மோடி பிரதமரானால் யாருக்கெல்லாம் ஆப்பு?
Baclofen 10 mg recreational us a, but it is highly illegal, and you may lose your license and have to leave the us in order to get the medication. The drug price of clomiphene Goris should be started only when absolutely necessary. You can also take a clomid doctor to evaluate you for diabetes, or you can use your doctor to check you for heart disease.
The amount of energy the star receives from the planet is so. The clomid price at dischem Ames product is to make the first ever "pilgrim of i-o". Hangırsa kötü şekil ücretsiz kalıcı, doğal gibi kötü şeyleri kullanımına karşı, ihtiyacıyla yapabiliriz.
The last afternoon at the apartment, after the kids had gone upstairs for the day, rachel was sitting. The azithromycin 500 mg mims, New Smyrna Beach are taken as capsules and are available in many different flavors. Tadalafil is a highly potent medication that is used to treat erectile dysfunction (ed).
1) அதிகாரிகள்:
இதுநாள் வரை எந்த வேலையும் செய்யாமல் அரசியல் தலைவர்களுக்கு ஒத்து ஊதிக்கொண்டிருந்த அதிகாரிகளுக்குத்தான் முதல் ஆப்பு. அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை. எங்கே, எப்படி எந்த திட்டத்தில் கொள்ளையடிக்கலாம் என்று அரசியல்வாதிகளுக்கு கோடிட்டுக் காட்டுபவர்களே இந்த அதிகாரிகள்தான். பல அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யத் தயங்குவதில்லை. கோப்புகளைப் பார்க்காமல், மக்களின் தேவைகளை இழுத்தடிப்பு செய்து உல்லாச வாழ்க்கை அனுபவித்த அதிகாரிகளுக்குத்தான் முதல் ஆப்பு. இனிமேல் அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சால்ஜாப்பு சொல்லமுடியாது. முன்பு மாதிரி எடுத்ததெற்கெல்லாம் கை நீட்ட முடியாது.
2) அரசியல் புரோக்கர்கள்/அரசியல் ஆதரவு தேடித் தருபவர்கள் (Lobbyists):
அரசாங்கத்திற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பாலமாக இருக்கும் இந்த புரோக்கர்கள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. எந்த நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் ஒப்பந்தம் வழங்கவேண்டும், யாருக்கு வழங்கக்கூடாது என்பதிலிருந்து அனைத்து விவகாரங்களையும்தான் இந்த புரோக்கர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். வர்த்தக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் ஏதாவது லைசன்ஸ் வாங்க வேண்டுமென்றால் இந்த புரோக்கர்களைத்தான் அணுகுகிறார்கள். புதிதாக பதவி ஏற்கவிருக்கும் மந்திரி சபையில் யார் எந்தத் துறைக்கு மந்திரியாகவேண்டும் என்பது முதற்கொண்டு இந்த புரோக்கர்கள் தீர்மானிக்கின்றனர். 2 ஜி விவகாரத்தில் நீரா ராடியவின் பங்கு இதற்கு ஒரு நல்ல உதாரணம். இந்த அரசியல் புரோக்கர்களை முற்றிலும் ஒழிக்க முடியாது, ஆனால் கட்டுப்படுத்தப்படுவார்கள்.
3) ஊழல் புரிந்த அரசியல்வாதிகள்:
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களை ஒன்றும் செய்வதில்லை. பேருக்கு வழக்கு நடக்கும். வழக்கு முடிவதற்குள், ஒன்று அந்த ஊழல் அரசியல் தலைவர்கள் இறந்து விடுவார்கள் அல்லது அவர்கள் செய்த ஊழலை விட பெரிய ஊழல்கள் நடந்தேறி மக்கள் மனதில் இவர்கள் செய்த ஊழல்கள் எல்லாம் மறைந்துவிடும். ஆனால் இம்முறை அதற்கு சாத்தியமே இல்லை. உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப ஊழல் அரசியல் தலைவர்கள் மீது சட்டமும், விசாரணையும் முடுக்கி விடப்படும். நீதிமன்ற தீர்ப்புகள் வருவதற்கான காலதாமதங்கள் சரி செய்யப்படும்.
4) தீவிரவாதிகளும், அவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களும்:
இதுநாள் வரை இந்தியாவில் புகுந்து எந்த நாச வேலை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்திருந்த தீவிரவாத இயக்கங்களுக்கு பலத்த அடி விழும். அவர்கள் நாட்டிற்குள் நுழையும் முன்பே அவர்களது கதை முடிக்கப்படும். உளவுத்துறை புதிய பரிமாணத்தை எட்டும். தீவிரவாத தாக்குதல்களைத் தடுக்கும் சிறப்புப் படைகள் பல உருவாக்கப்படும். தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தரும் உள்ளூர் ஆசாமிகளுக்கென புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கும் அவர்களது விசுவாசிகளுக்கும் கால தாமதமின்றி தண்டனைகள் நிறைவேற்றப்படும். தீஸ்தா செத்தல்வாட், மல்லிகா சாராபாய், அருந்ததி ராய், பிரிவினை பேசும் பிரஷாந்த் பூஷன், அக்பருதின் உவைசி , தாவுத் இப்ராகிம் ஆகியோருக்கெல்லாம் ஆப்பு நிச்சயம்.
5) மாவோயிஸ்டுகள்:
இந்தியாவில் இவர்களது ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லை. இவர்கள் யார், யாருக்காக செயல்படுகிறார்கள்? எங்கிருந்து இவர்களுக்கு பணம் மற்றும் ஆயுதங்கள் வருகிறது என்று அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்திருந்தாலும் இதுவரை எந்த அரசாங்கமும் இவர்கள் மீது சரியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் உள்நாட்டில் செயல்படும் கம்யூனிஸ்டுகள். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்த அடுத்த நிமிடம் மனித உரிமை மீறல் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். பத்திரிக்கைகளில் கண்களை கசக்க வைக்கும் கட்டுரைகளை (கட்டுக் கதைகளை) எழுதுவார்கள். போராட்டம் நடத்துவார்கள். அரசியல் மட்டத்திலேயே அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முறியடிப்பார்கள். அரசியல் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றால் தங்களுடைய தோழர்களை அல்லது தோழமை இயக்கங்களை வைத்து அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்வார்கள். மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தந்த டாக்டர் பினாயக் சென்னைக் காப்பாற்ற இவர்கள் செய்த முயற்சி நாடறிந்தது. நாட்டிற்கு எதிராக சதி செய்த குற்றத்தில் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட பினாயக் சென் இப்பொழுது நாட்டின் திட்டக் குழு உறுப்பினர். இனி இவையெல்லாம் மாறிவிடும். இராணுவம் வரவழைக்கப்பட்டு மவோயிஸ்டுகளின் கொட்டம் ஒடுக்கப்படும் அல்லது முற்றிலுமாக முடித்து வைக்கப்படும். இடதுசாரிகள் மனித உரிமை மீறல் என்று கதறினாலும் ஒன்றும் நடக்காது. நாட்டிற்கு துரோகம் செய்பவர்கள் இனம் கண்டுகொள்ளப்பட்டு களை எடுக்கப்படுவார்கள்.
6) சி.பி.ஐ:
இதுவரை ஆளும் கட்சியின் கூண்டுக் கிளியாக செயல்பட்ட சி.பி.ஐ அதன் கூண்டில் இருந்து விடுவிக்கப்படும். இதுநாள் வரை ஆளும் கட்சிக்கு கைப்பாவையாக செயல்பட்ட சி.பி.ஐ இனி சுதந்திரமாக செயல்படும். ஆட்சியாளர்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்து அவர்கள் எதிரிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும். அதேபோல் ஆட்சியாளர்களின் கட்டளையின் பேரில் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவிட்ட விவகாரங்களெல்லாம் கிளரப்படும். பதவியை துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் எல்லாம் வருந்த வேண்டிய காலம் தொடங்கிவிட்டது. நேர்மையாக உழைத்த அதிகாரிகளெல்லாம் மகிழ்ச்சி அடைவர். நேர்மையான அதிகாரிகள் மோசமாக செயல்பட்ட அதிகாரிகளை காட்டிப்கொடுப்பர், அவர்களுக்கு எதிராகவும் சாட்சியம் அளிப்பர்.
7) ஊடகத்துறை மற்றும் செய்தி நிறுவனங்கள்:
என்ன ஆட்டம் போட்டார்கள் இவர்கள். இந்திய ஜனநாயகத்தின் ஐந்தாதவது தூண் என்று பறைசாற்றிக்கொண்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்களில் முதன்மையானவர்கள் இந்த ஊடகத்துறையினர். அரசியல் அமைப்புச் சட்டம் தங்களுக்கு கொடுத்த கருத்து சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்த அரக்கர்கள். உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டவர்கள். காசுக்காக எதையும் செய்து வந்த எத்தகர்கள். தங்களுக்கு வேண்டியவர்களைப் பற்றி உயர்வாகவும், வேண்டாதவர்களைப்பற்றி இழிவான செய்திகளையும் பரப்பி வந்த இழிபிறவிகள். மற்ற அனைவரையும் விட இவர்களுக்குத்தான் பெரிய ஆப்பு காத்துக் கிடக்கிறது. ஊடகத்துறை, புது சட்டம் கொண்டுவரப்பட்டு கட்டுபடுத்தப்படும். ஊடகத்துறைக்கு வரும் நிதி உதவிகள் கண்காணிக்கப்படும். இதுகாரும் ஊடகத்துறையில் தருண் தேஜ்பால் போல் தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டவர்கள், ஈபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
8) என்.ஜி.ஓக்கள் (NGOs):
கஷ்டத்திலிருப்பவர்களுக்கும், நலிவடைந்தவர்களுக்கும் உதவி செய்கிறேன் என்ற பெயரில் கோடிக்கணக்கான வெளிநாட்டு பண உதவிகளை வைத்துக்கொண்டு மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களெல்லாம் இனி கடையை மூட வேண்டியதுதான். குஜராத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மதமாற்று தடைச் சட்டம் இனி தேசிய அளவில் கொண்டுவரப்படும். என்.ஜி.ஓக்களின் பண புழக்கங்கள், பட்டுவாடாக்கள் மேற்பார்வை இடப்படும். இவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பண உதவிகள், புதிய சட்டங்கள் மூலம் தீவிரமாக கட்டுப்படுத்தப்படும்.
9) நலிந்த அரசு பொது நிறுவனங்கள்:
நஷ்டத்தில் இயங்கும் பொதுநிறுவனங்களெல்லாம் இழுத்து மூடப்படும். இதுநாள் வரை பொது நிறுவனங்கள் நலிவுற்று நஷ்டத்தில் ஓடினாலும் அவற்றை மூடாமல் அங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் போராட்டத்திற்கும், யூனியனிற்கும் அஞ்சி பல நிறுவனங்களை அரசு நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருக்கிறது. பெருவாரியான அரசு பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தியே ஆகவில்லை என்றாலும் அரசாங்கம் சம்பளம் முதற்கொண்டு ஏனைய காரணங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு வந்திருக்கிறது. இனிமேல் இத்தகைய நிறுவனங்கள் மூடப்படும் அல்லது தனியார் வசம் கொடுக்கப்படும். இந்தியாவில் விமான சேவை செய்யும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா எடுத்துகொள்ள முன்பே விருப்பம் தெரிவித்திருக்கிறார். தொடக்கத்தில் ஏர் இந்தியா தோற்றுவித்ததே டாட்டா குழுமம்தான். இலாபம் ஈட்டக்கூடிய அல்லது அரசாங்கத்திற்கு முக்கியம் என்று கருதப்படுகின்ற நிறுவனங்களின் நிர்வாகிகளெல்லாம் மாற்றப்படுவர். இவை தவிர பெட்ரோலியத் துறை, இன்சூரன்ஸ் துறை சீரமைக்கப்படும். எண்ணெய் விலைகளின் ஏற்ற, இறக்கங்களை சமன் செய்ய புது யுக்திகள், கொள்கைகள் கொண்டுவரப்படும்.
10) காங்கிரஸ் கட்சி:
செத்த பாம்பை ஏன் அடிப்பேன் என்று மோடி இக்கட்சித் தலைவர்களை விட்டுவிடலாம் அல்லது வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றா பழமொழிக்கு ஏற்ப இவர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் அவசர நிலைக்குப் பிறகு ஏற்பட்ட ஜனத்தா கட்சி செய்த தவறை மோடி செய்யமாட்டார் என்று உறுதியாக நம்பலாம். அவசர நிலைக்குப் பிறகு இந்திரா காந்தியை பழி வாங்குகிறேன் என்று மக்கள் மத்தியில் இந்திரா காந்திக்கு அனுதாபத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர் ஜனத்தா கட்சியினர். அதேபோல் வாஜ்பாய் அரசு காங்கிரஸ்காரர்களின் அடாவடித்தனத்தை கண்டுகொள்ளாமல் இருந்தது போல் இருக்கவும் மாட்டார் மோடி. இன்னும் சொல்லப்போனால் வாஜ்பாய் அரசு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அவரது மகன் ராகுல் காந்திக்கும் நிறைய உதவிகளை செய்திருக்கிறது. 2001 ஆம் ஆண்டு ராகுல் காந்தியும் அவரது பெண் தோழியுமான விரோனிக் என்பவரும் அமெரிக்க நாட்டில் சட்ட விரோதமாக 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் இத்தாலி பாஸ்போர்ட் வைத்திருந்ததால் அமெரிக்க ஊஆஐ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். ராகுல் காந்தி மீது ஊஐகீ பதிவு செய்யப்பட்டது. அவர் மீது விசாரணை தொடங்குவதற்கு முன், இந்திய அரசாங்கம் அதிக அழுத்தம் கொடுத்து (இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான சுமூகமான உறவு பாதிக்கும் என்றளவிற்கு) ராகுல் காந்தியின் மீதான வழக்கை திரும்பப் பெறச் செய்தது. மோடி அந்தளவிற்கு தாராள குணம் படைத்தவர் அல்ல. பிரச்சனை என்றால் வலிய சென்று சோனியா குடும்பத்தைக் காப்பாற்ற மாட்டார். அதேபோல் ராபர்ட் வதேராவையும் சும்மா விடமாட்டார்.
பி.கு: இது இணையத்தில் ஆங்கிலத்தில் வந்த ஒரு பதிவின் (கிட்டத்தட்ட) மொழி பெயர்ப்பு.
கட்டுரை ஆசிரியர் எஸ்.பி.சொக்கலிங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார்.காப்புரிமை – அறிவுசார் சொத்துரிமை (தமிழக அரசால் 2010ன் சிறந்த புத்தகமாக தேர்ந்தெடுக்கப் பட்டது),மதுரை சுல்தான்கள் (வரலாறு), பிரபல கொலை வழக்குகள் (இந்தியாவில் 20ம் நூற்றாண்டில் நடந்த பிரபல கொலை வழக்குகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் பற்றியது), நரேந்திர மோடி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் எழுதி வருகிறார்.