இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18

இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக உத்திரபிரதேசம் விளங்குகிறது. இந்தியாவில் எந்தப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தாலும், புலன்விசாரனையில் சந்தேகப்படும் நபர் உத்திரபிரதேசத்தை சார்ந்தவராக இருப்பார் அல்லது உத்திரபிரதேசத்தில் தஞ்சம் புகுந்திருப்பார். 1985லிருந்தே உ.பி.யில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலை தூக்கியது. சிமி துவக்கப்பட்ட இடமான அலிகார், அதிக அளவில் பயங்கரவாதிகள் உருவான மாவட்டம் ஆஸம்கார், அடிக்கடி கலவரம் நடக்கும் கான்பூர்… உ.பி. தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்தே தங்களது பிரச்சார உத்திகளை வகுக்கிறார்கள்….

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18

பயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்

ஏழை இஸ்லாமியர்கள், எல்லாம் அல்லாவைச் சேர்ந்தது என அதிக அளவில் சந்தோஷமாக வாழ்கிறார்கள்; ஆனால் படித்தவர்கள், நல்ல வசதி படைத்தவர்கள் மட்டுமே பயங்கரவாத செயலுக்கு மாறுகிறார்கள்… மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். பட்டப் படிப்பும், பட்ட மேற்படிப்பும், மருத்துவ படிப்பும் அரசுக் கல்லூரிகளில், அரசுக் கல்வி உதவித்தொகை பெற்றுப் படித்தவர்கள். இவர்களின் பின்னே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும், பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பும் உள்ளன… ஆனால் நாட்டில் உள்ள மதச்சார்ப்பற்றவைகளாகக் காட்டிக் கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு கல்வி கிடைப்பதில் பாகுபாடு இருப்பதாகக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

View More பயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17

2001ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை பல்வேறு கால கட்டங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களும், இது தொடர்பான காவல்துறையினரின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தால், மற்ற மாநிலங்களை காட்டிலும் டெல்லியில் அதிக அளவில் இவர்களின் செயல்பாடுகள் நடந்துள்ளன என்பது நன்கு தெரியும். கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் நடந்த சம்பவங்களை முழுமையாக கூறுவதற்கு பதில் முக்கியமான சம்பவங்களை மட்டும் தொகுத்து கொடுத்தால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நோக்கமும், அரசு சிறுபான்மையினருக்கு காட்டப்படும் சலுகையின் காரணமாக பாரத தேசம் படும் வேதனைகளையும் இனம் கண்டுகொள்ள ஏதுவாக இருக்கும். பாரத தேசத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகளை ஆய்வு செய்யும் போது, பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் நாடுகளைச் சார்ந்த முக்கிய இஸ்லாமிய தலைவர்களின் நோக்கம் வேறுமாதிரியாக இருந்தது. இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தொடர்ந்து செயல்படுத்துவதின் நோக்கம் மெல்ல வெளியே கசிய தொடங்கியது.

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17

அசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்!

1990ம் ஆண்டு வரை போடோ பழங்குடியினர் பெரும்பான்மை ஆக இருந்தார்கள். 2012ல் 22 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 50 சதவிதத்திற்கு மேல் உயாந்துள்ளது… அசாமில் உள்ள அந்நியர்களை வெளியேற்றுவது சம்பந்தமான உடன்பாட்டை மத்திய அரசு மாணவர் அமைப்புடன் ஏற்படுத்தியது. அதற்குப் பிறகும் ஊடுருவல் காரர்களை வெளியேற்றாமல் இருப்பது இந்திய அரசே இந்திய மக்களுக்கு புரியும் துரோகமாகும்… பங்களாதேசில் இருந்து ஊடுருவும் இஸ்லாமியர்களால் தங்கள் அரசியல் அறுவடை நடத்தலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை அசாமிலும், மற்ற வடகிழக்கு மாநிலங்களீலும் வெடிக்கும் இத்தகைய கலவரங்களைக் கட்டுப்படுத்த இயலாது…

View More அசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்!

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்: மறுப்பும் விளக்கமும்

பயங்கர வாத இயக்கத்திற்கு கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம் என்ற கட்டுரையில் உள்ள கருத்துக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து, ஆதாரங்கள் கோரி மனித நேய மக்கள் கட்சியின் சட்ட ஆலோசகர் கடிதம் எழுதியிருந்தார். அந்த ஆதாரங்களை கட்டுரையாசிரியர் இங்கு தொகுத்தளிக்கிறார்… அல்-உம்மா இயக்கத்திலிருந்து பிரிந்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தோற்றுவித்தனர், மனிதநேய மக்கள் கட்சி என்பது த.மு,மு.கவின் அரசியல் பிரிவு.. திரு. ஜவாஹிருல்லா சிமியிலும் பொறுப்பில் இருந்தார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்திலும் பொறுப்பில் இருந்தார்… அவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப் பட்ட சம்பவமும் செய்தி ஊடகங்களில் பதிவு செய்யப் பட்ட ஆதாரபூர்வமான தகவல்..

View More தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்: மறுப்பும் விளக்கமும்

காஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை

… எந்த மாநிலத்திற்கும் இல்லாத அதிகாரங்கள் கொடுக்கும் விதமாக அரசியல் ஷரத்து 370, காஷ்மீர் மாநிலத்திற்கு என தனி அரசியல் சட்டம் போன்றவற்றை கொடுத்ததில் விளைவு, காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் கொழுந்து விட்டு எரியும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது. இநத பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திருப்ப வேண்டும் என பல்வேறு குழுக்கள் நியமித்து பரிந்துரை செய்த பின்னும் கூட பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை என்பது வேதனைக்குரியது….

View More காஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 16

பாரத தேசத்தின் தலைநகர் டெல்லி என்பதால் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளின் முக்கியத் தலைவர்களும் தங்களுக்குத் தேவையான அனைத்து விதமான தகவல் பெறுவதிலும், அந்தத் தகவல்களை முறைப்படி யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்புவதற்கும், உரிய இடமாக டெல்லியை மாற்றி வைத்திருந்தார்கள்….1997-ம் ஆண்டிலிருந்து டெல்லியில் பல்வேறு இஸ்லாமியப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையில், தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய வகையில் உள்ளது. ஆனால் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை டெல்லியில் மட்டும் 200க்கும் மேற்பட்டது. . கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே பயங்கரவாதிகள் அதுவும் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள், மற்றவர்கள் அப்பாவிப் பொது மக்கள் என்பதை மறந்து விட இயலாது.

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 16

மலேகான் முதல் மகாடெல்லி வரை

குறைந்தது 9 இஸ்லாமியத் தீவிரவாதிகளாவது மலேகான் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று அரசே ஒப்புக்கொள்கிறது. பிறகு திடீரென்று சடசடவென மாற்றங்கள் ஏற்பட்டன. கைது செய்த பின் அவர்கள் மீது முறையான வழக்குகள் தொடுப்பதற்குப் பல ஆண்டுகள் கழிந்தன. குற்றவாளிகள் தப்புவதற்குத் தேவையான பல விஷயங்கள் நடக்கின்றன. அதாவது, நடக்க வேண்டியவை நடக்காமல் போகின்றன. மலேகான் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரிகள் மாற்றப்படுகிறர்கள். மலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட பலரும் இஸ்லாமியர்கள் என்பது தெரிந்தும், இந்து பயங்கரவாதம் என்ற ஒரு இல்லாத பூச்சாண்டிப் பயங்கரவாதத்தை அரசே உருவாக்கி மக்களை மிரட்டி வருகிறது.

View More மலேகான் முதல் மகாடெல்லி வரை

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14

இந்த நாட்டின் துரதிர்ஷ்டம், குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தவுடனே, ஆளும் கட்சியினர் சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக குண்டுவெடிப்பின் காரணங்களை திசைதிருப்பக் கூடிய செயலும் நடைபெறுகின்றது… பயங்கரவாதச் செயல்கள் செய்வதற்கு ஆட்களைத் தேர்வுசெய்வதில் கூட இவர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் வித்தியாசமானவையாகும். பாகிஸ்தான் முழுவதும் இவர்களுக்கு அலுவலங்கள் உள்ளன… இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த இஸ்லாமியர்கள் அதாவது அரபு நாடுகளில் பணியின் நிமித்தமாகச் சென்றவர்கள், இத்திட்டத்திற்கு இசைந்து, இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டை எடுத்து கூறியே இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள்…

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14

உத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்

2004ம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை மத்தியில் ஆட்சியில்
இருக்கின்ற கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. 2004ல் கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றி உள்ளார்களா என்பதைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால் இவர்களின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும். விலைவாசி
உயர்ந்து கொண்டே போகிறது, விலைவாசியைக் குறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதைப் பற்றி ராகுல்
காந்தி விளக்கமளிக்க வேண்டும்.

View More உத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்