒன்றே ஒன்றுதான்

    ராகுல்காந்தி, சோனியா பாஸ்போர்டடை முடக்கி அவர்களை இந்தியாவிலே வைத்து கொள்வது நல்லது

  80. சீனா தைவானை சுற்றி நின்று போர் பயிற்சி என வழக்கமான மிரட்டலை செய்து கொண்டிருக்கின்றது, அதன் கப்பல்கள் விமானமெல்லாம் தைவானை கோவில் புறாக்களைபோல சுற்றி சுற்றி வருகின்றது வழக்கம் போல‌

    யுத்தம் வெடித்தால் எங்கள் ஜே 20 விமானம் சீறும் , எங்கள் சொந்த ஹைமார்ஸ் ஏவுகனைகள் பேசும் என்றெல்லாம் மிரட்டுகின்றார்களே தவிர எப்பொழுது யுத்தம் என சொல்லவே இல்லை

    சொல்லவும் மாட்டார்கள்

    தைவானை தொடவேண்டும் என்றால் திபெத்தை பிடித்த காலங்களிலே பிடித்திருப்பார்கள், பலத்த சிக்கல் இருப்பதால் அதை தாமதித்து கொண்டே வந்தார்கள்

    இப்பொழுதும் தைவான் தங்களோடு இணையவேண்டும் என்பது அவர்கள் முழு விருப்பம் அல்ல, அவர்களின் மிரட்டல் தைவான் சில தயாரிப்புக்களை செய்யகூடாது சீனாவினை பாதிக்கும் வண்ணம் இறங்க கூடாது என்பதுதான்

    சீனா 1975 வரை ஏழை பின் தங்கிய விவசாய நாடு, வழக்கம் போல சோவியத் ரஷ்யாவும் அவர்களுக்கு ஒரு தொழில்நுட்பமும் கொடுக்காமல்தான் வைத்திருந்தது

    இந்தியா இனி தன் பக்கம் வராது என்ற முடிவுக்கு வந்த அமெரிக்கா 1970களில் சீனாவினை வளைத்தது, கம்யூனிசம் குண்டுபோடும் சோறு போடாது என்ற முடிவுக்கு வந்த மாவோடும் அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சனை சந்தித்து அமெரிக்க முதலீடுகளை பெற்றார்

    அதிலிருந்துதான் சீனா வேகமாக வளரதொடங்கிற்று, அதுவும் 1990க்கு பின்னரான தாராளமயமாக்கலில் பெரும் வளர்ச்சி கண்டது

    சீனாவின் முக்கிய வருமானம் ஐசி சிப்புகள் எனப்படும் நுண்ணிய எலெக்ட்ரானிக் பொருட்கள், இதனை தைவான் தயாரிப்பதில் கில்லாடி உபயம் அமெரிக்கா

    இப்பொழுது டிரம்பரின் சீன தடைக்குபின் காட்சிகள் மாறிவிட்டன‌

    உலகம் புது யுகத்துக்குள் நுழைகின்றது , ஐந்தாம் தலைமுறைக்கான சிப்புகளும் இதர வடிவங்களும் அறிமுகமாகின்றன , இந்த நுட்பத்தில் தைவான் முன்னிலை வகிக்கின்றது

    அமெரிக்க சிறப்பு சட்டபடி இனிவரும் எதிர்கால தொழில்நுட்பமோ வளர்ச்சியோ சீனாவுக்கு கிடையாது, பல பில்லியன் டாலர் கொட்டி அமெரிக்கா உருவாக்கும் தொழில்நுட்பமெல்லாம் அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்குமே என்பது அதன் கொள்கை

    அதனால் சீனா இனி பின் தங்கும், தைவான் மிகபெரிய வளர்ச்சியினை அடையும்

    தன் காலடியில் ஒரு நாடு தன்னை மீறி வளர்வதையோ தன் வருமானத்தில் கைவைப்பதையோ சீனாவால் பொறுக்கமுடியவில்லை ஆனால் அங்கு படையெடுக்கவும் முடியவில்லை

    இதனால் அப்பிராந்தியத்தில் ஒரு பதற்றத்தை உருவாக்க முயல்கின்றதே தவிர யுத்தம் அவர்கள் முழு நோக்கம் அல்ல‌

    காரணம் ஒரு யுத்தம் வந்தால் ஏற்கனவே ரியல் எஸ்டேட் வீழ்ச்சியாலும் இன்னும் பல சிக்கல்களாலும் அடிவாங்கியிருக்கும் சீன பொருளாதாரம் மீளமுடியாதபடி அடிவாங்கும்

    இதனால் ஒரு மிரட்டலோடு எல்லை கட்டி நிற்பார்கள், அப்படியே அந்த மிரட்டலால் மக்கள் கவனத்தையும் கவரமுடியும்

    இதனால் கபடி விளையாட்டு போல தைவான் எல்லையினை தொட்டு தொட்டு திரும்பி விளையாடுவார்கள், இந்த விளையாட்டு அடிக்கடி இனி நடக்கும்

    வழக்கம் போல் சீன பத்திரிகைகள் “சீனத்து பரணி” பாடிகொண்டே இருக்கின்றன, இன்னும் பல நாட்களுக்கு பாடும்

  81. சுதந்திர இந்தியாவில் மாகாண கட்சிகளுக்கு அனுமதி கொடுக்க கூடாது, அப்படி கொடுத்தால் அது பல்வேறு குழப்பங்களை நாட்டுக்கு கொடுக்கும், ஒவ்வொரு மாகாண கட்சியும் அரசியலுக்காக மாநில குழப்பங்களையும் பிரிவினைகளையும் தூண்டும் அது பெரும் விபரீதத்தை கொடுக்கும் என நேருவிடம் தேசாபிமானிகள் எவ்வளவோ மன்றாடினார்கள்

    ஆனால் உலக ஜனநாயகத்தை காக்க பிறந்திருப்பதாக தன்னை கருதிய நேரு அதனை மறுத்தார், அமெரிக்கா பிரிட்டன் என உலக ஜனநாயக தாய்நாட்டிலே மாநில கட்சிக்கு அனுமதி இல்லை, உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் அப்படி இல்லை, சிக்கல் நிறைந்த பல இனம் பலமொழி நிறைந்த இந்தியாவில் அப்படி அனுமதித்தால் அது பெரும் குழப்பமாகும் என்ற கோரிக்கையினை நேரு புறம்தள்ளினார்

    விளைவு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கட்சி அல்லது பல கட்சி உதயமாயின, மாநில நலன் என சொல்லி அவை பிழைப்புவாத அரசியலும் பிரிவினைவாதத்தையும் தூண்ட ஆரம்பித்தன‌

    எதையுமே தாமதமாக உணரும் நேரு திமுகவின் திராவிட நாடு கோரிக்கை இன்னும் பல மாகாணங்களின் பல கோரிக்கைகளை கண்டு அதிர்ச்சியுற்றார் அப்பொழுதும் மாகாண கட்சிமேல் இறுக்கம் காட்டாமல் பிரிவினைவாத தடைசட்டம் கொண்டுவந்துவிட்டு அமைதியானார்

    ஆனால் அவர் அனுமதித்த அவரின் மாகாண கட்சிகான அனுமதி அவரின் சொந்த கட்சியினை சாய்க்கும் என்பதை கணிக்க தவறினார், அதுவும் தேசிய பெருங்கட்சி அப்படி சரிவது நாட்டுக்கு நல்லதல்ல எனும் சிந்தனையும் அவருக்கு அறவே இல்லை

    ஏன் என்றால் அதுதான் நேரு

    அப்படிபட்ட நேருவின் காலத்தில் மாகாண கட்சிகள் மெல்ல துளிர்விட்டு வளர்ந்தன, அவரின் காலத்துக்கு பின் யாரெல்லாமோ வளர்ந்தார்கள்

    காங்கிரஸை ஒழித்துகட்டுவது அவர்களின் பொது நோக்கமாய் இருந்தது, காங்கிரஸை ஒழித்து நாட்டை காப்பது அவர்கள் நோக்கம் அல்ல மாறாக இவர்களெல்லாம் கூடி ஒரு ஆட்சி அமைத்து ஊழல் காங்கிரஸை விட அதிக ஊழல் செய்வதும் ஒரு சூதாட்டம் போல் அரசியலை ஆடுவதும் நோக்கமாக இருந்தது

    இதனை உள்ளூற வைத்து கொண்டு எல்லோரும் காலம் பார்த்தார்கள் , அக்காலத்தில் காங்கிரஸின் அடுத்த தேசிய கட்சியாக கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்

    ஆனால் அவர்கள் தேசியமெல்லாம் ரஷ்ய தேசியம், சீன தேசியம், கியூபதேசியம் என்றிருந்தது இந்திய தேசம் பற்றி கவலையே இல்லை

    இந்நிலையில் இந்திரா பிரதமரானார் அவர் மாகாண கட்சிகள் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவில் இருந்தார்,விடுமா மாகாண கட்சிகள்?

    அவர்கள் ஆளாளுக்கு கிளர்ந்து எழுந்தார்கள், காங்கிரஸின் ஏகபோகத்தை முறியடிப்போம் என முரசு கொட்டினார்கள், இதில் காங்கிரசாரே பிரிந்து பல கட்சிகளை கண்டார்கள்

    அப்படித்தான் அந்த பீகாரிலும் பல கட்சிகள் உருவாயின, ஊழலும் லல்லுபிரசாத் கோஷ்டி உருவில் வந்தது, இன்னும் அங்கும் தமிழகம் போல ஏகபட்ட கட்சிகள் வந்தன ஐக்கிய ஜனதாதளம் போன்றவையும் வந்தன‌

    மும்பையில் சிவசேனா போல மிக குறைந்த எம்.எல்.ஏக்கள் வைத்திருந்த அவரை பாஜக பெரும்பலம் இருந்தும் முதல்வராக்கியது

    பாஜகவுக்கும் அவருக்கும் இருந்த உறவு மெல்ல மெல்ல கசந்தது, அதன் காரணம் இயல்பானது

    மாநில கட்சிகளுக்கு எப்பொழுதும் தேசிய கட்சிகளை பிடிக்காது, இது நாடு என்றோ தேசியம் முக்கியம் என்றோ அவை கருதாது, தங்கள் மாகாணம் தங்கள் மொழி இனம் மாநில உரிமை என குறுகிய அரசியல் செய்யும் அவை தேசிய கட்சியினை ஏற்காது மாறாக டெல்லியில் தங்களுக்கு பிடி கிடைக்குமா என்றுதான் யோசிக்கும்

    இங்கு நாட்டு நலன் முன்னிறுத்தபடாது

    இதைத்தான் நேருவிடம் தலையில் அடித்து கொண்டு முறையிட்டும் அவர் அசைந்து கொடுக்கவில்லை, அன்றே உரிய சட்டம் வந்திருந்தால் திமுக முதல் சிவசேனா, டிஆரெஸ் , காஷ்மீரிய கட்சி என இத்தனை நூறு மாகாண கட்சி வந்திருக்காது

    அரசியலுக்கு யாரும் வரலாம் ஆனால் தேசியவாதியாக மட்டும் வரலாம் எனும் நிலை என்றோ உருவாகியிருக்கும்

    நேருவின் சொதப்பலில் தீரா குழப்பத்தில் நாடு சிக்கி காங்கிரசும் எல்லா மாகாணங்களிலும் சரிந்தபொழுதுதான் தேசம் என்றோ செய்த புண்ணியம் பாஜக வடிவில் வந்தது

    நிச்சயம் பாஜக மாநிலகட்சிகளுக்கு வேப்பங்காய், முதலில் காங்கிரஸை சரிக்க அதனை கையில் எடுத்த மாகாண கட்சிகள் காங்கிரஸ் சரிந்து பாஜக விஸ்வரூபமெடுத்ததும் அதை வெறுப்புடன் நோக்க தொடங்கினர்

    இது தேசம் முழுக்க நடந்தது, ஒரு காலத்தில் பாஜகவினை கொண்டாடிய திமுக அதனை கண்டு அஞ்சியது, மம்தா, சிவசேனா என எல்லாரும் அலற காரணம் பாஜக தங்கள் மாகாணத்தில் வளர்ந்தால் தங்கள் அரசியல் இருக்காது

    ஆனால் அதையும் மீறி பாஜக இன்று பெரும் வளர்ச்சி எல்லா மாகாணங்களிலும் கண்டிருக்கின்றது இன்னும் அது வளர்ந்து மாகாண கட்சிகளை முறிக்கும் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌

    பாஜகவின் வளர்ச்சித்தான் மாநில நலன், மாநில சுயாட்சிஎன்ற போர்வையில் எவ்வளவு சுயநல அரசியல்வாதிகள் இருந்தார்கள், மாநில அரசியலின் முகம் உண்மையில் என்ன என்பதை காட்டிற்று

    அந்த முகமூடி பல இடங்களில் கிழிந்த நிலையில் நேற்று நிதிஷ்குமாரின் முகமூடியும் கிழிந்த்திருக்கின்றது

    பாஜகவின் உறவை முறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுன் தன் ஆட்சியினை தொடர முடிவெடுத்துள்ளார் அன்னார்

    அது சுலபமானது அல்ல என்றாலும் தன் இருப்பை தக்கவைக்க அவருக்கு வேறு வழியில்லை,மாகாண கட்சியின் நிலை அதுதான்

    இது 2023ம் ஆண்டு எதிர்கட்சி முகாமில் இப்படி மாகாண கட்சிகள் நிரம்பும் என்பதை காட்டுகின்றது

    இனி நடப்பதை காலம் காட்டும்

    இந்த காட்சியின் சுருக்கத்தை மகாபாரத காலத்தோடு ஒப்பிடலாம், யாரெல்லாம் அதர்மத்தின் பக்கமோ அல்லது யாரெல்லாம் தர்மத்தை மதிக்கவில்லையோ அவர்கள் ஏகபட்ட பேர் இருந்தார்கள், ஒவ்வொருவராய் அவர்களை தேடி அடையாளபடுத்துவதை விட பாண்டவருக்கு எதிரானவர் என அவர்களை வகைபடுத்தல் கண்ணனுக்கு எளிதாய் இருந்தது

    கவுரவர் கூட்டத்தோடு ஒவ்வொருவராய் தானாய் வந்து சேர சிரித்து கொண்டான் கண்ணன், மொத்த அதர்ம கூட்டமும் சேர்ந்துவிட்டதும் இந்த வாய்ப்பை விட கூடாது என சரியாக அடித்து ஒழித்தான் மொத்தமாக ஒழித்தான்

    ஆம், எதிரிகளை மொத்தமாக கூட வைத்து அடையாளம் காட்டுவது ஒரு கலை, பாஜக அதை சரியாக செய்கின்றது

    எது எப்படியாயினும் ராகுல்காந்தி என்பவரின் நிலை பரிதாபம், கொள்ளுதாத்தா செய்த தவறுக்கு பிராயசித்தமாக இனி ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி தொடங்குவதுதான் அவருக்கு சரி , வேறு வழியே இனி இல்லை

    பலமான இந்தியா உருவாக மாகாண கட்சிகளின் பலம் முறியடிக்கபட வேண்டும் அல்லது பாராளுமன்ற தேர்தலில் அவை போட்டியிடாமல் தேசிய கட்சிகள் மட்டும் போட்டியிடும் அளவு சட்டங்களை மாற்ற வேண்டும்

    அதுதான் இந்தியாவில் அவசரமான ஒன்று , அதை எவ்வளவு விரைவாக தேசம் செய்யுமோ அவ்வளவுக்கு நாட்டுக்கு நல்லது

    சரி, பிஜேபி துணை இல்லாமல் நிதிஷ்குமாரால் ஆளமுடியுமா என்றால் நிச்சயம் சவால்தான், அங்கும் ஒரு ஷிண்டே உருவாகிகொண்டிருக்கலாம்

  82. திட்டமிட்டபடி இலங்கை நோக்கி நகர்கின்றது சீன கப்பல், இலங்கையின் கோரிக்கையினை சீனா கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை

    அதே நேரம் இந்தியாவின் இறுக்கமும் இலங்கைமேல் அதிகரிக்கின்றது

    மத்தளத்துக்கு இரண்டுபக்கம் அடி என இலங்கை தலையில் கைவைத்தபொழுது இலங்கைக்கு உடனே வருவதாக தகவல் அனுப்பியிருக்கின்றது பாகிஸ்தான் போர்கப்பல்

    மயக்கம் போட்டு விழும் நிலையில் இருக்கின்றது இலங்கை, அது ஒரு காலத்தில் ஆடிய நாடகமெல்லாம் சரியான நேரத்தில் தலையில் வந்து அடிக்கின்றது, இன்னும் கனத்த அடியெல்லாம் விழும் போலிருக்கின்றது

    சீன கப்பல் வருவதை இந்தியாவும் உன்னிப்பாக கவனிக்கின்றது, இலங்கையின் எதிர்ப்பையும் மீறி அக்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நுழையுமானால் எப்படி தன்னை காத்து கொண்டு திருப்பி அடிக்கவேண்டும் என்பது இந்தியாவுக்கும் தெரியும்

  83. தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள் விற்பனை : முதல்வர் ஸ்டாலின் கவலை

    போதைபொருள் தடுப்பு மற்றும் காவல்துறையினை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினே இவ்வளவு கவலைபடுகின்றார் என்றால் நிலமை எவ்வளவு விபரீதமாய் இருக்கும் என மக்கள் கவலைபடுகின்றார்கள்

    அவர்களோடு சேர்ந்து காவல்துறையும் போதை தடுப்பு பிரிவும் மிகுந்த கவலைபடுகின்றது

    இனி எல்லோரும் அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிகொள்ளவேண்டியதுதான் வேறேதும் செய்யமுடியாது

    தமிழக முதல்வரும் காவல்துறையும் கவலைபட மட்டும்தான் இருக்கின்றார்கள் என்பதுதான் தமிழக கவலை

  84. நிலை மறந்த நிதிஷ்!

    கரகாட்டக்காரன்ல இந்த கார வெச்சிருந்த சொப்பன சுந்தரிய யாரு வெச்சிருக்கான்னு கேட்கிற செந்தில மாதிரி, இப்போ நிதிஷ் பிஹார் முதல்வர் பதவிய வெச்சிருக்காரு, ஆனால் அவரை யார் வெச்சு இருக்காங்கன்னு கேட்க வேண்டிய சூழல்!

    என்ன பிரச்சினை?

    மோடி குஜராத் முதல்வரா இருந்தப்போ பிரதம வாய்ப்புள்ளவர்களாக அவரையும், நிதிஷையும் பார்த்தார்கள். அதில் இருந்து மோடியை போட்டியளராக பார்ப்பவர் நிதிஷ். அதில் தவறில்லை, நாம் எல்லோரும் நம் உயர்வுக்கான யுக்திகளைத்தானே பார்ப்போம், அவரும் பிரதமராக வாய்ப்புள்ளவர் என்று சொல்லப்பட்ட காலத்தில், அந்த வாய்ப்பை மோடி எடுத்துக்கோண்டார் என்பதை விட அவரின் கடுமையான் உழைப்பும், நேர்மையான போக்கும் அவரை அந்த உச்சத்திற்கு கொண்டு வந்தது. அதைத்தானே அவர் செய்தார். அதில் எப்படி தவறு காண முடியும்?

    அப்படியெனில் குஜாரத்தைவிட பெரிய மாநிலமும், அதிக MP க்களை கொண்ட பிஹாருக்கு வாய்ப்புகள் அதிகம்தானே. அவரும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் மனம் கவர்ந்து அதை செய்திருக்கலாமே! அதை செய்ய முடியவில்லை.

    அவரின் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு வருவதற்கே அவர் பாஜகவையும், RJD யையும் நம்பி இருக்க வேண்டிய சூழல். அது மட்டுமல்ல, சென்ற தேர்தல் வரை அதிக தொகுதிகளை கொண்ட சீனியர் பார்ட்னர் என்ற முறையில் ஒரு கெத்து இருந்தது. சென்ற தேர்தலில் பாஸ்வானின் மகன் சிராஜ் பாஸ்வான், அவர் கேட்ட இடங்களை தர இவர் மறுத்ததால், இவருக்கு ஆதரவு தரவில்லை. அது மட்டுமல்ல தனியாக போட்டியிட்டார். அதுவும் நிதிஷ் கட்சி வேட்பாளர்களை மட்டும் எதிர்த்து போட்டியிட்டதால், நிதிஷ் கட்சிக்கு 45 இடங்கள் மட்டுமே கிடைக்க, பாஜகவிற்கோ 76 இடங்கள் கிடைத்தது. இருந்தாலும் பாஜக, நிதிஷுன் தலைமையில் தேர்தலை சந்தித்ததாலும், ஏற்கனவே ஜெண்டில்மேன் ஒப்பந்தப்படி அவரை முதல்வராக முன்னிறுத்தியதால் அவரே முதல்வரானார். ஆனால் இவர் ஜெண்டில்மேனாக இல்லை.என்பதுதாம் அடிப்படை பிரச்சினை என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை!

    இப்போது என்ன நடந்தது?

    தேர்தலில் சிராஜ் பாஸ்வானை மோடி மிரட்டி பணிய வைக்கவில்லை என்பது நிதிஷின் குற்றச்சாட்டு. அதாவது ஏற்கனவே பாஜகவை இரு முறை முதுகில் குத்தி ஏமாற்றிய நிதிஷுக்கு ஆதரவாக சிராஜை கட்டுப்படுத்தவில்லை என்பது. நிதிஷுக்கு முதல்வர் பதவி கொடுத்தது அவரை திருப்தி படுத்தவில்லை. காரணம் அவருக்கு இருந்த அடி மனதி ஆழமாக புதைந்திருந்த தாழ்வு மனப்பான்மை.

    சரி இப்போது மீண்டும் முதுகில் குத்தியது ஏன்?

    நிதிஷுக்கு எப்போதுமே மோடியின் மீது ஒரு எரிச்சல் என்பதை விட பொறாமை. அதனால் தொட்டும் தொடாமலும் இருந்து வந்தார். இவர் எப்போது சமயம் கிடைத்தாலும் அணி மாறுவார் என்று தெரிந்ததால், பாஜக தன் கட்சியை பிஹாரில் வலுப்படுத்தி வந்தது. இவருக்கு மெதுவாக பீஹார் மக்களிடையே ஒரு சலுப்பும், எதிர்ப்புணர்வும் தோன்றியது. அடுத்த முறை பாஜக அதிக இடங்களை கோரிப்பெற்றுவிடும். அதனால் தமக்கு முதல்வர் ஆவதற்கான வாய்ப்புகள குறைவு என்பதை விட இல்லை என்ற சூழல்.

    அது மட்டுமல்ல, அவர் கட்சியில் உள்ளவர்கள் சிலரே இவர் மீது எரிச்சலில் உள்ளதால், சமாளிக்க முடியாது என்ற சூழல். அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கே அந்த நிலை என்றால் நாம் எம்மாத்திரம் என்ற பயம்.

    இந்த சூழலில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது பிரதமர் வேட்பாளர் என்ற ஒரு இடத்திற்கு பலர்க்கு ஆசை. ஆம் ராகுல் காந்தி, சரத்பவார், மம்தா, சந்திர சேகர ராவ், ஏன் ஸ்டாலினுக்கு கூட அந்த ஆசை வந்துவிட்டது. அதில் அதில் சென்ற தேர்தலில் பெற்ற சட்டசபை வெற்றியால், மமதா தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற கர்வம் சிவன் கழுத்தில் இருந்த பாம்பாகவே மாறிவிட்டது. அவரும் ஜனாதிபதி தேர்தல் முதல், எல்லாவற்றிலும் தன்னையே முன்னிறுத்தி முடிவுகளை எடுத்தார். அதை அவரை எதிர்த்த காங்கிரஸ் கூட ஏற்க வேண்டிய சூழல். ஆனால் காங்கிரஸுக்கு அவரிடம் அடங்கிப்போக விருப்பம் இல்லை. விளைவு மாற்றாக நிதிஷுக்கு கொடுத்த சிக்னல். அதற்கு லல்லுவின் ஆதரவும் இருந்தது. ஏனெனில் இவர் பிரதமர் வேட்பாளரால மாறினால், அவர் கட்சி ஆதரவோடு நாம் பீஹாரை மீண்டும் ஆட்சி செய்யலாம் என்பதே.

    இந்த ஒரு சூழலில் மம்தாவின் அமைச்சர் ED ரெய்டில் எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டார். விளைவு பல் பிடுங்கிய பாம்பாக மோடி காலில் மம்தா விழ, அந்த இடம் காலியானது. இதை விட்டால் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தன் வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள பாஜகவை மீண்டும் ஒரு முறை உதைத்துவிட்டு, கட்சி மாறினார். இன்னும் முதல்வர்தான், ஆனால் இப்போது அவரை லல்லு வெச்சிருக்கார் என்றளவில்..

    எந்த எதிர்பார்ப்பில் இதை செய்தார்?

    எப்படி இருந்தாலும், இதற்கு மேல் ஒரு வாய்ப்பு அவர் முன்னால் இல்லை என்ற பட்சத்தில், இந்த ரிஸ்க் எடுத்தார்!

    என்ன பிரச்சினைகள் அவர் முன்னிருக்கிறது?

    தொடந்து முதல்வராக நீண்ட காலமாக இருக்கும் அவருக்கு மக்கள் மீது ஒரு சலிப்பும், வெறுப்பும் வந்து விட்டது. அதை மறைக்க லல்லுவின் கூட்டணிய்ம், மத சார்பற்ற என்ற டேக்கும் உதவும் என்பது அவரின் கணக்கு.

    அடுத்ததாக அடுத்த தேர்தல் வரும் வரை அவர் லல்லுவின் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்க வேண்டும். அதில் அராஜகம், ஊழல் என்பதெல்லாம் அடக்கம் எனும்போது, தேர்தல் வருமுன், அவருக்கு இருந்த எதிர்ப்பு மேலும் பலமாகி, அவரை பலவீனமாக்கும் என்பது நடப்பு.

    பிஹாரில் பாஜகவிற்கு ஒரு வலுவான முதல்வர் வேட்பாளர் இல்லை என்பது நீண்டகால பிரச்சினை. ஆனால் மோடிக்கு ஆதரவான நி(அ)லை இன்னும் இருப்பது ஒரு பெரிய சிக்கல். அதைத்தான் லல்லுவின் கட்சி இவரை வைத்து காய் நகர்த்துகிறது.

    காங்கிரஸுன் நோக்கம் என்பது மோடியின் கூட்டணியை பலவீனப்படுத்தி அதை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அது வீக்கானது என்ற தோற்றத்தை உருவாக்கிட இது போன்ற கூட்டணி முறிவு ஓரளவிற்கு உதவும். அது மட்டுமல்ல, நிதிஷ் போல பலமில்லாத ஒருவரை அல்லது ஒரு தத்தியை முன்னால் நிறுத்தி, தான் ஆள நினைக்கிறது. ஒரு வேளை அதன் மூலம் தானே வெற்றி பெற்றால் அதன் பின் தன் வெற்றியை காரணம் காட்டி, பிரதமர் ஆகிவிடலாம் என்பதும் அந்த ஃபார்முலாவில் உண்டு. அல்லது குறைந்த பட்சம் இவர் போன்ற ஒரு டம்மியை அல்லது தத்தியை வைத்து அவர்களுக்கு தேவையானதை சாதித்துக்கொள்வது என்பது குறைந்த பட்ச நோக்கம்!

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவில் இருந்து நேற்று உத்தவ் தாக்கரே வரை முதுகில் குத்தியவர்களுக்கு அமித்ஷா வெச்ச ஆப்பு என்பது மிக.மோசமானது என்பது தெரியாமல் இல்லை.. ஆனால் ஆசை என்பது யாரை விட்டது!

    120 கிமீ வண்டி ஓட்டினால்தான் போய சேர முடியும் என்பதால், வந்தால் மலை, அந்தால் மயிறு என்று முடிவெடுத்துவிட்டார்! 150 கிமீ.வேகத்தில் வண்டி போகிறது!

    ஆசை இருக்கு தாசில் செய்ய அம்சம் இருக்கு கழுதை மேய்க்க!

    விதி எதுவெனில் வேதம் வேறென்ன செய்யும்?

  85. பாரதி சொன்னது அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.. அதுக்கு பொருள் அன்னசத்திரம் ஆயிரம் கட்டுவதில் கிடைக்கும் புண்ணியத்தை விடவும் ஆலயங்கள் கட்டுவதன்மூலம் கிடைக்கும் புண்ணியத்தை விடவும் ஏழைக்கு கொடுக்கப்படும் கல்வியால் கிடைக்கும் புண்ணியம் கோடி மடங்காகும்.. அதாவது அன்னசத்திரம் கட்டுவது மகா புண்ணியம்.. ஆலயம் கட்டுவது அதைவிட மகா புண்ணியம்.. அதோடு நிறுத்திவிடாது கல்விக்கூடங்களையும் கட்டுங்கள் அது அதைவிட புண்ணியம் சேர்க்கும் என்பதே. ஆனால் இந்த கூத்தாடி தற்குறி பொறம்போக்குகள் கோயிலை கட்டாதே கோயிலை பராமரிக்காதே அதற்கு பதில் கல்விக்கூடங்களை கட்டு என்கிறான்கள்.. இவனுகளின் குறிக்கோள் கோயிலை பயனற்ற ஒன்றாக இழிவு படுத்தி மக்களை சர்ச்சுக்கும் மசூதிக்கும் மடைமாற்றம் செய்வதே ஆகும்.. மிசநரிகளின் கைக்கூலிகள்.. கோயில் இல்லை என்றால் பக்தி இல்லை பக்தி இல்லை என்றால் ஒழுக்கம் இல்லை.. ஒழுக்கம் இல்லை என்றால் மனிதகுலமே இல்லை.. உடனே பூசாரிகள் எல்லோரும் ஒழுக்கமானவர்களா என்று தாய்க்கும் தாரத்திற்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாத நாத்திக மிருக கூட்டம் பாய்ந்துவரும்.. அந்த கூட்டத்தின் கொட்டை சப்பிகளாக சில குல்லாப் பாவாடைகள் வரும்.. பள்ளியில் பள்ளிவாசல்களில் சர்ச்சுகளில் நடக்கும் ஒழுக்கக்கேடான விசயங்களோடு ஒப்பிடும் போது கோயில்களில் நடப்பது ஒன்றுமே இல்லை.. பொத்திட்டு போங்கடா என்று பொ.. ல் மிதித்து விரட்ட வேண்டும்..

  86. உலகிலேய உண்மையான.. தலை சிறந்த வீரர்கள் யார் தெரியுமா..???

    இந்துக்கள் தான்
    சும்மாவா…?
    கிட்டதட்ட 800 வருடங்களாக கஜினிமுகமதுகளும்… பரங்கிய வெள்ளையர்களும் செய்த அடக்குமுறைகளுக்கும்… அச்சுறுத்தலுக்கும்… சொல்லவண்ணா துயரங்களுக்கும் பல துன்புறுத்தல்களுக்கும்… சூழ்ச்சிகளுக்கும் ஆளான போதும்…!!!

    நாகரீக மாற்று மத மதவிபச்சாரத்திற்க்கும்…!!!
    காசையும்… மாந்தரையும் காட்டி மதவிபச்சாரம் செய்யும் அற்ப பதர்கள் ஆசை வார்த்தை கூறிய போதும்…!!!

    எத்தனை ஏசு கிறுத்துக்கள்…!
    எத்தனை கன்னிமரியாக்கள்..!
    எத்தனை தெரஸாக்கள்…!
    எத்தனை அல்லாக்கள்…!
    எத்தனை எத்தனை நபிகள்…!
    எத்தனை ராமசாமிகள்…வீரமணிகள்…
    கருநாய்நிதிகள்… கமலஹாசன்கள்… சைமன்கள்…
    வைகோகள்…லாஸரஸ்கள்… உமாசங்கர்கள்… திரு மாமாவளவன்கள்…!!!

    எத்தனை பிடல் காஸ்ட்ரோக்கள்…
    காம்ரேடு கம்னாட்டிகள்… யெச்சூரிகள்… தாமஸ் பாண்டியன்கள்…!!!

    எத்தனை எச்சை ஓட்டுபொறுக்கிகள்… எத்தனை அரைவேக்காடு நடுநிலை நக்கிகள்… எத்தனை மாற்றுமத கைகூலிகள்…!!!

    இப்படி எத்தனை எத்தனை திருட்டு விபச்சார கபோதிகள்…
    தலைமுறை தலைமுறையாக முயன்ற போதும் உண்மையான இந்துக்களின் ரோமங்களை கூட தொடமுடியாமல் இன்னும் இந்துக்கள் மீது மறைமுக பனிப்போர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்…!!!
    இருந்தும் இந்தியாவில் 86% சுமார் 100 கோடி இந்துக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்…!!!

    ஏன் தெரியுமா..??
    ஒரு இந்துவை கடவுள் படைக்கிறான்
    மாற்று மதத்தவர்களை இன்னொரு மனிதன் உருவாக்குகிறான்

    சற்றே சிந்தித்துபாருங்கள்…?
    அனைத்து இந்துக்களும் கடவுளின் வீர மைந்தர்கள்தானே…???

    நெஞ்சம் நிமிர்த்தி சொல்லுங்கள் நான் இந்து என்று…!!!
    நான் கடவுளின் மைந்தன் என்று…!!!
    இந்துவாக இருப்பதில் பெருமை படுவோம்… மாற்றுமத சைத்தான்களை விரட்டி அடிப்போம்!!!
    இந்துவாய் இணைவோம்.

  87. #முலைவரி #தோள்சீலை
    தோள்சீலைப் போராட்டம், முலைவரி சட்டம் உண்மைநிலை என்ன? ஆங்கிலேயனிடத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியை திராவிடமும், கம்யூனிஸமும் கற்றுக் கொண்டார்களுக்கு என்பத்ற்கு இதை விட சிறந்த உதாரணத்தை சுட்டிக் காட்ட முடியாது:
    ———————————————————————————–
    இப்போது எவ்வாறு திமுக சில பல திட்டங்களுக்கு தமது ஆட்சியில் ஒப்புதல் கையெழுத்து ஆட்சியில் இருந்து நீங்கியது அதே திட்டத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டுப் போராடி கேவலமான அரசியல் செய்கிறதோ அது போல் தான் அன்றைக்கு ஆங்கிலேயர்கள் ஒரு சட்டத்தையும் மறைமுகமாக வித்தித்துவிட்டு பின்பு அந்தச் சட்டத்துக்கு எதிராக மக்களை போராட்டம்ம் செய்யத் தூண்டி பல மக்களை மதம் மாற்றியது.

    தோள்சீலைப் போராட்டம்:
    —————————————–
    கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. பனையேறும் தொழிலைச் செய்து வந்த பனையேறி நாடார் நாயர், ஈழவர், புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் நாடு ஒரு நடைமுறையை வகுத்திருந்தது.

    ஆங்கிலேயர்கள் சுமத்திய வரி:
    ————————————————-
    இந்தியாவை ஒவ்வொரு சமஸ்தானத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள், திருவாங்கூர் சமஸ்த்தானத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதற்காக அந்த காலத்திலேயே வருடத்துக்கு 18 இலட்சம் கப்பமாக கட்ட வேண்டும் என்று திருவாங்கூர் சமஸ்தானத்தை நிர்பந்தித்தனர்.

    முலைக்கரம் தலைக்கரம்:
    —————————————–
    அவர்களின் நிர்பந்தத்தின் பெயரில் திருவாங்கூர் அரசு தனது மக்களின் மீது முலைக்கரம் தலைக்கரம் என்று இரு வரிகளை விதித்தது. அதாவது பெண்கள் மீது சுமத்தப்படும் விரியானது முலைகரம் என்றும் ஆண்கள் மீது விதிக்கப்படும் வரியானது தலைக்கரம் என்று பெயரிடப்பட்டது. (ஆனால் கலகம் விளைவிக்க நினைப்போர் முலைக்கரத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டனர்.) இதில் அரசாங்கத்தில் பணிபுரிவோர்க்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. வரி கட்டுபவர்களில் பெரும்பாலும் நாயர்கள் மற்றும் நாடார்கள் எனபதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த வரிகளை ஆங்கிலேயர்களின் மறைமுகமாக கப்பம் கட்டுவதற்காக வசூலிக்கப்பட்டது என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மிஷனரிகளின் குள்ளநரித்தனமும் அரசு ஆணையும்
    ———————————————————————————-
    1829-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட நீட்டில் (அரசு ஆணையில்) இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போன்று குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை. இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உரிமையும் பறிபோயிற்று.

    இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் திருவாங்கூர் சமஸ்தானத்தை மரைமுகமாக நடத்தியது ஆங்கிலேயர்களும் மிஷனரிகளும் தான். இங்கே அரசாணையும் அவர்களாலேயே வெளியிடப்படுகிறது. இந்த ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு பல நாடார் பெண்களையும் ஆண்களையும் எளிதாக மிஷனரிகள் கொண்டு மதம் மாற்றப்படுகின்றனர்.

    மதம் மாற்றப்பட்ட மக்களை வைத்துப் போராட்டம்:
    ———————————————————————————
    அவ்வாறு மதம் மாற்றப்பட்ட மக்களை வைத்து மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர். அதாவது தாங்கள் இவ்வாரே போராடி வெற்றி பெற்றோம் என்றும் அது போல் உங்களையும் போராடி வெற்றி பெற வைக்கிறோம் என்றும் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தினர். அதன் வாயிலாக பல நாடார் இன மக்களை மதம் மாற்றலாம் என்ற எண்ணம் தான் இதற்கு பிரதானம்.

    பிள்ளையையும் கிள்ளி தொட்டிலயும் ஆட்டுவது:
    —————————————————————————–
    இந்த போராட்டத்தின் விளைவாக 1859 ஆம் ஆண்டு ஜுலை 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அனைத்து சமயத்தைச் சேர்ந்த சாணார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Coarse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. மீண்டும் ஒன்றை நியாபகப்படுத்த விரும்புகிறேன் இங்கே அரசாணை பிறப்பித்ததும் ஆங்கிலேய அரசு தான்.

    சுருக்கமாக மக்களுக்குப் புரியும் வகையில்:
    ——————————————————————–
    திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு அதிகப்படியான கப்பம் விதித்ததும் ஆங்கிலேய அரசுதான். பின்பு அந்த கப்பத்தை வசூலிக்க முலக்கரம் தலக்கரம் என்று வசூழிக்க வழி வகை செய்ததும் ஆங்கிலேயர்களின் மிஷனரிதான். இங்கே முலக்கரம் என்பது பெண்ணின் உறுப்பைக் குறிப்பது அல்ல, பெண்ணைக் குறிப்பதாகும். அதுபோல தலக்கரம் என்பது ஆணைக் குறிப்பதாகும். அதிக வரியையும் திருவாங்கூர் சமஸ்தானம் மூலம் மக்கள் மீது விதிக்கச்செய்துவிட்டு அதை பெண்கள் மீது ஆபாசமாக மாற்றி அதை எதிர்த்து போராடுவது போல் போராடி மதம் மாற்றுவதில் வெற்றி கண்டனர் ஆங்கிலேய மிஷனரிகள். இதை வைத்து தோல் சீலை போராட்டம் என்ற நாடகத்தையும் அரங்கேற்றினர்.

    நாடார்கள் கீழ் சாதியாக சித்தரிக்கப்பட்டனர்:
    ———————————————————————
    தோள் சீலைப் போராட்டத்தின் ஒரு அங்கமாக நாடார்களுக்கு நில உரிமை மறுக்கப்பட்டது என்பதே ஆகும். ஆனால் இன்றைக்கு கிருஸ்தவ மிஷனரிகளின் வசம் இருக்கும் பெரும்பாளான நிலங்கள் நாடார்களுடையது. நில உரிமை பரிக்கப்பட்ட வகையராக்கள் எவ்வாறு நிலங்களை வைத்திருக்கவும் விற்கவும் முடியும்? இவ்வாறு ஆங்கிலேய ம்,இஷனரிகள் பல பொய்களையும் கட்டுக் கதைகளையும் கட்டவிழ்த்துவிட்டுதான் மதம் மாற்றம் செய்தனர்.

    – Vijaya Kumar A

    ஆதாரப் புத்தகங்கள்:
    ——————————–
    1. தோல்சீலைக் கலகம் – அம்.ராமசந்திரன், அ.கணேசன்.
    2. எழுதப்படாத சரித்திரம் சமூக புரட்சியாளர் வைகுண்ட சாமி
    3. பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட பண்பாட்டு வேர்களைத் தேடி.
    ———————————————————————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *