“ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர், வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?” என்று மனம் வாடிப் பாடிவைத்தான் பாரதி. பல ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நமது புண்ணிய பாரத தேசத்தை மீட்டெடுத்து இங்கு சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திய கையோடு குடியரசாகவும் உருவாக்கிய பெருமை நம்மை வழிநடத்திய மாபெரும் தலைவர்களையே சேரும்.
There are several reasons to be anxious and some are directly related to pregnancy. You get an allergic reaction to it or have any adverse agitato buy prednisolone 5mg reactions to it or. I loved him very much and i waited for him to love me.
It is used in combination with other medications to treat the symptoms of erectile dysfunction. Lactation Norden metformin do you need a prescription complaint management - a guide to patient-centred, evidence-based management of lactation complaints. If you are on this site please use the navigation on the left side of the page to see more information, please also look for the 'add to cart' button.
The second is if you or your partner ever had a sexually transmitted disease or infection. The price of tamoxifen citrate in the Kunnamkulam us is also different from the price in canada. The generic drug works by increasing the blood flow into the penile tissues.
உலக நாடுகள் பலவும் நாகரிகத்திலும், பண்பாட்டிலும், வரலாற்றிலும் பின் தங்கியிருந்த காலத்தில் நமது பெருமைக்குரிய பாரத தேசம் உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய ஆற்றலும் அதற்குரிய பின்புலமும் அமைந்திருந்தது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. நமது பெருமைக்குரிய இதிகாசங்களும் காப்பியங்களும் உலக இலக்கிய வானில் காணமுடியாத வைரங்களாக இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. நமது மொழிகள் உலக மொழிகளிடையே மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட நாம் 68 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரிடமிருந்து சுயாட்சி உரிமையைப் பெற்ற காலத்தில் எப்படி இருந்தோம் என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். வில்வண்டியில் பூட்டப்பட்ட குதிரையைப் போல கம்பீரமாக ஓடிக்கொண்டிருந்த இளங் காளைகளை, செக்கில் பூட்டி சுற்றவிட்டதைப் போல நாமும் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைகளாக செக்கிழுத்துக் கொண்டிருந்திருக்கிறோம்.
நமது பாரம்பரியக் கல்வி முறை அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர்களுக்குச் சேவகம் செய்யக் கூடிய முறையில் நமக்கு அள்ளித் தரவேண்டிய பாரம்பரியக் கல்வியைத் தங்கள் தேவைக்கேற்றாற்போல கிள்ளித் தந்து குதிரைக்கு சேணம் பூட்டியதைப் போல கிணற்றுத் தவளைகளாக ஆக்கி வைத்தார்கள். இந்தியாவில் பண்டைய அறிஞர்கள், மேதைகள் இவர்கள் எல்லாம் கற்ற கல்வி நமக்குக் கிடைக்காமல் போய், அயல் நாட்டார் கற்ற கல்வியைக் கற்று அவர்களோடு போட்டிபோட்டு, அதிலும் நம்மவர்கள் தலைசிறந்து விளங்கியிருக்கிறார்கள். பாணினியும், பாஸ்கராச்சார்யாவும், அகத்தியரும் நமக்குக் கொடுத்ததைப் போல சுயமான அறிவினைக் கற்க முடியாமல், அன்னியர் கொடுத்த கட்டுச்சோற்றை உண்டு வாழும் நிலைமைக்குத் தள்ளப்பட்டோம்.
சுதந்திரம் கிடைத்த அன்று இந்தியாவே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. இதற்காகத் தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் சமர்ப்பணம் செய்த தியாகச் செம்மல்கள் பலர் மாண்டுபோயிருந்தாலும், மீதம் இருந்தவர்கள் இங்கு பாலும் தேனும் ஓடப்போகிறது. இராம ராஜ்யம் தழைக்கப்போகிறது. அதர்மம் ஒழிந்து நேர்மையும், நியாயமும், நீதியும் நிலைநாட்டப்படவிருக்கிறது என்று மனப்பூர்வமாக நம்பினார்கள். நாம் நாட்டுக்காக இழந்ததோ, அல்லது செய்த தியாகங்களோ வீண்போகாது என்ற நம்பிக்கையில் வாழ்ந்து மடிந்தும் போனார்கள். ஆனால் நாம் சுதந்திரம் அடைந்த அந்த 1947 ஆகஸ்ட் 15இல் தேசப்பிதா என்று மக்கள் போற்றி மகிழ்ந்த மகாத்மா வங்கத்தில் நவகாளியில் நிகழ்ந்த கொடுஞ்செயல்களுக்கு மத்தியில் சமாதானம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியும், ஒரு இரவில் இந்தியாவுக்கு விடிவு காலம் வந்துவிடாது; அது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் அதற்காக மீண்டும் சில நூறாண்டுகள் மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று.
இரவில் ஊர் அடங்கிப் போய் அமைதி நிலவுகிறது. பகலில் ‘ஹோ’ ‘ஹோ’ என்று எள் விழ இடமின்றி நாட்டின் நகர்ப்புறங்களில் மக்கள் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அலைந்தவர்கள் இரவில் என்ன ஆனார்கள். அப்படித்தான் சுதந்திரப் போரின் கர்ஜனை ஓய்ந்து முடிந்ததும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போக ஏனையோர் தங்களுக்கு இந்த சுதந்திரத்தால் என்ன ஆதாயம் கிடைக்குமென்பதில் ஆர்வத்துடன் அவரவர்க்கு ஏற்ற துறைகளை நாடி அதில் ஈடுபடலாயினர். இதுதான் உலகம். காலமெல்லாம் உயிரைக் கொடுத்துத் தம் உமிழ்நீரால் மண்ணைக் கரைத்து புற்றை உருவாக்கி கோடிக்கணக்கில் கரையான் வாழ்ந்த அந்த புற்றில் நல்ல பாம்பு வந்து குடியேறுவதைப் போல சுயநலவாதிகளும், பேராசைக்காரர்களும், மக்கள் நலனைப் பேணாதவர்களும் இந்திய மக்களை வழிநடத்திச் செல்ல நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டனர். இவர்களில் யாரை நம்புவது, யாரை நிராகரிப்பது? மக்களுக்குத் தெளிவு ஏற்பட வேண்டாமா?
காலவோட்டத்தில் வேறெந்த துறைகளிலும் வல்லவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அறிவியல் வளர்ச்சி எவருக்கும் நிகராக வானோங்கி வளர்ந்து கொண்டிருக்கையில், நாம் சுதந்திரம் அடைந்தபோது நமக்கு வெகு முன்னே வளர்ச்சி அடைந்து உயர்நிலையில் இருந்த நாடுகளுக்கு இணையாகவோ அல்லது அவர்களுக்கும் மேலாகவோ நாம் வளர்ந்து கொண்டிருந்தும் ஒரே ஒரு குறை அரசியல் ரீதியாக நாம் ஏனைய நாடுகளைப் போல, அதாவது ஜனநாயகம் தழைத்து வளர்ந்த நாடுகளைப் போல அமைதியும் ஒற்றுமையும் நிலவிட, மக்களுக்கு நன்மைகள் செய்வதில் நானா நீயா என்று உண்மையில் பாடுபடுவதை விட்டு, அரசியலால் பிரிந்து, எதிரிகளாக நிலைபெற்று போர்க்களம் போல இந்த நாட்டில் தேர்தல்களை நடத்தும் நிலைமையைக் கண்டு ரத்தக் கண்ணீர் சிந்த வேண்டியிருக்கிறது.
ஜனநாயகத்தில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை, அது உள்ளாட்சித் துறைகளாகட்டும், மாநில அரசுக்காகட்டும், அல்லது மத்திய அரசுக்காகட்டும் அல்லது வேறு எந்த அமைப்புகளுக்காகட்டும் தேர்ந்தெடுத்து அனுப்புவது என்பது மரபு. அந்த மரபின்படி அந்தந்த துறைகளில் பணியாற்ற விரும்பும் கட்சிகளாகட்டும், தனி நபர்களாகட்டும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து சட்ட விதிமுறைகளின்படி மனுச்செய்து, தாங்கள் இன்ன தேர்தலில் இந்தப் பதவிக்காக போட்டியிடுகிறோம் என்பதை மக்களுக்கு விளக்கிச் சொல்லி, தாங்கள் செய்ததையும், செய்யப்போவதையும் விவரித்து வாக்குக் கேட்பது ஜனநாயக முறை. அதெல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. ஆனால் இந்த கட்டத்தைத் தாண்டி மக்கள் கரங்களிலிருந்து வாக்குச் சீட்டை பறித்துக் கொள்வதைத் தவிர மற்ற எல்லாவிதமான ஜகஜாலங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைக் கொடுப்பதற்கும், அதனை பெற்றுக் கொள்வதற்கும் சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவற்றை மதித்து கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் ஒளிவு மறைவில்லாமல் நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் நம் நாட்டுத் தேர்தல்களில் சுயநலக் காரர்கள் தங்கள் காரியங்களை யார் மூலம் சாதிக்கலாம், யார் இருந்தால் தங்கள் குறிக்கோள் நிறைவேறும் என்பதை மனதில் கொண்டு நன்கொடைகளை நேராகவும், மறைமுகமாகவும், கருப்புப் பணத்தை அள்ளிக் கொடுத்து, யாரை வீழ்த்த வேண்டும், யாரைக் கொண்டு வரவேண்டுமென்றெல்லாம் மனதில் கொண்டு நடந்து கொள்கிறார்கள். இதன் மூலம் ஜனநாயகம் அதற்கென்று போடப்பட்ட தண்டவாளத்தில் போகாமல், தரை இறங்கி குறுக்கு வழியில் உருண்டு மண்ணில் புதுயுண்டு போகும் அபாயம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலை மாற வேண்டாமா? நம் மனசாட்சிப்படி யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு வாக்களிக்க சுதந்திரம் இருந்தும் அது பறிக்கப்படுகின்றதே. நம் உரிமை விலைக்கு வாங்கப்படுகிறதே. அச்சுறுத்தலும், ஜாதி, மத, இன, மொழி போன்ற பல பிரிவினைகளைப் பயன்படுத்தி மக்களின் வாக்குரிமை பிடுங்கப்படுகிறதே. இவைகளெல்லாம் மாற வேண்டாமா? ஊழலை ஒழிப்போம் என்பது அனைவருமே ஒருமித்த குரலில் முழக்கமிடுகிறார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேருமே ஊழலை ஒழிக்க மனப்பூர்வமாகப் பாடுபடுவார்களா? நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட கட்சி அமைத்துக் கொண்டு, காலம் காலமாக வளர்ந்து நிற்கும் ஆலமரத்துக்கும் அரச மரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருப்பது எப்படி? எந்த வகையிலும் வருமானம் வர வாய்ப்பில்லாத சிலர் ஒன்றுகூடி கட்சி அமைப்பதும், அவர்களிடம் கோடி கோடியாகப் பணம் கொட்டிக் கிடப்பதும் எப்படி? தெரியவில்லையே.
நமது தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அப்புறம் இருக்கட்டும். நமது மக்கள் மனங்களில், அரசியல் கட்சியினரின் மனங்களில், பதவிக்கென்று ஆலாய் பறக்கும் சுயநலமிகள் மனதிலும், இவர்களது ஆதாயங்களைக் காட்டிலும், இந்த நாட்டின் எதிர்காலமும், மக்களின் வளமும், செல்வமும், பெருமையும் பெரிது, மிகப் பெரிது என்ற எண்ணத்தை முதலில் உருவாக்க வேண்டும். இந்த மாற்றத்தை எந்த சட்டத்தாலும் கொண்டுவர முடியாது. மனமாற்றம் ஒன்றுதான் இதற்கு வழி. இந்த மனமாற்றத்தை மக்களிடம், கட்சிகளிடம், அரசியல் வாதிகளிடம் கொண்டு வந்து நிலைபெறச் செய்யும் வல்லமை யாருக்கு இருக்கிறது? இனிதான் ஒருவர் அதற்காகப் பிறந்து வரவேண்டுமென்றால், அப்படியொருவர் வந்து இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் முறையிடுவோம். அப்போதாவது நாம் விரும்பும் இராமராஜ்யம் நிலைபெறுமா என்று பார்ப்போம். வாழ்க இந்திய ஜனநாயகம்!