நேற்று இந்த பிரம்மாண்டமான அத்தி மரத்தைப் பார்த்தேன். அதன் நிழலில் நின்று உளம் பூரித்தேன். பெங்களூரின் பசவனகுடி பகுதியில் உள்ள அழகான, விசாலமான சிருங்கேரி மட ஆலய வளாகத்தில் ஆதி சங்கரர் சன்னிதிக்குப் பின்புறம் உள்ளது இந்தப் பெருமரம். அத்திமரம் தான் என்று நிச்சயித்துக் கொள்வதற்காக பக்கத்தில் இருந்த கன்னடப் பெண்மணியிடம் மரத்தின் பெயரென்ன என்று கேட்டேன். “உதும்பரா” என்றார். அத்திக்கான சம்ஸ்கிருதப் பெயர், கன்னடத்திலும் அதே தான் போலிருக்கிறது.
There are many side effects that are possible when you are taking nolvadex: If you would like to read more about topamax online buy and why you need to https://evefitness.in/contact/ take it for it to work, click here to learn more. If you require a little more help with the use of the female birth control pill, you need to seek the aid of the pharmacist in order to help you make use of this drug as you desire it to be used.
For the past 5 months, he has been getting heartworms. Dapoxetine is is nasonex available over the counter Prenzlauer Berg available with many different dosage strengths. Amoxi is a drug in this case of the group cephalosporin that inhibits bacteria, as a consequence of the activity against the bacterial protein synthesis.
This may involve either low frequency signals called "nociceptive" signals or high frequency signals called "mechanical" signals. The clomid for men for sale vz-8000 is one of the best value products on the market, and it's one that's easy to use. Is nolvadex over the counter to get a high blood pressure.
நியக்ரோதோதும்பரோஸ்வத்த: என்ற விஷ்ணு சகஸ்ரநாம வரி உடனே மனதில் எழுந்தது. நியக்ரோத (nyagrodha), உதும்பர (udumbara), அஸ்வத்த (ashwattha) – ஆல், அத்தி, அரசு. இந்த மூன்றுமே மிகப் புனிதமான மரங்களாக வேதகாலம் முதல் கருதப் பட்டு வந்துள்ளன. விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் இந்த மூன்று மரங்களின் பெயர்களும் அடுத்தடுத்து வருவது ஒரு சிறப்பு.
கர்ப்பவதிகளின் எட்டாம் மாதத்தில் நடக்கும் சீமந்தம் என்ற வைதிக சடங்கில் அத்திமொட்டு, ஆலமொட்டு, அரசமொட்டு மூன்றையும் பிழிந்து கணவன் கருவுற்றிருக்கும் மனைவியில் மூக்கில் ஊற்றவேண்டும் என்பது மரபு. நானும் இந்த சடங்கை செய்திருக்கிறேன். இந்த மலர்ச்சாறு ஒரு மூலிகை போல, உள்ளிருக்கும் கருவுக்கு இவை சக்தியளிக்கும் என்ற விளக்கம் தரப்பட்டது.
அந்த மரத்தடியில் நிற்கும்போது, இந்த மரங்களின் மலர்களுக்கு ஒரு தனிசிறப்பு இருக்கிறது என்று தோன்றியது. என்ன அது? இந்த மூன்று மரங்களின் மலர்களுமே மிக அபூர்வமானவை. அவற்றின் பூப்பருவம் என்பதை நாம் காணவே முடியாது. அது காய், கனிப் பருவங்களின் (fig) அடியில் மறைந்து கிடக்கிறது. “அத்தி பூத்தாற்போல” என்பது வழக்கு. ஹிந்தியிலும் goolar kaa phool என்று இதே போல, அபூர்வத்தைக் குறிப்பதற்காக சொல்வார்கள். கருவுக்குள் உயிர் யாருக்கும் தெரியாமல் குகையில் வளரும் கனல் போல வளர்கிறது, குழந்தையாக அது வெளிப்படும்போது (manifest) தான் நாம் அதைக் காணமுடிகிறது. இந்த மரங்களின் மலர்தலும் கனிதலும் சிருஷ்டியின் மகா ரகசியத்தின் குறியீடுகளோ? இருக்கலாம்.
பெரும்பாலும் தத்தாத்ரேயர் கோயில்களில் எல்லாம் உதும்பர மரம் இருக்குமே நீங்க பார்த்திருக்கலாம் என்றார் அந்தப் பெண்மணி. அரசமரத்தைப் போன்றே அத்தியும் ஞானத்தின் அடையாளம் போலும். புத்த மதத்திலும் இந்த மூன்று மரங்களும் புனிதமானவையாகக் கருதப் படுகின்றன.
நெடியோனாகிய திருமால் குறளாக, வாமனனாக அவதரித்ததை, “ஆல் அமர் வித்தின் அருங்குறள் ஆனான்” என்கிறான் கம்பன். “ஆலமும் வித்து ஒத்து அடங்கும் ஆண்மையான்” என்றும் பிரகலாதன் வாக்காக இதையே குறிப்பிடுகிறான்.
சாந்தோக்ய உபநிஷதத்தில், புகழ்பெற்ற சுவேதகேது உரையாடலில் வருவது அத்திப் பழம் என்று தான் நினைத்திருந்தேன் – “துகள்போன்று சிறிய விதைகள்” என்பதை வைத்து. ஆனால் மூலத்தில் “நியக்ரோத” என்று தான் இருக்கிறது. எனவே அது பெரும்பாலும் ஆலம்பழமாக இருக்கக் கூடும்.
சங்கரரின் திருச்சன்னிதியில், அந்த மரத்தடியில் நிற்கையில் அந்த உரையாடலை மனதில் மீட்டத் தொடங்கினேன். சிலிர்த்தேன்.
இந்த மண்ணின் மீது காலகாலமாக நின்றுகொண்டிருக்கும் பெருமரங்களே, ஒப்பற்ற மெய்ஞானமெனும் ஆயிரமாயிரம் விதைகள் உறங்கும் மகா விருட்சங்களே, உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
******
இந்த மரத்திலிருந்து ஒரு அத்திப்பழம் கொண்டு வா.
இதோ ஐயா.
இதை உடை.
உடைத்துவிட்டேன் ஐயா.
அதில் என்ன காண்கிறாய்?
துகள்கள் போன்று சிறிய விதைகள், ஐயா.
அவற்றில் ஒன்றை உடை.
உடைத்துவிட்டேன் ஐயா.
அங்கு என்ன காண்கிறாய்?
ஒன்றுமில்லை ஐயா.
அவர் சொன்னார் – அன்பு மகனே, உன்னால் அங்கு காணமுடியாத நுண்ணிய சூட்சுமப் பொருள்; இந்த நுண்பொருளிலிருந்தே இந்தப் பெரும் அத்திமரம் வளர்ந்து நிற்கிறது.
சிரத்தை கொள், அன்பு மகனே. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.
மேலும் விளக்குங்கள் ஐயா.
அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.
இந்த உபநிஷத அத்தியாயம் முழுவதையும் முன்பு நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இங்கே வாசிக்கலாம்.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)