அரசியல் “மாநாடு”: திரைப்பார்வை

இருபது நிமிடங்களில் என் மீது திணிக்கப்படும் கருத்து என்னவென்று தெரிந்துவிட்டது. 1998 கோவை குண்டு வெடிப்பு களம். பாஷா என்ற பெயரை யாரும் உச்சரிக்கவில்லை.. “எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்” என்று ஆதங்கப்படும் அவர்கள் “ஏன் எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்” என்று கேள்வி கேட்காமல் இருப்பது விந்தையே.. படம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் மகன் “ஆமாம்பா. Poor they are. They are being crucified. பாவம் அவுங்க” என்று சொன்னபொழுது தான் என் பயம் அதிகமாகியது. The agenda works…

View More அரசியல் “மாநாடு”: திரைப்பார்வை

இருளர்களும் புளோரிடா மலைப்பாம்புகளும்

குட்டி விலங்குகளை சுவாகா பண்ணும் மலைப்பாம்புகளைப் பிடிக்க இயலாமல் மொத்த புளோரிடா அரசாங்கமும் தடுமாறியது.. ஆராய்ச்சியாளர் ரோமுலஸ் விட்டேக்கர் உதவியுடன் தமிழ் நாட்டிலிருந்து மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் என்ற இரு இருளர்களையும் அங்கு தருவிக்கிறது. இது நடந்தது 2017ல், பொய்யான சித்தரிப்பில் எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம் ‘ கூறும் 1993ஆம் வருடத்திற்கு நாற்பது ஆண்டுகள் சென்ற பிறகு நிகழ்ந்தது இது… இருளர்களுக்கு என்று தனியாக உள்ள கூட்டுறவுச் சங்கம் நாற்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. இதன் உறுப்பினர்களான இருளர்கள் மருந்துக்காக விஷப் பாம்புகளைப் பிடித்து கொடிய நஞ்சினை உரிய தொழில் நுட்பங்களோடு சரியான பாதுகாப்பு வழிமுறைகளோடு எடுக்கிறார்கள்… கிட்டதட்ட இரண்டு இலட்சம் எண்ணிக்கையுள்ள இருளர் சமுதாயத்தின் இறுதி பாம்புப் பிடிப்பவர்களாக இவர்கள் மட்டுமே இருக்கப் போகின்றனர்…

View More இருளர்களும் புளோரிடா மலைப்பாம்புகளும்

ருத்ர தாண்டவம் – திரைப்பார்வை

டிரெய்லரில் வந்த காட்சிகளை வைத்து கிறிஸ்தவ மதமாற்ற அபாயம் அழுத்தமாக பேசப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிறு ஏமாற்றம். ஆயினும், போதைப் பொருள் பரவல், பட்டியல் சமுதாயத்தினரின் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்ட வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் (PCR) துஷ்பிரயோகம், “க்ரிப்டோ கிறிஸ்டியன்ஸ்” ஏன்று பெயர்சுட்டப்பட்டும் முகமூடி கிறிஸ்தவர்கள், தேசவிரோத “போராட்ட” என்ஜிஓ அரசியல் என நான்கு பரபரப்பான சமாசாரங்களைப் போட்டுக் காய்ச்சி காட்டமான காக்டெயிலாக இப்படி ஒரு அதிரடி திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. இந்த ஒரு விஷயத்துக்காகவே அவருக்கும் மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்…

View More ருத்ர தாண்டவம் – திரைப்பார்வை

நர்த்தன கணபதி

பொற்சிலம்பு வயிற்றில் அணிந்த பாம்புக்கச்சையோடு அழகாக மிளிர, வெற்றிதரும் நடனத்தைச் செய்யும் தந்தையே வியந்து பார்த்து துடி கொட்டி இசைக்க, நின்று ஆடுகின்ற ஆனைக்கன்றை நினைப்பவர்களது வினைகள் இல்லாமலாகும் என்கிறது இப்பாடல்.. ஸ்ரீ சங்கரர் இயற்றிய கணேச புஜங்கம் – இதில் முதலில் நர்த்தன கணபதியின் ஸ்வரூபமும், பின்பு யோகிகளின் தியானத்தில் வெளிப்படும் கணபதியின் சச்சிதானந்த ஸ்வரூபமும், இறுதியில் பரம்பொருளாகிய கணேச தத்துவமும் அழகுற வர்ணிக்கப் படுகின்றன. இசைஞானி இளைராஜா மிக அழகாக துல்லியமான சம்ஸ்கிருத உச்சரிப்புடன் இந்தத் துதியை இசையமைத்துப் பாடியுள்ளார்….

View More நர்த்தன கணபதி

பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்

பாரம்பரியமும் பழமையும் வாய்ந்த சுவரோவியங்கள் உள்ள கோவில்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு இருக்கின்றன என்று ஒரு பட்டியல்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், வீடூர் ஆதிநாதர் கோவில், குறிஞ்சி கோதண்டஸ்வாமி கோவில், நார்த்தாமலை விஜயாலய சோழீச்சுரம் கோவில், தஞ்சைப் பெரிய கோவில், திருக்குறுங்குடி நின்றநம்பி கோவில், முழையூர் ஆதிச்சிவப்பிரகாச மடம், செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோவில்….

View More பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்

சர்வம் தாளமயம் – திரைப்பார்வை

மிருதங்கம் என்ற தோற்கருவியை செய்து கர்நாடக சங்கீதக் கச்சேரிகளின் மிருதங்க வித்வான்களுக்கு அளித்து வரும் ஒரு பட்டியல் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பீட்டர் ஜான்சன். ஒரு தருணத்தில் மூத்த வித்வான் பாலக்காடு வேம்பு ஐயரின் வாசிப்பால் கவரப்பட்டு அவரது சீடராகி விடவேண்டும் என்று துடிக்கிறார். பல்வேறு சாத்தியங்கள் வழியாக அவரைப் போன்றவர்கள் நுழைவதற்கே கடினமான கர்நாடக இசை உலகம் என்ற இரும்புக் கோட்டைக்குள் அவர் புகுந்து விடும் சித்திரம் இந்தப் படத்தில் அற்புதமாக எழுந்து வருகிறது…

View More சர்வம் தாளமயம் – திரைப்பார்வை

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2

ரஜினி விஷயத்தில் அவர் இந்திய தேசிய நலனை முன்னெடுப்பார் என்று நம்ப எந்த முகாந்தரமும் இல்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே இந்து விரோதிகளின் கைப்பாவையாகிவிட்டிருக்கிறார். அவருடைய சமீபத்திய திரைப்படங்கள் அதையே காட்டுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தமிழகத்தை காப்பாற்றுவதற்கு முன் ரஜினியைக் காப்பாற்றவேண்டும் என்றுதான் தோன்றுகிறது… மக்கள் இந்து மனநிலையுடனும் இந்திய தேசிய மனநிலையுடனும் வளர்ச்சி தொடர்பான எதிர்பார்ப்புகளுடனும் தான் இருக்கிறார்கள். மக்களுடைய அந்த உணர்வுக்குக் குரல் கொடுக்க எந்த தமிழக கட்சியும் முன்வருவதில்லை. ரஜினிகாந்த் தனது பிரபல்யத்தைப் பயன்படுத்தி அந்தக் குரலை முன்னெடுக்கவேண்டும். வெற்றி தோல்வி பற்றி சிந்தித்து காய் நகர்த்த வேண்டிய விஷயம் அல்ல இது…

View More பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1

ரஜினியின் அடையாளங்கள் என்னென்ன… தேசியவாதி, தெய்வ பக்தி மிகுந்தவர், மத நல்லிணக்க குணம்கொண்டவர், தீமைகள் குறைவான ஆணாதிக்க மனோபாவம், ஏழை எளியவர்களின் காப்பாளர்.. இவையெல்லாம் கபாலிக்கு முன்… இந்து விரோதம் என்பது புதிய விஷயம் ஒன்றுமல்ல. பராசக்தி காலம் தொடங்கி நடந்துவரும் அசட்டு, அபாயகரமான விஷயம் தான். ஆனால், இப்போது இந்து விரோத படங்களின் பெருக்கமானது முந்தைய இரண்டு காலகட்டத்தைவிடக் கூடுதல் கவனத்துடன் பார்க்கப்படவேண்டியது. ஏனென்றால், அது இதுவரை எப்போதும் இருந்திராத இந்திய விரோதம் என்ற விஷத்தையும் நுட்பமாக உள்ளே கொண்டிருக்கிறது…

View More பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1

குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்

காதல் நோயால் வருந்தும் தலைவியைத் தேடிக் கொண்டு குறத்தி வருகிறாள். தங்களது குற்றால மலையின் அழகையும் வளத்தையும் வர்ணித்து அவள் பாடும் பாடல்கள் அற்புதமானவை. இன்றைய பொதுப்பயன்பாட்டில் குறவன், குறத்தி ஆகிய சொற்களை நாகரீமில்லாத காட்டுமிராண்டி மக்களைக் குறிப்பது போலப் பயன்படுத்துகிறோம். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட, மலைவாழ் சாதியினரான குறவர்கள் தங்களது குலத்தின் கீர்த்தியைப் பெருமிதத்துடன் எடுத்துரைப்பதை இந்த நூலில் காண முடிகிறது: “அருள் இலஞ்சி வேலர்தமக்கு ஒருபெண்ணைக் கொடுத்தோம் – ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்”… குறி சொல்வதற்கு முன் தெய்வ வணக்கம் செய்கிறாள் குறத்தி. சிவபெருமான், உமையம்மை தொடங்கி பன்றி மாடன், பிடாரி வரை அனைத்து தெய்வங்களையும் துதிக்கிறாள். வரலாறு, சமூகவியல், பண்பாடு குறித்த எந்த ஆழ்ந்த புரிதலும் இல்லாமல் சிறுதெய்வம் பெருந்தெய்வம் அது இது என்று தமிழ்நாட்டு “ஆய்வாளர்கள்” கூறும் ஆதாரமற்ற கற்பனைக் கோட்பாடுகளை எல்லாம் தவிடுபொடியாக்குவதாக உள்ளது அவளது துதிப்பாடல்…

View More குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்

தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்

இத்தொடரில் என் மனதைத் தொட்ட ஒரு பாத்திரம் ஏகலைவன்.  கட்டைவிரலைக் கேட்டது அறமற்றசெயல் என்று துரோணர்மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுதளிக்கிறான் அவன்.  “அவர் என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டதால்தானே என்னிடம் குருதட்சிணை கேட்டுப் பெற்றுக்கொண்டார்?  பொன், பொருள் எதுவும் தர இயலாத, வெறும் வேட்டுவனான என்னிடம் நான் தரக்கூடிய ஒன்றைத்தானே கேட்டிருக்கிறார். அப்படிப் பெற்றுக்கொண்டதால்தானே நான் அழியாப் புகழ் பெற்றேன்?  எனவே, எனது குரு குற்றமற்றவர்!” என்னும்போது எனது கண்கள் பனித்துவிட்டன.  

View More தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்